Contact us at: sooddram@gmail.com

 

கடந்த ஆட்சியாளர்கள் செய்த துரோகத்தை நீங்களும் செய்ய வேண்டாம் - இரா.துரைரெட்ணம்  

கிழக்கு மாகாணத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தாங்கள் எமக்குச் செய்யாமல் எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் புதிய முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது மாகாணத்தில் சிறுபான்மை இன முதலமைச்சராக தாங்கள் தெரிவு செய்யப்பட்டதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைவதோடு, நானும் ஒரு சிறுபான்மை இனத்தவன் என்ற வகையில் தங்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டதல்களையும் தெரிவிக்கின்றேன்.

கிழக்குமாகாண சபை என்பது தமிழ்பேசும் மக்களின் 60 ஆண்டுகால போராட்டத்தின் அறுவடை. இதற்காக நாம் எண்ணற்ற விதைப்புக்களை இம் மண்ணில் விதைத்துள்ளோம். இந்த விதைப்புக்களின் ஈரங்கள் இன்னும் காயவில்லை. இந்த விதைப்புக்களின் ஒலங்கள், அவலங்கள் இன்னும் அடங்வில்லை.

எங்கள் உடன்பிறப்புக்களின் கல்லறைகளின் மீது நின்ற ஆதிக்கவிரோதமும், அதிகார மதமதையும் ஏகாதிபத்திய சிந்தனையும் கைகோர்த்து தங்கள் நலனை வலியுறுத்தி இலங்கை சோசலிசஜனநாயக குடியரசின் 13வது திருத்தச்சட்டம் மூலமாக வழங்கப்பட்ட இந்த அதிகாரமற்றசபை ஒன்றிற்கே நாம் கொடுத்த விலைகள் ஏராளம் ஆயினும் எமது உரிமைகள் தொடர்பாக, நாம் சாதிக்க வேண்டியவை அனேகம், போராடிப் பெறவேண்டியவைகள் ஏராளம்.

ஆயினும் இந்த நெருக்கு வாரங்கள், அதன் தாக்கங்கள், பொருளாதாரரீதியிலும், இராஜரிக ரீதியிலும் பேரினவாத ஆட்சியாளர்களை நிலைகுலையச் செய்தன. அந்த இயலாமையிலும், விருப்பின்றி வெறுப்போடு எமக்கு வழங்கப்பட்டதே 13வது திருத்தச்சட்டம் இதனை இலங்கைத் தீவில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கான முதற்கட்ட தீர்வாகவே நாம் பார்க்கின்றோம்.

இந்நிலையில் 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் இன்னும் பகிரப்படாத அதிகாரங்களை பகிர்தளிக்குமாறும், தமிழ் பேசும் இனங்களின் வாழ்வியல் உரிமைகளை வழங்குமாறும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றோம். இந்த பேராட்டத்திற்கு உள்நாட்டிலும், தமிழ்நாட்டிலும், சர்வதேசத்திலும் வாழும் எமது உடன்பிறப்புக்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்தவண்ணம் உள்ளனர்.

இந்தவேளையில் தான் நடந்து முடிந்த தேர்தலின் தமிழ்பேசும் இனங்களின் ஆட்சியமைப்பு முக்கியமுடையதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் ஆட்சி அதிகாரம் என்பதும் உரிமையென்பதும் சலுகைகள்மூலம் நிலைநிறுத்தப் படலாம் என்ற பேரினவாத சிந்தனை வட்டத்தில் தாங்கள் ஆளும் தரப்பின் வழியில் நின்று அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கப்போவதாக பதிவியேற்றுக் கொண்டவுடனேயே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தீர்கள் இதனை தமிழ்பேசும் இனத்தின் சார்பில் வரவேற்கின்றேன்.

இவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகாவலி திட்டத்தின் கீழ்வரும் காணி வாகரை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட ஒமடியாமடு மேல்பகுதியிலும், கிரான் பிரதேசசெயலக பிரிவிற்குட்டபட்ட காணி வடமுனைக்கு மேல் பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வளமுள்ள காணிகள் இவ் எல்லைப்புறத்தில் சிங்களவருக்கு மட்டும் பகிர்ந்தளிக்க கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

அதேபோல் இம்மாவட்டத்தில் வவுணதீவு பட்டிப்பளை, வெல்லாவெளி, செங்கலடி பிரதேச பிரிவுகளிலுள்ள வனபாலன திணக்களத்திற்கு சொந்தமான எல்லைப்புற அரசகாணிகளில் சிங்கள ஊர்காவற்படையினருக்கும், சிங்கள விவசாயிகளுக்கும் குத்தகைக்குவிடப் பட்டிருந்தது. மேலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் சிங்கள சமூகத்தவருக்கு மாத்திரம் பகிர்தளிக்கப்பட்டிருந்தன.

அத்துமீறிகுடியேற்றப்பட்டகாணிகள் தொடர்பாக பிரதேசசெயலாளர், அரசாங்க அதிபர் சட்டநடவடிக்கைகளை எடுத்த போதும் அவைகிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை தொடர்பான முழுமையான ஆதாரங்களுடன் கடந்த ஆட்சிகால முதலமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்தேன். ஆயினும் அவர் அவ்விடயத்தில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தின் பின் காலத்திற்கு காலம் பேரினவாத அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த குடியேற்ற திட்டங்கள் மூலம் தொடர்ந்தும் இம்மாவட்டத்தின் தமிழ்பேசும் இனம் பாதிக்கப்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் இத்தகைய கடந்த கால ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தாங்கள் எமக்குச் செய்ய மாட்டீர்களென நம்புகின்றோம்.

எனவே, 1)மட்டக்களப்பின் எல்லையிலுள்ள மகாவலி திட்டத்திற்குரிய காணிகள் விகிதாசார ரீதியில் இம் மாவட்டத்தில் வாழும் மூவின மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.

2)மட்டக்களப்பின் எல்லையிலுள்ள வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான அரச காணிகள் சிங்கள ஊர்காவற் படையினருக்கு வழங்கப் பட்டதுபோல் இம்மாவட்டத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கும் வழங்கப படல் வேண்டும்.

3)அத்துமீறி இம்மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் குடியேறியோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

தாங்கள் ஆளும்தரப்பினரால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் என்ற வகையில் இதனை தங்கள் நல்லாட்சியின் முதற்பணியாக கருத்திற்கொண்டு நியாயபூர்வமானதும் தீர்க்கப்படாததுமான இப்பிரச்சினையை செவ்வனே தீர்த்து வைப்பீர்களென எதிர்பாக்கின்றேன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com