Contact us at: sooddram@gmail.com

 

நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் நில அபகரிப்பும், படைக்குவிப்பும் நடக்கிறது என்று யாரும் நீலிக்கண்ணீர் வடிக்கும் அவசியம் இருக்காது 

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் இங்கு நில அபகரிப்பும், படைக்குவிப்பும் நடக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வாருங்கள் என நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி தொடர்ச்சியாக பகிரங்க அழைப்பு விடுத்து வருகின்றேன். இறுதியாக நான் விடுத்த அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் விடுத்திருந்த பதிலறிக்கையில், சுயலாப அரசியல் சேற்றில் ஊறிப்பெருத்த அவர்களது பொய் முகங்களே தெரிகின்றன.

எமது மக்கள் நலன் சார்ந்து நான் விடுத்திருக்கும் அழைப்பை அரசாங்கத்தின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதாகக் கூறும் சுரேஸ் பிரேமச்சந்திரன், இந்தியப்படை  இங்கு நிலை கொண்டிருந்த வேளை அதிகார மிடுக்கில் அவர் விடுத்த அறிக்கைகள் யாவும் இந்திய அரசின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக விடுக்கப்பட்ட அறிக்கைகள் என்று அர்த்தமா?...அல்லது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் ஆட்சிக் காலத்தில் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் கீழ் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சின் ஆலோசகராக சுரேஸ் பிரேமச்சந்திரன் தொழில் புரிந்த போது, அவர் விடுத்த அறிக்கைகள் யாவும் அன்றைய சந்திரிக்கா அரசின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க விடுக்கப்பட்ட அறிக்கைகள் என்று அர்த்தமா?...அல்லது அவர் அன்று கூறிய கருத்துக்கள் யாவும் அவர் சார்ந்திருந்த அரசுகளின் ஊதுகுழல் அறிக்கைகளா?....

போர் நடந்த போது, போர் முடிவடைந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்று நான் கூறியதாக, கனவு கண்டவர் போல் பொய் கூறி புலம்புகிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள். ஆகாயத்தை பிளந்து சென்று சூரியனையும் சந்திரனையும் பிடித்து பூமிக்கு கொண்டுவருவேன் என்று வாக்குறுதி கொடுத்தவன் நான் அல்ல. இந்த வெட்டி வீரப்பேச்சுக்களால் எமது மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியவர்களும் நாம் அல்லர். நடைமுறை சாத்தியமான வழிமுறைகள் குறித்து சிந்தித்து செயற்பட்டவர்கள் நாம் என்பதும், நடந்தேற முடியாத கோரிக்கைகளை முன் வைத்து, வாக்குகளுக்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்கி, எமது மக்களை அழிய கொடுத்துவிட்டு ஓடிப்போனவர்கள் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர் என்பதும் உலகறிந்த உண்மை.

யுத்தத்தின் பின்னர் மட்டுமல்ல, அழிவு யுத்தம் நடந்த காலத்திலும் எமது மக்களின் அவலங்களை துடைக்க மக்களை கைவிட்டு எங்கும் ஓடிப்போகாமல் உழைத்தவர்கள் நாம்.

இன்று நேற்றல்ல, இந்தியப் படை காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்து சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களின் அதிகார வன்முறைக்கு அஞ்சி, கொழும்பு நோக்கி ஓடி வந்த எமது இளைஞர், யுவதிகளை கொழும்பில் புனர்வாழ்வு முகாம்கள் அமைத்து அவர்களை பாதுகாத்து, அநீதிகளை அன்றும் தட்டிக்கேட்டவர்கள் நாம்.

மங்கள முனசிங்க காலத்தில் தெரிவுக்குழுவில் எதுவும் நடக்கவில்லை என்பது உண்மை. அந்த சூழலும் வேறு.

ஆறு மாத கால அவகாசம் வழங்கி, அரசாங்கம் இன்று அழைக்கிறது.

நானும் கலந்து கொள்ளும் இந்தத் தெரிவுக் குழுவில் பங்கெடுக்க வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன்.

அதில் தீர்வு கிட்டவில்லை என்றால், அரசாங்கம் நீதியாக நடந்து கொள்ளவில்லை என்றால், தெரிவுக் குழுவில் இருந்து மட்டுமல்ல அரசில் இருந்தே நானும் வெளியேறத் தயார் என்றே கூறுகின்றேன்.

அதன் பின்னர் அரசாங்கம் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நானும் ஏற்றுக்கொள்வேன். நானும் விமர்சனங்களை முன்வைப்பேன்.

அறுபது ஆண்டுகளாக உரிமைகள் இல்லை என்று இருந்த நாம் ஆறு மாதங்கள் மட்டும் முயன்று பார்ப்பதில் ஏன் தயக்கம் என்றுதான் கேட்கிறேன்?....

