Contact us at: sooddram@gmail.com

 

ஆவணி  2012ாதப் பதிவுகள்

ஆவணி 31, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 9)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியவர்களில் மாறுபட்டு நிற்கின்றார் ராஜினி திரணகம. ஆனால் இவ்வாறு மாறுபட்டு நிற்பவர்களுக்கு புலிகள் என்ன செய்வார்கள் என்பதை மதிப்பீடு செய்வதில் தவறு விட்டுவிட்டார். பல்கலைக் கழக மனிதஉரிமை அமைப்பில் மிகவும் தீவிர தெளிவான செயற்பாட்டை கொண்டிருந்தவர் சிறீதரன் என்ற கணிதப் பேராசியர். இவரை 1970 களின் பிற்பகுதியில் யாழ்பல்கலைகழக கணிதவியல் விரிவுரையாளராக பணியாற்றிய போது கொம்சிறீ என்றே மாணவர்கள் அழைப்பார்கள். நானும் அதில் ஒருவன். காரணம் இவரிடம் நிலவிவந்த இடதுசாரி சிந்தனை செயற்பாடு பார்வைகள். விரிவுரையாளர் சிறீதரனிடம் இருந்த இந்த இடதுசாரிப் போக்கு ராஜினியிடம் இருந்திருக்கவில்லை. சமூக வர்க்க விடுதலையின் ஒரு அங்கமே பெண்விடுதலையாகும். தனித்தே பெண்ணிலைவாதம் பெண்விடுதலை என்பது சாத்தியமற்றது. அதுபோல் பெண் விடுதலையின்றி வர்க்க சமூக விடுதலை சாத்தியம் இல்லை முழுமைபெறவும் மாட்டாது. இதை போன்றதே மனித உரிமை செயற்பாடுகளும் ஆகும்.
(மேலும்....)

ஆவணி 31, 2012

சம்பந்தன் ஐயாவின் காலம்கடந்த ஞானம்   

(டென்சில - கனடா)

தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் திரிகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைக்; தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் 22 வருடங்களின் பின்னர் தன்னை மறந்து  சில கசப்பான உண்மைகளை இப்போது கூறியுள்ளார். வீரகேசரிப்பத்திரிகையில் அவரது பேச்சு இடம்பெற்று இருந்தது. சம்பந்தன் அவர்கள் என்ன கூறியிருக்கின்றார் என்றால் :   “2000ம் ஆண்டில் சந்திரிகா அரசியல் அமைப்பு திருத்தம் ஒன்றை முன் மொழிந்தார் அது அதிகாரதீர்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதில் அதிகாரப்பகிர்வு பச்சையாக சமஸ்டி என்று கூறாவிட்டாலும் இந்திய மாநில அதிகாரங்களை விட அதிகாரங்களைக்கொண்டதாக அது அமைந்திருந்தது. ஆனால் அதுவும் ஐக்கியதேசியக்கட்சியின் எதிர்ப்பால் தடைபட்டுப்போனது.”  (நன்றி வீரகேசரி ). (மேலும்....)

ஆவணி 31, 2012

சரவாக்கு மாநிலத் தமிழர்

(மறவன்புலவு  க. சச்சிதானந்தன்)

ஓராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சைவ சமயச் சின்னங்கள் குச்சிங்குவில் உள்ள சரவாக்கு அருங்காட்சியகத்தில் முன்பிருந்தன. பிள்ளையார் சிலை, நந்தியின் சிலை போன்றவை சரவாக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்பொருளாய்வாளருக்குக் கிடைத்தவை. தென்னிந்தியப் பயணிகள், அரசுகள் சரவாக்குக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வந்து சென்றதற்கான தொல் சான்றுகள் இவை. எனினும் அண்மைய தமிழர் வரவுகள் 1860களில் தொடங்குகின்றன. இலங்கையில் தேயிலைத் தோட்ட முகாமையில் பட்டறிவுபெற்ற அண்டர்சன் என்பாரை, சரவாக்கு அரசர் புறூக்கு 1860களில் வரவழைத்தார். தேயிலைத் தோட்டங்களை அண்டர்சன் அமைத்தார். 1860 தொடக்கம் தமிழர்  இங்கு கப்பலில் வந்தனர். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய இலங்கையின் மலைநாட்டில் இருந்தும் தமிழகத்திலிருந்தும் தொழிலாளர்களாக 2,000 தமிழர்களை ஆங்கிலேயர் குடியேற்றினர். கங்காணிகளாகக் கொச்சினில் இருந்து ஒரு சிலர் வந்தனர். (மேலும்....)

ஆவணி 31, 2012

அமெரிக்கா  ஒபாமாவின் மூர்க்கத்தனத்தின் வேர்  ஆவணப்படத்திற்கு அமோக வரவேற்பு

அமெரிக்க வாழ் இந்தி யர் ஒருவர் அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவை அழைத்துச் செல்லும் பாதை எப்படிப்பட்டது, எதிர் காலத்தில் அமெரிக்கா என் னவாகும் என்ற கேள்விக் கணைகளுடன் இந்த ஆவ ணப்படத்தை உருவாக்கியி ருக்கிறார். இந்த ஆவணப் படத்தை அமெரிக்காவில் வெளி யிட்ட போது, அந்நாட்டு மக்களிடம் அமோக வர வேற்பை பெற்றிருக்கிறது. இந்த ஆவணப்படம் திரை யிடப்பட்டதன் மூலம் இது வரை 93 கோடி டாலரை அள்ளி சாதனையும் புரிந்தி ருக்கிறது. (மேலும்....)

ஆவணி 31, 2012

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் - பல்கலைக்கழக ஆசிரியர்கள்

இன்று வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் தமது தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அது ஒரு கொள்கை மட்டத்திலான ஆவணம் மாத்திரமே எனவும் சம்மேளனத்தின் கோரிக்கைகளுக்கான உறுதயான தீர்வு இல்லை எனவும் சம்மேளனத்தின் பேச்சாளர் கலாநிதி மஹிம் மெண்டிஸ் இன்று கூறினார். கல்வியியலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட 8 தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் சம்மேளனத்திற்கு கிடைத்தது எனவும் இப்பெறுபேறு குறித்து, சம்மேளம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்தல், சம்பள பிரச்சினைகளை தீர்த்தல் உட்பட எமது முக்கிய கோரிக்கைகள் எவை தொடர்பாகவும் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. 2011 ஆம் ஆண்டின் இடைக்கால தீர்வின்படி எமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்" என அவர் கூறினார்.

ஆவணி 31, 2012

யாழ். மாநகரத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக 24மணிநேர சுழற்சிமுறை கழிவகற்றல் திட்டம்

யாழ். மாநகரத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக 24 மணிநேர சுழற்சி முறையிலான கமிவகற்றல் செயற்திட்டம் எதிர்வரும் செப்ரம்பர் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் சுகாதார குழுத் தலைவர் எஸ்.விஜயக்காந் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையில் 24 வட்டாரங்கள் இருக்கின்றன. இந்த வட்டாரங்களில் கழிவகற்றல் பணிக்காக 24 சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர எல்லைப் பகுதியில் தேங்கியுள்ள திண்மக் களிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், அரச மற்றும் அரச சர்பற்ற நிறுவனங்களின் கழிவகற்றல்களுக்காக மேலதிகமாக 50 சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். சந்தைகளில் கழிவுகள் தேக்கமடையாமல் இருப்பதற்காக உடனுக்குடன் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றது. கழிவு அகற்றல் செயற்பாடுகள் காரணமாக மாநகர சபைக்கு மாதம் 13 இலட்சம் வருமானம் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 31, 2012

எமது உறவுகள் எங்கே? வவுனியாவில் கண்ணீர்மல்கக் கோரிக்கை

சர்வதேச காணாமற் போனோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமற் போனோரின் உறவினர்களால் வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. எமது உறவுகள் எங்கே? அவர்களை மீட்டுத் தாருங்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆவணி 31, 2012

வெங்காய விவசாயிகளின் ஆர்ப்பாட்டம்

இறக்குமதி வரியை மேலும் அதிகரிப்பது பற்றி அமைச்சர் ஆராய்வு

நம்மிடம் வெங்காயத்தை கொள்வனவு செய்யாது அரசாங்கம் வர்த்தகர்களிடம் வெங்காயத்தைக் கொள்வனவு செய்வதிலேயே முனைப்பாக உள்ளதெனக்கூறி சீகிரிய பிரதேச பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் நேற்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாகப் பெரும் வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், வாகனங்கள் ஸ்தம்பித்ததன் காரணத்தால் சாதாரண மக்கள் மட்டுமன்றி உல்லாசப் பிரயாணிகளும் அசெளகரியங்களுக்கு உட்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் வீதியின் குறுக்கே வெங்காய மூடைகளைப் போட்டுத் தமது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். வெங்காய உற்பத்தி விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையிலேயே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் வெங்காயத்துக்கு கிலோவொன்றிற்கு ஐம்பது ரூபாவை இறக்குமதி வரியாக அரசாங்கம் அதிகரித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து தற்போது 65 ரூபாவுக்கு வெங்காயம் கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைக்கு உரிய தீர்வு காணவும், இறக்குமதி வரியை மேலும் அதிகரிப்பதா என்பது தொடர்பிலும் சம்பந்தப்பட்டோரிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 31, 2012

‘விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு உயர் விருதுகளை பெற்றுக் கொடுப்பேன்’

எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன்’ என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். ஜெயா டி.வி. 14 ஆம் ஆண்டு தொடக்க விழா மெல்லிசை மன்னர்கள் எம். எஸ். விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி ஆகியோருக்கான பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். எம். எஸ். விஸ்வநாதனுக்கு ‘திரை இசை சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தை வழங்கினார். அதையடுத்து எம். எஸ். விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் தலா 60 பொற் காசுகள் கொண்ட பொற்கிழியையும், ‘போர்டு பியஸ்டா’ காரையும் வழங்கி கெளரவித்தார். புகழுக்கும், பெருமைக்கும் உரிய எம். எஸ். விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு தேசிய விருது பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதிற்கு பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. ‘ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்’ என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம். எஸ். வி. கூறினாலும் நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்றார்.

ஆவணி 31, 2012

பரம்பரை நோய்களை தீர்க்க எளிய வழி

கருமுட்டைகளில் உட்கருவை மாற்றம் செய்வதன் மூலம், பரம்பரை நோய்கள் மற்றும் அரிய வகை நோய்களுக்கு முடிவு கட்டி விடலாம் என்று பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித குணங்களை நிர்ணயிக்கும் டி. என். ஏ.யின் ஒரு நுண்ணுறுப்பு, ‘மைட்டோகான்ட்ரியா’. இது மொச்சை வித்து வடிவில் அமைந்திருக்கும். இது தான், ஒரு செல்லுக்கு சக்தியை வழங்குகிறது. இதில் ஏற்படும் குறைபாடுகளே பரம்பரை நோய்கள் வரக் காரணம் என்று நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது. பிரிட்டனில் நடந்த ஆய்வுப்படி தாய் வழியில் வரும் பரம்பரை நோய்கள் 250 பேரில் ஒருவருக்கு மிகச் சிறிய அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. (மேலும்....)

ஆவணி 30, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 8)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

இந்திய அமைதிகாக்கும் படையுடனான தேன் நிலவு புலிகளுக்கு சீக்கிரத்தில் கசத்தது. இதற்கு முக்கிய காரணம் ஏனைய விடுதலை அமைப்புக்களின் செயற்பாடுகள் தமது ஏகபோகத்தை இல்லாமல் செய்துவிடும் என்பதினால். மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். தருணம் பார்த்து இருந்தனர் புலிகள் இவற்றிற்கு முற்றுப் பள்ளி வைக்க. கடலில் ஆயுதக் கப்பலுடன் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை இந்திய அமைதிப்படை நிறைவேற்றவில்லை என்ற கோதாவில் புலிகள் இந்திய அமைதிப்படையை வலிந்த யுத்தத்திற்குள் இழுத்தனர். இதனையே ஜேஆர் என்ற குள்ள நரி இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது எதிர்பார்த்து செயற்பட்டார். இதற்கு செயல்வடிவம் கொடுத்தார்கள் புலிகள்.
(மேலும்....)

ஆவணி 30, 2012

கிழக்கிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் மக்களின் அவமானச்சின்னம் இரா சம்பந்தன்.

திரு இரா சம்பந்தனால் அண்மைக்காலமாக அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகங்களின் நிகழ்வுகளும், நினைவுகளும்.

அண்மைக்காலமாக  தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே எனக்கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபியாக்கள் (பிரபாகரனின் தலைமையில் உருவான பயங்கரவாதிகளாவர்) தமிழ் மக்களின் வாக்குகளை காலத்திற்கு. காலம் ஐ.தே.கட்சியினருக்கு குத்தகைமுறையில் விலைபேசி விற்பனை செய்யும் நிகழ்வுகள் திரு சம்பந்தனின் தலைமையில் இடம்பெறுகின்றது. ஏற்கனவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளென தம்மை அறிமுகப்படுத்திய அரசியல்வாதிகள் எவராலும் மேற்கொள்ளப்படாத வாக்கு விற்பனை இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபியாக்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. (மேலும்....)

 

ஆவணி 30, 2012

அமெரிக்கப்படை நெருங்கிய போது ஒசாமா இறந்து இருந்தார் - தாக்குதலில் பங்கேற்ற அமெ. வீரர்

ஒசாமா பின்லாடனை அமெரிக்க நேவி சீல்ட் கடற்படை வீரர்கள் நெருங்கிய போது அவர் நிராயுதபாணியாக ஏற்கனவே இறந்து கிடந்ததாக அந்த இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க வீரர் ஒருவர் எழுதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் அபோதாபாத் தாக்குதலின் போது அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையிலே இந்த புதிய விபரம் அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் இடம்பெற்ற ஒசாமா பின்லாடன் தாக்குதலில் பங்கேற்ற அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் அது குறித்த விபரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நோ ஈசி டே’ என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்த புத்தகத்தில் மேற்படி கடற்படை வீரர் தமது உண்மையான பெயரை வெளியிடாமல் ‘மார்க் ஒன்’ என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார். (மேலும்....)

ஆவணி 30, 2012

வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் விரும்பவில்லை

டக்கு, கிழக்கு இணைப்பை வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை என்பதை சர்வதேச சமூகத்துக்கு இந்த மாகாண சபைத் தேர்தல் மூலம் மக்கள் உறுதிப்படுத்த வேண்டுமென அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை. எம். எஸ். ஹமீட் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் தமது கட்சியைப் பாதுகாக்கவும் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதை நிறுத்தவும் வாக்களிக்குமாறு கேட்கின்றனர். அவ்வாறு பள்ளிவாசல்கள் பாதுகாக்கப்படுவதில் அவர்களுக்கு அக்கறையிருந்தால் அமைச்சரவையில் பாராளுமன்றத்தில் அதுபற்றி பேச வேண்டுமே தவிர மக்கள் முன் பேசுவதில் பயனென்ன? ஜெனீவா உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகள் பல்வேறு தளங்களில் பேசப்பட்டபோதும் இங்கு முஸ்லிம் மக்களும் உள்ளார்கள் என்பது எங்கும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. இதுபற்றி மு. காங்கிரஸ் எந்த அக்கறையும் இல்லை. கிழக்கில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்திருந்தால் மாகாண சபையில் சுமார் 17 ஆசனங்களைப் பெற்று நாம் பலமான ஆட்சியமைத்திருக்கலாம். இரு கட்சிகள் இதற்கு இணக்கப்பட்ட போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறிவர மறுத்துவிட்டது.

ஆவணி 30, 2012

கண்ணீர் அஞ்சலி

வைத்திலிங்கம் – நவரெத்தினராஜா (தோழர் ராஜன்)

தோற்றம்-19.12.1968 – மறைவு-27.08.2012

யாழ்ப்பாணம், சிறுபிட்டியை பிறப்பிடமாக் கொண்ட தோழர்ராஜன்  இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் இலங்கையின் வடக்கு-கிழக்கில் தனக்கும், தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அற்ற நிலைமையும், உயிர் அச்சுறுத்தலும் ஏற்பட்டதை உணர்ந்து பாதுகாப்பு தேடி தமிழம் வந்து புழல் அகதிகள் முகாமில் வாழந்து வந்தார்.  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் பகுதிகளில் கட்சி பணியாற்றியுள்ளார். சாதிய அடக்குமுறைக்கும்,அரச அடக்குமுறைக்கும்,புலிகளின் அடக்குமுறைக்கும்  எதிராக தனது பங்களிப்பை செய்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட அடக்குமுறைகளால் உலகம் பூராகவும் பரவிக்கிடக்கும் நம்சொந்தங்களிடம் உள்ள பரதவிப்பு,ஏக்கம் தோழர்ராஜனிடமும் இருந்ததை அவருடன் பேசும் போது உணரமுடியும், அவரிடம் ஒரு வீறாப்பு பேச்சு எப்போதும் காணப்படும். அது நம் சமூகத்தின் மேல் உள்ள கோபம்,அக்கறை என்றே நாம் உணரக் கூடியதாக இருக்கும்.அவர் எப்போதும் கலகலப்பாக இருப்பார் எந்த விடயத்ததைப்பற்றி பேசினாலும் அவரிடம் ஒரு தெளிவு காணப்பட்டது. நாம் பிறந்த இடத்தில் சொந்த பந்தங்களுடன் சேர்ந்து வாழ முடியாதது எமக்கு என்னதான் தலையெழுத்தோ, இறப்பில் கூட அந்தசந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்துடன் அவர் பிரிவால் துயருறும் அவர் மனைவி,பிள்ளைகளுக்கு நாம் ஆறுதல் கூறுவதுடன் அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்

ஆவணி 30, 2012

சிறைகளிலுள்ள புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் பணி ஆரம்பம்

சிறைச்சாலைகளில் இருக்கும் எல்.ரீ.ரீ.ஈ. சந்தேகநபர்கள் 74 பேர் முதற்கட்டமாக புனர் வாழ்வளிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்று தெரிவித்தார். சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, அவர்களை புனர்வாழ்வளிப்பதன் மூலம் விடுதலை செய்யவென முன்னெடுக்கப்பட்ட திட்டத்தினடிப்படையிலேயே முதற்கட்டமாக 74 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதன்படி நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலுமிருந்த 48 தமிழ் சிறைக்கைதிகள் தமது வழக்குகளின் முடிவினடிப்படையில் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புரையின் பேரில் தமிழ் சிறைக் கைதிகள் 26 பேர் எவ்வித வழக்குகளுமின்றிய நிலையில் நேரடியாக புனர்வாழ்வு நிலையத்திற்கு மாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் அமைச்சர் கஜதீர குறிப்பிட்டார்.

ஆவணி 30, 2012

ஒரு இலட்சம் தொன் அரிசி துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி

ஒரு இலட்சம் தொன் அரிசியை துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதுவரை 500 கொள்கலன்களில் அரிசி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாகவே இந்தளவு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மேலும் பல நாடுகள் இலங்கையில் இருந்து அரிசியை கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், 2 மாதத்தினுள் 4 ஆயிரம் கொள்கலன்களில் அரிசி அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், அரிசி ஆலைகளில் போதுமான நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில் துரிதமாக அவற்றை வழங்க முடியவில்லை. இதனால் அரிசி ஆலைகள் நவீன தொழில் நுட்பங்களுடன் முன்னேற்றப்பட்டுள்ளன.

ஆவணி 30, 2012

இனவாத பிரசாரத்தை ஹக்கீம் நிறுத்தினால் முஸ்லிம்களுக்கு பெரும் நன்மை

கிழக்கில் முஸ்லிம் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக தன்னு டைய இனவாத, வகுப்புவாத பிரசாரத்தை நிறுத்தினால் அது முஸ்லிம் சமூகத்துக்கு பெருமளவு நன்மையைப் பெற்றுக்கொடுக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், நாவற்குழி, அலீம் நகர், புல்மோட்டை, இறால்குழி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டங்களில் உரையாற்றும் போது வலியுறுத்தினார். முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நல்வாழ்வை கருத்திற்கொண்டு முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை சமூகத்துடனும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுடனும் நல்லெண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். முஸ்லிம்களின் 75 சதவீதமானோர் தென் இலங்கையிலும் 25 சதவீதத்தினரே வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. கிழக்கில் இன்று மேற்கொள்ளப்படும் இனவாத பிரசாரங்கள் தென் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆவணி 30, 2012

மும்பை தாக்குதல் குற்றவாளி

அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை

மும்பை தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோரை கொல்ல காரணமாக இருந்த பயங்கரவாதிகளில் ஒருவரான அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து இந்திய உச்சநீதிமன்றம் நேற்று இறுதி முடிவு செய்தது. கசாப் நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரான போர் செய்துள்ளான் என்பது நிரூபணமாகிறது. இதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. இவனை தூக்கில் விடுவதை தவிர வேறு வழி எதுவும் இல்லை என்று நேற்றைய தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மும்பை பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக இந்தியா சார்பில் தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில் மும்பை பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மும்பை பயங்கரவாத தாக்குதலில் களமிறங்கிய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்துள்ளது தகுந்த ஆதாரங்களின் மூலம் புலனாகி உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆவணி 30, 2012

ஆஸி. புகலிடக் கோரிக்கையாளர் படகிலிருந்து அபாய அழைப்பு

புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா சென்ற படகு இந்தோனேஷிய கடற்பகுதியில் மூழ்கியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட இந்தோனேஷியா ஒருசில மணி நேரங்களில் அதனை நிறுத்திக்கொண்டது. இந்தோனேஷியாவின் சுண்டா ஜலசந்தி பகுதியில் அந்தப் படகு குறித்த எந்த விபரமும் கண்டுபிடிக்க முடியாத நிலையிலேயே மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்திரா கடற்பகுதியில் 150 பேருடன் வந்த சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று மூழ்குவதாக அபாய அழைப்பு வந்ததாக அவுஸ்திரேலிய கடற்பாதுகாப்பு நிர்வாகத்தின் மூலம் இந்தோனேஷிய மீட்புப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தோனேஷிய ஹெலிகொப்டர்கள் மற்றும் மீட்பு படகுகளைக் குறித்த பகுதிக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அங்கு எந்தப் படகையும் காணாததால் மீட்பு நடவடிக்கைகளை ஒரு சில மணி நேரத்தில் இந்தோனேஷியா நிறுத்திக்கொண்டது. அபாயகரமான படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிச் செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிவருகின்றனர். இவ்வாறு இந்த ஆண்டில் மாத்திரம் 300 பேர் கடலில் மூழ்கிக் கொல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

ஆவணி 30, 2012

பிளாஸ்டிக்கில் இருந்து கண்ணாடிக்கு மாறுவோம்!

கொஞ்சக் காலம் முன்பு வரை கண்ணாடிப் போத்தல்களின் உபயோகம் அதிகமாக இருந்து வந்தது. மருந்து, பானம், தேன், ஊறுகாய் போன்றவை கண்ணாடி போத்தல்களில் சேமிக்கப்பட்டு வந்தன. இன்றோ நிலைமை தலைகீழாகிவிட்டது. பிளாஸ்டிக் போத்தல்களுக்கு வழிவிட்ட நாம் நோய் நொடிகளுக்கும் வழி திறந்துவிட்டிருக்கிறோம். கைதவறி விழுந்தால் கண்ணாடி உடைந்துவிடும் என்று அச்சப்பட்டது ஒரு காலம். தற்காலத்தில் உடையாத கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. எளிதில் உடையாத இத்தகைய கண்ணாடிகள் விமானங்களிலும், கார், பஸ் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.(மேலும்....)

ஆவணி 29, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 7)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

1986 களில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக புறப்பட்ட ஒவ்வொரு விடுதலை அமைப்புக்களை இந்தியாவின் கை கூலி எம்மை அழிக்க தீர்மானித்து இருந்தனர். தாமே தமது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டு ஒதுங்கிவிட்டனர் எம்முடன் கலந்து விட்டனர் என்று கூறி துப்பாக்கிகளால் வட கிழக்கில் செயற்படவிடாது தடுத்த போது எந்த புத்திஜீவிக் கூட்டமும் இந்த புலிகளின் ஏகபோக பாசிச செயற்பாட்டிற்கு எதிராக வீதியில் இறங்கவில்லை போராடவில்லை. கொலைகளை தடுத்து நிறுத்தவில்லை. இன்னொருவகையில் மௌனம் காத்து தவறுகளுக்கு வழிவிட்டு நின்றனர். சிலர் குளிர்பானம் பரிமாறி மகிழ்ந்தனர். சிலர் வாய்புக்களைப் பயன்படுத்தி பிரமுகர் ஆகினர். இவர்கள் அன்று யோசிக்கவில்லை இந்த ஆயுத ஏகபோகம் ஒரு முள்ளிவாய்கால் முடிவுகளை இறுதியில் கொண்டு வந்து நிறுத்தும் என்று. (மேலும்....)

ஆவணி 29, 2012

வல்லரசுகளுக்கிடையேயான போட்டியின் பகடையாக த.தே.கூ மாறிவிடும் அபாயம் -  ஹக்கீம்

'தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலே அரசியல் ரீதியான இணக்கப்பாடு என்பது எட்டப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம்தான் நிரந்தரமானதொரு தீர்வு சாத்தியமாகும். சர்வதேசம் அனைத்தினையும் வென்று தந்துவிடுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கொண்டிருக்கின்றது. ஆனால், வல்லரசுகளுக்கிடையிலான போட்டியின் பகடையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறிவிடும் அபாயம் உள்ளது. மு.காங்கிரஸ் சர்வதேசத்தினையும் நம்பவில்லை. இங்குள்ள ஆட்சியாளர்களையும் நம்பவில்லை. எங்களுடைய மக்களையே நாம் நம்புகின்றோம்' என்று மு.கா. தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். (மேலும்....)

ஆவணி 29, 2012

தாக்குதலுக்குள்ளான தமிழ் அரசியல் கைதி சதீஸின் நிலை கவலைக்கிடம்

தாக்குதலுக்குள்ளாகி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சுந்தரம் சதீஸ் என்ற அரசியல் கைதி நேற்றிரவு அவசரமாக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்...“தீவிரமான தாக்குதலுக்குள்ளான சதீஸ் - கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது நிலைமை மோசமடைந்திருப்பதால் அவசரமாக கொழும்புக்கு நேற்றிரவு அழைத்துவரப்பட்டிருக்கிறார். சதீஸின் இடதுபக்கம் பரலைஸ் நிலையில் காணப்படுவதாகவும் தாக்குதலில் நரம்பு பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாகவும் அவரது மனைவி கவிதா எம்மிடம் தெரிவித்தார். மிலேச்சத்தனமாக இத்தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம்” என்று மனோ கணேசன் கூறினார்.

ஆவணி 29, 2012

'காணாமல் போகும்' தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

இலங்கையிலும், இனப்பிரச்சினை, இனப்போராக மாறியிராவிட்டாலும், இந்த நிலைமையே தொடர்ந்திருக்கும். அதாவது, அதிக கல்வியறிவு மூலம் சிறந்த வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருந்திருக்குமே தவிர குறைந்திருக்காது. இதனை இனப்பிரச்சினையோடு சேர்ந்து இணைத்துப் பார்த்தால் தவறான முடிவுகளே கிடைக்கும். ஏன், இனப்போர் முடிந்த காலகட்டத்தில், அதனை இன்னமும் காரணம் காட்டி, ஓட்டை உடைசல் படகுகளிலும் வாரம் தோறும் வெளிநாடு செல்ல முயலும் நூற்றுக் கணக்கான தமிழர்கள் பொருளாதார முன்னேற்றம் கருதி மட்டுமே அவ்வாறான முயற்சிகளில் தங்களது உடமைகளையும் உயிரையும் பயணம் வைத்து செல்கிறார்கள்? இலங்கை என்று அல்ல, இந்தியாவில் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களையும் இந்த மோகம் கொல்வது வருந்த தக்கது. இது குறித்து தமிழ் சமூக-அரசியல் தலைமைகள் வாளாவிருப்பது, தமிழ் சமூகத்தின் சுய கௌரவத்தை பாதிக்கவில்லையா, என்ன? (மேலும்....)

ஆவணி 29, 2012

வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய 31500 பேர் வடக்குக்கு விஜயம்

இவ்வருட ஓகஸ்ட் மாதம் வரையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட 31500 வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர். 2011 ஜூலை மாதத்துக்கு பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 51 400 கடவுச் சீட்டுகளை வைத்திருப்போர் இலங்கை விஜயத்தை மேற்கொண்டபோது யாழ்ப்பாணத்துக்கும் சென்று வந்துள்ளனர். அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாவர். இவர்கள் தமது பரம்பரையினரின் வீடுகளையும் சொத்துக்களையும் நெருங்கிய உறவினரையும் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர். சேர் ஜோன் கொத்தலாவலை இராணுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய பாதுகாப்பு செயலர் ராஜபக்ஷ இத்தகவலை வெளியிட்டார்.

ஆவணி 29, 2012

வெனிசுலா எண்ணெய் ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாவேஸ் நேரில் ஆறுதல்

வெனிசுலாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத் தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிக ரித்துள்ளது. மேலும் திங்க ளன்று மூன்றாவது எண் ணெய் டேங்கிற்கு தீ பரவி யதில் மீண்டும் அந்த எண் ணெய் டேங்க் வெடித்து சித றியது. உலகில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாக வெனிசுலா பாரரகுவானான பகுதியில் உள்ள அமுவெ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் ஒன்று. இங்கு நாளொன்றுக்கு 9 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நடைபெறும். இதன் மூலம் சுமார் 2 லட் சம் பேரல் பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்பட்டு வரு கிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த சனிக் கிழமை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் இந்த ஆலை வெடித்து சிதறியது. இதில் உடனடியாக 24 பேர் பலி யாகினர். 50க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச் சை பெற்று வந்தனர். இந் நிலையில் இந்த விபத்திற் கான காரணம் என்ன வென்று இதுவரை தெளி வாக தெரியவில்லை. மேலும் இந்த விபத்து வாயு கசிவால் ஏற்பட்டிருக்க லாம் என கருதப்படுகிறது.  (மேலும்....)

ஆவணி 29, 2012

பெருச்சாளிகளின் ராஜ்யம்

சென்னையில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பெருச்சாளி கடித்து இறந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. குறைவான எடையுடன் (2.2 கிலோ) பிறந்த குழந்தையை மருத்துவமனையில் பாதுகாப்பாக இன்குபேட்டரில் வைத்து, பராமரித்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாது காப்பான இத்தகைய அறைகளிலும் கூட பெருச்சாளி போன்ற ஜந்துக்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றன என்பது தமிழக அரசின் சுகாதாரத்துறையின் லட்சணத்தை பளிச் சென்று பறைசாற்றுகிறது. திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மகப் பேறு மருத்துவமனையில் நடந்துள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவத்துறை வட்டாரம் தன்னைத் தற்காத்துக்கொள்ள விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. (மேலும்....)

ஆவணி 29, 2012

ஆசியாவிலேயே அதிவேகமான கடலுக்குக் கீழான தரவுப் பரிமாற்ற இணைப்பு

ஆசியாவிலேயே அதிவேகமாக தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உதவும் புதிய அதிவேக கடலுக்குக் கீழான இணைப்பு திறந்து வைக்கப்படவுள்ளது. 7800 கிலோ மீற்றர் நீளமான இந்தக் கடலுக்குக் கீழான இணைப்பானது ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை இணைக்கிறது. இந்த இணைப்பின் மூலம் தரவுகள் செக்கனுக்கு 40 ஜிகாபைட்ஸ் வேகத்தில் பரிமாற்றப்படுகிறது. இது சிங்கப்பூருக்கும் டோக்கியோவுக்குமிடையிலான எந்தவொரு இணைப்பை விடவும் 3 மில்லி செக்கன்கள் வேகமானதாகும்.  கணனிகளால் வியாபாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தரவுப் பரிமாற்றம் மூலம் ஒரு செக்கனிலும் குறைந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான தரவுப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. வங்கிகளுக்கிடையிலான கடும் போட்டி காரணமாக தரவுப் பரிமாற்றத்தில் ஏற்படும் ஒரு செக்கன் தாமதமானது அவற்றின் இலாபத்தின் அளவைப் பாதிப்பனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி 29, 2012

நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகளை அமுல்படுத்த திறைசேரி நிதி ஒதுக்கீடு

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற் திட்டத்திற்கு தேவையான நிதி வளங்களை திறைசேரி வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையை சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தத் தகவலை வழங்கினார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பல்வேறு சிபார்சுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்கவிருக்கும் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச அதிகார சபைகளின் செலவுகளை ஈடுசெய்வதற்காகவே இந்நிதி ஒதுக்கப்படுகின்றது. சமீபத்தில் பலதரப்பட்ட அதிமுக்கிய வெளிநாட்டு விஜயங் களை மேற்கொண்ட அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அரசாங்கம் வட மாகாணத்திற்கு எவரையும் சென்று பார்ப்பதற்கு இடமளித்திருக்கிறதென்றும் இதனால் நாடு பலதரப்பட்ட நன்மைகளை அடைந்திருக்கி ன்றது என்றும் கூறினார்.

ஆவணி 29, 2012

சகல விவசாய நிலங்களும் காப்புறுதி, வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பம்

நாட்டின் விவசாயக் கைத்தொழில் துறை மீது அபரிமித எதிர்பார்ப்பை கொண்ட அரசு எம்முடையதே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதனடிப்படையில் தான் விவசாயிகளுக்கு பலவிதமான சலுகைகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்ப தாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். விவசாய மக்களின் நலன்களுக்காக சகல விவசாய நிலங்களையும் காப்புறுதி செய்யும் வேலை திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். வரட்சியை என்னால் நிறுத்த முடியாது. என்றாலும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தயார். நாட்டின் விவசாய மக்களுக்காக பெற்றுக் கொடுக்க கூடிய சகல நிவாரணத்தையும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

ஆவணி 29, 2012

இலங்கை இராணுவத்தினருக்கு தொடர்ந்தும் பயிற்சி அளிக்கப்படும் - இந்தியா

இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது தொடர்ந்து நடைபெறும் என மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பல்லம் ராஜூ கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் தாம்பரத்தில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இது குறித்து அறிந்ததும் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற இலங்கை விமானப்படை வீரர்கள், 9 பேர் அங்கிருந்து பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை நிலை யத்துக்கு மாற்றப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை இராணுவ வீரர்களுக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து முதல்வர் ஜெ. பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.ஆனால், அவர்கள் இருவரும் கடந்த மே 19ம் திகதி முதல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். அதாவது, மே மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி குறித்த உண்மைகள், என் தலைமையிலான அரசுக்கு தெரிவிக் காமலேயே மறைக்கப்பட்டுள்ளது. இச்செயல், மத்திய அரசு அற்பத்தனமாக செயல்பட்டு வருவதையே காட்டுகிறது என கூறியிருந்தார்.

ஆவணி 28, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 6)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

புலி உறுப்பினர் ஒருவர் புலிகளுடன் தீவிரமான செயற்பாட்டில் உள்ளார் என்பதை அறிவது மிகவும் சுலபம். மிக நீண்ட கால நட்பில் இருந்த ஒருவர் மாற்று ஈழவிடுதலை அமைப்பில் இருந்தார் என்றால் அவருடனாக உறவை மறுப்பர். மேலும் தவிர்க்க முடியாமல் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு எற்படும் போது முகத்தை வேறுபக்கம் திருப்பி வெறுப்பைக்காட்டும் செயற்பாட்டை கொண்டிருப்பர் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர். இதனை இலண்டனில் ஈழவிடுதலை அமைப்பு மாற்று இயக்க உறுப்பினரும் இவரின் பல்கலைக் கழக சாகாவிடமே காட்டி இருக்கின்றார் என்றார் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த அளவிற்கு புலிகளுடன் உறவில் ராஜினியின் தீவிரம் காட்டியிருந்தார். ஆனால் ராஜினி வெறுமனவே தலைமைக்கு தலையாட்டும் பொம்மையாக இருக்காது கேள்வி கேட்கும் செயற்பாட்டாளராக இருந்தார் என்பது இங்கு முக்கிய விடயம். (மேலும்....)

ஆவணி 28, 2012

முன்னாள் மேயர் சுட்டுக்கொல்லப்படும் போது நான் மௌனமாக இருந்தேன - டக்ளஸ்

முன்னாள் மேயர் சுட்டுக்கொல்லப்படும்போது நான் மௌனமாக இருந்தேன்.அவருடைய நினைவு நாள் இன்று. அவருடைய குடும்பத்தினரை மதிக்கின்றேன். பண்ணை சுற்றுவட்டாரத்தில் இச் சிலையை அமைப்பதற்கும் அங்கு பூங்காவை நிர்மாணிப்பதற்குமான நிதியுதவியை யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பா நினைவாக அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு ௭னது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் ௭ன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; கடந்த காலத்தில் அல்பிரட் துரையப்பா ௭வ்வாறு செயற்பட்டாரோ நாமும் அவ்வாறே செயற்படல்வேண்டும். நாம் இன்று அவரைக் கௌரவிக்கின்றோம். கீரைக் கடைக்கும் ஓர் ௭திர்கக்கடை வேண்டும். ஓர் ஆளுங்கட்சிக்கு ஓர் ௭திர்க்கட்சி இருத்தல் வேண்டும். அப்போது தான் ஆட்சி சிறப்பாக நடைபெறும். கோம்பயன் மயானத்திற்கு வடமாகாண ஆளுநர் ரூ.10 இலட்சம் நிதி ஒ துக்கியுள்ளார். கூடிய விரைவில் இந்த செயற்றிட்டம் நடைபெறும். இவை முன்னேற்றத்தை நோக்கியதாகவே இருக்கும். இன்றைய செயற்பாடுகள் நாளை நல்லதாகவே அமைய வேண்டும் ௭னவும் தெரிவித்தார்.

ஆவணி 28, 2012

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் -  வேதநாயகன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் பேர் இதுவரை மீளக்குடியேற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ௭ன். வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் அரச அதிபர் மேலும் கூறுகையில்– முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம், கடற்றொழில், விவசாயம் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன அபிவிருத்திப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக மீள்குடியேறியவர்கள் வசிப்பதற்கு வசிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடமைப்புத் திட்டப் பணிகளு ம் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட ஏனைய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளும் அபிவிருத்தி கண்டுள்ளன.

ஆவணி 28, 2012

இடதுசாரிகள் கூட்டத்தில்   உரையாற்றிய அசாஞ்சே

பிரான்சில் இடதுசாரிக் கட்சிகள் நடத்திய கூட்டத்தில் விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உரையாற்றினார். பிரான்சில் கிரிநோபிள் அருகே செயிண்ட் மார்ட்டின் டி ஹெரெஸ் பகுதியில் இடதுசாரியினர் சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது தொலைபேசி வழியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :- பிரான்ஸ் எனக்கு எப்போதும் முக்கியமான நாடாகவே இருந்திருக்கிறது. என்னை பொறுத்தவரையில் நான் ஈக்குவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருப்பதற்கு காரணம், என்னை பிரிட்டன் அரசு சுவீடனிடம் ஒப் படைத்தால் நான் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப் படுவேன். அப்படி ஒப்படைக்கும் போது ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக எனக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதிக்கும். ஆகவேதான் நான் ஈகுவடாரில் தஞ்சம் புக இருக்கிறேன். சுவீடன் அரசு என்னை அமெரிக்காவிடம் ஒப்ப டைக்க மாட்டோம் என்று உறுதியளித்தால் நான் அந் நாட்டில் என்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் ஆஜராவதில் எவ்வித தயக்கமும் இல்லை என்று கூறினார். அப்போது இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான ஜான்லுக்மெலென்கோன், பிரான்ஸ் நாட்டு அரசு அசாஞ்சேவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த கருத்திற்கு பிரான்ஸ் பத்திரிகைகள் பலவும் ஆதவு தெரிவித்திருக்கின்றன.

