Contact us at: sooddram@gmail.com

 

பாரிஸ் மாநாடு ஓர் திருப்புமுனையாக அமையட்டும்

தோழர்களே எமது சர்வதேச கிளைகளின் மாநாட்டிற்காக நீங்கள் பிரான்சின் தலைநகர் பாரிசில் கூடியிருப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

சமூக தார்மீக நெறிமுறைகளுக்காக போராடுபவர்களை உலகின் எந்த தீய சக்திகளாலும் அழித்துவிட முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

கடந்து வந்த கால் நூற்றாண்டுக்கு மேலான எமது பாதையில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இழப்புக்களையும் துன்பங்களையும் சந்தித்து வந்திருக்கின்றோம்.

இப்படியும் நடக்குமா என கற்பனை செய்ய முடியாதவற்றை எல்லாம் நாம் அனுபவித்திருக்கிறோம் பார்த்திருக்கிறோம். நாமும் எமது தாயகத்தின் மக்களும் இழப்புக்கள் போக எஞ்சி நிற்கிறோம்.

இக்கட்டத்தில் முக்கியமான தவிர்க்க முடியாத கேள்வி ஒன்று எழுகின்றது. நாம் எமது சமூக இலக்குகளை அடைந்திருக்கின்றோமா? எமது சமூக வாழ்வு சமூகத்தில் ஜனநாயக மயப்பட்டிருக்கின்றதா? சமூக ஏணிப்படிகளில் அடித்தட்டில் வாழும் மக்களின் சமூக வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டிருக்கிறதா? சமூக தளைகள் அறுந்திருக்கிறதா? அல்லது சிறிதளவேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?

இங்கு யதார்த்தமாகவும் உண்மையாகவும் அப்படி எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எமது போராட்டத்தின் ஆரம்ப நிலையிலேயே பாசிசத்தின் நிழல் கவிந்து அது எமது சமூகத்தினுள் ஊடறுத்து போராட்டத்தின் சகல தார்மீக நெறி முறைகளையும் அழித்தொழித்து ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்டக் காரர்களையும் தலைவர்களையும் கல்வியாளர்களையும் துவம்சம் செய்ததோடு எமது இரண்டு தலைமுறையினரில் கணிசமானோரை இராணுவ மயப்படுத்தியும், இராணுவ மனோபாவத்திற்கு உள்ளாக்கியும் சமூகக் கருவூலங்களான கலாச்சார பொருளாதார விழுமியங்கள் எல்லாவற்றையும் நிர்மூலம் செய்தது.

சிந்திப்பதை நிறுத்திவிடுமாறு சமூகத்தை நிர்ப்பந்தித்தது. தனக்கு அடி பணந்து நிற்குமாறு தொழுதேற்றுமாறு அது அச்சுறுத்தியது தமக்கு எதிரானவர்கள் அல்லது அவ்வாறென தாம் சந்தேகப்படுபவர்கள் எல்லோரையும் மரணப்பொறிக்குள் வீழ்த்தியது.

திட்டவட்டமாக 1980 களின் நடுப்பகுதியில் குரூர முகம் காட்டிய பாசிசம் 2009 நடுப்பகுதியில் பலத்த ஆரவாரத்துடன் வீழ்ச்சியுற்றது.

அதற்குப்பிந்திய சூழலில் நாம் பேசுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான சூழல் உருவாகியிருக்கின்றது என்பது உண்மையே அது தாயகத்திலும் புலம்பெயர் தளத்திலும் உண்மையே.

ஆனால் தமிழ் மக்களுக்கும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தேசிய இனங்களுக்கும் உரிமைகளை அங்கீகரிப்பதில் கடுமையான நிலை உருவாகியுள்ளது. 1980 களில் இருந்ததை விட நிலைமை கடுமையாகியுள்ளது. இத்தகைய சிக்கலான இக்கட்டான நிலைக்கு தமிழ் மக்களை இட்டு வந்தது எம்மத்தியில் இருந்த பாசிசமே என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழர்களுக்கு எதையும் வழங்கத் தேவையில்லை பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்றவாறு இலங்கையின் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளை சேர்ந்தவர்களும் சொல்ல முற்படுகின்றார்கள்.

