Contact us at: sooddram@gmail.com

 

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி – 7)

(வரதர் பெருமாள்)

ஓநாய்! ஓநாய்! என அடிக்கடி பொய்க்குரலெழுப்பிய இடையனுக்கு உண்மையிலேயே ஓநாய்கள் வந்தபோது உதவ யாருமே வரவில்லை. இது ஒரு நீதிக்கதை. ஆனால் இங்கு அது ஒரு யதார்த்தம்.

த.தே.கூவின் தலைமையிலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு த.தே.கூட்டுத் தலைவர்களால் அடிக்கடி எழுப்பப்படுகிறது. அத்துடன் தமிழர்களுக்காக வெளிநாடுகள் வழங்கும் பணங்களையெல்லாம் அரசாங்கம் சிங்களப் பகுதிகளுக்குத் திசைதிருப்பி விடுகின்றது என்று பொத்தாம் பொதுவாக பகிரங்கக் குற்றச்சாட்டு த.தே.கூவினரால் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கருத்து இலங்கையில் உள்ள தமிழ் மக்களை மட்டும் குழப்பவில்லை, தமிழக மக்களையும் குழப்புகிறது. இந்தியா இலங்கைத் தமிழர்களுக்காக வழங்கும் உதவிகள் தொடர்பாகவும் இப்படிப்பட்ட அபிப்பிராயமே தமிழகத் தலைவர்கள் மத்தியிலும் பரவலாக விதைக்கப்பட்டு தமிழக மக்கள் மட்டத்தில் பிரபல்யமாக்கப்பட்டிருக்கின்றது.

தமிழர்களுக்கு எதிரான மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக சற்றுக் கூட்டி, சிறிது மிகைப்படுத்திக் கூறுவதால் தமிழர்களுக்கு என்ன நட்டம் எனச் சிலர் நினைக்கக் கூடும். உண்மையில் அவ்வாறான மிகைப்படுத்திய பிரச்சாரங்களால் மறுபுறமாக தமிழகத்தில் எழுப்பியுள்ள வாதப் பிரதிவாதங்கள் இந்திய அரசுக்கு எதிரான ஒரு பிரச்சாரமாகவே ஆகியிருக்கின்றது. இந்திய அரசின் அரசியற் தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் மட்டத்தில் இதன் விளைவு என்னவாக ஆகியிருக்கிறதெனில், இலங்கைத் தமிழர்களுக்கென வழங்கும் உதவிகளெல்லாம் இந்திய மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாகவே அமைகின்றன!

ஏன் இந்த வீண் தொல்லை!

அப்போது தமிழர்களுக்கு ஓர் அரசியற் தீர்வு ஏற்பாட்டை உருவாக்கித் தருவதற்கென இந்தியப் படைகளை அனுப்பி 1500 க்கு மேற்பட்டவர்களை சாகக் கொடுத்தும் இலங்கை மற்றும் தமிழகத் தமிழர்களிடமிருந்து கடைசியில் கெட்ட பெயர்தான் மிஞ்சிக் கிடைத்தது இப்போது இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வு தமிழர் பிரதேசங்களின் புனர்நிர்மாணம் என 5000 கோடி ரூபாக்களுக்கு மேற்பட்ட உதவிகளை தமிழர்களுக்கு வழங்குகிற போதும் அதே கெட்ட பெயர்தான் எஞ்சிக் கிடைக்கிறது என்ற எண்ணப்பாட்டையே உருவாக்கி வளர்த்திருக்கிறது.

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் தக்கு முக்கித் திக்குத் தாளம்! எட்டு நாளிலே தெரிஞ்சு போகும் தக்கு முக்கித் திக்குத் தாளம்!!

