Contact us at: sooddram@gmail.com

 

வெளிநாடு வாழ் சிறீலங்கா தமிழர் அமைப்பு’ – Non-Resident Tamils of Sri Lanka(NRTSL)ஒரு அறிமுகம்

(தோழர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்)
 

எதிர்வரும் 31-05-2015ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இலண்டனில் ‘வெளிநாடு வாழ் சிறீலங்கா தமிழர் அமைப்பு’ (NRTSL) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இவ் வைபவம் தொடர்பான முன்னோட்டம் இதுவாகும். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியும், நல்லிணக்க முயற்சிகளும் ஒருங்கிணைவாக எடுத்துச் செல்வதற்கு சகல இன மக்களினதும் பங்களிப்பு அவசியமானது. இதில் வெளிநாடு வாழ் இலங்கையர் இணைவு பிரத்தியேகமானது. அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது. ஏனெனில் மிகவும் கணிசமான தொகையுள்ள தமிழ் சமூகத்தினர் புலம்பெயர் நாடுகளில் காத்திரமான பொருளாதார வலுவுள்ள மக்களாக உள்ளனர். இம் மக்கள் இலங்கையின் ஒட்டுமொத்தமான பொருளாதார அபிவிருத்தியில் வலுவான விதத்தில் இணைக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களின் அல்லது தேசத்தின் சகல சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் அபிலாஷைகளை அர்த்தமுள்ள விதத்தில் தீர்க்க முடியும். பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தாமல் அரசியல் இணக்கத்தினை ஏற்ற விதத்தில் எடுத்துச் செல்ல முடியாது.

பொருளாதாரம் என்ற ‘கேக்’ இனது அளவு அதிகரிக்காமல் இருக்கும்போது தேசிய சிறுபான்மை இனங்களுக்கு கிடைக்கும் அளவு சிறு தொகையாக உள்ளது. இதற்கிடையில் மத, மொழி மற்றம் இனவாத முரண்பாடுகள் கிடைக்கும் அச் சிறு அளவையும் குறைத்து விடுகின்றன. பொருளாதார பங்களிப்பு என்பது ஒரு வழிப் பாதை அல்ல. முதலீடு செய்பவர்களுக்கும், அதன் பயனை அடைபவர்களுக்குமிடையே சமநிலை ஏற்படுவது அவசியம். அவரவர்களது நலன்கள் கவனத்தில் கொள்ளப்படுவது அவசியம். இதில் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்கக்கூடாது.

புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கையர்கள் குறிப்பாக தமிழர்கள் தமது தாயகத்துடனான உறவுகளைப் பலம்படுத்துவதில் மிகுந்த ஈடுபாட்டினை கொண்டுள்ளனர். தேசிய இனப் பிரச்சனை சுமுகமாகத் தீர்க்கப்படுவது அவசியமானது. தாயகம் இயற்கை அழிவகளினாலும், ஆயுதப் போராட்டத்தினாலும், தீர்க்க தரிசனமற்ற அரசியல் வழிகாட்டுதல்களினாலும் மிக நீண்ட காலமாக மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாக உள்ளது. இதனால் நாட்டின் ஏனைய பாகங்களை விட மிகவும் கூர்மையான பிரச்சனைகள் இங்கு காணப்படுகின்றன. இப் பிரச்சனைகளின் தாக்கங்கள் காரணமாக வெளியேறி தாயகத்திற்கு அப்பால் குறிப்பாக மேற்குலக நாடுகளில் வாழும் இம் மக்கள் தற்போது அங்கு ஓரளவு அமைதி காணப்படுவதால் அதனைப் பயன்படுத்தி நிரந்தர அமைதியை நோக்கி செயற்படுவது அவசியமாகிறது. நிரந்தர அமைதி என்பது பொருளாதார வளர்ச்சி பற்றிய ஏற்பாடுகளுடன் இணைந்து பயணிப்பதன் மூலமே சாத்தியமாகும்.

