|
||||
|
|
வைகாசி 2014 மாதப் பதிவுகள் மே 31, 2014 யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 33வது ஆண்டு நிறைவு இன்று (01.06.2014)! (தங்க முகுந்தன்)
எனது இந்தக் கட்டுரை ஒரு ஆராய்வாக அமைகிறது
– காரணம் நூலக வரலாற்றை நான் அறிந்தவரை நிறைய முரணான தகவல்கள்
இருக்கின்றதுபோலத் தோ முடி கொட்டுகிறதா அதை தடுக்க இப்படி பண்ணுங்க ..! வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து முடி உதிர்வதை தடுக்கலாம். இலங்கை வருகின்றார் சுஷ்மா இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவாராஜ் எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்கட்சியின் முன்னாள் தலைவியாக இருந்த போது வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இவர் 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு நாடாளுமன்றத்துக்கு குழு ஒன்றுடன் வருகை தந்திருந்தார். அந்நேரத்தில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களையும் உள்நாட்டு தலைவர்களையும் சந்தித்தார். அதே போன்று மலையத்தில் வாழும் இந்திய வம்சாவளியினருக்காக இந்திய நிதிதிட்டம் ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார். தமிழ்க் கூட்டமைப்பை அழைக்கவுள்ள ஜெயா? இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர் பில் பேசுவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத் தமிழரின் பிரச்சினை தீர்வுக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது. இந்த கடிதம் தமிழக முதல்வருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், அதற்கு சாதகமான பதில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை விரைவில் தமது அலுவலகத்துக்கு அழைத்து ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்துவார் என்று முதலமைச்சர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மே 30, 2014 நான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன்
வன்னிக் காடுகளின் புதல்வி தமிழ்க்கவி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருபது வருடங்களாகப் பல்வேறு துறைகளிலும் இயங்கியவர். கடைசிவரை புலிகளுடன் களத்தில் இருந்தவர். தமிழீழ சட்டக் கல்லூரியில் கற்றுத் தேறிய சட்டவாளர். புலிகள் இயக்கத்தின் நட்சத்திர மேடைப் பேச்சாளர். ‘புலிகளின் குரல்’ வானொலி, ‘தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி’ ஆகியவற்றில் முதன்மையான நிகழ்ச்சித் தயாரிப்பாளர். சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, நாட்டாரியல், நடிப்பு, இசை, ஒலி - ஒளிப்பதிவு, மொழிபெயர்ப்பு எனக் கலையின் வெவ்வேறு பரிமாணங்களையும் வசப்படுத்திக்கொண்டவர். இவ்வருடத்தின் தொடக்கத்தில் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ நாவலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டபோது அனைத்துலகத் தமிழ் இலக்கிய வாசகப்பரப்பிலும் தமிழ்க்கவி கவனம் பெற்றார். இறுதி யுத்தத்திற்குள் சிக்கியிருந்த மூன்று இலட்சம் மக்களது சாட்சியமாக அந்த நாவல் இருந்தது. இலங்கை அரச படைகளது இனவழிப்பையும் கொடூரங்களையும் நிணமும் தசையுமாக முன்னே வைத்த நாவல்; விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்களையே கொன்றொழித்ததையும் அவர்களது மனிதவுரிமை மீறல்களையும்கூட பதிவு செய்யத் தவறவில்லை. தன்னை உறுதியான தமிழ்த் தேசியவாதியாகப் பிரகடனப்படுத்தும் தமிழ்க்கவி என்ற படைப்பாளியின் நேர்மைத்திறனான சாட்சியம் அந்த நாவல். (மேலும்....) யுத்தம் முடிவுற்று இந்த ஐந்து வருடங்களில் அப்படி என்னதான் நடந்திருக்கின்றது? (சாகரன்) ஓட்டு மொத்தத்தில் ஒரு பலவீனமான சமூகத்தை இந்த யுத்தம் விட்டுச் சென்றிருக்கின்றது. பலவீனமான சமூகத்தை பலமாக்கும் முயற்சிகளை யாரும் செய்யவில்லை. செய்வதில் பாரிய முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் ஓடியாகிவிட்டது, மிகுந்த நம்பிக்கையுடன் இலங்கை மக்கள் எதிர்பார்த்து இருந்த சமாதான, சக வாழ்விற்கான பயணத்தில் நாம் கடந்து வந்த பாதைகளைப் பார்த்தால் அவ்வளவு ஆரோக்கியமானதாக காண முடியவில்லை. இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டம் பிழையான திசை வழியில் இழுத்துச் செல்லப்பட்டு பயங்கரவாத செயற்பாடுகளாக புலிகளினால் உருவாக்கிய நிலமையில் புலிகளை இலங்கையிலிருந்து அகற்றிவிட்டதாக இலங்கை அரசாங்கம் சந்தோஷப்படும் அதே வேளை தொடர்ந்தும் தமிழ் மக்கள் சம்மந்தமாக தான் சந்தேகப்படும் போக்கையே அது கொண்டிருப்பதாகவே காணக் கூடியதாக இருக்கின்றது. (மேலும்....) என் சிங்களத்து சகோதரியே என் வீட்டுக் கோடிக்குள் மட்டும் அல்ல உன் வீட்டுக் கோடிக்குள்ளும் கொலை வெறி தாண்டவம் ஆடுகின்றது. இணைந்த கரங்களின் போராட்டமே இதற்கு தீர்வாக அமையும் என்பதை நீ உணர்வாய். சகோதரியே! உன் ஆத்ம சாந்திக்காக உன்னை நான் முத்தமிட்டு, இறுதியாத்திரைக்கு அனுப்பி வைக்கின்றேன். - சாகரன் 4.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான கொழும்பு பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி படுகொலை செய்யப்படுவதற்கு முன் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவுசெய்திருந்த சிங்களக் கவிதையின் தமிழ் வடிவம்.
எப்போதேனுமொரு நாள் இவையெல்லாவற்றையும் மதப்பயங்கரவாதி மோடியும், கொள்ளைக்காரி ஜெயலலிதாவும் கிளிநொச்சி சிறிதரனின் நம்பிக்கை நட்சத்திரங்களாம்!!!இந்தியாவின் அடுத்த பிரதமராக சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர் நரேந்திரமோடி அவர்கள் அரியணை ஏறுவது கண்டும் அவர் தலைமையின் கீழ் அமையும் இந்திய பெரும் முதற்சபையில், தமிழர்களின் உணர்வு பூமியாம் தமிழ்நாட்டில் இருந்து தனித்தொரு பெண்ணாய் வரலாற்றுப் பக்கங்களில் சாதனைகளுக்குச் சொந்தக்காரியாய் திகழும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் வழிகாட்டலின் கீழ் நிகரற்ற பெரு வெற்றிபெற்று தமிழர் குரலாய் செல்ல இருக்கும் பெரு மாண்புக்கும், போர் நடந்த ஈழத்தமிழ் மண்ணில் இருந்து தமிழ் மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அன்பும், பட்சமும் நிறைந்த என் அண்ணாச்சி மோடியே, அக்காச்சி ஜெயலலிதாவே என்று உருகி, உருகி வாழ்த்து சொல்லுகிறார் பாசக்காரத்தம்பி கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அடப்பாவிகளா!! உங்களிற்கு எல்லாம் அறிவு, அனுபவம், அரசியல் என்று எதுவுமே கிடையாவிட்டாலும், கண்ணுக்கு முன்னால் நடந்தது கூடத் தெரியாத கபோதிகளா நீங்கள். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லீம்களை துடிக்க, துடிக்க கொலை செய்தவனை, முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து இன்னும் பிறக்காத அந்த பச்சைக்குழந்தையையும் கொலை செய்த கொலைகாரக்கும்பலின் அதிகாரபூர்வ தலைவனை வாழ்த்துகிறீர்களே நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா? (மேலும்....) இலங்கை விவகாரங்களுக்காக சிறப்பு பிரதிநிதியை நியமிக்க மோடி முடிவு இலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்கென தனது நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தமது ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களுக்காக மட்டும் ஜி. பார்த்தசாரதியை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல் இலங்கை விவகாரங்களை தமது சார்பில் நேரடியாக கையாளக் கூடிய சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதியானவர் வெளிவிவகார அமைச்சர், அவ்வமைச்சின் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களைக் கொண்டு செயற்படக்கூடியவராக இருப்பார் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரதிநிதியை நியமிப்பதால் இலங்கை மீதான இந்தியாவின் நெருக்கடி அதிகரிக்கும் என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. த.தே.கூவிலிருந்து கௌரிகாந்தன் நீக்கம் யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பியுள்ளார். அதனை,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வியாழக்கிழமை (29) உறுதிப்படுத்தினார். கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டே இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தமை, பிரதேச சபைத் தவிசாளர் பதவி விலகக் காரணமாக இருந்தமை மற்றும் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நடவடிக்கைகளை பிரதேச சபைக்குள் கொண்டு வந்தமை உள்ளிட்ட விடயங்களைக் காரணம் காட்டி இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவது தொடர்பாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிவஞானம் மேலும் தெரிவித்தார். எம்.எச் 370வின் சமிக்ஞைகள் பெறப்பட்ட பிரதேசம் அந்த விமானத்தின் பயணம் இறுதியாக முடிவடைந்த இடமல்ல காணாமல் போன மலேசிய எம்.எச் 370 விமானத்தினது என கருதப்படும் சமிக்ஞைகள் பெறப்பட்ட பிரதேசம் அந்த விமானத்தின் பயணம் இறுதியாக முடிவடைந்த இடமல்ல என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப்பிரதேசத்தில் தேடுதலை மேற்கொண்ட புளுபின் 21 ஆழற்ற ரோபா நீர்மூழ்கிக்கப்பல் எதனையும் கண்டுபிடிக்கப்படவில்லையென அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் விசேட உபகரணத்தைப் பயன்படுத்தி கடல் அடித்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகளை மதிப்பீடு செய்யும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். எம்.எச். 370 விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு 239 பேருடன் பயணித்த வேளை காணாமல் போனது. செய்மதி தரவுகளின் பிரகாரம் மேற்படி விமானத்தின் பயணம் அவுஸ்திரேலிய பேர்த் நகரின் வடமேற்கே இந்து சமுத்திரத்தில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து வெளிப்பட்டது என நம்பப்படும் 4 சமிக்ஞைகளை அடிப்படையாக வைத்து புளுபின் 21 ஆளற்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சமுத்திரத்தின் அடியில் தேடுதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் மேற்படி நீர்மூழ்கிக் கப்பல் சமுத்திரத்தின் கீழான தனது இறுதி தேடுதல் நடவடிக்கையை புதன் கிழமை மாலை பூர்த்தி செய்துள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலால் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த அவுஸ்திரேலிய ஒருங்கிணைப்பு முகவர் நிலையம் காணாமல் போன விமானத்துக்கான எந்தவொரு அடையாளமோ சிதைவுகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்தது. இதன் பிரகாரம் எம். எச். 370 விமானம் இறுதியாக பயணத்தை முடித்துக் கொண்ட இடமாக அப்பிரதேசத்தை கருத முடியாதுள்ளதாக அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணிமனை தெரிவித்தது. அமெரிக்கா சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளிக்க ஒபாமா வாக்குறுதிஅமெரிக்காவின் புதிய வெளிநாட்டு கொள்கை வெளிநாட்டு நட்பு நாடுக ளுடன் இணைந்த கூட்டு நடவடிக்கையை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என்று ஜனாதிபதி பராக் ஒபாமா உறுதி அளித்துள்ளார். நியுயோர்க்கில் நேற்று முன்தினம் நடந்த அமெரிக்க இராணுவ அகடமி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஒபாமா, கடந்த காலங்களில் நிகழ்ந்த பாரிய தவறுகள் தவிர்க்கப்படும் என்றார். எனினும் இந்த விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னின்று செயற்படும் என்று ஒபாமா குறிப்பிட்டார். சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு 5 பில்லியன் டொலர் நிதியத்தை அறிவித்த அவர், 'போர்க்களத்தின்; மூலம் அமெரிக்கா மேலும் எதிரிகளை உருவாக்காது" என்று வாக்குறுதி அளித்தார். ஒரு பலவீனமான வெளிநாட்டு கொள்கை குறித்து கண்டனம் வெளியிட்ட அவர் உக்ரைன் மற்றும் ஈரானில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து வரவேற்பு வெளியிட்டார். 'கூட்டு இராணுவ நடவடிக்கைகளின் திறன் குறித்து எப்போதும் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. அவ்வாறானவர் கள் சர்வதேச நிறுவனங்கள் அல்லது சர்வதேச சட்டத்தை மதிப்பதை பலவீன மாக கருதுகிறார்கள். அவர்களது முடிவு தவறென்று நான் நினைக்கிறேன்." இதில் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்து அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை இருக்கவேண்டும் என்றும் ஒபாமா குறிப் பிட்டுள்ளார். மே 29, 2014 பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு உரிமைகோரியே சிலர் ஆர்ப்பாட்டம் கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு அண்மித்த பிரதேசத்தை உரிமை கோரியே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறினார். கொள்ளுப்பிட்டியில் உள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது, கிளிநொச்சியில் கைப்பற்றியுள்ள பிரதேசத்தில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சில தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அந்த நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சாவகச்சேரியில் இருந்து வாகனங்களில் கொண்டுவரப்படட 42 பேர் கலந்துகொண்டனர். இக்காணிகளுக்கு உரிமை கோரும் எவரிடமும் சட்ட ரீதியான காணி உறுதிகள் இல்லை, மேலும் ஒரு காணிக்காக பலர் உரிமை கோரும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சட்ட ரீதியான காணி உறுதிகளைச் சமர்ப்பித்தவர்களுக்கு கிளிநொச்சியில் 108 ஏக்கர் காணிகளை நாம் மீளக் கையளித்துள்ளோம் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார். மீன் வளத்தை அழித்தொழிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்இலங்கையின் கடல்நீர் வளத்தையும் நன்னீர் மீன் வளத் தையும் அழித்தொழிக்கும் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது மிகவும் கவலைக்குரியதாகும். இந்திய மீனவர்களின் அத்துமீ றிய நடவடிக்கையினால் எமது நாட்டின் கடல் வளம் விரை வாக அழிந்துகொண்டு செல்கிறது. அதேசமயம் உள்நாட்டு நீர் நிலைகளில் காணப்படுகின்ற மீன்வளத்தை அழிக்கும் சட்ட விரோத செயலிலும் ஒருசாரார் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகி ன்றனர். மீன்வளம் அழிந்து விடாமல் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமா னால் சில கட்டுப்பாடுகளை அவசியம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். மீனவர்களால் அன்றாடம் பிடிக்கப்படுகின்ற மீன் கள், இறால், நண்டு போன்றவற்றின் தொகைக்கு ஈடான வகை யில் அவற்றின் இனப்பெருக்கத்துக்கும் இடமளிக்கப்பட வேண் டும். அதிகரித்த மீன்பிடியும் குறைந்தளவான மீன் பெருக்க மும் இருக்குமானால் நாட்டின் நீர் நிலைகளில் மீன்வளத்தைத் தொடர்ந்தும் பேணுவது முடியாத காரியமாகும். (மேலும்....) மே 28, 2014 மலேஷியாவில் கைதான 3 புலி உறுப்பினர்களும் T.I.D அதிகாரிகளால் கொழும்புக்கு அழைத்து வருகை
புலிகளை மீண்டும் உயிர்பெறச் செய்யும் வகையில் மலேஷியாவில் செயற்பட்டு வந்த மூன்று முக்கியஸ்தர்களை இலங்கை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர். எல்.ரீ.ரீ. ஈயை மீண்டும உயிரூட்டுவதற்காக நாடுகடந்த நிலையில் நேரடியாகவும், மறைமுக மாகவும் செயற்பட்டு வந்த புலிச் சந்தேக நபர்களுக்கு இண்டர்போல் ஊடாக ‘ரெட் அலர்ட்’ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி மேற்படி மூன்று பேரும் மலேஷிய பொலிஸாரினால் அண்மையில் கைது செய்யப்பட்டனர். புலிகள் இயக்கத்தில் முல்லைச் செல்வம் என்றழைக்கப்படும் சந்திர லிங்க ராஜா குஷாந்தன் (வயது 45) மீசாலை வடக்கைச் சேர்ந்த இவர் 94 ஆம் ஆண்டு புலிகளின் அரசியல்துறையில் இணைந்து அதன் பின்னர் புலிகளின் விமானப் படைப் பிரிவில் இணைந்துள்ளார். புலிகளின் சங்கர் மாஸ்டர் என்பவரின் சகோதரரின் மகளை பிரபாகரனின் விசேட அனுமதியுடன் திருமணம் செய்துகொண்ட இவர் 2004 ஆம் ஆண்டு மலேஷியாவுக்கு சென்றுள்ளார். மலேஷியாவில் இலக்ரோனிக் என்ஜினீயரிங் கற்று தொழில் புரிந்தவாறு புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். (மேலும்....) காட்டுக் குடிசைகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்காக குரல் கொடுப்பது இனவாதமாகாது வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்றம் பற்றி அண்மைக் காலமாக பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதைத் தொடர்ந்து அவற்றை நேரடியாகக் காண்பதற்காக இங்கு தான் விஜயம் செய்ததாக மீள்குடியேற்ற அபிவிருத்தி அமைச்சர் குணரத்தின வீரக்கோன் நேற்று முசலிப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதெ மெற்கண்டவாறு தெரிவித்தார். இல்லறமின்றி, காடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் உங்கள் துயரத்தைக் கண்டு நான் வெதனையடைகின்றேன். இப்படிப்பட்ட உங்களுக்காக குரல் கொடுக்க ஓர் அமைச்சராகவும் தலைவராகவும் றிசாத் பதியுத்தீன் செயற்பட்டு வருகின்றார்.உங்களுக்கு காணி பெற்றுத் தந்த காரணங்களுக்காக மிகவும் மோசமாக விமர்சிக்கப்படும் அமைச்சராகவும் அவர் காணப்படுகின்றார். காடுகளை அழித்து முஸ்லிம்களை குடியேற்றுகின்றார். என்று அமைச்சர் றிசாத் மீது இன்று பெளத்த பேரினவாத அமைப்பொன்று நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பிரசாரம் செய்கின்றது. (மேலும்....) சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி இல்லை சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி இல்லை என வர்த்தக துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வர்த்தக துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் இன்று தமது அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றும், இந்த விஷயத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி நடப்போம் என்றும் தெரிவித்தார். 13 வது சட்டதிருத்தம் ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தல்! இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியபோது, தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இலங்கை வருமாறு ராஜபக்சே விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புடன், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியபோது, தீவிரவாதம் குறித்து விவாதித்தார். மேலும், தீவிரவாத ஊடுருவல் குறித்து நவாஸிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்க கூடாது என்றும் அவரிடம் மோடி வலியுறுத்தினார். இதேபோல், இலங்கை அதிபர் ராஜபக்சேவையும், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழர் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், 13வது சட்ட திருத்தத்தையும் அமல்படுத்துமாறு ராஜபக்சேவை கேட்டுக்கொண்டார். மேலும் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை துரிதப்படுத்துமாறு ராஜபக்சேவை மோடி கேட்டுக்கொண்டதாகவும், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13 வது சட்டதிருத்த பிரிவை அமல்படுத்துமாறு வலியுறுத்தியதாகவும் சுஜதா சிங் தெரிவித்தார். அதே சமயம் இலங்கை உடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடரும் என்றும் மோடி உறுதியளித்தார். மேலும் இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடியை இலங்கை வருமாறு ராஜபக்சே அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இலங்கை வர பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்தார். மே 27, 2014 பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதையே செய்யும் என நம்புவோம்.
