Contact us at: sooddram@gmail.com

 

காணி உரித்து பதிவு நடவடிக்கையினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை

(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் 2011.10.21 ஆம் திகதி ஆற்றிய உரை.)

நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரே!...

இந்த நாட்டில் அழிவுகளை மட்டும் தந்துகொண்டிருந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டமை சாதாரண குடிமக்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாகும். குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் நீடித்த மகிழ்ச்சிக்கு அதிக விலை கொடுத்துள்ளதால் அழிவுகளுக்கு பின்னராவது நிமிர்ந்தெழுவோம் என்ற நம்பிக்கையோடும் மகிழ்ச் சியோடும் காத்திருக்கிறார்கள். ஆனாலும், அழிவு யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டமை குறித்து துயரப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே. கடந்த காலங்களில் அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் துணைபோனவர்கள். அழிவுகளையும், அவலங்களையும் மட்டுமே எடுத்துக் காட்டி சுயலாப அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தொடர்ந்தும் தமது வழமையான அரசியலை நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவேதான், இப்போது அரசாங்கத்தால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி உரித்துப் பதிவு நடவடிக்கையினை, தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட செயலாக பொய்யுரைத்து, அதை வைத்து தமது சுயலாப அரசியலை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து தேசிய மட்டத்தில் நாடு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டமானது 1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க காணி உரித்துப் பதிவு சட்டத்தின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் நடவடிக்கை என்பதை நான் இந்த சபையில் எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

இலங்கை தீவெங்கும் தனியார் காணிகளுக்கான உறுதி, அரச காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் (பேமிற்) மற்றும் அளிப்புப் பத்திரம் (கிரான்ட்) ஆகியவற்றை மிகவும் நம்பகத்தன்மையுடையதும் அரச உத்தரவாதமுடையதுமான உரித்து ஆவணமாக மாற்றுவது, மேலும் அதை வினைத்திறன் மிக்க, எளிமையான பத்திரமாக உருவாக்குவது, இதன் ஊடாக நடைமுறையில் இருந்து வரும் காணிப் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட சாதாரண குடி மக்கள் தத்தமது காணிகளின் உரித்தை வலுப்படுத்துவது, சிறந்த காணி முகாமைத்துவத்திற்காக கணனி மயப்படுத்தப்பட்ட காணித் தகவல் முறையொன்றை உருவாக்குவது. இவைகளே இப்போது நடந்து வரும் காணி உரித்துப் பதிவு நடவடிக்கையின் உண்மையான நோக்கங்களாகும்.

காணி உரித்துப் பதிவு நடைமுறை என்பது ஏற்கனவே தென்னிலங்கையில் கடந்த 2002 ஆம் வருடம் முன்னோடி நடவடிக்கையாக கம்பளை, பலாங்கொடை, தம்புத்தேகம, திவுலப்பிட்டிய, ஹோமாகம ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆரம்பித்து பின்னர் தேசிய அளவில் 2007 ஆம் ஆண்டில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தென் பகுதியில் 72 பிரதேச செயலகப் பிரிவுகளில் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் யுத்தம் நடந்து கொண்டிருந்த சூழ்நிலை காரணமாக இப்போதுதான் இந்த திட்டம் இப்பகுதிகளில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது.

இதற்கு மேலதிகமாக, வடக்குக் கிழக்கு பகுதிகளில் அரசியல் ரீதியிலான முறைகேடுகள் காரணமாகவும் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாகவும் அழிந்து போயுள்ள அரச காணி தொடர்பிலான ஆவணங்களை மீள வழங்கும் நடவடிக்கை 2011- 4 சுற்றுநிருபத்தின் பிரகாரம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாம் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையிலும், தமிழ் மக்களின் வாழ்வாதார மற்றும் அரசியல் உரிமைகளுக்காக உழைத்து வருகின்றவர்கள் என்ற வகையிலும் இது குறித்து தமிழ் மக்களுக்கு உண்மை நிலை என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டியதும் எமது பொறுப்பாகும்.

நடைபெற்று வரும் காணி உரித்துப்பதிவு சட்டத்தினால் தமிழ் பேசும் மக்கள் எந்த விதமான பாதிப்புகளையும் அடையப் போவதில்லை என்பதையும் இதனால் எமது மக்களுக்கு நன்மையே ஏற்படும் என்பதையும் நாம் ஆராய்ந்து அறிந்துள்ளதால் நாம் இச் சட்டத்தை ஆதரித்திருந்தோம் என்பதையும், நான் இந்த சபையில் எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இந்தக் காணி உரித்துப் பதிவு நடவடிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அச்சமூட்டப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பெயரில் இருக்கும் காணி கள் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் திட்டமிட்ட வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற மூத்த தலைவர்கள் சிலர் கடந்த காலங்களில் தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தி தனியார் மற்றும் அரச காணிகளை பலாத்காரமாகவும் கபடத்தனமாகவும் அபகரித்த குட்டு அம்பலப்பட்டு விடும் என்று அஞ்சியும் தங்களது சுயலாப அரசியலுக்காகவும் இப்படி யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதுடன் தமது சுயலாப எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே இந்த சபையின் ஊடாக நான் புலம்பெயர்ந்து வாழும் எம் தமிழ் பேசும் உறவுகளுக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்த விரும்பு கின்றேன்.

