Contact us at: sooddram@gmail.com

 

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!!  (பகுதி – 6)

(வரதர் பெருமாள்)

அறையில் ஆடிப் பழகினாற்தானே அம்பலத்தாருக்க  ில்லையான் கோவில் அரங்கத்திலும் ஆட வரும்

தமிழ்ப் பகுதிகளின் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளின் அதிகாரம் த.தே.கூவின் வசமே உள்ளது. அவற்றை வைத்த  எந்தெந்த அளவுக்கு என்னென்ன விடயங்களில் எந்தெந்தப் பிரதேச சபைகளுக்கான பகுதிகளில் த.தே.கூ தலைவர்கள் மக்களுக்கான கடமைகளைச் சாதித்து இருக்கிறார்கள் என்று ஒரு முழுமையான அறிவுபூர்வமான அறிக்கையொன்றை இதுவரை வெளியிட முடியாத நிலையிலேயே த.தே.கூவினர் உள்ளனர்.

கட்சி, அரசியல் சாரா மற்றும் கட்சி அரசியல் சார விரும்பா  அறிஞர்கள்தான் இதில் அக்கறையில்லாமல் இருந்தாலும் தமிழ் மொழி இன உணர்ச்சி ஆவேசம் ததும்ப நிற்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மறறும் மாணவர்களில் ஒரு பத்து அல்லது பதினைந்து பேரின் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்குத் தேவையான ஒத்துழைப்பைப் பெற முடியாமலா த.தே.கூக்காரர்கள் இருக்கிறார்கள்;? 

தமிழ் அரசாங்க அதிகாரிகளில் பெரும்பாலோர் இவர்களுக்குத்தான  ாக்களிப்பவர்கள்! அந்த அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பை இவர்கள் சிறிலங்கா அரசின் அனுமதியைக் கேட்காமலே பெற்றுக் கொள்ள முடியும்தானே! அவர்கள்தானே உள்ளுராட்சி சபைகளின் நிர்வாகங்களை நடைமுறையில் செயற்படுத்துபவர்கள். அவர்கள் த.தே.கூ தலைவர்களுக்கு உண்மைகளைக் கண்டறிய உதவமாட்டார்கள் என்று யாராவது சொல்வார்களானால் அது ஏற்கத்தக்க கருத்தாக இல்லை. அப்படி ஓர் உண்மை இருக்குமாயின் அது த.தே.கூக்காரர்களிடமுள்ள அரசியல், நிர்வாக இயலாமையின், ஆற்றலின்மையின் வெளிப்பாடாகவே அமையும்.

           ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றத்துக்கும் கிடைத்துள்ள நிதி!

           கிடைக்கக் கூடிய நிதியின் அளவு!

           நிதி வளத்தைப் பெறுகின்ற மற்றும் பெருக்கக் கூடிய வழி முறைகள்!

           மேற்கொள்ளப்படுகின்ற மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள்!

           மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் இன்று என்ன கட்டத்தில் உள்ளன!

           தமது உள்ளுராட்சிமன்ற அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசத்துக்குள் தம்மால் மேற்கொள்ளப்படக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக தமது உள்ளுராட்சி மன்றங்கள் கொண்டிருக்கின்ற அதிகாரங்கள்!

போன்றன பற்றி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைக்கும் அதன் தலைவருக்கும் அந்த சபையினது நிர்வாகத்திலுள்ள உயர் அரச உத்தியோகத்தர்கள் அவ்வப்போது எழுத்து மூலம் உரிய அனைத்து தகவல்களையும், அறிக்கைகளையும் சமர்ப்பித்தல் வேண்டும்.

           சபைத் தலைவர் அந்த அதிகாரிகளிடமிருந்து தேவையான தகவல்களை மற்றும் அறிக்கைகளை அதிகாரபூர்வமாகவே பெற்றுக் கொள்ளலாம்.