(ஸ்ரனிஸ்
ஆட்சியை இழந்த காங்கிரசுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையால் ஏற்பட்ட நெருக்கடிகள் இன்று பா.ஐ.க ஆட்சி பொறுப்பை ஏற்குமுன்பே ஏற்பட்டுவிட்டது. பல மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் ஒரு மாநிலத்தின் பிரச்சினையை நரேந்திரமோடி அரசு எப்படி கையாளப்போகிறது என்பதே இன்று எல்லோர் முன்னுள்ள கேள்வியாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி மீது இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு இருந்த வெறுப்பை விட இலங்கையில் வாழும் சில தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் பலருக்கு வெறுப்பு இருந்ததென்பது அவர்கள் காங்கிரசை தூற்றியும் மோடியை போற்றியும் எழுதியதிலும் பேசியதிலும் இருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. (மேலும்....) டில்லியில் ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம், பிரதமரானார் மோடிஇந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை சுபவேளையில் பதவியேற்றுக்கொண்டார். சார்க் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட பதவியேற்பு நிகழ்வு இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு நிகழ்வில், 23 அமைச்சரவை அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர்கள் 10 பேரும், மத்திய இணை அமைச்சர்கள் 12 பேரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய், மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, சதானந்த கவுடா, உமா பாரதி, நஜ்மா ஹெப்துல்லா, கோபிநாத் முண்டே, ராம்விலாஸ் பாஸ்வான், கல்ராஜ் மிஸ்ரா, மேனகா சஞ்சய் காந்தி, அனந்த் குமார், ரவிசங்கர் பிரசாத், கீதே, கஜபதி ராஜூ, நரேந்திர சிங் தோமர், ஹர்மிஸ்ராத் பாதல் கவுர், ஜூவால் ஓரம், ராதா மோகன் சிங், தாவர் சந்த் கெலோட், ஸ்மிருதி இராணி, ஹர்ஷ்வர்த்தன் உள்ளிட்ட 23 பேர் அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவியேற்றனர். தமிழகத்திலிருந்து தெரிவான பா.ஜ.க உறுப்பினரும், தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவருமான பொன்.இராதாகிருஷ் ணனுக்கு இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜபக் ஷே வருகை தமிழர் பிரச்னைக்கு பின்னடைவு இல்லை இலங்கையைப் பொறுத்த வரையில், அதிபராக இருந்த ஜெயவர்த்தனா முதல், அனைவருமே புத்திசாலித்தனமாகவே, தமிழ் இன பிரச்னையை கையாண்டு வருகின்றனர். தமிழர் பிரச்னையில், அவர்கள் தங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே பிரதானப்படுத்தி, அதை வைத்து இலங்கையிலும், வெளியேயும் மிகப் பெரிய லாபத்தை சம்பாதிப்பவர்கள். அப்படிப்பட்டவர்களில், மிகுந்த சாதுர்யமான நபராக தன்னை காட்டி வருபவர் தான், ராஜபக் ஷே. அவரை, நாம் அவ்வளவு எளிதாக அணுகி, பிரச்னையை தீர்த்துவிட முடியாது.புதிய அரசின் வெளியுறவு கொள்கை என்ன என்பதே, முழுமையாக அறியாத சூழ்நிலையில், அவரின் இந்திய வருகையால், இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு கிட்டிவிடும் என்றோ, பிரச்னை இன்னும் மோசமான சூழ்நிலையை எட்டப் போகிறது என்றோ யாரும் சொன்னால், அதை கேட்க வேண்டிய அவசியமில்லை. (மேலும்....) சட்டி சுட்டதடா முள்ளிவாய்க்காலின் ஆரம்பம் ( ரஞ்சன்) சமாதான முன்நெடுப்புக்களில் எந்தளவு முன்னேற்றம் இருந்ததோ இல்லையோஅல்லது சமாதான பேச்சக்களில் முன்னேற்றம் இருந்ததோ இல்லையோ சமாதான முன்னெடுப்புக்களில் இரு தரப்புக்கும் எந்தளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதை அளவிடும் அல்லது கண்காணிக்கும் பணியாகவே கண்காணிப்பாளர்களின் பணியும் சர்வதேசத்தின் பணியும் இருந்தது என்பது காலம் தாழ்த்தியே எல்லோருக்கும் புரிந்தது. இதில் ரணில் விக்கிரமசிங்க ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றார். அவர் சர்வதேசத்தின் மத்தியிலும் தமிழ்மக்கள் மத்தியிலும் சமாதானத்தின் மீது அக்கறை கொண்டவர் போன்று காட்டிக்கொண்டமை அன்றைய கால கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. அவர் 30 வருட கால போராட்டத்தை 3வருடத்தில் சுருக்கி காட்டியுள்ளார். இதை உணராத புலிகள் தொடர்ந்தும் வன்முறைகளிலேயே ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். (மேலும்....) ராஜபக் ஷேவுக்கு எதிர்ப்பு மோடியின் ராஜதந்திரம் புரியாமல் நடக்கும் கூத்து நரேந்திர மோடி, இந்திராவை விட இரும்பு மனிதராக இருந்து செயல்படக் கூடியவர் என்பது, ராஜபக் ஷேவுக்கு நன்கு தெரியும். இதெல்லாம் தெரிந்து தான், பதவியேற்பு விழாவை புறக்கணித்து, ஆரம்பத்திலேயே இந்தி யாவில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசோடு நெருடலை ஏற்படுத்திக் கொண்டால், அது பழைய படியே பிரச்னையை ஏற்படுத்தி விடும் என பயந்தார் ராஜபக் ஷே.அதனால் தான், அவர் நரேந்திர மோடியிடம் இருந்து அழைப்பு என்றதும், வருகை தர உடனே ஒப்புக் கொண்டு விட்டார். அதேபோல், இலங்கையில் யார் அதிபராக இருந்தாலும், பின்னணியில் இருந்து ஆட்சி பரிபாலனத்தை நடத்திக் கொண்டிருக்கும் புத்த பிட்சுக்களும், இந்த ஆபத்தை உணர்ந்தே இருக்கின்றனர். அதனால், அவர்களும், ராஜபக் ஷேவின் இந்திய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. (மேலும்....) யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் 'தறுதலைகள்'
மே 26, 2014 எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபர்கள் மூவரையும் நாடு கடத்த மலேசியா நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைதான மூன்று சந்தேகநபர்களையும் இலங்கைக்கு நாடு கடத்த அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்துள்ள மலேசியாவின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர், ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தொடர்புகள் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான முயற்சிகளில் இந்த மூன்று சந்தேகநபர்களும் ஈடுபட்டதாகக் கூறினார். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய விசா மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக இவர்கள் மலேசியாவில் தங்கியிருந்துள்ளனர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்ததாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தேகநபர்கள் மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். புலி சந்தேகநபர்கள் மூவர் மலேசியாவில் கைது தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலாலம்பூர், பி.ஜே. கிலாங் எனும் பிரதேசத்தில் வைத்தே இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மே மாதம் 15ஆம் திகதி அமைக்கப்பட்ட விசேட பயங்கரவாத குற்றப்பிரிவினரின் மூலமே குறித்த சந்தேக நபர்கள், கிலாங் மற்றும் பெடலிங் ஜெயா ஆகிய நகரங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தினால் அங்கீகாரிக்கப்பட்ட அட்டைகளை வைத்திருந்ததாகவும், முக்கியமாக தேசிய அளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை பரப்புவதற்காக முனைந்துள்ளனர் எனவும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் உயர் அதிகாரியான டான் ஸ்ரீ காலிட் அபூபக்கர் ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தை பிரசாரம் செய்யவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும், தொழிநுட்ப சாதனங்களும் மற்றும் 24 நாடுகளுக்கு சமனான வெளிநாட்டு பணம் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்நாட்டு அதிகாரிகளிடம் இருந்து மறைந்திருப்பதற்காகவே அவர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தினால் அங்கீகாரிக்கப்பட்ட அட்டைகளை பயன்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.பிரிவினையை எதிர்க்கிறோம் - பா.ஜ.க இந்தியா-இலங்கையின் உறவு என்பது தமிழர்கள் பிரச்சினையால் பகையாகிவிடக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகளை கொழும்பு, உண்மையாகவும் சுமுகமாகவும் தீர்க்கும் என நாம் கருதுகின்றோம்.இலங்கையில் பிரிவினையை எதிர்க்கிறோம், இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான 'ஆர்கனைசர்' இன் முன்னாள் ஆசிரியரும். பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் மும்பைவாழ் தமிழருமான சேஷாத்ரி சாரி தி இந்து வுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (மேலும்....)இரணைமடு நீர் விநியோகம் வடமாகாண சபையின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானம் , வ்வளவு வேகமாகத் தீர்மானம் நிறைவேற்ற முடிந்தவர்களால் இச்சபை கலையும் முன்னர் ஏதாவது ஒரு திட்டத்தையாவது உருவாக்கி நடைமுறைப்படுத்திக் காட்ட முடியுமா? என்று கேட்கத் தோன்றுகின்றது. கிளிநொச்சி - யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டம் தொடர்பாக 29.04.2014 அன்று வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. இந்தத் தீர்மானம் தீர்க்கதரிசனமற்ற முறையில் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்டோரினது அகங்கார வெற்றிக்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகவே இதைக் கருத வேண்டி உள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பாகப் பொது மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் ஒன்று ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்தினையும் இது கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது உண்மையில் எதிர்மாறான விளைவினையே ஏற்படுத்தும் என்கின்ற சாதாரண உண்மை கூட புலப்படத் தேவையான கால அவகாசம் சபை அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. (மேலும்....) பதவிப்பிரமாண அரசியல்
(எம்.எஸ்.எம்.ஐயூப்) மோடியுடன் இணைந்து செயல்பட ரஷ்யா விருப்பம் இந்தியாவில் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியுடன் ரஷ்யா இணைந்து செயல்பட விரும்புவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் பொருளாதார, இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இருதரப்பிலும் இணைந்து செயல்பட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, இந்தியாவுடன் உள்ள ரஷ்ய உறவு அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு என்றும் இந்திய மக்களுடன் நல்ல நட்புடன் தான் இருந்து வருகிறோம். மோடியை நான் சந்தித்து இருக்கிறேன் அவருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். இந்தியாவில் 10 ஆண்டுகளாக இருந்த ஐ.மு.கூட்டணி அரசை தூக்கி எறிந்துவிட்டு புதிய அரசை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இருந்த ஐ.மு.கூட்டணி அரசுடன் ரஷ்யா கொண்டிருந்த நட்பும் தற்போது மோடி தலைமையிலான அரசுடன் உள்ள நட்பு குறித்து பேசுகையில் இந்தியா-ரஷ்யா உறவு அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு.இந்தியா சிறந்த நாகரீகத்தை கொண்டது. அவர்களின் ஜனநாயக தேர்தலை வெற்றியுடன் நடத்தியுள்ளது பாராட்டுக்குரியது என்றார். இந்தியாவுடன் பொருளாதார உறவு, மனிதநேயத் தொடர்புகள், இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்து வருகிறது. அனைத்தையும் நிறைவேற்ற தயாராகி வருகிறோம் என்றார் புடின். அடுத்த தேர்தல் வெற்றி கருதியே தமிழ்க் கூட்டமைப்பினர் அஞ்சலி நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇருபது வருடங்களுக்கு மேலாக பலத்த சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக எனக்கு அரசியல் அங்கீகாரத்தை வழங்கி வருகின்ற தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும் எமது மக்களின் நீடித்த துயர்களைப் போக்குவதற்காக நான் அங்கம் வகித்து வருகின்ற அரசாங்கத்தின் அமைச்சர் என்ற ரீதியிலும் இந்தச் சபையில் நான் சில நியாயங்களை எடுத்துரைக்க விரும்புகின்றேன். நாம் வெறுமனே அரசியல் உரிமைக்காக மட்டும் குரல் கொடுத்து உழைத்து வருபவர்கள் அல்லர். அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை உருவாக்கவும், கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கவும் நாம் அன்றிலிருந்து குரல் கொடுத்து வருபவர்களாவர். அத்தோடு மனித குலத்தை, மக்கள் சமூகத்தை சீரழிக்கும் எந்த செயல்களையும் நாம் ஒரு போதும் எற்றுக்கொண்டவர்கள் அல்ல. மனித சமூகத்தையே சீரழிக்கும் போதைவஸ்து பாவனையை நாம் கொள்கை ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் எமது ஆரம்பகால உரிமைப் போராட்ட காலத்தில் இருந்தே எதிர்த்து வந்திருக்கின்றோம். (மேலும்.....) மே 25, 2014 இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் - 8) (அ. வரதராஜப்பெருமாள்)
வடக்கு மாகாணசபை வெறுமனே தமிழ்த் தேச சுயநிர்ணய அரசியற் களமாக மட்டும் தான் இருக்க வேண்டுமென்றால், திரு விக்கினேஸ்வரன் போன்ற ஒருவரை தமிழர்கள் முதலமைச்சராக ஆக்கியிருக்கி வேண்டிய அவசியமில்லையே! இவரை விட அதனை திரு மாவை சேனாதிராஜாவையோ அல்லது கௌரவ அடைக்கலநாதன் செல்வத்தையோ அல்லது கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரனையோ முதலமைச்சர் ஆக்கியிருந்தால் மிகத் திறமையாக ஆக்ரோஷம் கொப்பளிக்கும் களமாக மாகாண சபையை எப்போதும் சுடச்சுட வைத்துக் கொண்டிருப்பார்களே! எல்லோரையும் விட, சிவாஜிலிங்கமும், அனந்தியும் மாகாண சபையை முள்ளிவாய்க்காலில் நடத்தி எப்போதும் அதனை ஒரு சுடுகாட்டுக் கொதிநிலையிலேயே வைத்திருந்திருப்பார்களே! (மேலும்.....) மோடியின் பதவியேற்பு விழாவில் யாழ். மேயர், தொண்டமான் பங்கேற்பு இந்தியாவின் 14ஆவது பிரதமராகப் பதிவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தானும் பங்கேற்கவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ள முடியாத சூழலில் இவர் கலந்து கொள்வதாக அறிய முடிகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து சனிக்கிழமை (24) இரவு வந்த அழைப்பினை ஏற்று, தான் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதேவேளை, ஜனாதிபதியின் இந்த இந்திய விஜயத்தில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் பங்கேற்கவுள்ளார் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் அறிவித்துள்ளார். இந்த இந்திய விஜயத்தில் பங்கேற்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, வெளிவிவகார அமைச்சரினூடாக ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதிலும் அந்த அழைப்பை முதலமைச்சர் விக்னேஷ்வரன் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முரண்படும் அரசியல் செயற்பாட்டடை த.