Contact us at: sooddram@gmail.com

 

அபிவிருத்தியையும் ஐக்கியத்தையுமே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்

இரண்டாவது பதவியேற்புக்கு பின்னர்இந்து’வுக்கு ஜனாதிபதி பேட்டி

(நேற்றைய தொடர்)

ஜனாதிபதியின் பதவிக் காலத்துக்கு இருந்த இரு தடவை அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக அகற்றுவதன் பின்னணி தொடர்பாக தாங்கள் எதனைச் சிந்தித்திருக்கின்றீர்கள் என்பது பற்றிக் கூற முடியுமா?

இது தொடர்பாக சர்வதேச மட்டத்தில் கருத்துக் காணப்பட்டது. இந்த மாற்றம் குறித்து விமர்சனம் ஏற்பட்டிருந்தது.

பல்வேறு தலைவர்களின் இரண்டாவது பதவிக் காலத்தை நான் பார்த்துள்ளேன். இலங்கையில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலும் இதனைப் பார்த்திருக்கிறேன். ஏனெனில் முதலாவது வருடத்தில் (இரண்டாவது பதவிக் காலத்தில்) உங்களால் வேலை செய்ய முடியும். நீங்கள் வாக்குறுதிகளை அளிப்பீர்கள். முதல் வருடத்தில் பணியாற்ற முடியும்.

இரண்டாவது வருடம் வரும் போது கட்சிக்குள் அடுத்த தலைவர் யாரென அறிவதற்கு மோதல் ஆரம்பிக்கும். அரச ஊழியர்கள், அடுத்த தலைவர் யாரென பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் பணியாற்ற மாட்டார்கள். ஜனாதிபதி செயற்பட முடியாதவராக இருப்பார். சந்திரிகாவின் கடைசிப் பதவிக் காலத்தில் என்ன நடந்ததென்பதைப் பாருங்கள். ஜே. ஆர். ஜயவர்தனவிற்கு என்ன நடந்ததென்பதைப் பாருங்கள். ஏனையோருக்கு என்ன நடந்தது. நான் அதனைப் பார்த்துள்ளேன்.

ஆதலால் அந்தப் பொறிக்குள் நான் சொல்ல வில்லை. ஆதலால் போட்டியிடுவதோ இல்லையோ அது வேறு விடயம். அதற்குள் இருந்து விடுபடுவது சிறப்பானதென நான் நினைத்தேன். ஏனெனில் இரண்டாவது பதவிக் காலத்தின் ஆறு வருடங்களை மக்கள் எனக்குத் தந்துள்ளனர். ஏனெனில் முதலாவது பதவிக் காலத்தில் நான் வெற்றி கண்டுள்ளேன்.

எனக்கு அந்தச் சுதந்திரம் இருப்பது அவசியமாகும். சதிகளில்லாமல் மக்கள் மத்தியிலிருந்து தள்ளிவிடப் படாமல் விசேடமாக அரச ஊழியர் களிடமிருந்து தள்ளிவிடப்படாமல் அந்தச் சுதந்திரம் எனக்கு இருப்பது அவசியமாகும். இரண்டாவது பதவிக் காலமானது மிகவும் முக்கியமானதாகும்.

மக்களுக்கான அபிவிருத்தியை வென்றெடுப்பதற்கு அது அவசியம். அதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். அதனாலேயே நான் இதனைச் செய்தேன். மூன்றாவது பதவிக் காலத்துக்கோ அல்லது நான்காவது பதவிக் காலத்துக்கோ நான் போட்டியிடப் போகிறேனா என்பது விடயமல்ல. அது அந்த மாதிரியான ஒன்றல்ல. பொதுவாக இந்த விடயம் (இரு தடவை பதவிக் காலவரையறை) எமது தலைவர்களை இரண்டாவது பதவிக் காலத்தின் போது செயற்பட முடியாதவர்களாக உருவாக்கியிருந்தது.

இலங்கையின் அரசியல் கட்ட மைப்பானது பாராளுமன்றத்தி லிருந்து ஜனாதிபதியை தூர விலத்தி வைத்திருப்பதாக இருப் பது பிரச்சினைகளில் ஒன்று என ஒரு சந்தர்ப்பத்துக்கு மேல் நீங்கள் எனக்குக் கூறியிருந்தீர்கள். பாராளுமன்ற பாரம்பரியத்தில் தாங்கள் வளர்ச்சியடைந்துள்ளீர்கள். அந்த இடைவெளியை வெற்றி கொள்ள அல்லது குறுக் குவதற்கு நீங்கள் விரும்பியிருந் தீர்கள். அதனைச் செய்ய முடிந்ததா?

ஆம். இப்போது 18ஆவது திருத்தத் திற்குப் பின்னர் அது கட்டாயமான தாகும். அதாவது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும், குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு தடவையையாவது செல்ல வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு தடவையாவது பாராளுமன்றம் செல்லும் உரிமை எனக்குண்டு. தேவையேற்படின் எந்த நேரத்திலும் அதனை நான் பயன்படுத்த முடியும். அவர்கள் விமர்சித்தாலும் கூட. நான் பாராளுமன்றத்தை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றேன் என்று அவர்கள் விமர்சிக்கலாம். நான் அதனைச் செய்யவிரும்பவில்லை. மூன்று மாதத்திற்கு ஒரு தடவை செல்வது போதுமென நான் கூறியுள்ளேன்.