இப்போதெல்லாம் இலங்கைக்கு உதவி செய்யும் வெளிநாடுகள் தமிழர்களுக்கான புனர்வாழ்வு, தமிழ்ப் பிரதேசங்களுக்கான புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திகளுக்காக தாங்கள் வழங்குகின்ற நிதியானது நடைமுறையில் எவ்வாறு செலவழிக்கப்படுகின்றன; தாம் நிதி வழங்கிய செயற்திட்டங்கள் எந்த அளவில் நிறைவேறியுள்ளன என்று அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகள் அடிக்கடி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நேரடியாகச் சென்று பார்ப்பதுடன் அந்தந்த இடங்களில் மக்கள் பிரதிநிதிகளையும் அவர்கள் சந்தித்து விபரங்களை அறிந்த  வருகின்றார்கள்.

வெளிநாட்டுத் தூதுவர்களும் மேலைத் தேச நாடுகளிலிருந்து விஜயம் செய்யும் அரச உயர் அதிகாரிகளும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலைமைகளையும் மற்றும் அரச செயற்பாடுகள் பற்றியும் தெரிய வாய்ப்பற்றவர்கள் என்ற எண்ணத்தோடு உண்மைக்குப் புறம்பான தகவல்களையோ அல்லது மிகைப்படுத்திய வகையான தரவுகளையோ வழங்குகிறபோது தமிழ்த் தலைவர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்ற பெயரை, எண்ணப்பாட்டை அந்த வெளிநாட்டவர்கள் மத்தியில் உருவாக்குவதைத் தவிர வேறெதெனையும் த.தே.கூத் தலைவர்களின் பிரச்சாரங்கள் சாதிப்பதில்லை.

கொழும்பிலுள்ள பிரதானமான வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு ஒவ்வொரு நாளும் பொழுதும் வடக்கு, கிழக்கில் நடப்பவை பற்றிய விபரங்களையும்,  அவ்வப்போது நிலவிக் கொண்டிருக்கும் நடைமுறை நிலைமைகளையும் அறிவிக்கவென அரசு சாரா சமூக நிறுவனங்கள் பல வடக்கு கிழக்கில் செயற்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களை நடாத்தும் பிரமுகர்களிற் பெரும்பாலானோர் தேர்தற் காலத்தில தமிழர்கள் அனைவரும் த.தே.கூவுக்கே வாக்குகளை அளிக்க வேண்டுமென ரகசியமாக அதேவேளை காத்திரமாக பிரச்சாரம் செய்கின்றனர். அந்தவகையில் இந்த நிறுவனங்கள் தேர்தல் விடயத்தில் த.தே.கூவுக்கே பெரும்பாலும் ஆதரவாக உள்ளன. ஆனால், இந்த நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் தமிழர்கள் மத்தியில் உள்ள எந்த அரசியற் தலைமை மீதும் விசுவாசம் கொண்டவர்களல்ல. அத்துடன் த.தே.கூவினரால் அரசியல்ரீதியாக ஏதும் சாதிக்கப்படும் என நம்பிக்கை உடையவர்களுமல்ல. 

நடைமுறையில் இந்த நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் மத்தியில் தங்களது தனிப்பட்ட சமூக   முக்கியத்துவத்தையும் தத்தமது நிறுவனங்கள் மேற்கொள்ளும் சேவைகளையும் பற்றிய நல்லபிப்பிராயத்தை நிலைநாட்டுவதற்காக தமிழ் அரசியற் தலைவர்களைப் பற்றிய அவநம்பிக்கைகளையே தூபமிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக த.தே.கூக்.காரர்களின் அறியாமைகளையும், ஆற்றலின்மைகளையும், இயலாமைகளையும், உட்கட்சிப் பிளவுகளையும் தருணங்கள் தவறாது விலாவாரியாக விளக்கி, பரப்பி விடுகின்றனர்.

