Contact us at: sooddram@gmail.com

 

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி – 3)

(வரதர் பெருமாள்)

இன உணர்ச்சிக் குழறல்களால் வாக்குளை வெல்லலாம், அவைமக்களின் அரசியற் கோரிக்கைகளை வென்றெடுக்க உதவாது

மக்களாற் தெரிவு செய்யப்பட்ட தமிழர்களின் தலைவர்கள் என்போரில் பிரதானமானவர்கள் ஒருமித்து நாட்டிலுள்ள அனைத்து இனமக்களினதும் அரசியல் சமூக சக்திகளின் பார்வைக்கும் கருத்துக்கும் சந்தேகங்களுக்கு இடமின்றி இலங்கைத் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகள் என்னென்ன? அவற்றைத் திருப்திப் படுத்தும் வகையான குறைந்த பட்ச அரசியற் கோரிக்கைகள் என்னென்ன?  என்பதை தெளிவாக முன்வைக்க வேண்டும். அவ்வாறான ஒரு திட்டத்தை எல்லா இன மக்களினதும் எல்லா அரசியற் சக்திகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றில்லை. அவற்றை எதிர்ப்போரும் இருக்கவே செய்வர். ஆனாலும் அவ்வாறான ஒரு திட்டத்தை அனைத்து சிறுபான்மைத் தேசிய இனங்களினதும் பெரும்பான்மையான தலைவர்கள் ஏற்று ஆதரவு தரும் வகையாக அது அமைந்திருக்க வேண்டும். பெரும்பான்மைத் தேசிய இனத்தைப் பொறுத்த வரையில் அவர்கள் மத்தியிலுள்ள முற்போக்கு சக்திகள் மற்றும் தாராள ஜனநாயக சக்திகளின் ஆதரவு கிடைத்தாலே போதும். அவ்வாறான ஒரு திட்டத்தை உறுதியாகவும் சரியாகவும் முன்னெடுத்தால் அது நிச்சயமாக விரைவில் பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கும் சென்றடைந்து ஏற்புடையதாக ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

வெறும் கை முழம் போடாது

இன்றைய நிலையில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக என்ன திட்டத்தை தமிழ்த் தலைவர்கள் முன் வைத்திருக்கிறார்கள், எவ்வாறானதொரு அரசியற் தீர்வை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்று தெரியாமல் இந்தியா உட்பட வெளிநாட்டு சக்திகள் தத்தம் பாட்டுக்கு அவ்வப்போது இலங்கை அரசை நோக்கி தாம் நினைத்தபடி அந்தந்த நேரத்துக்கு தமக்கு வசதிப்பட்டபடி கோரிக்கைகளை  விடுக்கிறார்கள். உண்மையில் உள்நாட்டு அரசியற் சக்திகளும், வெளிநாட்டு சக்திகளும் பெரும்பான்மையான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் நியாயமான கோரிக்கைகளைத்தான் முன்வைக்கிறார்கள் என்று கருதவும், அதற்கு ஆதரவு தரவுமான நிலைமை ஏற்பட்டால்த்தான் அது காத்திரமான முன்னேற்றங்களை இலங்கையின் அரசியலில் ஏற்படுத்தும்.

தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு கூட்டுக்கோ அதனது அரசியல் நிலைப்பாடுகள் மற்றும், மக்கள் தொடர்பான அதனது கோரிக்கைகளை வெளிப்படையாக முன்வைக்க வேண்டும் என்ற ஒரு கட்டாயத் தேவை கிடையாது. மாற்றுக் கட்சிகளினதும் மற்றும், மாற்று இனங்களின் தலைவர்களினதும் மனச்சாட்சியையும், ஆதரவையும் வெல்ல வேண்டும் என்ற அவசியமும் அவ்வானதொரு தேர்தற் கட்சிக்கு இருப்பதில்லை. வெறுமனே தேர்தல்களுக்காக மட்டும் இருக்கும் ஒரு கட்சியைப் பொறுத்த வரையில் தாம் பங்குபற்றும் தேர்தல்களில் என்னென்ன வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, என்னென்ன புரளிகளைக் கிளப்பிவிட்டு, என்னென்னவாறு மக்களைக் குழப்பிவிட்டு குறுகிய காலத்தில் தேவைப்பட்ட, சாத்தியமான எல்லாக் குறுக்கு வழிகளையும் பாவித்து மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைக் கொள்ளையடித்து வெற்றிவீரர்களாவது மட்டுமே நோக்கமாக இருக்கும்.

