Contact us at: sooddram@gmail.com

 

தை 2015 மாதப் பதிவுகள்

 

ஜனவரி 31, 2015

 

யாருடனும் பேசமுடியாதவர்கள்!

ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்களை வாக்களிக்கச் சொல்லி, அதன்படி புதிய அரசாங்கத்தையும் தாங்களே கொண்டுவந்ததாகச் சொல்லிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொண்டுவந்த அரசாங்கத்துடன் தீர்வுப் பேச்சிற்கான முயற்சிகளைச் செய்வதாக ஏதும் செய்திகளைக் காணோம். இந்த அரசும் சரிவராது, அகிம்சைப் போராட்டம் இந்த அரசுக்கெதிராகவும் வெடிக்கும் என்று ஒற்றைவிரலை உயர்த்தி முழங்கிய மாவையாரின் பிரகடனம்தான் வந்திருக்கிறது. இந்தமுறை காலக்கெடு எதையும் சொல்லி மாட்டிக்கொள்ள விரும்பாமல் போராட்டத் திகதியை திறந்தபடி விட்டிருக்கிறார். (மேலும்....)

 

என் மனவலையிலிருந்து......
முஸ்லீம் மக்களுடனான இணைத்தல்கள்
(மேலே உள்ள 'யாருடனும் பேசமுடியாதவர்கள்!' கட்டுரைக்கான எதிர்வினையாக இது எழுதப்பட்டது)
(சாகரன்)
த.தே.கூ மட்டுமா இப்படி செயற்படுகின்றது. யாழ்ப்பாண மாநகரசபையை தேர்தல் மூலம் ஈ.பி.டி.பி கைபற்றிய போது நல்லிணக்க சமிக்கையாகவும், முஸ்லீம் மக்களை யாழ் ஐ விட்டுத் துரத்திய மூர்க்கமான செயற்பாட்டிற்கு ஒத்தணம் கொடுப்பதற்காகவும் முஸ்லீம் ஒருவரை யாழ் மாநகர சபையின் உதவி மேயராக நியமிக்க வேண்டும் என்று என்னைப் போன்றவர்கள் ஈ.பி.டி.பி இன் முக்கியஸ்தர்களிடம் கோரிக்கை வைத்தோம். இதற்கு அவர்களிடம் இருந்து கிடைத்த பதில் முடியாது என்பதே. தேர்தலில் அதிக விருப்பு வாக்குப் பெற்ற ஒருவர் (ஆமாம் அது தமிழர்தான்) இதற்கு நியமிக்கப்படுவார் என்று கூறி எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்தவர்கள் இவர்கள். கூடவே புலிகளுடனான யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கை இராணுவத்தின் கரங்களில் ஜனவரி 2009 இல் ஏ9 பாதை விழுந்தது. இதன் பின்னர் உத்தியோக பூர்வமாக பொது மக்கள் பாவனைக்காக ஏ9 பாதை திறந்தபோது இலங்கை அரசுடன் ஈ.பி.டி.பி யும் இணைந்து திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மேளதாளத்துடன் முதன் முதலாக முஸ்லீம் சகோதரர்களை அழைத்துச் சென்று புலிகள் செய்த இனச் சுத்திரிப்பிற்கு நாம் மன்னிப்புக் கோரும் குறியீட்டு அணுகுமுறை மூலம் முஸ்லீம் மக்களுக்கு தமிழ் மக்கள் மீதான ஒரு நம்பிக்கை பாலத்தை ஒருவாக்க வழி சமைப்போம் என்று பகிரங்க அறை கூவல் விடுத்திருந்தோம். இதனை சம்மந்தப்பட்டவர்கள் வாசித்திருபார்களோ தெரியாது. இதுவும் நடைபெறவில்லை. எப்போதும் தமிழர் தரப்பில் அது தமிழரசுக் கட்சியாகட்டும், த.தே.கூட்டமைப்பாகட்டும் மறுவளத்தில் ஈ.பி.டி.பி ஆகட்டும் வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்வில்லை என்பதே எமது தாழ்மையான எடுத்தியம்புதல் ஆகும். இதற்கு எதிர்வினையாக முகப் புத்தகத்திலும் ஏனைய இணைத்தளங்களிலிலும் இக்கருத்தை கூறுபவர்களை வசைபாடுவதையே கைங்கரியமாக கொண்டிருந்தால் இன்னும் ஆயிரம் வருடங்கள் சென்றாலும் தமிழ் முஸ்லீம் இடையேயான உறவுகள் பலப்படப்போவது இல்லை. சிறுபான்மை இனங்களின் ஐக்கியம் இன்று இலங்கையின் இனங்களுக்கிடையேயான சமத்துவம் இன்மையை போக்கும் இரசியல் செயற்பாட்டிற்கு அத்தியாவசியமானது. இந்த அத்தியாவசியத்தை உணர முடியாவிட்டால் இலங்கையில் தமிழ் இனம் ஒன்று இருந்தது என்பதை வரலாற்று நூல்களில் மட்டுமே எதிர்காலத்தில அறியவேண்டிய துர்ப்பாக்கி  நிலமைக்கு நாம் தள்ளப்படுவோம்.


தோழர் குமார் குணரட்ணத்தை நாடுகடத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான தோழர் குமார் குணரத்தினம் அவர்களை நாடு கடத்த தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள மைத்திரி ஸ்ரீசேன அரசு முயன்று வருகிறது. இதை எதிர்த்து முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரிக் கட்சிகளும் இணைத்து நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இப்போராட்டம் கீழ் வரும் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து நடத்தப்படுகிறது.
தோழர். குமார் குணரத்தினத்தின் அரசியல், ஜனநாயக, குடியியல் உரிமைகளை அங்கீகாரி!
மஹிந்த ராஜபக்ஷ அரசால் துரத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் நாட்டுக்குள் வர விடு!

போராட்ட விபரம்:

இடம் : கொழும்பு மைத்திய புகையிரத நிலையம் முன்பாக

காலம் : சனிக்கிழமை 31.01.2015

நேரம் : 12 மணிக்கு

 

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் பற்றிய சிறப்புத் தகவல்கள்!!


 

இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

இலங்கையில் பிறந்த சகலருக்கும் இரட்டை இரட்டை பிரஜாவுரிமை பெறமுடியுமென நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார். 2015ஆம் ஆண்டுகான இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முறையான ஒரு மதிப்பீட்டை தொடர்ந்து 5இலட்சம் ரூபாய் செலுத்தி இரட்டை பிரஜாவுரிமையை பெறமுடியும் என்றும் அவர் கூறினார். இலங்கையில் 10மில்லியன் டொலர் முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட அந்தஸ்தை பெறவிரும்புவோருக்கும் அதற்கான வழிவகைகள் செய்யப்படும். இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கிகாரத்தை பெறவேண்டும். இவர்களுக்கான விஸா கட்டணம் 2.5மில்லியன் ரூபாவாகும். இதனை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துகொள்ளவேண்டும்.

 

நாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்? - இந்தியா

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எத்தகைய உத்தரவாதத்தை இலங்கை அரசாங்கம் அளிக்கும் என இலங்கை தூதரக அதிகாரிகளிடம் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, டெல்லியில் நேற்று வெள்ளிக்கிழமை(30) நடைபெற்றுள்ளது. இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை இணைச் செயலர் சுசித்ரா துரை தலைமையில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை, நிதித் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினரும், இலங்கையின் சார்பில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் துணைத் தூதர் எம்.ஆர்.கே.லெனகாலா தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர். (மேலும்....)

 

நிலமும் வேலைவாய்ப்பும் கிடைத்தால் நாடு திரும்ப அகதிகள் விருப்பம்

இலங்கையில் தங்களுடைய நிலங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு வேலைவாய் ப்புகள் அளிக்கப்பட்டால் தாயகம் திரும்பத் தயாராக இருப்பதாக தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான இலங்கை அகதிகள் கூறுவதாக இந்திய பாராளுமன்ற நிலைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற நிலைக்குழு புதன்கிழமை இராமேஸ்வரம் மண்டபம் ஆகிய பகுதிகளில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தது. (மேலும்....)

 

வேலையற்ற பட்டதாரிகளின் நிலைமைக்கு யார் காரணம்?

தமக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று கூறி மீண்டும் பட்டதாரிகள் போராட்டங்களை நடத்தத் தொடங்கியூள்ளனர். புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர், யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இவ்வாறான போராட்டங்கள் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியூள்ளன. க.பொ.த. உயர்தரத்துக்குத் தோற்றும் சுமார் 3 இலட்சம் வரையிலானவர்களில், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் சுமார் 25,000 வரையிலானவர்கள், தமது பட்டக்கல்வியை நிறைவூசெய்த பின்னர் ஒவ்வொரு முறையூம் இப்படி தம்மைத் தாமே வேலையற்ற பட்டதாரிகள்(வேலையற்ற என்று சொல்லாமல், வேலை தேடும் என்று சொல்லலாமே?) என்று பிரகடனப்படுத்திப் போராட்டங்களை நடத்துவது வழக்கமாகவே இருந்து வருகிறது. (மேலும்....)

 

வாழ்க்கை தத்துவம்
குளிர்பதன வசதியுள்ள வாகன
த்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான். வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள். தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை.


ஊர்ல இருக்க அம்புட்டு அறிவாளியும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க....


 

ஜனவரி 30, 2015

 

மக்களுக்கு அதிகளவு நிவாரணம் வழங்கிய வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவுத் திட்டம் அமையும்

விவசாயிகளின் கடன்கள் 50 வீதத்தினால் குறைக்கப்படும். விவசாயிகளின் கடன்கள் 50 வீதத்தினால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்கு 50 வீத சலுகை வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உர மானியம் தொடர்ச்சியாக வழங்கப்படும் குறிப்பிட்டுள்ளார். தேயிலை கொழுந்து மற்றும் இறப்பர் ஆகியவற்றுக்கு உத்தரவாத விலைகள் நிர்ணயிக்கப்படும் தெரிவித்துள்ளார். தேயிலை கொழுந்து ஒரு கிலோ 80 ருபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 13 அத்தியாவசிய பொருட்ளுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளது. 13 அத்தியாவசிய பொருட்ளுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களுக்கான வரிகளை குறைப்பதன் மூலம் இவ்வாறு விலைகள் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

புதிய அரசிடம் சமவுரிமை இயக்கத்தின் கோரிக்கைகள்

சமவுரிமை இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் அறிக்கை

22.01.2015 இன்று மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூக சமய மையத்தில் சமவுரிமை இயக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின்பதான நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில், கொள்கை அளவில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சமவுரிமை இயக்க அமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் ரவீந்திர முதலிகே மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான தர்மலிங்கம் கிருபாகரன், எஸ்.எம்.கிரிசாந்த ஆகியோர் கலந்து கொண்டனர். (மேலும்....)
 
பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் மோடி அரசு - குஷ்பு

மோடி ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை, ஜாதி- மத கலவரம் எங்கு எப்போது நடக்கும் என்ற பயமும் பீதியும் நிலவுகிறது என குஷ்பு ஆவேசமாக பேசியுள்ளார். சென்னையில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு, கிராமத்தில் வாழும் ஏழைப் பெண்கள் தங்களது குடும்ப செலவுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்து வந்தனர். இந்த திட்டத்துக்கும் மோடி அரசு வேட்டு வைக்க பார்க்கிறது. கிராமப்புற பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் சுயமாக இந்த வேலையில் ஈடுபட்டு குடும்ப செலவை கவனித்து கொண்டனர். ஆனால் அவர்களது வாழ்க்கையிலும் மோடி அரசு விளையாடுகிறது. பாஜக ஆட்சியில் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை, இந்தியா முழுவதும் இதே நிலைதான் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களையே மோடி அரசு செயல்படுத்துகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் மோடி அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது புதியது அல்ல, 10 ஆண்டுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது கையெழுத்து மட்டும்தான் இப்போது மோடி போட்டு இருக்கிறார். 10 வருடங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்த சாதனைகளை, 100 வருடங்கள் ஆனாலும் மோடியால் சாதிக்க முடியாது என்று பேசியுள்ளார்.


சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளை குற்றச்சாட்டுக்கள் ஏதும் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்க கனடிய அரசாங்கம் பரிசீலனை.

ஒட்டாவா- கொன்சவேட்டிவ் அரசாங்கம் கனடாவின் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர பரிசீலனை செய்கின்றது. இந்த மாற்றம் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி ஒருவரை குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க பொலிசாருக்கு அனுமதி வழங்கும். இந்த மாற்றம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப் படுகின்றது. தற்போது எவராவது பயங்கரவாத செயல்பாட்டிற்கு திட்டமிடுகின்றார் என பொலிசார் நம்பும் பட்சத்தில் அந்நபரை பொலிசார் குற்றச்சாட்டு இல்லாமல் கைது செய்யலாம். பின்னர் 72 மணித்தியாலங்களிற்குள் பொலிசார் போதுமான ஆதாரங்கள் கொண்டுவராவிடில் சந்தேக நபர் விடுதலை செய்யப் படவேண்டும்.
பரிசீலனையில் இருக்கும் புதிய சட்டம் பொலிசார் ஒரு நீதிபதி முன் தோன்றி இரண்டு மேலதிக 48-மணித்தியாலங்களை பெற்று தங்கள் விசாரனையை தொடர அதிக நேரத்தை செலவிட அனுமதிக்கின்றது. அதாவது குற்றவியல் சட்ட முன்கூட்டிய தடுப்பு கைது விதிகளின் கீழ் பொலிசார் மொத்தமாக 7-நாட்கள் ஒருவரை தடுத்து வைக்கலாம்.


கனடிய டொலர் யு.எஸ்.சின் 80-சதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

கனடிய டொலர் கிட்டத்தட்ட 6-வருடங்களில் முதல் தடவையாக யுஎஸ்.சின் 80-சதத்திற்கு கீழே சறுக்கியுள்ளது. புதன்கிழமை கனடிய டொலர் யுஎஸ்சின் 79.87-சதமாக காணப்பட்டுள்ளது. இது செவ்வாய்கிழமையை விட சதத்திற்கு முக்கால் விகிதம் குறைந்துள்ளது. யுஎஸ். டொலரின் பெறுமதி கனடா உட்பட்ட உலகின் பல பெரிய நாணயங்களிற்கு எதிராக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனடிய லூனியின் பெறுமதி வீழ்ச்சியடைந்த பின்னர் ஒரு யுஎஸ் டொலரை வாங்க அதிகார பூர்வமான பரிமாற்ற விகிதமாக 1.25 கனடிய டொலர்கள் வேண்டும். 2009-ஏப்ரலில் இருந்து கனடிய டொலர் 80-சத யுஎஸ்சிற்கு பரிமாற்றம் செய்யப்படவில்லை. அடுத்த சில மாதங்களிற்கு நிலைமை மோசமாகலாம் எனவும் கூறப்படுகின்றது. கச்சா எண்ணெயின் விலை புதன்கிழமை பீப்பா ஒன்றிற்கு டொலர்கள் 1.78 குறைந்துள்ளது. சந்திரனை விட மூன்று மடங்கு பெரியதான விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.


அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான் !

இனி ஒபாமா இருக்கும் இடம்தான் மோடிக்கு அயோத்தி. அனுமானுக்கு கணையாழி…ஆர்.எஸ்.எஸ். சுக்கு அணு உலை…
ராமாயண குடியரசு
மோடி, ஒபாமா, வீடணன்

 

வீடணன் என்றால் என்ன மோடி என்றால் என்ன தேசத்துரோகம் ஒன்றுதான்!
ராமா என்றால் என்ன
ஒபாமா என்றால் என்ன
ராமாயணம் ஒன்றுதான்!
வீடணன் என்றால் என்ன
மோடி என்றால் என்ன
தேசத்துரோகம் ஒன்றுதான்!
அசுரநிலத்தை ஆக்கிரமிக்கும்
ஆரண்ய காண்டத்து காட்சிகளை
குடியரசு தின அணிவகுப்பில்
கண்டு மகிழ்கிறான்
அந்நிய ராமன்…
(மேலும்....)


சந்திரனை விட மூன்று மடங்கு பெரியதான விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நியூ மெக்சிகோவில் உள்ள Lincoln Near-Earth Asteroid Research (LINEAR) தொலைநோக்கி புதிய விண்கல் ஒன்றை கண்டுபிடித்தது. சந்திரனை விட மூன்று மடங்கு பெரிதான விண்கல்லுக்கு, ‘2004 பிஎல் 86′ (2004 BL86) என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது குறித்த விண்கல் பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. தற்போது பூமியில் இருந்து 745,000 மைல் (12 லட்சம் கிலோ மீட்டர்) தூரத்தில் உள்ள இந்த விண்கல், வெகு விரைவில் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற விண்கல் பூமியை 200 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கடக்கும் என்றும், அதே நேரத்தில் பூமியில் மோதாமல் கடந்து செல்லும் எனவும் நாசா மையத்தின் ஜெட் புரோ புல்சன் ஆய்வகம் (Jet Propulsion Laboratory) தெரிவித்துள்ளது.

 

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பம்
 

நூறுநாள் செயற்றிட்டமானது எம்முன்னால் காணப்படும் பாரிய ஒரு சவாலாகும். அச்செயற்றிட்டத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். அந்த சவாலை வெற்றிகொள்வதற்கு நாம் இரவு பகல் பாராது உழைக்கின்றோம். சிலர் நூறுநாள் செயற்றிட்டத்தை குறைகூறுகின்றனர். நியாயமான குறைகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். நூறுநாள் செயற்றிட்டத்தை வளமடையச் செய்யும் உங்கள் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்வோம். ஒரு நாள் இரண்டுநாள் பிந்துவதாக சிலர் கூறுகின்றனர். குடும்ப ஆட்சியையும், ஏகாதிபத்திய ஆட்சியையும் முழுமையாக அழித்து மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட இறைமையை மீண்டும் மக்களுக்கு வழங்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளோம். தனிநபரை மையப்படுத்தி காணப்படும் அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைக்குப் பதிலாக அமைச்சரவை மற்றும் பாராளுமன்றிற்கு அதிகாரம் கிடைக்கும் புதிய அரசியலமைப்பு முறையொன்றை அமைப்பதற்கான செயற்பாடுகளை நாம் ஆரம்பித்துள்ளோம். யாப்பு நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை தற்போதைக்கு நாம் நியமித்துள்ளோம். அவர்கள் தயாரிக்கும் அபிப்பிராய எழுத்தாவணத்தை மிக விரைவில் கட்சித் தலைவர்களிடம் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னரே அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்போம்.

 

புத்திசாலித்தனம்..........?

 

பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம்,
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.

அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.

உடனே அப்பெண், “1 2 3 4 5 6 7 8 9 0என்ற எண்ணுக்கு
முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள்.

“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி,வாக்கியமாக்கி
மனப்பாடம் செய்ததாக கூறினாள்.

அதாவது, “க’டுகு, “உ’ளுந்து, “ங’னைச்சு, “ச’மைச்சு, “ரு’சிச்சு, “சா’ப்பிட்டேன்,“எ’ன, “அ’வன், “கூ’றினான்; “ஓ’ என்றாள்.
இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது.

 

என்ன செய்யலாம் கிழக்கு முதல்வர் விடையத்தில்

 

கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சரை நியமிப்பதில் தமிழரசுக் கட்சியும் முஸ்லிம் கொங்கிரசும் இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனால் கிழக்கு முதலமைச்சர் விடயம் விவகாரமாகியுள்ளது.இப்படி விவகாரமாகும்போது தமிழ் - முஸ்லிம் உறவில் மேலும் மேலும் இடைவெளியும் காயங்களுமே ஏற்படும். இந்த இடத்தில் தமிழரசுக் கட்சி முஸ்லிம்களுக்கு அந்தப் பதவியை விட்டுக்கொடுப்பது நல்லது. அப்படிச் செய்வதன் மூலமாக முஸ்லிம் மக்களிடம் தமிழ் மக்களின் நல்லெண்ணத்தையும் விட்டுக்கொடுப்பையும் புரிந்துணர்வையும் வெளிப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன், கடந்த காலங்களில் தமிழ்த்தரப்பினால் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளையும் காயங்களையும் ஆற்றுப்படுத்தவும் இந்தத் தீர்மானம் உதவும். இது தமிழ் முஸ்லிம் உறவை மீளக் கட்டியெழுப்புவதற்கான அத்திவாரமாக அமைவதுடன், சிங்கள இனவாதச் சக்திகள் இந்தச் சமூகங்களைப் பிரித்தாள முற்படும் தந்திரோபாயத்தை முறியடிப்பதாகவும் இருக்கும். பெருந்தன்மையாக நடந்து கொள்வதும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுப்பதும் தலைமைத்துவத்தின் மாண்பாகும். இத்தகைய மாண்புக்குரிய செயல்களே வரலாற்றுத் திருப்பங்களை உருவாக்குகின்றன. (Karunakaran)

 

யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ்
 

ஒடியல் கூழ் செய்யும் முறை
தேவையானவை
ஒடியல் மா - 1/2 கிலோ
மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
இறால் - 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள்.
நெத்தலி மீன் கருவாடு 100 கிராம்

பயிற்றங்காய் - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
ஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி
அரிசி - 50 கிராம்
பச்சை மிளகாய் 10 இரண்டாக பிளந்தது
செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
பழப்புளி - 100 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப

ஜனவரி 29, 2015

 

Waste oil mixed in the drinking water wells -Jaffna


TNA-------- busy with next election
EPDP ------ busy with securing sand business
Diasporas --busy demanding Tamil eelam - surly not for them
Akka is visiting temples - to make sure to get back the seat
Nilbalakaya- busy with legal matters
All the rest sleeping - i have not seen with whom
Some people did politics with ICE cream - may be business competition
who is to take up the issue ?
Is Mano ganeshen around there ?

அகிம்சைப்போர் அறிவிப்பு “பென்டிங்”கில் இருக்கத்தக்கதாக, அரசுக்கெதிரான இரண்டாவது அகிம்சைப் போராட்ட அறிவிப்பு

கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடங்குவதாக அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பிரகடனம் செய்த அகிம்சைப்போர் அறிவிப்பு “பென்டிங்”கில் இருக்கத்தக்கதாக, அரசுக்கெதிரான இரண்டாவது அகிம்சைப் போராட்ட அறிவிப்பையும் அதேயளவு ஆக்ரோசத்துடனும் உக்கிரமாகவும் வெளியிட்டிருக்கிறார் மாவை சேனாதிராஜா அவர்கள். January 28,2015 அரசுக்கெதிராகப் போராட மக்களைக் கூவியழைக்கும்போது ஆவேசம் பொங்கும் மாவையார் குறித்து புதிதாக நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், திரும்பத் திரும்ப இந்த சத்தியாவேசங்களை சலனம் எதுவுமின்றி கேட்டுக்கொள்ள முடிகிற தமிழ் மக்களைப் பார்த்துத்தான் ஒரே வியப்பாக இருக்கிறது!  (மேலும்....)

இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்லவே விருப்பம்
 

இலங்கை அகதி களில் 70 சதவீதம் பேர் தங்கள் சொந்த நாட்டுக்கு செல்லவே விருப்புகின்றனர். 20 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்க விரும்புவதாகவும் 10 சதவீதம் பேர் கல்வி, வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தால் இலங்கைக்கு செல்ல தயார் என்றும் கூறியதாக இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான குழு தமிழ் நாடு இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கையிலிருந்து இந்தியா வந்து மண்டபம் முகாமில் உள்ள அகதிகள் மற்றும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட அவர்களது குறைகளை கேட்க, கருத்து கேட்பு கூட்டம் ஒன்றை நடத்தினார். இச்சந்திப்பின் பின்னர் சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை அகதிகளில் 70 சதவீதம் பேர் தங்கள் சொந்த நாட்டுக்கு செல்லவே விரும்புகின்றனர் என்றும், 20 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்க விரும்புவதாகவும், 10 சதவீதம் பேர், கல்வி, வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தால் இலங்கைக்கு செல்ல தயார் என்று கூறியதாக கூறினார்.


மன்னார் கடற்பரப்பில் கண்டு பிடிக்கப்பட்ட எரிவாயு குறித்து ஆய்வு
 

மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு தொகுதியில் மீள் முப்பரிமான ஆய்வுகளை மேற்கொள்ள கெய்ன் இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் தொடர்பாக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி முடிவடைந்த மூன்றாம் காலாண்டிற்கான அறிக்கையிலேயே கெய்ன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை வர்த்தகமயமாக்குவதில் பெரும் சவால்கள் காணப்படுகிறன. அதனால் நிறுவனம் ஆய்வுவளங்களை அடிப்படையாகக் கொண்டு சுத்திகரிப்பு குறித்த தொழில்நுட்ப மதிப்பீடுகளை கவனத்தில் கொண்டுள்ளதோடு அதுகுறித்து ஆராய்ந்து அதற்கான வாய்ப்பு பற்றி எதிர்பார்த்துள்ளது. இறுதியில் கெய்ன் நிறுவனம் முப்பரிமான தரவுகளுடன் நடப்பு காலாண்டில் தமது அகழ்வு ஆய்வு நடவடிக்கைகளை மீளவும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த கெய்ன் நிறுவனம் தற்போதுள்ள மசகு எண்ணெய் விலைச் சூழலுக்கு ஏற்ப எமது செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

பிரதம நீதியரசர் கடமையில் ஷிராணி பண்டாரநாயக்க


43வது பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம நீதியரசராக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயக்கோன் நேற்று உச்சநீதிமன்ற பதிவாளருக்கு அறிவித்தார். 2013ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டரீதியாக மேற்கொள்ளப்படாததால், இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், 44வது பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் நியமனம் ஆரம்பம் முதல் சட்டவிரோதமான நியமனம் என்றும் ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார். பிரதம நீதியரசராகவிருந்த மொஹான் பீரிஸை பதவியைவிட்டு விலகிச்செல்லுமாறு வலியுறுத்தி ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் ஒன்றியம் நேற்று புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. கலை 8.30 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு வரும்வரை சுமார் நண்பகல்வரை நீடித்திருந்தது.
 

அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாதுகாப்பு கொடுக்கும் மோடி….மனைவிக்கு பாதுகாப்பு அளிக்கவில்லையே

பிரதமர் நரேந்திர மோடி மனைவியை கைவிட்டவர் என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் கமாத்திற்கு பாரதீய ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. மும்பையில், மராட்டிய அரசுக்கு எதிராகவும், கிரேட்டர் மும்பை மாநகராட்சியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குருதாஸ் கமாத் பேசுகையில், மோடி, அவரது மனைவியை கடந்த 40 ஆண்டுகளாக கைவிட்டது மிகவும் வெட்கமானது.
பிரதமர் மோடி திருமணம் ஆனவராகவே உள்ளார். அவர்கள் விவாகரத்து செய்யவில்லை, மோடி அவரது மனைவியை கைவிட்டுவிட்டார். (மேலும்....)

 

தஞ்சம் கோரி படகில் சென்ற இலங்கை தமிழர்களை கடலில் தடுத்தது சரியே - அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம்


அவுஸ்திரேலியாவுக்கு அகதி தஞ்சம் கோரி படகில் கடல் வழியாகச் சென்ற 157 ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்து வைத்த அவுஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியான செயலே என்று அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.சென்ற ஆண்டு இந்த அகதித் தஞ்சம் கோரியவர்களை சுமார் ஒருமாதகாலம் நடுக்கடலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் படகில் தடுத்து வைத்திருந்த செயல் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது.சிறு குழந்தைகள் உட்பட 157 பேரையும் நாட்கணக்கில் நடுக்கடலில் பலவந்தமாக தடுத்து வைத்ததன் மூலம் அவுஸ்திரேலியா அரசு அகதிகளை நடத்துவதற்கான தனது சர்வதேச கடப்பாடுகளை மீறிவிட்டதாக ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்திருந்தன. இது தொடர்பான வழக்கில் இன்று புதன்கிழமை தீர்ப்பளித்திருக்கும் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அவுஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியே என்று தெரிவித்துள்ளது. இன்றைய தீர்ப்பு தனது நடவடிக்கைகளுக்கு கிடைத்த நீதிமன்ற அங்கீகாரமாக அவுஸ்திரேலிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய தீர்ப்பு அகதிகள் மற்றும் அகதித்தஞ்சம் கோருபவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு இது பின்னடைவாக அமையும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

 

சு.கவுக்கு தலைமை தாங்கி அரசியல் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்

அடுத்த பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு தலைமை வழங்கி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையின் கீழ் சுதந்திரக் கட்சி வெற்றியீட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்று கூறிய அவர் ஏனைய கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்காக செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று சுப நேரத்தில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார். (மேலும்....)

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரிப்பு


டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும் தற்போதைய நிலவரப்படி பாஜகவின் செல்வாக்கு சரிந்தும் ஆம் ஆத்மியின் செல்வாக்கு சற்று அதிகரித்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் அதிக இடங் களை பிடித்திருந்தபோதிலும் பாஜவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜ தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. முதல்வர் வேட்பாளராக கிரண் பேடியை பாஜ அறிவித்தது. அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் அரவிந்த் கெஜ் ரிவாலுடன் இணைந்து செயல்பட்டவர் கிரண்பேடி. பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அரவிந்த் கெஜ் ரிவாலுக்கு எதிராக கிரண் பேடியை பா.ஜ.க களம் இறக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரண் பேடி தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த தேர் தலில் படுதோல்வி அடைந்த காங் கிரஸ் இம்முறை கௌவுரமான இடங் களை பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வாக்காளர்களை சந்தித்து வருகிறது. மூத்த தலைவரான அஜய் மக்கானை காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்து வருகிறது.

இந்தியா உள்ளிட்ட பகுதிகளுக்கு தலைவரை அறிவித்தது ஐ.எஸ். அமைப்பு!

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை அந்த இயக்கம் அறிவித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம், சிரியா, ஈராக்கைக் கடந்து, தெற்கு ஆசியாவில் தங்களது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்து அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்குச் சவால்விட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக இணையதளங்களில் ஐ.எஸ். அமைப்பு வெளியிட்ட ஒரு விடியோவில், ஐ.எஸ். அமைப்பின் தளபதி அபு முகமது அல்-அட்னி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதில், ''ஐ.எஸ். அமைப்பின் "குராஸன்' பகுதிக்கான தலைவராக, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முன்னாள் தளபதி ஹபீஸ் சயீத் கான் நியமிக்கப்படுகிறார்'' என்று அவர் அறிவித்தார். இதன் மூலம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவின் சில இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கான இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கான தலைவராக, தலிபானிலிருந்து வெளியேறிய தளபதியை அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

ஜனவரி 28, 2015

உடனடி அவதானத்துக்கு……!
 

சுன்னாகத்தில் தொடங்கி யாழ் செம்மண் பிரதேசத்தில் பரவலாகி வரும் கழிவுஎண்ணைக்கலப்பு மிக மிக பாரதூரமான பிரச்சனை . இதனை வைத்து தமக்கு சம்பந்தம் இல்லை என்பது போல அரசியல் சித்து விளையாட்டு ஒன்று நடக்கிறது. இந்த பாரதூரமான நிலைமை முன்கூட்டியே தடுத்து நிறுத்தியிருக்கமுடியும். இதற்கு பதிலளிக்க வேண்டியவர்களின் பாசாங்கு தான் சகிக்க முடியவில்லை. இது ஒரு மக்கள் கூட்டத்தின் வாழ்வு இருப்பு தொடர்பான பிரச்சனை. இந்த பாரதூரமான பிரச்சனையிலிருந்து நீரையும் மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்கு உலகளாவிய அளவில் பரந்து வாழும் எமது புலமையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து உடனடியாகச் செயற்படவேண்டிய தருணம்.
 

நச்சென்று ஒரு வார்த்தை

கே.பி. விவகாரம்

பெப். 5 இல் ஆப்பா......? அங்கீகாரமா......?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும் அவ்வியக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் அவ்வியக்கத்தின் தலைவர் என்று கூறப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி) கைது செய்வதா அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் என்று தன்னை அறிவித்துக் கொண்ட குமரன் பத்மநாதன் மீது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற ரீதியில் அவர் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரயிருந்தது. கே.பி. மீது குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையிலும், எந்தவிதமான விசாரணைகளும் இன்றி, எந்தவிமான சட்டநடவடிக்கைகளும் இன்றி கிளிநொச்சியில் அவர் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றார். பணம், தங்கம், கப்பல்கள் அனைத்தையும் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் கே.பி.யும் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்களா என்கின்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது என்றும் அக்கட்சி கூறியிருந்தது. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் புனர்வாழ்வு பெற்று சிவில் வாழ்க்கையில் இணைந்துகொண்டுள்ள நிலையில், கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் எந்தவிதமான புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கும்; உள்ளாக்கப்படவில்லை. கே.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் விபரம் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக விளக்கம் கோரப்படும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி ஏற்கெனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளை வருமாறு அழைத்தனர் - குணரட்னம்

முன்னணி சோசலிசக்கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு திரும்பியதன் பின்னர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து, வாக்குமூலம் கொடுப்பதற்கு அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு இன்று (28) சென்றிருந்தார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னணி சோசலிச கட்சியின் தலைவராக எனது செயற்பாடுகள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் என்னிடம் கேட்டார்கள். மேலும் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைக்கு நாளை (29) திணைக்களத்துக்கு வருமாறும் தெரிவித்தனர். அது மட்டுமன்றி எனது குடியுரிமை பிரச்சினைகள் குறித்தும் விசாரணைகளை நடத்தினார்கள். பன்னிப்பிட்டியவிலுள்ள முன்னணி சோசலிச கட்சியின் அலுவலகத்துக்கு குடிவரவு திணைக்கள அதிகாரிகள், குமார் குணரட்ணத்திடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக திங்கட்கிழமை (26) சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நம்பிக்கை தரும் உறவுகள்

இவர்களுடன் இன்னொருவரும் இணைந்து இருந்திருத்தால்......?

அமெரிக்காவுடனான உறவுக்கு பிடெல் காஸ்ட்ரோ ஆதரவு?

அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையிலான உறவை மீள ஏற்படுத்தும் திட்டத்திற்கு கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ மறைமுக ஆதரவு அளித்துள்ளார். காஸ்ட்ரோ எழுதியிருக்கும் கடிதம் ஒன்றில், "அமெரிக் காவின் கொள்கைகளை நான் நம்பப்போவதில்லை. அவர்களுடன் நான் எந்த வார்த்தையையும் பரி மாறப்போவதுமில்லை. ஆனால் இது மோதலுக்கு அமைதியான தீர்வை நிராகரிப்பதாக அர்த்தம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். கியூபா-அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந் திர உறவை மீள ஏற்படுத்தும் வரலாற்று முக்கியம் வாய்ந்த அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியிடப் பட்டதன் பின்னர் அது குறித்து பிடெல் காஸ்ட்ரோ கருத்து வெளியிடுவது இது முதல் முறையாகும். இரு தரப்புக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சு வார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றது. காஸ்ட்ரோ எழுதிய கடிதம் கியூப அரச பத்திரிகையான கிரன்மா வில் நேற்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில், "உல கில் இருக்கும் அனைவருடனும் ஒத்துழைப்பு மற் றும் நட்பை பாதுகாப்போம். இதில் எமது அரசியல் எதிரிகளும் உட்படுகிறார்கள்" என்று விபரித்துள்ளார். கியூபாவின் தற்போதைய ஜனாதிபதியான தனது இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ அரசு எடுத் திருக்கும் முடிவையே 88 வயது பிடெல் ஆதரித் துள்ளார்.

வருகையும் வரவேற்பும் எதற்கான குறியீடு?

உலக நாடுகளிடையே நல்லுறவு வளர வேண்டும், எல்லைகள் தாண்டி மக்களிடையே நட்புறவு மேலோங்க வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட்டுகளின் விருப்பம். பிறகு ஏன் அமெரிக்க அதிபரின் இந்திய வருகையை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்தார்கள், ஒபாமாவே திரும்பிப் போ என்றார்கள் என்று சிலர் கேட்கிறார்கள. பயணம் முடிந்ததும் ஒபாமா தமது நாட்டிற்குத் திரும்பத்தானே போகிறார் என்று சிலர் நகைச்சுவையாகக் கேட்டுவிட்டு அவர்களாகவே சிரிக்கிறார்கள். ஒபாமா வருகையிலும் அவருக்கு இங்கே தரப்பட்ட மிகப்பெரிய வரவேற்பிலும் உள்ள குறியீடு என்ன என்பதை மக்களுக்குச் சொல்வதற்காகவே அந்தப் போராட்டங்கள். அவர் இங்கே வந்ததற்கும், அதற்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அங்கே வரவேற்றதற்கும் பின்னணியில் இந்தியாவின் சுயமரியாதையும் மக்களின் பொருளாதார நலன்களும், ஏன் உயிர்ப்பாதுகாப்பு நலன்களும் கூட விட்டுக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இருவரும் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேலும் பத்தாண்டுகள் நீட்டிப்பதற்கு மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார். (மேலும்....)

மணிசங்கர் ஐயருடன்  பத்மநாபா E.P.R.L.F

முன்னாள் இந்திய மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் மணிசங்கர் ஐயர் அவருடன் வந்த குழுவினரை பத்மநாபா E.P.R.L.F சத்தியன் 21/01/2015 சாயா ப்லூ ஹோட்டேலில் [Chaya Blue Hotel] இடம்பெற்ற சந்திப்பில் 13ம் திருத்த சட்டபடி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மிக விரைவாக நடைமுறைபடுத்துவதற்கு இந்திய மத்திய அரசையும் இலங்கை அரசையும் வலியுறுத்துமாறு கேட்டு கொண்டதுடன் இலங்கையின் ஆட்சி மாற்றத்தினால் ஒரு ஜனநாயக சூழல் உருவாகியுள்ள நிலையில் இலங்கையின் தேசிய பிரச்சனையாக உள்ள தமிழ் பேசும் மக்களின் தீர்வு திட்டத்தின் அடிப்படையில் இந்த 13வது திருத்த சட்ட மூலம் ஏற்படுத்தபட்டது. வடக்கு கிழக்கு மாகாண சபை கடந்த காலங்களில் இருந்து வந்த இலங்கை அரசுகளினால் 13வது திருத்த சட்டமூலம் சரியாக நடைமுறைபடுத்தபடவில்லை. அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மாறாக இரு மாகாண சபைகளாக பிரித்து விட்டார்கள். (மேலும்....)

மோடியின் மேக் இன் இந்தியா திட்டம்...!!!

மேக் இன் இந்தியா என்று ஊர் முழுக்க விளம்பரம் செய்யும் மோடி செய்த வேலை என்ன தெரியுமா...??

இந்தியாவின் 66வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் பெரிதும் சர்ச்சையை கிளப்பியது மோடி அணிந்திருந்த ஆடை. நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற தனது முழு பெயரையும் கோடுகள் போன்று எழுதப்பட்டிருந்த ஆடை. உலகிலேயே இந்த ஆடைக்கு தேவையான துணியை வழங்குவது லண்டனை சேர்ந்த Holland & Sherry Fabrics என்ற நிறுவனம். இது உலக புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம். இந்த நிறுவனம் பிரத்யேகமாக பல வகை ஆடைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் அந்த நிறுவனம் வெளியிட்ட ஓர் ஆடைதான் "Signature Fabric". இது பல ரகங்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ஒரு மீட்டர் துணி 300 பவுண்டுகள். இதன் சிறப்பம்சமே துணியில் கோடுகள் போன்று தனிமனிதர் பெயரோ அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரோ நெய்து தரப்படும். இந்த ஆடையை தைப்பது சிட்னியை சேர்ந்த உலக புகழ் பெற்ற நிறுவனமான Tom James என்ற நிறுவனம். மோடி நேற்று அணிந்திருந்த ஆடையின் துணி மட்டும் 7 மீட்டர் நீளம் கொண்டது. அதன் மதிப்பு மட்டும் 3000 பவுண்டுகள்(2,78,200 ரூபாய்). இதனை தைப்பதற்கும் சேர்த்து ஆன மொத்த தொகை 10,000 பவுண்டுகள்(9,27,332 ரூபாய்).
எளிமையான தலைவர், தான் பெங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றும் மிக அற்புதமான தலைவர் செய்த வேலை தான் இது..!!
லண்டனில் இருந்து துணி...!!
அதனை தைக்க ஆஸ்திரேலிய கம்பெனி..!!

இப்படி உடை அணிபவருக்கு எப்படி ஐயா பிரிட்டிஷ் காரர்களினால் அரைநிர்வாணப் பக்கிரி என்று அழைத்த) காந்தியைப் பிடிக்கும்

(Shankar)

நாட்டு வைத்தியம்!

பித்தவெடிப்பு,(கால் ஆணி) சரியாக...

பித்தவெடிப்பு வந்தா... கால் அசிங்கமா தெரியும். வலி வேறஒரு வழி பண்ணிரும். இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா... பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம்.
பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.
நகச்சுத்து விலக...
நகச்சுத்து உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டு வந்தா குணம் கிடைக்கும்.
வேப்பிலை கொஞ்சம் எடுத்துக்கோங்க, அதோட மஞ்சள்துண்டு சேர்த்து அரைச்சு நகச்சுத்து வந்த இடத்துல பூசினா... குணம் கிடைக்கும். இதை தொடர்ந்து ஒரு வாரம் செஞ்சுட்டு வந்தா உரிய பலன் கிடைக்கும். (மேலும்....)

கோணங்கியின் பேச்சும் என் கோணல் புத்தியும்

ஜனவரி 25 அன்று சென்னையில் பல முக்கிய நிகழ்வுகள். இந்தியாவின் தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழியாக அறிவிக்கக் கோரி கடற்கரையில் ஒரு பேரணி - தமிழகத்தின் மொழிப்போர் தியாகிகளுக்கு சரியானததொரு நினைவேந்தலாக நடைபெற்றது. நாடு தழுவிய அளவிலும் தமிழகத்திலும் கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் சாதிய-மதவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே எப்படிக் கொண்டுசெல்வது என்பது தொடர்பாக ஒரு கலந்துரையாடல் எழும்பூரில் உள்ள ஜீவனஜோதி அரங்கில் நடைபெற்றது. இதே போன்ற மற்றொரு நிகழ்வு, அசோக் நகரில் உள்ள தமிழர் திடலில் நடைபெற்ற பெருமாள் முருகன், துரை கண்ணா, கண்ணன் ஆகியோருக்கு ஆதரவாகவும், கருத்து வெளிப்பாட்டு ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் நடைபெற்ற கண்டனக் கூட்டம். ‘தமிழில் சிற்றிதழ்கள் இயக்கம்’ அந்த கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. (மேலும்....)

இட்லி சாப்பிடுங்கள்!

நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?
என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன. (மேலும்....)

கைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள் - வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

"சேகுவேரா" இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு...!!

அக்டோபர் 9... அதிகாலை 6.00... லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.
கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் 'சே'வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது 'சே'தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. 'சே'வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் 'சே'வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் 'சே'வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள். (மேலும்....)

மலையகத்தில் தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு உதயம்

எதிர்கால மக்கள் நலன்கருதி, மலையகம் மற்றும் கொழும்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பொன்றினை உருவாக்கவுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. தனித்தனிக் கட்சிகளாக பிரிந்து அரசியல் நடத்துவதிலும் பார்க்க, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசியலில் ஈடுபட்டால் பாரியளவிலான மாற்றமொன்றினை ஏற்படுத்த முடியுமென்ற காரணத்துக்காகவே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது. வடக்கு, கிழக்கினைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கூட்டமைப்பிலும் பல கட்சிகள் இணைந்திருக்கின்றன. அதேபோல், மலையகத்திலும் தலைநகரிலும் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயற்பட முடிவுசெய்துள்ளார்கள். இந்தக் கூட்டமைப்பில், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஸ்ணன், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கே.வேலாயுதம், முன்னாள் பிரதி அமைச்சர் புத்திர சிகாமணி ஆகியோர் இந்த கூட்டமைப்பில் அடங்கவுள்ளதாக தெரியவருகிறது. இக் கூட்மைப்பை ஆழமாகப்பார்த்தால் ஒன்று உணர முடியும். இது மலையக அடிமட்ட மக்களைப் பிரநிதித்துவப்படுத்தும் அமைப்பு அல்ல மாறாக மேல்த்தட்டு இந்திய வம்சாவழியினரை பிரநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இருப்பதை.

கல்லுண்டாய் வெளியில் கழிவுகள் கொட்டுவதை நிறுத்துமாறு உத்தரவு

யாழ்ப்பாணம், வலி தென்மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் வெளிகளில் யாழ் மாநகரசபையோ ஏனைய உள்ளுராட்சி சபைகளோ கழிவுகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்துமாறு வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 27.01.2015ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் உடன் நடைமுறைப்படுத்துமாறும் இதனை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஜனவரி 27, 2015

6 புதிய ஆளுநர்கள் நியமனம்

வடக்கு, கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிவைத்தார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  வடக்கு மாகாண ஆளுநர்- எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார. கிழக்கு மாகாண ஆளுநர்- ஒஸ்டின் பெர்ணான்டோ. சப்ரகமுவ மாகாண ஆளுநர்- பி.எம்.ஏ.ஆர். பெரேரா. மத்திய மாகாண ஆளுநர்- சுரங்கனி எல்லாவல. வட மத்திய மாகாண ஆளுநர்- பி.பீ.திஸாநாயக்க. ஊவா மாகாண ஆளுநர்- சட்டத்தரணி எம்.பி.ஜயசிங்க

போராட்ட வெடிப்பும், அரசின் சிரிப்பும்!

வவுனியா மண்ணுக்கு அப்படி என்னதான் மாவையாருக்குச் சூடு கிளப்பிவிடும் தன்மை இருக்கிறதோ தெரியவில்லை. “புதிய அரசினையும் நம்பத் தயாரில்லை, அகிம்சைப் போராட்டம் வெடிக்கும்” என நாலே மாதங்களுக்குள் மீண்டும் அந்த மண்ணில் நின்று சூளுரைத்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவர். நேற்றுமுன்தினம் சனிக்கிழமையன்று தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே மாவையாரின் இந்த அரசு மீதான கோபமும் பொங்கி வெடித்திருக்கிறது. நாலு மாதத்திற்குள் மற்றொரு தேர்தல் வரப்போகிறதென்றால் அவரும்தான் என்ன செய்வார் பாவம், மீண்டும் மற்றொருமுறை போராட்டத்தை வெடிக்க வைக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டுவிட்டது.(மேலும்....)

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க மறுத்த காமராசர்

அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க, அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார்.சர்வ அலட்சியமாக நிக்ஸனின் வேண்டுகோளை நிராகரித்த காமாராஜர், பின்வருமாறு கூறினார். "நம்ம அண்ணாதுரைய சந்திக்க மறுத்த நிக்ஸனை, நான் எதுக்கு சந்திக்கணும்னேன். பெருச்சாளி போல வளரும் நாடுகளை சுரண்டி வாழும் அமெரிக்காவை நான் கண்டிக்கிறேன்னேன். அமெரிக்க அதிபர்களை, நாம முக்கிய விழாக்களுக்கு டெல்லிக்கு கூப்பிடக் கூடாதுன்னேன்". பெருந்தலைவரின் இந்த வீர உரையை சீன, ரஷ்ய, ஐப்பான் ஊடகங்கள் மீண்டும், மீண்டும் ஒலிபரப்பின. அதைக்கேட்ட ஒட்டு மொத்த ஆசியக்கண்டமும், எழுந்து நின்று ஆரவாரம் செய்து பெருந்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தன. (மேலும்....)
 

முகமாற்ற ஆட்சியும் - இடதுசாரி அரசியலும்

முகமாற்றம் நடந்து முடிந்திருக்கின்றது. முகப் பூச்சுகள் நடந்து வருகின்றது. இந்த பின்னணியில் மாற்றங்களுக்கு ஏற்ற எதிர்பார்ப்புகளுடன் கூடிய பொது அரசியல் மேலெழுந்து காணப்படுகின்றது. இதற்கு பின்னால் இடதுசாரிய அரசியல் முடங்கிவிட முடியுமா? அதாவது முகமாற்றமும், முகத்துக்கு மேல் அடிக்கும் வெளிப்பூச்சுகளும் தானாக அம்பலமாகும் வரை காத்திருப்பதல்ல இடதுசாரியம். இது இடதுசாரிய சிந்தனையாகவோ, நடைமுறையாகவோ இருக்க முடியாது. மாறாக இவை சூழலுக்கு பின்னால் வால்பிடிப்பதாகும். தேர்தல் முன்பாகவே, முகமாற்றத்தை உண்மையான மாற்றமாக கருதுகின்ற அரசியல் போக்கு இருந்தது. இதை அரசியல்ரீதியாக எதிர் கொள்ளவும், இடதுசாரிய அரசியல் மூலம் கற்றுக் கொடுக்கவுமே, நாம் இடதுசாரி முன்னணி வேட்பாளரை நிறுத்தினோம். இந்த அரசியல் போராட்டம், தேர்தல் முடிந்தவுடன் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. அதேநேரம் அது தானாக அம்பலமாகும் வரை, காத்து இருப்பதில்லை.  (மேலும்....)

ஹிஸ்புல்லாவின் மோசடிகளும்! ஹக்கீமின் காடைத்தனங்களும்….

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 25-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல் மோசடிகள் இஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் காடைத்தனம் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லா, ஹக்கீம் இருவரும் வயிற்றுப் பிழைப்பு நடத்த முஸ்லீம் மக்களை அழிக்கிறார்கள் என ஆதங்கப்படுகிறார்.

யாழ்.போதனா வைத்தியசாலை
127 தொண்டர் பணியாளர்களை உதவி சுகாதார உதவியாளர்களாக சேர்க்க முடிவு

யாழ்ப்பாணம் போதனா ஆஸ்பத்திரியில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றும் 127 பேரையும் சுகாதார உதவியாளர்களாக இணைத்துக் கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் உள்நாட்டு மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர் பற்றாக்குறை தீவிர நிலையை அடைந்துள்ளதால் தொண்டர் அடிப்படையில் பணியாற்றவென 127 பேர் 2013ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் நாளொன்றுக்கு ரூபா 75.00 கொடுப்பனவுக்கு சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஆனால் அக்கொடுப்பனவு ரூபா 175.00 வரை அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த மூன்று மாத காலமாக அக்கொடுப்பனவு வழங்கப் படவில்லை. யாழ். போதனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்டிருக்கும் இந்நிலைமை குறித்து இலங்கை குடியரசு சுகாதார சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டொக்டர் சேனாரட்னவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். இவ்விடயத்தை சங்கத்தின் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துக் கூறினர். இதன் அடிப்படையிலேயே அமைச்சர் மேற்படி ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இந்திய, இலங்கை தலைவர்களின் விஜயம் உறவுகளைப் பலப்படுத்தும்

இலங்கை, இந்திய அரச தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் பலப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இந்த விஜயம் அவருடைய முதலாவது வெளிநாட்டு விஜயமாக அமையவுள்ளது. அதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கூடியவிரைவில் இலங்கை வரவுள்ளார். இந்த அரச தலைவர்களின் விஜயங்களின் போது எடுக்கப்படக்கூடிய தீர்மானங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்திருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தியாவின் 66வது குடியரசு தினம் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் இவ்வாறு கூறினார். வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் அபிவிருத்தியில் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர் களுக்கும் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது.

கசகசா இற்குள் புதைந்திருக்கும் இரகசியம்

இந்திய உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. ‘கசகசாவினால் குடற்புழு, தினவு, குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்கமின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்’ என்கிறது சித்தர் பாடல். காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப்படுகிறது. மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. பாப்பி மலர்கள் அலங்காரத்துக்காக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.(மேலும்....)

பூமியில் மனிதன் தோற்றம் எப்போது?

