|
||||
|
|
செப்ரம்பர் 2014 பதிவுகள் செப்ரம்பர் 30, 2014 ஜெயலலிதாவின் கோரிக்கை ஏற்பு ஜாமீன் மனு மீது நாளை விசாரணை! ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், நாளை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார். இதனையடுத்து, தீர்ப்புக்கு எதிராக ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜாமீன் கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனுவை இன்று விசாரித்த விடுமுறைகால நீதிபதி ரத்னகலா, மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ஜாமீன் மற்றும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை நாளையே விசாரிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற பதிவாளர் தேசாய், நாளை இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிட்டுள்ளார். விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலாவே இம்மனுவை விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பட்டேலை, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா இன்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது. ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாய்மை வெல்லட்டும்! இதுவரையிலான ஜெயலலிதாவின் எழுச்சிகள், வீழ்ச்சிகளோடு பட்டியலிட்டு ஒப்பிடக் கூடிய விஷயம் அல்ல இது. அதேபோல, ஒரு தனிப்பட்ட நபர் அல்லது ஒரு அரசியல் தலைவர் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே இதை அணுகுவதும் சரியான வழிமுறை அல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கோடு ஒப்பிட்டு நாம் அணுக வேண்டிய விவகாரம் இது. இந்திய அரசியலைச் செல்லரிக்கும் மிகப் பெரிய புற்றுநோயாக உருவெடுத்துவருகிறது ஊழல். அரசியல் வர்க்கத்துக்கு இணையாக அதிகார வர்க்கமும் ஊழலில் திளைக்கிறது. நாட்டின் எந்த மாநிலமும் ஊழலுக்கு விதிவிலக்கானதாக இல்லை. அறத்தின் மையமாக இருக்க வேண்டிய அமைப்புகளும், அதைப் பாதுகாக்க வேண்டிய மனிதர்களும் நெறி பிறழும்போது, சாதாரணக் குடிமக்கள் செய்வதறியாது நிற்கிறார்கள். ஒட்டுமொத்த அமைப்பின் மீது மட்டுமல்லாமல், அறத்தின் மீதே நம்பிக்கையற்றவர்களாக மாறிப்போகிறார்கள். (மேலும்....) ஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடல் அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என பரவலாக கருத்துக்கணிப்புக்கள் நிலவி வரும் நிலையில், அது தொடர்பில் ஆராய்வதற்கான விசஷட கலந்துரையாடலொன்று இன்றைய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜப்பக்ஷ இக்கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை நாடு திரும்பினார். இந்நிலையிலேயே இவ்விசஷட கலந்துரையாடல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாண சபை தேர்தலையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடுவது இதுவே முதல்தடவையாகும். நட்புக்கு மிகப்பெரிய விலை கொடுத்தாரா ஜெயலலிதா?
மன்னார்குடியில் வந்த குடும்பத்தினருடனான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நட்பு ஒரு நாள் அவரது அரசியல் வாழ்வை முடக்கும் என்ற அவரது அரசியல் விசுவாசிகள் பலரது கணிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது சனிக்கிழமை வெளியான தீர்ப்பு. 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது நடந்த சம்பங்கள் குறித்து நன்கு அறிந்தவர்களின் குற்றச்சாட்டு சசிகலா அந்தக் காலகட்டத்தில் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரங்களை கையில் வைத்திருத்தார் என்பதாகவே இருக்கும். சசிகலாவும் அவரது சகாக்களும் தமிழகம் முழுவதும் இடங்களை வாங்கிக் குவிப்பதில் மும்முரமாக இருந்தனர். (மேலும்....) திரையுலகின் ஜெயலலிதா ஆதரவு 'மவுன' உண்ணாவிரதம்: ஒரு முழுமையான பார்வை
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு வருத்தம் தெரிவித்து, தமிழ்த் திரையுலகினர் செவ்வாய்க்கிழமை மவுன உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காலை 9 மணி அளவில் தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. (மேலும்....) செப்ரம்பர் 29, 2014 ஜெயாவுக்கு பிணை கோரி மனு தாக்கல் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், பிணை கோரியும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று செய்யப்பட்டது. அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் பிணை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை நேரில் சந்தித்து மனுத் தாக்கல் செய்யப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற எழுதுவிளைஞரிடம் இந்த பிணை மனுக்களை அ.தி.மு.க தரப்பு சட்டத்தரணிகள் கையளித்துள்ளனர். பிணை, தீர்ப்புக்கு எதிரான இடைக்கால தடை மற்றும் தண்டனையை நிறுத்தி வைப்பது என மூன்று மனுக்களை ஜெயலலிதாவின் சட்டத்தரணி தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற அட்டவணை இன்று மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் ஜெயலலிதாவின் மனு எப்போது விசாரணைக்கு வரும் என்பது தெரிய வரும். தற்போது தசரா விடுமுறையில் உள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். ஒக்டோபர் 6ஆம் திகதி வரை நிதிமன்ற விடுமுறையாகும். அதேசமயம், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பெஞ்ச் அமர்வு நடைபெறும். எனவே, ஜெயலலிதாவின் மனு நாளையே விசாரணைக்கு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.புரட்சித் தலைவியின் தீர்ப்பால் கலைஞர் அதிர்ச்சியில்......?
ஹரியானா, பீஹார் முதல்வர்கள் போன்று ஜயலலிதாவுக்கும் பிணை கிடைக்குமா? சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பிணை எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு முன் ஊழல் தடுப்பு சட்டத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்திய தேசிய லோக் தளம் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோரின் வழக்குகள் எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகின்றன. கடந்த ஜூன் 3ம் திகதி சகோதரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஓம் பிரகாஷ் சவுதலாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. பின் சவுதாலாவின் உடல் நிலையைக் கருதி செப்டெம்பர் 26ம் திகதி வரை பிணை நீடிக்கப்பட்டது. கடந்த 25 ஆம் திகதி ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இதையடுத்து அக்டோபர் 17ம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாக்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் பிணை கோரிய போது மறுக்கப்பட்டது. இதே வழக்கு தொடர்பாக மற்றொருவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. அதன் அடிப்படையில் லாலு பிரசாத்தும் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2013 டிசம்பரில் அவருக்கு பிணை வழங்கியது. இதேவேளை 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணப்பிக்க இயலாது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். 'அம்மா'... ஜெயாவின் ஆட்சி தமிழக வரலாற்றில் கரும்புள்ளி‘அம்மா’.... ஆடிய ஆட்டம் என்ன? படுத்திய பாடு என்ன?... கூடிய கூட்டமென்ன?....
இந்திய நீதித்துறை அதன் கடமையை சரியாகச் செய்திருக்கிறது. பல் வேறு ஊழல் வழக்குகளில் தப்பிப் பிழைத்த அ. இ. அ. தி. மு. க. தலைவி செல்வி ஜெயலலிதா, இன்று தமிழக முதலமைச் சராக கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் போதே ஊழலில் மாட்டி யிருக்கின்றார். 1991 ஆம் ஆண்டிலிருந்து 1996 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தவர் ஜெயலலிதா. அந்தக் காலப் பகுதியில் வருமானத் துக்கும் அதிகமான சொத்துக்களைக் குவித்தாரென்ற குற்றச் சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 18 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சனிக்கிழமை (27.09.2014) வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்து இந்த வழக்கு கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூ ருக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணைகளை செவ்வனே நடத்தி வந்த சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை சனியன்று வழங்கியது. (மேலும்....) காவல் துறை வெட்கி தலைகுனிய வேண்டும் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் நேற்று அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதல், கருணாநிதி, ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. பல்லாவரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அளித்துள்ள புகாரின் பேரில் இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் - செய்தி. இப்போதுதான் தி.மு.க தலைமை இந்த விவகாரத்தில் எப்படி பொறுப்புடன் நடந்துகொண்டது என்று பதிவிட்டேன்.அதற்குள் ஒரு பொய் வழக்கு. அதிமுகவினர் கடைகளை அடித்து நொறுக்குவதை, ஒரு காரை தலைகுப்புற கவிழ்த்து உடைப்பதை, பேருந்தை எரிப்பதை, கொடும்பாவி கொளுத்துவதை, கடப்பாறையால் சுவரை இடித்து தள்ளுவதை என்று எதை எதையெல்லாமோ டிவியில் நேற்றிலிருந்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் செய்தவர்கள் மீதோ இதை தூண்டிவிட்டதாக அதிமுக தலைமையின் மீதோ இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யபட்டு இருக்கின்றன? அதிமுகவினரின் இந்த வன்முறையை காவல்துறை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, கோவை போன்ற இடங்களில் காவல்துறையினரே உணவகங்களை அடைக்கும்படி மிரட்டியதாக பொதுமக்கள் கூறுவதை புதிய தலைமுறை பதிவு செய்கிறது. காவல் துறையினர் தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் வாங்குகிறார்களே தவிர போயஸ் கார்டனில் இருந்து அல்ல. இந்த அராஜகங்களின் வழியே நீங்கள் ஜெயலலிதாவை இதிலிருந்து காப்பாற்றிவிடலாம் என்று நம்புகிறீர்களா? (Manushya Puthiran) ஜெயா உண்மையில் தண்டிக்கப்பட்டாரா?
நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் “ ஆமாம் நான் பாப்பாத்தி”யென்று பகிரங்கமாக பெருமையுடன் அறிவித்தவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென்று பெங்களூருவில் உள்ள பாரப்பன அக்கிரஹாரா என்று அழைக்கப்படும் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பின் போது அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிலையில் தனது பாதுகாப்பு பிரச்சினைகளை முன்வைத்து ஜெயா தரப்பில் சுட்டிக்காட்டியதன் பேரில் தான் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள கருநாடக சிறை வளாகத்திற்குள் சிறப்பு நீதிமன்றம் இடம் மாற்றப்பட்டது. தமிழினவாதிகளால் “ஈழத்தாய்” என்று போற்றப்பட்ட ஜெயலலிதா தனது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். (மேலும்....) அதிமுக வினருக்கு நன்றி.. நன்றி.. நன்றி
(வே மதிமாறன்) செப்ரம்பர் 28, 2014 அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருமனதாக தேர்வு செய்ததை தொடர்ந்து அவரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்டதும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, முதலமைச்சர் பதவியை இழந்ததோடு, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ஜெயலலிதா இழந்தார். இதனால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சரை உடனடியாகத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் அடுத்த முதல்வரை ஒருமனதாக தேர்ந்தெடுத்து கையெழுத்திட்ட கடிதத்தை, ஆளுநரிடம் வழங்குவதற்காக தமிழக ஆளுநர் ரோசையாவை மாலை 6.45 மணி அளவில் சந்தித்தனர். முன்னதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்ததும், பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் போயஸ்கார்டன் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் இல்லத்தில் சிறிது நேரம் ஆலோசனை நடைபெற்றது. கடந்த முறை ஜெயலலிதா இதேபோல் நீதிமன்ற தீர்ப்பால் முதலமைச்சர் பதவி இழந்தபோது அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக அப்போது நியமிக்கப்பட்டார். அதேபோல் இந்தமுறையும் அவருக்கு மீண்டும் முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க மனுதாக்கல் செய்ய நடவடிக்கை கர்நாடக சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக தலைவர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க திங்கட்கிழமை(28) கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுசெய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா வழக்கறிஞர்கள் குழு, தண்டனையை தடைசெய்யக் கோரும் உத்திகளை பரிசீலித்து வருகின்றனர். 'நாங்கள் நாளை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறோம்' என்று ஜெயலலிதாவின் மூத்த வழக்கறிஞர் பி.குமார் தெரிவித்துள்ளார். திங்களன்று மனு செய்தாலும் உயர்நீதிமன்றத்தின் விடுப்பு அமர்வு செவ்வாயன்றே மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. ஏனெனில் உயர்நீதிமன்றம் தற்போது தசரா விடுமுறை நாளில் உள்ளது. ஜெயலலிதாவை உடனடியாக வெளியே கொண்டு வர வழக்கறிஞர்கள் குழாம் சட்ட உத்திகளுக்கும் வாதங்களுக்கும் இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர். தண்டனை 3 ஆண்டுகளுக்கு மேல் விதிக்கப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றமே ஜாமீன் அளிக்க முடியும். வழக்கறிஞர்கள் கையில் உள்ள ஒரு ஆயுதம், கிரிமினல் ரிவிஷன் பெடிஷன் ஆகும். இந்த மனுவைச் செய்தால் தண்டனை மற்றும் குற்றம் என்ற தீர்ப்பிற்கும் தடை வாங்கி விடலாம் என்று கணக்கிட்டு வருகின்றனர். ஒருவேளை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தால் எம்.எல்.ஏ. தகுதி இழப்பு என்பது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். ஆனால் உயர்நீதிமன்றங்கள் ஊழல் வழக்கில் பொதுவாக ஸ்டே ஆர்டர் கொடுக்காது என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.ஆகியோர் வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விட்டாலே அவரது பதவி தானாகவே தகுதி இழப்பு அடைந்துவிடும். இதற்கு முன்பு இவ்வகை தீர்ப்பிற்கு பின்பு 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்து தகுதி இழப்பை முறியடிக்கலாம். ஆனால் அது இப்போது முடியாது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கு தீர்ப்பின் நகலைப் பெற்று அதை வைத்து விவாதித்து வருகின்றனர். (தி ஹந்து) ராகுல் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெயலலிதாவுக்கு பாதிப்பு 'ஊழல் உட்பட, குற்ற வழக்குகளில், 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறும், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்' என, 2013 ஜூலையில், உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து, பல அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இந்த விவகாரத்தில், எம்.பி.,க்களை காப்பாற்ற, சட்டத் திருத்தம் தேவை என்றும் வலியுறுத்தின. அதனால், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், 'குற்ற வழக்குகளில், தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியை, உடனே பறிக்க வேண்டும் என்ற தீர்ப்பு சரியானதே. ஆனால், இது தொடர்பாக, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தால், அதில், நீதிமன்றம் தலையிடாது' என, தெரிவித்தது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதிகளை காப்பாற்றும் வகையில், சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வர, மத்திய அரசு முற்பட்டது. அந்த சட்ட திருத்தத்தின்படி, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, 90 நாட்களுக்குள், அப்பீல் மனு அல்லது மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தால், மேல் கோர்ட்டுகள், தண்டனைக்கு தடை விதித்திருந்தால், அவர்களின் பதவியை பறிக்க முடியாது. மேலும், தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், உயர் நீதிமன்றங்களில் அப்பீல் செய்து, அந்த மனுக்கள் நிலுவையில் இருந்தால், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்கலாம். அதே நேரத்தில், சபையில் ஓட்டளிக்கவோ, சம்பளம் மற்றும் படிகளைப் பெறவோ, அவர்களுக்கு உரிமையில்லை என, தெரிவிக்கப்பட்டது.ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்திற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அது நிறைவேற்றப்படவில்லை. ராகுல் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டத் திருத்தம் நிறைவேறி இருக்கும். முதல்வர் ஜெயலலிதா உட்பட, இதற்கு முன் ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் பதவியும் தப்பி இருக்கும். (தினமலர்) தமிழகத்தின் மன்மோகன் சிங் ரெடி!
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்ததையடுத்து, தற்போது நிதி அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ரயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகளுடன் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆளுனர் ரோசய்யாவை சந்திக்க செல்கிறார். பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் மாதம் வரை தமிழக முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 63 வயதான ஓ.பன்னீர்செல்வம் போடியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3-வது முறையாக பன்னீர்செல்வம் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001ல் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தவர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அப்போது ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலகிய போதும் பன்னீர்செல்வமே முதல்வராக தேர்ந்தெடுக்ககப்பட்டது நினைவிருக்கலாம். (தினகரன்) தனிமை சிறையில் ஜெயலலிதா அவதி, நேற்றிரவு சாப்பிடவில்லை
ரூ.66.56 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று நேற்று பிற்பகல் 2.30 மணிக்கே அறிவிக்கப்பட்டு விட்டது. அப்போதே ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதியாகி விட்டது. பிற்பகல் 3.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.100 கோடி அபராதம் என்ற தீர்ப்பை நீதிபதி குன்கா வாசித்தார். இதை கேட்டதும் ஜெயலலிதா கடும் அதிர்ச்சி அடைந்தார். அடுத்தடுத்து நீதிபதி தீர்ப்பு விவரங்களை வாசித்தபோது ஜெயலலிதா அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். (மேலும்....) 18 ஆண்டுகள்.. 6 நீதிமன்றங்கள்.. 90 நீதிபதிகள்.. தினமும் 18 மணி நேரம் இடைவிடாது பணியாற்றிய டி'குன்ஹா
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் அவரது கடும் உழைப்பும்,அசராத அணுகு முறையும் உள்ளது. 1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது. சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வரை சுமார் 90 நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துள்ளதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. (மேலும்....)
25 வருடங்களுக்கு முன்பு சென்ற ரயில் இன்னும் காங்கேசந்துறையில்... வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைத்த யாழ். தேவி கொழும்பில் இருந்து முள்ளிக்குளம் வரையான பயணத்தை இற்றைக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நிறுத்தியது. புலிகளின் கெடுபிடிகளினாலேயே ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் யாழ். தேவி புறப்பட ஆயத்தமாகியுள்ளது. அன்றைய காலப்பகுதியில் யாழ். தேவியின் ரயில் சாரதியாக எஸ். இராஜகோபாலன் பணியாற்றினார். பணியில் இருந்து தற்போது இளைப்பாறியுள்ள அவர், 25 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பமாகியுள்ள யாழ். தேவி ரயில் சேவையை பார்வையிட வருகை தந்துள்ளார். அந்த பழைய நாள் ஞாபகம் இன்றுபோல் அவர் மனதில் காட்சியளிக்கின்றது. (மேலும்....) பதவி இழந்தார் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்றத்தினுள் இருக்கும் வழக்கறிஞர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்ற சிறப்பு நீதிபதி குன்ஹா இன்னும் சற்று நேரத்தில், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தீர்ப்பை வழங்க உள்ளார். ஜெயலலிதா தவிர்த்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரும் ஆஜராகி உள்ளனர். அவர்கள் தற்போது தீர்ப்புக்காக நீதிமன்றத்தில் காத்திருக்கின்றனர். (மேலும்....)
உண்மையில் ஜெயலலிதா எங்கு இருக்கின்றார்.....?
உண்மையில் இன்று சிறைக்குச் சென்றிருப்பது ஜெயலலிதா அல்ல. மீடியாக்கள் உருவாக்கி வைத்திருந்த ஜெயலலிதா என்கிற பிம்பம். ”இதுதான் நான் என்று” ஜெயலலிதாவே நம்பிவிட்ட அளவுக்கு சித்தரிக்கப்பட்ட பிம்பம் அது. ஆரம்பத்தில் ஜெயலலிதா என்ற பெண்ணுக்குள்ளும், அரசியல்வாதிக்குள்ளும் பல நியாயங்களும், நம்பிக்கைகளும் துளிர்த்திருந்தன. ஆனால் அவற்றை நசுக்கிவிட்டு பழிவாங்குதலையும், சர்வாதிகாரத்தையும் அரக்கத்தனமாக வளர்த்தது மீடியா. கருணாநிதி & கோவை முன்னிறுத்தி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு சுற்றியிருப்பவர்களையும் எரிக்கும் நெருப்பாக அவரை எப்போதும் தணலிலேயே வைத்திருந்தது, இன்னமும் வைத்திருக்கிறது. (மேலும்....) தீர்ப்பு வந்ததும் ஜெயலலிதா எவ்வாறு செயற்பட்டிருக்க வேண்டும் மாநிலத்தின் முதலமைச்சர், ஆளுங்கட்சியின் மிகப்பெரும் தலைவர் என்ற முறையில் தனது கட்சியின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும் - தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை ஏற்று அமைதி காக்க வேண்டும் என்று. எது எதற்கோ உடனுக்குடன் அறிக்கை விடுகிற அவர் இந்த முக்கியப் பிரச்சனையில் ஏன் அப்படிப்பட்ட அறிக்கை வெளியிடவில்லை? தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களாக கோபத்தோடு செயல்படக்கூடும் என்ற நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிக்கை விடுத்திருந்தால் அது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். (மேலும்....) 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதா ஜாமின் விண்ணப்பிக்க இயலாது ஆண்டுகளுக்கு மேல் சிறை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணபிப்க்க இயலாது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் வாதாடி அரசு வழக்கறிஞர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் பிறகு அவரது ஜூனியர் முருகேஷ் மராவடி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்தபோது சொத்து சேர்த்தது நிரூபணமானதால் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை, ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் அனுபவித்ததால் அவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நீதிபதி உத்தரவின் பேரில் 4 பேரும் உடனே பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணப்பிக்க இயலாது'' என்றார். அப்படி என்னதான் நடக்கப் போகின்றது ஜெயலலிதாவிற்கு தமிழகம் பூரா ஆர்ப்பாட்டம் செய்து கடைகளை அடித்து நொறுக்கி பேருந்துகளை எரிக்கும் ஆதிமுகவினர் ஏதோ உணர்சசி வேகத்தில் செய்வதாக நான் நினைக்கவில்லை. இப்படி ஒரு தீர்ப்பு வரப் போகிறது என ஏற்கனவே கட்சியினருக்கு தெரியும். அதற்காக தயாராக தான் இருந்திருக்கிறார்கள். அவரக்ளின் இலக்கு எப்போதுமே பொதுமக்களும் சாதாரண வியாபாரிகளும் தான். ஒரு நட்சத்திர ஓட்டலுக்குள் போய் தாக்குவார்களா? நீதிமன்றம் முன்பு போய் தர்ணா பண்ணுவார்களா? மாட்டார்கள். டாஸ்மாக் அதன் பாட்டுக்கு திறந்தே ஜெகஜோதியாக இயங்குகிறது. அதை உடைக்க மாட்டார்கள். ஏனென்றால் அங்கு போய் குடித்து விட்டு கிடைக்கிற மிதப்பில் தானே ஆர்ப்பாட்டம் பண்ண முடியும். பொதுச்சொத்தை ஆளுங்கட்சியினர் உடைப்பதை வேடிக்கை பார்க்கும் போலீஸ்காரர்கள் ஏதோ பள்ளிக்கூட பிள்ளைகளை விளையாட விட்டு கண்காணிக்கும் டீச்சரை போல் தோன்றுகிறார்கள். (மேலும்....) வடமாகாண சபைமுதலமைச்சர் வீட்டிற்கு மாத வாடகை 3 இலட்சம்தமிழ் இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் போராடிப் பெற்றுக்கொடுத்ததே வடமாகாண சபை என்றும் போராடிய இளைஞர்களின் குடும்பங்கள் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி நிற்க வியர்வை கூட சிந்தாத முதல்வர் விக்னேஸ்வரன் குடியிருக்கும் ஆடம்பர மாளிகைக்கு மாத வாடகையாக மூன்று இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது என ஈ.பி.டி.பி யின் சர்வதேச முக்கியஸ்தர் எஸ்.விந்தன் தெரிவித்துள்ளார். பாமர மக்கள் பம்பரம் போன்றவர்கள் அவர்களை சுழற்றிவிடும் பொறியாக இருப்பவர்கள் இளைஞர்களே. கடந்த காலங்களைப் போலன்றி மக்களை உணர்ச்சிப் பேச்சுக்களால் உசுப்பேற்றாமல் உணர்வுகளால் மட்டும் அரசியல் இலக் கின் திசை நோக்கி அவர்களை இயக்குவ தற்கு இளைஞர்கள் மாபெரும் சக்தியாக திரண்டு வரவேண்டும். ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒவ்வொரு கனவுண்டு. உங்களது வாலிய கனவுகளுக் கப்பால் இலட்சிய கனவுகளுக்காகவும் நீங்கள் உழைக்க முன்வர வேண்டும். வடமாகாண சபை என்பது நாங்கள் போராடிப் பெற்ற உரிமைகளில் ஒன்று. இந்த உரிமைப் போராட்டத்தில் அர்ப் பணித்தவர்களது குடும்பங்கள் நடுத்தெரு வில் நின்று பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்றார்கள். முதலமைச்சரின் ஆடம்பர மாளிகைக்கு மாதவாடகை மூன்று இலட்சம், அவைத் தலைவர் உட்பட ஐந்து அமைச்சர்களது ஆடம்பர மாளிகைகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வாடகை வழங்கப்படுகின்றது. (மேலும்....) தமிழகத்தில் வன்முறை கலைஞர் வீட்டுக்கு கல்வீச்சு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப் பளித்ததையடுத்து, தமிழகத்தில் அ.தி.மு.கவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது. ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அ.தி.மு.கவினர் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. சிறிய அளவில் உள்ள பொலிஸாரும் அ.தி.மு.கவினரின் இந்தச் செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். கோவையில் அவினாசி சாலையில் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.வினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அங்கு சில கார்களின் கண்ணாடியை உடைத்து வாகனங்களை சேதப்படுத்தினர் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கருணாநிதி வீட்டிற்குள் அ.தி.மு.கவினர் சிலர் நுழைய முயன்றனர். அப்போது, தி.மு.கவினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
