Contact us at: sooddram@gmail.com

 

அமீனா சாலியின் பெயரால் ஜப்னா முஸ்லிம் ஊடக மோசடி!

ஊடகங்களுக்கு இடையில் போட்டி இருக்கத்தான் வேண்டும், அதற்காக செய்திகளை தாமாக செயற்கையாக உருவாக்கி அதன் மூலம் பரபரப்பு மற்றும் புகழ் தேட நினைப்பது மோசமான ஒரு செயலாகும். அமெரிக்க ஊடக ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட ரூபர்ட் முர்டொக் என்பவர் செய்திகளை செயற்கையாக உருவாக்கும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு உலக அரங்கில் கேவலப் பட்டுப் போனதும், அவருக்கு சொந்தமான "நியூஸ் வீக்" வாராந்த சஞ்சிகை  பதிப்பகம் இழுத்து மூடப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. அஸாத் சாலி அவர்கள் கைது செய்யப் பட்டது, அது தொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன. வழமை போலவே இணைய ஊடகங்களுக்கு மத்தியில் செய்திகள், நிகழ்வுகளை விரைந்து வெளியிடுவதில் உள்ள போட்டி இதிலும் காணப் பட்டது. நேர்மையான போட்டி, எப்பொழுதும் ஆரோக்கியமானதாகவே இருக்கும்.

அஸாத் சாலி அவர்களின் மகள் அமீனா சாலி, குடும்பத்தவர்கள் சகிதம் கங்காராம விகாரையில் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட விவகாரம் முஸ்லிம்கள் மத்தியில் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பான செய்திகள், விமர்சனங்கள் என்பன இணைய ஊடகங்களிலும், Facebook இலும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் "
விமர்சனங்கள் குறித்து அஸாத் சாலி குடும்பம் பதில் வழங்கும்..!" என்ற ஒரு அறிவிப்பு, அஸாத் சாலியின் குடும்பத்தவர்கள் சார்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் மட்டும், மே 08 ஆம் திகதி புதன்கிழமை வெளியாகியது.  இந்த அறிவித்தல் வேறு எந்த ஊடகங்களிலும் காணப் படவில்லை.

அதனைத் தொடர்ந்து, மே 09 ஆம் திகதி வியாழக்கிழமை, அஸாத் சாலி குடும்பம் சார்பில், அமீனா அஸாத் சாலியின் பெயரில் தமிழ் மொழி மூலமான அறிக்கை ஒன்று ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் "
நாங்கள் காபிர்களாகி விட்டோமா...? ஆமீனா ஆஸாத் சாலி" என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.

குறித்த அறிக்கை, தமிழ் மொழியில் மாத்திரம், அதுவும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் மட்டுமே வெளியாகி இருந்தது. பொதுவாக இவ்வாறான பொது அறிக்கைகள் அனைத்து ஊடகங்களுக்கும் வழங்கப்படும் நடை முறை இருந்தும், இந்த குறிப்பிட்ட அறிக்கை மட்டும் ஜப்னா முஸ்லிம் தவிர்ந்த வேறு எந்த ஊடகத்திலுமே வெளிவரவில்லை.

ஒரு சில இணைய ஊடகங்கள், ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் இருந்து மேற்படி அறிக்கைய பிரதி  பண்ணி, ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தின் பெயரைக் குறிப்பிட்டு வெளியிட்டு இருந்தன.

அஸாத் சாலியை அறிந்தவன், முன்னர் அவரை ஆதரித்தவன் என்ற வகையில், மேற்படி அறிக்கையில் இருந்த பல விடயங்கள் தொடர்பிலும், மேலும் உதிரியாக சில விடயங்கள் தொடர்பிலும், அமீனா சாலிக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதி, ஜப்னா முஸ்லிம் உட்பட, நானறிந்த குறிப்பிட்ட சில முக்கிய முஸ்லிம் ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தேன்.

ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் மட்டும் வெளியான மேற்படி அறிக்கயை மேற்கோள் காட்டி எனது பகிரங்க மடலை வரைந்து இருந்த பொழுதும், ஜப்னா முஸ்லிம் எனது மடலை இதுவரை வெளியிடவில்லை. எனினும் ஏனைய ஊடகங்களில் பெரும்பாலானவை வெளியிட்டு உள்ளன. 

நான் அறிந்த வகையில், அஸாத் சாலி குடும்பத்தில், அமீனா சாலி அவர்கள் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்ற ஒருவராகவும், ஏனையவர்கள் ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர்களாகவுமே உள்ளனர். இதன் காரணமாகவே, எனது மடலில் அமீனா சாலியை நோக்கி "
குறித்த விளக்கம் உங்களால் சுயமாக எழுதப்பட்டதா என்ற கேள்வி, அதன் தமிழ் மொழி நடையை நோக்குமிடத்து எழுகின்றது." என்று குறிப்பிட்டேன்.

(அமீனா சாலிக்கான எனது பகிரங்க மடலை வெளியிட்ட ஊடகங்களில் கருத்து பதிந்த சில வாசகர்கள், ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில், அமீனா சாலியின் பெயரில் வெளியான "
நாங்கள் காபிர்களாகி விட்டோமா...? ஆமீனா ஆஸாத் சாலி
" என்ற அறிக்கையை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துவிட்டு, எனது கடிதத்தை மட்டும் வெளியிட்டு இருப்பதாக, குறித்த ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தி இருந்தனர்.)


இதனைத் தொடர்ந்து இது குறித்து சற்று ஆராய வேண்டும் என்று முயற்சியில் இறங்கினேன். 

