Contact us at: sooddram@gmail.com

 

தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்

அதுவே தனது இலக்கு என்கிறார் ஜனாதிபதி மைத்திரி

* அரசியலமைப்பில் மாற்றத்தின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பது குறித்து சிந்திக்க முடியும்.

* சிறுகட்சிகள், சிறுபான்மையினக்கட்சிகள், பாதிக்கப்படாதவகையில் தேர்தல் முறையில் மாற்றங்கள்

* தலைவர் என்ற வகையில் சுதந்திரக்கட்சியின் சார்பாகவே தேர்தல் பணிகளில் ஈடுபடுவேன்.

* புதிய அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்தே மனித உரிமைப் பேரவை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

ஜீடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் பல கட்சிகளை கூட்டிணைத்து போட்டியிட்டே வெற்றி பெற்றேன். 49 கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் இந்த வெற்றியினை என்னால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

தேர்தலின் போது 100 நாள் திட்டத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் 100 நாட்களுக்கு அப்பால் செயற்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்தும் நாம் தேர்தலின்போது மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தோம். அதற்கிணங்கவே தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எமது அரசியல் யாப்பிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை மக்கள் வெறு க்கின்றனர். இந்த நிறைவேற்று அதிகார முறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. இதனால் தான் அதில் மாற்றத்தை கொண்டுவரவும் 18 ஆவது திருத்தத்தை இல்லாது செய்து 19ஆவது திருத்தத்தைக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அத்துடன், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் வகையிலேயே எனது தேர்தல் செயற்பாடு அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதானிகளை கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியபோது தெரிவித்தார்.

அங்கு அவருடன் நடத்தப்பட்ட கருத்துப் பரிமாறல்களின்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் ஜனாதிபதி பதிலளித்தார்.

கேள்வி - புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ் மக்கள் பலரும் நாடு திரும்பி இங்கு முதலீடுகளை மேற்கொண்டு முன்னர் போன்று தமது நாட்டில் சுதந்திரமாக வாழ விரும்புகின்றனர். எனினும் தாம் முன்னர் போன்று கைது செய்யப்படுவோமா எனும் அச்சம் அவர்களிடையே காணப்படுகிறது. அவ்வாறு வந்த சிலர் கைது செய்யப் பட்டமையும் அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இது குறித்துத் தங்களது கருத்து என்ன?

பதில் - உண்மையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எவ்விதமான பயமுமின்றித் தாராளமாக நாட்டுக்குத் திரும்பி வரலாம். அவர்கள் இங்கு முதலீடுகளையோ வியாபாரத்தையோ மேற்கொள்வதுடன் அவர்களால் நிச்சயமாகச் சுதந்திரமாக வாழமுடியும். புலம்பெயர் தமிழர்கள் எம்முடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்.

அவர்களது சந்தேகத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். நான் லண்டனுக்குச் சென்றிருந்தபோது புலம்பெயர்ந்த தமிழர்களின் சில அமைப்பினருடன் பேச்சுக்களை நடத்தினேன். ஈழம் கோரும் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் எவருடனும் நான் பேசவில்லை. அவர்களுடன் பேச வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. நான் சந்தித்த புலம்பெயர் தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் சிங்களத்தில் என்னுடன் சகஜமாக உரையாடினர். எம்மை புலம்பெயர் தமிழர்கள் என்று முத்திரை குத்தவேண்டாம்.

நாம் உங்களுடன் சேர்ந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம். முன்னர் இருந்த இலங்கையின் தலைவர்கள் எம்முடன் பேசவில்லை. பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். நாட்டுக்கு வரவும் தயாராக உள்ளதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். எனவே, அவர்கள் எவ்விதமான பயமுமின்றி இங்கு வரலாம்.

கேள்வி - பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதனையே தாம் விரும்புவதாகவும், நாட்டுக்கு வரத் தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர்கள் உங்களிடம் தெரிவித்த கருத்துக்குத் தங்களது பதில் என்னவாக இருந்தது?

