Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக உயிர் வாழ்வதற்கு அரசாங்கம் உதவுகிறது

வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள் ஜலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல்

முன்னாள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராசப்பெருமாள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சுற்றிப்பார்த்த பின்னர். ஒரு அரசியல் கட்சி உழைப்பாளர் என்றில்லாமல் ஒரு அரசியல்வாதியாக விளக்கியவை. இந்த நேர்காணலில் சீ.ஏ.சந்திரப்பெரும, முன்னாள் முதலமைச்சருடன் கலந்துரையாடியவை யுத்தம் முடிவுற்றதன் பின்னதான சூழலில் வடக்கில் நிலவும் அரசியல் நடைமுறைகளைப் பற்றியது.

கேள்வி:- யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் வடக்கிலுள்ள மக்களின் மனநிலை பற்றி நீங்கள் என்ன படித்தறிந்தீர்கள்?

பதில்:- ஆரம்பத்தில் யுத்தம் முடிவடைந்த உடன் மக்கள் பீதியுற்றவர்களாயும்,எல்லாவற்றையும் அடக்கிவைத்து மௌனம் பாலிப்பவர்களாயும் இருந்தார்கள். ஆனால் கடந்த ஒருவருடமாக அமைதியும் சுதந்திரமுமான உணர்வுகள் பெரியளவில் முன்னேற்றம்அடைந்தள்ளன.மேலும் பொருட்களின் விலைகளும் வெகுவாகக் குறைந்துவிட்டன. ஆனாலும் கொழும்பு விலைகளுக்கும், யாழ்ப்பாண விலைகளுக்குமிடையில் சற்று வித்தியாசம் காணப்படுகின்றன. மக்கள் தமது தொழில்கள், விவசாயம், மீன்பிடி ஆகியவற்றை மீளாரம்பித்துள்ளார்கள். வன்னிப் பகுதியில் நிலமைகள இன்னமும் முழமையாக வழமைக்கு திரும்பி விடவில்லை. ஆனால் அவர்களும் படிப்படியாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.அரசாங்கம் இராணுவ முகாம்களை பலப்படுத்திக் கட்டியெழுப்பும் முயற்சிகளை விடுத்து,; வன்னிப் பகுதியில் புனர்வாழ்வு முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். அரசாங்கம் நிறைய முயற்சிகளைச் செய்கிறதுதான் ஆனால் மக்களின் அவசியத்துக்கு ஏற்ற விரைவில் அவை நடைபெறவில்லை.போரின் பின்பு வடக்குமற்றும் கிழக்கில் நிலைமைகள் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளன. மக்கள் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறார்கள். துப்பாக்கிக் குண்டுகள் பறக்கும் ஓசையோ,கொலைகள் நடக்கும் நிலமைகளோ இப்போது இல்லை.

கேள்வி:- மக்கள் இப்போது விடுதலைப் புலிகளை எவ்வாறு பின்திரும்பிப் பார்க்கிறார்கள்?

பதில்:-  இடத்துக்கு ஏற்றவாறு மனப்போக்குகள் வேறுபடுகின்றன. வன்னிப் பகுதியில் யுத்தத்தின் கடைசி நாட்களில் விடுதலைப் புலிகள் நடந்து கொண்ட முறையையிட்டு மக்கள் மிகவும் சீற்றமடைந்துள்ளார்கள். எவ்வாறாயினும் அதன் காரணமாக மக்கள் அரசாங்கத்தைப் பற்றி மகிழ்ச்சி கொண்டிருக்கிறார்கள் என்கிற கருத்தாகாது .நாங்கள் அதனை நன்கறிந்து கொள்ளவேண்டும். எப்படியாயினும் யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைக் காட்டிலும் அரசாங்கம் என்ன செய்கிறது என்பதில் அதிக அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஏனெனில் யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் முற்று முழதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கடுந்தாக்கத்தை அனுபவித்தவர்களல்ல. வன்னிப் பகுதியில் வசித்தவர்கள் இப்போது யாழ்ப்பாணம் வந்தபின்னர் யுத்தத்தின் கடைசி நாட்களில் தாங்கள் அனுபவித்த அவலமான துயரங்களை யாழ் மக்களிடம் சொல்லியிருப்பதன் காரணமாக என்ன நடந்தது என்பதை அவர்களும் இப்போது அறிந்திருக்கிறார்கள். எனவே அடிப்படையில் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிய நிறைவான எண்ணங்கள் எதுவுமில்லை. ஆனால் அரசாங்கம் வடக்கில் உள்ள மக்களின் மனங்களில் சுயமதிப்பையும் சுயநம்பிக்கையையும் ஏற்படுத்த நிறையச் செய்ய வேண்டியுள்ளது. இன்று வடக்கிலும் கிழக்கிலும் அநேகமாக ஒருவகை இராணுவ ஆட்சி முறையே நடக்கிறது.சிவில் நிர்வாகம் அல்ல.

