Contact us at: sooddram@gmail.com

 

சர்வதேசம் தீர்வைப் பெற்றுத்தராது

கேள்வி: தமிழ்க் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் அண்மைக்காலமாக வலுப்பெற்றுள்ளன. இது தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

பதில்: தமிழ்க் கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் உள்ளன. அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒரே குரலில் இயங்க வேண்டுமென்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. தமிழ் மக்களின் விமோசனத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஒரு சிறந்த கட்டமைப்புடன் இயங்க வேண்டும். இந்த கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் தாம் விரும்பியபடி நினைத்த மாத்திரத்தில் எந்த விடயங்களையும் எழுந்தமானமாக செய்யலாம் என்ற போக்கே இப்போது நிலவுகின்றது. எனவே இதனைப் பதிவு செய்து கட்டமைப்பு ரீதியில் கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்ற வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு.

கேள்வி: அப்படியென்றால் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியாக கட்சிகளை வைத்திருப்பது அவசியமில்லை என்ற பொருள் கொள்ளலாமா?

பதில்: அவ்வாறு நாங்கள் கூறவில்லை. கட்சிகளின் செயற்பாடுகளை குழப்பும் நோக்கமும் எமக்கு இல்லை. தமிழ் மக்களின் விமோசனத்தையும் விடுதலையையும் கொண்ட ஒரு பயணத்தில் ஒரு பலமான, சிறந்த அமைப்பாக கூட்டமைப்பை இயங்கச் செய்வதே எமது அவா.

கேள்வி: பதிவு செய்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலவுகின்றதே?

பதில்: இந்தத் தடைக்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியே காரணம். அவர்களின் மூத்த உறுப்பினர்கள் பதிவு செய்வதை விரும்பவில்லை. இது ஏனோவென்று எமக்கும் விளங்கவில்லை.

கேள்வி: கூட்டமைப்பில் பலமான கட்சியாகவிருக்கும் தமிழரசுக் கட்சி, தனது தனித்துவத்தை இழந்து விடுமென்ற எண்ணம் இருக்கலாமல்லவா?

பதில்: அப்படிக் கூற முடியாது. 1972 ஆம் ஆண்டு தந்தை செல்வாவின் தலைமையிலான தமிழரசுக் கட்சி ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ், தொண்டமான் ஐயாவின் இ.தொ.கா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (ஹிஸிழிபி) உருவாக்கப்பட்டதை நாமறிவோம். உதய சூரியன் சின்னத்தில் உலா வந்த அந்தக் கட்சி 30 வருடங்களாக அரசியற் களத்தில் வீறுநடை போட்டதை இங்கு ஞாபகப்படுத்தியே ஆக வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணி பலமான அணியாக பாராளுமன்றத்தில் அமர்ந்து எதிர்க்கட்சியாகவும் விளங்கியதே. இப்போது மட்டும் தமிழரசுக் கட்சிக்கு இந்த எண்ணம் ஏன்? பயம் ஏன்?

கேள்வி: தமிழரசுக் கட்சி பதிவை விரும்பவில்லை. ஏனையவை பதிய வேண்டுமென கோருகின்றன. இந்த இழுபறி தீர மாற்றுவழிதான் என்ன?

பதில்: மற்றைய கட்சிகள் விரும்பினால் ஒரே அமைப்பாக பதிவு செய்ய முடியும் தான். எனினும் கூட்டமைப்பாக அனைவரும் ஒருமித்து இருக்க வேண்டுமென்ற ஒரேயொரு காரணமே நாம் பொறுத்துப் போவதற்கு காரணம்.

கேள்வி: பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டல்லவா? பொறுத்தது போதாதா?

பதில்: நாம் பொங்கியெழுவதால் தமிழர்களுக்கு பயன் கிடைக்குமா!

கேள்வி: தமிழரசுக் கட்சியை உங்கள் வழிக்குக் கொண்டுவருவது சாத்தியமில்லாத பட்சத்தில் எஞ்சிய நான்கு கட்சிகளும் இணைந்து அதனை பதிவு செய்யும் எண்ணம் உண்டா?

பதில்: இந்தக் கேள்விக்கு என்னால் இப்போது பதில் கூற முடியாது. நான் கருத்து வெளியிட்டால் அது அமைப்பின் ஒற்றுமையையே பாதிக்கும்.

