Contact us at: sooddram@gmail.com

 

யாழ். பொது நூலகத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பான யாழ் மாநகர முதல்வரின் அறிக்கை!

யாழ் மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொதுசன நூலகம் சம்பந்தமாக வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைச்செய்திகள் பேசப்படும் செய்திகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு மாநகர முதல்வர் என்ற வகையில் எனக்குள்ளது என்பதனால் உண்மை நிலையை தெளிவுபடுத்துகின்றேன்.

23.10.2010 பி.ப 05.15 அளவில் யாழ் நூலகம் சம்பந்தமாக தொலைபேசி அழைப்பு வந்தபோது பார்வையாளர்கள் கற்கள் பொல்லுகளுடன் காணப்படுகின்றார்கள் நீங்கள் இதில் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்று எனக்கு அறியத்தரப்பட்டது.

மக்களின் தேவைகளை பிரச்சனைகளை உடனடியாக குறித்த இடத்திற்கு விரைந்து சென்று நிறைவேற்றி வரும் முதல்வர் என்ற வகையில் அன்றைய தினம் காலஞ்சென்ற எனது அன்புத்தந்தையாரின் பூத உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த உணர்வுபூர்வமானதும் வேதனை தரும் வேளையிலும் உடனடியாக அந்த இடத்திற்குச் செல்ல முடியாத நிலையில் யாழ் பொலிஸ் தலைமைப்பீட அதிகாரிக்கு தொலைபேசி மூலம் இத்;தகவல தெரியப்படுத்தி உண்மை நிலைமையை உடனடியாக எனக்கு அறியத்தருமாறு பணித்திருந்தேன்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸ் தலைமைப்பீட அதிகாரி சில நிமிடத்திற்குள் என்னுடன் தொடர்பு கொண்டு நீங்கள் கூறிய மாதிரியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை தங்களுக்கு தவறான செய்தி வந்துள்ளதாகவும் நிலைமை சாதாரணமாக உள்ளதாகவும் எனக்கு உடனடியாக அறியத்தந்தார். இதனைத்தொடர்ந்து பிரதம நூலகருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது பொலிஸ் அதிகாரி கூறிய மாதிரியே எனக்கு பதில் கிடைத்தது. புத்தகங்கள் எடுத்து வீசப்பட்டன கற்களுடன் பார்வையாளர்கள் காணப்பட்டனர் நூலகத்தை திரும்பவும் தாக்க முற்பட்டார்கள் என்ற செய்திகளை பொறுப்புள்ள முதல்வர் என்ற வகையில் முற்றாக மறுக்கின்றேன்.

பாரம்பரிய கைத்தொழிலகள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூறியது போன்று பொது நூலக சம்பவத்தின் உண்மை நிலையை அறியாது பத்திரிகைகள் ஊதிப்பெருப்பித்துள்ளனர் என்பது தான் உண்மையாகும். 21.10.2010 22.10.2010 23.10.2010 ஆகிய தினங்களில் யாழ் நூலகத்தின் கேட்போர் கூடத்தில் மருத்துவ சங்கத்தினரின் அகில இலங்கை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான வைத்தியர்களும் நிபுணர்களும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சுற்றுலாப்பயணிகள் வழமை போல யாழ் நூலகத்தை பார்வையிட வந்திருந்த பொமுது 21 22 23ம் திகதிகளில் மாநாடு நடைபெறுகின்றமையால் 23ம் திகதி எதுவித தடங்கலுமின்றி வழமை போன்று பார்வையிடலாம் என்று அறிவுறுத்தல் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் 23ம் திகதி உரிய நேரத்தில் மூன்று நாட்களுக்குமான பார்வையாளர்கள் திரண்டிருந்தமை யாவரும் அறிந்த உண்மை.

யாழ் நூலகத்தை பார்வையிடல் என்பது இலங்கையிலுள்ள ஏனைய நூலகங்களுடன் ஒப்பிட முடியாது என்பது பலரதும் கருத்தாகும். இதனாலேயே யாழ் மாநகர முதல்வராக பதவியேற்ற காலம் தொட்டு நூலக வாசகர்களிடமிருந்தும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்தும் வேறும் பல நிறுவனங்களிடமிருந்தும் யாழ் நூலகத்தை பார்வையிடல் சம்பந்தமான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாநகர சபை மாதாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு சபை உறுப்பினர்கள் யாவராலும் உணரப்பட்டிருந்த நிலையில் நூலக வாசகர்களுக்காக பி.ப 07.00 வரை காலத்தின் தேவை கருதி நீடிக்கப்பட்டது. இதில் பி.ப 05.00 தொடக்கம் 06.00 வரை சுற்றலாப்பயணிகளை அனுமதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. கடந்த மாத மாதாந்த பொதுக்கூட்டத்தில் 01.01.2011 முதல் சுற்றலாப்பயணிகளின் நுழைவுக்கட்டணமாக ரூபா 10 அறவிடலாம் என்பதை சபை தீர்மானித்துள்ளது என்பதனை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

