Contact us at: sooddram@gmail.com

 

ஐப்பசி 2011 மாதப் பதிவுகள்

ஐப்பசி 31, 2011

யார் இந்த அருணாசலம் ஜெகதீஸ்வரன்?

புலிகளின் சர்வதேச செயல்பாட்டாளர்களின் மற்றுமொரு காணொளியை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது! (Part 1)

www.defence.lk/new.asp?fname=20111027_ABC
புலிகளின் சர்வதேச செயல்பாட்டாளர்கள் குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மற்றுமொரு காண் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. அஸ்திரேலியாவில் வாழும் மீனா கிருஸ்ண மூர்த்தி அல்லது ஈழநதி என்பவரை மையப்படுத்தி இந்தக் காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. 12 நிமிட காட்சிகளை கொண்ட இந்தக் காணொளி புலி ஆதரவாளர்களும் புலிகளின் செயற்பாட்டாளர்களும் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசிற்கு எதிராக போலியான பிரச்சாரங்களையும் சதித் திட்டங்களையும் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புலிகளின் பினாமி அமைப்பில் தற்போது பிரபலமாக செயற்பட்டு வரும் அறிவழகன் என்பவரைப் பற்றியும் இலங்கை அரசு செய்தி வெளியிடவுள்ளதாக அறிய முடிகின்றது.

ஐப்பசி 31, 2011

தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றது - கனடாவில் இரா சம்பந்தன்!

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றது என கனடா ஸ்காபுறோ கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். 'தற்போதைய சூழ்நிலையில் எமது தாயகத் தமிழ் மக்களின் பிரச்சனை ஒரு உலகம் சார்ந்த பிரச்சனையாக கணிக்கப்படுகின்றது. அவர்கள் அந்த மண்ணில் படுகின்ற துன்பக் குரல் அல்லது அவர்கள் எழுப்புகின்ற அவலக் குரல் உலகின் காதுகளுக்கு கேட்கின்றது. (மேலும்....)

 

ஐப்பசி 31, 2011

CHOGM 2011

Fifteen nations help GoSL defeat Canada’s anti-Lanka move

(By Shamindra Ferdinando in Perth)

Sri Lanka had thwarted an attempt by a minute section of the Commonwealth and the LTTE to humiliate Sri Lanka, at the CHOGM 2011, External Affairs Minister Prof. G. L. Peiris said yesterday. Addressing the Sri Lankan media at the conclusion of the three-day biennial in Perth, Prof. Peiris said that Sri Lanka faced threats on three fronts, namely CHOGM 2011, litigation initiated by the LTTE and perceived bid to re-open the venue issue. Minister Peiris said that Canada had raised the alleged accountability issues in Sri Lanka under any other business at the end of the third session of ministerial-level talks. Recalling a statement attributed to Australian Foreign Minister Kevin Rudd in the run-up to the inauguration of the summit on Friday 28), Minister Peiris said that the former Australian premier had discussed the possibility of Sri Lanka’s accountability issue coming up at the summit. (more..)

ஐப்பசி 31, 2011

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி

வடக்கில் புலிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பு., 78,000 முஸ்லிம்கள் 72 மணித்தியாலங்களுக்குள் விரட்டப்பட்டனர்!

இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன. 'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'. இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல். (மேலும்....)

ஐப்பசி 31, 2011

அமெரிக்காவில் பாரிய பனிப் புயல்

அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியைத் தாக்கிய பாரிய பனிப் புயல் காரணமாக 6 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனால் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதால் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பனிப்பொழிவின் காரணமாக நிவ்ஜேர்ஸி, கெனக்டிகட், மசாசுஸெட்ஸ் மற்றும் நிவ்யோர்க்கின் சில பகுதிகளில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிலிடெல்பியாவில் பனிப் பொழிவின் காரணமாக இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். பென்சில்வேனியாவிலுள்ள ஆலயத்தில் பனி விழுந்ததால் 84 வயது வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார். கெனக்டிகட்டில் 75,000 பேரும் நிவ்ஜேர்சியில் 600,000 பேரும், மின்சாரமின்றி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை தென் கிழக்கு கனடாவும் பாரிய பனிப்பொழிவிற்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 31, 2011

ராஜீவ் கொலையாளிகளில் நளினியைத் தவிர மற்ற மூவருக்கும் தண்டனை ரத்து கூடாது - தமிழக அரசு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி களான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசும் கோரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு 11 ஆண்டுகளுக்குப் பின் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதி மன்றத்தில் மூவரும் தாக்கல் செய்த மனுவில் 11 ஆண்டுகள் காலதாமதமாக கருணை மனுவை ஜனாதிபதி நிரா கரித்துள்ளார். நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். ஆயுள் தண்டனை காலத் தையும் தாண்டி சிறையில் இருப்பதால் எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். (மேலும்...)

ஐப்பசி 31, 2011

கருணாநிதியைப் போலவே ஜெயலலிதாவும் ஏமாற்றிவிட்டார்

மூவரின் தூக்குத் தண்டனை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போலவே இந்நாள் முதல்வர் ஜெயலலிதா வும் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டார் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். மூவர் தூக்கு தண்டனை ரத்து கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் ஆஜரான வைகோ, பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், “பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ள மனுவைத் தள்ளுபடி செய்யும்படி தமிழக அரசு கூறியுள்ளது. தூக்குத் தண்டனையை எதிர்க்கும் பொதுமக்களின் கருத்து பற்றி எதுவும் சொல்வதற்கில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது. அப்படியானால் ஒகஸ்ட் 30ம் திகதி சட்டப் பேரவையில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசைக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத்தை ஏமாற்றத்தானே? இந்தப் பிரச்சினையில் தமிழக மக்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏமாற்றுவதைப் போலவே முதல்வர் ஜெயலலிதாவும் ஏமாற்றுகிறார் என்றார் வைகோ.

ஐப்பசி 31, 2011

க.சுப்பு அவர்களின் அஞ்சலி கூட்டத்தில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் சிறிதரன்

க.சுப்பு அவர்களின் இறுதிக்கிரியை இன்று(30.10.11) மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்ட மரண ஊர்வலமானது. மயிலாப்பூரில் உள்ள மயானத்தை வந்தடைந்தது. அங்கு அவரது உடல் எரியூட்டப்பட்டது. தகன கிரியைக்குப் பின்னர், அஞ்சலி; கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தி.மு.க முக்கியஸ்தர்கள், நக்கீரன் காமராஜ் ஐக்கிய பொது உடமைக் கட்சியைச் சேர்ந்த தோழர்சங்கர், ஊடகவியலாளர் ரி.எஸ்.மணி தோழர்பத்மநாபாவின் ஆத்மாத்த நன்பர்களும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் அனுதாபிகளுமான தோழர்கள் பாஸ்கர், தோழர்பாவல், தோழர்குலைகாதன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் சிறிதரன், தோழர் ஸ்ரனிஸ் மற்றும் கு.சுப்பு அவர்களின் நன்பர், அனுதாபிகள் என பலர் கலந்து கொண்டனர். (மேலும்....)

ஐப்பசி 31, 2011

Sri Lanka- Who are the real terrorists

The Tamil tiger terrorists declared by the Federal Bureau of Investigation in the United States, as the 'most ruthless terrorist organisation in the world' – and the war on terror succeeded. Of course your heart will ache as a man who supported the terrorist agenda. That is the case of many an Al Qaeda member. They believe that Bin Laden is a saint - in the truest form. They believe that he never sanctioned the attack on the twin towers. They believe that he never ever killed a civilian. So I totally empathise with your attempt to white wash the Tamil tiger terrorists, as you may have difficulty adjusting to the fact that they were defeated. Tamils still believe that the Ltte leader is alive (civilians in particular) You would do well to dissociate yourself from terrorists and think for a moment about your own ethnic group - the Tamils. It is a sad day for the Tamils, if you are supporting the tamil terrorists who killed their own because they could not tolerate a different view – I am sure you are aware of that much of the history of the Ltte – where its former leader annihilated all opposition. He has gone down in history as the Hitler of the 20th century – swearing allegiance to the leader, and wanting to wipe out Sinhala and Muslim from the North and East – which WAS genocidal. That is the only act of Genocide in Sri Lanka –wiping out two ethnic communities from North and East to create a monoethnic Tamil state. I wonder how you explain the peaceful coexistence 54% of Tamils living in the South of the country? (more....)

ஐப்பசி 31, 2011

தமிழர் தேசிய கூட்டமைப்பில் இணைந்தால் பாவங்கள் கழுவப்படுமா?

(நக்கீரன்)

தமிழர் தேசிய கூட்டமைப்பில் (ரி.என்.ஏ)இணைந்துவிட்டால் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்பதை தற்போது அறியக்கூடியதாக இருக்கின்றது. மனித உரிமைமீறலில் ஈடுபட்டவர்கள் தமிழர் தேசிய கூட்டமைப்பில் இணைந்தால் மட்டுமே மன்னிக்கப்படுவார்கள். உலகம் எங்கும் தங்குதடையின்றி உல்லாசமாக சுற்றிவரலாம்.  ஆரம்பகாலங்களில் தமிழரசுக்கட்சியும், தமிழர்விடுதலைக்கூட்டணியும் தமது அரசியல் எதிரிகளை தோற்கடிப்பதற்காக அவர்களுக்கு துரோகி என்று பட்டம் சூட்டி அவர்கள் தீண்டத்தகாதவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்று மேடையில் முழங்கி இளைஞர்களை உசுப்பேத்தி அதன்மூலம் தமது பகடைக்காய்களாக அவர்களைப் பாவித்து  சிவகுமாரன்களை உருவாக்கி ஆயுதக்கலாச்சாரத்திற்கு அடிகோலினர்.   அதன் ஆரம்பம்தான்  யாழ்ப்பாண மேயர் துரையப்பாவை சிவகுமாரன் படுகொலைசெய்ய திட்டமிட்டார். அந்த முயற்சி வெற்றிஅடையாதலால் பின்னர் பிரபாகரனால் துரையப்பா கொலைசெய்யப்பட்டார். யாழ் மேயர் துரையப்பாவை படுகொலை செய்துவிட்டு வந்த பிரபாகரனுக்கு அடைக்கலம் கொடுத்து தேனீர் ஊற்றிக்கொடுத்தவர்கள்தான் இந்த அகிம்சாவாதிகள். பலம்மிக்க அரசியல் எதிரியான துரையப்பா ஊசுப்பேத்திய இளைஞர்களால் அழிக்கப்பட்டார். (மேலும்...)

ஐப்பசி 31, 2011

Wall Street, Power & Democracy

( Nalliah Thayabharan)

Capitalism is a confidence trick, a dazzling edifice built on paper promises, gambling, bets and speculation. Wall Street doesn’t make or produce anything.  The Wall Street however attractive it may appear is built on paper. Wall Street only gambles and bets and speculates. Modern day bank robbers are at Wall Street but they wear grey suits and not masks. Speculators, propagandists and financiers of Wall Street are given some unfair advantage over the average consumers and taxpayers and the cumulative effect of the people watching selfishness prevail over the public interest has been an undermining of the public’s trust in the present US government. There’s no question the Wall Street is rigged against the average consumers and taxpayers. The Wall Street has a lot more information. Wall Street jerry-rig the system so that Wall Street always win.  If the Wall Street loses trillions, the US Treasury will bail the Wall Street out so it can go back and do it again. (more....)

ராமதாஸ், அன்புமணிக்கு எதிரான கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது

ஐப்பசி 31, 2011

தேர்தல் தொடர்பாக தனது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் 2006 ஆம் ஆண்டு மே 8 ஆம் இரவு தனது வீட் டிற்கு எதிரில் சண்முகம் ஆலோ சனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஆயுதம் தாங்கிய கும்பல் அவர் களின் மீது தாக்துல் நடத்தியது. இதில் சி.வி. சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் என்பவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். காருக்குத் கீழே படுத்ததால் காயமின்றி அமைச்சர் சண்முகம் தப்பியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ரோசனை காவல் நிலையத்தில் மறுநாள் புகார் அளிக்கப் பட்டது. அந்தப் புகாரில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் சண்முகத்தைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், இதற்காக ரகு என்பவரின் தலைமையில் கூலிப்படையினரை ஏவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. (மேலும்...)

ஐப்பசி 31, 2011

வெளிவந்துவிட்டது ஒக்ரோபர் வானவில்

காணிப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு அவசியம்!

இலங்கையின் வடக்கு கிழக்குமாகாணங்களில் காணி சம்பந்தமான பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இந்தப் பிரச்சினையைப் பாவித்து குளிர்காய்வதற்கு வழக்கம் போல சில அரசியல் சக்திகளும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக 'வெறும் வாயை மென்றவனுக்கு அவல் கிடைத்தது போல', தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையை வைத்து வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கிறது. இந்தப் பிரச்சினையை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வேறு சில தமிழ் கட்சிகளும் வவுனியாவில் உண்ணாவிரத நாடகமொன்றையும் அரங்கேற்றியுள்ளன். அடுத்த வருட முற்பகுதியில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படும் என அரச தரப்பிலிருந்து அறிவித்தல் வெளியாகியுள்ளதால், அதை மனதில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையில் தொடர்ந்தும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கும் என்பது நிச்சயம். தமிழ்க் கூட்டமைப்பு நடாத்தும் இந்த நாடகம் பார்த்து இரசிப்பதற்கு இரசனையாகத்தான் இருக்கும். (மேலும்....)

ஐப்பசி 31, 2011

உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது

உலக மக்கள் தொகை இன்று (31) 700 கோடியை தொட்டுவிட்டது. நேற்று (30) நள்ளிரவுடன் இந்த விசேட மக்கள் தொகை எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கிய விடயத்தை கொண்டாடும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜனத்தொகை நிதியத்தினால் 07 பில்லியன் பெறுமதியான திட்டங்கள் உலகம் முழுவதும் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 பில்லியன் மக்கள் வசிப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் எதிர்கால சவால்கள், சந்தர்ப்பம், மற்றும் ஏதும் செய்வதற்கு உள்ள திறமை, உலகின் எதிர்காலத்தை திட்டமிடுதல் ஆகிய செயற்பாடுகளின் கீழ் மேற்படி திட்டங்கள் அமையும். 07 பில்லியன் மக்களாக நாம் ஒருவருக் கொருவர் அக்கறையுடன் வசிப்போம் என்ற தொனிப் பொருளின் கீழ் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருக்கும் பிரதான மகப்பேற்று மருத்துவ மனைகளில் குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் முதலாவது குழந்தைக்கு அல்லது குழந்தைகளுக்கு உதவி வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும். இதற்கேற்ப, சுகாதார அமைச்சு, உலக மக்கள் நிதியம், மற்றும் குடும்ப சுகாதார செயலகம் ஆகியவை ஒன்றிணைந்து நாட்டின் பிரதான மகப்பேற்று மருத்துவ மனையான கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இன்று (31) நள்ளிரவு 12 மணிக்கு பின்னரான முதலாவது செக்கனில் பிறக்கும் குழந்தை களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளன.

ஐப்பசி 31, 2011

இடதுசாரி வேட்பாளர் அயர்லாந்து ஜனாதிபதி ஆனார்

மூத்த இடதுசாரி அரசி யல்வாதியும், கவிஞரும், மனித உரிமை ஆர்வலரு மான மைக்கேல் டி.ஹிக் கின்ஸ், அயர்லாந்து நாட் டின் ஜனாதிபதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். ஹிக்கின்ஸ் தற்போது தொழிலாளர் கட்சியின் தலைவராக இருக்கிறார். அனைத்து மக்களின் தலை வராக ஜனாதிபதி திகழ வேண்டும் என்ற மரபு கருதி தொழிலாளர் கட்சியின் தலைவர் மற்றும் உறுப் பினர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஹிக்கின்ஸ் 57 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிரமப்பட்டு வரும் நாட்டின் மக்களிடம் நம்பிக் கையையும், அயல்நாடு களில் நல்லெண்ணத்தை யும் உருவாக்கும் பெரும் பொறுப்பு அவருக்கு அளிக் கப்பட்டுள்ளது. (மேலும்...)

ஐப்பசி 31, 2011

அமெரிக்காவுடன் இப்போதைக்கு உறவு இல்லை - ஈரான்

அமெரிக்காவுடனான நட்பினை ஈரான் ஒரு நாள் விரும்பும். ஆனால், இப்போது இல்லை என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி கூறினார். ஈரான் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் அதேநேரத்தில் அந்நாட்டு மக்களை ஆதரிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த சலாஹி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, ஹிலாரி கூறியுள்ளது போன்ற அறிக்கைகளை நிறைய பார்த்துவிட்டோம் துரதிஷ்டவசமாக அவை அனைத்தும் முரண்பாடுகளாக உள்ளன. எங்களுடைய கொள்கை இஸ்ரேல் தவிர உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதுதான். அணு ஆயுதம் தயாரித்து வருவதாகவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 31, 2011

சிரியாவில் தலையிட்டால் பிராந்தியமே பற்றி எரியும்

சிரியாவில் தலையிட்டால் பிராந்தியமே பற்றி எரியும் என அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத் தெரிவித்துள்ளார். சிரியாவை துண்டாட அவர்கள் (ஐரோப்பிய நாடுகள்) நினைக்கிறார்கள். சிரியாவை ஆப்கானிஸ்தான் போன்று மாற்ற நினைக்கிறார்களா? அல்லது ஆப்கானிஸ்தான் ஆக மாற்றவேண்டும் என கருதுகிறார்களா? அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்கும், இங்கு ஏற்பட்டுள்ள புரட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. எனவே, மக்களின் போராட்டத்துக்கு நான் வளைந்து கொடுக்க மாட்டேன். எங்கள் நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டாம் என எச்சரித்தார். (மேலும்....)

ஐப்பசி 30, 2011

பறவைக்கு கொண்டாட்டம் மீனுக்கு திண்டாட்டம்

இருவரும் வாழ்வதற்கான போராட்டம்தான் நடாத்துகின்றனர். ஆனால் ஒருவரின் மரணத்தில் மற்றவரின் வாழ்வு உறுதிப்படுத்தப்படுவதுதான் வேதனை. பறவையின் திறமை என்று கொண்டாட முடியவில்லை. ஏனெனில் அது மீனின் உயிர் பறிப்பையல்லவா செய்கின்றது. இரை தேடுவதிலும் தர்மம் தேவையல்லவா...?

ஐப்பசி 30, 2011

கனடாவில்

பிசு பிசுத்துப் போன பொங்கு தமிழ் 2011

மிக நீண்ட தயாரிப்பு, அதீதக விளம்பரம், பெரிசுபடுத்தி சொன்ன சேதிகள், அதிக பொருட்ச் செலவு என் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற தயாரிப்புக்களின் உதவியுடன் ஒக்ரோபர் 29 ம் திகதி ரொறன்ரோ கனடாவில் அரங்கேற்றப்பட்டது, பொங்கு தமிழ் 2011. சனிக் கிழமை பி பகல் 2 மணிக்கு ஆரம்பமாகி ப.ப 6 மணியுடன் முடிவடையும் என திரும்ப திரும்ப விளம்பரப்படுத்திக் கொண்டே இருந்தனர். ஆனாலும் சனங்கள் போதியளவு சமூகமளிக்காததினால் ஏமாற்றம் அடைந்த ‘இளையோர்’ அமைப்புக்குள் புகுந்திருந்த புலிப் பிழைப்பு வாதிகள் 3 மணி நேரம் மட்டும் நடைபெறும் என்ற தமது நிககழ்ச்சி நிரலை ஒரு மணி நேரம் தாமதித்து வேறு வழியில்லாமல் ஆரம்பித்தனர். சில நூறு பேர் மட்டும் கலந்து கொண்ட(புலிகளின் ஆதரவு இணையத்தளத்தில் வந்த புகைப்படங்களை பார்க்கவும்) பொங்கும் தமிழ் பொங்காமலே பொரி அரிசி ஆகியதுதான் பரிதாபம். ஏதாவது செய்து தொடர்ந்தும் உண்டியலை குலுக்கி வருவாயைத் தேடிக் கொள்ள முயன்ற இவர்களுக்கு மீண்டும் தோல்விதான். பயணிகளை ஏற்றி இறக்குகின்றேன் என்று ஒரு கூட்டமும், விழாவிற்கான செலவிற்கு என இன்னொரு கூட்டமும். தலைவர் நிச்சயம் ஆபிரிக்கா காட்டிலிருந்து வருவார் வருவதற்கு பணம் தேவையென்று இன்னொரு கூட்டமும், மகிந்தாவை போர் குற்றவாளியாக சர்வ தேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று இன்னொரு கூட்டமும் என்று சும்மா போங்கள் கடும் முயற்சி செய்து பணம் திரட்ட முயன்றார்கள் முடிவு என்னவே போர்க்காலத்தில் திரண்டது போல் திரள வில்லை. இதில் தமிழ் பத்திரிகைககாரர்கள் மட்டும் பரபரப்பு செய்திகள் போட்டு ஏதொ பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ் வானொலி, ரிவி காரர் விழாவிற்கான விளம்பரம் என்று டிஸ்கவுன்ட் றேற்ரில் பணம் பண்ணியதாக கேள்வி. பாவம் தமிழ் மக்கள். என்னவோ கனடா தமிழ் மக்குளின் வாக்ககளை சுவீகரிப்பதில் மீண்டும் 'ஜிம்' தனது சாகசத்தை காட்டிவிட்டார்.

(நமது கனடா விசேட நிருபர்)

ஐப்பசி 30, 2011

இந்திய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாச்சியப்பனுடன்- டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் சந்திப்பு!

ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் ஆளும் இந்திய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாச்சியப்பனுடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்ததோடு தமிழ் பேசும் மக்கள் முகங்கொடுத்து வரும் அரசியல் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவானதொரு பேச்சுவார்த்தையினை நடத்தியுள்ளனர். இச்சந்திப்பின் போது பிரதானமாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து விரிவாக பேசப்பட்டது. இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பயனாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதை மேலும் வளர்த்தெடுத்து அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதையே தாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவாதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர் மட்ட பிரதிநிதிகள் வலியுறுத்திக் கூறியுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 30, 2011

சர்வதேச பெண்கள் அமைப்பு உறுப்பினராக நந்திதா சேர்ப்பு!

பெண்கள் அவலத்தை சினிமா மூலம் எடுத்துக் காட்டும் நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள பெண் தலைவர்கள் இணைந்து சர்வதேச பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பல துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை தேர்ந்தெடுத்து கவுரப்படுத்தி தங்கள் அமைப்பில் சேர்க்கின்றனர். அதன்படி, பெண்களின் அவலத்தை தனது நடிப்பால் சினிமா மூலம் வெளிப்படுத்திய நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளார். சர்ச்சைக்குரிய படங்களான எர்த், பயர், பவாந்தர் போன்றவற்றில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து பெண்களின் வாழ்க்கை நிலையை வெளியுலகத்துக்கு இவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய மீயூசியம் கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் நடிகை நந்திதாஸ் கவுரவிக்கப்பட்டார். சர்வதேச பெண்கள் அமைப்பு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் நந்திதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையாக மட்டும் அல்லாமல், இந்திய குழந்தைகள் சினிமா அமைப்பின் தலைவர் பதவி உட்பட பல பொறுப்புகளில் நந்திதா தாஸ் இருக்கிறார்.

ஐப்பசி 30, 2011

தோழர் க.சுப்பு அவர்கட்கு எங்கள் இதய அஞ்சலி

க.சுப்பு அவர்கள் இன்று (28.10.11) அன்று சென்னையில் காலமான செய்தி கேட்டு நாங்கள் பெரும் துயர் உற்றோம். தோழர் பத்மநாபா அவர்களுடன் மிகவும் நெருங்கி பழகிய சுப்பு அவர்கள் அந்த உறவினை பத்மநாபா அவர்களின் மறைவுக்கு பின்னர் முறித்துக் கொள்ளாமல், எமது கட்சியுடன் அந்த உறவை தொடர்ந்தார். தோழர் சுப்பு அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது தோழர் பத்மநபாவுடன் நெருக்கமான உறவை பேணிக்  கொண்டார். சென்னையில் பல இடங்களில் ஈ.பி.ஆர்.எல.;எப் தோழர்கள் பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்களுக்கு சகல உதவிகளையும் செய்து அவர்களது பிரச்சார பணியினை ஊக்குவித்தார். தனது இறுதி நாட்களில் சக்கரை நோயின் கோரப்பிடியால் ஒரு காலினை இழக்க நேரிட்டபோதும், சென்னையில் நடைபெற்ற தியாகிகள் தின கூட்டங்களில் பல தடவைகள் பங்குபற்றியுள்ளார். அவரது பிரிவால் துயரும் அவர் குடும்பந்தாருடன்,பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்களும் அந்த துயரில் பங்குகொள்கின்றனர். தோழர் சுப்பு அவர்கட்கு எங்கள் இதய அஞ்சலி.

ஐப்பசி 30, 2011

மேற்கும் லிபியாவும் – கடாபி கொல்லப்பட்டது எப்போது ? (பகுதி 2)

(சபா நாவலன்)

முதலாவதும் முக்கியமானதுமாக முவமர் கடாபியும் அவரின் சர்வாதிகாரமும் யாருக்கும் முன்னுதாரணமாகிவிட முடியாது. மேற்குலக ஊடகங்களின் புரட்டுக்களையும் பொய்களையும் தவிர்த்துப் பார்த்தால் கூட கடாபி தனது அதிகாரத்தை நிலை நாட்டிக்கொள்வதற்காகப் பலரைக் கொன்று குவித்திருக்கிறார் என்பதற்கான பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அரபுலகிலும் ஆபிரிக்காவிலும் உருவான அனைத்து சர்வாதிகாரிகளிடமிருந்தும் கடாபி பல வகைகளில் வேறுபடுகிறார். குறிப்பாக 2000 ஆண்டுவரை கடாபியின் அரசியலில் இழையோடிய ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்த வேறுபாடுகளின் மையப் பகுதியாக அமைகிறது அரேபியர் மத்தியிலும் ஆபிரிக்க நாடுகளிலும் கடாபிக்குக் காணப்பட்ட ஆதரவுத் தளம் பரந்துபட்டது. மேற்கின் கூலிகளாகச் செயற்பட்ட அரசியல் தலைவர்கள் கூட கடாபியை எதிர்த்து அரசியல் பேச முடியாத நிலையே காணப்பட்டது. தென்னாபிரிக்க சுதந்திரதின விழாவில் சொற்பொழிவு நிகழ்த்திய பில் கிளிங்டன் கடாபியின் ஆபிரிக்கா மீதான ஆதிக்கம் இல்லாதொழிக்கப்பட்ட வேண்டும் எனத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தலைவரான நெல்சன் மண்டேலா பின்வருமாறு குறிப்பிட்டார். “எமது இருண்ட காலங்களில் எமக்கு உறுதுணையாக இருந்த ஒருவர் குறித்து பில் கிளிங்டன் கூறும் அவதூறுகளோடு நான் இணைந்து கொள்ளத் தயாரில்லை” (மேலும்....)

ஐப்பசி 30, 2011

காணவில்லை!

பேரன்பும், பெருங்கோபமும் கொண்டு எரிமலையாய் போஸ் கொடுக்கும் அருகில்(இடது பக்கத்தில்) படத்தில் இருக்கும் நபரை மே13ஆம் தேதிக்குப் பிறகு காணவில்லை. இந்த தேதிக்குப் பிறகு ஒரே ஒரு நாள் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மூவர் தூக்குத்தண்டனையை நிறுத்தக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய “ஈழத்தாய் டாக்டர் புரட்சித்தலைவிக்கு”  பாராட்டுவிழா நடத்தியபோது மட்டும் மேடையில் கண்டதாக பொதுமக்கள் சொல்கிறார்கள். மே 13க்கு முன்பாக ‘மீனவனை அடித்தால், மாணவனை அடிப்பேன்’ என்று இவர் அடித்த பஞ்ச் டயலாக் மிக பிரபலம். மே 13க்குப் பிறகாக மீனவனை சிங்களவன் அடித்தால், பதிலுக்கு கொசுவை மட்டுமே அடித்து, இவர் காலம் தள்ளுவதாக பி.டி.ஐ. வட்டாரங்கள் கூறுகின்றன. (மேலும்....)

ஐப்பசி 30, 2011

கஸ்ட்ரோ சகோதரர்களிடம் இருந்து கியூபாவுக்கு விடுதலை தேவை - ஹிலரி இன் கொக்கரிப்பு

பிடல் கஸ்ட்ரோவின் கட்டுப்பாட்டில் இருந்து கியூபா விடுதலை பெற வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் கருத்து வெளியிட்டுள்ளார். வொஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒருகாலத்தில் அமெரிக்கா சொல்வதை அப்படியே கேட்டு நடக்கும் நாடாக இருந்தது கியூபா. ஆனால் பிடல் கஸ்ட்ரோ அந்நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்றதும் கியூபாவின் போக்கு மாறியது. அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணியாத நாடாக மாறியது. 
(மேலும்....)

ஐப்பசி 30, 2011

சிதைந்தது லிபியா  ‘போரை’ நிறுத்துவதாக நேட்டோ அறிவிப்பு

சுதந்திர நாடான லிபியா மீது சர்வதேச சட்டங்கள் அனைத்தை யும் மீறி கொடிய போரை நடத்திய அமெரிக்காவும் அதன் தலைமை யிலான நேட்டோ படைகளும் தங்களது தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. லிபியாவில் கடாபி அரசிடமிருந்து அந்நாட்டு மக்களைக் காப் பாற்றப் போவதாகக் கூறி அமெரிக்காவும் நேட்டோ படைகளும் கடந்த மார்ச் 31ம் தேதி போரை துவக்கின. நேட்டோவின் 9,600 அதிரடித்தாக்குதல் படையினர் உட்பட சுமார் 26 ஆயிரம் படை யினர் பேரழிவு ஆயு தங்களை ஏந்தி லிபியா முழுவதையும் கடுமை யாகத் தாக்கினர். தலைநகர் திரிபோலி, கடாபியின் சொந்த நகரமான சிர்தே உள்பட நாடு முழுவதும் சுமார் 5,900 இடங்களில் குண்டு மழை பொழிந்து அந்நாட்டையே சல்லடையாக துளைத்தன.
(மேலும்....)

ஐப்பசி 30, 2011

Toronto Tamils try to rally international support

Tamils still suffer human rights violations two years after the civil war in Sri Lanka ended, protesters at Queen’s Park said Saturday. Tamil Canadians — joined by Occupy Toronto protesters — flooded Queen’s Park for the “Tamil Freedom Rally,” intended to renew the community’s call to social justice. “The United Nations’ report has come out saying there were war crimes and crimes against humanity committed during the last conflict,” said Krisna Saravanamuttu, spokesman for the National Council of Canadian Tamils. “During that time, 40,000 to 75,000 Tamils civilians were killed in four months alone. What we want to see is a lasting political solution for the island, so it doesn’t get drowned in war again.” (more...)

ஐப்பசி 30, 2011

எதிர்காலம் சோசலிசத்திற்கே! 

சர்வதேசக் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

எதிர்காலம் சோசலிசத்திற்கே, இத னை எவரும் மாற்ற முடியாது என்று சர்வ தேசக் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சார்பில் லெபனானில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். சிறந்ததோர் உலகம் குறித்து நாங்கள் கனவுகள் மட்டும் கண்டு கொண்டி ருக்கவில்லை. மனிதனை மனிதன், ஒரு தேசத்தை மற்றொரு தேசம் சுரண்டாத சிறந்ததோர் உலகத்தை உருவாக்குவதற் கான தொலைநோக்குப் பார்வையும் நம்மிடம் உண்டு. அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் மனிதகுலத் திற்குப் பொன்னான விடுதலை என்பது சோசலிச அமைப்பை நிறுவுவதன் மூலமே சாத்தியமாகும். (மேலும்....)

ஐப்பசி 30, 2011

தனது தாய் மண்ணிலேயே மரணமடைய கடாபி விரும்பினார்

லிபியாவை விட்டு தப்பி ஓடி மகிழ்ச்சியாக வாழ அநேக வாய்ப்புகள் இருந் தும் தனது முன்னோர்கள் வாழ்ந்த மண்ணிலேயே மர ணமடைய கடாபி விரும் பியதாக அவரது பாதுகாவ லர் மன்சூர் தவோ கூறி னார். கடாபியின் இறுதி நாட்களைப் பற்றி அசோ சியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், நாட்டை விட்டு தப்பிஓடி மகிழ்ச் சியாக கடாபி வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அதை அவர் விரும்பவில்லை என் றும் நிலைமையை அவர் சரியாக கணிக்கவில்லை தனது நாட்டு மக்களை அவர் மிகவும் அதிகமாக நம்பினார் என்று தவோ கூறினார். (மேலும்....)

ஐப்பசி 29, 2011

அமெரிக்க பேச்சுக்கள் குறித்து கூட்டமைப்பு எம்.பி.க்கள் திருப்தியாம்...?

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்புக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவும் பயன்தருபவையாகவும் அமைந்துள்ளன என்று த.தே.கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நான்கு எம்.பி.க்கள் கடந்த மூன்று தினங்களாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய எம்.பிக்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். ரொபட் ஓ பிளேக்கையும் இவர்கள் சந்தித்திருந்தனர். சந்திப்புக்கள் ஆரோக்கியமானவையாகவும், பயனுள்ளவையாகவும், அமைந்திருந்தன எனவும் இது குறித்து அறிக்கைவாயிலாக மக்களுக்கு அறியத்தருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 29, 2011

பிரபாகரனைத் தேடிக் கைது செய்ய இலங்கை அரசிற்கு உதவ விரும்பிய அமெரிக்கா - விக்கிலீக்ஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கோடு அமெரிக்காவில் முகாமிட்டுள்ளது. அமெரிக்கா எங்கும் அமெரிக்க அரசிற்கு எதிரன போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. நேற்று பலர் அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்டனர். தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஏகாதிபத்திய சார்புப் போராட்டமாகவே அது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒசாமா பின்லடன் கொலை செய்யப்பட்ட வேளையில் இலங்கையிலிருந்த அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபெர்ட் ஓ பிளேக் பிரபாகரனும் ஒசாமாவும் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருத்து வெளியிட்டார். கொழும்பு ரெலிகிராப் இணையம் விக்கிலீக்ஸ் ஆவணங்களிலிருந்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. இலங்கை அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்தியும் அதில் வெளியிடப்பட்டுள்ளது. பிரபாகரனை தேடிக் கைது செய்வதற்கு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளதாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்ப் பேசும் மக்களின் எதிரிகளுடனும் மனித குலத்தின் எதிரிகளுடனும் கைகோர்த்த மக்கள் விரோத அரசியல் இன்னும் தொடர்கிறது. அவ்வரசியலின் ஊதுகுழல்கள் மக்களை இன்னும் மாயைக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.

ஐப்பசி 29, 2011

 

காணி உரித்து பதிவு நடவடிக்கையினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை

இவர்கள் தங்களது சுயலாப அரசியல் காரணமாக மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள் என்பதற்கு யாழ். முத்திரைச் சந்தியில் யாழ். மாநகர சபையால் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் சங்கிலியன் சிலை தொடர்பான விடயம் இதற்கு நல்லதொரு உதாரணம். கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் காலத்தில் சங்கிலியன் சிலையை உடைத்து புத்தர் சிலை நிறுவப்போவதாக சொன்னார்கள். இப்போது அதே இடத்தில் அந்த சங்கிலியன் சிலை புதுப்பொலிவோடு எழுந்து நிமிர்ந்திருப்பதே தமிழ்த் தேசியக் கூடடமைப்பின்போலி அரசியலுக்கு சிறந்த சாட்சியமாகும். சங்கிலியன் சிலையை கடந்து செல்லும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தலை குனிந்தே செல்கிறார்கள் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். (மேலும்......)

ஐப்பசி 29, 2011

3 பேரினதும் தூக்குத் தண்டனையையும் நிறைவேற்ற வேண்டும் - மத்திய அரசு கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முரு கன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தர விட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்தது. இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு 11 ஆண்டுகளுக்குப் பின் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் தாக்கல் செய்த மனுவில் 11 ஆண்டுகள் காலதாமதமாக கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். ஆயுள் தண்டனை காலத்தையும் தாண்டி சிறையில் இருப்பதால் எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். (மேலும்......)

ஐப்பசி 29, 2011

'எண்ணெய்' புரட்சியில் வீழ்ந்த கடாஃபி!

(சமஸ்)

து இல்லை... நடனக் கூடங்கள் கிடையாது... வீதிகளில் கைகோத்த காதலர்களைப் பார்க்க முடியாது... பொது இடங்களில் பெண்கள் பேசுவதுகூட குற்றம். ஆனால், மேற்கத்தியப் பாலியல் படங்களைப் பார்க்க, இணையதள மையங்களில் நிரம்பி வழியும் இளைஞர்கள்... இதுதான் லிபியா! மம்மர் கடாஃபியின் ஆட்சியில் ஒரு புறம் மக்களின் சுதந்திரமும் ஜனநாயகமும் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்த நிலையில்... மறுபுறம் அவர்கள் உலக நாடுகளை வேட்கையோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். கடாஃபி ஒவ்வொரு லிபியனுக்கும் கல்வி முதல் கழிப்பறை வரை எல்லா வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், அவர்களிடம் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டார். அவற்றைக் கேட்டவர்களுக்கு மரணத்தை மட்டுமே அவர் பதிலாக அளித்தார். ''இந்தப் புவிக்கோளத்தில் ஜனநாயகம் என்பது எங்குமே இல்லை, லிபியா நீங்கலாக!'' என்றார். (மேலும்......)

ஐப்பசி 29, 2011

From 1st January 2012, all foreign passport holders would require to obtain a visa prior to entry into Sri Lanka.

The process is simple and the cost is just US$50 as a standard for all countries for processing the visa prior to arrival. Those who arrive at the airport without a prior visa could obtain so at the port of arrival for US$75! However, Singaporeans and Maldivians are not required to have a visa prior to arrival (to reciprocate their kindness). The Visa could be obtained as follows: (more...)

ஐப்பசி 29, 2011

புலிகளைப் பற்றி புலிகளே சொல்லுகின்றார்கள்

வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றும் புலிகள் யாரையும் விட்டு வைக்கவில்லை.

(விவரணப் படத்தைப் பார்க்க...)

ஐப்பசி 29, 2011

உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பேர்த் நகரில் எடுத்துக்கொண்ட படம். இரண்டாவது எலிசபெத் மகாராணியும் படத்தில் காணப்படுகிறார்

ஐப்பசி 29, 2011

புலி உறுப்பினர்கள் 10,300 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், எஞ்சிய எழுநூறு பேரும் சில வாரங்களில் விடுதலை

முன்னாள் புலி உறுப்பினர்களில் 700 பேர் மட்டுமே புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சி உள்ளதாகவும் இன்னும் சில வாரங்களில் அவர்களையும் விடுதலை செய்ய உள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் கூறியது.இவர்களில் 74 பேர் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்ற உள்ளதால் அதற்கான வசதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சந்தன ராஜகுரு தினகரனுக்குத் தெரிவித்தார். இது தவிர தீபாவளியை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் 38 பேரும் டிசம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகும். சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ளனர். 11 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பி னர்களில் இதுவரை 10,300 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 700 பேருக் கும் வவுனியா வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் இந்நடவடிக்கை கள் முடிவடைந்த பின்னர் சமூகமயப்படுத்த உள்ளதாகவும் ஆணையாளர் கூறினார்.

ஐப்பசி 29, 2011

தூரப்பயணங்களுக்கு புதிய பஸ் சேவை

புதிதாக 425 அரை சொகுசு மற்றும் சொகுசு பஸ் வண்டிகளை போக்கு வரத்தில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தூரப் பயணங்களுக்காக அடுத்த மாதம் முதல் புதிதாக 400 அரை சொகுசு பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட் டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் எம். டீ. பந்துசேன தெரிவித்தார். புதிதாக போக்குவரத்து முறைமை யில் சேர்க்கப்படவுள்ள 25 சொகுசு பஸ் வண்டிகளை ஜனவரி மாதத்திலிருந்து போக்குவரத்தில் ஈடுபடுத்த உள்ளதாகவும், அவை காலி வீதி, கண்டி வீதி, ஹைலெ வல் வீதி, நீர்கொழும்பு வீதி, ஜயவர்தனபுர, கடுவளை வீதி என்பவற்றில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஐப்பசி 29, 2011

வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணி; ஜப்பான் நிதியுதவி

வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் மேலதிக நிதியுதவி அளிக்கவுள்ளது. டீ. ஏ. எஸ். எச். எனும் கண்ணிவெடி அகற்றும் அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இந்நிதியுதவி தொடர்பாக ஜப்பான் தூதரகத்துக்கும், டீ. ஏ. எஸ். எச். நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்த மொன்று எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது. வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முக்கியத்துவத்தை அறிந்தே நிதியுதவி வழங்கவிருப்பதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது. அதேநேரம், வடபகுதியில் முன்னெ டுக்கப்படும் மீளிணைவு மற்றும் நல்லிணக்கப் பணிகளுக்கு 122 மில்லியன் ஜப்பான் யென்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது. குடியகல்வுக்கான சர்வதேச நிறுவனத்தில் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்பட வுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐப்பசி 29, 2011

நடிகை மனோரமா வைத்தியசாலையில்

பிரபல நடிகை மனோரமா முழங்கால் வலி காரணமாக முன்பு சத்திர சிகிச்சை செய்துகொண்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை. வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் குளியலறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்தார். அதில் அவருடைய தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சேர்த்தார்கள். வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஐப்பசி 29, 2011

சைவ உணவு மாரடைப்பை குறைக்கும்

ஜாதகம் பார்த்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பார்கள் ஜோதிடர்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம் அல்லது அவர்கள் சொல்வது பொய்த்தும் போகலாம். ஆனால் ஒரு மனிதனின் உடலில் உள்ள மரபணுவில் (ஜீன்) பதிவாகி இருக்கும் தகவல்கள் பொய்த்துப்போகாது என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்து. அதாவது, ஒருவரின் மரபணுக்கள் அவரது பெற்றோர் மூலம் தலைமுறை தலைமுறையாக வருவதாகும். தாத்தா - தந்தை - மகன் என்று தலைமுறை தகவல்கள் மரபணுக்களில் தொடர்ந்து பதிவாகிக்கொண்டே இருக்கும். தந்தைக்கு இருதய நோய் இருந்தால் அது மகனுக்கும் வரும் வாய்ப்புகள் மிக அதிகம். (மேலும்...)

ஐப்பசி 29, 2011

கைப்பற்றுவோம் போராட்டங்கள்  புதிய பரிமாணம் எடுக்கிறது முதலாளித்துவ எதிர்ப்பு! 

காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பொது வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் தரப்பில் பேசிய கேட் புரூக்ஸ், அடக்குமுறை மிகவும் கொடூரமானது. அதனால் அடுத்த கட்டமாக வேலைநிறுத்தம் செய்யப் போகிறோம். யாரும் பணிக்கு செல்ல மாட்டார்கள். மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல மாட்டார்கள். ஒட்டுமொத்த நகரமே வெறிச்சோடிக் கிடக்கும் என்று கூறுகிறார். அடுத்த வாரத்தில் இந்த வேலை நிறுத்தம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்...)

ஐப்பசி 28, 2011

கூட்டமைப்புடனான சந்திப்பு

அமெரி்க்க அரசாங்கம் வழமையாக முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளின் ஒரு கட்டமாகும்.

அரசியல் பிரதிநிதிகளுடன் அமெரி்க்க அரசாங்கம் வழமையாக முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளின் ஒரு கட்டமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பும் அமைகிறது என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் உள்ளிட்ட அமெரிக்க அரசாங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவிக்கிறது.  அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க பிரதிநிதிகளுக்குமிடையே நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது இவ்வாறிருக்க, இதுவரை நடந்த சந்திப்புக்கள் மிகவும் திருப்தியானதாகவும் பயன்தரக் கூடியதாகவும் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசப்பட்ட விடயங்கள் குறித்து நாளை அறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.

ஐப்பசி 28, 2011

திருமலையில்

தமிழரின் தானைத்த தலைவரே தமிழரின் காணிகளை அபகரிக்கும் கொடுமை

ஒரு உண்மை சம்பவத்தின் பதிவு இது

(திருமலை அமுதன்‏)

இறுதியில் தொலைபேசியில் சம்பந்தன் ஐயாவை பிடித்துவிட்டனர். சம்பந்தன் ஐயா மிகத் தெளிவாகப் பேசினார். யோகராசாவை நான்தான் அனுப்பினனான், அந்தக் காணியின் உறுதிப் பத்திரம் என்னிடம்தான் இருக்கிறது. நீங்கள் எனக்குத் தெரியாமல் அதுல அத்துமீறி வீடுகட்டியிருகிறீர்கள். இதில வேறு யாராவது வீடு கட்டியிருந்தால் நடக்கிறதே வேற. சரி நீங்கள் எல்லாம் தமிழர்களா இருக்கிறபடியால் உங்களுக்கே அந்தக் காணியத் தாறன். நீங்கள் ஒரு பேர்ச்சுக்கு 25,000 ரூபா தாருங்கோ! எனக்கு திருகோணமலைக்கு வாறதுக்கு நேரமில்லை. சட்டத்தரணிகளும் அங்க இல்ல. அதனால் நீங்கள் அந்தக் காசை எனது வங்கியில் கட்டிப் போட்டுச் சொல்லுங்கோ. நான் உறுதி முடிச்சுத் தாறன்” என்ர சட்டத்தரணிகள் எல்லாரும் கொழும்பில்தான் இருக்கினம். காசு குடுத்தால் உறுதி முடிச்சு தாறன் சும்மா என்னத் தொல்லைப் படுத்தாதேங்கோ என்று கூற, எந்த வங்கியில் ஐயா காசைப் போடுறது? என்று கேட்டதற்கு எந்த வங்கியில என்றாலும் போடுங்கோ எனக்கு எல்லா வங்கியிலயும் எக்கவுண்ட் இருக்கு என்று கூறி தொப்பென வைத்தாராம் தொலைபேசியை! (மேலும்....)

ஐப்பசி 28, 2011

பொதுநலவாய நாடுகளின் கூட்டத்திற்காக மகிந்த

ஐப்பசி 28, 2011

காணி உரித்து பதிவு நடவடிக்கையினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை

(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் 2011.10.21 ஆம் திகதி ஆற்றிய உரை.)

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இந்தக் காணி உரித்துப் பதிவு நடவடிக்கை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அச்சமூட்டப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பெயரில் இருக்கும் காணி கள் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் திட்டமிட்ட வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற மூத்த தலைவர்கள் சிலர் கடந்த காலங்களில் தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தி தனியார் மற்றும் அரச காணிகளை பலாத்காரமாகவும் கபடத்தனமாகவும் அபகரித்த குட்டு அம்பலப்பட்டு விடும் என்று அஞ்சியும் தங்களது சுயலாப அரசியலுக்காகவும் இப்படி யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதுடன் தமது சுயலாப எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே இந்த சபையின் ஊடாக நான் புலம்பெயர்ந்து வாழும் எம் தமிழ் பேசும் உறவுகளுக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்த விரும்பு கின்றேன். (மேலும்....)

ஐப்பசி 28, 2011

கடாபி கொல்லப்பட்டது எப்போது ? (பகுதி 1)

(சபா நாவலன்)

லிபிய அதிபர் கேர்ணல் முவமர் கடாபி கொல்லப்படுவிட்டார். இது வரைக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன்பெறாத நாடாகத் திகழ்ந்த லிபிய அதிபர் மேற்கின் சூழ்ச்சியால் அவர் பிறந்த நகரத்தின் தெருக்களில் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று போடப்பட்டுள்ளார்.  ஆபிரிக்காவின் சிங்கமாகவும், கொடூரமான இத்தாலிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து யுத்தம் செய்த ஒமார் முக்தாரின் மறு அவதாரமாகவும் தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கடாபியின் முடிவு ஏகாதிபத்தியங்களை இன்னொரு முறை உலக மக்களுக்கு நிர்வாணமாகக் காட்டியுள்ளது. 1969 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளில் கைப்பொம்மை போன்று செயற்பட்ட லிபிய அரசை சதிப் புரட்சியின் ஊடாக வீழ்த்தி ஆட்சிக்கு வந்தவர் கடாபி. அவ்வேளையில் வட ஆபிரிக்காவில் மிகப் பெரும் அமரிக்க இராணுவத் தளம் அமைந்திருந்த நாடு லிபியா. லிபியாவை 1971 வரைக்கும் இராணுவத் தளமாக உபயோகிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கு சார்பு அரசிற்கும் அமரிக்காவிற்கும் கைச்சாத்தானது. ஏவுகணைகளை பரீட்சிப்பதற்கும், எரி குண்டுகளைப் பிரயோகிப்பதற்கும் அழிவு ஆயுதங்களை வட ஆபிரிக்க நாடுகளில் வினியோகிப்பதற்கும் இப் பயிற்சித் தளம் அமரிக்க அரசால் பயன்படுத்தப்பட்டது. 1970 இல் கடாபி அரசால் அமரிக்கா அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 28, 2011

முன்னாள் போராளிகள் 700 பேர் விரைவில் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 700 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் இவர்கள் சமூகமயமாக்கப்படவுள்ளனர். தற்போது அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரப் பயிற்சிகள் வவுனியா மற்றும் வெலிகந்த முகாம்களில் வழங்கப்பட்டு வருகின்றன. அதே நேரம் நீதிமன்ற உத்தரவின் கீழ் 100 பெண்களும் முகாம்களில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐப்பசி 28, 2011

யாழ். பல்கலை மாணவர்களின் பகிஷ்கரிப்பு முடிவடைந்துள்ளதாக அறிவிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் யாழ். கல்வி சமூகப்பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றுடன் முதல் தமது வகுப்பு பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. யாழ்; பல்கலைக்கழக மாணவர் சமூகம் கடந்த 10 நாட்களாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது. இது தெடர்பாக மாணவர் ஒன்றியம் இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'கடந்த 17.10.2011 முதல் மாணவர்களால் மேற் கொள்ளப்பட்டு வந்த வகுப்பு பகிஷ்கரிப்பு போரட்டமானது இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. கடந்த இரண்டு வாரங்களாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறு வலியுறுத்தி மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் யாழ். கல்வி; சமூக பிரதிநிதிகள் குழு மாணவர் ஒன்றியத்திற்கு ஒரு வேண்டு கோளை விடுத்திருந்தது. அதாவது, மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை இடைநிறுத்தி விரிவுரைகளுக்கு செல்லுமாறு கோரி இருந்ததற்கு அமைவாகவும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கவும், எமது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தொடர் பகிஷ்கரிப்பால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் இப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதற்கு யாழ்.கல்வி; சமூக பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்ததினாலும், எமது விரிவுரை பகிஷ்கரிப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குத் தீர்மானித்துள்ளோம். எனவே எதிர்வரும் 31 ஆம் திங்கட் கிழமையில் இருந்து மாணவர்களை விரிவுரைகளுக்கு சமூகம் அளிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு எமது பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மாணவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம

ஐப்பசி 28, 2011

நாகேஷ் சில நினைவுகள்...