தமிழர்களின் பிரதானமான கட்சியான த.தே.கூவின் தலைவர்கள் தாங்கள் தமிழர்களின் தாயகத்தை மீட்கவும்,  அதன் சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கவுமே தேர்தல்களில் போட்டியிடுவதாகவும், அதற்காக மட்டுமே தேர்தல்களின் போது தாங்கள் தமிழ் மக்களிடம் வாக்குகளை தங்களுக்கு மட்டுமே அள்ளிப் போடும்படி கேட்பதாகவும் அடிக்கடி மேடைகளிலும் பத்திரிகை அறிக்கைகளிலும் கூறுகிறார்கள். ஆகவேதான், தமிழர்களுக்கான அரசியற் கோரிக்கைகளை அவை நியாயமானவையென உலகம் கருதி ஆதரவு தரும் வகையாக த.தே.கூவினர் திட்டவட்டமாகவும் வெளிப்படையாகவும் முன்வைக்க வேண்டுமென்றும், அத்திட்டத்தை மையமாகக் கொண்டு ஆதரவைத் திரட்டும் அரசியற் பிரச்சாரம் ஒன்றை உள்நாட்டிலும், வெளிநாட்டு சக்திகள் மத்தியிலும் முன்னெடுத்திருக்க வேண்டும், இப்போதாயினும் முன்னெடுக்க வேண்டுமெனவும் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

த.தே.கூவினர் கேட்ட நேரமெல்லாம் தமிழ் மக்களை அவ்வாறே வாக்களிக்க வேண்டும் எனக் கோரும் தமிழச் சமூகப் பிரமுகர்கள், மற்றும் தமிழ் அரசியல் ஈடுபாட்டார்கள் அவ்வாறானதொரு திட்டத்தையும், அதையொட்டிய செயற்பாடுகளையும் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.  புலிகள் அழிந்து முடிந்து நான்கு ஆண்டுகள் முடிவடையப் போகிறது. ஆயினும் இன்றுவரையிலும், அவ்வாறான ஒரு திட்டத்தை த.தே.கூவினர் முன்வைக்கவில்லையே என்று தமிழ் அரசியல் ஆர்வலர்கள் ஆதங்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. இந்த எதிர்பார்ப்புகளை, ஆதங்கங்களை தெரியாமலும், புரியாமலும்  த.தே.கூ. தலைவர்கள் இருக்கிறார்கள் எனக் கூற முடியாது.

ஆனால் அப்படியான ஒரு முயற்சியில் த.தே.கூவின் தலைவர்கள் எந்தவொரு அளவிலும் தமது நாக்குகளுக்க நேர்மையாகவும், தமது மனச்சாட்சிக்க உண்மையாகவும், இவ்விடயத்தில் ஈடுபாடு காட்டுவதாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தைக் கூவியழைத்தும், ராஜபக்ஷாக்களைக் குறைசொல்லியும் அவ்வப்போது வெளியிடும் அரச எதிர்ப்பு அறிக்கைகளும், ஆடி அமாவாசைக்கு ஒன்று அடுத்த தைப்பூசத்துக்கு ஒன்று என மேற்கொள்ளும் நோகாத எட்டுமணித்தியால உண்ணாவிரதங்களும், ஆண்டுக்கு ஒரு முறை அமெரிக்காவுக்கும், டெல்லிக்கும் விஜயம் செய்து மேற்கொள்ளும் ரகசிய சந்திப்புக்களும் இதுவரை வேறு எதனையும் சாதிக்கவில்லை.

