|
||||
|
புரட்டாசி 2012 மாதப் பதிவுகள் புரட்டாசி 30, 2012 தமிழகமும் ஈழமும் இணைந்தான விரிந்த தமிழகத்தை அமைக்கும் முயற்சியில் எல்.ரீ.ரீ.ஈ ஈடுபடுகிறது தமிழகத்தையும் ஈழத்தையும் இணைத்து விரிந்த தமிழகம் அமைக்கும் திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக கியூ பிரிவு பொலிஸ் உயரதிகாரியான எஸ்.பி.சம்பத் தெரிவித்துள்ளார். இந்தியாவில், விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்புக்கு சரியான காரணங்கள் உள்ளனவா? இல்லையா? என்பது தொடர்பில் புதுடில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெய் தலைமையில் நடைபெற்றுவரும் தீர்ப்பாயம் விசாரணையில் ஆஜராகி தகவல் வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்புக்கு ஆதரவளிக்கும் வகையிலான ஆவணங்களும் அவரால் இதன்போது நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் இரு பெரிய தொகுப்புகளாக சீல் வைக்கப்பட்ட உறைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் அடங்குவதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். புரட்டாசி 30, 2012 சபாஷ் டக்ளஸ் தேவானந்தா யாழில் 1980 களில் நூறு மில்லியன் ரூபாவை ஏப்பம் விட்ட நிதி நிறுவனம் மீது 30 வருடங்களின் பின் சட்ட நடவடிக்கை?
'சப்றா' நிதி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்? பாதிக்கப்பட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சென்ற மக்கள் நாடு திரும்பி அதிரடி நடவடிக்கை!
புரட்டாசி 30, 2012 சம்பந்தனுடன் சுரேஸ் மோதல் கூட்டமைப்பிற்குள் பாரிய பிளவு இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தபோது கூட்டமைப்பின் கூட்டுக் கட்சியான ஈ.பி.ஆ.எல்.எப்.சுரேஸ் அணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை வன்மையாகச் சாடி ஒரு நீண்ட அறிக்கையை விட்டுள்ளார். விட்டது மட்டுமல்லாது பத்திரிகை ஆசிரியர்களைத் தொடர்புகொண்டு அதனை வெட்டாது அப்படியே பிரசுரிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த அறிக்கையில் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக அவர் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். ஒரு காலத்தில் உண்மையாகவே ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் அதனைத் தமது சுய தேவைகளுக்காகப் பயன்படுத்தி பலவிதமான வெளியே சொல்ல முடியாத செயல்களில் ஈடுபட்டு, அதன் பின்னர் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட வரலாறு அவரது இயக்கத்திற்கு உள்ளது. அதன் பின்னர் தமிழ் உணர்வு தலைப்பட்டு புலிகளிடம் பாவமன்னிப்புக் கேட்டு மன்னிக்கப்பட்டு இப்போது வெள்ளைச் சொக்காய் அணிந்த அரசியல்வாதியாக இருக்கும் அவர் கூட்டுக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த தனது பழைய இயக்கப் பாணியில் தலைப்பட்டுள்ளார். (மேலும்...) புரட்டாசி 30, 2012 குழந்தைகள் உரிமையில் கனடா பின்தங்கியே உள்ளது - ஐ.நா. சபை கனடாவில் குழந்தைகளுக்கான உரிமைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கனடாவில் குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள் மோசமாக உள்ளது. மேலும், கனடாவை தாய்நாடாகக் கொண்டுள்ள குழந்தைகளுக்கும், புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கும், பழங்குடியின மற்றும் ஊனமுற்றோரின் குழந்தைகளுக்கும் இடையில் உரிமைகளை பின்பற்றப்படுவதிலான வேற்றுமை அதிகமாக உள்ளதாகவும், இதுகுறித்து அறிக்கை சமர்பிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான உரிமைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல், மரணதண்டனை மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கும் ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. (மேலும்...)புரட்டாசி 30, 2012கேரளாவிலிருந்து சட்டவிரோதமாக ஆஸி செல்லமுயன்ற 14 இலங்கையர் நாடு திரும்பினர்இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் 14 இன்று சனிக்கிழமை நாடு திரும்பினர். இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த மேற்படி 14பேரும் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று இலங்கை திரும்பினர் என்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், கேரளாவுக்கு சென்றிருந்த நிலையிலேயே அந்நாட்டு பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்காக கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு இவர்கள் தலா ஒன்றரை இலட்சம் ரூபா வீதம் வழங்கியுள்ளனர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டுள்ள இந்திய முகவர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைத் தேடி கைது செய்யும் நடவடிக்கைகளில் இந்திய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் என்று விமான நிலைய அதிகாரிகள் மேலும் கூறினர். புரட்டாசி 30, 2012 ‘கும்கி’ பிரபு சாலமன் பாலா, அமீர், ஜனநாதன், சீனு ராமசாமி, பிரபுசாலமன், வெற்றிபாலன், சமுத்திரக்கனி, சசிகுமார் என தமிழ்ச் சினிமாவில் மாறுபட்ட இயக்குநர்களின் வருகை அதிகரித்திருப்பது தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் புதிய படைப்பாளிகள் இவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பாதையில் பயணித்தாலும் யதார்த்தமான கதை சொல்லிகளாக இருப்பதுதான் வரவேற்பிற்குரிய விஷயம். (மேலும்...)புரட்டாசி 30, 2012 அரசியலில் நுழைவாரா விமுக்தி குமாரதுங்க? இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் புதல்வருமான விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழையலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இதன் முதல்படியாகவே அவர் கடந்த 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தனது பாட்டனாரான எஸ்.டயிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 53 ஆவது சிரார்த்த தினத்தின் போது ஹொரகொல்லயில் அமைந்துள்ள அவரின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மிருக வைத்தியரான விமுக்தி இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். தற்போது விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு இங்கு வந்துள்ளார். அவரை அரசியலில் இறக்கும் நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூடிய விரையில் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வரலாம் என ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டுள்ளன. (மேலும்...) புரட்டாசி 30, 2012 கிழக்கிலங்கையின் புதிய முதல்வர் முன்பாகவுள்ள பாரிய பொறுப்புகள் கிழக்கிலங்கையின் புதிய முதல்வராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட் டுள்ளார். அந்த மாகாணத்தின் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய காலப்பகுதியிலிருந்தே அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியே மக்களது மனதில் இருந்து வந்தது. அதற்கு இப்போது விடை காணப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களது வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் நடத்திய கபட நாடகங்களுக்கு முகங்கொடுத்த மக்கள் சில அரசியல் கட்சிக ளால் தாம் ஏமாற்றப் பட்டதைக் கூட இப்போது நன்கு உணர்ந்திருப்பார்கள். தேர்தல் மேடைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிச்சயம் ஆட் சியமைக்கும் எனவும் அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரே முதல்வராவார் எனவும் பலரால் ஆரூடம் கூறப்பட்டது. அதே போன்று சுதந்திரக் கூட்ட மைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் இன்று அங்கே ஆட்சிபீடமேறியிருக்கின்றது. கிழக்கிலங்கை வாழ் மூவின மக்களும் இதனை முழு மனதுடன் வரவேற்றுள்ளனர். புரட்டாசி 30, 2012 புலிகளும் முதலில் இழந்தது கிழக்கைத்தான், தமிழ்க் கூட்டமைப்புக்கும் அந்நிலை வருமா?சொந்த வாழ்வு செழிக்க அரசிடம் தஞ்சம்; பொது மக்கள் தேவைக்கு மட்டும் கபட எதிர்ப்பு அரசியல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகளின் பிரகாரம் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதளவும் கருத்திற்கொள்ளாது தமது பிடிவாதமான ஒன்றுக்குமே உதவாத தமிழ்த் தேசியக் கொள்கையைக் காரணம் காட்டி மீண்டுமொரு தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாக அவர்களுக்கு வாக்களித்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் காலத்தில் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கிலங்கை மக்களுக்கு மாகாண ஆட்சியை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி வாக்கு வேட்டையாடினர். ஆனால் கிழக்கில் இன்று தமக்குச் செல்வாக்கு முன்னொரு காலம் போலில்லை என்பதை நன்கறிந்திருந்தும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களைப் பகடைக்காய்களாக்கி இன்று தமிழ்க் கூட்டமைப்பு அம்மக்களை ஏமாற்றியுள்ளது. (மேலும்...) ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள் அகத்தி தாவரவியற் பெயர் - Sesbania grandiflora (செஸ்பானியா கிராண்டிஃபுளோரா) குடும்பம்: Papilionaceae சிங்களப் பெயர்: கத்துருமுருங்க சமஸ்கிருதப் பெயர் : அகஸ்திய அகத்தியில் சாதாரண அகத்தி, சிற்றகத்தி, செவ்வகத்தி என்ற பேதங்களுண்டு. பெரும்பாலும் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. வீடுகளில் வளர்ப்பது அரிது. “அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்” என்று ஒரு பழமொழியுள்ளது. வீடுகளில் அகத்தியை வளர்க்கக் கூடாது என்பது பற்றியே இப்பழமொழி ஏற்பட்டுள்ளது. அகத்திக்காய், விதை என்பவற்றில் சபோனினி (Saponini) என்னும் நச்சுப் பொருள் உள்ளது. எனவே, வீட்டில் வளர்த்தால் குழந்தைகள் இதன் விதைகளைத் தெரியாமல் சாப்பிட்டு விடக்கூடுமல்லவா? அதனால்தான் அகத்தியை வீட்டில் வளர்ப்பதில்லை என்று ஏற்படுத்தியிருக்கிறார்கள் போலும். (மேலும்...) புரட்டாசி 29, 2012 டெசோ மகாநாட்டு அறிக்கை ஐ.நா. விற்கு செல்கின்றது இலங்கை விவகாரம் தொடர்பில் டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைப்பதற்காக தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 6ஆம் திகதி நியூயோர்க் செல்லவுள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையிலான டெசோ மாநாடு கடந்த ஓகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்றது. இதன்போது, இலங்கைத் தமிழர்கள் நலனை காக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை ஐ.நா.சபையிடம் கொடுக்க தி.மு.க முயற்சி செய்தது. ஆனால் இந்திய மத்திய அரசின் எதிர்ப்பு காரணமாறு அந்த முயற்சி தாமதமாகியிருந்தது. (மேலும்...) புரட்டாசி 29, 2012மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - வாசுதேவ நாணயக்கார!மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பாளர்களா என்பதில் அரசாங்கத்திற்கு சந்தேகம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது தொடர்பிலான வாக்கெடுப்பை மக்கள் ஆதரிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். சுயாட்சி அதிகாரங்கள் என்பதன் மூலம் மத்திய அரசாங்கம் செய்யும் கடமைகளை செய்வதனையே தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் ஆணைக்குழுக்களை நியமிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். புரட்டாசி 29, 2012 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் (அபிமன்யு) கிழக்கு மாகாணம் பல்லின மக்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் அது தமிழ் மக்களையே பெரும்பான்மையாகக் கொண்டிருந்தது. அங்கு வாழும் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் மக்களிடையே செல்வாக்கு படைத்த அனேக முஸ்லிம் தலைவர்களும் தமிழ்மக்களுடன் பேதமற்று அரசியல் விவகாரங்களில் கைகோர்த்து இணைந்து செயலாற்றினர். அதனால் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிரான பலமான அரசியல் சக்தியாக இரு இனங்களும் செயற்பட்டன. சிங்களப் பேரினவாதிகளின் ஏதேச்சாதிகாரச் சூழ்ச்சிகளை முறியடிக்க முடிந்தது. அந்த மாகாணத்தின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் பலமான அரசியல் சக்தியாக விளங்கினர். கால ஓட்டத்தில், அரசியல் சதுரங்கத்தில் பற்பல தூரநோக்கற்ற செயற்பாடுகளால், அந் நிலைமை மாறி, “தமிழ்பேசும் மக்கள் என்று இணைந்த மக்கள் பிரிந்து தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற இரு பிரிவாக இப்பொழுது செயற்படுகின்றனர். அதனால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்த பலமான சமூக சக்தி என்ற நிலைமை மாறி- சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய அரசாங்கத்தின் இனவாதப் போக்குகளை எதிர்க்கும் பலம் குன்றிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. (மேலும்...) புரட்டாசி 29, 2012 இந்தியாவிற்கு LTTE தொடர்ந்தும் அச்சுறுத்தல் - இந்தியாதமிழீழ விடுதலை புலிகள் இயக்கமானது தொடர்ந்தும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக விளங்கிவருவதாக இந்தியா கூறியுள்ளது. இதேவேளை, இந்தியாவின் மாவோஹிஸ்ட் இயக்கங்களின் உதவியுடன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிப்பதாக இந்தியா மேலும் கூறியுள்ளது. புரட்டாசி 29, 2012 கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நினைவுச் சொற்பொழிவு இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஸ்தாபக முன்னோடிகளில் ஒருவரும் சிறந்த கல்விச் சிந்தனையாளருமான தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் மறைவின் 35வது ஆண்டு நினைவுச் சொற்பொழிவு தலைமை: திரு. எஸ்.சிவகுருநாதன் (முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம்) திருமதி வசந்தி தயாபரன் 'சமுதாய மாற்றத்திற்கான பெண்களின் பங்களிப்பு' எனும் தலைப்பில் உரையாற்றுவார். இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம் 58 தர்மராம வீதி, கொழும்பு – 6 காலம்: செப்ரெம்பர் 30, 2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் நீர்வை பொன்னையன் இணைப்பாளர் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் E-Mail: kailashpath@yahoo.com புரட்டாசி 29, 2012 Stop Stoking the Flames of War Issued by the Central Executive Committee, Communist Party of Canada September 13, 2012 The September 6 decision of the Harper government to cut all diplomatic relations between Canada and Iran is a dangerous and irresponsible act. The reasons given by Foreign Affairs Minister John Baird for this brazen move do not stand up to scrutiny. There is no evidence that Iran’s nuclear program includes plans to produce nuclear weapons, nor is there any evidence that Canadian diplomatic personnel face any imminent danger. And while Tehran no doubt supports political movements and formations in other countries in the region, the same can be said of most other states, including Saudi Arabia, Qatar and Israel itself. (more....) புரட்டாசி 29, 2012 (மேலும்...) புரட்டாசி 29, 2012
NASA
predicts total blackout on 23-25 Dec 2012 during alignment of Universe. புரட்டாசி 29, 2012 ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு சகோதர யுத்தமே காரணம்! உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் இது போன்று எதிரியிடம் மண்டியிட்டுக் கையேந்தவில்லை; எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பெற்று சக போராளி இயக்கத் தலைவர்களையும், அவர்களது இயக்க அங்கத்தினரைப் படுகொலை செய்தவர்கள் புலிகள் மட்டுமே. பிரேமதாசா சிங்கள இராணுவத்தைத் தாக்குவதற்காவா ஆயுதங்களைப் புலிகளுக்கு வழங்கினார்? எந்த ஒரு தமிழ் இயக்கமும் எமது எதிரியிடம் மண்டியிட்டுக் கையேந்தவில்லை. இப்படியான செயலை ஆரம்பித்து வைத்தவர்களே புலிகள்தான். உலகத்திலேயே மிகவும் வெக்கக்கேடான போராட்டம் ஈழத்தில்தான் நடந்தது என்றால் அது மிகையல்ல. துரோக வழியில் பெற்ற ஆயுதங்களைக் கொண்டுதான் புலிகள் இயக்கம் இருபதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்களைக் கொன்றனர் என்பதை மிகவும் சுலபமாக மறைத்துவிட்டார் நெடுமாறன். (மேலும்...) புரட்டாசி 29, 2012 இனச்சுத்திகரிப்பு பௌத்த பூமிக்காக முஸ்லீம்களை வெளியேற்றும் இலங்கை அரசு தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சகல வீடுகளினதும் கடைகளினதும் உரிமையாளர்கள் அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. அப்பிரதேசத்தில் அமைந்துள்ள 52 வீடுகள், 12 கடைத் தொகுதிகள் என்பவற்றை நீக்குமாறு அதன் உரிமைகாளர்களிடம் நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறிப்பிட்ட காணித்துண்டுகள் புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 300/14 மற்றும் 1984.06.08 திகதி வர்த்தமானி அறிவித்தலின் படி அரசுடமையாக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்காக நீங்கள் வசிக்கும் இடம் அல்லது வீடு, புனிதபூமி அபிவிருத்தி திட்டத்துக்கு தேவைப்படுகிறது. அதற்குப் பதிலாக தம்புள்ளை கண்டலம் வீதி, கொள்வத்தை என்ற இடத்தில் காணித்துண்டு ஒன்றை அடுத்த இருவாரத்துக்குள் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கு தயராராகுமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவுறுத்தலை பெற்றுக் கொண்டோரில் சுமார் 65க்கும் மேற்பட்டோர் தம்புள்ளைவிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சென்று விபரங்களைக் கேட்டறிந்துள்ளனர். இதேநேரம், தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் இந்தச் செயற்றிட்டம் அமுல்படுத்தப்படும் போது பள்ளிவாசலுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவினர். இந்தத் திட்டத்துக்குள் பள்ளிவாசலின் ஒரு பகுதி உள்ளடக்கப்படுவதாகவும் பள்ளிவாசலின் மறுபுறத்திலிருந்து 60 அடி பாதை ஒன்று அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். புரட்டாசி 29, 2012 Students Courage: Reconciliation for Sustainable Peace (By Nipunika O. Lecamwasam ) It’s been three years since the Liberation Tigers of Tamil Elam (LTTE) has been militarily defeated and the three decade old armed conflict has officially come to an end. Since then ‘reconciliation’ has become the key operative word in socio-political discourses in post war Sri Lanka. It is today the main apprehension of both state and non state actors operating in the island. While there is no ideal strategy that could be employed in bridging deep ethnic divides, it is important to understand that every action taken in the name of reconciliation today will bear significance in the future and therefore gearing reconciliation has become a tricky subject. Most actors involved in reconciliation attempts focus on a societal transformation that concerns the political aspect of change. Much neglected is individual transformation which is crucial in sustaining peace in its truest sense. (more...) புரட்டாசி 29, 2012 ஆஸியில் தஞ்சமடைந்த இலங்கையரில் மீண்டும் நாடு திரும்ப விரும்புவோர் தொகை அதிகரிப்புபுகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களில், மீண்டும் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளோர் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க அந்நாட்டு பத்திரிகையான நெஷனல் ரைம்ஸுக்கு தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 18 இலங்கையர்கள் கடந்த வாரம் நவுறுவுக்கு அனுப்பப்படுவதை விட இலங்கை திரும்புவதையே விரும்பினர். பசுபிக் தீவான நவுறுவுக்கு அனுப்பி விசாரிக்கும் முறையை அரசாங்கம் கொண்டுவந்த பின்னும், புகலிடக் கோரிக்கையாளர்களுடன் படகுகள் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகாமையில் வருவதாக சிட்டி மோர்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தவகையில், அண்மைக்காலங்களில் வந்த படகுகளில் ஆகவும் கூடுதலான 195 பயணிகளை ஏற்றிய படகொன்றுக்கு உதவி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 13இன் பின், 3200க்கு மேற்பட்ட புகலிடம் கோருவோர் வந்துள்ளதாகவும் இவர்கள், நவுறு மற்றும் பப்புவா நியூகினி மனெஸ் தீவுகளில் உள்ள முகாம்களின் கொள்ளளவிலும் கூடுதலாக இருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு முற்பகுதியில் 24 மணித்தியாலங்களுக்குள் மூன்று படகுகள் கொக்கொஸ் தீவு ஆள்புலத்தினுள் வழிமறிக்கப்பட்டுள்ளன. மனிதக் கடத்தலில் ஈடுபடுவோரின் தொழில் விரைவில் முடிவுக்கு வந்துவிடுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது. புரட்டாசி 29, 2012 செவ்வாய்க் கிரகத்தில் நீரோடை இருந்த தடம், கண்டுபிடித்தது கியூரியாசிட்டி செவ்வாய்க் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளைக் கற்கள் பாறை இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள் ளது. செவ்வாய்க் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற் கொள்ள கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய்க் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. முன்னதாக செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந் ததற்கான அடை யாளங்கள் பதிந்த இடங்களை புகைப் படம் எடுத்து அனுப்பியது. இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்தது என் பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. அதாவது நீரோ டையால் அடித்துக் கொண்டு வரப்பட்ட சரளைக் கற் களின் பாறைகளை கியூரி யாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத் துள்ளது. அந்த பாறைகளின் அளவு மற்றும் வடி வத்தை வைத்து பார்க்கையில் அவற்றை காற்று கொண்டு வந்து போட் டிருக்க முடி யாது. நிச்சயமாக நீரோடை தான் அந்த கற்களை அடித் துக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கியூரியா சிட்டி விஞ்ஞானி ரெபக்கா வில்லியம்ஸ் தெரிவித்துள் ளார். சில பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன. அப் படி என்றால் அவை நீண்ட தூரம் அடித்து வரப்பட் டிருக்க வேண்டும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் அங்கு ஒரு நீரோ டையல்ல மாறாக பல்வேறு காலகட்டத்தில் பல நீரோ டைகள் இருந்திருக்கின்றன என்று கூறப்படுகிறது. புரட்டாசி 28, 2012 கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவராக த.தே.கூ.வின் சீ.தண்டாயுதபாணி தெரிவு
கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சீ.தண்டாயுதபாணி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சும்பந்தன் தலைமையில் சற்றுமுன்னர் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுரேஸ் பிரேமசந்தின், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்தன், ஆனந்தசங்கரி ஆகியோரைத் தவிர தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. சீ.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சின் முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பலரும் எதிர்பார்தததைப் போல் தமிழருக்கட்சியின் தண்டாயுதபாணி எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று பெயரிட்டாலும் அதில் உள்ள ஏனைய கட்சிகள் ‘டம்மி’ யாக இருக்க தமிழரசுக்கட்சியே தொடர்ந்தும் ஏகபோகம் வகிக்கும் நிலையே அங்கு உள்ளது. இந்நிலையில் ஏனைய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவை தொடர்ந்தும் கூட்டமைப்புடன் ஒட்டிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன என்ற அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ( நன்றி: புகைப்படம் தமிழ்மிரர்) புரட்டாசி 28, 2012 இந்தியாவின் ஏவுகணைகள் இலங்கையை குறி வைக்கவில்லை - இந்திய அரசுஇந்தியாவின் ஏவுகணைகள் இலங் கையை இலக்குவைத்து நிறுத்தப்பட் டிருப்பதாக ஒருசில இணையதளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி எவ்வித அடிப்படையுமற்ற இட்டுக்கட்டப்பட்டவை என இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு என குறிப் பிட்டுள்ளது. இந்தியா நீண்டகால திட்டத்தின் பேரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணை சோதனைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டம் அடிப்படையான தற்பாதுகாப்பு திட்டமேயன்றி எந்த நாட்டையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்படுபவையல்ல. இவ்வா றான உணர்வுபூர்வமான விடயங்களை தூண்டிவிட்டு இலங்கை, இந்தியாவுக்கு இடையிலான நெருங்கிய நட்பை சீர்குலைக்க முடியாது. அதில் பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவும் உள்ளடங்கும். புரட்டாசி 28, 2012 விவசாயம் செய்வோம் விளைச்சலைப் பெறுவோம்
புரட்டாசி 28, 2012 கேள்வி …..? பதில்! இறந்து போன எமது உறவுகளுக்காக அழுவதற்குக் கூட இங்கு எமக்கு உரிமையில்லை என மாவை சேனாதிராசா இரங்கற்கூட்டத்தில் உரையாற்றியுள்ளாரே? பிரபாகரனால் கொல்லப்பட்ட தனது தலைவர் அமிர்தலிங்கத்துக்கு இரங்கற் கூட்டம் வைப்பதற்குப் பயந்து, உரிமையற்று இருந்த மாவை, பிரபாகரனுக்கு இரங்கற்கூட்டம் வைப்பதற்கு உரிமையற்று இருப்பதாகப் புலம்புவது விந்தையிலும் விந்தை. இன்று எவ்வித புலி அச்சுறுத்தலுமின்றி அமிர்தலிங்கத்துக்கு இரங்கற் கூட்டம் வைக்கலாம். அமிர்தலிங்கத்துக்கு இரங்கற்கூட்டம் வைப்பதற்கான உரிமையை உங்களுக்குப் பெற்றுத்தந்தது யார்? பிரபாகரனால் மறுக்கப்பட்டிருந்த அந்த உரிமை மகிந்தாவால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. புரட்டாசி 28, 2012 மன்மோகன் சிங்கின் கொலைவெறித் திட்டம்! செலவுகளைக் குறைக்க ஓர் அதிரடி வழியாக, மரணத்தை யோசியுங்கள். - அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் உடி ஆலன் கிண்டலாகச் சொன்னது இது. இந்திய அரசோ அதை மறைமுகமாகச் சொல்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், டீசல் விலையை உயர்த்தி, மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆறாகக் குறைத்து, இரண்டாம் பொருளாதாரச் சீர்திருத்த அறிவிப்பை வெளியிட்ட முதல் 24 மணி நேரத்துக்குள் அந்த முதல் தற்கொலை பதிவானது. காசியாபாத்தைச் சேர்ந்த தொழிலாளி டோமர். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அறிவிப்பை மறுநாள் அரசு வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்துக்குள் இரண்டாவது தற்கொலை பதிவானது. மொரதாபாத்தைச் சேர்ந்த ரேஷ ஷர்மா. ஒரு மணி நேரத்துக்கு 15 தற்கொலைகள் பதிவாகும் ஒரு நாட்டில், இந்த மரணங்கள் அரசுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுதந்திர இந்தியாவில், 'விலைவாசி உயர்வைச் சமாளிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்ற எழுத்துபூர்வமான பதிவுகளோடு நடந்த தற்கொலைகள் இவை. கொலைக் குற்றவாளியாகத்தான் நிற்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. ஆனால், துளியும் குற்ற உணர்வு இல்லை; மேலும் பலரைக் கொல்லும் திட்டத்தோடும் வெறியோடும் நிற்கிறது. (மேலும்...) புரட்டாசி 28, 2012 படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 19 பேர் கைது சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்த 19 பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவேந்திரமுனை கடலில் இருந்து 27 மைல் கடல் தூரத்தில் இவர்கள் வழிமறிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 9 முஸ்லிம்கள், 7 சிங்களவர்கள் மற்றும் மூன்று தமிழர்கள் அடங்குவர். இவர்கள் கொழும்பு, வவுனியா, திருகோணமலை, புல்மோட்டை மற்றும் திக்குவெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். குறித்த நபர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கென குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புரட்டாசி 28, 2012 காணாமல்போன பிள்ளைகள் கிடைக்கும்வரை உண்ணாவிரத போராட்டம்: பெற்றோர் முடிவு ![]() காணாமல் போன எமது பிள்ளைகள் கிடைக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதப் போரட்டம் மேற்கொள்ளவுள்ளதாக காணமல் போனவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 'யுத்தம் நிறைவடைந்த நேரம் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பாக தகவல்கள் தெரியாமல் நீண்டகாலமாக பெரும் மன உழைச்சலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். மாதத்திற்கு ஒரு தடவை புலனாய்வாளர்களும் பொலிஸாரும் காணாமல் போயுள்ள எமது பிள்ளைகள் தொடர்பான விபரங்களை திரட்டி வருகின்றனர். அப்படி என்றால் எங்கள் பிள்ளைகள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அவ்வாறென்றால் அரசாங்கம் அவர்களை தடுத்து வைத்திருக்கும் இடத்தை எமக்கு சொல்ல வேண்டும். எமது பிள்ளைகள் கண் இல்லாமல் கால், கையில்லாமல் இருந்தாலும் பறவாயில்லை. எமது பிள்ளைகள் எமக்கு வேண்டும்' என்று அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். நான்கு வருடங்களுக்கு மேலாக எமது பிள்ளைகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை செய்து வந்தபோதும் எவ்விதமான பலனும் எமக்கு கிடைக்கவில்லை. இதற்காக பல போராட்டங்களும் நடத்திவிட்டோம். புரட்டாசி 28, 2012 சிரிய நாட்டு பிரச்சினையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் எதிர் எதிர்தரப்புகளில்கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் சிரிய பிரச்சினைக்கு ஐ. நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் தொடர்ந்து இணக்கப்பாடொன்றை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நேற்று முன்தினம் 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு சபையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா சிரியா தொடர்பில் முரண்பட்ட நிலைப்பாட்டை வெளியிட்டன. இதில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் தனது சொந்த மக்களையே கொன்று வருவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹலாரி கிளின்டன் கூறும் போது, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் தீவிரவாதத்தை ஊக்குவித்துவருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் கூறினார். சிரிய முரண்பாடு தொடர்பில் முடிவொன்றை எட்ட முடியாமல் பாதுகாப்புச் சபை செயலிழந்துவிட்டதாக ஹிலாரி கிளின்டன் குற்றம்சாட்டினர். “அக்கிரமங்கள் அதிகரித்துவரும் நிலையிலும் பாதுகாப்புச் சபை செயலிழந்த நிலையிலேயே காணப்படுகிறது. ஆனால் அது தொடர்பில் மீண்டும் ஒருமுறை தீர்வை காண முயற்சிக்க வேண்டும்” என்று அவர் அழுத்தம் கொடுத்தார். எனினும் சிரியா தொடர்பான தமது நிலைப்பாட்டில் ரஷ்யா எந்த மாற்றத்தையும் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் வெளிப்படுத்தவில்லை. ஆனால் சிரியாவில் வன்முறைகள் தொடர்பில் அரசுக்கும் எதிர்த்தரப்பினருக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லவ்ரொவ் கண்டனம் வெளியிட்டார். புரட்டாசி 28, 2012 வடக்கின் சமூக நற்பணிகளுக்கு டயஸ்போரா விஷம் விதைப்புஜனாதிபதி முன்னிலையில் நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களின் மகாநாட்டில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வடபகுதியில் உள்ள மக்களுக்காக பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் ஒரு மூத்த தமிழ் பிரஜை தமக்கு அனுப்பி வைத்திருந்த ஒரு மின்னஞ்சலை எல்லோருக்கும் கேட்கக் கூடியதாக வாசித்தார்.‘இன்று வடபகுதியில் 30 ஆண்டு கால யுத்தத்தின் பின்னர் அமைதி ஏற்பட்டிருப்பதை அடுத்து முன்னேற்றப் பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற டயஸ் போரா அமைப்புகள் விஷத்தைக் கலந்து தீங்கிழைக்கின்றன.இவ்வமைப்புகள் மீண்டும் எல்.ரி.ரி.ஈ. இயக்கம் உயிர்த்தெழப் போகின்றது என்றெல்லாம் பொய்ப் பிரசாரங்களை செய்கின்றன. இவை வடபகுதியில் இடம்பெறும் வீதி அபிவிருத்திப் பணிகளை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. இங்கு தமிழ் மக்கள் நிர்மாணப் பணிகளில் ஈடுபட விருப்பம் காட்டாமல் இருப்பதனால் தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள தொழிலாளர்களே இப்பணியை செய்கிறார்கள். புரட்டாசி 27, 2012 இந்தியாவுக்கல்ல எந்த நாட்டுக்கு சொன்றாலும் தீர்வுக்கு கூட்டமைப்பு எம்மிடமே வரவேண்டும் - அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களுடன் ௭ன்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ௭மது நாட்டின் பாராளுமன்றத்திடமே வரவேண்டும். யதார்த்தபூர்வமான தீர்வைக் காணவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும் ௭ன்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்தியாவுக்கு சென்று பேச்சுக்களில் ஈடுபடுவது புதிய விடயமல்ல. காலா காலமாக அவர்கள் இதனையே செய்துவருகின்றனர். ஆனால் ௭ஸ்.ஜே.வி. செல்வநாயகம் இதுபோன்று டில்லிக்கு அடிக்கடி சென்று அவர்களை அசெளகரியப்படுத்தவில்லை ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்...)புரட்டாசி 27, 2012 அடேல் பாலசிங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அடேல் பாலசிங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரிட்டனிடம், அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 6000த்திற்கும் மேற்பட்ட பெண்களை பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பலவந்தமாக இணைத்துக் கொண்டதாக அடெல் பாலசிங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அடெல் பாலசிங்கம் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். தற்கொலைத் தாக்குதலுக்கு ஆதரவாக அடெல் ஆற்றிய உரை தொடர்பான காணொளியையும் இலங்கை அரசாங்கம் மீட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புரட்டாசி 27, 2012 கேள்வி …..? பதில்! தமிழீழத் தேசிய துக்கநாள் என்றால் என்ன? கடைகளை மட்டும் பூட்டி விட்டால் அந்தநாள் துக்கநாளாக ஆகிவிடுமா? இதுவுமா புரிவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்ட நாள்தான் தமிழீழத் தேசியத் துக்கநாள். துக்கநாள் அறிவிப்பதிலும் புலிகளுக்குள் ஒற்றுமையில்லை. எல்லாமே பணத்துக்குத்தான். நாடுகடந்த தமிழீழ புலிகளுக்கு ஒருநாள். உலகத் தமிழர் புலிகளுக்கு ஒருநாள். இரண்டு பிரிவுப் புலிகளுக்கும் பயந்து இரண்டு நாளும் கடைகளைப் பூட்டிய இழிச்சவாய்த் தமிழர்களும் இருக்கிறார்கள். நேற்றுப் பூட்டினனான், இன்று பூட்டினனான் என்று சொல்லி இரண்டு நாட்களுமே கடைகளைப் பூட்டாமல், புலிகளுக்குச் சுத்திய பொயிலை வித்த கடைக்காரர்களும் இருக்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சாமல் தமது வியாபார நிறுவனங்களைத் திறந்து வைத்திருந்த கடை உரிமையாளர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி 27, 2012 மகிந்த அரசைக் அழுத்தங்களில் இருந்து சம்பந்தன் காப்பாற்றுகிறார் - சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பை யாரோ சிதைக்கப்போவதாக திரு.சம்பந்தன் அவர்கள் கூறுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைத் தவிர கூட்டமைப்பிற்கு என்ன வடிவம் இருக்கின்றது? அதற்கென்று ஒரு செயலாளர், பொருளாளர் என யாராவது இருக்கின்றார்களா? முடிவுகளை எடுப்பதற்கு வல்லமை கொண்ட கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளை உள்ளடக்கிய உயர்மட்டக்குழு ஏதாவது இருக்கின்றதா? கீழிருந்து மேல்வரை தலைமையுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய வகையில் கிராமிய நகர மட்டக்கிளைகள் ஏதாவது இருக்கின்றதா? 2001ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இவ்வமைப்பிற்கு குறைந்த பட்சம் நிதிக்குழுவென்று ஏதாவது இருக்கின்றதா? இவை எதுவுமே இல்லையென்பதுதான் நிதர்சனமான உண்மை. இவையனைத்தையும் உருவாக்கத் தடையாக இருப்பது தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையுமே என்பது அக்கட்சியின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களுக்குத் தெரியும். நிலைமை இவ்வாறிருக்க கூட்டமைப்பை வேறுயாரோ சிதைக்க முற்படுவதாக அறிக்கை வெளியிடுவதானது மக்கள் மத்தியில் பிழையான ஒரு கருத்தை உருவாக்கும் முயற்சி என்றே எண்ணத் தோன்றுகின்றது. (மேலும்...) புரட்டாசி 27, 2012 ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக ஐஸ்வர்யாராய் நியமனம் ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதராக முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யாராய் நியமிக்கப்பட்டுள் ளார். ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா ராய் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து அந்த தொற்று கிருமிகள் குழந்தைகளுக்கு பர வாமல் தடுக்கும் திட்டத்தின் கீழ் செயல்படு வார். மேலும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட தாய் களையும் பாதுகாக்கவும், புதியவர்களுக்கு எய்ட்ஸ் பரவாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு பிரச் சார திட்டத்திலும் இணைந்து செயல்படு வார் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் இந்தியா உள்ளிட்டு மொத் தம் 22 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவை தவிர அனைத்து நாடுகளும் ஆப் பிரிக்க நாடுகளாகும். காரணம், இந்த நாடுகளில் தான் 90 சதவிகிதம் தாய்களிடம் இருந்து குழந் தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவுகிறது. 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இப்படி குழந்தைகளுக்கு பரவும் எய்ட்ஸ் கிருமிகள் 25 சதவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஐஸ்வர்யாராய் உதவியாக இருப்பார் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. புரட்டாசி 27, 2012 ஆறு மாதகாலத்தில் தீர்வுத்திட்ட அறிக்கை ௭ன்று குறிப்பிட்டிருந்தும் கூட்டமைப்பு கலந்துகொள்ளாததேன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட அறிக்கை ஆறு மாதங்களில் வெளியிடப்படவேண்டும் ௭ன்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் இடம்பெற தயக்கம் காட்டுவது ஏன் ௭ன்று புரியவில்லை ௭ன மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனராட்ன தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக ஆறு மாதங்களில் தீர்வுத்திட்ட அறிக்கை வெளியிடப்படாவிடின் அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ௭திர்ப்பை வெளியிட முடியும். தமது பக்க நியாயத்தை வெளிப்படுத்தவும் முடியும் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.புரட்டாசி 27, 2012 உள்நாட்டு விவகாரங்களில் அங்கீகாரமற்ற குறுக்கீடு கூடாது - இந்தியா உள்நாட்டு விவகாரங் களில் அங்கீகாரமற்ற குறுக் கீடு கூடாது என ஐ.நா.வின் உயர்மட்டக்கூட்டத்தில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சட்டவிதிகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் 67வது அமர்வு உயர் மட்டக்கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் ஐ.நா. வுக்கான இந்தியாவின் நிரந் தர பிரதிநிதியான ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகை யில், நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அங்கீகார மற்ற குறுக்கீடுகளை தவிர்க்க வேண்டும். மோதல் சூழல் உள்ள இடங்களில் உரிய சட்ட கொள்கைகளு டன் அமைதியான அணுகு முறையை கடைப்பிடிப்ப தையே இந்தியா விரும்பு கிறது என்றார்.சர்வதேச அமைதி மற் றும் பாதுகாப்பு பிரச்சனை களுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண்பதே சிறந்தது. சட்டத்தின்விதி அத்தியாவசியமானது என் பதை நாங்கள் நம்புகிறோம். அனைத்துத் தரப்பினருக் கும் அது மையமாக இருக்க வேண்டும். தேசிய அளவி லான சட்டம் உருவாக்க செயல்பாடு தேசிய சட்ட மன்றத்திற்கு பிரத்யேகமான தளமாகும். தங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வு, பொரு ளாதாரம், சமூக, கலாச்சார நிலைமைகளில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு நாடுகளுக்கு உள்ளது.