மங்கள முனசிங்க காலத்தில் தெரிவுக் குழுவில் எதுவும் நடக்கவில்லை என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்கள்,..

டட்லி - செல்வா, பண்டா - செல்வா காலத்தில் இருந்தே நாடாளுமன்றத்தில் இருந்து வருகின்றார்கள்.

நாடாளுமன்றத்தின் ஊடாக அன்று அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு கிட்ட வில்லை என்பதற்காக, இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்தை பகிஸ்கரித்தார்களா?... இல்லையே.

அது போலவே மங்கள முனசிங்க காலத் தெரிவுக்குழு தோல்வியில் முடிந்திருந்தாலும், இன்றைய தெரிவுக் குழுவையும் எமது மக்களுக்காகப் பயன்படுத்தி முயன்று பார்க்க ஏன் தயக்கம்?...

31 பேர்கள் இருக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் 3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டும் இருப்பதால் எதை சாதிக்க முடியும் என்று கேட்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள்,

225 உறுப்பினர்கள் இருக்கும் நாடாளுமன்றத்தில் 14 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருந்து எதை சாதிக்கலாம் என்று எண்ணுகின்றார்?....

அரசியல் தீர்வு கிடைத்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யான காரணங்களை கட்டவிழ்த்து வருகின்றது.

நிரந்தர அரசியல் தீர்வின் ஊடாகவே அவர்கள் நீலிக்கண்ணீர் வடிக்கும் நில அபகரிப்பையும், படையினர் நிலை கொண்டிருப்பதையும் முழுமையாக நிறுத்த முடியும்.

நான் தனியொரு அமைச்சராக இருந்து யுத்தத்தின் பின்னர் பெருமளவிலான நிலங்களை அரச படைகளிடம் இருந்து மீட்டு எமது மக்களிடம் கொடுத்திருக்கிறேன்.
 
இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் முடிந்தளவு மீள்குடியேற்றம் செய்திருக்கிறேன்.

படையினர் நிலை கொண்டிருந்த காவலரண்கள் மற்றும் முகாம்கள் பலவற்றை அகற்ற முடிந்திருக்கின்றது.

புலிகள் தங்களது முக்கிய தளமாக பயன்படுத்தி வந்து யுத்தத்தின் மூலம் படைகள் தமது முகமாக பயன்படுத்திய யாழ்;.பல்கலைக் கழகத்திற்கு உரித்தான விவசாய மற்றும் பொறியியல் பீடம் அமைக்கப்படுகின்ற கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள பாரிய நிலப்பரப்பை மீட்டுக் கொடுக்க முடிந்துள்ளது.

இவ்வாறு பல உதாரணங்களை; என்னால் கூற இயலும்.

இவைகளைக் கண்டு தாம் அரசியல் நடத்துவதற்கான மக்களின் அவலங்கள் யாவும் தீர்ந்து வருகின்றனவே என்று அச்சப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,

நிரந்தர அரசியல் தீர்வு கிடைத்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் சுலபமாகவே தீர்ந்து விடும் என்று தமது அரசியல் இருப்பை எண்ணி கலங்கி நிற்கிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னரே அரசாங்கம் அறிவித்த போது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்று வந்திருந்தால,..

அண்மையில் நடந்து முடிந்ததாக அவர்கள் கூறும் சுற்றி வளைப்புகளோ, சில கைது நடவடிக்கைளோ இங்கு நடந்திருக்க வேண்டிய சம்பவங்களும் இடம்பெற்றிருக்காது.

இதுவரையில் நிரந்தரத் தீர்வையும் எட்டியிருக்கலாம்.

அநீதிகளைத் தட்டிக்கேட்பதென்பது, அவைகளை தடுத்து நிறுத்தவே அன்றி, எமது மக்கள் மீது அவலங்களை மேலும் சுமத்துவதற்காக அல்ல.

13 வது திருத்தச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களும், அதை உதாசீனம் செய்தவர்களும் இன்று அதையே ஏற்றுக்கொண்டு வர முடியும் என்றால்,...

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களை மத்திய அரசின் அதிகாரப் பறிப்பு என்று கூறியவர்கள்,...

இன்று அதே மத்திய அரசோடு இணைந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கெடுக்க வந்திருப்பது இதய சுத்தியானது என்றால்,..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியான நியாயங்களை கற்பிப்பதைக் கைவிட்டு மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை மக்களின் விடிவிற்காகப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

எனத் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தமிழ் பேசும் மக்களின் சம கால பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் கொண்டிருந்தால், அது அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் யதார்த்த வழிமுறை மூலமே முடியும் என்ற மதிநுட்ப சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com