Contact us at: sooddram@gmail.com

 

அடுத்த தேர்தல் வெற்றி கருதியே தமிழ்க் கூட்டமைப்பினர் அஞ்சலி நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இருபது வருடங்களுக்கு மேலாக பலத்த சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக எனக்கு அரசியல் அங்கீகாரத்தை வழங்கி வருகின்ற தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும் எமது மக்களின் நீடித்த துயர்களைப் போக்குவதற்காக நான் அங்கம் வகித்து வருகின்ற அரசாங்கத்தின் அமைச்சர் என்ற ரீதியிலும் இந்தச் சபையில் நான் சில நியாயங்களை எடுத்துரைக்க விரும்புகின்றேன். நாம் வெறுமனே அரசியல் உரிமைக்காக மட்டும் குரல் கொடுத்து உழைத்து வருபவர்கள் அல்லர். அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை உருவாக்கவும், கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கவும் நாம் அன்றிலிருந்து குரல் கொடுத்து வருபவர்களாவர். அத்தோடு மனித குலத்தை, மக்கள் சமூகத்தை சீரழிக்கும் எந்த செயல்களையும் நாம் ஒரு போதும் எற்றுக்கொண்டவர்கள் அல்ல. மனித சமூகத்தையே சீரழிக்கும் போதைவஸ்து பாவனையை நாம் கொள்கை ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் எமது ஆரம்பகால உரிமைப் போராட்ட காலத்தில் இருந்தே எதிர்த்து வந்திருக்கின்றோம்.

 நான் எமது மக்களின் சார்பாக அங்கம் வகித்து வரும் அரசாங்கம் போதைவஸ்து பாவனைக்கோ, அல்லது அதன் விற்பனைக்கோ ஒரு போதும் துணை போகாது என்பது எனது நம்பிக்கை. இங்கு விசித்திரமான விடயம் என்னவென்றால், போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட சிலரை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. போதைவஸ்து வியாபாரத்தில் இருந்து கிடைக்கும் வெளிநாட்டுப் பணத்தில் சுயலாப அரசியல் நடத்திக் கொண்டு இன்று இந்த நாடாளுமன்றத்தில் போதைவஸ்தை எதிர்ப்பது போல் நாடகம் ஒன்றை அரற்கேற்றி வருகிறது.

தமிழ் பேசும் மக்களின் பெயரால் அரசியல் நடத்த வந்தவர்கள் சமூகத்தை சீரழிக்கும் வியாபாரங்களை நடத்துவதால்தான் அரசியல் தீர்விற்கான வாய்ப்புக்கள் கிடைத்தும் எமது பிரச்சினை தீர்வின்றி இழுபட்டுச் செல்கிறது,

விலை மதிக்க முடியாத மனித உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம். பல்வேறு இடப்பெயர்வுகளையும், சொத்திழப்புக்களையும், சொந்த நிலங்களைப் பிரிந்து வாழும் அவலங்களையும் நாம் கண்டிருக்கின்றோம், ஆனாலும், அனைத்து அவலங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்த அர்த்தமற்ற அழிவு யுத்தத்தை நிரந்தரமாகவே முடிவிற்குக் கொண்டு வந்து......

அமைதி தரும் சூழலை உருவாக்கி, அந்த அமைதிச் சூழலில் இருந்து அரசியல் தீர்வு நோக்கிச் செல்லும் பாதை இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த அமைதிச் சூழலை உருவாக்கித் தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நான் இந்த சபையில் மீண்டும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

இதேவேளை... 2009ம் ஆண்டு அழிவு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், இந்த சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக உரையாற்றியிருந்த அதன் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள்

அழிவு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி கூறி உரையாற்றியிருந்ததையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

போதை வஸ்துப் பாவனைக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகக் கூறி இந்த சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இறந்து போன மக்களுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இல்லை என்று நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார்கள்.

இதுவரை கால அழிவு யுத்தத்தின் போது பலியாகிப்போன எமது மக்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது, இன்னமும் எந்த இழப்பின் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வையும், நீடித்த மகிழ்ச்சியையும் உருவாக்கிக் கொடுப்பதேயாகும்.