யாழ்தேவி வந்தபோது….. யாழ்தேவி பரீட்சார்த்தமாக யாழ் வந்தபோது புகையிரத -நீராவி யந்திரத்தை கண்டு பிடித்த -ஜோர்ஜ் ஸ்ரீபன்சனுக்கு ஏற்பட்ட அனுபவம் இங்கும் கிட்டத்தட்ட 3 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டது. ரயிலில் எதேச்சசையாக மாடு ஒன்று அடிபட்டிறந்தது. ரயிலை வேடிக்கை பார்க்க தந்தையுடன் வந்த சிறுவனைப் பாம்பு தீண்டியது. இந்த சம்பவங்கள் துரதிஸ்டமானவை. ஆனால் இவையெல்லாம் நாசமாய்ப்போன சைத்தான் ரயிலால் வந்த வினை என்று யாழப்;பாணத்து “வைபவக் குறைவான ஊடகங்கள்” பிரச்சாரம் செய்தன.(மேலும்....) யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தன் ரதிராஜா அவர்கள் 25-09-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அம்மா+அப்பா செப்ரம்பர் 27, 2014 உலகளாவிய நீதி மாற்றம் என்பதே நிரந்தரமானது! (சுகு-ஸ்ரீதரன்) ஸ்கொட்லாந்து ஐக்கிய ராச்சியத்தினுள் இணைந்திருக்கவேண்டுமா அல்லது பிரிந்திருக்கவேண்டுமா என்று சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 55 வீதமான மக்கள் தாம் ஐக்கிய ராச்சியத்தின் அங்கமாக இருப்பதை விருப்புவதாக வாக்களித்தார்கள். அதற்காக மிகுதி 45 வீதத்தவரின் அபிலாசைகளைப் புறக்கணித்து விட முடியாது. ஐக்கிய ராச்சியத்தின் அங்கமாக வாக்களித்தவர்களும் -அதிகாரப்பகிர்ந்தளிப்பு நிகழும் என தொழிற்கட்சி உட்பட பிரதான பிரித்தானிய கட்சிகளின் உறுதி மொழியை நம்பியே வாக்களித்தார்கள். (மேலும்....) கடலில் கலக்கும் ஆறுகளை மறித்து நீர்த் தேக்கங்கள் அமைக்கத் திட்டம் மக்களுக்கு பயன்படாமல் கடலில் கலக்கும் 33 ஆறுகளை வழிமறித்து நீர்த்தேக்கங்கள் அமைக்கும் திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வரட்சியான காலநிலைகளின் போது விவசாயம் செய்யவும் குடிப்பதற்கும் தேவையான நீரைப் பெறுவதற்காக இவ்வாறான திட்டமொன்றை செயற்படுத்த இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இதற்கென நிதி ஒதுக்கிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வரட்சி நிலையினால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்கும் வகையில் நீர் நிலைகளில் உள்ள சேறுகளை அகற்றும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனூடாக நீர் கொள்வனவு அதிகரித்து கூடுதல் நீரை தேக்கி வைக்க முடியுமென கூறிய அவர், அரசாங்கம் 17 பாரிய குடிநீர் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன் 3000க்கும் அதிகமான ஐரோப்பியர் இணைவுஇஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போராளிகளுடன் இணைந்திருக்கும் ஐரோப்பியர்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவரான ஜல்ஸ் டி கர்சோவ் குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ். மீதான மேற்குலகின் வான் தாக்குதல்கள் அதிகரிக்கும்போது ஐரோப்பாவில் பதில் தாக்குதல் இடம்பெறும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். ஈராக்கில் வான் தாக்குதலை முன்னெடுப்பது குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் வக்கெடுப்பு நடத்தப்பட விருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் அண்மைய மாதங்களில் ஈராக் மற்றும் சிரியாவில் பெருமளவு நிலப்பகுதியை கைப்பற்றியுள்ளனர். இதில் பிராந்தியத்தில் யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மற் றும் நாடு திரும்பியவர்கள் என்றே 3,000க்கும் அதிகமான ஐரோப்பியர் ஐ.எஸ். இல் இருப்பதாக கர்சோவ் சுட்டிக்காட்டினார். ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 31,000 ஐ.எஸ். போராளிகள் இருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. அண்மையில் கணித்திருந்தது. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல்கள் அதிகரிக்கும் நிலையில் பதில் தாக்குதல்கள் குறித்தும் அவர் எச்சரித்தார். அதேபோன்று அல் கொய்தா போன்ற ஐ.எஸ். போட்டி அமைப்புகளும் தமது பலத்தைக் காட்ட ஐரோப்பா மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்றார். மக்கள் தொகை அதிகரிப்பு ந(ர)கர வாழ்க்கையில் சென்னை மக்கள்! ![]() சென்னை மக்களின் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறி வருகிறது.சென்னை என்றாலே கிராமத்திலுள்ளவர்களுக்கு ஒரு வியப்பு. விண்ணை தொடும் வகையில் கண்ணாடி மாளிகைகள், சாலையில் விலை உயர்ந்த கார்கள், ஆடம்பரமான வாழ்க்கை என்று நினைக்கின்றனர். அனைத்தும் கிடைக்கும் சொக்கபுரியாகவே பலர் சென்னையை கற்பனை செய்து கொள்கின்றனர். ஆனால் சென்னையின் மறுபக்கம் பலருக்குத் தெரிவதில்லை. சென்னை நகருக்குள் வரும்போதே கூவம் ஆற்றின் துர்நாற்றம் புதிதாக வருபவர்களுக்கு ஒரு குமட்டலை ஏற்படுத்தும். அதை பொருட்படுத்திக் கொண்டு சென்னைக்குள் வருவதற்குள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி விடுகின்றனர். இருப்பினும் சொந்த ஊரில் வேலை வாய்ப்பு இல்லாததால், பிழைப்புத் தேடி சென்னைக்கு தினமும் பலர் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. (மேலும்....) செப்ரம்பர் 26, 2014 குப்புற கவிழ்க்குமா போர் வெற்றி? ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ள ஆறுதல் வெற்றி, அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட சிவப்பு சமிக்ஞை என்றே எல்லோராலும் கருதப்படுகிறது. ஊவா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் அரசியல் மாற்றத்துக்கு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காரணத்தை கூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஊவாவில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் திடீர் எழுச்சிக்கும் அரச தரப்பின் பின்னடைவுக்கும் தனியொரு காரணம் மட்டுமே இருக்கிறதென்று கருதமுடியவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள்தான், ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவில் பிரதிபலித்திருக்கின்றன. இது தேசிய அரசியலில் திருப்பமொன்று ஏற்படுவதற்கான பிரகாசமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தக் கட்டத்தில் ஊவா மாகாணசபையில் தாம் பெற்றுள்ள மயிரிழை வெற்றியைக்கூட, அரசாங்கத்தரப்பு பெரும் சாதனையாக சுட்டிக்காட்டி தப்பிக்கொள்ளப் பார்க்கிறது. (மேலும்....)சமர் பகுதியை தொடர்ந்து இந்திய பெருங்கடலிலும் சீன போர்க்கப்பல் குவிப்பு! இந்திய எல்லைப்பகுதியான சமர் பகுதியைத் தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியிலும் சீனா தனது போர்க்கப்பலை குவித்து வருகிறது. பிராந்திய போரில் வெற்றி பெறுவதற்காக சீன எல்லையில், மக்கள் விடுதலை ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என சீனா அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும், இந்திய-சீன எல்லையான, இமாச்சல பிரதேச எல்லையில் அமைந்துள்ள சுமர் பகுதியில், சீன ராணுவம் கடந்த 10ஆம் தேதி அத்துமீறி நுழைந்தது. அங்கு தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சீன வீரர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக கடல் பகுதியிலும் சீனா தனது படைகளை குவிக்க தொடங்கியுள்ளது. அதன்படி இந்திய பெருங்கடல் பகுதியில் ஏராளமான சீன போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதை உறுதிப்படுத்தியுள்ள இந்திய ராணுவ தளபதி ராபின் தோவன், சீனாவின் எவ்வித சவாலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு குஜராத்தில் இருக்கும் போது மறுப்பு டெல்லில் இருக்கும் போது வரவேற்பு ஐந்து நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள மடிசன் சதுக்க கார்டன் என்ற இடத் தில் உரையாறறவுள்ளார். ஒபாமாவின் அழைப்பை ஏற்று மோடி அமெரிக்காவில் 5 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார். இந்த 5 நாட்களிலும் அவர் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 28ந் திகதி பல்வேறு யூத அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கும் மோடி, பின்னர் மடிசன் சதுக்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் பேசுகிறார். அமெரிக்காவில் இதுவரை சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தலைவர்களில் போப் ஆண்டவருக்கு அடுத் தபடியாக மடிசன் சதுக்கத்தில் மிகப்பெரிய கூட்டத்தில் உரையாற்றப் போகும் முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. மோடி இங்கு ஆற்றும் உரை தொலைக்காட்சியில் நேரடியாகவும் ஒளிபரப்புச் செய்யப்படும். மோடி மடிசன் சதுக்கத்தில் ஆற்றும் உரையை கேட்க இந்திய வம்சாவளியினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெரிகிறது. பொதுச்சபையின் 69ஆவது அமர்வில் ஜனாதிபதி உரை இலங்கை மீது சில தீய சக்திகள் அளவுக்கு அதிகமாக இலக்கு கியூபா மீதான பொருளாதாரத் தடை நியாயமற்றது பலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட வேண்டும் சர்வதேச ரீதியான சவால்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியது அவசியம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு எதிரான தன்னிச்சையான பொருளாதார தீர்மானங்களை இலங்கை எதிர்க்கின்றது. நாடுகள் தொடர்பிலான விவகாரங்களின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள் கடுமையான கொள்கைகளை பின்பற்றுவதனை தவிர்க்க வேண்டும். கியூபா மீது எதேச்சாதிகார போக்கில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. கியூபா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டமை நியாயமற்றத.ு பயங்கரவாதம் உலகின் அனைத்து நாடுகளு க்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை இலங்கை நன்கு உணர்ந்து கொண்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைளை இலங்கை முழுமையாக எதிர்க்கும். இலங்கையின் சகல மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிரிகளுடனும் நட்பு பாராட்டும் வெளியுறவுக் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு சர்வதேச சமூகம் காத்திரமான வகையில் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். (மேலும்....) தஞ்சம் கோருவோரை கம்போடியாவுக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசு முடிவு படகுமூலம் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்போடிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. படகுகள் மூலம் விசா இல்லாமல் வந்தவர்களையும் நெளரு, மனுஸ், பப்புவா நியூகினியா தீவுகளில் உள்ளவர்களையும் கம்போடியாவுக்கு அனுப்புவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஆனால் கிலார்ட் பதவியில் இருந்த போது புகலிடம் கோரியவர்களை மலேசியா அனுப்பியது போன்ற நடைமுறைதான் இதுவும் என மொரிசன் விளக்கியுள்ளார். இதேவேளை, இந்த நடவடிக்கையானது மனித உரிமை மீறலாகும் என மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கம்போடியாவில் அகதிகள் வாழ்வதற்கான சரியான சூழலும் இல்லை என மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மகாராஷ்ட்ரா 25 ஆண்டு கால சிவசேனா - பா.ஜனதா கூட்டணி முறிந்தது! மகாராஷ்ட்ராவில் பா.ஜனதா - சிவசேனா இடையேயான 25 ஆண்டு கால கூட்டணி முறிந்தது. தொகுதி பங்கீடு விஷயத்தில் சிவசேனா தனது நிலையில் பிடிவாதமாக இருந்ததால் தாங்கள் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதாவுக்கு 130 தொகுதிகளை ஒதுக்க சிவசேனா ஒப்புக்கொண்டதாகவும், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கியதுபோக மீதமுள்ள 151 இடங்களில் சிவசேனா போட்டியிடுவது என்று தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதாக சிவசேனா வட்டாரங்கள் கடந்த 23 ஆம் தேதியன்று தெரிவித்தன. மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாங்கள் கூறினோம். ஆனால் சிவசேனாவோ முதலமைச்சர் பதவிக்குத்தான் அதிக ஆர்வம் காட்டியது" என்று குற்றம் சாட்டினார். பா.ஜனதாவின் இந்த அறிவிப்பின் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையேயான 25 ஆண்டு கால கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்ட்ராவில் மொத்தமுள்ள 48 மக்களவை தொகுதிகளில் 41 இடங்களை பா.ஜனதா - சிவசேனா கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மகாராஷ்ட்ராவில் 15 ஆண்டுகால காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையேயான கூட்டணியும் முறிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகளுக்குள்ளும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. செப்ரம்பர் 25, 2014 இது எப்படி இருக்கு.....?
