Contact us at: sooddram@gmail.com

 

மாசி 2011 மாதப் பதிவுகள்

மாசி 28, 2011

சிறிலங்காவை போர்க் குற்றத்தில் இருந்து காப்பாற்ற ருத்திரகுமாரன் கொழும்பு பயணம்?

சிறிலங்காவை போர்க் குற்றத்தில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் சில நாடுகள் மற்றும் அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனையும் தாண்டி சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் மிகவும் இறுக்கமான கட்டத்தை அடைந்துகொண்டிருக்கின்றன. இந்த விடயத்தில் ஐ.நா பொதுச் செயலர்கூட ஒதுங்கிப்போக நினைத்தாலும் வெளிவந்திருக்கும் போர்க் குற்ற ஆதாரங்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க் கட்டமைப்புக்களின் தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் மீதான குற்றச்சாட்டுக்களும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தன, வருகின்றன. இதனால், சிறிலங்கா மீது பெயரளவிற்கேனும் எதாவது ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஐ.நாவிற்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பான் கீ மூனினால் அமைக்கப்பட்டதுதான் நிபுணர்கள் குழு. இந்தக் குழு இத்தனை காலமாக எதனைச் செய்து முடித்துள்ளது என்பது தெரியவில்லை. எனினும், இந்தக் குழுவின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய இருக்கின்றது. ஆனால், நிபுணர் குழுவின் பதவிக்காலம் நீடிக்குமா என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. (மேலும்....) 

மாசி 28, 2011

சென்னையில் இருந்து டெல்லிவரையான ஈ.என்.டி.எல.எப் இனரின் நடைபயணம் இனிதே நடைபெற்று முடிவுற எமது இனிய வாழ்த்துக்கள்

ஜனவரி 16ம் திகதி ஸ்ரீபெரும்புத்தூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து டெல்லி வரை தொடங்கிய ஈ.என்.டி.எல்.எப் இனரின் நடைப்பயமானது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிடவேண்டும் என்பதற்கு மேலும் ஓரு அழுத்தத்தை கொடுக்கும். இந்த நடைப்பயணம் தொடங்குவதற்கு மனஉறுதி வேண்டும்.,  மனிதன் தங்களை வருத்தி கடவுளிடம் வேண்டுதல்களை வைப்பது போலேவே இதுவும் ஒப்பானது. ஈ.என்.டி.எல்.எப் தொடங்கிய நடைப் பயணத்தின் செய்திகள் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ஒரு சில இணையதளங்களில் வருவதும் வரவேற்க்கத்தக்கது. செய்தியை இருட்டடிப்பு செய்வது மனவேதனையை அளிக்கிறது. நடந்து செல்பவர்களின் மன உறுதியையாவது இந்த ஊடகங்கள் பாராட்ட வேண்டாமா? செய்திகளை இருட்டடிப்பு செய்யும் ஓர வஞ்சனை என்பது இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலேயே தொடங்கியது அது இன்னும் தொடர்வது  இலங்கைத்  தமிழர்கள் வாழ்வில் ஆரோக்கியமானவை எதையும் ஏற்படுத்தி விடாது. (மேலும்....)

மாசி 28, 2011

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்!

துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத் திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது. 500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது. தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல், சுங்க பரிசோதனைகள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. (மேலும்....)

மாசி 28, 2011

டாஃபியின் கழுத்து இறுகுகிறது!

கடைசி ஆணும்.. கடைசிப் பெண்ணும்... கடைசி குண்டும்...

லிபியா நாட்டு சர்வாதிகாரி மம்மர் கடாஃபியின் மகுடம் சரிந்து​ கொண்டு இருக்கிறது. அவரது கழுத்தை, புரட்சி ரீங்காரம் நெருக்​கும் காலம் இன்னும் ஒரு சில நாட்களே இருக்கக்கூடும்!  மன்னர் இண்டிரிசின் ஆட்சியைத் தனது அசைக்க முடியாத தைரியத்தாலும், படை பலத்தாலும், பேச்சுத் திறமையாலும் வீழ்த்தி, 42 ஆண்டுகளுக்கு முன்னால் வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் ஆட்சியைப் பிடித்தவர், மம்மர் கடாஃபி.'மன்னரை வீழ்த்திய கடாஃபிக்கு மக்களின் கஷ்டங்கள் தெரியும். சாதாரண மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது புரியும். அடிப்படைத் தேவைகளைக் கொடுத்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கவைப்பார்’ என்ற நம்பிக்கையில்தான் முழுக்கவே அந்த நாட்​டில் இருந்த இஸ்லாமிய மக்கள் இவரை ஆதரித்தனர். ஆனால், மன்னர் ஆட்சிக் காலத்தில் அடக்குமுறையும் ஆணவமும் மட்டுமே இருந்தது என்றால், இவரது ஆட்சியில் மத மயக்கமும் கலந்தது. மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டதால், கடாஃபி என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் சகித்துக்கொண்டார்கள் லிபியர்கள். (மேலும்....)

மாசி 28, 2011

இலங்கைக்கும் UKக்கும் இடையிலான விமான சேவை விஸ்தரிக்கப்பட உள்ளது

பயணத்தில் ஈடுபடும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான விமான போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பயணத்தில் ஈடுபடும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இரு நாட்டு விமான சேவை உயரதிகாரிகளும் இணங்கியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 14 இலிருந்து 21 ஆக உயர்த்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த விமான சேவைகளை கனடா வரையில் நீடிப்பதற்கும் பிரித்தானிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி வாரத்தில் ஏழு விமானங்கள் கனடா நோக்கிப் பயணிக்கும் என விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சில்வா தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்கள் பல இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

மாசி 28, 2011

Basil to personally survey flood recovery in Batticaloa

(Wilson Gnanadass)

Economic Development Minister Basil Rajapaksa is scheduled to undertake a tour of the east today to ascertain for himself the progress made with regard to the flood recovery programme, launched by his ministry immediately after the floods.The economic development ministry, on the directives of Minister Rajapaksa initiated the recovery programme soon after the floods hit the east last month.Basil is expected to address all the heads of department and local politicians in Batticaloa to review the flood recovery programme, today. (more....)

மாசி 28, 2011

மனிதர் வாழ்வதற்கு ஏற்ற 1235 கோள்கள்

தினமும் காலையில் உதயமாகி மாலையில் மறையும் சூரியன் போல சிறியது முதல் பெரியது வரையில் ஒரு இலட்சம் கோடி முதல் 4 இலட்சம் கோடி நட்சத்திரங்கள் கொண்ட பிரமாண்ட வான்வெளி பால்வழித் திரள், (கலக்சி) என்று அழைக்கப்படுகிறது. மிகவும் அதிக தொலைவு என்பதால் இவற்றின் தொலைவுகள் ஒளி ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. ஒளியின் வேகத்தில் அதாவது, கண் இமைக்கும் நேரத்தில் 200 இலட்சம் கி.மீ வேகத்தில் போனால்கூட பிரபஞ்சத்தின் இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் போவதற்கு ஒரு இலட்சம் ஆண்டுகள் ஆகுமாம். அப்படி என்றால் அதன் பிரமாண்டத்தை கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். (மேலும்....)

மாசி 28, 2011

உணவகங்கள் மீது சுகாதார பரிசோதனை: சட்ட நடவடிக்கை

சண்டிலிப்பாய்ப் பிரதேசத்தில் நெருப்புப் காய்ச்சல், வயிற்றோட்டம் போன்ற நோய்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, உணவு கையாளும் நிலையங்கள் உட்பட பேக்கரிகள், தனியார் வர்த்தக நிலையங்கள் ஆகியன சுகாதாரப் பரிசோதகர்களின் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையைத் தொடர்ந்து, தற்பொழுது பல இடங்களில் புதுப்புது உணவு நிலையங்களும், வர்த்தக நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. (மேலும்....)

மாசி 28, 2011

லிபியாவில் இரத்தக்களரி ஏற்படும் அபாயம்

தமது ஆதரவாளர்களுக்கு ஆயுத கிடங்கை திறந்துவிட்டு லிபியாவில் ரத்தக் களறியை ஏற்படுத்த அந்நாட்டு ஜனாதிபதி கடாபி திட்டமிட்டுள்ளார். லிபியாவில் அதிபர் 42 ஆண்டு கால ஆட்சியை எதிர்த்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அடக்க கடாபி இராணுவத்தை ஏவி விட்டுள்ள போதிலும் பல இடங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் வன்முறையை தடுத்து நிறுத்துமாறும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது படையினரை ஏவிவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தி வருகின்றன. மேலும் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலும் கடாபிக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. (மேலும்....)

மாசி 28, 2011

மக்களின் சீர்குலைந்துள்ள சுகாதாரம் இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் எமது நாட்டு மக்கள் இயற்கை உரத்தை பயன்படுத்தியே நெல் உற்பத்தியையும் காய்கறிச் செய்கையையும் மேற்கொண்டதுடன் கிருமி நாசினிகளின் பாவனையும் அன்று மிகவும் குறைவாகவே இருந்தது. அதனால் அன்றைய மக்கள் நச்சுத்தன்மையற்ற நல்ல சுத்தமான உணவை உட்கொண்டார்கள். அதுவும் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு ஒரு அடிப்படை காரணமாக விளங்கி வந்தது. மக்கள் சினிமாப் படங்களையும், வானொலியையும் மட்டுமே தங்கள் பொழுது போக்காக அன்று பயன்படுத்தி வந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் இரவு ஒன்பதரை மணியுடன் சினிமா படக் காட்சிகள் அனைத்தும் முடிந்துவிடும். அது போன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சிகளும் இரவு 10 மணியுடன் நிறைவுபெறும். இதனால் அன்றைய மக்கள் ஒன்பது, ஒன்பதரை மணிக்கு நித்திரைக்கு சென்று அதிகாலை 5 மணிக்கு எழும்பி தங்களது நாளாந்த கடமைகளை ஆரம்பிப்பார்கள். மக்களுக்கு ஆழ்ந்த நித்திரை செய்வதற்கு அன்று வாய்ப்பு இருந்த காரணத்தினால் மக்கள் அன்று தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தார்கள். (மேலும்....)

மாசி 28, 2011

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தொடங்கியது

லிபியாவில் சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக இரண்டு சிறப்பு விமானங்கள் லிபியா தலைநகர் டிரிப்போலிக்கு அனுப்பப்பட்டன. இதில் முதல் விமானத்தில் 300 பேர் நேற்று முன்தினம் இரவு டில்லி வந்து சேர்ந்தனர். விமானங்கள் தவிர நான்கு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. லிபியா தலைவர் முஅம்மர் கடாபி, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரு வாரங்களாக அந்நாட்டு மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடாபி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்ததால், ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், அந்தந்த நாடுகளால் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர். கலவர பூமியாக மாறிவிட்ட லிபியாவில் தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். (மேலும்....)

மாசி 28, 2011

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறல்

எல்லை தாண்டினால் படகு உரிமம் ரத்தாகுமென இந்தியா எச்சரிக்கை

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் சம்பவங்கள் தொடர்வதாக யாழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக யாழ். மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்தார். எனினும், முன்னர்போன்று அதிக எண்ணிக்கையான தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது சற்றுக் குறைவடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் எரி பொருள் மானியம், படகு உரிமம் என்பன இரத்துச்செய்யப்படும் என இந்தியக் கடற்படையினர் எச்சரித்து ள்ளனர்.  (மேலும்....)

மாசி 28, 2011

பிரதேச சபைகளுக்குள்ள நிறைவேற்று அதிகாரம் வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர்களைவிட பிரதேச சபைகளுக்கு அதிக நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது. பிரதேச சபைகளின் ஊடாக மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எனவே எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை மக்களின் பிரதிநிதிகளே நிறைவேற்றக் கூடிய இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியடையும் வகையில் வேட்பாளர்கள் செயற்பட வேண்டும் என வவுனியா மாவட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். (மேலும்....)

மாசி 28, 2011

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வாகாது - ஜே.வி.பி._

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமை தீர்வாகாது. கடந்த 25 வருடகால கொள்கையில் எவ்விதமான மாற்றமும் கிடையாது. நாட்டை பிரிக்காமல் சமஷ்டியில் தீர்வு பெற்றுக்கொண்டுள்ள உலக நாடுகளை இலங்கை முன்னுதாரணமாகக் கொள்வதே சிறந்தது என்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாடு அடைந்த சுதந்திரமோ, சமாதானமோ எவரையும் சென்றடையவில்லை. தங்கத்தையும் பணத்தையும் திருடியவர்கள் இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை திருடுகின்றனர் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. (மேலும்....)

மாசி 28, 2011

லிபியா விவகாரம் உலக நாடுகள் சீற்றம்

அவசரமாக கூடியது ஐ.நா.பாதுகாப்புச் சபை

* கடாபியின் சொத்துகளை முடக்கியது அமெரிக்கா

* பொருளாதார தடையை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி

* அமைதி காப்பு நடவடிக்கைகளில் ஐ. நா. பாதுகாப்பு சபை தீவிரம்

(மேலும்....)

மாசி 27, 2011

அரசாங்கத்திற்கும் TNAக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைவைப்பு!

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது. அரசாங்கத்தினால் இந்த பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

மாசி 27, 2011

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சு நடத்தத் தயாராகிறது அரசு

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தியுள்ளதாக அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாகக் கொண்டிருக்கும் எண்ணக்கருவை மாற்றுவதற்காக புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும் எனவும் கூறப்படுகிறது. (மேலும்....)

மாசி 27, 2011

நெருக்கடியின் பிடியில் மும்மர் கடாபி  லிபியாவை தாக்க அமெ. திட்டம

லிபியா மீது நேட்டோ படைகளை ஏவி தாக்குதல் நடத்தி அந்நாட்டை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ எச்சரித்துள்ளார். அரபு நாடுகளில் கடந்த இரண்டு வார காலமாக மக்கள் போராட்டம் கொந்தளிப்பு டன் நீடித்து வருகிறது. ஏமன், பஹ்ரைன், ஈரான் உட்பட கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே போராடும் மக்கள் மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். லிபியா விலும் 42 ஆண்டுகளாக ஆட்சி அதிகா ரத்தில் நீடித்துவரும் ஜனாதிபதி மும்மர் கடாபி, மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதற்கு பதிலாக தனது அதிகா ரத்தை தக்கவைத் துக்கொள்வதற்காக கடும் அடக்குமுறை யை ஏவியுள்ளார். தலைநகர் திரிபோலி, பெங்காஸி உள்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் கிளர்ச் சியில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக் கான மக்கள் மீது தனது ராணுவப் படை யினரை மட்டுமின்றி, ஆப்பிரிக்காவின் இதர நாடுகளிலிருந்து லிபியாவிற்கு குடி பெயர்ந்து வந்த மக்களிடையே இருந்து கிடைக்கப்பெற்ற கூலிப் படையினரையும் ஏவி தாக்குதல் தொடுத் துள்ளார். (மேலும்....)

மாசி 27, 2011

சர்வதேசப் புகழ்பெற்ற

பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன்

வடபகுதியில் தீண்டாமைக் கொடுமைக்கெதிரான பேராட்டம் கட்சிக்குப் பெருமை சேர்த்தது எனலாம். அன்றைய பாராளுமன்றப் பிரதிநிதிகள் தமது பதவிகளையும், வர்க்க நிலைப்பாட்டையும் காப்பாற்றிக்கொள்ள துரோகமிழைத்துவந்தவேளை, 1966 அக்டோபர் 21-ம் திகதி யாழ் முற்றவெளிப் பொதுக்கூட்டத்தில் சண் விடுத்த அறைகூவல் வடபகுதில் ஆலயப்பிரவேசப் போராட்டங்களுக்கும், தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்களுக்கும் உந்துசக்தியானது. சங்கானை - நிற்சாமம், கரவெட்டி - கன்பொல்லை, நெல்லியடி, சுன்னாகம், காங்கேசந்துறை, மட்டுவில், கொடிகாமம் உட்படப் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள் குறித்து இலங்கை வானொலி மௌனம் சாதித்தவேளைகளில் பீக்கிங் வானொலி உண்மைநிலை குறித்து தொடர்ந்து செய்திகளை ஒலிபரப்பியது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் மகத்தான வெற்றிகளைக் கண்டது. சண் தலைமையில் கட்சி இதற்கு உறுதுணையாகவிருந்து பூரண ஆதரவு வழங்கியது. தென்னிலங்கை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. இலங்கைப் பாராளுமன்றத்திலும்; தமிழ்த் தலைவர்களது வர்க்க நிலைப்பாடு அம்பலமானது. (மேலும்....)

மாசி 27, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 41, 42வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 41வது நாளான (25-02-2011, வெள்ளிக்கிழமை) நேற்று நடைபயண வீரர்கள் தேசிய நெடுஞ்சாலை – 7 வழியாக 38 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர். 42வது நாளான (26-02-2011, சனிக்கிழமை) இன்று காலை 7:00 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபயணத்தைத் தொடர்ந்து, 40 கிலோ மீற்றர் தூரம் கடந்து இரவு முகாம் அமைத்தனர். நடைபயண வீரர்கள் இன்னும் கடக்க வேண்டிய தூரம் 787கிலோ மீற்றர் தூரம் மட்டுமே! (மேலும்....)

மாசி 27, 2011

Dual citizenship gone - to avoid war crime charges?

(By Ranga Jayasuriya)

Some key positions of this government have been filled by dual citizens. Gotabaya Rajapaksa - the powerful Defence Secretary is a dual citizen of Sri Lanka and the USA. Basil Rajapaksa - Investment Development Minister has a US Green Card in addition to his Sri Lankan citizenship. Sarath Fonseka, the now incarcerated former army commander is also a Green Card holder. Palitha Kohona, Sri Lanka’s Permanent Representative to the United Nations also holds his Australian citizenship in addition to his Sri Lankan citizenship.
The government directive stopping dual citizenship is not retrospective - hence it would not affect the citizenship status of those who have already obtained dual citizenship. But it effectively deprives thousands, possibly hundreds of thousands of expatriate Sri Lankans of their Sri Lankan citizenship.
And, there are other explanations, as advanced by diaspora Tamils on the discontinuance of the applications for dual citizenship.
(more....)

மாசி 27, 2011

பேச்சுவார்த்தை விபரங்களை வெளியிட அரசு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது எதைப்பற்றி பேசுகின்றோம். என்ன கோரிக்கையை வலியுறுத்துகின்றோம் என்று ஏதும் கூற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சந்திப்பு நடக்கும் அதுபற்றி எதுவும் கூற இயலாது என அரச தரப்பும் கூறுகின்றன. அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களைத் தெரிவிக்குமாறு கேட்டபொழுதே இரு தரப்பினரும் இவ்வாறு பதில் அளித்தனர். தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக இருதரப்பினராலும் பேசப்படவுள்ள விடயங்கள் குறித்து தமிழ் மக்களுக்கே அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக இல்லை என்பதே முக்கியமான விடயமாகும். (மேலும்....)

மாசி 27, 2011

"என்னை பின்பற்றாவிட்டால் முழு லிபியாவையும் எரித்துவிடுவேன்" - கடாபி _

போராட்டங்களை உடனே கைவிடாவிட்டால் லிபியா முழுவதையும் எரித்து அழித்து விடுவதாக லிபிய ஜனாதிபதி எச்சரித்துள்ளார். தொலைக்காட்சியொன்றில் திடீரென தோன்றிய கடாபி எந்தவொரு வெளிநாட்டு சக்தியாலும் தன்னை பதவியிலிருந்து விலக வைக்க முடியாதெனவும், எதிர்ப்பவர்கள் அனைவரையும் அழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார். தன்னோடு இணைந்து ஆர்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர ஒத்துழைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை லி‌பியா‌வி‌ல் இடம்பெற்றும் வரு‌ம் ‌ஆர்ப்பாட்டங்களை வ‌ன்முறையா‌ல் ஒடுக்க முயல்வதை அந்நாட்டு அரசு கை‌விட வே‌‌ண்டு‌ம் என கடாபியை ஐ‌க்‌கிய நாடுக‌ள் சபை வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது. ‌(மேலும்....)

மாசி 27, 2011

அழிவின் விளிம்பில் 19 மொழிகள்  கொலம்பிய அரசு கவலை

கொலம்பியாவில் பேசப்படு வதில் 19 மொழிகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக அந் நாட்டின் கலாச்சாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. இந்த 19 மொழிகள் அழியும் நிலையில் இருப்பதோடு, மேலும் ஐந்து மொழிகள் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டன. டினிகுவா என்ற மொழியை ஒரே ஒருவர்தான் பேசிக் கொண்டிருக்கிறார். நோனுயா என்றொரு மொழியை மூன்று பேர் மட்டும் பேசுகிறார்கள். கரி ஜோனா, பிசாமிரா மற்றும் டொடோரோ ஆகிய மூன்று மொழிகளும் ஐம்பதுக் கும் குறைவானவர்களால்தான் பேசப்படுகின்றன. (மேலும்....)

மாசி 26, 2011

யாழ்.பல்கலைக் கழகத்துக்கு விரைவில் பொறியியல் பீடம்

யாழ். பல்கலைக்கழகத்தில் விரைவில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பில் ஜனாதிபதி பல நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார் என்று அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ். கொக்குவிலில் தொழில்நுட்பவியல் கல்லூரியை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து அமைச்சர் பசில் ராஜபக்ஷ உரையாற்றுகையில், என்னால் எழுதியாவது தமிழில் பேசு முடியாமைக்கு உண்மையில் மன வேதனை அடைகின்றேன். ஆனாலும் உங்கள் அனைவரினதும் இதயங்களில் நாங்கள் வாழ்கின்றோம் என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். (மேலும்....)

மாசி 26, 2011

ஏமன், பஹ்ரைன், லிபியா  மக்கள் கிளர்ச்சி தீவிரம்

ஏமன், பஹ்ரைன், இராக், ஈரான், லிபியா, அல்ஜிரியா உள்பட பல்வேறு அரபு நாடுகளில் அரசின் அடக்குமுறை களையும் மீறி மக்கள் கிளர்ச்சி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஏமன் தலைநகர் சனாவில் பல்க லைக் கழக மாணவர்கள் பல்லாயிரக்க ணக்கானோர் உள்பட மிகப் பெருவாரி யான மக்கள் வெள்ளியன்று நகரின் முக் கிய சதுக்கத்தில் கூடி பெரும் போராட்டம் நடத்தினர். அமெரிக்க ஆதரவாளரான ஜனாதிபதி அலி அப்துல்லா சலே உட னடியாக பதவியை விட்டு வெளியேற வேண்டுமென வலியுறுத்திய இந்தப் போராட்டம் ஏமனின் பிற நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற் புடன் நடைபெற்றது. (மேலும்....)


மாசி 26, 2011

மாசி 26, 2011

Libyan solidarity march

‘No to Qaddafi! Yes to freedom and democracy across the Arab World!’

R A L L Y  &  M A R C H

Saturday, February 26

Assemble at 12:00 p.m.

Yonge-Dundas Square

TTC: Dundas

மாசி 26, 2011

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜே.வி.பிக்கும் இத்தேர்தலில் மக்கள் தண்டனை கிடைக்கும்

மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் கழுதைகள் மற்றும் கருநாகம் ஆகியனவும் தேர்தல் சின்னங்களாக இல்லாவிட்டாலும் பிரசாரத்தின்போது முக்கியத்துவத்தை பெற்று வருகிறது ஒரு வகையில் விந்தையாகவும் இந்தளவிற்கு நாட்டின் அரசியல் தரம் விரைந்து செல்கின்றதென்றும் பொதுமக்களை சிந்திக்க வைக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று வலுப்பெற்று வரும் உட்கட்சி மோதல்கள் அதன் முக்கியத் தலைவர்களை கழுதைகளுக்கு ஒப்பிட்டு பேசுமளவிற்கு அக்கட்சி மக்கள் ஆதரவை இழந்து இன்று பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. (மேலும்....)

மாசி 26, 2011

மிகப் பெரும் பனியுடைப்பு

பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரமாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்கு குடை பிடித்து வருகிறது. வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவு கூடிக் குறையும்போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது. அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்க ளின் திணிவு மிகையாகிறது. வாயுக்களின் திணிவு அதிகமாகும்போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. (மேலும்....)

