Contact us at: sooddram@gmail.com

 

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி – 4)

(வரதர் பெருமாள்)

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் காட்டும்

தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லையைக் கடந்து மேற்கொள்ளும் விசைப்படகு, இழுவை வலை மீன்பிடிப்பால் யாழ்ப்பாண மற்றும் மன்னார் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்புத் தொழில் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. இது நாளாந்தம் அவர்கள் எதிர்நோக்கும் ஒரு நடைமுறைப் பிரச்சினை. இது அவர்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினை. இந்த விடயத்தை இலங்கை அரசு கடலெல்லை மீறற் பிரச்சினையாகக்  கையாள்கிறது. அத்துடன் தமிழக மீனவர்களுக்கும் இலங்கைத்  தமிழ் மீனவர்களுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் உறவுகள் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் இலங்கைக் கடற்படை விழிப்போடு செயற்படுகிறது.

இந்த விடயத்தை டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையாளும் முறையானது தமிழக மீனவர்களுக்கும வடமாகாணத் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் ஒரு நீண்டகால நிரந்தரப் பகைமையை வளர்த்து விடும் தன்மை கொண்டதாவே உள்ளது. இதை அவர் புரிந்து கொள்ளமுடியாதவர் அல்ல. பொதுவாக தேர்தல் அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தங்களின்  தேர்தல் வெற்றி மற்றும் பணம் திரட்டல் நலன்களுக் காகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது அரசியல் விதியே. இதில் டக்ளஸ் தேவானந்தா போன்ற ஒருவர் விதிவிலக்காக நடந்து கொள்வார் அல்லது நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

ஆனால், டக்ளஸ் அவர்கள் யாழ்ப்பாண மீனவர்களின் பிரச்சினையைக் கையாளும் விதங்களை உன்னிப்பாகப் பார்க்கையில் அவை அவரின் தேர்தல் வெற்றிக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதாக வரையறுக்க முடியவில்லை. டக்ளஸ் தேவானந்தா ராஜபக்ஷாக்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறாரா அல்லது  அவர் தமிழக உயர்நீதி மன்றத்தின் பிடிவிராந்துக்கு உட்பட்டு, தன்னால் இந்தியாவுக்குச் செல்ல முடியாது ஆக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவ்வாறு செயற்பட முற்படுகிறாரா என்ற கேள்விகளும் உண்டு. டக்ளஸ் தேவானந்தா உட்பட அரசாங்கத்தோடு அங்கமாக உள்ள எவராயினும் அவர்களை அனைத்துத் தமிழகத் தலைவர்களும் அரசியல் சமூக ரீதியில் தீண்டத்தகாதவர்களாவே கருதுகின்றனர். எனவே, எவ்வாறாயினும் அரசாங்கத்தின் அங்கமாக உள்ள எந்தப்பிரமுகரும் தமிழகத் தலைவர்களோடு  பேசி ஒரு இணக்கமான தீர்வை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்பது யதார்த்தம்.

ராஜபக்ஷாக்களை மட்டுமல்ல அனைத்து சிங்களத் தலைவர்களும் ஒரே எடைகொண்டவர்கள் என்ற எண்ணத்தையே  தமிழகத் தலைவர்கள் தமிழக மக்கள் மத்தியில் பரப்பி வைத்திருக்கிறார்கள். அதனால், எந்தவொரு சிங்களத் தலைவரும் நீதியை நிலைநாட்டும் வகையாக தமிழகத் தலைவர்களோடு பேசி ஒரு சமாதான ஏற்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சி எதனையும் தொடங்குவதற்குக் கூட அங்கு வாய்ப்பு எதுவுமில்லை.