ஆவணி 28, 2012

மகேஸ்வரன் எம்.பி. கொலை வழக்கில் பிரதான எதிரிக்கு மரண தண்டனை

முன்னாள் அமைச்சர் ரீ. மகேஸ்வரனை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பான வழக்கின் பிரதான எதிரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2008 ஜனவரி முதலாம் திகதி காலை கொட் டாஞ்சேனை சிவன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொள்வதற்காகச் சென்ற முன்னாள் அமைச்சர் ரி. மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் அமைச்சரையும் சந்திரகுமார் மஹிந்தன் என்பவரையும் சுட்டுக் கொலை செய்தது தொடர்பில் ஜோன் பொலின் வெலண்டின் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். சந்திரகுமாரை சுட்டுக்கொன்றது தொடர் பில் போதிய ஆதாரங்கள் முன்வைக்கப் படாததால் மேற்படி குற்றச்சாட்டில் இருந்து சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார். ரீ. மகேஸ்வரனை சுட்டுக்கொலை செய்தது தொடர்பில் சந்தேக நபர் குற்ற வாளியென நிருபணமாகியுள்ளதாக நீதி பதி அறிவித்தார். குற்றவாளியை ஜனாதிபதி தீர்மானிக்கும் தினமொன்றில் குறித்த நேரத்தில் வெலிக்கடை சிறைச்சாலையினுள் மூச்சு அடங்கும் வரை தூக்கிலிடுமாறு தொங்க வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஆவணி 28, 2012

மனித உரிமை மீறல் -மறுசிந்தனை தேவை

(தே.லட்சுமணன்)

இக்வாஜா யூனூஸ் என்ற இஸ் லாமிய இளைஞன், ஒரு கம்ப்யூட்டர் இன் ஜினியர். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந் தவன். ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது காட்கோபார் குண்டு வெடிப்பில் குற்றவாளியாகக் கருதப்பட்டு சிறைபிடிக் கப்பட்டவன். 27 வயதான அந்த இளை ஞன் ஆயிஷா பேகம் என்ற தாய்க்கு ஒரே மகன். குண்டு வெடிப்பு குற்றவாளியாக மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், வேதனை யோடு மனம் வெந்துக்கொண்டிருந்த தாய்க்கு மேலும் வேறொரு இடி. அதாவது சிறைபிடிக்கப்பட்ட சில நாட்களில் போலீஸ் காவலிலிருந்து அவன் தப்பி விட்டதாகவும், அவனை மீண்டும் கைது செய்ய போலீஸ் தீவிரமாக தேடுவதாகவும் தகவல். இந்தத் தகவல் தாய்க்குப் பிடிபடவில்லை. சந்தேகம் வலுத்தது. இது போலீஸ் பரப்பும் பொய்ச்செய்தி, ஏதோ என் மகனுக்கு போலீசாரால் அநீதி நடந்திருக்க வேண்டும் எனத் தாய் உறுதி யாக நம்பினார். தாயின் விடாமுயற்சியால் புகார் பட்டியல், நீதிமன்றம், விசாரணை என விஷயம் சூடுபிடித்துவிட்டது. “மிகிர் தேசாய்” எனும் வழக்குரைஞர் அந்தத் தாயின் வேகத்துக்கு ஒத்துழைத்து மிகவும் சிரமப்பட்டு வழக்குக்கும், விசாரணைக் கும் உதவினார்.  (மேலும்....)

ஆவணி 28, 2012

இரு படகுகளில் அவுஸ்திரேலியா சென்ற 72 பேர் திருமலை கடலில் வழிமறிப்பு

சட்டவிரோதமாக ஆழ்கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 72 பேரை இரண்டு வள்ளங்களுடன் கடற்படையினர் திருமலை கடலில் கைது செய்துள்ளனர். ‘ரஷித் புத்தா’ என்ற வள்ளத்தில் 12 முஸ்லிம்களும் இரண்டு பெண்களுடன் 12 தமிழர்களும் பயணித்துள்ளனர். சதேவ் புத்தா - 1 என்ற வள்ளத்தில் இரண்டு குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 52 பேர் பயணித்துள்ளனர். இரண்டு வள்ளங்களும் திருகோணமலை மற்றும் மணற்காடு பகுதியில் இடைமறிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மூதூர், அம்பாறை, மட்டக்களப்பு, கிண்ணியா, மருதன்கேணி, சாவகச்சேரி, மற்றும் பருத்தித்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய் யப்பட்டுள்ளனர். திருகோணமலை கடற்படை முகாமுக்கு ஒரு வள்ளமும், காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு மற்றைய வள்ளமும் கொண்டுவரப்பட்டு ஆரம்ப விசாரணைகளின் பின்னர் இரகசிய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

ஆவணி 28, 2012

அமெரிக்க ஆயுத விற்பனை 2011 இல் பல மடங்காக அதிகரிப்பு

உலக சந்தையில் 78 வீதமான ஆயுதங்கள் அமெரிக்காவிடம்

அமெரிக்காவின் ஆயுத விற்பனை 2011 ஆம் ஆண்டில் மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலக ஆயுத சந்தைக்கு அமெரிக்கா அதிக ஆயுத விற்பனை செய்த ஆண்டாகக் கடந்த ஆண்டு பதிவானது. அமெரிக்க ஆயுத விற்பனை தொடர்பில் அந்நாட்டு கொங்கிரஸ் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி அமெரிக்கா கடந்த ஆண்டில் 66.3 பில்லியன் டொலருக்கு ஆயுதம் விற்றுள்ளது. இது அமெரிக்கா 2010 இல் விற்ற ஆயுதங்களின் பெறுமதியை ஒப்பிடும் போது மும்மடங்காகும். 2010 இல் அமெரிக்கா 21.4 பில்லியன் டொலருக்கு உலகுக்கு ஆயுதங்களை விற்றுள்ளது. அதேபோன்று அமெரிக்கா அதிக ஆயுதம் விற்ற ஆண்டு கடந்த ஆண்டுதான். முன்னர் 2009 ஆம் ஆண்டில் 31 பில்லியன் டொலருக்கு ஆயுதங்களை விற்றதே அதிகமாக இருந்தது. இதில் 2011 ஆம் ஆண்டில் உலக ஆயுத சந்தையில் முக்கால் பங்கிற்கும் அதிகமான ஆயுதங்களை விற்ற நாடும் அமெரிக்கா என கொங்கிரஸ் சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக அண்மைய ஆண்டுகளாக சர்வதேச ஆயுத விற்பனையில் பாதிப்பு செலுத்தியுள்ளது. ஆனால் ஈரான் தொடர்பாக பெர்சிய வளைகுடா நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலை ஆயுத விற்பனை அதிகரிக்க காரணமாகியுள்ளது.

ஆவணி 28, 2012

ஞாபக மறதியை ஒழிக்க இலகுவழி பயிற்சிகள்

பலரையும் பாதிக்கும் பிரச்சினை ஞாபக மறதி. சரியான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நேரத்தைத்திட்டமிடாமை. காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் பதற்றத்துடன் செய்வதால் மனம் நிம்மதியற்றுப் போகிறது. இந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகின்றன. நேரத்தை திட்டமிடுவதன் மூலம் பதற்றத்தில் இருந்து விடுபட முடியும். மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக மாற்றலாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்குக் கொண்டு வர முடியும். மறதிக்கு இன்னொரு முக்கிய காரணம் கவனச்சிதறல், இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில் பதியாமல் போகின்றன. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்வது மற்றும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாகக் கைவிட வேண்டும். (மேலும்....)

ஆவணி 28, 2012

பக்கவாதத்தை தடுக்க தினமும் மூன்று வாழைப்பழங்கள்

நாளொன்றுக்கு மூன்று வாழைப் பழங்கள் சாப்பிடுவதால் பக்க வாதம் ஏற்படும் ஆபத்து குறைகிறது என்று பிரிட்டிஷ் மற்றும் இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித் துள்ளனர். காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு மூன்று வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான பொட்டாசி யத்தை வழங்கி அதன் மூலம் மூளையில் இரத்தக் கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர். இந்த ஆய்வாளர்கள். எனவே வாழைப்பழம் உள்ளிட்ட பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப்பொருட்களான பசளிக் கீரை, பால், மீன், உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் பக்கவாதத்திலிருந்து தப்பிக்கலாம் என்றே கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள். வாழைப்பழங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று இதற்கு முந்திய ஆய்வுகள் தெரிவித் துள்ள நிலையில் தற்போது இந்த ஆய்வு முடிவுகள் மேலும் வாழைப் பழ உபயோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆவணி 27, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 5)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

ராஜினியின் மூத்த சகோதரி நிர்மலாவும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட யாழ் பல்கலைக் கழக கலைப்பீட விரிவுரையாளர் நித்தியானந்தன் என்பவரும் அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர மறைமுக? செயற்பாட்டாளர்களாக இருந்தனர். இலங்கை பொலிஸாரால் காயம் ஏற்பட்டிருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் சீலன். பாதுகாப்பு காரணங்களுக்காக சீலனுக்கு வைத்திய சாலைக்கு வெளியில் இரகசிய முறையில் சிகிச்சை அழித்தல் என்ற நிகழ்வில் வற்புறுத்தலுக்கு இணங்க செயற்பட வைத்ததன் மூலம் புலிகளுடனான ஒரு தொடர்பு வலைக்குள் உள்வாங்கப்பட்டார் ராஜினி. இதன் மூலம் ராஜினி அவரின் சகோதரி நிர்மலா நித்தியானந்தனால் புலிகளிடம் ஒரு சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டார். இந்நிகழ்வுக்காக நிர்மலா ராஜினியின் ஆவணப்படமான No More Tears Sister இல் கண்ணீருடன் வருந்தியதை நாம் யாவரும் பார்க்கமுடியும். ஆனால் ராஜினியின் மரணத்தின் பின்பு வரும் காலம் கடந்த ஞானமாக இது அமைந்தது துர்பாக்கியமாக அமைந்துவிட்டது. (மேலும்....)

ஆவணி 27, 2012

The VK Krishna Menon Award 2012

Krishna Menon must be turning in his grave in disgust to know that you all have decided to hand over the VK Krishna Menon Award, to a woman who believes that the alleged persecution of the Tamil minority in Sri Lanka is wrong.  And to right that wrong to support the Tamil Tigers from her community, the most ruthless terrorists in the world, who perfected the body-pack for suicide bombings and assassinated two heads of State, Rajiv Gandhi of India and President Premadasa of Sri Lanka, by killing, massacring and maiming thousands of innocent unarmed people from Sri Lanka’s majority Sinhalese community.  And that is what bothers me and why I resent you conferring this award to her.  Her sense of human rights is cock-eyed and skewed and that does not translate into “advancement of human rights” in any form. This is the Tamil MP who displayed the Tamil Tiger terrorist flag prominently on her face book pages no sooner she was elected to represent the Scarborough-Rouge River riding in Ontario in the Canadian parliament.    Krishna Menon must be squirming in his grave. (more....)

ஆவணி 27, 2012

ஆஸி. தீர்மானத்தை எதிர்த்து கிறிஸ்மஸ் தீவில் உண்ணாவிரதம்

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருவோரை பப்புவா நியூகினி மற்றும் நவ்ரூ ஆகிய தீவுகளுக்கு மாற்றும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 62 பேர் கிறிஸ்மஸ் தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் தொடர்ந்து வருவதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் இலங்கையர்களும் இருக்கலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெரும் எண்ணிக்கை யானவர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு புகலிடம் கோரி வருகின்றனர். அண்மைய மாதங்களில் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தமையைத் தொடர்ந்து புகலிடக் கோரிக்கையாளர்களை பப்புவா நியூகினி மற்றும் நவ்ரூ ஆகிய தீவுகளுக்கு மாற்றும் தீர்மானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிறைவேற்றி யிருந்தது.

ஆவணி 27, 2012

சுற்றாடல் மாசுபடுவதை தடுக்கும் காற்றாடியூடான மின் உற்பத்தி

பஞ்ச பூதங்களில் ஒன்றான இப்பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை வாய்ந்த வாயு பகவானின் கிருபையுடன் எங்கள் நாட்டில் மின்சக்தி தட்டுப்பாட்டை தீர்த்து வைப்பதற்காக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட முயற்சிக்கு உயிரூட்டுவதற்கு மின்சக்தி எரிசக்தி துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இப்போது தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். காற்றாடிகள் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்வதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. இதன் மூலம் 2020ம் ஆண்டளவில் இலங்கையின் மின் உற்பத்தி வலையமைப்பில் மேலும் 400 மெகாவாட்ஸ் காற்றாடிகள் மூலமான மின்சக்தியை இணைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். (மேலும்....)

ஆவணி 27, 2012

மிருக வேள்விக்கு எதிர்ப்பு

முன்னேஸ்வரம் காளிகோயில் முன்னால் நேற்று சத்தியாக்கிரகம்

மிருக வதைக்கு எதிரான அமைப்புக்களும், பெளத்த பிக்குமாரும் நேற்றுக்காலை முன்னேஸ்வரம் காளிகோவில் நுழைவாயிலுக்கு அருகே சக்தியாக்கிரக போராட்ட மொன்றில் ஈடுபட்டனர். முன்னேஸ்வரம் உற்சவ காலத்தின்போது பத்திரகாளி அம்மன் கோவிலில் நடை பெறும் வேள்வித் திருவிழாவின் போது ஆடுகள், கோழிகள் பலியிடும் சம்பிரதாயம் பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இதனைக் கண்டித்தும், இம்முறை முதலாம் திகதி நடைபெறவுள்ள வேள்வித் திருவிழாவின் போது மிருகங்களைப் பலியிட வேண்டாம் எனக் கோரியுமே இவர்கள் நேற்று சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலாபம் பஸ் நிலையத்துக்கு முன்பாக பேரணியாகப் புறப்பட்ட இவர்கள், முன்னேஸ்வரம் சிவன்கோவில்வரை சென்றடைந்தனர். ஆடு, கோழி பலியிடும் நடவடிக்கைகள் முன்னேஸ்வரம் ஆலயத்தில் நடைபெறுகிறது என்ற தவறான கருத்தின்படி சிவன் கோவில் முன்றலில் சத்தியாக்கிரகம் செய்ததோடு, ஆலயத்துக்கு உள்ளே நுழையவும் முற்பட்டனர். ஆலய நிர்வாகமும், சிலாபம் இந்து மகா சபையினரும் அவர்களை இடைமறித்து ஆலயத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தனர். பெளத்த பிக்குகள் உட்பட நூற்றுக் கணக்கானோர் ஒரே நேரத்தில் ஆலயத்திற்குள் நுழைய முற்பட்டதால் ஆலய முன்றலில் குழப்பநிலை தோன்றியது.

ஆவணி 27, 2012

பூநகரியில் 10 குளங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

பூநகரி பிரதேசத்திலுள்ள பத்து குளங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு பணிகள் ஒரு மாத காலப் பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் பொறியியல் பிரிவினால் முன்னெடுக்கப்படும் இந்த புனரமைப்புத் திட்டத்திற்கு தேவையான இயந்திர உதவிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சும், இயந்திரங்களுக்கான எண்ணெய் வசதிகளை வட மாகாண சபையும் வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேற்படி குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் இந்தப் பிரதேசத்திலுள்ள 800 குடும்பங்கள் நன்மையடையவுள்ளதுடன் விவசாயிகளும் பயனடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்களின் நலன் கருதி இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இளங்கோவன் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 27, 2012

தொழில்நுட்பத்தை திருடிய வழக்கு

சம்சுங், ஆப்பில் நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் டொலர் அபராதம்

தென் கொரியாவின் சம்சுங் நிறுவனத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட காப்புரிமை வழக்கில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் வடிவமைப்பு தொழில்நுட்பங்களை திருடியதற்காக சம்சுங் நிறுவனம் ஒரு பில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக சம்சுங் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தனது கணனி, ஐபோட் உள்ளிட்ட சாதனங்களின் வடிவமைப்புத் தொழில் நுட்பங்களை சம்சுங் நிறுவனம் திருடுவதாக கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தான் தயாரிக்கும் 28 வகையான சாதனங்களை சம்சுங் அதே வடிவமைப்பில் உருவாக்குவதாகக் கூறி அவற்றைப் பட்டியலிட்டிருந்தது. எனினும், தனது காப்புரிமையை மீறி ஆப்பிள் நிறுவனம் ஐபோட், ஐபோன் ஆகியவற்றைத் தயாரித்ததாக சம்சுங் தனது பதில் மனுவில் குற்றம் சாட்டியது.

ஆவணி 27, 2012

இந்திய பிரதமரின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரான் பயணம்

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய இரு திகதிகளில் அணி சேரா நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக,பிரதமர் மன்மோகன் சிங் டில்லியில் இருந்து 28 ஆம் திகதி டெஹ்ரான் புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்குப் பிறகு ஈரான் செல்லும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆவார். ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டில் எகிப்திலும், 2006 ஆம் ஆண்டில் கியூபாவிலும் நடைபெற்ற இரண்டு அணி சேரா நாடுகளின் மாநாட்டிலும் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அந்தநாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் இந்தியாவை நிர்ப்பந்தித்து வரும் நிலையில், மன்மோகன் சிங்கின் இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஈரானில் நடைபெற இருக்கும் அணிசேரா நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இந்தியா முடிவு எடுத்து இருப்பது தனது வெளிநாட்டு கொள்கையில் பிடிவாதமாக இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஆவணி 27, 2012

பல்லின மக்கள் வாழும் இலங்கையில் தமிழ், சிங்கள மொழியறிவின் அவசியம்

சுதந்திர இலங்கைக்கு பின்னரான காலகட்டங்களில் மொழி ரீதியான பிரச்சினைகள் பல ஏற்பட்டன. அதன் காரணமாக இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை ஏற்பட்டது. இருப்பினும் அண்மையக் காலங்களில் மாற்றுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு முன்வைக்கப்பட்ட திட்டங்களுக்குள் முதன்மையானது மொழி பற்றியதாகும். அந்த வகையில் மொழி உரிமை மிகவும் காத்திரமான ஒரு செயற்பாட்டுக்கு வித்திட்டது எனலாம். தமிழ் பேசும் மக்களின் மொழி தொடர்பான உரிமைகள் மறுக்கப்பட்டு மீறப்படுகின்ற சந்தர்ப்பங்கள் முன்னர் ஏற்பட்டன. பின்னர் சிறுபான்மைச் சமுதாயத்தின் மொழி உரிமை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் சீர் செய்யப்பட்டுள்ளது. (மேலும்....)

ஆவணி 27, 2012

அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 58பேர் வடமராட்சி கிழக்கில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலமாகச்செல்ல முற்பட்ட 58 பேரை வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று அதிகாலை கைதுசெய்துள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் கொட்டோடை பகுதிக் கடற்கரையிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திப்படகு ஒன்றில் செல்ல முற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் பருத்தித்துறைக் கடற்கரைக்கு அழைத்துவந்த கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வடமராட்சி கிழக்கு , வடமராட்சி , முல்லைத்தீவுப் பகுதியைச்சேர்ந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் , சிறுவர்கள் உட்பட 58பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக அவுஸ்திரேலியா நோக்கி வடக்கு , கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றமையும் அவர்களைக் கடற்படையினர் கைதுசெய்து சட்டநடவடிககை மேற்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆவணி 27, 2012

அமெரிக்க டொலர் 100 மி. சீன உதவியில் வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்பை விருத்திசெய்யவும் இராணுவ முகாம்களுக்கு தேவையான விடுதி மற்றும் வசதிகளை மேம்படுத்திக் கொடுக்கவும் சீனா முன்வந்துள்ளது. அத்துடன் இலங்கையுடனான பொருளாதாரம்,வர்த்தம் மற்றும் இராணுவ உறவுகளையும் சீனா மேம்படுத்திக் கொள்ளவிருக்கின்றது. இராணுவ நலன்புரித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கவிருக்கின்றது. அதுமட்டுமன்றி படை அதிகாரிகளின் பிள்ளைகள் கல்வி பயிலும் கொழும்பு பாதுகாப்புக் கல்லூரிக்கு உதவியளிக்கவிருக்கின்றது. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வடக்கு ,கிழக்கில் இராணுவத்தைக் குறைக்குமாறு மேற்குலக நாடுகள் சிலவும் இந்தியாவும் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே சீனா இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றது.

ஆவணி 27, 2012

புலி ஆதரவாளர்களின் பணயக்கைதியாக இன்று கூட்டமைப்பு செயற்படுகின்றது

புலம் பெயர் மக்களின் ஒரு பகுதியினரான புலி ஆதரவாளர்களின் பணயக் கைதியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றமை கவலையளிக்கின்றது. அதனடிப்படையிலேயே கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளாமல் பல்வேறு விடயங்களை முன்வைக்கின்றனர் ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளும் முன்னர் கூட்டமைப்பும் அரசாங்கமும் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவது ௭ன்பது அர்த்தமற்ற செயற்பாடாகும். அவ்வாறு இணக்கப்பாட்டுடன் தெரிவுக்குழுவுக்கு சென்றால் ஏனைய கட்சிகளுக்கு ௭வ்வாறு பதிலளிப்பது? மேலும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அப்படியாயின் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதிலேயே அர்த்தம் இல்லை. பாராளுமன்றத் தெரிவுக்குழு ௭ன்பது அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்கின்ற ஒரு அதி உயர்ந்த இடமாகும். அவ்வாறான தெரிவுக்குழுவில் அனைத்துக் கட்சிகளும் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வர முடியும். இது யதார்த்தமான விடயமாகவுள்ளது.

ஆவணி 26, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 4)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கொழும்பு கண்டி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்ட மாணவர்கள் பிரதேச தரப்படுத்தல் முறமையினால் நன்மை அடைந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் பின்தங்கிய பிரதேச பல்கலைக்கழக அனுமதி முறமைகளில் உள்ள சலுகைகளை அப்பிரதேசங்களுக்கு தற்காலக இடம்பெயர்வுகள் மூலம் யாழ்ப்பாண மாணவர்களும் பயன்படுத்திக் கொண்டதுதான். கூடவே தமிழர்களுக்குள்ளேயே சாதி ரீதியாக தாழ்ந்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியிருந்தே கல்வி மறுப்பு என்ற மேட்டுக்குடி மக்களின் கல்விப் பாகுபாடும் நீண்டகாலமாக மூடி மறைக்கப்பட்டு வந்ததும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தமது பிள்ளைகள் சாதாரண அரச பாடசாலைகளில் கல்வி கற்க வைத்து சமூகத்தின் சகல பிரிவின் வாழ்வையும் அறிய வைத்த பேராசிரியர் கைலாசபதிக அதிபராக செயற்படும் போது அதிகார வர்க்கத்திறகுரிய செயற்பாட்டை தன்னகத்தே கொண்டிருக்காமல் மாணவர் சமூகத்திற்கு சமத்துவ கொள்கையை அறிமுகப்படுத்திய கார்திகேயன் போன்ற நல் ஆசான்கள் பலர் தோன்றியிருந்தால் தமிழருக்குள் தமிழர் போட்டுக்கொண்ட கல்வி மறுப்பு தரப்படுத்தல் இல்லாமல் உடைத்தெறியப்பட்டிருக்கும். (மேலும்....)

ஆவணி 26, 2012

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான ஆசனங்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைப்பு

நாடாளுமன்ற தெரிவுக்கான வன்னி தேர்தல் மாவட்ட ஆசனங்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மொனராகல மாவட்டத்துக்கான ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.  2011ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அடுத்தே, ஒரு ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. 2009இல் வன்னி தேர்தல் மாவட்டதில், 270,701 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2010இல் இந்த எண்ணிக்கை 236,449 ஆக குறைவடைந்தது. 2011ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் 221,409 வாக்களர்களே பதிவு செய்யப்பட்டுள்ளதால், வன்னித் தேர்தல் மாவட்டத்துக்கான ஆசன ஒதுக்கீடு ஆறில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது. இங்கு குறைக்கப்பட்ட ஒரு ஆசனம் மொனராகல மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆவணி 26, 2012

7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது!

இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவில், 1980 களில் ஒரு நாடு மட்டும் அசுர வேகத்தில் ஒளிவீசத்தொடங்கியது. அந்த நாட்டின் பெயர் புர்கினா ஃபசோ (Burkina Faso). ஒளிவீச காரணம் கேப்டன் தோமஸ் சங்காரா (Thomas Isidore Noël Sankara). இன்று அவன் உயிருடன் இருந்திருந்தால், ஆபிரிக்காவில் முதல் அபிவிருத்தி அடைந்த நாடாக தோற்றம் பெற்றிருக்கும் புர்கினோ பசோ. இளம் புரட்சிகர தலைவனாக, ஏகாபத்திய எதிர்ப்பாளனாக ஆபிரிக்க மக்களிடையே அடையாளம் காணப்பட்ட தோமஸ் சங்காராவுக்கு மூன்றாம் உலகம் சூட்டிய பெயர் 'ஆபிரிக்காவின் சே குவாரா'. (மேலும்....)

ஆவணி 26, 2012

TNA கிழக்கு மாகாண சபையை

கைப்பற்றிவிடும் எனும் பயத்தில் அரசாம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும். என நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரச்சாரக்கூட்டமொன்று கிண்ணியாவில் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் மெளலவி எஸ்.எல்.எம். ஹஸன் (அஷ்ஹரி) தலைமையில் கிண்ணியா ஹஸனாத் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

ஆவணி 26, 2012

நாய்களுக்கும் நீரழிவு நோய் வரும்

(by Noelnadesan)

கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர்.
அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி – முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் - வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?’’ – என்றும் வைரமுத்து இந்த கவிதை நூலில் சொல்கிறார்.

அப்படிச் சொன்ன கவிஞருக்கும் - கவிஞரின் கவித்திறனுக்கும் ஆய்வுரை வழங்கிய கருணாநிதிக்கும் வாசகர்களுக்கும் - இது சமர்ப்பணம்.

(மேலும்....)

ஆவணி 26, 2012

தமக்குள் மோதி சமூகத்தை விற்றுப் பிழைக்கும் தமிழ்பேசும் தலைமைகள்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பலமாகச் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ்பேசும் தமிழ், முஸ்லிம் தலைமைகளினால் அங்கிருந்து எழுப்பப்பட்டுவரும் இன, மத, பிரதேச ரீதியான கருத்துக்களால் அவ்விரு சமூகங்களையும் சார்ந்த மக்கள் துவண்டு போயுள்ளனர். அரசியலுக்காக இப்படியுமா தமக்குள் மோதி சமூகத்தை விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டும் எனும் கேள்வி பெரும்பாலான கிழக்கு மாகாண மக்களின் மனங்களில் எழுந்து வருகின்றது. இது ஆரோக்கியமானதல்ல. இது ஒரு சமூகத்தை அச்சமூகத்திற்குள்ளும், ஏனைய சமூகங்களுடனும் ஆணித்தரமான குரோதத்தை ஏற்படுத்த வழிசமைத்துவிடும் என்பதே இன்றுள்ள அச்சமாகும். (மேலும்....)

ஆவணி 26, 2012

வாக்குப் பலம்பெற கிழக்கில் வாண வேடிக்கை

முஸ்லிம்களை அரவணைத்தே தமிழருக்கு அரசியல் தீர்வு!

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று வருகின்ற போது முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளின் ஆலோசனைகள் முடிவுகள் இல்லாமல் எந்தத் தீர்வும் எடுக்கப்பட மாட்டாது. முஸ்லிம் மக்களை அரவணைத்தே அரசியல் தீர்வு காணப்படும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். இந்தத் தேர்தலை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. தனித்துவமிக்க இந்தத் தேர்தலை வெற்றி கொள்வதற்கு தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்களின் பிறப்புரிமை, மண்ணுரிமை சுயமரியாதை, சுயகெளரவம் எல்லாம் இந்தத் தேர்தலில் தான் தங்கியிருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளையும் சுயகெளரவத்தையும் அடகுவைத்துவிட்டு இந்த நாட்டிலே வாழ முடியாது. எமது உரிமைகளுக்காக நாம் அரசியல் போராட் டத்திலே ஈடுபட வேண்டும். இதற்கு ஒவ்வொரு தமிழ் மகனும் ஆயத்தமாக வேண்டும். ஆகவே நிரந்தரத் தீர்வொன்று வருகின்ற போது முஸ்லிம் மக்களை அரவணைத்தே முடிவகளை எடுப்போம். எனவே இந்தத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும் என இரா சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 26, 2012

கிழக்குக்கு காணி அதிகாரம் வழங்குவதில் ஆட்சேபனையில்லை ஆனால் பொலிஸ் அதிகாரம் வழங்குவதை ஆட்சேபிக்கிறேன் - சிரேஷ்ட அமைச்சர் பி. தயாரத்னா மனந்திறக்கிறார்

1970களில் தேசிய அரசியலில் பிரவேசித்து தொடர்ச்சியாக 07 தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு இன்று உணவு போஷக்குத்துறை அமைச்சராக திகழும் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்னாவுடனான பேட்டி

கேள்வி: கிழக்கு மாகாணசபைக்கு பொலீஸ் காணி அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: காணி அதிகாரம் வழங்குவதில் எனக்கு உடன்பாடுண்டு ஆனால் பொலீஸ் அதிகாரம் வழங்குவதை எதிர்கின்றேன். அதற்கு நியாயமான காரணங்களுள்ளன. காணி அதிகாரங்கள் கிழக்குமாகாணசபைக்கு வழங்கலாம் ஆனால் அதில் நிபந்தனையும் தேவை. அதாவது மாகணத்திலுள்ள காடுகள், வனஜீவ நிலங்கள் போன்றன மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். நான் இருவருடங்கள் அனைத்துகட்சி சம்மேளனத்தில் உறுப்பினராக இருந்தபோது காணி அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டுமென்று ஆலோசனை வழங்கினேன். ஆனால் பலர் எதிர்த்தனர். இலங்கை ஒரு சிறியநாடு. அதற்குள் பிராந்தியத்திற்கு பொலீஸ் அதிகாரிகளை வழங்குவதென்பது ஆபத்தானது. சிரேஷ்டத்துவத்தைப்பின் பற்றியே பொலீஸ் உயரதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். பொலீஸ் அதிகாரப்பரவலாக்கம் மாகாண நிலைமையை சீரழிக்கும். உங்களுக்கே ஆபத்தாக மாறும். (மேலும்....)

ஆவணி 26, 2012

உலகுக்கு விடைகொடுத்தார் நீல் ஆம்ஸ்ட்ரோங்

சந்திரனில் முதன்முதலாக காலடி எடுத்துவைத்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் தனது 82ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். இம்மாத முற்பகுதியில் இருதய சத்திரசிகிச்சையொன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பிறகு சுகயீனமுற்ற நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் ஆம்ஸ்ட்ரோங்கின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நீல் ஆம்ஸ்ட்ரோங் கடந்த 1969 ஆம் ஆண்டு ஜுலை 20 ஆம் திகதி முதன்முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்தார். அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே மதிப்புக்குரியவராகத் திகழ்ந்த இவருக்கு கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் சிறந்த பிரஜை என்ற தங்க விருதை அந்நாட்டு அரசாங்கம் அளித்து கௌரவம் வழங்கியது.

ஆவணி 25, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 3)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

ராஜினியின் குடும்ப சூழல் கல்வி கற்ற பாடசாலை போன்ற வழிகளில் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். பல்கலைக் கழகத்தில் சிங்கள தமிழ் மாணவரிடையே நிலவி வந்த இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் ராஜினி புலமை பெற்றிருந்தமையினால் சக சிங்கள மாணவர்களுடனும் இலகுவில் தொடர்புகளைப் பேண ஏதுவாக இருந்தது. பல தமிழ் சிங்கள பல்கலைக்கழக மாணவரிடையே பழகுதலுக்கான தடையாக மொழி இருந்ததை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இரு மொழி(தமிழ் சிங்களம்)ப் புலமையின்மை இலங்கையில் மொழிப் பிரச்சனைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. இலங்கையில் உள்ள சகல மக்களும் இரு மொழிப் புலமை பெற்றிருப்பின் இன முரண்பாடு என்று வளர்த்தெடுக்கபட்ட பிரச்சனை இவ்வளவு தீவிரம் அடைந்திருக்க வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கும். பல்கலைக்கழக மாணவ போராட்டங்களினூடக ராஜினிக்கும் தயாபாலா திரணகமவிற்கும் இடையே ஏற்பட்ட அறிமுகம் நட்பு காதல் என்று பரிணாமம் அடைந்து. அது 1977ம் ஆண்டு கல்யாணம் என்ற பந்தத்திற்குள் புகுந்து கொண்டது. (மேலும்....)

ஆவணி 25, 2012

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதி விரும்பவில்லை

(வடக்கில் 2 மணி நேரத்திற்குள் முழு முஸ்லீமையும் புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தபோதும், கிழக்கில் முஸ்லீம்களின் தொழுகை நிலையங்களுக்குள் புகுந்து வகை தொகையில்லாமல் அவர்களை கொன்றபோதும் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். தற்போது எந்த முகத்துடன் முஸ்லீம் மக்களை உங்களுடன் இணையுமாறு முஸ்லீம் காங்கிரங் ஊடாக கோரிக்கை விடுகின்றீர்கள் நீங்கள். சற்றே சிந்தியுங்கள் தமிழ் தேசியம் பேசும் த.தே. கூட்டமைப்பினரே!)

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைத் தவிர வேறு ௭ந்தக் கட்சியிலிருந்தும் ௭வரும் தெரிவு செய்யப்படப் போவதில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் இதனை நிரூபணம் செய்தது போல் தமிழ் மக்கள் இம் முறையும் நிரூபணம் செய்வர். அடாவடித்தனம் கபட நோக்குடன் கிழக்கு மாகாண சபை­யைக் கலைத்து தேர்தல் நடத்தி சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு முனைந்துள்ள அரசும் அதன் அடிவருடிகளும் தேர்தல்கள் நிலைவரம் கண்டு கதிகலங்கி நிற்கின்றனர். இதனால் அடாவடித்தனத்தை கிழக்கில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. ௭னினும் இவை அத்தனைக்கும் முகம் கொடுக்கும் சக்தியை நாம் மக்களிடமிருந்து பெற்றுள்­ளோம். (மேலும்....)

ஆவணி 25, 2012

கூட்டமைப்புக் கூடாரத்துக்குள் ஓடிப்போகிறவர்கள் சொல்லும் நியாயங்கள் ஏற்கத்தக்கவையா?

வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

(எனது மனக்கிடக்கையும் எடுத்தியம்பி நிற்கும் கட்டுரை. இதே மாதிரியான கருத்து நிலையில் பல கட்டுரைகளிலும், கலத்துரையாடல்களிலும், கூட்டங்களிலும், ஏன் தனி நபர்களிடமும் கருத்தப் பரிமாற்றம் செய்திருக்கின்றேன். இலங்கை அரசுடன் அனுசரித்து போய் சாதிக்கலாமா...? என்பதுவும், மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை பிரேமதாச காலத்தில் ஆரம்பித்து இன்றுவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் எதனையும் 'சாதிக்க' இலங்கை அரசுகள் அனுமதிக்கவில்லை. இனிமேலும் அனுமதிக்கப் போவது இல்லை என்பதுவும் தோழர் தேவாவிற்கும் தெரியும். சின்னத்தம்பி(யாழ்ப்பாணம்) தமிழ் கூட்டமைப்புத் தலைமைகள் பற்றி கூறும் கருத்துக்கள் மிகச்சரியானவை. – சாகரன்)

புலிகள் ஒழிந்த பின்பு ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் தலையைக் காட்டத் தயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அரசாங்கம் வழங்கிய தாராள ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி அங்கு நுழைந்து அரசியல் செய்யத் தொடங்கினர். வரலாற்றுத் தவறுகளிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு ஏதாவது ஆக்கபூர்வமான அரசியலைச் செய்தார்கள் என்றால் அதுதான் இல்லை. பழையபடி மக்களுக்கு இனவாத விசமேற்றி, அவர்களை வெறியர்களாக்கித் தமது பழைய அரசியலையே மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அதன் மூலம் பாராளுமன்றத் தேர்தல்களில் நல்ல அறுவடையையும் பெற்றுக்கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது இந்த அடாவடித்தனமான பிற்போக்கு இனவாத அரசியலைக் கண்டு பொறுக்காத மாற்றுத் தமிழ் அரசியல் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற ஜனநாயகபூர்வமான அமைப்பை உருவாக்கினர். உண்மையில் அந்த அரங்கத்தின் உருவாக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெலவெலக்க வைத்துவிட்டது. எனவே சதித்திட்டம் தீட்டி, தமது கையாட்களான மனோ கணேசன், எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றோரை அதற்குள் நுழைத்து, தமிழ் கட்சிகளின் அரங்கைச் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டனர். (மேலும்....)

ஆவணி 25, 2012

Sri Lanka: Tamils must first be reconciled with Tamils

(By Shenali Waduge)

It is easy to be asking solutions but when asking for solutions that relate to human beings it is not something that can be hurried. The international propaganda of the LTTE has left out crucial components that reveal exactly how divided Tamils in reality are. Not many have cared to question why LTTE did not use its USD300 annual earnings to uplift the areas it aspired to control over its own people. Absolutely nothing had been done except to build sophisticated bunkers and homes for the LTTE and their families. Even the food and medicines were sent by Sri Lanka’s Government to the North throughout the LTTE’s rule. The world needs to know that there is a major difference in what the Tamils (who controlled the Tamils during the hayday of the LTTE) aspire and what the Tamils need (the Tamils who suffered at the hands of the LTTE/Tamil politicians and the Tamil Diaspora). (more...)

ஆவணி 25, 2012

பூந்தமல்லி முகாமில் இலங்கை அகதி உண்ணாவிரதம்

தமிழகம் பூந்தமல்லி சிறப்பு முகாமில் இலங்கை அகதிகளின் உண்ணாவிரதம் நீடிப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 6ம் திகதி முதல் உண்ணா விரதமிருக்கும் செந்தூரன் என்ற இலங்கை அகதியை மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வருமாறும் உண்ணா விரதத்தை கைவிடுமாறும் பூந்தமல்லி கிராம அலுவலர் பேச்சு நடத்தினர் எனினும் அதனை ஏற்காது தொடர்ந்தும் அவர் உண்ணாவிரதமிருந்தார். பின்னர் மாலையில் செந்தூரனிடம் பேச்சுவார்த்தை நடத்த திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரவிக்குமார் சிறப்பு முகாமிற்கு வந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்தார். ஆனால் அதற்கும் செந்தூரன் மறுத்து விட்டதால், ஆர்.டி.ஓ. திரும்பி சென்று விட்டார். தமிழகத்துக்கு உரிய ஆவணங் கள் இன்றி கடல் வழியாக வந்த இலங்கை அகதிகளை பொலிஸார் கைது செய்து பூந்தமல்லி, செங்கல்பட்டு உள்ளிட்ட சிறப்பு அகதி முகாமில் அடைந்துள்ளனர்.

ஆவணி 25, 2012

அமரர் சிவகுருநாதன் ஞாபகார்த்த கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் “கலாசூரி” ஆர். சிவகுருநாதன் அவர்களின் நினைவுப் பேருரையும், கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் “இலக்கிய புரவலர்” ஹாசிம் உமர், தினகரன் வார மஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோர் முன்னிலையில் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இந் நிகழ்வில் லேக்ஹவுஸ் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், “கலாசூரி” ஆர். சிவகுருநாதன் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைப்பார். நிகழ்வுகளை “தமிழ்த் தென்றல்” தம்பு சிவா சுப்பிரமணியம் தொகுத்து வழங்குவார்.

ஆவணி 25, 2012

முன்னேஸ்வரம் காளி கோவிலில் இம்முறையும் மிருக பலி இல்லை

முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தில் வேள்வியின் போது ஆடு, கோழி பலி கொடுப்பதை இம்முறையும் தடுத்து நிறுத்தப் போவதாக மக்கள் தொடர்பாடல் மற்றும் மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று தெரிவித்தார். எதிர்வரும் முதலாம் திகதி முன்னேஸ் வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தின் வேள்வி உற்சவம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பலி கொடுப்பதற்காக எவரும் ஆடு, கோழிகளை ஆலயத்துக்குக் கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அமைச்சர் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். அன்றைய தினம் மிருக பலிக்கு எதிராக தான் ஆலய முன்றலில் அமர்ந்து அமைதி பிரார்த்தனை செய்யப்போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எந்தவொரு மதமும் மிருக பலியை செய்யுமாறும் கூறவில்லை என்று கூறிய அமைச்சர் மிருக பலி கொடுப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பசுக்களிலிருந்து பால் கரந்து நாம் பருகுகிறோம். ஆனால் மாடுகளை அறுப்பதும் இந்நாட்டில் நடைபெறுகிறது. இவற்றை தடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார்.