மாசி 26, 2011

லிபியாவில் தொடரும் போராட்டம்: உள்நாட்டுப் போர் மூளும் அபாயம்

டுனீசியா, எகிப்துக்கு அடுத்தபடி யாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போரா ட்டங்கள் இடம்பெற்று வருகி ன்றன. ஜனாதிபதி முஅம்மர் கடாபி யின் 41 ஆண்டு கால ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. லிபிய நாட்டின் கிழக்குப் பகுதி எதிர்ப்பாளர்கள் வசமாகிவிட்டது. இராணுவத் தளபதிகளே கடாபியின் ஆட்சி பிடிக்காமல் மக்களோடு சேர்ந்துகொண்டு விட்டனர். லிபி யாவின் தூதரக அதிகாரிகள் ஒவ் வொருவராக பதவி விலக ஆரம் பித்துவிட்டனர். முஅம்மர் கடாபியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது என்று அமெரிக்கா, பிரித் தானியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளி ட்ட மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துவிட்டன. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்கி மூனும் அறிவித்துவிட்டார். (மேலும்....)

மாசி 26, 2011

இறக்குமதியை மட்டுப்படுத்தினால் பொருளாதார சவாலை வெல்ல முடியும்

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் உபயோகத்தை மட்டுப்படுத்த முடியுமானால் பொருளாதார சவாலை எம்மால் வெற்றிகொள்ள முடியும் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். உலகில் ஏற்பட்டுள்ள காலமாற்றம் இயற்கை அனர்த்தங்களுக்கு அன்றாடம் பல நாடுகள் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. நாட்டிற்கான சவாலை வெற்றிகொண்டுள்ள நாம் உலகிற்கேற்ப எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இலாபத்தை மட்டும் கருத்திற்கொள்ளாது எமது தேசியத்திற்கு முக்கியமளிப்பது கவனத்திற்கொள்ள வேண்டும். (மேலும்....)

மாசி 26, 2011

அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மறைவு புலிகளுக்குப் பேரிழப்பு-விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக!

புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்துக்குப் பேரிழப்பாக அமைந்ததாக விமானப் படைத்தளபதி சீப் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க சுட்டிக்காட்டுகின்றார். புலிகளின் பல தலைவர்கள் நீண்ட காலமாக விமானப்படையினரால் இலக்கு வைக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும் உள்ளடங்கியிருந்தார். அவர் கிளிநொச்சியில் தங்கியிருக்கும் இடம் பற்றிய தகவல் 2008 நவம்பரில் துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அவரது மறைவிடம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இலக்கு கடினமானதாக இருந்த போதிலும் கடைசியில் வெற்றி கிட்டியது.
(மேலும்....)

மாசி 26, 2011

வடக்கை அபிவிருத்தி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு - ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்

மோதல்கள் இடம்பெற்ற வடபகுதியில் உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தெற்காசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தது. முன்னாள் மோதல் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்துகொண்டதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் கூறினார். (மேலும்....)

மாசி 26, 2011

பிரமுகர்கள் வெளியேற எகிப்து இராணுவம் தடை

முன்னாள் பிரதமர் அடேப் ஒப யோட் உள்ளிட்ட முக்கிய பிரமுக ர்கள் எகிப்தை விட்டு வெளியேறு வதற்கு இராணுவம் தடை விதித் துள்ளது. எகிப்தில் சமீபத்தில் ஏற்பட்ட புரட்சியால் ஜனாதிபதி முபாரக் கடந்த 11 ஆம் திகதி பதவி விலகினார். தற்போது நாட்டின் நிர்வாகத்தை இராணு வம் கவனித்து வருகிறது. இந்நிலையில் பதவி விலகிய ஜனாதிபதி முபாரக்கிற்கு நெருக்க மானவர்கள் மீது இராணுவம் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எகிப்தின் முன்னாள் பிரதமர் அடேப் ஒபயோட், கலாசாரத்துறை அமைச் சராக பணியாற்றிய பரூக் ஹோஸ்னி தொலைக்காட்சி ஒலிபரப்பு மற்றும் துறைகளுக்கு தலைவராக பணி யாற்றிய ஒசாமா எல் ஷேக் மற்றும் தொழிலதிபர்கள் ஒன்பது பேர் ஆகி யோர் எகிப்தில் இருந்து வெளி நாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் எகிப்தில் இருந்து வெளி யேற முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. விரைவில் இவர்கள் மீது விசாரணை நடத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

மாசி 26, 2011

மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள்

(எஸ்.வி.வேணுகோபாலன்)

வாழ்க்கையின் தேர்வு

வாழ்க்கையின் தேர்வின்படிவாழ்ந்துவிட

மக்கள் துணிந்து விடுவார்களானால்

விதியால் என்ன செய்ய முடியும் -

வழிவிட்டு நிற்பதைத் தவிர ?

இரவு தனது முகத்திரையைத் துறந்துவிடுகிறது..

சங்கிலிகள் எல்லாம் உடைந்து நொறுங்குகின்றன..

(மேலும்....)

மாசி 25, 2011

ஜெயலலிதாவின் அதிமுக வுடன் விஜயகாந்தின் தேதிமுக இன் கட்சி இணைந்தது

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, கட்சித் தலைவர் விஜயகாந்த் கொடுத்துள்ள பிறந்த நாள் பரிசாகும் என்று கூறியுள்ளார் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். நேற்று மாலை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான தேமுதிக குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்களை மேற்கொண்டனர். ஒரு வழியாக அதிமுகவைத் தேடி தேமுதிக வந்ததைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்களும், கூடவே தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த அவர்கள் மகிழ்ச்சி கோஷங்களை எழுப்பினர். (மேலும்...)

மாசி 25, 2011

லிபியாவை நெருங்கியது  இந்தியக் மீட்புக் கப்பல்

லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது ஒடுக்குமுறை ஏவப்பட் டுள்ள நிலையில் தலைநகர் திரிபோலி உட்பட அனைத்து நகரங்களிலும் பெரும் பதட்டம் நிலவு கிறது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம்பேர் அங்கு சிக்கி தவிக்கின்றனர். அவர் களை மீட்க இந்திய அர சின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச் சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரி வித்தார். இந்தியர்களை மீட்க ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற கப்பல் அனுப்பப்பட் டுள்ளது என்றும், அது லிபியாவின் துறைமுக நகர மான பெங்காசியை நெருங் கிவிட்டது என்றும் தெரி வித்த கிருஷ்ணா, மேலும் ஒரு கப்பல் அனுப்பப்படு கிறது என்று கூறினார். கப் பல் மூலம் மீட்கப்படும் இந் தியர்கள் உடனடியாக விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றார்.

மாசி 25, 2011

புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்டவர்களில் மூவர் விடுதல

மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்ட 05 தமிழர்களில் மூவரை கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்துள்ளார். விடுதலை செய்யப்பட்டவர்கள் மன்னார் பேசாலை கிராமம் 7 ஆம் வட்டாரத்தினைச்சேர்ந்த ஜெயராஜ் பெனோ பெல்டானோ,8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்தவர்களான அருள் சீலன் மெறான்டா,மற்றும் சந்தியோகு மெசனட் குருஸ் ஆகியோரவர்.

மாசி 25, 2011

பிள்ளையானுக்கு சவால் விடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் படலத்தையே எங்கும் தொடர்ந்து வருகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு இவர் அருகதையற்றவர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டிருந்தால் இவர் கதிரை ஏறியிருக்க முடியாது'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி. யோகேஸ்வரன் கூறினார். (மேலும்...)

மாசி 25, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 40வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 40வது நாள் 24-02-2011 வியாழக்கிழமையான இன்று நெடுந்தூர நடைபயண வீரர்கள் “குரை” என்ற இடத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை – 7 இல் பயணித்தனர். இதற்கிடையில் நடைபயண வீரர்களை தலைமையேற்று நடத்தும் உயர்திரு. ஞா.ஞானராஜா அவர்கள் திரு. சுதர்சன் அவர்களின் இறுதிக் கிரியைகளை முடித்துவிட்டு இன்று நடைபயண வீரர்களுடன் இணைந்துள்ளார். (மேலும்...)

மாசி 25, 2011

அ. தி. மு. க. கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு ஆசனம்

அ. தி. மு. க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர்கள் நரேந்திர டே, ஜி.தேவராஜன், மாநில பொதுச் செயலாளர் பி. வி. கதிரவன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை சந்தித்தனர். அப்போது, அ. தி. மு. க. கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் தேசிய செயலாளரும் மாநில தேர்தல் பார்வையாளருமான ஜி.தேவராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ‘பேச்சுவார்த்தை முடிவில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டோம். எங்களது கட்சிக்குரிய ‘சிங்கம்’ சின்னத்தில் போட்டியிடுவோம். மேற்கு வங்கத்தில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார்கள் என்றார்.

மாசி 25, 2011

பஹ்ரைன் மன்னருக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு மன்னிப்பு

மனாமா, பஹ்ரைனில் மன்னருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டதாகக் குற் றம் சாட்டப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவருக்கு, மன்னர் மன்னிப்பு வழங்கியுள்ளார். எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளின்படி நேற்று 50 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் கடந்தாண்டு அக்டோபரில் சட்டவிரோத அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதி யுதவி செய்து தவறான தகவலை பரப்பி யதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய் யப்பட்ட 25 ஷியா பிரிவினரும் அடங்குவர். தொடர்ந்து, ‘அல் ஹக்’ என்ற எதிர்க் கட்சியின் தலைவர்களான ஹசன் முஷைமா மற்றும் ஷியா முஸ்லிம் அறிஞர் முகமது அல் மொக்தாத் இருவ ருக்கும் மன்னர் மன்னிப்பு அளித்துள்ளார். இவர்களில் முஷைமா, தற்போது லண்டனில் உள்ளார். இவர் நாடு திரும்பி விட்டதாக செய்திகள் வெளியாயின.

மாசி 25, 2011

வடக்கில் 4 சனச வங்கி கிளைகள்

வடக்கில் சனச அபிவிருத்தி வங்கியின் நான்கு புதிய கிளைகள் அடுத்த மாதத்திற்குள் திறந்து வைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம், பளை ஆகிய இடங்களில் இரு கிளைகளும், யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறையில் ஒரு கிளையும் மன்னார் மாவட்டத்தில் அடம்பனில் ஒரு கிளையும் திறந்துவைக்கப்படவுள்ளதாக சனச அபிவிருத்தி வங்கியின் யாழ்.கிளை முகாமையாளர் அ. நாகேந்திரன் தெரிவித்தார். இந்நான்கு புதிய கிளைகளும் சென்ற மாதம் திறக்கப்படவிருந்த போதிலும் நாட்டில் பெய்த பலத்த மழை, வெள்ளப் பெருக்குக் காரணமாக ஒத்திவைக்க ப்பட்டிரு ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கிளைகள் நான்கும் ஒரே தினத்தில் திறந்துவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. சனச அபிவிருத்தி வங்கிக் கிளை கள் தற்போது யாழ்ப்பாணத் திலும் மன் னார் மாவட்டத்தில் நானாட் டானிலுமே இயங்கவுள் ளன.

மாசி 25, 2011

எச். ஐ. வி. பற்றிய ஆராய்ச்சியில் புதிய திருப்புமுனை!

எச்.ஐ.வி. எனப்படும் எயிட்ஸ் நோயைப் பற்றி புரிந்து கொள்வது எப்படி அதற்கு சிகிச்சையளிப்பது எப்படி என்பன போன்ற விடயங்களில் விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத இந்த எயிட்ஸ் வைரஸ்களை அவற்றின் ஜீன் உள்ள இடங்களை கண்டுபிடித்து சிகிச் சையளிப்பதே இந்தப் புதிய கண்டுபிடிப்பாகும். விக்டோரியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் ஸ்டீபர்னி வில்லர்த்ஸ் நடத்திய ஆராய்ச்சியின் முடிவிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல், இன்புளுவன்ஸா மற்றும் கொடிய எபோலா வைரஸ் என்பனவற்றையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம். வைரஸ்களின் ஜீன் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவற்றின் தோற்றம் உருவாக்கம் பற்றி அறிந்து கொள்ளவும் அடுத்த தலைமுறை டி. என். ஏ. முறையை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

மாசி 25, 2011

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். அலுவலகத்திற்கு மூடு விழா

இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாண அலுவலகம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது. எவ்வாறிருந்தபோதும் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள தேவைகள் தொடர்பான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.ஆர்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் அலுவலகம் 21 வருட சேவையின் பின்னர் மூடப்படுகின்றது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவைகள் தொடர்பான வரலாற்றில் இதுவொரு முக்கிய கணப்பொழுதாகும். (மேலும்...)

மாசி 25, 2011

ஜூலியன் அசாஞ்சேவை சுவீடனுக்கு நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க இராஜதந்திர தகவல்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவை சுவீடனுக்கு நாடு கடத்தும்படி பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அசாஞ்சேக்கு எதிராக சுவீடன் நாட்டு நீதிமன்றத்தில் இரண்டு பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சுவீடனின் வேண்டுகோளின் பேரில் பிரிட்டனில் வைத்து அசாஞ்சே கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை சுவீடனுக்கு நாடு கடத்தும்படி பிரித்தானிய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாக அசாஞ்சே அறிவித்துள்ளார். மேற்படி மனுவானது நிராகரிக்கப்படுமாயின் அவர் நாடுகடத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாசி 25, 2011

நான் பணம் செலுத்தமாட்டேன்’  கிரீஸ் மக்களின் புதுமையான சட்டமறுப்பு போராட்டம்

அரசின் கொள்கை களுக்கு எதிராகப் போராடி வரும் கிரீஸ் நாட்டு மக்கள் புது வகையான போராட் டம் ஒன்றைக் கையில் எடுத் துள்ளனர். “நான் பணம் செலுத்த மாட்டேன்” என்று பெய ரிட்டுள்ள இந்தப் போராட் டம் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகருக்கு வெளியிலுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த சிலரால் துவக்கப்பட்ட தாகும். பெரும் பொருளா தார நெருக்கடியில் சிக்கி யுள்ளதைக் காரணம் காட்டி மக்கள் நலப் பணிகளைக் குறைப்பது மற்றும் ஊதிய வெட்டு செய்வது ஆகிய நட வடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. (மேலும்...)

மாசி 25, 2011

தெலுங்கானா பிரச்சினை

மக்களவையில் கடும் அமளி

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி மக்களவையில் டீ.ஆர்.எஸ். தெலுங்கு தேசம் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்கள் நேற்று முன்தினம் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடிய போது ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி விசாரிக்க ஜே.பி.சி. அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததால் அவை அமைதியாக நடந்தது. (மேலும்...)

மாசி 25, 2011

130 ராணுவத்தினருக்கு மரண தண்டனை?  லிபியாவில் கடாபி அரசின் கொடூரத்தனம்

ஜனநாயகம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திவரு பவர்கள் மீது சுடுவதற்கான உத்தரவு இட்ட பிறகு, அதை நிறைவேற்றாமல் இருந்த 130 ராணுவத்தின ருக்கு மரண தண்டனை தரப்பட்டுள்ளது என்று மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரஸ்டிவி வெளியிட்டுள்ள செய்தி யில், கைகள் பின்புறத்தில் கட்டப்பட்டுள்ள நிலை யில் 130 ராணுவத்தினரின் உடல்கள் இருக்கும் வீடி யோக்காட்சிகள் இருப்பதா கக் கூறப்பட்டுள்ளது. லிபி யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்-பைதா நகரில் வைத்து இந்தக் கொடூரச் சம்பவம் நடைபெற்றுள் ளது. கலகக்காரர்கள் என்று அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. (மேலும்...)

மாசி 25, 2011

ஐ.நாவின் நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து கடாபியின் மகள் நீக்கம்

லிபியாவில் அரசுக்கெதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்நாட்டின் ஐ.நா.வுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டிருந்த முஅம்மர் கடாபியின் மகள் ஆயிஷா கடாபியின் பதவியை ஐ.நா.வுக்கான மேம்பாட்டு நிதியகம் நீக்கிவிட்டது. லிபியாவில் ஜனாதிபதி முஅம்மர் கடாபி பதவி விலகக்கோரி கடந்த ஒரு வாரமாக போராடி வருகின்றனர். இதில் 1000 த்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பதவி விலகமாட்டேன் என்றும், ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என்றும் பிடிவாதம் காட்டி வருகிறார். ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகள் கடாபியை கண்டித்துள்ளன. இந்நிலையில் ஐ.நா.வுக்கான மேம்பாட்டு நிதியகத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிரசாரம் மேற்கொள்ளவும் நல்லெண்ண தூதராக கடந்த 2009 ஆம் ஆண்டு லிபியா சார்பில் ஜனாதிபதி கடாபியின் மகள் ஆயிஷா கடாபி நியமிக்கப்பட்டிருந்தார். இவரை அப்பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளதாக ஐ.நா. மேம்பாட்டு நிதியத்தின் செய்தி தொடர்பாளர் நெஸர்கி தெரிவித்துள்ளார்.

மாசி 24, 2011

24.02.2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

இந் நிகழ்ச்சியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு சிறிதரன், ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு வி.சிவலிங்கம், ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் திரு .செ .ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர் மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு:  00 44 208 9305313              00 44 208 9305313      or 078107063682

Visit our website : www.tbcuk.com or www.tbcuk.net

V.Ramaraj , Thamil Broadcasting Centre UK Ltd     (TBC)

00 44 7817063682, 00 44 208 930 5313

SKYPE ID: TBCUKLIVE

மாசி 24, 2011

அரபு நாடுகளின் மக்கள் போராட்டம்

சவூதி மன்னர் அரச ஊழியர்களுக்கு திடீர் சலுகை வழங்கல் _

மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் அரசு எதிர்ப்பலையால் பீதியடைந்துள்ள சவூதி மன்னர் அப்துல்லா தன்னாட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மொராக்கோவில் சிகிச்சை பெற்று வந்த சவூதி மன்னர் அப்துல்லா நாடுதிரும்பிய வேளையிலேயே இதனை அறிவித்தளை விடுத்துள்ளார். 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இதில் அரசு ஊழியர்களின் சம்பளம் 15 சதவீத உயர்வு, அவர்களுக்கான வீட்டுக் கடன், சமூகப் பாதுகாப்பு, வெளிநாடுகளில் படிக்கும் சவூதி அரேபிய மாணவர்களின் கல்விக் கட்டண உதவி, வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி மற்றும் இலக்கியச் சங்கங்களுக்கு நிதியுதவி ஆகியவை அடங்கும். இவை தவிர வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் சிறையில் வாடும் சிலருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு அவர்களது கடனை அரசே வழங்கும் என்றும் அறிவித்துள்ளார். ___

மாசி 24, 2011

பயங்கரவாதிகளின் பட்டியலில் மீண்டும் புலிகள்

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருக்கும் பயங்கரவாதிகளின் பட்டியலில் புலிகள் இயக்கத்தின் பெயர் மீண்டும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி உருவாக்கிய பயங்கரவாத அமைப்புக்களைத் தடைசெய்யும் சட்டத்திற்கமைய புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப் பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட 26 அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தாம் தடைசெய்யப்பட்டமைக்கான காரணங்களைக் கோர முடியுமென்று 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்த போதும் எந்தவொரு அமைப்பும் அதற்கான கோரிக்கையை விடுக்க வில்லையென்றும் ஐரோப்பிய ஒன்றியத் தின் சஞ்சிகையில் மேலும் குறிப்பி ட்டுள்ளது.

மாசி 24, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 38,39வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 38வது நாளான 22-02-2011 செவ்வாய்கிழமை காலை 07:00 மணியளவில் நடைபயண வீரர்கள் சியோனி என்ற இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். இதேவேளை, விபத்தில் காயமடைந்த திரு. ரஞ்சித் அவர்களை அனுமதித்திருந்த மருத்துவமனையில் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று ரஞ்சித் அவர்கள் தெரிவித்ததாலும், மேலும் நடைபயண வீரர்கள் அனைவரும் நாக்பூர் மாநகரை கடந்து செல்வதாலும், திரு. ரஞ்சித் அவர்களை அங்கிருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து டெல்லியில் இருக்கும் அவரது சகோதரனையும் வரவழைத்தனர். (மேலும்...)

மாசி 24, 2011

கடற்படையினரின் பயன்பாட்டிலுள்ள காணிகள் மூன்று மாதத்தில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

வடக்கில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் 1/3 ஆக குறைக்கப்பட்டுள்ளதோடு படிப்படியாக பொதுமக்களின் காணிகள், வீடுகள் மீள கையளிக்கப்பட்டு வருவதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வன்னிப் பிரதேசத்தில் கடற்படையினர் பயன்படுத்தும் தனியார் காணிகள் 3 மாத காலத்தினுள் மீள உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். (மேலும்...)

மாசி 24, 2011

இந்தியாவின்

புதிய நாணயம் வெளியீடு

இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல் முறையாக 150 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. வருமான வரித்துறை தொடங்கப்பட்டு, 150 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில், இந்த சிறப்பு நாணயம் வெளிப்படு கிறது. எதிர்வரும் 28 ஆம் திகதி, பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பொதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த நாணயத்தை வெளியிடுகிறார். இந்த நாணயம், வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம், ‘சத்யமேவ ஜெயதே’, ‘இந்தியா’ ஆகிய வார்த்தைகளுடன் சர்வதேச வடிவமைப்பு கொண்டதாக இருக்கும். பின்பக்கத்தில், சாணக்கியர் படமும், தேனீயுடன் தாமரை மலர் படமும் இடம்பெற்று இருக்கும். 150 ரூபாய் மதிப்புள்ள 200 நாணயங்கள் அச்சிட்டு வெளியிடப்படும். மேலும், வருமான வரித்துறையின் 150 வது ஆண்டு கொண்டாட்டம் நிறைவடையும்போது 5 ரூபாய் மதிப்புள்ள 100 சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படும். நாணயங்களும், 150 ரூபாய் நாணய வடிவமைப்பிலேயே. ஆனால் சற்று சிறியதாக இருக்கும்.

மாசி 24, 2011

யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவு மரக்கறி, வெங்காயம் தென்னிலங்கைச் சந்தைக்கு வந்துள்ளது

மரக்கறி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவை யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்துக்கு வந்துள்ளன. பீட்றூட் கிழங்கு, வெங்காயம் போன்ற வை இலட்சக் கணக்கான கிலோக்கள் தம்புள்ளைச் சந்தைக்கு வந்து சேர்ந்துள்ளன. இதனால் அண்மைக் காலமாக அதிகரித்திருந்த மரக்கறி விலைகள் தற்போது குறைவடைந்து வருகின்றன. பயங்கரவாதத்தை ஒழித்து அப்பகுதியில் இயல்பு நிலையை தோற்றுவித்ததன் பயன்களாகவே இதனைக் கருதமுடியும். (மேலும்...)

மாசி 24, 2011

 

தமிழக சட்டசபை தேர்தலில் துணை இராணுவத்தை பயன்படுத்தத் திட்டம்

தமிழக சட்டசபைத் தேர்தலில் துணை இராணுவத்தை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் - திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அரசு எந்திரத்தையும் அந்த கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தின. மேலும், சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் பயன்படுத்தி வாக்குச் சாவடிகளில் கத்தி முனையில் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி தேர்தலை சாதகமாகக்கிக் கொண்டனர். தமிழக டி.ஜி.பி. உட்பட யாரும் இதை தட்டிக் கேட்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் திருமங்கலம், வந்தவாசி, பென்னாகரம், திருச்செந்தூர் போன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு மது, பிரியாணி, பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்றனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தேர்தலை நேர்மையுடன் நடத்த தமிழக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படக் கூடாது. ஒட்டு மொத்த தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றை துணை இராணுவத்தைக் கொண்டு நடத்த முன்வர வேண்டும்.

மாசி 24, 2011

வீடுகளை இழப்பவர்களுக்கு மாற்று இடங்களில் குடியிருப்புக்கள் வழங்கப்படும

நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வீடுகளை இழப்பவர்களுக்கு மாற்று இடங்களில் குடியிருப்புக்கள் வழங்கப்படும். எவருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வீடுகளை இழப்பவர்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் தாம் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார் என சுற்றாடல் துறை பிரதியமைச்சர் ஏ.ஆர். எம். அப்துல் காதர் நேற்று கூறினார். (மேலும்...)

