Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 2)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

இதே மாதிரியான கருத்தை பிரேமதாஸாவுடன் நல்ல உறவில் இருந்த டயான் ஜெயத்திலகாவும் வெளியிட்டார். அப்போது புலிகளும் பிரேமதாஸா தலைமையிலான இலங்கை அரசும் நல்ல உறவில் இருந்தனர். இக் கொலைக்கான நாளை மாணவர்களின் இறுதிப் பரீட்சை தினம் அன்று புலிகள் திட்டமிட்டே தெரிவு செய்து இருந்தனர். காரணம் மாணவர்கள் பரீட்சைகள் முடிந்ததும் விடுமுறைக்காக தமது வீடுகளுக்கு புறப்படுவதில் ஆர்வமாக இருப்பர். இதனால் மாணவர் மத்தியிலிருந்து இக் கொலைக்கான எதிர்பலைப் போராட்டங்கள் பாரியளவில் தொடர்ச்சியாக நடைபெற வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும் என்பதற்காக.

சிறிது காலத்தின் பின்பு இக் கொலை சம்மந்தமான முழுமையான விபரங்களை அறிந்து முடிந்தது. இதில் ராஜினியை புலிகளுக்காக உளவு பார்த்த யாழ் மருத்துவ பீட மாணவர்கள் இருவரில் ஒருவர் எனது மாணவன் தர்மேந்திரா. முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது க.பொ.த உயர்தர கல்வியை வவுனியா மகா வித்தியாலயத்தில் மேற்கொண்டவர். யாழ் மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெற்ற இவர் 1985 களில் என்னையும் பல தடவைகள் யாழ்பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்க நிகழ்வுகளில் உளவு பார்த்தவர் என்பதுவும் எனக்கு தெரியும். இவர் தனது மருத்து படிப்பிற்கு பின்பு புலிகளின் மருத்துவ பிரிவில் வேலைசெய்தவர். தற்போது புலம் பெயர் தேசத்தில் இருக்கின்றார். இவருடன் இன்னொரு மருத்துவ பீட மாணவன் சூரியகுமார் இணைந்து செயற்பட்டிருக்கின்றார். இவரும் தற்போது புலம் பெயர் தேசத்தில் மருத்துவராக பணி புரிகின்றார். மேலும் இந்த உளவுக்கு ராஜினி வீட்டிற்குள் சென்று உதவி செய்தவர் எனது இன்னொரு மாணவனின் அண்ணன். இவர் ராஜினி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருபவர். இவர்கள் இருவரும் வவுனியாவில் ஒரே காலகட்டத்தில் க.பொ.த உயர்தர மாணவர்களாக இருந்தவர்கள். மருத்து பீடத்தின் இருமாணவர்களின் உளவுபார்த்தல் ராஜினியின் வீட்டிற்கு நட்பு ரீதியில் சென்று வந்து தகவல் சொன்னவர். ராஜினியின் நடமாட்டத்திற்கான சைகை மூலம் இறுதி நேரத் தகவலை வழங்கி பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி செல்வகுமார் கொலை நேரடியாக செய்த புலிகளின் புலனாய்வுப்பிரின் இல்லாது ஒழிக்கும் முக்கிய உறுப்பினர் பொஸ்கோ என்று ஐவரால் நிறைவேற்றப்பட்ட கொலை இது.

இதற்கான சகல உத்தரவுகளும் புலிகளின் தலைமைப் பீடத்தினால் வழங்கப்படடிருந்தன. இக் கொலை நடைபெற்ற மறு தினம் எனது மாணவனான மருத்துவ பீட மாணவன் முறைப்படி கிராம சேவகரிடம் அனுமதி பெற்று கொழும்பிற்குச் தப்பிச் சென்றுவிட்டார். இவற்றை அன்றைய கால கட்டத்தில் யாழ் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற மாணவர்கள் மற்றும் பல பொது மக்கள் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது.

இதே போன்ற ஒரு நிகழ்வை இவ்விடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இவ் நிகழ்வின் கதாநாயகன் யாழ் பல்கலைக் கழக மருத்து பீடத்தின் கோடியில் வீடமைத்து வாழ்ந்து வந்தவர். எம்மில் பலருக்கு தெரியாதவர் இவர். ராஜினி போல் பட்டப்படிப்போ சர்வதேச பிரபல்யமோ ஏன் உள்ளுர் பிரபல்யமோஈ அல்லது புத்திஜீவியோ இல்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகிய 1970 களில் இருந்து இடதுசாரி செயற்பாடுடைய ஈழவிடுதலை அமைப்பிற்காக தனது வீடு குடும்பம் என்று எல்லாவற்றையும் வழங்கியவர் வைகுந்தவாசம். இவர் திருநெல்வேலி மரக்கறிச் சந்தையில் குத்தகை சேகரிக்கும் கடைநிலை கிராம சேவை உத்தியோகஸ்தர் விவசாயி. 4 பிள்ளைகளின் தந்தை இவரும் இக்கால கட்டத்தில்தான் புலிகளால் சுட்டுக்கொலப்பட்டார்.

இதே திருநெல்வேலியில்தான். சந்தையில் வேலையில் இருந்த தருணத்தில் பலர் முன்னிலையில். இவரின் தம்பி ஈரொஸ் அமைப்பின் யாழ்பாணத் தளபதி. இந்த பழியும் முதலில் ஈபிஆர்எவ்எவ் மீதே வீழ்ந்தது. ராஜினியின் பிரபல்யம் அவரை இங்கு நினைவு கூர வைக்கின்றது. கூட்டங்கள் கூட வைக்கின்றது. குறும்படம் எடுக்க வைத்திருக்கின்றது. பல்கலைக் கழக முன் வாசல் கொலையை இன்று உலகம் பேசுகின்றது. பல்கலைக் கழக பின்புறக் கொலையை யாரும் அறியாமலே பேசாமலே இருக்கின்றோம். வைகுந்தம் போன்ற அடிமட்ட மக்கள் போராளிகளின் விடயங்கள் விலாசம் இல்லாமலே போய்விடுகின்றது. இது போன்ற விடயங்களும் பதிவுசெய்யப்பட வேண்டும் கேள்வி எழுப்பப்படவேண்டும் என்ற காரணங்களுக்காக இங்கு குறிப்பிடுகின்றேன்.

இளம் பிராயத்தில் ராஜினி யாழ்ப்பாண மாநகர சபைக்குள் உட்பட்ட றக்கா வீதி நாவலர் வீதி சந்திப்பு அருகில் வசித்து வந்தார். யாழ்ப்பாணக் கல்லூரி உப அதிபர் இராஜசிங்கம் என்பவரின் மகள் ஆவார். மத்தியதர கிறிஸ்தவ குடும்பத்தில் 4 பெண்களில் 2 வது பெண்பிள்ளையாக பிறந்தார். 1954 பெப்ரவரி மாதம் 23ம் திகதி பிறந்த ராஜனி தனது கல்வியை அமெரிக்க மிசனறியால் நாடாத்தப்பட்ட வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்றார். மிகச் சிறிது காலம் ஆங்கில பாடத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கற்றார். 1973 ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவத்துறை கற்றலுக்கான அனுமதியைப் பெற்றார். பல்கலைக்
கழக மாணவர்கள் பலரிடமும் காணப்படும் ஆர்வத்துடன் மாணவர் போராட்டங்களில் ராஜினியும் ஈடுபடலானார்.

(தொடரும்......) (பகுதி 3)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com