Contact us at: sooddram@gmail.com

 

திரு.வி.ருத்திரகுமாரன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முறைமையைக் கைவிட்டு ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார்ஜெயானந்தமூர்த்தி (முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி)

நாடுகடந்த தமிழீழ அரசில் ஒரு சிலரின் சர்வாதிகாரப் போக்குக் காரணமாக தமிழ் தேசியத்தின் சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அதைவிட்டு வெளியேறவேண்டிய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இயங்குவதா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடுகடந்த அரசின் பிரித்தானிய பிரதிநிதியும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

நாடுகடந்த அரசின் இரண்டாவது அமர்வு தொடர்பாகவும் அங்கு ஏற்பட்ட குழப்பநிலைமை காரணமாகவும் எஸ்.ஜெயானந்தமூர்த்தியிடம் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதென்றால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதால் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற விடயத்தை நாம் கவனத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிட்டிருந்தோம் அதன் மூலம் தமிழ் தேசியத்தின் சார்பாக நாங்கள் அதினமானோர் தெரிவு செய்யபட்டிருந்தோம்.

அதிலும் நான் பிரித்தானியாவில் மாத்திரமின்றி அனைத்து நாடுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தேன். எனினும் நாம் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்ற நிலையில் நாம் தொடர்ந்து செயற்பட்டிருந்தோம்.

ஆனால் ஆரம்பம் முதலே நாடுகடந்த அரசின் உருவாக்கத்தில் இருந்தவர்களும் அதன் இடைக்கால நிறைவேற்றுனரும் மறைமுகத் திட்டங்களுடன் செயற்பட்டு வந்ததுடன் தேசியத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்டவர்களை திட்டமிட்டு ஓரங்கட்டி செயற்படத் தொடங்கியிருந்தனர். ஆனால் மாறாக தாங்கள் வெளிப்படையாகவும் ஒற்றுமையாகவும் இயங்குவதாக மக்களுக்குத் தெரிவித்து வந்தனர்.

இது மாத்திரமின்றி சில சக்திகளின் பின்னணியில் இந்த நாடுகடந்த அரசு உருவாகி இருந்ததையும் அது எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாடுகளில் செல்லக் கூடும் என்பதையும் எடுத்துக் கூறி எனினும் சர்வதேச வலைக்குள்ளேயோ அல்லது இலங்கை அரசின் நிகழ்சி நிரலுக்குள்ளேயோ சென்றுவிடாது தமிழர்களின் ஒரே தலைமை எமது தேசியத் தலைமை என்ற அடிப்படையில் அவரின் கொள்கையில் ஒற்றுமையாக நின்று செயற்பட வேண்டுமென்பதை கடந்த மே மாதம் 17,18,19 ஆம் திகதிகளில் நடைபெற்ற முதலாவது அமர்வின் போது லண்டனில் கலந்து கொண்டு வலியுறுத்தியிருந்தேன்.

எனினும் இதற்கு சில மாறான கருத்துக்கள் சிலரால் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனினும் நாடுகடந்த தமிழீழ அரசின் இடைக்கால நிறைவேற்றுனராக தெரிவு செய்யப்பட்டிருந்த திரு.வி.ருத்திரகுமாரன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முறைமையைக் கைவிட்டு ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார்.

அது மாத்திரமின்றி தற்போது இலங்கை அரசுக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் குமரன் பத்மநாதனின் செயற்திட்டங்களுடன் நாடுகடந்த அரசு செயற்படுகின்றதா என்ற அச்சம் எமக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது அவர்வு நடைபெற்றுள்ளது.

