|
||||
|
செப்ரம்பர் 2013 பதிவுகள் செப்ரம்பர் 30, 2013 அனந்தியின் அங்கத்துவத்தினை வலியுறுத்துகின்றோம் - பெண்கள் அமைப்பு 'வடமாகாண சபை அமைச்சரவையில் அனந்திக்குக்கு அங்கத்துவம் வழங்கவேண்டும்' என்று பெண்கள் அமைப்புக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக யாழ்.மாவட்ட பெண்கள் சமாசம், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாசம், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, புத்தளம் மாவட்ட சூரியன் பெண்கள் கூட்டமைப்பு, திருகோணமலை மாவட்ட அரசியற்கட்சி பெண் உறுப்பினர்களின் குழு, பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஆகிய பெண்கள் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். (மேலும்.......)வடமாகாண சபை பெண் ஒருவருக்கு இரண்டாவது போனஸ் இடம் இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் கிடைத்த இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை சுழற்சி முறையில், முதலாவதாக ஒரு பெண்மணிக்கு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வடமாகாண சபைக்குரிய போனஸ் இடங்களில் ஒன்றை பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு வருடாந்த சுழற்சி முறையில் அளிப்பது என்று கூட்டமைப்பு இன்று அதிகாரபூர்வமாக முடிவெடுத்துள்ளது. அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட மேரி கமலா குணசீலன் என்பவருக்கு முதலாம் ஆண்டு அந்த இடத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இரண்டு போனஸ் இடங்களில் ஒன்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபடி, மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அஸ்மின் அயூப் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது தொடர்பான முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாகாணசபையின் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் எங்கு வைத்துப் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்தும் பின்னர் கூடித் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ம.ம.மு தீர்மானம் மத்திய மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம் என மலையக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. மக்களின் நன்மை கருதியும் காலத்தின் தேவை கருதியும் ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கை ஆகியவற்றினாலேயே ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். "மத்திய மாகாண சபை தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளோம். இதன் மூலம் நாம் ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்படுவதா அல்லது எதிர்கட்சி ஆசனத்தில் அமர்வதா என்ற தீர்மானத்தை நாம் எடுக்க முடியும். அதற்காண அங்கீகாரத்தை மக்கள் எமக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் நாம் எமது மக்களின் நம்மை கருதியும் காலத்தின் தேவை கருதியும் அரசாங்கத்துடன் இணைந்து மத்திய மாகாண சபையில் செயல்படுவதென தீர்மானித்துள்ளோம்.ஆளுநர் சந்திரசிறியுடன் விக்னேஸ்வரன் இன்று சந்திப்பு வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும் இடையில் இன்று முதற் தடவையாக சந்திப்பு ஒன்று இடம்பெற வுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது. வட மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்களின் நியமனங்கள், அமைச்சுப் பொறுப்புகள், பதவிப் பிரமாணம் போன்ற விடயங்கள் தொடர்பில் சம்பிரதாய முறைப்படி இந்த விசேட சந்திப்பின் போது கலந்துரையாடப் படவுள்ளதாக தெரிய வருகிறது. நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முதலமைச்சர் பதவிக்கு தெரிவாகியுள்ள சி. வி. விக்னேஸ்வரனுக்கான நியமனத்தை வழங்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. வட மாகாண ஆளுநருக்கு கடந்த 23 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வட மாகாண ஆளுநர் கடந்த 25 ஆம் திகதி கையொப்பமிட்டு தனது பதில் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்காக வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாதுநாடெங்கிலும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இராணுவ முகாம்களை வைத்திருக்கிறது. விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கில் இருந்து இராணுவத்தை எனது அரசாங்கம் வெளியேற்றாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இதுபோன்று நாட்டின் ஏனைய மாகாண சபைகளும் இராணுவத்தை தங்கள் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுமாறு கேட்டால் எமது இராணுவத்தை வைத்திருப்பதற்கு இடமே இருக்காது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அயல்நாடான இந்தியாவுடன் நாம் நெருங்கிய நட்புறவை வைத்திருக்கிறோம். இந்தியாவுக்கு வேறு விதமான அரசியல் பிரச்சினைகள் இருப்பதனால் இந்தியாவின் சில செயற்பாடுகளை நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். வடக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது எமக்கு நன்கு தெரியும். வெளியில் இருந்து குற்றம் காண்பது எளிது. எனவே, வடமாகாணத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சீரான நிர்வாகத்தை நடத்த வேண்டுமென்று நான் சவால் விடுக்கிறேன் என ஜனாதிபதி இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். உலகத்திற்கு பொலிஸ்காரர்களின் தேவை அவசியமில்லை, சில நாடுகள் தாங்களே உலகத்தின் பொலிஸ்காரர்கள் என்று இறுமாப்பில் செயற்படுகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பொலிஸ்காரர்களை போன்று நடந்து கொள்ளும் இந்நாடுகள் மற்ற நாடுகள் மீது அழுத்தங்களை கொண்டுவர எத்தனிக்கின்றன என்றும் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் பல அரச சேவைகளும் முடங்கும் அபாயம்அமெரிக்காவின் அரசியல் இழுபறி காரணமாக எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் அந்நாட்டின் பல்வேறு அரச சேவைகளும் பணி நிறுத்தத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிதியாண்டு இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதன்மூலம் அரசின் பல சேவைகளுக்கான நிதி காலியாகவுள்ளது. இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் புதிய நிதியாண்டில் அரசின் திட்டங்களுக்கான நிதியைப் பெற கொங்கிரஸ் சபையின் ஆதரவு பெறவேண்டியுள்ளது. இந்நிலையில் புதிய நிதியாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி ஒபாமா சுகாதார சட்டமூலம் ஒன்றை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார். இந்த சட்டமூலம் தோல்வியடையும்பட்சத்தில் நாட்டின் பல்வேறு அரச சேவைகளும் பணி நிறுத்தத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 800,000 பணியாளர்கள் ஊதியமில்லா விடுப்புக்கு முகம்கொடுக்கவேண்டி வரும். அதேபோன்று நாட்டின் தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும். தவிர, 1.4 மில்லியன் இராணுவத்தினரின் சம்பளம் தாமதமாவதோடு, ஒருசில வெள்ளை மாளிகை பணியாளர்களும் நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களின் இழப்புகளும் அவற்றை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகளும்எதபோன் கரைசலில் சுண்ணாம்புக் கரைசலைச் சேர்க்கும் போது வெளிவிடப்படும் எதிலீன் வாயு பழங்களின் இழையங்களைத் தூண்டி பழுக்க வைத்தல் செயன்முறை நடைபெற உதவுகின்றது. இதன்போது தீங்கற்ற வாயுக்கள் உற்பத்தியாக்கப்படமாட்டாது. அத்துடன் பெறப்படும் பழங்களும் சுவை மிக்கதாகவும் தரமானதாகவும் இருக்கும். இம்முறையை உபயோகிப்பதற்கான உற்பத்திச் செலவு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதாகும். ‘எனவே பழ உற்பத்தியாளர்களே பழ வியாபாரிகளே தங்களையும் தங்கள் சந்ததியின் ஆரோக்கியத்தினைக் கருத்திற் கொண்டு மேற்குறித்த முறையை உபயோகித்து சுகாதாரக்கேடற்ற, சுவை மிக்கதாகவும் தரமானதாகவும் பழங்களை உற்பத்தி செய்யுங்கள் சர்வதேச சந்தை வரை சந்தை வாய்ப்பைப் பெற்றிடுங்கள்.’ (மேலும்.......) இரணைமடுவில் இருந்து நீரைக்கொண்டு செல்வது பிரதேச முரண்பாட்டை தோற்றுவிக்கும் இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக்கொண்டு செல்வதால் பிரதேச முரண்பாட்டை உருவாக்க இது வழி சமைக்குமென கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு போதியளவு நீர் கிடைக்காத நிலையில் எவ்வாறு இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல முடியுமெனவும் கேள்வியெழுப்பியுள்ளன. இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி நீரைக் கொண்டு செல்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள், கல்வி மான்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான சந்;திப்பு கிளிநொச்சி பிரதேச சபைத் தலைவர் வி.குகராசா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போதே கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாம் யாரும் யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுக்குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புக் காட்டவில்லை. எமது பிரதேசத்தில் இருபத்து இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு சிறு போகத்தில் நீர்ப்பாசனத்தை நம்பியே விதைக்கப்படுகின்றது. ஆனால் எட்டாயிரம் ஏக்கரில் இருந்து பத்தாயிரம் ஏக்கர் வரையான காணிகளுக்கு பயிர் செய்யும் காலத்தில் நீரை வழங்கக் கூடியதாகவுள்ளது. இத்தகைய நிலையில் யாழ்ப்பாணத்திற்கு எந்த வகையில் இரணைமடுக்களத்தில் இருந்து நீரைக் கொண்டுசெல்ல முடியும். கிளிநொச்சி மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவுசெய்த பின்னரே யாழ்ப்பாணத்திற்கு இரணை மடுக்குளத்தில் இருந்து நிரைக்கொண்டு செல்வதில் எந்த வகையான தடைகளும் இல்லையென கூட்டத்தில் கலந்துகொண்டவாகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். செப்ரம்பர் 29, 2013 ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை, சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் தொடரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ibon international என்ற அமைப்பு சுய நிர்ணய உரிமை, மக்கள் விடுதலை மற்றும் ஜனநாயகம் என்ற தலைப்பில் ஆய்வரங்கு ஒன்றை 23.09.2013 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இத்தலைப்பில் மூன்று ஆரம்ப உரையாளர்களும், நான்கு ஆய்வாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். Cynthia McKinney, Former member, House of Representatives, USA , Dr. Hans Koechler, University of Innsbruck, Austria, Luis Jalandoni, National Democratic Front, Philippines ஆகிய மூவரும் ஆரம்ப உரை நிகழ்த்தினர். ஆரம்ப உரையைத் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆய்வுரையின் முதல் பேச்சாளராக ஈழப் போராட்டம் குறித்த ஆய்வை சபா நாவலன் நிகழ்த்தினார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த ஆய்வில் ஈழப் போராட்டம் இனப்படுகொலையின் முடிவில் வன்னியில் இலங்கை பாசிச அரசால் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது குறித்தும், இன்னும் அந்தப் போராட்டம் தொடரப்பட வேண்டும் என்றும் உலகின் ஏனைய தேசிய விடுதலைப் போராட்டங்கள் போன்று ஈழப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏகாதிபத்திய அரசுகள் தமது நலன்களுக்காகப் போராட்டத்தைக் கையகப்படுத்தி அழித்ததை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலிருந்து மீண்டும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் மேலெழும் என அவர் குறிப்பிட்டார். (மேலும்.......) முகமாலை கண்ணி வெடியும் மாவட்ட அமைச்சர் கண்ணி வெடியும் (எம்.எஸ்.எம். ஐயூப்)மூன்று மாகாண சபைகளுக்காக கடந்த 21 ஆம் திகதி தேர்தல்கள் நடைபெற்று இரண்டு நாட்களில் முகமாலையில் வெடித்த நிலக் கண்ணி வெடியும் தேர்தல் முடிவடைந்து ஐந்து நாட்களில் காணியானது மத்திய அரசாங்கத்திகுரிய பொறுப்பு என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அரசாங்கம் மாவட்ட அமைச்சர்களை நியமிக்கப் போவதாக தேர்தலுக்கு மறுநாள் வெளியான செய்தியும் வடமாகாண சபையின் எதிர்க்காலத்தை கோடிட்டுக் காட்டுவதைப் போலாக அமைந்திருக்கின்றன. முகமாலை கண்ணி வெடி வட மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராகப் போகும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அவரது முன்னுரிமை பட்டியலை மீளாய்வு செய்வதற்காக விடுத்த அழைப்பைப் போன்றதாகும். அதேவேளை நீதிமன்றத் தீர்ப்பும் மாகாண அமைச்சர் நியமனத்திற்கான முயற்சியும் அவர் எவ்வளவு பெரும் சவால்களை எதிர்நோக்கப் போகிறார் என்பதை முன் கூட்டியே அறிவித்தலைப் போலாகும். (மேலும்.......) ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம்? வடமாகாண முதலமைச்சராக தெரிவுசெய் யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள வாய்ப்புக்கள் இருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண ஆளுநர் முன்னிலையில் புதிய முதலமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிவித்திருந்தது. அவ்வாறு அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளாத பட்சத்தில் ஜனாதிபதி முன்னிலையிலோ அல்லது கட்சித் தலைவர் முன்னிலையிலோ சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. சபையில் உரையாற்றச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாளை திங்கட் கிழமை நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை புதிய அமைச்சரவையை அமைப்பது தொடர்பிலும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நாளை மீண்டும் கூடி ஆராயவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின் றன. பிரிவினைக்கு ஒருபோதும் துணை போக மாட்டேன் - விக்னேஸ்வரன்“நாட்டைத் துண்டாடாமல் ஒரே நாட்டில் அதிகாரத்தைப் பகிர்ந்து முன் னேற்று வதே எனது குறிக்கோ ளாகும். அதற்கு சகல மக்களும் ஒன்றுபட்டுழைக்க வேண்டும் என்று வட மாகாணத்தில் போட்டியிட்டு முதன்மை உறுப்பினராக அதிக விருப்புவாக்கு பெற்றுத் தெரிவாகியுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் எதிர் காலத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நேச மனப்பான்மையுடன் ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன். நாட்டைப் பிரித்தால் நான் ஒத்துழைக்க மாட்டேன். அதற்குத் துணைபோகவும் மாட்டேன். உதவிகளும் செய்யமாட்டேன். இன்று சில பெளத்த குருமார்கள் நாம் நாட்டை பிரித்தாளப் போகின்றோம். அதற்கான முஸ்தீபு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் எம்மீது சேறு பூசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் எதுவித உண்மையும் இல்லை. இது உண்மைக்கு முற்றிலும் முரணானது என்று அவர் மேலும் தெரிவித்தார். உண்மையாகவே நாம் எமது வட மாகாண சபையின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யவே எதிர்பார்க்கின்றோம். இதற்காக நாம் மத்திய அரசின் உதவியையும் நாடி செயல்பட தயாராக இருக்கின்றோம். (மேலும்.......) சங்கரி ஐயாவிற்கே போனஸ் ஆசனம் இல்லையேல் தீக்குளிக்கவும் தயங்கேன் வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கு கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங் களில் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஐயாவிற்கே வழங்க வேண்டும் என்று அக் கூட்டணியின் அடுத்த தலைவர் பதவிக்குத் தெரிவாகவுள்ள தம்பிராசா (தம்பி) தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வாறு ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாதவிடத்து தீக்குளிப்புப் போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது. கிளிநொச்சியில் கூட்டணியின் தலைவர் சங்கரி ஐயா திட்டமிட்ட முறையில் தோற்கடிப்பட்டுள்ளார். அவராலேயே கிளிநொச்சி தனி மாவட்டமாக உருவானதை மக்கள் மறந்துவிடாது வாக்களிக்கத் தயாரான வேளையில் சக கட்சியில் போட்டியிட்ட சிலர் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர் வெற்றியைத் தடுத்துவிட்டதாகவும் தம்பிராசா தெரிவித்தார். எதிரானவர்களை அழித்தொழிப்பது எப்படி?தமது முதலாவது கூட்டத்திலேயே கூடி ஆராய்ந்த கூட்டமைப்பினர்வட மாகாணத்தின் அதிகாரத்தை கைப் பற்றியதும் தாம் நடத்திய முதலாவது கூட்டத்திலேயே தமக்கு எதிரானவர்களை எப்படி அழிப்பது என்பது குறித்தே கூட்டமைப்பின் தலைவர்கள் ஆராய்ந்திருப்பதாகத் தெரிய வருகின்றது. கூட்டமைப்பின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் அரசியல் ஆலோசகருமான என். கே. சிவாஜிலிங்கம், தேர்தல் காலத்தில் தமக்கு எதிராக செயற்பட்டு வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றை இடிக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். அவர் இவ்வாறு கூறியதனை அவதானித்த குறிப்பிட்ட அத்தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு பொறுப்பதிகாரி சிவாஜிலிங்கத்திடம் தனது கடுமையான கண்டனத்தை பதிவுசெய்திருக்கிறார். (மேலும்.......) வவுனியா மாவட்டத்திற்கும் அமைச்சுப் பதவி தேவை வட மாகாண சபையின் அமைச்சு பதவியொன்றை மூவின மக்களும் செறிந்து வாழும் வவுனியா மாவட்டத்திற்கு வழங்கவேண்டுமென வட மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி. ரி. லிங்கநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டமானது வட மாகாணத்தின் எல்லையாகவும் மூவின மக்கள் வாழும் பிரதேசமாகவும் இருப்பதுடன், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் தலைநகரமாகவும் விளங்கி வருவதை தாங்கள் அறிவீர்கள். இதற்கு மேலாக நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் நாம் எதிர்பார்க்காத வகையில் சிங்கள இனத்தைச் சேர்ந்த அரச தரப்பு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழர்களுக்கும் பெரும் சவாலாக அமையும் என்பதை தாங்கள் அறிவீர்கள். தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் கடந்த காலங்களில் வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்ட யுத்தம், இயற்கை அனர்த்தங்களின் போது வைத்திய அதிகாரியாகவும் மனிதாபிமான நிறுவனங்களிலும் அளப்பரிய சேவையாற்றி இவர் சிறந்த முகாமையாளராகவும் செயற்பட்டாளராகவும் விளங்கியுள்ளார். எனவே இவருக்கு கடந்த 15 வருட கால அனுபவம் அமைச்சொன்றை சிறந்த முறையில் செயற்படுத்துவற்குள்ள தகுதியை கொண்டுள்ளமையை மேலும் உறுதி செய்கின்றது என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டுமொரு முறை உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட வடபுலத்து தமிழர்கள்நடந்து முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தல் களிலும் வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வடபுலத்துத் தமிழ் மக்கள் மீண்டுமொரு தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களது உணர்ச்சிமிகு வீரவசனப் பேச்சுக்களுக்கு இரையாகி அடிமைப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதைத் தெளிவாகக் காட்டு கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் வெளியி டப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் எவ்வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படாத, இலங்கை அரசிய லமைப்புச் சட்டக் கட்டுக்கோப்புக்களுக்கு முரணான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவை வெறுமனே தேர்தலில் வெற்றி கொள்ள மக்களை ஏமாற்றுவதற் காகவெனத் தயாரிக்கப்பட்டதாக அமைந்திருந்த நிலை யிலும் வடக்கு வாழ் தமிழர்கள் நம்பி ஏமாந்திருக்கிறார்கள். (மேலும்.......) ஐக்கிய நாடுகள் சபையில் இரு முக்கிய சந்திப்புகள் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த உலக மகா சபையில் அங்கத்துவ நாடுகளின் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டு விடயங்கள் இங்கு முக்கிய இடத்தினை வகித்தன. சிரியாவின் இரு வருட கால யுத்தமும் இஸ்லாமிய குடியரசான ஈரானின் அணுவிவகாரமுமே மேற்படி இரண்டு முக்கிய விடயங்களாகும். சர்வதேச விவகாரங்களில் அக்கறை செலுத்துபவர்கள் அமெரிக்க ஈரானிய ஜனாதிபதிகளின் நேரடி சந்திப்பு நடைபெறும் என நம்பினர். இப்படியான சந்திப்புக்கு ஈரானின் புதிய ஜனாதிபதி பல கடிதங்களை அமெரிக்க ஜனாதிபதிக்கு பல தடவை எழுதி அத்திவாரமிட்டார். பதில் கடிதங்களையும் அமெரிக்க தலைவர் அனுப்பியதாக நம்பப்படுகின்றது. எப்படியும் பொதுக்கூட்டத்தில் முதல் நாளிலேயே இரண்டு நாட்டு தலைவர்களும் பேசினர். ஆனால் நேருக்கு நேர் தனிப்பட்ட ரீதியில் இரண்டு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலே பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை. (மேலும்.......) முரண்பாடுகளை களைந்தால் முன்னேற்றம் நிச்சயம் மலையகத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதும் இதுவே! நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்களில் மத்திய மாகா ணத்தில் கடந்த முறையை விட இம்முறை தமிழ்க்கட்சிகள் கூடுதலான இடங்களைப் பெற்றுள் ளன. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குப் பின்னர் இப்போதுதான் தமிழ்ப்பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேர் தல் காலத்தில் மலையக கட்சிகளி டையே இருந்த முரண்பாடுகளைக் களைந்துவிட்டு மக்களின் எதிர்கால நலனில் கூடிய அக்கறை செலுத்த வேண்டுமென மலையக புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (மேலும்.....) வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரி. என். ஏ.க்கு பக்க பலமாக செயற்பட ஈ. பி. டி. பி. முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற போது, நாமும் அவர்களுக்கு பக்கபலமாக இருப்போம் என ஈ. பி. டி. பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் எமது மக்கள் எதிர்நோக்கிய உடனடி மனிதாபிமானப் பணிகள் தொடக்கம் துயரத்தின் விளிம்பில் நின்ற அவர்களின் வாழ்வை மீள் நிலைநிறுத்துவதற்கான அனைத்து அடிப்படைத் தளங்களையும் நாம் கடந்த நான்கு வருடங்களுக்குள் ஏற்படுத்தியிருக் கின்றோம். முற்றாக அழிந்துபோய்க் கிடந்த அனைத்து துறைகளையும் மீள உருவாக்கியிருக்கின்றோம். இனி மக்கள் அந்த செயற்பாடுகளின் பலன்களை பெற்றுக்கொள்கின்ற காலத்தில் தடம்பதித்துள்ளனர். எனினும் மக்களின் தேவைகள் அனைத்தையும் முற்றாக நிறைவுசெய்வதாயின் மேலும் சில காலங்கள் பொறுத்திருக்க வேண்டி வரும். இந்நிலையில் தற்போது வட மாகாண சபையின் அதிகாரங்களை ஏற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் முன்வர வேண்டும். அவ்வாறு முன்வருகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களின் செயற்பாடுகளுக்கு நாம் பக்க பலமாக செயற்படத் தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார். “முருகுப்பிள்ளை நிர்மலன்” விபத்தில் காலமானார்.