புரட்டாசி 27, 2012 இலங்கையில் இன்று அமுலில் இருக்கும் அரசாங்கத்தின் முற்போக்கு செயற்பாடுகளை காலதாமதப்படுத்தும் சில சட்டங்களுக்கும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்த சட்டத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக அரசியல் சித்தாந்திகளும், சட்ட வல்லுநர்களும் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். தற்போது அமுலில் உள்ள சட்டத்தின்படி எங்காவது ஒரு இடத்தில் உல்லாச பயணிகளுக்கான ஒரு பாரிய ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்தாலும், அந்த ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான அனுமதியை 20இற்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகளிடம் இருந்து அனுமதியை பெற வேண்டுமென்ற சில சட்டங்கள் தற்போது அமுலில் இருந்து வருகின்றது.13வது திருத்தச் சட்டம் இலங்கையின் அரசியலில் ஒரு முக்கியத்துவம் பெற்ற சட்டமாகும். என்றாலும் இதனூடாக அதிகாரம் பெற்றிருக்கும் சில சட்டங்கள் யதார்த்தபூர்வமற்றவையாக இருக்கின்றன என்றும் அவற்றை மாற்றியமைப்பது அவசியம் என்றும் இவர்கள் அரசாங்கத்திற்கு யோசனை தெரிவித்துள் ளார்கள். புரட்டாசி 27, 2012 லிபிய முன்னாள் தலைவர் கடாபியை பிடித்த கிளர்ச்சி வீரர் மரணம்லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியை பிடித்த முன்னாள் கிளர்ச்சிப் படை வீரரின் இறுதிக் கிரியையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒம்ரான் பின் ஷாபான் என்ற கிளர்ச்சிப் படை வீரர் கடாபி ஆதரவாளர்களால் கடத்தி துன்புறுத்தப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணமடை ந்துள்ளர். 22 வயதான இவரது உடல் மேற்கு நகரான மிஸ்ரட்டாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஷாபான் கடந்த ஜுலையில் ஆயுதக் குழு ஒன்றால் கடத்தப்பட்டு 50 தினங்கள் பானி வலித் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இது முன்னாள் தலைவர் கடாபியின் ஆதரவுபெற்ற பகுதியாகும். லிபிய இடைக்கால அரசு நடத்திய பேச்சுவார்த்தை மூலம் இவர் கடந்தவாரம் விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததோடு துப்பாக்கிச்சூட்டுக்கும் இலக்காகி இருந்தார். இவர் பாரிஸ் நகருக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட போதும் அது பலனின்று நேற்று முன்தினம் மரணமடைந்தார். கடந்த ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி சிர்த் நகரில் ஒரு கால்வாய்க்குள் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்தவர் ஷபான் ஆவார். புரட்டாசி 26, 2012 தமிழ் மொழியில் யாழ். இந்து மாணவன் அபிராம் 193 புள்ளிகளுடன் முதலாமிடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக ளின் அடிப்படையில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை 1 மாணவனும், 2ம் இடத்தை மூன்று மாணவர்களும், 3ம் இடத்தை ஐந்து மாணவர்களும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதனடிப்படையில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் 193 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். புள்ளிகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் 10ம் இடத்தை இவர் பெற்றுக்கொண்டுள் ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற மட்டு. புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ் வண்ணன் துவாரகேஷ், வவுனியா மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற ரம்பைக்குளம் அரசினர் மகா வித்தியாலய மாணவி குகனேசன் தர்ஷிகா ஆகிய இருவரும் தமிழ் மொழி மூலம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். புரட்டாசி 26, 2012 கேள்வி …..? பதில்! இன்று தமிழர்கள், கிழக்கு மாகாணத்தை சி;ங்களவரிடமும் முஸ்லீம்களிடமும் பறி கொடுத்துவிட்டு ஏமாளிகளாக நிற்பதற்கு என்ன காரணம்? முழுக்கு முழுக்க சம்பந்தனும் ரீ.என்.ஏ களவாணிகளும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழர் கட்சிகள் எல்லாம் ஒரு சின்னத்தில் தேர்தலில் நின்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. சம்பந்தன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து தமிழர் தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கிறார். ஆனால் அவருடன் இருக்கும் சுரேஸ்பிரேமசந்திரா, சிறிதரன், சரவணபவன் போன்றவர்களோ அரச உளவாளிகளாகச் செயல்படுகிறார்கள். வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜபெருமாள் அவர்களின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற ஏற்பாட்டையும் சிங்களஅரசின் ஆசியுடன் சிதைத்தொழித்த பெருமை ரீ என் ஏ களவாணிகளுக்குத்தான் போய் சேரும். தேர்தல் முடிந்த பின்னரான காலத்தில் ஏற்பட்ட பேரம்பேசும் வாய்ப்பை சம்பந்தன் எமதாக்கிக் கொள்ளாமல் அந்த வாய்ப்பை முஸ்லீம் காங்கிரசுக்குக் கொடுத்துவிட்டு ஏமாளியாக நிற்கிறார். பிரபாகரனுக்கு முன் கைகட்டி நின்ற கிழட்டுப் புலியிடம் ராஜதந்திர அணுகுமுறையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். (மேலும்...) புரட்டாசி 26, 2012 மெனிக்பாம் நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டமைக்கு ஐ. நா. வரவேற்பு மெனிக் பாம் நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. வீடுகளுக்குத் திரும்ப இயலாத மக்களின் பிரச்சினைக்கு அவசர தீர்வு காணப்பட வேண்டுமென்றும் ஐ. நா. தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெயர்ந்த வர லாற்றில் இந்த நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டதானது ஒரு மைல்கல்லாகும். எஞ்சியுள்ளவர்கள் வீடு திரும்பவும் தீர்வு பெறப்பட வேண்டுமென்று இல ங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் மனி தாபிமான இணைப்பாளர் சுபிநே நண்டி தெரிவித்துள்ளார். மோதல் நிலையில் இருந்து நிலையான சமாதானத்துக்கு மாறுவதானது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஆயிரக்கணக்கான மக்களை மீள் குடியமர்த்தும் அரசின் கடப்பாடும் குறிப்பிடத்தக்கது. அநேகர் இன்னும் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் வாழ்கின்றனர். இன்றேல் நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர். இவர்களில் சிலர் பல வருடங்களாக இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு நிலையான தீர்வு அவசியம் என்றும் சுபினே நண்டி தெரிவித்துள்ளார். கற்ற பாடங்கள் நல் இணக்க ஆணை க்குழுவின் பரிந்துரைகளை முழுமை யாக நடைமுறைப்படுத்துவதில் இல ங்கை அதிகாரிகள் ஈடுபட வேண்டு மென்றும் அவர் கூறியுள்ளார். புரட்டாசி 26, 2012 அபிவிருத்தி, ஐக்கியம், சமத்துவத்தை வைத்தே ஐ.ம.சு.மு கிழக்கில் கூட்டாட்சிகிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, இன ஐக்கியம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சியை ஏற்படுத்தியிருப்பதாக மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்றுத் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் எந்தவொரு இனத்தவரும் தனித்து, பிரிந்து நின்று ஆட்சியமைக்கமுடியாது என்ற உண்மையை நடைபெற்று முடிந்த தேர்தல் உணர்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.இங்கு தொடர்ந்தும் கருத்துக்கூறிய அவர், கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தை ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.எனினும், தமிழ் மக்கள் இங்கு புறக்கணிக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சர்கள், பங்காளிக் கட்சிகள் ஆகியவற்றின் இணக்கப்பாட்டுடனேயே கிழக்கு மாகாணசபையில் கூட்டாட்சி அமைந்துள்ளது. முதலமைச்சர் பதவியை இலக்குவைத்தே நான் இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டேன். எனினும், கூட்டாட்சி அமைக்கவேண்டிய சூழ்நிலையில் அமைச்சுப் பதவிகூட எனக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும் கிழக்கு மாகாண அமைச்சர்களுக்குப் பின்னாலிருந்து மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் தொடர்ந்தும் செய்வேன். புரட்டாசி 26, 2012 600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம் பிரிட்டனில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600 இலங்கையரை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்திருந்தவர்களே இவ்வாறு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பிஅனுப்பப்படவுள்ளனர் என தெரிய வந்துள்ளது. தற்போது இலங்கையில் சமாதான சூழ்நிலை காணப்படுவதையடுத்தே இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் இவர்கள் அனைவரையும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கőன ஏற்பாடுகளை பிரித்தானிய அரசு செய்து வருவதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. புரட்டாசி 26, 2012 இலங்கை பிரச்சினை, இந்தியாவின் தேசிய பிரச்சினையா?(என். சத்தியமூர்த்தி) இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா விஜயம் செய்தபோது, அவரது வருகைக்கு எதிரான போராட்டங்களும் கூறப்பட்ட கருத்துக்களும், 'இனப் பிரச்சினைக்கு' புதியதொரு வடிவம் கொடுத்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இடைப்பட்ட காலத்தில் இதனை இமாலய வெற்றியாக கருதும் இலங்கை தமிழர் தலைமைகள் எதிர்காலத்தில் இதனால் குழப்பமே மிஞ்சும் என்பதனையும் உணர்ந்திருத்தல் அவசியம். ஜனாதிபதி ராஜபக்ஷ விஜயத்தின் போது, அவரது வருகையை எதிர்த்தும் அவரது அரசை எதிர்த்தும் தமிழ் நாட்டில் அரசியல் போராட்டங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. இதுவே பல்வேறு காலகட்டங்களில், தேசிய தலைநகரான புது டெல்லிக்கு இடம் பெயர்ந்துள்ளது. அண்மை காலத்தில், இனப் பிரச்சினையின் மற்றொரு அலகாக உருவகப்படுத்தப்படும் தமிழ் நாட்டு அகதிகள் முகாம்களில் உள்ளோர் அவுஸ்திரேலியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக பயணப்பட்டு கைது ஆவதும், கேரளா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களை விட்டுவைக்கவில்லை. (மேலும்...)புரட்டாசி 25, 2012 கடந்த ஆட்சியாளர்கள் செய்த துரோகத்தை நீங்களும் செய்ய வேண்டாம் - இரா.துரைரெட்ணம் கிழக்கு மாகாணத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தாங்கள் எமக்குச் செய்யாமல் எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் புதிய முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது மாகாணத்தில் சிறுபான்மை இன முதலமைச்சராக தாங்கள் தெரிவு செய்யப்பட்டதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைவதோடு, நானும் ஒரு சிறுபான்மை இனத்தவன் என்ற வகையில் தங்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டதல்களையும் தெரிவிக்கின்றேன். (மேலும்...)புரட்டாசி 25, 2012 புதுடில்லிக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழைப்பு ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்து சில நாட்கள் கழிந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடானான பேச்சுவார்த்தை உட்பட சில சுற்று பேச்சுக்களில் பங்குபற்றுவதற்காக ஒக்டோபர் 10 ஆம் திகதி புதுடில்லிக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளது. சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தபோது இலங்கையில் தேசிய பிரச்சினையில் தமிழ்நாடு மட்டுமன்றி முழு இந்தியாவுமே அக்கறையாக இருப்பதை இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. பல தசாப்தங்களாக தொடரும் இனப்பிரச்சினை மற்றும் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வு என்பவை தொடர்பாக ஏற்புடைய தீர்வொன்றை விரைந்து காணுமாறு இந்தியா வலியுறுத்தியதாக 'டைம்ஸ் ஒப் இந்தியா' செய்தி வெளியிட்டிருந்தது. புரட்டாசி 25, 2012 தோழர் ஹெக்டர் அபேவாத்தனாவுக்கு எம் இதய அஞ்சலிகள்
தோழர் ஹெக்கடர் அபேவர்த்தனா இலங்கையின் சமூக பொருளாதார மறுமலர்ச்சிக்காக
தன்னை அர்ப்பணித்தவர்.இலகையின் சமூபொருளாதார நிலைமைகள் பற்றி ஆழ்ந்த புரிதல்
கொண்டிருந்தார். இலங்கை சமசமாஜகட்சியின் முதுபெரும் தலைவாக்ளில் ஒருவர் .
இலங்கையின் இடதுசாரி இயக்க பாரம்பரியத்தில் வந்த தலைசிறந்த கல்வியாhளர் .
சர்வதேசியவாதி. தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி அதீத கரிசனை கொண்டவர்.
அவர் இலங்கை தொழிலாளர்கள் மத்தியில் மாத்திரமல்ல மும்பாய், குஜராத் ,கல்கத்தா
போன்ற இடங்களில் தொழிலாளவர்க்க இயக்க செயற்பாடுக்ளில் ஈடுபட்டவர். இந்திய
சுதந்திர இயக்த்தில் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இலங்கையின் முன்னணி
சுதந்திர போராட்டக்காரர். ஆதிர்ந்து பேசாத தன்னடக்கமான தளம்பாத இந்த
மாதிரியான மனிதர்கள் தான் இலங்கை அரசியல் கல்வியாளர் மட்டத்தில் அற நிலையை
உருவாக்கினார்கள். இறக்கும் போது அவருக்கு வயது 93 இவரது மனைவியார் குசலா
அபேவாத்தனா பொரளை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அன்னாரின் மறைவிற்கு
பத்மநாபா ஈபிஆர்எல்எப் தனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறது. புரட்டாசி 25, 2012 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுவோருக்கு இனி முதலமைச்சர் பதவி இல்லை - ஜனாதிபதிமாகாணசபை அமைச்சர்களாக பதிவியேற்பவர்கள், பொய் வாக்குறுதிகளை வழங்காமல் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக பாடுபட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, விருப்பு வாக்குகளை அதிகமாகப் பெறுவோருக்கு முதலமைச்சுப் பதவி வழங்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து அமைச்சர்களும் தங்களது மாகாணம், மற்றும் கிராமங்களுக்காக சேவையாற்ற வேண்டும். மாகாணசபை என்பது ஒரு வெள்ளை யானை போன்றது எனும் மனப்போக்கை மாற்றியமைக்கும் வகையில் செயற்படும் பொறுப்பு அமைச்சர்களுக்கு உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களாக பதவியேறோர் முன்னிலையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். புரட்டாசி 25, 2012
All not yet quiet in East (by Shamindra Ferdinando) Speculation is rife in political circles that former Chief Minister of the Eastern Provincial Council (EPC) Sivanesathurai Chandrakanthan aka Pilleyan (leader of the breakaway LTTE faction, TMVP) and Amir Ali (All Ceylon Muslim Congress- ACMC), both elected to the EPC on the UPFA ticket, are seeking to enter parliament via the UPFA National List. In a bid to strengthen the UPFA’s administration in the East, UPFA National List MP Ms Malini Fonseka tendered her resignation, but she subsequently withdrew it. Political sources told The Island last night that it was being discussed by the SLFP leadership and constituent parties of the UPFA in keeping with several political pacts among them to facilitate UPFA takeover of the EPC. The UPFA reached an agreement with the SLMC to run the EPC vis-ŕ-vis an all-out attempt by the Tamil National Alliance (TNA) to wrest control of the council with the help of SLMC leader and Justice Minister Rauff Hakeem. (more...) புரட்டாசி 25, 2012 மெனிக் பாமிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை சொந்த இடங்களில் மீளக் குடியேற்ற வேண்டும் - சிறி ரெலோ மெனிக்பாம் முகாமிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை ௭டுக்கப்பட வேண்டும். இதனை விடுத்து, அவர்களை மெனிக்பாம் முகாமிலிருந்து அழைத்துச்சென்று வேறொரு இடத்தில் குடியேற்றுவது கவலைக்குரிய விடயமாகும் ௭ன்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மெனிக்பாம் முகாம் நேற்றுடன் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த மக்கள் மந்துவில், கேப்பாப்பிலவு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார். இந்த மக்கள் முகாமிலிருந்து அதிகாரிகளினால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் கேப்பாப்பிலவு மக்களை வேறு இடத்தில் குடியேற்ற நடவடிக்கை ௭டுக்கப்பட்டு வருகின்றது. இந்த மக்களை சொந்த இடத்தில் குடியேற்றுவதே சிறந்ததாகும். வன்னியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு இன்னமும் தேவைகள் அதிகமாகவுள்ளன. இந்தத் தேவைகளை நிறைவுசெய்வதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும். இன்று வன்னிப் பகுதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளார். அவர் இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளை அறிந்து தீர்வுகாண்பதற்கு முன்வர வேண்டும். மீள்குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதற்கு உரிய நடவடிக்கை ௭டுக்கப்பட வேண்டும். புரட்டாசி 25, 2012 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முல்லைத்தீவு, கிளிநொச்சி விஜயம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் அபிவிருத்திக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்கின்றார். இந்த நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொள்ளவேண்டும் ௭ன அழைப்பு விடுக்கின்றோம் ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை ௭திர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ௭ன்பன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அவற்றுக்கு ஆதரவு வழங்கவேண்டும் ௭ன்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். (மேலும்...)புரட்டாசி 25, 2012 சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் நேற்று பதவியேற்பு சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் சுபநேரமான முற்பகல் 11.55ற்கு சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மஹிபால ஹேரத்தும் வட மத்திய மாகாண முதலமைச்சராக சமரக்கோன் முதியன்சலாகே ரஞ்சித்தும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சராக ஏற்கனவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நஜீப் ஏ மஜீத் நேற்றைய தினம் முதலமைச்சர் பதவிக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புக்களுக்கான சத்தியப் பிரமாணத்தை ஜனாதிபதி முன்னிலையில் செய்துகொண்டார்.(மேலும்...) புரட்டாசி 25, 2012 SLMC இரு மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண வைபவத்தை பகிஷ்கரிப்பு!கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமானம் செய்யும் வைபவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவான இரண்டு உறுப்பினர்கள் பகிஷ்கரித்ததாக தெரிய வருகின்றது. இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் சபாநாயகர், பிரதி சபாநாயகர் சத்தியப்பிரமானம் செய்யும் வைபவம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர்கள், முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து தெரிவான அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஜமீல் மற்றும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த அன்வர் ஆகிய இருவரும் இந்த வைபவத்தை புறக்கணித்ததாக தெரிய வருகின்றது. புரட்டாசி 25, 2012 வவுனியா நலன்புரி நிலையங்கள் நேற்றுடன் முற்றாக மூடப்பட்டன வவுனியா செட்டிக்குளம் மெனிக் பாம் நலன்புரி நிலையம் நேற்றுமுதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது. இந் நிலையத்திலிருந்த அனைவரும் மீள்குடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இவை நேற்று முதல் மூடப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.எச்.ஜே.பி. சுகததாஸ தெரிவித்தார்.மெனிக் பாம் நலன்புரி நிலையத்தில் எஞ்சியிருந்த 361 குடும்பங்களைச் சேர்ந்த 1187 பேரும் நேற்றையதினம் முல்லை த்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மந்துவில் பிரதேசத்தில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 827 பேரும், கேப்பாப்பிலவில் 110 குடுபங்களைச் சேர்ந்த 360 பேரும் நேற்றையதினம் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் பூர்த்திய டைந்த பாதுகாப்புத் தரப்பினரின் மனித நேய நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்த 300,000 பேர் செட்டிக்குளம் மெனிக்பாமில் தங்க வைக்கப்பட்டனர். (மேலும்...) புரட்டாசி 25, 2012 மலையாள நடிகர் திலகன் மரணம் மலையாள திரைப்பட நடிகரான திலகன் நேற்று அதிகாலை காலமானார். 77 வயதாகும் திலகன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்தவர். கடந்த மாதம் 23ம் திகதி மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அதிகாலை 3.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 1979ம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தவர் திலகன், மொத்தம் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசிய மற்றும் மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது திலகனுக்கு வழங்கப்பட்டது. திலகனுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். புரட்டாசி 25, 2012 பல கோடி ஆண்டுகளுக்கான நாள்காட்டி தயாரித்து பெங்களூர் தமிழர்சாதனைபல கோடி ஆண்டுகளுக்கான நாள்காட்டியைத் தயாரித்து பெங்களூர் வாழ் தமிழரான சுப்பிரமணி சாதனை படைத்துள்ளார். இதுவரை நாள்காட்டிகள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளன. கூகுள் போன்ற இணையளதளங்களில் 10 ஆயிரம் ஆண்டுகள் வரை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட பெங்களூர் கதிரேனஹள்ளியைச் சேர்ந்த சுப்பிரமணி முதலில் ஒரு இலட்சம் ஆண்டிற்கான நாள்காட்யை உருவாக்கினார். அதன் பிறகு பல்வேறு முயற்சிகளை செய்து பல கோடி ஆண்டுகளுக்கான நாள்காட்டியை உருவாக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியது; பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவங்கள் வரலா றுகள் போர்கள் பிறந்த நாள்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நான் உருவாக்கியுள்ள சூத்திரத்தைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம், மிகவும் எளிமையாக ஒரே பக்கத்தில் 14 ஆண்டுகளின் படத்தைப் பார்த்து நாள், கிழமை, ஆண்டுகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் நாள்காட்டியை உருவாக்கியுள்ளேன் என்றார். புரட்டாசி 24, 2012 செட்டிகுளம் முகாம் மூடப்பட்டது எஞ்சியிருந்த 360 குடும்பங்கள் முல்லையில் மீள்குடியேற்றம் இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களை கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டிருந்த வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாம் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வந்த நிலையில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்நலன்பரி நிலையமானது மக்களின் படிப்படியான மீள்குடியேற்றத்தின் பின்னர் இறுதியாக கேப்பாபிளவு மற்றும் மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த 360 குடும்பங்களையும் முல்லைத்தீவில் மீள்குடியேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கூறினார். (மேலும்...)புரட்டாசி 24, 2012 கிழக்கு மாகாணசபைக்கு தெரிவான த.தே.கூ. 11 உறுப்பினர்கள் வெள்ளியன்று பதவியேற்பு கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு உறுப்பினர்களும், எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை காலை, சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்பார்கள்' என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ள நிகழ்வொன்றின் போதே இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு முன்னதாக 11 உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்திலிருந்து ஊர்வலமாக கடற்படைத்தள வீதி வழியாக திருகோணமலை நகர மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்படுவர். சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.புரட்டாசி 24, 2012 சிகரெட் வழங்க மறுத்த கடை உரிமையாளர் கொலை, ஒருவர் கைது வவுனியா, ஓயார் சின்னக்குளம் பகுதியில் உள்ள தங்கராசா என்பவரின் கடைக்கு மதுபோதையில் சென்ற அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு சிகரெட் தருமாறு வற்புறுத்தியுள்ளார். எனினும் கடை உரிமையாளர், 21 வயதுக்கு குறைந்த எவருக்கும் தன்னால் சிகரெட் வழங்கமுடியாது என தெரிவித்துள்ளார். பின்னர் இவர் அந்தப் பகுதியில் உள்ள மதுபானசாலையில் மது அருந்திவிட்டு வந்து கடை உரிமையாளரை கல்லால் தாக்கியுள்ளதாகவும் இதன்போது கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வவுனியாப் பொலிஸார், 17 வயதுடைய சிறுவன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். வவுனியா, ஓயார் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா (வயது 70) என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.புரட்டாசி 24, 2012 படகுமூலம் அவுஸ்திரேலியா செல்வோருடன் குடும்பத்தினர் இணைவதற்கான சலுகை நீக்கம் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைந்து கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகை நீக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான நிபுணர் குழுவொன்றின் சிபாரிசுகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்துள்ளார். 13.08.2012 ஆம் திகதிக்கு பின்னர் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்களுக்கு, குடும்ப அங்கத்தவர்களுடன் மனிதாபிமானத் திட்டத்தின் கீழ்இணைந்துகொள்வதற்கு வாய்ப்பளிப்பதை தடுப்பதும் இச்சிபாரிசுகளில் அடங்கும். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி ஆபத்தான படகுபயணம் மூலம் மக்கள் வருவதை அதைரியப்படுத்துவதே இதன் நோக்கமாகும். (மேலும்....)புரட்டாசி 24, 2012 'இரண்டரை வருடங்களில் மு.காவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென எழுத்துமூல ஒப்பந்தம் உள்ளது'
புரட்டாசி 24, 2012 ஐ.ம.சு.கூ.வுடன் சேர்வதை தவிர மு.காவுக்கு இருந்த தெரிவு என்ன?கிழக்கு மாகாண சபை நிர்வாகம் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்ட முறை, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மு.கா. கொள்கையற்ற முறையில் செயற்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் குற்றஞ்சாட்டி வருகின்றன. உண்மைதான், கொள்கை எப்படிப் போனாலும் மு.காவின. நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே பலருக்கு விளங்கிக் கொள்ள முடியாதவையாகவே அமைந்தன. அவை தர்க்க ரீதியாக அமையவில்லை என்றே கூற வேண்டும். மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கும்போதே அவரது கட்சி கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக ஐ.ம.சு.கூட்டணியோடல்லாமல் தனித்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது. இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் இது தர்க்க ரீதியாக கிரகித்துக் கொள்ள பலரால் முடியாது போய்விட்டது. (மேலும்....) புரட்டாசி 24, 2012 கேள்வி ? பதில்! களம் கண்டு வெற்றியுடன் திரும்பும் வைகோ அவர்களுக்கு சென்னையில் வரவேற்பு விழா என்றொரு செய்தியை படித்தேன். என்ன களம்? என்ன வெற்றி? அக்கடச்சூடு……….! தெலுங்கைத் தாய்மொழியாக் கொண்ட வையாபுரி கோபால்சாமி அவர்களுக்கு இலங்கைத் தமிழர்களின் பணத்தின் மேல் இருக்கும் பற்று வியக்கத்தக்கது. இலங்கை அதிபரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என போராட்டங்கள் நடத்திய தமிழக சில்லறைக் கட்சிகள் அதில் தோற்றுப் போயின. மத்தியப்பிரதேசம் சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த இலங்கை அதிபருக்குக் கறுப்புக் கொடி காட்ட சாஞ்சிக்குப் போன வைகோ மத்தியப்பிரதேச மாநில எல்லையிலேயே சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். வைகோவால் மகிந்தாவுக்குக் கறுக்குக்கொடியும் காட்ட முடியவில்லை. புலிகளின் பணத்தில் கூலிக்குப் பிடிக்கப்பட்ட சிறு கூட்டத்துடன் பஸ்சில் வடமாநிலத்துக்கு சுற்றுப்பயணம் போய்வந்த வைகோவுக்கு, அவரின் ஏற்பாட்டின் படியே வரவேற்புவிழா நடப்பது என்பது தமிழக அரசியல்வாதிகளின் வாடிக்கையான கேலிக்கூத்துத் தான். இதுபற்றி யாருமே கண்டுகொள்ளத் தேவையில்லை. புரட்டாசி 24, 2012 மம்முட்டியின் மனசு சமீபத்தில் சிவகாசியில் நடந்த வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்காக 35 லட்சத்திற்கு மருந்து வாங்க சென்ற போது கொஞ்சம் குறையுங்கள் என்று கேட்டபோது, மருத்துவ நிறுவன நிர்வாகி முதலாளிக்கு தொலைபேசியில் சொல்ல ,எதற்காக மருந்து வாங்கப்படுகிறது என்று விசாரித்து இருக்கிறார். சிவகாசியில் காயம் அடைந்தவர்களுக்கு என்று சொன்னதும், “அவர்களிடம் பணம் எதுவும் வாங்க வேண்டாம். மருந்து கொடுத்துவிடுங்கள் அதை என் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார் மருந்து கம்பெனி முதலாளி. அந்த மருத்துவ நிறுவன அதிபர் நடிகர் மம்முட்டி. இதுவே தமிழ்த்திரைப்பட நடிகர்களாக இருந்தால் பிரஸ்மீட் வைத்து தங்கள் கருணை உள்ளத்தை வெளிச்சம் போட்டிருப்பார்கள். ஆனால் மம்முட்டி இதை வெளியிடவில்லை. மம் முட்டியின் பெரிய மனதை பாராட்டலாம். புரட்டாசி 24, 2012 இந்தியாவைச் சூறையாட தயாராகிறது வால்மார்ட் இந்தியாவில் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் சில்ல ரை விற்பனைக் கடை களைத் திறக்கப் போவதாக அமெரிக்காவின் வால் மார்ட் நிறுவனம் அறிவித் துள்ளது. இது தொடர்பாக வால் மார்ட் நிறுவனத்தின் ஆசி யப்பிரிவு தலைவரும், தலை மை நிர்வாக அதிகாரியு மான ஸ்காட் பிரைஸ் கூறி யுள்ளதாவது, இந்தியாவில் 12 முதல் 18 மாதங்களுக்குள் எமது நிறு வனத்தின் கிளைகளைத் தொடங்கி விடுவோம். இந் தியாவில் எங்கெங்கு, எத் தனை கடைகள் திறப்பது என்பது குறித்து இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில் லை. இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் பார்தி நிறு வனத்துடன் தற்போது இணைந்து நடத்தப்பட்டு வரும் கடைகள் தொடர்ந்து நீடிக்கும். சில்லரை வர்த்த கத்தில் இந்தியாவில் மேற் கொள்ளப்பட்டுள்ள சீர் திருத்த நடவடிக்கைகள் நிரந்தரமானவை என நம்பு கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.(மேலும்....)புரட்டாசி 24, 2012 அவுஸ்திரேலியா செல்ல முயற்சி பருத்தித்துறை, நீர்கொழும்பு கடற்பரப்பில் 81 பேர் கைது. இதுவரை 2,254 பேர் கடற்படையினரால் கைது அவுஸ்திரேலியாவு க்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட் டோரின் எண்ணிக்கை 2254 ஆக உயர்வடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான் டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித் துள்ளார். நேற்று அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாகச் செல்ல முயற்சித்த 81 பேர் பருத்தித்துறை மற்றும் நீர்கொழும்பு கடற்பரப்புகளில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பருத்தித்துறை கடல் வழியாக 46 பேரை ஏற்றிச் சென்ற படகு நேற்று அதிகாலை மடக்கிப் பிடிக்கப்பட்டு ள்ளது. அப்படகில் 41 தமிழர்களும் 4 முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நீர்கொழும்பு மேற்கு கடலில் நேற்று 35 பேருடன் சென்ற படகொன்று வழிமறிக்கப்பட்டுள்ளதாகவும் இப்படகில் பயணித்தவர்கள் தற்போது மோதர துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். புரட்டாசி 24, 2012 இஸ்ரேல் தாக்குவது நிச்சயம் - ஈரான் புரட்சி படை
இஸ்ரேல் எச்சரிக்கைக்கு அப்பால் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என ஈரான்
புரட்சிப் படை தளபதி மொஹமட் அல் ஜபாரி குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு
நிகழ்ந்தால் யூத நாடு தரை மட்டமாகும் என அவர் எச்சரித்தார். எதிர்வரும்
நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஈரான் மீது
இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தும் என சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே
ஈரான் இராணுவம் இவ்வாறு கூறியுள்ளது. “அவர்களது எச்சரிக்கை இஸ்லாம் மற்றும்
ஈரான் மீது எவ்வளவு பகையு ணர்வுடன் இருக்கி றார்கள் என்பதை காண்பிக்கிறது.
