Contact us at: sooddram@gmail.com

 

மார்கழி  2011 மாதப் பதிவுகள

மார்கழி 24, 2011

தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பத்திற்கு கூட்டமைப்பின் பதில் என்ன?

(வி.தேவராஜ் )

தமிழர்கள் வாய்மூடி மௌனிகளாக தொடர்ந்தும் இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் சிவில் சமூகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பம் இதனை உணர்த்தியிருக்கின்றது. வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் சார்பில் தமிழ் சிவில் சமூகம் இந்த பகிரங்க விண்ணப்பத்தை விடுத்துள்ளதாகவே கொள்ள வேண்டும். கூட்டமைப்பினரை நோக்கி விளக்கம் கோரி பல விடயங்களை தமிழ் சிவில் சமூகம் முன்வைத்துள்ளது. (மேலும்....)

த.தே.கூட்டமைப்பின் சுத்துமாத்து!

போட்டுடைக்கின்றார் பா.உ யோகேஸ்வரன்.

அண்மையில் இலங்கையிலிருந்து இளைய பாரளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பிரித்தானியா சென்றுவந்தது. இக்குழுவுக்கு 40 வயதிற்குட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 40 வயதுக்கு உட்பட்டவராக மட்டக்களப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பா.உ யோகேஸ்வரன் என்பவர் உள்ளபோதும் அவர் இக்குழுவில் இணைந்து செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவ்விடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அல்லா நபர் ஒருவரை கூட்டமைப்பு அனுப்பியுள்ளது. அனுப்பப்பட்ட நபர் சுமந்திரனின் நெருங்கிய உறவினர் அல்லது நெருக்கமானவர் என தெரியவருகின்றது. (மேலும்.....)

மார்கழி 23, 2011

இது எப்படியிருக்கு

மார்கழி 23, 2011

கேரள எல்லையில் முற்றுகை போராட்டம்

எல்லைச்சாலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க தடையை மீறி செல்ல முயன்றதாக ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வலியுறுத்தியும் அணைக்கு மத்திய பொலிஸ் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், ம. தி. மு. க. மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழ் நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் எல்லைச் சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார். தேனி மாவட்டத்தில் குமுளி மலைச் சாலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டம் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் வைகோ தங்கி இருந்த வீட்டிற்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் வந்தார். இதை அடுத்து அவர்கள் இருவரும் தேனியில் இருந்து வான் மூலம் குமுளி மலைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். (மேலும்.....)

மார்கழி 23, 2011

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை

உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பு

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச மட்டத்தில் கவனத்திற் கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தருஸ்மன் அறிக்கையை தூக்கிப்பிடித்தவர்கள் இன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடுநிலையாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஆரம்பத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இன்று அவையாவும் பொய்யாகியுள்ளன. தருஸ்மன் அறிக்கையை ஆரம்பத்தில் பாராட்டிய போதும் இன்று அந்த அறிக்கை தொடர்பில் சந்தேக நிலை உருவாகியுள்ளது. (மேலும்.....)

மார்கழி 23, 2011

ஜெயலலிதாவை வீழ்த்த சசிகலா குழு விஜயகாந்துடன் அணி சேருமா?

ஜெயலலிதாவால் விரட்டப்பட்டுள்ள சசிகலா குழுவினர், ஜெயலலிதாவை வீழ்த்த அவரது இன்னொரு எதிரியான விஜயகாந்துடன் கை கோர்க்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. அதிமுகவிலிருந்தும், ஜெயலலிதாவின் மதிப்பு வட்டத்திலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டுள்ள சசிகலா தரப்பு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்தடுத்த விசாரணையின் போது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் வட்டாரத்தில், சசிகலா தரப்பு, ஜெயலலிதாவை வீழ்த்த விஜயகாந்த்துடன் அணி சேரலாம் என பரபரப்பாக பேசப்படுகின்றது.(மேலும்.....)

மார்கழி 23, 2011

பக்தாத்தில் தொடர்ந்து குண்டு வெடிப்பு; 57 பேர் பலி; 176 பேருக்கு காயம்

ஈராக் தலைநகர் பக்தாதின் பல்வேறு இடங்களிலும் இடம் பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பில் 57 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 176 பேர் காயமடைந்தனர். பக்தாதில் நேற்றுக் காலை 12 இடங்களில் குண்டுகள் வெடித்தன. பாதையோரங்கள் கட்டிடங்கள் என இக் குண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்புக் கூறவில்லை. எனினும் திட்டமிட்ட ஓர் அமைப்பே இத் தாக்குதலை நடத்தியிருக்கும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இவ்வாறான தாக்குதலை அல் கொய்தா அமைப்பினாலேயே நடத்த முடியும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த குண்டு தாக்குதல்கள் பக்தாதின் அலாவி, பாப் அல் முதாம், கர்ராதா மாவட்டம், அத்யாமிய, ஜுவலா, கிழக்கு ஜெத்ரியா, கஸாலியா, அல் ஆமில், தூரா பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன. ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ள நிலையிலேயே இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும் அங்கு ஷியா, சுன்னி முஸ்லிம் பிரிவுகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த துணை ஜனாதிபதிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்கழி 23, 2011

மந்தமான காலநிலை தொடரும்

வடக்கு, கிழக்கு, தெற்கில் மழை

இலங்கையின் தென் பகுதி வளிமண்டலத்தின் கீழ்ப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதால் தற்போதைய மப்பும் மந்தாரமுமான காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலை யாளர் சமிந்திர டி சில்வா நேற்று தெரிவித்தார். இதன் விளைவாக வடக்கு, கிழக்கு, வடமத்தி, தென் மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடல் கொந்தளிப்பதாக காணப்படுவதால் கப்பல் பணியாளர்களும், மீனவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இம்மழை, வெள்ளம் காரணமாக 10 ஆயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்று கூறினார். இவர்களில் 2019 குடும்பங்களைச் சேர்ந்த 7406 பேர் 43 முகாம்களில் தற்காலிகமாகத் தங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம் நேற்று முன்தினம் மாலை முதல் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நீர் மட்டத்தைப் பேணவென திறக்கப்பட்டிருந்த பல குளங்களின் வான்கதவுகள் நேற்று மூடப்பட்டதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார்.

தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பம் தொடர்பாக புளொட் அமைப்பு விளக்கம்

தமிழ் சிவில் சமூகம் என்ற கோதாவில் “கூட்டமைப்பிற்கான பகிரங்க விண்ணப்பம்” என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் தொடர்பாக புளொட்டின் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றோம். புதுடில்லியில் கடந்த ஆகஸ்ட் 23ம், 24ம் திகதிகளில் இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து தமிழ் கட்சிகள் மாநாட்டில் தேசியம், சுயநிர்ணயம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானத்தை புளொட் அமைப்பு எதிர்த்ததாக தமிழ் சிவில் சமூகம் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலாகும் என்பதை நாம் தெரியப்படுத்துகின்றோம். அந்த மாநாட்டில் இந்திய பாராளுமன்றத்திற்கு பொதுவாக சமர்ப்பிக்கவென மாநாட்டில் பங்குபற்றும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக தீர்மானமொன்றை இயற்றித் தருமாறு சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் கோரப்பட்டது. (மேலும்.....)

மார்கழி 19, 2011

தாலியை தானம் கொடுத்த தமிழ்த் தாயே! கனடியத் தமிழர்களின் அன்னை பூபதியே!

அம்மா தாயே நீ கொடுத்த இந்த தாலியால் எத்தனை தமிழ்த் தாய்மாரின் தாலிகள் அறப்போகுதோ யாருக்குத் தெரியும். நீ இங்கு தாலி கொடுத்து ஷோ காட்டு. இதை சொல்லியே சிங்கள அரசு தமிழ்ப் பெண்களின் தாலிகளை அறுக்க வழி பண்ணட்டும். அம்மா நீ கொடுத்தது தங்கத் தாலி தானா அல்லது கவரிங் தாலியா? என்ற சந்தேகம் மக்களுக்கு வந்தாலும் வரும். ஏனெனில் முன்னர் இப்படியான சம்பவங்கள் எல்லாம் எமது சமூகத்தில் தாராளமாக நடந்திருக்கிறது. அரங்கத்தில் நீ கொடுத்தது உண்மைதான், ஆனாலும் முன்பே பேசிக் கொண்டபடி உனது மகனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்களா? (முன்பு நேருக்கள் குணாக்கள் எல்லாம் அப்படித்தான் செய்தவர்கள்). (மேலும்.....)

மார்கழி 19, 2011

நோர்வேயின் இரட்டைவேடமே யுத்த நிறுத்தம் சீர்குலைய காரணம் - நல்லிணக்க ஆணைக்குழு

நோர்வே அரசாங்கம் மேற்கொண்ட இரட்டை வேட செயற்பாடே யுத்த நிறுத்த உடன்பாட்டை சீர் குலைப்பதற்கு ஏதுவாக அமைந்தது என்று நல்லிணக்க ஆணைக்குழு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. நோர்வே அரசாங்கம் ஒரு பக்கத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் பணிக்கு அனுசரணையாளர்களாக இருந்துகொண்டு மறுபக்கத்தில் சமாதானம் மற்றும் யுத்தநிறுத்தம் சரியாக நடைமுறைப்படுத் தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியையும் இரண்டுக்கு ஒன்று நேர்மாறான செயற்பாடுகளை மேற்கொண்டதனால் நோர்வே அரசாங்கத்தினால் எதனையும் சரிவர செய்துமுடிக்காமல் பெரும் குளறுபடி ஏற்படுவதற்கு உதவியிருக்கின்றது என்றும் இவ்வறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

மார்கழி 19, 2011

அரசு - கூட்டமைப்பு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று மீண்டும் அரசாங்கப் பிரதிநிதிகளை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அரியநேந்திரன் எம்.பி. தெரிவித்தார். இச்சந்திப்பில் அரசாங்கத் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பேராசிரியர் ரஜீவ விஜயசிங்ஹ, சஜின் டி வாஸ் குணவர்தன எம்.பி. ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், எம். சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அடுத்த வாரமளவில் அதுகுறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றிய அறிக்கை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்காக வெளியிட்டு வைக்கப்படுமெனவும் அரியநேந்திரன் எம்.பி. கூறினார்.

ஐக்கிய தே. க. தலைவர் ரணிலா? கருவா? ஸ்ரீகொத்தாவில் இன்று தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சியின் 2012 ஆம் ஆண்டிற்கான தலை வர், பிரதித் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. மிகவும் பரபரப்பானதொரு சூழ்நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. ஐ.தே.க.வின் அரசியல் யாப்பின்படி 2012 ஆம் ஆண்டுக்கான கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கென கரு ஜயசூரிய எம்.பியும் ரணில் விக்கிரம சிங்கவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பிரதித் தலைவர் பதவிக்காக சஜித் பிரேமதாஸ எம்.பி.யும் ரவி கருணாநாயக்க எம்.பியும் தேசிய அமைப்பாளர் பதவிக்காக தயாசிறி ஜயசேகர எம்.பியும் தயா டி கமகே எம்.பியும் நேற்று மாலை மூன்று மணிக்குள்ளாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்ததாகவும் ஸ்ரீகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்றுக் காலை ஸ்ரீகொத்தாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் கூடியது. இதன் போது 2012 ஆம் ஆண்டுக்கான கட்சியின் உபதலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் தவிசாளராக காமினி ஜயவிக்கிரம பெரேராவும் கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

மார்கழி 19, 2011

அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சியை அரசு ஒருபோதும் கைவிடாது

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு தமிழ்க் கூட்டமைப்பின் பிரச்சினை வேறு

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளுக்கு எதிர்க் கட்சியினர் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளை அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என உறுதியாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்....)

மார்கழி 19, 2011

நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம்.

(மா.ஜெயக்குமார்.)

இத்தால் சகல புலம்(ன்) பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப  வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேதாவிகளுக்கு இத்தால் அறியத்தருகின்றோம். (மேலும்....)

மார்கழி 19, 2011

முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நிபுணர் குழு அறிக்கையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் தமிழகத்துக்கு சாதகமாக அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் விவகாரம் தொடர்பான விளக்கக் கூட்டம் தமிழக காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ப. சிதம்பரம் பேசியது: அணை உடைந்துவிடும் என கேரளத்தில் ஏற்பட்டுள்ள அச்சம் இடைத்தேர்தல் அச்சம், தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் நடத்தினால் அந்த அச்சம் முடிந்து போய்விடும். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் 3 நீதிபதிகள் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு விரைவில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் தமிழகத்துக்கு சாதகமாக அமையும் என்று உறுதியாகக் கூறுகிறேன். தமிழகத்திலும், கேரளத்திலும் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டியதும் மத்திய அரசின் கடமை.

மார்கழி 19, 2011

கேரளம் செல்லும் சாலைகளை மறித்து முற்றுகைப் போராட்டம்

முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரளத்துக்கு பொருளாதார முற்றுகை செய்வதற்காக தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் 13 சாலைகளையும் மறித்து ம. தி. மு. க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், வரும் 21 ம் திகதி போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இது குறித்து, ம. தி. மு. க. பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை, ம. தி. மு. க. முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழு ஐந்து மாவட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம், காஞ்சி மக்கள் மன்றம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, இந்து மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ்நாடு கள் இயக்கம் ஆகிய கட்சிகள் இணைந்து கேரளத்துக்கு பொருளாதார முற்றுகை செய்ய போராட்டம் நடத்துகின்றன. முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் கேரளாவின் திட்டத்தை கைவிடச் செய்வதற்கும், அணையில் தமிழகத்துக்கு இருக்கும் உரிமையை மீட்பதற்கும், இப் போராட்டம் நடத்தப்படுகிறது. விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெருமளவு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார். இலங்கையில் ஏ 9 பாதை முடப்பட்ட போது யாழ்பாணத்து தமிழ் மக்களை பட்டினிச்சாவு செய்கின்றனர் என்று கூக்குரல் இட்ட வைகோ இன்று தமது நாட்டின் ஒரு பகுதி மக்களை பட்டினிச்சாவால் கொல்ல 'போராட்டம்' நடத்துகின்றார்.....?

மார்கழி 19, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச சமூகத்திற்கு உண்மையை எடுத்துரைக்கும்

இலங்கை மீது சர்வதேச ரீதியில் சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக் கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் ஆதாரபூர்வமாக பதிலளிக்கக்கூடிய வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டிருந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமைந்திருப்பதாக அர சியல் அவதானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். தருஸ்மன் அறிக்கையும், நவனீதம்பிள்ளையின் அறிக்கையும் இலங்கை மீது ஆதாரமற்ற யுத்தம் மற்றும் மனித உரிமை மீறல் பற்றிய குற் றச்சாட்டுக்களை சுமத்தி, அவற்றின் ஊடாக எங்கள் நாட்டிற்கு சர்வ தேச ரீதியில் அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்த அடித் தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

மார்கழி 19, 2011

ஈராக்கிலிருந்து கடைசி அமெரிக்க வீரர்களும் வெளியேற்றம்

ஈராக்கில் இருந்த கடைசி அமெரிக்க இராணுவ வீரர்களும் நேற்று வெளியேறினர். இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன. ஆயுதம் தரித்த 110 அமெரிக்க வாகனங்களை 500 வீரர்களுடன் ஈராக் நேரடிப்படி நேற்று காலை 7.38 மணிக்கு எல்லையை கடந்து குவைத்தை அடைந்தது. ஈராக்கின் தென்பகுதி பாலைவனத்தை கடந்த இந்த வீரர்கள் குவைத்தை எட்டினர். இந்நிலையில் தற்போது ஈராக்கில் வெறும் 157 அமெரிக்க வீரர்களே உள்ளனர். இவர்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை பாதுகாக்கும் பணியிலும், ஈராக் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு சதாம் ஹுஸைனின் அரசுக்கு எதிராக ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க படையை விலக்கிக்கொள்ளும் ஒப்பந்தம் கடந்த 2008 ஆம் ஆண்டு கைச்சாத்தனது. இதன் மூலம் ஈராக்கில் இருந்த 170,000 அமெரிக்க வீரர்கள் மற்றும் 500 முகாம்கள் படிப்படியாக அகற்றப்பட்டன. இதுவரை ஈராக்கில் 4500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஈராக் யுத்தத்திற்காக அமெரிக்கா ஒரு டிரில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சி. ஐ. ஏ. உளவாளி ஈரானில் கைது

அமெரிக்காவின் சி. ஐ. ஏ. உளவாளி ஒருவரை கைது செய்துள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. எனினும் கைது செய்யப்பட்டவர் ஈரான் நாட்டைச் சேர்ந்த அமெரிக்க உளவாளி என அது குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ஈரான் நாட்டவரே கைது செய்யப்பட்டதாகவும் இவர் தம்மை ஈரான் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்திக் கொண்டு செயற்பட்டுள்ளதாகவும் ஈரானின் உளவுத்துறை அமைச்சு அந்நாட்டு அரச தொலைக் காட்சியில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த தகவலை மறுத்த அமெரிக்கா, ஈரான் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருவதாக கூறியுள்ளது. ஈரான் பல தடவைகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவாளிகளை கைது செய்ததாக செய்தி வெளியிட்டு வருகிறது. கடந்த மே மாதம் சி. ஐ. ஏ. உளவுப் பிரிவுடன் தொடர்புபட்ட 30 பேரை கைது செய்ததாக ஈரான் கூறியது. அதேபோன்று அமெரிக்க, இஸ்ரேலின் 15 உளவாளிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக கடந்த வாரம் ஈரான் அறிவித்தது.

எகிப்தில் 3வது நாளாக கலவரம் நீடிப்பு

எகிப்தில் இரண்டாம் சுற்று பாராளுமன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு பின்னர் கடந்த 2 நாட்களாக திடீர் போராட்டம் வெடித்தது. நேற்று 3வது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் தாஹ்ரிர் சதுக்கத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல்கள் நீடித்தது. பல இடங்களில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டபடியே இருந்தது. மேலும் நகரில் உள்ள முக்கிய வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு மற்றும் கற்களை வீசி தாக்கினர்.

கஸகஸ்தானில் வன்முறை : 10 பேர் பலி

கஸகஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கசாக் நகரில் ஏராளமான எண்ணெய் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மத்திய ஆசியாவில் இங்குதான் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தியாகிறது. இங்குள்ள எண்ணெய் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஏற்பட்ட மோதல், வன்முறை சம்பவங்களில் 10 பேர் பலியானார்கள். எண்ணெய் நிறுவன அலுவலகம், கார்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறைகளால் எண்ணெய் நிறுவன ங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் ஊழியர்கள் பணிக்கு வர அஞ்சுகிறார்கள். இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் அபாயம் நிலவுகிறது.

மார்கழி 18, 2011

நெருக்கடிக்குள் தமிழ்க் கூட்டமைப்பு!

முதற் தடவையாக TNA மீது புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூகத் தலைவர்கள் சீற்றம்

(எஸ். சுரேஷ்)

அரசாங்கத்திடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பாக எதிர்பார்ப்பது என்ன என்பது அரசிற்கு அவர்களால் இதுவரை தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக காலம் இழுத்தடிக்கப்படுவதுடன் தமிழ் மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய சலுகைகள், அபி விருத்தித் திட்டங்கள் யாவும் கேள்விக் குறியுமாகியுள்ளது எனப் புத்திஜீவிகள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். பேச்சுவார்த்தை எனக் கூறிக் காலம் தான் கடந்து செல்கிறதே தவிர எந்தவித மானதொரு முன்னேற்றமோ விமோசனமோ இதுவரை எட்டப்படவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் செயற்பாடு, ஊடக அறிக்கைகள் காரணமாகத் தமிழ் மக்களை மீண்டும் சிங்கள மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்க முற்படுகின்றனர் என் றும் புத்தி ஜீவிகள் குற்றம் சாட்டுகின்றனர். (மேலும்.....)

மார்கழி 18, 2011

தமிழீழ அரசாங்கத்திற்கு தாலியைக் கொடுத்த தமிழ்த் தாய்

 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில் ஈழத்தாய் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் மக்களும் தங்கள் பங்களிப்புகளை நகைகள் மூலமாகவும் பணமாகவும் செய்தனர். இந்த நிகழ்வின் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பேராளர் ஜெயபாலன் அழகரத்தினம் அவர்கள் தனது மனைவி மாவீரர் குடும்பத்தைச் சார்ந்தவராதலால் அவரது அனுமதி இன்றியே அவரது தாலிக் கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாக அமைந்திருந்தது. தனது தாலிக் கொடியைக் கழற்றிக் கொடுத்து முன்னுதாரணமாக விளங்கிய தமிழ்த் தாய்க்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும் பேராளர்களும் கண்ணீர் மல்க தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

மார்கழி 18, 2011

உச்சிதனை முகந்ததால் - திரைப்பட விமர்சனம்

(மீன்விழி கண்ணன்)

வீட்டை விட்டு வெளியேறும் அன்று தீபாவளி தினம் வெளியில் பட்டாசு கொளுத்துகிறார்கள். ஊரே ஆரவாரப்படுகிறது. அனதையாய் திரியும் ஈழத் தமிழர்கள் வாழ்வும் இப்படித்தான் என்பதை அது உணர்த்துகிறது. அந்த 13வயது குழந்தைக்கு, குழந்தை பிறக்கிறது அந்த 13 வயது அம்மா இறப்பதாக படம் முடிவடைகிறது. இந்த படத்தில் இலங்கையில் இராணுவம் கொடுமை செய்வதை காட்டுகிறார்கள், புலிகளின் உடையில் சிலர் வருகிறார்கள். சனல்-4 வில் வெளியானவையும் வருகிறது. புனிதாவுக்கு ஏன் எயிஸ்ட் நோய் இருப்பதாக சொன்னார்கள், இது தவறாகவே தெரிகிறது. புனிதாவாக வரும் அந்த புள்ள கண்களில் நீரை வரவைக்கிறார். அந்த புனிதாவுக்காக படம் பார்க்லாம். மட்டக்களப்பு புள்ளயாக புனிதா நடித்துள்ளார். ஆனால் மட்டக்களப்பு சொல்நடை இதில்  மிஸ்சிங். பல வசனங்கள் சென்சாரின் கத்தரிக்கு இரையாகியுள்ளது தெரிகிறது. இமாம் இசை படத்துக்கு தூக்கலாக உள்ளது. மற்றப்படி இது தமிழகத்தில் ஒருவாரம் வரை தாக்குப் பிடிக்கும் என்பது சந்தேகமே….?(மேலும்.....)

மார்கழி 18, 2011

திரு குகதாசன் கனகரத்தினம் (குகன்)

 

 அன்னை மடியில் : 3 மே 1965   ஆண்டவன் அடியில் : 14 டிசெம்பர் 2011

சென்ற இடமெல்லம்-உன்முகம்

காணவிட்டு கணப்பொழுதில்--நீங்கள்மட்டும்

மண்ணுலகை விட்டு மறைந்ததேனோ

இன்புற்று வாழ்ந்த நாட்களை--நாங்கள் மட்டும்

நினைத்து வாழ விட்டு தனிமையுடன் சென்றதேனோ

துடிக்குது எங்கள் நெஞ்சம் நண்பனே

துயரம் எங்களை வாட்டுது நண்பனே

இவ்வுலகில் நல்லதொரு உறவினராக.உற்ற நல்ல நண்பனாக. வாழ்ந்த எங்கள் நண்பனுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி தனை தெரிவித்துக்கொள்கின்றோம்இறுதிக்கிரிகை நாளை ஞாயிற்றுக்கிழமை 18.12.2011 கனடா நேரம் மாலை 17.00 தொடக்கம் 21.00 நேரடி ஒலிபரப்பும் சில இணையதளத்தினூடாக இடம்பெறும் என்பதினையும் அறியத்தருகின்றோம்

இவ்அறிவித்தல் தனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்

திருதிருமதி ராஐன்குடும்பத்தினர்.சுவிஸ் நண்பர்கள்.

தொடர்புகட்கு வின்சரன் (ராஐன்)(சுவிஸ்) 0041319910312 .0041797541317

மார்கழி 18, 2011

இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!

(கெரபொத்தா)

வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் கத்திச் சொல்கின்றன. ‘மனிதாபிமான நடவடிக்கை’யின் பின்னணியில் வந்திருக்கும் வியாபார நிறுவனங்கள், வாழ்க்கைப் போராட்டமானது இன்னும் முடிவுக்கு வரவில்லையெனக் கூறியபடி வேலைவாய்ப்புகளோடு காத்திருக்கின்றன. இது யுத்த காலத்துக்குப் பிறகு, வவுனியாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் உலகத்தின் இன்றைய நிலைமையாகும். (மேலும்.....)