மாசி 24, 2011

அமெரிக்காவின் பிரதிநிதி அரபு நாடுகளுக்கு விஜயம்

அரபு நாடுகளின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்டறிய மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மான் அங்கு பயணமானார். கட்டார், குவைத், பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளார். அந்நாட்டுத் தலைவர்களுடன் தனித்தனியே பேச்சுக்களை நடத்தும் ஜெப்ரி பெல்ட்மான் அரசியல், பொருளாதார, சமூகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்களையும் ஆராய்வதற்கு இஸ்ரேல் குறித்த அமெரிக்கா வின் நிலைப்பாடு அரபு நாட்டு மக்களி டையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ள இக்கால கட்டத்தில் இவரின் விஜயம் முக்கியம் வாய்ந்ததாக உள்ளதெனக் கருதப்படுகிறது. குவைத்தின் 50வது சுதந்திர வைபவங்களிலும் அவர் பங்கேற்பார்.

மாசி 24, 2011

சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு  அமெரிக்கா, பிரிட்டன் மீது பிரிட்டன் பிரதமர் குற்றச்சாட்டு

மனித உரிமைகளை ஒடுக்கி ஆட்சி புரிந்த சர் வாதிகாரிகளுக்கு அமெ ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவு தந் ததும், தற்போது எழுந் துள்ள நிலையற்ற தன்மைக் குக் காரணம் என்று பிரிட் டன் பிரதமர் டேவிட் கேம ரூன் குற்றம் சாட்டியுள் ளார். குவைத் நாட்டு நாடா ளுமன்றத்தில் உரையாற் றுகையிலேயே டேவிட் கேமரூன் இவ்வாறு குறிப் பிட்டார். மேலும் பேசிய அவர், மேற்கு ஆசியாவில் தற்போது எழுந்துள்ள மக் கள் எழுச்சிகள், இத்தகைய ஆதரவு அளித்தது எவ்வ ளவு தவறு என்பதையே காட்டுகிறது. சர்வாதிகாரி களுக்கும், ஒடுக்குமுறை அரசுகளுக்கும் மேற்கத்திய நாடுகள் ஆதரவளித்து வந் தன. ஆனால், ஜனநாயகம் கோரி ஆர்ப்பாட்டம் நடத் துபவர்களுக்கு ஆதரவாக பிரிட்டனின் தற்போதைய அரசு இருக்கும். (மேலும்...)

மாசி 24, 2011

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

எல்.ரி.ரி.ஈ. இயக்கத்துக்கும், ஆயுதப்படைகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சின்னாபின்னமாகி அழிவை எதிர்நோக்கியிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போது, சகஜ நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. இம் மாவட் டத்தில் உள்ள 127 கிராம சேவை உத்தியோகஸ்தர் பிரிவுகளில், 100 பிரிவுகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கை கள் பூர்த்தியடைந்துள்ளன. இது பற்றி தகவல் தெரிவிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசா ங்க அதிபர், இன்னும் 27 கிராம சேவை உத்தியோகஸ்தர் பிரிவுக ளில் மக்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெறுவதாகவும் இராணுவத்தினரும், அரச சார்பற்ற அமை ப்புக்களும் ஒன்றிணைந்து இந்த 27 பிரிவுகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இப்போது ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இப்பிரதேசங்களிலிருந்து நிலக்கண்ணிவெடிகள் முற் றாக அகற்றப்பட்டுவிட்டன என்ற சான்றிதழ் தமக்கு கிடைத்த வுடன் அங்கு மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று கூறினார். (மேலும்...)

மாசி 23, 2011

இலங்கைக்கு எதிரான தென்னிந்திய ஆர்ப்பாட்டங்கள் ஆரோக்கியமான தீர்வுகளுக்கு வழிவகுக்குமா?

இலங்கைக்கு எதிராக தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணிகளும் இடம்பெற்றுவருகின்றன. மீனவப் பிரச்சினை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பேசப்படும் கருப்பொருளாக தற்போது உருவெடுத்துள்ளது. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கட்சிக்குக் கட்சி, ஆளுக்கு ஆள் என முண்டியடித்துக்கொண்டு இலங்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் களமிறங்கினார்கள்.‘கொதித்தெழுந்தது தமிழகம்’, ‘இறுதிவரைப் போராடுவோம் என உறுதிமொழி’, போன்ற தலைப்புகளில் அடிக்கடி செய்திகள் வெளியாயின. இலங்கைப் பிரச்சினை, தமிழக அரசியலில் தீர்மானிக்கும் ஒரு சக்தியாகவும் மாறியிருந்தது. எனினும் அந்தப் போராட்டங்கள் அனைத்தும் எந்த வகையில் சாதகமான தீர்மானத்துக்கு வித்திட்டன என்பதைத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள். (மேலும்....)

மாசி 23, 2011

தப்பியோடவில்லை என கடாபி அறிவிப்பு

லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி கடாபிக்கு எதிரான போராட்டங்கள் உக்கிரமடைந்து வரும் நிலையில் "நான் நாட்டை விட்டு தப்பியோடவில்லை" என அந்நாட்டு அரச தொலைக்காட்சி சேவையில் தோன்றிய கடாபி தெரிவித்துள்ளார். தான் வெனிசூலாவிற்கு தப்பியோடிவிட்டதாக கூறப்படுபவை பொய்யென்றும் ஒருபோதும் பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கு இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடாபிக்கு ஆதரவான இராணுவத்தினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுடப்படுவதாகவும் சடலங்கள் வீதிகளில் கிடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் பல கடாபிக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

மாசி 23, 2011

தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தயார் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

வட பகுதி மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் ஏனைய தமிழ்க் கட்சியினருடனும் நடாத்தப்படவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மார்ச் முதலாம் திகதி இரண்டாவது தடவையாகப் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். அதேநேரம் வடபகுதி மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வி. ஆனந்த சங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் கட்சிகளுடனும் பேச்சுவார்த் தைகள் நடாத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். (மேலும்....)

மாசி 23, 2011

இருதேச பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தம்

இருதேச பிரஜா வுரிமை வழங்கும் நடைமுறையைத் தற்போது அரசாங்கம் இடை நிறுத்தி வைத்திருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சிலர் இந்த சலுகையைப் பயன்படுத்தி இலங்கைக்கு துரோகம் இழைக்கும் சதிகளில் ஈடுபட லாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதனால் இருதேச பிரஜாவுரிமை கோரி விண்ணப்பிப்பவர்கள் பற்றி நன்கு விசாரணை செய்த பின்னரே அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார். இது பற்றி ஒரு தீர்க்க மான முடிவை எடுப்பதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்று இப்போது நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த பின்னரே இருதேச பிரஜாவுரிமையை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி கூறினார். (மேலும்....)

மாசி 23, 2011

கொழும்பில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார் திருமாவளவன்

மறைந்த பார்வதியம்மாளின் இறுதி நிகழ்வில் பங்கேற்கச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கா அரசினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். திருமாவளவன் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானத்தில் கொழும்பு சென்றதாகவும், ஆனால் அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அவர் மீளவும் அதே விமானத்திலேயே சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது. சிறிலங்கா அரசின் இந்தச் செயலை வன்மையாக கண்டித்துள்ள தொல்.திருமாவளவன் இது இந்தியாவுக்கே அவமானம் என்று கூறியுள்ளார். எனினும் இதுபற்றி சிறிலங்கா அரசதரப்புத் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இன்று வல்வெட்டித்துறையில் நடைபெறும் பார்வதியம்மாளின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தொல்.திருமாவளவன் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாசி 23, 2011

ராஜபக்ஷேவின் நாடகமா?!

நாகை மீனவர்கள் சிறைப்பிடிப்பு..

இலங்கை வடமராட்சி வடக்குக் கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் அந்தோணிப்​பிள்ளை எமிலியாம் பிள்ளையிடம் பேசினோம். ''சம்பவத்​தன்று, எங்கட ஆட்கள் முதல் நாள் கடலில் போட்ட வலைகளை எடுக்கப் போக... இந்திய இழுவைப் படகுகளால் வலைகள் நாசமாகிக் கிடந்திருக்கு. எங்கட ஆட்கள் கோபத்தில் பேச, இரு தரப்பிலயும் வாக்குவாதம்! தமிழக இழுவைப் படகுகளைக் கரைக்குக் கொண்டு வந்தோம். 30 வருடங்களா போரால் துன்பத்தை அனுபவிச்​சுட்டு, இப்போதான் ஆழ்கடலில மீன்பிடிக்க அனுமதி கிடைச்சுது. போரில் குடும்ப உறவுகளை இழந்து, சொத்துகளை வித்தோ... கடன் வாங்கியோதான் மீன்பிடி சாதனங்களை வாங்கியிருக்கோம். இந்த நேரத்தில இழுவைப் படகைக் கொண்டுவந்து, எங்கட மீன்பிடி சாதனங்களை அழிக்கலாமா? வலை போட்டுப் பிடிச்சா, மேற்பரப்பில உள்ள மீன்களைப் பிடிக்கலாம், அடியில மீன்குஞ்சுகள் இருக்கும். தொடர்ந்து மீன்வளம் அழிக்கப்படாமல் இருக்கும். தமிழகத்தில் இருந்து வர்ற சகோதரர்களை எங்க கடற்பிரதேசத்தில மீன்பிடிக்கக் கூடாதுன்னு சொல்லல. எங்களப் போலவே வலையைப் போட்டு மீன்பிடிங்க. நீங்க இழுவைப் படகைப் பயன்படுத்துறதால எங்கட இயற்கை அழிஞ்சதுன்னா, இந்தத் தொழிலையே நம்பியிருக்கிற நாங்க எங்க அய்யா போக?' என்று கேட்டார் எமிலியாம்பிள்ளை. (மேலும்....)

மாசி 23, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 37வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 37வது நாளான 21-02-2011 திங்கள் கிழமை அகால மரணமடைந்த சந்திரதாஸ் சுதர்சன் அவர்களின் இறுதி கிரியைகள் புதுக்கோட்டை லேனாவிளக்கு அகதி முகாமில் நடந்து கொண்டிருக்கும் வேளையில், நெடுந்தூர நடைபயண வீரர்கள் சுதர்சன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, அவரது இலட்சியக் கணவை நிறைவேற்ற நெடுந்தூர நடைபயணத்தினை வெற்றியுடன் முடிக்க உறுதி எடுத்துக்கொண்டு, சுதர்சன் அகால மரணமடைந்த இடத்திலிருந்து சுதர்சன் அவர்களின் நினைவுகளுடன் மீண்டும் நடைபயணத்தை ஆரம்பித்தனர். (மேலும்....)

மாசி 23, 2011

இன்று எகிப்து... நாளை இந்தியா?!

(பாரதி தம்பி)

எகிப்தின் அடிப்படைப் பிரச்னை என்ன? வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் என அறியப்படும் ஒட்டுமொத்தப் பிரதேசத்துக்கும் ஒரு காலத்தில் தானிய ஏற்றுமதி செய்த செல்வச் செழிப்பான நாடு எகிப்து. ஒரு வல்லரசு ஆவதற்கான தகுதியுடைய நாடுதான். ஆனால், எங்கும் வறுமை, உணவுப் பஞ்சம், வேலைவாய்ப்பு இன்மை. எகிப்தின் மொத்த வளத்தையும் தன் சொந்த உடைமையாகக் கருதி கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருந்தார் அதிபர் முபாரக். கடுமையான பொருளாதார நெருக்கடி, குழு மோதல்களாகவும் கலவரங்களாகவும் ஆங்காங்கே வெடித்தன. அப்போதுதான் நடந்தது மற்றோர் அரபு நாடான துனிஷியாவின் மக்கள் புரட்சி. உண்மையில் தற்போதைய எகிப்து எழுச்சியின் துவக்கப் புள்ளி துனிஷியாவில்தான் தொடங்குகிறது. (மேலும்....)

மாசி 23, 2011

கனடா போன்ற நாடுகள் எல். ரி. ரி. ஈ.யின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளன.

நாட்டுக்குத் துரோகமிழைக் கும் புலம் பெயர்ந்த எல். ரி. ரி. ஈ. யைச் சார்ந்தவர்களுக்கு எதிராக இப்போது ஐரோப்பிய நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கனடா போன்ற நாடுகள் எல். ரி. ரி. ஈ.யின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளன. எல். ரி. ரி. ஈ.யினர் இப்போது கனடாவுக்கு ஒரு பெரும் தலையிடியாக இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் எல். ரி. ரி. ஈ. யினர் இப்போது கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். (மேலும்....)

மாசி 23, 2011

தமிழ் இனத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் மீனவர்கள்!

இலங்கையின் எண்பத்தைந்து சதவீத கடல்பகுதிகள் தமிழ் இனத்துக்குச் சொந்தமானது. இன்று இலங்கையின் கடற்பகுதி 100 சதவீதமும் சிங்கள இனத்துக்கானதாகிவிட்டது. ஓர் சிறிய பகுதியான யாழ்ப்பாணமும் மன்னாரும்தான் தமிழர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளாக இருக்கிறது. ஆழ்கடல் மீன்பிடி உரிமை தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. ஈழத் தமிழ் மீனவர்கள் முன்னொரு காலத்தில் இலங்கையின் தேவையில் பாதிக்கும் அதிகமான மீன்களை கொழும்புக்கு அனுப்பி வந்தனர். இனப்பிரச்சினை தலைதூக்கியதும் தமிழர்களின் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்காக மீன்பிடித் தொழிலையும் முடக்கினர் சிங்கள ஆட்சியாளர். (மேலும்....)

மாசி 23, 2011

(மேலும்....)

மாசி 23, 2011

HC Levy wants Sri Lanka to accommodate Tamil Diaspora

Surely you are not requesting the Sri Lankan government to give them one-third of the real estate of the north and east of the island bordered by 60 percent of the coast line that 30,000 of the Tamils took to the streets of Ottawa and Toronto carrying head-high a sea of red Tamil Tiger flags on March, April and May of 2009 asking the Canadian government to speak for them and not to let the Sri Lankan armed forces wipe out the Tamil Tigers who were fighting for that very separate Tamil racist state, Eelam. Come on Bruce!  You know that it will never happen, especially when Canada, the country you represent wouldn’t want to hand over the Canadian Province of Quebec to the separatist Quebecois, little alone to the  October 1970’s FLQ. (more.....)

மாசி 23, 2011

மாவோயிஸ்டுகளின் 14 கோரிக்கைகளில் 08 கோரிக்கைகள் ஒரிசா மாநில அரசால் ஏற்பு

மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. கிருஷ்ணா, பொறியாளர் பவித்ரா மஜ்சி ஆகிய இருவரையும் விடுவிப்பது தொடர்பாக அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான 2ம் நாள் பேச்சுவார்த்தை திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது மாவோயிஸ்டுகள் விடுத்த 14 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அந்த மாநில உள்துறை செயலர் பெஹரா தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரையும் பொறியாளரை யும் விரைந்து பத்திரமாக மீட்கும் பொருட்டு இந்த 8 கோரிக்கைகளையும் அரசு முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளது. (மேலும்....)

மாசி 23, 2011

மேலும் 8 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒத்திவைப்பு

மேலும் எட்டு உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார். திருகோணமலை நகரசபை, குளியாபிட்டி பிரதேச சபை, ருவன்வெல்ல பிரதேச சபை, கிரிபாவ பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, திருக்கோயில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, மெரிடைம்பற்று பிரதேச சபை என்பவற்றுக்கான தேர்தல்களையே தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே தேர்தல் திணைக்களம் 59 உள்ளூராட்சி சபை தேர்தல் களை ஒத்திவைத்திருந்தது.

மாசி 23, 2011

அமெரிக்காவுக்கெதிராக பலஸ்தீனில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா தான்தோறித்தனமான முடிவுகளை எதிர்த்து பலஸ்தீனின் மேற்குக்கரையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இஸ்ரேலின் திட்டமிட்ட யூதக் குடியேற்றங்களைக் கண்டித்து ஐ. நா. பாதுகாப்புச் சபை நிறைவேற்றிய கண்டனத் தீர்மானம் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் ரத்துச் செய்யப்பட்டது.  இதைக் கண்டித்தே மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பதா அமைப்பினர் இதை ஏற்பாடு செய்தனர். அமெரிக்காவின் உண்மையான நிலைப்பாடு தெரிந்துவிட்டது. மத்திய கிழக்கில் சமாதானத்தை கொண்டு வரும் எண்ணம் அமெரிக்காவிடம் இல்லையென ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர். இஸ்ரேலின் யூத விஸ்தரிப்புக் கொள்கையை ஐ. நா. பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் எதிர்த்தன. சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், பிரேஸில், பொஸ்னியா, கொலம்பியா, காபொன், ஜேர்மன், இந்தியா, லெபனான், நைஜீரியா, போர்த்துக்கல், தென்னாபிரிக்கா என்பன இஸ்ரேலுக்கெதிராக வாக்களித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தில் செல்லுபடியற்ற தாக்கியது. இஸ்ரேலின் அநீதியான செயற்பாடுகளை அமெரிக்கா ஆதரிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

மாசி 23, 2011

ரூபா 90 மில்லியன் செலவில் கிழக்கில் 13 ஹோட்டல்கள்

கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பிரயாணத் துறையை மேம்படுத்தும் வகையில் 871 அறைகளைக் கொண்ட 13 உல்லாச ஹோட்டல்கள் நிர்மாணிக் கப்படவுள்ளன. இதற்கென அரசாங்கம் 90 மில்லியன் அமெரிக்கன் டொலர் நிதியினைச் செலவிடவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார். அத்துடன் திருகோணமலை, குச்சவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மேலும் 34 உல்லாச பிரயாண ஹோட்டல்களை நிர்மாணிக்கவுள்ளதுடன் இதற்கென பல பில்லியன் ரூபா நிதியினைச் செலவிடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். யுத்த சூழ்நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலீடுகளை மேற்கொள்ள பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். கற்பிட்டி மற்றும் குச்சவெளி பகுதிகளில் உல்லாசப் பிரயாண ஹோட்டல்களை நிறுவுவதற்கு பல முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இத்தகைய விடயங்கள் எத்தகைய ஒளிவு மறைவுமில்லாமல் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் நிதி பரிமாற்றங்களை திறைசேரியே நேரடியாக மேற்கொள்ளுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாசி 23, 2011

லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை

லிபிய ஜனாதிபதி மொஹமட் கடா பியை உடனடியாகப் பதவி விலகுமாறு ஐ.நா.வுக்கான லிபியாவின் பிரதித் தூதுவர் கோரியுள்ளார். மக்களைக் கொலை செய்தமைக்கான போரியல் குற்றச்சாட்டையும் மனிதப் படுகொலைக் கான விசாரணைகளையும் எதிர்கொள்ள மொஹமட் கடாபி தயாராக வேண்டு மெனத் தெரிவித்த ஐ.நா.வின் பிரதித் தூதுவர் மொஹமட் கடாபியின் 42 வருட ஆட்சி நிறைவடையும் காலம் நெருங்கி விட்டதாகவும் விளக்கினார். லிபியாவின் நிலைமைகள் தொடர்பாக பி.பி.சிக்கு விளக்கமளிக்கையிலே ஐ.நா. வுக்கான லிபியாவின் பிரதித் தூதுவர் இவ்வாறு கூறினார். (மேலும்....)

மாசி 23, 2011

மும்மொழிக் கொள்கையின் மூலம் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பலாம்

மும்மொழிக் கொள்கை நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த ஒற் றுமைப்பாலமாக அமையும். எங்கள் நாட்டில் இனங்களிடையே பகைமை உணர்வும், சந்தேகமும் கடந்த காலத்தில் நிலைகொண் டிருந்தமைக்கு பிரதான மற்றவர்களின் மொழியை இன்னுமொரு சமூகத்தினர் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தே பிரதான கார ணமாகும். இனிமேல், இலங்கையில் அப்படியான நிலை ஏற்படாது என்று உறு தியளிக்கும் அமைச்சர் வாசுதேவநாணயக்கார, இந்த மும்மொழிக் கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்க அதி காரிகள், தனியார்துறை உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை அளிப்பது அவசியம் என்று வலியுறுத்தி யுள்ளார். இந்த மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஆங்கில அறிவு மிகவும் அவசியமாக இருக்கின்ற போதிலும், கூடிய வரை தமிழிலும், சிங்களத்திலும் பேசவும், எழுதவும் அரச கரும ங்களை சரியான முறையில் நிறைவேற்றக் கூடிய திறமைமிக்க வர்களுக்கு அரசாங்க பதவிகளைக் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அரசாங்கம் இப்போது தீர்மானித்துள்ளது. (மேலும்....)

மாசி 23, 2011

நியுஸிலாந்தில் பெரும் பூகம்பம், 65 பேர் பலி, கட்டடங்கள் சேதம்

நியுஸிலாந்தில் திங்கட்கிழமை பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இதன் அளவு 6.3 ரிச்டர் எனப் பதிவாகியுள்ளது. இப் பூகம்பத்தில் சிக்கி 65 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தும் காணாமலும் போயுமுள்ளனர். சுமார் 15 நிமிடம் வரை இப்பூகம்பம் உணரப்பட்டது. இதையடுத்து வைத்தியசாலைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டதுடன் காயமடைந்தோரைக் கொண்டுவர அம்பியுலன்ஸ் வண்டிகளும் சேவையிலீடுபடுத்தப்பட்டன. பாடசாலைகள், அரச அலுவலகங்கள், போக்குவரத்துக்கள் என்பன இயங்கவில்லை. மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிப் புறப்பட்டனர்.விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விமான நிலையங்களும் மூடப்பட்டன. தொலைபேசி வயர்கள் துண்டிக்கப்பட்டதால் தொடர்பாடல் வசதிகள் யாவும் செயலிழந்து காணப்பட்டன. நியுஸிலாந்தின் கிரிஸ்சேர்ச் என்ற பகுதியிலே இப்பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இதேபோன்றதொரு பாரிய பூகம்பம் சென்ற ஆண்டு செப்டம்பரில் நிகழ்ந்த வேளை ஏராளமான மக்கள் கட்டட இடிபாடு களுக்குள் மாட்டிக்கொண்டனர். 1931ஆம் ஆண்டுக்கும் பின்னர் ஏற்பட்ட பாரிய அதிர்வை இப்பூகம்பத்தில் மக்கள் உணர்ந்ததாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கிரஸ்சேர்து மேயர் இது தொடர்பான சேதவிபரங்களை நியுஸிலாந்து அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி 22, 2011

கூட்டமைப்புக்கு அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும் - வீ.ஆனந்தசங்கரி _

வடக்குகிழக்கில் இடம்பெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத பல கட்சிகளையும் உள்வாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்கிய நிலையில் மட்டக்களப்பிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் சனிக்கிழமை வந்த வீ.ஆனந்தசங்கரி நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (மேலும்....)

மாசி 22, 2011

அன்பான மக்களே... இதையும் படியுங்கள்!

புலிகளுக்கு பயந்து பதுங்கி வாழ்ந்த சமூகவிரோதி. புலி உறுப்பினர் புலிகளின் முக்கியஸ்தர், புலிகளின் இரகசிய இரட்டை உளவாளியாக வலம்வரும் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளியிட்டுள்ள இரங்கற் செய்தி!

ஈழத் தமிழர்கள் அரசியல் ரீதியாக தன்னாட்சி உரிமையைப் பெறுவதும் அதை நோக்கி உழைப்பதுமே திருமதி வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற(புலி) உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளியிட்டுள்ள இரங்கற் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அமரத்துவம் அடைந்த செய்தி தமிழ் மக்களை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த கருவறை என்ற வகையில் ஈழத்தமிழர்கள் மாத்திரமல்லாமல் உலகத் தமிழர்கள் அனைவருமே பார்வதியம்மாளை உணர்வு ரீதியாகத் தமக்கு நெருக்கமான ஓர் உறவாகவே கருதி வந்துள்ளனர். (மேலும்....)