2009ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள ராணுவம், பாதுகாப்பு காரணங்களால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலங்கள், போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பொதுமான வாழ்வாதாரங்கள் இல்லாத நிலை, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, வேலைவாய்ப்பு, பெண்கள், சிறுவர், மாற்றுத் திறனாளிகளின் தேவைகள், பாதுகாப்புகள் என பட்டியல் நீண்டுள்ளன. அதன் காரணமாக அரசியல் நிலமைகளும் தொடர்ந்தும் குழப்ப நிலையில் உள்ளன. இவை தாயகத்திற்கு அப்பால் வாழும் தமிழர்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்த தவறவில்லை.

போரின் காரணமாக வெளியேறிய இம் மக்கள் தமது சொத்துக்கள், உற்றார், உறவினர், நண்பர்களின் எதிர்காலம் குறித்து கவலை அடையத் தொடங்கினர.; புலம்பெயர் தமிழர்களை அரச விரோதிகளாகவும், பிரிவினைச் சக்திகளாகவும், மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்திற்குள் நாட்டைத் தள்ளுபவர்களாகவும் இலங்கை அரசியலில் உள்ள ஒருசாரார் அடையாளப்படுத்த தொடங்கினார்கள். இதனால் அரசாங்கம் மாறியபோதும் மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்படவில்லை. இந் நிலை தொடர்ந்து நீடிக்குமாயின் அம் மக்களின் வாழ்வு மேலும் பாதிக்கப்படும் என்பதால் அதனைத் தடுத்து புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பை அர்த்தமுள்ள விதத்தில் எடுத்ததுச் செல்வதற்கான ஒரு முயற்சியே இதுவாகும்.

இலங்கை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் அடிப்படையில் வித்தியாசமானது. ஜனநாயகம், பன்மைத்துவம், மனித உரிமை, நல்லாட்சி, ராணுவ அல்லது குடும்ப சர்வாதிகாரம் என்பவற்றிற்கு எதிரான போக்கு போன்றன குறிப்பிடத்தக் அம்சங்களாகும். இரண்டு படி அரிசி, நாட்டைச் சிங்கப்ப+ராக மாற்றுவோம் எனக் கூறி வாக்குகளைக் கேட்காமல் நல்லாட்சியைத் தருவதாக, கூறி புதிய ஆட்சியாளர் மைத்திரி பதவிக்கு வந்துள்ளார். 62 இலட்சம் மக்கள் இக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்து, சர்வாதிகாரத்தை, சிங்கள பௌத்த தீவிரவாதத்தினை நிராகரித்துள்ளார்கள்.

இம் மாற்றத்தைக் கோரிய மக்களுக்குள் தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் மிகப் பெரும்பான்மையாக இணைந்துள்ளனர். எனவே இவ்வளவு பெரும்தொகையான மக்களின் அபிலாஷைகளோடு இணைந்து சென்றால் மாத்திரமே அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை எய்த முடியும்.

மேலே குறிப்பிட்டவாறான ஓர் ஆட்சி அமைந்துள்ள நிலையில் புலம்பெயர் இலங்கையர்களின் பணி என்ன? என்ற கேள்வியின் பதிலாகவே ‘வெளிநாடு வாழ் சிறீலங்கா தமிழர் அமைப்பு’ (NRTSL) தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல பொருளாதார அபிருத்தியையும், நல்லிணக்கத்தினையும் இணைத்துச் செல்வதற்கான ஓர் முயற்சியே இதுவாகும். புலம்பெயர் வாழ் இலங்கையர்கள் பல துறைகளில் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளனர். குறிப்பாக கல்வித் துறையில் பெற்றுள்ள வளர்ச்சி காரணமாக வைத்தியம், தொழில் நுட்பம், வர்த்தகம், விஞ்ஞானம், பல் மொழிப் புலமை என பல துறைகளில் கால் பதித்துள்ளனர். இவர்களின் பங்களிப்பைப் பெற இலங்கை அரசு ஏற்ற வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

