Contact us at: sooddram@gmail.com

 

ஆனி 2012 மாதப் பதிவுகள்

ஆனி 30, 2012

வவுனியா சிறைச்சாலை பிரச்சினை, விசாரணைகள் ஆரம்பம்!

வவுனியா சிறைச்சாலையில் கடந்த தினங்களில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்படடுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளால் நேற்று முன்தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மூன்று உத்தியோகத்தர்களும் நேற்று மீட்கப்பட்டனர். (மேலும்.....)

ஆனி 30, 2012

வவுனியா சிறையில் புலிகளின் முன்னாள் தலைவர்கள் 5 பேரிடம் செய்மதித் தொலைபேசி!

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னரே, வவுனியா சிறையில் உள்ள புலிகளின் முன்னாள் தலைவர்கள் 5 பேர் உட்பட 321புலி உறுப்பினர்கள் சிறைச்சாலையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக வடபகுதியில் உள்ள சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் என திவயின செய்தி வெளியிட்டு உள்ளது. சசி, ருவான், ருக்ஷான், கண்ணன், குருதரன் ஆகிய புலித் தலைவர்களிடம் செய்மதி தொலைபேசிகள் இருப்பதாகவும் அவற்றின் மூலம் அவர்கள் இராணுவத்தினருக்கு எதிராக வழங்கியுள்ள தகவல்கள் ஒலிப்பரப்பபடுவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். சிறையில் உள்ள இந்த புலி உறுப்பினர்களுக்கு, புலிகளின் ஆதரவாளர்களின் உதவிகள் கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனி 30, 2012

உண்மைக்குப் புறம்பாக செய்திகள் வெளியிடுவதை ஏற்றுக்கொண்டது ‘உதயன்’ !

யாழ் நீதவான் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரினார் ‘உதயன்’ பத்திராதிபர் !

உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிடுவதை ஏற்றுக்கொண்டு யாழ் நீதிவான் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார் ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியர். யாழ் ஊடகவியலாளர்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவம் இன்று யாழ் நீதிமன்றில் நடந்திருந்தது. யாழ் நீதிவான் திரு மா.கணேசராஜா அவர்களை அவமதிக்கும் நோக்கில், அவர் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களிடம் மன்னிப்பு கோரியதாக உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை வெளியிட்டமைக்காக இன்று யாழ் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியரே மேற்படி தவறை ஏற்றுக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். அத்துடன் ‘உதயன்’ பத்திரிகை உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக தனக்கு பல சட்டத்தரணிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன என குறிப்பிட்ட சில சட்டத்தரணிகளை பெயர் குறிப்பிட்டு நீதவான் ‘உதயன்’ பத்திரிகை ஆசிரியரிடம் தெரிவித்திருந்தபோது அவர் பதிலேதும் கூறாமல் மௌனமாயிருந்ததன் மூலம் அக் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்.....)

ஆனி 30, 2012

வானவில் 18 வெளிவந்துவிட்டது

சகல இனவாதப் போக்குகளையும் அரசாங்கம் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்!

புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான 30 வருட இனவாத யுத்தம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுக்கு வந்தபோது, அந்த இறுதி யுத்தத்தால் ஏற்பட்ட மரண அவஸ்தையையும் தாங்கிக்கொண்டு மக்கள் ஓரளவு நிம்மதி மூச்சுவிட்டனர். அதற்கொரு காரணம் இருந்தது. அதாவது இனி யுத்தம் இல்லை, அதுமாத்திரமின்றி இனப்பிரச்சினைக்கும் ஒரு நீதியான தீர்வு கிடைக்கும் என்றவாறாக மக்களின் எண்ணங்கள் இருந்தன. யுத்தம் முடிவுற்ற நேரத்தில் தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு (புலிகளையும்தான்) இருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு இனி என்ன செய்யப் போகின்றது என கேள்வியும் மக்களிடம் இருந்தது. புலிகள் வழங்கிய பிராணவாயுவினால் உயிர்வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு புலிகள் போய்விட்டதனால் இனி எதிர்காலம் இல்லையென்று மக்கள் கருதியதே அதற்குக் காரணமாகும். இறுதி யுத்த நேரத்தில் தேசியக்கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் - குறிப்பாக சிவாஜிலிங்கம், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் வெளிநாடுகளில் தங்கியிருந்து அரசுக்கு எதிரான தீவிர பிரச்சாரங்களில் 1983 இன வன்செயலை நினைவூட்டும் காட்சி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் சிவாஜிலிங்கம் போன்றோர் சுமார் ஒரு வருடமாக இந்தியாவில் தங்கிநின்று சில திராவிடப் பிழைப்புவாதக் கட்சிகளுடனும், இந்தத்துவ வலதுசாரிக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியுடனும் கைகோர்த்து இலங்கை அரசுக்கு எதிரான கடுமையான எதிர்ப்பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். (மேலும்.....)

ஆனி 30, 2012

புதிய கட்சி அமைக்கிறார்

ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஹேமகுமார நாணயக்கார

புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பது தொடர்பாக அரசாங்க அங்கத்தவர்கள் பலர் தன்னுடன் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஹேமகுமார நாணயக்கார கூறினார். ‘அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட பலர் இதில் இணைவர். தீவிரமான ஸ்ரீல.சு.க., ஐ.தே.க. மற்றும் இடதுசாரிகள் இக்கட்சியில் இணைவர் என அவர் கூறினார். முன்னாள் அமைச்சரான ஹேமகுமார நாணயக்கார, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விவசாய ஆலோசகர் பதவியிலிருந்து கடந்தவாரம் ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்.....)

ஆனி 30, 2012

சுயாட்சி உரிமையுடன் வாழவே இலங்கைத் தமிழ் மக்கள் விருப்பம் – சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் 95 சதவீதம் பேர் சுயாட்சி உரிமை பெற்று வேலைவாய்ப்புடன் அமைதியாக வாழவே விரும்புவதாக மண்டபம் முகாமில் தங்கியுள்ள மக்கள் கூறினர். அவர்களை சந்தித்த பிறகு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.லாசர், இரா.அண்ணாதுரை ஆகியோர் இதை தெரிவித் தனர். முகாமிற்குள் நேரடியாக குறைகளை கேட்கச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுத்த செயலையும் அவர்கள் கண்டித்தனர். (மேலும்.....)

ஆனி 30, 2012

அதிக உடற்பயிற்சியும் ஆபத்தே!

அதிக அளவு உடற்பயிற்சி செய்வதும் உடலுக்கு ஆபத்தே என கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். பொதுவாக அதிக உடல் எடை கொண்டவர்கள் தங்களது எடையைக் குறைக்க எண்ணி, உணவுக்கட்டுபாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவிதமாக எடைக்குறைப்பு முறையை மேற்கொள்கின்றனர். நாள் ஒன்றிற்கு ஒரு மணிநேரம் பயிற்சி செய்வதே இதயத்திற்கு பாதுகாப்பு ஆகும். அதற்கு மேல் உடற்பயிற்சி செய்தால், நாளடைவில் அது இதயத்தை பாதிக்க வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சாதாரணமாகஇருப்பவர்கள் அதிதீவிர பயிற்சிகளிலும் போட்டிகளிலும் ஈடுபடும்போது, இதயத்துடிப்பு 120 ஆக உயர்கிறது. இதனால் இதயம் பாதிப்புக்குள்ளாகிறது. உடற்பயிற்சி என்பது பொதுவாக சுகாதார வாழ்வுக்கு நல்லதுதான். எனினும் அதிகமாக போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கி.மு 490ம் ஆண்டில் ஓர் இளம் கிரேக்கச் செய்தியாளர் 2 நாட்களில் 175 மைல்கள் ஓடி வந்த பின்னர் திடீரென இறந்தார். இவரது இறப்பே நீண்ட தூர ஓட்டத்தில் பாதிக்கப்பட்ட முதல் இதயம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனி 30, 2012

மணமுடித்த கையோடு விவாகரத்தில் முடிந்த கல்யாணம்!

கையடக்கத் தொலை பேசி ஊடாக காதல் கொண்டு மனசால் ஒன்று பட்ட காதல் ஜோடி ஒன்று திருமண மான அதே தினம் விவா கரத்தில் முடிந்தது. கையடக்க தொலை பேசி யில் தொடர்பு கொண்ட ஜோடிகளின் உறவு காதலாக மாறியதால் தொடர்ந்தும் தொலைபேசி யுடாக பேசி காதலை வளர்த்துக் கொண்டனர். பின்னர் இக்காதல் திருமணத்தில் முடிந்தது மணவறையில் இவர்கள் சந்திக்கும் வரை ஒருவரை யொருவர் சந்திக்காது தொலைபேசியிலே உரையாடிக் காதலித்தனர் திருமணம் முடிந்து தேனிலவு செல்கையிலே கணவன் கண்களையிழந்தவர் என மணமகள் அறிந்து கொண்டார். மணவாளன் இராணுவத்தைச் சேர்ந்தவர், கடந்த காலங்களில் நாட்டில் இடம் பெற்ற யுத்த சமயத்தின் போது பயங்கர வாதிகளின் குண்டுத் தாக்குதலில் தனது கண்களை இழந்திருந்தார்.

ஆனி 30, 2012

தமிழ் கைதிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய தீர்மானம்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை தமது விருப் பின் பேரில் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய தீர்மா னிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ் குமார் தெரிவித்தார். மேற்படி தமிழ் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட விசேட ஆணையார்களுள் ஒருவரான காமினி குளதுங்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து இந்த தீர்மானத்தை அறிவித்திருந்தார். தமிழ் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தவென விசேட நீதிமன்றங்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், கைதிகளின் விருப்பின் பேரில் இவர்களை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணை யாளர் குறிப்பிட்டார். எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் ஆயுதப் பயிற்சி எடுக்காத, புலி உறுப்பினர்களல்லாதவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும் என்பதனையும் அவ் ஆணையார் சுட்டிக்காட்டினார். அநுராதபுரம், நீர்கொழும்பு, மகசின் சிறைச்சாலைகளிலுள்ள 700 தமிழ் கைதிகள் இத்தீர்மானத்தை உடனடி யாக அமுல்படுத்தக் கோரி கடிதம் சமர்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனி 30, 2012

யாழ். தீவுப்பகுதி படகுச்சேவை நடத்துவோர் ஆர்ப்பாட்டம்

யாழ். குறிகட்டுவான் இறங்கு துறையிலிருந்து நயினாதீவு, நெடுந்தீவு செல்லும் பயணிகள் படகுச் சேவை நடத்துவோர் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். நயினா தீவிலுள்ள காவி உடைதரித்தவர் ஒருவரின் பயணிகள் படகுக்கும், ஏனைய பயணிகள் படகுக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை கார ணமாகவே இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. யுத்தம் முடிவடைந்த பின்னர் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடபகுதிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிக ரித்தே காணப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் மட்டும் யாழ். குடாநாட்டுக்கு சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் சென்றனர். தென்பகுதியிலிருந்து வரும் மக்கள் நயினை நாக பூசனி அம் மன் கோவில் மற்றும் நாக விகாரைக்கு செல்கின்றனர். இதனால் படகுச் சேவை நடத்துபவர்கள் தமது வாழ்வாதாரத்தை இப்போது மகிழ்ச்சியுடன் நடத்துகின்றனர். இராணு வத்தினர் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் பெற்று வருகின்றனர். பயணிகள் அதிகமாக வருவதால் படகுச் சேவையாளர்களும் தமது சேவையை சுழற்சி முறையில் செய்து வருகின்றனர். எனினும் நயினாதீவிலுள்ள காவி உடை தரித்தவர் தமக்குச் சொந்த மான படகை படகுச் சேவைகளின் சுழற்சிமுறையில் அல்லாமல் தனியே சேவையிலீடுபடுத்தியுள்ளார்.

ஆனி 30, 2012

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரேக்கம்

அமைதி, செழிப்பு, ஒற்றுமை ஆகியவற்றுக்காகப் பாடுபடுவோம் என்று உறுதி கூறி கைகோர்த்த ஐரோப்பிய யூனியன் நாடுகள், இப்போது மக்களின் மன அமைதியைப் பறித்து செழிப்பையும் தொலைத்துவிட்டது. ஒற்றுமை என்பது விரைவில் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான கிரேக்கத்தில் நாடாளுமன் றத்துக்கு முன்பு முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்நாட்டில் வரவு செலவுத் திட்ட சீர்த்திருத்தங்களால் ஓய்வூதியத்தை இழந்து வாழ வழியில்லாமல் விரக்தி அடைந்து அவர் எடுத்த சோக முடிவு அது. இது ஓர் உதாரணம் தான். வேலையின்மை, முன்னெப் போதும் எதிர்கொண்டிராத பொரு ளாதார நெருக்கடி ஆகியவற்றால் ஐரோப்பிய நாடுகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலைநாடுகள் என்றாலே செல்வச் செழிப்பு மிக்கவை என்று நம்மவர்களுக்கு ஏற்படும் பிம்பம் மெதுவாக மறைந்து வருகிறது. (மேலும்.....)

ஆனி 30, 2012

அகதிகளுடன் இரு படகுகள் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்தன

புகலிடம் கோருவோரை ஏற்றிச் சென்ற இரு படகுகள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவை நேற்று அதிகாலை சென்றடைந்துள்ளன. இலங்கையர்கள் ௭னக் கருதப்படும் 44 பேருடன் உள்ள ஒரு சிறிய படகு கிறிஸ்மஸ் தீவில் உள்ள சிறு துறைமுகத்துக்கு அப்பால் நங்கூரமிட்டுள்ளது. கடைசியாக வந்துள்ள இந்த வெள்ளை – நீல நிற மீன் பிடிப் படகின் மேல் தட்டில் ஆட்கள் நிரம்பியுள்ளனர் போலத் தெரிகின்றது. புதன்கிழமை தொடக்கம் இங்கு வந்து சேர்ந்த 3 கப்பல்களில் இது கடைசியானது ஆகும். புதன்கிழமை வந்த கப்பலிலிருந்து இறக்கப்பட்ட 98 பேரும் இன்னமும் துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படகும் வந்துள்ளது. கடைசியாகவும் மூன்றாவதாகவும் வந்த இந்தப் படகை அதிகாலை கிறிஸ்மஸ்தீவுக்கு பாதுகாப்பாக அழைத்து வந்த பெரிய அவுஸ்திரேலிய கடற்படைப் படகும் அண்மையில் தரித்து நிற்கின்றது. இதற்கு முன் கடந்த வாரம் இந்தோனேஷியாவுக்கும் கிறிஸ்மஸ் தீவுக்கும் இடையல் கவிழ்ந்த கப்பலிலிருந்து 110 பேரை காப்பாற்றுவதிலும் கடலில் மூழ்கி இறந்து போனதாகக் கரு­தப்படும் 90 பேரின் சடலங்களைத் தேடுவதி­லும் இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டது.

ஆனி 30, 2012

பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று மீட்பு

வவுனியா சிறைச்சாலையில் சிறைக் கைதிகளால் பணயக்கைதிகளாகத் தடுத் துவைக்கப்பட்டிருந்த மூன்று சிறைச் சாலை அதிகாரிகள் மீட்கப்பட்டுள்ள னர். பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரின் கூட்டு நடவடிக்கையின் மூலமே மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் மீட் கப்பட்டதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சஜீவ மெதவக்க தெரிவித்தார். நேற்று நண்பகல் 12.20 மணியளவில் இவர்கள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த புலி சந்தேகநபர்கள் சிலர் வேறு சிறைச் சாலைகளுக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இச்சிறைக் கைதிகள் நேற்றுமுன்தினம் மாலை மூன்று சிறைச்சாலை அதிகாரிகளைப் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத் திருந்தனர். பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட மூன்று சிறைச் சாலை அதி காரிகளை மீட் பதற்கு நேற்று முன்தினம் மாலை முதல் நேற்றுக் அதிகாலை வரை சிறைக்கைதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் யாவும் தோல் வியிலேயே முடிவடைந்துள்ளது.

ஆனி 29, 2012

பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் சிவ்சங்கர் மேனன்

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசினார். இன்று அதிகாலை 12.45 மணியளவில் வந்தடைந்த மேனன் ஜனாதிபதியை அவரது அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார். இதன் போது வடக்குப் பகுதியில் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமை, மறுசீரமைப்பு பணிகள், வடகிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். மேலும் கிழக்கில் சம்பூரில் இந்தியா உதவியுடன் அமைக்க திட்டமிட்டுள்ள அனல் மின் நிலையம் பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று மாலை 4.25 மணியளவில் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு பயணித்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சிவ்சங்கர் மேனன், இந்திய - இலங்கை உறவுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ___

ஆனி 29, 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூ., ஜே.வி.பி போட்டியிடத் தீர்மானம்

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனநாயக அரசியலில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதனால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்யும் என்றும் மாவை சேனாதிராஜா எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்.....)

ஆனி 29, 2012

போர் மூளும் அபாயம்

சிரிய எல்லையில் படைகளைக் குவிக்கும் துருக்கி

சிரியா எல்லையில் துருக்கி தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. எல்லையில் பறந்த துருக்கியின் ஜெட் போர் விமானத்தை சிரியா இராணுவம் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இதனால் 2 நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தீர்க்க ரஸ்யா தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை. இந்நிலையிலேயே சிரிய அதிரடி முடிவை மேற்கொண்டுள்ளது. இஸ்கேன்டுரன் தளத்தில் இருந்து நேற்று முன்தினம் 30 இராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இஸ்கேன்டுரன் தளம் தரைக்கடல் பகுதியில் உள்ளது. அதற்கு பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நேற்று மேலும் இராணுவ வீரர்களுடன் டாங்கிகள் மற்றும் போர் தளவாடங்கள் அனுப்பப்பட்டன. விமானம் தாக்குதலை சமாளிக்க 12 இராணுவ வாகனங்களில் வெடிகுண்டுகள், ஏவுகணைகள் கொண்டு செல்லப்பட்டன. (மேலும்.....)

ஆனி 29, 2012

இலங்கை வந்தடைந்தார் சிவ்சங்கர் மேனன்

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று அதிகாலை 12.54 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிவ்சங்கர் மேனன், இந்திய - இலங்கை உறவுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார். ஒருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இவர் இன்றே நாடு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனி 29, 2012

அகதிகளை ஏற்றிய மேலும் மூன்று படகுகள் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளன!

அகதிகளை ஏற்றிய மேலும் மூன்று படகுகள் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளன. நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ள படகில் 44 புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்துள்ளனர். இப் படகுகள் இலங்கையில் இருந்து சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் இப்படகுகள் கைப்பற்றப்பட்டு கிறிஸ்மஸ் தீவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதேவேளை இன்று அதிகாலை மேலும் ஒரு படகு அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் இருந்து 30 கடல் மைல்கள் தொலைவில் இந்த படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தப் படகில் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 93 பேர் இருந்துள்ளனர். இவர்களும் இலங்கையர்களாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனி 29, 2012

ஹிட்லரின் மரணத்தில் இருந்த மர்மம்

ஒருவர் நம்மை ஏமாற்றினால் நமக்கு எவ்வளவு கோபம் வந்துவிடுகிறது. அவரே பல ஆண்டுகள் ஏமாற்றினால் எப்படி இருக்கும்? ஆம்! வரலாற்றில் ஒருவன் 66 ஆண்டு காலமாக நம்மை ஏமாற்றியிருக்கின்றான். நம்மை என்றால் ஒட்டுமொத்த உலகையே 66 ஆண்டுகளாக ஏமாற்றியிருக்கிறான். தான் 'உயிருடன் இல்லை' என்று உலகையே நம்ப வைத்து ஏமாற்றியி ருக்கிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் உயிருடனும் வாழ்ந்திருக் கிறான். அவன் ஒரு சாதாரண மனிதன் என்றால், நாம் அவனைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஆனால் 20 ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் கொடூரமானவன் எனக் கணிக்கப்பட்டவன் அவன். உலகத் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரின் மரணங்கள் இந்த வரலாற்று மர்மத்தின் பக்கங்களாக நிரப்பப்பட்டு இருக்கின்றது. சிலரின் மரணங்களில் மர்மங்கள் இருந்தன. சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லர் ஆகியோர் உண்மையில் இறந்தார்களா என்பதே மர்மங்களாக இருப்பதாக வரலாறு பதிந்து கொண்டது. அந்த நபர் யாரென்று உங்களுக்குத் தெரியாத பட்சத்தில் நானே சொல்கிறேன். உலக வரலாற்றில் தன் பெயரை அழிக்க முடியாத கறையுடன், ஆழமாக 'அடால்ஃப் ஹிட்லர்' (Adolf Hitler)  என்று எழுதியவன். (மேலும்.....)

ஆனி 29, 2012

வவுனியா சிறைக் கைதிகளின் உண்ணா விரதம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது

பூஸாவுக்குக் கொண்டு செல்வதாகக் கூறி, அநுராத புரம் நீதி மன்ற வழக்குத் தவணை எனத் தெரிவித்து அநுராத புரம் சிறையில் தனியறையில் தடுத்து வைக்கப்பட்டு கழிவு நீர் ஊற்றப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகிய சக கைதியை வவுனியாவுக்கே கொண்டு வர வேண்டும் எனக் கோரி வவுனியா சிறைக் கைதிகள் இரண்டாவது நாளாக நேற்றும் தமது உண்ணா விரதப் போராட்டத்தை மேற் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நட ராஜா சரவணபவன் என்ற அரசியல் கைதியே இவ்வாறு அநுராத புரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டவராவார். (மேலும்.....)

ஆனி 29, 2012

பியர் டின்களால் யாழில் டெங்கு பெருகும் அபாயம்

யாழ். குடாநாட்டில் டெங்கு பரவுவதில் முக்கிய பொருட்களாக பியர் டின்கள் மற்றும் மதுப் போத்தல்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. யாழ். குடாநாட்டில் தற்போது எந்த வகையான கட்டுப்பாடுகளும் இன்றி பியர் அதிகளவில் மதுபானக் கடைகள் முதல் ஏனைய கடைகளிலும் பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை ஆட்கள் நடமாட்டமற்ற பகுதிகள், வயல்வெளிகள், தோட்டங்கள், கைவிடப்பட்ட காணிகள் மற்றும் இரவு வேளைகளில் வீதி ஓரங்களில் நின்றவாறு இளைஞர்கள் மிகவும் சாதாரணமாக அருந்திவிட்டு வெற்று டின்களை எறிந்து விட்டுச்செல்லும் நிலையும் காணப்படுகின்றது. மிகவும் ஆர்வத்துடன் இளைஞர்கள் பருகி வரும் பியர் டின்கள் மழைக் காலங்களில் நீர் நிரம்பி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்குக் காரணமாக அமைவதாகவும் பியர் அருந்துபவர்கள் வெற்று டின்களை பாதுகாப்பாக நீர் தேங்காத வண்ணம் கைவிட வேண்டும் எனவும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவிக்கின்றார்கள். இச்செய்தி எமக்கு இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றது. ஒன்று யாழ்ப்பாணத்தில் நிலவும் கட்டுக்கு மீறிய இளைஞர் மத்தியில் பழக்கத்தில் உள்ள சோமபான பழக்க வழக்கங்கள். இரண்டாவது சோம பானத்தை பகிரங்கமாக பருகும் அளவிற்கு வளர்ந்துள்ள கலாச்சார சீரழிவு. இவ்விரண்டும் ஆரோக்கியமான விடயம் அல்ல. 30 வருட கால யுத்தம் விட்டுச் சென்ற சீரழிவுகள் இவை. புலம் பெயர் தேசத்து 'காலச்சார' உள்வாங்கலே முக்கியமான காரணமாவும் இருக்கின்றது இவற்றிற்கு.

ஆனி 29, 2012___

முல்லைத்தீவில் ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்கள்

வட மாகாணத்திலேயே நாட்டில் குறைந்த அளவிலான மக்கள் வசிப்பதாக நேற்று வெளியான அரசின் சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரத் தகவல்கள் அடங்கிய ஆரம்பக்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் வட மாகாணத்தில் 5.2 சதவீதத்துக்கும் குறைவான மக்களே வசிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒரு இலட்சத்துக்கும் குறைவானவர்களே வசிப்பதாகவும் அரசின் இடைக்கால அறிக்கை கூறுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தான் இலங்கையிலேயே குறைவான மக்கள் வசிக்கிறார்கள். அங்கு சனத்தொகைக் கணக்கீட்டின்படி 92,228 பேர் இருக்கிறார்கள். அது நாட்டின் மக்கள் தொகையில் 0.5 சதவீதமாகும். புலம் பெயர் தேசங்களிலிருந்து நாடு கடந்த தமிழீழம் என்று கூக்கிரலிடுவதை விட்டுவிட்டு  எமது தாய்நிலங்களில் மீண்டும் குடியேறவேண்டும் புலம் பெயர் தேசங்களிலிருந்து. அன்றேல் யாழ்பாணத்தில் கூட தமிழ் மக்கள் சிறுபான்மையினாராகும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாது போய்விடும். ஒரு பல மிக்க சமூகத்தை கட்டியமைப்பதே தமிழ் சமூகத்தின் உடனடித் தேவையாக இருக்கின்றது. அதுவும் இலங்கையில் நிரந்தரக் குடிப்பரம்பல் உடையதாக இருக்கக் கூடியதாக அமையவேண்டும். செய்வார்களா புலம்பெயர் தேசத்து (இந்தியா உட்பட) தமிழ் பேசும் 'வீரர்கள்'...?

ஆனி 29, 2012

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது முற்றிலும் உறுதி

மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அபு ஜிண்டாலிடம் நடத்தப்பட்ட விசார ணையில் இது தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்போது கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி அபு ஜிண்டாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாங்கள் சந்தேகப்பட்ட பல விடயங்கள் உண்மையானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தலைவர்களின் உத்தரவுப்படி நடந்துகொண்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்றார். தொடர்ந்து பாகிஸ்தான் குறித்துப் பேசிய அவர், மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதக் குழுவினர் தங்கள் நாட்டில்தான் உள்ளனர் என்பதை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் மும்பைக்குள் புகுந்த அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்துதான் தொலைபேசி மூலம் உத்தரவுகள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் விரைவில் வெளிவரும். அப்போது பாகிஸ்தானின் நிலைமை மேலும் மோசமாகிவிடும். (மேலும்.....)

ஆனி 29, 2012____

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் நகர எழுச்சித்திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிர தேச செயலகப் பிரி வில் 451 மில்லியன் ரூபா செலவில் நகர எழுச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இத்திட்டங்களுக்கென 2011ம் ஆண்டில் 130 மில்லியன் ரூபாவும், 2012 ம் ஆண்டுக் கென 200 மில்லியன் ரூபாவும் 2013 ம் ஆண்டுக்கென 121 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கென ஜனாதிபதியின் முல்லை மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கனகரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், துணுக்காய் அபிவிருத்தி குழுவின் தலைவருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாருக், ஆளுநரின் ஆணையாளர் சாஹிப் மொஹிதீன், பிரதேச சபை உறுப்பினர்களான நந்தன், தீபன், பிருந்தாவணன், முல்லை பட்டதாரிகள் சங்கத் தலைவர் விஜிதரன், இணைப்பாளர் ஜொயிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஆனி 28, 2012

வடக்கில் தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகிறது? - எதிர்க்கட்சித் தலைவர் ரணில்

நாட்டின் ஏனைய பகுதிகளில் தேர்தல் நடத்தும் அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்துவதற்கு ஏன் தயங்குகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசேட கூட்டமொன்றில் சற்றுமுன் உரையாற்றியபோதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பினார். அங்கு அவர் தொடர்ந்து உரைநிகழ்த்துகையில், வடக்கிலுள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் இன்னும் வழங்கப்படவில்லை. அவர்கள் விரும்பியவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்வதற்கு இடமளிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலும் வாய்ப்பளிக்கப்படவில்லை, இப்போதும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அப்படியென்றால் புலிகளுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது நன்றாகப் புலப்படுகிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனி 28, 2012

மன்னாரில் முற்றவெளி வீதியின் பெயரை மாற்றக் கோரிக்கை

மன்னார் நகரிலுள்ள எஸ்பிளேனட் என அழைக்கப்படும் முற்றவெளி வீதியை முதலியார் அபூப் காசிம் மரைக்கார் வீதி என பெயர் மாற்றம் செய்யுமாறு மன்னார் நகர சபையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் முன்பு கேற் முதலியாராகவும் உடையாராகவும் செயல்பட்டு மாவட்டத்திற்கும் மக்களுக்கும் சிறந்த சேவையாற்றிவந்த முதலியார் நிலாம்தீன் முகம்மது இபுறாகிமின் மகனான முதலியார் அபூப் காசிம் மரைக்கார் வசித்த எஸ்பிளேனட் வீதியையே அவரின் ஞாபகார்த்தமாக பெயர் மாற்றம் செய்யுமாறு நகர சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆனி 28, 2012

சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தக் கனடா தீர்மானம்

கனடா, சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தத் தீர்மானித்துள்ளது. சன் சீ கப்பல் ஊடாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவுக்குள் பிரவேசித்தமை தொடர்பில் ஆறு சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு கனேடியர்களும், நான்கு இலங்கையர்களும் இவ்வாறு குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு பேருக்கு எதிரான விசாரணைகளையும் துரிதப்படுத்த அந்நாட்டு நீதித்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சந்தேக நபர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது ஒரு மில்லியன் கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் ஆர்வம் மற்றும் அரசியல் விவகாரம் ஆகியவற்றின் காரணமாக வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டு எம்.வீ. சன் சீ கப்பலின் ஊடாக 492 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவைச் சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ___

ஆனி 28, 2012

No difference between Govt. and LTTE - Ranil

UNP Leader Ranil Wickremesinghe said today the government was acting no different to the LTTE, which was led by Prabhakaran. He told a joint common opposition news conference that the government should hold provincial council elections in the North as promised by the President earlier. “The war is over now, and as promised president Rajapaksa must hold Provincial Council elections in the North. They held the General Elections and the Presidential Elections but why is the Government hesitating to hold the provincial council elections,” he asked. Mr. Wickremesinghe said the people had the right to choose and the government which was violating the fundamental rights of the people was no different to the LTTE. “People in the North should have the benefit of a vote. These are the very people who are demanding for an election and they are the ones who are deprived of it. If they are depriving these people of a democratic right, what’s the difference between the government and the LTTE,” he said.

(Yohan Perara & Nishan Casseem)

ஆனி 28, 2012

கிழக்கு மாகாண சபை கலைப்பு

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகள் நேற்று கலைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மூன்று மாகாண சபைகளையும் கலைப்பதற்கான உத்தியோபூர்வ வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளி யிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மாகாண சபைகள் கலைக் கப்படுவது தொடர்பில் மூன்று மாகா ணங்களினதும் முதலமைச்சர்கள் அந் தந்த மாகாண ஆளுனர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதையடுத்து உரிய வர்த்தமானி அறிவித்தல்களில் சம்பந்தப்பட்ட ஆளுனர்கள் கையொப்பமிட்டுள்ளனர். வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அந்த மாகாண சபைகளைக் கலைப்பது தொடர்பில் சந்தேகங்கள் நிலவின. எனினும் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மாகாண சபை முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (மேலும்.....)

ஆனி 28, 2012

ஈழத்தமிழர் தாயகத்தின் முதல் நூலகம் திருகோணமலைப் பொதுநூலகம்

ஈழத்தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்குகிழக்கில் முதலில் அமைக்கப்பட்ட நூலகம் என்ற பெருமை திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகத்திற்கே சாரும். 177 வருடப் பழைம கொண்ட திருகோணமலைப் பொது நூலகம் மிகவும் பிரசித்தி பெற்ற யாழ் நூலகத்தை விட 100 ஆண்டுகள் பழமையானது. திருகோணமலையின் பெருமைகளில் மிகமுக்கியமானது இது. அறிவை யாழ்ப்பாணத்துக்கு மட்டும் சொந்தமாக்குபவர்களில் காதுகளில் ஓங்கி கத்த வேண்டிய உண்மையிது. திருகோணமலைப் புறக்கோட்டை நூலகம் ( Trincomalee pettah library)என அழைக்கப்பட்ட இந்நூலகம் 1835ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1946ம் ஆண்டு திருகோணமலை நகராட்சி மன்றத்தால் பொறுப்பேற்கப்பட்டது. இது பற்றி தகவல் திருகோணமலை நகராட்சி மன்ற பொன்விழா மலரில் படங்களுடன் உள்ளது. (மேலும்.....)

ஆனி 28, 2012

உலகப் பொதுவுடைமை சிந்தனையாளர்களின் புரட்சித் தலைவர் லெனின் உடல் புதைக்கப்படுமா?

ண்பத்தி ஒன்பது ஆண்டு களுக்கு முன்பாக உலகப் பொதுவுடைமை சிந்தனையாளர்களின் புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் ரஷ்யத் தலைவர் லெனின் காலமானார். இத்தனை ஆண்டுகளாக அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் பதப்படுத்தி ரஷ்ய அரசால் மாஸ்கோவில் செஞ்சதுக்கம் எனும் இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவ்வுடலை இப்போது அடக்கம் செய்யவேண்டும் என்கிற குரல் ரஷ்யாவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு தடைகளை தாண்டி, இடையறாப் போராட்டங்கள் மூலம் ஒரு யுகப்புரட்சியை முன்னெடுத்ததால் ஏற்பட்ட உச்சக்கட்ட மனக்களைப்பு ஆட்சியாளராக ஒரு நாளைக்கு பதினாறு மணி நேர கடும் உழைப்பு, புரட்சிக்கு முன்பாக உள்நாட்டுப் போர்களில் பங்கெடுத்ததால் ஏற்பட்ட உடல்நல குறைபாடுகள், பலமுறை இவர் மீது பிரயோகிக்கப்பட்ட கொலை முயற்சிகள், அதுபோன்ற ஒரு முயற்சியின் போது இவரது தொண்டையில் சிக்கிய துப்பாக்கிக் குண்டு, அதை நீக்க ஒரு அறுவை சிகிச்சை, இன்னும் ஏராளமான காரணங்கள். புரட்சி மூலமாக 1917 இல் ஆட்சிக்கு வந்த லெனினின் உடல் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச் சியாக சீர்குலைவு அடைந்துகொண்டே போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை. (மேலும்.....)

ஆனி 28, 2012

Tamil who fled Sri Lanka dies in UK

A Tamil, who escaped alleged persecution in Sri Lanka and moved to the UK after gaining asylum in Germany in 1993, has died following a confrontation with a group of teenagers in the east Midlands town of Leicester. The local police have appealed for witnesses after launching a murder investigation into the death of Ponnuthurai Nimalaraja, 41, who died a week after he was found with serious head injuries sustained during the confrontation on June 9. Six boys, aged 15, 13 and four aged 14, and a girl aged 14 have been arrested as part of the murder investigation, and have been released on police bail, reports from Leicester said. The deceased's wife, Mathanika Nimalaraja, who is being supported by the local Tamil community, has urged local parents to come forward and help the investigation if they had any information about the incident. She told the Leicester Mercury, a leading local daily, that her husband faced persecution in Sri Lanka. She said: "He was beaten all over his body by soldiers from an army camp. He went to live in Colombo. "He left because it was not a safe place to live and was given asylum in Germany in 1993". Mathanika said her husband decided to move the family to England because he wanted the children to speak English, like most of the extended family, who had moved to Canada. Detective Constable Scott Cairns, a family liaison officer, said: "It is an appeal from the mother of two children left without their father to other parents to come forward and tell us what happened, to try and give this nice, hard-working family some resolution". (PTI)

ஆனி 28, 2012

ராஜீவ்காந்தி கொலையாளிகள்

ஆயுள் தண்டனையாக குறைக்கும் வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 10

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந் தியின் கொலையா ளிகளின் மரண தண் டனையை ஆயுள் தண்டனையாக மாற்று வது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி உச்ச நீதி மன்றத்தில் நடைபெறும் என சட்டத்தரணி சந்திர சேகரன் அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறி வாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முருகன், சாந்தன், பெரறிவாளன் ஆகியோரின் கருணைமனு ஜனாதிபதி மாளிகை செயலாளரிடம் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்காமல் மூவரின் கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி முடிவு எடுக்கலாம். இவ்வாறு சட்டத்தரணி சந்திரசேகர் கூறினார்.

ஆனி 28, 2012

கேரள கோயில் சொத்தில் தொடர்கிறது மர்மம்

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் இரகசிய அறைகளில் இருந்து புதையல்கள் எடுக்கப்பட்டு சுமார் ஓராண்டு ஆகியும் கோயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட புதையல்களின் மதிப்பில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. மேலும் திறக்கப்படாத இரகசிய அறைகள் குறித்த மர்மமும் இன்னும் விடை காணப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் புதையல்களில் கண்டெடுக்கப்பட்ட ஆபரண கற்களின் மதிப்பு குறித்து ஜெர்மன் குழுவினர் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வங்கி சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனி 28, 2012

ராகுலை மத்திய அமைச்சரவையில் இணைய கிருஷ்ணா கோரிக்கை

நாடு சந்தித்து வரும் பிரச்சினைகளை தீர்க்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மத்திய அமைச்சரவையில் சேர வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார். அவர் கூறுகையில், ராகுல் காந்தி அமைச்சரவையில் சேர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கை இன்னும் அப்படியே உள்ளது. நாங்கள் அவரும் அரசில் இணைய வேண்டும் என்ற நீண்ட நாட்களாகவே கோரி வருகிறோம். ஆனால் அவருக்கு இப்போதைக்கு அதில் விருப்பமில்லை என்று தெரிகிறது என்றார் கிருஷ்ணா.

ஆனி 28, 2012

205 மில்லியன் டொலர் கொள்ளை

13 நாடுகளைச் சேர்ந்த 24 கடனட்டை கொள்ளையர் கைது

கடன் அட்டை தகவல்களை கொள்ளை யிட்ட 13 நாடுகளின் 24 பேரை அமெரிக்க உளவுப் பிரிவான எப். பி. ஐ. கைது செய்துள்ளது. நான்கு கண்டங்களை உள்ளடக்கி எப். பி. ஐ. கடந்த இரண்டு ஆண்டுகள் மேற் கொண்ட விசாரணை மூலமே இந்த கடனட்டை கொள்ளையர் பிடிபட்டுள்ளனர். இணையத்தளத்தில் போலியான விற்பனை தகவல்களை கொடுத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்களது கடனட்டை இலக்கங்களை கொள்ளையிடும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான கொள்ளையில் ஈடுபட்ட 12 பேர் அமெரிக்காவிலும் மேலும் 6 பேர் பிரிட்டனிலும் பிடிபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என எப். பி. ஐ. குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒருவரது பெயர் இஸ்லாம். இவர் இணையதளத்தில் “ஜோஷ் தி காட்” என்ற பெயரில் சுமார் 50,000 கடனட்டை இலக்கங்களை கொள்ளையிட்டுள்ளார். இவ்வாறு சுமார் 400,000 கடனட்டை இலக்கங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பற்று மற்றும் கடனட்டை வைத்திருப்போரிடம் இருந்து சுமார் 205 மில்லியன் டொலர்கள் அளவு கொள்ளையிடப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

ஆனி 28, 2012

‘நாம் யுத்தத்திற்கு முகம்கொடுக்கும் தேசம்’ - சிரிய ஜனாதிபதி

“நமது நாடு யுத்தத்திற்கு முகம் கொடுக்கும் தேசம்” என சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அறிவித்துள்ளார். அஸாத் அரசுக்கு எதிராக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் எழுச்சி போராட்டம் தொடரும் நிலையில் அவர் முதல் முறையாக இவ்வாறான அறிவிப்பை வெளியிட் டுள்ளார். தனது புதிய அமைச்சரவை முன்னிலையில் உரையாற்றும் போதே அஸாத் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எனினும் இந்த யுத்தத்தில் வெற்றியை நோக்கி தாம் வழி நடத்துவதாக அவர் உறுதியளித்தார். “அனைத்து பாகங்களிலிருந்து நாம் யுத்தத்தை சந்திக்கும் தேசத்தில் வாழ்கிறோம். இந்த யுத்த சூழலில் அனைவரும் யுத்தத்தை வெல்வதற்காக செயற்பட வேண்டும். நாம் அனைத்து நாடுக ளுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகிறோம். ஆனால் எமக்கு எதிராக பொய்யான தகவல்கள் வழங்கப்படுவதை நாம் உணர வேண்டும்” என்று பஷர் அல் அஸாத் தனது உரையில் குறிப்பிட்டார். எனினும் சிரியாவில் தொடர்ந்தும் மோதல்கள் நீடிப்பதோடு, சிரியா துருக்கி விமானத்தை சுட்டுவீழ்த் தியதைத் தொடர்ந்து துருக்கி எல்லைப் பகுதிகளில் அந்நாட்டு இராணுவம் உஷார்நிலை யில் வைக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஆனி 28, 2012

தெரிவுக்குழுவில் இணைவதா ? இல்லையா ? தமிழ்க் கூட்டமைப்பு விரைவில் இறுதி முடிவு

இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பான விஷேட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதா ? இல்லையா? என்பது பற்றி கூட்டமைப்பின் அடுத்த சந்திப்பில் பேசப்படும் என்று அக் கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம். பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தனிப்பட்ட பயணமாக இந்தியா சென்றிருந்த  தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ள நிலையில் அவரது இந்திய பயணத்தின் பின்னரான கூட்டமைப்பின் முதலாவது சந்திப்பிலேயே மேற்படி  விடயம்  பற்றிப் பேசப்படும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி. குறிப்பிட்டார். (மேலும்.....)

ஆனி 27, 2012

ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் நடராஜா மஹேந்திரன் கனடாவில் கைது

எம்வீ சன் சீ கப்பல் மூலம் 492 இலங்கை அகதிகளை கனடாவுக்குக் கடத்திய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோயல் கனேடியன் மவுன்டன்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடராஜா மஹேந்திரன் என்ற நபர் ரொரொன்டோ - பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கனேடிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் இலங்கையில் இருந்து சென்ற விமானத்தில் இருந்து வெளியில் வந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார். 2010 ஓகஸ்ட் மாதம் பிரிட்டிஸ் கொலம்பியா வழியாக கனடாவை சென்றடைந்த எம்வீ சன் சீ கப்பலில் அகதிகளை கடத்தியதாக நடராஜா மஹேந்திரன் உள்ளிட்ட அறுவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்கடத்தல் குறித்த விசாரணைக்கு தாய்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நோர்வே உள்ளிட்ட நாட்டு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் நால்வர் தமது பிடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கனடா கூறியுள்ளது. ஒருவர் மீது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிரான்ஸில் சரணடைய முயற்சித்து வருவதாகவும் கனடா தெரிவித்துள்ளது.

ஆனி 27, 2012

மற்றுமொரு படகு கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் விபத்து

அகதிகளை ஏற்றிச் மற்றுமொரு படகு கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 150 க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணியில் அவுஸ்திரேலிய கடற்பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதோடு சேத விபரங்கள் பற்றி இதுவரை அறிவிக்கவில்லை. இதேவேளை கடந்த 21 ஆம் திகதி 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ___

ஆனி 27, 2012

பொருளாதார வீழ்ச்சியும் மக்கள் எழுச்சியும்!

(க.ராஜ்குமார்)

முதலாளித்துவ வளர்ச்சி என்பது அதன் அழிவினை நோக்கி என்றார் காரல் மார்க்ஸ். இன்றைய நிகழ்வுகள் இது உண்மை என்பதையே நமக்கு உணர்த்துகின்றன. 1992-ல் சோவியத் ரஷ்யாவின் சிதைவுக்குப் பிறகு, முதலாளித்துவத்திற்கு மாற்று ஏதும் இல்லை என்று உரத்த குரலில் பலர் கொக் கரித்தனர். முதலாளித்துவமே இறுதி கட்டம்; இதுவே முடிவானது என்றனர். உலகெங்கும் சோசலிசத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த கட்சிகள் கூட தங்களை கம்யூனிஸ்டுகள் அல்லது சோசலிஸ்டுகள் என்று சொல்ல அஞ்சின. கட்சியின் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள முடிவு செய்தன. இருபது ஆண்டு கள் கடந்த நிலையில் முதலாளித்துவ நாடு களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி யும், அதிலிருந்து மீள முடியாமல் அவை தடு மாறுவதும் இனி முதலாளித்துவம் நீடித் திருக்க முடியாது என்பதையே நமக்கு உணர்த் துகின்றன. 21ஆம் நூற்றாண்டு என்பது சோச லிச அமைப்பிற்கு உலகை கொண்டு செல்வ தற்கான ஆண்டு என்பதில் ஐயமில்லை. உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகொண்டு நடத்தி வரும் போராட்டங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன. (மேலும்.....)

ஆனி 27, 2012

இவர் இந்திய நிதியமைச்சரானால்

ஏ.கே.கான்

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. சர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில் நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் நிலையில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார். இந்தப் பதவியைப் பிடிக்க மத்திய அமைச்சர்களில் மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளிடையே கூட பெரும் போட்டி நடந்து வருகிறது. நிதித்துறையில் பெரும்மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்  முடுக்கி விடுவதோடு, அந்நிய முதலீட்டை இழுத்து வரும் திறமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதோடு ரூபாயின் மதிப்பு சரிவதைக் கட்டுப்படுத்தும் திறமையும் கொண்ட ஒருவர் தான் இப்போதைய தேவை. அதே நேரத்தில் நிதித்துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் காங்கிரஸின் ஓட்டு வங்கியும் பாதிக்கப்படாத வகையில் நேக்கு போக்காக அரசியலையும் நிதி விவகாரங்களையும் கவனமாகக் கையாளும் திறன் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார். அதில் முதல் சாய்ஸ் பிரதமர் மன்மோகன் சிங் தான். ஆனல், பிரதமர் பதவியோடு நிதியமைச்சர் பொறுப்பையும் வகிக்க முடியாத அளவுக்கு அவருக்க ஏராளமான பணி நெருக்கடி. இதனால் வேறு ஒருவரை நிதியமைச்சராக்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது. (மேலும்.....)

ஆனி 27, 2012

நகரங்களுக்கும் ஆன்மா உண்டு

அண்மையில் அபுதாபி நகருக்குச் சென்றிருந்தேன். கட்டாரை விட மிகவும் வேறுபட்டு நிற்கிற நகரம் என்பது தெளிவாகத் தெரிகிறது. முக்கியமாக அங்கு உருவாக்கி வைத்திருக்கிற பசுமைப் பகுதிகள். சாலை நெடுகிலும் மரங்கள், பசும் புல்வெளிகள் என்று அமர்க்களமாக இருக்கிறது. பல அழகான விடயங்கள் இருக்கின்றன. வீடுகள் மிட்டாய்க் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சதுர சதுரமான மிட்டாய்களைப் போலில்லாமல் நேர்த்தியான அமைப்பைக் கொண்டிருக்கின்றன. சாலைகளும் அதிக நெருக்கடி இல்லாமல் போக்குவரத்து சுணக்கங்கள் இல்லாமல் இருக்கின்றன. இந்த நகரத்தைப் பார்த்தபின் தான் டோஹா இன்னமும் வளருகின்ற கட்டத்திலிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அங்குள்ள சாலைகளில் பிக்-அப் டிரக்குகள் இல்லை என்பது ஆச்சரியமான விடயம். கட்டுமானப் பணிகள் எல்லாம் முடிந்து விட்ட நகரம் என்பதை அது உணர்த்தியது. டோஹா சாலைகளில் எரிச்சலை மூட்டுகின்ற ஒரு வாகனம் இந்த பிக்-அப் டிரக்குகள். (மேலும்.....)

