Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 3)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

1970 களில் இலங்கைப் பல்கலைக் கழகங்களில(அப்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டிருக்கவில்லை) ஜனதா விமுத்தி பெரமுன(ஜே.வி.பி) என்ற இரகசிய அமைப்பின் மாணவர் அமைப்பின் செல்வாக்குகள் அதிகமாக இருந்தன. ஜேவிபி யினர் இலங்கையில் ஒரு வர்க்கப் புரட்சிக்கான கோஷங்களை முன்வைத்து இலங்கையின் சிங்கள வறிய கிராமங்களில் பெரும்பாலும் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர். சிறப்பாக அன்றைய காலகட்டத்தில் கொழும்பு பெரதனிய பல்கலைக் கழகங்களின் மாணவர் அமைப்புக்களின் தலைமைத்துவ பொறுப்பு ஜேவிபி இடமே இருந்தன. அந்த அளவிற்கு மாணவர்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தது ஜேவிபி. பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் பலரும் ஜேவிபி மாணவர் பிரிவில் அங்கத்தவராக இருந்தனர். தயாபால திரணகம என்ற பல்கலைக்கழக மாணவனும் இந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு படிப்புடன் கூடிய அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தார்.
ராஜினியின் குடும்ப சூழல் கல்வி கற்ற பாடசாலை போன்ற வழிகளில் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். பல்கலைக் கழகத்தில் சிங்கள தமிழ் மாணவரிடையே நிலவி வந்த இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் ராஜினி புலமை பெற்றிருந்தமையினால் சக சிங்கள மாணவர்களுடனும் இலகுவில் தொடர்புகளைப் பேண ஏதுவாக இருந்தது. பல தமிழ் சிங்கள பல்கலைக்கழக மாணவரிடையே பழகுதலுக்கான தடையாக மொழி இருந்ததை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இரு மொழி(தமிழ் சிங்களம்)ப் புலமையின்மை இலங்கையில் மொழிப் பிரச்சனைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. இலங்கையில் உள்ள சகல மக்களும் இரு மொழிப் புலமை பெற்றிருப்பின் இன முரண்பாடு என்று வளர்த்தெடுக்கபட்ட பிரச்சனை இவ்வளவு தீவிரம் அடைந்திருக்க வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கும். பல்கலைக்கழக மாணவ போராட்டங்களினூடக ராஜினிக்கும் தயாபாலா திரணகமவிற்கும் இடையே ஏற்பட்ட அறிமுகம் நட்பு காதல் என்று பரிணாமம் அடைந்து. அது 1977ம் ஆண்டு கல்யாணம் என்ற பந்தத்திற்குள் புகுந்து கொண்டது.

யாழ்ப்பாணத்து பாரம்பரிய வாழ்வு முறமைக்குள் பிறந்து வளர்ந்த கிறிஸ்தவ தமிழ் பெண்ணான ராஜினி ஒரு பௌத்த சிங்கள இன இளைஞனுடன் கல்யாணம் வரைக்குமான உறவுக்கு சென்றதற்கான தைரியத்தை கொண்டிருந்தார் என்பதை நாம் இங்கு உற்று நோக்க வேண்டும். இவர்களுக்கு முறையே 1978. 1980 களில் நர்மதா, சரிகா என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன.

யாழ்ப்பாண சமூக அமைப்பு முறமையில் நாம் ஒன்றை அவதானிக்க முடியும். குறிப்பாக மத்திய தர வர்க்க குடும்பங்களில் ஆண் சகோதரர்கள் இன்றி அமைந்த குடும்பங்களில் பிறந்த பெண்கள் அவர்கள் பெற்றோரால் தைரியமான பெண்களாக வளர்வதற்குரிய தவிர்க்க முடியாத கட்டுப்பாட்டுத் தளர்வுகளை கொண்டிருந்தனர். இதனை சமூகமும் ஒருவகையில் அங்கீகரித்தே வந்துள்ளது. இந்த வகையில் 4 பெண் பிள்ளைகளில் ஒருவராக பிறந்த ராஜினியும் தைரியமான பெண்ணாக பரிணமித்தே இருந்தார். இதன் தொடர்ச்சியும் கல்வி கற்ற பல்கலைக் கழக சூழலும் ஒரு பௌத்த சிங்கள இளைஞருடன் திருமணம் என்ற பந்தத்திற்குள் இழுத்த வர உதவியது என்பதே என் பார்வையாகும்.