ஆவணி 25, 2012

சிலந்தி வலையின் விந்தை !

சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை. ஏன் தெரியுமா? சிலந்தி கட்டுகின்ற வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காச் செல்கிற இழைகளில் பசை இருக்காது, சிலந்தி அதன் வலையில் நடமாடும் போது, இந்தக் குறுக்கு இழைகளில் தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன.

ஆவணி 24, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 2)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

இதே போன்ற ஒரு நிகழ்வை இவ்விடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இவ் நிகழ்வின் கதாநாயகன் யாழ் பல்கலைக் கழக மருத்து பீடத்தின் கோடியில் வீடமைத்து வாழ்ந்து வந்தவர். எம்மில் பலருக்கு தெரியாதவர் இவர். ராஜினி போல் பட்டப்படிப்போ சர்வதேச பிரபல்யமோ ஏன் உள்ளுர் பிரபல்யமோஈ அல்லது புத்திஜீவியோ இல்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகிய 1970 களில் இருந்து இடதுசாரி செயற்பாடுடைய ஈழவிடுதலை அமைப்பிற்காக தனது வீடு குடும்பம் என்று எல்லாவற்றையும் வழங்கியவர் வைகுந்தவாசம். இவர் திருநெல்வேலி மரக்கறிச் சந்தையில் குத்தகை சேகரிக்கும் கடைநிலை கிராம சேவை உத்தியோகஸ்தர் விவசாயி. 4 பிள்ளைகளின் தந்தை இவரும் இக்கால கட்டத்தில்தான் புலிகளால் சுட்டுக்கொலப்பட்டார்.
(மேலும்....)

ஆவணி 24, 2012

யாழில் இராணுவப் பிரசன்ன அதிகரிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

யுத்தம் முடிவடைந்து  3 வருடங்களானபோதிலும், அரசியல் தீர்வு விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. தமிழர்களுக்கான தீர்வை வழங்கப்போகின்றோம். அதற்கான  நடவடிக்கைகளை  எடுத்துவருகின்றோம் என 3 வருடங்களாக அரசாங்கம் கூறிவருகின்றதே தவிர, அதற்கான வழி எதனையும் அரசாங்கம் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. யுத்தம் முடிவடைந்த நிலையில் இற்றைவரை சீரான முறையில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவில்லை.  இன்றும் பல பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுவருகின்றன. வடபகுதியில் தமிழ் மக்கள் மாத்திரமின்றி, முஸ்லிம் மக்களும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். யுத்த சூழ்நிலையில் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேறியிருந்த 5,000 முஸ்லிம்; குடும்பங்களில் 500 குடும்பங்களே இதுவரையில் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை. (மேலும்....)

ஆவணி 24, 2012

வெள்ளவத்தை முக்கொலை, சந்தேக நபர் கைது

கடந்தவாரம் வெள்ளவத்தை ராமகிருஸ்ண ட்ரெஸ்ட் வீடொன்றில் தாய், தந்தை, தங்கை ஆகிய மூவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த முக்கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என கருதப்பட்ட கொலையுண்ட தம்பதியினரின் மூத்த மகனான 28 வயதுடைய பிரபாத் குமாரசுவாமி என்பவரையே பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இக்கைது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவிக்கையில்...“நேற்றைய தினம் இச்சந்தேகநபர் தொடர்பில் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டோம். அதற்கமைய இன்று காலை 10.45 மணியளவில் கடவத்தை பகுதியில் பஸ்ஸில் பயணிக்கும்போதே மேற்படி  சந்தேக நபரை கைது செய்துள்ளோம். கொழும்பிலிருந்து குருணாகல் நோக்கி சென்ற பஸ்ஸிலேயே குறித்த சந்தேக நபர் பயணம் செய்துள்ளார். இவரை அடையாளம் கட்ட பயணி எமக்கு தகவல் வழங்கியதையடுத்து கடவத்தை பகுதியில் அவரை கைது செய்தோம்” என்று கூறினார்.

ஆவணி 24, 2012

ஆவணி 24, 2012

சிரிய கிளர்ச்சியாளர்களுடன் வெளிநாட்டு போராளிகள்

சிரியாவில் பல வெளிநாட்டு போராளிகள் கிளர்ச்சியாளர்களுக்காக போராடிவருவது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான சிரிய குடியிருப்பாளர்கள் தம்முடன் இணையவில்லை என கிளர்ச்சியாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சிரியாவில் மோதல் இடம்பெறும் பகுதியில் செய்தி சேகரிக்கும் அல் ஜீரா செய்தியாளர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:- “மோதல் களத்தில் அரபுப் போராளிகளைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் சவூதி மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள். தம்மை படம்பிடிக்க இவர்கள் மறுத்தனர். இதில் சில போராளிகள் தம்மை அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தினர்” என்று அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சிரிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோரில் பெரும்பான்மையானவர்கள் சிரிய நாட்டவர்களாவர். ஆனால் இந்தப் போராட்டம் சுன்னி அரபு முஸ்லிம்களை கவர்ந்துள்ளதாக அல் ஜீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மறுபுறத்தில் சிரியா தொடர்பில் லெபனானில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கு இடையிலான மோதல்கள் நீடித்து வருகிறது.

ஆவணி 24, 2012

அகதிகளை வரவேற்கிறதா ஆஸ்திரேலியா?

தப்ப முயன்ற ஈழத் தமிழர்கள்

திருட்டுத் தோணியில் ஏறிப்போய் நடுவழியில் உயிரை விட்டிருப்பார்கள். இப்போது, ஆஸ்திரேலியாவிலும் அதிகமான கட்டுப்​பாடுகள் இருப்பதால், ஈழத் தமிழர்கள் தப்பி ஓட முயற்சிப்பது நல்லதல்ல'' என்றார் அகதிகளைப் பிடித்த தனிப்படையைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர். அகதிகள் முகாமில் இருப்பவர்கள் திருட்டுத்தனமாக ஆஸ்திரேலியாவுக்குச் தப்பிச் செல்ல முயற்சிக்கிறார்கள் என்றால், இங்கே அவர்களுக்கு அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளும் கொடுமையும் இருப்பதாகத்தானே அர்த்தம்? கொடுமை தாங்காமல் இலங்கையில் இருந்து அபயம் கேட்டு வந்தவர்களைத் தமிழ்நாடும் வஞ்சிக்கக் கூடாது. ஆஸ்திரேலியாவில் அவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்​தையும், நிம்மதியையும் தமிழகம் தர வேண்டும். (மேலும்....)

ஆவணி 24, 2012

தமிழ் மக்கள் சுதந்திரக் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம்

பதவி மோகம் கொண்ட சந்தர்ப்பவாதிகளின் கூடாரமாக தமிழ்க் கூட்டமைப்பு மாறிவிட்டது

டந்த 60 வருட காலமாக கிழக்கு மாகாணத் தமிழர்கள் கடைப்பிடித்த அரசியல் பாதை எந்தவிதமான சமூக, பொருளாதார, அரசியல் நன்மைகளையும் எமக்கு பெற்றுத் தரவில்லை. மாறாக இருந்ததையும் இழந்து எமது எதிர்கால சமூக, பொருளாதார, அரசியல் இருப்பு இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கட்டியிருந்த வேட்டியையும் பறிகொடுத்துவிட்டு இன்று கோவணத்தைக் காப்பாற்றும் நிலை எமக்கு. இந்த நிலையிலே உணர்வு பூர்வமாக மட்டும் சிந்திப்பதை விடுத்து அரசியலை விஞ்ஞான பூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் யதார்த்த பூர்வமாகவும் பார்க்க வேண்டியது கடந்த 60 வருட கால அனுபவம் எமக்கு கற்றுத் தந்த பாடமாகும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் சுதந்திரக் கட்சி எனும் ஓர் அரசியல் கட்சியை தோற்றுவித்து அதனூடாக இக்கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளர் செல்வி க. தங்கேஸ்வரி தலைமை யிலான குழுவினர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (மேலும்....)

ஆவணி 24, 2012

வளர்ந்து வரும் இனவாத வன்மம்!

னசாட்சியைத் தட்டி எழுப்பும் கேள்விகள் யாரிடம் இருந்து வேண்டு​மானாலும் வரலாம். ''ஒரு மாதமாக அஸ்ஸாம் பற்றி எரிகிறது. கிராமங்கள் எல்லாம் சுடுகாடு ஆக்கப்பட்டு, நான்கு லட்சம் மக்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஏன் உங்கள் யாருக்கும் உறைக்கவில்லை'' என்று கேட்கிறார் வீரேந்தர். அஸ்ஸாம் கலவரத்தின் தொடர்ச்சியாக, வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பரவிய வதந்தியால் அலறி அடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு ரயில் பிடித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர் வீரேந்தர். அஸ்ஸாமின் ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியுமான பக்ருதீன் அஜ்மல் சொல்வதுபோல, ''அஸ்ஸாமில் என்ன நடக்கிறது என்றும், இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்றும் கவலைப்பட இந்தியா விரும்பவில்லை'' என்பதுதான் உண்மை. (மேலும்....)

ஆவணி 24, 2012

உணவு தேடும் வரை தாயின் வயிற்றுப்பையில் வாழும் கங்காரு குட்டி

ங்காரு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்கு. இதன் குட்டிகள் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்து விடுகின்றன.  மிகுதி வளர்ச்சியெல்லாம் காங்காருவின் வயிற்றுப் பையில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். பிரசவ நேரத்தில் கங்காரு, குட்டி வெளியே வருகிற துளை முதல் வயிற்றின் மேல் பகுதிவரையான பாகத்தை நக்கும். இப்படி நக்கி நக்கி தன் உடல் ரோமத்தின் வழியே ஒரு பாதையை ஏற்படுத்தும். குட்டி இந்தப் பாதை வழியே ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத் தவிர மற்ற உணவை சமிபாடடையக் கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி, அம்மாவின் பைக்குள்ளேயேதான் இருக்கும்.  குட்டியின்உடற் பகுதிகளெல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும். பிறகு எப்போதாவது நரியோ, கழுகோ, மற்ற விலங்குகளோ பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஏறி ஒளிந்து கொள்ளும்.

ஆவணி 24, 2012

முஸ்லிம்களை வெளியேற்றும் சதியில் பயங்கரவாத எச்சங்களின் செயற்பாடு

வடக்கிலும், கிழக்கிலும் சமாதானத்தையும், செளஜன்யத்தையும் விரும்பும் மக்களை மீண்டும் இந்த மண்ணில் இருந்து வெளி யேற்றுவதற்கான சதிகள் இத் தேர்தலில் முன்னெடுக்கப்படு வதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன், தமிbழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள போதும், அதனது ஆதரவு எச்சங்கள் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார். (மேலும்....)

ஆவணி 24, 2012

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுவதை தடுக்கும் சட்டத்தில் திருத்தம்

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுவதை தடுப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற் கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்பொழுது அமுலில் உள்ள 2005 ம் ஆண்டின் 25ம் இலக்க பயங் கரவாதிகளுக்கு நிதி வழங்குவதை தடுக்கும் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளதோடு அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய் துள்ளதாகவும் அவர் கூறினார். ஜீ. 7 நாடுகளினால் அமைக் கப்பட்ட நிதி முடக்கம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்தல் தொடர்பான கொள்கை தயாரிக்கும் செயலணி இது தொடர்பில் சிபார்சுகளை தயாரித்திருந்தது. இதனடிப்படையில், தற்பொழுதுள்ள சட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பிலான சட்டத்தை பலப்படுத்துவதினூடாகவே எதிர்காலத்தில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டப்படுவதற்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதற்காகவே சட்ட வரையறைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆவணி 24, 2012

ஆஸி. ஆண்டுக்கு உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக அதிகரிப்பு

அவுஸ்திரேலியா தனது நாட்டில் புகலிடம் கோரும் அகதிகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 20,000 மாக அதிகரித்துள்ளது. முன்னர் ஆண்டுக்கு 13,750 அகதிகளுக்கே அவுஸ்திரேலியா அனுமதி அளித்திருந்தது. இதன்மூலம் ஆஸி. அரசு அகதிகளின் எண்ணிக்கையை 45 வீதமாக உயர்த்தியுள்ளதோடு இது 30 ஆண்டுகளில் மிகப்பெரிய அதிகரிப்பாகும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லாட் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே புகலிடக் கோரிக்கையா ளர்களுக்கான தடுப்பு முகாம்களை அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் பபுவா நியுகினியா மற்றும் நவுரு தீவுகளுக்கு கொண்டு செல்ல அந்நாட்டு பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்தமை குறிப்பிடத்தக்கது. அபாயகரமான படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருவோரை தடுக்கும் வகையிலேயே ஆஸி. அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம் முறையான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஊக்குவிக்க ஆஸி. அரசு முயற்சித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் பிரதமர் நியமித்த மூன்று பேர் கொண்ட நியுணர்குழு 22 பரிந்துரைகளை செய்திருந்தது. அதில் அவுஸ்திரேலி யாவுக்கு வெளியில் தடுப்பு முகாம்களை மீண்டும் அமைக்கும் பரிந்துரை மற்றும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவற்றை ஆஸி. அரசு செயற்படுத்தியுள்ளது.

ஆவணி 23, 2012

பஷீர் சேகுதாவூத் பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார்!

சற்று முன்னர் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்ட போது அவர் இதனை உறுதிப்படுத்தினார். இதற்கான காரணங்கள் தொடர்பில் எமக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அண்மையில் தான் ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியதை தொடர்ந்து அரசில் அமைச்சர் பதவியொன்றை பெறுவதற்காக தான் முயற்சிசெய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சட்டுகளை அடுத்து தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும், அமைச்சுப் பதவிகளுக்காக தான் முயற்சிப்பதில்லை என்றும், கட்சிக்காகவே தான் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் அரசின் பிரதியமைச்சராக இருந்துகொண்டு அரச வாகனங்களையும் வளங்களையும் பாவித்து முஸ்லிம் காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்வதை தான் விரும்பவில்லை என்றும், தனது சொந்தச் செலவில் கட்சிக்காக இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவத்தார். கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவித்து விட்டே இந்த ராஜினாமாவை தான் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

ஆவணி 23, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 1)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

'இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது'
 

1989 செப்ரம்பர் 21ம் நாள் வியாழக் கிழமை பி.ப 4 மணியளவில் யாழ்பாண பல்கலைக் கழகத்தின் மருத்து பீடத்திருந்து 2ம் வருட மருத்துவ பீட மாணவர்களின் இறுதிப்பரீட்சை முடித்து. இப் பரீட்சைக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி விட்டு வழமைபோல் தனது துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்புகின்றார் ராஜினி. அவரின் பின்புறத்தே இருந்து பெயர் கூறி அழைக்கப்பட்டார். துவிச்சக்கர வண்டியை நிறுத்தி அதிலிருந்து இறங்காமல் தன்னை அழைந்தவரை திரும்பி பார்க்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழித்தொழிக்கும் பிரிவினரால் நெத்தியில் சுடப்பட்டார் ராஜினி. அப்போது தனது தலையை பாதுகாப்பதற்கான கரங்களை மட்டும் ஆயுதமாக ராஜினி கொண்டிருந்தார். துப்பாக்கி சூட்டினால் நிலத்தில் வீழ்ந்த ராஜினியை மீண்டும் இரு தடவை தலையின் பின்புறமாக சுட்டனர் கொலைகாரர். இது அவர் உயிர் தப்புவதற்குரிய வாய்ப்புக்களை இல்லாமல் உறுதி செய்துவதற்காக சுடப்பட்ட சூடுகள். இதன் பின்னரே அவ்விடத்தை விட்டு கிழம்பினார்கள் கொலைகாரர்கள். (மேலும்....)

ஆவணி 23, 2012

நான் வாழ்க்கையில் தோற்றுப்போனேன்

என்னை சில தினங்களில் உருக்குலைந்த சடலமாக காணலாம்

௭ன்னை மன்னித்து விடுங்கள், நான் வாழ்க்கையில் தோற்றுப்போனேன். வாழ்க்கையை தொடர்ந்து கொண்டுசென்றிருந்தால் அம்மாவும், அப்பாவும் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்திருக்கும். ஆகையால்தான் நான் இந்த முடிவை ௭டுத்தேன் ௭ன வெள்ளவத்தை முக்கொலையின் பிரதான சந்தேகநபரான குமார சுவாமி பிரசான் மின்னஞ்சல்மூலமாக தனது சகோதரி ஒருவருக்குத் தெரிவித்துள்ளார். கடன் தொல்லை தாங்கமுடியாமலேயே நான் இந்த முடிவை ௭டுத்தேன். நான் கெட்டவன் அல்ல ௭ன்னை மன்னித்து விடுங்கள். சில தினங்களில் கிராமத்தில் காட்டுப்பகுதி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ௭ன்னை நீங்கள் சடலமாக காணலாம். ௭னது இந்த முடிவை யார் மீதும் சுமத்தவேண்டாம் ௭னவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்....)

ஆவணி 23, 2012

மற்றுமொரு வெள்ளை வேன் கடத்தலின் உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது

 

பிரான்ஸில் இருந்து விடுமுறைக்காக இலங்கை வந்த ரொமிலா, வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. சுன்னாகத்தை சொந்த ஊராகக் கொண்ட தம்பிராசா மற்றும் டைசிரணியா ஆகியோரின் மகளாகிய ரொமிலாவும் 2004 ஆம் ஆண்டு பிரான்சிக்குச் சென்று அந்நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தார். கடந்த 2012.06.25 ஆம் திகதி பிரான்ஸ்சிலிருந்து விடுமுறையை கழிப்பதற்காக ரொமிலா தனது குடும்பத்துடன் இலங்கை வந்திருந்தார்.  விடுமுறையை ஊரில் கழித்துவிட்டு மீண்டும் பிரான்ஸ்க்கு செல்வதற்காக 2012.08.01ஆம் திகதி கொழும்புக்குச் சென்று அங்குள்ள எப்பலே என்ற விடுதியில் தங்கியிருந்தனர், மறுநாள் 02ஆம் திகதி தங்கிருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த கொட்டஞ்சேனை மாதா தேவாலயத்திற்கு வழிபடுவதற்காகச் சென்றள்ளனர். (மேலும்....)

ஆவணி 23, 2012

இந்தியா, சர்வதேச தீர்வுகளை அமுல்படுத்தவும் - சம்பந்தன்

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் உள்ளுர் தீர்வுகள் பல உருவாக்கப்பட்டன. அவை அமுல்படுத்தப்படவில்லை என்பதால் உள்நாட்டுத் தீர்வு இங்கு பொருந்தாது என்பதுடன் இந்தியா, சர்வதேச தீர்வுகளை அமுல்படுத்தவும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் இன்று புதன்கிழமை சபையில் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் சபையில் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நிறைய விடயங்களை மூடி மறைக்கும் வகையிலே செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது உலகிற்கு காட்டுவதாக அமைந்தால் முரண்பாடுகளைத்தான் மென்மேலும் வளர்க்கும் என்பதுடன் செயற்பாட்டுத் திட்டத்தை திருத்தாவிடின் நல்லிணக்கம் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 23, 2012

அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா விடுத்த எச்சரிக்கைக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளதோடு அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது எனவும் எச்சரித்துள்ளது. சிரியா இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தினால் அதற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வை சீனாவின் மூத்த பிரதிநிதி தாய் பின்க்கூ சந்தித்து சிரியா பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், ஒரு நாடு தனது நாட்டு எல்லைதாண்டி, அடுத்த நாட்டுப் பிரச்சினையில் தலையிட கூடாது. பன்னாட்டு சட்டத்தை கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும். அப்படி மீறி தாக்குதல் நடத்தினால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. ரஷ்யாவும், சீனாவும் சிரியாவுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்துவோம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவணி 23, 2012

மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் சம்பவம், மேலும் ஐவர் கைது

மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் 5 சந்தேக நபர்களை விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் முன்னிலையில் இவர்களை ஆஜர் படுத்தியபோது இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு அடையாளம் காணப்பட்ட மேலும் 26 சந்தேக நபர்களையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துமாறு மன்னார் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி 23, 2012

அணி சேரா மாநாட்டில் பங்கேற்க பான் கி மூனுக்கு அமெ. எதிர்ப்பு

ஈரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் பங்கேற்பதை, அமெரிக்கா எதிர்த்துள்ளது. ஈரான் நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குறைகூறி வருகின்றன. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதற்கிடையே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வரும், 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் உள்ளிட்ட 41 நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். 21 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இதில் பங்கேற்க உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் ஐ. நா. பொதுச் செயலர் பான் கி மூன், எகிப்து ஜனாதிபதி முர்சி உள்ளிட்டோர் கலந்துகொள்ளக் கூடாது. இந்த மாநாட்டில் அவர்கள் பங்கேற்பது நல்லதல்ல. மற்ற நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எனினும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும தலைவர்கள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையை கைவிடும்படி, ஈரானுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி விக்டோரியா கூறினார்.

ஆவணி 23, 2012

மாணவருக்கு இடையூறு

ஐ.ம.சு. முன்னணி வருத்தம் தெரிவிப்பு

உயர்தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இனிமேல் எந்த தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது என உறுதியளிப்பதாக அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்தார். அனுராதபுரத்தில் உயர்தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஐ.ம.சு.மு. பிரசார கூட்டமொன்று நடத்தப்பட்டது தொடர்பில் வருத்தத்தை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்; மாணவர்களுக்கு இடையூறாக இடம்பெற்ற மேற்படி பிரசாரக்கூட்டம் தேர்தல் ஆணையாளரினால் நிறுத்தப்பட்டது. இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்பதை தேர்தல் ஆணையாளருக்கும் மாணவர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கிறேன். இது தொ டர்பில் வேட்பாளர்களுக்கு அறிவூட்டி யுள்ளோம். அரச வாகனங்கள் பயன்படுத்துவது தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளோம். கடந்த ஆட்சிக் காலங்களில் மோசமான முறையில் அரச சொத்துக்கள் தேர்தலுக்கு பயன்ப டுத்தப்பட்டன. ஆனால் இந்த நிலை தற்பொழுது பெருமளவு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. எனது அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனமொன்றினூடாக விளையாட்டு உபகரணங்கள் பகிரப்பட் டதோடு, தேர்தல் ஆணையாளர் இது குறித்து அறிவித்ததை யடுத்து, அதனை நிறுத்த பணித்தேன்.

ஆவணி 23, 2012

இனவாதத்தை தூண்டி தமிழர்களை ஏமாற்ற கூட்டமைப்பு முயற்சி

தேர்தல் காலத்தில் இனவாதத்தை பரப்பி தமிழ் மக்களின் வாக்குகளை பெற தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது. இது தொடர்பாக சிந்தித்து தமிழ் மக்கள் ஐ.ம.சு.முவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக தேசிய கட்சி தலைவரும் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஐ.ம.சு.மு.வுக்கே வாக்களிப்பர், ஆனால் இனவாதம் பேசி த.தே. கூட்டமைப்பு மக்களிடம் வாக்கு கேட்கிறது. இதனூடாக சர்வதேச சமூகத்திற்கு தங்களுடைய பலத்தை காட்ட முடியும் என அது கூறி வருகிறது. கடந்த தேர்தல்களிலும் த.தே. கூட்டமைப்பு இதனை கூறியே மக்களிடம் வாக்கு கோரியது. ஆனால் த.தே. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு என்ன சாதித்துள்ளது. தேர்தல் காலத்தில் இனவாதத்தை பேசி வாக்குகளை பெறும் த.தே. கூட்டமைப்பு பின்னர் மக்களை மறந்து விடுகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த தேர்தல்களில் த.தே.கூட்டமைப்பு வென்ற உறுப்பினர் பதவிகளினால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் தமக்கு அரசியல் செய்ய முடியாது என்பதாலே பிச்சைக்காரரின் காயத்தை போன்று இந்தப் பிரச்சினையை இழுத்தடிக்கிறது. இது குறித்து சிந்தித்து தமிழ் மக்கள் ஐ.ம.சு.முக்கு வாக்களிக்க வேண்டும்.

ஆவணி 23, 2012

சென்னையில் ஓரிரு மாதங்களில் 100 மினி பஸ்கள் ஓடும்

சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. குறிப்பாக உள்பகுதியில் உள்ள சாதாரண மக்களுக்கு போக்குவரத்து வசதி கிடைப்பதில் பெரிய பிரச்சினையாக உள்ளது. மாநகர பஸ்களுக்காக மணி கணக்கில் காத்திருக்கும் அவலமும் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 மினி பஸ்கள் இயக்கப் படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி புதிய வழித்தடங்கள் பணியை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டது. வழித்தட தேர்வு முடிந்து, மாநகர போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. அடுத்து ஓரிரு மாதங்களில் சென்னையில் முதல்கட்டமாக 100 மினி பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

ஆவணி 23, 2012

தமிழ்க் கூட்டமைப்பு சர்வதேசத்திடம் மண்டியிடுவதனால் எதனையும் சாதித்துவிட முடியாது  - இனியபாரதி

வீரவசனங்களைப் பேசி தமிழ் மக்களை உசுப்பேற்றிய காலம் மலையேறிவிட்டது. மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி கேவலமான சுயநல அரசியலில் ஈடுபடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதியினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினையும் வழங்க முடியும். இதனை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்திடம் மண்டியிடுவதினால் எதனையும் சாதித்துவிட முடியாது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து தமிழ் மக்கள் ஜனாதிபதியின் கரத்தை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் பலப்படுத்த ஒன்று திரள வேண்டும்.இவ்வாறு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளரான வேட்பாளர் கே. புஸ்பகுமார் (இனிய பாரதி) தெரிவித்தார். (மேலும்....)

ஆவணி 23, 2012

வெள்ளவத்தை சடலங்கள்

தூக்கமாத்திரை கொடுத்தே மூவரும் கொலை செய்யப்பட்டிருப்பது ஊர்ஜிதம்

வெள்ளவத்தை பிரதேசத்தில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கும் தூக்க மாத்திரை கொடுத்தே கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேகநபரான மகன் தனது தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவருக்கும் நாற்பது தூக்க மாத்திரைகளை குடிக்க கொடுத்துள்ளதாக சந்தேகிப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. வெள்ளவத்தை, இராமகிருஷ்ண டெரஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடந்த சனிக்கிழமை மூவரின் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டன. அங்கிருந்து தூக்க மாத்திரை அட்டைகள் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான 27 வயதுடைய பிரசாந்த் மருந்துக் கம்பனி யொன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். அத்துடன் சந்தேகநபர் தனது நண்பர் ஒருவருடன் பரிமாறிய மின்னஞ்சல் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவென இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையை வைத்தே இந்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்பன தொடர்பான இறுதி முடிவை மேற்கொள்ள முடியும்.

ஆவணி 22, 2012

சகல பல்கலைக்கழகங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டன

நாட்டிலுள்ள அனைத் துப் பல்கலைக் கழகங்க ளின் மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய சகல பீடங்களும் காலவரை யறையின்றி மூடப்படுவதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் பல்வேறு மட்டங்களில் இடம் பெற்றுவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகங்களின் விரிவுரையா ளர்கள், உபவேந்தர்கள், மற்றும் நிறுவனங்களின் பணிப்பாளர்களுடன் கடந்த 20 ஆம் திகதி நடத்திய பேச்சுவார்த்தை க்கு இணங்க இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க அறிவித்துள்ளார். (மேலும்....)

ஆவணி 22, 2012

பூநகரி மக்கள் குடிநீரின்றி அசௌகரியம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வரட்சியினால் பூநகரிப் பகுதி மக்கள் குடிக்க நீரின்றி அலைந்து திரிவதுடன் ஒரு லீற்றர் நீரை ஒரு ரூபா கொடுத்துக் கொள்வனவு செய்கின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் குடிநீரை அதிகாரத்தினைப் பயன்படுத்தி அபகரிக்கின்ற கடற்படையினர் தினமும் 2000 லீற்றர் நீரைக் குளிக்கப் பயன்படுத்துவதாகப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவருகின்ற கடும் வரட்சி காரணமாக மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் என்றுமில்லாதவாறு வற்றியுள்ளதுடன் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையினால் மக்கள் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளுக்காக அலைந்து திரிவதனைக் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் இவ் வரட்சியின் முழுமையான தாக்கத்திற்கு உட்பட்டு குடிநீரைப்பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரதேசத்தில் மக்கள் தமது நாளாந்த தேவைகளுக்கான நீரினை பணம் கொடுத்துப் பெற்று வருகின்றனர். அதாவது பூநகரிப் பகுதியில் ஒரு லீற்றர் தண்ணீர் ஒரு ரூபா கொடுத்துப் பெற்று வருகின்றனர். பிரதேச சபையினர் நீர் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுகின்றபோதிலும் அப்பிரதேச மக்களின் முழுத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு நீர் விநியோகம் இடம்பெறவில்லை.

ஆவணி 22, 2012

இலங்கை அகதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம்

இலங்கை அகதிகளை விடுதலை செய்யக்கோரி பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிட முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ உள்பட 500 இற்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்தனர். போராட்டத்தின்போது திடீரென தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி தமிழகத்திற்கு கடல் வழியாக வந்த இலங்கை அகதிகளை, தமிழக பொலிஸார் கைது செய்து சிறப்பு அகதிகள் முகாம்களில் அடைத்து உள்ளனர். இதில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஏற்பட்ட பிரச்சினையால், அங்கிருந்த சிலரை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டனர். (மேலும்....)

ஆவணி 22, 2012

பாலாவி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்க

இலங்கை விமானப்படைக்குரிய புத்தளம் பாலாவி விமான நிலையத்தினை உள்நாட்டு விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் 1000 மீற்றர் கொண்ட விமான ஓடு பாதையினை 1500 மீற்றராக நீடிப்பதற்கும் இதில் சிறிய ரக விமானங்களை தரையிறக்குவதற்கு ஏதுவான வகையில் ஒழுங்குகளை மேற்கொள்வதற்கும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் கற்பிட்டி, வில்பத்து சரணாலயம் உட்பட உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையிலான பகுதிகளுக்கு இலகுவாகச் செல்லக்கூடிய வகையில் இந்த விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இவ்வருட வரவு செலவுத்திட்டத்தில் உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் பாலாவி விமான நிலையம் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும்.

ஆவணி 22, 2012

கொட்டகலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்த இயமன்

அன்று பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. கூடுகளில் கண்ணயர்ந்து கொண்டிருந்த பறவைகள் இரை தேடுவதற்காக சிறகுகளை உல்லாசமாக விரித்து பறக்கத் தொடங்கின. ஊர்க் குருவிகளும் தமது சின்னஞ்சிறு சிறகுகளை அடித்தன. இருள் கௌவிக்கொண்டிருந்த வானம் சூரிய ஒளிக்கதிர்களைக் கண்டு மெல்லமாய் ஓடி ஒளிந்து கொண்டிருக்கையில் அழகிய கார் ஒன்று அந்த வீட்டு வாசலில் சர்ர்..என்று பிரேக் அடித்து நின்றது.மகனே வாடாப்பா! அம்மாவின் ஆனந்தக் கண்ணீர் ஆரத்தழுவி வரவழைக்க தந்தையும் பூரித்து நிற்கையில் ஒரேயொரு தங்கையும் அண்ணாவை கட்டியணைத்து அன்போடு வரவேற்றாள். அந்த மூவரும் ஒரே கட்டிலில் நிரந்தரமாக உறங்குவார்கள் என்று ஒருகணம் கூட எண்ணிப் பார்க்கவில்லை. அவர்கள். ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி இராணியப்பு தோட்டத்துக்குச் சென்று தலைமறைவாகியிருக்கும் சந்தேக நபரான மரண மடைந்துள்ள பெற்றோரின் மகனே அவர்களை 12ஆம் திகதி கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார். (மேலும்....)

ஆவணி 22, 2012

பகுத்தறிவு பாடல்கள் பாடுவதில் திறமை பெற்ற பட்டுக்கோட்டையார்

பாட்டுக் கட்டிப் பாடுவதே அவரது பணி. சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் எழுதி, திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கல்பத்தான்காடு என்னும் கிராமத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 13.04.1930ல் பிறந்தார்.  தந்தை பெயர் அருணாசலக் கவிராயர். தாயார் விசாலாட்சி. இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள். இவர்களில் 4வதாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அண்ணன் கணபதி சுந்தரத்துடன் கல்யாண சுந்தரம் அரிச்சுவடி பயின்றார். அதோடு பள்ளிப்படிப்பு முடிந்தது. 2 ஆம் வகுப்புக்கு பிறகு பள்ளிக்கு போகவில்லை. அண்ணனிடமே சில ஆண்டுகள் அடிப்படைக் கல்வியையும், நாட்டு நடப்புகளையும் கற்றார். (மேலும்....)

ஆவணி 22, 2012

தரைக்கீழ் நீரை பாதுகாக்கத் தவறுவோமானால் நீருக்காக அலைய வேண்டிய நிலைமையேற்படலாம்

நிலத்தின் அடியில் மாசடையும் நீரை சுத்திகரிப்பதென்பது இயலாத காரியம். நீர்ப் பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்படுவது அவசியம். நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக ஒரு சொட்டு நீரின் விலை ஒரு சொட்டு பெற் றோலின் விலையை விடவும் கூடுதலான பெறுமதியை அடையக் கூடிய காலம் மிகவும் தொலை வில் இல்லை என்று ஆர்ஜென்டி னாவில் நடைபெற்ற ஐக்கிய நாடு கள் சபையின் நீரியல் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட சிரியாவின் பிரதிநிதியான சவூப் கெளல் கூறினார்.(மேலும்....)

ஆவணி 22, 2012

அவுஸ்திரேலியா செல்லமுற்பட்ட 69 பேர் நீர்கொழும்பில் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 69 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படை யினரால் கைதுசெய்யப் பட்டுள்ளனர். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையின் மேற்கு கடற்படைப் பிரிவினர் நீர்கொழும்பு கடற்பரப்பில் இவர்களை நேற்று கைதுசெய்திருப்பதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். ரோலர் படகில் பயணித்த இவர்கள் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் பயணித்த ‘ஆஷா துவ’ எனும் படகும் கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் 48 தமி ழர்களும், 19 சிங்களவர்களும், 2 முஸ் லிம்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீர்கொழும்பு, புல்மோட்டை, வவுனியா, மன்னார், யாழ்ப் பாணம், விஷ்வமடு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இவர்கள் மோதரை மீன்பிடி துறைமுகத்துக்கு கடற்படையினரால் அழைத்துவரப் பட்டு,மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக் கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆவணி 22, 2012

அம்பாறை மாவட்டத்தில்

8 ஆசனங்களுடன் ஐ. ம. சு. மு. அமோக வெற்றிபெறும்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாரிய அளவில் வெற்றியீட்டவுள்ளது. இம் மாவட்டத்தில் எட்டு ஆசனங்களை முன்னணி பெறவுள்ளது. நீங்களும் இத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளியாக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் மீதியாகவுள்ள குறைபாடுகளை நிர்த்தி செய்வதற்கு உங்கள் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்ற இனிய பாரதி, புஸ்பராசா, செல்வராச போன்ற வேட்பாளர்களுக்கு நீங்கள் ஆதரவளித்து அவர்களை வெற்றிபெறச் செய்வதன் ஊடாக தமிழ் பிரதேசங்களில் பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த நாட்டில் எந்தப் பகுதியிலும் பெளத்த, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்கள் எந்த வேறுபாடுகளின்றி தத்தமது மத கலாசாரங்களைப் பேணி வாழ வசதிகளை அரசாங்கம் செய்துள்ளது. இதற்கு நீங்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். (மேலும்....)

ஆவணி 22, 2012

மீண்டும் சென்னை திரும்பும் வட கிழக்கு மாநிலத்தவர்

வட கிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படுவதாக பரவிய செய்தி வதந்தி என உணர்ந்த வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு வார காலமாக வட கிழக்கு மாநிலத்தவர்கள், தாக்கப்படுகின்றனர் என நாடு முழுவதும் பரவிய வதந்தியால், ஆயிரக் கணக்கானோர், சென்னை உட்பட பல நகரங்களில் இருந்தும், தங்கள் சொந்த ஊர் சென்றனர். தாக்குதல் செய்தி வெறும் வதந்தி, அதற்கு பின்னால், வெளிநாட்டு சதி இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்து. சென்னையில் நடக்கும் பெரும்பாலான கட்டுமானப் பணிகளிலும், உணவகப் பணிகளிலும் வடகிழக்கு மாநிலத்தவரே பெரிய அளவில் பணிபுரிந்து வருவதால், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. (மேலும்....)

ஆவணி 21, 2012

கண்ணீரின் உப்பு

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படை யினரின் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு, அளவுகடந்த அலட்சியத்துடன் நடந்து கொள்வது கவலையளிக்கிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வைச் சேர்ந்த 18 மீனவர்கள் 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். வெள்ளப்பள்ளம் பகுதியில்அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளனர். மீன்பிடி சாதனங்களை கடலில் அள்ளி வீசிய தோடு வலைகளையும் அறுத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் குப்புசாமி என்ற மீனவர் படுகாய மடைந்துள்ளார். மேலும் 7 மீனவர்கள் காய மடைந்துள்ளனர். (மேலும்....)

ஆவணி 21, 2012

நிதி சேர் இரவு விருந்து

(இந்த நிகழ்வை 1989 மே மாதத்திற்கு முந்தைய காலகட்டம், 1987 இல் இலங்கை இந்திய ஒப்பத்தம், 1977ம் ஆண்டு இலங்கையின் பொதுத் தேர்தல் போன்ற காலகட்டங்களின் தமிழரின் தலைமை என்று தம்மை விழித்துக் கொண்டவர்களுடன் இணைத்துப் பார்த்தால் அதற்கு நாம் பொறுப்பாளிகள் இல்லை)

அன்பார்ந்த நண்பர்களே!

2012 செப்டெம்பர் 8 ஆம் நாள் கிழக்கு மாகாண அவைத் தேர்தல் நடைபெற உள்ளதைத் தாங்கள் அறிவீர்கள்.  இத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறப் பொருள் வலுவும் மனித வலுவும் தேவைப்படுவதாகக் களச் செய்திகள் கூறுகின்றன. அவற்றை வழங்கி நம்மால் ஆன உதவியைச் செய்வோம். அதற்காக நிதி சேர்க்கும் முகமாக வருகிற ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 26ம் திகதி 5:30 மாலை Metropolitan Banquet Hall (3840 Finch Avenue East Scarborough) இல்  ஒரு நிதி சேர் இரவு விருந்து நடாத்த இருக்கிறோம். இவ் விருந்தில் தவறாது கலந்து கொண்டு ஆதரவு தாரீர்! மண் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ததேகூ இன் கைகளை நாம் பலப்படுத்த வேண்டும். அரசியலுக்கு அப்பால் ததேகூ யை வெற்றிபெற வைக்க வேண்டிய இனநலம் சார்ந்த கடமை எமக்குண்டு! வெறும் கையால் முழம் போட முடியாது. பச்சைத் தண்ணீரில் பலகாரம் செய்ய முடியாது. இத்தேர்தலில் வெற்றி பெறுவதன் வாயிலாகக் கிழக்கு மாகாண மக்கள் தனது ஆட்சியை ஏற்றுத் தன்னோடு இருக்கின்றனர், தமிழ்மக்களுக்கு அரசியல் அடிப்படையிலான சிக்கல் ஏதும் இல்லை எனப் பன்னாட்டுச் சமூகத்துக்குக் காட்டலாம், தனது கைப்பொம்மையான ஒருவரை முதலமைச்சர் ஆக்கி அவரது ஒப்புதலோடு மாகாண அவைக்கு வழங்கப்பட்டுள்ள நிலம், காவல்துறை உள்ளிட்ட முதன்மையான அதிகாரங்களை மீளப்பெற்று விடலாம், அதன் பின்பு வலுவற்ற ஒரு மாகாணசபையைத் தமிழருக்குத் தீர்வாகக் காட்டலாம் எனச் சிறீலங்கா அரசு எண்ணுகிறது.  அரச தரப்பைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருமிடத்து தனது எண்ணத்தை மகிந்த அரசு நிறைவேற்றிவிடும் என்பதில் ஐயமில்லை. இதைத் தமிழராகிய நாம் அனுமதிக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். (மேலும்....)

