Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் தமிழீழம் என்பது முஸ்லிம்களற்ற தனிநாடு…

(ஸர்மிளாஸெய்யித்)

கேள்விகள்: மதுசுதன்

இலங்கை மட்டக்களப்புப் பகுதியின் ஏறாவூரில் 1982 இல் பிறந்த ஸர்மிளா ஸெய்யித் பத்திரிகைத் துறையில் ஈடுபாடு கொண்டவர். அத்தோடு இவர் சமூக ரீதியிலும் செயலாற்றி வந்தார். முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டார். சிறுவர், பெண்களின் கல்வி, உளவியல் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஸர்மிளா ஸெய்யித் தனது பிரதேசத்தில் சிறுவர் நலன்புரி அமைப்பை நிறுவி அந்நிறுவனத்தினூடாக சிறுவர்களின் கல்விக்கான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். அதே காலப்பகுதியில் “மீள்குடியேற்ற ஒன்றியம்”என்ற அமைப்பின் தலைவியாகச் செயற்பட்டு வந்ததோடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் கிராமங்களின் மீளமைப்பிற்கான பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். விசேட தேவையுள்ள பெண்களின் சமூக வாழ்வு குறித்த முன்னேற்றத்திற்காவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் பொருளாதார சமூக அபிவிருத்திக்காகவும் இவர் பணியாற்றினார். அநுராதபுரத்தைத் தலைமையகமாகக் கொண்ட விசேட தேவையுள்ள பெண்களுக்கான அமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட “மக்கள் ஒருங்கிணைப்பாளர்”ஆக இணைந்து விசேட தேவையுள்ள  பெண்களின் சமூக அந்தஸ்த்துப் பற்றி ஆய்வினைச் செய்ததுடன் அவர்களின் சமூக வாழ்விற்கான பல்வேறு செயற்பாடுகளிலும் ஈடுபட்டார். “பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாரபட்சங்களையும் ஒழிப்பதற்கான ஆசியக் கமிட்டி” உடன் இணைந்து மனித உரிமைகள் பற்றிய பல்வேறு பயிற்சிகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்று சிறுபான்மை மக்களின் உரிமைகள் பெண்கள் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.  தற்போது சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவியாக பெண்களின் தொழில் முயற்சிகளுக்கும் பெண்களின் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை வசதிகளுக்குமான செயற்பாடுகள் ஊடாக பெண்களின் பொருளாதார ஸ்திரத் தன்மையை மேம்படுத்தும் செயற்பாட்டாளராக செயற்படுகின்றார். “சிறகு முளைத்த பெண்” என்ற இவரது கவிதைத் தொகுதி காலச்சுவடு பதிப்பாக வந்து தமிழ் இலக்கியப் பரப்பின் கவனத்தை ஈர்த்தது. உம்மத் இவரின் முதல் நாவல்.

1) சிங்களப் பேரினவாத அரசும், விடுதலைப் புலிகளும் தங்களது அதிகாரத்தை  நிறுவுவதற்காக அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததன் மூலம் எதை நியாயப்படுத்த முடிகிறது அவர்களால்?
எதையுமே நியாயப்படுத்த முடியவில்லை, அநியாயத்தைத் தவிர. அதிகாரத்தை நிறுவுவதற்கோ,  அல்லது தக்கவைப்பதற்கோ ஆயுதப் பிரயோகம் செய்கின்ற தேவை ஏற்படுகின்றபோது, மக்களைக் கொன்று குவிப்பது தவிர்க்க முடியாத அநியாயமாகி விடுகின்றது என்பதைத்தான் இலங்கையின் அரசு- புலிகள் யுத்தம் நிரூபித்திருக்கிறது. நியாயங்கள் எதையும் நியாயப்படுத்த முடியாதபடியே மக்களைக் கொன்று குவித்த கோரயுத்தம் முடிவுக்கு வந்திருப்பதாக நம்பப்படுகிறது. ஆயினும், யுத்தத்தின் இறுதியில் 32 நாட்களில் கொல்லப்பட்ட மக்கள், போராளிகள், அரசபடையினர் முதலானோரின் தொகை 32 ஆண்டுகால இனப் பிரச்சனையின்போது உயிரிழந்த மக்களின் தொகையைவிட அதிகமாகக் காணப்படுகிறது.

2)போருக்குப் பிறகான இன்றைய சூழலில் தமிழர்கள் என்கின்ற  ஒற்றை அடையாளத்திற்குள்ளாக  இஸ்லாமியர்களைப் பொருத்தி வைக்க இயலுமா?