மார்கழி 18, 2011

கருணா, இனியபாரதி, ஈ.பி.டி.பி சீலன் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் - நல்லிணக்க ஆணைக்குழு!

ஆயுதக்குழுக்களாக செயற்படும் கருணா, இனியபாரதி, ஈ.பி.டி.பியின் சீலன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகள் உள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சட்டவிரோத ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆணைக்குழு விஜயம் செய்தபோது வழங்கப்பட்ட பல சாட்சியங்களின்படி, இத்தகைய சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது எனவும் இடம்பெற்றததாக கூறப்படும் பல கடத்தல்கள், தவறான சிறைவைப்புகள், கப்பம் வசூலித்தல் போன்ற செயற்பாடுகளால் மக்களின் வாழ்வதற்கான உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டன எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும்.....)

மார்கழி 18, 2011

TNA - SLMC மாதமொரு தடவை சந்தித்துப் பேச தீர்மானம்

தமிழ் பேசும் மக்களாக செயற்பட இருதரப்பும் விருப்பம் தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கும் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கும் அரசுக்கும் இடையில் நடை பெற்ற பேச்சுகளின் விவரங்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் சம்பந்தன் விளக்கிக் கூறினார். (மேலும்.....)

மார்கழி 18, 2011

யாழ்ப்பாணத்தின் நிலவரம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கின்ற போது ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற ரீதியில் துன்பமும் வேதனையும் எதிர்காலம் பற்றிய ஐயுறவும் தோன்றுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இப் பகுதியில் மக்களின் பிரதிநிதிகள் யார்? யாரிடம் எவ்வகையான அதிகாரங்கள் உள்ளன? மக்களுக்குத்தான் இவர்கள் சேவையாற்றுகின்றார்களா? என்பவை சிக்கலான விடைகாண முடியாத வினாக்களாக எம்முள் எழுகின்றன. இப்பிரதேசம் வாழ் மக்களை அலட்சியப்படுத்தி சிக்கலுக்குள்ளாக்கி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்தலாம் என எண்ணுகின்றேன். (மேலும்.....)

மார்கழி 18, 2011

‘லயன்' வாழ்விற்கு விரைவில் முற்றுப்புள்ளி!

மலையகப் பெருந்தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொன்று தொட்டு அனுபவித்து வரும் இருப்பிடப் பிரச்சினைக்கு காத்திரமான தீர் வினைக் காண்பதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. மலைய கப் பெருந்தோட்ட வரலாற்றைப் பொறுத்தவரை உத்தேச வீடமைப்புத் திட்டமானது சரித்திரத்தில் முதற்தடவையாக இடம்பெறப் போகின்றதென்பதை எவராலும் மறுக்க முடியாது. பரம்பரை பரம்பரையாக ‘லயன்’ என்றழைக்கப்படுகின்ற சிறு குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் அம்மக்கள் எதிர்காலத்தில் தங்களுக் கென்ற தனித்தனி வீடுகளில் வசிக்கும் வாய்ப்பைப் பெறப் போகிறார்கள். தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை இதனை விட மகிழ்ச்சியான செய்தி அவர்களுக்கு இருக்கவே முடியாது. ஏனெனில் ‘லயன்’ குடியிருப்புகளில் வாழ் கின்ற கஷ்டமான வாழ்க்கை அவர்களுக்கு மட்டுமே புரியும். (மேலும்.....)

மார்கழி 17, 2011

யுத்தம்!!! சத்தம் இல்லாமல்.......

'இனியிங்கே சிறுபான்மை பெரும்பான்மை கிடையாது. எல்லோரும் இந்நாட்டின் மக்கள்' என்ற கோசம்  நாளாந்தம் காற்றில் கலந்து, கரைந்து கொண்டிருக்கும் போதே...அநுராத புரத்தில் அடக்கத்தலம் சுவடு தெரியாமல் அழித்தொழிக்கப் படுகிறது. இன்னுமின்னும் இவை போல்   எத்தனையோ தொடரலாம். ஆக மொத்தத்தில் இந்த அபாயச்சங்கொலிகள் சொல்லவருவதென்ன?   இந்தச் சோகங்கள் சொல்லும் சேதிகள் சோனகர் எம் காதில் கேட்கிறதா? இது எப்போது  ஆரம்பித்து வைக்கப்பட்டது? எதில் கொண்டு போய் முடித்து வைக்கப்படப்போகிறது? இரு பேரினவாதங்களுக்கிடையில்  இருந்து தப்பிக்க வழியென்ன? மறுபுறத்தில் இரு பேரினவாதங்களுக்கிடையில் பங்காளிச் சண்டை தனியாக நடந்து கொண்டிருக்கிறது. அதாவது 'வடக்கில் பௌத்தர் இல்லாத இடங்களிலெல்லாம் விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இது தமிழினத்தை சுவடுதெரியாமல் அழித்தவிடும் முயற்சி. இதனைத்தடுக்க எம்மக்கள் தந்த பாராளுமண்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவோம். புத்தர் ஆரம்பத்தில் ஓர் இந்து. அவர் யாழ்ப்பாணத்தில் நாகர்களது பிரச்சினையை தீர்க்க வந்த போது இந்துவாகவே இருந்தார்' என யோகேஸ்வரன் எம்.பி. பாராளுமன்றில் கூற '1990 களுக்கு முன் வடக்கில் இருந்த 21000 சிங்களமக்களையும் அங்கு குடியேற்றியே தீர்வோம்' என சம்பிக்க ரணவக்க கூறுகிறார்' (வீரகேசரி 3.12.2011) போதாததற்கு 'முஸ்லிம்களை சவுதிக்கும், தமிழர்களை இந்தியாவுக்கும் அள்ளி அனுப்புவோம். முதலில் தமிழரை முடித்தவிட்டு வந்து முஸ்லிமை ஒரு கை பார்க்கிறோம்' என்ற சிங்கள தேசியவாதத்தின் கொக்கரிப்பு வேறு. (மேலும்....)

மார்கழி 17, 2011

பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தம்

பொதுமக்களின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்தே நடவடிக்கை - இலங்கை அரசு

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான இறுதி யுத்தத்தின்போது பொது மக்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கான ஒரு கொள்கைத்திட்டமொன்றும் வகுக்கப்பட்டிருந்தது. எந்நேரத்திலும் பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டிருந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்த நடவடிக்கைகள் மிகவும் நிபுணத்துவம் மிக்கதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தும், புலிகளின் கட்டுப்பாட் டுக்குள்ளிருந்த மக்களை விடுவிப்பதற்கு படையினர் உத்திகளை மிகவும் நுணுக்கமாகக் கையாண்டுள்ள னர் என்றும் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (மேலும்....)

மார்கழி 17, 2011

லண்டனில் நாடு கடத்தப்பட்ட 55 பேர் நேற்று தாயகம் வருகை

லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட 55 பேர் விசேட விமானம் மூலம் நேற்றையதினம் நாடுவந்து சேர்ந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 55 பேரில் 48 பேர் ஆண்களும், 7 பெண்களும் காணப்படுகின்றனர். பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் விசேட விமானத்தின் மூலம் முற்பகல் 11.25 மணியளவில் இவர்கள் நாடு வந்து சேர்ந்தனர். விமானநிலையத்தை வந்தடைந்த இவர்களிடம் சி. ஐ. டி. யினர் விசாரணைகளை மேற்கொண்டனர். யாழ்ப்பாணம், வத்தளை, திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். மாணவர் வீசாவில் சென்று விசாக் காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருந்தவர்கள், உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காதவர்கள் எனப் பல்வேறு காரணங்களால் விசா நிராகரிக்கப்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மார்கழி 17, 2011

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசுக்கு தி. மு. க. துணை நிற்கும்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் எடுக்கும் முடிவுக்கு தி. மு. க. முழு ஆதரவு அளிக்கும் என்று தி. மு. க. பொருளாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை, தமிழகத்தின் நலன்களை குறிப்பாக தென் மாவட்டங்களிலே உள்ள இலட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடிநீர் ஆதாரத்திற் காகச் சார்ந்து இருக்கும் நிலையினையும் பாதுகாத் திடும் நோக்கில் அரிசினால் கொண்டு வரும் எத்தகைய தீர்மானத் தையும், மனப்பூர்வமாக ஆதரித்து வலுசேர்த்திட தி. மு. க.வும் தலைவர் கலைஞரும் என்றைக்குமே தயார் என்பதை எடுத்த எடுப்பிலேயே அறிவித்திட விரும்புகிறேன்.

மார்கழி 17, 2011

ரஜினி குடும்பத்தை வன்மையாக கண்டித்தார் நடிகர் கருணாஸ்

நடிகர் ரஜினிகாந்துக்காக நடத்தப்பட்ட பிறந்த நாள் விழா கூட்டத்தில் ரஜினி குடும் பத்தினர் கலந்து கொள்ளாததை நான் நடிகர் கருணாஸ் பேசியுள்ளது திரையுலகில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினிகாந்தின் 62வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான ரஜினி ரசிகர்கள் கலந்துகொண்டனர். நகைச்சுவை நடிகர் கருணாஸ் இவ்விழாவில் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, இந்த விழாவுக்கு ரஜினி வராததில் தவறில்லை, காரணம், அவர் வந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது ஆனால், அவர் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் வந்திருக்க வேண்டுமல்லவா? இவ்வளவு பேரும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள். எத்தனையோ நிகழ்ச்சிக்கு போகும் ரஜினி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு வராததை நான் வெளிப்படையாகவே கண்டிக்கிறேன். ரஜினியை தலைவராக ஏற்றவன் என்ற உரிமையுடன் இதை நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். கருணாசின் இந்த பேச்சு, நியாயமானதுதான் என்று தலைவா, தலைவர் என்று தங்கத்தேர் இழுத்து மண் சோறு சாப்பிட்டு, பால்குடம் எடுக்கும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

மார்கழி 17, 2011

இருமொழிக் கொள்கை சிறுபான்மை மக்களின் உரிமைகளை பேணிப் பாதுகாக்கின்றது

ரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் அனைத்திலும் சிங்களமும், தமிழும் சம அந்தஸ்துடன் அரச கரும மொழிகளாக அவற்றின் நாளாந்த பணிகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். நம்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் தங்கள் தாய்மொழி மூலம் அரச பணி களை செய்துகொள்ளும் பூரண உரிமையை அரசியல் சாசனம் வழங்கு கின்றது என்றும், அதற்கு உத்தரவாதம் அளிப்பது அரச ஊழியர்களின் கடமை என்றும் ஜனாதிபதி அவர்களின் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட் டுள்ளது. 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் மொழிப் பிரச்சினை என்று ஒன்று இருக்கவில்லை. அப்போது அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரசாங்க அனுசரணையுடன் செயற்படும் நிறுவனங்களில் ஆங் கில மொழி மூலம் நிருவாகம் நடைபெற்றாலும், சுதேச மொழிகளில் எவ ரும் சென்று தங்கள் பிரச்சினைகளை முன்வைத்து அவர்களின் குறை பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு வசதியிருந்தது. (மேலும்....)

மார்கழி 17, 2011

"முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தமிழரின் ஓர் அங்குலக் காணியேனும் எடுக்கப்படமாட்டாது"

முஸ்லிம்களை மீள்குடியேற்றும்போது தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் ஓர் அங்குலத்தையேனும் எடுப்பதற்கு துணைபோகமாட்டேன் என்று தெரிவித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமிழ் முஸ்லிம் மக்களிடத்தில் குரோதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் கூறினார். மன்னார் சன்னார் பகுதி மற்றும் வவுனியா சௌபால புளியங்குளம் போன்ற கிராமங்களில் ஏற்கெனவே வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கு மீள்குடியேற்றப்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தான் நாம் கேட்கின்றோம். எனினும் அங்கிருந்த தமிழ் மக்களை வெளியேற்றுமாறு நான் ஒரு போதும் கூறியதில்லை. தமிழ் முஸ்லிம் மக்களை மோதவிட்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாது. முஸ்லிம்களுடன் போட்டி போட்டுக் கொண்டு செயற்படுவதால் எந்தத் தீர்வையும் எட்டி விட முடியாது. மேலும் முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அங்கு தமிழருக்குச் சொந்தமான ஓர் அங்குல நிலத்தையேனும் எடுப்பதற்கு நான் துணை போகமாட்டேன். பிரச்சினைகள் இருப்பின் அது பேசித் தீர்க்கப்பட வேண்டும்.

மார்கழி 17, 2011

யாழ். புகையிரத நிலைய சட்டவிரோத குடியிருப்பாளர்களை விரட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் குடியிருக்கும் மக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வட பகுதியை நோக்கி விரைவில் புகையிரதம் வரவுள்ளதாகவும அப்பகுதியில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கு புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதியில் 30க்கு மேற்பட்ட மக்கள் குடியிருப்பதாகவும் பிரதேச ரீதியில் அவர்களை எழுப்புவதற்கு புகையிரதத் திணைக்களம் இன்று (16) வெள்ளிக்கிழமை அறிவிப்பு விடுத்துள்ளதாகவும் இமெல்டா மேலும் தெரிவித்துள்ளார்.

மார்கழி 16, 2011

தமிழகத்தில்  உள்ள இலங்கை மக்களின் வலியும், தவிப்பும்.

(அருள் - விஜயன்)

அகதிகள் முகாமில் இருந்த ஒருவர் நன்றாக கூலி வேலை செய்து சம்பாதித்தார், தாய்நாட்டின் ஏக்கம் அவரை வாட்டிய போது இலங்கை சென்றார். ரொம்பநாட்களுக்கு பின்னர் ஊர் சென்றவருக்கு உபசரிப்பு என்றால் சொல்லி வேலை இல்லை. இவை சில நாட்கள்தானே, நிலமையை உணர்ந்த அவர் தொழில் தேட முயன்றுள்ளார். கூலித் தொழிலுக்கு சென்றுள்ளார். ஆனால்  அவருக்கு நிரந்தர வேலை இல்லை அதனால் மீண்டும் அகதியாக வந்து விட்டார். பல வருடங்கள் வாழ்க்கையை தொலைத்த அவருக்கு, இலங்கையில் உள்ள சிலரின் வாழக்கை முறை வெறுப்படைய வைத்துள்ளது. பலர் வசதியாக உள்ளனர் என்றம் தங்கள் சொந்தத்திலே பலர் வசதியாக இருப்பதாகவும் தான் இனி அவர்கள் அளவுக்கு வரமுடியாது அதனால் கண்காணமல் வாழ்வதே நன்று எனவும் கூறினார். இந்த எண்ணம் பல அகதி மக்களிடம் உள்ளது. இதனால் அந்த பத்துக்கு பத்து    அறையில் தங்கள் எதிர்காலத்தை நினைத்து ஏக்கத்துடன் முகாம்களில் வாழ்கின்றனர். (மேலும்.....)

மார்கழி 16, 2011

அரசியல் முள்ளிவாய்க்காலுக்குள் தள்ளிவிடக் கூடாதுகூட்டமைப்புக்கு தமிழ் சிவில் சமூகம் எச்சரிக்கை

வடக்கு மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுவது எமது நீண்ட அரசியல் பயணத்தின் அவல முடிவாகவும், முற்றுமுழுதான அரசியல் முள்ளிவாய்க்காலாகவும் அமைந்து விடும். இது நடைபெறாமல் தடுக்கும் வரலாற்றுக் கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே உள்ளது என்று தமிழ் சிவில் சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளித்துள்ள மனு ஒன்றில் கூறியுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் கையளிக்கப்பட்ட இந்த மனுவில், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகப் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப், மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மதகுருமார் மற்றும் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் இநத மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். (மேலும்.....)

மார்கழி 16, 2011

யாழ் .கொக்குவில் வளாகவீதியைப் பிறப்பிடமாகவும் 16 வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் நாட்டில் வசித்து அதன் பின்னர் கனடா 40 Falstaff Ave ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் கனகரத்தினம்

 

 

அன்னை மடியில் : 3 மே 1965          ஆண்டவன் அடியில் : 14 டிசெம்பர் 2011

அவர்கள் 14-12-2011 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார் கனகரத்தினம் ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் அருளானந்தம் வள்ளித்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்

உசாநந்தினி (உசா) அவர்களின் அன்புக் கணவரும்; றொசானா, திவானா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்; கமலதாசன்(கமல்), ஜேந்திமாலா(மாலா), ஜேமலதா(லதா), ஜெநந்தினி(நந்தினி), பிறேமதாசன்(ரமேஸ்), ஞானதாசன்(ரூபன்), ஆகியோரின் பாசமிகு சகோதரனும்; கலைமலர் செல்வராஜா கணேசலிங்கம் செல்வனேஸ்வரன் ரஜீவா சுமதி பவாநிதி வின்சரன் (ராஐன்)zollikofen Bern(சுவிஸ்) சுகந்தி சுரேஸ்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ரம்மியா கிஷானி கரனி லக்‌ஷா அகிலாஷ் கஸ்வின டிவிக்கா சபிநயா சேலின் நித்திகா வரஸ்மன் லிசாரபன் லொசாரியன் ரம்ஜி ப்ரீத்தி ஆகியோரின் செல்லமான பெரியப்பாவும் கார்த்திகா அசோக் கீர்த்தி அமரோஸ் துஷா மைஷா கரிஸ் ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 17/12/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Bernardo Funeral Home

தகனம்/நல்லடக்கம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/12/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப முகவரி: 1567, Royal York Road, (TP - 146 241 0861)தொடர்புகளுக்கு

கமல் — கனடா தொலைபேசி: +14168382027

ரமேஸ் — கனடா தொலைபேசி: +14168394069வின்சரன் (ராஐன்)zollikofen Bern(சுவிஸ்) 0041319910312 .0041797541317

ரூபன் — கனடா தொலைபேசி: +14165194515

மார்கழி 16, 2011

Tamil Heritage Days in the City of Markham

Meet our Immigration Consultants who have come to help you to apply to get over. " And I will do one more thing to help you Counsilor Kanapathi to get your people out of Sri Lanka and to reach the City of Eelam-Markhan.  If the Boeing 747s are over loaded and jet-puffing and hacking to get off the tarmac, I will be there to help push the plane to take off.    Let’s make it a deal, Councilor! And just one more request.  Please copy my prediction and have it  in a Time Capsule embedded in the City of Markham’s Hall entrance wall to be opened only on Christmas Day of 2025. Councilor Kanapathi, something tells me that this project will get support from the Minister of Citizenship Jason Kenney, and the MPs Paul Calandra, Patrick Brown, Jim Karygiannis, the right wing evangelist MP John McKay, Rathika Sitsabaisen, and many more.  They thrive on the Tamil votes and you know it. (more....)

மார்கழி 16, 2011

கைப்பற்றுவோம் போராட்டங்கள்  இதுவரையில் 5 ஆயிரம் பேர் கைது

முதலாளித்துவத்திற்கு எதிராக அமெரிக்காவில் நடைபெறும் போராட்டங் களை ஒடுக்கும் வகையில் இதுவரை கைது செய்யப் பட்டவர்களின் எண்ணிக் கை 5 ஆயிரத்தைத் தாண்டி விட்டது என்று தெரிய வந்துள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதி யன்று முதலாளித்துவக் கொள்கைகள் மற்றும் அத னால் ஏற்பட்டுள்ள நெருக் கடி ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த 150 பேர் முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த ஆர்ப்பாட் டம் ஏற்படுத்திய தாக்கத் தால் அமெரிக்கா முழுவ தும் லட்சக்கணக்கானோர் இந்த கைப்பற்றுவோம் போராட்டங்களில் ஈடுபட் டனர். ஓரிரு நாட்களில் போராட்டம் நிறைவு பெற்று விடும் என்று நினைத்த நிர்வாகம் போராட்டங் களை அனுமதித்தது. ஆனால் போராட்டம் தொடர்ந்த தோடு, அமெரிக்காவில் மட்டும் 100 நகரங்களுக்குப் பரவியது.  (மேலும்.....)

மார்கழி 16, 2011

முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது! 

சர்வதேச கம்யூனிஸ்ட் / தொழிலாளர் கட்சிகள் மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்

முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் மாற்றை உருவாக்கிட நாம் அனைவரும் களத்தில் இறங்குவோம் என்று சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழி லாளர் கட்சிகளின் 13ஆவது மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு, கீரிஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி மாநாட்டின் விவாதத்தில் பங் கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலகில், முதலாளித்துவ முறைக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் அல்லாத மக்களும் கூட கிளர்ந்தெழுந்து உலகம் முழுவதும் போரா டிக் கொண்டிருக்கக்கூடிய தருணத்தில் சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கிரீஸ் நாட்டிலும் அத்தகைய போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு போராடும் கிரீஸ் நாட்டின் தோழர்களுக்கும் மக்களுக்கும் நம் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். (மேலும்.....)

மார்கழி 16, 2011

What happened in the 18th session of the UN HRC in Geneva?

 There are many versions of a story spread by grassroots activists who attended the UN Human Rights Council sessions. But they attended only sessions following Mullivaighzal. The story refers especially to the 18th session, which took place last September. Therefore it is my duty to tell my side of the story. Here, I do not have to mention how long we have attended these UN Human rights forums. Anyway, our longstanding work in the UN is a troublesome fact for a few grassroots activists, especially two who started attending the UN HRC after Mullivaghzal. These two appear to have the sole intention of sabotaging the work in the UN. These two individuals are Nimalan, who belongs to an organisation in London, UK, and Gary from Canada. I never met them before 2009. The first time I met them was in March 2009 in Geneva. Let me be frank with you. (more....)

மார்கழி 16, 2011

ராஜிவ் கொலை வழக்கு

மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை குறைக்கக்கோரி ஜனாதிபதியிடம் 3 பேரும் கருணை மனு கொடுத்தனர். கருணை மனுவை ஜனாதிபதி சமீபத்தில் நிராகரித்து மரண தண்டனையை உறுதி செய்தார். இதை எதிர்த்து சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் 3 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி, மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்து இக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை சென்னை மேல் நீதிமன்றம் அருகே உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தொடங்கி வைத்தார். மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் பொதுமக்கள் பலர் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

மார்கழி 16, 2011

அணை பிரச்சினை தீர வேண்டுமெனில் போராட்டத்தை நிறுத்துங்கள் ! - கேரள முதல்வரிடம் பிரதமர்

முல்லைபெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, கேரள மாநில அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் டில்லியில் பிரதமர் மன்மோகனை சந்தித்துப் பேசினர். அப்போது, "அணைப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்மெனில், போராட்டங்களை நிறுத்திவிட்டு, சாதகமான சூழ்நிலையை உருவாக்குங்கள்" என கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் பிரதமர் மன்மோகன் சிங் கண்டிப்புடன் கூறினார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, பிரதமரைச் சந்திப்பதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பினராயி விஜயன் உட்பட 23 பேர் அடங்கிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் டில்லி சென்றனர். (மேலும்.....)

மார்கழி 16, 2011

கடாபி கொலையில் அமெரிக்காவுக்கு தொடர்பு - புடின்

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி கொலையில் அமெரிக்காவின் விசேட படைக்கு தொடர்பு இருப்பதாக ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் உரையாற்றிய புடின் கூறியதாவது, இதனை யார் செய்தார்கள். அமெரிக்க விசேடப் படை விமானங்கள் கடாபி மீது தாக்குதல் நடத்தின. பின்னர் தொலைபேசி மூலம் எதிர்ப்பாளர்கள், கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களை விசேடப் படை வீரர்கள் அங்கு வரவழைத்தனர். பின்னர் எந்த நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் கடாபி கொல்லப்பட்டார் என புடின் குறிப்பிட்டார். முஅம்மர் கடாபி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த சம்பவம் குறித்து ரஷ்ய தரப்பில் வெளியான முதலாவது அறிவிப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. எனினும் புடினின் கருத்துக்கு அமெரிக்கா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளது. புடினின் கருத்து நகைப்புக்குரியதாக இருக்கிறது என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பென்னட்டா குறிப்பிட்டுள்ளார். கடாபி கொல்லப்பட்டது தொடர்பான ஆவணங்கள் உலகுக்கே தெரிந்தது. அமெரிக்க படைகளின் காலடி கூட இந்த யுத்தத்தில் லிபிய மண்ணில் பதியவில்லை என அவர் தெரிவித்தார்.