(இரா.சரவணன்)

''நெஞ்சில் ஓர் ஆலயம் படம் ஆரம்பிச்சப்ப ஏற்கெனவே வாய்ப்பு கேட்டுப் போயிருந்த நாகேஷை வரச் சொன்னேன். குழந்தையைக் காணாமல் கம்பவுண்டர் தேடுற காட்சிக்கு ஒத்திகை பார்த்தோம். அந்த கேரக்டரில் நடிக்க வேண்டிய ராமாராவ் வரவில்லை. அதனால், நாகேஷை நடிக்க வெச்சோம்.   படுக்கைக்குக் கீழே குனிந்து குழந்தையைத் தேடுவதுதான் காட்சி. ஆனால், நாகேஷ் என்ன செய்தார் தெரியுமா? பெட்டில் கிடந்த தலையணையைத் தூக்கிப் பார்த்தார். பெட்டுக்கு அருகே இருந்த டிராயரைத் திறந்து பார்த்தார். குழந்தையைக் குழந்தைத்தனமாகவே அவர் தேடிய காட்சி ஸ்பாட்டில் எல்லாரையும் சிரிக்கவைத்துவிட்டது. கல்யாண்குமார் அழைத்தவுடன் வேகமாக படிக்கட்டில் நாகேஷ் இறங்கி வர வேண்டும். நடிப்பு தத்ரூபமாக வருவதற்காக படிக்கட்டில் விழுந்து புரண்டு ஓடினார். என் சம்மதம் இல்லாமல் கேரக்டர்கள் எதையும் செய்ய அனுமதிக்க மாட்டேன். ஆனால், நாகேஷுக்கு மட்டும் நான் எல்லா சுதந்திரத் தையும் கொடுத்தேன். காரணம், நான் நாகேஷின் ரசிகன்!'' - ஸ்ரீதர் சிலாகித்துச் சொன்ன வார்த்தைகள் அப்படியே இன்றும் மனதுக்குள் ரீங்கரிக்கின்றன.(மேலும்....)

ஐப்பசி 28, 2011

Sri Lanka

A religious preacher and a financial wizard reportedly helped the LTTE prosper - The Pioneer

Two events over the last fortnight: the deportation by India of the Sri Lankan Tamil Catholic priest, Fr SJ Emmanuel, to Dubai, when he arrived at Chennai; and the sentencing of Sri Lankan hedge fund billionaire Raj Rajaratnam to 11 years imprisonment for insider trading on Wall Street, by the US Federal district court, have uncovered the role of the Catholic Church in fostering Tamil separatism in Sri Lanka, states The Pioneer. The website further says, Fr Emmanuel is the president of the UK-based Global Tamil Forum (GTF), a leading LTTE front and umbrella organization for the Sri Lankan Tamil Diaspora groups. The Sunday Observer from Canada reported that Emmanuel had recently visited Canada and Europe to raise funds and mobilize pro-LTTE groups to stoke anti-Colombo propaganda in the West. But now, moderate sections of the Diaspora are questioning Fr Emmanuel’s role in radicalizing Tamil youth while not utilizing the millions of dollars collected through donations to help resettle and rehabilitate former LTTE cadres. (more...)

ஐப்பசி 28, 2011

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பத்து பாரிய அபிவிருத்தி திட்டங்கள் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றன. ‘இளைஞர்களுக்கான நாளைய’ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களை உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கவுள்ளார்.  ‘வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் ஊடாக வட மாகாண சபையினால் மாங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவு கட்டடம், மாங்குளம் வைத்தியசாலையின் ஆண், பெண் வார்ட், டாக்டர்கள், மருத்துவ மாது விடுதிகள், துணுக்காய் வலய கல்வி அலுவலகம், ஒட்டுசுட்டானில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் உதவி அலுவலகம், ஒட்டுச்சுட்டான் பிரதேச வைத்தியசாலை, டாக்டர்கள் விடுதி, கரைத்துறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் பிரிவின் வைத்தியசாலை, டாக்டர் விடுதி என்பன உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன. இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட பல்வேறு கட்டடங்களும் நேற்று திறந்து வைக்கப்பட்டன.

ஐப்பசி 28, 2011

10 countries with the lowest gas prices

In recent years, drivers have felt it each time they pull into a gas station: a sudden pang in the heart, and a low whimper sounding from their wallets.One gallon of gas in the United States cost $3.417 US on Oct. 10 — a bit over 90 cents Canadian per litre. That's significantly off the $4 US or more American drivers have had to shell out in recent years. It's not that way everywhere. In fact, in some countries gas is given away or downright cheap. The list of countries where you can find the cheapest gas at the pump:

  1. Venezuela (7.6 cents US/G or 2 Canadian cents per litre)
  2. Iran (37.9 cents US/G or 10 Canadian cents per litre)
  3. Saudi Arabia (60.6 cents US/G or 16 Canadian cents per litre)
  4. Libya (64.4 cents US/G or 19 Canadian cents per litre)
  5. Qatar (71.9 cents US/G or just over 19 Canadian cents per litre)
  6. Bahrain (79.5 cents US/G or 21 Canadian cents per litre)
  7. Turkmenistan (83.3 cents US/G or 22 Canadian cents per litre)
  8. Kuwait (87.1 cents US/G or 23 Canadian cents per litre)
  9. Oman ($1.173 US/G or 31 Canadian cents per litre)
  10. Algeria ($1.211 US/G or 32 Canadian cents per litre)

(more....)

ஐப்பசி 28, 2011

லிபிய இடைக்கால அரசு மீது போர்க்குற்ற வழக்கு

போரில் கடாபி கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக கடாபி குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடாபி குடும்பத்தினர் சார்பில் அவர்களது வழக்கறிஞர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போர்ஸ்டன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். லிபியாவில் புரட்சிப் படையினர் நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். லிபிய ஜனாதிபதி கடாபி மற்றும் அவரது மகன் ஆகியோர் அவரது சொந்த ஊரான சிர்த் நகரில் கொல்லப்பட்டனர். கடாபி குடும்பத்தினர் பலர் தற்போது நாட்டை விட்டு தப்பி சென்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.லிபியாவில் புரட்சிப் படையினர் ஆரம்பத்தில் இருந்தே போர் குற்றங்களை புரிந்து வந்துள்ளனர். போர்க்குற்றத்தை மீறி ஏராளமான இராணுவ வீரர்களையும் அப்பாவிகளையும் கொன்று குவித்துள்ளனர். கடாபி மற்றும் அவரது மகன் கொல்லப்பட்டதும் போர் குற்றங்களுக்கும். எனவே இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றம் வழக்கு தொடர இருக்கிறோம். இதற்கிடையே நகர பகுதிகளில் இருந்து தப்பி சென்ற கடாபி ஆதரவு இராணுவத்தினர் லிபியாவின் தெற்கு பாலைவன பகுதியில் பதுங்கி உள்ளனர். எனவே அவர்களை வேட்டை யாட புரட்சிப்படையினர் அந்த பகுதியை நோக்கி சென்றுள்ளனர்.

ஐப்பசி 28, 2011

ஏ.ஆர்.ரகுமானுக்கு மீண்டுமொரு சர்வதேச விருது

சர்வதேச அளவில் தொடர்ந்து விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், மற்றுமொரு விருதைப் பெற்றிருக்கிறார். 127 அவர்ஸ் என்ற படத்திற்கு அவர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுக்கான போட்டியில் பங்கேற்றது. இதில் பொதுமக்கள் தேர்வு செய்யும் விருது ரகுமானுக்குக் கிடைத்திருக்கிறது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள் மற்றும் இரண்டு கிராமி விருதுகளை ஏ.ஆர்.ரகுமான் பெற்றிருக்கிறார். 127 அவர்ஸ் திரைப்படத்திற்காகவும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் பெல்ஜியத்தில் நடைபெறும் சவுண்ட் டிராக் அகாடமி விருதுக்கான பரிந்துரை கிடைத்தது. அதில் பொதுமக்கள் தேர்வு செய்யும் விருது கிடைத்துள்ளது. இந்த விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ரகுமான் கூறியுள்ளார்.

ஐப்பசி 28, 2011

கடாபி மகன் சைப் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைய தயார்

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐ.ஐ.சி) சரணடைய தயாராக இருப்பதாக லிபிய இடைக்கால அரசு அறிவித்துள்ளது. இதற்காக அவர் மூன்றாம் தரப்பிடம் தமது பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் கேட்டுள்ளதாகவும் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டியே இடைக்கால அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதில் கடாபி அரசின் உளவுப் பிரிவு தலைவராக இருந்த அப்துல்லா அல் சனூசியும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைய தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் முஅம்மர் கடாபி அரசின் முக்கிய பிரமுகர்களான உளவுப் பிரிவு தலைவர் அப்துல்லா அல் சனூசி மற்றும் சைப் அல் இஸ்லாம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. இதில் 39 வயதான சைப் அல் இஸ்லாம் முஅம்மர் கடாபியின் வாரிசாக கருதப்பட்டவராவார். இவர்கள் இருவருக்கும் எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.(மேலும்....)

ஐப்பசி 28, 2011

மீனிலிருந்து பிறந்தவன் மனிதன்?

குரங்கிலிருந்து பிறந்தவர்கள் நாம் என்று பொதுவாகக் கூறுவதுண்டு. ஆனால் மீனிலிருந்து தோன்றியவர்கள் மனிதர்கள் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். கடல்வாழ் மீன்களின் இடுப்புப் பகுதி துடுப்புகள் எவ்வாறு பெரிய விலங்குகளில் பின்புறக் கால்களாகப் பரிணாமம் அடைந்துள்ளது என்று தாங்கள் கண்டுபிடிதிருப்பதாகக் கூறுகிறார்கள் அவர்கள். அவுஸ்திரேலியாவில் மோனாஷ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீட்டர் கர்ரி, சிட்னி பல்கலைக்கழகத்தின் டாக்டர் நிக்கோலஸ் கோலே தலைமையிலான ஆய்வுக் குழுவினர் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூறுகையில், 'டெட்ராபாட்' எனப்படும் நான்கு கால் விலங்கினங்கள் மனிதனின் 'தூரத்துச் சொந்தமான' உயிரினங்களுடன் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாகக் கடலிலிருந்து நிலப்பரப்பில் காலடி வைத்திருக்கின்றன என்ற கருத்துக்கு தங்கள் கண்டுபிடிப்பு வலுச் சேர்ப்பதாக உள்ளது என்கின்றனர். தங்கள் ஆராய்ச்சியின்படி, மீனின் மரபியலுக்கும் மனிதனின் மரபியலுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்று தெரியவந்திருப்பதாகக் கூறுகிறார், பேராசிரியர் கர்ரி.

ஐப்பசி 28, 2011

இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் துணையுடன் எதிர்ப்புக்களுக்கு நாம் வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும்

இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் ஏகாதிபத்தியவாதிகளும் எல். ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு துணை புரியும் சில அடிவருடிகளும் மேற்கொண்டு வரும் துஷ்பிரசாரங்களுக்கு தக்கபதிலடி கொடுக்கக் கூடிய வகையில் இலங்கையின் நட்பு நாடுகளான இந்தியா, சீனா, பாகி ஸ்தான் ஆகியன உதவியும் உறுதுணையும் புரிந்து வருவது பாராட்டுக் குரிய ஒரு விடயமாகும். பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் கலந்து கொள்ளும் அடு த்த உச்சிமாநாட்டை 2013ல் இலங்கையில் நடத்துவதற்கு முன்னர் இல ங்கை அரசாங்கம் தனது மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பான உண்மை நிலையை ஒழிவுமறைவற்ற முறையில் முழு உலகத்திற்கும் காண்பிக்கக்கூடிய வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டு மென்றும், அதுவரை அந்த உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவது என்ற தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்றும், அவுஸ்திரேலியா வின் சில அரசியல் பிரிவுகளும், கனடாவும் கருத்து தெரிவித்திருப்பது தொடர்பாக அவுஸ்திரேலியாவில் வைத்து இந்திய வெளியுறவு செயலா ளர் ரஞ்சன் மதாயிடம் ஊடகவியலாளர்கள் வினா எழுப்பிய போது அவர் இலங்கையில் 2013ம் ஆண்டில் பொதுநல அமைப்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்துவதில் எவ்வித மாற்ற மும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். (மேலும்....)

ஐப்பசி 27, 2011

சுதர்சன் நாச்சியப்பன் குழு யாழ் விஜயம  

இந்திய காங்கிரஸ் கட்சி பிரமுகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன். மேற்குலக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சகிதம் யாழ்ப்பாணம் வந்துள்ள அவர் பல இடங்களையும் சுற்றிப்பார்த்திருந்தார். யாழ்.செயலகத்திற்கும் குழுவினருடன் விஜயம் செய்த அவருக்கு வழமை போலவே அரச அதிபர் இமெல்டா சுகுமார் புள்ளி விபரங்கள் சகிதம் இலங்கையை அரசின் வடக்கிற்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கி கூறியிருந்தார். எனினும் அங்கு குறுக்கிட்டு பேசிய யாழ்.மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உண்மை அவ்வாறில்லை என நிராகரித்தார். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வகுப்புக்களை பகிஸ்கரித்து வருகின்றனர்.என்றார். குறிப்பாக இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் எந்த மாற்றமும் இன்றி தொடர்கின்றது. இதை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் இரு அரசுகளாலும் எடுக்கப்படவில்லையென்றார். இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் தொடர்பினில் இரு தரப்பு மீனவர்களும் ஒன்று கூடி பேசுவதை தவிர வேறு வழிகளில்லை எனத்தெரிவித்த சுதர்சன நாச்சியப்பன் தம் நாட்டு மீனவர்களோ சிங்கள மீனவர்கள் தம்மை தாக்குவதாக குற்றஞ்சாட்டி வருவதாக தெரிவித்தார்.குழுவினர் குடாநாட்டின் மக்கள் அண்மைக்காலங்களில் குடியமர்ந்த கிராமங்கள் சிலவற்றையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

ஐப்பசி 27, 2011

கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்தது எதற்காக?

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்து சுமார் இரண்டரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் அடிப்படைப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை. தீர்வுக்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதிலும் இதுவரை எந்தவொரு தீர்வும் இல்லை. அதேபோல போரால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பக்கூடிய நிலையும் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் முடியுமானவரை பேச்சுவார்த்தை மூலம் நாம் உரிய தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை காலமும் இந்தியா உடனேயே ஈழத்தமிழர்கள் தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் தமிழர்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு கூட்டமைப்பு அமெரிக்கா செல்வது இதுவே முதற் தடவையாகும் என்பதுடன் முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றாகவும் கருதப்படுகின்றது. (மேலும்...)

ஐப்பசி 27, 2011

நொக்கியா விண்டோஸ் கையடக்கத்தொலைபேசிகள் அறிமுகம்: மாற்றம் கைகொடுக்குமா?

 

கையடக்கத்தொலைபேசிகளின் ஜாம்பவானாக வர்ணிக்கப்பட்ட நிறுவனம் நொக்கியா. எனினும் அப்பிளின் ஐ போன் மற்றும் அண்ட்ரோயிட் கையடக்கத்தொலைபேசிகளின் வருகைக்கு பின்னர் இது வீழ்ச்சியடைந்தது. தன்னை சந்தையில் நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை இது மேற்கொண்ட போதும் பயனளிக்கவில்லை. 'சிம்பியன்' இயங்குதளத்தினை பெரும்பாலும் சார்ந்திருந்தமையும்,பாவனையாளர்கள் அப்பிளின் ஐ போன் மற்றும் அண்ட்ரோயிட் கையடக்கத்தொலைபேசிகளை நோக்கி கவர்ந்திழுக்கப்பட்டமையும் நொக்கியாவின் வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களாகக் கருதப்பட்டன. (மேலும்...)

ஐப்பசி 27, 2011

கச்சத் தீவு தீர்மானம், செல்லவே செல்லாது!

 

(குள.சண்முகசுந்தரம்)

மிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களுக்கு உண்மை யிலேயே முடிவுரை சொல்வதற்கான முன்னுரையை எழுதி இருக்கிறது மதுரை உயர் நீதிமன்றம்! பொதுப் பிரச்னைகளுக்காக நீதிமன்றப் படிகள் ஏறிப் போராடி வரும் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரி, கடந்த மார்ச் மாதம் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். மத்திய கேபினெட் செயலர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், இந்திய ராணுவச் செயலர், கடலோரக் காவல் படைத் துணை இயக்குநர், வெளியுறவுத் துறை அமைச்சகச் செயலர், தமிழகத் தலைமைச் செயலர் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது, அந்த மனு.  (மேலும்...)

In an exclusive interview, Raj Rajaratnam reveals his surprising motivations—and the reasons he didn’t take a plea that could have saved him from 11 years in jail.

It was 6 a.m. on Oct. 16, 2009, and Raj Rajaratnam, head of the Galleon Group hedge fund, was at home on his exercise bike looking out over Manhattan’s Turtle Bay, thinking about how many shirts he would have to pack for his trip to England that day. He was to go there to launch a $200 million fund to invest in the Sri Lankan stock market, in which he, the richest Sri Lankan on the planet, was the biggest single investor. At 6:30 his doorbell rang. He answered it to find a number of policemen and men in suits outside. An FBI agent named B. J. Kang told him he was under arrest for insider trading. There were five other agents with him, come to collect Rajaratnam. They asked if he had a gun, if he had drugs on the property. For a moment he was afraid they would plant something. (more...)

ஐப்பசி 27, 2011

ஏகாதிபத்தியத்திடம் வீழ்ந்த ‘சர்வ’ அதிகாரம்!

செப்.1, 1969-ல் ஒரு சின்ன ராணுவக் குழுவின் உதவியுடன் அரண்மனையை முற்றுகையிட்டு, ரத்தம் இல்லாப் புரட்சியின் மூலம், மன்னர் இத்ரியாஸின் கொடுமையான ஆட்சியில் இருந்து லிபியாவை விடுவித்தபோது, லிபிய மக்கள் தங்கள் மீட்பராக கடாஃபியைப் பார்த்தார்கள். உலகின் 2 சதவிகித எண்ணெய் வளத்தைப் பெற்று இருக்கும் லிபியாவில் அமெரிக்க, ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, தேசிய எண்ணெய்க் கழகத்தின் கீழ் லிபிய எண்ணெய் வர்த்தகத்தைக் கொண்டுவந்தபோது, முதலாளித்துவ நாடுகள் சிம்ம சொப்பனமாக கடாஃபியைப் பார்த்தார்கள். பாலஸ்தீன விடுதலைக் குழுக்களில் தொடங்கி, அயர்லாந்து விடுதலைக் குழுக்கள் வரை உலகின் பல ஆயுதக் குழுக்களுக்கும் வெளிப்படையாக அவர் ஆதரவு அளித்தபோது, போராளிகள் ஆப்பிரிக்காவின் சே குவாராவாக கடாஃபியைப் பார்த்தார்கள். சின்ன தொழில்கள் தனியார் வசமும் பெரிய தொழில்கள் அரசின் வசமும் இருக்க வேண்டும் என்பது அவருடைய முக்கிய மான பொருளாதார வியூகம். அது அவருக்கு வெற்றியைத் தந்தது என்றே சொல்ல வேண்டும். அதனால்தான், 2010-ல்கூட லிபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.6 சதவிகித வளர்ச்சியை அவரால் உருவாக்க முடிந்தது! (மேலும்...)

ஐப்பசி 27, 2011

Diwali Mood Returns To Sri Lanka Tamils

Tamils in northern Sri Lanka, once displaced and suffered in civil conflict, ushered the festival of lights today, slowly burying a painful 30-year-old violent past. Some 300,000 Tamils who once criss-crossed war zones, struggled in government-run camps and finally returned to their devastated homeland are now rejoicing Diwali in peace. Tamils numbering nearly two million all over Sri Lanka, joined millions in South Asia to celebrate the glittering festival, most auspicious day in the Hindu calendar. (more...)

ஐப்பசி 27, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தின் முக்கியத்துவம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளது. இந்தப் பயணமானது தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகின்றது. இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க பயணத்திற்கு அரசாங்கத் தரப்பில் சிலர் தமது எதிர் கருத்துகளை தெரிவிக்கின்றனர். சுமார் 30 வருட கால யுத்தத்தின் பின்னர் தமக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாலும், அரசியல் கட்சித் தலைவர்கள் பலராலும் அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்திய போதும் அரசாங்கம் ஒரு சரியான தீர்வை இது வரையில் பெற்று தராமல் ஒவ்வொரு பேச்சுவார்த்தை முடிவிலும் ஏதோ சில காரணங்களைக் கூறி தமது பேச்சு வார்த்தைகளை முடித்தது. (மேலும்...)

ஐப்பசி 27, 2011

2013 பொதுநலவாய மாநாடு

உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றமில்லை

பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் அடுத்த உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முடிவெடுக்கப்பட்டிருப்பதனால் இப்போதைக்கு அடுத்த உச்சிமாநாடு நடக்கும் இடம் பற்றிய சர்ச்சைக்கு இடமில்லையென்று இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மதாய் அறிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை சந்தித்து அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார செயலாளர், 2009ம் ஆண்டிலேயே பொதுநல அமைப்பு நாடுகளின் அரசாங்கத்தலைவர்களின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டதை ஞாபகப்படுத் தினார். இது குறித்து ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதனால், இந்த விடயத்தை மீண்டும் பரிசீலனைக்கு எடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறினார். (மேலும்...)

ஐப்பசி 27, 2011

மட்டு. சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரத போராட்டம் முடிவு

மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த சில கைதிகள் நேற்றுக் காலை கூரையைவிட்டு இறங்கி தமது உண்ணாவிரதத்தை கைவிட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு நேற்று காலை விஜயம் செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிபதி எம். அப்துல்லா கூரையின்  மேல் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டி ருந்த கைதிகளுடன் உரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார். உரிய அதிகாரி களுடன் கலந்துரையாடி இப்பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி தெரிவித் ததையடுத்து கூரையின் மேல் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் கூரையிலிருந்து இறங்கி தமது உண்ணா விரதத்தை கைவிட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சுகயீனம் காரண மாக உயிரிழந்த விளக்கமறியல் கைதியின் மரணம் தொடர்பான விசாரணை நடாத்த  சாலைக்கு வாரத்தில் ஒரு தடவை வரும் வைத்தியரை வாரத்தில் இரண்டு நாட்கள் வரச் செய்வதுடன் அவ் வைத்தியரை மாற்றி வேறு ஒரு வைத்தியரை நிய மிக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முப்பதுக்கு மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 27, 2011

கியூபா மீதான பொருளாதார தடை

அமெரிக்காவுக்கு ஐ.நா.வில் தொடர்ந்து 20 ஆவது ஆண்டாக கண்டன தீர்மானம்

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைக்கு எதிராக ஐ.நா. பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்திற்கு தொடர்ச்சியாக 20 ஆவது ஆண்டாகவும் அதிக பெரும்பான்மை வாக்கு கிடைத்துள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்ட இந்த கண்டன தீர்மானத்திற்கு 186 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பொதுச்சபையில் அமெரிக்காவோடு இஸ்ரேல் மாத்திரமே இதற்கு எதிராக வாக்களித்தது. மிக்ரோனே ஷியா, மார்ஷல் தீவுகள் மற்றும் பலவு ஆகிய மூன்று நாடுகளும் வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டன. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது. இதற்கு ஆதரவாக ஐ.நா. சபையில் தொடர்ந்தும் அதிக பெரும்பான்மை கிடைத்துவருகிறது. கடந்த ஆண்டு இந்த கண்டன தீர்மானத்திற்கு ஆதரவாக 187 வாக்குகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்...)

ஐப்பசி 27, 2011

தலைமைத்துவ போட்டியால் ஐ. தே. க. வுக்குள் பெரும் பூசல்

தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் சர்ச்சையும் எதிர்ப் புகளும் பூதாகார மெடுத்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1997லிருந்து நிலவிவரும் உறுதியற்ற தலைமைத்துவம் காரணமாக சரிவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமெனில் உடனடியாக தலைமைத்துவ மாற்றம் தேவை என கட்சியின் அதிருப்தி குழு தெரிவிக்கின்றது. தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் உறுதியான முடிவொன்றை எடுப்பதற்காக கட்சி சம்மேளனத்தைக் கூட்ட வேண்டுமென இக்குழு சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய போன்ற பிரதித் தலைவர்களுக்கு வேண்டு கோள் விடுக்கிறது. தலைமைத்துவ மாற்றம் தேவை எனத் தெரிவிக்கும் அதிருப்திக் குழுவினர் தெரிவித்த போது, கிழக்கு மாகாணம், மேல், மாகாணம், வடமேல் மாகாணம் ஆகிய பிரதேசங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகளாக விளங்கின. கடந்த தேர்தல்களை நோக்கு கையில், இப்பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வீழ்ச்சியை உணர முடிகின்றது எனத் தெரிவித்தனர்.

ஐப்பசி 27, 2011

முருகன், பேரறிவாளன், சாந்தன் உயிர்களை காப்பாற்ற பிரதமரிடம் வலியுறுத்தினேன்

தி. மு. க. தலைவர் கருணாநிதி டில்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரைச் சந்தித்தார். பின்னர் திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியையும் அவர் சந்தித்துப் பேசினார். கூடங்குளம் பிரச்சினையில் அங்கே வாழ்கிற மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அந்தத்திட்டத்தை நிறைவேற்ற உறுதிபட பாடுபட வேண்டும் என்பதை பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறேன். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் சரியாக வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதையும் ஆதாரங்களோடு பிரதமருக்கு விளக்கியிருக்கிறேன். இவற்றோடு தூக்குத் தண்டனை பெற்றிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வாடிக்கொண்டிருப்பதால் இதுவரையில் அனுபவித்துவந்த தண்டனை போதுமானது என்ற முறையில் அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஐப்பசி 27, 2011

அவுஸ்திரேலிய பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை தொடர்பில் அறிய முற்படும் எந்த தரப்புடனும் பேச்சு நடத்த தயார்

இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் அறிந்து கொள்ள முற்படும் எந்தத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்த நேரத்திலும் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அவதூறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுக்களாகும் என்பதை அவுஸ்திரேலிய பிரதமருக்குத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அது தொடர்பில் அறிய முற்படுவோருடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஜனநாயக மற்றும் இராஜதந்திர முறையாகும் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தல் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரமருக்குத் தெளிவுபடுத்தியுள்ள ஜனதிபதி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். புலிகள் அமைப்பின் சில உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழ்வதுடன் அவர்கள் அந்த நாட்டின் வாக்குரிமைகளைக் கொண்டுள்ளதுடன் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். அந்த நிதியினை இலங்கைக்கு எதிராக உபயோகப்படுத்து கின்றனர் எனவும் அவுஸ்திரேலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி 27, 2011

SOUTH ASIA’S MOST BUSINESS-FRIENDLY COUNTRY? SRI LANKA

(Source: Wall Street Journal)

While the business climate in South Asian countries is improving, excessive regulations mean it is far from easy for local entrepreneurs to run their businesses here, according to a new report by the World Bank. Although India is one of the world’s fastest-growing major economies, the report reminds us that it’s not that business-friendly. The South Asian giant ranked 132 out of 183 countries in terms of how easy it is to do business. This was worse than most other countries in the region and all other “BRIC” countries: China stood at No. 91, Russia at No. 120 and Brazil at No. 126. Still, India improved from last year, when it stood seven notches lower. It helped that it made it easier for firms to pay taxes through the introduction of electronic filing and payment for value added tax, the report said. (more....)

ஐப்பசி 26, 2011

ஐப்பசி 26, 2011

லிபியர்களை இறுதிவரை நேசித்தார் கடாபி

லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் கடாபி, திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக கடைசி நிமிடம் வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்தார். தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்தார். திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டு விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் கடாபி என்றார் அவர். (மேலும்....)

ஐப்பசி 26, 2011

குடாநாட்டில் புதிதாக உருவாகும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

யாழ்ப்பாண குடாநாட்டில் புதிய நிதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படுவது குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1980 களில் குடா நாட்டில் இயங்கிய சில நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக பணத்தை வைப்பிலிடச் செய்து செய்து அந்த நிறுவனங்கள் முகவரியில்லாமல் போனதாகவும் அவற்றில் வைக்கப்பிலிட்டு ஏமாந்தவர்களால்ன் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த நிதி நிறுவனங்கள் தென்பகுதியில் உள்ளவர்களால் நிர்வகிக்கப்படுவதால் இவை எந்த நேரமும் மூடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகள் செய்வதாக சிலர் விண்ணப்பப் படிவங்களை வழங்கி பணம் பெற முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1980 களில் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சப்றா சரவணபவன் என்பவரால் நடத்தப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவரால் ஏமாற்றப்பட்ட பலர் தங்கொலை செய்து கொண்டனர் என்பதை 1980 களில் யாழ்பாணத்தில் வாழ்ந்த பலருக்குத் தெரிந்த விடயம்.

ஐப்பசி 26, 2011

இரகசிய இடத்தில் கடாபி உடல் அடக்கம்

லிபியா ஜனாதிபதி கடாபி மற்றும் அவரது மகன் முயாட்டசின் ஆகியோரது உடல் ரகசிய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் கடாபி யின் உறவினர்கள் சிலர் மட்டுமே பங்கேற்க அனுமதிக் கப்பட்டது. லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் பியாட்டமல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இஸ்லாமிய முறைப்படி கடாபி, அவரது மகன் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அபுபக்கர் யூனிஸ் ஆகியோரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடாபி மற்றும் அவரது மகன் முயாட்டசின் ஆகியோர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். அடித்து உதைத்து சித்ரவதை செய்யப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை இறைச்சிக் கூடத்துக்குள் போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் கடாபி யின் உடலைக் காண ஏராளமான பொதுமக்கள் வந்தனர். கடாபியின் உடலை போட்டு வைத்திருப் பது குறித்து மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள் ளது. இந்நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக லிபிய அரசு அறிவித்துள்ளது. இரகசிய அடக்கம் என்பது அமெரிக்காவின் புத்தியில் உதித்தது. சதாமில் ஆரம்பித்து பின் லாடன் என்று அரம்பித்த தொடரும் நிதழ்வுகள் இது. புரிந்து கொள்ளுங்கள் லிபிய 'புரட்சியாளர்கள்' யார் புத்திக்கு இயங்குகின்றார்கள் என்று.

ஐப்பசி 26, 2011

ஏகாதிபத்திய சக்திகளை அடக்க இறைவன் துணைபுரிய வேண்டும்

’தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்துக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று மேல்மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அலவி மெளலானா அனுப்பி வைத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத அரக்கன் ஒழிக்கப்பட்ட பின்னர் கடந்த இரண்டாண்டு காலமாக தமிழ் மக்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் சுதந்திரமாக மற்றைய இனத்தவர்களுடன் ஒற்றுமையாக கொண்டாடி வருகிறார்கள். இனிமேல் எங்கள் நாட்டில் இது போன்ற துன்ப, துயரங்கள் எவருக்கும் ஏற்படக்கூடாதென்று நான் பிரார்த்திக்கும் அதேவேளையில் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர். அவர் என்றுமே நீதிக்காக தங்களை அர்ப்பணித்தவர்களுக்கு கருணை புரிவார். பயங்கரவாதம் வேறொரு உருவில் சில நாடுகளை துவம்சம் செய்யும் முயற்சிகளில் ஏகாதிபத்தியவாத சக்திகள் இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே, இன்றைய நன்நாளில் நாம் அனைவரும் சர்வதேச அரங்கில் கொடுமைகளைப் புரிந்துவரும் ஏகாதிபத்தியவாதிகளை அடக்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும் என்று அல்ஹாஜ் அலவி மெளலானா தமது தீபாவளி பண்டிகைச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி 26, 2011

கிரீசை விற்று விடுவார்கள்! 

சர்வதேச அமைப்புகள் பற்றி வல்லுநர்கள் கருத்து

ஐரோப்பிய யூனியன், ஐ.எம்.எப் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புகள் கிரீஸ் நாட்டை விற்று விடுவார்கள் என்று எட் ஹாரிசன் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து பிரஸ் டிவிக்கு பேட்டியளித்த எட் ஹாரிசன், நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடியில் தள்ளிய கிரீஸ் ஆட்சியாளர்கள் தங்கள் பதவியை இழக்கப் போகிறார்கள். மக்களோ தங்களை மேலும் படுகுழியில் தள்ளுவதை அனுமதிக்க மாட்டார்கள். இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் சட்டம் அளித்திருக்கும் வழிகாட்டுதலை தற்போதுள்ள ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். அத்தகைய அலட்சியப் போக்கு அந்நிய சக்திகளுக்கே உற்சாகமளிக்கும். அடிப்படையில் பார்த்தால் அந்நிய சக்திகளுக்கு கிரீஸ் நாட்டை விற்பது போன்றதாகும் இந்த நடவடிக்கை என்கிறார். கடந்த ஆண்டிலிருந்து ஐரோப்பிய யூனியன், ஐ.எம்.எப் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புகள் இணைந்து இரண்டு முறை கடன்களை வழங்கியுள்ளன. அதற்காக ஏராளமான மக்கள் விரோத நடவடிக்கைகளை, சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் செயல்படுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தன. மக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த நடவடிக்கைகளை கிரீஸ் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இதை சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கவலையோடு பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஐப்பசி 26, 2011

முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 368 பேர் நேற்றைய தினம் சமூக வாழ்வில் இணைக்கப்பட்டனர். தீபாவளித் திருநாளை முன்னிட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட 368 பேரின் வாழ்க்கையிலும் ஒளிவீசவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இவர்களை விடுவிக்கத் தீர்மானித்ததாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது. (மேலும்....)

ஐப்பசி 26, 2011

அமெரிக்க ராணுவத்தில் குண்டர்கள்! உளவுத்துறை தகவல்

அமெரிக்காவில் மொத் தம் 14 லட்சம் பேர் குண்டர் கள் கும்பல்களில் இணைந் திருப்பதாகவும், அவர்களில் பலர் ராணுவத்திற்குள் ஊடு ருவியுள்ளதாகவும் அந்நாட் டின் உளவுத்துறையான எப்.பி.ஐ. கூறியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு ஆய்வொன்றை யும் நடத்தியுள்ளது. ஆய் வின் விபரங்கள் முழுமை யாக வெளியிடப்பட வில்லை. ஆனால் சில தகவல்கள் மட் டும் ஊடகங்கள் மூலமாக கசிய விடப்பட்டுள்ளன. இந்த குண்டர் கும்பல்கள் அமெரிக்க ராணுவத்தை யும், பாதுகாப்புத் துறையை யும் குறிவைத்துள்ளது. தங் கள் செயல்பாடுகளை விரிவு படுத்திக் கொள்ளவும், ஆயு தங்கள் மற்றும் போதை மருந் துக் கடத்தல்கள் போன்ற குற்றங்களுக்கு பாதுகாப்பு தரவும் இத்தகைய ஊடுரு வல்கள் அவர்களுக்கு உதவு கிறது என்று ஆய்வறிக்கை கூறியுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 26, 2011

வியட்நாமில் ஜாவா இன கண்டாமிருகம் முற்றாக அழிவு

வியட்னாமில் இருந்த கடைசி ஜாவா இன காண்டாமிருகமும் கொல்லப்பட்டு விட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை உலக வனஜிவராசிகள் நிதியம் மற்றும் சர்வதேச காண்டாமிருக அமைப்பு ஆகியன உறுதி செய்துள்ளன. வியட்நாமின் கேட்டினே தேசிய பூங்காவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரே ஒரு ஜாவா இன காண்டாமிருகமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மிருகமும் அதன் கொம்பக்காக கொல்லப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆல்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி காண்டாமிருகத்தின் கால்பகுதியில் சுடப்பட்டு கொம்பு அகற்றப்பட்ட நிலையில் அதன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வியட்நாமில் இருந்த ஜாவா இன காண்டா மிருகங்கள் முற்றாக அழிந்துவிட்டதாக உலக வனஜீவராசிகள் நிதியம் அறிவித்துள்ளது. உலகில் அருகிவரும் ஜாவா இன காண்டாமிருகங்கள் அதன் கொம்புக்காக வேட்டையாடப்பட்டு வருகின்றன. உலகில் 50 ஜாவா இன காண்ட மிருகங்கள் மாத்திரமே எஞ்சியுள் ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி 25, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா விஜயம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை யுஎல் 505 என்ற விமானத்தின் மூலம் நியூயோர்க் நோக்கிப் பயணமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். அமெரிக்க அழைப்பின்பேரில் பேச்சுவார்த்தைக்காகச் செல்லும் இவர்கள் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரொபட் ஓ பிளேக் மற்றும் அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஆகியோரைப் பிரதானமாகச் சந்திக்கவுள்ளனர். இவர்கள் ஏனைய அமெரிக்க அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

ஐப்பசி 25, 2011

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது ஆஸி பிரதமர்

அவுஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்த நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று தெரிவித்துள்ளார் ஒரு நாட்டின் தலைவருக்கு எதிரான இவ்வாறான வழக்குகளை சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தொடர முடியாது எனவும் அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் ஆஸி. பிரதமர் கூறியுள்ளார். (மேலும்....)

ஐப்பசி 25, 2011

இலங்கையில் எவரும் எங்கும்வாழலாம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணிப்பதிவு நடை முறையைக் கூட்டமைப்பினர் எதிர்ப்பது அநீதியானதாகும் - பஷில் ராஜபக்ஷ!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணிப்பதிவு நடை முறையைக் கூட்டமைப்பினர் எதிர்ப்பது அநீதியானதாகும். வடக்கு, கிழக்கு மக்களின் நலன் கருதிய இந்த வேலைத்த்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கின்றோம். காணிப் பதிவை முன்னெடுப்பதன் அவசியம் கூட்டமைப்புக்குத் தெரிந்துள்ள போதிலும், அவர்கள் அதனை எதிர்க்கின்றனர் என்று பொரு ளாதார அபிவிருத்தி அமைச்ர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்றத்தினால் உண்மையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் எவரும் எங்கும்வாழலாம் என்பதே எமது கொள்கையாகும். இருப்பினும், அரசாங்கம் புதிதாக எந்த வொரு சிங்களக் குடும்பத்தையும் வடபகுதியில் மீள்குடியமர்த்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்....)

ஐப்பசி 25, 2011

எழுத்து என்றால் என்ன? எழுப்பப்படுவதா, எழுதப்படுவதா?

அறிஞர்கள் சிலர் கி. மு. 1000 ஆண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் நாகர்களும் இயக்கர்களும் வாழ்ந்தார்கள் 'எலு' மொழி இயக்கர்களால் பேசப்பட்டது. நாகர்களால் தமிழ் மொழி பேசப்பட்டது என்கின்றார்கள். மிகச் சிலரோ இயக்கர்களால் பேசப்பட்ட 'எலு' மொழி கொடுந்தமிழாக இருந்தது. அதனுடன் நாகர்கள் பேசிய செந்தமிழும் சேர்ந்தே பண்டைய தமிழ் உண்டானது என்கின்றனர். வேறுசிலர் விஜயனின் 'லாலா' நாட்டு மொழியுடன் இயக்கர்களின் 'எலு' மொழியும் சேர்ந்து 'சீகளம்' என்றொரு மொழி உருவாகியது. அதுவே பின்னர் சிங்களம் உருவாகக் காரணம் என்கிறார்கள். இதில் யார் சொல்வது சரி? எதனைக்கொண்டு இந்த முடிவுகளுக்கு வந்தார்கள் என்பதற்கு சரியான ஆதாரம் யாரும் கொடுப்பதில்லை. அத்துடன் இன்றைய வரலாற்றாளிணிவார்களில் சிலர் 'எலு' மொழியை 'எழு மொழி' என எழுதி வருகின்றார்கள். அவர்கள் ஆங்கில நூல்களை வாசித்து 'எலு' (Elu)  மொழியை 'எழு' (Elu)  மொழி என எழுதுகின்றார்கள் போதும். அது அவர்களின் தவறல்ல என்பது புரிகின்றது. (மேலும்....)

ஐப்பசி 25, 2011

புலிகளின் தோல்வி ஆசிய போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை பாதித்துள்ளது விக்கிலீக்ஸ்!

புலிகள் யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆசிய போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி அமெரிக்க தூதரகத்தினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு முதல் புலிகள் ஆசிய போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளில் முக்கிய பங்கினை வகித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இந்தியாவின் மும்பையை மையமாகக் கொண்டு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதியில் போதைப் பொருள் வர்த்தகம் நடைபெறுவற்கு தொடர்ந்தும் சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி 25, 2011

இதுதான் மோடி நிர்வாகம்

இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி ‘நர வேட்டை’ மோடிக்குத்தான் உண்டு என்று அமெரிக்கா நற்சான்றிதழ் வழங்குகிறது. இந்தியா வில் பெரு முதலாளிகளும் மோடிக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். பாஜகவுக்குள் அடுத்த பிரத மர் வேட்பாளர் மோடியா? அத்வானியா? என்று அதிகாரப்போட்டி நடக்கிறது. அத்வானி ரதயாத் திரை நடத்துகிறார். மோடி தனது பங்கிற்கு நல்லிணக்க உண்ணாவிரதம் இருக்கிறார். ஊழலை எதிர்த்து யாத்திரை நடத்தும் அருகதையோ, நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் யோக்கியதையோ பாஜக வினர் யாருக்கும் இல்லை. (மேலும்....)

ஐப்பசி 25, 2011

ஜனாதிபதி மகிந்த சற்றுமுன் அவுஸ்திரேலியா பயணமானார் _

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாகியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்குச் சொந்தமான விசேட விமானத்தில் ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் பயணமானதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இதே வேளை அவுஸ்திரேலியா நீதிமன்றம் ஒன்றில் போர்க் குற்றவாளியாக குற்றம்சாட்டி புலம்பெயர் தேசம் வாழ் இலங்கைத் தமிழர் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஐப்பசி 25, 2011

பொருளாதாரத்தடை காரணமாக  விக்கிலீக்ஸ் பணி தற்காலிக நிறுத்தம்

அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் பொருளா தாரத் தடை காரணமாக தங்களது பணியை தற்காலி கமாக நிறுத்தி வைப்பதாக விக்கி லீக்ஸ் நிறுவனம் அறி வித்துள்ளது. லண்டனில் இந்நிறுவ னத்தின் நிறுவனர் ஜூலியன் அசாங்கே வெளியிட்ட அறிவிப்பில், பன்னாட்டு நிதி நிறுவனங்களான விசா, மாஸ்டர் கார்டு, வெஸ் டர்ன் யூனியன். பே பாத் ஆகிய நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே விக்கி லீக்ஸுக்கு எதிராக பொரு ளாதாரத் தடை விதித் துள்ளன. சர்வாதிகார தன்மை கொண்ட, சட்ட விரோத பொருளாதாரத் தடையை இந் நிறுவனங் கள் விதித்துள்ளன. இத னால் விக்கி லீக்ஸின் 95 சத வீத வருவாய் பாதிக்கப்பட் டுள்ளது.
(மேலும்....)

ஐப்பசி 25, 2011

ஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு!

(சமஸ்)

ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்தது வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு! உள்ளூர்க் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யப்படாத விசித்திரமான இந்த வழக்கில், பழங் குடிகளுக்கு எதிராக அரச வன்முறையில் ஈடுபட்ட 269 அரசு அலுவலர்களும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வர மிக முக்கியக் காரணம் சி.பி.ஐ-யின் விசாரணை. இதற்காக நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அளிக்க உத்தரவிட்டது. ஒரு வழக்கு விசாரணைக்காக இப்படி வெகுமதியைப் பெறுவது சி.பி.ஐ. வரலாற்றில் அநேகமாக இதுவே முதல் முறை. ஆச்சர்யமான இன்னொரு செய்தி, 19 ஆண்டுகளுக்கு இழுத்த இந்த வழக்கில், சி.பி.ஐ. தன்னுடைய விசாரணையை வெறும் 13 மாதங் களுக்குள் முடித்தது. அதுவும் இந்த வழக்கின் பெரும் பகுதி விசாரணையை மேற்கொண்டது ஒரே ஒருவர்தான். எஸ்.ஜெகந்நாதன். ஓய்வு பெற்றுவிட்ட இந்த அதிகாரிக்கு இப்போது வயது 68. ஆனால், நம்ப முடியாத உற்சாகத்துடன் பேசினார்! (மேலும்....)

ஐப்பசி 25, 2011

ஆஸி. அகதி முகாமில் மோதல்

இலங்கையர் உட்பட மூவர் காயம்

வட அவுஸ்திரேலிய அகதிகள் முகாமொன்றில் நேற்று முன்தினம் இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு சபை தெரிவித்துள்ளது. அகதிகள் முகாமில் இடம்பெற்ற இந்த மோதலில் ஒரு காவலாளியும் இரு அகதிகளும் காயமடைந்தனர். இதன்போது இலங்கை அகதி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. குறித்த இலங்கை அகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய அகதிகள் செயற்பாட்டாளர் இயன் ரின்டோல் தெரிவித்துள்ளார். மோதலை அடுத்து சுமார் 700 பேர் வரை தங்கியுள்ள இந்த முகாமில் பதற்றம் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முகாமில் பல இலங்கை அகதிகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பதிலுக்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கின்றனர்.

ஐப்பசி 25, 2011

தந்தையின் வழியில் தொடர்ந்து போராடுவேன் - கடாபி மகன் உறுதி

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம், “லிபிய மக்களுக்காக இறுதிவரை போராடுவேன்” என அறிவித்துள்ளார். முஅம்மர் கடாபி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களால் தேடப்பட்டுவரும் சைப் அல் இஸ்லாம் சிரியாவிலிருந்து செயற்படும் ‘அல்ராய்’ தொலைக்காட்சி மூலம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.“நான் சாகவில்லை இன்னும் உயிருடன் சுதந்திரமாக இருக்கிறேன். லிபிய மக்க ளுக்காக நான் இறுதிவரை போராடுவேன். என் தந்தையை கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது. எனது தந்தையின் வழியில் போராட்டம் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

ஐப்பசி 25, 2011

யாழ். குடாவில் ரோலர் மீன்பிடியை தடுக்க நேற்று முதல் நடவடிக்கை

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவந்த ரோலர் மீன்பிடியைத் தடுப்பதற்கு நேற்றுமுதல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ணவின் உத்தரவுக்கமைய ரோலர் மீன்பிடியைத் தடுக்க நடவடிக்கை எடுத்தி ருப்பதாக மீன்பிடித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ரவீந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்திருந்த மீன்பிடித்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண விடம் யாழ் குடாநாட்டு மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்துச் சுட் டிக்காட்டப்பட்டது. இதன்போது ரோலர் மீன்பிடி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழில்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழில்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அமைச்சர் கடும் உத்தரவு பிறப்பித்தார். இதற்கமைய நேற்றையதினம் ரோலர் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது என ரவீந்திரன் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 25, 2011

துனீஷிய பொதுத் தேர்தலில் 90 வீத வாக்கு பதிவு

மக்கள் புரட்சிக்கு பின் துனீஷியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 90 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து மக்கள் தனது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் பிற்பகல் 7 மணிக்கு முடிவடைய இருந்த வாக்குப் பதிவு நீண்ட வரிசை காரணமாக ஒரு சில மணிநேரம் நீடிக்கப்பட்டது. அரபு நாடுகளில் தொடரும் கிளர்ச்சி துனீஷியாவிலேயே ஆரம்பமானது. கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து மூன்று தசாப்தங்களுக்கு மேல் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி பென் அலி சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற முதலாவது ஜனநாயக தேர்தலாக இது பதிவானது. இந்த தேர்தலில் 80 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதன் மூலம் 217 அரசியல் சபைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஐப்பசி 24, 2011

புரிந்து கொள்ளுங்கள் 'முற்போக்கு' விக்கிரபாகுவின் முற்போக்கை

சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடம - விக்கிரமபாகு

லிபியாவின் மக்கள் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட முஅம்மர் கடாபியின் ஆட்சி பின்னர் மக்களை அடக்கும் சர்வாதிகார, குடும்ப ஆட்சியாக மாறியமையே அவரது அழிவுக்குக் காரணமாக அமைந்தது என இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். உலகின் குடும்ப சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடமாகுமென்றும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 24, 2011

 

கடாபியை சுட்டுக் கொன்ற வாலிபர் பரபரப்பு பேட்டி

லிபிய முன்னாள் தலைவர் கடாபியை சுட்டுக் கொன்றது நான் தான் என்று வாலிபர் ஒருவர் கூறியுள்ளார். லிபிய முன்னாள் தலைவர் கடாபியை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த 20 ம் திகதி அவரது சொந்த ஊரான சிர்த்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து ஐ.நா. அறிக்கை கேட்டுள்ளது. இந்நிலையில் கடாபியை சுட்டுக் கொன்றது நான்தான் என்று சனாத் அல்சதக் அல்யுரிபி என்ற வாலிபர் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக இணையதளத்தில் புதிய வீடியோவையும் வெளி யிட்டுள்ளார். அந்த வீடியோவில் சனாத்தை சிலர் பேட்டி எடுக்கின்றனர். அவரை சுற்றி சிலர் இராணுவ உடையில் இருக் கின்றனர். சிலர் சனாத்தை பாராட்டு கின்றனர். கடாபியின் தங்க மோதிரம், ரத்தக் கறை படிந்த சட்டையை காட்டுகின்றனர். அந்த தங்க மோதிரத்தில் கடாபியின் 2 வது மனைவி சபியாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பேட்டியின் போது, கடாபியை 2 முறை துப்பாக்கியால் சுட்டேன் ஒரு குண்டு அவரது தோளிலும் மற்றொரு குண்டு தலையிலும் பாய்ந்தது. ஆனால் கடாபி உடனடியாக சாகவில்லை. அரை மணி நேரம் கழித்துதான் இறந்தார் என்று சனாத் கூறியுள்ளார்.