சுமார் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை உறுப்பினர்கள் இல்லை. எல்லாம் சேர்ந்து ஒரே இனமாகத்தான் இருந்தது. பின்னர் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒவ்வொரு வகை மிருக இனமாக பிரிந்துவிட்டன. அதில் ஒரு பிரிவுதான் மனித இனம்.கொரில்லா, சிம்பன்ஸி, போனோபோ, உராங் உடான் மனிதன் எல்லாம் சேர்ந்து ஒரே குடும்பம்தான். இந்தக் குடும்பத்தில் இருந்த ஒரு சில உறுப்பினர்கள் இன்று இல்லை. அவை எலும்பு பாஸில்களாக உலகமெல்லாம் புதைந்து கிடக்கின்றன”மனிதனுக்கு மிக நெருங்கிய மிருகம் சிம்பன்ஸிதான். இரண்டுக்கும் இடையே 99 விழுக்காடு DNA ஒற்றுமை காணப்படுகிறது.“நியான்டர்தால் மனிதன், ஆஸ்ட்ராஸோ பித்தேகஸ் போன்றவைகளும் இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தானே”மனித ஜினோமில் மொத்தமாக 3 பில்லியன் எழுத்துக்கள் உள்ளன. கிட்டத்தட்ட அத்தனை எழுத்துக்கள் சிம்பன்ஸி ஜினோமிலும் உள்ளன. இரண்டுக்கும் இடையே 15 மில்லியன் எழுத்துகள் மாறியிருக்கின்றன. அதாவது 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுத்து பேதங்கள் உள்ளன. மனித ஜினோமை ஈயின் ஜினோமுடன் ஒப்பிட்டால், அளவிலும் எழுத்து பேதங்களிலும் 40 சத வேற்றுமை இருக்கிறது. கடந்த 40,000 ஆண்டுகளில் மனித இனம் சக குரங்கு இனத்தலிருந்து தன்னை மாற்றிக் கொண்டது. ஆயுதம், சடங்குகள், கலை, இலக்கியம், கட்டடம், தொழில்நுட்பம், ஆன்மிகம், கோயில்கள்.... இப்படி எத்தனை எத்தனை விதத்தில் மனிதன் வேறுபட்டிருக்கிறான்.(மேலும்....)

ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா வருகையை எதிர்ப்போம்!

ஒபாமா வருகையின் நோக்கம் …

• அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் சரிந்துவரும் நிலையில், தனக்குப் போட்டியாக சீனா வளர்ந்து வரும் சூழ்நிலையில், சீனாவை எதிர்த்து அமெரிக்கத் தலைமையில் ஆசிய-பசிபிக் இராணுவ, பொருளாதாரக் கூட்டமைப்பில் பங்குகொள்ள இந்தியாவை இணங்க வைப்பது.
• அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்காக இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்த இந்திய அரசை நிர்ப்பந்திப்பது.
• அமெரிக்க-இந்திய இராணுவ ஒப்பந்தத்தை மேலும் பத்து ஆண்டுகள் தொடர்வதற்கு உத்தரவாதப் படுத்துவது.
• இராணுவத் தளவாட உற்பத்தியில் அமெரிக்கப் பன்னாட்டு கம்பெனிகளின் ஏகபோகத்தை உத்தரவாதப் படுத்துவது.
• அமெரிக்க அணு உலை முதாளிகளின் கொள்ளை லாபத்திற்காக அணு உலை விபத்து இழப்பீட்டுச் சட்டத்தை நீக்க வற்புறுத்துவது.
• இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்புகளுக்கு அமெரிக்க முதலாளிகள் நிதி உதவி வழங்குவது மூலம் மோடி கும்பலின் கரங்களை வலுப்படுத்துவது.
• ஜனநாயகத்தை பாதுகாப்பது என்ற பேரால் அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும் அரசுகளை கவிழ்த்தல் மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு ஆதரவளிக்க இந்திய அரசை இணங்க வைப்பது.

இத்தகைய அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்க நோக்கங்களுக்கு இந்திய அரசை நிர்ப்பந்திக்கவே ஒபாமாவின் வருகை. எனவே கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கின்றோம்!
அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்ப்போம்!
ஜனநாயகத்தின் பேரால், மேலாதிக்கத்திற்குப் பணிய மறுக்கும் அரசுகளைக் கவிழ்ப்பதை எதிர்த்துப் போராடுவோம்!
ஆசிய-பசிபிக் மண்டலத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ முயலும் ஒபாமாவின் கனவைத் தகர்ப்போம்!
புதிய தாராளக் கொள்கைகளின் மூலம் இந்தியத் துணைக்கண்டத்தை புதிய காலனியாக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!
ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா – இந்துத்துவப் பாசிச மோடி கூட்டணியை முறியடிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

ஜனவரி 26, 2015

காவியும், கழுகும் கை கோர்க்கின்றன

1580 கோடி ரூபாய் மதிப்புள்ள பறக்கும் வெள்ளை மாளிகை

அமெரிக்க ஜனாதிபதியின் அலுவல் விமானத்தின் பெயர் "ஏர்போர்ஸ் 1". போயிங் 747 ரக விமானமான இதில் தான் அவர் டில்லிக்கு வந்தார். அணுஆயுதங்களால் கூட இந்த விமானம் பாதிக்கப்படாது. 1580 கோடி ரூபாய் மதிப் புள்ள இந்த விமானமே ஒரு "பறக்கும் வெள்ளை மாளிகை". அதாவது, அந்த அளவுக்கு இதிலேயே ஜனாதிபதி; அலுவ லகமே இயங்கும். அதிநவீன தகவல் தொடர்பு சாத னங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வ தற்கு அவர் "மெரைன் ஒன்" என்ற ஹெலிகொப்டரை பயன்படுத்துவார். இதுவும் அமெரிக்காவில் இருந்து வர வழைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி யுடன்; அமெரிக்காவின் நவீன "மெரைன்' பாதுகாப்பு படையினர் இருப்பர். வானிலும் அமெரிக்க விமானப்படை தொடர்ந்து கண்காணித்தபடி இருக்கிறது. அணு ஆயத இழப்பீடு சட்ட மசோதா குறித்து விவா திக்கப்படும் என தெரிகிறது. எரிவாயு விநியோகம், திரவ இயற்கை வாயு, எரிசக்தி தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு பாதுகாப்பு பயிற்சி போன்ற வி'யங்கள் விவாதிக்கப்பட உள்ளன. ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே போன்ற துறைகளில் அமெரிக்க முதலீட்டை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறலாம். ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் பாக். - ஆப்கன் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை ஒருங்கிணைந்த பயற்சி பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.

உலக புகைப்பட தினம்.

பெருமாள் முருகன் எழுதியதில் என்ன தவறு இருக்கின்றது

உண்மையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனால் எங்கள் கலாச்சாரம் கேட்டு விட்டது என்று ஒப்பாரி வைக்கும் சாதி மற்றும் காவி வெறிபிடித்த கலாச்சார காவலர்கள் மேலேயுள்ள கோவில்களில் அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். அதெல்லாம் எங்க ஊர் கோவில் கிடையாது என்றா ? அந்த கோவில்கள் எல்லாம் ஏதோ கல் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றியதல்ல ...அவையெல்லாம் பெருமாள் முருகன் குறுப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த கலாச்சாரத்தை பாதுகாத்த முன்னோர்கள் கட்டி எழுப்பியது தான். எங்களுடைய கலாச்சாரம் பெண்களை போற்றும் கலாச்சாரம் என்று சொல்லும் அன்னக்காவடிகள் பெண்களை சீலை இல்லாமல் சிற்பமாக்கி இருக்கும் அந்த கலையுணர்விற்கு என்ன சொல்ல போகிறார்கள் ? என்றாவது அது போன்ற கோவில்களுக்கு சென்று போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார்களா ? அங்கெல்லாம் பெண்கள் வர மாட்டார்களா ? பெருமாள் முருகனின் புத்தகத்தால் கெட்டு போய்விடுவார்கள் என்று கதறுபவர்களுக்கு அங்கு வருகிற பெண்களின் கண்கள் அந்த சிற்பங்கள் அலை பாய்ந்து அவர்களுடைய மனது கெட்டு போய் விடும் என்று ஏன் கதறுவதில்லை ?

நடேசனுடன் சந்திப்பு

எதிர்வரும் 27.01.2015 செவ்வாய்கிழமை பி.பகல் 4.00 மணிக்கு கிளிநொச்சியில் எழுத்தாளர் நடேசனுடன் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. நண்பர்களும் ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

நடேசனின் நாவல்கள் -
1. வண்ணாத்தி குளம்
2. உனையே மயல்கொண்டு
3. அசோகனின் வைத்தியசாலை

சிறுகதைத் தொகுதி -
1. மலேசியன் ஏர்லைன் 370

அனுபவக்கதைகள்
1. வாழும் சுவடுகள் - பாகம் 01
2. வாழும் சுவடுகள் - பாகம் 02

அடுத்து வரவுள்ளவை
1. வாழும் சுவடுகள் - பாகம் 03
2. எகிப்து - கட்டுரை
 

கிரேக்கத்தில் இடதுசாரிகளின் மாபெரும் வெற்றி! SYRIZA ஆட்சி அமைக்கிறது!

கிரேக்க இடதுசாரிக் கட்சிகளின் கூட்டான SYRIZA கிரேக்கப் பாராளுமன்ற தேர்தலில் 25.01.2015, இரவு 9:40 வரையான வாக்கு எண்ணிக்கையின்படி 149 ஆசனங்களை வென்று பாரிய வெற்றியடைந்துள்ளது!

25.01.2015 இன்று ஆறு மணியுடன் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவுக்கு வந்தது. அதன் தொடர்சியாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே SYRIZA பாரிய வெற்றியடையும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, தேர்தலில் வென்றுள்ள SYRIZA (25.01.2015, இரவு 9:4 வரை) 35.92ம% வீதமான வாக்குகளை பெற்றுள்ளது. 50% வீதமான வாக்குகளை SYRIZA பெறாவிட்டாலும், 300 ஆசனங்களைக் கொண்ட கிரேக்க பாராளுமன்றத்தில், கிரேக்க தேர்தல் சட்டப்படி 50 வீததுக்கும் மேலான ஆசனங்களைப் பெறும் எனக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் இது வரை ஆளும் கட்சியாகவிருந்த புதிய ஜனநாயகம் என்ற நவதாராள பழைமைவாதக் கட்சியின் தலைமையிலான அரசு இன்று இரவு பதவி விலகியது. அதன் பிரதம மந்திரி அந்தோனியோ சமராஸ் தோல்வியை ஒப்புக்கொண்டு, SYRIZAவின் பிரதமர் வேட்பாளர் அலெக்சிஸ் சீபிராஸ் - Alexis Tsipras அவர்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். தனிப்பெருங்க கட்சியாக வென்றுள்ள போதும் SYRIZAதனித்து கிரேக்கத்தில் ஆட்சி அமைக்காமல், தனது கொள்கைக்கு உகந்ததாக அரசியல் இணக்கம் காணக்கூடிய வேறு கட்சிகளையும் இணைத்தே ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்....)

ஊழல் பேர்வழிகள், வெள்ளை வான்காரர்கள் தண்டிக்கப்படுவார்களா?

நாட்களை குறிப்பிட்டு அரசாங்கம் நிறைவேற்றவிருக்கும் பணிகளுள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழும் இடம்பெற்ற மாபெரும் ஊழல்களைப் பற்றியும் வெள்ளை வான்களில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களைப் பற்றியும் விசாரணை நடத்தி சம்பந்தப்பபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதும் அடங்கும். ஆனால், அந்தப் பணியை புதிய அரசாங்கம் நிறைவேற்றுமா என்ற சந்தேகம் மக்களிடையே படிப்படியாக உருவாக ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் ஊழலைப் பற்றி பெயர் பெற்ற சிலர் வெளிநாடு சென்றமை இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணமாகும். அவர்களை பிடித்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததைப் போலவே, அவர்களைப் போன்ற பலர் இப்போதும் தப்பிச் செல்ல எந்தவித தடையும் இருப்பதாக தெரியவில்லை. (மேலும்....)

Is this the beginning of a ‘Maithri regime’..? watch out..!

A younger brother of Maithripala Sirisena who was cutting down trees under past regime has been appointed as the chairman of the Sri Lanka telecom (SLT) of the modern era which is abounding with knowledge of commerce and science, and when that vacancy should be filled by a mathematician or someone with knowledge in that field . Besides , this appointment being made by Maithri himself is a matter for deep regret. It is an indisputable and obvious fact the protesting people of the country, on 8thJanuary 2015 ,at last succeeded in destroying almost insurmountable obstacles in the face of the gravest odds , to get rid of a most brutal , barbaric corrupt murderous despotic family regime which during its 9 years reign only fanned nepotism , cronyism and favoritism thereby appointing all its relatives , crooks ,corrupt and competent individuals to the highest offices in the country, and in the end led itself into inevitable disaster and despair. (more....)

திஸ்ஸவுக்கு எதிராக சி.ஐ.டி.யினர் வழக்கு?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாட்டை பிரிவினைக்குட்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்தாகியது என பகிரங்கப்படுத்திய முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவித்து போலி ஆவணமொன்றை, திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கப்படுத்தியதாக அவர்மீது குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர், திஸ்ஸ அத்தநாயக்கவினால் காண்பிக்கப்பட்ட ஒப்பந்தம் போலியானது என கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கையெழுத்து மோசடி தொடர்பில் திஸ்ஸ மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சாத்தியங்கள் சட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2015 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டைப்பின் தேசியத்தலைவர் இப்படி கூறுகின்றார்

புலிகள் விவகாரத்தை சரியாக கையாளாவிடின் பயங்கரவாதம் தலைதூக்கும் - பொன்சேகா


மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியுமென நான் நினைக்கின்றேன். எவ்வாறாயினும், யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  (மேலும்....)

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்

பழம்பெரும் திரைப்பட நடிகர் வி.எஸ். ராகவன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. உடல்நலக் குறை வால் சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். ஆரம்ப காலங்களில் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வந்தார். நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால், நாடகங்களில் நடித்து வந்த அவர், பின்னர் திரைப்படங்களில் குணச் சித்திர வேடங்களில் தோன்றி புகழ் பெற்றார். 1954ல் வைரமாலை என்ற திரைப்படத்தில் அறிமு கமான அவர், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். திரைப் படங்களில் மட்டுமின்றி சின்னத்திரை தொடர் களிலும் நடித்துள்ளார். ஆல் இன் ஆல் அழகுராஜ, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சாகும் வரையிலும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. இவர் கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் உடல் நலக்குறைவால் வி.எஸ்.ராகவன் காலமானார். வி.எஸ். ராகவன் இல்லம் மந்தைவெளி ராம கிருஷ்ணா நகரில் உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட் நகர் மயானத்தில் அவரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

எகிப்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய இடதுசாரி பெண் சுட்டுக் கொலை

எகிப்து முன்னாள் ஜனா திபதி ஹொஸ்னி முபா ரக்கை பதவி கவிழ்த்த 2011 மக்கள் எழுச்சி போராட்டத்தின் நான்கு ஆண்டு பூர்த்தியை ஒட்டி தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற இடதுசாரிக் களின் அர்ப்பாட்டத்தில் பெண் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் நெருங்கிய இடைவெளியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை எகிப்து உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது. பேரணி நடத்தியவர்களே வெடிக்கும் கருவிகளை பயன்படுத்தியதாக அது நியாயம் கூறி இருந்தது. காயத்திற்கு உள்ளான குறித்த பெண் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துள்ளார். இவ்வாறான ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு எகிப்து அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஹெய்மா அல் சபாக் என்ற குறித்த பெண்ணின் வாயில் இருந்து இரத்தம் வழிவது போன்ற பல்வேறு வீடியோக்கள் இணையதளத்தில் பரவியுள்ளன. எனினும் அவர் சூட்டுக்கு இலக்கானார் என்பது உறுதி செய்யப்படவில்லை. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த பேரணி தலாத் ஹார்ப் என் பகுதியில் இருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'எதிர்காலத்தில் இண்டர்நெட் காணாமல் போகும்!'

இணையம் இல்லாமல் நவீன வாழ்க்கை இனி இல்லை என்று நினைக்க துவங்கியிருக்கும் நேரத்தில், இணையம் மறைந்து போகும் நிலை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்கிமிட் தான் இவ்வாறு கூறி வியக்க வைத்திருக்கிறார். ஆனால் கவலை வேண்டாம், ஸ்கிமிட் சொல்வது இணையம் இல்லாமல் போகும் என்பதல்ல, நாம் அறிந்த வகையில் இணையம் காணாமல் போய் , நாம் அதன் இருப்பை உணராத அளவுக்கு எங்கும் இணையம் வியாபித்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். நீக்கமற நிறைந்திருப்பது என்பார்களே அதே போலதான் இணையமும் ஆகிவிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார். (மேலும்....)

யாழ்‬.குடாநாட்டை அச்சுறுத்தும் கழிவு ஒயில் !!

யாழ்.குடாநாட்டில் தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலத்தடி நீரில் கழிவு எண்ணைய் கலக்கும் விடயம் தொடர்பாக பலவிதமான கதைகள் அடிபடுகின்றன. வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்குப் பகுதியில் இக்கழிவு ஒயில் கசிவு மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் அப்பகுதி மக்களின் தண்ணீர் மற்றும் குடிதண்ணீர்த் தேவைப் பாதிக்கப்பட்டு வருகின்றமை உண்மையான விடயம். இதனை யாரும் மறுக்கவோ மறுக்கவோ முடியாது. ஆரம்பத்தில் சுன்னாம் பகுதிகளில் பரவி வந்த இவ் எண்ணைக் கசிவு சுமார் 4 மாதங்களுக்குள்ளேயே தெல்லிப்பழை யூனியன் கல்லூரிப் பிரதேசம் வரை சென்றுவிட்டது. நிலத்தின் சுண்ணாம்புப் பறைகளின் இடுக்குகளுக்கு இடையினால் கசிந்து செல்லும் இக்கழிவு எண்ணைய் நிலத்தடி நீரூற்றுக்களில் கலந்து கிணறுகளில் போய் விழுகின்றன. இதனால் அன்றாடம் மக்கள் பயன்படுத்தி வரும் கிணற்று நீர்களுடன் கழிவு எண்ணையும் சேர்ந்து உள்ளது. இதனால் மக்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. (மேலும்....)

ஜனவரி 25, 2015

‘அதிகாரமில்லாத’ மாகாண சபை பதவி எதுக்கு?

கிழக்கு முதலமைச்சர் பதவியினை தமக்கு விட்டுத்தருமாறும் புதிய ஆட்சி அமைவதிலுள்ள சிக்கல் நிலைமையினை தீர்த்துவைக்குமாறும் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். இச்சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்றுப் பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரே ஜனாதிபதியுடனான இம்முக்கிய சந்திப்பில் கலந்துகொண்டனர். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக தமிழர் ஒருவர் வருவதற்கான காரணங்களை எடுத்துரைத்த கூட்டமைப்பினரின் கருத்துக்களை நிதானமாகச் செவிமடுத்த பின், “தங்களது நியாயமான கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் நான் பொதுவாக மாகாணசபை விடயங்களில் தலையிடுவதில்லையென எண்ணியிருக்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (மேலும்....)

ரணில் ஒரு ஆபத்தானவர்

 நாம் கவனமாக இருக்க வேண்டும் - கூட்டமைப்பு எம்.பி. சிறீதரன்

மஹிந்த சிந்தனையை தோற்கடித்து மைத்திரி யுகத்தை உண்டாக்குவதல்ல எங்கள் நோக்கம். மாற்றம் என்ற ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது. மூச்சு வீடுவதற்கான காலம் வேண்டும். பேச்சுச் சுதந்திரம் வேண்டும் என்பதற்காக அந்த காலத்திற்காக வாக்களியுங்கள் என கேட்டிருந்தோம். அதனூடாக ஜனவரி 9 ஆம் திகதி இந்த நாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
100 நாட்களுக்குள் எல்லாம் நடந்து விடும் என்று எங்கள் மக்களிடம் நாங்கள் பொய்களைச் சொல்ல முடியாது. அதற்கு கால இடைவெளி இருக்கின்றது. அந்த கால இடைவெளியில் நாங்கள் அதனை செய்து கொண்டுதான் செல்ல வேண்டும்.ரணில் நல்லது செய்வார் அல்லது மைத்திரி நல்லது செய்வார் என்று பார்க்காது, இவர்கள் எவ்வளவு தூரம் எமது பிரச்சினையில் கவனம் செலுத்துவார்கள் என்பதையே நோக்கவேண்டும். தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையே ரணில் விக்கிரமசிங்க சில வேளைகளில் தனித்தனியே சந்திப்பார். அவர் மிக மிக முக்கிய ஆபத்திற்கு உரிய நபர் என்றார். (மேலும்....)

எண்ணையின் விலை வீழ்ச்சி! அரசின் அடிப்படையான வளர்ச்சித் திட்டத்திற்குப் பாதிப்பு ஏற்படப்போவதில்லை கனடா பிரதம மந்திரி

கனடாவில் எண்ணையின் விலை குறைந்தமையால் சில பாதிப்புக்கள் ஏற்பட்டாலும், தமது அரசின் அடிப்படையான வளர்ச்சித் திட்டத்திற்குப் பாதிப்பு ஏற்படப்போவதில்லையென பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் கூறினார். சென் கதரின்ஸில் சிறு வணிக நிறுவனங்கள் கடன்களைப் பெறுவதை இலகுவாக்கும் திட்டம் ஒன்று குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிகழ்வில் அவர் இந்த விடயத்தைக் கூறினார். கனேடிய மத்திய வங்கி அதன் பிரதான வட்டிவீதத்தை காற் சதவீதத்தால் குறைத்த நிலையில், மேலதிக பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தேவையில்லையென அவர் கூறினார். பொருளாதார வளர்ச்சி நிலவும்போது, வரவு செலவுத் திட்டத்தைச் சமப்படுத்துவதுதான் தேவையான நடவடிக்கையென அவர் தெரிவித்தார்.

'புதிய ஜனாதிபதியை நம்புகிறோம்' - கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்

தற்போது இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது. ஜனநாயகத்தைக் கொண்டு நடத்தக்கூடிய புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார். இந்த புதிய ஜனாதிபதியை தாங்கள் நம்புகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். 'இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதற்காக சிறுபான்மையின மக்களின் அமோக வாக்குகளால் புதிய ஜனாதிபதி வெற்றி பெற்றுள்ளார் என்பதை இலங்கை மாத்திரமின்றி, சர்வதேசமே உன்னிப்பாக அவதானித்துள்ளது. கடந்தகால போராட்ட காலத்தில் உயிரைத் தியாகம் செய்த எத்தனையோ இளைஞர்கள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு சிறையில் வாடும் இளைஞர்களை விடுவிக்கவேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சிறையிலுள்ளவர்களின் விபரங்களை அரசு எம்மிடம் கோரியுள்ளது. மிக விரைவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்' என்றார்.

தமிழ் - முஸ்லிம் தரப்பு இணைந்தே கிழக்கில் ஆட்சி அமைக்க வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முஸ்லிம்களோ, முஸ்லிம்களைத் தமிழர்களோ விட்டுவிட்டு நிர்வாகத்தை அமைப்பது நியாயமற்ற செயல் என்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். இனியும் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் புறக்கணித்துவிட்டு ஆட்சி அமைப்பது ஆரோக்கியமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன. முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த மூன்று கட்சிகளும் பெற்றுக் கொண்ட ஆசனங்களையும் சேர்த்தால் அரசாங்கத்திற்கு எதிரான ஆசனங்கள்தான் அதிகமாக இருந்தன. (மேலும்....)

பொழுதுபோக்கிற்காக தேர்தலில் போட்டி

இரட்டைப்  பிரஜாவுரிமைக்காரர்கள் கபடம்

இரட்டை பிரஜாவுரிமை கொண்டோரை நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கவோ, இடமளிக்கவோ கூடாது என யாழ்ப்பாண மாவட்டத்துக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளரும், கட்சியின் மத்திய குழு அமைப்பாளருமான கலாநிதி வேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார். இத்தகையவர்கள் தமது குடும்பம், தமது நலன் பற்றிய சிந்தனையிலேயே எப்போதும் இருப்பர். போட்டியிட்டதும் குடியுரிமை பெற்ற நாடுகளுக்கு தமது மனைவி, பிள்ளைகளையும், உறவுகளையும் பார்க்க ஓடிவிடுவர். இங்கே பொழுது போக்கிற்காகவே வந்து செல்வர். இவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு இவர்களால் ஒருபோதுமே திருப்தியான சேவையைச் செய்ய முடியாது. எனவே இத்தகைய இரட்டைக் குடியுரிமை கொண்டோர் இனிவரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும் எனவும் கலாநிதி தங்கராசா தெரிவித்துள்ளார்.

ரத்தின தேரரின் கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

தமிழர் கலாசாரம் மதுவால் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது என ஜாதிக ஹெல உருமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் கவலை வெளியிட்டிருக்கிறார். உண்மைதான். ரத்தின தேரர் பெளத்த ஐந்து கலாசார அமைப்பில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் வடக்கு கிழக்கிற்கு அடிக்கடி சென்று அம்மகளுடன் அந்நியோன்யமாகப் பழகி வருகிறார். அவர் அங்கு கண்ணுற்ற காட்சிகளை வைத்தே இதனைக் கூறியிருக்க வேண்டும். வடக்கின் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் விடியற் காலையில் பாதையோரங்களில் சிதறிக் கிடக்கும் பியர் வெற்றுக் கான்களை பார்த்தாலேயே தேரரின் கூற்று உண்மை என்பது புலனாகும். இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் திருந்தி நடக்க வேண்டும்.

ஜனவரி 24, 2015

அறிவிற்கெதிரான அதிகாரம், கலகம்.

(சுகு-ஸ்ரீதரன்)

வரலாற்றை நவீன உலகில் தொல்லியல் மற்றும் மானிடவியல் மற்றும் இலக்கியங்கள், மரபார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாடுகளிலிருந்தும் இவற்றை விஞ்ஞான ரீதியான விசாரணைக்கு உட்படுத்தி பதிய முற்படுகிறார்கள். ஆர்தர் .சி கிளார்க், ஐசாக் அசிமோவ் போன்றவர்கள் ஆர்வக் கிளர்ச்சி ஏற்படுத்தும் புனைவுகளைத் தந்தார்கள்.இரண்டு சூரியன்கள் நிலவும் கிரகம் கண்டு பிடிக்கபட்டபோது அது ஆர்தர்.சி. கிளார்க்கின் புனைவொன்றை ஒத்திருந்தது.தென்னிந்திய இலங்கை வரலாற்று ஆய்வுகளை ஐராவதம் மகாதேவன், நாகசாமி, இந்திரபாலா, சேனகபண்டாரநாயக்கா, செரான் தெரணியகல, ரகுபதி போன்றவர்கள் பிரதானமாக தொல்பொருளியல் மற்றும் மானிடவியல் தகவல்களைக் கொண்டு திராவிட மற்றும் இலங்கை சமூகங்களின உருவாக்கம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
தற்போது டிஎன்ஏ - பரம்பரை இயல் தகவல்கள் மூலம் மக்கள் சமூகங்களின் பூர்வீகங்களை அறிய முயற்சிக்கின்றனர். இன்னும் சொற்ப காலத்தில் இது மிக எளிதாகி விடும். (மேலும்....)

உலக பேரழிவு கடிகாரம் நள்ளிரவை எட்ட இன்னும் மூன்று நிமிடங்கள்

காலநிலை மாற்ற அச்சுறுத்தல் மற்றும் அணு ஆயுத அபாயம் காரணமாக உலகப் பேரழிவு குறித்து கணிக்கப்படும் கடிகாரத்தில் நள்ளிரவை எட்ட நிமிட முள் இரண்டு நிமிடம் முன்னகர்த்தப்பட்டுள்ளது. இந்த பேரழிவு கடிகாரம் அமெரிக்க அணு விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்படுகிறது. இந்த கடிகாரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அது நள்ளிரவை எட்ட மேலும் மூன்று நிமிடங்களே எஞ்சியுள்ளது. இந்த கடிகாரம் நள்ளிரவை எட்டுவதென்பது உலகில் பேரழிவு நிகழும் என்பதை எச்சரிப்பதாக இருக்கும். 1947 ஆம் ஆண்டு அமைக் கப்பட்ட இந்த பேரழிவு கடிகாரம் இதுவரையில் 18 தடவைகள் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 1957 ஆம் ஆண்டு அமெரிக்கா ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை சோதித்தபோது இந்த பேரழிவு கடிகாரம் நள்ளிரவுக்கு இரு நிமிடங்கள் நெருங்கியது. அதேபோன்று 1991 ஆம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்தபோது அதிபட்சமாக இந்த கடியாரம் நள்ளிரவுக்கு 17 நிமிடங்கள் விலகிச் சென்றது. கடைசியாக இந்தக் கடிகாரம் 2012 ஜனவரியில் மாற்றத்திற்கு உள்ளானது. இதன்போது கடிகாரம் ஒரு நிமிடம் முன்னகர்த்தப்பட்டது. "தடையற்ற காலநிலை மாற்றம் மற்றும் அணு ஆயுதப் போட்டியின் விளைவாக இன்று மனித இனத்தின் இருப்புக்கு சந்தேகம் இல்லாமல் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது" என்று மேற்படி கடிகாரத்தை இயக்கும் குழுவின் நிறைவேற்று இயக்குனர் கெனட் பெனடிக்ட் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

சரத்பொன்சேகாவின் விசேட ஏற்பாட்டில். SRITHARAN M.P ற்கு. விசேட இராணுவ பாதுகாப்பு. வழங்கப்பட்டது

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவத்தினர் அவரது பாதுகாப்பு அகற்றப்பட்டபின்பு. புலம்பெயர்து வாழும் தமிழர்களின் நிதியை அதிகமாக கையாழும் Sritharan M.P ற்கு சரத்பொன்சேகாவின் ஏற்பாட்டில். பாதுகாப்பு. வழங்கி வருகின்றனர்


விவசாயிகள் தமது வேதனையை வெளியிட்டுள்ளனர்

தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா தான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர் எனவும் விவசாயிகளின் துன்ப, துயரங்களை நன்கறிவேன் எனவும் தெரிவித்திருந்தார். அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்திய பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 100 நாள்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் வேலைத்திட்டம் என்ற தலைப்பில் நெல் கொள்வனவு செய்யும் போது கிலோ ஒன்றின் உத்தரவாத விலையை 50 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ளபோதும் அரசாங்கம் விவசாயிகளி டமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கோ, அதற்கான உத்தரவாத விலையை வழங்கு வதற்கோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த வருடத்தில், விவசாயிகள், தனியாரிடம் 3000 ரூபாவுக்கு விற்பனை செய்யக் கூடியதாயிருந்த 70 கிலோ நெல்லினை இப்போது தனியார்துறை வர்த்தகர்கள் விவசாயிகளிடமிருந்து 2000 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தமது வேதனையை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கிலோ நெல்லின் உத்தரவாத விலை 43 ரூபா என தெரிவிக்கப்பட்டிருந்தது அந்த விலையும் கூட கிடைக்காமல் ஒரு கிலோ நெல்லின் விலை 28 ரூபா 50 சதமாக குறைவடைந்திருப்பது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை விளைவிக்கும். எனவே வடக்கு மாகாண விவசாய அமைச்சரும், பாராளுமன்றத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த விடயத்தை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து, அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கும் ஒரு கிலோ நெல்லின் உத்தரவாத விலை 50 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நடைமுறைப்படுத்தி விவசாயிகள் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதன் பயனைப் பெறவும் ஆவன செய்தல் வேண்டும்.
(தோழர் – மோகன்)

புதிய மூன்று ஆளுநர்கள் நியமனம்

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், இன்றைய தினம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். அதற்கமைய - மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன், தென்மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்கார, வடமேல் மாகாண ஆளுநராக திருமதி அமர பியசீலி ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ.சு.கா.வின் மத்திய குழு இன்று கூடுகிறது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு அதன் தலைமையகத்தில் இன்று கூடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தனது டுவிட்டர் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கூலித் தொழிலாளியா வேலை செய்யும் மாகாண, பிரதேசசபை உறுப்பினர்கள்.

அன்று ஒரு நாள் அனுர குமாரவின் பேட்டி ஒன்று ஹிரு டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. அதில் பொதுவாக பெரும்பாலானோர் மத்தியில் இருக்கும் ஒரு சந்தேகத்தை ஹிரு நிருபர் கேட்டார்.

கேள்வி- ஜேவிபி ஏனைய கட்சிகளை விட அரசியலில் அதிகம் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போஸ்டர்கள், பொதுநல வழக்குகள் என்று சுறுசுறுப்பாக வேலை செய்யும் ஒரு கட்சி. இதற்குரிய பணம் எங்கிருந்து வருகிறது ??
பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளங்கள், ஜேவிபியின் வெளிநாட்டு கிளைகளின் ஊடான கொடுப்பனவுகள், அவர்களின் அச்சகத்தின் ஊடாக வரும் வரவுகள், உறுப்பினர்களின் அன்பளிப்புகள் என்று பதில் சொல்லிக்கொண்டு போன அனுரகுமார, கட்சியின் நிதி சேகரிப்புக்கு சொன்ன இன்னுமொரு வழி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதாவது வெள்ளாமை அறுவடை காலங்களில் ஜேவிபியின் உறுப்பினர்கள் அந்த இடங்களுக்கு சென்று பல நாள் அறுவடை வேளைகளில் ஈடுபட்டு அதில்வரும் கூலிகளை அப்படியே கட்சிக்கென்று கொடுப்பார்களாம். அதை போலவே, நகரங்களில் இருக்கும் உறுப்பினர்கள் கொங்கிரீட் போடும் தொழிலாளிகளாக வேலைசெய்து அதை கட்சிக்கென்று கொடுத்துவிடுவார்களாம். இதில் இன்னொரு ஆச்சரியம் என்ன என்றால் இந்த வேலைகளில் ஜேவிபியின் பிரதேச சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கூட வேலை செய்வார்களாம்.

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் வித்தியிடம் விசாரணை?

வெள்ளை வான் கடத்தல்களில் பின்னணியில் யார் யாரெல்லாம் செயற்பட்டார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாகவே வித்தியாதரனிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு லசந்தவின் கொலைக்கு பின்னர், வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வித்தியாதரன் பேட்டி ஒன்றினை வழங்கியிருந்தார். அதில் தனக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், கடத்தல்களின் பின்னணி தொடர்பில் ஆராயப்படவேண்டும் என்பதோடு, வீட்டிலிருந்து வருகின்ற நாங்கள் உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்புவோமா என்பது தெரியாது எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டியின் பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை குறித்த வெளிநாட்டு ஊடகவியலாளர் பேட்டி எடுப்பதற்காகச் சென்றிருந்தார். அந்த ஊடகவியலாளர் கோட்டாபாயவின் அலுவலக வாசலுக்கு செல்லும்போதுதான் வித்தியாதரன் கடத்தப்பட்டார். இதுதொடர்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர், கோட்டாவிடம் கேட்டபோது பகிரங்கமாகவே வித்தியாதரனை விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்படுத்தி திட்டித்தீர்த்தார். அவர் ஒரு தீவிரவாதி எனவும் குறிப்பிட்டார். (மேலும்....)

பெருமாள் முருகன்

எழுத்தாளனுக்காக எல்லோரும் குரல் எழுப்பித் தம் ஆதரவைத் தொடர்கின்றார்கள்

முள்ளிவாய்க் கால் அழிவுக்குப்பின் காணாமல் போன புலிகளின் அரசவைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை பற்றி யாரும் பெரிய அளவில் போராட்டம் நடத்திப் பொங்கியதாக இதுவரை நான் கேள்விப்படவில்லையே...[அப்படி ஏதும் நடந்திருந்தால் மன்னிக்கவும்] முள்ளிவாய்க்கால் பிரசினையின்போதோ ,அதற்கு முன்னரோ பலவந்தமாக ஆட்கள் சேர்க்கப் பட்டபோதெல்லாம் மௌனம் காத்த ஒருவருக்காகப் பொதுவில் எல்லோரும் போராடுவது எப்படிச் சாத்தியமாகும்?. அவர் சார்ந்தவர்கள் இப்போதும் கிளர்ந்தெழுந்து ஓங்கிக் குரல் கொடுத்துப் போராடினால் என்ன கெட்டுப்போய்விடும். போராடுங்களேன் யார் வேண்டாமென்றது. பெருமாள் முருகன் ஒரு தனிப்பட்ட எழுத்தாளன். மாதொரு பாகனுக்கு முதலே நிறைய எழுதியிருக்கிறார். அவருடைய எழுத்துக்கள் யாரையும் துன்புறுத்தும் நோக்குடன் சீண்டவில்லை. உண்மைகளை ஆராய்ந்தே தன் கருத்துக்களை வெளியிட்டது ,.... சமயப் பாதுகாவலர்களால் [!] பொறுக்கமுடியாமலே....., பலவித தடைகள்கொண்ட எதேச்சாதிகாரமாக வெளிவந்திருக்கின்றது. இந்தக் கருத்துச் சுதந்திர மறுப்பை நீடிக்கவிட்டால் ...எந்தவொரு எழுத்தாளனும் தன் சுய புத்தியோடு எழுத முடியாது. எனவேதான், பாதிக்கப்பட்ட பெருமாள் முருகன் என்ற தனிப்பட்ட எழுத்தாளனுக்காக எல்லோரும் குரல் எழுப்பித் தம் ஆதரவைத் தொடர்கின்றார்கள் .கவனத்தில் கொள்ளவும் , இவர் யாரையும் சார்ந்தவர் அல்ல.!

(புஷ்பராணி)

சிங்கள ஸ்ரீக்கு டக்ளஸ் தேவா வைத்த ஆப்பு!

வாகன இலக்கத் தகட்டில் தமிழ் எழுத்தை பொறித்த முதலாவது தலைவர் இன்றைய ஈ. பி. டி. பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். 1985 ஆம் ஆண்டு காலப் பகுதி. ஈ. பி. ஆர். எல். எப், ரெலோ, தமிழீழ விடுதலைப் புலிகள், புளொட், ஈரோஸ், தமிழீழ விடுதலை இராணுவம் ஆகியன உட்பட பல தமிழ் போராட்ட அமைப்புக்கள் தீவிரமாக செயல்பட்டு வந்த காலம். யாழ். கோட்டை உட்பட பல இடங்களிலும் இராணுவம் ஆங்காங்கு நிலை கொண்டிருந்தது. சில இடங்களில் பொலிஸ் நிலையங்களும் காணப்பட்டன.  அப்போது வாகன இலக்கத் தகடுகளில் சிங்கள ஸ்ரீயை பயன்படுத்த வேண்டும் என்கிற சட்டம் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. தமிழ் தலைவர்களும் சிங்கள ஸ்ரீயை கொண்ட இலக்க தகட்டையே வாகனங்களில் பயன்படுத்தினர். ஆனால் ஒரே ஒரு தமிழ் தலைவர் மாத்திரம் சிங்கள ஸ்ரீயை கொண்ட இலக்கத் தகட்டை திட்டவட்டமாக நிராகரித்தார். (மேலும்....)

ஜனவரி 23, 2015

கூட்டமைப்பால் கல்விச் சமூகத்திற்கு மிரட்டல்! நீதி கேட்டதற்கு பரிசு!!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் நேற்று புதன்கிழமை நடத்திய போராட்டத்தை முடக்க கூட்டமைப்பு முற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றது. வழமை போன்றே பாடசாலை முடிவடைந்த பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு உடனடியாகவே வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு உத்தரவிட்டதாகவும் அந்த உத்தரவை மீறியும் மாணவர்கள் தமது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் தெரியவருகின்றது. (மேலும்....)

போராளிகள் உட்பட அனைவரும் இலங்கைக்கு திரும்பி வரலாம்-  வெளிவிவகார அமைச்சர்!

இலங்கையில் இருந்து போரினால் இடம்பொயர்ந்து இந்தியா மற்றும் உலகின் ஏயை இடங்களிலும் அகதிகளாக வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்பி வரவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகில் எங்கும் இலங்கையர்கள் அகதிகளாக வாழக் கூடாது. முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் திரும்பி வரலாம். அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அவர்கள் அனைவரும் எமது மக்கள். பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் தமது தாயகத்தை விட்டுச் சென்றுள்ளனர். பல பத்தாண்டுகளாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் முயன்றோம். ஆனால் முடியவில்லை. எமது அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு எல்லா இன மக்களும் வாக்களித்துள்ளனர். இந்தநிலையில் அனைவரும் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும். முன்னைய அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட குழுக்களைச் சேர்ந்த பலரை நான் லண்டனில் சந்தித்துள்ளேன். அவர்களைத் தீவிரவாதிகளாக என்னால் நம்ப முடியவில்லை. அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியுள்ளது. அவர்களை அரசாங்கத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அவர்களின் பங்களிப்பும் உதவியும் அவசியம். தேசிய நல்லிணக்கத்துக்கு ஏற்கனவே பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. திம்பு யோசனைகள், மங்கள முனசிங்க திட்டம், சந்திரிகாவின் திட்டம், இன்னும் பல யோசனைகள் உள்ளன. தேசிய நல்லிணக்கத்தை எட்டுவதற்கு இதுவரை முடியாமல் போனதற்கு அரசியல் இணக்கபாடின்மையே காரணம். இப்போது அரசியல் இணக்கபாடு உள்ளது. எனவே தீர்வை எட்டமுடியும் என்று நம்புகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரப் பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி கராச்சி குச்சவெளி பிரதேசத்துக்கு உட்பட்ட கும்புறுபிட்டி மக்கள் கோரிக்கை !

 

2009ம் ஆண்டு (ரைகம்) என்னும் நிறுவனம் பெரிய கராச்சி குச்சவெளி பிரதேசத்துக்கு உட்பட்ட கும்புறுபிட்டி என்னும் இடத்தில் உப்பு உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு 1800 ஏக்கர் காணியை எடுப்பதற்கு அங்கு வாழும் மீன்பிடி தொழிலை செய்யும் மக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து கையெழுத்து வாங்குவதற்காக அரசாங்கத்தின் கூட்டம் நடப்பதாக சொல்லி மக்களை அவ்விடத்துக்கு அழைத்து வந்து 1 சோற்று பார்சலும் 200 ரூபா பணமும் கொடுத்து கையெழுத்து வாங்கிவிட்டு உப்பளம் செய்வதற்கு மக்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று காண்பித்து காணியை குச்சவெளி பிரதேச செயலகம் ஊடாக 2000 ஏக்கர் நிலப்பரப்புக்கு வேலி அடைத்துவிட்டனர். (மேலும்....)

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்க வேண்டுமென கோரிக்கை

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய முன்னணி கட்சியின் ஸ்தாபகர் பழ நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டுமாயின், இலங்iகியன் புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு நடவடி;ககை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், அவ்வாறு அமுல்படுத்தப்படாவிட்டால் கடந்த கால அரசாங்கங்களைப் போன்றே புதிய அரசாங்கமும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் சிங்கள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தை போன்றே அனுமதியளிக்கவில்லை தெரிவித்துள்ளார்.1989 களில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையில் கலைக்க வேண்டும், இல்லாமல் செய்யவேண்டும் என்று புலிகளுக்காக கூக்குரலிட்டு பிரேமதாசாவுடன் இணைந்து அம்மகாண சபையைக் கலைத்தவர்கள் இன்று இணைப்பு வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டம் அமுல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

தலைமன்னார் - இராமேஸ்வரம் விரைவில் நேரடி கப்பல் சேவை

தலைமன்னார் - இராமேஸ்வரம் மற்றும் கொழும்பு - தூத்துக்குடிக்குமிடையில் நேரடி கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நேரடி விமான சேவைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயத்தின்போது இது குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பு- கண்டிக்கிடையில் இரட்டை ரயில் பாதை அமைத்தல், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 4 ஆயிரம் தோட்ட வீடுகளை நிர்மா ணித்தல் என்பன குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்துவருதல், வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேம்படுத்தல், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பன தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. இந்திய பிரதமர் தான் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அறிவித்துள்ளார். 1987 ஆம் ஆண்டின் பின்னர் இந்திய நாட்டு தலைவரொருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைய உள்ளது.

யாழ்.மாநகரசபை அமைய ஊழியர்கள் வேலை நீக்கம், அரசியல் பழிவாங்கல் என ஊழியர்கள் ஆதங்கம்

யாழ்.மாநகரசபையில் தற்காலிக நியமனம் வளங்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்துவந்த ஊழியர்களை தற்போதைய ஆட்சி மாற்றத்தின் காரணமாக மாநகரசபை நிர்வாகம் நிறுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் யாழ்மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று காலை யாழ்.மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக்காரியாலயத்திற்கு சென்ற மாநகரசபை ஊழியர்கள் ஒருங்கிணைப்பாளர் வி.கே.ஜெகனுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு முறைப்பாடு செய்துள்ளனர்.(மேலும்....)

கொழும்பு கோட்டையில் அதி உயர் பாதுகாப்புக்கு மூடப்பட்ட வீதிகள் திறப்பு

உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கொழும்பு மாநகரில் மூடப்பட்டிருந்த பல வீதிகள் நேற்றுமுதல் மீண்டும் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு, கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்புக்கு அமைய இந்த வீதிகள் திறக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதற்கமைய உயர்பாதுகாப்பு வலயமாக மூடப்பட்டிருந்த ஜனாதிபதி மாவத்தை, பரோன் ஜயதிலக மாவத்தை, சதாம் வீதி உள்ளிட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக நேற்றுமுதல் திறக்கப்பட்டுள்ளன. பழைய பாராளுமன்ற சுற்றுவட்டத் திலிருந்து ஜனாதிபதி மாவத்தை ஊடாக மணிக்கூட்டுக் கோபுரம் வரையான வீதியில் சில இடங்களில் ஒருவழி போக்குவரத்து அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், பெளத்தாலோக மாவத்தையில் ஸ்டான்லி விஜயசுந்தர மாவத்தை சந்திக்கும், தும்முள்ளை சந்திக்கும் இடைப்பட்ட வீதியில் பல வருடங்களாக பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளது. இந்த வீதியூடாக இனிமேல் பஸ் போக்குவரத்து இடம்பெறும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கியூபா-அமெரிக்காவுக்கு இடையில் வரலாற்று முக்கியம் வாய்ந்த பேச்சு

அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையில் பல தசாப்தங்களுக்கு பின்னர் கியூப தலைநகர் ஹவானா வில் உயர்மட்ட பேச்சு வார்த்தை இடம்பெற்றுள் ளது.  இரு நாட்டு உறவுகளை யும் புதுப்பிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ கடந்த மாதம்; அறிவித்த நிலையிலேயே கடந்த புதனன்று இரண்டு நாள் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இதில் முதல் நாள் சந்திப்பு முன்னேற்றம் கொண்டதாக இருந்ததென்று அமெரிக்க அதிகாரி ஒருவர் விபரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவது மற்றும் புலம்பெயர்வு தொடர்பில் இரண்டாவது நாள் சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. கியூபா சென்றிருக்கும் அமெரிக்க தூதுக் குழுவுக்கு லத்தீன் அமெரிக்காவுக்கான உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரியும் இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளருமான ரொபடா ஜகொப்சன் தலைமை வகிக்கிறார். கடைசியாக அமெரிக்கா உயர்மட்டக் குழுவென்று கியூபா சென்றது 35 ஆண்டுகளுக்கு முன்னராகும். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கொங்கிரஸ் அவையில் ஆற்றிய உரையில் கியூபாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை அகற்றுவது குறித்து கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மோடியைப் புகழும் காங்கிரஸ் தலைவர்கள்...சுதாரிக்காத சோனியா!

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பிரதமர் மோடியை புகழ்ந்து கொண்டே, பா.ஜனதாவுக்கு தாவவும் தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், கட்சித் தலைமை அதனை மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதே என்ற குமுறல்கள் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளன. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்த உடனேயே மோடியை முதல் ஆளாக புகழ்ந்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர். அப்பொழுதே காங்கிரஸில் முணுமுணுப்புகள் எழுந்தன. தொடர்ந்து அவர் மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டத்தை வெகுவாக புகழ, பா.ஜனதாவினர் குஷியாகி, காங்கிரஸ் கட்சியை சீண்ட தொடங்கினர். இதனையடுத்து கட்சியின் இமேஜை காப்பாற்ற ராகுல் காந்தியே களமிறங்கினார். மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் விளம்பர நோக்கத்திலானாது, வெற்று விளம்பரத்திற்காக மோடி துடைப்பத்துடன் போஸ் கொடுக்கிறார் என்று கடுமையாக சாடினார். (மேலும்....)

எங்கேயோ இடிக்குதே......?

'ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆட்சி அமைப்பதில் என்ன தவறு'

'சந்திரிகாவின் மகன் விமுக்தி நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் போடடியிடுவார்' - செய்தி

உண்மையில் உக்ரேன் விடயத்தை ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு நோக்குகின்றன....?

Ukraine என்ற நாட்டில் நடக்கும் யுத்தத்தை பற்றி ஜேர்மன் ஆய்வாளர் கூறுவது தான் முற்றிலும் உண்மையான விடயம். Ukraine , ரஷ்யா ,அமரிக்கா, ஐரோப்பா ஆகிய நான்கு அமைப்புகளும் சேர்ந்து கதைக்க முடியாத அளவு போர் சென்று கொண்டு இருப்பதாகவும் Ukraine முடிவு செய்திருக்கிறது தமது நாட்டின் கிழக்கில் நடக்கும் போரை இராணுவத்தினால் தீர்க்க முடியும் என்று. அது தனியாக இந்த முடிவை எடுக்கவில்லை என்று இவர் கூறுவதின் ரகசியம் அமரிக்காவுடன் சேர்ந்து என்பது தான். ஐரோப்பா இந்த முடிவை இட்டு சந்தோசப்படவில்லை என்றும் Ukraine மிகுந்த கடன் தொல்லையால் துன்பப்படும் நாடு என்று அது தனது கடன்களையே திரும்ப செலுத்த முடியாத நாடு என்றும் கூறுகிறார். (மேலும்....)

ஜனவரி 22, 2015

மகிந்தவை அழித்தொழித்த விமல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இல்லாதொழித்தது விமல் வீரவன்சவே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முந்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முதற்தடவையாக பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலமையில் நேற்று முந்தினம் கூடியது. இதன்போது உரையாற்றிய பிரதமர், விமல் வீரவன்சவை நோக்கி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய பிரதமர் , " நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் , இலங்கையர்களாக நாம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் , நான் இன்று விமல் வெளியிட்டுள்ள கருத்தைக் கண்டு புதுமை அடைந்தேன் " எனத் தெரிவித்ததோடு விமல் வீரவன்சவை நோக்கி முன்னாள் ஜனாதிபதியை இல்லாதொழித்தது நீங்களே எனவும் மீதமிருப்பதை அழிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். மேலும் இனவாதத்தை மறந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

இந்த அரசு நல்லதா, கெட்டதா?

மகிந்த ஆட்சி போய் மைத்திரி ஆட்சி வந்துவிட்டது. பெரும் பான்மையான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள், இந்த ஆட்சியிலாவது தமிழ் மக்களது பிரச்சினைகளின் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து ஒரு முடிவைக் காண் பதை துரிதப்படுத்த வேண்டும். 2015 ஆம் ஆண்டில் எப்படியும் தீர்வைக் காண்போம் என்று ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தமிழர சுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வவுனியாவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது உறுதிபடத் தெரிவித்திருந்தார். அதன்பின்னர், ஜனாதிபதித் தேர்தல் நாளுக்கு ஒருவாரம் முந்தியதாக, இந்தியாவிலிருந்து கொழும்புக்குத் திரும்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அவரது வீட்டில் நடந்த கூட்டமைப்புத் தலைவர்களின் கூட்டத்தில், 2015-ல் நிச்சயம் தீர்வு என்று அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. (மேலும்....)

டெலிகொம் தலைவராக ஜனாதிபதியின் சகோதரர் நியமனம்

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தகுதி அடிப்படையில் மிகமூத்த அதிகாரியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம் நிறுவனத்தின் தலைமைக்கு பொருத்தமானவர் என்ற காரணத்தினாலேயே இப்பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை அரச நியமனங்களுக்கு பயன்படுத்தமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்த நிலையில், அவரது சகோதரருக்கு ஸ்ரீ லங்கா டெலிக்கொம் தலைவர் பதவி வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 2006ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடம் டிசெம்பர் வரை, அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பொது முகாமையாளராகவும் குமாரசிங்க சிறிசேன கடமையாற்றியிருந்தார். அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கியதன் பின்னர் குமாரசிங்க சிறிசேனவின் பதவி பறிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

வெளிவந்துவிட்டது வானவில் 47

நாட்டின் முன்னேற்றப் பயணம்  பின்தள்ளப்படும் அபாயம்!

1977இல் எப்படி அன்றைய ஐ.தே.க, அன்று ஆட்சியில் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசின் தற்காலிக பொருளாதார நெருக்கடிகளை பயன்படுத்தி மக்களுக்கு நல்லாட்சி தருவதாக பொய் வாக்குறுதிகள் தந்து ஆட்சியை கைப்பற்றிவிட்டு, பின்னர் 17 வருடங்களாக மக்களையும் நாட்டையும் நரக குழிக்குள் தள்ளினரோ, அச்சொட்டாக அதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் இன்றும் எதிரணியினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். ஒரு புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளை கணிப்பிட ஒரு சில நாட்கள் போதாது என்பது உண்மையென்ற போதிலும், புதிய ஜனாதிபதியின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் யார் யார் என்பதை வைத்து அது எந்தப் பாதையில் செல்லப் போகின்றது என்பதை அனுமானிப்பது ஒன்றும் சிரமமான விடயமல்ல. வெளிநாட்டு வல்லாதிக்க சக்திகள் பெரும் பிரயத்தனப்பட்டு இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது பொழுதுபோக்கு வேடிக்கைக்காக அல்ல. (மேலும்....)