நீங்கள் காணி உரித்துப் பதிவுக்காக இங்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்பதையும், நீங்கள் வாழும் நாடுகளில் இருந்து கொண்டே உங்களது உறவினர்கள், அல்லது நண்பர்கள் அல்லது கணனி மூலமாக உங்களது காணிகள் தொடர்பான தகவல்களை வழங்கி பதிவு செய்ய முடியும் என்பதையும் இதற்கு மேலதிகமாக எந்தவொரு ஆவணமும் தேவையில்லை என்பதையும் இதற்கு மேலதிகமாக எந்த முயற்சிகளையும் செய்யத் தேவையில்லை என்பதையும் நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இதேவேளை கடந்த கால அழிவு யுத்தத்தின் போது இறந்தவர்களின் காணிகளோ அன்றி இயற்கை மரணம் எய்தவர்களின் காணிகளோ நடைமுறையில் இருந்து வரும் காணி உரிமை சட்டத்தின் பிரகாரம், இறந்தவர்களின் சந்ததியினருக்கே அந்தக் காணிகள் சொந்தமாகும் என்ற விடயத்தையும் நான் இந்த சபையில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரே!....

நாடளாவிய ரீதியில் நடந்து வரும் காணி உரித்து பதிவு நடைமுறையானது தமிழ் மக்களுக்கு விரோதமான ஒரு செயல் அல்ல என்பதாலும் அது தமிழ் மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக அமையும் என்பதாலும் தான் நாம் இந்த விடயத்தில் எடுத்திருக்கும் நிலைப்பாடே சிறந்த சாட்சியம் ஆகும்.

இது தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கையாக இருந்திருந்தால் இந்த நடவடிக்கையை நான் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன்.

உரிய தரப்போடு, உரிய முறையோடு நான் எமது மக்களுக்காக நீதி கேட்டு வாதாடியிருப்பேன். இதை நான் உறுதியாக இந்த சபையில் எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ளேன்.

இச்சட்டமானது 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட போது இன்று இதை சுயலாப அரசியல் காரணங்களுக்காக எதிர்த்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சார்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான சட்டமேதை அமரர் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் கூட இச்சட்டத்தை சரிவரப் புரிந்து கொண்டதன் காரணமாகவே இதை அவர் அன்று எதிர்த்திருக்கவில்லை. அத்துடன் இது ஒரு நல்ல விடயம் என்றும் இதனை எதிர்ப்பது எமக்கு பாதிப்பாக அமைந்து விடும் என்றும் அவர் என்னிடம் கூறியதை நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அரசாங்கம் சரியானதை செய்யும் போது அதை ஆதரிப்பதும், தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அதை சுட்டிக்காட்டி அதற்கு உரிய தீர்வு காணும் உண்மையான நோக்கத்தோடு செயற்படுவதுமே நாம் முன்னெடுத்து வருகின்ற இணக்க அரசியல் வழிமுறையாகும்.

உரிமைக் குரல் கொடுப்பதும், உறவுக்கு கரம் கொடுப்பதுமே எமது இணக்க அரசியல் கோட்பாட்டின் அடிப்படை கொள்கையாகும்.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தி வருவது வெறுமனே ஒரு சுயலாக அரசியலுக்கான எதிர்ப்பு மட்டும்தான். அரசாங்கம் சரியானதை செய்தாலும் அதை எதிர்ப்பார்கள், தவறானதை செய்தாலும் அதை எதிர்ப்பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தவறானவற்றை எதிர்ப்பது கூட அந்த தவறுகளை திருத்தி, சரியான வழிமுறை நோக்கி அரசாங்கத்தை அழைத்து வருவதற்காக அல்ல. தவறுகள் தவறுகளாகவே இருக்க வேண்டும் என்றும், அந்தத் தவறுகள் தொடர வேண்டும் என்றும், இதை வைத்தே தமது நாடாளுமன்ற நாற் காலிகளை தக்க வைத்துக்கொள்வதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நோக்கமாகும்.

இல்லாத பிரச்சினைகளை தாமே உருவாக்கி அதை தமது தேர்தல் வெற்றிகளுக்காக பயன்படுத்துவதே இவர்கள் செய்து வரும் மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

காணி உரித்துப் பதிவு தொடர்பில் இவர்கள் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தாலும் இவர்களும் இவர்களது குடும்ப உறுப்பினர்களும் வேகமாக காணி உரித்துப் பதிவுகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதனையும் இவர்களுக்கு நெருக்கமானவர்களை காணி உரித்துப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு தூண்டியும் வருகிறார்கள் என்பதனையும் நான் இந்த சபையில் அம்பலப்படுத்த விரும்புகிறேன்.

அத்துடன் காணி உரித்துப் பதிவு தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தரணியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் (வினாயக மூர்த்தி) காணி தொடர்பான எதிர்ப்புப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன், அவர்கள் சார்ந்த சக நாடாளுமன்ற உறுப்பினரும் பத்திரிகை உரிமையாளருமான சப்றா சரவண பவனும் வெளிநடப்புச் செய்தனர் என்பதனை இச்சபைக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அதுமட்டுமல்லாமல் இக்காணி உரித்துப் பதிவு தொடர்பில் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏதும் கிடையாது என மாகாண காணி ஆணையாளரை சந்தித்து தான் தகவல் அறிந்து கொண் டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேற்படி பத்திரிகை உரிமையாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தனது பத்திரிகையில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்டுவதோடு அதை இந்த சபையில் சமர்ப்பிக்கவும் விரும்புகிறேன். (நாளை வரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com