Contact us at: sooddram@gmail.com

 

அபிவிருத்தியையும் ஐக்கியத்தையுமே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்

இரண்டாவது பதவியேற்புக்கு பின்னர்இந்து’வுக்கு ஜனாதிபதி பேட்டி

(நேற்றைய தொடர்)

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களென ஒப்புக் கொள்ளப்பட்டவர்கள் அல்லது ஆதரவாளர்கள் என பதினொராயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக எனக்குக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள்.

ஏற்கனவே சிலருக்குப் புனர் வாழ்வளிக்கப்பட்டுள்ளது. நாலாயிரம் பேர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். பிள்ளைகள், முதியவர்களை நாங்கள் விடுவித்துள்ளோம். சிலர் போக விரும்பவில்லை. தமது சொந்த நன்மைக்காக அவர்கள் எம்முடன் இருக்கின்றனர்.

தங்களின் ஐ. நா. உரையில் இலங்கைப் பிரஜைகளான புலம்பெயர்ந்த தமிழர்களை நாட்டின் அபிவிருத்தியில் இணைந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பைத் தாங்கள் விடுத்திருந்தீர்கள். அது தொடர்பாக நல்ல விதமான பதில் கிடைத்துள்ளதா?

ஆம், அதிகளவு பதில் கிடைத்திருக்கிறது. இரட்டைப் பிரஜாவுரிமை விரும்பும் புலம்பெயர்ந்தவர்கள் உட்பட பலரிடமிருந்து பதில் கிடைத்துள்ளது. ஆனால், ஏனைய காரணங்களுக்காக அங்கு சென்றவர்களும் உள்ளனர். மோதலைக் காட்டிச் சென்றவர்களும் உள்ளனர். இலங்கையர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று ஏனைய நாடுகளின் பிரஜாவுரிமைகளைப் பெற்றுள்ளனர்.

இந்தியத் தலைவர்களுடன் நீங்கள் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகிaர்கள். இந்தியாவுக்கு வருகை தந்தீர்கள். பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி வைபவத்தில் பிரதம விருந்தினராக வருகைதந்துள்ளீர்கள். தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணி வருகின்றீர்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பு மட்டம் குறித்து நீங்கள் திருப்தியடைந்துள்ளீர்களா?

ஆம். உறவுகள் பிரமாதமாகவுள்ளன. யுத்தத்தின் பின்னரும் யுத்தம் முடிவதற்கு முன்னரும் உறவுகள் சிறப்பாக இருந்து வருகின்றன. இரு நாடுகளின் தலைவர்களும் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகின்றோம். உதாரணமாக வடக்கிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக் காக 50 ஆயிரம் வீடுகள் நிர் மாணிக்கப்படவுள்ளன. வடக்கில் ரயில் பாதை கட்டமைப்புப் புனர மைக்கப்படுகிறது. பலாலி விமானத்தளம், காங்கேசன்துறை துறைமுகம், வீதி அபிவிருத்தித் திட்டங்கள், கிழக்கில் சம்பூரில் மின்சக்தித் திட்டங்கள் என்பன மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் யாவும் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்போது சில பத்திரிகைகள் எமது திட்டங்கள் தொடர்பாக பாரியளவில் விடயங்களைக் கூறுகின்றன. சீனாவுக்கு நாம் வழங்கியவற்றுடன் ஒப்பீடுகளை மேற்கொள்கின்றன.

இந்திய அரசாங்கம், அரசியல் தலைவர்கள் அல்லது அதிகாரிகள் இது தொடர்பாக கவலையை வெளிப்படுத்தியிருந்தார்களா?

இல்லை. இல்லை. அவர்கள் அதிகளவுக்கு முதிர்ச்சியைக் கொண்டுள்ளனர். ஏனெனில் சகலதுமே முதலில் அவர்களுக்குத் தான் வழங்கப்பட்டது. துறைமுகம், விமான நிலையம், அம்பாந் தோட்டைத் துறைமுகம், சம்பூர் என்பன நான்கு வருடங்களுக்கு முன்னர் அவர்களுக்கே வழங்கப் பட்டது. எமக்குத் தேவை துரித அபிவிருத்தியாகும். இது வடக்கு மக்களுக்கு தமிழர்களுக்கு அதிகள வுக்கு உதவியாக அமையும். விடு தலைப்புலிகளுக்கு ஆதரவளித்தவர் களே இந்தத் திட்டங்கள் தொடர்பாக குழப்பங்களைக் கொண்டுள்ளனர். பேராசிரியர் சுவாமிநாதனின் வடக்கில் விவசாய, மீன்பிடித்துறை அபிவிருத்தித் திட்டம் உட்பட இவை குறித்து குழப்பகரமான விடயங்களை அவர்கள் உருவாக்கி யிருந்தனர். இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்திருக்கும் நிலையில் உங்கள் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நீங்கள் விடுக்கும் செய்தி என்ன? இலங்கையின் புதிய நிலைவரம் தொடர்பாக அவர்கள் எவ்விதம் பதிலளிக்கக்கூடும்.?

நான் அபிவிருத்திப் பணியில் கவனத்தைச் செலுத்துகின்றேன் என்பது எனது மக்களுக்கு விடுக்கும் செய்தியாகும். அறிவு, சக்தி, வர்த்தகம், கடல் வழிப்போக்கு வரத்து, விமானப் போக்குவரத்துப் போன்றவற்றில் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்க விரும் புகின்றேன். இதனை வெற்றி கொள்ள எமது மக்கள் ஒன்று பட்டிருப்பது அவசியமாகும். மக்களுக்காக அரசாங்கத்தின் ஆதரவளிக்க வேண்டும். சர்வதேச சமூகத்துக்கு நான் விடுக்கும் செய்தி எமது நிலைப்பாட்டை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதாகும். நாங்கள் பயங்கரவாதிகளைத் தோற்கடித்திருக்கிறோம். சுதந்திரப் போராளிகளை அல்ல. முழு உலகுமே இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. ஆதலால் நாங்கள் எதனை வென்றெடுத்துள் ளோம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு நாட்டை வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய உதவ வேண்டும். சமூகங்களுக்கிடையே இடை வெளியை அதிகரிப்பதற்கு அல்லாமல் அவர்களை நெருக்கமாக்குவதற்கு அவர்கள் உதவ வேண்டும். கடந்து சென்றது கடந்து சென்றவை தான். காயங்களைக் கிளற வேண்டாம். எதிர்மறையாக அல்லாமல் நாம் சாதகமாகச் சிந்திப்பது அவசியம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com