வெளிநாட்டு நிபுணர்களை அழைப்பதற்குப் பல நாடுகள் கோடிக் கணக்கான வெளிநாட்டுச் செலாவணியை செலவிடுகின்றனர். எமது மக்களுக்கு தேவையான சில கொள்கை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் பல கோடி பணத்தை மீதப்படுத்த முடியும். இது சாத்தியமானால் தமது தாயகத்தின் உயர்வுக்காக அரப்பணிக்க இவர்கள் தயங்கமாட்டார்கள். அரசு இம் மக்களை பிரிவினைவாதிகளாக, தாயக விரோதிகளாகப் பார்க்காமல் தாயகத்தின் மதிப்பிற்குரிய பிரஜைகளாக கௌரவப்படுத்தினாலே போதுமானது.

இந்திய அரசு புலம்பெயர் இந்தியர்களை தாய்நாட்டிற்கு வரவழைப்பதற்கு பல திட்டங்களை அறிவித்து வருகிறது. வெளி நாட்டு இந்திய பிரஜா உரிமை, பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி, குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு, நிலம் வாங்கும் உரிமை, நிரந்தரமாக வாழும் உரிமை என பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக் ஆபிரிக்க நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் பலர் இன்று தமது மூதாதையரோடு நிரந்தர உறவுகளை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போன்று அமெரிக்கா, கனடா, பிரித்தானியா பொன்ற நாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பலர் இன்று தமது பிற்காலத்தை இந்தியாவில் கழிப்பதற்கான கொள்கைகள் வெளியாகியுள்ளன.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது புலம் பெயர் தேசங்களில் வாழ் இலங்கையர் குறிப்பாக தமிழர்; பலர் போர் காரணமாக அவசர அவசரமாக வெளியேறியதனால் தமது நிலங்கள் தொடர்பான பரிமாற்றங்கள் எதனையும் மேற்கொள்ள முடியவில்லை. போரும் அதனைத் தொடர்ந்து காணப்பட்ட சட்ட விரோத பரிமாற்றங்களும், அசாதாரண நிகழ்வுகளும் ஏற்படுத்தியுள்ள சிக்கல்கள் இம் மக்கள் மனதிலே ஆழமான கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. இவை தொடர்பாக அரசு வெளிப்டையான கொள்கை நிலைப்பாடுகளை அறிவிப்பது அவசியம். அவற்றைப் படிப்படியாக அரசை வற்புறுத்திப் பெறுவதற்கு இத்தகைய அமைப்பு அவசியமானது. இவ்வாறான அமைப்புகள் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோடு இணைந்து செயற்படுவது தேவையானது.

தமது அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும்? என்பதை அம் மக்களே தேர்வு செய்ய வேண்டும். நாம் அவர்களது எதிர்பார்ப்புகள் செயல் வடிவம் பெற அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளோடு இணைந்து செயற்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் எழும்போது அவற்றைக் களைவதற்கான பொறிமுறைகளை வகுத்து அவற்றைச் சுமூகமாக தீர்க்க வேண்டும். அரசியலில் யதார்த்தத்திற்கு வெளியில் தீவிரவாதத்தை முன்வைத்து நிலமைகளைக் குழப்பியதன் விளைவுகளை தாயக மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இவ்வாறான நிலமைகள் எதிர்காலத்திலும் முளைவிடாது தடுக்க முயற்சிக்கவேண்டும். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வன்மறையை ஆதரிக்கும் போக்குகள், இன சௌஜன்யத்தைக் குலைத்து வேற்றுமை, முரண்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுவது இன்றியமையாதது.