அங்கு சென்று பாராளுமன்ற முறைமையைக் குழப்புவதற்கு நான் விரும்பவில்லை. மக்களின் விருப் பத்தை உணர்ந்து கொள்ள அங்கிருக்க விரும்புகிறேன். எதிரணி கூறுவதைக் கேட்க விரும்புகிறேன். இதற்கு ஒரு உதாரணமொன்றைக் கூறுகிறேன். சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்க கசினோக்கள் பற்றி பிரச்சினையொன்றை எழுப்பியிருந்தார்.

அரசாங்க நிலத்தில் கசினோ இருப்பதாக எவரோ சிலர் கூறியிருந்தனர். அது தொட ர்பாகக் கண்டுபிடிக்குமாறு நான் உத்தரவிட்டேன். அது உண்மையான விடயமாக இருந்தது. நான் உடனடியாக ரணிலை அழைத்து அவருக்கு நன்றி தெரிவித்தேன். நான் அங்கேயிருந்தால் இந்த மாதிரியான விடயங்களை எமக்குக் காட்டுவது எதிரணியின் கடமையாகும். பாராளுமனறத்தில் இந்த விடயங்கள் குறித்து எனக்கு அறியத்தருவது சிறப்பானதாக இருக்கும். தவறானது இடம்பெற்றிருந்தால் எப்போதும் அதனை நாம் சீர்செய்வோம். ஆதலால் பாராளுமன்றத்துடன் நான் நெருக்கமாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

அடுத்த விவகாரமாக இருப்பது தங்களின் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தொடர்பாக விமர்சிக்கப்பட்ட விடயமாகும். அவரோ அவரின் குடும்ப உறுப்பினர்கள் எவரோ ஜனாதிபதியின் மன்னிப்பைக் கேட்டிருக்கவில்லை. இது இலங்கையின் அரசியல் பிரச்சினையா?

இது அரசியல் பிரச்சினையல்ல. சட்டம் யாவருக்கும் உரியது. சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்கள். அவர்கள் தவறான விடயங்களை எதனையாவது செய்திருந்தால் அவர்கள் அதனை எதிர்கொள்ள வேண்டும். மக்கள் இதனை விளங்கிக் கொள்கிறார்கள். இதனை அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்த சில எதிரணி எம்.பிக்கள் நினைக்கின்றனர். அவரின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற முடியுமென நினைக்கின்றனர். மக்கள் உணர்ச்சி வசப்படும் விடயமாக நான் இதனைப் பார்க்கவில்லை. அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

ஐ. தே. க. வோ ஜே. வி. பி.யோ தீவிரமான விடயமாக இதனை எடுத்துக் கொண்டதாகத் தோன்றவில்லையா?

இல்லை. அவர்கள் எதனையோ கூற விரும்புகிறார்கள். அல்லது ஏதோ செய்கிறார்கள். ஒன்று சட்ட விதியாகவும் ஜனாதிபதியின் பங்களிப்பாகவும் உள்ளன. அத்துடன், தனிப்பட்ட ரீதியான தன்மையும் காணப்படுகிறது.

அவர் உங்களின் இராணுவத் தளபதியாக இருந்தவர். இவரைத் தனிப்பட்ட முறையில் நீங்கள் அறிந்துள் ளீர்கள். இந்த இரு விடயங்களையும் எவ்வாறு தொடர்புபடுத்த முடியும்?

ஆம், இது மிகவும் உண்மையில் கஷ்டமானது. ஆனால் நீங்கள் இராணுவத் தளபதியோ இல்லையோ, தவறாக எதனையாவது செய்திருந்தால் அதனை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். அவர் அந்த மாதிரியான மனிதர் என நான் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை. எமக்குத் தெரிந்திருக்கவுமில்லை. அவர் வேட்பாளராக வந்த போது அவரின் மருமகன் ஆயுத வியாபாரியென எனக்குக் கூறியிருந்தார்கள். நாம் ஒருபோதும் அதனை அறிந்திருக்க வில்லை. அவரும் அதனை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.

எமக்கு அவர் அறிவித்திருக்க வேண்டும். அவர் கேள்வி மனுச் சபையில்தலைவராக இருந்தார். இதற்கு முன்னர் எந்தவொரு இராணுவத் தளபதியும் அவ்வாறு செய்திருக்கவில்லை. சிறிது காலத்தில் ஓய்வுபெறவிருந்த வரை நாம் இராணுவத் தளபதியாக உருவாக்கினோம். அவரின் மருமகன் ஆயுத வியாபாரியென நான் அறிந்திருந்தால் அதனை எச்சரித் திருப்பேன். அல்லது அவரை எச்ச ரித்திருப்பேன் அல்லது அவரைத் திருத்தியிருப்பேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com