ஆனால் த.தே.கூத் தலைவர்களின் நிலை அதுவல்ல. த.தே.கூத் தலைவர்கள் தாங்களே தங்களை இலங்கைத் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் எனப் பிரகடனம் செய்பவர்கள்! கடற்கரையோரத் தமிழர்களின் இந்த வாழ்வாதார விடயத்தை மிகைப்படுத்தல்கள் ஏதுமின்றி மிகத் திட்டவட்டமாவும் தெளிவாகவும், பிரதானமான தமிழகத் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்லி நடைமுறைச் சாத்தியபூர்வமான ஒரு தீர்வை நிலைநாட்டுவதற்கு காலதாமதம் செய்யாமல் எல்லா முயற்சிகளையும் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் இதுவரை அவர்கள் மேற்கொண்டதாக இல்லை.

மாறாக, ஒரு புறம் இப்பிரச்சினையை இலங்கை அரசு அதனது கடற்படையைப் பாவித்து அதனது நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கும், மறுபுறம் தமிழகத்திலுள்ள சிங்கள இன எதிர்ப்பு அரசியற் பிரச்சார அமைப்புகள் அவைகளது பிரபல்ய நோக்கங்களுக்காகப்  பயன்படுத்து வதற்கும் விட்டுவிட்டு, தமது கண்களையும், காதுகளையும், வாய்களையும் பொத்திக்கொண்டு இந்த விடயத்தில் சந்நியாசவிரதம் காக்கிறார்கள்.

இந்த விடயத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்கள் எவ்வளவுதான் பாதிக்கப்பட்டாலும் தமிழகத்தில் அது இலங்கைக் கடற்படைக்கு எதிரான ஆத்திர உணர்வுகளை வளர்ப்பதனால் இலங்கையிலுள்ள தமிழ்த்தேசிய சுயநிர்ணய வியாபாரிகளும் மேலைத் தேச நாடுகளெங்கும் பரவிக்கிடக்கும் சர்வதேசப் புலிவாதிகளும் மிகுந்த மகிழ்ச்சியையே கொள்கின்றனர். 'என்னுடைய மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்குச் சகுனம் பிழைத்தாற் காணும்'  என்பதைத்தானே இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சாராம்சமாக இதுவரை வளர்த்து வந்திருக்கிறார்கள்!

இதை ஏன் கெடுப்பானேன்! 'என்ன நடந்தாலும் யாழ்ப்பாண மற்றும் மன்னார் கடற்கரையோரக் குடி மக்கள் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த சமயக்குருமார்கள் தேர்தல்கள் வரும் வேளைகளில் சொல்லுகிறபடியும், அத்துடன், இலங்கை அரசுக்கு எதிரான கடந்த கால கசப்பான நினைவுகளோடும், தங்களுக்குத்தான் பெரும்பான்மையாக இனியும் வாக்களிக்கப் போகிறார்கள்' என்பதில் த.தே.கூக்காரர்ள் மிகவும் உறுதியாக உள்ளனர். அப்படியிருக்கையில் எதற்காக இந்த மீன்பிடி விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டும் எனத் த.தே.கூத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவு. ஏற்கனவே தாங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பல்வேறு முக்கியமான விடயங்களிலும் கடைப்பிடித்து வருகின்ற 'நோகாமலே நொங்கு தின்னும்' வாய்ப்புகள் இன்னமும் இருக்கையில் 'தேவையில்லாமல் கத்தி எடுப்பானேன் அநாவசியமாக கையில் நோவைத் தேடுவானேன்' என்பதைத் தாரக மந்திரமாக்கி மிகவும் தந்திரமாகச் செயற்பட்டு வருகிறார்கள் என்றால் மிகையாகாது. 

கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போவானாம்

இலங்கையின் இனப்பிரச்சினையில் தமிழர்கள் வேறு யாருக்கும் பாதகமில்லா வகையில் தமக்கு வழங்கப்பட வேண்டிய நீதி என்ற அடிப்படையில் தமது நியாயங்களை உரிய பொருத்தமான அரசியல் உபாயங்களினூடாக  சாதிப்பதற்கு தமிழக அரசினதும் தமிழக அரசியற் தலைவர்களினதும் வளங்களை ஆற்றல்களை சாதகமான துணைகளாக, வாய்ப்புகளாக, ஆதாரங்களாக ஆக்கிக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலையில் மிகவும் அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் தமிழர்கள் மத்தியில் இருக்க முடியாது.

