Contact us at: sooddram@gmail.com

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் சேதமுற்ற கட்டடங்கள், குளங்கள் பலகோடி ரூபாவில் புனரமைப்பு

கேள்வி : உங்களைப்பற்றிய அறிமுகமொன்றை சுருக்கமாக கூறுவீர்களா?

பதில் : தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் இருந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் மிகத்தீவிர ஒரு போராளியாக இருந்தேன். அந்தக்காலத்தில் இளைஞராக இருந்த நான் தமிழரசுக்கட்சியின் வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டேன். அதன் பின்னரான காலப்பகுதியில் ஒவ்வொரு பிரச்சினைகளும் உருவாகியமையினால் அவற்றில் இருந்து விடுபட்டு விடுதலைப்புலிகளின் அரசியல் துறையுடன் சேர்ந்து செயற்பட்டுக்கொண்டிருந் தோம். அப்போது 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டம் சார்பில் என்னை போட்டியிடுமாறும் தேர்தலுக்குரிய பணம், பிரசாரம் உள்ளிட்ட தேர்தலுக்கு தேவையான உதவிகளைச் செய்வதாகக் கூறி வற்புறுத்தினார்கள்.

எனினும் அவர்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலையில் புலிகளுடைய கோரிக்கையை ஏற்று அப்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் என்னை இரண்டாவது இடத்திற்கு தெரிவு செய்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்த காலப்பகுதியில் எமக்கு சுயமாக இயங்க முடி யாது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என சொல்வார்கள். அதையே நாம் செய்ய வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் நிதியைக் கூட எமது விருப் பத்திற்கு ஏற்றவாறு செலவு செய்ய முடியாத அளவுக்கு கட்டுப்பாடு போடுவார்கள். அப்போது ஒரு பொம்மை அரசியல்வாதியாகவே செயற்பட வேண்டியேற்பட்டது.

மட்டுமன்றி, புலிகளின் குரல் வானொலி, சர்வதேச ஊடகங்கள் மூலம் என்னை அரசுக்கு எதிராக பேசச் சொல்லி என்ன பேசுவது என்பதை சொல்லித் தருவார்கள். அதன்படி கட்டாயத்தின் பேரில் அன்று அரசுக்கு எதிராக ஊடகங்கள் மூலம் குரல் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

பின்னர் இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் ஊடாக வன்னி மக்களுடன் மக்களாக நானும் ஓமந்தைக்கு சென்றேன். அப்போது ஓமந்தையில் நான் பாராளுமன்ற உறுப்பினர் என்றேன். எனினும் மக்களுடன் மக்களாக இராணுவத்தினர் என்னை மெனிக்பாம் அகதி முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். சில காலம் மெனிக்பாம் முகாமில் இருந்த போது புலனாய்வு துறையினர் என்னை வவுனியா அழைத்துச் சென்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு (நான்காவது மாடி) அழைத்துச் சென்றனர்.

என்னை பார்ப்பதற்கு எனது குடும்பத்தை அனுமதிக்கவில்லை. கொழும்பிலுள்ள நண்பர்கள் சிலரே எனக்கு தேவையான உணவு உள்ளிட்ட உதவிகளைச் செய்து கொடுத்தனர். எட்டு மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்தார்கள்.

அதன் பின்னர் 09 மாதம் என்னை விடுதலை செய்வதற்கு உரிய முயற்சிகளை எமது மாவட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேற்கொண்டார். எனக்காக ஜனாதிபதியுடனும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடனும் பேசினார். அரசாங்கம் என்னை விடுதலை செய்வதாகக் கூறினார்கள். அப்போது அமைச்சர் பஷில் ராஜபக்ஷ என்னுடன் தொலைபேசி ஊடாக பேசினார்.

‘ஐயா நீங்கள் எங்கு போகப் போகிaர்கள், இதற்கு பிற்பாடு நீங்கள் என்ன செய்யப் போகிaர்கள்’ என்றார். அதற்கு நான் இறுதிக்கட்டம் வரை மக்களுடன் மக்களாகவே நின்றவன் என்ற அடிப்படையில் இனி எனது வாழ்நாளை நான் எனது வன்னி மக்களுக்காகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் அரசுடன் இணைந்து பணியாற்றப் போகிறேன் என பதிலளித்தேன்.