மார்கழி 16, 2011

ஈராக்கில் அமெரிக்க தேசிய கொடி இறக்கம், யுத்தம் முடிந்ததாக அறிவிப்பு

ஈராக்கில் 9 ஆண்டு இராணுவ தலையீட்டுக்கு பின் அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறு வதையொட்டி சம்பிரதாயபூர்வமாக தேசிய கொடி இறக்கி வைக்கப்பட்டது. ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவப் படை தலைமையகத்தில், அமெரிக்கப் படை ஈராக்கில் இருந்து விடை பெறும் வைபவம் நேற்று இடம்பெற்றது. இதில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் சேவை முடிந்ததைக் கணிக்கும் வகையில் அமெரிக்க கொடி இறக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு சதாம் ஹ¤ஸைனின் அரசுக்கு எதிராக ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம் கடந்த 9 ஆண்டுகளாக அங்கு யுத்தம் புரிந்தது. இதன்போது சுமார் 170,000 அமெரிக்க வீரர்கள் ஈராக்கில் தனது இராணுவச் செயற்பாட்டை முன்னெடுத்தது. ஈராக்கில் சுமார் 500 வெளிநாட்டு இராணுவத் தளங்கள் செயற்பட்டன. இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் சுமார் 4,500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதோடு ஒரு இலட்சம் ஈராக்கியர் பலியாயினர். மேலும் 1.75 மில்லியன் பேர் இடம்பெயர்ந்தனர். ஈராக் யுத்தத்தில் அமெரிக்கப் படை சுமார் ஒரு டிரில்லியன் டொலரளவு செலவு செய்துள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் அமெரிக்கப் படை முழுமையாக ஈராக்கைவிட்டு வெளியேறவுள்ளது. ஈராக்கில் மேலும் 5,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்கள் தனது கடைசி பாதுகாப்பு நடவடிக்கைகளை ஈராக் படையிடம் கையளித்துவிட்டு வெளியேறவுள்ளனர்.

மார்கழி 15, 2011

வடக்கு-கிழக்கு இணைய வேண்டும்

(தோழர் ஸ்ரனிஸ்)

வடக்கு-கிழக்கை பிரித்ததே ஏற்ககொள்ள முடியாமல் இருக்கும் போது, பிரிந்தபடியே இருக்கட்டும் என்ற சத்தம் அதிகமாக வரதத்;  தொடங்கியுள்ளது. ஈழம் என்றால் வடக்கு-கிழக்கு இணைந்த பகுதிதான், இதற்காகத்தான் இன்று பலவற்றை இழந்து  ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டு நிற்கிறோம். ஈழம் எனும் சொல் பதம் 1983களிலே பிரபல்யமானது, இந்த சொல் பதத்திற்கு அர்த்தத்தை கொடுத்து, அதன் பால் இளைஞர்களை ஈர்த்து, பலரை அதற்காக, தியாகம் செய்ய வைத்து,நமக்குள் நாமே முட்டி மோதி எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டோம். ஈழம் கிடைக்கவில்லை வடக்கு-கிழக்கு இணைப்பாவது கிடைக்க வேண்டாமா? இந்த இணைப்பை நாம் எல்லோரும் சேர்ந்து பெறுவதன் மூலமே இறந்தவர்களின் தியாகங்களை நாம் கௌரவப்படுத்த முடியும். ஈழம் என்ற கோசத்துடன் தான்  அனைத்து இயக்கங்களும் ஆரம்பத்தில் போராடியது, ஆனால் அது கனவாகிப்போனது, விடுதலைப்புலிகளால் என்பதை பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. (மேலும்.....)

மார்கழி 15, 2011

கனேடிய தமிழர் நிதி நிறுவனம் "திவால்" வங்குரோத்து

கனேடிய தமிழர்களிடம் அரங்கேறிய தமிழர் நிதி நிறுவனம்  திவால் ஆகிவிட்டது. ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை எம்மருபவர்கள் இருப்பார்கள் என்பது உண்மை. கடந்த காலங்களில் டொரோண்டோ தமிழர்கள் மத்தியில் தமிழர் நிர்வாகத்தில் கீழ் ஓர் நிதி நிறுவனம் உருவாகியது அதன் பெயர் "மாகோச" என்று, இதில் செயற்குழுவில் உள்ளவர்கள் மக்கள் மத்தியில் தங்களை தங்கள் பெரிதாக அரங்கேற்றிக்கொண்டு தமிழர் ஊடகங்களாகிய தமிழ் வானொலிகள், பத்திரிகைகள் போன்றவற்றில் இவ் நிதி நிருவனத்தை ஓர் வங்கிக்கு இணையானது இன்று விளம்பரம் செய்து பலரை வரவழைத்து சிலரை தங்களின் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலிடு செய்யுங்கள் என்று கூறி ஏமாற்றி விட்டார்கள். ஆனால் இன்று இந்த நிதி நிறுவனமோ மக்களை ஏமாற்றி வைப்பில் இடப்பெற்ற பணத்தை விழுங்கி விட்டது என்று இதில் முதலீடு செய்தவர்கள் புலம்புகின்றனர். இந்த நிதி நிறுவனம் வங்குரோத்தை சந்தித்துள்ளது.  இவ் நிறுவனத்தின் திமிகிலங்கள் அதே இடத்தில் இன்னும் பல நிறுவனங்களை நடத்திவருகின்றனர். யாரை ஏமாற்றலாம், யாரிட்ட பிடுங்கலாம் என்பது தான் அவர்களின் செய்யல்பாடு என்று பாதிக்கப்பட்டவர் புலம்புகின்றார்.  இப்படியான நிதி மோசடியில் முன்னர் காலங்களில் யாழ்ப்பாணத்திலும், தென் இந்தியாவில் பல நிறுவனகள் மோசடி செய்துள்ளன என்பது கூறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இதுவும் ஒன்று.....கனடிய தமிழர்கள் இனியாவது விழிப்புனர்வுடன் இருப்பார்களா?

கனேடிய தமிழ் மகன்

மார்கழி 15, 2011

சிவாஜியின் கொலைவெறி

(Why ‘s this kolaivery kolaiverdy….)

மார்கழி 15, 2011

தமிழினத்தை வழிப்படுத்தத் தவறிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

ஒரு பெரியவர் எம் தமிழினத்தின் பெருமைகள் பலவற்றை கூறினார். அவர் கூறியபோது. இறுமாப்பாக இருந்தது. எனி னும் எங்கள் நிதர்சனத்தை நினைத்த போது, அட! தமிழன் நொந்துகெட்டு நூலாகிப் போனமைக்கு பழம் பெருமை பேசி க்காலம் கடத்தியதும், பஞ்சாங்கத்தில் பல்லி சொற்பலன் பார்த்ததும்தான் காரணம் என்று நினைத்துக் கொண்டேன். ஐயா! இதுவரை தமிழனின் பெருமைகளை தாங்கள் பேசக்கேட்டோம். ஒரு சந்தேகம் என்றேன். சந்தேகம் யாதோ! என் றார் அந்தப் பெரியவர்.தமிழ் மக்களின் தலைவன் யார்? என்றேன். சிறிது நேரம் அங்கும் இங்கும் பார்த்தார். நம்மையும் முழித்துப் பார்த்தார். இது குறுக்கால போறபுத்தி, இதற்கெல்லாம் என்னால் பதில் கூறமுடியாது என்றார். சரி! தலை வன் என்று யாரையும் பெயர் குறித்துக் குறிப்பிட முடியாது என்றால், அரசியல் தலைமை உண்டா? என்றேன். (மேலும்.....)

மார்கழி 15, 2011

புலம் பெயர் நாடுகளை நோக்கிப் பொன்முட்டைகள்

(சுதர்சன்)

எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதங்களை மட்டுமே நம்பியிருக்கும் வன் முறை செயற்பாடாக மாற்றமடைந்த போது கூட ஒடுக்கு முறை உருவாக்கிய சமூகத்தின் சிந்தனை தனது எல்லையை வரையறுத்திருந்தது. துரோகிகள் என்று ஒரு பகுதியாகவும் தியாகிகள் என்று இன்னொரு பகுதியாகவும் சமூகம் பிளவுற்றது. அரசியல் அடிப்படை, தத்துவார்த்தப் பின்புலம், கருத்து என்பன எல்லாவற்றிற்கும் அப்பால் பலம் மிக்கவர்களாக இனம்காணப்பட்டவர்கள் பொதுவாகத் தியாகிகளாகக் கருதப்பட்டனர். வலிமை குன்றிய ஆனால் மாற்று அரசியலை முன்வைத்தவர்கள் துரோகிகள் வரை தரம் தாழ்த்தப்பட்டனர். (மேலும்.....)

மார்கழி 15, 2011

The West, Mr. Wickremesinghe and the coat-hanger

By Dr. Dayan Jayatilleka

The Minister of External Affairs Prof GL Peiris usually gives no reason to be described as ‘irate’. That however, was the newspaper description of his uncharacteristically sharp remonstration, urging Opposition and UNP leader Ranil Wickremesinghe not to ‘outsource’ the role of the Opposition to the international/diplomatic community. The MEA website carries the story: "Prof. Peiris lambasted Wickremesinghe for taking all domestic issues before the international community instead of having local mechanisms to tackle problems faced by the Sri Lankans. An irate External Affairs Minister stressed that the responsibilities of the Opposition shouldn’t be handed over to Colombo-based foreign envoys..." (Source: ‘Don’t outsource Opp. responsibilities to foreign missions, GL tells Ranil’ The Island, 2 December 2011). Was there perhaps an unstated flipside to that coin? It may be argued that sections of the international community have also shown a propensity to outsource their Sri Lankan policy at least in part, to Mr Wickremesinghe or to rely upon him as an instrument of policy. (more....)

மார்கழி 15, 2011

தமிழ் கட்சிகள் ஓரணியில் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்

னப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைக்கப்படவிருக்கும் உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத் தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளமை உண்மை யிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு சிறந்த நடவடிக்கையாகும். நம்பிக்கையுடனும், அக்கறையுடனும் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை முன் வைப்பதற்கு தமிழ் கட்சிகளிடையில் பொதுவான இணக்கப்பாடு ஒன்று ஏற்படவேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், இதனை உணர்ந்து தெரிவுக்குழுவின் ஊடாக தங்களுக்கு கிடைத்திருக் கும் அரிய வாய்ப்பை அனைத்து தமிழ் கட்சிகளும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறார். (மேலும்.....)

மார்கழி 15, 2011

யுனெஸ்கோ தலைமையகத்தில் பலஸ்தீன கொடி ஏற்றம்

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அமைந்துள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நிரந்தரமான இடமொன்றில் பலஸ்தீன தேசியக் கொடி ஏற்றப்பட்டது. ஐ.நா.வின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்கா இஸ்ரேலின் எதிர்ப்புக்கு மத்தியில் பலஸ்தீனுக்கு நிரந்தர அங்கத்துவம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து யுனெஸ்கோ நிரந்தர அங்கத்துவத்திற்கான பலஸ்தீன தேசிய கொடி ஏற்றும் வைபவம் நேற்று முன்தினம் கடும் மழைக்கு மத்தியில் நடைபெற்றது. இதில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசும் பங்கேற்றார். இதன்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என குறிப்பிட்ட மஹ்மூத் அப்பாஸ் பலஸ்தீனம் ஏனைய அமைப்புகளிலும் அங்கத்துவம் பெறுவதற்கு இது சிறந்த ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே பலஸ்தீன் ஐ.நா. அங்கத்துவத்திற்காக விண்ணப்பித்துள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இடம்பெற வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்கழி 15, 2011

‘கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு

அணுவுக்கு நிறையைத் தரக்கூடியவை என்று கருதப்படும் ஹக்ஸ் போஸான் எனும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான அறிகுறிகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள செர்ன் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவற்றை கடவுளின் துகள் என்கின்றனர் விஞ்ஞானிகள். எனினும் இது குறித்து இறுதியான ஆதாரத்தை வழங்குவதற்கு தாம் இன்னமும் சில கூடுதல் ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர். இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. பிரான்ஸ் – சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைந்துள்ள உயர் ஆற்றல் புரோத்திரன் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை ஆரம்பமானது. (மேலும்.....)

மார்கழி 15, 2011

பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு

பயங்கரவாதிகள் பயன்படுத்தும் வெடிமருந்து பொருட்களை பாகிஸ்தான் தடை செய்யாதவரை, அந்நாட்டுக்கு அளிக்கப்படும் இராணுவ உதவியை நிறுத்த, அமெரிக்க செனட்சபை ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அமைதி பணியில். அமெரிக்க படைகள் ஈடுபட்டுள்ளன.  இந்த படைகள் மீது தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகள், இந்த வெடிமருந்து பொருளை தயாரித்து வருகின்றனர். இதை தடை செய்யும்படி, அமெரிக்கா பலமுறை பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த வெடிமருந்து பொருள் தயாரிப்பை, பாகிஸ்தான் தடுப்பதாக தெரியவில்லை. எனவே, பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும், 700 மில்லியன் டொலர் இராணுவ உதவியை நிறுத்தி விடும்படி, அமெரிக்க பிரதிநிதிகள் சபையும், செனட்டும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளன. எனினும், இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், ஜனாதிபதி ஒபாமா கையில் தான் உள்ளது.

மார்கழி 15, 2011

மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து

மார்பக புற்றுநோய்க்கு இன்னும் 3 ஆண்டுகளில் புதிய மருந்து கண்டு பிடிக்கப்படும் என விஞ் ஞானிகள் தெரிவித்தனர். உலகில் லட்சக்கணக்கான பெண்கள் மார் பக புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் மரு ந்து தயாரிக்கும் பணியில் மும் முரமாக உள்ளனர். அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் குழுவினர் இந்த மருந்து தயாரிப்பில் ஈடு பட்டுள்ளனர். தற்போது அந்த பணி முடிந்து விட்டது. அதை எலிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதன் மூலம் அந்த ஊசி மருந்து மார்பக புற்று நோயை மட்டுமின்றி, ஏனைய புற்று நோயையும் குணப்படுத்தக் கூடியது என கண்ட றியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த மருந்தை மார்பக புற்று நோயால் பாதித்த பெண்ணின் உடலில் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது சோதனைக்கூட அளவில் உள்ளது இதன் மூலம் 90 சதவீத மார்பக புற்று நோய் குணமாகுகிறது. எனவே, முற்றிலும் நோய் குணமாகும் வகையில் மருந்து தயாரிக்கப்படுகிறது. அவை வருகிற 2013ம் ஆண்டு இறுதியில் அதாவது 3 அண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்கழி 15, 2011

கேரள மனு நிராகரிப்பு: நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க தேவையில்லை

"முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்" என்ற கேரள அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து, அம்மனுவை நிராகரித்தது. முல்லைப்பெரியாறு அணை விடயத்தில் முரண்டு பிடிக்கும் கேரள அரசுக்கு, இது முதலாவது அடியாகும். தமிழக - கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் 116 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை செயல்பட்டு வருகிறது. அணை பகுதியில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டு, அணை பலமிழந்துவிட்டது. தற்போதுள்ள அணையை அகற்றி விட்டு புதிய அணை கட்ட வேண்டும். அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் கோரி வருகின்றன. தற்போதுள்ள நிலையில் அணைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. எனவே, அது குறித்து உச்ச நீதிமன்றத்தின் எந்த வித தலையீடும் தேவை யில்லை. அணைக்கு மத்திய தொழில் பாது காப்புப் படை பாதுகாப்பு வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்து, அடுத்த இரு நாளில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

மார்கழி 15, 2011

லண்டன் அருங்காட்சியகத்தில் ரஜினிக்கு விரைவில் மெழுகுச் சிலை

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்கட்சியகம் உலகப் புகழ் பெற்றது ஆகும். மெழுகுச் சிலைகள் உருவாக்குவதில் தலைசிறந்து விளங்கிய சிற்பி மேரிதுசாட்ஸ் என்பவர்தான் இதனை நிறுவினார். இதனால் அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது.  இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தி திரையுலக பிரபலங்கள் அமிதாப் பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய், நடிகர் ஷாருக்கான், நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட பலரது மெழுச் சிலைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மெழுகுச்சிலையும் இந்த அருங்காட்சியத்தில் விரைவில் இடம்பெறப் போகிறது என்பதுதான் தற்போதைய புதிய செய்தி ஆகும். இந்த தகவலை இரகசியமாக வைத்துள்ள அருங்காட்சியக நிர்வாகம் சிலை தயாராகி முடிந்ததும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது. மெழுகுச்சிலை அமைப்பது தொடர்பாக லண்டன் துசாட்ஸ் அருங்காட்சியக நிர்வாகம் சார்பில் ரஜினியிடம் அனுமதி கேட்கப்பட்டது என்றும், அதற்கு அவரும் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தார் என்பதையும் அவரது மூத்த மருமகன் நடிகர் தனுஷ் ஒருமுறை கூறியுள்ளார்.

மார்கழி 15, 2011

தமிழ்க் கூட்டமைப்பின் எண்ணம் நிறைவேறாது
 

எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க முடியும். அதனை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்க ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்கப் போவதில்லையென வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேசிய ரீதியிலான ஆணைக்குழுவை நிராகரித்து சர்வதேச ஆணைக்குழுவை எதிர்பார்க்கும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் எண்ணம் ஈடேறாது எனத் தெரிவித்த அமைச்சர் சம்பந்தன் போன்றோர் நல்லெண்ணத்தை வளர்க்கும் விதத்தில் கூற்றுக்களை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. 54 நாடுகள் எமக்கு ஆதரவாகவே உள்ளன. சகல சவால்களையும் வெற்றி கொள்ள அரசாங்கத்திற்கு முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 15, 2011

வவுனியா

இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைக்கு நடமாடும் சேவை ஊடாகத் தீர்வு

வவுனியாவில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நடமாடும் சேவையின் ஊடாக தீர்வு. இதனடினப்படையில் மீண்டும் இக்குழு நேற்று முன்தினம் வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண ஆளுநர் மற்றும் அங்கிருக்கும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் அங்கிருக்கும் கிராமங்களுக்கும் நேரடியாக விஜயம் மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்தது. வவுனியாவில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை, காணி உறுதிகளை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தடைகள், தாங்கள் வாழும் பிரதேசத்திற்கான பாதை அமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், பாடசாலை ஆகிய வசதிகள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள், குடியிருப்பாளர்களின் சுகாதார வசதி உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அப்பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் நடமாடும் சேவைகளையும் நடத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்திய வம்சாவளி வவுனியா மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை களை தீர்த்து வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே நாம் இதனை கருதுகின்றோம்.

மார்கழி 14, 2011

மார்கழி 13

புலிகள் ஈபிஆர்எல்எவ் ஐ அழித்தொழிக்க முனைந்து 25 வருடங்கள் கடந்துவிட்டன...

(தோழர் மோகன்)

'தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ...தர்மம் மறுபடியும் வெல்லும்.'

1986 மார்கழி 13 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பக்கஙகளில் துயர் தோய்ந்த ஒருநாள். விடுதலை இயக்கங்களை அழித்தொழித்து தனது ஏக அதிகாராத்தை நிலை நிறுத்தும் ஆசையில் பிரபாகரன் தனது ஆயுததாரிகளை ஈபிஆர்எல்எவ் மீது ஏவி விட்ட நாள். தமிழ் மக்களின் விடுதலையை குறிக்கோளாகக் கொண்டு ஆயுதந்தாங்கிய புலிகள் இயக்க இளைஞர்கள் பிரபாகரனதும் அவருக்கு அருகிலிருந்து ஆலோசனை வழங்கியவர்களதும் சூழ்ச்சிக்கு பலியாகி ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.  ஏன் எதற்கு என்று அறியாமல் தலைமையின் கட்டளை என்ற பேரில் ஈபிஆர்எல்எவ் ஐ சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தமது இளமைக்கால ஆசைகளை தூக்கி எறிந்து அர்ப்பண உணர்வோடு தமிழ் மக்களின் விடிவிற்காக போராட முன்வந்த இளைஞர்கள் எவ்வித காரணமுமின்றி கொல்லப்பட்டனர். (மேலும்.....)

மார்கழி 14, 2011

அரசியல் போட்டியிருக்க வேண்டும் ஆனால் பொறாமை இருக்கலாகாது

ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று தோன்றியுள்ள தலைமைத்துவ போரா ட்டம் அக்கட்சியை மட்டுமன்றி, எங்கள் நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தையே சீர்குலைக்கக் கூடிய வகையில் விஸ்வ ரூபம் எடுத்து வருகின்றது. கட்சியின் இணை உப தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசாவுக்கு கட் சியின் தலைமைத்துவத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற பேராசை இரு க்கின்ற போதிலும், அவர் தலைமைத்துவப் போராட்டத்தில் இறங்கி தோல் வியடைந்து, மூக்குடைபட்டு, தனது அரசியல் எதிர்காலத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை. எனவே, அவர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்யும் தனது முயற்சிக்கு ஒரு பலிக் கடாவைத் தேடி கட்சியின் இன்னுமொரு இணை உபதலைவரான கரு ஜெயசூரியவை தலைமைத்துவப் போட்டியில் இறக்கியுள்ளார். (மேலும்....)

மார்கழி 14, 2011

சிறுவயதில் வறுமை' மரபணுக்களில் தெரியும்!

(பத்மஹரி )

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்; இது சில பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதை குறிப்பிட்டுச் சொல்லப் பயன்படும் ஒரு பழமொழி, ஆனால், நம் பழக்க வழக்கங்கள், குணாதிசயங்கள், ஆரோக்கியம் என இவை அனைத்துக்கும் டி. என். ஏ. எனும் மரபுப் பொருளாலான நம் மரபணுக்களே காரணம் என்கிறது மூலக்கூறு அறிவியல். இது ஒருபுறமிருக்க ஒருவரின் இளமைக்காலம் வறுமையில் கழிந்ததா அல்லது செல்வச் செழிப்பில் நகர்ந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள அவரது மரபணுக்களை ஆராய்ந்தாலே போதும் என்று ஆச்சரியப்படுத்துகிறது இங்கிலாந்து நாட்டின் சமீபத்திய ஆய்வு ஒன்று!  (மேலும்.....)

மார்கழி 14, 2011

கனேடிய பிரஜா உரிமை பெற முகத்தை மூடும் பர்தாவுக்கு தடை

கனேடிய பிரஜா உரிமைக்கான சத்தியப்பிரமாணத்தின் போது முகத்தை மூடும் வகையில் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘கனேடியராக வேண்டுமானால் முகத்தைக் காட்ட வேண்டும்’ என அந்நாட்டு பிரஜா உரிமை மற்றும் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்தார். பிரஜா உரிமைக்கான சத்திய பிரமாணத்தைப் பெற்றுக் கொள்ளும் நீதிபதிகள் மற்றும் எம். பிக்கள் கூறிய புகாரைத் தொடர்ந்தே இந்த தடை விதிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஏற்கனவே கனடாவின் குலபெக் மாநிலத்தில் அரச செயற்பாடுகளில் முகத்தை மூடும் வகையில் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனடா அரச சேவைகளில் இந்தத் தடையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கனடாவில் 940,000 முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இது அந்நாட்டு மொத்த சனத் தொகையில் 2.8 வீதமாகும்.

மார்கழி 14, 2011

ஆத்திரமூட்டலுக்கு இரையாக வேண்டாம்!  பாரம்பரிய நல்லுறவை பாதுகாத்திடுக!  தமிழக-கேரள மக்களுக்கு சிபிஎம்   அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள்

ஆத்திரமூட்டும் இனவெறி சக்திகளின் சதிச்செயல் களுக்கு இரையாகாமல் பாரம்பரிய நல்லுறவு மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாக்குமாறும் தமிழக-கேரள மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனையைப் பொறுத் தவரை அணைக்கு பாதுகாப்பு மற்றும் தமிழகத்திற்கு தண் ணீர் என்ற இரு முக்கிய அம்சங்களை மனதிற்கொண்டு, இரு மாநிலங்களுக்கிடையே நிலவிவரும் கருத்து வேறுபாட்டை தீர்க்க வேண்டியது அவசியமாகும். மத்திய அரசு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக் கையை எடுக்க வேண்டியது அவசியம் என்று அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது. (மேலும்.....)

மார்கழி 14, 2011

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியும்!