தமிழர்களின் பிரச்சினை பயங்கரவாததத்திற்கு முற்பட்டது 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவுவது என்பதை உணர்ந்தும் உணராதவர்கள் போல் இவர்கள் நடக்க முற்படுகின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் 2009 வெற்றியின் பெருமித உணர்வுகள் பரவலாக இருந்தாலும் அவர்கள் இன்று தாம் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளும் காவுகொள்ளப்பட்டு விடுமோ என அச்சமுறுகின்றார்கள் இலங்கையில் இன சமூகங்களின் பிரச்சினைக்கு ஜனநாயகரீதியாக தீர்வு காணாத வரை இலங்கையின் பெரும்பான்மை இன மக்களும் ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க முடியாதென்பதே நிஜம்.

தென்னிலங்கையில் முற்போக்கு அரசியலும் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

கெடுபிடி யுத்தத்திற்கு பின்னரான உலகம் 1990இருந்து தீவிர மாற்றமடைந்து வந்திருக்கிறது. அது தென்னாசியாவையும் பாதித்தது.

இந்தியா, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் சாரம்சத்தை அதன் அதிகாரப் பரவலாக்கத்திட்டத்தை நடைமுறையில் முழுமையாக சாத்தியமாக்குமாறு இலங்கையிடம் பல தடைவை நயந்து கேட்டிருக்கிறது. இலங்கையின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டிருக்கிறது. நட்பான அயல்நாடு என்ற வகையில் பல்வேறு தடைவைகள் இலங்கையின் தலைவர்களிடம் பல தடைவைகள் இதனை வலியுறுத்தி வந்திருக்கிறது.

ஆனால் இந்த விடயம் எதிர்நிலையிலேயே பயணப்பட்டிருக்கிறது. அவசரகாலச்சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. முறையாக இணைப்பதற்கு மனசாரச்செயற்படுவதற்கு இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளுக்கும் மனமொருப்படவில்லை.

இந்தியாவின் அனுசரணையுடனான அதிகாரப்பரவலாக்கத்திட்டம் சந்திரிக்காவின் சமஸ்டி ஒஸ்லோவின் கூட்டாச்சி மகிந்தவின் அனைத்துக்கட்சிக்கூட்டம் எல்லாமே கடந்து போய் விட்டன தற்போதும் வடக்கு கிழக்கின் இரண்டு மாகாணங்களுக்கும் பொருள் பொதிந்த அதிகாரப்பகிர்விற்காக உணர்ச்சிவேசப்படாமல் நிதானமாக செயற்படவேண்டியிருக்கிறது.

யுத்தத்தின் இறுதியில் பணயம் வைக்கப்பட்டு பின்னர் பிரலயமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் முட்கம்பி வேலிகளைத் தாண்டி வன்னியில் நிகழ்கிறது. ஆனால் அவர்களின் வாழ்க்கையினை உறுதியான அடித்தளத்தில் நிர்மாணிப்பதற்கு உள்ளகக்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

உயிரிழப்பு, ஊனமற்ற நிலை பொருளாதார இழப்பு பேதலித்த மனமென வன்னியில் மக்களின் இழப்புக்கள் பிரமாண்டமானவை. இவர்களின் தேவைகளை நிவர்த்திக்க ஊழலற்ற மனிதப்பண்புடனான அர்ப்பணிப்புத்தேவை இந்தியா மற்றும் ஐநா ஸ்தாபனங்கள் உலக நாடுகள் கணிசமான அளவில் உதவிகளை வழங்கிவருகின்றன.

அகதிகளான மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் வடக்கு கிழக்கை மீள் கட்டியெழுப்பவும் சர்வதேச சமூகம் உதவி வழங்க முன்வந்திருக்கிறது.

இவற்றை வினைத்திறனுடன் கையாழ்வதற்கான தமிழர் பங்குபற்றலுடனான அரசமுறைமையொன்று இன்னும் இங்கு ஸ்தாபிக்கப்படவில்லை

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நாங்கள் நழுவவிட்டுள்ளோம். தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் தீர்க்க தரிசனமற்ற அரசியலே இதற்கு காரணம் என்றால் மிகையல்ல

ஆனால் இந்த திரும்பத்திரும்ப நிகழ்த்தப்பட்டு வருகின்ற வரலாற்றுப்பிழைக்கு முடிவு கட்டவேண்டும் அப்போதுதான் பன்முகத்தன்மை வாய்ந்ததும் சமத்துவமானதும், ஐக்கியமானதுமான வாழ்வொன்றை இங்கு கட்டியெழுப்ப முடியும்

எமது மக்கள் இழந்த இழப்புக்களுக்கும் சந்தித்தத்த பேரழிவுகளுக்கும் ஈடாக தீர்வொன்று எட்டப்படவேண்டும்.

