Contact us at: sooddram@gmail.com

 

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி – 5)

(வரதர் பெருமாள்)

தனக்குத்தனக்கு என்றால் மட்டும்தான் சுளகு படக்குப்படக்கு எனப் புடைக்குமோ!

அரசாங்கம் போடும் தாளத்துக்கெல்லாம் ஆட வேண்டிய அவசியமுமில்லை அதற்கெல்லாம் ஆமாம்சாமியெனத் தலையாட்டி ஜிஞ்சா போட்டு கூஜா தூக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆனாலும் அரச அதிகாரத்தினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை முழுமையாக அரசாங்கம் நிறைவேற்றவும் அவற்றின் நன்மைகள் உரியபடி மக்களுக்குச் சென்றடையவும் வகையாக ஆக்குவதற்கு உரிய நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் பொறுப்பும் உண்டு, உரிமையும் உண்டு. இதற்காக யாரும் தங்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டும் என  எதிர்பார்ப்பது  முட்டாள்த்தனமென்பதோடு மக்கள் அவர்களுக்கு அளித்துள்ள கடமைகள் தொடர்பான பொறுப்பற்றதனமுமாகும்.

அரசாங்கத் தரப்பினர  அழைத்தாலும் சரி அழைக்காவிட்டாலும் சரி தமககு உரிய உரிமையோடு மக்களுக்கு அவசியமான பொதுநிகழ்ச்சிகளில் அவர்கள் தமக்குரிய இடத்தை எடுத்துக் கொள்வதற்கும், மக்களுக்கான கடமைகள் தொடர்பான பொதுவிடயங்களில் அவர்கள் தமக்கான பாத்திரத்தையும் தாமாக வகிப்பதற்குமே மக்கள் தமக்கு அவர்களது வாக்குகள் மூலம் வழங்கியிருக்கிறார்கள் என்பதை மக்களிடம் வாக்குகளைப் பெற்று சட்டபூர்வமாக மக்களின் பிரதிநிதிகள் ஆனவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

'அபிவிருத்தித் திட்டக் கூட்டங்களுக்கு எங்களைக் கூப்பிடவில்லை',

'எமது மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி அரசாங்கம் எங்களுடன் ஆலோசனை நடத்துவதில்லை'

என்று த.தே.கூ நாடாளுமன்றப் பிரதிநிதிகள் அடிக்கடி தமிழப்பத்திரிகைளில் அழுது குழறுவது தமிழர் அனைவருக்கும் தெரியும்.

இவ்விடயம் தொடர்பாக த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி எழுப்பக் கூடிய சில கேள்விகள்:-

  • பாராளுமன்றக் கூட்டங்களிற் பங்கு பற்றும் உங்கள் தனிப்பட்ட உரிமைகளைத் தடுத்தால் விட்டுவிடுவீர்களா? அதை எப்படியும் சட்டங்களுக்குள் புகுந்து ஆராய்ந்து நிலைநாட்டுகிறீர்கள்தானே!

  • உங்கள் சம்பளத்துக்கும் அப்பால் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் நீங்கள் பங்கு பற்றுவற்காக உங்களுக்கு வழங்கப்படும் பணக் கொடுப்பனவுகளை அரசாங்கம் தராது விட்டால் விட்டுவிடுவீர்கள? அவற்றை எப்படியும் போராடி அங்கு உங்களது உரிமைகளை நிலைநாட்டி விடுவீர்கள்தானே?

  • பாராளுமன்ற உறுப்பினர் என்னும் உங்கள் கடமையை நீங்கள் முறையாகவும் முழுயாகவும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இலவசப் போக்குவரத்து, இலவச போன்வசதிகள், உங்களுக்கென தனி எழுத்தாளர் எனப்பல இத்தியாதிகளை அரசு உங்களுக்கு பணமாகவும் சலுகைகளாகவும் வழங்குகிறது. இவற்றில் எந்த ஒன்றையாயினும் அரசாங்கம் தர மறுத்தால் நீங்கள் இலகுவில் விட்டுவிடுீர்களா? அவை ஒவ்வொன்றும் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சிறப்பான தனி உரிமைகள் என்ற பெயரில் அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் வாங்கி கமுக்கமாக உங்கள் பாக்கெட்டுகளுக்குள் தவறாமல் போட்டுக் கொள்கிறீர்களே?

  • பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்காக உங்களுக்கு வழங்கப்படும் பாராளுமன்ற விடுதிகளை உங்கள் குடும்பத்துக்கான வீடாகப் பாவித்து சொந்தம்கொண்டாடிக  ொள்கிறீர்கள்தானே?

  • நீங்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுகிற ஒவ்வொரு தடவையும் பல கோடி ரூபாக்கள் பெறுமதியான கார்களை வேறு யாருக்குமே கிடைக்க முடியாத விலைச்சலுகைகள் மற்றும் வரிச்சலுகைகள வழியாக சில இலட்சம் ரூபாக்களுக்கு அரசாங்கம் உங்களுக்குத் தருகிறபோது அவை தொடர்பாக ஒரு மூச்சுச் சத்தமும் வெளியேகேட்டுவிடாதபடி அமுக்கிக் கொள்கிறீர்கள்தானே? அதைத் தருவதற்கு சற்றுக் கால தாமதம் ஏற்பட்டாலும் எத்தனை தடைவயாயினும் உரிய அமைச்சுப்படியேறி எவருக்கும் அந்தத் தகவல் தெரிய வருவதற்கு முதல் அவற்றை வாங்கிவிட்டுத்தானே மற்ற வேலை பார்க்கிறீர்கள்?

  • இப்படியான உரிமைகள் மற்றும் சலுகைகளில் எந்த ஒன்றையாயினும் எப்போதாயினும் அரசாங்கம் உங்களைக் கூப்பிட்டுத் தரவில்லை என்று கூறியிருப்பீர்களா? அல்லது நீங்களாகத்தான் கேட்டுப் பெற வேண்டி ஏற்பட்டது என்பதற்காகக் குறைப்பட்டிருப்பீர்களா?

  • அப்படியிருக்க உங்கள் பகுதி மக்களுக்கான, உங்களைத் தேர்ந்தெடுத்த பிரதேசத்துக்கான அபிவிருத்தி விடயங்களில் நீங்கள் அக்கறை காட்டுவதற்கு மட்டும் ஏன் நீங்கள் உங்களின் உரிமைகளை நீங்களே நிலைநாட்டி மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றத்   தவறுகிறீர்கள்? அதறகாக மொட்டைக் காரணங்களை கண்டுபிடித்து அதையும் தமிழ்மக்களிடமே அப்பாவிகள் போல முறையிடுகிறீர்கள்?

  • உங்களிடையே உள்ள பா.ஊக்களிற் சிலர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதான் நீங்கள் மக்களுக்கு அபிவிருத்தி தொடர்பான சேவைகளைச் செய்ய முடியாமைக்குத் தடையாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அப்படிச் சொல்வதற்கோ அல்லது சொல்வதைக் கேட்பதற்கோ கூச்சமாக இல்லையா? டக்ளஸ் தேவானந்தா உங்களின் அரசியல் வெற்றிகளுக்கு ரோட்டும் போட்டு பாயும் விரித்து விடுவார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்களின் அரசியல் அறிவீனமாகாதா?, மடைமைத்தனமாகாதா?

பரமசிவன் கழுத்தில் ஒட்டிய பாம்பாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தவையே நீங்கள் விளையாடும் அரசியற் கிளித்தட்டில் உச்சி ஓடத் தெரியாவிட்டால் நீங்கள் எப்படி பரமசிவன், நாராயணன் மற்றும் பிரம்மா என மும்மூர்த்திகளாக அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்ஷாக்கள உச்சி ஓடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போகிறீர்கள் என சந்தேகப்பட்டால், கேள்வி எழுப்பினால் அது நியாயமாகத்தானே இருக்கும்?.   