அதற்காகவே பிறந்திருக்கும் இந்த அமைதிச் சூழலை எமது மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காகப் பயன்படுத்த எண்ணி நாம் நடைமுறை யதார்த்த வழி நின்று உறுதியுடன் உழைத்து வருகின்றோம்.

ஆனாலும், அழிவு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதை ஆதரிப்பதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறு புறத்தில் பலியாகிப்போன எமது மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களுக்கு மாற்aடாக ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் விருப்பமின்றி இருந்து வருகிறது.

இறந்து போன எமது மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையாகவே அஞ்சலி மரியாதை செலுத்த விரும்பியிருந்தால் எமது மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க அவர்கள் முன் வந்திருப்பார்கள்.

மீண்டுமொரு பொன்னான வாய்ப்பாக பிறந்திருக்கும் இந்த அமைதிச் சூழலை அரசியல் தீர்வுக்காக அவர்கள் பயன்படுத்த முன்வந்திருப்பார்கள்.

ஆனாலும் அவர்கள் முன்வரவில்லை. ஏன் முன்வரவில்லை? இது ஆச்சரியமான ஒன்றல்ல.... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பங்கள் யாவும் அப்பாவி மக்களின் அழிவுகளும், அவலங்களுமே.

போதைவஸ்து பாவனை கூட இங்கு இருக்க வேண்டும் என்பதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது.

ஏனெனில் கலாசார சிழிவுகள் நடப்பதாகக் காரணம் காட்டி அதில் கூட தமது சுயலாப அரசியலை நடத்திடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கங்கனம் கட்டி நிற்கின்றது.

எங்கே ஒரு அவலம் நடக்கின்றதோ. எங்கே ஒரு மனித உயிர் பலியாக்கப்படுகின்றதோ... எங்கே கலாசார சீரழிவுகள் நடப்பதாக கதைகள் கட்டி விடப்படுகின்றனவோ, அங்கே அதை வைத்து அழுவது போல் நடித்து, நீலிக்கண்ணீர் வடித்து. அந்த அவலங்களையும், இழப்புகளையும் கலாசார சீரழிவுகளையும் அரசியலாக்கி அதை அடுத்த தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்துவதே அவர்களது வரலாறு.

சவப்பெட்டிக்கடைக்காரன் கூட சாவு நடக்கும் போது துயரப்படுவான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ மனித உயிர்கள் பலியாகிப்போனால் அதில் மகிழ்ச்சி கொண்டாடுகின்றார்க்ள.

இறந்து போன மக்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்துவது உண்மை என்றால்.. எமது மக்களை நேசித்த தமது தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம்,, ஆலாலசுந்தரம், தர்மலிங்கம், சரோஜினிதேவி யோகேஸ்வரன், பொன் மதியுகராஜா, பொன் சிவபாலன், தோழர் பத்மநாபா, சிறி சபாரத்தினம் போன்றவர்களுக்கும் அஞ்சலி செலுத்த முன்வந்திருப்பார்கள். தமது தலைவர்களுக்கே உரிய முறையில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள், அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது போல் நடிப்பது வெறும் பகல் வேசம்.

இறந்து போன மக்களை மனதில் நிறுத்தி அஞ்சலி செலுத்தாமல் அடுத்த தேர்தல் வெற்றியை மனதில் வைத்துக் கொண்டே இவர்கள் இந்த அஞ்சலி நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

போதைவஸ்து பாவனை நடப்ப தாகவும், அதனால் சமூகம் சீரழிந்து போவதாகவும் கூறுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமது சுயலாப அரசியலால்தான் அப்பாவி மக்கள் அழிந்தனர் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? முள்ளி வாய்க்கால் அழிவுகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேசி வருவது வெறும் பொய் வேசம்.

வன்னி மண்ணில் யுத்தம் நடப்பதற்கு முன்பாக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து.

யுத்தம் தொடங்கினால் அழிவுகள் நடக்கப் போகின்றன. அவலங்கள் தொடரப் போகின்றன. அதைத் தடுப்பதற்கு வழியுண்டு வாருங்கள். இணைந்து செயற்படுவோம். எமது மக்களைக் காப்போம் என்று கேட்டிருந்தேன்.