கேள்வி: 13வது திருத்தத்தை ஒழிக்க வேண்டுமென்ற குரல்கள் தற்போது எழுந்துள்ளனவே?

பதில்: 1987 இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழேயே 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டு மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளபோதும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் இருக்கும் ஒரேயொரு சட்டமூலம் இதுவே. எனவே தீர்வுக்கான அடிப்படையாக இதனை நாம் பார்க்கின்றோம். சிங்களக் கடும் போக்காளர்களின் இந்தக் கோரிக்கை தீவிரமடைந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்வதில் நிறைய கஷ்டங்கள் இருக்கும்.

கேள்வி: 13வது திருத்தம் அகற்றப்பட்டுவிடுமென நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ அவ்வாறான எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறான ஓர் இக்கட்டான நிலை அரசுக்கு ஏற்பட்டாலும்கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைப்பது சாத்தியமற்றதாகவே இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, இ.தொ.கா, ஏனைய முஸ்லிம் கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் இதற்கு ஒருபோதும் துணை போகாது என்பதே என் எண்ணம்.

கேள்வி: இந்தியாவையும் வெளிநாடுகளையும் நீங்கள் இன்னும் நம்பியிருக்கின்றீர்களா?

பதில்: இந்தியாவோ வெளிநாடுகளோ இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு நமக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுத் தரப்போவதில்லை. ஜே.ஆர்.ஆட்சியில் இந்தியா கொடுத்த அழுத்தமே 13ஆவது திருத்தத்துக்கு வழிகோலியது. அவ்வாறான ஒரு சூழ்நிலை இன்றில்லை.

கேள்வி: அவ்வாறாயின் வெளிநாடு களுக்கு கூட்டமைப்பு ஏன் இன்னும் ஓடித்திரிகின்றது?

பதில்: தீர்வு முயற்சியில் ஏதாவது வெளிநாட்டு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால் பிரச்சினைக்கு எளிதில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்.

கேள்வி: என்ன தான் இருந்தாலும் தீர்வு உள்நாட்டிலே தான் கிடைக்க வேண்டுமென்பதை நீங்கள் ஒப்புக்கொள்கின்றீர்களா?

பதில்: நிச்சயமாக. ஜனாதிபதியுடன் பேசியே பொருத்தமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்களும் இதனையே வலியுறுத்தி வருகின்றனர்.

கேள்வி: அப்படியானால் தெரிவுக்குழுவில் பங்கேற்கலாமே?

பதில்: தெரிவுக்குழுவில் பங்கேற்பதன் மூலம் உருப்படியான தீர்வு கிடைப்பதில் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 13வது திருத்தத்தையே ஏற்றுக்கொள்ள மறுக்கும் சில கடும் போக்காளர்கள் தெரிவுக் குழுவில் அதற்கு வழிவிடுவார்களென நான் நம்பவில்லை. எனவே கூட்டமைப்பும் அரசாங்கமும் பேச்சு நடத்தி அதன் மூலம் எட்டப்படும் இணக்கப்பாட்டை தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிப்பது தான் காலோசிதமானது.

கேள்வி: அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளமை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: கடந்த காலங்களில் தமிழர் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட இணக்கப்பாடுகள், குறிப்பாக பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் ஆகியன தோல்வியடைந்தமைக்கு பிரதான காரணம் இந்த இரண்டு தரப்பு தலைமைகளின் நேரடியான உடன்பாடுகளே என அரச உயர்மட்டம் கருதுகின்றது. எனவே தான் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உடன்பாடு காண அரசு எண்ணுகிறது. இந்த விடயத்தை ஜனாதிபதியும் என்னிடம் பல தடவை தெரிவித்ததை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

கேள்வி: ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட உங்கள் புளொட் இயக்கம் ஜனநாயக வழிக்கு வந்துவிட்டது. போராட்டம் தோல்வியுற்றமைக்கான பிரதான காரணம் என்னவென்று கூறுங்களேன்?