மாசி 22, 2011

மாசி 22, 2011

2ஜி: திரைமறைவில் சில உண்மைகள்

(ஆர்.பத்ரி)

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீடு தொடர்பான விவாதங்கள் பரபரப்பாக ஒவ் வோர் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கோணங் களில் கருத்துக்களை வாத, பிரதிவாதங்க ளாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்ற னர். மக்கள் அனைத்தையும் மவுனமாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் எழுந்துள்ள இந்த முக்கியப்பிரச்சனை, பொது வெளியில் அனைத்துத் தரப்பினராலும் விருப்புவெறுப்பின்றி நடுநிலையோடு விவா திக்கப்படவேண்டும்.
(மேலும்....)

மாசி 22, 2011

துயரத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்ட நடைபயண விரார்கள் தமது புதுடில்கியை நோக்கிய நடைபயணத்தை நாக்பூர் நகரை அடைந்து உள்ளனர்

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் சென்னையிலிருந்து புது டில்கியை நோக்கிய ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் போது ஈழத் தமிழர் விடுதலைக்காக தன்னுயிர் துறந்த செல்வன். ச. சுதர்சன் அவர்களின் பூதவுடலுக்கு நடை பயணவீரார்களின் இறுதி மரியாதைக்கு   பின்  உடல் விமானத்தில் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யபட்டுள்ளது. துயரத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்ட நடைபயண விரார்கள் தமது புதுடில்கியை நோக்கிய நடைபயணத்தை நாக்பூர் நகர் ஊடாக மேற்கொண்டு உள்ளனர். (மேலும்....)

மாசி 22, 2011

China, the elephant in the global economic-recovery room

(DOUG SAUNDERS)

In public, the world’s financial chiefs warn of a “two-speed recovery” in which some countries, especially China, are experiencing fast-growing economies while others, notably the United States and much of Europe, are mired in debt and unemployment and barely growing at all. In private, though, the central bankers and finance ministers of the world’s 20 largest economies, gathered in Paris this weekend to confront looming global economic problems, almost all paint a picture of China’s surging economy as a powerful black hole whose inward draw is sucking up a huge share of the world’s debt, currency reserves, food, commodities and jobs. (more.....)

மாசி 22, 2011

அரசாங்க கட்சி இந்த தேர்தலிலும் வெற்றிவாகை சூடும்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பொய் வதந்திகளை தொடர்ந்தும் பரப்பி, அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது, தங்களின் தேர்தல் பிர சாரங்களை முடுக்கிவிட்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி யும், ஜே. வி. பி. யினரும் உட்கட்சி பூசல்களினால் நிலைதடுமாறி இருப்பதாக அரசியல் அவதானிகள் கூறு கிறார்கள். மக்கள் ஆதரவை இழந்து வரும் ஜே. வி. பி. யினர் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இப் போது செல்லாக் காசாக மாறி, சிறைக் கைதியாகி இருக் கும் சரத் பொன்சேகாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக் கையை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற முயற்சியில் வெற்றிக் கிண்ண சின்னத்தில் போட்டியிட்டும் படு தோல்விக்கு முகம் கொடுத்தனர். இதனால் ஜே. வி. பி.யினர் மீண்டும் தங்களின் பழைய மணி தேர்தல் சின்னத்துடன் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். (மேலும்....)

மாசி 22, 2011

Tigers’ defeat made ICC Cricket World Cup 2011 matches possible at SL venues

(Chief of Defence Staff)

Fearing LTTE attacks, Australia and the West Indies declined to play their opening games in Colombo in 1996 at the Wills World Cup.

(by Shamindra Ferdinando)

Chief of Defence Staff Air Chief Marshall Roshan Goonetileke says Sri Lanka’s war victory over the LTTE has made it possible to hold the ICC Cricket World Cup 2011 matches in the country. Had the LTTE leadership escaped the army cordon and sought refuge in the northern jungles, the group could have posed a threat in spite of losing its conventional military capability, the SLAF Commander told The Island. (more....)

மாசி 22, 2011

500 ஆண்டு பழமையான “கிறிஸ்டி” மொழி அடியோடு அழிந்து போகும் பரிதாபம்

மகாராஷ்டிராவின் கொங்கன் பிராந்தியத்தில் பேசப்படும் 500 ஆண்டு பழைமை வாய்ந்த கிறிஸ்டி என்ற மொழி, தற்போது படிப்படியாக அழிந்து வருகிறது. மகாராஷ்டிராவின் கொங்கன் பிராந்தியத்தில் உள்ளது ரய்காட் மாவட்டம். இங்குள்ள அலிபாக் நகரத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் கொராலி என்ற கிராமம் உள்ளது. இங்கு 1,200 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 500 ஆண்டுகளுக்கு முன் போர்த்துக்கேயர்கள் இங்கு ஆதிக்கம் செலுத்திய போது கிறிஸ்டி மொழி இங்கு பரவியது. போர்த்துக்கேய மொழியின் ஒரு பிரிவாக இது கருதப்படுகிறது. கொராலி கிராமத்தில் மட்டும் அல்லாமல் அதை சுற்றியுள்ள மற்ற பகுதிகளிலும் இந்த மொழியை பேசுவோர் கணிசமான அளவில் இருந்தனர். (மேலும்....)

மாசி 22, 2011

பிரதேச சபைகளை கைப்பற்றுவதன் மூலம் ;பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்ய முடியும்

வவுனியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை நாம் கைப்பற்றுவதன் மூலம் பின்தங்கியுள்ள கிராமங்கள் பல வகையிலும் துரிதமாக அபிவிருத்தி காணும் என தெரிவித்துள்ள வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன், அதற்காக எங்களுடைய வேட்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் நான்கு பிரதேச சபைகளின் வேட்பாளர்களுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போது மேற்கண்டவாறு அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரின் இணைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப் பினருமான அப்துல்பாரி சரீப்வ் உள்ளிட்ட அனைத்து வேட்பா ளர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். வேட்பாளர்கள் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்க வேண் டும். அத்துடன் கிராமிய மட்டத் தில் சிறு கருத்தரங்குகளை வைத்து அரசாங்கத்தின் வேலைத் திட்டங் களை விளக்கலாம் என்றார்.

மாசி 22, 2011

எமனில் அரச ஆதரவாளர்கள் பல்கலை மாணவரிடையே மோதல்

எமன் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். தலைநகர் சனாவிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் அரசுக்கெதிரான போராட்டங் களை ஆரம்பித்திருந்தனர். ஜனாதிபதி மாளிகையை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெ டுத்த போது எமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலிஹ் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு நிலைமைகள் மேசமடைந்தன. தொடர்ந்தும் மாணவர்கள் ஜனாதிபதிக்கெதிரான போக்கை கடைப்பிடிப்பதால் அரசின் ஆதரவாளர்கள் பொல்லுகள், போத்தல்கள், கற்கள் சகிதம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தனர். இதனையடுத்தே இரு தரப்பாரிடையேயும் மோதல்கள் வெடித்தன. வீதிகளை மாணவர்கள் தடைசெய்ததால் இதில் பொலிஸார் தலையிடவேண்டியேற்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது.

மாசி 22, 2011

 

லிபியாவில் பணியாற்றிய வெளிநாட்டு தூதுவர்கள் பதவி விலகல்

லிபியாவில் அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டத்தையடுத்து அங்குள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவர் பதவி விலகியுள்ளனர். சீனா, அரபுலீக் என்பவற்றுக்கான தலைவர்களே தங்கள் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். இதேவேளை லிபியாவுக்கான இன்னும் சில தூதுவர்களும் லிபியாவில் ஜனநாயகம் இல்லை, எனவே அந் நாட்டுக்கான தூதுவராகப் பணியாற்றுவதில் கெளரவம் இல்லையெனக் கூறியுள்ளனர். அப்பாவி மக்களை லிபிய இராணுவ கொலை செய்கின்றது. இதை சர்வதேச சமூகம் தடுக்க வேண்டுமென லிபியாவின் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் வெளிநாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதிகளை நிறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதே வேளை லிபிய ஜனாதிபதியின் மகன் ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரித்துள்ளார்.

மாசி 22, 2011

தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் அதிர்ச்சி பின்னணி

தமிழக எம்.பி.க்களில் 11 பேர் மீதும் எம்.எல்.ஏ.க்களில் 76 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. இதில் ஏழு எம்.பி.க்கள் 25 ஏம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் கொலை, கொலை முயற்சி ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டவை. மேலும் 36 எம்.பி.க்கள், 54 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். நெஷனல் எலக்ஷன் வட்ச் மற்றும் அசோசியேஷன் ஆப்டெமாகிரடிக் ரிபார்ம்ஸ் ஆகிய அமைப்புக்கள், தமிழக எம்.பிக்கள், எல்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் மற்றும் சொத்து விவரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளது. அவை பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 39 லோக்சபா எம்.பி.க்களில் 10 பேர் மீது குற்ற வழக்கு கள் (ஆறு எம்.பி.க்கள்) மீது கடுமையான வழக்குகள் உள்ளன. தி.மு.க. எம்.பி.க்கள் 18 பேரில் நான்கு பேர் மீது குற்ற வழக்கும், ஒருவர் மீது கடுமையான வழக்கும், அ.தி.மு. க. எம்.பி.க்கள் ஒன்பது பேரில் நான்கு பேர் மீது கடுமையான குற்ற வழக்கும், ம.தி.மு.க. வின் ஒரு எம்.பி.யின் மீது குற்ற வழக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரு எம்.பி. மீது கடுமையான குற்ற வழக்கும் உள்ளன. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள கேரளா, தமி ழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிக எம்.எல். ஏ.க்கள் மீது குற்ற வழக்கு உள்ளது.

மாசி 22, 2011

ஜனாதிபதியின் சிந்தனைப்படி அனைவருக்கும் மும்மொழி தேர்ச்சி அவசியம்

பல் ஊடகக் கருவியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் நவீனமுறைக் கற்பித்தலை வகுப்பறைகளில் மேற்கொள்ள வேண்டும் என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று உலக நாடுகளில் கற்பித்தலில் நவீன முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. மாறி வரும் உலகிற்குகேற்ப நாமும் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பல்ஊடக உபகரணங்களைப் பயன்படுத்தி கணனி ஊடாக கற்பிக்க வேண்டும். இந்த நவீன முறைக் கற்பித்தல் உத்தி மாணவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய கவர்ச்சிமிகு கற்பித்தல் முறையாகும். 2020 ஆம் ஆண்டில் எல்லோரும் கணனி அறிவு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தமிழ், சிங்களம் உட்பட மும்மொழிகளிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறி வரும் ஜனாதிபதி அவர்களின் இலக்கினை நிறைவேற்ற அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

மாசி 22, 2011

See…. CPU for all Scams….RADIA

மாசி 22, 2011

 

மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில், மேற்கு வங்காளத்தில் முக்கிய எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. ஆனால், காங்கிரஸின் பல்வேறு கொள்ளைகளை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மத்திய ரெயில்வே மந்திரியுமான மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்தார். எனவே, மேற்கு வங்காளத்தில் விரைவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கொல்கத்தாவில் நடந்த மாபெரும் கண்டன பேரணியில் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது அவர், “காங்கிரஸ் மற்றும் எஸ்.யு.சி.ஐ. கட்சிகளுடன் எங்கள் கட்சி கூட்டணி அமைப்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மேற்கு வங்காளத்தில் 35 ஆண்டுகளாக நடந்து வரும் இடதுசாரி ஆட்சியை அகற்ற காங்கிஸுசுடன் கூட்டணியை தொடர விரும்புகிறோம். மாநிலத்தில் உள்ள இடதுசாரி சிந்தனை கொண்ட மக்கள் அனைவரும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்”

மாசி 22, 2011

சவூதி அரேபியாவில்

புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க முனைந்தோர் கைது

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரஜைகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட் டுள்ள மனித உரிமை அமைப்பு அரசியல் கட்சிகளின் செற்பாடுகளுக்கு சவூதி அர சாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளது. அரசியல் கட்சியொன்றைப் பதிவு செய்வதற்கான அனுமதியை சவூதி மன்னரிடம் கோரிய 05 பேர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்னும் விடுதலையாகவில்லை. ‘இஸ்லாமிக் உம்மா கட்சி’ என்ற அரசியல் கட்சியையே இவர்கள் ஸ்தாபிக்க இருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட தைக் கண்டித்து சவூதியில் ஆர்ப்பாட்டங் களும் இடம்பெற்றன. 2005ம் ஆண்டு மாநகர சபைக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாசி 21, 2011

சமஷ்டி, சுயாட்சி என்ற பேச்சு இனி எடுபடாத விடயங்களா?

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சில அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தார். 13வது திருத்தச்சட்;டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக அதிகாரப் பகிர்வுகளை சாத்தியப்படுத்துதல், இநத அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துதற்கு உடனடியாக ஒரு ஆணைக்குழுவை ஏற்படுத்துதல். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவமுடையவர்கள் விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக்கூடிய திறனாளர்களைக் கொண்ட நிபுணர்குழுவொன்றை அமைத்தல் அவசியமாகும் என்பது வரதராஜப்பெருமாளின் சாராம்சக் கருத்தாகும். (மேலும்....)

மாசி 21, 2011

கடற்றொழிலாளர்களை அரசியல் பகடைக்காய்களாக பயன்படுத்துவது தவறு

டற்றொழிலாளர்கள் இந்தியர்களாகவோ இலங்கையர்களா கவோ இருந்தாலும், அவர்கள் அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு தேவையான போஷாக்கு உணவான மீனை பிடித்து வருகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இவர்கள், கடல் கொந்தளிக்கும் போதும், மழை, காற்று போன்ற சீரற்ற காலநிலையிலும் கடலுக்கு சென்று தொழில் புரிகிறார்கள். இந்தக் கடல் தொழிலாளர்கள் தாங்கள் படும் கஷ்டத்திற்குரிய வருமானத்தைப் பெறுகிறார்கள் என்று நாம் கூறமுடியாது. பெரும்பாலும், கடலுக்குச் செல்லும் இழுவைக் கப்பல்களின் உரிமையாளர்களும், மீன் தரகர்களுமே கடல் தொழிலாளர்களின் உழைப்பின் மூலம், கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறார்கள். (மேலும்....)

மாசி 21, 2011

"When u can't laugh on the same joke again & again, then why do u keep crying over the same thing over and over again”

A wise man once sat in the audience & cracked a joke.
All laughed like crazy. After a moment he cracked the same joke again and a little less people laughed this time.
He cracked the same joke again & again, when there was no laughter in the crowd,  
he smiled and said,
"When u can't laugh on the same joke again & again, then why do u keep crying over the same thing over and over again”
 

மாசி 21, 2011

புதுமாத்தளனில் கைவிடப்பட்டவை

உரிமைகோராத வாகனங்களை ஏலத்தில் விற்க தீர்மானம்

புதுமாத்தளனில் கைவிடப்பட்ட நிலையில் மீட்டெடுக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் உரிமையாளர் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தி விட்டு பெற்றுச் செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு ஒரு வருடகாலம் கழிந்துள்ள நிலையிலேயே அதனை ஏலத்திற்கு விற்பதற்காக தீர்மானத்தை தான் எடுத்ததாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். மீட்டெடுக்கப்பட்ட கனகர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உபகரணங்களின் பெருமளவிலானவை உரிமையாளர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தியதை அடுத்து கையளிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், 800 மோட்டார் சைக்கிள்கள், 50 கனகரக வாகனங்கள், கணனி, போட்டோ பிரதி இயந்திரம், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளே எஞ்சியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். (மேலும்....)

மாசி 21, 2011

அமெரிக்கா அமெரிக்காதான்……?

இஸ்ரேலுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை அமெரிக்கா ரத்து செய்தது

இஸ்ரேல் சட்டவிரோதமாக கட்டிவரும் குடியிருப்புகள் குறித்து கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தின் மூலம் ரத்து செய்தது. 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபையில் இதற்கான தீர்மானத்தை மற்ற நாடுகள் அதரித்து கண்டன தீர்மானங்கள் கொண்டுவந்தன. ஆனால் அத்தீர்மானம் நிறைவேற்றாமல் தனது ரத்து அதிகாரம் மூலம் ரத்து செய்தது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன் பகுதிகுயில் சட்ட விரோதமாக குடியமர்த்தும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தப் பிரதிநிதி மன்ஜீவ் சிங்க் பூரி கொண்டு வந்தார். (மேலும்....)

மாசி 21, 2011

Two doctors accused of drugging and sexually assaulting woman

Two doctors have been charged Friday for allegedly drugging and sexually assaulting a 23-year-old woman at a downtown hotel on Sunday. Police believe there may be more victims. The victim met with the two men at a hotel bar on Queen St. W. and University Ave. Sunday, police said. The men said they would provide her with career advice, police added. The woman was later taken to a second bar in the Wellington St. W. and Spadina Ave. area, where they allegedly put an unknown substance in her drink. The accused took her back to the hotel, where they allegedly sexually assaulted her, police said. Amitabh Chauhan, 32, of Ancaster and Suganthan Kayilasanathan, 32, of Markham have been charged with administering a noxious substance and two counts of gang sexual assault. Anyone with information is asked to contact police or Crime Stoppers anonymously at 1-800-222-TIPS (8477).

மாசி 21, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 35,36வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 35 வது நாளான நேற்று (19-02-2011) நடைபயண வீரர்கள் அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர். நடைபயணம் மேற்கொள்ளபடவில்லை. நெடுந்தூர நடைபயணத்தின் 36வது நாளான இன்று 20-02-2011 ஞாயிற்றுக் கிழமை பகல் 2 மணியளவில் நடைபயண வீரர்கள் அனைவரும் ஈழத் தமிழர் விடுதலைக்காக தன்னுயிர் துறந்த செல்வன். ச. சுதர்சன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதன் பின்ன்னர் இரவு 7:00 மணியளவில் சுதர்சன் அவர்களின் உடல் விமானத்தில் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்படுகிறது.  சென்னைவரை விமானத்திலும் அதன் பிறகு அமரர் ஊர்தியிலும் சுதர்சன் அவர்களின் உடல் கொண்டு செல்லப்பட்டு 21-02-2011 திங்கள்கிழமை காலையில் புதுக்கோட்டையில் (லேனாவிளக்கு) உள்ள அகதிகள் முகாமிற்கு கொண்டு வரப்படும். அன்னாரின் இறுதிச் சடங்கு புதுக்கோட்டை (லேனாவிளக்கு) அகதி முகாமில் 21-02-2011 திங்கள்கிழமை பிற்பகல் நடைபெறும்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

ஈ.என்.டி.எல்.எப்.

மாசி 21, 2011

Cuba Public Forum

How to Improve Socialist Economy: Speaker: Jorge F. Soberón Luis, Honourable Consul General of Cuba in Toronto

U.S.-based terrorism against Cuba and the case of the Cuban Five Speaker: Lorne Gershuny, Attorney at Law

WhenThu, February 24, 7pm – 9pm GMT-05:00

WhereO.I.S.E., 252 Bloor Street W., Room #2-281

Who(Guest list has been hidden at organizer's request)

மாசி 21, 2011

உலகின் சிறந்த விமான நிலையம்

உலகில் மிகச் சிறந்த சர்வதேச விமான நிலையம் என்ற பெயரினை இந்தியாவில் ஐதராபாத் நகரில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுள்ளது. டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் 4ம் இடத்தில் உள்ளது. சர்வதேச விமான நிலையங்களுக்கான கவுன்சில் என்ற அமைப்பைச் சேர்ந்த ஏ. எஸ். கியூ என்ற நிறுவனம் உலக அளவில் சர்வதேச விமான நிலையங்களில் உள்ள பல்வேறு வசதிகள், பயணிகளுக்கு அளிக்கும் சேவை குறித்து ஏறத்தாழ 3 இலட்சம் விமான பயணிகளிடம் சர்வே நடத்தியது. இதில் இந்தியாவில் ஆந்திர மாநில ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் உலகில் சிறந்த விமான நிலையம் என தேர்வு செய்துள்ளது. டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 4ம் இடத்தில் உள்ளது. இதில் ஐதராபாத் சர்வதேச விமான நிலையம் ஜி. எம். ஆர். என்ற நிறுவனம் வடிவமைத்து அதனை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கான விருது வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி டில்லியில் நடக்கவுள்ள விழாவில் வழங்கப்படுகிறது.

மாசி 21, 2011

யாழ்.பிராந்திய நிலையத்தில் பொறியியல்மாணி கற்கை

இலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகத்துக்கு பொறியியல் தொழில்நுட்ப மாணி, கைத்தொழில்மாணி, தொழில்நுட்ப டிப்ளோமா, கைத்தொழில் கல்வி டிப்ளோமா கைத்தொழில் கல்வி சான்றிதழ் தொழில்நுட்ப முதுமாணி 2010/2011 கற்கை நெறிக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விசேட கருத்தரங்கு எதிர்வரும் 12ம் திகதி யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அமைந்துள்ள யாழ். பிராந்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.  இக்கற்கை நெறிகள் அனைத்தும் இலங்கைத் திறந்தவெளிப் பல்கலைக்கழக யாழ். பிராந் தியத்தில் நடத்தப்படவுள்ளதாக யாழ். பிராந்திய இணைப்பாளர் தெரிவித்துள்ளார். இக்கற்கை நெறிக்கான விண்ணப்பப்படிவங்கள் 12ம் திகதி முதல் 26ம் திகதிவரை யாழ். பிராந்திய நிலையத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் மாணவர்கள் இக்கற்கை நெறிக்கான தகுதிகளை அலுவலக விளம்பரப் பலகையில் பார்வையிட்டு விண்ணப்பிக்க முடியுமென அறிவித்துள்ளார். (மேலும்....)

மாசி 21, 2011

கறுப்புப்பண குற்றச்சாட்டுக்கு பதில்
அத்வானிக்கு சோனியா எழுதிய கடித விவரம்

தான் வெளிநாட்டில் கறுப்புப்பணம் பதுக்கி வைத்திருப்பதாக பா. ஜனதா கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, அத்வானிக்கு சோனியாகாந்தி எழுதிய கடித விவரம் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் உள்ள இரகசிய வங்கிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அவருடைய கணவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி ஆகியோர் பெயர்களில் கறுப்புப்பணம் போட்டு வைக்கப்பட்டுள்ளதாக பா. ஜனதா நியமித்த ஒரு குழு அறிக்கை வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து, கடந்த 15ந் திகதி பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதினார். அதையடுத்து, 16ந்தி திகதி சோகியாகாந்தியிடம் வருத்தம் தெரிவித்து அத்வானி கடிதம் எழுதினார். (மேலும்....)

மாசி 21, 2011

Dear Canada grant of Rs.633,875/=

We are pleased to inform you that we have completed the 1st phase of the Dear Canada grant of Rs.633,875/= with which we supported 1111 families in Vellavely D.S division. The delay was due to the lack of communication between the G.A’s office and D.S office. We proceeded to Vellavely on the 15th with relief supplies to Vellavely where we were informed by the D.S the goods are required to another villages not mentioned in the G.A’s letter. We were then forced to return with the goods without the letter from the G.A. Subsequently the approval letter from the G.A was delivered and we went the following day with the goods. Enclosed are the first letter from the G.A and subsequent letter from D.S approved by the director planning for your information. In all it took three days to complete distribution. Each family was given a mat, a bed sheet and sanitary kits to 1111 families in 4 villages in the Vellavely D.S division.

மாசி 21, 2011

மீண்டும்

தனி தெலுங்கானா மாநிலம் கோரி போராட்டம்

ஐதராபாத்தில், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் திடீரென்று வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது 5 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பொலிசாரின் கூடாரங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினரும், தெலுங்கானா பகுதியில் உள்ள பிற கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். (மேலும்....)

மாசி 21, 2011

60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைப்பு

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படிருப்பதால் அறுபது (60) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்குத் தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார். இதற்கேற்ப எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி 241 உள்ளூராட்சி மன்றங்களு க்குத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த 60 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் எதிர்வரும் 17ம் திகதி தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக் கைகளை இடைநிறுத்துமாறும் தேர்தல் ஆணையாளர் மாவட்ட மட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களுககு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று பிரதி தேர்தல் ஆணையாளர் மஹிந்த பாலசூரிய கூறியுள்ளார். (மேலும்....)