மாறாக ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் அதிகாரம் மேலும் உக்கிரத்துடன் வலுக்கொண்டு நீடிக்கவும், அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க முடியாமைக்கான காரணம் த.தே.கூக்காரர்களே என குற்றச்சாட்டுகளைப் போட்டு விட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பது தொடர்பான தமது பொறுப்பைத் தள்ளிப் போடுவதற்கும், அவர்கள் தமக்கான சிங்கள வாக்கு வங்கியின் கையிருப்பை மேலும் அதிகரிப்பதற்குமே வசதி செய்து கொடுக்கின்றது.

பானையில் இருந்தாற்தானே அகப்பையில் வருவதற்கு

இலங்கையின் பல்வேறு முற்போக்கு ஜனநாயக சக்திகளும், அனைத்து சிறுபான்மை இனங்களின் தலைமைகளும் வெளிநாடுகளும் நியாயமான தெனக் கருதக் கூடிய ஓர் அரசியற் கோரிக்கைத் திட்டத்தை த.தே.கூவினர் வெளியிட முன்வராமைக்கு பிரதானமான காரணம் அரசாங்கமல்ல என்பதும், மாறாக அவர்களுக்குள்ளே நிலவும் ஒற்றுமையின்மையும், தங்களுக்குள்ளே இருக்க வேண்டிய ஒற்றுமையை நிலைநாட்டும் வகையாக முடிவெடுத்துச் செயற்படும் திராணியின்மையுமே அதற்கு பிரதானமான காரணமெனலாம்.

அத்துடன், நியாயமானதொரு திட்டத்தை வெளியிட்டால் வெளிநாடுகளிலுள்ள புலிவாதிகளின் எதிர்ப்புகளுக்கும், யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தாயகத் தேசிய சுயநிர்ணயவாதிகளின் விமர்சனத்துக்கும் உள்ளாக வேண்டி ஏற்படுமோ என்ற கிலசமும் அவர்களை சரியான பாதையில் வெளிப்படையாக செயற்பட முடியாமல் ஆக்கி வைத்திருக்கிறது, அதனால், தாங்கள் தமிழ் மக்களின் பொதுநலன்கள் தொடர்பாக தங்களின் மனச்சாட்சிப்படி நடந்து கொண்டால் அடுத்த தேர்தலின் வெற்றியை அது பாதித்து விடுமோ என்ற கலக்கத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதுவும் புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றே. இவையே த.தே.கூவின் அரசியல் இயலாமைக்கான திட்டவட்டமான காரணங்கள் என்பது தெளிவு.மேலும், ஒரு திட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி விட்டால் பின்னர் அது தொடர்பான கருத்துக்கள் எதிரும் புதிருமாக எழவே செய்யும். அவற்றின் மீது பகிரங்கமாக பலருக்கும் ஏற்புடைய வகையாக திட்டவட்டமாக  விவாதிக்க வேண்டியும், பதில் சொல்ல வேண்டியும் ஏற்படும்.

இப்போது த.தே.கூவினர் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பிலிருந்து தாம் முன் வைக்க வேண்டிய அரசியற் கோரிக்கைகளைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தாமல் பொத்தாம் பொதுவாக:-

'தமிழர் தாயகமே எமது கொள்கை',

'தேசிய சுயநிர்ணய உரிமையே எமது கோரிக்கை',

'சிங்கள இராணுவமே வெளியேறு',

'அரசே! சிங்களக் குடியேற்றத்தை நிறுத்து'

என சுலோகங்களை வெளியிடும் அணுகுமுறையையே கடைப்பிடிக்கின்றனர்.