எத்தனை அவமானங்கள் இழிவுகள் உதாசீனம், மரணங்கள் மத்தியில் நாம் வாழ்ந்திருக்கிறோம். இது இலங்கையில் வாழும் தோழர்களுக்கு மாத்திரமல்ல புலம்பெயர்ந்து வாழும் தோழர்களுக்கும் பொருந்தும்.

எமது மக்களின் சார்பில் எம்மை ஸ்தாபிப்பதற்கு பாரதப்போரில் அவிமன்யு சிக்கியது போல் ஒரு சக்கர வியூகத்தினுள் அல்லவா நாம் சிக்கியிருந்தோம் இறுதியாக அது எமது மக்களுக்கும் நேர்ந்தது.

இவற்றையெல்லாம் தாண்டி பேரழிவுகளுக்குப் பின்னால் எஞ்சியிருப்பவை எமது கொள்கைளும், கனவுகளும், இலட்சியங்களும்தான்.

சமகாலச சூழ்நிலைக்கு ஏற்ப இவற்றை வென்றெடுப்பதற்காக நாம் இயங்க வேண்டியிருக்கிறது, செயற்படவேண்டியிருக்கிறது,

இன்று எமது ஸ்தாபனம் என்பது உலகளாவியதாக அமைந்திருக்கிறது. எமது பிரச்சினைகள் எம்மை அவ்வாறு ஆக்கியிருக்கிறது தாயகத்திலுள்ள தோழர்கள் மக்களை ஊக்கப்படுத்துவத்தில், தென்பூட்டுவதில் புலம்பெயர் தளத்திலுள்ள தோழர்கள் நண்பர்கள் ஆதரவாழர்கள் வழங்கிய பங்களிப்பை உரிமையுடனும் நன்றியுடனும் நினைவுகூர கடமைப்பட்டவர்கள்.

புலம்பெயர்த்தளத்தில் இயங்கிய மாற்று ஊடகங்கள் வழங்கிய பங்களிப்பு வானொலி, இணையங்கள் இங்கு வழங்கிய பங்கழிப்பு சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்தவை.

புலம்பெயர்த்தளத்தில் செயற்பட்ட தோழர்களின் அர்ப்பணம், நேர்மை தாயகத்திலுள்ளவர்கள் பற்றிய அவர்களின் உள்உணர்வு என்பன இங்கு எமக்கு பல நண்பர்களை உருவாக்கி தந்திருக்கிறது.

நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் இலங்கையினை அரசியல் அரங்கை ஜனநாயகப்படுத்துவதற்கும் சமூக அபிவிருத்திப் பணிகளை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கும் எமது நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கும் பரந்த அளவிலான ஐக்கியம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

பாரிய அளவில் வெகுஜனங்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

1980களின் முற்பகுதியில் அல்லது 70களில் வேலை செய்தமை போன்ற முறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது.

ஆனால் அப்போதிருந்த அரசியல் சமூக சவால்கள் தற்போது உள்ளதுடன் ஒப்பிடுகையில் தலைகீழ் வித்தியாசமானவை ஓரளவு எளிமையானவை

எனவே புதிய நிலவரங்களுக்கு ஏற்ப புதிய வெளிச்சத்தில் நாங்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

சர்வதேச அளவில் எங்களைப் போன்று மனித குலத்தில் நல்வாழ்விற்காக போராடும் சக்திகளுடன் கரங்கோர்த்து செயற்படும் அந்த இயல்பை என்றைக்கும் நாம் கைவிட்டுவிடக்கூடாது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் அடையாளமே எமது அடையாளம் நாம் அவர்களைப் பிரதிபலிப்பவர்கள் மாத்திரமல்ல அந்த மக்களின் விடிவிற்காக செயற்படுவர்கள் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.

பாரிஸ் மாநாடு நடைபெறும் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது.

பாரிஸ் மாநாட்டின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தி.ஸ்ரீதரன்

 செயலாளர்

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி  

(ஒக்ரோபர் 24, 2010)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com