அஸாத் சாலியின் குடும்பம் சார்பில் விளக்கமளிக்கும் அறிவிப்பு, அமீனா சாலியின் பெயரிலான விளக்க அறிக்கை ஆகியன ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் மட்டுமே வெளியாகி இருந்தமை, அந்த அறிக்கையில் பயன்படுத்தப் பட்டிருந்த தமிழ் மொழிநடை, அடுத்தவரை குறை சொல்ல வார்த்தைகளை சூட்சுமமாக பயன்படுத்தியிருந்த வஞ்சக வரிநடை போன்றவை குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், நான் ஏற்கனவே நன்கு அறிந்த, தற்பொழுதும் அஸாத் சாலியுடன் நெருக்கமாக இருக்கும் சிலரை தொடர்பு கொண்டு இதன் பின்னணியை அறிந்து கொண்டேன்.

தங்களது தவறான செயல்பாடுகள் குறித்து சமூகத்தில் காணப்படும் விமர்சனங்கள் தொடர்பில் அறிந்திருந்தாலும், அவை தொடர்பில் அறிக்கை எதனையும் வெளியிடும் எந்த நோக்கமும் அமீனா சாலி உட்பட குடும்பத்தவர்கள் யாருக்கும் இருந்திருக்கவில்லை.

எனினும், புதன்கிழமை ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் இருந்து தொடர்புகொண்டு, இது தொடர்பில் நடந்த விடயங்களைப் பேசிவிட்டு, அஸாத் சாலி குடும்பம் சார்பில் தாங்களே ஒரு அறிக்கையை தயாரிப்பதாக மட்டும் தெரிவித்து உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஆசாத் சாலி குடும்பத்தின் பெயரில் ஒரு அறிவிப்பை அவர்களே வெளியிட்டு உள்ளனர். அதனைத் தொடர்ந்து, மறுநாள் வியாழக்கிழமை (09.05.2013) அமீனா சாலியின் பெயரில் அறிக்கை ஒன்று ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் மட்டும் வெளியாகியுள்ளது.

இதனை புரியும்படியாக சொல்வதென்றால், திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம், இசை, நடிப்பு, பின்னணிப் பாடல்கள் என்று அனைத்தையுமே ஜப்னா முஸ்லிம் இணையத்தளமே செய்துள்ளது. அமீனா சாலியின் பெயர் மட்டும் டைட்டிலில் பயன்படுத்தப் பட்டுள்ளது 

மேற்படி அறிக்கையில் உள்ள வார்த்தைகள், வசனங்கள், கருத்துக்கள் என்பவற்றுக்கு அமீனா சாலி பொறுப்பு இல்லை என்பதால், கேள்விகள், விமர்சனங்களால் பிரச்சினைகள் வந்து தங்களின் மோசடி அம்பலமாகி விடக் விடக் கூடாது என்பதற்காக, இந்த அறிக்கையின் கீழ் பதியப்பட்ட வாசகர்களின் விமர்சனங்கள், கேள்விகள், கருத்துக்கள் என்று Comments எதனையுமே அனுமதிக்கவில்லை / பிரசுரிக்கவில்லை. தற்பொழுது வரை எந்தக் குறிப்புக்களும் இல்லை. நான் பதிந்த குறிப்புக்கள் கூட பிரசுரமாகவில்லை.        

மேற்படி காரணத்தினாலேயே, நான் அமீனா சாலிக்கு எழுதிய பகிரங்க கடிதத்தையும் பிரசுரிக்க முடியாத நிலை ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அமீனா சாலி பெயரிலான குறித்த அறிக்கை ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தின் சொந்தத் தயாரிப்பு என்கின்ற காரணத்தினாலேயே அது வேறு எந்த ஊடகங்களுக்கும் வழங்கப் படவில்லை, கிடைக்கவுமில்லை. ஆகவே, குறித்த அறிக்கையை வெளியிடவில்லை என்று ஏனைய ஊடகங்களை குறை சொல்லுவதும் அர்த்தமற்ற ஒன்றாகும். 

அஸாத் சாலியின் கைதையும், முஸ்லிம்களின் பிரச்சினைகளையையும் மூலதனமாக வைத்து ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் சுய லாபம் தேட முற்பட்டுள்ளமை இந்த விடயத்தின் மூலம் தெளிவாகியுள்ளது .

இவ்வாறான போக்கு மேலும் தொடர்வது மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் கேடு விளைவிக்கும் ஒன்றாகும். ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தின் மேற்படி கீழ்த்தரமான செயல்பாடு,"எங்கே குண்டு வெடிக்கும்? எத்தனை பேர் மரணமடைவார்கள்? Breaking News போடலாம் அல்லது எங்கே அடுத்த பள்ளிவாசல் தாக்கப்படும் அதனை வைத்து செய்தி வெளியிட்டு மக்களை உசுப்பேற்றி நாட்டில் இனக்கலவரத்தைத் தூண்டலாம்" என்று காத்திருப்பதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை உண்மைப்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.

இத்தகைய மனநிலை பாதிப்பு மேலும் மோசமடைந்தால், இவர்களே குண்டை வைத்துவிட்டு Breaking News வெளியிடும் கீழ்த்தரமான நிலைக்கு இட்டுச் செல்லக் கூடும். மேற்படி கீழ்த்தரமான நடைமுறையைக் கைவிட்டு, நேர்மையாக செயல்படும்படி ஜப்னா முஸ்லிம் இணையத்தள நிர்வாகத்தினைரை பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றேன். 


இனாமுல்லாஹ்
கல்கிஸ்
(10.05.2011)

தேவைப்பட்டால் : அமீனா சாலிக்கு எழுதிய பகிரங்க மடல் கீழே இணைக்கப் படுகின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com