           மேலும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாக தமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் தங்களது நிர்வாக அமைப்பில் உள்ள அதிகாரிகள் தொடர்பாக நிலவும் நிறைகள் மற்றும் குறைகள் அவை தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள அபிப்பிராயங்கள் என்பன பற்றிய அறிவும் ஆட்சியிலுள்ள ஒரு கட்சிக்கு அல்லது ஒரு கூட்டுக்கு அவசியமாகும். 

இந்தத் தேடல்களும், ஆய்வுகளும், அவை தொடர்பான அறிக்கைகளும்; வேறு யாருக்காகவும் அல்ல.

மாறாக,

           த.தே.கூ தலைவர்கள் தமதும் தம்மோடு சேர்ந்துள்ளவர்களதும் ஆற்றல்களைத் தாமே அளந்து மதிப்பிடுவதற்காகவும்,

           தம்மால் தலைவர்கள் ஆக்கப்பட்டவர்கள் மக்களுக்கு எவ்வளவுதூரம் எவ்வாறு சேவை செய்கிறார்கள் என்பதை உண்மையாக அறிந்து கொள்ளவும்,

           தம்மால் தலைவர்கள் ஆக்கப்பட்டவர்கள் உண்மையாகவும் ஆற்றலோடும் மக்களுக்கு நல்ல முறையில்;; சேவைகள் செய்யும் வகையாக வழி காட்டவும்,

           தமது ஆட்சி நிர்வாகம் திறனுடன் இயக்கப்படுவது தொடர்பாக வழிகாட்டுவதற்கும்,

           மேலும் தம்மைப் பற்றி மக்கள் மத்தியில் நேர்முகமான நம்பிக்கைகளை வளர்ப்பதற்கும்

அவை மிகவும் அவசியமாகும்.

பயங்கரவாத சூறாவளியின் மத்தியிலும் வடக்குகிழக்கில் வெற்றிகரமாக ஓர் அரசியற் பரிசோதனை அன்று மேற்கொள்ளப்பட்டது. அன்று வடக்கு-கிழக்கு மாகாண சபை எவற்றைச் சாதித்தது, எப்படிச் செயற்பட்டது, என்னென்ன சிரமங்களையெல்லாம் எதிர்நோக்கியது என்ற விபரங்களை தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலோர் அன்று மட்டுமல்ல இன்றும் கூட அவற்றில் குறைந்த பட்சத்தைக் கூட தெரிந்திருக்க மாட்டார்கள்தெரியவும் முயற்சிக்கவில்லைதெரிந்து கொள்வதில் அக்கறையும் கொள்ளவில்லை என்பதே உண்மை.

           'அந்த மாகாண சபைக்காக நடந்த தேர்தலானது இந்தியப் படைகளால் நடத்தப்பட்ட ஒரு நாடகம்' எனவும்,

           'அந்த மாகாண சபை இந்திய அரசின் கூலிப்படை ஆட்களையும  மற்றும் பொம்மை முதலமைச்சரையும்; கொண்டிருந்த ஒரு பொய்க் கூத்து' எனவும்,

புலிகள் பலமாக இருந்த காலத்தில் படிப்பித்துக் கொடுத்த அறிவுக்கு அப்பால் வேறெதுவும் தமிழர்களுக்குத் தெரியாது என்பதே யதார்த்தம்! தமிழர்களுக்குச் சாதகமாக வந்தும் புலிகள் முழங்கிய கற்பனைகளிலும், புலிகள் பற்றிய கனாக்களிலும் மூழ்கிப் போய் இருந்ததால் தவறவிட்ட காலத்தின் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதற்கும், அதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதற்கும் எந்த தமிழ் அறிவுஜீவியும் இதுவரை விசுவாசமாக முயற்சிக்கவில்லை. அந்தச் சபை செயற்பட்டு முடிந்து இருபத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த அநுபவங்களைத் தேடும் முயற்சி தமிழ்ச் சமூகத்தின் கல்வி வெளியில் இன்னமும் காணப்படவில்லை.