ஐப்பசி 24, 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 28)

(நேசன்)

1984 ம் ஆண்டு பங்குனி மாதம் தளநிர்வாகப் பொறுப்பாளராக செயற்பட்ட சலீம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார். சலீம் கைது செய்யப்பட்டு பல மாதங்களின் பின்னர் டொமினிக் (கேசவன்) இந்தியாவிலிருந்து தளம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். . டொமினிக் (கேசவன்) தளம் வரும்போது உமாமகேஸ்வரனால் கண்ணாடிச் சந்திரனுக்கு மடல் ஒன்று கொடுத்துவிடப்பட்டிருந்தது. அந்த மடலில், தளத்தின் அனைத்து அரசியல் சம்பந்தமான விடயங்களுக்கும் டொமினிக்கே(கேசவன்) பொறுப்பாக இருப்பார் என்றும், சில தினங்களில் கண்ணன் (ஜோதீஸ்வரன்)  தளத்திற்கு வர இருப்பதாகவும் தளத்தின் அனைத்து இராணுவம்  சம்பந்தமான விடயங்களுக்கும் கண்ணன் பொறுப்பாக இருப்பார் என்றும், இந்த இருவரிடமும் சகல பொறுப்புக்களையும் கையளித்து விட்டு,  உடனடியாக சென்னைக்கு வருமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் அனைத்து மாவட்ட அமைப்பாளர்களையும் டொமினிக்குக்கு (கேசவன்) அறிமுகம் செய்து வைக்குமாறும் சகல ஆயுதங்களையும் கண்ணனிடம் கையளிக்குமாறும் பணிக்கப்பட்டிருந்தது. (மேலும்....)

ஐப்பசி 24, 2011

‘தலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார் கடாபி’ 

லிபிய ஜனாதிபதி மும் மர் கடாபி, தலையில் துப் பாக்கியால் சுட்டுக் கொல் லப்பட்டார் என்பதை திரி போலி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உறு திப்படுத்தினார். லிபியாவில் அமெரிக்கா தலைமையிலான நேட் டோ படை கொடிய போரை நடத்தியது. இப் படையின் ஆயுத உதவி யோடு அதிகாரத்தைக் கைப் பற்றியுள்ள தேசிய மறு மலர்ச்சிக்குழு என்ற பெய ரிலான மத அடிப்படை வாதக்குழுவினர், கடாபி யின் சொந்த ஊரான சிர்தே எனும் நகர் மீது கடும் தாக்கு தல் நடத்தினர். இங்கு பதுங்கியிருந்த கடாபியையும் அவரது மகன்கள் மற்றும் உதவியா ளர்களையும் சுட்டுப் படு கொலை செய்தனர். கடந்த 20ம்தேதி இந்த சம்பவம் நடந்ததாக ஊட கங்கள் செய்தி வெளியிட்டன. (மேலும்....)

ஐப்பசி 24, 2011

மீண்டும் வரிச் சலுகை அமெரிக்க தீர்மானம்

வளைந்து கொடுக்காத சிறீலங்கா வழிக்கு வந்தது அமெரிக்கா

இலங்கையின் உற்பத்திகளை கொள்வனவு செய்யும் தனியொரு மிகப் பெரிய நாடான அமெரிக்கா இதுவரை இடை நிறுத்தி வைத்திருந்த “U S - G S P” என்ற வரிச் சலுகையை மீண்டும் இலங்கைக்கு பெற்றுத்தர தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சட்ட ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் (21) கைச்சாத்திட்டு அனுமதி வழங்கியமை இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்துக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் கையொப்பத்தையடுத்து இந்த வரிச் சலுகை எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதி முதல் 2013 ஜுலை 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். எனினும் இந்த வருடம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் நவம்பர் 05 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இலங்கைப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியை திருப்பிக் கொடுக்கவும் அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (மேலும்....)

ஐப்பசி 24, 2011

நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற போது தொங்குபாலம் அறுந்துவிழுந்தது  சென்னையை சேர்ந்த இரண்டு மாணவிகள் பலி, 7 பேர் படுகாயம்

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள மார்க் கிரிகோரியஸ் கல்லூ ரியை சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர் கள் உள்ளிட்ட 43 பேர் நேபாள நாட்டுக்கு சுற்றுலா சென்று இருந்தனர். அவர்கள் அங்கு பல் வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு, தலைநகர் காத்மாண்டில் இருந்து 80 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பொகோரோ என்ற மலை வாசஸ்தலத்துக்கு சென் றனர். மலைப்பகுதியின் இயற்கை அழகை ரசித்து பார்த்து விட்டு, அவர்கள் திரிசூலி ஆற்றின் மேல் இரு பாறைகளை இணைத்து கட்டப்பட்டு இருந்த கயிற்று தொங்கு பாலத்தின் மீது நடந்து வந்து கொண் டிருந்தனர்.அப்போது, அந்த தொங்கு பாலத்தின் ஒரு ஓரத்தில் நின்று அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண் டிருந்தனர். அவர் களுடன் வெளிமாநில மாணவ, மாணவிகளும் அந்த பாலத்தில் புகைப் படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் அதிக எடையை தாங்காமல், திடீ ரென அந்த கயிற்றுப்பாலம் அறுந்து விழுந்தது. (மேலும்....)

 

ஐப்பசி 24, 2011

ராசா, கனிமொழி மீது நம்பிக்கை துரோக வழக்கு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் நம்பிக்கை துரோக வழக்கை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதம் 26ஆம் திகதி இந்திய தண்டனைச் சட்டம் 409ம் பிரிவின் கீழ் நம்பிக்கை துரோக மோசடி என்ற புதிய குற்றச்சாட்டை இந்த 17 பேர்மீதும் சி.பி.ஐ பதிவு செய்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். இதனால் சி.பி.ஐயின் இந்த புதிய குற்றச்சாட்டுக்கு 17 பேரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  (மேலும்....)

ஐப்பசி 24, 2011

த. தே. கூ எம்.பி க்கள் குழு நாளை அமெரிக்கா பயணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை அமெரிக்கா செல்கிறது. உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா செல்லும் இவர்கள் அந்நாட்டு ஆளும் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இன்று அமெரிக்கா செல்கின்றனர். இலங்கை அரசாங்கத்துடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள், இனப்பிரச்சினைத் தீர்வு, மீள்குடியேற்றம், புனரமைப்புப் பணிகள், வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எதிர்நோக்கப்படும் காணிப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்குழுவினர் அமெரிக்க அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஐப்பசி 24, 2011

லூசியானா ஆளுநர் தேர்தல் ஜிண்டால் மீண்டும் வெற்றி

அமெரிக்காவின் லூசியானா மாநில ஆளுநராக அமெரிக்க வாழ் இந்தியர் பாபி ஜிண்டால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அவர், அடுத்த 4 ஆண்டுகளுக்கு இப்பதவியில் தொடர்வார். மொத்தம் பதிவான வாக்குகளில் 66 சதவீதத்தை பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் குறைந்த வாக்குகளையே பெற்றனர். எதிர்க்கட்சியான ஜனநாய கக் கட்சி சார்பில் போட்டியிட்ட தாரா ஹோலிஸ் 18 சதவீத வாக்குகளைப் பெற்றார். 40-வயதாகும் ஜிண்டால் வரும் ஜனவரி மாதத்தில் இரண்டாவது முறையாக லூசியானா ஆளுநராகப் பதவியேற்பார்.

ஐப்பசி 24, 2011

கடாபியை அழைத்த மகளுக்கு அதிர்ச்சி

கேர்ணல் முஅம்மர் கடாபி சுட்டுக்கொல்லப்பட்டு சில நிமிடங்களில் கடாபியின் செய்மதித் தொலைபேசிக்குத் தொடர்பை ஏற்படுத்திய கடாபியின் மகளுக்கு கடாபி கொல்லப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளமை தற்பொழுது தெரியவந்துள்ளது. இறுதிக்கட்டத்திலிருந்த போது அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்துள்ள கடாபியின் மகளான ஆய்ஷா கடாபி, தனது தந்தையை செய்மதி தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டுள்ளார். அந்த அழைப்புக்குப் கிளர்ச்சியாளர் ஒருவர் பதிலளித்துள்ளார். “கிழட்டுத் தலை செத்துவிட்டது” எனப் பதிலளித்த புரட்சியாளர் கூறியுள்ளார். இச்செய்தி கடாபியின் மகளை உலுக்கியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. லிபியாவில் கடாபிக்கு எதிரான மோதல்கள் உக்கிரமடையத் தொடங்கியதைத் தொடர்ந்து கடாபியின் மகளான ஆய்ஷா, அவருடைய தாயார் மற்றும் இரு சகோதரர்கள் அல்ஜீரியாவில் தஞ்சம் கோரியிருந்தனர். அல்ஜீரியாவிலிருந்தே ஆய்ஷா தனது தந்தையை செய்மதி தொலைபேசியின் ஊடாக இறுதி நேரத்தில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஐப்பசி 24, 2011

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்  ஆயிரம் பேர் பலி

ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவான பயங்கர நிலநடுக்கம் துருக்கி நாட்டின் கிழக்குப் பகுதியை தாக்கியது. இதில் அப்பிரதேசம் முழுவதிலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. முதல்கட்டத் தகவலின்படி ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த அதிர்வுகளும், துருக்கியின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள வான் எனும் நகரை கடுமையாகத்தாக்கியது. குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பெரிய நகரம் இது. நூற்றுக்கணக்கான பல மாடிக்கட்டிடங்கள், ஹோட்டல்கள் உள்பட இந்நகரிலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கட்டிடங்கள், வீடுகள் நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.“இப்பகுதி முழுவதும் மரண ஓலமும், கதறலுமாக மக்கள் வீதிகளில் இறங்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்; தொலைத்தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது; யாரையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை” என வான் மாநகர மேயர் பெகிர் காயா கூறியதாக துருக்கி தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

ஐப்பசி 24, 2011

யெமன் ஜனாதிபதி பதவி விலக ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம்

யெமன் ஜனாதிபதி அப்துல்லா சலே பதவி விலகி பொறுப்புகளை துணை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றியு ள்ளது. யெமனில் ஜனாதிபதிக்கு எதிராக கடந்த 8 மாதங்களாக மக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரி வருகின்றனர். புரட்சியாளர்கள் மீது இராணுவம் ஏவப்பட்டு மனித உரிமைகள் மீறப்படுவதாக புகார் எழுந்துள்ளன. இந்நிலையில் யெமன் ஜனா திபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேறியுள்ளது. அரசும், எதிர்க்கட்சிகளும் அவர் களுக்கு உடன்பாடு செய்து கொண்டு, அதிகார ஒப்படைப்பு சிக்கலின்றி நடைபெற உதவ வேண்டும். பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி 24, 2011

கடாபி உடலை தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் உடலை தருமாறு அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்துள்ள அவரது குடும்பத்தினர் கோரியுள் ளனர். முஅம்மர் கடாபியின் இரண்டாவது மனைவி சபியா, மகள் ஆயிஷா, மூத்த மகன் முஹம்மத், மற்றுமொரு மகனான கமால் ஆகியோர் அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்கள் முஅம்மர் கடாபியின் உடலை லிபிய இடைக்கால அரசிடம் கோரியுள்ளனர். அத்துடன் முஅம்மர் கடாபி மீது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அதுபற்றி ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது மனைவி சபியா குறிப்பிட் டுள்ளார். எனினும், முஅம்மர் கடாபியின் உடல் அடக்கம் குறித்து இடைக்கால அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.  அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி மறைமுகமான இடத்தில் அடக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று இறுதிக் கட்ட மோதலின்போது கொல்லப்பட்ட கடாபியின் மகன் முதஸ்ஸிமின் உடலை கிர்த்தில் விடுக்கும் கடாபி. உறவினர்களிடம் கொடுக்க இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஐப்பசி 24, 2011

ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானுக்கு அங்கத்துவம்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராக 2 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதரை கட்டியணைத்து நேரில் வாழ்த்து தெரிவித்தார் இந்திய தூதர். இந்த காட்சியை ஐ.நா. சபையில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதுதவிர, 10 நாடுகள் 2 ஆண்டுகளுக்கு தற்காலிய உறுப்பினராக தேர்வு செய்யப்படும். தற்காலிக உறுப்பினர்களை தேர்வு செய்ய ஐ.நா. சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் வாக்களிக்க வேண்டும். பாதுகாப்பு சபையில் கடந்த 2003ம் ஆண்டில் பாகிஸ்தான் தற்காலிக உறுப்பினராக இருந்தது. அதற்கு பின் வாய்ப்பு எதுவும் பாகிஸ்தானுக்கு தரப்படவில்லை. (மேலும்....)

ஐப்பசி 23, 2011

வெள்ளைக்கொடி சம்பவத்தை ஒத்ததே கடாபியின் கொலை - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும் இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்படி கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருப்பதாவது, சிர்தே நகரில் கேர்ணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும் சண்டையின் போது அவர் கொல்லப்பட்டதாக இடைக்கால அரசு கூறி வருகிறது. இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சரணடைய முற்பட்ட வேளையில் இலங்கைப் படையினரால் இவ்வாறே கொல்லப்பட்டனர். அதற்கான சாட்சியங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. எனினும் அதனை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐப்பசி 23, 2011

கூட்டமைப்பிற்கு ஆப்பு வைக்கும் கொழும்பில் மட்டும் வாழும் புலிக் கஜேந்திரன்

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பினர் போர்க்குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது

அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமையையும் ஆணித் தரமாக வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களும் இளைஞர்களும் செய்த உயிர்த்தியாகங்களை பேரம்பேசும் வகையில் போர்க் குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வுள்ள நிலையில் அவர்களது பயணம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளார் மகாநாடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர்களில் ஒருவரும் வெளிவி வகாரக்குழு தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம் பலத்தின் இல-15 இராணி வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் இன்று இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 23, 2011

காணிப் பதிவுக்கு எதிராக நாளை உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணிப் பதிவுகளுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரியவருகின்றது. சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஊடாக இந்த மனுவை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் 12 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது வடக்கு, கிழக்கு மக்கள் தற்காலம் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில் முக்கியமாக வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணிப் பதிவு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான அதிருப்தியைத் தெரிவித்திருந்ததுடன் இது தொடர்பில் அரசாங்கம் உரிய தீரமானம் எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது. பேச்சுவார்த்தை இடம்பெற்று இன்றுடன் மூன்று நாட்கள் ஆனபோதிலும் அரசாங்கத்திடமிருந்து உரிய பதில்கள் கிடைக்காத பட்சத்திலேயே இந்நடவடிக்கை மேற் கொள்ளப்படவிருப்பதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐப்பசி 23, 2011

கடாபியின் மரணம் தொடர்பில் விளக்கம் கோருகிறது இலங்கை!

கேணல் கடாபியின் மரண சம்பவங்கள் தொடர்பில் விளக்கம் ஒன்று வேண்டுமென இலங்கை அரசாங்கம் கருதுவதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 42 வருடங்களாக லிபியாவை தன் பிடிக்குள் வைத்திருந்த மும்மர் கடாபி கொல்லப்பட்ட முறை தொடர்பில் சர்வதேச ரீதியாக பல நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது. கடாபி கொல்லப்பட்டமையானது மனிதாபிமானமற்ற முறையில் இடம்பெற்றதாக சர்வதேச நாடுகள் பல சுட்டிக்காட்டியுள்ளன. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் தெளிவான விளக்கமொன்று குறித்து தெளிவான விளக்கம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என அமெரிக்காவும், ரஸ்யாவும் வோண்டுகோள் விடுத்துள்ளதுடன் இது தொடர்பில் வெளிப்படையான விசாரணையொன்று நடத்தப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.  கேணல் கடாபியின் கொலை தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அவர் கைது செய்யப்பட்டபோது உயிருடன் இருந்ததாக காணொளி மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் பின்னரே அவர் லிபிய தேசிய இடைக்கால சபையைச் சேர்ந்த ஆயுத தாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்ட ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. சர்வதேச நாடுகள் போன்றே இலங்கையும் விளக்கம் கோரியுள்ளது.

ஐப்பசி 23, 2011

விசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 50 அமெரிக்க டொலர் விசா கட்டணத்தினைக் குறைக்குமாறு இலங்கையிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்புத் தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள், கடந்த வாரம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிதாக இலங்கை அறிமுகப்படுத்தியுள்ள 50 அமெரிக்க டொலர் என்ற கட்டணமானது, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்ததாக இல்லையென என இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் சார்க் அமைப்பிலுள்ள நாடுகளுக்கு நன்மையளிக்கும் வகையில் இந்த கட்டணக் குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விசா கட்டண மாற்றம் தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஐப்பசி 23, 2011

யாழ் டான் ஒளிபரப்பில் தி.சீறீதரன்

டான் யாழ்ஒளியில் வாராவாரம் நடைபெறும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில்பத்மநாபாஈமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பொது செயளாலர் தோழர் தி.சிறிதரன் (சுகு) அவர்கள் இன்றயநேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து நாட்டில் அவலத்துக்குள்ளான மக்களின் நிலைகுறித்தும் கட்சியின் நிலைப்பாடுகுறித்தும் உலகம் வாழ் தமிழ்மக்களுக்கு தெரிவிக்கவுள்ளார் இந்நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை லண்டன்நேரம் இரவு 21.00 மணிக்கும் (23.10.2011) ஐரோப்பிய நேரம் இரவு 22.00 மணிக்கும், ரொரன்ரோ(கனடா) நேரம் 15.00 மணிக்கும் டான் யாழ்ஒளியில் பார்வையிடலாம்...

http://www.dantv.tv/live_eur.html

ஐப்பசி 23, 2011

மணற் கயிறு

தம்மிடையே

இல்லாத

ஜனநாயகத்தையும்

பொருளாதாரத் திண்மையையும்

தேடித் தேடி

இறுதியில்

பாலைவனப் பரப்புகளின்

சுடுமணலுக்கடியில்

கறுப்பு நிறத்தில்

திரவ வடிவில்

கண்டெடுக்கிறார்கள்.

அதில்

உதிரம் தோய்ந்தும்

தெரியாமல் மறைகிறது.

(வம்சிகன்)

ஐப்பசி 23, 2011

தவிக்கும் அமெரிக்க மாகாணங்கள்-வறுமையில் 20 விழுக்காட்டிற்கு மேலான மக்கள்

அமெரிக்காவில் உள்ள மிசிசிபி மற்றும் நியூ மெக் சிகோ ஆகிய இரு மாகா ணங்களிலும் வறுமையின் கொடுமை பெருமளவில் அதிகரித்துள்ளது என்று புதிய தகவல்கள் கூறு கின்றன. 2010 ஆம் ஆண்டில் மிசி சிபி மாகாணத்தில் வறு மைக் கோட்டிற்குக்கீழ் வாழும் மக்களின் எண் ணிக்கை 22.4 விழுக்காடாக இருந்தது. அதேபோல் நியு மெக்சிகோ மாகாணத்தில் 20.4 விழுக்காடு மக்கள் வறு மையால் வாடுகிறார்கள். அதுவும், மிகவும் கொடிய வறுமையில் வாடுபவர் களின் எண்ணிக்கையும் இந்த மாகாணங்களில் கணி சமானதாக இருக்கிறது. தலைநகர் வாஷிங்டன் இருக் கும் இருக்கும் கொலம்பியா மாவட்டத்தில்தான் குறை வான எண்ணிக்கையில் வறு மையில் வாடுபவர்கள் உள் ளனர். அங்கும் 8.4 விழுக் காடு மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். (மேலும்....)

புலிகள் தொடர்பில் நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சர்வதேச ரீதியாக தாக்கம் செலுத்தும்-வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது!

புலிகள் தொடர்பில் நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சர்வதேச ரீதியாக தாக்கம் செலுத்தும். இந்தக்கருத்தை த வாசிங்டன் போஸ்ட் செய்திதாள் வெளியிட்டுள்ளது. புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து தமிழர்களுக்கு இரண்டு முதல் 6 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவர்களுக்கு 20 வருடங்கள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறைந்தளவு தண்டனையே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புலிகளை பயங்கரவாதிகளாக கொள்ள முடியாது என்று ஹேக் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. (மேலும்....)
 

ஐப்பசி 23, 2011

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு - அமெரிக்கா

தீவிரவாதிகளுக்கு பாது காப்பு இடமாக பாகிஸ்தான் மீண்டும் உருவாகியுள்ளது. தீவிரவாத குழுக்கள் நீண்ட காலமாக அங்கு சுதந்திர மாக நடமாடுகின்றன. இதனை சகித்துக் கொள்ள முடியாது என அமெரிக்க அயல்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் எச்ச ரித்தார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அந் நாட்டு அயல்துறை அமைச் சர் ஹினா ரப்பானி கர்ரு டன் அமெரிக்க அயல் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வெள்ளிக்கி ழமை பேட்டி அளித்தார். அப்போது ஹிலாரி கூறு கையில், பாகிஸ்தான் மக் கள் மற்றும் அவர்களது எதிர்காலத்திற்கு செயல்பட வேண்டியுள்ளது. பாகிஸ் தானுடன் அமெரிக்கா நட் புறவை விரும்புகிறது. இரு தரப்பினரின் பலன்களுக் காக இந்த உறவை விரும் புகிறது என்றார். (மேலும்....)

ஐப்பசி 23, 2011

SRI LANKA- WHO ARE THE REAL TERRORISTS? Says the Ltte propagandist

Dear SirThe world order does not condone banned terrorists it gets rid of terrorists. A terrorist is one that uses terror to achieve its aims. It inflicts terror on civil society. It distorts information and cultivates and mobilises people to believe in their ideology. You are a classic victim of the Ltte terror ideology. I will respond to your statements, one by one. You say that: “The difference between Mexico and Sri Lanka are that, in Mexico the government is fighting to eradicate powerful drug cartel, but In Sri Lanka the Drug cartel and the criminals are the government”. That is the difference. (more....)

ஐப்பசி 22, 2011

சிவப்பு பிடியாணை

கே.பி.க்கு நிதி சேகரிக்க உதவிய பொன்னையா ஆனந்தராஜாக்கு

அமெரிக்காவில் தலைமறைவாக வாழ்கின்றவரும் குமரன் பத்மநாதனுக்காக நிதி சேகரித்தவருமான ஒருவரை கைது செய்வதற்காக சிவப்பு பிடியாணையொன்றை கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொன்னையா ஆனந்தராஜா அல்லது ஜயா என அழைக்கப்படும் இவர் அமெரிக்கா, கனடா, மலேசியா, நோர்வே, இலங்கை மற்றும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்தாரென்றும் நீதிமன்றத்தில் பிரசன்னமாக தவறிய இவர் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி நியாஸ் பறி நீதிமன்றத்தில் கூறினார். சட்ட மா அதிபர், சுப்பிரமணியம் சிவகுமார் அல்லது ராஜன் மற்றும் பொன்னையா ஆனந்தராஜா அல்லது ஜயா ஆகிய இருவர் மீதும் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் குமரன் பத்மநாதனின் நிதிக்கும் வேறு சொத்துக்களுக்கும் பொறுப்பாக இருந்தனரென குற்றஞ்சாட்டி வழக்குத் தொடுத்திருந்தார். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல வணிக நிறுவனங்களை நடத்தினரெனவும் இந்த இயக்கத்துக்காக கப்பல்கள், படகுகளைக் கட்டியவர்களெனவும் சந்தேகிக்கப்படுகின்றது. வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி 22, 2011

C மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி மறைவு

கணணி பயன்பாட்டில் சி என்னும் மொழி ஒன்றை உருவாக்கி நவீன கால கணணிப் பயன்பாட்டிற்கு அடித்தளம் அமைத்த கணணி விஞ்ஞானி டெனிஸ் ரிட்ச்சி சென்ற வார இறுதியில் காலமானார். ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்து ஒரு வார காலத்திற்குள் இன்னொரு கணணி வித்தகர் மரணம் அடைந்துள்ளார். இவரும் புற்று நோயால் அவதிப்பட்டு தன் இல்லத்தில் அதற்கான சிகிச்சை எடுத்து வருகையில் காலமானதாக தகவல் கிடைத்துள்ளது. அக்டோபர் 8ல் காலமானது நேற்று தான் உலகிற்கு அவரின் நண்பரால் அறிவிக்கப்பட்டது. சிலர் சரித்திரத்தை மாற்றி பெயர் பெறுவார்கள், சிலர் சரித்திரத்தை உருவாக்கிப் புகழ் பெறுவார்கள். ரிட்ச்சி இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். (மேலும்....)

 

ஐப்பசி 22, 2011

அ.தி.மு.க. 10 மாநகராட்சிகளிலும் அமோக வெற்றி பெற்று சாதன

தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் தி.மு.க., இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது; மிகக் குறைவான ஓட்டுகளை பெற்ற தே.மு.தி.க.,வின், "டிபாசிட்' காலியாகியுள்ளது.  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, சேலம், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளுக்கும் கடந்த 17ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த கட்சிகள், இந்த தேர்தலில் தனித்தே களமிறங்கின. (மேலும்....)

ஐப்பசி 22, 2011

இலங்கை மீது போர் குற்ற விசாரணைக்கு கோரிக்கை விடுப்பது குறித்து அவுஸ்திரேலியா ஆராய்வு

இலங்கையில் போர் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அறிவித்தல் விடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவுஸ்திரேலியா பிரதமர் ஜூலியர் கில்லார்ட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள விஷேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ஏ.பீ.சி வானொலி ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியும் அதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அளித்த பதிலும் வருமாறு, ஊடகவியலாளர்: இப்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகிறார். கனடா மற்றும் பிரித்தானியா முந்திக் கொண்டதை போன்று இலங்கை மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணை நடத்த நீங்கள் பகிரங்கமாக வலியுறுத்துவீர்களா? (மேலும்....)

ஐப்பசி 22, 2011

மேலும் ஒரு கொலைக்களம்

உலகிலேயே அரக்கத்தனமான ஆட்சியை நடத்திவரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், லிபியா வில் கடாபி ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டதாக கொக்கரித்திருக்கிறது. லிபிய ஜனாதிபதி மும்மர் கடாபியை, தனது தலைமையிலான நேட்டோ படை நடத்திய கொடிய போரின் மூலம் படு கொலை செய்துவிட்டது. இராக்கில் சதாம் உசேனைப் பிடித்து, விசார ணை நாடகம் நடத்தி, பின்னர் தூக்கில் போட் டுக் கொலை செய்த அமெரிக்கா, கடாபிக்கு அந்த வாய்ப்பைக்கூட கொடுக்காமல், கிளர்ச்சியாளர் கள் என்ற பெயரிலான தனது ஆதரவாளர்களைக் கொண்டு அவரது கதையை முடித்துவிட்டது. (மேலும்...)

ஐப்பசி 22, 2011

புலிகளுக்காக நிதி திரட்டிய ஐவருக்கு நெதர்லாந்து ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது!

புலிகள் அமைப்பின் சார்பில் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஐந்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களிடம் குறித்த நபர்கள் சட்டவிரோதமான முறையில் நிதி திரட்டியதாகவும், அந்த நிதியை புலிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. குறித்த ஐந்து இலங்கைத் தமிழர்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச பட்சமாக ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் இளைஞர் அமைப்பு, நெதர்லாந்து தமிழ் கலை கலாச்சார அமைப்பு போன்ற பெயர்களில் புலி ஆதரவு அமைப்புக்களை உருவாக்கி பல மில்லியன் யூரோ நிதியை குறித்த நபர்கள் திரட்டியுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்வாறு திரட்டப்பட்ட பணம் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐப்பசி 22, 2011

கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்!”

(சமஸ்)

வல்லரசு என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, இத்தனை காலமாகத் தனது நாட்டுக்குள் இருந்த ‘இன் னொரு அமெரிக்கா’ வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது. அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்ற வர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங் களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்க ளின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது! அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத் தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக்கோட் டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த10 ஆண்டுக ளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சத விகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாத தால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற் றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உரு வெடுத்து வருகிறது. (மேலும்...)

ஐப்பசி 22, 2011

கடாபி கைதான பின்னரே சுட்டுக் கொல்லப்பட்டார்

முன்னை நாள் லிபிய அதிபரும் சர்வாதிகாரியுமான கடாபி கைதான பின்னரே சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று சுதந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டபியின் ஆதரவு நகரான ஷெர்த் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களின் மீதும், சந்தேகத்திற்கு இடமான பகுதிகளிலும் நேட்டோ விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும், அதிலிருந்து தப்பிச் செல்லும் நோக்கோடு வாகனத் தொகுதி ஒன்றில்  கடாபி பயணம் செய்த போதே அவர் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக அரேபிய ஊடகங்கள் நேரடிச் சாட்சிகளை ஆதாரம்காட்டி செய்திகள் வெளியிட்டுள்ளன. (மேலும்...)

ஐப்பசி 22, 2011

மரணத்தில் மனம் குளிரும் மனநோயாளிகள்

கடாபியின் கொலையும் கிலாரி கிளிங்டனின் குதூகலமும்

லிபிய சர்வாதிகாரி கேணல் முவமர் கடாபி ஷேர்த் நகரத் தெருக்களில் கோரமாகக் கொலை செய்யப்பட்ட முறை மனிதாபிமான உலகத்தை உறையச் செய்தது. முன்னதாக கடாபியுடன் கைகோர்த்துக் குதூகலித்த கிலாரி கிளிங்டன் கடாபியின் மரணம் குறித்துக் குதூகலிப்பதைக் கீழ் வரும் காணொளியில் காணலாம். கடாபியின் இறப்பிற்கு முன்னதாக வன்னியில் நடந்ததைப் போன்றே லிபிய நகரங்கள் எங்கும் மக்கள் குடியிருப்புக்கள் மீது அமரிக்க ஐரோப்பிய படைகள் குண்டுத் தாக்குதல் நடத்தி பெரும் இனவழிப்பையே நடத்தியிருக்கின்றன. எண்ணை வளம் மிக்க நாடுகளைக் கண்டவுடன் மனிதாபிமானம் பொங்கும் அமரிக்க அரசியல்வாதியின் கோரமுகம் இந்தக் காணொளியில் இழையோடுகிறது. கடாஃபி   பிடிக்கப்பட்ட சமயத்தில் உயிரோடு இருந்துள்ளார் பின்னர் உயிரிழந்துள்ளார் என்று காட்டும் கைத்தொலைபேசி வீடியோ படங்கள் மிகவும் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளன என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

ஐப்பசி 22, 2011

SRILANKAN AIRLINES & AIR CANADA COMMENCE  CODE SHARE SERVICES

 SriLankan Airlines & Air Canada announced today a code share agreement that will make flying between Sri Lanka and Canada more convenient.“This code share between the two national carriers opens up several key points in Canada in addition to the main cities of Toronto and Montreal and will be a tremendous boost to tourism between the two countries. Additionally, Canada is home to Sri Lanka's largest expatriate community and we greatly value this opportunity to provide a seamless service to our people who live in Canada on SriLankan Airlines with our code share partner, Air Canada,” said Mr. G. T. Jeyaseelan, Chief Marketing Officer, SriLankan Airlines. (more....)

ஐப்பசி 22, 2011

கடாபி அகப்பட்டது எப்படி?

"கழுகுகள் சிறைபிடிப்துக் கொடுக்க ஒட்டகங்கள் கடித்துக் குதறின"

கடாபியின் பிறப்பிடமான சிர்த் நகருக்குள் சல்லடைத் தேடுதல் நடத்திய கிளர்ச்சிப் படையினர், கடாபியும் சகாக்களும் பதுங்கியிருந்த இடத்தை எவ்வாறு அடையாளம் கண்டனரென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிளர்ச்சிப் படையினர் முன்னேறிக்கொண்டிருந்த போது, அரசாங்கப் படையினர் கடுமையான எதிர்த் தாக்குதல்களை நடத்தினர். கிளர்ச்சிப் படையினர் சற்றும் எதிர்பாராத தாக்குதலாக இது இருந்ததால், முக்கிய தலைகள் இங்கு பதுங்கி இருக்கலாமென சந்தேகம் எழுந்தது. அதேநேரம், கடாபியும் இங்கு பதுங்கி இருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், 5 கார்களில் கடாபியும் அவரது ஆதரவுப் படைகளும் தப்பியோடினர். இதனையறிந்த கிளர்ச்சிப் படையினர் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்கு புரட்சிப் படையினர் தகவல் தரவே, அமெரிக்க போர் விமானங்கள் விரைந்து வந்து அந்த கார்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் கடாபியின் ஆதரவுப் படையினர், உளவுப் பிரிவுத் தலைவர், மகன் ஆகியோர் பலியாகிவிட, கடாபி படுகாயத்துடன் தப்பி அருகே இருந்த பாதாள சாக்கடைக் குழிக்குள் இறங்கி பதுங்கினார். இதையடுத்து புரட்சிப் படையினர் கடாபியை வெளியே இழுத்துப் போட்டனர். அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தும், சரமாரியாக அடித்தும் இழுத்து வந்து கால்களில் சுட்டனர். பின்னர் வயிற்றிலும் சுட்டுவிட்டு கடுமையாக மிதித்தனர். அப்போது தன்னை விட்டுவிடுமாறு கடாபி கெஞ்சியுள்ளார். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் புரட்சிப் படையினர் கடாபியை தலையில் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

ஐப்பசி 22, 2011

Meeting Hosted by the Canadian Sri Lankan Community on Nov. 5, 2011

with Hon. Vasudeva Nanayakkara, Minister of Social Integration, Sri Lanka

We have pleasure in inviting you to the above meeting being hosted by our association in partnership with  other members of the community on Saturday, November 5, 2011 from 11.45 a.m. to 2.00 p.m. at the Scarborough Village Community Centre, 3600 Kingston Road (Markham Road and Kingston Road) Scarborough.

 A brief agenda is given below:

 AGENDA

 Address of Welcome:  President of SLUNA and Representative of CDTCA

Introduction of the Guest Speaker:  Mr. Karunaratne Paranavitharne, Consul

                                                              General for Sri Lanka in Toronto

Address by Guest Speaker: The Hon. Vasudeva Nanayakkara,  Minister of National

            Languages and Social Integration of Sri Lanka will speak on “Healing the

            Rifts in the Nation”

Question and Answer Session:  Those having questions should seek the permission

                                                      of the Chair, identify themselves and ask their

                                                      question. Due to the limited time available, the

                                                      maximum time allowed to each person is 2 mins.

Vote of Thanks:  Daya Hettiarachchi

Termination of the meeting

 Please make a special note to participate and arrive on time to avoid any disruption.

 Yours sincerely,

 Mahinda Gunasekera

Honorary President

ஐப்பசி 22, 2011

ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய பெருந்தலைவர் கடாபி

ஏகாதிபத்திய நாடுகள் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளைக் கங்கணம்கட்டிக்கொண்டு முன்னெ டுக்கும் நடவடிக்கையின் ஒரு வெளிப்பாடே முஅம்மர் கடாபியின் படுகொலை அமைந்துள்ளதென மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்துள்ளார். கடாபியின் இழப்பானது முஸ்லிம் நாடுகளுக்கு மாத்திரமன்றி உலகத் துக்கே ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார். கடாபியின் கொலை தொடர்பாக வெளியிட்டிருக்கும் அனுதாபச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார். கடாபி சிறந்ததொரு வீரர் மாத்திரமன்றி, ஏகாதிபத்திய நாடுகளுக்கு சவாலாக விளங்கிய முக்கியமானதொரு சிறந்த தலைவர். இவரின் இழப்பானது பேரிழப்பாகுமெனவும் அலவி மெளலானா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடாபியின் இழப்பைத் தொடர்ந்து, முஸ்லிம் நாடுகள் யாவும் ஐக்கியப்பட்டு ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் சீ. ஐ. ஏ.யினரின் நடவடிக்கையாலேயே கடாபி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நாம் கண்டிக்கின்றோம். இறைவனுடைய பெயரால் முஸ்லிம் நாடுகளிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐப்பசி 22, 2011

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி பணவீக்கம் 5.7 வீதமாக வீழ்ச்சி

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் 2010-2011 வருடங்களில் 8 வீத பொருளாதார வளர்ச்சியை எட்டமுடிந்துள்ளமையும் பணவீக்கத்தை 11 வீதத்திலிருந்து 5.7 வீதத்துக்கு குறைக்கமுடிந்துள்ள மையும் அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வருடங்களில் மேலும் நிதியினை அதிகரித்தால் தொடங்கப்பட்டுள்ள அபிவிருத்தித்திட்டங்களைத் தொடர்வதற்கு வசதியாக இருக்குமெனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.

ஐப்பசி 22, 2011

அணிசேரா நாடுகளின் வலுவான அடித்தளமாக விளங்கிய

லிபிய தலைவரின் மறைவு மனித சுதந்திரத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்

அணிசேரா நாடுகளின் அமைப்பின் பலம்வாய்ந்த அடித்தளமாக விளங்கிய லிபியாவின் தலைவர் கேணல் முஅம்மர் கடாபி நேற்றுமுன்தினம் கொல்லப்பட்டார். சதாம் சர்வாதிகாரப் போக்கில் ஈராக்கில் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார் என்றும், அவரிடம் உலகை அழிக்கவல்ல இரசாயண ஆயுதங்கள் இருந்தன என்றும் போலிக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி சதாம் உசைனின் அரசாங்கத்தை பதவியிறக்கிய சர்வதேச ஏகாதிபத்திய வாதிகள் இறுதியில் அந்த மனிதனை தூக்கிலுமிட்டு தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டனர். அதேபோன்று கடாபியை அழித்தால் தங்களுக்கு எதிராக அரபு நாடுகளில் தோன்றிவரும் எதிர்ப்பை முறியடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஏகாதிபத்திய வாதசக்திகள் லிபியாவிலும் தலையிட்டு எவருக்கும் அச்சமின்றி இருந்துவந்த கேணல் கடாபியையும் இறுதியில் தங்கள் மோசடி வலையில் வீழ்த்தி அவரின் உயிரைப் பறித்துவிட்டனர். (மேலும்..)

ஐப்பசி 22, 2011

மீன் மழை

ஆலங்கட்டி மழை கேள்விப்பட்டிருப்பீர்கள். மீன் மழை பெய்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். சில இடங்களில் மழை பெய்யும் போது மீன்களும் சேர்ந்து விழுந்துள்ளன. உலகில் உள்ள பல நாடுகளில் இந்த மீன்மழை பெய்துள்ளது. கனடா, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், கிரீஸ், இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா போன்ற நாடுகளில் மீன்மழை பெய்துள்ளது. முதல் நூற்றாண்டில் எழுத்தாளர் பிளினி புயல் மழை பற்றியும் அதில் பெய்த மீன் மற்றும் தவளைகள் பற்றயும் குறிப்பிட்டுள்ளார். (மேலும்..)

ஐப்பசி 22, 2011

உள்ளாட்சி தேர்தல்

காணாமல் போன விஜயகாந்த்!

சட்டசபைத் தேர்தலில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளார். இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் (மாநகராட்சி மேயர் தேர்தல்) விஜயகாந்தின் தேமுதிக கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலையோ அல்லது வெற்றி பெறவோ இல்லை. தங்கள் கட்சி பலம் இந்த உள்ளாட்சி தேர்தலில் தெரியும் என மார் தட்டிய விஜயகாந்த் தற்போது மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளார். மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வார்டு என அனைத்திலும் பெரிய கட்சிகளான திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது. அதுமட்டுமின்றி மாநகராட்சிகளிலும் சரி, நகராட்சிகளிலும் சரி அதிமுகவின் வெற்றியை தேமுதிகவின் பிரிவு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. பேரூராட்சிகளில்தான் இக்கட்சிக்கு ஓரளவு வார்டுகள் கிடைத்து வருகின்றன. தபால் ஓட்டுக்களிலும்(சென்னை) கூட தேமுதிகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் ஓட்டே கிடைக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி பிறகு தேமுதிகவிற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அடி இந்த உள்ளாட்சி தேர்தல். எதிர்பார்கப்பட்டதைப் போல் அதிமுக அதிக இடங்களில் வெற்றியீட்டியுள்ளது. திமுக இற்கு சில ஆறுதல் பரிசுகள் கிடைத்துள்ளன.ஏனைய கட்சிகள் தமது வலுவான ஆதரவுத்தள இடங்களை கைப்பறிறயுள்ளன.

ஐப்பசி 21, 2011

"பஞ்சபூதங்களை நம்பி வாழ்கிறோம்" நெல்லியடி விவசாய தொழிலாளர்களின் குரல்

"மண்ணோடு மண்ணாகிப்போகும் வரை இந்த மண்ணை நம்பித்தான் வாழ்ந்து வருகிறேன். விடிஞ்சதும் தோட்ட வேலை, இருட்ட வீட்டு வேலை”

அது யாழ்ப்பாணம் நெல்லியடி மூத்த விநாயகர் கோவிலடி. இறுவாட்டு மண்ணில் வெங்காய அறுவடை நடந்துகொண்டிருக்கிறது. முதியவர் ஒருவரின் கண்காணிப்பின்கீழ் ஆறேழு பேர் வேலை செய்கிறார்கள். அந்தி மங்குவதற்குள் அறுவடையை முடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோள் கண்களில் தெரிந்தது. வாகன இரைச்சலைக்கூடப் பொருட் படுத்தாது கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. சூரியன் அஸ்தமிக்கும் வேளை கடுமை யான உழைப்பில் களைத்துப்போன பவளம் (64) தன் கைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார். முகச்சுருக்கம் வயதின் முதுமையைக் காட்ட, காதோரம் வழிந்தோடிய வியர்வை அன்றைய நாளின் பாரமான பொழுதுகளை நினைவூட்டின. பவளம் சிறுவயதிலிருந்தே விவசாய கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நாளொன்றுக்கு ஏழு ரூபா சம்பளம் வாங்கிய காலம் முதல் எழுநூற்று ஐம்பது ரூபா சம்பளம் வாங்கும் காலம் வரை மண்ணோடு போராடிக்கொண்டிருக்கிறார். (மேலும்....)

ஐப்பசி 21, 2011

லிபிய தலைவர் கடாபி சுட்டுக் கொலை

லிபியாவில் 42 ஆண்டு காலம் ஆட்சிபுரிந்த கேணல் முஅம்மர் கடாபி நேற்று புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. கடாபி தன்னுடைய நெருக்கமான நண்பர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் தனது பிறந்த சொந்த ஊரான செற் நகரிலிருந்து தப்பியோட எத்தனித்த போது அந்த வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட கடும் தாக்குதலில் அவர் படுகாயமடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ள போதிலும், இப்போது அவர் மரணமடைந்திருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 21, 2011

இனப்படுகொலை இலங்கை அரசு தன்னைத் தானே தண்டித்துக்கொள்ள வேண்டும் - அமெரிக்கா

பல்வேறு இன மக்களிடையே ஐக்கியத்தை எதிர்பார்க்கும் நாடொன்று, மனித உரிமைப் பிரச்சனைகளுக்கு பிரச்சினைகளுக்கு அவர்களே தீர்வை தேடுவது, முக்கியமானது. இலங்கை இதனை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார். கொலைக்காரர்களே கொலைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்று உலகின் போர்ப்பிரபு நாடான  அமரிக்காவின் பேச்சாளார் கூறியிருப்பதை இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்று தமிழ் ஊடகக் கோமாளிகள் செய்தி வெளியிட்டுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 21, 2011

கணனியில் வைரஸ் அனுப்பித் திருடும் “ஜனநாயக” அரசாங்கங்கள்

(மதனாகரன்)

கணணியில்(Computer)  வைரஸ் தொற்றிக்கொள்வதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. ஆரம்பத்தில் மென்பொருளில் ஏற்படும் தவறுகள் காலப் போக்கில் வைரசாக மாறுவதுண்டு. இணையத் தொழில் நுட்பம் பாவனைக்கு வந்த பின்னர் இரண்டு பிரதான வைரஸ் வகைகள் கணணியைத் தொற்றிக்கொள்வது வழமையாகிவிட்டது. விளம்பரப் பொருள் (adware) மற்றும் வேவு பொருள்(spyware) என்ற இரு வைரஸ் வகைகளும் தகவல் தொழில் நுட்ப உலகத்திற்கு சவாலாக இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக வேவு பொருள் என்பது கணணிப் பாவனையாளரின் தகவல்களைத் எங்கோ தொலைவில் உள்ளவர் திருடுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. வங்கிக் கணக்கிலங்கள், மின்னஞ்சல் தொடர்புகள், குரல்வழித் தொடர்புகள் போன்றவற்றைத் திருடுவதற்காக தகவல் தொழில் நுட்பக் கொள்ளைக் காரர்களால் வேவு பொருள் பாவிக்கப்படுகின்றது. (மேலும்....)

ஐப்பசி 21, 2011

"Ford" CEO's Car

பல இலட்சம் தொழிலாளர்களின் வியர்வையில் சுகம்காணும் இவர்களின் ‘WallStreet’ இல் தற்போது வியர்வை சிந்தியவர்கள் நீதி கேட்க புறப்பட்டுவிட்டனர். இது ஆரம்பம் மட்டுமே! இன்னும் இருக்கு.....?

ஐப்பசி 21, 2011

அப்படி போடுங்க அரிவாளை பிரதமரே

வயல் நிலங்களை மேட்டு நிலங்களாக மாற்றினால் கடும் சட்ட நடவடிக்கை

விளைநிலங்களாக இருக்கும் வயற் காணிகளை மேட்டு நிலங்களாக மாற்றி கட்டடங்கள் அமைப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இவற்றுக்கு துணைபோகும் அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் தி.மு. ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விளை நிலங்களில் குத்தகை அடிப்படையில் செய்கை பண்ணும் கமத் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான கமநல அபிவிருத்தித் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.(மேலும்....)

ஐப்பசி 21, 2011

பாகிஸ்தான் ஒன்றும் ஈராக் இல்லை

வடக்கு வசரிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் முன் நன்கு யோசித்துக்கொள்ள வேண்டும் என பாக். இராணுவ தளபதி கயானி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்கா தனது படைகளை குவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கயானி, பாகிஸ்தான் ஒன்றும் ஈராக் இல்லை என்றும், வடக்கு வசரிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் முன் நன்கு யோசித்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா கவனம் கொள்ள வேண்டியது ஆப்கானிஸ்தான் தான் என்றும் பாகிஸ்தான் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐப்பசி 21, 2011

30 ஆயிரம் பேரை பட்டிச் சாவிற்குள் தள்ளி இரண்டு பில்லியன் யூரோக்களை பாக்கெற்றுக்குள் போட ஐரொப்பிய யூனியன் முயற்சி

கிரீஸ் பாராளுமன்றத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கான இரு முக்கிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதுமான 48 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று முன்தினம் தொடக்கம் நடைபெற்றது. அத்துடன் முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கில் மக்கள் திர ண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடன் நெருக்கடியில் சிக்கிய கிரீஸ¤க்கு, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.), ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய மூன்று அமைப் புகளும் கடன் தவணையை வழங்க விதித்த நிபந்தனைக்கமையவே கிரீஸ் இந்த சிக்கன நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீஸின் இரு மிகப்பெரிய தொழிற்சங்கங்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை நேற்று முன்தினம் தொடக்கம் நடத்தியது. இதில் 40 இலட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். (மேலும்....)

ஐப்பசி 21, 2011

சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி

ஐ. நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற சீனா உதவி செய்யும் என்று நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில் சீனா திடீரென பாகிஸ்தானிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந் துள்ளது. ஐ. நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ என்றழைக்கப்படும் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட ஐந்து நாடுகள் இடம் பெற்றுள்ளன. உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள் வேண்டுகோள் விடுத்து வரும் நேரத்தில் இந்தியா உறுப்பு நாடுகளின் வரிசையில் இடம் பெறுவதற்கு சீனா உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவை இந்தியா கோரி வருகிறது. இந்த கோரிக்கைக்கு சீனாவும் ஆதரவு தெரிவித்தது. இந் நிலையில் ஆதரவு நிலையில் இருந்து தன் முடிவை சீனா மாற்றிக் கொண் டுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தரப்போவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜியாங்யூ கூறியதாவது; சீனாவும் பாகிஸ்தானும் அனைத்து விடயங்களிலும் ஒத்த கருத்து கொண்டவையாக திகழ்கின்றன. இந்தியா நிரந்தர உறுப்பு நாடு ஆவதற்கு சீனா எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

ஐப்பசி 21, 2011

மும்மொழிக் கொள்கை நாட்டில் ஐக்கியத்தை வலுப்படுத்தும்

மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலமே நாட்டு மக்கள் அனைவரும் சம உரிமையுடனும், மன நிறைவுடனும் சகல மத, இன மக்களுடன் நட்புறவுடன் வாழ முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ள கருத்து உண் மையிலேயே யதார்த்தபூர்வமான, நாட்டின் மேம்பாட்டுக்காக முன் வைத்த ஒரு சிறந்த யோசனையாகும்.  தற்போது தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்துவரும் வாசுதேவ நாணயக்கார 1960-70ம் ஆண்டு தசாப்தங்க ளில் லங்கா சமசமாஜக் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராக இருந்த போது, மொழிகளுக்கு சம உரிமை கொடுத்தால்தான் நாட்டில் உண்மையான இன ஐக்கியமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுமெ ன்று பலதரப்பட்ட போராட்டங்களை அன்றைய அரசாங்கங்களுக்கு எதிராக மேற்கொண்டு வந்திருக்கிறார். (மேலும்....)