வெப்பம் மற்றும் அழுத்தத்தில் பூமியைப் போலவே பெரும்பகுதியை கொண்ட செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியம் என்று அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக வானியல் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியர் சார்லி லைன்வீவ இவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வசிக்க முடியுமா என்பது பற்றி தீவிர ஆராயச்சியில் ஈடுபட்டுள்ளது. இது பற்றி லைன்வீவர் கூறியதாவது; பூமியின் மொத்த அளவில் 1 சதவீதம் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. பூமியின் தட்பவெப்பம், அழுத்தம் ஆகியவற்றை போலவே செவ்வாய் கிரகத்தின் 3 சதவீத இடங்கள் உள்ளன. மீதி பகுதி முழுவதும் புதைந்த நிலையில் காணப்படுகிறது. பூமியின் 1 சதவீத பகுதியில் உயிரினங்கள் ஆக்கிரமித்துள்ளதை போல், அதே வெப்பம், அழுத்தம் கொண்ட செவ்வாயின் 3 சதவீத பகுதியில் உயிரினங்கள் ஆக்கிரமித்துள்ளதை போல, அதே வெப்பம், அழுத்தம் கொண்ட செவ்வாயின் 3 சதவீத பகுதியில் உயிர்கள் வசிப்பது சாத்தியம். செவ்வாயின் துருவங்களில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது பூமியில் உள்ள அளவுக்கு இருக்குமா, அங்கு உயிரினங்கள் குடியேறினால் அவற்றுக்கு தேவையான அளவு இருக்குமா என்பது பற்றி தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது இவ்வாறு லைன்வீவர் தெரிவித்தார்.

மார்கழி 14, 2011

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி

(பேராசிரியர் பிரபாத் பட்நாயக்)

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி குறித்த ஒரு பொதுவான பார்வை என்னவாக இருக்கிறது?  ‘சந்தை’க்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் நம்பகத்தன்மை குறித்து ஒரு நம்பிக்கை யின்மை ஏற்பட்டுவிட்டது என்பதே இதற்கு பதில். கடந்த காலத்தில் இந்த அரசாங்கங்கள் தொடர்ந்து ஒரு நெறிமுறை இல்லாமல் நடந்து கொண்டதன் விளைவாக மிகப்பெரிய அளவில் கடன் குவிந்துவிட்டது. இதன் காரணமாக சந்தைக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது. ‘சந்தை’ என்பதன் கண்ணோட்டத்தில் இந்த நெருக்கடியின் தீர்வு இந்த அரசாங்கங்கள் தங்களுடைய செலவினங்களை சுருக்கிக் கொள்வதைப் பொறுத்தும், மிகக்கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதைப் பொறுத்தும் தான் அமையும் என்பதாகும். அதாவது செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டிக்கொள் என்பது போன்ற உத்தரவுகள் சந்தையால் பிறப்பிக்கப்படும்; அவை ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுகின் றனவா என்று மதிப்பீடு செய்யப்படும் என்ப தால் இந்த உத்தரவுகள் அரசாங்கங்களால் மீறப்படுவதில்லை. (மேலும்.....)

மார்கழி 14, 2011

தமிழகம் - கேரளா இடையே சுமுக உடன்பாடு ஏற்பட வேண்டும்

முல்லை பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணையை கட்ட வேண்டும் என்று கோரி இடுக்கி மாவட்டம் சப்பாத்து பகுதியில் கேரள மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். உண்ணாவிரத பந்தலுக்கு சமூக ஆர்வலர் மேதா பட்கர் நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவர் பேசியதாவது :- முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு இடையே ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஒரு பக்கம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், மற்றொரு பக்கம் அணை உடைந்தால் மக்கள் பலியாகும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் விவசாயிகளைவிட மனித உயிர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதை புரிந்து கொண்டு கேரளா மற்றும் தமிழகம் ஆகிய 2 மாநிலங்களும் பிரச்சினைக்கு தீர்வுகாண முயல வேண்டும். கேரள மக்களின் கருத்து என்ன என்பதையும், தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படுமா? என்பதையும் ஆராய்ந்து பார்த்து அதற்கு தீர்வு காண்பது மத்திய அரசின் கடமை. முல்லை பெரியாறு விவகாரத்தை பொறுத்தவரை யாருக்கு தோல்வி என்பதை பார்ப்பதைவிட பிரச்சினைக்கு தீர்வு காண்பதைத்தான் முக்கியமாக கருத வேண்டும். அணை உடைந்தால் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 70 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. எனவே இந்த பிரச்சினையில் விரைவாக இறுதி தீர்வு காண வேண்டும். இதில் இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட வேண்டும்.

மார்கழி 14, 2011

கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து கனடா விலகல்

கால நிலை மாற்றம் தொடர்பான கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து கனடா விலகிக் கொண்டுள்ளது. “கனடா தொடர்ந்தும் கியோட்டோ ஒப்பந்த த்தின்படி செயற்படாது” என அந்நாட்டின் சுற்றாடல் துறை அமைச்சர் பீட்டர் கென்ட் தெரிவித்துள்ளார். இதன்படி கியோட்டோ ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளும் முதலாவது நாடாக கனடா பதிவானது. கியோட்டோ ஒப்பந்தம் 1997 ஆம் ஆண்டு உலக வெப்பமடைவதற்கு எதிராக ஜப்பானின் கியோட்டோ நகரில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும். கியோட்டே ஒப்பந்தத்தின்படி செயற்பட கனடா தொடர்ந்து தவறிவரும் நிலையில் அதற்காக அதிகப்படியான தண்டப் பணத்தை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. கியோட்டோ ஒப்பந்தத்தின் கீழ் கனடா 13.6 பில்லியன் டொலர் அளவில் தண்டம் செலுத்தியுள்ளது. இதனால் கனடாவின் ஒவ்வொரு குடும்பமும் தலா 1,600 டொலர் அளவில் செலவு செய்துள்ளது. இந்நிலையில் உலகில் அதிக சூழல் மாசடையும் செயலில் ஈடுபடும் சீனா, அமெரிக்கா ஆகியன இந்த ஒப்பந்தத்தின் படி செயற்படவில்லை எனவும் கனடா சுற்றாடல்துறை அமைச்சர் குற்றம் சாட்டினார்.

மார்கழி 14, 2011

மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது - கருணாநிதி

முல்லை பெரியாறு பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தக் கோரியும் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் வட சென்னை மற்றும் தென் சென்னை தி. மு. க. சார்பில் அண்ணா அறிவாலய வளாகத்தில் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் நடந்தது. மாலை 5 மணிக்கு தி. மு. க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அப்போது கருணாநிதி பேசியதாவது :- சேர, சோழ, பாண்டியர்கள் கொடி நிழலில் வாழ்ந்தவர்கள் நாம். நாம் உருவாக்கிய ஒற்றுமை உறுதி என்றும் நிலை நிறுத்தப்பட வேண்டும். இதில் யாரும் உணர்ச்சி வசப்பட்டுவிடாமல் நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டும். ஒன்றுமையை பேண வேண்டும். கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்குமிடையே நடக்கும் இந்த பிரச்சினையை மத்திய அரசு டெல்லியில் இருந்து வேடிக்கை பார்க்காமல் வேடிக்கையாக கருதாமல் அப்படி கருதினால் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவு ஏற்படுத்தும் என்ற ஆபத்தை உணர்ந்து எதிலும் தாமதமாக முடிவெடுக்கும் மத்திய அரசு இதிலாவது தாமதமாக முடிவு எடுக்காமல் தமிழர்களின் செங்குருதி தெருவில் சிந்தாமல் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மார்கழி 14, 2011

இத்தாலி தொழிலாளர் எழுச்சிக் கோலம்  வேலை நிறுத்தத்துக்கு தயாராகிறார்கள்

இத்தாலி அரசின் மக் கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்து லட்சக் கணக்கான தொழிலாளர் கள் வேலை நிறுத்தம் மற் றும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி ஆகியவற் றிற்கு திட்டமிட்டுள்ளார்கள்.போர்ச்சுக்கல், கிரீஸ், அயர்லாந்து என்று நெருக் கடியில் சிக்கிய ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் இத் தாலியும் சிக்கி வருகிறது. மற்ற நாடுகளைப் போலவே ஐ.எம்.எப். மற்றும் ஐரோப் பிய யூனியன் ஆகியவற் றின் பரிந்துரைகளைக் கேட்டு நெருக்கடியிலிருந்து மீள மக்கள் மீது சுமையை ஏற்றும் கொள்கைகளை வலதுசாரி அரசு நடை முறைப்படுத்தி வருகிறது. இத்தகைய நடவடிக்கைக ளில் அந்நாட்டின் தொழிலா ளர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானவர்களின் வேலை பறிக்கப்பட்டுள் ளது. ஊதியங்களில் கடுமை யான வெட்டு செய்யப்பட் டிருக்கிறது. இவ்வளவு செய்த பிறகும், நாடு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது என்று அரசு கூறி வருகிறது. இது மேலும் சுமையை ஏற் றவே என்ற தொழிற்சங்கத் தினர் கூறுகின்றனர். (மேலும்.....)

மார்கழி 13, 2011

தமிழ் மக்களின் நலன்சார்ந்த அரசியல் கட்சிகள் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையும் கிழக்கு பிரிவினை வாதத்தையும் பேசிக்கொண்டிராமல் தீர்வுத்திட்டத்தை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் (பத்மநாபா EPRLF)

தமிழ் மக்களின் நலன்சார்ந்த அரசியல் கட்சிகள் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையும்,கிழக்கு பிரிவினை வாதத்தையும் பேசிக்கொண்டிராமல் நேர்மையுடனும் இதயசுத்தியுடனும் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வுத்திட்டத்தை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

மார்கழி 13, 2011

உண்மையான அரசியல் தீர்வை எட்ட உத்தேச தெரிவுக்குழு அரிய சந்தர்ப்பம் - அமைச்சர் டக்ளஸ்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அமைக்கப்படவிருக்கும் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் முன்வரவேண்டுமென ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். நம்பிக்கையுடனும், அக்கறையுடனும் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுக்கிடையில் பொதுவான இணக்கப்பாடொன்று ஏற்படவேண்டியது அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனை உணர்ந்து தெரிவுக்குழுவின் ஊடாக ஏற்பட்டிருக்கும் அரிய சந்தர்ப்பத்தை அனைத்துத் தமிழ் கட்சிகளும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 13, 2011

வடக்கு, கிழக்கில் காணி அதிகாரத்தை கையாள்வதற்கு கூட்டு ஆணைக்குழு

மத்திய அரசுக்கும், மாகாண சபைக்கும் சம அதிகாரம் வழங்க உத்தேசத் திட்டம்

ஒன்றிணையாத வடக்கு, கிழக்கில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்கான விசேட பொறிமுறையொன்றை வகுக்க அரசு உத்தேசித்துள்ளது.

இதனடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் காணி விடயங்களை மத்திய அரசும்,  மாகாணசபையும் கையாளும் வகையில் அதிகாரங்களுடனான கூட்டு ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற பேச்சின் போதுஇ கூட்டமைப்பின் முக்கியமான மூன்று கோரிக்கைகளான காணி அதிகாரம், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்தல் மற்றும் பொலிஸ் அதிகாரம் என்பவற்றை ஏற்றுக்கொள்ள அரசு தரப்பு மறுத்துவிட்டது. (மேலும்.....)

மார்கழி 13, 2011

The Canada Revenue Agency Revokes the Charitable Status of the Canadian Foundation for Tamil Refugee Rehabilitation

OTTAWA, ONTARIO, Dec 09, 2011 (MARKETWIRE via COMTEX) -- The Canada Revenue Agency (CRA) will revoke the charitable registration of the Canadian Foundation for Tamil Refugee Rehabilitation (the Foundation), a Toronto-area charity. The notice of revocation will be published in the Canada Gazette with an effective date of December 10, 2011. On November 7, 2011, the CRA issued a notice of intention to revoke the charitable registration of the Canadian Foundation for Tamil Refugee Rehabilitation, in accordance with subsection 168(1) of the Income Tax Act (the Act). The letter stated, in part, that: (more....)

மார்கழி 13, 2011

ஈழப் போராட்ட அரசியல்  தொடரும் காட்டிக்கொடுப்பு

(சபா நாவலன்)

{இக்கட்டுரையில் எங்களுக்கு பல முரண்பாடுகள் இருந்தாலும் (சிறப்பாக அருந்ததி ராய் போன்ற விடயங்கள்) விவாதத்திற்குரிய கருப் பொருளாக இவற்றை முன் வைக்கின்றோம்.}

மகிந்த ராஜபக்ச அரசு வன்னிப் படுகொலைகளை நிகழ்த்தி முடித்த மூன்றாவது வருடம் அண்மித்துக்கொண்டிருக்கின்றது. ஈழப் போராட்டத்தில் தன்னைத் தானே இணைத்துக்கொண்ட அமரிக்க அரசின் மனித முகமாகத் தொழிற்படும் நோர்வே அரசு இரண்டு வருடங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் இலங்கை அரசுடனும் நடைபெற்ற பேச்சுவார்த்தையை மீளாய்வு செய்து ‘பிரமாண்டமான’ அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் நடைபெற்ற இன அழிப்புக்குறித்து எங்காவது ஒரு முலையில் கூட அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. உலகில் நடைபெறுகின்ற போராட்டங்களை ஒட்டச் சிதைப்பதில் நோர்வே அரசு “அளப்பரிய” சேவையாற்றியுள்ள வரலாற்றுப் புள்ளிவிபரத்தோடு ஈழப் போராட்டமும் இணைக்கப்படும். (மேலும்.....)

மார்கழி 13, 2011

Unasked and unanswered questions will trip talks

The Tamil National Alliance (TNA) submitted a long list of concerns to the Government.  Most of these relate to day-to-day issues that they believed require urgent attention.  Many of them are legitimate even though not all of them can be said to be relevant only to the Northern and Eastern Provinces or the Tamil people living in these areas.  The TNA, given its ideological position, does have a legitimate case for inserting into the wish-list elements such as police and land powers, and the merging the two provinces. (more....)

மார்கழி 13, 2011

வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கு ஒரு போதும் இடமில்லை, பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து தெரிவுக்குழு பரிசீலிக்கும் - வாசு

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு பரிசீலிக்கும். ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கு ஒரு போதும் இங்கு இடமில்லை. இவ்வாறு தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரசால் நிராகரிக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொங்கி நிற்கின்றது. தமிழர்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பு பேச முன்வர வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அண்மையில் தெரிவித்திருந்தார்.(மேலும்.....)

மார்கழி 13, 2011

தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும் - கல்விமான்கள்

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக ஒரே குரலில் தமிழர் பிரச்சினை குறித்து அரசாங்கத்தரப்பினருடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் யதார்த்தபூர்வமான பேச்சுவார்த்தை களை நடத்தினால் நிச்சயம் தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவை பெறமுடியும் என்ற கருத்தை தமிழ் மக்களும் தமிழ் அறிஞர்களும், சிங்கள கல்விமான்களும் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமாக தமிழ் மக்களை ஆறாத்துயரத்தில் ஆழ்த்தி வரும் இனப் பிரச்சினைக்கு இனிமேலும் காலதாமதமாகாமல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் கருத்து மோதல்களையும், அபிப்பிராய பேதங்களையும் மறந்து ஓரணியில் குரல் கொடுத்து செயற்பட வேண்டுமென்று தமிழ் கல்விமான்களும், நாட்டின் மீது பற்றுள்ள மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். (மேலும்.....)

மார்கழி 13, 2011

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக ரூ. 18 இலட்சம் மோசடி

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 18 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை அலவத்துகொடை பிரதேசத்தில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 16 கடவுச்சீட்டு களையும் பல்வேறு ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். கண்டி, சுதுஹும்பொல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கனடாவுக்கு தொழிலுக்காக அனுப்புவதாக கூறி கடந்த ஓகஸ்ட் மாதம் 18 இலட்சம் ரூபா பணத்தை சந்தேக நபர் பெற்றுள்ளார். இதனையடுத்து கண்டி விசேட குற்றச் செயலுக்கான புலனாய்வு பிரிவு பொலிஸார் குறித்த சந்தேக நபரை அலவத்துகொடை பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சந்தேக நபர் கண்டி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மார்கழி 13, 2011

இறுதி யுத்தத்தின் போது புலிகள் சிறுவர்களை வயது வித்தியாசமின்றி யுத்தத்தில் ஈடுபடுத்தினர் - சிரேஷ்ட புலி உறுப்பினர்

இறுதிக்கட்ட யுத்தத்தில் வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு, புலிகளால் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக முன்னாள் சிரேஷ்ட புலி உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி பிரித்தானிய செய்தித்தாளான ‘த இன்டிப்பென்டட்’ செய்தி வெளியிட்டுள்ளது. பல சிறுவர்களுக்கு ஒருநாள் அடிப்படைப் பயிற்சி மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில் யுத்த களத்தில் இறக்கிவிடப் பட்டதுடன், பாதுகாப்புப் படையினரின் பகுதிக்குத் தப்பிச்செல்ல முற்பட்ட பொதுமக்கள் பலர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலிகளின் ஆயுதப் பிரிவைச் சாராத ஒரு சிரேஷ்ட புலி உறுப்பினரே இத் தகவல்களை வழங்கியிருப்பதாக பிரித்தானிய செய்தித்தாள் தனது செய்தியில் குறிப் பிட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 13, 2011

பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

காய்கறிகள் மற்றும் பழவகைகளை பிளாஸ்டிக் கூடைகளில் அடைத்தே விற்பனை நிலையங்களுக்கு லொறிகளில் கொண்டு செல்ல வேண்டுமென்று அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலைப்பாட்டினை எடுத்துவர வேண்டுமென நுகர்வோர் விவகார அமைச்சினால் அமுல்படுத்தப்பட்ட தீர் மானத்திற்கு நாட்டின் ஒரு சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் தமது எதிர்ப்பை பல்வேறு வழிகளிலும் வெளிக்காட்டினர். தம்புள்ள பொருளாதார மத்திய நிலை யத்திற்கு முன்பாக தம்புள்ள – மாத்தளை ஏ9 பிரதான வீதியில் சுமார் மூவாயிரம் விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் விற் பனை முகவர்கள் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நேற்று (12) நடத்தியிருந்தனர். (மேலும்.....)

மார்கழி 13, 2011

அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டுவீழ்த்த பாக். இராணுவம் முடிவு

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் விமானங்களை சுட்டு வீழ்த்த அந்நாட்டு இராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் எல்லையில் வான் பாதுகாப்பு முறை ஒன்றை அமைக்கவும் இராணுவம் திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது நேட்டோ நடத்திய தாக்குதலில் 24 பாக். வீரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இராணுவ கொள்கையின்படி வான்வெளிக்குள் ஊடுருவும் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் உட்பட எந்த ஒரு பொருளையும், பாகிஸ்தான் இராணுவம் உடனடியாக சுட்டுத் தள்ளிவிடும் என பாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆப்கானிலுள்ள நேட்டோ படைக்கு எண்ணெய் மற்றும் உணவு விநியோகிக்கும் பாதை தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கராச்சி துறைமுகத்திலும் நேட்டோ படைக்கு விநியோகிக்க வேண்டிய எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களுடன் நூற்றுக் கணக்கான லொறிகள் காத்திருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பாகிஸ்தான் ஷம்சி முகாமில் இருந்து அமெரிக்க படை முற்றலும் வெளியேறியது. ஷம்சி தளத்தில் இருந்த 5 ஆளில்லா விமானங்கள் (டரோன்) ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மார்கழி 13, 2011

அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது - ஈரான்

நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக் காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது என ஈரானின் புரட்சிப்படை திட்ட வட்டமாகத் தெரிவித் துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி. மீ தொலைவில் ஈரானுக்குள் கடந்த 4ம் திகதி அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்ததாகவும், அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 8ம் திகதி அந்த விமானத்தை ஈரான் அதிகாரிகள் சிலர் பார் வையிடும் வீடியோவை வெளி யிட்டது. இந் நிலையில் ஈரானின் புரட்சிப்படை துணைத் தளபதி உசேன் சலாமி நேற்று முன்தினம் வெளி யிட்ட அறிக்கையில் கூறியதாவது, ஈரானின் வான்வெளிக்குள் அமெரிக்க போர் விமானம் நுழைந்தது போரைத் தூண்டும் நடவடிக் கையாகும். இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் எனினும் இவ்விமானத்தை நாங்கள் அமெரிக்கா விடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

மார்கழி 13, 2011

கேரள அரசுக்கெதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் அணி திரள்வதால் எல்லையோரம் பதற்றம்

முல்லைப் பெரியாறு விவகாரத்தினால் இரு மாநிலங்களிடையே 13 வழிகளும் தடைப்படும் ஆபத்து. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழக கேரள எல்லையான குமுளியை நோக்கி 2வது நாளாக நேற்று முன்தினம் 1 இலட்சம் பேர் பேரணியாக சென்றனர். அவர்கள் கேரளாவுக்கு செல்லும் 13 வழிச்சாலைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். முல்லைப் பெரியாறு அணை விவ காரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியை கேரள அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ள சூழ்நிலையில், கேரள மாநிலம் குமுளியில் தமிழர்கள் தாக்கப் பட்டதையடுத்து இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது. கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர், கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி பகுதி மக்கள் 25 ஆயிரம் பேர் நேற்று முன்தினம் கேரள மாநிலம் குமுளி எல்லையை நோக்கி பேரணியாக சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மார்கழி 13, 2011

இன்று ரஜனிக்கு பிறந்த நாள்

 

தமிழக, கர்நாடக எல்லையோரத்தில் கிருஷ்ணகிரியிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் நாச்சிக்குப்பம் பகுதி யில் வசித்த குடும்பம் தான் ரானோவ்ஜி ராவ் கெய்குவாட் குடும்பம். அவர் மனைவி யின் பெயர் ராம்பாய். இவர்களுக்கு பிறந்தவர்தான் சிவாஜிராவ் கெய்குவாட். கர்நாடக காவல்துறையில் கான்ஸ்டபிள் உத்தியோகம் பார்த்தார். ஓர் அக்கா, இரண்டு அண்ணன்கள் என்று சிவாஜிராவு க்கு உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். கடைக்குட்டியாய் பிறந்தவர் தான் இந்த சிவாஜிராவ். அதனால் செல்லமாகவே வளர்ந்தார். சிறு வயதிலேயே தாயாரின் அரவணைப்பை இழந்து தவித்தார் சிவாஜிராவ். ராம்பாய் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டபோது, துடியாய் துடித்தார். இறப்பதற்கு சற்று முன்னர் தாயாரிடம் இருந்து அவருக்கு கிடைத்தது, கடைசி முத்தம். தாயை இழந்த சிவாஜி ராவுக்கு, எல்லாமே, மூத்த அண்ணன் சத்தியநாராயணன் தான். (மேலும்.....

மார்கழி 12, 2011

நினைத்தேன் எழுதுகிறேன் - 2

(அருள் விஜயன்)

அரசாங்கம் பிடித்து வைத்திருக்கும் அல்லது தடுத்து வைத்திருக்கும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் போராளிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் கொண்ட பட்டியலை வெளியிடும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்  நீதி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போது பாராளுமனறத்தில் கேட்டுள்ளார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்க பாலகுமார், எழிலன் யுதத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஒரு கத்தோலிக்க குருவுடன் சென்று இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இவர்களின் சரண் கத்தோலிக்க குருவின் அனுசரனையுடன் நடந்தது. இவர்களுக்கு என்ன நடந்ததென தெரியிவில்லை இவர்கள் எங்கிருக்கிறார்கள் என அறிவிக்கும் படி கோருகிறோம். (மேலும்....)

மார்கழி 12, 2011

கொரியாவால் முடியுமானால் இந்தியாவால் முடியாதா?

வால்மார்ட் போன்ற பெரிய விற் பனை நிலையங்களில் இந்திய பிராண்டுகளுக்கு என்ன இடம் இருக் கும் என்பது கேள்வி. மக்கள் விரும் பக்கூடிய தரமான பொருட்களை இந்திய உற்பத்தியாளர்கள் உருவாக்கி னால் அந்த பொருட்கள் நிச்சயம் இடம்பிடிக்கும் என்பதே பதில். அமெ ரிக்காவில் உள்ள வால்மார்ட் கடை களில் இருக்கும் 60 சதவிகிதம் பொருட்கள் சீனாவில் உற்பத்தி யானவை என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்திக்கு பிறகு யாரும் தேசிய பெருமிதம் என்பதை இந்தியர் களுக்கு உருவாக்க தவறிவிட்டனர். அவர்கள் இந்தியாவின் கஜானாவை காலி செய்வதிலேயே குறியாக இருந் தனர். ஜப்பானிலோ உள்நாட்டு பணி மனைகளில் பொருட்கள் செய்யப்படு வதைதான் ஊக்குவிக்கின்றனர். இது தான் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளுக் கும் பொருந்தும். அமெரிக்க நிறுவனங் களான ஜிஎம் மற்றும் கிரிஸ்லர் நிறு வனங்களை கடனில் இருந்து அமெ ரிக்கா ஏன் மீட்டது என்றால், அவை கள் அமெரிக்கத்துவத்தை பிரதிபலிப் பவை. (மேலும்....)