ஆனி 27, 2012

கியூபாவின் பொது சுகாதார திட்டத்தில் யோகா!

கியூபாவின் பொது சுகாதார திட்டத்தில் யோகவை சேர்க்கப்பட்டுள்ளது. மனிதனின் நல்வாழ்வுக்கு யோகாஇயற்கையானஉடற்பயிற்சியாக இருந்து வருகிறது. இதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தை பேன முடிகிறது என கியூபா கூறியுள்ளது. கியூபா என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது, நம் மனதிற்குள் ஓடுவது பிடல் காஸ்ட்ரோ மற்றும் புரட்சி. அடக்குமுறைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்களை ஒன்றுதிரட்டி பல புரட்சிகளை காஸ்ட்ரோ உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்டனர் என்பது தான். இதனால் அந்நாடு உலக மக்களிடையே புரட்சியாளர்கள் நாடு என்றே அடைமொழியோடு அழைக்கப்படுகிறது. தற்போது அந்நாட்டு மக்கள், ஆரோக்கியமான வாழ்விற்காக இயற்கையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். (மேலும்.....)

ஆனி 27, 2012

சிரியா பிரச்சனையில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் - ரஷ்யா

சிரியா பிரச்சனையில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று ரஷ்யா வேண்டுகோள் விடுத் துள்ளது. சிரியா நாட்டில் அரசு ஆதரவுப் படைகளுக்கும், கலகக்காரர்களுக்கும் உள் நாட்டு போர் நடந்து வரு கிறது. இதனால் சிரியா மக் கள் உயிரை காக்க அண்டை நாடான துருக்கிக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகிறார்கள். அகதிகள் பிரச்சனை சிரியாவுக்கும், துருக்கிக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை துருக்கி நாட்டு விமானம் ஒன்று சிரியா எல்லைக்குள் பறந்தது. அந்த விமானத்தை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு துருக்கி கடும் எதிர்ப்பை தெரி வித்தது. சர்வதேச வான வெளியில் பறந்த தங்கள் விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தி விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது. இது பற்றி விவாதிக்க நேட்டோ நாடுகள் அமைப்பு விதி 4-ன் கீழ் வட அட்லாண்டிக் ஒப் பந்தபடி சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று துருக்கி கோரியது. (மேலும்.....)

ஆனி 26, 2012

வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள்களின் தியாகிகள் தின செய்தி!

தோழர் பத்மநாபா அவர்கள் நடைமுறையில ஈழமக்களுக்கான புரட்சிகர விடுதலைப் போராட்டத்தோடு, தன்னை முழுமையாக அர்ப்பணித்தவரென்றாலும் அவர் ஈழத் தேசியவாதம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் தன்னை அடைத்து வைத்திருந்தவரல்ல என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஈழமக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவாத அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு உடனடியாக முடிவுகட்டவேண்டுமென்பதில் குறியாக இருந்தவர் எனினும் அவர் இலங்கை மக்கள் அனைவரையும் நேசித்தார்: இலங்கை தழுவிய ஒரு சோசலிசப் புரட்சியையே அவர் தனது நீண்டகால அபிலாஷையாகக் கொண்டிருந்தார். அவர் ஒரு சர்வதேசிய புரட்சிவாதி: உலகம் முழுவதுவும் அனைத்து மக்களும் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் பொருளாதார சுரண்டல்களிருந்தும் அரசியல் அதிகார அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்பதில் அவாக் கொண்டிருந்தார். அதனால் உலகம் முழுவதிலும் உள்ள முற்போக்கு தேசிய விடுதலை இயக்கங்களோடும் புரட்சிகர இயக்கங்களோடும் ஒருங்கிணைந்து செயற்படுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். (மேலும்.....)

ஆனி 26, 2012

அரசியல் தேவைக்காக தமிழினி விடுதலை செய்யப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை  - முரளிதரன்

அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக தமிழினி விடுதலை செய்யப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் இலங்கை அரசு தனது வெளிப்படைத் தன்மையை சர்வதேசத்துக்கு காட்டும் நடவடிக்கையே அது என்றும் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழினிக்கு அளிக்கப்படும் புனர்வாழ்வை ஏனைய அரசியல் கைதிகளுக்கும் அளிக்காமல் இருக்கும் அரசின் அணுகுமுறைக்கு அரசியல் நோக்கங்கள் தான் காரணம் என்று ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு முரளிதரன் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

ஆனி 26, 2012

இலங்கையிலும் அப்பிள் உற்பத்தி செய்த விவசாயி

கொத்மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வெளிநாட்டு அப்பிள் இனமொன்றை உள்நாட்டில உற்பத்தி செய்து வெற்றி கண்டுள்ளார். திஸ்பனை என்ற இடத்தைச் சேர்ந்த யூ.ஜீ.சோமதாச என்பவரே இம்முயற்சியில் வெற்றி கண்டுள்ளார். சுமார் நான்கு வருடங்களில் இவ் இலக்கை எய்தியதாக அவர் தெரிவித்துள்ளார். சுமார் ஆறு வருடங்கள் பழைமையான செடிகளும் இருப்பதாக அவர் கூறுகிறார். தனியாக நாற்று மேடைகளை அமைத்துள்ளதாகவும் இறக்கு மதி செய்யும் வெளி நாட்டு எப்பலுக்கு சரி நிகராக இவை இருப்பதகவும் அவர் தெரிவிக்கின்றார். வெளிநாட்டு அப்பிள் வித்துக்கள் மூலமே இவற்றை உற்பத்தி செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனி 26, 2012

ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவரை கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளனர். ரொரன்டோ விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  492 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச் சாட்டின் பேரிலேயே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். நடராஜா மகேந்திரன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டு சன் சீ கப்பலின் மூலம் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை கனடாவிற்கு கடத்தியதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவராக மகேந்திரன் திகழ்கின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் நான்கு பேர் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்.....)

ஆனி 26, 2012

வெளியேறு,வெளியேறு இராணுவமே வெளியேறு

வடக்கு,கிழக்கில் காணி சுவீகரிப்பில் இராணுவமும் அரசாங்கமும் ஈடுபடுவதாகத் தெரிவித்தும் அவ்வாறான நடவடிக்கைகளைக் கண்டித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முன்றிலில் ஆர்ப்பாட்டமொன்று இன்று பகல் இடம்பெற்றது. 'எமது இடங்களையும் பொது நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம்'என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எங்கள் நிலம் எமக்கு வேண்டும், எங்களுடைய வீட்டுக்குச் செல்ல விடு, வெளியெறு வெளியேறு இராணுவமே வெளியேறு, முறிகண்டி மக்களுக்கு என்ன நடந்தது?, முறிகண்டி மக்கள் எங்கே?, யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் இன்னும் எம் முற்றத்தில் இராணுவம், ஆடாதே ஆடாதே, இராணுவ ஆக்கிரமிப்பு நிலைக்காது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நின்றனர்.

ஆனி 26, 2012

லண்டனில் தியாகிகள் தின நிகழ்வுகள் இடம் பெற்றன

ஆனி 26, 2012

மன்னார் ஆயர் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

மன்னாரில் அண்மைக்காலமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்டுவரும் இடைவெளியை சீர்செய்யும் நோக்கில் மன்னார் ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் முஸ்லிம் சமய, சமூகத் தலைவர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களுக்கி டையில் நட்புறவையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் ஆரம்ப கட்ட முயற்சியாக இந்த சந்திப்பு அமைந்ததுடன் மன்னார் ஆயரில்லத் தில் நடந்த இச் சந்திப் பினை மன்னார் சர்வ மதப் பேரவை ஏற்பாடு செய்திருந்தது. மன்னாரில் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த மக்கள் மன்னாரில் இனங்களுக் கிடையில், மதங்களுக்கிடையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து மிகுந்த வேதனை கொண்டுள்ளனர். இச்சந்திப்பு முதற் கட்ட சந்திப்பாக அமைந்தது. எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். அடுத்த கட்ட சந்திப்பில் அமைச்சர் றிசாட் பதியுதீனையும் அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

ஆனி 26, 2012

முல்லைத்தீவு பகுதியில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட வாகனங்கள் , ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அம்பலவன்பொக்கணைப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாப்பான முறையில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் ஒரு தொகுதி ஆயுதங்களை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளார்கள். விசேட அதிரடிப்படையினர் கடந்த 20 ஆம் திகதி மேற்கொண்ட நடவடிக்கை போதே இத்தகைய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகநேசன் தெரிவித்துள்ளார். இதன்போது பின்வரும் இலக்கங்களைக்கொண்ட டிப்பர் வாகனங்கள் மூன்று, என்சி 2636 ,என்பி 1358, ஆர்பி 4397 ஆகிய இலக்கங்களைக்கொண்ட வாகனங்கள், உழவு இயந்திரம், தேக்கு மரங்கள் 104 மற்றும் கைக்குண்டுகள், 124 மோட்டர் குண்டுகள் ,135 82 இலக்கக் குண்டுகள், 37 வெடி மருந்து ,50 கிலோ 7.62 துப்பாக்கி ரவைகள், 431 12.7மில்லி மீற்றர் ரவைகள் 14 120 மில்லிமீற்றர் மோட்டர் குண்டுகள் 12 உட்பட மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ___

ஆனி 26, 2012

வடக்கு, கிழக்கில் புதிய சரணாலயங்கள், பூங்காக்களை அமைக்கத் திட்டம்

வடக்கு, கிழக்கில் புதிய தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை அமைப்பது பற்றி அரசாங் கம் ஆராய்ந்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்து ள்ளது. யுத்தம் முடிவடைந்து நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வலயங்களில் வடக்கு, கிழக்குப் பகுதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில் புதிதாக நான்கு வலயங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்தது. வனஜீவராசிகள் திணைக்களம் இலங் கையை 7 வலயங்களாகப் பிரித்திருந்தது. யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வடமத்திய மாகாண வலயத்திற்குள்ளேயே உள்ளடக்கப்பட்டி ருந்தன. நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப் பட்டிருக்கும் சூழ்நிலையில் வடக்கு, கிழக்கில் புதிதாக நான்கு வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து நாடு முழுவதிலும் மொத்தமாக 11 வல யங்கள் உள்ளன. கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளிலேயே புதிதாக நான்கு வலயங்கள் உருவாக்கப்பட்டி ருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் தொடர்பாடல் அதிகாரி கூறினார். இந்த நிலையில் வடபகுதியில் புதிதாக தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் அமைப்பது பற்றி ஆராய்ந்து வருகின்றோம். சுண்டிக்குளம், மடுவீதி மற்றும் ஊர்கா வற்துறை ஆகிய இடங்களில் தேசிய பூங்காக்களை அமைப்பது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

ஆனி 26, 2012

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, நடைமுறைக்கேற்றவை அமுல்

அமெரிக்காவிடம் எவ்வித இரகசியங்களையும் கையளிக்கவில்லை

கற்றுக் கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுலாக்கு வது பற்றிய எந்தவொரு ஆவணத்தையும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனிடம் சமர்ப்பிக்கவில்லை. கடந்த மே மாதத்தில் தாங்கள் வொஷிங்டனுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது தானோ வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்களோ இலங்கையில் வெளி வரும் ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டது போன்று சமர்ப் பிக்கவில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று நிராகரித்தார். இதேவேளை, பேராசிரியர் ஜீ.எல். பீரிசும் தொடர்ச்சியாக பல தடவைகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடை முறைப்படுத்துவது பற்றிய எந்தவொரு ஆவணத்தையோ இரகசித்திட்டத்தையோ சமர்ப்பிக்கவில்லையென்று திருமதி கிளின்டனை சந்தித்து நாடு திரும்பிய பின்னர் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்.....)

ஆனி 26, 2012  

யாழ். குடாவில் 4865 குடும்பங்கள் இரு வாரங்களில் மீள்குடியேற்ற திட்டம்

யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டு மீள்குடியேறாதவர்களை இரண்டு வாரங்களில் மீள்குடியேற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டபோதும் பல இடங்களில் பலர் மீள்குடியேறாமல் உள்ளனர். இந்தப் பிரதேசங்களில் மக்கள் மீள்குடி யேறாதிருப்பதற்கான காரணங்கள் பிரதேச செயலாளர்களிடம் கேட்டறிந்து கொள்ளப் பட்டது. இப்பகுதி மீள்குடியேற்றங்களில் காணப்படும் தடைகளை நிவர்த்தி செய்வது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. மீள்குடியேற்றத்துக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து இரண்டு வாரங்களுக்குள் இப்பகுதி களில் மீள்குடியேற்றம் பூர்த்திசெய்யப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அடிப் படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவிகள் வழங்கப்படும் என்றும், வீடு கள், மின்சார இணைப்புக்கள், பாடசாலை கள், பொதுக் கட்டடங்கள் உள்ளிட்ட உட்கட்டுமான புனரமைப்புப் பணிகளை துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண் டும் என்றும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.

ஆனி 26, 2012

சுவிஸிலுள்ள பேர்ன்மாநகரில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது

 

ஆனி 26, 2012

உண்டியலைக் குலுக்க மீண்டும் வந்துட்டாங்கள்

நிதி சேர் இரவு விருந்துநாள் 

யூன் 30 (சனிக்கிழமை) 2012நேரம் - மாலை 6.00 மணி

இடம் - கனடா சிறீ அய்யப்பன் கோயில்

635 Middlefield Road

Scarborough (Finch/Middlefield)

சிறப்பு விருந்தினர்கள்

திரு சிவஞானம் சிறிதரன்,     நா.உ.  ததேகூ

திரு சீ. யோகேஸ்வரன்,           நா.உ. ததேகூ

அன்பளிப்பு :  $75

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு (கனடா)

ஆனி 26, 2012

 

திருமுறிகண்டியில் பொது மக்களை அச்சுறுத்துவதற்கு ஜே.வி.பி. கண்டனம்

ஆக்கிரமிப்புக்கெதிராக இன்று திருமுருகண்டியில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கடந்த சில தினங்களாக அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை ஜே.வி.பி. வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு மக்கள் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட முடியாத அதேவேளை சொந்த இடங்களில் குடியிருக்க முடியாதுள்ளனர். அதாவது கடந்த காலங்களில் சகோதரத்துவத்துக்கான மக்கள் அரண் அமைப்பினால் வவுனியாவில் வட கிழக்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுக்கப்பட்டது. அது போல் யாழ்ப்பாணத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டமும் இதேபோன்று தடுக்கப்பட்டது. (மேலும்.....)

ஆனி 26, 2012

பொருளாதார மீட்சிக்கு வெளிநாடுகளின் உதவி சாத்தியமில்லை - இந்தியப் பிரதமர்

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்க முடியாது. நாமே சில கடும் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மெக்ஸிகோவில் ஜி – 20 நாடுகள் மாநாட்டிலும், பிரேஸிலில் ரியோ பிளஸ் – 20 மாநாட்டிலும் பங்கேற்றுவிட்டு சனிக்கிழமை இரவு நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியது, இந்தியா போன்ற நாடுகளின் பிரச்சினைக்கு சர்வ தேச யோசனைகள் தீர்வாக இருக்காது. இதுபோன்ற கடினமான காலங்களில் நாம் வெளிநாடுகளின் உதவியை எதிர் பார்க்க முடியாது. நமது பொருளாதாரத் திட்டங்களை நாம் தான் வகுக்க வேண்டும். ஒட்டுமொத்த உள்நாட்டு உறுபத்தி 9 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக குறைந்தது. இந்தச் சரிவிலிருந்து மீள நமக்கு 2 ஆண்டுகளானது. ஆனால் தொடர்ந்து அதன்பின் ஐரோப் பிய மண்டலத்தில் பொருளாதாரத் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் செய் யப்பட்டிருந்த முதலீடுகளை விலக்கிக் கொண்ட முதலீட்டாளர்கள், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். இதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துள்ளது என்றார் பிரதமர்.

ஆனி 26, 2012

ரெலோ இயக்கத்தை மீளமைக்க முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அதில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உயர் பீடம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதென அக் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர் பீட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் 1983 ஆம் ஆண்டு  கலவரத்தில்  வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கத்துரை மற்றம் குட்டி மணி உட்பட 53 பேரின் ஞாபகார்த்த கூட்டத்தை ஜூலை 25 ஆம் திகதி மன்னாரில் நடத்துவதெனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக அவ் இயக்கத்தின் அரசியல் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தற்போது முல்லைத்தீவு மற்றும் வட மராட்சி கிழக்கு பகுதிகளில் தீவிரமடைந்துவரும் நில மற்றும் கடல் ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டங்களை  கட்சித் தலைவர்கள் முன்னின்று நடத்துவதெனவும் இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு முன்னணியாக பதிவு செய்வதனை விரிவுபடுத்துதல் மற்றும் ரெலோவின்  தேசிய மகாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ஆனி 26, 2012

பிரணாப் முகர்ஜி இன்று ராஜிநாமா 40 வருட அரசியல் பயணத்திற்கு முடிவு

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது நிதியமைச்சர் பதவியை இன்று இராஜிநாமா செய்கிறார். இதன் மூலம் நீண் நெடிய அவரது அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறது. இராஜிநாமா செய்த பின்னர் அவர் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்வரும்  28 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார் பிரணாப் முகர்ஜி. 28 ஆம் திகதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதற்கு வசதியாக அவர் அரசியலை விட்டும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் இன்று விடை பெறுகிறார். (மேலும்.....)

ஆனி 25, 2012

ஐயாவுக்கு அவசர கடிதம்

வணக்கம் ஐயா...!

எங்க நலம் பற்றி சொல்வதற்கு ஒன்னும் இல்ல, நீங்க நலமா? உங்க நலத்திற்கு என்ன குறைவு... நல்லா ஏசி ரும்ல குளுகுளுனு இருப்பிங்க, நாங்க ஓசி ரும்ல ஒதுங்கி கிடக்கிறம்...

நாங்க நுவரெலியா டிக்கூட்டில் தோட்ட மக்கள்... உங்களுக்கு எங்களை ஞாபகம் இருக்கிறதா என்று தெரியல, ஆனால் எங்களுக்கு உங்களையும் உங்க முகத்தையும் அப்படி லேசா மறந்திட முடியல.

தவறி உங்க முகத்த நாங்க மறந்தாலும் நீங்க சொன்னிங்களே அந்த சொல்லு... அதான் நீங்க கொடுத்த வாக்குறுதிகளை சொன்னோம், அத மறக்கவே முடியாதுங்க...

அது எப்படிங்க நம்ம மலையக தலைமைகளுக்கு மட்டும் இது முடியுது?

(மேலும்.....)

ஆனி 25, 2012

வேலணை சாட்டி கடற்கரை துப்புரவில்லை சுற்றுலாப் பயணிகள் பெரும் அசௌகரியம்

யாழ்ப்பாணம் வேலணை சாட்டி கடற்கரை துப்புரவில்லை எனவும் அங்குள்ள உடை மாற்றும் அறைகள் துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். தீவுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய கடற்கரையாக காணப்படும் சாட்டி கடற்கரை வேலணை பிரதேச சபையின் பராமரிப்பில் உள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகள் வரும் வாகனங்களுக்கு தரிப்பிட பணம் வசூலிக்கப்பட்டும் வருகின்றது. இப் பணம் கடற்கரை பராமரிப்புக்கென தெரிவிக்கப்பட்டபோதிலும் கடற்கரை கழிவுப் பொருட்கள் நிறைந்தும் கடற் தாவரங்களால் நிரம்பியும் காணப்படுவதுடன், பெண்கள்  உடை மாற்றும் அறை துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே இப் பகுதியை மேலும் துப்புரவாக பேணும் சந்தர்ப்பத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் பிரதேசமாக மாற்ற முடியுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆனி 25, 2012

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்க முன்வந்த உதவியை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு!

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்க முன்வந்த உதவியை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், இந்நடவடிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் கீழ் கையாள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி உட்பட வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா முன்னெடுக்கத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு இந்தியா முன்வந்துள்ளபோதிலும், இதற்கான ஒப்பந்தம் இன்னமும் கையெழுத்தாகவில்லை. எவ்வாறாயினும் இந்தியாவுடனான கூட்டு முயற்சியின்றி பலாலி விமான நிலையத்தை புனரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. (மேலும்.....)

ஆனி 25, 2012

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அபு ஹம்சா கைது!

மும்பையில் நடந்த கொடூர தாக்குதலில் சம்பந்தப்பட்ட முக்கிய சதிகாரனை இன்று சிறப்பு படை போலீசார் கைது செய்தனர். இவன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவன் என்று தெரிய வந்துள்ளது. மும்பை தாஜ் ஓட்டல் மற்றும் முக்கிய இடங்களில் கடந்த 2008 நவ 26 ம்தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி மற்றும் குண்டுகள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தினர். 164 பேர் கொல்லப்பட்டனர். 300 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் ஈடுபட்டவர்களில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். இந்நிலையில் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் சையீது ஜெயுபுதீன் என்ற அபு ஹம்சா என்பவன் பிடிபட்டுள்ளான். இவன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்து பாகிஸ்தான் நாட்டில் வசித்து வந்தவன். மும்பை தாக்குதல் நடந்த போது பாகிஸ்தானில் இருந்தபடி தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்தவன் என்று தெரிய வந்துள்ளது. ஹம்சாவுக்கு பெங்களூரூ ஸ்டே‌டியம் தாக்கப்பட்ட வழக்கு, குஜராத்தில் நடந்த சில வன்சம்பவங்களுக்கும் இவனுக்கு தொடர்பு உள்ளளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இவனை கைது செய்திருப்பது மூலம் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. பல முக்கிய சாட்சியங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குஜராத்தில் சில வழக்குகளிலும் தொடர்புடைய அபு தற்போது கோர்ட் உத்தரவுப்படி 15 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனி 25, 2012

இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்துவதாயின் 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்த வேண்டும் - ஐ.தே.க

13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாது வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைத்த பெருமை பிரபாகரனுடன் கூட்டுச் சேர்ந்த உங்கள் தலைவர் பிரேமதாஸாவே சாரும். டாக்ரர் சற்று நினைவுபடுத்தி பாருங்கள் - அரசியல் விமர்சகர்

இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து உண்மையானால் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி அதனை இரத்து செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. (மேலும்.....)

ஆனி 25, 2012

சுவிஸிலுள்ள பேர்ன்மாநகரில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது

24.06.2012 அன்று மாலை 15.00 மணியிலிருந்து மாலை 17.00 மணிவரை சுவிஸிலுள்ள பேர்ன்மாநகரில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தோழர் இராஐன் அவர்கள் நிகழ்விற்க்கு தலைமை தாங்கினார். இதுவரை காலமும் மக்களின் விடியலுக்காக மரணித்த தோழர்களுக்கும்இ பொதுமக்களுக்கும்இசக அமைப்பின் தோழர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களான புளொட், ஈ.என்.டி.எல்.எவ் தோழர்கள் மற்றும் சமூகஅக்கறையுள்ளவர்களும் பங்குபற்றியிருந்தனர் .(மேலும்.....)

ஆனி 25, 2012

லண்டனில் இன்று தியாகிகள் தின நிகழ்வுகள் இடம் பெற்றன

இன்று மாலை லண்டன் அல்பெர்டன் பகுதியில் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தியாகிகள் தின நிகழ்வுகள் தோழர் சிராப் தலைமையில் இடம்பெற்றது.  திருமதி ரவி தேவி அவர்களின் விளக்கேற்றலுடனும், இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடனும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. நிகழ்வின் சிறப்பு பேச்சாளர் தோழர் சிவலிங்கம், இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏட்ப்படுத்தப்பட்டு, இருபத்தி ஐந்து வருடங்கள் பூர்த்தியாக வுள்ள நிலையில், இலங்கையின் சமகால நிலைமைகளையும், அன்று மேற்கொள்ளப்பட்ட அதிகார பரவலாக்கல் தொடர்பான முற்ச்சிகள் எவ்வளவு தீர்க்கதரிசனத்துடன் மேற்கொள்ள பட்டிருக்கின்றன என்ற பொருளில் ஆய்வுரை ஒன்றை நிகழ்த்தினார். (மேலும்.....)

ஆனி 25, 2012

மன்னார் முதல் வவுனியா மாவட்டம் வரை குடிநீர் விநியோகத்திட்டங்கள்

மன்னார் முதற் கொண்டு வவுனியா மாவட்டம் வரையான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீரியல்வள அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நேற்றிரவு அக்குறணை தெழும்புகஹவத்தை என்ற இடத்தில் 24 கோடிரூபா செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டத்தை அடுத்து இடம் பெற்ற பொதுக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். சுமார் 50 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் குடிநீர் வசதி செய்து தரும்படி அக்குறணை தெழும்புகஹவத்தைப் பிரதேச மக்கள் வேண்டுகோள் வீடுத்து வந்த போதும் அக் கனவு இன்று நிறைவேறி உள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே முஸ்லிம்களை 100 சதவீதம் கொண்ட இப்பகுதிக்கு எதிர்வரும் றமழான் மாதம் முதல் போதியளவு குடி நீர் வசதி செய்து தரப்படும் என்றார். பிரதி அமைச்சப் பைசர் முஸ்தபாவும் உரையாற்றினார்.பல வருடங்களாக வீழ்த்த முடியாதிருந்து அக்குறணைப் பிரதேச சபையை ஐ.ம.கூட்டணி இம்முறை கைபற்றியதன் விளைவாக இக்குடி நீர் விநியோகம் இலகுவாகி உள்ளதாகவும் கூறினார்.

ஆனி 25, 2012

சிவசங்கர் மேனன்  இலங்கை செல்கிறார்

இலங்கை அரசு சமீப காலமாக இந்தியாவுக்கு எதி ரான நிலை எடுத்து வருவது குறித்து விவாதிக்க இந்திய பாதுகாப்புத்துறை ஆலோ சகர் சிவசங்கர் மேனன் இந்த வார இறுதியில் கொழும்பு செல்வார் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவின் கவலை யை கடுமையான முறையில் சிவசங்கர் மேனன் கூறக் கூடும் என்று ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை கூறி யுள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷே, பாதுகாப்புத்துறை அமைச் சர் கோத்தபய ராஜபக்ஷே ஆகியோரை சிவசங்கர் மேனன் சந்திக்க உள்ளார். சில இலங்கை அமைச்சர் கள் இந்தியாவுக்கு எதிரான நிலை எடுத்து பேசிவருவது குறித்தும் இலங்கைத்தமிழர் கள் மறுவாழ்வு பணிகளில் ஏற்பட்டுள்ள சுணக்கம் குறித்தும் சிவசங்கர் மேனன் விவாதிக்க உள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவை பிரதமர் மன்மோகன் சந்தித் துப் பேசினார். கடந்த ஏப் ரல் மாதம் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை யில் சுற்றுப்பயணம் மேற் கொண்டது. எனினும் இலங்கைத் தமிழ்மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில் லை என்று இந்தியா கருதுவ தாக சண்டே டைம்ஸ் பத் திரிகை கூறுகிறது. இது குறித்து சிவசங்கர் மேனன் இந்தியாவின் கவலையை மட்டுமின்றி அதிருப்தியை யும் தெரிவிப்பார் என்று அந்த ஏடு கூறியுள்ளது.

ஆனி 25, 2012

தெல்லிப்பழை பொலிஸாரால் நடமாடும் சேவை

தெல்லிப்பழை பொலிஸாரால் நடமாடும் சேவை சனிக்கிழமை மல்லாகம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நடமாடும் சேவையை காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் வலி. வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன், சுகாதார வைத்தியதிகாரி நந்தகுமார், தெல்லிப்பழை பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலர் சாந்த மோகன் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இடம்பெற்ற நடமாடும் சேவையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை , பொலிஸ் மருத்துவப் பிரிவு ஆகியவற்றினால் பொது மக்களுக்காக மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டதுடன் தேசிய அடையாள அட்டை, சாhதி அனுமதிப்பத்திரம் மற்றும் சிறு குற்றச் செயலகள் சம்பந்தமாக பொலிஸ் பதிவுகள் இடம் பெற்று முறைப்பாடுகள் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஆனி 25, 2012

பிரபாகரன் வாழ்கிறார், அகதிகள் மரணிக்கின்றனர்

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து தங்களை வெளியேற்றுமாறு அங்குள்ள முகாம் வாசிகள் கடந்த ஒருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எட்டு பேர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழம் பெற்றுக்கொடுப்போம் என்ற முழக்கத்தின் கீழ் அரசியல் இலாபம் ஈட்டும் தமிழ் நாட்டின் தமிழ் இனவாதக் கட்சிகள் முகாம்களில் வதைக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறித்துக் கண்டுகொள்வதில்லை. இன வெறுப்புணர்வைத் துண்டும் வகையில் நாம் தமிழர் கட்சி ஆவணம் ஒன்றை வெளியிட்டுருந்தது. ஈழத் தமிழர்களின் இரட்சகர்களாகத் தம்மைப் புனைந்துகொள்ளும் இவர்கள் தமிழகம் எங்கும் உள்ள முகாம்களில் வாழும் அகதிகளின் அவலம் குறித்து வாய்திறப்பதில்லை. (மேலும்.....)

ஆனி 25, 2012

CITY PALITANA

PALITANA IS A CITY IN BHAVANGAR DISTRICT OF STATE OF GUJARAT, IN INDIA. IT IS SITUATED ABOUT FIFTY KILOMETERS SOUTHWEST OF BHAVNAGAR CITY.

ஆனி 24, 2012

தமிழ் மக்களது காணிகளில் இராணுவம் அத்துமீறி முகாமா?

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களது காணிகளில் இராணுவத்தினர் அத்துமீறிக் குடியேறி முகாம்களை ஏற்கனவே அமைத்துள்ள தாகவும், தந்போதும் மினி இராணுவ முகாம்களை அமைத்து வருவதாகவும் பொதுவானதொரு குற்றச்சாட்டு பரவலாக எழுந்த வண் ணமுள்ளது. நெருப்பில்லாது புகைவருமா என்பது போல இந்தக் குற்றச் சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பி னர்கள் தமது தனிப்பட்ட பிராசாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொய்யான இந்தக் குற்றச்சாட்டிற்கு இப்போது கை, கால், மூக்கு வைத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழ்க் கூட்டமைப் பின் கைப்பொம்மைகளாக இருந்த பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வும் பிரசாரம் செய்துவரும் யாழ். பத்திரிகைகள் சில இவ்விடயத்தை மக்களிடையே படையினர் தொடர்பாக நஞ்சை விதைப்பது போல செய்திகளை வெளியிட்டுவருகிறது. (மேலும்.....)

ஆனி 24, 2012

வெளி மாநிலத்தவரிடம் உழைப்புக் கொள்ளை

(காண்டீபன், சென்னை)

வெளிமாநிலங்களிலிருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு வந்து பணிபுரிகின் றனர். அனல்மின்நிலையங்கள் அமையும் பொழுது அதில் கட்டுமானப் பணியை செய்கின்ற ஒப் பந்தக்காரர்கள், அனல் மின்நிலையம் கட்டும் இடத்திற்கு அருகாமையில் வசிக்கும் வாழ் வாதாரம் பறிக்கப்பட்ட மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு ஊதியம் அதிகமாக வழங்க வேண்டும். தொழிற்சங்கம் வைத்து உரிமையை கேட்பார்கள். அதற்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். அதைவிட ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் சிறிது செலவு செய்தால் போதுமானது. தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பெரும் தொகையை முதலாளிகள் சுருட்டியும் விட்டார்கள்.(மேலும்.....)

ஆனி 24, 2012

தமிழருக்கு ஆயுதம் தராத விடிவை அறிக்கை அரசியலா தரப்போகின்றது?


தற்போது கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பேசப்படுவதால் கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் அப்பகுதியில் சற்று தடல்புடலாகக் காணப்படுகிறது. தமிழரசுக் கட்சியின் மாநாடும் அங்கு நடத்தப்பட்டது. ஆனால் வடக்கில் மீள்குடியேற்றம், குடியேறியுள்ள மக்களுக்குள்ள குறைபாடுகள், சரணடைந்தும் விடுவிக்கப்படாத ஏனைய தமிழ் இளைஞர்களின் நிலை, சிறையில் வாடும் அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளின் நிலை தொடர்பாக எவ்விதமான அக்கறையும் இவர்களுக்கு இல்லை. தமிழ் ஊடகங்களையும், சர்வதேசம் எனும் நிஜமில்லாத நிழலையும் நம்பி அரசியல் நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் அரசியல் தீர்வில் தமது உண்மையான நிலைப்பாடு என்னவென்று இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. மாறாக அரசாங்கத்தை வசைபாடி வருவதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வருகின்றது. (மேலும்.....)

ஆனி 24, 2012

தப்பினார் அப்துல் கலாம்

“என் மீது அன்பும் மதிப்பும் வைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல தலைவர்களும் வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அன்பை மதிக்கிறேன். ஆனாலும் தற்போது எழுந்துள்ள சூழநிலைகள் அனைத்தையும் முழுவதுமாக ஆராய்ந்து பார்க்க வேண்டி உள்ளது. மேலும் ஜனாதிபதி பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட வேண்டுமென்று எப்போதுமே நான் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. ஆகவே தற்போதைய தேர்தல் களத்தில் இறங்க நான் விரும்பவில்லை”. வருவார் ஆனால் வரமாட்டார் என்ற ரஜனி காந்த் பாஷையில் முழு இந்தியாவையும் பரபரப்புக்கு உள்ளாக்கிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தனது இறுதி முடிவைத் தெரிவித்துவிட்டார். தேர்தல் களத்தில் அவர் நிற்கிறார் என்ற போது சிலர் தலைமுடியை பிய்த்துக் கொண்டார்கள். இப்போது அவர் மறுத்ததும் வேறு சிலர் தலைமுடியைப் பிய்க்கிறார்கள். இதுதான் அரசியல். (மேலும்.....)

ஆனி 24, 2012

தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !!
 

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!  (மேலும்.....)

ஆனி 24, 2012

பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன.!

நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதிக்குப் பாராட்டு.!!

பாரிஸ் மாநகரில் எதிர்வரும் 15 -ம் திகதி (15 - 07 - 2012 ஞாயிற்றுக் கிழமை பாரிஸ் மார்க்ஸ் டோர்முவா தேவாலயக் கலையரங்கத்தில் (50 Place de Torcy - 75018 Paris)''இலக்கிய மாலை' நிகழ்வு சிறப்புற நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் புகழ் பெற்ற தமிழகப் படைப்பாளிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம், பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஆகியன ஒன்றிணைந்து நடாத்தவுள்ள இந்நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன. டாக்டர் வி. ரி. இளங்கோவனின் 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா', 'தினக்குரல்' பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கத்தின் 'ஊருக்கு நல்லது சொல்வேன்', நந்தினி சேவியரின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்', இந்திய சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற எழுத்தாளர் இந்திரனின் 'தோட்டத்து மேசையில் பறவைகள்';, இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதியின் 'சங்கம்' நாவல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ''Le Réveil"ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன. (மேலும்.....)

ஆனி 24, 2012

மொழிக்கொள்கை முறையாக நடைமுறைப்படுத்தப்படின் பிரச்சினைகள் சுமுகமாக தீரும்

நமது நாட்டை ஒருமைப்பாட்டிக்குள் கொண்டு வரும் போது முகங்கொடுக்கும் சவால்கள், அவற்றை வெற்றி கொள்ளும் அணுகுமுறைகள் என்பவற்றில் மொழி தொடர்பான முக்கியத்துவம், எதிர்கால திட்டங்கள் பற்றியும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களுடன் நடாத்திய நேர்காணல். (மேலும்.....)

 

ஆனி 24, 2012

சுயரூபக் கோவை

பெயர் : மனோ கணேசன்
வயது : கண்டுபிடிக்கவே முடியாது
முழு நேர தொழில் : அரசியல்
சைட் பிஸினஸ் : வர்த்தகம்
அசைக்க முடியாத பலம் : குறையாத ஆதரவு
பொழுதுபோக்கு : சளைக்காமல் அறிக்கைகள் விடுவது
நண்பர்கள் : தனது அறிக்கைகளை வெட்டாது அப்படியே பிரசுரிக்கும் பத்திரிகையாளர்கள்
எதிரிகள் : அறிக்கைகளை வெட்டிக்கொத்தி பிரசுரிக்கும் பத்திரிகையாளர்கள்
நிரந்தர எதிரிகள் : அறிக்கைகளைக் கண்டுகொள்ளாத தொலைக்காட்சிகளின் ஊடகவியலாளர்கள்
கண்டுபிடிக்க முயல்வது : காணாமற்போனோரை (முன்னொரு காலத்தில்)
கண்டுபிடித்தது : கூடவே இருந்து குழி பறித்த இரத்த உறவுகளை
நிறைவேறாதிருக்கும் ஆசை :
ஐ.தே.க பட்டியலில் எம்.பியாகுவது
அரசியல் இலட்சியம் : தமிழ் மக்களின் நிரந்தர அமைதி
மனம் நெகிழ்ந்த
சந்தர்ப்பம் : பிறந்த நாளன்று அதிகாலையிலேயே ஜனாதிபதி வாழ்த்தியமை
மிகுந்த கோபமடைந்தது : ரணில் நம்ப வைத்து கழுத்தறுத்தமை
கோபம் தணிந்தது : தம்பிமாரை விடவும் ரணில் பரவாயில்லை என்ற போது
கடுப்பாகியும் வெளிக்காட்டாத
ஒன்று : கொழும்பில் தமிழரசுக் கட்சிக் கிளை ஆரம்பித்தமை
வெளிக்காட்டிய கடுப்பான
சந்தர்ப்பம் : தனது செயலாளரை சிலர் விமர்சித்தபோது
எதிர்பார்த்துக்கொண்டிருப்பது :
பொதுத் தேர்தல் ஒன்றை (எம்.பி ஆக வருவதற்காக)
தவறவிட்டது : ஐ.தே.க ஆட்சியில் அமைச்சர் பதவியை (ரணில் கேட்டும் ஏற்கவில்லை)
நம்பிக்கொண்டிருப்பது : ரணில் எப்போதாவது மனம் மாறுவார் என்று

(நன்றி: தினகரன்)

ஆனி 24, 2012

பூந்தோட்டத்திற்கு செல்கிறார் தமிழினி

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவிகளில் ஒருவரான தமிழினியை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழினி புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுடன் வவுனியாவில் தங்கியிருந்த தமிழினியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். தமிழினி விரும்பினால் புனர் வாழ்வு முகாமில் புனர்வா ழ்வு பெற அனுமதிக்க முடி யும் என சட்ட மா அதிபர் திணை க்களம் புலனாய்வு பிரிவின ருக்கு அறிவித்திருந்தது. கடந்த தடவை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்தி ருந்தனர். தமிழினியின் விருப்பத்தை அறிந்துகொள்ள புலனாய்வுப் பிரிவினருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வெள்ளியன்று தமிழினி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு மாற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆனி 24, 2012

யாழ்ப்பாண மக்களுக்காக ஒரு சத நிதியைக்கூட ஒதுக்காத எம்.பிக்கள்

யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பன்முகப் படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து யாழ்ப்பாண தேர்தல் தொகுதி அபிவிருத்திக்கு என எந்தவித நிதி ஒதுக்கீட்டினையும் மேற்கொள்ளவில்லை என யாழ். மாநகரசபை த.தே.கூ. உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ். தேர்தல் தொகுதியில் அடங்கும் 11 தொகுதிகளினுள்ளும் யாழ்ப்பாண தொகுதியிலேயே கணிசமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் யாழ். மாநகரச பையும் இத்தொகுதியினுள்ளேயே அடங்கியுள்ளது. த.தே. கூட்டமைப்பு சார்பில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மாநகரசபை பிரதிநிதிகள் என்றவகையில் மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்களை தயாரித்து த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகிய போதும் அவர்கள் எதனையும் கிள்ளித்தர ஆயத்தமாக இல்லை. இந்நிலையில் மாநகரசபையினால் ஒதுக்கப்படும் சிறிய தொகையான பன்முகப்படுத்தப்பட்ட நிதியைக் கொண்டு எவ்வாறு நாம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆனி 24, 2012

தமது இருப்பிற்காக குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் தமிழக தலைவர்கள்

சொந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் ஈழத் தமிழர் விடயத்தில் வீணே மூக்கை நுழைப்பு

அமைதியாக வாழ்வோரை ஆபத்திற்கு தள்ளிவிட வேண்டாமென எச்சரிக்கையுத்தம் இடம்பெற்றபோது அவலக்குரல் எழுப்பிய தமிழரைத் திரும்பியும் பார்க்காத தமிழகத் தலைவர்கள் தற்போது யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழ் மக்கள் தமது பிரதேசங்களில் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரும் நிலையில் வீணாக மூக்கை நுழைத்து தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முனைவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமது அரசியல் இருப்பிற்காக இலங்கைத் தமிழரை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி இவர்கள் விட்டுவரும் அறிக்கைகளும், கவிதைகளும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை புண்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. யுத்தம் நடந்தபோது ஆட்சி அதிகாரத்திலிருந்த கருணாநிதி அப்போது மெளனமாக இருந்துவிட்டு இப்போது எதிர்க்கட்சியானதும் எகிறிப் பாய்வதாகவும், தனது குடும்பப் பிரச்சினையை இதுவரை தீர்த்து வைக்க முடியாதவர் இலங்கை மக்களது பிரச்சினை பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றே தொல் திருமாளவன், சீமான், பழ நெடுமாறன் போன்ற தமிழகத் தலைவர்களும் காலம் கடந்த நிலையில் இலங்கைத் தமிழருக்கு உதவு வதாகக் கூறுவதை ஏற்க முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது அமைதியாக இருந்தால் அதுவே இலங்கைத் தமிழரின் ஒளிமயமான எதிர்கால வாழ்விற்குச் செய்யும் பேருதவியாக இருக்கும் என புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனி 23, 2012

உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது

(கருணாகரன்)

ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஸ்பராணி (அக்கா) அவர்களின் ‘அகாலம் - ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள் என்ற இந்த வரலாற்றுப் பதிவு, பல நிலைகளில் முக்கியம் பெறுகிறது. இது ஒரு வரலாற்றுப்  பதிவாக மட்டுமல்லாமல், கடந்த நாற்பது ஆண்டுகால ஈழ அரசியற் போக்குகளின் மீதான விமர்சனமாகவும் இந்தப் போராட்ட காலத்திற் செயற்பட்ட முன்னோடிகளைப் பற்றிய சித்திரங்களாகவும் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்தின்போது தன்னுடன் இணைந்து சகபயணிகளாகச் செயற்பட்டவர்களின் வாழ்வையும் வரலாற்றையும் பதிவாக்கியுள்ளார் புஸ்பராணி. இவ்வாறு பதியப்பெறும்பொழுது, இந்தக் காலகட்டத்தின் அரசியல் இயக்கங்களைப் பற்றியும் அவற்றின் தலைமைப்பொறுப்புகளிலிருந்தோரைப்பற்றியும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள், அணுகுமுறைகள், அவர்களுடைய ஆளுமை, தனிப்பட்ட குணவியல்புகள் போன்ற முக்கியமான அம்சங்களைப் பற்றியும் கவனப்படுத்துகிறார். அதேவேளை அன்றைய சமூக அதிகார அடுக்குமுறை, இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் நிலவிய அசமத்தும், சிங்கள மேலாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இலங்கை அரசினதும் அதனுடைய பொலிஸ், சிறைச்சாலை போன்ற அதிகார அடுக்குகள் செயற்பட்ட விதங்களைப் பற்றியும் இந்தப்பதிவில் வெளிப்படுத்துகிறார். (மேலும்.....)

ஆனி 23, 2012

ஒபமாவே இது எப்படியிருக்கு

பிரேஸிலில் நடைபெறும் ரியோ+20 மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் ஈரானிய ஜனாதிபதி மொஹமட் அஹ்மத் நெஜாட்டைச் சந்தித்துக் கலந்துரையாடி போது...

ஆனி 23, 2012

வட பகுதியில் இராணுவ படைப்பலம் குறைக்கப்பட்டுள்ளது

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட இலங்கை தூதுக் குழுவினர் அதன் மூன்றாவது நாள் நிகழ்வில் எமது நாட்டின் வடபகுதியில் தற்போது இராணுவத்தின் பலம் குறைக்கப்பட்டிருக்கிறதென்றும் இன்று வடபகுதியில் 20 ஆயிரம் இராணுவ வீரர்களே இருக்கிறார்கள் என்றும் நாட்டின் தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டே இப்போது குறைந்தளவில் இராணுவ வீரர்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பதாக இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான பதில் தூதுவர் திருமதி மனிஷா குணசேகர அறிவித்திருக்கிறார்.  (மேலும்.....)

ஆனி 23, 2012

கிறிஸ்மஸ் தீவு படகு விபத்து: இறந்தவர்களில் இலங்கையர் இல்லை

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவுக்கு அருகே கடலில் மூழ்கியவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லையெனப் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலில் மூழ்கிய மேலும் 90 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீட்கப்பட்ட 110 பேரில் இலங்கையர்கள் எவரும் இல்லையென இந்தோனேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கூறியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இறந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இருக்கிறார்களா என்பது குறித்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் தரப்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் வெளி யிடப்படவில்லையென வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். அதேநேரம், அவுஸ்திரேலியாவுக்கும் இந் தோனேசியாவுக்கும் இடையில் கடலில் மூழ்கிய படகு இலங்கையிலிருந்து புறப்பட்ட படகு இல்லையென்றும், இது இந்தோனேசியாவில் தயாரிக்கப்பட்ட படகு என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனி 23, 2012

இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி மஹிந்த சந்தித்துப் பேச்சு

பிரெஸிலில் நடைபெறும் ரியோ +20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் குக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடை பெற்றுள்ளது. நேற்று முன்தினம் பிரெஸிலின் ஜெனய்ரோ நகரில் இடம்பெற்றுள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய கவனம் செலு த்தப்பட்டுள்ளது. இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்பதாக இரு நாட்டுத் தலைவர்கள் மட்டும் கலந்து கொண்ட விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரி வித்தது. இந்திய-இலங்கை நாடுகளுக்கிடையில் நிலவும் நீண்ட கால நல்லுறவு சம்பந்தமாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இந்த உறவுகள் தொடர்பில் இரு நாடுகளும் தொடர்ச்சியான அவதானத்தைச் செலுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட் டுள்ளன. நெருக்கடி நிலைமைகளின் போது பேச்சு வார்த்தை மூலம் அவற்றை சுமுகமாகத் தீர்க்க முடியுமென இப் பேச்சுவார்த்தையில் இரு கட்சித் தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், இரு தரப்புப் பேச்சுவார்த்தை போன்றே தனிப்பட்ட சந்திப்பும் சுமுகமாக இடம்பெற்றுள்ளது.