பதில் - இவ்விடயம் தொடர்பில் பிரதமருடனும், அமைச்சரவையுடனும் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு நான் உறுதியளித்திருக்கின்றேன். தற்போது யுத்தம் இல்லை. குண்டு வெடிப்புக்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது. ஆனால் இந்த யுத்தம் ஏற்படுவதற்கு காரணமான விடயங்களுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

யுத்தம் மீண்டும் உருவாகும் என்று நான் கோர வில்லை. ஆனால் இன வாதம், மத வாதங்கள், வளருமானால் அது நாட்டுக்கு நல்லதல்ல. நாம் நாட்டின் எதிர்காலம் கருதி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவது அவசியமாகும். எனவே, இவ்விடயத்தில் நான் நிச்சயம் நல்லதொரு தீர்வினை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பேன்.

கேள்வி - அரசியலைப்பு மாற்றம், பாராளுமன்றத் தேர்தல் பற்றியே இப்போது அதிகம் பேசப்படுகிறது. இதில் எதனை முதலில் செய்வதற்கு உத்தேசித்துள்Zர்கள்? இவ்விரு கருத்துக்களினால் கட்சிகளிடையே ஏதாவது முரண்பாடுகள் உள்ளனவா?

பதில் - அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்த பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பது குறித்து சிந்திக்க முடியும் என்பதே எனது நிலைப்பாடாக உள்ளது. அரசியல் அமைப்பு மாற்றத்தினை ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அரசியல் அமைப்பின் மாற்றம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் அறியவேண்டியுள்ளது. இதற்கு ஆகக் குறைந்தது இரு வாரங்களாவது வழங்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

எது எவ்வாறு இருப்பினும் சகல கட்சிகளும் இணைந்து பேச்சுக்கள் நடத்துவதன் மூலம் பொதுவான இணக்கப்பாட்டிற்கு வர முடியும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை மாற்றியமைக்கும் 19 ஆவது திருத்தச் சட்டத்துடன் தேர்தல் முறையும், மாற்றப்பட வேண்டுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரி வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடி இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகின்றேன்.

கேள்வி - ஜனாதிபதியின் பதவிக் காலத்தையும், பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்தையும் ஐந்து வருடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இது எவ்வளவு தூரம் சாத்தியமாகிறது? இவை நடத்தி முடிக்கப்படுமா?

பதில் - நிச்சயமாக நடத்தி முடிக்கப்படும். 19ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 வருடங்களாக குறைப்பதற்கான யோசனையினை நானே முன்வைத்தேன். இதேபோல் பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்தை 5 வருடங்களாக குறைக்கவும் இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு நான் விரும்பவில்லை என்ற தோரணையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றுமுழுதான பொய்யாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிக்க வேண்டும் என தேர்தல் காலங்களில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தவன் நானே.

எனவே, நான் பொறுப்பேற்ற விடயத்தினை செயற்படுத்தியே தீருவேன். அரசியல் அமைப்பின் திருத்தத்தை மேற்கொள்வதற்கு முன்னர் கட்சிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்துரையாடி மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதற்கு மத்தியஸ்தராக நான் செயற்படுகின்றேன்.

கேள்வி - தாங்கள் ஜனாதிபதியானதன் பின்னர் இந்தியாவிற்கும், லண்டனுக்கும் சென்று வந்துள்Zர்கள். அதேபோன்று இலங்கைக்கு வந்த பல வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்துள்Zர்கள். இன்றைய எமது நாடு குறித்து அவர்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?

பதில் - ஆம், நான் ஜனாதிபதியானதன் பின்னர் நான் இந்தியா, மற்றும் பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருந்தேன். அத்துடன் இலங்கை வந்திருந்த. ஐ.நாவின் உதவிச்செயலாளர் மற்றும் வெளிநாடுகளின் அமைச்சர்களையும், பிரதிநிதிகளையும் நான் சந்தித்துப் பேசியிருந்தேன்.

இந்திய விஜயத்தின் போது அந்நாட்டுப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தேன். அதேபோல் பிரித்தானியாவின் விஜயத்தின் போது அந்நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன், எலிஸபெத் மகாராணி ஆகியோரையும் சந்தித்திருந்தேன். இந்த சந்தப்புக்களிலிருந்து சர்வதேச அளவில் எமது நாடு எவ்வளவு அழுத்தங்களை சந்தித்து வருகின்றது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இவர்களுடனான சந்திப்புக்களின் போது புதிய அரசாங்கத்தின் மீது அவர்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளதை அறியக்கூடியதாக உள்ளது.