யாழ்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறைப்பு
 

யாழ் மாவட்டத்தில் 1991ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 09ஆக இருந்த நிலையில் இம்முறை நடைபெற உள்ள தேர்தலில் அது 7ஆக குறைக்கப்பட்டது வாகக்காளர்களின் பதிவில் ஏற்பட்ட தாக்கமே இந்த குறைப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து குறைக்கப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்கள், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு முந்திய ஆண்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்கள் குறைக்கப்பட்டமை குறித்த செய்திகள் வெளியாகி இருந்த போதும், அது தாக்கம் செலுத்தி இருக்கவில்லை.
எனினும் இந்த ஆண்டு பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவாகும் நிலைமை உருவாகி இருக்கிறது. அந்த மாவட்டத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ள நிலையில், மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையே இதற்கான பிரதானகாரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தீபிகாவின் கதை

அழகி என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தீபிகா படுகோனேவுக்கு கண்டிப்பாக பொருந்தும்... இந்த தைரியம் எத்தனை பிரபலங்களுக்கு வரும்!!!... இது போன்றவைகளே மேலும் மேலும் மக்களுக்கு தங்களின் பிரச்சினைகளை வெளியே சொல்ல உதவும்... தயவுசெய்து பகிரவும்...

(Translated from Hindustan Times, Mumbai edition, January 15th. Reported by Kavita Awaasthi)

ஹிந்தி படங்களில் காணப்படுவது போல தடைகளை தகர்க்கும் கதைதான், ஆனால் இது ஆபூர்வமான ஒன்று. உங்களுக்கு தெரியுமா?... கடந்த வருடம் தன்னை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக நிலை நிறுத்த போராடியபோது தீபிகா படுகோனே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தன் மனம் திறந்து தன் வாழ்கையின் இந்த இரு வேறு அம்சங்களை எப்படி ஒன்றிணைத்து வெற்றி கண்டார் என்பதை பற்றி பேசுகிறார்...(மேலும்....)
 

இயக்குனர் ஷங்கரின் "ஐ" யும் திருநங்கைகளும்

ஐ திரைப்படம் வெளியாகி என்னுடைய சக திருநங்கை சகோதரிகள் எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் செய்தும் போராடியும் வருவதை கண்டு அந்த திரைபடத்தில் அப்படி என்ன திருநங்கைகளுக்கு அவமானம் தேடி தரும் அல்லது மனம் புண்படும் விடையம் என்ன உள்ளது என்பதை கண்டறிய திரைப்படம் காண சென்றேன். இயக்குனர் ஷங்கர் ஒரு முன்னணி இயக்குனர் என்கிற அடையாளத்தோடு சமூக அக்கறை மிக்க கருத்தாக்கங்களை திரையில் வெளிபடுத்தியவர் என்கிற நினைப்பு என் மனதில் உள்ளது. அவருடைய இந்தியன், அந்நியன், முதல்வன் போன்ற திரைப்படங்கள் என்னை இன்றளவும் கவர்ந்த படங்கள். திருநங்கைகளை காலம் காலாமாய் திரைப்படங்களில் அவமானதுக்கூரிய பொருளாக சித்தரித்து பல படங்கள் வந்தாலும் ஒரு சில சொற்ப படங்கள் மட்டுமே கண்ணியாமாக வெளிக்காட்டியுள்ளது. (மேலும்....)

வெலிக்கடை படுகொலை திட்டமிடப்பட்டவை சாட்சியங்கள் உள்ளன - உதுல்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெலிகடை சிறைச்சாலையில் நடந்த கைதிகளின் போராட்டத்திற்கு சிறையதிகாரிகள் தீர்வு கண்ட நிலையில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் பல கைதிகளை சுட்டுக்கொலை செய்தனர். முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட இந்த திட்டமிட்ட கொலை தொடர்பான சாட்சியங்கள் இருப்பதாக சட்டத்தரணி உதுல் பிரேமரட்ன தெரிவித்தார். நாட்டின் இன்றைய அரசாங்கம் இந்த படுகொலை குறித்து நியாயமான விசாரணைகளை நடத்த குழுவொன்றை நியமித்தால், சாட்சியங்களை முன்வைக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சந்திரிக்காவின் மகன் விமுக்தி வருகிறார்!

விரைவில் நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்க போட்டியிடவுள்ளார் என தெரிய வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கம்பஹா மாவட்டத்தில் அவர் போட்டியிடவுள்ளதாகவும் இது தொடர்பில் தனது மகனுடன் சந்திரிகா கலந்துரையாடியுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதேவேளை, நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறையிலேயே நடத்தப்படவுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னரே தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

EPDP சந்திரகுமார் 100 கோடிசொத்து குவிப்பு

யாழில் நிலை கொண்டுள்ள டக்கிலஸ் அணி பெரும் அட்டூழியங்களை மகிந்த ஆட்சியில் புரிந்து வந்தது . தற்போது மகிந்தா ஆட்சி கவிழ்க்க பட்ட பின்னர் அடங்கி போனது. இவர்கள் ஆட்டம் நடந்து முடிந்த தேர்தலின் போது கட்டுக்கடங்காது சென்றது. தற்போது ஆட்சிபீடம் மாறிய நிலையில் கூலி வேலை செய்து திரிந்த சந்திரகுமார் நூறு கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளாராம்? இந்த சொத்து எப்படி வந்தது என்பது தொடர்பான விசாரனைகளை ஆரம்பிக்க ஆளும் தரப்பு உத்தரவிட்டுட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது.

இந்திய அகதிகள் முகாம்களில் இலங்கையர்கள் மீது தாக்குதல்

இந்திய அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமாரி பிரதேசத்தில் அமைத்திருக்கும் பெருமால்புரம் எனப்படும் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண் மற்றும் அவரின் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவிக்கின்றது. இரும்பு மற்றும் தடிகளுடன் அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அசரிபல்லம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்காக இந்திய பொலிஸார் மேலதிய விசாரனையை ஆரம்பிதத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொன். கந்தையா
(கரவைதாசன், டென்மார்க் )

வர்க்க உணர்ச்சியும், உண்மையான ஜனநாயகப் பிரியமும்புரட்சிகர உணர்ச்சியும் கொண்ட வர்களை எப்பொழுதும் கொம்யூனிஸ்டுகள் வசீகரிப்பதைப்போல் வேறெவரும் வசீகரிப்பதில்லை. ஐம்பதுகளில் இலங்கைத் தீவே வர்க்கத்துருவப்பட்டிருந்தபோது வடமராட்சியில் கம்யூனிஸ்ட்கள் தோழர் பொன் கந்தையா அவர்களை வசீகரித்திருந்ததில் வியப்பேதும் இல்லை! அன்று தமிழ்மக்கள் பாராளுமன்ற அங்கத்தவராகத் தேர்ந்தெடுத்த ஒரேயொரு இடதுசாரி பாராளுமன்ற அங்கத்தவர் தோழர் பொன். கந்தையாதான். இல்லையேல் சரித்திரம் ஒட்டுமொத்த தமிழர்களையே பிற்போக்குவாதிகள் என்று நாமாகரணம் சூட்டியிருக்கும். (மேலும்....)

இடதுசாரி, முற்போக்கு முன்னணிகளுடன் ஸ்ரீ.ல.சு.க பொது தேர்தலில் போட்டி

மூன்று மாதத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை இலக்கு வைத்து எமது கட்சி சார்பிலும் 100 நாள் திட்டமொன்று முன்வைக்கப்பட்டதுடன் ஏனைய கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலுக்கு தயாராகவுள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் அதேவேளை அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலும் ஆழமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனது நீண்டகால அரசியலுக்கு பரிசாக இருந்த பதவி கிடைத்துள்ளது. சுதந்திரக் கட்சி, இடதுசாரி முற்போக்கு சக்திகளை அழியவிடாது உயிரூட்ட நடவடிக்கை எடுப்பேன். எமக்கு வாக்களித்த 57 இலட்சம் மக்களின் கஷ்டங்கள், பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவும் அவை குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்து நிவாரணம் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரக் கட்சி செயற்குழுவினதும் மத்திய குழுவினதும் ஏகமனதான தீர்மானத்தின் படி எதிர்க்கட்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். எமது கட்சியை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பேன். புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு ஒத்து ழைப்பு வழங்குவோம். இந்த ஆதரவு என்பது ஐ. தே. க வுடன் கூட்டுச் சேர்வதல்ல.

நாட்டின் முக்கியத்துவம்மிக்க யோசனைகள் தேசிய நிறைவேற்று சபையிடம் முன்வைப்பு

பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஐந்து வருடங்களாகக் குறைத்தல் உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீர மைப்பு, காணாமல் போனவர்கள் மற்றும் படுகொலைகள் குறித்த விசாரணை, வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் இழந்த தங்கநகைகளை மீளப்பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேசிய நிறைவேற்று சபையிடம் யோசனைகள் முன்வைத்திருப்பதாக ஜே.வி.பி தெரிவித்தது. ஊடகவியலாளர் சிவராம், லசந்த விக்ரமதுங்க உள்ளிட்டோரின் படுகொ லைகள், போத்தல ஜயந்த ஆகியோர் மீதான தாக்குதல்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும். இறுதி யுத்தத்தின் போது பெருமளவான மக்கள் வடக்கில் இடம்பெயர்ந்தபோது அவர்களிடமிருந்த வாகனங்கள் பல கைவிடப்பட்டன. இந்த வாகனங்களை உரியவர்களிடம் கையளிப்பதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. புலிகளின் வங்கிகளில் அடகுவைக்கப் பட்டிருந்த நகைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் போயுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தாம் கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். நிறைவேற்று ஜனாதிபதிமுறை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எனினும் நூறு நாட்களுக்குள் அதனை நிறைவேற்றுவது கடினம். அதேநேரம் மக்களின் ஆணையால் வெற்றிபெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை இல்லாமல் செய்ய முடியாது. எனவே சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாமல் அரசியல மைப்பின் ஊடாக குறைக்கக் கூடிய ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய நிறைவேற்று சபையில் தாம் வலியுறுத்தியதாகவும் அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

An open letter to our newly minted President.

thayagam featured-president
Dear Mr.President,

It looks like an open season in Sri Lanka for presidents, past and present. There are gunmen and penmen (Shall I say, gunpersons and penpersons!) on the hunt for presidents. Those who lived by the sword should have known better. And those in the pursuit should better know now.

But what’s wrong with the penpersons?

You are flooded with open letters from everywhere. Santa wouldn’t get this many letters pre-christmas, ever. Yes, It was your fault. You opened the floodgate. You called on dissidents and intellectuals to come back. So instead of jumping and swimming to the shores of our motherland, they are testing the waters, with their open letters. (more....)

இன்று (21/01/2015) தோழர் லெனின் மறைந்த நாள்

மன்னர்களின் ஆட்சியை ஒழித்து தனது புரட்சிகர சிந்தனையால் மனிதகுலத்திற்கு மாபெரும் மாறுதலை கொண்டு வந்து மக்களால் மக்களுக்கான ஆட்சிமுறையை உருவாக்கிய புரட்சியாளர் தோழர் லெனினுக்கு வீரவணக்கம்!


"ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும், சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது.

ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம் பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை, முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது."

- தோழர் லெனின்

எண்ணெய் தோய்ந்த சுன்னாகம் மண்ணை இனி என்ன செய்யலாம்

(சி.சிவன்சுதன்)

சுன்னாகத்திலே பல கிணறுகளில் எண்ணெய்ப் படவங்கள் மிதப்பது தற்பொழுது ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. நிலத்தடி நீரில் கலந்திருக்கும் இந்த எண்ணெய்ப்படிவுகளால் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் தோன்றி இருக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள நிலத்தடி நீருடன் கழிவு எண்ணெய் எவ்வாறு கலந்தது? 1958 ஆம் ஆண்டிலிருந்தே சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் அகற்றப்படும் பொறிமுறையிலே ஏதாவது பிரச்சினைகள் இருந்தனவா? அல்லது இடைக் காலங்களிலே இந்த விடயங்களில் உரிய கவனம் செலுத்தப்படவில்லையா? அல்லது அண்மைக்காலத்து நடவடிக்கைகளில் ஏதாவது கவனக் குறைவுகள் இருந்தனவா? என்பன பற்றி எல்லாம் விவாதித்துக் கொண்டு இருப்பதிலும் பார்க்க, இந்த நிலையிலிருந்து மீட்சி பெறுவதற்கு இனி என்ன செய்யலாம் என்று சிந்திப்பது பயனுடையதாக அமையும். (மேலும்....)

ஜனவரி 21, 2015

யார் கிழக்கு முதல் அமைச்சர்

கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு தோல்வி

இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. முதலமைச்சர் பதவி தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படாததே இந்த தோல்விக்குக் காரணம் என இரு தரப்பும் கூறுகின்றன. (மேலும்....)

அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஒத்துழைப்போம்

வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் தமது தேசிய தலைவரை தேர்தெடுப்பதற்காக தீவிரமாக வாக்களித்தனர் - அநுர

நாங்கள் முன்பே முன்வைத்த தகவல் அறியும் உரிமையை உறுதியாக ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பை மாற்றும் நடிவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்' என்றும் கூறினார். நாடாளுமன்றத்தின் 2015ஆம் ஆண்டுக்கான கன்னியமர்வு நேற்று, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமானது. அங்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கன்னியுரையை ஆற்றினார். அதனையடுத்து கட்சித்தலைவர்கள் உரையாற்றினர். இதன்போதே அநுர குமார திசாநாயக்க, மேற்கண்டவாறு தெரிவித்தார்.கூட்டணியாக அமைக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி எங்களுக்கு தேவையில்லை என்பதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கொண்டு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மோசடி மற்றும் ஊழல்களில் ஈடுப்பட்ட அனைத்து நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதுடன் ஊழல் பற்றி ஜனாதிபதி தேர்தல் விவாத மேடையில் பரவலாக பேசப்பட்டது. அவை தொடர்பில் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சத்துக்கு தற்போது கொண்டுவரப்படுகின்றது. நாங்கள் முன்பே முன்வைத்த தகவல் அறியும் உரிமையை உறுதியாக ஆதரிப்போம். ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பை மாற்றும் நடிவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் தமது தேசிய தலைவரை தேர்தெடுப்பதற்காக தீவிரமாக வாக்களித்தனர்.

அரசில் தீர்வுக்கு முன்னுரிமையளிக்கவேண்டும் - நிமல்

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வளர்த்தெடுப்பதற்கு புதிய அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டுமென புதிய எதிர்க்கட்சித் தலைவரான நிமல் சிறிபால டி சில்வா கேட்டுக்கொண்டார். புதிய அரசாங்கம் தனது நூறுநாள் திட்டத்தை பூர்த்தி செய்ய தனது கட்சி ஒத்துழைக்கு என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தின் நேற்று ஆரம்பமான 2015ஆம் ஆண்டுக்கான கன்னியமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கான தீர்வை எவ்வாறாயினும் அடைந்தே தீரவேண்டும். சகல சமுதாயத்தினருக்கும் ஏற்புடைய தீர்வொன்று காணப்படவேண்டுமெனவும் அவர் கூறினார்.புதிய அரசினது, சகல தரப்பினரையும் அணைத்து செல்லும் கொள்கையை செயற்படுத்துவதற்கு, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீது அவிழ்த்து விடப்பட்டுள்ள வனடமுறை கட்டுப்படுத்தப்பட வேண்டுமென அவர் கூறினார்.

அரசியலமைப்பு திருத்தத்தில் ஒற்றையாட்சி தன்மை பேணப்படும் - ரணில்

அரசியலமைப்பு திருத்தங்களின் போது அரசியலமைப்பில் ஒற்றையாட்சி தன்மை பேணப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்றபின், தனது முதலாவது உரையை நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் நூறுநாட்கள் வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் முறைபற்றி அவர் தனது உரையில் விளக்கினார். 18ஆவது திருத்தத்தை வலுவிழகக் செய்த சுதந்திர ஆணைக்குழுக்களை மீளவும் அமைத்து 19ஆவது திருத்தம் மீளவும் கொண்டுவரப்படுமென அவர் கூறினார். நாடாளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் நிறைவேற்று அதிகாரங்களை கையளிக்கும் புதிய அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டு வரப்படும். இவற்றை செய்யும் போது அரசியலமைப்பின் ஒற்றையாட்சி இயல்பை பேணுவோம். இந்த கொள்கையடிப்படையில் 13ஆவது திருத்தம் செயற்படுத்தப்படுமெனவும் அவர் கூறினார். ஒரு புதிய அரசியல் கலாசாரத்துக்கான களம் அமைக்கப்பட்டுள்ளது. முரண்படும் போக்குக்கு பதிலாக இணங்கிச்செல்லும் போக்கு அரசியல் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார். இந்த நாடு அரசியல் பொருனாதார பிரச்சினைகளில் மூழ்கியுள்ளது. சர்வதேச மட்டத்திலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். இதையெல்லாம் தாண்டி நாம் முன்னேற வேண்டும்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து, தமிழீழத்தைத் தவிர மறுபேச்சுக்கு இடமில்லை

13 வருடங்களின் பின், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் `முன்னாள் செயலாளர்` மைத்திரிபால ஜனாதிபதியாகியிருக்கும் சூழலில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் மீண்டும் பிரதமராக, புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வில் இன்று ஆற்றிய சிறப்புரையில், `தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்காக 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வு திட்டம் தயாரிக்கப்படும்` எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தரப்பில் அடைந்திருக்கக் கூடிய அதியுச்ச அரசியல் தீர்வு கிடைக்ககூடிய வாய்ப்பைப் புறம்தள்ளி, ஒரு தோல்வி யுத்தத்தை மாவிலாற்றில் தொடங்கிய புலிகளின் தலைமை தமிழ் மக்கள் வாயில் மண்ணள்ளிப் போட்டது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து, தமிழீழத்தைத் தவிர மறுபேச்சுக்கு இடமில்லை என்ற ஒற்றை வரி அரசியல் கோட்பாட்டில் சுமார் 20 வருடங்கள் நீண்ட யுத்தத்தின் முடிவு, இறுதியில் தமிழ் மக்களை அரசியல் கையறு நிலைக்குள் தள்ளியுள்ளது. (மேலும்....)

பிரிக்கப்படாத நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - சம்பந்தன்

தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என நம்புகிறோம். அதற்கு நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு வழங்குவரென எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். தேர்தலின் பின்னர் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, புதிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எமது பாராட்டை தெரிவிக்கிறோம். எதுவித பலனும் எதிர்பார்க்காமலே நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினோம். மக்களின் உணர்வுகளுக்கு இடமளித்து செயற் பட்டோம். முழு நாட்டு மக்களுக்கும் தேர்தலின் போது சமமான வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரங்களுக்கு அரச அதிகாரம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஆர்வமாக வாக்களித்தார்கள். நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்த தமது ஒத்துழைப்பை வழங்கினார்கள். 100 நாள் திட்டத்தினூடாக முழு நாட்டிற்கும் நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பிரிக்கப்படாத நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். கடந்த 60 வருட காலத்தில் எமக்கு முன் பல அனுபவங்கள் காணப்படுகின்றன. நாடு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது. தமிழ் மக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அது குறித்து எமக்கு நம்பிக்கை உள்ளதோடு. நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் இதற்கு தமது ஆதரவை வழங்குவர் என எதிர்பார்க்கிறோம்.

பாராளுமன்ற தேர்தல் தொகுதிவாரி முறையில் நடைபெறாதென ஜனாதிபதி உறுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி தலைவர்களு க்கான விசேட கூட்டம் கடந்த (19) திங்கட் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட கூட்டத்தில் கட்சித் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான சுசில் பிரேம ஜயந்த, டி.யு.குணசேகர, தொண்டமான், அதாவுல்லாஹ், அனுர பிரியதர்சன யாப்பா உட்பட பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முதலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து உரையாற்றிய அவர், பாராளுமன்ற தேர்தல் தொகுதி முறைக்கு வருகின்ற பொழுது முஸ்லிம்கள் இந்த நாட்டிலே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்படும். முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்படும் நிலை தோன்றும். ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தொகுதிகளை பிரிப்பதற்கு தற்போது காலம் போதாத காரணத்தால் தற்போது அமுலில் உள்ள மாவட்ட மட்ட முறையில் தேர்தலை நடத்துமாறும் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல் லாஹ்வின் கூற்றை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தொகுதி முறையில் தேர்தல் நடைபெறாது எனவும் தற்போது அமுலில் உள்ள மாவட்ட மட்ட முறையே பின்பற்றப்படும் என ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

சகல தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு

பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் பிரகாரம், இந்த விபரங்களை திரட்டி தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களின் கவனத்துக்கு சமர்ப்பிக்கும்படி சபை செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். வருடக்கணக்கில் குடும்பங்களை பிரிந்து வாழும் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். தண்டனை பெற்றவர்களும் குறிப்பிட்ட காலம் புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும். வழக்குகளை எதிர்கொள்கின்றவர்களுக்கு பிணை வழங்கப்பட வேண்டும். அல்லது அவர்களும் புனர்வாழ்வு பயிற்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும். இவையே இந்த நீண்டகால பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்துவைக் கக்கூடிய வழிமுறைகள் ஆகும்.

எதிர்வுகூறல்களை அப்பா நம்பியிருக்கவில்லை

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எனது தந்தை எடுப்பார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட புதல்வி சத்துரிக்கா சிறிசேன


நாட்டில் கலவரம் வெடித்த சமயங்களில் கட்சித் தலைவர்களை உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றுவதற்கு தந்தை முன்னின்று செயற்பட்டார். சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் நம்பிக்கையுடன் செயற்பட்டார். யுத்தத்துக்கு முடிவு கட்டப்பட்ட கடைசி தினத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்தார். அந்த சமயத்தில் பாதுகாப்பு அமைச்சராக எனது தந்தையே செயற்பட்டார். யுத்த வெற்றி செய்தியை நாட்டு மக்களுக்கு வெளியிடாமல் நாட்டுத்தலைவர் திரும்பி வரும்வரை அதனை இரகசியமாக பாதுகாத்தார். எமது தந்தை அதுபோன்ற நேர்மையான மனிதர். (மேலும்....)

புதிய சூழலுக்குள் சகல சமூகங்களுக் கிடையிலும் மீள் இணக்கமும் சக வாழ்வும் உருவாக்க கூடியதான நல்லாட்சியை நோக்கி ......

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சாதகமான புரள்விற்கு தமது உயிரையும் எதிர்காலத்தையும் துச்சம் என மதித்து கைகோர்த்து செயற்பட்ட அனைவரினதும் ஒத்தாசையுடன் தேசிய நல்லிணக்கத்திற்கான வேலைதிட்டமொனறு உடனடியாக தொடங்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். பல தசாப்தங்களாக மக்கள் தமது மனங்களுக்குள் வைத்துக் குமையும் கவலை, வேதனை, ஒருவருக்கெதிராக மற்றவர் கொண்டிருக்கும் சந்தேகம், பகையுணர்வு அவற்றுக்கு வகைசெய்த காரணிகள் என்பவற்றை ஒன்றாக உட்கார்ந்து பேசவும் அதனை ஒவ்வொருவரும் செவிமடுக்கவும் அவசியமான ஒரு சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான இடைவெளியை ஏற்படுத்திக்கொள்ளல் வேண்டும். அதி தீவிவிரவாத கருத்துக்களினுள் ஆட்பட்டு மொழி, மதம், இனம் என்பவற்றின் பெயரால் சமூகங்கள் என்ற வகையில் நாம் ஒருவரை ஒருவர் மிக மோசமாக காயப்படுத்திக் கொண்டுள்ளோம். இம்சைக்கு உட்படுத்தியுள்ளோம். அக்காயங்களை ஆற்றுவதை விடுத்து அவற்றை நியாயப்படுத்தவும், அவற்றைக் கண்டு மகிழவும், அக்காயங்களை மென்மேலும் கிளறி விட எங்களை ஊக்குவிகின்ற அரசியல் சூழலுகுள் வாழவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். இருந்தாலும், இன்று நாம் ஏற்படுத்திக்கொண்டுள்ள இந்த புதிய சூழலுக்குள் சகல சமூகங்களுக் கிடையிலும் மீள் இணக்கமும் சக வாழ்வும் உருவாக்க கூடியதான நல்லாட்சியை நோக்கி நகர இந்த புதிய அரசுக்கு அழுத்தம் இடக்கூடியதான வேலைதிட்டமொன்றை உடனடியாக தொடங்க வேண்டியது அவசியமாகும் - Mano Ranjan

இலங்கை அகதிகளை அழைத்து வர நடவடிக்கை

தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை ஆகியோருக்கு இடையில் சந்திபோன்று நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போதே மேற்கண்ட இணக்கம் எட்டப்பட்டதாக எமது சென்னை செய்தியாளர் தெரிவித்தார். இதற்கான பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி மாற்றப்பட்டார்!

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வடக்குமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் முரண்பட்ட இவர், மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரான விஜயலட்சுமியை மாற்றம் செய்யும்படி முன்னைய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலதடவை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இவர் அந்தப் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சீன உதவித் திட்ட மீளாய்வு குறித்த கருத்து நிராகரிப்பு

இலங்கையில் சீனாவின் உதவித் திட்டங்கள் மீளாள்வு செய்யப்படும் என்ற கருத்தை சீனா நிராகரித்துள்ளது. இலங்கைக்கும் தமது நாட்டுக்கும் இடையிலான உறவு தொடர்ந்தும் சீரான முறையில் பேணப்படும் என்று சீன அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையும் சீனாவும் நட்புரிமை நாடுகள். இரண்டு நாடுகளும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வந்ததாக சீன வெளியுறவு செயலாளர் ஹொங் லீய் நேற்று சீன தலைநகர் பீஜிங்கில் வைத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த புரிந்துணர்வு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் 1.4 பில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படும் போட் சிட்டி நிர்மாணம் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மீளாய்வுக்கு உள்ளாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையிலேயே சீனாவின் உத்தியோகபூர்வ பதில் வெளியாகியுள்ளது.

ஜனவரி 20, 2015

மைத்திரிபால சிறிசேன இராஜினாமா

புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைஇராஜினாமாச் செய்துள்ளார். தற்பொழுது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான மைத்ரிபால சிறிசேன, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டு நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படமை குறிப்பிடத்தக்கது.
 

இலங்கை இறுதி யுத்தம்

இலங்கை இராணுவம் வென்றது எப்படி?

(பிரபாகரனின் இறுதி நாட்கள் என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் ஆங்கில நூலின் தமிழாக்கத்தின் ஒரு பகுதி
இறுதி நாள் -19 மே 2009)

தங்கள் இறுதி இலக்குக்கு மிக மிக அருகில் வந்துவிட்டோம் என்று படைகளுக்குப் புரிந்துபோனது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தன் அணியின் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் நெருக்கமாகப் பார்த்து வந்தார். அவர் உடனேயே சார்ஜண்ட் விஜேசிங்கவின் ஆட்களைத் தடுப்பு வியூகத்தில் நிற்கச் சொன்னார். தப்பிச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைக்குமாறு கூறினார். 8 பேர் அடங்கிய தரைப்படைக் குழு ஒன்றும் நால்வர் அடங்கிய டாஸ்க் போர்சும் விஜேசிங்கவின் குழுவுக்குப் பக்க பலமாக உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த இரண்டாவது குழுவுக்கு சார்ஜண்ட் டி.எம்.முத்துபண்டா தலைமை தாங்கினார். இந்த அணியினர் முன்னேறும்போது மீண்டும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமானது. கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சதுப்பு நிலக்காட்டில் அமைதி. இரு அணிகளும் மிகவும் மெதுவாகப் புதர்களுக்கு இடையே முன்னேறினர். 18 இறந்த உடல்கள் கிடைத்தன. அதில் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஒருவர். இலங்கை அரசை 30 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்தவர். அப்போது காலை 8.30 மணி.19 மே 2009. (மேலும்....)

மேர்வினின் கருத்து தொடர்பில் விசாரிக்குமாறு ஹிருணிகா முறைப்பாடு

தனது தந்தையான பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்து பற்றி, விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி, மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்திலும் அங்கொடை பொலிஸ் நிலையத்திலுமே இவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இந்த கொலை சம்பவத்துக்கும் ஏனைய முக்கிய சில கொலைகளுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே ஆசிரியர் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த வாரம் தெரிவித்திருந்தார். கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கடந்த சனிக்கிழமை முறைப்பாட்டை செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியிருந்தார். இதனையடுத்து, தனது தந்தையின் படுகொலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி ஹிருணிக்கா முறைப்பாடு செய்துள்ளார்.
 

கே.பி.க்கு எதிராக வழக்குத் தொடரும் ஜேவிபி

விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு, தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குமரன் பத்மநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜேவிபி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது. ராஜீவ் கொலை விசாரணைக்காக இந்தியாவின் சிபிஐ இண்டர்போலின் உதவியை கோரியுள்ளது யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் என்று தன்னை அறிவித்துக் கொண்ட குமரன் பத்மநாதன் மீது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற ரீதியில் அவர் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கின்ற வழக்கு நடவடிக்கை தொடர்பில் குமரன் பத்மநாதனுடன் தமிழோசை தொடர்புகொண்டு கேட்டபோது, அதுபற்றி தற்போது கருத்துக்கூற முடியாது என்று கூறிவிட்டார்.

அதிகளவு சுயாட்சி வழங்க அரசாங்கம் தயார் - பிரதமர் ரணில்

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அதிகளவிலான சுயாட்சியை வழங்குவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.  இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி சனல் என்.டி.டிவிக்கு அளித்திருக்கும் விஷேட பேட்டியிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பின்வாசல் வழியாக கைகோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டார்.
ராஜபக்ஷ காலத்தில் சீனாவுடன் செய்து கொண்ட பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை நாங்கள் மறுஆய்வு செய்ய உள்ளோம். விடுதலை புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது இழைத்த குற்றங்களுக்காக ஐ.நா.நடத்தும் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை அளிக்கும். இதுவரை மகிந்த ராஜபக்ஷ அதற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்துவந்தார். இனிமேல் அது நடக்காது. கொள்கைரீதியாக தமிழர் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு முழு சுயாட்சி உரிமையை வழங்க எங்கள் அரசு தயாராக உள்ளது எனவும் ரணில் தெரிவித்தார்.

மணல் சேவை வைப்புப் பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளது - மகேஸ்வரி நிதிய செயற்திட்ட இணைப்பாளர்

மகேஸ்வரி நிதியத்தினூடாக பாரவூர்தி உரிமையாளர் சங்கத்திலிருந்து விலக விரும்புபவர்களுக்கு மணல் சேவை வைப்புப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக நிதியத்தின் செயற்திட்ட இணைப்பாளர் றஜீவ் தெரிவித்துள்ளார். மகேஸ்வரி நிதியத்தினூடாக மணல் ஏற்றி இறக்குவதற்கு 500க்கும் மேற்பட்ட பாரவூர்தி உரிமையாளர்கள் பாதுகாப்பாக ரூபா 5000 செலுத்தியிருந்தனர். இந்நிலையில் குறித்த சேவையிலிருந்து விலக விரும்பும் உரிமையாளர்களுக்கு அடுத்த 2ம் திகதி முதல் கட்டம் கட்டமாக பணம் மீளளிப்பு செய்யப்படவுள்ளதாக திட்ட இணைப்பாளர் றஜீவ் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிச்சயமற்ற நிலைமை

மைத்திரிபால, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். அக் கட்சியைச்சேர்ந்த சிலர் அவரது அமைச்சரவையிலும் இருக்கிறார்கள். அக் கட்சியின் பெரும்பாலானவர்கள் எதிர்க் கட்சியில் இருக்கிறார்கள். அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் எந்தப் பக்கத்தில் அமரப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. மறுபுறத்தில் இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டில் சகல கட்சிகளினதும் ஆதரவு இருப்பதால் அவர் விரும்பினால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்தல் உட்பட சகல தேர்தல் வாக்குறுத்களையும் நிறைவேற்ற முடியும். அல்லது நன்றி கெட்டவராக ஐ.தே.க.வை கைவிட்டு ஸ்ரீ.ல.சு.க., மு.கா, ஹெல உறுமய போன்ற கட்சிகளோடு சேர்ந்து கடந்த நவம்பர் மாதத்துக்கு முன்னர் இருந்த நிலைமையை உருவாக்கவும் முடியும். வாக்குறுதிகளை உதறித் தள்ளி விடவும் முடியும். எல்லாம் அவரது விருப்பத்திவேயே தங்கியிருக்கிறது. ஆனால், அதன் பிரதிபலனையும் அவர் அடுத்த பொதுத் தேர்தலின் போதும் ஜனாதிபதித் தேர்தலின் போதும் அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும். (மேலும்....)

குண்டுகள், தோட்டாக்களால் சேதமாக்க முடியாத தனி காரில் ஒபாமா வருகை

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தலைநகர் டில்லியில் 26-ந் திகதி நடைபெறுகிற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் மனைவி மிச்செல், உயர் மட்ட தூதுக் குழுவினருடன் 25-ந் திகதி தனி விமானம் மூலம் டில்லி வந்து சேர்வார். ஒபாமாவின் வருகையையொட்டி டில்லியில் குடியரசு தின விழாவுக்கு வரலாறு கண்டிராத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக குடியரசு தின விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள தலைமை விருந்தினர், ஜனாதிபதியுடன் அவரது குண்டு துளைக்காத காரில் வருவது வழக்கம். ஆனால் ஒபாமா தனியாக தனது காரில் வந்து சேருவார் என தகவல்கள் கூறுகின்றன. ஒபாமா பயணம் செய்ய குண்டு துளைக்காத கார் வரவழைக்கப்படுகிறது. இந்த காரின் டயர், டீசல் டேங்க் போன்றவையும் துப்பாக்கியால் சுட முடியாத அளவுக்கு பாதுகாப்பு கவசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.  தீ பீஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த கார் 18 அடி நீளமும் 8 தொன்கள் எடையும் கொண்டது. எட்டு அங்குல தடிப்பமும் கொண்டது. இந்த காரின் எடை போயிங் 757 விமானத்தை விட அதிக எடை கொண்டது என்று கூறப்படுகிறது. பஞ்சர் ஆகாத வகையில் இந்த காரின் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒட்சிசன் தாங்கிகளும் தீயணைப்பு கருவிகளும் உள்ளன. மேலும் இரவையும் துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் கெமரா அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இரகசிய சேவையில் பயிற்சி பெற்ற நபர்தான் இந்த காரை இயக்குவார். அதிவேகமாக ஓட்டுவதுடன் 180 டிகிரி கோணத்தில் காரை திருப்பும் பயிற்சியும் இவர் பெற்றிருப்பார்.

இராயப்பரின் இராஜ விசுவாசம்

இராயப்பரின் இராஜ விசுவாசம். ஒரு புறம் மத்தியில் ஏற்பட்டுள்ள பேரசுக்கானது மறுபுறம் வடக்கை ஆளும் சிற்றரசு மீதான இராஜ விசுவாசம். போங்கள் இராஜப்பரின் இராஜ விசுவாசம் எல்லோரையும் புழகாங்கிதம் அடைய வைத்து விட்டது. வன்னியை பிரபா அரசன் ஆண்டபோது காட்டிய இராஜ விசுவாசத்தைவிட இந்த புதிய இராஜ விசுவாசம் விஞ்சிவிட்டதாக தாயக உறவுகள் பேசிக்கொள்கின்றன. கொடிய யுத்தமானது ஆரம்பித்த காலம் முதற்கொண்டு எமது இளைஞர், யுவதிகள் பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமற்போயிருந்தனர் . இதனால் காணா மற்போனோரின் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியதுடன் அவர்களது குடும்பபங்களும் மிகவும் கஷ்டத்திட்குள்ளாகியது. (மேலும்....)

மரண அறிவித்தல்

திரு சூசைபிரகாசம் மனுவல்பிள்ளை
(சின்ராசா மாஸ்டர், ஓய்வுபெற்ற ஆசிரியர்- நெடுந்தீவு, அனலைத்தீவு, றாகலை, கினிகஸ் தென்ன, St.Charles யாழ்ப்பாணம்)
பிறப்பு : 14 டிசெம்பர் 1930 — இறப்பு : 14 சனவரி 2015

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூசைபிரகாசம் மனுவல்பிள்ளை அவர்கள் 14-01-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரகாசம் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், மாட்டீன், Dr.சவேரியன், சிறில் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளம்மா, பொலின், காலஞ்சென்ற றொமீனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனிவா, நிறஞ்சனி, நந்தினி, விஜிதா, சுஜிதா, றஜிதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பெர்ணடேட், றெசின், யூலியட், பிரேமா, டங்கன் வைற் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் நல்லடக்க ஆராதனை யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் 17-01-2015 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பேராலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

கிழக்குமுதலமைச்சர் விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமேயில்லை!

கிழக்குமுதலமைச்சர் விடயம் ஒரு பேசுபொருளல்ல. அவ்விடயத்தில் விட்டக்கொடுப்புக்கு இடமேயில்லை.ஆளும் மத்திய அரசாங்கம் தார்மீகஅடிப்படையிலியங்கி கிழக்கில் நல்லாட்சிக்கான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும்.நாம் எந்தவொரு இனத்திற்கும் பாதிப்பேற்படாதவகையில் ஆட்சிநடாத்துவோம். இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் த.தே.கூட்டமைப்பிற்கும் மு.கா.விற்கும் இழுபறி நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றனவே இது பற்றித் தங்களின் கருத்து என்ன என்றுகேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறிப்பிட்டார். (மேலும்....)

நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்று

நாடாளுமன்றத்தின் 2015ஆம் ஆண்டுக்கான கன்னியமர்வு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30க்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகும். அதனைதொடர்ந்து, ஆளும் கட்சியின் பிரதம கொறடா,சபை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் இறுதியமர்வு கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டதுடன் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வடமாகாண முன்னாள் ஆளுநரின் கீழிருந்த பணிகள் மாற்றம்

வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கீழ் இருந்த விடயதானங்களில் வடமாகாண சபையின் கீழ் மாற்றம் செய்வதற்கு வடமாகாண உறுப்பினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு 89 ஆயிரத்து 169 மில்லியன் ரூபாய் ஆக இருந்த செலவினம் 2015ஆம் ஆண்டில் 132 ஆயிரத்து 917 மில்லியன் ரூபாய் என அதிகரித்தமைக்கான புதிய செயற்றிட்டங்களை வடமாகாண சபையின் கீழ் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.பிராந்திய ஆணையாளர் என்ற பதவி வகித்து தற்பொழுது உதவிச் செயலாளர்களாகப் பணியாற்றுவோர் ஆளுநர் செயலகத்திலிருந்து மாகாணப் பொது நிர்வாகப் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். இவர்களுக்கான ஆளணி, ஆளுநர் செயலகத்துடன் இணைந்துள்ளதால் இந்த மாற்றத்துக்கான அங்கிகாரத்தை புதிய ஆளுநர் ஒப்புதலுடன் முகாமைத்துவ மாகாணப் பொது நிர்வாகப் பகுதியிடம் இருந்து பெற்றுக்கொள்ளுதல்.ஆளுநர் செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள வடமாகாண இணையத்தளம் முன்பிருந்தது போல திட்டமிடல் பகுதிக்கு மாற்றப்படுதல். இந்த மாற்றங்கள் தொடர்பான விடயங்கள் வடமாகாண ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பதவி இல்லையாம் கணவன் எதற்கு! மகிந்தவின் மனைவி

பெண்களின் குணத்தை தானும் காட்டியுள்ளார் மகிந்தவின் மனைவியான ஷிரந்தி. கணவனுக்கு பதவி இல்லாது போனவுடன் கணவன் கசக்கத் தொடங்கிவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அவரது மனைவி ஷிரந்தி, தனியாகப் பிரிந்து வசிப்பதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினுள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஹம்பாந்தோட்டைக்குச் சென்றடைந்த பின்னர் ஷிரந்தி ராஜபக்ஷ தனது கணவருடன் முரன்பட்டதாகத் தெரியவருகின்றது. தற்போதைய நிலையில் கொழும்பு அருகேயுள்ள ஒரு மாளிகையில் தனது மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவுடன் ஷிரந்தி தனியாக வசித்துக் கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்தவுக்கு நெருக்கமான சிலர் ஷிரந்தியை சமாதானப்படுத்த முயற்சிகளை மேற் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே புனித பாப்பரசரின் வருகையின் போது அவரைச் சந்திக்கும் சாக்கில் ஷிரந்தியுடன் சமாதானமாகும் முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ஷ நேரடி முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கத்தோலிக்க மதத்தவரான தனது மனைவி தன்னுடன் இணைந்து பாப்பரசரை சந்திக்க வரக் கூடும் என்று எதிர்பார்த்த மஹிந்தவுக்கு கடைசியில் ஏமாற்றமே எஞ்சியுள்ளது.சிராந்தி பாப்பரசரை சந்திக்க மட்டும் மகிந்தருடன் இருந்துவிட்டு அப்புறம் சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அரசாங்க விடயங்களில் முக்கியத்துவம் வழங்கியமை காரணமாகவே மஹிந்த தோற்றுப் போக காரணமாக அமைந்தது என்பதுதான் ஷிரந்தியின் கோபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. 2005ம் ஆண்டின் ஆரம்பம் தொட்டே கோத்தபாய மற்றும் பசில் ஆகியோரின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்

மஹிந்த ராஜபக்ஷ இவ்வளவு அமைதியாகக் கவிழ்க்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை, அவரும் கூடத்தான். அவர் இவ்வளவு அமைதியாக ஆட்சிப்பொறுப்பை மைத்திரியிடம் கையளிப்பார் என்றும் அநேகமானவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலில் அவர் தோற்றால் ஆட்சிப்பொறுப்பை கையளிக்க மறுத்து படைத்தரப்பின் உதவியைப் பெறக் கூடும் என்றவாறான ஊகங்கள் ஏற்கனவே மேற்கத்தேய தூதரகங்கள் மத்தியில் காணப்பட்டன. சக்திமிக்க நாடொன்றின் தூதுவர் இது தொடர்பாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரோடு உரையாடியிருக்கிறார்.
ஆனாலும், கத்தியின்றி இரத்தமின்றி ஆட்சிமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அது மட்டுமல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான பிடியை அவர் அமைதியாகக் கைவிட்டதும் இதற்குள் அடங்கும். (மேலும்....)

பசிலும், மனைவியும் மற்றுமொரு சிக்கலில் சிக்கினர்! உதவிய அதிகாரிகளும் மாட்டினர்

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவியை சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு அனுப்பி வைத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய மற்றும் முகாமையாளர் சேன நந்திவீர ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விமான நிலைய தொழிற்சங்கங்கள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரபுக்கள் பகுதியில் பயணம் செய்வதற்கு உரிய அனுமதி பெற்றுக்கொள்ளாது பசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய பிரபுக்கள் பகுதியில் பயணம் செய்ய வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சு அல்லது நாடாளுமன்றின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். விமான நிலையத்தின் தலைவர் பிரசன்னவின் அறிவுறுத்தலுக்கு முகாமையாளர் சேன சந்திவீரவின் கையொப்பத்துடன் பசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஒருவரும் அவரது மனைவியும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும் அதற்கு விமான நிலைய நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் எழுத்து மூலம்தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்குமா?
 

1983 ல் எம்.ஜி.ஆர் அனைத்து இயக்க பிரதிநிதிகளையும் கோட்டையில் சந்தித்தார். அப்போது அவர் புளட் இயக்க ஆதரவாளராக இருந்தமையினால் எல்லா இயக்கங்களையும் புளட் இயக்கத்தில் சேரும்படி ஆலோசனை கூறினார். அவருடைய ஆலோசனையை ஒரு இயக்கமும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது பாலஸ்தீன விடுதலை அமைப்பு போல் எல்லா இயக்கமும் ஒரு குடையின் கீழ் வருவதாகவும் அதனை இந்திய அரசு அங்கீகரிக்க அவர் வழி செய்ய வேண்டும் எனவும் இயக்கங்களின் சார்பில் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் அதில் விருப்பம் காட்டவில்லை. (மேலும்....)

தமிழ் மொழியின் சிறப்புகளில் சில......

* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில்
"பாளையகரர்கள் நுழை வாயில்"
என்று தமிழில்எழுதபட்டிருக்கும்.
* கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்ற
என்பது பொறிக்கபட்டிருகும்.
* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்..
* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டுள்ளது
* உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாகஅதி
கமாகமொழி பெயர்க்கப்பட்ட நூல்
திருக்குறள்..

ஜனவரி 19, 2015

கிழக்கு முதலமைச்சர் விவகாரம்

ஜனாதிபதியுடன் ரி.என்.ஏ இன்று பேச்சு


கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட புதிய ஆட்சி அமைப்பு விவகாரம் தொடர்பாக இன்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரட்ணம் தெரிவித்தார். கிழக்கில் தமிழ் மக்கள் சார்பாக 11 உறுப்பினர்கள் மாகாண சபையில் உள்ளனர். இருந்தும் கடந்த கலங்களில் இந்த சபை தமிழ் மக்கள் விடயத்தில் மிகவும் பொடுபோக்குத்தனமாக நடந்துகொண்டமை வேதனைக்குரிய தமிழ் மக்களின் அபிவிருத்தியிலும் நியமனத்திலும் இடமாற்றத்திலும் கிழக்கில் பாரிய புறக்கணிப்புகள் நடந்தேறின. கிழக்கில் குரல் கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் இம்முறையும் அதேபோன்றதொரு தவறைச் செய்ய நாம் விரும்பவில்லை. எனவே ஜனாதிபதி பிரதமரிடம் இது பற்றிக் கூறி தார்மீகக் கடமையைச் செய்யுமாறு வேண்டவுள்ளோம். சிலவேளை அரைவாசிக் காலத்திற்கு எம்மையும் மீதிக் காலத்திற்கு மு. க.வும் முதலமைச்சர் பதவியை வகிக்குமாறு கோரப்படுமாயின் எமக்கே முதல் காலப் பகுதி வழங்கப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாகவிருக்கின்றோம்.
 

பேச்சுக்கு நாம் தயார், தீர்வுத் திட்டத்தை உருவாக்க அரசு தயாரா - கூட்டமைப்பு
தீர்வுத் திட்டம் சம்மந்தமான வரைபு கூட்டமைப்பிடம் உள்ளதா...? - பொது மகன்


இலங்கை கேட்கும் அத்தனை திட்டங்களையும் செய்து கொடுத்தார்கள். அதில் பல கோடிகள் அப்போது இருந்தவர்களின் சட்டைப்பைகளுக்குள் போயிருந்தன. ஆனால், இந்த ஆட்சி மாற்றத்தின் பலனாக அதிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது சீனாவின் விடயங்களை மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது தற்போதைய அரசு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் ஒரு வருட காலத்தில் 18 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் கிடைக்கவில்லை. நாம் தீர்வு திட்டத்தை கொடுத்த போது அரசு அதற்கு கருத்தை சொல்லாதிருந்து, தெரிவுக்குழுவுக்கு வருமாறே அழைத்தனர். தற்போதைய அரசிலும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்வுக்கான எந்த சொற்றொடரும் கிடையாது. குறைந்தது தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்கும் வேலைத்திட்டம் கூட அதில் கிடையாது. ஆனால், தேர்தலுக்கு பிற்பாடு சம்பந்தன், சுமந்திரன் மற்றும் நான் உட்பட ஜனாதிபதியையும் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திரிக்காவையும் சந்தித்தோம். அதன்போது எமது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி சொல்லியிருக்கின்றோம்.

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை இடைநிறுத்தம்

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நெடுஞ்சாலைக்கான முழுமையான செலவுகளை ஆராய்ந்து பார்ப்பதற்காவே இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் செங்கடகல நுழைவாயிலுக்கான அடிக்கல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாட்டப்பட்டது. 300 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த நெடுஞ்சாலையானது, நான்கு கட்டங்களாக நிர்மாணிக்க ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக, என்டேரமுல்லயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலும், இரண்டாம் கட்டமாக குருநாகல் முதல் பெலெந்தெனிய வரையிலும், மூன்றாம் கட்டமாக தம்புள்ளை வரையிலும் நான்காம் கட்டமாக தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் நிர்மாணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த திட்டத்தை அமுலாக்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும்என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
 

சுரேஸுக்கு ஆனந்த கண்ணீர், சுமந்திரனுக்கு சோக கண்ணீர்!

சுமந்திரன் மீது சுரேஸ் பாய்ச்சல் …………………?

(அருந்ததி)

அமைச்சுப்பதவி என்றால் அதன் மீது ஒட்டுண்ணி போல் ஒட்டிக் கொள்ளவே சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அலாதிப்பிரியம். தனக்கு கிடைக்காத அமைச்சு வேறு ஒருவருக்கும் கிடைக்க கூடாது என்பதே அவரது விருப்பம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை ஆட்சி உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அப்போது இந்திய தூதுவராக இருந்தவர் டிக்ஸித். கொழும்பு இந்திய தூதகரத்தில் வடக்கு கிழக்கு மாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஒரு கூட்டம் நடந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபாதான் முதலமைச்சர் என்றார் டிக்ஸித். ஆனாலும் அதை பெருந்தன்மையோடு பத்மநாபா ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து துள்ளி குதித்த சுரேஸ் தானே முதலமைச்சர் என்றார். அதற்காக டிக்ஸித்தின் காலைப் பிடிக்காத குறையாக தன்னையே முதலமைச்சராக நியமிக்குமாறு மன்றாடினார். ஆனாலும் அதை ஏற்க மறுத்த டிக்ஸித் வரதராஜப்பெருமாளே முதலமைச்சர் என்று உறுதிபட தெரிவித்து விட்டார்.(மேலும்....)

தொளிலாளர் நலன்களுக்கு ஆப்பு வைக்கும் உத்தரவு


மக்கள் தேவைகளை நிறைவேற்றாத அரசாங்க அதிகாரிகளுக்கு தண்டனை
 

பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முன்வந்துள்ளது.தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியவாறு நல்லாட்சி வேலைத் திட்டத்தின் முக்கிய அங்கமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இத்திட்டம் அமுலாகும். கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும். கடிதம் கிடைக்கும் மொழியில் பதில் அனுப்பப்பட வேண்டும். அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளுக்குக் கிடைக்கும் தொலைபேசி அழைப்புக்கு பதில் கூறாமல் கூட்டம், மாநாடு என்று பதில் வழங்கும் அதிகாரிகள் தொடர்பாக உடன் முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

கட்சித் தாவல்களை மேற்கொண்டால் பதவிகள் ரத்து

கட்சித் தாவல்களை மேற்கொள்ளும் உறுப்பினர்களின் பதவிகளை ரத்துச் செய்வதற்கான புதிய சட்ட திட்டங்களை வரைவதற்கு தேசிய நிறைவேற்றுச் சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. இரட்டைப் பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு தேசிய, பிரதேச தேர்தல்களில் போட்டியிட முடியாதெனக் கூறும் சட்டங்களைக் கொண்டு வருவதும் தொடர்பாகவும் ஆராயப்பட்டு ள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது. இந்த நிறைவேற்றுச் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாதுலுவாவே சோபித தேரர், பாட்டலி சம்பிக்க ரணவக்க, அநுர குமார திசாநாயக்க. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரவூப் ஹக்கீம், ஆர். சம்பந்தன். சரத் பொன்சேகா, மனோ கணேசன். ரிசாட் பதியுதீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நாளை 20 ஆம் திகதி இச்சபை ஜனாதிபதி செயலகத்தில் மீண்டும் கூட உள்ளது.

அமெரிக்க கோரிக்கையை இந்தியா நிராகரிப்பு

குடியரசு தின விழாவின் போது ராஜ் பத் பகுதியில் 5 கி.மீட்டர் சுற்றளவுக்கு விமானங்கள் பறக்க தடைவிதிக்க வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. டெல்லியில் எதிர்வரும் 26ந் திகதி நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் தனது மனைவி மிச்செல்லுடன் 25-ந் திகதி டெல்லி வருகிறார். ஒபாமா வருகையை யொட்டி டெல்லியில் ஒரு மாதத்துக்கு முன்பே பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதை டெல்லி பொலிஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 5 கி.மீ. சுற்றளவுக்கு பொலிஸார் கடுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். விழாவில் ஒபாமா கலந்து கொள்ளும் நேரத்தில் ராஜபாதையில் 5 கி.மீ. சுற்றளவுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்க முடியுமா என்று ஒபாமா பாதுகாப்பு அதிகாரிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
 

ஜனவரி 18, 2015

போவோமா ஊர்கோலம்.....