அதன் பிற்பாடுதான் முல்லைத் தீவுக்கு வருகை தந்த போது முல்லைத் தீவு மாவட்டத்தில் அப்போது துணுக்காய், பாண்டியன்குளம் ஆகிய இரு பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேறியிருந்தனர். அப்போது மீள்குடியேறிய மக்களுக்கு தேவையான வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டங் களையும், அடிப்படைத் தேவைகளையும் அரசாங்கத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தேன்.

அதன் பின்னர் வந்த பாராளுமன்ற தேர்தலில் அரசு சார்பில் போட்டியிட்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக தெரிவு செய்யப்படவில்லை. எனினும் அந்த தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரான ரிசாத் பதியுதீனுடன் இணைந்து தொடர்ந்தும் மக்களுக்கான பணியை முன்னெடுத்து வருகிறேன். பின்னர் 2010 இல் ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக நியமனம் கிடைத்தது.

கேள்வி : கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நீங்கள் பின்னர் அரசுடன் இணைந்துள்ளமை முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்கள் வரவேற்கிறார்களா?

பதில் : நான் என்னுடைய தனிப் பட்ட சுகபோகங்களுக்காக அரசுடன் இணைந்துகொள்ளவில்லை. அப்படி யென்றால், அன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட என்னுடைய மகன் இன்றும் சிறையில்தான் இருக்கிறான். பலரை தடுப்பிலிருந்து விடுதலை செய்த அரசாங்கம் எனது மகனை விடுதலை செய்யவில்லை.

எனவே, நானும் எந்த கோரிக்கையை முன்வைத்தும் அரசுடன் இணைந்து கொள்ளவில்லை. என்னுடைய மாவட்டம், மக்கள் என்ற உணர்வுடன் மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கவே அரசுடன் இணைந்து கொண்டேன்.

அபிவிருத்தி நடவடிக்கையை அரசாங்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்க முடியும். அறிக்கை விடுவதால் மக்களுக்கு பிரயோசனத்தைக் கொடுக் காது. முழு மாவட்டத்திற்கும் விமோசனத்தை பெற்றுக்கொடுக்காது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு செய்த சேவையை விட ஜனாதிபதியின் இணைப்பாளராக இருந்து கொண்டு செய்த பணி அளப்பரியது. இதனை மிகவும் நன்றியுணர்வுடன் பார்க்கிறேன். எனவே, ஒரு சிலருக்கு மனக்கசப்புகள் இருந்தாலும் பலர் இதனை மனரீதியாக ஏற்றுக்கொண்டிருக் கிறார்கள்.

அரசுடன் இணைந்த பின்னர் ஜனாதிபதி மற்றும் வன்னிக்குப் பொறுப்பான அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோரின் உதவியுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை செய்திருக்கிறேன். மட்டுமன்றி, என்னுடைய சிபார்சில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்கும், தொழில்வாய்ப்பு களுக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் நானே சிபார்சு செய்திருக்கிறேன்.

சமுர்த்தி பட்டதாரி, சிற்றூழியர் என பல துறைகளில் ஆயிரத்திற்கும் கூடுதலானோருக்கு அரச துறைகளில் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளமையானது எனக்கு பெரும் மன நிம்மதியைத் தருகிறது.

மட்டுமன்றி மக்களுக்கு தேவையான அத்தனை உதவித்திட்டங்களையும் அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொடுத்திருக்கிறேன். இதனால் அரசுடன் இணைந்த காலப்பகுதியில் என்னை விமர்சித்தவர்கள் காலப்போக்கில் அதன் உண்மைத்தன்மையை புரிந்துகொண்டு அரசுடன் இணைந்தமையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் அரசியல் பேசவில்லை. எமக்கு அபிவிருத்தியே தேவையாகவுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட எமது முல்லைத்தீவு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை எமக்கு உள்ளது. அதனடிப்படையில்தான் எமது மாவட்டத்தின் தேவைகளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் மக்களுக்காக பெற்றுக்கொடுக்கிறேன்.

கேள்வி : யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதி யில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகள் பற்றி சுருக்கமாக சொல்ல முடியுமா?

பதில் : நிச்சயமாக போரினால் முழுமையாக அழிவடைந்து போன எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்திப் பணிகளை முழுமையாக சொல்ல முடியாவிட்டாலும் ஒருசிலவற்றை சுட்டிக்காட்ட முடியும். ஏனெனில், கல்வி, சுகாதாரம், விவசாயம், பாதை, மின்சாரம், கல்வி என்று சகல துறைகளிலும் எமது மாவட்டத்தை அரசு அபிவிருத்தி செய்திருக்கிறது.

