Contact us at: sooddram@gmail.com

 

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்து கண்டனக் கருத்தரங்கம்

ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள் வரலாற்றில் ஹிட்லர , முசோலினி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலை நாட்டிய பாசிசத்தின் ஐந்து முக்கிய கூறுகள் இருந்தன. ஓன்று மிதமிஞ்சிய தேசிய வெறிவாதம், இரண்டு நாடளுமன்றங்கள் அரட்டை அரங்கங்களாக குறைக்கப்படுவது, மூன்று அரசின் தாளத்திற்கு ஏற்ற வகையில் ராகம் போடும் நீதி அமைப்பை உருவாக்குவது, நான்கு தொழிற்சங்கங்கள் போன்ற உழைப்பாளரின் நலன்களுக்காக பாடுபடும் ஜனநாயக அமைப்புகள் ஒடுக்கப்படுவது, ஐந்து கருத்து சுதந்திரத்தின் குரல் வலை நெறிக்கப்படுவது.

பாசிசத்தின் இந்த ஐந்து அம்சங்களும் சிறிய பெரிய அளவுகளில் நமது நாட்டில் தலைதூக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. பாரளமன்றத்தின் மாண்பும், மரபும் எவ்வாறு சீரழிந்து கொண்டுள்ளது என்பதை நிறைய வார்த்தைகளில் விளக்கத் தேவையில்ல . நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களது நலனை பாதுகாக்கும் அல்லது பேணும் விதத்தில் கேள்விகள் எழுப்புவது, மக்கள் நலனை புறக்கணித்து சுயலாபம் பேணுவதற்காக தங்களது பதவியைப் பயன்படுத்துவது போன்ற போக்குகள் மலிந்துள்ள சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். மக்களுடைய நலன்களுக்காக பாடுபடுவதற்கு பதிலாக தங்களது நலன்களை தங்களின் ஊழல் செய்பவர்களை லோக்பால் போன்ற மசோதாக்கள் சட்டமாகி தண்டித்து விடக் கூடாது என்ற அடிப்படையில் செயல்படும் கேவலமான போக்கு தலைவிரித்தாடுகிறது.

நீதி அமைப்பில் நிலவும் ஊழல் மறைக்க முடியாத அளவிற்கு வெட்ட வெளிச்சமாகி அதனை கட்டுப்படுத்துவதற்காக லோக் பால் வரம்பிற்குள் அதை கொண்டுவருவதா, அல்லது அதற்காக ஜுடிசியல் கமிசன் ஓன்று தனியாக அமைப்பதா என்ற இரு கேள்விகளுக்கும் எதைச் செய்வது எனதில் நமது ஆட்சியாளர்கள் தலையை பியித்துக் கொண்டுள்ளனர . உலகமயம் என்ற சூழல் ஏற்பட்ட நாளில் இருந்து நெருக்கடி சூழ்ந்த நிலையில் இருக்கும் உற்பத்தியாளருக்கு உதவுகிறோம் என்ற பெயரில் நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு விரோதமாக மட்டுமின்றி அவர்களது நலன் கருதி முன்பு வழங்கப்பட்ட முத்திரை தீர்ப்புகள் கூட மாற்றி எழுதப்படும் போக்கு நிலவுகிறது.

தொழிலாளர்களின் ஜனநாயக அமைப்பான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை கோரியதற்காக ஹூண்டாய், மாருதி, ஏனாம் ரெகன்சி தொழிலாளர்கள் அடித்து நொறுக்கப்படுகிரார்கள . வேலைக்கு அமர்த்த , அட்டையென உழைப்பை உறுஞ்சு, சக்கையென உழைப்பாளரை தூக்கி ஏறி என்ற காட்டுமிராண்டி தனம் எழுதப்படாத நீதியாக அமலாகிக் கொண்டுள்ளது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனக் கருதப்படும் பத்திரிக , எழுத்து சுதந்திரங்களை உள்ளடக்கிய கருத்து சுதந்திரத்தின் குரல் வலை கடுமையாக நெறிக்கப்படுகிறது. பத்திரிக்கைகள் அரசு விளம்பரங்கள் எனும் தூண்டில் புழுக்களால் அரசின் கைப்பாவையாக்கப் பட்ட பழைய போக்குகளையும் கடந்து புதிய ரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனது ஆட்சியின் குறைகளை விமர்சித்த குற்றத்திற்காக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இன்றைய முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் இனிமேல் தன்னை விமர்சிக்கும் ஆனந்த பஜார் பத்திரிக்கா, அமிர்த பஜார் பத்திரிக்க , டெலிகிராப் போன்ற பத்திரிக்கைகளுக்கு மேற்கு வங்கத்தின் நூலகத்தில் இடமில்லை என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சங்க பரிவாரங்களின் அடிச்சுவட்டில் பயணித்து மார்க்சிசத்தை வங்க மண்ணில் துடைத்தெறிவேன் என்று கொக்கரித்து இனிமேல் மேற்கு வங்க கல்வி சாலைகளில் மார்க்ஸ , எங்கல்ஸ் போன்றவர்களின் கருத்துகளை உள்ளடக்கியதாக வரலாற்று பாடப்புத்தகங்களில் இராது என்று அறிவித்துள்ளார்.