23ம் திகதி நூலகத்தை பார்வையிடுவதற்காக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதற்கமைய யாழ் நூலக முன் வாசலில் சுற்றுலாப்பயணிகள் கூடி நின்றனர். இந்நிலைமையினை கருத்தில் கொண்டு பிரதம நூலகர் மாநாட்டு ஏற்பாட்டாளருடன் ஆலோசித்து மாநாடு பி.ப. 05.30 மணிக்கு முடியவிருப்பதனால் அந்நேரம் தொடக்கம் சுற்றுலாப்பயணிகளை உள்ளே அனுமதிக்கலாம் என்பதனை சுற்றுலாப்பயணிகளுக்கு தெரியப்படுத்துமாறு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறியப்படுத்தினார். இந்நிலையில் ஏமாற்றமடைந்த சுற்றுலாப்பயணிகளுக்கும் நூலக நிர்வாகத்தினருக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது உண்மையே.

 

இதன் முடிவில் சுற்றுலாப்பயணிகள் நூலகத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகைச்செய்திகள் குறிப்பிடுவது போன்று நூல் நிலையத்தினுள் அத்துமீறி புகுந்த தென்னிலங்கையிலிருந்து வந்தவர்களால் காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டதுஇ நூல்கள் தூக்கி வீசப்பட்டது என்பதும் இச்செயற்பாடுகள் பொலிஸாரின் முன்னிலையிலும் இராணுவ அதிகாரிகளின் முன்னிலையிலும் நடைபெற்றது என்பதும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

இதேவேளை 29.10.2010ம் தினத்தன்று பத்திரிகை மூலமாக பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாழ் நூலக கேட்போர் கூடத்திற்கு யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர் யாழ் நூலகக்குழுஇ கௌரவ மாநகர சபை உறுப்பினாகள் சட்டத்தரணிகள் யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும  நலன்விரும்பிகள் என பலதரப்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில் மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு இதன் உண்மை நிலைமையினை ஆழமாக புரிந்து கொண்டு கருத்துக்களை கூறியமைக்காக அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

யாவரதும் கருத்துக்களை கேட்டறிந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நூலக நிர்வாகத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சுற்றுலாப்பயணிகளை உட்பிரவேசிக்க அனுமதித்திருந்தால் மாநாட்டினை பாதிக்கும் என்ற வகையில் தடுத்து நிறுத்தியமையையும் சுற்றுலாப்பயணிகள் தம்மால் நூலகத்தை பார்வையிட முடியவில்லையே என்ற கசப்புணர்வு ஏற்பட்டமையையும் உணர்ந்து கொண்டிருந்ததை வெளிப்படுத்தினார். மேலும் தனக்கு இச்சம்பவம் தெரிந்திருந்தால் அவ்விடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று இருபகுதியினருக்கும் இடையே ஏற்பட்டிருந்த சுமுகமற்ற நிலைமையினை முடிவிற்கு கொண்டுவந்திருக்கலாம் என்ற உணர்வில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரச்சனைகளை மேலும் வளர்க்காமல் அரச பிரதிநிதி என்ற வகையில் மன்னிப்பு கோரினார். அத்துடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதிமொழி வழங்கினார்.

இதன் உண்மை நிலையினை அறியாது இச்சம்பவத்தை பூசி மெழுகும் வகையில் அமைச்சர் கூறியதாக பத்திரிகையில் வந்த அறிக்கைகளை அக்கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்ற வகையில் இதனை முற்றாக மறுக்கின்றேன். பகிரங்கமாக அறிவுறுத்தப்பட்ட கூட்டத்தில  ாழ் பொதுசன நூலகத்தில் கரிசனை உள்ளவர்கள் என்று கூறிக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு உண்மை நிலையை அறியாமல் தொடர்ந்து பொதுமக்களை திசைதிருப்பும் வகையில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளிவிடுவதனை வன்மையாக  கண்டிக்கின்றேன்.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் பணிப்பின் பெயரில் பொலிஸாரும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடத்திய விசாரணைகளில் அவ்வாறனதொரு தாக்குதல் நடைபெறவோ அதில் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் தொடர்புபடவோ இல்லை என்பதனை ஜனாதிபதி செயலகம் தெளிவாக அறிவித்துள்ளது. உண்மை நிலையை அறியாமல் உறுதிப்படுத்தலின்றி வெளியிடப்பட்டிருக்கும் உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பாக வருத்தமடைகின்றேன். உறுதிப்படுத்தப்படாத தரப்பினரின் தகவல்களையும் இனந்தெரியாத நபர்களின் தகவல்களை கொண்டு யாழ் பொது நூலகம் பற்றி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. மோதல் காலத்திலிருந்த சூழ்நிலை ஏற்படாத வகையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் கொள்கையுடனேயே யாழ் மாநகரசபை செயற்பட்டு வருகின்றது என்பதனை உறுதிபட கூறிக்கொள்கின்றேன்.  

யோகேஸ்வரி பற்குணராஜா

யாழ் மாநகர முதல்வர்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com