யாழ்ப்பாணம் கைதடி

மஹிந்தவின் தோல்வியில் 'றோவின் வகிபாகம்'

ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு, வேலை செய்ததாக கூறப்பட்டு, இந்திய உளவு ஸ்தாபனமாகிய றோவின் கொழும்பு தலைமை அதிகாரியை இலங்கை அகற்றியது என ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு, புதுடெல்லியிலுள்ள பல தகவல் மூலங்கள், உற்சாகம் அளித்துடன் தேர்தல் சமயத்திலும் அவருக்கு உதவி வழங்கியதால், றோவின் முகவரை மீளப்பெறுமாறு இந்தியாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளன. இந்தியாவின் பகைமையுடனான சீனாவின் பக்கம் முன்னாள் ஜனாதிபதி சாய்ந்தமையினால், இலங்கை மீது இந்தியாவின் செல்வாக்கு குறைவாகப்பேசப்பட்ட சமயத்தில், ராஜபக்ஷ எதிர்பார்க்காத விதத்தில் தோற்றப்பட்டார். மைத்திரிபால சிறிசேன உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற தூண்டியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடாது இருக்க தீர்மானிக்க வைத்து, வெல்லக்கூடியவரும் இந்தியாவுடன் ஒத்துபோகக்கூடியவருமான ஒருவரை களத்திலிறக்க உதவினார் என்றும் இலங்கையின் றோவின் தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. றோ உளவு நிறுவனம் ரணிலை சந்தித்து கட்சித்தலைவர்களை தூண்டி சந்திரிக்காவையும் கொண்டுவந்தது என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ராய்டருக்கு கூறினார்.
 

சோதனை மேல் சோதனை மகிந்தவுக்கு..

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய யாப்பின் படி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருவர் அதிபராக தேர்வாகும் போது அவருக்கு அதன் தலைமை பதவி உரித்தாகும் என - மகிந்தவால் சட்டம் மாற்றப்பட்டது. இது சந்திரிகாவை கட்சியிலிருந்து ஒதுக்குவதற்காக மகிந்தவால் மாற்றப்பட்டது. எனவே அப் பதவி இப்போது மகிந்தவுக்கு ஆப்பாகி மைத்ரி வசம் வந்துள்ளது. மைத்ரி பொது அபேட்சகராவதற்கு முன்னர் - எந்தவொரு கட்சியிலும் அங்கத்துவம் இல்லாமல் இருத்தல் வேண்டும் எனும் நடைமுறையிலே அதிபராக போட்டியிட உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இது ரதண -ரணிலுடன் கூடிய ஒரு ரகசிய ஒப்பந்தம். வெளியே வரவில்லை. இப்போது மைத்ரி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கிடைத்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை பதவியை - யாப்பை மாற்றி சந்திரிகாவுக்கு கொடுக்கவுள்ளார். மகிந்த ஒன்றை நினைக்க மைத்ரி ஒன்றை செய்கிறார். சந்திரிகாவை இல்லாமல் செய்ய - செய்த வலையில் மகிந்த. சந்திரிகா மீண்டும் கட்சி தலைமைக்கு பொறுப்பேற்கவுள்ளார். ம்ம்ம்....

காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக்கப்பல்

காலி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மஹநுவர கப்பலில் உள்ள 12 கொள்கலன்கள்களில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆயுத களஞ்சியசாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.எஸ்.டீ.எஸ் குணவர்தனவுக்கு இன்று நண்பகல் தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் அடிப்படையில் நங்கூரமிடப்பட்டிருந்த மஹநுவர கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  அந்த கப்பல், எவன்காட் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால் குத்தகைக்கு பெறப்பட்டதாகும். அந்த கப்பலில் ஆயுதங்கள் பல இருந்தன. ரி-56 ரக துப்பாக்கிகள், மெஷின் கன், 84 எஸ் ரய்பில் எனும் ஆயுதம் மற்றும் தன்னியக்க ஆயுதங்கள், அரைவாசி தன்னியக்க ஆயுதங்கள் உள்ளிட்ட 3,000 ஆயுதங்கள் இருந்ததாக அந்த கப்பலுக்கு பொறுப்பாக இருந்தவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதிபெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதற்குள் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
 

இன்னும் இரண்டு கொள்கலன்கள் சிக்கின

ஜனாதிபதி மாளிகையிலிருந்த சில பொருட்கள் அடங்கிய இன்னும் இரண்டு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பேலியகொடை-நீர்கொழும்பு வீதியிலுள்ள ஓரிடத்தில் வைத்தே இவ்விரு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்விரு கொள்கலன்களிலும் ஆடைகள், மர தளபாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருந்துள்ளன. அந்த கொள்கலன்களுடன் சென்ற அதிகாரிகளிடம் இதுதொடர்பில் விசாரணை நடத்தியபோது, அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய குடும்பத்தின் தனிப்பட்ட பொருட்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
 

யாழ் வடமாராட்சி கிழக்கில்

மகேஸ்வரி நிதியத்தின் மணல் அகல்வுக்கு இடைக்காலத் தடை

யாழ்.வடமராட்சி கிழக்கில் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் முறையற்றவகையில் பெறப்பட்டுள்ளதாக மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்கும், அகழப்பட்ட மணலை அள்ளுவதற்கும் காவல்துறை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. குடத்தனை, அம்பன், நாகர்கோவில் பகுதிகளில் ஈ.பி.டி.பி அமைப்பின் மகேஸ்வரி நிதியத்தினால் கடந்த சில வருடங்களாக சட்டத்திற்கு மாறான வகையிலும், வழங்கப்பட்ட நியமங்களை மீறியும் மணல் அகழப்பட்டுவந்ததாக மக்கள் மற்றும் அரசியல் தரப்புக்களால் குற் ற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அம்பன் பகுதியில், தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து வடமராட்சி கிழக்கில் சட்டத்திற்கு மாறான வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வினை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் மற்றும் உழவு இயந்திர உரிமையாளர்களுடன் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றிணை நடத்தியிருந்தனர். (மேலும்....)

யாழ் மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சனைக்காக வீதியில் இறங்கியுள்ளனர்

வலி.வடக்குப் பிரதேசத்தில் கழிவு எண்ணெய் பரவலால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை 8.30 மணி தொடக்கம் சுன்னாகம் மின் நிலையம் முன்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுன்னாகத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையம் கழிவு எண்ணெயை நிலத்தின் கீழ் செலுத்தியமையால் சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம், உடுவில் பிரதேச மக்களின் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்தது. இந்தக் கழிவு எண்ணெய் நீரைப் பயன்படுத்தினால் தோல் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய், மலட்டுத்தன்மை, குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதுடன் வேறு பல நோய்கள் ஏற்படும் என சுகாதாரப் பகுதியினர் எச்சரித்தனர். ஆனால் இந்தப் பிரச்சினைகள் குறித்து அரசியல்வாதிகளோ, அரச உயர் அதிகாரிகளோ கண்டு கொள்ளவுமில்லை. நடவடிக்கை எதுவும் எடுக்கவும் இல்லை. இதனைக் கண்டித்தும், இந்தப் பிரச்சினைகள் குறித்து உடனடிக் கவனம் எடுக்குமாறு கோரி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


இலங்கை 2015 தேர்தல் - சில அவதானங்கள்.

பாசிச கிட்லரின் தொடர்மரபுதான் (Legacy) 2ம் உலக போரும் பின்வந்த பனிப்போரும். அது போலவே பாசிச பிரபாகரனின் தொடர்மரபுதான் மகிந்தராச்சியமும், டக்ளசின் சிற்றரசும். 1987 இல. இந்திய ஓப்பந்தம் பிரபாகரனால் சீரழிக்கப்படாவிட்டால் EPRLF ல் இருந்து
விலக்கப்பட்ட டக்ளசு அரசியல்வாதியாக வந்திருக்கவே முடியாது. இத்தேர்தலில் 2 மக்கள் விரோதர்களின் முடிவு மகத்தான விளைவு. மகிந்த வென்றிருந்தால் இனி சனநாயகமே இல்லாத ராணுவமய ஆட்சியை நோக்கி நாடு போயிருக்கும். யாழ் பல்கலைக்கழகத்துக்கு
பொருத்தமான துணைவேந்தரான Ratnajeewan Hoole ஐ சிபார்சு செய்யும் படி 100 க்கு மேற்பட்ட Noel Nadesan, Chinniah Rajeshkumar, M. Sripathy ( former Hartley college principal and university senate member) Dr. Rajeswary Balasubramanium, Prof. Carlo Fonseka's முதலிய தமிழ் சிங்கள அறிஞர்கள், நலன்விரும்பிகள் டக்ளசிடம் வேண்டினார்கள். டக்ளசு செய்ததோ மக்களின் விருப்பை புறக்கணித்து கதைக்க பேசவே தெரியாத பொம்மை வசந்தியை துணைவேந்தராக்கினார். சீனா இலங்கை உறவால் பயன்பட்டது மகிந்தகுடும்பமும் சீனாவுமே. இந்தியாதான் கடனாக அல்லாமல் உதவியாக பெருந்தொகைப் பணம் இலங்கைக்கு கொடுத்தது. மாக்சிய சித்தாந்த மயப்படுத்தலுக்குட்பட்டவர்கள் இந்திய வெறுப்பு சீன காதல் வாய்ப்பாட்டிலிருந்து விலகி திறந்த மனத்தோடு இப்பிரச்சனையை அணுகவேண்டும்.
(Nadchathran Chev-Inthiyan)

வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் தீர்மானம் இல்லை - ருவன் வணிகசூரிய!


வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். அங்குள்ள முகாம்கள் மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான சகல விடயங்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. மேற்படி பிரதேசங்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால பாதுகாப்பு நிலைமை, பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருக்க வேண்டிய பிரதேசங்கள் எவை?, பாதுகாப்பு படையினர் அகற்றப்பட வேண்டிய பிரதேசங்கள், வடக்கில் கடமையாற்றுபவர்களை அங்கேயே கடமையாற்ற விடுவதா? இல்லை வேறு இடங்களுக்கு அவர்களை மாற்றுவதா உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தீர்மானமொன்றுக்கு வரும்பூ என பேச்சாளர் கூறினார். இதேவேளை, பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள ஆயிரக்கணக்கான காணிகளை பொதுமக்களிடத் கையளிப்பது தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த போனார் மைதிரி வந்தார். மீண்டும் உண்டியல் குலுக்கல் ஆரம்பம்

லண்டனில் தாயக மக்களுக்கான அவசர நிவாரண உண்டியல் முனைப்பு !

இலங்கைதீவின் தமிழீழத் தாயக பகுதியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிடும் பொருட்டு லண்டனில் நிவாரண உண்டியல் முனைப்புபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி அமைச்சின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றிருந்த இந்த நிவாணர உண்டியல் முனைப்பு தமிழர்கள் கூடுகின்ற பகுதிகளெங்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு போர் காரணமாக 2009ம் ஆண்டு தமது சொந்த நிலங்களில் இருந்து முழுதாக பெயர்த்தெறியப்பட்ட மக்களே, கடந்த சில வாரங்களாக பெய்த கடும் மழைக்குள் அகப்பட்டு பெரும்துயரைச் சந்தித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 31,536 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 10,896 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9,715 பேரும், மன்னார் மாவட்டத்தில் 6,495 பேரும், மொத்தமாக 58,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தாயகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி அமைச்சு இந்த நிவாரண உண்டியல் முனைப்பினை லண்டனில் மேற்கொண்டுள்ளது. மனமுவர்ந்து உண்டியலில் இடுகின்ற ஒவ்வொரு சிறுதுளியும் தாயக மக்களின் கண்ணீர்துளிகளை துடைக்கும் என தெரிவித்துள்ள தாயக அபிவிருத்தி அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் நம் அனைவரதும் முதற்கொடையாக இது அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தீர்வு காண்பதற்கான நல்ல தருணம், புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை

சகல கட்சிகளையும் உள்வாங்கியதாக புதிதாக ஆட்சி பீட மேறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுமெனத் தாம் திடமாக நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இப்புதிய அரசாங்கத்தின் மீது தமிழ்க் கூட்டமைப்பு நம்பிக்கை வைத்துள்ளதாக வும், அதில் சகல கட்சிகளும் இணைந்தி ருப்பதால் எவ்விதமான எதிர்ப்புக்களும் இன்றித் தீர்வினைக் காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்துவரும் நாட்களில் தமிழ்க் கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வடக்கு கிழக்கில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், வடமாகாண சபை மற்றும் இராணுவக்குறைப்பு, காணி விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐவருக்கு எதிராக எழுந்துள்ளது குற்றச்சாட்டு

சதித்திட்டம் குறித்து தகவல் திரட்டும் விசேட பொலிஸ் குழு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது இராணுவத்தை பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகிய ஐவருக்கும் எதிராக எழுந்துள்ளது. அவசர காலச் சட்டத்தை ஏற்படுத்தி இராணுவத்தினரை அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களுக்குள்ளும் புகுத்தி முடிவுகளை மாற்றவும், பனாகொடை இராணுவ முகாமில் உள்ள வீரர்களைக் கொண்டு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்டவர்கள் இருந்த தேர்தல்கள் செயலக கட்டிடத்தை சுற்றிவளைத்து முடிவுகளை மாற்றவும் சதி பின்னப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டு மக்களின் அதிர்ஷ்டமாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனும், இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவும், சட்ட மா அதிபர் யுவஞ்சன் விஜேயதிலகவும் இந்த சதியை எதிர்த்ததாகவும் அதனாலேயே அத்திட்டம் பலிக்காது போனதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரியின் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு தற்பொழுது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள நிலையில் அது தனது பெரும்பான்மையை நாளை மறுதினம் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் நிரூபிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும், ஜனநாயக தேசியக் கட்சியின் 6 உறுப் பினர்களும், தேர்தல் காலத்தில் எதிரணியில் இணைந்து கொண்ட 25 உறுப்பினர்களும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 21 உறுப்பினர்களும் என மொத்தமாக 107 உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினர். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை அங்கீகரித்து மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரோடு இணைந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர்களான விஜித் விஜிதமுனி சொய்சா, சரத் அமுனுகம, ஜகத் புஷ்பகுமார, ரெஜினோல்ட் குரே, எஸ்.பி.நாவின்ன, அதாவுட சென விரட்ன உள்ளிட்ட சுமார் 15 பேர் தேசிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளனர். அத்துடன் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, விநாயகமூர்த்தி முரளிதரன், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, டியூ.குணசேகர, உதித் லொக்குபண்டார, சனத் ஜெயசூரிய, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல் காதர், முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி உள்ளிட்ட பலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

மஹிந்தவின் தலமையில் அரசாங்மொன்றை அமைப்போம் - வாசுதேவ நாணயக்கார

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாக முன்னாள் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தேச விடுதலை முன்னணி, மஹஜன கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த திட்டத்திற்கு ஏற்கனவே ஆதரவினை தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன கட்சி கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளாது என கருதுவதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடுமென தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியைத் தழுவியதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் மீண்டும் இனவாதம் தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள பௌத்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு போதியளவு வாக்குகள் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் முழு அளவில் நம்பிக்கை உண்டு எனவும், நிச்சயமாக பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி ஆட்சியை கைப்பற்றுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ நல்லாட்சி நடத்திய காரணத்தினாலேயே ஜனநாயக ரீதியான தேர்தல் ஒன்றை முன்னெடுக்க முடிந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்தள விமான நிலையத்துக்கு மூடுவிழா?

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தள விமான நிலையத்தினால் அமைச்சுக்கு பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9ம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் மத்தள என்ற இடத்தில் கடந்த ஆட்சியின் போது திறக்கப்பட்டது. அதேவேளை, இந்த விமான நிலையத்துக்காக விமானங்களை இயக்குவது பெரிய அளவு நட்டத்தை ஏற்படுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தெருக்கோடியில் உள்ள மளிகைக்கடை ஈட்டும் வருமானத்தைக் கூட இந்த விமான நிலையம் ஈட்டித் தரவில்லை என்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு அறிக்கையில் புதிய அரசாங்கம் கூறியுள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து சேவை வழங்க தனியார் விமான நிறுவனங்கள் ஆரம்பத்திலிருந்தே பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மகிந்த ராஜபக்சவின் பெயரில், அவரது சொந்த மாவட்டத்தில், அவரது ஆட்சிக் காலத்தில் இந்த விமானநிலையம் தவிர துறைமுகம் ஒன்றும் சர்வதேச மாநாட்டு மண்டபம் ஒன்றும் கலையரங்கம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 17, 2015

தேசிய நிறைவேற்று சபை உருவாக்கம்! சம்பந்தன், மனோ, ஹக்கீம் உள்ளிட்ட 11 பேர் நியமனம்
 

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 100 நாள் வேலைத்திட்டம், உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு மாநகரிலும், வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள், தேசிய கணக்காய்வாளர் நடவடிக்கைகள் உட்பட புதிய அரசாங்கத்தின் தேசிய முன்னெடுப்பு தொடர்பாக முடிவுகளை இந்த உயர்சபை எடுக்கும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இந்தத் சபை ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும். இந்த சபையின் அங்கத்தவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வண. சோபித தேரர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சம்பந்தன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகிய 11 பேர் பணியாற்றுவர்.

மேவின் டி சில்வா

கோட்டாவிற்கு தோட்டா

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை(17) முறைப்பாடுசெய்துள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் இவ்விருவரும் செய்த ஊழல்கள் தொடர்பிலேயே அவர் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அமைச்சராக இருந்தபோதும் இப்போதும் மேவினின் செயல்களுக்கு தோட்டா வைத்திருக்க வேண்டும் மக்கள். ஆனால் இன்று மேவின் வைக்கும் தோட்டாவைப் பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.

குடும்ப ஆட்சியே யுத்தவெற்றிக்கு உதவியது - நாமல்

எங்களது குடும்ப ஆட்சியே தமிழீழ விடுலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை வெற்றிகொள்ள வழிவகுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அவரது சட்ட நிறுவன அலுவலகத்தில் வைத்து இந்திய என்.டி.ரீ.விக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனது தந்தை மற்றும் சிறிய தந்தையான பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளே எல்.ரீ.ரீ.ஈயினருடனான போரில் இலங்கை இராணுவம் வெற்றிபெற காரணம் எனவும் அவர் கூறினார். தமது குடும்பத்துக்கிடையேயுள்ள பிணைப்பே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக தெரிவித்த நாமல், எந்தவொரு தலைவருக்கும் நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு செயலாளர் ஒருவர் தேவைப்படுவார் என்றார். அத்துடன் எனது தந்தை அரசு தலைவர்களுடன் சேர்ந்து தனிப்பட்ட உறுதியான முடிவுகளை எடுக்கமுடிந்ததது. ஆனால், அந்த தலைவருக்கு உண்மையானவர்கள் தேவைப்பட்டதாகவும் நாமல் தெரிவித்தார்.

தமிழ் பகுதியிலிருந்து இராணுவத்தை நீக்க

வட, கிழக்கின் பாதுகாப்பு நிலைமை அறிக்கை கோரும் அமைச்சு

வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை. அங்குள்ள முகாம்கள் மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான சகல விடயங்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். மேற்படி பிரதேசங்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால பாதுகாப்பு நிலைமை, பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருக்க வேண்டிய பிரதேசங்கள் எவை?, பாதுகாப்பு படையினர் அகற்றப்பட வேண்டிய பிரதேசங்கள், வடக்கில் கடமையாற்றுபவர்களை அங்கேயே கடமையாற்ற விடுவதா? இல்லை வேறு இடங்களுக்கு அவர்களை மாற்றுவதா உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தீர்மானமொன்றுக்கு வரும் என பேச்சாளர் கூறினார். இதேவேளை, பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள ஆயிரக்கணக்கான காணிகளை பொதுமக்களிடத் கையளிப்பது தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கம்! - பாதுகாப்பமைச்சு

இலங்கைக்கு வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் வடக்கு செல்வதற்கு முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இலங்கையில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக்கட்டுப்பாடு அவசியம் இல்லை என்று எண்ணியே இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை ஆயுதங்கள், இராணுவ சீருடைகள், வெடி பொருட்களை தவிர, வடக்கு கிழக்குக்கு விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கான விநியோகத் தடையையும் பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது.


வட மாகாண மீள்குடியேற்றத்தில் வெளி மாவட்டத்தினருக்கு அனுமதி இல்லை

மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வட மாகாணத்தைச் சாராத எவரும் இம்மாகாணத்தில் குடியேற நாம் இடமளிக்க மாட்டோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார். புதிய மீள் குடியேற்ற அமைச்சர், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் நாமும் ஒன்றிணைந்து வட மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஒழுங்கு முறையாகவும், திட்டமிட்ட அடிப்படையிலும் மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அ. இ. ம. கா. தலைவரான அமைச்சர் ரிஸாட் பதியுத்தீன் மேலும் கூறியதாவது, வட மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் ஒழுங்கு முறையாக மேற்கொள்ளுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதன் நிமித்தம் புதிய மீள்குடியேற்ற அமைச்சர், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் நாம் இணைந்து செயற்படவிருக்கின்றோம். இதன்படிவட மாகாணத்தில் ஏற்கனவே வாழ்ந்தவர்கள் யார்? மீளக்குடியேறியவர்கள் யார் என்பன குறித்து நாம் முதலில் கவனம் செலுத்துவோம். கடந்த காலத்தில் சில சதி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினர் இங்கு அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக நாம் புதிய மீள்குடியேற்ற அமைச்சர் வடக்கு முதலமைச்சர், வட மாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆகிய தரப்பினருடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம். மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வட மாகாணத்தைச் சாராத சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ இம்மாகாணத்தில் குடியேற நாம் இடமளிக்க மாட்டோம். கொள்கை ரீதியில் நான் இதற்கு எதிரானவன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காந்தி கொலை

கேள்வி -பதில் வடிவில் சில உண்மைகள்

(அ.மார்க்ஸ்)

கேள்வி: சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் பயங்கரவாதச் செயல்

அ. காந்தி கொலை ஆ. 2001 நாடாளுமன்றத் தாக்குதல் இ. மும்பை தாக்குதல்

சரியான பதில் ‘அ’. காந்தி படு கொலை யாரோ சிலர் தன்னிச்சையாக மேற்கொண்ட அரசியல் கொலை அல்ல. இந்த நாட்டை ஒரு “இந்து அரசாக” (இந்து ராஷ்ட்ரா) அமைப்பதற்கு பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த காந்தி தடையாக இருந்தார் என்பதற்காக அவரை ஒழித்துக் கட்டும் முயற்சி 1934 தொடங்கி மேற்கொள்ளப்பட்டது. அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது. அமைபுகளிலிருந்து இந்தக் கொலைக் கும்பல் விலகிவிட்டதாகக் காட்டிக் கொண்டதும்கூட அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவுதான். இந்தத் தாக்குதலின் போது காந்தியுடன் சேர்ந்து அருகில் நிற்போரும் கொல்லப்பட்டாலும் கவலை இல்லை என்பதால்தான் முன்னதாக மேற்கொண்ட கொலை முயற்சிகளில் வெடி குண்டுகளையும் பயன்படுத்தினர். (மேலும்....)

நாடாளுமன்றம் ஏப்ரல் 24ஆம் திகதி கலைக்கப்படும்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து ஜுன் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவார் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் முடிந்த பின்னர் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக்கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (16) கையளித்துள்ளார். புதிய ஜனாதிபதியின் தலைமையிலேயே நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னேடுத்துச் செல்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவே செயற்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சம் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த ஊடகவியலாளர்களை நாடு திரும்புமாறு அழைப்பு


சிறந்த ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தி ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான காத்திரமான சூழலை ஏற்படுத்த உச்சளவில் நடவடிக்கை எடுக்கப்போவதாக புதிய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கடந்த காலங்களில் ஊடகவிய லாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத அச்சுறுத்தல் நிலவியதைக் குறிப்பிட்ட அமைச்சர், இதன் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த ஊடகவியலாளர்களை மீள தாய் நாட்டுக்கு வருமாறும் அமைச்சர் அழைப்பு விடுத்தார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் அமைச்சரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதாரணவும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சு.க தலைமைப் பதவியை கையளித்தார் மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை இன்றுமுதல் (நேற்று) கையளி ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்துள்ளார். கட்சித் தலைவர் பொறுப்பு உட்பட கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து, கடந்த 50 வருடங்களாகக் கட்சியைப் பாதுகாப்பதற்கு தான் அரும் பங்காற்றியிருந்ததாகவும் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் ஆபத்தைத் தான் பார்க்க விரும்பவில்லையென்று குறிப்பிட்டிருக்கும் அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விரும்புபவர்கள் என்ற ரீதியில் இந்தப் பிளவிலிருந்து கட்சியைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கிய கட்சியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, புதிய தலைமைத்துவம் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கட்சியின் நலனைப் பேணுவது மட்டுமன்றி நாடு தொடர்பிலும் அக்கறைசெலுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும் மற்றும் கட்சிக்குள் ஜனநாயகத்தைப் பேணுவதற்கும் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெருமாள் முருகனை ஆதரிப்போம்

ஒரு படைப்பாளி தான் விரும்புவதை, நினைப்பதை, சிந்திப்பதை, கற்பனை செய்வதை எழுதுவதற்கும் படைப்பதற்கும் முழு உரிமை உடையவர். அவற்றுடன் எமக்கு உடன்பாடு இல்லை எனில் நாம் விமர்சனம் எழுதலாம் அல்லது அதற்கு மாற்றான ஒரு படைப்பை உருவாக்கலாம் ஆனால் ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை எழுதாதே எனத் தடுக்கவோ, தடை செய்யவோ யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு ஒரு படைப்பை எழுத்தை எதிர்க்க வேண்டுமானால் எழுத்தை எழுத்தால் மட்டுமே எதிர்க்க வேண்டும். இதற்கு மாறான வேறுவகையான எந்த நடவடிக்கைகளையும் அதை முன்னெடுப்பவர்களையும் நாம் எதிர்க்க வேண்டும். பெருமாள் முருகனின் படைப்புகளுடன் கருத்துக்களுடன் எங்களுக்கு உடன்பாடு இருக்கலாம். உடன்பாடு இல்லாமலும் இருக்கலாம் அல்லது அவரது படைப்புகளை வாசித்திருக்கலாம் வாசிக்காமலும் இருக்கலாம். எந்த நிலையிலும் இன்று நாம் செய்ய வேண்டியது அவரை இச் சந்தர்ப்பத்தில் ஆதரிப்பது மட்டுமே செய்ய வேண்டும். பெருமாள் முருகனுக்கு எங்கள் ஆதரவையும் அவருக்கான பாதுகாப்பையும் நாம் அளிக்க வேண்டும். இது எங்கள் பொறுப்பு. பெருமாள் முருகன் அவர்கள் மீண்டும் எழுத வேண்டும். இப் போராட்டம் வெறுமனே பெருமாள் முருகனுக்கானது.(Meera Bharathy)

பொதுவாழ்வில் தூய்மையின் அடையாளம்

தோழர் ஜோதிபாசு இந்திய பொதுவுடைமை இயக்க வரலாற்றில் என்றென்றும் ஒளிவிடும் ஒரு பெயர். விடுதலைப்போராட்டக்காலத்தில் பொதுவாழ்வில் துவங்கிய அவரது பயணம், நாடு விடுதலைபெற்ற பின்பு மக்கள் நலனுக்காக அயர்வின்றி தொடர்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் ஜோதிபாசு, மேற்குவங்க மாநிலமுதல்வராக ஐந்து முறை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு 24 ஆண்டு காலம் அந்தப்பொறுப்பை அலங்கரித்தவர். ஊழலற்ற எளிமையும், நேர்மையும் நிரம்பிய பொது வாழ்க்கையின் அடையாளமாக திகழ்ந்தவர். மக்கள் மீது மாறாத அன்பு கொண்டவர். மக்களும்அவர் மீது இன்று வரை அளவற்ற அன்புகொண்டுள்ளனர். மதச்சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் ஆகியவற்றுக்காக சோர்வின்றிப் போராடிய அவரது பணி என்றென்றும் நினைவுகூரப்படும்.(Theekkathir)

காரல் மார்க்சின் 'மூலதனம்' நூல்

காரல் மார்க்சின் 'மூலதனம்' நூல் தற்போது மிக அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது .2007 ம் ஆண்டு முதல் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக, காரல் மார்க்ஸ் எழுதிய பொருளாதாரக் கோட்பாட்டைப் பற்றி அறிந்து தீர்வு காண்பதற்காகவே அவரது நூல்களைத் தேடிப் பிடித்து படிக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நூல்கள் பற்றிய அறிமுகம் நமக்கும் தேவையல்லவா ? சமூக அக்கறை கொண்டோர்க்கு சரியான வழிகாட்டுதல் அவசியமல்லவா? இதற்காகவே சமூகப் பொறுப்புணர்வில் கவலையும் அக்கரையும் ஆர்வமும் உடைய எனது நண்பர் தோழர் அ.கா.ஈஸ்வரன் மார்க்சியம் தொடர்பான பல நூல்களை எழுதி வெளியிட்டு வருகிறார் .இந்த புத்தகக் கண்காட்சியில் -
'மார்க்ஸ் - ஏங்கல்ஸ்
வாழ்வும் - படைப்பும்' என்ற எளிய முறையிலமைந்த நூலை வெளியிட்டிருக்கிறார்.
சமூகப் பொறுப்புணர்வு மிக்க அவருக்குத் தலை வணங்கி இப்பதிவை நண்பர்களுக்குத் தருகின்றேன்.

மக்களே உங்கள் பிரிதிநிதிகளை கேளுங்கள்

வட கிழக்கு தமிழர் தாயகத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத தமிழ் மக்களுடைய நிலங்கள் தொடர்பிலான தகவல்களையும், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தகவல்களையும் முழுமையாக தமக்கு வழங்குமாறு புதிய மத்திய அரசாங்கம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைவாக வடகிழக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் ஊடாக மேற்படி தகவல்களை சேகரிக்க கூட்டமைப்பு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ‎என்ன‬ மக்களே இது செய்தி இதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள் ? அப்பாடியோவ் மைத்திரி ஒரு மாதிரி விடிவு காலம் தந்துவிடுவார் என்று தானே இதை தாண்டி எதையும் சிந்திப்பீர்களா ? கிட்டத்தட்ட யுத்தம் முடிந்து 5வருடங்கள் ஆகியும் இப்பொழுது தான் மேற்படி தகவலை சேமிக்கவே நடவடிக்கை எடுக்க உள்ளனராம் அப்படி எனில் மஹிந்த அரசுடன் பேச்சுவார்த்தை எல்லாம் செய்ததாகவும் அது சரிவரவில்லை என்று கூறினார்களே அப்பொழுது எந்த தகவலும் இல்லாது தான் போனாரா ? அல்லது அவைகளே நாடகம் தானா என்று சிந்திக்க மாட்டீர்களா ?? 5வருடத்தில் இவர்கள் ஒரு தகவலை கூட கூட்டமைப்பு சேகரிக்கவில்லை எனில் இவர்கள் இதுவரை என்ன செய்தனர் என்று சிந்தியுங்கள் பிரதிநிதிகளை கேள்வி கேளுங்கள். இந்த அரசிலாவது அரசியல் செய்யாமல் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தூண்டுங்கள்.

சம்பந்தன் மட்டுமல்ல விடுதலைப்புலிகளும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டிருந்தனர்

வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள சிலரும் கண்டனக்கணைகளை தொடுத்து வருகின்றனர். மாகாணசபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்கு முன்னர் கோரி வந்தனர். தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டோம் என்று சொல்ல இந்த அயோக்கியர்கள் யார் என கவிஞர் காசி ஆனந்தன் ஆவேசமாக பேசிய காணொளி ஒன்றும் இணையத்தளங்களில் பார்க்க முடிந்தது. தனிநாட்டு தமிழீழ கோரிக்கையை கைவிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் தமிழ்நாட்டில் உள்ள சிலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த மாகாணசபையில் எதுவுமே இல்லை, மாகாணசபையை விடுதலைப்புலிகள் நிராகரித்திருந்தனர் என்றும் சிலர் எழுதி வருகின்றனர். (மேலும்....)

ஜனவரி 16, 2015

First Negotiator To North East


BEAUTIFUL Former Sri Lankan President Chandrika Bandaranaike Kumaratunga With Her Husband Vijaya Kumaratunga

ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சி தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

  • செயற்குழு உறுப்பினர்கள் 53 பேரில் அதிக ஆதரவு

  • கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று

  • போசகர்களாக சந்திரிகா, மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் இன்று (16) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார். இன்று நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தின் போது இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்று இருவருக்குமிடையில் நடைபெற்றதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் சமிந்த சிரிமல் வத்த தெரிவித்தார். (மேலும்....)

எதிர்க்கட்சி தலைவராக நிமல் நியமனம், அரசாங்கத்துடன் விமல் வீரவன்ச ?

எதிர்க்கட்சி தலைவராக நிமல் சிறிபாலடி சில்வாவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக டப்ளியு டி ஜே செனவிரத்னவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் ஆனால், அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் எண்ணம் இல்லை எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் இணையபோவதில்லை. ஏனெனில் அவரது அரசியல் கொள்கையில் எமக்கு உடன்பாடில்லை. அதனால்தான், நாங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிகொண்டிருக்கின்றோம். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 5.7 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆளுங்கட்சிக்கு தாவுவதனூடாக நாங்கள் அவர்களுக்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை. ஆனால், அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவோம். 'அரசியலமைப்பில் மாற்றம், தேர்தல் சீர்திருத்தங்கள், வாழ்க்கைச் செலவு குறைப்பு, எண்ணெய் விலைகளின் குறைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் இந்த 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதால் அதற்கு நாங்கள் ஆதரவளிக்கவுள்ளோம்;' என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினர் வசம் உள்ள தனியார் காணிகளை மீள ஒப்படைக்குமாறு முப்படைகளுக்கும் உத்தரவு


வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள தனியார் காணிகளில், பாதுகாப்புக் கரிசனைக்குரியவை தவிர்ந்த ஏனையவற்றை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆயுதப்படைகளின் தளபதிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முப்படைகளின் தளபதிகளும், ஏற்கனவே குழுவொன்றை அமைத்துள்ளனர். அத்துடன் அந்தப் பகுதிகளின் முறையான நில உரிமையாளர்களைக் கண்டறியும் பணியும் இடம்பெற்று வருகிறது. முக்கியமான, பாதிக்கப்படக் கூடிய, முப்படைகளுடனும் நேரடியாகத் தொடர்புடைய பகுதிகள் தவிர்ந்த பிற காணிகளை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு தனக்கும், முப்படைகளின் தளபதிகளுக்கும், சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும், பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். அதேவேளை வடக்கு, கிழக்கின் நிர்வாக கட்டமைப்புகளிலும் விரைவில் மாற்றங்கள் இடம்பெறும் என்று அறியப்படுகிறது. மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் தடைசெய்யப்பட்டுள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் தவிர்ந்த, ஏனைய பொருட்கள் அனைத்தும், வடக்கு, கிழக்கிற்கும் அனுமதிக்கப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
 

தலைவர் பதவியை ஒப்படைக்கத் தயார் - மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களுக்கிடையில் நேற்று புதன்கிழமை (14) இரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி விலகிவிடக்கூடாது என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் மாகாண சபை உறுப்பினரான உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானத்தை மேல்மாகாண முதலைமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பார் என்று கூறப்படுகின்றது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு இன்று வியாழக்கிழமை (15) இடம்பெறவுள்ளது. கொழும்பு, விஜேராமவிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திலேயே இச்சந்திப்பு இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார்

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான பொறுப்பை முழுமையாக ஏற்று அந்த தேர்தல் பிரசார செயற்பாட்டில் முக்கியஸ்தராக செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இன்று இராஜினாமா செய்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பாவுக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவித்துள்ள பசில் ராஜபக்ஷ, தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பங்காளி கட்சிகளும் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை மிகவும் நீதியாக நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்கிய அரச அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸார், பாதுகாப்பு தரப்பினர், மற்றும் கம்பஹா மாவட்ட உள்ளிட்ட நாடு முழுவதும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்
 

மூடப்பட்டது டக்ளஸினது அலுவலகம்! பெருமூச்சு விடும் அதிகாரிகள்!!

யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பு அலுவலகமாக செயற்பட்டு வந்த பிரிவு அவசர அவசரமாக இழுத்து மூடப்பட்டுள்ளது. முன்னதாக டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாண மாவட்ட இணைத்தலைவராக நியமித்திருந்தார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தனக்கு என ஓர் காரியாலயமொன்றை அமைத்துக்கொண்டிருந்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் 42ம் இலக்க அறையில் இந்த காரியாலயம் செயற்பட்டு வந்தது. இந்த அலுவலகத்திற்கான இணைப்பாளரென கனகரத்தினம் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியரான நபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நபர் அரச அதிகாரிகளை மிரட்டுவது முதல் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் டக்ளஸை முன்னிறுத்தும் நிகழ்வுகளை நடத்தி வந்திருந்தார். அத்துடன் ஏனைய அரசியல்கட்சி ஆதரவாளர்களை பந்தாடியும் வந்திருந்தார். தற்போது புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து காரியாலயம் மூடப்பட்டுள்ளது. இவ்வலுவலக இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நபரும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அமைச்சர் ஆவாரா டக்ளஸ்?

தடுத்து நிறுத்த பகீரத பிரயத்தனம் மைத்திரியிடம் வலியுறுத்தினார் சம்பந்தன்

புதிதாக தெரிவாகிய மைத்திரிபால தலைமையிலான அரசின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவினர் இடித்துரைத்துள்ளனர். புதிய ஜனாதிபதியுடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்புக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்றனர். அங்கு ஜனாதிபதி தலைமையிலான அரச தரப்பு குழுவினருடன் பேச்சுக்கள் ஆரம்பமாகின. அரசு தரப்பில் ஜனாதிபதியுடன் ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன உட்பட பலர் பிரசன்னமாகி இருந்தனர். இந்தப் பேச்சுக்களின்போது கூட்டமைப்பு தூதுக்குழுவினர் கோரிக்கைகள் சிலவற்றை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

"எனக்கு என்னமோ டக்ளஸ் மீண்டும் அமைச்சர் ஆகிவிடுவார் என்றே தோன்றுகின்றது. இரண்டு காரணங்கள் ஒன்று டக்ளஸ் இன் சரணாகதி அணுகுமுறை. கேபி உம் டக்ளஸ் உம் பதவி இல்லாமல் இருக்க மாட்டார்கள் இயக்க காலத்திலிருந்து இன்றுவரை இவர்களின் நடவடிக்கையைப் பார்த்தால் புரியும் இரண்டாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியல்." - சாகரன்

(மேலும்....)

பதவியுடன் வருகிறார் சரத்! ஆட்டம் கண்டார் மகிந்தர்….

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, தேசிய பாதுகாப்பு விவகாரம் தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் இந்த நியமனம் வழங்கப்பட உள்ளது. சரத் பொன்சேகா இழந்த இராணுவ பதவிகள், பட்டங்கள், பதக்கங்கள் அனைத்தையுமே மீளவும் வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளது. இதன்படி, தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒத்துழைப்பு வழங்க சரத் பொன்சேகா இணங்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக மூவர் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களாக ஒஸ்டின் பெர்ணான்டோ, திலக் ரணவிராஜா, டபிள்யூ.ஜே.எஸ்.கருணாரட்ண ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வழங்கி வைத்தார். அரச சேவையில் பல அனுபவகங்களை கொண்ட ஒஸ்டின் பெர்ணான்டோ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராவார். பல தசாப்தங்களாக அரச உயர்பதவிகளை வகித்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான திலக் ரணவிராஜா, மக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமாதானம், தபால் மற்றும் தொலைத்தொடர்புகள், வைத்திய மற்றும் சுதேச வைத்திய, ஊடகம், சமூக நலன்புரி, மகாவலி, நீர்வழங்கல், மின்சக்தி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல அமைச்சுகளில் செயலாளராக கடமையாற்றியுள்ளார். அத்துடன் சர்வதேச நிறுவனங்கள் பலவற்றில் அவர், உயர் பதவிகளையும் வகித்துள்ளார். நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியான டப்ளியு. ஜே.எஸ் கருணாரத்ன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் செயலாளராக கடமையாற்றினார். அத்துடன் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றினார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் 19ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் அது தனது பெரும்பான்மையை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்றத்திலுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும், ஜனநாயக தேசியக் கட்சியின் 6 உறுப்பினர்களும், தேர்தல் காலத்தில் எதிரணியில் இணைந்து கொண்ட 25 உறுப்பினர்களும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 21 உறுப்பினர்களும் என மொத்தமாக 107 உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினர். இதேவேளை, முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள் ஐவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். அந்த ஐவரும் இணைந்தால், நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 112ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும். இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிப்பர் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை

விசாரணைக் கைதிகளாக நீண்டகாலமாக இருக்கும் அனைவரது விடுதலை பற்றியும் ஜனாதிபதி செயலாளர் மற்றும் உயரதிகாரிகளிடம் எடுத்துரைப்பதோடு அவர்களது விடுதலையை மிகவிரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரானந்த பல்லேகம, கூறினார். 'உங்களின் ஏக்கம் எனக்கு நன்கு தெரியும். உங்கள் கண்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன. நான் இந்தப் பதவியை ஏற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன. இதுவரை காலமும் உங்கள் ஏக்கங்களை சரியாக தீர்த்து வைக்க முடியவில்லை. காலமும் அதற்கு இடம்கொடுக்கவில்லை. ஆனால், இப்போது காலம் கனிந்திருக்கிறது. குறிப்பாக ஜனாதிபதியின் வெற்றியில் தமிழ் மக்களின் பங்கு அதிகமாகவிருக்கிறது. இதன்மூலம் அவர்கள் நல்லதொரு செய்தியையும் ஜனாதிபதிக்கு கூறியிருக்கிறார்கள். எமது உறவுகளை எங்களுடன் வாழ வழிசெய்யுங்கள் என்பதே அந்த செய்தி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இவர்களின் ஆசையினை தீர்ப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறார். ஆகையினால், எதிர்காலத்தில் நிச்சயமாக நல்லது நடக்கும் என நம்புகிறேன்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பிரச்சினை

அமெரிக்க விண்வெளிக் குழுவினர் மூச்சு விட உதவும் கருவியை அணிந்து கொண்டு அருகே இரு ந்த ரஷ்ய கலனுக்கு சென்றனர்

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலை யத்தில் புதனன்று காலை ஏற்பட்ட பிரச் சினைக்கு என்ன காரணம் என்பதை அமெ ரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் வல்லுநர்கள் அறிய முயன்று வருகிறார் கள். விண்வெளி நிலையத்தில் உள்ள குளிர வைக்கும் அமைப்பிலிருந்து அம்மோனியா கசிந்ததால் இது நடந்தது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனமான, ராஸ்காஸ்மோஸ் கூறியுள்ளது. ஆனால், நாசா இது உணர்ந்தறியும் கரு விகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் அல்லது கணனித் தகவல்களை அனுப்பும் பெட்டி ஒன்றில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறுகிறது. இந்தப் பிரச்சினை ஏற்பட்டபின்னர், விண் வெளி நிலையத்தில் இருந்த அமெரிக்க விண்வெளிக் குழுவினர் மூச்சு விட உதவும் கருவியை அணிந்து கொண்டு அருகே இரு ந்த ரஷ்ய கலனுக்கு சென்றனர். அங்கு அவர்கள் நேற்றைய தினத்தை கழித்தனர். சர்வதேச விண்வெளி நிலையத் தில் இருக்கும் இத்தாலிய பெண் விண் வெளி வீரர் சாம் கிறிஸ்டொபொரெட்டி தன் னுடைய டுவிட்டர் கணக்கில் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், ரஷ்ய கல னில் நன்றாக இருப்பதாகவும் கூறினார்.

கூகுளில் மொழிபெயர்ப்பாளர் வசதி

கூகுளின் மொழிபெயர்ப்பு மென்பொ ருளை சமகால குரல் மொழிபெயர்ப்பா ளராக பயன்படுத்த முடியும் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மென்பொருளானது தானாக மொழிகளை அறிந்துகொண்டு அவைகளை உரை மொழிபெயர்ப்புச் செய் யும் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மென்பொருள் கடந்த புதனன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கையடக்க தொலைபேசியில் வரும் செய்திகளையும் உடனுக்குடன் மொழி பெயர்த்துத் தரும். எனினும் சிக்கலான மொழி உரை களை புரிந்து கொள்வதில் இந்த மென் பொருள் தோல்வி கண்டிருப்பதாகவும் விமர்சனம் உள்ளது. "அடிப்படையில் இது மிகவும் பயன்தரக் கூடியது. உதாரணத் திற்கு எனது தாயால் வேறு எந்த மொழி யையும் பேச முடியாது. ஆனால் சுற் றுலா செல்ல அதிக விருப்பம் உடையவர். எனவே இந்த மென்பொருள் அவருக்கு நகரங்களை கண்டுபிடிக்க உதவும். இத னால் நுணுக்கங்கள், கலாசார குறிப்பு கள் மற்றும் நகைச்சுவைகளை புரிந்து கொள்ள முடியாது" என்று நோதம்ரியா பல்கலைக்கழக வெளிநாட்டு மொழிகள் தொடர்பான விரிவுரையாளர் ஆரியன் பொகைன் சுட்டிக்காட்டினார். புதிய மென்பொருளில் கையடக்க தொலை பேசியில் இருக்கும் கெமராவைக் கொண்டு மொழிபெயர்ப்பு செய்ய வசதி உள்ளது. இதில் கெமராவின் மூலம் பெறப்படும் படத்தில் இருக்கும் எழுத்துக்களையும் உட னடியாக மொழிபெயர்க்க முடியும் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 15, 2015

2015 ஜனாதிபதி தேர்தலில் ஒரு தேடல்

பலபொய் முகங்களுடன் பிரசவமாகிய இத்தேர்தலின் உண்மை நிலைகள்தான் என்ன? யாரும் எதையும் எழுதலாம் என்பதால் செய்திகளின் நம்பகரத்தன்மை கேள்விக் குறியாகிறது. காதில் விழுந்த செய்திகள்
• கோத்தபாயர் கருணாவுடன் ஓடிவிட்டார்.
• மகிந்தர் வோட்டுப்போட்ட கையுடன் மாலைவீவுக்கு மாறிவிட்டார்.
• மூட்டை மூட்டையாக புலிகளின் நகைகளையும், பணங்களையும் ஏற்றிக் கொண்டு ராஜபக்கசகுடும்பம் பறந்து விட்டது.
• விலையுயர்ந்த கார்களையும் ஏற்றிக்கொண்டு மகிந்தரும் கோத்தபாயரும் நாட்டைபிட்டுப் பறந்துவிட்டார்கள். ஆனால் நேற்று இராஜபக்ச தனது தொகுதியிலும் வீட்டிலும் மக்களைச் சந்தித்திருக்கிறார். எப்படி? (மேலும்....)

பத்மநாபா ஈபிஆர்எல்எப் ஊடக அறிக்கை

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக அமைதியான முறையில் நிகழ்ந்த தேர்தல் இது.
தேர்தலை பாரிய வன்முறைகள் இல்லாது நடத்தி முடிப்பதில் ஆணையாளரின் தலைமையிலான அயராத முயற்சிகள் இங்கு குறித்துரைக்கவேண்டியன.
இலங்கையின் ஜனநாயக பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் அவர் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்திருந்தார். இலங்கையின் பல்லின சமூக பிரிவினரின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களுக்கு பத்மநாபா ஈபிஆர்எல்எப் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. நாட்டின் சகல தரப்பு மக்களதும் இந்த நம்பிக்கையை அவர் ஜனநாயக அரசியல் சக்திகளுடன் இணைந்து பாதுகாப்பார் என எதிர் பார்க்கிறோம். அதேபோல் முன்னாள் ஜனாதிபதிக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அவர் கரிசனைக்கெடுத்துக்கொள்வார் என நாம் எதிர் பார்க்கிறோம்.
விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையில் தீவிர சீர்திருத்தங்கள் மாற்றங்கள் செய்யப்படுவதுடன் மக்கள் நலம் சார்ந்த ஆக்க பூர்வமான சமூக அபிவிருத்தி நடவடிக்கைககள் உறுதியுடன் முன்னெடுக்கப்படவேண்டியிருக்கிறது. இன சமூகங்களிடையே மீளிணக்கம் மற்றும் சர்வதேச உறவுகள் சுமுகமானதாக்கபடவேண்டும்.
இலங்கையின் கீர்த்தி வாய்ந்த இலவசக்கல்வி மற்றும் சுகாதார சேவைகள் உறுதியாக்கபடுவதோடு மக்களின் குடியிருப்பு குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும். சுதந்திரமான சமூக அரசியல் செயற்பாடுகளுக்கான இடைவெளி அதிகரிக்கப்படவேண்டும். அடியாள் மற்றும் வன்முறை அரசியலுக்கு முடிவு காண வேண்டும்.
ஆடம்பரமற்ற மக்களுக்கு நெருக்கமான எளிமையான அரசியல்பாரம்பரியம் ஒன்று உருவாக்கபடவேண்டும்.
தி.ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா. ஈபிஆர்எல்எப்

இல 294 கண்டி வீதி
யாழ்ப்பாணம்
11-01-2015

டிங்கிரி டிங்காலே.......கூட்டமைப்பு! கூட்டமைப்பே!! டிங்கிரி டிங்காலே......

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே..
"சம்பந்தன் குழு ஜனாதிபதியை சந்தித்துள்ளது! இனப்பிரச்சினையை தீர்க்க ஒரு மாதத்துக்குள் செயற்குழு: ஜனாதிபதி உறுதி"
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே..

பொது பல சேனாவே மஹிந்தவை தோற்கடித்தது

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்களின் போது அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி தோல்வியடைந்த முதலாவது தேர்தலும் ஒரே தேர்தலும்? இம் முறை நடைபெற்ற தேர்தலேயாகும். அதேவேளை ஒருவர் மூன்று முறை ஜனாதிபதியாவதற்கு எடுத்த முதலாவது முயற்சியே தோல்வியில் முடிந்துள்ளது. முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மட்டுமே போட்டியிட்டார். 1988ஆம் ஆண்டு அவரது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணசிங்க பிரேமதாசவே போட்டியிட்டார். ஜனாதிபதி பிரேமதாச பதவியில் இருக்கும் போது மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலை சந்திக்க கிடைக்கவில்லை. அதற்கிடையில் அவர், 1993ஆம் ஆண்டு புலிகளின் தற்கொலைக்குண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டார். அவரது பதவிக் காலத்தின் மீதமான காலத்துக்கு நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டீ.பி. விஜேதுங்கவும் பதவியில் இருக்கும் போது மீண்டும் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக ஐ.தே.க. சார்பில் 1994ஆம் ஆண்டு காமினி திஸாநாயக்கவே போட்டியிட்டார். 1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பதவியில் இருக்கும் போது போட்டியிட்ட 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார். அவர் 2010ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் இம் முறை தோல்வியடைந்தார். எனவே, பதவியில் இருக்கும் நிலையில் தோல்வியடைந்த முதலாவது ஜனாதிபதி ராஜபக்ஷவே. (மேலும்....)

என்னை அழித்தது நீங்கள் தான்... சகோதரரிடம் ராஜபக்ஷே குய்யோ... முறையோ...
 