ஆரம்பத்தில் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்கும், முல்லைத்தீவிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்வதற்கு முல்லைத்தீவிலிருந்து மாங்குளம், செல்வதற்கும் நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் இன்று நினைத்தவுடன் உரிய இடத்தை அடையக்கூடிய அளவுக்கு கிரவல் பாதையாக இருந்த வீதி இன்று தார் பாதையாக மாறியுள்ளது.

அதுமட்டுமன்றி யுத்தத்தினால் மக்களின் வீடுகள், அரச கட்டடங்கள் முற்றாக அழிவடைந்து போனது. இதனையும் மீளவும் நிர்மாணித்து அன்று அந்த வீடுகளும் கட்டடங்களும் எப்படிக் காட்சியளித்ததோ அதைவிடவும் செழிப்பான முறையில் பல மில்லியன்கள் ஒதுக்கீட்டில் வீடுகளும், அரச கட்டடங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை எமது மக்களுக்கு கிடைத்த பெரும் கெளரவமாகும். மட்டுமன்றி, பல கிராமங்கள் மின்சாரமின்றி, இருளில் மூழ்கிக் கிடந்தன. ஆனால் இன்று வரை பல கிராமங்களுக்கு மின்சாரத்தை வழங்கிய பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கே உள்ளது.

மட்டுமன்றி முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விவசாயக்குளங்கள், கடல் வளங்கள், என்பனவற்றிலும் பாரிய முன்னேற்றங்கள் அடைந்துள்ளன. இவ்வாறான அபிவிருத்திகளை எவராலும் மாற்றவும் முடியாது. மறக்கவும் முடியாது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான். மாந்தை கிழக்கு, துணுக்காய் வெலிஓயா, புதுக்குடியிருப்பு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர்களும், இராணுவம் உள்ளிட்ட பொலிஸாரும் எமக்கு மனப்பூர்வமான ஒத்துழைப்புகளைத் தருகிறார்கள்.

எனவே, எமது மக்கள் எப்போதும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். மனிதனுக்கு யாரும் உதவி செய்தால் அதனை நன்றியுணர்வுடன் நினைவு கூருவோம்.

கேள்வி : முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசு பல அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளதாகச் சொன்னீர்கள். அப்படியென்றால், கடந்த மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் ஏன் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை?

பதில் : ஆம் கடந்த மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் மாத்திரமன்றி முழு வடபகுதியிலுள்ள மக்கள் அரசுக்கு வாக்களித்தமை மிகவும் குறைவுதான்.

இதற்கு காரணம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார யுக்தியாகும். அப்போது எமது மக்களை இறுதிக்கட்ட போரின் நிகழ்வு களையும் மாவீரர் துயிலும் இல்லத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் வடக்கை கூட்டமைப்பே கைப்பற்ற வேண்டும் என்ற உணர்வுபூர்வமான பேச்சுக்களை சொல்லி மக்களை பிழையாக வழிநடத்தி வடக்கை கைப்பற்றியுள்ளார்கள்.

தேர்தல் காலங்களில் கூட்டமைப்பு செய்த போலிப்பிரசாரத்தை நம்பிய எமது மக்களும் அவர்களுக்கு வாக்களித்தால்தான் விமோசனம் கிடைக்கும் என்று நம்பி வாக்களித்தார்கள். இன்று அவர்கள் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தந்திரத்தை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அரசின் அபிவிருத்தித் திட்டங்களை நன்கு புரிந்து வைத்துள்ள முல்லை மாவட்ட மக்கள் வரக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் அரசுடன்தான் இருப்பார்கள் என்றும் வீரவசனங்களை பேசி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் அணிதிரள்வார்கள் என நம்புகிறேன்.

அதுமட்டுமன்றி கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர்களை தெரிவு செய்ததிலும் ஒரு பிழை உள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களை விட்டு கறைத்துறைப்பற்று பிரதேச எல்லைக்குட்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தினார்கள். இதனால் மக்களின் வாக்கு சிதறடிக்கப்பட்டது. இதனால் இரு உறுப்பினரை பெற்றுக்கொள்ள இருந்த எமக்கு ஒரு உறுப்பினரை மாத்திரமே பெறமுடிந்தது.