மாசி 21, 2011

மக்கள் போராட்டத்தால்
அரபு நாடுகளில் தொடர்ந்து பதற்றம்
 

லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், யெமன் உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை கோரி மக்கள் போராட்டம் நடத்துவதால், அரபு நாடுகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லிபியாவில் இராணுவம் தாக்கியதில் 84 பேர் பலியாகி உள்ளனர். துனிசியா, எகிப்து ஆகிய நாடுகளில் நீண்ட காலமாக நடந்து வந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த இரண்டு நாடுகளிலும் ஜனாதிபதிகள் பதவி விலகி ஜனநாயக ஆட்சிக்கு வழி விட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மற்ற அரபு நாடுகளிலும் இந்த கிளர்ச்சி பரவி உள்ளது. அல்ஜீரியா, பஹ்ரைன், லிபியா, ஜோர்டான், யெமன் ஆகிய நாடுகளில் ஆயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். குறிப்பாக லிபியாவில் மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெறுகிறது. (மேலும்....)

மாசி 21, 2011

யாழ். மாவட்டத்திலுள்ள 4 வீதிகள் புனரமைப்பு

யாழ்ப்பாணத்தில் எண்பத்தைந்து கிலோ மீற்றர் நீளமான நான்கு நெடுஞ்சாலைகள் சீன அரசாங்கத்தின் நிதியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுவருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில், யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்-பலாலி வீதி, புத்தூர்-மீசாலை வீதி என்பனவே இவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதி ஆவரங்கால் சந்தி முதல் நெல்லியடி வரையான பாதை அகலமாக்கப்பட்டு காப்பற் வீதியாக மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் -காங்கேசன்துறை வீதியை அகலமாக்கும் பணி இலுவிலில் ஆரம்பமாகியுள்ளது. இவ்வீதிகளைப் புனரமைக்கும் பணிகளை சீன அரசாங்கத்தின் ரயில்வே அபிவிருத்திச் சங்கம் மேற்கொண்டுவருகிறது.

மாசி 21, 2011

உலகப் பொருளாதார சமச்சீரற்ற நிலைக்கு இந்தியா காரணம் அல்ல

சர்வதேச சந்தையில் உற்பத்திப் பொருட்களின் விலை, அபரிமிதமாக கூடுவதற்கும் இந்தியா பொறுப்பாக முடியாது. பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றப் பாதையில் உள்ள இந்தியா, பருவகால காரணிகளால் எளிதில் பாதிக்கப்படுகிறது. அதனால், உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் உணவுப் பணவீக்கமும் அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்க அதிகரிப்பு, மக்களின் நுகர்வு முறையிலும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. (மேலும்....)

மாசி 21, 2011

ஐ.நா.வில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு ஆதரவாக அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப் பெரும் சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இது தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக பிரதிநிதிகள் சபை கருத்து தெரிவித்துள்ளது. (மேலும்....)

மாசி 21, 2011

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 17 இலங்கையர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாந்தோட்டை கடற்பரப்பிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் படகு ஒன்றில் சென்றுகொண்டிருக்கும் போதே நேற்று முன்தினம் இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட படகும் அதில் பயணித்துக்கொண்டிருந்த 17 பேரும் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

மாசி 21, 2011

 

பிரபாகரனின் தாயார் காலமானார்

பிணத்தை வைத்து வியாபாரம் நடத்தும் பிரபாகரனின் 'இறுதி' குடும்ப உயிரும் மறைந்தது

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம் மாள் தனது 81வது வயதில் நேற்றுக் காலை காலமானார். நீண்டகாலமாகச் சுகயீனமுற்று வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவரின் உடல்நிலை கடந்த சில வாரங்களாக மிகவும் மோசமடைந்திருந்தது. இவர் நேற்றுக் காலை 6.10 மணியளவில் வைத்தியசாலையில் உயிரிழந்தார். இவருடைய இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் தெரிவித்தார். பார்வதியம்மாளின் மூன்று பிள்ளைகள் கனடா, டென்மார்க், இந்தியா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இறுதிக் கிரியைகளில் இவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரியவருகிறது. இறுதிக்கட்ட மோதல்களில் பிரபாகரனின் பெற்றோரும் இடம்பெயர்ந்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் பிரபாகரனின் தந்தையாரான வேலுப்பிள்ளை உயிரிழந்திருந்தார். அதன் பின்னர் தாயாரின் நிலைமை மோசமடைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாசி 21, 2011

21 இலங்கை மீனவர்கள், 4 படகுகள் இந்தியாவில் விடுவிப்பு

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 இலங்கை மீனவர்களும் நான்கு படகுகளும் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கடற் படையினரால் அழைத்துவரப்பட்ட 21 இலங்கை மீனவர்களும், 4 படகுகளும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படி இந்த 21 மீனவர்களும் இந்தியாவினால் விடுவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை கடற் பரப்பை பாதுகாப்பதும், அத்துமீறல் இடம் பெறுவதை தடுத்து நிறுத்துவதும் கடற் படையின் பொறுப்பாகும் என்று தெரிவித்த கொமாண்டர் வர்ண குலசூரிய, அதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் கடற்படைத் தளபதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாசி 20, 2011

மீண்டும் மீண்டும் நிதி திரட்டும் புலிகளின் நாடுகடந்த தமிழீழக்காரார்

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் புலிகளின் பிரதமர் ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களிடம் நிதி திரட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் தலா 15 அமெரிக்க லொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ருத்ரகுமாரனுக்கு எதிரான அமைப்புக்களை விடவும் தம்மை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு நிதி திரட்டப்படுவதாக இலங்கை புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும் ருத்ரகுமாரனின் இந்தத் திட்டத்தினால் புலம்பெயர் புலி தமிழர்களுக்கு இடையில் மேலும் பிளவு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. புலிகளின் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தினால் விநியோகம் செய்யப்படும் அடையாள அட்டைகளில் பல்வேறு மோசடிகள் இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாசி 20, 2011

புரிந்துணர்வுடன் தீர்க்கப்படவேண்டிய இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை

இந்திய - இலங்கை மீனவர்கள் தொடர்பான பிரச்சினை இன்றைய பேசு பொருளாக உள்ளது. இலங்கை மீனவர்களும் இந்திய மீனவர்களும் ஒரே கடற்பரப்பில் மீன் பிடிக்கின்றனர். இரு நாட்டினருக்குமான கடல் எல்லை தீர்மானிக்கப்பட்டு தத்தம் கடற் பிரதேசத்திலே மீன்பிடிக்க வேண்டுமென்ற நிலைப் பாடே இருந்தபோதும் சில சந்தர்ப்பங்களிலே கடல் எல்லை தெரியாது அடுத்தவரின் கடற் பிரதேசத் துக்குள் பிரவேசிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இரவிலே கடல் எல்லை தெரியா மல் ஏற்படும் இத்தகைய சம்பவங்களை பொறுத்துக்கொள்ளலாம். (மேலும்....)

மாசி 20, 2011

நுரைச்சோலை அனல் மின்நிலையம் முழுமையாக நிலக்கரியில் இயக்கம்!

புத்தளம், நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின்நிலையத்திற்கு முழுமையாக நிலக்கரி எரிபொருளை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த அனல் மின்நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் டிசல் எரிபொருளை பயன்படுத்தி பரீட்சிக்கப்பட்டது. பின்னர், கிரமமாக நிலக்கரி பயன்படுத்தி மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது 100 சத வீதம் நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி வலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (மேலும்....)

மாசி 20, 2011

பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்!

பிரபல சினிமா பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன். 16 வயதினிலே படத்தில் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்ற பாடல் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனார். தொடர்ந்து சினிமாவில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். வில்லனாகவும், குணசித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்தார். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.15 மணிக்கு இறந்தார். அவரது உடல் சாலி கிராமம் கம்பர் தெருவில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. மலேசியா வாசுதேவன் மலேசியாவில் பிறந்தவர். சினிமாவில் பாடுவதற்காக தமிழ்நாட்டுக்கு வந்தார். டெல்லி டூ மெட்ராஸ் படம் மூலம் பாடகராக அறிமுகம் ஆனார். அவர் தமிழில் 8 ஆயிரம் பாடல்களும், மற்ற மொழிகளில் 4 ஆயிரம் பாடல்களும் பாடி உள்ளார். இவரது மகன் யுகேந்திரன், மகள் நிஷாந்தினி ஆகியோரும் பின்னணி பாடகர்களாக உள்ளனர்.

மாசி 20, 2011

எகிப்தின் திரொலி

அரபுலகில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கெதிரான புரட்சி டியூனீஷியாவில் ஆரம்பமாகி இரண்டே மாதங்களேயாகின்றன. டியூனீஷியாவில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பதற்கு இளைஞனொருவனுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதையடுத்து அவன் தனக்குத்தானே தீமூட்டி இறந்து போனான். டியூனீஷிய, எகிப்திய சர்வாதிகார ஜனாதிபதிகள் நாட்டை விட்டு ஓட்டம் பிடிப்பதற்குத் தூண்டுகோலாய் அமைந்த சம்பவம் இதுதான். ஆனால் அவ்விளைஞனின் மரணத்தோடு ஆரம்பமான புரட்சிகள், டியூனீஷியா, எகிப்து என்பனவற்றோடு மட்டும் நின்று விடவில்லை. மாறாக யெமன், ஜோர்தான், லிபியா, சவூதிஅரேபியா, பஹ்ரேன் என அரசுக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் புரட்சிக்கு அது வழிகோலியிருக்கிறது. (மேலும்....)

மாசி 20, 2011

நிர்ப்பந்தம் காரணமாக கூட்டமைப்பு புலிகளின் குரலாக செயற்பட்டது

மனித உரிமை மீறல் பற்றிப் பேசுவதற்கு பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அருகதை இல்லை. வியாபாரத்துக்கு வந்த பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை முதலிலும் பின்னர் கண்டியையும் கைப்பற்றியபோது நடைபெற்ற போரிலே தேசாபிமானமிக்க சுதேசிகள் கொல்லப்படவில்லையா? அது மனித உரிமை மீறல் இல்லையா? கடந்த காலங்களில் அரசியல் வாதிகளாகவும் தலைவர்களாகவும் இருந்து பணிபுரிந்த பலர் கொல்லப்பட்டமை மனித உரிமை மீறல் இல்லையா? வடபுலத்திலுள்ள 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் ஓரிரு நாளில் விரட்டியடிக்கப்பட்டமை மனித உரிமை மீறல் இல்லையா? உலக நாடுகள் பலவற்றிலே போரினாலும் அதிகாரப் போட்டியாலும் எத்தனை உயிர்கள் மடிகின்றன. அவைகள் ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஏன் தெரியவில்லை? இலங்கை விஷயம் தானா அவர்களின் கண்ணில் புலப்படுகின்றது. காழ்ப்புணர்வு காரணமான இந்தச் சேறுபூசும் நடவடிக்கை பொருத்தமற்றது என்பதே வெளிப்படையான உண்மை. (மேலும்....)

மாசி 20, 2011

எகிப்து தந்த பாடம்

லெனின் பெனடிற்

ஜனநாயகப் புரட்சி என்பது ஆயுதம் தாங்கி அரசுக்கெதிராகப் போராடுவதே என்று இத்தனை காலமும் சித்தரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் ஆயுதமின்றி இரத்தம் சிந்தாமல் மகத்தான மக்கள் எழுச்சியினாலும் ஒற்றுமையினாலும் ஜனனாயகத்தை வென்றெடுத்த சாதனையை எகிப்திய மக்கள் சாதித்திருக்கிறார்கள். இந்த புரட்சியின் சாதனையான இப்போராட்தைத் தலைமைதாங்க எவ்வித தலைவர்களும் இன்றி அல்லது வழிகாட்டலின்றி எல்லோரும் அந்நாட்டு மன்னர்களாக இந்த ஜனனாயகப் போராட்டத்தை எவ்வித சிதைவோ சீரழிவோ இன்றி உறுதியுடன் முன்னெடுத்துச் சென்று இறுதியாக எகிப்திய சர்வாதிகாரியை பதவியிலிருந்து விரட்டியடித்து ஓர் அற்புத சாதனையைப் படைத்துள்ளார்கள். (மேலும்....)

மாசி 20, 2011

மீனவர் பிரச்சினையில் அரசியல்,  தமிழக தலைவர்கள் தேர்தல் சித்து

(விசு கருணாநிதி)

இலங்கை தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் லாபம் தேடிக்கொண்டதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான் காலத்திற்குக் காலம் முன்னணி வகிக்கின்றனர். தமிழகத்தில் சட்ட சபைத் தேர்தல் நடைபெறும் காலத்தில் பிரசாரம் செய்வதற்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையே அவர்களுக்குக் கைகொடுத்து வருகிறது. தி.மு.க, அ.தி.மு.க. என இரு பிரதான அரசியல் கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தே தமது அரசியல் காய்நகர்த்தலை முன்னெடுத்து வருகின்றன. இதில் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கைதேர்ந்தவராகத் திகழ்கிறார். இப்போது அவரது மகள் கனிமொழி அப்பாவின் வழியில் தப்பாமல் இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்துப் பிரசாரம் செய்வதில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். (மேலும்....)

மாசி 20, 2011

பலமான எதிரணி இன்மையால் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தமக்கிடையே பலப்பரீட்சை

ஆளும் கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கூட்டமைப்பிற்கு போட்டியாக பலமான எதிரணி இல்லாத காரணத்தினால் இப்போது கூட்டமைப்பு வேட்பாளர்கள் தமக்கிடையே போட்டிகளில் ஈடுபட்டு பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்நிலை மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு நிலவுவதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. பிரஜைகள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மக்கள் பெரு வரவேற்பு அளித்து வருகின்றனர். (மேலும்....)

மாசி 20, 2011

இரட்டை பிரஜாவுரிமை சர்ச்சை புலம்பெயந்தோரை பாதிக்காது
 

இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைகள் நவீனமயப்படுத்தப்பட வுள்ளதுடன் அரசுக்கும், பிரஜாவுரிமை பெறுபவர்களுக்கும் அதிகளவு நன்மைகள் கிடைக்கும் விதத்தில் இந் நடை முறையை மேம்படுத்தும் வேலைகளை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டு வருகிறது என திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்தபெரேரா தெரிவித்தார். இப் புதிய நடவடிக்கை மூலம் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் உட்பட புலம் பெயர்ந்துள்ள இலங்கை யர்கள் மேலும் நன்மையடைவார்களே தவிர எவ்விதத்திலும் பாதிக்கப் படமாட்டார் கள் என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்....)

மாசி 20, 2011

இலங்கை மீனவர்களின் வலைகள் மீண்டும் அறுப்பு

தமிழக மீனவர்கள் 136 பேர் விடுதலையாகி சென்ற அன்றும் கட லில் யாழ். மீனவர்களின் வலைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ். தவரட்ணம் தெரி வித்தார். பல இலட்சம் ரூபா பெறுமதி யான வலைகள் நாசமாக்கப்பட்டு ள்ளன. இழுவைப் படகுகளினால் இவை அறுத்து எடுக்கப்படுகின்றன. தமிழக மீனவர்களை பாதுகாப் பாக நாம் அனுப்பி வைக்கிறோம். மறுபுறம் மேலும் வள்ளங்கள் உட்புகுந்து எமக்கு அழிவை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மாசி 20, 2011

எல்லைதாண்டும் இந்திய இழுவைப் படகுகள், 30 வருடகால அநீதி தொடர வேண்டுமா?

 “30 வருட காலம் சொல்லொணாத் துயர்களை அனுபவித்துவிட்டு பிச்சைக்காகச் செல்லும் எமது மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது” என வடமாகாண கடற்றொழி லாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ். தவரட்ணம் தெரிவித்தார். “எல்லை தாண்டி அத்துமீறி இழுவைப்படகுகள் மூலம் தமிழக மீனவர்கள் வருவதைத் தடுக்க எவரும் முன்வருவதாக தெரியவில்லை. முதலில் அவர்கள் வருவதை தடுத்தாலே பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம்”.  (மேலும்....)

மாசி 19, 2011

தமிழக மீனவர் 136 பேரும் விடுதலை

தமிழகக் கடல் எல்லை வரை இலங்கைக் கடற்படை படகுகள் பாதுகாப்பு

பருத்தித்துறை முனை மற்றும் மாதகல் கடற்பரப்பில் யாழ். கடற்றொழிலாளர்களினால் சிறை பிடிக்கப்பட்ட 136 தமிழக மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த அவர்களது 25 வள்ளங்களிலேயே அவர்களை பாதுகாப்பாக அனுப்புமாறு பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிவான்கள் பொலிஸாருக்கு உத்தரவிட்டனர். இரண்டு கடற்படை படகுகள் 136 தமிழக மீனவர்களையும் தமிழக கடல் எல்லைவரை சென்று வழியனுப்பி வைத்தது. கடந்த 15ஆம் திகதி 18 இழுவைப் படகுகளில் பருத்தித்துறை முனை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 112 தமிழக மீனவர்களை யாழ். மீனவர்கள் சிறைபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.  (மேலும்...)

மாசி 19, 2011

உலகக் கிண்ண கிரிக்கெட், விசேட பாதுகாப்பு ஏற்பாடு

இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பாதுகாப்புக்காக முப்படையினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் உட்பட அனைத்துத் தரப்பினரும் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த பாதுகாப்புப் படையினர் உள்ள இலங்கையில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இன்டர்போல் பொலிஸாரின் உதவியும் பெறப்படவுள்ளது. அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் நாம் இணைப்பாளர்களாகச் செயற்படுவோம். (மேலும்...)

மாசி 19, 2011

தமிழக மீனவர்களைக் கைது செய்தது சிறிலங்கா அரசுதான்!

தமிழகத்து மீனவர்களை கடத்திச் சென்று யாழ்ப்பாணச் சிறையில் அடைத்தது யாழ்ப்பாணத் தமிழர்கள் செய்த செயலல்ல. சிங்கள அரசின் உளவுத்துறையின் ஏற்பாட்டில் டக்கிளஸ் தேவானந்த என்ற அமைச்சர்தான் இதனைச் செய்வித்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டு மீனவர்கள் சிலருக்கு மீன்பிடிப் படகுகளை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்த வழங்கினார். அறுபது படகுகள் வரை முற்பணம் செலுத்தாமல் சிங்கள அரசின் சார்பாக தவணை முறையில் வழங்கப்பட்டது. அந்தப் படகுகளைக் கொண்டு அவர்கள் மீன்பிடித்து வந்தனர். (மேலும்...)

மாசி 19, 2011

Notice of Annual General Meeting of the Past Pupil’s Association of St Michael’s College (Batticaloa) North America - 2011

Members are kindly invited to attend the Annual General Meeting of the Past Pupil's Association of St Michael's College (Batticaloa) North America which will take place at the Best Western Primrose Hotel, Toronto on Saturday 19th March, 2011 at 4pm. Please find enclosed the agenda for the Annual General Meeting.

Thanks,

Yours Sincerely,

Stanley Chellapillai
General Secretary
P.P.A. of S.M.C.(North America)

மாசி 19, 2011

(மேலும்...)

மாசி 19, 2011

The Egyptian revolt is coming home

(by John Pilger)

The uprising in Egypt is our theatre of the possible. It is what people across the world have struggled for and their thought controllers have feared. Western commentators invariably misuse "we" and "us" to speak on behalf of those with power who see the rest of humanity as useful or expendable. The "we" and "us" are universal now. Tunisia came first, but the spectacle always promised to be Egyptian. As a reporter, I have felt this over the years. At Tahrir ("liberation") Square in Cairo in 1970, the coffin of the great nationalist Gamal Abdel Nasser bobbed on an ocean of people who, under him, had glimpsed freedom. (more....)

மாசி 19, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 34வது நாளாவது நாளின் துயரச்சம்வத்தின் விவரம்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 34வது நாளான நேற்று 18-02-2011 வெள்ளிக்கிழமை இரவு 07:30 மணியளவில் நாக்பூர் மாநகரத்துக்கு 15கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்னால் நடைபயண வீரர்கள் இரவு முகாம் அமைத்தனர். இரவு 07:40 மணியளவில் நடைபயண வீரர்களுக்கு மருந்துகள் கொடுப்பதற்கு பொறுப்பாக இருந்த லேனாவிளக்கு, புதுக்கோட்டை அகதிகள் முகாமைச் சேர்ந்த திரு. சந்திரதாஸ் சுதர்சன் அவர்களும் நடைபயணக்குழுவின் லொறி ஓட்டுனரான தமிழகத்தின் ஈரோடு என்ற இடத்தைச் சேர்ந்த திரு. ரஞ்சித் அவர்களும் குறைவாக இருந்த மருத்துகள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் மருந்து கடைக்குச் செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த மாருதி வேனுடன் மோதுபட்டு விபத்து ஏற்பட்டது. (மேலும்...)

மாசி 19, 2011

எல்லை தாண்டிய மீன்பிடி, தடுத்து நிறுத்த நடவடிக்கை

எல்லைதாண்டிய மீன்பிடித்தலை தடுத்து நிறுத்துவதனூடாக இலங்கை மற்றும் தமிழக கடற்றொழிலாளர் களிடையே ஏற்படும் தகராறுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பிரதிநிதி ஒருவரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதிக்கு அவசர கடிதம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக மக்களின் முதல்வராகிய உங்கள் மீது ஈழத் தமிழ் மக்கள் தீராத பற்றுதலை கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். (மேலும்...)

மாசி 19, 2011

கனிமொழியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு

முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை தி. மு. க. உறுப்பின ருமான கனிமொழியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்றதாக ஸ்வான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால்வா அண்மையில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்வான் நிறுவனம் கலைஞர் டி.வி.க்கு ரூபா 240 கோடி கொடுத்ததாகத் தெரியவந்தது. இந்த நிலையில், ஸ்வான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியது தொடர்பாக டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார், இயக்குநர் கனிமொழி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சில கேள்விகள் அடங்கிய பட்டியலை சில நாட்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் கனிமொழிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் கலைஞர் டி.வியின் மற்றொரு இயக்குநரான தயாளு அம்மாளை விசாரணைக்கு அழைக்கும் திட்டம் சிபிஐக்கு இல்லை எனத் தெரிகிறது.

மாசி 19, 2011

லிபியா, பஹ்ரைனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்

டுனீசியா, எகிப்தை தொடர்ந்து பஹ்ரைன், லிபியாவிலும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளாக லிபிய ஜனாதிபதியாக இருக்கும் முஅம்மர் கட்டாபிக்கு எதிராக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 14க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், ஜனாதிபதி கட்டாபி ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மேலும் பலர் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது. இதன்போது 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். (மேலும்...)

மாசி 19, 2011

டில்லியில் சோனியா காந்தியுடன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டில்லியில் பா. ம. க. தலைவர் டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அரசியலில் கடந்த சில நாட்களாக ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தி. மு. க. - காங்கிரஸ் கூட்டணியில் பா. ம. க. சேருவது பற்றி ஒரு முடிவான சூழ்நிலை ஏற்படாத நிலை இருந்து வந்தது. கடந்த 3ம் திகதி சென்னையில் தி. மு. க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் அமைச்சர் கருணாநிதி பேசும்போது பா. ம. கவை கூட்டணியில் சேர்ப்பதற்கு சோனியாகாந்தி அவ்வளவாக விரும்பவில்லை என்பது போல பேசியதாக பரவலாக பேச்சு எழுந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டில்லியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சோனியா காந்தி வீட்டுக்கு காலை 11.30 மணிக்குச் சென்றார். அங்கு அவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது என்றும், இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள் என்றும் தெரிகிறது.

மாசி 19, 2011

பின்லேடன் சிக்கினால் எங்கு சிறை வைப்பது?

சர்வதேச பயங்கரவாதியும் அல் கைதா அமைப்பின் தலைவருமான ஒசாமா பின்லேடன் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டால், அமெரிக்க இராணுவ சிறையான குவாதனான்மோ சிறைதான் என அந்நாட்டு உளவு அமைப்பான சி. ஐ. ஏ. அமைப்பின் தலைவர் லியோன் பெனிட்டா தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் தொடர்பான உயரதிகாரிகள் கூட்டம் அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் உள்ள செனட் சபையில் நடந்தது. இதில் அந்நாட்டு புலனாய்வு மற்றும் உளவு அமைப்பு தலைவர்கள், அட்டோனி ஜெனரல்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (மேலும்...)