தே கூட்டமைப்பு கையாளுவதாகவே தெரிகின்றது. குளத்தோ கோவித்துக் கொண்டு அசுத்தத்தை கழுவாத செயலாகவே இதனைப் பார்க்கமுடியும். ராஜபக் ஷே வருகையை இன உணர்வு பார்வையில் பார்ப்பதா? இலங்கை தமிழர் பிரச்னை என்பதை சில கட்சிகள், தங்கள் கருத்துக்கு ஏற்ப ஓட்டு வங்கியாக மாற்றியதாலோ என்னவோ, அக்கட்சிகளுக்கு தங்களது உரிமை மீறல்கள் தெரியாமலேயே போய் விட்டது. இதற்காக, ஒவ்வொரு முறையும் ஒரு ராஜீவை பலி கொடுத்து, அவர்களை மவுனிகளாக்க முடியாது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுத் தர வேண்டியது, இந்தியாவின் முக்கிய கடமை. எப்போது, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் கீழ், பதிமூன்றாவது சட்ட திருத்தம் இலங்கையில் இயற்றப்பட்டதோ, அப்போதே அந்த கடமை துவங்கி விட்டது. அன்று, விடுதலை புலிகள் இயக்கமும், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பும், இதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தான், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகளும், அதையும் காரணம் காட்டி, பதிமூன்றாவது சட்ட திருத்தத்தை அமல்படுத்தாமல் விளையாட்டு காட்டுவதற்கு பழகி விட்டார்கள். மாறாக, பதிமூன்றாவது சட்ட திருத்தத்தை அன்றே ஏற்றுக் கொண்டுஇருந்தால், அதன் செயல்பாட்டின் அடிப்படையில், இலங்கையில் உள்ள மாகாணங்கள் அதிக அதிகாரங்களை பெற்றிருக்கும். தமிழர்களுக்காக இல்லைஎன்றாலும், இலங்கையின் மீதமுள்ள எட்டு மாகாணங்களில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளும் மக்களுமே, ஒன்றுபட்ட வடகிழக்கு மாகாணத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களை கண்டு, அதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பார்கள். (மேலும்......) ஈழப்போர்-5 ஐரோப்பாவில் தொடங்கியது! மதியுரைஞர் சேரமானின் கதிகலங்கும் வியூகம்!! இலங்கை அரசு, வெளிநாடுகளில் உள்ள 16 தமிழர் அமைப்புகளை ‘விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகள்’ என கூறி தடைசெய்துள்ள நிலையில், அந்த 16-ல் ஒன்றான பிரித்தானிய தமிழர் பேரவைமீது, அதே 16-ல் மற்றொன்றாக நெடியவன் படையணி, ‘தேசிய பன்முக தாக்குதலை’ தொடுத்துள்ளது. நெடியவன் படையணியின் மதியுரைஞர் (ஆலோசகர் என்று அர்த்தம்) சேரமான், தமது புதிய அறிக்கையில், பிரித்தானிய தமிழர் பேரவையை போட்டுத் தாக்கியுள்ளதுடன், ‘சைட்-கிக்’ ஆக, தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரையும் ஒருகை பார்த்துள்ளார். (உருத்திரகுமாரனின் ஈழமும், இலங்கை அரசு பட்டியலில் உள்ள 16-ல் ஒன்று) இலங்கை அரசு, 16 வெளிநாட்டு தமிழர் அமைப்புகளை தடை செய்தால், அந்த 16 அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இலங்கை அரசை தாக்க வேண்டும் என்பது, அறிவிலிகள் போடக்கூடிய வியூகம். ஆனால், மதியூகியான மதியுரைஞர் ஒருவரை கொண்டுள்ள நெடியவன் படையணி, வித்தியாசமான வியூகத்தை வகுத்துள்ளது. (மேலும்......) பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த பங்கேற்கிறார்இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி ஜனாதிபதி முகர்ஜி முன்பாக பதவிப்பிரமாணம் இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நாளை 26 ஆம் திகதி திங்கட்கிழமை பதவியேற்கிறார். இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் அவருக்குப் பதவிப் பிரமாணம், இரகசியக் காப்புப் பிரமாணம் ஆகியவற்றை குடியரசுத் தலைவரான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி செய்து வைக்கவுள்ளார்.இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் அதிகாரத்ததைப் பெற்றது. ஆட்சியமைப்பது தொடர்பாக பா.ஜ.க, கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இந்திய நாடாளுமன்றில் நடந்தது. இதில் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்க ஒருமனதாக ஆதரவு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நிகழ் வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங் கேற்பது உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை ஜனாதிபதி செயலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரதமர் மோடி தனியாகச் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு தொடர்பாகக் கலந்துரையாடுவார். சம்பிரதாய பூர்வமான இந்தச் சந்திப்புகள் தலா 30 நிமிடங்கள் வரை நீடிக் கும் என்றும் புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என பாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மோடி பதவி யேற்பு விழாவில் சார்க் கூட்டமைப் பில் உள்ள நாடு களின் தலைவர்கள் அனைவரும் பங் கேற்பது உறுதி யாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த வருகைக்கு எதிர்ப்புதமிழக கட்சிகள் மீது மோடி அதிருப்தி டுவிட்டரில் வெளிப்படுத்தினார்இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகை தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் மீது நரேந்திர மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பா. ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கிறது. நாளை 26 ஆம் திகதி நரேந்திரமோடி, பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. இதன்படி இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அவர் மோடி பிரதமராக பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தி. மு. க. தலைவர் கருணாநிதி, ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, பா. ம. க. நிறுவனர் ச. ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழ் கட்சி. தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்நிலையில். ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்திய வருகை தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் மீது நரேந்திர மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மோடி, மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நிர்வகிப்பது. தாங்கள் அல்ல... மத்திய அரசுதான் என்பது தெரியாமல் இலங்கை அதிபருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டின் கட்சிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் என்ற மனப்பான்மையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் - TULF தலைவர் வி. ஆனந்தசங்கரிபுலிப்பயங்கரவாதத்தை தோல்வி அடையச் செய்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டி இன்றைக்கு ஐந்து வருடங்கள் ஆகின்றன. கடந்த காலத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் இந்த அரசாங்கம் நாட்டில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றது. அந்த வகையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீள்குடியமர்த்தும் வேலைத்திட்டத்தைக் கூட சிங்களவர்களிடம் கையளித்திருந்தால் அதையும் இன்னும் சிறப்பாக செய்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். சுனாமியினால் வட கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டபோது கூட இந் நாட்டு சிங்கள பெளத்த மக்களே அவர்களுக்குப் பெரிதும் உதவினார்கள். (மேலும்......)மே 23, 2014 நந்தி கடலில் பதுங்கி இருந்த பிரபாகரனை காட்டி கொடுத்த பாடிகார்ட் -மெய் நடுங்கும் கண்ணீர் சம்பவங்கள் (பகுதி இரண்டு)
மீண்டும் சற்று பின்நோக்கி போகலாம். 2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 6 மணி. விடுதலைப் புலிகள் இருந்த சிறிய பகுதியை சுற்றி முற்றுகையிட்டிருந்த இலங்கை ராணுவ படைப்பரிவுகளில், 58-வது, 59-வது படைப்பிரிவுகளின் முற்றுகை லைன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செக் பண்ணிக்கொண்டு இருந்த தளபதி லெப். கர்னல் செனக விஜேசூர்யவுக்கு போன் அழைப்பு வந்தது. பேசியவர், வன்னி ஆபரேஷன் கமான்டர், மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூர்ய. “விடுதலைப் புலிகளின் ரேடியோ தொடர்புகளை ஒட்டுக் கேட்டதில் இருந்து, இன்றிரவு அவர்கள் முற்றுகை லைனை உடைத்துக் கொண்டு வெளியேறும் திட்டம் ஒன்று வைத்திருப்பது தெரிகிறது. அவர்கள் தமது ரேடியோ உரையாடலில் படகுகள் பற்றி பேசினர். எனவே, இந்த தாக்குதல் நந்திக்கடல் பக்கம் இருந்து வரலாம். உங்களது டிவிஷன் பாதுகாப்பு லைனை பலமாக வைத்திருங்கள். இன்றிரவு தாக்குதல் நடக்கலாம் என சொல்கிறது எம்.ஐ. (மிலிட்டரி இன்டெலிஜென்ஸ்)” என்றார். (மேலும்....) மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பார்இந்தியாவின் 14 ஆவது பிரதமராக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்புவிழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதனை இந்தியச்செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழர் நலன் கருதியே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார் என்று தமிழக பாரதீய ஜனதாக கட்சியின் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல் பகுதி - 3 - டி.பி.எஸ் ஜெயராஜ் வவுனியா விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு புதிய தகவல் வவுனியாவிலிருந்து கிளம்பியது. காவலில் உள்ள நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, வவுனியா சிறிமா நகரிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது. தாய்.தந்தை மற்றும் ஆறு மற்றும் நான்கு வயதுள்ள இரண்டு பிள்ளைகள் ஆகிய நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று அங்கிருந்து கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது. பெற்றோர்கள் இருவரும் கிழக்கு பிராந்திய தமிழர்கள் வவுனியாவில் வசித்து வந்தவர்கள் மற்றும் கிட்டத்தட்ட அந்தப் பகுதிக்கு அந்நியர்களாக இருந்தார்கள். அந்த பிள்ளைகள் இரண்டையும் விட்டு வர வேறு யாரும் இல்லாததால் அவர்களும் அழைத்து வரப்பட்டார்கள். பின்னர் அவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டார்கள். (மேலும்....) நினைவுக் குறிப்புகள் போராட்டங்களின் தோழர் உமாநாத்! (எஸ்.கல்யாண சுந்தரம்) மூத்த தலைவர் உமாநாத்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினருமான ஆர்.உமாநாத் இன்று திருச்சி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92. தோழர் உமாநாத் கேரளா மாநிலம் காசர்கோடு என்ற இடத்தில் 1921 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் ராமநாத் ஷெனாய். தாய் நேத்ராவதி. பிராமண குடும்பத்தில் பிறந்த இவருக்கு 5 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். மார்க்சிஸ்ட் மாநில உறுப்பினர் யு.வாசுகி, நிர்மலா ராணி மற்றும் லக்ஷ்மி ஆகியோர் இவரது மகள்கள் ஆவர். உமாநாத் சிறு வயதிலேயே 1930-ல் நடந்த அந்நிய துணி எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். கல்லூரியில் பயின்றபோது வேலையின்மைக்கு எதிராக கண்ணனூர் முதல் சென்னை கோட்டை வரை நடந்த பட்டினி பாதயாத்திரையில் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் 1940 ஆம் ஆண்டு தன்னை கட்சியின் முழுநேர ஊழியராக இணைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்து கட்சி பணிகளை மேற்கொண்டார். (மேலும்....) அம்பலத்திற்கு வரும் சயந்தனின் திருவிளையாடல்கள்! சீற்றத்தினில் சக கூட்டமைப்பு உறுப்பினர்கள்!! வடமாகாணசபையினில் இன்று பொதுச்சுடரேற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதை தடுப்பதினில் கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர் சயந்தனே முக்கிய குழப்பங்களை ஏற்படுத்தியதாக ஏனைய உறுப்பினர்கள் கடுமையான சீற்றத்தினை வெளியிட்டுள்ளனர். சட்டத்தரணியான குறித்த நபர் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கள் ஏதும் வெளியிடப்பட்டால் அரசு பக்கம் தாவலாமென அவரது கட்சி சார்ந்த தரப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. சட்டத்தரணியான குறித்த நபர் கொழும்பினை மையமாக கொண்டு பணியாற்றி வருகின்றார்.கடந்த மாகாணசபை தேர்தலில் அங்கிருந்தே கொழும்பு சிபார்சினில் தேர்தல் களத்தினில் குதித்திருந்ததுடன் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தினிலேயே வெற்றியும் பெற்றிருந்தார். முன்னதாக கூட்டமைப்பின் மேதினத்தை சாவகச்சேரியினில் நடத்தியமை மற்றும் அங்கு தலைவர் பிரபாகரனை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விமர்சித்த விடயத்திலும் குறித்த சயந்தனே பின்னாலிருந்தமை அம்பலமாகியுள்ளது.இன்றைய தினம் காலை இடம்பெற்ற நினைவேந்தல் சுடரேற்றலிலும் முதலமைச்சர் மற்றும் பேரவை தலைவர் ஆகியோருடன் அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் பங்கெடுக்காது விட்டிருக்க இவரே காரணமென கண்டறியப்பட்டுள்ளது. நினைவேந்தலில் சுடரேற்ற தயார் ஆகுவது பற்றி தகவல்களை தொலைபேசியினூடாக வழங்கி அவர்களை பேரவைக்கு தாமதமாக வருகை தர இவரே அறிவுறுத்தியதாக தெரியவருகின்றது.இதையடுத்தே சுடரேற்றல் முடிவுற்றதும் அவர்கள் சபைக்கு வருகை தந்துள்ளனர்.நேற்றை கூட்டத்திலும் கறுப்பு பட்டி மட்டுமே அணிய முடியுமென தெரிவித்து ஏனையவர்களுடன் இவர் வாக்குவாதத்தினில் ஈடுபட்டமையினை உறுப்பினரான விந்தன் கூட்டிக்காட்டினார்.முன்னதாக நேற்று இடம்பெற்ற ஒத்திகைக்கூட்டத்திலும் குறித்த நபர் கடந்த 16ம திகதி முன்னெடுக்கப்பட்ட சுடரேற்றல் நிகழ்வினை நையாண்டி செய்திருந்ததாக மற்றொரு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் வேதனையுடன் தெரிவித்தார். எதிர்க்கட்சி பதவி அணி திரளும் அதிமுக, திரிணாமுல், பிஜூ ஜனதா! நாடாளுமன்ற எதிர்க்கட்சி பதவியில் இருந்து காங்கிரசை ஓரம் கட்ட மூன்று மாநில கட்சிகள் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவித்ததுமே நாட்டில் மூன்றாவது அணியை அமைத்து மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை ஓரம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட குறைந்த பட்சம் 10 சதவீத தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. எனவே, காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளையும் ஒன்றிணைத்து, எதிர்க்கட்சியாக செயல்பட முடிவெடுத்துள்ளது. (மேலும்....)அகதிகளை மனிதாபிமானத்துடன் ஏற்று தஞ்சம் கொடுக்கும் நாடு
மேற்குலகை சேர்ந்த பணக்கார நாடுகள் மட்டுமே, அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதாக பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், மேற்குலகை சேராத பிற உலக நாடுகளில் தான் பெருமளவு அகதிகள் புகலிடம் கோரியுள்ளனர். செர்பியாவும் அதில் ஒன்று. பல ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை சேர்ந்த அகதிகள், செர்பியாவில் சிறப்பாக பராமரிக்கப் பட்டு வருகின்றனர். அதற்கு நன்றிக் கடனாக, தற்போது செர்பியா வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ள நேரம், அகதிகள் சிரமதானப் பணி செய்து உதவியுள்ளனர். முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான செர்பியாவில், பன்னாட்டு அகதிகளுக்கு தஞ்சம் கொடுத்து பராமரிக்கிறார்கள் என்று சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். அந்தளவிற்கு, மேற்குலக பிரச்சாரங்களை மட்டுமே, உண்மையான தகவல்கள் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, இந்த தகவல் எந்தவொரு மேற்கத்திய ஊடகத்திலும் வந்திராது. Tamil Canadian politician claims to be walking in Prabhakaran’s footsteps By Camelia Nathaniel A terrorist ideologue is masquerading as a politician in Canada. He is planning to contest the forthcoming Ontario Provincial election in the riding of Scarborough Rouge River on June 12, 2014. Having penetrated the Provincial political system, his mission is to penetrate the Canadian political system at a federal level. He is none other than Neethan Shanmugaraja who operates under the name Neethan Shan. A shadow leader of the LTTE in Canada, Neethan radicalized an entire generation of Tamil youth to support the LTTE, a proscribed terrorist group in Canada. Neethan Shan is the directing figure of the Tamil Youth Movement (TYO), designated as a ‘terrorist entity’ under the United Nations Security Council Resolution 1373 and holds the post of National Director in the National Council of Eelam Tamils (NCCT), another organization designated as a ‘terrorist entity’ under the same UN resolution. Very good at hiding himself, he came to the attention of the authorities after he was nominated as the New Democratic Party candidate to contest the elections. He was unsuccessful in the past, but this time he has mobilized the entire LTTE machinery in Canada to support him. (more.....) உங்களுக்குத் தெரியுமா?
