Contact us at: sooddram@gmail.com

 

தமிழர் விடுதலை கூட்டணியின் வருடாந்த மாநாடு குறித்த தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வாழ்த்துச் செய்தி

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் பாரிய மாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் வாழ்வு பல்வேறு நெருக்கடிக்குள்ளாக சென்று வருகிறது. தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிய அரசியல் சக்திகள் காலத்திற்குக் காலம் எடுத்த முடிவுகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதற்குப் பிரதான காரணம் பாராளுமன்ற அரசியல் என பலரும் கருதுகின்றனர். சிங்கள தேசியவாத எழுச்சி சிறுபான்மை இனங்களுக்கு எதிராக திரும்பியது. குறுக்கு வழிகளில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதம் பெரும் துணையாக அமைந்தது.  இவ் இனவாதம் சிறுபான்மை இனங்கள் மத்தியிலே அச்சத்தை ஏற்படுத்த இந்த அச்சத்தைப் பயன்படுத்தி தமிழ் குறும் தேசியவாதம் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் துணையாக அமைந்தது. சிங்கள மக்களைப் பாதுகாப்பதாக கூறிய தேசியவாதம் சிங்கள தேசிய வாழ்வை எவ்வாறு சீரழித்ததோ? அதேபோன்று தமிழ் தேசியவாதம் தனது மக்கள் வாழ்வை சீர்குலைத்தது. மொத்தத்தில் நாடே ஜனநாயக வாழ்வை இழந்து சீர்குலைந்துள்ளது.

இக் குழப்ப நிலையிலிருந்து நாடு மீழ்வதற்கு மிகவும் காத்திரமான மாற்றம் தேவைப்படுகிறது. இம் மாற்றங்கள் ஏற்படுவதற்கு பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசவேண்டும். தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை வகித்த தமிழர் விடுதலை கூட்டணி இதற்கான வாய்ப்புகளைத் தற்போது திறந்து விட்டுள்ளதாகவே கருதுகிறோம். கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்ப் பிரதேசங்களில் தலைவிரித்தாடிய அரசியல் பயங்கரவாதம் முடிவுக்கு வந்த போதிலும் அதன் படிப்பனைகள் உணரப்பட்டதாக இல்லை. அதன் சாதக பாதகங்கள் குறித்து வெளிப்படையாக கருத்துச் சொல்ல எந்த அரசியல்வாதியும் தயாராகவும் இல்லை. இங்குதான் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் திரு. ஆனந்தசங்கரி அவர்களின் பணி துலங்குகிறது. மிகவும் சிக்கலான காலகட்டத்தில் துணிச்சலான முடிவோடு செயற்பட்டவர். சாமான்ய மக்களோடு வாழ்ந்தும் பழகியும் தனது அரசியலை நடத்திய அவர் தற்போது மக்கள் படும் அவலங்களால் அரசியல் வாதிகளை நோகும் நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

பாராளுமன்ற அரசியல் கதிரைகளுக்காக தேர்தல் காலங்களில் தேசியவாதத்தை கக்கி வாக்குகளை வேட்டையாடுவதும் தேர்தல் முடிவடைந்ததும் மக்களைக் கைவிட்டுச் செல்வதுமான அரசியலின் பக்கங்கள் இனிமேலும் தொடரக்கூடாது என எதிர்பார்க்கிறோம். குறுகிய தேசியவாத அரசியலிலிருந்து விடுபட்டு பரந்த ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமான தீர்வை நோக்கிச் செல்லும் அரசியல் பாதையை தேர்வு செய்யும் எந்த அரசியல் கட்சியினதும் பணி பாராட்டப்பட வேண்டியதே.

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம் குறித்து தமிழர் விடுதலை கூட்டணி தெரிவித்து வருவதும், இதன் மூலம்தான் தேசத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற தேசிய இனங்களின் பங்களிப்பினை பெற முடியும் எனக் கூறுவதும் வரவேற்கத்தக்கதே. பெரும்பான்மை சிங்கள மக்கள் அமைதியான சுபீட்சமான ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவதற்கு இனப் பிரச்சனைக்கான தீர்வு அவசியம் எனத் தெரிவித்து வருவதும், அதன் அடிப்படையில் சிங்கள தேசியவாத அரசியல் சக்திகளோடு விவாதங்களை நடத்துவருவதும், அதேவேளை சிங்கள முற்போக்கு சக்திகளோடு பலமான அணி ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற யோசனைகளோடு செயற்படுவதும் மாற்றங்களை நோக்கிய அணுகுமுறையாகவே கருதுகிறோம்.

இருபத்தோராம் நூற்றாண்டுக்கான மாற்றங்களை நோக்கி முன்னேறும் இத்தகைய கோட்பாடுகள் அவை எக் கோணத்திலிருந்து வந்தாலும் வரவேற்று பலப்படுத்தப்பட வேண்டும் என்ற பரந்த நோக்கின் அடிப்படையில் தமது வருடாந்த மாநாட்டினை நடாத்தும் தமிழர  ிடுதலை கூட்டணிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வண்ணம்

வீ இராமராஜ்- பணிப்பாளர் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

வி சிவலிங்கம் -அரசியல ஆய்வாளர் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

செ. ஜெகநாதன் அரசியல ஆய்வாளர் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com