இலங்கை அதிபர் தேர்தலில் நான் தோல்வி அடைந்ததற்கு என் சகோதரர்களும், மகன்களும் தான் காரணம். அவர்களால் எனது 45 ஆண்டு அரசியல் வாழ்க்கை அழிந்து விட்டது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே தனக்கு நெருக்கமானவர்களிடம் கண்ணீர் விட்டு அழுது, புலம்பி வருகிறார். இலங்கை அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெற்று 3வது முறையாக அதிபராக போவதாக உறுதியாக நம்பி இருந்த ராஜபக்ஷே சிறிதும் எதிர்பாராத விதமாக, பொது வேட்பாளர் சிறிசேனாவிடம் படுதோல்வி அடைந்தார். இந்த பலத்த அடியை தாக்க முடியாத ராஜபக்ஷே, தோல்வியை தாங்க முடியாமல் கடும் விரக்தியில் இருந்து வருகிறார். தோல்வி துயரம் வாட்டி எடுத்து வரும் நிலையில், அவர் மீதும், அவரது ஆட்சி மீதும் கூறப்பட்டு வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள், ராஜபக்ஷேவை நிலைகுலைய வைத்துள்ளன. பதவி இழந்து, தனது சொந்த ஊரில் இருந்து வரும் ராஜபக்ஷே, தனது சகோதரர் கோத்தபாயவை போனில் தொடர்ந்து கொண்டு பேசி உள்ளார். அப்போது, என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். எங்கும் வெளியேற முடியவில்லை என, குமுறலை கொட்டித் தீர்த்தார். இந்த உரையாடல் சிறிது நேரத்திலேயே வாக்குவாதமாக மாறியது. ஆத்திரமடைந்த ராஜபக்ஷே, என்னை வீழ்த்தியது தமிழர்களோ, முஸ்லீம்களோ இல்லை. நீயும், எனது மகன்களும் தான் .என் அரசியல் வாழ்க்கையை அழித்தது,' என கத்தினார்.
மேலும், 'என்னுடைய 45 வருட அரசியல் வாழ்க்கை என் சகோதரர்களாலும், என் 3 மகன்களின் நடத்தையாலும் தான் அழிந்து விட்டது. எனக்கு வாய்ந்த சகோதரர்களும் அப்படி...மகன்களும் அப்படி...நான் என்ன செய்வேன்? என தனது நெருங்கிய உறவினர்கள் சிலரிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த நெருக்கடியில் ராஜபக்ஷேவின் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளது அவரை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. (இது சார்பான கட்டுரைகளை வாசிக்க...)

இடதுசாரியத்தின் மீதான சாதிய அவதூறுகளை நிறுத்துங்கள்!
 

(மணலைமைந்தன்)

பிரபாகரன் அவர்களின் தலைமையிலான புலிகள் இயக்கம் பல வெற்றிகளைக் கண்டு உச்சத்தில் இருந்தவேளை, பிரபாகரனின் சாதியை முன்னிறுத்தி புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் புலம் பெயர்ந்த நாடுகளின் முன்னெடுக்கப்பட்டது. பிரபாகரன் படிக்காதவராகவும், முரட்டுத்தனம் பிடித்த ஒருவராகவும், எதையும் செய்யத் துணிந்தவராகவும் சித்தரிக்கப்பட்டார். அத்துடன் கள்ளக்கடத்தல், களவு, கொலை போன்ற விடையங்களை செய்வதும் அவரின் இயல்பாகக் கருதப்பட்டது. இப்படியான அவரின் நடத்தைகளுக்குக் காரணம் அவரின் சாதியாவும் - யாழ்ப்பாண மொழியில் சொன்னால் "அவரின் சாதிப்புத்தியாகவும்" புலியெதிர்ப்பு ஆய்வுகள்" முன்வைக்கப்பட்டது. (மேலும்....)

வட மாகாண ஆளுநரை நீக்க கூடாது - தே.சு.மு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கிணங்கவே வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி நியமிக்கப்பட்டமையால், அரசாங்கம் அவரை பதவியிலிருந்து நீக்கக்கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸமில், இன்று வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அரசாங்கம் அதனது 100 நாள் திட்டத்திலிருந்து விலகி வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியை நீக்க முற்படுகின்றது. மேலும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கான சூழ்ச்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

யோஷித ராஜபக்ஷ மறைத்து வைத்திருந்த விமானம், சந்திரன் ரட்ணத்துடையது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருக்கு சொந்தமானதென கண்டுபிடிக்கப்பட்ட சிறிய ரக விமானம், தன்னுடையது என திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான சந்திரன் ரட்ணம் தெரிவித்துள்ளார். இரண்டு ஆசனங்களை கொண்ட மேற்படி சிறிய ரக விமானம், நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13) மீட்கப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சிவில் விமான சேவைகள் அதிகாரசபை, இலங்கையிலுள்ள அனைத்து விமானங்களும் தமது அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது. இது போன்ற சிறியரக விமானங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலேயே பயன்படுத்தப்பட்டன என்றும் அவற்றைக் கொண்டே அவ்வியக்கத்தினர் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர் என்றும் அதிகாரசபை மேலும் தெரிவித்தது.

மனிதன், இயற்கைக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்தும் தெய்வ வழிபாடே தைப்பொங்கல் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
 

மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையில் பலமான பிணைப்பை ஏற்படுத்த தெய்வ வழிபாடுகளில் மக்கள் சமூகங்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் பண்டிகை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தை மாதத்தின் முதல் தினத்தைக் குறித்து நிற்கும் இவ்விசேட பண்டிகையான தைப்பொங்கல் சிறந்த அறுவடையைப் பெற்றுக் கொண்டமைக்காக சூரியப் பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் விசேட அம்சமான பாலும் சோறும் பொங்க வைப்பதனைக் குறித்து நிற்கும் பொங்கலானது விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தின் எல்லா அம்சங்களிலும் சூரிய பகவானிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதத்திற்கு நன்றி செலுத்துவதாய் அமைகிறது. அறுவடையின் முதற்பகுதி சூரியபகவானுக்கு படையல் செய்யப்படும் போது இது ‘சூரிய மாங்கல்யமாகவும்’ கருதப்படுகிறது. இப்பண்டிகை சிறந்த அறுவடைக்காக சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதிலும் எதிர்வரும் வருடத்திலும் சிறந்த அறுவடையும் வெற்றிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் மிகுந்த அன்பு மற்றும் புரிந்துணர்வுடன் குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றிணைக்கின்றது.

 இலங்கை அதிபர் தேர்தல் - சில அவதானங்கள்.
1. சீனாவைத் தோற்கடித்திருக்கிறது அமெரிக்கா மற்றும் மேற்குக் கூட்டணி. அல்லது சீனாவுக்கு பின்னடைவு ஏற்றபட்டிருக்கு.
2. (வாசலில் )காத்திருந்த இந்தியாவுக்கு மிச்ச சொச்சங்கள் கிடைத்திருக்கிறது.
3. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஸவின் வீழ்ச்சியையும் மைத்திரியின் வெற்றியையும் கொண்டாடுகின்றனர் பலர்.
4.1994 - 2005 காலப்பகுதியில் சந்திரிகா ஆட்சியிலிருந்தபோது யாழ்ப்பாண முற்றுகை - றிவிரச, நவாலித் தேவாலயம் மீதான குண்டு வீச்சு, நாகர்கோவில் பாடசாலை மீதான தாக்குதல், செம்மணிப் புதைகுழி, கிரிசாந்தி படுகொலை,சத்ஜெய - கிளிநொச்சி மீதான படையெடுப்பு, ஜெயசிக்குறு நடவடிக்கை மற்றும் கிழக்கிலும் வன்னியிலும் நடந்த குண்டு வீச்சுகள்... எல்லாவற்றையும் தமி்ழர்கள் மறந்தும் மன்னித்தும் விட்டனர். அதாவது அந்தப் பத்து ஆண்டுக் கோவத்தை நம்மக்கள் மறந்து விட்டனர். இதே போல அடுத்து வரும் ஆண்டுகளில் மகிந்த ராஜபக்ஸ மீதான இன்றைய கோபத்தையும் மறந்து மன்னித்து விடுவார்கள். சந்திரிகா யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது அவருடைய ஆட்சிக்காலம் பற்றி எந்தப் பத்திரிகையும் ஒரு கேள்வியைக் கூட எழுப்பவில்லை.
5.முன்னுறு ஆண்டுகளாக எங்கள் நிலத்தில் அவர்களுக்காக உழுத நாம் தொடர்ந்தும் அந்நியர்களுக்காக உழப்போகிறோம்.
6. பெரிய யானைகளின் காலடியில் எப்போதையும் போல இப்பொழுதும் சிக்கியிருக்கிறது இலங்கை.
மாற்றம் என்றால் என்ன?  (மேலும்....)

ஜனவரி 14, 2015

எமது இனிய உறவுகளுக்கு இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

தைப்பொங்கல்

உழவுக்கு சூரியன் அவசியம் என்பதை உலகிலுள்ள அனைத்து இனமும் காலா சாரங்களும் அறிந்திருக்கின்றன. வடஐரோப்பா, வடதுருவநாடுகளில் சூரியனை வரவேற் கும் ஒளிநாள்பற்றி இணையத்தில் எழுதியிருந்தேன். இன்று அந்த ஒளிநாள் கிறிஸ்த வத்தின் ஆக்கிரமிப்பில் நத்தாராக மாறியுள்ளது. இந்த சூரியனை வரவேற்கும் ஒளிநாளை எவரும் வருடப்பிறப்பு என்பதில்லை. இந்துக்கள், தமிழர்கள், முக்கியமாக உளவர்கள் சூரியனை மையமாகக் கொண்டே வாழ்ந்தார்கள். தமிழர்கள் இந்துக் கள், பௌத்தர்களின் நூர்டன் மித்தலெகி (வடதுருவமித்துக்கள்) வழிபாடுகளில் சூரியனும் ஒரு இயற்கைத் தெய்வமாகவே வணக்கப்பட்டிருக்கிறது. நோர்வே போன்ற துருவநாடுகளுக்கு வடக்கே வாழும் ஒருவகை மங்கோலிய அடியைக் கொண்ட சாமர் களும் சூரியவணக்கதையே கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இதனால் தான் இந்துக் களின் முதல் வேதமான இருக்குவேதத்தில் இயற்கை வணக்கமே அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது. அதாவது தமிழுக்கு தை அதாவது ஆங்கிலத்துக்கு தை 14 சூரியன் மகரராசியினுள் பிரவேசிக்கும் நாளாகும். இதுவே தைப்பொங்கல் உழவர்திருநாள் ஆகும். (மேலும்....)

நேற்று அமைச்சு பொறுப்புக்களை கையேற்கும் போது நடந்த சில சம்பவங்கள்!

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற புதிய அரசாஙகத்தின் புதிய அமைச்சர்கள் பதவியேறபின போது சில சுவாரஷ்யமான சமபவங்கள் இடம பெற்றதை அவதானிக்க முடிந்தது. அமைசசரகளுக்கு நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியினால் வழஙகபபடடன. ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் நியமனக் கடிதஙகளை வழங்கும் ஏறபாடுகளை செயது கொணடிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபைக்கு வந்து ஆசனத்தில் அமர்நததும் அதிகாரி ஒருவர் அமைசசரகளுககான நியமனக் கடிதங்கள் அடஙகிய அனைத்து கோபபுககளையும் ஒரு கதிரையில் வைத்து கதிரையை நகர்த்தி ஜனாதிபதி செயலாளரிடம் கொணடு வந்தார். அப் போது கதிரை திடீரென சாய்நதுவிடடது. இதனால் கோபபுக்கள் அனைத்தும் கீழே விழுநதன. இதனை ஜனாதிபதியும் பிரதமரும் அமைசசரகளாக பதவியேற்க காததிருநத வரகளும் அவதானிததனர். (மேலும்....)

நறுக்கு நொறுக்கு........

(மோகன்)

அட அண்ணே எப்பிடியிருக்கிறீங்க?
இருக்கேன் இருக்கேன் என்ன விசயம்?
அட நம்ம மைத்திரி ஜெயிச்சிட்டாரல்ல.
ஆமா, ஆமா
அட அதில்லைனென்ன, மகிந்தாவல்ல தோத்திட்டாரு
அட வெண்ணை! அவரு தோத்ததாலதானே இவரு ஜெயிச்சாரு
இதில உங்களுக்கு சந்தோசமா இல்லையான்ணே?
ரொம்ப, ரொம்ப சந்சோம் இப்ப அதுக்கென்ன?
பின்ன எதுக்கு டல்லா இருக்கிறமாதிரி இருக்கு?
அதுக்கு என்னை டங்கு டங்கண்ணு குதிக்க சொல்லிறியா?
இல்லா மைத்திரி எதாவது தமிழருக்கு குடுப்பாரா?
குடுப்பாரு, குடுப்பாரு
என்ன குடுப்பாரு?
எனக்கென்ன தெரியும்
இல்ல.. மைத்தியின் வெற்றி கூட்டமைப்பின் வெற்றிதானே?
இருக்கலாம்
அப்போ அது தமிழரின் வெற்றிதானே
அட கழுதே முதல்ல கூட்டமைப்பின் வெற்றியே தமிழ் மக்களின் நாசம் அத புரிஞ்சிக்கோ
என்னண்னே சொல்லிறீங்க? அவங்கதானே அள்ளி அள்ளி வாக்கு போட்டிருக்கிறீங்க
நம்ம சனங்க நாங்க வாழ்வதைவிட மற்றவன் வாழ்திடக்கூடாது என்பதில ரொம்ப கவனமா இருப்பாங்க ஆனா அவங்களுக்கு தெரியும் தாங்க என்ன கூத்தாடினாலும் தங்களுக்கு வரவேணடியது வந்து சேருமெண்டு
எப்பிடியண்ணே சொல்றீஙக?
அட ஆமாய்யா ஆனானப்பட்ட புலிகளே கண்டமேனிக்கு அப்பாவி சிங்கள சனங்களை கொண்டபோது கூட சிங்கள அரசு புலிகளுக்கும் சேர்த்துதானே அரிசி பருப்பு மயிறு மட்டையெல்லாம் அனுப்பிச்சு
புலிகளும் அதில வயிறு வளர்திண்டுதானே மறுபடியும் மறுபடியும் அப்பாவி மக்கள கொண்டாங்க
அப்போ மைத்திரிய நம்பினது சுத்த வேஸ்டென்கிறிங்க?
அது அப்பிடியில்ல யாரை நம்பி அவரை நம்பினாங்களோ அதுதான் வேஸ்டு
அப்ப பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
நீ ஒண்ணு பண்ணுறியா பேசாம இந்த இடத்தைவிட்டு கிழம்பு நானே நம்ம தல அஜித்திட படம றிலீசு தள்ளிபோச்சென்னு செம கடுப்பில இருக்கிறன் வந்திட்டு அலுப்பு குடுக்கிற.

கொழும்பில் மைத்திரியின் மகனும் சண்டித்தனத்தில்

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களும், ஊழலில் ஈடுபடுபவர்களும் உடனுக்குடன் தண்டிக்கபடுவார்கள் என்ற மைத்திரிபால சிரிசேனவின் கூச்சலின் எதிரொலி அழியும் முன்னரே அவரது மகன் கொழும்பில் தெருச் சண்டித்தனத்தில் இறங்கியுள்ளார்.
தனது நண்பர்களுடனும் மெய்ப்பாதுகாவலர்களுடனும் ஏழு வாகனங்களில் கொழும்பு ரேஸ் கோர்ஸ் இரவு விடுதியில் கடந்த பத்தாம் திகதி இரவு வந்திறங்கிய மைத்திரிபால சிரிசேனவின் மகன் டாகம் சிரிசேன அங்கிருந்தவர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.
விடுதியின் பாதுகாப்பு ஊழியர்களிடம் பாதுகாப்பு கமராக்களை நிறுத்துமாறு டாகம் கட்டளையிட்டார். அவர்கள் அதற்கு மறுக்கவே மெய்ப்பாதுகாவலர்கள் உத்தரவிட கமெராக்கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் தனது கூத்தை ஆரம்பித்த டாகம் விடுதியில் மற்றவர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார். மகிந்தவின் மகன்களின் தொடர்ச்சியாக மைத்திரியின் மகன் தோன்றியுள்ளார். இது தொடர்பாக மைத்திரியின் புதிய அரசியல் கலாச்சாரம் எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
2013 ஆம் ஆண்டு மைத்திரிபால சிரிசேனவின் மகன் குழுவினரால் கடற்கரை விடுதியொன்றில் தாக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதும்,அதனை மூடி மறைக்க மைத்திரிபால அதிகாரத்தைப் பயன்படுத்தியதும் பழைய செய்தி. மேட்டுக்குடிகளின் இரவு களியாட்ட விடுதியில் நடந்த மேட்டுக்குடி மோதல் என்பதற்கு அப்பால் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய டாகம், மைத்திரி ஆட்சிக்கு முன்னுரை சொல்கிறார் என்பதே முக்கியமானது.

Chithranganie Wagiswara is Sri Lanka’s new Foreign Secretary

While Mangala Samaraweera assumed duties as Sri Lanka’s new Foreign Minister this morning (13 January), a senior Foreign Service official Chithranganie Wagiswara was appointed as the new Foreign Secretary. President Maithripala Sirisena’s new government yesterday appointed United National Party parliamentarian representing the Kalutara District, Ajith P. Perera as the Deputy Minister of Foreign Affairs.


ஊவா மாகாண சபையில் ஐ.ம.சு.மு பெரும்பான்மை பலத்தை இழந்தது

ஊவா மாகாண சபையில் பெரும் பான்மை ஆதரவு ஐ. தே. கட்சிக்கு இருப்பதாக எதிர்க் கட்சி தலைவர் ஹரீன் பெர்னாண்டோ மாகாண ஆளுநர் சீ. தித்தமெதிவிடம் சத்திய கடதாசி மூலம் நேற்று காலை ஆளுநர் அலுவலகத்துக்கு அறிவித்துள்ளார். ஊவா மாகாண சபையில் ஐ. தே. கட்சிக்கு 12 ஆசனங்கள் இருப்பதோடு ஆளும் கட்சிக்கு 17 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே. வி. பி.) 2 ஆசனங்களும் உள்ளன. இந்நிலையில் ஆளும் ஐ. ம. சு. கூட்டமைப்பிலிருந்து ஐ. தே. கட்சிக்கு ஐவர் (5) ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதில் நேற்று ஸ்ரீல. சு. கட்சி பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் ஐ. தே. கட்சி உறுப்பினர்களுடன் தமது சத்தியக் கடதாசியை சமர்ப்பித்தார். இந்நிலையில் தற்போது ஐ. தே. க. 17 ஆசனங்களும் ஐ. ம. சு. முவுக்கு 17 ஆசனங்களும் உள்ளன.இந்நிலையில் ஜே. வி. பி (2) இருவரும் சுயாதீனமாக இருந்து ஐ. தே. கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிய முடிகிறது.

அமெரிக்க இராணுவ டுவிட்டர் பக்கம் ஐ.எஸ். ஆதரவாளர்களால் முடக்கம்

அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்ட ளைப் பிரிவின் டுவிட்டர் மற்றும் யூடியூப் கணக்குகளை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) அமைப்பின் ஆதரவாளர்கள் முடக்கியுள்ளனர். அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்ட ளைப் பிரிவு புளோரிடா மாநிலத்தில் உள்ள டம்பாவில் அமைந்துள்ளது. இந்த பிரிவு ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போரை கண்காணித்து வருகிறது. 'இணைய கலீபத்" என்று தங்களை அழைத் துக்கொள்ளும் இந்தக் குழு முன்னாள் அமெ ரிக்க தளபதிகள் மற்றும் தற்போது பதவியிலி ருக்கும் தளபதிகள் பெயர்கள் மற்றும் அவர் களது தனிப்பட்ட தகவல்களையும், இராணுவ உள் விவகார ஆவணங்களையும் வெளியிட் டுள்ளது. அதில் பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தியில் 'அமெரிக்க சிப்பாய்களே, நாங்கள் வருகி றோம், உங்கள் பின்புறத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங் கள்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உரை நிகழ்த்திய கையோடு இராணுவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணைய பக்கங் கள் சுமார் 30 நிமிடங்கள் கழித்து இராணுவத்தின் கட்டுப் பாட்டிற்கு வந்தது. இந்த ஊடுருவல் நடவடிக்கையால் தமது தரவுகளில் எந்த பாரிய பாதிப்புகளும் ஏற்பட வில்லை என்று அமெரிக்க இராணுவ மத்திய கட்டளை யகம் குறிப்பிட்டுள்ளது.

பறிக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் கிடைத்தது பொன்சேகாவிற்கு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இராணுவத்தில் வழங்கப்பட்டிருந்த பதவி பட்டங்கள், பதக்கங்கள், ஓய்வூதியம், குடியுரிமை உட்பட அனைத்து சிறப்புரிமைகளும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் பறிக்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டதன் காரணமாக பொன்சேகாவை முன்னாள் ஜனாதிபதி கடுமையான பழிவாங்கலுக்கு உட்படுத்தினார். பறிக்கப்பட்ட இந்த சிறப்புரிமைகள் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் சரத் பொன்சேகாவின் சிறப்புரிமைகள் அனைத்தும் இன்று அவருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

விளங்காத அரசியல்

மைத்திரியின் தேர்தல் அறிக்கையில் தமிழர் விடயம் எதுவுமில்லை ஆனாலும் அவரை நம்புகிறோம், மகிந்தர் தமிழர் விடயத்தில் பலதுகள் சொன்னார் ஆனால் அவரை நம்ம மாட்டோம் இது கூட்டமைப்பின் விளக்கம்
இப்படி வெறும் நம்பிக்கையில் அரசியல் நடத்துவதற்க்கு நீங்கள் எதற்க்கு?
பேசால் ஆண்டவனை நம்மிட்டு சிவனேன்னு இருந்திடலாமே, இரண்டிற்க்கும் என்ன வித்தியாசம்?

(மோகன்)

ஜனவரி 13, 2015

ராஜபக்ஷவின் விமானம் சிக்கியது

பிரபாகரன் தப்பியோட தயாரித்த விமானத்திற்கும் இதற்கும் தோற்றத்தில் பாரிய வேறுபாடுகள் இல்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருக்கு சொந்தமானதென கருதப்படும், மறைத்து வைக்கப்பட்ட இரண்டு ஆசனங்களை கொண்ட சிறிய ரக விமானமொன்று மீட்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டியவில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறியரக விமானம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறியரக விமானமானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனால் கொள்வனவு செய்யப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, வெளிக்கள ஒளிபரப்புக்கு தேவையான உபகரணங்கள் சிலவும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், திங்கட்கிழமை (12) அழைப்பாணை விடுத்தது. சோலங்காரச்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வழக்கு விசாரணையின் போது மன்றில் ஆஜராகுமாறு மேற்படி நால்வருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. சோலங்காரச்சியின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட நீதவான் சுஜாதா அழகப்பெரும, இந்த அழைப்பாணையை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சினையை தீர்க்க ஒரு மாதத்துக்குள் செயற்குழு - ஜனாதிபதி மைத்திரி

'பிளவுபடாத இலங்கைக்குள் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக செயற்குழுவொன்றை நியமிக்குமாறு', தாம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ள ஜனாதிபதி;, இந்த செயற்குழுவை ஒரு மாதத்துக்குள் நியமித்து பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்மிரருக்கு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் திங்கட்கிழமை (12) கொழும்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. (மேலும்....)

புதிய அரசுக்கு 03 இடதுசாரிகள் ஒத்துழைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் மூன்று, புதிய அரசாங்கத்தின் ஜனநாயக முறைகளை பின்பற்றும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளன. எனினும் அரசாங்க கட்சியில் இணைவதாகத் தெரிவிக்கவில்லை. இது குறித்து, இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில், 'தொடர்ந்தும் நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இடதுசாரி கட்சியாக இருந்துகொண்டு புதிய அரசின் தேர்தல் வாக்குறுதிகளை செயற்படுத்த அழுத்தம் கொடுப்போம்' எனக் கூறினார். முன்னாள் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரான வாசுதேவ நாணயக்கார, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என பல தடைவைகள் கூறிவந்த நிலையிலேயே இவ்வாறானதொரு கருத்தை நேற்று தெரிவித்தார். இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகும். எனினும், நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்த கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருந்தன.

வட மாகாணத்தின் ஆளும் கட்சியும் இல்லை! எதிர்க் கட்சியும்  இல்லை!!

மைதிரியின் தேசிய? அரசின் அமைச்சரவை விவரங்கள்

(சாகரன்)

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தற்போது பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகின்றது. பலரும் எதிர்பார்த்ததைப்போல் கூட்டமைப்பு மந்திரி சபையில் இடம்பெறவில்லை. டக்ளஸ் இன் ஈபிடிபியும் மந்திரி சபையில் இடம்பெறும் அளவிற்கு இன்னும் புதிய அரசை நெருங்க முடியவில்லை. ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது எதிர்ப்பு அரசிலை நடத்துவதற்காக தனது வாழ் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் சம்மந்தன் 'இளசு' சுமந்திரனையோ அல்லது வேறு யாரையையோ மந்திரிப்பதவி எடுக்கவிடாமல் தடுத்தவண்ணமே தனி முடிவெடுத்துச் செயற்படுவார். தொண்டமான் கட்சியினர் என்றும் போல் இனிவரும் காலங்களில் மந்திரிசபையில் இடம்பிடிக்க உள்நாட்டிலும், வெளி(இந்தியா)நாட்டிலும தமது காய்களை நகர்த்தி வெற்றியும் பெறுவர். இடதுசாரிகள் சந்திரிகாவின் கரமா? அல்லது ரணிலின் கரமா? புதிய அரசில் மேலோங்குவதைப் பொறுத்து எதிர்காலத்தில் தமது நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பர். (மேலும்....)

நூறு நாட்களில் பொதுத் தேர்தல் புது அரசு புதிய மந்திரிசபை - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதியாக நானும் பிரதமராக ரணிலும் ஏற்கனவே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டோம். அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என இன்று நியமனம் பெற்றுள்ளனர். நான் இந்த அமைச்சர்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் சொல்ல விரும்புவது, எமது வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட அமைச்சரவையே இது. நூறு நாள் வேலைத் திட்டங்களையடுத்து நாம் பொதுத்தேர்தலொன்றுக்குச் செல்லவுள்ளோம். அதனூடான அமைச்சரவைமூலம் அமைக்கப்படுவதே நிரந்தர அரசாங்கமாகும். நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்குத் தெரிவித்த கொள்கைகளுக்கு இணங்கவும், நூறு நாள் வேலைத்திட்டத்தின் மூலமும் மேற்கொள்ளக்கூடிய பல விடயங்கள் உள்ளன. அதற்கான பொறுப்பை மக்களிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நாங்கள் இன்னும் நூறு நாட்களில் நாம் தேர்தலொன்றுக்குச் செல்லப்போகின்றோம் என்ற உறுதியான மனப்பாங்கோடு செயற்படுவது முக்கியமாகும். (மேலும்....)

டியூ. குணசேகர, விநாகமூர்த்தி முரளிதரன்

மேலும் பல எம்.பிக்கள் ஜனாதிபதி மைத்திரியுடன் இணைவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை அங்கீகரித்து மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றும் அவரோடு இணைந்து கொண்டனர். நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர்களான விஜித் விஜிதமுனி சொய்சா, சரத் அமுனுகம, ஜகத் புஷ்பகுமார, ரெஜினோல்ட் குரே, எஸ். பி. நாவின்ன, அதாவுட செனவிரட்ன உள்ளிட்ட சுமார் 15 பேர் தேசிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளனர். இந்த நிலையில், மேலும் பலர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, விநாகமூர்த்தி முரளிதரன், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, டியூ. குணசேகர, உதித் லொக்குபண்டார, சனத் ஜெயசூரிய, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல் காதர், முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி உள்ளிட்ட பலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

சவாலே சமாளி

வட புலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), கிழக்குப் புலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) என்பன தமிழ்த் தேசியத்தின் மைய சக்தியாக தற்போது இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை கேள்விக்குள்ளாக்கும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் குறிப்பிடத்தக்க இரண்டு. இந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவு, ஒரு வகையில் புதிய தளமொன்றுக்கு இவர்களை இட்டுச் சென்றுள்ளது. வடக்கின் மாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருப்பதால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி காத்திரமான ஒர் எதிர்க் கட்சியாக செயற்பட வேண்டும். கிழக்கில் த.தே.கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்தால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆக்க பூர்வமான எதிர்க் கட்சியாக சேர்ந்து இயங்க முடியும். (மேலும்....)

அமைச்சரவையில் இணைவது குறித்து சிந்திக்கலாம் - இரா சம்பந்தன்


"பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைத் தாருங்கள்"

அமைச்சரவைக்கு வாருங்கள் நீங்கள் எங்களிடம் கேட்கத் தேவையில்லை நீங்களே நடைமுறைப்படுத்தலாம் என கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் அமைச்சர் ராஜிதசேனாரட்ண விடுத்த கோரிக்கையை இரா சம்பந்தன் நிராகரித்தார். பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைத் தாருங்கள் அதன் பிற்பாடு அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்து கவனத்தில் கொள்ளலாம் என இன்றைய சந்திப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. .இந்த நிலையில் பாராளுமன்ற அமர்வின் பின் தீர்வு குறித்த விடயங்களிலும் உரிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக பதில்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 

கிழக்கு மாகாணசபை மீண்டும் ஒத்திவைப்பு

கிழக்கு மாகாணசபையின் நடவடிக்கைகளை மீண்டும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ள அதன் தவிசாளர் ஆரியவதி கலபதி, புதிய ஆட்சியை அமைத்து வரவு -செலவுத்திட்டத்தை அன்றையதினம் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி அன்று கிழக்கு மாகாணசபை அமர்வு, தவிசாளர் ஆரியவதி கலப்பதியினால் 2015ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் திங்கட்கிழமை (12) கிழக்கு மாகாணசபை மீண்டும் கூடியது. கட்சி தலைவர்களின் கூட்டத்தை தொடர்ந்து சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கோரம் இல்லாத காரணத்தினால் திங்கட்கிழமை (12) முற்பகல் 11 மணிவரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதன் பின்னர், சபை நடவடிக்கைகள் 11.15 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாணசபையிலுள்ள ஆளும் கட்சியினர் பலர் எதிர்க்கட்சியின் பக்கம் வந்துள்ளதனால், ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தவேண்டியுள்ளதுடன், அதற்கான கால அவகாசமாக எதிர்வரும் 20ஆம் திகதிவரை சபையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தண்டாயுதபாணி கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி குழு தலைவர் எல்எம்.ஜெமிலும் வழிமொழிந்தார். இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர், கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் ஏற்படும் என்று ஜக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே தெரிவித்தார். மாகாண சபை வளாகத்தில், திங்கட்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டக்ளஸ் அமைச்சராகவே இருக்க விரும்புகிறார் - சுரேஸ் பிரேமச்சந்திரன்

காலங்காலமாக ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்திடம் ஆதரவு என்ற போர்வையில் செல்வது அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவிற்கு ஒன்றும் புதிதல்ல எனத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புதிய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமையப்போகும் அரசாங்கத்திடம் அமைச்சர் டக்களஸ் சென்றாலும் அந்த அரசாங்கம் இணைத்துக் கொள்வதென்பது பெரும் கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபெற்ற ஐனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் சார்பாகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி மகிந்த ராஐபக்சவிற்கு ஆதரவு வழங்கியிருந்தது. (மேலும்....)

ரவூப் ஹகீம் இடம் இருப்பது

சாணக்கியமா? அல்லது சரணாகதியா?

இன்று தம்பி ரவூப் ஹகீம் அவர்களுடன் மு.கா பாராளுமன்ற , மாகாணசபை உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒருவர் " இந்தவெற்றி TNA யும் SLMC யும் கொண்டுவந்ததல்ல , இது சிங்கள பெரும்பான்மை வாக்காளர்களினால் விளைந்தது என்று சம்பிக்க ரணவக்க சொல்கிறார் , இதனை நீங்கள் கண்டிக்க வேண்டும் " என்றார் . அப்போது புன்முறுவலுடன் ஹகீம் இவ்வாறு சொன்னார் : "சம்பிக்க சொன்னதில் எந்தத் தவறுமே இல்லை .இந்த வெற்றிக்கு நாம் வெளிப்படையாக உரிமை கொண்டாடக் கூடாது .ஹெல உறுமயவின் பங்கு இவ் வெற்றியில் பாரிய செல்வாக்கு செலுத்தி உள்ளதை மறைக்க முடியாது , மகிந்த அரசின் ஊழல்கள் , அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றை மற்ற எவர் சொன்னாலும் சிங்கள மக்கள் கணக்கில் எடுத்திருக்க மாட்டார்கள் . அந்த மக்களுக்குள் செல்வாக்குள்ள அவர்களின் ஒரு முக்கிய அரசியல் கட்சியான ஹெல உறுமய அதனைச் சொன்னதனால் மட்டுமே உண்மையை உண்மை என்று விளங்கி மஹிந்தைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். (மேலும்....)

இலங்கை மண்ணில் பரிசுத்த பாப்பரசர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று இலங்கை வருகிறார். இன்று காலை 8.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையும் பரிசுத்த பாப்பரசருக்கு விமான நிலையத்தில் அரச வரவேற்பளிக்கப்பட வுள்ளது.இன்று பிற்பகல் 5.00 மணியளவில் இலங்கையிலுள்ள சர்வ மதத் தலைவர்களையும் பரிசுத்த பாப்பரசர் சந்திக்கவுள்ளார். இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன் மதத் தலைவர்கள் மத்தியில் பரிசுத்த பாப்பரசர் சிறப்புரையொன்றையும் ஆற்றவுள்ளார். இச்சந்திப்பினையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பரிசுத்த பாப்பரசருக்குமிடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. பரிசுத்த பாப்பரசர் நாளை மடுத்திருப்பதிக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு வடக்கு, கிழக்கு மறை மாவட்டங்களின் ஏற்பாட்டில் மாபெரும் மத வழிபாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் பத்து இலட்சம் மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக மன்னார் மறை மாவட்டம் அறிவித் துள்ளது.

காந்தி ஒரு தீவிரவாதி

மாறாகக் கொலைகாரர்களை தீவிரவாதி என்பது சரியல்ல

பாரிஸ் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைப் போன்றவர்களை “தீவிரவாதிகள்” என்ற சொல்லால் சித்தரிப்பதே தவறு என்று நினைக்கிறேன். ஒரு நல்ல நோக்கமும் கொள்கையும் உள்ள ஒருவர் அதற்காக முனைப்புடன் செயல்படுவதும், அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பதும்தான் தீவிரவாதம். அந்த வகையில் காந்தி ஒரு தீவிரவாதி எனலாம். மாறாகக் கொலைகாரர்களை தீவிரவாதி என்பது சரியல்ல. அவர்கள் பயங்கரர்கள், மனிதகுல விரோதிகள். உலக ஆதிக்க சக்திகள் திட்டமிட்ட முறையில் இப்படிப்பட்ட சொற்களை உருவாக்கிப் பரப்புகிறார்கள், நாமும் அவற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். (மேலும்....)

ஜனவரி 12, 2015

புதிய அரசின் நூறு நாள் திட்டத்தை வெளியில் இருந்து ஆதரிப்போம் - ஈபிடீபி

புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை வெளியில் இருந்தே ஆதரிப்பதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முடிவு செய்திருக்கின்றது. இது தொடர்பில் அக்கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நடந்திருக்கும் ஆட்சி மாற்றத்திலும் எமது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆக்கபூர்வமான திட்டங்கள் தொடர வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து புதிய அரசு எந்த வழிமுறையை கொண்டிருக்கிறது என்பதை இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு எவ்வாறான தீர்வு காணப்படப்போகின்றது. என்பதை நாம் புதிய அரசுடன் கூடிப்பேசிய பின்னரே எமது கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு எது என்பதை தீர்மானிப்போம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட நூறு நாட்கள் திட்டத்தில் சகல மக்களுக்கும் பயன்தரும் நல்ல பல அம்சங்கள் உண்டு. புதிய அரசு அவைகளை நிறைவேற்ற வேண்டும் என விரும்பும் நாம் அதற்கான எமது ஆதரவை வெளியில் இருந்து கொண்ட வழங்குவோம். எமது மக்களின் நம்பிக்கையான எதிர்காலத்திற்காகவும், நியாயமான அரசியல் தீர்வுக்காகவும், நாம் நடைமுறை யதார்த்த வழி நின்று உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கரம் கொடுப்போம். என்றும் நாம் மக்களுக்காக...' என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணவர்தன குடும்பத்துடன் பயணமானார்

முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தனது குடும்பத்துடன், இன்று திங்கட்கிழமை(12) சீனாவுக்கு பயணமாகியுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.ஸ்ரீ லங்கா விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 868 எனும் விமானத்தில் அவர் சீனாவுக்கு பயணமானதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

"நாட்டுக்குத் தேவை அரசன் அல்ல, உண்மையான மனிதனே அவசியம்”
தேசிய அரசு அமைக்க சகல கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்

  • நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு
  • பாராளுமன்றம், அமைச்சரவை, நீதித்துறைக்கு அதிகாரங்கள் மாற்றம்

    தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அழைப்பு விடுத்தார். இன்று வாழ்கின்ற மக்கள் போன்று நாளை பிறக்க இருக்கின்ற பிள்ளைகளுக்காகவும் நாட்டில் நல்லாட்சியின் ஊடாக வறுமையற்ற சுதந்திரமான ஜனநாயகத்தை உறுதிப் படுத்துவதற்காகவும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்துப் பலப்படுத்தவும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். (மேலும்....)
     

மஹிந்த இராணுவ உதவி கோரியது குறித்து விசாரணை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் தோற்றுவிட்டதை அறிந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இராணுவத்தை களத்தில் இறக்க முயன்றார் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளர் ரஜித சேனரட்ண குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்தத் தேர்தலில் தான் தோற்றுவிட்டதை ஏற்றுக்கொள்வதாக மஹிந்தராஜபக்‌ஷ பகிரங்கமாக அறிவிப்பதற்கு முன்னர், இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக மீது பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று மஹிந்தராஜபக்ஷவின் சார்பில் பேசவல்ல மோஹன் சமரநாயக மறுத்திருக்கிறார். அப்படியான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். (மேலும்....)

கிழக்கு, ஊவா, மேல் மாகாண சபைகளின் ஆட்சி கவிழும் அபாயம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள கிழக்கு, ஊவா மற்றும் மேல் ஆகிய மூன்று மாகாண சபைகளின் ஆட்சியும் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியிலிருக்கும் கிழக்கு மாகாணசபையின் கதி இன்று திங்கட்கிழமை (12) தெரியவரும் என்று அந்த மாகாணசபையின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாண சபையமர்வு, 2014ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதியன்று இன்று 12ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் 01.12.2014 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, அமளிதுமளி ஏற்பட்டது. இதேவேளை, செங்கோலையும் பறிப்பதில் இரு தரப்பினருக்கும் இடையில் இழுபறியும் ஏற்பட்டது. இதனையடுத்தே கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி சபையை இன்று 12ஆம் திகதி வரையும் ஒத்திவைத்தார். (மேலும்....)

சு.க. தலைவராக ஜனாதிபதி மைத்திரி தெரிவு


ஆலோசகர்களாக மஹிந்த  ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கூடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைவராக நியமித்துள்ளனர். அதேநேரம் கட்சியின் செயலாளராக துமிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளராக எஸ். பி. நாவின்ன, தேசிய அமைப்பாளராக ஜனக பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டிருப்பதோடு கட்சியின் ஆலோசகர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் கொண்ட மத்திய குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கூடி இந்த முடிவை ஏகமனதாக எடுத்ததாக நேற்று மாலை கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இன்றைய நாள் இதேநேரம் டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் மத்திய குழுவின் இன்னுமொரு பகுதியினர் கூடி தீர்மானம் மேற்கொண்டு வருகின்றனர். கட்சி யாப்பின்படி இது போலியானது. சட்டத்தின் முன்னால் அந்த தீர்மானம் செல்லுபடியாகாது. எமது கட்சியின் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவும் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்டனர். செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன கட்சியிலிருந்த படியே எதிரணியில் போட்டியிட்டார். இதன்படி கட்சி தலைவர் தோல்வியுற்றார். கட்சி செயலாளர் ஜனாதிபதியானார். கட்சியின் யாப்புக்கமைய கட்சியிலிருந்து ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவரே கட்சி தலைவராவார்.

முன்னாள் அமைச்சர் பஷில் அமெரிக்கா சென்றார்

முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர்களு க்கான வழியின் ஊடாக நேற்று அதிகாலை 2.55 மணிக்கு அவர் வெளிநாடு சென்றுள்ளார். ஈ.கே.349 என்ற எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் டுபாய் ஊடாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல் நகருக்குப் பயணமாகியுள்ளார். பசில் ராஜபக்ஷவுடன் அவருடைய மனைவி, புஷ்பா ராஜபக்ஷவும் உடன் சென்றிருப்பதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் மற்றுமொரு சகோதரரான முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே மாலைதீவுக்குத் தப்பி சென்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இலங்கையிலிருந்து எவரும் விசேட விமானம் மூலம் மாலைதீவு வரவில்லையென அந்நாட்டு அரசாங்கம் கூறியிருப்பதாக செய்திகள் வெளியா கியுள்ளன.
 

பிரான்ஸில் பகையான 'நையாண்டி''

"சார்லி ஹெப்டோ'' என்ற வாயில் நுழையாத பெயர் பிரான்ஸில் வாரம் ஒருமுறை வெளியாகும் நையாண்டி பத்திரிகை ஒன் றின் பெயர். பத்திரிகை என்பதற்காக நாம் நினைப்பது போல மரம் வெட்டிய, கால்வாய் தோண்டிய செய்திகளை பிர சுரிக்கும் சாதாரண பத்திரிகையல்ல. சம கால நிகழ்வுகளை நையாண்டியாக சொல் லும் கேலிச் சித்திரங்கள் கொண்ட ஒரு பத்திரிகை. இந்த பத்திரிகையை அங்குள்ள அர சியல்வாதிகள் பார்த்து கோபமடையாத நாட்களில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்த பத்திரிகை எல்லாவற் றையும் நையாண்டி செய்கிறது. கடந்த புதன்கிழமை காலை சார்லி ஹெப்டோ பத்திரிகையின் டுவிட்டர் பக்கத்திற்கு ஒரு கேலிச்சித்திரம் வந்தது. கேலி சித்திரம் என்பதனால் அது கேலியாக இருக்கவில்லை. ஏனென்றால் அந்த சித்திரத்தில் இருந்தது அமெரிக்காவு க்கே பூச்சாண்டி காட்டு இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவின் தலைவர் அபூபக்கர் அல்பக்தாதி. அந்த சித்திரத் தில் புதிரான சம்பா'னையும் போடப்ப ட்டிருந்தது. (மேலும்....)

ரஜினிகாந்தின் உண்மை முகம் பற்றி அவரின் ரசிகர் அவருக்கு எழுதிய கடிதம்


(ரஜினி என்னும் அரசியல்வாதி !2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன்)

சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,வணக்கம்.

உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை நான் நிச்சியமாக எழுதவில்லை. உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. "ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். "எந்திரன்" னிலும் உங்கள் நடிப்பு அருமை.உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள், ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான் இங்கே குறை கூற போவதில்லை. (மேலும்....)

காசு வாங்கிக் கொண்டு தோ்தல் கரகாட்டம் ஆடிய அனந்தி கூட்டமைப்பில் இருந்து அகற்றப்பட்டார்?

மாவிலாறு என்னும் தண்ணீர் இல்லாத ஆற்றை வழிமறித்து கடைசியில் அதனாலேயே விடுதலைப் புலிகளையும் அழித்து தானும் அழிந்து போன எழிலனின் மனைவி ஜனாதிபதித் தோ்தலில் மகிந்தராஜாபக்சவிற்கு ஆதரவாக செயற்படுவதற்காக புலனாய்வுப் பிரிவிடம் பெருமளவு பணத்தை வாங்கிக் கொண்டு ஜனாதிபதித் தோ்தலை தமிழ்மக்கள் பஸ்கரிக்க வேண்டும் என அறிக்கை விட்டதாக கூட்டமைப்பின் முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவாஜிலிங்கத்தின் ஊடான வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி மற்றும் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பின் தலைவர் சிவகரன் ஆகியோர் மகிந்தவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதித் தோ்தலைப் பஸ்கரிக்குமாறு அறிக்கை விட்டதாக கூட்டமைப்புத் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை கோடிக்கணக்கில் பணத்தை எதிர்த் தரப்பிடம் வாங்கிக் கொண்டு ஜனாதிபத்தித் தோ்தலில் கூத்தாடிகளாகத் திரிந்த கூட்டமைப்பு சிறிய அளவில் பணத்தைப் பெற்ற அனந்தி, சிவகரன் போன்றவார்களை பழிவாங்க முற்படுவது கேலிக்குரியதாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் சதுரங்கத்தின் மாற்றங்கள்

இலங்கைக்கு எதிர்வரும் 13ம் திகதி வருகை தரவுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸை வரவேற்பதற்காக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவுள்ளார். புனித பாப்பரசருக்கு அழைப்பிதழ் விடுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாப்பரசரை வரவேற்பதற்காக அழைப்பிதழ் விடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Karunarathna Paranavithana appointed as Media Ministry Secretary

Diplomat, journalist and political activist Karunarathna Paranavithana has been appointed as the Secretary to the Ministry of Mass Media and Information. He held the posts of Assistant Secretary to the Ministry of Justice and Constitutional Affairs, Director General - Sri Lanka Broadcasting Corporation, Editorial Director - Associated Newspapers of Ceylon Ltd., Chief Executive Officer - Sri Lanka Rupavahini Corporation and Consul General - Consulate General of Sri Lanka in Totonto, Canada.

ஜனவரி 11, 2015

SLFP Splits Into Two

Mahinda Re-appointed As Chairman By One Faction and Maithripala Appointed As Chairman By other faction


In a major development, the Sri Lanka Freedom Party has now been divided into two factions. While one faction has decided to support President Maithripala Sirisena, the other faction has chosen former President Mahinda Rajapaksa as the Chairman of the party. General Secretary of the Rajapaksa faction of the Sri Lanka Freedom Party, Anura Priyadarshana Yapa said 42 members of the Central Committee, who gathered at Darley Road headquarters of the SLFP, re-appointed President Rajapaksa as the Chairman of the party. However, the group supporting President Maithripala Sirisen said the Central Committee meeting which took place at the party headquarters was unconstitutional as they did not have the majority support of the CC. The SLFP Central Committee comprises of 55 members and both parties claim that they have the majority support in the party’s topmost decision making body. The headquarters of the party and its assets are still under the purview of Anura Priyadarshana Yapa, who is the General Secretary of the Rajapaksa faction of the party. The Rajapaksa faction also stated that the “alleged” Central Committee meeting which took place at the residence of President Maithripala Sirisena was illegitimate. The Rajapaksa faction of the party held a press conference at the party headquarters this evening with former President Mahinda Rajapaksa at the chair. It looks as if the problem involving the “real authority” of the Sri Lanka Freedom Party is likely to end up in courts.

'மாற்றுக் கருத்தாளர்கள் நாடு திரும்ப வேண்டும்' -  மைத்திரி

இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் காணாமல்போனதாக கூறப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் நினைவாக நடத்தப்பட்ட போராட்டம் ஒன்று அரசியல் மாற்றுக் கருத்தாளர்கள் நாடு திரும்பவேண்டும் என்றும் புதிய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். மாற்றுக்கருத்துள்ள இணையதளங்கள் மீதான தணிக்கையை உடனடியாக நீக்குவதற்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவது நிறுத்தப்படுவதற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மாற்றுக் கருத்தாளர்களுக்கு இடமளிக்காமல் அவர்களை ஒடுக்கியதாக பதவியிழந்து சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பெருமளவிலான ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் ஊடக சுதந்திரத்துக்கான அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இதேவேளை, மகிந்த ராஜபக்ஷ தேர்தல் தோல்விக்குப் பின்னரும் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு இராணுவத்தின் உதவியை கோரியிருந்ததாகவும் அதற்கு இராணுவம் மறுத்துவிட்டதாகவும் புதிய அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார். எனினும் இராணுவத்திடமிருந்து அதுதொடர்பில் கருத்தெதுவும் கிடைக்கப்பெறவில்லை.


புதிய அரசின் தேசிய நலன்சார் திட்டங்களுக்கு ததேகூ ஒத்துழைப்பு

'அமைச்சரவையில் சேர்வது பற்றி கூட்டமைப்பு கூடி ஆராயும்' - சம்பந்தன்

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்குகொள்ள வேண்டும் என்று புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் புதிய அரசாங்கத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றார். இந்த நிலையில், புதிய அரசாங்கத்தின் தேசிய நலன்கள் சார்ந்த வேலைத்திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். அமைச்சரவையில் சேர்வது குறித்து மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது பற்றி தங்களுக்குத் தெரிய வந்திருப்பதாகவும், அதுபற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் கூடி முடிவெடுக்கவுள்ளதாகவும் சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தேசிய நலன்கள் என்பது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளையும் உள்ளடக்கும் என்றும் அவற்றுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் என்றும் அவர் கூறினார். தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுக்கள் நடத்தவுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

பிரான்ஸில் பகையான 'நையாண்டி''

"சார்லி ஹெப்டோ'' என்ற வாயில் நுழையாத பெயர் பிரான்ஸில் வாரம் ஒருமுறை வெளியாகும் நையாண்டி பத்திரிகை ஒன் றின் பெயர். பத்திரிகை என்பதற்காக நாம் நினைப்பது போல மரம் வெட்டிய, கால்வாய் தோண்டிய செய்திகளை பிர சுரிக்கும் சாதாரண பத்திரிகையல்ல. சம கால நிகழ்வுகளை நையாண்டியாக சொல் லும் கேலிச் சித்திரங்கள் கொண்ட ஒரு பத்திரிகை. இந்த பத்திரிகையை அங்குள்ள அர சியல்வாதிகள் பார்த்து கோபமடையாத நாட்களில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்த பத்திரிகை எல்லாவற் றையும் நையாண்டி செய்கிறது. கடந்த புதன்கிழமை காலை சார்லி ஹெப்டோ பத்திரிகையின் டுவிட்டர் பக்கத்திற்கு ஒரு கேலிச்சித்திரம் வந்தது. கேலி சித்திரம் என்பதனால் அது கேலியாக இருக்கவில்லை. ஏனென்றால் அந்த சித்திரத்தில் இருந்தது அமெரிக்காவு க்கே பூச்சாண்டி காட்டு இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவின் தலைவர் அபூபக்கர் அல்பக்தாதி. அந்த சித்திரத் தில் புதிரான சம்பா'னையும் போடப்ப ட்டிருந்தது.


சு.க மத்தியக்குழு இன்று மாலை கூடும்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூடவிருக்கின்றது.இந்தக் கூட்டத்தில் புதிய தலைவர் பெரும்பாலும் தெரிவாகலாம். அது சந்திகாவா அல்லது மகிந்தாவா அல்லது மைதிரியா என்று தெரிந்துவிடும்.

முன்னாள் அமைச்சர்கள் பலர் மைத்திரிக்கு ஆதரவு

முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளடங்களாக பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். அதில், அத்தாவுட செனவிரத்ன, சரத் அமுனுகம, ரெஜினோல் குரே, பியசேன கமகே, ஜனக்க பண்டார தென்னக்கோன், சனத் ஜயசூரிய ஆகியோரும் அடக்குவர்.

சு.கவின் தலைவராக மைத்திரியை நியமிக்க மத்தியகுழு முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்கு கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
 

மகிந்தவின் வீழ்ச்சி மற்றும் வரலாற்றின் முடிவு

(தயான் ஜயதிலகா)

“போர்களில் வெற்றி அல்லது தோல்வி ஏற்படலாம் --- ஆனால் போராட்டம் நடந்துள்ளது
- சேகுவேரா

வருடக்கணக்கில் விவாதிக்கப்பட்ட விடயமான (1) மகிந்த ராஜபக்ஸவின் mahinda 2015-1கீழுள்ள ஸ்ரீலங்காவில் நிலவுவது சர்வாதிகாரம் அல்ல, ஆனால் ஒரு பலம் பொருந்திய ஜனநாயகம், ஏனென்றால் மத்திய வலதில் உள்ள ரணில் விக்கிரமசிங்காவின் தலைமையின் கீழுள்ள ஐதேக உருகும் நிலையில் உள்ளது, மற்றும் (2) மாறாக எதிர்க்கட்சியானது ஒரு தாரண்மையான தேசியத்தை முன்னிறுத்தியிருக்க வேண்டும், இந்த வகையில் எனது முன்னோக்கங்கள் குறைந்த பட்சம் பகுதியளவிலாவது நிரூபிக்கப் பட்டுள்ளது. அப்படியானால் ஏன் திரு. சிறிசேன என் முதல் தெரிவு ஆகாமல் இரண்டாவது தெரிவாக இருந்தார்? அதற்கான வெளிப்படையான காரணம் ரணில் - சந்திரிகா காரணி (அல்லது காரணிகள்). இரண்டாவது அவரது திட்டமான விரைவான வழியில் அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்வது மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சாத்தியமான மையவிலக்கு விளைவுகளுமே. (மேலும்....)

அதிர்ச்சி தகவல்கள்

ஆட்சி மாறியது எப்படி?

இறுதி நேரத்தில் அலரிமாளிகையின் திக் திக் நிமிடங்கள்!
 