ஆவணி 21, 2012

அனைவரும் சட்டம் அறிவோம் 

இன்று படித்தவர்களிடம் கூட சட்டம் பற்றிய அறிவு என்பது குறைவாகவே இருக்கிறது. இன்றுள்ள சமூக சூழ்நிலையில் நீதிமன்றம் செல்வதும், போலிஸ் ஸ்டேசனுக்கு செல்வதும் யாராலும் தவிர்க்கவே முடியாத ஒன்றாகும். நமக்கு அரசால், பக்கத்து வீட்டுகாரர்களால் , ஏன் சொந்த பந்தங்களால் கூட ( உயிரை போல் நேசித்த கணவன், மனைவியால் கூட ) எதாவது பிரச்னை ஏற்படவே செய்கிறது. எனக்கு சட்டம் தெரியாது அதனால் நான் இந்த சட்ட மீறலை செய்து விட்டேன் என்று யாரும் கூறவே முடியாது. ஏனெனில் இந்த நாட்டில் பிறந்த அல்லது வசிக்கும்  ஒவ்வொருவருக்கும் சட்டம் தெரிந்ததாகவே அனுமானிக்கப்படும். நம்மால் முழுமையான சட்ட நிபுணராக முடியாவிட்டாலும், நமக்கு அடிப்படையாக தேவைப்படகூடிய அளவிற்கு சட்ட அறிவை நாம் வளர்த்துக் கொள்ளவே வேண்டும்.  (மேலும்....)

ஆவணி 21, 2012

இணைந்து போராடுவோம்

சுவிட்சர்லாந்தில் வாழும், தமிழர்கள், சிங்களவர்களுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வையும், நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சென் காலன் நகரில் நடந்த நிகழ்வில், புலம்பெர்ந்த இலங்கையர் சங்கமும், சுவிஸ் மனித உரிமை ஸ்தாபனங்களும் ஒழுங்கு படுத்தி இருந்தன. இலங்கையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் மேம்படுத்துவது பற்றி பேசப் பட்டது. குறிப்பாக வட பகுதி தமிழர்களின் பிரதேசம், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, நிலங்கள் தனியாருக்கு விற்கப் படும் பிரச்சினை குறித்தும் அலசப் பட்டது. ஒருங்கிணைத்த வேலைத்திட்டத்திற்காக தெரிவான குழு, 18 ஆகஸ்ட் அன்று, தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.

ஆவணி 21, 2012

ஐ.நா. அங்கீகரித்த, "நாடு கடந்த க்மெர் ரூஜ் அரசாங்கம்"

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை, ஐ.நா. மன்றம் அங்கீகரித்து, சபையில் ஒரு ஆசனத்தையும் ஒதுக்கிக் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த சந்தர்ப்பத்தில், தமிழர்கள் பூமிக்கும் வானத்திற்கும் இடையில் துள்ளிக் குதித்து குதூகலிப்பார்கள். க்மெர் ரூஜ் இயக்கத்தின், "நாடுகடந்த கம்பூச்சிய அரசு", குறைந்தது பத்து வருடங்களாவது ஐ.நா. சபையில் அங்கம் வகித்தது. அதற்கு அமெரிக்காவும் பூரண ஆதரவு வழங்கியது. ஆனால், இன்று க்மெர் ரூஜின் நிலை என்ன? ஐ.நா. நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப் பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை என்பது, உலக மகா அயோக்கியர்களின் கூட்டணி என்பதை பலர் உணர்வதில்லை. ஏகாதிபத்திய நாடுகளின் கைப்பொம்மையாகவே ஐ.நா. செயற்பட்டு வந்துள்ளது.
(Kalaiyarasan Kalai)

ஆவணி 21, 2012

வதந்திகளைத் தடுத்து  நம்பிக்கையை வளர்த்திடுக!
குடிமக்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வாழ இந்தியாவின் அரசமைப்பு சாசனம் உரிமை அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஒரு மாநிலத்து மக்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்று பிழைப்புத் தேட முடியும் என்ற அளவில் ஒருமைப்பாடும் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. சமத்துவமற்ற சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலையில், ஒரு மாநில மக்கள் மற்றொரு மாநிலத் தில் சென்று தொழில்களிலும் வேலைகளிலும் கல்விப் பயிற்சிகளிலும் ஈடுபடுகிறபோது அந்நிய இடத்தில் இருப் பதாகக் கருதுவதில்லை. சொந்த நாட்டின் வேறொரு பகுதியில்தான் இருக்கிறோம் என்றே உணர்கிறார்கள். (மேலும்....)

ஆவணி 21, 2012

வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக வதந்தி  இணையதளங்கள் முடக்கம் தொடர்கிறது

பிறமாநிலங்களில் வசிக் கும் வடகிழக்கு மாநில மக் களிடம் பீதியை உண் டாக்கும் வகையில் பொய் யான தகவல்களை வெளி யிட்ட மேலும் 250 இணை யதளங்களை முடக்க மத் திய அரசு உத்தரவிட்டது. மக்களிடையே பீதி உணர்வுகளைக் கிளப்பி விடும் வகையில் சிதைக்கப் பட்ட படங்களையும், வீடி யோக் களையும் வெளி யிட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட இணைய தளங் களைத் தடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது வரை 130இணையதளங்கள் தடுக்கப்பட்டுள்ளன. மற்ற வைகள் விரைவில் தடுக்கப் படும் என்று மத்திய உள் துறை அமைச்சக அதிகாரி கள் கூறினர்.  சர்வதேச அமைப்பு களில் சர்ட்-இன் ஆய்வு முடிவு கள் குறித்து எழுப்புவது குறித்தும் அரசு ஆலோ சித்து வருகிறது. அண்மைக் காலங்களில் இந்தியா மீது சைபர் குற்றங்களை கிளப் பிவிடும் பெரும் முன்னு தாரணமாக அரசு இதை கருதுகிறது.
(மேலும்....)

ஆவணி 21, 2012

அசாஞ்சே கைதானால் கடும் விளைவுகள் ஏற்படும்  பிரிட்டனுக்கு ஈகுவடார் நட்பு நாடுகள் எச்சரிக்கை

பிரிட்டனில் உள்ள ஈகு வடார் தூதரகத்தில் தஞ்ச மடைந்துள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டன் காவல்துறை தூதரகத்திற் குள் நுழைந்து அத்துமீறி கைது செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரி டும் என ஈகுவடார் நட்பு நாடுகளின் கூட்டமைப்பு ‘அல்பா’ பிரிட்டனை எச் சரித்துள்ளது. அமெரிக்காவின் பல் வேறு சதித்திட்டங்கள் மற் றும் பல்வேறு அத்துமீறிய செயல்பாடுகளை விக்கி லீக்ஸ் நிறுவனம் தனது இணையதளத்தின் மூலம் உலகிற்கு அம்பலப்படுத்தி வருகிறது. இதனால் உலக அளவில் அமெரிக்காவின் உண்மை முகம் தெரிய வந்தி ருக்கிறது. இதனால் எரிச்ச லடைந்த அமெரிக்கா, எப் படியாவது அசாஞ்சேவை கைது செய்து அமெரிக்கா விற்கு கொண்டு வர வேண் டும் என பல்வேறு முயற்சி களை செய்து வருகிறது. (மேலும்....)

ஆவணி 21, 2012

அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த 2 படகுகள் திருமலை கடலில் வழிமறிப்பு

சட்டவிரோதமாக ஆழ்கடல் வழியாக இரண்டு வள்ளங்கள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 83 பேரை திருகோணமலை கடலில் கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை கடலில் கிழக்கு பகுதியில் சுமார் 15 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு படகுகளையும் நேற்றுக் காலை கடற்படையினர் வழிமறித்து கைது செய்தனர். முதலாவது படகில் 39 பேர் பயணித்தனர்.31 தமிழரும், 8 சிங்களவர்களும் இதில் இருந்ததாகவும் இவர்களுள் ஒரு பெண்ணும் 4 பிள்ளைகள் இருந் துள்ளனர்.  அடுத்த வள்ளத்தில் 35 தமிழர் களும் 6 சிங்களவர்களும், 3 முஸ்லிம்களுமாக ஒரு பெண் உட்பட 44 பேர் பயணித் துள்ளனர். நேற்று பிற்பகல் திரு§ காணமலை கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற் படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.‘காவந்தினி’, ‘பிரசன்ஷனிதுவ’ என்ற இந்த இரண்டு வள்ளங்களிலும் அதிகளவு பயணிகளை ஏற்றியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் நேற்றுவரை சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஆழ்கடல் வள்ளங்கள் 25ஐ கைப்பற்றி யுள்ளதுடன், இதன் மூலம் 1047 பேரின் உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளது.

ஆவணி 21, 2012

கிழக்கில் தேர்தலை பாதிக்கும் பாரிய வன்முறைகள் இல்லை - தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கபே

கிழக்கு மாகாணத்தில் ஒருசில தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளபோதும், தேர்தல் செயற்பாடுகளைப் பாதிக்கு மளவிற்கு எதுவித பாரிய வன்முறைச் சம்பவங்களும் அங்கு இதுவரை இடம்பெறவில்லையென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இரண்டு வன்முறைச் சம்பவங்களே பதிவாகியிருப்பதாக கபே அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பணிகளை அமைதியாக நடத்தக்கூடிய சூழ்நிலையே தற்பொழுது அங்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை விட இம்முறை கிழக்கு மாகாணத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது. ஆங்காங்கே ஒருசில வன்முறைச் சம்ப வங்கள் பதிவாகியுள்ளபோதும், பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் அங்கு இடம்பெறவில்லையென கீர்த்தி தென் னக்கோன் தெரிவித்தார். அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான தேர்தல் சுவரொட்டிகள், கட்டவுட்டுக்கள் என்பன 99 வீதம் அகற்றப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆவணி 21, 2012

மீண்டும்

யசூசி அக்காஷி இன்று இலங்கை விஜயம்

ஆறு நாள் உத்தி யோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அக்காஷி இன்று இலங்கை வருகிறார். இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தங்கியிருக்கும் அக்காஷி அரசாங்கத்தின் முக்கியப் பிரதிநிதிகள் ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் முக்கியஸ் தர்கள், சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.இதேவேளை, வட மாகாணத்தில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகளை கண்டறிவதற்கென இவர் வடக்குக்கு நேரில் விஜயம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்ப தாகவும் ஜப்பானிய தூதரகம் தெரிவித்தது. நாட்டில் முன்னெ டுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம், முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர் வாழ்வளித்தல், மோதல் இடம்பெற்ற பகுதிகளில் மீள்கட்டுமானப் பணிகள் முன்னெடுத்தல் ஆகிய அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு மத்தியில் அண்மையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை களை அமுல்படுத்துவது தொடர்பான தேசிய வேலைத் திட்டமொன்றும் வெளியாகியுள்ள நிலையில் ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் அக்காஷியின் இலங்கைக்கான விஜயம் பொருத்தமானதாக அமையுமென நம்புவதாக ஜப்பானிய தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு அக்காஷி இப்பதவியை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இவர் இன்று 22 வது தடவையாக இலங்கை வருகிறாரென்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி 20, 2012

''பெண்கள் தங்கள் உரிமையை இழக்கக் கூடாது.'' - போராடு்ம் வேதநாயகி

வேலூர் மாவட்டம் ராணிபேட்டையைச் சேர்ந்தவர் வேதநாயகி. கடந்த ஐந்து வருடத்துக்கும் மேலாக வேலூர் மக்களிடையே மதிக்கப்படும் ஒருவராக இருப்பவர். இவர் தலைமையில் இயங்கும் 'தென்றல் இயக்கம்’ பெண்களுக்காகப் பல வகையிலும் பாடுபட்டுவருகிறது.  வேலூரில் உள்ள பெரியார் பூங்காவில் ஒரு மாலை நேரத்தில் வேதநாயகியைச் சந்தித்தேன். ''பெண்ணியம் பற்றி பேசுபவர்களைப் பற்றி சமூகம் வித்தியாசமாக நினைப்பதை மாற்ற முடியவில்லை. பெண்ணியம் என்றால் ஆண்களைவிட உயர்வாக இருப்பது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  பெண்ணியம் என்பது ஆண்களுக்குச் சமமாக இருப்பது என்பது மட்டுமே: நம் நாட்டில் குழந்தைகள் முதல் திருமணமான பெண்கள் வரை எவ்வளவு பேர் ஆண்களிடம் சிக்கிச் சீரழிந்து இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியும். ஏன், இதை நானே அனுபவித்தேன். எனக்கு நான்கு அக்கா. இருவர் திருமணமாகி அவர்களுடைய கணவர்களிடம் பட்ட பாட்டை கண் முன்னே பார்த்து வளர்ந்தேன். அப்போது எனக்கு 10 வயது. அப்போதே எந்தக் காலத்திலும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது  என்று முடிவு செய்தேன். (மேலும்....)

ஆவணி 20, 2012

அமெரிக்க நாடுகள் அமைப்பில் அமெரிக்கா சங்கடங்களைச் சந்திக்கும்

வாஷிங்டனில் வரும் வெள்ளியன்று நடைபெற வுள்ள அமெரிக்க நாடுகள் அமைப்பின் வெளியுற வுத்துறை அமைச்சர்கள் கூட்டம் ஈகுவேடர் நாட்டுக் கும் பிரிட்டனுக்கும் இடை யில் நிலவிவரும் ராஜதந்திர உறவில் ஏற்பட்டுள்ள பூசல் குறித்து ஆழமாக விவாதிக் கும் என்று அமெரிக்க நாடு கள் அமைப்பு கருத்து தெரி வித்தது. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கேக்கு லண்டனில் உள்ள ஈகுவே டர் தூதரகத்தில் பதுங்கியி ருந்த போது அவருக்கு அரசியல் தஞ்சம் அளித்தது. இதனால் பிரிட்டனுக்கும் ஈகுவேடருக்கும் இடையில் பூசல் ஏற்பட்டது. லண்ட னில் தங்கியிருந்த அசாங்கே அமெரிக்க அரசின் பல ரகசியங்களை வெளியிட்டு வந்தார். (மேலும்....)

ஆவணி 20, 2012

ஈரோஸ் கட்சி அலுவலகம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

மட்டக்களப்பு, பூம்புகார் பகுதியில் உள்ள ஈரோஸ் கட்சி அலுவலகத்தின் மீது இன்று காலை பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரால் அதிகாலை 1.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆவணி 20, 2012

ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்புகள் 

(ந. முருகேசபாண்டியன்)

யாழ்ப்பாணம் பெண்கள் ஆய்வு வட்டம் சார் பில் வெளியான ‘சொல்லாத சேதிகள்’ தான் தமி ழில் வெளியான முதல் பெண் கவிதைத் தொகுப்பு. எட்டுப் பெண் கவிஞர்களின் இருபத்து மூன்று கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. அதே நூல் சிறிய திருத்தமுடன் 1987ஆம் ஆண்டு சிலிக்குயில் பதிப்பகத்தினரால் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் இடம் பெற்ற சிவரமணியும் செல்வியும் உலகிலிருந்து அகற்றப் படவில்லை. ஏனையோர் வெவ்வேறு இடங்க ளில் உறைந்துள்ளனர். சிங்கள ராணுவத்துடன் முரண்பட்டுப் போராடும் சூழலில், அகப் போராளி இயக்கத்தினருடன் முரண்பாடு நிற்கும் நிலையை ‘சொல்லாத சேதிகள்’ சொல்ல முயன்றுள்ளன. (மேலும்....)

ஆவணி 20, 2012

சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்

30 நாட்கள் கடலில் தத்தளித்த பேர் கடற்படையால் மீட்பு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக கடந்த ஜுலை 17 ஆம் திகதி புறப்பட்டுச் சென்று வள்ளம் பழுதடைந்த நிலையில் ஆழ் கடலில் நீர் ஆகாரமின்றி 30 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் 300 கடல் மைல் தொலைவில் அஷேன் புதா-2 என்ற ஆழ்கடல் வள்ளம் பழுதான நிலையில் இருப்பதாக கடற்படைக்கு கிடைத்த தகவலையடுத்து மீட்புப் பணிகளை கடற்படையினர் ஆரம்பித்தனர். கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி நீர்கொழும்பிலிருந்து புறப்பட்ட மேற்படி வள்ளத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 19 தமிழர்களும் 11 சிங்களவர்களும் பயணித்துள்ளனர். (மேலும்....)

ஆவணி 20, 2012

சீன மாணவி உலக அழகியாக தேர்வு

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தொங்க்செங் என்னுமடத்திலுள்ள உடற்பயிற்சி மைதான அரங்கில் உலக அழகி போட்டி நடைபெற்றது. உலகிலுள்ள பல நாட்டு அழகிகள் கலந்து கொண்ட இப் போட்டியில் இந்தியா சார்பாக வண்யா மிஸ்ரா என்ற அழகியும் கலந்து கொண்டார். பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் இறுதியாக சீன அழகி வெண் சியா யு தேர்வு பெற்றார். பலவண்ண விளக்குகள் மின்னிய அரங்கில் கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுவேலா அழகி இவியன் சார்கோஸ் தனது தங்க கிரீடத்தை சீனா அழகி வெண் சியா யுவுக்கு சூட்டி மகிழ்ந்தார். இசை பயிலும் மாணவியான 23 வயது உலக அழகிய வெண் சியா யு தான் ஒரு இசை ஆசிரியையாக வர விரும்புவதாக அப்போது கூறினார். வேல்ஸ் அழகியான சோபி மோல்ஸ் இரண்டாவதாகவும், ஆஸ்திரேலியா நாட்டின் அழகி ஜெசிக்கா கஹவாட்டி மூன்றாவது அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டு பட்டங்கள் சூட்டப்பட்டனர்.

ஆவணி 20, 2012

வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட சடலங்கள் கொலையா? தற்கொலையா?

கொழும்பு வெள்ளவ த்தை இராமகிருஷ்ண டெரஸ் ஒழுங்கையி லுள்ள வீடொன்றிலிரு ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கொழு ம்பு தேசிய வைத்திய சாலையில் நேற்று நடக்கவிருந்த பிரேத பரிசோதனைகள் இன் றைய திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட தனால் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து எதையும் திட்டவட்டமாக கூற முடியாதிருப்பதாக பொலிஸ் பேச்சாளரும் வெள்ளவத்தை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரும் கூறுகின்றனர். சம்பவத்தில் ஹட்டன் கொட்டகலைப் பகுதியைச் சேர்ந்த தாயும் தந்தையும் மகளுமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் சங்கிலி குமாரசாமி (56), அவரது மனைவி பூபவதி (54), மற்றும் அவர்களின் மகளான அனித பிரியா (25) என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர். (மேலும்....)

ஆவணி 20, 2012

முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சி?

தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்க தமிழ்க் கூட்டமைப்பு நாடகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிய¨ மக்கப் போகிறார்களாம். இதனைத் தமிழ் மக்கள் நம்ப வேண்டுமாம். சம்பந்தனின் இந்நாடகத்தை பகுத்தறிவுள்ள எந்தத் தமிழனும் ஏற்கமாட்டான். இது ஒரு பகற் கனவு. இவ்வாறு கூறுகிறார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன். கிழக்கு மாகாண சபைக்கான அம்பாறை மாவட்ட ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் சோ. புஸ்பராசாவை ஆதரித்து சொறிக்கல் முனையில் அவரது பணிமனை முன்றலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காரைதீவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது, 2008 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலை இந்த த. தே. கூட்டமைப்பு புறக்கணித்தது. இதற்கு அப்போது சம்பந்தர் கூறியது, கிழக்கு மாகாண சபை என்று ஒன்றில்லை. (மேலும்....)

ஆவணி 20, 2012

இனப்பிரச்சினைக்கு வெளிநாட்டில் அல்லது இந்தியாவில் அல்லது ஐ.நாவிலிருந்து ஆலோசனைகள் அவசியமில்லை

இலங்கை மக்களே ஐக்கியமாக தீர்வொன்றை காணவேண்டும்

(டாக்டர் சுப்ரமணியம் சுவாமி)

ந்த யோசனைகளின் படி கிராம மட்டத்திலான 3,000 உள்ளூராட்சி மன்றங்களை ஏற்படுத்துதல் அவற்றுடன் மாவட்ட, மாகாண அடிப்படையில் இருந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்து பாராளுமன்றத்தில் 2வது பேரவைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல் போன்ற விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. இந்த 2வது சபையில் எல்லாமாக 75 அங்கத்தவர்கள் இருப்பார்கள் என்றும் இதில் 50 பேரை 25 மாவட்ட சபைகள் தெரிவு செய்யும் என்றும் எஞ்சிய 25 இடத்திற்கு ஜனாதிபதி உறுப்பினர்களை நியமிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும் ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தில் தமிழர்களுக்கு எதிரான கொள்கையை தீவிரமாகக் கடைப்பிடித்த சிறில் மத்தியூ இந்த யோசனையை பகிரங்கமாக எதிர்த்தார். (மேலும்....)

ஆவணி 19, 2012

ஆவணி 19, 2012

பேராசிரியர் கைலாசபதியின் மகள்

அமெரிக்க நகரசபையின் உறுப்பினராக சுமங்களா!

இலங்கையின் புகழ் பூத்த பேரா சிரியர் கைலா சபதி யின் புதல்வி சுமங்களா கைலாசபதி அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள ஆன்ஆபர் நகர சபை உறுப்பினராக தெரிவாகி உள்ளார். ஜனநாயக கட்சியின் வேட் பாளராக போட்டியிட்ட இவர் கடந்த 7 ஆம் திகதி சக வேட்பாளரை வாக்கெடுப்பில் தோற்கடித்தார். சுமிக்கு வயது 45. இவர் கடந்த 19 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார். ஆன்ஆபரில் கடந்த 19 வருங்களாக வாழ்கின்றார். இவர் பொருளியலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் தனித் தனியாக இளமாணி பட்டங்கள் பெற்றவர். அரசியல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் படிப்புக்கள் படித்தவர். கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராக 10 வருடங்கள் கடமை ஆற்றி உள்ளார். அங்கீகாரம் பெற்ற கணக்காளராக நிறுவனம் ஒன்றில் கடமை ஆற்றி வருகின்றார். இவர் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் வெற்றி ஈட்டி இருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆகும்.

ஆவணி 19, 2012

புலிகள் காலத்தில் ஒன்று, மடிந்த பின்னர் வேறொன்று

சுயமாகக்கூட சிந்திக்க தெரியாதவர்கள் அரசியலில்! சம்பந்தர் பயந்த கோழ - சந்திரகாந்தன்

2008இல் பிரிக்கப்பட்ட கிழக்கில் போட்டியிடுவது தமிழர்களுக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்று சொல்லிவிட்டு இன்று புலித் தலைமை மடிந்தபின்னர் என்ன கூறுகிறார்? அதிகாரம் மிக்க முதலமைச்சரையும் கிழக்கு மாகாணசபையையும் உருவாக்க காலத்தின் கட்டாயம் கருதி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்களாம்...!அப்படி என்றால் 2008 இல் எம் மக்களுக்கு அதிகாரங்களும் தீர்வுகளும் தேவையான விடயங் களாக இருக்கவில்லையா என்று தமிழ் மக்கள் விடுத லைப்புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களுக்குப் பணியாற்றவென்றே நாம் புறப்பட்டோம். நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம் ஆனால் சம்பந்தர் மிகவும் பயந்த ஒரு கோழை. நான் ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால் சந்திரிகா கொண்டு வந்த தீர்வுப் பொதியில் தமிழர்களுக்கு மிகவும் வலுவானதும் நியாயமானதுமான பல்வேறுபட்ட அதிகாரங்கள் மலிந்து காணப்பட்டன என்று சம்பந்தர் மிக அண் மையில் ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார். (மேலும்....)

ஆவணி 19, 2012

டெசோவின் தீர்மானங்களில்தனிநாடு குறித்து ௭துவுமில்லை - விக்கிரமபாகு

டெசோ மாநாட்டு தீர்மானங்களில் தனி நாடு தொடர்பாக ௭துவும் இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்கள் சகல வசதிகளுடன் சொந்த இடங் களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும் போன்ற விடயங்களே அத்தீர்மானங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தன என கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தத்தில் இத்தீர்மானங்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைப் போலவே இருந்தன. இலங்கை அரசு நியமித்த கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இந்த 14 பிரேரணைகளை விடச்சிறந்தவை. இதை நான் டெசோ மாநாடு நடைபெற்ற தினத்தன்று காலை இடம்பெற்ற பிரதிநிதிகளின் கருத்தரங்கில் விளக்கிக் கூறினேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளன. இதையும் நான் அந்தக் கருத்தரங்கில் தெரிவித்தேன். இலங்கையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தமிழ் மக்களுக்கு ௭துவும் செய்யமாட்டார்கள் ௭ன்ற நிலைப்பாடே இந்நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர்கள் மத்தியில் காணப்பட்டது. இம்மாநாட்டில் நான் 13 ஆவது சட்டத்திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் ௭ன வலியுறுத்தினேன் ௭ன்றும் கூறினார்.

ஆவணி 19, 2012

Rajani

Rajasingham was brutally gunned down at Thirunelvely, as she was cycling back home from the Jaffna University. She was Professor of Anatomy at the Jaffna medical faculty. The 35 year old mother of two daughters was also a human rights activist, feminist, critic of narrow nationalism and opponent of irresponsible militarism. Her husband,Dayapala Thiranagama in a recent article on Rajini has referred to the manner in which she was killed. Here is the relevant excerpt; “The armed confrontation between the Tamil Tigers and the IPKF was at its peak at the time and no dissent was tolerated. She had had links with the LTTE and had treated injured Tamil militants before at the inception of Tamil tiger militancy. Then they were only a small band of armed men. Times had changed. Her assassins had been waiting for her on her way home after work at the Medical Faculty and she was gunned down near her home in Kokuvil, Jaffna on 21st September 1989 about 4.00pm.”(more....)

ஆவணி 19, 2012

ஆவணி 19, 2012

ஐ.நா மனித உரிமை அதிகாரிகள் குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதிகாரிகள் குழு அடுத்த மாதம் 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளை இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை நேரில் பார்வையிடுவதற்கு அனுமதிக்க முடியாது ௭ன்று அரசாங்கம் இதுவரை கூறிவந்தது. ஆனால் தற்போது, அரசாங்கம் அதற்கு அனுமதியை வழங்கியுள்ள நிலையிலேயே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு அடுத்தமாதம் கொழும்பு வரவுள்ளது. இந்தக் குழுவினர் இலங்கையின் வடக்குப் பகுதிகளுக்கு மட்டுமன்றி, தென்பகுதிக்கும் சென்று அங்குள்ள மனித உரிமைகள் நிலை குறித்து மதிப்பீடு செய்யவுள்ளனர் ௭னவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆவணி 19, 2012

தாய், தந்தை, மகள் மூவரும் வெள்ளவத்தையில் சடலமாக மீட்பு

கொழும்பு வெள்ளவத்தையில் தாய்,தந்தை,மகள் மூவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன சற்றுமுன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். வெள்ளவத்தை இராமகிருஷ்ணா வீதியில் உள்ள வீடொன்றிலேயே இவர்களுடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்டார்களா, தற்கொலை செய்துகொண்டார்களா போன்ற விபரங்கள் இதுவரை அறியக்கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 19, 2012

ஆவணி 19, 2012

TNA யுடன் மு.கா இணைவது புலிகளுடன் கூட்டுக்கு சமம்!

புலிகளின் குரலாக இன்றும் செயற்பட்டுவருவதாக முஸ்லிம் மக்களால் நம்பப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள மறைமுகமான இரகசிய உடன் பாடானது முஸ்லிம் மக்களிடையே பாரிய எதிர்ப்பலை யையும் அதிருப்தியையும் உருவாக் கியுள்ளது. இது புலம் பெயர் தமிழர்களினதும், புலி ஆதரவாளர்களினதும் நிகழ்ச்சித் திட்டத் திற்கமையவுள்ள சூழ்ச்சிக்கு வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களை அடகு வைப்பதற்குச் சமனாகும். வடக்கையும் கிழக் கையும் இணைக்கும் புலி ஆதரவு சர்வதேச சதித்திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் துணை போவதுடன் முஸ்லிம்களுக்கு துரோகமிழைக்கும் நயவஞ்சகச் செயலுமாகும். (மேலும்....)

ஆவணி 19, 2012

அதிகாரம் கொண்ட ஆட்சியும் ஆளுமை மிக்க உறுப்பினர்களும்

தமிழ்பேசும் மக்களைப் பொறுத்தவரையில் கிழக்கு மற்றும் சபரகமுவ மாகாணம் உட்பட தேர்தல் நடைபெறும் மூன்று மாகாணங்களிலும் தமிழ்பேசும் கட்சிகள் சில போட்டியிட்டாலும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்பேசும் வேட்பாளர்களையே மக்கள் நிச்சயம் ஆதரிப்பர். கிழக்கு மாகாணசபையை யார் கைப்பற்றுவது என்பது குறித்தே பலரதும் கவனம் இப்போது சென்றுள்ளது. இம்மாகாண சபையானது இம்முறையும் ஆளுங்கட்சி வசம்தான் என்பது உறுதி என்றாகி விட்டது. தெற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் அரசாங்கத்தின் அசுர வேகத்திலான மாகாண அபிவிருத்தியும், அக்கட்சியின் தெரிவாக இடம்பிடித்துள்ள திறமையுள்ள வேட்பாளர் களும் சாட்சியாக அமைந்துள்ளனர். முன்னாள் மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின் கட்சி உட்பட அமைச்சர்களான அதாவுல்லா, ரிசாத் பதியுதீன் ஆகியோரின் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் களமிறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் இத்தேர்தலை ஒரு அரசியல் கண்ணோட்டத்தில் பார்வையிடாது மக்களுக்குச் சேவை செய்யும் ஒன்றாக நோக்குகின்றனர். (மேலும்....)

ஆவணி 19, 2012

யாழ்தேவியும் இந்தியாவும்

வடக்கு கிழக்கில் மக்கள் திரும்பாத கிராமங்கள் இருக்கின்றன. அதைப்போலவே திறக்கப்படாது மூடுண்ட வீதிகளும் இன்னமும் இருக்கின்றன. வாழ்க்கை மூடுண்ட வரலாற்றுச் சோகத்தில் வாழும் மக்களுக்கு வாழ்க்கை திரும்புதல் என்பது உண்மையில் எப்படியிருக்கும்? என்றே கேட்கத் தோன்றுகிறது. தமிழ் மக்களின் வாழ்க்கை திரும்புதல் என்பது எப்படியிருக்கும் என்பதை மெய்யான புரிதலுடன் நேர்மையாக அணுகுவது முக்கியமானதாகும். இந்தியா தமிழர்களுக்காக அக்கறையோடு இருக்கிறது! இந்தியா தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும்!! இந்தியா யாழ் தேவி ரயிலை திருப்பி அனுப்பும்!! என்கிற அறிக்கைகள் இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவைக் காப்பாற்றுவதைக் குறித்து முயற்சிக்கிறதே தவிர அது தமிழர்களின் வாழ்வை திருப்பிக் கொடுக்குமா என்பதே முக்கியமானது. (மேலும்....)

ஆவணி 19, 2012

இலங்கைக்கு தீங்கு ஏற்படுவதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது - இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

தமிழ் நாட்டின் மூலம் இலங்கைக்கு தீங்கு ஏற்பட இந்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாது. இலங்கைத் தீவை பாதுகாப்பதற்கு இந்தியா இருக்கிறது என்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனதாக் கட்சியின் தலைவருமான டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கூறினார். தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எல்.டி.டி.ஈ யினருக்கு ஆதரவாக செயல்படுவது பற்றி சுப்ரமணியன் சுவாமி எடுத்துரைக்கையில் இலங்கை இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்தக் கூடாது. அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என்பதால் இலங்கையர்கள் அவர்களை அசட்டை செய்யப் பழகிக்கொள்ள வேண்டுமென்று கூறினார். (மேலும்....)

ஆவணி 19, 2012

சிரியா

அஸாத்தின் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி?

ஏறத்தாழ 17 மாதங்களுக்கு முன்னர் பஷீர் அல் அஸாத்தின் அரசுக் கெதிரான போராட்டங்கள் சிரியாவில் ஆரம்பித்திலி ருந்து, தினந்தோறும் செய்திகளை ஆக்கிரமித்தது சிரியா. ஒவ்வொரு நாளும் சிரியா பற்றிய செய்திகளை வாசிப்பவர்களுக்கும் இது எதில் போய் முடியப்போகின்றது என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியாது. சிரிய மோதல்களில் வெளித்தலையீடுகள் அவசியம் என்று மேற்குலக ஊடகங்கள் வலியுறுத்தி வருகின்ற வேளையில், வெளித் தலையீடுகள் சிரியர்களை பரம்பரை பரம்பரையாக இருண்டயுகத்துக்குள் தள்ளி விடும் என்று சர்வதேச அவதானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள் யுத்தமாக வெடிக்குமானால், அது சிரியாவுக்கு அப்பாலும் பரவும் ஆபத்திருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. (மேலும்....)

ஆவணி 19, 2012

துப்பாக்கிச் சூட்டில் 36 பேர் பலி

தென்ஆப்ரிக்க சுரங்க நிர்வாகம் தொழிற் சங்கத்துடன் பேச்சுவார்த்தை!

சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய சுரங்க தொழிலாளர்கள் மீது போலீசார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 36 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் ஆப்ரிக்காவின் ரஸ்டன்பர்க் அருகே உள்ளது மரிகானா. இங்கு விலை உயர்ந்த பிளாட்டினம் சுரங்கம் உள்ளது. உலகிலேயே இந்த சுரங்கம் மிக பெரியது. இது லண்டனை சேர்ந்த லோன்மின் நிறுவனத்துக்கு சொந்தமானது. சுரங்கத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர். கடினமான வேலை இருந்தும் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.4000தான். அத்துடன் சுரங்கத்தில் விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளருக்கு சரியான இழப்பீடும் கிடைப்பதில்லை. இந்நிலையில் 3 மடங்கு சம்பள உயர்வு கேட்டு கடந்த 10ம் தேதி முதல் தொழிலாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். (மேலும்....)

ஆவணி 18, 2012

"கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் ௭மக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம்"

ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு அதிக பட்ச அதிகாரத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வை வழங்குமாறு வலியு­றுத்தப்­பட்டுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை வழங்க விரும்ப­வில்லை. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ௭டுக்கும் முடிவு சர்வதேச சமூகத்தின் ௭திர்பார்ப்பை பல­வீனப்படுத்துவதாக அமைந்து விடாமல் பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடவுளினால் ௭மக்கு தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம். ௭ன தமி­ழ்த் தேசிய கூட்ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரிவித்துள்ளார்.  (மேலும்....)

ஆவணி 18, 2012

சென்னையிலிருந்தும் வெளியேறும் வட கிழக்கு மாநிலத்தவர்கள்..!

தாக்குதல் பீதி காரணமாக பெங்களூர்,ஹைதராபாத்,மும்பை உள்ளிட்ட  நகரங்களிலிருந்து மட்டுமல்லாது சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள்  வெளியேறி வருகின்றனர்.  அசாமில் வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களுக்கும்,பழங்குடியினத்தவர்களுக்கும்  இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது,  ஆகஸ்ட் 20-ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று   மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று முன்தினம் திடீரென  பரவியது. எஸ்.எம்.எஸ், இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டர்   போன்றவை மூலம் இந்த வதந்தி வேகமாக பரவியது. இதனால் பீதியடைந்த வடகிழக்கு மாநிலத்தவர்கள், உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்  என்று தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்காக தங்கள் உடைமைகளுடன் ஒரே   நேரத்தில் பெங்களூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. (மேலும்....)

ஆவணி 18, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 57 பேர் கைது

சட்டவிரோதமாக ஆழ்கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 57 பேரை கடற்படையினர் நேற்று முன்தினம் மாலை புல்மோட்டை கடலில் கைது செய்துள்ளனர். புல்மோட்டை கடலில் சுமார் 40 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த ஆழ்கடல் வள்ளமொன்றை கடற்படை படகுகள் சுற்றிவளைத்த போதே இவர்கள் 57 பேரும் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். 9 பிள்ளைகளும் 8 பெண்களுமாக 52 தமிழர்களும் 5 சிங்களவர்களும் இதில் பயணித்துக் கொண்டிருந்ததாக அவர் மேலும் தெரி வித்தார். திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்து வரப்பட்ட 57 பேரும் ஆரம் கட்ட விசாரணைகளின் பின்னர் நேற்று இரகசிய பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்ப டைக்கப்பட்டதாக கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

ஆவணி 18, 2012

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில்ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக  மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின்கூறப்பட்டுள்ளது. அதில்,  2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்களுக்கான நிலக்கரி ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எஸ்ஸார் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் சுரங்க உரிமங்கள் பெற்றதாகவும், இதற்கு சரியான ஏல நடைமுறைகள் கடைப்பிடிக்காததால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமான கோல் இந்தியா நிறுவனத்திற்கு 116 மில்லியன் டன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனமான சாசன் மின் உற்பத்தி நிறுவனத்திற்கு கூடுதலாக 3 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும்,  ரிலையன்ஸ் நிறுவனம் 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்திருப்பதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆவணி 18, 2012

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு திஸ்ஸ விதாரணவிடம் அறிக்கை கையளிப்பு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு, கண்டி எர்ல்ஸ் ரிஜென்சி ஹோட்டலில் இன்று நடத்திய சர்வதேச மாநாடு ஒன்றில் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்களிடம் 'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களது சமாதானம், பாதுகாப்பு ,அபிவிருத்தி தொடர்பாக இலங்கைப் பெண்களுக்கான நிகழ்ச்சித் திட்டம்" என்ற ஓர் அறிக்கையை கையளித்தது. இங்கு உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்ததாவது, இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மிகப் பொருத்தமாக உள்ளன. இதனை அமுல் படுத்துவதில் நாம் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக நகரம் முதல் கிராமம் வரை அதிகாரப் பகிர்வு முழுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும். இதற்கு பாரிய நிதி ஒதுக்கப்படுதல் வேண்டும். அடுத்ததாக, பல் இன சமூகம் வாழும் எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலும் சமூகங்களுக்கிடையிலும் புரிந்துணர்வையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பினால் மட்டுமே பெண்களது அபிவிருத்தியைப் பூரணமாக முன்னெடுக்க முடியும். (மேலும்....)

ஆவணி 18, 2012

வடக்கின் வசந்தம் வெற்றிகரமாக முன்னெடுக்க

இன, மத, குல பேதமின்றி சகலரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்

இன, மத, குல பேதமின்றி ஒரே அரசாங்கம் என்ற ரீதியில் வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல சகலரும் பூரண ஆதரவு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அபிவிருத்தியின் மூலம் வடக்கு கட்டியெழுப்பப்பட்டு சகல மக்களும் சந்தோசமாக வாழவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். அதனை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரச ஊழியர்களும் உதவ வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கான மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டம் நேற்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வவுனியா, மன்னார் மாவட்டப் பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களும் ஒன்றாக இணைந்து வாழ்கின்றனர். சகல மக்களுக்கும் ஒரே விதமான வசதிகள் அரசாங்கத்தால் சமமாகப் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எத்தகைய வேறுபாட்டுக்கும் இடமில்லை.

ஆவணி 17, 2012

நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கும் தமது பங்களிப்புத் தொடரும் - அசோக் கே.காந்தா

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைத் துரிதமாக செயல்படுத்துமாறு இலங்கை அரசை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான தனது பங்களிப்புத் தொடரும் எனவும் அது அறிவித்துள்ளது. இந்திய சுதந்திர தினத்தையொட்டி கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைத் துரிதமாகச் செயற்படுத்துவதானது தேசிய நல்லிணக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் செயற்பாட்டின் முன்னோக்கிய பாதையில் மிகப் பெரிய படிக்கல்லாக அமையும். இனப்பிரச்சினைக்குக் காலதாமதமின்றி அரசியல் தீர்வொன்று காணப்படும் முயற்சியில் இந்தியா தொடர்ந்தும் ஆதரவளித்துவரும். அத்துடன் சமத்துவமான வாழ்வியல், நீதி, சுயகௌரவம் மற்றும் சகல பிரஜைகளுக்குமான மதிப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் முன் முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும். ஆயுத மோதலுக்கு முடிவு கட்டப்பட்டதானது இலங்கையர்கள் அனைவருக்குமான சிறந்ததொரு எதிர்காலத்;தைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் விடயத்தில் குறிப்பிட்டளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

ஆவணி 17, 2012

தன்மானத்தை இழக்காத ஈரான்!

பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா வழங்க முன்வந்த நிவாரண உதவியை ஏற்க முடியாது என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரானில், தப்ரிஸ் நகரில், கடந்த 11ம் தேதி, இரண்டு முறை பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதில், 306 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தால் பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமெரிக்க அரசு, நிவாரண உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக அறிவித்தது. தற்போது இதுகுறித்து, ஈரான் உள்துறை அமைச்சர் ஹசன் கடாமி குறிப்பிடுகையில், "பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா நல்லெண்ணத்துடன் உதவுவதாக தெரியவில்லை. தற்போது, எங்களுக்கு மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. அமெரிக்கா உண்மையில் உதவுவதாக நினைத்தால், மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்' என்றார். மேலும் ஜேர்மனி, தாய்வான்ஆகிய நாடுகளிடமிருந்தான உதவிகளையும் ஈரான் ஏற்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் கட்டார், பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வழங்கிய உதவிகளை ஈரான் ஏற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. ஈரான் அணுச்செறிவாக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க உட்பட பல நாடுகள் அதன்மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

ஆவணி 17, 2012

நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகள் மட்டுமல்ல எவர் வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் நாயகம் நவநீதம்பிள்ளையினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிநிதிகள் மட்டுமல்ல எவர்வேண்டுமானாலும், இலங்கைக்கு வரலாம். எவருக்கும் எதுவித தடையுமில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார். குறிப்பாக கடந்த காலங்களில் இலங்கை தொடர்பாக தவறான கருத்துக்களை கொண்டிருந்தார்கள். இலங்கைக்கு எதிராக செயற்பட்டவர்கள், வாக்களித்தவர்கள் இலங்கைக்கு வருவார்களேயானால் அவர்களை நாம் வரவேற்கிறோம். அப்போது அவர்களுக்கு இங்குள்ள உண்மை நிலையை நேரடியாக கண்டறிய முடியும். கடந்த காலங்களில் சிலரை நாம் அனுமதிக்க வில்லை. அப்போது இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளின், மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடையாத நிலையில் இருந்தன. மிதிவெடிகள் அச்சுறுத்தல்களும் இருந்தன.

ஆவணி 17, 2012

கணினிக் கதிர்-கணினியையும், மனிதனையும் வேறுபடுத்தும் ‘கேப்ட்சா’

(எம். கண்ணன், என். ராஜேந்திரன்)

இணையவழியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும்போதும், இணைய வங்கிக் கணக்கு, புதிய மின்னஞ்சல் சேவையைப் பெறப் பதியும்போதும் கலைந்த நிலையில் வளைந்தும் நெளிந்தும் எழுத்துக்கள் சிறு படமாகக் கொடுக்கப்பட்டு அதனை சரியாக பூர்த்தி செய்யும்படிக் கேட்கப்படும். இந்த எழுத்துக்கள் அமைந்த படம்தான் கேப்ட்சா(CAPTCHA) வாகும். இது எதற்கு? இதனால் என்ன நன்மை? என்று கேள்வி தோன்றும். இந்த கேப்ட்சா அமைப்பு இணையக் கணக்குகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும். (மேலும்....)

 

ஆவணி 17, 2012

SEPTEMBER 15, 2012

SATURDAY

5:00PM

UNIVERSITY OF WATERLOO

HUMANITIES THEATER

 FREE ADMISSION

Naathaswaram & Thavil, Classical Dances, Cine Dances, Drama, Classical Music,

Fashion Show, Multicultural Dances

& Music Band etc..

 Come with your Family and Friends 

and enjoy the fun filled evening with our cultural Flavors 

Administration

Thamil Heritage School of Waterloo Region & Guelph

 "WE LOVE OUR MOTHER LAND and MOTHER TONGUE"

ஆவணி 17, 2012

வாழ்க சுதந்திரம்!  வாழ்க நிரந்தரம்! 

இந்தியத்திருநாடு 66வது சுதந்திரத் திருநா ளை பெருமகிழ்வுடன் இன்று கொண்டாடுகிறது. நம் தாய்த்திருநாட்டின் மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகள் ஆயிரமாயிரம். சிறைச்சாலை சித்ர வதை, அடக்குமுறைகளை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டோர் லட்சோபலட்சம். அவர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம், அவர்களது லட்சியத்தை முழுமையாக நிறை வேற்ற சூளுரைப்போம். சும்மா கிடைத்துவிடவில்லை இந்த சுதந் திரம். மகாகவி பாரதி பாடியதுபோல, கண்ணீர் விட்டு அல்லவோ வளர்த்தோம் சுதந்திரப்பயிரை. இந்திய மக்கள் அனைவரும் சாதி, மதம், இனம், மொழி, நிறம் என அனைத்து வேற்றுமைகளையும் மறந்து ஒற்றுமையாக போராடியதன் காரணமாகவே இந்திய விடுதலை சாத்தியமாயிற்று. அத்தகைய மகத்தான மக்கள் ஒற்றுமையை இப்போதும் முன்னெடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. (மேலும்....)

ஆவணி 17, 2012

13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இலங்கை புதிதாக இராஜதந்திர உறவு

பதின்மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் ஊடகத் துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 13 நாடுகளுடன் புதிதாக உறவுகளை ஏற்படுத்தும் பொருட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 33 இலத்தீன் அமெரிக்க நாடுகளில் 20 நாடுகளுடன் இலங்கை ஏற்கனவே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. உறவுகள் ஏற்படுத்தப்படாத புதிய நாடுகளுடனேயே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துகின்றன. கெளதமாலா, சூரினேம், பெலிசி, ஹொன்டுராஸ், நிக்கரகுவா, அன்றிடுவா என்ட் பார்புடா, பார்படோஸ், டொமினிக்கா, கிரொடா, ஹெய்ட்டி சென்ட் கிற்ஸ் என்ட் நேவஸ், சென்ட் லூசியா மற்றும் சென்ட் வின்சன்ட் என்ட் த கிரெநெடைன்ஸ் ஆகிய 13 நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஐரேப்பிய நாடுகளினது காலனித்துவ நாடுகளாக இருந்த இலத்தீன் அமெரிக்க நாடுகள் யாவும் தற்போது தன்னிறைவை நோக்கி முன்னேறுகின்றன.

ஆவணி 17, 2012

தீண்டிய தீ

(மேலாண்மை பொன்னுச்சாமி)

அப்போது நான் மனதளவில் திமுக ஆதரவாளன். தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா சென்னை மாநகரில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை நிறைவேற்றியதையும், தனியார் முதலாளி களின் கைவசமிருந்து பேருந்துகளை அரசுடமையாக்கியதையும் நினைத்து நினைத்துக் கொண்டாடிக் கொண்டிருந் தேன். மேலாண்மறைநாடு கிராமத்தில் என் கடையின் கூரைத் தாழ்வாரத்தில் வந்தவர்கள் போனவர்களிடமெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பேன். அப்போது விருதுநகர் கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த தோழர் ஆர்.பெரியசாமி சனி, ஞாயிறுகளில் ஊர் வருவார். எனது பக்கத்துவீட்டுக்காரர். கையில் கொண்டு வருகிற தீக்கதிர் பத்திரிகையை விரித்துப்படிப்பார், என் கடைத்தாழ்வாரத்தில் உட்கார்ந்து. ஆர் வப்பெருக்குடன், உற்சாகத்துள்ளலுடன் நான் செய்கிற திமுக பரப்புரையை பார்ப் பார். கவனிப்பார். தற்செயலாக போட்டு விட்டுப் போகிற பாவனையில் தீக்கதிர் பத்திரிகையை கடைக்குள் போட்டு விட்டுப் போவார். (மேலும்....)

ஆவணி 17, 2012

கையூட்டு தருவதற்கு தனி கருவூலம்

(காண்டீபன்)

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் தாலுகாவில் மையம் கொண்ட கிரானைட் ஊழல், மோசடி என்ற புயல் இப்பொழுது மொத்த தமிழகம் முழுவதும் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. இயற்கையின் சீற்றத்தால் சில சம யங்களில் பூமிப்பந்தில் இடமாற்றங்கள் நிகழ்வதுண்டு. அதனால் அந்த இடங்கள் வரைபடத்தில்காணாமல்போவதும்உண்டு; மாற்றியமைக்கப்படுவதும் உண்டு. அதுபோலத்தான் மேலூர் தாலுகா வில் ஏராளமான கண்மாய்களும், கால் வாய்களும் காணாமல் போய்விட்டன. முல்லைப் பெரியாறு பாசன வசதியால் கரும்பும், வாழையும், நெல்லும் நிரந்தரமாக சூழ்கொண்டிருந்த இப்பூமி இப்பொழுது வறண்ட பாலைவனமாக காட்சியளிக் கிறது.  மேலூர் தாலுகா முழுவதுமிருந்து சிறிய, பெரிய மலைகள் எல்லாம் சின்னா பின்னமாக்கப் பட்டுவிட்டன. 500 முதல் 600 அடி ஆழத்திற்கு பூமியை வெட்டிச் சிதைத்து கிரானைட் கற்களை வெட்டி யெடுத்திருக்கிறார்கள். வெட்டி எடுத்த தில், பணத்திற்கு ஆனது போக மீதியைப் போட்டு நீர்வரத்து மிக்க கண்மாய் களையும் மூடிவிட்டார்கள். (மேலும்....)

ஆவணி 17, 2012

இந்தியா எங்கள் எதிரியல்ல: சீனா அறிவிப்பு

இந்தியாவும் சீனாவும் நட் புறவு நாடுகளே தவிர எதிரி நாடுகள் அல்ல என்று சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ப்யூ-இங் கூறினார். நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப் போது அங்குள்ள தலைவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சீனா திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த காலங்களில் இரு நாட்டு தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் வலு வான முன்னேற்றத்தை நாங்கள் கண்டுள்ளோம். தெற்கு ஆசிய நாடுகள் குறித்த சீனாவின் கொள்கைகள் இந்தி யாவின் நேச நாடுகளான நேபா ளம் மற்றும் பூடான் உள்ளிட்ட அனைத்து சார்க் நாடுகளின் நலனை பாதிக்காத வண்ணம் இருந்து வருகின்றன. இது ஆசியப் பகுதியில் பொதுவான வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. தென் ஆசியப்பகுதியில், வலு வான முன்னேற்றத்தை காணும் நோக்கில் சீனா, இந்தியாவுடன் தனது ஒத்துழைப்பை விரிவு படுத்தியுள்ளது. அதுமட்டுமில் லாமல் அனைத்து சார்க் நாடு களுடனும் இணைந்து செயல் பட சீனா தனது முழுமையான ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தென் கிழக்கு ஆசியப் பகுதி யில் இந்தியாவும் சீனாவும் தங்க ளின் வலிமையை நிலைநாட்டு வதற்காக முயற்சிகள் மேற் கொண்டு வரும் நிலையில் சீன அமைச்சரின் பேட்டி முக்கியத் துவம் பெற்றுள்ளது.

ஆவணி 17, 2012

அரசியல் சிக்கல்களினால் சர்வகட்சி மாநாடு இயற்கை மரணத்தை எதிர்நோக்கியது

(டாக்டர் சுப்ரமணியம் சுவாமி)

க்கிய தேசியக் கட்சி தமிழ் பேசும் மக்களை பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கியிருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்கிறது. தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் தமிழ் பேசும் மக்கள் தனி நாடொன்றை உருவாக்கும் இயக்கமொன்றை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியத்திற்கு முழு நாட்டிலும் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்தப்படுவது அவசியம் என்று கட்சி கருதுகிறது. எனவே கால தாமதம் இன்றி இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இக்கட்சி விரும்புகிறது. (மேலும்....)

ஆவணி 17, 2012

ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம்!  இஸ்ரேலிடம் அமெரிக்கா ரகசிய வாக்குறுதி

ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேலிடம் அமெரிக்கா ரகசிய வாக்குறுதி அளித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்காவும், இஸ் ரேலும் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. ஈரான் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் சர்வதேச அணு சக்தி ஏஜென் சியில் உறுப்பு நாடாகவும் ஈரான் உள்ளது. அணுசக்தியை மின்சாரம் உற்பத்தி செய் வது போன்ற ஆக்கபூர்வமான வழிகளில் தான் பயன்படுத்தி வருகிறோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
(மேலும்....)

ஆவணி 17, 2012

சபாஷ்! தென்அமெரிக்க நாடு ஈகுவடோர்

அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சம் வழங்க ஈகுவடோர் தீர்மானம்!

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சம் வழங்கவுள்ளதாக ஈகுவடோர் அறிவித்துள்ளது. ஈகுவடோர் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரிகாடோ படினோ இவ்வறிப்பை மேற்கொண்டுள்ளார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவடோர் நாட்டு தூதரகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தஞ்சமடைந்துள்ளார். பிரித்தானிய அரசாங்கத்தின் எச்சரிக்கைக்கு மத்தியிலேயே ஈகுவடோர் இம்முடிவினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி 17, 2012

அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஸ்யா

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலொன்று அமெரிக்க கடற்பரப்புக்குள் நுழைந்து உளவுப்பார்த்துச் சென்ற சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. குறித்த கப்பலானது அமெரிக்காவின் அனைத்து கண்காணிப்புகளையும் மீறி தனது பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. ஏராளமான ஏவுகணைகளோடு அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உலா வந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அகுலா ரகத்தைச் சேர்ந்த தாக்குதல் கப்பலெனத் தெரிவிக்கப்படுகின்றது. விளாடிமீர் புடின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியான பின்னரே இந்த ஊடுருவல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகின்றது. அக்கப்பல்அமெரிக்க கடல் பகுதியை விட்டு வெளியே சென்ற பிறகே இந்தத் தகவல் அமெரிக்கக் கடற்படைக்கு தெரியவந்துள்ளது. எனினும் அமெரிக்க இதனை மறைத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பலின் நோக்கம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை அழிப்பது மட்டுமே என இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டில் ரஸ்ய நீர்மூழ்கியொன்று அமெரிக்க கடற்பரப்பில் இணங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி 17, 2012

நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?

நவரத்தினங்களில் அனைவருக்கும் தெரிந்தது வைரவம். அது தவிர இரத்தினம், புஷ்பராகம், முத்து, பவளம், மாணிக்கம், வைடூரியம், மரகதம், கோமேதகம் போன்றவை உள்ளன. இரத்தினம் என்பது அலுமினியமும், ஒக்சிஜனும் அதிகம் சேர்ந்த கலவை. காலையில் அடர் நிறத்திலும், மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிக்கும். 17 ஆம் நூற்றாண்டில் இரத்தினக் கற்கள் அரச ஆபரணமாக இருந்தன. அதை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தேன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் புஷ்பராகக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கிறது. (மேலும்....)

ஆவணி 16, 2012

'பிரபாகரன்... கொலைகாரன்!'

திடுக்கிட வைக்கும் தி.மு.க. பேச்சு

ம்புச் சண்டைக்குப் போவது தி.மு.க. முன் னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஆசை ஆசையாக அல்வா சாப்பிடுவது மாதிரி. நிலத்தை ஆக்கிரமித்தார், ஆளைக் கட்டிவைத்து அடித்தார், கோஷ்டிச் சண்டையை வளர்க்கிறார் என்று நிறையவே குற்றச்சாட்டுகளைச் சந்தித்தவர். இப்போது ஈழ ஆதரவுத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கொலைகாரர் என்று பகிரங்கமாகப் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு நோக்கத்தை விளக்கவும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே. பெரியசாமியின் பவள விழாக் கொண்டாட்டமும் இணைந்த தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஈரோட்டில் நடந்தது. முதலில் பேசிய பொறுப்பாளர்கள் அனைவரும் வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற ஈழ ஆதரவுத் தலைவர்களை வறுத்து எடுத்தனர். அடுத்துப் பேசிய மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி.ராஜாவின் பேச்சு, கூட்டத்தினரைத் திகில் அடையவைத்தது. (மேலும்....)

ஆவணி 16, 2012

பண்டா - செல்வா, டட்லி - செல்வா ஒப்பந்தங்கள்

நிறைவேற்றப்படாதமையினால் இனப்பிரச்சினை வன்முறையாக மாற்றமடைந்தது

(டாக்டர் சுப்ரமணியம் சுவாமி)

திகாரபரவலாக்கல் நாடு பிரிவடைவதற்கு முதற்கட்ட நடவடிக்கை என்றும் அதனால் இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள வளமான பிரதேசங்களை இந்தியா கைப்பற்றும் என்ற அச்சம் சிங்கள மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது. தமிழர்கள் 13வது திருத்தத்தின் மூலம் அதிகாரபரவலாக்கல் அமுலாக்கப்படும் என்று சிங்களவர்கள் கூறி காலம் கடத்த எத்தனிக்கிறார்கள் என்று சந்தேக மனத்துடன் இருந்தார்கள். சிங்கள, தமிழ் தலைவர்களிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் இடை நடுவில் ரத்து செய்யப்பட்டதும் இதற்காகவே என்று தமிழர்கள் சந்தேகம் வெளியிட்டனர். 1957ம் ஆண்டில் இரு சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை அதிகாரபரவலாக்கல் மூலம் தீர்த்து வைப்பதற்காக பண்டா, செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. (மேலும்....)

ஆவணி 16, 2012

புகலிடக் கோரிக்கையாளர்களை ஆஸிக்கு வெளியில் தடுத்து வைக்க முடிவு

புகலிடக் கோரிக்கையாளர்களின் தடுப்பு முகாம்களை அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் அமைப்பதற்கான சட்ட மூலத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி, புகலிடக் கோரிக்கையாளர்களின் தடுப்பு முகாம்களை மீண்டும் பப்புவா நியுகினியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறு தீவான நவ்ருவுக்கு கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லாட் நியமித்த சுயாதீன குழுவின் பரிந்துரைக்கமைய அந்நாட்டு பாராளு மன்றத்தின் கீழ் சபையில் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்ட சட்ட மூலத்திற்கு எம்.பிக்கள் ஆதரவளித்துள்ளனர். (மேலும்....)

ஆவணி 16, 2012

முன்னாள் எல். ரி. ரி. ஈ. போராளிகளின் புனர்வாழ்வுப் பணிகள் துரிதப்படுத்தப்படும்

புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமென நெர்டோ அமைப்பின் செயலாளர் குமரன் பத்மநாதனின் (கேபி) ஏற்பாட்டில் இலங்கை வந்த புலம்பெயர் உணர்வாளர்களிடம் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நெர்டோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை வந்த வெளிநாட்டு உணர்வாளர்களுடன் கடந்தவாரம் இடம்பெற்ற சந்தப்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்ததாக குமரன் பத்மநாதன் இணையமொன்றுக்கு தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பாக கேபி மேலும் கூறுகையில், கனடா, லண்டன், அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, சுவீடன், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 உணர்வாளர்கள் நெர்டோ அமைப்பின் ஏற்பாட்டில் கடந்தவாரம் இலங்கை வந்தனர். இந்த உணர்வாளர்களுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்திய பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ பல உறுதி மொழிகளை வழங்கினார்.(மேலும்....)

ஆவணி 16, 2012

ஆவணி 16, 2012

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பலம் சேர்க்கும் செயல்கள் இப்போதும் நடக்கின்றன

பயங்கரவாதம் நிறுத்தப்பட்ட போதும் நமது செயல்பாடுகள் நிறுத்தப்பட முடியாதது. வட்டுக்கோட்டைத் தனிநாடு கோரிக்கைக்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்கும் செயற்பாட்டுக்கும் நாம் செய்ய வேண்டியது பெருமளவு உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி தனி இராச்சியத்துக்குப் பலம் சேர்க்க முயல்வோர் விடயத்தில் படையினர் மட்டுமன்றி முழு நாட்டு மக்களும் தெளிவுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் வலியுறுத்தினார். அண்மையில் நடந்த ஈழக் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் மாநாடு பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி; அந்த மாநாட்டின் பின்னணி தனியான ஈழ இராச்சியக் கொள்கையே எனவும் சுட்டிக்காட்டினார். இது விடயத்தில் சகலரும் தெளிவுபெற்றிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். (மேலும்....)

ஆவணி 16, 2012

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு

சவுதி - ஈரான் தலைவர்கள் அருகருகில்

சவுதி அரேபியாவில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் சவுதி மன்னர் அப்துல்லாவுக்கு அருகில் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநஜாத் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிரிய விவகாரத்தில் ஷியா, சுன்னி என இருநாடுகளும் பிரிந்து செயற்படும் நிலையில் மாநாட்டின் முதல் நாளான நேற்று முன்தினம் இரு நாட்டு தலைவர்களும் அருகருகே அமர்ந்து புன்முருவலுடன் அளவளாவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த மாநாட்டில் சிரியாவை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து விலக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் உரையாற்றிய சவூதி மன்னர் அப்துல்லா, இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவே முஸ்லிம் களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்.

ஆவணி 16, 2012

தாவூத் விருந்தில் பங்கேற்றேன் ; உச்ச நீதிமன்றத்தில் சஞ்சய் தத் ஒப்புதல்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத், உச்ச நீதிமன்றத்தில் நடந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையின் போது, ‘நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மும்பையில் கொடுத்த விருந்தில் பங்கேற்றது உண்மை தான். ஆனால் அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை, தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 200 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், 2007 ஆம் ஆண்டு ஜுலை முதல் அக்டோபர் வரை தீர்ப்பு வழங்கியது. இதில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 78 பேருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை, பலவிதமாக தண்டனை வழங்கப்பட்டது. நடிகர் சஞ்சய் தத், மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதி குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆவணி 15, 2012

தமிழர்களுக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் - ஜெயலலிதா

சிங்களவர்களுக்கு சமமான உரிமைகளை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கு இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி வழிவகை செய்து அவர்களின் துயரை நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சென்னையில் திமுக சார்பில் தமிழ் ஈழ ஆதரவாளர் மாநாடு நடத்தப்பட்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதாவும் சுதந்திர தின உரையில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

ஆவணி 15, 2012

அரசாங்கம் அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறத - யாழ். ஆரப்பாட்டத்தில் கேள்வி

கருணா, கே.பி, பிள்ளையான் போன்றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கேள்வியெழுப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையைக் கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமசமாஜக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, உள்ளிட்ட தென்னிலங்கை முற்போக்குக் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த ஆர்பாட்டத்தின் முன்னணியில் குதிரை கஜேந்திரன், பின்னணியில் 'இடதுசாரி' செந்தில்வேல். வாழ்க எதிர்ப்பு ஐக்கியம். சிறைப் படுகொலையை எவ்கையிலும் நியாயப்படுத்த முடியாது. இது கண்டிக்கத்தக்கது.

ஆவணி 15, 2012

தென் அமெரிக்காவில் அடுத்த டெசோ மாநாடு?

டெசோ' வின் அடுத்த மாநாட்டை தென் அமெரிக்காவில் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் பல போராட்டங்களுக்குப் பின்னர் சென்னையில் டெசோ மாநாட்டை நடத்தி முடித்தது திமுக.இதில் கலந்துகொள்வதாக கூறிய பல வெளிநாட்டு தமிழ் பிரமுகர்கள் வரவில்லை.இது திமுகவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில், அடுத்த மாநாடு வெளிநாட்டில் நடந்தால் சர்வதேச அளவில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு திரட்ட முடியும் என்று திமுக கருதுவதாகவும், எனவே அடுத்த மாநாட்டை தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து,அண்மையில் நடந்து முடிந்த டெசோ மாநாட்டின் இறுதியில் திமுக முக்கியப் பிரதிநிதிகள் கலந்து விவாதித்ததாகவும்,அப்போது இது குறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் மேலும் கூறப்படுகிறது. அப்ப வெளிநாட்டு சினிமா சூட்டிங் மாதிரி எல்லோரும் ரூம் போட்டுக் கதைக்கலாம். ஆமாம் யார் செலவில் விமான ரிக்கெற்வாங்கிறது, ரூம் இற்கு காசு கட்டுறது...?

ஆவணி 15, 2012

மங்குனி சீமானும் அவரின் மொக்கை அரசியலும்? (பகுதி 3)

தமிழர்களிலேயே எந்தத் தமிழன்? என்ன சாதி? சாதியில் என்ன பிரிவு? பிரிவில் என்ன வகையறா? என்றெல்லாம் தமிழன் கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறான். முதலில் 'நாம் தமிழர்' என்று முழங்குபவர்களுக்கு தமிழகச் சூழலில் தமிழர்களுக்கு எது முதன்மையான பிரச்சனை? தமிழர்களை ஒன்றுசேர விடாமல் தடுப்பது எது என்கிற வரலாற்று, சமூக, அரசியல் அறிவு அவசியம். பன்னெடுங்காலமாக கூறுபோடுவது சாதியும் மதமும்தான். இவைதான் தமிழரின் வீழ்ச்சிக்கு மூலம். ஊர் என்றும் சேரி என்றும் இரண்டு குடியிருப்புகள் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. இதைவிட வேறு என்ன அவமானம் இருக்கிறது? தமிழர்களே ஊர்த்தெரு தமிழர்களாகவும், சேரித்தெரு தமிழர்களாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். சக மனிதன் சாதியின் பெயரால் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்படும் நிலைகண்டு கொதிக்காதவன் என்ன புரட்சி பேசி என்ன ஆகப்போகிறது?  (மேலும்....)

ஆவணி 15, 2012

 I thought you should know...........the book
"Understanding Women" is finally out in paperback......

ஆவணி 15, 2012

கூட்டமைப்புக்கு வாக்களித்து உறுதிப்பாட்டைக் காட்ட வேண்டும் - புளொட் தலைவர் சித்தார்த்தன்

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில் தீர்வை வழங்குவது சாத்தியமில்லை. யுத்தம் நிறைவடைந்ததும் தீர்வை வழங்குவோம் என இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு இந்த அரசாங்கம் கூறிவந்தது. ஆனால் மூன்று வருடம் கடந்துவிட்ட நிலையிலும் அதுபற்றி எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக பாராளுமன்றக் குழுவின்மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் எனக்கூறி காலத்தை இழுத்தடித்து விடலாம் என அரசு நம்புகிறது என புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை, உவர்மலையில் ஞாயிறன்று இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். (மேலும்....)

ஆவணி 15, 2012

சிறுவர் இலக்கியத்துறைக்கான பரிசு பத்மா இளங்கோவன் பெறுகிறார்..!   

இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளையின் 4 -ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர் இலக்கியத்துறைக்கான பரிசினைப் பெறுவதற்குப் பிரான்ஸ் நாட்டில் வதியும் பத்மா இளங்கோவன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பத்மா இளங்கோவன் பல வருடங்களாகக் கவிதைகள், பாலர் பாடல்கள், கட்டுரைகள் எழுதி வருபவர். யாழ்ப்பாணம் 'ஈழநாடு' பத்திரிகை முப்பது வருடங்களுக்கு முன்பு நடாத்திய வெண்பா எழுதும் போட்டியில் வெற்றிபெற்றவர். 'தினபதி' கவிதா மண்டலத்திலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தாயகத்திலும் ஐரோப்பாவிலும் வெளிவந்த சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. அன்று பிரான்சில் வெளியாகிய 'பாரிஸ் ஈழநாடு' 'ஐரோப்பா முரசு' ஆகிய பத்திரிகைகளிலும் வானொலி, தொலைக்காட்சியிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின. (மேலும்....)

ஆவணி 15, 2012

ஈரான் மீது ஒரு சார்பு நடவடிக்கை, அமெரிக்காவிற்கு ரஷ்யா எச்சரிக்கை

ஈரான் மீது ஒரு சார்பாக அமெரிக்கா புதிய புதிய தடைகளை தொடர்ந்து விதித்து வருவது நல்லதல்ல. ஐக்கிய நாடுகள் சபையின் முடிவிற்கு இணங்க ரஷ்யா இதுவரை செயல்பட்டு வரு கிறது. ஆனால் அமெரிக்கா, அணு ஆயுத ஆற்றலை ஈரான் விரிவுபடுத்தி வருவ தாகக் கூறி தொடர்ந்து ஈரான் மீது புதிய புதிய தடைகளை விதித்து வருகிறது. அதுவும் நினைத்த நேரமெல்லாம் ஒரு சார்பாக இஷ்டத்திற்கு தடைவிதிக்கிறது. இதனை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில் லை. இது சர்வதேச சட்டத் திட்டத்திற்கு எதிரானது. அமெரிக்கா தொடர்ந்து சர் வதேச சட்ட திட்டங்களை மீறிச் செயல்பட்டு வருகி றது. இந்த நடவடிக்கை ஈரான் அணு ஆற்றல் பிரச் சனை தொடர்பான பல் வேறு சுற்று பேச்சுவார்த் தையில் ஏற்பட்டுள்ள முன் னேற்றத்தை இந்தச் செயல் முடக்கவே துணை புரியும். இதனை பல முறை அமெ ரிக்காவிற்கு ரஷ்யா சுட்டிக் காட்டியிருக்கிறது. இருப்பி னும் தொடர்ந்து அமெ ரிக்கா, ஈரானுக்கு எதிராக ஒரு சார்பு நடவடிக்கை யையே மேற்கொண்டு வருகி றது.  இந்த நிலை தொடர்ந் தால் ரஷ்யாவிற்கும் அமெ ரிக்காவிற்கும் இடையி லான உறவு கடுமையாக பாதிக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆவணி 15, 2012

இறைமையும், தன்னாதிக்கமும் உடைய இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டும்

(டாக்டர் சுப்ரமணியம் சுவாமி)

(நேற்றைய தொடர்)

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டுத் தமிழர்களுடன் மொழி ரீதியிலான மற்றும் அரசியல் கலாசார தொடர்புகள் இருக்கின்ற காரணத்தினால் சிங்கள மக்கள் தங்கள் நாடு பிளவுபட்டுவிடும் என்று அஞ்சுகிறார்கள். இந்திய அரசாங்கம் தன்னுடைய தமிழ் பிரஜைகளின் அழுத்தங்கள் காரணமாக இதனை செய்யலாம் என்றும் சிங்களவர்கள் நினைக்கிறார்கள். இதனால் தான் அதிகாரப் பரவலாக்கல், சுயாதிபத்தியம் போன்ற தமிழர்களின் கோரிக்கைகளுக்கு சிங்களவர்கள் வெறுப்புடன் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். சிங்களவர்களின் இந்த மனப்பான்மை குறித்து இந்தியா தொடர்ந்தும் அவதானமாக இருத்தல் அவசியம். தமிழ் சிறுபான்மை மக்களின் மனித உரிமைகளுக்கு நட்புறவுடன் குரல் கொடுக்கும் உரிமையை தியாகம் செய்யாத வகையில் இந்தியர்கள் நடந்து கொள்வது அவசியம். (மேலும்....)

ஆவணி 15, 2012

த.தே.கூ. கிழக்குத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமிழைத்துள்ளத  - விநாயகமூர்த்தி முரளிதரன்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்குத் தமிழர்களுக்கு மாபெரும் துரோகமிழைத்துள்ளதாகத் தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அவர்கள் இத்தேர்தலில் போட்டியிடாமல் விலகியிருந்தால் எதிர்காலத்தில் எனது வாக்கைக்கூட அவர்களுக்கு அளித்திருப்பேன் என்றார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் ருத்திரமலர் ஞானபாஸ்கரனை ஆதரித்து கோவில்போரதீவில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கோவில்போரதீவு பொதுமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் மண்முனைப்பற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் யசோதரன்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்பு முக்கியஸ்தர் வரதன் உட்பட பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ருத்திரமலர் ஞானபாஸ்கரனை ஆதரித்துப் பேசினர்.

ஆவணி 15, 2012

அமெரிக்கா  அரசுக்கு எதிராக போராடுபவர்கள்   வீடுகளில் எப்பிஐ சோதனை

ஒரு சதவீதம் பேரின் நலனுக்காக 99 சதவீதம் பேரின் நலன்களை காவு கொடுப்பதை அனுமதிக்க முடியாது என அமெரிக்கா வில் போராட்டம் தீவிர மடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதற்கு காரணமாக இருக்கும் பங்கு வர்த்தகத்தை நிர்ணயிக்கும் அமெரிக்காவின் வால்ஸ்டி ரீட்டை கைப்பற்றுவோம் என்று ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது அமெரிக்க அரசு அடக் குமுறையை ஏவினாலும் இன்னும் போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மே தினத் தன்று அமெரிக்க அரசுக்கு எதிராக வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன் போராட் டத்தை தீவிரப்படுத்தினர். ஆனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத் தினர். இந்நிலையில் அர சுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் ஈடுபடு பவர்களை மிரட்டும் நோக் குடன் அவர்களின் வீடுக ளில் திடீர் சோதனையை அந்நாட்டின் எப்பிஐ பிரிவு மேற்கொண்டு வருகிறது. அப்படி சோதனைக்கு செல்லும் எப்பிஐ பிரிவினர் சுமார் 60 பேர் வரை திரண்டு நவீன ஆயுதங்களுடன் சென்று போராட்டக்காரர் களை அச்சுறுத்தி வருகின்ற னர் என்று அமெரிக்காவின் ‘தி ஒரேகானியன்’ பத்திரி கை பல்வேறு ஆதாரங் களை சுட்டிக்காட்டி செய்தி யை வெளியிட்டிருக்கிறது.

ஆவணி 15, 2012

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 52 பேர் கைது, நீர்கொழும்பில் வழிமறிப்பு

சட்டவிரோதமாக ஆழ்கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முற்பட்ட 52 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். நீர்கொழும்பிலிருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் 43 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த ஆழ்கடல் வள்ளமொன்றை நேற்று அதிகாலை 3.00 மணியளவில் கடற்படையின் அதிவேக படகுகள் மூலம் சுற்றி வளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். இதேவேளை நேற்று முன்தினம் மேலும் 8 பேரை கடற்படையினர் நீர்கொழும்பில் கைது செய்தனர். இவர்கள் 8 பேரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக முயற்சித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டனர்.

ஆவணி 15, 2012

இஸ்ரேல் சிறையில் இருக்கும் கணவனின் விந்தணுவை கடத்தி தாயான பலஸ்தீன பெண்

இஸ்ரேல் சிறைச்சாலையில் இருக்கும் தனது கணவனின் விந்தணுவை கடத்தி வந்து பலஸ்தீன் தாய் ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பலஸ்தீனின் நப்லூஸ் மருத்துவமனையில் டலாஸ் சிபன் என்ற 32 வயது தாய் நேற்று முன்தினம் சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார். இவரது கணவர் அம்மார் இஸ்ரேல் சிறையில் 32 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இஸ்ரேல் சிறைச்சாலையில் இருக்கும் பலஸ்தீனர்களுக்கு தனது மனைவியுடனான உறவுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. டலாஸ் சிபன் தனது கணவரை கடந்த 15 ஆண்டுகளாக கண்டதில்லை. எனினும் 37 வயதான தனது கணவனின் விந்தணுவை கடத்தி அந்த பெண் தாயாகியுள்ளார். எனினும் டலாஸ் சிபானுக்கு தனது கணவர் மூலம் ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர். (மேலும்....)

ஆவணி 14, 2012

ஒலிம்பிக் முடிவுகள் உணர்த்தும் பாடம்

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம் பிக் போட்டிகள் ஒவ்வொரு முறை விடை பெறும் போதும் உலக மக்கள் மனதில் விளை யாட்டு மீதான ஆர்வத்தை மேலும் வளர்த்து விட்டுச் செல்கின்றன. லண்டன் ஒலிம்பிக் போட் டியும் இதில் விலக்கல்ல. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது தான் உல கத்தில் இத்தனை நாடுகளா? என்று வியக்க வேண் டியுள்ளது. ஒரு குட்டித் தீவை கொண்ட நாடுகள் கூட இந்த போட்டியில் கலந்துகொண்டன. 204 நாடுகளின் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்ட இந்த போட்டியை பிரிட்டன் மிகச் சிறப்பாக நடத்தி அனைவரது பாராட்டையும் பெற்றுவிட்டது. வல்ல ரசுகளாக இருந்தாலும் திறமை இருந்தால்தான் பதக் கம் வெல்ல முடியும். அதுதான் ஒலிம்பிக். வலிமை மிக்க நாடுகளின் அணி யோடு மோதி பதக்கத்தை வெல்லும் குட்டி நாடுகள், தங்களுக்குள்ள திறமை யை இந்த ஒலிம்பிக் போட்டியிலும் வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளன. குறிப்பாக ஜமைக்காவை கூறலாம். தடகளத்தில் இந்த நாட்டின் வீரர்கள் வலிமைமிக்க அமெரிக்காவுக்கு கடும் சவாலாக திகழ்கிறார்கள். (மேலும்....)

ஆவணி 14, 2012

லண்டனுக்கு விடைகொடுத்தது ஒலிம்பிக் போட்டிகள்

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் ஞாயிறு அன்று கோலா கலமாக முடிவுக்கு வந்தன. பிரிட்டிஷ் நேரப்படி இரவு 9மணிக்கு தொடங்கிய நிறைவு விழா நிகழ்ச்சிகள் மூன்று மணி நேரம் நடந்தன. பிரிட்டனின் பெரும் பாடகர் களும், பிரபலங்களும் விழாவிற்கு கவர்ச்சியையும் துடிப்பையும் அளித்த னர். இசையும் நடனமும் பார்வை யாளர்களை பெரிதும் மகிழ்வித்தன. பிரிட்டிஷ் கலாச்சாரம் மீண்டும் பெரு மையுடன் காட்டப்பட்டது. வண்ண மிகு வாணவேடிக்கைகள் மக்களை பிரமிக்க வைத்தன. கலைநிகழ்ச்சிகள் முடிந்தவுடன் பாரம்பரியப்படி ஒலிம் பிக் தீபம் அணைக்கப்பட்டது. 17நாட் கள் நடந்த விளையாட்டு திருவிழாவில் பல ஒலிம்பிக், உலக சாதனைகள் திருத்தி எழுதப்பட்டன. புதிய விளை யாட்டு நாயகர்கள் அறிமுகமானார்கள். (மேலும்....)

ஆவணி 14, 2012



 

ஆவணி 14, 2012

மங்குனி சீமானும் அவரின் மொக்கை அரசியலும்?  (பகுதி 2)

இந்த லட்சணத்தில் 'இது மற்றுமோர் அரசியல் கட்சி அன்று - மாற்று அரசியல் புரட்சி' 'நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல - புரட்சிவாதிகள்' - என்கிற பிரகடனத்தை செய்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க ஆவணத்தைப் படிக்கும்போது தலை சுற்றுகிறது. எம்ஜிஆரின் அண்ணாயிசம். ஜெயலலிதாவின் அம்மாயிசம்,  தேமுதிகவின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கட்சியின் கொள்கை இவற்றைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் பேசுவதைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் 'நாம் தமிழர் கட்சி'யின் ஆவணத்தைத்தான் நாம் புரிந்துகொள்ள முடியவில்லை. (மேலும்....)

ஆவணி 14, 2012

அமெரிக்க ராணுவத்தினர் மீது 3,200க்கும் அதிகமான பாலியல் குற்றச்சாட்டுகள் 

அமெரிக்க ராணுவத்தினர் மீது சுமார் 3 ஆயிரத்து 200 பாலியல் குற்றச்சாட்டுக்களை பெண் ராணுவத்தினர் தொடுத்துள்ளனர். இது குறைந்த அளவே என்றும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தினர் உலகம் முழுவதும் பல்வேறு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சக ஊழியர்களாலே ராணுவத்தினர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது அமெரிக்க ராணுவத்தினரிடையே அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் 3 ஆயிரத்து 200 பெண் ராணுவத்தினர் தாங்கள் சக ஊழியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளதாக அமெரிக்க ராணுவத்தலைமையகமான பெண்டகன் அறிவித்துள்ளது. இதில், 80 சதவிகித பெண் ராணுவத்தினர் தங்களது பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார்களை தெரிவிக்க முன்வருவதில்லை. மேலும், புகாரின் பேரில் ஏற்படும் விளைவுகள், எதிர்காலப் பிரச்சனைகள் மற்றும் சட்டத்தின் மீதான அவநம்பிக்கை போன்றவற்றின் காரணமாக அவர்கள் புகார்கள் தெரிவிக்க மறுப்பதாக பெண்டகன் தெரிவித்துள்ளது. (மேலும்....)