ஆனாலும், தமிழ் பேசும் மக்கள் மீது எவ்வளவு இரக்கம் கூட காட்டாமல் எனது கோரிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தட்டிக்கழித்திருந்தார்கள்.

அதன் பின்னர், வன்னியில் அழிவு யுத்தம் தொடங்கிய போது எமது மக்களை அழிவுகளில் இருந்து பாதுகாக்க, அவர்களை யுத்தம் இல்லாத பிரதேசங்களுக்கு வருமாறு நாம் கேட்டிருந்தோம்.

அப்பாவி மக்களை யுத்த கேடயங்களாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும்..... யுத்த பிரதேசங்களை விட்டு அப்பாவி மக்களை வெளியேறி வர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும்.......

கோரிக்கைகளை முன்வைத்து மக்களை அணி திரட்டி நாம் மாபெரும் ஆர்ப்பாட்டங் களையே நடத்தியிருந்தோம்.

அப்போதும் 22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நாற்காலிகளை சூடேற்றிவிட்டு, எமது மக்களை தமது போதை வார்த்தைகளால் அழியவைத்து தமது குடும்பங்களோடு, உறவுகளோடு தாம் மட்டும் தப்பிச் சென்று உலக நாடுகளில் உல்லாசம் நடத்திக் கொண்டிருந்தனர்.

எந்தவொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராவது யுத்தமற்ற பிரதேசத்தை நோக்கி எமது மக்கள் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கவில்லை.

அன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வினோநோதராதலிங்கம் லண்டனில் வைத்து கருத்து தெரிவித்திருந்த போது.....

தான் மட்டும் இது குறித்துக் குரல் கொடுத்திருந்ததாகவும், ஏனைய 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாய் மூடி அழிவுகளைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்ததாகவும் கூறியிருந்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

பலியாகிப்போன நம் உறவுகளுக்கு அஞ்சலி நடத்துவது தவறல்ல. அதை யாரும் தடுக்க முடியாது. ஆனாலும். பலியாகிப்போன எமது மக்களின் ஆத்மாக்களின் மீது ஏறி நின்று போதை ஏற்றும் சுயலாப அரசியல் நடத்துகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

மனித குலத்தையே சீரழிக்கும் வகையில் நடத்தப்படும் போதைவஸ்து தொழில் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு பணத்தில் தமது உல்லாச பயணங்களையும், சுயலாப அரசியலையும் நடத்தி வருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போதைவஸ்து பாவனைக்கு எதிராகப் பேசுகின்றார்கள்.

சாராயக்கடை முதலாளிகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமூகம் சீரழிகின்றது என்று ஓலமிடுகின்றார்கள்.

அயலக நட்பு நாடாகிய இந்தியா கூட தமிழ்த்சியக் கூட்டமைப்பின் சுயலாப அரசியலை புரிந்து கொண்டு தனது அதிருப்தியை காட்டத் தொடங்கியிருக்கிறது. கையிலே நெய்யை வைத்துக்கொண்டு வெண்ணெய்க்கு அலைவது போல், கிடைத்திருக்கும் மாகாணசபையை சரிவர நடத்த விரும்பாதவர்கள் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.

இன்று, தென்னாரிக்காவை அழைக்கப் போவதாகக் கதை விடுகின்றார்கள். தென்னாபிரிக்காவே.... தமிழ் பேசும் மக்களை மனித்துக் கொள் என்று நாங்கள் தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டியுள்ளது.

ஏனென்றால், தென்னாபிரிக்கா மீதும், அதன் சுதந்திர தலைவரான கறுப்பு சூரியன் நெல்சன் மண்டேலா மீதும் தமிழ் பேசும் மக்கள் அளவு கடந்த மரியாதை வைத்திருக்கின்றார்கள்.

சிறியது, பெரியது என்று பேதம் பாராமல், அனைத்து கட்சிகளும், இணைந்து அனைத்து இன மக்களுக் குமான தீர்வை உருவாக்கி தலை நிமிர்ந்து நிற்கும் தேசம் தென்னா பிரிக்கா.

உரிமை கிடைக்க வேண்டும் என்றால் எதிரியுடனும் பேசு. என்றார் தலைவர் நெல்சன் மண்டேலா.