தாய்லாந்தில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்தாய்லாந்தில் ஓர் இராணுவ சதிப்புரட்சியாக, அந்நாட்டு அரசை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக தாய்லாந்து இரா ணுவ தளபதி nஜனரல் பிரயுத் சான் ஒசா அறிவித்துள்ளார். நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் அரசியல் சீர்திருத்தத்தை கொண்டுவரவும் இராணுவம் நட வடிக்கை எடுக்கும் என்று நேற்று தொலைக்காட்சி முன் தோன்றிய இராணுவ தளபதி அறிவித்தார். கடந்த இரு தினங்களாக தாய் லாந்து இராணுவம் அந்நாட்டு அரசி யல் தரப்புகளை சந்தித்து பதற்ற சூழலை தணிக்க மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி யடைந்த நிலையிலேயே நாட்டை யும் அரசையும் தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதாக இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த பல மாதங்களாக தாய் லாந்தில் அரசியல் பதற்றம் நீடித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை அந்நாட்டு இராணுவம் நாட்டில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியது. இந்நிலையில் ஆர்ப்பாட்ட முகாம் களில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர் களை அகற்றுவதற்கு இராணுவம் நேற்று துருப்புகளையும் வாகனங் களையும் அனுப்பியுள்ளது. மே 22, 2014
அரசியல்மயமாக்கப்பட்ட ஞாபகார்த்தங்கள்
மே 21, 2014 என் மனவலையிலிருந்து..... இந்தியத் தேர்தல் முடிவை மீள்பரிசீலனை செய்வோம் (சாகரன்) சில சந்தர்பங்களில் எமது விருப்பங்கள் எமது ஆய்வு? கட்டுரைகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதுண்டு. இதுதான் இந்தியத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்ற ஆய்வுக் கட்டுரையில் அதிகம் ஏற்பட்டிருக்கின்றது. என் விருப்பங்கள் என் கட்டுரையில் நான் அதிகம் ஆதிக்கம் செய்திருக்கின்றது என்பதை சுயவிமர்சனமாக ஏற்றுக்கொள்கின்றேன். இந்த என்விருப்பம் பொது நலனிகளின் அக்கறை என்ற பார்வையிலிருந்து உருவானது. இவை ஒருபுறம் இருக்க இந்திய மக்களின் ஜனநாயக கூறலுக்கு கிடைத்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்தியாவின் தலைவிதியை பாரதிய ஜனதா கட்சியிடம் இந்திய மக்கள் ஒப்படைத்திருக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களிடம் இருந்த வெறுப்பும், மோடி இந்தியாவை குஜராத்தை வளர்ச்சியடைந்த? மாநிலமாக மாற்றியதைப் போல் இந்தியாவையும் மாற்றுவார் என்ற பா.ஜ.க வின் கருத்தை ஏற்றிருப்பதையும் இந்த வெற்றி எடுத்துக்காட்டுகின்றது. இந்தியாவின் ஆளும்வர்க்கம் எப்போதும் தேர்தலில் யார் வென்றாலும் மாற்றம் அடைவதில்லை. இதேபோல் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் கட்சிகளை மீறி தற்போதும் ஆதிகத்தில் இருப்பதனால் ஆட்சி மாற்றம் இந்திய அரசின் செயற்பாட்டில் அதிகம் மாற்றத்தை உள்நாடு, வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவது இல்லை. பிஜேபி கட்சியின் வாஜ்பேயின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் ஒன்றும் காங்கிரஸ் கட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களுக்கு சளைத்தது அல்ல. இது இந்திய திருநாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று. ஆனாலும் மக்கள் இதனையெல்லாம் மறந்து மாறி மாறி இந்த ஒரு குட்டை மட்டைகளையே தமது ஆட்சியாளர்களாக ஏற்றிருக்கின்றனர். இந்தியாவின் மிகப் பெரும் சக்தியாக விளங்கும் இளைஞர்கள் ஒரு முற்போக்கான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. தற்போதெல்லாம் முற்போக்கு கருத்தியலை நன்கு பரப்பப் கூடிய நகரத்து இளைஞர்கள் பல் தேசியக் கம்பனிகள் வழங்கும் 14 மணி நேரத்திற்கு அதிகமான வேலைசெய்தல் என்பதை ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு இதுதான் வாழ்வு என்று ஓடிக்கொண்டு இருக்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என்பதைவிட தன்னுடைய வளர்ச்சி என்ற சுயநலக்கிடங்குக்குள் வீழ்ந்து கிடக்கின்றனர். இந்த கிடங்கிலிருந்து இவர்களை தட்யெழுப்ப வேண்டிய அவசியமும் அவசரமும் இருக்கின்றது. இந்த மாற்றம் நிகழாதவரைக்கும் இந்திய ஆட்சியில் பாரிய முற்போக்கு மாற்றம் ஏற்படப்போவது இல்லை. இதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய தேவை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும், சமாதான சக வாழ்விற்கும் உண்மையான விசுவாசமான சிந்தனை உள்ளவர்கள் செய்தே ஆக வேண்டும். இதற்கான ஒரு பலமான அமைப்பிற்கான வெற்றிடம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. நபர்களாக பலர் இருந்தும் இவர்கள் ஒரு ஐக்கியப்பட்ட அமைப்பை இதுவரை கட்டியமைக்கவில்லை. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் கருணாநிதியின் சாணக்கியத்தை பயன்படுத்த முடியாத அவரின் அரசியல் வாரிசின் தேர்தல் வியூகம் தோற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். மற்றயபடி அம்மாவின் இலவசங்களும், அம்மா கடையும் இதனைப்போன்ற தாக்கங்களுகம் அவர்மீது மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்தியம்பி நிற்கின்றது. தமிழ் நாட்டில் அதிமுக வின் வெற்றி, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் தோல்விகளை விட என்னை அதிகம் பாதித்தது சாதியத்தை முன்னிறுத்தி வெறியராக செயற்படும் ராமதாஸின் கட்சி ஒரு இடத்தில் வெற்றியடைந்தது. இது எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்ல. அண்மைக்காலங்களில் காதலைக்காட்டி நடைபெற்ற சாதிக்கலவரங்களில் எல்லாம் இவரகளின் கரங்கள் இருந்தும் அன்பு மணியின் வெற்றி தமிழகத்திற்கு அடித்துள்ள அபாய மணியாகும். இது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இந்தியத் தேர்தலில் பங்கு பற்றிய மூன்று முக்கிய பெண்மணிகளில் ஜெயலலிதா, மம்மதா பானர்ஜி, மாயாவதி ஆகிய மூவரில் மாயாவதி மொத்த வாக்குகளில் அதிகம் பெற்றிருந்தாலும் ஒரு தொகுதியைக் கூட இவரால் வெல்ல முடியாத போனபோது மற்றய இருவரின் அமிர்தமான வெற்றி கருத்தில் கொள்ளப்பட வேண்டியததான். ஆம் ஆத்மி கட்சி டெல்லியல் ஒரு தொகுதயையேனும் வெல்ல முடியாத போதும் பஞ்சாபில் மட்டும் 4 தொகுதிகளில் வென்றிருப்பது நல்ல ஆரம்பம்தான். பாரம்பரிய இடசாரிகள் ஒன்பது, ஒன்று என தமக்குள் வெற்றிகளை தமதாக்கிக் கொள்கையில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி கருத்தில் கொள்ளப்பட வேண்டியதே. பொறுதிதிருந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை பிஜேபி இந்தியாவின் மத, இன நல்லிணகத்திற்கும் அயல்நாடுகளுடனான நல்லுறவிற்கும் ஆரோக்கிமான செயற்பாட்டை கொண்டிருக்கப் போவதில்லை. மாறாக மன்மோகன் சிங்கின் அமெரிக்க சார்பின் பல மடங்கை தன்னகத்தே கொண்டு பல் தேசியக் கம்பனிகளை கட்டுப்பாடின்றி அவிழ்த்து விட்டு இந்திய உழைக்கும் மக்களின் உழைப்பை உறுஞ்ச அகழியை வெட்டிவிடும். (மே 19, 2014) (சாகரன்) ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல் பகுதி - 2 (டி.பி.எஸ் ஜெயராஜ்) கணணிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், மற்றும் கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் அதேபோல கைது செய்யப்பட்டவர்கள் வெளிப்படுத்திய தகவல்கள் என்பன புலனாய்வாளர்கள் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்பு முயற்சிகள் பற்றிய ஒரு தோராயமான அறிவைப் பெறுவதற்கு உதவின. புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிச் சக்திகள் இந்த நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. பாதுகாப்பு தரப்பினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது என்னவென்றால் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயின் பிளவுபட்ட வௌ;வேறு பிரிவுகளின் ஆதரவு இந்த முயற்சிக்கு கிடைத்திருப்பதுதான். ஒப்பீட்டளவில் பெரிய பிரிவுகளான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான அனைத்துலக செயலகம்,அதேபோல அதற்குச் சமமான பிரிவான விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகத்தின் தலைமையிலான தலைமைச் செயலகம் போன்ற இரு பிரிவுகளுமே இதற்கு உதவியுள்ளன. விநாயகம் பிரிவின் நிதியுதவி பிரதானமாக பிரான்சில் இருந்து கிடைத்த அதேவேளை நெடியவன் பிரிவிலிருந்து பணம் சுவிட்ஸலாந்தில் இருந்து வந்துள்ளது. (மேலும்....) புலிகள் - பசில் ராஜபக்ஷ மே 17 முதல் மே 18 காலை 8.00 மணிவரை நடந்த தொடர்பாடல் !
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி காலை 6.50க்கும் 8.00 மணிக்கும் இடையே,
புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர்
இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்களோடு சென்ற சுமார் 40
காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்கள் அனைவரும் சுட்டுக்கொல்லபட்டார்கள். இது
நடந்த விடையம் பலருக்கு தெரியும். ஆனால் அங்கே என்ன தொடர்பாடல் நடந்தது ?
இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்கள் யார் யார் , தொடர்பில் இருந்தார்கள் ?
எந்த நாடுகளுக்கு இவர்களின் சரணடைவு தெரிந்திருந்தது. இதோ நிமிடத்திற்கு
நிமிடம் நடைபெற்ற தொடர்பாடலை இங்கே நாம் தருகிறோம்: இலங்கையில்
சந்திரகாந்தன் சந்திரநேரு இவர்களுக்கு இடையே மத்தியஸ்தம் வகித்துள்ளார்.
(மேலும்....) புதிதாக பதவியேற்கவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா விசா கொடுக்க முடிவு செய்துள்ளதை வரவேற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு, இந்த முடிவை எடுத்ததற்கு அமெரிக்க அரசுக்கு தமது பாராட்டை தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் வசித்தபடி தமிழ் ஈழத்தை ஆட்சி செய்யும் பிரதமர் உருத்திரகுமாரை இந்திய பிரதமர் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது, தமிழீழம். இது தொடர்பாக தமிழீழம் சார்பில் இலங்கை உள்நாட்டு அபிவிருத்தி(யை வெளிநாட்டில் இருந்து கவனிக்கும்) அமைச்சர் (Homeland Development Minister) முருகதாஸ் கூறுகையில், “புதிதாக பதவியேற்கவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரை சந்திக்க முடியாத துரதிஷ்ட நிலை சில நாட்களின் முன் ஏற்பட்டிருந்தது. தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் கிடையாது என்பதால், அவரால் அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாது. இந்திய பிரதமர் மோடியிடம் பாஸ்போர்ட் இருந்தும், அவருக்கு அமெரிக்க விசா இல்லாததால், அவரால் அமெரிக்கா செல்ல முடியாது. இதனால், ஆசியப் பிராந்தியத்தின் இரு முக்கிய பிரதமர்களும் சந்திக்க முடியாத துரதிஷ்ட நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது, அமெரிக்க அரசு இந்திய பிரதமர் மோடிக்கு விசா வழங்குவதாக அறிவித்த காரணத்தால், இந்தியப் பிரதமர் அமெரிக்கா வந்து, தமிழீழ பிரதமரை சந்திக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை இந்திய பிரதமர் பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். நல்ல வேளையாக, தமிழீழ பிரதமர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்கா விசா கொடுக்கிறது என இவர்கள் கூறவில்ல. வியட்நாமின் தந்தை என்று அழைக்கப்படும் ஹோச்சிமின் பிறந்தநாள்.