பதில்: புலிகள் இயக்கம் தம்மைப்பற்றி அதீத எண்ணம் (overestimation) கொண்டிருந்தது. ஆயுதத்தில் மட்டுமே அவர்கள் அபரிமித நம்பிக்கை கொண்டிருந்தனர். தமிழ்ப்பத்திரிகைகளும் புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்களுமே புலிகளின் இந்தப் போக்குக்கு காரணம். புலிகளைப்பற்றி அவர்கள் ஒரு மாயையை வளர்த்தனர். புலிகள் ஏனைய இயக்கங்களை கருவறுத்தமைக்கு இதுவும் காரணம். இந்த விடயத்தை நாம் அன்று சுட்டிக்காட்டியபோது போராட்டத்துக்கு நாம் எதிரானவர்கள் என்ற அபிப்பிராயத்தை விதைத்தனர். எனினும் எமது இயக்கம் மிகத் தெளிவான பாதையில் மக்களின் அன்றாட வாழ்வையும் கருத்திற்கொண்டு பயணித்தது.

ஆனால் மக்களும் இதனை அன்று உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டனர். புலிகள் விரும்பியிருந்தால் தமிழ் மக்களுக்கான சிறந்த ஒரு தீர்வை எட்டியிருக்க முடியும்.

இது மட்டுமன்றி அன்று போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் தங்கள் தங்கள் இயக்கத்துக்கு முன்னுரிமை வழங்கத் தொடங்கின. ஏனைய இயக்கங்களை எவ்வாறு பின்னிலைப்படுத்தலாமென்ற உணர்வே அவர்களிடம் மேலோங்கியது. தற்போது கூட தமிழினம் இத்தனை அழிவுகளைச் சந்தித்த பின்னரும் தத்தமது கட்சிகளை முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகளையே தமிழ்த் தலைமைகளிடம் நாம் பார்க்கின்றோம். இந்த நிலைமை மிகவும் கவலைக்குரியது. ஆபத்தானது.

கேள்வி: யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு கிடந்த மக்கள் இன்று அனைத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்த் தலைவர்கள் இன்னும்தீர்வு’ - ‘தீர்வுஎன காலங்கடத்துவது அப் பாவித் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

பதில்: தமிழ் மக்களின் பிரச்சினைகளை நான் இரண்டு விதமாகவே இன்று பார்க்கின்றேன். ஒன்று - அந்த மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வு. மற்றையது - நிர்க்கதியான மக்களின் வாழ்வாதாரங்களை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பிலான செயற்பாடு.

இந்த இரண்டு விடயங்களும் சமாந்தரமாகவே செல்ல வேண்டும். அபிவிருத்திக்கு அரசை மாத்திரம்தான் நம்பியிருக்க வேண்டும் என்றில்லை. புலம்பெயர் தமிழர்கள் மனம் வைத்தால் பொருளாதார வளங்களைக் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப முடியும். இதனை நாம் சரியான கட்டமைப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் அவ்வப்போது சில உதவிகளைச் செய்து கொண்டிருந்தாலும் முறையான ஒழுங்கமைப்பு ஒன்று தேவை. புளொட் இயக்கம் முடிந்த வரையில் இந்த மக்களுக்கு தற்போது உதவி வருகின்றது. (தொடர் -- பக்கம்)

கேள்வி: தீர்வு முயற்சிகள் ஒருபுறமிருக்க அரசின் அபிவிருத்திக்கு கூட்டமைப்பு ஒத்துழைக்கலாமே!

பதில்: இதில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது. எனினும் தமிழ் எம்.பிக்கள் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு அரசுடன் பேச வேண்டும். அதன் மூலம் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்குவது சாலச் சிறந்ததே.

கேள்வி: வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 ஆண்டுகளாகின்றன. இன்னுமே அந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவதில் தடைகள் உள்ளனவே?

பதில்: புளொட்டைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் விடயத்தில் ஒரு தெளிவான பார்வை கொண்டுள்ளது. புலிகளால் வடக்கிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டபோது பகிரங்கமாக கண்டித்து அறிக்கை வெளியிட்டவர்கள் நாமே. தென்னிலங்கைக்கு அகதியாக அள்ளுண்டு போன அவர்களில் பலரை வவுனியாவில் இடைத்தங்கவைத்து முடிந்தளவு உபசரித்து அனுப்பினோம். வெளியேற்றம் ஒரு வேதனையான நிகழ்வு. தாம் வாழ்ந்த பூமியில் அவர்கள் மீளக்குடியேற வேண்டுமென்பதில் நாமும் உறுதியாகவுள்ளோம்.

சுஐப் எம்.காசிம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com