மார்கழி 12, 2011

காணி, பொலிஸ், வடக்கு - கிழக்கு இணைப்பு

அரசுடன் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு

வடக்கு - கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் மாகாணங்களுக்கான காணி அதிகாரங்கள் குறித்த முக்கிய விடயங்களில் அரசாங்கத்துடன் இணக்கப்பாடொன்று எட்டப்படவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். இந்த விடயங்களில் அரசாங்கம் இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் கூறினார். அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் முக்கியமான இந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு இணக்கப்பா டொன்று எட்டப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்த வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் மாகாணங்களுக்கான காணி அதிகாரங்கள் போன்ற மூன்று விடயங்களில் காணப்படும் சவால்கள் குறித்து அரசாங்கப் பிரதிநிதிகள் கூட்டமைப்பினருக்கு விளக்கமளித்திருந்தனர். இரு தரப்புக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் எதிர் வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்விடயங்கள் பற்றி அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் ஆராயப்படும் என்றும் அரியநேந்திரன் குறிப்பிட்டார்.

மார்கழி 12, 2011

உலகைச் சுற்றி

‘ஆம், உன்னால் முடியாது!’

ஆப்கானிஸ்தானைத் தாக்கும் போது ஒசாமா பின்லேடன் ஒரு காரண மாக கிடைத்தார்; இராக்கை தாக்கும் போது, அங்கு பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு காரணம் கிடைத்தது; லிபியாவை சிதைக்கும்போது, அந் நாட்டின் ஜனாதிபதி மும்மர் கடாபி மக்கள் மீது ஒடுக்குமுறை ஏவுவதாக காரணம் கிடைத்தது. ஈரானுக்கும் ஒரு காரணத்தை கண்டு பிடித்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் அடிவருடியாக வீழ்ந்துகிடக்கிற சவூதி அரேபியாவின் தூதரை வாஷிங்டனில் வைத்து கொலை செய்ய கடந்தமாதத் துவக்கத் தில் ஒரு முயற்சி நடந்தது. வாஷிங் டனில் உள்ள சவூதி அரேபியத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தத் தூதர் உயிர் தப்பிவிட்டார். இது குறித்த விசாரணைகள் எதுவும் துவங்கு வதற்கு முன்னரே, அமெரிக்காவுக்கான சவுதி அரேபியத் தூதரை கொல்ல முயன்றது ஈரான் அரசாங்கமே என்றும், எனவே அமெரிக்காவின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கே ஈரான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், அந்நாட்டின் மீது உடனடியாக பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டுமென்றும், அந்த தாக்குதல் இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரு கடுமையான ராணுவத் தாக்குதலாக இருக்க வேண்டுமென்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியர சுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு பெரும் ஆளும் வர்க்கக் கட்சிக ளின் பிரதிநிதிகள் அனல் கக்குகிறார்கள். மறுபுறத்தில் ஐ.நா. பொதுச் சபை யில், சவூதி அரேபிய தூதரைக் கொல்ல நடந்த முயற்சியைக் கண்டித்து, ஈரானை மறைமுகமாகக் குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேறுகிறது. மற்றொருபுறத்தில் சர்வதேச அணு சக்தி முகமை, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் பணியை தீவிரமாக மேற் கொண்டு வருவதாக பழைய பல்ல வியை மீண்டும் பாடி கண்டனத் தீர்மா னம் நிறைவேற்றுகிறது.

மார்கழி 12, 2011

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதி இவ்வருடம் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இவ்வருடத்தில் இரண்டாவது தடவையாக கடந்த செப்டெம்பர் மாதம் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துக் காணப்பட்டதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.  தைக்கப்பட்ட ஆடைகள், இறப்பர் போன்றவற்றின் கேள்வி அதிகரித்தமையால் செப்டெம்பர் மாதம் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்த நிலையில் காணப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கான விற்பனைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 19.1 வீதமாகக் காணப்பட்ட நிலையில் செப்டெம்பர் மாதத்தில் அது 20.4 வீதமாக அதாவது 854 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதென மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது. செப் டெம்பர் மாதத்தில் ஆடை உற்பத்தித் துறை யின் ஏற்றுமதி 13.7 வீதமாக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்கான இறப்பர் விற்பனை 37.3 வீதமாக அதிகரித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள்களின் விலை அதிகரித்திருந்த நிலையில் எரிபொருள்களின் இறக்குமதியில் கூடுதலான செலவீனம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், 2011ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் உல்லாசப் பயணத்துறை 48 வீதத்தால் அதிகரித்திருப்பதுடன், இதன் ஊடாக 580 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இலங்கைக்குக் கிடைத்திருப்பதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி 12, 2011

வடக்கின் கல்வி நடவடிக்கை

தமிழ் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் மறுப்பு

வடக்கில் கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். சிலர் தமது அரசியல் இலாபத்திற்காக உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருவதாக தெரிவித்த அவர் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை தான் முற்றாக மறுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதரன் எம்.பி. அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மேலும் கருத்து தெரிவிக்கையில் வட பகுதி மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக வட மாகாண சபையின் ஊடாக பாரிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில் இந்த மக்களின் கல்வி உட்பட ஏனைய செயற்பாடுகளுக்கு எந்த முட்டுக்கட்டையும் கிடையாது. பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அதிதிகளாக செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சிலர் மாணவர்களின் எதிர்கால கல்வி மேம்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை விட்டு ஈழ சிந்தனைகள் தொடர்பிலே உரையாற்றுகின்றனர்.

மார்கழி 12, 2011

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் சிறப்பாக இருக்கும் - ஐரோ. பிரதிநிதி

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேச கவனங்களையும் உள்ளடக்கியதாக திடமான பரிந்துரைகளை முன்வைத்திருக்குமென எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் கென்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்புப் பேச்சாளருமான ஜியோவ்ரி வான் ஓர்டன் தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் தமது பிரச்சினைகளை தமக்கே உரித்தான வகையில் தீர்த்துக்கொள்வார்கள் எனக் கூறியிருக்கும் அவர், சர்வதேச நாடுகளின் ஆக்கபூர்வமான ஆதரவையே இலங்கையர்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றத்திலுள்ள இலங்கைக் குழுவின் நண்பர்கள் அமைப்பின் தலைவரான ஓர்டன், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கடந்த காலங்களில் இலங்கையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களே புலிகளால் மோச மாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 30 வருட யுத்தத்திலிருந்து விடுபட்டி ருக்கும் இலங்கை நாட்டை முன்னேற்று வதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழ் மக்களின் கூடுதலான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட பிரிவினைவாதத்தைத் தொடர்ந்தும் கோரமுடியாது. இலங்கைக்குள்ளேயே தீர்வொன்றைக் காண்பதற்கும், நீண்டகால தீர்வொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கு வதாகவும் அவர்கள் என்னிடம் நேரடியாக கூறியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தபோது தெரிவித்த கருத்துக்களை அவர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். (மேலும்....)

மார்கழி 12, 2011

லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்

லிபிய தலைநகர் திரிபோலியின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கிளர்ச்சிப் படை வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்துள்ளனர். திரிப்போலி சர்வதேச விமான நிலையத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கிளர்ச்சிப் படையின் சின்தான் பிரிவுக்கும், திரிபோலியின் கிளர்ச்சிப் படை வீரர்களுக்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சின்தான் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து விமான நிலையத்தை கைப்பற்ற திரிபோலி கிளர்ச்சியாளர்கள் முற்பட்டபோதே இந்த மோதல் மூண்டதாக, விமான நிலையத்தின் நிர்வாகப் பிரிவில் பணிபுரியும் கமுகா என்பவர் ஏ. எப். பிக்கு தெரிவித்துள்ளார். (மேலும்....)

மார்கழி 12, 2011

தேர்தல் மோசடி

ரஷ்யாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தேர்தல் முறைகேடுகளை கண்டித்து ரஷ்யாவில் மாபெரும் எதிர்ப்பு பேரணி இடம் பெற்றது. தலைநகர் மொஸ்கோவில் இடம் பெற்ற இந்தப் பேரணியில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற ரஷ்ய பொதுத் தேர்தலில் பிரதமர் விளாடிமிர் புடினின் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் இடம் பெற்றதாக எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் தலைநகர் மொஸ்கோவில் உள்ள கிரெம்ளின் கட்டடம் முன்பு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பாதுகாப்புக்காக, 50 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டனர். ஜனநாயக நாடு என அறிவித்துக் கொள்ளும் புடினின் ஆட்சியில் கடந்த ஒரு வார காலமாக மொஸ்கோ நகர், அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட நகராக காட்சியளித்ததாக சர்வதேச பத்திரிகை நிருபர்கள் தெரிவித்தனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், 13ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் உரால்ஸ் சைபீரியா உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம்ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்ட பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அடுத்தாண்டில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் புடின் போட்டியிட உள்ளார். ஆனால், தேர்தல் மோசடி குறித்த இந்த ஆர்ப்பாட்டங்கள் அவருக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன.

மார்கழி 12, 2011

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை; தமிழகம், கேரளாவில் பதற்றம்  

இரு மாநிலங்களும் தமது சமூக பொருளாதார வாழ்வு மேம்பாட்டுக்கு ஒன்றையொன்று சார்ந்தே இருந்திட வேண்டும் என்பது இயற்கையாகவே பூகோள ரீதியாக உருவாகியுள்ள நிலைமை ஆகும். எனவே இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவுப் பாலங்கள், ஒன்றையொன்று சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பிரச்சினைகளை அணுகுவதற்கு மாறாக குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, நீண்ட நெடிய வரலாற்று அடிப்படையிலான உறவைக் காயப்படுத்திட எண்ணினால், வரலாறு நிச்சயம் மன்னிக்காது என்பதை அருகருகே உள்ள இரண்டு மாநிலங்களின் மக்களும் குறிப்பாக அரசியலாளர்களும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென்று தி.மு.க செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. (மேலும்....)

மார்கழி 11, 2011

ஈழத் தமிழர்களின் விடிவெள்ளி!

வருங்கால தமிழ்நாட்டு முதலமைச்சர்!!

புலன்பெயர்ந்த தமிழர்களின் தேசியத்தலைவர்!!!

உலகின் ஒரேயொரு தூய தமிழன் சீமான் அவர்களுக்கு……

(பச்சைத் தமிழன்)

சமீபகாலமாக உங்களைக் கவனித்து வந்ததில், உங்களை மிஞ்ச யாருமே இல்லை என்னும் அளவிற்கு, உங்களது பேச்சுக்களும் நடவடிக்கைகளும் இருக்கின்றன. மறைந்தும் மறையாத தேசியத்தலைவர்? பிரபாகரனுக்கு அடுத்தபடியாக நீங்கள் தான் எமது கண்களுக்குத் தேசியத் தலைவராகத் தெரிகின்றீர்கள். வையாபுரி கோபாலசாமி, நெடுமாறன், திருமாவளவன், ராமதாஸ், ஈழத்தவர்களான உருத்திரகுமார், வினாயகம்? நெடியவன்? போன்றவர்களெல்லாம் உங்கள் கால்தூசுக்கும் பெறமாட்டார்கள். இவர்களை நம்பி எந்தப் பிரயோசனமும் இல்லை என்பது எமக்குப் புரிந்து விட்டது. விரைவில் பெரும்படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு வந்து, வன்னிக் காட்டில் இருந்துகொண்டு இலங்கை இராணுவத்துக்குப் பதிலடி கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். மறைந்த தேசியத்தலைவர்? பிரபாகரன் அவர்களுக்கு உணர்ச்சியாகப் பேசத் தெரியாது. மாவீரர்தின உரை நிகழ்த்தும் போது அவர் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் தெரியாது. எழுதிக் கொடுப்பதை எழுத்துக்கூட்டி வாசிப்பதனால் அவர் முகத்தில் சரியாக வாசித்து முடித்து விட வேண்டுமென்ற படபடப்பு மட்டும் தான் காணப்படும். ஆனால் நீங்களோ உணர்ச்சிப் பிளம்பு. வாய்ச் சொல் வீரன். நீங்கள் பேசும்போது வார்த்தைகள் வரிசைகட்டி வருகின்றன. (மேலும்....)

மார்கழி 11, 2011

நினைத்தேன் எழுதுகிறேன் - 1

(அருள் விஜயன்)

இலங்கையின் வட- கிழக்கு பிரதேச அரசியல் தீர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி தெரிவுக்குழுவில் தொடங்கி தற்போது பாராளுமன்ற தெரிவுக்குழுவில் வந்து நிற்கிறது. அனைத்துக்கட்சி தெரிவுக்குழு மூலம் பேசப்பட்டு ஒரு தீர்வு எட்டப்பட்டாலே, அது முழுமையானதாக இருக்கும். பாராளுமன்ற தெரிவுக்குழு என வரும்போது,பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள் இதில் தங்கள் கருத்துக்களை சொல்லவாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வதால், அதில் அங்கம் வகிக்காமலும், பாராளுமன்றத்தில் அங்கத்துவம் இல்லாமலும் இருக்கும் தமிழ் கட்சிகள் தங்கள் கருத்துக்களை சொல்ல களம் இல்லாமல் போய்விடுகிறது. (மேலும்....)

மார்கழி 11, 2011

மகிந்த இராணுவத்தால் லலித் மற்றும் குகன் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டனர்

ஜே.வி.பியின் பிளவுற்ற குழுவைச் சேர்ந்த விரசாமி லலித் குமார யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டுள்ளார். நேற்று 11/12/2011 அன்று லலித் குமார கடத்தப்பட்ட வேளையில் ஆவரங்கலைச் சேர்ந்த குமரகுருபரன் என்பவரும் அவரோரு கடத்தப்பட்டுள்ளார். இருவரும் பயணம் செய்த துவிச்சக்கர வண்டி இன்று யாழ்ப்பாண நகரப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னை நாள் ஜே.வி.பி உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து பிரிந்து மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே லலித் கடத்தப்பட்டுள்ளார். சில தினங்களின் முன்னர் யாழ்ப்பாண இராணுவ அதிகாரியால் அவர் எச்சரிக்கப்பட்டிருந்தாக இனியொருவிற்குத் தெரிவித்திருந்தார். (மேலும்....)

மார்கழி 11, 2011

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து தொடக்கப்பட்டதே தேசிய இனப்பிரச்சினை
(கடந்த வாரத் தொடர்)

நாணயபெறுமதியிறக்கம் 3 சதவீதமாக பெறுமதியிறக்கம் செய்வதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் வெளிநாடுகளில் போட்டியிடக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த கூடியதாக அமைகின்றது. உல்லாச பயணிகளின் வருகை மூலமான வருமானத்தை 1 பில்லியனாக அதிகரிக்க இலக்கிடப்பட்டிருப்பது சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான அரசின் முன்னுரிமையை எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கு உல்லாச அபிவிருத்தி துரித கதியில் நடைபெறுவதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SME) எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் காணப்படுகின்றது. இது தொடர்பான வருமானவரி 10% மாகக் குறைக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

மார்கழி 11, 2011

நெடியவன், விநாயகம், ருத்ரகுமார் மோதல்

ஐரோப்பிய நாடுகளில் மாவீரர் நாள் தோல்வி!

விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வுகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தோல்வியைக் கண்டிருப்பதாகவும், இதனால் விடுதலைப் புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களுக்கிடையில் பாரியளவில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் தோல்வியடைந் துள்ளமையினால் மூன்று முக்கிய விடுதலைப் புலித் தலைவர்களுக்கு இடையில் பாரியளவில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது மோதலாக உருவெடுத்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்புத் தலைவர்களுக்கு இடை யிலான மோதல்களினால் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் விசேடமாக இடம்பெற வில்லை என்றும் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. நெடியவன், விநாயகம் மற்றும் ருத்ர குமார் ஆகியோருக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது. எனினும் இது தொடர்பாக புலிகளின் தரப்பில் இருந்து தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

மார்கழி 11, 2011

ஞாபகத்திற்கு வரும் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதை!

யாழில் 1989 இல் 11ஆக இருந்த பாராளுமன்ற ஆசனம் 2011 இல் 05 ஆக மாறிய அவலம்!

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 1989 தேர்தலின் போது பதினொரு பாராளுமன்ற ஆசனங்கள் இருந்தன. 1994 தேர்தலின் போது அந்த எண்ணிக்கை 10 ஆகவும் 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போது 9 ஆகவும் குறைக்கப்பட்டிருந்தது. யாழ். மாவட்டத்தின் சனத்தொகையின் அடிப்படையில் இனிவரும் தேர்தலின் போது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளதாகத் தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்தது. யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து குறைக்கப்படும் இந்த 4 ஆசனங்களும் இரத்தினபுரி, குருநாகல், பதுளை மாத்தறை மாவட்டங்களுக்கு தலா ஒன்று வீதம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தி லிருந்து தெரிவு செயய்யப்படும் நாடாளு மன்ற ஆசனங்களின் 9லிருந்து 5ஆக குறைக்கப்பட்டுள்ளமை யானது, யாழ். மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையே இதற்குக் காரணம் என தேர்தல் திணைக்கள அதி காரிகள் உத்தியோகவூபூவமாக அறிவித்தி ருந்தனர். நிலைமை இவ்வாறு இருந்த போது, கடந்த வருடத்தில் வாக்காளர் பதிவின் போது விடுபட்டுப் போன 24.364 பேர் வடக்கில் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்துள்ளனர். விடுபட்டுப் போன வாக்காளர்களை மீளப்பதியும் பட்சத்தில், இழந்து போகும் அபாயத்திலிருந்து 2 ஆசனங்களை மீளப் பெறும் சாத்தியம் உருவாகியுள்ளதற்கு பவ்ரல் போன்ற அரச சார்பற்ற அமைப்பு களே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி 11, 2011

நாங்கள் நாங்களாக வாழ்வது எப்பொழுது?

இன்று உலக நகரங்கள் பல்வேறு வளர்ச்சியுடனும் வேகத்துடனும் பயணித்துக்கொண்டிருக்கின்றன. பிரமிப்பையும் கவர்ச்சியையும் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. அழகும் கொண்டாட்டங்களும் நிறைந்த நகரங்களை மனிதர்கள் சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர்களின் நகரங்கள் பயங்கரங்களை உருவாக்கும் வன்முறை நகரங்களாகவே மாறிக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாண நகரம் எத்தனை எத்தனை மக்களின் கனவுகளாய் விரிந்திருக்கிற நகரம். வரலாற்றுத் தொன்மையும் அரசியல் முக்கியத்துவமும் பெற்ற இந்த நகரம் ஓர் அச்சப் பிராந்தியமானது எப்பொழுது? இந்த நகரத்தின் மக்கள் தங்கள் வாழ்வை தொலைத்தது எப்பொழுது? யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என்று இன்று உலகின் கண்கள் திரும்பும் அளவில் இங்கொரு ஆட்சியும் அதிகாரத்தின் நடவடிக்கையும் நிகழ்கின்றது. (மேலும்....)

மார்கழி 11, 2011

முற்றும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம்!

மீனவர்கள் தாக்கப்படுதல், கூடங்குளம் அணு மின்நிலையம் என்று எமது அண்டை நாட்டு அரசியல்வாதிகள் கூச்சலிட்டு தமது அரசியல் செல்வாக்கினைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் தற்போது பூதாகரப்படுத்தப்படும் விஷயம்தான், முல்லைப் பெரியாறு அணை விவகாரம். மற்றுமொரு காவிரியாக கேரளத்திடம் தமிழகத்தை தண்ணீருக்காக மண்டியிட வைத்திருக்கிறது முல்லைப் பெரியாறு. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்துமாறு தமிழகம் கேரளத்திடம் கோர, கேரள அரசோ முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது. (மேலும்....)

மார்கழி 11, 2011

நெருக்கடியில் தவிக்கும் ஐரோப்பா  ‘யூரோ’வைப் பாதுகாக்க கடும் நிதிக்கட்டுப்பாடு

யூரோ நாணய முறை பின்பற் றப்படும் ஐரோப்பிய மண்டலத்தில் நிலவும் நிதித் தட்டுப்பாடு, கடன் நெருக் கடியை சமாளிக்க தத்தமது நாடுகளின் வரி விதிப்பிலும், வரவு-செலவுத் திட்டத்தி லும் மாற்றங்களைச் செய்ய அந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், இந்த யூரோ கூட்டமைப்பு மண்டலத் தில் உள்ள 27 நாடுகளில் யூரோவை பயன்படுத்தும் 17 நாடுகள் மட்டுமே இந்தத் தீர்வை உடனடியாக ஏற்றுக் கொண்டன. யூரோவைப் பயன்படுத்தாத பிரிட்டன், இந்தத் திட்டத்திலிருந்து விலகி நிற்பதாக அறிவித் துள்ளது. அதே நேரத்தில் சுவீ டன், ஹங்கேரி, செக், டென் மார்க், போலந்து, லாட் வியா, அயர்லாந்து உள் ளிட்ட 9 நாடுகள் தங்களது நாடாளுமன்றங்களில் இது குறித்து ஆலோசித்துவிட்டு முடிவெடுப்பதாக அறிவித் துள்ளன (மேலும்....)

மார்கழி 11, 2011

மக்கள் எழுச்சி

அடுத்தது சவூதி அரேபியா?

துனீசியாவில் துவங்கி பல்வேறு நாடுகளில் எழுந்த எழுச்சியால் ஆட்சியாளர்கள் மாறியுள்ளனர். அவர்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை என்றாலும், ஆட்சி மாற்றங்கள் அடுத்தடுத்துள்ள நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. பஹ்ரைன் போன்ற நாடுகளில் மக்கள் போராடியபோது, போராட் டத்தை ஒடுக்க சவூதி அரேபியா வின் மன்னர் அரசு அங்கு தங்கள் ராணுவத்தைஅனுப்பி வைத்தது. சிரியாவில் உள்நாட்டு கலகத்தை உருவாக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஆதரவும் அளித்தது. சொந்த நாட்டில் எந்தவிதமான ஜனநாயக உரிமைக்கும் இடம் தராமல் பார்த்துக் கொள்ளும் சவூதி மன்னருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டங்களின் மீதான அடக்குமுறைகள் செய்திகளாக வில்லை. (மேலும்....)

மார்கழி 11, 2011

மீனவர் பிரச்சனைக்கு குறுகிய காலத்தில் தீர்வினை எட்ட முடியாது - இலங்கை

இந்திய மீனர்வர்களின் பிரச்சனைகளுக்குக் குறைந்த காலத்தில் தீர்வினை எட்டமுடியாது என்று இலங்கைக் கடற்படைத் தலைவர் தெரிவித் தார். தூதரகப் பேச்சுவார்த்தைகளினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று அவர் தெரிவித்தார். இப்பிரச்சனையைக் கடற்படையால் மட்டுமே தீர்த்துவிட முடியாது. இருநாடு களுக்கிடையிலான தூதரகப் பேச்சு வார்த்தைகளினால் தீர்வுகள் சாத்திய மாகும் என்று அட்மிரல் சோமதிலகே திசநாயகே கண்டியில் வெள்ளிக்கிழமை யன்று தெரிவித்தார். இருநாடுகளைச் சேர்ந்த மீனவர்களும் சர்வதேச கடல் எல்லைகள் தெரியாத காரணத்தால் இதுபோன்ற பிரச்சனை களுக்கு ஆளாகின்றனர். இருநாடுகளின் தூதரக நடவடிக்கைகளில் உள்ள குழப்பம் காரணமாக இப்பிரச்சனை நீடிக்கிறது.

 மார்கழி 10, 2011

எல்லையில் படைகளைக் குவிக்கவுள்ள பாகிஸ்தான்

பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில், போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தும் படைகளை குவிக்க பாக். அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தானில், சலாலா எல்லைச் சாவடி மீது, நேட்டோ நடத்திய தாக்குதலை அடுத்து, எல்லைகளில், நேட்டோவின் அத்துமீறலை எதிர்கொள்ளும் வழிகளை பாகிஸ்தான் ஆலோசித்து வருகிறது.  இதுகுறித்து, நேற்று முன்தினம், பாக்,, பார்லிமென்டின் நிலைக் குழுவில் பேசிய பாக். இராணுவத்தின் நடவடிக்கைப் பிரிவு இயக்குனர் அஷ்பாக் நதீம் அகமது பேசுகையில், "நடந்த நேட்டோ தாக்குதலுக்குப் பின், மேற்குப் பகுதியில், மீண்டும் தாக்குதல் நடக்கலாம். அதை எதிர்கொள்ளும் வகையில், அங்கு படைகள் குவிக்கப்படும்' என்றார்.