முடியாது. இலங்கையைப் பொறுத்த வரையில், வரலாற்று ரீதியாக தமிழ் இஸ்லாமியர்களின் தாய் மொழியென  நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிற அதேநேரம், அவர்கள்  எக்காலத்திலும் மொழியைவிட மதத்துக்கே முன்னுரிமை கொடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். அதுமட்டுமன்றி இலங்கை இஸ்லாமியர்கள் தமிழை நேசித்து வரும் அதேநேரம், மதத்தைச் சுவாசித்து வருகிறார்கள். தமிழ் பேசுகின்ற ஏனைய இந்து, கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் மதத்தையும் தங்கள் மொழியையும் சமாந்தரமாக  நேசிப்பதையும், சுவாசிப்பதையும் காணமுடிகின்றது. சைவமும் தமிழும் இரு கண்கள்” என்பதான ஆறுமுக நாவலர் போன்றோரின் கடந்த நூற்றாண்டுக் கருத்துக்கள்  தமிழ் மொழியையும் இந்து மதத்தையும் இணைத்ததாக மட்டுமே காட்டப்படுகின்றது. ஆக தமிழ் பேசும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் “தமிழர்கள்” என்ற ஒற்றை அடையாளத்திற்குள் தங்களைப் பொருத்திக் கொள்ள எக்காலத்திலும் சித்தமாயிருக்க, முஸ்லிம்கள் எக்காலத்திலும்  தமிழர்கள்”  என்ற அடையாளத்திற்குள் பொருத்திக் கொள்ள  விரும்பியவர்களாக இருந்ததில்லை. தமிழர்களின் வன்முறை ஊடான இனத்துவ அரசியல், முஸ்லிம்களுக்குத் தங்களது  தனித்துவமான அடையாள அரசியலுக்கான வாசலைத் திறந்துவிட்டது. அந்த அரசியலை யுத்தம் முடிவடைந்த பின்னும் தொடர்வதற்கு முஸ்லிம்கள் விரும்புவதால், “தமிழர்கள்” என்கின்ற ஒற்றை அடையாளத்திற்குள் முஸ்லிம்களைப் பொருத்தி வைக்க இயலாதென்பதே எனது புரிதல்.

3) முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை  புலிகள்  எங்கிருந்து கட்டமைக்கத் தொடங்கினார்கள்?
யுத்தத்துக்கு முன்பு, விசேடமாகக் கிழக்கு மாகாணத்தில் ஓர் உள்ளார்ந்த பொருளாதார முரண்பாடு தமிழ், முஸ்லிம் ஆகிய இரண்டு சமூகங்களுக்குமிடையிலும் இருந்தே வந்துள்ளது.  இந்த மெல்லிய முரண்பாடு கொண்ட சமூகத்துக்குள் இருந்துதான் புலிகளுக்கு உறுப்பினர்கள் உள் வாங்கப்பட்டார்கள். இந்த உறுப்பினர்கள் காலப் போக்கில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளுக்குள் அமிழ்ந்து போனதால், போராட்டத்தில் மனிதாபிமானமே புறக்கணிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், தமிழ், முஸ்லிம்களுக்கிடையிலான சின்னச் சின்ன உள்ளுர்க் கலவரங்கள் வெளிப்படத் தொடங்கின. 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் முடிவடைந்த பின் தொடங்கப்பட்ட யுத்த காலத்திலிருந்து அரசுக்கெதிரான போரின்போது கிழக்கு மாகாண புலி உறுப்பினர்களின்  அர்ப்பணிப்பு புலிகள் அமைப்புக்குத் தேவையான ஒன்றாகவும், புலிகள் அமைப்பினால் புறந்தள்ள முடியாத ஒன்றாகவும் இருந்தது. இக்காரணங்கள் புலிகள் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய வடக்குப் புலித்தலைவர்களால் கிழக்குப் புலித் தலைவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இட்டுச் சென்றது.
அதற்குப் பிறகு புலிகளின்  தமிழீழம் என்பது, “முஸ்லிம்களற்ற  தனிநாடு” என்கின்ற மிகமோசமான கோட்பாட்டு ரீதியான மாற்றத்திற்குள்ளாகியது.
முஸ்லிம் அரசியல்வாதிகள், சிங்களப் பெரும்பான்மை அரசியலோடு தங்களை அடையாளம் காட்டியமை பற்றிய கோபமும் இம்மாற்றங்களுக்குக் காரணமாகியிருந்தது. இந்த ஒட்டுமொத்தமான அரசியல், பொருளாதார, சமூகவிடயங்களின் காரணமாகவே புலிகள் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சியைக் கட்டமைக்கத் தொடங்கினர். முஸ்லிம்களையும் தனி இயக்கமாக நோக்கத் தொடங்கினர். இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளின்போது அந்த இயக்கங்களை அழிப்பதற்கு புலிகளால் எவ்வாறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதோ  அதேபோல  முஸ்லிம்களையும் ஒரு இனமாகவோ, ஒரு மதம் சார்ந்த சமூகமாகவோ அங்கீகரிக்காது ஆயுதங்களைப் பயன்படுத்தி அழிக்க முயன்றனர்.