அத்துடன்,

'தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் அரச படைகள் உயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லாது போயும் வெளியேறுகிறார்கள் இல்லை',

'அரச படையினர் தமிழர்களின் நிலங்களை அபகரித்து இராணுவ முகாம்களை விரிவாக்குகிறார்கள், மேலும் தமிழர் பகுதிகளெங்கும் புதிய இராணுவ முகாம்களை ஆக்குகிறார்கள்',

'அரசாங்கம் கைது செய்யப்பட்ட புலிகளின் விபரங்களை இதுவரை வெளியிடவில்லை',

'அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் சாக்குப் போக்குச் சொல்லி காலத்தைக் கடத்துகிறது',

'அரசாங்கம் அரசியல் யாப்பின் 13வது திருத்த விடயங்களை நிறைவேற்றத் தயாராக இல்லை',

'அரச படையினர் யுத்தத்தால் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கிறார்கள் இல்லை'

போன்ற குற்றச் சாட்டுகளை அடுக்குவதிலும் அவற்றிற்காகக் குரலெழுப்பு வதிலுமே த.தே.கூ. தலைவர்கள் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள்.

மேலே அடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எல்லாம் சரியானவை அல்ல என்றாலும் குறிப்பிடத்தக்க அளவு உண்மைகள் இல்லாமலும் இல்லை. ஆனால் அவை தமிழர்களின் பிரதானமான அரசியற் கோரிக்கைகளைப் பதிலீடு செய்வதற்குப் போதிய கோரிக்கைகளா என்ற கேள்வியையே இங்கு பிரதானமாக எழுப்ப வேண்டியுள்ளது.

அதிதீவிர சுலோகங்களும் நடைமுறை ஓரங்களில் ஒட்டியிருக்கும் தற்காலிகப் பிரச்சினைகள் தொடர்பான குற்றச் சாட்டுகளும் தமிழ் மக்களின் உணர்ச்சிகளை அரசுக்கு எதிராக கொதிக்கப் பண்ணலாம், அது தேர்தல்களின் போது அரசுக்குச் சார்பானவர்களுக்கு விழும் வாக்குகளைக் குறைக்கலாம். ஆனால் அவற்றால் தமிழ் மக்களின் நேர்மையான அரசியல், பொருளாதார  அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. அவற்றின் அடிப்படையிலான நியாயமான அரசியற் கோரிக்கைகளையும் தெளிவாக வெளிப்படுத்த முடியாது.

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தைக் காட்டும் விந்தையான வித்தை

த.தே.கூவினர் திட்டவட்டமாக தமது அரசியற் கோரிக்கைகளின் திட்டத்தை முன்வைத்தால் தாங்கள் அரசியல் உரல்களுக்குள் அகப்பட்டு இடிபட நேரிடும் என அஞ்சுகிறார்கள் என்பது தெரிகிறது. எனவே வெ'வ்'வேறு வகைப்பட்ட அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களை அவரவருக்கு அளவாக தமது தொப்பியை கற்பனையில் தெரிவு செய்து கொள்ளும்படி விடுவது போல தமது அரசியல் கோரிக்கைத் திட்டத்தையும் அரசியல் அரங்கிற்கு வெளியிடாமல் ஒவ்வொருவரையும் தமக்குச் சார்பாக கற்பனை செய்து கொள்ளும்படி விட்டிருக்கிறார்கள்.

த.தே.கூவினரின் அரசியற் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டை:-

அவர்கள் தமிழர் தாயகத்துக்கு அதி உயர்ந்த பட்ச தேசிய சுயநிர்ணய உரிமைகளையும், அதிகாரங்களையும் கொண்ட அரசியற் தீர்வையே கோருகிறார்கள் என்றும் கொள்ளலாம்.

அல்லது,

அவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் எந்தவொரு இனமக்களும் அஞ்சாத வகையில் ஒரு நியாயமான அளவு அதிகாரப் பகிர்வைத் தெளிவாகத் தருகிற அரசியற் தீர்வுக்கு சமரசம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள் என்றும்  கொள்ளலாம்.

அவர்களின் கோரிக்கையை:-

விரும்பியவர்கள் கனடாவின் கியூபெக் பெற்றிருக்கும் அதிகாரங்களை மாகாணசபைகளுக்குக் கோருவது போலவும் எடுத்துக் கொள்ளலாம்,

அல்லது, சிலர் முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த குடியரசுகள் கொண்டிருத்தமை போலவும் கருதிக் கொள்ளலாம்,

அல்லது, சிலர் இந்தியாவிலுள்ள மாநில அரசுகள் கொண்டிருப்பது போல அதிகாரங்களைக் கோருவது போலவும் கொள்ளலாம்.