ஐப்பசி 21, 2011

பரவுகிறது அமெ. மக்களின் போராட்டம்

(எஸ்.ஏ.பெருமாள்)

கடந்த ஒரு மாத காலமாக ஆயிரக் கணக்கான அமெரிக்க மக்கள் வால் தெருவைக் கைப்பற்றுவோம் என்ற முழக் கத்துடன் அந்தத் தெருவை ஆக்கிர மித்துப் போராடி வருகின்றனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்கா வின் ஆளும் வர்க்கமாய் திகழும் முத லாளிகளின் தலைமையகமாய் திக ழுவதே வால்தெருவாகும். உலகையே நிரந்தரப் போர்க்களமாக்கிவரும் பதி னான்கு ஆயுத உற்பத்தி முதலாளிகள் குடியிருப்பது இந்தத் தெருவில்தான். இவர்கள்தான் அமெரிக்க அரசை ஆட்டிப்படைப்பவர்கள். 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளா தார நெருக்கடியின் போது அமெரிக்க வங்கிகளுக்கும், இன்சூரன்ஸ் நிறுவனங் களுக்கும் பல லட்சம் கோடி டாலர்களை அள்ளி வழங்கி அவர்களது நஷ்டத்தை ஒபாமா அரசு ஈடுகட்டியது. ஏழை, நடுத் தர, உயர் நடுத்தர மக்களுக்கு எந்த நஷ்ட ஈடும் கிடைக்கவில்லை. இதனால் லட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கிறார் கள். பொறுமையிழந்து தற்போது போராட் டத்தில் குதித்திருக்கிறார்கள். உலகைக் கொள்ளையடித்து, உலகமக்களை ஓட் டாண்டிகளாக்கும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு எதிராக அவர்கள் போர்க்குரல் கொடுக்கிறார்கள். (மேலும்....)

ஐப்பசி 20, 2011

Moammar Gadhafi killed after 42-year reign

Muammar Gaddafi is dead, Libya's new leaders said, killed by fighters who overran his hometown and final bastion on Thursday. His bloodied body was stripped and displayed around the world from cellphone video. Senior officials in the interim government, which ended his 42-year rule two months ago but had labored to subdue thousands of diehard loyalists, said his death opened the way for a declaration of "liberation" after eight months of war. His body was expected in the long-standing rebel stronghold of Misrata, officials said as their Western sponsors held off from confirming that Gaddafi, a self-styled king of kings whom they had lately courted after decades of enmity, was dead at 69. (more...)

ஐப்பசி 20, 2011

தோழர் காத்தமுத்து விசுவலிங்கம் (நாபா) மறைவு

 

உதயம் 19.12.1961       மறைவு 19.10.2011 

எமது இதய அஞ்சலிகள்

தோழர் காத்தமுத்து விசுவலிங்கம் நாபா இவர் நேற்றிரவு சென்னை மருத்துவமனையில் அகாலமரணமானார். அவர் மட்டக்களப்பு சித்தாண்டியை பிறப்பிடமாக கொண்டவர். 1983ல் இருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து சமூக அரசியல் விடுதலைக்காகப் பாடுபட்டவர். இந்தியாவில் புழல் அகதிகள் முகாமில் தனது மனைவி மகளுடன் வாழ்ந்து வந்தவர். 17ம் திகதி அவர் தனது ஆட்டோவை ஓட்டிச் சென்ற போது ஒரு விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். இதற்கு முன்னரும் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் அவரது ஒரு காலில் முறிவு ஏற்பட்டது. ஆனாலும் அவர் சோர்ந்துவிடாத அயராத உழைப்பாளியாக இருந்தார். அவர் தோழர்களாலும் நண்பர்களாலும் அயலவர்களாலும் மிகவும் நேசிக்கப்பட்டவர். எல்லோருக்கும் உதவி புரியும் மனோபாவம் அவருக்கு இருந்தது. எப்போதும் இன்முகத்துடன் காணப்படுவார். அவர் நேற்றிரவு சென்னை பொது வைத்தியசாலையில் காலமானார் அவரின் இறுதிச் சடங்குகள் இன்று (20.10.2011) சென்னை புழலில் நடைபெறும். அன்னாரின் மறைவிற்கு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. (மேலும்....)

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்

ஐப்பசி 20, 2011

சிர்தே வீழ்ந்தது

கடாபி கைது? கொல்லப்பட்டுவிட்டார்?

கடாபியின் இறுதி மறைவிடமாகக் கருதப்பட்ட அவரது சொந்த நகரான சிர்தே இடைக்கால அரசாங்கப் படையின் வசம் வீழ்ந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடாபியின் கைது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படாத போதிலும் சர்வதேச ஊடகங்கள் கடாபி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.  இதேவேளை கைது செய்யப்பட்ட வேளை கடாபியின் கால்களில் காயமேற்பட்டிருந்ததாக 'ஸ்கை நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை கடாபி கை செய்யப்படவில்லை போரில் கொல்லப்பட்டுவிட்டார் என்ற ஊர்ஜிதம் அற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. (மேலும்....)

ஐப்பசி 20, 2011

புலிகள் அமைப்புடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்த 5 இலங்கை தமிழர்கள் சம்பந்தமான ஹேய்க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளைய தினம்!

புலிகள் அமைப்புடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 5 இலங்கை தமிழர்கள் சம்பந்தமாக ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்பட உள்ளது. நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்த 5 பேரும் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தாக தகவல்கள் தெரியவந்துள்ளன. சர்வதேச குற்றம், பயங்கரவாத அமைப்பின் குற்றங்களுக்கும், குண்டு தாக்குதல், நபர்களை கொலை செய்தல் ஆகிய குற்றச் செயல்களுக்கு உதவியதாக இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், இவர்களுக்கு தலா ஒரு வருடச் சிறைத் தண்டனை வழங்கப்படும். நெதர்லாந்தில் சட்டவிரோதமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்டு, இந்த 5 பேரும் கடந்த வருடம் நெதர்லாந்து காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த சந்தேக நபர்கள் புலிகளுக்கு நிதி வழங்கியிருப்பதாகவும் சட்டவிரோதமாக பரிசுச்சீட்டுகளை விற்பனை செய்து, பணம் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் அமைப்பை தடைசெய்தது. இதனால் அந்த நாடுகளில் புலிகளுக்கு நிதி சேகரிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை புலிகளின் செயற்பாடுகளை கண்டறிவதற்காக நெதர்லாந்து அரசாங்கம், ஒபரேஷன் கோனிக் என்ற பெயரில் விசேட விசாரணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது. இந்த விசாரணைக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்ததுடன்,புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஐப்பசி 20, 2011

தமிழ் மக்களை குழப்பும் சம்பந்தன் - சங்கரி கூட்டு  - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

சம்பந்தன், ஆனந்த சங்கரி போன்றோர் இணைந்து செயற்படுவது தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கல்ல. மாறாக நாட்டையும் மக்க ளையும் குழப்புவதற்கே என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கிழக்கு மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதைப் பொறுக்காது அவர்கள் கிழக்கு மக்களை குழப்பும் குறுகிய அரசியல் செயற்பாடுகளில் இறங்கி யுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு வவுணதீவில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற நீர் விநியோ கத்திட்ட ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய முதலமைச்சர்: கிழக்கு மாகாணம் பாரிய முன்னேற்றம் கண்டு வருகிறது. மூவின மக்களும் இங்கு ஐக்கியமாக வாழ்கின்றனர். அரசியல் செயற் பாடுகளிலும் நாம் சில விட்டுக்கொடுப்புகளுடன் செயற்பட்டு வருகின்றோம். இதனைக் குழப்பும் வகையிலேயே ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு நடவடிக்கை எனக் கூறி அவர்கள் மக்களை திசை திருப்ப முயல்கின்றனர். மக்கள் எதற்கும் ஏமாறக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐப்பசி 20, 2011

ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்ட

ராஜீவ காந்தி கொலையாளிகள் மூவர் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ராஜீவ காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. ராஜீவ காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மூவருக்குமான தூக்குத் தண்டனைக்கு 8 வார காலம் தடை விதித்து, இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். (மேலும்....)

ஐப்பசி 20, 2011

தொலைபேசி ஊடாக கொழும்பு-பதுளை ரயில் ஆசனப்பதிவு

மொபிட்டெல் தொலை பேசி சேவையை பயன் படுத்தும் வாடிக்கையாளர்கள் 365 என்ற இலக்கத்தை அழைத்து பதுளை-கொழும்பு ரயில் சேவையில் பய ணிப்பதற்கான ஆசனப் பதிவுகளை மேற்கொள்ள முடியும். மேற்படி சேவையூடாக ஆசனப் பதிவினை மேற் கொள்ளும் வாடிக்கையா ளர்களின் பதிவுகள் 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் விஜயசமரசிங்க தெரிவித்தார். தற்போது கொழும்பு-வவுனியா, கொழும்பு-கண்டி ஆகிய இடங்களுக்கான ரயில் முன் பதிவு நடை முறையில் இருக்கின்றது. இச் சேவையானது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் எதிர்வரும் பண்டிகை காலத்தில் மக்கள் எவ்விதமான பிரச்சினைகளுமின்றி போக்குவரத்தை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐப்பசி 20, 2011

அன்னா ஹசாரே குழு உடைந்தது

அன்னா ஹசாரேவின் உயர்மட்டக் குழுவில் இருந்து 2 முக்கிய சமூக ஆர்வலர்க ளான பி.வி.ராஜகோபால் மற்றும் ராஜஸ்தானின் தண் ணீர் மனிதர் என்று வர்ணிக் கப்படும் ராஜேந்திர சிங் ஆகியோர் செவ்வாயன்று விலகினர். ஹசாரேவின் இயக்கம் தற்போது அரசியலில் ஈடு படத் தொடங்கியுள்ளதற்கு ஆட்சேபம் தெரிவித்து இந்த குழுவில் இருந்து விலகுவ தாக அவர்கள் அறிவித்துள்ளனர். ஹரியானா மாநிலம் ஹிசாரில் காங்கிரசுக்கு எதி ரான பிரச்சாரத்தைத் தொடங் கும் முடிவு உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப் படவில்லை என்பதும் ஹசாரே குழுவில் இருந்து விலகும் முடிவுக்கு ஒரு கார ணம் என இருவரும் தெரி வித்தனர். குழுவில் இருந்து விலக வேண்டாம் என்று தன்னை ஹசாரே குழுவினர் நிர்ப்பந்தித்தனர் என்று ராஜகோபால் தெரிவித்தார்.

ஐப்பசி 20, 2011

பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும்

நாட்டின் இரண்டாவது பாரிய நீர் விநியோகத் திட்டத்தை வவுணதீவில் இன்று ஆரம்பித்து வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்குதான் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கருணா குழுவினர் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டனர் என அறிகிறேன். கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில், கிழக்கிற்கே நாம் பெருமளவு நிதியினை செலவிட்டு வருகிறோம். இப்பிரதேச மக்களுக்குப் பிரச்சினைகள் இருப்பின், அவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். அதனால் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியம். கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை நாம் கிராம, நகர, மாவட்ட, மாகாண மட்டத்தில் முன்னெடுத்துச் சென்றுள்ளோம். வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்றே கிழக்கிலும் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை என பாரிய அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் வடக்கு – கிழக்கு உட்பட சகல பகுதிகளும் முன்னேறி வருகின்றன. (மேலும்....)

ஐப்பசி 20, 2011

கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்த திட்டம்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு செய்திருக்கும் ‘சில்ப’ சிறுகைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சிகள் கண்காட்சி எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கடந்த கால யுத்தம் காரணமாக பாதிக் கப்பட்டுள்ள பாரம்பரிய, சிறு மற்றும் மத்திய கைத்தொழில்களை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தக் கண்காட்சி நடத்தப்படவிருப்பதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 20, 2011

நேபாள பிரதமர் பட்டாராய்  இந்தியாவின் ஆதரவைக் கோருகிறார

இவ்வார இறுதியில் இந் தியா வரவுள்ள நேபாளப் பிரத மர் முனைவர் பாபுராம் பட்டாராய் தன்னுடைய பிரதான நிகழ்ச்சி நிரலாக நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை இறுதிப்படுத்துவ திலும், அமைதிவழியில் நாட் டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும், இந்தி யாவின் ஆதரவையும் நல் லெண்ணத்தையும் பெரிதும் கோர இருக்கிறார். இது தொடர்பாக நேபாள அரசின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், இரு நாடுகளின் இடையே வழக்கமாக இருந்து வரும் பிரச்சனைகள் தொடர் பாக எவ்விதப் பேச்சுவார்த் தையும் இருந்திடாது என்றும், மாறாக நேபாளத்தில் இறுதிப் படுத்தப்படவுள்ள அரசமைப் புச் சட்டத்தின் அம்சங்கள் குறித்து இந்தியாவின் ஆதர வையும், நல்லெண்ணத்தை யும் குறிப்பாக சமூகப் பொரு ளாதாரத் துறைகளில் இந்தியா வின் உதவியைக் கோருவதாக அமைந்திடும் என்றும் தெரி விக்கின்றனர்(மேலும்....)

ஐப்பசி 20, 2011

மக்கள் கிளர்ச்சி மீதான தாக்குதலுக்கு ஆயுதம் விற்ற நாடுகள் அம்பலம் - சர்வதேச மன்னிப்புச் சபை

மக்கள் கிளர்ச்சிக்கு எதிராக தாக்குதல் நடத்தும் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க நாடுகளின் இராணுவங்களுக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ஆயுத விநியோகம் செய்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் கிளர்ச்சி மீது தாக்குதல் நடத்தப்பட்ட பஹ்ரைன், சிரியா, எகிப்து, யெமன் மற்றும் லிபியா ஆகிய நாடுகளின் இராணுவங்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் ஆயு தம் விநியோகிக்கும் நாடுகள் குறித்த விபரத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான ஆயுதப் பரிமாற்றம் என்ற தலைப்பில் மன்னிப்புச்சபை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 20, 2011

திபெத் போராட்டம் தீவிரம், பெண் துறவி தீக்குளிப்பு

சீனாவின் பிடியில் இருந்து திபெத்தை விடுவிக்கும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் துறவி, தீக்குளித்து இறந்துள்ளார். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், திபெத் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொடக்கம், இப்பகுதியில் உள்ள கீர்த்தி மடாலயத்தைச் சேர்ந்த ஏழு துறவிகள், தீக்குளித்தனர். இவர்களில் இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். எட்டாவதாக, ஒரு முன்னாள் துறவி, சமீபத்தில் தீக்குளித்தார். இந்நிலையில், அபா பகுதியைச் சேர்ந்த பெண் துறவி டென்ஜின் வாங்கமோ, 20 கடந்த திங்கட்கிழமை தீக்குளித்து சம்பவ இடத்திலேயே உயிர்விட்டார். அபா நகரில் சீன பொலிஸாரின் பாதுகாப்பு அதிகமாக இருந்ததால், நகரின் வெளியில் அவர் தீக்குளித்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீக்குளித்தவர்கள் அனைவருமே, 18 வயதில் இருந்து, 22 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 20, 2011

ஐக்கிய தேசிய கட்சி அகங்காரத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும்

டந்து முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளை நாம் அமை தியாக இருந்து பகுப்பாய்வு செய்தால் எங்களுக்கு கடலாமையும், வீட்டுக்கோழியும் ஞாபகத்திற்கு வரும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நாம் கடலாமையாகவும், ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு வீட்டுக் கோழியாகவும் தான் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஆயிரம் முட்டைகளை இடும் கடலாமை அமைதியாக இருக்கும் போது, ஒரே யொரு முட்டையிட்ட கோழி கொக்கரிப்பதைப் போன்று ஐக்கிய தேசி யக் கட்சி இன்று நடந்து கொள்வது அக்கட்சிக்கே அவமானத்தை தேடிக் கொடுக்கிறது. முடிந்த 23 உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் 22 உள்ளூராட்சி மன்றங்க ளில் படுதோல்வியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு உள் ளூராட்சி மன்றத்தில் மாத்திரம் வெற்றியடைந்ததை வைத்துக் கொண்டு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாட்டையே கைப்பற்றி தாங்கள் அர சாங்கத்தை அமைத்து விட்டோம் என்றது போன்ற மமதையில் இன்று அரசாங்கத்தின் பலத்தை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருக்கி றார். அரசாங்கத்தின் அழிவு கொழும்பில் ஆரம்பமாகி விட்டது என்று அவர் கொக்கரிக்க ஆரம்பித்து விட்டார். (மேலும்...)

ஐப்பசி 19, 2011

கிழக்குப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்க முயற்சி - இரா துரைரட்ணம் (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்தினால் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை கடந்த 3 வருடங்களாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 20 மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்பட்டு தற்போது மொத்தமாக 58 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒவ்வொரு வருடத்திலும் சித்த மருத்துவத்துறைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 20 மாணவர்களை தேர்வு செய்கிறது. இப்படியிருக்க கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இந்த சித்த மருத்துவத்துறையை இணைப்பதற்கு ஏற்பாடுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக நடைபெற்று வருவதாக அறிகிறேன். (மேலும்...)

ஐப்பசி 19, 2011

Have you ever seen a river over a river?  

Even after you see it, it is still hard to believe !

ஐப்பசி 19, 2011

இதுவரை 2 ஆயிரம் பேர் கைது

முதலாளித்துவத்திற்கு எதிராகக் கடந்த மாதம் 17 ஆம் தேதி துவங்கி, தொடர் ந்து நடந்து கொண்டிருக் கும் போராட்டத்தில் ஈடு பட்ட அமெரிக்கர்களில் 2 ஆயிரம் பேரை அந்நாட் டின் காவல்துறை கைது செய்துள்ளது. வால்ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம் என்று பங்குச்சந்தையை முன்னி றுத்தும் அமெரிக்காவின் முதலாளித்துவக் கொள்கை யை எதிர்த்துத் துவங்கிய போராட்டம் தற்போது சுமார் 100 நாடுகளுக்குப் பரவியுள்ளது. போராட்டத் தின் வீச்சு அதிகரிக்க, அதி கரிக்க அடக்குமுறை நட வடிக்கைகளையும் அமெ ரிக்க மற்றும் ஐரோப்பியக் காவல்துறையினர் அதிகரித் துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க், சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் மற் றும் பாஸ்டன் ஆகிய நக ரங்களில் ஆயிரக்கணக் கான மக்கள் போராட்டத் திற்கு ஆதரவாகக் களமிறங் கியுள்ளனர். (மேலும்...)

ஐப்பசி 19, 2011

கணனி ' - ஆணா... பெண்ணா..?

 கணனி ' - ஆணா... பெண்ணா..? ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே
மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு
அறிவுறுத்தினார்.......... மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு
வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ... (மேலும்...)

ஐப்பசி 19, 2011

அகால மரணமடைந்த அருமைதோழன் ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஸ்

அவர்களுக்கு பத்மநாபாஈழமக்கள்புரட்சிகர விடுதலைமுன்னணி கட்சியினர் தங்களது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின்குடும்பத்தார்க்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது. (மேலும்...)

ஐப்பசி 19, 2011

இப்போது தான் தெரிகிறதா?

மம்தா பானர்ஜியின் பொய்களும் புனை சுருட்டுகளும் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழு கின்றன. அவரது நிஜ முகத்தை மேற்குவங்க மக்கள் பார்க்கத் துவங்கியிருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி ஆட்சி நடந்தபோது, மாவோயிஸ்டுகள் என்று தங் களை கூறிக்கொள்ளும் கொலைகாரக் கூட்டத் துக்கு இவர் அரசியல் புகலிடம் அளித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் என்று யாருமே இல்லை. மார்க்சிஸ்டுகள்தான் அட்டூழியம் செய்கிறார்கள் என்று கொஞ்சம் கூட நா நடுங்காமல் பேசினார். ஆனால் இன்றைக்கு இவர் முதல மைச்சரான பின்பு மாவோயிஸ்டுகளை கொலை காரர்கள் என்றும், வன மாபியாக்கள் என்றும் வசைபாடத் துவங்கியிருக்கிறார். ஒருவார காலத் திற்குள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் விளைவு விபரீதமாகயிருக்கும் என்று கர்ஜிக்கிறார். (மேலும்...)

ஐப்பசி 19, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நவம்பரில்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கை நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் தெரிவித்தார். மக்கள் வழங்கிய சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே இறுதியறிக்கையின் பரிந்துரைகள் அவர் தினகரனுக்குக் கூறினார். இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இறுதி அறிக்கைக்கான முதற்கட்ட திட்டவரைபுகளை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. 2 ஆம், 3 ஆம் கட்டத் திட்டவரைபுகள் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். (மேலும்...)

ஐப்பசி 19, 2011

தொலைக்காட்சியில் கடவுள் சித்தரிப்பு

துனீஷியாவில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

அரபு புரட்சிக்கு வித்திட்ட துனீஷி யாவில் பொதுத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள சூழலில், புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு தொலைக் காட்சி ஒன்றில் கடவுளை உருவம் உடையவராக சித்தரித் ததற்கு ஆதரவும் எதிர்ப் பும் உருவாகியுள்ளது. துனீஷியாவின் “நெஸ்மா டிவி” யில் சமீபத்தில் ‘பெரஸ்போலிஸ்’ என்ற கார்ட்டூன் படம் ஒளிபரப்பானது. இதில் கடவுள் உருவம் உடையவராக சித்தரிக்கப்பட்டிருந்தார். இதை எதிர்த்தும், இது போன்ற காட்சிகளை தணிக்கை செய்ய வேண்டும் எனவும் கோரி இஸ்லாமிய பழைமை வாதிகள் கடந்த வாரம் தலைநகர் துனீஷில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாற ஆரம்பித்துள்ளது. பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிக் கூட்டத்தைக் கலைத்தனர். அதேநேரம், நாட்டின் இஸ்லாமியர்களில் முற்போக்குவாதிகள் பலர், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நேற்று முன்தினம் மற்றொரு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐப்பசி 19, 2011

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அமெரிக்க நிலைப்பாடு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்படும்வரை அவ்வறிக்கை தொடர்பில் எந்தவொரு தீர்மானத்துக்கும் வரப்போவதில்லையென அமெரிக்கா கூறியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே அதுபற்றிய நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் எனத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மார்க் டோனர், நவம்பர் 15 ஆம் திகதி இறுதியறிக்கை வெளியிடப்பட முன்னர் தீர்மானமொன்றுக்கு வரப்போவதில்லையென்று கூறினார். வொஷிங்டனில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட்.ஓ.பிளேக், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைத் தாம் எதிர்பார்த்திருப்பதாகக் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 19, 2011

தொடரும் ‘வோல் தெரு ஆக்கிரமிப்பு’ போராட்டத்திற்கு ஒரு மாதம் நிறைவு

அமெரிக்காவின் “வோல் தெரு ஆக்கிரமிப்பு” போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. போராட்டத்திற்கான நிதியுதவி தற்போது மூன்று லட்சம் டொலராக அதிகரித்துள்ளது. இந்நிலையில், லண்டனில் “லண்டன் ஆக்கிரமிப்பு” போராட்டம் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், கடந்த செப்டம்பர் 17ம் திகதி மன்ஹாட்டன் பகுதியில் வோல் தெரு என்ற இடத்தில் நடந்த 1000 பேர் மட்டும் பங்கேற்ற சிறு போராட்டம் தற்போது உலகளவில் தீப்பிடித்தது போல பரவிவருகிறது. (மேலும்...)

ஐப்பசி 19, 2011

பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க இராணுவம் குவிப்பு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான பீரங்கிகள், இராணுவ ஹெலிகொப்டர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தானுக்கும், ஆப்கானுக்கும் இடையிலான அனைத்துப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு, எல்லைகள் மூடப்பட்டு விட்டன. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை ஒட்டி, ஏழு பழங்குடியினப் பகுதிகள் உள்ளன. அவற்றில்தான் தெற்கு, வடக்கு வஜீரிஸ்தான் பகுதிகள் உள்ளன. பாகி ஸ்தான் அரசியலமைப் புப்படி, ஏழு பகுதிகளும் பழங்குடியினரால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பகுதிகள், வடக்கு வஜீரிஸ்தானின் தலைநகர் மிரான்ஷா நகர். பாக், ஆப்கான் எல்லையில் பழங்குடியினப் பகுதிகள் இருப்பதால், தலிபான்கள் மிகச் சுலபமாக பாகிஸ்தானுக்குள் நுழைகின்றனர். ஹக்கானி குழுவின் பதுங்கிடமாக வடக்கு வஜீரிஸ்தான் இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. (மேலும்...)

ஐப்பசி 19, 2011

கடாபி மகன் காமிஸ் மரணம்

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் காமிஸ் கடாபி கொல்லப்பட்டதை கடாபி ஆதரவு பெற்ற தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது. முஅம்மர் கடாபியின் இளைய மகனான காமிஸ் கடாபி மற்றும் கடாபி அரசின் உளவுப் பிரிவுத் தலைவர் அப்துல்லா அல் சனூசியின் மகன் முஹம்மத் சனூசி ஆகியோர் கடந்த ஓகஸ்ட் 29ம் திகதி மோதலின் போது கொல்லப் பட்டதாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். எனினும் இந்தச் செய்தி உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடாபி ஆரவு பெற்ற சிரியாவின் அல்ராய் தொலைக்காட்சி காமிஸ் கடாபி மற்றும் முஹம்மத் சனூசி ஆகியோர் எதிரிப்படையுடனான மோதலில் கொல்லப்பட்டதாக நேற்று செய்தி வெளியிட்டது. அல் ராய் தொலைக்காட்சியிலேயே தலைமறைவாகியுள்ள முஅம்மர் கடாபி தனது செய்திகளை வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை முஅம்மர் கடாபியின் கட்டுப்பாட்டிலுள்ள கடைசி நகரான பானி வலீதின் 95 வீதமான பகுதியை கைப்பற்றிவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐப்பசி 19, 2011

இயற்கையின் கொடை

நம் வாழ்வில் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துவிட்ட மரம் தென்னை. தென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் மிகப் பழங்காலந் தொட்டே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். மலேசிய பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும் மத்தியிலும் உள்ள தீவுகள், கிழக்குத் தீவுக் கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகள் ஆகியவற்றில் தென்னை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 இலட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டு விளைச்சல் 14 ஆயிரம் கோடி தேங்காய்கள். (மேலும்...)

ஐப்பசி 18, 2011

எச்சரிக்கை

கனடாவில் செல்வியின் பெயரால் கள்வனே கள்வனைத் தேடிய நாடகம்!

பாசிச புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, பெண் புலிகளால் மனிதகுலம் வெட்கித் தலைகுனியுமளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டு, அந்த ஏழை கிராமப்புற பிள்ளையை நார் நாராகக் கிழித்து படுகொலை செய்த, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியான செல்வி (செல்வநிதி தியாகராசா) அவர்களுக்கு, கனடாவில் 2011 அக்டோபர் 16ம்திகதி நினைவுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. செல்வி 1991ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30ந் திகதி யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் அருகிலுள்ள அவரது வீட்டிலிருந்து புலிகளால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவருக்கு யாரும் நினைவஞ்சலிக் கூட்டம் நடாத்தவில்லை. இப்பொழுது மட்டும் ஏன் இந்தக் கூட்டம் என்பது தெரியவில்லை. (மேலும்...)

ஐப்பசி 18, 2011

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் பொறுப்பற்ற கூற்றுக்கு EPDP கண்டனம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தனபாலசிங்கம் தாக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என யூகத்தின் அடிப்படையில் இணையத் தளங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளமை கண்டனத்திற்குரியது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆதரவு தேட சிவஞானம் சிறீதரன் முற்பட்டுள்ளார். இச்சமயம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பத்மினி சிதம்பரநாதன் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நடத்திய இரகசிய ஆலோசனையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தனபாலசிங்கமும் சமூகமளித்திருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரகசிய ஆலோசனையில் ஈடுட்பட்ட அணியினருடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நெருக்கமான உறவினைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. (மேலும்...)

ஐப்பசி 18, 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பு(TNA) இலிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) வெளியேறுகின்றது?

தமிழ் தேசிக்கூட்டமைப்புக்குள் இணைந்திருக்கும் கட்சிகளுக்கிடையே கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்திருப்பதாக தெரியவருகிறது. எதிர்வரும் 25ம் திகதி அமெரிக்காவுக்கும் ஜரோப்பாவுக்கும் செல்லிவிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவில் அதன் முக்கிய பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக எதிர் வரும் 18ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட தலைவர்களைக் கொண்ட குழு ஒன்று சந்திக்க உள்ளதாகவும் இதில் பல் வேறு விடயங்கள் பேசப்பட உள்ளதாகவும் சாதகமான முடிவு ஏற்படாத பட்சத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி மூன்றாவது அணி ஒன்றை உருவாக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். (மேலும்...)

ஐப்பசி 18, 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 27)

(நேசன்)

இந்தியாவிலிருந்து பயிற்சி பெற்றவர்களை தளத்துக்கு கொண்டுவரும் படகிலேயே இந்தியாவிலிருந்து “புதிய பாதை” பத்திரிகை, சஞ்சிகைகள், துண்டுப்பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இவற்றை “செய்தி மக்கள் தொடர்புத் திணைக்கள” ப் பொறுப்பாளர் விபுல் கடற்கரையிலிருந்து பொறுப்பெடுத்துக் கொண்டு வருவார். இந்தியாவிலிருந்து வந்த பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளுடன் தெல்லிப்பளையைச் சேர்ந்த ஒருவரின் முகவரிக்கு பொதி ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்தப் பொதி பிரச்சார சம்பந்தமானதாக இல்லாததால் அதை விபுல் கண்ணாடிச் சந்திரனிடம் ஒப்படைத்தார். அந்தப் பொதியை கண்ணாடிச் சந்திரன் திறந்து பார்த்ததில் அதற்குள் பட்டுச்சேலைகள் இருப்பதைக் கண்டார். விடுதலைப் போராட்ட இயக்கமான புளொட்டினுடைய படகில் இத்தகைய பொருட்களை அனுப்பி வைப்பது தவறென்று கூறிய கண்ணாடிச் சந்திரனின் கருத்தில் நாமும் உடன்பட்டோம். (மேலும்...)

ஐப்பசி 18, 2011

 

அழகாக இருப்பது எமது வாழ்நிலங்கள் மட்டுமா? மக்களின் வாழ்வு நிலையுமா...?

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட தள்ளாடி அரிப்பு பாலம் ஞாயிற்றுக்கிழமையன்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கென அரசாங்கம் 540 மில்லியன் ரூபாவினை செலவு செய்துள்ளது.

ஐப்பசி 18, 2011

தோழர் பாரதவை நிரந்தரமாக அமைதியாக்கிய அரசியல் கலாசாரம்

1982ம் ஆண்டு ஜனாதி பதித் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா கட்சிக்கு அசுப காலம் ஆரம்பமாகியது. இது இக்கட்சியின் அழிவுக்கான ஆரம்பமாகவும் அன்று கருதப்பட்டது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதி பதித் தேர்தலுக்கான வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவவை ஆதரித்தவர்கள் நக்சலைட் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கும் செயற்பாட்டில் அன்றைய ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கம் ஈடுபட்டது. விஜய குமாரதுங்க, ஒஸி அபேகுண சேகர, பீலிக்ஸ் பெரேரா, ரேனுகா பெரேரா ஆகியோர் நக்சலைட் குற்றச்சாட்டின் பேரில் சிறை வைக்கப்பட்டனர். நக்சலைட் என்ற பிரதான குற்றச்சாட்டு விஜயகுமாரதுங்க மீதே சுமத்தப்பட்டது. அனுர பண்டாரநாயக்க விடுத்த அறிக்கை காரணமாகவே இவர்கள் சிறை வைக்கப்பட்டதாக அன்று அறிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஒரு இளைஞனிடம் நீ விஜயகுமாரதுங்கவிற்கு எதிராக ஒரு வாக்குமூலம் அளித்தால் உன்னை விடுவிப்போம் என்று அன்றைய ஆட்சியாளர்கள் பயமுறுத்தினார்கள். என்றாலும் அந்த இளைஞன் அந்தப் பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் எவ்வளவு காலமாவது சிறையில் இருக்க தான் தயார் என்று அறிவித்தார். (மேலும்...)

ஐப்பசி 18, 2011

நேர்மையான பொலிஸ் உத்தியோகத்தர்களும் இருக்கிறார்கள

மஹகரம பொலிஸ் பிரிவில் ஒரு பெண் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது அதனை நிறுத்தி முச்சக்கரவண்டியை சோதனையிட்டனர். அப்போது அந்தப் பெண்ணிடமிருந்து பெருமளவு போதைவஸ்துக்களை இருப்பதை பொலிஸார் அவதானித்தனர். முச்சக்கர வண்டி சாரதியை உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு போ என்று உத்தரவிட்ட பின்னர் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் அந்த பொலிஸ்காரர் முச்சக்கர வண்டியில் ஏறிக்கொண்டார். போகும் வழியில் முச்சக்கர வண்டியை நிறுத்தச் சொன்ன அந்தப் பெண், தன்னை விடுவிக்குமாறும், அவ்வாறு விடுவித்தால் 50ஆயிரம் ரூபா லஞ்சமாக தருவதாகவும் கூறினார். நேர்மையான இந்த பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் அந்தப் பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கூண்டில் அடைத்து வழக்கு தொடர்ந்தனர். இந்தப் பெண்ணுக்கு எதிராக பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க எத்தணித்தது, மற்றும் போதை வஸ்த்துக்களை கடத்திச் சென்றது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஐப்பசி 18, 2011

ஊவா - பரணகம

4 தோட்டங்களில் வேலை நிறுத்தம்

ஊவா - பரணகமைப் பகுதியின் நான்கு பெருந் தோட்டங்களில் 1500 தொழிலாளர்கள் நேற்று முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கேர்கில்ஸ், லக்கி லேண்ட், அலகொல்ல, கம்பஹா ஆகிய நான்கு பெருந் தோட்டங்களிலேயே, வேலை நிறுத்தம் இடம் பெற்று வருகின்றது. கடந்த ஓகஸ்ட் மாத போனஸ் கொடுப்பனவுகள் வழங்கப் படாமை உள்ளிட்டு அதிமுக்கிய கோரிக்கை களை முன்வைத்தே இவ் வேலை நிறுத்தம் நடைபெறுகின்றது. இது குறித்து தொழிற் சங்கப் பிரதிநிதிகள், பகுதி உதவித் தொழில் ஆணை யாளருடன் தீவிரத் தொடர்புகளை மேற்கொண்டுள்ளனர்.

ஐப்பசி 18, 2011

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அடிப்படை வசதிகளுடன் மீள்குடியேற்றப்படுவர்.

'ஆயுத ரீதியாக பிரச்சினைக்கு தீர்வில்லை என்பதை விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து பேச்சுவார்த் தைக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார்.'

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை செய்ய முற்படும்போது சர்வதேச நாடுகள் நிதி வழங்குவதிலிருந்து விலகிக் கொள்ளும் நிலை காணப்படுவதாகவும், இதற்கு சில அரச அதிகாரிகளும் துணைபோயுள்ளதாக தெரிவித்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, எந்தத் தடைகள் வந்தபோதும் வடமாகாணத் திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களது தாயக பூமியில் மீள்குடியேற்றி அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் நாம் செய்து கொடுப்போம். அதற்கெதிராக செயற்படும் அனைத்து சக்திகளையும் வலுவிழக்கச் செய்வோம் என்றும் கூறினார். (மேலும்...)

ஐப்பசி 18, 2011

உணவு விஷமானதில் 592 பேர் பாதிப்பு

தலவாக்கலையில் இரு அதிபர்கள் உட்பட ஐந்து பேர் கைது

உணவு விஷமானதால் பாடசாலை மாணவர்கள் 580 பேர் திடீர் சுகவீனமுற்ற சம்பவம் தொடர்பாக இரு அதிபர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார். தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தமிழ் பாடசாலை மற்றும் தலவாக்கலை தமிழ் வித்தியாலயம் என்பவற்றில் நடைபெற்ற சிறுவர் தின வைபவங்களின் போது வழங்கப்பட்ட உணவு விஷமானதில் 580 மாணவர்களும் 12 பெரியவர்களும் நோய்வாய்ப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றது. (மேலும்...)

ஐப்பசி 18, 2011

திருக்கேதீஸ்வர ஆலய புனரமைப்பு

இலங்கை - இந்தியா நேற்று ஒப்பந்தம்

வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் திருப் பணிகளுக்கு இலங்கை நாணயப்படி 326 மில்லியன் ரூபாவை இந்தியா வழங்கியுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கும், ஆலயத்தின் திருப்பணி சபையினருக்கு மிடையில் நேற்று கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்துக்கமைய திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் மஹா மண்டபம் அமைப்பதற்கான சகல உதவிகளும் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும். இம்மண்டபத்துக்கான கற்கள் மூலப்பொருள்கள் மற்றும் அவற்றை அமைப்பதற்கான கலைஞர்கள் மற்றும் சிற்பிகள் அனைவரும் இந் தியாவிலிருந்தே அழைத்துவரப்படுவார்கள். (மேலும்...)

ஐப்பசி 18, 2011

ஆயிரக்கணக்கான கென்ய துருப்புக்கள் சோமாலியாவுக்குள் ஊடுருவல்

சோமாலியாவின் அல் ஷபாய் ஆயுதக் குழுவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அயல் நாடான கென்யா முன்னெடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான கென்ய துருப்புகள் எல்லை தாண்டி சோமாலியாவுக்குள் நுழைந்துள்ளன. அல் ஷபாப் ஆயுதக் குழு கென்ய எல்லையில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ள நிலையிலேயே அந்நாட்டு இராணுவம் இந்த இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. ஆயுதம் தரித்த கென்ய இராணுவ வீரர்களை தாங்கிய 25 வாகனங்கள் சோமாலியாவின் தோப்லி நகரை தாண்டியதாக அங்கிருப்போர் பி. பி. சி. க்கு தெரிவித்துள்ளனர். (மேலும்...)

ஐப்பசி 18, 2011

கொழும்பு வீடமைப்பு திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொழும்பு வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ஆரம்பித்துள்ள வீடமைப்புத் திட்டமானது மிகவும் வெற்றிகரமான ஒன்றாகும் என கொழும்பு புதிய மாநகர மேயர் ஏ. ஜே. எம். முஸம்மில் தெரிவித்தார். இத்திட்டம் வெற்றியளிப்பதற்கு கொழும்பு மாநகர சபையால் பெற்றுக் கொடுக்க வேண்டிய பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாரெனவும் அவர் மேலும் கூறினார். நேற்று (17) கொழும்பு மாநகர மேயராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு கூறினார். கொழும்பு சேரிக் குடியிருப்பு மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் திட் டத்தில் அரசாங்கமும் மாநகர சபையும் ஒரே மாதிரியான கொள்கையினைக் கொண்டுள்ளதாகவும் முஸம்மில் மேலும் கூறினார். (மேலும்...)

ஐப்பசி 18, 2011

வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வந்தால் காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார் - அன்னா ஹசாரே

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வந்தால், காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவர உறுதி பூண்டிருப்பதாக கூறி இருந்தார். பிரதமர் எழுதிய கடிதத்தால், வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்ற ஊக்கம், என்னுள் எழுந்துள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், வலுவான லோக்பால் மசோதா கொண்டு வருவதுடன், தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான வாக்குறுதி களையும் நிறைவேற்றினால், நான் ஏன் காங்கிரசை எதிர்க்கப்போகிறேன்? இன்னும் சொல்லப் போனால், காங்கிரசுடன் இணைந்து செயல்படுவேன். (மேலும்...)

ஐப்பசி 18, 2011

கொஸ்மிக் கதிர்களைப் பற்றித் தெரியும்? அதென்ன காஸ்மிக் ஆண்டு?

பால் வீதியில் பல நூறு மில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் சூரியனும் ஒன்று. சூரியனைச் சுற்றி நமது பூமி உட்பட எட்டு கோள்களும் தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு வலம் வருகின்றன. அதுபோலவே பால்வீதியின் மையத்தை அச்சாக வைத்து எல்லா நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றன. இவற்றில் சூரியன் தன் எட்டு கோள்களோடும் சேர்ந்த பால் வீதியில் சுற்றி வருவதற்கு எடுக்கும் கால அளவே கொஸ்மிக் ஆண்டு ஆகும். பால் வீதியின் மையத்தில் இருந்து 30,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வினாடிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியன் அசைந்து கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் சூரியன் ஒரு தடவை சுற்றிவர சுமாராக 250 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. எனவே ஒரு கொஸ்மிக் ஆண்டு என்பது 250 மில்லியன் ஆண்டுகள் ஆகும் விஞ்ஞானிகள் வாஸ்ப 12பி என்ற கோளை 2008 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். இந்தக் கோளில் காபன் மிகவும் அதிகமாக இருப்பதால் அங்கு நிறைய வைரங்கள் இருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். அங்கே ஒரு முறை போய் திரும்பி வந்தால் பெரும் பணக்காரராக ஆகி விடலாம்! ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. இந்தக் கோள் 1,200 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. (ஏறக்குறைய ஒன்பதரை இலட்சம் கோடி கிலோ மீற்றர் தூரம்தான் ஒரு ஒளி ஆண்டு) அப்படியானால் நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதை.

ஐப்பசி 17, 2011

உரிய தீர்வு வழங்காவிடின் ஏனைய மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும்

வடபகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை விலக்கக் கோரி தற்போது நாம் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட் டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்காவிடின் ஏனைய மாவட்டங்களிலும் இதேபோன்று உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று உண்ணாவிரத அமைப்பாளர்கள் தெரிவித்த னர். வடபகுதியிலுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக் கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து வவுனியா நகரசபை மண்டபத்தில இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இந்தப் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண் டுள்ளதாக உண்ணாவிரத அமைப்பாளர்கள் தெரிவித்த னர். (மேலும்...)

ஐப்பசி 17, 2011

வால் ஸ்ட்ரீட் போராட்டம் 80 நாடுகளுக்கு பரவியது!

தொழிற்சாலைகளின் பேராசையை கண்டித்து அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டம், 80 நாடுகளுக்கு பரவி உள்ளது. பேராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சாலை அதிபர்கள் பேராசைக்காரர்களாக உள்ளனர், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், வேலைவாய்ப்பு இல்லை, பொருளாதார நெருக்கடி போன்ற பல காரணங்களை கூறி அமெரிக்காவில் ஒரு மாதமாக போராட்டம் நடந்து வருகிறது. ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் நடந்து வரும் போராட்டம், இப்போது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில நாடுகள் உள்பட 80 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த நாடுகளை சேர்ந்த 950 முக்கிய நகரங்களில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. மான்ஹட்டன் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. லண்டனில் செயின்ட்பால் கத்தீட்ரல் அருகில் நூற்றுக்கும் அதிகமானோர் டென்ட் அமைத்து தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ரோமில் இளைஞர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். போலீசார் தடுத்ததால் அங்கும் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியும் தடியடி நடத்தியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கும்பலை கலைத்தனர். இதனால் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சிக்கலில் தவிக்கின்றன.

ஐப்பசி 17, 2011

விஹிர் பட இயக்குநரின் புதிய திரைப்படம்

உலகளாவிய அளவில் பாராட்டுப் பெற்ற விஹிர் திரைப்பட இயக்குநர் உமேஷ் குல்கர்னியின் அடுத்த திரைப்படமான தியோல் (கோவில்) திரைக்கதையின் சுருக்கம், தவறாக வழி நடத்தப்படும் இளைஞர்களால் கிராமப்புற வளர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என் பதாகும். 1980களில் இருந்த கிராமங்கள் இப் போது இல்லை. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல கிராமப்புற மாண வர்கள் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். அவர்கள் விவசாயத்தையும் கைவிட்டு விட் டனர். ஆனால் அவர்களுக்கேற்ற வேலை கிடைப்பதில்லை. ஆனால் அவர்களிடம் அதிநவீன செல்போன்கள், தொலைக் காட்சிப் பெட்டிகள் போன்றவற்றிலிருந்து வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண் டனர். ஆனால் பல கிராமங்களில் சாலை வசதி இல்லை. மின்சாரம் இல்லை சுத்த மான குடிநீர் கிடைப்பதில்லை. இளைஞர் கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். இதன்காரணமாக இளைஞர்களின் சக்தி வீணாகப் போகிறது என்று மும்பை திரைப்பட விழாவின்போது பத்திரிகை யாளர்களிடம் தெரிவித்தார். மேலும், உலகமயமாதல் கொள்கை என்றால் என்னவென்று தெரியாதவர்கள் கூட அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

ஐப்பசி 17, 2011

பல்கலைகழக மாணவர் அவைத்தலைவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

யாழ் பல்கலைகழக மாணவர் அவைத்தலைவர் தவபாலசிங்கம் மீது கந்தர்மடத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதலை பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பல்கலைகழக மாணவர்கள் மீது அடிக்கடி நடைபெறுகின்றன. மக்கள் பீதி நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். நாவாந்துறை தாக்குதல், உதயன் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் இப்போது பல்கலைகழக மாணவர் தலைவர் மீதான தாக்குதல் என்பன வடக்கு கிழக்கில் ஜனநாயக இடைவெளி இல்லாதொழிக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.

இந்த அச்சுறுத்தல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஜனநாயகம், மனித உரிமை சட்டத்தின் ஆட்சி என்பவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பல்கலைகழகத்தின் சுயாதீனம் மாணவர் ஆசிரியர்களின் உரிமைகள் என்பன பாதுகாக்கப்பட வேண்டும்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுயாதீனமான நீதி விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் பகிரங்கப்படுத்தப்படுவதும் தண்டனை வழங்குவதும் முன்னுரிமை பெறுகின்றன.

இத்தகைய அச்சுறுத்தல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

தி. ஸ்ரீதரன்

பொதுச்செயலாளர்

பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.

ஐப்பசி 17, 2011

புலிகளை நோர்வே தடை செய்ய வேண்டும் அரசாங்கம் கோரிக்கை?

தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு நோர்வே அரசாங்கத்திடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை மீண்டும் தடை செய்வது குறித்து நோர்வே அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொஹான் கார் ஸ்ட்ரோ மற்றும் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பின்போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோர்வேக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அந்நாட்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் நிமால் சிறிபாலவுடன் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவும் இணைந்து கொண்டுள்ளார்.  நல்லிணக்க நடவடிக்கைகளின்போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என அமைச்சர் நிமால் சிறிபால கோரிக்கை விடுத்துள்ளார். நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஐப்பசி 17, 2011

மலையக பாடசாலைகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நிகழ்வுகளை நடத்த முடியும்

பாடசாலைகளில் தனிப்பட்டதாரர்கள் நிகழ்வொன்றை நடத்து வதாயின் சகல மட்டங்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலை பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி யின்போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களும் பெற்றோரும் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் இடம்பெற்றமை தொடர்பான காரணங்களை கண்டறியும் முகமாகவும் இதுபோன்ற சம்பவங்கள் இனி இடம் பெறாது தவிர்ப்பதற்குமான கல்வி சார் அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்று இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பாடசாலைகளில் தனிப்பட்ட நிறுவனங்களால் உரியவர்களின் அனுமதியின்றி எந்தவொரு நிகழ்வையும் நடத்த முடியாது. அனுமதி பெற்ற பின்னரே இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும் என்றார். இக்கலந்துரையாடலின்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜதுரை, முத்து சிவலிங்கம், மத்திய மாகாணக் கல்வி அமைச்சர், ஐந்து கல்வி வலயங்களைச் சேர்ந்த பணிப்பாளர்கள், கோட்டப் பணிப்பாளர்கள், மற்றும் கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஐப்பசி 17, 2011

இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை

(சசீதரன்)

பிரித்தானியாவில் உயர்கல்வி கற்கும் நோக்கோடு அங்கு செல்கின்ற இந்திய மாணர்வகளில் பலர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள சீக்கியர்களின் கோவிலுக்கு உணவிற்காக வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது. பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாடம் காரணமாக அங்கு பகுதி நேர வேலை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற நிலையில் மாணவர்கள் வெளி நாட்டு மாணவர்கள் நாளாந்த உணவிற்கா சீக்கியர்களின் கோவில் இலவச உணவைப் பெற்றுக்கொள்வதற்காக பல மைல் தொலைவிலிருந்து கூட வந்து சேர்வதாகத்ச் செய்திகள் வெளியாகியிருந்தன. 2009ம் ஆண்டு இறுதியில் இத்தகவல்கள் வெளியாகியிருந்தன. இன்று இரண்டு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் பல மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக 25 வயதிற்கு உட்பட்ட பிரித்தனியர்கள் கூட நிரந்தர வேலை பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலுல்ளனர்.(மேலும்....)

ஐப்பசி 17, 2011

சுவிஸ் உதயம் எனும் பொது நலஅமைப்பு  10.09.2011அன்று சுவிஸ் பேர்ன் மானிலத்தில் நாடாத்திய தமிழர்களின் பாரம்பரிய கலைகலாச்சார நிகழ்வு

எங்கள் தாய்நாடாம் இலங்கையில் 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் சொல்லண்ணா துயரத்தை ஏற்படுத்தியதை நாம் அனைவரும் அறிவோம். பல்லாயிரக்கணக்கான எங்கள் உறவுகளை சுனாமி அலை கொண்டு சென்றதையும் நாம் மறந்துவிடவில்லை. அந்த அலையில் தப்பிப்பிழைத்த எங்கள் உறவுகளை காத்திடவே அன்றய காலகட்டங்களில் பொதுநல விரும்பிகளால் எத்தனையோ எதிர்ப்புகள் மத்தியில் உதயம் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அன்றிலிருந்து இன்றுவரை உதயம் அமைப்பினர் அமைப்பின் ஊடா புலம் பெயர் மக்களிடம் பெறும் உதவிகளை இலங்கையில் தங்களால் இயலுமானவரை சில பாகங்களில் பாதிக்கப்பட்ட பிள்ளை செல்வங்களை மனமுகர்ந்து பாதுகாத்து வருகின்றனர்.(மேலும்...)