நிமோ என எல்லோராலும் அறியப்பட்ட முருகுப்பிள்ளை நிர்மலன் இலங்கையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அகால மரணமானார். ரெலோ இயக்கத்தின் முன்னாள் போராளீயான இவர் ஜேர்மனியில் வசித்து வந்தவர். இவர் ஒரு மேடைக் கலைஞருமாவார். நிமோவின் தந்தையாரும் ஒரு கலைஞர் ஆவார்.ரி.பி.சி வானோலியின் முக்கிய அறிவிப்பாளராகவும்,நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அரசியல் ஆய்வாளராகவும் சேவை செய்த இவர் ஐரோப்பாவில் புலிப் பினாமிகளால் பலத்த நெருக்கடிக்குள்ளாகியிருந்தவர்.. ரி.பி.சி வானொலியின் பணிப்பாளர் ராமராஜ் வங்கி அட்டை மோசடியின் காரணமாக சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவித்தபோது தனது குடும்ப நலன்களைக்கூடக் கைவிட்டு ரி.பி.சி வானொலியை ஒரு வருடமாக பொறுப்பேற்று நடத்தியவர் நிமோ அவர்கள். நிமோ அங்கு பணியாறிய வேளையில் ரி.பி.சி வானொலி புலிப் பினாமிகளால் சேதமாக்கப்பட்டது. ஆனால் சிறைத்தண்டனை முடிந்து மீண்டும் லண்டனுக்கு வந்த ராமராஜ் நிமோவை வெளியேற்றி தனது நன்றிக்கடனைத் தீர்த்துக் கொண்டது ரி.பி.சி வானொலியின் நேயர்கள் அறிவார்கள். புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் வெளீநாட்டு வாழ்க்கையைத் துறந்து மீண்டும் இலங்கை சென்று தனது சமூகப்பணிகளை மேற்கொண்ட நிமோ அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாததும் ஜீரணித்துக்கொள்ள முடியாததுமாகும். அவரது கும்பத்தினருக்கு சலசலப்பு இணையத்தி சார்பாக வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். செப்ரம்பர் 28, 2013 என் மனவலையிலிருந்து.... ஐ.நா. சபை தனது இருப்பிடத்தை மாற்ற வேண்டுமா? (சாகரன்) தற்போது ஐ. நா. சபைக் கூட்டம் நடைபெற்றுவருகின்றது. ஐ. நா. சபையான உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட சிக்கல் நிலைமைகளுக்கு ஒரு மத்தியஸ்தராக இருந்து அவற்றை சார்பு நிலையின்று நீதியின்பால் தீர்த்து வைத்த வரலாற்றைக் கொண்டது. இவ் ஐ. நா. சபை 1945 இல் உலகநாடுகள் இணைந்து உருவாக்கின. இதன் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் அமைந்துள்ளது. சோவியத் யூனியனின் உடைவிற்கு பின்னரான ஒரே முகாமாக உருவெடுத்திருக்கும் அமெரிக்கா தனது நாட்டில் இருக்கும் ஐ. நா. சபையை தனது நாட்டின் ஒரு சொத்தாக கருதிச் செயற்பட்டுவருவதை அண்மைக் காலங்களில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் சிறப்பாக அமெரிக்காவின் முதலாளித்துவக் கொள்கையை எதிர்க்கும் நாடுகளுடன் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றது. குறிப்பாக சோசலிச சித்தாந்தங்களை தழுவிவரும் தென் அமெரிக்க நாடுகளை, அவர்களின் தலைவர்களை ஐ. நா. மகாநாடுகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதில் தான் தோன்றித்தனமாக நடந்து வருகின்றது, அல்லது தவிர்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றது. ஐ. நா. சபை தற்போது அமெரிக்காவில் இருப்பதைக் காரணம் காட்டி இதனை செய்து வருகின்றது. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற போலிக் காரணங்களைக் அமெரிக்கா இதற்கு கூறுகின்றது என்றே நம்பவேண்டியுள்ளது. இதனால் தனது நாட்டின் பாதுகாப்புதுறை, உளவுத்துறையில் பலம்மிக்கவை என அமெரிக்கா பீற்றிக் கொள்கின்றதா என்பது கேள்வியாகியுள்ளது. எவ்வளவுதான் இராணுவ படைப்பலம், ஆயுதங்கள் இருந்தாலும் மக்கள் ஆதரவு அற்ற நிலையில் இவையெல்லாம் வெறும் துருப்படித்த உலோகங்கங்கள்தான். இதனை கடந்த காலத்தில் பல வீரம் மிக்க மக்கள் போராட்டங்கள் நிறுவி நிற்கின்றன. அமெரிக்கா இதில் பல கசப்பான அனுபவங்களைத் தன்னகத்தே கொண்டது. ஐ. நா. சபையிற்கு சுதந்திரமாக வந்து தமது கருத்துக்களைத் தெரிவிக்க ஒரு உலக நாட்டுத் தலைவருக்கு உரிமையற்ற நிலமையை நியூயோர்க் ஐ. நா சபை உருவாக்கியுள்ள நிலையில், ஐ. நா சபையின் இருப்பிடம் கேள்விக்குறியாகியுள்ளது. தனது 'இச்சை'க்கு இணங்காத தலைவர்களை அச்சுறுத்தும் இச் செயற்பாட்டை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் ஐ. நா. வின் இருப்பிடம் இடம் மாறவேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். அன்றேல் இதற்கு மாற்றீடான பலமான இன்னும் ஒரு உலக பொது அமைப்பு தோன்றுவது தவிர்க்க முடியாமல் போகலாம். த.தே.கூ . வில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இவ் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்க உள்ள சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவருகின்றது. இதில் வடக்கு மாகாண சபைக்கான பதவிப்பிரமாணம் செய்வது, போனஸ் ஆசனங்கள், அமைச்சர்கள் உட்பட பல விடயங்கள் குறித்து முடிவு செய்யப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. காசோலை மோசடிக் குற்றச்சாட்டு த. தே. கூட்டமைப்பு வெருகல் பிரதேசசபை தலைவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேசசபை தலைவர் எஸ்.விஜயகாந்தை நேற்று மாலை கைதுசெய்து பிணையில் விடுவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காசோலை மோசடிக் குற்றச்சாட்டிலேயே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதான திருத்த வேலைகளுக்கு மண் தருவிப்பதற்கான ஒப்பந்தத்தில், லொறி சாரதி ஒருவருக்கு ரூ.5 லட்சம் என குறிக்கப்பட்ட போலி காசோலை வழங்கியமை தொடர்பிலேயே பிரதேசசபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட வெருகல் பிரதேசசபை தலைவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது ரூ.2 லட்சம் பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். SLFP Is Not A Racist Party - Chandrika KumaratungaRacism and religious extremism have no place in the Sri Lanka Freedom Party, former President Chandrika Kumaratunga said at the commemoration of her father S.W.R.D. Bandaranaike’s death yesterday. Addressing a crowd during the ceremonies to commemorate the former Sri Lankan Premier, Kumaratunga said that the pact signed between her father and Federal Party Leader, popularly known as the Banda-Chelva Agreement, went far beyond the power sharing provisions of the 13th Amendment. “At that time, the Federal Party was asking for power sharing under a federal system,” she said. “Nowadays they are speaking of too many powers in the 13th Amendment. The Banda-Chelva pact was willing to share power far more significantly than that,” the former President said. The SLFP was started with the Bandaranayake vision, said Kumaratunga, adding that in these days various convoluted visions had been incorporated into the party. “Of late various people claim their fathers created the SLFP along with my father – at that time I don’t think they were around,” she charged. Defending her father’s controversial Sinhala Only Act, Kumaratunga said it was an attempt to uphold the rights of the majority that had been suppressed by European colonialists for hundreds of years. “He also brought the Tamil language bill at the same time. He had no intention to implement racist policies. But because he was assassinated, there was no way to enact that bill,” President Kumaratunga said. விக்னேஸ்வரனின் பயம்!வடமாகாணசபை நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட தயார் என்று தேர்தல் முடிந்தவுடன் அமைச்சர் பஷில் கூறியிருந்தமையில் நம்பிக்கை உள்ளதாக சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கட்டாயமாக அவர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. ஆனால் விமல் வீரவன்ச போன்றவர்கள் வெவ்வேறு பேச்சுக்களை பேசுகின்றார்கள். சில நேரங்களில் அவர்களின் கருத்துக்களுக்கு ஜனாதிபதி செவி சாய்ப்பதால் ஏதாவதொன்றை கூறிவிட்டு மாறாக வேறு எதனையும் செய்யக்கூடும் என்றதொரு பயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சிங்கள மக்களை குழப்புவதற்கு இனத்துவேஷத்துடன் செயல் படுவதற்கு சிலர் இருக்கின்றார்கள். அதன் காரணத்தினால் அவர் ஏதாவது பிரச்சினைக்கு உட்பட்டு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுமோ என்று தெரியாது. நாங்கள் இவற்றை அனுபவத்தில் நன்றாக படித்துள்ளோம். உதாரணமாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க செல்வநாயகத்துடன் ஓர் உடன்படிக்கை வைத்த போது எமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கின்றது என்று நாம் எதிர்பார்த்திருந்தோம் ஆனால் 200 பௌத்த பிக்குகள் அவரது வீட்டிற்குச் சென்று பல எதிர்ப்பு வார்த்தைகளை கூறிய பின்னர் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டார். டட்லி சேனாநாயக்கவுடனும் அவ்வாறு தான் இடம்பெற்றது. இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தலைவர்கள் சில நல்ல காரியங்கள் செய்யும் போது அதை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளே இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு தேய் பிறைக் காலம் தென்படத் தொடங்குகிறது....! (எஸ். ஹமீத்) தீ நிகர்த்த தேர்தல் மேடைகளில் அனல் பறக்கும் ஆவேசப் பேச்சுக்கள் அரங்கேறி முடிந்து விட்டன. வாய்க்கு வந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் கலக்க விடப்பட்டு, வாக்காளப் பெருமக்களின் நெஞ்சங்களுக்குள் நிரப்பப்பட்டுவிட்டன. தேர்தல் விஞ்ஞாபனங்கள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகை அறிக்கைகள், பதாகை வசனங்கள் என்று அள்ளி வீசிய கொள்கை விளக்கங்கள் மூலம் மக்களின் மூளையைச் சலவை செய்தாகிவிட்டது. இவற்றின் பெறுபேறாக, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலிலே வரலாற்று முக்கியத்துவமிக்க பெரும் வெற்றியையும் பெற்றாகிவிட்டது. (மேலும்.......) வட மாகாண சபைக்குரிய கட்டடம் யாழ். கைதடியில் வட மாகாண சபைக்குரிய கட்டடத்தை யாழ். கைதடி பகுதியில் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வட மாகாண சபைக்கான கட்டட நிர்மாணப் பணிகள் தற்போது பூர்த்தியடையும் தருவாயில் இருப்பதுடன், ஒக்டோபர் 10 ஆம் திகதியளவில் முழுமையாக கட்டடத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாண பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷ் நியூஸ்பெஸ்டுக்கு கூறினார். மாகாண சபை அமர்வுகள் நடத்தப்படும் திகதி, விபரங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் வட மாகாண சபை இயங்குவதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வட மாகாண சபைக்கான தேர்தலின்மூலம் ஆட்சி நிருவாகம் உருவாகியுள்ளதை அடுத்து அந்த பணிகள் துரிதப்பட்டுள்ளதாகவும் பிரதம செயலாளர் விஜயலக்ஷ்மி ரமேஷ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவில் இருந்து ஐ.நா. சபையை மாற்ற வேண்டும்
அமெரிக்காவில் இருந்து ஐ.நா. சபையை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் ஐ.நா. சபையில் பேசினார். மேலும் பேச்சின் போது அமெரிக்காவின் ஏகாதிபத்திய அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1945 -ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முதல் ஐ.நா. சபை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வருகிறது. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக பான் கி மூன் உள்ளார்.இப்போது ஐ.நா. சபையின் 68-வது ஆண்டு பொது சபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். (மேலும்.......) த. தே. கூட்டமைப்பினரை “நாட்டை பிளவுபடுத்தும் விஞ்ஞாபனம்” விளக்கமளிக்க வருமாறு அழைப்பாணை கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான காரணங்களை விளக்க எதிர்வரும் அக்டோபர் 02 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு உத்தரவிட்டு உயர் நீதிமன்றம் நேற்று அழைப்பாணை விடுத்துள்ளது. (மேலும்.......) வடமேல் மாகாண முதல்வராக தயாசிறி ஜயசேகர வடமேல் மாகாணத்தின் ஆறாவது முதல்வராக தயாசிறி ஜயசேகர பதவியேற்கவுள்ளதாக குருணாகலையிலுள்ள அவரது அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், அவர் எதிர்வரும் முதலாம் திகதி அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். புதிய அமைச்சரவையில் கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ இடம்பெற உள்ளமை உறுதியாகியுள்ளது. திருச்சியில் கேலிக் கூத்தாக முடிந்த மோடிக் கூத்து பிரதமர் வேட்பாளர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் பரிவட்டம் கட்டப்பட்டுள்ள நரேந்திர மோடி திருச்சியில் வந்து குதியாட்டம் போட்டுவிட்டு சென்றுள்ளார். இவரை மோடி என்று அழைப்பதைவிட மோசடி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். நடிகர் ரஜினிகாந்த்தை பாஜக கூட்டணிக்கு வருமாறும், வாய்ஸ் கொடுக்குமாறும் பாஜக தலைவர்கள் இல.கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் நச்சரித்தனர். ஆனால் அவர் இவர்களை கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் ரஜினி படத்தையும் மோடி படத்தையும் ஒன்றாகப் போட்டு பல இடங்களில் டிஜிட்டல் போர்டு வைத்துள்ளனர். (மேலும்.......)
சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம்கள்
ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் மாத்தறையில் இருந்து அனுராதபுரம் வரை வார இறுதி நாட்களில் சேவையில் ஈடுபட்டுவந்த புகையிரத சேவையை கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு மாத்தறையிலிருந்து புறப் படும் புகையிரதம் மு.ப. 9.50க்கு கோட்டை புகையிரத நிலையத்தையும் பி. ப. 3.50க்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தையும் சென்றடையவுள்ளது. கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை மு. ப. 11 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் புகையிரதம் மாலை 5.15க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தினையும் இரவு 7.15 மணிக்கு மாத்தறை புகையிரத நிலையத்தையும் வந்தடையவுள்ளது. வடக்கு தெற்கு உறவு பாலமாக இந்த போக்குவரத்து சேவை செயற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. கொலை சதி எதிரொலி வெனிசுலா ஜனாதிபதியின் அமெரிக்க பயணம் ரத்து
கொலை சதி தெரியவந்ததால் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ ஐ.நா கூட்டத்திற்காக அமெரிக்க செல்லவிருந்த தனது பயணத்தை ரத்து செய்தார்.அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை இயங்கி வருகிறது. இங்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கலந்து கொள்வதாக இருந்தது. சீன பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் அவர் அமெரிக்கா செல்வதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் அமெரிக்க பயணத்தின் போது மதுரோவை கொல்ல செய்யப்பட்ட சதிதிட்டம் வெளியாது. இது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அமெரிக்க பயணத்தை மதுரோ ரத்து செய்தார். (மேலும்.......) யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களின் இழப்புகளும் அவற்றை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகளும்பழங்கள் சந்தைப்படுத்தலின் தற்போதைய நிலை உலர் வலயப் பழங்களிற்குச் சிறப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தில் மாம்பழம், வாழைப் பழம், பலாப் பழம், பப்பாசிப் பழம், திரட்சைப் பழம் போன்ற பழ மரங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. இப்பழங்களின் சுவைக்கு சர்வதேச சந்தைவரை நல்ல கேள்வி உண்டு. இப்பழங்கள் யாவும் தரமானவையாக உற்பத்தி செய்யப்பட்டுச் சந்தைப்படுத்தப்பட்டால் மாத்திரமே விவசாயிகள் நியாயமான சந்தை விலையை தமது உற்பத்திகளுக்கு பெற கூடியதாக விருக்கும். (மேலும்.......) செப்ரம்பர் 27, 2013 என் மனவலையிலிருந்து...... நம்பிக்கை தரும் முன் உதாரணங்கள் (சாகரன்) வட மகாண சபையின் போனஸ் ஆசனம் முஸ்லீம் பிரதிநிதிக்கு ஒருவருக்கு வழங்குதல் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு வரவேற்கத்தக்க முடிவாகும். கூடவே மூத்த அரசியல் தலைவர் சங்கரியருக்கு மாகாண சபையில் தனது அரசியல் பிரசன்னத்தை ஏற்படுத்த வாய்ப்புக்கள் அழிக்கவும் வேண்டும். யாழ்ப்பாணத்தைவிட்டு முஸ்லீம் மக்கள் உடுத்த உடையோடு கலைக்கப்பட்டபோது மௌனம் சாதித்து அங்கீகாரம் வழங்கியதற்கு இவ் போனஸ் ஆசனம் முழுமையான ஒத்தடங்களை கொடுக்க முடியாவிட்டாலும் சக சிறுபான்மை இனத்துடன் நாமும் இணைந்து செயற்படுவதற்கு இவை எதிர்காலத்தில் ஒரு திறவு கோலாக அமையலாம். நடப்பு யாழ் மாநகரத் தேர்தல் முடிவுற்ற கையோடு மாநகரசபை ஆடசியைக் கைப்பற்றியவர்களுடன் உதவி மேயர் பதவி முஸ்லீம் ஒருவருக்கு வழங்குதல் நல்லெண்ணத்தை எடுத்துகாட்ட உதவும் என்றேன். இதற்கு அவர்கள் 'விருப்பு வாக்குகளில் அதிகம் பெற்ற ஒருவருக்கே அந்தப் பதவி வழங்குதல் நியாயம்' என்று தமது தரப்பு நியாயங்களை எடுத்தியம்பினர். விருப்பு வாக்குகளை விட சக சிறுபான்மை இனத்தின் நட்புறவு எமக்கு அவசியம் இதனைக் கட்டியெழுப்பவேண்டிய தேவை எமக்கு உள்ளது என்ற அடிப்படையிலேயே இதனை மீண்டும் இவ்விடத்தில் மீள் வேண்டுகோளுக்கு உள்ளாக்குகின்றேன். சம்மந்தப்பட்டவர்கள் இதனைச் சீர்தூக்கிப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் உண்டு. கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் நிலவிய முரண்பாட்டடைப் பயன்படுத்தி சுல்தான் என்ற முஸ்லீம் மாநகரசபை உறுப்பினரை முதல்வராக்கினார். இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை நாம் மீண்டும் நிறுவி நிற்பதன் மூலம்தான் புலிகளால் முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட ஆறாத ரணத்தை ஆற்ற முடியும். தனி மனிதன் ஒருவரது பழக்க வழக்கங்களை விமர்சிப்பது அழகு அல்ல. ஆனாலும் இன்று விக்னேஸ்வரன் தனி மனிதர் அல்ல. யார் விரும்பியோ, யார் விரும்பாவிட்டாலோ அவர் இன்று வட மாகாண முதல் அமைச்சர். எனவே சகல சமூகப் பிரிவினரையும் பிரநிதித்துப்படுத்தும் முகமாக அவர் தன் நெற்றியில் உள்ள அந்த சிவப்பு பொட்டை தவிர்ப்பது நலம். அவரின் நம்பிக்கையை தனது வீட்டு நாலு சுவருக்குள் மட்டுப்படுத்திக் கொள்வதே அவர் சகல தரப்பு மக்களினதும் முதல்வர் என்பதை ஏற்புடையதாக்கும். இதனை விக்னேஸ்வரன் செய்வாரா என்பதை அவர் முடிவிற்கே விட்டுவிடுகின்றோம். வவுனியா கம்யூனிஸ்ட் பத்மநாதனின் மகன் வைத்தியக் கலாநிதி சத்தியலிங்கம் கம்யூனிஸ்ட் நம்பிக்கையினால் மொஸ்கோவில் படித்துப் பெற்ற வைத்தியக் கலாநிதிப் பட்டத்தை தமிழ் குறும் தேசியவாதம் என்னும் அழுக்கு சேற்றுக் குளத்திற்குள் மூழ்கடிக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் அவரிடம் இருந்து காத்திரமான மக்கள் சேவையை எதிர்பார்த்து நிற்கின்றது தமிழ் பேசும் சமூகம். இதில் அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள். ஒரு வாகசரின் (Shri Rama Jaya - tamilarn@gmail.com) கருத்துக்கள் இவை சூத்திரமே உன் ஆத்திரம் புரியவில்ல நியாயமில்லாத உன் ஆத்திரத்துக்கு தமிழர்கள் என்ன செய்வது {சட்டத்தை மீறும் (முன்னாள்)நீதியரசர்........? நீதியரசர் சட்டத்தை மீறவில்லை தவறு நடந்தது எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தவறாக பருப்புரை செய்வதில் சூத்திரம் இன்று முன்னிலையில் -------------------- இது எப்படியிருக்கு நாடுகடந்த தமிழீழக்காரர்களே? இப்படியான ஓர் சந்திப்பு நடக்கவில்லை அமெரிக்க ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் கணணி மூலம் எதையும் நிஜப்படுத்தலாம் சூத்திரமே அடக்கி வாசி ---------------------------- அடுத்து ஆடப் போகிறார், ஓங்கி அடித்து!!