தயாபால திரணகம ராஜினியின் நட்பு காதல் கட்டங்களில் இலங்கை தமிழ் சிங்கள மக்கள் பற்றி இருவரும் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளில் முரண்பாடுகள் இருந்தே வந்திருக்கின்றன. ஆனால் முரண்பாடுகளுடனேயே வளர்ச்சி ஏற்படும் என்ற இயங்கியல் தத்துவத்தின் அடிப்படையில் இவர்களின் உறவு வளர்ந்து வலுப் பெற்று திருமணம் இரு பெண்பிள்ளைகளுக்கு பெற்றோர் என்ற நிலைவரை பரிணாமம் அடைந்து. இறுதிவரை மன மண முறிவின்றி தொடர்ந்ததே ராஜினி திரணகம தயாபால திரணகம என்ற இருவரதும் உறவு நிலையாகும்.

ராஜினி 1978 ம் ஆண்டு தனது மருத்துவக் கல்வியின் தொடர்சியான மருத்துவருக்கான தொழிற் பயிற்சியை யாழ் போதனா வைத்திய சாலையில் மேற் கொண்டார். இதனைத் தொடர்ந்து இலங்கையின் மலையகப் பிரதேசத்தில் அப்புத்தளை என்ற நகரத்தில் அமைந்த கல்டுமுல்ல என்ற பின் தங்கிய கிராம வைத்திய சாலையில் மருத்துவராக தனது பணியை ஆரம்பித்தார். இலங்கையைப் பொறுத்தவரையில் பல்கலைக் கழக படிப்பை முடித்த பலர் மருத்துவ தொழிலாக இருந்தாலும் சரி ஆசிரியர் தொழிலாக இருந்தாலும் சரி அல்லது வேறு என்ன அரசாங்க தொழிலாக இருந்தாலும் சரி பின்தங்கிய வசதி வாய்ப்புக்கள் குறைந்த பிரதேசங்களில் தங்கியிருந்து தமது சேவையை அரசு உத்தியோகத்தை பார்க்க விரும்புவதில்லை. பல்கலைக் கழக பட்டதாரிகளிடையே பொதுவாக நிலவி வந்த மத்திய தர குணாம்சம் அவர்களை பின் தங்கிய கிராமங்களை தவிர்த்து நகர வாழ்விற்குள் தள்ளியது என்பது மிகையானது அல்ல.

ஆனால் தவிர்க்க முடியாமல் பல்கலைக் கழக படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் முதல் வேலையில் சிறிது காலம் அரசால் தரப்படும் பின்தங்கிய பிரதேசங்களில் கடமையாற்றுவர். ஆனால் சிறிது காலத்திற்கு பின்பு முறையற்ற தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் இவர்கள் தமது விருப்பு இடங்களுக்கு மாற்றலாகி செல்வதும் வழமையாக இருந்து வந்துள்ளது. இதற்கு விதிவிலக்காக ராஜினி இருந்தாரா? என்பதை முடிவு செய்ய முடியவில்லை. காரணம் ஒரு வருட மருத்துவர் சேவையின் பின்னராக 1980 இல் யாழ் மருத்து பீடத்தில் விரிவுரையாளராக வேலை பெற்று இடம்பெயர வேண்டிய சூழல் ராஜினிக்கு ஏற்பட்டுவிட்டது.

(தொடரும்......) (பகுதி 4),

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com