மார்கழி 10, 2011

ருமேனியாவில் சிஐஏவின் ரகசியச்சிறை! அம்பலமானது அமெரிக்காவின் மோசடி வேலை

தங்களுக்கு வேண்டாதவர்களை சித்ரவதை செய்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ ரகசியச் சிறைகளை அமைத்திருக்கிறது என்ற செய்தி ஏற்கெனவே வெளியானது.இந்நிலையில் ருமேனியாவில் ஒரு கட்டிடத்தில் இந்த சிறை இயங்கி வந்தது என்று அம்பலமாகியிருக்கிறது. ஊடக நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் மற்றும் ஜெர்மன் தொலைக்காட்சி ஆகிய இரண்டும் இணைந்து நடத்திய கூட்டு புலனாய்வில்தான் இது தெரிய வந்தது. இந்தச் சிறையில்தான் காலித் ஷேக் முகம்மது உள்ளிட்ட பலரும் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். சிஐஏவின் முன்னாள் அதிகாரிகள் சிலரின் உதவியால் இந்த சிறை இயங்கி வந்த கட்டிடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். (மேலும்....)

மார்கழி 10, 2011

அமெரிக்காவுக்கு எதிராக முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும்”

அமெரிக்காவுக்கு எதிராக உலகநாடுகளிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் அணிதிரள வேண்டும் என மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா அழைப்பு விடுத்தார். நேட்டோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. நேட்டோ படைகள் முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக தொடர்ந்தும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. லிபியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், ஈரானுக்கு எதிரான தாக்குதல் என அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன. தற்போது பாகிஸ்தானில் தமது அராஜக நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. அதன் விளைவாக 28 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் அண்மையில் கொல்லப்பட்டார்கள். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். நேட்டோ படைகள் முன்னெடுத்துவரும் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும். அப்போதே இவ்வாறான அராஜக செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மார்கழி 10, 2011

வட மாகாணத்தின் ஆளுநர் தமிழருக்கு எதிரானவர் -  சுரேஷ் எம்.பி. _

மாகாணசபைகள் இருக்கின்றன. இவற்றுக்கு மக்களால் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். சபைகளுக்கு அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன. அமைச்சர்களும் நியமிக்கப்படுகின்றனர். எனினும் கிழக்கு மாகாண ஆளுநர் அங்கிருக்கும் அமைச்சர்களையும் மதிக்காது அனைத்து விடயங்களிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரைப் போன்று செயற்படுகின்றார். அப்படியென்றால் மாகாண சபையோ மாகாண அமைச்சர்களோ இங்கு தேவையற்ற விடயங்களாகும். கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக சபையின் ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தபோது அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இரு ஒரு புறமிருக்க கிழக்கில் யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் அங்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் வடக்கில் யுத்தம் நிறைவடைந்து 30 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் அங்கு இன்னும் வட மாகாணத்துக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.  (மேலும்....)

மார்கழி 10, 2011

அமெரிக்காவைக் கண்டிக்க வேண்டும்  ஐ.நா.சபைக்கு ஈரான் வலியுறுத்தல்

தங்கள் நாட்டிற்குள் சட் டவிரோதமாக ஆளில்லா விமானத்தை அனுப்பி உளவு பார்க்க முயன்ற அமெரிக்காவின் நடவடிக் கையை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி யுள்ளது. சில நாட்களுக்கு முன் பாக அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்று ஈரானின் எல்லைக்குள் புகுந்தது. அந்த விமானத்தை ஈரான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த் தினர். அதோடு நிற்காமல், சுட்டு வீழ்த்தப்பட்ட ஆர். கியூ,170 ரக விமானத்தை சர்வதேச பத்திரிகையாளர் களின் பார்வைக்கு வைத் திருக்கிறார்கள். இப்போ தும் கூட, தங்கள் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது என்பதை அமெரிக்கா ஒப்புக் கொள்ளவில்லை. எந் திரக் கோளாறு காரணமாக ஈரானுக்குள் விழுந்திருக்கும் என்று கூறி வருகிறது. (மேலும்....)

மார்கழி 10, 2011

கல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 70 பேர் பலி?

கல்கத்தாவில் உள்ள ஏ. எம். ஆர். ஐ. மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதில் 70 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. இதில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளிகளும் சிலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 25 தீயணைப்பு வண்டிகள் வந்து போராடி வருகின்றன. மருத்துவமனையின் கீழ் தளத்தில் ரசாயனங்களும் மருத்துவ கழிவுப் பொருட்களும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன. அங்குதான் நேற்றுக் காலை தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. தீப்பிடித்தவுடன் மருத்துவமனை வளாகத்திலிருந்து 80% நோயாளிகள் அகற்றப்பட்டதாக தீயணைப்புத் துறை அமைச்சர் ஜாவேத்கான் தெரிவித்தார். பலி எண்ணிக்கை முதலில் 20 அல்லது 25ஆக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 70 பேர் பலியாகியிருக்கலாம் என்று பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மார்கழி 10, 2011

சிறப்புடன் திகழும் இரு மொழிகளுள் தமிழும் ஒன்று

11 ஆம் நூற்றாண்டளவில் பிரிட்ட னின் ஆளும் வர்க்கத்தின் மொழியாக பிரெஞ்சும், மத தத்துவ மொழியாக இலத்தீனும், விஞ்ஞான நீதி ஆகியவற்றின் மொழியாக இலத்தீனுமே இருந்து வந்தன. பிரெஞ்சை அங்கு அரச கரும மொழியாக்க முயற்சி நடந்துகொண்டிருந்த போதும் அதனை எதிர்க்க கூட வலிமை அற்ற மொழியாக ஆங்கில மொழி இருந்தது. இயேசுநாதர் பேசிய எபிரேயமொழி, சாக்ரடீஸ் பேசிய கிரேக்க மொழி, சீசர் பேசிய இலத்தின் மொழி, வால்மீகி பேசிய வட மொழிகள் இன்று பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் கன்பியூசியஸ் பேசிய சீன மொழியும், திருவள்ளுவர், தொல்காப்பிய புலவன் பேசிய தமிழ் மொழியுமுமே இன்றும் சிறப்புடன் திகழ்கிறது. இன்றைக்கும் ஆதி மொழிகளான கிரெக்க மொழியிலிருந்து உருமாறிய கிaக், எரேபிய மொழியிலிருந்து உருவான ஹீப்ரு நவீன இலத்தீன் ஆலயங்களில் எஞ்சி இருக்கின்ற சமஸ்கிருதம், சீனம், தமிழ் ஆகிய மொழிகளே பழமை மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. (மேலும்....)

மார்கழி 09, 2011

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வு என்பது பழங்கதையாகி வரும் போக்கு காணப்படுகிறது. இதற்கு பேரினவாத அரசியலின் இழுத்தடிப்பு மாத்திரமல்ல தமிழ் தலைமைத்துவங்களின் அலட்சிய மனோபாவமும் காரணமாகும் - தி.ஸ்ரீதரன் (பத்மநாபா ஈபிஆர்எல்எப்)

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வு என்பது பழங்கதையாகி வரும் போக்கு காணப்படுகிறது. இதற்கு பேரினவாத அரசியலின் இழுத்தடிப்பு மாத்திரமல்ல, தமிழ் தலைமைத்துவங்களின் அலட்சிய மனோபாவமும் காரணமாகும். அமெரிக்காவில் பேசுகிறோம். இங்கிலாந்தில் பேசுகிறோம் என்று சொல்லிக் கொண்டு உள்ளுரில் நடைமுறை சார்ந்த செயற்பாடுகளில் அக்கறை காட்டாமல் இருப்பதும் இதற்கு காரணமாகும். அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தாம் அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளுக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எமது பிரச்சினை பற்றி விரிவாக எடுத்துரைத்தாகவும், அதேபோல் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பேசியது, கேள்விகளுக்கு பதிலளித்தது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். நல்ல விடயம்! ஆனால் பிரச்சினை இலங்கையில் தீர வேண்டும். அதற்கு உள்நாட்டில் மற்றும் உப கண்ட பிராந்திய மட்டத்திலேயே முயற்சிகள் பிரதானமாக தேவைப்படுகின்றன. (மேலும்...)

மார்கழி 09, 2011

கடந்த கால வரலாறுகளை கூட்டமைப்பினர் கற்றுக்கொள்ளாமை கவலையளிக்கிறது - சந்திரகாந்தன்

எதிர்காலத்தில் எமது சமூகம் பயணிக்கவேண்டிய முறைமைகள் பற்றி திட்டமிடுவதற்கு கட்டாயம் நாம் எமது கடந்தகால வரலாறுகளை கற்றே ஆக வேண்டும். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கற்றுக்கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கின்றது என கிழக்கு மாகாண முதலைமச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். அண்மையில், தனது சொந்த ஊரில் இடம்பெற்ற கடினபந்து கிரிக்கெட் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார் அதாவது இலவசக்கல்வி முறையினை எதிர்த்தவர்கள் தமிழ் தலைவர்கள் இல்லை, அப்படி இருந்தால் சொல்லுங்கள் என அவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். 1944ஆம் ஆண்டு டப்ளியு.டப்ளியு. கன்னங்கராவினால் கொண்டுவரப்பட்ட இலவசக்கல்வி மசோதாவை முதன்முதலில் எதிர்த்தவர்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம், மகாதேவா, ஸ்ரீ பத்மநாதன், இவர்களெல்லாம் யார்?  (மேலும்....)

மார்கழி 09, 2011

காணி, பொலிஸ், வடக்கு - கிழக்கு இணைப்பை பற்றிப்பிடிக்காமல்

நெகிழ்ச்சிப் போக்குடன் தீர்வுக்கு அடித்தளமிட கூட்டமைப்பு முன்வரவேண்டும்

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் சகல வழிகளிலும் முயற்சி எடுத்து வருகிறது. மூன்று விடயங்களை மாத்திரம் பற்றிப்பிடித்துக் கொண்டிராமல் தீர்வுக்கான ஆரம்ப அடித்தளமாக ஏனைய விடயங்களில் இணக்கம் கண்டு பிரச்சினைக்கு தீர்வுகாண, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டும். அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுநடத்த நான்கு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 2 நாட்கள் பேச்சுகள் நடைபெற்றன. பேச்சுக்களில் இருந்து ஒதுங்குவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவாக எதனையும் கூறாது அவ்வப்போது மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகிறது. (மேலும்....)

மார்கழி 09, 2011

நல்லிணக்க ஆணைக்குழு

முழு அறிக்கை மாற்றமின்றி சபையில்

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முழுமையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதனை வெளியிடுவதில் காலதாமதம் இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிட ஐந்து வருடம் பிடிக்கையில் 30 வருட யுத்தத்துடன் தொடர்புடைய அறிக்கை வெறும் 3 மாதங்களில் தயாரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (மேலும்....)

மார்கழி 09, 2011

கடாபி குடும்பம் மெக்சிகோவுக்கு தப்ப முயன்ற விபரம் அம்பலம்

முஅம்மர் கடாபியின் மகன் சாதி கடாபி மற்றும் குடும்பத்தினர் ரகசியமாக மெக்சிகோவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தகவல் அம்பலமாகியுள்ளது. லிபிய யுத்தத்தில் பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து சாதி கடாபி தனது குடும்பத்தினருடன் மெக்சிகோவில் தஞ்சம்புக திட்டமிட்டுள்ளார். இதற்காக உள்ளாச பயணிகள் வரும் மெக்சிக்கோவின் பஹியா டி பொன்டராஸ் பகுதியில் வீடுகளை வாங்கியுள்ளார். விசேட விமானம் மூலம் மெக்சிகோ சென்று தனது குடும்பத்தினருடன் ரகசியமாக தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை மெக்சிகோ உள்துறை அமைச்சர் அலஜன்ட்ரே பொய்ரே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். சாதி கடாபி மெக்சிகோவுக்கு ரகசியமாக வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்த நான்கு பேரை மெக்சிகோ பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. சாதி கடாபி தற்போது லிபியாவுக்கு அண்டிய நாடான நைகரில் தஞ்சம்புகுந்துள்ளார்.

மார்கழி 09, 2011

 

கேரளாவிலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் வர அனுமதி

தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் தற்போது அமைதி திரும்பி வருகிறது. புதிதாக எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறவில்லை. இதையடுத்து கேரளாவிலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்திலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பயன்படுத்தி கேளராவில் சில சமூக விரோதிகள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தமிழகத்திலிருந்து போன ஐயப்ப பக்தர்களையும், அவர்களது வாகனங்களையும் தாக்கினர். பணப் பறிப்பில் ஈடுபட்டனர். பெண்களை மானபங்கப்படுத்தினர். இதனால் கம்பம் பகுதியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கேரளத்தவரின் கடைகள், வாகனங்கள் தோட்டங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீவைத்து எரிக்கப்பட்டன. நேற்று முன்தினம் தமிழகத்தில் கேரளத்தவரின் கடைகள் உள்ளிட்டவை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குமுளிப் பகுதியில் தற்போது வன்முறை அடங்கியுள்ளது. புதிதாக எந்த வன் செயலும் நடைபெறவில்லை. அதேபோல கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைதி நிலவுகிறது. இதையடுத்து தற்போது கேரளாவிலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதேசமயம், தமிழகத்திலிருந்து குமுளி வழியாக வாகனப் போக்குவரத்துக்கு இன்னும் அனுமதி தரப்படவில்லை. சபரிமலைக்குச் செல்வோர் தொடர்ந்து செங்கோட்டை வழியாக சென்று வருகின்றனர்.

மார்கழி 09, 2011

ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வலுவான எதிர்க்கட்சியாக மாற வேண்டும்

ஒரு நாட்டின் பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டுமாயின், அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி வலுப்பெற்றிருக்க வேண்டும். ஒரு வலுவான எதிர்க்கட்சி அரசாங்கத்தின் நல்லாட்சியை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கு ஒரு நல்ல சட்டாம்பிள்ளையாக இருக்க முடியும். பாராளு மன்ற ஜனநாயகம் சிறப்புற்று விளங்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அந்நாட்டின் ஆட்சியாளர்கள் எந்நேரமும் பயந்து அவதானமான முறையில் நல்லாட்சியை மேற்கொள்வதற்கு அங்கு ஒரு சக்திவாய்ந்த எதிர்க்கட்சி இருப்பதே பிரதான காரணமாகும். சமீபத்தில் இந்தியா எங்கும் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய எரிபொருள் விலையேற்றத்தின் போது இந்திய எதிர்க்கட்சிகள் நாடெங்கி லும் மக்களின் பூரண ஆதரவுடன் மேற்கொண்ட வெற்றிகரமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்திய அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்திய தனது தீர்மானத்தை வாபஸ்பெற்று எரிபொருளின் விலையை முன்பிருந்ததை விட சிறிதளவு குறைத்து விடுவது என்ற தீர்மானத்தை எடு த்தது. (மேலும்....)

மார்கழி 09, 2011

அமெரிக்கா  ‘தரகர்கள்’ முகாமைக் கைப்பற்றினர் மக்கள்

நிறுவனங்களுக்கிடை யிலான பேரங்களை முடித்து தரும் தரகர்களாகப் பணிபுரிபவர்களின் அலுவ லகங்கள் உள்ள தெருவை அமெரிக்க முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டக்கா ரர்கள் கைப்பற்றினர். “கே ஸ்டிரீட்” என்ற ழைக்கப்படும் இந்தத் தெரு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள் ளது. இந்தத் தரகர்கள், முத லாளித்துவத்தைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறார்கள் என்பது போராட்டக்காரர் களின் கருத்தாகும். தங்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி இவர்களின் அலுவல கங்கள் உள்ள தெருவைக் கைப்பற்றப் போகிறோம் என்று போராட்டக்காரர் கள் அறிவித்தனர். இந்த அறி விப்பைக் கேட்டு ஏராள மான மக்கள் போராட்டத் திற்கு ஆதரவாகக் குவிந்தனர். (மேலும்....)

மார்கழி 09, 2011

எல்லை மீறியது அமெரிக்கக் கப்பல்தான்! சாவேஸ் உறுதி

கடந்த மாதத்தில் வெனிசுலா கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது அமெரிக்கப் போர்க்கப்பல்தான் என்று வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் உறுதிப்படுத்தியுள்ளார். நவம்பர் 6 ஆம் தேதியன்று வெனிசுலாவின் கடற்பகுதிக்குள் நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று நுழைந்தது. அது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதை அப்போது உறுதிப்படுத்த முடியவில்லை. அந்நிலையில், வெனிசுலாவின் கடற்படையினர் அக்கப்பலைத் தங்கள் எல்லையிலிருந்து விரட்டியடித்தனர். இதுபோன்ற சமயங்களில் எப்போதும் அறிக்கை வெளியிடும் அமெரிக்கா இம்முறை எதுவும் பேசவில்லை. அத்துமீறல் பற்றி சம்பவம் நடந்தபோது பேசிய வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ், பேரரசுகள் அத்துமீறலை மேற்கொள்கின்றன. செயற்கைக்கோள்கள் மூலமாகவும் உளவு பார்த்து இப்பகுதியில் மூக்கை நுழைக்கின்றன என்று எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார். அதன்பிறகு விரிவான விசாரணையை வெனிசுலா கடற்படை மேற்கொண்டது. (மேலும்....)

மார்கழி 09, 2011

கைப்பற்றிய அமெரிக்க விமானத்தினை உலகிற்கு காட்டியது ஈரான்

அமெரிக்க உளவு விமானமொன்றினை சுட்டு வீழ்த்தியதாகவும் பின்னர் அதனைக் கைப்பற்றியதாகவும் ஈரான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்நிலையில் ஈரான் கைப்பற்றிய அதி நவீன உளவு விமானத்தின் காணொளியை அந்நாட்டு தொலைக்காட்சிச் சேவையொன்று ஒளிபரப்பியுள்ளது. அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன ஆர்.கியூ- 170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை உளவு பார்க்கும் நடவடிக்கையில் மேற்படி விமானங்களே ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அக் காணொளியில் அந்நாட்டு அதிகாரிகள் இருவர் அருகில் இருந்து விமானத்தினை ஆராய்வது போலவும் அக் காணொளியில் சித்திரிக்கப்பட்டுள்ளது.  மேலும் விமானத்தில் 'அமெரிக்காவினால் ஒன்றும் செய்ய முடியாது' என்ற ஈரானிய முன்னாள் தலைவர் அயத்துல்லா ருஹொல்லா கொமேனியின் வாசகம் எழுதப்பட்ட பெனர் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. ஈரான் இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்தியது என்பது தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றது. காரணம் பொதுவாக இத்தகைய ஆளில்லா உளவு விமானங்கள் எதாவது தொழிநுட்ப கோளாறு அல்லது தாக்குதலுக்குள்ளாகும் வேளையில் தமது நிலைக்குத் திரும்பவோ அல்லது தானாகவே அழித்துக்கொள்ளும் படியே தயாரிக்கப்படுகின்றன. எனினும் ஈரான் இதனைக் கைப்பற்றியுள்ளமையானது பலரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்கழி 08, 2011

கிறீஸ் போனது ஊசி வந்தது

திருகோணமலையில் பயப்பிராந்தி

திருகோணமலையில் மர்ம ஊசி மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. கடந்த சில தினங்களாக பாடசாலை ஆசிரியர்கள், மாணவிகள் சிலர் மர்ம ஊசி மனிதர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்ப டுகின்றது. திருகோணமலை தில்லை நகரில் வசித்து வரும் முன்பள்ளி ஆசிரியையொருவர் நேற்றுக் காலை 10 மணியளவில் பாடசாலை சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதரொருவர் ஆசிரியையின் பின்புறத்தில் குத்தி விட்டுத் தப்பிச்சென்றுள்ளார். குறித்த ஆசிரியை தனது வீட்டிலிருந்து உட்துறைமுக வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கறுப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த நீலநிற பெனியன் அணிந்திருந்த நபரொருவரே இவ்வாறு ஊசியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் பெற்றோர் உதவியுடன் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி ஆசிரியையின் பின்பகுதியிலிருந்து வளைந்த நிலையில் ஊசியொன்றையும் எடுத்துள்ளனர். கடந்த மூன்று தினங்களாக இச்சம்பவம் இடம்பெற்று வருவதாகத் தெரிய வருகின்றது. இச்சம்பவத்தினால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

மார்கழி 08, 2011

முள்ளியவளையில் இளைஞன் கடத்தல்

முல்லைத்தீவு முள்ளியவளை காட்டுவிநாயகர்புரம் பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வந்த சிலர் தம்மை தீவிரவாத தடுப்புப் பிரிவினர் எனக்கூறி தனது மகனை அழைத்துச் சென்றதாக கடத்தப்பட்டவரின் தாயார் தெரிவித்துள்ளார். மணல் ஏற்றிச் செல்லும் தொழிலில் ஈடுபட்டுள்ள 23 வயதுடைய கணேசமூர்த்தி ரதன் என்ற இளைஞரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்தபோது, முல்லைத்தீவு பொலிஸார் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் தொடர்பு கொண்டு வினவியுள்ளனர். கணேசமூர்த்தி ரதன் என்பவர் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தற்போது வவுனியா ஜோசப் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மார்கழி 08, 2011 _

முல்லைத்தீவில் காணாமல்போனவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் பகுதியில் காணாமல்போனவர் நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் காணாமல்போன ஒட்டுசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய சிவபாதம் உதயகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கச்சலாம் மடு குளத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மார்கழி 08, 2011_____

காணவில்லை

பாலசுப்பிரமணியம் கம்சா

நடந்து முடிந்த இறுதியுத்தின் முன்னர் கிளிநொச்சி முல்லைதீவு பகுதிகளில் அதிகமான சிறுவர்சிறுமியர் காணாமல் போயுள்ளனர் 2009வருடம் பெப்ரவரிமாதம் எராளமான பிள்ளைகள் காணமல் போனதையடுத்து பெற்றோர்கள் மிகவும் வேதனையடைந்தவண்ணம் தெருத்தெருவாக பிள்ளைகளைதேடி வவுனியா இடம் பெயர்ந்த முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் கண்ணீருடன் விசாரித்துஅலைந்தவண்ணம் உள்ளனர் அப்படி காணாமல் போன தனது ஒரேயொரு செல்ல மகளை தேடி தந்தையும் தாயும் மனநிலை பாதிக்கப்பட்டு வாழும் நிலை ஏற்ப்பட்டுள்ளது அன்பான புலம் பெயர்வாழ் உறவுகளே பாதிக்கப்பட்ட இந்த பெற்றோரின் கவலைதீர்க்க உங்களால் முடியுமா??இவர்களது ஒரேயொரு செல்லமகளை யாராவது பார்த்திருந்தாலோ அல்லது உங்கள் உறவுகள்மூலமாக அறிந்திருந்தாலோ மனிதநேயஅடிப்படையில் உதவி புரியகாத்திருக்கும் எங்களுடன் தயவு செய்து தொடர்கொள்ளுமாறு கேட்டுக்கொகிறோம் காணாமல் போனவரின் தகவல் தருவோர்க்குதகுந்த சன்மானம் வழங்கப்படும்.

 நன்றி

வணக்கம்

தொடர்புகட்கு...தாய் மாமன் karan 0041788202953

மார்கழி 08, 2011

புலிகளை அழிக்க அமெரிக்காவை ரணில் விக்கிரமசிங்க நம்பியிருந் தார் - விக்கிலீக்ஸ்!