ஐப்பசி 17, 2011

முன்னாள் புலிகள் 350 பேர் தீபாவளியன்று விடுவிப்பு

தீபாவளியை முன்னிட்டு புனர்வாழ் வளிக்கப்பட்ட 350 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படவிருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம். எஸ். சதீஸ்குமார் தெரிவித்தார். மனிதாபிமான நடவடிக்கை யின்போது பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் 11 ஆயிரத்து 699 பேரில் 10 ஆயிரத் துக்கும் அதிகமானவர்கள் விடுவிக்க ப்பட்டு, சமூகத்துடன் இணை க்கப்பட்டி ருப்பதாக சதீஸ்குமார் தினகரனுக்குத் தெரிவித்தார். இதன் அடுத்தகட்டமாக 350 பேர் தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்படவுள்ளனர். அன்றைய தினம் அவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வை கொழும்பில் நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரத்து எண்ணூறு பேர் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். எஞ்சியுள்ளவர்களை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐப்பசி 17, 2011

சிறுவர், பெண்கள் மீதான வன்முறைகள்; யாழ். செயலகத்தில் முறைப்பாட்டுப் பிரிவு

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முறையிடும் நம்பகத் தன்மை மிக்க பிரிவொன்றினை மாவட்டச் செயலகத்தில் ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். மாவட்டச் செயலகத்தில் ஏற்கனவே மகளிர் விவகார பிரிவொன்று இயங்கி வருகின்ற போதிலும் அதற்கும் மேலதிகமாக, பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் வகையிலான நம்பகத்தன்மைமிக்க பிரிவொன்றினை ஸ்தாபிப்பதே எமது நோக்கமெனவும் அரச அதிபர் மேலும் கூறினார். இதன் மூலம் பாலியல் துஷ் பிரயோகத்திற்கு உள்ளான பெண் இரகசி யமாக குறித்த பிரிவிற்கு வந்து தன்னை யாரென அடையாளம் காட்டாமலேயே மறைவில் இருந்தபடி தனக்கு நேர்ந்தவற்றை நம்பிக்கையுடன் முறையிட்டுச் செல்லலாம். அந்த பெண் தொடர்பிலோ அல்லது அவரது முறைப்பாடு தொடர்பிலான எந்தவொரு விடயமும் வெளியே செல்லாதபடி நாம் நம்பிக்கையுடன் செயற்பட்டு அவர்களுக்காக நீதியைப் பெற்றுக்கொடுக்கவுள்ளோமென்றும் அவர் தெரிவித்தார். (மேலும்...)

ஐப்பசி 17, 2011

நகர சுத்திகரிப்பு மற்றும் அதனை அழகுபடுத்தும் பணிகளில் எதிர்காலங்களில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவர்

பாதுகாப்பு அமைச்சுடன் நகர அபிவிருத்தி இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டு வைக்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். இதுவரை இருவேறு அமைச்சுக்களாக இயங்கி வந்த பாதுகாப்பு அமைச்சும் நகர அபிவிருத்தி அமைச்சும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன. இதன்படி நகரத்தை அழகுபடுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் ஆகிய செயற்திட்டங்கள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படுமெனவும் பணிப்பாளர் ஹுலுகல்ல தெரிவித்தார். நகர சுத்திகரிப்பு மற்றும் அதனை அழகுபடுத்தும் பணிகளில் எதிர்காலங்களில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவரெனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை ரயில்வே கடவை, பேரா வாவியோரமென, சட்டவிரோத பாதுகாப்பற்ற குடியிருப்பாளர்கள் 35 ஆயிரம் பேருக்கான வீடமைப்புத் திட்டங்கள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

ஐப்பசி 17, 2011

'வோல் தெரு ஆக்கிரமிப்பு' போராட்டம் உலகம் பூராவும் பரவியது

ஐரோப்பா நகரங்களில் கலவரம், ஆசியா, ஆபிரிக்காவிலும் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடந்து வரும் “வோல் தெரு ஆக்கிரமிப்பு இயக்க” போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உலகப் பொருளாதாரம் சீர்கேடு அடைவதற்குக் காரணமான வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசியல்வாதிகளைக் கண்டித்தும், போராட்டங்கள் உலகளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. “வோல் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம்” கடந்த செப்டம்பர் 17ம் திகதி நியூயோர்க்கில் ஆரம்பித்த போராட்டம், தற்போது அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், நியூயோர்க்கில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ள, தனியாருக்குச் சொந்தமான “ஜூகோட்டி பூங்காவில்” இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றும் நோக்கில், அந்தப் பூங்காவைத் தூய்மைப்படுத்தப் போவதாக, பூங்கா உரிமையாளரான “ப்ரூக்பீல்ட் பிரொபர்ட்டீஸ்” நிறுவனம் அறிவித்தது. (மேலும்...)

ஐப்பசி 17, 2011

உகண்டாவுக்கு இராணுவத்தை அனுப்ப அமெரிக்கா முடிவு

ஆபிரிக்க நாடான உகண்டா வின் வடக்கு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். இதுவரை 30 ஆயிரம் அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துள்ளனர். பெண்களை கடத்தி கற்பழித்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். சிறுவர்களை கடத்தி சென்று அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து பயங்கரவாதிகளாக மாற்றி வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் பணியில் உகண்டா இராணுவம் ஈடுபட்டுள்ளது. இருந்தும் அவர்களை அடக்க முடியவில்லை எனவே அமெரிக்காவின் உதவியை அந்த நாட்டு அரசு நாடியுள்ளது. அதை ஏற்று அமெரிக்க இராணுவ வீரர்கள் 100 பேரை உகண்டாவுக்கு அனுப்ப உள்ளது. இது குறித்து தகவல் களை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். அது சரி அமெரிக்கா என்ற சமூக சேவையா செய்யப் போகின்றது?.

ஐப்பசி 17, 2011

எடியூரப்பாவுக்கு சிறையில் நெஞ்சுவலி

அரசு நிலத்தை நிலமறு அறிவிப்பு மூலம் சிலருக்கு தாரை வார்த்த வழ்கில் கர் நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதி காலையில் அவருக்கு வாந்தியும், நெஞ்சு வலியும் வந்ததால் அவரசமாக ஜெயதேவா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டி ருந்தாலும் உடல் நிலை தற்போது சகஜ மாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எடியூரப்பா தனது ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை தனது மகன்கள் நடத்தும் நிறுவனத்துக்கு குறைந்த விலைக்கு தாரை வார்த்ததாக லோக் அயுக்தா சிறப்பு நீதி மன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எடியூரப்பா தாக்கல் செய்த முன் பிடியாணை மனுவை நிரா கரித்தது நீதிமன்றம். இதனையடுத்து பிடியாணை உத்தரவும் பிறக்கப்பட்டதால் அவரை கைது செய்ய பொலிஸார் அவ ரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் முன் கூட்டியே புறப்பட்டு நீதிமன்றத்துக்கு வந்து சரண் அடைந்தார். பின்னர் அவரை வரும் 22ம் திகதி வரை சிறைக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சிறையில் இருந்த போது 2 மணியளவில் வாந்தி எடுத்தார். தொடர்ந்து தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து சிறை அதிகாரிகள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஐப்பசி 17, 2011

வெளவால்

சிறிய வெளவால்களால் பார்க்க முடியாது. அவற்றிற்கு வெளிச்சமும் அவசியமில்லை. அவை வாயாலோ, மூக்காலோ ஒருவித ஒசையை எழுப்புகின்றன. இதை ‘அல்ட்ராசொனிக்’ ஓசை என்று சொல்வார்கள். மனிதர்களால் இந்த ஓசையைக் கேட்க, முடியாது. இந்த ஓசை, முன்னால் உள்ள பொருட்களின் மீது பட்டுத் திரும்பி வரும். இப்படித் திரும்பி வரும் எதிரொலியின் தன்மையைப் புரிந்துகொண்டு, இந்தப் பொருட்களின் பருமனையும், வடிவத்தையும், அது இருக்கின்ற தூரத்தையும், அதன் அசைவையும் வெளவால்கள் தெரிந்துகொள்ளும். வளர்ந்த பெரிய வெளவால்கள் பார்வைத் திறனைப் பயன்படுத்தி தான் இரவு நேரங்களில் பறக்கின்றன. வெளவால்கள் பொதுவாக பழங்களையே விரும்பி உண்ணும். வெளிநாடுகளில் மற்ற பாலூட்டிகளின் உதிரத்தைக் குடிக்கின்ற வெளவால்களும் உண்டு.

ஐப்பசி 17, 2011

இந்தியா - பிரேசிலிடம் அமெ.பாடம் கற்க வேண்டும்  ஹிலாரி கிளிண்டன் பேச்சு

வளர்ந்து வரும் நாடு களான இந்தியா, பிரேசி லிடம் அமெரிக்கா பாடம் கற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறினார். உல கின் சக்தி மைய நிலையை மீண்டும்பெறவிரும்பினால், இதனை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரி வித்தார். நியூயார்க்கில் நடந்த பொருளாதார நிபுணர்கள் குழு கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசுகையில், வளரும் பொருளாதார நாடு களாக இந்தியா, பிரேசில் உருவெடுத்து வருகின்றன. இந்த இருநாட்டுத் தலைவர் களும் உள்நாட்டு சவால் களை எதிர்கொள்வது போன்றே சர்வதேச சவால் களை எதிர்கொள்கின்றனர். வளர்ந்து வரும் அந்த நாடுகள் தங்களது அயல் நாட்டு கொள்கைகளின் மைய விஷயமாக பொரு ளாதாரத்தை வைக்கின்றனர் என கூறினார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் எப்போதும் உள்ளது. இது, நமது அயல்நாட்டுக் கொள் கையாக இருக்க முடியாது. நமக்கு சிறந்த வாய்ப்பு உள்ள இடங்களில் தீவிர கவனம் செலுத்துவதாக அயல் கொள்கை இருக்க வேண்டும்.அமெரிக்கா,ஆசியா, பசிபிக் பிராந்தியத் திலேயே கவனம் செலுத்து கிறது. உலகின் நிலைப்பாடு மற்றும் பொருளாதார மையத்தின் ஈர்ப்பு சக்தி, கிழக்கை நோக்கி நகர்ந்து உள்ளது என்றும் ஹிலாரி தனது உரையில் குறிப்பிட் டார்.

ஐப்பசி 16, 2011

மரணத்தினுள் வாழ்ந்தோம்

(சாகரன்)

பெண்களின் விடிவிற்காக விடாப்பிடியாக போராட புறப்பட்டு புலிகளால் கொல்லப்பட்ட செல்வி போன்றவர்களின் மரணம் தவிர்கப்பட்டிருந்தால் இன்று குழந்தைகளை சுமக்கும் 'குழந்தை விதவை' அவலங்கள் எங்கள் மண்ணில் நிறைவேறி இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்திருக்க முடியும். செல்வி போன்றவர்களின் நினைவு கூறலை 'தைரியமாக' செய்ய 20 வருடங்கள் எடுத்திருக்கின்றது என்றால் பாருங்களேன் புலிகளின் பாசிசம் எவ்வளவு மரணப்பணத்தை ஏற்படுத்pயிருக்கின்றது என்று. மரணத்திற்குள் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல மரணத்திற்குள் வாழ்கின்றோம் என்பதே இன்றைய யதார்த்த நிலையாகும். இவ்விடத்தில் இன்னொன்று விமலேஸ்வரனுக்கு நினைவு கூரல் நிகழ்வு எப்போது....?  (மேலும்....)

ஐப்பசி 16, 2011

சொல்லாத சேதிகள்

கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட செல்வியின்(செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்

இடம்: Scarborough Village Recreation Centre, 3600 Kingston Road , Toronto ON  M1M 1R9
Markham Road & Kingston Road

காலம்: October 16, 2011 (Sunday)

3:00 pm – 6:00 pm

‘தோழி’ இதழின் ஆசிரியரும், கவிஞரும், பெண்ணிலைவாதியும், எழுத்தாளருமான செல்வி என்று அழைக்கப்பட்ட சேமமடுவைச் சேர்ந்த செல்வநிதி தியாகராசா யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் இறுதியாண்டு ஆண்டு மாணவியாக இருந்தவேளையில் கடத்தப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்தன. செல்வியின் கவிதைகள் மனஓசை, மண், அரங்கேற்றம், ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்தன. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றன. சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். (மேலும்....)

ஐப்பசி 16, 2011

தொல்பொருள் உள்ள இடங்களில் சிங்களவர் வாழ்ந்ததாக கூறமுற்பட்​டால் பிரச்சினை மேலும் சிக்கலாகும் ​- புளொட் தலைவர் சித்தார்த்​தன்

தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கில் 400 இடங்களில் தொல்பொருள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் சிங்களவர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுமானால் இருக்கின்ற பிரச்சினையை அது மேலும் சிக்கலாக்கும் என புளொட் தலைவரும், வன்னி மாவட்ட முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களம் 400 இடங்களை அடையாளமிட்டுள்ளது. இது தொடர்பாக, புதைத்து வைத்துவிட்டு மீண்டும் எடுப்பதும், இல்லாத இடங்களில் தொல்பொருள் இருப்பதாகக் காட்டுவதையும் நாம் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். அதற்காக முற்றுமுழுதாக அப்படி ஒரு விடயம் இல்லை என்றும் கூறிவிட முடியாது. (மேலும்....)

ஐப்பசி 16, 2011

Sri Lanka’s hard-earned peace in Danger, Let us act fast

The LTTE rumps and their allies in bogus right groups benefited from Sri Lanka’s war have started a scattered but intense campaign against the ongoing reconciliation efforts in Sri Lanka. Without much publicity, the Amnesty International has tasked its university student unions in the U.S. to screen the Channel 4 propaganda video to unsuspecting student audiences. All such screenings are often reinforced with biased and distorted remarks against Sri Lanka by a guest expert-panel pretend to be well conversant with Sri Lanka’s war. Also, the Amnesty International has opened a petition on the U.S. White House website to urge the Obama administration to support war crime investigations against Sri Lanka government – an ideal measure to block the reconciliation efforts. (more....)

ஐப்பசி 15, 2011

ஐப்பசி 15, 2011

One SL Action Alert - Sri Lanka's hard-earned peace in Danger-Let us act fast

The LTTE rumps and their allies in bogus right groups benefited from Sri Lanka’s war have started a scattered but intense campaign against the ongoing reconciliation efforts in Sri Lanka. Without much publicity, the Amnesty International has tasked its university student unions in the U.S. to screen the Channel 4 propaganda video to unsuspecting student audiences. All such screenings are often reinforced with biased and distorted remarks against Sri Lanka by a guest expert-panel pretend to be well conversant with Sri Lanka’s war. Also, the Amnesty International has opened a petition on the U.S. White House website to urge the Obama administration to support war crime investigations against Sri Lanka government – an ideal measure to block the reconciliation efforts. One Sri Lanka views this campaign as the groundwork of a major campaign against the reconciliation effort to be launched in the next couple of months. Amidst losing support from the Tamil Diaspora to the separatist cause, these rights groups and LTTE remnants  expect to give major boost to their campaign during the “LTTE's Suicide bombers Week”  starting from Oct 29. The master plan of the anti Sri Lankan lobby is to refuel ethnic strife in Sri Lanka by blocking all possible avenues for reconciliation in Sri Lanka. Please Show your solidarity with 20 million Sri Lankans for their desire to live in peace and harmony by signing this petition that urge the Obama administration to support the country’s reconciliation process.

ஐப்பசி 15, 2011

தேசியப் போராட்டத்தின் அடிப்படையும் இன்றைய நிலையும்

(சபா நாவலன்)

இலங்கையைச் சுரண்டும் நோக்கோடு அங்கிருந்த மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தியது பிரித்தானிய ஏகாதிபத்தியம். பாளி மொழியில் ஆங்காங்கே காணப்பட்ட மகாவம்சம் என்ற கற்பனைக் கதைகளை பிரித்தானி அரசாங்கம் சிங்களத்தில் மொழிபெயர்த்தது. அவ்வாறு மொழிபெயர்ப்பதற்காக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த இரண்டு பௌத்த மதகுருக்களை நியமித்தது. மகாவம்சம் என்ற கற்பனைக் கதைகள் சிங்களப் பகுதியிலிருந்த விகாரைகளுக்கு விநியோகம் செய்யபட்டது. இதே வேளை ஹெலேனா பிளவாற்ஸ்கி போன்ற மனித விரோத நிறவாதச் சிந்தனை கொண்டவர்களூடாக சிங்கள பௌத்த சிந்தனை வளர்க்கப்பட்டது. சிங்கள பௌத்ததின் தேசியத் தந்தை என அழைக்கப்படும் அனகாரிக தர்மபால என்பவர் பிளவாற்ஸ்சி உருவாக்கிய தியோசோபிகல் அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டார். தமிழ் நாட்டில் அடையாறில் தங்கியிருந்து பயிற்சி பெற்ற பின்னர் இலங்கை சென்ற அனகாரிக அங்கே முதலில் தமிழர்களுக்கு எதிராகவும் குறிப்பாகத் தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுக்கு எதிராகவும் தனது இனவாத நஞ்சைப் பரப்ப ஆரம்பித்தார். பௌத்தம், ஆரியத் தூய்மைவாதம், சிங்களம் என்ற சுலோகங்களின் அடிப்படையில் சிங்கள -பௌத்த பெருந்தேசிய வாதத்தை கட்டியெழுப்ப ஆரம்பித்தார். (மேலும்....)

ஐப்பசி 15, 2011

இலங்கை - வியட்னாம் இடையே எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்கிடையி லான 8 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்றைய தினம் இரு நாட்டு ஜனாதிபதிகள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்னாம் ஜனாதிபதி டிரோன்க் டன் சன்ங் (Truong Tan Sang) இற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற இரு தரப்பு சந்திப்பின் போது இவ் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவ்வைபவத்தில் அரசியல், நிதி, கைத்தொழில், கல்வி, பெற்றோலியம், தொழில்நுட்பம் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய துறைகளி ற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக 08 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 15, 2011

தயாநிதியின் முறைகேடுகள்? அம்பலப்படுத்துகிறது சி.பி.ஐ

தயாநிதி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தன் பதவியை தவறாகப் பயன்படுத்தி, எப்படியெல்லாம் மறைமுகமாக நிர்பந்தம் செய்தார் என்பது குறித்து, சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, “டிராய்” தலைவராக உள்ள ஜே.எஸ். சர்மா, தயாநிதிக்கு பக்கபலமாக இருந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. தயாநிதி, 2004-2007ல் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தன் பதவியைப் பயன்படுத்தி, மறைமுகமாக நிர்பந்தம் செய்தார் என, அந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன், கடந்த மே மாதம் புகார் கொடுத்தார். (மேலும்....)

ஐப்பசி 15, 2011

கடல் பிரச்சினைகளை தீர்க்க  சீனா - வியட்நாம் ஒப்பந்தம்

தென் சீனக் கடலில் எந்தப் பகுதி யாருக்கு என்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க சீனாவும், வியட்நாமும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. தென் சீனக் கடல் முழுமையும் தனக்குத் தான் சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந் நிலையில் சீனத் தலைநகர் பீஜிங்கில் சீனாவுக்கும், வியட்நாமுக்கும் இடையில் கடல் பிரச்சினைகள் தொடர்பான ஆறு அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திப்பு, கடல் பிரச்சி னைகள் தொடர்பாக நிரந்தர தொலைபேசித் தொடர்பு, சர்வதேச சட்டப்படி அடிப் படை யான நீண்ட கால கடல் பிரச்சினைக ளைத் தீர்த்துக் கொள்ளு தல், சட்டங்களை இரு தரப்பும் மதித்தல் உள்ளிட் அம்சங்கள் இந்த ஒப்பந் தத்தில் இடம் பெற்றுள்ளன.

ஐப்பசி 15, 2011

கணினியினால் காணாமல் போன பாரம்பரிய விளையாட்டுக்கள்

வீதிக்கு, வீதி முளைத்து வரும் 'வீடியோ கேம்ஸ்' விளையாட்டுக்களால், உடல் இளைக்க விளையாடும் விளையாட்டுகள் மாயமாகிவிட்டன. பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தவுடன் பறந்து போய் மூலையில் விழும் புத்தகப்பை ஆசை, ஆசையாய் அம்மா வைத்த பருப்பு குழம்பு சாதத்தை சாப்பிட்டு, சட்டையை சாட்டையாய் கழற்றி வீசி, அம்மா விளையாட போய்ட்டு வரேன் இதுதான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை கிராமங்களிலும், நகரங்களிலும் இருந்த வழக்கம். வியர்க்க, விறுவிறுக்க விளையாடி விட்டு, மறுபடியும் சாப்பிட்டு விட்டு, வீசிய புத்தகப்பையை தேடி எடுத்து, இரவு 8.30 மணிக்கு மேல் கண்கள் சொருக, அப்பா அடிப்பாரோ? என்று அவரை ஓரக்கண்ணால் பார்த்து, பார்த்து கண்களை மூட, அவர் அசந்த நேரத்தில் தலைக்கு மெத்தையாக புத்தகப்பையை வைத்து இனிமையாய் தூங்கிய காலம் அன்று. (மேலும்....)

ஐப்பசி 15, 2011

விருப்பு வாக்கு தேர்தல் முறை விரைவில் மாற்றப்படும்

ஜே. ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்த போது தன்னுடைய ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் எதிர் காலத்தில் நடக்கும் சகல தேர்தல்களிலும் மாபெ ரும் வெற்றியை அடைய வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்த தேர்தல் முறையை மாற்றியமைத்து விருப்பு வாக்கு தேர்தல் முறையை அறிமு கம் செய்த தினத்திலேயே, எங்கள் நாட்டின் ஜனநாயக முறை யில் நடைபெறும் தேர்தல்கள் சீர்குலைந்து, வன்முறை கலாசா ரமொன்று தேர்தல் காலத்தில் உருவெடுப்பதற்கான அடித்தள த்தை அமைத்தார். அன்று முதல் ஐக்கிய தேசியக் கட்சி பதவியில் இருந்த 17 வரு டங்களிலும் தேர்தல்கள் நடுநிலையாகவோ, நேர்மையாகவோ நடத்தப்படாமல், தேர்தல்களில் வன்முறையை அறிமுகம் செய்து கள்ள வாக்குகளை பதிவு செய்தல் போன்ற பலதரப்ப ட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு, அதையடுத்து தொடர்ந்து நடந்த பல தேர்தல்களில் வெற்றியீட்டியது. (மேலும்....)

ஐப்பசி 15, 2011

பிரான்ஸ்  போக்குவரத்து தொழிலாளர்கள் எழுச்சிமிகு போராட்டம்

பட்ஜெட்டில் ஏராள மான வெட்டுகளை மேற் கொண்டுள்ள அரசின் மக் கள் விரோத நடவடிக்கை களை எதிர்த்து பிரான்சின் போக்குவரத்து தொழிலா ளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தை நடத்தியுள் ளனர். பிரான்ஸ் போக்குவரத் துத் துறையில் சி.எப்.டி.டி மற்றும் சி.ஜி.டி ஆகிய இரண்டு பெரிய தொழிற்சங் கங்கள் உள்ளிட்டு ஐந்து தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன. அரசின் கொள் கைகளைக் கண்டித்து நடக் கும் போராட்டத்தில் இந்த ஐந்து சங்கங்களுமே களத் தில் இறங்கியுள்ளன. முதல் கட்டமாக ஒருநாள் வேலை நிறுத்தத்தை நடத்திய தொழி லாளர்கள், அடுத்த கட்ட மாக தொடர் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங் களை நடத்தவுள்ளனர். சுமார் 200 பேரணிகள் நாடு முழுவதும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. (மேலும்.....)

ஐப்பசி 14, 2011

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத் தமிழன் தேசவழமைச் சட்டத்துக்கு உட்பட்டவன்’. எவரும் குடாநாட்டில் காணியை கொள்வனவு செய்யத் தடையில்லை!

தமிழனாக இருந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த எந்தவொரு நபரும் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்டவராவார். குறித்த ஒரு நபர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வெளிநாட்டில் அந்நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தாலும் யாழ்ப்பாணத்துடன் பூர்வீகத் தொடர்புகளை பேணுமிடத்தில் அவர் தேச வழமைச் சட்டத்திற்கு உட்பட்வராவார். அதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள காணிகளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு தான் விற்பனை செய்ய வேண்டுமென எந்தச் சட்டமும் கூறவில்லை. சொந்தக் காணியாக இருந்தால் ஏனைய பங்குதாரர்கள் கொள்வனவு செய்யாதவிடத்து அக்காணியை பிறருக்கு விற்பனை செய்ய முடியும். சிறுபான்மையினர் தமது கலாசார மரபுகளை பேணிப் பாதுகாத்து வளர்த்துக் கொள்வதற்கே தேசவழமைச் சட்டம் வழி வகுக்கின்றதென வெளிநாட்டவர்களால் கூறப்படுகின்றது.  (மேலும்....)

ஐப்பசி 14, 2011

தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாக சபை சட்டவிரோதமானதசம்பந்தன்

நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் அதனை மீறிச் செயல்பட்டவர் சம்பந்தனவீ.ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரான தனது அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தி புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். புதிய நிர்வாக சபை செல்லுபடியற்றதெனவும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதும் சட்டவிரோதமானதும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு தான் கடித மூலம் அறிவித்துள்ளதாக சம்பந்தன் கூறுகிறார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நல்லூரில் நடைபெற்று தலைவராக எஸ்.கனகராஜாவும் செயலாளராக வீ.ஆனந்தசங்கரியும் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவானது. இது குறித்து பதிலளித்த வீ.ஆனந்தசங்கரி நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் அதனை மீறிச் செயல்பட்டவர் சம்பந்தன். நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக விடுதலைப் புலிகளைத் தலைவராக ஏற்று செயற்பட்டவர். அப்படியிருக்கையில் கட்சியின் பொதுச் செயலாளர் என்று உரிமைகோர அவருக்கு அதிகாரம் எதுவும் இல்லை. கடந்த மூன்று தேர்தல்களில் அவரைக் கேட்காமல்தான் கட்சி போட்டியிட்டது. அவர் இல்லாமல்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி இயங்குகிறது. கட்சியின் மாநாட்டை நிறுத்தக் கோரி இரு தடவைகள் கடிதங்கள் அனுப்பினார். ஆனால் நான் அவற்றைக் கவனத்தில் எடுக்கவில்லை. முடிந்தால் அவர் சட்ட நடவடிக்கையை எடுக்கட்டும் என்கிறார்.

ஐப்பசி 14, 2011

வவுனியா கல்மடுவில் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நிலத்துக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடிபொருட்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். வவுனியாப் பொலிஸாருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலே மேற்படி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 1.5 கிலோ கிராம் எடையுடைய 3 குண்டுகள், ஒரு கிலோ கிராம் நிறையுடைய 10 கிளைமோர் குண்டுகள், ரி-81 வர்க்க மோட்டர் குண்டொன்றும், இரண்டு உயிர்க்கொல்லி குண்டுகள், டெட்டனேட்டர், மற்றும் வயர்கள் ஆகியவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வெடி பொருட்களை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் அமரசிறி சேனாரத்ன உட்பட பொலிஸ் அதிகாரிகள் பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி 14, 2011

அவுஸ்திரேலியா செல்வதற்கு முயன்ற மூவருக்கு பிணை மறுப்பு

அண்மையில் மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்டவேளை கைது செய்யப்பட்டவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவருக்கு பிணை வழங்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டார். கல்முனை ஊடாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லவிருந்த 39 பேர் கைது செய்யப்பட்டதோடு அவர்களில் 6 பேர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டது. அதன்படி குறித்த ஆறு பேரையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் 33 பேர் 10 இலட்சம் ரூபா தனி நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 14, 2011

துமிந்தவின் மூளையில் பாதிப்பு

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதேவேளை கண்களுக்கோ கண்பார்வைக்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மண்டையோட்டில் துப்பாக்கிச் சன்னம் இருக்கின்றமையால் குணப்படுத்துவதற்கு சில நாட்களாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் முழுமையாகக் குணமடைவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று குறிப்பிடப்படவில்லை. முல்லேரியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் உட்பட ஐவர் பலியானதுடன் துமிந்த சில்வா உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 14, 2011

சீன நாணயத்திற்கு எதிரான சட்ட மூலம் அமெரிக்க செனட்டில் நிறைவேற்றம்

சீன நாணயத்தின் மதிப்பை வலுக்கட்டாயமாக உயர்த்த வழிசெய்யும் சட்டமூலம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது. பிரதிநிதிகள் சபையில், சட்ட மூலத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கிய சீனா, இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் உருவாகும் என எச்சரித்துள்ளது. சீனா தனது “யுவான்” நாணய அலகை டொலருக்கு எதிரான மதிப்பில் தொடர்ந்து குறைத்தே வைத்துள்ளது. இதனால், சீன ஏற்றுமதியாளர்களுக்கு அளவற்ற லாபம் கிடைப்பதாகவும், அமெரிக்காவில் ஏற்கனவே நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சி இது எனவும், அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. (மேலும்....)

ஐப்பசி 14, 2011

கல்முனை மேயர் நியமன சர்ச்சைக்கு தீர்வு

பதவிக்காலத்தை இரண்டாக பகிர்ந்தளிக்க மு.கா. தீர்மானம்

கல்முனை மாநகர மேயராக முதல் இரண்டு வருடங்களுக்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த மீராசாகிப் சிராஸை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் சர்ச்சைக்குரிய மேயர் விவகாரம் தொடர்பாக நேற்று காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தலைவரும் அமை ச்சருமான ரவூப் ஹக்கீம், மற்றும் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கல்முனை மாநகர மேயர் நியமன விவகாரம் விரிவாக ஆராயப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 14, 2011

World’s worst terror financer goes to Jail

Raj Rajaratnam , the largest single financer to the internationally banned terror group LTTE or Tamil Tigers , has been sentenced to 11 years of imprisonment by the  U.S. courts today (Oct 13). He was convicted for the largest insider trading case in the U.S. history. Though the U.S. courts did not charged him for terror financing , it has been a well-known fact that Raj and his father J.M were the key figures that ran the multimillion dollar illegal business empire of the defeated terrorist outfit. In 2007, Jane’s Defense Review said the illegal business enterprises around the world could earn an annual income of 200-300 million U.S. Dollars. The FBI once called the LTTE  the world’s most deadly terror outfit. It was the terror group that pioneered the art of suicide bombing and the only terror group in the world to kill two world leaders. Though the severity of punishment given to Rajaratnam is nothing compared with the horrendous crimes committed against Sri Lankans with his support, One Sri Lanka Peace Watch believes that justice has been finally delivered to tens and thousands of innocent men, women and children killed and maimed by the Tamil Tigers with Rajaratnam’s money. View crimes that Rajarathman and other LTTE supporters in the U.S. and other western country’s are responsible for

http://www.youtube.com/user/onslorg#p/a/u/2/Mrk4H83SYRo

ஐப்பசி 14, 2011

கடாபி மகன் முத்தஸ்ஸிம் கைதானதாக செய்தி, இடைக்கால அரசு மறுப்பு

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் முத்தஸ்ஸிம் கடாபி கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த செய்திக்கு லிபிய இடைக்கால அரசின் ஒரு தரப்பு மறுப்பு வெளியிட்டுள்ளது. முத்தஸ்ஸிம் கடாபி சிர்த் நகரில் இருந்து தப்பிச் செல்லும் வழியில் கிளர்ச்சியாளர்க ளால் கைது செய்யப்பட்டு, கிளர்ச்சி யாளர்களின் முன்னாள் தலைமையகமான பெங்காசிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிர்த் நகரில் இருக்கும் கிளர்ச்சிப்படை வீரர்கள் தெரிவித்ததாக செய்தி வெளியானது. முத்தஸ்ஸில் கடாபி தற்போது பெங்காசியிலுள்ள இராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பிட்டது. (மேலும்....)

ஐப்பசி 14, 2011

ஐப்பசி 14, 2011

LTTE readies for big ‘show’ ahead  of Heroes’ Day, LLRC report

(By Shamindra Ferdiando)

In the wake of declining support for the LTTE’s separatist cause, UK Tamils are planning a series of protests in major cities, beginning on Oct 29, targeting the Sri Lankan government ahead of annual Heroes’ Week events to commemorate those who died fighting for the group. Organizers are trying to mobilize support among the UK-based Tamil Diaspora in support of the campaign. External Affairs and intelligence sources told The Island that the LTTE was making an attempt to sustain its anti-Sri Lanka blitz parallel to a section of the international community targeting the country on the diplomatic front.(more...)

ஐப்பசி 14, 2011

கறுப்பு மரண பக்டீரியாவின் மரபணு வரைபடத்தினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டறிந்து சாதனை 

ஐரோப்பாவில் 1347 முதல் 1351 வரையான காலப்பகுதியில் சுமார் 100 முதல் 150 மில்லியன் பேர் உயிரிழக்கக் காரணமான கறுப்பு மரணம் ( Black Death) எனப்படும் தொற்று நோய்க்குக் காரணமான பக்டீரியாவின் மரபணு வரைபடத்தினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டறிந்துள்ளனர். (யேர்சினியா பெஸ்டிஸ்) Yersinia pestis எனப்படும் பக்டீரியாவின் வகையொன்றே இந்நோய்க்குக் காரணமாக அமைந்ததாகவும் இக்காலத்தில் இது பரிணாமவளர்ச்சியடைந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். (மேலும்....)

ஐப்பசி 14, 2011

நிதி மூலதனத்தின் கொடுங்கோன்மை

(அசோக் மித்ரா)

இருபது ஆண்டு காலத்தில் உலக நிதி மூலதனத்தின் பங்கு : அதன் பேராசையும், தவறான கணிப்புகளுமே, பெருவீழ்ச்சி காலத்திற்குப் பின்னர் அமெரிக்காவை இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியது.உடனடி லாபம், மேலும் லாபம், மென் மேலும் லாபம் என்பதே நிதி மூலதனத் தின் தொடரும் வேட்டை. இதற்காக, உலகம் முழுவதும் சுதந்திரமாகச் சுற்றி வருவதற்கான உலக அமைப்பினை அது தனது நீண்ட நெடிய முயற்சியின் மூலம் உருவாக்கியிருக்கிறது. உற்பத்தியில் ஈடுபடுவதை விட ஊகத்தில் ஈடுபடு வதன் மூலமே, அத்தகைய உடனடி கொள்ளை லாபம் சாத்தியமாகிறது. எனவே, ஊக நடவடிக்கைகள் அதனது இயல்பான விருப்பமாக மாறியிருக்கிறது. நிதி மூலதனத்திற்கு அறநெறிகள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. தனது லாபத்தினைப் பெருக்க வேண்டுமென் றால், அது எவ்வளவு மோசமானது என் றாலும், கிரிமினல் நடவடிக்கை என்றா லும் கூட அதில் ஈடுபடத் தயங்காது. எந்த அமெரிக்கப் பொருளாதாரம் தனக்கு மிகப் பெரும் பலமாக இருந்ததோ, அந்தப் பொருளாதாரத்தினையே இன்று பலவீனப்படுத்துவதில் நிதி மூலதனம் தயக்கம் காட்டவில்லை. (மேலும்....)

ஐப்பசி 14, 2011

எதிர்கால சந்ததியினருக்காக உணவு உற்பத்தியை பெருக்குவது அவசியம்

இலங்கை மட்டுமல்ல தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள சகல நாடுக ளும் இன்று விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து தத்தமது நாடு கள் இயற்கை வளங்களை பேணிப் பாதுகாத்து அதன் மூலம் நன் மையடையும் விவசாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகி ன்றன. பொருளாதார வளர்ச்சி எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதை விட விவசாயத்துறையின் வளர்ச்சியும் முக்கியத்துவம் பெறுகின் றது. இன்று உலக நாடுகள் விவசாயத்திற்கு அளித்து வரும் ஆர் வம் இதற்கு சான்று பகர்கின்றது. எங்கள் நாட்டில் உள்ள விவசாய நிலங்களை பேணிப் பாதுகாத்து அவற்றிற்கு தேவையான இய ற்கை உரத்தையும், நீர்ப்பாசன வசதிகளையும் செய்து கொடுப்ப தன் மூலம் நெற்பயிர்ச்செய்கை உட்பட ஏனைய உணவுத் தானி யங்களின் உற்பத்தியையும் பெருக்க முடியும். (மேலும்....)

ஐப்பசி 14, 2011

செறிவூட்டப்பட்ட பால் நீரிழிவை தடுக்கும்

வாழ்க்கை முறை நோய்களான நீரி ழிவு உயர் இரத்த அழுத்தம் ஆகியவ ற்றை செறிவூட்டப்பட்ட, பால் தடுக் கும் என்று தேசிய ஊட்டச் சத்து ஆய்வு நிறுவனம் கூறுகிறது. இதற் கென பாலில் விட்டமின் டி சேர்த்து செறிவூட்டி சோதனை நடத்த அது திட்டமிட்டுள்ளது உடல்நல குறைபாடு களை உணவால் சமன்படுத்துவதற்கு நுண்ணிய ஊட்டசத்து சேர்க்கும் நடைமுறையை செறிவூட்டுதல் (ஃபோர்டிபிகேஷன்) என்கின்றனர். அதன்படி பாலில் விட்டமின் டி சேர்ப்பதன் மூலம் வாழ்க்கை முறை உடல் நலக் குறைபாடுகளான உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 14, 2011

பாலி அருகே கடும் நில நடுக்கம்

இந்தோனேஷியாவின் பாலி தீவில் நேற்று காலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்தனர். எனினும் நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. அமெரிக்க புவி ஆய்வு மையத் தகவலின்படி பாலி தீவுக்கு தென் மேற்கே 60 மைல்கள் தொலைவில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவு கோலில் 6.0 என்ற அளவாக பதிவாகி இருந்தது. இந்த நில நடுக்கம் காரணம் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளன. எனினும் நில நடுக்கத்தால் ஏற்பட்ட சொத்து மற்றும் ஏனைய சேதங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

ஐப்பசி 14, 2011

டில்லியைத் தாக்கும் சதி முறியடிப்பு

கார் வெடிகுண்டு மூலம் டில்லியை தகர்க்கும் சதியை பொலிஸார் தக்க சமயத்தில் கண்டறிந்து முறியடித்துள்ளனர். ஹரியானா மாநிலம் அம்பாலாவில் 5 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளுடன் நிறுத்தப்பட்டு இருந்த காரை பொலிஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் 7ம் திகதி டில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகினர். இதையடுத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் டில்லியைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக டில்லி பொலிஸாரை உளவுத் துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார் ஒன்று இருப்பதாக டில்லி குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும் பொலிஸாருக்கு நேற்று முன்தினம் ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே பொலிஸார் அம்பாலா ரயில்வே நிலையம் விரைந்தனர். இரகசியத் தகவல் கொடுத்தவர் காரின் வகை மற்றும் எண்ணைக் கூறியிருந்தார். (மேலும்....)

ஐப்பசி 13, 2011

தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற மட்டு.வீரர்களுக்கு வரவேற்பு

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி இலங்கைக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த மட்டக்களப்பு வீரர்களுக்கான வரவேற்பு வைபவம் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. வெண்கலப்பதக்கத்தை வென்ற இலங்கையின் கபடி அணியில் சோட்டோகான் கழகத்தின் ராதாகிருஷ்ணன் சகீவன், கணேசராசா சினோதரன் அகியோரும், உதைபந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற அணியின் தலைவராக செயற்பட்ட புனித இக்னேசியஸ் விளையாட்டுக் கழகத்தின் ரெமோசன் செலர், அதே நேரம் உதைபந்தாட்டப் போட்டியில் மத்தியஸ்தராகச் செயற்பட்ட கோட்டமுனை விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்த சபை உறுப்பினருமான ஏ.டிவாகரன் ஆகியோருக்கே இந்த வரவேற்று வழங்கப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 13, 2011

முல்லேரியா சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் இந்தியாவில் கைத 

முல்லேரியா சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்று இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். முல்லேரியா பகுதியில் தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் உயிரிழந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஐப்பசி 13, 2011

ஆபத்தான நிலையில் டி.எம்.எஸ்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுக்கு சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த டி.எம்.எஸ். ஒரு காலத்தில் திரையுலகில் கொடிகட்டிப்பறந்தார். இவர் திரையுலக ஜாம்பவான்களான எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என பலருக்கும் பல வெற்றிப்பாடல்களை வழங்கியுள்ளார். அண்மையில் இவருக்கு உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார். இந்நிலையில் டி.எம்.எஸ். அவர்களுக்கு மீண்டும் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்தனையடுத்து அவரை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். வைத்தியப்பரிசோதனையில் பின்னர் மருத்துவர்கள், சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்தாக தெரிவிக்கின்றனர். வைத்ததியர்கள் இவரை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருகிறார்களாம். வைரமுத்து, பீ.சுசீலா என பலரும் இவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். ___

ஐப்பசி 13, 2011

 

உலகம் முழுவதும் றிம்(RIM) வலைத் தொடர்புகள் செயலிழந்து இருக்கும் இந்நேரத்தில் இந்தப் படம் தேவையானது தான்......?

ஐப்பசி 13, 2011

சொல்லாத சேதிகள்

கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட செல்வியின்(செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்

இடம்: Scarborough Village Recreation Centre, 3600 Kingston Road , Toronto ON  M1M 1R9
Markham Road & Kingston Road

காலம்: October 16, 2011 (Sunday)

3:00 pm – 6:00 pm

‘தோழி’ இதழின் ஆசிரியரும், கவிஞரும், பெண்ணிலைவாதியும், எழுத்தாளருமான செல்வி என்று அழைக்கப்பட்ட சேமமடுவைச் சேர்ந்த செல்வநிதி தியாகராசா யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் இறுதியாண்டு ஆண்டு மாணவியாக இருந்தவேளையில் கடத்தப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்தன. செல்வியின் கவிதைகள் மனஓசை, மண், அரங்கேற்றம், ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்தன. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றன. சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். (மேலும்....)

ஐப்பசி 13, 2011

இம்மானுவல் பாதிரியார் சென்னை  விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்.

உலகப் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே.இம்மானுவல் பாதிரியார் சென்னை விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.நேற்று (11-10-2011) சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த பாதிரியாரை தமிழ் நாட்டிற்குள் நுழைய விடாது ஒரு மணி நேரமாக தடுத்து வைத்திருந்த பின்னர் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு எனக் கூறி குடிவரவு, குடியகழ்வு அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுமாறு படி பணித்ததாக தகவல்கள் வெளியாகின. சென்னை பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், இந்திய ஆயர் பேரவை மற்றும் பல தொலைக்காட்சி நிலையங்களின் நடாத்தப்படவுள்ள பேருரைகளும், நேர்காணலும் நிகழ்வுக்கு கலந்து கொள்ளவதற்காக சென்னை சென்ற போது இம்மானுவல்  திருப்பி அனுப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தியன் கொலை வாரிசுகளின் தந்தைப் பாதிரியாருக்க துணிச்சல் சற்று அதிகம்தான். யாரங்கே சீமான் எங்கே? வைகோ எங்கே? நெடுமாறன் எங்கே? ..........???கோஷம் போட?

ஐப்பசி 13, 2011

வால் ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்!  1,400 நகரங்களுக்குப் பரவியது மக்கள் போராட்டம்

அமெரிக்காவின் நியூ யார்க் நிதி மாவட்டத்தில் துவங்கிய பெரு நிறுவன ஊழலுக்கு எதிரான போராட் டம் உலகம் முழுவதும் 1,400 நகரங்களுக்குப் பரவியுள் ளது. ஆக்குபய் டுகெதர் என்ற இணை யதளத்தையும் போராட் டக்காரர்கள் துவக்கியுள்ள னர். அனைத்து இடங்க ளில் நடைபெறும் போராட் டங்களையும் ஒருங்கிணைக்க இந்தத் தளம் உதவும் என்று போராடி வரும் குழுக்கள் முடிவு செய்துள்ளன. அக் டோபர் மாதத்தில் இந்தப் போராட்டம் மற்றும் போராட் டத்திற்கு ஆதரவான இயக் கங்கள் 1,496 நகரங்களில் நடைபெறும் என்று திட்ட மிடப்பட்டுள்ளது. அமெ ரிக்க நகரங்களில் ஆர்ப் பாட்டக்காரர்களை வன் முறை மூலமே காவல்துறை யினர் எதிர்கொண்டுள் ளனர். (மேலும்....)

ஐப்பசி 13, 2011

அண்ணன் பாடுபட்ட கட்சிக்குள்ளேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் - பிரேமசந்திரவின் சகோதரி!

எனது அண்ணனே உயிரிழந்துள்ளார். எனது தமயனான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்வதற்கான சதி தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் தெரிய வந்தன. அதனையடுத்து கனடாவில் வாழும் நானும், நான்கு சகோதரிகளும் சகோதரனும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துதிற்கும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதங்களை எழுதினோம். எமது சகோதரனின் நிலையை தெளிவு படுத்தி அவரது பாதுகாப்பை பலப்டுத்துமாறு நாம் வேண்டுகோள் விடுத்தோம். இது தொடர்பாக நாம் இரண்டு பக்கங்கள் உடைய கடிதமொன்றை அனுப்பினோம். எமது அரசியல் வரலாற்றில் அனைத்து விடயங்களும் அந்த கடிதத்தில் விபரிக்கப்பட்டிருந்தன. எமது சகோதரனை பாதுகாப்பற்கான தார்மீக கடமை அவர்களுக்கு உளளது என்பதை நினைவூட்டினோம். (மேலும்....)

ஐப்பசி 13, 2011

கல்முனை மேயர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி நிலை

கல்முனை மாநகரசபை மேயர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று மு.கா. முக்கியஸ்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்திய போதும், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கட்சி முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மு.கா. வெற்றியீட்டியதோடு, முஹம்மது சிராஸ் முதலிடத்தையும், முதன்மை வேட்பாளரான நிஸாம் காரியப்பர் இரண்டாமிடத்தையும் பெற்றனர். இந்த நிலையில் யாரை கல்முனை மாநகரசபை மேயராக நியமிப்பது என்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  அம்பாறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீடக் கூட்டம் கட்சித் தலைவர் தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு கூடியபோது, இங்கும் எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை. முஹம்மது சிராஸ் மற்றும் நிஸாம் காரியப்பர் ஆகிய இருவரையும் மு.கா. தலைவர் சந்தித்து பேசியபோதும், முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இறுதி முடிவை மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஓரிரு தினங்களில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பசி 13, 2011

எகிப்து துணை பிரதமரின் ராஜினாமா நிராகரிப்பு

எகிப்து நாட்டின் நிதியமைச்சர் ஹசம் எல்பெப்லாவி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் ஆளும் இராணுவ அரசு அமைச்சரின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலுக்கு பொறுப்பேற்று தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தாக்குதல் சம்பவத்தில் அமைச்சருக்கு எவ்விதத்திலும் நேரடியான தொடர்பு இல்லை என்பதால் அவரது ராஜினாமா நிராகரிக்கப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், தனது ராஜினாமாவை மீளப்பெறப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் எல்பெப்லாவி, தான் பெரும் நெருக்கடியில் இருப்பதாகவும் குழப்பமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஹசன் எல்பெப்லாவி எகிப்தின் துணை பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 13, 2011

ஒபாமாவின் திட்டம் செனட் சபையால் நிராகரிப்பு

அமெரிக்காவில் தொழில் வாய்ப்பை அதிகரிக்கும் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் திட்டத்திற்கு அந்நாட்டு மக்களவை எதிராக வாக்களித்துள்ளது. அமெரிக்காவில் வேலையற்றோர் எண்ணிக்கை 9.1 வீதத்தினால் அதிகரித்துள்ளது. அத்துடன் நிதி சீர்த்திருத்தம் கோரி அமெரிக்கா பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் புதிய தொழில்வாய்ப்புகளை கொண்டுவரும் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் திட்டம் நேற்று முன்தினம் செனட் சபையில் முன்வைக்கப்பட்டது. 447 பில்லியன் டொலர் கொண்ட இந்தத் திட்டத்திற்கு செனட் சபையில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. இந்த திட்டம் குறித்த வாக்கெடுப்பு நேற்று முன்தினம் செனட் சபையில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிராக செனட் சபையில் உள்ள 46 குடியரசு கட்சி உறுப்பினர்களும் இரு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஐப்பசி 13, 2011

4 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பறந்தது பிஎஸ்எல்வி  வெற்றிகரமாக நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை

இந்தியா - பிரான்ஸ் கூட்டுத் தயா ரிப்பான மேகா-டிராபிகுய்ஸ் செயற் கைக்கோளை விண்ணில் வெற்றிகர மாகக் கொண்டுசென்று, சுற்றுப்பா தையில் புதன்கிழமையன்று நிலை நிறுத்தியது. இந்தச் செயற்கைக் கோள் பிஎஸ்எல்வி- சி18 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண் வெளி மையத்தில் இருந்து அனுப்பப் பட்டது. மேகா- டிராபிகுய்ஸ் செயற்கைக் கோள் உலக வெப்பமண்டல பகுதியில் உள்ள வானிலையை ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்ளும். இந்தச் செயற்கைக் கோளுடன் இந்திய விண் வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ராக்கெட் இதர 3 செயற்கைக்கோள் களான வெசல்சாட்-1 (லக்சம்பர்க்), எஸ்ஆர்எம் சாட் (எஸ்ஆர்எம் பல் கலைக்கழகம், சென்னை செயற்கைக் கோள்) மற்றும் ஜீக்னு (ஐஐடி, கான்பூர்) ஆகியவற்றை வெற்றிகரமாக கொண்டுசென்று, சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. (மேலும்....)

ஐப்பசி 13, 2011

பொதுவுடமை போராளி சூடாமணியுடனான அனுபவ பகிர்வு

(சை. கிங்ஸ்லி கோமஸ்)

2011.10.08 தினம் வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் வித்தியாசமான நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. தனது 75 ஆவது வயதினை பூர்த்தி செய்த மூத்த பொதுவுடமை போராளி இ.கா. சூடாமணியின் பிறந்த தினத்தை முன்னிட்டு புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிச கட்சியின் வவுனியா கிளை, தோழர் சூடாமணியின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து தோழர் சூடாமணியின் அனுபவப் பகிர்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. முதிர்ச்சி, அனுபவம் , பொறுமை ஆகிய மூன்றையும் இணைத்து மனித நேயத்தினை அடிநாதமாக கொண்டு மானுட விடுதலைக்கான பாதையினை வெட்டிய தோழர் சூடாமணி, சீனத்துக் கிழவன் மலை வெட்டப் போன கதையினை ஞாபகமூட்டியதனைக் காணக்கூடியதாய் இருந்தது. கடந்த பல மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் தனது தோழர்களை சந்திக்க பெரும் ஆவல் கொண்டிருந்ததன் காரணத்தாலும் அவரது வாழ்வும் தியாகமும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெரும் படிப்பினையாக அமைந்தது. (மேலும்....)