த.தே.கூத் தலைவர்களும் நிச்சயமாக இதைப் புரிந்து கொண்டே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதற்கான முன்முயற்சிகள் எல்லாவற்றையும் எடுக்கவேண்டிய பொறுப்பையும் தமிழ் மக்கள் தங்கள் தலை மேலேயே சுமத்தியிருக்கிறார்கள் என்பதையும் நிச்சயமாக த.தே.கூத் தலைவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதிலும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால், அதற்காக எந்த முன்முயற்சியையும் மேற்கொள்ளாமலும் த.தே.கூ தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதுவும் ஒரு சாதாரணமான பொது அறிவுக்கு உட்பட்ட விடயமாகும்.

ராஜபக்ஷாக்களை மட்டுமல்ல மொத்த சிங்கள இன மக்களையும் சினிமாத் தனமாக அக்கரையில் இருந்து மிரட்டும் அரசியல் மட்டுமே இலங்கை தொடர்பாக தமிழ் நாட்டில் நடக்கிறது. அவை இலங்கைத் தமிழர்களுக்கு எந்தளவு தூரம் பயன்படும்?, எந்தளவுக்கு பாதகமாக அமையும்? என்ற கேள்விகளுக்கு துல்லியமாக விடை காண முற்படுவது ஒருபுறமிருக்கட்டும். தமிழக அரசியற் தலைவர்களும் அதற்கு ஆதரவான பல்வேறு தமிழக மக்கள் சக்திகளும் வெறுமனே தமது சுயநலன்களுக்காக மட்டுமே அவ்வாறு செயற்படுகின்றார்கள் என்று விளங்கிக் கொள்வதுவும் அல்லது அவ்வாறு விளக்க முற்படுவதும் தவறான புரிதலை மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிர்மறையான விளைவுகளையுமே ஏற்படுத்தும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

தமிழக அரசியற் சக்திகள்

  • பெரும்பாலும் இலங்கைத் தமிழர்கள் பட்ட துன்பங்கள் மற்றும் இன்னமும் அநுபவிக்கிற இன்னல்கள் தொடர்பான அநுதாபத்திலும்,

  • இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு இன்னமும் முறையானதொரு அரசியற் தீர்வைத் தரத்தயாராக இல்லாமை என்பதோடு

  • நடைமுறையில் தமிழர்களை நீதியாகவும், பாதுகாப்பாகவும்,  சமத்துவமாகவும் நடத்தவில்லை என்ற ஆத்திரத்தாலுமே

அவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதே பெரும்பாலும் உண்மையாகும்.

  • ஆனால் அவை இலங்கை அரசுக்கு எதிர்ப்பைக் காட்டுதல் என்பதாக  மட்டுமே. அதனிலும் மேலாக ஒட்டுமொத்த சிங்கள இனத்துக்கு எதிரான அரசியலாகவே அங்கு நடப்பதனால்,

  • அவை இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்வு நிலைகளுக்கும் அரசியல், பொருளாதார முன்னேற்றங்களுக்கும்  எந்தளவுக்கு என்னென்ன வகைகளில் சாதகமான, பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவன என்பதையும்,

  • அத்துடன் தமிழகம் எந்தெந்த வகையான நடவடிக்கைகளை, செயற்பாடுகளை என்னென்ன கோரிக்கைகளோடு மேற்கொண்டால் அவை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதாரமாகவும், துணையாகவும், பயனுடையதாகவும் அமையும் என்பதையும்

தமிழகத் தலைவர்களுக்கு த.தே.கூ தலைவர்கள் எடுத்துச்சொல்லி சரியான, முழுமையான புரிதல்களை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அனைத்து சிங்களத் தலைவர்களுக்கு எதிராகவும், ஒட்டு மொத்தத்தில் அனைத்து சிங்கள இனத்தவர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படும் அரசியல் போல தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதற்கும் த.தே.கூத்  தலைவர்கள் தம்மாலான பிரயத்தனங்களை கட்டாயம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவை தொடர்பாக இதுவரையில் த.தே.கூத் தலைவர்கள் எந்தவொரு முயற்சியையும் முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை.