பிரெஞ்சு, அமெரிக்க ஆதிக்கத்திற்கெதிராக போராடிய வியட்நாமியர்களை “யானையை எதிர்க்கும் வெட்டுக்கிளிகளின் போர்’’ என்று சொன்னவர்களை பார்த்து வியட்நாமின் தலைவர் ஹோசிமின் கூறுகிறார்: “விமானங்களையும், பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளை தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது. ஆனால் மார்க்சியம், லெனினியம் என்ற வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் பார்ப்பதால் "இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டைபோடுகின்றன. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கி எறியப்படும்." யுத்தம் தொடங்கிய போது மேலாதிக்க நாடுகளின் ஏளனப் பேச்சுக்களை கண்டு சலிக்காமல் மூங்கில் கழிகளையும், கற்களையும் ஆயுதங்களாக்கி போராடிய வியட்நாம் மக்கள் (வெகட்டுக்கிளிகள்) கடைசியில் யானையின் குடலையும் பிடுங்கி எறிந்தார்கள். நாட்டின் இக்கட்டான நேரத்தில் எதிரிகளிடம் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற மிகச் சிறந்த தலைவனாய் முன்நின்று மக்களுக்கு தைரியம் சொல்லிக் கொண்டு, ஆயுதங்களுக்கு முன் மார்க்சிய / கம்யூனிஸ கொள்கையை தற்காப்பு கருவியாய் முன்நிறுத்தி போராடிய தோழர் ஹோசிமின் பிறந்த தினமான இன்று தோழரின் வரலாற்று சுவடுகளில் இருந்து தன்னம்பிக்கை நம்மையும் தொற்றிக் கொள்கிறது...
- தமிழச்சி தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக காட்டு யானைகள் மக்களின் குடியிருப்பு கிராம பகுதிகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது.ஒட்டுசுட்டான் கருவேலன்கண்டல் மானுருவிக் கிராமத்தில் இரவு வேளைகளில் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதால் தாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தினமும் கிராமத்துக்குள் புகும் யானைகள் தென்னை, வாழை, பப்பாசி உள்ளிட்ட பயன்தரு மரங்களைத் தள்ளி வீழ்த்தி அவற்றை அழிப்பதுடன் வீடுகளுக்குள் இருக்கும் உணவுப் பொருள்களையும் இழுத்து எடுக்கின்றன. அத்துடன் வீட்டுக்கூரைகளைப்பிடுங்கி எறிவதுடன் சுவர்களையும் தள்ளி வீழ்த்துகின்றன. இதனால் இரவில் வீட்டில் நிம்மதியாகப் படுத்துறங்க முடியாதுள்ளதாகவும் அச்சத்துடன் விழித்திருந்து யானைகளை விரட்டவேண்டியுள்ளதாகவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடன் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தம்புள்ளயில் 25 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்தம்புள்ள பிரதேச போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த 25 பொலிஸாருக்கு 19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தும் விதத்தில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜீ.ஜே சந்ரகுமாரவின் பணிப்புரைக்கமைவாக தம்புள்ள போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 13 பேர் , சீகிரிய, கலேவெல மற்றும் மாத்தளை பொலிஸ் நிலையங்களுக்கும் கலேவெல பொலிஸ் நிலையம் மற்றும் சீகிரிய பொலிஸ் நிலையம் என்பவற்றிலிருந்து தலா 6 பேர் தம்புள்ள பொலிஸ் நிலையத்திற்குமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெஸாக் பெளர்ணமி தினத்திலும் , மறுதினத்திலுமாக இரண்டு தினங்கள் தொடர்ச்சியாக தம்புள்ள பிரதேசத்தில் வெவ்வேறு இரு வீதி விபத்துக்களினால் இருவர் உயிரிழந்த சம்பவங்களை யடுத்தே, போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர்கள் இடமாற் றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்டு கின்றது. மே 20, 2014
மே 18. முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இதற்கு அரசியல் ரீதியான பெறுமதி ஒன்றுமில்லை
மே 18. முள்ளிவாய்க்கால் நினைவுதினம். முகநூலில் பதியப்படும் புகைப்படங்கள் நெஞ்சை அறுக்கின்றன. கண்ணில் ஈரம் துளிர்க்காமல் நகர முடியவில்லை தான். ஆனால், ஏய் ராஜபக்ஷே என்ற அடிவயிற்று உறுமல் எனக்கு எழவில்லையே ஏன்? இதைச் சொல்லக் கூச்சம் ஒன்றுமில்லை. தமிழில் நிகழும் இந்த வெற்று உறுமல்கள் ஒரு கும்பல் மனநிலையின் கையாலாகாத கோபம். அது ஒரு மதிக்கத்தக்க உணர்வுதான். ஆனால் அதற்கு அரசியல் ரீதியான பெறுமதி ஒன்றுமில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் ஈழத்தில் நடந்தது என்ன? தமிழகத்தின் நம் அரசியல் தலைமைகள் ஈழமக்களின் நலன் குறித்து சாதித்தது தான் என்ன? ஒன்றுமே இல்லையா என்றால், ஆம்.ஒன்றுமே இல்லைதான். பிரபாகரன் குறித்த சிறிய விமர்சன முணுமுணுப்பு கூட தமிழில் எழவில்லையே ஏன்? இந்த அறிவு மொன்னைத் தனம் தான் புலிகளை, சக மனிதர்கள் என்று பார்க்காமல் ஒரு சாகசக்காரர்களாக தமிழின் வெகுஜன மனநிலையில் நிலை நிறுத்தியது. தமிழீழ அரசியல் பேசிய எல்லோரும் இதில் தவறிழைத்தவர்கள் தான். (மேலும்....) புலிகளால் நிர்பந்த (தற்)கொலை செய்யப்பட்ட சிவரமணி
விடுதலைப் போராட்ட நிழலாக “புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம் வாருங்கள் தோழியரே” என்று எழுதிய நெருப்பு பற்றி, இளைஞர்களின் விடுதலை எழுச்சியின் பிண்ணனியில் “என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி, ஒரேயொரு கைக்குண்டு, என் எதிரிக்கெதிராய்ப் போரைப் பிரகடனம் செய்ய என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி ஒரேயொரு கைக்குண்டு எனினும் நான் தளரவில்லை......” என்று வீரமா உருவாகிய தமிழர் கலை இலக்கிய மலர்ச்சியின் எழுச்சியில் உருவாக்கிய ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர் சிவரமணி, சிவரமணி எழுதிய எல்லாக் கவிதைகளையும்,சேர்த்து வைத்து இருந்த புத்தங்கங்கள் எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு நெருப்பு பத்த வைத்துப் போட்டு ,நித்திரைக் குளிசையை அள்ளிப்போட்டு "....மூச்சறுத்த மரணத்தின் சுவடுகள் என் பாதங்களுக்கிடையில் மூச்சையுற என் வெளிச்ச நோக்குகை இன்மையை விரட்டுகிறது...." என்று விரக்தியாக எழுதிய சிவரமணி இருவத்தி மூன்று வயதில் தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்டன. (மேலும்....) இந்தியத் தேர்தல் ஒரு புள்ளிவிபர பார்வை இந்தத் தேர்தலின் விசித்திரங்களில் ஒன்று. மம்தா, ஜெயா ஆகிய லேடிகளோடு சேர்ந்து கலக்கியிருக்க வேண்டிய இன்னொரு லேடி மாயாவதி குறித்தது. முட்டை வாங்கியிருக்கும் கட்சிகளில் அவருடைய BSP யும் ஒன்று. ஆனால் பிஜேபி, காங்கிரசுக்கு அடுத்து மூன்றாவதாக அதிகம் வாக்கு வாங்கியிருக்கும் கட்சி இந்திய அளவில் அதுதான். பிஜேபி 31%, காங்கிரஸ் 19.3% பிஎஸ்பி 4.1%. 34 இடங்களில் இரண்டாவது இடம் BSP க்கு. இன்னொரு முக்கியமான விசயத்தையும் கவனிக்கத் தவறலாகாது. பிஜேபி வாங்கியிருக்கும் மொத்த ஓட்டு 17.16 கோடி. காங்கிரஸ் வாங்கியிருக்கும் ஓட்டு 10.7 கோடி. 7 கோடிகள் ஓட்டு வித்தியாசத்தில் எத்தனை இடங்களை இழந்திருக்கிறது பாருங்கள் காங்கிரஸ். இந்த கணக்கு வழக்குகளில் அடிக்கடி முட்டை வாங்குவது அரசியல்வாதிகள் மட்டுமல்ல. தேர்தலை வெறும் புள்ளிவிபரக் கணக்காக அணுகும் அனலிஸ்ட்களும் தான். ஆனால் இந்த தேர்தலில் மோடி குறிவைத்து அடித்த இடம் ஒன்று உண்டென்றால் அது புதிய வாக்காளர்கள். 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்தலில் முதல் முறை வாக்களித்திருக்கிறார்கள். நமது வரலாற்றின் கறைகள்.....இந்து மதத்தின் அவமானம்....! பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்!
திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்." இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மார்பகத்தை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயராக, பாட்டியாக, இருந்தாலும் "மார்பகத்தை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்."(மேலும்....) இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவரை அடையாளம் கண்டனர் அவரது பெற்றோர் இறுதிப்போரின் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு, அதற்கான ஆதார படமாக அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய யுவதி, மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் நேற்று உறுதிப்படுத்தினர். இறுதிப்போரில் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி, 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற்போயிருந்தார். மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியாவுககு அருகில் எமது மகள் இருப்பதை நாம் அடையாளம் கண்டோம் என்கிறார்கள் அவரது பெற்றோர். இராணுவத்திடம் சரணடைந்த இசைப்பிரியா உட்பட ஏராளமானவர்கள், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் துன்புறுத்தப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய புகைப்படம்ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்ததே. மோடி அலை, பிஜேபி அலை என்று எதுவும் வீசவில்லை எல்லா புள்ளி விவரங்களும் தெளிவாகக் காட்டுகின்றன. மோடி அலை, பிஜேபி அலை என்று எதுவும் வீசவில்லை. இந்தியாவில் இதுவரை தனியே மெஜாரிட்டி அடைந்த எந்தக் கட்சியின் ஆட்சியை விடவும் இப்பொது பிஜேபி குறைவான வாக்கு விகிதம் பெற்றுதான் அதிக இடங்களை அடைந்திருக்கிறது. பிஜேபிக்கு 31 சதவிகிதம். காங்கிரசுக்கு 19 சதவிகிதம். மீதி 50 சதவிகிதம் வாக்குகளும் இதர பல்வேறு கட்சிகளுக்குத்தான். கேரளம், தமிழகம், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா இங்கெல்லாம் பிஜேபி இன்னமும் ஒரு முக்கிய இடத்தை தொடவே இல்லை. காங்கிரஸ் ஆட்சி எதிர்ப்பு அலையின் பயனை, பரவலாக அந்த எதிர் வாக்குகள் பிரிந்ததன் பயனை , பிஜேபி ஒரு லாட்டரி பரிசு போல அடைந்திருக்கிறது. ஹிந்தி மாநிலங்களில் மதவாதப் பிரசாரக் கூர்மைப்படுத்தலும், மோடி என்றால் வளர்ச்சி என்ற பொய்யை கெப்பல்ஸ் பாணியில் ஓயாமல் பிரசாரம் செய்து புது வாக்காளர்களை ஏமாற்றியதும் கணிசமாக அதற்கு உதவியிருக்கிறது. இதற்கு மேல் இந்தத் தேர்தல் ஒன்றும் ரொம்ப வித்யாசமான தேர்தல் என்று சொல்வதற்கில்லை. அடுத்த ஐந்தாண்டுகளில் , பிஜேபியை ஆட்சிக்குக் கொண்டு வரக் கடுமையாக உழைத்த ஆர்.எஸ்.எஸ்சுக்கும், சர்வதேச கார்ப்பரேட் சக்திகளுக்கும் இடையே மெல்ல முரண்பாடுகள் கூர்மையாகி முற்றி சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். அப்போது போலி தேசபக்தி, எதிரியை ஒழித்துக் கட்ட யுத்தம் என்ற வழக்கமான ஆயுதத்தைக் கையிலெடுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் அவையெல்லாம் முரண்பாடுகளை இன்னும் கூர்மையாக்கும். மாற்று அரசியலுக்காக உழைப்போர் எல்லாரும் மக்களிடம் தீவிரமாக, திட்டமிட்ட கருத்துப் பிரசாரம் செய்து மக்களை இந்த ஏமாற்றத்திலிருந்து வெளி வரச் செய்வது ஒன்றுதான் மாற்றத்துக்கு வழி வகுக்கும். மே 19, 2014 திருமதி அனந்தி எழிலனுக்கு பொலிஸ் பாதுகாப்பு! திருமதி இசைச்செல்வி தமிழ்செல்வனுக்கு வெளிநாட்டு விசா!!