மாசி 18, 2011

அரச எதிர்ப்புப் போராட்டங்கள் பல நாடுகளில் தொடர்கின்றன

எகிப்திலும் டுனிசியாவிலும் நடந்த அரச எதிர்ப்புப் போராட்டங்களையடுத்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகள் எங்கிலும் பரவியுள்ளது. அந்தந்த அரசாங்கங்களால் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தமே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எகிப்துக்கும் டுனிசியாவுக்கும் இடையில் இருக்கும் எண்ணெய் வள நாடான லிபியா மற்றும் பஹ்றெயின், யெமன், ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் நேற்று முன்தினம் அரச எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. வெகுசனத் தொடர்பு ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் மக்கள் மத்தியில் அரச எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி பிரசாரத்தை மேற்கொள்வதில் பெரும் பங்காற்றுகின்றன.

மாசி 18, 2011 

எகிப்திய இராணுவத் திட்டங்கள் மீது அமெரிக்க அரசு அதிக கரிசனை

எகிப்தில் முபாரக்கின் ஆட்சிக்குப் பின்னரான நடைமுறைகள் தொடர்பாக இராணுவ ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா பிரத்தியேகமாக அழுத்தத்தைப் பிரயோகித்து வருகிறது. எகிப்தின் இராணுவத் திட்டங்களில் அதிக கரிசனையைக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அவை எகிப்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த வெள்ளியன்று ஆட்சியைக் கைப்பற்றிய எகிப்து இராணுவம், அங்கு மிக நீண்டகாலமாக அமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தை நீக்கத்தவரியிருந்தது. முன்னைய அமைச்சரவை கலைக்கப்பட் டதாகக் கூறப்படுகின்றபோதும் பல அரச அதிகாரிகள் இன்னும் தமது பதவியிலேயே இருக்கின்றனர். அரசியலமைப்பு சீர்திருத்தங்களும் தேர்தல்கள் நடாத்துவதற்கான காலக்கெடு வும் உறுதியான மக்கள் அரசை அமைக்கப்போதுமானதாக இருக் குமா என்பது கேள்விக்குறியாக இருக் கிறது. இராணுவத்தின் அதிகாரம் மேலோங்குவதாக போராட்டக்காரர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.  என்ன இது ஆடு நனையுது என்ற ஓநாய் அழுத கதையாக இருக்கின்றது....?

மாசி 18, 2011 

ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள் மட்டுமா? _

அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள் மட்டுமே என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஜொப்ஸ்(55) தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். இந்நிலையில் ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றி செய்தி வெளியிட்டுள்ள 'த நெசல் என்குயரர்' என்ற சஞ்சிகையானது வைத்தியர் ஒருவரை மேற்கோள் காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவரின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் நோய் முற்றியுள்ளதால் அவரின் ஆயுட்காலம் வெறும் 6 வாரங்களே என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் தோற்றம் மிக மோசமாக உள்ளதாகவும் எடையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அப்பிள் நிறுவனம் இது தொடர்பில் மறுப்பு அறிக்கை எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

மாசி 18, 2011 

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அமைச்சர் டக்ளஸ் அவசர கடிதம்

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இரு தரப்பு மீனவ மக்களிடையேயும் நிரந்தரமான உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக நேரடியாகவே முதல்வர் கருணாநிதியின் பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவது வரவேற்கத்தக்கது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மாசி 18, 2011 

தேர்ந்து எடுக்கப்பட்ட ஜனாதிபதியிடம் 6 மாதங்களில் ஆட்சி ஒப்படைப்பு

எகிப்து நாட்டில் முபாரக் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதன் காரணமாக அதிபர் முபாரக் நாட்டை விட்டு ஓடிவிட்டார். இராணுவ தளபதிகள் ஆட்சியை கைப்பற்றி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் முபாரக்குக்கு எதிராக போராட்டத்தை நடத்திய மக்கள் பிரதிநிதிகள் கெய்ரோ நகர சதுக்கங்களில் இருந்து வெளியேறாமல் முழு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை தொடர்ந்து சதுக்கங்களில் தான் இருப்போம் என்று கூறி வருகிறார்கள். இதற்கிடையில் இராணுவ தளபதிகளின் கவுன்சில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தேர்ந்து எடுக்கப்பட்ட ஜனாதிபதியிடம் 6 மாதங்களுக்குள் ஆட்சியை ஒப்படைப்போம் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறும் என்றும் இராணுவ தளபதிகள் ஆட்சியில் நீடிக்க மாட்டார்கள் என்றும், தற்போதைய நிலைமை இராணுவத்தின் மீது திணிக்கப்பட்டு உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மாசி 18, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 32,33வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 32வது நாளான 16-02-2011, புதன்கிழமையன்று காலை 06:00 மணியளவில் கிராஞ்சி என்ற இடத்திலிருந்து நடைபயணம் தேசியநெடுஞ்சாலையில் தொடர்ந்தது. வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை நடைபயண வீரர்கள் கொடுத்த இந்தி மொழியிலான பிரசுரங்களை விரும்பி பெற்று வாசித்து ஈழத் தமிழர் பிரச்சினைகளையும், அவர்கள் பட்ட துண்பங்களையும் தெரிந்துகொண்டு வாழ்த்துச் சொல்கின்றனர். (மேலும்....)

மாசி 18, 2011

ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுகள் அதன் தோல்விக்கு அடித்தளம் அமைக்கின்றது

இலங்கையிலுள்ள யானைகளின் எண்ணிக்கை நாளாந் தம் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான ஜீவமரணப் போராட்டம் காரணமாக குறைந்து வரு கிறது. இதனால், எங்கள் நாட்டின் வரலாற்றில் முதல் தட வையாக யானைகள் பற்றிய கணக்கெடுப்பு ஒன்றை எதிர் வரும் ஒகஸ்ட் மாதத்தில், மேற்கொள்வது என்று வன விலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அது போன்றே, கடந்த காலத்தில், நாட்டின் மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்டு உழைத்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் இன்று யானைகளுக்கு நடந்தது போன்ற அழிவு ஆரம்பமாகியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் ஆதவா ளர்கள் எத்தனை பேர் இலங்கையில் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வது பொருத்தமாக இரு க்கும்.(மேலும்....)

மாசி 18, 2011

இரணைமடுக்குள அபிவிருத்திக்கு ஆசிய அபி. வங்கி நிதி உதவி

கிளிநொச்சி இரணைமடுக்குளம் புனரமைப்புக்கென, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி தமக்கு கிடைத்திருப்பதாக கிளிநொச்சி பிரதி நீர்பாசன பொறியியலாளர் என். சுதாகரன் தெரிவித்துள்ளார். இதன்படி குளக்கட்டின் புனரமைப்புக்கென 1100 மில்லியன் ரூபாவும், வாய்க்கால் உள்ளிட்ட புனரமைப்புக்காக 2200 மில்லியன் ரூபாவும் தற்போது தமக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வாய்க்கால் உள்ளிட்ட திருத்த பணிகளுக்கு ஐ. எப். ஏ. டி. அமைப்பு இந்த 2200 மில்லியன் ரூபாவையும் வழங்கியுள்ளதாகவும் மழை காரணமாக தாமத மடைந்திருந்த திருத்த வேலைகள் மீண்டும் தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனைவிட இரணைமடுக்குளத்திலிருந்து திருவையாறு பகுதிக்கு நீர்ப்பாசனம் வழங்குவதற்காக இயந்திரங்களை திருத்தும் பணிகளும் நடைபெறவுள்ளதாகவும் இவ்வாறு இந்த ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் 1100 ஏக்கர் மேட்டு நிலப்பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியும் எனவும் சுதாகரன் தெரிவித்தார். எவ்வாறாயினும், இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் விநியோகம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டமாக இரணைமடுக்குளம் புனரமைப்பு செய்யப்படுவது அவசியம் என்றும் அதனடிப்படையில் இந்த குளம் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாசி 18, 2011

சுயஸ் கால்வாயில் ஈரானிய போர்க் கப்பல்கள், பயணத்தை தடை செய்தது எகிப்து

சுயஸ் கால்வாயை கடக்கவிருந்த இரு ஈரானிய கப்பல்களையும் எகிப்து நேற்று தடுத்தது. செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கும் நீர்ப்பரப்பே சுயஸ் கால்வாயாகும். ஏலவே, இரு ஈரானியப் போர்க் கப்பல்கள் சுயஸ் கால்வாயைக் கடக்கவிருக்கின்றனவென இஸ்ரேல் தகவல் வெளியிட்டிருந்தது. அந்த இரு பக்கல்களின் பயணமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சுயஸ்கால்வாய் அதிகாரசபை தெரிவித்திருந்தது. அல்வான்ட், கார்க் என்ற அவ்விரு கப்பல்களும் சவூதியின் ஜெட்டா துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் போதே அடையாளங்காணப்பட்டன. சுயஸ் கால்வாயினூடாக பயணிக்கும் கப்பல்களின் பட்டியலில் தற்போதைக்கு எந்த ஒரு ஈரானியக் கப்பலும் இல்லை என தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (மேலும்....)

மாசி 18, 2011

யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் ஐந்து மாடி சந்தைக் கட்டடம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஐந்து மாடிக் கட்டடத்தின் மூலம் நகரின் வர்த்தக நடவடிக்கைகளும் அபிவிருத்தியும் முன்நோக்கி நகரும் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கூறினார். யாழ். நகரில் கஸ்தூரியார் வீதியில் உள்ள மாநகர சபையின் காணியில் புதிய ஐந்து மாடி சந்தைக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா இதனைத் தெரிவித்தார். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபடி நகரின் அபிவிருத்தியிலும் அழகிலும் நாங்கள் அக்கறையுடன் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம். அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா யாழ். நகரை எழில் கொஞ்சும் நகராக மாற்ற வேண்டும் என்பதில் நாட்டமுடன் செயற்பட்டு துரித அபிவிருத்திகளை முன்னெடுக்க எமக்கு உதவுகிறார். (மேலும்....)

மாசி 18, 2011

125 ஆண்டுகளுக்கு பிறகு

கோகோ கோலாவின் இரகசியம் அமெரிக்க வானொலியில் ஒலிபரப்பு

125 ஆண்டுகளுக்குப் பிறகு இரகசியமாக வைக்கப்பட்ட கோகோ கோலாவின் சூத்திரம் வெளியாகியுள்ளது. கடந்த 1886ம் ஆண்டு தான் கோகோ கோலா முதன் முதலாக தயாரிக்கப்பட்டது. முதலில் அட்லாண்டாவில் மட்டுமே விற்பனையான இந்த குளிர்பானம் பிறகு உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. கோகோ - கோலா விற்பனையாகத் தொடங்கியது முதல் பலரும் அதற்கு பிரத்தியேக சுவை அளிக்கும் சூத்திரத்தை தெரிந்துகொள்ள முயன்றனர். அதில் பலர் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூட கூறினர். ஆனால் யார் கையிலும் சிக்காமல் சூத்திரம் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட சூத்திரத்தை கண்டுபிடித்தவர் ஜான் பெம்பர்டன். இந்த சூத்திர இரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரே ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையத்தளத்திலும் வெளியாகி உள்ளது. கோகோ - கோலாவின் அதிகார பூர்வமான எழுத்துப் பிரதி அட்லாண்டாவில் உள்ள சன்டிரஸ்ட் வங்கியின் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 2 ஊழியர்களுக்கு மட்டும்தான் அந்த சூத்திரம் தெரியும் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணிப்பதில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் அவ்விருவர் மூலமும்தான் இரகசியம் வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

மாசி 18, 2011

வலிகாமம் வடக்கில் வீதி புனரமைக்க நடவடிக்கை

உலக வங்கியின் நிதி உதவியுடன் மானிப்பாயிலிருந்து இணுவில் ஊடாக கோண்டாவில் டிப்போவைச் சென்றடையும் வீதி போக்குவரத்திற்கு வசதியாக அகலமாக்கப்படவுள்ளது. வட மாகாணத்தில் 100 கி. மீற்றர் நீளமுள்ள வீதியைப் போக்குவரத்திற்கு வசதியாக அகலமாக்கி காப்பெற் வீதியாக மாற்றி அமைப்பதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது. இதில் யாழ். மாவட்டத்தில் 25 கி. மீற்றர் நீளமான வீதி மாற்றி அமைக்கப்படவிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து மானிப்பாய் ஊடாக பொன்னாலை செல்லும் பிரதான வீதியில் மானிப்பாயிலிருந்து இணுவில் ஊடாக கோண்டாவில் டிப்போவைச் சென்றடையும் சுமார் 5 கிலோ மீற்றர் நீளமான வீதி தற்பொழுது திருத்தி அமைக்கப்படவிருக்கிறது. (மேலும்....)

மாசி 18, 2011

சமூக நலக் கொள்கைகள் தொடரட்டும்  வெனிசுலா அரசுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் பேரணி

ஜனாதிபதி ஹியூகோ சாவேஸின் சமூக நலக் கொள்கைகளுக்கு ஆதர வாகவும், தொழிலாளர் களின் உரிமைகளை வலுப் படுத்தும் முயற்சிகளை அதி கப்படுத்தக் கோரியும் ஆயி ரக்கணக்கான தொழிலா ளர்கள் வெனிசுலா தலை நகர் காரகாசில் நடந்த பேர ணியில் பங்கேற்றனர். வெனிசுலா நாடாளு மன்றத்தை நோக்கிச் சென்ற இந்தப் பேரணியில் சுகா தாரம், கல்வி, மின்சாரம், எண்ணெய் ஆகிய துறை களைச் சேர்ந்த தொழிலா ளர்கள் பங்கேற்றனர். தொழி லாளர்களின் பிரதிநிதி களை நாடாளுமன்ற சபா நாயகர் பெர்னாண்டோ சோடோ ரோஜாஸ், சந் தித்து அவர்களின் மனு வைப் பெற்றுக் கொண்டார். (மேலும்....)

மாசி 18, 2011

பருத்தித்துறை

நீதிமன்றக் கட்டட தொகுதி நிர்மாணம்

பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடத் தொகுதியின் நிர்மாண வேலைகள் சுமார் 66 மில்லியன் ரூபா செலவில் நடைபெற்று வருகின்றன. கரவெட்டிப் பிரதேச செயலகப் பிரிவில் வதிரியில் உள்ள தனியார் கட்டடங்களில் இவ்விரு நீதிமன்றங்களும் தற்காலிகமாக இயங்கிவருகின்றன. இக்கட்டட நிர்மாண வேலைகள் பூர்த்தியடைந்ததும் இந்நீதிமன்றங்கள் பருத்தித்துறையில் புதிய கட்டடத் தொகுதியில் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி 18, 2011

ஆட்சி மாற்றம் தேவை  மூன்றாவது நாளாக பஹ்ரைன் மக்கள் போர் முழக்கம்

இவ்வளவு மக்கள் திரண் டுள்ளதால் எங்கள் கோரிக் கையான ஆட்சி மாற்றம் என்பது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையுள்ளதாக பஹ்ரைன் அரசுக்கெதி ராகத் திரண்டுள்ள போராட் டக்குழுவின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான மக் கள் அரசுக்கெதிரான ஆர்ப் பாட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். அதோடு, போராடும் மக்களுக்கெ திராக கடுமையான வன் முறையை பாதுகாப்புப் படையினர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஃபாதல் அல் மத்ரூக்கின் இறுதி ஊர்வ லத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். அதில் பங் கேற்ற மாணவர்கள் தலை வர்களில் ஒருவரான பக்கர் அகில், எங்கள் உரிமை களை அமைதியான வழி யில் வலியுறுத்தி வருகி றோம். இவ்வளவு பெரிய மக்கள் கடல் திரண்டிருப்ப தால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என நம்புகி றோம் என்று குறிப்பிட் டார். (மேலும்....)

மாசி 17, 2011

அரச எதிர்ப்புப் போராட்டம் அரபு நாடுகளை தொடர்ந்து வட ஆபிரிக்காவுக்கும் பரவியது
 

லிபியாவின் கிழக்கு நகரில் போராட் டக்காரர் ஒருவரை பொலிசார் கைது செய்ததையடுத்து கொந்தளித்த மக்கள் கூட்டம் பொலிசாருடனும் அரச ஆதர வாளர்களுடனும் மோதியது. இதில் 14 பேர் காயமடைந்தனர். அதேவேளை லிபியாவின் தலைவர் கடாபிக்கு ஆதரவான போராட்டங்களும் வேறாக நடைபெற்றன. பொலிசார் கைது செய்த மனித உரி மைகள் செயற்பாட்டாளரை விடுவிக்குமாறு கோரி அரச அலுவலகமொன்றின் முன் னால் நின்று ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் கூட்டம் பின்னர் சாகா சதுக் கத்திற்குச் சென்றது. அங்கு அவர்களுக்கும் பொலிசார் மற்றும் அரச ஆதரவாளர்க ளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போதும் பின்னர் கலவரம் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்பட்டது. 10 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். (மேலும்....)

மாசி 17, 2011

புதுக்குடியிருப்பு

உதவி அரசாங்க அதிபர் பணிமனை மீள் நிர்மாணம்

போரினால் சேதமடைந்துள்ள புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பணிமனை வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கிறது. இதற்கான நடவடிக்கையில் உதவி அரசாங்க அதிபர் என். கோணேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பணிமனை, பிரதேச சபை ஆகியன இயங்க முடியாதவாறு பலத்த சேதத்திற்குள்ளாயின. இதனால் தற்பொழுது உதவி அரசாங்க அதிபர் காரியாலயம், பிரதேச சபை காரியாலயம் ஆகியன றெட்பானா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஒரு பகுதியில் இயங்கி வருகின்றன. போரினால் சிதைவுண்டுள்ள வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வடக்கின் துரித மீள்ச்சித் திட்டத்தின் கீழ் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தற்பொழுது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் புதுக்குடியிருப்பு உதவி அரசாக அதிபர் பணிமனையும் புதிதாக நிர்மாணிக்கப்பட இருக்கின்றது. இதற்கான ஒழுங்குகளை புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ளார்.

மாசி 17, 2011

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவத்தினர்

எகிப்திலே மிக நீண்டகாலமாகத் தடைசெய்யப்பட்டிருந்த முஸ்லிம் சகோதரத்துவத்தினர் எகிப்தில் ஜனநாயகம் அமைந்த பின்னர் தாம் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தனர். அதேசமயம், ஜனாதிபதி வேட்பாளரை தாம் நியமிக்கப் போவதில்லை என உறுதி கூறியுள்ளனர். எனினும் எகிப்தின் எதிர்கால அரசியலில் முஸ்லிம் சகோதரத்தினர் முக்கிய பங்கு வகிப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மாசி 17, 2011

தோப்புக்காடு வீதியை புனரமைக்கக் கோரிக்கை

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாதுள்ள தோப்புக்காடு வீதியைப் புனரமைக்குமாறு இப் பிரதேச மக்கள் தோப்புக்காடு கிராம முன்னேற்றச் சங்கத்தின் ஊடாக காரைநகர் பிரதேச சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 1991 ஆம் ஆண்டு இடப் பெயர்வின் பின்னர் கடந்த வருடம் மீண்டும் இப் பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தத் தொடங்கினர். இவ்வருடம் ஜனவரி மாதத்தில் தோப்புக்கூடு மறைஞானசம்பந்த வித்தியாசாலையும் மீளத் திறக்கப்பட்டு மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். போக்குவரத்து செய்ய முடியாதளவில் குண்டும் குழியு மாகக் காணப்படும் இவ் வீதியை விரைவில் புனரமைக் கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாசி 17, 2011

டுனிசிய குடியேற்றவாசிகள் தொடர்பில் ஐரோப்பாவுக்கு இத்தாலி எச்சரிக்கை

இத்தாலியக் கடற்கரையில் டுனிசிய குடியேற்றவாசிகள் வந்திறங்கியதை யடுத்து இத்தாலி ஐரோப்பிய நாடுகளை எச்சரித்துள்ளது. லம்பெரசா தீவில் வந்திறங்கியிருக்கும் டுனிசிய குடியேற்ற வாசிகளால் ஐரோப் பாவின் சமூகக் கட்டமைப்புக்கள் குலைக் கப்படுமென இத்தாலியின் உள்ளக அமைச் சர் றொபெடோ மரோனி தெரிவித்திருந்தார். ஐரோப்பிய யூனியனின் எல்லை ஏஜென்சி தனது வேவுப் படகுகளையும் வான்படையையும் இத்தாலிக்கு உதவிக்கு அனுப்புகிறது. அதே சமயம் சிசிலிக்கு அருகாமையில் 30 பேருடன் சென்று கொண் டிருந்த படகொன்று இடைமறிக்கப்பட்டது. அப்படகில் இருந்தோர் எகிப்திலிருந்து வந்தவர்களாக இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் மட்டும் டுனிசியாவிலிருந்து 5000 குடி யேற்றவாசிகள் லம்பெரசா பகுதியை வந்தடைந்துள்ளனர்.

மாசி 17, 2011

யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் முகாமைத்துவ கற்கைநெறி

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் பாடசாலையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கையெடுத்துள்ளது. யாழ். மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், அத்துறையில், புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதற்கும் ஹோட்டல் பாடசாலையில் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கற்கை நெறிகள் பகுதிநேர கற்கை நெறியாகவும் முழு நேர கற்கை நெறியாகவும் நடத்தப்படவிருப்பதாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை யாழ். பிராந்திய இணைப்பாளர் இரா. அகிலன் தெரிவித்துள்ளார். கற்கை நெறிகளாக ஹோட்டல் பராமரிப்பாளர், ஹோட்டல் உபச ரணை யாளர், ஹோட்டல் உணவு தயாரிப்பாளர் என்பன ஆரம்பிக்கப்படவுள்ளன. பாடசாலையை விட்டு வெளியேறிய இளைஞர் யுவதிகள் இக் கற்கை நெறியில் இணைந்து கொள்ளலாமெனவும் தமது விண்ணப்பங்களை இணைப்பாளர் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை, இல 375, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மாசி 17, 2011

 

அமெரிக்காவுக்கு ஆப்கான் போரினால்  ஒரு நாளுக்கு ரூ. 1,500 கோடி செலவு

ஆப்கானிஸ்தான் போர் காரணமாக அமெரிக்காவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1,500 கோடி செலவு ஆகிறது என்று இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான், ஈராக் 2012ம் ஆண்டுக்கு, அமெரிக்க இராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 5 இலட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபா ஆகும். இது கடந்த ஆண்டை விட 2 இலட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி ரூபா குறைவு ஆகும். ஈராக்கில் இராணுவ வீரர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் செலவும் குறைந்து வருகிறது. ஈராக்கில் எஞ்சி இருக்கும் 50 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இந்த ஆண்டு இறுதியில் நாடு திரும்புகிறார்கள்.

மாசி 17, 2011

அரசாங்கம் தேர்தல் இலாபத்தை எதிர்பாராமல் மக்கள் சேவையை தொடரும்

2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்படுத்திய அழிவுகளுக்கு அடுத்தபடியாக பெருமளவு அழிவு இந்தத் தடவை ஏற்பட்டு ள்ளது. இதனால் 50இற்கும் மேற்பட்டவர்கள் மரண மடைந்துள்ளார்கள். மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளா ர்கள். இலங்கையில் இந்த வெள்ள அனர்த்தத்தினால் 123,740 ஹெக்டயர் நெற்காணிகள் முழுமையாக அழிந்துள்ளன. இது இந்நாட்டின் மொத்த நெற்காணி பரப்பளவில் 40 சதவீதமாகும். இந்த வெள்ள அனர்த்தம் 400 ஏரிகளையும், நீர்த்தேக்கங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இத்துடன் பல்லாயிரக்கணக்கான கால்நடைகளும், இலட்சக்கணக்கான கோழிகளும் வெள்ளத்தினால் அழிந்து போயுள்ளன.(மேலும்....)

மாசி 17, 2011

தமிழ்நாடு சட்டசபை

தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்யவில்லை

திருமங்கலம் அருகே, குல தெய்வம் கோவிலுக்கு நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்ய வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார். திருமங்கலம் அருகே, காங்கேய நத்தத்தில் விஜயகாந்தின் குல தெய்வமான வீர சின்னம்மாள் கோவில் உள்ளது. அரசியலில் முக்கிய முடிவுகளை அவர் எடுக்கும் முன் இங்கு தரிசனம் செய்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை விஜயகாந்த், குடும்பத்தினருடன் அங்கு சென்றார். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. அதில் அவர்கள் கலந்துகொண்டனர். பத்து நிமிடங்கள் அங்கிருந்து விட்டு மதுரை புறப்பட்டனர். (மேலும்....)