இந்த பகை ஒரு மோதலாக மாறும்” என்று அல் ஜபாரி நேற்று முன்தினம் நடந்த ஊடக
மாநாட்டில் கூறியதாக ஈரானின் இஸ்னா செய்திச் சேவை கூறியுள்ளது. “யுத்தம்
ஒன்று ஏற்படுவது தெளிவானது. ஆனால் அது எப்போது எங்கே நிகழப் போகிறது.
தெரியாது அதற்காக நாம் எமது பாதுகாப்பை பலப்படுத்தி யுள்ளோம்’’ என்றார். உண்மையில் பேரம் பேசும் சக்தி யாருக்கு? தனதாக்கிக்கொண்ட மு.காவுக்கா? ஏற்படுத்திக் கொடுத்த TNA வுக்கா? முஸ்லிம் காங்கிரஸிற்கு பேரம் பேசும் சக்தியை தாமே ஏற்படுத்திக் கொடுத்தோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் தெரிவித் திருந்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ் ஆர்வலர்கள் பல ரும் ஏன் அந்தப் பேரம் பேசும் சக்தி யாக தாங்கள் இருந்திருக்க முடியாமற் போனது எனும் கேள்வியை எழுப்பியுள்ளனர். முப்பது வருடகால ஆயுதப் போராட்ட அரசியல் நடத்தி ஒரு சிறு காரியத்தைக் கூடச் சாதிக்க முடியாமல் இருக்கும் தமிழ்க் கூட்டமைப்பு தற்போது அறிக்கைப் போராட்டம் நடத்திய தீர்வைப் பெறப்போ கின்றது எனவும் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த வாய் வீச்சு அரசியல் நடத்தி எஞ்சியிருக்கும் தமிழ்ச் சமூகத்தையும் அழிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனரோ தெரியாது எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். முஸ்லிம் அரசியல் சாணக்கியத் தலைமைகள் விமர்ச்சிக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் தமது சமூகத்தின் நலனில் அக்கறையில்லாது செயற்பட்டு வருவது துரதிஷ்டவசமானதே எனவும் அவர்கள் தெரிவித்தனர். முன்னொரு காலத்தை விடுத்து இனியாவது தமிழ் அரசியல் தலைமைகள் தாமும் பேரம் பேசும் சக்திகளாக மாறி அரசாங்கத்தின் சலுகைகளை தமிழ்ச் சமூகமும் அனுபவிக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையேல் முப்பது வருட கால அவலவாழ்வு இன்னும் முப்பது அல்ல முண்ணூறு வருடங்கள் தொடர்ந்துவரும் என்பதே யதார்த்தம் என்றும் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். புரட்டாசி 23, 2012 கிழக்கு முதலமைச்சருக்கு கிண்ணியாவில் வரவேற்பு...
கிழக்கு மாகாண முதல் முஸ்லிம் முதலமைச்சரான நஜீப் அப்துல் மஜீத்துக்கு இன்று கிண்ணியாவில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது. கொழும்பில் இருந்து விஷேட விமானம் மூலம் சீனக்குடா விமான நிலையத்தை வந்தடைந்த முதலமைச்சருக்கு அங்கு இஸ்லாமிய கலாசார முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டதோடு சர்வ மதத்தலைவர்களின் ஆசி வேண்டிய பிராத்தனைகளும் இடம்பெற்றன. இதனைத் தொடாந்து சீனக்குடா வெள்ளை மணல் ஊடாக தனது சொந்த ஊரான கிண்ணியாவுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட முதலமைச்சரை வீதியின் இரு மருங்கிலும் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மலர் தூவி வரவேற்றனர். ஊர்வலத்தின் இறுதியில் கிண்ணியா கிராமக்கோட்டு மைதானத்தில் மாபெரும் வெற்றி பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது. புரட்டாசி 23, 2012 அமெரிக்க வாழ் பணக்காரர்கள் வரிசையில் முதல் 5 இடங்களை பிடித்த இந்தியர்கள் அமெரிக்க பணக்காரர் கள் வரிசையில் முதல் 5 இடங்களை பிடித்த இந்தி யர்கள் பெயர் வெளியிடப் பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்பஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண் டும் அமெரிக்க பணக்காரர் கள் பெயர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற் படுத்தி வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் 400 அமெரிக்க கோடீஸ்வரர் களின் பெயர் பட்டியலை போர்ப்பஸ் வெளியிட் டுள்ளது. (மேலும்....)புரட்டாசி 23, 2012 ஆபத்தான ஆழ்கடலூடாக முடிவின்றி தொடரும் சட்டவிரோத புலம்பெயர்வு அண்மைக் காலமாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் அதில் பெரும்பாலானவை சட்டவிரோதமாக வெளிநாடுக ளுக்குச் செல்லும் இலங்கையர் பற்றியதாகவே உள்ளன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சட்டவிரோதமாக சிறு படகுகள் மூலமாக இவர்கள் பயணிப்பதையும் நடுக்கடல் பகுதியில் வைத்து கடற்படை யினரிடம் சிக்குவதையும் அறியமுடிகிறது. இன்னும் சில சம்பவங்க ளாக பயண ஆரம்பத்தின்போதே கரையோரங்களில் வைத்து இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுகிறார்கள். ஆட்கடத்தல் காரர்கள் தமக்கிடையேயான தொழில் போட்டி காரணமாக காட்டிக் கொடுப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், இன்னும் சில கடத்தல்காரர் பயணிப்போரிடம் முன்கூட்டியே முழுப்பணத்தையும் பெற்றபின் தாமே பொலிஸாருக்குத் தகவலை வழங்கி இவர்களைப் பிடித்துக் கொடுத்து இலாபமீட்டியும் வருகின்றனர். ஆபத்தான ஆழ்கடல் பயணம் என நன்கு தெரிந்திருந்தும் இலட்சக்கணக்கான பணத்தை ஆட்கடத்தல்காரரிடம் கொடுத்து இவர்கள் பொருள்தேடும் எண்ணத்தில் இவ்வாறு உயிரைத் துச்சமெனக் கருதி துணிந்து செல்கின்றனர். (மேலும்....) புரட்டாசி 23, 2012 Srinivasa Ramanujan
Srinivasa Ramanujan FRS was an Indian mathematician and autodidact who, with almost no formal training in pure mathematics, made extraordinary contributions to mathematical analysis, number theory, infinite series, and continued fractions. (more....)
புரட்டாசி 23, 2012 கேள்வி ? பதில்! கருணாநிதியின் திடீர் தமிழீழக் கோஷத்துக்கு விசேட காரணம் ஏதாவது உள்ளதா? இடைத் தேர்தலில் படுதோல்வி. பிள்ளைகள் ஸ்ராலின் அழகிரி பதவிச் சண்டை. கனிமொழியின் கள்ளத்தனம். முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள். இவற்றையெல்லாம் பார்த்து விரக்தியடைந்துள்ள தொண்டர்களை திசைதிருப்ப கலைஞர் போடும் அரசியல் கோஷம்தான் இந்த தமிழீழ வாக்கெடுப்பு. ரெசோ புனரமைப்பு எல்லாம். மற்றப்படிக்கு இதை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அடுத்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு முன் மீண்டும் மாநில சுயாட்சி கேட்டாலும் கேட்பார். புரட்டாசி 23, 2012 Innocence of Muslim பின்னணி என்ன? (எம்.எஸ். சாஜஹான்) அது செப்டம்பர் 8 சனிக்கிழமை. எகிப்தின் ஷேக் காலித் அப்துல்லாஹ்வின் தொலைக்காட்சியான அல்-நாஸ்-அரபிய மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த 13.51 நிமிடங்கள் மட்டும் ஓடும் வீடியோவை முதன்முதலாக வெளியிட்டது. ஒரு சில மணித்தியாலயங்களில் அது கணனி மூலம் அரபுலகில் வலம் வந்தது. பல்லாயிரணக்கானோர் அல்லது சில லட்சம் பேர் ஓரிரு நாட்களில் அதனைப் பார்த்தனர். ஆத்திரம் அடைந்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் YOU TUBE அது வந்ததைப் பார்த்தனர். அவ்வளவுதான்! அரபுலகம் வெடித்தது. (மேலும்....) புரட்டாசி 23, 2012 பொதுநலவாய நாட்டுப் பிரதிநிதிகளை கவர்ந்த யாழின் புதுமை பார்ப்போம்...... நம்புவோம்.......... Seeing is believing..... “இதுவல்லவா நாம் பாடசாலையில் படித்த tresure (தனக் களஞ்சியம்) தீவு” என்று தனது ஆச்சரியத்தைத் தெரிவித்தார். இலங்கையர்களாகிய நாம் கேட்டும்பார்த்தும் பழக்கம் இல்லாதது கனடாவின் கல்காரி calcary பிராந்திய மாகும். இந்தப் பிராந்தியத்தின் பாராளு மன்ற உறுப்பினர் devinder Shorn, “இங்கு நாம் வருவதற்கு முன்பு இது யுத்தம் நடைபெற்ற காட்டுமிராண்டி நாடாகும். ஒவ்வொரு மரத்தின் கீழும் இராணுவம் நிறுத்தப்பட்டிருக்கும்; எங்கு போனாலும் இலங்கைக்குப் போகாதீர்கள்; இலங்கைக்குப் போனாலும் யாழ்ப்பாணப் பக்கமே தலையைக் காட்டக் கூடாது” என்று எம்மைப் பயமுறுத்தியிருந்தனர். “ஆனால், நாம் வந்தோம்; பார்த்தோம். உண்மையை விளங்கினோம். மன நிறை வோடு போகிறோம்; திரும்பவும் வருவோம்” என்றார் நியூசிலாந்து பிரதிநிதி. (மேலும்....) புரட்டாசி 23, 2012 அக்கரை சென்றால் மகிழ்ச்சி கைதுசெய்யப்பட்டால் கூச்சல் போர் முடிந்த காலம் தொட்டு இன்று வரை மேலை நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கேட்கும் நோக்கத்தோடு சட்டவிரோதமாகப் படகுகளில் செல்லும் இலங்கையர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கடந்த சில வாரங்களில் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளால் நடுக்கடலில் பிடிபட்ட படகுகளின் எண்ணிக்கையே திகைக்க வைக்கின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் வெகுவாக கவலைப்பட தொடங்கியுள்ளன. அது போன்றே இந்தியாவில், தமிழ் நாட்டில் அரசு முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக மேலை நாடுகள் செல்ல முயலும் போது பிற மாநிலங்களில் கைது செய்யப்பட் டுள்ளனர். (மேலும்....) புரட்டாசி 23, 2012 கட்சி நலனை விடவும் சமூக நலனுக்கு முன்னுரிமை அழுத்தங்கள், விமர்சனங்களுக்கு அடிபணியாது மு. கா தலைவர் எடுத்த முடிவிற்கு வரவேற்புகிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியமை அந்த இயக்கம் தமது கட்சி நலன் சார்ந்த விடயங்களை விட சமூக நலனுக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதை எடுத்துக்காட்டி யுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எத்தனையோ அழுத்தங் கள், விமர்சனங்கள் மற்றும் உட்கட்சிப் போராட்டங்க ளுக்கு மத்தியில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட இந்த முடிவு காலோசிதமானது என அவர்கள் கூறுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைத்து தமக்கு முதலமைச்சர் பதவியையும் ஏனைய அமைச்சுப்பதவிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தபோதும் கிழக்கு மக்க ளையோ, அல்லது தனது கட்சி அங்கத்த வர்களையோ மட்டும் கவனத்திற் கொள்ளாது வடக்கு - கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நலனையும் கருத்திற்கெடுத்து மேற்கொண்ட இந்த தீர்க்கமான முடிவு சமூக நலனில் அக்கறை கொண்டவர்களால் பெரிதும் சிலாகிக்கப்படுகின்றது. “எமது தீர்மானத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றமடைந்திருக்கலாம். எனினும் எதிர்காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மு.கா சிநேகபூர்வமாக செயற்படும்” என்ற ஹக்கீமின் கூற்றானது தமிழ் மக்களுடனான புரிந்துணர்வு தொடர வேண்டியதன் அவசியத்தை கோடிட்டு காட்டுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். புரட்டாசி 23, 2012 “எங்களுக்கும் காலம் வரும்” என TNA தெரிவிப்பு நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைத்ததை அறிவித்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் சினேகபூர்வமான அழைப்பினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதையிட்டு நான் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று கூறியது சம்பந்தமாக கேட்டபோதே இவ்வாறு பதிலளித்தார். முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்த விடயம்தான் ஏனெனில் தமிழர்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில் அஸ்ரப் அவர்களுக்கு பின்னர் எந்த முஸ்லிம் தலைமைகளும் தமிழர்களுடன் இணைந்து செயற்பட்ட வரலாறு கிடையாது. இது முஸ்லிம் கட்சிகளுக்கேயான தனித்துவம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தனித்துவம் என்பது வேறு. முஸ்லிம் கட்சிகளின் தனித்துவம் என்பது வேறு. புரட்டாசி 22, 2012 நந்திக்கடல், வெள்ளமுள்ளி வாய்க்கால் ஊடாக பிரபாகரன் கடைசியாக இருந்த விஷ்வமடு, புதுக் குடியிருப்பு பிரதேசங்களுக்கு மட்டுமன்றி பிரபாகரனின் வீட்டிற்கும் கூட மின்சாரம் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் வடக்கிற்கு தேசிய மின் கட்டமைப்பினூடாக முழுமையான மின்சார வசதி அளிக்கப்படும். இதனூடாக யாழ். குடா அடங்கலாக வடக்கு பிரதேசத்தில் காணப்படும் மின்சார சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு ஏற்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை அதி சக்தி வாய்ந்த மின் பரிவர்த்தனை தொகுதியும் மின் உபநிலையமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதனை எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்....) புரட்டாசி 22, 2012 தலைமன்னார் - இராமநாதபுரம் சட்டவிரோத படகுச்சேவை நடத்திய நபர் கைது தலைமன்னாருக்கும் தமிழ்நாட்டின் இராமநாதபுரத்துக்கும் இடையே சட்டவிரோதமாகப் படகுச் சேவையை நடத்தி வந்த சுரேஷ் என்ற இலங்கையரொருவரை இந்திய கரையோர பாதுகாப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் இலங்கையிலிருந்து, அகதிகளை தமிழ்நாட்டுக்கு ஏற்றிச்சென்றமையை ஒத்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்றிச்செல்வதற்கு 30 ஆயிரம் முதல் 50,000 ரூபாவரை கட்டணமாக வசூலித்துள்ளார். தற்போது சுரேஷ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். புரட்டாசி 22, 2012 நபிகளாரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக இலங்கை பூராக ஆர்ப்பாட்டம்
முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை கல்குடா, ஹட்டன், மருதமுனை, மடவளை, கொழும்பு கொள்ளுப்பிட்டி, தெமட்டகொடை பகுதியிலும், காத்தான்குடி போன்ற இலங்கையின் பல்வேறு பாகங்களில் நடைபெற்றன. பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டன. கொழும்பில் ஆர்பாட்டம் நடைபெற்றபோது எனினும் நூற்றுக்கணக்கான பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டு தூதரகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில் பராக் ஒபாமாவின் நூற்றுக்கணக்கான கொடும்பாவிகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டன. உலகம் பூராகவும் நடைபெற்றுவரும் ஆர்பாட்டங்களின் ஒரு அங்கமாக முஸ்லீம் சகோதரர்கள் தமது நியாயமான எதிர்பை தெரிவித்து போராடி வருகின்றனர். புரட்டாசி 22, 2012 கேள்வி ? பதில்! தமிழர்களின் அடுத்த தேசியத் தலைவன் டக்ளஸ் தேவானந்தாவா, சுரேஸ் பிரேமசந்திரனா? தேயத் தலைவனாக வரும் போட்டியில் கே பி, ருத்திரகுமார், போன்று பலர் இருந்தாலும், தென்னிந்திய சினிமாக்காரன் சீமான் தான் போட்டியில் முன்னணியில் இருக்கிறார். ஏனெனில் அவர்தான் இந்தியாவில் தம்பிமாரை திரட்டிக்கொண்டு வந்து வன்னியை மீட்கப்போவதாக சொல்லிக்கொண்டு திரிகிறாராம். புரட்டாசி 22, 2012 யாழ்.நகரப் பகுதியில் இடம் பெற்ற திருட்டுகள் தொடர்பாக மூவர் கைது யாழ்.நகரப் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி, சங்கிலித் திருட்டுகள் தொடர்பாக மூன்று பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மோட்டார் சைக்கிள்களில் ஆளரவமற்ற இடத்தில் தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அறுத்துச்செல்வதில் இந்தக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்கள் . கடந்த புதன் கிழமை தனிமையில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டவேளையில் குறிப்பிட்ட ஒருவர் பிடிபட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட சம்பவத்துடன்மேலும் இருவர் தொடர்புடையவர்கள் என்ற தகவல் வெளி வந்த நிலையில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யாழ்ப்பாணம் நகர உள்ளுராட்சி மன்றத்தில் கடமையாற்றுபவர்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். புரட்டாசி 22, 2012
செம்மொழித் தமிழின் சிறப்புணர்த்தும் நூல் புரட்டாசி 22, 2012 சிரியாவில் போராட்டக்காரர்களுடனான பேச்சு வார்த்தைக்குத் தயார்: பஷார் அல்-அஷாத் சிரியாவில் கடந்த இரண்டு வருடங்களாக நிலவி வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர போராட்டக்காரர்களுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என சிரிய அதிபர் பஷார் அல்-அஷாத் அறிவித்துள் ளார். சிரியாவில் அதிபர் பஷார் அல்-அஷாத்தின் ஆட்சிக் கெதிராக ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்கள் வன் முறையில் ஈடுபட்டு வருகின் றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் ராணுவம் ஈடுபட் டிருந்தது. இருவருக்கும் இடையேயான மோதலில் போராட்டக்காரர்கள் உள் பட ஆயிரக்கணக்கான அப் பாவி மக்கள் கொல்லப்பட் டனர். மேலும், இந்த போராட்டக்காரர்களுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி களை துருக்கியின் உதவியு டன் மேற்கத்திய நாடுகள் செய்து வருவதாக சிரியா குற்றம் சாட்டி வருகின்றது. இந்நிலையில், சிரியாவில் போராட்டக்காரர்கள் கைப் பற்றியிருந்த பெரும்பாலான மாவட்டங்களை ராணுவம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இத னால், அங்கு அமைதி திரும் பிக் கொண்டிருக்கிறது. (மேலும்....)புரட்டாசி 22, 2012 ரஷ்யாவில் தொன் கணக்கில் வைரக்கல் கண்டுபிடிப்பு! தங்கத்திற்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பி வாங்குவது வைர நகைகள். இதற்குக் காரணம் தங்கத்தை விட வைரத்திற்கான விலை அதிகமாக இருப்பதுதான். ஆனால், ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்குப் போதுமான அளவிற்கு டிரில்லியன் கேரட் கணக்கான வைரங்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் மோதியது. இதனால், 62 மைல் விட்டத்திற்கு பள்ளத்தாக்கு ஒன்று உருவாகியது. இது கடந்த 1970ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு போபிகாய் ஆர்ஸ்ப்லெம் எனப் பெயரிடப்பட்டது. இங்கு நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. அப்பகுதியில் கோடிக்கணக்கான டன் அளவிற்கு வைரங்கள் இருந்தது. இவை, சாதாரண வைரங்களைவிட இரண்டு மடங்கு கடினமுடையதாகஉள்ளன. இவற்றை வெட்டியெடுக்க அதிக தொழில்நுட்ப விஞ்ஞான உபகரணங்களைக் கொண்டு தான் செதுக்க முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போது இத்தகவல்கள் வெளியுலகிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி 22, 2012 இலங்கை யாத்திரிகர்கள் மீதான தாக்குதல் புலம் பெயர் தமிழர்களின் தூண்டுதலே காரணம் தமிழகத்தில் அண்மையில் இலங்கை பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் புலி ஆதரவாளர்களான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் தூண்டுதலாலேயே இடம்பெற்றன. இவற்றில் ஜெயலலிதாவோ அல்லது கருணாநிதியோ சம்பந்தமில்லையென பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார். இச்சம்பவம் காரணமாக இரு நாடுகளு க்குமிடையிலான நல்லுறவுகளில் எவ்வித பாதிப்புமில்லையென தெரிவித்த பிரதியமைச்சர் மேற்படி சம்பவம் நடைபெற்ற இருவார காலங்களில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டார். (மேலும்....) புரட்டாசி 22, 2012 சிலாபம் குமாரகட்டுவவில் ஆயுதமுனையில் 13 லட்சம் கொள்ளை சிலாபம், பங்கதெனிய குமாரகட்டுவ என்ற இடத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் சாரதியை கட்டி வைத்துவிட்டு வீட்டு உரிமையாளரை ஆயுதமுனையில் அச்சுறுத்தி 13 இலட்சத்து 50,000 ரூபா பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனோஜ் ரணகல தலைமையிலான குழுவினர் கொள்ளைக் கும்பலைத் தேடி வலை விரித்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் வீட்டினுள் புகுந்தபோது குறித்த சார தியும் வர்த்தகரும் மட்டுமே இருந்துள் ளனர்.ரி.56 ரக துப்பாக்கியொன்றுடனும் கைத் துப்பாக்கியொன்றுடனும் திடீரென வீட்டுக்குள் புகுந்துள்ளனர். 4 லட்ச ரூபா ரொக்கப் பணமும் சுமார் 9 1/2 லட்ச ரூபா பெறுமதியான நகைகளையும் இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர். புரட்டாசி 22, 2012 நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவன்நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. கடந்த 350 ஆண்டுகளாக தீர்வு காணமுடியாமல் இருந்த எண் கணிதத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவன் தீர்வு கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் டிரெஸ்டென் பகுதியில் வசிக்கும் செளர்யா ரேய் என்ற அந்த மாணவன், விஞ்ஞானி சேர் ஐசக் நியூட்டன் வகுத்த எண் கணிதத்திற்கு தீர்வு கண்டு பிடித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த கணிப் பொறி மூலம் தீர்வுக்கு முயற்சித்த அடிப்படை துகள் இயக்கவியல் கொள்கை தொடர்பானவற்றுக்கும் ரேய் தீர்வு கண்டுபிடித்ததாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பந்தை சுவரில் எறியும் போது பந்தின் திசை, சுவரில் பந்து எவ்வாறு பட்டு திரும்பும் என்பது உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆராய முடியும் எனவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புரட்டாசி 21, 2012 கேள்வி ? பதில்! பிரபாகரன் உயிருடன் இருப்பதாக காலச்சக்கரம் என்னும் சாத்திரம் பார்த்துக் கண்டு பிடித்துள்ளதாக புலி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே? புலிகள் சாத்திரம் சகுனம் போன்றவற்றை நம்புவதை பார்க்கும் போது, ஏன் வீணாக துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு சண்டைக்கெல்லாம் போனார்கள். ஒரு மலையாள மாந்திரிகனை வைத்து மகிந்தாவையும் அவரின் படையினரையும் பில்லி சூனியம் வைத்து மந்திரத்தாலேயே கொன்றிருக்கலாமே என எண்ணத் தோன்றுகிறது. புலித் தலைவன் பிரபாகரனும் ஒரு மலையாள வம்சாவழியினன் என்றபடியால் இந்த வழி மிகவும் சுலபமாக இருந்திருக்கும். இன்னும் காலம் கடந்துவிடவில்லை. பிரபாகரனின் அப்பன்வழி அத்தையை பிடித்து ஒரு வழி பண்ணிவிடலாம். புரட்டாசி 21, 2012 துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியத் தலையங்கம் இலங்கைப் பிரச்னை இலங்கைத் தமிழர்களுக்கு கணிசமான அளவில் திருப்தி தருகிற வரையில் ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதைத் தடுத்துவிட தமிழகத்தில் நடக்கின்ற சில நிகழ்ச்சிகள் போதும். தினந்தோறும் நடக்கின்ற “கொலைகார ராஜபக்ஷ....” பேச்சுக்கள் அவ்வப்போது நடக்கிற கொடுங்கோலன் ராஜபக்ஷ கொடும்பாவி எரிப்பு, சில சமயங்களில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற இலங்கையைப் பிளந்து ஈழத்தை உருவாக்குவதே தீர்வு என்று தீர்ப்பளிக்கின்ற கட்டுரைகள் திடீர் உண்ணாவிரதங்கள், இவை போதாதென்று டெசோ பிரதே ஊர்வலம் அதைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் டெசோ எலும்புக்கூடு நடனம் மத்திய அரசுக்கு மிரட்டல்கள் என்று - இலங்கை அரசின் பிடிவாதம் தளர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள, இங்கு பெரும் முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. (மேலும்....)