ஆனி 23, 2012

பிரணாபை ஆதரிக்க மார்க்சிஸ்ட் முடிவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் முடிவு செய்துள்ளன. யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலையை இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிச கட்சி ஆகியவை எடுத்துள்ளன. குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை ஆதரிக்கலாம் என்பதைத் தீர்மானிக்க மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு டில்லியில் வியாழக்கிழமை கூடி விவாதித்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி யிடும் மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மாவுக்கு ஆதரவளிக்க பா.ஜ.க. எடுத்த முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆனி 23, 2012

ரூபாய் மதிப்பு  கடும் சரிவு

எண்ணெய் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதால் சர்வதேசச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. தொடர்ந்து 5 நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. வெள்ளியன்று அதே நிலை தொடர்ந்துள்ளது. வியாழனன்று வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு ரூ.56.30 ஆக இருந்தது. வெள்ளியன்று வர்த்தக நேர தொடக்கம் முதலே இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து காணப்பட்டது. காலை ரூ. 56.87 ஆக இருந்த ரூபா யின் மதிப்பு வர்த்தக நேர முடிவில் ரூ. 57.30 ஆக குறைந்தது. இதனால் இந்தியாவின் 10 முன்னணி தொழில் நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தீர்வேதும் இன்றி தொடரும் உலகப்பொருளாதார நெருக்கடி மேலும் முற்றியுள்ள நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடுகள் பலவும் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவது, இந்தியாவில் மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

ஆனி 23, 2012

விக்கி லீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சேயை   அமெரிக்காவிடம் ஒப்படைக்க முயற்சி   புகலிடம் தர ஈக்குவடார் முடிவு

இங்கிலாந்து அரசு விக் கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக் காவிடம் ஒப்படைக்கும் விதமாக ஸ்வீடனுக்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் அந்த சதிவலையில் சிக்காமல் தப்பிப்பதற்காக தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் குடியேற ஜூலியன் அசாஞ்சே அனுமதி கோரி யுள்ளார். உலக அளவில் பல் வேறு நாடுகளின் உள் விவ காரங்களில் தலையிட்டு பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா வின் ரகசிய தகவல்களை ஜூலியன் அசாஞ்சே விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் அம்பலப்படுத்தினார். இது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்காவின் அத்து மீறிய தலையீடுகளையும், சதிவேலைகளையும் விக்கி லீக்ஸ் இணையதளம் அம் ப லப்படுத்தி வருகிறது. (மேலும்.....)

ஆனி 23, 2012

கனடாவில் 130வது நாளாக தொடரும்   மாணவர்கள் போராட்டம்

கனடாவில் கல்விக் கட் டணம் உயர்த்தப்பட்ட தைக் கண்டித்து மாணவர் கள் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் 130வது நாளை எட்டி யுள்ளது. கனடாவில் உள்ள கியூ பெக் அரசு, சமீபத்தில் கல் விக் கட்டணம் மற்றும் போராட்ட எதிர்ப்பு சட் டம் கொண்டு வந்தது. இச்சட்டத்தின் படி, கல்விக் கட்டணம் 80 சதவிகித அளவிற்கு உயர்த்தப்பட் டது. அதேபோல், போராட் டம் நடத்தவும் பல்வேறு விதிமுறைகளை நிர்ணயித் தது. இதில், போராட்டத் தில் 50 பேருக்கு மேல் ஈடு படக் கூடாது, பொது இடங்களில் கூட்டம் கூடக் கூடாது, போராட்டத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே காவல்துறையினரிடம் அனுமதி பெறவேண்டும். போராட்டப்பாதையை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என பல விதி முறைகளை விதித்தது. இதற்கு அந்நாட்டு மக்களி டையே பெரும் கொந் தளிப்பு கிளம்பியது. இத னைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது, அவர்கள் இது தங்களது சுதந்திரத்தை பறிப்பது போல் உள்ளது எனக் கூறி அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். (மேலும்.....)

ஆனி 23, 2012

சிரியாவிற்கு எதிரான நாசவேலையில் அமெரிக்க உளவுப் பிரிவு

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், அமெரிக்காவின் உளவுப் பிரிவான சிஐஏ ரகசியமாக நாசவேலை செய்து வருவது தெரியவந்துள்ளதாக அமெரிக்கா மற்றும் அரே பிய புலனாய்வுத் துறை தகவல்களை சுட்டிக் காட்டி அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிரியா அரசிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக உலக நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் உளவுப் பிரிவான சிஐஏ, சிரியா உள்நாட்டுப் போருக்குப் பின்னால் மிகப்பெரும் நாசவேலையை ரகசியமாக செய்து வருகிறது எனும் அதிர்ச்சித் தகவலை அமெரிக்கா மற்றும் அரேபிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் வெளிக்கொணர்ந்துள்ளனர். அமரிக்காவின் சிஐஏ பிரி வினர் சிரியா மக்களைப் போல் உள்ளே நுழைந்து அந்நாட்டு அரசிற்கு எதிரான உள்நாட் டுப் போரை தீவிரப்படுத்தி வருகின்றனர். சிஐஏ பிரிவின் அதிகாரிகள் தெற்கு துருக்கியில் இருந்துகொண்டு, ரகசியமாக சிரியா அரசிற்கு எதிரான உள்நாட்டுப் போரில் ஈடுபடும் மக்க ளோடு இணைந்து, போருக்குத் தேவையான ஆயுதங்களைப் அமெரிக்காவிடமிருந்து பெற்று, அந்நாட்டு மக்களிடையேயான உள்நாட்டு கலவரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். (மேலும்.....)
 

ஆனி 22, 2012

வெளிநாட்டு மோகமும் பரிதாபமான கட்டார் வாழ்க்கையும்

அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் டோஹாவிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிலாளர் நல அலுவலராகப் பணி புரிந்தார். இந்த நிறுவனத்தின் தொழிலாளர் குடியிருப்பில் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதைப் புலன் விசாரணை செய்த நமது நண்பர் பல அதிர்ச்சியூட்டும் விடயங்களைக் கண்டுபிடித்தார். இதைப் போன்ற தற்கொலைகள் பல நடைபெறுகின்றன என்ற தகவல் அவற்றிலொன்று. இவர் தமது விசாரணை அறிக்கையில் நிறுவனத்தின் பல மனிதாபிமானமற்ற செயல்களைக் குறை கூறி எழுதியிருந்ததால் நிறுவன முதலாளிகள் கோபமடைந்தனர். தமது அறிக்கையில் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதால் அவரை வேலையிலிருந்து நீக்கத் தீர்மானித்தனர். முதலாளிகள் அளித்த விளக்கம் தொழிலாளர் நல அலுவலர் என்ற பதவி அரசாங்கம் வலியுறுத்துவதனால் உருவாக்கப்பட்டது. அதாவது கண் துடைப்புக்காக. மனித உரிமை மீறல் குறித்து எதையும் நீ பேசக் கூடாது என்றனர். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை. (மேலும்.....)

ஆனி 22, 2012

தென்மராட்சியில் 300 ஏக்கரையும் தெல்லிப்பழையில் 61 ஏக்கரையும் கைப்பற்ற இராணுவம் முயற்சி

வடக்கில் இடம் பெற்று வரும் காணி அபகரிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ. தே. க. கோரியுள்ளார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் சுமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற இச் சந்தர்ப்பத்தில் வடக்கில் இராணுவத்தினால் மேற் கொள்ளப்படும் காணி அபகரிப்பு மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குடா நாட்டில் தனியார் காணிகள் மற்றும் கட்டிடங்கள் 1000 த்துக்கும் அதிகமான இடங்களில் இராணுவம் நிலை கொண்டுள்ளது. இராணுவம் இவ்வாறு நிலை கொண்டுள்ள நிலையில் தென் மராட்சிப் பிரதேசத்தில் 300 ஏக்கர் நிலத்தையும் தெல்லிப் பழைப் பிரதேசத்தில் 61 ஏக்கர் நிலத்தையும் கைப்பற்றுவதற்கு இராணுவம் முயற்சி செய்து வருவதாக எழுந்துள்ள செய்தியினால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தற்போது யாழ். மாவட்டத்தில் வீட்டுடன் இணைந்த காணிகள் 57 இலும் 5 வெற்றுக் காணிகளிலும் அரச காணி 1 இலும் வியாபார நிறுவனம் 1 இலும் காவற்றுறையினர் குடி கொண்டுள்ளனர்.

ஆனி 22, 2012

உலக வெப்பத்திற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளே காரணம்

உலகம் வெப்பமயமாவதற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளே காரணம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். பிரேஸிலில் நடைபெறுகின்ற ' ரியோ-20 'மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகம் வெப்பமடைகின்றமை, தீவுகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் செயற்பாடுகளினால் சுற்றாடல் பாதிக்கப்படும் அதேவேளை அதன் விளைவுகளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அனுபவிக்கின்றன என்று கூறியுள்ளார். மூன்று தசாப்த காலமாக நடைபெற்றுவந்த பயங்கரவாதச் செயற்பாடுகளை இல்லாதொழித்து, இலங்கை தற்போது பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனதுரையில் தெரிவித்துள்ளார் ___

ஆனி 22, 2012

ஜே.வி.பிக்கும் எல்.ரி.ரி.ஈ இற்கும் இடையில் இரகசியத் தொடர்பு இருக்கின்றதா?

அரசியலில் செல்லாக்காசாகி மக்களால் அரசியல் குப்பைத் தொட் டியில் தூக்கியெறியப்பட்டிருக்கும் ஜே.வி.பி. மீண்டும் தன்னு டைய தேசத்துரோக செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பழைய குருடி கதவைத் திறடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசாங்கத்தை துப் பாக்கி முனையில் அடிபணியவைத்து, அரசாட்சியை கைப்பற்ற வேண் டுமென்ற வன்முறை கலாசாரத்தை இலங்கையில் முதல் தடவையாக 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆயுதக் கிளர்ச்சியின் மூலம் ஜே.வி.பி. அறிமுகம் செய்து வைத்தது. இந்தக் காலகட்டத்தில் வடபகுதியிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களைப் பற்றி நினைத்துகூட பார்க் காமல் தங்கள் உயர் கல்வியிலேயே முழுக்கவனத்தையும் ஈர்த்து, நாட் டுக்கு நல்லது செய்யக்கூடிய படித்த இளைஞர்களாக தங்களை உரு வாக்கிக் கொள்வதில் ஆர்வத்துடன் இருந்தார்கள். (மேலும்.....)

ஆனி 22, 2012

நூல்வெளியீடு!
 
அகாலம்-புஷ்பராணி (ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள்)

காலம்-30-06-2012 (சனி) - மாலை 5 மணி - இடம்-47, Shernhall, Walthamstow, E17 3EY

வரவேற்புரை-நவரத்னராணி சிவலிங்கம்

கருத்துரைகள்

* சந்தூஷ் - தவராஜா - நிர்மலா -பௌசர் - கோவை நந்தன்

ஏற்புரை-புஷ்பராணி

நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்!
 
தொடர்பு- 079 8422 4359 ( எஸ்-தவராஜா)

ஆனி 22, 2012

 

இதுதான் தெளிந்த நிலைபாடு

ஆனி 22, 2012

யாழ்ப்பாணத்தில் தியாகிகள் தினம்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, சுபிட்சமான எதிர்காலத்திற்காக போராடி 19.06.1990 இல் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பத்மநாபா அவர்களையும் மக்களின் விடிவுக்காக தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், இதர அமைப்புக்களை சேர்ந்தவர்கள், பொதுமக்களையும் நினைவு கூர்ந்து வருடம் தோறும் ஜுன் 19ம் திகதி அனுஸ்டிக்கப்படும் தியாகிகள் தின வைபவம் இன்று (19.06.2012) பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான அஞ்சலி நிகழ்வுகள் பிற்பகல் 2.00 மணிவரை இடம்பெற்றது. இதனை தொடர்ந்து உயிர் நீத்த தோழர்களின் நினைவாக இரத்த தானமும் வழங்கப்பட்டது. (மேலும்.....)

 

 

 

 

 

 

 

 

 

 

ஆனி 22, 2012

அமெரிக்கா

தலைவிரித்தாடும் வறுமை, ஏற்றத்தாழ்வுகள்!

உலக வல்லரசுகளில் முதலிடத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பில் உலக நாடுகளின் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து தீர்ப்பு வழங்கும் அமெரிக்காவில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்காவில் வாழும் மக்களில் 99 சதவிகித மக்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு, அனைத்து வளங்களையும், வருமானங்களையும் ஒரு சதவிதமாக இருக்கும் பெரும் பணக்காரர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் பங்குவர்த்தக கட்டிடம் நிறைந்த ‘வால்ட்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்’ எனும் போராட்டம் வெடித்தது. இப்போராட்டம் அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்கு வெளிச்சமிட்டுக்காட்டி வருகிறது. தொடர்ந்து பல மாதங்களாக லட்சக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. “நாங்கள் 99 சதவிகிதத்தினர்” என்ற முழக்கத்துடன் அவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். (மேலும்.....)

ஆனி 22, 2012

தமிழராய்ப் பிறந்ததே குற்றமா? தப்பவே முடியாதா?

வணக்கம்

54 நாடுகளில் தோராயமாக 15 இலட்சம் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர். இவர்களுள் 90% அகதிகளாகவே அந்தந்த நாடுகளில் வாழ்க்கையைத் தொடங்கினர். 1976 மார்கழியில் சிறையிலிருந்து விடுதலையான தமிழ் இளைஞர்கள் பதினான்கு பேர், கொழும்பிலிருந்து 1977 தொடக்கத்தில் அகதி வாழ்வு தேடிப் புலம்பெயர, அப்பதினான்மரும் இலங்கைக் கடவுச்சீட்டுப் பெற உதவினேன். யார் யார் என்பதுகூட நினைவில்லை. 1988இல் ஒருநாள் ஒருவர் என்னைக் கண்டதும் ஓடோடி வருகிறார். அண்ணை நீங்கள் கையெழுத்து வைத்து நான் தப்பினேன். இன்றைக்கு நான் அமைச்சராக இருக்கிறேன். முதல் அமைச்சர் வரதராசப்பெருமாள் அமைச்சரவையில் உறுப்பினராக அவர்.1979இல் யாழ்ப்பாணத்தில் திரு. ஈழவேந்தன் கைதாகிரார். யாழ்ப்பாணச் செயலக வாடிவீட்டில் தடுத்துவைத்து, உடல் வதைக்குள்ளான காலங்களில், உதைத்த காவலர்கள் அவரிடம் கேட்ட வினாக்களுள் ஒன்று, Where is the bugger Sachi?   He is your friend. He has signed for 14 persons to obtain passports to escape. Wherever he is we will get him. 2010 கார்த்திகையில் நுணாவில் படைமுகாமின் குடிசார் அலுவலகத்திலிருந்த ஒருவர் என்னிடம் தொலைப்பேசியில் அரைகுறைத் தமிழில் கேட்ட வினா. நீ இந்தியாவிலை இரோந்து என்ன செய்யிறது தெரியும். உடனே வா படைமுகாமுக்கு. நாட்டு எல்லைகள், கடவுச்சீட்டுகள், நுழைவு அனுமதிகள் யாவும் கற்பிக்கப்படவை. இயற்கையானவையல்ல. 

மனித வாழ்வு இயற்கையின் கொடை.

மேலும் படியுங்கள்,
(மேலும்.....)

இன்று அனைத்துலக அகதிகள் நாள்

நன்றி 
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

ஆனி 22, 2012

"ஜூன்" மாத நிகழ்வு விபரம்!

அமர்வு-1

நூல் அறிமுகம்-பிரக்ஞை

உரை - சபேஸ் சுகுணா சபேசன்

மீரா பாரதி (நூலாசிரியர் - கனடா)

வழிப்படுத்துகை- நா.சபேசன்

சமூகம் இயல் பதிப்பக திட்டம்-முன்மொழிவுகள்

எம்-பௌசர்

அமர்வு-11

தேசிய இனப்பிரச்சினையும் சிங்கள மக்களும்

உரை

Uvindu Kurukulasuriya

(Editor -Colombo Telegraph)

வழிப்படுத்துகை - சார்ள்ஸ் அன்ரனிதாஸ்

காலம்- 23 ஜுன் 2012 மாலை 4.15மணி(சனிக்கிழமை)

இடம் -Trinity Centre, East avenue, Eastham, E12 6SG

ஆனி 22, 2012

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு சீபிளேன் விமான சேவை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சிவில் விமான சேவைகள் அமைச்சின் அங்கீகாரத்தில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை (சீபிளேன்) கடல் விமான சேவையை நடாத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் பொருட்டு கொழும்பு சீதுவைப் பிரதேசத்திலுள்ள தண்டன் ஓயா வாவியிலிருந்து இந்த பரீட்சார்த்த விமானம் புறப்பட்டு நேற்று மட்டக்களப்பு வாவியில் பரீட்சார்த்த விமானம் வந்து தரையிறக்கப்பட்டது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வாவியில் வந்திறங்கிய இவ்விமானத்தில் வந்த சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் வரவேற்றார். இந்த விமான பரீட்சார்த்த பணிகள் நிறைவுபெற்றதும் இந்த கடல் விமான சேவை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு பாசிக்குடா பகுதிகளுக்கு சேவையீ லீடுபடுத்தப்படவுள்ளதாக அபிவிருத்தி முகாமையாளர் சன்ஜீவ ஜெயதிலக தமது தகவலில் தெரிவித்தார். இந்த பரீட்சாத்த கடல் விமானம் மட்டக்களப்பு வாவியில் தரையிறங்குவதைக் கண்டு களிக்க பெருமளவிலான மக்கள் இப்பகுதியில் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனி 22, 2012

வவுனியா சிறையினுள் இரு தமிழ் கைதிகள் குழுக்கள் மோதல்

வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ்க் கைதிகள் குழுக்களுக் கிடையில் இடம்பெற்ற மோதலில் ஏழு கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். இந்த மோதல் சம்பவம் நேற்றுக்காலை 9.00 மணிக்கும் 10.00 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் இருவருக்கு தலைப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழ்க் கைதிகள் குழுக்களுக்கிடையே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இருதரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதமே மோதலாக மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது பாதுகாப்பு மேலும் பலப் படுத்தப்பட்டுள்ளது என்றும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.

ஆனி 22, 2012

இலங்கையின் சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69 ஆயிரம்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டில் 36,807 கிராமங்கள் உள்ளதோடு ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 123 குடும்பங்கள் வாழ்வதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன தெரிவித்தார். வாய்மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது: இந்த கணிப்பீட்டின்படி 14,022 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளதோடு 313 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. குடிசன மதிப்பீட்டு பணிகள் 2012 பெப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெற்றது. மொத்த சனத்தொகையில் ஒரு கோடி 5,12,000 பெண்களும் ஒரு கோடி 3,57,000 ஆண்களும் உள்ளனர்.

ஆனி 22, 2012

பிரணாப் முகர்ஜிக்கு  சிபிஎம் ஆதரவு-பார்வர்டு பிளாக் கட்சியும் ஆதரிக்க முடிவு

குடியரசுத் தலைவர் தேர் தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன. பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. தற்போ துள்ள சூழ்நிலைமையில், குடியரசுத்தலைவர் பதவிக்கு பரவலான முறையில் ஏற் றுக்கொள்ளத்தக்க ஒரு வேட்பாளர் அவரே. அதேநேரத்தில், நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றி வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும்; உறுதியுடன் போராடும். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப் பது தமது கட்சிக்கு உடன் பாடு இல்லை என்றும், பிர ணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனி 22, 2012

சரிகிறது ரூபாய்-ஆபத்தின் பிடியில் ‘மன்மோகன்’ பொருளாதாரம்

ரூபாயின் மதிப்பு மிக மோசமான முறையில் சரிந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 56.54 என்று வீழ்ந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மே 21ம் தேதி ரூபாயின் மதிப்பு 56.50 ஆக இருந்தது.  கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர் களிடையே டாலருக்கு கிராக்கி அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம். ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் இந்திய ரிசர்வ் வங்கி அவசர கதியில் செயல்பட்டு ரூபாயைக் காப்பாற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வெளிநாட்டு நிதிகள் பெருமளவில் வந்ததால், ரூபாயின் மதிப்பு அதிகமாக சரியாமல் தப்பியது. ஆனால் ஏப்ரல், மே மாதத்தில் அந்நிய முதலீடுகள் குறைந்ததாலும், நிதி வரவு வீழ்ந்ததாலும் தற்போது ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் இது மேலும் மோசமாகி ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57 ஆக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனி 21, 2012

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தோழர் பத்மநாபாவின் 22வது நினைவுதினம் வெகுசிறப்பாக நடைபெற்றது!

 

EPRLF செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் 22வது நினைவு தினம் இன்று மாலை நேற்று (19) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.1990ம் ஆண்டு யூன் மாதம் 19ம் திகதி சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் தோழர் பத்மநாபாவும் அவரது தோழர்களும் புலிகள் இயக்கத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அத்துயரச் சம்பவத்தின் 22வது நினைவுதினம் தோழர் நக்கீரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தை ஈபிடிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தமையைத் தொடர்ந்து பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரட்ணம் சட்டத்தரணி தேவராஜன் ரங்கன் பிரபல ஊடகவியலாளர் நெல்சன் எதிரிசிங்க சிந்தன் டி சில்வா கே.சுப்பையா ஐ.சிறி ரங்கேஸ்வரன் ஆகிய தோழர்கள் உரைநிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் தோழர்கள் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

ஆனி 21, 2012

மரணவிளையாட்டை  நோக்கி தள்ளுவது யார்? 

தமிழகத்தில் சில செய்திகள் முக்கியத்துவம் தரப்படாமலேயே விட்டுவிடப்படுகின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தமிழகத் தில் தொடர் விவாதம் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் தங்கவைக்கப் பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் பிரச் சனைகள் போதுமானஅளவுக்கு விவாதிக்கப் படுவதில்லை. அண்மையில் தமிழகத்தில் பல்வேறு முகாம் களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 87 ஆண்கள், 17 பெண்கள், 19 குழந் தைகளை கேரள போலீசார் பிடித்தனர். மிகவும் ஆபத்தான முறையில் மீன்பிடி படகில் இவர் கள் ஆஸ்திரேலியா செல்ல முயன்றுள்ளனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள 17 அகதி முகாம் களிலிருந்து சென்றுள்ளனர். ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி இவர்களிட மிருந்து தலா 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சிலரால் வசூலிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆனி 21, 2012

டெல்லியில் இந்திய அரசியல் தலைவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ரகசிய ஆலோசனை?

டெல்லியில் இந்திய அரசியல் தலைவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ரகசிய ஆலோசனை நடத்த உள்ளாக கூறப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அவர் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் அடைந்த பிறகு டெல்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையை அடுத்து, அவரைக் கைது செய்யுமாறு சில கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இந்த நிலையில் தான் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்குச் சென்றுள்ளார். அவர் சென்னையில் இருந்து கொழும்பு திரும்புவதற்கு முன்பு டெல்லியில் இந்திய அரசியல் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இலங்கையில் தமிழர்களின் நிலை, அவர்களின் வாழ்வாதாரம், தமிழர்களின் தற்போதைய தேவைகள், தற்போதைய சூழல் போன்றவற்றை அவர் விளக்கி கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அவர் சந்திக்கவிருக்கும் அரசியல் தலைவர்கள் குறித்த தகவல்கள் மிக இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

ஆனி 21, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 22)

(அ.ஆனந்தன்)

ஆரம்பத்தில் சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலியுறுத்திப் போராடிய கம்யூனிஸ்ட் அமைப்புகளும் தலைவர்களும் இருக்கவே செய்தனர். நாளடைவில் நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கியவையாக அக்கட்சிகள் ஆகிவிட்டதால் படிப்படியாக இனவாதத்தையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் கலிசடைகளாக அவையும் உருமாறிவிட்டன. எனவேதான் தமிழ் மக்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்ட போதும் அவை வாய்மூடி மெளனம் சாதித்தன. வர்க்கப் பார்வையை கைவிட்டுவிட்டு இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஜாதிய வாதத்தை கையிலெடுத்து குறுக்கு வழியில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய முனைவதுபோல் இலங்கையில் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகளில் சிலவும் மிதமிஞ்சிய சிங்கள வெறிவாதத்தை கையிலெடுக்கவும் செய்தன. எனவே இலங்கையின் இனப்பிரச்னைக்கு உண்மையான தீர்வு உழைக்கும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக உருவாகும் வர்க்க பேதமற்ற சமுதாயம் அமைவதில்தான் உள்ளது. அத்தகைய வர்க்கப் போராட்டங்களே சிங்கள, தமிழ் உடமைவர்க்கங்களின் உண்மையான முக விலாசத்தை அம்பலப்படுத்தக் கூடியவை. (மேலும்.....)

 

ஆனி 21, 2012

Today’s Matter

A Husband frantically calls hotel management from his hotel room, 

"Please come fast I'm having an argument with my wife and she says she will jump out the window of your hotel".


The manager responded, "Sir that's a personal matter ".


Husband: "Idiot, the window won't open! That's a maintenance matter !"

ஆனி 21, 2012

பத்தாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா

பத்தாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா எதிர்வரும் June 23,2012 சனிக்கிழமை நண்பகல்12.00 மணிக்கு ஸ்காபுரோ சிவிக்சென்ரரில் நடைபெறவுள்ளது. வருகைதந்து ஊக்குவிக்குமாறு வேண்டுகின்றோம்!

ஆனி 21, 2012

'நீர்வை பொன்னையன் நினைவலைகள்' நூல் வெளியீடு

தற்பொழுது 82வது அகவையைக் கடந்து வாழும் இலங்கையின் மூத்த முற்போக்கு எழுத்தாளரும், இடதுசாரி அரசியல் - தொழிற்சங்க செயற்பாட்டாளருமான தோழர் நீர்வை பொன்னையன,; தனது ஆறு தசாப்தங்களுக்கும் மேலான மக்கள் பணியின் அனுபவங்களை ஏறத்தாழ 370 பக்கங்களில் வடித்துள்ளார். அவரது சுயசரிதை போல அமைந்துள்ள இந்நூலின் வெளியீட்டு விழாவும் ஆய்வரங்கும் தலைநகர் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு விபரம் வருமாறு (மேலும்.....)

ஆனி 21, 2012

90 அரச நிறுவனங்களில் 1000 கோடி ரூபா மோசடி அம்பலம்

கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் பல அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை செலுத்தாது இரகசியமாக பல்வேறு வீண் விரயங்களுக்கு செலவிடுவதுடன், அவைகளினால் சுமார் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தொகை வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சுமார் 90 கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு தெரியாதவாறு நிதி கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்டுள்ளன. நிறுவனத் தலைவர்கள் பொது திறைசேரிக்கு நிதி வழங்காமையினால் திறைசேரி அவர்களிடம் அடிக்கடி அறிவித்த போதிலும் அவர்கள் போலி காரணங்களைக் கூறி நிதி வழங்கு வதை தாமதப்படுத்தி வருவதாக பொது திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் நிதியினை நிலையான வைப்புக்கள், திறைசேரி உண்டியல்கள் என்பவற்றிலும் இரகசியமான முறையில் முதலீடு செய்வதாகவும் தெரியவந்துள்ளது. (மேலும்.....)

ஆனி 21, 2012

திருமலை துறைமுக பகுதிக்குள் மீன் பிடி தடை முற்றாக நீக்கம்

திருகோணமலை துறைமுக எல்லைக்குள் மீனவர்கள் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த சகல தடைகளும் நேற்று புதன்கிழமை (20) முதல் நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் ஒரு சிலர் மேற்கொள்ளும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் கடற்படையினரால் கிழக்கு மாகாண மீனவர்களுக்கென பல சட்ட திட்டங்கள் விதிக்கப்பட்டிருந்தன. திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், சம்பூர், கடற்கரைச்சேனை, கெவுழியாமுனை, வெள்ளைமணல், சீனக்குடா மற்றும் கொட்பே ஆகிய பிரதேச மீனவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பாஸ் வழங்கல், இரவில் மீன் பிடிக்கத்தடை குறிப்பிட்ட கடல் எல்லையில் மீன் பிடித்தல் போன்ற சட்ட திட்டங்கள் அமுல்பட்டிருந்தன. பேச்சுவார்த்தையையடுத்து இம்மாவட்ட மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டு சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.மீனவர்களின் நலன்கருதி இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் மீனவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தவறான வழிகளில் ஈடுபடக் கூடாதென கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார்.

ஆனி 21, 2012

பாகிஸ்தான் புதிய பிரதமரை தேர்வு செய்ய பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி உத்தரவு

பாகிஸ்தானின் புதிய பிரதமரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யுமாறு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியை அந்நாட்டு நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்ததை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நாளை) மாலை 5.30 க்கு பாராளுமன்ற கீழ் சபை கூடி புதிய பிரதமரை தேர்வுசெய்ய வேண்டும் என ஜனாதிபதி சர்தாரி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரதமர் யூசுப் ராசா கிலானியை பாக். உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தகுதி நீக்கம் செய்தது. அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் தகுதி நீக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை கருத்தில்கொண்டு ஜனாதிபதி சர்தாரி தனது ரஷ்ய சுற்றுப் பயணத்தை ரத்துச் செய்து கடந்த இரு தினங்களில் அவசர கூட்டங்களை நடத்தினார். இதில் நேற்று காலை நடந்த கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு மூத்த தலைவர் மக்தூம் ஷகாபுதீனை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனி

21, 2012

அலைக்கற்றை பிரச்சினையில் நான் செய்த 4 தவறுகள்

அலைக்கற்றை பிரச்சினையில் நான் 4 தவறுகளைச் செய்துள்ளேன் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா. 2-ஜி வழக்கில் பிணையில் விடுவிக்கப் பட்ட ஆ. ராசா தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு திங்கட்கிழமை வந்தார். செந்துறைப் பகுதியில் தொண்டர்களிடையே அவர் மேலும் பேசியதாவது; இந்தப் பகுதி சுயமரியாதை தீரர்கள் வாழ்ந்த பூமி. உலகத்தில் எதைப் பெற விரும்பினாலும், மற்றொன்றை இழந்துதான் பெறமுடியும். இந்தியாவில் தற்போது சாதாரண மனி தன் கையிலும் அலைபேசி இருக்கிறது. அதற்காக நான் 15 மாதம் சிறையில் இருந் துள்ளேன். நான் செய்தது 4 தவறுகள், முதல் தவறு ஸ்பெக்ட்ரம் பிரச்சினை இவ் வளவுதான் என வெளிப்படையாகக் கூறியது. 2வது தவறு ஒரு ரூபாய் என்றிருந்த அலைபேசி கட்டணத்தை 30 பைசாவாகக் குறைத்தது. 3வது தவறு நான் பதவியேற்ற போது 100கோடி இந்திய மக்கள் தொகையில் 30 கோடி பேரே அலை பேசியை பயன்படுத்தினர். சிலரின் ஆதி க்கத்தில் இருந்த இந்தத் துறையை மீட்டு, பதவியை விட்டு இறங்கும்போது, 90 கோடி பேர் அலைபேசியை பயன்படுத் தினர். இதை நான் சொல்லவில்லை, நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. 4வது தவறு இந்தியக் குடிமகன் சராசரியாக மாதம் ரூ. 310 அலைபேசி கட்டணமாகச் செலுத்தி வந்ததை ரூ. 100 ஆகக் குறைத்தது என்றார்.

ஆனி 21, 2012

கடிதத்தில் எழுதிய வார்த்தைகளை அனுபவிக்கும் சுகம் மின்னஞ்சலில் வருமா?

எனது காதலை கவிதையாகவும், காவியமாகவும் மாற்றியது இந்த (காதல்) கடிதங்கள்தான், மறக்க முடியுமா.......?

உலகம், இரண்டு விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் மிகவேக வளர்ச்சி அடைந்தது. ஒன்று மின்சாரம். இரண்டு தகவல் தொடர்பு. இவை இரண்டும் இல்லாத இன்றைய உலகத்தை கற்பனையிலும் கணிக்கமுடியவில்லை.  தகவல் தொடர்பு வளர்ச்சியால் இன்று சில நிமிடங்களில் தகவல் பரிமாற்றங்கள் நடந்து விடுகின்றன. இதனால் மனித உறவுகளுக்கு நன்மை எனினும், சில இழப்புகளும் உண்டு. அரசர்கள் காலத்தில் தகவல் தொடர்புகள், புறாக்கள் மூலமும் ஒற்றர்கள் வாயிலாகவும் நடைபெற்றது. பிற்காலத்தில் கடிதத் தொடர்பு ஏற்பட்டு தகவல் பரிமாற்றம் நடந்தது. செல்வந்தர்கள் வீட்டில் மட்டும் தொலைபேசி இருந்த போது இந்தக் கடிதத் தொடர்பே உறவுகளை உணர்வுபூர்வமாய் இணைத்து வைத்திருந்தது. கிராம மக்கள் இதனை தங்கள் பேச்சு வழக்கில் ‘கடுதாசி’ என்று குறிப்பிட்டனர். (மேலும்.....)

ஆனி 21, 2012

வடபகுதியில் இராணுவ, பொதுமக்கள் நல்லுறவு தழைத்தோங்கி வருகின்றது

டபகுதியில் இராணுவத்தினர் மீண்டும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று வெளியிடப்படும் பொய்யான தகவலுக்கு எவ்வித ஆதாரமும் இல்லையென் பதை சமீபத்தில் வடபகுதிக்கு சென்றிருந்த நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இராணுவத்தினர் மட்டுமன்றி பொலிஸாரும் வடபகுதி மக்களுடன் ஒன்றாக, ஒற்றுமையாக இருந்து வருகி றார்கள். ஓரிரு இடங்களில் மாத்திரம் வடக்கில் சோதனை நிலையங்கள் இருந் தாலும், அவற்றை உண்மையில் சோதனை நிலையங்கள் என்று நாம் பார்க்கக் கூடியதாக இல்லை. சாரதியை மாத்திரம் இராணுவ உத்தியோகத்தர்கள் அழைத்து உங்கள் வாகன அனுமதிப் பத்திரத் தின் இலக்கத்தை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் என்று மிக வும் அன்பாக உரையாடுவதை நாம் அவதானித்தோம். (மேலும்.....)

ஆனி 21, 2012

படை குவிப்பின் நோக்கம்

குவைத் நாட்டில் தொடர்ந்து சுமார் 15 ஆயிரம் அமெரிக்க ராணுவப் படையினரை குவித்தே வைத்திருப்பதுஎன்று ஒபாமா நிர்வாகம் திட்ட மிட்டிருப்பதாக தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத் திற்கு அந்நாட்டின் ராணுவத் தலைமையகம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. வளைகுடா பிரதேசத்தில் சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய 6 நாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உலகின் எண் ணெய் வளத்தில் சரிபாதி இந்த நாடுகளில் குவிந்துகிடக்கிறது. உலகின் மொத்த இயற்கை எரிவாயு வளத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த நாடு களில்தான் இருக்கிறது. மேற்கண்ட 6 நாடுகளுமே நீண்ட கால மாகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியில் தான் இருக்கின்றன. அரேபிய எழுச்சியின் ஒரு பகுதியாக சமீப மாதங்களில் இந்த நாடுகளில் எழுந்த மக்கள் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்தது. (மேலும்.....)

 

ஆனி 20, 2012

 

'பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'

பெண்கள் இல்லாத வீடுகளில் நிகழும் தடுமாற்றங்களையும், தவறுகளையும் பார்த்துத்தான் 'பெண்கள், வீட்டின் கண்கள்!’ என்று சொல்லியிருப்பார்கள் போல! அதை முழுவதுமாக உணர்ந்து, தவித்து, இப்போது உயிர் துறந்திருக்கிறார் விவேகானந்தன்! மதுரை, கண்ணனேந்தல் எம்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். மகள், திருமணமாகி வேறு ஊரில் வசிக்கிறார். மகனுக்கு திருமணமாகி, அவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய்விட்டார் மருமகள். ஆக, பெண்கள் இல்லாத அந்த வீட்டில் கடைசியாக விவேகானந்தனும், மகன் விக்னேஸ்வரன் மட்டுமே! (மேலும்.....)

ஆனி 20, 2012

சென்னை புழல் அகதிகள் முகாமில் தியாகிகள் தின அஞ்சலி கூட்டம்

19.6.12 அன்று காலை 8.00 மணிக்கு சென்னை புழல் அகதிகள் முகாமில் பத்மநாபா-ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் நடத்திய அஞ்சலி நிகழ்வும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஐக்கிய பொது உடமை கட்சி உப தலைவர் தோழர் சங்கர் தோழர்பத்மநாபா திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்கு வந்திருந்த தோழர்களும்,பொதுமக்களும் கியூ வரிசையில் நின்று பூ தூவி பத்மநாபா அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். புழல் அகதிகள் முகாமில் உள்ள பத்மநாபா வாசிசசாலை முன்பாக நடைபெற்ற இந்நிழ்வானது பத்மநாபா-ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்ஸ்ரனிஸ் தலைமையில் நடைபெற்றது. (மேலும்.....)

ஆனி 20, 2012

ஷேகுவேராவின் மனைவி, மகன், உறவினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ பணிகளை பூர்த்தி செய்த பின், நேற்று கியூபா, ஹவானாவில் உள்ள ஷேகுவேராவின் இல்லத்துக்கு சென்றார். ஜனாதிபதி, ஷேகுவேராவின் குடும்பத்தவர்களின் சுகநலன்களையும் கேட்டறிந்தார். ஷேகுவேராவின் மனைவி, மகன் உட்பட உறவினர்களின் சுகநலன்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்களுடன் உரையாடினார். ஷேகுவேராவின் புரட்சி வாழ்வின் இன்மை நினைவுகளை ஷேகுவேராவின் மனைவி ஜனாதிபதியிடம் நினை வூட்டினார். ஷேகுவேரா பற்றி எழுதப்பட்ட இரு நூல்களையும் அவர் ஜனாதிபதியிடம் கையளித்தார். ஜனாதிபதியைத் தமது கமெராவில் பதித்த ஷேகுவேராவின் மகன் அதனை நினைவுப் பரிசாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், அநுர பிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ஸ, மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் விஜயத்தில் இணைந்திருந்தனர்.

ஆனி 20, 2012

திருகோணமலையில் தியாகிகள் தினம்

 

22வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி திருகோணமலை தோழர்களால் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து  திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள ஸ்ரீ கற்பக பிள்ளையார் நூல் நிலையத்தில் தோழர் சத்தியன் தலைமையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தோழர் பத்மநாபாவிற்கு அஞ்சலி செலுத்தியதுடன் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றம் இலவச கண்ணாடி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆனி 20, 2012

சிரியாவின் அமைதியைக் குறித்து ஒபாமா, புடின் ஆலோசனை

சிரியாவில் தொடரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அந்நாட்டின் அமைதியைக் குறித்தும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஜி-20 மாநாட்டில் ஆலோசித்துள்ளனர். மெக்சிகோவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பிற்கு பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதில் சிரியாவில் தலைவிரித்தாடும் வன்முறை கலவரங்கள் அடங்கி அமைதி திரும்புவதையே அனைத்து தலைவர்களும் விரும்புவதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், சிரிய மக்கள் அவர்களாகவே சுதந்திரமாக ஜனநாயகரீதியில் தங்களது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்திபல் தாங்கள் ஒன்றுபட்டுள்ளதாகவும் இருவரும் கூறியிருந்தனர்.

ஆனி 20, 2012

ஆரோக்கியம் காக்கும் கைப்பட்டை!

சுமார் 80 பவுண் விலையுள்ள கைப் பட்டையை மணிக்கட்டில் அணிந்து கொண்டால், அது அவரது சாப்பாடு தூக்க முறைகள், உடற் பயிற்சி முறை போன்றவற்றைக் கண் காணிக்கும். அதனுடன் இணைக்கப் பட்டுள்ள கணினி மென்பொருள் வாயிலாக குறிப்பிட்ட நபர் எப்படி ஆரோக்கியமாக இருப்பது என்று தனிப்பட்ட ஆலோசனையை வழங்கும். இந்தக் கைப்பட்டையை உருவாக்கி யிருக்கும் நிறுவனமான ‘ஐ¡போன்’ இது ஒரு நீடித்து உழைக்கக் கூடிய கவர்ச்சிகரமான தண்ணீரால் பாதிக்கப் படாத உபயோகமான பொருள் என்று பெருமையடித்துக்கொள்கிறது. இந்தப் பட்டையில் உள்ள அசைவு உணர்வி (மோசன் சென்சார்) இதை அணிந்திருப்பவர் எடுத்து வைக்கும் அடிகள், எரிக்கப்படும் கலோரிகள், நடக்கும் தூரம், ‘சும்மாயிருந்த’ நேரத்து டன் ஒப்பிடுகையில் வேலை அல் லது பயிற்சிகளில் ஈடுபட்ட நேரம் ஆகியவற்றைப் பதிவு செய்துகொள் ளும். அத்துடன், ஒருவர் தூங்கும் நேரம் அது ஆழமான தூக்கமா, மேலோட்டமான உறக்கமா என்பன போன்ற விடயங்களும் பதிவாகும்.

ஆனி 20, 2012

சுவிஸ்சில் தோழர் நாபாவின் 22வது நினைவு தினம்!

 

தோழர் நாபாவின் 22வது நினைவு தினம். பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட EPRLF செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா அவர்களுக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட தினமாகிய இன்று ஆனி 19 அன்று சுவிஸ் நாட்டில் உள்ள தோழர் பத்பநாபாவின் உண்மையான விசுவாசிகளாலும் ஆதரவாளர்களாலும் பொது மக்களாலும் நினைவு கூறப்பட்டது.

ஆனி 20, 2012

குழந்தைகள் பால்மா விலைகள் குறைப்பு

குழந்தைகளுக்கான பால்மாக்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று நள்ளிரவுமுதல் 19 வகையான குழந்தைகள் பால்மாக்களின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்றுத் தெரிவித்தார். இதன்படி, குழந்தைகளுக்கான பால்மா பக்கற்றுக்கள் ஆகக் குறை ந்தது 2 ரூபாவாலும், ஆகக் கூடியது 404 ரூபாவாலும் குறைக்கப்பட்டு ள்ளன. இது தொடர்பான வர்த்த மானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ள்ளதாக கொழும்பில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார். நேற்று முதல் சந்தைப்படுத்தப் படும் குழந்தைகள் பால்மா பக்கற்று க்கள் புதிய விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டும். இதுவிடயத் தில் நுகர்வோரை ஏமாற்றுவதற்கு வர்த்தகர்கள் முயற்சித்தால் அவர்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக் கப்படும். புதிய விலைகளைக் கண் காணிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடு ப்பார்கள். இது குறித்து நுகர்வோர் அதிகாரசபைக்கு நான் உரிய பணிப் புரைகளை வழங்கியுள்ளேன் என் றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர் னாண்டோ மேலும் கூறினார்.

ஆனி 20, 2012

வடக்கில் தகுதியுள்ள தொண்டர் ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்க முடிவு

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு தகுதியுள்ள தொண்டர் ஆசிரியர்கள் உடனடியாகவே ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்படுவர் எனவும் ஏனையோர் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவித்தார். வன்னித் தொண்டர் ஆசிரியர் சங்கத்தினர் திங்களன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமது நிரந்தர நியமனம் தொடர்பில் கலந்துரையாடியபோது, அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்; வன்னித் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனும் கல்வி அமைச்சருடனும் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளேன். அத்துடன் அமைச்சரவையின் முடிவும் கிடைக்க உள்ளது. தொண்டர் ஆசிரியர்களுக்கு முதன் முதலாக எமது முயற்சியின் பயனாகவே இந்த நியமனம் கிடைத்தது. அதன் பின்னர் இன்று நாடளாவிய ரீதியிலும் நியமனம் வழங்கப்பட்டு, தற்போது அத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனி 20, 2012

ஆனி 20, 2012

ஐரோப்பிய யூனியனிற்கு பிரிக்ஸ் நாடுகள் 7 ஆயிரத்து 500 கோடி டாலர் நிதி உதவி

கடுமையான பொருளா தார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் ஐரோப்பிய யூனியனைக் காப்பாற்ற பிரிக்ஸ் நாடுகள் இணைந்து 75 பில்லியன் டாலரை நிதி உதவியாக அளித்துள்ளன. ஐரோப்பிய யூனியன் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால், அந் நாட்டில் பல்வேறு வங்கி கள் திவாலாகி வருவதோடு, இக்கட்டான சூழ்நிலையில் மூழ்கியுள்ளது. எனவே, அந்நாட்டைக் காப்பாற்ற வேண்டுமெனில், 430 பில்லி யன் டாலர் தேவைப்படுவ தாக சர்வதே நிதி நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலை யில், இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக் கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு ஐரோப்பிய யூனியனை பொருளாதார நெருக்கடியி லிருந்து மீட்டெடுப்பதற் காக 75 பில்லியன் டாலரை நிதியாக வழங்கியுள்ளது. (மேலும்.....)

ஆனி 20, 2012

உண்மை கசக்கும்

(தே.இலட்சுமணன்)

இந்தி நடிகர் அமீர்கான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஸ்டார் தொலைக் காட் சியில் சமூகப் பிரச்சனைகளில் சிலவற்றை எடுத்து அதன்மீது தன் கருத்தை வழங்கு கிறார். அது விஜய் தொலைக்காட்சியிலும் தமிழில் மொழி பெயர்த்துக் காட்டப்படுகிறது. அதையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒவ் வொரு திங்கட் கிழமையும் “இந்து” நாளிதழ் வெளியிடுகிறது. புகழ்பெற்ற நடிகர்கள், நடிகைகள், சில கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மக்களிடம் அதிகப் பிரபல்யம் ஆகிவிடுகிறார்கள். அந்த மக்களின் செல்வாக்கை வணிக நோக்கத் தோடு பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் மூலமாக நுகர்வுப் பொருள்களை விளம்பரம் செய்து கோடிக் கணக்கில் லாபம் குவிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட வணிக உலகில் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஒரு நடிகர் - சில சீர் திருத்தக் கருத்துக்களை சமூக அக்கறை யோடு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் எடுத்துச் செல்லுகிறார் என்றால் அந்தக் கருத் துக்கள் கோடிக்கணக்கான மக்களிடம் பரவு வது போற்றும் செயலே. (மேலும்.....)

ஆனி 20, 2012

புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மற்றும் நகரசபை உறுப்பினர் உட்பட நான்கு பேர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது!

புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மற்றும் நகரசபை உறுப்பினர் உட்பட நான்கு பேர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் வவுனியா மாவட்ட புளொட் அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட சூரி என்பவர் அவரது காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியமை, ஆயுதங்களை வைத்திருந்தமை வாகனங்களை பலாத்காரமாக பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பாகவே குறித்த புளொட் உறுப்பினர்கள் நால்வரையும் கைது செய்துள்ளதாக காவற்துறையினர் அறிவித்துள்ளனர். குறிப்பாக புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மீது கொள்ளை முதலான பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவரைப் பொலிஸார் தேடியவேளை, சூரி தலைமறைவாகியதாகவும் கூறப்படுகிறது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வைத்து இவரைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது இவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.பார்த்தீபன் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனி 19, 2012

முள்ளிக்குளம் கிராமத்தைச் சூழ கடற்படைப் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்!