மாசி 17, 2011

தமிழக மீனவர் 106 பேர் சிறைபிடிப்பு இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை!

புதுடெல்லி : தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ளதற்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இது போன்ற நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது’ என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. சமீபத்தில் இலங்கை கடற்படையால் 2 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், தமிழகத்தின் நாகை மாவட்டம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 106 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க நேற்று முன் தினம் கடலுக்கு சென்றனர். (மேலும்....)

மாசி 17, 2011

நாங்கள் செய்தது தவறு எங்களை மன்னியுங்கள் - இந்திய மீனவர்கள்

வடபகுதி கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் மேற்கொண்டதை இந்திய கடற்றொழிலாளர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதுடன் தமக்கு மன்னிப்பளித்து விடுவிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டனர். இதேவேளை, ஒரேசமயம் நூற்றியாறு பேர் பருத்தித்துறை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர்களை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கு வடமராட்சி கடற்றொழில் சமாசத்தினர் முன்வந்துள்ளனர். இதனை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரே தாய்மொழியினை பேசுவது மாத்திரமல்லாமல் வாழ்வாதாரத்திற்காக ஒரே தொழிலை மேற்கொள்பவர்கள் என்ற ரீதியில் வடமராட்சி சமாசத்தினரின் மனிதாபிமானத்தை பாராட்டியதுடன் சட்டம் தனது கடமையினைச் செய்து தமிழக கடற்றொழிலாளர்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பும் வரையில் அவர்களை கௌரவமாக பாதுகாத்து பராமரித்து அனுப்ப வேண்டியது எமது கடமை என்பதையும் வலியுறுத்தினார்.

மாசி 16, 2011

எமது பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும்

 ‘எமது நாட்டுப் பிரச்சினை களை எம்மால் தீர்க்க முடியும் என்பது நிரூபணமா கியுள்ள நிலையில் அவற்றை வைத்து வெளிநாடுகளில் தவறான பிரசாரங்களை மேற்கொள்வது எந்த விதத்தி லும் நல்லதல்ல என இல ங்கை தொழிலாளர் காங்கி ரஸின் தலைவரும் பிரதிய மைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். நாட்டில் அமைதியற்ற யுகமொன்றிருந்தது. தற்போது அந்த யுகம் மாற்றமடைந்து பூரண அமைதி நிலவுகின்றது. இத்தகைய தருணத்தில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த முயல்வது சிறந்ததல்ல எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். (மேலும்....)

மாசி 16, 2011

பருத்தித்துறை கடற்பரப்பில் 112 இந்திய மீனவர்கள் கைது

யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்த 112 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களது 18 இழுவைப் படகுகளையும் இழுத்து வந்துள்ளனர். இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறைமுனைக் கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது. இந்திய மீனவர்கள் கடந்த சில நாட்களாக இலங்கைப் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்களின் வலைகள், மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு, மீனவர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. (மேலும்....)

மாசி 16, 2011

உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20.50 கோடி

உலக அளவில் 20 கோடியே 50 இலட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில் ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களும் வேலை இல்லாமல் உள்ளனர். சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், உலகில் உள்ள எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன் பின், பொருளாதார மந்த நிலை சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது. (மேலும்....)

மாசி 16, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 31வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயண வீரர்கள் நேற்று இந்தியாவின் இரண்டு மாநிலங்களைக் (தமிழ்நாடு, ஆந்திரா) கடந்து மூன்றாவது மாநிலத்திற்குள் (மகாராஸ்ரா) நுழைந்தனர். மகாராஸ்ரா எல்லையிலிருந்து ஏழு கிலோ மீற்றர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை (7) யின் ஓரத்தில் முகாம் அமைத்திருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் நேற்று நடைபயண வீரர்கள் 32 கிலோ மீற்றர் தூரமே கடந்திருந்தனர். (மேலும்....)

மாசி 16, 2011

சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம் - கனடா

Swami Vipulananda Arts Society – Canada

அன்புடையீர்,

சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தின் ஒன்பதாவது வருடாந்த பொதுக்கூட்டம்

Date: Saturday, March 05/2011

Time: 2.30 PM

Place: York Civic Centre- # 2700, Eglington-West (Keel & Eglington)

சகல அங்கத்தவர்களையும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து, நீங்களும் புதியநிர்வாகத்தில் இணைந்து மன்றத்தின் வளர்ச்சிக்கும் அதன் நோக்கத்தையும் மேலும்சிறப்பாக எடுத்துச்செல்ல உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம். மேலும், இவ்வருட நிகழ்வுகளை சிறப்பாக நடத்திட புதியவர் களையும் உங்களுடன் அழைத்துவந்து மன்றத்துடன் இணைய உதவுமாறு அன்புடன் கேட்கின்றோம்.

நன்றி                 

S. உதயகுமாரன்                          

செயலாளர்

தொடர்புகளுக்கு: 905-277 9440,  647-224 8871,  905-568 0551

மாசி 16, 2011

காலி – மாத்தறை அதிவேக ரயில் சேவை நாளை ஆரம்பம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்ட காலி – மாத்தறை அதிவேக ரயில் சேவையை போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம நாளை புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆரம்பித்துவைக்கவுள்ளார். இது தொடாரபில் நாளை நடைபெறவுள்ள வைபவத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. சிறிகாந்தாவும் கலந்துகொள்கிறார்.
காலிக்கும் மாத்தறைக்கும் இடையில் மணித்தியாலயத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில்கள் பயணிக்கும் வகையில் ரயில் பாதைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
இந்த புனரமைப்புப் பணிகள் காரணமாக கடந்த ஆறு மாத கலம் காலிக்கும் மாத்தறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாசி 16, 2011

POTLUCK for Emergency Flood Relief February 19th 2011

“Sarvodaya is seeking donations to provide food, clothing and blankets; medical supplies; sanitary items; and tents or other forms of temporary shelter. Sarvodaya – JDC Community Disaster Management Centre (S-J-CDMC) in Moratuwa is operating around the clock to coordinate the relief efforts. “(http://www.sarvodaya.org)Please join us by donating a food item and or by ordering lunch packets to help out in this meritorious deed. Lunch packets will only be available on prior order please call as soon as possible to order the lunch packets and/or to contribute a food item.  Menu: Rice, Chicken or Devilled Sprats (Hallmasso Bedum), Lentil Curry (Parippu), Curried Beans, Coconut Sambol, Chutney… 

Cost: $5.00 Each

Location: 71 Cass Avenue, Unit 12, Scarborough, M1T-3P8 (Gayan 416-824-6153)                

Lunch packets will also be available at Westend Buddhist Centre (905-891-8412)

Monetary Donations Please contact following:

Toronto /Scarborough area - Chamila Jayatilake at 416-298-3696

Mississauga/Brampton area – Westend Buddhist Centre 905-891-8412

Please contact following people for lunch packet orders and/or to contribute a food item:

Suzan: 905-832-0638 / 647-779-2285

Chamila: 416-298-3696

Rupanjani: 416-321-6719

Girlin: 416-297-0972

மாசி 16, 2011

தி.மு.க ஆட்சி

தமிழர்களுக்கு ஒரு பொற்காலம்!

தி.மு.க. ஆட்சி தமிழர்களுக்கு ஒரு பொற்காலம் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறினார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 2008, 2009, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, 2007, 2008ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா, பாரதி எம். எஸ். சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. தமிழக அரசின் கவிஞர் பாரதி விருது ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்டு அவர் பேசுகையில், தமிழர்களுக்கு இது ஒரு பொற்காலம். கலைஞர்கள் மீதும், தமிழ் மீதும் எல்லை கடந்த அன்பு கொண்டவர் முதல்வர் கருணாநிதி அந்த அன்பை அவர் முதல்வராக இருப்பதால் தான் வெளிப்படுத்த முடிகிறது. (மேலும்....)

மாசி 16, 2011

பாகிஸ்தானில்

கைதான அமெரிக்கருக்காக வாதாடும் சட்டத்தரணிகளுக்கு தலிபான்கள் எச்சரிக்க

பாகிஸ்தானியர்கள் 2 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்கர் ரேமண்ட் டேவிஸ் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஆதரவாக வாதாடும் சட்டத்தரணிகளும் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியும், வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர். கடந்த மாதம் (ஜனவரி) 27 ஆம் திகதி லாகூர் நகரில் பாகிஸ்தானியர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற அமெரிக்கர் ரேமண்ட் டேவிஸ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். தூதர் என்ற முறையில் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரி வருகிறது. விடுதலை செய்யக்கூடாது என்று தலிபான்கள் எச்சரித்து உள்ளனர். (மேலும்....)

மாசி 16, 2011

கோமா நிலையில் ஹொஸ்னி முபாரக்?

ஜனாதிபதி மாளிகையில் முபாரக்கின் இரு மகன்கள் அலா மற்றும் கமாலுக்கு இடையில் தந்தையின் நிலை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. முபாரக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராக கமால் இருந்த போது, தன் நண்பர்கள் பலருக்கும் தொழில்துறையில் சட்டவிரோமாகத் தொழில் தொடங்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இதுதான் நாட்டை ஊழலுக்கு இட்டுச் சென்றது என்று அலா குற்றம்சாட்டினார். வாக்குவாதம் முற்றி இருவருக்கும் அடிபிடி சண்டை ஏற்பட்டது. அங்கிருந்த இராணுவத் தளபதிகள் சிலர் தலையிட்டு சமாதானம் செய்து ¨வைத்தனர். இதையடுத்து பதவி விலகப் போவதாக உரை எழுதி வைத்துள்ளார் தந்தை என்று கேள்விப்பட்ட கமால், அவருடன் பேசி செப்டெம்பர் வரை பதவி விலகப் போவதில்லை என்று பேச சம்மதிக்க வைத்தார். (மேலும்....)

மாசி 16, 2011

வீதியில் நடப்போரை பொலிஸார் கைது செய்வார்கள்

பாதசாரிகள் வீதி ஒழுங்குகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் இல்லையானால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுமென்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். பாதசாரிகள் பாதுகாப்பாக வீதியில் செல்வதற்கு மேல் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான வீதிகள் இப்போது நடைபாதைகள் அமைக்கப்பட்டி ருப்பதனால் அவர்கள் இனிமேல் வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு தடையாக வீதியில் நடந்து சென்றால் அல்லது மஞ்சள் கோட்டைத் தவிர மற்ற இடங்களில் வீதியைக் கடந்தால் பாதசாரிகளுக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கையை எடுப்பார்கள். (மேலும்....)

மாசி 16, 2011

கம்போடியா, தாய்லாந்து விவகாரம்

நிரந்தர யுத்தநிறுத்தத்துக்கு ஐ. நா. அழைப்பு

கம்போடியாவையும் தாய்லாந்தையும் நிரந்தர யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு வருமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை அழைத்துள்ளது. தென் கிழக்காசியாவிலே அயல் நாடுகளாக இருக்கும் கம்போடியாவினதும் தாய்லாந்தினதும் இராணுவத்தினர் எல்லைப் பிரச்சினை தொடர்பில் மோதலில் ஈடுபட்டனர். உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இருக்கும் இந்துக் கோயில் ஒன்றுக்கு உரிமை கோரியே இந்த மோதல் ஆரம்பித்தது. பின்னர் பதற்றம் நிறைந்த சூழலில் யுத்த நிறுத்தம் பேணப்பட்டது. இந்நிலையில் இம் முரண்பாட்டைத் தீர்த்து வைக்குமாறு தாய்லாந்தைப் பேச்சுக்கு அழைக்குமாறும் ஐ. நா. பாதுகாப்புச் சபையை கம்போடியா கோரியுள்ளது. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஆசியான் அமைப்பின் தலைவரும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சருமான மாட்டி நட்டலெகவா முன்னிலையில் சந்தித்தனர். நிரந்தர யுத்த நிறுத்தத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நட்டலெகவா கருத்துத் தெரி வித்தார்.

மாசி 16, 2011

 

எகிப்து, டுனிசியாவை அடுத்து பஹ்றெயினிலும் மக்கள் போராட்டம்

நேற்றுமுன்தினம் பஹ்றெயினில் நடாத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை எதிர்த்த பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் இறப்பர் குண்டுப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதில் ஒருவர் பலியானார். அரேபிய வளைகுடா மாநிலத்தின் தலை நகரான மனாமாவில் போராட்டத்துக்காக ஷைத் முஸ்லிம்கள் கூடிய பகுதியைச் சுற்றி ஹெலிகொப்டர்கள் வட்டமிட்டன. ஷைத் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பஹ்றெயினில் சுன்னி முஸ்லிம்களின் அதிகாரமே காணப்படுகிறது. திராஸ் கிராமத்திலே தமது அரசியல் உரிமைக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட பொலிஸாரைச் சுற்றிவளைத்த ஷைத் முஸ்லிம்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர். பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது 2000க்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்புக்குரல் எழுப்பினர். துப்பாக்கிக் குண்டு தலையிலும் காலிலும்பட்டதால் 24 வயது இளைஞர் பலியானார். டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களினூடே இந்த மக்கள் போராட்டம் மற்றும் ஊர்வலங்களுக்கான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பஹ்றெயின் சிறிய எண்ணெய் வள நாடான போதிலும் சுன்னி அல் கைஃபா குடும்பத்தின் பாரபட்சங்களுக்கு உட்பட்டதாகும். புதிய பிரதமரைத் தேர்வு செய்யக் கோரியும் சகல அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியுமே ஷைத் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாசி 16, 2011

யெமனில் தொடர்ந்து போராட்டம்

யெமன் நாட்டில் ஜனாதிபதியைப் பதவி விலக கோரி நேற்று முன்தினம் நான்காவது நாளாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொலிசாருக்கும், மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. யெமனில், அலி அப்துல்லாசலே 32 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வருகிறார். தற்போது எகிப்து மக்களின் போராட்டத்தை அடுத்து யெமனிலும் அதிபருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. நேற்று 4வது நாளாக, பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வக்கீல்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர், சனா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புறப்பட்டு அல் தாரிர் சதுக்கத்தை நோக்கி பேரணி நடத்தினர். அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியின் ஆதரவாளர்களும் சதுக்கத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். பொலிசார் இரு தரப்பையும் பிரித்து சதுக்கத்தை நோக்கி செல்வதை தடுக்க முயன்றனர். அப்போது எதிர்ப்பாளர்கள் மீது கம்பி வலைகளை வீசியும், லத்திகளால் தாக்கியும் பொலிசார் கடுமையாக செயல்பட்டனர். இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எதிர்ப்பாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பேரணியில், அதிபர் பதவி விலக கோரியும், ஊழலை ஒழிக்க கோரியும் கோஷங்கள் இட்டனர்.

மாசி 15, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 30வது நாள் ஆந்திராவை கடந்து மகாராஸ்ராவினுள்.....

நாம் கடந்த 30 நாட்களாக ஆந்திரப் பிரதேச மக்களின் ஆதரவினால் களைப்பில்லாமல் நடந்து நேற்று (14-02-2011 திங்கள் கிழமை) ஆந்திரப் பிரதேச எல்லையைக் கடந்து மகாராஸ்ர மாநிலத்தில் எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம். மகாராஸ்ர மக்களும், செய்தியாளர்களும், காவல்துறையினரும் எங்களை வரவேற்றனர். நாம் இன்னும் 1173 கிலோ மீற்றர் தூரத்தை 35 நாட்களில் நடந்து, வருகின்ற மார்ச் மாதம் 21ம் திகதி (2011) உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகர் சென்றடைந்து எமது இனத்தின் இன்றைய நிலையையும், எங்கள் இனம் காக்கப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கவுள்ளோம். (மேலும்....)

மாசி 15, 2011

சாவகச்சேரியில்

வெள்ளை வானில் சுற்றிய ஐவர் கைது

வெள்ளை வானில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலேயே நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இவர்களை கைதுசெய்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள வீதிவழியாக வந்துகொண்டிருந்த மேற்படி வெள்ளை வானை மறித்து சோதனையிட்ட பொலிஸார், அதில் பயணம் செய்த மேற்படி ஐவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். பொலிஸார் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அவர்களில் ஒருவர், வானிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாசி 15, 2011

சனசமூக நிலையத் தலைவரையே எங்களால் மாற்ற முடியவில்லை!

நாட்டின் தலைவர் விடுக்கும் உத்தரவை ஏற்றுச் சுட்டுத் தள்ளும் இராணுவ உலகில், எகிப்திய இராணுவம் மக்களின் புரட்சிக்கு மதிப்பளித்த பெருந்தன்மையை, கொடூரமான போக்கைக் கடைப்பிடிக்கும் இராணுவங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு மேலாக ஆட்சியை மாற்றி நாட்டிற்கு மீட்சியைப் பெற்றுக் கொடுக்க எகிப்திய மக்கள் தொடர்ச்சியாக நடத்திய போராட்டம் தூய்மையானது. அவர்களின் ஒற்றுமை உலகிற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. எகிப்திய மக்கள் நடத்திய போராட்டம் பற்றி நினைக்கும் போது நாம் எம்மட்டு. (மேலும்...)

மாசி 15, 2011

Salute the people’s victory!

Long live the Egyptian revolution!

Message from the International Action Center

 The International Action Center joins with the people of Egypt and the world in celebrating the stunning triumph of people's power and mass action in Egypt. The greatest analysts of human society described real revolutions as “festivals of the masses.” We see then that the 18 days that overturned the Hosni Mubarak dictatorship is one of the greatest revolutions in the history of humanity. Never before have so many in such a condensed period of time become the actors and writers of their own history. We congratulate the people of Egypt for their tremendous victory over a tyrant who for 30 years had the support of the “great powers” of the European Union and especially of the United States until the final moments of his reign. (more....)

மாசி 15, 2011

வவுனியா மாவட்ட

வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கங்கள் வழங்கல்

வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச சபைகளுக்கும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகவலை வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இன்னமும் முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறவில்லை இந்த பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் இன்னமும் நிவாரண கிராமங்களிலும் நண்பர்கள் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். குறித்த இரு பிரதேச சபைகளின் களநிலவரங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை தான் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாசி 15, 2011

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள், மதகுகள் புனரமைப்பு

வடக்கிலும், கிழக்கிலும் வெள்ள அழிவினால் பாதிக்கப்பட்ட வீதிகள் மதகுகள் உடன் மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 3500 மில்லியன் ரூபாவினை மீள் எழுச்சி திட்டத்தின் ஊடாக வழங்கி இவற்றை மீள்புனரமைப்பு செய்யவுள்ளது. உலக வங்கி மேற்படி அபிவிருத்திக்கான நன்கொடை நிதியினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கியுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக விபரங்கள் திரட்டப்பட்டு மதிப்பீடு தயாரிக்கப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் அபிவிருத்தி இடம்பெறும்.

மாசி 15, 2011

கரைச்சி வடக்கில்

இறால் பிடிக்க அனுமதி

கரைச்சி வடக்கு ஆணையிறவு, சுண்டிக்குளம்,காஞ்சிபுரம், போப்பாறை வரையான கடலேரிப் பகுதியில் இறால் கூடுகளை அமைத்து இறால் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் அறிவித்துள்ளது. கடந்த ஏழாம் திகதி கூடிய கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச பொதுச் சபையின் தீர்மானத்துக்கு அமைய எதிர்வரும் 20ம் திகதி இக்கடலேரியல் பரீட்சார்த்தமாக இறால் கூடுகளை அமைத்து இறால் பிடிக்க அனுமதி வழங்கப்படுமென அறிவித்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்ளூர் கொள்முதலாளர்கள் இறால் பிடிக்கும் கடற்றொழிலாளர் களிடம் இறால்களை கொள்முதல் செய்வதற்கு கரைச்சி கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசத்தில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவித்துள்ளனர்.

மாசி 15, 2011

உலக பொருளாதார நிலையில் ஜப்பானை பின்தள்ளியது சீனா

1968 இலிருந்து உலகின் இரண் டாவது பாரிய பொருளாதார நாடாக இருந்த ஜப்பானை தற் போது சீனா பின்தள்ளியிருக்கிறது. கடந்த வருடத்திற்கான ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3.9% ஆக இருந்த போதிலும் சீனாவுடன் ஈடுகொடுக்க ஜப்பானால் முடியவில்லை. வயது முதிர்ந்தோரின் சனத் தொகையாலும், அரச கடன் அதிகரிப்பு மற்றும் வேறுபல கார ணங்களாலுமே ஜப்பானின் பொரு ளாதாரம் பின்னடைவை எதிர் நோக்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய கார் சந்தையைக் கொண்டிருக்கும் சீனா வோ மிகப்பெரிய சக்தி நுகர்வையும் கொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவை நோக்கியே சீனா வின் பார்வை திரும்பியுள்ளது. 2020 – 2030 வரையிலான காலப் பகுதி க்குள் உலக பொருளாதாரத்தில் முதலி டத்தில் இருக்கும் அமெரிக்காவைக் கூட சீனா பின்தள்ளி விடலாம் என ஊகங்கள் தெரிவிக்கின்றன.

மாசி 15, 2011

அல்ஜீரியாவில்

வாராந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் தொடரும்!

நேற்று முன்தினம் அல்ஜீரிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர் வலத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிக் குழுக்கள் அரசாங்கம் மாறும் வரை பிரதி சனிக்கிழமை தோறும் ஆர்ப் பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளன. எகிப்திலே மக்கள் போராட்டத் தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைய டுத்து அல்ஜீரியாவிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. ஆனால் நகரப் பகுதியில் குவிக் கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கலகம் அடக்கும் பொலிஸாரினால், அந்த ஊர்வலம் நகருக்குள் செல் லாமல் தடுக்கப்பட்டதும் குறிப்பி டத்தக்கது. எதிர்க்கட்சியின் ஊடகப் பேச்சாளராகச் செயற்படும் மொஹ் சன் பெலாபெஸ் ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடாத்தி வருகிறார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஆட்சி மாற்றமொன்று நிகழும் வரை பிரதி சனிக்கிழமைகள் தோறும் ஊர்வ லத்தை நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளோம் என்றார். கடந்த சனியன்று நடாத்தப்பட்ட ஊர்வலம் பெரியளவில் நடைபெற் றாலும் பெருந்தொகையானோரின் ஆதரவைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அல்ஜீரியாவில் ஏறத்தாழ 19 வருடங்களாக அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் இன்னும் சில நாட்களில் நீக்கப்படுமென அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெளராட் மெடெல்சி தெரிவித்தார். எகிப்து, டுனிசியாவைத் தொடர்ந்து அல்ஜீரியாவிலும் நடக்கும் மக்கள் போராட்டத்தால் 1992 இல் லிருந்து அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு பெரும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாசி 15, 2011

Message of Solidarity by the Committee of Progressive Pakistani-Canadians

The Saudi monarchy – the most reactionary, despotic and US-dependent of the Arab regimes – has also played a significant role in aiding and abetting undemocratic and unjust regimes in the region – including those of Pakistan. King Abdullah had personally phoned Mubarak to express his solidarity, calling the protests an ‘attack against the security and stability of Egypt’ that were being carried out by ‘infiltrators in the name of free speech’. Like you we hope that the transformations in Egypt and Tunisia are the beginnings of political and social change in the entire region. (more....)

மாசி 15, 2011

எதிர்க்கட்சிகள் நேர்மையான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 17ம் திகதியன்று, நாடெங்கிலும் நடத்தப்படுவதற்கான ஒழுங்குகள் தற்போது துரிதகதியில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் சகல அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை இப்போது தீவிரமாக முடுக்கிவிட ஆரம்பித்துள்ளன. தேர்தல் பாராளுமன்ற தேர்தலாகவோ, ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தலாகவோ உள்ளூராட்சி மன்ற தேர்தலாகவோ இருந்தாலும், அதனை ஜனநாயக பாரம்பரியங்களுக்கு அமைய சகல கட்சிகளும், சம்பிரதாயபூர்வமாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளருக்கும், அவருக்கு இரு கரங்களைப் போல் இருந்து ஒத்துழைப்பு வழங்கும் பொலிஸ் திணைக்களத்திற்கும், தபால் திணைக்களத்திற்கும் அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டி யிடும் சுயேட்சை அணியினரும், பூரண ஒத்துழைப்பை அளிப்பது அவசியமாகும். (மேலும்...)