ஆவணி 14, 2012

அத்தனை சினிமாக்களும்  அரசியல்  சினிமாக்கள் தான்

(முனைவர் சு.இரவிக்குமார்)

அரசியல் சினிமா என்ற இரண்டு வார்த்தை களைக் கேட்கும் போது நமது மூளைக்குள் சட்டென்று எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெய லலிதா, விஜயகாந்த் என்று உள்ளூர் சினிமா, அரசியல் பிரபலங்கள் முதல் கலிபோர்னியாவின் கவர்னராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட அர்னால்டு ஸ்வாஸ்நேக் கர் வரை நம் கண் முன் விரிவார்கள். அரசியல் என்பது அதிகாரத்துக்கான போட்டி என்பது அரசியல் வல்லுநர்க ளின் கருத்து. அரசென்பது ஒருங்குபடுத் தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட வன் முறை என்பார் தோழர் லெனின். துப்பாக் கிக் குழலிலிருந்து அதிகாரம் பிறக்கிறது என்றார் தோழர் மாவோ. அரசியல் என்பது மனித சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்ட காலத்திலிருந்து தொடருகின்ற ஒரு சமூ கவியல் யதார்த்தமாகும். சமூகத்தின் வன்மையுள்ள ஒரு பிரிவினர், ஒருங்கு திரண்டு, திரட்டப்பட்டு, முறைப்படுத்தப் பட்டு, சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு, சட்டமியற்றுகின்ற ஏற்பாடுகள், சட்டத் தைப் பாதுகாக்கிற ஏற்பாடுகள், சட்டத்தை நிர்வகிக்கின்ற ஏற்பாடுகள் என்று பலவி தமாகக் கிளைபரப்பி வளர்ந்துள்ள ஆலம ரம் அரசு. சட்டமன்றம், பாராளுமன்றம், நீதி மன்றம், காவல்துறை, இராணுவம், சிறைச் சாலை, ஆயுதக் குவியல், வரி வசூல், தேர் தல், பிரதிநிதிகள் என்று அரசு அதிகாரத் தின் குவி மையங்கள் பலவிதமாகப் பரந்து கிடக்கின்றன. அரசு அதிகாரமே இறுதியில் எதையும் தீர்மானிப்பதாக நடைமுறை யில் அமைந்துள்ளது. மேலும் ஆளுகின்ற வர்க்கத்தின் தேவைகளைச் சரிவர உணர்ந்து, கச்சிதமாகச் சட்டங்கள் இயற்றி, அதற்கான ஒப்புதல் மனோவியலை உருவாக்கி, ஆளும் வர்க்கத்தினருக்கான சேவைக்கருவியாக எந்த சமூகத்தின் அரசுகளும் விதி விலக்கின்றிச் செயல்படு கின்றன.(மேலும்....)

ஆவணி 14, 2012

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை பெரும்பாலான இந்தியர் விரும்பவில்லை

(நேற்றைய தொடர்ச்சி)

1991ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழ்நாட்டு அரசாங்கத்தை இந்திய மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் எல்.ரி.ரி.ஈ.யுடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்த காரணத்தினால் கலைத்தது. அதையடுத்து இந்திய மத்திய அரசாங்கத்தின் சட்ட மற்றும் நீதித் துறையின் சிரேஷ்ட அமைச் சர் என்ற முறையில் தமிழ்நாட்டு விவகாரங்களை கண்காணித்து வந்தேன். அப்போது தமிழ்நாட்டு மக்கள் எனக்கு பேராதரவை அளித்தார்கள். 1991ம் ஆண்டு ஜூன் மாத பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 234 எம்.எல். ஏக்களைக் கொண்ட சபையில் இரண்டு ஆசனங்களையே வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. மாநில அரசாங்கத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இக்கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படவும் இல்லை. (மேலும்....)

ஆவணி 14, 2012

மு. கா. வுக்கு அளிக்கும் வாக்குகள் வடக்கு, கிழக்கு இணைப்புக்கு துணைபோகும்

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும் வடக்கையும், கிழக்கையும் இணைப் பதற்குரிய சதித்திட்டத்திற்கு துணை போகுமென தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார். நிந்தவூரில் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் பேசுகையில் அமைச்சர் ஏ. எல். ஏம். அதாவுல்லா :- பிராந்தியத்தில் இனவாதத்தை தூண்டி, நாட்டில் பிரச்சினையை தோற்றுவித்து அதன் மூலம் மாகாண சபை தேர்தலில் வாக்குகளை வேட்டையாட சில சக்திகள் முயற்சிக்கின்றன. இதற்கு மக்கள் ஒருபோதும் துணைபோகக் கூடாது எனக் கூறினார்.

ஆவணி 14, 2012

இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மியன்மார் முஸ்லிம்களுக்கு சவூதி 50 மில்லியன் டொலர் உதவி

மியான்மார் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு 50 மில்லியன் டொலர் பெறு மானமுள்ள உதவிகளை வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது. மியன்மார் நாட்டில் பங்களாதேஷ் எல்லையையொட்டி அமைந்துள்ள ரகின் மாகாணத்தில், கடந்த ஜுன் மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது. ரகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் பங்களாதேஷில் இருந்து குடிபெயர்ந்த, எட்டு லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்கள் மியான்மாரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர். இதற்கிடையே கடந்த ஜுன் மாதம் முஸ்லிம்களின் குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி, பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதுவரை 50 பேர் பலியாகினர். இதையடுத்து மவுங்தா பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி ஏராளமான முஸ்லிம்கள் தங்கள் தாயகமான பங்களாதேஷ¤க்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். மியான்மாரில் உள்ள முஸ்லிம்கள் அந்நாட்டு இராணுவத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதை இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கண்டித்துள்ளன.

ஆவணி 14, 2012

ஆஸி. சட்ட விரோத குடியேற்றவாசிகளை தடுக்க சுயாதீன குழு பரிந்துரை

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி சட்ட விரோதமாக படகுகளில் வருவோருக்கான முகாம்களை பவுவா நியூகினியா, சிறிய பசிபிக் தீவான நவுரு ஆகிய பகுதிகளுக்கு விரிவு படுத்தவும் மலேசியாவுடனான அகதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய பிரதமரால் நியமிக்கப்பட்ட சுயாதீன குழு பாராளுமன்றத்தை பரிந்துரைத்துள்ளது. இதில் படகுகளில் சட்ட விரோதமாக வருவதை தவிர்த்து முறைப்படியான புலம்பெயர்வுக்கு ஊக்குவிக்கும்படியும் மூன்று பேர் கொண்ட மேற்படி சுயாதீன குழு பரிந்துரைத்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக படகுகளில் செல்வோர் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றனர். இவ்வாறு கடந்த வாரத்தில் மாத்திரம் 170 பேர் குடியுரிமை கோரி படகுகளில் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் அவுஸ்திரேலிய அரசு தனது மனிதாபிமான உதவிகளுக்கான வசதியை 13000 தில் இருந்து ஓர் ஆண்டுக்குள் 20,000 பகுதிகளுக்கு விஸ்தரிக்க பரிந்துரைத்துள்ளது. இது 5 ஆண்டுகளுக்குள் 27,000 ஆக அதிகரிக்கவும் கோரப்பட்டுள்ளது. இது தமது உயிரை பணயம் வைத்து படகுகளில் வருவோரை தடுக்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆவணி 14, 2012

மு.கா. – தே.கா. ஆதரவாளர்களுக்கு இடையில்கைகலப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களை அடுத்து அங்கு இருவேறு இட ங்களில் பெரும் பதற்றம் நிலவியது. அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனைப் பகுதிகளிலேயே
இவ்வாறு பதற்றம் நிலவியதுடன் கைகலப்பு மற்றும் கல்வீச்சுச் சம்பவங்களினால் வாகனங்கள், கட்சிக்காரியாலயங்கள் ௭ன உடைமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன.
(மேலும்....)

செவ்வாய்க் கிரகத்தைக் கண்முன் நிறுத்தும் 'கியூரியோசிட்டி' அனுப்பிய புகைப்படங்கள்

செவ்வாய்க் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நாசாவினால் அனுப்பப்பட்ட 'கியூரியோசிட்டி'  விண்கலமானது அக்கிரகத்தின் தெளிவான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகின்றது. சுமார் 8 மாதங்களாக 352 மில்லியன் மைல்களைக் கடந்து இவ்விண்கலமானது கடந்த  5 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்வதே 'கியூரியோசிட்டி'யின் பிரதான இலக்காகும். இந்நிலையில் தற்போது அவ் விண்கலமானது செவ்வாய்க் கிரகத்தின் தெளிவான வண்ணப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகின்றது.  'கியூரியோசிட்டியின்' தெளிவான இப்புகைப்படங்கள் செவ்வாய்க் கிரகத்தினை எம் கண்முன்னே நிறுத்துகின்றது. இதனைத் தவிர அவ்விண்கலமானது தனது புகைப்படத்தினையே அதாவது விண்கலத்தின் புகைப்படத்தினையும் அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகள் விண்கலத்தின் பாகங்களின் நிலைகுறித்துத் தெரிந்துகொள்ளவே இதனை அது அனுப்பியுள்ளது. இதேவேளை  கியூரியோசிட்டியின் மென்பொருளை மேம்படுத்தும் நடவடிக்கையிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறித்த விண்கலமானது அங்கு தரையிறங்கிய நாள் முதல் அதற்கு வழங்கப்பட்ட கட்டளைகளைச் சரிவர செய்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  

ஆவணி 14, 2012

உருளைக் கிழங்கு, பெரியவெங்காயம் இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் இறக்குமதித் தீர்வை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று 13 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நிதித் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது.2012 ஆம் ஆண்டு சிறுபோக அறுவடையின் மூலம் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என்பன இம் மாத நடுப்பகுதியில் சந்தைக்கு வரவிருக்கின்றன. இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடனும் இந்த இறக்குமதித் தீர்வை அதிகரிக்கப்பட்டிருப்பதாக அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை காலம் இறக்கு மதியான ஒரு கிலோ பெரிய வெங்கா யத்துக்கு அறவிடப்பட்ட 25 ரூபா இறக் குமதி வரி 50 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கு 10 ரூபாவாக அறிவிடப்பட்ட இறக்குமதி வரி 30 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆவணி 13, 2012

புலம்பெயர் தமிழர்களில் சிலர் கோத்தபாயவுடன் சந்தித்து பேச்சு?

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் ௭ன்று நம்பப்படுகின்ற புலம்பெயர் தமிழர்களில் சிலர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அந்தப் புலம்பெயர் தமிழர்கள் குழு வடக்கு மற்றும் கிழக்கிற்கும் விஜயம் செய்து திரும்பியதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் குழுவில் அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம், சுவிஸ், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 22 பேர் அடங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புலிகளின் முன்னாள் ஆதரவாளரான கே.பி. ௭னப்படும் குமரன் பத்மநாதன் தலைமையிலான குழுவினரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவைச் சந்தித்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிகின்றன. (மேலும்....)

ஆவணி 10, 2012

"ராஜபக்ஷேவைக்கூட நம்புவோம்... கருணாநிதியை நம்ப மாட்டோம்!"

(ம.அருளினியன்)

காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோ’ அமைப்பை.  அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? (மேலும்....)

ஆவணி 10, 2012

தனிநாட்டுக் கோரிக்கை முன்வைத்தால் கருணாநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ரெசோ மாநாட்டின் போது இலங்கையில் தனிநாடு கோரிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கப்படும் பட்சத்தில், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக உள்ளதாக இந்திய ஜனதாக் கட்சித் தலைவர் கலாநிதி சுப்பிரமணியம்சுவாமி தெரிவித்தார். இந்த மாநாட்டில் இலங்கையில் தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கக் கூடாதென எச்சரிக்கை விடுத்துள்ள அவர், அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பின் நிற்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது எச்சரிக்கையின் பின்னர் பிரிவினைவாதக் கருத்தற்ற மாநாடு ஒன்றினை நடாத்துவதாக கருணாநிதி தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் நாட்டிலே ஒருசில குழுக்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் வெற்றி யளிப்பதில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஒருசில அரசியல்வாதிகளுக்கு எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களிடம் இருந்தும், புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் நிதியுதவி கிடைப்பதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இலங்கைக்கு எதிரான போக்கினை கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். திரைப்பட கலைஞர்கள் சிலருக்கும் எல். ரி.ரி. ஈ. ஆதரவாளர்களிடமிருந்து நிதி கிடைப்பதாகவும் எனினும் அவர்கள் தேர்தல்களின் போது படுதோல்வி அடைவதாகவும் தெரிவித்ததுடன், அவ்வாறான சூழ்நிலையிலேயே தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிbழ மாநாட்டினை ஏற் பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

ஆவணி 10, 2012

கண்ணிவெடிகள் இலங்கையில் விஸ்வரூபம் எடுக்க வல்லரசுகளே அடித்தளம் அமைத்தன

வடபகுதியில் உள்ள 90 சதவீதமான நிலப்பரப்பிற்கும் கூடுத லான பகுதியில் புதைக்கப்பட்டிருந்த தரைக்கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய அறிவித்துள்ளார். வடபகுதியில் உள்ள தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணி 2002ம் ஆண்டு ஆரம்பமாகியது. அப் பிரதேசத்தில் 6 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பிரதேசம் மனிதர்கள் செல்வதற்கு ஆபத்தான பிரதேசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், இராணுவத்தினர் மேற்கொண்ட தொழில்நுட்ப ஆய்வின் மூலம் வடபகுதியில் 2 ஆயிரத்து 61 சதுர கிலோமீற்றர் பிரதேசமே கண்ணிவெடிகள் புதையுண்டுள்ள ஆபத்தான பிரதேசம் என்று அறி விக்கப்பட்டது. இதில் ஏற்கனவே ஆயிரத்து 947 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தில் தரைக்கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. 2002ம் ஆண்டு முதல் இதுவரையில் 8 லட்சத்து 65ஆயிரம் கண்ணி வெடிகளும், யுத்த தாங்கிகளை சீர்குலைக்கும் பாரிய தரைக் கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டுள்ளன.(மேலும்....)

ஆவணி 10, 2012

மருந்தில் பன்னாட்டு படையெடுப்பு

(என்.சிவகுரு)

மருந்து விற்பனை என்பது இன்று வேகமாக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள் ளதை உலகமய சூழலில் நாம் காண்கிறோம். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட தங்கள் வர்த்தகத்தை அதிகப்படுத்திட, இத்துறையில் கால் பதிக்க துவங்கியுள்ளன. சேவை என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. லாபம்.. லாபம்.. கூடுதல் லாபம் எனும் தாரக மந்தி ரத்தை பின்புலமாய் கொண்டு இத்துறையில் உள்ளவர்கள் செயலாற்றி வருகின்றனர். ஒரு மருந்து சிலகுறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே கொடுக்கப்படாமல், அதன் விரி வான பயன்பாட்டின் காரணமாக வேறு சில நோய்களுக்கும் கொடுக்கப்படும் வாய்ப் புள்ளது. சமீப காலமாக உலக அளவில் புதிய மருந்து கண்டுபிடிப்பில் தேக்கமும் வறட்சி யும் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி பணிகளுக்கு ஆகும் பெரும் செலவே இதற்கு முக்கிய கார ணமாகும். ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் ஏற் பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இதற்கு கூடுதல் காரணமாகவும் அமைந்துள்ளது. (மேலும்....)

ஆவணி 10, 2012

380 குடும்பங்களைச் சேர்ந்த 1204 பேர் முல்லைத்தீவில் இன்று மீள்குடியேற்றம்

வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து மேலும் 380 குடும்பங்களைச் சேர்ந்த 1204 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மீள்குடியேற்றப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச். குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். இவர்களை இரண்டு கட்டங்களாக தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்படி 206 குடும்பங்களைச் சேர்ந்த 635 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் முதற்கட்டமாக இன்று மீள்குடியேற்றப்படுகின்றனர். 174 குடும்பங்களைச் சேர்ந்த 569 பேர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மல்லிகைத்தீவுப் பகுதியில் எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை மீள்குடியேற்றப்படவுள்ளனர். இதன் நிமித்தம் மீள்குடியேறிச் செல்பவர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்மைப்பு வசதிகளையும் அமைச்சு முறையாக செய்து கொடுத்துள்ளது. இம்மக்களுக்கு உலர் உணவு சமைத்த உணவு உட்பட குடிதண்ணீர், மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு வழங்கு வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேறிச் செல்லும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதற்காக அமைச்சு 23 இலட்சம் ரூபாய்களை ஒதுக்கீடு செய் துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரி வித்துள்ளார்.

ஆவணி 10, 2012

ஆன்மாவைத் தேடுகிறாராம் ஒபாமா 

“இதுபோன்ற பயங்கரமான, துயரமான நிகழ்வு கள் நடப்பது அதிகரித்துள்ளது. இப்படி நடக்காமல் இருக்க நம் ஆன்மாவைத் தேடும் வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. வன் முறையைக் குறைக்க இன்னும் கூடுதலாக ஏதேனும் வழிகளை ஆய்வு செய்ய வேண்டி யிருக்கிறது” என்று ‘ஆன்மா’ வைத் தேடும் பணியில் இறங்கியிருக்கிறார் அமெரிக்க ஜனாதி பதி ஒபாமா. அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகா ணத்தில் கிரீக் பகுதியிலுள்ள சீக்கிய மத வழி பாட்டுத் தலமான குருத்துவாராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்மூடித்தனமாக மிக்கேல் பேஜ் என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்தது. இதில் 4 பேர் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள். இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோதுதான் மேற் கண்டவாறு ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார். (மேலும்....)

ஆவணி 10, 2012

சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது!

சீனாவின் கட்டுமானக் கலைக்கு சான்றாக விளங்குவதும், அதன் சரித்திரத்தில் முக்கிய பங்கு வகிப்பதுமான சீனப்பெருஞ்சுவரின் பகுதியொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. சீனாவின் ஹீபீ மாகாணத்தின் , சஹஞ்சியாகு நகரில் அமைந்துள்ள  சுவரில் சுமார் 100 அடி நீளமான ஒரு பகுதியே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது. அங்கு பெய்துவரும் கடும் மழை மற்றும் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டுமானப்பணி ஆகியவை காரணமாகவே சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் 1484 ஆம் ஆண்டு  'மிங்' அரச வம்சத்தினரின் ஆட்சிக் காலத்தில்  சீனப் பெருஞ்சுவரின் சிதைவடைந்த ஒரு பகுதி மீள்நிர்மாணம் செய்யப்பட்டது. சீனப் பெருஞ்சுவரானது 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி 10, 2012

ஜனநாயக மக்கள் முன்னணி

டெசோ மாநாட்டில் கலந்துகொள்வது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளது - மனோ கணேசன்

திராவிட முன்னேற்ற கழகத்தினால் சென்னையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த மாநாட்டில் கலந்துகொள்வது இல்லை என்ற முடிவை, மிகுந்த மனவருத்தத்துடன் ஜனநாயக மக்கள் முன்னணி எடுத்துள்ளது. தமிழக அமைப்புகளின் எல்லாவித நடவடிக்கைககளும் இலங்கையில் தமிழரை கொடும் ஆட்சிக்கு உள்ளாக்கி இருக்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றன என்பதை நாம் அறிவோம். எனவே தமிழக மற்றும் இந்திய அரசியல் கட்சிகளின் இலங்கை தொடர்பான நடவடிக்கைககளை விமர்சனம் செய்வது இல்லை என்பது நமது கட்சி தொடர்ந்து கடைபிடிக்கும் நிலைப்பாடு ஆகும்.(மேலும்....)

ஆவணி 10, 2012

எதிரியும் ஆபத்தில் உதவலாம்

ஈரானியர்களைக் காப்பாற்றிய அமெரிக்கா

மத்திய கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த படகொன்றிலிருந்து  10 பேரை அமெரிக்க கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 8 பேர் ஈரானியர்கள் என்பதுடன் இருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ் ஜேம்ஸ் ஈ. வில்லியம்ஸ் என்ற போர்க்கப்பலே இவர்களை மீட்டுள்ளது. குறித்த விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க கடற்படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கின் கடற்பகுதியில் அமெரிக்க கப்பல்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஈரான் ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. எனினும் அமெரிக்கா அப்பகுதியில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அமெரிக்கப் படையினரால் ஈரானியர்கள் காப்பாற்றப்படுவது  இது முதல் முறையல்ல. இவ்வருட ஆரம்பத்தில் ஈரானியர்கள் 13 பேரைக் கடற்கொள்ளையர்களிடமிருந்து அமெரிக்க கடற்படையினர் காப்பாற்றியிருந்தனர்.

ஆவணி 10, 2012

அஸாம் வன்முறைக்கு வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களே காரணம்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல். கே. அத்வானி பேசிய பேச்சால் மக்களவையில் புதன்கிழமை அமளி ஏற்பட்டது. அவரது பேச்சுக்கு சோனியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் தி.மு.க திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து தனது கருத்தை அத்வானி திரும்பப் பெற்றார். அசாம் விவகாரம் தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது அத்வானி பேசியதாவது, அசாம் வன்முறைக்கு வங்கதேசத்தில் இருந்து, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களே காரணம். இந்தப் பிரச்சினையை இனப் பிரச்சினையாகவோ, இந்து- முஸ்லிம் பிரச்சினையாகவோ பார்க்கக் கூடாது. வங்கதேசத்திலிருந்து அகதிகளாக அசாமுக்கு வந்தவர்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. அதன் விளைவாக சொந்த மாநிலத்திலேயே அசாம் வாழ் இந்தியர்கள் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஆசிய நாடுகளின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஆவணி 10, 2012

பராகுவே அரசு கவிழ்ப்பு, ஏகாதிபத்திய அடாவடி

(பேரா.பெ.விஜயகுமார்)

அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தன்னுடைய அரசியல் தலையீடுகளை நடத்திவருகிறது. லத்தீன் அமெரிக்கப் பகுதி யினை தன்னுடைய கொல்லைப் புறமாகவே பாவிக்கும் போக்கு தொடருகிறது. கடந்த பத் தாண்டுகளாக பல தென்அமெரிக்க நாடு களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இடதுசாரி அரசு கள் அமைவதை அமெரிக்காவினால் சகித் துக் கொள்ள முடியவில்லை. இந்நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான அரசுகளை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படு கிறது. சமீபத்தில் பராகுவே நாட்டின் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலை வரைப் பதவியிலிருந்து நீக்கியுள்ள செயல் இதனை உறுதிப்படுத்துகிறது. 2009ல் ஹோண்டுராஸ் அரசையும், 2010ல் ஹைட்டி அரசையும் கவிழ்த்தது. ஈகுவடாரில் அதன் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது. வெனிசுலா, பொலிவியா நாடுகளிலும் பல முறை கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டது. இத்தகு அடாதடி நடவடிக்கைகளுக்கு ‘கவிழ்ப்பு எண் 2.0’ என்று பெயரிட்டுள்ளது. (மேலும்....)

ஆவணி 10, 2012

ஈரானின் அதிரடி முடிவு!

இணையம் ஊடாக அடிக்கடி தாக்குதலுக்கு முகங்கொடுக்கும் நாடாக ஈரான் மாறியுள்ளது. ஈரானின் அணுச் செறிவாக்கல் நிலையங்கள், முக்கிய அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் இணையக் கட்டமைப்புகள் மற்றும் கணனிகள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின. இத்தாக்குதல்களின் போது அதன் முக்கிய இராணுவ மற்றும் இராஜதந்திர தகவல்கள் இணையம் மூலமாகத் திருடப்பட்டன. மேலும் பல கணனிகள் செயலிழந்தன. குறிப்பாக ஸ்டக்ஸ்நெட் மற்றும் பிளேம் என்றறியப்பட்ட வைரஸ்கள் ஈரானுக்கு பெரும் தலையிடியாக மாறின.  இவ் வைரஸ்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலினாலேயே உருவாக்கப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையமூடான தாக்குதலைக் கருத்தில் கொண்டு ஈரான் அதிரடி முடிவொன்றினை மேற்கொண்டுள்ளது. அதாவது நாட்டின் முக்கியமான அமைச்சரவை மற்றும் அரச ஸ்தாபனங்களுக்கான உலகளாவிய இணையத்தொடர்பை நிறுத்துவதென முடிவு செய்துள்ளது. உலகளாவிய இணையத்தொடர்பை தமக்கு எதிரான நாடொன்று கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ள ஈரான் இதனூடாக அதியுயர் இராணுவ இரகசியங்கள் திருடப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இம்முடிவானது உலகளாவிய இணையத்திற்கு பதிலாக தமது நாட்டிற்கென பிரத்தியேகமாக உள்வலையமைப்புகளை (intranet) உருவாக்கும் ஈரானின் திட்டத்தின் முதல்படியெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆவணி 10, 2012

கோத்தபய ராஜபக்‌ச, டக்ளஸ் உடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு!

சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்றுள்ள  ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி, அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய  ராஜபக்‌ச மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டக்ளஸ்  தேவானந்தா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக சர்வதேச  பாதுகாப்பு கருத்தரங்கு அந்நாட்டில் நேற்று துவங்கியது.இதில் கலந்துகொள்ள சுவாமி  இலங்கை வந்துள்ளார். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம்  ஆகியவை குறித்த சிறப்பு விவாதமும் இந்த கருத்தரங்கில் நடைபெற உள்ளது.  இலங்கை ராணுவத்தால் நடத்தப்படும் இக்கருத்தரங்கு கடந்த வருடமும் நடத்தப்பட்டது.  இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் சீனா உள்ளிட்ட 43  நாடுகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ள இக்கருத்தரங்கில் சுப்ரமணிய  சாமி நாளை உரையாற்றுகிறார். முன்னதாக நேற்று ஹோட்டல் தாஜ் சமுத்திராவில் நேற்று மாலை அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவையும் சுவாமி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது இலங்கையின் குறிப்பாக வடக்கு கிழக்கு நிலவரங்கள் குறித்து   டக்ளஸ் தேவானந்தாவிடம் சுப்ரமணியம் சுவாமி கேட்டறிந்ததாகவும்,பதிலுக்கு இந்திய  மற்றும் தமிழ்நாட்டு நிலவரங்கள் குறித்து சுவாமி எடுத்துக்கூறியதுடன், இலங்கை  தமிழ்பேசும் மக்கள் குறித்த இந்திய தமிழ்நாட்டு மக்களின் அக்கறையையும்  வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆவணி 10, 2012

லிபியாவில் ஆட்சி அதிகாரம் புதிய ஆட்சியாளர்களிடம் ஒப்படைப்பு 

லிபியாவில் ஒரு ஆண்டாகாலமாக ஆட்சி நடத்தி வந்த தேசிய இடைநிலைக்குழு, தனது அதிகாரத்தை புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தது. இதனைத் தொடர்ந்து, புதிய ஆட்சிமன்றம் தனது முதல் கூட்டத்தை நடத்தியது. லிபியாவில் 40 ஆண்டு காலமாக ஆட்சிபுரிந்து வந்த மும்மர் கடாபி மீது மக்கள் அதிருப்தி அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்நாடு முழுவதும் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த கடாபியை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். பின்னர், ஆட்சியை தேசிய இடைக்கால குழு கைப்பற்றியது. இதனிடையே, 200 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்திற்கான, ஜனநாயக முறையில் சுதந்திரமான தேர்தல் நடைபெற்றது. கடந்த 1965ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டுதான் லிபியாவில் சுதந்திரமாகத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி 10, 2012

முப்பது வயதில் தான் மனமுதிர்ச்சி வருகிறது

ரீன் ஏஜ் முடிந்து 21 வயது நிரம்பினால் பெரிய ஆளாகிவிட்டதாக காலம் காலமாகக் கூறப்படுகிறது. ஆனால் 21 வயதானாலும் இன்னும் குழந்தைப் பருவம்தான் என்றும் 30 வயது ஆனால்தான் மனமுதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் உள்ள செயின்ட் லாரன்ஸ் அறக்கட்டளை மன முதிர்ச்சி குறித்து ஆய்வு நடத்தியது. இதில் 21 வயது நிரம்பியவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது 21 வயது என்பது விருந்து கொண்டாடும் வயது. மகிழ்ச்சியாக இருக்கும் வயது என்றுதான் பதில் வந்தது. குழந்தைப் பருவத்தில் இருந்து முழு மனிதனாக மாறும் கால கட்டம் அதுவல்ல. படிப்பு முடித்து சம்பாதிக்க தொடங்கி திருமணம் செய்துகொண்டு சுயமாக முடிவெடுக்கும் காலம் 30 வயதுதான். 21 வயது வந்து விட்டாலே குழந் தைப் பருவம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறியுள்ளனர்.

ஆவணி 09, 2012

மரியதாஸ் தில்ரொக்சன் படுகொலைக்கு அரசாங்கமே முழு பொறுப்பு - மனோ கணேசன்

வவுனியா சிறைச்சாலை சம்பவத்தில் கொடூர  தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு நேற்று உயிழந்த மரியதாஸ் தில்ரொக்சசனின் படுகொலைக்கு  அரசாங்கமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த மரணம் தெருவில் நடந்தது அல்ல. வழமையாக சொல்வதைபோல்,விசாரணைகள் நடக்கின்றது, கொலையாளிகளை இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்லி அரசாங்கம் தப்ப முடியாது. இந்த படுகொலை அரசாங்கத்தின் பாதுகாவலுக்கு உட்பட்ட, சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றுள்ளது என்பதுடன் தாக்குதலுக்கு  உட்படுத்தப்பட்ட இன்னும் பல தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையிலும்,  வைத்தியசாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்  என்ற அடிப்படை உண்மையை அரசாங்கம் மறைக்க முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்(மேலும்....)

ஆவணி 09, 2012

Man charged with GTA robbery

A 26-year-old man faces 28 charges in connections with more than a dozen gas station and convenience store robberies in and around the city.Toronto Police hold-up squad officers and 22 Division’s major crime unit collaborated with Peel Regional Police to investigate the rash of robberies spanning nearly five months. And the investigation was brought to a successful conclusion over the weekend, police said. “In all, 14 gas stations and convenience stores in Toronto and Peel Region were robbed between March 23 and Aug. 3,” Const. Tony Vella said Tuesday. In each incident, a man entered the business with a note demanding money and indicated he had a gun, Vella said. Several of the robberies were captured by security cameras. Police executed two search warrants and an arrest was made on Saturday. Karthik Poologanathan, 26, of Mississauga, is charged with 14 counts each of robbery and failing to comply with a probation order. “This was a cooperative effort and it was excellent work by all of the officers involved,” Vella said. He also offered some advice for robbery victims.

ஆவணி 09, 2012

சட்டவிரோதமாக ஆஸி. செல்லவிருந்த 93 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 93 பேர் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். காலியிலமைந்துள்ள கொஸ்கொட எனும் இடத்தில் 68 பேரும் பேருவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 25 பேருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களில் இருபெண்களும் மூன்று சிறுவர்களும் அடங்குவதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார். மேலும் கைது செய்யப்பட்ட 93 பேரில் இச்சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் ௭ன சந்தேகிக்கப்படும் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆவணி 09, 2012

டெசோ மாநாடு பற்றி இலங்கையின் தவறான பிரசாரத்தை நம்ப வேண்டாம் - கலைஞர்

டெசோ மாநாடு பற்றி இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரத்தை உலகத் தமிழர்கள் நம்ப வேண்டாம் என்று திமுக தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அரசின் அறிக்கையும், இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியிருப்பதும் கற்பனையான குற்றச்சாட்டின் அடிப்படையில் புனையப்பட்டது. இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதனை புரிந்துகொள்ளாமல் இலங்கை அரசு பேசுவது கவலை தருகிறது. இலங்கைத் தமிழர் நலன் பேணும் முயற்சிகளை டெசோ மாநாடு முன்னெடுத்துச் செல்லும். இலங்கையின் தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஆவணி 09, 2012

மாணவர் விசா கட்டுப்பாட்டை நீக்குமாறு பிரிட்டிஷ் பிரதமரிடம் கோரிக்கை

பிரிட்டனில் கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்குமாறு அந்நாட்டின் வர்த்தக சமூகத்தினர் பிரதமர் டேவிட் கமரூனை கோரியுள்ளனர். வளரும் நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிப்பதற்காக பிரிட்டனுக்கு வருகின்றனர். இந்த வெளிநாட்டு மாணவர்களை ஆண்டுக்கு ஒரு இலட்சம் பேருக்கு மேல் அனுமதிப்பதில்லை என்று பிரிட்டன் அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இது குறித்து அந்நாட்டின் 37 பெரிய வர்த்தகர்கள் பிரதமர் டேவிட் கமரூனுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர். அவர்களில் கோப்ரா பீர் நிறுவன உரிமையாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கரண் பிலிமோரியாவும் ஒருவராவார். தி சன்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் உலகெங்கிலும் இருந்து சிறந்த மனங்களை( மாணவர்களை) ஈர்க்க வேண்டிய அவசியம் இங்கிலாந்துக்குள்ளது. உண்மையான ஆர்வம் மிக்க மாணவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள் என்ற தெளிவான செய்தியை நாம் அனுப்ப வேண்டியது  அவசியம்.நாட்டின் வர்த்தக வளர்ச்சியில் அவர்களுக்கும் பங்கு உள்ளது. எனவே அவர்களின் எதிர்காலச் சேவை நமக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆவணி 09, 2012

பெற்றோரின் கவனக் குறைவே சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு காரணமாகும்

சிறு பிள்ளைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றி இன்று நாடெங்கிலும் நாளாந்தம் வேதனை அளிக்கக்கூடிய செய்தி கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது பற்றி சமீபத்தில் பத்திரிகை ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் செய் திப் பிரிவு பொறுப்பாசிரியர்களையும் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், எங்கள் நாட்டில் சிறு பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகமாக வீடுகளிலேயே இடம் பெறுகின்றன என்ற அனைவரும் வேதனைப்படக்கூடிய உண்மையான கருத்தை எடுத்துரைத்தார். வீட்டில் உள்ள தாத்தாமார், மாமாமார், அண்ணன்மார், மைத்துனர்கள் போன்றவர்களே இவ்விதம் சிறு பிள்ளைகளை பாலியல் ரீதியில் இம்சித்த சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதற்கு போதியளவு ஆதார ங்கள் இருக்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி, தங்கள் பிள் ளைகளை முதலில் வீட்டில் உள்ளவர்களிடம் இருந்தும், அயல வர்களிடம் இருந்தும் காப்பாற்றுவது பெற்றோரின் கடமை என்று கூறினார். (மேலும்....)

ஆவணி 09, 2012

வவுனியா, புத்தளம், அ’புரம், பொலனறுவை: 160 குளங்களை ஆழமாக்கும் பணி ஆரம்பம்

வவுனியா, புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் 160 குளங்கள் ஆழமாக்கப்படுவதுடன் இதன்மூலம் ஒரு இலட்சம் ஏக்கர் நெல் உற்பத்தியை புதிதாக மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதுவரை மேற்படி நான்கு மாவட்டங்களிலும் 160 குளங்கள் சேறு அகற்றப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஆயிரம் நடுத்தர மற்றும் சிறு அளவிலான குளங்கள் சேறு அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்படும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளங்கள் புனரமைப்புத் திட்டங்கள் மூலம் மேற்படி சகல மாவட்டங்களிலுமுள்ள விவசாயிகள் இரண்டு போகம் நெல் உற்பத்தியை மேற்கொள்ள நீர்ப்பாசன வசதிகள் செய்து கொடுக்கப்படும் என கமநலசேவைகள் அமைச்சர் எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்தார்.

ஆவணி 09, 2012

மன்னாரில்

முஸ்லிம்கள் மீள்குடியேறுவதை தடுக்க புலி ஆதரவாளர் முயற்சி

புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதைத் தடுப்பதற்கு எஞ்சியுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருவதாக கைத்தொழில் அபிவிருத்தி வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேற்றுப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். மன்னார் நிலைமை தொடர்பாக இச்சபையில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். இதனை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண் டும். நான் மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த சமயத்திலும் இன, மத பேதம் பாராமல் சேவையாற்றியுள்ளேன். வட மாகாணத்தில் காலா காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களைப் புலிகள் தான் பலவந்தமாக வெளியேற்றினர். இதனால் சுமார் 22 வருடங்கள் அகதி முகாம்களில் எமது முஸ்லிம்கள் தங்கினர். உடுத்த உடையுடன் முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகள் அம்மக்களின் சொத்துக்களையும், இருப்பிடங்களையும் அபகரித்தனர். என்றாலும், 2009ம் ஆண்டில் புலிப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டு நாட்டிற்கு அமைதியான சூழலை எமது ஜனாதிபதி பெற்றுத் தந்தார். இதன் பயனாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த இருப்பிடங்களில் மீளக் குடியேறச் சென்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் உப்புக்குள முஸ்லிம்கள் தமது பாரம்பரிய மீன்பிடித் தொழில் இடங்களை இழந்திருப்பதை உணர்ந்தனர். அவர்களது இடங்களில் விடத்தல்தீவு மீனவர்கள் தொடர்ந்தும் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

ஆவணி 09, 2012

அஸாமில் வன்முறைக்கு இதுவரை 73 பேர் பலி

அஸாமில் மீண்டும் துவங்கியுள்ள வன்முறைக்கு மேலும் நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், வன்முறைக்கு இதுவரை பலியானவர்க ளின் எண்ணிக்கை, 73 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கோக்ராஜ்கர் மற்றும் தூப்ரி மாவட்ட எல்லைப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை எண் 31ல், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அஸாமின், கோக்ராஜ்கர் மற்றும் சிராங் மாவட்டங்களில், போடோ பழங்குடியினருக்கும், வங்க தேசத்திலிருந்து குடிபெயர்ந்த சிறுபான்மையினருக்கும் இடையே, சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 56 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள், தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகளை இழந்த மூன்று லட்சம் பேர், பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். மாநில மற்றும் மத்திய அரசு மேற் கொண்ட நடவடிக்கை காரணமாக, 10 நாட்களாக இயல்பு நிலை திரும் பியிருந்தது. கடந்த ஞாயிறன்று மீண்டும் கலவரம் வெடித்தது. அதில், சிராங் மற்றும் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் ஐந்து பேர் பலியாயினர்.

ஆவணி 09, 2012

உயிரினங்களுக்கு மனிதன் படிப்படியாக உலை வைப்பதால் புவியின் சூழலுக்கு பெரும் ஆபத்து

ல்லுயிர் பெருக்க குறைவு என்பது தட்பவெப்ப மாறுதல், மாசடைதல், சுற்றுச் சூழல் நெருக்கடி ஆகியவற்றை விட உயிர் சூழலியல் முறையில் பெரும் தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதே உண்மை. மனிதனால் இயற்கைக்கு நேரும் நேரடி ஆபத்தைவிட இது மிகக் கடுமையானது. இதற்காக உலகளவில் ஒவ்வொரு நாடும் பல்லுயிர் பெருக்கத்தையும், அதன் விளைவையும் தெரிந்துகொண்டுள்ளனர். ஒவ்வொரு குடிமகனும் எளிமையாகப் புரிந்துகொண்டு தன்னையும் இப்பூவுலகையும் பாதுகாக்க வேண்டும். இதற்கு அரசு முழு அளவில் தன்னை அர்ப்பணித்து செயல்புரிய வேண்டும் என சமீபத்தில் கனடாவில் கூடிய அனைத்துலக சுற்றுச் சூழலியல் விஞ்ஞானிகள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். (மேலும்....)

ஆவணி 09, 2012

சிரிய கிளர்ச்சியாளர்களிடம் சிக்கிய ஈரான் குழுவில் புரட்சிப் படை வீரர்கள்

சிரிய கிளர்ச்சியாளர்களிடம் பிடிபட்டுள்ள 48 பேர் கொண்ட ஈரான் குழுவில் ஓய்வுபெற்ற புரட்சிப் படை வீரர்கள் இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் அவர்கள் இரணுவ செயற்பாட்டுக்காக அங்கு செல்லவில்லை என்றும் அங்கு யாத்திரை சென்றவர்கள் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலாஹி குறிப்பிட்டுள்ளார். கிளர்ச்சியாளர்களிடம் இருக்கும் இந்த ஈரானியர்களை விடுவிக்க உதவுமாறு ஐ.நா. சபையையும் ஈரான் கோரியுள்ளது. சிரியா அரச படைக்காக இராணுவ நடவடிக்கையில் ஈடுபடவே இந்த ஈரான் குழு சிரியா வந்ததாக கிளர்ச்சியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.(மேலும்....)