புலி பதுங்குவது பாயவே -சி.வி புலி பதுங்குவது பாய்வதற்காகவே. தற்பொழுது வடமாகாண சபை பதுங்கிய நிலையில் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் வியாழக்கிழமை (25) இடம்பெற்று வருகின்றது. இதன்போது, முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் தொடர்பில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அது தொடர்பில் இனி சபை அமர்வுகளில் கதைப்பதில்லையென கூறினார். இதன்போது குறுக்கிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், அனைத்து விடயங்களுக்கும் ஆளுநருக்கு பயந்து விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறினார். சிவாஜிலிங்கத்தின் கருத்திற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மத்திய அரசிடமிருந்து நிறைய விடயங்களை நாங்கள் பெறவேண்டிய தேவை இருக்கிறது. ஆகையால், முதலமைச்சர் நிதி நியதிச்சட்டத்தைப் பற்றி கதைப்பதை விடுவோம்' என்றார். (மேலும்....)ரஞ்சன்குடி கோட்டை ரகசியங்களை வெளிக் கொண்டுவர வேண்டும்: கோரிக்கை வைக்கும் கோட்டை காவலர்
“ரஞ்சன்குடி கோட்டையை அகழ்வாராய்ச்சி செய்தால் அரிய பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும்” என்கிறார் அந்தக் கோட்டையில் 37 ஆண்டு காலம் காவலராக இருந்த ஹாசீம் பாய். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை நவாப்கள் ஆட்சி செய்த இடம். 55 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் கோட்டை வளாகம் இப்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் முறையான பராமரிப்பு இன்றி கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து வருகிறது. 1972-லிருந்து இந்தக் கோட்டையில் காவலராக இருந்தவர் ஹாசீம் பாய். 37 ஆண்டு காலம் பணி செய்து 2008-ல் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டாலும் ரஞ்சன்குடி கோட்டைக்குள் புதைந்து கிடக்கும் வரலாற்றுத் தடயங்களை உலகம் அறிய வேண்டும் என துடிக்கிறார் ஹாசீம்பாய். இதற்கு காரணம் பரம்பரை பரம்பரையாய் அவரது குடும்பத்துக்கும் அந்தக் கோட்டைக்கும் உள்ள தொடர்பு. (மேலும்....) வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் பௌத்தர்கள் இருந்தனர் - சி.வி முன்னொரு காலத்தில், வடக்கு – கிழக்கில் தமிழ் பேசும் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களால் இங்கு வைக்கப்பட்ட பௌத்த சின்னங்களே இன்றும் இங்கு காணப்படுகின்றன என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்தார். சைவ சமயத்தில் தோன்றிய சமய குரவர்கள் நால்வரும் சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள். பண்டைய காலத்தில் இலங்கையின் வட, கிழக்கு பிரதேசத்தில் இருந்த தமிழ் மக்கள் கூட சரித்திரப் படி பார்த்தால் இந்து தர்ம முறைப்படியே வாழ்ந்து வந்தவர்கள். கௌதம புத்தரின் தோன்றலுக்கு முன்னையதான சரித்திர சான்றுகளில் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னைய பௌத்தத்தின் உள்நுழைவால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்திற்கு பௌத்தத்தால் கவரப்பட்டு பௌத்த சமயிகளாக மாறி, அதன்பின்னர் இந்து சமய குரவர்களின் வரவாலும் அவர்களின் சமய ஆதிக்கத்தாலும் பௌத்தத்தில் இருந்து விடுபட்டு சைவத்திற்கு சென்றவர்களே எமது மூதாதையர். (மேலும்....)சிங்கள சாப்பாடு அது என்னவோ தனிச்சுவை தான் , சுவைகள் வித்தியாசப்படும், எங்களது சமையல் வேறு மாதிரி சுவை.
பாவப்பட்ட எழுத்தாளர்கள் பற்றி புஷ்பராணி.......! சூடான் நாட்டைச் சேர்ந்த கவிஞரும், எழுத்தாளரும், இசைக்கலைஞருமான "முகமத் ஹூசைன் பஹ்னாஸ் " கெய்ரோ வீதியொன்றில் குளிரில் உறைந்து மரணமடைந்துள்ளார் இறக்கும்போது அவர் வயது 43. சூடானில் இருந்து அகதியாகப் புலம் பெயர்ந்த இவர் இடமேதும் கிடைக்காது இறக்குமட்டும் தெருவோர வாசியாகவே இருந்திருக்கின்றார். இந்தத் தகவலை நண்பர் பௌசர் மஹ்ரூப் தனது பக்கத்தில் எழுதியிருந்தார். இதைப் படித்து எனக்கு ஏற்பட்ட மனவருத்தம். என்னுள்ளே பல நாட்களாக ஓடிக் கொண்டிருக்கும் சில எண்ணங்களை இங்கு பதியவேண்டும் என்ற உணர்வைக் கிளறி எழுதத் தூண்டியது. (மேலும்....)
ஆனந்த விகடனில் வரதராஜப்பெருமாள் பேட்டி 'தமிழ் ஈழத்தைப் பெற்றுத்தருவேன்’ என்ற நம்பிக்கையை ஊட்டினார். கடைசியில் எதையும் செய்து கொடுக்காமல் போய்விட்டார் பிரபாகரன்" 25 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்துக்கு வருகிறார் வரதராஜ பெருமாள் (காணொளியைப் பார்க்க.....) தனிநாடு அமைக்கும் நோக்கம் கிடையாது நீதிமன்றில் சத்தியம் செய்த த.தே.கூட்டமைப்பு ! தனி நாடு அமைக்கும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ அல்லது இலங்கை தமிழரசுக் கட்சிக்கோ கிடையாது என உச்ச நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தியக் கடதாசி மூலம் இது தொடர்பில் உச்ச நீதிமன்றிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அறிவித்துள்ளன. இலங்கை எல்லைக்குள் தனிநாடு ஒன்றை அமைக்கும் நோக்கம் கிடையாது என தெரிவித்துள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சத்தியக்கடதாசி மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.(மேலும்....) யாழ். பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பிறிதொரு திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அத்தினத்தில் நடைபெறாது எனவும், பிறிதொரு தினத்திலேயே பட்டமளிப்பு விழா நடைபெறும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பில் பல்கலைக்கழக பதிவாளரை தொடர்புகொண்டு கேட்டபொழுது, 'தவிர்க்க முடியாத காரணங்களால் பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது. பிற்போடப்பட்டமைக்கான காரணங்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியாது' என கூறினார். அத்துடன், பட்டமளிப்பு விழா நடைபெறும் திகதி தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஹிலாரி-மஹிந்த சந்திப்பு
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற காலநிலை உச்சிமாநாட்டில் வைத்தே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஹிலாரியை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காங்கிரஸ் விதைக்க பாஜக அறுவடைசெவ்வாய்க்கிரக சுற்றுவட்டப்பாதையில் இணைந்த மங்கள்யான்
மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில்
வெற்றிகரமாக இணைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதல்
முயற்சியிலேயே செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள்
விண்கலத்தை செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாகவும்
இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகமே ஆவலோடு
எதிர்பார்த்திருந்த இந்த அரிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி
பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்திலிருந்து
பார்வையிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
(மேலும்....) கண்டியில் உள்ள பாடசாலை புலிகளுக்கு நிதி வழங்கியது ! கண்டியின் பிரபலமான பாடசாலையொன்றின் நிர்வாகத்தால் 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்தாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளது. குறிப்பிட்ட கல்லூரியின் பழையமாணவர்கள் குழுவொன்று இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. 2005 இல் குறிப்பிட்ட பாடசாலை அதிபராக வெளிநாட்டவர் ஒருவர் பதவி வகித்த வேளை இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாகவும், பாடசாலை நிதியத்திலிருந்தே இந்த பணம் வழங்கப்பட்டதாகவும், மேலும் 11 விடுதலைப்புலி உறுப்பினர்களை மாணவர்களாக பாடசாலை நிர்வாகம் சேர்த்துக்கொண்டதாகவும் குறிப்பிட்ட மாணவர்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ச்சியான முறைப்பாடுகளுக்கு பின்னா குறிப்பிட்ட அதிபர் நாடுகடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த களத்தில் ஆளில்லா, ஆயுதம் தாங்கிய விமானங்களின் பயன்பாடுகள் அதிகரிப்பு தீவரவாதத்தை முறியடிப்பதற்கான யுக்தியாக சர்வதேச நாடுகள், விமான ஓட்டி இல்லாத தன்னிக்க விமானம் மற்றும் ஆயுதம் ஏந்திய விமானங்களின் பாவனையை அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 27வது அமர்வில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்ட போதே ஆணைக்குழுவின் இந்த கொள்கைகளுக்கு ஆதரவளித்த இலங்கை இது தொடர்பில் தமது அதிருப்திகளையும் முன்வைத்தது. சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளால் ஏனைய நாடுகள் மற்றும் வளிமண்டலம் பாதிக்கப் படுவதுடன் பொதுமக்கள் காயங்களுக் குள்ளாவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கவலை தெரிவித்துள்ளது. “மோதல்களின் போது கண்மூடித்தனமாக ஏவப்படும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆயுதமேந்திய விமானங்களினால் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சிவிலியன்கள் காயமடைவது குறித்து நாம் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று இலங்கை தனது அதிருப்தியை வெளிக்காட்டியிருந்தது. டில்லி ஜூவின் புலிகள் உலவுகிற குழிக்குள், இன்றைக்கு ஒரு சோகம் நிகழ்ந்தது.