இவ்விடயத்தில் புலிவாதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டு இருந்தவர்கள் மட்டுமல்ல அதுவல்லாதவர்கள் மத்தியிலும் அதுதான் நிலை. அந்த மாகாண சபையும் தமிழர்களின் அரசியல் வாழ்வில் நிகழ்ந்த ஒரு துரதிருஷ்ட சம்பவமாகக் கருதி அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லதுஅதை உண்மையாக மதிப்பிட முயற்சிக்காமல்; இருப்பதே புத்திசாலித்தனமானது என பெரும்பான்மையான தமிழ்ச் சமூகப் பிரமுகர்களும் மற்றும் அறிவுஜீவிகளும் கருதுகிறார்கள் என்றே கொள்ள வேண்டி உள்ளது.

எவ்வாறாயினும் அந்த மாகாண சபை செயற்பட்ட காலத்தின் பொதுவான அரசியல் மற்றும் சமூகச் சூழலை அனைவரும் அறிவர். அன்று மற்றைய கட்சிகளின் உறுப்பினர்களை புலிகள் எல்லாத் தந்திரங் களையும் பாவித்து வேட்டையாடிப் படுகொலை செய்து கொண்டிருந்தனர். அதற்கு பெரும்பான்மையான வடக்கு மற்றும் கிழக்கின் திருகோணமலை மாவட்டத் தமிழர்களும், மேலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் உயர்குடித் தமிழர்களும் கணிசமான அளவு நேரடியாகவும் மௌனமாக மறைமுகமாகவும் புலிகளுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்தார்கள். அத்தோடு மாகாண சபை அதிகாரிகளுக்கும் புலிகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தனர். இங்கு தமிழர்கள் எனும்போது தமிழர்கள் மத்தியிலுள்ள சமூக மற்றும் சமயப் பிரமுகர்களையும் அறிவுஜீவிகளையுமே குறிக்கின்றேன்.

புலிகளிடமிருந்து எதிர்நோக்கிய கொலைகார ஆபத்துகளை மட்டுமல்ல, இலங்கை அரசும் அந்த மாகாண சபைக்கு ஒத்துழைக்காததையும், அத்தோடு புலிகளின் பயங்கரவாதத்துக்கு ஒத்துழைத்து தன்பாகத்துக்கு இலங்கை அரசு மேற்கொண்ட பல்வேறு தடங்கல்களையும் எதிர் நடவடிக்கைகளையும் அந்த மாகாண அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்று அப்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டும் இணைந்த வகையாகக  ிடைத்;த மாகாண சபையைத் 'தவறவிட்டு விட்டோமே' என்று தமிழ்ப் பிரமுகர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் தனிப்பட்டரீதியில கவலைப்படுவது தெரிகின்றது. ஆனால் அது பற்றி இன்றைக்கும் யாரும் பகிரங்கமாகக் கூறுவதில்லை, விவாதிப்பதுமில்ல .

வடக்கு கிழக்கு இணைந்த அநத மாகாண சபை ஆட்சியை அததோடு அதனை திருகோணமலையைத் தலைநகரமாகக் கொண்ட ஒனறாக யதார்த்தமாக்குவதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்காரர்கள் சிந்திய இரத்தங்கள் செய்த தியாகங்களை தமிழ் பிரமுக சமூகம் இன்றைக்கும் திரும்பிப் பார்க்க - சிந்தித்துப் பார்க்கத் தயாராக இல்லை.   பெரும்பான்மையான தமிழர் சமூக சமயப் பிரமுகர்களும் புத்திஜீவிகளும்; அன்று தமிழர்களின் நலன்களுக்கு எதிராக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை அழிப்புகளையும் அந்த மாகாண சபை இல்லாமற் போக வேண்டும் என்பதையும் மனமார மகிழ்ச்சியோடு வேண்டிக் கொண்டுதான் இருந்தார்கள்.