4) ஒரு சமூக செயற்பாட்டாளராக இயங்கக்கூடிய தவக்குல் போன்ற பெண்கள் இச்சமூகம் கொடுக்கும் அவப் பெயரிலிருந்து  மீள்வதற்கு வழியே இல்லையா?
சமூக மதிப்பீடுகள் எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை.  அதுமாறக் கூடியது. உறுதி, நம்பிக்கை, துணிவு இவையெல்லாம் நேர் கொண்டிருக்கிறபோது அவமதித்த சமூகமே கொண்டாடுவதும், மீள்வதற்கு கதவுகளைத் திறந்துவிடுவதும் நிகழ்வதுண்டு. இன்னொரு உண்மையும் உண்டு. அது, அவமானங்களைக் கண்டு துவண்டுபோகிற பெண்கள் மூழ்கிப்போக நேர்வதுடன், அவமானங்களை எதிர்கொள்கிறவர்கள் தான் அதிலிருந்து மீள்கிறார்கள் என்பதே.

5) போராளிகள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நினைக்கும்போது  அவர்களைப்  பெற்றவர்களே புறந்தள்ளுவதும் அவமானப்படுத்துவதற்குமான செயல்களுக்குப் பின்னான உளவியல் குறித்து..
புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்தவர்களின் சமூகப் பின்னணி குறித்த தெளிவே இந்தக் கேள்விக்கான பதிலை அடைய உதவும் என நம்புகிறேன். புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியாகப் பார்க்கையில் கீழ் மத்திய வர்க்கத்தினராகவே இருந்தனர். பொருளாதார வசதிபடைத்த  தமிழர்களிடமிருந்து புலிகளுக்கு ஆதரவு  இருந்ததே தவிர,  நேரடியாகப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மிகக்குறைவானவர்களாகவே இருந்தார்கள். இந்தப் பின்னணியைக் கொண்டவர்கள் போர் முடிவுக்கு வந்தபின்னர் இயல்பு வாழ்வுக்குத் திரும்புகையில் இரண்டு விதமான சவால்களை எதிர்கொள்கின்றர். ஒன்று பொருளாதார ரீதியானது.            மற்றையது சமூகம் சார்ந்தது.
போராட்டத்திலிருந்து  திரும்பியவர்களைப் பெற்றோர்கள் புறக்கணிப்பதற்கு, அவர்களைச் சுமையாகக் கருதுவதே காரணம். இளம்பெண் போராளியெனில் திருமணம் பெரும் சுமையாகப் பார்க்கப்படுகின்றது. காணி, வீடு,  திருமணச் செலவு, சீதனம் என்று ஈடுகட்ட முடியாதவற்றைச் சுமப்பதைக்காட்டிலும், நீண்ட காலம் குடும்பத்தை விட்டு விலகியிருந்து இணைகின்றவரை புதிய ஒருவராகக்  கருதிப்  புறக்கணிக்கிற  மனப் போராட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
மற்றுமொரு உளவியல் போராட்டத்திற்கு காரணமானவர்கள் மீதான தார்மீகக் கோபம். அதுவே புறக்கணிப்பாக  வெளிப்படுகிறது. போராடி இவர்கள் அடைந்ததென்கின்ற  வலியுடனான ஏமாற்றம், போராட்டத்தில் இழுத்துவிட்டவர்களால் எதிர்கால வாழ்விற்கான உத்தரவாதமான சூழல் உருவாக்கித்தரப்படவில்லை என்கிற அதிருப்தி, போராட்டத்தில் பங்காளிகளாக ஆக்கிவிட்டவர்கள்தான்  போராட்டம் முடிந்த பின்பும் போராளிகளின் பொறுப்புதாரிகள் என்று எண்ணக்கூடிய மனப்பாங்கு என்பதாகப் பெற்றோருக்கும் சமூகத்துக்கும் பல்வேறு மனப்போராட்டங்கள் இருக்கின்றன.