எச்சரிக்கைகளையும், விதிகளையும் மீறி, கடைசி தடுப்பு சுவரின் மேல் மக்ஸூத் ஏறியதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. ஒரு வேளை, அவனுடைய நோக்கம் நெருக்கமாக போய் புலியை படமெடுப்பதாக இருக்கலாம். உள்ளே தவறி விழுந்த அவனுடைய இறுதி நேரம் மிக மிக பரிதாபமானது. பார்வையாளர் எடுத்த ஒரு புகைப்படத்தில், அவன் புலியின் முன்னால் கைகளை கூப்பிய நிலையில் காட்சி தருகிறான். இந்த நிலை சுமார் பதினைந்து நிமிடங்கள் நீடித்தது. அவனுக்கு யாரும் உதவவில்லை', 'அத்தாரிட்டிகளிடம் மயக்க ஊசி இல்லை' மற்றும் குழியில் தண்ணீர் இல்லை' என்கிற மாதிரி கூவல்களை ஊடகங்கள் எழுப்பினாலும், முழு தவறுமே அந்த பரிதாபத்துக்குரிய இளைஞனுடையதுதான்.. கால் மணி நேரம் புலியை நோக்கி கைகூப்பியே இருந்த இளைஞனை அமைதியாக பார்த்துகொண்டிருந்த புலி அவனின் கழுத்தை பிடித்து தன் குழிக்குள் இழுத்து சென்று அவன் கடைசி நிமிடத்தை முடித்தது. எல்லோருக்கும் இது ஒரு பாடம் .. பாதுகாப்பின்மை, அது இது என்று அரசை குறை சொல்ல நினைத்தாலும் , இது இன்றைய இளைஞர்களின் அடாவடித்தனத்துக்கும், பொறுப்பற்ற செயலுக்கும் கிடைத்த தண்டனை என்றே கொள்ளவேண்டும் ... பாடங்கள் என்றும் வெகு கொடூரமாகவே நடந்து முடிகின்றன. அதுசரி பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் எங்கே போனார்கள் அந்த பத்தது நிமிடம் வரை? கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! மழைக்காலத்தில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான பழங்களுள் ஒன்று தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழமானது பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதிலும் நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் . ஒரே ஒரு கொய்யாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே அத்தகைய கொய்யாப்பழத்தை தவறாமல் தினமும் வாங்கி சாப்பிடுங்கள். மேலும் மழைக்காலத்தில் எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பதால், கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம். (மேலும்....) செப்ரம்பர் 23, 2014 நியூயோர்க்கில் ஜனாதிபதி... அவரை நோக்கி புலிப் பிரமுகர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் 69ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை பகல், நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது பிறகென்ன . சிறப்பாக கனடாவிலிருந்து புலிகளின் ஆதரவாளர்கள் ஊர்க்கோலம் போக தயாராகி வருகின்றனர் வேறு என்ன எதிர்ப்பு தெரிவிக்க. இப்போது எல்லாம் வெறும் 20 டாலர்களுக்கே ஆட்களைப் பிடிப்பது புலிகளின் பினாமி அமைப்புக்களுக்கு கஸ்டமாக இருக்கின்றது. அரசியல் தீர்வை உறுதிப்படுத்தும் கோஷங்களைத் தவிர மகிந்த தமது பிரபாகரனை கொன்று விட்டான் என்ற வன்மம் மட்டுமெ இவர்களிடம் மேலோங்கி நிற்கும் இந்த யாத்திரைகள் வெற்றியளிக்காது. இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதில் ஒரு கோஷ்டி லைக்கா போல் மகிந்தா குழாமுடன் உறவை வளர்க்கவும் பயணமாம். எல்லாம் உருத்திரருக்கும் தெரியுமாமாம், கேபியின் ஆசீர்வாதத்ததுடன் புலிகள் மன்னிப்பு கேட்டார்கள்.....?
புலிகள் மன்னிப்புக் கேட்டார்கள்
என்பது உண்மைதான். மனம் வருந்தி, தவறை உணர்ந்து இதயபூர்வமாக அவர்கள்
அதனைச் செய்யவில்லை. முஸ்லிம் தலைவர்களை வன்னிக்கு அழைத்துப்
பேசியதும் மன்னிப்புக் கேட்டதுமெல்லாம் அப்போதிருந்த அரசியல்
சூழ்நிலையைத் தற்காலிகமாகக் கையாளுவதற்கே! சர்வதேச மத்தியஸ்தத்துடன்
இலங்கை அரசும், புலிகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டிருந்த தருணத்தில் தாங்கள் வரலாற்றில் இழைத்த
தவறுகளிலிருந்து தப்பிக்கின்ற தந்திரோபாயமாகவே புலிகளின் இவ்விரண்டு
செயல்களையும் நோக்க முடியும். இவ்விரண்டும் உண்மையானவையாக,
இதயசுத்தியானவையாக இருந்திருந்தால் மாவிலாறில் தொடங்கிய
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புலிகள், மூதூர் முஸ்லிம்களை
ஒட்டுமொத்தமாக வெளியேற்றித் துடைத்தெறிந்த சம்பவம்
நிகழ்ந்திருக்காது. ரயில் பாதையோரம் குழுமி நின்று யாழ்தேவியை படம் பிடித்த மக்கள் யாழ்ப்பாணம் புகையிரத சேவை மீண்டும் எப்போது ஆரம்பமாகுமெனக் காத்திருந்த வடபகுதி மக்கள் தற்போது பெருமகிழச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் ரயில் சேவையை மீண்டும் ஆரம்பித்து வைத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எமது மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அமைச்ச ரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவான ந்தா தெரிவித்துள்ளார். யாழ்தேவி புகையிரத சேவையின் பரீட்சார்த்த சேவை நேற்று நடைபெற்றது. இச்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து, ஊடகவியலா ளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார். இந்த ரயில் சேவை மூலம் மக்களின் நீண்ட காலத் தேவையை ஜனாதிபதி நிறைவேற்றி வைத்துள்ளார். புகையிரத சேவை எமது மக்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். இதற்காக எமது மக்கள் சுமார் இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இவ்வருட இறுதிக்குள் யாழ்தேவி சேவை காங்கேசன் துறை வரை சென்று விடும். யாழ்தேவி பரீட்சார்த்த ரயில் யாழ்ப் பாணம் நோக்கிச் செல்லும் போது ரயில்பாதையோரத்தில் குழுமி நின்ற பலர் தமது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மக்கள் ரயில் சேவையை எந்தளவு ஆவலுடன் காத்திருந்தனர் என்பது இதன் மூலம் தெரிகிறது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார். நாட்டைவிட்டு வெளியேற ஏழு இந்தியர்களுக்கு உத்தரவுஇந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கல்முனை பிரதேசத்தில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட ஏழு இந்தியர்களையும் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புடைவைகளை அரசுடமையாக்குமாறும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜுட்சன் உத்தரவிட்டுள்ளார். கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து கல்முனை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை, வீடு வீடாக புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேரை கல்முனை பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியதுடன், அவர்களிடமிருந்த புடைவைகளையும் கைப்பற்றினர். இவர்களை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜுட்சன் முன்னிலையில் நேற்று (22) ஆஜர் படுத்தியபோது இவர்களிடமிருந்து வியாபார நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட புடைவைகள் மற்றும் துணிமணிகளை பறிமுதல் செய்து அரசுடமையாக்குமாறும், உடனடியாக இவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். செப்ரம்பர் 22, 2014 கேள்வி எழுப்புவதற்கும் விமர்சிப்பதற்குமான உரிமை. (சுகு-ஸ்ரீதரன்)
1970 களுக்குப் பின் கேள்வி கேட்பதும் விமர்சனம் என்பதும் குறைவடைந்து வந்தன. 1980களின் நடுப்பகுதியுடன் அவை உருவழிந்து போயின. கருத்துச் சுதந்திரத்தை இயல்பாக வெளிப்படுத்திய பலர் உடல் மீதியின்றி அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். தமிழ் சமூகத்தில் உள்ளும் புறத்திலுமிருந்து இது நிகழ்ந்திருக்கிறது. இதனை அலட்சியம் செய்யும் போக்கு சமூகத்திற்கு எவ்விதத்திலும் உதவாது. இந்த வரலாற்று விபரீதங்கள் நிகழாதிருந்தால் பெரும் ஆக்கசக்தி இன்றளவில் நிலவியிருக்கும். நாம் வாழும் ஊர் மனிதர்கள் வசிக்க விரும்பாத பாலைவனமாகிக்கெண்டிருப்பதற்கு காரணம் இந்த ஜனநாயக இடைவெளி குறுகிச்சென்றதே. (மேலும்....) யாழ்தேவி ரெயிலா? அப்படி ஒன்று இருந்ததா?
யாழ்தேவி ரெயிலா? அப்படி ஒன்று இருந்ததா? ஆம் இருந்தது 1990 வரை இருந்தது. இந்திய இராணுவம் வெளியேறியபின் புலிப்பயங்கரவாதிகளால் யாழ்ப்பாணத்திற்கான ரெயில் சேவை தடுக்கப்பட்டது. தண்டவாளங்களையும் சிலிப்பர் கட்டைகளையும் அகற்றிய புலிப்பயங்கரவாதிகள் அதனைக்கொண்டு வல்வெட்டித்துறை அரக்கன் பிரபாகரனுக்கு பங்கர்கள் கட்டினார்கள். புலிகளால் கடத்திச்செல்லப்பட்டு சித்திரவதை முகாம்களில் இருந்த மாற்று இயக்க உறுப்பினர்கள், மாற்றுக் கருத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என்று நூற்றுக்கணக்கான சிறைக் கைதிகளைக் கொண்டே புலிகள் தண்டவாளங்கள் சிலிப்பர்க் கட்டைகளை கழற்றி எடுத்தார்கள். (மேலும்....) சுரேஸ்பிரேமச்சந்திரனின் தம்பி சா்வேஸ்வரனுக்கு எதிராக பட்டதாரிகள் போா்கொடி துாக்குகின்றனா் பட்டதாரிகளை தகுதியற்றவர் எனக் கூறிய வடமாகாண சபை உறுப்பினரின் செயலைக் கண்டித்து யாழ்.நகரில் அகிம்சைப் போராட் டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாணப் பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். இம்மாகாண தமிழ்பேசும் பட்டதாரிகள் ஒன்றிணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் செயலாளராகப் பதவியேற்ற உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வடமாகாண ஆளுநரினாலும் பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளரினது நேர்முகப் பரீட்சையின் பின்னர் பட்டதாரி தரத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேர்முகப் பரீட்சைக்கு செல்லவில்லையென்ற காரணத்தைக் காட்டி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியதன் பேரில் செயலாளர் பதவி இரத்துச்செய்யப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க வடமாகாண சபை உறுப்பினரான கலாநிதி க.சர்வேஸ்வரன், பச்சிலைப்பள்ளி செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த செ.ரமேஷ் தகுதியற்றவர் ஒரு செயலாளர் என தெரிவித்து பட்டதாரிகளை இழிவுபடுத்தியுள்ளதாக வடமாகாண பட்டதாரிகளில் சிலர் விசனம் வெளியிட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக குறித்த வடமாகாண உறுப்பினர் தனது தவறினைத் திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு தனது தவறினை குறித்த மாகாண சபை உறுப்பினர் திருத்திக்கொள்ளாவிடின் வடக்கில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த பட்ட தாரிகளை ஒன்றிணைத்து அகிம்சைப் போரா ட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமா காணத் தமிழ்பேசும் பட்டதாரிகள் தெரிவிக்கின் றமை குறிப்பிடத்தக்கது
My
sister and I wrote a joint statement for this weekend, this is a
small part: ஊவா மாகாண சபைக்கு, தமிழர்கள் நால்வர் தெரிவுநடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளின்படி, பதுளை மாவட்டத்திலிலுந்து 4 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து செந்தில் தொண்டமான்( 31,858 வாக்குகள்), ஆறுமுகம் கணேசமூர்த்தி (19,262வாக்குகள்) வடிவேல் சுரேஸ் (21,967 வாக்குகள்) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேலாயுதம் ருத்ரதீபன்(30,457 வாக்குகள்) ஆகியோரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சி இழந்த 6 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐ.தே.க2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடுமிடத்து இம்முறை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 69 ஆயிரம் வாக்குகள் குறைவாகக் கிடைத்துள்ளன. இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்கு 1 இலட்சத்து 45 ஆயிரத்து 629 வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த 2009ஆம் ஆண்டை விட 21 ஆயிரத்து 941 வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளது. இம்முறையும் ஊவா மாகாண சபையை ஐ.ம.சு.மு கைப்பற்றியுள்ள போதிலும், 6 ஆசனங்களை இழந்துள்ளது. இதேவேளை, ஐ.தே.க.வுக்கு 6 ஆசனங்கள் மேலதிகமாகக் கிடைத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணியும் ஓர் ஆசனத்தை மேலதிகமாகப் பெற்றுள்ள அதேவேளை, கடந்த முறை ஓர் ஆசனத்தைப் பெற்றிருந்த மலையக மக்கள் முன்னணி, இம்முறை அந்த ஆசனத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை ஒக்டோபர் 13இல் ஆரம்பம்யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டுடன் அஸ்தமித்திருந்த வடக்குக்கான ரயில் சேவை, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து ஓமந்தை, பளை, கிளிநொச்சி வரை படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு தற்போது யாழ்ப்பாணம் வரை சேவை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை விஸ்தரிக்கும் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு, இன்று (22) பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு பளையிலிருந்து ஆரம்பமாகும் பரீட்சார்த்த புகையிரதம், 10.30 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையும் என புகையிரத திணைக்களம் தெரிவித்தது. தொடர்ந்து ஒக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்தது. பேச்சுவார்த்தை, தீர்வுக்கா தேர்தலுக்கா?தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவில் வெளியிடப்படும் இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போது கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்தைப் பற்றி அவரது சகோதரர்களான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் என்ன கூறுகிறார்கள் என்று அறிய நிச்சயமாக மக்கள் விரும்புவார்கள். ஏனெனில், இந்த நால்வரும் 13ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறவர்கள். (மேலும்....) செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலம்
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப் பாதையை நெருங்கி வருவதால் அதன் என்ஜினை இயக்குவதற்கான ஆயத்த பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மங்கள்யான் விண் கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் தனது பயண தூரத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது. மங்கள்யான் விண்கலம் இன்று செவ் வாய் கிரகத்தின் நீள் வட்டப் பாதையை அடை யும் என்று இஸ்ரோ விஞ் ஞானிகள் அறிவித்துள் ளனர். இதனால் விண்கல த்தை செவ்வாய் கிரகத் தின் நீள்வட்டப் பாதை யில் நிலைநிறுத்துவதற் காக விண்கலத்தின் என்ஜினை இயக் குவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டபடி எதிர் வரும் 24ம் திகதி மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப் படும் என்று நம்பிக்கை தெரிவித்துள் ளனர். அதன் பின் மங்கல்யான் தனது ஆராய்ச்சி பணியை துவங்கும் என்று தெரிகிறது.