புலிகளை அழிக்க அமெரிக்காவை ரணில் விக்கிரமசிங்க நம்பியிருந்துள்ளதாக-விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறிலங்காவிலிருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளால், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களில் இநத் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் அத் தகவல்கள் தெரிவிப்பதாக அறியவருகிறது. உள்நாட்டில் புலிகளுடன் நடைபெற்று வந்த யுத்த நடவடிக்கைகளில் அமெரிக்காவின் உதவியை அவர் வெகுவாக நம்பியிருந்ததாகவும், அமெரிக்காவின் அனுசரணையுடனேயே புலிகளைக் கட்டுப்படுத்தும் சர்வதேச உதவிகளைப் பெற முடியும் எனவும் அவர் நம்பியிருந்ததாகவும் அத் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்காக அமெரிக்காவின் உதவிகளை அவர் நாடுவதில் அக்கறை கொண்டிருந்தது மட்டுமல்லாது, அவர் ஒரு அமெரிக்க விசுவாசி எனவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பரம்பரைச் செல்வந்தர்கள் என்பதால், இடதுசாரிச் சிந்தனைகள் மீது அவருக்கு நாட்டமில்லை எனவும் 2003ம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்கத் தூதுவராக இருந்த ஆஷ்லி வில்ஸ்அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி 08, 2011

மார்கழி 08, 2011

ஆக்கிரமிக்கப்படும் மக்கள் நிலங்கள் -”தேசியத் தலைமைகளுக்கு” பகிரங்க வேண்டுகோள்

நீங்கள் நேசிப்பதாகக் அடிக்கடி கூறிக்கொள்ளும் மக்கள் இப்போது போராட ஆரம்பித்துவிட்டார்கள். நீங்கள் உயிரையும் துறக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் மண் ஆக்கிரமிக்கப் படுவதற்கு எதிராக கொலைக் களத்தில் நின்று மக்கள் போராடுகிறார்கள். பல ஆயிரங்களை கொட்டி நீங்கள் நிகழ்த்திய மாவீரர் தினத்தின் அலங்காரங்கள் கலைவதற்கு முன்பாகவே மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ்ப் பேசும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய்க் கொன்று குவிக்கப்பட்ட மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் பேரினவாத அரசு திட்டமிட்டுச் சூறையாடுகிறது. வன்னி பெரு நிலம் என்று நீங்கள் பெருமையடித்துக்கொண்ட மண்ணின் 30 வீதத்தை ஆக்கிரமித்தாகிவிட்டது. (மேலும்....)

மார்கழி 08, 2011

Indian government backtracks, suspends plan to let in foreign big-box retailers like Wal-Mart

(By Erika Kinetz,Ravi Nessman, The Associated Press )

India on Wednesday suspended its plan to open its huge retail sector to foreign companies such as Wal-Mart in a reversal seen as a major capitulation to political opponents that further weakens the administration.The business community had hailed the initial decision to let foreign firms own a majority stake in retailers here just two weeks ago, and the government and some economists said foreign retailers would bring better prices for farmers and lower prices for consumers. But opposition parties and even some members of the governing coalition protested, saying the local mom-and-pop stores that are the heart of Indian retailing would be crushed. Opposition lawmakers disrupted Parliament for days in protest. On Wednesday, the government met with all the parties in Parliament to hammer out a deal: It would suspend the decision if they would let the legislature function. (more....)

மார்கழி 08, 2011

மோசடி மூலம் ஆளுங்கட்சிக்கு வெற்றி! ரஷ்ய மக்கள் ஆவேசம்

டிசம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெற்ற ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளன என்று அனைத்துக்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. திங்களன்று வெளியான முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு 238 இடங்களும், ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 92 இடங்களும், ஜஸ்ட் ரஷ்யா கட்சிக்கு 64 இடங்களும், லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு 56 இடங்களும் கிடைத்துள்ளன. களத்தில் இருந்த மற்ற மூன்று கட்சிகளும் குறைந்தபட்சத் தேவையான மூன்று விழுக்காடு வாக்குகளைப் பெறவில்லை என்பதால், அக்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் இடங்கள் கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் 315 இடங்களைப் பெற்றிருந்த ஆளுங்கட்சி தற்போது 238 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதோடு, மொத்த வாக்குகளில் 50 விழுக்காடு வாக்குகளை எட்ட முடியவில்லை.
(மேலும்....)

மார்கழி 08, 2011

உள்ளூர் செய்கையையும் ஊக்குவிக்க

கோதுமை மா, பழவகைகளின் இறக்குமதியை நிறுத்த வேண்டும்

கோதுமை மா இறக்குமதி செய்வதை அரசாங்கம் முற்றாக நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக அரிசி மா, சோளம் மா பாவனையை ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் டி. எம். ஜயரட்ண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேபோன்று பழ வகைகள் இறக்குமதி செய்யப்படுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, பெருந்தோட்டத்துறை, தெங்கு அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அன்றைய நாட்களிலிருந்து அவர்கள் அரிசி மாவையே பயன்படுத்துகிறார்கள். நாங்கள் பான் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் எமது பணத்தை மீதப்படுத்த முடியும். ஒவ்வொரு வரும் கூறுவதை பார்த்துக்கொண்டிருக்காமல் எமக்கென்று ஒரு முறையை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று எமது நாட்டுக்கு சகல பழ வகைகளும் இறக்குமதி செய்யப் படுகின்றன. இதனை முதலில் நிறுத்த வேண்டும். இதனை உடனடியாக நிறுத்து வதுடன் உள்நாட்டில் பழ வகைகளை செய்கைபண்ண ஊக்குவிக்கவும் வேண்டும்.

மார்கழி 08, 2011

‘நாடாளுமன்றத்தை மீட்போம்’  அலுவலகக் கட்டிடங்களை ஆக்கிரமித்தனர் மக்கள்

கைப்பற்றுவோம் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து மீட்போம் என்ற அறைகூவலுடன் வாஷிங்டனில் உள்ள பல்வேறு நாடாளுமன்ற அலுவலகக் கட்டிடங்களை மக்கள் முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க சிகாகோ, பாஸ்டன், செயின்ட் லூயிஸ், புளோரிடா, கன்சாஸ், விஸ்கோன்சின் மற்றும் பல்வேறு நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் போராட்டக்காரர்கள் வாஷிங்டன் வந்திருந்தனர். நாடாளுமன்றக் கட்டிடங்கள் பலவற்றில் இவர்கள் புகுந்து உள்ளே அமர்ந்து முழக்கங்களை எழுப்பத் துவங்கினர். பெரும் நிறுவனங்களுக்காக வேலை செய்வதை விட்டுவிட்டு மக்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினர். (மேலும்....)

மார்கழி 08, 2011

இந்தோனேசியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள பாலி ஜனநாயக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் காலை இந்தோனேசியாவிற்குப் பயணமானார். இந்தோனேசிய ஜனாதிபதி கலாநிதி சுசிலோ பம்பேங் யுடோயூனோவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாலி ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்வதுடன் மாநாட்டு அமர்வில் சிறப்புரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். நேற்று இந்தோனேசியா சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இந்த பாலி ஜனநாயக மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரையாற்றவுள்ளார். ஜனநாயகமாக்கலை எதிர்பார்க்கும் ஆசிய நாடுகளின் முக்கிய அரச தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் வெளிநாட்டமைச்சர்கள் முன்னணியிலுள்ள சர்வதேச அரச பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவு ள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

மார்கழி 08, 2011

கேரளா மக்களுக்கு வேண்டுகோள் - ஜெயலலிதா

கேரளாவில் தமிழர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதை விட அதிகமான, மலையாளிக்ள தமிழகத்தில் இருக்கின்றனர்கள் அற்ப நோக்கம் கொண்ட அரசியல் வாதிகளின் சூழ்ச்சிக்கு அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது’ என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சினை, அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தூண்டிவிடப்பட்ட அச்சத்தின் காரணமாக எழுந்துள்ளது. சிக்கலான தருணங்களில், மக்களின் உணர்ச்சிகள் உச்சத்தை அடைவது இயல்பே. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 116 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காகவே, அதன் பாதுகாப்பை ச்நதேகிக்க வேண்டியதில்லை காவிரியில், கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, 1900 ஆண்டுகளாக திடமாக உள்ளது. அதே சுண்ணாம்புச் சாந்து மூலம் தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கேரளாவும், நிலநடுக்க மண்டலத்தின் மூன்றாவது பிரிவில் தான் இருக்கிறது என்பதால், நிலநடுக்கத்தால் அணை பாதிக்கப்படும் என்பதற்கும், எந்தவிதமான அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. பல நூற்றாண்டுகளாக, இரு மாநில மக்களுக்கும் இடையில் நிலவி வரும் பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு, நல்லெண்ணத்தைச் சீர்குலைத்துவிடாதீர்கள் என, கேரள மக்களை வேண்டிக் கொள்கிறேன். "தமிழக மக்களுக்கு விரோத மான வன் முறைச் செயல்கள், கேரளாவில் தொடர் ந்தால், அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறினால், கட்சியின் செயற்குழு கூடி, உரிய முடிவெடுக்கும்" என தி. மு. க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். பொதுமக்களிடையே தேவையின்றி அச்ச உணர்வையும் பீதி மற்றும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும் கேரள அரசின் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.

மார்கழி 08, 2011

நெடுஞ்சாலை'ஹைவேஸ்'

ரோம சாம்ராஜ்ஜியத்தில் நகரங்களுக்கு இடையே பொது மக்களின் பயன்பாட்டுக்காக சாலைகளை அமைத்தனர். தனியார் அமைத்த சாலைகளை விட அவை உயரமாகவும், சிறந்ததாகவும் அமைக்கப்பட்டன. அதனால் அவை 'ஹைவேஸ்' என்று அழைக்கப்பட்டன. நெடுஞ்சாலை எனப்படும் 'ஹை வேஸ்' தோன்றிய விதம் இதுதான்.

மார்கழி 08, 2011

போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு சீன ஜனாதிபதி உத்தரவு

போருக்கு தயாராகுமாறு சீன கடற்படைக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஹுஜிண்டாவோ உத்தரவிட்டுள்ளார். தெற்கு சீன கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் அதிகமாக காணப்படுகிறது. இப்பகுதியையொட்டிய கடல் பகுதிகளை சீனாவையொட்டியுள்ள பல்வேறு அண்டை நாடுகள் குறிப்பாக பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்றவை சொந்தம் கொண்டாடி வருகின்றன. இங்கு எண்ணெய் துறப்பன பணிகளுக்காக சில நாடுகளுடன் இந்த நாடுகள் ஒப்பந்தமும் செய்துள்ள நிலையில் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இது விடயத்தில் சீனாவையொட்டியுள்ள அண்டை நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளதோடு, ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பல்வேறு அமெரிக்க உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் தங்களது கடல் பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்று சீனா கருதுகிறது. இந்த சூழ்நிலையிலேயே, போருக்கு தயாராகுமாறு கடற்படைக்கு அழைப்பு விடுத்துள்ளார் சீன ஜனாதிபதி ஹுஜிண்டாவோ. இது தொடர்பாக சீனாவின் அதிகாரமிக்க மத்திய இராணுவ ஆணையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற் றுகையில் மேற்கண்ட அழைப்பை விடுத்தார்.

மார்கழி 07, 2011

தோழர் சர்மா அவர்கட்கு எமது கண்ணீர் அஞ்சலி

செல்வம் என்றும், சர்மா என்றும் அழைக்கப்படும் மாதகல்லைச் சேர்ந்த தோழர் சர்மா அவர்கள் கடந்த 4.12.11 அன்று கரூர் மாவட்;டம் ராயனூர் அகதிகள் முகாமில்  மரணமான செய்தி கேட்டு அவரது ஆரம்பகால கரை சார்ந்த வேலைகள் தொடர்பாக அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். போராட்டம் ஒரு மனிதனை எவ்வளவுக்கு சீரழித்துள்ளது என்பதற்கு தோழர் சர்மாவின்  மரணம் இன்னுமொரு உதாரணமாக அமைந்து நிற்கிறது. போராட்டத்தால் சீரழிந்து, மனநோயாளிகளாக உலகமெங்கும் பரவிக் கிடக்கும் பலருள் தோழர் சர்மாவும் ஒருவர். அவர் மரணத்தை தழுவியதற்கு ஈழப்போராட்டமும் ஒரு காரணம். அப்போராட்டம் எப்படி சீரழிக்கபட்டதோ, அதன்பால் ஈடுபாடு கொண்டு வீட்டை விட்டு புறப்பட்ட பலரும் இன்று சீரழிந்து நிற்கின்றனர். ஈழப்போராடத்துக்கு தோழர் சர்மாவின் கரை சார்ந்த பங்களிப்பு என்பது, மறக்க முடியாதது, யாராலும் மறக்கக்கூடாதது. வேதாரணியம் கரை காற்று மாறும் போது மல்லிபட்டினம் கரை, தங்கச்சிமடம் என்பன அவருக்கு அத்துப்படி. .பல தோழர்களை அவர் அங்கும் இங்குமாக ஏற்றி இறக்கி அளப்பரிய பங்களிப்பை, எமது கட்சியின் ஆரம்பகால தேவவைகளுக்காக செய்துள்ளார். மேற் சொன்ன கரை பகுதிகளில் வாழும் தமிழக மக்களுக்கு தோழர் சர்மாவை நன்கு தெரியும். அக்கால கட்டங்களில் அவர் அந்த மக்களுடன் அன்பாக பழகியுள்ளார். அதன் மூலம் அவர் அவர்களது அன்பை பெற்றுள்ளளர். இன்னுமொரு குணத்தை அவருடன் பழகியவர்கள் அறிந்திருப்பர் உணவளிப்பது, யார் சென்றாலும் அவர் வயிறு நிறைய சாப்பாடு கொடுத்தே அனுப்புவார். இந்தக் குணம் அவர்களது குடும்பத்திடமும் நிறைய காணப்பட்டது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட கால கட்டத்தில் இவரது பங்களிப்பும் யாராலும் மறக்கக் கூடியது அல்ல, புலிகள், பிரேமதாச கூட்டுச்சதி ஏற்பட்டபோது பல இன்னல்களை சந்தித்த எமது கட்சி தோழர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த போது இவரும் மனைவியுடன் இடம் பெயர முயன்றார். அப்போது இவரது மனைவியை புலிகள் பிடித்துச் சென்றனர்.

தோழர் சர்மாவின் ஆத்மா சாந்தி அடைய எமது கண்ணீர் அஞ்சலி

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

தோழர் ஸ்ரனிஸ்

மார்கழி 07, 2011

இந்தியாவின் பிராந்திய நலன்களுடன் முரண்பட்டுக்கொண்டு ஈழத் தமிழ் அரசியல் சக்திகள் எதையும் சாதிக்க முடியாது

(தமிழ்நாட்டில் இருந்து 'உலகத்தமிழ் இதழ்' என்ற விருது வாக்கியத்துடன் வெளியாகும் 'காலச்சுவடு' டிசம்பர் மாத இதழில் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான யதீந்திரா எழுதிய கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி எமது தளத்தில் மீள் பிரசுரம் செய்கிறோம்.)

உலகத்தையே சுற்றிவந்துவிட்டேன் என்னும் இறுமாப்பிலிருந்த முருகனுக்கோ பேரதிர்ச்சி காத்திருந்தது. இறுதியில் பெற்றோருடன் கோபித்துக்கொண்டு கோவணத்துடன் திரிந்தார் முருகன். இந்த நாட்களில் நாவல்மரமொன்றில் நின்றுகொண்டு, சமாதானம் பேச வந்த அவ்வையாரைப் பார்த்து 'உனக்குச் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா?' என்று வசனம் பேசுவதாக அந்தக் கதை செல்கிறது. கதையின்படி முருகனிடம் இருந்ததோ வீராவேசம் ஆனால் தும்பிக்கையானிடம் இருந்ததோ மதிநுட்பம். மதிநுட்பமே இறுதியில் வென்றது. மிகவும் பிரம்மாண்டமான தோற்றம் காட்டிய, பெரும் தியாகங்களைச் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் மூன்றே வருடங்களில் எவ்வாறு நிர்மூலமாக்கப்பட்டது? இது குறித்துச் சிந்திக்கும்போதெல்லாம் நான் இந்தக் கதையையே நினைத்துக்கொள்வதுண்டு. அப்போதெல்லாம் நான் புலிகளின் தலைவர் பிரபாகரனை முருகனின் இடத்திலும் மகிந்த ராஜபக்சவைத் தும்பிக்கையானின் இடத்திலும் வைத்துப் பார்ப்பதுண்டு. நாரதரின் இடத்தை யாருக்குக் கொடுக்கலாம்? (மேலும்....)

மார்கழி 07, 2011

அரசு - கூட்டமைப்பு நேற்று பேச்சு, அடுத்த சுற்று 14ம் திகதி

அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இச்சந்திப்பு நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் மற்றும் கனகஈஸ்வரன் ஆகியோரும், அரசாங்கத் தரப்பில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், நிமல்சிறிபால.டி.சில்வா மற்றும் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். நேற்றைய பேச்சுவார்த்தையின்போது மூன்று முக்கிய அம்சங்கள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தினகரனுக்குத் தெரிவித்தார்.  வடக்கு, கிழக்கு இணைப்பு, சட்டம் ஒழுங்கு, பொலிஸ் மற்றும் மாகாணங்களுக்கான காணிகளை உரித்தாக்குதல் ஆகியவை தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதுடன், இவை தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு தரப்புக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மார்கழி 07, 2011

AN INSIGHT INTO LTTE-ADMINISTERED SCHOOLS IN EUROPE - THE RADICALIZATION OF TAMIL YOUTH

The Concept and Beginning of the "Thamilcholai" School System

Examining the beginnings of the 'Thamilcholai' school system, it is clear that it was designed and created by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) terrorist movement, initially within Sri Lanka. The beginnings of this school system can be seen as beginning as an orphanage in and around the year 1990 in accordance with the wishes of the LTTE leader, Velupillai Prabakaran. This orphanage was established with 90 children aged between 2-12 years. In the years 1991 and 1993 the LTTE established two orphanages namely 'Sencholai' for female orphans and 'Kantharuban Aravichollai ' for male orphans (Kantharuban was the name of the first LTTE "sea tiger" suicide cadre who took part in a suicide operation to destroy the Sri Lanka Navy ship "Edithra", in 1990). These orphanages were controlled and administered by the LTTE but to the outside world they were presented as orphanages run by an independent social welfare group. (more…..)

மார்கழி 07, 2011

புதியதோர் உலகம் படைப்போம்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அறைகூவல்

லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகள் சமூகம்(செலாக்) என்ற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் உடன்பாட்டில் 33 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்கக் கண்டங்களைப் பொறுத்தவரை இது வரலாறு காணாத மாறுதலாகும். இதற்கு முன்பாக உருவாக்கப்பட்ட அனைத்து வகையான பன்முகத்தன்மை கொண்ட அமைப்புகளும் அமெரிக்க ஐக்கிய நாடுகளை(யு.எஸ்) தலைமையாகக் கொண்டு அல்லது அதன் கட்டுப்பாட்டில் இயங்குபவையாகவே இருந்து வந்தன. முதன்முறையாக அமெரிக்கா இல்லாத அமைப்பொன்று உருவாகியுள்ளது. இந்த அமைப்பில் ஜி-8 நாடுகளின் ஒன்று என்று அழைக்கப்படும் கனடாவும் இடம் பெறவில்லை. (மேலும்....)

மார்கழி 07, 2011

RIM’s Situation ‘serious’ but not dire

Research In Motion Ltd. (RIM) finds itself subject to more unpleasant North American news headlines in the last few days including a story that suggests the BlackBerry maker's recovery window is nearly closed. The Globe And Mail reports Waterloo, Ont.-based RIM took a hit of almost half-a-billion dollars on its PlayBook tablet and unsettling news about sales of its new BlackBerry smartphones have rattled investors. Meanwhile, success in one of RIM's most crucial overseas markets in Indonesia is seemingly overshadowed by word that RIM's Indonesian CEO Andrew Cobham will be charged with negligence due to a Jakarta sale that turned into a consumer stampede in the finest of Black Friday traditions. (more....)

மார்கழி 07, 2011

மன்னார் மாவட்ட அரச நியமன விவகாரம்

தமிழ் கூட்டமைப்பு எம்.பியின் குற்றச்சாட்டு தமிழர்-முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட முகாம் அதிகாரிகளே மன்னார் மாவட்டத்தில் தமது மீள்குடியேற்றத்தின் பின்னர் உரிய நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி அரச நியமனங்களை பெற்றுள்ளனர் என வட மாகாண மஜ்லிஸ¤ல் சூறா அமைப்பின் தலைவர் மெளலவி எம். ஏ. எம். முபாறக் றசாதி தெரிவித்துள்ளார். இந்த நியமனம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே மீண்டும் பிளவுகளை தோற்றுவித்து விடும் நிலையேற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். (மேலும்....)

மார்கழி 07, 2011

ஆரோக்கியமான உடல் என்பது மனம் தங்கும் மாளிகை

‘நமது உடலை ஆரோக் கியமாய் வைத்திருக்க வேண்டியது நமது முதன்மையான வேலை. இல்லை யேல் நமது மனம் வலுவாகவும், தெளிவாகவும் இருக்காது’ என்கிறார் புத்தர். உடலும் மனமும் எதிரெதிர் துருவங்களல்ல. ஒன்றின் ஆரோக்கியமும், பலவீன மும் அடுத்ததைப் பாதிக்கும் என்பதே புத்தர் சொல்லும் அறிவியல் உண்மையாகும்.  உலக அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும், இந்திய அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும் அச்சத்துடன் தெரிவிக்கும் விடயம் ‘இன்றைய இளம் தலைமுறை யினர் ஆரோக்கியமில்லாமல் இருக்கிறார்கள்’ என்பதுதான் அதற்குக் காரணம். இளம் வயதினரின் ஏனோதானோ மனநிலை என்று சொல்வதில் தப்பில்லை என நினைக்கிறேன். ‘ஒப்சிடி’ எனப்படும் அதீத உடல் பருமன் பிரச்சினை இன்று பரவலாய் எல்லா இடங்களிலும் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது. ‘பீட்சா’, ‘பர்கர்’, ‘ஃபாஸ்ட் புட்’ போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை பலரும் ஆர்வத்துடன் அரவணைத்துக் கொள்கிறார்கள். ஊடகங்கள் கூவி விற்கும் சிப்ஸ், குளிர்பானங்கள் போன்றவையும் அவற்றுடன் சேர்ந்து கொள்ள அதீத உடல் பருமன் பிரச்சினை ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறது. (மேலும்....)

மார்கழி 07, 2011

Past is the Past - KP

Kumaran Pathmanathan was the international chief of the LTTE. He was the mastermind behind the arms procurement, shipping and financial networks of the LTTE abroad. KP sustained the continuous supply of arms and ammunition by securing shipping and finance networks for over 30 years until 2003. During his sojourns abroad KP built very strong ties with the Diaspora community and his influence on them is significant. The LTTE disintegrated after he was sidelined from the organisation in 2003. However with the escalation of the conflict Prabakaran reappointed him in January 2009 as the Chief of International Relations. Having visited more than 50 countries worldwide KP is known by many aliases. His role in the most ruthless terrorist organisation began during the latter part of the 1970s and reached its climax when he claimed himself as the leader of the LTTE following the death of Prabakaran. (more....)

மார்கழி 07, 2011

வோல் தெரு ஆக்கிரமிப்பு போராட்டக்காரர்கள் கைது

பன்னாட்டு நிறுவனங்களை கண்டித்து வொஷிங்டனில் போராட்டம் நடத்திய வோல் தெரு ஆக்கிரமிப்பு போராட்டக் காரர்கள் 24 பேரை பொலிஸார் கைது செய்தனர். சட்ட விரோதமாக மரத்தாலான கூடாரங்களை அமைத்து அதில் தங்கியிருந்த இவர்களை பொலிஸார் அப்புறப்படுத்தியதோடு கூடாரங்களையும் அகற்றினர். வெள்ளை மாளிகையை ஒட்டி அமைந்துள்ள மேக்பெர்சன் சதுக்கத்தில் கடந்த செப்டம்பரிலிருந்து போராட்டக்காரர்கள் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை பொலிஸார் பெரும் முயற்சிக்குப் பின்னர் அப்புறப்படுத்தினர். ஆனாலும் இவர்கள் அவ்வப்போது இங்கு வந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒவ்வொரு முறையும் நூதனமான முறையில் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சதுக்கத்தில் உள்ள கட்டடத்தின் மீதேறி கீழே இறங்காமல் போராட்டம் நடத்தினர். 8 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்ட மேற்கூரை இல்லாத கூடாரத்தில் இருந்த இவர்களை பொலிஸார் மிகுந்த சிரமத்துக்கிடையே கீழே இறக்கி கைது செய்தனர்.