தோற்றது என்றோ மக்களிடமிருந்து தூக்கி
ஏறியப்பட்டவர்கள் இலங்கை தேர்தல் முடிவே இந்தியாவின் வெற்றி இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழர்களின் வெற்றி, இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் அலுவலக விவகாரத்துறை மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி கருத்து தெரிவித்தார். கோவையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இலங்கையில் வடக்கு மற்றும் வட கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில், 13-வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில், வடக்கு, வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியது. அதன் விளைவாகவே, தற்போதைய தேர்தல் நடந்து முடிந்து தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனி கண்டிப்பாக அச் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றியே தீர வேண்டும். அதற்கான முன்முயற்சிகளை அங்கு வெற்றி பெற்றுள்ள கட்சிகள் மேற்கொள்ளும். இதனால் தமிழர்களுக்கு புனர் வாழ்வு கிடைக்க வழி ஏற்படும்” என்றார். மனித உரிமை பேரவையில் பிளவு இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை
ஐக்கிய
நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல
அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை இன்று இரண்டாக பிளவுபட்டிருந்தது. அமெரிக்கா,
ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவு வழங்கியதுடன்
இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தன. புலிகளை விடவும் இந்த புலிகள் பொல்லாதவை'பிரபாகரன் விட்ட இடத்திலிருந்து விக்னேஸ்வரன் இந்த அரசியல் போராட்டத்தை தொடக்குவார் என ஜாதிக ஹெல உறுமய உறுபினர் உதய கமன்பில கூறினார். இந்த புலிகள் பிரபாகரன் காலத்து புலிகளைவிட ஆபத்தானவை மற்றும் பொல்லாதவை எனவும் அவர் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட யாவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் கீழ் வேலை செய்தவர்கள் எனவே ஈழயுத்தம் தற்போது இராஜதந்திர ரீதியான இலக்காகியுள்ளது என்றும் கமன்பில கூறினார். (மேலும்.......) செப்ரம்பர் 26, 2013 என் மனவலையிலிருந்து...... ஊழலை ஒழிக்க ஹிட்லரை அழைத்துவராதீர்கள் (சாகரன்) இந்தியாவில் அண்மைய நாட்களில் நடந்துவரும் அரசியல் மாற்றங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருக்கும் பல அமைச்சர்கள் செய்துவரும் ஊழல்களால் இவ் அரசு மீது மக்கள் வெறுப்படைந்து இருக்கின்றார்கள். மத்தியில் இருக்கும் அரசு மோசடியான மக்கள் விரோத அரசு அல்ல, ஆனால் ஊழல் நிறைந்த மோசமான அரசுதான். பல கட்சிகளை தன்னகத்தே கொண்ட கூட்டாட்சியில் நடைபெறும் ஒழுங்கற்ற நடவடிக்கைகள் இவ் அரசிலும் நிறையவே இருக்கின்றன. சிறுபான்மை அரசிற்கு அதன் கூட்டணிக் கட்சிகளினால் கொடுக்கும் நெருக்கடியினால் அமைச்சர்கள், அரசில்வாதிகள் செய்யும் ஊழல்களை கட்டுப்படுத்த முடியாமல் ஐக்கி முற்போக்கு கூட்டணி அரசு தத்தளிகின்றது. கூடவே அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை உடைய மன்மோகன் சிங், சிதம்பரம் போன்றவர்களால் இந்தியத் தேசியத்தின் நிலையும் வெளிநாட்டு முதலிடு என்ற போர்வையில் கேள்விக்குறியாகி நிற்கின்றது. அண்மைக் காலத்து டாலருக்கு எதிரான ரூபாய் இன் வீழ்ச்சியும் இந்த அமெரிக்க சார்பு பொருளாதாரத்தின் தாக்கங்கள்தான். தேசிய உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் அந்நிய முதலீட்டுடன் கூடிய தொழிற்துறைகளில் மக்களைச் சாய்த்துச் செல்லும் அணுகு முறையானது அத்தியாவசியப் உணவுப் பொருட்களின் விலைகளை வானளவிற்கு உயர்த்திச் சென்றுள்ளது. பண்ட உற்பத்தியே ஒரு நாட்டின் வளர்ச்சியை உயர்த்திப் பிடிக்கும். இதிலும் இந்தியா போன்ற விவசாயம் முக்கியத்துவம் பெற்ற நாடுகளில் விவசாயத் துறையை நாசம் பண்ணும் பொருளாதார தொழில்துறைகளை ஊக்கிவிக்கும் அணுகுமுறையானது நாட்டில் சாமான்ய மக்களை மேலும் வறுமைக் கோட்டிற்குள் கீழ் கொண்டு சென்று உணவுபொருட்கள் இன்றி பட்டினிச் சாவிற்குள் தள்ளிவிடும். நகரத்தில் காப்ரேட் நிறுவனங்களில் தொழில்புரியும் மத்தியதர வசதி படைத்தவர்களிடம் பணம் இருக்கலாம் ஆனால் பண்டங்கள் இருக்காது. புண்டங்களை வாங்குவதற்கு வண்டியில் பணம் கொண்டு சென்று கூடைக்குள் பொருட்களைக் வாங்கிவரும் நிலமைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் ஹிட்லர் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபித்திருக்கும் நரேந்திர மோடி ப.ஜ.க வின் அடுத்த பிரதம மந்திரி வேட்பாளர் என்ற அறிவிப்பும் அதனைத் தொடரந்த சங்க பரிவாரங்களின் ஆர்ப்பரிப்பும் மத நல்லிணகத்தை இன்னமும் கட்டிக்காத்துவரும் இந்தியாவில் மீண்டும் ஒரு மும்பாய், பாபர் மசூதி. குஜராத் கலவரங்களை உருவாக்கமாட்டாது என்று அடித்துக் கூற முடியவில்லை. மோடியை முன்னோக்கி நகர்த்துவது எந்தவகையிலும் இந்தியாவிற்கு நல்லதல்ல. இதன் பலாபலன்களை இந்திய மக்கள் எதிர்காலத்தில் அனுபவிக்க நேரலாம். அமெரிக்காவும், பாகிஸ்தானும் சீனா என்ற பூச்சாண்டிக்குள் இந்தியாவில் இரத்த ஆற்றை ஓடவைக்க மோடி செய்த, செய்ய இருக்கின்ற படுகொலைகளை எதிர்காலத்தில் காரணங்களாகக் காட்ட முற்படலாம். இதற்கு பலியாக அப்பாவி; முஸ்லீம் பிரஜைகளை இவர்கள் பலியிட மோடியின் நகர்வு ஊக்க மருந்து போல் அமையலாம். எனவே இந்திய மக்களே ஊழல் அரசை இல்லாது ஒழிக்க ஒரு ஹிட்லரின் மாற்றீடான மோடியை முன்னிறுத்தவதற்கு உடன்படாதீர்கள். இது இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க நினைப்பவர்களுக்கு தீனிபோட்டதாக அமைந்து விடும். தேசிய உற்பத்தியை முன்னிறுத்தும் அந்நிய ஆதிக்க தொழிற்துறை முதலீட்டை எதிர்த்து நின்று வென்று காட்டுங்கள்.காணி அதிகாரங்கள் மத்திய அரசிற்கு மாத்திரமே காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே என உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றிற்கு தீர்ப்பு வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் நீதியரசர்களான எஸ்.ஸ்ரீபவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரை கொண்டு குழவினரே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். போனஸ் ஆசனத்தை முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்க கூட்டமைப்பு தீர்மானம் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வழக்குவதற்கு தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணியின் வேட்பாளர் அய்யூப் அஸ்மினுக்கே அந்த போனஸ் ஆசனம் ஒன்றினை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள போனஸ் ஆசனத்தை ஐந்து வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், முதலாவது வருடத்தை யாருக்கு வழங்குவது என்று இன்னும் ஓரிரு தினங்களில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, ஐந்து வருட மாகாண சபை பதவி காலத்தில் ஐவர் தலா ஒவ்வொரு வருடம் மாகாண சபை உறுப்பினராக பதவி வகிக்கவுள்ளனர். வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவருக்கு இந்த போனஸ் ஆசனம் பகிரப்படும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில், வடமாகாண சபையில் முஸ்லிம் பதவி வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இது எப்படியிருக்கு நாடுகடந்த தமிழீழக்காரர்களே?
(இதற்கு தொடர்புடைய கட்டுரை....) நவீபிள்ளை காலக்கெடு விதிப்பு, இலங்கை நிராகரிப்பு போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,அதையும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும்இ அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை எச்சரித்துள்ளார். ஓகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நவி பிள்ளை இலங்கைக்கு ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் வாயிலாக வாய்வழி அறிக்கையாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. (மேலும்.......)புலிச் சுறாவிற்கும் நீச்சல் பிழைக்கும்.......
வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகொன்று 1,500 கிலோ கிராம் எடையுடைய புலிச்சுறா இன மீன் ஒன்றை இன்று புதன்கிழமை பிடித்துள்ளது. அண்ணளவாக 24 அடி நீளமும் 15 அடி சுற்றளவையும் இந்த மீன் கொண்டிருக்கும் என குறித்த படகின் உரிமையாளரான ஏ.எல்.எம்.முபாறக் தெரிவித்தார். சமூகங்கள் சமத்துவமாக மீள் இணைவதற்கான இழந்து விடக் கூடாத சந்தர்ப்பம் (ஸ்ரீதரன் சுகு)
விருப்பு வாக்குகள் 2004 பாராளுமன்ற தேர்தலின் பிரதிபலிப்புக்களை கொண்டிருக்கின்றன. திரு கஜன் பொன்னம்பலம் , திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் தெரிவை ஒத்ததாகவும் காணப்படுகிறது. தீவிர தேசியவாத நிலைப்பாடுகளும் உள்ளார்ந்து காணப்படுகின்றன என்பதை மறுத்து விட முடியாது. கொந்தளிக்கும் சமுத்திரத்தில் லாவகமாக மாகாண சபையை இயங்கச் செய்வதில் இவர்களுக்கு குறிப்பாக திரு. விக்கினேஸ்வரன் அவர்களுக்கு மிகுந்த நிதானம் தேவைப்படுகிறது. கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் வெ'வ்'வேறு தங்கள் தனிப்பட்ட நலன்கள் சார்ந்து இயங்கக் கூடியவர்கள். ஆக்கபூர்வமாக மாகாணசபையை இயங்கச் செய்வது அதற்கான அதிகாரங்களுக்காக போராடுவது என்பதை விட அதனை குறுந்தேசியவாத அரசியல் நோக்கி இழுத்துச் செல்வது விபரீதங்களுக்கு வழி வகுக்கும். (மேலும்.......) “நாடக ஹீரோ முதல்வர் விக்கினேஸ்வன் அயோக்கியர்” - நாடுகடந்த கவிஞர் காசி.ஆனந்தன் “தமிழர் பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று கோரிக்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மட்டும் இருந்தல்ல, பல உலக நாடுகளிடமும் இருந்துதான் வந்தன. திரு. ஆனந்தனின் இந்த சாடலைக் கேட்டவுடன், “அடாடா… இந்த நாடகம் நடக்கும் விஷயத்தை உலக நாடுகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து, எச்சரிக்கை செய்திருக்கலாமே” என்ற அங்கலாய்ப்பு ஏற்படுகிறது அல்லவா? (மேலும்.......) (காசியின் சொற்பொழிவை காணொளியில் பார்க்க......) 13 ஆவது திருத்தத்திற்கான உறுதிமொழியை நிறைவேற்றவும்: இந்தியா வடமாகாணம் உட்பட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை வெற்றிகரமாக முடித்துள்ளதை இந்திய அரசாங்கம் வரவேற்றுள்ளது. மொத்தத்தில் இந்த தேர்தல்களில் மக்களின் விருப்பம் பிரதிபலிப்பதை தெளிவாக காணக்கூடியதாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள இந்தியா 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பில் வழங்கிய உறுதி மொழிகளையு நிறைவேற்றுவதை நாம் ஆவலுடன் எதிர்பாத்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. வடமாகாணசபை தேர்தலை நடத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும், இலங்கை அரசாங்கமும் நம்பிக்கை தரவல்ல அறிக்கையை வெளியிட்டுள்ளதை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். வடபகுதி மக்கள் நலனை கருத்தில்கொண்டு மறுதரப்புடன் ஒற்றுமையாக இயங்க இருதரப்பினரும் விருப்பம் தெரிவித்துள்ளமை திருப்தியளிக்கின்றது. இவ்வாறான ஒத்துழைப்பு மனப்காங்கு மட்டுமே இரு சமூதாயத்தினருக்கும் இடையில் மனப்பூர்வமான நல்லிணக்கம் ஏற்பட வழிவகுக்கும். சிறும்பான்மையினர் உட்பட இலங்கையிலுள்ள சகல சமுதாயங்களும் ஐக்கிய இலங்கையில் தாம் சமமான பிரஜைகள் என உணரவும் சமத்துவம், நீதி, கௌரவம, சுயமரியாதை என்பவற்றை கொடுக்கவல்ல எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையுடன் வாழவும் வழிவகுக்கும் செயல்முறையை ஊக்குவிக்க இரு தரப்பினருடனும் செயற்பட இந்தியா உறுதியாக உள்ளது. சிங்கள மாணவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை தமிழ், முஸ்லிம் மாணவர்களும் அனுபவிக்க வேண்டும் சிங்கள மாணவர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் தமிழ், முஸ்லிம் மாணவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நாட்டின் கல்விக் கொள்கை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா தெரிவித்தார். இன்று பிரபல பாடசாலைகள் எனக் கருதப் படுபவைகள் அனைத்தும் 1ஏபி தரப்பாடசாலைகளாகும். இவற்றிற்கு மாணவர்களைச் சேர்க்கவே இன்று பெற்றோர் பெரும் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். மாணவர்களும் ஓய்வின்றி அதிகாலை முதல் நகரப் பாடசாலைகளுக்கு படை எடுக்கின்றனர். இச்சிரமத்தைக் குறைக்க நாம் கிராமப்புறங்களில் 1ஏபி சுப்பர் தரப்பாடசாலைகளை அமைக்கவுள்ளோம். அடுத்த வருடம் முடிவடைவதற்குள் இவ்வாறான 1ஏபி சுப்பர் பாடசலைகள் 200 ற்கும் மேல் அமைக்கப்பட்டு விடும். க.பொ.த. உயர்தரத்தில் கலைத்துறைக்கு 25 சதவீதமாகவும், வர்த்தகத்துறைக்கு 35 சதவீதமாகவும், விஞ்ஞான தொழில் நுட்பத்துறைக்கு 40 சதவீதமாகவும் மாற்றப்படவேண்டும். அத்துடன் இன்று தொழிற்சந்தையில் பாரிய கேள்வி நிலவுவது வர்த்தகத்துறைக்கும் தகவல் தொழில் நுட்பத்துறைக்குமாகும். இதற்காகக் கல்வித் திட்டத்தில் பாரிய மாற்றம் ஒன்று தேவைப்படுகிறது. அதனையே நாம் மேலே சொன்ன 1ஏபி சுப்பர் பாடசாலை மூலமாக அடையவுள்ளோம் என்றார். விக்னேஸ்வரனை சந்திக்கின்றார் குர்ஷித் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ள சி.வி. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார். அடுத்த மாத ஆரம்பத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு அடுத்த மாத ஆரம்பத்தில் குர்ஷித் விஜயம் செய்யவுள்ளார். அவர் ஒக்டோபர் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரியவருகிறது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திக்கும் குர்ஷித், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் விக்னேஸ்வரனையும் அவர் சந்திக்க உள்ளார். பாக். பூகம்பத்தால் கடலில் உருவான குட்டி தீவு
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியை பூகம்பம் உலுக்கிய வேகத்தில் கடலில் புதிய குட்டித்தீவு ஒன்று தோன்றி உள்ளது. பாகிஸ்தானின் க்வாடர் கடலோரப் பகுதியில் இந்த தீவு உருவாகி இருக்கிறது. சுமார் 60 மீற்றர் நீள அகலத்தில் தோன்றியுள்ள இந்த தீவின் மணல் பகுதி சுமார் 20-30 மீற்றர் உயரத்துக்கு உயர்ந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இது போன்ற தீவு உருவாகி இருந்தது. நாளடைவில் அந்த தீவு கடலில் கரைந்து காணாமல் போய்விட்டது. தற்போது பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிய குட்டித்தீவு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கடலோரத்தில் திரண்டு அந்த புதிய குட்டித் தீவை பார்த்தனர். இந்த தீவு 100 மீ சுற்றளவு கொண்டுள்ளது. கடற்கரையிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருப்பதால் இந்தத் தீவு கண்களுக்குத் தெரிந்தது. இவ்வளவு பெரிய பூகம்பத்தின் விளைவாக இதுபோன்று குட்டித் தீவு தோன்றுவது ஒன்றும் ஆச்சரியமல்ல என்று ஜாகித் ரஃபி என்ற பூகம்ப ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்க பூகம்ப ஆய்வு மைய நிபுணர் கூறுகையில் பொதுவாக தீவு தோன்றுவது அரிதானதே. தீவு தோன்றும்போது பேரலைகள் எழும் என்று கூறியுள்ளார். கென்யாவில் நான்கு நாள் நீடித்த ஆயுததாரிகளின் முற்றுகை முறியடிப்புகென்ய தலைநகர் நைரோபி வணிக வளாகத்தில் நான்கு தினங்களாக நீடித்த இஸ்லாமிய ஆயுததாரிகளின் முற்றுகை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய 5 அயுததாரிகள் கொல்லப்பட்டதாகவும் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கென்ய ஜனாதிபதி உஹ்ரி கென்யாட்டா தொலைக்காட்சி ஊடே நாட்டு மக்களுக்கு அறிவித்தார். தமக்கு எதிரான தாக்குதல்தாரிகளை கென்யா தோற்கடித்தது. ஆனால் நாம் இழப்பை சந்தித்தோம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். (மேலும்.......) செப்ரம்பர் 25, 2013 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியதோர் ஆரம்பமாக எடுக்க வேண்டும் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் மூலம் பிரதான எதிர்க்கட்சிகளான இடதுசாரிகளினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் வாக் குகளின் சதவீதம் மற்றும் ஆசனங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியுற்று காணப்பட்ட மையானது அவர்கள் மரணிக்கும் தறுவாயில் உள்ளதையே எடுத்துக் காட்டுகிறது என ஜனநாயக இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது. ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் வாசு தேவ வெளியிட்டுள்ள அறிக் கையிலேயே மேற்கண்ட வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாகாண சபைத் தேர்தலில் பொதுவான முடிவாக வெளிப்படுத்தப் படுவது என்னவெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் கீழ் ஜனநாயகம் செயற்படுவதாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை புதியதோர் ஆரம்பமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (மேலும்.......) ஆசியப் பெண்களின் நம்பிக்கைச் சுடர்! சுனிலா அபேசேகரா...
ஆசியப் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராகவும் உரிமைகளுக்காகவும் போராடிய சிங்களப் பெண். இலங்கையில் தமிழர்கள் வாழும் வடபகுதியில் தொடங்கி, உகாண்டா வரை, பாதிக்கப்படும் பெண்களுக்காக கடந்த 30 ஆண்டுகளாக ஒலித்த குரல் சுனிலா அபேசேகராவினுடையது. 61 வயதான சுனிலாவை கடந்த சில வருடங்களாகவே தொந்தரவு செய்துகொண்டிருந்த புற்று நோய், கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அவரை மரணிக்க வைத்துவிட்டது! (மேலும்.......) வடக்கு தமிழ் முதல்வர் விக்கினேஸ்வரன் கார் அருகே.. யார் அந்த சிங்களர்கள்?
இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரன்,
இலங்கை அரசுடன் ‘கண்ணை மூடிக்கொண்டு’ எதிர்ப்பு அரசியல் நடத்த மாட்டார்.
அதற்கான அறிகுறி, நேற்று இரவே வவுனியா நகரில் தெரிந்தது. மாகாண சபை தேர்தல் வெற்றியை
அடுத்து, யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிறப்பு
ஆலோசனைக் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள
வந்திருந்த முதல்வர் விக்கினேஸ்வரன், கூட்டம் முடிந்தபின் தமது காரில் கொழும்பு
திரும்பிக்கொண்டிருந்தார். அவரது கார், வவுனியா நகரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில்
எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் அந்த காருக்கு 60
லீட்டர் எரிபொருளை நிரப்பியபோதுதான், தற்செயலாக பெட்ரோலுக்கு பதிலாக டீசல்
நிரப்பப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மெக்கானிக் ஒருவரை அழைத்துவந்து,
காரின் பெட்ரோல் டேங்க் கழட்டப்பட்டு துப்பரவு செய்தபின் மீண்டும் பொருத்த
வேண்டியிருந்தது. வடக்கு மாகாண முதல்வர் சுமார் 3 மணி நேரம், பெட்ரோல் நிலையத்தில்
காத்திருந்தார். இந்த தகவல் கிடைத்ததை அடுத்து, வவுனியா பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரி
டி.கே.அபயரட்ண அங்கு வந்ததுடன், வடக்கு மாகாண முதல்வருக்கு மேலதிக பாதுகாப்பு
ஏற்பாடுகளையும் செய்தார். வவுனியா போலீஸ் நிலையத்தில் இருந்து, போலீஸார்
தருவிக்கப்பட்டனர். அதன்பின், அப்பகுதி ஆளும்கட்சி (ராஜபக்ஷே கட்சி) மாவட்ட செயலாளர்
பிரேமரட்ன சுமதிபால அங்கு வந்து, கார் திருத்தி முடியும்வரை வடக்கு மாகாண முதல்வர்
விக்கினேஸ்வரனுடன் சிங்களத்தில் பேசிக்கொண்டிருந்தார். இரு தினங்களுக்கு முன்புவரை,
இரு கட்சியினரும் ஆளையாள் மேடைகளில் திட்டிக் கொண்டிருந்தனர். புதிய தமிழ்
முதலமைச்சரின் காரை பின்தொடர்ந்து வேறு கார்களில் வந்து கொண்டிருந்த தமிழ் தேசியக்
கூட்டமைப்பு கட்சியினர், இந்தக் காட்சியை வைத்த கண் வாங்காமல் ஆச்சரியமாக பார்த்துக்
கொண்டிருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை ஆச்சரியமான காட்சிதானே அது! (Viruvirupu)
எரிந்த யாழ்.நூலகத்துக்கு நூல்களை சேகரித்தவர் மரணம்உலகத் தமிழர்களின் சொத்தாக இருந்த யாழ்ப்பாண பொது நூலகம்; 1981ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவு நேரத்தில், தீ வைத்து எரிக்கப்பட்டதைதொடர்ந்து அந்த எரியூட்டப்பட்ட நூலகத்திற்காக நூல்களை திரட்டிய நாமக்கல்லைச் சேர்ந்த ப.இராமசாமி மரணமானர். தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் அன்றைய கணக்குப்படி 97,000 அரிய நூல்களுடன் திகழ்ந்த அந்த நூலகம் எரிந்த போது கண்ணீர் விட்டு அழாத தமிழர்களே இல்லை. அப்படி அழுதவர்தான் இந்த நா.ப.இராமசாமியுமாவார். எல்லோரும் அழுததுடன் நின்று விட்டார்கள். ஆனால், நாமக்கல்லைச் சேர்ந்த ப.இராமசாமி எரிந்து போன நூலகத்தை புதுப்பிக்க புதிய நூல்களை திரட்ட துவங்கினார். கண்ணில் தென்படும் பழைய நூல்களை வாங்கத் தொடங்கினார். பழைய நூல்கள் எங்கு கிடைக்கும் என்று சொன்னாலும், உடனடியாக கிளம்பி போய்விடுவார். பகுத்தறிவு, வரலாறு, அறிவியல், புரட்சி, போராட்டம், விடுதலை, மொழி, இனம், வீரம், குழந்தைகள் கதை என்று தமிழர் சமுதாயத்துக்கு தேவையான அனைத்து நூல்களையும் வாங்கி குவிக்கத் துவங்கினார். இடைவிடாத பயணம், தேடல் என்று போன நா.ப.இராமசாமியிடம் இன்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களைக் கொண்ட நூலகத்தைப் பாதுகாத்து பராமரித்து வந்தார். 2004 ஆம் ஆண்டு ஜனவரியில், யாழ்ப்பாணம் சென்ற நா.ப.இராமசாமி, ரூபாய் ஐந்து இலட்சம் மதிப்புள்ள 3800 நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். மீதமுள்ள நூல்கள் அனைத்தும் யாழ்பாண நூலகத்துக்கு என தன்னுடைய உயிலில் எழுதி வைத்துள்ளார் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. ஏன் இந்தப் படுதோல்வி?வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 2005இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தேர்தல் ரீதியாகவும், அரசியல் ரீதியாக சந்தித்துள்ள மிகப்பெரிய தோல்வி இது. இப்படியொரு தோல்வி அரசாங்கத்துக்கு ஏற்படும் என்றோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தளவு பெரிய இமாலய வெற்றி கிடைக்கும் என்றோ எவரும் நினைத்திருக்கவில்லை. காரணம், வடக்கில் அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களால், அரசியல் ரீதியாக மக்கள் கவரப்படக் கூடும் என்ற கருத்து பரவலாக இருந்து வந்ததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தளவு பெரிய வெற்றியை எவராலும் கணிக்க முடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட இதனை எதிர்பார்க்கவில்லை. அவர்கள், 30 ஆசனங்களை வென்றால், தமது குரலை உலகம் காது கொடுத்துக் கேட்கும் என்று பிரசாரங்களை செய்திருந்தனரே தவிர, எவரும் 30 ஆசனங்களை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவிக்கவில்லை. (மேலும்.......) செப்ரம்பர் 24, 2013 சட்டத்தை மீறும் (முன்னாள்)நீதியரசர்........?
வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன்அடுத்து ஆடப் போகிறார், ஓங்கி அடித்து!!
இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அக் கூட்டணியின் பிரதான வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன், வடக்கு மாகாணத்தின் முதல்வராக போகிறார். அடுத்து என்ன? இனித்தான் இருக்கிறது திருவிழா! தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மக்களுக்கு காட்டிய அரசியல்வாதிகளில் இருந்து விக்னேஸ்வரன் வித்தியாசமாக இருப்பது, கூட்டமைப்பு இதுவரை செய்துவந்த அரசியலில் இருந்து வேறுபட்டு இருக்கப்போகிறது. அதை இதுவரை காலமும் தமிழ் தேசிய அரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. சகித்துக்கொள்வது நல்லது. தேர்தலில் ஜெயித்து 24 மணி நேரம் முடிவதற்கு முன்னரே விக்னேஸ்வரன், “இலங்கை அரசுடன் இணக்கமாக முறையில் செயல்பட்டு ஆட்சி செய்வோம்” என்றார். (மேலும்.......) மாகாண சபை அமைச்சரவைக்கு முன் அமைச்சரவையில் மாற்றம்? நடந்து முடிந்த மூன்று மாகாண சபைகளுக்கான அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உயர்மட்டவட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவத்தை வழங்கும் வகையிலேயே இந்த மாற்றம் கொண்டுவரப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மாகாண சபை தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் தி.மு.ஜயரட்னவின் மகன் அனுராத ஜயரட்ன ஆகக்கூடிய 107,644 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்கும் நோக்கிலேயே அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நியமனத்தினால் பிரதமர் பதவியிலிருந்து தி.மு.ஜயரட்ன இராஜினாமா செய்து அரசியலிருந்து ஓய்வுபெறவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் ஜயரட்னவின் இராஜினாமாவை அடுத்து ஏற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.மத்திய மாகாண சபையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் பலர் வெற்றி மத்திய மாகாண சபையில் கண்டி மாவட்டத்தில் இம்முறை அரசியல்வாதிகளின் உறவினர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர். பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் மகன் அனுராதா ஜயரத்ன, காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் சகோதரர் மகன் திலின தென்னக்கோன், விளையாட்டு அமைச்சரின் மைத்துனர் ஆனந்த வீரசிங்க, கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் எரிக் பிரசன்ன வீரவர்தனவின் தந்தையான முன்னாள் பிரதி அமைச்சர் எதிரிவீர வீரவர்தன, மறைந்த அரசியல் வாதி காமினி திசாநாயக்காவின் மகன் மயந்த திசாநாயக்கா ஆகியோர் கண்டி மாவட்டத்தில் தெரிவானதுடன் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் இருந்து இன்னும் பல உறவினர்கள் தெரிவாகியுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் மகன் பிரமித்த பண்டார தென்னக்கோன் பிரதி அமைச்சர் ரோகண திசாநாயக்காவின் சகோதரர் பராக்கிரம திசாநாயக்கா, உயர்கல்வி பிரதி அமைச்சரின் மகன் சிந்தன ஏக்கநாயக்கா, உயர் கல்வி பிரதி அமைச்சரின் சகோதரர் சரத் ஏக்கநாயக்கா(முன்னாள் முதலமைச்சர்), வசந்த அலுவிகாரையின் சகோதரர் ரஞ்சித் அலுவிகார (அலிக் அலுவிகாரையின் மகன்), உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவின் சகோதரர் ஜயலத் திசாநாயக்கா, முதலானவர்களை விசேடமாகக் குறிப்பிடலாம். இவர்களை விட இக்னும் பலர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. வட மாகாண சபை பிரிவினையின் மையமா? நல்லிணக்கத்தின் மையமா? கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகளை வாக்கெடுப்புக்கு முன்னரே மக்கள் அறிந்திருந்தனர். வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறும் என்பதும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாறு காணாத வெற்றியை பெறும் என்பதும் முன்னரே எல்லோருக்கும் தெரிந்திருந்தது. தமிழ் வேட்பாளர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட விக்னேஸ்வரனும் சிங்கள வேட்பாளர்களில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகரவும் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமரின் மகன் அனுராத ஜயரத்னவும் விருப்பு வாக்குகளில் முன்னணியில் இருப்பார்கள் என்பதும் முன்கூட்டியே பலரது அனுமானமாக இருந்தது. சரியான புள்ளி விபரங்களை மட்டுமே மக்கள் அறியாமல் இருந்தனர். (மேலும்.....)தமிழர்களின் விடயத்தில் மீண்டும் இந்தியா கரிசனை தமிழ் மக்களுடைய விடயத்தில் இந்தியா மீண்டும் கரிசனைகாட்டத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் காட்டிய கரிசனையை இந்தியா இடையில் காட்டாத போதிலும் தற்போது மீண்டும் தலையிடுவதனால் இந்தியாவின் கருத்துக்களை உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தியா எமது தாய் நாடு இந்தியா இலங்கையில் வாழும் தமிழ் மக்களுடைய பிரச்சினை நியாயமான முறையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் கடந்த காலத்தில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டது. இடைக் காலத்தில் துரதிஸ்டவசமாக கைவிடப்பட்ட நிலைமை காணப்பட்டது. தற்போது யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் எமது பிரச்சனைகளின் பால் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அண்மையில் கூட கொண்டுவரப்படவிருந்த ஒரு சட்டமூலம் இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் கருத்துக்களை உலக நாடுகள் மதிக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் கருத்துக்கு எதிராக எமது பிரச்சினையில் ஏனைய நாடுகள் செயல்பட மாட்டாது. இந்தியாவில் தமிழ் நாடு மட்டும் அன்றி ஏனைய மாநிலங்களில் வர்ழும் மக்களும் கூட எமது விடயத்தில் அக்கறையாக இருக்கின்றார்கள். தமிழ் நாட்டில் உள்ள தமிழ் தலைமைகள் அனைத்தும் ஒரே கருத்தில் செயல்படுமாக இருந்தால் கூடிய நன்மையை பெறமுடியும் எனவும் தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் இடங்களில் மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை வடக்கில் வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் எவ்வித மோசடிகளும் இல்லாத வகையில் அனைத்து செயற்பாடுகளும் நீதியாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட்டதனை இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் என். கோபாலசுவாமி உறுதி செய்துள்ளார். அவை தவிர்ந்த வெளியிடங்களில் தேர்தல் வன்முறைகள் இடம் பெற்றிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதும், தமக்கு அவை குறித்து எவ்வித நேரடி அனுபவங்களும் இல்லையெனவும் அவர் கூறினார். இதேவேளை, இலங்கைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்துள்ளார். இராணுவத்தினர் சிவில் உடைகளில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற போதிலும், அவை குறித்த எவ்வித அத்தாட்சிகளும் இல்லாத நிலையில் எம்மால் அதனை ஊர்ஜிதம் செய்ய இயலாதுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இடம் பெயர்ந்தோர் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வருவதற்கான வாகன வசதிகளை செய்து கொடுத்தமை மற்றும் எழுந்தமானமாக வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டமை ஆகிய தேர்தல்கள் ஆணையாளரின் செயற்பாடு களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். சிரிய இரசாயன ஆயுதங்களை அகற்ற ரஷ்யா இராணுவ உதவிசிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் திட்டத்திற்கு உதவியாக அங்கு இராணுவத்தை அனுப்ப தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா - ரஷ்யாவுக்கு இடையில் இணக்கம் ஏற்பட்ட இந்த திட்டத்திற்கு ரஷ்ய இராணுவ கண்காணிப்பாளர்கள் உதவ முடியும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரொவ் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். எனினும் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா பயமுறுத்துவதற்கு பயன்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். சிரியா தன்னிடம் உள்ள இரசாயன ஆயுதங்கள் குறித்த தரவை சமர்ப்பித்ததாக சர்வதேச இரசாயன ஆயுத கண்காணிப்பு நிறுவனம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. சிரியாவிடம் சுமார் 1000 தொன் இரசாயன ஆயுதம் கையிருப்பில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அகற்ற பெருந்தொகை படையினர் தேவையில்லை என்றும் ஒரு சிறு தொகை கண்காணிப்புப் படை போதுமானது என்றும் லவ்ரொவ் விபரித்தார். அத்துடன் அரபு நாடுகள் மற்றும் துருக்கியும் இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட அழைப்பு விடுத்தார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகள் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான தனது குறுட்டுத்தனமாக செயற்பாட்டுக்கு முயற்சித்து வருவதாகவும் இந்த பேட்டியில் லவ்ரொவ் குற்றம் சாட்டினார். விக்னேஸ்வரன் ஜனாதிபதியை சந்திப்பது பிரச்சினையை தீர்க்க நல்ல அறிகுறியாகும்ஜனாதிபதி அவர்களை நான் சந்தித்து பேசத்தயாராக இருக்கிறேன் என்று திரு.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் கருத்து உண்மையிலேயே பாராட் டப்பட வேண்டியதாகும். எதிர்ப்பு அரசியலை நடத்தாமல் இணக்கப்பாட்டு அரசியலின் மூலமே நல்லெண்ணத்தை வலுப்படுத்தி, வடபகுதியின் வளர்ச்சிக்கு உதவ முடியுமென்ற திரு.விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டின் காரணமாகவே ஜனாதிபதியை சந்தித்து பேசவிரும்புவதாக கூறியிருக்கிறார் என்று அரசியல் அவதானிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வடமாகாண மக்களின் தீர்ப்புக்கு நாம் மதிப்பளிக்கிறோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப் பாளருமான திரு. பசில் ராஜபக்ஷவும் அறிவித்திருக்கிறார். புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். (மேலும்.....) போனஸாக கிடைத்த ஆசனங்களை கூட எனக்கு தரவில்லை ! வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வரலாறு காணாத வெற்றியை ஈட்டியுள்ளார்கள். இதன் மூலமாக 2 ஆசனங்கள் போனஸாகக் கிடைத்தது. கிடைக்கப்பெற்ற இந்த ஆசனங்களில் ஒன்றை, முஸ்லீம் சகோதரர் ஒருவருக்கும் மற்றையதை பெண் ஒருவருக்கும் கொடுத்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு. நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்த்தலில் ஆனந்த சங்கரி போட்டியிட்டு படுதோல்வியை தழுவியுள்ளார். இன் நிலையில் போனஸ் ஆசனங்கள் 2 இருக்கிறது அதில் ஒன்றையாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு தரும் என்று அவர் நம்பியிருந்துள்ளார். ஆனால் அந்தக் கனவிலும் தற்போது மண் விழுந்துள்ளது. இதேவேளை வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி, திரு.விக்னேஸ்வரன் அவர்களை உத்தியோகபூர்வமாக முதலமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்ற செய்திகளும் தற்போது வெளியாகியுள்ளது. செப்ரம்பர் 23, 2013 வட மாகாண சபை தேர்தல் உண்மையில் வெற்றி யாருக்கு? (மட்டக்களப்பிலிருந்து - எழுகதிரோன் )
தமிழ் மக்களின் கடந்த கால இழப்புகளையும் அழிவுகளையும் நினைவு படுத்தியே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தேர்தலை எதிர்கொண்டனர். இறுதி யுத்தம் முடிந்த பின்னர் சமாதானம், சமூக நல்லிணக்கம், இனங்களிடையேயான ஒருமைப்பாடு என்பன மெல்ல மெல்ல முளை விட ஆரம்பித்தன. சுமார் நான்கு வருடங்கள் மீட்சி பெற்று வந்த இயல்பு வாழ்க்கைக்கு இந்த இரு மாதங்களுக்குள் கூட்டமைப்ப்பினர் ஆப்பு வைத்துள்ளனர். இந்த தேர்தலில் கூட்டமைப்பினர் பிணங்களை தோண்டிஎடுப்பதுபோல் இனங்களிடையேயான வெறுப்புணர்வை, பகைமையை, பழிவாங்கும் உணர்வை மீண்டும் தூண்டி விட்டுள்ளனர்.வாக்குகளை பெற்று கொள்வதற்காக மிக மோசமான முறையில் இனவாதமும், இனவெறியும் கூட்டமைப்பினரின் பிரச்சார மேடைகளில் அரங்கேற்றப்பட்டன. அதுமட்டுமன்றி தமிழ் மக்களை மீண்டும் ஒரு யுத்தத்துக்கு தயார் படுத்துவது போன்று இராணுவத்தினருடனான முறுகல்களுக்கு தூண்டிவிட்டனர். எத்தனையோ தமிழ், முஸ்லிம், சிங்கள அப்பாவி சிவிலியன்களை கொன்றுகுவித்த பிரபாகரனை ஒரு மாவீரனாக கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் நீதியரசர் விக்கினேஸ்வரன் பேசிய பேச்சுக்கள் சிவஜிலிங்கத்தைவிட அவரை தரம் தாழ்த்தியிருக்கின்றன.இந்த மிக மோசமான வழி முறைகள் ஊடாகவே சிங்களவர்களுக்கும் அரசுக்கும் எதிராக தமிழ் மக்களின் மன உணர்வுகளை சூடாக்கி அதனை தமக்கான வாக்குகளாக அபகரிப்பதில் கூட்டமைப்பினர் வெற்றி பெற்றுள்ளனர். (மேலும்.....) வட மாகாணசபை அதிகாரங்கள் இறைமையின் நிமித்தம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் - சம்பந்தன் 'வட மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவின் மூலம் பெறப்பட்டுள்ள மாகாணசபைக்கான அதிகாரங்கள் அனைத்தும் இறைமையின் நிமிர்த்தம் பகிர்தளிக்கப்பட வேண்டும்' என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், 'எமது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப் போன்று வடக்கு மாகாணசபை ஆட்சியை நடத்துவதற்கான அதிகாரம், நிர்வாக மற்றும் நீதி அதிகாரங்கள் அனைத்தும் மக்களுக்குரிய இறைமையின் நிமிர்த்தம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்' என்றார். 'வடக்கு மாகாணத்தில் தற்போது இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்றது. இராணுவமானது தனது வேலைக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இது தொடர்ந்து இடம்பெற நாங்கள் இடமளிக்கமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவினை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். (மேலும்.....)மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம்வடமாகாண சபைக்கு முழுமையான ஒத்துழைப்பு - பசில் ராஜபக்ஷ புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாரென பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டமானது தேர்தலை இலக் காக கொண்டு முன்னெடுக் கப்பட்டதொன்றல்ல. அது அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகவே நாம் கருதுகின்றோம். வட மாகாணத்தின் புதிய முதலமைச்சர் தலைமையிலான நிர்வாகம் அந்தப் பகுதி மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமென தான் நம்புவதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (மேலும்.....) ஐ.தே.க., ஜே.வி.பி. பெருந்தோல்வி மு.கா. வாக்கு வங்கியில் பாரிய சரிவு நடந்து முடிந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி (ஜே.வி.பி) என்பன படுதோல்வி அடைந்துள்ளதோடு முஸ்லிம் காங்கிரஸ் பாரிய பின்னடைவை அடைந்துள்ளதாக தேர்தல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். மத்திய மாகாணத்தில் ஐ.தே.க. உறுப்பினர் தொகை 6 இனாலும் வடமத்திய மாகாணத்தில் இரண்டினாலும் குறைவடைந்துள்ளதோடு வடக்கில் ஒரு உறுப்பினரைக் கூட ஐ.தே.க. பெற முடியாது போனமை குறிப்பிடத்தக்கது. (மேலும்.....) TNA victory in SL "a verdict against Rajapaksa govt" - D Raja Hailing the Tamil National Alliance's victory in provincial council polls in Sri Lanka as being "significant" one, CPI Leader D Raja today said "it is a verdict against the (Mahinda) Rajapaksa government". "It is a significant verdict given by Tamil people in the Northern Province of Sri Lanka. Primarily, it is a verdict against the Rajapaksa government", Raja told PTI. "Now the Rajapaksa government should own accountability for all it did to Tamil people," Raja added. "If the Rajapaksa government has any respect for the verdict of the people, it should immediately stop militarisation of the Tamil areas and the forced disappearance of Tamil youth," he said. The island government should come forward for a political solution. It is for the Tamil people of Sri Lanka to decide what kind of political solution they want, he said. (more...) தெற்கு அரசியலில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்திருக்கும் ஜனநாயக கட்சிமுன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியானது தென்பகுதி அரசியலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது. நடந்து முடிந்த மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் இதுவரை காலமும் தெற்கில் மூன்றாவது சக்தியாக வலம் வந்த மக்கள் விடுதலை முன்னணியை பின்தள்ளிவிட்டு ஜனநாயக் கட்சியானது மூன்றாவது சக்தியாக வந்துள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக் கட்சியானது ஐந்து ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டுள்ளது. எனினும் இதுவரை காலமும் தெற்கில் மூன்றாவது சக்தியாக காணப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியானது வடமேல் மாகாணத்தில் மட்டும் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது. இரசாயன ஆயுத தரவுகள் சிரிய அரசினால் கையளிப்பு சிரியா தனது இரசாயன ஆயுதம் குறித்த செயற்பாடுகளை தம்மிடம் வழங்கியிருப் பதாக சர்வதேச இரசாயன ஆயுத கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. ரஷ்யா - அமெரிக்காவுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்ட சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் திட்டத்திற்கு அமைய, சிரியா தன் மீதான ஒரு வார கெடு முடிவதற்குள் இந்த தகவலை வழங்கியுள்ளது. சிரியாவிடம் சுமார் 1000 தொன்கள் இரசாயன ஆயுதங்கள் கையிருப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது. புதிய உடன்படிக்கையின்படி அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் சிரியாவிடம் இருக்கும் அனைத்து இரசாயன ஆயுதங்களும் அகற்றப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. “எமக்கு கிடைக்கப் பெற்றிருப்பது சிரிய அரசின் முழுமையான இரசாயன ஆயுதம் தொடர்பான செயற் திட்டம் என்பதை எம்மால் முழுமையாக உறுதி செய்ய முடியாது” என இரசாயன ஆயுதங்களை தடுக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. டமஸ்கஸ் புறநகர் பகுதியில் கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி நூற்று க்கணக்கானோரை பலி கொண்ட இரசாயன தாக்குதல் குறித்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு மீது குற்றம் சாட்டுகின்றன. எனினும் அதனை மறுக்கும் அஸாத், இந்த தாக்குதலுக்கு கிளர்ச்சி யாளர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார். இந் நிலையில் சிரியா தொடர்பில் பாதுகாப்பு சபையில் கொண்டுவர திட்டமிடப்பட்டி ருக்கும் தீர்மானம் குறித்து நிரந்தர அங்கத்துவ நாடுகளுக்கு இடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. பாகிஸ்தான் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு: 52 பேர் பலிபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கிறிஸ்தவ தேவால யத்திற்கு வெளியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 52 பேர் கொல்லப் பட்டதோடு 40 க்கும் அதிகமானவர் கள் காயமடைந்தனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை ஆராதனை யில் பங்கேற்க மக்கள் தேவாலய த்தில் ஒன்றுகூடி இருந்தவேளை இரு தற்கொலைதாரிகள் குண்டை வெடிக்கச் செய்ததாக குண்டு செயலிழக்கும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். கொல்லப்பட்டோரில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். குண்டு வெடித்தபோது தேவாலயத்தில் 500 முதல் 600 பேர் வரை இருந்துள்ளனர். முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானில் 1.6 வீதம் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். கென்யாவில் வணிக வளாகத்தில் ஆயுததாரிகள் தாக்குதல்: 59 பேர் பலிகென்ய தலைநகர் நெய்ரோபிலுள்ள வணிக வளாகத்தின் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளதோடு 175 பேர் காயமடைந்துள்ளனர். அல் ஷபாப் ஆயுதக் குழுவால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த தாக்குதல் இரண்டாவது நாளாக நேற்றைய தினத்திலும் நீடித்தது. இதில் மேலும் பலர் தொடர்ந்து பிணைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வணிக வளாகத்தை சுற்றி இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதோடு தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டவாறு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. அத்துடன் வணிக வளாகத்தின் ஒரு பகுதியை ஆயுததாரிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். சோமாலியாவில் கென்ய இராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அல் ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. சோமாலியாவில் அல் ஷபாபுக்கு எதிராக 2011 தொடக்கம் சுமார் 4000 கென்ய படைகள் போராடி வருகிறது. இந்த தாக்குதல் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரும் பாரிய இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கென்ய அரசு அறிவித்துள்ளது. ஈராக்கில் இறுதிக் கிரியையில் குண்டு தாக்குதல்; 60 பேர் பலிஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தலைநகர் பக்தாதின் சத்ர் பகுதியில் இறுதிக் கிரியை நிகழ்வொன்றின் போது இடம் பெற்ற குண்டு தாக்குதல்களில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். இறுதிக் கிரியையில் பங்கேற்றோர் ஒன்று கூடியிருந்த பகுதியை இலக்குவைத்து ஒரு தற்கொலை கார்குண்டு தாக்குதல் உட்பட இரு குண்டு தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர், அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் பொலிஸார் விரைந்த நிலையில் மூன்றாவது குண்டு வெடித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள், பெண்களும் உட்படுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் 120 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம் பெற்ற இந்த தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை. செப்ரம்பர் 22, 2013 என் மனவலையிலிருந்து..... தேர்தலின் ஜனநாயக முடிவுகளை மதிப்போம் (சாகரன்) வட மாகாணசபைத் தேர்தல் முடிவுற்று தேர்தல் முடிவுகளும் முழுவதுமாய் வெளிவந்தும் விட்டன. பொதுவான எதிர்பார்ப்புக்கள் கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் தமிழ் அரசுக் கட்சி பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. த.