மன்னார் முசலிப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தம் இடம்பெற்றபோது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உட்பட முசலியில் உள்ள அனைத்து கிராம மக்களும் இடம்பெயர்ந்து சென்றனர். இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்த பின் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் கடந்த 2009ஆம், 2010ஆம் ஆண்டுகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இதன் போது கரடிக்குளி, மரிச்சுக்கட்டி,பாலைக்குளி,மொட்டை தீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த முஸ்ஸிம் மக்களும் பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நீர்கொழும்பு மக்களும் அடிப்படை வசதிகளுடன் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். (மேலும்.....)

ஆனி 19, 2012

யாழில் ஆர்ப்பாட்டத்திற்கு சென்று வந்தவர்கள் மீது கல் வீச்சு

வலி வடக்கு மக்களை மீளக் குடியேற்றக்கோரி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பிய பருத்தித்துறை சுப்பர் மடம் முகாமில் வாழும் மக்கள் சென்ற மினி பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதவர்கள் கல்லெறிந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பஸ்சில் சென்ற மக்கள் மீதும் ஒயில் ஊற்றியுள்ளனர். சுன்னாகம் புகையிரதக் கடவைக்கு அண்மையாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி வந்த ஆறு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சுன்னாகத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பஸ்ஸைத் தொடர்ந்து விரட்டி வந்த இவர்கள் புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அண்மையாக வைத்து பாரிய கல்லினால் மினிபஸ் மீது தாக்கியதில் பஸ்ஸின் பின் கண்ணாடி உடைந்துள்ளது. இதனையடுத்து பஸ்ஸினுள் இருந்தவர்கள் மீது ஒயில் ஊற்றப்பட்மையால் பத்துக்கும் மேற்பட்டவர்களின் உடைகள் சேதமடைந்துள்ளது.

ஆனி 19, 2012

லண்டனில் கொலைக் குற்றச் சாட்டு இரு இலங்கையருக்கு விளக்க மறியல்

பிரிட்டனின் ஒக்ஸ் போர்ட் பகுதியில் விவசாயியான சமீர சந்திரசேன கடந்த பெப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கையர் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்கு முன்னதாக பூர்வாங்க விசாரணைக்காக வாய் மூலம் சாட்சியமளிப்பதா என்பது குறித்து தீர்மானிப்பதற்கு இவர்களின் சட்டத்தரணிகளுக்கு ஜூலை 2 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒக்ஸ் போர்ட்டில் டோமியின் வீதியிலுள்ள வீடொன்றுக்கு பெப்ரவரி 23 ஆம் திகதி தீ வைத்ததாகவும் சந்திர சேனவை கொலை செய்ததாகவும் மேற்படி இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. துவான் பிவாஸ் சவால் ( 23 ) விராஜ் அழகக் கோன் ( 33 ) ஆகியோரே இவ் விரு இலங்கையர்களாவர். 28 வயதான சந்திர சேனவின் உடல் அவரின் வாடகை வீட்டில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீயின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனி 19, 2012

ஜுன் -19 தியாகிகள் தினம்

தோழர்பத்மநாபா மற்றும் அனைவரையும் நினைவு கொள்வோம்.

தோழர்பத்மநாபா மற்றும் பன்னிரு தோழர்கள் புலிகளால் 19.06.90 அன்று சென்னை சூளைமேட்டில் வைத்து படுகாலை செய்யப்பட்டனர். இந்நாளை அவரது கட்சியினர் தியாகிகள் தினமாக வருடாவருடம் அதே நாளில் கடைபிடித்து வருகின்றனர். இலங்கையின் தமிழர் உரிமை போராட்டமானது மிக நேர்த்தியாக சென்றுகொண்டிருந்த போது அது திசை மாறி சகோதர படுகொலை எனும் ஒரு மோசமான நிலைக்குள் சென்று ஆண்டம் கண்டது. அன்றே அதன் பின் விளைவுகளை  நேர்த்தியாக தீர்க்க தரிசனத்துடன்   முன்வைத்தவர் தோழர்பத்மநாபா என்றால் அது மிகையாகாது. இன்று அந்த சகோதர படுகொலைகளின் விளைவே நாம் ஒன்றும் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டு நிற்கிறோம் என்பதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். (மேலும்.....)

ஆனி 19, 2012

22-வது தியாகிகள் தினம்

19.06.2012 காலை 8.00 மணிக்கு புழல் அகதிகள் முகாமில் உள்ள தோழர்  பத்மநாபா வாசிகசாலை முன்பாக நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

பத்மநாபா - ஈ.பி.ஆர்.எல்.எப் (சென்னை)

ஆனி 19, 2012

 

ஆனி 19, 2012

எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் தோழர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி செயலாளர் நாயகம் க.பத்மநாபாவுக்கும் அருமைதோழர்களுக்குமான அஞ்சலிகவிதை உங்களி வழி எங்கள் பயணம் தோழர்களே

ஆனி 19, 2012

தொற்றா நோய்களின் தாக்கம்

உலகில் 44 மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம்

தொற்றா நோய்கள் காரணமாக அடுத்துவரும் பத்து வருடங்களில் 44 மில்லியன் பேர் உலகில் உயிரிழப்பர் என்று உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் தொற்றா நோய்கள் காரணமாக தென்னாசிய நாடுகளில் 10.4 மில்லியன் பேர் உயிரிழப்பர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் நால்வரில் ஒருவர் தொற்றா நோயான நீரிழிவு நோயின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையின் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் உயிரிழப்பவர்களில் பெரும் பகுதியினர் தொற்றா நோய்களுக்கு உள்ளானவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டி ருக்கின்றது. தொற்றா நோய்களைத் தவிர்ப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான ஆசியக் கூட்டமைப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்கா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆனி 19, 2012

கிரீஸ்  பொதுத்தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி

கிரீஸ் நாடாளுமன்றத் திற்கு நடைபெற்ற தேர்த லில் குடியரசு கட்சி அதிக இடங்களை கைப்பற்றி யுள்ளது. கிரீஸ் நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத்தேர் தலில் எந்த கட்சிக்கும் அருதிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் மற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சி யும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இரண்டா வது முறையாக ஞாயிறன்று பொதுத்தேர்தல் நடை பெற்றது. இதில் குடியரசு கட்சிக்கும், சிரிசா கட்சிக் கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. குடி யரசு கட்சி ஐரோப்பிய ஒன் றிய நாடுகளின் பொதுவான நாணயமான யூரோவை தொடர்ந்து பயன்படுத்து வது என கொள்கை முடி வெடுத்து ஆதரித்து வந்தது. இதற்கு எதிராக சிரிசா கட்சி ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் கடனுதவியை வாங்கக் கூடாது என்பது டன், ஐரோப்பிய ஒன்றியத் தில் இருந்து விலகிச் செல்ல வேண்டும் என தனது நிலை யை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வந்தது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வந்தது. மேலும் கடனில் சிக்கித் தவித்து அரசு கஜானா காலியாகும் சூழல் உருவானது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தல் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாக கருதப் பட்டது. இந்நிலையில் குடி யரசு கட்சியே அதிக இடங் களை கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித் துள்ள குடியரசு கட்சி தலை வர் அந்தோனிஸ் சமராஸ், கிரீஸ் தனது பயன்பாட் டுக்கும் உபயோகிப்பதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து விலகிச்செல்லாது இருப்பதற்கும் கிரீஸ் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால்தான் இந்த தேர்த லின் முடிவாக குடியரசு கட்சி வெற்றி பெற்றிருக் கிறது என தெரிவித்தார்.

ஆனி 19, 2012

வடமாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் - வாசுதேவநாணயக்கார!

கண்ணிவெடி, மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களைக் காரணங்காட்டி வடமாகாணசபைத் தேர்தலை நடத்தும் விடயத்தில் அரசு காலங்கடத்திவரும் இவ் வேளையில், வடமாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளருமான வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது நடத்தப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை அரசுக்கு முக்கிய பிரமுகர்கள் விவரித்துவரும் நிலையிலேயே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்ட கருத்தை முன்வைத்துள்ளார். வடமாகாணசபைத் தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார். கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கை, மீள்குடியேற்றம் ஆகிய விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில்தான் வடக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்படியானால் ஏன் மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியாது என்ற கேள்வி எழும்புகின்றது அல்லவா?

ஆனி 19, 2012

களத்தில் இல்லை கலாம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி யிடப்போவது இல்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் திங்களன்று அறிவித்தார். இதுதொடர்பாக தில்லியில் திங்களன்று அப்துல் கலாம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர் பான பிரச்சனையின் ஒட்டுமொத்த தன்மை யை உணர்ந்தும், தற்போது நிலவும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டும்” இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக தெரிவித் துள்ளார். “மீண்டும் ஒருமுறை குடியரசுத் தலை வர் பதவியில் இருந்து செயல்படுவதற்கான விருப்பமோ அல்லது தேர்தலில் போட்டி யிட வேண்டுமென்ற ஆர்வமோ எனக்கு ஒரு போதும் இருந்தது இல்லை” என்று குறிப்பிட்டுள்ள அப்துல்கலாம், என்ற போதிலும், தான் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜியும் இதர அரசியல் கட்சிகளும் விரும்பினர் என்று குறிப்பிட்டுள்ளார். “இதேபோன்ற விருப்பத்தை ஏராளமான குடிமக்கள் என்னிடம் வெளிப்படுத் தினார்கள், அது என் மீதான அவர்களது அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்து கிறது. என்மீதான மக்களின் உணர்வுகளை காட்டுகிறது. இந்த ஆதரவினால் நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள அப்துல்கலாம், “இது அவர்களது விருப்பமாக இருக்கிறது; இந்த உணர்வை நான் மதிக்கிறேன்; என்மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆனி 19, 2012

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் தொடர்பில்: இரட்டைக் குடியுரிமை தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம்!

இரட்டைக் குடியுரிமை தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் போது புதிய நடைமுறைகள் பின்பற்றப்படஉள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார். வேறும் ஓர் நாட்டில் குடியுரிமை உடைய நபர் ஒருவர்இலங்கையில் இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்தால், முதலில் ஐந்து ஆண்டுகள்வதிவிட உரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளின் பின்னரே குறித்த நபருக்கு இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் எவ்வாறு குடிரிமை பெற்றுக் கொண்டார்கள் என்பது பற்றிய விபரங்களை வெளியிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். என்ன காரணத்திற்காக இலங்கையில் குடியுரிமை கோரப்படுகின்றது என்பது பற்றியும் விளக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்போர் கட்டணமாக இரண்டு தவணைக்குள் 200,000 ரூபாவினை செலுத்த வேண்டுமென குறிப்பிடப்படுகிறது. சட்ட திருத்தங்கள் கொண்டு வரும் நோக்கில்இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை இந்த ஆண்டு ஆரம்பம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனி 19, 2012

எகிப்து தேர்தலில்  முகமது மோர்சி வெற்றி 

எகிப்தின் புதிய அதிப ராக முகமது மோர்சி தேர்ந் தெடுக்கப்பட்டதாக அறி விக்கப்பட்டுள்ளது. எகிப்தில் அதிபராக இருந்த ஹோசினி முபா ரக்குக்கு எதிராக மக்கள் புரட்சி நடத்தினர். இதற்கு அமெரிக்கா மறைமுகமாக ஆதரவு அளித்தது. முபாரக் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் முன்னாள் அதிபர் அன்வர் கொலை வழக்கில் தண டனை விதிக்கப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள் ளார். மக்கள் ஆதரவுடன் ராணுவம் ஆட்சியை பிடித் தது. புதிய அதிபர் தேர்ந் தெடுக்கப்படும் வரை ராணுவ தலைமைக் குழு ஆட்சியை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ராணுவ தலைமைக்குழு தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முயன்றது. இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட் டத்தில் குதித்தார்கள். இதை யடுத்து ராணுவம் மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது. சில நாட்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் அகமது சபீக்கும், நீதிக் கட்சியின் தலைவர் முகமது மோர்சியும் போட்டியிட் டார்கள். தேர்தலில் முகமது மோர்சி வெற்றி பெற்றதாக ராணுவ தலைமைக் குழு திங் களன்று அறித்தது. மக்கள் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ராணுவ தலைமைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஆதர வுடன் நடத்தப்பட்ட இந்த தேர்தல் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார் கள் என்று ராணுவ தலை மைக் குழு அஞ்சுகிறது. இத னால் தேர்தல் முடிவை அர சியல் அமைப்புச் சட்ட அறி விப்பாக வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தேர்தல் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் அவர்களை ஒடுக்கவும் ஆட்சியாளர்கள் திட்ட மிட்டுள்ளனர்.

ஆனி 18, 2012

ஆனி 18, 2012

22 பேர் சிங்களவர்கள், 03 பேர் முஸ்லிம்கள் டாக்டர்கள் சேவையாற்றுகின்ற

முல்லைத்தீவு பெரியாஸ்பத்திரி தமிழ் வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை மத்தியில் திருப்திகரமான மக்கள் சேவை

வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறைக்கு மத்தியிலும் முழுமை பெற்ற ஆஸ்பத்திரி யாக முல்லைத்தீவு பெரிய ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. ஏ 4 பாதைக்கு அருகிலுள்ள இந்த பெரியாஸ்பத்திரி விடுதலைப் புலிகளால் சேதமாக்கப்பட்டு தற்போது முழுமைபெற்ற ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது. ஆகப் பிந்திய மருத்துவ உபகரணங்களும், சிகிச்சை வசதிகளும் இங்கு உள்ளன. விடுதலைப் புலிகள் தம்மவருக்கு மட்டுமே இந்த ஆஸ்பத்திரியை பயன் படுத்தினர். வறிய மக்களுக்கு இங்கு செல்ல வசதியே இருக்கவில்லை. இந்த ஆஸ்பத்திரியில் 25 இளம் டாக்டர்கள் சேவையாற்றுகின்றனர். 22 பேர் சிங்களவர்கள். 03 பேர் முஸ்லிம்கள். இந்த 25 டாக்டர்மாரும் சிறப்பாக மருத்துவப் பணி செய்கின்றனர். விடுதலைப் புலிகள் இளைஞர்களையும், சிறுவர்களையும் கடத்தினர். இதனால் எல்.ரி.ரி.ஈ. யினரின் காலத்தில் மக்கள் ஒருபோதும் இந்த ஆஸ்பத்திரிக்குச் செல்லவில்லை என வசந்தராஜா கிருத் திகா என்ற 22 வயது பெண் நோயாளி தெரிவித்தார். (மேலும்.....)

ஆனி 18, 2012

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.06.2012)

பத்மநாபா அவர்களின் 22வது ஆண்டு நினைவுநாள் யாழில்

கொலைகார புலிபாசிஸ்டுக்கள் துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் உயிரிழந்த பத்மநாபா அவர்களின் 22வது ஆண்டு நினைவுநாள் யாழில். இருபத்திரண்டாவது தியாகிகள் தினம் எதிர் வரும் 24 ம் திகதி லண்டனில்! EPRLF செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் 22வது நினைவுதினம் யாழில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.06.2012) பி.ப. 3.00 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள மக்கள் தலைவன் தோழர் பத்மநாபாவின் நினைவுதினத்தினை அனுஷ்டிக்க அவரின் கொள்கை வழி நடந்தோர் நடப்போர் நடப்பதற்காய் விரும்புவோர் அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் தோழமையுடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனி 18, 2012

விலைவாசிக்கு எதிராக ஜே.வி.பி. துண்டுப்பிரசுரம் விநியோகம்

தற்போது நாட்டில் அதிகரித்துவரும் பொருட்களின் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.) மட்டக்களப்பு நகரில் இன்று காலை துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். (ஜே.வி.பி.) கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரே இத்துண்டுப் பிரசுரங்களை மட்டக்களப்பு பொது சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் கூடியிருந்த மக்களிடம் கையளித்தனர். நீதியான தேசம். நேர்மையான சமுதாயம். அடிமையில்லா மனிதன். மக்களை வதைக்கின்ற ஆட்சிக்கு எதிராக நல்லதோர் ஆட்சியை உருவாக்குவதற்காக அணிதிரள்வோம் என்ற தலைப்பில் இத்துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மட்டக்களப்பில் வீதியோரங்களில் சப்பாத்து தைக்கும் தொழிலாளிகளிடம் (ஜே.வி.பி.) கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரனின் நாளாந்த செலவு பற்றியும், வருமானம் பற்றியும் கேட்டறிந்ததாக அங்கு இருக்கும் செய்தியாளர் தெரிவித்தார்.

ஆனி 18, 2012

இருபத்திரண்டாவது தியாகிகள் தினம் எதிர் வரும் 24 ம் திகதி லண்டனில்!

அன்புடன் தோழர்களுக்கு

இருபத்திரண்டாவது தியாகிகள் தினம் எதிர் வரும் 24 ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது. 1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைய இருக்கின்றது. கால் நூற்றாண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் இன்று அதே அடிப்படைகளுக்காக, அதாவது வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பரவலாக்கம் வேண்டும், சிங்கள முஸ்லிம் மக்களின் இணக்கமின்றி தீர்வு சாத்தியமில்லை, இந்திய சர்வதேச அனுசரணை அத்தியாவசியமானது, யதார்த்தங்களை புரிந்துகொண்ட நுட்ப்பமான அணுகுமுறை தேவை என்ற அதே நிலைப்பாடுகளுக்கு அனைத்து தமிழர் தரப்பினரும் வந்து நிற்கின்றார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலம் எமது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் சொல்லில் அடங்காது. நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகள், வீராப்பு வசனங்கள்,உசுபேற்றும் அரசியல் எமது மக்களையும் தேசத்தையும் நாசம் செய்யும் என்கின்ற தீர்க்கதரிசனத்துடன், ஏற்படவிருக்கும் அனர்த்தங்களை நிறுத்தலாம் என்கின்ற கனவுகளுடனுமே ஆயிரக்கணக்கான எமது தோழர்களும் பொது மக்களும் தமது உயிர்களை அன்று அர்ப்பணித்தனர். இலங்கை இந்திய ஒப்பந்ததத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் நிர்வாகம் ஒன்று பலப்பட வேண்டும் என்றே எமது தோழர்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்ய வேண்டி நேரிட்டது. பெருமை மிக்க எமது உன்னதமான தோழர்களை தியாகிகள் தினமான ஜூன் 19 இல் வருடா வருடம் நினைவு கூருவதில் EPRLF இனராகிய நாம் பெருமை கொள்ளாமல் இருக்க முடியாது. இம்முறை தியாகிகள் தினத்தில் இலங்கை இந்திய ஒப்பந்ததத்தின் பினரான 25 வருடங்கள் பற்றிய மீள் பார்வை பற்றிய கலந்துரையாடல் விசேட அம்சமாகும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

தோழமையுடன்
சிராப்.

ஆனி 18, 2012

நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து நாளை யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்

தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் நில ஆக்கிரமிப்பை கண்டித்து நாளை திங்கட்கிழமை யாழ்.நகரினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடத்தவிருக்கும் எதிர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன. நாளை பிற்பகல் ஒரு மணிக்கு யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் நிரந்த படைத்தளங்களை அமைப்பதற்கு முப்படைகளும் தயாராகி வருகின்றன. வன்னியில் அண்மைக் காலங்களில் சுவீகரித்த இடங்களிலும், யாழ் .குடாநாட்டில் 1996ஆம் ஆண்டு முதல் படைதரப்பு நிலைகொண்டுள்ள அரச மற்றும் தனியார் நிலங்கள் மற்றும் கட்டிடங்களிலும் நிரந்தர படைத்தளங்களை அமைக்கும் முயற்சிகள் முனைப்பு பெற்றுள்ளன. (மேலும்.....)

ஆனி 18, 2012

வெனிசுலா தயாரித்த முதல் ஆளில்லா விமானம்

வெனிசுலா முதன் முதலில் ஆளில்லா விமானத் தை தயாரித்து, அமெரிக் காவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தென் அமெரிக்கா கண் டத்தில் உள்ள கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகள் எதை செய்தாலும் அமெ ரிக்காவின் கண்ணை உறுத் தும். சில ஆண்டுகளுக்கு முன்பு வெனிசுலா 3 நவீனரக ஹெலிகாப்டர்களை தயா ரித்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித் தது. இப்போது ஈரான் நாட்டு நிபுணர்கள் உதவி யுடன் வெனிசுலா முதன் முதலாக ஆளில்லா விமானத்தை தயாரித்து அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. வெனிசுலா முதன் முத லாக ஆளில்லா விமானத் தை தயாரித்திருப்பதை அந் நாட்டு ஜனாதிபதி சாவேஸ் அதிகாரப்பூர்வமாக அறி வித்தார். மேலும் அவர் கூறி யதாவது:- வெனிசுலா சுதந்திர மான நாடு. வெனிசுலா பாது காப்பை பலப்படுத்த ஈரான், சீனா, ரஷ்யா நாடுகள் உதவியுடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வெனிசுலா பாதுகாப் பை அதிகரிக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் ஆளில்லா விமானத்தை தயாரித்துள்ளோம். இந்த ஆளில்லா விமானம் ராணுவத்துக்காகவும், சாதாரண மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றார். வெனிசுலா தயாரித் துள்ள ஆளில்லா விமானம் 100 கிலோமீட்டர் வேகத்தில் 9 ஆயிரம் அடி உயரத் தில் 90 நிமிடம் பறக்கும் திறன் கொண்டது.

ஆனி 18, 2012

வடக்கில் முகாம்களை மீள் அமைக்க 3 மாத காலத்துள் அரச காணிகள் தெரிவு

வடக்கில் இராணுவ முகாம்களை மீள் அமைப்பதற்குத் தேவையான அரச காணிகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் மூன்று மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்யப்படும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இராணுவத்திற்குத் தேவையான அரச காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்த அவர், காணிகள் வழங்கப்பட்ட பின்னர் இராணுவம் தங்கியுள்ள பொது மக்களின் எஞ்சியுள்ள வீடுகளும் விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அடிப்படையில் எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்ப டும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டி னார். அடையாளம் காணப்படும் அரச காணிகளில் முகாம்கள் மீள் அமைக்கப்பட்ட பின்னர் பொது மக்களின் வீடுகளில் தங்கியுள்ள இராணுவத்தினர் அந்த வீடுகளை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளனர். (மேலும்.....)

ஆனி 18, 2012

‘சிகிரியா குன்றிலிருந்து குளவிகளை அகற்றுவதில்லை’

சிகிரியா குன்றிலுள்ள குளவிகளை எக்காரணங் கொண்டும் அங்கிருந்து அகற்றுவதில்லை என வன விலங்குகள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன 15 ஆம் திகதி சீகிரியாவில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் தெரிவித்தார். சிகிரியா குன்றிலுள்ள குளவிகளை மாதுறு ஓயா பாதுகாப்பு வனப் பிரதேசத்தில் விடுவதென அண்மையில் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய கலாசார முக்கோண நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி அதிகாரி உள்ளிட்ட குழுவினருடன் சீகிரியா பிரதேசத்திற்கு வருகை தந்த அமைச்சர் எஸ். எம். சந்திரசேன மேற்கொண்ட நீண்ட நேர காலத்துரையாடலின் பின்னரே குளவிகளை சீகிரியாக் குன்றிலிருந்து அகற்றுவதில்லை’ என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. குளவிகளை வேறிடங்களுக்கு எடுத்துச் செல்வதால் அவை காலப் போக்கில் சிறிது சிறிதாக அழிவடையும் எனவும், அவை மீண்டும் மீண்டும் சீசிரியாவை வந்தடையும் வாய்ப்புகள் அதிகம் எனவும் இதன் போதுதெரிவிக்கப்பட்டது.

ஆனி 18, 2012

வளமிக்க மண்ணை மங்க வைக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை

(ஆர்.ஜி. ஜெகதீஷ் )

னிதர்களாகிய நாம் தினம் சுவாசிக்கும் காற்றை யாராவது தடைசெய்தால், நம்முடைய நிலைமை என்னவாகும்? நம் உடலின் ஒவ்வொரு முக்கிய உறுப்புகளும் செயலிழந்து கடைசியாக நம்மால் இறுதி மூச்சுக்கூட விட முடியாமல் பரிதாபமாக மாய்ந்து போவாம். மனிதன் சுவாசிப்பதற்குத் தேவை யான பிராண வாயு காடுகளில் உள்ள மரங்களில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால், அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காடுகளின் இப்போதுள்ள நிலைமை வருத்தமளிக்கும் நிலையில் இருக்கின்றது. மனிதனின் நுரையீரலைப் பிளாஸ் டிக் பையால் அடைத்தால் எப்படிச் சுவாசிக்க முடியாதோ அதே மனிதனால் காடுகளில் வீசப்படும் பிளாஸ்டிக்கால் மரங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. (மேலும்.....)

ஆனி 18, 2012

பொதுமக்களின் காணிகளை பலாத்காரமாக வைத்திருக்கும் தேவை இராணுவத்துக்கு இல்லை

வடக்கில் இராணுவத்தின் பொறுப்பிலிருந்த 50 வீதமான வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சியுள்ள 400 வீடுகளையும் விரைவில் கையளிக்கவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். வடக்கிலுள்ள பொது மக்களில் காணிகளை பலாத்காரமாக வைத்திருக்க வேண்டிய எந்த ஒரு தேவைகளும் இராணுவத்திற்கு இல்லை என்று தெரிவித்த அவர், அவ்வாறு கூறப்படும் செய்திகள் தவறானது என்றும் சுட்டிக்காட்டினார். வடக்கில் முகாம்களை அமைப்பதற்கு தேவையான காணிகளை மாகாண ஆளுநரிடம் கோரியுள்ளதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, உரிய இடத்தில் பொருத்தமான காணிகள் கிடைத்தவுடன் எஞ்சியுள்ள 400 வீடுகளையும் உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோன்று வடக்கின் பாதுகாப்பு நிலைமை கொழும்பு உட்பட நகர்ப் புரங்களைவிட சிறந்ததாக காணப்படுவதுடன் 26 ஆயிரம் இராணுவத்தினர் கடமையாற்றி வந்த நிலையில் அது தற்போது 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்பு தேவைகளை கருத்திற்கொண்டு தேவைக்கேற்ப படிப் படியாக எஞ்சியுள்ளவர்களை குறைப்பதா இல்லையா என்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க சுட்டிக் காட்டினார்.

ஆனி 18, 2012

உலகெங்கும்...

அகதிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு

றுமையான மக்களின் எண்ணிக்கை, வறுமைச் சூழல் எவ்வாறு அதிகரித்துப் போகின்றதோ? அதே போல் அகதி களின் எண்ணிக்கை, அவர்களைப் பராமரிக்கும் பொதுத்தளம் என்பன வற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகின்றது. அகதிகள் யார் என்று அடையாளம் காட்டுவது இலகு. ஆனால் அகதிகள் குறித்து பொதுவான வரையறை ஒன்றைச் சொல்வது கடினம். உலக அளவில் அகதிகள் என்றால் யார்? அவர்களுக்கான பொதுவான குண வியல்புகள் என்ன? என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஏனெனில் அகதிகள் உருவாக்கப்பட்டி ருக்கும் சூழல், அதற்கான காரணங்கள் அவர்களின் எதிர்காலம் குறித்து உரு வாக்கப்பட்டிருக்கும் செயற் திட்டங்கள் போன்றவை மாறுபாட்டையும், வேறுபாட்டையும் கொண்டுள்ளன. (மேலும்.....) 

ஆனி 17, 2012

தமது பிரதிநிதிகள் யார் என்பதில் தமிழருக்கு எழுந்துள்ள சந்தேகம்?

தமிழ்மக்கள் இன்று அரசியல் அநாதைகளாக உள்ளனர் என்று கூறினால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில் அம்மக்களை சரியான முறையில் தலைமை வகித்து வழிநடத்த பொறுப்பான தமிழ் அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் இன்று இல்லை எனக் கூறலாம். அதனால் அரசாங்கமே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவும் இருந்து செயற்படுகின்றது என்று கூறினாலும் அது பொய்யாகாது. ஒரு காலத்தில் வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரையில் அங்கு வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே எனப்புலிகள் தமக்குத் தாமே மகுடம் சூடி வந்தனர். அந்த மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ அதனை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதுதான் அன்றைய கால கட்ட நிலையாக இருந்தது. அதனால்தான் அப்போது பதவி வகித்த அரசாங்கங்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டன. (மேலும்.....)

ஆனி 17, 2012

13வது திருத்தம் தொடர்பான அச்சமும் தெளிவும்

இலங்கை ஜனநாயக சோஸலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியே 13 வது திருத்தமாகும். தேசி யப் பிரச்சினையான இனப்பிரச்சினையில் இன்றுவரையில் ஒரு சட்டபூர்வ ஆவணமாக இருப்பது 13வது திருத்தமே. பல மும்மொழிவுகள் பின்மொழிவுகள் உத்தேச நகல் வரைவுகள் பரிமாறப்பட்ட ஆவணங்கள் என பலவிதமான ஆலோசனைகள் அரங்கேறியும் எவையும் சட்டபூர்வ அந்தஸ்தையோ, அமுலாக்கத்தகு தகைமையையோ பெறவில்லை என்ற வகையில் அதிகாரம் பெற்ற ஒரு பொதுவான அடிப்படை ஆவணமாக 13வது திருத்தம் காணப்படுகிறது. (மேலும்.....)

ஆனி 17, 2012

கிழக்கு முதலமைச்சராக மீண்டும் சந்திரகாந்தன் தெரிவாகுவது உறுதி

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு, மீண்டும் அதற்கான தேர்தல் இடம் பெறுமாயின் இன்றைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதலமைச்சராகுவார். இதனையிட்டு எவரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காரணம் கிழக்கு மண்ணில் வாழும் மூவின மக்களையும் ஒற்றுமையுடன் கட்டிக் காக்கும் ஆளுமையும், திராணியும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு உண்டு என்பதை எவரும் மறுதலிக்க முடியாது. இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அ. செல்வேந்திரன் குறிப்பிட்டார். (மேலும்.....)

ஆனி 17, 2012

மேடைகளில் மக்கள் முன் வீர முழக்கம், ஊடகங்களில் வேறொரு விளக்கம்

தமிழரசு கட்சியின் தடுமாற்ற அரசியல் இனியும் தொடருமா? உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென புத்திஜீவிகள் வேண்டுகோள்

தமிழரசுக் கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது தவறு நேர்ந்திருப் பதாக அக்கட்சியினர் கூறுவது அவர்களின் தடுமாற்ற அரசியலைப் புலப்படுத்துவதாகப் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநாட் டின்போது கட்சியின் தலைவர் இரா. சம்பந் தன் ஆற்றிய உரையே சர்ச்சையைத் தோற்று வித்திருக்கிறது. அந்தச் செய்தியை முதன் முதலில் ‘இந்து’ பத்திரிகையே வெளியிட்டிருந்தது. அப்போது அதுபற்றி தமிழரசுக் கட்சியினர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இப்போது, சம்பந்தனின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென தேசப் பற்றுள்ள சில அரசியல் கட்சிகள் கோரியுள்ளன. நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. (மேலும்.....)

ஆனி 17, 2012

முதலமைச்சர் மாறி மாறி நியமிக்கப்பட்டால் தமிழ் - முஸ்லிம் உறவு காத்திரமாகும்

கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச் சராக வரவேண்டு மென அந்த மாகாண முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதில் என்ன தவறிருக்கின்றதென்று மாகாண அமைச்சர் எம்.எஸ். சுபைர் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களும் சனத்தொகையில் சுமார் அரைவாசிப் பங்கினராக இருக்கின்றனர். எனவே முதலமைச்சர் நியமனம் மாறி மாறி வருவதே தமிழ், முஸ்லிம் உறவுக்கு காத்திரமாக அமையுமெனச் சுட்டிக்காட்டிய அவர் இனப்பிரச்சினைத் தீர்வில் சிறுபான்மை மக்கள் ஒட்டு மொத்தமாக குரல் எழுப்ப இது அடித்தளமாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார். தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் இன ஐக்கியத்துக்காக குரலெழுப்பும் தமிழ்த் தலைமைகள் இதையுணர்ந்து செயற்படுவதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வை இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகையேற்படுமென அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்.....) 

ஆனி 17, 2012

கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ ஜனாதிபதி மஹிந்த இருதரப்பு பேச்சு

கியூபாவுக்கான மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேச்சு நடத்துகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹவானாவில் உள்ள ஒசே மர்டி வானூர்தி தளத்திற்கு நேற்று முன்தினம் மாலை சென்றடைந்தார். அதன்போது, அவரை கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அங்குள்ள இலங்கை தூதுவர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது, கியூபா ஜனாதிபதியுடன் இருதரப்பு கலந்துரை யாடல்கள் இடம்பெறவுள்ளன. அதேவேளை, சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப் படவுள்ளன. கியூபாவில் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் பலவற்றையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்காணிக்கவுள்ளார். ஜனாதிபதியின் இந்த கியூப விஜயத்துக்கான நோக்கம் இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவதும் சர்வதேச மட்டத்தில் கியூபாவின் இலங்கைக்கான ஒத்துழைப்புக்காக கியூபா அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதும் ஆகும். இலங்கையின் விவசாயத் துறையில் உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் இவ்விஜயத்தின் போது ஆராயப்படவுள்ளது. கியூபாவின் உயிரியல் தொழில்நுட்ப நிலையத்துக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

ஆனி 17, 2012

இந்திய, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை இழுபறிகளை முடித்து வைக்க முயற்சி

இந்திய - பாகிஸ்தான் உயர் மட்ட பேச்சுக்கள் சென்ற வாரம் சிறப்பாக ஆரம்பமானது. நெடுங்காலமாக இழுபறிக்குள்ளாகியுள்ள முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் அடுத்த சந்ததியினருக்கும் விட்டு வைக்காமல் ஒட்டுமொத்தமாக முடித்துவைப்பதே இந்தப் பேச்சு வார்த்தைகளின் நோக்கம். எவ்வளவுதான் உள்முரண்டுபாடுகள், கோபதாபங்கள் இருந்தாலும் அயலவர் இருவரும் முரண்பட்டுக் கொண்டிருப்பது இரு நாட்டு பொதுமக்களுக்கும் நல்லதல்ல. உள்ளவற்றை வெளிப்படையாக எடுத்துரைத்து அரசியல் நலன்களுக்கப்பால் சென்று தேசங்களின் நன்மைக்காக இந்திய - பாகிஸ்தான் தலைவர்கள் செயற்பட வேண்டியுள்ளது. (மேலும்.....) 

ஆனி 16, 2012

இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்! பொன்சேகா அதிரடி

(சமஸ்)

''போரில் சண்டையின்போதுதான் பிரபாகரன் இறந்தாரா? அவர் சரணடையவில்லை என்றும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படவில்லை என்றும் உங்களால் உறுதி அளிக்க முடியுமா?''

''கண்டிப்பாக.

அந்த இரவு எனக்கு எப்போதுமே மறக்க முடியாதது. ஒரு சின்ன பகுதிக்குள் பிரபாகரனைச் சுற்றி வளைத்தோம். மூன்று அணிகளைக்கொண்டு மூன்று வளையங்களை புலிகள் அமைத்திருந்தார்கள். அதிகபட்சம் அவர்கள் 400 பேர் இருந்திருக்கலாம். முதல் அணியில் 100 பேர். நடேசன், பூலித்தேவன் தலைமையிலானது. அழித்தோம். அடுத்த அணியில் 200 பேர். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையிலானது. அழித்தோம். கடைசிக் கட்டத் தாக்குதல் நள்ளிரவில் நடந்தது. 100 பேர்கொண்ட அணி அது. பிரபாகரன் தலைமையிலானது. அழித்தோம். சண்டையில் குண்டடிபட்டுத்தான் பிரபாகரன் இறந்தார்.'' (மேலும்.....)

ஆனி 16, 2012

சமயம் உயரத்திலிருத்தலும்! வாழ்வு துயரத்தில் வீழ்தலும்!!

மூதூர் ஜபல் நகர்மலையைப்பொறுத்தவரை அது மூதூரின் மையப்பகுதியில்  எழில் கொஞ்சும் ஒரு இயற்கை வளமாகும். மனித நாகரிகம் தோன்றியது முதல் மக்களது கருங்கற் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அம்மலையைச் சூழவுள்ள பல்லாயிக்கணக்காண வயல்நிலங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கும், தமிழருக்கும் உரித்தானவை. மலைக்குச் செல்லும் வழியில் ஜபல்நகர் மஸ்ஜிதுன்னூர் என்ற பள்ளிவாசலும், மலையடிவாரத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வணங்குவதற்கென ஒரு சிறு முருகன் கோவிலும் பன்னெடுங்காலமாகக் காணப்படுகிறது. இச்சமயத்தலங்கள் எக்காலத்திலும் பன்னெடுயின் மீது ஆதிக்கம் செலுத்தியது கிடையாது. மாறாக, மலையைச் சூழவுள்ள தம் விளை நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தம் வணக்கவழிபாட்டை மேற்கொள்ளவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. யுதார்த்தம் இவ்வாறிருக்க வரலாற்றில் என்றுமே பௌத்த சமய அடையாளம் இல்லாத பூர்வீகமாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்(குடியேற்றினாலன்றி)பௌத்தர்கள் இல்லாத ஜபல்நகர் மலையின் மீது, இப்போது புத்தர் சிலை நிறுவும் பணி அதிகார பக்கபலத்துடன்12.06.2012 முதல் நடை பெறுகின்றது. அதேவேளை ஏனைய சமய அடையாளம் இருப்பது போல அங்கு பௌத்த சமள அடையாளமும் இருந்து விட்டுப் போகட்டும் என ஒர் அபிப்பிராயமும்  இங்கு முன்வைக்கப்படலாம். ஆனால் இங்கு மக்களது நியாயமான அச்சம் என்னவென்றால் , வரலாற்றில் சிறுபான்மை மக்கள் செறிவாக சுமுகமாக வாழும் பிரதேசங்களில் புத்தர் சிலை நிறுவிடும் போதெல்லாம் நடைபெற்றுவருவதை அனைவரும் அறிவர். (மேலும்.....)

ஆனி 16, 2012

ஆனி 16, 2012

Nik Wallenda successfully completes Niagara Falls highrope walk before spectators, television viewers

Tightrope walker Nik Wallenda walks across Niagara Falls from Buffalo, New York to Niagara Falls, Ontario, Friday evening June 15, 2012. It has been the seventh generation Wallenda family daredevils dream to make the historic walk. Emerging out of a cloud of mist, Nik Wallenda ran the last few steps to become the first man in more than a century to cross Niagara Falls on a high wire and singlehandedly bring the Wallenda name back into the public consciousness. Although the walk was mostly free of theatrics, thirty metres from the finish, he bent down on one knee. As spectators gasped, suspecting he had fallen, he raised a fist in triumph. The crowd chanted his name as he cleared the last few meters to a raised lift, moving past the lights, cranes and news vans of what had become a multi-million dollar operation. “Welcome to Canada, Nik!” screamed a spectator. (more...)

ஆனி 16, 2012

ஆனி 16, 2012

காதலியை கரம் பிடிக்கும் முன்னாள் புலி உறுப்பினர்

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளவுள்ளார். இவருடைய திருமணம் நாளை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெறவிருப்பதாக புனர்வாழ்வு ஆணையகத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மஞ்சுள களுவாராய்ச்சி தெரிவித்தார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு கடந்த 2ஆம் திகதி சமூகத்தில் இணைக்கப்பட்ட ஸ்ரீகாந்த் ஸ்ரீகண்ணன் என்பவரே தனது நீண்டநாள் காதலியைக் கரம்பிடிக்கவுள்ளார். வவுனியாவிலுள்ள சிறுவர் பராமரிப்பு பாடசாலையில் சந்தித்த பெண்மீது மலர்ந்த காதல் தற்பொழுது திருமணம்வரை சென்றுள்ளது. தனது நீண்டநாள் காதலியான தங்கராசா உதயரூபியை இவர் நாளை கரம்பிடிக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

ஆனி 16, 2012

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஐ.நா. வுடன் இலங்கை இணைய வேண்டும் - பான் கீ மூன்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு தன்னால் ஊக்கமளிக்க முடியும் என பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளதை பான் கீ மூன் வரவேற்றுள்ளார். மேலும் வடபகுதியில் பாதுகாப்புப் படைகள் குறைக்கப்பட்டதையும் வரவேற்றுள்ள அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19/2 தீர்மானத்தை வரவேற்பதாகவும் ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் நீதி, சமத்துவம், நியாயம், நல்லிணக்கம் கிடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனி 16, 2012

ஜனாதிபதி கியூபா பயணம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு நேற்று கியூபா நோக்கிப் பயணமானார். ஹவானா சென்றடையும் ஜனாதிப திக்கு கியூபா புரட்சி இல்லத்தில் உத்தியோகபூர்வ வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அங்கு ஜனாதிபதி கியூபா நாட்டுத் தலைவருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். கியூபாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அங்கிருந்து பிரேசில் செல்லவுள்ளார். பிரேசிலில் நடைபெறவுள்ள நிலையான அபிவிருத்தி தொடர்பான ரியோ 20 ஐ. நா. மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ள துடன் எதிர்வரும் 20 ஆம் திகதி ரியோ மாநாட்டில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். ரியோ மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி அதில் பங்கேற்கும் பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

ஆனி 16, 2012

ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் -சோனியா காந்தி அறிவிப்பு

நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய முற் போக்கு கூட்டணியின் வேட்பாள ராக மத்திய நிதியமைச்சர் பிர ணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். இதுதொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பை, தில்லியில் வெள்ளியன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சி களின் ஆலோசனைக் கூட்டத்திற் குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டார். பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிக்குமாறு அனைத்துக் கட்சி களுக்கும் வேண்டுகோள் விடுத் துள்ள சோனியா காந்தி, அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி பிர ணாப் முகர்ஜியை குடியரசுத் தலை வராக தேர்ந்தெடுக்க ஒத்தக்கருத் தை எட்ட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். (மேலும்.....)

ஆனி 15, 2012

தோழர் றொபேட் மறைந்து 9 ஆண்டுகள்

(சுகு ஸ்ரீதரன்)

எமது சமூகத்தின் வாழ்வைச் சீராக்குவதற்கு பலபேர் முயற்சித்திருக்கிறார்கள். சமூக அநீதிகள் ,பாரபட்சங்கள் ஒடுக்குமுறைகள், மூடநம்பிக்கைகளுக்கெதிராக பலரும் போராடி இருக்கிறார்கள் . தன்னலமற்ற பெருந்திரளானவர்கள் எமது சமூகத்தில் இருந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்கிறார்கள். மக்களின் வாழ்வை செம்மையாக்குவதற்கு ,சீராக்குவதற்கு இன்று வாழ்பவர்கள் பங்களிக்கமுடியும். பங்களிக்க வேண்டும். ஆனால் அவநம்பிக்கைகள்  அதிகரித்துள்ளன. மிகவும் நெருக்கடியான ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் தோழர் சுபத்திரன் -றஞ்சன்- றொபேட்டின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சகலவிதமான சமூகத் தழைகளிலிருந்தும் விடுதலை, அறிவு, நியாயத்தின் வெளிச்சத்தில் விடயங்களை அவர் நோக்கினார். தேசிய ஒடுக்கமுறைக்கெதிரான போராட்டத்திற்கப்பால் சமூக சமத்துவத்திற்கான அக்கறைகள்  அவரிடமிருந்தன. (மேலும்.....)

ஆனி 15, 2012

பல்லேகலை சிறையிலிருந்து தப்பிய தமிழ்க்கைதிகள் இருவர் கைது

பல்லேகலை சிறைச்சாலையிலிருந்து கடந்த புதன்கிழமை தப்பிச் சென்ற இரண்டு கைதிகளை அலவத்துகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர். துதுவெவ பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் 30 , 34 வயதான தமிழர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவர் என்பதுடன் மற்றையவர் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் சம்பந்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

ஆனி 15, 2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நாள

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர், பணிக்குழு உயர்மட்டக் கூட்டம் நாளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு புதிய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஊடகங்கள் மூலமாகவும், மக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்படும் நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இச் சூழலில் எவ்வாறான நடைமுறைகளைக் கையாள்வது ,கட்சியின் நிலைப்பாடுகள் என்ன என்பன தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ___

ஆனி 15, 2012

காணி, பொலிஸ் அதிகாரங்கள், 13+ குறித்தும் பேச

தெரிவுக் குழுவுக்கு எதிர்க்கட்சியினரை அழைத்துவர அரசாங்கம் முழு முயற்சி

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு எதிர்க்கட்சிகளை அழைத்து வருவதற்காக தன்னாலான சகல முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள் ளும். வெளியில்பேசப்படும் காணி, பொலிஸ் அதிகாரங்கள், 13 பிளஸ் இதற்கு முன் ஆராயப்பட்ட விடயங்கள் என சகல விடயங்கள் குறித்தும் இங்கு ஆராய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முதலில் சகல கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்து பேச்சை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். (மேலும்.....)

"ஒலிக்காத இளவேனில்" (2009)

வடலி பதிப்பகத்தால் வெளியான, "ஒலிக்காத இளவேனில்" (2009): 18 பெண் கவிஞர்களின் கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி...

இடம்:  ஸ்காபரோ சிவிக் சென்ரர் - Scarborough Civic Center
திகதி: சனிக் கிழமை: யூன் 16, 2012
நேரம்: 3 - 6 PM

ஆர்வமுள்ள உங்கள் அனைவரையும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு வேண்டுகிறோம்...

ஆனி 15, 2012

பெனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 148 பேர் இலங்கை வந்தடைந்தனர்

ஆபிரிக்க நாடான பெனினிலிருந்து நாடு கடத்தப்பட்ட 148 இலங்கையர்கள் இன்று மாலை 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். சட்டவிரோதமான முறையில் பெனின் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து கனடாவுக்கு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்த இலங்கையர்களே கைது செய்ப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுப்பட்டவர்களில் மூன்று மதங்களையும் சேர்ந்த ஆண், பெண் இருப்பதுடன் அவர்களிடம் விமானநிலைய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர்.

ஆனி 15, 2012

ஒரு செங்கொடி நகர் உதயம்

(கே.பி.பெருமாள்)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங் குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள, ஊரைச்சுற்றி விவசாய நன்செய் நிலங்கள் நெல், வாழை, உளுந்து ஆகிய பிரதான விவசாயப் பயிரைக் கொண்ட அழகிய கிராமம் ஆராம்பண்ணை. இங்கு பெரும்பகுதி முஸ்லிம் மக்கள் வாழ்கி றார்கள். சிறு பகுதியினர் இதர சமூகத்தை சார்ந்தவர்கள். விவசாய நிலங்களுக்கு சொந்தக் காரர்களாக முஸ்லிம்கள் ஏராளமானோர் உள் ளனர். விவசாயத்தின் மூலம் வசதி படைத்த வர்களாகவும், சிலர் வெளிநாடுகளில் வேலை செய்து அந்த வருவாய் மூலம் நல்ல நிலை யிலும் உள்ளனர். ஒரு பகுதி முஸ்லிம்கள் விவ சாய கூலி வேலை செய்பவர்களாக, பீடி சுற் றும் தொழில் செய்பவர்களாக உள்ளனர். இவர் களில் பெரும்பாலானோர் வாடகை வீடு களில் குடியிருந்து வருகிறார்கள்.  (மேலும்.....)