கேள்வி:- தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைவுக்குப் பின்னர் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இன்னமும் ஒரு பெரிய அரசியல் சக்தியாக வடக்கு கிழக்கில் இருந்து வருவதின் காரணத்தை எவ்வாறு நீங்கள் கணக்கிடுகிறீர்கள்?

பதில்:- நீங்கள் உண்மையில் இப்போது அப்படிக் கூறிவிட முடியாது. பாராளுமன்றத் தேர்தல்கள்,யுத்தம் முடிவடைந்து ஒருவருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில், மக்கள் பயத்துடனும் பலவித இடர்ப்பாடுகளுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் இடம் பெற்றது. அதனால் பலர் வாக்களிக்கக் கூட முன்வரவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் தாங்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கெல்லாம் ராஜபக்ஸவே காரணம் என நினைத்தார்கள்.குறிப்பாக யாழப்பாணத்தில் (வன்னியைக் காட்டிலும்). இப்போது மாதங்கள் பல கடந்துவிட்டன.நிகழச்சிகள் மாற்றம் பெறுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுக்கு பயனற்ற ஒன்று என மக்கள் நினைக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தங்களுக்கு எதையும் பெற்றுத்தர முடியாது என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் தங்களுக்கு எல்லாவற்றையும் செய்து விடும் என்றுஅவர்கள் திருப்திப் படுகிறார்கள் என்கிற கருத்தாக இது ஆகிவிடாது.ஏனெனில் அவர்கள் அரசாங்கத்தின் மீது பலத்த சந்தேகம் கொண்டிருக்கிறார்கள். இந்த  அரசாங்க எதிர்ப்பு எண்ண அலைகள்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உதவி செய்கிறது.உண்மையில்அவர்களின் சொந்தத் திறமையல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியலில் உயிர் வாழ்வதற்கு இந்த அரசாங்கம் மறைமுகமாக உதவி புரிகிறது.

கேள்வி:- உங்களது மதிப்பீட்டின்படி வடக்கில் இந்த அரசாங்க எதிர்ப்பு உணர்வுகளுக்கு அடிப்படை மூலகாரணிகள் எவை?

பதில்:- ஒரு காரணம் உள்நாட்டு,வெளிநாட்டு இருதரப்பு ஊடகங்களிலும் யுத்த காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளைக் குறித்து பரப்பி வரும் பிரசார உத்திகள்.யாரும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கெதிராகப் புரிந்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசுவதில்லை. இராணுவம் சிங்கள இராணுவம். காவல்துறையும் சிங்களக் காவல்துறையே. பொது சேவைகள்,அரச சேவைகள் யாவற்றிலும் சிங்களமே ஆட்சி புரிகிறது.

கேள்வி:- கூடியளவு தமிழர்களை இராணுவம், காவல்துறை ஆகியவற்றில் ஈடுபடுத்துவதன் மூலம் இந்தப் புதிரை அவிழ்க்க முடியுமா?

பதில்:- கள நிலமைகளில் இராணுவம் மோசமாக நடந்து கொள்வதாக நான் கருதவில்லை. மக்களுடனான அவர்களின் பழகும் விதமும் நன்றாகவே உள்ளது. தனிப்பட்ட முறையில் மக்கள் இராணுவத்தினரோடு எந்தவித கசப்புணர்வையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் பொதுமக்களிடையே காணப்படும் அதிகமான இராணுவ பிரசன்னம் மக்களிடையே ஒரு அரச எதிர்ப்புணர்வைத் தோற்றுவிக்கிறது. எனவே அரசாங்கம் பொதுமக்களிடையே காணப்படும் அதிகமான இராணுவ பிரசன்னத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.மற்றும் அரசாங்கம் தமிழ்பிரதேசங்களை தமிழ்த் தலைவர்களே ஆள வழிவகை செய்ய வேண்டும். அரசாங்கம் பலவகையான குரல்களை எழுப்பினாலும் கூட இராணுவத்திலோ அல்லது காவல்துறையிலோ தமிழர்களைச் சேர்ப்பதற்கான இதயபூர்வமான முயற்சிகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. யுத்தம் முடிவடைந்த காலப் பகுதியில் இதற்கான சில முயற்சிகள் நடைபெற்றிருந்தாலும் கூட இது ;ன்னமும் விரிவான முறையில் நடைமுறைப் படுத்தப் படவேண்டும். கடந்த முறை அரசாங்கம் யாழப்பாணத்தில் 400 காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டி ஆட்சேர்ப்பு நடத்தியபோது 6000 இளையோர் சேருவதற்கு முன்வந்திருந்தனர். ஆரம்ப கட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்தில் சேர முன்வருவார்கள் என்றில்லை ஆனாலும் அரசாங்கம் அதற்கான ஒரு முயற்சியிலிறங்க வேண்டும். அதனால் அவர்கள் தேவையானளவு ஆட்களை இராணுவத்துக்கு சேர்த்துக் கொள்ள முடியும்.

