Contact us at: sooddram@gmail.com

 

மானிட நீதியை நிலைநாட்ட வரலாறு கோருகிறது தி. ஸ்ரீதரன் பொதுச்செயலாளர் ஈ.பி.ஆர்.எல்.எப்

இம்முறை மேதினம் மாறுபட்ட சூழலில் நினைவுகூரப்படுகிறது. உலகளாவியளவில் தொழிலாளர் இயக்கங்களும், ஜனநாயக இயக்கங்களும் வீறிட்டு எழுந்து நிற்கின்றன.

'சிறு பொறி பெரும் காட்டுத்தீயை மூட்டும்' என்பதுபோல் ஜனநாயகத்துக்காகவும், சமூக மாற்றத்துக்குமான இயக்கங்கள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வருகின்றன.

தற்போதைய உலக ஒழுங்கு அநீதியானது. சமூக ஒழுங்கு அநீதியானது மாற்றம் வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்னர் கம்யூனிசம் புதைகுழிக்கு அனுப்பப்பட்டு விட்டது என்று கூக்குரலிட்டவர்கள், ஏளனம் செய்தவர்கள் இன்று விழி பிதுங்கி, பீதி கொண்டு நிற்கின்றனர்.

உலகமயமாக்கம், ஏகாதிபத்தியம் உலகின் பல மில்லியன் மக்களை வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளியுள்ளது.

உலகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு வளங்களைச் சூறையாடல் நிகழ்கிறது.

'எண்ணெய்க்கு விலையாக ரத்தம்' என்ற அளவிற்கு மரணங்கள் மலிந்த பூமியாக மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு மாறியுள்ளன.

மத அடிப்படை வாதிகள் ஆப்கானிஸ்தானிலும், மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கிலும் தென்னாசியாவிலும் தமது பயங்கரவா  நடவடிக்கைகளை தொடர்கிறார்கள்.

ஈரானுக்கு எதிரான பொருளாதாரத்தடை எண்ணெய் விலையை அதிகரிக்கச் செய்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்தியா, இலங்கை உட்பட நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவேன் என இஸ்ரேல் மிரட்டுகிறது. ஈரான் அணுசக்தி ஆற்றலை கொண்டிருக்கும் நிலையில் இதுவொரு பயங்கரமான பதற்ற நிலையாகும்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சுட்டெண் 8.3 வீதமாக இருக்கிறது என மத்திய வங்கி அறி;க்கை குறிப்பிடுகிறது.

பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி சுட்டெண் என்பது சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடுவதல்ல. டொலரின் பெறுமதி இலங்கை ரூபாவில் 130 வரை அதிகரித்துள்ளது. இன்னும் அதிகரிக்கலாம்

நகர்ப்புற தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் அமைதியிழந்து காணப்படுகிறார்கள். இதில் தோட்டத் தொழிலாளர்களின் நிலை மிகவும் அவலமானது.

பணிப்பெண் வேலைக்காக மத்திய கிழக்குச் சென்ற குடும்பங்களின் நிலை, ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களும் மூச்சுத்திணறும் நிலையை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் தமது உற்பத்திக்கு, விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைக்காததால் விரக்தியடைந்துள்ளனர்.

தீவிரமான தனியார் மயமாக்கம்சேவைத்துறைகளின் நலிவு உயர் கல்வியையும் சுகாதாரத் துறையையும் மோசமாக பாதி;த்துள்ளது. மின்சாரம், பஸ் கட்டணம், சமையல் எரிவாயு மற்றும  இன்னோரன்ன  பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன மக்களின் அன்றாட வாழ்வில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேம்பாலங்கள், வீதிகள் புனரமைப்பு, புதிய வீதிகள் அமைத்தல் போன்ற உள்ளக கட்டமைப்பு செயற்பாடுகள் நிகழ்ந்தாலும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் மாற்றங்கள் நிகழவில்லை.

மிகவும் மோசமான நிலவரம். இடப்பெயர்வுகளைச் சந்தித்து மீள் குடியேறுபவர்களின் வாழ்வில்தான் அமைகிறது. குடும்ப ஆண்தலைவரை இழந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வார்த்தைகளால் சொல்லமுடியாத துன்பங்களை- வறுமையை அனுபவிக்கின்றன.

இலங்கையின் தேவை சனத் தொகை வீதாசாரத்கு ஏற்றதாக அல்லாமல், உற்பத்தியுடன் சம்பந்தப்படாத பிரமாண்டமான இராணுவம் என்பது மக்களின் வரிப் பணத்தி;ல ஒரு சுமையாக மாறியுள்ளது.

வடக்கு கிழக்கில் மக்களின் அன்றாட அந்தரங்க வாழ்வில் தலையீடுகள் நிகழ்கின்றன. இராணுவத்தை பகிரங்க இடங்களில் இருந்து அப்புறப்படுத்துமாறு உண்மைகளை கண்டறியும் குழு தெரிவித்திருந்தும் உண்மைகளை கண்டறியும் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தும் அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இனப்பிரச்சனை தீர்வு தொடர்பிலும் முன்னேற்றங்கள் எதுவுமில்லை. பேரினவாத ஆவேச கூச்சல்களே மேலோங்கியதாக காணப்படுகின்றன. அதேபோல் போக முடியாத ஊருக்கு வழிசொல்லும் தமிழ் குறுங்குழு வாதமும் விரவிக் கிடக்கிறது.