தற்போது வெளிநாடுகளில் இரண்டாம், மூன்றாம் தலைமுறை இலங்கையர் உள்ளதால் தமது மூதாதையரின் அடையாளங்களை, உறவுகளை வளர்க்கவும், தமது மூதாதையரின் பிறப்புரிமையைப் பயன்படுத்தி தேசத்திற்கு உதவவும் ஆவலாக உள்ளனர். அரசு இதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். தாயகத்தில் உள்ள உறவுகளின் பாதுகாப்பு, வளர்ச்சி என்பவற்றில் கொண்டுள்ள அக்கறை காரணமாக பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆலயங்கள் என்பவற்றினைப் புனரமைப்பது, முதியோர் இல்லங்களை அமைப்பது, பராமரிப்பது, மாற்றுத் திறனாளிகள், பெண்கள் என்போரின் ஆளுமையை அதிகரிக்கும் பொருட்டு மேற்குலக வாய்ப்புகளையும், அனுபவங்களையும் பெற்றுக் கொடுப்பது, தமது கிராம உள்கட்டுமானங்களை நிர்மாணிப்பது என பல உதவிகளை மேற்கொள்ள முடியும். இதே போன்று வர்த்தகத்தில் குறிப்பாக உற்பத்தி, சந்தைப்படுத்தல் அதுவும் சிறிய அளவிலான உற்பத்தி என்பவற்றில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளதால் இவை தாயக மக்கள் மத்தியில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த உதவும். வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணம் சரியாக பயன்படுத்தப்படுவதற்கு வங்கிகள் சிறந்த முறையில் உதவ முடியும். அதே போன்று மாகாண சபைகள் இவ் உள் கட்டுமானப் பணிகளைப் பொறுப்பேற்று நிறைவேற்ற முடியும்.

இவற்றின் மூலம் நாடு அபிவிருத்தி அடைவதோடு நல்லிணக்கத்திற்கான புறச் சூழலும் உருவாக்கப்படும். இலங்கை அரசு புலம் பெயர் இலங்கையர்களின் இவ்வாறான பங்களிப்பை பெறும் விதத்தில் காத்திரமான கொள்கை மாற்றங்களை அறிவிக்க வேண்டும். இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைவதால் அந் நாடுகளின் பல தேவைகளை இலங்கை போன்ற நாடுகள் நிறைவேற்ற முடியும். இதற்கு ஏற்ற விதத்தில் இலங்கையின் பொருளாதரம் மற்றும் அரசியல் கட்டுமானங்கள் மாற்றப்பட வேண்டும். இதற்கு புலம்பெயர் மக்கள் பெருமளவில் உதவ முடியும். ஆனால் இத் தேவைகளை, பங்களிப்பினை சரியான விதத்தில் எடுத்துச் சொல்வதற்கான அமைப்பு அவசியம்.

தனி நபர்கள் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றும் போக்கிற்குப் பதிலாக புலம்பெயர் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் அமைப்பு ஒன்று செயற்படுவது இன்றியமையாதது. அரசு ஓர் தனியான திணைக்களம் ஒன்றை புலம்பெயர் மக்களின் நலன்களைக் கவனிக்கும் பொருட்டு நிறுவுவது அவசியம். இவை இலங்கையில் அமைந்துள்ள அரசு எதுவாக இருந்தாலும் அதனுடன் அர்த்தமுள்ள விதத்தில் இணைந்து செயற்படுவதன் மூலமே சாத்தியப்படும். எனவே அரசியல் பிரச்சனைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாது, பொருளாதாரம், நல்லிணக்கம் என்பவற்றைப் பலப்படுத்தும் நோக்கங்களுக்கே முன்னுரிமை கொடுத்துச் செல்ல இவ் அமைப்பு விழைகிறது.

நாட்டின் நீண்டகால தேவைகளையும், புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கையர்களின் அபிலாஷைகளையும் உள்ளடக்கியுள்ள இவ் அமைப்பின் விபரங்களை மேலும் அறிவதற்கு அல்லது ஆலோசனைகளை வழங்க பின்வரும் மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ள முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com