ஆனி 15, 2012

இந்திய பொருட்களின் இறக்குமதியை தடைசெய்யும் தீர்மானம் எதுவுமில்லை

தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (சப்டா) வின் கீழ் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்வதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை. சார்க் வலய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் தேவைக்கேற்ப இடையிடையே ஆராயவே முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். உள்நாட்டு தேசிய உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இறக்குமதிப் பொருட்கள் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சு நடத்தி அதில் மாற்றம் செய்ய முடிவுசெய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். உள்நாட்டு விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும் இறக்குமதிப் பொருட்கள் இருந்தால் ஒப்பந்தத்தினூடாக இணக்கம் காணப்பட்டிருந்தாலும் அது குறித்து பேச்சு நடத்தி அது தொடர்பில் முடிவுகாண இங்கு தீர்மானிக் கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி களுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படக்கூடிய பொருட்கள் தொடர் பில் வெளிப்படையாக பேசி அதி லுள்ள விடயங்கள் குறித்து இறுதி முடிவுக்கு வர திட்டமிட்டுள்ளோம். 2016 இல் பால் உற்பத்தியில் தன்நிறைவு காண திட்டமிட்டுள்ளதால் இந்த இலக்கிற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இறக்குமதிகள் குறித்து பேசி அதில் மாற்றம் செய்யப்படும்.

ஆனி 15, 2012

தென் சீனக் கடலில் இந்திய கப்பல்களுக்கு  சீன கடற்படை கப்பல்கள் வரவேற்பு

தென்சீன கடல் பகுதி யில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்தியக் கடற் படைக் கப்பல்களை, சீன கடற்படைக் கப்பல்கள் வர வேற்று அழைத்துச் சென்றன. இந்த மாதத் துவக்கத் தில் நான்கு இந்திய கடற் படைக் கப்பல்கள் பிலிப் பைன்சில் இருந்து புறப்பட்டு சீனாவை நோக்கிச் சென் றன. எதிர்பாராத ஆச் சரி யம் அளிக்கும் அழைப்பாக தென்சீன கடல்பகுதியில் சீனபோர்க்கப்பல் பிளான் இந்தியாவின் கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ்-ஐ வர வேற்று பாதுகாப்பாக அழைத்துச் சென்றது. தென்சீன கடல்பகுதியில், நான்கு இந்தியக் கப்பல் செல் லும் பன்னிரெண்டு மணி நேரத்திற்கு பிளான் கப்பல் பாது காப்பாக வந்தது. தற் போது இந்தியக் கப்பல்கள் ஷாங் காய் வந்தன. உலகின் மிக முக்கியமான நீர்ப்பா தையை சீனா நோக்கும் நிலைப் பாட்டை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது. ஒரு மாத காலம் மேற்கொள் ளும் நீர்ப்பயணத்தில் இந்தி யக் கப்பல்கள் 4 நாட்கள் ஷாங்காய் வரவிருப்பதை யும் சீன பிளான் கப்பல் அறிந்து இருந்தது. புதன் கிழமையன்று இந்தியக் கப்பல்கள் ஷாங்காய் வந்தன.
(மேலும்.....)

ஆனி 15, 2012

மம்தா, முலாயம் பரிந்துரைத்த மூவர் பெயரும் நிராகரிப்பு

குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாம். மன்மோகன்சிங் அல்லது சோம்நாத் சட்டர்ஜியை நிறுத்தலாம் என்று முலாயம்சிங் யாதவும் மம்தா பானர்ஜியும் முன்வைத்த யோசனையை காங்கிரஸ் கட்சி முற்றாக நிராகரித்து விட்டது. இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதி கூறியதாவது நாட்டின் பிரதமராக 2014ம்ஆண்டு வரை தொடர்ந்து மன்மோகன்சிங்தான் நீடிப்பார். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. மம்தாவும் முலாயமும் பரிந்துரைத்த அனைவரது பெயரையும் காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது. கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் மம்தாவுடன் சோனியா ஆலோசனை நடத்தினார். அவருடனான பேச்சுவார்த்தை விவரங்களை மம்தா பானர்ஜி வெளியில் கூறியிருக்கக் கூடாது. அது தவறான அணுகுமுறை என்றார். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் பிரனாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்துவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

ஆனி 15, 2012

நோக்கியா

மீண்டும் பத்தாயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டம்

பத்தாயிரம் பணியாளர் களை வேலையை விட்டு நீக்கி, வீட்டுக்கு அனுப்புவது என்று நோக்கியா செல் போன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலக அளவில் மிகப் பெரிய செல்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் நோக்கியா நிறுவ னம் பல்வேறு நாடுகளில் தனது நிறுவனத்தின் கிளை களை நிறுவியுள்ளது. உல கம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர் கள் இந்நிறுவனத்தின் கீழ் வேலை செய்து வருகின்ற னர். இந்நிறுவனம் ஏற்க னவே பின்லாந்தில் உள்ள இதன் கிளையை மூடியது. தொடர்ந்து பல கிளைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை யை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் 2010ம் ஆண் டில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யாக ஸ்டீபன் இலோப் பொறுப்பேற்றுக் கொண் டார். 2008ம் ஆண்டு ஏற் பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் ஆட் டம் காண ஆரம்பித்தது. அன்று துவங்கி இன்று வரை 40 ஆயிரத்திற்கும் மேற் பட்ட அந்நிறுவனத்தின் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. (மேலும்.....)

ஆனி 15, 2012

அமெரிக்காவில் வங்கிகளிடம் வீடுகளை இழந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் கட னுக்காக வங்கிகளிடம் வீடு களை இழந்தவர்கள் வங்கி களுக்கு எதிராக ஆர்ப்பாட் டம் நடத்தினர். அமெரிக்காவில் உள்ள வங்கிகள் கடந்த 2008-ம் ஆண்டு அதிக வருமானத் தை ஈட்ட கண்ணை மூடிக் கொண்டு, தகுதியில்லாத பலருக்கு வீடு வாங்கவும், கட்டவும் கடனை வாரி வழங்கின. இதனால் பலர் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப் பட்டனர். இதையடுத்து வங் கிகள் பொருளாதார நெருக் கடியில் சிக்கின. இதனால் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. இது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. (மேலும்.....)

ஆனி 14, 2012

தன் வாழ்வால் எங்களுக்கு வழிகாட்டியவர்

நினைவுதினம்: 14.06.2003

தோழர் றொபேட் ( தம்பிராசா சுபத்திரன்) சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல், சமூக பிரச்சினைகளில் பிரக்ஞை கொண்டு செயற்பட்டவர். தமிழ் பேசும் மக்களின் விடிவிற்காக 23 வருடங்கள் தொடர்ச்சியாக அவர் ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளில் முன்னணியிலிருந்து கருமமாற்றியவர். அவரது 9வது நினைவு தினம் இன்றாகும். சாவகச்சேரி நுணாவில் என்னும் இடத்தை பிறப்பிடமாக கொண்ட தோழர் றொபேட் அவரது 45 ஆவது வயதில் 14.06.2003 அன்று புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். தோழர் றொபேட்டின் குடும்ப சூழல், துன்ப, துயரங்கள், இன்னல்கள் ஏதுமற்றிருந்த போதும் சமூகத்தின் துன்ப துயரங்கள் சமூகத்தில் நிலவிய அநீதிகள் அகல வேண்டும் என்று அக்கறை கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் துணிந்தார். (மேலும்.....)

ஆனி 14, 2012

கனேடிய பிரஜை கொலையின் பின்னணியில் இளம் பெண் விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்

கிளிநொச்சி பரந்தன் கமரிக்குடாவில் தனிமையில் இருந்த வேளை குழுவொன்றினால் வெட்டிக் கொல்லப்பட்ட கனேடிய பிரஜையான அந்தோனிப்பிள்ளை மகேந்திர ராஜாவின் கொலையின் பின்னணியில் இளம் பெண் ஒருவரே இருந்து செயற்பட்டிருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. மகேந்திரராஜாவின் 22 ஏக்கர் காணியைப் பராமரித்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஞானசேகரம் என்பவரைத் திருமணம் செய்திருந்த ஞானசேகரம் ஆரணி (32) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு இந்தக் கொலையின் பின்னணியில் இருந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. (மேலும்.....)

ஆனி 14, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 21)

(அ.ஆனந்தன்)

தேசிய வாதமும் தனிநாடு கோரிக்கையும் இப்போதும் எப்போதும் அந்தந்த தேசிய இனங்களை சேர்ந்த உடமை வர்க்கங்களின் முழக்கங்களே. ஏனெனில் உடமை வர்க்கங்கள் ஏதாவது ஒரு அடிப்படையில் பிறர் உழைப்பில் வாழும் ஒட்டுண்ணித்தனமான வாழ்க்கையையே வாழக்கூடியவை, எனவே அவற்றிற்கு அந்த ஒட்டுண்ணித்தன வாழ்க்கை மூலம் அடையும் சலுகைகள் மற்றொரு தேசிய இனத்தை சேர்ந்த அதே வகையான வாழ்க்கை நடத்தும் உடமை வர்க்கங்களால் அவை வலுவாக பெரும்பான்மையாக இருக்கின்றன என்ற காரணத்தால் பறிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே தனிநாடு முழுக்கம் முன்வைக்கப்படுகிறது. (மேலும்.....)

ஒரு மாத காலத்தில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் வாய்ப்பு

ஒரு மாத காலத்துக்குள் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாறு காணாத பாரிய அபிவிருத்தி, மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், 20 அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட 300 பேர் நேரடி கள பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட விரிவாக்கல் செயற்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார். இவ் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளி தரன் ஒரு மாத காலத்திற்குள் கிழக்கு மாகாண சபை கலைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. கிழக்கு மாகாண சபை தேர்தல் விடயத்தில் சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருப்பதை போன்று தமிழ் மக்க ளும் விழிப்பாக இருக்க வேண்டும்.(மேலும்.....)

ஆனி 14, 2012

சிரியாவில் சிவில் யுத்தம்

சிரிய அரசு தற்போது சிவில் யுத்தத்திற்கு முகம்கொடுக்கும் நாடு என்றும் அங்கு அரசு பல நகரங்களில் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் ஐ.நா. அமைதிகாக்கும் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் நீடிக்கும் சிரிய மோதல் குறித்து ஐ.நா. இவ்வாறான அறிவிப்பை வெளியிடுவது இது முதல் முறையாகும். சிரியாவில் உள்ள ஐ.நா. கண்காணிப்பாளர்கள் அங்கு முற்றுகையிடப்பட்டிருக்கும் ஹப்பா நகரை அடைய முயற்சித்த போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். இந்த நிலையிலேயே ஐ.நா. மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேவேளை ரஷ்யா, சிரியாவுக்கு தாக்குதல் ஹெலிகொப்டர்களை விநியோகிப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவின் இந்த செயல் சிரியாவில் மேலும் மோதலை அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார். இதனிடையே சிரிய எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹப்பா நகரை அரச படையினர் சுற்றிவளைத்துள்ளனர். இங்கு வன்முறைகள் தீவிரமடையும் அபாயம் இருப்பதாக ஐ.நா. மற்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளன. இதில் ஐ.நா. கண்காணிப்பாளர்கள் ஹப்பா நகருக்குள் செல்ல கடந்த திங்கட்கிழமை முயற்சித்தனர். எனினும் அவர்களுக்கு அங்கு செல்ல அனுமதி அளிக்கப் படவில்லை.

ஆனி 14, 2012

How this couple retired in Bali

'How did you find Bali?" and "What do you do all day?" are the two most common questions asked of us. I am a retired lawyer from California; my husband is a vintner (plus many other things). We're both 68 years old, and most people can't wrap their minds around the change we made moving to Bali, Indonesia, seven years ago. As we approached retirement age, we kept a watchful eye for those places that were exotic, less expensive (we lived in California for 35 years) and comfortable. A top priority was warmth. We both grew up in Connecticut, and I spent four winters in Buffalo, N.Y., so we were done with cold and snow. We visited all the warm climates we could find on the globe. It was by chance that a client/friend asked me to visit her in Ubud, Bali. When I returned, I said to my husband, "This may be it." (more...)

ஆனி 14, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பலவற்றை இவ்வாண்டினுள் அமுல்படுத்த தீர்மானம்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள 135 பிரதான பரிந்துரைகளில் பலவற்றை அரசாங்கம் இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தும் என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூறினார். அடுத்தாண்டில் இந்த சிபாரிசுகளை நிறைவேற்றுவதற்கு நிதி அவசியம் என்பதனால் அடுத்த வரவு செல வுத்திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அரசாங்கத்துடன் தொடர்புடைய சகல திணைக்களங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து ஒரு முகமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதற் காக, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்றுவதற்காக தனது தலைமையில் ஒரு செயலணியை ஏற்படுத்துவதென்று கடந்த மே மாதம் 2ம் திகதியன்று அமைச்சரவை தீர்மானித்திருக்கிறதென்றும் திரு. லலித் வீரதுங்க தெரிவித்தார். (மேலும்.....)

ஆனி 14, 2012

அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த படகு அறுகம்பை கடலில் துரத்திப் பிடிப்பு

திருகோணமலை, சிலாபம், உடப்பூர் பகுதிகளிலிருந்து மட்டக்களப்பு ஊடாக வள்ளம் ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த 53 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (12) அதிகாலை அருகம்பையிலிருந்து சுமார் 60 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிரு ந்த மேற்படி வள்ளத்தை கடற்படையினர் சுற்றி வளைத்து சோதனையிட்ட போதே இவர்கள் 53 பேரும் கைது செய் யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார். இரண்டு இந்தியர்கள் உட்பட 49 தமிழர்களும், 4 சிங்களவர்களும் இவ்வள்ளத்தில் பயணித்ததாகவும் இவர்கள் அனைவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலிருந்து குறித்த வள்ளம் 53 பேருடன் புறப்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்பரப்பை கடந்து செல்லும் போதே இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 53 பேருள் நால்வர் இந்த பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆனி 14, 2012

புலம்பெயர் தமிழர்களால் பிரிட்டனுக்கு அச்சுறுத்தல்

"இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழர்கள் எமது அரசாங்கத்திற்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க முடியாது. அவர்களின் அச்சுறுத்தலை இன்று பிரிட்டிஷ் அரசாங்கமே எதிர்நோக்கியிருக்கிறது. பிரிட்டனில் முன்பிருந்த சட்டத்தின்படி யாராவது ஆர்ப்பாட்டங்களை செய்வதானால் அது என்று நடக்கும், எங்கு நடக்குமென்று பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும்" என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இது தொடர்பான சட்டம் பிரிட்டிஷ் சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதனால், பிரிட்டனில் உள்ளபுலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் நினைத்த மாத்திரத்தில் எந்த இடத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம். அதனை நிறுத்திவிடும் அதிகாரம் பிரிட்டிஷ் பொலிஸாருக்கு இல்லை. எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்கள் விரும்பினால் மகாராணி செல்லும் பாதையின் குறுக்கிலும் ஆர்ப்பாட்டங்களை செய்து பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கே பெரும் சவாலை ஏற்படுத்தலாம் என்று நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

ஆனி 14, 2012

சர்ச்சைக்குரிய பொக்லாந்து தீவின் உரிமை குறித்து வாக்கெடுப்பு

பிரிட்டன் ஆளுகையில் உள்ள ஆர்ஜன்டீனாவுக்கு அண்டிய சர்ச்சைக்குரிய பொக்லாந்து தீவின் உரிமை குறித்து கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொக்லாந்து தீவு லண்டன் ஆளுகையில் நீடிப்பதை உலகுக்கு எம்மால் உறுதியாக அறிவிக்க முடியும் என அந்த தீவின் நிர்வாக தலைவர் கெவின் ஷோர்ட் குறிப்பிட்டுள்ளார். 3000 பேர் மாத்திரமே வசிக்கும் பொக்லாந்து தீவுக்கு ஆர்ஜன்டீனாவும் உரிமை கோருகிறது. இங்கு பிரிட்டன் தனது காலனித்துவத்தை தொடர்ந்து தக்கவைத்திருப்பதாக ஆர்ஜன்டீன அரசு குற்றஞ்சாட்டுகிறது. இந்த தீவின் உரிமைக்காக கடந்த 1982 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தத்தில் 649 ஆர்ஜன்டீனர்களும் 255 பிரிட்டன் வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பொக்லாந்து விவகாரம் ஆர்ஜன்டீன, பிரிட்டன் அரசுகளுக்கு இடையில் மீண்டும் விரிவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஐ.நா.வில் முறையிடவுள்ளதாக ஆர்ஜன்டீன ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னான்டஸ் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பொக்லாந்து தீவின் உரிமை குறித்து கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட் டுள்ளது. இந்த வாக்கெடுப்பு 2013 ஆம் ஆண்டு முதல் பாதியில் நடத்தப்படவுள்ளது.

ஆனி 14, 2012

ஜி-20 நாடுகளில் மிகவும் பின்தங்கிய இடத்தில் இந்தியா

ஜி 20 நாடுகளில் உள்ள அனைத்து சூழ்நிலைகளையும் ஆய்வு செய்து அவற்றுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், ஆண் - பெண் இன வேறுபாட்டைக் களையும் அரசின் கொள்கைகள், வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களின் சுகாதாரத்தைப் பேணும் திட்டங்கள் போன்றவற்றால் கனடா பெண்கள் வாழத் தகுதியான நாடுகளின் இடத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தைகள் திருமணம், அடிமைத்தனம் ஆகியவற்றால் இந்தியா மிக மோசமான நாடாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. பெண்களுக்கு வாகனம் ஓட்டத் தடை, 2011 ஆம் ஆண்டுதான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது ஆகியவற்றால் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சவூதி அரேபியாவும், அதனைத் தொடர்ந்து இந்தோனேசியா, தென்னா பிரிக்கா, மெக்சிகோ நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் பெண்கள், குழந்தைகளை பாலியல் தொழிலுக்காக விற்கும் நடைமுறை 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம், வரதட்சணைக் கொடுமையால் உயிரோடு எரிக்கப்படுதல், பெண்கள் பாலியல் கொடுமைக்குள்ளாவது போன்ற காரணங்களால் இந்தியா பெண்கள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வை மேற்கொண் டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனி 13, 2012

ராஜீவ், ஷாருக்கான் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இன்று இந்தியாவை விமர்சிப்பது வேடிக்கை

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களும், பிரபல இந்திய நடிகர் ஷாருக் கான் மீது கொழும்பில் வெடிகுண்டு வீசியவர்களும், இலங்கை வந்த அமெரிக்க-பிரித்தானிய-பிரான்சிய அமைச்சர்களுக்கு எதிராக கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களும், இன்று தமிழகத்தில் இலங்கை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஜனநாயக எதிர்ப்புப் போராட்டங்களை விமர்சிப்பது நல்ல வேடிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

ஆனி 13, 2012

பிரிட்டன் அறிமுகப்படுத்தும் புதிய குடிவரவு சட்ட விதிகள

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளிலிருந்து தமது கணவன் அல்லது மனைவியை பிரிட்டனுக்கு வரவழைக்க விரும்பும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்காக அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள குடும்ப விசா தொடர்பான ஒழுங்கு விதிகளை நோக்கும் போது குடியேற்றவாசிகளுக்கு எதிரான போக்கு அதிகரித்துவருவதாக தென்படுகிறது. இந்தப் புதிய நடவடிக்கைகளால் இலங்கை உட்பட தெற்காசிய சமூகமே அதிகளவுக்கு பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து அந்நாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழ்கின்றனர் .பிரிட்டனிலும்  சுமார் 3 இலட்சம் தமிழர்கள் வசிப்பதாக உத்தியோகப்பற்றற்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நிரந்தரவதிவிட உரிமை, பிரிட்டிஷ் பிரஜாவுரிமை, மாணவர் விசா, தொழில் விசாவென பல்வேறு வகையறாக்களின் கீழ் அங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இப்போது பிரிட்டன் அறிமுகம் செய்திருக்கும் ஒழுங்கு விதிகள் குடும்ப விசாவை மையப்படுத்தியவையாகும். (மேலும்.....)

ஆனி 13, 2012

மட்டக்களப்பில் பல்கலைக்கழக ஊழியர்கள் மறியல் போராட்டம்

கிழக்கு பல்கலை கழகத்தின் அனைத்து கல்வி சாரா ஊழியர்களும் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல்போராட்டங்களில் ஈடுபட்டனர்.காலை 11மணிமுதல் 1மணிவரை போராட்டம் தொடர்ந்தது. கிழக்கு பல்கலைகழகத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள வந்தாறுமூலை, மட்டக்களப்பு , கல்லடி வளாகங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு அரசடி சௌக்கியபீட வளாகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரியே இவ்ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. நாளை இவர்களின் போராட்டம் திருமலை வளாகத்தின் முன்னால் இடம் பெறவுள்ளது.

ஆனி 13, 2012

முஸ்லிம்களைஅச்சுறுத்தும் விதத்தில் காலி பெந்தர,எல்பிட்டிய பகுதிகளில் சுவரொட்டிகள்

காலி மாவட்டத்தில் பெந்தர,எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஓட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான கோரியுள்ளார். இல்லாவிட்டால் இது ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயமுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். (மேலும்.....)

ஆனி 13, 2012

பௌத்த துறவிகள் பொதுச்சேவை செய்ய பாராளுமன்றத்துக்கு செல்லவேண்டியதில்லை -  அஸ்கிரிய தேரர்

பௌத்த துறவிகள் பொதுச்சேவையை மேற்கொள்ள பாராளுமன்றமோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித தேரர் தெரிவித்தார். நேற்று மாலை கண்டி அஸ்கிரிய விகாரையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இன்று பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள பலர் தமது உரிமைகளுக்காகப் பணிப்பகிஷ்கரிப்பு போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர். இதுபோல் பௌத்த மத குருமார்களும் பொதுச் சேவைக்காகச் சென்று பணிப்பகிஷ்கரிப்புக்களில் ஈடுபடத் தேவையில்லை. அவர்கள் விகாரைகளில் இருந்து கொண்டு பௌத்த சமய வளர்ச்சிக்குப்பாடுபட்டால் அது மட்டும் போதுமானது என்றார். ___

ஆனி 12, 2012

கண்ணீர் விட்ட எவரும் கைவிடப்படுவதில்லை.

நேர்காணல் - ஸகசதுல்ல ஜதூரோஸ்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஸகசதுல்ல ஜதூரோஸ். ஜதுரோஸ_க்கு வயது 60. இப்போது புத்தளம் வாசி. ஆனால், அவருடைய நினைவும் கனவும் யாழ்ப்பாணத்தில்தான். 1990 இல் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளின் அறிவிப்பை அடுத்து வெளியேறியவர்களில் ஸகசதுல்ல ஜதூரோஸின் குடும்பமும் ஒன்று. நீண்டகால அகதி வாழ்க்கை – பின்னர் புத்தளத்திலேயே காணி, வீடு என்று நிரந்தர வாழ்க்கைக்கு மாறி, புத்தளம் வாசியாகிவிட்டார் ஸகசதுல்ல ஜதூரோஸ்.  20 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்துக்கு வெளியே வசித்து வரும் ஸகசதுல்ல ஜதூரோஸ் யாழ்ப்பாணத்தில் புடவை வியாபாரத்துக்காக வந்து செல்கிறார். அவருடன் கூடவே அவருடைய பிள்ளைகளும் வந்து செல்கிறார்கள். நடமாடும் வியாபாரியாகத் தொழில் செய்துவரும் ஸகசதுல்ல ஸதூரோஸையும் அவருடைய பிள்ளைகளையும் சந்தித்து உரையாடினேன். (மேலும்.....)

ஆனி 13, 2012

அதிகாரிகளிடமிருந்து சமிக்ஞை கிடைத்தால் வடக்கில் தேர்தல்

தேர்தல் நடத்தக்கூடிய சூழல் உள்ளதென உரிய அதிகாரிகளிடமிருந்து சமிக்ஞை கிடைக்குமானால் வட மாகாண தேர்தலை நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது குறித்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் கண்ணிவெடியகற்றல், மீள்குடியேற்றம் போன்ற காரணங்கள் வட மாகாணத்தின் சில பகுதிகளில் நிலவுவதாக அறிகிறேன். எனினும் உரிய அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைத்தால் தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வாக்காளர்கள் தம்மை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முன்னெப்போதுமில்லாதவாறு அதற்கு அதிகளவு வாய்ப்பினை நாம் வழங்கி யுள்ளோம். இது விடயத்தில் ஊடகங்கள் மக்களுக்குப் போதிய விழிப்புணர்வை வழங்குவது அவசியம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். ஊடகவியலாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளித்த அவர் இந்தியா போன்ற நாடுகளில் மக்கள், கட்சிகள், ஊடகங்கள் உட்பட சகல தரப்பு ஆதரவும் தேர்தல் ஆணைக் குழுவுக்கு உண்டு என தெரிவித்த அவர் இங்கு அது போன்ற நிலை ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஆனி 13, 2012

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் வட அமெரிக்க சங்கங்கள் இணைந்து நடத்தும் கோடை கால ஓன்று கூடல்

வருகின்ற ஜூலை மாதம்7 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை

176 எல்சன் வீதியில் இருக்கும் எல்சன் பூங்காவில் நடைபெறும். (மார்க்கம்  சக எல்சன் சந்தி).

பழைய மாணவர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Alumni Associations of Methodist Central College and St.Michael’s College, Batticaloa,

North American Chapters, cordially invite the Old Students, Friends and Well-Wishers for their 1st Annual Summer Picnic, which will be held on Saturday, July 7th from 10.00 A.M. to 6.ooP.M. at Elson Park located at 176 Elson Street Markham

(Markham Road and Elson Street)

ஆனி 13, 2012

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்பிய தரகரிடம் கியூ பிரிவு விசாரணை

இலங்கை அகதிகளை, ஏர்வாடி கடற்கரையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகில் அனுப்ப, திட்டம் தீட்டிய தரகரிடம் கியூ, பிரிவு பொலிஸார், விசாரித்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி, சிக்கல் பகுதிகளில், கடந்த சில நாட்களாக, இலங்கை தமிழர்களின் நடமாட்ட் அதிகமாக இருந்து வருகிறது. இவர்கள், பக்தர்கள் என்ற போர்வையில், ஏர்வாடி தர்கா வளாகத்தில் தங்கி வந்ததை, கியூ பிரிவு பொலிஸார் இரகசியமாக கண்காணித்தனர். இங்குள்ள ஏழை மீனவர்களிடம், ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களிடமுள்ள மீன்பிடிப் படகை, கூடுதல் விலைக்கு வாங்க முயற்சிகள் நடந்தது. படகை கேரளா கொண்டு சென்று, அங்கு புதிய வர்ணம் பூசி, அதில், அகதிகளை அவுஸ்திரேலியா அழைத்துச் செல்ல, திட்டம் தீட்டினர். ஏர்வாடி அருகே, செங்கல் நீரோடையை சேர்ந்த ரமேஷ் (42) தரகராக செயல்படுவதாகவும், அவுஸ்திரேலியா அழைத்துச் செல்ல, 14 பேரிடம், தலா ஒரு இலட்சம் ரூபா வாங்கியதாகவும் தெரிய வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ரமேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கடுக்காய் வலசை மனோகரன் ஆகியோரிடம் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தினர்.

ஆனி 13, 2012

சீனா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

ஈரானின் எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்ட 7 நாடுகள் மீதான தடை எச்சரிக்கையை விலக்கிக் கொண்டுள்ள அமெரிக்கா, சீனா மீதான பொருளாதர தடை எச்சரிக்கையை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதிக்குள் சீனா, தனது ஈரானுடனான எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொள்ளாத பட்சத்தில் அமெரிக்கா அதன் மீது பொருளாதார தடை விதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும் ஒரு நாடு ஏனைய நாடுகள் மீது ஒரு தலைப்பட்சமாக தடைவிதிப்பதை எதிர்ப்பதாக சீன தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்கா கடந்த ஆண்டு விதித்த தடை எச்சரிக்கைக்கு அமைய செயற்பட்ட 7 நாடுகள் மீதான பொருளாதார தடை எச்சரிக்கையே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா, மலேஷியா, தென்னாபிரிக்கா, தென்கொரியா, இலங்கை, துருக்கி மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளின் தடை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஜப்பான் மீதான இவ்வாறான தடை எச்சரிக்கையை அமெரிக்கா விலக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆனி 13, 2012

மியன்மாரில் தொடர்ந்து கலவரம், 25 பேர் பலி

மேற்கு மியன்மாரில் அரசு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியிருந்தாலும் அங்கு தொடர்ந்தும் கலவரம் நீடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேற்கு மாநிலமான ரகினில் பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டுள்ள மோதலில் இதுவரையில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் மியன்மார் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஏ.எப்.பிக்கு தகவல் அளித்துள்ளார். எனினும் இந்த வன்முறை குறித்து எந்த மேலதிக தகவலையும் வெளியிடவில்லை. எனினும் இரு இனங்களுக்கும் இடையிலான இந்த கலவரம் 5 ஆவது நாளாக நேற்றைய தினத்திலும் நீடித்தது. ரகினி மாநிலத்தில் பங்களாதேஷத்தில் இருந்து குடிபெயர்ந்த பங்காளி மொழி பேசும் மக்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்நிலையில் இந்த வன்முறை காரணமாக பங்களாதேஷ¤க்குள் நுழைய முயன்ற மேலும் மூன்று படகுகளை பங்களாதேஷ் எல்லை பாதுகாப்புப் படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த படகுகளில் சிறுவர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இருந்ததாக பங்களாதேஷ் எல்லை பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் 125 மைல்கள் கொண்ட மியன்மார் எல்லைப்பகுதியிலும் பங்களாதேஷ் அரசு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

ஆனி 13, 2012

யாழ்ப்பாணத்தில் சாரதி லைசன்ஸ் பெறும் ‘இணையவழி’ அலுவலகம்

சாரதி அனுமதிப்பத்திரம் வழங் குவதற்கான இணையவழி (onlinலீ) அலுவலகமொன்றை யாழ்ப்பாணத் தில் ஆரம்பிக்க உள்ளதாக போக்கு வரத்து அமைச்சர் குமார வெல்கம கூறினார். கம்பஹா மற்றும் குருணா கல் ஆகிய இடங்களில் இணைய வழி அலுவலகங்கள் ஆரம்பிக் கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களில் இணைய வழியூடாக தகவல் பெற்று சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுவதாகவும் அவர் குறுப்பிட்டார். புதிதாக சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்கு ‘ஸ்மார்ட் அட்டை’ வழங்கப்படுகிறது. பழைய சாரதி அனு மதிப் பத்திரம் உள்ளவர்களுக்கும் எதிர் காலத்தில் கணனிமயப்படுத்தப்பட்ட ‘ஸ்மார்ட் அட்டை’ வழங்க திட்டமிட் டுள்ளோம். தனியார் நிறுவனமொன்றி னூடாகவே சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கப்படுகிறது. அதிலுள்ள குறை பாடுகள் நிவர்த்திக்கப்படும்.

ஆனி 13, 2012

தமிழ் பெண்களை ஏமாற்றி 25 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண் கப்பம்

கொழும்பு – 04 இல் அமைந்துள்ள அரசாங்க தொடர் மாடியில் குடியிருக்கும் இருதமிழ் பெண்களை ஏமாற்றி 25 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களை கப்பமாக பெற்றுக் கொண்ட இரு சந்தேக நபர்களை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள் ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தின் அதிகாரிகளென தம்மை அடையாளம் காட்டிக் கொண்ட மேற்படி இரு சந் தேக நபர்களும் கப்பம் தருமாறும் இல்லையேல் அந்த வீட்டில் குடியிருந்த தாயையும் மகளையும் கைது செய்வரென வும் அச்சுறுத்தியே மேற்படி பணத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் நிலை யத்தில் மேற்படி பெண்கள் முறைப்பாடு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேக நபர்கள் இரு வரையும் கைதுசெய்து விசாரணைக்குட் படுத்தி வருகின்றனர்.

ஆனி 13, 2012

வெட்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தல் மற்றும் அவர்களை பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஐ. நா. பாதுகாப்புச் சபையால் முன்வைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதென ஐக்கிய நாடுகளின் பிரதம அதிகாரியின் சிறுவர் மற்றும் ஆயுத போராட்டம் பற்றிய வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கொலை செய்தல், ஊனமாக்குதல், பாலியல் வன்முறையில் ஈடுபடுதல், பாடசாலைகள், வைத்தியசாலைகளை தாக்குதல் என்பவற்றில் ஈடுபடும் தரப்பினர் பட்டியல் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவே வெட்கப்பட வேண்டியவர்கள் பட்டியல் ஆகும். இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட் டுள்ளதாவது, இலங்கையில் பாதுகாப்பு நிலைமை ஸ்திரம் அடைந்துள்ளது. அது விரைந்து மீட்சி பெற்று வருகிறது. இருப்பினும், வடக்கில் வாழ்கின்ற இலகுவில் ஆபத்துக்கு உட்படும் நிலை யிலுள்ள குடும்பங்களுக்கான ஆதரவு இன்னும் சவாலாகவே உள்ளது. இதனுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அமுலாக்கும்போது யுத்தத்துக்கு பின்னரான முயற்சிகளுக்கு அது வலு சேர்ப்பதாக அமையும்.

ஆனி 13, 2012

அமெரிக்க ராணுவத்தில்   தினமும் ஒருவர் தற்கொலை   அதிர்ச்சியில் அமெரிக்கா

அமெரிக்க ராணுவத் தினர் ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது அமெ ரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 155 நாட்களில் மட் டும் 154 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின் றனர் என்று பென்டகன் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் அமெரிக்க ராணுவ வீரர்கள் எண்ணிக் கை அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலி பான்கள் ஆட்சியை அகற்ற அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு தாக்குதல் நடத்தி யது. கடுமையான போருக்கு பிறகு தாலிபான்கள் தோற் கடிக்கப்பட்டனர். அதிபர் கர்சாய் தலைமையில் அமெ ரிக்க ஆதரவு பொம்மை அரசு அங்கு அமைக்கப் பட்டது. இங்கு பாதுகாப்பு பணியில் 1லட்சத்து 30 ஆயி ரம் அமெரிக்க வீரர்கள் ஈடு பட்டு உள்ளனர். இப்போது கர்சாய் அரசை அகற்றவும், அமெரிக்க ராணுவத்திற்கு எதிராகவும் தாலிபான்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இது வரை நடந்த போரில் 6500 வீரர் கள் இறந்துவிட்டார்கள். (மேலும்.....)

ஆனி 13, 2012

டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு நேற்று காலை 133.60 ரூபாவாக உள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிராகப் பதிவாகியுள்ள இலங்கை நாணயத்தின் ஆகக் குறைந்த மதிப்பு இதுவேயாகும். ___

ஆனி 12, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லவிருந்த 11 பேர் கைது

அவுஸ்திரேலியா நோக்கிச் சட்டவிரோதமாக படகில் பயணிக்கவிருந்த 11 பேரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் 9 பேர் மட்டக்களப்பையும் இருவர் முல்லைத்தீவையும் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் வைத்தியசாலைக்குப் பின்புறம் உள்ள விடுதியொன்றில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட பிரதான சந்தேக நபரை பொலிஸார் இனங்கண்டுள்ளனர். குறித்த நபரைக் கைது செய்யும் நடவடிக்கையை தற்போது விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்டுள்ளது.

ஆனி 12, 2012

நைஜீரியப் பிரஜைகள் நால்வர் நீர்கொழும்பில் கைது

நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் 4 பேர் நீர்கொழும்பில் வைத்து எதுல்கோட்டை சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்லுபடியற்ற விசாவை வைத்திருந்த காரணத்தினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டோரில் 2 ஆண்கள், 1 பெண் மற்றும் 1 குழந்தை அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கைதானோரிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் மற்றும் 44 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் _பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கைப் பெறுமதியில் 17 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் பிடிபட்டுள்ளார். இந்நபர் இன்று அதிகாலை சீனாவிற்குப் பயணம் மேற்கொள்வதற்காக திட்டமிட்டிருந்த வேளையில் இவரைக் கைது செய்ததாகவும் இவரிடம் 13,000 அமெரிக்க டொலர் பணம் இருந்ததாகவும் விமான நிலைய சுங்கப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஆனி 12, 2012

இனவாதம், மதவாதம் இனங்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்தாத பதியுதீன்

இனவாதமும், மதவாதமும் பிரதேச வாதங்களும் ஒரு போதும் இனங்களுக்கு இடையில் உறவை ஏற்படுத்தாது,மாறாக விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே எமது இலக்கை நோக்கி அடையலாம் என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவில் பாப்பாமோட்டை றோ.க.த.க.பாடசாலைக்கான பாடசாலைக் கட்டிடம், அதிபர் விடுதி, கணணிப் பிரிவு என்பனவற்றை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொ்ண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர் அருட் சகோதரர் சீ.எஸ்.விஜயதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேலும் அமைச்சர் மேலும் கூறியதாவது: இனங்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வை சீர் குலைக்க சில சக்திகள் முற்படுகின்றன. அவற்றுக்கு இடம் கொடுக்க முடியாது. எமது மண்ணில் நாம் சகலரும் சமமானவர்கள். இதில் சாதிப் பாகுபாடுகளோ, மத ரீதியான பிளவுகளோ ஏற்பட இடம்கொடுக்க முடியாது. இந்த விடயங்களை நாம் பாடசாலைகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஆனி 12, 2012

இலங்கை இந்திய இராஜதந்திர உறவுகளை சீர்குலைக்க வைகோ சீமான் சதி

இலங்கை இந்திய இராஜதந்திர உறவுகளை சீர்குலைப்பதற்கு வைகோ மற்றும் சீமான் குழுவினர் சதி செய்கின்றனர். இதன் வெளிப்பாடே தமிழகத்தில் அமைச்சர் ரெஜினோல்ட் எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும். இத்தகைய போராட்டங்களை பெரிதாக்கி இந்தியாவுடன் பகையை ஏற்படுத்திக் கொள்வது தேவையற்ற விடயமாகும். ஏனெனில் உள்நாட்டிலும் வெளிநாட்டு தூதரகங்கள் முன்பாக படுத்து புரண்டெல்லாம் போராட்டங்கள் செய்கின்றனர். இதற்காக அமெரிக்கா, இலங்கையிடம் கோபித்துக் கொண்டால் அதில் அர்த்தம் இல்லை. எனவே அர்த்தமற்ற விடயங்களுக்கு விளம்பரங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை. செனல் 4 தொலைக்காட்சிக்கு படங்களையும் போலித் தகவல்களையும் வழங்கி இலங்கைக்கு எதிரான படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சீமான் மற்றும் வைகோ குழுவினர் அமைச்சர் ரெஜினோல்ட் வருகையை எதிர்த்து போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தமிழக பொலிஸார் தெளிவுபடுத்தினர். வீண் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாது இரு நாட்டு உறவிற்கும் பங்கம் ஏற்படாத வகையில் இந்தியாவிலிருந்து சுய விருப்பின் பேரில் அமைச்சர் ரெஜினோல்ட், குழுவினரும் இலங்கை வந்தடைந் தனர். அவர்களை யாரும் வெளியேற்றவோ நாடு கடத்தவோ இல்லை.

ஆனி 12, 2012

இஸ்ரேலில் இலங்கை அகதிகள் மூவர் கைது

இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்ற விடயம் தெரியவில்லை. இஸ்ரேலிய பொலிஸார் நடத்திய சோதனையின் போது இவர்கள் உட்பட்ட தென் சூடான் நைஜீரியா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளின் சுமார் 150 அகதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேலின் உள்துறை அமைச்சில் தம்மை பதிவு செய்துக் கொள்ளாமை காரணமாகவே கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் ஹெலி இசாய் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு வாரத்துக்குள் சுயமாகவே இஸ்ரேலை விட்டு வெளியேறுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனி 12, 2012 

6 மாத சிறைத் தண்டனை

தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் வெடி பொருட்களை ஏற்றிச் சென்றதை அறிவிக்கத் தவறினார்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கில் எதிரியான நபருக்கு ஆறுமாத கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதி மன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வவுனியா மேல் நீதி மன்ற நீதிபதி சந்திர மணி விஸ்வலிங்கம் இந்தத் தீர்ப்பினை வழங்கினார். மன்னார் பிரதேசத்தில் பயங்கரவாத செயல் பற்றி அறிந்திருந்தும் தகவல் கொடுக்கத் தவறினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் இவர் மீது வவுனியா மேல் நீதி மன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதன்படி 01. 01. 2006 இற்கும் 22. 09. 2009 இற்கும் இடைப்பட்ட கால எல்லைக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் வெடி பொருட்களை ஏற்றிச் சென்று சேதத்தை விளைவிப்பதற்கு ஆயத்தமாகின்றார்கள் எனத் தெரிந்திருந்தும், அல்லது அது குறித்த நியாயமான காரணங்களிருந்தும் அதனைப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு அறிவிக்கத் தவறினார் என்றும் சந்தேக நபர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ___

ஆனி 12, 2012

ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வு தொடர்பில் எதுவும் தெரியாது - தமரா

இந்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் எதுவும் தெரியாத நிலையில் தான் வெளிவிவகார அமைச்சினால் வைக்கப்பட்டிருப்பதாக ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். ஜுன் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடகள் மனித உரிமைகள் பேரவை அமர்வு எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரம் வரை நடைபெறும். இந்த தருணத்தில் இலங்கை விவகாரத்தை எடுத்துக் கொள்ள உத்தியோகபூர்வமாக பட்டியலிடப்படாத போதிலும் நாட்டிற்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ள அரச சார்பற்ற நிறுவங்களும் சர்வதேசக் குழுக்களும் ஆர்வமாகவுள்ளதாகவும் தூதுவர் கூறினார். ___

ஆனி 12, 2012

தாராளமயத்திற்கு மாற்று

புதிய உத்வேகத்தில் வெனிசுலா

உலகெங்கும் நவீன தாராயமயக் கொள்கையால் அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய நாடுகள் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள வெனிசுலா நவீன தாராளயமத்திற்கு எதிரான மாற்றுப் பாதையில் முன்னேறி வருகிறது. இது மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு நம்பிக்கையை உருவாக்கி வருகிறது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழிலாளர்கள் நலன், அண்டை நாடுகளுக்கு உதவி செய்வது என பல்வேறு வகையிலான ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வெனிசுலா முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. (மேலும்.....)

ஆனி 12, 2012

அமைச்சர்கள் வெளிநாடு செல்ல முடியாத நிலைக்கு அரசே காரணம்

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அண்டைய நாடான இந்தியாவுக்கு கூட இலங்கை அமைச்சர்களால் செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணமாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அண்மையில் இந்தியா சென்ற அமைச்சர் ரெஜினோல்ட் குரே அங்குள்ள மக்களின் எதிர்ப்பினால் நிகழ்வில் கூட கலந்து கொள்ளாமல் நாடு திரும்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. _

ஆனி 12, 2012

அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த மேலும் இரு படகுகள் கடலில் இடைமறிப்பு

சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் 150 பேர் பயணித்த இரண்டு படகுகள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அருகில் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் இடைமறிக்கப்பட்டு ள்ளன. இவை இம்மாதத்தில் இடைமறிக்கப்பட்ட 10 வது மற்றும் 11வது படகுகள் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலாவது படகு 112 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் பிரிவினரால் இடைமறிக்கப்பட்டிருப்பதுடன், மற்றைய படகு 38 பேருடன் நேற்று இடைமறிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு படகுகளும் நேற்று கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசெல்லப் பட்டுள்ளன. இந்தப் படகுகளின் வருகையுடன் இம்மாதத்தில் மாத்திரம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை, கடந்த சனிக்கிழமை அவுஸ் திரேலியாவின் கொக்கோ தீவுக்கு பாறை யுடன் மோதுப்பட்ட படகிலிருந்து மீட் கப்பட்ட 32 பேரும் இலங்கையர்கள் என அவுஸ்ரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனி 12, 2012

முகமாலை மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வு

முகமாலை பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது. முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் அப்பகுதியின் மீள்குடியேற்றம் தொடர்பில் இக்கூட்டத்தில் ஆராயப்பட விருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. . இதேவேளை, முகமாலைப் பிரதேசத்தின் மீள்குடியேற்றப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அண்மையில் தெரிவித்திருந்தார். யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பகுதியினராலும் அதிகளவான கண்ணி வெடிகள் இங்கு புதைக்கப்பட்டிருப்பதால் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு சுமார் 3 முதல் நான்கு வருடங்கள் தேவைப்படு வதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனி 12, 2012

அழகிரியை மிஞ்சும் ஸ்டாலின்

தி.மு.க.விற்குள் அண்ணன், தம்பி சண்டை அமைதியாய் நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வாரம் ஸ்டாலின், டில்லி சென்று வந்தது அண்ணன், தம்பி கோஷ்டிக்குள் மேலும் சர்ச்சையை உண்டாக்கும் என டில்லி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. டில்லி வந்த ஸ்டாலின், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்து அரசியல் பேசினார். ‘’காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. தொடர்ந்து நீடிக்கும் என்றும், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவில் எவ்வித மாறுதலும் இல்லை’’ என, சோனியாவிடம் ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்டாலின், டில்லி வந்த சமயத்தில் ராகுல் ஊரில் இல்லை. அடுத்த முறை வரும் போது ராகுலை சந்தியுங்கள் என, ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார் சோனியா. ‘’இனி ஸ்டாலின் தான் எங்கள் கட்சி மேலிடத்தோடு எந்த விஷயத்திலும் பேச்சு வார்த்தை நடத்துவார்’’ என, காங்கிரசார் கூறுகின்றனர். அழகிரி மத்திய அமைச்சராக இருந்தும் சோனியா சந்திப்பதில்லை. பிரதமர் தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் அழகிரி கலந்து கொள்வதில்லை. அத்திபூத்தாற் போல் எப்போதாவது தான் கலந்து கொள்கிறார். தி.மு.க. அமைச்சர்கள், ஒரு முறை பதவி விலக ராஜினாமா கடிதங்களுடன் டில்லி வந்த போது, சோனியாவை சந்தித்தார் அழகிரி. அதற்குப் பிறகு சோனியாவை சந்திக்கவில்லை.