செப்ரம்பர் 21, 2014 புலிகளின் அதி தீவிர கொலைக்களம் இங்கிருந்துதான் ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கான தளமும் இங்குதான் உருவானது
ஊவா மாகாண சபை ஆளுங்கட்சி வசம், ஆனால் ஆதரவு குறைந்துள்ளது
பதுளை, மொனராகலை ஆகிய இரு
மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஊவா மாகாண சபையை ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வெற்றிகொண்டுள்ளது.தேர்தல்கள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக
வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி - 349,906 வாக்குகள் 51.25 சதவீதம் (2 போனஸ் ஆசனங்கள்
அடங்களாக 19 ஆசனங்கள்) ஐக்கிய தேசிய கட்சி - 274,773 வாக்குகள்
40.24 சதவீதம் ( 13 ஆசனங்கள்) மக்கள் விடுதலை முன்னணி 36,580
வாக்குகள 5.36 சதவீதம் ( 2ஆசனங்கள்) யாழ். மக்களுக்கு அவசர வேண்டுகோள்!
யாழ். மக்களுக்கு இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர். பளைக்கும் – யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் அதிவேகமான புகையிரத பரீட்சார்த்த வெள்ளோட்டம் இடம்பெறவுள்ளது. புகையிரத பரிட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதால் புகையிரதப் பாதையின் அருகில் செல்லும் போது, அவதானத்துடன் செல்லுமாறும், மக்களின் கால்நடைகளின் நடமாட்டத்தை புகையிரதப் பதையருகில் கட்டுப்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ் அறிவித்தல்களை புகையிரத திணைக்களத்தினர் ஒலிபெருக்கியில் அறிவிப்பதுடன் துண்டுப்பிரசுங்களும் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடியான பரிட்சார்த்த பயணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது வடமாகாண சபையினருக்கு எதிராக கேலி துண்டுப்பிரசுரங்கள்
வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்று விதமான துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. 'அன்றும் அவளே இன்றும் அவளே' என அனந்தி சசிதரனை கேலி செய்யும் விதத்தில் ஒரு துண்டுப்பிரசுரமும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றின் கனவுகளுடன் வாழ்வதாக வரைபடங்கள் மூலம் சித்தரிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினத்துடன் (21) ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையிலும் வடமாகாண சபை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செயற்படுத்தவில்லை என்பதுடன், மக்கள் இன்னமும் கஷ்டங்கள், சிரமங்களின் மத்தியில் வாழ்வதாகவும் குறிப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுமும் ஒட்டப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களுக்கு கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்புஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவின் அஹிம்சைப் போராட்டத்திற்கான அறிவிப்பும், அரசாங்கத் திற்கான காலக்கெடு விதிப்பும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் அங்கம் வகிக் கும் இதர கட்சிகளின் தலை வர்களைக் கடும் சீற்றத்திலும், அதி ருப்தியிலும் ஆற்றி யுள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது. கூட்டணிக் கட்சி களுடன் கலந்தா லோசிக்காமல் தமிழரசுக் கட்சியின் தலைவர் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு தம்மால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொன்று என அவர்கள் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இவ்விடயத்தில் கூட்டுக் கட்சிகளில் ஒன்றான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தனது எதிர்ப்பை வெளிப் படையாகவே தெரிவித்துவிட்டார். மற்றும் இரு கட்சிகளான புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தனும். ஈ. பி. ஆர். எல். எப். அமைப்பின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் இதனை ஏற்க முடியாது என்பதனை மறைமுகமாத் தெரிவித்துள் ளதாகவும் தெரிய வருகிறது. மக்களது கருத்தறியா மல் மாவை சேனாதிராஜா அவசரப்பட்டு அறிக்கை விட்டுவிட்டார் என இவர்கள் இருவரும் குற்றம் சாட்டியுள்ளதாகவும் தெரிய வருகிறது. அதேபோன்று மற்றுமொரு கூட்டுக் கட்சியான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரான எம். கே. சிவாஜிலிங்கம், தன்னால் மாகாண சபையில் கொண்டுவரப்படும் பிரேரணைகளை எதிர்ப்பவர்கள் தேவையற்ற இவ்விடயத்தை முதன்மைப்படுத்தியது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிய வருகிறது. இதனைவிடவும் புதிய தலைவரால் அறிவிக்கப்பட்ட தீர்மானங்களை தமிழரசுக் கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலரும் எதிர்த்துள்ளதாகத் தெரிய வருகிறது. மாவையின் தலைமையில் மீண்டும் சவடால் அரசியல் ஆரம்பம்பழைய குருடி கதவைத் திறடிதமிழரசு கட்சியின் தலைவராக எதிர் பார்த்தவாறு மாவை சேனாதிராஜா கட்சியின் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிக ளின் தலைவர்களைப் பொறுத்தவரை யில், அவர்கள் மாவையின் தெரிவை மகிழ் ச்சியுடன் நோக்கவில்லை. மாவை தலைவராக தெரிவுசெய்யப்பட்ட உட னேயே, பழைய தமிழரசு கட்சியின் பாணியில் கோஷங்களும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கோஷங்களை பார்த்தால் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என் னும் பழமொழியே நினைவுக்கு வரு கிறது. அமரர் செல்வநாயகம் 1949இல் தமிழரசு கட்சியை தொடங்கிய காலத் திலிருந்து எத்தனையோ கோஷங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அப்படியான கோஷ ங்கள் கட ந்த அறுபது வரு டங்களாக எதைச் சாதித்ததென்று கோட் டால் பதில் சொல்வார் எவரு மில்லை. (மேலும்....) கிழக்கில் குறைந்து வரும் மாட்டு வண்டி பாவனை
கிழக்கு மாகாணத்தில் மாட்டு வண்டிப் பாவனை வேகமாக குறைந்துகொண்டு வருகிறது. இதனால் மாட்டு வண்டினை நம்பி தொழில் செய்து வந்தவர்கள் வேறு தொழில்களை தேட வேண்டிய ஒரு நிலமை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு ஒல்லாந்தர், போர்த்துகேயர் வந்த காலத்தில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கோட்டைகள் கட்டுவதற்கு அத்துறையில் திறமையான பறங்கிச் சமூகத்தைச் சேர்ந்த குழு ஒன்றை இலங்கைக்கு அழைத்து வந்து கோட்டைகள் கட்ட வேண்டிய இடங்களில் இவர்களை குடியமர்த்தினார்கள். கோட்டை கட்டி முடிந்ததும் அவர்கள் அந்தந்த இடங்களிலே நிரந்தரமாக இருந்து கொண்டு பல்வேறு தொழில்கள் செய்வதில் ஈடுபட்டு வந்தார்கள். (மேலும்....) மலையக மக்கள் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக திகழ்ந்தவர் சி.வி மக்கள் பண்பாட்டுக்கழகம் சி.வி. வேலுப்பிள்ளையின் நூறாவது ஜனன தினத்தையொட்டி நடத்திய ஆய்வரங்கு கடந்த 08ஆம் திகதி ஹட்டன் சமூகநல நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. மக்கள் பண்பாட்டுக்கழக அமைப்பாளர் பா. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சட்டத்தரணி எல். ஜோதிகுமார், “சி.வி பதித்துச் சென்ற இலக்கிய தடங்கள்” என்ற தலைப்பிலும் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் எம். எம். ஜெயசீலன் சமகால இலக்கியத்தின் சி.வி. என்ற படைப்பிலக்கியத் தாக்கம் எனும் தலைப்பிலும் “மலையக மக்களின் வரலாற்று அசைவியக்கத்தில் சி.வியின் அரசியல் தொழிற்சங்க பணிகள்” என்ற தலைப்பில் மக்கள் பண்பாட்டுக்கழக செயற்பாட்டாளர். சு. விஜயகுமாரும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். (மேலும்....) செப்ரம்பர் 20, 2014 அதிகாரங்களை பகிர்ந்தால் பிரிவினையை தடுக்கலாம் - சம்பந்தன் தமது அரசியல் தலைவிதி என்ன என்பது குறித்த முடிவை ஸ்கொட்லாந்து மக்களே எடுக்கும் வகையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஒரு சிறந்த ஜனநாயக நடவடிக்கை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஸ்கொட்லாந்து மக்கள் எடுத்த முடிவு எதுவாக இருந்த போதிலும் ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தினதும் தலைவர்களும், ஸ்கொட்லாந்துக்கு இன்னமும் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதையும் அவர் வரவேற்றிருக்கிறார். ஆகவே, ஒரு தனியான வாழ்விடத்தில் உள்ள, தனியான இன மக்களுக்கு உரிய அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவதன் மூலம் பிரிவினையை தடுத்துக்கொள்ள முடியும் என்பது இலங்கைக்கு உட்பட பல நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு பாடம் என்றும் அவர் கூறினார்.(பிபிசி) மாண்டலின் ஸ்ரீநிவாஸ் காலமானார்
இந்தியாவில் அதிகம் அறியப்படாத ஒரு வாத்தியத்தை தனது அதியற்புதமான திறமையினால் உச்சத்துக்கு எடுத்துச் சென்ற ஒரு பிறவிக் கலைஞரின் இசை இன்று அடங்கியது . ஸ்ரீநிவாஸ் என்று இசை உலகம் அறிந்த அந்தக் கலைஞர் தமது 45 ஆவது வயதில் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் காலமானார். கல்லீரல் பிரச்னை தொடர்பான, சென்னை தனியார் மருத்துவமனையில், கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஸ்ரீநிவாஸ், 19 செப்டம்பர், 2014 காலை 09.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார். மாண்டலின் என்ற இசைக் கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். இசைக் குடும்பத்தில் பிறந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், தன்னுடைய மாண்டலின் இசைக் கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச் செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். பாவடைக்குள் பயங்கர ஆயுதம் வைத்துக் கொண்டு, ஆளுநரைப் பற்றி ஆராய்வதற்கு ஆயருக்கு அருகதையில்லை சமயங்களைப் போதிப்பவா்கள் தற்போது அரசியல் போதிக்கும் நிலைக்கு உள்ளாகி வருகின்றார்கள். இலங்கையைப் பொறுத்தவரை தென்பகுதியில் சிங்கள பௌத்த பிக்குகள் சிலா் தீவிர அரசியல் களத்தில் குதித்து சமயபோதனைகளை விடுத்து மக்களுக்கு அரசியல் போதிக்கின்றனா். இதேபோல் வடபகுதியில் வடக்கு மக்களின் அரசியல் வழிகாட்டிகளாக கிறீ்ஸ்தவ மதத்தைப் போதிக்கும் சமயத்தலைவா்கள் ஈடுபட்டுள்ளனா். வடபகுதி தமிழ்மக்களைப் பொறுத்தவரை பெரும்பான்மையோர் சைவசமயத்தைச் சோ்ந்தவா்கள். ஆனால் இவா்களது மதத்தலைவா்கள் பெரும்பாலும் அரசியலுக்குள் நுழையவில்லை. இதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இதைப் பற்றி பின்னா் பார்க்கலாம்.(மேலும்....)