அத்துடன் நான் பிரித்தானியாவிற்கு சென்றபோது அங்கு ஈழம் கோருகின்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் 300 பேரளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் என்னை சந்தித்த எலிஸபெத் மகாராணியார் இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றதை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறியாதுள்ளனர். என்று தெரிவித்தார். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஏனெனில் இவர்கள் எம்மைப் பற்றிய விடயங்கள் எதையுமே அறியாது அங்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கேள்வி - 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மோடி வலியுறுத்தியிருந்தார். வடமாகாண முதலமைச்சரும் இதனை கூறிவருகின்றார். ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்ற கொள்கையுடன் இருக்கிறது. இவ்விடயம் தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோருடனான சந்திப்புக்களின் போது புதிய அரசாங்கமானது 100 நாள் வேலைத் திட்டத்திலேயே கவனம் செலுத்தி வருகின்றது, நாட்டில் இனங்களுக்கிடையிலான பிரச்சினைக்கு பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உருவாகும் தேசிய அரசாங்கத்திலேயே தீர்வு காணப்படும் என்று எடுத்துக் கூறியிருந்தேன். இந்த நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம்.

கேள்வி - கட்சி மாறுவதை தடுக்கும் வகையில் சட்ட மூலம் விரைவில் கொண்டு வரப்படுமா? புதிய தேர்தல் முறை மாற்றத்தினால் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகின்றது. சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் முறை மாற்றம் அமையுமா?

பதில் - கட்சி மாற்றத்தை சிலர் ஆதரிக்கின்றனர். சிலர் எதிர்க்கின்றனர். எனவே, இவ்விடயம் குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. தேர்தல் முறை மாற்றத்தில் சிறுகட்சிகள், சிறுபான்மையினக் கட்சிகள், பாதிக்கப்படாத வகையில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து பேசுகின்றோம். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்ட பின்னர் தான் தேர்தல் முறை மாற்றியமைக்கப்படும்.

கேள்வி - விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் போது சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற வகையில் அக்கட்சியுடன் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவீர்களா? அல்லது இவ்விடயத்தில் பொது நிலைப்பாட்டை எடுப்பீர்களா?

பதில் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தேர்தலின் போது சுதந்திர கட்சியின் சார்பாகவே தேர்தல் பணிகளில் ஈடுபடுவேன். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருக்கின்ற போதும், ஜனாதிபதி தேர்தலின் போதும் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, பொன்சேகாவின் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடனேயே நான் போட்டியிட்டேன். ஜே.வி.பி வெளியிலிருந்து மறைமுக ஆதரவு வழங்கியிருந்தது. தேர்தலின் போது கூட நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவன் என்றும், சுதந்திரக் கட்சியின் செயலாளராகவே போட்டியிடுகின்றேன்.

என்றும் தெரிவித்திருந்தேன். தேர்தலின் பின்னர் பிரச்சினையின்றி சுதந்திரக் கட்சியின் தலைமை பதவி எனக்கு கிடைத்தது. என்னிடம் அரசியல் தூர நோக்கு உள்ளது. தேர்தலின் போது சுதந்திரக் கட்சியின் சார்பில் தேர்தல் பணியாற்றுவேன். ஆனால், இந்தத் தேர்தல் நடவடிக்கையானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதை பாதித்துவிடக் கூடாது. அதற்கு இணங்கவே நான் எனது பணியினை மேற்கொள்வேன். பாராளுமன்றத் தேர்தலின் பின் ஒன்றிணைந்து நாம் தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும்.

இதற்கு ஏற்றவகையிலேயே எனது செயற்பாடுகள் அமையும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரைகுறை அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்காகவே தேசிய அரசாங்கம் பற்றி பேசுவதாக சிலர் கூறுகின்றனர். தேசிய அரசாங்கத்தினால் பல்வேறு விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேள்வி - ஜெனிவாவில் மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த மனித உரிமை பேரவையின் அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமைக்கு புதிய அரசாங்கம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. அரசாங்கம் எந்த வகையில் காரணமாக இருந்தது?