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் பாதுகாப்புக்கென பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பொலிஸ் பாதுகாப்புடனேயே அனந்தி சசிதரன் இன்று (16) வடமாகாண சபையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தார். வடமாகாண சபை உறுப்பினர்கள் தங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டுமென்று விண்ணப்பிக்க முடியும் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தமையடுத்து, அனந்தி சசிதரன் விண்ணப்பம் செய்து மேற்படி பொலிஸ் பாதுகாப்பினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு. அது கேபி இல் ஆரம்பித்து அனந்தி வரை. பொது மக்களுக்கு துப்பாக்கி மிரட்டல். அதுவும் உரிமைகளுக்காக குரல் கொடுத்தால். மேலும் வெளிநாடுகளுக்கு இடம் பெயர் பாஸ்போட் விசா இத்தியாதி. தமிழ் செல்வனின் மனைவியிற்பு சாதாரண பொது மக்கள் வெளிநாட்டிற்கு பிழைப்பிற்கான தப்பி செல்கையில் பிடிபட்டால் விசாரணை தண்டனை இத்தியாதி....? என்னடா கேசவா இலங்கையில் என்னதான் நடக்கின்றது. பிரேமதாஸ காலத்திலிருந்து இன்று வரை புலிகள் அரசின் விருந்தினர்கள்தான் போங்கள் நல்ல தமாசுதான். ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல் (பகுதி 1) ( டி.பி.எஸ் ஜெயராஜ்) தேவிகன் - அப்பன் - கோபி மூவர் குழாத்தின் தலைமையில் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் புலம் பெயர்ந்தவர்களின் மூன்றாவது முயற்சி எப்படி முறியடிக்கப்பட்டது - கட்டுரையின் மூன்றாவது பகுதி ஜெயகுமாரி பாலேந்திராவினை கைது செய்து தடுத்து வைத்ததின் விளைவாக அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்து பெரும் கூக்குரல் எழுந்தது. ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் ஆகியோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் நன்கு அறியப்பட்ட பங்கேற்பாளர்களாக இருந்ததால் இந்தக் கைதுக்கு ஒரு எதிர்மறை ஒளி பாய்ச்சப்பட்டது. மனித உரிமையை பாதுகாப்பவர்களை அச்சுறுத்தி அவர்களை மௌனமாக்கும் முயற்சிக்காக மனித உரிமைகள் ஆர்வலர்களை அரசாங்கம் வேட்டையாடுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் ஊட்ட முயற்சிப்பவர்களுடன் ஜெயகுமாரிக்கு தொடர்பு உள்ளதாக சாட்டப்படும் குற்றச்சாட்டு பாதுகாப்பு தரப்பினரின் கற்பனையில் உருவான கட்டுக்கதை என்று அலட்சியமாக புறந்தள்ளப் பட்டது. (மேலும்....) சமாதானத்தை வெற்றி கொண்ட தினத்தையே நினைவு கூருகிறோம் - மஹிந்த ராஜபக்ஷநாம் யுத்த வெற்றியை அனுஷ்டிக்கவில்லை. சமாதானத்தின் வெற்றியே இது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ். முஸ்லிம், சிங்கள மக்களை கொலை செய்த குரூரமான பயங்கரவாதியான பிரபாகரனுக்கு மலர்வளையம் வைக்க சிலர் முயல்கின்றனர் என்று குறிப்பிட்டார். ஆனால் புலிகளால் கொல்லப்பட்ட மக்களின் அடகஸ்தலங்களையோ, அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், ரவிராஜ், கதிர்காமர் போன்றவர்களையோ கெளரவிக்க எவரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தேசிய பிரச்சினையின் போது இணக்கப்பாடு ஏற்படுத்தக் கூடிய சிறந்த இடமான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைப்பது சகல கட்சிகளின் பொறுப்பு என்று குறிப்பிட்ட ஜனாதிபதி டயஸ்போராக்களுடன் இணைந்து மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்க வைக்க முயல்வது நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு செய்யும் அநீதியாகும் என்றும் கூறினார். பயங்கரவாதிகள் குழுவொன்று நைஜீரியாவில் மாணவர்களை கடத்திய சம்பவம் உலக ஊடகங்களின் கூடுதல் கவனத்தைப் பெற்றது. ஆனால் 30 வருட யுத்தத்தின் போது பல ஆயிரம் சிறுவர்களை புலிகள் படையில் இணைத்தனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 600க்கும் அதிகமான சிறுவர்கள் சரணடைந்ததோடு அவர்கள் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாடசாலைகளுக்கு செல்ல வசதி அளிக்கப்பட்டது. இது குறித்து சில நாடுகள் ஊமையாக, குருடாக, செவிடாக உள்ளன. நாம் இதனைக் கொண்டாடுவதை அவர்கள் எதிர்க்கின்றனர். கதிர்காமம் பாத யாத்திரைக்குழு வற்றாப்பளையை சென்றடைந்தது சிங்களவரும் இணைவுயாழ்ப்பாணத்திலிருந்து கடந்த சனிக்கிழமையன்று ஆரம்பமான கதிர்காமத்திற்கான பாத யாத்திரைக் குழுவினர் 07 தினங்களின் பின் கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு வற்றாப் பளையை சென்றடைந்துள்ளனர். அங்குள்ள கிணற்றில் நீர் பொங்கி வழியும் அதிசயத்தை பாத யாத்திரைக் குழுவினர் கண்டு வியந்ததாக தலைவர் வேல்சாமி அங்கிருந்து தெரிவித்தார். பொங்கிவழியும் நீர் குழாய் வழியாக பக்கத்து வளவுகளுக்குள் அனுப்பப் படுகிறது. இன்னமும் பக்தர்கள் இவ்வற்புதத்தை பார்க்க வருகிறார்கள். அவர்கள் எமது அதிசய வெள்ளி வேலையும் பார்த்து முருகனின் அற்புதத்தை நினைந்து அரோகரா கோசம் எழுப்பியவாறு செல்கின்றனர். இதேவேளை, எமது பாத யாத்திரைக் குழுவில் பெரும்பான்மையின சிங்கள சகோதரர் ஒருவரும் இணைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.கொழும்பு தெஹிவளையைச் சேர்ந்த 54 வயதான ஏ. கே. என். பெர்னாண்டோ என்பவரே இவ்விதம் பாத யாத்திரைக் குழுவில் முதற் தடவையாக இணையும் பெரும்பான்மையினத்தவராவார். கடந்தவருடம் இணையத்தளமொன்றில் பாத யாத்திரைக் குழுவினரின் படங்களைப் பார்த்ததாகவும் தானும் அதேபோன்று பாத யாத்திரையில் ஈடுபட்டு முருகனின் அருளைப் பெறவேண்டுமென்பதற்காகவும் இதில் கலந்து கொள்வதாக அவர் தெரிவித்தார். வியட்னாம் கலவரம் தீவிரம்பிரஜைகளை அழைத்துவர ஐந்து சீன கப்பல்கள் விரைவுசீன எதிர்ப்பு கலவரங்கள் வியட்னாமில் தீவிரமடைந்துள்ள நிலையில் தமது நாட்டு பிரஜைகளை அங்கிருந்து வெளியேற்ற சீனா ஐந்து கப்பல்களை அனுப்பியுள்ளது. ஏற்கனவே சீன அரசு வியட்னாமில் இருக்கும் 3000 க்கும் அதிகமான சீனர்களை வெளியேற்றி விட்டதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட் டுள்ளது. இந்நிலையில் வியட்னாம் விரைந்திருக் கும் சீன கப்பல்களில் முதல் கப்பல் நேற்று தனது பிரஜைகளை ஏற்றிக்கொண்டு சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றது. சீனா சர்ச்சைக்குரிய நீர்ப்பகுதியில் எண்ணெய் கிணறு தோண்டுவது குறித்து வியட்னாமில் ஏற்பட்டிருக்கும் சீனாவுக்கு எதிரான கலவரத்தில் இரு சீன தொழிலாளர்கள் கொல்லப்பட்டி ருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு வியட்னாம் அரசு கடந்த சனிக்கிழமை கோரிக்கை விடுத்தது. இந்த சட்ட விரோத செயற்பாடுகள் உடன் நிறுத்த வேண்டும் என்றும் இது நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்றும் வியட்னாம் அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட் டிருந்தது. தென் சீன கடற்பகுதியில் வியட்னாம், தாய் வான் நாடுகளும் உரிமை கொண்டாடும் பகுதி யில் சீனாவின் எண்ணெய் கிணறு தோண்டும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகி றது. இந்த விவகாரத்தில் வியட்னாம் தேசிய வாதிகள் கடும்போக்கு நிலைப்பாட்டை கொண்டி ருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். இதில் சீனாவினால் வெளியேற்றப்பட்டுவரும் பெரும்பாலானோர் வியட்னாமில் இருக்கும் சீன தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் சீன நாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடியின் ந(ஞ்)ச்சு பதில்கள் கேள்வி : நரேந்திர மோடி என்று சொன்னால் 2002 குஜராத் கலவரத்துடன் தான் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறார்கள். நீங்கள் அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? பதில் : இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யாருக்கும் யாரையும் விமர்சனம் செய்யவும், குறை கூறவும் உரிமை உண்டு. செய்யாத குற்றத்திற்காக ஒருவர் குற்றம் சாட்டப்படும் போது சற்று வேதனை இருக்கத்தான் செய்யும். உச்சநீதிமன்றம் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து அந்தக் குழு எனக்கும் குஜராத் கலவரத்திற்கும் தொடர்பில்லை என்று தெளிவுபடுத்திய பிறகும், அரசியல் ஆதாயத்திற்காக என் மீது பழிசுமத்தி அதில் சிலர் குளிர்காய்கிறார்கள். நான் முதலமைச்சராக இருந்தபோது அப்படியொரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அதற்காக நிச்சயமாக வருத்தப்படுகிறேன். நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேள் என்கிறார்கள். அந்தச் சம்பவத்திற்கு நான் காரணமல்ல எனும் போது ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும். கேள்வி : டில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு காங்கிரஸ் மன்னிப்புக் கேட்டிருக்கிறதே? பதில்: அவர்களுக்கு நேரடித் தொடர்பு இருந்திருக்கிறது. மனசாட்சி உறுத்தியிருக் கலாம். மன்னிப்புக் கேட்டார்கள். குஜராத் கலவரத்தைப் பொறுத்தவரை எங்கள் அரசு கலவரத்தை அடக்கப் பெரும் முயற்சி செய்தது என்பதுதான் நிஜம். அதனால் வருத்தம்தான் தெரிவிக்க முடிகிறதே தவிர மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் புரியவில்லை. இசைப்பிரியாவை கொன்றது இலங்கை ராணுவம்தான் - அல்ஜசீரா
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா போரில் உயிரிழந்தார் என்று இலங்கை ராணுவம் கூறி வந்த நிலையில், ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இசைப்பிரியா கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தற்போது வெளியாகியுள்ள படம் அம்பலப்படுத்தியுள்ளது. இறுதிக்கட்ட போரின்போது இவர் மிகவும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். ராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் ராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்தது.
மே 18, 2014 இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 7)
உண்மையில் இப்போதுள்ள மாகாண சபைகள் ஏதோ ஒரு வகையில் சிறிதளவாயினும் இன்றைய காலத்துக்கு அவசியமானதாக இருந்தாலும் கூட, அதனை ஓரளவாயினும் பயனுடையதாக ஆக்குவதற்கு வாய்ப்பு இருந்தாலும் கூட, அதன் மீது மக்களுக்கு சிறிதளவு நம்பிக்கையும் ஏற்பட்டு விடாமற் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் தமது தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை சுலோகங்கள் கொண்ட அரசியலுக்கு இந்த மாகாண சபையை செயற்திறன் உள்ளதாக ஆக்குவது பொருந்தமற்றது என்றுமே பெரும்பான்மையான ததேகூக்காரர்கள் கருதுவது தெளிவாகத் தெரிகின்றது. தமிழர்களின் பிரச்சினையை உலகறியச் செய்யவும், மஹிந்த அரசை அம்பலப்படுத்தவும், சர்வதேச அளவில் தமிழ்த் தலைமைகளுக்கு ஓர் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைக்கவும், அதன் மூலம் சர்வதேச சமூகம் தமிழர்கள் விரும்புகின்ற ஒரு தீர்வை ஆக்கித் தரவுமான நிலைமையை ஏற்படுத்தவுமே தாங்கள் வடக்கு மாகாண சபையைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில ததேகூக்காரர்களைப் பொறுத்த வரையில் (மேலும்....) கூட்டமைப்பின் திருகுதாளம்படையினரையும் வரவழைத்து கொண்டாடிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
தேர்தல் முடிவு ‘வைகோவின் ஈழம்’ விருதுநகரில் இருந்தே டேக்-ஆஃப் ஆகவில்லை!
வைகோவின் (பார்டர் லைனில்கூட இல்லாத, படு) தோல்வி, ம.தி.மு.க. தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கு சாதகமாக மோடி அலை அடிக்கிறது என்பது ஓட்டுப் போடுவதற்கு முன்னரே அனைவருக்கும் தெரிந்திருந்த நிலையில், ஒருவேளை வைகோ ஜெயித்தால் மத்திய அமைச்சராவார் என்பதும் தெரிந்திருந்த நிலையில், மத்திய அரசில் அங்கம் வகித்தால், இலங்கை தொடர்பாக இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வைகோ அழுத்தம் கொடுப்பார் என்பதும் தெரிந்திருந்த நிலையில், “நீங்க எதுக்கு சார் டில்லிக்கெல்லாம் போயி சிரமப்படணும் பேசாம ஊரிலேயே இருந்துடுங்க” என்று சொல்லியிருக்கிறார்கள், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள். வைகோவுக்கு விழுந்த அடி, ‘அம்மா-1000’ திட்டத்தால் மட்டுமே விழுந்தது என்று ம.தி.மு.க.-வில் நம்பினால், அவர்களால் இனி வரும் எந்த தேர்தலிலும் ஜெயிக்க முடியாது. தமது தரப்பில் என்ன தவறு உள்ளது என்பதை புரிந்து கொண்டால்தான், பூச்சியத்தில் இருந்து ராச்சியம் போக எத்தனிக்கலாம். (மேலும்....) உதைபந்தாடி முள்ளிவாய்க்கால் தினத்திற்கு கொள்ளி வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
முள்ளிவாய்க்கால் தினத்தை சோக நிகழ்வாகக் காட்டி அதை
துக்க தினமாகக் கொண்டாடுமாறு தமிழ்மக்களுக்கு கூறும் கூட்டமைப்பினர் இன்று
பருத்தித்துறையில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து சிறப்பித்து
முள்ளிவாய்கால் துக்க தினத்திற்கு கொள்ளி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாவை சேனாதிராசா
அவர்களே !! வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் தேவை இல்லைப் போல் தெரிகிறது.