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராதேவி சந்திரகாந்தன் அவர்கள் 18-09-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவஞானம் தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், நாகேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சந்திரகாந்தன்(சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும், நீபா, திவிபரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், பகவதி(ரஜெனி-சுவிஸ்),சுமிதிரன்(அன்பு-சுவிஸ்), சுரேந்திரன்(குட்டி-இலங்கை), மீனநலினா(மீனா-இலங்கை), காஞ்சனா(ஜெர்மனி),(காலம் சென்ற பாலசுப்பிரமணியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவசுப்பிரமணியம் கமலநாயகி, கந்தசாமி கோகிலநாயகி, பத்மநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகளும், சண்முகராசையா விமலாசினி தம்பதிகளின் அன்பு மருமகளும், சக்திவடிவேல் லிங்கமூர்த்தி, சத்தியபாமா, செல்வராணி, கிருபாமூர்த்தி, லக்ஷ்மிகாந்தன், நிமலகாந்தன், உமாகாந்தன், சாந்தமலர், சங்கரன், சிந்தாகரன், ஷைலஜன், நிலானி ஆகியோரின் அன்பு மைத்துனியும், அலகேஸ்வரி, ராசரத்தினம், வனஜா ஆகியோரின் அன்புச் சகலியும், நிவேஸ். சிறிஷா, லவனேஸ், கஜந்தி, கிஷெக், அபராஜுதன், நந்திகா, வர்ஜிதா, மானசீதா, லவனேஸ், ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும், மோகனரூபன், காந்தசொரூபி, அகீசன், உமைகாந்த், விஷாலினி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும், சிவானுஜன், மாதுஜன், விஷ்னுஜன், தர்மினி, கம்சிகா, சாய்சஜன், சுவாரகேசன், சிந்துகேசன், விதுர்ஷன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 19-09-2014 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு சந்திரகாந்தன்(கணவர்) — இலங்கை 0094776506767 பகவதி சகோதரி -சுவிஸ் 0041791059814 காஞ்சனா(சகோதரி) — ஜெர்மனி 004915212299730 சிந்தா — இலங்கை 0094775259046 பிரிட்டனுடன் இணைந்திருக்கவே ஸ்கொட்லாந்து மக்கள் விருப்பம்ஸ்கொட்லாந்து தனி நாடாவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரேட் பிரிட்டன் என்ற ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து தனி நாடாவது குறித்த பொது வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வெளியாகத் துவங்கின. இதில் 55 வீத வாக்குகள் ஸ்கொட்லாந்து கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. கிரேட் பிரிட்டனின் ஓர் அங்கமாக கடந்த 307 ஆண்டுகளாக நீடித்த ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு அந்நாட்டிலேயே உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றின் உண்மையான நிலையறிய அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் ஸ்கொட்லாந்து பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டுமென தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருந்தால் வரும் 2016ம் ஆண்டு மார்ச்சுக்குப் பிறகு அந்நாடு தனி நாடாகி இருக்கும். அது பிரிட்டனின் செல்வாக்கை சர்வதேச அளவில் குறைப்பதோடு பிரதமர் கமரூனின் பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தியிருக்கும். மாற்று அமைப்பொன்றிலிருந்து இணைந்து செயற்பட்டவரே செந்திலை கொல்ல முயற்சிபண்டாரவளையில் இடம்பெற்ற கொலை முயற்சி சம்பவத்தின் சந்தேகநபர் 17ம் திகதி இரவு பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுடன் அடுத்தநாள் சந்தேக நபரை பண்டாரவளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதும், நீதிபதி எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மாற்று அமைப்பொன்றிலிருந்து இ. தொ.காவுடன் இணைந்து செயற்பட்ட எஸ். செல்வேந்திரன் என்ற நபரே, சந்தேகத்தின் பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவராவார். கடந்த 17ந் திகதி பண்டாரவளை மாநகரில் நடைபெற்ற இ. தொ. கா. வின் பிரசார பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது வாகனமொன்றினை செலுத்தி, ஒருவர் மரணமாகியதுடன் 27 பேருக்கு காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பாகவே, குறிப்பிட்ட நபர், சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டி ருப்பவராகும். காயமுற்றவர்களில் வேட்பாளர் செந்தில் தொண்டமான், அல்து முள்ளை பிரதேச சபை உபதலைவர் சிங்கமுத்து அசோக்குமார் உள்ளிட்ட மூன்று பொலிஸாரும் உள்ளடங்கி யுள்ளனர். உலகத் தமிழர்களுக்கு அவசர வேண்டுகோள்! போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி என்ற பெயரில் பண மோசடி செய்த சிவாவதனி
யுத்தத்தின் விளைவுகளால் தனது கால் ஒன்றினை இழந்து மற்றைய காலும் செயலிழந்து போகும் நிலையில் வாழ்வாதாரத்திற்காக துடித்த முன்னால் பெண் போராளிக்கு உதவுவதாகக் கூறி 5000 கனடிய பணத்தை ஆட்டைய போட்ட சிவாவதனி. முன்னால் பெண் போராளிக்கு உதவு மாறு முகநூளில் சிலருக்கு வேண்டுகோள் விடுத்தது அவர்களும் அந்த வேண்டுகோளை ஏற்று 3 பேர் தனித்தனியாக சிவாவதனி இடம் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் இன்று வரை அந்த பெண் போராளிக்கு பணம் செல்லவில்லை அவரிடையே நீங்கள் நேரடிய கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொள்வது மட்டுமின்றி உதவும் நல் உள்ளம் கொண்டோரே உதவிக்கரங்கள் நீட்டுங்கள் 0094773256776 (மேலும்....) செப்ரம்பர் 19, 2014 என் மனவலையிலிருந்து…..! ஊவா மாகாண சபைத் தேர்தல் சொல்லப்போகும் சேதி (சாகரன்) நாளை வாக்கு பதிவு நடைபெறப்போகும் ஊவா மாகாணசபைத் தேர்தல் எல்லோரினதும் கவனத்தையும் தன்பால் திசை திருப்பியுள்ள ஒரு தேர்தல் என்றால் மிகையாகாது. கடைசியாக இலங்கையில் நடைபெற்ற தென்மகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி வெற்றிபெற்றிருந்தாலும் அதன் இறங்கு முகத்தை எடுத்துக்காட்டிய ஒரு தேர்தல் என்றே அதனைக் கூறவேண்டும். சிங்கள பெரும்பான்மை மக்களிடத்தும் ஐக்கிய சுதந்திர முன்னணி பற்றிய கவர்ச்சி குறைந்து வருவதை எடுத்துக்காட்டிய தேர்தலாக அது அமைந்தது. சாதாரண மத்தியதர, அதற்கு கீழ்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு சவால்விடும் இலங்கையின் இன்றைய பொருளாதார நிலமை சாதாரண சாமான்ய மக்களிடையே ஐக்கிய சுதந்திர முன்னணி அரசின் மீது வெறுப்பையே ஏற்படுத்தி வருகின்றது. அபிவிருத்தி என்றும், புதிய கட்டுமானம் என்றும் ஓடிக்கொண்டிருக்கும் இன்றை அரசின் செயற்பாடுகள் சராசரி உழைக்கும் மக்களின் வாழ்வை உறுதிப்படுத்த போதுமானதாக இல்லை. உழைப்பின் ஊதியங்களுக்கு மீறிய வாழ்க்கைச் செலவை கொண்டிருக்கும் விலைவாசி உயர்வை சாதாரண, சமான்ய மக்கள் முகம் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர், தவிக்கின்றனர் என்பதே இன்றை இலங்கையின் நிலையாகும். அபிவிருத்தியும், கட்டுமானமும் வசதி படைத்த மிகச்சிலருக்கு மட்டும் சென்றடையும் அல்லது அனுபவிக்கக் கூடிய நிலமைகளே இலங்கையில் இன்று நிலவுகின்றது. சாதாரண மக்கள் மேல் ஏற்றப்பட்ட வாழ்க்கைச் சுமையின் பிரதிபலிப்பை இந்த ஊவாமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எடுந்தியம்பி நிற்கும். அதிலும் சிறுபான்மை மக்களின் பெருவாரியான வாக்குகள் உள்ள மாகாணம் ஒன்றில் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசுக்கெதிரான வாக்குகள் வழமைபோல் இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சி தமது நண்பன் என்ற மாயமான் மீது நம்பிக்கையை கூட்டும் முகமாவே அமையப் போகின்றது. இதன் அர்த்தம் ஐதே கட்சி நாட்டு மக்களுக்கோ அல்லது சிறுபான்மை மக்களுக்கோ உதவிகரமான கட்சி என்பது அல்ல மாறாக ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வலைகளை வெளிக்காட்டும் ஒரு மாற்றீடாக வாக்குகள் மாறப்போகின்றன அவ்வளவே. ஆனால் இந்த எதிர்பலை ஐக்கிய சுதந்திர முன்னணி அரசிற்கான ஆதரவு தளத்தை குறைத்துக்காட்ட மட்டும் உதவுமே ஒழிய அக் கட்சி ஆட்சியமைப்பதை தடுப்பதற்கு போதுமானதாக அமையப் போவதில்லை. இலங்கையில் இன்னமும் ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி மாற்றாக மக்கள் நலன் சார்ந்து மக்களுக்கு தலைமை கொடுக்க ஒரு அரசியல் கட்சி இருக்கின்றது என்று நம்பிக்கையைக் கொடுக்கக் கூடிய எந்த கட்சியையும் மக்களால் இனம் காண முடியவில்லை. இதே நிலமைதான் வடக்கிலும் தமிழ் தேசியக் கூட்டமைக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்ததற்கும் காரணம் ஆகும். இதையொத்த காரணம் இன்றும், இன்னமும் தென்னிலகையிலும் நிலவுகின்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற நிலையும், சோசலிச நாடுகளுடனான உறவு என்பதுவும், தேசிய நலன்களை முன்னிலைப்படுத்தும் செற்பாடுகளையும் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கேனும் தன்னத்தே கொண்டிருக்கும் கட்சி என்ற பெருமை மட்டும் ஐக்கிய சுதந்திர முன்னணியிற்கு போதுமானதாக இல்லை. ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசின்மீதுள்ள வெறுப்பலையை அறுவடைசெய்ய யாரும் இல்லாத நிலையில் இவர்கள்தான் ஓரளவிற்கு நம்பிக்கைகு உரியவர்களாக தோற்றம் அழிப்பதினால் இத் தேர்தலிலும் அவர்களே சற்றுக் குறைவானாலும் வெற்றியை தமதாக்கிக் கொள்வர். (செப்ரம்பர் 18, 2014) புலிகளுக்கு எதிராக யாழில் சுவரொட்டி