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால வெற்றி பெற்றதும், எந்த சந்தடியுமின்றி எப்படி அவர் ஜனாதிபதியானார் என்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. அதிகாலையிலேயே, முழுமையான தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட முன்னரே முன்னாள் ஜனாதிபதி அலரி மாளிகையிலிருந்து மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறியிருந்தார். இது அவரது பெருந்தன்மையை காண்பிப்பதாக பலரும் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, இவற்றின் பின்னணியில் பெரும் அதிர்ச்சிக்கதைகள் புதைந்துள்ளன என்பதை இப்பொழுது வெளிவரத் தொடங்கியுள்ள தகவல்கள் உறுதி செய்கின்றன. முதலில் ஒன்றை நினைவூட்டலாம். மகிந்த அலரி மாளிகையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த நேரம் காலை 6.30. அந்த சமயத்தில் அவர் மைத்திரியை விட வெறும் ஒரு இலட்சம் வாக்குகள்தான் பின்தங்கியிருந்தார். அறிவிக்கப்பட்டதெல்லாம் மகிந்தவிற்கு எதிரான மாவட்டங்கள். முக்கியமாக வடக்கு, கிழக்கு. மகிந்தவின் கோட்டைகளும், பெரிய மாவட்டங்களும் அறிவிக்கப்படாமல் இருந்தன. நிலைமை இப்படியிருக்க, ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசமென்பது, அவர் ஹம்பாந்தோட்டையால் மட்டமே ஈடுகட்ட கூடிய வித்தியாசம். அது தவிர, அவரது கோட்டைகள், மொனராகலை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, மாத்தறை என பெரிய மாவட்டங்கள் இருந்தன. அப்படியிருக்க அவர் ஏன் அப்பொழுதே வெளியேறினார்? லொஜிக் இடிக்கவில்லையா. (மேலும்....)

25 பேர் கொண்ட அமைச்சரவை நாளை ஞாயிறு பதவியேற்பு!

அமைச்சரவை அந்தஸ்துள்ள இருபத்தைந்து அமைச்சர்கள், பத்து அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள், இருபத்தைந்து பிரதி அமைச்சர்கள் என அறுபது பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டாளம் நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கும் என 'மலரும்' இணையத்துக்கு அறியவந்தது. புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, தமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்தாலேசித்து இந்த அமைச்சர்கள் மற்றும் அமைச்சு ஒதுக்கீடுகளை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இருந்த சிலருக்கும் முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் எனத் தெரிகின்றது. வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படுவார். முன்னர் இந்தப் பதவியில் கடமையாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. புதிதாக உருவாக்கப்படும் உள்துறை அமைச்சுக்குப் பொறுப்பாக ராஜித சேனாரட்ண நியமிக்கப்படுவார் எனத்தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சு புதிய ஜனாதிபதியின் வசமே இருக்கும். புதிய அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முக்கிய பொறுப்பு ஒன்றை அளிக்க முன்வந்துள்ள புதிய அரசுத் தலைமை, ஈ.பி.டி.பி தரப்புக்கு அமைச்சரவையில் இடமளிக்காது என்றும் கூறப்பட்டது. ஜே.வி.பி. புதிய அமைச்சரவையிலோ அரசிலோ இணைந்து கொள்ளாது என்றும் தெரிகிறது. நாடாளுமன்றின் ஒவ்வொரு விடயங்களின் அடிப்படையிலும் அவற்றைப் பரிசீலித்து அவையவைக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஜே.வி.பி. தீர்மானிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய அமைச்சரவையில் சஜித் பிரேமதாஸ, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், போன்றோருக்கும் முக்கிய இடமளிக்கப்படவிருக்கின்றது. ஐ.தே.கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி விஜயகலா மகேஸ்வரன் அல்லது தேசியப் பட்டியல் உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் ஆகிய இருவரில் யாராவது ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு பிரதி அமைச்சர் பதவியாவது வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

பல்லின இலங்கையின் எதிர்பார்ப்பு.
(சுகு-ஸ்ரீதரன்)

இலங்கையின் பல்லினமக்களின் விருப்பமாகவே புதிய ஜனாதிபதி மைத்திரிபாலாவின் தெரிவு அமைகிறது. சமூகங்களிடையே ஏற்படுத்தப்பட்ட பேதங்களின் சலிப்பும்- நாம் ஐக்கியமாக ,சமத்துவமாக வாழ்வதற்கான மக்களின் எதிர்பார்ப்பும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இலங்கையின் வௌ;வேறு இன சமூகத்தவரின் ஜனநாயக அபிலாசைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பிரதானமாகவும்- முக்கியமாகவும் சுதந்திரமான, அமைதியான, வன்முறையற்ற சகவாழ்வு மக்களின் வாக்குச் சீட்டால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதனை புதிய ஜனாதிபதியும் அவரது சகாக்களும் கூரிய நுண்ணுர்வுடன் புரிந்து கொள்ளவேண்டும். (மேலும்....)

 வடமாகாண ஆளுநராக பள்ளிகக்கார நியமனம்

வடக்கு மாகாகண ஆளுநராக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றிய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதி நிதியுமாகிய எச்.எம்.ஜீ.எஸ் பள்ளிகக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரைகாலமும் கடமையிலிருந்த மேஜர் ஜெனரல ஜீ.ஏ.சந்திரசிறி நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு பள்ளிகக்கார நியமிக்கபட்டுள்ளார்.

சந்திரிகாவின் ரகசியம்….

தேர்தல் வெற்றியில் பலருக்கும் பங்கிருப்பதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மைதான். இது மிகப்பெரிய கூட்டு வெற்றி. இதில் பெண்கள் எல்லோரும் பெருமைப்படும்படி ஒரு பெண்தான் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது வாழ்க்கை அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை. இலங்கையின் மிகப்பெரிய குடும்பத்தைசேர்ந்தவராயினும், அப்போதைய பிரபல சிங்கள நடிகரான “விஜய குமாரதுங்க” அவர்களை பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் 1978 இல் கரம்பிடித்தார். குழந்தைகள் சிறுவர்களாக இருந்தபோது 1988 இல் வெறும் பத்தாண்டு மனவாழ்க்கையின்போது தன் காதல் கணவனை திடீரென இழந்தார். UNP ஆதிக்கத்தை தனி ஒரு பெண்ணாக நின்று 1994 இல் எதிர்த்து ஜனாதிபதியானார். 1999 இல் ஒரு குண்டு வெடிப்பில் தனது ஒரு கண்ணை பறிகொடுத்தார். 2005-2014 வரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த அவர்களின் எக்கச்சக்கமான சித்ரவதைகளை தாங்கிக்கொண்டார். 2015 இல் இலங்கையில் புதிய ஆட்சி மலர முதுகென்பாக இருந்து, தற்போது எதுவுமே செய்யாததுபோல் ஒதுங்கி நின்று மற்றவர்களை தூக்கிவிடுகிறார். கணவனை இழந்தாலும் தனி ஒரு பெண்ணாக அவரின் பங்களிப்பு இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியுள்ளது.

வருட நிறைவுக்குள் தீர்வு! - இரா.சம்பந்தன்

இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னதாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தற்போது சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் சந்தித்த துயரங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று கருதி தங்களின் வாக்குகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புண்ணிய காரியமாக கருதுகிறது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இணக்கப்பட்ட விடயங்கள் குறித்த ஆவணங்கள் இருக்கின்றன. எனவே தீர்வினை பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்க வேண்டியதில்லை. இந்த வருடம் நிறைவடைவதற்குள் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சம்பந்தன் கூறினார்.

மாற்றத்தை விரும்பிய மக்களது மனங்களுக்கு மதிப்பளிப்போம் -EPDP

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இலங்கைத்தீவின் அரசியல் மாற்றத்திற்கான களமாக அமைந்துள்ளது. இது ஒட்டுமொத்த இலங்கை மக்களது எதிர்பார்ப்பாக இருந்தது.
மாற்றத்தை விரும்பிய மக்களது உணர்வுகளுக்கு நாம் தலைவணங்குகின்றோம். எமது கோரிக்கையை ஏற்று வாக்களித்த எமது ஆதரவாளர்களுக்கு இச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாற்றத்தினூடாக அவர்கள் தேடுகின்ற எதிர்பார்ப்புகளுக்கு, பதவியேற்றுள்ள இந்த புதிய ஜனாதிபதியினூடாக தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வழிகளை விரைவுபடுத்தி தமிழ் மக்களது உரிமைகளுக்கும் வாழ்வியல்த் தேவைகளுக்கு நிரந்தரமாக தீர்வுகளை பெற்றுத்தரும் தார்மீக கடமைகளை அனைவரும் மேற்கோள்ளவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். (மேலும்....)

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 41வது சிரார்த்த தினம்

1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 41வது சிரார்த்ததினம் இன்றாகும். 41வது சிரார்த்த தினமான இன்றும் இத்துயர சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றுகாலை மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நினைவுக்கூட்டம் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள், தமிழராய்ச்சி மாநாட்டின்போது நடைபெற்ற சம்பவங்களை மிகத் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் அங்கு திரண்டிருந்த மக்களுக்கு விளக்கிக் கூறினார். மேலும் இந்த நினைவுத் தூபியினை அமைப்பதற்கு எடுத்த பல்வேறு முயற்சிகள் பற்றியும், அது பல தடவைகள் அரச படைகளினால் உடைக்கப்பட்டது தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தின்போது வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்ணம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோர் உயிர் நீத்தவர்களாவர்.

புலம்புகின்றார் மனோ கணேசன்

"கடமையை செய் பலனை பாராதே" என்று உழைக்கிறேன். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான எனது போராட்டம், நடந்து முடிந்த தேர்தலுடன் ஆரம்பித்தது அல்ல. அது என் நண்பன் ரவிராஜுடன் நான் ஆரம்பித்த போராட்டம். பல்லாண்டுகளாக மனந்தளராமல் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து, கொலைக்கார மகிந்தவை வீழ்த்த முதல் நபராக பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்று உழைத்தேன். இன்று நான் இந்த கட்டத்தில் வெற்றிக்கண்டுள்ளேன் என நம்புகின்றேன். ஆனால், மைத்திரிபால ஆட்சி என்பது ஒரு விடுதலை என்றோ, ஒரு மீட்சி என்றோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இதை தாய் நாட்டிலும், புலம் பெயர்ந்தும் வாழும் என் உடன் பிறப்புகள் புரிந்துகொள்ள வேண்டும். வேண்டுகிறேன் !

''நான்தான் பிரதமர்'' மொட்டை மாடியிலேறி புலம்பும் மகிந்த

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட கட்சியின்  தலைவரான நான் இப்போது வெளியே இருக்கிறேன். ஆனால் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாத ஒருவர் இப்போது பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். இப்படி மனம் புழுங்குகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று தனது தங்காலை 'கால்ட்டன் ஹவுஸ்' இல்லத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் முன்னிலையில், வீட்டின் மேற் தளத்திலிருந்து அழுது புலம்பியுள்ளார். (மேலும்....)

 

தீர்வுக்கு புதிய அத்திபாரம் மைத்திரி - வடக்கு முதல்வர்

பெரும்பான்மையினரும் சிறுபான்பான்மையினரும் இணைந்து நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துள்ளோம். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு சிறந்த அத்திவாரம் மைத்திரிபால சிறிசேன என, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில் வடக்கு முதலமைச்சர் விடுத்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (மேலும்....)

மைத்திரியின் வெற்றியில் முக்கிய பங்கு தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளது - அநுரகுமார திஸாநாயக்க


பொது எதிரணியின் வெற்றியில் மறை முகமான பங்கு எமக்கு உள்ளது எனினும் பொது எதிரணியில் உறவு வைத்துக்கொள்ளவோ வெற்றியில் பங்கு கேட்கவோ விரும்பவில்லை நாம் சுயாதீனமாக செயற்பட ஆசைப்படுகின்றோம் என தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றியில் முக்கிய பங்கு தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளது. வெற்றியை தீர்மானித்த சக்தி அவர்களெனவும் குறிப்பிட்டார்.(மேலும்....)

முன்னாள் ஜனாதிபதி அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்தாரா? இயலமையால் விட்டுச் சென்றாரா?

வியாழக்கிழமை இரவு ஆரம்பகட்ட முடிவுகள் மைத்திரிபால சிறிசேனவிற்கு சாதகமாக வெளியானதும் என்ன நடைபெற்றது என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ச தான் தோல்வியடையும் நிலை உருவாகலாம் என உணர்ந்ததும் அவசரகால நிலையை பிரகடனம் செய்து வாக்களிப்பை இரத்துச்செய்ய முயன்றார். அதற்காக தனக்கு நெருக்கமான சிரேஸ்ட அமைச்சர்களுடன் அவசரமாக உரையாடலை நடத்தினார்.. அதற்கு சிரேஸ்ட அமைச்சர்கள் இணங்கவில்லை. தொடர்ந்த இராணுவத் தளபதியுடனும் அராணுவ அதிகாரிகளுடனும் தொலைபேசியில் உரையாடி இருக்கிறார். அவர்களும் மக்களின் தீர்ப்பை மீறி பலாத்காரமாக ஆட்சியை தொடர இடமளிக்கப் போவது இல்லை என தெரிவித்துள்ளார்கள்... பொலிஸ்தரப்பின் பெரும்பான்மை ஏற்கனவே எதிரணியுடன் நெருக்கமாக இருந்தது... கடற்படையின் சிரேஸ்ட அதிகாரிகளும் ஜனாதிபதியின் நகர்வை வரவேற்கவில்லை. (மேலும்....)

MIA அருளர்

முதலில் ஈரோஸ். பின்பு ஈபிஆர்எல்எவ் இறுதியில் புலி இயக்கம்என்று கலர் மாத்திக் கொண்ட அருளர் என்ற அருட் பிரகாசம்.  லங்கா ராணி என்ற புத்தகத்தின் ஆசிரியர். அருட்பிரகாசம் என்ற பொறியிலளராக Russia ,லண்டனில் படித்துப் பின்னர் இலங்கை சென்று , தமிழ் போராளிகள் இயக்க உறுபினராக இருந்தவருக்கும், லண்டனில் வதிவிட விசா இல்லாமல் அவதிப்பட்டு, அதுக்காக அருட்பிரகாசத்தை மணம் முடித்த கலா என்ற யாழ்பானதமிழ் பெண்மணிக்கும் லண்டனில் பிறந்த மாதங்கி "மாயா " அருட்பிரகாசம், சிறுவயதில் இலங்கைக்கு சென்று பின்னர் ,சண்டை உக்கிரமாக, போராளியான அப்பாவை, போராடத்துடனும் ,போராளிகளுடனும் விட்டுவிட்டு அம்மாவுடன் பின்னர் அரசியல் தஞ்சம்கோரி பிரித்தானியா வந்தார் என்கிறார்கள் .ஈழத் தமிழ் பெண்ணான இவர், பின்னர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற M .I .A என்ற பொப் இசைப் பாடகியாக இருக்கிறார். மாதங்கி என்ற பெயரை மாற்றி எம்.ஐ.ஏ என்று மாற்றிக்கொண்டதுக்குக் காரணம் அவரின் அப்பா பலவருடம் யுத்தகாலத்தில் தலைமறைவாக இருந்தார், ஒருவிதத்தில் அவர் சண்டையில் இறந்துவிட்டார் என்ற ஒரு குடும்பத்துடன் தொடர்பற்ற நிலை இருந்ததால் " Missing In Action " என்பதை சுருக்கி அப்படி வைத்தாரம். (மேலும்....)

உண்மையான மாற்றத்திற்காக முன் செல்வது மக்களின் கடமையாகும்.

இலங்கையில் நடந்துள்ள அதிகார மாற்றமானது எந்த ஒரு தனித்த இனத்தினதும் , தனியேயான அரசியல் நிறுவனங்களினதும் பங்களிப்பினால் நிகழ்ந்தது அல்ல. இதுவொரு கூட்டு ஒருமைப்பாட்டினால் விளைந்த அரசியல் மாற்றம். இந்த மாற்றத்திற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் , மலையக மக்களின் கூட்டிணைவும், அனைத்து ஜனநாயக நிறுவனங்களினதும் ஒருமைப்பாடுமே முக்கிய பங்களித்திருக்கிறது. மக்களின் ஜனநாயக உரிமைக்கான அபிலாசை இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டியும், கட்சி, அமைப்பு , பிரதேச அடையாளங்களை கடந்தும் இணைந்தும் பிணைந்தும் இந்த முதல் மாற்றத்தினை கொண்டு வந்திருக்கிறது.
(மேலும்....)

ஜனவரி 10, 2015

என் மனவலையிலிருந்து.....

தெற்கில் மைதிரி தோல்வி!  வடகிழக்கில் மகிந்த தோல்வி!!

ஆனால் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைதிரி வெற்றி!!!

(சாகரன்)

நடந்து முடிந்த தேர்தலில் தென் இலங்கையில் சிறப்பாக பெரும்பான்மை சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷவை தேர்தெடுத்து வெற்றி பெற வைத்துள்ளனர். மாறாக அத்தனகலை ஈறாக இப்பகுதிகளில் மைதிரி சிறிசேனாவை தோற்கடித்துள்ளனர். மாறாக மைதிரியை வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளில் சிறப்பாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெற்றியடைய வைத்துள்ளனர்.(பார்க்க அருகில் உள்ள வரைபடத்தை) இதன் மூலம் முழு இலங்கையிலும் மைதிரி வெற்றி பெற்று புதிய 7வது ஜனாதிபதியாக வெற்றியடைந்திருக்கின்றார். இதே போன்ற செயற்பாட்டையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தா, சரத் பொன்சேகா போன்றவர்கள் பெற்றிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. (மேலும்....)

 

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் உருவான 'ஈழம்'

தமிழ் முஸ்லீம்கள் வாழும் பிரதேசங்களில் மைத்திரி பல மாவட்டங்களில் ஒரு இலடசம் வாக்கு வித்தியாசத்தால் வென்றுள்ளார். ஆனால் மஹிந்தா ஹம்பாந்தோட்டையில் மாத்திரமே ஒரு இலட்சம் வாக்குகளால் வென்றுள்ளார். சிறுபான்மை இனத்தவர் தான் மைத்திரியை வெல்ல வைத்தார்கள். வென்ற இடங்களைப் பார்த்தால் ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கீறிய 'கற்பனை ஈழம்' போல் உள்ளது. ஆனால் இந்தப் பகுதியில் பெருமளவு சிங்கள் வாக்குகள் மைத்திரிக்கு விழுந்து உள்ளது. ஆனால் சிறமாவின் அத்தனகலை தொகுதியில் மகிந்த கூடுதலான வாக்குகளைபெற்றிருக்கின்றார்.


'அனந்தி, சிவாகரன் கட்சியில் இருந்து இடைநீக்கம்'

தீர்மானத்துக்கு முரணான கருத்து வெளியிட்டமை மற்றும் தீர்மானத்துக்கு முரணான முறையில் பிரசாரம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், தமிழரசுக்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், சனிக்கிழமை (10) தெரிவித்தார். இது தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இடைநீக்கியுள்ளதாக அறிவிக்கவுள்ளோம். அடுத்த கட்டமாக இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் மிக விரைவில் நடைபெறவுள்ளது. விசாரணையின் பின்னர் குறித்த உறுப்பினர்களின் பதவி மற்றும் உறுப்புரிமை நீக்குவது தொடர்பாக மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நான் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல மாட்டேன் - கே.பி

தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது எனவும் நாட்டைவிட்டு செல்வதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி., தமிழ் மிரருக்கு தெரிவித்தார். தான் கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்கும் தன்னுடைய பணியினை செய்து வருவதாகவும் தான் நாட்டை விட்டு ஒருபோது தப்பிச்செல்ல மாட்டேன் எனவும் கே.பி. தமிழ்மிரரிடம் பிரத்தியேகமாக தெரிவித்தார். முன்னதாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாவின் இடத்துக்கு பஸ்நாயக்க

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்கு, முன்னாள் சுற்றாடல் அமைச்சர் பி.எம்.யூ.டி. பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் மூத்த உறுப்பினரும் பொதுநிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பீ அபயக்கோன், நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வு, அதிகார மாற்றம் யாருக்கு?

இலங்கைக்கு புதிய அதிபர் வந்திருக்கிறார். வரவேற்போம். இந்நேரத்தில், இலங்கையில் தமிழருக்கான அதிகாரம் வழங்குதல் குறித்த கோரிக்கைகள், முழக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு நாட்டில் எல்லோருக்குமான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதிகாரப்
பகிர்வு, அதிகார மாற்றம் என்பதெல்லாம் இங்கே ஆதிக்கம் செலுத்தக்கூடிய தரப்பினரின் நலனுக் கானவை களாகத் தான் இருக்கின்றன. பிரிட்டிஷ் அரசிடமிருந்து அதிகாரம் இந்தியர்களுக்கு கைமாறியதாகச் சொல்லப்பட்டாலும் அது இந்துக்களுக்கான, முதலாளிகளுக்கான அதிகாரமாற்றமாகத்தான் அமைந்தது. (மேலும்....)

மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வருவார் - விமல் வீரவன்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வீட்டில் இருப்பதற்கு இடம்தர மாட்டோம். அவரது அரசியல் இன்னும் முடியவில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
 

பதவிப்பிரமாண செலவு ரூ.6,000

நாட்டின் ஏழாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். அந்த பதவிப்பிரமாண வைபவத்துக்காக 6,000ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். புதிய ஜனாதிபதியை வரவேற்பதற்காக பூக்கொத்து வாங்குவதற்கு சிறுதொகையும் சுதந்திர சதுக்கத்துக்கான மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 

So Sad
வீடு திரும்பினார் மஹிந்த கண்ணீருடன் மக்கள்

(காணொளியில் காண....)
 

பதவியேற்பில் தமிழர்களை மறந்தர் மைத்திரி! பாய்ந்து விழுந்தார் மனோ

தேர்தல் காலங்களில் தமிழர்களின் ஆதரவைக் கோரிப் பெறுவது. தேர்தல் முடிந்ததும் தமிழர்களை உதாசீனம் செய்து உதறித் தள்ளுவது. இதுதான் தென்னிலங்கை அரசுகளின் காலாகால பரவணிப் பழக்கம். அதை இன்று ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே செயலில் காட்டத் தொடங்கி விட்டீர்களே! – என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சீறி வீழ்ந்தார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். இந்தச் சம்பவம் இன்றிரவு(09) இடம்பெற்றது. இன்று மாலை புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் ஆகியோர் பதவியேற்கும் நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வை ஒட்டி நேற்றிரவு இடம்பெற்ற உரையாடல் ஒன்றின் போதே புதிய பிரதமர் மீது இப்படிப் பாய்ந்து விழுந்தார் மனோ கணேசன். (மேலும்....)

யார் இந்த மைத்திரி?

பிறப்பு : 1955, செப்டம்பர் 3 ஆம் திகதி, கனேமுல்லவில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்பக்கல்வி : பொலன்னறுவ தோபா வெவ கல்லூரி, பொலன்னறுவ ரோயல் கல்லூரி.

உயர்கல்வி : ரஷ்யா மார்க்சிம் கோர்க்கி கல்விக் கழகத்தில் அரசியல் அறிவியல் டிப்ளோமா பட்டம்

அரசியல் ஈடுபாடு : பாடசாலை பருவத்தில் இடதுசாரி கொள்கைகளில் ஈடுபாடு

குடும்பம் : மனைவி ஜெயந்தி புஷ்பகுமார, 3 பிள்ளைகள்

அரசியல் பிரவேசம் : 17 வயதில் பொலன்னறுவ ஸ்ரீல.சு.க. இளைஞர் அமைப்பு செயலாளர்.

சிறைவாசம் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது மட்டு சிறையில் அடைப்பு

முழுநேர அரசியல் : 1978 இல் சு.க. வில் முழுநேர அரசியலில் குதிப்பு

அமைப்பாளர் : 1982 இல் பொலன்னறுவை சு.க. அமைப் பாளராக நியமிப்பு (மேலும்....)

புதிய ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புகிறேன்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை பின்நிற்காது ஜனாதிபதி நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். சட்டத் திலுள்ள ஒட்டைகளினூடாக புகுவதற்கு எவருக்கும் இடமளிக்க வேண்டாம் எனவும் கோரினார். ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடக மாநாடு தேர்தல் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இங்கு கருத்தித் தெரிவித்த அவர். இந்த தேர்தலை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த சகலருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன். அளித்த வாக்குகளை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். எதுவித வன்முறைக்கும் இடமளிக்கப் போதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு கூறியிருந்தார். அவரின் அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தேர்தலை நியாயமாக நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழு ஒத்துழைப்பு வழங்கினார். சில இணையத்தளங்கள் சமூக வலைத்தளங்கள் கூறியது போலன்றி எதுவித சம்பவங் களுக்கும் இடமளிக்காது அவர் அதிகாரத்தை கையளித்து விட்டு சென்றார். இது எமது நாட்டு சம்பிரதாயமாகும். அது குறித்து அவருக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.

புதிய அரசாங்க அமைச்சரவையில் டக்ளஸ் இடம்பெறுவதைத் கூட்டமைப்பு அனுமதிக்காது - சுமந்திரன்

புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம்பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றத் தயார் என இன்று வியாழக்கிழமை(09.01.2015) டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆரம்பமே அபசகுனம் தான் ......?
யார் வரக்கூடாது என்பது தான் முதல் சிந்தனையா? தமிழ் மக்களுக்கு என்ன செய்வது என்பதை பற்றி சிந்திக்கவில்லையா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நடைபெற்று முடிந்துள்ள பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன் படி பிரதான வேட்பாளர்களாக போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 47.58% வீத வாக்குகளைப் பெற்றுள்ளதோடு அவரை எதிர்த்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 51.28% வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் இத் தேர்தலில் 4,49,072 வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பிரகடனப்படுத்தியுள்ளார். இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தமான 19 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

மகிந்த தேசப்பிரிய விதிவிலக்காவர்
 

இவர் சாதாரண அதிகாரவர்க்கப்பிரவைச் சேர்ந்த அதிகாரி அல்ல. சமூகத்திலிருந்து தனிமைப்பட்ட தோரணையான அதிகாரி அல்ல. அரசியல் கட்சியினரை அழைத்து அடிக்கடி கலந்துரையாடல்களை நடத்துவார். தேர்தல் நடைமுறைகள் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதிக்காதவகையில் வன்முறையற்றவகையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கான பிரயாசை அதில் இருக்கும். பொது மக்கள் வாக்காளர்களாக பதிவு செய்வதை ஊக்கபடுத்துவார். பலருடைய கருத்துக்களையும் செவிமடுப்பார். வன்முறை தலையீடுகள் நிறைந்த இலங்கையின அரசியல் அதிகார சூழலில் கண்ணியமான சமூக அக்கறை கொண்ட அதிகாரி. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அவரின் துணிச்சல், பொறுமை, பாரபட்சமின்மை, நேர்மை என்பன பரவலாக பேசபப்டும் விடயமாக இருந்தன.
60களின் பின்னர் மிகச் சிறப்பாக நடைபெற்ற தேர்தல். பொதுவாகவே இலங்கையின் அதிகாரவர்க்கம் இறுகிய முகம் கொண்டதும், தன்மையவாதம் துருத்திக் கொண்டிருப்பதுமாகும். பொது நோக்கு வறட்சியா இருக்கும். காலனியாதிக்க கால கனவான்கள் போல வாழ செயற்பட பழக்கபட்டவர்கள். மகிந்த தேசப்பிரிய விதிவிலக்காவர்.

ஜனவரி 09, 2015

புதிய ஜனாதிபதியாக மைத்திரி தெரிவு

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 62,17,162 (51.28%) பெற்றுள்ளார் என்றும் அவர் அறிவித்தார்.கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சத்தியப்பிரமாணம், உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன, தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ள நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். சமூக நலன்புரி சிரேஷ்ட அமைச்சரான மில்ரோய் பெர்னாண்டோ புள்ளையே இவ்வாறு தீர்மானித்துள்ளார். ஆனமடுவையில் வைத்தே அவர் இந்த உறுதிமொழியை இன்று அளித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவை சந்தித்தே தான், மைத்திரிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

நாட்டைவிட்டுச் செல்ல மாட்டோம்:- பசில், நாமல்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த நாட்டை விட்டுச் செல்லமாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ, 'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும். நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாம் நினைக்கிறோம்' என அவர் கூறினார்.

புதிய பாதுகாப்பு செயலரும் பதவியேற்பார்

புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, இன்று மாலை பதவியேற்கும் கையோடு, புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவரும் பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு செயலாளர் பதவியும் செயலிழக்கிறது. இந்நிலையிலேயே, புதிய பாதுகாப்பு செயலாளரும் இன்று மாலையே பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பொறுத்திருந்து பார்ப்போம் - டக்ளஸ்

தேசிய அரசை அமைக்கப்போவதாக மைத்திரி கூறியுள்ளார். அதன் சாதக பாதகங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை தெரியப்படுத்தியுள்ளார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதன் மூலம் எதையோ எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகள் இந்த அரசில் சாத்தியமாகவும் இருக்கும். சாத்தியமற்றதாகவும் இருக்கும். இராணுவத்தை அகற்ற மாட்டோம், நாட்டை பிரிக்க மாட்டோம் என்றுதான் இவர்களும் கூறுகிறார்கள். புதிய அரசோடு நாங்கள் பேசவேண்டியுள்ளது. பேசிய பின்புதான் தெரியும் என அவர் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தில் இணைய தீர்மானமில்லை:- ஜே.வி.பி

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதா, அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் நேற்று மேற்கண்மவாறு தெரிவித்தார்.
 

மைத்திரி, ரணில் இன்று சத்தியப்பிரமாணம்

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும். இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. புதிய ஜனாதிபதியின் சத்தியப்பிரமாண நிகழ்வு, கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2015

Sri Lanka's Rajapaksa admits defeat in election
Sri Lanka's long-time leader Mahinda Rajapaksa has admitted defeat in the presidential election, his office says. President Rajapaksa has dominated politics for a decade, but faced an unexpected challenge from his health minister Maithripala Sirisena. The statement said Mr Rajapaksa would "ensure a smooth transition of power". Official results are not due until later on Friday, but early results indicated that Mr Sirisena was on course to win the 50% needed. He has not yet commented.(more....)

தோல்வியை ஏற்றுக் கொண்டார் மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்துள்ளதை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லத்திலிருந்தும் அவர் இன்று காலை வெளியேறிவிட்டார். தேர்தல் முடிவுகள் முழுமையாக இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதிகாலை பிரதான எதிர்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்கவை அவர் சந்தித்த பிறகு தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார். தேர்தல் முடிவு குறித்த முன்னணி நிலவரம் தெரிய வந்ததும் நாடெங்கிலும் மைத்திரி ஆதரவாளர்கள் பட்டாசுகளைக் கொளுத்திக் கொண்டாடினார்கள் .

 

இலங்கை மக்களுக்கு மைத்திரி நன்றி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்திருக்கிறார். தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேர்தல் முடிவு குறித்து கருத்தை வெளியிட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன, " என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கருணையுடனான மைத்ரி யுகத்தை நோக்கி செல்வோம்" , என்று கூறியிருக்கிறார். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இந்த கருத்து பிரசுரிக்கபட்டிருக்கிறது.

மைத்திரிக்கு மோடி வாழ்த்து

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகக் குறிப்பொன்று கூறுகிறது.அமைதியான வகையில் ஜனநாயக வழிமுறையில் தேர்தலில் பங்குபெற்றதற்காக இலங்கை மக்களுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தியா, இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடு மற்றும் அண்டை நாடு என்று கூறிய மோடி, இலங்கையில் சமாதானம், வளர்ச்சி மற்றும் சுபிட்சத்துக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவைத் தர உறுதியளித்தார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதுவரை வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில்

பிரதான இரு வேட்பாளர்களும் பெற்ற வாக்கு வீதம்:
 

மைதிரி: 51.3%  (Up) (36,03,880 Vote)
மகிந்த:    47.6% (Down) (31,86,661 Vote)

வாக்குகளைப் பெற்றுள்ளனர்

என்மனவலையிலிருந்து.....?
பாடங்களைக் கற்றுக் கொள்வோம்

(சாகரன்)

என்னதான் விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் இலங்கை அரசு மீதும், மகிந்த ராஜபக்ஷ இடம் இருந்தாலும் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து பாரியளவு தேர்தல் வன் முறைகள், பழிவாங்கல்கள் ஏதும் நடைபெறாதது இலங்கையில் உள்ள ஜனநாயகம் மீது மதிப்பும் மரியாதையும் எற்பட்டே ஆக வேண்டும். தேர்தல் தினமான இன்றும் சிறு சிறு அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் இது ஆதரவாளர்கள் மத்தியில் நடைபெற்றதே ஒழிய எந்து முன்னணி அரசியல் தலைவர்களும் இதனைத் தூண்டாத நிலமை இருப்பதை அவதானிக்க முடிந்தது. இவ்விடயத்தில் ஜே.ஆர் ஜெயவர்தனாவின் 'போர் என்றால் போர்......." என்ற சூழுரையும் இதனைத் தொடர்ந்த திட்டமிட்ட கலவரங்களும், இன அழிப்புக்களும் இன்று இல்லை? என்பது ஆறுதல் தரும் விடயங்கள். மகிந்த தன்னிடத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்திருந்தும்,  அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடவில்லை? என்பதுவும் கவனிக்தக்கது. ஆனால் மூன்று இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு இலங்கையின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருந்தால் இவர் அசோகராக மாறியிருக்கலாம். ஒருமுறை அவருக்கு கிடைத்த வாய்பை தொலைத்து விட்டார் என்றே கூறவேண்டும். இதேவேளை புலிகள் வடக்கு கிழக்கில் ஏகமாக இருந்தபோது மாற்றுக் கருத்தாளர்கள் விமர்சகர்களுக்கு கொடுத்த துணுக்காய் அனுபவங்கள் புலிகளின் பங்குவமற்ற தன்மையையும் மகிந்தரின் ஏன் சிங்களத் தலைமைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள். இக்கால கட்டத்தில் வடக்கு கிழக்கில் புலிகளின் சிருஷ்டிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர வேறுயாரும் தேர்தலில் பங்கு பற்றாத நிலமை உருவாக்கப்பட்டிருந்தது இங்கு கவனிக்க தக்கது. இதேபோல் தீவுப்பகுதியில் டக்ளஸ் இன் குறுநில மன்னர் ஆட்சியும் நடைபெற்றதை மறுப்பதற்கு இல்லை. தமிழர்களின் தொட்டில் பழக்கம் இந்த ஏகபோகம் இனியாவது மாற்றம் ஏற்படுமா..?

மத்தியிலிலும் மகாணத்திலும் மூன்றில் இரண்டு ஆனால் செயற்பாட்டில்....?

கடந்தது அரசியல் பாதையில் மத்தியிலும் மூன்றில் இரண்டு, வட மகாணத்திலும் மூன்றில் இரண்டு. மத்தியில் பல கட்சிகள் ஆட்சியில் பங்கு பற்றின. பல கட்சிகள் எதிரணில் நின்று செயற்பட்டன. ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பு அரசியலில் ஈடுபட்டது. ஆனாலும் பாராளுமன்றத்தில் இவர்களை பண்புடனேயே நடத்தினர் ஆளும் கட்சியினர் பெரும்பான்மை இனவாதக் கட்சிகள் கூட மரியாதையாக நடத்தினர். ஆனால் மாகாணத்தில் பல கட்சிகள் இணைந்து ஆட்சியை நடத்தின. சில கட்சிகள் இணைந்து எதிர் கட்சி அரசியல் நடத்தினர் எதிர் கட்சியினருக்கு மகாண அமைச்சர்களே 'போத்தில் அடி' போட்ட நிகழ்வுகள் கூட நடைபெற்றன. ஏன் வட மகாண ஆளும் தரப்பு தமக்குள்ளேயே வெட்டிக்கொண்டே தினமும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டன. அரசியல் நாகரீகம் பண்பு தெரியாத கூட்டங்களாக இவர்கள் செயற்பட்டனர்.

தேர்தல் முடிவுகளில் மகிந்தாவின் வாக்குகள் கூடிவருவதையும் மைதிரியின் வாக்குள் குறைவதையும் அவதானிக்கும் போது இது மிகவும் போட்டி மிகுந்த தேர்தல் என்ற கணிப்புகளை உறுதியாக்குகின்றது

கோட்டே தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 34,614
மஹிந்த ராஜபக்ஷ- 24,663

குருநாகல் தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 37,895
மஹிந்த ராஜபக்ஷ- 31,429

கெக்கிராவை தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 32,563
மைத்திரிபால சிறிசேன- 29,410

பண்டுவஸ்நுவர தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 32,197
மைத்திரிபால சிறிசேன- 25,172

புத்தளம் தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 58,844
மஹிந்த ராஜபக்ஷ- 24,235

மஹரகம தேர்தல் தொகுதி

முன்பாக

மஹரகம தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 53,327
மைத்திரிபால சிறிசேன- 51,480

ஆனமடுவ தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 52,225
மைத்திரிபால சிறிசேன- 31,026

பண்டாரவளை தொகுதி தேர்தல் முடிவு

பொரளை தேர்தல் தொகுதி
குளியாப்பிட்டி தேர்தல்

மைத்திரிபால சிறிசேன- 38,538
மஹிந்த ராஜபக்ஷ- 33,944

ஹிரியால்ல தேர்தல்

வென்னப்புவ தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 39,523
மைத்திரிபால சிறிசேன- 35218

கொழும்பு மத்தி தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 82,495
மஹிந்த ராஜபக்ஷ- 17,779

கட்டுகம்பளை தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 41,990
மைத்திரிபால சிறிசேன- 37,655

மாத்தறை தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 35,248
மஹிந்த ராஜபக்ஷ- 34,191

கல்கமுவ தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 46,848
மைத்திரிபால சிறிசேன- 31,027

இறக்குவானை தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 42,940
மைத்திரிபால சிறிசேன- 38,366

அவிசாவளை தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 51,351
மைத்திரிபால சிறிசேன- 42,728

குளியாப்பிட்டி தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 39,115
மைத்திரிபால சிறிசேன- 37,528

அநுராதபுரம் மேற்கு தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 42,349
மைத்திரிபால சிறிசேன- 33,791

கொலன்ன தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 65,270
மைத்திரிபால சிறிசேன- 44,089

பொல்கஹாவெல தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 31,108
மைத்திரிபால சிறிசேன- 28,365

உடதும்பர தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 27,722
மைத்திரிபால சிறிசேன- 18,472

லக்கல தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 33,821
மைத்திரிபால சிறிசேன- 21,581

பொரளை தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 31,469
மஹிந்த ராஜபக்ஷ- 15,148

கடுவெல தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 70,970
மைத்திரிபால சிறிசேன- 68,886

பிபிலை தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 37,987
மைத்திரிபால சிறிசேன- 23,704

அத்தனகலை தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 54,777
மைத்திரிபால சிறிசேன- 50,380

அத்தனகலை தேர்தல் தொகுதி

யட்டிநுவர தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 32,298
மஹிந்த ராஜபக்ஷ- 30,194

ஹங்குராங்கெத்த தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 77,415
மைத்திரிபால சிறிசேன- 25,645

ஹோமாகம தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 77,415
மைத்திரிபால சிறிசேன- 63,563

கலகெதர தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 21,466
மைத்திரிபால சிறிசேன- 19,818

தம்பதெனிய தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 41,422
மைத்திரிபால சிறிசேன- 32,964

வாரியபொல தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 34,499
மைத்திரிபால சிறிசேன- 24,562

கலிகமுவ தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 28,668
மைத்திரிபால சிறிசேன- 22,699

மீரிகம தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 51,242
மைத்திரிபால சிறிசேன- 45202

மத்துகம தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 45,984
மைத்திரிபால சிறிசேன- 38,668

தொம்பே தேர்தல் தொகுதி

முன்பாக

தொம்பே தேர்தல் தொகுதி

முன்பாக
செங்கடகல தேர்தல் தொகுதி

எஹலியகொடை தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ-45,606
மைத்திரிபால சிறிசேன- 32,106

செங்கடகல தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 36,127
மஹிந்த ராஜபக்ஷ- 26,062

தொம்பே தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 54,714
மைத்திரிபால சிறிசேன- 38,491

கொத்மலை தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 36,393
மஹிந்த ராஜபக்ஷ- 23,821

தெரணியகலை தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 28,741
மைத்திரிபால சிறிசேன- 23,648

மிஹிந்தலை தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 26,032
மைத்திரிபால சிறிசேன- 22,860

கல்குடா தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 60,342
மஹிந்த ராஜபக்ஷ- 10,337

பொத்துவில் தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 81,547
மஹிந்த ராஜபக்ஷ- 22,425

அகலவத்தை தேர்தல் தொகுதி

அகலவத்தை தொகுதி முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 44,750
மைத்திரிபால சிறிசேன- 33995

மதவாச்சி தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 37,772
மைத்திரிபால சிறிசேன- 26,431

மின்னேரியா தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 32,744
மஹிந்த ராஜபக்ஷ- 31,747

மொரட்டுவை தொகுதி தேர்தல் முடிவு

யாப்பகூவ தேர்தல் தொகுதி
யாப்பகூவ தேர்தல் தொகுதி
ருவன்வெல்ல தேர்தல் தொகுதி
கேகாலை மாவட்டம் - ருவன்வெல்ல தேர்தல் தொகுதி

யாப்பகூவ தேர்தல் தொகுதி

முன்பாக

யாப்பகூவ தேர்தல் தொகுதி

முன்பாக

மைத்திரிபால சிறிசேன- 48,599
மஹிந்த ராஜபக்ஷ- 46,885

நிகவரெட்டிய தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 40, 015
மைத்திரிபால சிறிசேன- 31,444

ருவன்வெல்ல தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ - 30,9222
மைத்திரிபால சிறிசேன- 26,989

30922
30922

நீர்கொழும்பு தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 53,331
மஹிந்த ராஜபக்ஷ- 25,432

களனி தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 37,884
மஹிந்த ராஜபக்ஷ- 32,856

ஹேவாஹெட்ட தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 28,049
மஹிந்த ராஜபக்ஷ- 24,167

வெல்லவாய தொகுதி தேர்தல் முடிவு

மஸ்கெலியா தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 171,578
மஹிந்த ராஜபக்ஷ- 57,718


மைதிரியும் மகிந்தாவும் தொலைபேசியில் சந்திப்பு

முன்னாள் சகாக்களான மைதிரியும் மகிந்தாவும் சற்று முன்பு ஒரு தொலைபேசிக் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மைதிரியின் வெற்றி இதுவரை உறுதிப்படுத்த முடியாத நிலையில் மகிந்தா தனது வாழ்த்துக்களை மைதிரிக்கு தெரிவித்தாக அறிய முடிகின்றது

மைத்திரி முன் நிலையில் மகிந்த பின் நிலையில்

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. வழமை போல் தபால் முறையில் வாக்களித் முடிவுகள் முதலில் வெளிவரத் தொடங்கின. கடும் போட்டி நிலவும் இத் தேர்தல் முடிவுகளில் இது வரை வெளிவந்த முடிவுகள் மைதிரி இற்கு சாதகமாக அமைந்துள்ளன. மகிந்த தனது தோல்விப்பாதையை தவிர்க்க போராடிக் கொண்டு இருக்கின்றார். வடக்கு கிழக்கு , இதனை அண்டிய மகாணங்களில் மைதிரியும் தென் மாகாணங்கள், இதனை அண்டிய மகாணங்களில்  மகிந்தவும் முன்னிலை வகிக்கின்றனர். மத்திய மகாணங்களில் இருவரும் மாறி மாறி வெற்றிகளை தமக்காக்கி கொண்டுள்னர்.

கொழும்பு வடக்கு தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 51,537
மஹிந்த ராஜபக்ஷ- 16,423

நல்லூர் தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 24,923
மஹிந்த ராஜபக்ஷ- 5,405

பருத்தித்துறை தொகுதி தேர்தல் முடிவு

மைத்திரிபால சிறிசேன- 17,388
மஹிந்த ராஜபக்ஷ- 4,213
 

தங்காலை தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 62,739
மைத்திரிபால சிறிசேன- 32,598

அகுரஸ்ஸ தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 42,860
மைத்திரிபால சிறிசேன- 30,617

பண்டாரகம தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 61,199
மைத்திரிபால சிறிசேன- 48,469

கராப்பிட்டிய தொகுதி தேர்தல் முடிவு

மஹிந்த ராஜபக்ஷ- 34,983
மைத்திரிபால சிறிசேன- 19,752

அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார் மஹிந்த

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையிலிருந்து வெளியேற போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்றுக்காலை அறிவித்துவிதுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.பாராளுமன்றத்தை கலைக்கும் எண்ணம் இருப்பதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான அவசர அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது

ஜனவரி 08, 2015

மஹிந்த யுத்த வெற்றியால் அல்லாமல் அசோகரைப் போல் பௌத்தனானால் நீண்டகாலம் ஆளலாம் - வரதராஜப் பெருமாள்

(ஜனவரி 04, 2013 இல் சூத்திரத்தில் பிரசுரிகப்பட்ட கட்டுரை இன்றுள்ள அரசியல் சூழலுக்கு மிகவும் பொருந்துகின்றது என்பதற்கா மீள்பிரசுரம் ஆகின்றது)


“தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்பார்கள். இது ஜனாதிபதி மஹிந்த அவர்களுக்கும் பொருந்தும். அவர் தம்பிகளை மட்டுமல்ல, தனது அண்ணனையும் பொறுத்த அரசியல் அதிகார பீடத்தில் வைத்திருக்கிறார். அவர் தனது மகன்களையும் இறைமை அதிகாரங்கள் பல பெற்றவர்களாக செயற்பட வைத்திருக்கிறார். 2005ம் ஆண்டுக்கு முதல் மஹிந்தவைப் பார்த்தவர்கள் அவரை “பௌத்த போதனைகளின் பண்புகள் நிறைந்தவர்”, “சோசலிசத்தின் நண்பன்”, “தொழிலாளர்களின் தோழன்”, “ஏகாதிபத்தியம், சியோனிசம், பேரினஆதிக்கவாதம் போன்றவற்றின் எதிரி” என்றுதான் பார்த்தார்கள். இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் அவரை “ஒரு நல்ல சிங்கள பௌத்தன் ஆனால் இனவாதியல்ல” என்றுதான் அடையாளம் கண்டார்கள், இந்தியா அவரையும் அவரது சகோதரர்களையும் “அவர்கள் ஒப்புக் கொள்வதை செய்கிறார்கள், தம்மால் முடியாததை நேரடியாக தமக்கு முடியாது” என்கிறார்கள் என அவர்களது நேர்மையில் நம்பிக்கை வைத்தது. 2005ம் ஆண்டு மஹிந்தவை ஜனாதிபதி ஆக்குவதில் பெரும் பங்காற்றிய பிரபாகரனும் அவரை ஒரு யதார்த்தவாதி என்றார். எனினும் பிரபாகரன் மஹிந்த அவர்கள் ஒரு பலயீனமான ஜனாதிபதியாக இருப்பார் என்றே எதிர்பார்த்தார். ஆனால் மஹிந்த அவர்கள் ஜனாதிபதி ஜெயவர்த்ததனாவின் கணித்து செயற்படும் ஆற்றல், ஜனாதிபதி பிரேமதாசாவின் நினைத்ததை நினைத்தவாறே முடிக்கும் வல்லமை, ஜனாதிபதி சந்திரிகாவின் மக்கள் கவர்ச்சி ஆகிய மூன்று ஆளுமைகளினதும் மொத்த உருவாகமாக விசுவரூபம் எடுத்து நிற்கிறார் என்பதில் சந்தேகமில்லை. (மேலும்....)

அன்றிலிருந்து.....

இலங்கையின் விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றப்பட வேண்டிய வரலாற்று தருணம்

இன்றைய நிலையில் ஏற்பட வேண்டிய மாற்றத்தில் மைத்திரிபால தலைமையிலான அணி வெற்றி பெறவேண்டிய தேவை இருக்கிறது. அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அரசியல் சக்திகள் எதிரும் புதிருமானவையாக இருப்பினும் இது நிகழவேண்டும். அரசுதரப்பிலும் அவ்வாறே. ஆனால் இங்கு எதிர்பார்க்கப்படுவது நீண்டகாலமாக மக்களை அவலத்திற்குள்ளாக்கிய விசேட அதிகாரம் கொண்ட முறைறை நீக்குவது பற்றியது.
சமூகமாற்றத்திற்கான இயக்கப்போக்கில் ஜனநாயகப்புரட்சி என்ற ஒரு அம்சம் இருக்கிறது. அதில் வௌ;வேறு வர்க்க சமூக சக்திகள் பங்கு பற்றும் என்பது விளங்கிக் கொள்ளப்படவேண்டும். நிலப்பிரபுத்துவத்துடன் நவதாராளவாத உலகில் பிரவேசித்திருக்கும் நாடு இலங்கை. இன்று உலகில் தேசிய அரசு என்ற சொல் பரவலாக அர்த்தம் இழந்திருக்கிறது. எனவே பல்வேறு கால கட்டங்களில் ஜனநாயக புரட்சி இயக்கங்கள் நிகழவேண்டியிருக்கிறது. அதில் பல்வேறு சமூக வர்க்க சக்திகள் பங்கு பற்றும் பங்கு பற்றவேண்டும் என்பதே யதார்த்தமாகும். (மேலும்....)

மகிந்தாவின் வீழ்ச்சிக்கு ராஜபக்ஷகளே காரணம்
(சாகரன்)

(டிசம்பர் 05, 2014 இல் சூத்திரத்தில் பிரசுரிகப்பட்ட கட்டுரை இன்றுள்ள அரசியல் சூழலுக்கு மிகவும் பொருந்துகின்றது என்பதற்கா மீள்பிரசுரம் ஆகின்றது)

மகிந்த 2005 இல் முதலாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது புலிகள் இவரோடு இரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆதரவு தெரிவித்தது பகிரங்க இரகசியம். இதற்கு கைமாறாக எழுதப்படாத உடன்படிக்கையாக புலிகளுக்கு பணம் வழங்கி அவர்களை ஊக்கிவித்ததும் இதே மகிந்தாதான். ரணிலின் ஜனாதிபதிப் பிரசன்னைத்தை தவிர்த்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் தமது போரை தீவிரமாக நடத்த அது ஊக்கியாக அமையும் என்பதே இதற்கு காரணம் ஆகும் ஆனால் புலிகள் எதிர்பார்த்ததிற்கு மேலாக மகிந்தாவிடம் அடிவாங்கி அழிந்து போனது அந்தோ பரிதாபம்தான். இதே போல் கருணா, பிரபா முரண்பட்ட காலகட்டத்தில் பிரபாகரனின் புலிகள் வெருகலைக் கடக்க தனக்கு பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் சந்திரிகா திறந்து விட்டது கருணாவையும், அவரது போராளிகளையும் சிறப்பாக பெண்களையும் கொலை செய்யக் காரணமாக அமைந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. வழமை போலவே இம்முறையும் புலிகளின் கட்டளைப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்வில்லை என்பது ஒன்றும் எதிர்பார்க்காதது அல்ல. (மேலும்....)

நாங்கள் நலமாக இருக்கின்றோம் கனடாவில்.......? இன்று குளிர்நிலை  - 30.00 0 C

வாக்களிப்பு ஆரம்பம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றுக்காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமானது என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

ஏழாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மிகக் கூடு தலான வேட்பாளர்கள் போட்டியிடும் (19 பேர்) தேர்தல் இது வாகும். பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகிறது. பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்ததும் வாக்குப் பெட்டிகள் எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும். நள்ளிரவுக்குப் பின்பே தேர்தல் முடிவுகள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை நீதி நேர்மையுடன் நடத்த வேண்டுமென்ற அர்ப்பணிப் பான செயற்பாட்டுடன் தேர்தல்கள் ஆணையாளர் செயற்படு கிறார் என்பதை தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது. அவர் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்புகளும் அறிவுறுத்தல் களும் அவருடைய உறுதியான பணிகளைப் படம் போட்டுக் காட்டு கின்றன. வாக்குச் சாவடிகளுக்கு நேரகாலத்தோடு சென்று வாக்களிக்குமாறு அவர் பொது மக்களுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் என்பதும் வாக்களிப்பு என்பதும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போனதாக இருந்து விடாதீர்கள். வாக்குரிமை என்பது நமது அடிப்படை உரிமை என்பதை மறந்து விடாதீர்கள். கடுமையான போராட்டங்களால் நாம் பெற்றுக் கொண்ட உரிமையை மறுதலிக்கும் வகையில் மக்கள் நடந்து கொள்ளக் கூடாது. இந்தத் தேர்தலில் நீங்கள் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகள் தான் ஜனநாயக விழுமியத்தின் அத்திபாரமாக அமையும். ஆகவே ஒவ்வொருவரும் தங்களது வாக்கை சரியாகப் பயன்படுத்த வேண்டியது அடிப்படை உரிமையுடன் சேர்ந்த கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப் போவது யார்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்கிற கருத்துக் கணிப்புகளும் வாதப்பிரதிவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. யார் வெற்றி பெறுவார் என்பதற்கு முன்னால், இத்தேர்தலில் ஒவ்வொருவரும் (மக்கள், தனி நபர்கள், கட்சிகள், அமைப்புகள் ) எடுத்திருக்கும் நிலைப்பாடுகளே முக்கியமானதாகும். வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் மகிந்த ராஜபக்ச வெல்லப்போகிறார் அல்லது மைத்திரி வெல்லப்போகிறார். ஆகவே வெல்பவரின் பக்கம் நிற்போம் என்கிற பார்வை மட்டும் , அரசியல் கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டுக்கு வெகு தூரமானது என்பதுடன் , அதிகார நலனுடன் சேர்ந்த எதிர்பார்ப்புடன் வெற்றியை மட்டும் ஆராதிக்கும் மனோ நிலையுமாகும். இன்னொரு வகையில் சொல்வதானால் மைத்திரி தோல்வி அடைந்து விட்டால், மகிந்தவின் ஜனநாயக விரோத,இனவாத, ஊழல்மிகு அரசாங்கமும் கொள்கையும் வெற்றி அடைந்து விட்டதாக கருதமுடியாது. உண்மையில் மகிந்த ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன் நடத்த எடுத்த முடிவே அவரது தோல்வியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவேயாகும். (மேலும்....)
 

