Contact us at: sooddram@gmail.com

 

13 தான் தீர்வுக்கான அடிப்படை

கேள்வி: ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமெனக் கோருகின்றார்களே! அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஈ.பி.டி.பி இது தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

பதில்: 13ஆவது திருத்தமே தீர்வின் அடிப்படை. இதனைத் தொடக்கமாகக் கொண்டே தீர்வு முயற்சிகளை மேற்கொள்ள முடியும். 13 பிளஸ் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கருத்துக் கூறியுள்ளார். அத்துடன் திவிநெகும சட்டமூலம் வாயிலாக கிராமிய அபிவிருத்தியையும் வறுமையையும் நீக்க முடியும். எமது மக்களுக்கு இரண்டுமே தேவையாகிறது.

கேள்வி: ஆனால்திவிநெகுமசட்டமூலம் மத்திய அரசின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சியென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்ற சில கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. நீங்கள் அதிகாரப்பகிர்வைக் கோருகின்aர்கள். இதை எந்த வகையில் நோக்க முடியும்?

பதில்: தமிழர் பிரச்சினைக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஒருபோதும் தீர்வை நாடி நிற்கவில்லை. அவர்கள் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டு. அவர்கள் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு கதை சொல்பவர்கள். தொட்டிலையும் ஆட்டுவர். பிள்ளையையும் கச்சிதமாகக் கிள்ளிவிடுவர். அவர்களுக்கு நிரந்தரமான தீர்வில் அக்கறையுமில்லை. தேவையுமில்லை. தேசியப் பிரச்சினை இழுத்தடிக்கப்படுவதே அவர்களுக்குத் தேவையான ஒன்று. கடந்த காலங்களில் பல்வேறு அரிய சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அவர்கள் அதனைப் பயன்படுத்தவில்லை. பிரச்சினையைத் தீர்க்க உதவவில்லை. அந்த நேரத்தில் 13ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோதுஅதனை மிகச் சிறியது - மிகத் தாமதமானதுஎன கூட்டமைப்பு விமர்சித்தது. இப்போது 13ஆவது திருத்தத்துக்காக கூக்குரலிடுகின்றனர். கடந்த காலத்தில் பயங்கரவாதப் பிரச்சினை இருந்தது. நாங்கள் அதற்கு முடிவு கட்டினோம். அதைப்போன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு விரைவில் வழியேற்படுத்துவோம். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் இது மேற்கொள்ளப்படும்.

கேள்வி: பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நடை முறைப்படுத்துவதில் சிக்கலாகவுள்ளதே?

பதில்: அனைத்து தரப்பினரையும் இந்தக் குழுவுக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எண்ணமும் நோக்கமும். தமிழ்க் கூட்டமைப்பும் இதில் பங்கெடுக்க வேண்டுமென்பதே அரசின் விருப்பம். இது ஒரு தேசியப் பிரச்சினை. எனவே ஒவ்வொருவரினதும் பங்குபற்றுதலும் தேவையாகிறது. கூட்டமைப்பு இதில் பங்கேற்க மறுத்தால் நாங்கள் மாற்று உபாயங்களைக் கையாள வேண்டிவரும். கூட்டமைப்பின்றி நாங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிவரும். விடுதலைப்புலிகள் வெல்ல முடியாத ஒரு சக்தியாக கருதப்பட்ட காலம் ஒன்றிருந்தது. ஆனால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

கேள்வி: தமிழ்க் கூட்டமைப்பு பங்கேற்காமல் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அரசாங்கம் முன்னெடுக்குமென்று நீங்கள் நினைக்கின்aர்களா?

பதில்: நான் முன்னர் பலதடவை குறிப்பிட்டது போன்று புலிகளின் பிரச்சினையிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினை வேறுபட்டது. அதைப்போன்று தமிழ்க்கூட்டமைப்பின் பிரச்சினைகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்ல. தமிழ்க்கூட்டமைப்பை இந்த விவகாரத்தில் ஒரு பக்கத்தில் நாம் வைத்து விட்டு நமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற வேண்டும்.

கேள்வி: 13ஆவது திருத்தம் தீர்வுக்கு வழியேற்படுத்தும் என நீங்கள் நினைக்கின்aர்களா?

பதில்: இது ஒரு ஆரம்பமே. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு சிறந்த அடிப்படை.

கேள்வி: அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகியன 13ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனவே?

பதில்: இது ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் அபிப்பிராயமும் நோக்கும் இருக்கின்றது. நாடு என்ற ரீதியில் நாங்கள் ஒருமித்து செயற்பட வேண்டும். கடந்த காலத்தில் இந்தத் திருத்தத்தை ஐ.தே.க அறிமுகம் செய்தபோது ஸ்ரீ.ல.சு.க எதிர்த்தது. தற்போது அக்கட்சி அதனை ஏற்றுக்கொள்கின்றது. சகல மாகாண சபைகளையும் தற்போது ஸ்ரீ.ல.சு.க வே நிர்வகிக்கின்றது.

கேள்வி: 13ஆவது திருத்தச் சட்டத்தில் நீங்கள் ஏதாவது குறைபாடுகளைக் காண்கின்aர்களா?