சரி இவை எவை நடந்தாலும் நாளைக்கு எலக்சன் என்ற ஒன்ற வந்தால் நித்தரைப்பாயால் கண்ணை கசக்கிக்கொண்மு எழும்பி வீட்டுக்க நேரே புள்ளடி போடுவதூன் எமது வழக்கம் என்று சாமான்ய பொது மகன் கூறுவதும் எமக்கு கேட்கத்தான் கேட்டுகிறது மூவர் மட்டும் கலந்து கொண்ட முள்ளிவாய்கால் நிகழ்வு
இவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமே. முள்ளிவாய்க்காலும்,உயிரிழந்தவர்களும் தேவைப்பட்டார்கள். வடமாகாண சபை முன்றலில் இன்றைய தினம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களோ வெறும் மூவரே. அரசாங்கத்திற்கு மு.கா மீது நம்பிக்கை இல்லை - ஹக்கீம்
மட்டக்களப்பு மாவட்ட அரசியல் சமன்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும்
என்கின்ற இரண்டு தரப்புக்களுக்கிடையில் நின்று ஸ்ரீலமுகா தனது பிரதிநிதித்துவத்தைப்
பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல வியூகங்களை வகுத்துச் செயற்பட்டிருக்கின்றது. இலங்கை தமிழர் விடயத்தில் உண்மை நிலையை உணர்ந்து கொண்ட தமிழக மக்கள் (எஸ். சுரேஸ்) இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுத்து தமிழகத்தில் வெளிப்படையாகவே தமது அரசியலை நடத்தி வந்த தொல். திருமாவளவன் மற்றும் வைகோ என அழைக்கப்படும் வை. கோபாலசாமி ஆகிய இருவரும் மற்றும் நடிகர் விஜயகாந்த் அணியினரும் நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர். இவர்களைப் போன்றே இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கை விட்டும், புலிகளுக்கு ஆதரவாக கவி பாடியும், இலங்கைத் தமிழருக்காக ஆதரவுக் குரல் கொடுப்பதாகவும் நடித்து வாக்குக் கேட்ட கலைஞர் கருணாநிதியின் தி.மு.க வின் அனைத்து வேட்பாளர்களும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர். இதிலிருந்து தமிழக மக்கள் இனியும் இத்தகைய உள்ளூர் அரசியல்வாதிகளின் பொய்யுரைகளை நம்பத் தயாரில்லை என்பதை இத்தேர்தல் மூலமாக உணர்த்தியுள்ளனர். இது தமிழகத்திலிருந்து இலங்கைத் தமிழருக்காக நீலிக் கண்ணீர் வடித்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் ஏனைய ஏமாற்றுக்காரரான பழ. நெடுமாறன், சீமான் போன்ற வர்களுக்கும் நல்லதோர் படிப்பினை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். (மேலும்....) பிரபாகரனை சர்வாதிகாரி எனும் உண்மையை கூறிய விக்கியை காப்பாற்றிய சுமந்திரன் எம்.பி. கடந்த 01.05.2014 அன்று சாவ கச்சேரியில் நடைபெற்ற கூட்ட மைப்பின் மே தினக் கூட்டத்தில் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்று உண் மையை உரைத்த வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக் னேஸ்வரன் பேசியிருந்த மறுநாளே அவர் மாரடைப்பால் வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதும் யாவரும் அறிந்ததே. பிரபாகரனை சர்வாதிகாரி என்ற உண்மையை உரைத்த விக்னேஸ்வரனுக்கு தாயகத் திலும், தமிழகத்திலும், புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. கூடவே தமிழ் தேசிய ஊடகங்களும் கொதித்தெழுந்து விக்னேஸ்வரனை வன்மையாகக் கண்டித்த தோடு, அவரின் தொலை பேசி, பக்ஸ், மின்னஞ்சல் தொடர்பு முகவரிகளையும் எல்லோரது பார்வைக்காகவும் பதிவேற்றி, நியாயம் கேளுங்கள். விசாரணை செய்யுங்கள், கேள்வி எழுப்புங்கள் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தின. (மேலும்....) நரேந்திர மோடி மோடி அவர்களது அறுதிப்பெரும்பான்மை வெற்றி மூலமாக பாரதத்தில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு அமைகிறது. இந்தியா இதுவரை 16 லோக்சபா தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. 1984ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இந்திரா படுகொலையால் ஏற்பட்ட அனுதாபத்தின் விளைவாக காங்கிரஸ் கட்சிக்கு 415 இடங்கள் கிடைத்தன. அதன் பின்னர் நாட்டில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை. எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.கவுக்கும் கிடைக்கவில்லை. தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா மத்திய அரசை அமைக்கிறது. பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். தற்போது பாஜக 277 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அத்துடன் தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் அல்லாத முதல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மேலும் காங்கிரஸ் அல்லாத வலிமையான தனிப்பெரும்பான்மையுடன் கூடிய முதல் மத்திய அரசையும் பாரதிய ஜனதா அமைக்கிறது. மேலும் இந்தியாவில் இதுவரை இருந்து வந்த கூட்டணி ஆட்சி சகாப்தம் என்பது முடிவுக்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (மேலும்....) மே 17, 2014 இந்தியத் தேர்தல் முடிவு ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை 1999-2004 இல் வாஜ்பாயி தலைமையில் பிஜெபி ஆண்ட போது இருந்த நிலையே அடுத்த 5 வருடங்களிலும் இருக்கும் என்று தோன்றுகிறது. அதை விட இன்னும் மோசமாக போய்விடாது என்று ஒரு நம்பிக்கை. மேலும் அடுத்த பொது தேர்தலில் மாறுதல் வரும். எனவே குடி முழுகி போய்விட்டது என்று விரக்தி அடைய தேவையில்லை. இந்தியா இன்னும் ஜனனாயக நாடு தான். நீதி துறை பலமாகவே இருக்கிறது. ஒரு பிரதமரால் அரசியல் சட்டத்தை அத்தனை சுலபமாக திருத்தி விட முடியாது. அதே போல் தான் ராமர் கோயில் விவகாரமும். உச்ச நீதி மன்றத்தை மீறி பிஜெபி ஒன்றும் செய்துவிட முடியாது. பொறுத்திருந்து பார்க்கலாம். காந்தி – இந்தியா (சுகு-ஸ்ரீதரன்) காலனி ஆதிக்கத்திற்கெதிரான இந்திய சுதந்திர இயக்கம் இந்தியாவிற்கும் உலகிற்கும் பல அறங்களைக் கற்றுத் தந்தது. வன்முறை சாராத காந்தியாரின் போராட்ட முறைமை எதிரிகளின் மனச்சாட்சியை உலுக்கியது. இந்தியாவின் கோடான கோடி மக்களை ஆகர்சித்தது. குஜராத் -இங்கிலாந்து- தென்னாபிரிக்கா வாழ்க்கை, தேடல் என்பன அற உணர்வின் உன்னதங்களை நோக்கி மோகன்தாஸ் கரம்சம் காந்தியை வழி நடத்தியது. தாய் தந்தையர் மற்றும் உறவுகள் -நண்பர்கள் -சுற்றாடல் அனுபவங்கள அரிச்சந்திரன், இராமாயணக்கதைகள் கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் எல்லாமே அவர் மீது செல்வாக்குச் செலுத்தின. தாயைப் போற்றும் இந்திய பண்பாட்டு மரபுகளும் அவரைச் செப்பனிட்டன. துன்புறும் மனிதர்கள் மீது அவர் கருணை கூர்ந்தார். இந்திய ஆன்மிக உலகில் உருவான எளிமையான வாழ்க்கை, கொல்லாமை, பொய்யுரையாமை என சமூக விழுமியங்கள் அவர் மீது தளை விட்டன. தென்னாபிரிக்க வாழ்க்கையில் நிறவெறி -அதிகாரம் ஆபிரிக்க- இந்திய மக்கள் மீது காட்டிய வெறுப்பு அடக்குமுறை- அதிகாரம் ,வாழ்வைப்பற்றி அவர் மனம் புழுங்கினார். (மேலும்....)
குமுதினிப் படுகொலை- 1985may 15
ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி 65பேருடன் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
வந்துகொண்டிருக்கும் போது நடுக்கடலில் வைத்து கடற்படையினரால் வெட்டியும் குத்தியும்
அடித்தும் 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளான
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் சிங்கள இராணுவத்தை
தாக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் மக்கள் பழிவாங்கப்பட்டனர். அன்றைய சம்பவமும்
அவ்வாறு தான் இடம்பெற்றது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றிற்காக நெடுந்தீவில்
இருந்து யாழ்ப்பாணம் நோக்கி குமுதினியில் வந்த மக்கள் நடுக்கடலில் வைத்து
கடற்படையால் வஞ்சகம் தீர்க்கப்பட்டனர். எனினும் குமுதினிப்படுகொலை நினைவான
கட்டப்பட்ட கட்டடமும் உடைக்கப்பட்டு தற்போது நினைவுத்தூபி மட்டும் உள்ளமை
குறிப்பிடத்தக்கது.மக்களின்
இழப்புக்களில் தங்களை பலப்படுத்திக்கொண்டவர்கள் கூண்டோடு அழிந்ததுமில்லாமல் எஞ்சிய
மக்களை பழையநிலைக்கே விட்டுச்சென்றார்கள். மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத
பாசிசத்தின் முடிவு இது. இதன் எச்சங்கள் இன்னமும் மக்கள் நலனை கருத்தில் கொள்வதாக
தெரியவில்லை.
(மேலும்....) அத்வானியா மோடியா சிறந்தவர் கொலைகளை கொண்டாடுவதில்......? மோடியை விட மோசமான கொலைகாரர் அத்வானி தான். மோடி முன்னிருந்தபடாமல், அத்வானியே பிரதம வேட்பாளராக இருந்திருந்தால், இத்தனை கோபம், எதிர்வினை உருவாகியிருக்காது என்று தான் தோன்றுகிறது. அது தான் சோகம். உண்மையில் நவீன இந்தியாவில், 80களுக்கு பின் இந்த்துவ விஷத்தை ஆழமாக, பரவலாக விதைத்ததில் மிக மிக முக்கியமானவர் அத்வானி தான். 80கள் வரை பெருசா அறியபடாத அயோதியா ‘பிரச்சனையை’ கையில் எடுத்து, ரத யாத்திரைகள் நடத்தி, மத வெறியை பரப்பி, பெரும் அழிவை உருவாக்கி, அதன் மூலம் பிஜெபியை பெரும் கட்சியாக உருமாற்றிய ‘பெருமை’ அவருக்கு தான். ஆனால் அதை எல்லாம் இன்று பலரும் மறந்து விட்டோம். (உடனே நான் மோடியை ஆதரிப்பதாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்). அத்வானியை ‘மன்னித்து’ ஏற்று கொண்டது போல (1999-2004) இனி மோடியையும் சகித்து கொள்ள வேண்டியது தான் போல.என்ன அத்வானிக்கு ரதயாத்திரையை செய்து பாபர் மசூதியை இடித்து விட்டு பதவிவை பெற முடியவில்லை. மோடிக்கு ரயில் யாத்திரயில் வந்வரகளை கொழுத்தி கொலை செய்து விட்டு அறுதிப் பெரும் பான்மையுடன் பதவியைப் பெறும் திறமை இருக்கின்றது. இதில் யார் சிறந்தவர் என்று நான் என்ன சொல்ல முடியும் இந்திய இடதுசாரிகள் பற்றி சொல்லும் தேர்தல் முடிவுகள் இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்றபட்டுவிட்டார்கள். வெகுவிரைவில் கேரளாவிலும் நடக்குமா? இடது சாரிகள் தங்களை ஒரு தொழிலாளர் கட்சியாக மாற்றித் கொண்டு ஐரோப்பால் உள்ள கட்சிகள்போல் தொழில்படாததால் இந்தியாவில் தற்பொழுது தொழிலாளர் நன்மை பேசுவதற்கு யாரும் இல்லாத நிலை ஏற்படப்போகிறது. முக்கியமாக இந்தகாலகட்டத்தில் தொழிலாளர் நலம் ,சுழல் மற்றும பிற்பட்டோர் நலனை பற்றி பேசுபவர்கள் தேவை . . ஒருவிதத்தில் மார்கிரட் தச்சர் யுகத்தையே பிஜேபியின் உருவாக்குவார்கள். அதுதேவையானதும் கூட ஆனால் எதிர்த்தரப்பு தேவை. மே 16, 2014 மத்தியில் ஆட்சி அமைக்கிறது பாஜக, பிரதமராகிறார் மோடி! நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 260க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி பாஜக 271 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் 81 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருவதால் மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராவதும் உறுதியாகிவிட்டது. 27 நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். சேலத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்திய தேர்தல் முடிவுகள் இன்று இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. 543 ஆசனங்க ளுக்காக கடந்த ஏப்ரல் 07 முதல் மே 12ம் திகதி வரை 09 கட்டங்களாக தேர்தல்கள் நடாத்தப் பட்டன. இவற்றுக்கான முடிவுகளை அறிவிக் கும் பொருட்டு இன்று வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகின்றன. இதற்கென நாடு முழுவதும் 989 வாக்கு என்னும் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இன்று காலை பத்து மணி முதல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மாலை நான்கு மணிக்குள் சகல முடிவுகளும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 3 மணி நேரத்திற்குள் (காலை 11 மணி) நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களின் முன்னணி நிலவரங்கள் தெரிந்துவிடும். அடுத்து ஆட்சி அமைக்கப்போகும் கட்சி அல்லது கூட்டணி எது என்ற கேள்விக்கான பதிலும் கிடைத்துவிடும். இறுதி முடிவு மாலை 3 முதல் 4 மணிக்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இலங்கையில் 1976ம் ஆண்டு உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், தனி ஈழத்துக்காக போராடி வந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டபோது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதி கட்டப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இதனால், அந்த அமைப்பின் செயல்பாடு முடங்கியுள்ளது. இந்நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நேற்றில் இருந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரபாகரனை நினைவு கூரவேண்டாம்இலங்கை அகதிகளுக்கு அறிவுறுத்தல்தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவாக எவ்வித நிகழ்வுகளையும் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் மேற்கொள்ளக்கூடாது என்று இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அகதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய கரையோர காவல்துறையினராலேயே இவ்வாறு அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை ஒன்றை நடத்தினர். நினைவு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுமானால் அது எதிர்காலத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்று கரையோர காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, புதிதாக எவரினதும் நடமாட்டங்கள் இருக்குமானால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கரையோர காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் 454 குடும்பங்கள் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும் கப்பம் பெறுதல், பாரிய பண மோசடி தயாபரராஜா, உதயகலா தம்பதியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை
வட மாகாண மக்களிடம் பாரிய பண மோசடியில் ஈடுபட்டதன் பின்னர் இந்தியாவின் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள தயாபரராஜா. உதயகலா தம்பதியினரை கைதுசெய்வதற்கு இன்டர்போலின் உதவியை நாட தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். உதயகலா என்னும் மேற்படி பெண் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்துவதுடன் தொடர்புடைய முக்கிய புள்ளியென்பதும் அவரினால் ஏமாற்றப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. மோதல்களைத் தொடர்ந்து மன்னாரில் தலைமறைவாகியிருந்த மேற்படி தம்பதியினர் எவ்வித ஆவணங்களுமின்றி தமிழ்நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்றவேளை தனுஷ்கோடியில் வைத்து தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். (மேலும்....) உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு இடம்பெற்றுள்ளது. 4 இலட்சம் சதுர அடிகள் பரப்பளவில் 27 மாடிகளைக் கொண்ட முகேஷ் அம்பானி தன்னுடைய வீட்டிற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள மர்மத்தீவான 'அண்டிலியா' வின் பெயரை சு+ட்டியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 1 லிருந்து 2 பில்லியன் டொலர் வரை இருக்கும் என 'போர்ப்ஸ்"மதிப்பிட்டுள்ளது. அது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடியாகும். 27 மாடிகள் கொண்ட அண்டிலியாவில் 6 மாடிகள் கார் நிறுத்துவதற்கு வசதிக்காகவும் ஹெலிகொப்டர் இறங்குவதற்கு வசதியாக 3 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டில் 600 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகர கட்டிடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட அண்டிலியா 8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் வந்தாலும் தாங்கக்கூடிய சக்தி கொண்டது. இது அவரால் உறுஞ்சப்பட்ட உழைப்பாளர்களின் இரத்தம், வியர்வையை காட்டி நிற்கும் அடையாளச் சின்னம் அல்லவா? துருக்கி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக அதிகரிப்புதுருக்கியின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ள நிலையில் அந்நாட்டு தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. அண்மையில் சுரங்க தொழிற்துறையை தனி யார் மயப்படுத்தியது பணியாளர்களின் தொழிற் தளத்தின் பாதுகாப்பை மேலும் அபாயத்திற்கு உட்படுத்தி இருப்பதாக தொழிற்சங்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சுரங்க விபத்தையொட்டி நாட்டின் பல பகுதிகளிலும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. சுமார் 787 சுரங்க பணியாளர்கள் நிலத்திற்கு கீழ் இருக்கும்போது மின்சார அலகில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சுரங்கப்பாதை சரிந்து விழுந்து பல பணியாளர்களும் சிக்கிக்கொண் டனர். வெடிப்பு ஏற்பட்டு ஒரு மணிநேரத்திற்குள் 363 சுரங்கப் பணியாளர்கள் மீட்கப்பட்டதாக அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற மீட்பு நடவடிக்கையில் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை. இந்நிலையில் பல தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக இருப்பதாக துருக் கியின் புரட்சிகர தொழிற்சங்கங்களின் கூட்டணி தலைவர் நேற்று ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். பெரும் நஷ்டத்தில் சோனி நிறுவனம்உலகளவில் ஒரு காலத்தில் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஜப்பானிய நிறுவனமான சோனி, கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணியின் போது, கணனி தயாரிப்பிலிருந்து வெளிவருவது என்று எடுக்கப்பட்ட முடிவே இந்த அளவுக்கு பெரும் நஷ்டத்துக்கு காரணம் என, விளையாட்டுக்கு பயன்படும் ப்ளேஸ்டே'ன்களைத் தயாரிக்கும் சோனி கூறுகிறது. நடந்து செல்லும்போதோ அல்லது பயணத்தின் போதோ இசையைக் கேட்டவாறு செல்லவதற்கு வசதியாக, சோனி நிறுவனம் அறிமுகப்படுத்திய வோக்மேன், மனிதர்கள் இசையை கேட்டு ரசிக்கும் போக்கையே மாற்றிய புரட்சியை ஏற்படுத்தியது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் மற்றும் சாம்சுங் போன்ற போட்டியாளர்களிடம் தமது சந்தைப் பங்கை சோனி கணிசமான அளவுக்கு இழந்துள்ளது. தொலைக்காட்சி தயாரிப்பிலும் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ள சோனி, அதை லாபமீட்டும் வகையில் மாற்றியமைக்கும் பணிகளிலும் சிரமங்களை சந்திக்கிறது. இந்த ஆண்டும் சோனி நஷ்டத்தையே எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில், அமெரிக்கத் தலைமையம் போன்ற பல சொத்துக்களை விற்பதற்கு அப்பாற்பட்டு, 5000 பேரை வேலையிலிருந்து நீக்கவும் சோனி திட்டமிட்டுள்ளது. மே 15, 2014 இந்தியத் தேர்தல் 2014 இந்திய மக்களின் நல்லிணக்கம் வலுப்பெற உதவுமா....? (சாகரன்)
