Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவுசெய்வதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது. இன்று மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த்தேசியத்தின் நலன் கருதி ஒன்றிணைக்கப்பட்ட தமிழ்கட்சிகளின் கூட்டமைப்பே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. இவ்வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கூட்டுத்தலைமைகள் கூடித் தீர்மானங்களை தீர்மானித்து அறிவிப்பதே ஜனநாயகமாகும்.

தமிழ்த் தேசியத்தின் நலனுக்கும், அதன் உரிமைகள் தொடர்பான போராட்டப்பாதைக்கும், அதன் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், பங்கம் விளைவிப்பதாகவே அமையும். இதேவேளை, கிழக்குமாகாணசபையில் பலமான ஆட்சியாளராக மாறுவதற்கானதும் முதலமைச்சரைப் பெறுவதற்கானதும், அதிகாரமுள்ள அமைச்சைப் பெறுவதற்குமான வாய்ப்புகள் இருந்தும் அதைத் தவறவிட்டுள்ளோம்.

இந்தப் பொறுப்பை தவறவிட்டவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இனிமேல் இந்த தவறைவிட்டுவிடக் கூடாது. இதேவேளை இன்றைய சூழ்நிலையில் நாம் பலமாக இருக்கும் போது முஸ்லிம் காங்கிரசால் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனும் ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

அந்தவகையில் மாவட்டரீதியான பொதுவான வேலைகளை முன்னெடுப்பதற்கும் கிழக்குமாகாணசபையில் கடந்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தடுத்து நிறுத்தவும், திறமை அடிப்படையிலும் விகிதாசார முறையிலும் நியமனங்களை வழங்கவும், அதிகாரப்பங்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் விகிதாசார அடிப்படையில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கவும் இன ஐக்கியத்தை உருவாக்குவதற்கும் எமது கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

மேலும் கூட்டமைப்பிலுள்ள ஒருகட்சி கூட்டு முடிவை எடுக்காமல் தனித்துச் செயற்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள தவறுகளை சுட்டிக் காட்டியமைக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான கௌரவ சுரேஸ் பிரேமச் சந்திரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் அவர்கள் மீது கடந்தவாரம் குறித்த ஒருகட்சியின் மத்திய குழு கூட்டத்தில் சுமத்தப்பட்ட கண்டனத் தீர்மானமானது இன்றையச் சூழலில் எமக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது.

அதேவேளை கிழக்குமாகாண ஆட்சியமைப்பு தொடர்பாகவும், அமைச்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட முறைமை தொடர்பாகவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி ஜனநாயக வன்முறைகளுக்கு முரணாக நடந்துகொண்டமை தொடர்பாக நாம் மிகுந்த மனவேதனை அடைகின்றோம்.

இந் நிலைமைகள் தமிழ்த் தேசியத்தின் நலனுக்கும், அதன் உரிமைகள் தொடர்பான போராட்டப் பாதைக்கும், அதன் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், பங்கம் விளைவிப்பதாகவே அமையும். எனவே தமிழ்த் தேசியத்தின் நலன் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பின் முன்னெடுத்துவரும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான இராஜதந்திர நடவடிக்கைகளையும்,

தமிழர்களின் உரிமைகள், அபிலாசைகள், இயல்பு வாழ்க்கை ,புணர்வாழ்வு நடவடிக்கைகள், அதிகாரப்பங்கீடு முதலான கருத்திட்டங்களுக்கும் உணர்வுபூர்வமாகவும், இதய சுத்தியோடும், மனஉறுதியோடும் நாம் எமது வேலைத் திட்டங்களை காலத்தின் தேவை அறிந்து கூட்டுத் தலைமைகளால் மட்டும் உருவாக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

இதுவே இன்று நம்முன்னுள்ள கடமையாகும். இந்தவகையில் தமிழ்த்தேசியத்தின் இலட்சியத்தை என்றுமே வெல்லப்பட முடியாத வரலாற்றுச் சூழ்நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது. இதன் காரணமாக தமிழ்த் தேசியத்தைப் பிளவுபடுத்திச் சின்னாபின்னமாக்கித் தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக அரசியல் இருப்பையும், உரிமையையும், குழிதோண்டிப் புதைத்துவிடும் செயல் நிலையான நிலைப்பாட்டையே இந்த தலைமைகள் தோற்றுவிக்கும்.

எனவே தமிழ்த்தேசியத்தின் வலிமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல, தமிழ்த் தேசியக் கட்களின் ஐக்கியம் தொடர்ந்து பேணப்பட, உட்கட்சி முறன்பாடுகளையும் கருத்து மோதல்களையும் கூடுமான வரை தவிர்த்துக் கொள்ள, தமிழ்மக்கள் கட்சி ரீதியாக பிரிந்து நின்று தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை கிழக்கு மண்ணில் இழக்காது இருக்க கூட்டுத்தலைமை பொதுவான வேலைத்திட்டத்தை வகுத்து, மாவட்ட ரீதியாக வெளியிலுள்ள நல்லசக்திகளை இனம் கண்டு அவர்களை உள்வாங்கி கிராம ரீதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக அரசியற்கட்சியாகப் பதிவுசெய்யப்படல் வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com