புரட்டாசி 21, 2012 மானிட நேயத்தை முன்னிறுத்தி மூன்றாவது ஆண்டாக வாழும் மனிதம் - 3 காலம்: செப்ரெம்பர் 22, 2012 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபம் (மக்கோவன் - எல்ஸ்மெயர்) சிறப்புப் பேச்சாளர்: பிரித்தானியாவிலிருந்து வருகை தரும் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான எஸ்.எம்.எம்.பசீர் அவர்கள் 'போருக்குப் பின்னான இலங்கைத் தேசமும் இனவாதமும்' எனும் தலைப்பில் உரையாற்றுவார். கனடிய தமிழ்ச்; சமூகத்தில் ஜனநாயக விழுமியங்களுக்காகத் தொடர்ந்து குரல் குரல் கொடுத்து வருபவரும், சமூகச் செயற்பாட்டளருமான எஸ்.இராஜேந்திரன் அவர்கள் 'தமிழ் சமூகமும் அடிப்படைவாதமும்' எனும் பொருளில் உரையாற்றுவார். ஒருங்கிணைப்பாளர்: தேவன் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். • நிகழ்வு குறித்த நேரத்தில் ஆரம்பமாகும். அன்புடன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புரட்டாசி 21, 2012 வடக்கு, கிழக்கு பிரதேசங்களில்இராணுவ பிரசன்னம் குறையவில்லை - இந்து பத்திரிகை இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இராணுவப் பிரசன்னம் குறையவில்லை ௭ன்று இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினரின் ௭ண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதும், இதுவரை ௭ந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கையில் மொத்தமாக உள்ள 19 இராணுவ பிரிவுகளில், 16 பிரிவுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே நிலை கொள்ள செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் மூன்று படைப்பிரிவுகள் காணப்படுகின்றன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மூன்று பிரிவுகள் உள்ளன. அத்துடன் வவுனியாவில் ஐந்து படை பிரிவுகளும், கிழக்கில் இரண்டு படைப்பிரிவுகளும் நிலைகொண்டுள்ளன. ஏனைய 3 படைப் பிரிவுகளே தென்னிலங்கையில் உள்ளன. இந்த நிலையில் தமிழ் பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம் குறைந்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. புரட்டாசி 21, 2012 13 தமிழர்கள், 8 முஸ்லிம்கள், 4 சிங்களவர்கள் பிரிட்டன் நாடு கடத்திய 25 பேர் நேற்று விசேட விமானம் மூலம் வருகை பிரிட்டினில் புகலிடம் கோரி நிராகரிக் கப்பட்ட மற்றும் வீசா காலம் முடிவடைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வர்களுள் 25 பேர் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 25 இலங்கையருடன் விஷேட விமானத்தில் 50 பிரிட்டன் அதி காரிகளும் வந்திருந்தனர். ஒரு இலங்கையருக்கு இரண்டு அதிகாரிகள் வீதம் இலங்கை வந்த அவர்கள் விமான நிலையத்தில் குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளிடம் 25 பேரையும் ஒப்படைத்தனர். மூன்று தமிழ் பெண்களும், ஒரு முஸ்லிம் பெண்ணும் உட்பட 13 தமிழர்கள் 8 முஸ்லிம்களும், 4 சிங்களவர்களும் இதில் அடங்குவதாகவும் இவர்கள் 2006 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து லண்டனுக்குச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருணாகல், யாழ்ப்பாணம், கண்டி, முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களே நேற்று இலங்கை வந்ததாகவும் அவர்கள் விமான நிலையத்தில் விசாரணைகளுக்குட்படுத்தப் பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். புரட்டாசி 21, 2012 இந்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் 26,000 பேர் கைது சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு, டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து இந்திய எதிர்க்கட்சிகள் நேற்று வியாழக்கிழமை முழுவதும் நாட்டின் பல பாகங்களிலும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டு, இரு எம்.பி.க்கள், 13 எம்.எல்.ஏக்கள், மூவாயிரம் பெண்கள் உட்பட 26 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் என்று இந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர். பாரதிய ஜனதாக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆகியனவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டன. பொதுவேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. மற்றும் தனியார் வாகனங்கள் இயங்காததால் பாதிப்பு ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. புரட்டாசி 21, 2012 ஜனாதிபதி மஹிந்த - இந்திய பிரதமர் மன்மோகன் சந்திப்பு இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலந்துரையாடினார். இந்த இரு தரப்பு சந்திப்பின் போது இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மறுவாழ்வு, நீண்ட காலமாக நிலவும் இனப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களுக்கான இயல்பு வாழ்க்கை மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கவலை வெளியிட்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அதனை துரிதப்படுத்துமாறு அழுத்தம் கொடுத்ததுடன், இனப்பிரச்சினைக்கு நீடித்த தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனப்பிரச்சினையைக் கையாள்வதிலும் தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காகவும் அரசாங்கம் முன்னெடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார். இந்த கலந்துரையாடலை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் இரவு விருந்துபசாரமொன்றையும் அளிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புரட்டாசி 21, 2012 யாழில் கடற்கரை பகுதிகளை ஆழமாக்குவதற்கு நடவடிக்கை தொண்டமனாறு தொடக்கம் கற்கோவளம் வரையான கடற்கரை பகுதிகளை ஆழமாக்குகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் யாழ். மாவட்ட திட்டப்பணிப்பாளர் சுதர்சன், வடமராட்சி கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் தலைவர் அருளானந்தம் மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை ஆகியோர் இப்பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். கடற்கரை பகுதிகளை செப்பனிடுவதற்காக கடற்கரை பகுதியின் ஆளம், அகலம் என்பவற்றை கணிப்பிட்டதுடன், செப்பனிடுவதற்கு பல மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதனால் அதிகாரிகளிடம் தீர்மானித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் யாழ். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். புரட்டாசி 21, 2012 கிழக்கு மாகாண மக்கள் ௭ம்முடன் வடமாகாண தேர்தல் அடுத்த வருடம் - ஜனாதிபதி மஹிந்த கிழக்கு மாகாண மக்கள் இன, மத, மொழி பேதங்களை மறந்து அரசாங்கத்துடன் இணைந்து நிற்கின்றனர். அடுத்த வருடம் வடமாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும் ௭ன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்தியாவிற் இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஜனாதிபதி பிராணப் முகர்ஜியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். புரட்டாசி 20, 2012 மீண்டும் முதலமைச்சராக வரமுடியாது என்பதை ஏற்கனவே விளங்கிக்கொண்டேன் - சந்திரகாந்தன் 'கிழக்கு மாகாணத்தில் கூடுதலான விருப்பு வாக்குகளை நான் பெற்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தது மூன்று ஆசனங்களையாவது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியான நாங்கள் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இம்முறை கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் வரமுடியாது என்பது எனக்கு தெரிந்திருந்தது. மாகாண முதலமைச்சராக இருந்து பல பணிகளை நான் செய்திருந்தேன். பின்னர் கிழக்கு மாகாண அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்து பணி புரிவதென்பது சாத்தியமற்ற விடயமாகும். அத்தோடு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்குவது ஆசனங்களை பிரிப்பது போன்ற சங்கடங்களை அரசாங்கம் எதிர்நோக்கியிருந்தது. (மேலும்....) புரட்டாசி 20, 2012 கிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவருக்கு துரைரெட்ணம் பொருத்தமானவர். (தோழர்ஸ்ரனிஸ்) கிழக்கு மகாண தேர்தல் முடிவடைந்து யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை முடிவுக்கு வந்து முதலமைச்சரான மஜீத் அவர்கள் நியமிக்கப்பட்டுவிட்டார். யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது ஒரு மர்மமாக இருந்தது என்பது இல்லை ஐக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும் சேர்ந்துதான் ஆட்சி அமைக்க போகிறது என்பது வெள்ளிடைமலையாக தெரிந்திருந்தும் அதை ஒரு மர்மாகவும் கிழக்கு மக்களின் ஆவலை வீணடித்து நாட்களை கடத்தி அந்த மக்களின் ஆசையை நிராசையாக்கியது முஸ்லீம் காங்கிரசே. (மேலும்....) புரட்டாசி 20, 2012 கேள்வி ? பதில்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில், அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றி? அமெரிக்காவுக்கு இஸ்ரேல் சம்பந்தமான சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு. இந்தியாவுக்கு சர்வதேச தர்மசங்கடம். புலன் பெயர்ந்த தமிழர்கள் சிலருக்கு ஊரார் பணத்தில் ஜெனிவா செல்ல ஒரு வாய்ப்பு. தமிழ் ஊடகங்களுக்கு சில நாட்களுக்கான செய்தித் தீனி. தமிழ்நாட்டு மட்டரக அரசியல்வாதிகளுக்கு சிலநாள் பொழுதுபோக்கு. சிங்களத் தலைவர்களுக்கு இரத்தக் கொதிப்பு. சம்பந்தர் கூட்டத்துக்கு சம்பாதிக்க, பேரம் பேச ஒரு சந்தர்ப்பம். இலங்கைத் தமிழர்களுக்கு எருமை மாட்டின் மேல் மீண்டும் ஒரு மழை. புரட்டாசி 20, 2012
சகல கட்சிகளினதும் உதவியுடன் கிழக்கை கட்டியெழுப்புவேன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐ. தே. க. அடங்கலான கிழக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் கிழக்கு பிரதேசத்தை முன்னேற்றுவதே எனது இலக்காகும். கிழக்கில் சகல இன மக்களும் சமமாகவும் ஒற்றுமையுடனும் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்தவும் சகல இன மக்களுக்கும் சமமாக சேவையாற்றவும் முழுமையாக தன்னை அர்ப்பணிக்கப் போவதாக புதிய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார். (மேலும்....) புரட்டாசி 20, 2012 தமிழக முகாம்களிலிருந்து 73 இலங்கையர்கள் நாடு திரும்பினர் தமிழகத்தின் முகாம்களில் தங்கியிருந்த 73 பேர் நேற்றுமுன்தினம் விமானம் மூலம் நாடு திரும்பினர். வடபகுதியைச் சேர்ந்த 23 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேருமே இவ்வாறு நாடு திரும்பியிருப்பதாக யூ.என்.எச்.சி.ஆர் அமைப்பு தெரிவித்தது. நாடு திரும்பிய இவர்களுக்கு யூ.என்.எச்.சி.ஆர். அமைப்பினால் 10,000 ரூபாவும், போக்குவரத்துக் கான கொடுப்பனவாக 4 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டதாக அந்த அமைப்பின் அதிகாரியொரு வர் குறிப்பிட்டார். தமிழகத்திலுள்ள முகாம்களிலிருந்து நாடு திரும்ப விரும்புவோருக்கான விமானச் சீட்டுக்கள் அங்குள்ள யூ.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் சொந்த இடங்களுக்குச் சென்ற பின்னர் அங்குள்ள யூ.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொண்டால் அவர்களுக்கு உலருணவு நிவாரணப் பொதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 873 இலங் கையர்கள் நாடு திரும்பியிருப்பதாக யூ.என்.எச்.சி.ஆர் அமைப்பு தெரிவித்துள் ளது. புரட்டாசி 20, 2012 இலண்டனில் விஸா மறுக்கப்பட்ட 50 இலங்கையர்கள் இன்று வருகைஇலண்டனில் விஸா மறுக்கப்பட்ட நிலையில் 50 பேர் இன்று இலங்கை திரும்புவதாக குடிவரவு மற்றும் குடிய கல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் சூலா நந்த பெரேரா தெரிவித்தார். இவர்கள் விசேட விமானம் மூலம் இன்று கட்டு நாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவர். திருப்பியனுப்பப்படுபவர்களுள் பெரும்பாலானோர் அந்நாட்டில் அகதி அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்டவர்களா வர். மேலும் பலர் தமது விஸா காலம் முடிவடைந்ததும் அதனை புதுப்பிக்க அந் நாட்டு அரசாங்கம் மறுத்தமை காரண மாகவே நாட்டிற்கு திருப்பியனுப்பப் படுவதாகவும் அவ்வதிகாரி கூறினார். புரட்டாசி 20, 2012 அமெ.வுடன் சேர்ந்து அல்-கொய்தாவை உருவாக்கியது நாங்கள்தான் : பிரிட்டன் எம்.பி.-லிபியாவில் அமெ.தூதரை கொன்றது அமெரிக்காதான் எதிரிகளை அழிப்பதற்காக அமெரிக் காவுடன் சேர்ந்து அல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை உருவாக்கியது நாங்கள் தான் என பிரிட்டன் நாடாளு மன்ற உறுப்பினர் ஜார்ஜ் கேல்லொவே தெரிவித்துள்ளார். இன்று உலகிற்கே அச்சுறுத்தலாக விளங்கி வருவது அல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள். கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை விமானங்கள் மூலம் தாக்கி உலகையே அச்சுறுத்தியது அல்-கொய்தா. இந்த இரண்டு தீவிரவாத அமைப்புகளை யும், மேற்கத்திய நாடுகள் தங்களது மிகப் பெரிய எதிரிகளாக கருதும் சோவியத் யூனி யனுக்கு எதிராக தங்களது ஆயுதமாகப் போராட கடந்த 1980ம் ஆண்டு அமெ ரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் தான் உருவாக்கியது என்ற அதிர்ச்சித் தக வலை பிரிட்டனின் பிராட்ஃபோர்ட் வெஸ்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூயார்ஜ் கேல்லவோ, யூ டியூப் நிறுவனத் தின் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.(மேலும்....) புரட்டாசி 20, 2012 இந்தியா - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு; மீள்குடியேற்றம், மீனவர் குறித்து பேசப்படும் நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை இந்தியாவுக்கு பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று மாலை இந்திய குடியரசுத் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்திய ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இரவு 7 மணிக்குச் சந்தித்துப் பேசவுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அங்கு அவருக்கு இந்திய பிரதமர் இரவு விருந்து அளிக்கவுள்ளார். இலங்கையில் இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் தமிழர் மீள்குடியேற்றப் பணிகள் குறித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் விவகாரம் குறித்தும் இலங்கை - இந்திய தலைவர்கள் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நாளை வெள்ளிக்கிழமை காலை, புதுடில்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி செல்லும் ஜனாதிபதி குழுவினர், அங்கு நிர்மாணிக்கப்படவுள்ள பௌத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டவுள்ளனர். ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சாஞ்சியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன. இதனால் அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புரட்டாசி 20, 2012 தோற்றுப்போன பிரதேச வாதமும் தோற்று நிற்கும் கிழக்கு தமிழனும் ..! (இரா.வி.விஸ்ணு ) என்ன இது தலைப்பு பிரதேச வாதம் பெசப்போகிறதா என யோசிக்க வேண்டாம் . இன்று என்ன மனோநிலையில் கிழக்கு வாழ் முஸ்லீம் மக்கள் இருப்பார்களோ அதற்க்கு எதிர்மறை மனோநிலையிலேயே கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பாலான தமிழ் மக்கள் எந்த ஆட்சி அதிகாரத்தை தாம் கைப்பற்றவேண்டும் என்று நினைத்த வாக்களித்தார்களோ அந்த கனவு அவர்களை எதிர்க்கட்சியில்தான் அமர்த்தியிருக்கிறது . மறுபுறம் எந்த அதிகாரத்தை தாம் கைப்பற்ற வேண்டுமென்று முஸ்லீம் மக்கள் வாக்களித்தார்களோ அந்தக்கனவு அவர்களுக்கு முழுமையாக நிறைவேறியதுடன் ஒருபடி மேல் சொல்லப்போனால் அவர்களுக்கு நிறைவேறியது வெறும் கனவல்ல போனஸ் கனவு என்றே சொல்லவேண்டும் . கடந்த கிழக்கு தேர்தலில் முதலமைச்சு நோக்கி சரமாறியாக தமிழ் , முஸ்லீம் தரப்பில் இனவாதம் பிரதேசவாதம் , அரச எதிர்ப்பு என்பன மும்முனை பிரச்சார கருத்துக்களாக . த.தே.கூட்டமைப்பு , ஐ .ம .சு .மு (தமிழ் ,முஸ்லீம் கூட்டணி கட்சிகள் ) , முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் இருந்த மும்முனை போட்டி போல மோதின .இக்கருத்துக்கள் ஒருதரப்புக்கு வெற்றியை தேடித்தந்து மறுதரப்புக்கு ஏமாற்றத்தை அள்ளித்தந்ததையும் தேர்தல் முடிவுகள் காட்டி நிட்கின்றன . இன்றைய சூழலில் தேர்தல் முடிவுகளையும் தாண்டி ஏமாற்றம் என்பது கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு உரியதாகி இருக்கின்றதென்பது கிழக்கில் உள்ள சிலருடன் உரையாடியதில் இருந்து உணர முடிந்தது .(மேலும்....) புரட்டாசி 19, 2012 கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தீர்மானிக்கவில்லை கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பலமான எதிர்க்கட்சியை கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தவுள்ளதாக த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார். "எனினும் யாரை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் கூடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர் தண்டாயுதபானி ஆகிய இருவரில் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் கூடியவாய்ப்பு தண்டாயுதபாணிக்கே உள்ளதாக அறியமுடிகின்றது. புரட்டாசி 19, 2012 ஜனாதிபதி மஹிந்த இந்தியாவுக்குப் பயணமானார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் இந்தியாவுக்குப் பயணமானதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இலங்கை நேரம் பிற்பகல் 3.25 மணிக்கு அவர் இந்தியா நோக்கிப் பயணமாகியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள புலி ஆதரவு கட்சிகள், திமுக, அதிமுக கட்சிகளின் எதிர்ப்புக்களின் மத்தியிலும் இவர் இந்தியா பயணமாகியுள்ளார். புரட்டாசி 19, 2012 சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நியமனம் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்ட டாக்டர் துசிதா விஜேமான்ன மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் இன்று புதன்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இதேவேளை, சப்ரகமுவவுக்கான ஐ.தே.க அமைப்பாளராக ஹசித முகாந்திரம் நியமிக்கப்பட்டதோடு வடமத்திய மாகாணத்துக்காக அமைப்பாளராக சந்திம கமகேவும் நியமிக்கப்பட்டார். புரட்டாசி 19, 2012 அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக எஸ்.எம்.சந்திரசேன அறிவிப்பு தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக கமநல மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். தனது சகோதரரான மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.ரஞ்சிதிற்கு வட மத்திய மாகாண முதலமைச்சர் பதவியினை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தமையினாலேயே அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சுப் பதவிகளை ஏக காலத்தில் வகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிறைவேற்றுக்குழு தெரிவித்ததாக டெய்லி மிரருக்கு எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். இந்நிலையில், தனது சகோதரருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுவதற்காக தனது அமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதாக எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சு முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புரட்டாசி 19, 2012 மத்திய அரசில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த அமைச்சு பதவிகளையும் கோரவில்லை - ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய அரசில் எந்த அமைச்சு பதவிகளையும் கோரவில்லை என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் அமைச்சு பதவிகள் கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானது என அவர் குறிப்பிட்டார். "முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக அரசாங்கத்திலிருந்து கொண்டு குரல் கொடுப்போம். தற்போதைய சூழலில் முஸ்லிம் சமூகத்திற்கு நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் மிக விரைவில் அமுல்படுத்தப்படும்' என அவர் தெரிவித்தார். (மேலும்....) புரட்டாசி 19, 2012 கேள்வி ? பதில்! ராஜபக்ஸ, பிரபாகரன் இவர்களில் அதிகமான பொதுமக்களை கொன்றவர் யார்? ராஜபக்ஸ, (பிரபாகரன் தயவில்) பதவிக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட முப்பதினாயிரம் முதல் நாற்பதினாயிரம் வரையில் தமிழ் பொதுமக்கள் இலங்கை அரச படைகளால் கொல்லப்பட்டிருக்கலாம். பிரபாகரனாலும் அவரின் புலிப்படையாலும் அதேயளவு தமிழ் பொதுமக்களும் அதைவிட சுமார் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள முஸ்லீம் பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். ஜெயவர்த்தனா, பிரேமதாஸா காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள் இங்கு சேர்த்துக் கொள்ளப்பட வில்லை. புரட்டாசி 19, 2012 இரண்டரை வருடங்களின் பின் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி - ஹக்கீம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியானது சுழற்சிமுறையில் வகிக்கப்படவுள்ளது. இதற்கமைய, இரண்டரை வருடங்களின் பின்னர் இப்பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது எனவும் முஸ்லிம் காங்கிரஸுக்கு இரு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த இரண்டு அமைச்சு பதவிகளும் கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அமைச்சு பதவி கிடைக்காமல் விடுபடும் மூன்றாவது மாவட்டத்திற்கு தேவையான அரசியல் அந்தஸ்து கட்சியினால் பலப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். (மேலும்....)