ஐப்பசி 13, 2011

கிரீஸ்

புது வீச்சுடன் மீண்டும் மக்கள் போராட்டம்

சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் அடுத்த கட்ட நிதி வெட்டை கிரீஸ் அரசு மேற்கொள்ளவிருக் கும் வேளையில், அந்நாட்டு மக்கள் புதிய எழுச்சிகர மான போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். செவ்வாயன்று துவங் கிய பல்வேறு போராட் டங்களின் ஒருபகுதியாக நகராட்சி ஆசிரியர்கள் மற் றும் ஊழியர்கள் அலுவல கங்களிலிருந்து வெளி நடப்பு செய்யும் போராட் டத்தை நடத்தினர். பல் வேறு அரசு ஊழியர்கள் அமைச்சகங்களின் வாயில்களில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். இவர்களோடு விரைவில் வங்கி, மருத்துவமனை ஊழி யர்கள் மற்றும் வழக்கறி ஞர்களும் இணைந்து போராட்டங்களை நடத்தவுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 13, 2011

தாயகம் திரும்புவோர் தொகை அதிகரிப்பு

மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்து இந்தியா சென்ற இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் நேற்று கப்பல் மூலமாக தாயகம் திரும்பினர். சுமார் 20 வருடங்களுக்கு பின் முதற் தடவையாக கப்பல் மூலம் இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்டது இதுவே முதற் தடவையாகும் என்றும் இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் ஐ. நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இலங்கை பிரஜைகளில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் அடங்குவதாக யு. என். எச். சி. ஆர். தெரிவித்தது. மோதல் காரணமாக வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவது தற்போது அதிகரித்து வருவதாக யு. என். எச். சி. ஆர். இலங்கை வதிவிடப் பிரதிநிதி மைக்கல் ஸ்வாக் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 13, 2011

லிபியா

ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!

(தனபால்)

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பிடம்(OPEC) தமது நாட்டின் எண்ணெய் விலையை டாலரில் அல்லாமல் தினாரில் தீர்மானித்து, அதன்படி வழங்குமாறு கடாபி கோரிவந்தார். நாட்டின் செல்வத்தை டாலரில் அல்லாமல் தினாரில் சார்ந்திருக்கச் செய்ய அவர் முயற்சித்தார். அந்நிய கடனுதவியைச் சார்ந்திராமல் நிலத்தடி நீர் திட்டங்களை அவர் நிறைவேற்ற முயற்சித்தார். வளைகுடா நாடுகளின் சில வங்கிகளைத் தவிர, மேற்கத்திய பன்னாட்டு ஏகபோக வங்கிகளை லிபியாவில் நுழைய அவர் அனுமதிக்கவில்லை. டாலரை மையமாகக் கொண்ட ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் லிபியா வராததும், எண்ணெய் வளங்களும் வர்த்தகமும் முழுமையாக ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்துவிடப்படாமலிருந்ததும் ஏகபோக எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இடையூறாக இருந்தன. இந்நிலையில், பிரிட்டனின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் வர்த்தக நிறுவனமான விடோல், லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கைப்பற்றத் துடித்தது. இதற்காக பிரிட்டிஷ் அனைத்துலக வளர்ச்சித்துறை அமைச்சரான அலன் டங்கனுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இவர் அமைச்சராவதற்கு முன், விடோல் நிறுவனத்தின் ஆலோசகராகச் செயல்பட்டவராவார். இன்னொருபுறம், பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் வர்த்தக நிறுவனங்களும் லிபியா மீது குறிவைத்தன. எண்ணெய் நிறுவனங்களின் நோக்கம் இந்நாட்டு அரசுகளின் கொள்கையாக மாறியது. பிரிட்டனும் பிரான்சும் லிபியாவில் கடாபியின் ஆட்சியை நீக்கிவிட்டு, தமது விசுவாச ஆட்சியைக் கொண்டுவரத் தீர்மானித்தன. (மேலும்....)

ஐப்பசி 13, 2011

ஐ.தே.கவினால் தமிழ் மக்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மனோ கணேசன் தலைமையிலான கட்சி தனித்து போட்டியிட நேர்ந்ததுதும், ஐ. தே. க. செய்த தவறினாலேயாகும். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பல கட்சிகள், அமைப்புக்கள் ஆகியவற்றினை இணைத்துக்கொண்டே, அக்கூட்டமைப்பு அபார வெற்றிகளை தொடர்ந்தும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஐ. தே. கட்சி மட்டும் ஏன் தமிழ் மக்களை புறக்கணிக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தூர விலகிச் செல்லும் நிலையினை அவதானிக்க முடிகின்றது. (மேலும்....)

ஐப்பசி 13, 2011

EMBASSY OF SRI LANKA LAUNCHES AMBASSADOR​’S WEBCAST

Jaliya Wickramasuriya, Sri Lanka’s ambassador to the United States and Mexico, is featured on a new webcast produced by the Embassy of Sri Lanka. During the webcast, Ambassador Wickramasuriya discusses post-conflict resettlement, reconciliation and development in Sri Lanka. He calls on members of the Sri Lankan community in the United States to help publicize those positive developments to help Americans better understand that lasting peace and growing prosperity has returned to Sri Lanka. (more....)

ஐப்பசி 13, 2011

உள்ளாட்சித் தேர்தலும் உழைக்கும் மக்கள் கடமையும்  - ஓர் அறைகூவல்

இப்போதெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று வாக்குறுதி கொடுப்பதும் இல்லை; மக்கள் அத்தகைய வாக்குறுதிகளை அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதுமில்லை. சம்பாதிப்பதற்காகத் தான் இவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது மக்களைப் பொறுத்தவரையில் முடிவுகட்டப் பட்டுவிட்ட விடயமாகிவிட்டது. அதனால் தான் தேர்தல் அறிவிப்பு வந்த நாளிலிருந்து அவர்கள் செய்யும் செலவுகளையும் வைக்கும் விருந்துகளையும் எவ்வளவு அதிகபட்சமாக்கி அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அதிகபட்சமாக்கி அனுபவிக்கும் அவலம் வாக்காளர்கள் மத்தியிலும் தலைதூக்கியுள்ளது. எப்படியாவது வெற்றி பெற்று சட்டமன்றங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சிகளுடன் உடன்பாடு வைத்துக்கொள்ளத் துடிக்கும் ஆளும் கட்சியாக வர வாய்ப்புள்ள கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் வந்தவுடன் எந்தவிதத் தயக்கமும் இன்றி கூட்டணிக் கட்சிகளை புறந்தள்ளித் தான் மட்டும் தனியே செல்லவும் தயங்குவதில்லை. (மேலும்....)

ஐப்பசி 13, 2011

JVP rebels’ bank accounts under probe

Alleged LTTE funds

(by Saman Indrajith)

State intelligence services are investigating allegations that the JVP dissidents led by Premkumar Gunaratnam are receiving funds from the LTTE activists overseas, according to sources.The LTTE had channeled funds to the JVP rebel group from Canada and Scandinavia, an intelligence operative told The Island yesterday. "We have so far traced a bank account operated by two JVP dissidents, Dimuthu Attygalle and Waruna Rajapaksa at the Homagama branch of a State bank," he said. Refusing to mention the exact amount, he said it had over two million rupees. (more....)

ஐப்பசி 12, 2011

இந்தியாவிலிருந்து ஒரு தொகுதி அகதிகள் நாட்டிற்கு வருகை

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் வசித்துவந்த அகதிகளில் ஒரு தொகுதியினர் இன்று புதன்கிழமை காலை நாடு திரும்பினர். கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இவர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வரவேற்றார். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவுக்கான ஆளுநரின் ஏற்பாட்டில் இலங்கை - இந்திய நாடுகளின் புரிந்துணர்வின் அடிப்படையில் இவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாண்டில் மாத்திரம் சுமார் 1400 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையினால் வயதுவந்த நபர் ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாவும் வயது குறைந்த சிறுவர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபா வீதமும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொருவருக்கும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஜே.வி.பியின் கிளர்ச்சி அணி - பிள்ளையான் தரப்பு ரகசிய பேச்சுவார்த்தை!

ஜே.வி.பியின் கிளர்ச்சி அணியினருக்கு உள்ளக ரீதியாக ரகசியமான தலைமைத்துவத்தை வழங்கி வரும், பிரேம்குமார் குணரட்னம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி திருகோணமலை சீனக்குடா பிரதேசத்தில் வைத்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தரப்பினருடன் ரகிசயமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹபரணை, மட்டக்களப்பு, வாகரை ஊடாக கறுப்பு நிற டொல்பின் வேன் ஒன்றில், திருகோணமலை சென்ற குணரட்னம், குழியோடியாக தொழில்புரியும் ஒருவரின் நண்பரின் வீட்டில் உணவை உடக்கொண்டுள்ளார். (மேலும்....)

ஐப்பசி 12, 2011

இலங்கை பிரஜாவுரிமையினை பெறுவதற்கான நடமாடும் சேவை

அகதிகளாக இந்தியா சென்றவர்களுக்கு இந்தியாவில் குழந்தை பிறந்த நிலையில் மீள இலங்கை திரும்பி தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் இலங்கை பிரஜாவுரிமையினை பெறுவதற்கான நடமாடும் சேவையினை இலங்கை சட்ட உதவிகள் ஆணைக்குழு எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவில் செயற்படுத்தவுள்ளது. எனவே பிரஜாவுரிமையினை பெறாதவர்கள் தமது ஆவணங்களை வவுனியா நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சட்ட உதவி ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடமாடும் சேவை இடம்பெறும் தினத்திற்கு முன்னராக ஒப்படைத்து தமது ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வதுடன் தமது தேவைகளை நடமாடும் சேவையின்போது நிறைவு செய்து கொள்வதனை இலகுபடுத்திக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.

ஐப்பசி 12, 2011

பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டு-கண்டித்து ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிராக யாழ்.அரச அதிபர் எழுப்பியுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களைக் கண்டித்து ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை இன்று நடத்தியுள்ளனர். தமது கற்றல் செயற்பாட்டு விரிவுரைகளை பகிஸ்கரித்து இப்போராட்டத்தினை அவர்கள் நடத்தியிருந்தனர். பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிராக அங்கு கல்வி கற்கும் மாணவ ஆசி;ரியர்கள் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களை யாழ்.அரச அதிபரிடம் சமர்ப்பித்திருந்தனர். இதையடுத்து ஊடகங்களுக்கு அவற்றை அம்பலப்படுத்தியிருந்த அரச அதிபர் விசாரணைகளுக்கு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்ததார். (மேலும்....)

ஐப்பசி 12, 2011

வாகனத்திலிருந்து இறங்கி வந்த துமிந்த சில்வா பாரதவை பேசியதுடன் தாக்குதல் நடத்தினார்

பொலிஸாரின் கண்ணெதிரிலேயே பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்ற சம்பவத்தை நேரில் பார்த்த சஞ்ஜீவ பிரசாத் என்பவர் சிங்கள ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கீழே கிடந்த பாரத லக்ஷ்மனை வைத்தியசாřலக்கு கொண்டு செல்வதற்கு கூட பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாமே மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். (மேலும்....)

ஐப்பசி 12, 2011

நிலம், நிதி, பொலிஸ், நீதித்துறை அதிகாரங்கள் தொடர்பில் கூடிய கரிசனை எடுத்து செயற்பட வேண்டியிருக்கிறது - தி. ஸ்ரீதரன், பொதுச்செயலாளர், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வு கட்டமைப்பாவது உருவாக்கப்படாவிட்டால் தமிழ்ச்சமூகம் தனது அடையாளங்களை இழப்பதோடு பேரினவாத ஆக்கிரமிப்பில் கரைந்து உருக்குலைந்து போகும் நிலையை யாரும் தடுக்க முடியாத நிலை ஏற்படலாம். என பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்  பொதுச் செயலாளரான தி. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துன்ன அறிக்கை வருமாறு குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வு கட்டமைப்பாவது உருவாக்கப்படா விட்டால் தமிழ்ச்சமூகம் தனது அடையாளங்களை இழப்பதோடு பேரினவாத ஆக்கிரமிப்பில் கரைந்து உருக்குலைந்து போகும் நிலையை யாரும் தடுக்க முடியாத நிலை ஏற்படலாம். (மேலும்....)

ஐப்பசி 12, 2011

விமல் குழந்தைவேலின் - கசகறனம் -  நாவல் உரை அரங்கு!

"போராட்டத்தின் பெயரால் தமது வாழ்வைத் தொலைத்த அக்கறைப்பற்று பெரும் பிரேதேச ஏழை தமிழ் முஸ்லிம் மக்களின் துயரத்தை அம்மக்களின் மொழியிலேயே நம்முன் காட்சிப்படுத்துகிறது இந் நாவல். தாயக மண்ணில் சிதவுற்று நிற்கின்ற  தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வாழ்வுறவை மீளக் கட்டியெழுப்பும் விமல் குழந்தைவேலின் "கசகறணம்" நாவல்,கலாசார பண்பாட்டுத் தளத்தில் பெரும் பங்காற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த உன்னத பணி வெற்றிபெற நாமனைவரும் இணைந்து முடியுமான பங்களிப்பினை வழங்குவோம். தகவலை ஏனைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்." (மேலும்....)

ஐப்பசி 12, 2011

மரணதண்டனையில் இருந்து மூவரை விடுவிக்க கர்நாடக தி.மு.க. தீர்மானம்

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரையும் மரணதண்டனையில் இருந்து விடுவிக்க கர்நாடக தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கர்நாடக மாநில தி.மு.க. ஆலோசனைக் குழு கூட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடந்தது. மாநில அமைப்பாளர் ந. இராமசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வி. தேவராசன், வி.எஸ். மணி உள்ளிட்டோர் பேசினார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக மரணத்தண்டனை கைதிக ளாக சிறையில் வாடும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் அத்தண்டனையில் இருந்து விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வேண்டு கோளுக்கு ஏற்ப மனிதாபிமான அடிப் படையில் மூவரின் மரண தண்டனையை ரத்துச் செய்ய மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.

ஐப்பசி 12, 2011

உணவு பொருட்களின் விலை உயர்வு தொடரும்

உணவு பொருட்கள் விலை உயர்வு நீடிக்கும். அதனால் விவசாயிகள், நுகர்வோர் நாடுகள் எழ்மை பாதுகாப்பற்ற நிலையை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா. உணவு அமைப்பின் அறி க்கை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புகளில் ஒன்றான ஐ.நா. உணவு அமைப்பு தனது ஆண்டு அறிக்கையை வெளியி ட்டது. அதன் விபரம் வருமாறு: 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட சர்வதேச உணவு மற்றும் பொருளாதார நெருக்கடி யின் பாதிப்பை ஏழை மற்றும் வளரும் நாடுகள் இப் போதும் சந்தித்து வருகின்றன. உணவு பொருட்களின் விலை உயர்வு நீடிக்கக்கூடும். மேலும் உயரவும் வாய்ப்புள்ளது. அதனால் ஏழை விவசாயிகள், நுகர்வோர் மற்றும் நாடுகள் ஏழ்மை மற்றும் உணவு பாதுகாப் பற்ற நிலையை சந்திக்க நேரிடும். குறிப்பாக சிறிய மற்றும் இறக் குமதியை நம்பியுள்ள நாடுகள் இந்த அபாயத்தில் உள்ளன. ஆபி ரிக்க நாடுகள் இந்த ஆபத்தை அதிகம் எதிர்நோக்கியுள்ளன. இவ் வாறு ஐ.நா. உணவு அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஐப்பசி 12, 2011

அமெரிக்காவின்

வோல் தெரு ஆக்கிரமிப்பு' போராட்டம் அமெரிக்கா முழுவதும் பரவுகிறது

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆரம்பமான வோல் தெரு ஆக்கிரமிப்பு போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் வொஷிங்டனில் இரண்டாவது வாரமாகத் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இப்போராட்டங்களை, ‘அமெரிக்காவின் வசந்தம்’ என விமர்சித்துள்ளது ஈரான். அமெரிக்காவின் நிதி மேலாண்மையில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் வரம்பு கடந்து இயங்குவதை எதிர்த்து கடந்த ஒரு மாத காலமாக ‘வோல் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம்’ தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. நியூயோர்க்கில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், தலைநகர் வொஷிங்டனையும் விட்டு வைக்கவில்லை. அந்நகரின் கே. தெருவில் உள்ள மெக்பெர்சன் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த இரு வாரங்களாக, கூடாரங்கள் போட்டு தங்கியுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 12, 2011

உள்ளத்தின் ஆழத்தில் இருந்து மரியாதை தொடங்க வேண்டும்

ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு முன்னால் அமர்வதற்கே இளம் வயதினர் ஆயுள்காலத் தயக்கம் காட்டுவார்க்ள. அப்பாவை ‘ஐயா’ என பணிந்து கைகட்டி மதிக்கும் பழக்கம் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வ சாதாரணம். இப்போதைய உயர் தொழில்நுட்ப யுகம் மரியாதையைத் தூக்கி வெளியே வீசிவிட்டதோ எனும் கவலை எழுகிறது. கிராமத்துப் பெரியவர்களுக்கும், முதியவர்களுக்கும் தலைமுறை தலைமுறையாகத் தரப்பட்டுக் கொண்டிருந்த மரியாதையிலும் விரிசல் விழுந்திருக்கிறது. அவர்கள் வேண்டாத சுமைகளாகப் பார்க்கப்படும் துயரமான நிலையும் உருவாகிவிட்டது. மீண்டும் ஒரு களங்கமற்ற அன்பிலும் மரியாதையிலும் பிணைக்கப்பட்ட ஒருகலாசாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் எனும் ஆதங்கம் நமக்குள் எழாமலில்லை.  (மேலும்....)

ஐப்பசி 12, 2011

வெளிநாட்டில் உள்ள வைத்தியர்கள் நாட்டுப்பற்றுடன் செயற்பட வேண்டும்

ஏழை மக் கள் செலுத்தும் வரிப்பணத்தினால் படித்து பட்டம் பெற்று டாக்டர் களாகியவர்களில் பெரும்பாலானோர்கள் இன்னுமொரு வகையிலான தேசத்துக்கு துரோகம் இழைக்கும் வகையில் இப்போது சுயநலமாக நடந்து கொள்கிறார்கள். அரசாங்க ஊழியர்களாக இருந்த போது அரசாங்கத்தின் அனுசரணை யுடன் வெளிநாடுகளுக்கு புலமைப் பரிசிலில் சென்ற டாக்டர் களும் வேறு பல காரணங்களை முன்வைத்து தற்காலிகமாக வெளி நாடு சென்ற டாக்டர்களும் இன்று அந்நாடுகளில் கை நிறைய சம் பளம் எடுத்துக் கொண்டு நாடு திரும்பாமல் வெளிநாடுகளில் உள்ள சுகபோகங்களையும், வருமானத்தையும் அனுபவித்து வருகிறார்கள். இவ்விதம் வெளிநாடு சென்ற சுமார் 10 ஆயிரம் டாக்டர்கள் இல ங்கை திரும்பி நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். மக்களின் பணத்தில் இலவசமாக பெற்ற உயர் கல்வியின் மூலம் டாக்டர்களாக படித்து பட்டம் பெற்றவர்கள் நாடு திரும்பி மக்களுக்கு வைத்திய சிகிச்சை அளிக்க மறுப்பதை தேசத் துரோகம் என்று கூறுவதை விட வேறு என்ன சொல்ல முடியும். (மேலும்....)

ஐப்பசி 12, 2011

நிபந்தனை இல்லாமல் ஆதரவு வழங்க முடியாது - மனோ கணேசன் _

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான எமது கட்சியின் ஆதரவை நிபந்தனையில்லாமல் வழங்க முடியாது. கடந்த பத்து வருடங்களாக கொழும்பு மாநகர சபையிலும், மேல் மாகாண சபையிலும், பாராளுமன்றத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் வழங்கியதைப் போன்று நிபந்தனையற்ற ஆதரவை இனிமேலும் தொடர முடியாது. தலைநகர் தமிழ் மக்கள் தங்களது நலனை முன்னிறுத்தும் பேரம் பேசும் சக்தியை எங்களுக்குத் தந்துள்ளார்கள். இதுவே கொழும்பு மாநகரத்திலும், தெகிவளை கல்கிஸையிலும் கொலொன்னாவையிலும் தமிழ் மக்கள் எங்களுக்கு தந்துள்ள ஆணையாகும். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.  (மேலும்....)

ஐப்பசி 12, 2011

ஒரே குடும்பத்தில் இருவர் வெவ்வேறு கட்சிகளில் மேயர்

நடைபெற்று முடிந்த மாநகர சபைத் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலும் மாநகர முதல்வர்களாக தெரிவு செய்யப்பட்டுள் ளனர். மாத்தளை மாநகர சபைக்கு ஐ. ம. சு. மு. வில் போட்டியிட்ட மாநகர முதல்வர் ஹில்மி முஹம்மத் கரீமின் மூத்த சகோதரியான ஜனாபா பெரோஷாவின் கணவர் எம். ஜே. எம். முஸம்மில் கொழும்பு மாநகர சபைக்கு ஐ. தே. க. யில் போட்டியிட்டு 55448 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹில்மி முஹம்மத் கரீம் 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாத்தளை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதோடு 2005, 2011 ஆம் ஆண்டுகளில் ஆளும் ஐ. ம. சு. மு. யில் போட்டியிட்டு மூன்றாவது முறையாகவும் மாத்தளை மாநகர முதல்வராக தெரிவுசெய்யப்பட்டு சரித்திரம் படைத்துள்ளதோடு, ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மாநகர முதல்வர்களாக தெரிவு செய்யப்பட்டு இவர்களின் குடும்பம் சாதனை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஐப்பசி 12, 2011

முல்லேரியா சூட்டு சம்பவம், மேலும் ஐவர் கைது

முல்லேரியா பகுதியில் கடந்த தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரே இவர்களைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஷி புரக்டர் நேற்றுத் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், மேற்படி சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினமும் முக்கிய சந்தேக நபர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார். கடந்த தேர்தல் தினமான சனிக்கிழமையன்று முல்லேரியா பிரதேசத்தில் இட்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு இலக்காகி படுகாயமுற்ற பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர அரச மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனின் நேரடி வழிகாட்டலில் குற்றப்புலனாய்வுப் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளன. இவர்கள் சந்தேகத்துக்கிடமான சுமார் 40 பேரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதனையடுத்தே நேற்றும் நேற்று முன்தினமும் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என மெக்ஷி புரொக்டர் தெரிவித்தார்.

ஐப்பசி 12, 2011

வடக்கில் 79 பாடசாலைகளை புனரமைக்க இந்தியா உதவி

வட மாகாணத்தில் 79 பாடசாலைகளைத் திருத்துவதற்கு இந்திய அரசாங்கம் 187 மில்லியன் இலங்கை ரூபாவினை வழங்க முன்வந்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்க ளிலுமுள்ள 79 பாடசாலைகளே இச் செயற்திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் கைச்சாத்திடப்பட்டது. பாடசாலைகளின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ரூபா 5 இலட்சம் முதல் ரூபா 70 இலட்சம் வரை தேவைப்படுவதுடன் செலவினம் பாடசாலையின் அளவு மற்றும் கட்டடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் வித்தியாசப்படுகிறது. இந்திய அரசாங்கத்துடன் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து எதிர்வரும் ஒன்பது மாத காலப் பகுதிக்குள் இச்செயற்திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. இதன் மூலம் 42 ஆயிரம் மாணவர்களும் 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் மற்றும் கல்வியதிகாரிகளும் நேரடியாக நன்மையடைவரென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பசி 12, 2011

முல்லை புதுக்குடியிருப்பு பி.ச. கரைத்துறைப்பற்று

எஞ்சிய இரு சபைகளுக்கும் விரைவில் தேர்தல்

எஞ்சிய இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுமென மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு கூறியது. 335 உள்ளூராட்சி சபைகளில் 333 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவடைந்துள்ளதோடு மிதிவெடி அகற்றாத நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் மாத்திரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மிதிவெடி முற்றாக அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்ட பின் இங்கும் துரிதமாக தேர்தல் நடத்த உள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக தெரிவித்தார். புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசங்களின் ஒரு பகுதியில் மிதிவெடி அகற்றப்பட்டு மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளிலும் மிதிவெடி அகற்றப்பட்டு வருகிறது. இந்த வருட முடிவுக்குள் இங்கு மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படவுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஐப்பசி 12, 2011

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் திரிபுராவின் வெற்றி

(கி. இலக்குவன்)

நடைமுறை அறிவும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மாநில அரசு நீண்டகாலக் கண்ணோட்டத்துடனும் உறுதி யாகவும் பிரச்சனைகளை எதிர்கொண்டது. சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு ஆக்கப்பூர் வமான விதத்தில் பன்முகப்பட்ட பரிமாணம் கொண்ட நுண்ணோக்குத்திட்டத்தை வகுத் தது. கலகக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பகுதிகளை விடுவிப்பதற்கு உளவி யல் அடிப்படையான செயல்பாடுகள் அரங் கேற்றப்பட்டன. ஆதிவாசி மக்களின் மனங்க ளில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்ப குதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல், ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல், பாதுகாப்புப்படைகள் பங்கேற்ற வளர்ச் சித்திட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ் முறை களும் அத்திட்டத்தில் இணைக்கப்பட்டி ருந்தன. (மேலும்....)

ஐப்பசி 12, 2011

“லண்டன் பங்குச்சந்தையைக் கைப்பற்றுவோம்”  பிரிட்டனுக்குப் பரவும் முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டம்

அமெரிக்காவில் கடந்த மூன்று வாரங்களாக நடை பெற்று வரும் முதலாளித் துவ எதிர்ப்புப் போராட் டம் பிரிட்டனிலும் எதி ரொலிக்கத் துவங்கியுள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதி யன்று வெறும் 200 பேர் பங் கேற்ற ஆர்ப்பாட்டமாகத் துவங்கிய இந்தப் போராட் டம் தற்போது லட்சக் கணக்கான ஆதரவாளர் களைக் கொண்டதாக மாறி யிருக்கிறது. காவல்துறையி னரின் அடக்குமுறையை மீறி தற்போது சுமார் ஆயி ரம் அமெரிக்க நகரங் களுக்குப் போராட்டம் பர வியிருக்கிறது. இந்நிலையில் இத்தகைய போராட்டங் களை நடத்த பிரிட்டனைச் சேர்ந்த பலர் முடிவெடுத் துள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 12, 2011

கம்யூனிச எதிர்ப்பு வேலைகளை நிறுத்துக!  கம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்குரல்

கஜகிஸ்தானில் அற்பத் தனமான காரணத்தைக் காட்டி அந்நாட்டின் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு தடை விதித்துள்ளனர். பதிவு செய் யப்படாத, அரசு சாரா சங்கம் ஒன்றின் கூட்டத்தில் கஜகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலா ளர் காசிஸ் அல்டம்ஜ ரோவ் பேசியிருக்கிறார். இதற்காகக் கட்சியையே தடை செய்து விட்டனர். இதற்கு முன்பும் கட்சியின் ஊழியர்கள் காவல் துறையின் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகி யுள்ளனர். காஸ்முனாய் கேஸ் என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை நிறுத் தம் செய்தனர். அவர்களது கூட்டத்தில் பேசியதற்காக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நூரிஜாஸ் அப்டிரிமோவா வுக்கு கடுமையான அபரா தம் விதிக்கப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 12, 2011

2 அமெரிக்க பேராசிரியர்களுக்கு  பொருளாதார  நோபல் பரிசு

அமெரிக்கப் பொரு ளாதார நிபுணர்களான கிறிஸ்டோபர் சிம்ஸ் மற் றும் தாமஸ் சார்ஜெண்ட் ஆகியோர் இருவருக்கும் பொருளாதாரத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக் கப்பட்டுள்ளது. 68 வயதான இருவரும் தனித்தனியே ஆய்வுகளைச் செய்திருந்த போதிலும் இரு ஆய்வு களும் ஒன்றுக்கொன்று ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து சரிந்து வரும் உலகப் பொருளா தாரத்தை விடுவிப்பதற்கான கொள்கைகளை வகுக்க புதிய வழிமுறைகளை இவர் கள் முன்வைத்துள்ளனர். பேரளவு பொருளாதார (மேக்ரோ-எகனாமிக்ஸ்) காரணிகள் மற்றும் விளை வுகள் குறித்த ஆய்வுகளுக் காக இவர்களுக்கு ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயன்சஸ் நோபல் பரிசு அறி வித்துள்ளது. நியூயார்க் பல் கலைக்கழகத்தில் பணி புரிந்து வரும் பேராசிரியர் ஜே.சார்ஜண்ட் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் கிறிஸ் டோபர் ஏ.சிம்ஸ் ஆகிய இருவரும் நோபல் பரிசுத் தொகை யான 10 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சரிசமமாகப் பகிர்ந்து கொள்வார் கள்.

ஐப்பசி 11, 2011

யாருடன் இணைக்கப் போகிறார் மனோ கணேசன்

(சாகரன்)

முன்னை நாள் 'கொழும்புப் பிரபாகரன்; கனடாவிற்கு தப்பியோடி அழையாத கூட்டங்கள், விழாக்களில் 'விருந்தாளி'யாக மாறி வடையும், கோப்பியும் இனாமாக தின்று திரியும் நிலையில், தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போதைய 'கொழும்புத் தமிழ் ஈழம்' இன் பிரபாகரன் விபி கணேசனின் செல்வந்த வாரிசு என்று கூறுகின்றனர். மேலும் கொழும்புத் தமிழ் மக்கள் கணேசனுக்கே வாக்களிக் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எனவே சாராம்சத்தில் கணேசன் கூட்டமைப்பின் சகலை ஐ. தே. கட்சின் உறுப்புரமை பெறாத அங்கத்தவராகத்தான் தொடர்ந்தும் இருக்க விரும்புவார். கடந்த பொதுத் தேர்தலில் கணேசனுக்ம், ரணிலுக்கும் இடையில் ஏற்பட்ட மாமி, மருமகள் சண்டை அவர்களை பிரித்து வைத்திருப்பது போல் தோற்றத்தைக் கொடுத்தாலும் கணேசன் என்றும், எப்போதும் ஐ. தே. கட்சியின் சகலனாகவே இருப்பார். அது இணைந்திருந்தால் என்ன, இணையாமல் 'தனித்து' இருந்தால் என்ன. (மேலும்....)

ஐப்பசி 11, 2011

'முஸ்லிம்களுக்கு உரிமை தேவையெனில் போராடுங்கள்' என அறிவுரை பகர்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு

ரஉப் ஹக்கீம் தேர்தல் பிரசாரத்தில் உரிமைகளை தட்டிக்கேட்டு கட்டிக்காத்து வென்றுவரப்போவதாக வாக்குவேட்டையின் போது வழமை போல வாக்காளர்களை கிளர்ச்சியூட்டுவதற்காக எடுத்து விட்ட சவடால் ஒன்றுக்காக நீங்களும் பதிலுக்கு எடுத்து விட்ட சவடாலாகக்கூட மேற்படி தங்கள் கூற்று இருக்கலாம். ஆனால் முஸ்லிம் சமூகம் சார்பாக இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டவிடமுடியாது. அதாவது 'ஒருவருக்கு உரிமை தேவையென்றால் போராட வேண்டும்' என்ற உங்களது புத்திமதி ரஊப் ஹக்கிம் அவர்களுக்கு சம்டைம் உறைக்கலாம் ஒருவேளை உறைக்காதும் போகலாம். அதனையிட்டு முஸ்லிம்கள் அலட்டப்போவதில்லை. ஏனெனில் த.தே.கூட்டமைப்பினராகிய நீங்களும் மற்றும் ஹக்கீமும் இன்றைக்கு கொத்திக் கொள்ளும் நீங்கள் நாளைக்ககே கட்டிக்கொள்ளலாம். கட்டிக் கொண்டு புதிய பாதையில் கைவீசிப் புறப்படலாம். எதுவும் சாத்தியமே. ஏனெனில் சிறுபான்மையினராகிய முஸ்லிம்களையும்,  தமிழர்களையும் மிகக் கீழ்த்தரமாக ஏசிப்பேசி இனவாதத்தைப்படு பயங்கரமாக வெளிப்படுத்திய அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பான சரத்பொன்சேக்காவை உங்கள் சுயநலன்களுக்காக 'சிறுபான்மையினரின் மீட்பர்'என்றுகூறி அவரை ஜனாதிபதியாக்க ஓடுப்பட்டுத்திரிந்த இனப்பற்றாளர்கள் தான் நீங்கள் இருதரப்பாரும். (மேலும்....)

ஐப்பசி 11, 2011

இந்திய வெளிவிவகார​ச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தமிழ்த் தரப்பு சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய்க்கும் தமிழ்த் தரப்புக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுபகல் 12மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. சுமார் 45நிமிட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் அவர்களுடன், இந்திய அதிகாரிகளும், இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, பிரதி உயர்ஸ்தானிகர் குமரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். (மேலும்....)

ஐப்பசி 11, 2011

உறைய’ வைத்த கண்டுபிடிப்பு மூவருக்குக் கிடைத்த நோபல்!

உலகம் இறுதியில் எப்படி அழியும்! இந்தக் கேள்விக்கு பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான். ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில் உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும் என்பது. இதற்காகத்தான் அவர்களுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு கிடைத்துள்ளது. இந்த மூன்று அமெரிக்க விஞ்ஞானி களின் கண்டுபிடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இந்த மூவருக்குமே கூட தங்களது கண்டுபிடிப்பு பெரும் வியப்பையே அளித்ததாம். அவர்களால் கூட இதை நம்ப முடியவில்லையாம். சூப்பர் நோவா எனப்படும் வெடிக்கும் நடசத்திரக் கூட்டங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில்தான் உலகம் கடைசியில் உறைந்து போய் விடும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர் இந்த மூவரும். (மேலும்....)

ஐப்பசி 11, 2011

Sri Lanka is Thinking -Why are UK MPs supporting LTTE terrorism?

LTTE commenced it major terror attacks such as village massacres, suicide bombings and other civilian massacres in 1983. It took 14 years for the U.S. to identify the LTTE as a terror outfit. During this time, the LTTE had carried out hundreds of village massacres, suicide bombings, and even assassination of two world leaders. It took 17 years for the U.K, to feel the terrorism of the LTTE. For the EU and Canada it took 23 years. (more....)

ஐப்பசி 11, 2011

முல்லேரியா சூட்டுச் சம்பவம்

பிரதான சந்தேகநபர் ஆயுதங்களுடன் கைது

முல்லேரியா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரென கருதப்படும் ஒருவர் நேற்றுமாலை ஆயுதங்களுடன் சீ.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டிருக்கும் சந்தேகநபரிடமிருந்து 12 பிஸ்டல்கள், 02 ரிவோல்வர், 02 ரி-56 ரக துப்பாக்கி உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டி ருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்சி புரொக்டர் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சீ.ஐ.டி.யினர் இரு குழுக்களின் கீழ் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான 37 பேரிடம் விரிவான விசாரணைகள் நடத்திய சி.ஐ.டி.யினர், பிரதான சந்தேக நபரென சந்தேகிக்கப்படும் ஒருவரை நேற்று மாலை கைதுசெய்தனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன் னாள் எம்.பி பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் உயிரிழந்திருப்பதுடன் துமிந்த சில்வா எம்.பி. படுகாயமடைந்த நிலையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோனின் பணிப்புரையின் பேரில் சீ.ஐ.டி.யினர் விரிவான விசாரணைகளை ஆரம் பித்துள்ளனர்.

ஐப்பசி 11, 2011

கல்முனை மாநகர முதல்வர் யார்? இன்று தீர்மானம்

கல்முனை மாநகர சபை மேயர் யார் என்பது பற்றி இன்று தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பில் கூடும் கட்சியின் உயர் மட்டக் குழு இவ்விடயம் தொடர்பில் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற முஹம்மட் ஸிராஸ் என்பவரையா அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிஸாம் காரியப்பரையா மேயராக நியமிப்பது என்பது தொடர்பில் குழப்ப நிலையொன்று தோன்றியுள்ளது. இதனைத் தீர்க்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு உயர் குழுகூடி ஆராயவிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. கல்முனை மாநகர சபையின் மேயர் யார் என்பது பற்றி இன்றைய தினம் தீர்மானிக்கப்படுமென்று தெரிவிக்கப்படுகிறது.

ஐப்பசி 11, 2011

பொருளியல் துறையில் இருவருக்கு நொபல் பரிசு

அமெரிக்க ஆய்வாளர்களான தோமஸ் சேர்ஜன் மற்றும் கிறிஸ்டோபர் சிம்ஸ் ஆகியோர் 2011ம் ஆண்டுக்கான பொருளியல் துறைக்கான நொபல் பரிசை வென்றனர். ஸ்டொக்ஹோமில் நொபல் பரிசுக் குழுவினரால் நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் மெக்ரோ - பொருளியல் மற்றும் அரச பொருளாதார கொள்கைத் திட்டமிடல் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்தற்காகவே இவர்கள் நொபல் பரிசுக்கு தெரிவாகியுள்ளனர். 1895 ஆம் ஆண்டு அறிமுகமான நொபல் பரிசில், பொருளியலுக்கான நொபல் பரிசு 1969 ஆண்டு தொடக்கமே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நொபல் பரிசு வழங்கும் வைபவம் ஸ்டொக்ஹோமில் வரும் டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஐப்பசி 11, 2011

ரஷ்ய பிரதமர் புடின் இன்று சீனா விஜயம்

ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் இன்று சீனா செல்கிறார். அவர் அந்த நாட்டில் 2 நாட்கள் தங்கி இருக்கிறார். அவருடன் 160 உறுப்பினர் கொண்ட தூதுக்குழுவும் செல்லவுள்ளது. சீனாவில் அவர் ஜனாதிபதி ஹியூ ஜிண்டாவோ, பிரதமர் வெண் ஜியாபாவோ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 1999 ஆம் ஆண்டு முதல் அவர் பல முறை சீனாவுக்கு சென்று இருக்கிறார். புடின் விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று அவர் பதவியில் உட்கார்ந்தால் அது சீன – ரஷ்ய நட்புறவுக்கு மேலும் வலுவூட்டும் என்று நம்பப்படுகிறது.

ஐப்பசி 11, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல்

தயாநிதி, கலாநிதி ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை, கைது செய்யத் திட்டம்

நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மேலும் ஒரு தி.மு.க வின் மாஜி மத்திய அமைச்சர் தயாநிதி, சன் டி.வி கலாநிதி (கருணாநிதி பேரன்கள்) மீது சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்), பதிவு செய்தது. இதனையடுத்து சென்னை டில்லி ஐதராபாத் பகுதியில் உள்ள இவர்களது வீடுகள் சன் டி.வி. அலுவலங்களில் (திங்கட்கிழமை) காலை சி.பி.ஐ, அதிகாரிகள் அதிரடி சோத னையில் ஈடுபட்டனர். தொலைத் தொடர்பு துறையில் ராஜாவுக்கு முன்பாக அமைச் சராக இருந்து அவரை ஜெயிலுக்கு தள்ளி விட்டு அவர் பிந்தி செல்லவிருக்கிறார் என்பது தான் கூடுதல் விஷயம். எப்.ஐ.ஆர். அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வும் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரிக்கவும் சி.பி.ஐ முடிவு செய்திருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. (மேலும்...)

ஐப்பசி 11, 2011

Toronto LTTE Tamils planing to protest Sri lanka travel show

PLEASE see attached picture's. LTTE try to shut down Sri Lanka Trade show in Canada., Some crook business man try to make $$$ with Sri Lanka Name their for not much support from Colombo Gov.

ஐப்பசி 11, 2011

50 வருடங்களின் பின்னர் குருநாகல் மாநகர சபைக்கு இ.தொ.கா உறுப்பினர் தெரிவு

உள்ளூராட்சி சபை தேர்தலில் இ. தொ. காவுக்கு கிடைத்துள்ள வெற்றியின் மூலம் மலையக மக்கள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இருக்கின்றனரென்பது இதன்போது தெளிவாகியுள்ளது. இ.தொ.காவின் வரலாற்றில் முதன் முறையாக குருநாகல் மாநகர சபைக்கு எமது கட்சியின் சார்பில் 50 வருடங்களுக்கு பின்னர் உறுப்பினர் ஒருவர் தெரிவானது இ. தொ.கா. வின் பக்கம் மக்கள் அணித் திரண்டுள்ளனர் என்பதனை இத்தேர்தல் பெறுபேறுகள் எடுத்து காட்டுகின்றன என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. (மேலும்...)

ஐப்பசி 10, 2011

iPhone

ஐப்பசி 10, 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று ஜனநாயக அணி உருவாக்கப்பட வேண்டும்!

இன்றுள்ள சூழ்நிலையில், தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு காண்பதானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை தீர்வு முயற்சிகளிலிருந்து தள்ளி வைக்காமல் அது ஒருபோதும் சாத்தியப்படாது. இது வரலாறு காட்டும் உண்மை. எனவே அதைச் செய்வதானால், முதலில் மீண்டும் ஜனநாயக தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்குவது அவசியம். அதை சாத்தியமாக்குவதற்கு முன் கையெடுத்து செயல்படுவதற்குரிய தகைமை தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈ.பி.டி.பி என்பனவற்றுக்கே உண்டு. அந்த இரு கட்சிகளும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இதுபற்றி பாரதூரமாக ஆலோசிக்க வேண்டும். வலதுசாரி, பிற்போக்குவாத, ஏகாதிபத்திய சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, மாற்று அணியொன்றை உருவாக்காமல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு இல்லையென்பதையும், தமிழ் ஜனநாயகக் கட்சிகளுக்கு வாழ்வில்லையென்பதையும், இந்தப் பிரச்சினையில் அக்கறையுள்ள அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. (மேலும்.....)

ஐப்பசி 10, 2011

தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமை குறித்து ஜே.வி.பி பிளவுற்ற குழுவுடன் உரையாடல்

உறைந்து கிடந்த இத்தாலியில் மாபெரும் மாணவர் போராட்டங்களை நாம் எதிர்பார்த்ததில்லை. பில்லியன்களைச் திருடிவைத்திருப்பவர்களின் சொர்க்கபுரியான வோல் ஸ்ரீட்டை அமரிக்க உழைக்கும் மக்கள் ஆக்கிரமிக்கும் போராட்டத்தை யாரும் எதிர்பார்த்ததில்லை. அதிகாரத்தைச் சர்வாதிகாரிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு மதத்திற்குள் புதைந்துகிடந்த அரேபிய மக்கள் தெருக்களில் உரிமைக்காகப் போராடுகிறார்கள். கார்ல் மார்க்சை கோமாளி என்ற அதிகார வர்க்கம் கூட இப்போது அவரை மேதை என்று புகழாரம் சூட்டுகிறது. இந்த மாற்றங்களின் ஒரு பகுதிதான் இலங்கையில் இடது சாரிக் கட்சி என்று தம்மைத்தாமே கூறிக்கொண்ட ஜே.வி.பி இனுள் ஏற்பட்ட பிளவா அன்றி வெறும் அதிகாரப் போட்டியா என்ற தேடலில் இனியொரு தன்னை உட்படுதி கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நேர்காணல் வெளியாகிறது.(மேலும்.....)

ஐப்பசி 10, 2011

பாம்பின் கால் பாம்பறியும் ?? காசேதான் கடவுளடா ...............

(மேலும்.....)

ஐப்பசி 10, 2011

Jobs authorized biography so his kids can know him

Steve Jobs, in pain and too weak to climb stairs a few weeks before his death, wanted his children to understand why he wasn't always there for them, according to the author of his highly anticipated biography. "I wanted my kids to know me," Jobs was quoted as saying by Pulitzer Prize nominee Walter Isaacson, when he asked the Apple Inc co-founder why he authorized a tell-all biography after living a private, almost ascetic life. "I wasn't always there for them, and I wanted them to know why and to understand what I did," Jobs told Isaacson in their final interview at Jobs' home in Palo Alto, California.(more...)

ஐப்பசி 10, 2011

நூல் விமர்சன நிகழ்வு

லெனின் மதிவானம் எழுதிய

'பேராசிரியர் க.கைலாசபதி: சமூகமாற்றத்திற்கான இயங்காற்றல்'

என்னும் நூல் பற்றிய விமர்சன அரங்கு

இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்

     58 தர்மராம வீதி, கொழும்பு – 6

காலம்: 2011 அக்டோபா 09, ஞாயிற்றுக்கிழமை 4.30 மணி

தலைமை: சிவா சுப்பிரமணியம்

        ('தினகரன்' முன்னாள் பிரதம ஆசிரியர்)

விமர்சன உரை: பேராசிரியர் சபா ஜெயராசா

            கலாநிதி ந.இரவீந்திரன்

நிகழ்ச்சி ஏற்பாடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

E-Mail: kailashpath@yahoo.com

ஐப்பசி 10, 2011

As fresh fund raising campaign gets underway

LTTE factions on collision course

(By Shamindra Ferdinando)

The government believes that various LTTE factions are making an attempt to streamline fund raising operations for the separatist cause in the wake of a section of the international community turning the heat on Sri Lanka over accountability issues. The LTTE fund collection network collapsed in early 2009 even before the conclusion of the conflict in May 2009. Intelligence and External Affairs Ministry sources told The Island that those pursuing the LTTE’s cause had cited their efforts to move the US judiciary against President Mahinda Rajapaksa and Sri Lanka’s No 02 at the UN Maj. Gen. Shavendra Silva over accountability issues as a main reason for fresh funds.(more....)

ஐப்பசி 10, 2011

காணிப் பதிவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஆதரவு வழங்கத் தயார் - ஆனந்தசங்கரி _

காணிப் பதிவு சம்பந்தமான விவகாரத்தினால் வடபகுதி மக்கள் மிகவும் கவலையுற்றுள்ளனர். இதற்கெதிராக கூட்டமைப்பு நடவடிக்கை எடுப்பதாயின் நாம் பூரண ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளோம். இல்லையேல் இவ்விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு எமக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கோரியுள்ளார். (மேலும்.....)

ஐப்பசி 10, 2011

சவீந்திர சில்வாவுக்கு அமெரிக்கா இராஜதந்திர விதி விலக்கு

நியூயோர்க் நீதிமன்றத்தில் போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு இருப்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவிருப்பதாக ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இராஜதந்திர உறவுகள் தொடர்பான 1961 ஆம் ஆண்டின் வியன்னா உடன்பாட்டின் அடிப்படையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு இருப்பதாக அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் வழங்கும் சான்றிதழை, சவீந்திர சில்வாவின் சட்டவாளர் தெற்கு நியூயோர்க் நீதிமன்றதில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 09, 2011
 

தேர்தல், வாக்களிப்பு, கலவரம், ஊரடங்கு சட்டம்,  துப்பாக்கிச் சூடு, ஆணைக்குழு அமைப்பு

ஐப்பசி 09, 2011

ஆளும் கட்சி அமோக வெற்றி

உள்ளுர் ஆட்சித் தேர்தல் முடிவுகள்

(சாகரன்)

ஐ.தே. கட்சியின் கோட்டைகளாக கடந்த 60 வருடங்களாக இருந்து வந்த கண்டி, கொழும்பு உட்பட சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் இதுவரை வெளிவந்த தேர்தல் முடிவுகளில் ஆளும் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணி முன்னணி வகிக்கின்றது. 6 ஐ.தே கட்சி பெரும் தோல்விகளை சந்திக்கும் இதேவேளை ஜேவிபி காணாமல் போகும் நிலையில் உள்ளது. அண்மைய தேர்தல்களுடன் ஒப்புடுகையில் அதிக வன்முறைகள் நிறைந்த தேர்தலாக காணப்படுகின்றது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆளும் கட்சியினர் என்று கூடப்பார்காமல் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். நடைபெற்ற கலவரங்கள், மரணங்களை விசாரிக்க ஆணைக்குழு அமைத்துள்ளார் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. 2  தவிர்ந்த ஏனையஉள்ளுராட்சி சபைகளை இதுவரை ஆளும் கட்சி கைபற்றியுள்ளது. (மேலும்...)