இலங்கை தொடர்பான தமிழக அரசியல் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பாதகங்களை விளைவித்தாலும் பரவாயில்லை, அவை தமது தேர்தல் வெற்றிகளுக்கும், உலகம் பூராவும் வாழும் தமிழர்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கும் மாயைத்தனமான செல்வாக்குக்கும் பயன்பட்டாற் போதும்  என த.தே.கூத் தலைவர்கள் கருதுவதாலேயே அவர்கள் தமிழகத்தில் நடப்பவைகள் எவையாயினும் எல்லாம் நடந்து கொண்டே இருக்கட்டும் என இருக்கிறார்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

உலகத் தமிழர்களின் சனத்தொகை ஏழு கோடியைத் தாண்டும். வளம் மிக்க மேலைத் தேய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்துக்கும் மேல். இந்த வெளிநாட்டுத் தமிழ்ப்பிரமுகர்களுக்கும் தமிழகத்தின் சினிமாத் துறையினர் மற்றும் அரசியற் துறையினருக்கும் இடையில் இறுக்கமான பல அந்நியோன்ய உறவுகள் உள்ளன.

விவசாயத்திலும், தொழிற் துறையிலும் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கும் தேசம். இவ்வளவும் இருந்தென்ன? அழிந்துபோன இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகம் தானாக ஒரு பள்ளிக்கூடம் கட்டித் தரவில்லையே? அழிந்து போன ஒரு ஆஸ்ப்பத்திரியைக் கட்டித் தரும்படி கூட இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் எந்தவேளையிலும் தமிழக அரசிடம் கேட்டிருப்பதாகத் தெரியவில்லை?  ஒரு வீடு கட்டித் தருவதற்குக் கூட தமிழக பட்ஜட்டில் இருந்து நிதி ஒதுக்கித் தரவில்லையே.

தமிழகம் நினைத்தால் ஈழத் தமிழர்கள் பல்லாயிரம் பேர் தொழில் தொடங்க ஒரே நாளிலேயே கடன் உதவிளை வழங்க முடியும். தமிழகம் கண்வைத்தால் யாழப்பாணம் உலகிலேயே சிறந்த கணணித் தொழில் மையமாகலாம். தமிழகம் கைகொடுத்தால் மட்டக்களப்பு நூற்றுக்கணக்கான சிறு கைத்தொழில்களின் மையமாகலாம். 650 ஐம்பது இலட்சம் தமிழகத் தமிழர்கள் 35 இலட்சம மட்டுமேயான இலங்கை வாழ் தமிழர்களுக்குக் கைகொடுத்துத் தூக்கி விட முடியாமலா இருக்கிறார்கள்! ஆனால், தமிழக சக்தி வெறுமனே சிங்களவர்களுக்கு எதிராகக் குரலெழுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக அரசியல் விவகாரங்களைக் கையாள்வதில் மட்டும் நிபுணரல்லளஇலங்கைத் தமிழர் பற்றிய விடயங்ளையும் தெளிவாகப் புரிந்தவர். அவருக்கு நீட்டி முழக்கி எந்த விடயத்தையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சொல்லவேண்டிய விடயங்களை இரத்தினச் சுருக்கமாகச் சொன்னாலே போதும் அவர் அதன் முழுமையையும் தெளிவாகப்புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலுடையவர்.