6) என்னதான் ஒரு சமூக செயற்பாட்டாளராக இருந்தும் நெருக்கடிகளுக்குள் தள்ளப்படும் போது ஆறுதல் தருகிற மனங்களைக் காட்டிலும் உத்வேகம் ஊட்டுகிற ஒருவரையும் காண முடியாததுதான் சமூக எதார்த்தமா?
தவக்குல் எதிர்கொண்ட யதார்த்தம் அப்படியாக  இருந்தது. அது  ஒட்டுமொத்தப் பெண்களின் அனுபவமாகப் பார்க்கப்பட வேண்டியதில்லை!

7) போருக்குப்பிந்தைய சூழலில் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்த அவசியமும், உங்களது மதிப்பீடும்?
தொண்டு நிறுவனங்கள் இரண்டு வகையாகப் பங்காற்றுகின்றன. ஒன்று உள்ளுர் நிறுவனம். மற்றையது சர்வதேச நிறுவனம். இலங்கையைப் பொறுத்தவரையில்  தொண்டு நிறுவனங்களின் வருகை சுனாமிக்குப் பின்னரே அதிகரித்தது. எந்தவோர் அனர்த்தமாக  இருந்தபோதும் தொண்டு நிறுவனங்களின் தேவைப்பாடு அதிகளவில் உணரப்படுகின்ற ஒரு நிலமாக இலங்கைப் பிராந்தியம் முழுவதும் இருந்து கொண்டிருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்டவர்களில் அரச உதவியைப் பெற்றவர்களைக்  காட்டிலும் தொண்டு நிறுவனங்களின் உதவியைப் பெற்றவர்களும் அதன் துணையுடன் நிமிர்ந்தவர்களுமே இன்று அதிகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நலனோம்பு செயற்பாடுகளுக்கு அப்பாலான கண்ணோட்டமென்பது முக்கியமாகப்படுகின்றது. அதாவது முன்னர் கூறியதுபோல தொண்டு நிறுவனம் உள்ளூராயினும், சர்வதேசம் சார்ந்திருப்பினும் நிதி வெளிநாடுகளிலிருந்தே பெறப்படுகின்றது. ஆகவே, தொண்டு நிறுவனங்களின் செயற்பாடென்பது பன்னாட்டுத் தலையீடு மற்றும், கண்காணிப்பையும் கட்டமைப்பாகக் கொண்டது. இது அரசியல் சமூக, கலாசார ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தப் போதுமானது.
மற்றொரு புறம், தொண்டு நிறுவனங்களில் தலைமை வகிப்பவர்கள் Òஒயிட் காலர்ஸ்” என்று சொல்லக்கூடிய உயர்மட்டத்தவர்கள். இவர்கள் அடிமட்ட மக்களின் இயல்பு வாழ்வோடு கலந்து செயற்படுவதில் தோல்வியடைந்தவர்கள். இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களையோ தேவை  உடையவர்களையோ இனங்காண  முடிவதில்லை. பயனாளர்கள் பட்டியலில் பல உரிமை மீறல்கள் இடம்பெற இடமுண்டு. ஆனபோதும், குறித்த செயற்றிட்டத்தைத் திட்டமிட்ட காலத்திற்குள் முடிப்பதில் காண்பிக்கப்படும் கவனம் பயனாளர்கள் தெரிவில் காண்பிக்கப்படுவதில்லை.
தொண்டு  நிறுவனங்கள்  அரசியல்  சார்பற்றவை என்று சொல்லப்பட்டாலும் அவை ஏதேனுமொரு அரசியல்  நிலைப்பாட்டை  ஆதரிக்கவே செய்கின்றன. அத்தோடு தொண்டு நிறுவனங்களுக்கிடையிலான Òஅரசியல்” மக்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகளில் பாதிப்புச் செலுத்துவதும் நிகழ்கிறது.