செந்தில் தொண்டமானை கொலை செய்ய சதி பண்டாரவளை நகரில் வைத்து நேற்று முன்தினம் (17/09) மாலை நடந்த வாகன விபத்து ஒரு விபத்து அல்ல. திட்டமிட்டு செந்தில் தொண்டமானை கொலை செய்ய மேற்கொண்ட ஒரு சதித் திட்டமாகுமென இலங்கை தொழிலாளர் காங்கி ரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். நேற்று மாலை பண்டார வளை நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்தார். விபத்தின் போது 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்த ஜீப் வண்டி செந்தில் தொண்டமான் இருந்த இடத்தை நோக்கி செலுத்தியதையடுத்து இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். மேலும் ஊவா மாகாணத்தில் பெரும் வெற்றியை செந்தில் தொண்டமான் எடுப்பதை தடுப்பதற்காக பல நாட்களாக திட்டமிட்டு குறித்த சாரதியை செந்தில் தொண்டமானிடம் அனுப்பியிருப் பதாகவும், இதேபோல் ஒரு சம்பவம் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கும் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேட்பாளர் செந்தில் தொண்டமான் கொழும்பு மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 24 பேர் கடுங்காயப்பட்டு பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிராக ஆயுதம் வழங்க அமெ. பிரதிநிதிகள் அவையில் அனுமதிஇஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுடன் போராடுவதற்கு சிரியா வின் மிதவாத கிளர்ச்சியாளர் களுக்கு பயிற்சி மற்றும் ஆயு தங்களை வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் அவை அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுமதி அளித்துள்ளது. குடியரசு கட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதிநிதிகள் அவையில் இந்த திட்டத்திற்கு அதிக பெரும் பான்மை வாக்குகள் கிடைத்தன. இது செனட் அவையிலும் நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது. ஈராக்கில் தரைவழியாக அமெரிக்க துருப்புகளை அனுப்பப் போவதில்லை என்று ஒபாமா உறுதி யளித்ததைத் தொடர்ந்தே அமெ ரிக்க பிரதிநிதிகள் இந்த திட்டத் திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மத்தியில் இருந்து ஈராக்கில் இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிராக அமெரிக்கா 174 வான் தாக்குதல்களை நடத்தி யுள்ளது. கடைசியாக கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வட மேற்கு இத்ரிப் மற்றும் தென்மேற்கு பக்தாதில் அமெரிக்க படை நடத்திய வான் தாக்குதல்களில் ஐ.எஸ். இன் இரு கவச வாகனங்கள் அழிக் கப்பட்டதாக அமெரிக்க கட்டளை தலைமையகம் குறிப்பிட்டிருந்தது. ஐ.எஸ். க்கு எதிரான ஒபாமாவின் யுத்த மூலோபாயத்தில் ஈராக்கை போன்றே அந்த குழுவுக்கு எதிராக சிரியாவிலும் வான் தாக்குதல்களை முன்னெடுக்க உறுதி அளிக்கப்பட் டுள்ளது செப்ரம்பர் 18, 2014 என் இனமடா நீ!!! அடுத்த தேசியத் தலைவர். நீதான்டா!!! (யாழ் வெடிவேலு) இனிமேல் சிங்களவனுக்கு எதிராக போராடப் போகும் அடுத்த தேசியத்தலைவா் கடந்த சிலதினங்களுக்கு முன் தமிழரசுக்கட்சியால் தெரிவுசெய்யப்பட்டார். அவா்தான் மாவை சேனாதிராஜா அவா்கள். மாவை சேனாதிராஜா தான் தலைமைப் பதவிக்கு வந்தவுடன் இனப்பிரச்சனையைத் தீா்ப்பதற்குள் சிங்கள அரசிற்கு மூன்று மாதகால அவகாசம் கொடுத்துள்ளார். அதற்குள் தமிழா்களுக்கு சரியான முறையில் அதிகாரம் கொடுக்கப்படாவிட்டால் அகிம்சைப் போரில் குதிக்கப் போவதாகவும் சூளுரைத்துள்ளார். அகிம்சைப் போர் என்பதன் அா்த்தம் என்னவென்று அவா் விளக்கமாகச் சொல்லாவிட்டாலும் பெரும்பாலும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதையே அவா் அகிம்சைப் போர் எனத் தெரிவித்திருக்கலாம். (மேலும்....) அறிஞர் அண்ணாத்துரை பற்றி ஒரு கம்யூனிஸ்ட் அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது அவரது பல முக்கியப் பங்களிப்புகளில் நான்கு விசயங்களை முன்வைக்க விரும்புகிறேன். ஒன்று, மாநில சுயாட்சி. திமுக எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட காலத்திலும், பின்னர் ஆளுங்கட்சியாக மாறிய பின்னரும் இதை வலியுறுத்தியவர் அவர். வலிமையான மாநிலங்கள் அமைவதுதான் வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்ற தெளிவோடு மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று கூறினார் அண்ணா. அடுத்து, மொழி உரிமை. அடிப்படையில் தமிழுக்காக அவர் குரல் கொடுத்தார் என்றாலும் அதன் பொருள், இந்தியா போன்ற பல்வேறு மொழிகளும் பன்முகப் பண்பாடுகளும் உள்ள நாட்டில் அனைத்து மொழிகளும் சமமாக மதிக்கப்படுவது முக்கியம். மூன்றாவதாக, விமர்சனங்களை அவர் எதிர்கொண்ட விதம். மாற்றுக் கருத்துகளையும், தன்னைப் பற்றிய எதிர்க்கருத்துகளையும் மனம் திறந்து வரவேற்றவர். இயக்கத்தின் வளர்ச்சிக்கும் அரசின் நல்ல செயல்பாட்டிற்கும் விமர்சனங்கள் தேவை என்று கருதியவர் அவர். (மேலும்....) செப்ரம்பர் 17, 2014 அமெரிக்காவிலேயே அதிக மனித உரிமை மீறல்கள் இலங்கை நாடு இன்று சகல இனங்களும் கெளரவத்துடன் வாழக்கூடிய சுதந்திர நாடாக உலகில் திகழ்கின்றது. சில உலக நாடுகளும் அமைப்புகளும் எமது அரசாங்கத்தையும், நாட்டையும் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வருகின்றன. இது ஒரு அப்பட்டமான பொய்ப் பிரசாரமே. அமெரிக்க அரசுக்கு எதிராக போராடி யவர்கள் இன்றும் சித்திரவதை முகாம்களில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மனித உயிர்களை அழித்து நாட்டில் சொத்துக்களை நாசப்படுத்தி அரசுக்கு எதிராக போராடியவர்களை இன்று அரசாங்கம் புனர்வாழ்வு அளித்து சந்தோசமாக குடும்பங்களுடன் ஒப்படைத்து அவர்களை சமூகத்தில் இணைத்துள்ளது. இதனை மனித உரிமை பற்றி பேசும் அமைப்புக்கள் மற்றும் உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஒரு பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடிவரும் நிலையில் சில தீய சக்திகள் எமது நாட்டில் மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதற்கு மக்கள் சோரம் போகாது சிந்தித்து செயல்பட வேண்டும். நாம் அக்கறையுடன் உங்களின் இடங்களுக்கு வருகை தந்து உங்களை பற்றியும் உங்களின் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்கின்றோம். நீங்கள் நம்பிக்கையுடன் எங்களுடன் இணைந்திருங்கள். நாம் அனைவரும் இன ஐக்கியத்துடன் இலங்கையில் ஒற்றுமையுடன் வாழ்வோம் என மேலும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். ரஷ்யாவுடனான உறவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்பிரேசிலில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்டினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யாவுடனான உறவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கூறினார். 'பிரிக்ஸ்' என்னும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய 5 நாடுகளின் உச்சிமாநாடு, பிரேசில் நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்ய அதிபர் புட்டினை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளிடையே நல்லுறவு நீடிக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். சந்திப்பின்போது, பிரதமர் மோடி நாடு விடுதலை பெற்றது முதலே இந்தியாவுடன் ரஷ்யா நட்புறவு கொண்டுள்ளது. இது இந்திய குழந்தைகளுக்குக் கூட தெரியும். அணுசக்தி, இராணுவம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்த இந்தியா உறுதியாக இருக்கிறது என்று கூறினார். மேலும் ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் கல்வி கற்கும் வசதியாக விசா நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்றத்தில் வெளிமாவட்டத்தவர்களுக்கு இடமில்லைமுல்லைத்தீவு மாவட்டத்தைச் சாராத எந்தவொரு முஸ்லிம் குடும்பங்களையும் அந்த மாவட்டத்தில் மீள்குடியேற்றப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் காணியில்லாதோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளை பணித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியில்லாத முஸ்லிம் மக்களுக்கு காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறித்த மக்களுக்கு பொருத்தமான அரச காணியை பகிர்ந்தளிப் பதற்கு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரியும் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை மோதவிடும் சதிகளை ஒருசிலர் மேற்கொள்கின்றனர். இது விடயத்தில் எல்லோரும் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த பிரதேசத்தில் காணியில்லாதோருக்கு காணிகள் வழங்கப்படும் அது தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம் மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதேச செயலாளரை கேட்டுக்கொள்கிறேன். தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் 89ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட வயல் காணிகளை உரிய வர்களிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றார். சர்ச்சைக்குரிய கடல் பகுதியிலிருந்து எண்ணெய் தளத்தை அகற்றியது சீனாசர்ச்சைக்குரிய கடற்பகுதியில் சீனா மேற் கொண்ட எண்ணெய் கிணறு தோண்டும் பணி கள் முடிவடைந்துள்ளன. இந்த எண்ணெய் கிணறு விவகாரம் சீனாவுக்கும் வியட்னாமுக் கும் இடையில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது. சீன தேசிய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டிருக்கும் அறிவிப் பில், குறித்த எண்ணெய் கிணற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகள் ஆய்வுக்கு உட்படுத் தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சீனா கடந்த மே மாதத்தில் பரகில் தீவுக்கு அருகில் எண்ணெய் கிணறு தோண்ட ஆரம்பித்தது. இந்த பகுதிக்கு வியட்னாமும் உரிமை கோருகிறது. இந்த சர்ச்சையால் இரு நாட்டு கப்பல்களுக்கும் இடையில் கடற்பகுதியில் மோதல்கள் ஏற்பட்ட தோடு. வியட்னாமில் சீன எதிர்ப்பு கலவரமும் ஏற்பட்டது. குறித்த எண்ணெய் தளம் தற்போது சீனாவின் ஹைனான் தீவை நோக்கி கொண்டு செல்லப்பட்டிருப்பதாக வியட்னாம் கடலோர பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது. செப்ரம்பர் 16, 2014 லைக்கா குருதிபடிந்த கரங்கள் இலங்கை இராணுவ விமானத்தில் சென்று இராணுவத்துடன் கைகுலுக்கும் லைக்கா
குமுதம் இதழுக்கு லைக்கா மோபைலின் நிறுவனரும் இயக்குனருமான சுபாஸ்கரன் வழங்கிய நேர்காணலில் ராஜபக்சவிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். தவிர, இலங்கைக்குச் சென்ற சுபாஸ்கரன் தனியார் நிறுவனத்திடம் வாடகைக்கு எடுத்துக்கொண்ட ஹெலிக்கொபடரில் பயணம் செய்தார் என்றும், அத் தனியார் நிறுவனம் இலங்கை அரசின் ஹெலிகொப்டர்களை வியாபார நோக்கில் பயன்படுத்தி வருவதாகவும் அதனைச் சிலர் தவறாகப் பிரச்சரம் செய்வதாகவும் கட்டுக்கதை ஒன்றை உலாவ விட்டிருக்கிறார்கள். (மேலும்....) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
|
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |
||||