தே. கூட்டமைப்பு மக்களின் வேண்டி நின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அப்பால் 38 இல் 30 ஆசனங்களை அவர்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளனர். அபிவிருத்திகளை தொடர்ந்தும் செய்வதற்கு தமக்கு வாக்களிக்குமாறு கோரிநின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இற்கு மக்கள் 25 வீதமான ஆதரவுகளை மட்டும் வழங்கியிருக்கின்றனர். அரசின் அபிவிருத்தியைவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் மக்கள் கூடுதலான நம்பிக்கை வைத்திருப்பதை இது எடுத்தியம்பி நிற்கின்றது. இத் தேர்தலை தமிழ் மக்கள், தமிழ் மக்கள் எதிர் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க மறுக்கும் இலங்கை அரசு என்ற கோதாவில் பார்த்திருப்பதாகவே எனக்கு புலப்படுகின்றது. மக்களின் பார்வை சரியா பிழையா என்பதை தீர்மானிக்கும் விடயம் அமையப்போகும் மகாணசபை ஆட்சிக்காலம் ஆகும். தமிழ் அரசுக் கட்சி எவ்வாறு மகாணசபையை ஆட்சி புரியப்போகின்றது என்பதில் இது தங்கியிருக்கின்றது. தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் ஒரு ஐக்கியமான மாற்று அணி தமிழ் தேசிக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாக தேர்தல் களத்தில் நின்றிருந்தால் தமிழ் அரசுக் கட்சியின் வெற்றி வாய்புக்களில் ஒரு மாற்றத்தைக் கண்டிருக்க முடியும். இதனைத் தேர்தலுக்கு முன்னைய காலங்களிலும் வலியுறுத்தி வந்தாலும் இது சாத்தியப்படவில்லை. சரி எப்படி இருப்பினும் தற்போது வடமாகாண சபையின் முதல்வர் விக்னெஸ்வரன்தான். எப்படி கிழக்கின் முதல்வர் சந்திகாந்தன் என்பதை நாம் ஏற்று அன்று செயற்படவேண்டும் என்று கோரினோமோ இதேபோலவே இன்றும் வடமாகாணத்தில் முதல்வர் விக்னேஸ்வரன்தான். இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதல் அமைச்சர் வரதராஜப்பெருமாள் என்பதை தமிழ் மக்கள் ஏற்கவேண்டுமோ அதேயளவு நியாயங்கள் இன்றும் விக்னேஸ்வரனை முதல் அமைச்சராக ஏற்கவேண்டும் என்பதிலும் உண்டு. மறு வழத்தில் இலங்கை அரசு வடமாகாணசபை தவிர்ந்த ஏனைய 8 மாகாண சபைகளில் தனது ஆட்சியை நடத்தினாலும் இலங்கையின் ஒன்பதாவது மகாணமான வட மாகாணத்திலும் ஆட்சியிலுள்ள மாகாண அரசை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும். இதில் இரு தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும். வட மாகாண தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை தமது முதல் அமைச்சர், ஏனைய மகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மத்திய மாகாண அரசுகளிடையேயான சம்பிரதாயங்களுக்கு ஏற்ப சந்திப்புக்கள், வரவேற்புகள், பேச்சுவார்த்தைகள் என்பனவற்றில் ஈடுபடும்போது இவற்றின் தார்ப்பரியங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் பல விடயங்கள் எங்கள் மக்களுக்கு புதியனவையாக இருக்கலாம்,. ஏன் எனில் 25 வருடங்களுக்குப் பின்னரான முதலாவது மாகாணசபையல்லவா இது. மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் நாம் அதை வரவேற்போம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பெற்ற ஆணையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவேண்டுமென்றும், அவ்வாறு நிறைவேற்றினால் அதை நாம் எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சிக்காக வரவேற்கத் தயாராக இருப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வந்திருப்பதும், நீதியானதும், நேர்மையானதுமான தேர்தலை நடத்த ஒத்துழைத்தமையும் வரவேற்கத்தக்க விடயம். அதற்காக நாம் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறுகின்றோம். இதேவேளை, எமது வழிமுறைகளை ஏற்று எமக்கு வாக்களித்த மக்களுக்கும் விஷேடமாக நாம் நன்றி கூறுகின்றோம். (மேலும்.....) இழப்புக்கள் ஏற்பட்ட போதும் வடக்கு மக்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லைநடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எத்தனை இழப்புக்கள் ஏற்பட்ட போதும் வடக்கு தமிழ் மக்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை என்பது தெரிகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி பிழைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய ஏமாற்றுக்கட்சிகளை பெரும்பாலான முஸ்லிம்கள் நிராகரித்துள்ளமையையும் காட்டுகிறது. மன்னார், அமைச்சர் ரிசாதின் மாவட்டமாக இருந்தும் அங்கு ஆளுங்கட்சி ஒரு ஆசனத்தையே பெற்றுள்ளதன் மூலம் அவரது கட்சி வட மாகாண முஸ்லிம்களுக்கு உதவாமல் அவர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறது என்பது தெரிகிறது. எதிர்காலத்தில் அவர் தனது கட்சியை தூக்கி வீசிவிட்டு வன்னி முஸ்லிம்களுக்கு வேலை செய்யாவிட்டால் அடுத்த பாராளுமன்ற தேர்தல் அவருக்கு கேள்விக்குறியாகி விடும். அதன் பின் அவரை வைத்து பிழைப்பு நடத்தும் செயலாளர் நாயகம் கல்முனைக்கு ஓட வேண்டிய நிலைவரும். (மேலும்.....) தேர்தல் சிறப்புச் செய்திகள் ஆனந்த சங்கரி தோல்வி தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இலங்கை தமிழரசு கட்சி சார்பாக ப.அரியரட்ணம் 27,264 விருப்பு வாக்குகளையும் குருகுலராஜா 26,427 விருப்பு வாக்குகளையும் பசுபதிப்பிள்ளை 26,132 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக தவநாதன் 3,753 வாக்குகளையும் பெற்றுள்ளார். யாழ். விருப்பு வாக்குகள் சி.வி.விக்னேஸ்வரன் க்கு முதலிடம் இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக சி.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளையும் அனந்தி சசிதரன் 87,870 விருப்பு வாக்குகளையும் தர்மலிங்கம் சித்தார்த்தன் 39,715 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். அத்துடன் பாலச்சந்திரன் கஜதீபன் 23,669 விருப்பு வாக்குகளையும் இ.ஆர்னோல்ட் 26,888 விருப்பு வாக்குகளையும் கந்தையா சிவஞானம் 26,747 விருப்பு வாக்குகளையும் எம்.கே.சிவாஜிலிங்கம் 22,660 விருப்பு வாக்குகளையும் ஐங்கரநேசன் பொன்னுத்துரை 22,268 விருப்பு வாக்குகளையும் எஸ்.சுகிர்தன் 20,541 விருப்பு வாக்குகளையும் கே.சயந்தன் 20,179 விருப்பு வாக்குகளையும் விந்தன் கனகரத்தினம் 16,463 விருப்பு வாக்குகளையும் ஏ.பரம்சோதி 16,359 விருப்பு வாக்குகளையும் கந்தையா சர்வேஸ்வரன் 14,761 விருப்பு வாக்குகளையும் வி.சிவநேசன் 13,479 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலலேந்திரன் 13,632 விருப்பு வாக்குகளையும், அங்கஜன் இராமநாதன் 10,034 வாக்குகளையும் பெற்றுள்ளனர். வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள் வவுனியா மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பினை வவுனியா மாவட்ட செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அறிவித்துள்ளது. இதனால் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் 19,656 விருப்பு வாக்குகளையும், கந்தர் தாமோதரம் லிங்கநாதன் 11,901 விருப்பு வாக்குகளையும் ம. தியாகராசா 11,681 விருப்பு வாக்குகளையும் ஐ.இந்திரராசா 11, 535 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பகா தர்மபால செனவிரத்தின 5,148 விருப்பு வாக்குகளையும் ஏ.ஐயதிலக 4,806 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். முல்லை. மாவட்ட விருப்பு வாக்குகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக அன்ரனி ஜெகநாதன் 9,309 விருப்பு வாக்குகளையும் சிவப்பிரகாசம் சிவயோகன் 9,296 விருப்பு வாக்குகளையும், துரைராஜா ரவிகரன் 8,868 விருப்பு வாக்குகளையும் கனகசுந்தரம் சுவாமி வீரபாகு 8,702 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக அகமட் லெப்பை காசீம் 1,726 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மக்கள் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர் - சி.வி.விக்கினேஸ்வரன்'வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும், அதேவேளை மக்கள் தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரான இரா. சம்பந்தன், 'மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள். அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள். அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம்' என்றும் கூறியுள்ளார். (பி.பி.சி)பதுமன் யுத்த தர்மத்திற்கு மாறாக தூதுவனை கைது செய்து சிறை வைத்த புலிகள் 2004 இல் கிழக்கிலிருந்து வன்னிக்கு தூது சென்றவர் றுதி யுத்தத்தில் பாதாள சிறையில் தடுத்து வைப்பு 2004 ஆம் ஆண்டு மார்ச் 4ம் திகதி புலிகளுக்குள் உருவான கிழக்கு பிளவினை சமாதானமாக தீர்த்து வைக்கும் முகமாக வடக்கிற்கு சமாதான தூது சென்றவர்தான் பதுமன். அவ்வேளை திருமலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த பதுமன் கிழக்கிலிருந்து வன்னிக்கு சமாதான தூது சென்றார். அனைத்து வித யுத்த அறங்களுக்கும் மாறாக தூதுவனை கைது செய்து பாதாள சிறையில் அடைத்தனர் வன்னி புலிகள். கிழக்கு பிளவை ஜனநாயக வழிகளில் தீர்க்கும் முயற்சியில் தனது உயிரை பணயம் வைத்து வன்னி சென்ற பதுமனை காணாத கிழக்கு மக்கள் “பதுமன் எங்கே? என்ற கேள்விகளோடு மெளனித்து கொண்டனர். எப்படியோ இறுதி யுத்தம் வரை புலிகளின் பாதாள சிறையினில் உயிரை கையில் பிடித்துகொண்டிருந்த பதுமன் இறுதி யுத்த வேளையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் தனது கடந்த கால பயங்கர வாத செயல்பாடுகளுக்காக நீதியை எதிர் கொண்டு இப்போது விடுதலையாகி உள்ளார். விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் திருகோணமலை தலைவர் பதுமன் என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் கடந்த புதன் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். வடமாகாணத்தில் தமிழ் அரசுக்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கைப்பற்றியது
வட மாகாண சபைத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 30
ஆசனங்களை ( போனஸ் 2 அடங்கலாக) கைப்பற்றி அமோக வெற்றியடைந்துள்ளது. இதுதவிர ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும்
கைப்பற்றியுள்ளன. யாழ் மாவட்டத்தில் 213,907 வாக்குகளை மொத்தமாக பெற்ற தமிழரசுக்
கட்சி 14 ஆசனங்களைக் கைப்பற்றியது. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால்
2 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற
வடக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தினை முற்றாக ஈர்த்திருந்தமை
குறிப்பிடத்தக்கது. இது தவிர வட மாகாணத்தின் மற்றைய மாவட்டங்களில் கட்சிகள் பெற்ற
ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு, வட மேல் மாகாணத்தையும் ஐ.ம.சு.கூ கைப்பற்றியதுஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களுடன் வட மேல் மாகாணத்தை கைப்பற்றியுள்ளது. வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் போனஸ் ஆசனங்கள் இன்றி வட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. மத்திய மாகாணத்தை கைப்பறியது ஐ.ம.சு.கூஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களுடன் மத்திய மாகாணத்தை கைப்பற்றியுள்ளது. வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் போனஸ் ஆசனங்கள் இன்றி மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 16ஆசனங்களையும் ஜனநாயக கட்சி இரண்டு ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படுவது வழமை. அதற்கமைவாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மேலதிக 2 ஆசனங்கள் மத்திய மாகாணத்தில் கிடைக்கவுள்ளன. 1987இல் மாகாணசபை சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் நேற்று தான் முதல் தடவையாக வடமாகாணசபை தேர்தல் நடைபெற்றது
தென்னிலங்கையையும், வட இலங்கையையும் இணைக்கும் நட்புறவுப் பாலமாக இருந்த யாழ்தேவி மீண்டும் செயற்பட ஆரம்பித்துவிட்டாள். 1987ம் ஆண்டில் இந்திய பிரதமமந்திரி ராஜீவ்காந்தி திடீரென ஒருநாள் முடிவு செய்து கொழும்பு மாநகரத்திற்கு விமானம் மூலம் தனது பரிவாரங்களுடன் அதிகாலையில் வந்து சேர்ந்தார். அதையடுத்து அவர் ஜனாதிபதி மாளிகையில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மீது அழுத்தங்களைக் கொண்டு வந்தோ, அல்லது அச்சுறுத்தல்களை மேற்கொண்டோ எதிர்ப்புகளுக்கு இடமளிக்காமல் இலங்கை இந்திய நட்புறவு ஒப்பந்தத்தை செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கையில் அதிகார பரவலாக்கலுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக மாகாணசபைகள் என்ற புதியதொரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. (மேலும்......) மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்நேற்றுக் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வட மேல் மற்றும் மத்திய ஆகிய 3 மாகா ணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மத்திய மாகாணம் கண்டி - 60%, மாத்தளை - 62% நுவரெலியா - 60% வடமேல் மாகாணம் புத்தளம் - 55-60%, குருநாகல் - 55% வட மாகாணம் யாழ்ப்பாணம் - 62%, கிளிநொச்சி - 70% வவுனியா - 65%, முல்லைத்தீவு - 71% மன்னார் - 70% செப்ரம்பர் 22, 2013யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி - 855 நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20,279 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 273,821 பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 426,813 இலங்கை தமிழரசுக் கட்சி - 14 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள் மன்னார் மாவட்டத்தை தனதாக்கிக்கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி
வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கைத்
தமிழரசுக் கட்சி - 03 ஆசனங்கள் வவுனியா இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது
வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின்
உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365 நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,416 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,781 பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644 இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள் யாழ்ப்பாணம் மாவட்டம்தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்வடமாகாண சபைத் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி - 7625 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1099 ஐக்கிய தேசியக் கட்சி - 35 சுயேச்சைக் குழு 6 - 16 சுயேச்சைக் குழு 7 - 12 செல்லுபடியாகும் வாக்குகள் - 8835 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 114 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 8949 பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 9301 வவுனியா மாவட்டம்தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்வடமாகாண சபைத் தேர்தலின் வவுனியா மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி - 901 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 323 ஐக்கிய தேசியக் கட்சி - 65 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 24 மக்கள் விடுதலை முன்னணி - 15 ஜனநாயகக் கட்சி - 12 சுயேச்சைக் குழு 6 - 05 சுயேச்சைக் குழு 7 - 01 செல்லுபடியாகும் வாக்குகள் - 1346 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 25 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 1371 பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 1402 கிளிநொச்சி மாவட்டம்தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி - 756 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 160 ஐக்கிய தேசியக் கட்சி - 01 பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 970 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 929 செல்லுபடியாகும் வாக்குகள் - 919 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 10 முல்லைத் தீவு மாவட்டம்தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி - 646 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 146 ஐக்கிய தேசியக் கட்சி - 02 ஜனநாயக கட்சி - 01 பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 831 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 800 செல்லுபடியாகும் வாக்குகள் - 795 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 05 மன்னார் மாவட்டம்தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்வடமாகாண சபைத் தேர்தலின் மன்னார் மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி - 1300 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 408 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 135
ஐக்கிய தேசியக் கட்சி - 7 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 17 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 1869 பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 1917 மாகாணசபைத் தேர்தல் மொத்த வாக்களிப்பு வீதம் (மாவட்ட ரீதியில்)வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு: மத்திய மாகாணம் கண்டி 60% மாத்தளை 62% நுவரெலியா 60% வடமேல் மாகாணம் புத்தளம் 55-60 % குருநாகல் 55% வடமாகாணம் யாழ்ப்பாணம் 62% கிளிநொச்சி 70% வவுனியா 65% முல்லைத்தீவு 71% மன்னார் 70% வட மாகாணத் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது- விக்னேஸ்வரன்வட மாகாணத் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை சிவிலியன்களாக வருகை தந்த இராணுவத்தினால் பல பகுதிகளில் தமிழ் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு முறையிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபைக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் தேர்தல் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். வாக்களிப்பு நிலையத்தின் முன் நடமாடிய சந்தேக நபரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்த மாவை
தெல்லிப்பளை, கொல்லங்கட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சைவ தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியின் முன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞனொருவரை பிடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்நபரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெல்லிப்பளை, கொல்லங்கட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சைவ தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது அப்பகுதியில் இளைஞரொருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடி வருவதை மாவை சேனாதிராஜா அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர் குறித்த இளைஞனிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு அவ்விளைஞன் மறுப்புத் தெரிவித்ததையடுத்து அந்நபரை அவர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். எம்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை - சுரேஷ் பிரேமச்சந்திரன்யாழில் தனது மற்றும் ஆதரவாளர்களது வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் வைத்து சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது இனந்தெரியாதாரோல் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நாம் அவரிடம் வினாவிய போது இத்தகைய சம்பவம் எதுவும் இடம்பெறவில்லையென தெரிவித்தார். யாழில் தாக்குதல், ஒருவர் காயம் யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்களிப்பு நிலையத்திற்கு மாற்றுத்திறனாளிகளை ஏற்றிச்சென்ற பஃரல் வாகத்தை இடைமறித்த முகமூடி நபர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அந்த வாகனத்தின் சாரதியை தாக்கியுள்ளனர். இச்சம்வம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முகமூடி அணிந்தவாறு மோட்டார் சைக்கிலில் வருகை தந்த ஆயுதம் தரித்தவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த வாகனத்தின் சாரதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கையிலிருது ஹீத்ரோ நோக்கி பயணித்த விமானம் அவசரமாக திசை திருப்பப்பட்டதுஇலங்கையிலிருந்து லண்டனின் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கி பயணித்த விமானமொன்று ஸ்டேன்ஸ்டெட் விமானநிலையத்திற்கு அவசரமாக திசை திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான யு.எல். 503 விமானம் 267 பயணிகளுடன் லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து விமானத்தில் இரு பிரித்தானிய பிரஜைகள் பயணித்ததாகவும் இவர்களில் ஒருவர் தம்மிடம் வெடிகுண்டொன்று உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த விமானம் நேற்று மாலை 7.30 மணியளவில் ஸ்டேன்ஸ்டெட் விமானநிலையத்திற்கு திசைதிருப்பப்பட்டுள்ளது. பின்னர் குறித்த பிரித்தானிய பிரஜைகள் இருவரும் எசெக்ஸ் பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விமானத்தில் பயணித்த மற்றையோர் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஹீத்ரோ விமானநிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பிந்திக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். செப்ரம்பர் 21, 2013 என் மனவலையிலிருந்து...... வன்முறைகளை தவிர்ப்போம், கண்டிப்போம் (சாகரன்) வன்முறைகள் எந்த வடிவில் இருந்தாலும் அது ஏற்புடையது அல்ல. அனந்தி எழிலன் வீட்டில் தாக்குதலாக இருந்தால் என்ன, வேறு எங்கு நடந்தால் என்ன இதனை யார் செய்திருந்தால் என்ன அது கண்டிக்கத்தக்கது. இது அப்பட்டமான ஜனநாயக மறுப்பு, மனித உரிமை மீறல். இதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை. இதேபோல் யாழ் உதயன் பத்திரிகை தொடக்கம் தமிழ் குறும் தேசியத்திற்கு வால்படிக்கும் சகல பத்திரிகைகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றோர் மீது விமர்சனம் என்ற நாகரிகச் செயற்பாட்டிற்கு அப்பால் அவதூறுகளை அள்ளி வீசுவதும் மனித உரிமை மீறல்கள்தான். அதுவும் சரவணபவன் போன்ற த.தே. கூட்டமைப்பு எம்பிகளின் பொய் முகங்களும், சுரேஸ் போன்றவர்களின் போர் அறை கூவல்களும் மக்கள் விரோத, மனித உரிமையை மீறவதற்கான செயற்பாடுகளின் வடிவங்கள்தான். புலிகளின் காலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள், மாற்று இனத்தவரகள் புலிகளால் கொல்லப்படும் போது இவற்றிற்கு எல்லாம் அதரவாக நேரடியாகச் செயற்பட்வர்கள் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அன்று நடைபெற்ற மனித உரிமை மீறல்களை ஐக்கியப்பட்டு தடுத்திருந்தால் இன்று நடைபெறும் மனித உரிமை மீறல்களைப்பற்றி இவர்கள் கதைப்பதில் உள்ள நியாயங்கள் வலுவானதாக, உண்மையானதாக இருக்கும். இதேபோல் தனது கணவன் எழிலன் உடன் இணைந்து மாற்றுக் கருத்தாளர்களின் குரல்களை மட்டும் அல்ல அவர்களின் உயிர்களையும் நிரந்தர மௌனமாக்கியபோது இவர்களின் மனித உரிமை மீறல் பற்றிய எதிர்ப்புக் குரல்கள் இவர்களிடம் இல்லாது விட்டாலும் ஆதரவுக்கரல் அல்லவா ஒலித்தது. அதுபற்றி இன்றுவரை வாய் திறக்காத ஜீவன்கள் இவை. இதில் கேபி உம் அடக்கம் கருணாவும் அடக்கம் ஏன் பிள்iளாயனும் அடக்கம். பொருட்களைக் தேடுதல் என்ற போர்வையில் வெள்ளைவான் கடத்தல்களும். மிரட்டல்களும், ஆயுதக் கலாச்சாரமும் போரின் முடிவுக்குப் பின்னரும் இன்னமும் தொடர்வது ஏற்புடையது அல்ல. இதேபோல் போர்காலத்திலும் போர் தவிர்ப்புக் காலங்களிலும் புலிகளும் அவர்களின் அடிவருடிகளும் அதுதான் இன்ற இருக்கும் த.தே. கூட்டமைப்பினரும் இதே மனித உரிமை மீறல்களை ஆதரவுக் கரங்களால் தாராளமாகச் செய்தனர். தேர்தலில் நிற்கும் த.தே. கூட்டமைப்பு உறுப்பினர் சுரேஸ் இன் தம்பி வெளிநாட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கி பொய் புரளிகள் கூட ஜனநாயக விரோத கருத்தியல் செயற்பாடுதான். இங்கு இன்று தேர்தல் களத்தில் நின்று கொண்டு மனித உரிமை மீறல், மிரட்டல்கள், ஜனநாயக மறுப்பு என்று கூச்சல் இடுபவர்களில் பலரின் கரங்கள் மனித உரிமை மீறல்களை கருவிகளால், கருத்தியலால் செய்தவைதான். தொடரும் அப்புக்காத்து அரசியல் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டுத்தருமா....? (சிவா ஈஸ்வரமூர்த்தி) முப்பது வருடகாலத்து ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களை அரசியல் வியாபாரம் ஆக்கும் கூட்டமைப்பை இன்று நிறைத்து நிற்பவர்கள் எந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் நலன்களுக்காக ஒரு சிறு கல்லைக்கூட நகர்த்தாத அல்லது தம்மை எந்தவகையிலும் அந்தப் போராட்டக் களங்களில் அடையாளப்படுத்திக் கொள்ளாத அப்புக்காத்துக்களுக்கெல்லாம் அப்புக்காத்தான விக்னேஸ்வரனை தற்போது எமது புதிய 'தேசியத் தலைவராக' தமிழ் மக்கள் மத்தியில் நிறுத்தியுள்ளனர். இலங்கை அரச துறையில் உயர்பதவி வகித்த இவர் தனது பதவிக்காலத்தில் தமிழ் மக்களுக்கான நீதி எதனையும் வழங்க முயற்சிக்காது, ஏன் இலங்கை மக்களுக்கு பொதுவாக என்று கூட நீதித்துறையில் எதனையும் சாதிக்காத இவர் மற்றொரு அப்புக்காத்துக்கெல்லாம் அப்புக்காத்தாக இருந்த சிவா பசுபதி இளைப்பாறிய பின் தமிழீழம் பேசியது போலவே இன்று தமிழ் மக்களின் தலைவராக மாறியுள்ளார். அந்த சிவா பசுபதியானவர் இப்போது அவுஸ்திரேலியாவில் தமது கடைசிக் காலத்தைக் கழித்துக் கொண்டு தமிழீழத்துக்கான சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறார். சிலவேளை அவர் தற்போதும் கொழும்பில் வாழ்க்கையை தொடர்ந்திருப்பாரேயானால் அவருக்கே இந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கும். (மேலும்.....) வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்கள் !
புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, உடையார்கட்டு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள
வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக அங்கிருக்கும்
இலங்கைச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். காலை 7 மணிக்கு
வாக்களிப்பு ஆரம்பமாகிய போது சற்று மந்தப்போக்கு காணப்பட்ட போதிலும் பின்னர் மக்கள்
வாக்களிப்பில் ஆர்வம் காட்டி வருவதாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்து
வாக்களிப்பதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றனர். மேலும் இதுவரை எவ்வித
தேர்தல் வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையெனவும் இலங்கைச் செய்தியாளர்கள்
தெரிவிக்கின்றனர் பத்திரிகை செய்தியால் யாழில் பரபரப்பு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்தார். தேர்தலை புறக்கணிக்கின்றது தமிழரசுக்கட்சி எனும் தலைப்பிலான செய்தியினால் யாழில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'உதயன்' என்ற பெயரிலேயே யாழ் வீதிகளில் இந்த பத்திரிகை வீசப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 5.00 தொடக்கம் இந்த பத்திரிகை வீதியில் வீசப்பட்டுள்ளதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நான்கு பக்கங்கள் கொண்ட இந்த பத்திரிகை மக்களை குழப்பும் நோக்கில் அரச அடிவருடிகளால் மேற்கொள்ளப்படுள்ளது என்று இது எமது பத்திரிகைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சதி இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணவபன் தெரிவித்தார். உரிமையா சலுகையா வரலாற்று முடிவு இன்று! எனும் தலைப்பியே இன்று சனிக்கிழமைக்குரிய உதயன் பத்திரிகை பதிப்பு வெளியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அனைவரும் வாக்களிப்பதன் மூலமே ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும்
வட மாகாண சபை வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக இன்று சனிக்கிழமை
நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும்.
அனைவரும் வாக்களிப்பதன் மூலமே ஜனநாயகத்தை உறுதிபடுத்த முடியும் என ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில்
ராஜபக்ஷ தெரிவித்தார். அமைதியான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய
அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேடமாக வட மாகாண
சபைக்காக இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பில் வாக்குரிமையுள்ள
அனைவரும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அனைவரும் வாக்களிப்பதன் மூலமே ஜனநாயகத்தை
உறுதிபடுத்த முடியும். வடக்கில் ஜனநாயகத்தை தொடர்ந்தும் நிலைநாட்டும்
செயற்பாடுகளையும் அபிவிருத்திகளையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும். எனவே
மக்கள் தேர்தலில் வாக்களிக்கவேண்டும்.
இதேவேளை இன்று நடைபெறவுள்ள வடமாகாண சபைக்கான தேர்தலிலை இராணுவத்தினர்
குழப்பாவிடின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்
பலத்துடன் வெற்றியீட்டும் எனவே சகல தமிழ் மக்களும் வாக்களிக்க முன்வர வேண்டும் எனத்
தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார். மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டும்குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழவேண்டும் என்று ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ. ஆர். அனந்த்மூர்த்தி தெரிவித்தார்.பெங்களூரில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ. ஆர். அனந்த்மூர்த்தி, நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். நரேந்திரமோடி பிரதமரானால், பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவார். மக்கள் அச்சத்துடன் வாழவேண்டும். முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, நரசிம்மராவ் ஆகியோர் ஆட்சி செய்தபோது, பிரதமர் பதவிக்கு கெளரவம் கிடைத்தது. ஆனால் நரேந்திர மோடி பிரதமரானால், அந்தப் பதவியின் கெளரவம் களங்கப்பட்டுவிடும். பாஜக ஒரு பாசிச கட்சி. இந்து மதத்தின் உண்மையான கோட்பாடுகளை அந்தக் கட்சியினர் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் விரோத ஆட்சி அல்ல. ஆனால் ஊழல் புரிந்துள்ளதால் அந்தக் கூட்டணி தண்டிக்கப்படவேண்டும். இதற்காக நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது மட்டுமே தீர்வல்ல என்றார் அவர். செப்ரம்பர் 20, 2013 வட மாகாண மக்களை வாழ விடுங்கள்! (எஸ்.ஹமீத்) பாவப்பட்டதும் பரிதாபத்திற்கும் உரிய ஒரு மாகாணம் இலங்கையில் இருக்குமென்றால், அது வட மாகாணத்தைத் தவிர வேறொரு மாகாணமாக இருக்க முடியாது. 30 வருடங்களுக்கு மேலாக யுத்தப் பேய் கடித்துக் குதறி சப்பித் துப்பிய மாகாணம் அது. இரத்த வாடை இன்னமும் வீசிக் கொண்டிருக்கும்-இழப்புகளின் ஓலம் இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கும்-மாகாணம் அது. அந்தகாரங்களுக்குச் சொந்தக்காரர்களாகிப் போன அபலைகளைக் கொண்டிருக்கும் மாகாணம் அது. அவயவங்களை இழந்து ஆறாத் துயரில் மூழ்கியிருக்கும் அப்பாவிகளைக் கொண்டிருக்கும் மாகாணம் அது. சொந்த ஊர்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் யுத்தத்தின் கோரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தாமாகவே வெளியேறிய தமிழ் மக்களையும் கொண்ட மாகாணம் அது! (மேலும்.....) வடக்கு தேர்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறும் வட மாகாண சபைத் தேர்தலானது இலங்கை மக்களுக்கு முக்கியமான ஒன்றாகும் என்பதுடன் அது இலங்கையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து பான் கீ மூன் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறிப்பாக வட மாகாணத்தில் 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலானது அரசியல் நல்லிணக்கம் மற்றும் இலங்கையர்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் மிக முக்கிய வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை; காங்கிரஸ் பெண் பிரமுகரிடம் விசாரிக்கவில்லையென மனு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் சந்திரசாமி, அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பெண் பிரமுகர் குறித்து சி.பி.ஐ. (பன்னோக்கு விசாரணை பிரிவு) விசாரிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள முதலாவது தடா நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 26பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.பிரசார நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் வடக்கில் வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பம்வடமாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் அரசாங்க கட்சிகளின் சார்பில் போட்டியிடாத வேட்பாளர்கள் மீதான தாக்குதல் வடக்கில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட வேட்பாளர்கள் மீதும் அரச சார்பற்ற சுயேட்சைக் குழுக்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செயற்பட்டுள்ளதாகவும் வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இரசாயன ஆயுதங்களை அழிக்கும் திட்டத்திற்கு சிரியா உடன்பாடுசிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிக்கும் திட்டத்திற்கு உடன்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உறுதியளித்துள்ளார். எனினும் அவைகளை அழிக்க ஓர் ஆண்டு காலமளவு எடுக்கும் என்றார். அமெரிக்காவின் ‘பொக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், டமஸ்கஸ¤க்கு அருகில் ஓகஸ்ட் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலை தமது படை மேற்கொள்ள வில்லை என அஸாத் குறிப்பிட்டார். சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அகற்றும் திட்டத்திற்கு கடந்த வாரம் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. (மேலும்.....) சிஐஏவின் சதிவேலைகள்!
முன்னாள்
ஏஜெண்டுகள்
அம்பலப்படுத்துகின்றனர்! சிஐஏ என்பது ஒரு வெறும் உளவு அறியும் ஸ்தாபனம் மட்டுமல்ல. அரசு களைக் கவிழ்க்கவும் அரசியல் தலை வர்களை கொலை செய்யவும் சதித்திட் டங்களை வரைந்து நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளது என்று லூயி உல்ப் என்ற அமெரிக்க இளைஞர் கூறியுள்ளார். அவர் உலகெங்கிலும் சிஐஏ கும் பல் நடத்திவரும் சதிவேலைகளையும் சித்துவேலைகளையும் அம்பலப் படுத்திவருகிற ஒரு சிறிய குழுவின் உறுப்பினர் ஆவார். அமெரிக்க அதி பரின் வெள்ளை மாளிகைக்கு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கட்டிடத்தின் பத்தாவது மாடியில் ஒரு சிறிய அரையில் இருந்து கொண்டு ஆணும் பெண்ணுமாக ஒரு சிறிய குழு, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. (மேலும்.....) செப்ரம்பர் 19, 2013 அமெரிக்காவில் 46.5 மில்லியன் பேர் வறுமையில் அமெரிக்காவில் வறுமையில் வாழ்வோரின் எண்ணிக்கை 46.5 மில்லியனாக அதிகரித்திருப்பது அந்நாட்டின் கணக்கெடுப்பு தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் அண்மைய பொருளாதார மீட்சி அந்நாட்டின் சாதாரண மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. கடந்த 2011 கணக்கெடுப்பின்படி வறுமையில் உள்ளோரின் எண்ணிக்கை 46.2 மில்லியனாக இருந்தது. இதன்படி அந்நாட்டின் வறுமை வீதம் எந்த மாற்றமும் இன்றி 15% ஆக நீடிக்கிறது. கடந்த ஆறு வருடங்களாக இந்த வறுமை வீதத்தில் முன்னேற்றம் இன்றி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்று 23,492 டொலருக்கு குறைவான வருமானத்தை பெறுவது வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோர் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 16.1 மில்லியன் சிறுவர்கள் மற்றும் 65 க்கு மேற்பட்ட 3.9 மில்லியன் முதியவர்கள் வறுமையில் வாழ்வதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. சுடலைக் குருவிகள் போன்றவர்கள் கூட்டமைப்பினர் - தவராசா யுத்தத்தை நிறுத்தவும் முயற்சிக்காமல், அழிவுகளைத் தடுக்கவும் முன்வராமல் சுடலைக் குருவிகள் போல் உளறிக் கொண்டு திரிந்தவர்கள் தான் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அவ்வாறானவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தப்போவதாக அறிக்கை விடுக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் சி. தவராசா தெரிவித்துள்ளார். (மேலும்.....)கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தைவிட பிரச்சனையானது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானம், ஒஸ்லோ மாநாட்டில் புலி பிரதிநிதிகள் கொண்டுவந்த முன்மொழிவுகள் என்பவற்றின் கலவையாக உள்ளது என கூறியுள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பலரின் விடுதலையை கூட்டமைப்பு தடுத்துவருகின்றது என்று இன்று குற்றஞ்சாட்டினார். விடுதலைப்புலிகளின்; சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் காரணமாக அவர்களை விடுதலை செய்யவேண்டாமென அதிகாரிகளிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வற்புறுத்துகின்றது என்றும் அவர் தெரிவித்தார். எஞ்சியுள்ள புலி அங்கத்தவர்களை விடுதலை செய்வதற்கு நான் என்னாலானதை செய்வேன். ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தான் ஒரேயொரு பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சி.வி விக்னேஸ்வரன் தலைமை நீதியரசராக இருந்தபோது புலிகளின் சந்தேநபர்களுக்கு உச்ச தண்டனையை வழங்கிவந்தவர். இது சிங்கள நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனையை விடவும் கூடுதலாகவே இருந்தது. ஆனால் இப்போது தேர்தலில் வெல்வதற்காக முன்னாள் போராளிகளின் உரிமைகள் பற்றி பேசுகின்றார். 2009 இல் புலிகளை சம்பந்தன் பாராட்டினார். ஆனால் பின்னர் தான் புலிகளின் கொலைப்பட்டியலில் இருப்பதாக கூறினார். ஏன் இந்த இரட்டை வேடங்கள் ?' என்றும் அவர் கேள்வியெழுப்பினார். வட மாகாண தேர்தல் நடவடிக்கையில் இராணுவத் தலையீடுகள் எதுவும் இல்லைமூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று ஏற்பாடு செய்திருந்த இறுதி செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையி லேயே அமைச்சர் மேற்கண்டவற்றை கூறினார். மத்திய மற்றும் வடமேல் மாகாணங்க ளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமோக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை வடக்கில் கடும் போட்டிக்கு மத்தியிலும் வெற்றியை எதிர்பார்க்கின் றோம். இதுவரை எந்தவொரு மாகாண சபைத் தேர்தலிலும் இல்லாத வகையில் இம்முறை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மத்தியில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.(மேலும்.....) வவுனியா நகர சபை தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர் குமாரசுவாமி தலைமையிலான குழு அரசுடன் இணைவு வவுனியா நகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தேசமான்ய எம். எஸ். குமாரசுவாமி தலைமையிலான குழுவினர் அர சாங்கத்துடன் இணைந்து கொண் டுள்ளனர். வவுனியாவிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காரியாலயத்தில் வைத்து சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த முன்னிலையில் வவுனியா நகர சபை உறுப்பினர் எம். எஸ். குமாரசுவாமி தலைமையிலான ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை நேற்று முன்தினம் பெற்றுக் கொண்டுள்ளனர். புளொட் அமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற குமாரசுவாமி 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை வவுனியா நகர சபை உறுப்பினராக இருந்த அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் போட்டியிட்டு 2009ம் ஆண்டு முதல் வவுனியா நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்துடன் இணைந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா நகர சபை உறுப்பினர் எம். எஸ். குமாரசுவாமி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் வவுனியா நகர சபை இயங்கி வருகின்ற போதிலும் 2009ம் ஆண்டு முதல் மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்க முடியாது போயுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து செயற்படும் கட்சியல்ல என்றும் வவுனியா நகர சபை உறுப்பினர் குமாரசுவாமி தெரிவித்தார். கிளாலி இறங்குதுறை பகுதியில் நேற்று முதல் மீன்பிடிக்க அனுமதியாழ். கிளாலி மீன்பிடி இறங்குதுறை உட்பட அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கடற்படை தளபதி மற்றும் கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருடனான சந்திப்பின்போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன நேற்று தெரிவித்தார். யுத்தம் நடைபெற்ற காலம் முதல் கிளாலி கடலேரி பகுதியில் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன யாழ். நகர் சென்றிருந்தபோது இது தொடர்பாக மீனவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். நேற்றுக் காலை கடற்றொழில் அமைச்சில் கடற்படை தளபதியுடனான சந்திப்பின்போது கிளாலி கடலேரிப் பகுதியில் எந்நேரமும் சுதந்திரமாக மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கு வதாக கடற்படைத் தளபதி உறுதிய ளித்தார். இது தொடர்பாக யாழ். கடற்படை அதிகாரிகளுக்கும் அவர் பணிப்புரை விடுத்தார். கிளாலி இறங்குதுறை உட்பட அதனை அண்டிய பகுதிகளில் நேற்று முதல் மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக யாழ். குடாநாட்டு மீனவர்களுக்கும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அறிவித்தல் விடுத்துள்ளார். செப்ரம்பர் 18, 2013 என் மனவலையிலிருந்து...... வடக்கு - கிழக்கு மாகாண சபை மக்கள் சேவையில் ஒரு கம்யூன் வாழ்வு (சாகரன்) இலங்கையில் மகாண சபை உறுப்பினர்களின் சம்பளம், ஏனைய சலுகைகள் ஒரு இலட்சத்திற்கு மேல். இலவச சொகுசு வாகனம், இலங்கை அரசின் பாதுகாப்பு, வாசஸ்தலம் இன்னும் இத்தியாதி இத்தியாதி. 27 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பெற்ற மகாண சபையிலும் இதே மாதிரியான சலுகைகள் இருந்தன. அன்று மகாண சபையை ஆண்ட பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அணியினரின் நான்கு அமைச்சர்கள் இருந்தார்கள் வரதராஜப்பெருமாள், கிருபாகரன், அபுயூசுப்( இவர் கம்யூனிஸ்ட் கட்சியன் முன்னாள் உறுப்பினரும் கூட), ஜோ செனிவரத்தன(மேர்ஜ் அமைப்பின் உறுப்பினர்), இராஜரத்தினம்(ஈ.என்.டி.எல்.எவ்.). கூடவே ஆளும் கட்சியில் பல ஈபிஆர்எல்எவ் மகாண சபை உறுப்பினர்கள் இருந்தனர் இவர்கள் தமது மாதச் சம்பளம், வாகனங்களை மகாண அரசை ஆண்ட தமது கட்சியிடம் ஒப்படைத்துவிட்டு வாழ்வின்; அடிப்படைத் தேவைக்காக கட்சி ஒதுக்கிய நிதியுடனும், மக்களின் சேவைக்காக வானங்களை மட்டும் பயன்படுத்தியே வந்தனர். ஒரு வகை கம்யூன் வாழ்வில் தம்மை ஈடுபடுத்தியிருந்தனர். இன்று மாகாண சபையில் தேர்தலில் நிற்கும் பலரும் இலங்கை அரசினால் வழங்கப்படும் இந்த சலுகைகளை தமது மக்களின் நலன்களுக்காக தமது கட்சியிடம் ஒப்படைக்க தயாரா. இச்சலுகைகளை குறி வைத்தே பலரும் தேர்தலில் நிற்கின்றனர். ஒரு கம்யூன் வாழ்வின் ஆரம்ப படியாக இதனை ஈபிஆர்எல்எவ் இனர் அன்று செய்தனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அன்றைய காலகட்டத்தில் அவர்கள் அருகில் இருந்து பார்த்தவன் என்ற வகையில் இதனை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன். திருகோணமலையின் நகரசபை மண்டபத்தில் தமது மாகாண அரசை கொண்டு நடத்தினர். தினமும் தென் இலங்கையின் மாகாண சபை உறுப்பினர்கள் வடக்கு –கிழக்கு மாகாண சபைக்கு விஜயம் செய்து 'ஒரு சுய ஆட்சிக்குரிய வடிவத்தில் நீங்கள் உங்கள் ஆட்சியை உருவகப்படுத்தி செயற்பட்டுவருகின்றீர்கள், மாகாண சபை உரிமைகளுக்கான உங்கள் போராட்டங்கள் வெல்ல வேண்டும் அது தங்கள் மகாணங்களுக்கும் கிடைக்கும் உரிமையாகவும் அமையும்' என்றும் அவர்கள் கூறிச்செல்வர். கூடவே எங்கள் மாகாணசபை உரிமைகளுக்கான போராட்டங்களில் தாமும் இணைந்து குரல் கொடுக்கப்போவதாகவும் வாக்கு அளித்துச் செல்வர். ஜே.ஆர். எவ்வளவோ முயன்றும் திருகோணமலையைத் தலை நகரமாக கொண்ட மாகாண சபை அமைவதை நிறுத்த முடியவில்லை. திருமலையைத் தவிர்த்து வேறு எங்காது மகாண சபையை அமைத்தால் தன்னால் சலுகைகள் வழங்க முடியும் என்று கூட ஆசை காட்டிப்பார்த்தார் ஈபிஆர்எல்எவ் இனர் மசியவில்லை. இன்று இருக்கும், இனி வரப் போகும் மகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்கான ஒரு கம்யூன் வாழ்வையும், அரசுக்கெதிரான உறுதியான நிலைப்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறியே. பதவிகளில் கிடைக்கும் பணமும், சலுகைகளும், வசதிகளுமே இவர்களின் குறி. இதில் தம்மை புடம் போட்ட தங்கங்களாக தீட்டப் போகின்றவர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும். இடிந்த கட்டத்தில் தனது வாசஸ்தலத்தைக் கொண்ட முதல் அமைச்சர் ஒருவரை இனிமேல் காணமுடியுமா என்பதுவும் கேள்விக்குறியே. எல்லாம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை இல்லாமல் போனதுடன் இல்லாமல் போய்விட்டது. புலிகளின் முக்கியஸ்தர் பதுமன் விடுதலை தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் திருகோணமலை தலைவர் பதுமன் என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். இராணுவ முகாம்களை தாக்கியமை, இராணுவத்தினரை தாக்கி கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.அமல் ராஜ் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க பாலம்பட்டார் பகுதி தலைவராக இருந்த காலத்தில் தாக்குதல்களை நடத்தினார் எனவும் கொலைகள் செய்தார் எனவும் இவர் மீது சட்டமா அதிபர் குற்றம் சாட்டியிருந்தார். குற்றம் சுமத்தப்பட்டடிவரின் ஒப்புதல் வாக்குமூலம் மாத்திரமே அவருக்கு எதிராக வைக்கப்பட்ட சான்றாக இருந்தது. இதிலும் பல குறைகள் உள்ளதை கருத்திற்கு கொண்டு நீதிமன்றம் விடுதலை இவரை விடுதலை செய்துள்ளது. பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு இவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தை ஐ.ம.சு.மு. கைப்பற்றும்! தொண்டமானாறு பாலம் திறப்பு