எவ்வாறாயினும் த.தே.கூ தலைவர்கள் தாங்களாக எதனையும் திட்டவட்டமாக அனைவரும் ஒரே கருத்தாகப் புரிந்து கொள்ளும் வகையாகச் சொல்லாமல் இருப்பதில் திறமைசாலிகளாக இருக்கிறார்கள் என்பது உண்மையே.

பிரணவ மந்திரத்தை அறிந்த  சாஸ்த்திரிகளாலும் புரிய முடியா சூத்திரம்

மஹிந்தவுக்கும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தாங்கள் தமிழர்களுக்கான அரசியற் கோரிக்கைகளை ரகசியமாகச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவற்றைத் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்  தமிழ் மக்களுக்கோ! ஏன்! தங்களது கட்சிப் பிரமுகர்களுக்குக் கூட அவர்கள் அந்த ரகசியத்தைத் தொடர்ந்து மறைத்து வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அந்தப் பிரமுகர்கள் இது தொடர்பாக விரக்தியின் எல்லையில் உள்ளமையைக் காணலாம்.

அப்படியொரு ரகசியம் உண்மையில் உண்டா என்பதுவும் ஒரு கேள்வி. அவ்வாறு ரகசியமாக எதையும் அமெரிக்க அரசுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ  கொடுத்திருப்பதாக நம்பமுடியவில்லை. ஏனெனில் அந்த நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு அமைச்சு அதிகாரிகள் இலங்கை அரசை நோக்கிக் கோரும் கோரிக்கைகளில் பழைய புளித்து நாறிப்போனவைகளே இன்னமும் காணப்படுகின்றன. தமிழர்களின் அடிப்படையான அரசியற் கோரிக்கைகள், அவசியங்கள் தொடர்பான சரியான காத்திரமான சாராம்சங்கள் எதனையும் காண முடியவில்லை. 

தமிழர்கள் அநுபவித்து வரும் அவல நிலைகளே த.தே.கூவினரில் அரசியல் வாழ்வைக் காப்பாற்றி வருகிறது என்றால் மிகையாகாது. உண்மையில் த.தே.கூவின் இந்த அணுகுமுறை அரசாங்கத்துக்கு மிக வசதியாக த.தே.கூவின் பக்கத்துக்கு பந்தை அடித்துவிட்டு இலகுவாக அரசியற் தீர்வு பற்றிய விடயத்தைக் குப்பைக் கூடைக்குள் போட்டுிட்டு காலத்தைக் கடத்துவதற்கே உதவியாகவும் வசதியாகவும் உள்ளது. த.தே.கூ த் தலைவர்களும் அவ்வாறு அரசினால் குப்பைக் கூடைக்குள் போடப்பட்டிருக்கும் அரசியற் தீர்வு விடயம் அரங்கத்துக்கு மீண்டும் உரியபடி எடுக்கப்பட்டால் அதுவே தமக்கு எதிரான அரசியற் பூதமாக வெளிப்பட்டு விடுமோ என அஞ்சுகிறார்கள் என்பது தெரிகிறது.

அரசியற் தீர்வு தொடர்பாகத் தமது காலைக் கையைத் தூக்கினால் 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெட்டான் ஆண்டி' என்பது போல தமக்கும் ஆகிவிடுமோ என்பதால் வெ'வ்'வேறு உணர்ச்சிகரமான விடயங்களை மக்கள் அரங்கத்தில் வைத்து அரசுக்கு எதிராக 'அரசியற் கபடி' விளையாடுவதே தமக்கு நல்லது என த.தே.கூத் தலைவர்கள் கருதி செயற்படுகிறார்களோ என்று சந்தேகப்படுபவர்களையும் குறை கூற முடியாது.

(தொடரும்....)

(இக் கட்டுரையின் 1ம் பாகம்)

(இக் கட்டுரையின் 2ம் பாகம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com