8) போருக்குப் பிந்தைய இன்று சிங்களப் பேரினவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம்,  தமிழ்க்குறுந் தேசியவாதம், இவைகளுக்கு மத்தியில் அங்குள்ள எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சூழல் என்னவாக இருக்கின்றது?
போரற்ற சூழ்நிலை யுத்த அழிவுகள், மரணங்கள், முதலான அவலங்களிலிருந்து சகலமக்களுக்கும் விடுதலை வழங்கியிருக்கின்ற போதிலும், அம்மக்களின் வாழ்வாதாரத்தில் எவ்வித நிறைவையும் தரவில்லை. போர்ச்சூழலிலான மரணங்கள் இல்லாதபோதும் அச்சம் நீங்கியதான சூழல்ஏற்படவில்லை. கெடுபிடிகளின் ஆதிக்கம் ஏதேனும் ஒருவகையில் அடிக்கடி தலைக்காட்டுவதோடு, போர்க்கால அகதிகளுக்கான விமோசனம் கிட்டவில்லை. அச்சம் காரணமாக  நாட்டைவிட்டு வெளியேறியுள்ளவர்களில் மிகப் பெரும்பான்மையானோர்  நாட்டுக்குள் மீளவந்து குடியேறவில்லை.  நிறைவான புனர்வாழ்வு ஏற்பாடுகள் மிகக்குறைவாகவே  காணப்படுகின்றன. விவசாயிகள், மீனவர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் மற்றும் அன்றாடக் கூலிகள் முதலான  எவரது வாழ்விலும் யுத்தம் முடிவுற்றமை வெளிச்சத்தைப் பாய்ச்சவில்லை.
இனவாதம் அப்படியே இருக்க மதவாத செயற்பாடுகள் மேலோங்கி வருகின்ற  சூழ்நிலை, வஞ்சிக்கப்பட்டமக்கள் தொடர்ந்து  வஞ்சிக்கப்பட்ட மக்களாகவே வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சிறுபான்மை இன இந்து, கிறிஸ்தவ முஸ்லிம் மக்களின் மதங்களின் மீதான  பெருமதவாதத்தின் திட்டமிட்ட வன்முறை யுத்தத்தின்  பின்னரான காலத்தில் மெல்லெனத் தொடங்கி தற்போது ஆங்காரமாக எரியத் தொடங்கியுள்ளது. மேலும் பாய்ச்சல்களுக்கான வாய்ப்பு உள்ளது என்ற வகையில் சிறுபான்மை மக்களுக்குள் பதட்ட நிலை காணப்படுகின்றது.

9) விரும்பியவன் சிங்களராணுவத்தினனாக இருக்க, தெய்வானையைப் போன்ற பெண்கள்  இயக்கத்திலிருந்து, சமூகத்திலிருந்து எந்தவிதமான கஷ்டநஷ்டங்களை எதிர் கொண்டிருப்பார்கள்?
விலையாக  உயிரையும் தரும் நிலையை எதிர்கொள்வதே இறுதியாக நிகழக்கூடியது. இப்படியான மரணதண்டனைகள்  இருதரப்பிலும் சாத்தியமானதே. இராணுவ புலனாய்வுக்காக புலிகள் தரப்புடன் இயங்கக் கூடியவர்கள், புலிகள் புலனாய்வுக்காக இராணுவத்தரப்பில் இயங்கியவர்கள் ஆகியவர்களால் எல்லாவிதமான தகவல்களுமே பரிமாறப்படும். இப்படியான  காதல்  Òகிசுகிசு” க்கள் கசிவதை மாபெரும் இனத் துரோகமாகவே புலிகளும் இராணுவத்தினரும் கருதினர். புலிஉறுப்பினரில் காதல்கொண்டதால் இராணுவன் இராணுவத்தினராலேயே கொல்லப்படுவதும், இராணுவனில்  காதல் கொண்டிருந்தால் புலி உறுப்பினர் புலிகளாலேயே கொல்லப்படுவதும், சித்ரவதை செய்யப்படுவதும்  மிகச்சாதாரண இராணுவக் கடமைகளாகவே கருதப்பட்டன. இதனாலேயே தலைமறைவாகி வாழ்ந்த, நாட்டைவிட்டுத் தப்பியோடிய உறுப்பினர்கள் இருதரப்பிலும் உள்ளனர்.

10) அண்டை  அயலாரிடம்  தாமரை இலைத் தண்ணீர் போலவே தவக்குல்லின் தந்தை ஹபீப் இருக்க வேண்டிய அவசியம்தான்  என்ன? அவர் அவ்வாறு  இருக்கிறாரா, அல்லது அச்சமூகம் அவ்வாறு இருக்கிறதா?
இஸ்லாமிய  சமூகக் கட்டமைப்பில் பெண் பிள்ளைகளின் தந்தையொருவர் தன் ஒவ்வொரு காரியங்களையும் கவனித்து நிதானித்து செய்யவே பழக்கப்பட்டவராகிறார். மகளுக்கு மாப்பிள்ளை தேடுகையில், தான் தலைநிமிர்ந்தவராக இருப்பதற்கு அவர் அப்படிக் கவனத்துடன் இருக்க வேண்டிய தேவையுள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் பெண் ஒழுக்கம் எனப்படுவது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரது நடத்தைகளைக் கொண்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.

(மாற்று)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com