ஆவணி 08, 2012

ஈழத் தமிழர்கள், அடுத்து என்ன?

கிழக்கு மாகாணத் தேர்தல் நடக்க உள்ளது. தமிழர்களின் தேசிய உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்படும் 'தமிழ் தேசியக் கூட்ட​மைப்பு’ இந்த முறை தேர்தலில் பங்கேற்​கிறது. கடைசிப்போர் நேரத்தில் நடைபெற்ற சென்ற தேர்தலைக் கூட்டமைப்பு புறக்கணித்தது. எனினும், போருக்குப் பின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்று ஐந்து இடங்களைக் கைப்பற்றியது. இம்முறை ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அது தேர்தலில் பங்கேற்கிறது. ஆனால், கிழக்கு மாகாணத்தில், போருக்குப் பிந்திய இன்றைய சூழலில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தும் உள்ளது. எனவே, முஸ்லிம்களின் ஆதரவை கூட்டமைப்பு வெளிப்படையாக வேண்டுகிறது. (மேலும்.....)

ஆவணி 08, 2012

மே...! ஒயாலா  காத்தான்குடி வாகே ஹதண்ட எபா

இலங்கையின் மிக நீண்ட பாலம் வடக்கில் இருந்து தெற்காக முடிவடையும் புள்ளியில் இருநதே கிண்ணியா பிரதேசம் விரிந்து செல்கின்றது. அவ்விடத்தில் ஒரு வரவேற்பு வளைவு உருவாக்கப்பட வேண்டும். அது இஸ்லாமிய கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் படியாக இருக்கவேண்டும்.  என்ற நியாயமான கனவு எல்லாமக்களிடமும் காணப்பபட்டது. மட்டுமல்லாது தேர்தல்காலங்களில் தவறாமல் இவ்வம்சம் விஞ்ஞாபனங்களில் இடம்பிடிக்கத் தவறுவதுமில்லை. 'யுத்தம் ஓய்ந்தது. இடம் பெயர்ந்த மக்கள் தத்தம் வாழிடங்களில் சுதந்திரமாகச் சென்று தம் சமய காலாசார தனித்துவங்களைப் பேணி சந்தோசமாக வாழலாம். இந்தத் தேசம், தேசத்தை நேசிக்கும் பல்லின மக்கள் அனைவருக்குமானது.' என்ற ஜனாதிபதியின் அறிவிப்பிற்கிணங்க மக்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஆரம்பித்துள்ள வேளையில் மற்றுமோர் யுத்தத்துக்கு முகங் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். (மேலும்.....)

ஆவணி 08, 2012

தமிழ்நாடு அகதி முகாமில் தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு - இனவாதிகள் எங்கே

திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வரண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று முன்நாள் மீட்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வரண்ட கிணற்றில் இருந்து உடல் கருகிய நிலையில் குறித்த மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த கலைச்செல்வி (வயது-35), அவரது மகன்மாரான வினோத் (வயது-12), கௌதம் (வயது-7) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீயில் கருகிய நிலையில் சடலங்கள் காணப்படுவதால் குறிப்பிட்ட மூவரும் கொலை செய்யப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்டாளர்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகத்தில் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவணி 08, 2012

ஐக்கிய தேசிய கட்சியின் சவாலை ஏற்பதற்கு தயார்

1994ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஐ.தே.க. வேட்பாளரான காமினி திஸாநாயக்க வின் தேர்தல் உபாயங்களை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வெளியிட்டது ரணில் விக்ரமசிங்க என நான் விடுத்திருந்த அறிவிப்பை இயலுமாயின் நிரூபித்துக் காட்டட்டும் என்ற ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விடுத்த சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். திஸ்ஸ அத்தநாயக்க விடுத்த சவாலை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க தான் தயாராகவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதனால் ஐ.தே.க.வுக்குள் ஏற்படும் பாரிய பிரச்சினைக்கு தான் பொறுப்பு இல்லை என்றும் குறிப்பிட்டார். (மேலும்.....)

ஆவணி 08, 2012

ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் ஏவுகணையை சோதித்தது இஸ்ரேல்

ஈரானுடன் மோதல் போக்கைக் கடைபிடித்துவரும் இஸ்ரேல் தனது ஏவுகணை வரிசையை விரிவுபடுத்தி யுள்ளது. மத்திய ரக ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கும் 'ஏரோ - 02' ஏவுகணையை இஸ் ரேல் மேலும் மேம்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் மத்திய தூர ஏவுகணை களான 'சஹாப்' 'செஜில்' சிரியாவின் 'ஸ்கட் டிஎஸ்' ஏவுகணைகளை வழி மறித்துத் தாக்கும் திறனுடையதாக "ஏரோ-2" மேம்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் இருந்து வெளியாகும் "ஜெரூசலம் போஸ்ட்' பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. வரும் மாதங்களில் "ஏரோ-3" எனும் புதிய இடைமறித்துத் தாக்கும் ஏவுக ணையை முதன் முறையாக பரிசோதித் துப் பார்க்க அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இஸ்ரேலின் முதல் தலைமுறை ஏவுகணை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு 80 சதவீத நிதியுதவி அமெரிக்காவால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆவணி 08, 2012

இரணைமடு குளத்து நீர் வீணாக்கப்படவில்லை விவசாயிகளுக்கு போதியளவு நீர் விநியோகம்

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் நீர் மட்டம் குறைவடைந்திருந்தாலும் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு நீர் விநியோகிக்கப்படுவதாக கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்தார். மழை வீழச்சி குறைவடைந்து இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்த போதும் இயலுமானளவு நீர் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இரணைமடுக் குளத்தின் நீர் விரயமாக வெளியேற்றப்பட்டமையால் தற்போது விவசாயிகள் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார். இராணுவ முகாம் மற்றும் இரணைமடு விமான ஓடு தளத்துக்காக இரணைமடுக் குளத்தின் நீர் வீண் விரயமாகத் திறந்துவிடப்பட்டு போதியளவு நீர் தேக்கி வைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என எதிர் தரப்பினரால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் இவ்வாறான குற்றச் சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை என சுதாகரன் குறிப்பிட்டார்.

ஆவணி 08, 2012

ஆட்டிறைச்சி என்று நாய் இறைச்சி விற்கப்படும் மோசடி நடைபெறுகிறதா?

சில சுயநலவாத கசாப்புக் கடை முதலாளிமார் இன்று கிடைப்பதற்கு அரிதாக இருக்கும் ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியையும் கன்றுக்குட்டிகளின் இறைச்சியையும் கலந்து ஆட்டிறைச்சியாக விற்று, மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவதாக பொலிஸாருக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்திருக்கிறது. இவை கொழும்பிலும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களிலும் உள்ள ஒரு சில இறைச்சிக் கடைகளில் விற்கப்படுவதாக பொலிஸார் மற்றும் மிருக நலன்புரி சங்க உறுப்பினர்களும் ஊர்ஜிதம் செய்துள்ளனர். தற்போது கொழும்பிலும் அதனை அடுத்துள்ள பிரதேசங்களிலும் இருக்கும் கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை திடீரென்று வீழ்ச்சியடைந்திருப்பதற்கு அவை இறைச்சி கடைகளில் விற்கப்படுவதே காரணம் என்றும் இவர்கள் தெரிவித்தார்கள். கட்டாக்காலி நாய்களின் மூலம் விசர் நாய்க்கடி நோய் பரவி வருவதாக கொ ழும்பு மாநகர சபையின் மிருக வைத்திய பிரிவினர் அறிவித்துள்ளனர். சமீபத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி கொள்ளுப்பிட்டியில் உள்ள சில ஹோட்டல்களுக்கு அருகில் இருந்த 10 கட்டாக்காலி நாய்கள் திடீரென்று காணா மல் போனதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.

ஆவணி 08, 2012

6 சீக்கியர்களை கொன்றவர் அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்

அமெரிக்காவில் குருத்வாராவில் புகுந்து 6 சீக்கியர்களை சுட்டுக் கொன்றது அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றி இடைநீக்கப்பட்டவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த முன்னாள் இராணுவ வீரரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதால் கொலைக்கான நோக்கம் என்னவென்று தெரியவில்லை. அமெரிக்க பொலிஸ் படையான எப்.பி.ஐ. கொலையாளி குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் அவர் முன்னாள் இராணுவ வீரர் வாடே மைக்கேல் பேஜ் (40) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், 'கொலையாளி தீவிரவாதி அல்ல. அவர் முன்னாள் இராணுவ வீரர் வாடே மைக்கேல். அவரது கைகளில் நிறைய பச்சை குத்தப்பட்டிருந்தது. இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 9/11 சம்பவத்தை குறிப்பிடும் பச்சையும் அதில் ஒன்று. அவருக்கு சீக்கியர்கள் மீது ஏதோ வெறுப்பு இருந்துள்ளது. எனினும் இந்த கொடூர கொலைகளுக்கான நோக்கம் என்னவென்று இன்னும் தெரியவில்லை' என்றனர். அமெரிக்காவின் விஸ்கவுன்ஸிலில் அமைந்துள்ள சீக்கிய ஆலயத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதோடு பொலிஸாரின் பதில் தாக்குதலில் துப்பாக்கிதாரியும் பலியானார்.

ஆவணி 08, 2012

பிக்குகளின் அடாவடித்தனதடுத்தை நிறுத்த சிறுபான்மையினர் ஒன்றிணைய வேண்டும் மாவை

 

அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ௭ன யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். (மேலும்.....)

ஆவணி 08, 2012

கிளர்ச்சியாளர்களுடன் இணைந்ததாக சிரிய பிரதமர் அறிவிப்பு

சிரிய நாட்டு பிரதமர் அரசில் இருந்து விலகி ஜோர்தானில் தஞ்சம் புகுந்த நிலையில் அங்கு தொடர்ந்து கடும் மோதல் இடம்பெற்று வருகிறது. மிகப் பெரிய நகரான அலப்போவின் பல பகுதிகளிலும் அரச படை எறிகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அலப்போவின், ஷார் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் பாயமடைந்துள்ளனர். எனினும் அங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக எதிர்ப்பாளர்களின் உள்நாட்டு இணைப்பு கவுன்ஸில் குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினம் காலை வரையான காலத்தில் மோதல்களில் நாடு பூராகவும் 11 பேரளவில் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிரிய அரசில் இருந்து வெளியேறிய பிரதமர் ரியாட் ஹிஜாப் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கொலைகார, தீவிரவாத அரசில் இருந்து நான் விலகிக் கொண்டதை அறிவித்துக்கொள்கிறேன். அத்துடன் கெளரவத்திற்கும் சுதந்திரத்திற்குமாக புரட்சியாளர்களுடன் இணைந்து கொள்கிறேன். இன்றிலிருந்து புரட்சிப்படை வீரராக செயற்படுவேன்’ என கூறியுள்ளார். எனினும் ஹிஜாப்பின் விலகல் சிரிய அரசில் நிர்வாக ரீதியில் பெரிய பாதிப்பை செலுத்தாது என கூறப்படுகிறது. பிரதமர் அரசின் தலைவராக செயற்பட்டாலும் அரசு சிரியாவில் ஆட்சி நடத்தவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஆவணி 08, 2012

உணவில் உப்பை அதிகம் குறைப்பது ஆபத்து

உணவில் உப்பின் அளவைக் குறைக்க ஆரம்பித்துள்Zர்களா? கவனம் தேவை. குறிப்பிட்ட அளவுக்குக் கீழே உணவில் உப்பின் அளவைக் குறைப்போரு க்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக உணவில் உப்பை அதிகமாகப் பயன்படுத்துவோருக்கு இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் உருவாவதோடு அதுவே மாரடைப்பு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது என்ற கருத்து மருத்துவர்களிடையே உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களு டன் வரும் நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறுவர். (மேலும்.....)

ஆவணி 07, 2012

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறல்; 37 சீன மீனவர்கள் மட்டு கடற்பரப்பில் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 37 சீன நாட்டு பிரஜைகளை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு கிழக்கு கடற்பரப்பில் 15 கடல் மைல் பிரதேசத்தில் இரண்டு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரி வித்தார். சீன மீன்பிடி படகுகளில் இருந்த இரு இலங்கையர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட தமது நாட்டு மீனவர்கள் 37 பேரை விடுவிக்குமாறு சீனா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு - பீஜிங் இடையிலான நெருங்கிய உறவின் அடிப்படையில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 37 சீன மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு கைது செய்து திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், மீனவர்கள் பிரச்சினையை சட்ட ரீதியில் கையாண்டு முடிந்தளவு விரைவில் அவர்களை விடுதலை செய்யுமாறு சீன தூதரகம் இலங்கையிடம் கோரியுள்ளது.

ஆவணி 07, 2012

புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்கள் உரிய இடத்துக்கு கடமைக்கு செல்ல தவறின் சம்பளம் இரத்து

பாடசாலைகள் பெயர் குறிக்கப்பட்டு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உரிய பாடசாலைகளுக்குக் கடமைக்குச் செல்லத் தவறினால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில்அரசாங்கம் புதிய ஆசிரியர் நியமனங்களை பாடசாலைகளின் பெயர் குறித்து வழங்குகிறது. அரசியல் வாதிகளின் செல்வாக்குகளை உபயோகித்து சில ஆசிரியர்கள் இதனை மீறி செயற்படுகின்றனர். உரிய பாடசாலைகளுக்குக் கடமைக்குச் செல்லத்தவறும் ஆசிரியர்கள் விடயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆவணி 07, 2012

அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாதவர் பிரதமராக வாய்ப்பு

நாட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத ஒருவர் இவ்விரு கட்சிகளில் ஏதாவதொரு கட்சியின் ஆதரவில் பிரதமராக வாய்ப்புள்ளது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கருத்துத் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நிறுத்தக்கூடாது என்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் கூறியுள்ள நிலையில் எல்.கே. அத்வானி அதிரடியாக இப்படியொரு கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (மேலும்.....)

ஆவணி 07, 2012

லைசன் இன்றி போக்குவரத்தில் ஈடுபட்டால்

தனியார் பஸ்களுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்: அரசுடைமையாக்கவும் நடவடிக்கை

அனுமதிப் பத்திரமின்றி போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபா தண்டம் அறவிடவும் குறித்த பஸ்ஸை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென தனியார் போக்குவரத்து அமைச்சர் சி. பி. ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவை பத்திர மொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வாரம் இந்த பிரேரணைக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவில் நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் வாகன சாரதிக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கவும் புதிய சட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட வுள்ளதாக அமைச்சர் கூறினார். சாரதிகளுக்கு மக்களின் உயிருடன் விளையாட இடமளிக்க முடியாது. அத்தகைய சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்யவும் தயங்கப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆவணி 07, 2012

32 பயணிகள் பலி

ரயில் பெட்டியில் வெடிபொருட்கள் வெடித்தது காரணமாம்

32 பயணிகளை பலி வாங்கிய தமிழ்நாடு விரைவு ரயில் தீ விபத்திற்குக் காரணம் ரயில் பெட்டியில் இருந்த வெடிபொருட்கள் வெடித்தது காரணமாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர் தெரிவித்துள்ளார். டில்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ரயில் கடந்த 30ம் திகதி தீ விபத்தில் சிக்கியது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வரும்போது பெட்டியில் தீப்பற்றி எரிந்ததில் 32 பயணிகள் உயிர் இழந்தனர். இந்த தீ விபத்துக்கான கார ணம் குறித்து ஆந்திர தடயவியல் நிபு ணர்கள்ஆய்வு செய்துவருகிறார்கள். எரிந்து கிடந்த பெட்டியில் முழுமையாக சோதனை செய்தனர். அதில் இருந்து சேகரிக் கப்பட்ட துகள்களை எடுத்து பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் சமூக விரோதிகளின் நாசவேலை காரணமா? மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் ரயில்வே பொலிசார் விசாரணை நடத்துகின்றனர். தடயவியல் இயக்குனர் நாராயணமூர்த்தி கூறியதாவது, தீ விபத்தில் எரிந்த ரயில் பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் நிபுணர் குழு பரிசோதனை செய்ததில் பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனாலும் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது. மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்ட பிறகுதான் விபத்திற்கான காரணம் குறித்து உறுதியாக சொல்ல முடியும் என்றார்.

ஆவணி 07, 2012

நாஸா விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறக்கம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற் காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அனுப்பிய ரோவர் விண்கலம் பல லட்சம் கிலோ மீற்றர் பயணத்திற்கு பின் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. மிக தீர்க்கமான 7 நிமிட செயற்பாட்டுக்கு பின்னர் இலங்கை நேரப்படி நேற்று காலை 11 மணிக்கு ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலத்தில் இருந்த அதி நவீன தொழிநுட்பம் கொண்ட கியூரியா சிட்டி என்ற ஆய்வு இயந்திரம் செவ்வாயில் இருந்து முதலாவது புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்த 1,400 க்கும் மேற்பட்ட நாஸா, விஞ்ஞானிகள் உற்சாகக் கூக்குரலிட்டு வரவேற்று கொண்டாடினர். (மேலும்.....)

ஆவணி 07, 2012

தீவிர அரசியலில் குதிக்கிறார் பிரியங்கா

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, தீவிர அரசியலில் குதிக்கிறார். முதல் கட்டமாக அவர் தன் தாயாரின் ரேபரேலி லோக்சபா தொகுதி பொறுப்பு களை கவனிக்க உள்ளார். பிரியங்கா, தீவிர அரசியலில் குதிக்கப் போவதாக அதிகார பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலக பொறுப்பாளர்கள் அனைவரும், “பிரியங்கா எப்போதும், ரேபரேலி தொகுதி மக்களுடன் கலந்துரையாடி வருபவர். அதனால், இதில் புதிய விசயம் ஒன்றும் இல்லை” என்றனர். அதேநேரத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும், இனி பிரியங்கா, ரேபரேலி தொகுதிக்கு செல்வார் என்றும், அங்கு மக்களையும், கட்சித் தொண்டர்களை யும் சந்தித்து குறைகளைக் கேட்பார் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே, இந்த ஆண்டு முற்பகுதியில், உ. பி, சட்ட சபை தேர்தல் நடந்தபோது, ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில், பிரியங்கா தீவிர பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி 07, 2012

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு பிரபாகரன் மட்டும் காரணமல்லர் - ஹரிகரன்

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணமல்லர் என இலங்கையில் இந்தியப்படைகள் கடமையில் ஈடுபட்டிருந்த போது அதில் பணியாற்றிய கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய உடன்படிக்கையின் வெற்றிக்கு புலிகள் மிகப் பெரிய தடையாக இருந்திருப்பார்கள் என்பதை எவரும் நியாயப்படுத்த முடியாது. இந்திய அரசு, புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆயுதக்குழுவை வழிநடத்திய பிரபாகரனின் ஒற்றை மனப்போக்கை புரிந்து கொள்ளத் தவறிய இராணுவத்தினர் போன்ற பலரும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் தோல்விக்கு காரணமாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

ஆவணி 07, 2012

அவுஸ்திரேலியாவிற்குச் செல்லவிருந்த 41 பேர் கைது

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்லவிருந்த 41 பேர் வெண்ணப்புவ பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். வெண்ணப்புவ பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 37 தமிழர்களும் 4 முஸ்லிம்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆவணி 06, 2012

ஆவணி 06, 2012

தமிழ் தேசியம் பேசியதை தவிர தமிழ் கூட்டமைப்பு சாதித்தது என்ன? - பிரபா

தமிழ்த் தேசியம் பற்றி பேசி தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களுக்காக எதனை சாதித்துள்ளது. என்ன உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் நேற்று கேள்வி எழுப்பினார். இனவாதத்தை பேசி மேடை நாடகம் போடுவோரிடம் ஏமாந்து வாக்குகளை வீணாக்காமல் தமிழ் மக்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், மக்களின் நலன், பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு அரசுடன் இணைந்து போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.  (மேலும்.....)

ஆவணி 06, 2012

மீள்குடியேற்ற பணிகளில் இலங்கை பெரும் சாதனை - ஐ.நா. அதிகாரி

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாத யுத்தம் முடிவடைந்ததை அடுத்து 4 இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானோரை மீள்குடியேற்றி இருக்கும் அரசாங்கத்தின் சாதனையை ஐக்கிய நாடுகள் நிவாரண பணியின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் பாராட்டி இலங்கைக்கு இது தொடர்பாக கூடுதலாக தொடர்ந்தும் நிதி உதவி வழங்க வேண்டும் என்று நிதி வழங்கும் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களை மீள்குடியேற்றுவதிலும் அவர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதிலும் இலங்கை அரசாங்கம் சாதனை புரிந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒன்றிணைப்பு காரியாலயத்தின் செயற்பாட்டுப் பணிப் பாளர் ஜோன் ஜிங் தெரிவித்துள்ளார். அவர் மூன்று நாள் விஜயமாக இலங்கை வந்து நியுயோர்க் திரும்பும் போதே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். (மேலும்.....)

ஆவணி 06, 2012

இனவாத கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் சக வாழ்வை ஏற்படுத்த முடியாது

இனவாதத்தை தூண்டி வாக்குகளை பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். இது நாட்டுக்குப் பெரும் அழிவை ஏற் படுத்தும். எனவே, முஸ்லிம்கள் இந்த விடயத்தில் தெளிவுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இனவாத கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் சகவாழ்வை ஏற்படுத்த முடியாது. எனவே சகவாழ்வு மூலம் கிழக்கு மாகாண தேர்தலில் வெற்றி பெறலாம். இதற்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். (மேலும்.....)

ஆவணி 06, 2012

நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக சமூகவிரோதிகள் ஆட்கடத்தல்களை மேற்கொள்கிறார்கள்

30 ஆண்டுகால யுத்தத்தின்போது அரசாங்கப் படையினர் அப் பாவிப் பொதுமக்களை ஈவிரக்கமற்ற முறையில் துன்புறுத்தி யதுடன் நின்று விடாமல் தமிழ் பெண்களை மானபங்கப் படுத்தியது போன்ற பலதரப்பட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட் டார்கள் என்று எல்.ரி.ரி.ஈ.யை ஆதரிக்கும் தேசத்துரோக சக்தி களும், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலரும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வந்தார்கள். இத்தகைய தீய நடவடிக்கைகளினால் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை அரசாங் கப் படைகள் எத்தனையோ சந்தர்ப்பங்களில் போர் முனையில் படுதோல்வியடையச் செய்யும் வாய்ப்புக்கள் இருந்தும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக எங்கள் நாட்டில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் வெற்றியடையும் கட்டத்தில் இருந்தபோதிலும் யுத்த நிறுத்தம் அல்லது அந்த யுத்தத்தின் அழுத்தங்களைத் தளர்த்தி வாபஸ் பெறுதல் போன்ற தீர்மானங்களை எடுக்கவேண்டியிருந்தது. (மேலும்.....)

ஆவணி 06, 2012

ஆப்பிரிக்காவில் சீனா முதலீடு  அமெரிக்கா எரிச்சல்

ஆப்பிரிக்கா நாடுகளில் சீனா தனது முதலீடு செய்வதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள அமெரிக்கா சீனா முதலீடு செய்யும் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளூர் வளர்ச்சி ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் இருந்து வருவாதாக குறைகூறியுள்ளது. ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சீனா, ஆப்பிரிக்கா பகுதியில் முதலீடு செய்வது குறித்து குறை கூறியிருந்தார். இதற்கு சீனா பதிலடி கொடுத்திருக்கிறது. சீனா, ஆப்பிரிக்கா நாடுகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. குறிப்பாக சீனா- ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 5 வது அமைச்சர் நிலைக் கூட்டத்தில் ஆப்பிரிக்காவின் அடிப்படை வசதிகள், வேளாண்துறை, தயாரிப்புத்துறை சிறிய மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காகவே இந்த கடன் தொகை முழுவதும் பயன்படுத்தப்படும் என ஆப்பிரிக்க நாடுகள் தெரிவித்திருக்கின்றன. அமெரிக்கா தேவையில்லாமல் வீண்பழி சுமத்துவதை கைவிட்டுவிட்டு இப்படி உதவிகள் செய்வது ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆவணி 06, 2012

செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது நாஸா விண்கலம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலம் சுமார் 8 மாத பயணத்திற்கு பின் இன்று தரையிறங்கவுள்ளது. இதனால் நாசா விஞ்ஞானிகள் ரோவா விண்கலத்தின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பூமியில் இருந்து சுமார் 570 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. (மேலும்.....)

ஆவணி 06, 2012

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான பொருளாதார வாய்ப்புக்கள் குறித்து பிரிட்டிஷ் எம்.பிக்கள் குழு மகிழ்ச்சி

இலங்கையில் தற்போது நிலவிவரும் சமாதான சூழ்நிலையில் வடக்கு, கிழக்கிலுள்ள மக்களுக்கு பல்வேறு பொருளாதார வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கப் பணிகள் என்பன இலங்கை அரசாங்கத்தால் மிகவும் வெற்றிகரமான முறையில் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன. நாட்டில் பல பொருளாதார முன்னேற்றத்துக்கான பாதைகள் திறந்துள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு காணப்படும் பொருளாதார வாய்ப்புக்கள் குறித்து பிரிட்டிஷ் மகிழ்ச்சியடைவதாக கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழுவினர் தெரிவித்தனர். (மேலும்.....)

ஆவணி 06, 2012

அலப்போ நகரில் பாரிய மோதலுக்கு தயாராகும் இராணுவம் - கிளர்ச்சியாளர்

சிரியாவின் மிகப் பெரிய நகரான அலப்போவில் தொடர்ந்தும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில் இரு தரப்பும் பாரிய மோதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அலப்போ நகரைச் சுற்றி சுமார் 20,000 அரச படை முன்னகர்ந்து வருவதாக இராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளதோடு, பலமான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் அலப்போ நகர் மீது அரச படை எறிகணை, விமானம் மற்றும் ஹெலிகொப்டர் மூலம் தாக்குதல்களை தொடுத்து கிளர்ச்சியாளர்களை பின்வாங்கச் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அலப்போ நகரின் அரச தொலைக் காட்சி, வானொலி தலைமையகங்களுக்கு அருகிலும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆவணி 06, 2012

சிரியாவை நோக்கி ரஷ்யப் போர்க் கப்பல்கள், வலுவடையும் உலகப் போர் அச்சம்

சிரியாவில் அரச படைகளுக்கும் அமரிக்க – நேட்டோ பின்னணியில் இயங்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் ரஷியா 3 போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. கிளர்ச்சிக் குழுக்களுக்கான ஆயுதங்கள், தொலைத் தொடர்பு மற்றும் பண உதவிகளை அதிகரிக்கும் என வெளிப்படையாக அமரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் இந்தக் மூன்று பாரிய யுத்தக் கப்பல்களை ரஷ்யா அனுப்பிவைத்துள்ளது.120 ஆயுதம் தரித்த கடற்படையினருடன் சிரியா நோக்கிச் செல்லும் இந்தக் கப்பல் மூன்று நாட்களுக்குள் சிரியாவை அடைந்துவிடும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அமரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோப்படைகளதும் ஆக்கிரமிப்பு யுத்தம் மூன்றாம் உலக யுத்தம் ஒன்றிற்கு வழிவகுகலாம் என பல ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். மக்களின் நலன்களோடு எந்த வகையிலும் தொடர்பற்ற இந்த நாடுகளின் ஆதிக்கப்போட்டி மூன்றாம் உலகப் போர் குறித்த அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

ஆவணி 06, 2012

அமெரிக்க குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ஒரு குருத்வாராவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்;25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியாவிலிருந்து சென்றுள்ள சீக்கிய மத போதகர் ஒருவர் மில்வாக்கி அருகே உள்ள ஓக் கிரீக் நகரில் உள்ள குருத்வாராவில் கூடியிருந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குருத்வாராவை சுற்றி வளைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குருத்வாராவுக்குள் துப்பாக்கியுடன் இருந்த அந்த மர்ம நபர்,12 குழந்தைகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நிலையில்,அதிரடி தாக்குதல் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். முன்னதாக குருத்வாராவுக்குள் 3 பேர் கொண்ட கும்பல் நுழைந்ததாக கூறப்பட்ட நிலையில், ஒருவர்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இதனிடயே இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய தூதரகம், தாங்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

ஆவணி 04, 2012

மக்கள் சீனத்தில் பத்து நாட்கள்

பேரா. ஆர்.சந்திரா

தோழர் தாமஸ் ஐசக் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் 10 பேரைக் கொண்ட குழு ஜூலை 9-18 வரை மக்கள் சீனத்திற்கு சென்றது. மல்லாரெட்டி, நாகராஜ், கோபிகாந்த் பக்ஷி, சுஜன் சக்ரவர்த்தி, குர்மேஷ் சிங், லலன் சௌத்ரி, ஜக்மதி சங்வான், மம்தா மற்றும் ஆர்.சந்திரா ஆகியோரைக் கொண்ட இக்குழு, சீனப் பொருளாதாரம், சீர்தியருத்தங் கள், மாற்றங்கள், சவால்கள் ஆகியவற்றைப் பற்றி பல மட்டங்களில் அங்கு பொறுப்பு வகிப் பவர்களுடன் உரையாடி, விவாதித்தது. சோ சலிச நிர்மாணம், சந்தைப்பொருளாதாரம் பற் றிய பல வினாக்களுக்கு விடை கிட்டியது. ஹீனான் (விவசாயம்), ஷாங்காய் (தொழில் வளர்ச்சி), பெய்ஜிங் ஆகிய மூன்று முக்கிய மான இடங்களுக்கு பயணம் செய்தோம். (மேலும்.....)

ஆவணி 04, 2012

துளசிதரன் சாந்திராஜாவை நாடுகடத்த அவுஸ்ரேலியா முடிவு

28 தொன் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப முயற்சித்த மெல்பேர்ன் சர்வதே சபாடசாலையின் முன்னாள் தலைவரான துளசிதரன் சாந்திராஜா என்பவரை இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம், கடந்த முதலாம் திகதி தீர்மானித்துள்ளது. இவரை நாடு கடத்தும் உத்தரவை அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் நிக்கலோ ரொக்ஷன் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக விசா அனுமதியில் அவுஸ்திரேலியா சென்றிருந்த இந்த நபர், மெல்பேர்ன் சர்வதேச பாடசாலையில் பணியாற்றி வந்ததுடன், விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். சந்திராஜா நாடு கடத்தப்படுவதை தடுக்க புலிகளின் ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் கையெழுத்திட்ட, மகஜர் ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கையளித்துள்ளதாகவும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆவணி 04, 2012

தமிழ், முஸ்லிம் தேசியங்கள் ஒரு போதும் ஒன்று சேராது - பஸீர் சேகுதாவூத்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்தை செல்வாவின் பக்குவத்தையும் முஸ்லிம் மக்கள் மறைந்த ஸ்ரீ.ல.மு.கா தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் பக்குவத்தையும் பெறும் வரை தமிழ்த் தேசியமும் முஸ்லிம் தேசியமும் ஒரு போதுமே ஒன்று சேர மாட்டாது என கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார். (மேலும்.....)

ஆவணி 04, 2012

கிழக்கு தேர்தல் ஜனாதிபதிக்கு பாடம் புகட்டுவதுடன் சர்வதேசத்தின் தலையீட்டுக்கும் வழிவகுக்க வேண்டும்

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உரை கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு தக்க பாடம் புகட்டுவதாகவும் சர்வதேசத்தின் தலையீட்டுக்கு வழிவகுக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அதிகாரப் பகிர்வுடன் மாகாணசபைத் தேர்தல் தொடர்வுபடுவதால் அதிகாரப் பகிர்வை ௭திர்க்கும் அரச தரப்பினர் இத்தேர்தலில் போட்டியிடக் கூடாது. பயங்கரவாதப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது ௭ன நினைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கத் தேவையில்லையென நினைக்கின்றார். (மேலும்.....)

ஆவணி 04, 2012

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கு, உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு _

கும்பகோணத்தில் 2004ஆம் ஆண்டில் நிகழ்ந்த பள்ளி தீவிபத்து வழக்கை, 6 மாதங்களுக்குள் முடிக்க தஞ்சாவூர் நீதிமன்றத்திற்கு, இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு, ஜூலை 16 ஆம் திகதி கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பலியாயினர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக, இந்த வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன், தன்னை இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, தீவிபத்து சம்பவம் நடைபெறுவதற்கு ஓராண்டிற்கு முன்னதாகவே, நான் அம்மாவட்டத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறிச் சென்று விட்டதாகவும், எனவே, என் மீது தவறில்லை எனக்கூறி, இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் அதில் தெரிவித்திருந்தார். அவர் பணியில் இருந்தபோது, பள்ளி விபத்து தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டிருந்தால், இவ்விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று கூறி பாலகிருஷ்ணனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கை, அடு்த்த 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஆவணி 04, 2012

சட்டவிரோதமாக வெளிநாடு சென்று

அரசியல் புகலிடம் கோருவோரை நாடு கடத்துமாறு அரசு வேண்டுகோள்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதனால், வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக சென்று அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்கள் அனைவரையும் இலங்கைக்கு நாடு கடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் இலங்கையரின் எண்ணிக்கையின் காரணமாக அந்நாடுகளுக்கு சமாளிக்க முடியாத ஒரு பெரும் சவால் ஏற்பட்டிருப்பதனால் அப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண வேண்டுமாயின், அந்த அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட இலங்கையரை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டுமென்று எமது அரசாங்கம் கேட்டிருப்பதாக ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். (மேலும்.....)

ஆவணி 04, 2012

தமிழ் நாடு அகதி முகாம்களிலிருந்த இலங்கையர் ஆஸி செல்ல முயற்சி

தமிழ் நாடு, புதுச்சேரியில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியை அடுத்த பெரிய காலாப்பட்டு பங்களா தெருவில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியான ஆட்கள் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். காலாப்பட்டு பொலிஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பொலிஸாரைக் கண்டதும் வீட்டிலிருந்தவர்கள் தப்பி ஓடினர். இதில் மேதியூஸ், நந்தகோபாலன், தயாகரன், சசிகரன், இந்திரஜித், பாரத் ஆகிய 6 பேர் பொலிஸ் பிடியில் சிக்கினர். 3 பேர் தப்பினர். பிடிபட்டவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண் டனர். இவர்களில் மேத்யூஸ் சிவகங்கை அகதி முகாமை சேர்ந்தவர், சசிகரன் திருப்பூர் முகாம், இந்திரஜித் கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்தவர் என்பதும், அவர்கள் ஜனா என்ற முகவர் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றமை தெரியவந்தது. அவர்களிடம் ஜனா லட்சக் கணக்கில் பணம் வசூலித்துள்ளார். பிடி பட்ட 6 பேரிடம் உளவுத்துறை பொலிஸா ரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவணி 04, 2012

புணே குண்டு வெடிப்புடன் ஜோர்தானுக்கு தொடர்பு

புணேயில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் ஜோர்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. குண்டு வெடிப்பில் காயமுற்று இப்போது பொலிஸ் காவலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயானந்த் பாட்டீல், ஜோர்தானில் 9 மாதங்கள் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் புணே தொடர் குண்டு வெடிப்புக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான தொடர்பு குறித்து புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன. மேலும் குண்டுகளை வெடிக்கச் செய்யும் “டைமர்களாக’ கைக்கடிகாரமே பயன்படுத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுவாக இந்திய முஜாகிதீன் போன்ற பயங்கரவாதக் குழுக்கள் இவ்விதமான உத்திகளைக் கையாளுவது வழக்கம். இந்நிலையில் இந்தக் குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஒரு சைக்கிள் கடை உரிமையாளரும் பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். (மேலும்.....)

ஆவணி 04, 2012

தமிழால் ஆட்சியை பிடித்தவர்கள் தமிழை கண்டுகொள்ளவில்லை

தமிழால் ஆட்சியை பிடித்தவர்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழை கண்டுகொள்ளவில்லை என தமிழறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் தமிழறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தாய்மொழி, பயிற்று மொழியாக இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே இது தலைகீழாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ் நாட்டில் பள்ளிக் கல்வியில் பயிற்று மொழி தமிழ்மொழியாக இருந்து வந்தது. விதிவிலக்காக ஆங்காங்கு ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே இயங்கி வந்தன. இப்போது, ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகள் புற்aசல் போல் பெருகி விட்டன. தமிழ் நாட்டில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க வேண்டிய ஆட்சியாளர்கள், ஆங்கில கல்விக் கொள்கையை செயல்படுத்தி வருவதால், தனியார் பள்ளிகள் பெருகிவிட்டன. இதனால் தமிழகத்தில் எங்கும் ஆங்கிலமே கோலோச்சி நிற்கிறது. இதை தடுத்து நிறுத்த பல களப்போராட்டங்கள் நடத்தியும், இறங்கி வரவே இல்லை. இன்று வரை ஆங்கில வழிக் கல்வி பயிற்றுமொழியே அதிகரித்து வருகிறது.

ஆவணி 04, 2012

ரஜினியின் சிவாஜி 3டியில்

ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்து ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த படம், ‘சிவாஜி’. இந்த படத்தை ஷங்கர் டைரக்டு செய்திருந்தார். 5 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து இருந்தார். வில்லனாக சுமன் நடித்திருந்தார். படம், மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் வசூல் சாதனையையும் செய்தது. குழந்தைகளையும், பெரியவர்களையும் கவரும் வகையில், ‘சிவாஜி’ படத்தை ‘3டி’ தொழில்நுட்பத்தில் தயாரித்து மீண்டும் வெளியிட ஏ.வி.எம். நிறுவனம் திட்டமிட்டது. அதன்படி அந்தப் படத்தை ‘3டி’ யில் உருவாக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெறுகிறது. பாடல் காட்சிகள் அனைத்தும் ‘3டி’யில் உருவாகிவிட்டன. மற்ற காட்சிகளை ‘3டி’யில் மாற்றும் வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ‘3’டி தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்ட பாடல் காட்சிகள், ரஜினிகாந்துக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதைப்பார்த்து அவர் சின்ன குழந்தையைப் போல் உற்சாகமாக கைதட்டி பாராட்டினார்.

ஆவணி 04, 2012

நீரிழிவு நோயாளருக்கு இனிப்பான செய்தி

இரத்தத்தில் சீனியின் அளவை குறைக்க வகை செய்யும் ஹோர்மோன் என்ற நாளமில்லா சுரப்புத் திரவம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிற நிலையில், இக்கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தற்காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே பெரும் தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற் பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம் உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம் உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நாளமில்லா சுரப்புத் திரவத்தை எலிகளுக்கு சோதனை முறையில் செயற்கையாகச் செலுத்திப் பார்த்ததில் உடல் பருமனுக்கும் நீரிழிவுக்கும் மருந்தாவது காணப்பட்டது. மனிதர்களிடத்தும் இச்சோதனை வெற்றியடையும் என்றும் விரைவில் இன்சுலினுக்கு மாற்றாக இத்திரவத்தை குருதியில் செலுத்துவதன் மூலம் நீரிழிவு குறைபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்றும் டானா- ஃபார்பர் புற்றுநோய் மைய விஞ்ஞானி ப்ரூஸ் ஸ்பைகில்மென் கூறியுள்ளதாக அமெரிக்க மருத்துவ சஞ்சிகையொன்று தெரிவிக்கிறது.

ஆவணி 04, 2012

கிரிக்கட்டை மட்டுமன்றி ஏனைய விளையாட்டு துறைகளையும் முன்னேற்றுவது அவசியம்

ஒரு காலத்தில் அமெரிக்காவினதும், சோவியத்யூனியனதும் ஆக்கிரமிப் பில் இருந்த ஒலிம்பிக் பதக்கங்களை இன்று சீனா, ஜப்பான், கொரியா உட்பட பல வறுமை நிலையில் உள்ள ஆபிரிக்க நாடுகள் வென்றெடுக் கின்றன. இந்தியாவும் ஒலிம்பிக் பதக்கங்களை வென்றெடுக்கக்கூடிய வகையில் தங்கள் வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக்கி வந்துள்ளது. இந்தியா இந்தத் தடவையும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளது. சீனா இந் தத் தடவை அமெரிக்காவையும் மிஞ்சிவிடக்கூடிய அளவுக்கு கூடுதலான ஒலிம்பிக் பதக்கங்களை கைப்பற்றி வருகின்றது. சீனா போன்ற நாடுகள் சுமார் 60 ஆண்டுகளில் பல்வேறு கஷ்டங்களை எதிர் நோக்கி இன்று உலகின் பலம்வாய்ந்த பொருளாதார வல்லரசாக மாறிக் கொண்டிருக்கும் அதே வேளையில், விளையாட்டுத்துறையிலும் முழு உல குமே பாராட்டக்கூடிய அளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளது. (மேலும்.....)