ஒரு நாட்டின் அரசியல் யாப்பு என்பது பல விடயங்களை உள்ளடக்கியதாக ஒரு நாட்டுக்கான வலுவைக் கொண்டாக இருக்க வேண்டும். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசினால் உருவாக்கப்பட்டுள்ள யாப்பு குறைந்தது ஒரு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் யாப்பைப்போன்றும் அமையவில்லை என்பதே எனது கருத்தாக உள்ளது. அது ஒரு தனிப்பட்ட நபரின் அல்லது குழுவின் கரத்தைப் பலப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

எனவே இது ஒரு நாட்டின், அல்லது தேசியத்தின் விடுதலைக்கான யாப்பாக இதைப் பார்க்க முடியாது. அது மாத்திரமின்றி இரண்டாவது அமர்வில் பல முறைகேடுகளும் பக்கசார்பான, தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் இடம் பெற்றுள்ளன. என்னைப் பொறுத்த வரையிலும் என்னைப் போன்று தேசியத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட பலரைப் பொறுத்த வரையிலும் நாம் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களோ அல்லது விலைபோனவர்களோ கிடையாது. எமது நோக்கமே புலம் பெயர் தேசத்தில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பி அதன் மூலம் எமது இனத்தில் விடுதலையை அடைவதேயாகும்.

எனினும் நாடுகடந்த தமிழீழ அரசின் ஆரம்பம் முதல் இரண்டாவது அமர்வு நடைபெற்றது வரை ஐனநாயகம் என்பது கடைப்பிடிக்கப்படாமல் பக்கசார்பான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இரண்டாவது அமர்வின்போது சில பதவிகளை ஐனநாயக ரீதியில் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யாமல் வாக்கெடுப்பைத் தடுத்து தன்னிச்சாயான முடிவில் தெரிவுகள் இடம் பெற்றுள்ளன. இது ஐனநாயகத்திற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது மாத்திரமின்றி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை அம்மக்களின் விருப்பு வெறுப்புகளை முன்னெடுக்கவிடாது தடுக்கப்பட்டும் உள்ளது.

இரண்டாவது அமர்வில் நம்பிக்கையோடு நியூயோர்க், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களில் கலந்து கொண்ட தேசியத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தொடர்ந்தும் அமர்வுகளில் கலந்து கொள்ள முடியாதவாறு நடத்தப்பட்டதால் அதில் இருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் இவ்வுறுப்பினர்கள் வெளியேறிய நிலையில் குறைந்தளவான உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் பதவிநிலை தெரிவுகள் இடம் பெற்றுள்ளன.

நான் இரண்டாவது அமர்வில் கலந்து கொள்ளவில்லை. எனினும் அங்கு இடம் பெற்ற சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். கடந்த மே மாதம் நடைபெற்ற முதல் அமர்வில் இருந்தே எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டிருந்தன. அதனால் நாடுகடந்த அரசின் மீது நம்பிக்கையீனம் இருந்தது என்பது உண்மையே. இதன் காரணமாக நான் சில உறுப்பினர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் சந்திப்புகளில் கலந்து கொள்வில்லை.

உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை மக்கள் முன் கொண்டு சென்று அவர்களை பிழையாக வழி நடத்த விரும்பவில்லை. எனக்கும் தேசியத்திற்கும் வாக்களித்த மக்களுக்கு உண்மையான விடயங்களை முன்வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அந்த உண்மையான விடயங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசின் நோக்கம் அதன் போக்குப் பற்றி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

எனவே நாடுகடந்த அரசின் செயற்பாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பதா இல்லையா என்பதை நான் தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். இக்கருத்தையே தேசியத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிலரும் கொண்டுள்ளனர். எனவே நாம் எடுக்கும் எந்த விதமான முடிவுகளாக இருந்தாலும் அதற்கு நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் சர்வாதிகாரப் போக்குடைய ஒருசிலருமே பொறுப்பாகும் என்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதை விரைவில் நாம் மக்களுக்குத் தெளிவு படுத்துவோம்.

மக்களின் விருப்பு வெறுப்புகளையோ  அரசியல் அபிலாசைகளையோ கைவிட்டு தனிநபர்களின் அல்லது சர்வாதிகாரப் போக்குடைய ஒரு குழுவின் திட்டங்களுடன் இணைந்து செயற்பட முடியாது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனினும் எமது தாயகம், தேசியம், கொள்கை என்பவற்றைக் கைவிடாது இறுகப்பற்றிக் கொண்டு தேசியத் தலைமையின் வழியில் எமது மக்களின் விடுதலையை நோக்கி எனது செயற்பாடு தொடரும். என ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com