த.தே.கூத் தலைவர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் மற்றும் பிரதேசங்கள் தொடர்பான அபிவிருத்தித் திட்ட விடயங்கள் பற்றிய தமது அறியாமைக்கும் தமது அக்கறையின்மைக்கும் அரசாங்கத்தைச் சுட்டி சப்பைக் காரணங்களைக் காட்டிவிட்டு தமது வேலை முடிந்து விட்டதென பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறார்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

1983க்கு முதல் தமது அரசியல் மூதாதையர் நடத்திய வெறும் பாராளுமன்ற எதிர்க்கட்சி அரசியலும், 1970 தொடக்கம் 'எங்கட பெடியன்கள விடமாட்டாங்கள்;' என்ற எங்களின் தலைமுறை நடத்திய வெறும் எதிர்ப்பு அரசியலும் 2009க்குப் பிந்திய இன்றைய காலகட்டத்துக்குப் போதியதுமல்ல, பொருத்தமானதுமல்ல என்பதை த.தே.கூவின் இன்றைய தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளில் முற்றாக அழிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களையும், இதேகாலகட்டத்தில் முற்றாகச் சிதைக்கப்பட்ட தமது வாழ்க்கைகளையும் தமிழ்ச் சமூகம் தனது மூச்சைப் பிடித்து முக்கி உந்தி மீண்டும் எழுப்பி நிலைநாட்ட முயன்று கொண்டிருக்கும் காலகட்டமிது. அதேபோல, தாங்கள் புலிகள் இருந்த காலத்தில் நடத்திய அரசியல் எவ்வளவு தவறானது என்பதையம் த.தே.கூத் தலைவர்கள் இப்போதாவது சுயவிமர்சனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேவாறாக, தாங்கள் மட்டுமே தமிழர்களின் எகபிரதிநிதிகள் எனப் பிரகடனம் செய்து கொண்டு 'புதிய மொந்தையில் பழைய கள்ளு' என இன்னமும் செயற்படுவது அதைவிட மோசமானது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் த.தே.கூக்காரர்கள் தெரியாமற்தான், புரியாமற்தான் இருக்கிறார்களா? என்ற கேள்வியும் உள்ளது. எப்படிப் போராடுவது என்பது அவரவரது தீர்மானத்துக்கு உட்பட்டது. ஆனால், போராடாமல் ஒரு பூச்சி கூட அதனது வாழ்வை நிலை நிறுத்த முடியாது என்பது இயற்கையின் நியதி. மக்கள் பிரதிநிதிகளில் எவருக்கும் அவர்களது மக்கள் தொடர்பான தமது கடமைகளை ஆற்றுவதற்கு உரிய உரிமைகளைத் தர அரசாங்கம் மறுத்தால், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளுக்கு உரிய அபிவிருத்திகள் தொடர்பான தீர்மானங்களை கூட்டங்கள் நடக்கும் அரசாங்கக் காரியாலங்களுக்குள் தங்களை பாரபட்சமான முறையில் அனுமதிக்க மறுத்தால், தமது பகுதிகளில் நடந்து கொண்டிருக்கும் மற்றும் நடக்கவிருக்கம் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முழுத் தகவல்களையம் தரவுகளையும் அரசாங்க அதிகாரிகள் தமக்குத் தரமறுத்தால் -

  • அந்த அரசாங்கக் காரியாலங்களின் முன்னால் அந்த மக்கள் பிரதிநிதிகள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள தொடர்பான தமது உரிமைகள  ிலைநாட்டப்படுகிற வரை விடாப்பிடியாக அஹிம்சை வழியில் மறியல் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும்!

  • பாராளுமன்றத்தில் அவை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்!

  • நீதிமன்றத்தில் அவர்களது முன்னுரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக அடிப்படை உரிமைகள் வழக்குத் தொடரப்பட்டிருக்க வேண்டும்!

  • தமக்கு ஏற்படும் உரிமை மறுப்புகள் தொடர்பாக அரசாங்கமல்லாத கட்சிகளின் அநுதாபத்தையம் ஆதரவையும் திரட்டியிருக்க வேண்டும்!

  • ஜனாதிபதியையும், நாடாளுமன்றத்தையும் தமக்கு ஏற்படும் முன்னுரிமை மறுப்புக்கள், மற்றும் தமக்கு உரிய சிறப்ப உரிமை மறுப்புக்கள் தொடர்பாக பகிரங்கமாக பதில் சொல்ல வைத்தருக்க வேண்டும்!

  • அதற்காக பாராளுமன்ற கட்டடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடியிருக்க வேண்டும்!