இதே வழியில் சங்பரிவாரத்தினரின் மாணவர் அமைப்பு போராடியதை காரணமாக காட்டிஆயிரம் இராமயணங்கள்என்ற பேராசிரியர் முனைவர். ஏ.கே. ராமானுஜரின் நூல் டெல்லி பல்கலைகழகத்தில் வரலாற்றுப் பாடத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதையொத்த காரணங்களுக்காவே பம்பாய் பல்கலைகழகம , இலக்கியத்திற்காக புக்கர் பரிசு வென்ற பின்ட் அவர்களின் நாவலை இலக்கியப் பாடத்தில் இருந்து எடுத்தெறிந்தது.

இந்த பின்னணியில் தான் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் மற்றொரு புக்கர் பரிசு வென்ற சல்மான் ருஷ்டிக்கும் மறுக்கப்பட்டது. பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ருதின் மத அடிப்படைவாதிகளின் ஆதரவை இலக்கக் கூடாது என்பதற்காக இடது முன்னணி ஆட்சியின் போது   மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவையனைத்தையும் செய்யும் ஆட்சியாளர்கள் கூரைகளில் மேலேறி உரத்த குரல்களில் இந்தியாவை வல்லரசாக்குவோம் என்ற தேசிய வெறிவாத பிரச்சாரத்தை கட்சி வேறுபாடுகளின்றி செய்து கொண்டுள்ளன. கம்யூனிச இயக்கம் ஈன்ரெடுத்த மகத்தான பெண் தலைவர் கிலார ஜெட்கின் ஐரோப்பிய நாடுகளில் பாசிசம் தலைதூக்கிய போது வேதனையுடன் கூறினார். ஐரோப்பிய பாட்டாளிவர்க்கம் தனது வரலாற்று கடமையினை ஆற்றத் தவறிய குற்றத்திற்காக பாசிசம் எனும் கொடூரமான தண்டனையை அனுபவித்து கொண்டுள்ளது என்று. அதே வழியில் தான் இந்திய பாட்டாளி வர்க்கத்தின் முழு முதற் பிரதிநிதிகள் என்று தங்களை கூறிக் கொள்ளக்கூடிய அமைப்புகளும் அவர்களது முற்போக்கு எழுத்தாளர் சங்கங்களும் இந்த தாக்குதல்களை அடையாளம் கண்டு கொள்ளாமல் அம்பலப்படுத்த முயற்சிக்காமல் தங்களது தாய் அமைப்புகளான கட்சிகளின் நாடாளமன்ற வாத நலன் கருதி முடங்கிக் கிடக்கின்றன.

இச்சூழ்நிலையில் கொடுமையான பாசிசத்தின் கோரப்பற்கள் கருத்து சுதந்திரத்தின் குரல் வலையை கடித்து குதறுவதற்கு முன் குறைந்தபட்சம் முற்போக்கு எழுத்துலகமாவது அணிதிரண்டு அதனை முறியடிக்க முயற்சிப்போம்!

 இடம : மணியம்மை மழலையர் & தொடக்கப்பள்ளி , (வடக்குமாசி வீதி கிருஷ்ணன் கோவில் எதிரில்), மதுரை

 நாள : 20 .05 .2012 

நேரம : காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை

சிறப்புர : பேராசிரியர். கோவிந்தன்

                   தோழர்.அ. ஆனந்தன்

                தென் இந்திய பொதுசெயலாளர் CWP

ஏற்பாடு : கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் ( CWP )

           தமிழ்நாட ,    தொடர்பிற்கு : 9443080634

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com