ஆனி 12, 2012

மியன்மாரில் கலவரம்

7 பேர் பலி; பல வீடுகள் தீக்கிரை

மியன்மாரின் மேற்கு மாநிலமான ரகினில் முஸ்லிம்களுக்கும் பெளத்தர்க ளுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அங்கு அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ரகின் மாநிலத்தில் நீடிக்கும் கலவரத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு நூற்றுக் கணக்கான சொத்துகள் சேதமாக்கப்பட் டுள்ளன. கடந்த மாதம் பெளத்த பெண் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் சென்ற பஸ் ஒன்று தாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மஜ்டோவில் ஆரம்பமான கலவரம் தொடர்ந்து தலைநகர் சித்வா மற்றும் ஏனைய பகுதிகளுக்கு பரவியுள்ளது. இதன்போது முஸ்லிம்கள் மற்றும் பெளத்தர்களின் பல வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. பங்களாதேஷின் எல்லைப்புற மாநிலமான ரகினில் முஸ்லிம்களுக்கும் பெளத்தர்க ளுக்கும் இடையில் நீண்டகாலமாக பதற்ற நிலை நீடிக்கிறது. இங்கு ரகின் இன பெளத்தர்களே பெரும்பான்மையாக உள்ளனர். சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்களில் பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்த பங்காலி மொழி பேசுபவர்களும் உள்ளனர். இவர்களில் அதிகமானோர் இருநாட்டு குடியுரிமையும் பெறாதவர்களாவர். இவ்வாறான 800,000 பேரளவில் ரகின் மாநிலத்தில் இருப்பதாக ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஆனி 12, 2012

கடலுக்குள் இருந்த இமயமலை

சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையோ, கட்டுக்கதையோ என்று யோசிக்கத் தோன்றும். உதாரணமாக இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ் கடலுக்குள் இருந்தது என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை. நமது உலகம் தோன்றும்போது அது இப்போது நாம் காணும் தோற்றத்தில் இல்லை. இப்போது கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு வித்தியாசம். அவை இப்போது இருப்பதைப் போல் ஐந்து கண்டங்களாக இல்லை. உலகத்தின் சிறுபகுதி வெறும் நிலத்திட்டாகவும் பெரும் பகுதி நீரால் சூழப்பட்டதாகவும் இருந்தது. ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும் நகர்ந்துகொண்டே இருந்தது. அதை கண்டங்களின் நகர்வு என்கிறார்கள். அதற்குக் காரணம் பூமி ஒரே திடப்பொருளாக இல்லாததுதான். (மேலும்.....)

ஆனி 11, 2012

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்

கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அபே சிறி குணவர்த்தன கடந்த புதன் கிழமையன்று இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அவரின் இடத்திற்கு வட மேல் மாகாணத்தில் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பூஜித ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் புதன்கிழமையன்று கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என மட்டக்களப்பிலுள்ள உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பூஜித ஜயசுந்தர கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் எற்பட்ட கிறீஸ் மர்ம மனிதன் எனும் அச்ச நிலை நிலவிய கால கட்டத்தில் மக்களுக்கு அமைதியை ஏற்படுத்த கிழக்கில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ___

ஆனி 11, 2012

லெனின் உடல் 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படலாம்?

சோவியத் யூனியனை நிர்மாணித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பதப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 88 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது லெனினின் உடல். மொஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் லெனின் உடல் இத்தனை காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏராளமான மக்கள் இந்த உடலைப் பார்வையிட்டு வருகின்றனர். சோவியத் யூனியன் சிதறுண்டு போன பின்னரும் கூட லெனின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது லெனின் உடலை அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (மேலும்.....)

ஆனி 11, 2012

காணாமல் போனவர்களைக் கண்டு பிடித்துத் தருமாறும்  வேண்டுகோள்

யுத்த நடவடிக்கையின் போது காணாமல் போனவர்களைக் கண்டு பிடித்துத் தருமாறும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் யாழ்ப்பாணத்தில் கண்ணீர் மல்கி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். காணாமல் போனவர்களின் உறவினர்கள் புகைப்படங்கள் சகிதம் அமைச்சரை சுற்றிவளைத்து காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரி கண்ணீருடன் கதறியழுதனர். யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? அவர்கள் சிறைகளில் வைக்கப்பட்டு இருந்தால் எந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். எங்கள் பிள்ளைகளை எங்கு தடுத்து வைத்திருக்கின்றீர்கள்? அவர்களை விடுதலை செய்ய உதவுங்கள் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோரினர். இவர்களின் கோரிக்கையைச் செவிமடுத்த அமைச்சர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தால் அவர்களின் வழக்குகளை துரிதப்படுத்தி நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

ஆனி 11, 2012

கிழக்கு தேர்தல்

அரசியல் களம் சூடு பிடிப்பு

கிழக்கு மாகாண சபை இம்மாதம் 26 ஆம் திகதி கலைக்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பரவலாக பேசப் பட்டதையடுத்து கட்சிகளுக்கிடையிலான வேறுபட்ட கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. ஸ்ரீல. சு.க., த. தே. கூ., மு. கா., தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி ஜே. வி. பி. கட்சிகளுக்கிடையே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் யாரை வேப்பாளராக நியமிப்பது என்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாகவிருக்கின்றது.

ஆனி 11, 2012

சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்

கடலில் தத்தளித்த மற்றுமொரு படகு கொக்கோ தீவருகே மீட்பு

சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் சென்ற மற்றுமொரு படகொன்று சனிக்கிழமை அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்திருப்பதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. இந்தப் படகில் உள்ளவர்கள் இலங்கையர்களாக இருக்கலாமென நம்புவதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் பயணித்த படகு அவுஸ்திரேலி யாவின் கொக்கோ தீவுக்கு அருகில் பாறையுடன் மோதியதைத் தொடர்ந்து கடலில் தத்தளித்த 32 பேர் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தப் படகு இலங்கையிலிருந்து புறப்பட்டதாக இருக்கலா மென நம்புவதாக அவுஸ்திரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் படகு அவுஸ்ரேலியாவை அடைவதற்கு முன்னர் கொக்கோ தீவுகளுக்கு அருகிலுள்ள பாறைகளில் மோதியுள்ளது. படகில் இருந்த 32 பேரும் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், இவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு மாற்றப்பட்டிருப்பதாக அவுஸ்ரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தியாவின் கேரளாவின் ஊடாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 150 பேர் கடந்த வாரம் கேரளப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் சிலர் தமிழக முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டி ருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனி 11, 2012

நாலாயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம்

இம்மாத இறுதிக்குள் 4 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தொழில்நுட்ப பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கும் கல்வியற் கல்லூரியில் டிப்ளோமா கற்கை நெறிகளை முடித்துக் கொண்ட மூவாயிரம் பேருக்குமே எதிர்வரும் 29ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒரே மேடையில் வைத்து நியமனங்கள் வழங்கி வைக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். இவர்களுக்கான நியமனங்களில் பாடசாலைகளும் குறிப்பிடப்படுமென அவர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியிலுள்ள 17 கல்வியியற் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களே ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தமது டிப்ளோமா கற்கை நெறிகள் மற்றும் தற்காலிக ஆசிரிய பயிற்சிகளை முடித்துக்கொண்ட மூவாயிரம் பேருக்கும் தாம் கடமையாற்றப் பட வேண்டிய பாடசாலைகளின் பெயர் கள் குறிப்பிடப்பட்ட நிலையிலேயே இம் முறை நியமனக் கடிதங்கள் வழங்கப்பட வுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நியமனம் பெறும் ஆசிரியர்கள் ஆகக்குறைந்தது ஐந்து வருடங்களாயினும் குறித்த பாடசாலையில் கடமையாற்ற வேண்டும். எவ்வித அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரங்களைக் கொண்ட நியமனம் பெற்றுக் கொண்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதில் ஜனாதிபதி அவர்கள் உறுதியாகவுள்ளாரெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

ஆனி 11, 2012

ரூ. 3 கோடி பணம், நகை மோசடி

தலைமறைவான பெண் முந்தல் காட்டில் சடலமாக மீட்பு

உடப்பில் 3 கோடி ரூபா பணம், நகையுடன் தலைமறைவாகிய இளம் பெண் காட்டுப் பகுதியில் தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவருடைய சடலம் முந்தல் காட்டுப் பகுதியில் முந்தல் பொலிஸாரால் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது. மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட இவரின் சடலம் குறித்து முந்தல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். நகைகள், பணம், தங்க ஆபரணங்களை வாங்கி கொள்முதல் செய்வது, வட்டிக்குப் பணம் கொடுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த உடப்புப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இராமமூர்த்தி ரிஷிவதனி, சுமார் 42 பேரிடம் 3 கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகையைச் சுருட்டிக்கொண்டு சில வாரங்களுக்கு முன்னர் தலைமறைவாகியிருந்தார். இவர் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் இவரைத் தேடி வலைவிரித்திருந்தனர். இந்த நிலையிலேயே குறிப்பிட்ட பெண் மரமொன்றில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆனி 11, 2012

வன்னி பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட பஸ் சேவை இன்று ஆரம்பம்

வன்னி கல்வி வலயத்தில் சேவையாற்றும் ஆசிரியர் களுக்கான விசேட போக்குவரத்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட வுள்ளது. இத்திட்டத்திற்கமைய யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களிலிருந்து வன்னி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்களின் நலன் கருதி 12 வண்டிகள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வட மாகான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். தனது ஆலோசனைக்கமைய வட மாகாண கல்வி அமைச்சு இந்த விசேட போக்குவரத்து சேவை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அவர், இதற்கமைய நாளாந்தம் ஆறு பஸ் வண்டிகளும், வாராந்தம் ஆறு பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மடு, துணுக்காய், வவுனியா வடக்கு ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த ஆசிரி யர்கள் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர். இந்த பஸ் சேவையின் மூலம் நாளாந்தம் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் பஸ் வண்டிகள் காலை 8.00 மணிக்கு பாடசாலையை சென்றடைவதுடன் பிற்பகல் 3.00 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் பஸ் வண்டிகள் மாலை 5.00 மணிக்கு வந்தடைய உள்ளது என்றார். அதேபோன்று திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் பஸ் வண்டி காலை 8.00 மணிக்கு பாடசாலையை சென்றடையவுள்ளதுடன் மீண்டும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் பஸ் வண்டி மாலை 5.00 மணிக்கு உரிய இடத்தை சென்றடையவுள்ளது என்றார்.

ஆனி 11, 2012

எனது உயிருக்கு அச்சுறுத்தல் சரத்பொன்சேகா கூறுகிறார்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனால் தனக்கு பலத்த பாதுகாப்புத் தேவைப்படுவதாகவும் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது போதாமல் உள்ளதாகவும் சரத்பொன்சேகா கூறியதாக ஸின்ஹுவா செய்திச் சேவை தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் உதவியாளர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் 15 உத்தியோகத்தர்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இருப்பினும் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் தனக்கு திருப்தி இல்லை எனவும் தான் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுப்பதால் தனக்கு பலத்த பாதுகாப்பு தேவை எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். ___

ஆனி 11, 2012

விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது சீனா

சீனா விண்வெளியில் ஆய்வு கூடம் ஒன்றை வரும் 2020 ஆம் ஆண்டில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு முன் ஏற்பாடாக விண்வெளிக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் ஒன்றை முதல் தடவையாக ஏவுகிறது. அதில் ஒரு பெண் உட்பட 3 விண் வெளி வீரர்கள் செல்கிறார்கள். ‘ஷென்ஸ்ஹோவு-9’ என்ற செயற்கைக் கோளை சுமந்து கொண்டு அந்த விண்கலம் இம்மாதம் மத்தியில் விண்ணில் ஏவப்படும் என எதிர் பார்க் கப்படுகிறது. இதற்கான விண்கலம் நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜியூயான் என்று இடத்தில் உள்ள ஏவுதளத்துக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவலை சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனி 11, 2012

நித்தியானந்தா தலைமறைவு?

ஆசிரமத்தை கைப்பற்ற கர்நாடக அரசு தீவிரம்

சில நாட்களுக்கு முன் அமெரிக்க குடியுரிமைப் பெற்ற ஆரத்தி ராவ் என்ற பெண், தனக்கு நித்தியனந்தா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொலிஸில் புகார் தெரிவித்தார். இது குறித்து விளக்குவத ற்காக பிடதியில் செய்தியாளர் சந்திப்பிற்கு நித்தியானந்தா ஏற்பாடு செய்திருந்தார். இதில் செய்தியாளர்களுக்கும், நித்தியானந்தா ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி, செய்தியாளர்கள் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் பொலிஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்த பொலிஸார், 7 பேரை கைது செய்தனர். நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை கர்நாடக பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆனி 10, 2012

கிழக்கு மாகாண சபை தேர்தல் செப்டெம்பரில்

மூன்று மாகாண சபைகளை கலைத்து செப்டெம்பரில் தேர்தல் நடத்த திட்டம்

வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாண சபைகளை எதிர் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கலைத்துவிட்டு செப்டெம்பர் மாதம் தேர்தல் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடமத்திய மாகாணத்தை உரிய காலம் முடிவடைவதற்கு முன்னர் கலைப்பதற்கு அநுராதபுர உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை கடந்த வாரம் நீக்கப்பட்டது தெரிந்ததே. தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் ஸ்ரீல.சு கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆனி 10, 2012

கனடிய பிரஜையான அந்தோணிப்பிள்ளை ஜயகுமாரின் படுகொலை சம்பவத்தின் உண்மையான பின்னணி

 

புலி பயங்கரவாத ஆதரவு ஊடகங்களால் இலங்கை அரசாங்கத்தின் மீதும், பாதுகாப்பு படையினர் மீதும் அடிப்படையற்ற வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தி புறலியை ஏற்படுத்தும் இன்னுமோர் சம்பவம் அம்பலமாகியுள்ளது. கனடிய பிரஜையான அந்தோணிப்பிள்ளை ஜயகுமாரின் படுகொலை சம்பவத்தின் உண்மையான பின்னனி தற்போது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 3ஆம் திகதி இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட கனடிய பிரஜையான அந்தோணிப்பிள்ளை ஜயகுமாரின் கொலைத்தொடர்பாக பல பயங்கரவாத ஆதரவு ஊடகங்கள் பாதுபாப்புப் படையினர் மீது குற்றம் சுத்தினர். இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் வெளியான தகவல்களின் படி, ஜே.ஆரணியா என்ற பெண்ணுடன் முறையற்ற காதல் தொடர்பு ஏற்றபட்டதன் மூலம், கொலைசெய்யப்பட்ட குறித்த நபரின் பணத்தை கொல்லையடிக்கும் நோக்கில், முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரால் இப் படுகொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆனி 10, 2012

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கூட்டமைப்பு போராட்டங்களை செய்யவில்லை

இந்நாட்டு தமிழ் மக்களுக்கு உருப்படியாக எதுவும் கிடைக்குமானால் ஜே.வி.பி. இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்கும். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவித போராட்டங்களையும் நடத்தவில்லை என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இலங்கை தமிழ் மக்கள் மீது குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு எதுவித கரிசனையும் இல்லை. சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கவென இந்தியா பொறுப்பேற்ற காணிகளில் வசித்த தமிழ் மக்கள் இன்றும் அகதி முகாம்களில் அவல வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்த மக்கள் குறித்து இந்திய அரசு எதுவும் செய்யவில்லை.  வடக்கு ரயில் பாதை அமைக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. ரயில் பாதை அமைப்பதற்கு தேவைப்படும் தொழிலாளர்களையும் இந்தியாவிலிருந்து வரவழைத்துள்ளது. இதனால் வடக்கில் வாழும் தமிழர்களின் தொழில் வாய்ப்பும் பறிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றைத் தீர்க்க குழு அமைக்கவும் தேவையில்லை. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவும் தேவையில்லை. உடனடியாக இவற்றைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனி 10, 2012

உள்ளூர் தமிழரை நோகடிக்கும் புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகள்

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் உள்நாட்டில் நிம்மதியாக வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு பேராபத்து ஒன்று காத்திருக்கிறது. வெளிநாடுகளில் எமது நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தேச விரோத செயற்பாடுகள் எல்லை கடந்து செல்வதைக் காண முடிகிறது. தாமும் இலங்கையர் என்பதை மறந்து புலிக்கொடிகளை ஏந்தி வீதியோரங் களிலும், விமான நிலையங்களிலும் நின்று கூக்குரலிடுவதால் இவர்கள் எதைச் சாதிக்க நினைக்கிறார்களோ தெரியவில்லை. மேலைத்தேய நாடுகளின் பொறுமையை இழந்து அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டால் தாம் இலங்கைதான் தஞ்சம் என வந்திறங்க வேண்டும் என்பதை இவர்கள் மறந்து செயற்படுவது ஏன் என்று புரியவில்லை. கனரக ஆயுதங்கள், இராணுவ பலம், வான்படை, கடற்படை என வைத்திருந்து போரிட்ட பிரபாகரனாலேயே எதுவும் செய்யமுடியாது போனதை உணராது தஞ்சம் தேடி பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் ஏன் இந்தத் தேவை யில்லாத வேலை. (மேலும்.....)

ஆனி 10, 2012

SLFP யில் இணைவதில் ஆர்வம் காட்டிவரும் யாழ். இளைஞர்கள்

வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற் பாடுகளில் ஆர்வம் கொண் டுள்ள பல இளைஞர் யுவ திகள் தம்மை அக்கட்சியுடன் இணைத் துக் கொள்ள ஆர்வம் கொண்டுள் ளதாக அக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்க ஜன் இராமநாதன் தெரிவித்தார். இதற்காக சுமார் பத்தாயிரத் திற்கும் அதிகமான இளைய வர்கள் தமது கட்சி அலுவல கத்தில் கட்சியின் அங்கத் துவத்தைப் பெற்றுள் ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக வேலையற்ற பட்டதாரிகள் பலரும் கட்சியின் செயற்பாடுகளில் அதிக ஆர்வத் துடன் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் தமது தொழில் வாய் ப்பிற்காக பதிவுகளை மேற்கொண் டிருப்பதாகவும் அவர் தெரிவித் தார். இவ்வாறு இருபத் தோராயிரத்து நானூற்று முப்பத்தைந்து பேர் தம்மை கட்சி அலுவலகத் தில் பதிவு செய்துள் ளதாகவும் அவர்களுக்கான நியமனங்களை ஆண்டு மூப்பு அடிப்படையில் வழங்க சம்மந்தப்பட்ட அமைச்சுக் களுடன் தான் பேச்சு நடத்தி வருவதாகவும் அங்கஜன் தெரிவித்தார். இவர்களது நியமனங்களில் எந்தவொரு அரசியல் தலையீட் டிற்கும் தான் அனுமதி அளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்த அங்கஜன், பட்டதாரிகள் தமது நியமனத்திற்காக எவராவது பணம் பெற முனைந்தால் தன் னிடம் முறையிடுமாறும் தெரி வித்துள்ளார்.

ஆனி 10, 2012

சம்பந்தனும் குணதாசவும் நல்ல நண்பர்கள். ஆனால்.....

சம்பந்தன் ஐயாவை கைது செய்ய வேணுமெண்டு தேசப்பற்று குணதாச ஐயா உயர்தரப்புக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இரண்டு ஐயாமாருக்கு கிட்டத்தட்ட ஒரே வயது தான். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு நன்கு தெரியும். இரண்டு பேருமே இனப்பற்றினால் உந்தப்படுவதனால் தான் இந்த நிலமை. இருவரும் நாட்டுப்பற்றை முன்னிலைப்படுத்தி செயற்பட்டா நல்லாயிருக்கும், இல்லாவிட்டா வயசான காலத்தில பேரப்பிள்ளைகளோட விளையாடி ஓய்வா இருக்க வேணும். என்ன தான் இருந்தாலும் குணதாச ஐயாவின் தேசப்பற்றுக்கு ஒரு சபாஷ்.

ஆனி 10, 2012

இனப்பிரச்சினை தீர்வுக்கு குந்தகமாக இருக்கும் புலம் பெயர் நாட்டு புலிகள்!

தப்பியோடிய புலிகளும் அங்குள்ள புலி ஆதரவாளர்களுமே இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகின்றது. பழிவாங்கும் நோக்கோடு பயனற்ற இந்த நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் இவ்வித செயல்களால் தமிழ் மக்கள் பயனடையப் போவதில்லை. மாறாக இனப்பிரச்சினைத் தீர்வை இழுத்தடிக்கவும் மென்மேலும் சிக்கலாக்கவுமே இந்த நடவடிக்கை பயன்படும். நமது மக்கள் அரசியல் ரீதியாக எதிர்காலத்தில் அடைய இருக்கும் நன்மைகளை இத்தகைய நடவடிக்கைகள் பாதிக்கும். கடும் போக்குள்ள பேரினவாதிகளுக்கு உறைப்பாகக் கதைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். அங்கே நடந்த எதிர்ப்பு இங்கு நிம்மதியாக வாழும் தமிழ் மக்களின் வாழ்விலே பாதிப்பை ஏற்படுத்த காரணமாகவும் அமையலாம். போர் முடிவின் பின்னர் இனங்களுக்கிடையிலான நல்லுறவு வளர்ந்து வரும் இவ்வேளையில் இவ்வாறான சம்பவங்கள் இனத்தின் விடிவு முயற்சிக்கு நாமே குந்தகம் விளைவித்ததாக முடியும் என்பதை பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். (மேலும்.....)

ஆனி 10, 2012

அதியுயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் இராணுவத்தின் கருத்தை கூட்டமைப்பு நிராகரிக்கிறது

யாழ். குடாநாட்டிலுள்ள 40 சதவீத அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பதை கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.வடக்கிலுள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்டு புத்த சிலைகள், விகாரைகள், இராணுவ குடியிருப்புகள், விமான ஓடு பாதைகள் அமைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். கிழக்கில் குச்சவெளி போன்ற பிரதேசங்களில் பௌத்த சின்னங்கள் இருப்பதாகத் தெரிவித்து முஸ்லிம் மக்களும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வடக்கில் இராணுவத்தினரின் கூற்றுப்படி பார்த்தாலேயே இன்னும் 60 சதவீத அதி உயர் பாதுகாப்பு வலய நிலப்பிரதேசம் விடுவிக்கப்படவில்லை. அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 50 ஆயிரம் மக்கள் இன்னும் அகதி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலுமே கடந்த 25 வருட காலமாக வசித்து வருகின்றனர்.

ஆனி 10, 2012

இலங்கைக்கு உதவுவதற்குக் காத்திருக்கும் சீன இராணுவம்

சீன இராணுவம் எந்த சந்தர்ப் பத்திலும் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சீன இராணுவத் தளபதி, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜய சூரியவிடம் வாக்குறுதி யளித்துள்ளதாக இரா ணுவப் பேச்சாளர் பிரி கேடியர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள் ளார். சீனாவுக்கு விஜ யம் செய்துள்ள இல ங்கை இராணு வத் தளபதி, சீன இராணுவத் தளபதியை சந்தித்து இருதரப்பு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடை யிலான இராணுவப் பயிற்சிகள் மற்றும் தொழிநுட்ப உதவிகளை தொடர் ந்தும் வழங்க இதன் போது இணக்கம் தெரிவிக்கப் பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ராணுவ உறவு களை வலுப்படுத்திக் கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியங் குங்லீ ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு எட்டப் பட்டுள்ளது. பல்வேறு இராணுவ விவ காரங்களில் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் கூட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனி 10, 2012

தேர்தலை பகிஷ்கரிக்கும் படி கூறியமையே புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கும் படி விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை கேட்டது தான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடன் அரசு நடத்திய ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளிலும் நான் அரச பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ளேன். புலிகள் தரப்பில் தற்போதைய அமைச்சர் கருணாவும் அப்பேச்சுக்களில் கலந்து கொண்டுள்ளார். 2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கும் படி விடுதலைப் புலிகள் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதுதான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அமைச்சரை கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் படி கேட்டுக்கொண்டனர். இது தேர்தல் விஜயம் அல்ல என அமைச்சர் அம்மக்களுக்கு பதிலளித்தார்.

ஆனி 10, 2012

சூளை மேட்டில் என்ன நடந்தது?

இப்ப்போது ஊடகங்களை இடையிடையே ஆக்கிரமிக்கும் செய்திகளில் சூளைமேட்டுச் சம்பவமும் ஒன்று. சூளை மேட்டுச் சம்பவம் என்றால், என்னவென்றே தெரியாதவர்கள் கூட இந்த செய்திகள் வரும் போது பரபரப்போடு படிக்கிறார்கள். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சூளை மேட்டு படுகொலைச் சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவராகவும், அதை விட மேலாக, அவரே இந்தப் படுகொலையை நடத்தியவராகவும், இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சமுகமளிக்காத காரணத்தால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார், என்றும் சில ஊடகங்கள் சொல்லி வருகின்றன. (மேலும்.....)

ஆனி 09, 2012

இலங்கை மீது இந்தியா கடும் சீற்றம்?

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான அமலாக்க யோசனையை அமெரிக்காவிடம், இலங்கை அரசு நேரடியாகக் கையளித்தது குறித்து இந்தியா கடும்  சீற்றமடைந்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இது விஷயத்தில் இலங்கை மீதான தமது அதிருப்தியை டெல்லி, இராஜதந்திர  வழிமுறைகளில் தெரிவித்திருப்பதாகவும் தூதரக வட்டாரங்கள் மூலமாக  தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.(மேலும்.....)

ஆனி 09, 2012

பத்மநாபசுவாமி கோயிலின் அடியி்ல் சுரங்கப் பாதையா?

புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலின் அடியில் சுரங்கம் உள்ளதா என்பது குறித்து நிலவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 இரகசிய அறைகளில் பல இலட்சம் கோடி ரூபா மதிப்பிலான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது 2 அறைகளில் உள்ள பொக்கிஷங்களைக் கணக்கெடுக்கும் பணி உச்சநீதிமன்றம் நியமித்த மதிப்பீட்டு குழுவால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்மநாபசுவாமி கோவிலின் அடியில் பல சுரங்கங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் போர்க்காலங்களில் மன்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தப்பிச் செல்வதற்காகவும், ஆபத்துக் காலங்களில் பொக்கிஷங்களைப் பாதுகாப்பாக வேறு இடத்துக்குகொண்டு செல்லவும் இந்த சுரங்கப் பாதைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரகசிய அறையி்ல் பல இலட்சம் ரூபா மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதால் பத்மநாபசாமி கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனி 09, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 20)

(அ.ஆனந்தன்)

கூடுதல் அதிகாரம் வழங்குவது, சுயாட்சி, தனிஈழம் உள்பட அனைத்து விசயங்களும் அதில் விவாதிக்கப்பட்டு தனி ஈழம்தான் தீர்வு என்ற கோரிக்கை மற்ற தீர்வுகளைக் காட்டிலும் பெரிதாக எழுந்தால் அப்போது வாக்கெடுப்புக்குச் செல்லலாம். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரின் பிரிக்க முடியாத உரிமையாகும். அதனை அம் மக்களின் ஏகோபித்த விருப்பை மனதிற்கொண்டே செயல்படுத்த வேண்டும். இந்த பிரச்னையை இலங்கை அரசுடன் விவாதிக்க தகுதியும் அதிகாரமும் படைத்த ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பே என்ற கருத்தை இங்கு செயல்படும் விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் பல முன் வைக்கின்றன. அது சரியானது அல்ல, ஏனெனில் அனைத்து மக்களின் விருப்பு வெறுப்பற்ற மனநிலையை ஆயுதம் தாங்கிய ஒரு குழு மிகச் சரியாக பிரதிபலிக்கும் என்று கூற முடியாது. (மேலும்.....)

ஆனி 09, 2012

கனடாவில் தம்புள்ள விவகாரமும் அதன்பின்னாலுள்ள ரகுமான் ஜானின் "அரசியல் நிகழ்ச்சி நிரலும் "

(நேசன்)

தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்து ரொறன்ரோவில் (கனடா) மே 6, 2012 நடைபெற்ற கூட்டத்தில் ரகுமான் ஜான் ஆற்றிய உரையெனக் கூறி "தம்புள்ள விவகாரமும் அதன் பின்னுள்ள அரசியலும்" என்ற தலைப்பில் "தேசம் நெற்" இணையத்தளம் உட்பட பல இணையத்தளங்களில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இக்கட்டுரையை எழுத்து வடிவத்திற்கமையவும் நண்பர்களது(?) கோரிக்கைகளுக்கு இணங்கவும் சில அம்சங்களை உள்ளடக்கும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கட்டுரையின் மூலம் "தம்புள்ள விவகாரமும் அதன் பின்னுள்ள அரசியலும்" இனங்காணக் கூடியதாக உள்ளதோ இல்லையோ ரகுமான் ஜானையும் அவர் பின்னுள்ள  அரசியலையும் இனங்காண முடிகிறது. (மேலும்.....)

ஆனி 09, 2012

உள்நாட்டுப்போரை   நோக்கிச் செல்லும் சிரியா  இந்தியா எச்சரிக்கை

சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண ராணுவ ரீதியாக அணுகினால் அது அந்நாட்டில் உள்நாட்டுப்போரை மேலும் தீவிரமடையச் செய்யவே வழி செய்யும் என்றும், இது அரபுப் பிரதேசம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது. சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து இந்தியா மிகவும் கவலைப்படுகிறது என்றும், அங்கு நடக்கும் அனைத்துவிதமான வன்முறைகளையும் - அந்த வன்முறை களை எவர் நிகழ்த்தினாலும்வன்மையாகக் கண்டிப்பதாக வும் ஐ.நா. பொதுச் சபையில் பேசிய இந்தியாவுக்கான நிரந் தரத் தூதரர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார். எண்ணெய்வளம் மிக்க அரேபிய நாடுகளில் ஒன்றான சிரியாவை கைப்பற்றும் நோக்கத்தோடு அந்நாட்டில் திட்டமிட்டே உள்நாட்டுக் குழப்பத்தை உருவாக்கியுள் ளது அமெரிக்க ஏகாதிபத்தியம். (மேலும்.....)

ஆனி 09, 2012

I will stand firm by country’ – President tells Lankans in Britain

President Mahinda Rajapaksa emphasized that no force will be permitted to snatch away the country which had been liberated from terrirism.. The President said he is prepared to make any sacrifice on behalf of the future generations to transform Sri Lanka into a super country to be reckoned with in the international world. The President was addressing the Sri Lankans who staged a demonstration  pledging support to the motherland at Park Lane in London. The President is in London attending the Diamond Jubilee celebrations of Queen Elizabeth II, on an invitation extended by the Queen.(more...)

ஆனி 09, 2012

பிரான்ஸ்   ஓய்வுபெறும் வயது குறைப்பு

பிரான்சில் ஓய்வு பெறும் வயதை 62 ல் இருந்து 60 ஆக குறைத்து புதியதாக பொறுப்பேற்றுள்ள சோசலிஸ்ட் கட்சி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிரான்ஸ் நாட்டின் சமூகநலத்துறை அமைச்சர் மரிசோல்டூரேய்ன் கூறியிருப்பதாவது : பிரான்சில் 18 வயதில் பணிக்கு சேந்து 41 அல்லது 41. 5 ஆண் டுகள் தங்களின் ஓய்வூதியத்திற்கான பணம் செலுத்தியவர் களுக்கு மட்டுமே இந்த வயது குறைப்பு நடவடிக்கை பொருந்தும். இந்த திட்டத்தை அமல்படுத்தும் அதே நேரத்தில் தொழிலாளர்களின் ஓய்வூதியம் குறையக்கூடாது என்பதற் காக தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் ஓய்வூதிய திட்ட பங்களிப்பு நிதி ஒரு சதவீதம் அதிகரிக்கப்படும். இதே போல் பெண்களுக்கு பிரசவகால விடுப்பு 6 மாதம் வரை அளிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.(மேலும்.....)

ஆனி 09, 2012

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 14 எண்ணெய் தாங்கிகள்

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் 14 எண்ணெய்த் தாங்கிகள் நிர்மாணிக் கப்பட்டுவருவதாக துறைமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த எரிபொருள் தாங்கிகள் துறைமுக நிர்மாண நடவடிக்கையின் முதற்கட்ட செயற்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் துறைமுகத்துக்கு வருகை தரும் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கு வதற்காகவே இது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். எட்டு எரிபொருள் தாங்கிகள் கப்பல் களுக்கு எரிபொருள் வழங்கவும் 3 தாங்கிகள் படகுகளுக்கு எரிபொருள் வழங்கவும் உபயோகப்படுத்தப்படவுள்ள தாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறெனினும் இந்த எரிபொருள் தாங்கி உள் வெளி நாட்டுக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படமாட்டாதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனி 09, 2012

Tamil Tiger Supportives Finally Being Brought To Task By The Canadian Government

(Insight By Sunil Kumar)

But today under the jurisdiction of the Harper Administration which was also responsible for hounding the LTTE out of existence in Canada for which all freedom loving Sri Lankans need to be thankful,  there is further good news that the present Canadian Government unlike its predecessor stands firm in how it views the LTTE and those who support its mendacious cause.That the Canada Revenue Agency has fined two Hindu temples in the Toronto area for sending money to a suspected front organization for Sri Lankan rebels following the 2004 Indian Ocean tsunami is a firm assertion of this in addition to the manner in which the Royal Canadian Mounted Police went after all LTTE activities in big cities in Canada where the terror group to all intents and purposes is non-functional in Canada today or have been driven underground if they have been bold enough to take that route where there will be further heavy penalties to pay if this is indeed true! (more....)

ஆனி 09, 2012

புத்தளத்தில் வீட்டினுள் புகுந்து தங்கச் சங்கிலி அபகரிப்பு

தமது வீட்டிலே இரவு நேரம் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை பிடுங்கிச் சென்றுள்ள ஒருவரை தேடி புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த (05) ஆம் திகதி இரவு நேரத்தில் புத்தளம் ரத்மல்யாய பிரதே சத்தைச் சேர்ந்த ஒரு வீட்டில் புகுந்து தமது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியைப் பிடுங்கிச் சென்றுள்ளதாக ரத்மல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த ராமசாமி நடராஜா என்பவர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தாம் தமது மனைவியுடன் இரவு நேரம் வீட்டிலே உறங்கிக் கொண்டிருந்தபோது ஒருவர் வீட்டினுள் நுழைந்து மனைவியின் கழுத்திலிருந்த 2 1/2 பவுண் எடையுடைய தங்கச் சங்கிலியை பிடுங்கிச் சென்றதாக அவர் தமது முறைப்பாட்டிலே மேலும் குறிப்பிட்டுள்ளார். கூரை ஓட்டை கழற்றிவிட்டு வீட்டினுள் நுழைந்துள்ள ஒருவரே மேற்படி தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளதாக அது தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

ஆனி 09, 2012

மீட்டெடுத்த நாட்டை பயங்கரவாதிகள் மீண்டும் பறித்தெடுக்க ஜனாதிபதி இடமளிக்கமாட்டார்

ஜனாதிபதி அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ.யுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஜனாதிபதி நீட்டிய நேசக்கரத்தை தட்டிக்கழித்துவிட்டு மாவில்லாறு வான்கதவுகளை எல்.ரீ.ரீ.ஈ. மூடிய சம் பவமே எல்.ரீ.ரீ.ஈ.யின் அழிவு ஆரம்பமாகியது. அதையடுத்து, இந்நாட்டு மக்களின் நிம்மதியைக் குலைத்து நாடெங்கிலும் தற்கொலை குண்டுதாரிகளின் மூலம் அராஜகங்களை புரிந்து வந்த எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தை முற்றாக அழித்தொழிப்பதை விட வேறு வழியி ல்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள், எல். ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் சில உறுப்பினர்கள் தமிழர்களாக இருந்தாலும், தமிழ் மக்கள் ஆயுதம் தூக்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடவி ல்லை என்பதை நன்கு உணர்ந்து, இந்த யுத்தத்தை அப்பாவி பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய உயிராபத்தை கூடியவரையில் குறைக்கக்கூ டிய வகையில் யுத்தத்தை நடத்தி இறுதியில் எல்.ரீ.ரீ.ஈயை மண்டியிட வைத்து, இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்து, அவர்களை பயங்கரவாத பிடியில் இருந்து மீட்டெடுத்தார். (மேலும்.....)

ஆனி 09, 2012

புனர்வாழ்வு அளிக்கப்பட்டோருக்கு சுயதொழில் ஊக்குவிப்புக்கடன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்புக் கடன்களை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இன்று வழங்கவுள்ளது. சிறைச்சாலைகள் அமைச்சு, புனர்வாழ்வு அதிகாரசபையின் ஊடாக இந்தக் கடன்களை வழங்கவிருப்பதாக செயலாளர் குறிப்பிட்டார். 2.5 மில்லியன் ரூபா நிதி இந்தக் கடன்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதன் ஒரு அங்கமாக 100 பேருக்கு இன்று முல்லைத்தீவில் சுயதொழில் ஊக்குவிப்புக்கடன் வழங்கப்படவிருப்பதாகக் கூறினார். இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவரை இந்த இலகுக்கடன் வழங்கப்படவுள்ளது. இந்தக் கடன்களைக் கொண்டு மீள்குடியமர்ந்த மக்களும், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகங்களுடன் இணைக்கப்பட்டவர்களும் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றார். அதேநேரம், இன்று பிற்பகல் யாழ் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில், புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட 100 பேருடனான கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெறவிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதேவேளை புனர்வாழ்வு நிலையங்களில் இன்னமும் புனர்வாழ்வுபெற்றுவரும் சுமார் 625 பேர் கூடிய விரைவில் சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் என அமைச்சின் செயலாளர் ஏ.திஸாநாயக்க குறிப்பிட்டார். ஒருவருட புனர்வாழ்வு செயற்திட்டத்தைப் பூர்த்திசெய்ததும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், வவுனியா மற்றும் பொலன்னறுவையிலுள்ள 4 முகாம்களில் இவர்கள் புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனி 09, 2012

பனி மனிதனின் வரலாறு பல விசித்திரமான தகவல்களைக் கொண்டுள்ளது

அறிவியல் உலகில் அதிரடித் திருப்புமுனையாக உலகத்தை பிரமிக்கச் செய்த ஒரு தகவல் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடலிலிருந்து இரத்தம் வெளியேறிய கண நேரத்தில் காற்று அதன் மேல் பட்டவுடன், இரத்தம் இறுகிக் கெட்டியாகி, கட்டியாகிவிடும். இதுதான் இரத்தத்தின் இயல்புத் தன்மை. சிவப்பணுக்களின் ஆயுள் என்பது சுமார் 120 நாட்கள் மட்டுமே. அதற்குள் அவை தன் உருவிழந்து மறைந்து விடும். ஆனால் சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனிதன் ஒருவனின் உடலிலிருந்து இரத்தம் எடுக்கப்பட்டு, அன்றைய மனித இரத்த கலங்களின் தன்மையும் கண்டறியப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆனி 08, 2012

வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டும் - கி.மா. சபையில் தீர்மானம்

விடுதலை புலிகளினால் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டுமென்ற பிரேரணையொன்று கிழக்கு மாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போது மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சபைரினால் இப்பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்ற அரசாங்கம், அரச அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அரசியல் கட்சிகள், மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உட்பட அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் சுபைர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த பிரேரணை அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனி 08, 2012

ராஜபக்ஷ குடும்பத்தினரின் காலில் வீழ்ந்து பதவி பெற்றவர் எனக்கு சவால் விடுவதா? யோகேஸ்வரன்

ராஜபக்ஷ குடும்பத்தினரின் காலில் வீழ்ந்து மாகாண சபை உறுப்பினர் பதவியை பெற்ற பிரசாந்தன் எனக்கு சவால் விடுவதா?! யோகேஸ்வரன் எம்பி. ராஜபக்ஷ குடும்பம் போட்ட மாகாணசபை உறுப்பினர் பிச்சையைப் பெற்று வந்த பிரசாந்தன் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவாகி பாராளுமன்றம் சென்ற எமக்கு சவால் விடுவதா? சீ.யோகேஸ்வரன் எம்.பி. கேள்வி? எழுப்பியுள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு ஏழாவது இடத்தில் தெரிவாகிய பூ.பிரசாந்தன் ராஜபக்ஷ குடும்பத்தினரின் காலில் வீழ்ந்து பின்வழியால் மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாதங்களின் பின் பெற்றுக் கொண்ட மாகாணசபை உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் அதிகூடிய வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய என்னுடன் சவால் விடுவது சிரிப்பாக உள்ளது.

சாமியின் பேச்சு அவர் சாகும்வரை நாற்காலி உறுதி என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கான விடிவு...? அதனைப்பற்றி யார் கவலைப்படுகின்றனர். தமிழ் குறும் தேசியவாதம் பேசுவதே வெற்றிக்கு 'கரண்டி' என்பதை மீண்டும் மீண்டும் நம்பும் வரை தமிழ் பேசும் மக்களுக்கு விடிவே கிட்டப் போவது இல்லை. பிரபாகரனின் கொலைவெறியை நம்பி அரசியல் நடத்தாவிட்டால் சாமிக்கும் மட்டக்களப்பில் நாற்காலி கிடைக்காது என்பது சாமிக்கு மட்டும் அல்ல சுரேஸ், சம்மந்தன், மாவை, செல்வம் போன்றவர்களும் தெரியும். தொடரட்டும் எங்கள் அரசியல் சித்து விளையாட்டுக்கள். ஏமாற தமிழ் பேசும் மக்கள் இருக்கும் வரை ஆண்ட பரம்பரை பெருமையைப் பேசிப் பேசியே இலங்கையில் தமிழ் பேசும் இனம்(முஷ்லீம் மக்கள் தவிர்ந்த) ஒன்று எதிர்காலத்தில் இல்லாமல் செய்து விடுவீர்கள் என்பது மட்டும் தூரத்தில் தெரியாமல் இல்லை - சாகரன் (மேலும்.....)

ஆனி 08, 2012

யாழ்ப்பாணத்தில்   படைகள் குறைப்பு

சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக இலங்கைஅரசு, தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாண பகுதிகளில் இருந்து, அதிக அளவில் துருப்புகளை குறைத்துள்ளதாக புதன்கிழமைத் தெரி வித்தது. யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 50 ஆயிரம் வீரர்கள் தற்போது 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளனர் என, இலங்கை கூறியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களில் 60 சதவீதம் குறைக்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வானிச் சூர்யா கூறினார். எல்டிடிஇயினருக்கு எதிராக, ராணுவம் நடவடிக்கை எடுத்தபோது 2008ம் ஆண் டில் 50 ஆயிரம் வீரர்கள் அங்கு அனுப்பப் பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார். எல்டிடிஇ மற்றும் இலங்கை ராணுவம் இடையே உள்நாட்டுப்போர் நடந்த இடத் தில் ராணுவத்தை குறைக்க வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வந்தன.

ஆனி 08, 2012

அமெரிக்காவை மிரட்ட ரஷ்யா - சீனா கூட்டாக போர் பயிற்சி

வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் பெய்ஜிங் சென்றுள்ளார். அப்போது அவர் சீனத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை இந்தப் பிராந்தியத்தில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷ்யா-சீனா கூட்டாக இராணுவ பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளன. (மேலும்.....)

ஆனி 08, 2012

மனிதனா மிருகமா?

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன்.  அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து,  மருந்து ,
இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும்,  எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா, ‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு , ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)  போய் உடமைபைக் காட்டுங்க!  அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள். என்னது மிருக டாக்டர்கிட்டேயா?  உனக்கென்ன மூளை
கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
(மேலும்.....)

ஆனி 08, 2012

ஒபாமாவின் உத்தரவின் பேரில்   ஈரான் மீது வைரஸ் தாக்குதல்  வெள்ளை மாளிகை ரகசியங்கள் கசிவு

ஈரான் மீது தாக்குதல் வைரஸ்களை ஏவி அந்த நாட்டின் மீது தகவல் தொழில்நுட்ப ரீதியாக தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ரகசியமாக உத்தரவிட்டதாக வாஷிங் டன் வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன. உலகில் எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளில் ஈரான் முக்கிய இடத்தை வகிக்கி றது. இதனை எப்படியாவது ஆக்கிரமிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமெரிக்கா பல்வேறு வேலைகளில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக ஈரான் அணு ஆயுதங்களை சட்ட விரோதமாக தயாரித்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் அந்நாட்டிற்கு எதிராக உலகம் முழுவதும் பல்வேறு தடை களை விதித்திருக்கிறது. (மேலும்.....)

ஆனி 08, 2012

புலிகளின் கோரிக்கைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முன்வைக்கின்றனர்திஸ்ஸ வித்தாரண!

புலிகளின் கோரிக்கைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்து வருவதாக சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்தும் முன் நிபந்தனைகளை கூட்டமைப்பு விதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 2003ம் ஆண்டில் வடக்கு கிழக்கு இடைக்கால சுயாட்சி அதிகாரங்கள் தொடர்பில் புலிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நிகரான கோரிக்கைகளையே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் முன்வைப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு கிழக்கின் மீன்பிடி, விவசாயம், கடல் துறைமுகங்கள், கனிய வளங்கள், ஊடகம், மோட்டார் போக்குவரத்து வரி, நீதிமன்றம் மற்றும் காவல்துறை அதிகாரம் போன்றன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே சம்பந்தனின் கோரிக்கையாக அமைந்துள்ளது என திஸ்ஸ வித்தாரண சுட்டிக்காட்டியுள்ளார். நல்லெண்ண அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழு அமர்வுகளில் பங்கேற்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கமோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ முன் நிபந்தனைகளை விதித்து பாராளுமன்றத் தெரிவுக்குழு அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனி 08, 2012

கொழும்பின் சில பகுதிகளில் பலத்த காற்று...

வெள்ளவத்தை, தெஹிவளை மற்றும் நாவல ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவத்தைப் பகுதியில் வீசிய காற்றால் மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காற்றின் வேகத்தினால் பொலிஸ் மோசடி தடுப்புப் பிரிவிற்கு சொந்தமான கட்டிடத்தின் கூரைக்கு சேதமேற்பட்டு, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதால் அவரை தற்போது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனி 08, 2012

2023 ஆம் வருடத்தில் செவ்வாய் கிரகத்தில்   காலனி அமைக்க புதிய செயல் திட்டங்கள் 

நமது சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் உள்ளதென்றும், ஒரு சிலர் இல்லையென்றும் இருவேறு கருத்துக்கள் நிலவிவருகிறது. இந்த சூழ்நிலையில், இன்னும் 11 வருடத்தில் நெதர்லாந்து நாட்டிலிருந்து துணிச்சலாக தனியார் விண்வெளி வீரர்கள் நான்குபேரைக் கொண்ட ஒரு குழுவை ஒரு வழிப் பயணமாக அனுப்பிவைக்கப்பட உள்ளது. அந்த குழுவிற்கு பெயர் மார்ஸ் ஒன் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தொடங்கியவர் டச்சு தொழிலதிபரும், முன்பு மாற்று ஆற்றல் நிறுவனத்தின் தலைவருமான பஸ் லேன்ட்ஸ்ட்ராப் ஆவார். செவ்வாய் கிரகத்தை அடையவேண்டும் எனும் துணிச்சலான பயணத்திற்கு தயாராகிவரும் பட்டியலில் மார்ஸ் ஒன் உறுதியாக முன்னணியில் உள்ளது. (மேலும்.....)