இனரீதியான பிரச்சினைகளை கடந்து தமிழ், சிஙகள, முஸ்லிம், மலையக மக்கள் ஒண்றிணைந்து ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம்

'ஆறு கடக்கும் வரை அண்ணன், தம்பி கடந்தபின் நான் யாரோ நீயாரோ' எ;ன்று தமது காரியமானதும் நண்பர்களை மறந்து விடுபவர்கள் பற்றிச் சொல்லப்படுவதுண்டு. அரசியலில் இந்த வகையான நபர்களை, இந்த மாதிரியான சம்பவங்களை நாம் திரும்ப திரும்ப காண்கிறோம், கேள்விப்படுகிறோம். அதிகாராத்திற்கு வரும்வரை அரவணைப்பதும் உத்தரவாதங்களை வழங்குவதும் அதிகாரத்திற்கு வந்ததும் தூக்கி எறியப்படுவதும் சாதாரண நடைமுறையாக உள்ளது.  ஒரு குறித்த இலக்கினை எட்டுவதற்காக உருவாகின்ற அணி சேர்க்கைகள் பின்னர் உடைந்து உதிர்ந்து காலவதியாகிப்போன உலக வரலாறுகளும் உண்டு.
புலிகளின் ஏக பிரதிநிதித்துவ அகங்காரத்திற்கு எதிராக, ஜனநாயக விரோதப் போக்குக்கு எதிராக நாம் வௌ;வேறு காலகட்டங்களில் வௌ;வேறு சக்திகளுடன் இணைந்து போராடியிருக்கிறோம். இதற்காக நாங்கள் கைகோர்த்துக் கொண்ட பலர் ஏக பிரதிநிதித்துவ மோகம் கொண்டவர்களாகவும், பன்மைத்துவத்தை நிராகரிப்பவர்களாகவும் வளர்ந்த கசப்பான வரலாற்றையும், சுயலாபம், கட்சி நலன் என்ற குறுகிய எல்லைகளுக்குள் செயற்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறோம். (மேலும்....)

மகிந்த ராசபக்ச தரப்புடன் அனந்தி செய்து கொண்ட இணக்கம் - ஆதாரத்துடன் சுனந்த தேசப்பிரிய

வடமாகாணசபை உறுப்பினரும் விடுதலைப்புலிகளின் திருமலை அரசியல் பொறுப்பாளர் எழிலனின் மனைவியுமான அனந்தி மகிந்த ராசபக்சவுடன் செய்து கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமையவே தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார் என சிறிலங்கா ப்றீவ் என்ற இணையத்தளத்தில் பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பியுடன் இரகசிய தொடர்பை வைத்திருக்கும் பிரான்ஸில் இருக்கும் ஒரு நபரே மகிந்த ராசபக்ச மற்றும் ஈ.பி.டி.பியுடன் அனந்திக்கு இரகசிய தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்றும் இந்நபரே அனந்தி ஜெனிவா வரும் போது அவருக்கான மொழிபெயர்ப்பு உட்பட அனைத்து உதவிகளையும் செய்வார் என்றும் ஜெனிவாவில் இருக்கும் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார். ( பிரான்ஸில் இருக்கும் நபரின் முழுவிபரமும் சுனந்த தேசப்பிரியாவின் கட்டுரையில் உள்ளது) (மேலும்....)

யுத்த வெற்றி மட்டுமே இலங்கையை ஒன்றுபடுத்த போதுமானதல்ல

யுத்த வெற்றி மட்டுமே இலங்கையை ஒன்றுபடுத்த போதுமானதல்ல. யுத்தவெற்றியின் பின்னர் இனங்களிற்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டியது மகிந்த ராஜபக்சவின் பொறுப்பு. அதனை அவர் செய்யவில்லை. மூன்றாவது முறை செய்வதாக கூறுவதை நம்புவதை விட, புதியவர் ஒருவரையே மக்கள் நம்புவதற்கு வாய்ப்பு அதிகம். தனது பதவிக்காலத்தில் தமிழர் பிரச்சனையை தீர்ப்பதாக யாழில் வாக்குறுதியளித்த ஜனாதிபதி, தெற்கில் அதிதீவிர இனவாத பிரசாரங்களை செய்கிறார். (மேலும்....)

500 மில்லியன் ரூபாய்: முக்கிய அமைச்சுப் பதவி! தன்னிடம் அரசதரப்பு பேரம் பேசியது என்கிறார் கூட்டமைப்பு எம்பியான அப்பாத்துரை விநாயகமூர்த்தி

நாளையதினம் நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் ஐனாதிபதி மகிந்த ராஐபச்ஷவிற்கு ஆதரவை வெளிப்படுத்துமாறு பல கோடி ரூபாக்களும் சொத்துக்கள் பதவிகள் என பல்வேறு வகையிலான பேரம் பேசுதல்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நேரடியாகவே நடைபெற்று வருகின்றது. இவ்வாறு ஏற்கனவே கூட்டமைப்பின் பல உறுப்பினர்களிடம் பேரம் பேசுதல்கள் நடைபெற்றிருந்த நிலையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்தியுடனும் பேரம் பேசுதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் இம் முக்கிய அமைச்சுப் பதவியொன்று வழங்குவதாகவும் பேரம் பேசப்பட்டு வந்ததாகவும் விநாயகமூர்த்தி பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். (மேலும்....)

அமெரிக்காவில் பிச்சைக்காரர்களின் அவலம்

"அமெரிக்கா என்றால் அதுவன்றோ நாடு. அங்கே பிச்சைக்காரனும் ஆங்கிலம் பேசுகிறான்..." என்று சொல்லிப் புளங்காகிதம் அடைவோர் நிறையப் பேர். ஆனால், அமெரிக்கப் பிச்சைகாரர்கள், உறைபனிக் காலத்திலும், கடுங்குளிரில் விறைத்த படி, பிச்சையெடுக்க வேண்டிய அவலம் பற்றிப் பேசுவோர் யாருமில்லை.

திரைப்பட விமர்சனம்

கயல்

ஆறு மாதம் வேலை செய்து பணம் ஈட்டுவது, ஆறு மாதம் எங்கே வேண்டுமானாலும் பயணம் செல்வது என்று கிளம்பிவிடுகிறவர்கள் ஆரோன், சாக்ரடீஸ். ஒருவனது பெயர் முதலெழுத்தையே இன்னொருவன் தன் பெயருக்கான முன்னெழுத்தாக வைத்துக்கொள்கிற அளவுக்கு நெருக்கமான அந்த நண்பர்கள் கலகலப்பானவர்கள், வரக்கூடிய சூழல்கள் எதையும் அனுபவமாக ஏற்கத் தெரிந்தவர்கள். மற்றவர்களுக்கு ஏதோ பயன்படும் வகையில் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தோடு பொருளாதாரம், அதிகாரம் சார்ந்த சொந்த லட்சியம் எதுவும் தேவையில்லை என்று சிறகடிக்கிற இருவரையும் பார்க்கிறபோது கொஞ்சம் பொறாமையாகக்கூட இருக்கிறது. ஊர் சுற்றிகள்தான் உலகத்தைக் கண்டுபிடித்தார்கள் என் ராகுல சங்கீர்த்தியாயன் தமது ஊர்சுற்றிப் புராணம் புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது நினைவுக்கு வருகிறது. (மேலும்....)

நேதாஜியின் மரணம்

வெடித்து கிளம்பும் புதிய உண்மைகள் !

இந்தியாவின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்து ஜப்பானுடன் கூட்டணி அமைத்து ஆங்கிலப்படைக்கு எதிராக இரண்டாம் உலகப்போரில் போரிட்டவர் சுபாஷ் சந்திர போஸ். இந்திய இளைஞர்களின் கதாநாயகனாக திகழ்பவர். ஆனால் அவரது மரணம் குறித்த சர்ச்சைகள், சந்தேகங்கள் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. ஒரு நாட்டின் வரலாறு பற்றி அறிய அந்த நாட்டு குடிமக்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் தேசியத் தலைவரான சுபாஷ் சந்திர போஸின் கடைசி நாட்களைப் பற்றிய மர்மத்தை மக்களுக்கு தெரிவிக்க எந்த இந்திய அரசும் உண்மையாக முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை. (மேலும்....)

பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி

பிரான்ஸின் நையாண்டி பத்திரிகையான சார்லி ஹப்டோ அலுவலகத்தில் துப்பாக்கிதாரிகள் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாரிஸில் இருக்கும் இந்த அலுவலகத்திற்குள் நுழைந்த முகமூடி அணிந்த ஆயுததாரிகள் இயந்திர துப்பாக்கி கொண்டு தொடர்ச்சியாக சூடு நடத்தியதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பத்திரிகை சமகால நிகழ்வுகள் குறித்து நையாண்டியாக செய்திகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த பத்திரியை தனது புதிய பதிப்பில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருந்தது. இந்த தாக்குதலில் குறைந்தது ஒரு ஊடகவியலாளர் கொல்லப்பட்டும் மூன்று பொலிஸார் காயமடைந்து இருப்பதை பொலிஸ் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். சார்லி ஹப்டோ பத்திரிகை பல தடவைகள் இறைத்தூதர் முஹமது நபியின் கேலிச் சித்திரங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 2011இல் இறைத்தூதரை அவமதிக்கும் கேலிச்சித்திரத்தை வெளியிட்டதற்காக இந்த அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

நாட்டைவிட்டு தப்பி ஓடிய முக்கிய அமைச்சரும், முதலமைச்சரும்!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மற்றும் மாகாண முதலமைச்சர் ஒருவரும் குடும்பத்தினருடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ்அழகப்பெரும மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நாட்டை விட்டு நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக வெளிநாடு சென்றுள்ளார். மேலும் சமல் ராஜபக்சவின் மகனும் ஊவா மாகாண முதல் அமைச்சர் சஷிந்திர ராஜபக்சவும் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சீனா நோக்கிப் புறப்பட்ட விமானமொன்றில் நேற்று நண்பகல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்சி மாற்றம் எங்கு தேவை?... மத்தியிலா?.. மாகாணத்திலா?... - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

ஆட்சி மாற்றம் தேவை என்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஆனாலும், வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி, ஏனைய மாகாணங்களை விடவும் தமிழ் பேசும் மக்களின் வட மாகாண சபைக்கே அதிகூடிய நிதியை ஜனாதிபதி அவர்கள் ஒதுக்கித் தந்திருந்தார். அதை மக்களாகிய உங்களுக்கு இதுவரை சரிவரப்பயன்படுத்தத் தவறியதால், பெருவாரியான நிதி அரசாங்கத்தின் திறை சேரிக்கு வருட இறுதித் தினமே திரும்பிச் சென்று விட்டது. ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்பது போல நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாட்டு என்பது போல, ஆற்றலும், அக்கறையும் இல்லாது விட்டதனால் வடக்கு மாகாண சபை இன்று குரங்கின் கையில் சிக்கிய பூமாலை போல் ஆகிவிட்டது. தமிழ் பேசும் மக்களின் வட மாகாண சபைக்கு அதிகூடிய நிதியை ஒதுக்கித் தந்த மகிந்த ராஜபக்ச அவர்களது அரசில் ஆட்சி மாற்றம் வேண்டுமா?.. அல்லது அந்த நிதியை எமது மக்களுக்காக செலவழிக்காமல், அரசாங்கத்தின் திறைசேரிக்கே திருப்பி அனுப்பி வைத்த வட மாகாண சபையில் ஆட்சி மாற்றம் வேண்டுமா?....

பண்டைய தமிழர் கலாச்சாரம்.....?

இலங்கை ஆங்கிலேயரின் காலனியாக இருந்த காலத்தில், யாழ்ப்பாணம் உடுவில் பெண்கள் கல்லூரியில் எடுத்த புகைப்படம். 1908 ம் ஆண்டு வாழ்ந்த தமிழ்ப் பெண்கள், பாவாடை மாதிரியான ஆடை அணிந்திருப்பதை காணலாம். இன்றைக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் பெண்கள் அது மாதிரியான உடை அணிவது வழக்கம். சேலை உடுப்பது தான் "தமிழ்க் கலாச்சாரம்" என்று பெரும்பாலானோர் நினைப்பதற்கு மாறாகவே, எமது மூதாதையர் வாழ்ந்துள்ளனர். நாங்கள் இன்றைக்கு "தமிழ்க் கலாச்சாரம்" என்று பீற்றிக் கொண்டு திரியும் பல அம்சங்கள். பிற்காலத்தில் ஆங்கிலேயர்களினால் கொண்டு வரப் பட்ட கலாச்சார மாற்றங்கள் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. (படத்திற்கு நன்றி: Yarl Olai)

ஜனவரி 07, 2015

சிறுபான்மையினர் மத்தியில் ஆளும் கட்சியினர் மைத்திரிக்காக பிரசாரம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் போது தாம் ஆதரவளிப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கா அல்லது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கா என்பதை முடிவு செய்யாது இழுத்தடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இறுதியில் அந்த முடிவை எடுத்துள்ளன. அக்கட்சிகளின் முடிவு ஏதும் ஆச்சரியத்துக்குரியது அல்ல. இது எதிர்ப்பார்க்கப்பட்டது தான். அவ்விரு கட்சிகளும் இறுதியில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் என நாடே எதிர்ப்பார்த்து. அதற்குக் காரணம் ஐ.ம.சு.கூ தலைவர்கள் கூறுவதைப் போல் அக்கட்சிகளுக்கும் மைத்திரிபாலவுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் ஏதும் இருப்பதனால் அல்ல. அவர்கள் அந்த முடிவை எடுக்க தத்தமது சமூகங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். (மேலும்....)

இப்படியும் புலிகள் அமைப்பு செய்தது. இது கதையல்ல உண்மைச்சம்பவம்

இப்படித்தான் எமது ஈழ போராட்டம் இருந்தது.இவர்கள்தான் எமக்கு ஈழத்திற்காக போராடினார்கள். வருட முடிவுநாளில் எனது ஞாபகத்திற்கு வரும் சம்பவத்தை எனது நண்பர்களும் அறிந்துகொள்ள வேண்டும். 1990ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி எனக்கு 16வயது இருக்கும் எனது தம்பி பெயர்:- உதயசங்கரி வயது:- 12 இவர் யாழ் சென் ஜோன்ஸ கல்லூரியில் 07ம் ஆண்டு கற்றுவந்தார். இவர் 1990ம் ஆண்டு 02ம் தவனை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தார், ஒரு நாள் அம்மா தம்பியை முறிகண்டி கூ.சங்கத்திற்கு பொருட்கள் வாங்குவதற்காக அனுப்பிவைத்தார் ,எனது தம்பி முறிகண்டி சென்றிருந்தபோது முறிகண்டி பிள்ளையார் கோவில் அருகில் தெரு நாடகம் நடந்துகொண்டிருந்தது . தம்பியுடன் சிறுவயதில் முறிகண்டி பாடசாலையில் படித்த நண்பனொருவன் புலிகள் அமைப்பில் இருந்தான் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள், தானும் இயக்கத்துக்கு வருவதாகக்கூரி தம்பியும் இணைந்துகொண்டான். (மேலும்....)

பிரபாகரன் அன்று சொன்னதைத் தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் தற்போது செய்துகொண்டிருக்கின்றார்கள்

(பிரபாகரன் சொன்னதை காணொளியில் காண...)

இலங்கையில் தேர்தல்

தெரிந்த பிசாசா அல்லது தெரியாத தேவதையா

இலங்கை எனும் எழில்மிகு இயற்கையின் கொடை அன்று அனுமன் வாலாலும் பின்னர் புலிகளின் துப்பாக்கியாலும் துயரையே கண்டது. அனுமன் சீதைக்காக அழித்தான். என்ன பலன்? மீண்ட சீதையை ராமன் தீயில் வீழ்த்தினான்.புலிகள் துப்பாக்கி தமிழர் விடுதலைக்கு என்றார்கள். விடுதலை வேட்கை கொண்ட சகாக்களுக்கு துரோகி பட்டம் கொடுத்து இந்த உலக வாழ்க்கையை விட்டே விடுவித்துவிட்டார்கள். புலி பதுங்குவது பாய்வதற்காக என்று மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால்வரை பதுங்கி இன்றுவரை பதுங்கித்தான் இருக்கிறார் . எப்போது பாய்வார் என்பதை சில சீமான்களே அறிவர். சாமான்யன் அறியான். இந்தத்தேர்தலில் தெரிந்த பிசாசா அல்லது தெரியாத தேவதையா யாரை ஆதரிப்பது என்று குழம்பும் மக்கள். தனித்த தமிழ் அரசியல் இந்தக் குழப்பத்தைத் தவிர வேறு என்ன தரும்? இலங்கையில் ஜனநாயகம் முழுமை அடையாமல் தமிழர் சமஉரிமை சாத்தியம் ஆகாது. வடக்கு கிழக்கு மக்கள் தென்னிலங்கை மக்களுடன் சேர்ந்து , இலங்கைக்கான ஜனநாயகப் போராட்டத்தில் பங்கெடுத்தால் மட்டுமே தமிழ் மக்களின் சம உரிமைக்கான போராட்டம் வெற்றி தரும். சினிமாக்காரன் கட்டவுட்டுக்கு பால் ஊத்தும் பகுத்தறிவு தமிழ்நாட்டை நம்பி வீண்போகாமல் , இலங்கைத்தீவில் ஒற்றுமையும் சமாதானமும் சகஜ வாழ்வும் வாழும் வகையில் , முதல் படியாக பொது வேட்பாளர் சிறிசேனவை வெற்றி பெறவைப்பார்கள் என நம்புகிறேன். (Kanniappan Elangovan)

தமிழும் சித்தர்களும்

அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார். God’s particle, Higgs Boson என்று பலவற்றை கண்டாலும் அது நடராஜரை தொடர்புபடுத்துகிறது, திருமூலரும் அப்படியே கூறுகிறார். பல பில்லியன் டாலர்கள் செலவில் , செர்ன் (CERN) என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் , பிரான்ஸ்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே , 574 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளம் உள்ள சுரங்கப்பாதையில் Large Hadron Collider ஒன்று உருவாக்கப்பட்டது. நடராஜர் தாண்டவமும் அணுவின் செயல்பாடும் சம்பந்தப்பட்டுள்ளது என்று நம்புவதால் அங்கே நடராஜர் சிலை வைத்துள்ளனர். (மேலும்....)

" சிரித்திரன்" சிவஞானசுந்தரம்..

யாழ்பாணத்தில் இருந்து " சிரித்திரன்" எண்டு ஒரு நகைசுவை பத்திரிகை வந்தது பலருக்கு தெரியும் ,ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில், அதை இலங்கை தீவில் பல அறிவு சார்ந்த விசியன்களில் முன்னோடிகள் அதிகம் வசித்த வடமராசியின் , கரவெட்டியில் பிறந்த ,சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம் , " செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்' என்ற சிந்தனைக் கொள்கையுடன் பல வருடம் வெளியிட்டார். அறுபதுக்களில் ஆரம்பிக்கப்பட்ட "சிரித்திரன்" சஞ்சிகை திரு சி சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை சுமார் 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்திருக்கு என்கிறார்கள் , சிவஞானசுந்தரம் அவர்களின் தந்தை இலங்கையின் முதலாவது தபால் மாஅதிபர் திரு வி. கே. சிற்றம்பலம் என்கிறார்கள் . சுந்தரைக் அவரின் தனத்தை இந்தியாவுக்கு ஆர்கிடெக்சர் என்ற கட்டிடக்கலை படிக்க அனுப்ப , அவர் இந்தியாவின் ஹிந்து பத்திரிகையில் கார்டுநிஸ்ட் ஆக இருந் R K லக்மனின் , கார்டுனில் மயங்கி , இந்தியாவில் கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டுஇலங்கை வந்தாராம் . (மேலும்....)
 

ஜனவரி 06, 2015

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?

(வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்))

ஐ.தே.கவுக்கு இனிமேல் இலங்கையில் அரசியல் எதிர்காலம் இல்லை என்பதே அது. அதுவும் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைவராக இருக்கும் வரை அக்கட்சி ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பது இருபதுக்கும் மேற்பட்ட தடவைகள் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் சர்வதேச பிற்போக்கு சக்திகள் 2010 ஜனாதிபதி தேர்தலில் தமது உத்தியை மாற்ற வேண்டி வந்தது. அத்தேர்தலில் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியின் பங்காளி எனக் கருதப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகவை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டிக்கு நிறுத்திப் பார்த்தார்கள். அவர் அதற்கு முந்திய தேர்தலில் ரணில் எடுத்த வாக்குகளுக்கு அண்மித்ததாக கூட வாக்குகளை பெறவில்லை. எனவேதான் இம்முறை ஆளும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை உடைத்தெடுத்து அவரை ஒரு ‘யூதாஸ்’ ஆக மாற்றி களமிறக்கியுள்ளனர். அத்துடன் தனது குடும்ப வாரிசை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர துடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவையும் தம்முடன் இணைத்து கொண்டுள்ளனர்.(மேலும்....)

தமிழர் பிரச்சினைக்கு சுயாட்சியே ஒரே தீர்வு - துமிந்த நாகமுவ

கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர் போட்டியிட்டாலும் போட்டி பிரதானமாக மைத்திரிபால சிரிசேனாவுக்கும் மகிந்த ராஜபக்சாவுக்கும் இடையே இருக்கின்றது. இரு பிரதான வேட்பாளர்களிலிருந்தும் நீங்கள் எவ்வாறு வேறுபடுகின்றீர்கள்?

பதில்: நாங்கள் இடதுசாரிகள். அதனையே முதன்மைப்படுத்துகின்றோம். பிரதான இரு கட்சிகளும் அடிப்படையில் ஒரே கொள்கையைத்தான் கொண்டிருக்கின்றன. அவர்களது கொள்கைகளில் வித்தியாசத்தை காணமுடியாது. ஆனால் நாங்கள் அடிப்படையில் வேறு மாதிரியான கொள்கைகளைக் கொண்டிருக்கின்றோம். சாதாரண மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையே முதன்மைப்படுத்துகின்றோம். இது எமது போராட்டத்தின் ஆரம்பம். இடதுசாரிகளை முன்னிலைப்படுத்தி மாற்றம் ஒன்றுக்காகப் போராட ஆரம்பித்திருக்கின்றோம். மாற்றத்துக்கான இந்த ஆரம்பம் படிப்படியான வெற்றிகளை எங்களுக்குப் பெற்றுத்தரும். (மேலும்....)

கொழுக்கட்டையா? மோதகமா?

(அர்வின். ஜீ)

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப்போவது தற்போதைய ஜனாதிபதி மகிந்தவா? அல்லது முன்னாள் அமைச்சர் மைத்திரியா? ஜனவரி 09ம் திகதி தெரிந்துவிடும். மகிந்தவும் மைத்திரியும் நல்ல நண்பர்கள். இப்போது எதிர் எதிராக மக்கள் முன் ஜனாதிபதி வேட்பாளர்களாக நிற்கிறார்கள். தேர்தலின் பின் இவர்கள் இருவரும் தொடர்ந்து நண்பர்களாக இருப்பார்களா? அல்லது வென்றவர் தோற்றவரை பழிவாங்குவாரா? இதற்கும் புதிய ஜனாதிபதி அறிவிக்கப்பட்ட பின்னர் தெரிந்துவிடும்.  மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் ராஜபரிபாலணத்தை தலைமையேற்று நடாத்துவதற்கு மூன்றாவது முறையாகவும் விருப்பம்கொண்டுள்ளார். கடந்தகால அவரது ஆட்சிக்காலத்தில் சில அபிவிருத்திகள் நடைபெற்றாலும் பல பாதகமான சம்பவங்களும் நடந்திருக்கின்றன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்பதும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான சிங்கள பௌத்த அடாவடித்தனமும் முஸ்லீம், தமிழ் - சிங்கள மக்களின் பெரும் ஏமாற்றமான அமைந்தது. (மேலும்....)

அதிகார பரவலாக்கல் என்ற பேச்சுக்கு இப்போதைக்கு இடமில்லை - மைத்திரி

'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்கலுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது' என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 'இந்த நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும் எனது முன்னணியும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். நான் பதவிக்கு வந்த பின்னர், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை ஒருபோதும் அகற்ற மாட்டேன்' என்றும் அவர் கூறினார். (மேலும்....)

மகிந்தவை தவிர்க்க வேண்டும், துமிந்தவுக்கு வாக்களியுங்கள் - குமார் குணரத்தினம்

இலங்கையில் ஜனநாயகம் இல்லை. சிவில் நிர்வாகம் இல்லை. மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர். எனவே தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவை தவிர்க்க வேண்டும். அவரைத் துரத்த வேண்டும். அதேவேளை மைத்திரியும் மஹிந்தவைப் போலவே தான் என்று தெரிவித்துள்ள முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான குமார் குணரத்தினம், மக்களுக்கு நீண்டகால உண்மையான வெற்றியைப் பெற்றுக் கொள்ள இடதுசாரிகள் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் துமிந்த நாகமுவவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். (மேலும்....)

முதலாவது சிங்கள-தமிழ் இனக்கலவரம்

(என்.சரவணன் )

இலங்கையின் வரலாற்றில் நடந்து முடிந்த வகுப்பு கலவரங்கள் இறுதியில் இனப்பிரச்சினையை பிரதான பிரச்சினையாக நிலைபெறச் செய்யுமளவுக்கு பாத்திரம் வகித்து வந்திருப்பதை நாம் அறிவோம். இலங்கையின் முதலாவது மதக் கலவரம் எதுவென்று கேட்டால் நாம் 1883இல் பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் நடந்த கொட்டாஞ்சேனை கலவரத்தை குறிப்பிடுவோம். அதுபோல இலங்கையில் முதலாவது இனக்கலவரமாக 1915இல் சிங்கள-முஸ்லிம் கலவரமான கண்டிக் கலம்பகத்தை குறிப்பிடுவோம். இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கு இடையில் நிகழ்ந்த முதலாவது கலவரம் எது என்பது இன்றும் பலருக்கு நினைவிருக்காது. 1939இல் நாவலப்பிட்டியாவில் நிகழ்ந்த இனக்கலவரமே முதலாவது தமிழர்-சிங்கள கலவரமாகக் கொள்ளப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து இந்த வருடத்தோடு 76 வருடங்கள் ஆகின்றன. இந்த கலவரம் பற்றிய குறிப்புகளும், எழுத்துக்களும் கூட போதிய இல்லை என்பதே உண்மை.(மேலும்....)
 

தமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

ராஜபக்‌ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இதன் அர்த்தம் மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதல்ல. மைத்திரி எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவர்களில் பலரிடம் துலக்கமான பதில் இல்லை. தமிழ்ப் பொது உளவியலின் பெரும் போக்கைக் கருதிக் கூறின், தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக காணப்படுகிறார்கள் என்பதே சரி. இவ்விதம் அரசுக்கு எதிராக காணப்படும் வாக்குகள் அவற்றின் தவிர்க்கப்படவியலாத தர்க்கபூர்வ விளைவாக மைத்திரிக்கு ஆதரவாகவே விழும். கூட்டமைப்புக்கு உள்ள மிகச் சாதகமான அம்சம் இது. அதாவது, தமிழ் மக்கள் வாக்களிக்க வந்தால் அதில் பெரும்பாலானவர்கள் அரசுக்கு எதிராகவே வாக்களிக்கப் போகிறார்கள் என்பதுதான். (மேலும்....)

உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....!!

எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோர செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்களே....! அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது. இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும்ஜெய்ஹிந்த்என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். (மேலும்....)

உங்களுக்கு தெரியுமா...

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை. முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம், துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன. (மேலும்....)

 

திரும்பிப்பார்க்கின்றேன்

படைப்பிலக்கியவாதி தெணியானுக்கு இன்று 73 வயது

இலங்கை வடமராட்சியின் ஆத்மாவை வாசகர் உலகிற்கு முன்னிலைப்படுத்திய கதை சொல்லியின் வாழ்வும் பணிகளும் பரந்துபட்டது
(முருகபூபதி)

நீர்கொழும்பில் எங்கள் வீட்டு முற்றத்தில் எமது பொலிஸ் தாத்தா நட்ட மல்லிகைக்கொடி வளர்ந்து பூத்துக்குலுங்கியது.  தாத்தா இறந்தபொழுது அந்த மல்லிகைப்பந்தலுக்கு கீழே அவரது பூதவுடலை இறுதி அஞ்சலிக்கு வைத்தார்கள். சில மல்லிகை மலர்கள் அவர் மீது விழுந்த காட்சி என்னை பரவசப்படுத்தியிருக்கிறது. அப்பொழுது எனக்கு ஆறுவயது.
வீதியில் செல்பவர்களும் மல்லிகையை பறித்து முகர்ந்துகொள்வார்கள். பாட்டி வீட்டில் சுவாமி படங்களுக்கு தேவையானதை வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை கோயிலுக்கு கொடுத்துவிடுவார்கள். பின்னாளில் நான் வெளியே செல்லும்போதெல்லாம் எனது சேர்ட் பொக்கட்டுக்குள் ஒரு மல்லிகை மலரும் இருக்கும். அதன் வாசம் எப்பொழுதும் என்னுடன் தொடர்வது போன்ற உணர்வு. தாத்தா வைத்த மல்லிகை நான் பிறந்த காலத்திலிருந்து எனக்கு நெருக்கமானது. (மேலும்....)

ஜனவரி 05, 2015

குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்?

மூன்று புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுடன் கே.பி என்ற குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. அவர்கள் எங்கு சென்றனர், எந்த விமானத்தில் சென்றனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் செல்லும் போது ஒரே ஒரு பாதுகாப்பு அதிகாரி மாத்திரமே அங்கு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. குமரன் பத்மநாதனை நாட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் போது அடையாளம் காணமுடியாதபடி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குமரன் பத்மநாதன் மலேசியாவில் கைது செய்யப்பட்டதுடன் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டார். அவ்வப்போது நடத்தப்பட்ட தேர்தல்களின் போது பத்மநாதன் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வடக்கில் செயற்பட்டார். இம்முறையும் இறுதி வரை வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் தேர்தல் பணிகளுக்கு அவர் பங்களிப்பு வழங்கி வந்தார்.

தேர்தல் பிரசார பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (05) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகின்றது. எனவே பிரதான அரசியல் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் இறுதி பிரதான கூட்டங்களும் ஏனைய பிரசார நடவடிக்கைகளும் இன்றைய தினம் சூடுபிடித்துள்ளன. வாக்கெடுப்பு நடத்தப் படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும். அதற்கமையவே இன்று நள்ளிரவு 12 மணியுடன் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் முற்றுப்பெறவுள்ளன. இதன்படி அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் எந்தவோர் அரசியல் கட்சியையோ அல்லது சுயேச்சைக் குழுவினதும் வேட்பாளர் ஒருவரையோ ஊக்குவிக்கும் வகையிலான பிரசாரங்களை மேற்கொள்வது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் செயலாகுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அதற்கமைய கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பிலான பிரசார வர்த்தக விளம்பரங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள், கடிதங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை பிரசுரித்தலோ அல்லது பிரசாரம் செய்வதோ சட்டப்படி குற்றமாகுமெனவும் அவர் கூறினார்.

வாக்களிப்பது உங்கள் உரிமை

வாக்களிப்பது எவ்வாறு?

இலங்கை ஜனநாயக குடியரசின் ஏழாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ‘ஜனாதிபதி தேர்தல்’ எதிர்வரும் 08 ஆம் திகதி நாடுமுழுவதும் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு 19 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் அதிகூடிய வாக்குகளைப் பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். வேட்பாளர்களுள் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த போட்டியாளர்களாவர். கடந்த 2014 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பிற்கமையவே எதிர்வரும் 08ம் திகதி வியாழக்கிழமை 22 தேர்தல் மாவட்டங்களிலுமுள்ள 160 தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிப்பு நடத்தப்படவுள்ளது. இதன்படி இம்முறை 1,50,44,490 பேர் இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். (மேலும்....)

அந்தக் காலத்தில

இளவட்டக்கல் ................

முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் மாப்பிள்ளைக்கல் என்று அழைக்கப்படுகிற இளவட்டக்கல்லைத் தூக்கினால்தான் பெண் வீட்டார், பெண் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இளவட்டக்கல் என்பது ஊரின் மையத்தில் அல்லது ஆட்கள் அதிகமாக நிற்கக் கூடிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். இளவட்டக்கல் தூக்கக்கூடிய ஒருவர், உடல் வளமும் மனோபலமும் மிக்கவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரால்தான் அந்தக் கல்லையே தூக்க முடியும். அத்தகைய ஒருவர், தனது பெண்ணை காலம் முழுக்க வைத்துக் காப்பாற்றும் மனோதிடமும் உடல் வலிமையும் பெற்றிருக்கிறார் என்பதே பெண் வீட்டாரின் எண்ணம்.
அதனால், இளவட்டக்கல்லைப் பலரும் ஏதோ ஒரு சமயத்தில் தங்களுக்குள்ளேயே பந்தயம் கட்டிக் கொண்டு தூக்கிப் பார்ப்பார்கள். ஒருவரின் உடல் வலிமையையும் உள்ள வலிமையையும் குறிப்பால் உணர்த்துகிறது இந்த முறை. ஒரு நாற்பது வருடங்களுக்குமுன் மிக ஒல்லியாக இருப்பவர்களும் பலசாலியாகவே இருந்தார்கள். எல்லோருக்கும் கிராமத்தில் விவசாயம்தான் முக்கிய வேலை. அதனால், உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். அதனால் உடல் மெலிந்தோர், உடல் பருத்தோர் என்ற வித்தியாசம் இன்றி பலரும் உடல் வலிமை மிக்கவராகவே இருந்தார்கள்.
(மேலும்....)

தோனிக்கு ஒரு சராசரி ரசிகனின் கடிதம்

(ஸ்ரீனிவாச ராமானுஜம்)

மைதானத்தில் ரசிகர்க் கூட்டத்தின் நடுவிலிருந்து உங்களைப் பார்க்கும் போது, சில சமயம் உங்கள் செயல்கள் எங்களுக்குப் புரிகிறது. நடப்பதை யூகிக்கும் வகையில் உங்களுக்கு ஏதோ ஒரு முன்னுணர்வு இருப்பது போலத் தெரிகிறது. உங்கள் ஃபீல்டிங் மாற்றங்கள் அப்படித்தான் தெரிகின்றன. ஒரு ஐபிஎல் போட்டியில் நடந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. பந்துவீச்சாளருக்கு அருகில் சென்று, ஏதோ பேசிவிட்டு, ஒரு வீரரை இடம் மாற்றி நிற்க வைத்தீர்கள். அந்த காலத்து ஆட்கள் அதைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் அடுத்த பந்திலேயே விக்கெட் விழுந்தது.
ஒரு பத்திரிகையாள ரசிகனாக உங்களிடம் சில வார்த்தைகள் பேசச் சொல்லி அணுகியபோது, "மன்னிக்கவும் நண்பா. நீங்கள் அணியின் மேனஜரிடம் தான் பேச வேண்டும்" என்றீர்கள். எவரும் அணுகலாம் என்ற நிலையில் நீங்கள் இருப்பது வெகுவாக ஈர்த்தது. நாம் நம் நண்பர்களிடம் விளையாடுவதைப் போல, நீங்கள் அஸ்வினுக்குப் பின்னால் சென்று மெதுவாக அவரை பயமுறுத்திய விதத்தில் உங்கள் எளிமை பிரமிக்க வைத்தது. (மேலும்....)

மாவை சேனாதிராசா தமிழீழதேசியத் தலைவராகின்றாரா?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறுகின்றவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வகிக்கின்ற பதவிகளும் பறிக்கப்படும். தமிழ் மக்களுக்கு யார் துரோகம் இழைத்தாலும் அதை நாம் அனுமதிக்க மாட்டோம். அப்படியென்றால் - கட்சி எப்படி நடந்து கொண்டாலும் அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு வாயைப்பொத்திக்கொண்டு, கையைக் கட்டிக்கொண்டு பேசாதிருந்து விட வேண்டும். நல்லாயிருக்கு ஜனநாயகத்தின் விறுத்தம். ஜனநாயகத்தைப் பற்றி யாராவது படிப்பதாக இருந்தால் அதை மாவை சேனாதிராஜாவிடம் படித்துக்கொள்ளலாம். (மேலும்....)

ஆளுக்கொரு நீதியை வலியுறுத்தும் சம்மந்தன் குழுவினருக்கு எதிராக தமிழர்கள் சாட்டையை சுழற்ற வேண்டும் - ப.உதயராசா

சனாதிபதி தேர்தலில் சொந்த சலுகைகளுக்காக சோரம் போன சம்மந்தன் குழுவினருக்கு எதிராக தமிழ் மக்கள் வாக்கு உரிமையை பயன்படுத்தி நல்ல சாட்டை அடியினை கொடுக்க முன்வரவேண்டும் என சிறிரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்தார். செட்டிகுளத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரணி வேட்பாளர்களை ஆதரிக்கும் பரிவாரத்தில் தேரை செலுத்துபவர்கள் அனைவரும் முன்னர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து சொத்து சேர்த்தவர்களும் தவறான வழியில் வாணிபம் செய்தவர்களுமே அதிகம். (மேலும்....)

வட மாகாண புலி ஆனந்தி சசிதரனின் சுய உருவம் இதோ..!

தமிழர்களை தேர்தலை பகிஷ்கரிக்க கோரி மகிந்தவுக்கு நன்றிக் கடன் !

வட மாகாண சபையின் உறுப்பினர் புலி எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காது பகிஷ்கரிக்கும்படி கூறியுள்ளார். அவரின் கூற்றுப்படி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத எந்த ஒருவருக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதாகும். அவரின் மற்றொரு காரணம் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை மைத்ரிபால சிறிசேன ஏற்க மறுப்பதாகும். வெளிப் பார்வைக்கு இந்தக் கோரிக்கை தமிழர் நலன் சார்ந்தது அல்லது சிங்களத் தலைவர்களுக்கு எதிரானது போல் தோன்றலாம். அது தவறு. ஆனந்தி தமிழரின் அக்கறையில் இவ்வாறு கூறுகிறார் என எவராவது நினைத்தால் அதுவும் தவறாகும். சர்வதேசத்தை பொறுத்தவரை அரச படைகள் மட்டுமல்ல புலிப்படையினரும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்தான் என்பதை ஆனந்தி வகையாக மறந்துவிட்டார் போலும். இவர் புலிகளின் முக்கிய உறுப்பினரின் மனைவியாக இருந்தும் எவ்வாறு அரசாங்கம் இவரை அரசியல் செய்ய அனுமதித்தது எனத் தமிழர்கள் பலரும் இதுவரை தலையை சொறிந்தவண்னம் இருந்தனர். ஆனால் இப்போது அவரின் சுய உருவம் வெளிவந்துள்ளது. (மேலும்....)

ஜனவரி 04, 2015

யாழில் தோழர் குமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு - வீடியோ இணைப்பு


தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் இடதுசாரிய முன்னணி சார்பாக யாழ்ப்பாணத்தில் "இடதுசாரிய மக்கள் சந்திப்பு" நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்க்காக வருகை தந்துள்ளார். இன்று காலை ஊடகவியளாலர் சந்திப்பு ஒன்று இடம்பெற்று முடிந்துள்ளது. குடா நாட்டின் அனைத்து ஊடகவியளாலர்களும், பத்திரிக்கைகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உதயன், சக்தி, ஜ.ரி.ன், வலம்புரி, தினக்குரல், வீரகேசரி, தினகரன், ஆதவன், லேக்கவுஸ், தமிழ் மிறறர், சிரச, சூரியன் எவ்எம் ஆகிய ஊடகங்களை சேர்ந்த ஊடகவியளாலர்கள் கலந்து கொண்டனர்.
(பத்திரிக்கையாளர் மாநாடு வீடியோ இணைப்பு 1)

வடமாகாண மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்களா? ஆள் மாற்றத்தை விரும்புகிறார்களா?

வடமாகாண மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்களா? ஆள் மாற்றத்தை விரும்புகிறார்களா? என கேட்டால் ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறார்கள். ஆனால் நடைபெறவிருப்பது வெறும் ஆள் மாற்றம் மட்டுமே என முன்னிலை சோசலிஷ கட்சியின் உறுப்பினர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.கிறீன்கிறாஸ் விடுதியில் நடைபெற்ற சமகால தேர்தல் நிலைமைகள் குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி தேர்தலில் இரு பெரும்பானமை கட்சிகளினதும் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார் (மேலும்....)

அமைச்சர்கள் இன்றி இயங்கும் 10 அமைச்சுக்கள்

ஆளும் கட்சி அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் எதிரணிக்கு மாறியதால் ஐந்து அமைச்சரவை அமைச்சுப் பதவிகளும் ஐந்து பிரதியமைச்சுப் பதவிகளும் காலியாக இருக்கின்றது. ரவூப் ஹக்கீம் எதிரணிக்கு மாறியதால் நீதி அமைச்சும் பஷீர் சேகுதாவூத் விலகியதால் திறன் அபிவிருத்தி அமைச்சும் பாட்டாளி சம்பிக் ரணவக்க விலகியதால் தொழில் நுட்ப மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைச்சும் நவீன் திசாநாயக்க பதவி விலகியதால் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சும் துமிந்த திசாநாயக பதவி விலகியதால் கல்விச் சேவைகள் அமைச்சும் அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் காலியாகவுள்ளது. மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கியதால் அவர் வகித்த சுகாதார அமைச்சு மாத்திரம் திஸ்ஸ அத்தநாயகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராஜித சேனாரட்ன வகித்த மீன்பிடி நீரியல்வள அமைச்சுக்கு பதில் அமைச்சராக சரத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் எம்.ஜே.டி.எஸ். குணவர்தன நந்திமித்ர ஏக்கநாயக, பைஸர் முஸ்தபா, ப. திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் வகித்த பிரதி அமைச்சுப் பதவிகளுக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க இணைச்செயலாளராகப் பணியாற்றிய தோழர் சி. புலேந்திரன் காலமானார்..!

(வி. ரி. இளங்கோவன்)

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சண் பாதை) ஆதரவாளராகவும் ''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்" இணைச்செயலாளராகவும் பணியாற்றிய தோழர் சி. புலேந்திரன் வியாழக்கிழமை (01 - 01 - 2015) காலமானார் என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.V. T. - Con. - 1979 யாழ். கன்பொல்லையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் சின்னத்துரை புலேந்திரன் 01 - 01 - 2015 வியாழக்கிழமை காலமானார். தோழர் புலேந்திரன் நீண்ட காலமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சண் பாதை) ஆதரவாளராகவும் ''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்" செயல்வீரனாகவும் செயற்பட்டவர். (மேலும்....)

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து த.தே.கூ. பிரசாரம்


ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செங்கலடி மற்றும் வாழைச்சேனைப் பிரதேசங்களில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்ன இந்திரகுமார், கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசார பணிகளில் ஈடுபட்டனர்.

72 மணிநேரம் தீர்க்கமானது  - எதிரணி

கொழும்பு அரசியலில் அடுத்த 72 மணிநேரம் தீர்க்கமானதாக இருக்கும் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர். இந்த 72 மணிநேரத்துக்குள், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து பிரபலமான மிகவும் முக்கிய அமைச்சு அல்லது சிரேஷ்ட அமைச்சு பதவிகளை வகிக்கின்ற சிலர் , எதிரணியுடன் இணைந்து கொள்ளவிருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அடுத்த இரண்டொரு நாட்களுக்குள் ஆளும் கட்சியைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர், எதிரணியுடன் இணைந்துகொள்ளவிருப்பதாக முன்னாள் பிரதியமைச்சரும் எதிரணியுடன் இணைந்துகொண்டவருமான நந்தமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அன்று பிரபாகரன் பயங்கரவாதி, இன்று Mr. பிரபாகரனா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அம்மையார் வடபகுதி தமிழர்களை முட்டாள்கள் என நினைக்கிறார். அவர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என விழித்துப் பேசியிருந்தார். இவ்வாறு தான் பேசினால் தமிழ் மக்கள் பார்வை தன் மீது திரும்பி தமது பொது வேட்பாளரான மைத்திரி பால சிறிசேனவிற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பர் என அவர் தப்புக்கணக்கு போட்டுள்ளார். இது தவறு. சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் அவர் எத்தனை தடவை பிரபாகரனை பயங்கரவாதி, தீவிரவாதி, கொலைகாரன் எனச் சாடியிருப்பார். இன்று அதே வாயால் மிஸ்டர் பிரபாகரன் என கெளரவமாக விளிக்கிறார். காரணம் கேட்டால் ஆங்கிலேயரின் பண்பாடு என்கிறார். இதே சந்திரிகா அம்மையார் பிரபாகரனைக் கொல்ல எத்தனையோ தடவைகள் முயற்சியும் செய்தார். ஆனால் இன்று தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக அன்று கொலைகாரன், தீவிரவாதி, பயங்கரவாதி என வர்ணித்த அதே வாயால் மிஸ்டர் பிரபாகரன் என அழைக்கிறார். இது இவரது நடிப்பு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் விவகாரங்களுக்கான இணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக படையினரை ஏவி விட்டு தமிழ் மக்களை உடுத்த உடுப்புக்களுடன் வன்னியை நோக்கி இரவோடிரவாக விரட்டிய வரும் இந்த சந்திரிகாவே என்பதை தமிழ் மக்கள் இன்னமும் மறந்துவிடவில்லை.

மகிந்தரை நெருங்கும் டக்லஸ் தடுக்கப்படுகிறார்

வடக்குக்கு இன்று தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மடுத் தேவாலயத்தை மஹிந்த தரிசிக்கச் சென்றவேளையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் ஆரம்ப நிகழ்வில் டக்ளஸ் வாயிலிலே தடுக்கப் படுகிறார் இன்று நம்பிக்கை இழந்துள்ளார் என்பது புலப்படுகிறது

நம்முடைய மறதியின் வரலாறு

தேயிலை மற்றும் காபி உற்பத்தியிலிருந்து மட்டும் இலங்கைக்கு அரசுக்கு, வருடத்துக்கு 2,395 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. 2012-ம் ஆண்டு கணக்கின்படி 2 லட்சம் பேர் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். 1980-ம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 5,30,000. இன்று மலையகத் தமிழர்களின் மக்கள்தொகை சுமார் 15 லட்சம். 1948-ம் ஆண்டு இலங்கை அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்தாலும், 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் சாஸ்திரி - இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தத்தாலும் 10 லட்சம் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களானார்கள். இந்தக் காலகட்டங்களில் இந்தியா திரும்பியவர்கள் இன்றளவும் ‘சிலோன் அகதிகள்’ என்றே அழைக்கப்படுகின்றனர். (மேலும்....)
 

அனந்தி மயக்கியது என்னாலா?? இதுவல்ல காரணம் மாவை…

இன்று காலை அனந்தி சசிதரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அனந்தியை கடுமையாகத் திட்டிதாகவும் அதனால் அனந்தி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்ததாக தெரியவந்தது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவை சேனாதிராஜா தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர் கூறுகையில், நான் தொலைபேசி அழைப்பெடுத்து அனந்தியிடம் பேசியது உண்மைதான். ஆனால் ஊடக செய்திகள் சொல்லும்படி நான் அவரை திட்டவில்லை. நாட்டு நிலை குறித்தே பேசியிருந்தேன். என்னை பற்றி பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நான் ஒரு வயது முதிர்ந்த அரசியல்வாதி ஒருபோதும் அப்படி பேசுபவர்கள் அல்ல. நான் கதைத்ததால் தான் அனந்திக்கு இவ்வாறு ஏற்பட்டதென்றால் நான் அதற்கு மனம் வருந்துகின்றேன்´ என்றார்.

இளைஞர்களின் பங்களிப்பே வளர்ச்சி கண்ட சமூதாயத்தை உருவாக்க முடியும்

திருகோணமலை கன்னியாவில் இன்று (03/01/2015) கிராம இளைஞர் முன்னேற்ற கழகம் வரிய மக்களின் சுமைகளை குறைக்கும் முகமாக பிள்ளைகளுக்கான பாடசாலை உபகாரணங்கள் வழங்கும் நிகழ்வில் பத்மநாபா E.P.R.L.F அமைப்பாளர் சத்தியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிராம இளைஞர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் "மோகன்" இறைவணக்கத்துடன் இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து சத்தியன் பேசுகையில் "இளைஞர்களின் பங்களிப்பே வளர்ச்சி கண்ட சமூதாயத்தை உருவாக்க முடியும். இளைஞர்கள் தங்களை யாரும் கவனிப்பதில்லை என்று ஆரம்பத்தில் சிறு சிறு குற்றங்களை ஆரம்பிப்பார்கள். அதுவே காலபோக்கில் பெரிய குற்றங்களாக வளர்ந்து விடும்" என்பதை சுட்டி காட்டியதுடன், "தவறுகளை எப்போதும் திருத்த முடியும். ஆகவே கடந்த கால வாழ்க்கையை நினைத்து எதிர் காலதை மண்ணாக்காமல் இன்றே எமது சமூதாயத்தின் முன்னேற்றத்திற்காக சமுக சேவை செய்யும் நோக்குடன் வாழ பழகி கொள்ள வேண்டும்" என்று இளைஞர்களை கேட்டு கொண்டார்.

ஏசு நாதர் போராட மாட்டாரா ?

(by வினவு)

“ஒன்னும் நடக்கலன்னா, அதுக்கு மேல நீங்க போராடித்தான் ஆகனும்! எங்களால ஒன்னும் செய்ய முடியாது. நாங்க ஜெபிப்போம். அவ்வளவுதான் எங்க வேல பா!” உலகமே ஓய்வெடுக்கும் நள்ளிரவு முழுக்க ஓய்வில்லாமல் எனது ஆலை இயந்திரத்தை இயக்கிவிட்டு, வெளி உலகம் எந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் காலைப் பொழுதில் நானோ தூங்கி கொண்டிருந்தேன். (மேலும்....)

 

இலங்கையின் மூத்த முஸ்லிம் ஊடகவியலாளரான எஸ்.ரீ ரஊபிடம் கடந்த வாரம் இராணுவ புலனாய்வுத்துறை விசாரணை

அண்மையில் முஸ்லிம்கள் பற்றிய இணையத்தளம் ஒன்றை பொறுப்பேற்றிருந்தார் எஸ்.ரீ.ரஊப் இந்த இணையத்தளத்தின் பெயர் சிலோன் முஸ்லிம், இந்த இணையத்தளம் பல இனவாத சம்பவங்களை உலகிற்கு துணிச்சலாக எடுத்து காட்டிய தளமாகும். அது மாத்திரமின்றி முஸ்லிம்கள் சம்பந்தமாக பல நிகழ்வுளை நடாத்தி மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தது. இந்த இணையத்தளம் பற்றி மாத்திரமில்லாமல் ரஊபின் விஜயங்கள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்த இணையத்தளத்தின் செயற்பாடுகள் குறித்து அவதானிக்கும் பொருட்டு இந்த இணையத்தளத்தின் பல தகவல்களையும் புலனாய்வுத்துறை பெற்றுக்கொண்டுள்ளதாவும் குறிப்பிட்டார்.

கரையோர மாவட்ட அலகை வழங்க மைத்திரி, சந்திரிகா, ரணில் தயாரா?