கேள்வி : வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : அந்தக் குற்றச்சாட்டுக்கள் போலியானவை. உண்மையில் இராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு உதவியாக இருக்கிறார்களே தவிர, உபத்திரம் கொடுத்தது கிடையாது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒரு பிரதேசமே கேப்பாப்புலவு கிராமமாகும். அங்கு வாழும் மக்களுக்கு தேவையான சகல அடிப்படை வசதிகளையும். தேவையான உதவிக ளையும் அரசாங்கம் செய்துவரும் அதேவேளை, இராணுவத்தினர் கூடவே இருந்து சகோதரர்கள் போல உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

பொதுக்கூட்டங்கள், விழாக்கள், சிரமதானங்கள் என்றால் மக்கள் வரும் முன்னர் எதுவிதமான எதிர்பார்ப்புகளையும் பார்க்காமல் இராணுவத்தினரே முதலில் நிற்பார்கள். இது மக்களுக்கு பெரும் உதவியையே கொடுக்கிறது. மட்டுமன்றி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல ஏக்கர் விவசாய நிலங்களையும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் உரிய மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு தேவையான அபிவிருத் திகளை தடுக்கிறோம் என்று கொஞ்சம் கூட குற்ற உணர் வின்றி, கூட்டமைப்பினர் அரசுக்கு எதிராகவும், இராணுவத்தினருக்கு எதிராகவும் பிரசாரங்களை செய்து வருகிறார்கள்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தமக்கு அறிக்கையை மாத்திரம்தான் விடமுடியுமே தவிர, வேறு எதுவும் செய்ய முடியாது என்று குறிப்பிட் டுள்ளார். உண்மையும் இதுவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி அண்மையில் ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வந்த போது கூட்டமைப்பினர் ‘வைக்கோல் பட்டடை நாய் போல’ என்று தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார்.

உண்மையும் அதுதான். உங்களுக்கு அபிவிருத்தி செய்யாது போனால் அதற்கு உதவி செய்யுங்கள். ஆனால் அதனை தடுக்கும் நோக்கில் உபத்திரமாக இருக்காதீர்கள் என்பதை நான் வினயமாகக் கேட்கிறேன்.

கேள்வி : முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு வழங்க உள்ள காணியை தடுப்பதற்கு கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் கொடுக்க வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிaர்கள். எனவே, அந்த மக்களுக்கு எப்போது காணி கிடைக்கும்?

பதில் : முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு யாருக்கெல்லாம் காணி இல்லையோ அவர்களுக்கு பொருத்தமான இடங்களில் காணியை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த நடவடிக்கையில் அதற்கு ஆதரவாக நானும் செயற்படுகிறேன். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும். இதில் இரு கருத்திற்கு இடமில்லை.

1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முல்லைத்தீவு முஸ்லிம்கள் புத்தளம் போன்ற இடங்களில் மீள்குடியேறியிருந்தனர். அன்று ஒரு குடும்பமாக சென்றவர்கள் இன்று பல குடும்பங்களாக மாறியிருக்கின்றனர். எனவே, அவர்கள் எல்லோரும் இங்கு வந்து வாழ்வதற்கு உரிய காணி, வீடு இல்லாத பிரச்சினை காணப்படுகிறது என்பது உண்மையாகும்.

எனவே, முஸ்லிம் மக்களுக்கு அரச காணியை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமின்றி எவர் எதிர்த்தா லும் ஜனாதிபதியின் பூரண அனும தியுடன் மிக விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும்.

கேள்வி : இறுதியாக என்ன கூற விரும்புகிaர்கள்?

பதில் : மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலம் இது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் - முஸ்லிம் மக்கள் 90 இற்கு முன்னர் எப்படி ஒற்றுமையாக இருந்தார்களோ அது போல அந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் மோதவிட்டு அதில் அரசியல் குளிர்காய நினைக்கின்றவர்களுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்.

எமது நாட்டிற்கு நல்ல தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிடைத்துள்ளார். தமிழ் மக்கள் மீது அவர் அதிக பாசம் கொண்டிருக்கிறார். வடக்கை தவிர ஏனைய மாகாண மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை வட மாகாண மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார்.

அதுபோல அமைச்சர் ரிசாத் பதியுதீனும் தமது மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். என்ன உதவிகளைக் கேட்டாலும் ஏன் எதற்கு என்று பார்க்காமல் கேட்கின்ற உதவிகளையெல்லாம் செய்து தருகிறார்.

எனவே, நாமும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அரசுடன் இணைந்து கொண்டு இருப்பதன் மூலமே அபிவிருத்திகளை பெறமுடியும்.

சந்திப்பு :
ரமுன் ரஸ்மின்
(கற்பிட்டி தினகரன் விசேட நிருபர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com