ஆனி 08, 2012

மும்மொழித் திட்டம் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது

தேசிய மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசு தேவ நாணயக்கார, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்க ளின் மும்மொழித் திட்டத்தை நாடெங்கிலும் வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கு ஆங்கில மொழி அறிவு முக்கியத் துவம் பெறுகிறது. இன்றைய நவீன உலகில் ஆங்கில மொழியில் தேர்ச்சி இல்லாதவர்களு க்கு நல்ல வேலைவாய்ப்பையோ அல்லது ஒரு சிறந்த வளமான எதிர் காலத்தையோ எதிர்பார்க்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தி ருப்பதனால், ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இந்நா ட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளன. (மேலும்.....)

ஆனி 08, 2012

சிரிய கிராமத்தில் மற்றுமொரு படுகொலை: 86 பேர் பலி

சிரியாவின் ஹமாவில் அரச ஆதரவுப் படை 86 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்துள்ளதாக செயற்பாட் டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் 20க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளடக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. ஹமா பகுதியின் குபரியா மற்றும் மார்சால் கிராமங்களிலேயே இந்த கொடூர தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சிரியாவின் ஹவ்லா நகரில் கடந்த இரு வாரங்களுக்குள் இதே போன்ற தாக்குதலில் 108 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் ஹமா நகர தாக்குதல் தீவிரவாதிகளின் செயல் என சிரிய அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படுகொலையை அரச ஆதரவு பெற்ற ‘ஷபியா’ என்ற ஆயுதக் குழுவே நடத்தியதாக அரச எதிர்ப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் உள்ள அரச ஆதரவு கிராமங்களில் இருந்து வந்து எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்த கிராம வாசிகளை படுகொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் கத்தியால் குத்தப்பட்டும் நெருங்கிய இடைவெளியில் சுடப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப் பட்டிருப்பதாக ஹமா நகரின் செயற் பாட்டாளர் ஒருவர் பி.பி.சிக்கு தெரிவித்துள்ளார். இதேபோன்று குபரியா கிராமப் பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து அங்கிருந்து 40 உடல்கள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனி 08, 2012

வலதுகுறைந்தோரை வீட்டுரிமையாளராக்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில்

வலது குறைந்தவர்களை வீடுகளின் சொந்தக்காரர்களாக்கும் வேலைத்திட்டம் இன்று 08ஆம் திகதி யாழ். மாவட்ட பிரதேச செயலக அலுவலகத்தில் ஆரம்பமாகிறது. சமூக சேவைகள் அமைச்சு நாடு முழுவதும் சகல வலதுகுறைந்தவர்களுக்கும் வீடுகளை வழங்கும் திட்டத்தை நடைமுறை ப்படுத்தி வருகிறது. அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தலைமையில் அமைச்சர் டக் ளஸ் தேவானந்தா உட்பட யாழ். மாவட்ட அமைச்சர்கள் எம்.பி.மார்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்வர். யாழ் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு பயனாளியின் வீட்டுக்கும் இன்று அத்திவாரமிடப்படும். 26 பயனாளிகளுக்கு வீடுகளை நிர்மாணிக்க தலா 2,50,000 ரூபா என்ற ரீதியில் நிதி வழங்கப்படும். சகல பயனாளிகளும் பங்குபற்றும் இந்த விழாவில் மூக்குக்கண்ணாடி சக்கரநாற்காலி உட்பட பல உபகரணங்களும் வழங்கப்படும். சமுர்த்தி உதவி பொதுசன உதவி பெறும் 70 வயதைத் தாண்டியவர்களுக்கு ஜூன் 1 முதல் 1000 ரூபா அலவன்ஸ் வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்துவைப்பார்.

ஆனி 08, 2012

சீனப் பெருஞ்சுவரின் நீளம் அதிகம்

சீன பெருஞ்சுவரின் நீளம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது முன்னர் நம்பப்பட்டதை விடவும் அதிக நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. சீன அரசின் புதிய அளவையின்படி சீனப் பெருஞ்சுவர் 21, 196.18 கிலோ மீற்றர் (13, 170.6956 மைல்கள்) கொண்டதென அந்நாட்டு அரச ஊடகமான சுக்சிங்ஹோ குறிப்பிட்டுள்ளது. முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சீனச் சுவரின் நீளம் 8,850 கிலோ மீற்றராகவே இருந்தது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் செய்யப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின்படியே சீன பெருஞ்சுவரின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மின்ஸ் அரச பரம்பரை காலத்தில் (1368-1644) கட்டப்பட்ட சீனச் சுவர் மாத்திரமே கணக்கில் எடுக்கப்பட்டது. எனினும் 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் மேற் கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வில் மின்ஸ் பரம்பரைக்கு முன்னர் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை தற்போதைய புதிய அளவில் இணைக்கப் பட்டுள்ளது. சீனாவின் வடக்கு எல்லையை பாதுகாக்கும் வகையில் சீன மன்னர் களால் கி.பி. 475ஆம் ஆண்டு தொடக்கம் 1644ஆம் ஆண்டுவரை சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டுள்ளது. மனிதனால் அமைக்கப்பட்ட மிகப் பெரிய கட்டுமானமாக பதிவாகியுள்ள சீனப் பெருஞ்சுவர் 1987ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சொத்தாக பிரகடனப்படுத்தப் பட்டது.

ஆனி 08, 2012

திருமலை கிரிக்கெட் வீரர் கொலைச் சம்பவம்: விமானி உட்பட இருவர் கைது

மனைவியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடுகிறது இலங்கை . கள்ளக்காதல் தொடர்பே காரணம்

திருகோணமலை, ஐயனார்கேணி பிரதேசத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் ஈஸ்ரவதாஸன் கேதீஸ்வரன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் லண்டனில் உள்ள அவரது மனைவியை கைதுசெய்ய இன்டர்போலின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். (மேலும்.....)

ஆனி 07, 2012

மீட்டெடுத்த நாட்டை பயங்கரவாதிகள் மீண்டும் பறித்தெடுக்க இடமளியேன் - இலணடனில் ஜனாதிபதி

குரூர பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டை மீண்டும் எந்தச் சக்தியும் பிரித்தெடுத்துக் கொள்ளுவதற்கு இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினருக்காக எந்த அர்ப்பணிப்பையும் செய்து இலங்கையை உலகில் சிறந்த நாடாகக் கட்டியெழுப்புவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் லண்டனுக்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்திற்கு ஒத்துழைப்பும், நல் வாழ்த்தும் தெரிவிப்பதற்காக பெருந்தொகையான இலங்கையர் லண்டன், பார்க் லேனில் மறியல் போராட்டமொன்றை நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். (மேலும்.....)

ஆனி 07, 2012

கனடாவில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

கனடா ஆபாச நடிகரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் உடல் பாகங்கள் வென்கூவர் பகுதியின் பாடசாலைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் மனித கை மற்றும் கால் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கனடா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே கனடா அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கு மற்றொரு கால் மற்றும் கைகள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும் கொல்லப்பட்டவரின் தலை மற்றும் மேலும் சில பாகங்கள் கண்டெடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடா ஆபாச நடிகரான பூகா ரொக்கோ மெக்னொட்டா என்பவர் தனது காதலன் எனக் கூறப்படும் சீன நாட்டின் 33 வயது ஜுன் லின் என்பவரை கொன்று அவரது உடல் பாகங்களை இவ்வாறு அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் பாடசாலைக்கு அனுப்பியுள்ளார். ஜுன் லின்னை கொன்று துண்டு துண்டாக வெட்டும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று மின்னஞ்சல் மூலம் கனடா அரச அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்ட நடிகர் ரொக்கோ பெர்லின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை கனடாவுக்கு நாடுகடத்தும் ஆவணங்களை ஜெர்மன் நிர்வாகம் தயாரித்து வருகிறது.

ஆனி 07, 2012

கள்ள நோட்டுகளுடன் ஆறு பேர் கைது

கள்ள நோட்டுக் களை பயன் படுத்தி சூட் சுமமான முறையில் கொடுக்கல், வாங்கல் களில் ஈடு பட்டு வந்த ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ள னர். தந்திரி மலை ரஜமகா விகாரைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போலியான ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் பத்தும் 72 ஆயிரத்து 959 ரூபா ரொக்கப் பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கொட்டாவ, ராஜகிரிய, எப்பாவல, சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரும் இரண்டு பெண்களும் அடங்குவர். கள்ள நோட்டு விற்பனை நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகளையும் தந்திரிமலை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த கள்ள நோட்டுக்கள் எங்கு, எவ்வாறு அச்சிடப்பட்டன, இதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ஆனி 07, 2012

இந்தியா, மலேசியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் ஆர்வம்

இந்தியா மற்றும் மலேசியாவிலி ருந்து 2012ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 206 குடும்பங்களைச் சேர்ந்த 548 இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்பியிருப்பதாக கொழும்பிலுள்ள யூ.என்.எச்.சி.ஆர். அலுவலகம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5 ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களிலிருந்து தாமாக முன்வந்து நாடு திரும்பியிருப்பதாக யூ.என்.எச்.சி.ஆர். அலுவலகத்தின் அதிகாரியொருவர்த் தெரிவித்தார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 2012ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவி லிருந்து நாடு திரும்பிய இலங்கை தமிழ் அகதிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையி லான கப்பல் சேவை தடைப்பட்டிருப்பதும் இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறினார். (மேலும்.....)

ஆனி 07, 2012

சூரிய சக்தி விமானம் ஸ்பெய்னிலிருந்து மொரொக்கோவை அடைந்தது

சூரிய மின்சக்தியில் பறக்கும் விமா னம் ஸ்பெயினில் இருந்து மொரோக் கோவை சென்றடைந்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த சாகச நிபுணர் பெர்னாட் பிக்கார்டிக் (வயது 54) சூரிய மின் சக்தியில் விமானத்தை இயக்கினார். இந்த விமானத்தின் மேல் பகுதி முழுவதும் சூரிய சக்தியை மின் சாரமாக மாற்றும் சோலார் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 11,800 அடி உயரத்தில் இந்த விமானம் பறக்கும். சுவிஸில் சோதனை செய்யப்பட்ட சோலார் இம்பல்ஸ் விமானம் கடந்த மே மாதம் சுவிஸ் நாட்டிலிருந்து ஸ்பெயின் வந்தது. அங்கிருந்து 2,500 கி.மீ தூரத்தில் உள்ள மொராக்கோ நாட்டின் தலைநகர் ரபாட் நகருக்கு சோதனை ஓட்டமாக விமானம் நேற்று சென்றடைந்தது. ஒருவர் அமரக் கூடிய இந்த விமானத்தின் நீண்ட தூர பய ணம் வெற்றிகரமாக அமைந்தால், எதிர் காலத்தில் சூரிய சக்தி விமான போக்கு வரத்துக்கான கண்டுபிடிப்புகள் முன்னேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனி 07, 2012

கந்தப்பளை பாக் தோட்டத்தில் தொடர்ந்தும் பகிஷ்கரிப்பு

கந்தப்பளை பாக் தோட்ட தொழிற்சாலை தொடர்பான தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் 10 வது நாளாக நேற்றும் (06) தொடர்ந்து நடைபெற்றது. இன்று (07) இது தொடர்பான பேச்சுவார்த்தை நுவரெலியா தொழில் ஆணை யாளர் அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்க ளுக்கும் இடையில் நடைபெறவுள்ளது. நேற்று 10 வது நாளாக நடைபெற்ற பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக தொழிலாளர்கள் கூறுகையில், எமது சக தொழிலாளர்கள் சிலர் எமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வேறு சில தோட்டங்களுக்கு சென்றுள்ளார்கள். (07.06.12) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் மற்ற தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பாக அவர்களுடன் பேசுவதற்காக சென்றுள்ளார்கள். அவர்களும் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இது எமக்கு மட்டும் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை அல்ல. இது தொழிலாளர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரச்சினையாகவே நாம் கருதுகின்றோம். நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. தொழிலாளர்களின் ஒற்றுமை என்ன என்பதைபுரிய வைக்க வேண்டும். இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு வராவிட்டால் போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றனர்.

ஆனி 07, 2012

அத்வானியின் கருத்துக்கு கருணாநிதி திடீர் ஆதரவுகூட்டணி சேர வாய்ப்பு

தேர்தல் ஆணையரை நியமிக்கக் குழு அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ள கருத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீரென ஆதரவு தெரிவித்துள்ளதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி சேரவாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் ஆணையரை நியமிக்கக் குழு அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அத்வானி கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் உள்ள கருத்துகள் எனக்கும் உடன்பாடுதான் எதிர்க்கட்சியின் கருத்து என்பதால் அது அலட்சியப்படுத்தக்கூடியது இல்லை. பா.ஜ.க. மூத்த தலைவர் எல். கே. அத்வானியின் கருத்துக்கு திடீரென ஆதரவு தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர அச்சாரமாக இதை எடுத்துக் கொள்ளலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். (மேலும்.....)

ஆனி 07, 2012

அணுஆயுத காலம் முடிந்தது இன்று நடப்பதோ சைபர் யுத்தம்

நீங்கள் அணுகுண்டு தயாரி த்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டு கிறதே என்று ஈரான் ஜனாதிபதி முகமது அகமதி நிஜாதிடம் சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டார்கள். அதைக்கேட்டு அவர் கோபப்படவில்லை. ‘இந்த உலகம் வேறு எங்கோ போய்க்கொண் டிருக்கிறது. இன்னமும் அணுகுண்டு தயாரிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிaர்களே அதெல்லாம் பழைய கதை’ என்றார். ஒருவேளை குற்றச்சாட்டை திசைதிருப்புவதற்காகவோ அல்லது இராஜதந்திர யுத்தங்கள் இரசாயன ஆயுதங்கள், உயிரிப் போர் பற்றியோ அவர் குறிப்பிட்டிருக்கலாம் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால், இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால், அவர் குறிப்பால் உணர்த்தியது சைபர் யுத்தமாகக் கூட இருக்கலாம் போல் தெரிகிறது. (மேலும்.....)

ஆனி 07, 2012

ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் இவை இரண்டும் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படும்

ழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய வற்றுக்குரிய ஊழியர்களின் கொடுப்பனவுடன், கம்பனியும் தனது பங்குத் தொகையை செலுத்த வேண்டும் என்ற கட்டு ப்பாட்டான விதிமுறை அரசாங்கத்தினால் சட்டப்பூர்வமாக அமுலாக் கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த விதிமுறையை எங்கள் நாட்டில் உள்ள சுமார் 60 வீதமான சிறிய கம்பனிகள் நடைமுறைப்படுத்துவதில்லை என்று சமீப த்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் பணிபுரியும் ஊழி யர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. எனினும், அதற்கு ஈடு செய்வதற்காக அரசாங்கம் 1958ம் ஆண்டில் ஊழியர் சேமலாப நிதி யம் என்ற இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினருக்கு வயோதிப கால த்தில் உதவக்கூடிய ஒரு நலன்புரி திட்டத்தை அன்றைய அரசாங்கம் அமுலாக்கியது.  (மேலும்.....)

ஆனி 07, 2012

ஆர்க்கிமிடிஸ்

பூமியை அசைப்பேன் என்றவர்

நான் நிற்பதற்கு ஓர் இடமும் சரியான நெம்புகோலும் என் கையில் கிடைத்தால் என்னால் இந்தப் பூமியையே அசைத்து நகர்த்திவிட முடியும்’ என்று சூளுரைத்தார் கிரேக்கத் தத்துவஞானியான ஆர்க்கிமிடிஸ். நிலைத்தளம் ஒன்றின் மீது ஒரு நீண்டகோலை படியச் செய்து அந்தக் கோலின் நீண்ட முனையை கையில் பிடித்துத் தூக்கும் ஒரு பலமற்ற சிறுவனால் பலம் வாய்ந்த பெரிய மனிதனால் நகர்த்த முடியாத பொருளை யும் நகர்த்திக் காட்ட முடி யும் என்றார் ஆர்க்கிமிடிஸ். இதுதான் ஆர்க்கிமிடிஸ் கண்டுபிடித்த நெம்புகோல் தத்துவம்.

 

ஆனி 06, 2012

வட்டமிடும் கழுகு

அமெரிக்க ராணுவத்தின் ஆக்டோபஸ் கரங் கள், ஆசியாவை நோக்கி நீள்கின்றன. 2020ம் ஆண்டிற்குள், உலகம் முழுவதும் உள்ள தனது படை பலத்தில் 60 சதவீதத்தை ஆசிய - பசிபிக் பிரதேசத்தில் உள்ள நாடுகளில் குவிப்பது எனத் தீர்மானித்திருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளது ஒபாமா நிர்வாகம். இதற்கான முஸ்தீபுகளைச் செய்வதற்காக தனது பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேட்டாவை ஆசிய நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ஜனாதிபதி ஒபாமா. இதன் ஒரு பகுதியாகவே லியோன் பனேட் டா, இந்தியாவிற்கு விஜயம் செய்கிறார். ஆப்கானிஸ்தானில் தனது ராணுவத்திற்கு இந்தியா எப்படி உதவ வேண்டும் என உத்தரவு போட அவர் வருகிறார். (மேலும்.....)

ஆனி 06, 2012

Channel-4 journalist deported

Shirani Sabaratnam, who works at the London-based Channel-4 TV Station as an editor and a presenter, arrived in Sri Lanka on Sunday. On arrival she was detained at the airport by Sri Lankan law enforcement authorities and later deported to Britain, informed sources said. The sources alleged that Ms. Sabaratnam, a former LTTE member, had arrived with her British husband from Britain via Dubai on Sunday. Her detention and subsequent deportation was the result of her being blacklisted. On being questioned by detectives, Ms. Sabaratnam admitted she had used different passports to travel to Sri Lanka’s North both during the war and after the war ended. Authorities believe that the husband and wife were visiting Sri Lanka to do another documentary critical of the Government. Ms. Sabaratnam was born at Vaddukoddai in Jaffna and is married to Stuart Cosgrove a director of Channel 4. They are reportedly playing a major role in Diaspora activities against Sri Lanka. Meanwhile, Police are looking for the husband of Sabaratnam, Stuart Cosgrove, who is reportedly staying in a luxury hotel in Colombo.

ஆனி 06, 2012

ரஷ்யா விமான விபத்து

அமெரிக்காவின் நாசவேலை அம்பலம்

ரஷ்யாவின் சுகோஷ் சூப்பர்ஜெட் விமானம் மே மாதம் 9ம் தேதி இந்தோ னேஷியாவின் சலக் மலை யில் மோதி விபத்துக்குள்ளா னது. இதில், விமானத்தில் பயணம் செய்த 45 பேரும் உடல் கருகி பலியாகினர். இவ்விபத்திற்கு மோசமான வானிலையே காரணம் என கூறப்பட்டது. ஆனால், இவ் விபத்திற்குப் பின்னணியில் அமெரிக்காவின் நாச வேலை இருப்பதாக அதிர்ச் சித் தகவல்கள் வெளியாகி யுள்ளன. விமானம் விபத்துக்குள் ளாகி சில நாட்களுக்குப் பின்னர் விமானத் தகவல் பதிவுக் கருவியை இந்தோ னேஷிய மலைக்கிராம மக் கள் கண்டுபிடித்தனர். மேலும், விமானத்தின் உயரம், வேகம் மற்றும் வழித்தடம் ஆகிய வற்றை பதிவு செய்துள்ள இப்பெட்டி நல்ல நிலையில் உள்ளதாக இந்தோனேஷிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் தலை வரான துணை மார்ஷல் டாரியாட்மோ தெரிவித் துள்ளார். (மேலும்.....)

ஆனி 06, 2012

இரகசிய ஆவணம் எதனையும் அமெரிக்காவுக்கு வழங்கவில்லை

செயற்பாட்டுத் திட்டம் அடங்கலான இரகசிய ஆவணம் எதனையும் அரசாங்கம், அமெரிக்க ராஜாங்க செயலாளருக்கு வழங்கவில்லை. நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்தே அமெரிக்காவுக்கு எடுத்துரைக்கப்பட்டது என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது உள்ளக விடயங்களில் வெளிநாட்டுத் தலையீடு இடம்பெறுவதை இலங்கை முழுமையாக எதிர்க்கிறது. இது எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனவும் அவர் கூறினார். உள்நாட்டு விடயங்களில் வெளிநாட்டு தலையீடு மேற்கொள்ளப்படாதிருப்பதை அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. இது எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். எமது உள்ளக விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு இடம்பெறுவதை இலங்கை முழுமையாக எதிர்க்கிறது. எமக்கு பாதிப்பாக இருந்தபோதும் 19 ஆவது மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனையை நாட்டு மக்களின் சுயகெளரவத்திற்காக நாம் எதிர்த்தோம். ஐ. நா. மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுபட்டது. வடக்கு தேர்தல் என்பன தொடர்பிலான அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் பேச வருமாறு அழைப்பிலிருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. எமக்கு உத்தரவு அன்றி அழைப்பே விடுக்கப்பட்டது.

ஆனி 06, 2012

வெனிசுலாவில் ஆயுதங்கள் விற்கத் தடை!

வெனிசுலாவில் ஆயுதங் கள் மற்றும் வெடிமருந்து களை விற்க அதிபர் ஹியூ கோ சாவேஸ் தடைவித் துள்ளார். வெனிசுலாவில் நிகழும் வன்முறைகளை தடுப்பதற்காகவே இம்மு டிவை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வெனிசுலாவில் வாழும் மக்களின் பாதுகாப்பை உறு திப்படுத்தவும், குற்றவாளி கள் மற்றும் வன்முறையா ளர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற இந்த அரசு தொடர்ந்து பல்வேறு முயற் சிகளை எடுத்து வருகிறது. மேலும், மனிதர்களின் உயி ரின் மதிப்பை உணரும் வகையில், ஆயுதங்களால் ஏற்படும் வன்முறைகளை குறைத்து, அந்த ஆயுதங் களை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் வண்ணம் மக்களை தயார்ப்படுத்த வேண்டும் என்று சாவேஸ் கூறினார். இதுகுறித்து குற்றவியல் சட்டப் பேராசிரியர் ஒரு வர், வன்முறைகளைக் குறைக்க வேண்டுமெனில் சட்டம் இயற்றுவது மற் றும் பொதுக் கொள்கை களை வகுப்பது மட்டும் போதாது, தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை உள்ள டக்கிய பல உத்திகளை மேற் கொள்ள வேண்டும் என் றும் அரசுக்கு பரிந்துரைத் துள்ளார்.

ஆனி 06, 2012

வீசா நடைமுறைகளை மீறிய 250 வெளிநாட்டவர் நாடுகடத்தல்

கடந்த ஐந்து மாதங்களில் நாட்டின் வீசா நடைமுறைகளை மீறிய 250 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 137 இந்தியர்களும், 38 பாகிஸ்தானியர்களும், 17 தாய் நாட்டவர்களும் இதில் அடங்குவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப் புப் பிரிவின் தலைவர் அமித்த பெரேரா தெரி வித்தார். உரிய காலம் கடந்த பின்னர் நாட்டில் தங்கி இருந்தோரும், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோருமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் ஆவர். நாட்டில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் வீசா காலம் முடிந்த பின்னரும் இலங்கையில் தங்கி இருக்கலாம் என குடிவரவு குடியகல்வு திணை க்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெற்காசிய, கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களே வீசா விதிகளை மீறி நீண்ட நாட்கள் நாட்டில் தங்கி இருப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலும் இவர்களுள் சிலர் சம்பந்தப்பட்டவர்கள். உல்லாச பிரயாண வீசாவில் வந்த சிலர் தொழி ல்களிலும் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடு பட்டவர்கள். வெளிநாட்டவர்கள், ஹோட்டல்களிலும், ஆபரணக் கடைகளிலும், நிர்மாண வேலைத் தளங்களிலும், ஆலைகளிலும், வீதியோரக் கடைகளிலும் வேலை செய்தமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனி 06, 2012

ஆண் ஒருவரை கொன்று உடல் பாகங்களை அனுப்பிய நடிகர் கைது

மர்ம நபர் ஒருவரை கொன்று விட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய நடிகர் ஜெர்மனியின் பெர்லின் நகரில் கைது செய்யப்பட்டார். ஆபாச படங்களில் நடிக்கும் லூகா ரோக்கோ மாக்னோட்டா என்ற 29 வயது நபரே கைது செய்யப்பட்டார். இவர் கனடா அரசு அதிகாரிகளுக்கு சமீபத்தில் ஒரு வீடியோ காட்சியை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். அதில் அடையாளம் தெரியாத ஒரு ஆணை கொன்று துண்டு துண்டாக வெட்டி பையொன்றுக்குள் போடுவது போன்று காட்சி பதிவாக்கப்பட்டுள்ளது. கொடூரமாக கொலை செய்யப்பட்ட அந்த நபரின் உடலில் இருந்த ஒரு கால் கனடா கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமையகத்திற்கும், ஒரு கை ஒட்டாவா தபால் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லூகா இருந்த வீட்டின் அருகே ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் ஒரு ஆணின் பின்புறம் அழுகி புழுத்துப் போய் இருந்தது. இதில் லூகாவால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர் ஜுன் லின் என்ற 33 வயது சீன நாட்டவர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனி 06, 2012

ஹட்டனிலிருந்து கதிர்காமத்துக்கான பஸ்சேவையை ஆரம்பிக்கக் கோரிக்கை

மஸ்கெலியா சிவனொளி பாதமலை புனித பூமியான நல்லதண்ணி நகரில் இருந்து கதிர்காம புனித பூமியை நோக்கி பயணித்த ஹட்டன் பேருந்து நிலைய பேருந்தும், கதிர்காம பேருந்து நிலைய பேருந்தும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் அவர்களினால் வைபவரீதியாக முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சேவையின் மூலம் இப்பகுதி மக்கள் மிகவும் பிரயோசனம் அடைந்தமையும் இச் சேவைமூலம் இரண்டு பேருந்து நிலையங்களும் பாரிய இலாபம் கிட்டியமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது இச்சேவை நுவரெலியா விலிருந்து கதிர்காமத்துக்கு நடத்தப்படுவதால் மீண்டும் ஹட்டனில் இருந்து நடத்துமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆனி 06, 2012

வெயிலின் அகோர தாண்டவம், ஆந்திராவில் 148 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் கடும் வெயிலால் பதிக்கப்பட்ட 148 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் ஒரே நாளில், இவ்வாறு வெயில் கொடுமைக்கு 148 பேர் பலியாகி உள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 4ஆம் திகதி தொடங்கி 28ஆம் திகதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தால் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து சுட்டெரித்து வருகிறது.

ஆனி 06, 2012

ஜெர்மன்

குழந்தைகள் உணவின்றி தவிப்பு

ஜெர்மனியில் 9 குழந்தைகளில் ஒரு குழந்தை உணவின்றி தவித்து வருவதாக யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகின் வளர்ந்த பெரும் பணக்கார நாடாக கருதப்படுபவை ஜெர்மனி. அந்த நாட்டில் குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபமாகி வருவதாக யுனிசெப் நிறுவன ஆய்வில் பல்வேறு விப ரங்கள் தெரிய வந்திருக்கிறது. ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள 29 நாடுகளில் குழந்தைகள் நலன் குறித்து யுனிசெப் அமைப்பு ஓர் ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் குழந்தைகளின் அன்றாட தேவை களில் 14 விஷயங்களை மையப்பொருளாக எடுத்துக் கொண்டு, சுமார் ஒன்றரை கோடி குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில் குழந்தைகளின் உணவில் உள்ள காய்கறிகள், பழங்கள் சேர்த்தல், ஆடைகள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்டவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்படி ஜெர்மனியில் மட்டும் சுமார் 12 லட்சம் குழந்தைகள் மேற்குறிப்பிட்ட அன்றாடத் தேவைகளான அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் ஐஸ்லாந்து, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து போன்ற நாடுகளும் குழந்தைகளின் அடிப்படை தேவைகளில் இன்னும் மோசமாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

ஆனி 05, 2012

Two Toronto Hindu temples fined by CRA for sending money to suspected Tamil Tigers

The Canada Revenue Agency has fined two Hindu temples in the Toronto area for sending money to a suspected front organization for Sri Lankan rebels following the 2004 Indian Ocean tsunami.The Richmond Hill Hindu Temple and the Hindu Mission of Mississauga, both registered charities, have been hit with $140,000 and $300,000 fines over money they sent to “non-qualified donees,” the CRA said.The federal charities regulator said the temples had donated tens of thousands of dollars to the Tamils Rehabilitation Organization, which it called “part of the support network” of the Liberation Tigers of Tamil Eelam, or LTTE. In letters to the temples, the Charities Directorate wrote that “the use of a registered charity’s resources to sustain the objectives and operations of the LTTE, either directly or indirectly through organizations that operate as its support network, is inappropriate.” The CRA said it had stopped short of revoking the temples’ charity status because of “extenuating circumstances,” including the tsunami disaster and the fact that both had agreed in writing to comply with federal charity regulations in the future. (more....)

ஆனி 05, 2012

அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையை இரண்டாக பிரித்து விடும் - ஜே.வி.பி. _

இனப்பிரச்சினைக்கான தீர்வில் அரசின் இழுத்தடிப்பானது நாட்டில் பிளவு ஏற்படுவதற்கான நிலையினையே தோற்றுவித்துள்ளது. யதார்த்த நிலையை அரசு பொருட்படுத்தாவிட்டால் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மேலும் தலையீடுகளை மேற்கொண்டு இலங்கையை இரண்டாக பிரித்து விடும் என்று ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்ததும் வடக்கின் பிரச்சினைகளை அரசு புரிந்து காள்ளவில்லை. திருமணத்திற்கு கூட இராணுவத்தின் அனுமதியினை வடக்கு தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இந்த நிலை சிவில் உரிமைகளின் அடிப்படை தன்மையை கேள்விக் குறியாக்கிவிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

ஆனி 05, 2012

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடான வாகன ஏற்றுமதி, இறக்குமதி நாளை ஆரம்பம்

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் வாகன இறக்குமதி, மீள் ஏற்றுமதி, பராமரிப்பு பணிகள் நாளை 06 ஆம் திகதி முதல் ஆரம்பமாகுகிறது. ஜப்பான் நாட்டில் இருந்து “FR ICIA” என்ற கப்பலில் 15 வாகனங்கள் இத்துறைமுகத்தை இன்று 5 ஆம் திகதி வந்தடையும் “ASIAN SUN” என்ற கப்பலும் சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை 1000 வாகனங்களுடன் இங்கு வருகிறது. “ASIAN SUN” என்ற கப்பலில் கொண்டுவரப்படும் 1000 வாகனங்கள் “ASIAN LEGEND” என்ற கப்பலில் அல்ஜீரியாவுக்கு மீள் ஏற்றுமதியாகும். இத்தகைய கப்பல்துறை சார் நடவடிக்கைகள் அம்பாந்தோட்டை முறைமுகம் தொடர்பாக பலராலும் தெரிவிக்கப்படும் தவறான பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும் என துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்துறைமுகத்தின் தற்போதைய நிலைமையை நேரில் சென்று அண்மையில் பார்வையிட்டார். கொழும்பு துறைமுகத்தில் நிலவும் நெரிசல் காரணமாக இறக்குமதிக்காக வாகனங்களை ஏற்றிவரும் கப்பல்கள் துறைமுகத்தின் வெளியில் நங்கூரமிட நேரிடுகிறது. இதனால் தாமதங்களும் ஏற்படுகின்றன. புதிய ஏற்பாடு இந்தத் தாமதங்களைக் குறைக்கும் எனவும் துறைமுக அதிகார சபை தெரிவிக்கிறது.

ஆனி 05, 2012

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முதற் பெண்மணியும் லண்டன் பயணம்

ஐக்கிய ராச்சியத்தின் யியிவது எலிசபெத் மகாராணியரின் வைரவிழா கொண்டாட்ட ங்களில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷவும் நேற்று முன்தினம் (3) இரவு ஐக்கிய இராச்சியத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். லண்டன் விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் முதற்பெண்மணியும் பக்கிங்ஹம் மாளிகையில் அளிக்கப்படும் வரவேற்பு உபசாரத்திலும் புனித பவுல் தேவாலயத்தில் நன்றி ஒப்புவிப்பு ஆராதனையிலும் கலந்து கொள்வார்கள். கில்டா மண்டபத்தில் நடத்தப்படும் வரவேற்புபசாரத்திலும், மகாராணியாரைக் கெளரவிக்குமுகமாக பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அளிக்கும் பகற்போசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்வார். லண்டன் மாநகரமும் பொதுநலவாய வர்த்தக பேரவையும் ஒழுங்கு செய்துள்ள பொதுநலவாய பொருளாதார ஒன்றியத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

ஆனி 05, 2012

லிபியாவில் கடாபிக்கு பின்னரான தேர்தலை நடத்துவதில் தாமதம்

லிபியாவில் முகம்மர் கடாபி அரசு கவிழ்க்கப்பட்டதன் பின் அங்கு நடைபெறவுள்ள முதலாவது தேர்தல் அடுத்த மாதத்திற்கு பிற்போடப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. லிபியாவில் புதிய அரசியல் அமைப்புக்கான சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி நடத்தப்பட அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தது. 200 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில் சுமார் 4000 பேர் அளவில் போட்டியிடவுள்ளனர். எனினும் இந்த தேர்தல் ஜுலை முதலாம் வாரம் வரை பிற்போடப்பட்டவுள்ளதாக லிபிய இடைக்கால அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் செயற்பாடுகளுக்கு போதிய காலம் தேவை என்பதாலேயே நிர்வாகம் இவ்வாறு தேர்தலை பிற்போட்டுள்ளது. முன்னதாக தேர்தலுக்கு நாடு இன்னும் தயாராக இல்லை எனக் கூறி லிபிய துணைத் தேர்தல் ஆணையாளர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனி 05, 2012

பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு சில கைதிகள் கடிதம்

பயங்கரவாத மற்றும் அவசரகால தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தண்டகைக் கைதிகள் சிலர் ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக் கோரி கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர். புலிகள் இயக்கம் பற்றிய தகவல்களை வழங்க மறுத்தமை அவர்களுக்கு பல உதவிகளை வழங்கியமை போன்ற குற்றங்களுக்காக மிக நீண்ட காலமாக தண்டனையினை அனுபவித்து வந்தவர்களில் சிலரே இவ்வாறு பொது மன்னிப்புக் கோரி ஜனாதிபதிக்கு கடிதமெழுதியுள்ளனர். குறித்த கடிதத்தினை பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.சுமந்திரன் ஊடாக ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டுள்ளது.
(மேலும்.....)

ஆனி 05, 2012

நைஜீரியாவில் கட்டடத்தின் மீது விமானம் மோதி கோர விபத்து

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 153 பேரும் கொல்லப்பட்டனர். அத்துடன் விமானம் மோதிய கட்டடத்தில் இருந்த ஒரு சிலரும் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியாவின் வர்த்தக நகரமான லகோசில் இருந்து தலைநகர் அபுஜாவுக்கு நேற்று முன்தினம் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. ‘டானா ஏர்’ என்ற விமான போக்குவரத்து நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் சிப்பந்திகள் உட்பட 153 பயணிகள் இருந்தனர். லாகோஸ் விமான நிலையத்தில் இருந்து கிளம்கிய சிறிதுநேரத்தில் அந்த விமானம் விபத்துக்கு உள்ளானது. குடியிருப்பு உள்ள ஒரு கட்டடத்தின் மீது திடீரென்று விழுந்து நொறுங்கியது. கட்டடத்தின் மீது விழுந்ததும் விமானம் தீப்பிடித்துக் கொண்டது. பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 153 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானத்தில் இருந்த பயணிகள் யாரும் உயிர் தப்பி இருக்க வாய்ப்பு இல்லை என்று விபத்தைநேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

ஆனி 05, 2012

நேருவின் ‘ஆதிவாசி மனைவி’

(கி. இலக்குவன்)

கட்டுமானப்பணியில் பங்கேற்ற ஒரு தொழிலாளிதான் பொத்தானை அழுத்தி அணையைத் திறக்கவேண்டும் என்று கருதிய நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க புத்னியே பொத்தானை அழுத்தி அணையைத் திறந்துவைத்தார். தனக்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை தனது குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் பரபரப்புடன் தனது கிராமமான கர்பானாவுக்குத்திரும்பிய அந்த ஆதிவாசிப்பெண்ணிற்குபேரதிர்ச்சி காத்திருந்தது.  அந்த அப்பாவிப்பெண்ணின் எதிர்காலமே இருளில் தள்ளப்பட்டது. நீ நேருவுக்கு மாலை அணிவித்ததால் நடைமுறையில் உனக்கும் அவருக்கும் திருமணமாகிவிட்டதாகப் பொருள் என்று அந்த கிராம வாசிகள் தெரிவித்தனர். அடுத்தநாள் ஊர்ப்பெரியவர்கள் நடத்திய கூட்டத்தில் அவள் நேருவின் மனைவியாகிவிட்டாள் என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. (மேலும்.....)

ஆனி 05, 2012

அமெரிக்காவின் அடுத்த இலக்கு சிரியா?

2010ம் ஆண்டின் இறுதியில் உலக அளவில் பல நாடுகளில் துவங்கிய மக்களின் எழுச்சிமிகு போராட் டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கி ன்றன. குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்களின் எழுச்சி அந்த நாடுகளில் ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தியது. துனீசியாவில் துவங்கி எகிப்து, லிபியா, யேமன் ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனை மேற்குலக மேலை நாடுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா அரபு நாடுகளில் தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறது. அதாவது தனது கைப்பாவையாக இருக்கக் கூடிய ஓர் அரசுதான்அங்கு அமைய வேண்டும். அதன்மூலமே தனது மேலாதிக்க தேவைக்கேற்ப அந்த நாட்டை பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறது. (மேலும்.....)

ஆனி 05, 2012

சிம்லாவில் கனவு வீடு கட்டுகிறார் பிரியங்கா

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் கனவு வீடு, சிம்லாவில் மீண்டும் கட்டப்படுகிறது. இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் உள்ள சரபாரா பகுதியில், சோனியாவின் மகளான பிரியங்கா கனவு வீடு கட்டி இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவில், அந்த வீடு இடிந்து விட்டது. தற்போது அந்த இடத்தில் மீண்டும் தன் கனவு இல்லத்தைக் கட்டும் பணியை பிரயங்கா துவக்கி உள்ளார். மொத்தம் 180 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு மாடிகளாகக் கட்டப்படும் வீடு வலுவாக இருப்பதற்காக, இம்முறை அடித்தளம் ஆழமாக தோண்டப்பட்டு உள்ளது. சிமென்ட்டுக்கு பதிலாக சின்க் உள்ளிட்ட பிற பொருட்களைக் கொண்டு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மலைப் பிரதேசத்துக்கு ஏற்ப வீட்டின் கூரையில் பலகைகள் பொருத்தப்பட உள்ளன. இம்முறை எந்தத் தடங்கலும் இல்லாமல், தன் கனவு இல்லத்தை முடிக்க பிரியங்கா தீர்மானித்து உள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், சிம்லா சென்றிருந்த பிரியங்கா, வீட்டின் கட்டமைப்பு குறித்து கட்டட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். வீட்டைச் சுற்றிலும் ஆப்பிள் மற்றும் செர்ரி மரங்கள் நிறைய உள்ளன, ஜனாதிபதி ஓய்வு எடுக்கும் ‘’தி ரீட்ரீட்’’ இல்லத்துக்கு அருகே பிரியங்காவின் வீடு கட்டப்பட்டு வருகிறது.

ஆனி 04, 2012

அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 150 இலங்கை அகதிகள் கைது

கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 150 இலங்கை அகதிகள் கொல்லத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளனர். கொல்லம் கடற்கரையில் நேற்றிரவு ஆறு இலங்கை தமிழ் அகதிகள் படகு ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்த போது கேரள பொலிஸார் விசாரணை செய்தனர். அப்போதே அவர்கள் தாம் அவுஸ்ரேலியா செல்வதற்காக படகிற்கு காத்திருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவுஸ்ரேலியா செல்வதற்காக கொல்லத்தில் காத்திருந்த 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 பெண்களும் 22 சிறுவர்களும் அடங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ளவர்களாவர். சிலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை அவுஸ்ரேலியாவுக்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படவிருந்த படகு ஒன்றை கேரள காவல்துறையினர் மடக்கிப் பிடிக்க முயன்ற போது அதில் இருந்த படகோட்டியும், இருவரும் கடலில் குதித்து தப்பி விட்டனர். பிடிபட்ட அகதிகள் ஒவ்வொருவரும் அவுஸ்ரேலியா செல்வதற்கு 1 இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம் ரூபா வரை முகவர்களுக்கு செலுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனி 04, 2012

எதிர்ப்புக்களை கண்டு கவலைப்படாது தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் -  திஸ்ஸ விதாரண

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் தடையாக உள்ளன. எனவே தடைகளை பொருட்படுத்தாது ஆதரவுக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இலங்கை மீது சர்வதேச நாடுகளின் தலையீடுகளும் அழுத்தங்களும் அதிகரிப்பதற்கு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமும் ஒரு காரணம். ஆகவே கூடிய விரைவில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். (மேலும்.....)

ஆனி 04, 2012

கொழும்பில் கொல்லப்பட்டவர் புலிகள் இயகத்தின் கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலர் என அடையாளம் காணப்பட்டார்!

கொழும்பில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டி தேசிய பாடசாலை ஒன்றின் முன்பாக கொலை செய்யப்பட்டு அனாதரவாக விடப்பட்ட சடலம் பின்னர் அவரது தந்தையாரால் நேற்று அடையாளம் காட்ட்டப்பட்டுள்ளது. இவர் மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக பணியாற்றியவர். இதன்பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகத் தொழிற்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பின்னர் இவரது சடலம் பம்பலப்பிட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஆனி 04, 2012

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும - மாவை

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும், அவற்றை அகற்றி எமது உறவை புதுமைப்படுத்த தற்போது நல்லதொரு சந்தரப்பம் ஏறபட்டுள்ளதாக தழிரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐயா மாவையாரே!

புலிகள் வடக்கிலிருந்து முஸ்லீம் மக்களை இனச்சுத்திகரிப்பு செய்த போது நீங்கள்  இதனைக் கூறியிருந்தால் உங்களின் இவ் வாய்ச்சவட்டலை நாம் ஏற்று இருப்போம். கிழக்கில் வகை தொகையில்லாமல் முஸ்லீம் மக்களை கொன்றபோது கண்ணீர் மல்கி இருந்தால் உங்கள் இன்றைய கூற்றுக்கு உண்மைத் தன்மை இருந்திருக்கும். உங்கள் தலைவர் அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட போது நீங்கள் கண்டித்திருந்தால் நீங்கள் கொலைகளை கண்டிப்பவர் என்று நம்பியிருப்போம். புலிகள் தமிழ் மக்களுக்குள்ளேயே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராட புறப்பட்ட போராளிகளையும், அவர் தம் தலைவர்களையும் வகை தொகையில்லாமல் கொல்லும் போது உரக்க எதிர்புக் குரல் கொடுத்திருந்தால் இன்றைய தமிழ் மக்களின் பலவீனமான நிலை ஏற்பட்டிருக்க வாய்புக்கள் இல்லை. அப்போது எல்லாம் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு மௌனம் காத்து விட்டு இன்று நாற்காலிகளை இறுக்கப்பிடித்துக் கொண்டு வீரவசனம் பேசுவது, நீலிக்கண்ணீர் வடிப்பது கிழக்கு மாகாணசபை நாற்காலிகளைப் பிடிக்க போடும் வேஷம் என்பதை விட வேறு என்ன வென்று சொல்வது. மாவையாரே பதில் கூறுவீர்களா? - சாகரன் (மேலும்...)

ஆனி 04, 2012

வடக்கில் முஸ்லிம்கள் குடியேறுங்கள் என த.தே.கூ. பேச்சளவில் மட்டும் கூறுகிறத - றிசாத்

புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் அகதிகளாக இருக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள சாதாரண சூழலில் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு வருகின்ற போது, அங்கு வேறு மாவட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் அமர்ந்தால் பரவாயில்லை, அருகிலுள்ள காணிகளில் முஸ்லிம்கள் தமது வீடுகளை அமைத்து வாழ வழி செய்ய நடவடிக்கைகள் எடுத்த போது, அதனை தடுத்து நிறுத்தும் பணியினை சில தமிழ் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்கின்றனர். அதற்கு ஆயர் அவர்களும் துணையிருப்பது கவலையளிக்கின்றது. அன்று புலிகளை வளர்ப்பதில் மிகமுக்கிய பங்குகளை வகித்தவர்கள், அன்று புலிகள் எதனை செய்தார்களேர், அதனை போன்று சில அரச அதிகாரிகளும், மத தலைவர்கள் சிலரும் செய்கின்றனர். இந்த நிலையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் நிலையினை எண்ணிபார்க்க வேண்டியுள்ளது. (மேலும்.....)

ஆனி 04, 2012

பட்டறிவினால் பகுத்தறியும் கிழக்குமக்களின் மாகாண தேர்தல் 

(படுவான்கரையான் )

1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் கிழக்கு மக்களின் கண்ணை திறந்த ஒரு தேர்தலாக இருந்ததை யாவரும் அறிந்ததே. அப்பொதுத்தேர்தல் வடக்கு கிழக்கு என்ற இனபேதத்தை துப்பிக்காட்டும் ஒரு தேர்தலாக தமிழ்க்கட்சியின் தலைவர்களால் திட்டமிட்டு தொகுதிகளில் பிரதிநிதிகளை நியமித்து அரங்கேற்றப்பட்டது. இவ்வாறாக அன்றய நாட்களில் கிழக்கு மக்களை அடிமட்ட மடையர்களாக்கி அவர்கள் முதுகில் சவாரி செய்ய நினைத்த பல தமிழ்கட்சிகளின் தலைவர்களுக்கு கிழக்கு மக்கள் நல்லொதொரு பாடம் புகட்டினர். மூதூர்,கற்குடா, மட்டக்களப்பின் இரட்டைதொகுதிகளும், கல்முனை ஆகிய தொகுதிகளிலும் யாழ் தலைமையில் போட்டியிட்ட கிழக்குமக்கள் ஏனைய மாகாணத்தவர்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டாலும் தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் தமிழ்க்கட்சிக்கு வெற்றியீட்டி இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக தமிழர்கூட்டணி எதிர்க்கட்சி அந்தஸ்தத்தை பெறுவதற்கான வாய்ப்பையும் அளித்தனர். (மேலும்.....)

ஆனி 04, 2012

தற்கொலைப் போராளி (சிறுகதை)

(நடேசன்)

நானும் எனது பாலஸ்தீனிய நண்பனும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது, நான் சாப்பிடும் வேகத்தைப் பார்த்துவிட்டு, ‘ஏன் தற்கொலைப் போராளி போன்று சாப்பிடுகிறாய். ஆறுதலாக சாப்பிடு’ என்றான். அந்த நண்பன் என்னை தற்கொலைப் போராளியோடு ஒப்பிட்டபோது அவனது பேச்சு, எனது ஆவலைத் தூண்டியது. அவனது நாட்டில் அவர்களைப் பற்றி அவன் அறிந்திருக்கக்கூடும்.  அவர்களோடு அவன் பழகி இருந்திருக்கவும் கூடும். ரஷ்ஷியா சென்று படித்தததால் இவனால் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிவர முடிந்திருந்தது. எனது நாட்டிலும் தற்கொலைப்போராளிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களோடு நான் பேசியதோ பழகியதோ இல்லை. ஆனால் கேள்வி ஞானம் மட்டும் உள்ளது. தற்கொலைப் போராளிகள் கடைசியாக உயிரை தியாகம் செய்யப் போகும் முன்பு அவர்களது தலைவர்களுடன் விருந்துண்ணுவார்கள். கடைசியான உணவு என்ற போது இரசித்து சாப்பிடுவது தானே நியாயம். ஏதற்காக அவசரப்படவேண்டும்? (மேலும்.....)