எவ்வாறாயினும், இங்கு பிரதானமாகக் கூற விழையும் விடயம் என்னவெனில், அன்று இலங்கை கட்டவிழ்த்;த விட்ட அத்தனை அயோக்கியத்தனங்களுக்கு மத்தியிலும், புலிகள் கட்டற்று மேற்கொண்ட பயங்கரவாதப் பேரலைகளின் மத்தியிலும் அந்த மாகாண சபையானது அதன் ஓராண்டுக்குள் அதன் செயலியக்கம் தொடர்பாக துறைகள் ஒவ்வொன்றினதும் நிலவர அறிக்கைகள், திட்ட அறிக்கைகள், மதிப்பீட்டு அறிக்கைகள் என பலவகையான அறிக்கைகளை அச்சொட்டான தரவுகளோடும் தகவல்களோடும் வெளியிட்டது. அந்த மாகாண சபை உயிர்பிழைத்து செயலாற்றிய சூழலோடு ஒப்பிடுகின்ற போது இன்று த.தே.கூவினர் அமைதிப் பூங்காவில் உள்ளுராட்சி சபைகளின் ஆட்சிகளை நடத்துகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்துடன் தவிர்க்க முடியாத வரலாற்றுக் காரணங்களால் தலைமையேற்று நடத்திய அந்த வடக்கு கிழக்கு மாகாண ஆட்சியின் முதலமைச்சரின் அப்போதைய வயது வெறுமனே 35 தொடக்கம் 37தான் என்பதை இப்போதைய பேரனுபவங்கள் மிக்க தமிழ்ப் பெருந்தலைவர்கள் நினைவு படுத்திக் கொள்வது அவர்களுக்குப் பயனுடையதாகும்.

எவ்வகையாகப் பார்க்கினும், ,தே.கூக்காரர்கள் தமது இயலாமையாற்தான், முடியாமையினால்தான் தமதை மற்றும் தம்மால் தலைவர்கள் ஆக்கப்பட்ட கட்சிக்காரர்களின் ஆற்றல்களை, மக்கள் தந்த பதவிகளைக் கொண்டு செய்ய வேணடிய சேவைகளை அளவிட முடியாமல் - மதிப்பிட்டு வெளியிட முடியாமல் இருக்கிறார்கள் என்று கருத முடியாதுள்ளது.

அவர்கள், மாறாக, தாம் வெளியிடும் உண்மைகள் கொண்  அறிக்கைகள் தம்மையே மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி விடுமோ என,

'நுணலும் தன் வாயால் கெடுதல்' போல் ஆகிவிடுமோ என,

'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெட்டான் ஆண்டி' என்பது போல ஆகிவிடுமோ என அஞ்சுகிறார்களோ என்று கேள்வியை எழுப்பவ  ோன்றுகின்றது.

ஆக த.தே.கூக்காரர்கள் தம்மைப் பற்றிய மாயைக்கனவுகள் மக்கள் மத்தியில் இருந்து கலைந்து - மறைந்து விடுவதற்குள் தமது அரசியற் காலத்தை ஓட்டி விட முனைகிறார்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது.  

(பகுதி -7 ஐ நோக்கி தொடரும்....)

(அன்பார்ந்த வாசகர்களே!

இத்தொடரில் சேர்க்கப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும் என நீங்கள் கருதுபவைகளையும்;, இத்தொடரில் கூறப்பட்டுள்ளவை தொடர்பான உங்கள் மாற்றுக்கருத்துக்களையும் vpgowry53@gmail.comக்கு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.)

(இக் கட்டுரையின் 1ம் பாகம்)

(இக் கட்டுரையின் 2ம் பாகம்)

(இக் கட்டுரையின் 3ம் பாகம்)

(இக் கட்டுரையின் 4ம் பாகம்)

(இக் கட்டுரையின் 5ம் பாகம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com