புரட்டாசி 19, 2012
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இன்று (18.09.2012) கொழும்பில் அமைச்சரின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது, தன்னை முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சருக்கும் ஏனைய கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் நன்றி தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். புரட்டாசி 19, 2012 கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நஜீப் ஏ.மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். புரட்டாசி 19, 2012 ஆதரவு வாபஸ் மம்தா பானர்ஜி அறிவிப்பு மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக் கிக் கொள்வதாக மம்தா பானர்ஜி தலைமை யிலான திரிணாமுல் காங்கிரஸ் அறிவித் துள்ளது. மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. ஆண்டுக்கு 6 சமையல் எரி வாயு சிலிண்டர்களுக்கு மேல் வாங்கினால் மானியம் ரத்து, சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க வும், நால்கோ உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களின் பங்குகளை விற்கவும், சிவில் விமான போக்குவரத்து துi றயில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பை அதிக ரித்தும் பிரதமர் மன்மோகன்சிங் தலைமை யிலான பொரு ளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கடந்த வாரம் கூடி முடிவு செய்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப் புத் தெரிவித் தன. இந்த முடிவுகளை மத்திய அரசு விலக்கிக்கொள்ள மம்தா 72 மணிநேர கெடு விதித்திருந்தார். அந்த கெடு திங்க ளன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் செவ் வாயன்று மாலை கொல்கத்தாவில் கூடிய திரி ணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், மன்மோகன்சிங் தலைமை யிலான அரசுக்கு அளித்து வந்து ஆதரவை விலக்கிக் கொள்வது எனவும் தமது அமைச் சர்களை திரும்ப அழைத்துக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்ட தாக மம்தா கூறினார். புரட்டாசி 19, 2012 புதினுக்கு எதிராக மாபெரும் போராட்டம் -ஒரு லட்சம் பேர் மாஸ்கோவில் திரண்டனர் ரஷ்யாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் அதிபருக்கான தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு புதின் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. அதன் மூலம் புதின் ரஷ்ய அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு எதிராக ரஷ்யா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து போராட்டத்தை நடத்தி வருகின்றன. இப்படி போராட்டத்தில் ஈடுபட்டால் சிறையில் தள்ளி போராட்டத்தை ஒடுக்குவதற்கு புதின் புதிய சட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார். மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சிறையில் தள்ளுவதோடு, பெரும் அபராதமும் விதிக்கும் படியான உத்தரவை அதிபர் புதின் பிறப்பித்துள்ளார். இதனால் அந்நாட்டில் அதிபர் மீதான கோபம் மேலும் அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே புதினின் இந்த அடக்குமுறை கொள்கைகளை எதிர்த்து கிறிஸ்தவ தேவாலயத்தில் பாடல்களை பாடி பிரச்சாரம் செய்த பெண் பாடகர்குழுவினரை புதின் அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்நிலையில் ஞாயிறன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் புதினுக்கு எதிராக கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர். புரட்டாசி 19, 2012 An Urgent Appeal for Peace in the Middle East - Mobilize for October 6th! We are writing you with regard to the ever-growing danger of aggression and war in the Middle East – especially foreign aggression against Syria and Iran – and the need for all peace-loving individuals, groups and organizations across Canada to speak out against any such aggression, and to condemn the role of the Harper government in imposing crippling sanctions, breaking off diplomatic relations and helping to whip up an atmosphere of war hysteria with its bellicose and dangerously irresponsible statements. (more....) புரட்டாசி 18, 2012 வரலாறு தோழர் ரட்ணத்தை விடுதலை செய்துள்ளது. (சுகு - ஸ்ரீதரன்)
கிழக்கல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகறைப் பெற்ற தோழர் துரைரட்ணத்தின் வரலாறு துன்பமும் சவால்களும் நிறைந்தது. அது சமூகத்தின் சராசரி சவால் அல்ல. மரணங்களும், இடம்பெயர்வும், புலம்பெயர்வும் மோதல்களும் முரண்பாடுகளும் அவலங்களும், நிறைந்தது. விடிந்தால் என்ன நடக்குமோ! மாலையில் என்ன நிகழுமோ! இப்போதுதான் யாது நிகழுமோ!!! என ஊகிக்க முடியாதது. அறிவு தெரிந்த நாள்முதல் அவரது வாழ்வு மரணங்கள் மலிந்த பூமியிலானது.1980 களின முற்பகுதியில் ஈபிஆர்எல்எப் இன் மாணவர் அமைப்பான ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக சமூக அரசியல் பிரவேசத்தை மேற்கொண்ட ஆரம்பத்தில் அம்பாறை மாவட்ட கிரமங்களில் தனது பணிகளை ஆரம்பித்தார். அது ஆயிரக்கணக்கான விடுதலைப்போராளிகளின் பிரவேசம் போன்றதே. பணத்திற்காகவும் பதவிக்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் அரசியல் பிரவேசம் செய்யும் அற்ப பதர்களினதைப்போன்றதல்ல. சமூகத்தில் அடிமட்டத்தில் உழல்பவர்களை அணிதிரட்டும் விழிப்படையச் செய்யும் பாரிய பணி அது. மக்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொண்டு ,அவர்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்பு பட்டு அவர்களை அரசியல் மயப்படுத்தும் முயற்சி அது. (மேலும்....) புரட்டாசி 18, 2012 கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் தெரிவு? கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் ஏ. மஜீட்டை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவான நஜீப் ஏ. மஜீட் முதலமைச்சராக பதவியேற்றால், முதல் முஸ்லிம் முதலமைச்சராக விளங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமைப்பதனால் அக்கட்சிக்கு இரண்டு மாகாண அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளது எனவும் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலதிகமாகவுள்ள இரண்டு மாகாண அமைச்சு பதவிகளில் ஒன்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாயக்கவிற்கு வழங்கப்படும் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. (மேலும்....) ‘தேசிய அரசு' எங்கே, எதற்கு, எப்போது? (என். சத்தியமூர்த்தி) கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் தோன்றியுள்ள 'தொங்கு சபை' பிரச்சினைக்கு முடிவு காண, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அங்கு 'தேசிய அரசு' ஒன்று அமையும் சூழ்நிலை அமைந்தால் அதில் பங்கு பெறுவது குறித்து ஆலோசனை செய்யும் என்று கட்சி தலைவர் சம்பந்தன் அறிவித்திருப்பது கொள்கை ரீதியாக வரவேற்கப்பட வேண்டிய விடயம். அதே சமயம், இது குறித்து கூட்டமைப்போ, பிற கட்சிகளோ தீவிரமாக சிந்தித்துள்ளார்களா? அல்லது இதனை தங்களது அடுத்தகட்ட அரசியல் விளையாட்டில் ஒரு பகடைக்காயாக மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்களா என்பது குறித்து தற்போதைக்காகிலும் தெளிவு இல்லை. (மேலும்....)கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் முஸ்லிம் என்பது உறுதி – அமைச்சர் ரவூப் ஹக்கீம்
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் முஸ்லிம் ஒருவர் என்பது உறுதியாகிவிட்டது.
நாங்கள் அரசுடனும் -தமிழ் தேசிய கூட்டமைப்போடும் பேச்சுவார்தையில்
ஈடுபட்டோம். த.தே.கூ. - காத்தான்குடி முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் கலந்துரையாடல் வேறு தினத்திற்கு மாற்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் காத்தான்குடி முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் பிறிதொரு தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சமகால அரசியல் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்தான்குடியிலுள்ள முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை இன்று மாலை 5மணிக்கு காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள தாஜ் பிளாஸா ஹோட்டலில் சந்திக்க இருந்தது. குறித்த நேரத்துக்கு காத்தான்குடியிலுள்ள சமூக மதிப்புக்கான மக்கள் ஒன்றியம், காத்தான்குடி தவ்ஹீத் கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் வருகைதந்திருந்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் குறித்த நேரத்துக்கு வருகைத் தராத காரணத்தால் சில அமைப்புக்களின் பிரதிநிதிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.(மேலும்....) புரட்டாசி 18, 2012 "கேட்டதையெல்லாம் கொடுப்போமென ௭திர்பார்க்கக் கூடாது" அரசாங்கத்தின் கதவுகள் ௭ப்போதும் திறந்தே உள்ளன. இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால் கேட்பதையெல்லாம் கொடுப்போம் ௭ன்று யாரும் ௭திர்பார்க்கக் கூடாது ௭ன அமைச்சரவை பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சர்வ கட்சி ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாத்திரமல்ல, ஏனைய கட்சிகளுக்குமான பொதுவான அழைப்பையே அரசு விடுத்துள்ளது. ௭னவே அரசின் கொள்கைகள் மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவை தொடர்பில் இணக்கப்பாடுடனான ஒன்றிணைந்த சர்வ கட்சி ஆட்சியினையே கிழக்கில் அரசு விரும்புகின்றது ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். ௭னவே கூட்டமைப்போ ஏனைய கட்சிகளோ ஒன்றிணைந்து செயற்படலாம். ஆனால் நிபந்தனைகள் மற்றும் அழுத்தங்களுக்கு அடி பணிந்து கேட்பதையெல்லாம் அரசு கொடுத்து விடும் ௭ன்றும் யாரும் நினைத்து விடக்கூடாது. இது சாத்தியப்படவும் போவதில்லை. அரசு நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படவே விரும்புகின்றது ௭ன்றார். புரட்டாசி 18, 2012 இலங்கை - சீனா 10 க்கும் மேற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சீன மக்கள் காங்கிரஸின் தலைவர் வூ பங்குவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பயனுள்ள 10ற்கும் மேற்பட்ட முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் இரண்டாம் கட்டத் திட்டங்களுக்கு கடன்பெற்றுக் கொள்வதற்கான சில ஒப்பந்தங்கள், இலங்கைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கான் இயந்திரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம், ஐந்து வருடங்களுக்கு நிதி ஒத்துழைப்புத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம், கொழும்பு தாமரை கோபுரத்திட்டத்துக்கான ஒப்பந்தம், இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள் பிரிவுக்கான நிதியினை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் இங்கு கைச்சாத்திடப்பட்டன. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுக் கொடுப்பதில் சீன அரசாங்கம் வழங்கிய பூரண ஒத்துழைப்புக்கு இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். புரட்டாசி 17, 2012 கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான போட்டி தீவிரம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள முஸ்லிம் கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடையிலான போட்டி தீவிரமடைந்துள்ளது. கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸும், அமீர் அலியை முதலமைச்சராக்க வேண்டுமென கோருகின்றன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அமீர் அலி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்விடயம் தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புரட்டாசி 17, 2012 ஈரானை இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்கலாம்?: அமெரிக்க, பிரித்தானிய படைகளும் வளைகுடா நோக்கிப் படையெடுப்பு! ஈரானின் அணு உலைகளை இலக்குவைத்து இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை வளைகுடாவில் தோன்றியுள்ளதுடன் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் வளைகுடாப் பகுதியை நோக்கிப் படையெடுத்துள்ளன.இருபத்தைந்து நாடுகளின் போர்க்கப்பல்கள், விமானந் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணைப் (Strait of Hormuz) பகுதியில் இதுவரை இல்லாத அளவில் அவை மிகப்பெரிய போர் ஒத்திகையை அங்கு நடத்தவுள்ளன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையின் ஊடாக தினசரி 18 மில்லியன் மசகெண்ணெய் பெரல்களைக் கப்பல்கள் கொண்டுசெல்கின்றன. இந்த வழியைத் தடைசெய்யப்போவதாக ஈரான் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றது. இதன்மூலம் உலக நாடுகள் பலவற்றினை ஸ்தம்பிக்க வைக்கமுடியுமென ஈரான் கருதுகின்றது. இந்நீரிணையூடான வழியை மூடுமானால் ஈரான் மீது தாக்குதல் நடத்த உலகநாடுகள் பல தயாராகவுள்ளன. ஈரானிடம் அதிநவீன தொழில்நுட்பங்கள் இல்லாதபோதிலும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், அதிவேக தாக்குதல் படகுகள் போன்றவற்றின் மூலம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கப்பல்களை அது தாக்கலாம் என நம்பப்படுகின்றது. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமானால் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சாது என அந்நாட்டின் புரட்சிகரப் படையின் கட்டளைத் தளபதி ஜெனரல் மொஹமட் அல் ஜபாரி எச்சரித்துள்ளார். புரட்டாசி 17, 2012 மாலக்க சில்வா உள்ளிட்டோர் பொலிஸில் சரண்இராணுவ அதிகாரி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, றெஹான் விஜயரட்ன மற்றும் வேறு சிலரும் கொம்பனித்தெரு பொலிஸில் சற்றுமுன்னர் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 'நைட் கிளப்பில் ஏற்பட்ட குழப்பத்தின்போது யாரோ சிலர் இராணுவ மேஜரை தாக்கினர். அத்தருணத்தில் அவரது கைத்துப்பாக்கி கீழே விழுந்துள்ளது. எனது வாகன சாரதி இக்கைத்துப்பாக்கியை எடுத்து பொலிஸில் ஒப்படைத்தார்' என அவர் கூறினார். இராணுவ அதிகாரி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, றெஹான் விஜயரட்ன மற்றும் 5 பேரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். தனது மகனுக்கான தான் வருந்துகின்றபோதிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவை தான் மதிப்பதாக ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். புரட்டாசி 17, 2012 கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அமீர் அலிக்கு வழங்காவிடின் அரசு பாரிய விளைவை எதிர்நோக்கும்முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிடின் அதன் விளைவை அரசாங்கம் எதிர்நோக்கும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். "கிழக்கு மாகாண முதலமைச்சரை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்க கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளித்து வருகின்றது. அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான எமது கட்சியானது அரசாங்கத்தின் கூட்டு கட்சியாக இருந்து வருகின்றது. இவற்றையெல்லாம் அரசாங்கம் கருத்திற் கொண்டு முதலமைச்சர் விடயத்தில் அரசாங்கம் தெளிவான ஒரு முடிவை எடுக்கும் என நான் நினைக்கின்றேன். எமது கட்சியை சேர்ந்த அமீர் அலிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கப்படல் வேண்டும். இல்லையேல் அதன் விளைவை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என்பதை தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.புரட்டாசி 17, 2012 கேள்வி ? பதில் ! நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் சொல்லிநிற்கும் சேதி என்ன? தமிழரிடமிருந்து கிழக்குமாகாணம் பறி போய்விட்டது. புலிகளின் தமிழீழ வரைபடத்திலிருந்து கிழக்கு அழிக்கப்பட்டுவிட்டது. வடக்க ு- கிழக்கு இணைந்த மாகாண அரசுக் கெதிராகப் புலிகள் செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்தே இதற்கான விதை விதைக்கப்பட்டு விட்டது. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமென்று புலிகள் என்றுமே விரும்பியதில்லை. விரும்பியிருந்தால் வடக்கு - கிழக்கு மாகாண அரசுக்கு எதிராகப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்திருக்கமாட்டார்கள். தமிழ் மக்களுக்கான மாகாண அரசுக்கு எதிராக சிங்கள அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்க மாட்டார்கள். பிரேமதாஸாவும், பிரபாகரனும் அண்ணன், தம்பி கதை பேசியிருக்கமாட்டார்கள். வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண அரசை இரண்டாகப் பிரித்த பின்பாக ஜெனீவாவில் நடந்த புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தையில் வடக்கு, கிழக்கு பிரிப்புபற்றி புலிகள் வாயே திறக்கவில்லை. புலிகளுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் தமிழிழம் என்னும் பெயர்மட்டும் தான். தமிழீழத்தின் கை வெட்டப்பட்டாலென்ன. கால் வெட்டப்பட்டாலென்ன. தமிழீழம் என்னும் முண்டம் கிடைத்தால் போதும் என்று இருந்தார்கள். அதன் பிரதிபலன் தான் இப்போது கிடைக்கிறது. புரட்டாசி 17, 2012 சர்ச்சைக்குரிய திரைப்பட தயாரிப்பாளரின் புகைப்படத்தை அம்பலப்படுத்திய நடிகை
முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை தயாரித்த சாம் பசில் என்று கூறப்படும் நகவ்லா பஸ்ஸலி நகவ்லாவின் புகைப்படத்தை அந்த திரைப்படத்தில் நடித்த அன்னா குர்ஜி என்ற பெண் அம்பலப்படு த்தியுள்ளார். திரைப்படத் தயாரிப்பின் போது தன்னுடன் அமர்ந்திருக்கும் நகவ்லாவின் படத்தை அந்த பெண் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இந்த படத்தில் நடித்ததால் தான் தற்போது பயத்தில் வாழ்வதாக குர்ஜி என்ற 21 வயது நடிகை குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் குர்ஜி, முஹம்மத் என்ற கதாபாத்திரத்தின் பருவமடையாத மணப் பெண்ணாக நடித்துள்ளார். இவர் ஊடகங்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்துள்ளார். (மேலும்....) புரட்டாசி 17, 2012 தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் திடீர் சந்திப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இன்று (16.9.2012) காலை கொழும்பு பாக் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் றஊப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதே போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாண சபையின் ஆட்சியமைப்பது தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததாக தெரிய வருகின்றது. புரட்டாசி 17, 2012 அரசுடன் இணையுமாறு சம்பந்தனுக்கு உயர்மட்டத்திலிருந்து அழைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கில் தெரிவான பதினொரு
உறுப்பினர்களில் ஐவரை விலைக்கு வாங்கும் முயற்சியில் அரசாங்கம் இராணுவப்
புலனாய்வுப் பிரிவினரை நேரடியாக ஈடுபடுத்தியிருப்பதாக கூட்டமைப்பின் தலைவர்
இரா. சம்பந்தன் நேற்று சம்பந்தனின் ‘தேசிய அரசு’ கருத்தில் எந்த முரண்பாடுமில்லை - மனோ கணேசன்கிழக்கு மாகாண தேர்தலையடுத்து ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் எம்பி தெரிவித்த ‘தேசிய அரசு’ என்ற கருத்தை அரசியல்ரீதீயாக புரிந்துகொள்ளவேண்டும் என நான் நினைக்கின்றேன். சம்பந்தன் சிங்கள மொழியில் தெரிவித்த கருத்தை நான் தொலைகாட்சியில் பார்த்து, கேட்டேன். அதில் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை. உண்மையில் இந்த அரசாங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டாட்சியை, மாகாணத்திலோ அல்லது மத்தியிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கும் என்று, கூட்டமைப்பின் அரசியல் எதிரிகளும்கூட நம்ப மாட்டார்கள். (மேலும்....)புரட்டாசி 17, 2012 அவுஸ்திரேலியா புறப்பட்டோர் 20 நாட்களாக ஆழ்கடலில் தத்தளிப்பு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த 52 பேர் ஆழ்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்டெடுக்கப் பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து சுமார் 235 கடல் மைல் தொலைவில் மீட்டெடுக்கப்பட்ட 52 பேரும் கடற்படை கப்பல் மூலம் காலி துறைமுகத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டனர். 52 பேரும் சட்டவிரோதமாக பயணம் செய்த படகு ஆழ்கடலில் பழுதடைந்ததால் இந்த பாரிய அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்குடன் கடந்த மாதம் 26ம் திகதி சிலாபத்திலிருந்து 52 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 20 நாட்களாக ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர். இது தொடர்பில் கடற்படையினருக்கு கடந்த 13ம் திகதி தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை அடுத்து இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான சமுதுர கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி கப்பல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 52 பேரையும் பாதுகாப்பாக மீட்டெடுத்துக் கொண்டு நேற்றுக் காலை காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மீட்டெடுக்கப்பட்ட 52 பேர்களில் 38 தமிழர்கள், 9 சிங்களவர்கள் மற்றும் 5 முஸ்லிம்களும் அடங்குவர். புரட்டாசி 17, 2012 கச்சதீவை மீளப்பெறும் தமிழக முதல்வரின் முயற்சியை ஏற்க முடியாதுஇலங்கை இந்திய அரசாங்கங்களின் பரஸ்பர இணக்கப்பாட்டுடன் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் கச்சதீவை மீளப்பெறவேண்டிய தேவை தமிழக அரசாங்கத்துக்கு இல்லையென சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இரு நாட்டு அரசாங்கங்களும் பரஸ்பரமான இணக்கப் பாட்டுடனேயே கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான தீவாக்கப்பட்டது. தற்பொழுது இதனை மீளப்பெறுவதற்கான முயற்சிகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் குறிப்பிட்டார். கச்சதீவை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதற்காக அத்தீவை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடப்போவதாகக் கூறியிருப்பதை நியாயப்படுத்த முடியாது. அவ்வாறு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்வதாயிருந்தாலும் இரு நாட்டு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வுகாண வேண்டும் என்றும் அமைச்சர் திஸ்ஸவிதாரண மேலும் தெரிவித்தார். கச்சதீவை மீளப்பெறுவதற்கு தமிழக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. புரட்டாசி 17, 2012 சீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்புஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலையியல் குழுவின் தலைவர் வூ பங்குவோ, இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்திக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கும் இச்சந்திப்பின்போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத்திஸா நாயக்க தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சீனத் தலைவர், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவைச் சந்தித்து இருதரப்புப் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதுடன், சீனத் தலைவருக்கு சபாநாயகர் இராப் போசனவிருந்தினை வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.கடந்த சனிக்கிழமை கட்டுநாயக்க விமானநிலையத்தின் மூலம் இலங்கை வந்தடைந்த சீனத் தலைவர் நேற்று சீனாவின் உதவியுடன் காலியில் அமைக்கப்பட்டிருக்கும் துறைமுகப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், சுதந்திர சதுக்கம் ஆகிய இடங்களையும் இவர் பார்வையிட்டார். புரட்டாசி 17, 2012 10 ரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்அதிக வருமானம் ஈட்டும் பத்து ரயில் நிலையங்களை நவீன மயப்படுத்தி பிரயாணிகளுக்கு சகல வசதிகளையும் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படும். ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க இதனைத் தெரிவித்தார். கொழும்பு கோட்டை, மருதானை, ராகமை, கம்பஹா, வெயாங்கொடை, அநுராதபுரம், வவுனியா, மட்டக்களப்பு, கண்டி, காலி ஆகிய ரயில் நிலையங்களே நவீன மயப்படுத்தப்படும். இதன் மூலம் சர்வதேச தரத்துக்கு ரயில் சேவைகளை வழங்கவும் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. புரட்டாசி 17, 2012 சூடான், துனீஷியாவிலிருந்து தமது பிரஜைகளை வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவுஇராஜதந்திர அதிகாரிகள் தவிர்த்து சூடான், துனீஷியாவில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அங்கிருந்து வெளியேறும்படி அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இவ்வாறு கோரப்பட் டுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சூடான், துனீஷியாவில் அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது. முன்னதாக தமது தூதகரத்தை பாதுகாக்க சூடானுக்கு அனுப்பப்பட்ட யுத்த கப்பல்களுக்கு சூடான் அரசு அனுமதி மறுத்தது. கடந்த வெள்ளிக்கிழமை சூடான் தலைநகர் கார்டூமில் இருக்கும் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர். இதன் போது ஜெர்மனி, பிரிட்டன் தூதரகங்களும் தாக்கப்பட்டன. (மேலும்....) புரட்டாசி 16, 2012 கிழக்கு கற்றுத் தந்த பாடம் (சாகரன்)
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்ற அரசும் வெற்றி பெறவில்லை, இரண்டாம் இடத்தில் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பும் வெற்றி பெறவில்லை, மாறாக மூன்றாம் இடத்தில் ஆசனங்களைப் பெற்ற முஸ்லீம் காங்கிரசே வெற்றி பெற்றுள்ளது என்றால் மிகையானது அல்ல. (எண்ணிக்கையில் குறைவான வெற்றியைப் பெற்ற ஐதே கட்சி தோல்வி அடைந்துள்ளது.) கிழ்க்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கு மகாணத்திலும், மத்திய அரசிலும் பதவிகளைக் கொடுத்து அழைக்கும் அரசு ஒருபுறம் மறுபரறத்திலும், துரோகத்தை சுட்டிக் காட்டி வெருட்டி அழைப்புவிடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று மறு முனையிலும் 'கிங் மேக்கர்' ஆக முஸ்லீம் காங்கிரஸ் இருக்கின்றது. (மேலும்....) புரட்டாசி 16, 2012 மீண்டும் நழுவிப்போகும் வரலாற்றுச் சந்தர்ப்பம்? - தோழர் சுகு- ஸ்ரீதரன் பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்
கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,முஸ்லீம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்க முடியுமனால் அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமையலாம். இலங்கையை பல்லின நாடாக மாற்றும் ஜனநாயக கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக அமையலாம். இன்று இலங்கையை ஜனநாயக மயப்படுத்துதல் இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய சமூகங்களான தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகமக்கள், பறங்கி, மலாய் இன மக்கள் பெரும்பான்மைச் சமூகத்தின் ஜனநாயக உணர்வு கொண்ட பெருவாரியான மக்கள் இணந்து செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் தமிழ் முஸ்லீம் கட்சிகள் கிழக்கில் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு வாராது வந்துற்ற சந்தர்ப்பம் இதுவாகும். (மேலும்....) புரட்டாசி 16, 2012 கிழக்கில் ‘தேசிய அரசு’ அமைப்பு ஜனாதிபதி நேரடியாக பேசினால் பரிசீலனைபதவிகளுக்கு அடிபணியோம் என்றார் சம்பந்தன் தேர்தலுக்கு முன்பு தனித்த தமிழ் முதல் அமைச்சருடன் ஆட்சி அமைப்பதாக கனவும், வீராப்பும் கொண்டிருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தேர்தல் முடிவுகள் அதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை. பின்பு ஐ.தே. கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதாக கனவு கண்டது. இதற்கும் கணக்கு பிழைத்தது. பின்பு முஸ்லீம் காங்கிரஸ் தம்முடன் இணைந்து ஆட்சி அமைக்க கோரியது. சாத்தியப்படவில்லை. பின்பு முஸ்லீம் காங்கிஸ் உடன் இணைந்து அவர்கள் ஆட்சி அமைக்க தாம் தயார் என்றது. நல்ல பலன் கிடைக்கிவில்லை. இன்னும் கீழேபோய் எல்லாம் உங்களுக்கதான் நீங்களே முதல் அமைச்சரை எடுத்துக் கொள்ளுங்கள் என்றது. யாரும் கண்டு கொள்ளவில்லை. இறுதியில் துரோகம் என்று முஸ்லீம் காங்கிரஸ் ஐ வெருட்டிப் பார்த்தது. இதுவும் எடுபடவில்லை. இன்று தேசிய அரசு அழைக்க அரசு கூப்பிடும் போது மகிந்த அழைக்க வேண்டும் என்று செங்கம்பள வரவேற்பை எதிர்பார்க்கின்றது. யாரும் அப்படி அழைக்கப் போவது இல்லை. இன்னும் சில தினங்களில் நாங்கள் எதற்கும் தயார் என்று த.தே.கூட்டமைப்பு கூறினாலும் ஆச்சரியப்படப் போவதில்லை. ஆனால் யாரும் இதனைக் கண்டு கொள்ளப் போவதில்லை என்பததான் அந்தோ பரிதாபம். புரட்டாசி 16, 2012 கிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பால் தாமதம் முதலமைச்சர் யார்?
கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே ஆட்சியை அமைக்குமென்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிழக்கின் முதலமைச்சராக போகின்றவர் யாரென்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவுமுள்ளது. (மேலும்....) புரட்டாசி 16, 2012 வடக்கில் இடம்பெறும் கலாசார சீரழிவிற்கு சில இளம் மதத்தலைவர்களும் காரணமென மக்கள் குற்றச்சாட்டு வடக்கில் இடம்பெற்றுவரும் பாலியல் வன்புணர்வு மற்றும் கலாசார சீரழிப்புச் சம்பவங்கள் பலவற்றுக்கும் சில இளம் மதப் போதகர்களும், குருமார்களும் ஒருவகையில் காரணமாக இருந்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்நகர்ப்பகுதியில் ஆசிர்வாதம் பெறச் சென்ற யுவதிகள் இருவர் மதப் போதகர் ஒருவரினால் கிளிநொச்சி வட்டக்கச்சிக்கு கடத்திச் செல்லப்பட்டு அங்கு வைத்து அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஊர் மக்கள் அச்சம்பவத்திற்குப் பொறுப்பான இரு மதப் போதகர்கள் மீது தாக்குதல் நடத்தியும் உள்ளனர். இவ்வாறு வெளியே தெரியாத சம்பவங்கள் பல யாழ்ப்பாணத்தில் மத வணக்கஸ்தலங்களை மையமாக வைத்து அரங்கேறி வருவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களுக்குப் பாதுகாப் பாகவும், ஆறுதலாகவும் இருக்க வேண் டிய மதப் பெரியார்கள் இவ்வாறு நட ந்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக அண்மை யில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். புரட்டாசி 16, 2012 அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிப்பு புலம்பெயர் தமிழரில் சிலரை திருப்பி அனுப்புகிறது பிரிட்டன்இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்ற இலங்கைத் தமிழர்களில் பெருந்தொகையானோர் எதிர்வரும் புதன்கிழமை திருப்பியனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு அல்லது மூன்று சிறப்பு விமானங்களில் இந்தப் புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் புதன்கிழமை இங்கிலாந்திலிருந்து திருப்பியனுப்பவுள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. தங்களை இலங்கைக்கு திருப்பியனுப் பினால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாகு வோம் என அகதி அந்தஸ்து கோரிய தமிழர்களில் பலர் கோரியபோதிலும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் திருப்பியனுப்பப்படவுள்ளனர். சுமார் 500 இற்கும் மேற்பட்டவர்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இங்கிலாந்துக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் இவ்விடயம் தொடர் பில் கருத்துக்கூற மறுத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. புரட்டாசி 16, 2012 யாழ். நூலகத்தை எரித்து 83 இல் தமிழரை படுகொலை செய்த UNP யுடன் கூட்டா?தமிழர்களைப் பொறுத்தவரையில் ஐ.தே.கட்சியும், ஆளும் ஐ.ம.சு.முன்னணியும் ஒன்றுதான் என்றால் யாழ். நூலகத்தை எரித்து 1983 ஜுலைக் கலவரத்திற்குக் காரணமான ஐ.தே.கட்சியுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைக்க முடியுமாயின் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவகை செய்து அபிவிருத்தி என்றால் என்ன என்று தமிழருக்கு யதார்த்தமாகக் கூறிய ஐ.ம.சு.முன்னணியுடன் ஏன் கூட்டுச் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைக்க முடியாது? இவ்வாறு தமிழரசுக் கட்சியின் முன் னாள் நாவிதன் வெளி பிரதேச சபைத் தவிசாளரும், ஐ.ம.சு.முன்னணியின் முன் னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பின ருமான சோமசுந்தரம் புஸ்பராசா கேள்வி யெழுப்பியுள்ளார். நான் இனவாதம் பேசவில்லை. கிழக்கில் பெரும்பான்மையினமாக உள்ள தமிழ் மக்கள் கிழக்கை ஆள்வதில் என்ன தவறு இருக்கிறது? அதற்காகத்தான் தமிழ் மக்கள் முன்னரைவிட கூடுதலானளவு வாக்களித்துள்ளனர். மு.காவுடன் சேர்ந்து தமிழ் ஆட்சியைத் தாரை வார்ப்பதற்காக அல்ல. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தெரிவுக்குழு வில் பேச வருமாறு அழைத்தால் செல்வதில்லை. சர்வதேசம் பார்த்துக்கொள்ளும் என்று பசப்புவார்த்தைகளைக் கூறிக்கூறி எதிர்க்கட்சி அரசியல் செய்து தமது இருப்புக்களைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களின் நோக்கமாகும். பிரபாகரனையே காப்பாற்றாத சர்வதேசமா சாதாரண தமிழ் மக்களுக்கு தீர்வு தருவது? நடக்கக்கூடிய ஒன்றா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். புரட்டாசி 16, 2012 ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்திய சப்ரகமுவ மாகாண தமிழ் மக்கள்சப்ரகமுவ மாகாண தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குகளை பிரதான கட்சிகளுக்கே தொடர்ந்து வழங்கிவந்தனர். இதனால் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரு மாவட்டங்களிலிருந்தும் பல வருடங்களாக மாகாணசபைக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ தமிழ் உறுப்பினர்கள் தெரிவாகவில்லை. அதற்கு முன்னர் சப்ரகமுவ மாகாணசபைக்கு போனஸ் ஆசனத்தின் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஏ.எம்.டி.இராஜன் அதன் பின் தேர்தல்களின் மூலம் திரு கணபதி இராமச்சந்திரன், பின்னர் அமரர் ஏ.எம்.டி.இராஜன் ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்து வந்தனர். இவர்களுடைய காலத்தில் இரத்தினபுரி மாவட்ட மக்களுக்காக பாரிய அளவு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. (மேலும்....) புரட்டாசி 15, 2012 யாழில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான தகவல் இது யாழ்.மாவட்டத்தில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 20 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த விசாரணையை கொழும்பில் இருந்து வருகை தரவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளார்கள். முதல் கட்டமாக 2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அழைப்பாணைகள் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளன. காணாமல்போனவர்களின் பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர்களையும் தம்மிடம் உள்ள காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் சம்பந்தமான விபரங்களையும் கொண்டு வரும்படி பணிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி 15, 2012 முஸ்லிம் மக்களின் ஜனநாயக உரிமையை மு.கா காப்பாற்ற வேண்டும் - சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குறுதியை நம்பி ஜனநாயக ரீதியில் வாக்களித்த முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை முஸ்லிம் காங்கிரஸ் காப்பாற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார். 'முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது தேர்தல் பிரசாரங்களில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது வெக்கக்கேடானது என்றும் கூறியிருந்தார். மொத்தத்தில் அரசுக்கு எதிராக பிரசாரத்தினை மேற்கொண்டுதான் 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது முஸ்லிம் காங்கிரஸ். முஸ்லிம் காங்கிரஸின் அரசுக்கெதிரான பிரசாரங்களை நம்பி ஜனநாயக ரீதியில் வாக்களித்த முஸ்லிம் மக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடக்கூடாது. (மேலும்....)