இதே வழிமுறையைத்தான் இலங்கை விவகாரத்திலும் தென்னாபிரிக்கா கையாள விரும்பும்.

தமது சொந்த சலுகைகளுக்காக மட்டும் பின் கதவு தட்டி அரசுடன் கூனிக்குறுகி பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. விளம்பரத்திற்காக வெளியே மட்டும் வீரம் பேசிக் கொண்டு, அதே அரசுடன் பகைமை கொப்பளிக்க பேசி வருகிறது. இந்த சபையில் போதைவஸ்துக்கு எதிராகப் பேச வந்திருக்கும் இவர்கள், போதைவஸ்தை விடவும் மோசமான போதை வார்த்தைகளோடு வந்திருக்கிறார்கள். போதைவஸ்தை விடவும், போதை வார்த்தைகள்தான் அதி மோசமானவை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே வெளிச்சம்.

போதை ஏற்றும் வார்த்தைகளை உணர்ச்சி பொங்க பேசி வாக்குறுதிகளை போதைப்பொருளாக அள்ளி வழங்கி,

தமிழ் பேசும் மக்களை தொடர்ந்தும் தமது வெற்று வீர மயக்கத்தில் வைத்திருக்கலாம் என்று கனவு காண்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

உரிமை கிடைக்க வேண்டும் என்றால் எதிரியுடனும் பேசு என்று மதிநுட்ப சிந்தனை வகுத்த தென்னாபிரிக்க நாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவேச தெருக்கூத்துக்களை ஒரு போதும் விரும்பாது.

சர்வதேச நாடுகள் மீதான நம்பிக்கையை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தாமே வளர்த்து விட்டு, பின்னர் ,அதையே எமது மக்களின் மனங்களில் வெறுப்புணர்வுகளாக மாற்றி விட்டவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்.

இன்று தென்னாபிரிக்காவை துணைக்கு அழைப்பவர்கள், தமது சுயலாப நாடகங்கள் அரங்கேற முடியவில்லை என்றதும்,

நாளை தென்னாபிரிக்காவும் ஏமாற்றி விட்டது என்று கூறி எமது மக்கள் மனங்களில் தென்னாபிரிக்கா குறித்த வெறுப்புணர்வுகளை வளர்க்கவே திட்டமிடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ஆகவேதான் தமிழ் பேசும் மக்கள் சார்பாக நான் தென்னாபிரிக்காவே எங்களை மன்னித்து விடு என்று முன்கூட்டியே வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்.

ஆனாலும் இந்த சபையின் ஊடாக ஒன்றை மட்டும் நான் கூற விரும்புகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது போல் தென்னாபிரிக்கா எமது அரசியலுரிமை தீர்வு விடயத்தில் தலையிட முன்வந்தால் அதை நான் வரவேற்கத் தயாராகவே இருக்கின்றேன்.

இதேவேளை அதற்கான கால அவகாசத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சகல அரசியல் அதிகாரங்களும் இருக்கின்றன. வடக்கு கிழக்கில் ஈ. பி. டி. பி. யினராகிய எம்மிடம் இருக்கும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களை விட, ஏனைய 14 நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் யாழ். மாவட்டத்தில் எம்மிடம் இருக்கும் 4 உள்ளூராட்சி சபைகளை விட,

ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறார்கள்.

அதைவிட, எமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பான வட மாகாண சபை அதிகாரத்தை அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வைத்திருக்கிறார்கள்.

இத்தனை அதிகாரங்களையும் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூடமைப்பு தமிழ் பேசும் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைக்க முயற்சிக்கின்றது.

உண்மையாகவே மாகாணசபையை செயற்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பமின்றி இருக்கின்றதா.....

அல்லது மத்திய அரசு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்கின்றதா...

இந்தக் கேள்விகளுக்கான விடையினை தமிழ் பேசும் மக்கள் மேலும் முழுமையாக அறிந்து கொள்வதற்காக, எது உண்மை எது பொய் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக நான் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளின் முன்பாகவும், வட மாகாண ஆளுநரின் முன்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பகிரங்க விவாதம் நடத்த விரும்பி அவர்களை அழைக்கின்றேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com