தமிழர் தரப்பிலும் காத்திரமான யதார்த்தமான முன்னெடுப்புக்கள் எதுவும் இல்லை என்பது தூரதிஸ்டமானது. நாடு தழுவியளவில் ஜனநாயக சக்திகளும், தேசிய இனப்பிரச்சனைக்கு மானசீகமாக தீர்வை விரும்புவோரும் தீவிர சமூக அரசியல் மாற்றங்களை விரும்புவோரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

இலங்கையிலும், உலகிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டும், மாற்றங்களுக்கான அறிகுறிகள் துலங்கிக் கொண்டும் இருக்கி;ன்றன.

சாதாரண மக்கள் சார்ந்த மாற்றங்களுக்காக உலகத்தினதும், இலங்கையினதும் மக்கள் என்ற வகையில் எமது வரலாற்று கடமைகளை ஆற்றுவோமாக!

நிலை நாட்டப்படவேண்டியவை

சகல தளங்களிலும் ஜனநாயகம் வேண்டும்

இனப்பிரச்சனைக்கு பல்லினங்களின் நாடு என்  அடிப்படையில் தீர்வு காணவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம நீக்கபட்டு அனைத்து தமிழ்கைதிகளுக்கும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டும்

நாட்டின் சகல பகுதிகளிலும் கருத்துச் சுதந்திரம் மனச்சாட்சி சுதந்திரம் பேணப்படல் வேண்டும்.

தொழிலாளர், மாணவர் இயக்கங்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும்.

சர்வாதிகாரத்தின் கூறுகள் அடியோடு அகல வேண்டும் தமிழர் வாழ்பிரதேசங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் போன்றதான இராணுவப்பிரசன்னங்கள் அகல வேண்டும . மக்களின  ிலங்கள்  விடுவிக்கப்படவேண்டும் .

சிறுபான்மையின சமூகங்களின் பாரம்பரி  ிலங்களை கபளீகரம் செய்வதை நோக்கமாகக் கொண்ட குடியேற்றங்கள் நிறுத்தப்படல் வேண்டும்.

சொல்லிலும் செயலிலும் வன்முறை சகல தளங்களிலும் அகல வேண்டும்.

விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படல் வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் விலைச்சுட்டெண்ணுக்கு ஏற்ப 800 ரூபா வரை அதிகரிக்கப்படல் வேண்டும். சுகாதாரம், கல்வி ஆகியன தோட்டப்பகுதிகளில் மேம்படுத்தப்படல் வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் நில, வீட்டு உரிமை உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

இலங்கையின் சேவைத் துறைகளான கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து என்பன இன்னும் விரிவாகவும், பரந்தளவிலும் தரமாகவும் மக்களுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.

ஆங்கிலகணித- விஞ்ஞான- தொழில்நுட்ப கல்வி, நவீன தொழிற்பயிற்சி ஆகியன அனைத்து மட்டத்திலுமுள்ள மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

பெண்களின் சமத்துவமும், சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பெண்கள், மத்திய கிழக்கில் எவ்வித சமூக பாதுகாப்புமற்று ஈவிரக்கமற்றுச் சுரண்டப்படும் பெண்கள், இலங்கையின் கிழக்கு- வடக்கிலும், தெற்கிலும் யுத்தம் பயங்கரவாதம் சுனாமியின் கோர வடுக்களுடன் குடுபத்தின் முழுச் சுமையையும் தாங்கி நிற்கும், பயங்கரவாதத் தடைச்சட்;டத்தின் கீழ் சிறைகளில் வாழும் பெண்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றப்படவேண்டும். சுதந்திரமான கௌரவமான வாழ்வு கிட்ட வேண்டும்

பெண்கள், சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் உறுதியுடன் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இலங்கையின் உயிரியல் சூழல், இயற்கை வளம் என்பன பாதுகாக்கப்படுவதோடு உலகளாவிய இயற்கை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு இயக்கங்களுடன் நாம் கைகோர்க்க வேண்டும்.

பாதுகாப்பான சுதந்திரமான வாழ்க்கை எமது நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் கிடைப்பதற்கு நாம் எம்மால் இயன்றதை செய்ய வேண்டும்.

உலக சனத் தொகையில் பல நூறு மில்லியன் மக்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். வறுமையும், இயற்கை பேரழிவுகளும், யுத்தங்களும், பல்;வேறு விதமான வன்முறைகளும் மக்களை அன்றாடம் காவு கொள்கின்றன. இவற்றிலிருந்தெல்லாம் விடுதலை வேண்டும்.

நிலமானிய சமூகத்தின் எச்சசொச்சமானதும் இன்றளவில் நீடித்து நிலவுவதுமான தீண்டாமை கொடுமைகள் ஒழிக்கப்பட  ேண்டும்

ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்

மானிட நேயம் கொண்ட ஆட்சிமுறைகள் இலங்கையிலும், உலகின் பல பாகங்களிலும  ிளிர வேண்டும்.

வன்முறை சாரா வழியில் மானிட வாழ்வில் எழிலார்ந்  ாற்றங்களுக்காக வெகுஜனங்கள் அணிதிரளவேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தின் செங்கொடிகள் வரலாற்றில் உயர்வதும் வெகுஜன எழுச்சிகளும் இவ் உயரிய குறிக்கோள்களுக்காகவே!

தி. ஸ்ரீதரன்

பொதுச்செயலாளர்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com