அம்பாறை மாவட்ட தனி முஸ்லிம் நிர்வாக அலகை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்தமையால் அவரிடமிருந்து பிரிந்து சென்றதாக அறிக்கை விடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கான உறுதிமொழியை மைத்திரி, சந்திரிகா, ரணில் கூட்டணியிடம் பெற்றுக் கொண்டா பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்வந்தது என முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் கேள்வி யெழுப்பியுள்ளார். பொது எதிரணி கூட்டணியினால் அத்தகையதொரு உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தால் அதனை மு.கா. தேர்தலுக்கு முன்பாக பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் பொது எதிரணியினால் முஸ்லிம் சமூகத்திற்கு எத்தகைய நன்மைகள் கிடைக்கும் என்பதையும் மு.கா. தெளிவுபடுத்த வேண்டும். இதனை விடுத்து மு.கா. மைத்திரிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினால் அது முடிவில் ஆபத்திலேயே முடிவடையும் எனவும் சேகு இஸ்ஸத்தீன் தெரிவித்தார். கரையோர மாவட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஜாதிக ஹெல உருமய கட்சியின் தலைவர்கள் பொது எதிரணியில் இணைந்து கொண்டிருப்பதால் மு.கா.வின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற வாய்ப்பில்லை.

மகிந்த, மைதிரி வெற்றி, தோல்விகளுக்கு பின்னால்.......?

மகிந்த வின் கடந்த கால தான் ,தாங்கள் என்ற குடும்ப அநீதி ஆட்சி மற்றும் நீண்ட பதவி ஆசை ,ஆட்சியில் குறிப்பாக சிங்கள மக்களுக்கும் ஏற்றபட்ட திருப்தி இன்மையே மைத்ரி பக்கம் பெரும் பான்மை சிங்கள மக்கள் செல்ல கரணம் ஆகியது . சிங்கள மக்களின் வாக்கே மைத்ரியின் தேர்தல் வெற்றியினை தீர்மானிக்கும் . ஆட்சி மாற்றத்துக்கு ஆகவே தாங்கள் வாக்களிக்கின்றோம் மைத்ரியின் திறமைக்கு ஆக இல்லை என்று கூறும் சிங்கள மக்களும் உண்டு .மகிந்தவினை அகற்ற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் நிலை .அதற்க்கான வாக்கே மைத்ரிக்கு கிடைக்க போகின்றது .சில கொழும்பு தமிழ்,முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூறுகின்ற மாதிரி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொல்வதால்,ஆதரவளிப்பதால் அல்ல ...மைத்ரி மூலமும் சிறுபான்மையின மக்களின் உரிமை பிரச்சனைகள் தீர முறச்சி எடுக்கப்படும் ,ஆனால் தீராது ....தமிழ்,முஸ்லிம் மக்களின் அரசியல் தலைவர்களின் சந்தர்ப்ப இலாபம் அற்ற ஒற்றுமையே மக்களுக்கு விடிவினை தரும்.

‘எல்லையில் இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் முன்னேறி வருகிறது’

ஜம்மு காஷ்மீரில் எல்லையில் இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் முன்னேறி வருகிறது என்று சர்வதேச உளவுப்பிரிவு தகவல்கள் வெளியாகியுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக்கு அப்பால் இருந்தபடி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு வசதியாக பல சமயங்களில் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறது. (மேலும்....)

ஜனவரி 03, 2015

புலிகள் மீதான தடையை தமிழக அரசு நீடித்தது

தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால் அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதிலிருந்து, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தடை கடந்த ஆண்டு முடிந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. இதற்காக தமிழகத்தின் முக்கியமான இடங்களில் தீர்ப்பாயம் மூலம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்பதை மீண்டும் தீர்ப்பாயம் உறுதி செய்து தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு, திருச்சி அகதிகள் முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. பிரபாகரனின் மகன்கள் சார்லஸ் அன்டனி, பாலச்சந்திரன் பெயர் பொறித்த கல்வெட்டும் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் இன்னும் தங்கள் நடவடிக்கைகளை தொடர்வது இதன்மூலம் தெரிகிறது. இதனால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோத இயக்கம் என்பதால், அதன் மீதான தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 

ஏளனத்துக்காகவே பிரபாகரனை யாழில் 'மிஸ்டர்' என்று கூறினேன் - சந்திரிகா
 

எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பிரசார கூட்டத்தில் பிரபாகரனுக்கு ‘மிஸ்டர் பிரபாகரன்’ என ஏளனத்துக்காகவே தான் கூறியதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் தெரிவித்துள்ளார். அவர் யாழ்ப்பாணத்தில் “மிஸ்டர் பிரபாகரன்” எனக் கூறியபோது, அங்கிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர். அவர் “மிஸ்டர் பிரபாகரன்” எனக் கூறிய வேளையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன சிரித்துக் கொண்டு மேடையில் அமர்ந்திருந்தார். சந்திரிகாவின் ஆட்சியில் ஆனையிறவு முல்லைத்தீவு பகுதி எல்.ரீ.ரீ.ஈ. வசம் சென்றது. கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதலால் பில்லியன் கணக்கில் சேதம் ஏற்பட்டது. எண்ணெய் தாங்கி தாக்குதல், மத்திய வங்கி தாக்குதல், தலதா மாளிகை தாக்குதல் சந்திரிகா நிர்வாகத்தில் நடந்த நிகழ்வுகளாகும். அவரின் ஒரு கண்ணை இழந்து வெடித்த குண்டுத் தாக்குதலும் இயலுமானால் மிஸ்டர் பிரபாகரனைக் கொண்டு செய்த வேடிக்கை என அவருக்கு இன்று கூற இயலும். தனது தந்தையைக் கொலை செய்வதற்கும் செயற்பட்ட பிரபாகரன் என்ற கொடும் பயங்கரவாதிக்கு “மஹத்மயா” எனக் கூறுபவர்களில் சஜித் பிரேமதாச, நவீன் திசாநாயக்க போன்றோரும் இருப்பது எவ்வாறு என ராவணா பலய அமைப்பு வினா எழுப்பியுள்ளது.
 

ஆயுத எழுத்து (நாவல்)
ஒரு புலிப் போராளியின் ஒப்புதல் வாக்குமூலம்?

புலிகள் அமைப்பில் பல வருடங்களாக முன்னணி செயற்பாட்டாளராக விளங்கிய சாத்திரி என்பவர் எழுதி வெளிவந்திருக்கும் நாவல் “ஆயுத எழுத்து” இதுவரை ஈழப் போராட்டம் குறித்து சில நாவல்கள் வந்திருக்கின்றன. இதுவும் ஈழப் போராட்டம் பற்றிய நாவலாகவே வந்துள்ளது. ஈழப் போராட்டத்தில் அக்கறையுள்ளவர்கள் படிக்க வேண்டிய நாவல்களில் இதுவும் ஒன்று. இதுவரை மாற்று கருத்தாளர்களால் புலிகள் அமைப்பு மீது முன்வைக்கப்பட்ட கருத்துகள் பல புலிகள் அமைப்பில் இருக்கும் சாத்திரி என்பவரால் இந் நாவலில் கூறப்பட்டிருக்கிறது. எனவே இது ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக கருத இடம் அளிக்கிறது.
உண்மை பெயர்களுடன் உண்மை சம்பவங்களை எழுதிவிட்டு எதற்காக நாவல் என குறிப்பிடுகிறார்; என்று புரியவில்லை? ஒருவேளை ஏதாவது சட்ட சிக்கல் வருமா என அஞ்சினாரா தெரியவில்லை? (மேலும்....)

மனித உரிமைக்காக அன்று பேரணி சென்ற மஹிந்த இன்று என்ன செய்கிறார்? - குமார் குணரத்னம்

மனித உரிமைக்காக அன்று பேரணி சென்ற மஹிந்த ராஜபக்ஷ இன்று என்ன செய்கிறார்? பிரதான வேட்பாளர்கள் இருவரும் தேசிய பிரச்சினையை மறந்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேசியப் பிரச்சினையை காட்டிக் கொடுத்துள்ளது. திடீர் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்பாளர்களினதும் கொள்கைகளில் மாற்றம் இல்லை எனவும் கல்வி, சுகாதாரம் மற்றும் தேசிய பிரச்சினை தொடர்பாக இருவரும் கொண்டுள்ள கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. தற்காலிக நிவாரணங்களுக்கு பொதுமக்கள் ஏமாறக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

விலாங்கு மீன் ராஜப்பு ஜோசப்

நேற்றைய தினம் இதே போன்ற சந்திப்பொன்றில் மைதிரிபால சிறீசேனாவுடன்

மன்னார் மடு மாதா தேவாலயத்தில் ஆராதனைகளில் பங்குகொண்ட சனாதிபதி அவர்கள், மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராஜப்பு ஜோசப் ஆண்டகையை சந்தித்த போது அமைச்சர் டக்ளஸ் அவர்களும் உடனிருந்தார்.

இனரீதியான நிர்வாக அலகு கோரிக்கை யுத்தத்திற்கு நிகரான சவால்  - ஜீ.எல். பீரிஸ்  


யுத்தத்துக்கு எவ்வகையான சவாலை நாம் எதிர்கொண்டோமோ அதற்கு நிகரான சவாலை ‘இன ரீதியான நிர்வாக அலகு’ கோரிக்கையும் உருவா கியுள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். தமிழீழம் அமைப்பதில் தோல்வி கண்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்கள் தீட்டியுள்ள சதித்திட்டத்தின் பின்னணி யிலேயே சிறுபான்மை அரசியற் கட்சிகள் இனரீதியான நிர்வாக அலகு கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார். அரசியலுக்கூடாக இன ரீதியான நிர்வாக அலகுகளை ஸ்தாபிக்க எடுக்கும் முயற்சியானது யுத்தத்தின் ஒரு மாற்று வடிவமெனவும் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.இனரீதியான நிர்வாக அலகுகளை நிறுவுவதன் மூலம் நாட்டை துண்டு துண்டாக பிரிக்கும் செயலிற்கு எதிரணி துணை போகின்றது. எல்.ரீ.ரீ.ஈ. வடக்கு, கிழக்கில் தமிழ் இனத்தை பிரதிபலித்து தனியானதொரு நிர்வாக அலகு கோரியிருந்தது. அதே வழியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபையின் அதிகாரங்களை அதிகரிக்க கோருகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனியானதொரு நிர்வாக அலகினை கோருகின்றது. இவ்வாறு இனரீதியான நிர்வாக அலகுகளாக கூறுபோட்டால் தாய்நாட்டின் இறுதி நிலைதான் என்னவென்றும் அவர் கேள்வியெழுப்பினார். வடக்கிற்கு சென்றுள்ள சந்திரிகா அங்குள்ள பாதுகாப்பு முகாம்களை மாற்றியமைப்பதாகவும் வட மாகாண சபையின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

திரைப்பட விமரிசனம்

பி.கே.

பேரண்டத்தையே படைத்து, உலகத்தை உருவாக்கி, அதில் உயிரினங்களை உற்பத்தி செய்து, எது எது எப்படி நடக்க வேண்டும் என்று தானே தீர்மானித்து, ஒவ்வொரு அணுவையும் இயக்குகிறவர் எனக் கூறப்படும் கடவுளை எந்த அற்ப மானிடப் பிறவியாவது அவமதித்துவிட முடியுமா? நம்பிக்கைளைக் கேள்வி கேட்பதென்பது அப்படி அவமதிக்கிற செயல்தான் என்று கூறி, அதிலிருந்து காப்பாற்றப் போவதாகக் கிளம்புவதை விடவும் கடவுளை அவமதிக்கிற வேலை இருக்க முடியுமா? ஆண்டவனைக் காப்பாற்ற அவதாரமெடுத்தவர்கள் அப்படிச் சொல்லித்தான் மக்களைக் கூறுபோடுகிறார்கள், மதங்களின் பெயரால் மோதவிடுகிறார்கள், உண்மைப் பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடவிடாமல் தடம் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். (மேலும்....)

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு. பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும். (தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது. இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும். அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும். நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க. (மேலும்....)

மகிழ்ச்சியின் ஊற்றங்கரை......!

கூரை வீடுதான்
இங்கே மகிழ்ச்சி இருந்தது
இங்கே குளிர்ச்சி இருந்தது
ஓடி விளையாட
இடம் இருந்தது
வீட்டின் அத்தனை விசேங்களும்
வீட்டின் வாசலிலேயே
கொண்டாடப்பட்டன
சொந்தங்களின் வரவால் வீடே
சந்தோசமாக இருக்கும்
சேவல் கூவும் ஓசைதான்
நம்மை எழுப்பும் அலாரம்
மரங்களிடையே புகுந்து வரும்
இயற்கைக் காற்று
இதம் தரும்
இப்போது கான்கிரிட் வீடுகளில்
இருப்பதாலோ
இருக்கமாகவே இருக்கிறோம்.
வெளிவர முடியாமல்.
(முத்துப்பேட்டை மாறன்)

மீண்டும் மீண்டும் மணம் முடிக்கும் இசையமைப்பாளர் யுவன்சங்கர்  ராஜா

கண்ணீரை வரவழைத்த பதிவு

உணரட்டும் , உயரட்டும்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடார் ஜாதியும் கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்ட ஜாதி தான். கோவிலுக்குள் விட மாட்டார்கள். தலையில் துண்டு கட்ட அனுமதியில்லை. செருப்பு போட அனுமதி இல்லை. சில தெருக்களில், ஏன், நீர் நிலைகளில் கூட அனுமதி மறுக்கப்பட்டது அவர்களுக்கு. அவ்வளவு ஏன், நாடார் குல பெண்கள் தங்களின் மார்பை கூட மறைக்க முடியாது. அவ்வளவு தூரம் ஆதிக்க சாதிகளின் ஒடுக்குமுறை. ஆனால் இன்று அவர்கள் வளர்ந்து வந்திருக்கும் நிலை ஊர் அறிந்த விசயம். எப்படி இந்த வளர்ச்சி? (மேலும்....)

“தலைவர் நம்மாழ்வார்!” - வரலாறு

'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்துவிட்டார். அவருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்’ என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி பேசுகிறார்கள். (மேலும்....)

இதையும் ஒருதரம் படித்துக்கொள்ளுங்கள்

இலங்கையில் யுத்தத்தை முடித்து வைத்தது யார்........?

ஈழத்தமிழினத்தின் மீதான இனஅழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளாராக களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவும் ஒருவரென எக்கனோமிஸ்ற் The Economist சஞ்சிகை செய்திவெளியிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப் போரில், 2009-மே17ம் திகதி வரையிலான கடைசி இரண்டு வாரங்கள், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு வகித்தார் என எக்கனோமிஸ்ற் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் சிறிலங்காவின் அரசுத்தலைவராக இருக்கின்ற மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுப்பயணத்தினை மேற்கொண்டிருந்த நிலையில்அவர் வகித்திருந்த பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பினை மைத்திரிபால சிறிசேனவிடமே ஒப்படைந்திருந்தார். (மேலும்....)

மகாராஷ்டிராவில் 5 லட்சம் பேர் ஒட்டுமொத்தமாக 'தாய் மதமான' புத்த மதத்துக்கு திரும்ப முடிவு!

மகாராஷ்டிராவில் 2016ஆம் ஆண்டு 5 லட்சம் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒட்டுமொத்தமாக தங்களது தாய் மதமான புத்தமதத்துக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர். மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு அமைந்தது முதல் மதமாற்ற விவகாரம் விஸ்வபரூமெடுத்து வருகிறது. கிறிஸ்துவம், முஸ்லிம் மதங்களைப் பின்பற்றுவோரை மீண்டும் தாய் மதத்துக்குக் கொண்டு வருகிறோம் என்று கூறி கட்டாய மதமாற்றத்தை இந்துத்துவா அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் 5 லட்சம் பேர் ஒட்டுமொத்தமாக 'தாய் மதமான' புத்த மதத்துக்கு திரும்ப அதிரடி முடிவு!! இது நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் 5 லட்சம் பேர் 2016ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக தங்களது தாய் மதமான புத்த மதத்துக்குத் திரும்பப் போவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (மேலும்....)

ஜனவரி 02, 2015

 

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு நல்லது - மஹிந்த ராஐபக்ஷ்

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு நல்லது என்ற பழமொழிக்கிணங்க, இந்த தெரிந்த பிசாசான மஹிந்தவுடன் ஒன்றுசேருங்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் என்னோடு வாருங்கள். இன்னும் நாம் முன்னேற வேண்டும். நாம் எப்போதும் உங்களோடு தான். அரசியல் வேறு அபிவிருத்தி வேறு. நான் உங்களை பாதுகாப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். (மேலும்....)

 

எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி?

சினிமா வியாபாரம் என்ற ஆவணப்படத்திற்காகப் பல சினிமா வியாபாரப் பிரமுகர்களை நேரில் சந்தித்துப் பேட்டியெடுத்து வருகிறேன். எல்லோரும் சினிமாவின் தற்போதைய வியாபாரம் குறித்துக் கவலையாகத்தான் பேசுகிறார்கள். ஒரு சினிமா தயாரித்துவிட்டு, மேற்சொன்ன வியாபாரத்தில் இன்று ஒன்றைக் கூடச் செய்ய முடியாமல் படங்களை வெளியிட என்ன செய்வது என்று பல தயாரிப்பாளர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். வியாபாரம் இன்று விவகாரமாக மாறிவிட்டதில் படத்தில் ஆடியோவில் ஆரம்பித்து, எந்த உரிமையும் வாங்க ஆளில்லை. இன்று கோடம்பாக்கத்தின் வண்ணமயமான விழாக்களாக நடக்கும் பல இசை வெளியீடுகள் தயாரிப்பாளர் சொந்தச் செலவில் படத்தின் விளம்பரத்துக்காகச் செய்வதாக நோக்கம் குறுகிப்போய்விட்டது. பெரிய படங்களே திரையரங்குகளைப் பிரித்துக்கொள்வதில் சண்டையிட்டுக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் போட்ட பணத்தை எடுக்கச் சின்னப் படங்களுக்கு வேறேதாவது வழி இருக்கிறதா? எனப் பல தயாரிப்பாளர்கள் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். (மேலும்....)

கே.கே.எஸ்.க்கு ரயில் போனது, மஹிந்த போகவில்லை


காங்கேசன்துறையிலிருந்து உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு செல்லும் யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் இன்றைய (வெள்ளிக்கிழமை 02) நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோர் இந்த ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்தனர். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரும் இவர்களுடன் ரயிலில் பயணம் செய்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, காங்கேசன்துறை ரயில் சேவை ஆரம்பிப்பு, ரில்கோ விருந்தினர் விடுதியில் தொழில்வல்லுநர்களுடன் சந்திப்பு மற்றும் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்வதாக இருந்த போதும், ரயில் சேவை ஆரம்பிக்கும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
 

நக்ஸலைட்கள் சந்திக்கும் மையமாக மாறிவரும் சென்னை: தீவிர விசாரணையில் க்யூ பிரிவு போலீஸ்

(ஆர்.சிவா)

நக்ஸல்கள் கூடி ஆலோசனை நடத்தும் இடமாக (மீட்டிங் பாய்ன்ட்) சென்னையை பயன்படுத்தி வருவதை க்யூ பிரிவு போலீஸார் கண்டுபிடித் துள்ளனர். தமிழகம் - கேரள எல்லையான கோவை மாவட்டம் அட்டப்பாடியில் கடந்த 22-ம் தேதி போலீஸ் வாகனங்கள், சோதனை சாவடிகள் மீது நக்ஸலைட்கள் தாக்குதல் நடத்தினர். வட மாநிலங்களில் பலமாக இருக்கும் நக்ஸலைட்கள், தென்னிந்தியாவில் மெதுவாக காலூன்ற தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தருமபுரி, தேனி மாவட்ட காட்டுப் பகுதிகளில் இருந்த நக்ஸலைட்கள் இப்போது சென்னையில் ஊடுருவி, தங்கள் அமைப்பின் வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றனர். நக்ஸல்களுக்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை சேகரிப்பதையும் தொடங்கியுள்ளனர். நக்ஸல்களின் ஆலோசனை மையம் (மீட்டிங் பாய்ன்ட்) ஆகவும் சென்னையை பயன்படுத்தி வருகின்றனர். (மேலும்....)

குஜராத் கடல் எல்லையில் வெடிபொருள் படகு: பாக். மீது பாஜக கடும் தாக்கு

குஜராத் கடல் எல்லையில் வெடிபொருட்களுடன் இந்தியப் பகுதியில் நுழைந்த பாக். மீன்பிடிப் படகின் சதிவேலையை இந்திய கடலோரக் காவற்படை முறியடித்தது. இந்த சதிவேலை குறித்து பாஜக பாகிஸ்தான் மீது கடும் தாக்குதல் தொடுத்தது. இது குறித்து பாஜக தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா கூறும் போது, “வெறுப்படைந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலை இந்தியாவுக்கு எதிராக செய்த இன்னொரு விரய முயற்சியாகும். தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தும், பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்தும் வருகிறது பாகிஸ்தான். பயங்கரவாத நடவடிக்கையை திறமையாக முறியடித்த கடலோரக்காவல் படையை பாஜக மனம் திறந்து பாராட்டுகிறது. படைகள் பயங்கரவாதத்தை முறியடிக்க சுயமாக, சுதந்திரமாகச் செயல் பிரதமர் மோடி அளித்த அதிகாரம் ஆகும். இது மோடின் தலைமைப் பண்பை எடுத்துரைக்கிறது. வெங்கைய நாயுடு தெரிவிக்கும் போது, “பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானுக்கு இது தற்போது ஒரு தீராப்பழக்கமாகவே ஆகிவிட்டது” என்றார். பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறும் போது, “பயங்கரவாத சதிவேலைக்கான முயற்சியாகவே இது தெரிகிறது. கடலோரக் காவற்படையின் செயலை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.” என்றார்.

புலிகளின் தலைவர்கள் மஹிந்தவின் பிரச்சாரத்தில்
 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றிக்காக விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண பொறுப்பாளர்களான ராம் மற்றும் நகுலன் ஆகியோர் தற்போது கிழக்கு மாகாணத்தின் முக்கிய பிரதேசங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து வசதிகளை இராணுவத்தினர் மூலம் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலதிகமாக இராணுவத்தினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இவர்கள் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன், வாக்களிப்பு தினத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் தமிழ்ப் பிரதேசங்களில் ராம், நகுலன் மற்றும் கருணா, பிள்ளையான் குழுவினரைக் கொண்டு கள்ள வாக்களிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மாவை ஏசியதால் மயங்கி விழுந்தார் அனந்தி

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் வெள்ளிக்கிழமை (02) காலையில் திடீரென மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, அனந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏசியதாலேயே அவர் மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது. அனந்தியை தொடர்புகொண்ட போது, அவர் மயக்கமடைந்து உடல் நலம் குன்றியிருப்பதாக அவரது வீட்டிலுள்ளவர்கள் தெரிவித்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதை அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்த்து வந்தார். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையை சேர்ந்தவர்களுக்கும் அனந்திக்கும் இடையில் கருத்து முரண்பாடு இருந்து வந்துள்ளது. இதனையடுத்தே, மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அனந்தியை ஏசியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அச்சல ஜயகொட எம்.பி, மைத்திரிக்கு ஆதரவு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜயகொட பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

கிணற்றில் விழச்சொல்லும் TNA! தமிழர்கள் என்ன செம்மறியாடுகளா….??
 

ஜனநாயம் என்ற பேரிலே ஒரு சர்வாதிகார குடும்ப ஆட்சி செய்துவந்த கூட்டம் இத்துடன் தங்களது ஆட்டம் அடங்கிவிடப்போகின்றதோ என்று பயப்படத்தொடங்கியுள்ளது. மகிந்த அரசை வீழ்த்தியே தீரவேண்டும் என்று சபதமெடுத்துக்களமிறங்கி உள்ளது ஒரு கூட்டம் தேர்தலுக்கான திகதி நெருங்க நெருங்க இவர் வெல்லுவாரோ அவர் வெல்லுவாரோ என்று வெற்றியாளரின் பக்கம் தாவிக்கொள்ளக்காத்திருக்கின்றது ஒரு கூட்டம், எங்கே யார் எதைக்கொடுப்பார்கள் அவர்கள் பக்கம் சாய்ந்து கொள்வோம் என்று சிந்தித்துக்கொண்டிருக்கின்றது ஒருகூட்டம் ஆனால் தமிழர்களோ இந்த தேர்தலில் தாம் என்ன செய்வது வாக்களிக்கவேண்டுமா? அல்லதுபுறக்கணிக்கவேண்டுமா ? யாருக்கு வாக்களிக்கவேண்டும் யாரைப்புறக்கணிக்கவேண்டும் என்ற பல கேள்விகளுடன் தம்மால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களை நோக்கிப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.  (மேலும்....)

 

இன அழிப்புக்கு சம்பந்தன்

ராஜபக்சவுடன் துணை நின்றமையே காரணம்! - கஜேந்திரன்

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு சம்பந்தன் – அதிகாரப்பகிர்வை ஏற்க முன்வந்து ராஜபக்ச அரசுடன் துணை நின்றமையே காரணம் மாறாக 2005 தேர்தல் பகிஸ்கரிப்பு அல்ல எமது மக்களின் படுகொலைக்கான பொறுப்பை அவரும் ஏற்க வேண்டும் என செல்வராசா கஜேந்திரன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மேசையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஸ்டித்தீர்வை வலியுறுத்தியபோது தமிழ் மக்களது ஆணையை பெற்ற கூட்டமைப்பின் தலைவராக இருந்துகொண்டு அதிகாரப்பகிர்வு அடிப்படையில் சமஸ்டித்தீர்வை ஏற்க சம்பந்தன் முன்வந்திருந்தார். அதுவே ஸ்ரீலங்கா அரசு புலிகளை குழப்பவாதிகளாக சர்வதேச ரீதியில் காட்டி அவர்களை அழிப்பதற்கான சர்வதேச ஆதரவை திரட்டிக் கொடுத்தது. (மேலும்....)

தலையெழுத்தை மாற்றுமா கையெழுத்து

 

ஸ்மார்ட் பேனா மூலம் ஐபோனில் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் எழுதினால் ஐ போன் திரையில் அதே எழுத்து பிரதிபலிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் சந்தைப்படுத்தப்பட உள்ளது. பேனாவின் அசைவின் படி அதன் இயக்கத்தினை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை காட்சிபடுத்தும் இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவி இதனை செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்த தொழிநுட்பத்தை தனது தயாரிப்புகளில் அறிமுகடுத்தும் என தெரிகிறது.

 

யாழ்.தேவி இன்று முதல் கே.கே.எஸ் வரை சேவை


24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் சேவை இன்று காங்கேசன்துறை வரை பயணம் செய்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட ரயிலில் காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்க இருப்பதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் சிசிர குமார தெரிவித்தார். யாழ்ப்பாணம் வரையான ரயில் சேவை 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலையடுத்து யாழ்தேவி ரயில் சேவை கடந்த 24 வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரையான ரயில் சேவை 2009 ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரையான சேவை 2011 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, கிளிநொச்சி வரையான யாழ்தேவி சேவை 2013 செப்டெம்பரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி - பளை வரையான ரயில் சேவை கடந்த மார்ச் மாதத்தில் ஜனாதிபதி ஆரம்பித்தார். அடுத்த கட்டமான பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையான சேவை 24 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கும் காங்கேசந் துறைக்குமிடையிலான 18 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை துரிதமாக நிர்மாணிக் கப்பட்டுள்ளதோடு இன்று சுபநேரத்தில் ரயில் சேவையை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கிறார். இதேவேளை மடு, தலை மன்னார் இடையிலான ரயில் பாதையும் மீளமைக்கப்பட்டுள்ளதோடு வடபகுதிக்கான சமிக்ஞை கட்டமைப்பும் மீள நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப் பட்டுள்ளது. கூடங்குளத்தில் 1000 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 2 அணுஉலைகள் ரஷ்ய நாட்டு உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த சில மாதங்களாக சோதனை முறையில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கூடங்குளத்தில் இதுவரை 300 கோடி யுனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் யுனிட் ஒன்றுக்கு ரூ.1.22 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் அணுமின் நிலையத்திற்கு ரூ.366 கோடி வருமானம் கிடைத்தது. இந்நிலையில் பல்வேறு கட்ட ஆய்வு பணிகளுக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் 7ம் திகதி இறுதி கட்டமாக மின் உற்பத்தி தொடங்கியது. கடந்த 10ம் திகதி முதல் அணுஉலை அதிகபட்சமாக 1000 மெகாவோட்டை எட்டியது. கடந்த 20 நாட்களாக முதல் அணுஉலையில் தொடர்ந்து 1000 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

 

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட சனநெரிசலில் சிக்கி 36 பேர் பலி

சீனாவின் அதிக சனத்தொகை கொண்ட நகரமான 'ங்காயில் புத்தாண்டுக் கொண்டாட் டங்களின் போது ஏற்பட்டுள்ள கூட்டநெரிசலில் சிக்கி குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர். 47 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க பண்ட் நதியோர மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டத்துக்காக பெருந்திரளான மக்கள் கூடியிருந்த நிலையிலேயே இந்த சனநெரிசல் ஏற்பட்டுள்ளது. இரவுக் களியாட்ட விடுதி யொன்றின் மாடியிலிருந்து வீசப்பட்ட பணத் தாள்களை எடுப்பதற்காக மக்கள் முண்டி யடித்தபோதே இந்த திடீர் சனநெரிசல் ஏற்பட்டதாக நேரில் கண்டவர்களை மேற்கோள்காட்டி சமூக இணையத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பண்ட் பிரதேசத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால், புத்தாண்டு பிறப்பின்போது அங்கு பாரம்பரியமான பட்டாசு- வாணவெடிக்கைகளை இம்முறை நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்துள்ளதாக அரச ஊடகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

ஜனவரி 01, 2015

என் மனவலையிலிருந்து........!

2014 இற்கு விடை கொடுப்போம்! 2015 ஐ வரவேற்போம்!!
(சாகரன்)

எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் , கடந்த காலம் பற்றிய கனவுகள் என்பனவே மனிதகுலத்தின் சிறப்பான செயற்பாடுகள் ஆகும். இதுவே மற்றைய உயிரினங்களை மனிதனிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் விடயமும் ஆகும். இந்த நம்பிக்கைகளுடன், கனவுகளுடன் கடந்த வருடத்திற்கு விடை கொடுப்போம், புதிய வருடத்தை வரவேற்போம். கடந்து போன 2014 ஆண்டில் உலகம் பூராக நடைபெற்ற யுத்தங்களும், போர்களும் குறைந்தபாடாக தெரியவில்லை. மாறாக உலகை கூறுபோடும் புதுப்புது யுத்தங்களும், போர்களும் உருவாக்கப்பட்டே இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த வருடம் ஆயுத யுத்தம் நடைபெறபோதும் இந்த யுத்தத்தம் நடைபெற்றதற்கான தீர்வுகள் எட்டப்படாமலே கழிந்து போய் இருக்கின்றது. இந்தியாவில் ஆட்சிமாற்றத்தை இந்திய மக்கள் உருவாக்கியிருந்தாலும் தற்போது அங்கு நடைபெற்றுவரும் இந்துவத்துவா மேலாண்மையும், அந்நிய முதலீட்டிற்கு திறந்து விட்ட செயற்பாடுகளும் ஒரு ஆரோக்கியமான முன்நகர்வை அங்கு ஏற்படுத்தவில்லை. உலக வல்லரசுகளாக இருந்த இரு முகாங்களின் பனிப்போர் புதுப்பிக்கப்பட்டு வருகின்றதை அமெரிக்க, ரஷ்யா இடையேயான முரண்பாடுகள் எடுத்தியம்பி நிற்கின்றன. பாலஸ்தீனம் தொடர்ந்தும் அகதி முகாங்களுக்குள் வாழ்க்கை என்பதை மீண்டும் நிறுவியே நிற்கின்றது. எபோலா என்ற நோய் அரகன் ஆபிரிக்க நாடுகளை உலுக்கினாலும் கியூபா மருத்துவக்குழுவின் பிரசன்னம் அதனை மெல்ல சாகடித்த வரலாறு வழமைபோல் மறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கியூபா இடையேயான இராஜதந்திர உறவு கியூபாவை இல்லாமல் செய்யும் தந்திரோபாயத்திற்காக அமெரிக்காவால் உருவாகப்பட்டதா? என்பதை 1985 களில் கடாபி வெளிநாடுகளுக்கு லிபியாவை திறந்து விட்ட அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கத் தூண்டியுள்ளது. தொடர்ந்தும் தென்அமெரிக்க நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு வியக்க வைக்கின்றது. இங்கு நிலவிவரும் தளம்பல் அற்ற நிலைபாடுகள் சில நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளன. நான்கிற்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் வான்பறப்பு பயணங்களை கிலிகொள்ளச் செய்துள்ளது. கிரிக்கட்டின் ஜம்பவான் என்று மூன்று தசாபதத்திற்கு மேலாக இருந்த சச்சின் ரென்டுல்கார் தனது கிரிக்கெட் விளையாடும் ஓய்வை அறிவித்தார், அவரைப் பின் தொடர்ந்தார் மகேந்திரசிங் டொனி. இலங்கையில் ஆட்சிமாற்றம் என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்ற போக்கு அதிகார வர்க்கத்திற்கிடையேயான போட்டியாக உருவகப்பட்டு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. தொடர்ந்தும் சீனாவின் பொருளாதாரப் பாயச்சல் உலகின் முதல்தர பணக்கார நாடு என்ற நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்துக்கொண்டே இருக்கின்றது. உலகெங்கும் பிரிவினைவாத இயங்கங்கள் இனங்களுக்கிடையேயான சமத்துவம் இன்மையினால் உருவாகி வந்திருக்கின்றன. தலிபானை மீறிய அகண்ட இஸ்லாமிய தேசம் என்ற கோபாடு அமெரிக்க நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் தாவும் தொழிநுட்பம் கோள் விட்டு கோள் தாவும் 4 வது பரிணாமத்திற்கு எகிறிப் பாய்கின்றது. இதில் இந்தியாவும் சளைத்தது அல்ல என்பதை நிறுவி நிற்கின்றது. மாற்றம்  ஒன்றே மாறாதது என்னும் இயங்கியலை ஏற்று தொடர்ந்தும் மனிதகுல வடிவிற்காக எமது வரலாற்றுக்கடமைகளை செய்வோம். ம்....  எல்லோருக்கும் ஒரு வயதும் கூடியுள்ளது.....?

இனிமை, ஐக்கியம் நிறைந்த புத்தாண்டு உதயமாகட்டும்!

உலக சரித்திரத்தை நோக்குவோமாயின் அதில் இவ்வுலகில் வாழ்ந்து மடிந்தவர்கள், புதிய தலைவர்கள் உருவாக்கம், புதிய கண்டுபிடிப்புக்கள், உலக சமாதானம், பொருளாதாரம் கொள்கைகள், ஒரு நாட்டின் வருமான மதிப்பீடு போன்ற பலவற்றை நாம் ஆண்டுகள் ரீதியாக கையாள்கின்றோம். ஒரு புதிய ஆண்டை வரவேற்பதிலும், இவ்வாண்டில் நாம் செய்யப் போகும் பல திட்டங்களை மனதில் நிறுத்தி வருடத்தின் முதல் நாள் அன்று உறுதிபூணுகின்றோம். புதிய ஆண்டு என்பது பூமியின் ஒரு சுற்று நிறைவடைந்து மீண்டும் புதிய சுற்றுக்குள் பிரவேசித்தல் என்பதாகும். உதாரணமாக ஒரு வட்டத்தில் ஒரு மையப்புள்ளியை வைத்து அதனை மீண்டும் அடைதல் என்பது எனலாம். இதைத்தான் ஓராண்டில் 365 நாட்கள் என கணக்கிடப்பட்டு அந்த நியதியின் படி வாழ்வுச் சக்கரத்தை நகர்த்திச் செல்கின்றோம். (மேலும்....)

த.தே.கூ.வின் முடிவு, முரணான பலனையே தரும் - ஆனந்தசங்கரி

மைத்திரியை ஆதரிப்பதாக அறிவித்தமையானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்ததற்கு மாறான விளைவையே ஏற்படுத்தும். ஏனெனில் பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், தமிழர்கள், சிங்களவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்ததோடு பல உறவுகளையும் இழந்துள்ளனர். சில குடும்பததினர் கண்ணீருடனும் போதிய உணவின்றியும் வாழ்கின்றனர். எனது குடும்ப வட்டத்தில் தன் இரு குழந்தைகள், கணவர் ஆகியோரை எண்ணி தினமும் கண்ணீரும் கம்பலையுமாக போதிய உணவின்றி வாழ்கின்றனர். விடுதலைப்புலிகளை தமிழ் தேசியத்தின் தலைமையாகவும், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகவும் ஏற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அநேகர், எதுவித இழப்புக்களை கொண்டிராதவர்களும் நிதியுதவி உட்பட விசேட சலுகைகளை பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆனால் ஏனைய பாதிப்புக்குள்ளானவர்கள் பல்வேறு துன்பங்களுடன் வாழ்கின்றனர். இக்குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் இவ்வாறான நிகழ்வில் மனநிறைவோடு கலந்துகொள்ளமாட்டார்கள்.
 (மேலும்....)

பிரதியமைச்சர் நந்தமித்ரவும் மாறினார்

உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க பொது எதிரணியுடன் இணைந்துகொண்டார். அவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் இணைந்து கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்திகொண்டிருக்கின்றார்.
கம்பஹா மாநகரசபை பிரதிமேயர் அஜித் பஸ்நாயக்க, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

கட்சி தாவக்காத்திருக்கும் மாகாணசபை உறுப்பினர்கள்.........

எதிர் வரும் ஓரிரு தினங்களில் கூட்டமைப்பின் உறுப்பினர் சிலர் கட்சிதாவ காத்திருக்கின்றனர் சன்மானங்களுக்கும் சலுகைகளுக்கும் ஆசைப்பட்டு கட்சிதாவக்காத்திருக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களில் முதன்மையானவர் அனந்தி சசிதரன் அவரோடு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் ரவிகரன் ஆகியோரும் உள்ளனர்.

கொல்வின்.ஆர்.டி.சில்வா கேட்டதற்கிணங்க

நிறைவேற்று அதிகார முறையை ஜே.ஆர் இல்லாமல் செய்திருக்க வேண்டும் - சி.வி

1956ஆம் ஆண்டில் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்த போது 'இரு மொழிகள், ஒரு நாடு; ஒரு மொழி இரு நாடுகள் என்று கூறிய கலாநிதி கொல்வின்.ஆர்.டி சில்வா, நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி என்ற பதவியை ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கியபோது, உன் காலத்தில் இந்தச் சட்டத்தை வேண்டுமானால் நீ நடைமுறைப்படுத்து. ஆனால் நீ போகும் போது இந்த சட்டத்தை இரத்துச் செய்து நாடாளுமன்ற அதிகாரம் நிலைக்க வழிவகுத்து விட்டு செல். உனக்கு பின்வரும் ஒருவன் உன்னை போல் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டான். கொடூரமாக அவன் இதனை நடைமுறைப்படுத்தக்கூடும் என்று கூறினார். அதாவது அதிகாரம் என்பது ஒருவர் வசம் இருந்து அந்த அதிகாரத்தைப் பாவிக்கும் போது சட்டதிட்டங்களுக்கு அமைவாக, மனிதஉரிமைகளைப் பேணிப்பாதுகாக்கும் விதத்தில், மனிதாபிமான முறையில் பாவிக்கத் தலைப்பட்டால், சட்டம் எவ்வாறு அமைந்திருந்த போதும் அங்கு நல்லாட்சியும் நீதியும் நிலைக்கலாம். (மேலும்....)

இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடைமுறையை உடனடியாக மீண்டும் அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கடந்த (டிசம்பர் மாதம்) 29 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) மேலதிக செயலாளர் திருமதி தமயந்தி ஜயரத்ன தெரிவித்தார். இரட்டை பிரஜா உரிமை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கும் பொருட்டு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் தற்பொழுது அமுலில் உள்ள சட்டத்திற்கு மேலதிகமாக புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்புடன் தொடர்புடைய சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலு ள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தில் நடைபெற்றது.
 (மேலும்....)

ஐ.ம.சு.கூ விலிருந்து 18 பேர் தாவினர்

குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர்கள் 18 பேர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்கள், மேற்கண்ட அறிவிப்பை விடுத்தனர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட கொபேகன பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விஜித்த பிரேம்லால் கருத்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் பட்டியால் வாடும் போது பொலிவூட் நடிகர் சல்மான் கானை அழைத்து வந்து அரசாங்கம் நாடகம் நடத்துகிறது. கிராம புறங்களில் உள்ள மக்கள் மிகவும் நலிந்த பொருளாதார நிலையில் பட்டியால் வாடுகின்றனர். ஆனால், அரசாங்கம் பெருமளவு பணத்தினை செலவழித்து சல்மான் கானை அழைத்து வந்து பிரசாரம் செய்கிறது.  காட்டு யானைகளால் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் மக்களுக்கு அந்த பணத்தை கொண்டு பாதுகாப்பு வேலிகளையாவது அமைத்து கொடுத்திருக்கலாம். ஆனால், அதனை இந்த அரசாங்கம் செய்யவில்லை. நாட்டின் மீண்டும் நல்லாட்சியை ஏற்படுத்தவே நாம் இன்று இந்த தீர்மானத்தை எடுத்தோம் என்றார்.

மைத்திரிக்கு, பைஸர் முஸ்தபா ஆதரவு

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தான் தீர்மானித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் தனது முடிவை வெளியிட்டுள்ளார்.

பொ.ஐங்கரநேசனும் சிறிதரனும் சொல்கின்ற பொய்கள்.

என்ன மாதிரியெல்லாம் தமிழ்ச் சனங்களை ஏமாற்றுகிறார்கள் இந்தப் பொ.ஐங்கரநேசனும் பொல்லாத சிறிதரனும் என்று கோபப்படுகிறார்கள் சனங்கள். கோபம் என்றால் அப்படியொரு கோபம். இருக்காதா பின்னே, தங்களுடைய சோற்றில் மண்ணை அள்ளிப் போடுகின்றவர்களைக் கண்டால் யாருக்குத்தான் கோபம் பொத்துக் கொண்டு வராது? இவர்கள் இருவரும் இவர்களுடைய கையாட்களும் சொல்கின்ற பொய்களைக் கொஞ்சம் நீங்களும் அறியுங்கள். ஆட்சி மாற்றம் கட்டாயம் வரப்போகிறது. நிச்சயமாக மைத்திரிதான் வெல்லப்போகிறார். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வடக்குக் கிழக்கில் படைக்குறைப்பைச் செய்யப்போகின்றன. மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவோம். மன்னிக்கவும் தூக்குக்கு அனுப்புவோம். 100 நாட்களில் தமிழீழத்துக்கு நிகரான தீர்வு கிட்டும்.... இப்படி ஊர் ஊராகப் போய்ச் சனங்களைத் திரட்டி பிரச்சாரம் செய்கிறார்கள்.(மேலும்....)

ஜனவரி 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இலங்கை இந்து மஹா சபையின் அறிக்கை.

அபிவிருத்தித் திட்டங்கள் கைவிடப் படும். அரச நிறுவனங்கள் மக்களின் சொத்துக்கள் பணம் சூறையாடும் தனியார்களிடம் போய்விடும். கலாச்சார பண்பாடுகள் மதிப்பு குறைந்து போய்விடும். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள குற்ற வாளிகள் தமிழ் தலைவர்கள் ஆவார்கள். மறு படியும் இந்து சமய தமிழ் மக்கள் கை கட்டி வாய் பொத்தி நிற்க வேண்டிவரும். யார் யாரோ தமிழ் மக்கள் நிலைமைகள் பற்றி பேசி பணம் திரட்டுவார்கள். அநியாயங்கள் எல்லாம் நியாயங்கள் என்று போற்றப்படும். ஏனைய மதத் தலைவர்களும் மேற்குலக பிரதி நிதிகளும் தமிழ் மக்களிடமுள்ள குற்ற வாளிகளுடன் கை குலுக்கி திரிவார்கள். முட்டாள் தனமான செயல்கள் எல்லாம் அதியுயர் புத்தி சாதுரியமான செயல்கள் என தமிழ் பத்திரிகைகள் போற்றும். மத மாற்றங்கள் தங்கு தடை இன்றி பெரிய அளவில் இந்து சமய தமிழ் மக்கள் அவமான பட வைத்து நடக்கும். தற்போதைய தமிழ் தலைமை வழமை போல அந்த மதத்தவர்களின் செயல்களை கண்டு கொள்ளாமல் இருக்கும். இந்து தமிழ் மக்கள் வலது சாரி தென் பகுதி அரசியல் தலைமையால் பல் வேறு நெருக்கடிகளுக்கு உள்ளார்வர்கள். ஒரு வித முன்னேறமும் இந்து தமிழ் மக்கள் அடைய முடியாதபடி மீண்டும் அரசியல் சகதிக்குள் சிக்கி விடுவார்கள். (மேலும்....)

பிறக்கப்போகும் புத்தாண்டிணை விடியலை நோக்கியதாக வரவேற்போம் ப.உதயராசா


தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் மரபு. அதற்கு அமைவாக விடியப்போகின்ற இந்த வருடத்தை அமைதியுடனும் அபிவிருத்தியுடனும் புதுப்பொலிவடைய செய்ய உளத்தெளிவுடனும் நம்பிக்கையுடனும் பிறப்போகும் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என சிறிரெலோகட்சியின் செயலாளர் ப.உதயராசா தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொடிய குண்டுச்சத்தங்களுடனும் அவலக்குரல்களுடனும் புத்தாண்டினை வரவேற்ற காலங்கள் உருண்டோடிவிட்டன. அவ்வாறான துன்பியல் காலம் எமக்கானது அல்ல என்றாகி விட்டது. தற்போது ஆலயங்களின் மணி ஓசையுடனும் மதப்பெரியார்களின் வேத வாக்குகள் மற்றும் மந்திரங்களுடனும் பக்தியுடனும் புத்தாண்டை வரவேற்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது.ஆகவே காழ்ப்புணர்வுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துடனும் சந்தோசத்துடனும் வாழ்வதற்காக புதுவருடத்தினை அமைத்துக்கொள்ள இறைவனை பிரார்த்திப்போம். அது மாத்திரமன்றி புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியுறும் அதேவேளை உணவற்று உடையற்று இருக்கும் நம் அயலவர்களை இரக்ககுணத்துடன் உதவி செய்து மதவிழுமியங்களையும் அனுட்டானங்களையும் மேற்கொள்வதற்கு உறுதி பூணுவோம் எனவும் அந்த வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Who is behind the scene for the explosion of this massive eruption of Volcano in the ruling government of MRP.

Sajin Vas Vs. Chris Nonis.

X - Ray Report.

Among the several factors for rebellion waves within the MRP Coalition government, one of the important reasons is talked about by political analysts is Indian U.S unified plot. But there is something more important matter which many people have not noticed is the game of Mr. Chris Noanis who was the representative of Sri Lankan government in England. His careful movement in the playing field has produced this much of enormous cracks within the ruling coalition.  Who is this Chris Noanis? One of the handful of rich people in Sri Lanka. One of the handful of educated persons. He is also one of the statesmen, one of the handfuls of tea exporters in Sri Lanka. If one person has all these qualities, it is not a surprise that this person also can be haughty. (more....)
 

பொது எதிரணியிடம் ஆறு கோடி ரூபாய் காசு வாங்கிய மாவை.சேனாதிராசா!

பிரபாகரன் காசு வாங்கும் போது எங்கடா போயிருந்தனீ? – மாவை சீற்றம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் ஆகியோர் மைத்திரிபால ஸ்ரீசேனவை முன்னிறுத்தும் பொதுஎதிரணியிடமிருந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா ஆறு கோடி ரூபாய் காசு வாங்கியுள்ளார். சிறீலங்காவின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தலில் மைத்திரியை ஆதரித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே இந்த காசு பொது எதிரணியிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. (மேலும்....)

கருத்துக் களம்
நலிவுற்றோர் இவ்வளவு நாளும் அரசிற்கு ஆதரவாக தூசணம் எல்லாம் எழுதிவிட்டு திடீரென ஏன் பினாத்துகிறீர்? பிழைப்பு சரியாகப்போகவில்லையா? குடும்ப ஆட்சி என்கிறீர்கள்....பண்டாரரநாயக்கா குடும்பம் ஆட்சி செய்யவில்லையா? சந்திரிகா காலத்தில் பாதுகாப்பு அமைச்சர் யார்?ஜே ஆர் காலத்தில் பச்சைப்புலிகள் என தமிழரையும் சிங்களமக்களையும் அழித்தது யார்? ரவி ஜெயவர்த்தன..... பிரேமதாச ஆட்சியின் வாரிசுதான் இன்று சஜித் பிரேமதாச குடும்ப ஆட்சி என்பது எல்லோரும்தான் செய்கிறார்கள். வரலாறு தெரியவில்லையா? சிரிலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகர்களில் முக்கியமானவர் ராஜபக்சவும் ஒருவர் ஆனால் அதனை இருட்டடிப்பு செய்துவிட்டு இவ்வளவு காலமும் பண்டார நாயக்கா குடும்பமே சிரிலங்கா சுதந்திரக்கட்சியினை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். புலிகளை வைத்து கடந்தகாலத்தில் எல்லா அரசாங்கமும் பிழைப்பு நடத்தியது ஆனால் மகிந்தமட்டும்தான் போரைவென்றார் இன்று சுதந்திரமாக எல்லா அரசியல்வாதிகளும் பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்களே எப்படி? தமிழ்த்தலமைகூட கொழும்பு யாழ்ப்பாணம் சுதந்திரமாக நடமாடுகிறார்களே எப்படி வெல்லமுடியாதவர்கள் என்று எல்லோராலும் கூறப்பட்ட புலிகளை வென்றவர் மகிந்த அதனால்தான் ....மகிந்தவே மீண்டும் வேண்டும்.... (Ganeshalingam Kanapathipillai)

மாற்றம் வருமோ இல்லையோ ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள மாற்றங்களை நிச்சயமாக நாம் எதிர் பார்கின்றோம், அதே சமயம் நாம் எந்த மாற்றத்தையும் விரும்பாமல் மீண்டும் அதே நிலைப்பாட்டில் இருந்தால் எமக்கு எந்த மாற்றங்களும் தேவை அற்றது, மற்றும் தற்போதுள்ள ஆட்சியில் எமக்கு பூரண திருப்தி உள்ளது, அதுபோன்று நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையைக்கூட நாம் ஆதரிக்கின்றோம், ஆகவே எந்த சந்தர்ப்பங்களையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றே ஆகிவிடும். மீண்டும் பல வருடங்கள் காத்திருந்தும் இதை விடவும் மேலான அழுத்தங்களுக்கு உட்படுவதை விடுத்து மாற்றங்களுக்கான சந்தர்ப்பங்களை எதிர் பார்ப்பதில் எந்த தப்பும் இல்லையே! அது சிறுபான்மையினத்தின் பிரதிநிதிகள் என்ற வகையில் எமது சுதந்திரமான கருத்து இது என்பதில் தவறில்லையே!....(Selvan Thevasee)

இரண்டு தரப்பையும் நிராகரிப்பது ஒரு தரப்பை வெல்லச் செய்வதற்கான உத்தி ........ (mohan Sivarajah)

தமிழர்களை மீண்டும் புதைகுழிக்குள் தள்ளவே தமிழ் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு

நாட்டின் மிக மோசமான இனவாதிகளின் கூட்டாக உருவெடுத்துள்ள மைத்திரி தலைமையிலான எதிரணிக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கோருவது தமிழ் மக்களை மீண்டும் புதைகுழிக்கு தள்ளும் முடிவு என பாராளுமன்ற உறுப்பினரும். பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் சென்று பழைய கதைகளைக் கூறி மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை உசுப்பேற்றிவிட்டு வாக்குகளை அபகரித்துச் சென்றுவிடுவார்கள். மீண்டும் அடுத்த தேர்தலில்தான் அவர்கள் மக்களை நாடிச் செல்வார்கள். கடந்த முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தில் மக்கள் தமது உறவுகளை இழந்து, பலர் அங்கவீனர்களாகவும். வறுமையிலும் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, மக்களின் வறுமையையும். அவலங்களையும் வைத்து அரசியலை முன்னெடுக்கும் கூட்டமைப்பினரின் செயற்பாடுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இனத்தின் பெயரால் அவர்கள் மூட்டிய தீ கொழுந்து விட்டெரிந்து எமது தேசத்தையே அழித்தது. அதில் அந்த தலைவர்கள் குளிர்காய்ந்தார்களே தவிர அதற்கு பலியாகிக் கொண்டிருந்த மக்களைப் பற்றி அவர்கள் துளியேனும் சிந்தித்ததில்லை. தாமும் தமது குடும்பங்களும் அதிலிருந்து தப்பி வாழ்வதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com