மார்கழி 07, 2011

கெப்லர் - 22-பி’

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம் இருப்பதை நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. நாஸா விண்வெளி மையத்தின் சக்தி வாய்ந்த அதி நவீன கெப்லர் தொலை நோக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இந்த புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்திற்கு 'கெப்லர் 22-பி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகம் சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. எனினும் இக்கிரகம் பூமியை விடவும் 15 வீதம் குறைவான இடை வெளியிலேயே அதனது நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இதனால் இக்கிரகத்தில் ஒரு வருடம் 290 நாட்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. பூமியை விட 2.4 மடங்கு பெரியதாக ‘கெப்லர் 22- பி’ கிரகம் உள்ளதென நாஸா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்கு 22 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவுகிறது. இதனால் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதென நம்பப்படுகிறது. எனினும் இந்த கிரகத்தின் பெரும்பாலான பகுதிகள் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை. அவை பாறைகளாகவோ, கியாஸ் அல்லது திரவ நிலையிலோ இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த புதிய ‘கெப்லர் 22- பி’ கிரகம் குறித்து சமீபத்தில் நடந்த வானவியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த கிரகம் பூமியை போன்றதுதான் என உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.

மார்கழி 07, 2011

தற்காலிக வெற்றி எனினும் விழிப்புணர்வு தேவை

(இந்திய அரசியல் வானில் இடதுசாரிகளின் பலம் மீண்டும் ஒரு மோசமான நிகழ்வை தடுத்து நிறுத்தியுள்ளது. இலங்கை போன்ற நாடுகளின் இடதுசாரிகளுக்கு இது நல்ல ஒரு பாடமாக கொள்ள வேண்டிய விடயம். சிறப்பாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இடதுசாரி அமைப்புக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மிகச்சிறந்த உதாரணங்கள் இவை.)

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முத லீட்டிற்கு அனுமதியளிப்பது என்ற முடிவை மத் திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் புதனன்று அறி விப்பு வெளியிட இருப்பதாகவும் மத்திய நிதி யமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலை வர்களிடம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள், வர்த்தக அமைப்புகள் நடத்திய போராட்டத் திற்கு கிடைத்த வெற்றியாகும் இது. எனினும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை கைவிடுவதாக அரசு அறிவிக்கவில்லை. மாறாக நிறுத்திவைப்பதாகத் தான் கூறியுள்ளது. இந்தநிலையில் தொடர்ந்து விழிப்புடன் இருந்து மத்திய அரசின் நாசகர முயற்சியை முற்றாக முறியடிப்பது அவசிய மாகும். (மேலும்....)

மார்கழி 06, 2011

யாழ்ப்பாண குடாநாட்டு குடிநீர் திட்டத்துக்கு ரூ. 21,000 மில்லியன்

  • இரணைமடு குளத்திலிருந்து நீர் விநியோகம்
    மாநகர பகுதியில் நிலத்தடி நீரை பேண திட்டம்
    நீர் கட்டணத்தில் அதிகரிப்பு இல்லை
    பழைய நீர் வழங்கல் முறையால் வீண் விரயம்

சுமார் 70 வருடங்களுக்குப் பின்னர் யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்ட செலவீனங்களுக்காக 2012 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் 21 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இரணைமடுக் குளத்திலிருந்து யாழ் குடாநாட்டின் மூலை முடுக்கு எங்கிலும் குழாய் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்ப தாகவும் அமைச்சர் தினேஷ் கூறினார். (மேலும்....)

மார்கழி 06, 2011

கொட்டாஞ்சேனையில் வர்த்தகர் கடத்தல்

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இனந்தெரியாதோரினால் வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்தக் கடத்தல் சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கொட்டாஞ்சேனை, ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 55 வயது டைய கிரிஸ்டோபர் என்பவரே வானில் வந்த இனந்தெரியாதோரினால் கடத்தப்பட் டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். கடத்தப்பட்டவர் குறித்த பிரதேசத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர் என தெரிவிக்கப்படுகிறது. பணம் கொடுக் கல் வாங்கல்களில் ஏற்பட்ட முரண்பாடுகளே கடத்தல் சம்பவத்திற்கு காரணமாக அமைந்தி ருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.

மார்கழி 06, 2011

வியட்னாமில் இன்னும் 16 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பில் வெடிபொருட்கள்

யுத்தம் 40 வருடங்கள்பூர்த்தியடைந்து சுமார் ஒரு இலட்சம் பேர் பாதிப்பு. வியட்னாம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 40 வருடங்கள் கடந்துள்ளபோதும் இதுவரை கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத ஏனைய வெடிபொருட்களால் சுமார் ஒரு இலட்சம் பேர்வரை கொல்லப்பட்டு அல்லது காயமடைந்திருப்பதாக வியட்நாம் பிரதமர் நகியென் டங் டுங் தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் 42 ஆயிரத்து 132 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், 62 ஆயிரத்து 163 பேர் காயமடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றியபோது வியட்நாம் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

மார்கழி 06, 2011

ரஷ்யாவில்

புடின் கட்சி பின்னடைவு, கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறுகிறது

ரஷ்யாவில் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி 50.2 சத வீதம் வாக்குகள் பெற்று மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையை இழந்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி 64 சத வீதம் வாக்குகளை பெற்று இருந்தது. 2 வது இடத்தை கம்யூனிஸ்ட் கட்சி பிடித்துள்ளது. அக் கட்சிக்கு 19.12 சத வீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. ரஷ்யாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி சார்பில் புடின் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்து இருப்பது புடினுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி 06, 2011

தமிழ் அறிஞர் கல்கி கிருஷ்ணமூர்த்தி செய்த பணியை மறந்து விடலாகாது

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் இலக்கிய படைப்புகள் காலத்தை வென்று நிற்கின்றன. இன்றும் கூட ‘பொன்னியின் செல்வன்’ வர லாற்று நாவல் நூறு தடவைகளுக்கு மேல் மறுபதிப்பு செய்யப் பட்டாலும் மக்கள் அதனை விரும்பி வாங்கி படித்து, புளகாங் கிதம் அடைகிறார்கள். அந்தளவிற்கு அவரது உயர்ந்த கருத்துக் கள் இந்த நாவலில் தெளிவாக அமைந்துள்ளன. தமிழில் நகைச்சுவையை மிகவும் சரளமாக கலந்து சிறுகதைகள், கட்டுரைகளை எழுதுவதில் கல்கி கிருஷ்ணமூர்த்தி வல்லவராக விளங்கினார். ஒரு தடவை அவர் எழுதிய கதையில் கதாநாயகன் தனது மனைவியை துரத்திவிட்டு வேறொரு பெண்ணுடன் இல்லற வாழ்க்கையை நடத்திய பின்னர் மீண்டும் மனைவியை நாடி வந்த போது அந்தப் பெண்ணின் தந்தை “மகளே, நீ உன்னுடைய உணர்வுகளை தியாகம் செய்துவிட்டு மீண்டும் உன் கணவனுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையை நடத்து” என்று அறிவுறுத்தினார். அப்போது அந்தப் பெண் “அப்பா, சுதந்திரத்திற்காக நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால், அடி மைத் தனத்திற்காக தியாகம் செய்ய தயாராக இல்லை” என்று பதில் கூறுவதை தனது கதையில் புகுத்தி பெண்ணுரிமையின் மகத்துவத்தை கல்கி மிகவும் தெளிவாக விளக்கிக் கூறி யிருக்கிறார். (மேலும்....)

மார்கழி 06, 2011

பிரேஸிலின் தொழிலாளர் அமைச்சரும் ராஜினாமா

ஊழல் சர்ச்சையை தொடர்ந்து பிரேஸில் தொழிலாளர் அமைச்சர் காலொஸ் லுபி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஜனாதிபதி டில்மா ரொஸ்ஸியின் 32 பேர் கொண்ட அமைச்சர வையில் 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதில் 5 அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே தமது பதவியை துறந்தமை குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் அமைச்சர் கார்லொஸ் லுபி தன்னார்வ தொண்டு நிறுவனங் களுடன் இணைந்து ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக பிரேஸில் சஞ்சிகை ஒன்று செய்தி வெளி யிட்டது. இது தொ டர்பில் ஜனா திபதியின் ஒழுக்கா¡ற்று குழுவும் லுபிக்கி கண்டனம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்தே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மார்கழி 06, 2011

மதுரையிலிருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை!

மதுரையிலிருந்து இலங்கைக்கு அடுத்த மாதம் முதல், நேரடி விமான போக்குவரத்து துவங்க உள்ளது. இதற்கான தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் நிஷன்தா விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். மதுரையிலிருந்து, சர்வதேச விமானங்களை இயக்க, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில், திருச்சியில் நேற்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் நிஷன்தா விக்ரமசிங்கேயை, சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேல், செயலர் ராஜமோகன், டிராவல்ஸ் கிளப் முன்னாள் தலைவர் ஸ்ரீராம் சந்தித்தனர். மதுரையிலிருந்து இலங்கைக்கு நேரடி விமானம் இயக்குவதன் மூலம் ஏற்படும் பலன்கள், பொருளாதார வளர்ச்சி குறித்து விளக்கினர். இவ்விமான சேவையை சந்தைப்படுத்துதல் மற்றும் குறைந்த அளவிலாவது பயணிகள் செல்வதை உறுதிப்படுத்தும் பொறுப்பை சங்கம் ஏற்கும், என்றனர். இதைத் தொடர்ந்து, மதுரையிலிருந்து இலங்கைக்கு விமான சேவையை துவக்கும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், நிஷன்தா அவர்களிடம் உறுதியளித்தார்.

மார்கழி 06, 2011

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் காவல் டிசம்பர் 19ம் தேதி வரை நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் காவல் டிசம்பர் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். இதனிடையே மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டம் நடத்த மீனவ அமைப்புகள் நாளை கூடியுள்ளன. தமிழக மீனவர்கள் கடந்த நவம்பர் 28ம் தேதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

மார்கழி 06, 2011

குளோனிங் முறையில் மீண்டும் மமூத் யானை

குளோனிங் முறையில் மீண்டும் ‘மமூத்’ யானையை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்கின்றனர். உலகில் கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மமூத் என்ற மிகப் பெரிய உருவமுள்ள யானைகள் அதிக அளவில் இருந்தன. அவை உடலில் ரோமங்களுடன் நீண்ட பெரிய சுருண்ட தந்தங்களை கொண்டவை. அந்த யானை இனம் படிப்படியாக அழிந்தது. எனவே அவற்றை குளோனிங் முறையில் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கான ஆராய்ச்சியில் ரஷ்யாவின் சக்கா குடியரசு மமூத் அருங் காட்சியகமும், ஜப்பான் கின்கி பல்கலைக்கழகமும் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே, பாதுகாக் கப்பட்டு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மமூத் யானையின் தொடை எலும்பு மஜ்ஜை (போன்மேரேர்) பகுதியில் இருந்து எடுக்கப்படும் செல்களின் மூலம் குளோனிங் முறையில் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த முயற்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே இன்னும் 5 ஆண்டுகளில் குளோனிங் மமூத் யானைகள் உருவாகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மார்கழி 05, 2011

நாடு திரும்பாத விரிவுரையாளருக்கு அரசு அழைப்பு

அரச செலவில் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று நாடுதிரும்பாத பல்கலைக்கழக விரிவுரையாளர்களை நாடு திரும்புமாறு உயர்கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபின் வெளிநாடுகளுக்கு மேற்கற்கைகளை மேற்கொள்ளச் சென்ற 600க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் இன்னும் நாடு திரும்பவில்லையென கடந்த வாரம் வெளியிடப்பட்ட கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்......)

மார்கழி 05, 2011

18 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

சூரியனை விட பல மடங்கு பெரியதாக 18 புதிய கிரகங்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இது பற்றி வொஷிங்டனில் குழுவின் தலைவர் ஜோன் ஜொன்சன் கூறுகையில்; நட்சத்திர கூட்டத்தை சுற்றியுள்ள மிக அதிக கிரகங்களை கண்டுபிடித்து அறிவிக்கும் முதல் முயற்சி இது. 18 கிரகங்களை கெப்ளர் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளோம். அனைத்தும் சூரியனை விட பல மடங்கு பெரியவை. இதற்காக 300 நட்சத்திரங்களை சுற்றி தீவிர ஆராய்ச்சி நடந்தது என்றார்.

மார்கழி 05, 2011

உணவுப் பொருட்களுக்கான விலை கட்டுப்பாட்டு டிசம்பர் முதல் அமுல்

உணவுப் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு விலைகள் டிசம்பர் முதலாம் திகதி முதல் கடுமையாக அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவற்றை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் பாதிப்படையாத வகையில் நாடளாவிய ரீதியில் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாரிய சுற்றி வளைப்பினை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நவம்பர் மாதம் இறுதி இரு வாரங்களில் மாத்திரம் கட்டுப்பாட்டு விலையையும் மீறி அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்த மூவாயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்ப தாகவும் இனிவரும் காலங்களில் இது கடுமையாக அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மார்கழி 05, 2011

நேட்டோ தாக்குதல்

பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க அமெ. மறுப்பு, நேட்டோ பின்வாங்கியது

நேட்டோ தாக்குதல் விவகாரத்தில், பாகிஸ்தானிடம் மன்னிப்புக் கோர முடியாது என அமெரிக்கா உறுதியாகக் கூறியுள்ளது. அதேநேரம், பாக். படைகள் தாக்குதல் நடத்தினால், நேட்டோவும் பதிலடி கொடுக்கத் தயங்காது என பென்டகன் கூறியுள்ளது. இந்நிலையில், நேட்டோ படைகள். ஆப்கான்-பாக். எல்லையில் பதற்றமான இடங்களில் இருந்து சிறிது விலகி இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நேட்டோ தாக்குதல் விவகாரத்தில், அமெரிக்கா நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தது. ஆனால், அந்த வருத்தம் மட்டும் போதாது, விளைவுகள் மோசமாக இருக்கும் என பாக். இராணுவம் எச்சரித்திருந்தது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், வெளியிட்ட அறிக்கையில் இச்சம்பவம் மிகவும் வருந்துவதற்கு உரியது தான் பாபகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கிறது. ஆனால், அதற்காக மன்னிப்புக் கோர முடியாது. நடந்தது என்ன என்பது பற்றி இன்னும் விபரங்கள் வர வேண்டியுள்ளன. இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது என்றார்.

மார்கழி 05, 2011

ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்

ஈரானுக்கான பிரான்ஸ் தூதுவராலயத்தின் பெரும்பாலான அதிகாரிகளை பிரான்ஸ் அரசு திரும்ப அழைத்துள்ளது. தெஹ்ரானிலுள்ள பிரிட்டன் தூதுவராலயம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனினும் தற்காலிகமாகவே அதிகாரிகளை திரும்பப்பெற்றதாக பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஈரான் மீது பிரிட்டன் மேலும் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து பிரிட்டன் துதுவராலயம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தூதுவராலய அதிகாரிகளை பிரிட்டன் மீள அழைத்தது. அத்துடன் பிரிட்டனுக்கான ஈரான் தூதுவரையும் வெளியேற்றியது. இது தவிர, ஈரானுக்கான ஜெர்மன், இத்தாலி மற்றும் நெதர்லாந்து தூதுவர்களை அந்நாட்டு அரசுகள் அவசர ஆலோசனைக்காக திரும்ப அழைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மார்கழி 05, 2011

ரஷ்யாவில் பொதுத் தேர்தல்

ரஷ்யாவில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் விளாடிமிர் புடினின் கட்சி பெரும்பான்மை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்காது என தகவல்கள் கூறு கின்றன. ரஷ்ய நேரப்படி நேற்று காலை 8 மணிய ளவில் 10 ஆயிரம் வாக்குச்சா வடிகளில் ஆரம்பமான வாக்கெடுப்பு இரவு 8 மணி வரை நடை பெற்றது.

மார்கழி 05, 2011

விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா

நேட்டோ படையினர் நடத்திய தாக் குதலில் பாகி ஸ்தான் இராணு வத்தினர் 24 பேர் பலியா னார்கள். இதனையடுத்து தங்களுக்கு சொந்தமான ஷம்சி விமான தளத்தை 15 நாளில் காலி செய்ய அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதியாக கூறியது. மேலும், விமான தளத்திற்கு செல்லும் அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அடைத்தது. இதனை தொடர்ந்து அமெரிக்கா ஷம்சி விமான தளத்தை காலி செய்ய ஆரம்பித்துள்ளது. இதற்காக அமெரிக்காவுக்கு சொந்தமான விமானம் ஒன்று பாகிஸ்தான் வந்துள்ளது. விமான தளத்தில் பணிபுரிந்த அமெரிக்கர்கள் பாதுகாப்புடன் விமானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். எப்.ஐ.ஏ. அதிகாரிகளும் விமான தளத்தில் இருந்தனர். விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மார்கழி 05, 2011

மின்னல்

காற்று மண்டலத்தில் நைதரன் அதிகளவு காணப்பட்டாலும் தாவரங்களால் நைதரசனை வாயுநிலையில் பயன்படுத்த முடிவதில்லை. இவை மண்ணில் இருந்து பெருமளவில் நைட்ரேட் அயன்களாகவே உறிஞ்சிக் கொள்கின்றன. காற்று மண்டலத்தில் உள்ள நைதரசன் வாயுவைத் தாவரங்கள் உறிஞ்சக்கூடிய பதத்தில் அயன்களாக மாற்றிக் கொடுக்கும் வேலையைத்தான் மின்னல் செய்கிறது. பூமியில் முதன் முதலில் உயிரினங்கள் தோன்றுவதற்கும் மின்னல் காரணமாக இருந்தது. காற்று மண்டலத்தின் வழியாக பாய்ந்த மின்னல், வாயுக்களைச் சேர்த்து அமினோ அமிலங்களை உருவாக்கியது. இவைதான் உயிர்க்கலங்களில் உள்ள புரதங்களின் ஆக்கக்கூறுகளாக வேலை செய்கின்றன. இந்த தகவலை ‘ஆர்ஜின் ஆப் லைப்’ என்ற நூல் தெரிவிக்கிறது.

மார்கழி 05, 2011

ஸ்தம்பித்தது பிரிட்டன், ஸ்தம்பிக்கட்டும் இந்தியா!

பிரிட்டனில் கடந்த டிசம்பர் 1ம்தேதி 20லட்சத்திற்கும் அதிகமான பொதுத்துறை தொழிலாளர்கள் நாடு தழுவிய 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். இது வரலாறு காணாதது. பிரிட்டனின் வர லாற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்ததில்லை. 37 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத் திய இந்த மாபெரும் கிளர்ச்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் தொழிலாளர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் எழுச்சியோடு பங்கேற்றார்கள். ஆண்டாண்டு காலமாக போராடிப் பெற்ற ஓய்வூதியப் பலன்கள் என்ற உழைக்கும் வர்க்கத்தின் உரிமையைப் பறிக்காதே என்பதே இப்போராட்டத்தின் பிரதான முழக்கம். (மேலும்......)

மார்கழி 05, 2011

சாத்தன்களின் இருப்பிடம்

அமெரிக்காவில் நிலவும் வேலை யின்மை குறித்து அந்நாட்டின் தொழி லாளர் துறை அமைச்சகமும் உண்மை களை ஒப்புக்கொள்கிறது. ஏற்கெனவே நீண்ட காலமாக வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறாமல் கொந்தளிக்கும் பட்டாளத்தோடு, கடந்த 6 மாத காலமாக எவ்வித வேலைவாய்ப்பும், சிறு வரு மானமும் கூட இன்றி 57 லட்சம் தொழி லாளர்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது, தொழிலாளர் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்திருக்கிறது. இந்த அறிக்கையின்படி நவம்பர் மாத இறுதியில் வேலையில்லாதவர் களின் எண்ணிக்கை மொத்தம் 133 லட்சம் ஆகும். இவர்களில் பகுதி நேரம் மட்டுமே வேலை கிடைத்தவர்கள், 2 மணிநேரம் மட்டுமே வேலை கிடைத்த வர்கள், வாரத்தில் 1 நாள் அல்லது 2 நாள் மட்டுமே வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை அடங்காது. இவர்க ளையும் சேர்த்துக்கொண்டால், அமெ ரிக்காவில் இன்றைய நிலையில் முழு நேர வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்களின் எண்ணிக்கை 244 லட்சம் ஆகும். (மேலும்......)

மார்கழி 04, 2011

மாகாண சபை அதிகாரங்கள் திரும்ப பெறப்படாத வகையில் அமைந்திருக்க வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

தமிழ் செல்வனின் சட்டாம்பி வேலைக்கு பயந்து சந்திரிகா அம்மையாருக்கு இரவு கொடுத்த வாக்கு றுதியை காற்றில் பறக்க விட்டவர் சம்மந்தர். இதன் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் ஐ.தே. கட்சியுடன் இணைந்து சந்திரிகா அம்மையாரின் தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் கொளுத்தி மகிழ்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு என்ன அருகதை இருக்கின்றது சந்திரிகா அம்மையாரின் தீர்வுப் பொதியையும் அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட. பதில் சொல்வாரார்களா? தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். (மேலும்.....)

மார்கழி 04, 2011

இலங்கை

மீண்டும் இரட்டை குடியுரிமை வழங்கப்படும் செயற்பாடு ஆரம்பம்

500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டு காலமாக குறித்த விண்ணப்பங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இரட்டைக் குடியுரிமை தொடர்பில் அரசாங்கம் பல புதிய விதிகளை அறிவித்ததன் பின்னர் முதல் தடவையாக இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரிகளில் இலங்கையர்களும், வெளிநாட்டுப் பிரஜைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் விண்ணப்பதாரிகளிலிருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இரட்டைக் குடியுரிமை வழங்குதல் தொடர்பான புதிய சட்ட யோசனைத்திட்டம் சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியோருக்கு குடியுரிமை வழங்குவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக் கொண்ட பலர் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மார்கழி 04, 2011

சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு

சரத் பொன்சேகாவின் குடும்பத்தாரை சந்திக்கத்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயார்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து சரத் பொன்சேகாவின் குடும்பத்தாரை சந்திக்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். பொதுமன்னிப்பு வழங்குமாறு சரத் பொன்சேகாவின் குடும்பத்தார் நேரடியாக கோரிக்கை விடுத்தால் அது குறித்து கவனம் செலுத்த முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சரத் பொன்சேகாவின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் முறைப்பாடு செய்வதனை விடுத்து, நேரடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்.....)

மார்கழி 04, 2011

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் நாளை விடுதலை?: 5-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு!

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் பிரசாத், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், எமர்சன் ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மீது போதை பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று அவர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பத்தினர் பட்டினியால் உள்ளனர். இதற்கிடையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரையும் நாளை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படலாம் என்று தெரிகிறது. கைது செய்யப்பட்ட 5 மீனவர்களையும் நாளை விடுதலை செய்யப்படாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாக ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

மார்கழி 04, 2011

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளிலிருந்து தொடக்கப்பட்டதே தேசிய இனப்பிரச்சினை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அரசியல் மக்களை பிரித்து வைக்கிறது, பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கின்றது. எமது நாட்டின் தேசிய இனப்பிரச்சினை என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் இருந்தே தொடக்கி வைக்கப்பட்டது. இலங்கைத்தீவை ஆட்சி செய்து வந்த காலனியாதிக்கவாதிகளால் திட்டமிடப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சியாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. 1948 ம் ஆண்டில் காலனியாதிக்க வாதிகளின் கைகளில் இருந்து எமது இலங்கைத்தீவு விடுவிக்கப்பட்ட நிலையில், அன்றில் இருந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வரை மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அன்றைய அரச தலைவர்களும் தவறானதோர் அரசியல் வழிமுறையினையே தொடர்ந்தும் கடைப்பிடித்திருந்து வந்திருக்கிறார்கள். சிங்கள சகோதர மக்களுக்கும், தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் திட்டமிட்டு தூண்டி விடப்பட்டன. ஆனாலும், இவைகள் குறித்து பேசுகின்ற தார்மீக உரிமையினை சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் இழந்து விட்டன. காரணம், தமது தேர்தல் வெற்றிக்காக, வாக்குகளை அபகரிப்பதற்காக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரே தமிழ் இனவாத வெறியை அடிக்கடி ஊட்டி, எமது மக்களை உசுப்பேற்றி விடுவதும், தமிழ் மக்கள் வீதிக்கு வரும் போது மக்களை நடுத்தெருவில் கைவிட்டு, தமது குடும்பங்களோடு நாட்டை விட்டு ஓடியும் விடுகின்றார்கள். (மேலும்.....)

மார்கழி 04, 2011

கிழக்கு முதலமைச்சர் யார்?

கிழக்கில் அடுத்ததா முஸ்லிம் முதலமைச்சர்தான் வரவேணும் என்று ஒரு தரப்பும், இல்லை அது தமிழராக இருக்கலாம் என்று இன்னொரு