தொண்டமானாறு பாலம் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சினால் சுமார் 200 மில்லயின் ரூபா செலவில் தொண்டமானாறு பாலம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர். 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்த பாலம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்து இடம்பெற்று வந்தது. இந்த நிலையில் துரிதப்படுத்தப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யுனெப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் 129 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சிரியாவில் சரின் விஷவாயு பயன்படுத்தியது போர் குற்றமே; ஐ. நா. பாதுகாப்பு சபையில் அறிக்கைசிரியாவில் அகஸ்ட் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி ஆசாத் படையினர் விஷக் குண்டுகளை வீசி 1429 பேரை கொண்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனடிப்படையில் ஐ. நா. ஆய்வாளர்கள் சிரியாவில் சோதனை மேற்கொண்டனர். இதனறிக்கையை ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கீ முன் நேற்று முன்தினம் ஐ. நா. பாதுகாப்பு சபையில் சமர்ப்பித்தார். சிரியாவில் கடந்த மாதம் ஜனாதிபதி ஆசாத் படைக்கும், போராளிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அப்போது சரின் என்ற விஷவாயு பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான சுற்றுச்சூழல் இரசாயன மற்றும் மருத்துவ மாதிரிகளுடன் தெளிவான மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்களை ஐ. நா. ஆய்வாளர்கள் சேகரித்து இருக்கிறார்கள். சரின் என்ற இந்த விஷவாயு நரம்புகளை பாதித்ததால் குழந்தைகள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தலைநகர் டமஸ்கஸ் அருகே போராளிகள் வசமிருந்த கவுதா பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்று அந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை. இருந்தும் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு செய்தியாளர்களை பான் கீ மூன் சந்தித்தார். அப்போது, பொதுமக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த மொசமான இராசாயன தாக்குதலை 21ம் நூற்றாண்டின் மோசமான தாக்குதலாகவும், போர் குற்றமாகவும் அறிவிப்பதாகக் கூறினார். நயினாதீவு – குறிகட்டுவானுக்கான படகுப்பாதை போக்குவரத்து ஆரம்பம் யாழ். நயினாதீவுக்கும்; குறிகட்டுவானுக்கும் இடையிலான முதலாவது படகுப் பாதை போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், 61.141 மில்லியன் ரூபா செலவில் இந்த படகுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகுப் பாதையில் வாகனங்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்ல முடியும். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பெருந்தெருக்கள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். செப்ரம்பர் 17, 2013 உட்கட்சி பூசல்களால் பலவீனமடைந்துள்ள கூட்டமைப்பு வடபகுதியை வளமாக்குமா?தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்திற்காக இலங்கை அரசாங்கத்துடன் போராடுவதற்காகவே வடமாகாண சபைத் தேர்தலில் நாம் ஒற்றுமையாக போட்டியிடுகிறோம் என்று மார்பு தட்டிக் கொண்டு பொது மேடைகளில் உரை நிகழ்த்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தங்களு க்கிடையில் பெரும் அதிகாரப் பலப்பரீட்சையில் தற்போது ஈடுபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் விசனம் தெரிவிக்கிறார்கள். மாவை சேனாதிராஜா போன்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களும் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற அரசியலில் பல்லாண்டு காலம் இருந்துவரும் தலைவர்களும் தங்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் பிரதம வேட்பாளராக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதமை குறித்து பலத்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக வும் அதனால், அவர்கள் பகிரங்கமாக முதலமைச்சர் பதவிக்கு போட்டி யிடும் சி.வி. விக்னேஸ்வரனை ஆதரிப்பதைப் போல் இருந்தாலும் திரை மறைவில் அவரைவிட மற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதற்கு இப்போது பெருமுயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.(மேலும்.....) வடக்கு மாகாண வாக்காளப் பெருமக்களுக்கு சில தாழ்மையான வேண்டுகோள்கள் (அபிமன்யு) இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டிய வடக்கு மாகாணசபைத் தேர்தல் இன்னும் வெகு சில நாட்களில், எதிர்வரும் செப்ரம்பர் 21ம் திகதி, நடைபெறவிருக்கிறது. இந்த இருபத்தாறு ஆண்டுகள் நடைபெற்ற போர் ஏற்படுத்திய அனாவசிய அளப்பரிய உயிர்ப் பலிகள், உடமை அழிவுகள், அவயவ இழப்புகள், வாழ்வாதார அனர்த்தங்கள், இன்னல்கள், அனாதைகள், விதவைகள், மற்றும் இடப்பெயர்வுகள், இராணுவப் பிரசன்னங்கள், ஆகியவற்றின் பின்னணியில் இந்த வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலில் நீங்கள் வாக்குச் சாவடிக்குள் அடியெடுத்து, உங்களதும், உஙகளது பிள்ளைகளின் வருங்காலத்தை நிர்ணயிக்கப்போகும் வாக்குகளை அளிக்கும் முன்னர், பின்வரும் கேள்விகளுக்கான விடைகளைச் உணர்ச்சிகளுக்கு உட்படாமல், அறிவுக்கூர்மையுடன் சிந்தித்து, சீர்தூக்கி வரும் பதில்களுக்கேற்ப உங்களது வாக்குகளைப் போடுங்கள். (மேலும்.....) கூட்டமைப்பின் வேட்பாளர் உட்பட 50 பேர் கைதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் வவுனியா நகர்ப்பகுதியில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஆரம்பமாகி மாலைவரை இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையிலேயே இந்த பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் பிரதேச இளைஞர்கள், ஆதரவாளர்கள் இணைந்து மேற்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்றுமாலை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில் அங்கு வந்த வவுனியா பொலிசார் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்து வவுனியா பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) உள்ளிட்ட அனைவரையும் அவர்களின் கையெழுத்தைப் பெற்று விடுதலை செய்துள்ளனர். பிழையான நேரத்தில் சரியான கருத்தை தெரிவித்த விக்னேஸ்வரன் (எம்.எஸ்.எம். ஐயூப்)வட மாகாணசபை தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன், சென்னையில் வெளியிடப்படும் இந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தமிழ் நாட்டுத் தலைவர்களைப் பற்றி கூறிய ஒரு கருத்து இப்போது சர்ச்சையாகிக் கொண்டு வருகிறது. எதிர்ப்பார்த்ததைப் போலவே அக்கருத்துக்கு தமிழ் நாட்டிலிருந்தும் இலங்கை தமிழர்களில் சிலரிடம் இருந்தும் எதிர்ப்பு வரத் தொடங்கியுள்ளது. தமிழ் நாட்டுத் தலைவர்கள் தமது அரசியல் நலனுக்காக இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை பாவிப்பதாகவும் அதனால் இலங்கை தமிழர்களே பாதிக்கப்படுகிறார்கள் என்றும் விக்னேஸ்வரன் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார். (மேலும்.....) போதியளவு அதிகாரங்களும் சுயாட்சியும் எமக்கு வேண்டும் பெரும்பான்மையின மக்களை குழப்ப வேண்டாம் - சம்பந்தன் நாம் ஒருமித்த நாட்டிற்குள், பெரும்பான்மை இனத்தவர்களுக்குள் அடிமையாகிப் போகாமல் எமது நாட்டில், எமது பிரதேசத்தில் கௌரவத்துடனும் சுய மரியாதையுடன் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு போதியளவு அதிகாரங்களும் சுயாட்சியும் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றே கோரி நிற்கின்றோம். இதனையே தேர்தல்விஞ்ஞாபனத்திலும் தெரிவித்துள்ளோம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஜனாதிபதியும் தென்னிலங்கையின் பேரினவாத சக்திகளும் நன்கு விளங்கிப் படிக்க வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தை தென்பகுதி மக்கள் மத்தியில் தவறாக விமர்சிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஒன்றுபட்ட நாட்டிற்குள் உண்மையான, உறுதியான, விசுவாசமான, போதுமான அளவுக்கு அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமாக இனப்பிரச்சினை தீர்வுகாணப்பட வேண்டும் என்ற கருத்தையே நாங்கள் வெளிக்கொணர்ந்துள்ளோம். சர்வதேச பங்களிப்புடனே தீர்வு என்பதை கூறியுள்ளோம். இவ்விதமான தீர்வு ஒருமித்த நாட்டிற்குள் என்பதையும் தெளிவாக கூறியுள்ளோம். ஆகவே இவ்விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் விசேடமாக பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாமல் இருக்க வேண்டும் எனவும் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் என்றார். களங்கமற்ற எமது செயற்பாடுகள் மீது கறைபூசும் நோக்கில் கூட்டமைப்பு வடமராட்சி கிழக்கில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புகுந்து குழப்பம் விளைவித்ததாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் வழமைபோல் எம்மீது அவதூறு சுமத்தப்பட்டு பத்திரிகை ஒன்றில் வெளியாகிய செய்தியை நாம் முற்றாக மறுக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்ற வேளையிலும், நாம் சகிப்புத் தன்மையுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் ஜனநாயக முறைப்படி எமது பிரசார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றோம். இதனால் பெருகிவரும் எமக்கான மக்களின் ஆதரவைக் கண்டு சகிக்க முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் களங்கமற்ற எமது செயற்பாடுகள் மீது கறைபூசும் கபட நோக்கில் செயற்படத் தொடங்கியுள்ளனர். உடுத்துறைக் கிராம மக்களை விசனமடையச் செய்யும் வகையில், எமது வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீ ரங்கேஸ்வரனை (ரங்கன்) அநாகரிகமான வார்த்தைகளால் வசைபாடியும் உள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த அவ்வூர் மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் வாய்த்தகராறும், முறுகல் நிலையும் ஏற்பட்டதாக அறிய முடிகின்றது. அங்கு நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஈ. சரவணபவன் ஆகியோரைப் பார்த்து எமக்காக இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என உள்ளூர் பொதுமக்கள், கேள்வி கேட்ட நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கிருந்து அகன்று சென்றதாகவும் அறிவிக்கப்படுகிறது. அல்பேனியாவின் புதிய அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றதுஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் கடந்த ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடந்தது. இதில், ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட சோஷலிச தலைமையிலான இடதுசாரி கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. முன்னாள் பிரதமர் சாலி பெரிஷாவின் ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டமும், ஊழலும் நிறைந்திருந்தன. வெற்றிபெற்ற சோஷலிசக் கட்சி எடி ராமாவைப் பிரதமராக தேர்ந்தெடுத்து 20 பேர் கொண்ட அமைச்சர் குழுவையும் தேர்ந்தெடுத்தது. நேற்று முன்தினம் ஞாயிறன்று நடந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் இந்த அமைச்சரவை 82 – 55 என்ற அளவில் வாக்குகளைப் பெற்று அம்மன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது. பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடி ராமா (49) 3,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் ஏழ்மையை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளார். செப்ரம்பர் 16, 2013 என் மனவலையிலிருந்து..... தவராசா இற்கு பதிலளித்த? விக்னேஸ்வரன் சீமானுக்கு பதிலளிப்பாரா...? (சாகரன்)
ஒரே மேடையில் பகிரங்க விவாதத்திற்கு தயாரா? என அழைப்புவிடுத்த வடமாகாணசபைத் தேர்தல் ஈபிடிபி முதன்மை வேட்பாளரின் வேண்டுகோளுக்கு 'நாகரிகமாக?' நழுவலாக பதிலளித்து தப்பித்துக்கொண்ட விக்னேஸ்வரன் இன்று பிரபாகரனின் தம்பி சீமானின் 'சீறலுக்கு பதிலளிப்பாரா? என்பதே தற்போதைய கேள்வி. மேற்குலக நாடுகளில் தேர்தலில் பங்குபற்றும் பல்வேறு கட்சிகளும் பொது மேடையில் விவாதத்தில் ஈடுபடும் பண்புகளை கொண்டுள்ளன. இதன் ஒரு வடிவமாகவே தவராசா விக்னேஸ்வரனிடம் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விட்டிருப்பார் என நம்ப முடிகின்றது. அதுவும் இரண்டு மாதத்;திற்கு முன்பு தமிழ் மக்களுக்கு யார் என்று தெரிந்திராத விக்னேஸ்வரன் என்று விளித்து இலங்கை, டெல்லி இன் கைக் கூலி என்றும் விளித்துள்ளார் விக்னேஸவரனை சீமான். அண்மையில் கனடாவிற்கு விஜயம் செய்த சம்மந்தன், சுமந்திரன் குழுவினரை பிரத்தியேகமாக சந்தித்தவர்களில் நாடு கடந்த தமிழீழக்காரர், கனடிய தமிழ் காங்கிரஸ், கனடியத் தமிழ் பேரவை உடன் முக்கியமாக கலந்து கொண்டவர்கள் நாம் தமிழர் கனடா கிளையினர். சம்மந்தர் ஐயா, விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துவிட்டு புலம் பெயர் தேசத்திற்கு விஜயம் செய்து தாம் ஏன் வடமாகாணசபைத் தேர்தலில் பங்கு பற்றுகின்றோம்....? ஏன் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தோம் என்ற விளக்கத்தை ஐயா விளங்கப்படுத்திய போது எல்லோரும் தலையை ஆட்டிவிட்டு இப்போது நாம் தமிழர் சீமான் சீறுவதன் சூட்சமம் என்ன என்பதே தற்போதைய கேள்வி. இவரின் சீற்றம் ஒன்றும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் தரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தப்போவது இல்லை. என்றாலும் தமிழ் நாட்டிற்கு 2009 ல் சூட்கேஸ் காவிய சுரேஸ் இற்கும் சிவாஜிலிங்கத்திற்கும், வியாபாரங்களை சொத்துக்களைக் கொண்டுள்ள இவர்களுடன் கூடிய செல்வம் அடைக்கலநாதன், மாவையாருக்கு பிரச்சனைதான். அதுவும் சுரேஸ் ஐ மீட்ட விக்னேஸ்வரனுக்கு ஒன்று என்றால் சுரேஸ் துடிக்காமலா விடுவார். தமிழ்நாட்டு சொத்துக்களா? விக்னேஸ்வரனின் நட்பா? என்று இருதலைக்கொள்ளி எறும்பாக இருப்பது இவர்களே. அது சரி 1989 களில் பிரேமதாஸாவுடன் சேர்ந்து 'நாங்கள் சகோதரர்கள் நீங்கள் அந்நியர்கள்' (இந்தியாவை நோக்க) என்று உறுமிய பிரபாகரனின் தம்பி சீமானுக்கு வரலாறு தெரியுமோ தெரியாது. 2009 களில் நாம் தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழீழ ஆதரவாளராக பிந்திப் புறப்பட்ட சீமானுக்கு இது தெரியுமோ தெரியாது. கயல்விழியை மணக்கும் போது முன்னிலை வகித்த நெடுமாறன் ஐயாவிடம் அடிக் குறிப்பை கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். இவர் பலவேளைகளில் வரலாற்றைத் திரிப்பார். எனவே சோ. இராமசாமியிடம் அல்லது ஜெயலலிதாவிடம் தைரியம் இருந்தால் பிரேமதாஸ, பிரபாகரன் உறவு பற்றியும் 'நாங்கள் சகோதரர்கள் நீங்கள் அந்நியர்' என்ற பிரபாகரனின் வீரவசனங்கள் பற்றி சீமான் அறிந்து கொள்ளலாம். கூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்பது அரசியலுக்கேதாழ்த்தப்பட்ட தமிழர் என்பதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயர்ப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் உபதலைவர் மாணிக்கம் லோகசிங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். வடக்கில் தாழ்த்தப்பட்ட தமிழர் என்பதால் நான் பெயர்ப்பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்படுவேன் என்பதை ஏற்கெனவே உணர்ந்தவனாக நான் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன். என்னை வேட்பாளர் பட்டியலில் சேருங்கள் என்று நான் யாரிடமும் கேட்கவில்லை. ஆனால் சுரேஷ் பிரேமசந்திரன் அண்ணன் என்னை சந்தித்து அவரே எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டார். ஆனால் இறுதி நேரத்தில் தாழ்த்தப்பட்ட தமிழருக்கு இரண்டு இடம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறி என்னை கழற்றி விட்டார்கள். அவர்கள் கூறும் சாதி வேறுபாடு தாழ்த்தப்பட்ட தமிழர், உயர் குல தமிழர் என்பதை தேர்தலில் கூறக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களெனக் கூறிக் கொள்வோரின் பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்பதோடு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால், தமிழ்க் கூட்டமைப்பினர் இங்கு வசிக்கும் அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலிக்கடாக்களாக்க முயல்கின்றனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்களின் பிள்ளைகள் எவராவது யுத்தத்தில் இறந்திருக் கிறார்களா? யுத்தத்தில் அங்கவீனம் உற்றிருக் கிறார்களா? அல்லது காயமடைந்திருக்கிறார்களா? துப்பாக்கியொன்றை ஏந்தியிருக்கிறார்களா? ஆகக் குறைந்தது விளையாட்டுத் துப்பாக்கி யொன்றையாவது அவர்களது கையில் கொடுத்திருப்பார்களா? தலைவர்களின் பிள்ளைகள் எல்லோரும் படிப்பது இங்கிலாந்தில் அல்லது கனடாவில், இந்தியாவில், பிரான்ஸில். இந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலிக் கடாக்களாக்கி அவர்களது பிள்ளைகளுக்கு சொகுசு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கிறார்கள். இதனாலேயே இன்று எமது அப்பாவி மக்களின் பிள்ளைகளை பலியாக்க முயல்கிறார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முல்லைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.(மேலும்.....) வட மாகாண தேர்தலிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும்! (எஸ். ஹமீத்) வட மாகாணத்தைப் பொறுத்தவரை தேர்தலிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகி, வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது, 23 வருடங்களாக அகதி வாழ்விற்குள் நொந்து நூலாகி-வெந்து கரியாகிக் கிடக்கும் வட மாகாண முஸ்லிம்களுக்குச் செய்யும் பேருதவியாக இத் தருணத்தில் அமையும். வட மாகாண முஸ்லிம்களுக்கென்று இப்போது அத்தியாவசியமாகத் தேவைப்படுவது, அவர்களின் இருண்டு போன வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம். அந்த இருட்டு வாழ்க்கையிலிருந்து வெளியேறி ஓரளவாவது வெளிச்சத்தைக் கண்ட பின்புதான், தமது அரசியல் உரிமைகளைப் பற்றியோ, ஏனைய உரிமைகளைப் பற்றியோ அவர்களால் சிந்திக்கத் தொடங்க முடியும். இந்த வெளிச்சத்தை ஆளும் கட்சியினால்-அல்லது ஆளும் கட்சியுடன் இணைந்து தமது மக்களின் விடிவுக்காகப் போராடும் ரிசாத் பதியுதீனின் கட்சியினால் மட்டுமே வழங்க முடியும்.(மேலும்.....) சமஷ்டி பிரிவினையல்ல - விக்னேஸ்வரன் சமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பது பற்றி அரசாங்கத்தினால் கூறப்படவில்iலை. எந்த தீர்வும் இதுவரையிலும் முன்வைக்கப்படவுமில்லை, நாங்கள், எங்களின் அபிலாஷைகளை முன்வைத்தால், அதற்கும் குறை கூறுவார்கள். மூன்று மாகாணங்களுக்கான தேர்தல்கள் ஒரே காலத்தில் நடைபெற இருப்பதால், சிங்கள மக்களுக்கு ஏதாவது கூறுவுதற்காக இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் போல் இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.(மேலும்.....)திருமலையில் முஸ்லிம்களின் காணிகளை சுவீகரித்து படைமுகாம், விகாரை அமைக்க முயற்சி திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளைச் சுவீகரித்து விகாரை அமைக்கவும் தொல்பொருள் ஆய்வுகளை மேற் கொள்ளவும் படை முகாம்களை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக புல்மோட்டைப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதுடன் இதனை தடுத்து நிறுத்த முஸ்லிம் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள 13 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அரிசிமலை, பொன்மலைக்குடா, கொக்கிளாய், வீதிப் பகுதிகளிலுள்ள முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் சொந்தமான காணிகளை தொல் பொருள் ஆய்வு, விகாரை அமைத்தல், படைமுகாம் விஸ்தரித்தல், பூஜாபூமி வேலைத் திட்டம் ஆகியவற்றைக் காரணங்காட்டி சுமார் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்யப்படுகின்றது. அரிசிமலை, விகாரை, நாகவிகாரை என்ற சிறிய சிறிய விகாரைகள் இருந்த இடங்களில் பெரும் விகாரைகளை அமைப்பதற்காகவே இம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழ் இணையங்களில் புலிகளின் கொடி நீக்கம் பிரிட்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் உள்ளூர் லிவிசாம் பரோ கவுன்சிலும் தமிழ் இணையத்தளங்களில் புலிகள் இயக்கக் கொடி காண்பிக் கப்படுவதை தடை செய்துள்ளது. மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் மக்களுக்கு செய்யும் பணிகளை விளக்கிக் கூறுவதற்கு இந்த இணையத்தளங்கள் உதவுகின்றன. உலகெங்கிலும் எல்.ரி.ரி.ஈ. இந்த புலிகள் கொடியை தனது சின்னமாக வைத்திருக் கின்றது. பொலிஸார் மக்களுக்கு செய்யும் சேவையை தெளிவாக விளக்கும் முக மாகவே புலிகள் கொடியுடனான இந்த இணையத்தளம் அமைக்கப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகராலயமும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்தே லண் டனின் மெட்ரோ பொலிட்டன் பொலி ஸாரும் லிவிசாம் பரோ கவுன்சிலும் புலிகள் கொடியை அகற்றுவது என்று முடிவெடுத்தன. இந்த தீர்மானத்தை அடுத்து இரு இணையத்தளங்களில் இருந்து புலிகள் கொடி உடனடியாக அகற்றப்பட்டது. உலகெங்கிலும் பரந்துவாழும் சுமார் 80 மில்லியன் தமிழர்கள் தங்களுக்கென ஒரு தனியான கொடியை விரும்புகிறார்கள் என்று லண்டன் பொலிஸார் தெரிவித்தனர். சிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடையில் உடன்பாடுசிரியா தொடர்பிலான திட்ட வரைபு குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதன்படி சிரியா தன்னிடம் இருக்கும் இரசாயன ஆயுதம் குறித்த விபரங்களை ஒரு வாரத்திற்குள் கட்டாயம் வெளியிட வேண்டும் என உடன்படிக்கையில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரசாயன ஆயுதத் தளங்கள் 2014 நடுப் பகுதியில் முற்றாக அகற்றப்படும். இந்த செயற்திட்டத்தை கடைபிடிக்க சிரியா தவறும் பட்சத்தில் அதன் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஐ. நா. தீர்மானத்திற்கு சாத்தியம் ஏற்படும். எனினும் இந்த விடயத்தில் ஐ. நாவின் இணக்கம் இன்றியே நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு என அமெரிக்க நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இடையிலான உடன்பாட்டுக்கு சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஐ. நா. மற்றும் நேட்டோ என அனைத்து தரப்பும் தனது ஆதரவை வெளியிட்டுள்ளன. ‘இந்த உடன்பாடு சிரிய பதற்றத்தை குறைக்கும்’ என சீன வெளியுறவு அமைச்சர் வங் யீ நேற்று பீஜிங்கில் வைத்து குறிப்பிட்டார். மறுபுறத்தில் அசாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களின் சிரிய சுயாதீனப் படை அமெரிக்க, ரஷ்யாவின் உடன்பாட்டை நிராகரித்துள்ளதோடு, தொடர்ந்தும் போராடுவதாக உறுதி அளித்துள்ளது. இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது ஆயுதக் குழுவினரே - ஐ.நாவிடம் ஈரான் ஆதாரங்களை சிரியாவில் பஷார் அல் அசாத் அரசிற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டு வரும் ஆயுதக்குழுவினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈரான் அரசு ஒப்படைத்துள்ளது. சிரியாவில் பாஷர் அல் அசாத் அரசிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவினர் கடந்த இரண்டு வருடமாக உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 21 அன்று டமாகஸ் அருகே நடைபெற்ற சண்டையின் போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை சிரியா அரசு நடத்தியதாக கூறி அமெரிக்கா நேரடி ராணுவ தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்தபணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் வெளிநாடுகளை சிரியா அரசிற்கெதிரான நேரடியான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அமெரிக்கா ஆதரவு ஆயுதக்குழுவினரின் சதித்திட்டமே இந்த இரசாயன தாக்குதல் என சிரியா அரசு கூறி வருகிறது. அதற்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்துள்ளது. இதே போல் ரஷ்யாவும் தனக்கு கிடைத்த ஆதாரங்களை ஐ.நா சபையிடம் ஒப்படைத்து இரசாயன தாக்குதலை நடத்தியது ஆயுதக்குழுவினரே என எடுத்துரைத்து வருகிறது. இந்நிலையில் ஈரான் அரசு அந்நாட்டிற்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இரசாயன ஆயுதங்களை கையாண்டது ஆயுதக்குழுவினரே என ஐநா சபையிடம் ஆதாரங்களை ஒப்படைத்துள்ளது செப்ரம்பர் 15, 2013 கூட்டமைப்பு எல்லோரையும் எப்போதும் ஏமாற்றுவது சாத்தியமா? - சாந்தன் வடமாகாண சபை தேர்தல் தமிழ் மக்களை பொறுத்தவரையில்இந்த அரசாங்கம் என்ன செய்தது அல்லது என்ன செய்யும் என்பது பற்றியதல்ல.மாறாக TNA யினர் என்ன செய்கின்றனர்? நடை முறையில் என்ன செய்யப்போகின்றனர் என்பது பற்றியதே! ஒளிவு மறைவு இன்றி இந்த அரசாங்கம் அதிகார பரவலாக்கம் தொடர்பாகதனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. சுருக்கமாக சொல்வதானால்; அதிகாரப்பரவலாக்கம் பிரிவினைக்கு இட்டு செல்லும் என்றும் நாட்டை பிளவு படுத்த விடமாட்டோம் என்பதுமேஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. அரசாங்கம்TNA இனருடன் பல சுற்றுக்கள் பேசியிருக்கின்றதுஎனவேசாதாரண பொதுஅறிவுள்ள அனைவருக்குமே தெரிந்த இந்த விடயம் TNA இனருக்கும் நன்றாகவேதெரியும். (மேலும்.....) விக்னேஸ்வரனுக்கு சீமானின் பதில(லி)டி
ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தீர்மானித்தவர் செல்வா அவர்கள்தான் .தமிழ் நாடு இதனை முடிவுசெய்யவில்லை என்பது விக்னேஸ்வரனுக்கு தெரியாதோ? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு. இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். (மேலும்.....) ஜனாதிபதி – கே.பி சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது வடமாகாண தேர்தல், அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திலலேயே நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் வட மாகாண சபை தேர்தலுக்கான பிரசார பணிகளில் ஜனாதிபதி நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டார். இதன்பின்னர் இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கும் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு கே.பியை சந்தித்து கலந்துரையாடியதுடன் செஞ்சோலை சிறுவர் இலத்திலுள்ள சிறுவர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார். முல்லைத்தீவில் 'கோட்டாபய' கடற்படைத்தளம் முல்லைத்தீவில், இலங்கை கடற்படை அமைத்துள்ள புதிய தளத்துக்கு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடற்படையின் இந்த தளத்திற்கு 'எஸ்எல்என்எஸ் கோட்டாபய' தளம் என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் இந்த புதிய தளத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே திறந்து வைத்துள்ளார். முல்லைத்தீவில், இலங்கை கடற்படை 2011 ஜனவரி 13 ஆம் திகதி முகாம் ஒன்றை நிறுவியது. தற்போது, செம்மலை, நாயாறு, சிலாவத்தை பகுதிகளில் உள்ள கடற்படை முகாம்களுக்குப் பொறுப்பான தளமாக, 'எஸ்எல்என்எஸ் கோட்டாபய' நிறுவப்பட்டுள்ளது என்று கடற்படை அறிவித்துள்ளது. தேர்தல் காலத்தில் மட்டுமே சம்பந்தன் குழுவினரை வடக்கில் காணமுடிகிறதுஅதன் பின்னர் வழமைபோன்று கொழும்பில்தான் - டக்ளஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி வடக்கு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களின் டொலர்கள், ஸ்ரெலிங் பவுண்கள் மற்றும் யூரோக்களுக்காக வடக்கு தமிழ் மக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காட்டிக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களில் மட்டுமே சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்களை வடக்கில் பார்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கொழும்பில் உள்ள தங்களது சொகுசு வீடுகளுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் திரும்பி விடுவார்கள் என தெரிவித்துள்ளார். தங்களது பிள்ளைகளுக்கு வெளிநாடுகளில் கல்வி புகட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சுயநலவாத அரசியல்வாதிகளின் பொறியில் மக்கள் சிக்கிவிடக் கூடாது எனவும், மக்களுக்காக குரல் கொடுக்கும் ஈ.பி.டி.பி. கட்சிக்கு வாக்களிக்க வேண்டு மெனவும் அவர் கோரியுள்ளார். தமிழ்த் தேசியத்திற்கு பாடுபடுபவர்கள் பாதைகளில் பகிரங்க சண்டை சங்கரியைத் தோற்கடிக்க சிறீதரன் முயற்சி, விக்கியை வீழ்த்த மாவை சுரேஷுடன் கூட்டுஅடிதடிச் சண்டை இப் பொழுது வட மாகாண சபைத் தேர்தலிலும் களை கட்டி நிற்பதை காணக்கூடிய தாக இருக்கின்றது. தமிழ் இனத்தின் தேசிய விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்துள்ளதாக இலட்சியம் பேசினாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குள் பகிரங்கமாக அடிதடிச் சண்டை நடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த பொதுத் தேர்தலின் போதும் இந்த காலை வாரும் நடவடிக்கை யால்தான் தான் தோற்றுப் போனதாக அத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டி யிட்ட சி.வி.கே சிவஞானம் பின்னர் புலம்பியதை நாம் கேட்டோம். இம்முறை வட மாகாணசபைத் தேர்தலில் இந்த காலை வாரும் முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சற்றுத் தீவிரமடைந்திருப்பதைக் காண முடிகிறது. (மேலும்.....) ஜனாதிபதி 23 ஆம் திகதி நியூயோர்க் பயணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை நியூயோர்க் பயணமாகவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் உரையாற்றுவதற்கே அவர் நியூயோர்க் செல்லவுள்ளதாகவும் அங்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆறு நாட்கள் நியூயோர்க்கில் தங்கியிருப்பார் என்றும் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் டளஸ் அழகபெரும ஆகியோரும் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் உயிர்வாழும் வயதான நபராக எதியோப்பிய விவசாயி எதியோப்பியாவைச் சேர்ந்த விவசாயியொருவர் தனது வயது 160 எனவும் தானே உலகின் மிகவும் வயதானவர் எனவும் உரிமை கோரியுள்ளார். 1895 ஆம் ஆண்டு எதியோப்பியாவில் இத்தாலி தலையீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாபகத்தில் உள்ளதாக ஓய்வுபெற்ற விவசாயியான எடகபோ எப்பா தெரிவித்தார். எனினும் அவரிடம் தனது வயதை உறுதிப்படுத்துவதற்கு எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை. அவர் ஒரோமியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, 19 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற சம்பவங்களை விபரித்துள்ளார். இத்தாலியால் எதியோப்பியா ஆக்கிரமிக்கப்பட்டபோது, தான் இரு மனைவிகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாக அவர் கூறினார். அவர் கூறுவது உண்மையானால் உலக வரலாற்றுப் பதிவில் நீண்ட காலம் வாழ்ந்த நபராக அவர் இடம்பிடிப்பார், இதவரை உலக வரலாற்றில் அதிக காலம் உயிர் வாழ்ந்த நபராக பிரெஞ்சு பெண்மணியான ஜீன் கல்மென்ட் உள்ளார். அவர் 1997 ஆம் ஆண்டு தனது 122 ஆவது வயதில் மரணமானார். எழுதப் படிக்கத் தெரியாத சமூகத்தை சேர்ந்த எப்பாவின் வயதை உறுதிப்படுத்தக் கூடிய எவருமே உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வயது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அவர் உலகில் உயிர்வாழும் அதி வயதானவராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பார். தற்போது உலகில் உயிர் வாழும் அதிக வயதானவராக 115 வயதான மிஸவோ ஒகவா விளங்குகிறார். இராணுவம் சிவில் நிருவாகத்தில் தலையிடுவது தடுக்கப்பட வேண்டும் - வாசுதேவ வடக்கில் இராணுவத்தை முழுமையாக முகாம்களில் அடைக்க வேண்டும் என்ற கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்தை நிராகரிக்கின்றோம். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அதேவேளை இராணுவம் சிவில் நிருவாகத்தில் தலையிடுவது தடுக்கப்பட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதையே தனது வேலையாக கொண்டுள்ளார். வடபகுதியில் உள்ள இராணுவத்தினர் அனைவரையும் முகாம்களுக்குள் அடைப்பது என்பது முடியாத காரியம். வடக்கின் பாதுகாப்பிற்கு இராணுவத்தினரின் பிரசன்னம் அத்தியாவசியமானதாகும். ஆனால் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து காணப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது இதனை இல்லாது செய்ய வேண்டும். தம்மால் உருவாக்கப்பட்ட புலிகளாலே தமது தலைவர்கள் அழிக்கப்பட்டதை மறந்து செயற்படும் தமிழ்க் கூட்டமைப்புபுலிகளின் நிகழ்ச்சி நிரலை மீண்டும் நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. இதனை புறக்கணிப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடபகுதி மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென சர்வ மதத்தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஜனாதிபதியின் இணைப்பாளர்களான வணக்கத்துக்குரிய கலகம தம்மரன்சி தேரர், சர்வதேச இந்துமதபீட அமைப்பின் செயலாளர் பிரம்மஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் (பரபுசர்மா), வணக்கத்துக்குரிய அருட் தந்தை சரத் ஹெட்டியாராச்சி, ஹம்பாந்தோட்டை ஸ்ரீலங்கா மொஹம்மதியா சங்கத்தின் தலைவர் கலாநிதி அல்ஹாஜ் ஹசன் மெளலானா ஆகியோரே இதனைத் தெரிவித் துள்ளனர். (மேலும்.....) TNA கூறுவதில் உண்மை எது? தமிழ் மகனின் கேள்வி இது!தேர்தலில் தங்களை வெற்றிபெற வைத்தால் சர்வதேச சமூகம் உதவிக்கு வரும் என்கிறார்கள். கடந்த தேர்தல்களிலும் இதையே கூறினார்கள், யாரும் வரவில்லை. வாக்குப் பலத்தைத் தந்தால் இராணுவத்தை வெளி யேற்றுவோம் என்கிறார்கள். இராணுவத்தினர் குறித்து தீர்மானிப்பது மாகாண சபையல்ல, ஏமாற்றுகிறார்கள். மாகாண சபை மூலம் அரசியல் தீர்வை அடைய முடியாது. நமது பிரச்சினைக்குத் தீர்வு நவநீதம்பிள்ளை அவர்களின் மூலம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். மாகாண சபையை நடைமுறைப்படுத் துவதற்கூடாக அரசியல் தீர்வை அடைய முடியும் என்பதுதான் உண்மையில் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கும் கருத்து. இதனை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. (மேலும்.....) TNA முக்கியஸ்தர் அறுவர் ஸ்ரீல.சு. கவில் இணைந்தனர் அடுத்த புதுவருடத்துக்கு யாழ்தேவியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மீண்டும் உங்களைச் சந்திப்பேனென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ் நகரில்நேற்று மாலை தெரிவித்தார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஐ.ம.சு.மு. கூட்டத்தில் பங்கேற்று ஜனாதிபதி உரையாற்றினார். இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த 6பேர் ஜனாதிபதியின் முன்னிலையில் அரசுடன் இணைந்து கொண்டனர். வலிகாமம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் வசந்தநாதன் சிவானந்தன். வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வீரசிங்கம் சிவகுமாரன், வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை செல்வராஜா, முன்னாள் வலிமேற்கு பிர. சபை தலைவரும் சுயேச்சைக்குழு 3இன் முதன்மை வேட்பாளருமான நல்லநாதன் திரிலோகநாதன், சுயேச்சைக்குழு 3 வேட்பாளர் கணபதி கதிரவேலு, வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சூசைப்பிள்ளை சசிதரன் ஆகியோரை சு.கவில் இணைந்து கொண்டனர்.தென்னிலங்கையைச் சேர்ந்த எவரும் வடக்கை ஆளமுடியாதென்று கூறியவந்த ரி.என்.ஏ. இன்று தென்னிலங்கையில் இருந்து முதன்மை வேட்பாளரை இறக்குமதி செய்து களத்தில் இறக்கியுள்ளது. முன்னுக்குப் பின் முரணாகச் செயற்படும் இவர்களின் நடவடிக்கைகள் எனக்கே புதிராக விருக்கின்றன. இங்கு குழுமியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை பார்க்கும் போது நான் உண்மையில் மனமகிழ்கின்றேன். செப்ரம்பர் 14, 2013 யாழ்தேவி கிளிநொச்சியை சென்றடைந்தது யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியை சற்று முன்னர் சென்றடைந்துள்ளது. இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார். யாழ்தேவி ரயில் தனது பயணத்தை ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்தே இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பித்தது. கிளிநொச்சி ரயில் நிலையத்தை காலை 10.15 மணியளவில் வந்தடைந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் பயணியாக ஏறி பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்தேவி ரயில் சேவைகள் நாளை 15 ஆம் திகதி முதல் கிளிநொச்சிவரை நடைபெறும் என்று அறிவித்துள்ள ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 8.15 க்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை தனது சேவையை வழங்கி வந்த யாழ்தேவி 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதியின் பின்னர் வவுனியா வரை மட்டும் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாணத்திற்கு முதலாவது சமிக்ஞை விளக்குகள்
பொருத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியையும் ஆஸ்பத்திரி வீதியினையும் இணைக்கும்
முத்திரைச் சந்திப் பகுதியிலே இந்த முதலாவது வீதிச்சமிக்ஞை விளக்குகள்
பொருத்தப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மொறட்டுவ பல்கலைக்கழக
மாணவர்களினால் யாழ் நகரின் முக்கிய சந்திகளில் பயணிக்கும் வாகனங்கள்
எண்ணிக்கைகள் கணக்கெடுக்கப்பட்டதினைத் தொடர்ந்து முத்திரைச் சந்தியில்
வீதிச்சமிஞ்ஞை விளக்குகள் நேற்று மாலை பொருத்தப்பட்டுள்ளன.
யாழ்.நகரத்திற்குள் இருந்தும் ஏ – 9 வீதிக்கு செல்லும் வாகனங்கள்,
வெளியிடங்களிலிருந்து யாழ்.நகரத்திற்கு நுழையும் வாகனங்கள் முத்திரைச்
சந்தியினூடகவே பயணிப்பது குறிப்பிடத்தக்கது. மாகாணசபையை இல்லாதொழிக்கும் - திஸ்ஸ விதாரண 'தனிநாட்டினை பெறுவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளின் மூலம், வடமாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பது மட்டுமல்ல, மாகாண சபைகளை இல்லாது ஒழிப்பதற்காக நடவடிக்கைகளும் இருக்கின்றன' என்று சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 'தமிழ் தேசிய கூட்டமைப்பினால், இந்த தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள் குறித்து தான் கவலையடைவதாகவும், வெளி நாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டினை எடுக்கின்றார்களே தவிர, இங்கு இருக்கும் தமிழர்களின் நிலைப்பாட்டினை எடுக்கின்றார்கள் இல்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 'அரசாங்கத்துடன், இணைந்து யுத்தத்திற்கு பின்னரான மீள் இணக்கத்தினை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை சமாதானத்திற்கான முயற்சியை தவிர்த்து, மக்களின் நலனுக்காக கதைப்பது குறைவு' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு வடபகுதியை மீட்டு, தனிநாட்டு கோரிக்கைக்கான அறிக்கை விடுவதும், சமாதானத்திற்காக ஈடுபடுவதை தவிர்த்து முரண்பாடாக நடப்பது தவறாகும் என்றும் அவர் கூறினார். (மேலும்.....)23 வருடங்களின் பின் கிளிநொச்சி செல்லும் யாழ்தேவியில் ஜனாதிபதி இன்று பயணிப்பார் ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, கிளிநொச்சி ரயில் நிலையம், சுன்னாகம் உப மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார். இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும் ஜனாதிபதி அவர்கள், ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றவுள்ளார். இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஜனாதிபதி, சுன்னாகத்தில் 1800 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டிருக்கும் உப மின் உற்பத்தி நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார். எல்.ரி.ரி.ஈ யினரால் வடபகுதிக்கான ரயில் சேவைகள் சீர் குலைக்கப்பட்டதுடன், 1990 ஆம் ஆண்டுடன் வடபகுதிக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் ரயில் தண்டவாளங்கள் கழற்றப்பட்டு எல்.ரி.ரி.ஈ யினரால் பயன்படுத்தப்பட்டிருந்தன. புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்புபுலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற் பாடுகளுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பாக உயர்நிலைப் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கல்விகற்க அனுப்பிக்கொண்டிருக்கும் அதேவேளையில், இலங்கையிலுள்ள ஏழைத் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தூண்டுகிறார்கள் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் நல்ல வசதியாக வெளிநாடுகளில் நல்ல வருமானத்துடன் மகிழ்ச்சியாக வாழ் கின்ற போதிலும் அவர்கள் இலங்கை யிலுள்ள தமிழர்களுக்கு தீங்கிழைக்கும் கொள்கையையே கடைப்பிடிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இவ்விதம் சுயநலப்போக்கைக் கடைப் பிடிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இங்குள்ள தமிழர்கள் தமிழ்த் தாயகத்துக்காக ஆயுதப்போராட்டத்தில் இறங்கவேண்டு மெனத் தூண்டுவது மன்னிக்க முடியாத குற்றமென்றும் தெரிவித்தார். செப்ரம்பர் 13, 2013 வடக்கு மாகாணசபையை யார் கைப்பற்றவேண்டும்? (லியோ, ரெரன்ரோ, கனடா) வடமாகாண ஆட்சி யார் கையில் கிடைக்கப்போகின்றது என்பதே எல்லோர் முன் எழுந்துள்ள கேள்வியாகும் யார் வெல்வார்கள் யார் தோற்பார்கள் என்று ஆரூடம் கூறுவதற்கு ஓரு கிறிக்கற் போட்டியோ அல்லது உதைபந்தாட்டப்போட்டியோ அல்ல இது. யார் கட்டாயம் வெற்றிபெறவேண்டும் என்பதே முக்கியம். அபிவிருத்திக்கும், அரசியலுக்குமான இந்தத்தேர்தலில் சரியானவர்களும் அந்த மண்ணில் மக்களுடன் மக்களாக இருந்தவர்கள் மக்களின் பிரச்சினைகளை அனுபவரீதியாக அறிந்தவர்கள்தான் தெரிவு செய்யப்படவேண்டும். அபிவிருத்தியை எடுத்துக்கொண்டால் வடக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியாக ஓட்டும் (எக்கனமி எஞ்சின்) என்று கருதப்படும் கடற்தொழில், விவசாயம், பனம்பொருள் உற்பத்திகள் யுத்தம் முடிவுற்றபின்னர் வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதன்மூலம் வேலைவாய்ப்பையும் பெற்றதுமட்டுமல்ல வடக்கு மாகாணம் பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேற்றம் கண்டுவருகின்றது. அடித்தளமக்களின் பொருளாதாரம் கல்வி வேலைவாய்ப்பு முன்னேற்றம் கண்டுள்ளது. (மேலும்.....) டில்லி மாணவி பாலியல் வழக்கு நால்வருக்கும் மரண தண்டனை டில்லியில் 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் மாணவி ஒருத்தி ஆறு பேரால் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி இவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என்று ஏற்கெனவே தீர்ப்பளித்திருந்தார். அவர்களுக்கான தண்டனை ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்று அரச தரப்பு வழக்குரைஞர்கள் கோரியிருந்தனர். இருந்தும் தாம் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று குற்றவாளிகள் வாதிட்டனர். இந்த சம்பவம் இந்தியாவெங்கும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதுடன், பாலியல் வல்லுறுவுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவும் வழிவகுத்தது. கடந்த வாரம், இதே குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட பதின்பருவ இளைஞர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சீர்திருத்த நிலையத்தில் கழிக்க தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஆறாவது நபர் மார்ச்சில் சிறையில் இறந்து கிடந்தார். இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், உயர் நீதிமன்றம் அந்த தண்டனையை உறுதி செய்த பிறகே அதை நிறைவேற்க முடியும். கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இராவணா சக்தி தன்னிடம் கோரியதற்கிணங்கவே அந்த விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, தேர்தல்கள் ஆணையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியல்ல என்பதனை முதலில் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன். இலங்கை தமிழரசு கட்சியே ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாகும். எனினும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட அரசியல் கூட்டமைப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த கட்சி பதியப்படும் போதே அக்கட்சியின் கொள்கை அறிக்கையை தேர்தல்கள் ஆணையாளர் கோருவார். தேர்தல் காலத்தில் அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படாது. அதனால், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதி எனக்கு கிடைக்கவில்லை. அதனை அவர்கள் எனக்கு வழங்கவேண்டிய தேவையுமில்லை. எவ்வாறாயினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளேன் என்றார். புலிகளின் ஆயுத களஞ்சியங்களை அழிக்க அமெரிக்கா உதவியது தமிழீழ விடுதலைப்புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களை ஆழ் கடல் பகுதியில் வைத்து 2006 க்கும் 2008 க்கும் இடையிலான காலக்கட்டத்தில் அழித்தொழிக்க அமெரிக்க அதன் பூரண ஆதரவை வழங்கியிருந்தது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கடற்புலிகளின் ஆயுத விநியோக கப்பல்களை இலங்கை கடற்படையால் மூழ்கடிக்க முடிந்த போது இந்த யுத்தத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். '2006 க்கும் 2008 க்குமிடையில் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களில் நாம் 12 ஐ அழித்தோம்' இது எவ்வாறு சாத்தியமானது?'அமெரிக்கர்கள் மிகமிக உதவியாக இருந்தனர். ஆயுத கப்பல்கள் இருந்த இடங்களை அவர்கள் எமக்கு தந்தனர்' என பாதுகாப்பு அமைச்சர் செயலாளர் அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 'தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்களில் பெரும்பாலானவை திறந்த சந்தையில் வாங்கப்பட்டவை' என்றும் அவர் தெரிவித்துள்ளார். பீரங்கிகளில் அநேகமானவை வடகொரியா மூலத்தை கொண்டவை. அவர்களிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இருந்தன. இவை இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள போதுமானவையாக இருந்தன அல்லது சில சமயம் இலங்கை இராணுவத்திட்டமிருந்ததைவிட கூடுதலானவையாகவும் இருந்தன. புலிகளிடமிருந்த பீரங்கிகள் எமக்கு ஏராளமான இழப்புகளை ஏற்படுத்தின'. புலிகளின் கப்பல்கள் இருக்கும் இடங்களை அமெரிக்க செய்மதி தொழில்நுட்பங்கள் கப்பல்களின் இடத்தை காட்டின. இதனால் இலங்கை படைகளால் அவற்றை அழிக்க முடிந்தது. கொழும்பு, கிளிநொச்சிக்கு தினமும் மூன்று ரயில் சேவைகள்கொழும்பு கோட்டை யிலிருந்து கிளிநொச்சிக்கு 15 ஆம் தி |