ஐப்பசி 09, 2011

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 101,920 வாக்குகளையும் 24 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.ம.சு.கூ 16 ஆசனங்களையும், ஜனநாயக மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் மக்கள் ஐக்கிய முன்னணி 2 ஆசனங்களையும் இரண்டாம் இலக்க சுயேட்சை குழு 1 ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் இரண்டாம் இலக்க சுயேட்சை குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 101,920 வாக்குகள், 24 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 77,089 வாக்குகள், 16 ஆசனங்கள்

ஜனநாயக மக்கள் முன்னணி - 26,229 வாக்குகள், 6 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 9,979 வாக்குகள், 2 ஆசனங்கள்

மக்கள் ஐக்கிய முன்னணி - 7830 வாக்குகள், 2 ஆசனங்கள்

இரண்டாம் இலக்க சுயேட்சை குழு - 4,085 வாக்குகள், 1 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி - 3,162 வாக்குகள், 1 ஆசனம்

இரண்டாம் இலக்க சுயேட்சை குழு - 2,962 வாக்குகள், 1 ஆசனம்

ஐப்பசி 09, 2011

தெகிவளை - கல்கிசை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

தெகிவளை-கல்கிசை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39,812 வாக்குகளையும் 16 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 11 ஆசனங்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 39,812 வாக்குகள், 16 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 31,082 வாக்குகள், 11 ஆசனங்கள்

ஜனநாயக மக்கள் முன்னணி - 2,168 வாக்குகள், 1 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) - 1,568 வாக்குகள், 1 ஆசனம்;

ஐப்பசி 09, 2011

மொரட்டுவ மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

மொரட்டுவ மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 45,286 வாக்குகளையும் 18 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 9 ஆசனங்களையும் முதலாம் இலக்க சுயேட்சை குழு ஒரு ஆசனத்தையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 45,286 வாக்குகள், 18 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 25,224 வாக்குகள், 9 ஆசனங்கள்

முதலாம் இலக்க சுயேட்சை குழு - 3,478 வாக்குகள், 1 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி - 1,585 வாக்குகள், 1 ஆசனம்

ஐப்பசி 09, 2011

ஜெயவர்த்தனபுர கோட்டே மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் _

ஜெயவர்த்தனபுர கோட்டே மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 26,723 வாக்குகளையும் 13 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும், மூன்றாம் இலக்க சுயேட்சைகுழு ஒரு ஆசனத்தையும் லங்கா சமசமாஜக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 26,723 வாக்குகள், 13 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 10,830 வாக்குகள், 3 ஆசனங்கள்

மூன்றாம் இலக்க சுயேட்சைகுழு - 2178 வாக்குகள், 1 ஆசனம்

லங்கா சமசமாஜக் கட்சி - 1291 வாக்குகள், 1 ஆசனம்

ஐப்பசி 09, 2011

கொலன்னாவ நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

கொலன்னாவ நகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,303 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 4 ஆசனங்களையும், ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 11,303 வாக்குகள், 6 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 10,667 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஐப்பசி 09, 2011

கொட்டிகாவத்தை-முல்லேரியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

கொட்டிகாவத்தை-முல்லேரியா பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37,998 வாக்குகளையும் 16 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 37,998 வாக்குகள், 16 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 12,239 வாக்குகள், 5 ஆசனங்கள்

ஐப்பசி 09, 2011

அம்பாறை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

அம்பாறை, கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகளையும் 11 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும், ஐ.ம.சு.கூ 4 ஆசனங்களையும் ஐ.தே.க ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 22,356 வாக்குகள், 11 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 9,911 வாக்குகள், 4 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 8524 வாக்குகள், 3 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 2,805வாக்குகள், 9 ஆசனம்

ஐப்பசி 09, 2011

கம்பஹா, நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

கம்பஹா, நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37,232 வாக்குகளையும் 16 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 9 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 37,232 வாக்குகள், 16 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 24,712 வாக்குகள், 9 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,588 வாக்குகள், 1 ஆசனம்

ஐப்பசி 09, 2011

கம்பஹா மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

கம்பஹா மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 22,679 வாக்குகளையும் 14 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களையும், மூன்றாம் இலக்க சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 22,679 வாக்குகள், 14 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 6,478 வாக்குகள், 3 ஆசனங்கள்

மூன்றாம் இலக்க சுயேட்சைக்குழு - 835 வாக்குகள், 1 ஆசனம்

ஐப்பசி 09, 2011

இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 15,626 வாக்குகளையும் 15 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 15,626 வாக்குகள், 15 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 6,820 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஐப்பசி 09, 2011

இதுவரை ஆளும் தரப்பினர் முதலிடத்தில்: ஐ.தே.க. பின்னடைவு

இன்று நடைபெற்று முடிந்த தேர்தல்களில் பிரதான உள்ளூராட்சி சபைகள் பலவற்றை தன் வசப்படுத்தியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி. 23 சபைகளுக்காக நடைபெற்ற தேர்தலில் இதுவரை மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருணாகல், நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, கம்பஹா ஆகியவை ஆளும் தரப்பினர் வசம் வந்துள்ளன. கல்முனை மாநகர சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகள் என வர்ணிக்கப்பட்ட மாநகர சபைகள் சிலவும் ஆளும் தரப்பினர் வசம் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்தவொரு சபையையும் ஐக்கிய தேசியக் கட்சியால் இத் தேர்தலில் கைப்பற்ற முடியவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துப் @பாட்டியிட்ட இரத்தினபுரி மாநகர சபையில் தோல்வியைத் தழுவியுள்ளது.

ஐப்பசி 09, 2011___

மாத்தளை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

மாத்தளை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,407 வாக்குகளையும் 9 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும், ஐந்தாம் இலக்க சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 11,407 வாக்குகள், 9 ஆசனங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 4,751 வாக்குகள், 5 ஆசனங்கள்.

ஐந்தாம் இலக்க சுயேட்சைக்குழு - 552 வாக்குகள், 1 ஆசனம்.

ஐப்பசி 09, 2011

கண்டி மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்

கண்டி மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23,189 வாக்குகளையும் 13 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 10 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 23,189 வாக்குகள்.3 ஆசனங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 20,087 வாக்குகள் 10 ஆசனங்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1248 வாக்குகள், 1 ஆசனம்.

ஐப்பசி 09, 2011

நுவரெலியா மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்

நுவரெலியா மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6,275 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 6,275 வாக்குகள், 11 ஆசனங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,781 வாக்குகள், 3 ஆசனங்கள்.

ஜனநாயக மக்கள் முன்னணி - 1237 வாக்குகள், 1 ஆசனம்.

ஐப்பசி 09, 2011

கண்டி குண்டகசாலை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

கண்டி குண்டகசாலை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 34,488 வாக்குகளையும் 14 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 6 ஆசனங்களையும், முதலாம் இலக்க சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 34,488 வாக்குகள், 14 ஆசனங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 16,934 வாக்குகள், 6 ஆசனங்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,128 வாக்குகள், 1 ஆசனம்.

ஐப்பசி 09, 2011

பதுளை மாநாகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

பதுளை மாநாகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13,337 வாக்குகளையும் 10 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 13,337 வாக்குகள், 10 ஆசனங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 6,982 வாக்குகள், 5 ஆசனங்கள்

ஐப்பசி 08, 2011__

ஹம்பந்தோட்டை சூரியவெவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

ஹம்பந்தோட்டை சூரியவெவ பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,279 வாக்குகளையும் 4 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 14,279 வாக்குகள், 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,388 வாக்குகள், 1 ஆசனங்கள்

ஐப்பசி 08, 2011__

காலி மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்

காலி மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23,539 வாக்குகளையும் 11 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் ஜே.வி.பி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 23,539 வாக்குகள், 11 ஆசனங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 16,137 வாக்குகள், 5 ஆசனங்கள்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,085 வாக்குகள், 1 ஆசனம்.

ஐப்பசி 08, 2011__

ஹம்பந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

ஹம்பந்தோட்டை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,836 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 11,836 வாக்குகள், 6 ஆசனங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 3,788 வாக்குகள், 1 ஆசனங்கள்.

ஐப்பசி 08, 2011__

அநுராதபுரம் மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்

அநுராதபுரம் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,849 வாக்குகளையும் 10 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 14,849 வாக்குகள், 10 ஆசனங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 5,028 வாக்குகள், 3 ஆசனங்கள்

ஐப்பசி 08, 2011__

குருநாகல் மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்

குருநாகல் நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளையும் 8 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 4 கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 20,681 வாக்குகள், 8 ஆசனங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 4,838 வாக்குகள், 4 ஆசனங்கள்._

ஐப்பசி 08, 2011____

மாத்தறை மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள்

மாத்தறை நாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளையும் 9 ஆசனங்களையும் பெற்று வெற்றியீட்டியுள்ளது. மேலும் ஐ.தே.க 5 ஆசனங்களையும் ஜே.வி.பி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) - 20,681 வாக்குகள், 9 ஆசனங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) - 12,619 வாக்குகள், 5 ஆசனங்கள்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,449 வாக்குகள், 1 ஆசனம்.

ஐப்பசி 08, 2011__

துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் எம்.பி பாரத லக்ஷ்மன் உட்பட மூவர் பலி

அங்கொடைப் பிரதேசத்தில் இருகுழுக்களுக்கிடையே சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உயிரிழந்துள்ளார். இத்தகவலை ஆளும் கட்சி பாரளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உறுதிப்படுத்தினார். அங்கொடைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின்போது, காயமடைந்த துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இச்சம்பவத்தில் லக்ஷ்மன் உட்பட மூவர் உயிழந்துள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எமது இணையத்தளத்திற்கு சற்றுமுன்னர் தெரிவித்தார்.

ஐப்பசி 08, 2011__

The UPFA won the Galle Municipal Council taking 11 seats.

The UNP won seven seats while the JVP won one seat.

Anuradhapura MC goes to UPFA

The UPFA won the Anuradhapura Municipal Council taking ten seats while the UNP won three.

The JVP did not win any seats.

UPFA sweeps Hambantota

The UPFA won the Hambantota Pradeshiya Sabha taking six of its seven seats. The UNP won one seat.

UPFA heading for victory in N-Eliya

Another bastion of the United National Party-the Nuwara-Eliya Municipal Council is set to fall into the hands of the United People’s Freedom Alliance (UPFA) after leading with 400 plus votes, unofficial reports said.

The main opposition United National Party (UNP) had controlled the Council for the past 28 years on the trot.

UPFA takes Matara , K'gala MCs

The ruling United People's Freedom Alliance (UPFA) has won both the Kurunegala and Matara Municipal Councils, according to results released a short while ago.

In Kurunegala, the UPFA secured eight seats while the UNP obtained four seats while in the Matara MC, the UPFA won nine seats, the UNP five and the JVP one.

UPFA set to take Kandy MC

 The United People’s Freedom Alliance (UPFA) has taken an early lead in the Kandy Municipal Council elections for the first time in 58 years, unofficial reports said.

They said that the UPFA was ahead of its main rival the United National Party (UNP) by some 3,000 plus votes.

 The UNP had ruled the Council for the past 58 years on the trot.

ஐப்பசி 08, 2011__

கொழும்பில் சுமுகமான முறையில் வாக்களிப்பு

கொழும்பில் வாக்களிப்பு சுமுகமான முறையில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக வாக்கெடுப்பு நிலையங்களிலுள்ள எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு மாநகர சபைக்கு 53 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கட்சிகளின் சார்பில் 531 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 590 பேரும் என ஆயிரத்து 121 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களைத் தெரிவு செய்வதற்காக 3 இலட்சத்து 93 ஆயிரத்து 85 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்

ஐப்பசி 08, 2011__

நுவரெலியா மாவட்ட வாக்களிப்பு நிலைவரம்

நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நுவரெலியா மாநகர சபைக்கு 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் சார்பில் 65 பேரும் சுயேட்சைக் குழுக்களின் சார்பில் 78 உறுப்பினர்களும் அடங்கலாக 143 பேரும் போட்டியிடுகின்றனர் இந்த சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 18 ஆயிரத்து 472 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஐப்பசி 08, 2011__

வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் 24 வன்முறை சம்பவங்கள்

உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை தேர்தல் வன்முறை சம்பவங்கள் 24 பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வாக்களிப்பு நிலையங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ பால மெதவத்த தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா மாவட்டப் பகுதிகளில் மாத்திரம் 13 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகாமையில் இருந்து துண்டுபிரசுரங்களை வநியோகித்தல் மற்றும் உலர் உணவுப்பொருட்களை வழங்குதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் இடம்பெறும் பகுதிகளில் ஆங்காங்கே சிறியளவிலான சம்பவங்கள் இடம்பெற்று வந்தாலும் சுமூகமான முறையிலேயே வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஐப்பசி 08, 2011

வெல்லம்பிட்டிய பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதல்: ஸ்ரீ.ல.சு.கட்சி அலுவலகம் தீயில்

அங்கொட வெல்லம்பிட்டிய பகுதியில் தற்போது இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதலொன்று இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக சம்பவ இடத்தில் இருக்கும் எமது இணையத்தள அலுவலக செய்தியாளர் சற்று முன் தெரிவித்தார். இதேவேளை, அப்பகுதியில் வீட்டிலுள்ள அலுவலகமொன்று எரிந்து கொண்டிருப்பதாகவும் இதனால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துக் கொள்வதற்கு எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.

ஐப்பசி 08, 2011

மாகாண சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரம்

மாகாண சபைகளுக்கு முழுமை யாக பொலிஸ் அதிகாரம் வழங்கு வது தொடர்பில் பிரச்சினை உள்ள போதும் அவற்றுக்கு ஓரளவுக்கு அதி காரம் வழங்குவது குறித்து அரசாங் கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெ ல்ல தெரிவித்தார். ஏனைய மாகாண சபைகள் பொலிஸ் அதிகாரம் தேவையில்லை என்று கூறுகிற போதும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியிருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 08, 2011

23 உள் ளூராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல்

கொழும்பு மாநகர சபை உட்பட 23 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நீதியும் அமைதியுமான தேர்தலை உறுதி செய்யும் வகையில் காலையிலேயே நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறு அவர் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறார். கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, கல்முனை மாநகர சபைகள் உட்பட 23 உள்ளூராட்சிச் சபைகளுக்கான இத் தேர்தலில் 420 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக 1589622 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மொத்தம் 6488 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளதுடன் 1167 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இன்று காலை 7.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணி வரை இடம்பெறவுள்ளன. முதலாவது தேர்தல் முடிவுகளை இரவு 10 மணியளவில் வெளியிட முடியும் என தேர்தல் செயலகம் தெரிவித்தது. (மேலும்....)

ஐப்பசி 08, 2011

Tamil Canadians in prison for arming rebels renounce violence

Sarachandran Shunmugan talks about his jailed son.

Five years after they were caught buying arms for Sri Lankan rebels, three Canadians have signed an open letter from prison acknowledging they were wrong and renouncing political violence.“We incorrectly believed that violence could achieve the goals that we sought,” they wrote. “We now realize that what we did was not helpful in leading to a positive resolution of the issues that existed in Sri Lanka.”The rejection of armed militancy is a complete reversal for the Toronto men, who were part of the international weapons procurement network that supplied the Tamil Tigers, or LTTE, during Sri Lanka’s long civil war.But since being caught in New York shopping for $1-million worth of surface-to-air missiles and AK-47 assault rifles — a crime that earned them sentences of at least 25 years — the men have apparently had a change of heart. (more...)

ஐப்பசி 08, 2011

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் இசை ஆல்பம்

உலகப் புகழ் பெற்ற பல இசை ஆல்பங்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஆல்பத்தை வெளியிடவிருக்கிறார். சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் ஆல்பத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், மூன்று இந்திப் பாடல்களும், இரண்டு ஆங்கிலப் பாடல்களும் இதில் இடம் பெறப் போகின்றன. இரண்டு பாடல்களை மட்டும் காட்சிகளாக படமாக்குகிறார்கள். அதில் ஒரு பாடலில் ஏ.ஆர்.ரகுமானே தோன்றிப் பாடுகிறார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்த ஆல்பத்தை ரகுமான் முன்பு தயாரித்த வந்தேமாதரம் ஆல்பத்தை வெளியிட்ட பரத்வாலா வெளியிடவிருக்கிறார். பிறப்பால் இந்துவாக இருந்த ஏ.ஆர் ரகுமான் வளர்பால் இஸ்லாமியராகவும் வாழ்வால் சகல மதத்தவராகவும் இருப்பது அவரது சிறப்பு அம்சமாகும்.

ஐப்பசி 08, 2011

"News & Views" High Commission Newsletter.

(more.....)

மூன்று பெண்மணிகளுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு

லைபீரிய ஜனாதிபதி உட்பட மூன்று பெண்மணிகளுக்கு 2011 ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. லைபீரியன் ஜனாதிபதி எலன் ஜொன்சன் சேர்லீப், லைபீரிய சமாதான செயற்பாட்டாளர் லெய்மா ஜிபெளவீ மற்றும் யெமனைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டாளர் தவாக்குல் கர்மன் ஆகிய மூவரின் பெயர்களை நோபல் குழு அறிவித்துள்ளது. பெண்களின் உரிமைகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் முன்நின்றி செயற்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் களுக்கே சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவிருப்பதாக நோபல் குழு அறிவித்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 08, 2011

SCAPEGOATING OF A GENERAL

(Jehan Perera)

There is indignation in Sri Lanka at the fate that has befallen General Shavendra Silva who has been served with summons in the United States  where he is representing his country as a diplomat in the United Nations.  He is faced with both a case against him as a representative of the Sri Lankan government which has allegedly committed war crimes, and also with a civil action for the same reason.  When he led his troops from the west coast of the Northern Province to the east coast General Silva was in the news almost every day and for about two years there was no assurance of his success or whether he would come out of the battle alive.  The previous thirty year record was that the LTTE invariably rolled back the military advances inflicting heavy casualties on the retreating army.  Now like the professional soldier he proved to be on the war front, General Silva has said he will fight the cases against him to clear his own name and that of the country he represents. (more....)

ஐப்பசி 08, 2011

சட்டவிரோத இத்தாலி பயணம், தடுப்பதற்கு இருதரப்பு ஒப்பந்தம்

இத்தாலிக்கு சட்டவிரோதமாக செல்வதை தடுப்பதற்காக இத்தாலி அரசாங்கத்துடன் இருதரப்பு ஒப்பந்தமொன்று மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனையை அமைச்சர் டிலான் பெரேரா சமர்ப்பித்திருந்தார். இதன்படி கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகத்தில் உள்நாட்டு இணைப்பு அலுவலகம் ஒன்று அமைக்கப்படும். இத்தாலி வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்றவாறு இலங்கை ஊழியர்களுக்கு மொழி மற்றும் தொழிற்பயிற்சி வழங்கப்படும். வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு அமைச்சும் இத்தாலி உள்நாட்டு இணைப்பு அலுவலகமும் இணைந்து ஆட்களை தேர்வு செய்யும். இத்தாலியில் காணப்படும் வேலைவாய்ப்பிற்கு ஏற்ப இலங்கைக்கு வருடாந்தம் 1 கோட்டா வழங்கவும் இந்த ஒப்பந்தத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐப்பசி 08, 2011

சிர்த் நகர் வீழும் தறுவாயில்

இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு

லிபியாவின் அதிகார பூர்வமற்ற அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு நாட்டு மக்களிடம் முன்னாள் தலைவர் முகம்மர் கடாபி அழைப்பு விடுத்துள்ளார். முஅம்மன் கடாபியின் பிறந்தகமான சிர்த் நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் வீழும் தறுவாயிலுள்ள நிலையில் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். லிபிய தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து முஅம்மர் கடாபி தலைமறைவாகியுள்ளார். எனினும் அவர் தொடர்ச்சியாக ஒலிநாடா உரைகளை வெளியிட்டு வருகிறார். சிரியாவில் இருந்து செயற்படும் ‘அல் ராய், தொலைக்காட்சி கடாபியின் தகவல்களை வெளியிட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை கடாபி வெளியிட்ட புதிய தகவலில் இடைக்கால அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். (மேலும்....)

ஐப்பசி 08, 2011

கொழும்பு மாநகரை பாதுகாப்புச் செயலாளர் நவீன மயப்படுத்தியது பாராட்டுக்குரிய ஒரு விடயம்

கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் கொழு ம்பு மாநகரை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சியின ரின் பலத்த கண்டனம் எழுந்துள்ளது. என்றாலும் என்னைப் பெறுத்தமட்டில் எல்லோருக்கும் தெளிவாக விளங்கக்கூடிய நல்ல மாற்றம் இடம்பெற்றுள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போது கொழும்பு மாநகரம் மிகவும் சுத்தமாக இருக்கிறது. முன்பு இருந்தது போன்று எந்தவித காரணத் திற்காகவும் குப்பைக் கூளங்கள் போடுவதை காண முடியாதிருக்கிறது. கொழும்பு 7, செல்வந்தர்கள் வாழும் இடம் மட்டு மல்ல, பொரளையில் உள்ள வனாத்தமுல்ல பிரதேச மும் மிகவும் சுத்தமாகவே காணப்படுகிறது. கொழும்பு மாநகரில் வாகன நெருக்கடியும் பெருமளவில் குறைந் திருக்கிறது. கொழும்பு மாவட்டத்திற்குள் கொள்கலன் வாகனங்களை இரவு நேரத்தில் மாத்திரம் செயற்பட விட்டால் இந்த வாகன நெரிசல் மேலும் குறைந்து விடும். (மேலும்....)

ஐப்பசி 08, 2011

பின்லேடன் கொலை

அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மீது சதி செய்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

ஒசாமா பின்லேடனை அமெரிக்கப்படை சுட்டுக்கொல்ல உதவிய பாகிஸ்தான் மருத்துவர் மீது சதியில் ஈடுபட்டதாக பாக். அரசு நியமித்த ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தான் அபோதாபாத்தில் வைத்து அமெரிக்க சீஸ் கடற்படை வீரர்களால் அல் கொய்தா இயக்க தலைவர் பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. இதில் ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்காவுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர் ஒருவரை பாக். பொலிஸார் பின்லேடன் கொல்லப்பட்டு இரண்டு நாட்களுக்குள் கைது செய்தனர். ஷகில் அப்ரிடி என்ற மருத்துவர் அபோதாபாத்தில் இருந்தது பின்லேடனே என்பதை உறுதி செய்ய அவரது டி. என். ஏ. யைப் பெற சி. ஐ. ஏ. வுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதற்கமைய மேற்படி மருத்துவர் பாக். அரசுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் இந்த மருத்துவருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.

ஐப்பசி 08, 2011

கார்ல் மார்க்ஸ்

அறிவியல் சார்ந்த சமதர்ம கொள்கை (மார்க்சியம்) வகுத்தவர் கார்ல் மார்க்ஸ். 1818ல் ஜேர்மனியில் பிறந்தார். வறுமையில் வாழ்ந்த இவர் வறுமையின் வரலாறு என்னும் முதல் நூலை வெளியிட்டு புகழ் பெற்றார். பொருளாதார மேதையான இவர் 1867ல் டாஸ்காபிட்டல் (மூலதனம்) என்னும் நூலை வெளியிட்டார். இதன் அடுத்த 2 பாகங்களை தொகுத்து வந்தபோதே 1883ல் உயிரிழந்தார். இந்நூல்கள் பொதுவுடைமை சித்தாந்த வேதமாக புகழப்படுகிறது. பணி முடியாத மார்க்சின் நூல்களை தொகுத்து பதிப்பித்தவர் அவரது நண்பரான அரசியல் அறிஞர் எங்கெல்ஸ் இவரது பங்களிப்பு மூலதனத்தில் முக்கியானது என்றாலும் மார்க்சின் பங்கு பிரதானமானது.

ஐப்பசி 08, 2011

அல்பட் ஐன்ஸ்டீன்

ஜேர்மனியின் அல்பட் ஐன்ஸ்டீன் (1879 - 1955) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. சார்பியல் கொள்கையை அளித்தவர். அவரது (ரி=ணிவி 2/3) கோட்பாடு விஞ்ஞான உலகை புரட்டிப் போட்டது. அணு ஆற்றல் உள்ளிட்ட பல முக்கிய பயன்பாடுகளுக்கு இக்கொள்கை உதவுகிறது. அவரது பொதுச் சார்புக் கொள்கை தனிப்புகழ் பெற்றது. ஒளிமின் விளைவை விளக்கி கூறியதற்காக நோபல் பரிசு வென்றவர். ஹிட்லரின் எதிர்ப்பால் யூதரான இவர் ஜேர்மனை துறந்து அமெரிக்க பிரஜையானார். மனிதர்களில் அதிகப்படியாக மூளையை உபயோகித்தவர் என்று பாராட்டப்படுபவர் இவரது மூளை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஐப்பசி 07, 2011

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா....?

ஐப்பசி 07, 2011

கனடா ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தல்

இன்று நடைபெற்று முடிந்த ஒன்ராறியோ மாகாண சபைத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றிக் கனியை தனதாக்கிக் கொண்டது. கடந்த இரண்டு தவணைகளாக ஆட்சியில் இருக்கும் லிபரல் கட்சியின் ஆட்சி பற்றி மக்கள் மத்தியில் பாரிய அளவில் குறைபட்டுக் கொள்ளும் விடயங்கள் இருந்திருக்கவில்லை. இது ஒன்றே அந்த ஆட்சி மீண்டும் தொடருவதற்கு மக்கள் அனுமதித்ததற்கு முக்கிய காரணம். கூடவே அடிப்படைச் சம்பளத்தை கணிசமான அளவிற்கு உயர்த்திய பெருமையும் இந்த அரசை சார்ந்திருக்கின்றது. புலிகளின் தீவிர ஆதரவு (புலி உறுப்பினர்களை விட ஒரு படி மேலே உள்ள) தமிழர் இருவர் இத் தேர்தலில் போட்டியிட்டனர். ஒருவர் வீடு வாங்க, விற்க தரகராக வேலை செய்து ‘சமூக சேவை’ செய்பவர். மற்றயவர் பல்கலைக்கழக படிப்பை முடிந்து பலகாலமாகியும் தொடர்ச்சியான ‘உழைப்பில்’ ஈடுபடாமல் வாழ்வை ஓட்டும் மாமனிதர். ஒருவர் பழமைவாத கட்சியிலும், மற்றயவர் புதுமைவாதக் கட்சியிலும் இணைந்(த்)து போட்டியிட்டனர். எப்படியாவது. எதில் இணைந்தாவது, என்ன செய்தாவது வெற்றி பெறுதல், தொடர்ந்து சொகுசு வாழ்வை தனது பரம்பரைக்கு உறுதிப்படுத்துவதே இவர்களின் முக்கிய இலக்கு என்றால் இல்லை ‘தமிழ் தேசியம்’ தான் முக்கியம் என்று எமது 60 வருடகால ‘தமிழ் தலைமை’போல் சொல்லுவார்கள். ஆனால் இவர்கள் இருவரும் தேர்தலில் வெல்லவில்லை என்பது இவர்கள் இருவருக்கும் அ(இ)டி விழுந்த செய்தி. சிற்சபேசனுக்க கிடைத்த அதிஷ்ட வாழ்வு இவர்கள் இருவருக்கும் கிடைக்கவில்லை. அந்தக் கொடுப்பனவு கவுன்சிலருக்கு மட்டுமே தொடருகின்றது.

ஐப்பசி 07, 2011

India’s new $35 Aakash tablet computer designed in Canada

Appealing to the millions who cannot afford an iPad 2, India jumped into the saturated tablet market Wednesday with what has been dubbed 'the world's cheapest tablet computer.' The Aakash tablet, or "sky" in Hindi, will be sold at the subsidized price of $35 to  students, and later in stores for only $60. "The rich have access to the digital world, the poor and ordinary have been excluded," explains Telecoms and Education Minister Kapil Sibal in a Reuters story. "Aakash will end that digital divide." And while Indian students are beaming, the release of the Aakash is just as much a win for Canada's tech industry as it is for the people of India. (more...)

ஐப்பசி 07, 2011

நாடுகடந்த அரசாதிபதிகளுக்கு ஓர் திறந்த மடல்

(சேரமான்)

இந்தக் கட்டுரை பதிவு என்னும் புலிசார் இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்தது. புலிகளுக்குள் நடக்கும் குத்துவெட்டுக்களைப் பகிரங்கப்படுத்தும் நோக்கமாக இக்கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகிறது.  இதுதவிர இந்த சூரியத்தேவன் சந்திரத்தேவன் பேர்வழிகளுடனெல்லாம் எமக்கு உடன்பாடில்லை. (மேலும்....)  

ஐப்பசி 07, 2011

Stephen Harper and necessary commiseration

First the righteousness. Harper outlined Canadian values: ‘freedom, democracy and human rights’.  For good measure, Harper said that those who do not share these values are considered a threat.  Nice words, but when it comes to application, all I know is that a few weeks after Harper said he will have no truck with dictators, he was making deals with a man who carried out a coup.  Makes me wonder what he means by ‘democracy’.Freedom.  Harper’s government is trying to push through a new set of electronic surveillance laws that will make privacy history in Canada.  Jennifer Stoddart, Privacy Commissioner of Canada sums it all up: ‘Read together, the provisions of [these bills] would substantially diminish the privacy rights of Canadians. They do so by enhancing the capacity of the state to conduct surveillance and access private information while reducing the frequency and vigour of judicial scrutiny. In essence, they make it easier for the state to subject more individuals to surveillance and scrutiny.’Human rights.  My fellow Yaka has a comment.  Well, more than one.‘Tell me the basis on which Harper or any Canadian derives claim to discuss human rights with anyone or anything other than their off-pink navels!  Can they tell us how to take the asbestos they exported to us from our roof and out of our lungs, knowing well that it causes the worst and most painful carcinomas?  And how can we resolve his concern for humanity when an original aka aboriginal aka red indian aka first nations aka native person’s average mortality is 27 years?  Yes, now, in 2011.  Where is he speaking from? Windstruck in Prairie Winnipeg? Mounted on a war horse overlooking the Beaufort Sea? Under the Queen of England’s Hanoverian underwear?’

ஐப்பசி 07, 2011

கண்ணோட்டம் வெளிவந்துவிட்டது

எங்கள் நேசமிகு தோழர்களே! பொது மக்களே!! பத்மநாபாஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் மாதாந்தம் வெளிவரும் கண்ணோட்டம் சஞ்சிகை வெளிவந்து விட்டது நீங்கள் வசிக்கும் நாடுகளில் உங்கள் தொடர்புகளில் எங்கள் கட்சி தோழர்களிடம் பெற்றுக்கொள்ளுங்கள் கண்ணோட்டம் சஞ்சிகை இது உங்கள் சஞ்சிகை. (மேலும்....)

 

ஐப்பசி 07, 2011

பாலஸ்தீன கோரிக்கை நியாயமானது

ஐ.நா. பொதுச் சபையில் தனக்கு முழு உறுப் பினர் அந்தஸ்து வழங்கவேண்டும் என்று பாலஸ் தீனம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு இந்தியா, சீனா, ரஷ்யா உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித் துள்ளன. வழக்கம்போல் அமெரிக்கா இஸ்ரேலு டன் சேர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாலஸ்தீனம் பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே மேற்காசியாவில் உள்ள நாடா கும். இதற்கு ஆதாரமாக பல கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள் உள்ளன என்பதை வரலாற்று ஆசி ரியர்களும் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். ஐக் கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் கலாச்சா ரத்திற்கான அமைப்பான யுனெஸ் கோ பாலஸ்தீ னத்திற்கு சொந்த மான பெத்லஹேம், நெபுல்லா ஆகிய வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் 17 நினைவுச் சின்னங்களை இதற்கு ஆதரவாக காண்பிக்கிறது. இந்த சின்னங்களை பாதுகாக் கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளால் தோற்கடிக்கப்பட் டன. எண்ணெய் வளமிக்க மேற்காசியாவில் தனது மேலாதிக்கம் இருக்கவேண்டும் என்ப தற்காக, இஸ்ரேலை உருவாக்கிய அமெரிக்கா, பாலஸ்தீனத்திற்கு எப்போதும் எதிராகவே உள்ளது. (மேலும்....)

ஐப்பசி 07, 2011

கண்ணீர்க்கதை சொல்லும் சென்சஸ்!

வெளியாகியுள்ள 2011 மக் கள்தொகை கணக்கெடுப்பு விவரங் கள், நம் நாடு எதிர்கொண்டு இருக் கும் பெரும் அபாயத்தை உணர்த்துவ தாக இருக்கின்றன. கிராமங்களில் வாழ்வோர் எண்ணிக்கை, 2001 மக் கள்தொகை கணக்கெடுப்பை விட, 2011 கணக்கெடுப்பில், 90.6 மில்லி யன் (1 மில்லியன் = பத்து லட்சம் ) உயர்ந்திருக்கிறது. இதே கால கட்டத் தில், நகரங்களில் வாழ்வோர் எண் ணிக்கையோ, 91 மில்லியனாக உயர்ந்திருக்கிறது. நகர ஜனத்தொகை உயர்வு கிராம ஜனத்தொகை உயர் வைக் காட்டிலும் அதிகரித்திருப்பது மிகுந்த கவலைதரும் அறிகுறி.
(மேலும்....)

ஐப்பசி 07, 2011

எழுகிறது   அமெ. தொழிலாளி வர்க்கம்

உலக முதலாளித்துவத்தின் சூதாட்ட மைய மாக திகழும் அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பகு தியை கைப்பற்றுவோம் என்ற முழக்கத் துடன் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு எண்ணற்ற தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஏழு லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கத் தகவல் தொடர்பு ஊழியர்கள் சங்கம் தனது முழு ஆதரவை அளித்திருக் கிறது. அனைத்து அமெரிக்கர்களிடம் இருக்கும் கோபத்தை இந்தப் போராட்டம் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, வால் ஸ்டிரீட்டால் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கான கோரிக்கைகளை உள்ளடக்கியதாக இந்தப் போராட்டம் அமைந் திருக்கிறது என்று அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 07, 2011

கட்சிகளின் பலத்தை மீண்டும் பரீட்சிக்க நாளை வாக்கெடுப்பு

நாட்டிலுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்களிப்பு நாளை 8 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நீதியாகவும் அமைதியாகவும் நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் தேர்தல் செயலகம் மேற்கொண்டிருக்கிறது. இந்த 23 உள்ளூராட்சி சபைகளில் 17 மாநகர சபைகளும், 5 பிரதேச சபைகளும் ஒரு நகரசபையும் அடங்கியுள்ளன. கொழும்பு, தெஹிவளை - கல்கிஸ்ஸ, சிறி ஜெயவர்தனபுர கோட்டை, மொரட்டுவை, நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கல்முனை, அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, குருநாகல் ஆகிய 17 மாநகர சபைக்கும், கொலன்னாவ நகர சபைக்கும், கொட்டிகாவத்தை - முல்லேரியா, குண்டசாலை, கங்கவட்ட கோரளை, ஹம்பாந்தோட்டை, சூரியவெவ ஆகிய 5 பிரதேச சபைக்கும் தேர்தல் நடைபெறுகின்றது. (மேலும்....)

ஐப்பசி 07, 2011

அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் காலமானார்

அப்பிள் கணனியை கண்டு பிடித்து கணனி உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜொப்ஸ் 56 ஆவது வயதில் காலமானார். ஸ்டீவ் ஜொப்ஸம் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணனியை கலிபோர்னியாவின் புறகர் பகுதியில் ஏப். 01. 1976 இல் உருவாக்கினர். அதன் பின்னர் கணனி உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணனி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபோர்ட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர். (மேலும்....)

ஐப்பசி 07, 2011

யாழ்ப்பாணம் செல்லும் இந்திய வெளியுறவு செயலர் அபிவிருத்தி பணிகளை பார்வையிடுவார்

இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சித் மாத்தாய், வடபகுதியில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்கள், புகையிரதப் பாதை அமைப்புப் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகளை நேரில் சென்று பார்த்துவிட்டு திட்ட முன்னெடுப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராகப் பதவியேற்றிருக்கும் ரஞ்சித் மாத்தாய், கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் நாளைய தினம் முதன் முதலாக இலங் கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இலங்கை வரும் இவர் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (9) வடபகுதிக்கு விஜயம் செய்யவிருப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலய உயரதிகாரியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 07, 2011

பலஸ்தீன அங்கத்துவத்திற்கு ஆதரவாக யுனெஸ்கோவில் பெரும்பான்மை வாக்கு

ஐ .நா. சபையின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் அங்கத்துவத்தை பெறுவதற்கு பலஸ்தீனுக்கு அதன் நிறைவேற்றுக் குழுவின் ஆதரவு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஐ.நா. சபையில் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்துள்ள பலஸ்தீனத்திற்கு முதல் இராஜதந்திர ரீதியிலான வெற்றி கிடைத்துள்ளது. கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவில் பார்வையாளர் அங்கத்துவம் பெற்றுள்ள பலஸ்தீனத்தை முழு அங்கத்துவ நாடாக ஏற்கும் கோரிக்கையை அரபு நாடுகள் முன்வைத்தன. அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு யுனெஸ்கோ நிறைவேற்றுக் குழுவில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 07, 2011

முதலாளித்துவத்தின் முடிவுகாலம் வந்துவிட்டது  அகமதிநிஜாத் கருத்து

மற்ற நாடுகளைக் கொள் ளையடிக்க முயலும் முதலா ளித்துவத்தின் முடிவுகாலம் வந்துவிட்டது என்று ஈரா னின் ஜனாதிபதி முகமது அகமதிநிஜாத் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பேசிய அவர், இன்றைய தினத்தில், ஏராளமான நாடு களைக் கைப்பற்றிக் கொள்ள முதலாளித்துவம் துடிக் கிறது. மேலும் பல நாடு களை ஆக்கிரமிக்கும் முயற் சியில் தீவிரமாக உள்ளது. மற்ற நாடுகளின் சொத் துக்களை முடக்குவதே அதன் நோக்கமாகும். ஒட் டுமொத்தமாக, மற்ற நாடு களின் நிதியைத் துடைத் தெறிவதே தனது இலக் காகக் கொண்டு செயல்படு கிறது. இந்த மோசடி வேலை களையெல்லாம் கவர்ச்சி கரமான முழக்கங்களை முன்வைத்து செய்கிறார்கள். (மேலும்....)

ஐப்பசி 06, 2011

மூவர் தூக்கு தண்டனை

மோதிக் கொள்ளும் வைகோ,சீமான்

மரணத்திலும் கட்சி அரசியல் நடத்தும் தமிழக 'உணர்வாளர்கள்'

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு தண்டணை அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சி யாரும் எதிர்பாராதது. தமிழ் உணர்வாளர்கள் அனைவருமே ஒரே அணியில் கைகோர்த்து போராடிய சில சம்பவங்களில் இதுவும் ஒன்று. கட்சிக்கு அப்பாற்பட்டு மனிதநேய அடிப்படையில் மக்கள் பெருமளவு இணைந்து போராடியதும் தமிழ் நாட்டில் இதுவே முதல்முறை. சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் தவிர, அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கருத்துதான் இருந்தது. ஆனாலும் வைகோவும், சீமானும் இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டினர். இருந்தாலும் போராட்டம் தொடர்பான மேடைகளில் இருவரும் இணைந்து கலந்து கொள்ளாதது இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் இருப்பதை உணர்த்தியது. தற்போது இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக புலம்புகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். (மேலும்....)

ஐப்பசி 06, 2011

நெதர்லாந்தில் புலி இயக்க ஆதரவு குழு பள்ளி நடத்தி வருவது தொடர்பில் பள்ளிகளை மூடிவிட சட்ட நடவடிக்கை!

 

நெதர்லாந்தில் புலி இயக்க ஆதரவு குழு சனிக்கிழமை பள்ளி நடத்தி வருவது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நெதர்லாந்து அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். நெதர்லாந்தில் புலிகள் இயக்க ஆதரவு குழு சனிக்கிழமை நாட்களில் தமிழ் சிறுவர்களுக்கு 21 பள்ளிகளை நடத்தி வருவதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டது. குறித்த பாடசாலைகள் நெதர்லாந்து அரசின் கல்வி திட்டத்திற்கு உட்பட்டதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் தமிழ் மற்றும் கலாச்சாரம் குறித்து தமிழ் மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திலும் கற்பிக்கப்படுவதாக நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ஐவோ ஒப்ஸ்டெல்டென் (Ivo Opstelten) தெரிவித்துள்ளார்.  (மேலும்....)

ஐப்பசி 06, 2011

நியாயமான தீர்வை முன்வைப்பத​ன் மூலமே பேரினவாத கடும்போக்கா​ளர்களைக் கட்டுப்படு​த்த முடியும - பு​ளொட் தலைவர் சித்தார்த்​தன்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ்மக்களின் பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வை முன்வைப்பதன்மூலமே பேரினவாத கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.(மேலும்....)

ஐப்பசி 06, 2011

LTTEer as candidate in Canadian polls

(Disna MUDALIGE)

Tamil expatriate in Canada T S Swarnam expressed his strong displeasure over the nomination of Neethan Shan as the candidate of the New Democratic Party (NDP) in Scarborough Rouge River for the upcoming provincial election in Canada. He observed that Neethan Shan has been an active campaigner for the LTTE for more than a decade, which is a banned terrorist organization in Canada and elsewhere. He identified this move as an attempt by LTTE terrorist proxy elements to penetrate into Canadian politics, and is a threat to the future of the peace loving Canadian Tamil community in Ontario. (more...)

ஐப்பசி 06, 2011

தாஜ்மகால் இடிந்து விழும் அபாயம்

இந்தியாவின் பெருமை மிக்க ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் இன்னும் 5 ஆண்டுகளில் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 358 ஆண்டுகாலம் பழைமை வாய்ந்த இந்த சலவைக்கல் அதிசயத்தை பார்வையிட ஆண்டுதோறும் ஆக்ராவிற்கு 40 இலட்சம் சுற்று லாப்பயணிகள் செல்கின்றனர். தாஜ்மகாலின் நீண்டு நிலைத்த இருப்பிற்கு காரணமாகும் யமுனை நதி நாளுக்கு நாள் சாக்கடையாக மாறிவருவதும், தொழிற் சாலைப் பெருக்கமும், காடு கள் அழிப்பும் தாஜ்மகாலை அழித்து விடும் என்று இவர்கள் எச்சரித்துள்ளனர். தாஜ்மகாலின் அடிக்கட்டுமானம் தளர்ந்து வருவதாகவும் அது மிகவும் தற்போது பலவீமாக இருப்பதாகவும் விழிப்புணர்வு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 06, 2011

கொழும்பு மாநகர சபையையும் வென்று ஆச்சரியம் ஏற்படுத்துவோம்
 

யாராலும் முடியாது என்று கூறப்பட்ட யுத்தத்தை முடித்து பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற்றது போன்று வெல்ல முடியாது என்று கருதப்படும் கொழும்பு மாநகரசபையை வென்று ஐ. ம. சு. மு. ஆச்சரியத்தை ஏற்படுத்துமென அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறினார். தேர்தலில் படுதோல்வி அடைவதை முன்கூட்டியே உணர்ந்துள்ள ஐ. தே. க. தோல்விக்கான காரணத்தை இப்பொழுதே கூறத் தொடங்கியுள்ளது. கொழும்பில் ஐ. தே. க.வாக்கு பலம் குறைந்து வருவதோடு ஐ. ம. சு. முவின் பலம் கூடி வருகிறது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் ஐ. தே. க. 71 வீதமும் ஐ.ம. சு. மு. 28 வீதமும் வாக்குகளைப் பெற்றன. 2010 ஜனாதிபதித் தேர்தலில் ஐ. தே. க. வாக்கு 67 வீதமாகக் குறைந் தது. ஐ. ம. சு. மு. வாக்கு 31 வீதமாக அதிகரித்தது. 2010 பொதுத் தேர்தலில் ஐ. தே. க. வாக்கு 58 வீதமாகக் குறைய ஐ. ம. சு. மு. வாக்கு 32வீதமாக அதிகரித் தது. (மேலும்....)

ஐப்பசி 06, 2011

இலங்கையின் எரிபொருள் துறையில் முதலீடு செய்ய பிரான்ஸ் விருப்பம்

2012 இல் நடை பெறவுள்ள எக்ஸ்போ 2012 கண்காட்சியில் பிரான்சின் உயர்மட்ட கைத்தொழில் மற்றும் வியாபாரத்துறை சார்ந்தவர்களிற்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்டின் ரோபி சோன்ஸ் இலங்கை யிலுள்ள பிரான்ஸ் கவுன்சிலரின் ஜீன் லூய் பொலி, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரிற்கிடையே திங்களன்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கையின் புதிய அபிவிருத்தி யுகத்தைப்பற்றி பிரான்ஸ் அறிந்து வைத்துள்ளதாகவும் பிரான்சினால் இலங்கையின் நிர்மாண மற்றும் எரிபொருள் துறைகளிலும் முதலீடுகளை செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் அந்நாட்டு தூதுவர் அமைச்சரிடம் கூறினார். பிரான்ஸ் இலங்கையின் முக்கிய வியாபார கொடுக்கல் வாங்குனராகும். 2010 ஆம் ஆண்டு இரு நாடுகளிற்கும் இடையிலான வியாபார கொடுக்கல் வாங்கல் டொலர் மில்லியன் 310 ஆக பதியப்பட்டுள்ளது. இதில் 8.06மி டொலர் இலங்கைக்கு சாதகமான மீதியாகும். கடந்த ஆறு வருடங்களாக (2005, 2008 தவிர) இலங்கைக்கு சாதகமான மீதியே பதியப்பட்டுள்ளது.

ஐப்பசி 06, 2011

Sri Lanka should apply Universal Jurisdiction on matters pertaining to Terrorism – Prof. Rohan Gunaratne

(By K.T.Rajasingham )

Professor Rohan Gunaratne The US Government applies Universal Jurisdiction on matters pertaining to terrorism. Sri Lanka too should follow this example emphasized Professor Rohan Gunaratne. He said, “The terrorist campaign in Sri Lanka by the Tamil Tigers, was largely funded by LTTE led diaspora organizations. It is essential to bring those LTTE leaders who have provided and it is important for the Sri Lanka Government to identify and file cases against LTTE activists who are still seeking to poison the Tamil minds.” An international terrorism expert, Professor Rohgan Gunaratna speaking to Asian Tribune , said those activists include V. Rudrakumaran , Father S.J. Emanuel, Nediyavan, and Vinayagamoorthy. (more.....)

ஐப்பசி 06, 2011

அமெரிக்காவில் நிதி சீர்திருத்த கோரிக்கை

‘வோல் தெரு ஆக்கிரமிப்பு’ போராட்டம் மூன்றாவது வாரமாக நீடிப்பு

அமெரிக்காவில் வோல் தெரு ஆக்கிரமிப்பு இயக்கத்தின் பேராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயோர்க் மட்டுமல்லாமல், தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம், சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  நியூயோர்க் நகரில் உள்ள பரூக்ளின் பாலத்தில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 700 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆர்ப்பாட்டத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளது. நியூயோர்க், போஸ்டன், லொஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. லொஸ் ஏஞ்சல்சின் சிட்டி ஹொல் கட்டடம் முன்பு நேற்று மிகப் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. (மேலும்....)

ஐப்பசி 06, 2011

முன்னாள் சோவியத் நாடுகளை ஒன்றிணைக்க புடின் முயற்சி

ஐரோப்பிய யூனியனின் அனுபவத்தின் அடிப்படையில், முன்னாள் சோவியத் நாடுகள் ஒன்றிணைந்த யூரேஷியன் யூனியன் உருவாக வேண்டும் என. ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் அடுத்தாண்டு மார்ச்சில், ஜனாதிபதி அதேர்தல் நடக்க உள்ளது. அதில் ஆளும் கட்சி சார்பில் புடின் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கத் தீர்மானித்துள்ளார். இந்நிலையில் அவரது வெளியுறவுக் கொள்கைகளை வெளிக் காட்டும் வகையில் மொஸ்கோவில் இருந்து வெளியாகும் இஜ்வெஸ்டியா தினசரி பத்திரிகையில் அவர் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளார். இஜ்வெஸ்டியா பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ள அக்கட்டுரையில் புடின் கூறியிருப்பதாவது: முன்னாள் சோவியத் நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும்வகையிலும், ஒன்றிணையும் வகையிலும் நாம் யூரேஷியன் யூனியன் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும். ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிராந்திய கூட்டமைப்புகளின் அனுபவத்தின் அடிப்படையில், இந்தப் புதிய ஒன்றியம் கட்டமைக்கப்பட வேண்டும். இந்த ஒன்றிய உருவாக்கத்தின் அடிப்படையில் மீண்டும் ஒரு சோவியத் யூனியனை உருவாக்கும் எண்ணம் எதுவும் இல்லை. இந்த கண்டத்தின் நிலவியல் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சூழலை உருவாக்குவதுதான், இந்த திட்டத்தின் உண்மையான நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

ஐப்பசி 06, 2011

ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த

சிரியாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ரஷ்யா, சீனா ‘வீட்டோ’ மூலம் நிராகரிப்பு

சிரிய அரசுக்கு எதிராக ஐ. நா. பாதுகாப்பு சபையில் ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த கண்டன தீர்மானத்தை சீனா, ரஷ்யா தமது ‘வீட்டோ’ அதிகாரத்தின் மூலம் நிராகரித்தன. சிரியாவின் அரசுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்ந்துவருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வன்முறைகளால் 2700 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. அறிவித்துள்ளது. இந்நிலையில் சிரிய அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐ. நா. பாதுகாப்புச் சபையில் உள்ள பிரான்ஸ் ஏனைய ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி மற்றும் போர்த்துக்கல்லுடன் இணைந்து கண்டன தீர்மானம் ஒன்றை முன்வைத்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதில் 15 நாடுகளில் பெரும்பான்மையான 9 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, தென்னாபிரிக்கா, பிரேஸில், லெபனான் ஆகிய நான்கு நாடுகளும் வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்து கொண்டன. இந்நிலையில் இந்த தீர்மானத்துக்கு எதிராக ஐ. நா. சபையின் நிரந்தர நாடுகளான சீனா, ரஷ்யா ‘வீட்டோ’ எனும் விசேட மறுப்பாணையை பயன்படுத்தின. இதன்மூலம் சிரியா மீதான கண்டன தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 06, 2011

இலக்கியத்திற்கான நோபல்

இந்தியர்கள் பெயர் பரிசீலனை

ஆண்டு தோறும் இலக்கியத்திற்கு என வழங்கப்படும் நோபல் பரிசு போட்டியில் இந்தாண்டுக்கான பெயர் பட்டியலில் இந்தியர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. கேரளாவை சேர்ந்த பிரபல மலையான பாடலாசிரியர் சச்சிதானந்தன் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் விஜய்தன் தெத்தா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இந்தியர்களுக்கு நோபல் பரிசு பெறும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சூரில் பிறந்த சச்சிதானந்தன் தற்போது தலைநகர் புதுடில்லியில் வசித்து வருகிறார். 1996-2006ம் ஆண்டு கால கட்டங்களில் சாகித்திய அகடமியின் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 05, 2011

இந்திய நகரங்களில் தீவிரமடையும் சுவாசப் பிரச்சனை

(இந்தக்கட்டுரையில் உள்ள விடயங்கள் இலங்கையிற்கும் அப்படியே பொருந்துகின்றது. அதுவும் குறிப்பாக போருக்கு பின்னரான தமிழ் பிரதேசங்கள் எங்கும் வெளிநாட்டு டாலர்களில் தங்கியருக்கம் மோகம் இந்த ‘புகை’ வாகனம் இன்றி நகருவதில்லை என்ற கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது. இரண்டு சக்கர வண்டிகள், கால் நடையினால் ஆன பயணங்கள் எல்லாம் 'கௌரவக் குறைவான' பயணங்கள் சிந்தனைப் போக்கு சமூகத்தில் வளர்ந்திருக்கின்றது. இது மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்துவதற்கு காரணிகளாக அமைகின்றன. இளம் சமூகம் இந்த அபாயகரமான நிலமைகளை புரிந்து கொள்வார்களா...? கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளின் துவிச்சக்கர வண்டி பயணங்களை ஊக'கிவிக்கும் முகமாக பெருநகரங்களில் துவிச்சங்கரப் பயணங்களுக்கு தனித்தடங்கள் அமைக்கப்பட்டு வருவதை இவர்கள் அறிவார்களா...? - சாகரன்) (மேலும்....)

ஐப்பசி 05, 2011

புலிசார் குழுக்களிடையே மோதல்கள் ஆரம்பம் ?

அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் என்ற இரு வேறான அமைப்புக்களின் கட்டுப்பாடுகளுள் இயங்கும் முன்னை நாள் புலி ஆதரவு அமைப்புக்களிடையேயான முறுகல்கள் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரியவருகிறது. சிலதினங்களுக்கு முன்னர் கொவன்றி பகுதியில் நடைபெற்ற ஒன்றுகூடலில் இதன் நேரடியான வெளிப்பாடுகள் தென்பட்டதாகத் தெரியவருகிறது. இதன் பின்னணியில் புலிகள் அமைப்பின் பண முதலீட்டு விவகாரங்கள் காணப்படுவதாகவும் தெரியவருகிறது. வருடாவருடம் நடைபெறும் மாவீரர் தின நிகழ்வுகள் இரண்டு பகுதிகளும் தனித் தனியாக நடத்தவும் தீர்மானித்துள்ளன. கே.பி மற்றும் இலங்கை உளவுத் துறைகளின் பங்கும் இதன் பின்னணியில் காணப்படுவதாக பரவலாகக் கருத்தும் பரப்பட்டு வருகின்றது. எது எவ்வாறாயினும் புலம் பெயர் தமிழ்ப் பேசும் மக்களை விரக்திக்குள்ளாக்கும் அரசியல் வியாபாரிகளின் இந்த மோதல்கள் எதிர்பார்க்கப்பட்டவையே. இவ்வேளை மக்களை சரியான திசைவழியை நோக்கி நகர்த்துவது தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையுள்ள அனைவரதும் கடமையாகும்.

ஐப்பசி 05, 2011

Rathika Sitsabaiesan

your statement on Sri Lanka in parliament on 29 Sept. 2011

This number includes that six-year old Tamil kid who was wearing a T-shirt with Prabhakaran silkscreened on the front and carrying a red Tamil Tiger flag behind a barrier on Wellington Street opposite the parliament buildings in Ottawa in late April 2009  who was among the 20,000 Tamil demonstrators wanting Canada to save your Tamil Tiger leaders from being annihilated by the Sri Lankan soldiers.  When a TV reporter approached him and asked him on camera, “Why are you demonstrating?”  Pat came the answer, “They are killing my people”.  “Who are they?” the reporter asked, “I don’t know” was his reply.  When the TV reporter asked him, “Who is he?” pointing out to the face of Prabhakaran on the chest of his T-shirt.  “I don’t know” was his reply.  Rathika so much for the brain washing of innocent Tamil kids by your Tamil adults and you happen to be a product of that generation after you were brought to Canada when you were five-years old by your parents to give you a better life, not that they were discriminated in Sri Lanka.  As they would tell you, their best friends in Sri Lanka were the Sinhalese, from the majority community. (more.....)

ஐப்பசி 05, 2011

‘நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதால் பிரபஞ்சம் வேகமாக விரிவடைகிறது’  3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞா னிகள் 3 பேர் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசினைப் பெறுகிறார்கள். நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதால் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருகிறது என்ற ஆய்விற் காக இம்மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறும் சூப் பர் நோவா மற்றும் நட்சத் திரங்களை ஆய்வு செய்வ தன் மூலம் பிரபஞ்சம் வேக மாக விரிவடைந்து வருகி றது இம்மூவரின் ஆய்வுகள் நிரூபணம் செய்துள்ளன. தொலைதூரத்திலுள்ள 50 சூப்பர்நோவாக்கள் வெடித்துச் சிதறுவதால் வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எதிர்பார்த்ததை விட மிக மென்மையானதாக பலவீன மாக உள்ளது என்று ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் சொசைட்டி தெரிவித்தது. 1400 கோடி வருடங் களுக்கு முன்னர் ஏற்பட்ட பெருவெடிப்பின் காரண மாக பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது. எனினும், இக் கண்டுபிடிப்பு மிகவும் வியப் பை அளிக்கிறது. இதே வேகத்தில் பிரபஞ்சம் விரிவ டைந்து செல்லுமானால் பிரபஞ்சம் முழுவதும் பனிக்கட்டியால் மூடப்ப டும் என்றும் கருத்து தெரி வித்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 05, 2011

எரிவாயு மேலதிகமாக கிடைப்பின் ஏற்றுமதி மூலம் பொருளாதாரத்தை முன்னேற்ற பெரும் வாய்ப்பு

மன்னார் படுகையில் கண்டுபிடிக் கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு எமது பயன்பாட்டுக்கு மேலதிகமாகக் காணப்படுமாயின் அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நாட்டின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மன்னார் படுகையில் கண்டு பிடிக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இரு வருட காலத்துக்குள் கடல்மட் டத்துக்கு வெளியில் கொண்டுவர முடியுமெனவும், கெய்ன் நிறுவ னத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் இதற்கான நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுமெனவும் அவர் கூறினார். மன்னார் படுகையில் எரிபொருள் வளம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள 8 பிரிவுகளில் ஒரு பிரிவு கெய்ன் லங்கா நிறுவனத்துக்கு மற்றும் இரு பிரிவுகள் இந்திய மற்றும் சீன நாடுகளுக்கும் எண்ணெய் அகழ்வுக்காக வழங்கப்பட்டுள்ளது எனக் கூறிய அமைச்சர், விரைவில் ஏனைய ஐந்து பிரிவுகளும் கேள்வி மனுக்கோரி அகழ்வுக்காக வழங்கப்படும் என்றும் கூறினார்.

ஐப்பசி 05, 2011

END LTTE, TAMIL, FOREIGN BASHING – START TALKING MAID SLAVERY, MASSIVE CORRUPTION!

 One is sick and tired of the incessant barbs and nit-picking over major and minor issues pertaining to the LTTE Tigers, Tamil Diaspora, Channel 4, foreign accusers of alleged war crimes, and other related issues, even non-issues. Such a tendentious campaign by some against anything even remotely connected to the Tamil ethnic issues, often laced with plain drivel, borders on mental masturbation. It is time to end this constant drum-beat. It is high time that your readers be spared of this monotonous “broken record”, of pouring bile, non-stop, on ethnic issues and related international issues. (more...)

ஐப்பசி 05, 2011

மக்கள் எழுச்சியால் தனிமைப்படுகிறது இஸ்ரேல்   அமெரிக்க ராணுவ அமைச்சர் கருத்து

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மக்கள் எழுச் சிப் போராட்டங்களால் இஸ்ரேல் தனிமைப்பட்டு வரு கிறது என்று அமெரிக்காவின் ராணுவ அமைச்சர் லியோன் பநெட்டா கருத்து தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட் டியில்தான் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், மேற்கு ஆசியாவில் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தன்னை மேலும் தனிமைப்படுத்திக் கொள்வது இஸ்ரேலுக்கு நல்லதல்ல. ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. எகிப்து மற்றும் துருக்கி போன்ற நாடுகளோடு நட்புறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய உறவுகள் பலவீனமடைந்தால் எவ்வளவுதான் ராணுவத்தை ஆயுத மயமாக்கினாலும் பலனிருக்காது. இப்படியொரு கேள் வியை எழுப்ப வேண்டியுள்ளது. பிற நாடுகளுடன் உறவு வைத்துக் கொள்ளாமல் தனிமைப்படும் வேளையில், ராணுவத்தை பலப்படுத்தினால் போதுமா என்று இஸ் ரேல் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும். வலுவான நட்பு மற்றும் ராணுவ பலம்தான் உண் மையான பாதுகாப்பு. மக்கள் எழுச்சியால் அண்டை நாடு கள் பலம் அடைந்து வருகின்றன என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். தற் போது பாலஸ்தீனத்திற்குள் அத்தியாவசியப் பொருட்கள் செல்வது சாத்தியமாகியுள்ளது. சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் துருக்கியைச் சேர்ந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இதனால் துருக்கியின் அதிருப்தியையும் இஸ்ரேல் சந்தித்துள்ளது.

ஐப்பசி 05, 2011

செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விடவும் 100 மடங்கு தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு அதிகம் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், ஐரோப்பிய விண்வெளி நிலையம் மற்றும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் குழுவினர் “சிவப்பு கிரகம்” என அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த கிரகத்தின் காற்று மண்டலத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். அவை ஓரளவு தான் உள்ளது என விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். ஆனால் தற்போது செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் அவை ஆவி நிலையில் பறந்து விரிந்து கிடக்கிறது. துகள்கள் மற்றும் தூசிகள் போன்று காற்றில் மிதக்கின்றன. அவை காற்று மண்டலத்தில் ஆங்காங்கே மேக கூட்டம் போன்று இருக்கின்றன. எனவே செவ்வாய் கிரகத்தில் எங்கும் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐப்பசி 05, 2011

ஒளியின் வேகத்திலும் விஞ்சிப் பயணம் செய்யும் நுண்நொதுமிகள்

பேரண்டத்தில் வேகமாகப் பயணம் செய்யக்கூடியது எது எனும் கேள்விக்கு இதுவரை ‘ஒளி’ என்பதே விடையாக இருந்து வந்தது. ஆனால், அது இப்போது பொய்க்கும் என்ற தோற்றப்பாடு அண்மைய ஆராய்வுகளினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒளியின் வேகம் 299,792, 458 மீற்றர்/செக்கன்கள்  (m/s) ஆகும். ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஒளியின் வேகத்தை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒளியே இப்பிரபஞ்சத்தில் மிகவும் வேகமான பொருளாகும். ஆனால் நியூத்திரன்கள் 299, 798, 454 மீற்றர்/செக்கன்கள்  (m/s)  வேகத்தில் பயணித்தாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். (மேலும்....)

ஐப்பசி 04, 2011

இயற்கையும், மனிதன் இன்புற்றிருக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்று தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரமிது.

தி. ஸ்ரீதரன் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

பேராசிரியர்  இரா. சிவசந்திரன் டாக்டர் நரேந்திரன் போன்றவர்களின் சில கட்டுரைகள் வடக்கின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் இன்றைய வாழ்வியல் மனோபாவங்கள், அபிவிருத்தி வளங்களை பாதுகாப்பு பற்றி சமூக, பொருளாதார அக்கறையுடனான கட்டுரைகள் தேனீயில் அவ்வப்போது இடம்பெற்றிருக்கின்றன. மனிதர்களுக்கிடையிலான உறவுகள், உழைப்பின் மீது நம்பிக்கையீனம் ,சமூகச் சீர்கேடுகள் பற்றியும் சிறப்பான வாழ்க்கையை அமைப்பதற்கான வாய்ப்புக்களை யாழ்ப்பாணம் கொண்டிருப்பது பற்றியும் நரேந்திரன்  எழுதிய அருமையான கட்டுரை ஒன்றை வாசிக்கமுடிந்தது. திரு சிவசந்திரன் வீதி அபிவிருத்தியும், சட்டம் ஒழுங்கு பேணப்படாமையும் விரயமும் தாறுமாறான மின்சாரக்கட்டமைப்பும் அடிக்கடி செயலிழந்து போவது வரலாற்றுச் சின்னங்கள் அழிந்துபோவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தின் நில, நீர் வளம் பற்றிய கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி வந்துள்ளார். இவை எனக்கு மிகவும் பிடித்தமான பத்திகளாக இருந்திருக்கின்றன. (மேலும்....)

ஐப்பசி 04, 2011

ஜனாதிபதி, அமைச்சர் டக்ளஸ் அரசியல் தீர்வு குறித்து நீண்ட நேரம் பேச்சு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் சந்தித்துப் பேசியுள்ளனர். கடந்த 30ம் திகதி மாலை அமைச்சரது வாசஸ்தலத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கலத்துரையாடலின் போது நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப் பட்டது. விரைவானதும் கெளரவமானதுமான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாதிருக்கும் மக்களை விரைவில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பிலும் புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சி இருக்கும் இளைஞர் யுவதிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப் பட்டது. அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்களை கூடிய விரைவாக விசாரணைகள் செய்வது அவர்களை விடுதலை செய்வது குறித்தும் அவதானஞ் செலுத்தப்பட்டது. மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இங்கு கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐப்பசி 04, 2011

மோதல்கள் – விரக்தியடைவதற்கில்லை புதிதாய் எழுச்சி கொள்ளவே

(அஜித்)

எனக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து பேரினவாத இராணுவத்தின் துப்பாகிகளுக்கோ, அரசபடைகளின் அடக்கு முறைக்கோ பயத்தில் தான் ஒவ்வொரு காலையும் விடிந்திருக்கிறது. பேரின வாதத்தின் கோரப்பசிக்கு பலியாகும் ஒவ்வோர் மனிதனையும் பார்த்தவாறே அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக உலகின் பலம் பொருந்திய வல்லரசுகளெல்லாம் தமது அதிகாரப் பசியை நிறைவேற்றிக்கொண்டன. 80 களின் ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் பேரினவாதம் எங்காவது சரிந்து விழுந்திருக்கிறதா என்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள். நிச்சயமாக இல்லை. (மேலும்....)

ஐப்பசி 04, 2011

LTTE இப்பொழுது இல்லை. நாங்கள் உண்மை நிலமையை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.

தற்போது நியூயோர்க்கில் உள்ள தடுப்பு நிலையத்திலே பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் 25 வருட சிறைவாசத் தண்டனையில் ஜந்தாவது வருடத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்.  நான் இத்தால் இக் கடிதத்தை எனது சக இளைஞர், சகோதர், சகோதரி அங்கத்தவர்களுக்கு எழுதிக்  கொள்வதாவது அதே பாதையில் நடந்து சென்ற காரணத்தால் காலக் கட்டத்தில், என்னை நியூயோர்க் சிறைவாசத்தை அனுபவிக்க வைத்தது. நான் இன்று வேதனைப்படுகின்றேன். எனது குடும்பத்தவர்கள் வேதனைப்படுகின்றார்கள். துன்பம் ஒருவரை பாதிக்கும் பொழுது அது அவரை சுற்றி இருப்பவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. நான் வேதனைப் படுவதனால் என்னைச் சார்ந்தோரும், வேதனைப்படுகின்றார்கள். நான் உடல்ரீதியாகவும்,உளரீதியாகவும் நிதி நிலமைகாரணமாகவும் மருத்துவரீதியாகவும் நல்ஒழுக்ரீதியாகவும் வருந்துகின்றேன் நான் அனுபவிக்கின்ற கஸ்டங்களை பலபக்கங்களில் எழுதி விபரிக்கலாம். வாசிப்பவர்களுக்கு கூடிய சுமையைக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் எனது கடந்த கால செயல்பாட்டின் விளைவாலே நான் இவற்றை அனுபவிக்கின்றேன். (மேலும்....)

ஐப்பசி 04, 2011

இந்திய பிரஜை மட்டக்களப்பில் கைது

இந்தியப் பிரஜை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப் பட்டுள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய மேற்படி இளைஞர் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து புடைவை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த சுமார் ஒரு இலட்ச ரூபா பெறுமதியான புடைவை வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஐப்பசி 04, 2011 ___

பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்ட குழு மட்டு.வில் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களிலும் மிக நீண்டகாலமாக பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாரிய கொள்ளைக்கோஷ்டியொன்றை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்ததாக மாவட்ட தலைமையக பொலிஸ் அத்தியட்சககர் சஞ்சித் வனராஜா தெரிவித்தார். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர கரவெட்டவின் பணிப்புரையின் பேரில் தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் வனராஜாவின் வழிகாட்டலில் தமைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.சாந்தகுமார் தலைமையில் இச்சுற்றிவளைப்பு நடாத்தப்பட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் கம்பியூட்டர்கள், ஒலிபெருக்கி சாதனங்கள் தங்க நகைகள் உட்பட பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஐப்பசி 04, 2011

மலையக மக்களுக்கென கண்டியில் உள்ளூர் விமான நிலையம்

கண்டி மாநகரை இருபது ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய நகராக அபிவிருத்தி செய்யும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப் பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினமிரவு தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் மூன்று பில்லியன் ரூபா முதலீடுகளுடன் முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப் பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். இதேவேளை மத்திய மலையக மக்களுக்கென கண்டியில் உள்ளூர் விமான நிலையம் (Domestic Airport) ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறிய அவர், இதற்காக 100 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கண்டி என்பது இந்நாட்டின் வரலாற்று புகழ் மிக்க நகரம். இலங்கையில் வாழும் பெளத்த மக்களின் தலைநகரம், இங்கு எல்லா இன மக்களும் வாழுகின் றார்கள். ஆயினும் இம்மக்களின் அடிப் படைத் தேவைகள் கூட இற்றைவரை நிறைவேற்றப்படாதுள்ளன. ஆனால் நாம் கண்டி மாநகரை இரு பது பில்லியன் ரூபா செலவில் நவீன மாநகரமாக மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் சுமார் முப்பது வருட காலம் நீடித்த பயங்கரவாதப் பிரச்சினையைக் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டினோம். இன்று முழு நாட்டிலும் அச்சம், பீதியின்றி நடமாட முடிகின்றது.

ஐப்பசி 04, 2011

வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

வியட்நாம் ஜனாதிபதி டோன்டேன் சேங் இம்மாதம் 13ஆம் திகதி முதல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளாக வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை உயர் மட்ட அரச அதிகாரிகளுக்கும் வியட்நாம் வர்த்தகர் குழுவொன்றுக்குமிடையே இருதரப்பு ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஏற்கனவே இடம்பெற்ற சர்வதேச பௌத்த மாநாட்டின் போது பிரதமர் டி.எம். ஜயரத்ன இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும்படி வியட்நாம் பிரஜைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 04, 2011

தேர்தலுக்கு இன்னும் 4 தினங்கள்

இருபத்து மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நான்கு தினங்களேயுள்ள நிலையில் அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊர்வலம் நடத்துதல், துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், வானொலி, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தல், வேட்பாளர்கள் வீடு வீடாகச் செல்லுதல் உள்ளிட்ட அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும். அத்துடன் கையடக்கத் தொலைபேசியினூடாக குறுந்தகவல்கள் மூலம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதனையும் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைகளிலும் 17 மாநகர சபையிலும் 05 பிரதேச சபையிலும் ஒரு நகர சபையிலும் எதிர்வரும் 08 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. 15 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இம்முறை தேர்தலில் வாக்களிக்க பதி வாகியுள்ளனர்.

ஐப்பசி 04, 2011

மோடியின் முகமூடி கழன்றது

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு பொருத்தமான நபர் என்று பட்டையைக் கட்டுகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். அம்பானி, டாடா போன்ற இந்திய பெரும் முதலாளிகளும் மோடிக்கு லாலி பாடுகிறார்கள். குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக் களை கொன்று குவிக்க காரணமாக இருந்த மோடி, திடீரென்று மனிதப் புனிதராக வேட மணிந்து உண்ணாவிரதம் இருக்கிறார். பக்கம் பக்கமாக தரப்பட்ட விளம்பரங்களுக்கு விசுவாச மாக ஊடகங்கள் மோடியை உயரத்தில் கொண்டு போய் நிறுத்துகின்றன. மக்கள் ஒற்றுமைக்காக தன்னுடைய இன்னு யிரையே தியாகம் செய்த தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் போய் நிற்கிறார் மோடி. காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் குருகுலத்தில் தான் இவர் பாலபாடம் படித்தவர். மோடி திருந்திவிட்டார், மனம் வருந்திவிட் டார் என்று நற்சான்றிதழ் தர சிலர் முயல்கையில், செயற்கையாய் அணிந்த சாந்தசொரூபி முகமூடி யை கலைந்து இயல்பான கொலைவெறி முகத்தை காட்டியிருக்கிறார் மோடி. (மேலும்....)

ஐப்பசி 04, 2011

பலஸ்தீனத்துக்கான அமெ. நிதி உதவி நிறுத்தம்

பலஸ்தீனத்துக்கான 200 மில்லியன் டொலர் நிதியுதவியை அமெரிக்க நாடாளுமன்றம் நிறுத்திவைத்தது. ஐ.நா. வில் முழுமையான உறுப்பு நாடாக ஆவதற்கு பலஸ்தீனம் முயன்றுவரும் நிலையில் நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. பலஸ்தீனம் எடுத்துவரும் முயற்சிகள் தொடர்பாக ஒரு முடிவு ஏற்படும் வரை நிதியுதவி நிறுத்திவைக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகக் குழு செனட்டின் வெளியுறவு குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். தற்போது ஐ.நா.வில் உறுப்பினராவதற்கு பலஸ்தீனம் எடுத்துவரும் முயற்சியால் அமெரிக்கா கோபம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாடு கடந்த தமிழீழக்காரர்களின் மீட்போன் அமெரிக்காவின்,  பாலதீனத்தின் தனிநாட்டுத் தீர்மானத்திற்கு கிடைத்த பரிசை இன்று சர்வதேசமே பார்த்துக்கொண்டிருக்கின்றது.

ஐப்பசி 04, 2011

“முதலாளித்துவத்தைக் கைப்பற்றுவோம்.!! அமெரிக்காவில் மக்கள் போர் முழக்கம்

“நாங்கள் தொழிற்சங்கங்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் மூத்த குடிமக்கள் குடும்பங்கள் வேலையற்றோர் நியாயமான வேலை கிடைக்காதோர்..” இவ்வாறு விவரிக்கிறது “வால்ஸ் டிரீட்டைக் கைப்பற்றுவோம்” இயக்கத்தின் இணையதளம். கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவின் பங்குச்சந்தை அமைந்திருக்கும் வால் ஸ்டிரீட்டை நோக்கி பேரணிகள் நடந்து வருகின்றன. தற்போது பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற இடங்களுக்கும் இது பரவியுள்ளது. இந்தப் போராட்டங்கள் துவங்கியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி அரசுகள் உருவானதும், அரபு நாடுகளில் ஜனநாயகம் கோரி எழுந்துள்ள மக்கள் எழுச்சிகளுமே பிரதான காரணங்களாகக் கூறப்படுகிறது. அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பாக நடந்து வரும் இப்போராட்டத்தை மறைக்கும் மேற்கத்திய ஊடகங்களின் முயற்சி தொடர் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. செய்திகள் பரவத் துவங்கிவிட்டன. (மேலும்....)

ஐப்பசி 04, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அனில் அம்பானிக்கு தொடர்பா?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 அதி காரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அனில் அம்பானிக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த தொடர்பும் இல்லை என சி.பி.ஐ. கூறியுள்ளதாக தகவல் வெளியானது. ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன்பு 29ம் திகதி அன்று சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில், "2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பணப் பரிமாற்றம் மற்றும் பல்வேறு நிறுவனங் களில் தொடர்பு என்ற வகையில் அனில் அம்பானிக்கு எதிராக வாய்மொழி ஆதா ரமோ அல்லது ஆவணங்களோ விசாரணை யில் சிக்கவில்லை. இன்றை திகதி வரை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனில் அம்பானிக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை' என தெரிவித்துள்ளது. எனினும் அனில் அம்பானிக்கு நற்சான்று அளிக்கவில்லை என சி.பி.ஐ. நேற்று விளக் கம் அளித்தது. சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் கூறுகையில்: "2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை தொடர்கிறது. ஊழலில் தொடர்பு இல்லை என அவருக்கு எந்தவித நற்சான்றையும் சி.பி.ஐ. அளிக்கவில்லை" என்றார்.

ஐப்பசி 04, 2011

3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு

புற்று நோய் மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறையில் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த 3 விஞ்ஞானிகளுக்கு திங்கட்கிழமையன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் பெட்லர், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜூல்ஸ் ஹாஃப்மேன் மற் றும் கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டீன்மேன் ஆகி யோரை நோபல் விருதுக் குழு தேர்வு செய்துள்ளதாக ஸ்டாக்ஹோம் கரோலின்ஸ்கா நிறுவனம் தெரிவித்தது. இம்மூவரும் பரிசுத் தொகை ரூ.15லட்சம் அமெரிக்க டாலரைப் பகிர்ந்து கொள்வார்கள்.(மேலும்....)

ஐப்பசி 04, 2011

பெற்றோர் வாழும் இடம் முதியோர் இல்லமெனில் பிள்ளைகளையே சேரும் அதற்கான பாவம்!

உலகளாவிய ரீதியில் சனத்தொகை துரிதமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவத்துறை முன்னேற்றம் காரணமாக மனிதரின் சராசரி ஆயுட் காலம் கூடிக் கொண்டு போவதே இதற்கு முக்கிய காரணமாகும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பது வருடங்களாகவிருந்த சராசரி ஆயுட் காலம் தற்போது அறுபதாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் இரண்டு சகாப்த காலத்தில் ஆயுட் காலம் 70, 80 ஆக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் முதியோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் சனத்தொகை அதிகரிக்கும் போது வாழ்வாதார, பொருளாதார, உணவு, அறிவு, சுகாதாரம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல்வேறு புதிய வகை நோய்களும், சமூக மாற்றமும் ஏற்படுகின்றன. இந்த மாதம் (ஒக்டோபர் 2011) ஏழு பில்லியனாக உயர்ந்துள்ள உலக சனத் தொகை 2025 ஆம் ஆண்டு எட்டு பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்.....)

ஐப்பசி 04, 2011

தரம் தாழ்கிறதா ஐஐடி நிறுவன கல்வி?

மதிப்பிற்குரிய இந்திய தொழில் நுட்பக் கழகங்களில் (ஐஐடி) சேர விரும்பும் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறையைப் பரந்த அளவில் மாற்ற வேண்டியது அவசியம் என்று இன்போசிஸ் என்.ஆர். நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் முன்னாள் ஐஐடி மாணவர்களின் கருத்தரங்கில் பேசிய அவர், தனிப்பயிற்சி வகுப்பு களில் பல வருடங்கள் படித்து வரு கின்ற காரணத்தால் இந்திய தொழில் நுட்பக் கழகங்களில் (ஐஐடி) பயின்று வரும் மாணவர்களின் தரம் குறைந்து வருகிறது. பன்னாட்டு நிறு வனங்களில் வேலை பார்த்து வருபவர்களும் உயர்கல்வி நிறுவனங் களில் வேலைபார்த்து வரும் இந்திய ஐஐடி மாணவர்களும் தங்களது வேலைகளில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறார்கள் என்று அவர் குறை கூறினார் (மேலும்....)

ஐப்பசி 03, 2011

கனடிய தமிழ் பயங்கரவாத அமைப்புக்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி வருவது எப்படி?

தமிழ்ப் பயங்கரவாதம் கனடிய அரசியலுக்குள்ளும் ஊடுருவி வருகிறது.

தமிழர் வாக்குகளுக்காக, கனடிய தேசிய அரசியல்வாதிகளின் செயற்பாடுகள்,  கனடாவின் எதிர்காலத்தையே சீரழித்துவிடும். கனடிய தேர்தல்களில் போட்டியிடும் தமிழர்கள்,  புலிப் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் அல்லது அந்த  அமைப்பின் துணைக் குழு உறுப்பினர்களே. (மேலும்.....)

ஐப்பசி 03, 2011

நெதர்லாந்து விசாரணை

தமிழர் செயற்பாடுகளை குற்றங்களாக அடுக்கும் வழக்குரைஞர்கள்

"நெதர்லாந்தில் உள்ள தமிழ்ச் சிறார்கள் அவர்களது சிறுவயதிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறை சார் கருத்தியலுக்கு ஏற்ப மூளைச்சலவை செய்யப்படுவது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய விடயமாகும்" இவ்வாறு உலகளாவிய ஒலிபரப்பு சேவையைக் கொண்ட நெதர்லாந்து வானொலியின் [Radio Netherlands Worldwide - RNW] இணையத்தளத்தில் Marcel Haenen எழுதியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஏறத்தாழ 9000 தொடக்கம் 13000 வரையிலான ஆண்களைக் கொண்ட நெதர்லாந்தின் தமிழ்ச் சமூகமானது சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பெரும்பாலும் தமிழ்ப் புலிகளுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் மற்றும் தேசத் துரோகம் போன்ற சிலவற்றின் ஊடாக நெதர்லாந்துத் தமிழர்கள் மத்தியில் 'சூழ்நிலை அச்சம்' ஒன்று நிலவியுள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 03, 2011

அரசு - த. தே. கூ பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்றையதினம் நடைபெறவிருந்த அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தை எப்பொழுது நடைபெறும் என்ற திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசாங்கப் பிரதிநிதிகள் குழு சார்பில் கலந்துகொள்ளும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார். அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இதுவரை 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருக்கும் நிலையில் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்றையதினம் நடைபெறவிருந்தது. எனினும், இன்றையதினம் பேச்சுவார்த்தை நடைபெறாதென்றும், இது பிறிதொரு தினத்தில் நடைபெறும் என்றும் அமைச்சர் சிறிபால டி சில்வா கூறினார். (மேலும்.....)

ஐப்பசி 03, 2011

இலங்கை கடற்பரப்பில் எரிவாயு

இலங்கை கடற்பரப்பில் பாரிய எரிவாயுப் படுக்கை இருப்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கண்டியில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். எமது கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வு தொடர்பான நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அச்சமயம், ‘இந்நடவடிக்கைகள் தொடர்பாக நல்ல தகவல்கள் கிடைக்குமாயின், அவை தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் தமக்கு அறியத் தருமாறு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கு ஆலோசனை வழங்கி இருந்தேன். அதற்கேற்பவே இந்த நல்ல செய்தி நேற்றுக் காலையில் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதனை தலதா மாளிகை அமைந்திருக்கும் புனித பூமியிலிருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன். (மேலும்.....)

ஐப்பசி 03, 2011

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க மறுத்தல்  அமெரிக்க அதிபரின் அடாவடித்தனம்

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஐ.நா. மன்றத்தில் ஆற்றியுள்ள உரை யானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பிரதிபலிக்கக் கூடிய விதத்திலும், இஸ்ரேலுக்கு அதன் உறுதி யான ஆதரவினைத் தெரிவித்திடும் விதத்திலும் அமைந்துள்ளது. பாலஸ் தீனத்தின் பகுதிகளை ஆக்கிரமித் திருப்பது தொடர்பாக ஐ.நா. மன்றம் நிறைவேற்றியுள்ள பல தீர்மானங்களை, மிகவும் வெட்கங்கெட்ட முறையில் இஸ் ரேல் மீறியிருப்பது குறித்தோ, சுதந்திர பாலஸ் தீனம் உருவாவதை அது ஏற்க மறுப்பது குறித்தோ அது கொஞ்சங் கூடக் கவ லைப்படவில்லை. இவ்வாறு பாரக் ஒபாமா பேசியிருப்பதானது, இஸ் ரேலையொட்டி பாலஸ்தீனம் உருவாவ தற்கு வழிசெய்திடும் ஐ.நா. மன்றத்தின் 181ஆவது தீர்மானத்தினை முற்றிலும் மீறும் செயலாகும். (மேலும்.....)

ஐப்பசி 03, 2011

அருகில்தான் இருக்கிறோம்...!

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உலக அரசியல் அரங்கில் அமெரிக்காவுக்கும், பாகிஸ் தானுக்கும் இடையிலான விரிசலும், அது மோதல் நிலைக்கு சென்று கொண்டிருப்பதும் பிரதான செய்தியாக இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அரசாங்கமே பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது என்றும், அதை நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்றும் அமெரிக்கா மிரட்டல் விடுத்ததும், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமெரிக்கா தன்னிச்சையாக தாக்குதல் நடத்து மானால் கடுமையான பதிலடியை சந்திக்க நேரு மென பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ எச்சரிக்கை விடுத்ததும்... என அடுத்த டுத்து அறிக்கைகளும், பேட்டிகளும் ஊடகங் களுக்கு விருந்தாகின. (மேலும்.....)

ஐப்பசி 03, 2011

பூமியின் பொக்கிஷங்கள், எரிகற்களின் பரிசு

பூமியின் அடியில் புதையுண்டு கிடக்கும் தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோகங்களின் படிவுகள், பூமியைத் தாக்கிய எரிகற்களின் பரிசு என்கிறார் கள், பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இது தொடர்பாக, ‘நேச்சர்’ இதழில் அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில், பூமி தோன்றி 20 கோடி ஆண்டுகள் கழித்து விண்ணிலிருந்து வந்து பூமியைத் தாக்கிய எரிகற்களா லேயே மதிப்புமிக்க உலோகப் படிவு கள் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரி வித்துள்ளனர். பூமி உருவானபோது, உருகிய இரும்பு பூமியின் மத்தியில் திரண்டு அதன் அடிப்படையை உரு வாக்கியது. அப்போது அது பெருமள விலான தங்கம், பிளாட்டினத்தையும் எடுத்துச் சென்றது. உண்மையில், பூமி முழுவதும், நான்கு மீற்றர் கனமுள்ள அடுக்கால் மூடும் அளவிலான தங்கம், பூமியின் மத்தியப் பகுதியில் உள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 03, 2011

ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் ‘ராணா’ படம் கைவிடப்பட்டதா?

நேற்று முன்தினம் ‘ராணா’ படம் கைவிடப்பட்டு விட்டதாக மீண்டும் ஒரு தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. ‘ராணா’ ஒரு வரலாற்று படம். ராஜா கள் சம்பந்தப்பட்ட கதை. அதில், ரஜினிகாந்த் குதிரை சவாரி செய்வது போல் பல காட்சிகள் வருகின்றன. ரஜினிகாந்தின் இப்போதைய உடல்நிலை குதிரை சவாரிக்கு இது கொடுக்காது என்பதால், ‘ராணா’ கைவிடப்பட்டு விட்டதாகவும் அதற்கு பதில் வேறு ஒரு படம் தொடங்கப்படுவதாகவும் சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவியது. ஆனால், இந்த தகவலை ‘ராணா’ படத்தை தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் மறுத்தது. ‘ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி, ‘ராணா’ படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது உண்மை. (மேலும்.....)

ஐப்பசி 03, 2011

கனிமொழி பிணை மனு 17க்கு தள்ளி வைப்பு

“2ஜி” ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி 2 வதுமுறை தாக்கல் செய்த பிணை மனு வரும் 17 ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கள் வரையப்பட்டு பதிவான பின்னர் பிணை மனு மீதான விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என கனிமொழி வக்கீல் தெரிவித்ததை அடுத்து நீதிபதி ஏற்றுக்கொண்டார். வரும் 15 ஆம் திகதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்.....)

ஐப்பசி 03, 2011

சாதி கடாபியிடம் விசாரணை நடத்த இடைக்கால அரசுக்கு அனுமதி

நைகருக்கு தப்பிச் சென்ற முஅம்மர் கடாபியின் மகன் சாதி கடாபியிடம் தேவைப்படும் நேரம் விசாரணை நடத்த முடியும் என லிபிய இடைக்கால அரசுக்கு நைகர் அரசு அனுமதி அளித்துள்ளது. லிபியாவில் இருந்து கடந்த மாத ஆரம்பத்தில் நைகருக்கு தப்பிச் சென்ற முன்னாள் லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் மூன்றாவது மகன் சாதி கடாபிக்கு சர்வதேச குற்ற ஒழிப்பு பொலிஸான இன்டர்போல் கடந்த வாரம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில் சாதி காடாபி மீதான விசாரணைக்கு எந்த தடங்களும் விதிக்கமாட்டோம் என்றும் எந்நேரமானாலும் லிபிய இடைக்கால அரசுக்கு நைகருக்கு வந்து சாதி கடாபியிடம் விசாரணை நடத்த முடியும் என நைகரின் நீதி அமைச்சர் மவ்ரோ அமன்டோ குறிப்பிட்டுள்ளார். எனினும் சாதி கடாபி தற்போது எங்கே இருக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 03, 2011

அமெரிக்காவில் நிதிச் சீர்திருத்தம் கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் உடனடியாக நிதிச் சீர்திருத்தம் செய்யக் கோரி ஆயிரக்கணக்கானோர் நியூயோர்க் நகரின் வோல் தெருவை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகைப் போராட்டம் பொஸ்டன் உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் பரவி வருகிறது. அமெரிக்காவில் 2008 இல் நிகழ்ந்த வங்கிகளின் திவால் அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வேலை பறிபோனது உள்ளிட்டவற்றை சரி செய்யக் கோரியும், நிதி சீர்திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ளக் கோரியும் ‘வோல் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம்’ என்ற அமைப்பு கடந்த செப்டம்பர் 17ம் திகதி முதல் எகிப்து பாணியில் போராட்டங்களை ஆரம்பித்தது. (மேலும்.....)

ஐப்பசி 03, 2011

பலஸ்தீனின் ஐ.நா. அங்கத்துவத்திற்கு ஈரான் எதிர்ப்பு

பலஸ்தீனை துண்டாக பிரிக்கும் ஐ.நா. தனிநாட்டு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லா அலி கமைனி பலஸ்தீனத்தின் அங்கத்துவ கோரிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அதில் சுதந்திரமான முழு பலஸ்தீனமே எமது கோரிக்கை. பலஸ்தீனத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல. இவ்வாறு துண்டாக பிரிக்கும் எந்த கோரிக்கையும் முற்றாக நிராகரிக்கப்படும் என்றார். ஐ.நா. அங்கத்துவம் பெற பலஸ்தீன ஜனாதிபதி விண்ணப்பித்துள்ளார். இதில் அவர் மேற்குக்கரை, கிழக்கு ஜரூஸலம் மற்றும் காசா பகுதிகளே பலஸ்தீனமாக கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 03, 2011

தமிழருக்காக குரல்கொடுக்க தயங்கியதில்லை

அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து எமது மக்களின் நலனுக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார். வெள்ளவத்தை கொலிங்வூட் பாதையிலுள்ள தொடர்மாடி உரிமையாளர்கள் மத்தியில் உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்ததாவது :- நான் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதனால் ஒரு சிலர் என்னை விமர்சனம் செய்கிறார்கள். நான் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரோ அல்ல. அரசாங்கத்தின் மூலமாக எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அபி விருத்திகளை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றேன். (மேலும்.....) 

ஐப்பசி 02, 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 26)

(நேசன்)

1983 யூலை ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான அரசினால் திட்டமிடப்பட்டு தமிழ், முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையும் அதைத் தொடர்ந்த இனக்கலவரமும் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழ்ந்துவந்த இலங்கைத் தமிழர்கள்- குறிப்பாக இளைஞர்கள்-மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் இளைஞர்கள் இன ஒடுக்குமுறைக்கெதிராக போராடுவததொன்றே ஒரே வழி எனக் கண்டனர். ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவில் தமது செயற்பாடுகளை விஸ்தரித்து இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்திருந்தவேளை உண்மையான விடுதலை உணர்வோடு,  போராட்ட உணர்வோடு மேற்கு ஜரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து இந்தியா சென்று விடுதலை இயக்கங்களுடன் இணைந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களில் ரவிமூர்த்தியும் ஒருவர். ரவிமூர்த்தி சிறுவயதிலிருந்தே எனது சகோதரனின் நெருங்கிய நண்பனாக இருந்தமையால் ரவிமூர்த்தியை நன்கு அறிந்தவனாகவும் பரிட்சயமுள்ளவனாகவும் நானிருந்தேன். (மேலும்.....)

ஐப்பசி 02, 2011

ஜேவிபியின் இரட்டை முகம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது!

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜேவிபி சந்திக்கின்ற மிக நெருக்கடியான காலகட்டம் இது. முன்னரும் ஜேவிபி பல நெருக்கடியான காலகட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறது தான் என்றாலும் அவற்றிற்கும் இப்போதுள்ள நெருக்கடிக்கும் இடையே பிரதானமான வேறுபாடு ஒன்று உள்ளது. முன்னைய சந்தர்ப்பங்களின் போதெல்லாம் நெருக்கடி ஏற்பட்டது அதற்கு வெளியிலிருந்து தான். குறிப்பாக 1971 கிளர்ச்சியின் போதும், 1988 -1989 காலகட்டத்தின் போதும் அது நெருக்கடியை வெளியிலிருந்து எதிர்கொண்டது. அவ்விரு சந்தர்ப்பங்களின் போதும் தனது உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் ஆயிரக்கணக்கில் இழக்க நேர்ந்த போதும் சரி, ஏன் அதன் ஏன் தலைவரையும் இழந்த போதும் சரி அது இவ்வாறான ஒரு நெருக்கடிக்கு ஆட்பட்டதில்லை. (மேலும்.....)

ஐப்பசி 02, 2011

தமிழ் வியாபார ஊடகங்கள் புறக்கணிக்கும் புதிய அரசியல் மாற்றம்

(கோசலன்)

முப்பது வருடம் வெற்றிகளையும் தோல்விகளையும் அவலங்களையும் அழிவுகளையும் சந்தித்த ஒரு தேசிய இனத்தின் எச்ச சொச்சங்கள் என்றால் எத்தனை அறிவு பூர்வமான விவாதங்கள் ஆக்கபூர்வமான நகர்வுகளைக் கண்டிருக்க முடியும்? கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு சமூகம் இருளுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் யாரும் இலகுவில் உணர்ந்து கொள்வார்கள். முள்ளிவாய்க்காள் இழப்புக்கள் வரைக்கும் இராணுவ வெற்றிகளையும் அரசியல் தோல்விகளையும் அறுவடை செய்திருக்கிறோம். அத்தனை நண்பர்களையும் எதிரிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். அத்தனை எதிரிகளையும் நண்பர்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறோம். மூன்று கால் நூற்றாண்டுகளாக ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றின் நியாயமான போராட்டம் தடையங்கள் கூட இல்லாம் துடைத்தெறியப்பட்டதற்கு பின்னணியில் இயங்கிய அதே வியாபாரிகளும் சந்தர்ப்பவாதிகளும் எந்தத் தயக்கமுமின்றி மீண்டும் மீண்டும் முளைத்தெழுகிறார்கள். தம்மைத் திருத்திக் கொண்டல்ல. அதே சாகடிக்கப்பட்ட வழிமுறைகளை மூட்டை மூட்டையாக முதுகில் சுமந்துகொண்டு மக்களை நோக்கி வருகிறார்கள். (மேலும்.....)

ஐப்பசி 02, 2011

ஆன்மீகம் பேசிக்கொண்டு அடுத்தவனின் மனைவியில் கைவைத்த வெள்ளைசேட்டு வின்சன் (முடிக்கு) மக்களே உங்கள் தண்டனை என்ன???

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற உண்மை சம்பவம்

அடிக்கடி எங்கள் திருவாய்களில் அடிக்கடி  மீட்டப்படும் சொல் ஆன்மீகம் காரணம் ஓரு மனிதன்  வாழும் காலம் வரைக்கும் ஆன்மீகம் என்ற பதம் அன்றாடம் தேவைப்படடுவது ஒன்றாகும்  உறவு முறைகளையும் இரத்தபாசங்களையும் மனிதநேயங்களையும் கட்டிக்காக்க கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான பரஸ்பர கொள்கையுடன் அதாவது கடவுள்கூறியபடி மனிதன் வாழவில்லை ஆனால் மனிதனின் வாழ்வுமுறைகளில் கட்டுக்கோப்புடன் கூடய செயல்முறைகளுடன் செயல்படுவது என்று பொருள். விடைத்திற்க்கு வருகிறோம் வாசிப்பவர்கள் அவசரப்படவேண்டாம்  ஆன்மீகவழிகளில் இறைவனுக்கு சேவை செய்கிறோம் என்று புறப்பட்ட பலர் ஆன்மீக வழிமுறைகளில் வாழ்ந்து முத்தியடைந்த மகான்களை நாம்  நம் கண்முன்னே கண்டுவாழ்கிறோம். ஆனால் பைபிள் என்றும் அமைப்புகள் என்றும் சிலுவை சுமக்கும் மதம் என்றும் அமைப்புகளுடன் மக்களையும் கடவுளையும் ஏமாற்றி திரியும் வின்சன்போன்ற சில சுயநலவாதிகள் மக்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். (மேலும்.....)

ஐப்பசி 01, 2011

இலங்கை பல்லினங்களின் நாடாக மாறாதவரை அபிருத்தியையோ, சமூக நல்லுறவையோ ஏற்படுத்த முடியாது

(தி. ஸ்ரீதரன் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் )

இன்று வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வில் நிகழும் சொல்லொனா வேதனைகள் சவால்கள்  இழப்புக்கள் என்பவற்றை எதிர்கொள்வதற்கு என்ன வழி என்பது இன்று எம் முன்னுள்ள முக்கிய கேள்வியாகும். இன்று அனுபவிப்பது போன்ற துன்பங்களை விடவும் மோசமான துன்பங்களை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். பழைய யாழ் சந்தை, யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்டதிலிருந்து இன்றைய நில அபகரிப்பு மக்களின் அன்றாட வாழ்வில் இராணுவத் தலையீடு, கிரீஸ் பூதம் வரையிலான பிரச்சினைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.  இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதானால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களும் நிலத்தின் மீதான அதிகாரங்களும், நீதித்துறை அதிகாரங்களும் கொண்ட அதிகாரப்பகிர்வு கட்டமைப்பு அவசியம். மாநில மட்டத்திலான அரச கட்டமைப்பிற்குள் இது அடங்க வேண்டும். (மேலும்....)

ஐப்பசி 01, 2011

பிரித்தானியாவிலிருந்து மேலும் பலர் நாடு கடத்தப்படுவர் _

பிரித்தானியாவில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 44 பேரும் நேற்று முன்தினம் 50 பேரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்.  இந்த நிலையில் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் ருக்கோன், லிவர்பூல் வீதி போன்ற இடங்களில் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய தேடுதலின் போது இலங்கையர்கள் பலர் சட்ட விரோதமாக விசா முடிவடைந்த நிலையில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரித்தானிய குடியுரிமை சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பசி 01, 2011

Crouching Tiger, Hidden Raj

Earlier this year, Raj Rajaratnam, founder of the Galleon Group hedge fund, was convicted of conspiracy and securities fraud in one of the biggest insider-trading cases in the history of Wall Street. But there was another reason the federal government was interested in Rajaratnam—his alleged financial support for Tamil separatists in Sri Lanka, whose cause is spearheaded by the ferocious Tamil Tiger terrorists. Vanity Fair’s David Rose gets the untold story from a Tamil Tiger turned F.B.I. informant.

By David Rose

 

FRIENDS WITH BENEFITS Left, Convicted insider trader and former Galleon hedge-fund founder Raj Rajaratnam at the Manhattan Federal Courthouse in New York, in April 2011. Inset, members of Sri Lanka’s Tamil Tigers.  (more....)

முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 1800 பேரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் அவர்களது பெற்றோர்களிடம் கையளித்தார். அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட வைபவத்தில் இவர்கள் 1800 பேரும் தமது உறவினர்களுடன் இணைந்து கொண்டதுடன் பெற்றோர்களிடம் பிள்ளைகளை ஒப்படைத்த ஜனாதிபதி அவர்களின் எதிர்கால வளமான வாழ்வுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நேற்றைய இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் இளைஞர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். (மேலும்....)

ஐப்பசி 01, 2011

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்  இலங்கைக்கு எதிரான முயற்சிகள் முறியடிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் பேரவையில் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையைக் கொண்டுவந்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறை வேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டமையானது இலங்கைக்குக் கிடைத்த முதல் வெற்றி யென்று தெரிவித்த அமைச்சர், 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விவாதிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டமையானது இலங்கைக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியென்றும் கூறினார். (மேலும்....)

ஐப்பசி 01, 2011

Conflict leads to revelation of party secrets:
JVP Rebel Leader's aliases, subversive past exposed

By Saman Indrajith

The on-going clash between the current JVP leadership and its rival faction led by Premkumar Gunaratnam has led to the revelation of many a party secret such as the identities of its underground cadres, clandestine operational centres and safe houses. Last week's assault by the Gunaratnam faction on a Somawansa loyalist at Madiwela exposed the location of a JVP safe house used by hardcore JVPers whose identities are not known even to some of the senior members of the party active in mainstream politics. Within hours of the clash, a posse of police intelligence personnel descended on the place, ascertained as much information as possible and took into custody all the computers the JVP leaders had used there. (more....)

ஐப்பசி 01, 2011

உங்கள் ஊரிலிருந்து உங்களை விரட்ட ஒருபோதும் இடமளியேன் - ஜனாதிபதி

கொழும்பு வாழ் மக்களை அவர்களின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு நான் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கிராமத்தில் பிறந்த ஒருவன் என்ற வகையில் தன்னை தமது கிராமத்திலிருந்து விரட்டுவதாக யாராவது எனக்கு கூறினால் என் மனம் எவ்வளவு வேதனையடையும் என்பது பற்றி தனக்குத் தெரியுமெனவும், அவ்வாறான வேதனையை கொழும்பு வாழ் மக்கள் அடைவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் கூறினார். சோமாலியா, எத்தியோப்பியா போன்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் கொழும்பு மக்கள் வாழுகின்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்து குடிசைகளுக்குப் பதிலாக அழகான மாடி வீடுகளில் புதிய வாழ்க்கை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பினை பெற்றுத்தருவதாகவும் கூறினார். (மேலும்....)

ஐப்பசி 01, 2011

ஜே. வி. பி.க்குள் பிளவு

‘லங்கா’ பத்திரிகையை அச்சிட்ட ஐவர் கைது

ஜே.வி.பி. உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘லங்கா’ பத்திரிகையை சட்ட விரோதமாக அச்சிட்டது தொடர்பாக லங்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் அடங்களான ஐவர் கல்கிஸ்ஸ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக அச்சிடப்பட்ட 20400 ‘லங்கா’ பத்திரிகை பிரதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜே. வி. பி.யிற்குள் ஏற்பட்டுள்ள பிளவையடுத்து மாற்றுக் குழுவுடன் தொடர்புடைய ‘லங்கா’ பத்திரிகை ஆசிரியர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு ‘லங்கா’ பத்திரிகை அச்சிடுவதையும் கட்சி இடைநிறுத்தியுள்ளது. இந்த நிலையில் ரத்மலானை பகுதியில் மேற்படி பத்திரிகை சட்ட விரோதமாக அச்சிடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆணையின் பிரகாரம் அச்சகம் நேற்று முன்தினம் இரவு சோதனை செய்யப்பட்டது.

ஐப்பசி 01, 2011

‘சூரியக்காற்று’ பற்றித் தெரியுமா?

விண்வெளியில் கோள்களுக்கு இடையில் இடைவிடாமல் பெருகிப் பாய்ந்து கொண்டிருக்கும் மின்னூட்டமுள்ள துகள்களையே ‘சூரியக்காற்று’ என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சூரியனின் கொனராப் பரப்பிலிருந்து வெளியாகிறது இந்த புரோத்தன், இலத்திரன்களின் காற்று வீச்சு. கொனராப் பரப்பிலிருந்து வெளியாகும் வாயுக்கள் அயன் நிலையில் உள்ளவை. மிக அதிக வெப்ப ஆற்றல் உடையவை. சூரியனின் ஈர்ப்பாற்றலால் இந்த அயன் நிலை வாயுக்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இந்த அயனநிலை வாயுவை ‘பிளாஸ்மா’ என்று கூறுவார்கள். இது பொருளின் நான்காவது நிலை. (மேலும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com