அதற்கு த.தே.கூக்காரர்களின் மிகைப்படுத்தல்கள் நிறைந்  அறிக்கைகளும் வெளிநாட்டுத் தூதர்கள் மத்தியில் அவர்கள் நேரடியாக வழங்கும் வாக்குமூலங்களில் காணப்படும் தப்பான தரவுகளும், மற்றும் பிழையான தகவல்களும் த.தே.கூக்காரர்கள் பற்றிய எதிர்வினையான அபிப்பிராயங்களை உறுதிப்படுத்துபவையாக உள்ளன. த.தே.கூக்காரர்களின் அறிக்கைகளையும் பேச்சுக்களையும் நம்பி எந்தவொரு சபையிலும் அவற்றை சிறிலங்கா அரசுக்கு எதிரான விவாதங்களில் பயன்படுத்த முற்படுபவர்கள் அந்தச் சபைகளில் மொக்கையீனப்படும் நிலைக்கே உள்ளாவார்கள் என்ற நிலையையே த.தே.கூக்காரர்கள் நிலைநாட்டியிருக்கிறார்கள்.

சத்தியம் தவறாது கேளுங்கள் தரப்படும்! விசுவாசம் கொண்டு தட்டுங்கள் திறக்கப்படும்!!

மற்றவர்களையெல்லாம் தாம் கெட்டித்தனமாக தமக்கேற்ற விதமாக பயன்படுத்த முற்படுவதாக நினைக்கும் நினைப்புகளை கட்டுப்படுத்திக் கொண்டு, தமிழ் மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறும் வஞ்சக நோக்கங்களுடன் உணர்ச்சிவசப் புலுடாக்களைக் கட்டவிழ்த்து விடுகின்ற அதேபாணியில் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான ஆத்திர வெறியைக் கிளப்புவதற்கா  உண்மைகளை மீறி மிக அதீதமான அளவில் கூட்டிக்கட்டி தகவல்களைப் பரப்பும் அதே முறையில், த.தே.கூக்காரர்கள் வெளிநாட்டவர்கள் மத்தியில் ஆதரவு தேடுவது தமிழர்களின் நலன்களுக்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதற்கு மாறாக த.தே.கூக்காரர்கள் உண்மை பேசுபவர்களாகவும், நேர்மையான முறையில் விடயங்களை முன்வைப்பவர்களாகவும் சரியாக, முறையாக முயற்சித்தால் இந்தியா உட்பட இலங்கைக்கு உதவி புரியும் பெரும்பாலான வெளிநாடுகளிலிருந்து நேரடியாவே உள்ளுராட்சி சபைகளின் குறிப்பிட்ட திட்டங்களுக்கு பெரும் நிதியைத் திரட்ட முடியும்.

இலங்கையின் எந்த அரச பாகத்துக்கான வெளிநாட்டு நிதியுதவியும் கொழும்பு அரசாங்கத்துக்கு ஊடாகவேதான் வந்து சேரும் என்பது ஒரு நிதி நிர்வாக சம்பிரதாயம் மட்டுமே. எந்தவொரு வெளிநாட்டு உதவியையும் வேண்டாம் என மறுக்கும் அதிகாரம் கொழும்பு அரசாங்கத்துக்கு உண்டு. என்றாலும் இலங்கை தொடர்பான இன்றைய சர்வதேச நிலைமையில் மக்களின் சட்டபூர்வமான பொதுநலன்கள் தொடர்பான எந்த வெளிநாட்டு உதவியையும் இலங்கை அரசாங்கம் மறுத்துவிடக்கூடிய நிலையில் இல்லை. உதவி செய்யும் வெளிநாடுகள் தமது உதவி தாம் வழங்கிய குறிப்பிட்ட திட்டத்துக்குப் பயன்படுத்தப்படுகிறதா! இல்லையா! என்பதைக் கண்காணிக்கும் உரிமை பெற்றவர்கள். அவ்வாறு கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனவே, ஒரு உதவியைத் திசை திருப்புவதை அந்த உதவி செய்த நாடே அங்கீகரித்தாலோழிய, குறைந்த பட்சம் தமது உதவி எங்கே செல்கிறது? எதற்காகச் செலவழிக்கப்படுகிறது? எப்படிச் செலவழிக்கப்படுகிறது? என்பன பற்றி பொருட்படுத்தாமல் இருந்தால் ஒழிய இலங்கை அரசாங்கம் தன்னெண்ணப்படி அந்த உதவியைத் திசை திருப்ப முடியாது. இதனை இத்தனை ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் த.தே.கூக்காரர்கள் அறியாமல் இருக்கிறார்கள் என்றால், அது நம்பத் தகுந்ததாக இல்லை.

இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அடுத்து வடக்கு கிழக்கு மாகாண சபை இயங்கிய வேளையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் புனர்நிர்மாணம், தமிழர்களின் புனர்வாழ்வு போன்றவற்றிற்காக மேலைத்தேச நாடுகள் வழங்கிய பல நிதி உதவிகள் பிரேமதாசா அரசாங்கத்தால் புலிகளின் வேண்டுகோளின் பிரகாரம் தென்னிலங்கை நோக்கி திசை திருப்பப்பட்டன.

அப்போது சோவியத் யூனியன் உயிரோடு இருந்தது. இந்திய-சோவியத் நல்லுறவு தொடர்ந்து கொண்டிருந்தது. அதனால் இந்தியாவுக்கும் மேலைத் தேச நாடுகளுக்கும் இடையே அன்று இருந்த உறவு நிலை சுமுகமானதாக இருக்கவில்லை. இந்திய - இலங்கை சமாதான உடன்பாட்டை புலிகள் மற்றும் சிங்கள இனவாதிகள் எதிர்த்தன என்பது மட்டுமல்ல மேலைத் தேச நாடுகளும் மறைமுகமாக அதற்கு எதிராகவே செயற்பட்டன. அன்றைய வடக்கு கிழக்கு மாகாண ஆட்சி சிறப்பாகச் செயற்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு ஆதரவான நம்பிக்கைகளை வளர்த்து விடக் கூடாது என்பதில் புலிகளும், பிரேமதாசா தலையிலான அரசும், மேலைத் தேச அரசுகளும் அப்போது கைகோர்த்துச் செயற்பட்டன.

எனவே அப்போது வடக்கு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்திட்டங்களுக்கான பெயரில் வழங்கப்பட்ட நிதிஉதவிகள் பிரேமதாசா அரசால் திசைதிருப்பப்பட்டதை, அவை உரிய மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் சென்றடையா வண்ணம் தடைகள் செய்ததை அந்த உதவிகளை வழங்கிய நாடுகளின் தூதரகங்கள் கண்டும் காணாதது போல் இருந்து கொண்டன. இன்றைய நிலைமை அப்படியல்ல.

த.தே.கூத் தலைவர்கள் இந்தியாவினதும், மேலைத் தேச அரசுகளினதும் செல்லப்பிள்ளைகள். இந்தியா உட்பட கொழும்பிலுள்ள பிரதானமான வெளிநாட்டுத் தூதரகங்கள் அனைத்தும் த.தே.கூத் தலைவர்கள் பற்றி எவ்வளவுதான் 'நெஞ்சில் உரமற்றவர்கள்', 'நேர்மைத் திறனற்றவர்கள்', வாக்கில் உண்மையற்றவர்கள்', 'சாராம்சத்தில் ஏதுமற்ற வெத்து வேட்டுப் புரட்டர்கள்;' என்பன போன்ற அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தாலும், த.தே.கூக்காரர்கள் மக்களால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் என்பதாலும் இந்தியாவும் மற்றும் மேலைத் தேச நாடுகளும் மஹிந்த அரசாங்கம் பற்றி அதிருப்தி கொண்டிருப்பதாலும் இந்த நாடுகள் த.தே.கூக்காரர்களுக்கு எல்லாக் கௌரவங்களையும் வழங்குகிறார்கள்; த.தே.கூக்காரர்கள் சொல்வனவற்றை காதுகொடுத்துக் கேட்கிறார்கள்; த.தே.கூக்காரர்களை தவறாது ஒவ்வொரு விருந்துக்கும் அழைக்கிறார்கள்; த.தே.கூக்காரர்களைத் தங்கள் நாடுகளுக்கு அரச விருந்தினர்களாக அழைத்து இலங்கை அரசின் செயற்பாடுகள் பற்றியும் தமிழர்களின் நிலை பற்றியும் கருத்துக் கேட்கிறார்கள். 