மாசி 15, 2011

கருணாநிதி 6வது முறையாகவும் முதலமைச்சராவார்

ஐந்தாம் முறையாக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பு ஏற்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் நான் பெரம்பலூருக்கு வந்து இருக்கிறேன். 2007ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கலைக்கல்லூ திறந்து வைக்கவும் 2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட விழாவுக்காகவும், 2009 ம் ஆண்டு பெப்பரவரி மாதம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுழல் நிதி வழங்கவும், 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சமத்துவபுரத்தை திறந்து வைக்கவும் வந்து இருக்கிறேன். இப்போது 2011ம் ஆண்டு மாவட்ட செயலாளர் மகன் திருமணத்தை நடத்தி வைக்க மட்டும் அல்லாமல் சற்று தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கவும் வந்து இருக்கிறேன். இன்னும் தேர்தலை ஒட்டி பிரசாரத்துக்காக வருவேன். அதன் பின்னர் 6வது முறையாக தலைவர் கலைஞர் முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்னர் மீண்டும் அரசு திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக 2012ம் ஆண்டு பெப்ரவரி மாதமும் வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. (மேலும்...)

மாசி 15, 2011

ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?

'அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள். இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார். (மேலும்...)

மாசி 14, 2011

எகிப்தில் ஜனநாயகம் மலரும்!

ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவி விலகியதை அடுத்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள எகிப்தின் புதிய இராணுவ ஆட்சியாளர்கள், ஆத்திரமடைந்து அரச எதிர்ப்பு போராட்டங்களில் தொடர்ந்தும் ஈடுபட் டிருக்கும் பொதுமக்களை அமைதியாக இருக்கச் செய்யும் எண்ணத்துடன் விரைவில் அங்கு மக்களாட்சியை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாக உறுதியளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பொதுவாக அரசாங்கத்தின் புதிய வாரத்திற்கான வேலை நாள் ஆரம்பிக்கும் தினமாகும். இராணுவ ஆட்சியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் தாங்கள் மீண்டும் போராட்டங்களை ஆரம்பிக்க போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (மேலும்......)

மாசி 14, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 29வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் 29-02-2011 ஞாயிறு அன்று காலை 05:30 மணியளவில் புறப்பட்டது. மதிய உணவிற்காக குடியாத்தனூர் என்ற இடத்தில் இடைநிறுத்தப்பட்டது. மதிய உணவை முடித்துக்கொண்டு வீரர்கள் நடைபயணத்தைத் தொடர்ந்தனர். இறுதியாக அனைத்துப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு லொறியும் புறப்பட்டுச் சென்றது. கடைசியாக உயர்திரு. ஞா.ஞானசேகரன் அவர்களின் புதல்வாரன திரு. ஞா. சுபேசன் அவர்களும், புதுக்கோட்டை முகாமைச் சேர்ந்த திரு. குலரூபன் அவர்களும் கனணி மற்றும் அவை சார்ந்த பொருட்களை எடுத்துவைத்துக்கொண்டிருந்த போது, ஒரு பெண் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்து இந்தியில் பேசி ஒரு கிணற்றைக் காட்டி அழுதார்.(மேலும்......)

மாசி 14, 2011

திருட்டுக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் தீவிர நடவடிக்கை

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திருட்டு முயற்சிகளிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்கும் வகையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் கூட்டு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு வேளைகளில் பிரதான வீதிகளில் மட்டுமன்றி கிராமப்புறங் களில் உள்ள சிறு வீதிகள், ஒழுங்கைகள் மற்றும் சந்திப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவோரை விசாரணை செய்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை மறித்து சோதனை செய்து வருகின்றனர். இதேவேளை, பொது இடங்களில் தேவையற்ற முறையில் கூடி நிற்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுரை கூறி வருவதையும் காண முடிகின்றது. மேற்படி வீதிச் சோதனைகள் குடாநாடெங்கும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மாசி 14, 2011

வடக்கின் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் வன்னியில் அபிவிருத்தி நடவடிக்கை

வடக்கின் துரித மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ள கடனின் மூலம் கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் பல அபிவிருத்தி கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளன என திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் கலாநிதி எஸ். எஸ். சிவகுமார் தெரிவித்தார். கிளிநொச்சி பல நோக்குக் கூட்டுறவுச் சங்க கட்டடம் புனரமைத்தல், மன்னார் - முசலி, மடு, மாந்தை மேற்குப் பிரதேச உள் வீதிகளைப் புனரமைத்தல், மன்னார் பெரியபண்டிவிரிச்சான் குளம் புனரமைத்தல், வவுனியா பிரதேசத்தில் உள்ள சில பாடசாலைகளைப் புனரமைத்தல், பனிச்சன்குளம், நொச்சிக்குளம், கற்குளம், பாவட்டன்குளம், நாகர்குளம், பரசன்குளம் ஆகிய சிறுகுளங்கள் புனரமைத்தல் ஆகிய பணிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவியில் மூலிகைத் தோட்டத்தை புனரமைத்தல், வீதி அபிவிருத்தி திணைக்கள கட்டடங்கள், கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, சிலாவத்தை பாடசாலை புனரமைத்தல், மேலும் கரைத்துறைப்பற்று, துணுக்காய் பிரிவில் உள்வீதிகள் புனரமைத்தல் ஆகிய பணிகளும் இந்த திட்டத்தின் கீழ் அடங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாசி 14, 2011

Queensland floods -  photos Australia

 

மாசி 14, 2011

தனித்து போட்டியிடுவது குறித்து ராகுல் ஆய்வு, தமிழக காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம்

தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ¤க்கு செல்வாக்கு எப்படியிருக்கும் என்ற நிலையை அறிவதற்கு ராகுல் தமிழகம் மற்றும் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் இரகசிய ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வால் காங்கிரஸார் உற்சாகமடைந்துள்ளனர். ஆய்வில் காங்கிரஸ¤க்கு ஆதரவாக கருத்து வெளியாகியுள்ளது என தெரியவந்துள்ளது. ‘தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ராகுலின் கனவாக உள்ளது. அந்த கனவை நிறைவேற்றுவதற்கு மாநில அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், மக்கள் ஆதரவை திரட்டும் வியூகத்தையும் ராகுல் அமைத்து வருகிறார். (மேலும்......)

மாசி 14, 2011

இலங்கைக்கு எதிரான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டில் இந்தியாவும் தமிழ்க் கூட்டமைப்பும்

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் சாட்சியங்களின் பின்னணியில் இந்தியா உள்ளது. அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு சர்வதேச உதவிகள் இடைநிறுத்தப்படலாம் என்று தேச ப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைக்கு முகம் கொடுக்க ஜெனிவா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் தயாராக இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் எமது தாய் நாட்டை காட்டிக் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. நாட்டை துண்டாடும் அந்நிய சக்திகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது. (மேலும்......)

மாசி 14, 2011

ஜனநாயக சீர்திருத்தத்தை வலியுறுத்தி அல்ஜீரியாவில் ஆர்ப்பாட்டம்

அல்ஜீரியா தலைநகர் அல்ஜீர்ஸில் ஜனநாயக சீர்திருத்தத்தை வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதில சுமார் 400 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் என்பவற்றை இல்லாமல் செய்ய ஜனநாயக சீர்திருத்தம் வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி அப்தெலாஸிஸ் போடஃப்லிகாவை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

மாசி 14, 2011

தப்பியோடிய இராணுவத்தினரில் இதுவரை 4ஆயிரத்து 630 பேர் கைது _

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் இதுவரையில் 4ஆயிரத்து 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 12 அதிகாரிகளும் அடங்குவதாக இராணுவப்பேச்சாளர் உபய மெதவெல தெரிவித்தார். தப்பியோடிய இராணுவ வீரர்களில் 4ஆயிரத்து 816 பேர் இதுவரையில் சரணடைந்துள்ளதுடன் அவர்களில் 11 அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கும் அவர் தப்பியோடியவர்களுக்கான சரணடையும் காலம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருக்கும் இராணுவ வீரர்களை சரணடையுமாறு நாம் அறிவித்திருந்தோம், அத்தோடு அதற்கான காலக்கெடுவும் விடுத்திருந்தோம். அதனடிப்படையிலேயே பெருந்தொகையினர் சரணடைந்துள்ளார்கள். இவ்வாறு சரணடைவதற்காக கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்துள்ளது. எனவே இதுவரையிலும் சரணடையாமல் உள்ள தப்பியோடியவர்களையும் கைது செய்யவுள்ளோம். _

மாசி 13, 2011

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத்திட்டமென்றை முன்வைக்கத் தீர்மானம்!

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு இந்திய மத்திய அசாங்கம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கான வரைவுத் திட்ட தீர்வு ஒன்றை இந்தியா முன்வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதித் தீர்வுத் திட்ட யோசனை தயாரிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்கள் கோரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசியல் கட்சிகளினால் இலங்கைத் தமிழர் தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு பிரயோகிக்கப்படும் அழுத்தம் காரணமாக தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பின்னர் சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்திய மத்திய அசராங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாசி 13, 2011

எகிப்து எழுச்சி வென்றது

ஓட்டம் பிடித்தார் முபாரக்   ஜனநாயகம் மலரும், மக்கள் உறுதி

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக 30 ஆண்டு காலம் எதேச்சதிகார ஆட்சி நடத்தி வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை அதிகாரத்திலிருந்து அகற்றி, வர லாறு படைத்தனர் எகிப்து மக்கள். 18 நாட்களாக நீடித்த எகிப்து மக் களின் மகத்தான எழுச்சியின் விளைவாக, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைநகர் கெய்ரோ வை விட்டு குடும்பத்து டன் ஓட்டம் பிடித்தார் முபாரக். ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக கடந்த ஜனவரி 25ம்தேதி துவங்கிய எகிப்து மக்களின் மகத் தான எழுச்சியில், அடக்குமுறை களை மீறி, ராணுவத்தின் அச்சுறுத் தலை மீறி தலைநகர் கெய்ரோவின் சுதந்திர சதுக்கத்திலும், அலெக் சாண்ட்ரியா, சூயஸ் உள்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களிலும், லட்சோப லட்சம் மக்கள் அணி திரண்டனர். 18 நாட்களாக நீடித்த இந்தப் போராட்டத்திற்கு, வேறு வழி யின்றி ராணுவ வீரர்களும் ஆத ரவு அளிப்பதாக கூறினர். (மேலும்....)

மாசி 13, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - மகாராஸ்ரா எல்லையை நோக்கி...

ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திரமான வாழ்வுக்கு ஆதரவும் அங்கீகாரமும் உத்தரவாதமும் தேடி நாம் மேற்கொள்ளும் இந்த நெடுந்தூர நடைபயணம் இன்று 28வது நாளாக (12-02-2011) ஆந்திர பிரதேசத்தின் எல்லையை வந்தடைந்துள்ளோம். இன்னும் 1240 கி.மீற்றர் தூர எமது நடைபயணத்தின் மூலம் நாம் எமது இனத்தின் பாதுகாப்புக்கு வழி தேடிச் செல்கிறோம். உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரை நாம் சென்றடைந்து ஈழத்தில் எம் இனத்தின் உரிமைக்கு உத்தரவாதம் வழங்கும்படி கோரவுள்ளோம். (மேலும்....)

மாசி 13, 2011

‘எங்கள் தேசம் மீண்டும் பிறந்தது’  எகிப்து மக்களின் உற்சாகப் பெருவெள்ளம்

துனீஷிய தேசத்தின் மக்கள் தங் களது எதேச்சதிகார அரசை தூக்கி யெறிந்த பின்னர், சரியாக 4 வார காலத்தில் அரபு உலகின் மிகப் பெரும் நாட்டில் மக்கள் சக்தி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. எகிப்தியர்கள் 30 ஆண்டு காலத் திற்கு பிறகு ஹோஸ்னி முபாரக்கின் எதேச்சதிகார ஆட்சியை தூக்கியெ றிந்து புதிய சகாப்தத்தை அடைந்தி ருக்கிறார்கள். முபாரக் ராஜினாமா செய்தபின், அவர் தலைநகர் கெய்ரோவை விட்டு ஓட்டம் பிடித்து விட்டார் என்ற செய்தியை அறிந்தவுடன் எகிப்திய மக்கள் மகிழ்ச்சி வெள் ளத்தில் ஆர்ப்பரித்தனர். முபாரக் கின் வீழ்ச்சி நாடு முழுவதும் லட் சக்கணக்கான மக்களை மிகப் பெரும் உற்சாக கடலில் மூழ்கச் செய்தது. வெள்ளியன்று இரவு முழுவதும் கொண்டாட்டங்கள். (மேலும்....)

மாசி 13, 2011

Lesson Learnt in Revolution at Cairo (LLRC)       

(By Lenin Benedict-Toronto)

History has once again proved that any country or dictatorship will be over thrown by the united power of people.  The waves of Democratic revolution which starts at Tunisia, followed by Egypt sweeping across the whole of Middle East changing its political landscape. It is yet to reach the shores of Asia and other parts of the Globe but it is certain it will rock each and every nation that is governed by emergency laws and ruled by dictators. When it reaches the shores of Asia, Srilanka will be definitely the first one to get hit.  The news of uprising by people in police state and the message that carries will make the people of Srilanka to fall in line with them. (more....)

மாசி 13, 2011

ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்

அண்மையில் எற்பட்ட இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்கள் மீண்டு வர உடனடியாக என்ன செய்ய வேண்டும்...(மேலும்....)

மாசி 13, 2011

எகிப்து

மக்கள் வரலாறு படைக்கிறார்கள்

(பிரகாஷ் காரத்)

எகிப்து மக்களின் பேரெழுச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் ஆவ லுடன் கவனித்துக்கொண்டு வருகிறார்கள். ஜனவரி 25இலிருந்து பிப்ரவரி 9ஆம் தேதி வரையிலான பதினைந்து நாட்களில் இப் பேரெழுச்சியில் லட்சக்கணக்கான எகிப்தி யர்கள் பங்கேற்றுள்ளார்கள். அனைத்துப் பிரிவு மக்களும், குறிப்பாக இளைஞர்கள், தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர், சாமானிய ஆண்கள் - பெண்கள் என அனைத்துப் பிரிவினரும், ஹோஸ்னி முபாரக் கின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக அணி திரண்டு வருகிறார்கள். முபாரக் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், புதிய ஜனநாயக அமைப்பை உருவாக்குவதிலும் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார் கள். கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத் தில் குழுமிய மக்கள் காட்டிய வீராவேசம் மற்றும் உள்ள உறுதி அவர்கள் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இப் போராட்டத் தில் இதுவரை சுமார் முன்னூறு பேர் தங்கள் இன்னுயிரைப் பலிகொடுத் திருக்கிறார்கள். (மேலும்....)

மாசி 13, 2011

உழவும் தொழிலும் முரண்பட்டதல்ல

உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக முக்கிய பிரச்சனையாக முன்னுக்கு வந்துள்ளது. தொழில் வளர்ச்சியோடு இணைந்த பிரச்சனை யாக ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், விவசாயம், விளைநிலத்தை பாழ் படுத்தும் பிரச்சனை விவாதிக்கப்படுகிறது. விவசாயிகளும் விளை நிலமும் பாதுகாக்கப் படுவது காலத்தின் தேவை என்பதை மன சாட்சியுள்ள யாரும் மறுதலித்துவிட முடியாது. அதே நேரத்தில் தொழிலும், தொழிலாளர் வாழ் வாதாரமும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதும் அவசியம். (மேலும்....)

மாசி 13, 2011

மொழிகளின் மரணம்

(பேராசிரியர் ஆர். சந்திரா)

26ஜனவரி, 2010 ... இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம். முக்கியத்துவம் வாய்ந்த தினம். ஆனால், அன்றுதான் அந்தமான் நிக்கோபார் தீவில் பேசப்பட்டு வந்த 65 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த “போ” என்ற மொழி மரணமடைந்தது. ‘சிறப்பு அந்தமான்’ மொழிகளில் ஒன்றான “போ” மொழியை பேசிவந்த போவா சீனியர் என்ற 80 வயது மூதாட்டி மரணமடைந்த போது அந்த மொழி யும் மரணமடைந்தது. 2004ம் ஆண்டு டிசம்பர் சுனாமி அந்தமான்நிக்கோபார் தீவுகளை கோரமாக தாக்கிய போது அதில் உயிர் தப்பிய சிலரில் போசீ னியரும் ஒருவர். சுனாமி தாக்கிய போது, ராட்சத அலைகள் எழும்பி தணிந்ததையும், அதன் தாக்கத்தையும் “போ” மொழியில் அவர் பாடி, வீடி யோவில் பதிவு செய்யப்பட்டது தான் “போ” மொழி வாழ்ந்ததற்கு சாட்சியாக உள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி, “உலகின் மிகப்பழமையான மொழி அழிந்துவிட்டது” என இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

மாசி 13, 2011

அரபு உலகில் பெரும் வரவேற்பு  அடுத்து எந்த நாடு?

எகிப்திய மக்களின் எழுச்சிமிகு கிளர்ச்சி அரபு உலகெங்கும் வாழ்கிற மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் துவங்கி, சவூதி அரேபியா வரை இருக்கிற பல்வேறு அரபு நாடு களில் நிலவும் எதேச்சதிகார அரசுகளுக்கும், மன்னராட்சி அரசுகளுக்கும் எதிரான கிளர்ச்சி உணர்வை, எகிப்திய மக்களின் வெற்றி மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகளான அதிகாரம், மக்களால் தூக்கியெறியப்பட்ட செய்தியை பாலஸ்தீனம், ஜோர்டான், துருக்கி, ஏமன், பஹ்ரைன், அல்ஜீரியா, லெபனான், சிரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளின் மக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். வாணவேடிக்கைகள், வாழ்த்து பரிமாற்றங்கள் என வீதிகளில் குவிந்த மக்கள் விடியவிடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். (மேலும்....)

மாசி 13, 2011

குமரன் பத்மநாதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளத் தயார்பிரதமர் டி.எம். ஜயரட்ன!

கருணா அம்மான் அனுமதிப்பாரா....?

புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளத் தயார் என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் குமரன் பத்மநாதனுக்கு கட்சி அங்கத்துவம் வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். (மேலும்....)

மாசி 12, 2011

18 நாள் எழுச்சி

எகிப்து மக்கள் வென்றனர் முபாரக் விலகினார் 

காலம் எதேச்சதி கார ஆட்சி நடத்தி வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை அதிகாரத்தி லிருந்து அகற்றி, வரலாற்றுச் சாதனை படைத்தனர் எகிப்து மக்கள்.18 நாட்களாக நீடித்து வந்த எகிப்து மக்களின் மகத்தான எழுச்சியின் விளை வாக, பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைநகர் கெய்ரோவைவிட்டு குடும்பத்து டன் ஓட்டம் பிடித்தார் முபாரக். ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சிக்கு எதி ராக கடந்த ஜனவரி 25ம்தேதி துவங்கிய எகிப்து மக்களின் மகத்தான எழுச்சி, அரபு உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. முபாரக் அரசு ஏவிய அடக்குமுறைகளை மீறி, ராணுவத்தின் அச்சுறுத்தலை மீறி தலை நகர் கெய்ரோவின் சுதந்திர சதுக்கத்திலும், அலெக்சான்ட்ரியா, சூயஸ் உள்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களிலும், லட்சோப லட்சம் மக்கள் அணிதிரண்டனர். 18 நாட் களாக நீடித்த இந்தப் போராட்டத்திற்கு, வேறு வழியின்றி ராணுவ வீரர்களும் ஆத ரவு அளிப்பதாக கூறினர். (மேலும்....)

மாசி 12, 2011

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றில் ஆஜர், பிடியாணை ரத்து

பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவிறாந்தை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வாபஸ் பெற்றது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரின் கொள்ளுப்பிட்டி அலுவலகத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியொருவர் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வழக்கு விசாரணையில் அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் கடந்த 7ஆம் திகதி பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று சட்டத்தரணிகள் எம்.கே.பி. சந்திரலால் மற்றும் அநுருத்த பண்டார மாகம்மன ஆகியோருக்கூடாக நீதிமன்றில் சரணடைந்தார். அமைச்சருக்கு எதிரான பிடிவிறாந்தை வாபஸ் பெறுமாறு அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை கோரினர். அதையடுத்து நீதிபதி டபிள்யூ.எம்.பி.பீ. வராவேவ மேற்படி பிடிவிறாந்தை வாபஸ் பெற்றதுடன் அமைச்சர் தேவானந்தாவை எதிர்வரும் மே 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

மாசி 12, 2011

Norway arrests ex LTTE member

Crime branch of the Norwegian Police has arrested an ex-LTTE member on January 26 at his work place in Norway. The 31-year-old man, living in Norway for more than 3 years, has been charged for three killings in his home country before coming to Norway, which the lawyer representing the prosecutor said could be acts of war or war-like scenario, reported a local newspaper, Bygdebladet, on 29 January. Per Zimmer, the lawyer representing the Norwegian Police told the paper that the situation prevailing now in the island had enabled them [the Norwegian authorities] to undertake investigations on the ground. While questioning whether any agency of the war crimes accused Sri Lanka would be recognized in such investigations, diaspora Tamils wonder what action would be taken against the individuals suspected in the commitment and facilitation of war crimes in the island. (more....)

மாசி 12, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 27வது நாள் நிகழ்வுகள்!

இந்தியாவின் ஆதரவு ஈழத் தமிழர் பக்கம் திரும்பாதா? சுதந்திர வாழ்வு கிடைக்காதா? ஏன்ற ஏக்கத்துடன்தான் தங்களை வருத்தி இந்த நடைபயணத்தை மேற்கொள்கின்றனர். இந்தியாவும் உலகநாடுகளும் ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டு ஈழத் தமிழர்கள் சார்பாக நாங்கள் வைத்திருக்கும் நடைமுறை சாத்தியமான எங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள நாங்கள் எங்களை வருத்தி மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தை வெற்றிபெற ஆதரவு வழங்குமாறு உலகநாடுகளையும், உலகில் வாழும் தமிழர்களையும், இந்திய மக்களையும் கேட்டுக்கொள்கிறோம். (மேலும்....)

மாசி 12, 2011

ருமேனியர்கள் சொல்கிறார்கள்  கம்யூனிசமே மேம்பட்டது!

ருமேனியாவில் தற்போதுள்ள முதலாளித்துவ ஆட்சியைக் காட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியி லிருந்தபோது வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருந்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பங்கெடுத்தவர்களில் பெரும்பான்மையோர் கம்யூனிச சிந்தனையை ஆமோதிக்கின்றனர், 60 சதவிகிதம் பேர் கம்யூனிசம் நல்ல சிந்தனை என்று தெரிவித்துள்ளனர். 4 வருடங்களுக்கு முன்பாக இதே போல கருத்து வாக்கெடுப்பு நடத்தியபோது இருந்ததைக் காட்டிலும் தற்போது கம்யூனிசம் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளதாக வாக்கெடுப்பை நடத்தியவர்கள் தெரிவித்தனர். (மேலும்....)
 

மாசி 12, 2011

Hosni Mubarak resigns as president

Egyptian president stands down and hands over power to the Supreme Council for the Armed Forces.

Hosni Mubarak, the Egyptian president, has resigned from his post, handing over power to the armed forces.Omar Suleiman, the vice-president, announced in a televised address that the president was "waiving" his office, and had handed over authority to the Supreme Council of the armed forces. Suleiman's short statement was received with a roar of approval and by celebratory chanting and flag-waving from a crowd of hundreds of thousands in Cairo's Tahrir Square, as well by pro-democracy campaigners who attended protests across the country on Friday. (more...)

மாசி 12, 2011

இயற்கை சீற்றத்துக்கு கடந்த ஒரு ஆண்டில் 2 1/2 இலட்சம் பேர் பலி

ஒரு தலைமுறைக் காலத்தில் கடந்த 2010ம் ஆண்டு தான் மிக மோசமான ஆண்டு ஆகும். இந்த ஆண்டில் இயற்கை சீற்றங்கள் காரணமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. பொதுச்