பதில் - நிச்சயமாக எமது புதிய அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்தே மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த மனித உரிமை பேரவையின் அறிக்கை, ஒத்திவைக்கப்பட்டது. அதில் எந்தச் சந்தேகமும், இல்லை. இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் முன்னைய தலைவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பர். கால அவகாசத்தை நாம் கோரியதை அவர்கள் ஏற்றுக் கொண்டு எம்மைக் கெளரவப்படுத்தினார்கள். அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் உறுதி செய்வோம்.

கேள்வி - தேசிய அரசாங்கம் பற்றியும் இப்போது அதிகம் பேசப்படுகிறது. இது இலகுவில் சாத்தியப்படக் கூடியதொரு விடயமா? இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்Zர்களா?

பதில் - அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முரண்படக்கூடாது. இத்தகைய முரண்பாடுகளை தவிர்க்க வேண்டுமானால் தேசிய அரசாங்கமே தேவையாக உள்ளது.

நாட்டில் பிரதான பிரச்சினை மற்றும் சர்வதேச அழுத்தத்தை சந்திக்கும் பிரச்சினைகள் என்பவற்றை தீர்ப்பதற்கும், மீண்டும் யுத்தம் ஏற்படாத நிலையை உருவாக்குவதற்கும் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.

கேள்வி - இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் தமிழ்க் கட்சிகள் ஆர்வமாக உள்ளன. இது தொடர்பாக ஏதாவது முன்னேற்பாடுகளை அரசாங்கம் எடுத்துள்ளதா?

பதில் - இல்லை. இது போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. பாராளுமன்றத் தேர்தலின் பின்பு அமைக்கப்படும் தேசிய அரசே 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் பிரதான பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்யும். ஏனெனில் இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

தேர்தலின் பின்பு சகல கட்சிகளையும் கொண்ட தேசிய அரசு அமைப்பதே எமது குறிக்கோள். ஆகவே, தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேசிய அரசொன்றை அமைப்பதற்கு மக்களின் ஆணையைப் பெறுவதை பிரதான நோக்கமாகக் கொண்டு தமது பிரசாரங்களை முன்னெடுப்பது அவசியமாகும். அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கு உறுதியானதொரு தீர்வு காண்பது அவசியமானது.

கேள்வி - தேர்தல் முறைமை மாற்றப்படும்போது சிறுபான்மை மக்கள், கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்படுமா?

பதில் - நிச்சயமாக, தேர்தல் முறைமை மாற்றம் செய்யப்படும்போது சிறுபான்மை மக்கள், சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும். புதிய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறுபான்மையினர் மற்றும் சிறு கட்சிகளின் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கப்படும்.

கேள்வி - தேசியப் பட்டியல் எம்.பி என்பதன் நோக்கம் இப்போது மழுங்கடிக்கப்படுகிறது. இதனை நிவர்த்திக்க தேர்தல் முறையில் ஏதாவது ஏற்பாடு செய்யப்படுமா?

பதில் - உண்மைதான், ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சியின்போது 1978 அரசிலமைப்பின் ஊடாக கொண்டு வரப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் முறைமையில் பல குறைபாடுகள் உள்ளது. தேசியப் பட்டியல் முறைமையின் நோக்கமே புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்களை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவது. ஆனால், இதுவரை காலத்தில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவானோரில் ஒருவர் மட்டுமே தகுதியானவர். அவர்தான் காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர். இதனை நான் பெருமையாகக் கூறுகிறேன்.

கேள்வி - ஊடக சுதந்திரம் தொடர்பாகக் தங்களது கருத்து என்ன?

பதில் - ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும். நான் எப்போதும் ஊடக சுதந்திரத்தை மதிப்பவன். பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கும் உரிமை இருக்கவேண்டும். அது இப்போது உள்ளது என்பதை என்னால் கூற முடியும்.

கேள்வி - சீனாவின் துறைமுக நகர்த்திட்டம் தொடருமா?

பதில் - இந்தத் திட்டம் தொடர்பிலான சுற்று சூழல் அறிக்கையினை நாம் கோரியுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்த பின்னர் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.

தே. செந்தில்வேலவர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com