பதில்: இருக்கக்கூடும். ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் நாம் இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இந்தச் செயன்முறை முன்னெடுக்கப்படும் போதே நாங்கள் பிரச்சினைகளைக் கண்டறிய முடியும். இதனை நடைமுறைப்படுத்தும்போது பிரச்சினைகளை இனங்காண முடியும். அதன் பிறகு தீர்த்துக்கொள்ளலாம். தமிழர் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் வகையிலேயே இந்தத் திருத்தம் அறிமுகஞ் செய்யப்பட்டது. ஆனால் புலிகள் இருந்த வேளை இதன் பயனை அடைந்து கொள்ள முடியாது போய்விட்டது. இப்போது நாம் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. வடக்குக்கும் இதனை நாம் பிரயோகிக்கவேண்டும்.

கேள்வி: இந்தத் திருத்தம் இல்லாதொழிக்கப்படுமாயிருந்தால் இதன் விளைவுகள் என்னவாகும்.

பதில்: உங்கள் கேள்விக்கு என்னால் இந்த தருணத்தில் பதில் சொல்ல முடியாது. ஆனால் அரசாங்கம் அவ்வாறான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

கேள்வி: இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 1987இல் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தம் குறித்த உங்கள் அனுபவங்களைக் கூறமுடியுமா?

பதில்: தமிழ் மக்கள் பிரச்சினையில் தத்தளித்த ஒரு காலப்பகுதி ஆளுந்தரப்பு மக்களைப் பற்றி கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காத ஒரு காலம்திதான் தீர்வு என ஆளுங்கட்சி கூறும்கிதான் சரியான தீர்வு என எதிர்க்கட்சி பதிலுக்கு கூறும். எனவே நீண்ட காலமாக தமிழர் பிரச்சினை இழுபட்டுக்கொண்டிருந்தது. தமிழ்மக்கள் ஆயுத மோதல்களுக்குள் அகப்பட்டுத்துன்பப்பட்ட ஒரு காலம். இந்தக்காலகட்டத்திலேதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கேள்வி : 13ஆவது திருத்தம் கொண்டு வரப்படுவதில் இந்தியா பெரும் பாத்திரம் வகித்தது. இந்தியா இன்னுமே அந்தப் பாத்திரத்தை தொடர்ந்தும் வகிப்பதாக நீங்கள் நினைக்கின்aர்களா?

பதில : உள்நாட்டிலேயே தீர்வு ஒன்றைக் காண வேண்டுமென்பதே எனது கருத்தாகும். அவர்களால் மருத்துவ மாது போன்றே உண்மையில் தொழிற்பட முடியும். தாய் நாடான இலங்கை தனது குழந்தையை பிரசவிக்கும். வெளிநாட்டுத் தலையீடுகள் மேலும் பிரச்சினைகளைச் சிக்கலாக்கவே உதவும் தமிழ்க்கூட்டமைப்பு இந்தியாவுக்கும் பிறநாடுகளுக்கும் உதவிதேடிச் செல்கின்றது. இது ஒரு முறையான வழியல்ல. மேலும் பல்வேறு தடுமாற்றங்களை ஏற்படுத்தவே இது வழிவகுக்கும் வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணசபையின் வரதராஜப் பெருமாளின் நியமனம் கூட தவறுகளை பல ஏற்படுத்தியது. எனக்கு இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இந்தப் பிரச்சினையை யதார்த்த ரீதியில் தீர்த்துவைக்க முடியும்.

கேள்வி : இந்திய நீதிமன்றம் உங்களுக்கெதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளதே. இந்த நிலைமையை நீங்கள் எவ்வாறு கையாள்கின்aர்கள்?

பதில : தமிழ்நாட்டில் சேரிப்புறமொன்றில் சட்டவிரோத கூட்டம் ஒன்றை கூட்டியதாக என்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது ஒரு கொலைக் குற்றச்சாட்டல்ல. ஆனால் தமிழ் ஊடகங்கள் இதனை ஊதிப் பெருப்பிக்கின்றன. இந்தியாவின் குற்றவியல் நீதிமன்றத்தில் தான் என்மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சென்னை நீதிமன்றில் எனக்கு நீதி கிடைக்காவிடின் நான் புதுடெல்லியிலுள்ள மேல் நீதிமன்றில் நீதி கோருவேன். அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் செல்வேன். நான் அமைதியை நிலைநாட்டவே அந்தப் பகுதிக்கு சென்றேன். வரதராஜப் பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் அங்கு நின்றனர்.

கேள்வி : வடமாகாண தேர்தல் எந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றது?

பதில : இது முக்கியமானது. அடுத்த வருடம் செப்டம்பரில் தேர்தல் இடம்பெறுமென ஜனாதிபதி அறிவித்துள்ளார். களநிலைமைகளைச் சரிசெய்ய எமக்கு காலம் தேவைப்படுகின்றது. கறி சமைக்க முன்னர் அதற்குரிய பதார்த்தங்களைச் சேர்க்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளது.

கேள்வி : வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் இன்னும் உள்ளதா?

பதில : நிச்சயமாக. நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது.

சுஐப் எம்.காசிம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com