Contact us at: sooddram@gmail.com

 

ஊடக அறிக்கை!..

நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசாங்கம் நியாயமாக நடக்கத் தவறினால் நான் தொடர்ந்தும் அரசில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்யத் தயாராக உள்ளேன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மீண்டும் பகிரங்க அழைப்பு!

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடக்கத் தவறினால் தான் தொடர்ந்தும் அரசில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க வருமாற  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி மீண்டும் பகிரங்க அழைப்பு விடுத்து உள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினையை நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஊடாக தீர்க்க வருமாறு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை நோக்கி அரசாங்கம் அழைப்பு விடுத்து இரு வருடங்கள் கழிந்து விட்டன. அறுபது ஆண்டு காலப் பிரச்சினையை நாடாளுமன்றத் தெரிவுக் குழ  ூலம் ஆறுமாத கால அவகாசத்தில் தீர்ப்போம் வாருங்கள் என்று கால வரையறையை வழங்கியும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நடைமுறை யதார்த்த வழிமுறையை முயன்றும் கூட பார்க்காமல் திட்டமிட்டே  தட்டிக்கழித்து வருகிறது.

அழைத்த போதே அவர்கள் வந்திருந்தால் இதுவரை நாம் தீர்வை எட்டியிருக்கலாம். ஆனாலும், வழமைபோல் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் பிரச்சினையை தீராப் பிரச்சினையாக நீடிக்க வைப்பதற்காக பல்வேறு பொய்யான காரணங்களையே கட்டவிழ்த்து வருகிறது. அரசியலுரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவான மாகாண சபை முறைமையில் இருந்து தொடங்குவதே நடைமுறை யதார்த்தம் என்று நாம் தீர்க்கதரிசனமாக ஆரம்பத்தில் இருந்தே தெரிவிதது வருகின்றபோது மாகாண சபை முறைமை உருப்பட்டு வராத, ஒன்றுக்கும் உதவாத, உழுத்துப்போன, அரை குறை தீர்வு என்று தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர் ஆரம்பம் தொட்டே தட்டிக்கழித்தே வந்தனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் உட்பட எமக்குக் கிடைத்த பல அரிய வாய்ப்புக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து தட்டிக் கழித்து வருவதையே வழமையாக்கிக் கொண்டுள்ளனர் என்பது வரலாறு. எமது தீர்க்கதரிசனங்களை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அன்றே முன் வந்திருந்தால் எமது மக்கள் பாரிய அழிவுகளை சந்தித்த துயரங்கள் இங்கு நடந்திருக்காது. ஆனாலும், காலங்கடந்தாவது எமது வழிமுறையை ஏற்று தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர் மாகாணசபை முறைமையை ஆதரித்து அதற்கான தேர்தலிலும  ோட்டியிட்டு இன்று அதன் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளார்கள்.

இவ்வாறு எமது வழிமுறைக்கு அவர்கள் வந்திருப்பது தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்தது என்பது உண்மையாக இருக்குமென்றால், இன்று நாம் கூறும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் இறுதித்தீர்வை எட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் மறுக்க வேண்டும்? வட மாகாண சபை அதிகாரத்தை தம் வசப்படுத்திய தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர், அதன் பயன்களை எமது மக்கள் அனுபவிப்பதற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள மறுத்த  வந்தார்கள்.

அதற்கு பல்வேறு தடைகள் இருப்பதாக பொய்யான காரணங்களைச் சொல்லி தட்டிக்கழித்து வந்த அவர்கள், தாம் கூறிவந்த போலியான எந்தக் காரணங்களுக்கான மாற்றங்களும் நடந்திராத போதும், இன்று யாழ், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் காலம் கடந்தாவது கலந்து கொள்ள முன் வந்திருக்கிறார்கள். எமது யதார்த்த வழிமுறையை ஏற்று யாழ், கிளிநொச்சி மாவட்  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு  கலந்து கொள்ள முன் வந்திருப்பது தமிழ் பேசும் மக்கள் நலன் சார்ந்தது என்பதில் உண்மை இருக்குமாயின், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் எமது மக்களின் பிரச்சினைக்கான இறுதித் தீர்வை எட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் பின்னிற்க வேண்டும்?

மகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை என்று போலிப் பரப்புரை செய்து வரும் அவர்கள், மாகாண சபை அதிகாரங்களை மத்திய அரசு பிடுங்க நினைக்கிறது என்று இன்னொரு பொய்யை சொல்வதன் மூலம் மாகாண சபைக்கு அதிகாரங்கள் உண்டு என்பதையே அவர்கள் தம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்கிறார்கள். எனக்கு எமது மக்களின் உரிமைகளே பிரதானம். எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சியே எனதும் நீடித்த மகிழ்ச்சி ஆகும். அரசியலுரிமை, அபிவிருத்த மற்றும் எமது மக்களின் வாழவ்வாதார உரிமைகளை மத்திய அரசில் இருந்து எமது மக்களுக்கு பகிர்ந்தளிக்கவே நான் அரசில் அங்கம் வகித்து வருகின்றேன். பலரது தூற்றுதல்களுக்க  மத்தியிலும் நான் தொடர்ந்தும் அரசில் அமைச்சராக பங்கெடுத்து வருவது எமது மக்களுக்காகவே. எனது சாணக்கிய தந்திர மதிநுட்ப வழிமுறை மூலம் எமது மக்களுக்காக பலதையும் நான் ஆற்றி வருகின்றேன். எமது வழிமுறை மூலம் அனைத்து உரிமைகளையும் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

உள்நாட்டில் அனைத்து தமிழ்;க கட்சி தலைமைகளும் இணைந்து யதார்த்த வழிமுறையில் நல்லெண்ண சமிக்ஞையை அரசுக்கு காட்டாத வரை சர்வதேச அழுத்தங்கள் எமது மக்களுக்கு ஒரு போதும் எந்தத் தீர்வையும் பெற்றுத்தராது. எமது நடைமுறை யதார்த்த வழிமுறையை ஏற்று தமிழத்; தேசியக் கூட்மைப்பு வந்திருப்பது உண்மை என்றால், நடைமுறைக்கு சாத்தியப்படாத வெற்று வீர கோசங்களை கைவிட்ட  ாம் கூறி வந்த மாகாண சபை முறைமையில் இருந்து தொடங்குவதை தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு ஏற்று வந்திருப்பதும்,

யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எமது வழிமுறையை பின்பற்றி கலந்து கொள்ள முன்வந்திருப்பதும் தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்தது என்பது உண்மை என்றால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவும் எமது மக்களுக்கான இறுதித் தீர்வை நோக்கிச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வர வேண்டும் என நான் மீண்டும் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். எனத் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளத் தவறினால் அரசில் தொடரந்தும் அங்கம் வகிப்பது குறித்து மறு பரிசீலனை செய்ய தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

(ஊடக இணைப்பாளர்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com