ஆவணி 04, 2012

வெள்ளபாதிப்பு

ஐ.நா. சபையிடம் உதவி   கோருகிறது வட கொரியா 

வடகொரியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பாதிப்பால் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் கோரி ஐக்கிய நாடுகள் சபையிடம் வடகொரியா உதவி கோரியுள்ளது. வடகொரியாவில் பெய்த பலத்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 119 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நீரில் தத்தளித்து வருகின்றனர். வெள்ளத்தால், வடகொரியாவின் அன்சு நகரம், சொன்ங்சோன் நகரம், சோன்னே நகரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தின் காரணமாக, விவசாய நிலங்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால், மக்கள் உணவு போன்றவையின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகொரிய மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் சுத்தமான குடிநீர் போன்றவற்றை வழங்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையிடம் வடகொரிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆவணி 03, 2012

நீதி அமைச்சர் கவனத்துக்கு - செபஸ்டியன்

மூதூர் ஜெட்டியிலிருந்து புளியடிச்சந்தி வரைக்கும் இருந்த தமிழ் மக்களுக்கு நடந்தது என்ன? இவர்கள் எங்கே எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் இந்த வழியே இருந்த நவரத்தினம் மதுபானக் கடை அடையாளமாக இருந்நது எப்படி இப்போ விளையாட்டு அரங்காக மாறியுள்ளது? ஏன்? எப்படி? முஸ்லீம் பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்கள் எப்படி உடனடியாக அகற்றப்படுகிறது இதற்காக காரணங்கள் என்ன? முன்பு தமிழர்களின் கிராமமான 64ல் இப்போது முஸ்லீம் கிராமமாக மாறியுள்ளது எப்படி? மூதூர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம் உதவி முகாமையாளர் ராமச்சந்திரன் சலீம் தலைமையில் கொல்லப்பட்டது?

திரு செபஸ்டியன் அவர்களுக்கு -  Rosaen

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் முஸ்லிம்களுக்கு அநீதியிழைத்தால் முஸ்லிம்கள், மொத்த தமிழினத்தையும் எவ்வாறு குற்றம் சுமத்துவது முட்டாள் தனமோ அவ்வாறுதான் முஸ்லிம் ஒருவர் ராணுவத்தைசேர்ந்தவராக இருந்தால் அவரை ஒரு ராணுவ வீரராகப் பார்க்கவிரும்பாது அதற்குமப்பால் அவர்சார்ந்த சமுதாயத்தை குற்றஞ்சாட்டவிளைவதுமாகும். செபஸ்தியன் உங்களது பல குற்றச்சாட்டுக்கள் இந்தப்பணியிலேயே கற்பனையின் உச்சத்தை தொட்டு நிற்கின்றன. (மேலும்.....)

ஆவணி 03, 2012

வாகன ஓட்டிகளுக்கு கடும் தண்டனை கொடுத்தால் வீதி விபத்துக்கள் குறையும்

நாட்டில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறைந்த பட்சம் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை காலை முதல் இரவு வரை வீதிப் போக்கு வரத்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். பொலிஸாரின் எண் ணிக்கை வாகனப் போக்குவரத்து பணிகளில் கூடுதலாக ஈடுபடுத்தப் படுகின்ற போதிலும் நாட்டில் இப்போது நாளாந்தம் வீதி விபத்துக்க ளினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த வீதி விபத்து மரணங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்னவென்று பகு ப்பாய்வு செய்த ஒரு அனுபவமிக்க பொலிஸ் அதிகாரி, வாகனங்க ளின் எண்ணிக்கை மட்டுமன்றி வீதிகள் அகலப்படுத்தப்பட்டு ஒரே திசையில் ஏககாலத்தில் இரண்டு மூன்று வாகனங்கள் செல்லக்கூடிய வசதி இருப்பதே வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என்று கூறினார். (மேலும்.....)

இலங்கைக்குரிய பாரம்பரிய அம்சங்களை தன்னகத்தே கொண்ட ஹோட்டன் சமவெளி

(கே. ஏ. அலீம் )

உலகில் சமவெளிகளாக இனங்காணப்பட்டுள்ள இடங்களில் ஹோட்டன் சமவெளியும் முக்கியத்துவம் பெறுகின்றது. மத்திய மலைநாட்டில் தியகம, பட்டிபொல, தொட்டு பொலகந்த, ஒஹிய்யா, ஹினி ஹிரிய, கரிவத்த, கிரிகலபொத்த போன்ற பகுதிகளை எல்லைகளாகக் கொண்ட இச்சமவெளி 3160 ஹெக்டர் பரப் பளவுடையதாகும். 1988ல் தேசிய பூங்காவாகவும் 2010 ஆகஸ்ட் 2ம் திகதி உலக மரபுரிமைத் தலமாகவும் பிரகடனப்படுத்தப்பட்ட இவ்விடம் பொருளாதார சுற்றுலாத்தலமாகவும் பரிணமிக்கின்றது. ஹோட்டன் சமவெளி உலகத்திலுள்ள அதி சிறந்த இயற்கைப் புகலிடப் பிரதேசமாகும். இத்தேசியப் பூங்கா பெருமளவு தாவரங்களுக்கும் பறவைகள், விலங்குகள் மற்றும் மூலிகைச் செடிகளுக்கும் ஒரு புக லிடத்தினை வழங்குகின்றது. வர லாற்றில் இப்பிரதேசம் மகாஎலிய தென்ன என்றழைக்கப்பட்டது. 1800ம் ஆண்டு நடுப்பகுதியில் அன்றைய இலங்கையின் பிரித்தானிய ஆளுநர் சேர். றொபர்ட் ஹோர்ட்டன் இப்பகுதிக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து ஹோட்டன் சமவெளி என அழைக்கப்படுகிறது. (மேலும்.....)

ஆவணி 03, 2012

“How did Mad Sumith become a DIG”


 

1. This memo is about the two malicious, false, defamatory and unfounded news items given in your in Lanka news web in June 2012, titled “ DIG Sumith Edirisinghe forgets his past”  and “How did Mad Sumith become a DIG”
 2
.On the first news item, this was an operation carried out under the direction of the UDA in removal of an unauthorized construction after repeated reminders to the owner to remove them. DIG Sumith Edirisinghe was present their as a peace officer to maintain peace and for the safety of everyone present. The decision to demolish the unauthorized structures were solely done on the orders of UDA authorities who were present at the site.   Your opening statement that there was a presence of over 500 police and army officers were present at the site is totally  false and exaggerated as your own photographs published with the news item  does not show the presence of so many officers. Any sensible person will bear testimony to this looking at the photographs. (more...) 

ஆவணி 03, 2012

How many beams? Count at the top and then at the bottom

Yasitha Pandithawatta 
Undergraduate
Computer Science and Engineering Department
University of Moratuwa
Sri Lanka

ஆவணி 03, 2012

சிரியா கலவரக்கும்பலுக்கு உதவ   ஒபாமா ரகசிய உத்தரவு - அம்பலம்

ிரியாவில் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு அந்நாட்டில் உள்ள அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவினருக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஓபாமா ரகசிய உத்தரவிட்டிருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. ராய்ட்டஸ், ஏபிசி உள்ளிட்ட பல்வேறு உலக செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்திருக்கும் தகவல் என்ற அடிப்படையில் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் இதுவரை ரகசியமாக செய்த பல்வேறு சதிவேலைகள் வெளிப்படையாக தெரியவந்திருக்கிறது. (மேலும்.....)

ஆவணி 03, 2012

நான் ஈ - விமர்சனம் 

“வீட்டில் குழந்தைகள் இருக்கிற குடும்பங்கள் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்தால் அது குழந்தைகளுக்குச் செய்கிற குற்றம்,” என்கிற அளவுக்கு ரயில் பயணக் கூட்டாளிகள் பேசிக்கொண்டார்கள். தொடர்ச்சியான பணிகளின் அழுத்தம் அது போன்ற குழந்தை உற்சாகத்தை நாடுமாறு தூண்டியதால் நண்பர்களோடு திரையரங்கம் சென்று படம் பார்த்தபோது ஏற்பட்ட எண்ணம்: “குழந்தைகளோடு வந்திருந்தால் இன்னும் நன்றாக ரசித்திருக்கலாமே.” குழந்தைகளும், குழந்தையாக மாறியும் ரசித்து மகிழ வைக்கிற படங்கள் இங்கு வருவதில்லையே என்ற குறையை ஈடுகட்டுவதில் வெற்றி பெறுகிறது இந்த ஈ. முதலிலேயே, இது தூக்கம் வராத ஒரு குழந்தைக்குத் தந்தை சொல்கிற கற்பனைக் கதை என்பதாக அறிமுகப்படுத்தி விடுகிறார்கள். ஆகவே, இப்படியெல்லாம் நடக்குமா என்ற ஆராய்ச்சியை ஒதுக்கி வைக்க முடிகிறது. (மேலும்.....)

ஆவணி 03, 2012

பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழு

வடக்கு, கிழக்கு சென்று நிலைமைகளை நேரில் ஆராயுமாறு பிரி. குழுவிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பு நேற்றுக் காலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றதுடன் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் முதலீடுகள், வர்த்தகத்துறை மேம்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளன. தற்போது இலங்கையில் நிர்மாணிக்கப் பட்டு வரும் மேம்பாலங்களுக்கு பிரித்தானியா நிர்மாண உதவிகளை வழங்கி வருகிறது. அதேவேளை, இலங்கையில் தற்போதுள்ள முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ஜனாதிபதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தினார். (மேலும்.....)

ஆவணி 03, 2012

கொகோஸ், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு 138 இலங்கையர்கள் சென்றடைவு

கடந்த இரு தினங்களில் 138 இலங்கையர்களுடன் மூன்று ஆழ்கடல் வள்ளங்கள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் மற்றும் கொகோஸ் தீவுகளை சென்றடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய நேரப்படி புதன்கிழமை காலை 8.00 மணியளவில் 67 இலங்கைத் தமிழர்களுடன் கூடிய படகொன்று கொகோஸ் தீவை அண் மித்துள்ளது. கரைக்கு சுமார் 200 மீற்றர் தொலைவு இருந்தபோது 4 இலங்கை தமிழர்கள் கடலில் நீந்தி கரையை சென்றடைந்துள்ளனர். கரைக்கு நீந்தி வந்தவர்கள் மூலம் தகவல் அறிந்து கொண்ட பொலிஸார் படகிலிருந்தவர்களை பாதுகாப்பாக கரைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் விரைவில் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதேபோன்று கடந்த செவ்வாயன்று இரவு மற்றுமொரு படகு 28 இலங்கையருடன் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளது. அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவினர் இப்படகை கைப்பற்றி கரைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதே சமயம் கிறிஸ்மஸ் தீவுக்கு வடக்கே மேலும் இலங்கையருடன் மற்றுமொரு ஆழ்கடல் படகு அவுஸ்திரேலிய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட் டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட் டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 43 பேர் இருந்ததாகவும் இவர்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் அவர்களுக்குத் தேவையான உணவு என்பவை வழங்கப்பட்டு பாது காப்பாக அழைத்துச் செல்லப்படவுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆவணி 02, 2012

ஆணைக்குழு, தெரிவுக்குழு விடயத்தில்அரசு வெற்றிபெறாவிடின் சவாலை சந்திக்க நேரும் - திஸ்ஸ விதாரண

நல்லிணக்க ஆணைக்குழு விடயத்திலும், பாராளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்திலும் அரசாங்கம் வெற்றிகொள்ளாவிடின் அடுத்த மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சவாலானதாக அமைந்து விடும். குறுகிய காலத்திற்குள் சாதிக்க வேண்டிய விடயங்கள் குறித்து அரசு முழுமையான அவதானத்தை செலுத்த வேண்டும் ௭ன்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.(மேலும்.....)

ஆவணி 02, 2012

அண்ணன் காசி இந்தியாவில் அஞ்ஞான வாசம், தம்பி இரத்தத் திலகத்தை ஞாபகப்படுத்தி கதிரைக்கான வாக்கு வேட்டை

நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கட்சி ரீதியானதல்ல. தமிழர்களின் தன்மானத் தேர்தல. முள்ளிவாய்க்காலில் இழந்த உரிமைகளைப் பெறுவதற்கும், ஜெனிவாவில் நமது உரிமையை வென்றெடுப்பதற்கும் நடைபெறுகின்ற தேர்தலாகும் என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை( வெள்ளிமலை) நேற்று தெரிவித்தார். கிழக்கு மாகாணத் தன்மானத்தமிழர்கள், பாலத்தையும், விளையாட்டு முற்றத்தையும், கட்டங்களையும், வீதிகளையும் கண்டு சோரம் போகமாட்டார்கள் என்பதை நிரூபித்துக் காட்டுகின்ற நன்னாள், பொன் னாள் அந்தத்திருநாள் செப்டெம்பர் 8ஆம்திகதியாகும். கடந்த காலங்களில் நமது தமிழ் இனம் வாக்களிப்பதும் கீழ் நிலையில் இருப்பதும் நீங்களும் நானும் அறிந்ததாகும். ஆனால் எதிர்வரும் தேர்தலில், மக்களாகிய நீங்கள் கள்ளவாக்கிடுபவர்களுக்கு இடம் கொடாது, பகல் 12 மணிக்கு முன்னரே வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களியுங்கள். அந்த வாக்குரிமை மூலம் நாம் இழந்த உரிமையை மீளப் பெறுவதற்குள்ள வாய்ப்பு இதுவே ஆகும். இக்கிராமம் இன்று நேற்றல்ல அன்று தொட்டு இன்றுவரை, தமிழத்; தேசியத்தை ஆதரித்து தமிழ் இனத்தின் மீது பற்றுள்ள கிராமம். கிழக்கிலங்கையில் தங்க மாலையிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களைக் கௌரவித்த கிராமம். அதே நேரம் இரத்தத்திலகமிட்டு வரவேற்ற கிராமமுமாகும். எனவே இதனை நான் சொல்லி அறிய வேண்டியதில்லை. இது உலகமறிந்த உண்மை. அதனால் வருகின்ற தேர்தலில் தமிழ் தேசியத்தை ஆதரித்து உங்களது வீடான வீட்டுச்சின்னத்திற்கும் எனது இலக்கமான 8க்கும் வாக்களித்து தமிழ் தேசியத்தை வெல்லச் செய்யுங்கள்.

ஆவணி 02, 2012

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவில் தொடர்ந்தும் தடை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான தடையை ஐக்கிய அமெரிக்கா மேலும் நீடித்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாத எதிர்ப்பு அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாட்டுப் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் அதன் நிதி வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு முழுவதும் தமிழீழ விடுதலப் புலிகள் இயக்கத்தின் நிதி வலையமைப்பு இயங்கி வந்துள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தற்போதைக்கு மீள உருவெடுக்கக்கூடிய அபாயம் இல்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள 2011ம் ஆண்டுக்கான பயங்கரவாத எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்கள உயர்ஸ்தானிகர் பென்ஜமின் தெரிவித்துள்ளார். ஆனால் உருத்திகுமார் அமெரிக்காவிலிருந்து தொடர்ந்தும் செயற்பட அனுமதி. இது எப்படியிருக்கு?

ஆவணி 02, 2012

புனேவில் 4 இடங்களில் குண்டுவெடிப்பு

புனேவில் புதன்கிழமை இரவு 4 இடங்களில் அடுத்தடுத்து ஏழு நிமிட இடைவெளிக்குள் குண்டுகள் வெடித்தன. வெடித்த குண்டுகள் அனைத்தும் சக்தி குறைந்தவை என்பதால், யாருக்கும் உயிரிழப்புகளோ அல்லது காயமோ இல்லை. பாலகந்தர்வா திரையரங்கு, ஜங்கிலி மகாராஜா சாலையில் (ஜே.எம். சாலை) உள்ள தேனா வங்கிக் கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டொனால்ட் உணவகம் அருகிலிருக்கும் குப்பைத் தொட்டி, கார்வாரே பாலம் ஆகிய 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதை தொடர்ந்து இந்தப் பகுதிகள் அனைத்தும் போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டன. மகாராஷ்டிர மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை, வெடிகுண்டு சோதனைப் பிரிவு, குண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் அடங்கிய குழு ஆகியன குண்டுவெடிப்பு நடந்த இடங்களுக்கு விரைந்தன. அந்தப் பகுதிகளில் இருந்த 6 குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன. வெடித்த குண்டுகள் அனைத்தும் சக்தி குறைந்தவை என்பதால், இழப்புகள் பெரிய அளவில் இல்லை. (மேலும்.....)

ஆவணி 02, 2012

ஒரு மாத காலத்துக்குள் 28 ஆயிரம் பேர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 28000 பேர் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2012 ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 2012 ஜுலை மாதம் 31ம் திகதி வரையிலான ஒரு மாத காலப்பகுதிக்குள் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மூலமே 28 ஆயிரம் பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தினகரனுக்குத் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்த அவர், இவர்களில் 7103 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். (மேலும்.....)

ஆவணி 02, 2012

முல்லைத்தீவு செம்மன் குன்றில்

38 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டம் செம்மன் குன்று கிராமத்தில் 38 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றப்படவுள்ளன. அம்பலவன் பொக்கனை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கரைதுறைபற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள செம்மன் குன்று கிராமத்திலேயே இன்று மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தெரிவித்தார். கண்ணிவெடி அகற்றும் பணிகள் இப்பகுதியில் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலிருந்து 38 குடும்பங்களும் அழைத்து வரப்பட்டு இன்று மீள்குடியேற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.  மேலும் சில கிராமங்களில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்திய டைந்துள்ளன. ஒருசில தினங்களில் மேலும் இரண்டு, மூன்று கிராமங்களில் மீள்குடியமர்த் தப்பட விருப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். மெனிக் பாம் நலன்புரி நிலையத்தில் இன்னமும் 1260 குடும்பங்கள் எஞ்சியுள்ளன. அவர்களை இம்மாத நடுப்பகுதிக்குள் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட் டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதே நேரம் மீள்குடியமர்த்தப்பட்ட வர்களுக்குத் தேவையான உதவிகளையும் தாம் வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 02, 2012

பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் ஆதிக்கம்

ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தொடர்ந்தும் தங்கப் பதக்கங்களில் அதிகளவைப் பெற்றுபதக்கப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. 13 தங்கங்கள், 6 வெள்ளிகள், 4 வெண்கலங்கள் அடங்கலாக 23 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் காணப்படுகிறது. 9 தங்கங்கள், 5 வெள்ளிகள், 3 வெண்கலங்கள் அடங்கலாக 17 பதக்கங்களுடன் சீனா, மேலதிகமாக 4 தங்கங்கள் ஒரு வெள்ளி ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது. இரண்டாவது இடத்தில் ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் காணப்படுவதுடன் ஒட்டுமொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையில் சீனாவுடன் தொடர்ந்தும் சமநிலையில் காணப்படுகிறது. 5 தங்கங்கள், 7வெள்ளிகள், 5 வெண்கலங்களோடு ஐக்கிய அமெரிக்கா, நேற்றுமுன்தினம் மேலதிகமாக 9 தங்கங்கள், ஒரு வெள்ளி ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மொத்தமாக பதக்கங்கள், 8 வெள்ளிகள், 6 வெண்கலப் பதக்கங்களோடு மொத்தமாக 23 பதக்கங்களோடு இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.

ஆவணி 02, 2012

டொலரின் பெறுமதி 150 ரூபாவை எட்டும் அபாயம் 10 ஆயிரம் ரூபா நோட்டை அச்சடிக்க தயாராகிறது அரசு - ஐ.தே.க. எம்.பி. ஹர்ஷ டி சில்வா

 

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள அரசாங்கம் சர்வதேச நாணய நிதியிடமிருந்து 200 கோடி டொலர்களை கடனாகப்பெற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே எடுக்கப்பட்ட கடனுக்கு வட்டி மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில் மற்றொரு கடனைப் பெறுவதன் மூலம் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயம் உருவாகி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேற்கண்ட  வாறு தெரிவித்தார். அரசு கூறுவது போன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 8.8 வீதமாகக் காணப்படவில்லை. அரசு பொய் கூறுகிறது. உண்மையான  பொருளாதாரம் 6.85 சதவீதமாகவே காணப்படுகின்றது.
(மேலும்.....)

ஆவணி 02, 2012

சர்வதேச சந்தையில் பேஸ்புக் பாரிய வீழ்ச்சி, பெரும் நட்டத்தை நோக்கி செல்கிறது

சமூக வலைத்தளமான பேஸ்புக் பங்கின் மதிப்புகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நேற்றைய பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, அதன் மதிப்பு சுமார் 15 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. சமீபத்தில் ஒரு பில்லியன் டொலர்களை திரட்டும் வகையில் பங்கு சந்தைக்குள் நுழைந்த பிறகு பேஸ்புக், தனது நிதிநிலை அறிக்கையில் 160 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது என்று வந்துள்ள செய்திகளை அடுத்து, அதில் முதலீடு செய்தவர்கள் குறிப்பாக கவலையடைந்துள்ளனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே பேஸ்புக் பங்கின் மதிப்புகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆவணி 02, 2012

மெர்கோசுர் வர்த்தகக் கூட்டமைப்பில் வெனிசுலா இணைந்தது 

வெனிசுலா அரசு ஆறு மாத தாமதத்திற்குப் பிறகு மெர்கோசுர் பிராந்திய வர்த்தக கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்ந்திருக்கிறது. தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஜெண்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 1991ம் ஆண்டு மெர்கோசுர் எனும் வர்த்தக கூட்டமைப்பை உருவாக்கின. இந்த கூட்டமைப்பு, தங்களுக்குள் பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கும், வர்த்தகம், பொருள், மக்கள் மற்றும் ரூபாயை சுதந்திர ஊக்குவிப்பதற்கும் துவங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் 250 மில்லியன் மக்களையும், வட அமெரிக்க கண்டத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் மூன்று பங்கு அளவிற்கு சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. அதாவது, இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 1100 கோடி டாலராகும். (மேலும்.....)

ஆவணி 02, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வோர் திருப்பி அனுப்பப்படுவர்

அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாகச் செல்பவர்கள் கண்டிப்பாக மீண்டும் தாய் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படுவர் என வெளிவிவகார பிரதியமைச்சர் நியூமல் பெரேரா தெரிவித்தார். இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டிய எத்தகைய அவசியமும் இல்லை எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாகப் போய்ச் சேர்ந்தவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர் திருப்பியனுப்பப்படப்போவது தெரிந்தும் ஆபத்தான பயணத்தை மேற் கொள்ளத் துணிய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற முதலாவது நபர் அண்மையில் திருப்பியனுப்பப் பட்டதுடன் அந்நாட்டு அரசாங்கம் மேலும் சுமார் 200 பேரை விரைவாக மீண்டும் அனுப்புவதற்குத் தயாராகி வருவதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஆவணி 02, 2012

உணர்ச்சிப்பிழம்பாக்கும் எழுத்து

‘வெள்ளையனே வெளியேறு’ எனும் இந்தச் சிறு நூல் 74 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. தற்போது இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. இதை எழுதிய தோழர் ஐ.மா.பா. என்றழைக்கப்படும் ஐ.மாயாண்டிபாரதிக்கு அப்போது வயது 22. எழுதப்பட்ட காலம், இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. 1939ம் ஆண்டில் நாஜி ஹிட்லர் உலக நாடுகளைக் கைப்பற்றும் வெறியோடு சோவியத் ரஷ்யா மீது ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்திக் கொண்டிருந்தான். இந்தியா, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிக் கொண் டிருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தனர். அந்தக் காலத்தில் இளம் கம்யூனிஸ்ட்டாக இருந்த ஐ.மா.பா. பத்திரிகை யாளராகவும் பணியாற்றினார். (மேலும்.....)

ஆவணி 02, 2012

பெற்ற தாயை மயானத்தில் தவிக்க விட்டுச் சென்ற மகன்

ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பைடிதல்லி (வயது 70). இவரது மகன் சீனு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். சீனுவின் தாயார் பைடிதல்லிக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பைடிதல்லி அங்கு இருப்பது சீனுவின் மனைவிக்கு பிடிக்கவில்லை. அவரை எங்காவது கொண்டுவிட்டு விடுமாறு சீனுவை மனைவி அடிக்கடி நச்சரித்தார். இதனால் சீனு மனதை கல்லாக்கிக் கொண்டு தாயை எங்காவது விட்டுவிட முடிவு செய்தார். சம்பவத்தன்று வெளியில் சென்று வரலாம் என்று சீனு தாயாரை அழைத்துச் சென்றார். அவர்கள் விசாகப்பட்டினத்தில் வந்துஇறங்கினார்கள் பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தாயாரை சீனு அழைத்துச் சென்றார். ஸ்ரீராம் நகரில் உள்ள மயானம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆட்டோவை நிறுத்தினார். அங்கு தாயாரை இறக்கி விட்டார். நான் சென்று சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி விட்டார். மகன் சாப்பாடு வங்கி வருவான் என்று பைடிதல்லி காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் மகன் வராததால் அவர் அங்கேயே தவித்தார். எப்படியாவது மகன் வந்து விடுவான் என்ற எண்ணத்தில் 10 நாட்களாக அவர் மயானம் அருகிலேயே பட்டினியுடன் கிடந்தார் ஆனால், மகன் வராததால் அவர் மெல்ல மெல்ல நடந்து அருகில் இருந்த ஊருக்குள் சென்று பசியால் மயங்கி கீழே விழுந்தார். அந்தப் பகுதி மக்கள் அவருக்கு உணவு கொடுத்தனர்.

ஆவணி 01, 2012

வடபகுதியில் கலாசார சீரழிவுகள் ௭ன்றுமில்லாத வகையில் அதிகரிப்பு

கடந்த காலங்களில் வெளிநாடுகளில் தான் கலாச்சார சீரழிவுகள் நடந்தமையை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்று வடபகுதியில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. யாழ்ப்பாணம் ௭ன்றால் படித்தவர்கள் ௭ன்று கூறுவது வெறும் வார்த்தையாகவே உள்ளது. அது தற்போது நடைமுறையில் இல்லை. வட பகுதியில் சிசு மரணம், பாலியல் துஷ்பிரயோகங்கள், இள வயதுத் திருமணங்கள், திருமணமாகாத கர்ப்பங்கள், சட்டவிரோதக் கருக்கலைப்புக்கள் அதிகரித்துள்ளன. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளில் அக்கறை கொள்வதில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பிள்ளைகள் ௭ங்கு செல்கிறார்கள் ௭ன்பது தொடர்பில் ௭துவும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பாடசாலை புத்தகப் பையுடன் மற்றுமொரு உடுப்பையும் ௭டுத்துச் சென்று பாடசாலை செல்லாது வேறு இடங்களுக்குச் செல்கின்றார்கள். (மேலும்.....)

ஆவணி 01, 2012

கூட்டமைப்பு தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வேண்டும் - சித்தார்த்தன் _

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுக்க வேண்டும். கிழக்கு வாழ் தமிழ் வாக்காளர்களின் கைககளில்தான் அது தங்கியிருக்கின்றது என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை, சிவன்கோவில் வீதி, தந்தை செல்வா நினைவாலயத்திற்கு அருகில் நகரசபைத் தலைவர் திரு.த.செல்வராசா தலைமையில் கடந்த 28ஆம்திகதி நடத்திய முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். கிழக்கு மாகாணம் தமிழ்ப்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் என்பதை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்மூலம் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியே ஆகவேண்டும். 1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அதன் கீழான அரசியல் தீர்வு தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது என நாம் இந்திய அரசுக்கு எடுத்துச் சொன்னோம். ரஜீவ்காந்தி அதனை ஏற்றுக்கொண்டு இதனை ஆரம்பமாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஓராண்டு காலம் செல்ல நாம் அதனைப் பூரணப்படுத்துவோம் எனக் கூறினார் எனவும் புளொட் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவணி 01, 2012

இலங்கை – அவுஸ்திரேலிய அதிகாரிகளின் பேச்சின் பின்னரே தமிழ் அகதி நாடு கடத்தல்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னரே அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் ஒருவர் திருப்பியனுப்பப்பட்டதாக 'த அவுஸ்திரேலியன்’ நாளிதழ் கூறுகிறது. இலங்கை கடற்படை தளபதிக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. அதேவேளை, அவுஸ்திரேலியா, தமது நாட்டுக்கு வரும் அகதிகளை தமிழர்கள் மற்றும் சிங்கள இனத்தவர்கள் ௭ன வகைப்படுத்தி நடவடிக்கைகளை ௭டுப்பதாக இலங்கையின் கடற்படைத் தளபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார். இதனாலேயே தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அதிகளவில் செல்வதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையிலேயே கடந்த வாரம் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தமிழர் ஒருவர் நாடு கடத்தப்பட்டதாக அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. இது தவிர, அவுஸ்திரேலியாவிற்கு செல்ல ௭த்தனிக்கும் அதிகளவான தமிழர்களே இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சம்பவங்களுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ___

ஆவணி 01, 2012

என்றும் வாழும் லெனின்!

(ந.வினோத்குமார்)

‘லெனின் அடக்கம் செய்யப்பட்டார்!’ - இன்னும் சில தினங்களில் பத்திரிகைகளில் வெளியாக உள்ள இந்த தலைப்பு, வெறும் செய்தியாக இருக்கலாம். ஆனால் ‘88 ஆண்டுகளுக்குப் பிறகு...’ என்பது வரலாறாக இருக்கும்! 1924-ல் தனது 53வது வயதில் இறந்தார் லெனின். அப்போதைய சோவியத் யூனியனின் தலைவராக இருந்த ஸ்டாலினின் உத்தரவுப்படி, இத்தனை ஆண்டுகளாக லெனினின் உடல் அடக்கம் செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. ரஷ்யாவுக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் லெனினின் பதப்படுத்தப்பட்ட உடலைப் பார்த்துவிட்டு வருவது என்பது புனிதப் பயணத்திற்குச் சென்று வருவதற்குச் சமமானதாக இருந்தது. ரஷ்யாவின் கலாசார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, லெனினின் உடல் இன்னும் சில தினங்களில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. (மேலும்.....)

ஆவணி 01, 2012

கே.கே.எஸ். பொலிஸ் பிரிவில் 144 பேர் கைது

யாழ்ப்பாணம் மற்றும் கே.கே.எஸ் பொலிஸ் பிரிவுகளின் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 144 பேர் கடந்த ஒரு வாரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.இ. எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ். பொலிஸ் தலமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்த்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; யாழ்ப்பாணம் மற்றும் கே.கே எஸ். பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் பொது மக்களுடைய பாதுகாப்பினை நிலைநிறுத்துவதற்காக பொலிஸாரினால்   விசேட ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 144 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.  (மேலும்.....)

ஆவணி 01, 2012

ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியாகிறது விண்டோஸ் 8

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் பொதுமக்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கணணிகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், தங்கள் கணணிகளில் இதனை பதிந்தே விற்கும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும். அதனை மற்ற மதர்போர்டு உள்ள கணணிக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என எண்ணினால், புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க வேண்டியதிருக்கும். (மேலும்.....)

ஆவணி 01, 2012

உணவகங்கள் மீது வழக்குத் தாக்கல்

கொக்குவில் காங்கேசன்துறை வீதியிலும், ஆடியபாதம் வீதியிலும் உள்ள இரண்டு உணவகங்கள் மீது அப்பகுதி சுகாதாரப் பரிசோதகரினால் யாழ்.நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆடியபாதம் வீதியில் உள்ள உணவகத்தில் ஒன்றரை லீற்றர் சோடாக்கள் 46 காலாவதியான நிலையில் கைப்பற்றப்பட்டதை அடுத்தும் காங்கேசன்துறை வீதியில் உள்ள உணவகம் சுகாதாரச் சீரழிவுடன் காணப்பட்டதாகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குவில் சுகாதாரப் பரிசோதகர் க. அனுஷன் அப்பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இவ்விரண்டு உணவகங்களும் அகப்பட்டுக் கொண்டன. 46 ஒன்றரை லீற்றர் சோடாக்களும் அந்த உணவகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதேமாதிரி மற்றைய உணவகம் சுகாதாரமற்ற முறையில் இயங்கியதாகவும், அங்கு சுகாதாரச் சீரழிவுடன் தயாரிக்கப்பட்ட உணவுகள் விற்பனைக்குத் தயாராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
காலாவதியான மற்றும் சுகாதார சீரழிவுடன் காணப்படும் உணவகங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது சுகாதாரப் பரிசோதகர் க. அனுஷன் தெரிவித்துள்ளார்.

ஆவணி 01, 2012

சிரியா மோதலுக்கு ஒபாமாவும், நேட்டோ படையுமே காரணம் - உலகமயமாக்கல் ஆய்வு மையம் தகவல்

சிரியாவில் நடைபெறும் கலவரம் மற்றும் குழப்பத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், நேட்டோ படையினருமே காரணம் என கனடாவைச் சேர்ந்த உலகமயமாக்கல் ஆய்வு மையத்தின் இயக்குநரான பேராசிரியர் மைக்கேல் சோஸ்ஸுடோஸ்கி தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷார் அல்-அஷாத் தலைமையிலான ஆட்சிக்கும், அந்நாட்டில் உள்ள சில குழுக்களுக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. இம் மோதலில் அரசு ராணுவத்தினரும் எதிர் குழுக்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அப்பாவி பொது மக்களும் கொன்று குவிக் கப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் சிரியாவின் இராணுவத்திற்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் நேட்டோ படையினர் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். அதே நேரத்தில் மறுபுறத்தில் அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் எதிர்முகாமில் உள்ளவர்களுக்கு ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றனர். ஒட்டு மொத்தத்தில் சிரியா சின்னாபின்னமாக்கப்பட்டு வருகிறது.
(மேலும்.....)

ஆவணி 01, 2012

வால்மார்ட்டும் ஒபாமாவும்

இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதது சரியல்ல என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, மத்திய அரசைக் கட்டாயப்படுத்தியிருக் கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒபாமா, அமெரிக்க அரசு செயலாளர் ஹிலாரி கிளிண்டனை இதற்காக இந்தியாவுக்கு அனுப்பியிருந்தார். ஹிலாரியும் வந்து, மம்தா பானர்ஜி முதல் ஜெயலலிதா வரை சில மாநில முதலமைச்சர்களைச் சந்தித்துவிட்டுப் போனார். பாச்சா ஒன்றும் பலிக்காததால், ஒபாமாவே களத்தில் இறங்கியுள்ளார். அவர் ஏற்கெனவே, அமெரிக்கத் தேர்தல் களத்தில் திணறிக்கொண்டிருக்கிறார். வால் மார்ட்டுக்கு 120 கோடிப் பேர் கொண்ட பிரம்மாண்ட மார்க்கெட்டைத் திறந்துவிட் டால், தனக்குப் பாராட்டுக் கிடைக்கும். மேலும் தேர்தலுக்கும் பயன்படும் என்று கருது கிறார். (மேலும்.....)

ஆவணி 01, 2012

எகிப்து, லிபியா, துனீஷியாவுக்கிடையில் விசா இல்லா வலையம்

எகிப்து, துனீஷியா மற்றும் லிபிய நாட்டு பிரஜைகள் விசா இன்றி பயணிப்பதற் கான உடன்பாடொ ன்றை எட்ட மூன்று நாடுகளும் ஆலோ சித்து வருகின்றன. எகிப்து, துனீஷிய மற்றும் லிபிய நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்த மூன்று நாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதார ஒத்துழைப்புக்கான கெய்ரோ பிரகடனம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது. இந்தப் பிரகடனத்தில் ஏனைய அரபு நாடுகளும் இணைய அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி மூன்று நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தவும் பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான செயற்பாடு போதைக்கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகியவை தொடர்பாக ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் இணக்கம் எட்டப்பட்டது. மேற்படி எகிப்து, துனீஷியா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் மக்கள் எழுச்சி மூலம் ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி 01, 2012

2 வது நாளாகவும் திடீர் மின்தடை; 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின

இந்தியாவின் வடக்கு மற்றும கிழக்கு பகுதிகளில் இரண்டாவது நாளாகவும் மின் விநியோகம் தடைப்பட்டதுடன் 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின. இந்த மின் தடையினால் 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் திடீர் மின் தடை ஏற்பட்டதால், 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின. 300 ரயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேவேளை மெட்ரோ ரயில் சேவையும் தடைப்பட்டுள்ளதுடன் ரயில் நிலையங்களில் உள்ள பயணிகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் அதிக மின் அழுத்தம் காரணமாக இந்த நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.35 மணி அளவில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் வடமாநிலங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்கள் இருளில் மூழ்கின. பாதிப்புக்குள்ளான 8 மாநிலங்களில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆவணி 01, 2012

காணாமல் போன, களவாடப்பட்ட கடவுச்சீட்டுகள் முறைப்பாடு: புதிய நடைமுறை இன்று முதல் அமுல்

காணாமற்போன அல்லது களவாடப்பட்ட கடவுச்சீட்டுகள் பற்றிய முறைப்பாடுகளை செய்வதற்கான புதிய நடைமுறையொன்றினை ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது. தமது கடவுச் சீட்டு காணாமற்போன பின்னர் அல்லது யாரினாலோ களவாடப்பட்டிருந்தால் புதிய கடவுச் சீட்டொன்றை பெறுவதற்காக மட்டுமே பொலிஸ் நிலையம் செல்கிறார்கள். ஆனால் கடவுச்சீட்டு காணாமற்போனவுடன் அல்லது களவாடப்பட்ட பின்னர் அதனை முறைகேடாக எவராவது உபயோ கிக்கக்கூடும் என்ற எண்ணத்தில் எவரும் உடனடியாக முறைப்பாடு செய்வதில்லை. இதனால் மற்றொருவரின் கடவுச் சீட்டை பயன்படுத்தி வெளிநாடு களுக்குச் செல்லுதல், வெளிநாடுகளில் அதனை பயன்படுத்துதல் என்பன நடைபெறுகின்றன. (மேலும்.....)

ஆவணி 01, 2012

இந்தியாவுடன் இணைந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் கிடையாது

இந்திய எரிபொருள் கம்பனி 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்க உள்ளதாக வெளியான செய்தியை பெற்றோலிய துறை அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது. இவ்வாறு சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பது தொடர்பில் இந்திய எரிபொருள் கம்பனியுடன் எதுவித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை எனவும், இந்திய கம்பனியுடன் இணைந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது எனவும் அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுடனோ கம்பனிகளுடனோ இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பெற்றோலியத்துறை அமைச்சு இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்திய எரிபொருள் கம்பனி இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிறுவ உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ஆவணி 01, 2012

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 12 பேர் சிலாபத்தில் கைது

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 12 பேரை சிலாபம் பொலிஸார் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர். சிலாபம், தொடுவாவ கடற்கரை பிரதேசத்தில் வைத்து ஒரு சிலரையும் சிலாபம் மஹாவெவ பகுதியில் சிலரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் பயணித்த இரண்டு வேன்களையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி மனோஜ் ரணகலவின் தலை மையிலான புலனாய்வுப் பிரிவின் தொடுவாவ கடற்கரை பிரதேசத்தில் பதுங்கியிருந்தனர். அதிகாலை வேன் ஒன்றிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்தவர்களை பொலிஸார் கைது செய் தனர். தொடுவாவ கடற்கரை யிலிருந்து வள்ளமொன்றில் புறப்பட விருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளதுடன் மேலும் சிலர் மஹவெவ பகுதியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி மஹவெவ பகுதிக்குச் சென்று பொலிஸார் மற்றுமொரு சேவனையும் கைப்பற்றினர். அத்துடன் அவுஸ்திரேலியா செல்வதற்கு முதற்கட்டமாக 3 இலட்ச ரூபா வரையில் ஒவ்வொருவரும் கொடுத்ததாகவும், சிலர் காசோலை மூலம் பணம் கொடுத்த தாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளத.ு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com