புரட்டாசி 15, 2012 புரட்டாசி 15, 2012 ரத்மலானை விமானநிலையம் 'கொழும்பு சிட்டி" என பெயர் மாற்றம் ரத்மலானையில் அமைந்துள்ள விமானநிலையத்தின் பெயர் 'கொழும்பு சிட்டி" விமானநிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. குறித்த விமானநிலையமானது இன்று முதல் கொழும்பு சிட்டி விமான நிலையம் என அழைக்கப்படும் என விமானநிலைய முகாமையாளர் சரத் டி சில்வா தெரிவித்தார். புரட்டாசி 15, 2012 முஸ்லிம் காங்கிரஸின் காலதாமதத்தால் கூட்டமைப்புடனான பேச்சு கைவிடப்பட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையில் நேற்று இடம்பெறவிருந்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேர காலதாமதம் மற்றும் காத்திருப்புக்கு மத்தியில் கைவிடப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அலரி மாளிகையில் இடம்பெற்ற பிறிதொரு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட தாமதத்தின் பேரிலுமே இந்தப் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் இன்று இடம்பெறலாம் ௭ன்ற யூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அறிய வந்துள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பிலும் முதலமைச்சர் பதவி உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் குறித்தும் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் கூட்டமைப்பும் மு.கா. வும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.புரட்டாசி 15, 2012 போனஸ் ஆசனங்களுக்குரிய பெயர்கள் தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பிவைப்புகிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணச பைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வாக்குகளின் படி ஆறு போனஸ் ஆசனங்களுக்கான பெயர் பட்டியல் தேர்தல் திணைக்களத்துக்கு நேற்று அனுப்பப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்தது. இதன்படி வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்காக ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவ ட்டத்திலிருந்து போனஸ் ஆசனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கிழக்கு மாகாணத் தில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களுக்கு போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் ஒருவரையும், அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வில் அடுத்த படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவருக்கும் போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளது. இதேவேளை, மூன்று மாகாண சபைகளுக்கும் உரிய முதலமைச்சர் யார் என்பது பற்றியும், அமைச்சரவை தொடர்பாகவும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புரட்டாசி 15, 2012 உன்னி கிருஷ்ணனின் மன்னிப்பு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எரிச்சலையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளது அண்மையில் டக்ளஸ் தேவானந்தா தனக்கு மாலை அணிவித்ததற்காக பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த மன்னிப்பு கேட்ட விடயம் பாடகர் உன்னி கிருஸ்ணன் தனது பிழைப்பிற்காகவே கேட்டுள்ளார் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட சமயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். (மேலும்....) புரட்டாசி 15, 2012 வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் - ரொபட் பிளேக் வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவது துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் கூறியுள்ளார். யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், முக்கியமான மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான நேர்மையான தேடுதல்கள், விசாரணைகள், வழக்குகள் நடந்திருக்க முடியும். காணாமல் போனவர்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமென கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார். வடமாகாணத்தில் தேர்தல் நடைபெற வேண்டுமெனவும் அவர் கூறினார். 2013 செப்டெம்பரில் இத்தேர்தல் நடைபெறுமென தனக்கு கூறப்பட்டதாகவும் ஆனால் அதற்குமுன் விரைவாக அத்தேர்தல் நடைபெறுமென தான் நம்புவதாகவும், இத்தேர்தலை விரைவாக நடத்த தான் வலியுறுத்தியதாகவும் பிளேக் கூறினார். வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுனெ அவர் கூறினார்.புரட்டாசி 15, 2012 நான்கு தமிழ் அரசியல்கட்சிகள் தொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்பதா?நான்கு தமிழ் அரசியல்கட்சிகளின் நோக்கங்களில் ஒன்று தனிநாடு ஒன்றை அமைப்பதாகும் என்று பிரகடனப்படுத்தும் தீர்ப்பை வழங்கக்கோரும் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்பதற்கான வாதங்களை முன்வைப்பதற்கு உயர்நீதிமன்றம் டிசெம்பர் 5ஆம் திகதியை நேற்று நிர்ணயித்தது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (டெலோ) மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆகிய தமிழ்; அரசியல் கட்சிகளுக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறையே மாவை சேனாதிராஜா, வீ.ஆனந்தசங்கரி, என்.இந்திரகுமார் மற்றும் கே.பிரேமச்சந்திரன் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர்களில் இந்திரக்குமார் தவிர்ந்த ஏனையோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்ளூ அவர்களின் சார்பில் வழக்குரைஞர்களும் ஆஜராகியிருந்தனர்.புரட்டாசி 15, 2012 கூடங்குளம் தொடரும் பரபரப்பு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும் நிலையில், அப் பகுதி முழுவதும் பரபரப்பான நிகழ்வுகள் தொடர்கின்றன. அணு உலை எதிர்ப்பாளர்கள் குழுவின் தலைவரான உதயகுமார், திங்களன்று கூடங்குளத்தில் நடந்த காவல்துறை தாக்கு தல் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது அங்கிருந்து தப்பியோடினார். இந்நிலை யில் அவர் செவ்வாயன்று கூடங்குளத்தில் இக்குழுவினர் நடத்திவரும் உண்ணாவிர தப்போராட்டத்தில் திடீரென்று பங்கேற் றார். அப்போது, இரவு 9 மணியளவில் காவல்துறையிடம் சரணடைவதாக தெரி வித்தார். எனினும் திடீரென்று தனது முடி வை மாற்றிக்கொண்டஅவர் ஒரு படகு மூலமாக மீண்டும் தப்பினார். இதனிடையே கூடங்குளத்திற்கு, அன்னா ஹசாரே குழுவில் முக்கிய நபராக இருந்தவரும் ஊழல் எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் நாட்டின் கவனத்தை தனது பக்கம் திருப்ப முயல்பவருமான அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென கூடங்குளத்திற்கு செவ்வாயன்று இரவு வந்தார். அவர் உதய குமாரை சந்தித்துப்பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையிடம் சரணடைய வேண்டாம் என உதய குமாருக்கு அறிவுரை கூறியதாக தெரிவித்தார். இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத் தப்போராட் டம் மூன்றாவது நாளாக தொடர்ந்தது. திருச்செந்தூர், வேம்பார், புன்னக்காயல், மணப்பாடு, தூத்துக்குடி உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.புரட்டாசி 15, 2012 ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது - ஜெர்மனி ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஜெர் மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தாமஸ் டி மைஜீரி எச்சரித்துள்ளார். ஈரான் அரசு ஆபத்தை விளைவிக்கும் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், ஈரான் அரசு சர்வதேச அணுசக்தி மையத்தில் உறுப்பினராக உள்ளதால், அமைதியான முறையில் நாட்டின் மேம்பாட்டிற்கு அணு சக்தித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஈரானிற்கு உரி மை இருக்கிறது என்று கூறி வருகின்றன. இக்கருத்தை அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஏற்க மறுத்து வருகிறது. மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் பகிரங்கமாக அறி வித்துள்ளது. அதுமட்டுமன்றி, தனது ராணுவத்தை ஈரான் எல்லைப்பகுதியில் முடுக்கிவிட்டுள்ளது. இதற்கு இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரி வித்துள்ளன. ஈரான் மீது இஸ்ரேல் தாக்கு தல் நடத்தினால், பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியும் இஸ் ரேலை எச்சரித்துள்ளது. புரட்டாசி 15, 2012 புலிகள் சார்புக் குழுக்களின் இலங்கை பற்றிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானதுபுலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சில குழுக்கள் இலங்கை தொடர்பாக பரப்பி வந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பது பொதுநலவாய பாராளுமன்ற குழுவின் வடக்கு விஜயத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள உண்மை நிலவரத்தைக் கண்டு அவர்கள் பிரமித்துள்ளனர். இதனூடாக இலங்கை பற்றி திரிபுபடுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதில் கிடைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவறான பிரசாரங்களில் இலங்கை குறித்து வெளிநாடுகளில் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இங்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் உண்மை நிலையை நேரில் கண்டறிந்தனர். தாம் எதிர்பார்த்ததை விட பாரிய மாற்றங்கள் வடக்கில் தேற்கொள்ளப்பட்டிருப்பது கண்டு பிரமிப்படைத்ததாக அவர்கள் என்னிடம் கூறினர். இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் திருப்தி வெளியிட்டனர். இதன்மூலம் த. தே. கூட்டமைப்பின் பொய் பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புரட்டாசி 15, 2012 சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 65 இலங்கையர் தமிழக மீனவர்களால் மீட்புசட்ட விரோதமாக ஆழ்கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 65 இலங்கையர்களை தமிழக மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆழ்கடல் வள்ளத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததுடன் காற்றின் வேகத்தினால் வள்ளம் தமிழ்நாடு மகாபலிபுரம் அருகே நடுக்கடலுக்கு தள்ளப்பட்டது. இலங்கையில் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 61 பேரும் 4 சிங்களவர்களும் வள்ளத்தில் இருந்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நாகபட்டினத்தைச் சேர்ந்த தம்பிராஜன் உள்ளிட்ட குழுவினர் மகாபலிபுரம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை படகை கண்டதுடன் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர். 65 இலங்கையர்களையும் தங்கள் படகுகளில் ஏற்றி நாகை துறைமுகத்திற்கு நேற்று (14) காலை அழைத்து வந்தனர். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நீதி மோகன் மற்றும் பொலிஸார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் 65 பேரையும் பத்திரமாக அழைத்து சென்றனர். விசாரணை மேற்கொண்ட பின்னர் அவர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது. கடலில் தத்தளித்தவர்களை மனிதாபிமான முறையில் மீட்டு வந்த நாகை மீனவர்களை பொது மக்கள் பாராட்டினர். புரட்டாசி 14, 2012 கிழக்கில் பலிக்காத கணக்குகள்! (மப்றூக்) திறந்து சொன்னால், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தனது லாபத்தினை முன்னிறுத்தியே கிழக்கு மாகாணசபையில் தம்முடன் இணைந்து ஆட்சியமைக்க வருமாறு மு.காங்கிரஸைக் கோரிக்கை விடுக்கின்றது. ஐ.ம.சு.முன்னணியுடன் இணைவதைத் தவிர்த்து த.தே.கூட்டமைப்புடன் மு.கா. இணைவதென்பது மு.கா.வுக்கு நஷ்டமாகும்! அரசியல் என்று வரும்போது, இந்த லாப - நஷ்டக் கணக்கினை மு.கா. நிச்சயம் பார்க்கும். 'சரி, நமக்கு லாபமில்லாது விட்டாலும் பரவாயில்லை, த.தே.கூட்டமைப்பின் நலனுக்காக ஆதரவு வழங்குவோம்' என்று மு.கா. யோசிப்பதற்குரிய கள நிலைவரமும் இங்கு இல்லை! காரணம், அப்படி விட்டுக் கொடுக்குமளவு தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவு இங்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பது கசப்பான உண்மையாகும்! முஸ்லிம்களின் தனி இன அடையாளத்தையும், அவர்களுக்கான தேசியத்தினையும் த.தே.கூட்டமைப்பினர் திறந்த மனதுடன் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், முஸ்லிம் சமூகத்தை 'தமிழ் பேசும் மக்கள்' என்கிற பொதுமைக்குள் வைத்துத்தான் த.தே.கூட்டமைப்பின் தலைமைத்துவம் இற்றைவரை பேசிவருவதையும் முஸ்லிம் சமூகம் கடுமையான வெஞ்சத்துடனேயே பார்க்கிறது. கடந்த தேர்தல் மேடையொன்றில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது 'முஸ்லிம்களின் தேசியத்தினை ஒளித்து மறைத்துப் பேசும் கபடத்தனத்தினை தமிழ் தேசியம் கைவிட வேண்டும்' என்று கூறியதை மேற்சொன்ன வெஞ்சத்துக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். (மேலும்....)புரட்டாசி 14, 2012 தமிழகம் வரும் யாத்திரிகர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது - ஜெயலலிதா அன்புச் சகோதரியின் வேண்டுகோளை செவிசாய்ப்பார்களா? வைகோ, சீமான், திருமா, நெடுமாறன் சுற்றுலாவுக்காகவும், யாத்திரைக் காகவும் தமிழகம் வரும் சிங்கள வர்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா நேற்று தெரிவித்துள்ளார். திருச்சியில் ஸ்ரீரங்கத்துக்கு நேற்று விஜயம் செய்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்திற்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் சரியான ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்பதாலேயே இவ்வாறு வலியுறுத்தினேன் என்றும் செல்வி ஜெயலலிதா கூறினார். எனினும் சுற்றுலா யாத்திரிகைகளுக்கு வரும் சிங்களவர்களுக்கு இடையூறு அளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். அத்துடன் தமிழகத்திலுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என அன்றே உத்தரவிட்டுள்ளேன். அதன்படியே வழங்கப்பட்டு வருகிறது. என்றும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். புரட்டாசி 14, 2012 ‘தமிழ் நாட்டுக்கான பயண எச்சரிக்கை விரைவில் நீக்கம்’இலங்கை யாத்திரிகர்கள் தமிழ் நாட்டுக்கு செல்வது தொடர்பாக தற்போது விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை வெகு விரைவில் நீக்கப்பட்டுவிடும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக இந்திய பாதுகாப்பு பிரிவினருடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நேற்று ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையிலிருந்து தமிழ் நாட்டுக்குச் சென்ற யாத்திரிகர்கள் அங்கு தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தையடுத்து பாதுகாப்பு கருதி இலங்கை அரசு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. இந்த பயண எச்சரிக்கை எப்போது தளர்த்தப்படும் என செய்தியாளர் ஒருவர் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புரட்டாசி 14, 2012 அமெரிக்க தூதுவர் கொலை லிபியாவுக்கு அமெரிக்க போர் கப்பல்கள் விரைவு, முஸ்லிம் நாடுகளெங்கும் ஆர்ப்பாட்டம்
லிபியாவில் அமெரிக்க தூதுவர் ஆயுததாரிகளின் தாக்குதலில் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா லிபியாவுக்கு இரு போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நீதி நிலை நாட்டப்படும் என அறிவித்துள்ளார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோரே லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது அங்கிருந்த அமெரிக்க தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டிபன் மற்றும் மேலும் மூன்று அமெரிக்கர் கொல்லப்பட்டனர். எனினும் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என கூறியுள்ள அமெரிக்கா அது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தனது இரு போர் கப்பல்களை லிபியா கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. (மேலும்....) புரட்டாசி 14, 2012 இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தில் என்ன இருக்கிறது?எகிப்து, லிபியா மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமான முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்த நபர் மாயமாகியுள்ளதோடு அவர் குறித்த தகவல்களும் போலியானவை என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் குழுவினர்கள் தயாரிப்பாளர் தம்மை தவறாக வழி நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘குற்றமற்ற முஸ்லிம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியவரின் பெயர் சாம் பசில் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது உண்மையான பெயர் அதுவல்ல என தற்போது தெரியவந்துள்ளது. இந்த திரைப்படம் கடந்த ஆண்டில் 59 நடிகர்கள், திரைக்கு பின்னால் 45 தொழிநுட்பவியலாளர்கள் ஊழியர்களுடன் 2 மணி நேரம் ஓடக்கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. (மேலும்....) புரட்டாசி 14, 2012 ஏ.எம்.கோபு அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சிறந்த தொழில்சங்கவாதியுமான தோழர் ஏ.எம்.கோபு அவர்கள் 01.07.1930 பிறந்தார். 12.9.12 அன்று முதுமை காரணமாக காலாமானார். தோழர்கோபு அவர்கள் தோழர்கல்யானசுந்தரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தி சென்ற போது தோழர்பத்மநாபாவுக்கு நன்கு அறிமுகமானார். இலங்கை பிரச்சினை தொடர்பாக தோழர்பத்மநாபாவுடன் சேர்ந்து அம் மக்களுக்கான அரசியல் தீhர்வு தொடர்பான பல நல்ல கருத்துக்களை முன்வைத்தவர்.இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தெளிவான பார்வை அவரிடம் காணப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழில் சங்க பிரிவான ஏ.ஐ.ரி.யு.சி யின் தமிழ் மாநில பொறுப்பாளராக அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. முதலாளித்துவத்துக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கும் எதிராக போராடினார். தொழிலாளிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அதனை தீர்த்து வைத்தார். சிறந்த தொழில்சங்க வாதி என்ற பெயரைப் பெற்று தொழிலாளிகளுக்காக உழைத்தார். தனது உடல் உறுப்புகளை சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு தானம் செய்ததுடன் அவரது உடலும் தானம் செய்யப்பட்டது. அந்த வகையில் அவர் மீண்டும் தனது பொதுநலத்தை காண்பித்துள்ளார். தோழர்கோபு அவர்களின் ஆத்மா சாந்தியடையவும்,அவர் குடும்பந்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். (பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப், சென்னை) புரட்டாசி 14, 2012 கராச்சி தீ விபத்தில் 258 பேர் பலி தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு கராச்சியில் செவ்வா யன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 258 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இத னைத்தொடர்ந்து, அந்தத் தொழிற்சாலையின் உரிமை யாளர்கள் அப்துல் அஜீஸ், முகம்மது அர்ஷாத் மற்றும் ஷாகித் பாலியா மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட் டுள்ளது. மேலும், அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லா வண்ணம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கராச்சியின் பால்டியா நகரில் உள்ளது அலி எண் டர்பிரைசஸ் ஜவுளித் தொழிற்சாலை. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், செவ்வா யன்று மாலை இத்தொழிற் சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இத னால் மக்கள் அலறியடித் துக் கொண்டு வெளியே வந்தனர். ஆனால், உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே ஒரு வழி மட்டுமே இருந்ததால் அவர் களால் விரைவில் வெளியில் வர முடியவில்லை. இத்தீவிபத்தில் சிக்கி இதுவரை 258 பேர் உயிரிழந் தனர். அவர்களில் பெரும்பா லானோரின் உடல்கள் கரிக் கட்டையாகக் கிடந்தன. புரட்டாசி 14, 2012 வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் மேலும் சிக்கலாகும் - ஐ.நா. எச்சரிக்கை உலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் மேலும் குறையும், குறிப்பாக வளர்ந்த நாடுகளின் பொரு ளாதாரம் மேலும் சிக்கலாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாட்டின் அறிக் கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2012ம் ஆண்டு உலகப் பொருளா தார வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண் டை காட்டிலும் குறையும். அதாவது கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.7 சதவிகிதம் அதிகரித்திருந்தது. இந்த வளர்ச்சி விகிதம் 2.3 சதவிகிதம் குறையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வளர்ந்த நாடுகளின் சிக்கன நிதிக் கொள்கை, வருமானக் குறைப் புக் கொள்கை முதலியவையே காரண மாக இருக்கிறது. இதனடிப்படையில் 2012ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.9 விழுக்காடாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் குறைப் பது, வேலைவாய்ப்புகளை உருவாக்கு வது, நிதிச் சந்தை மீதான நம்பிக்கை யை மீட்பது முதலிய இலக்குகளை சிக்கன நிதிக் கொள்கை நனவாக்க வில்லை. புரட்டாசி 14, 2012 யாழ்பாணத்தில் ஈபிடிபி தேய்காய் உடைப்பு வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேங்காய் உடைப்பு
பொதுநலவாய பாராளுமன்ற பிரதிநிதிகள் நேற்று வடபகுதிக்கு விஜயம் செய்தனர். இதன்போது யாழ்ப்பாணம் சென்றடைந்த பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வரவேற்கப்படுவதையும் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்ற பிரதிநிதிகள் சிதறுதேங்காய் உடைப்பதையும் படங்களில் காணலாம். குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வரும் படத்தில் காணப்படுகிறார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையில் 1008 தேங்காய் உடைத்து சிறப்புப்பிரார்த்தனையொன்று வவுனியா குறுமண்காடு காளி கோயிலில் இடம் பெற்றது. அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேற்கொண்டு வந்த முயற்சிகள் பலனற்றுப்போயுள்ளன. இந்த நிலையில் காணமால் போனவர்களையும்,அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு குறித்த சிறப்புப்பிரார்த்தனையில் ஈடுபட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (நன்றி: தினகரன், வீரகேசரி) புரட்டாசி 13, 2012 கிழக்கில் ஆட்சியமைக்க மூன்று கட்சிகள் கடிதம் - மொஹான் விஜேவிக்ரம! கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைப்பது தொடர்பில் மூன்று கட்சிகள் ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இது குறித்து தமக்கு அறிவித்துள்ளதாக ஆளுநர் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்துள்ளார். எனினும் மாகாண சபைத் தேர்தல் மூலம் தெரிவான பிரதிநிதிகளின் பெயர்கள் இதுவரை வர்த்தமானியில் பிரசுரமாகவில்லை என்று ஆளுனர் மொஹான் விஜேவிக்ரம கூறினார். போனஸ் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் பிரசுரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய பின்னணியின் கீழ் அரசியல் ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். புரட்டாசி 13, 2012 மு.கா - தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் - மருதமுனை அரசியல் திறனாய்வாளர்கள் அமைப்பு வேண்டுகோள் 1994ஆம் ஆண்டு பெரும் தலைவரினால் செய்யப்பட்ட உடன்பாடும் மாற்றமும் இணைவும் ஒரு வரலாற்று வழி காட்டியல்ல. அது ஒரு தற்செயல் நிகழ்வு. சரியா பிழையா என்ற விமர்சனங்கள் இங்கு தேவையில்லை. அதுதான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றால் மேடையும் பிரசாமும் தேவையில்லை. கிழக்கின் அபிவிருத்தியின் படத்தை சர்வதேச உலகுக்குக் காட்ட அரசு துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான முகவர்கள் தேவையில்லை. புதிய அமைச்சர்களும், அபிவிருத்தியென்ற மாயையும் தேவை தேவையென்று முஸ்லிம மக்கள் வாக்களிக்கவில்லை. தனித்துவத்தைப் பாதுகாத்து, முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்த குரல் கொடுக்கும் என்ற செய்திதான் இந்த 80 ஆயிரம் வாக்குகள். (மேலும்....) புரட்டாசி 13, 2012 தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசை ஆதரிக்க வேண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அடிப்படையற்ற தமிழீழ தேசத்துக்கான பிரசாரங்களைக் கைவிட்டு தேசிய நல்லிணக்கத்துக்காக அரசாங்கத்தை ஆதரித்து செயற்பட முன்வர வேண்டும். இது சர்வதேசத்துக்கு நற் செய்தியாக அமையும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நேரடி அரசியல் செயற்பாட்டாளர்களாகவே கூட்டமைப்பினர் செயற்பட்டனர். ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாது வன்முறைகள் ஊடாக தமது நோக்கங்களை அடைய புலிகள் முயற்சித்த போதிலும் அது தோல்வி கண்டுள்ளது. கூட்டமைப்பினரின் இத்தகைய முயற்சிகளை கிழக்கு தமிழர்களும் நிராகரித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனை இனவாதம் பேசும் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழீழ தேசத்துக்கான 4 ஆம் கட்டப் போராக அறிவித்து கிழக்கு மகாண சபைத் தேர்தலில் களமிறங்கிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை தமிழ் சமூகத்தின் விடிவுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும்.புரட்டாசி 13, 2012 'நல்லிணக்கம் குறித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறினால் பொதுநலவாயத்தின் நம்பகத்தன்மை சவாலுக்குள்ளாகும்' நல்லிணக்கம் தொடர்பாக, சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறினால் பொதுநலவாயத்தின் நம்பகத்தன்மை சவாலுக்குள்ளாகும் என பொதுநலவாய அமைப்பு தெரிவித்துள்ளது."தனது உள்நாட்டு பிரச்சினையை சமாதானமாகவும், கூட்டாகவும் தீர்ப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் மனவுறுதி மற்றும் ஆற்றலில் சர்வதேச சமூகம் நம்பிக்கையை இழந்தால் அது துரதிஷ்டவசமானதாகும். பொதுநலவாயமானது அரசுகளுக்கிடையிலான பாரிய சக்தியொன்றாக தன்னை வரையறுத்துக்கொள்ளத் தவறியதாக குற்றம் சுமத்துபவர்களுக்கு தானே ஆயுதம் வழங்கிய நிலைக்கு பொதுநலவாயம் தள்ளப்படும் நிலையை இது ஏற்படுத்தும்" என பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவின் தலைவர் சேர் அலன் ஹசெல்ஹர்ட் எம்.பி. கூறினார். (மேலும்....)புரட்டாசி 13, 2012
லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தபட்டதில் ஒருவர் பலியானார். இதனை தொடர்ந்து லிபியாவுக்கான அமெரிக்க தூதர் பாதுகாப்பான் இடத்துக்கு செல்ல முயன்றபோது அவரது காரைக் குறி வைத்து ரொக்கெட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் உட்பட 4 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளது. புரட்டாசி 13, 2012 Arrest this thug! This is not the first time that the son of Mervin Silva, Minister of Public Relations and Public Affairs, has thrown his weight around. It is not the first time that Malaka Silva has violated the law. It is not the first time he’s played cops-n-robbers with real weapons. It is not the first time he has earned the wrath of all law-abiding citizens in this country. This is not the first time the son of a politician took the law into his hands. Not the first time that common thugs operated as though political connections have them special powers to browbeat those who crossed their path. It is no wonder that cartoonists regularly lampoon the generic political figure with pistol, club, knife or other weapon tucked into belt even as the brute is clothed in spotless white. Malaks is not out of order. He is way out of order. And if he moved from out-of-order to way-out-of-order it is not he but those who treated him with kids’ gloves the first time he erred that are to blame. First and foremost his father.(more.....) புரட்டாசி 13, 2012 தனியார்மயம் அமெரிக்கா சொல்லும் பாடம் (கே.வரதராசன்) அனைத்திற்கும் அருமருந்து தனி யார்மயம்: இந்தியா வல்லரசு ஆக தனியார் மயம், தாராளமயம், உலகமயமே வாய்ப்பு வாசல் என இந்தியாவில் இருக்கும் முத லாளித்துவ கட்சிகளும், ஊடகங்களும் வாய் ஓயாது அலறி வருகின்றன. அதற்கு சாட்சியாக அமெரிக்காவை சுட்டிக்காட்டு கின்றனர். ஆனால் உலகமயம், தாராள மயம், தனியார் மயம் மூலம் நேரடியாக பாதிப்பிற்காளான இந்திய விவசாயிகள், சாதாரண மக்கள் ஆகியோருக்கு அமெ ரிக்கா என்றால் மான்சாண்டோ, வால் மார்ட் நிறுவனங்கள் கண்முன் தோன்றும், பயமுறுத்தும். தனியார் மயம் முழுவீச்சில் செயல்பட்ட பின்னணியில் இன்றைக்கு அமெரிக்க அனுபவம் வெளிச்சம் போட்டுக்காட்டியிருப்பது எது தெரியுமா? (மேலும்....)புரட்டாசி 13, 2012 பொதுநலவாய பிரதிநிதிகள் குழு இன்று வட பகுதிக்கு விஜயம் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள 60 வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று (13 ஆம் திகதி) வட பகுதிக்கு விஜயம் செய்கின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று யுத்தத்திற்கு பின்னரான உண்மையான நிலைமைகளை நேரில் கண்டறிய உள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பிரிட்டன் மற்றும் கனடா பாராளு மன்றத்தைச் சேர்ந்த சில எம்.பிக்கள் இறுதி யுத்தம் ந |