கேள்வி:-கடந்த காலங்களில் எல்லாம் தமிழ் அரசியலில் எப்போதும் ஒரு கட்சி மட்டுமே ஆட்சி பெற்று வந்தது, ஆரம்பத்தில் தமிழ் காங்கிரஸ் பின்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி அதன் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணி இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் மேலும் பலகட்சிக் கலாச்சாரமுறை உருவாகலாம் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்:- அரசாங்கம் தமிழ் மக்களிடையே சந்தேகம் தோன்றக் கூடிய வகையில் நடந்து கொள்ளுமாயின் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற சக்திகளுக்கே பயன் தரக்கூடியதாக இருக்கும். சிஙகளத் தலைவர்கள் (அரசாங்கம் மட்டுமல்ல) இந்த நாட்டின் பன்மைத் தன்மையினை ஏற்றுக் கொள்ள உதவி புரிய வேண்டும். 800,000 புலம் பெயர் தமிழர்களின் மனங்களையும் இந்த அரசாங்கத்தால் வெற்றி கொள்ளப் படவேண்டும்.அவரகளைஸ்ரீலங்காவில் தாஙகள்    சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழமுடியும்  என நம்ப வைக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் சக்திகளும் தமிழ் மக்களிடையே சேவையாற்ற உதவி புரிய வேணடும். அரசாங்கம் ஓரிருவரை மட்டும் தமிழ் மக்களிடையே சேவையாற்றும் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யக் கூடாது.

கேள்வி:- கே.பி. இதில் ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்:- அது மக்கள் தீர்மானிக்க வேண்டிய விடயம்.

கேள்வி:- நீங்கள் எப்படி? வருங்காலங்களில் வடக்கில் நீங்கள் தேர்தல்களில் போட்டியிட உள்ளீர்களா?

பதில்:- நான் சுயமாகப் போட்டியிடுவது வேறு விடயம் ஆனால் எனது கட்சி 1988 லிருந்து வென்றாலோ,தோற்றாலோ அதைப் பற்றிக் கவலைப் படாமல் ஒவ்வொரு தேர்தல்களிலும் போட்டியிட்டுக் கொண்டே வருகிறது. இந்தப் பகுதியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நாங்கள் தொடர்ச்சியாகப் பாடுபட்டு வருகிறோம்.ஆனால் இன்னமும் இந்த இடங்களில் ஜனநாயகச் சூழல் ஏற்பட்டு விட்டதாக நான் நினைக்கவில்லை.

கேள்வி:- வடக்கில் இன்னமும் ஜனநாயகச் சூழல் ஏற்படவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்?

பதில்:- அரகாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் சில குழுக்களுக்குப் பயந்தே இன்னமும் மக்கள் அங்கு வாழ்கிறார்கள். எவரையும் பெயர் குறிப்பிட்டுக் கூற விரும்பவில்லை.ஜனநாயகம் அங்கு மீள்நிலைப் படுத்த வேண்டும் என அரசாங்கம் விரும்பினால் சகல சக்திகளுடனும் கூட்டாகச் செயற்பட வேண்டும்.

கேள்வி:- பிரதான வரிசை அரசியற் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் தங்கள் சொந்தப் பெயர்களில் வடக்கு மற்றும் கிழக்கில் போட்டியிடுவதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

பதில்:- அரசாங்கத்திலுள்ள சிலர் இந்த நாட்டில் இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன எனத் தவறாக நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தினால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்கு பலம் பெற்றிருக்கிறது. இந்தியாவில் பிராந்தியக் கட்சிகள் முன்னணிக்கு வந்தால் பிராந்திய பிரிவினை பற்றிய விவாதங்கள் எழுகின்றன.ஆனால்; பிராந்தியக் கட்சிகள் பிரதான கட்சிகளுடன் கூட்டை ஏற்படுத்துவதால் அங்கு கூட்டு ஒன்றிணைப்பு விருத்தியாகிறது. அந்த முறை இங்கும் பிரயோகிக்கப் பட வேண்டும். சிங்களத் தலைவர்களிடையே அதிகாரப் பரவலை நடைமுறைப் படுத்தினால் நாட்டில் பிரிவினை ஏற்பட்டு விடுமென்கிற ஒரு உணர்வு காணப்படுகிறது.அது தவறான கணிப்பு. 13 வது திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப் பட்ட சில அதிகாரங்களை 18 வது திருத்தம் குறைக்கிறது. இதைச் சொல்வதற்காக நான் வருத்தப் படுகிறேன். சிறிய அதிகாரம் அதன்மூலம் மாகாணசபைகள் சில வேலை வாய்ப்பை வழங்கக் கூடியதாக இருந்த மாகாண பொது சேவைகளையும் காவற்துறை ஆணைக் குழவினையும் அது எடுத்துக் கொண்டு விட்டது.

(மூலம்: ஜலண்ட்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com