  • இவர்கள் நீதிக்கும், சமாதானத்துக்கும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயாராக இருந்தும் மக்களின் பிரதிநிதிகளான தங்களுக்கே இதுதான் பரிதாப நிலை என்பதை நாட்டின் அனைத்து இன மக்களும் உலகமும் அறியும் நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்!

  • ஆயிரக்கணக்கில் தமிழ் இளைஞர்களை கொலைகார யுத்தக் களங்களுக்கு அனுப்பி பலிக்கடாக்கள் ஆவதற்கு வெறியூட்டுவதில் வல்லவர்களாக இருந்த இவர்கள் இப்போது அரச படைகளின் பொல்லுத் தடிகளுக்கா அஞ்சுகிறார்கள்! அல்லது சில நாட்களுக்காயினும் சிறைச்சாப்பாடு உண்ண வேண்டி ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி என தயங்குகிறார்ளோ!

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் அந்த அடிப்படையில் பொதுமக்களின் நலன்கள் தொடர்பாக இவர்களுக்கு இருக்கும் அடிப்படை முன்னுரிமைகள் மற்றும் சிறப்பு உரிமைகளையே நிலைநாட்ட முடியாத இவர்கள் பொது மக்களினுடைய உரிமைகளை எப்படிப் போராடி நிலைநாட்டப் போகிறீர்கள் என பலரும் கேள்வி எழுப்புவது நியாயம்தானே.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இவர்களும் தமிழ் மக்கள் மத்தியில் நின்று தமிழ் மக்களுக்கு மட்டும் கேட்கவென தமது இயலாத்தனங்களை தமிழ் மககளோடு கூடிநின்று கூவி ஒப்பாரி வைப்பதற்காக அல்ல இவர்கள் தமிழ் மக்களால் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்ிறார்கள் என்பதை த.தே.கூத்தலைவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

அபிவிருத்தித் திட்டங்களுக்காக என்ற பெயரில் செலவு செய்யப்படும் பணங்கள் அனைத்து இன மக்களுக்கும் உரியவையாகும். அவை அரசாங்கத்துக்கு ஆதரவானவர்களுக்கு மட்டுமே உரியதல்ல. அரசாங்கம் செலவு செய்யும் பணம் மற்றும் அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எல்லா இன,மத,சாதி மக்களுக்கும் பங்குண்டு. ஆனால் அவற்றைக் கோருவதில், அதற்காகக் குரல் எழுப்புவதில், அவற்றைக் கட்டாயப்படுத்திப் பெறுவதில், அவற்றை உரிய மக்கள் பகுதியினருக்குச் சென்றடைய வைப்பதில் த.தே.கூவினர் அக்கறை உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு எந்த வகையிலும் போதிய எடுத்துக் காட்டுகளைக் காணமுடியவில்லை.

சினிமாவில் நடிகர்கள் ஆடுவதுவும், பாடுவதுவும் வெறும் காசுக்கே! என்பது போல, அரசுக்கு எதிரான வீரவசனங்களுக்கு இசைகள் தொகுத்து அடிக்கடி ஓங்கிய குரல்களிற் பாடுதல்; அரச படைகளுக்கு எதிரான சுலோகங்கள் இயற்றி அவ்வப்போது அரசியற் கூத்துகள் போடுதல்; அந்நிய நாடுகளுக்கு இடைக்கிடை யாத்திரைகள் செய்து உலகம் தங்கள் கையால்த்தான் உருட்டப்படுவது போல வேடிக்கைகள் காட்டுதல் என த.தே.கூக்காரர்கள் செய்யும் எல்லா வேலைகளும் வெறுமனே அடுத்த தேர்தலுக்கான வாக்குகளுக்கு மட்டுமே எனக் கூறப்படுவதை மறுப்பதற்கு சரியான வேறு விவாதங்கள் இங்கு இல்லை.  

(தொடரும்.....)

(இக் கட்டுரையின் 1ம் பாகம்)

(இக் கட்டுரையின் 2ம் பாகம்)

(இக் கட்டுரையின் 3ம் பாகம்)

(இக் கட்டுரையின் 4ம் பாகம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com