Contact us at: sooddram@gmail.com

 

மக்களோடு மக்களாய்

முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஊர்காவற்துறை, கொக்குவில் பகுதி மக்களுடன்

யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் நேற்றையதினம் (19.10.2010) கொக்குவில் மற்றும் ஊர்காவற்துறை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களைச் சந்தித்து தற்போதைய அரசியல் பொருளாதார சமூக நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

நேற்றுக் காலை 9 மணியளவில் கொக்குவில் கிழக்கு மாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட வரதராஜப்பெருமாள் அங்கு கூடி நின்ற மக்கள் மத்தியில் நீண்ட உரையொன்றினை ஆற்றினார். அரசியல் தீர்வுகள் எட்டப்படவேண்டிய நேரங்களில் தமிழ் தலைவர்கள் குறிப்பாக புலிகள் தவறவிட்ட சந்தர்ப்பங்களை இதன்போது சுட்டிக்காட்டிய அவர் ஈபிஆர்எல்எவ் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையினை உருவாக்கி அதன் தலைமையகத்தினை திருகோணமலையில் நிறுவிக்காட்டியதையும்; குறிப்பிட்டார். அவ்வாறான மாகாணசபை தொடர்ந்து செயற்பட்டிருந்தால் இன்று வடக்கு கிழக்கு என இரண்டு மாகாணசபைகள் உருவாகியிருக்காது என சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவே போராட்டங்களை ஆரம்பித்ததாக குறிப்பிட்ட அவர் யுத்தம் முடிவடைந்திருந்தாலும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை ஆயினும், ஆயுதப் போராட்டம் மூலம் எமது நியாயமான கோரிக்கைகளை பெற்றுவிட முடியாது என்பதை கடந்த கால அனுபவங்கள் மூலம் உணர்ந்துவிட்டோம். எனவே எதிர்காலத்தில் எமது கோரிக்கைகளை மக்கள் திரண்ட ஜனநாயக வழியிலான போராட்டங்கள் மூலம் வென்றெடுக்க எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் ஒன்றினை கட்டியெழுப்பும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 இதேபோன்று மாலை 5 மணியளவில் ஊர்காவற்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு இன்றுள்ள அரசியல் நிலை எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததோடு மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். இக் கூட்டத்தில் உரையாற்றிய பாடசாலை அதிபர் சண்முகம்பிள்ளை ஈபிஆர்எல்எவ் தலைமையில் அமைக்கப்பட்ட மாகாணசபையில் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தார். இங்குள்ள கிராமங்களில் எண்பதுகளில் சாதிப்பிரச்சினைகள் தலை தூக்கிய வேளைகளிலெல்லாம் ஈபிஆர்எல்எவ் மட்டுமே அதில் தலையிட்டு அவற்றை தீர்த்து வைத்த சம்பவங்களை சுட்டிக்காட்டினார். அவர் இங்குள்ள கிராமங்கள் தற்போது வரையில் அபிவிருத்தி காணாத கிராமங்களாக இருந்து வருவதையும் குறிப்பிட்டார். அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் எமது மக்களுக்கு வீடு கட்டுவதற்கும், கோவில் கட்டுவதற்கும  ிதி உதவி செய்து வருகின்றனர். இவற்றுக்கான தேவைகளிருக்கின்றது ஆனால் தமிழ் மக்களுக்கு இந்த உதவிகள் மட்டும் போதுமானதல்ல. அதற்கு மேலாக எம் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று முக்கியமானது எனக் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் வோட்டுக் கேட்டுவரும் அரசியல் கட்சிகளுடன் மக்கள் பேரம் பேசும் நிலை ஒன்று உருவாகும் எனத் தெரிவித்தார்.

 அங்கு உரையாற்றிய அ.வரதராஜப்பெருமாள் சுமார் 23 வருடங்களின் பின்னர் இப்பகுதிக்கு தாம் வந்திருப்பதாகவும் இவ்வாறு பல கிராமங்களிலும் மக்களை சந்திக்கின்ற போது மக்கள் தமக்கு வழங்கப்படும் சிறு சலுகைகளோடு மட்டும் திருப்தி கொள்ளாது தமிழர்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாக இருப்பது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். 'அரசாங்கத்தில் அமைச்சராக அங்கம் வகிப்பவர்கள் மட்டுமே அரசாங்கத்தின் காசினை செலவளிக்க முடியும் என்னும் உண்மை அனைவரும் அறிந்த ஒன்றாகும். நான் பணத்துடன் உங்கள் முன்வரவில்லை ஆனால் எனது மனச்சாட்சியுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கின்றேன்' எனத் தெரிவித்தார். 'நீங்கள் விரும்பும் கேள்விகளை என்னிடம் கேட்க முடியும். உங்கள் கருத்துக்களை நீங்கள் துணிந்து கூற வேண்டும். அதுவே எனது வருகை அர்த்தமுள்ளதாக அமையும். நானும் நான் சார்ந்த அமைப்பும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். எங்களுடைய கட்சி அரசாங்கம் தரும் சலுகைகளோடு திருப்திப்பட்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் இருக்காது. அதேவேளை அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள், புனர்வாழ்வு உதவிகள் எமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்பட வைக்கவும் முயற்சிப்போம் எனத் தெரிவித்தார். நாம் ஒரு மக்கள் இயக்கமாக வலுவான அரசியற் சக்தியாக வளர்ச்சியடைய நீங்கள் அனைவரும் எங்களோடு இணைந்து ஒத்துழைக்க வேண்டும்' என அங்கு கூடியிருந்த மக்களை தோழர் வரதராஜப்பெருமாள் கேட்டுக்கொண்டார்.

இந்த விஜயங்களின் போது ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், யாழ் மாவட்ட செயலாளர் மோகன் உட்பட கட்சியின் தோழர்கள் ரவி (சச்சி), கிருபா, முரளி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com