2014 தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்கவேண்டும் என்ற தவிர்க்க முடியாத சூழலே இன்று இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டு இருக்கின்றது. இது தேர்தலுக்கு பிறகு பாரிய பதவி அடிப்படையிலான பேரம் பேசல், கட்சிகளை, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப் போகின்றது. இது இந்திய ஜனநாயகம் முகம் கொடுக்க வேண்டிவரும் பாரிய சவால் ஆகும். இந்தப் போக்கு மத்தியில் மாத்திரம் அல்ல மாநிலங்கள் மட்டத்திலும் விரிந்தே இருக்கின்றது. இதுவும் ஒரு வகை ஜனநாயகத்தின் வெற்றிதான். ஐக்கிய முன்னணித் தன்மை கொண்ட இது ஒரு ஜனநாயக செயற்பாட்டின் வெளிப்பாடாக இருந்தாலும் இந்த ஜனநாயகம்? த்தை கட்டியாள்வது பணநாயகம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. ஐக்கிய முன்னணி கொள்கையின் அடிப்டையில் மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தியே உருவாக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் இந்திய ஜனநாயகத்தின் இருப்பு இதில்தான் தங்கியிருக்கின்றது. (மேலும்....) நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் நில அபகரிப்பும், படைக்குவிப்பும் நடக்கிறது என்று யாரும் நீலிக்கண்ணீர் வடிக்கும் அவசியம் இருக்காது தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் இங்கு நில அபகரிப்பும், படைக்குவிப்பும் நடக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வாருங்கள் என நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி தொடர்ச்சியாக பகிரங்க அழைப்பு விடுத்து வருகின்றேன். இறுதியாக நான் விடுத்த அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் விடுத்திருந்த பதிலறிக்கையில், சுயலாப அரசியல் சேற்றில் ஊறிப்பெருத்த அவர்களது பொய் முகங்களே தெரிகின்றன. (மேலும்....) படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட புலி முக்கியஸ்தர் இந்தியாவில் தஞ்சம் காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானோர் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்ற விடயம் எல்.ரீ.ரீ.ஈ. யின் முன்னாள் உறுப்பினர் கே. தயாபரராஜா தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதன் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளதென பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். எல்.ரீ.ரீ.ஈ. முன்னாள் உறுப்பினரான தயாபரராஜா (33) யாழ்ப்பாணத்தில் கணனித்துறை பொறியியலாளர் ஆவார். இவர் இறுதிக்கட்ட மோதலின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த போதும், துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சர்வதேச செய்திச் சேவைகள், இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் படத்துடன் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அவர் சட்ட விரோதமாக இந்தியாவுக்கு சென்றவேளை, தனுஷ்கோடியில் வைத்து தமிழ் நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தயாபரராஜா இது கால வரை தலை மறைவாக வாழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது. சீன கம்யுனிஸ்ட் கட்சி மத்திய குழு இலங்கை வருகைசீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய இராணுவ ஆணைக் குழுவின் பிரதித் தலைவரும், இராணுவ ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜெனரல் சூ கிலியாக் தலைமையிலான குழுவொன்று இலங்கை வந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இக்குழுவினரை பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் வரவேற்றனர்.கம்போடியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கான விஜயத்தை மேற் கொண்டே சீன குழுவினர் இல ங்கை வந்துள்ளனர். இந்த சீனக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு மற் றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜ பக்ஷ, முப்படைத் தளபதிகள் மற் றும் பொலிஸ்மா அதிபர் ஆகி யோரைச் சந்திக்கவுள்ளனர். இவர் கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் சீனன்குடா இராணுவ அக்கடமி, திருகோணமலை கடற் படை அக்கடமி, கண்டி தலதா மாளிகை, கட்டுநாயக்க விமானப் படைத் தளம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிடவுள்ளனர். மே 14, 2014 பரபரப்பு உலகில் காணாமல் போன கூட்டுக் குடும்பம் உறவுகள்
இந்தியாவில் ஆட்சி அமைக்கப் போவது பா.ஜ.க வா? காங்கிரசா? மூன்றாவது அணியா? (ஸ்ரனிஸ்) நடந்து முடிந்த இந்திய பொதுத்தேர்தல் முடிவுகள் வரும் 16ம் திகதி வெளியாகவுள்ளது. இதில் தமிழகத்தில் பாண்டிச்சேரி உட்பட மொத்தம் 40 தொகுதிகள் அடக்கம். இந்தியாவின் சகல மாநிலங்களில் இருந்தும் 543 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். சாதி உணர்வு, மத உணர்வு, இன உணர்வு, மாநில உணர்வு என சகல விதமான உணர்வுகளையும் தட்டியெழுப்பி விட்டு முடிவுக்காக அரசியல் கட்சிகள் காத்துக்கிடக்கின்றன தமிழகத்தில் ஐந்து முனை போட்டி இருந்தபோதும் பெரும் வாக்கு வங்கியை வைத்திருக்கும் அ.தி.மு.க, தி.மு.க இடையே போட்டி என்ற நிலமையை பா.ஐ.க கூட்டணி மாற்றிவிட்டது. (மேலும்....) மீனவர் பேச்சுவார்த்தையில் முடிவில்லை; நாடு திரும்பியது தமிழகக் குழு இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது சுற்று பேச்சுவார்த் தையின் முழுமையான அறிக்கை எதிர்வரும் திங்கட் கிழமை கடற்றொழில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனார ட்னவிடம் கையளிக்கப்படும். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கும் தலைமையேற்ற தேசிய மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதியான தங்கவேலு சதாசிவம் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நிமால் ஹெட்டியாராச்சி ஆகியோர் இந்த அறிக்கையை அமைச்சரிடம் கையளிக்கவுள்ளனர். பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு எட்டு மணிக்கு முடிவடைந்தபோதும் 120 நாட்கள் இலங்கை கடற் பரப்பிற்குள் வருவதற்கு அனுமதி வேண்டும் என்று தெரிவித்த தமிழக மீனவர்கள் ஆகக்குறைந்தது 90 நாள் அல்லது 70 நாட்களாவது தாருங்கள் என கேட்டனர். இதேவேளை தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தையில் பார்வையாளராக வருகை தந்திருந்த மீன் வளத்துறை வாரியத்தின் செயலர் டொக்டர் விஜயகுமாரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் வர அனுமதி யுங்கள் என கேட்டுக் கொண்டார். (மேலும்....) வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குப்பதிவு இந்தியாவின் 16வது பாராளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 7ந்திகதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 9 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் மிக நீண்ட காலமாக நடந்தாலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பது சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தத் தேர்தலில் ஏராளமான புதிய வாக்காளர்கள் வாக்களித்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதற்கு முன்பு அதிக அளவாக கடந்த 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும் ஒரு காரணம் ஆகும். கடந்த 2009ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 58.19 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கிழக்கு உக்ரைனை ரஷ்யாவுடன் இணைக்க பிரிவினைவாதிகள் அழைப்பு கிழக்கு உக்ரைன் இறையாண்மை கொண்ட சுதந்திர தேசம் என்று பிரகடனம் செய்திருக்கும் பிரிவினைவாதத் தலைவர்கள் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். கிழக்கு உக்ரைன் பிராந்தியங்கள் சுயாட்சி பெறுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மக்கள் பெரும்பான்மை ஆதரவளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மறுபுறத்தில் இந்த முன்னெடுப்புகள் உக்ரைன் அரசுக்கு பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழுத்தத்தை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. டொனட்ஸ்க் மக்கள் குடியரசு ரஷ்யாவுடன் இணைய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சுயமாக அறிவித்துக்கொண்ட பிரிவினைவாத தலைவரான டெனிஸ் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார். "வரலாற்று நீதியை மீட்க டொனட்ஸ்க், ரஷ்ய கூட்டணியுடன் இணைய நடவடிக்கை எடுக்கும்" என்று குறிப்பிட்டார். (மேலும்....) மே 13, 2014 மரணத்தினுள் வாழ்ந்தோம்! - (சாகரன்)
(ஆகஸ்ட் 19, 2012 ம்
திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால்
நடாத்தப்பட்ட
'மரணங்களின்
நினைவு கூர்த்தல்'
என்ற நிகழ்வில்
தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)
"One
day some gun will silence me and it will not be held by an outsider but by the
son born in the womb of this very society, from a woman with whom my history is
shared"
- Rajini Thiranagama. இலங்கைத் தம்பதியை கைது செய்ய இன்டர்போல் உதவி
தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர்கள் இருவரை (தம்பதி) கைது செய்ய, இன்டர்போல் பொலிஸாரின் உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருப்பதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு பகுதியிலிருந்து கடந்த மே 5 ஆம் திகதி தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு 2 தனித்தனிப் படகுகளில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் அகதிகளாக வந்தனர். இலங்கை இராணுவத்தினரால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால் உயிர்ப் பிழைப்பதற்காகவே அகதிகளாக ராமேஸ்வரம் வந்தோம் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். முன்னதாக, அகதிகளாக வந்த கதிர்வேலு தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகிய இருவரும் பல்வேறு பண மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையிலுள்ள பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் சாவகச்சேரி ஆகிய நீதிமன்றங்களில் பிடிவிறாந்துகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த தம்பதியர் தஞ்சம் கோரி தமிழகத்திற்கு வந்துள்ள செய்தி, இலங்கையிலுள்ள ஊடகங்களில் படத்துடன் வெளியாகின. இதனைப் பார்த்த இந்தத் தம்பதியினரால் பாதிக்கப்பட்டவர்கள் சாவகச்சேரி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சாவகச்சேரி நீதி அறிக்கை தாக்கல் செய்து தயாபரராஜா, உதயகலா தம்பதியினரை தம்பதியரை இன்டர்போல் காவல்துறையின் உதவியுடன் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் அம்மா சாப்பாட்டுக் கடை
ஜெரோமி கொன்சலிற்றா வழக்கு; பாதிரியார்கள் மன்றில் சாட்சியம் குருநகரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இரண்டாவது தடவையாக யாழ்.நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கில் சந்தேக நபர்கள் எனக் கருதப்படும் இரண்டு பாதிரிமாரும் மன்றில் முன்னிலையாகிச் சாட்சியமளித்தனர். ''எமக்கும் உயிரிழந்த யுவதிக்கும் தனிப்பட்ட வகையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. அவர் மறைக்கல்வி ஆசிரியராக இருந்ததன் காரணமாக அது தொடர்பான தொடர்பே இருந்தது. இதுதவிர இந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளவுமில்லை. குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) அனுப்பவுமில்லை''- என்று மன்றில் சாட்சியமளித்தனர் இரண்டு பாதிரியார்களும். வழக்கை விசாரித்த நீதிவான் பொ.சிவகுமார் மீண்டும் அடுத்தமாதம் 6ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார். பாலியல் ரீதியாக பாதிரியார்கள் இருவரும் தொந்தரவு கொடுத்ததன் காரணமாகவே தமது மகள் தற்கொலை செய்துகொண்டார் என உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மன்றில் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பாதிரியார்கள் சார்பாகச் சட்டத்தரணிகள் அன்ரன் புனிதநாயகம், மு.றெமீடியஸ் ஆகியோர் முன்னிலையாகி வாதிட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமற்போன இந்த யுவதி மறுநாள் கிணற்றிலிருந்து சடலமா க மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நாகூர் ஹனீபாஓர் இசையின் கதை!
சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் நாகூர் ஹனீபா. நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் நேசத்திற்குரியவர். கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்தின் அன்பைப் பெற்றவர். தமிழக அரசியல் களத்திலும், இஸ்லாமியப் பண்பாட்டுத் தளத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பாடல்கள் ஒலிக்காத பெருநாள்கள் இல்லை. அவர் குரல் கேட்காத கூட்டங்கள் இல்லை. அவரது பாடல்களில் உருகாத நெஞ்சங்கள் இல்லை. (மேலும்....)
ஈழ வரலாற்றிக்கான ஏக உரிமை சபாலிங்கத்தின் மரணம் - சிவராம் தராக்கி
புளொட் இயக்கத்தின் ஆரம்ப உறுப்பினராக இணைந்து குறுகிய காலத்துள் உமா மகேஸ்வரனின் கொலைப்படையின் மூளையாக மாறிய சிவராமின் அரசியல் வரலாறு கறைபடிந்தது. புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணாவின் பிளவின் பின்புலத்தில் செயற்பட்ட சிவராமின் இறுதிக் கால வரலாறு வரைக்கும் அவர் அதிகாரத்தைச் சார்ந்தே செயற்பட்டிருப்பது புலனாகும். சிவராம் ஊடகத் துறைக்கு முன்னுதாரணமல்ல.வரலாற்றை மறைத்து, தேசியம் என்ற பெயரில் அயோக்கியர்கள் நடத்தும் தர்ப்பாரில் சிவராம் போன்றவர்களை எதிர்கால சந்ததிக்கு முன்னோடிகளாகச் சுட்டிகாட்டப்படுகின்றனர். இதுவரைக்கும் ஊழிக்காலத்தின் கர்த்தாக்களாகவிருந்த நயவஞ்சகர்கள் புதிய சந்ததியைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள் போலும். இவர்களின் ஒருவேளைச் சோற்றிலும் ‘தேசிய இரத்தம் கலந்திருப்பதை சிவராமைப் புனிதனாக்குவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.(மேலும்....) ரீயூனியன் என்று ஒரு அதிசயமான தமிழர் பூமி …!!
தமிழ்நாட்டில் பலர் கேள்விப்படாத இடம். ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப் பகுதி ஒன்று. சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே இந்து மகா கடலில், மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு. இந்த தீவின் மொத்த மக்கள் தொகை – சுமார் எட்டரை லட்சம். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே. ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு – சுமார் ஒன்றரை லட்சம்….!!! சுயாட்சி பெற 89-96 வீதமானோர் ஆதரவு கிழக்கு உக்ரைன் சர்வஜன வாக்கெடுப்பில் பிரிவினைவாதிகள் வெற்றி பிரகடனம் கிழக்கு உக்ரைனின் டெனஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்கள் சுயாட்சி பெறுவதற்கு மக்கள் அமோக ஆதரவளித்திருப்பதாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர். ஆனால் உக்ரைன் அரசு இந்த சர்வஜன வாக்கெடுப்பு சட்டபு+ர்வமற்றது என கண்டனம் வெளியிட்டிருப்பதோடு வெறுமனே கேளிக்கூத்து என்று விமர்சித்துள்ளது. எனினும் கிழக்கு பிராந்தியங்களில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சர்வஜன வாக்கெடுப்பில் 89 முதல் 96 வீதமானோர் வரை "சுயாட்சி"க்கு ஆதரவளித்திருப்பதாக பிரிவினைவாதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வாக்கெடுப்பில் குழப்பமான நிலை இருந்ததாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அங்கிருக்கும் பி.பி.சி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....) மே 12, 2014 |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
|
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |
||||