எவ்வாறாயினும் நோயாளிதானே வைத்தியனைத் தேடிப் போக வேண்டும். ஜெயலலிதா அவர்கள் பதவிக்கு வந்து இரண்டாவது ஆண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றுவரை த.தே.கூத் தலைவர்கள் சென்று அவரைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களின் உண்மையான நிலை என்ன என்பதை கூட்டிக் குறைக்காமல் அச்சொட்டாக எடுத்துச் சொல்வதோடு, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் என்னென்ன செய்யவேண்டும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதை ஒரு திட்டமாக எழுத்து மூலம் அவரிடம் கோரியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாதது மட்டுமல்ல, அப்படியொரு முயற்சியை முன்னெடுப்பதற்கான எண்ணம் கூட கிஞ்சிற்றும் இருப்பதாகத் தெரியவில்லை.  

சினிமாச் சந்தர்ப்பங்கள் கிடைக்காமற் திரியும் சீமான், பிரபாகரன் இல்லாமற் போனதால் நொந்து போயிருக்கும் நெடுமாறன், பிரதானமான எந்தத் தமிழகக் கட்சியும் கணக்கில் எடுக்காத  வைக்கோ சாமி போன்றவர்கள் வானத்தை நோக்கி ஊதும் தமிழ்ப் பெருந் தேசிய சங்கநாதங்களையே இந்திய மற்றும் தமிழக ஆதரவுகளுக்கு சர்வதேசப் புலிவாதிகளும் த.தே.கூ சார்புப் பத்திரிiயாளர்களும் நம்பி இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. இந்த தமிழகப் பெருமான்கள் இந்திய அரசையும் தமிழகத்தின் பிரதானமான கட்சிகளின் தலைவர்களையும் மிரட்டி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பயணிக்க வைப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.

இந்திய அரசு மற்றும் தமிழகத் தலைவர்களின் ஆக்கபூர்வமான ஆதரவுளைத் திரட்டுதல், பெறுதல்  தொடர்பாக சர்வதேசப் புலிவாதிகள் மற்றும் யாழ்ப்பாண நாளேடுகளின் தயவில் தங்கியிருக்கும் த.தே.கூகாரர்களிடம் எந்தவொரு உருப்படியான சிந்தனையும் இருப்பதாகத் தெரியவில்லை, அவை தொடர்பான முயற்சி எதனையும் மேற்கொள்ளும்  அக்கறையும் அவர்களிடம் இல்லை என்பதுவும் தெளிவு.

தொப்புள்க்கொடி உறவு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை உரிமை கொண்டாடப்படும் பக்கத்து தமிழக ஆதரவையே ஆக்கபூர்வமாகத் திரட்டிக் கொள்ள முடியாத த.தே.கூக்காரர்கள் டெல்லி அரசுத் தலைமைக்கு முறையாக விடயங்ளைக் கொண்டு சென்றும், மேலைத் தேய நாடுகளின் ஆதரவுகளை சரியான முறையில் துணையாகப் பெற்றும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு திட்டவட்டமான தீர்வு கிடைக்க வழி வகுப்பார்கள்  என்று நம்புவதற்கு எந்தவொரு தடயத்தையும் அவர்கள் இதுவரை காட்டவில்லை.

'தங்களைக் கேட்டுத்தான் இந்தியா இலங்கைக்கு நெருக்கடி கொடுகக்கிறது' 'தாங்கள் சொல்லுகிறபடிதான் அமெரிக்கா இலங்கை மீது அழுத்தங்ளைப் பிரயோகிக்கிறது' என்று இவர்கள் கூச்சநாச்சமின்றி பகிரங்கமாவே அடிக்கடி சொல்வதில் சினிமா வசனத்தனம்தான் தெரிகிறதே தவிர அவை எந்த வகையிலும் நம்பத்தகு தன்மை கொண்டவையாக இல்லை.

........... பகுதி ஐந்தை நோக்கி தொடரும் ............

(இந்தத் தொடர்களில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பான வாசகர்களின் துணைக் கருத்துக்களையும் மாற்றுக் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அறியவிரும்புகிறேன். அவற்றை எனது ஈமெயில் vpgowry53@gmail.com முகவரிக்கு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.)

(இக் கட்டுரையின் 1ம் பாகம்)

(இக் கட்டுரையின் 2ம் பாகம்)

(இக் கட்டுரையின் 3ம் பாகம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com