ஆனி 04, 2012

ஆனி 04, 2012

வாள்வெட்டினால் துண்டிக்கப்பட்ட இளைஞனின் கை இணைக்கப்பட்டது

வாள் வெட்டுக்கு இலக்காகி வலது கையின் முழங்கைப் பகுதி முற்றாகத் துண்டிக்க ப்பட்டு ஒரு தோலில் மாத்திரம் தொங்கிக்கொண்டிருந்த 17 வயது உயர்தர வகுப்பு மாணவனின் கையை சத்திர சிகிச்சையின் மூலம் ஒன்றிணைக்கும் சாதனை கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் கடந்த வெள்ளிக் கிழமை திறமை மிக்க சத்திரசிகிச்சை நிபுணர்களின் கடும் முயற்சியினால் வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டது. (மேலும்.....)

ஆனி 04, 2012

கிரேக்கம்

கிரேக்க நாடு ஐரோப்பியக் கண்டத் தில் உள்ளது. இது முப்புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. கிழக்கில் துருக்கியும், மேற்கில் யவனக் கடலும், தெற்கில் பால்கன் மூவலத் தீவும், வடக்கில் அல்பேனியாவும், மாசிடோ னியாவும், பல்கேரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. கிரேக்கம், மேற்கத்திய நாடுகளின் நாகரிகத்தின் பிறப்பிடம். இதன் தலை நகரம் ஏதென்ஸ். இந்த நாட்டின் ஆட்சி மொழி கிரேக்க மொழி. நாடாளுமன்ற குடியரசு முறை அரசியல் அமைப்பு தான் இங்கு ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. கிரேக்க நாடு 1,31,990 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பினைக் கொண்டது. இந்த நாட்டில் 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 11,306,183 பேர் வாழ்கிறார்கள். (மேலும்.....)

ஆனி 04, 2012

கிரிக்கெட்டுக்கு பின்னர் இராணுவ சேவை

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இராணுவத்தில் பணிபுரிய விரும்புவதாக இந்திய அணி தலைவர் தோனி கூறியுள்ளார். இந்திய இராணுவத்தில் கெளரவ கர்ணலாக நியமிக்கப் பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி, நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீர் சென்றார். சியாச்சென் முகாமில் உள்ள இராணுவ வீரர்களை சந்திப்பதுடன், அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பயிற்சி பெறவும் திட்டமிட்டுள்ளார். ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி கூறியதாவது; கிரிக்கெட் விளையாட்டால்தான் நான் இங்கு வர முடிந்திருக்கிறது. இப்போதைக்கு கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நிச்சயமாக இராணுவத்தில் இணைந்து பணி செய்ய விரும்புகிறேன் என்றார்.

ஆனி 04, 2012

இஸ்ரேலுக்கு ஈரான்   கடும் எச்சரிக்கை

ஈரான் மீது தாக்குதல் நடத் தினால் பதிலுக்கு இஸ்ரேல் மீது பேரிடி விழும் என்று அந் நாட்டின் மதத் தலைவர் அய துல்லா கொமேனி எச்சரித்துள் ளார். இது தொடர்பாக தொலைக் காட்சி ஒன்றில் அவர் கூறிய தாவது, எங்கள் மீது ஏதாவது தாக்குதல் நடத்தினால், அதற் குப் பதிலடியாக இஸ்ரேல் மீது பேரிடி விழுவது போன்ற தாக்குதல்கள் நடத்தப்படும். ஈரான் அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுகிறது என்று ஒரு பொய்யை வைத் துக் கொண்டு, எங்களை சர்வ தேச சமூகம் சந்தேகிக்கிறது. எங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைதான் எங்களது மனத் துணிவை பலப்படுத்தியிருக்கிறது. ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதற்கான எந்த அடையாளமோ ஆதார மோ இல்லாததால், ஈரானுக்கு எல்லா சலுகைகளும் வழங்கப் பட வேண்டும். ஆனால் அதற் குப் பதிலாக எங்கள் பரம எதிரி களான அமெரிக்காவும், இஸ் ரேலும் எங்களை அவமதித்து வருகின்றன. ஈரான் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்தினால், இஸ் ரேல் மீது பேரிடியாக விழும். சர்வதேச அரசியல் வட்டாரங் களும், ஊடகங்களும் ஈரானி டம் அணு ஆயுதங்கள் இருப்ப தாகவும், ஈரானை ஒரு ஆபத் தான நாடாகவும் சித்தரித்து வருகின்றன. இது ஒரு பொய் யை அடிப்படையாகக் கொண் டது. இத்தகைய பொய்யான தகவல்களால் அவர்கள் ஈரா னுக்கு துரோகம் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனி 04, 2012

ஜனாதிபதி மஹிந்தவை சந்திப்பதை தவிர்த்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகளின் திருமணத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் நாச்சியாரின் திருமண வரவேற்பு இந்திய முறைப்படி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கொழும்பு வேட்டர் எட்ஜ் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தாய்லாந்துக்கு நான்கு நாள் பயணமாகச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை காலையில் கொழும்பு திரும்பியிருந்தார். திருமண வரவேற்பில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் அவருக்கு நெருக்கமாக இருந்த அமைச்சர்களில் ஒருவருமான மங்கள சமரவீரவும் நேர காலத்துடனேயே புறப்பட்டனர். ஆனால் ஜனாதிபதி மஹிந்த அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின்னரே சந்திரிகாவும் மங்கள சமரவீரவும் திருமண வரவேற்பு மண்டபத்துக்குள் நுழைந்தனர். மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ளவே அவர்கள் தாமதமாகச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இந்தத் திருமணத்துக்காக தாய்லாந்து பயணத்துக்கு இடையில் கொழும்பு திரும்பிய மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அன்று மாலையே பாங்கொக் புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனி 03, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 19)

(அ.ஆனந்தன்)

இன்று 30 ஆண்டுகால கடுமையான போர் அதன் விளைவான உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஆகியவற்றுக்கு பின் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி அதிகாரத்துடன் சேர்ந்து வாழ்ந்தால்கூட பரவாயில்லை என்ற பழைய நிலைக்கு-அதாவது தமிழர் விடுதலை முன்னணி போன்றவை மனதிற்கொண்டிருந்த அந்த பழைய நிலைக்கு- திரும்பியிருக்கின்றனர் என்பது போன்ற ஒரு சித்திரமே நம் கண்முன் எழுந்து நிற்கிறது. இத்தனை பின்னடைவுகள் எல்.டி.டி.ஈக்கு ஏற்பட்டுள்ள நிலையிலும் எல்.டி.டி.ஈ இலங்கை இராணுவத்துடன் நடத்திக் கொண்டுள்ள போருக்கு வலுசேர்த்து உதவும் வண்ணம் யாழ்ப்பாணம் போன்ற பெரும்பான்மை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கிளர்ச்சியும் எழுச்சியும் ஏற்படாதிருப்பதற்கும் அம்மக்களின் இந்த மனநிலைதான் காரணமாக இருக்க முடியும். (மேலும்...)

ஆனி 03, 2012

நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல்படுத்துவதில் அரச கட்சிகளுக்குள் முரண்

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில சிபாரிசுகளை அமுல் படுத்துவது தொடர்பில் அரசாங்கத்துக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக தெரிய வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக தங்கள் கருத்துக்களை எழுத்து மூலம் சமர்ப்பிக்கும்படி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் கேட்டிருந்தார். இதன்படி பல கட்சிகள் தமது கருத்துக்களை அரசுக்கு சமர்ப்பித்திருந்தன. மேலும் சில கட்சிகள் இன்னும் ஒரு சில தினங்களில் தமது கருத்துக்களை சமர்ப்பிக்கவுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.டி.பி.டி, ஜனநாயக இடது சாரி முன்னணி, லங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்த வேண்டுமென பொதுவாக கருத்து தெரிவித்துள்ளன. இருந்தும் தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற சில கட்சிகள் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை சில திருத்தங்களுடன் அமுல்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய ஒரு குழுவொன்றை நியமித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தமது கருத்துக்களை எழுத்து மூலம் சமர்ப்பிக்கவுள்ளதாக அக் கட்சி தெரிவிக்கின்றது. ___

ஆனி 03, 2012 

காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதால் நாடு பிளவுபடப் போவதில்லை _

இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தவறில்லை. இதனால் நாடு பிளவுபடப்போவதில்லை. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கும்படி நான் வலியுறுத்துவேன். எனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பிரதி நிதிகளை நியமிக்க வேண்டும். மீன்பிடி நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன வீரகேசரிக்கு வழங்கிய விஷேட செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கியதால் உலகில் எந்தவொரு நாடும் பிளவுபட்டதாக சரித்திரத்தில் இல்லை. தனி நாடுதான் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று சற்று இறங்கி வந்து ஐக்கிய நாட்டுக்குள் அதிகாரப் பரவலாக்கலை ஏற்றுக்கொண்டுள்ளது. இதை நாம் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனி 03, 2012

இனப்பிரச்சினை தீர்வுக்கு ஜே.வி.பி தீர்வுத்திட்டம் தயாரித்து முன் வைக்கவுள்ளத

இனப்பிரச்சினை தீர்வுக்கு ஜே.வி.பி தீர்வுத்திட்டமொன்றைத் தயாரித்து நாட்டுக்கு முன் வைக்கவுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று ஜே.வி.பி.யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு ஆலோசனைகளை ஜே.வி.பி. இப்போது தயாரித்து வருகின்றது. வெகு விரைவில் ஜே.வி.பி.யின் மத்திய குழுவின் அங்கீகாரம் பெற்றதும் நாட்டு மக்கள் முன் வைக்கப்படும். இனப்பிரச்சினை தீர்வுக்காகவென சர்வக் கட்சி மாநாடு நேரடிப் பேச்சு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவென அரசாங்கம் காலத்தைக் கடத்துவதாகவே ஜே.வி.பி. கருதுகின்றது. ஜே.வி.பி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்காததற்கும் இதுவே காரணமெனவும் டில்வின் சில்வா தெரிவித்தார்.

ஆனி 03, 2012 ___

ஹொஸ்னி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை

எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கொன்ற வழக்கில் எகிப்து நீதிமன்றம் இப் பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது. முபாரக் மற்றும் 6 அதிகாரிகளும் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்திய 850 பேரை கொன்றதாக முபாரக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முபாரக்கிற்கு எதிரான தீர்ப்பால் கோர்ட் வளாகத்தில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆனி 03, 2012

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிதல் இழுபறியில் _

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் தொடர்ந்தும் இழுபறி நிலையே நிலவுகின்றது. பதிவு செய்வது தொடர்பாக தமிழரசுக் கட்சிக்கு கரிசனை இருப்பதாகத் தெரியவில்லை என கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அது தொடர்பாகக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக இக் கூட்டத்தில் ஆராயப்பட்ட போதும் அக்குழுவுக்கு பிரதி நிதிகளை நியமிப்பது குறித்து எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். _____

ஆனி 03, 2012

உலகின் உச்சியில் இந்தியர் 

“ஆனந்த்தை தோற்கடிப்பது இளைய தலை முறைக்கு மிகவும் கடினமான காரியம்” என்று மே 2008-ல் பிரபல சதுரங்க வீரரும் முன்னாள் உலகச் சாம்பியனுமான கேரி காஸ்பரோவ் கூறிய தீர்க்கதரிசனமான கூற்றினை விஸ்வ நாதன் ஆனந்த் மீண்டுமொரு முறை நிரூபித் துள்ளார். சதுரங்கம் ஒரு உடல்ரீதியான விளையாட்டு அல்ல. மனதும் மூளையும் ஒருமித்து கணக் கிட்டு, திட்டமிட்டு ஆடும் ஆட்டம் ஆகும். அத னால் சதுரங்க சாம்பியன் என்பவர் மற்ற விளை யாட்டுகளின் சாம்பியன்களை விடச் சிறப்பான வர் ஆவார். அப்படிப்பட்ட சாம்பியன் பட்டத்தை ஐந்துமுறை வென்றுள்ள ஆனந்த் பாராட்டுதலுக் கும் போற்றுதலுக்கும் உரியவர். அவருடைய சா தனையின் பலனாக, பொருளாதார ரீதியால் துவ ண்டு நிற்கும் இந்தியனின் நடை யில் ஒரு துள்ள லும், முகத்தில் ஒரு இறுமாந்த புன்னகையும் ஏற்பட்டுள்ளதென்றால் அது மிகையல்ல. (மேலும்...)

ஆனி 03, 2012

Thoughts on religious unity...

The ULTIMATE ANSWER to our endless worldly problems is not to have a God-fearing religion, but for all existing religions to find that "Way of Life" which loves all forms of creatures and living beings created by "Him" to share the planet together, peacefully. (more....)

ஆனி 03, 2012

உயர்ந்த கட்டிடங்கள், தாழ்ந்த உள்ளங்கள்

(தே.இலட்சுமணன்)

அண்டை மாநிலங்களிலிருந்து சிலர் கொள்ளையடிக்க வரலாம், திருட வரலாம். இது அங்கொன்றும், இங்கொன்றுமாக நடப்பது. இப்படி தமிழகத்திலிருந்தும் கூட அண்டை மாநிலத்துக்கு சிலர் திருடப்போவதும் உண்டு, பலர் பிழைக்கப்போவதும் உண்டு. திரு வண்ணாமலை, வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அண்டை மாநிலமான பெங்களூருக்கு கட்டிட வேலைக்கு, மரவேலைக்கு போய் பிழைத்து வருவதும் இப்போதும் நடைபெறுகிறது. சென்னை நகரில் பெண்களின் கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டார் பைக்கில் ஓடி தப்பிக்கும் செய்திகள் வராத நாளில்லை. இவர்கள் அனைவரும் நம்நாட்டு இளைஞர்கள்தான். தமிழகத்தில் அன்றாடம் வழிப்பறி, வீடுபுகுந்து திருடுதல், கொலை, கொள்ளை நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் தமிழர்கள்தான் தம் தமிழர்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றம்தான். இதில் வடநாட்டான், தென்னாட்டான் என்று இனம் பார்ப்பது சரியல்ல. (மேலும்...)

ஆனி 03, 2012

யூரோ நாணய தொடர் வீழ்ச்சியால்  ஸ்பெயினில் அதிகரிக்கும் நெருக்கடி

யூரோ நாணய வீழ்ச்சி யால் ஸ்பெயினுக்கு தொடர் ந்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள ஸ்பெ யின் ஏற்கெனவே கடுமை யான பொருளாதார நெருக் கடியில் சிக்கியிருக்கிறது. இந்நிலையில் யூரோ நாண யம் தொடர்ந்து வீழ்ச்சியை தழுவி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் பணப் பரிவர்த்தனையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிக ரான யூரோவின் மதிப்பு கடந்த புதன்கிழமை 1.24 டாலர் அளவிற்கு குறைந் தது. கடந்த ஜூலை 2010ம் ஆண்டிற்கு பிறகு அதிகள வில் யூரோவின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதனால் ஸ்பெயினில் தொடர்ந்து பொருளாதார மந்த நிலை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இத னடிப்படையில் அந்நாட் டின் கடன் விகிதத்தில் 7 சத விகிதம் உயர்வு ஏற்பட்டு இன்னும் நிலையற்ற தன் மையிலேயே இருக்கிறது. (மேலும்...)

ஆனி 03, 2012

முடிவுகள் எதுவுமில்லாது முடிவடைந்த கூட்டமைப்பு தலைவர்களது சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு எதிர்பார்க்கப்பட்டதன் படி இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்திருப்பதாக கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் இருக்கின்ற முரண் நிலைகள் தொடர்பிலான தீர்மானத்தினை எடுக்கும் நோக்கில் கூட்டமைப்பின் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு இடை யிலான சந்திப்பு கொழும்பில் வெள்ளியன்று நடைபெற்றிருந்தது. இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கென அதி உயர் சபை ஒன்றை உருவாக்குவது என்பது தொடர்பில் இணக்கப்பாடு ஒன்று ஏற் பட்டிருப்பதாகவும் இருப்பினும் அதன் செயற்பாடுகள் தொடர்பிலான இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது. இந்த முடிவினை எட்டுவதற்கே நீண்ட நேர முயற்சி எடுக் கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பெயர் குறிப்பிடவிரும்பாத முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினை கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பிலும் எந்த முடிவுகளும் எடுக்கப்பட வில்லை என்றும் தெரிய வந்திருக்கின்றது.

ஆனி 03, 2012

மனைவி, மகன் UK யில்; இவர் ஏஜென்ஸிக்காரர்

ஏமாற்றப்பட்ட சிலரது ஆத்திரத்தின் வெளிப்பாடா?

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப் பும் முகவர் வேலை செய்த நபர் ஒரு வர் கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கு முன்னால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மோட் டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர் களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கிழக்கை சேர்ந்த 37 வயதுடைய கணபதிப் பிள்ளை உதயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது மனைவியும் மகனும் லண்டனில் வசித்து வருகின்றனர். இவர் கொழும்பிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவராக செயற்பட்டு வந்தார். இவரிடம் பணத்தை கொடுத்து தாம் ஏமாந்துள்ளதாக சிலர் ஏற்கனவே காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. பெருந்தொகை பணத்தை கொடுத்து ஏமாந் தவர்கள் இவர் மீது ஆத்திரம் கொண்டு இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என் றும் நம்பப்படுகிறது. எனினும் இக் கொலைக் கான சரியான காரணம் பற்றி தெரியவில்லை என்றும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பம்பலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனி 03, 2012

பிரதேசவாதமும் இனவாதமும் ஆரோக்கியமானதாக அமையாது

இனவாத சக்திகள் நாட்டைக் கூறுபோட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கையில் பிர தேச வாதம் தனது இனத்திற்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்த முற்பட்டுவரு வது எதிர்கால இருப்பிற்கு ஆரோக்கியமானதாக அமையாது எனும் கருத்து புத்தி ஜீவிகளால் தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. இது யதார்த்தமானதொரு உண்மை தான். ஆங்கிலேயர் எமது நாட்டை எம்மிடமே ஒப்படைத்து விட்டுச் சென்றதன் பின்னர் நான் தமிழன், நான் சிங்களவன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் எனும் இன, பேதம் இலங்கையர் என்றிருந்த எமது மக்களிடம் படிப்படியாக எழ ஆரம்பித்தது. அதன் விளைவின் உச்சக்கட்டத்தையே நாம் கடந்த மூன்று வருடங்களுக்கு முற்பட்ட முப்பது வருடங்களாக அனுபவித்து வந்தோம். இன்று அது முடிவிற்கு வந்துவிட்டது என்று நினைத்தால் அது முற்றுப்பெறாத ஒரு நிலையிலேயே இருக்கின்றது என்பதை உணரக்கூடியதாக உள்ளது. (மேலும்...)


ஆனி 03, 2012

வேலையில்லாதோர் எண்ணிக்கை   பிரான்சில் 28.9 லட்சமாக உயர்வு

ஐரோப்பிய யூனியனில் உள்ள முக்கியமான நாடு பிரான்ஸ். இந் நாட்டில் லேலையில்லா திண்டாட் டம் வேகமாக அதிகரித்து, வரலாறு காணாத அளவில் உயர்ந்திருக்கிறது. அதாவது 1999 ல் மொத்தம் 4 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வேலை யில்லாமல் இருந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்நிலை யில் அமெரிக்காவில் ஏற் பட்ட பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் பிரதிப லித்தது. அதன் விளைவாக பல நிறுவனங்கள் திவாலா கின. வேலையின்மையும் பன்மடங்கு அதிகரிக்க துவங்கியது. அதன் விளை வாக தற்போது அந்நாட்டில் வரலாறு காணாத அளவில் அதிகரிக்க தொடங்கியது. அப்படி அதிகரிக்க இன்று 28.9 லட்சம் பேர் அந்நாட் டில் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்த எண்ணிக்கையும் வேலை இல்லாமல் பதிவு செய்திருக்கும் பட்டியலின் அடிப்படையிலானது. உண் மையில் வேலையில்லாதவர் களின் எண்ணிக்கை இதை விட அதிக அளவில் இருக் கக்கூடும் என அந்நாட்டி னர் தெரிவிக்கின்றனர். (மேலும்...)

ஆனி 03, 2012

ரசிகர்களை முட்டாள்களாக்கும் I P L

ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு தொடங்கின. தொடங்கிய ஆண்டு முதல் தொடர்ந்து பணத்தை அள்ளியெடுத்தார்கள். 2008 ஆம் ஆண்டு இந்த ஆட்டங்களின் மூலம் 102 மில்லியன் டொலர் கிடைத்தது. இது ஆண்டு தோறும் 20 மில்லியன் டொலர்களால் அதிகரித்துக் கொண்டே வந்தது. 2011 ஆம் ஆண்டு (4வது பருவம்) 160 மில்லியன் டொலர்கள் (சுமார் 900 கோடி ரூபா) கிடைத்தது. ஆனால் 2012இல் இதுவரை 159 மில்லியன் டொலர்கள் மட்டும் கிடைத்திருப்பதாக சலித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் ரூபா 1077 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி மேலான்மைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாக ஐ. பி. எல். மற்றும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அமுலாக்கல் பிரிவு இதுவரை 19 நோட்டிஸ்களை அனுப்பியுள்ளது. இது குறித்து அரசின் எந்தத் துறையும் வருமான வரித்துறை உட்பட நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்குக் காரணம் பி. சி. சி. ஐ. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அரசியல்வாதிகள். மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா, ஐ. பி. எல். தலைவராக இருக்கிறார். (மேலும்...)

ஆனி 03, 2012

தனிநாட்டு கோஷம்

தமிழ் மக்களை மீண்டும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும்

போர் முடிவின் பின்னரான கடந்த மூன்று ஆண்டு களிலும் மக்களின் இயல்பு வாழ்வை மீளப் பெறுவதற்காக அரசு பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் சமூக நலப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு இடம் பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்த மக்களுள் பெரும்பான்மையா னோரை மீள்குடியேற்றம் செய்துள்ளது. புலித் தொடர் புள்ளவர்கள் எனச் சந்தேகிக்கப் பட்ட இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி அளித்து அவர்கள் சுயதொழில் செய்வதற்காக வங்கிக் கடன் வசதிகளைச் செய்து வரு கின்றது. சுருக்கமாகச் சொன்னால் இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் கெளரவமாக, சுதந்திரத் தோடு வாழ வேண்டுமென அரசு பணி செய்துவருகின்றது. இந்த முன்னேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட வெளிநாட்டுத் தூதுவர்கள், பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் இலங்கைக்கு வந்து அரசின் பணிகளை அவதானித்து திருப்தியோடு செல்கின்றனர். இலங்கை பற்றிய தவறான எண்ணங்களை பரப்பி வருபவர்களின் கருத்துகள் பிழையானவை என்பதை அவ ர்கள் உணர்ந்து செல்கின்றனர். (மேலும்...)

ஆனி 03, 2012

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முழுப் பலத்தையும் வெளிக்காட்டுவோம் - மு. கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் முக்கியமான கட்சி. சிறுபான்மை மக்களின் அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்காக முன்னின்று போராடும் கட்சி. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி. 8 பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் கொண்டுள்ளோம். பாராளுமன்றத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வர் அங்கம் வகிக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சமனான பிரதிநிதித்துவத்தை நாம் கொண்டிருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தின் பிரதான கட்சியொன்ற வகையில் முதன்மை வேட்பாளராக நாம் போட்டியிடுவதிலோ அல்லது எம்மை அங்கீகரிப்பதிலோ எந்தத் தவறும் இருக்காது என நம்புகின்றேன். (மேலும்...)

ஆனி 02, 2012

தமிழக அரசியியல்வாதிகிகளே! இலங்கைத் தமிழர்கள்வாழ்வுவுடன் விளையாடுவதை நிறுத்ததுங்கள்! - வானவில்

தமிழ்நாட்டின் இனவாத அரசியல்வாதிகள், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்துவது கடந்த பல தசாப்தங்களாக நடந்து வருகின்ற ஒரு விடயமாக இருக்கின்ற போதிலும், தற்போது அது மேலும் மேலும் மோசமான ஒரு நிலையை எடுத்து வருகின்றது. அவர்களுடைய வாய்ச்சவடால்களும், நடவடிக்கைகளும் உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களின் துயரங்கள் மீது அப்பழுக்கில்லாத அக்கறையைக் கொண்டிருக்குமாயின், நாம் அதை இருகரம் நீட்டி வரவேற்கலாம். ஆனால் அப்படியில்லாமல் தமக்கிடையிலான அரசியல் போட்டி காரணமாவும், தமிழ்நாட்டு மக்களின் எரியும் பிரச்சினைகளிலிருந்து அம்மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும், அங்குள்ள பிரதான அரசியல் கட்சிகள் செய்யும் அமர்க்களங்கள், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் மேலும் வளர்க்கவே செய்யும் என்பதை, கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் இந்த 'இனமானம் காக்கும்' அரசியல்வாதிகளுக்கு நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. (மேலும்....)

ஆனி 02, 2012

The largest flower in the world

The largest flower in the world was born in Rio Blanco , Veracruz , Mexico. Two meters high and weighing 75 kilos, it has the peculiarity of blooming only during three days every 40 years. Amorphophallus titanum, also called cadaverous flower has the peculiarity of blooming only during three days every 40 years, a privilege that Mother Nature bestowed on this town in Veracruz.

ஆனி 02, 2012

ஈரானுடனான வர்த்தக உறவு பாதிக்கப்படக் கூடாது - கிருஷ்ணா

‘ஈரானுடன் இந்தியா நியாயமான வர்த்தக உறவுகளைக் கொண்டிருக்கிறது. ஒரு தலைப்பட்டசமாக எவர் எடுக்கும் தடை நடவடிக்கைகளும் இந்த வர்த்தகத்துக்கு பாதகமாக அமைந்துவிடக்கூடாது’ என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலேஹியிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார். புதுடில்லி வந்திருக்கும் அவருடன் வியாழக்கிழமை பேச்சு நடத்தியபோது கிருஷ்ணா இக் கருத்தைத் தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் தெஹ்ரான் நகரில் நடைபெறவுள்ள அணி சாரா நாடுகள் (நாம்) மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவர் இந்தியா வந்திருக்கிறார். ஈரான் அதிபர் மஹமூத் அகமது நிஜாதி அவரைத் தன்னுடைய விசேஷத் தூதராக இதற்காகவே அனுப்பி வைத்திருக்கிறார். ‘சர்வதேச அணுவிசை ஏஜென்சியுடன் ஒத்துழைக்க ஈரான் மறுக்கிறது. அணு ஆயுதங்களை அது ரகசியமாக தயாரித்து வருகிறது. எனவே அந்த நாட்டுடன் வர்த்தக உறவுகளை இந்தியா போன்ற நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்கா நேரடியாக வலியுறுத்தி வரும் வேளையில் ஈரானிய அமைச்சர் இந்தியா வந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

ஆனி 02, 2012

காவத்தையில் மர்மம் தொடர்கிறது

காவத்தை பகுதி வீடொன்றில் இருந்து இரு சகோதரிகளின் சடலங்கள் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான மர்மம் நீடிக்கிறது. இந்த சம்பவம் தற்கொலையா? கொலையா? என்பது குறித்த சந்தேகம் தொடர்ந்தும் நீடிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டினுள் தீயில் எரிந்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து காவத்தை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு, அப்பகுதியின் பாதுகாப்பிற்கு பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப் படையினரும் அனுப்பப்பட்டிருந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளதோடு, இதுவரை எதுவித முக்கிய தடயமும் கிடைக்கவில்லை என பொலிஸார் கூறினர். இருவரதும் பிரேத பரிசோதனை நேற்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

ஆனி 02, 2012

பம்பலப்பிட்டியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம்

கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு முன்பாக வெட்டுக்காய ங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியது. மட்டக்களப்பு, பெரிய கல்லாறு பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு இறந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெ டுக்கப்பட்டது. இவர் கொலைசெய்யப்பட்டிருக்க லாம் என சந்தேகிக்கப்படுவதோடு, நேற்று பிரேத பரிசோதனை நடைபெற ஏற்பாடாகி இருந்தது. பம்பலப்பிட்டிய பொலிஸார் விசாரணை நடத்துகின் றனர்.

ஆனி 02, 2012

கிராம சேவையாளர் நியமனம்

வயதெல்லையை 40 ஆக அதிகரிக்க பொது நிர்வாக அமைச்சு திட்டம்

கிராம சேவகர்களாக நியமிக்கப்படுவோரின் வயதெல்லையை 21 முதல் 40 வயது வரை அதிகரிப்பதற் குப் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் புதிதாக கிராம சேவகர்களை நியமிக்கும் போது ஆண்களுக்கு 80 வீத வாய்ப்பையும் பெண்களுக்கு 20 வீத வாய்ப்பையும் வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 3000ற்கும் மேற்பட்ட கிராம சேவகர் வெற்றிடங்கள் நிலவுவதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. அரசாங்கம் கிராமிய பிரதேசங்களை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற இக்காலகட்டத்தில் கிராம சேவகர்களின் பணி முக்கிய மாகவுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டே கிராமசேவகர் வெற்றிடங்களைத் துரிதமாக நிரப்புவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். கிராம சேவகர்களின் வயதெல்லை சம்பந்தமாக கிராம சேவை அதிகாரிகளின் சங்கம் பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்தது. அதனைக் கருத்திற் கொண்டே 21 வயது முதல் 40 வயது வரை வயதெல்லையை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆனி 02, 2012

முன்னாள் புலி உறுப்பினர் 75 பேர் இன்று சமூகத்தில் இணைப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் 75 முன்னாள் புலி உறுப்பினர்கள் இன்று சமூகத்தில் இணைக்கப் படவுள்ளனர். இந்த நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற வுள்ளது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திர சிறி கஜதீர இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கல ந்து கொண்டு புனர்வாழ்வு பெற்ற வர்களை அவர்களது பெற்றோர், உறவினர்களிடம் கையளிப்பார். மனிதாபிமான நடவடிக்கைகளை யடுத்து தவறான வழியில் சென்ற 12,000 தமிழ் இளைஞர்கள் அரச படைத்தரப்பினரிடம் சரணடைந்தனர். அரசாங்கம் அவர்களுக்குப் பொது மன்னிப்பளித்து அவர்களுக்கு புனர் வாழ்வளித்தது. இதுவரை 10,875 பேர் புனர்வாழ்வளிக்க ப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு ள்ளனர். இவர்கள் புனர்வாழ்வு பெற்ற காலப்பகுதியில் பல்வேறு தொழிற் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்தது.

ஆனி 02, 2012

Busiest. Train. Ever.

ஆனி 02, 2012

மீள்குடியேற்றம், மீள்நிர்மாணம், அபிவிருத்தி

குறுகிய காலப்பகுதியில் நிறைவான அபிவிருத்தி

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் கூட இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தியைக் கண்டு பாராட்டுவதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்தார். 30 வருட யுத்தத்திற்கு முகம் கொடு த்திருந்த இலங்கை யின் வடக்கு பிரதே சத்தில் 3 ஆண்டுகள் என்ற மிகக் குறுகிய காலத்தில் இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துதல் மற்றும் அப்பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளை பார்க்கின்ற போது ஏனைய முன்னேற்றமடைந்த நாடுகளுக்கு இரண்டாம் பட்சமாக அல்லாத அளவுக்கு அவை இருக்கின்றன எனவும் இந்த நிலைமையில் எந்தவொரு சிக்கலையும் தீர்த்துக் கொள்வதற்கான ஆற்றல் இலங்கையர்களிடம் இருக்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

ஆனி 02, 2012

ஆரோக்கியமான சமுதாயத்தை அமைக்க எமது மூதாதையோரின் நற்பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும்

 

இலங்கையில் 100 முதல் 150 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக் கள் தேக ஆரோக்கியத்துடன் விளங்கினார்கள். அன்று அவர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்ததே அவர்களின் நீண்ட ஆயு ளுக்கும் தேக ஆரோக்கியத்திற்கும் பிரதான காரணமாக இருந்தது. விவசாயிகள் சூரிய உதயத்திற்கு முன்னரே தங்கள் வயல் நிலங்களுக்கு சென்று பணியை ஆரம்பிப்பார்கள். பாடசாலை பிள்ளைகள் அதி காலை 5 மணியிலிருந்து 6.30 மணி வரையில் தங்கள் வகுப்பு பாடங்க ளில் கவனம் செலுத்துவார்கள். இல்லத்தரசிகள் தனது பிள்ளைகளுக் கும் கணவன்மார்களுக்கும் காலை ஆகாரத்தையும் பகல் உணவையும் தயாரித்து, பணிக்கு செல்லும் கணவன்மாருக்கும் பாடசாலைக்கு செல் லும் பிள்ளைகளுக்கும் பார்சல் செய்து கொடுப்பார்கள். இன்று எங்கள் நாட்டில் இருப்பது போன்று அன்று மோட்டார் சைக்கிள் களோ, வாகனங்களோ இருக்கவில்லை. 100 வீடுகளை எடுத்துக் கொண் டால் அதில் ஒரு வீட்டில் மாத்திரம் பழைய காரொன்று இருக்கும். மற் றபடி பஸ்களும் மிகவும் குறைவாகவே சேவையில் ஈடுபட்டன. (மேலும்....)

ஆனி 01, 2012

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டோர் விமான நிலையத்தை வந்தடைந்தனர்

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். நாடு கடத்தப்பட்டோரில் 22 தமிழர்களும் 8 சிங்களவர்களும் 6 முஸ்லிம்களும் உள்ளடங்குவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். பிரித்தானியாவின் விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த இவர்களுக்குப் பாதுகாப்பாக அந்நாட்டு அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர். பிரிட்டனில் புகலிடம் தேடிய பெருந் தொகை தமிழ் அகதிகள் இரகசிய விமானம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டி பென்டன் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. (மேலும்....)

ஆனி 01, 2012

இலங்கை விவகாரங்களில் எல்லை மீறி செயற்படும் அதிகாரம் ஐ.நா.வுக்கோ பிரிட்டனுக்கோ இல்லை - அமைச்சர் சம்பிக்க

இலங்கை விவகாரங்களில் எல்லை மீறிச் செயற்படும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கோ பிரித்தானியாவிற்கோ கிடையாது. வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் தொடர்பாக பேசுவதற்கு எந்தவொரு நாட்டின் பிரதிநிதியும் இலங்கைக்குள் நுழையக் கூடாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக தெரிவித்தார். வெள்ளமுள்ளி வாய்க்கால் தொடர்பாக போலியான பிரசாரங்களை பிரித்தானியாவே முன்னின்று முன்னெடுத்தது. எனவே பிரித்தானியாவின் நோக்கங்களை உள்நாட்டில் ஈடு செய்து கொள்ள இடமளிக்கப் போவதில்லை. ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தான் ஒரு அதிகாரி என்பதனையும் தனக்குள்ள பொறுப்பையும் மறந்து செயற்படக்கூடாது. இலங்கையில் வீர தீர செயல்களை அரங்கேற்றுவதால் எவ்விதமான பயனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்....)

ஆனி 01, 2012

கனடாவின் அதி சிறந்த குடி வரவாளர்களில் ஒருவராக ஈழத் தமிழர் தெரிவு 

கனடாவின் அதி சிறந்த குடிவரவாளர்களுக்கான தெரிவுக்காக மேற்கொள்ளப்பட்ட தேர்வொன்றில் டொரன்டோவின் பிரபல சட்டத்தரணியும் தொழிலதிபருமான மெலானி டேவிட் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருபத்தைந்து சிறந்த குடிவரவாளர்களைத் தேர்வு செய்யவென இத்தேர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் மறைந்த எதிர்க் கட்சித் தலைவரின் மனைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான ஒலிவியா சோ. மற்றும் சிறந்த ஹிப் கொப் பாடகர் ஹனான், எமி விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட நடிகரான ரோன்யா லீ வில்லியம்ஸ், ஒலிம்பிக்ஸ் மல்யுத்த வீரரான டானியல் இகாளி ஆகியோருடன் ஈழத் தமிழர்களின் தலை சிறந்த சட்டத் தரணிகளில் ஒருவரும் டொரன்டோவில் வளர்ந்து வரும் தொழிலதிபருமான மெலானி டேவிட்டும் இந்த விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டார்.  550 பேர் இந்த விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட போதும் அதன்போதான பலத்த தேர்வின் அடிப்படையில் 75 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒருவராக மெலானி டேவிட் தெரிவு செய்யப்பட்டமை ஈழத் தமிழர்களுக்கு பெருமை தரும் விடயமாகக் கருதப்படுகிறது. ___

ஆனி 01, 2012

புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா _

விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கப்படுவது குறித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் போராளிகளும், தலைவர்களும் மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதை அடுத்தே, இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ___

ஆனி 01, 2012

இலங்கை ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கையின் நாணயத்தின் மதிப்பை 125 ரூபாவாக நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி உத்தரவாதம் வழங்கிய போதும், இலங்கை ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. நேற்றுக்காலை அந்நியச் செலாவணி வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட போது அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு 131.55 ரூபாவாக இருந்தது. பின்னர், இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து அமெரிக்க டொலருக்கு எதிரான நாணய மதிப்பு 134.55 ரூபா என்ற உச்ச அளவைத் தொட்டது. இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு எதிரான நாணய மதிப்பை 132 ரூபாவாக நிலை நிறுத்தவுள்ளதாக தவறான செய்தி பரப்பப்பட்டதாலேயே நேற்று ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக இலங்கை மத்திய வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பை 125 ரூபாவாக நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனி 01, 2012

போக்குவரத்து வசதி குறைந்த ஊர் மாணவியின் கட்டுரை தேசிய மட்டத்திற்கு தெரிவு

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வெல்லாவெளிகோட்ட பாடசாலையாகிய தம்பலவத்தை கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்விபயிலும் செல்வி கதிரேசபிள்ளை நிதுசா அவர்கள் கட்டுரை ஆக்கம் 3ம் பிரிவில் மாகாண மட்ட போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதிபர் மற்றும் பெற்றாரது விரைவான செயற்பாட்டினாலே இம்மாணவி இப்போட்டியில் பங்குபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் போக்குவரத்து வசதி குறைந்த இப்பிரதேச மாணவிக்கான போட்டிக்கான தகவல் போட்டி நடக்கவிருந்த நேரத்திற் 12 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே கிடைக்கப்பெற்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.அதிபரின் சாதுரியமான செயற்பாட்டால் குறித்த மாணவி இப்போட்டியில் பங்குபற்றியது மட்டுமல்லாது எமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது வாழ்த்துக்கள்

No rift says Sampanthan

Tamil National Alliance leader R. Sampanthan said that there is no rift within the TNA as portrayed by the media. “ There is no rift within the TNA as certain media are trying to point out” he said.When the Daily Mirror online queried Sampanthan about the remarks made by TNA spokesman Suresh Premachandran who was reported to have said that certain remarks made by Sambanthan at the ITAK conference were controversial, Sambanthan said that the TNA is a democratic party. “We are a democratic party and I respect the views expressed by members of our party and won’t say anything against it, but there is certainly no rift within the party” he said.

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் கொழும்பை வந்தடைந்தனர்!

பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானமொன்றின் மூலம் கொழும்பை வந்தடைந்தனர். இவர்களிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துவருகின்றனர். நாடுகடத்தப்பட்டவர்களில் 22 தமிழர்கள், 8 சிங்களவர்கள், 6 முஸ்லிம்கள் அடங்குகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக பிரித்தானிய அதிகாரிகள் 72 பேரும் மேற்படி விசேட விமானத்தில் வந்தமை குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் புகலிடம் தேடிய பெருந் தொகை தமிழ் அகதிகள் இரகசிய விமானம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டி பென்டன் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ் அகதிகளை ஏற்றிய பி. ரி. வி. 030 என்ற இலக்கமுடைய வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் நேற்று பிற்பகல் 2. 30 மணியளவில் லண்டன் விமான நிலையத்தின் வெளிப்படுத்தப்படாத இடம் ஒன்றில் இருந்து கொழும்புக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களில் நான்கு வாடகை விமானங்களில் இலங்கைக்கு தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனி 01, 2012

Former Tamil Tiger fighters struggle for normal life

Three years after Sri Lanka’s civil war ended, thousands of former fighters of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) face an uphill battle in re-establishing themselves, despite government efforts to rehabilitate them. “I’m struggling a lot economically. I don’t regret the loss of the LTTE, but I wish there was a better support system for us,” said 34-year-old Raja from Batticaloa district in eastern Sri Lanka. He was in the separatist movement from 2005 to 2008 and recently completed the government programme. “I suffered a lot of during those three years. All I want now is a brighter future,” he told IRIN. (more....)

ஆனி 01, 2012

திமுகவின் கசப்பும் - மக்களின் கசப்பும்

(டி.கே.ரங்கராஜன் எம்.பி.)

அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் காண்பதால் எண்ணெய் வளத்தை தன்னு டைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெ ரிக்கா முயல்கிறது. இதனாலேயே இராக்கை ஆக்கிரமித்தது. ஈரானையும் ஆக்கிரமிக்க முயல்கிறது. டாலர் மதிப்பில் பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்வதும் தற் போதைய விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது. ஆனால் மன்மோகன் சிங் அரசின் அமெரிக்க சார்பு அயல்துறை கொள்கையோ டும் திமுகவுக்கு எந்தக் கசப்பும் இல்லை. மத்திய அமைச்சர் பொறுப்பை உவப்போடு தான் திமுக வகித்து வருகிறது. சில்லரை வர்த் தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைய அனுமதித்தாலும் அந்த முடிவில் திமுகவுக்கு கசப்பு இருக்கப்போவதில்லை. மக்கள் நலனைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. எத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் “கசப்போடு” அதை ஏற்றுக்கொண்டு எப்படியேனும் பதவி யில் தொடரவே திமுக விரும்புகிறது. (மேலும்....)

ஆனி 01, 2012

எண்ணெய் பரிமாற்றத்தில்  ஈரான் - வெனிசுலா இடையே கூட்டு ஒப்பந்தம்

வெனிசுலா மற்றும் ஈரான் நாடுகளிடையே 200 கோடி அமெரிக்க டால ருக்கு புதிய கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதத் தில் ஈரான் மற்றும் வெனிசு லா இடையே இரண்டு புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் ஏற் பட்டன. அதில், இருநாடு களும் இணைந்து, தொழிற் சாலை, அறிவியல், நானோ தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளைமேம்படுத்துவது என ஒப்புக்கொண்டன. அதனடிப்படையில், தற்போது வெனிசுலா அர சின் எண்ணெய் நிறுவனத் திற்கும், ஈரான் அரசின் பெட்ரோபார்ஸ் எண் ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்கும் இடையே 25 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவின் மிகப் பெரிய எண்ணெய் நிலைய மான டொபோகுபியில் நாள் ஒன்றுக்கு 15,000 பேரல்கள் உற்பத்தியாகின் றன. ஆனால், உலக நாடுகளி டையே கச்சா எண்ணெ யின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பேரல்களின் உற்பத் தியை 40,000 முதல் 60,000 வரை உயர்த்த வெனிசுலா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இத்திட்டத்தில் ஈரான் அரசு 500 முதல் 520 அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய வுள்ளதாக பெட்ரோபார்ஸ் நிறுவனத்தின் செயற் இயக்கு நர் முகமது ஜாவத் ஷாம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த கூட்டு ஒப்பந்தத்தில் ஈரான் 26 சதவிகித பங்குகளும், வெனிசுலா 74 சதவிகித பங் குகளையும் கொண்டுள்ளன. அமெரிக்க அரசு ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண் ணெயை இறக்குமதி செய் யக்கூடாது என தடை விதித் தது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து லத்தீன் அமெரிக்க நாடுகள் ஈரான் அரசுடன் பல்வேறு ஒப்பந்தங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனி 01, 2012

ஆலையடிவேம்பு சாந்திபுரம்

மீளக் குடியேறுவோரை உடன் சொந்த இடம் திரும்ப பணிப்பு

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவு சாந்திபுரம் (தோணிக்கல்) மீள்குடியமர்வு கிராம மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களிலுள்ள வீடுகளுக்கு மிக விரைவாகத் திரும்பி வரவேண்டும். கிராமத்திற்கு மீளத் திரும்பி வராதவர்களது வீட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டு வீட்டு தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும். ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரிவின் அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.எச். பியசேன தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதேச செயலாளர் வி. ஜெகதீஸன், தவிசாளர் க. இரத்தினவேல், மாகாண அமைச்சர் நவரெத்தினராசா, வலய கல்விப் பணிப்பாளர் ஆர். சுகிர்தராஜன், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி க. அகிலன் உட்பட பல தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் கலந்த கொண்டனர். (மேலும்....)

 

ஆனி 01, 2012

யுரேனியம் செறிவூட்ட   எங்களுக்கு உரிமை உண்டு  ஈரான் அதிபர் அகமதி நிஜாத்

உற்பத்தி செய்யப்படும் யுரேனியத்தில் 20 சதவிகிதத்தை செறிவூட்ட எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாத் பிரான்ஸ் செய்தி நிறுவனத் திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச அணுசக்தி முகமையின் விதிகளின்படி யுரேனியத்தை செறிவூட்டும் நாடுகள் செறிவூட்டிய யுரேனியம் 20 சதவீதத்தை ஈரா னுக்கு முன் நிபந்தனையின்றி வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வழங்கவில்லை. எங்களின் தேவையை சர்வதேச விதிமுறைகளின்படி ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம். ஆனாலும் வழங்கவில்லை. ஆனால் ஏஐஇஏ - யின் விதிமுறைகளின் படியே நாங்கள் உற்பத்தி செய்யும் யுரேனியத்தில் 20 சதவிகிதத்தை செறிவூட்ட எங்க ளுக்கு உரிமை இருக்கிறது. ஆனாலும் நாங்கள் அவ்வாறு செய்ய வில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் ஈரானுக்கு செறி வூட்டப்பட்ட யுரேனியத்தை வழங்க முன்வர வேண்டும். அதுவே ஆக்கபூர்வமான ஒத்துழைப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை என்றாலே, அது அணுகுண்டு தயாரிப்பதற்கு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார்.

ஆனி 01, 2012

மாநாட்டை குழப்புவதற்கு த.ம.வி.பு.கட்சி முயற்சித்த போதும் மாநாடு நூறுவீத வெற்றியை தந்துள்ளது - கூட்டமைப்பு எம்.பிக்கள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாட்டை குழப்புவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பூரண ஒத்துழைப்புடன் நூறு வீத வெற்றியுடன் மாநாடு சிறப்பான வெற்றியை தந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (மேலும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com