அதுமட்டுமல்ல, தமது நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் வேளைகளில் த.தே.கூக்காரர்களோடு சந்திப்புகளையும் ஒழுங்கு செய்கிறார்கள். எந்தவொரு வெளிநாடும் த.தே.கூக்காரர்களின் அரச எதிர்ப்புப் பிரச்சாரங்களையோ அல்லது அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளையோ இதுவரை பகிரங்கத்தில் விமர்சித்ததில்லை. இவ்வாறான வளங்களையும் வாய்ப்புகளையும் கொண்ட த.தே.கூ.த் தலைவர்கள் வெளிநாடுகள் செய்யும் உதவிகள் எவ்வளவு கிடைத்திருக்கின்றன, எவ்வௌற்றுக்காகக் கிடைத்திருக்கின்றன என்கின்ற விபரங்கள் அத்தனையையும் அந்த நாடுகளின் தூதரகங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் வடக்கு – கிழக்கு மக்களின் நல்வாழ்வு முன்னேற்றங்களுக்கும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் பொருளாதார மற்றும் கட்டுமான அபிவிருத்திகளுக்கும் என்னென்ன உதவிகள் எவ்வௌவளவு உதவிகள் வேண்டுமென்பதை வெளிநாடுகளிடம் கேட்டு அவற்றை உரிய மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் சென்றடையும் நிலையை ஆக்கக்கூடிய சந்தர்ப்பங்களை த.தேகூவினர் நிறையவே கொண்டுள்ளனர். த.தே.கூவினர் அவ்வாறு கொஞ்சமாவது செய்கிறார்களா? அல்லது இனியாவது அவ்வாறு ஏதாவது செய்வார்களா? அல்லது அவற்றைச் செய்வது தமது கடமையே என்ற அக்கறையாவது அவர்களுக்கு உண்டா என்ற கேள்விகள் இங்கு எழுவது நியாயமே.

மஹிந்த அரசு ஏதாவது வெளிநாட்டு நிதி உதவியை திசை திருப்பியிருந்தால் அதனை பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டாக மேடைப் பேச்சுப் பாணியில் முன்வைக்காமல் குறிப்பாகவும் திட்டவட்டமாகவும் ஆதாரபூர்வமாகவும் அதே நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கு த.தே.கூவினருக்கு எல்லா வாய்ப்புக்களும் இன்று உள்ளன. 

இந்த ஆண்டு முடிவுக்குள் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்தே தீரும் என நம்புவதற்க  இடமுண்டு. அப்போது த.தே.கூவினர் வடக்கு மாகாண சபையை ஆளும் நிலை ஏற்பட்டாலும் மேலே கூறப்பட்டுள்ள அவதானிப்புகள் த.தே.கூக்காரர்களுக்கு மிகவும் அவசியமனவையே. த.தே.கூவுக்கு அதன் பலம் தெரியாமல் இருக்கிறதா? அல்லது இதெல்லாம் அவர்கள் நடத்தி வரும் தேர்தல் அரசியலின் உள்நோக்கங்களுக்கு அவசியமற்றவை என அவர்கள் கருதுகின்றார்களா? என்ற கேள்விகளும் இங்கு நியாயமாகவே எழுகின்றன.

(பகுதி - 8 ஐ நோக்கி தொடரும்……)

(அன்பார்ந்த வாசகர்களே! இத்தொடரில் சேர்க்கப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும் என நீங்கள் கருதுபவைகளையும்;, இத்தொடரில் கூறப்பட்டுள்ளவை தொடர்பான உங்கள் மாற்றுக்கருத்துக்களையும் vpgowry53@gmail.comக்கு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.)

(இக் கட்டுரையின் 1ம் பாகம்)

(இக் கட்டுரையின் 2ம் பாகம்)

(இக் கட்டுரையின் 3ம் பாகம்)

(இக் கட்டுரையின் 4ம் பாகம்)

(இக் கட்டுரையின் 5ம் பாகம்)

(இக் கட்டுரையின் 6ம் பாகம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com