Contact us at: sooddram@gmail.com

 

ஐப்பசி 2010 மாதப் பதிவுகள்

ஐப்பசி 31, 2010

பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேசக் கிளைகளின் மகாநாடு

கடந்தவாரம் பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேச கிளைகளின் மகாநாடு ஐரொப்பாவில் நடைபெற்றது. இது தொடர்பாக அவர்களின்   சர்வதேசப் பொறுப்பாளர் த. சாந்தன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை. (மேலும்...) (english Ver...)

 

 

 

ஐப்பசி 31, 2010

13 வது திருத்தத்தை நிராகரிக்கலாமா?

(ஆர். கே. ராஜலிங்கம்)

பதின்மூன்றாவது அரசிய லமைப்புத் திருத்தத்தை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடித்துக் கூறுவது இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் பிரதான தடைக்கல்லாக இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் எண்ணிக்கையில் கூடுதலான பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வு நடைமுறையில் பிரதான பங்காளியாக இருக்க வேண்டிய அவசியத்தைக் கூட்டமைப்புத் தலைமை உணர்ந்து செயற்படுகின்றதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அரசியல் தீர்வை அடைவதற்குத் தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்று ஜனாதிபதி அண்மையில் கூறியதில் அர்த்தம் உண்டு. தீர்வு முயற்சியை முன் னெடுப்பதற்குத் தடையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதை மனதில் வைத்தே ஜனாதிபதி அவ்வாறு கூறியிருக்க வேண்டும். (மேலும்...)

ஐப்பசி 31, 2010

சர்வதேச 'வாய்ப்பாடு'

இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் சர்வதேசம் என்ற ஒரு மாயை தமிழ்த் தலைவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. காலங்காலமாகத் தலைவர்கள் சர்வதேச வாய்ப்பாடு சொல்லிக்கொண்டிருப்பதால் மக்களும் அதில் நம்பிக்கை வைக்கத் தொடங்கினர். ஒருபோதும் சாத்தியமற்ற இரண்டு விடயங்களில் தலைவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்கள். ஒன்று தனிநாடு அமைக்க முடியும் என்ற நம்பிக்கை. மற்றது சர்வதேசம் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை. தமிழ் மக்கள் முகங்கொடுத்த இழப்புகளுக்கும் பின்னடைவுகளுக்கும் இவ்விரு நம்பிக்கைகளுமே பிரதான காரணம்.(மேலும்...)

ஐப்பசி 31, 2010

அரசியல் கட்சிகளின் அராஜகம்

பல்கலைக்கழக மாணவர்களின் வன்முறைச் செயற்பாடுக ளும் இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி வெளியிடப்படும் கருத்துகளும் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்து வருகின் றன. பல பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்து மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் பற்றிப் பேசியிருப்பதிலிருந்து ஏறக்குறைய எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் அமைதியற்ற நிலை இருப்பதைப் புரிந்துகொள் ளலாம். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அண்மையில் மாணவர்குழுவொன்று உயர் கல்வி அமைச்சுக் குள் அத்துமீறிப் புகுந்து தளபாடங்களையும் உபகரணங்களை யும் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாகவே இவர் கைது செய் யப்பட்டார்.

(மேலும்....)

ஐப்பசி 31, 2010

அரசியல் வட்டத்துக்குள் முடக்கப்பட்ட தமிழ் சினிமாவும், மழுங்கிப் போகும் கலைஞர்களின் திறமைகளும்

கடந்த சில மாதங்களாக வெளிவந்த வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்த படங்கள் அனைத்துமே அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டவை அல்லது மற்றவர்கள் தயாரித்து அவர்களால் வெளியிடப்பட்டவை. அவர்களோடு தொழில் ரீதியாக மோத முடியாத சிறிய தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரித்த படங்களை திரையிடுவதற்கு தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். தமிழத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சிலரே கைப்பற்றியதுதான் காரணம். சினிமா பெரும் முதலீட்டில் உருவாக்கப்படுகிறது என்பதால் அதன் வெற்றி என்பது விமர்சனங்கள், விருதுகள், அனைத்தையும் தாண்டி வியாபாரத்லும் இருக்கிறது. (மேலும்.....)

ஐப்பசி 31, 2010

பெண்கள் மீதான ஊடக வன்முறை

(அனிச்சா)

பெண்கள் ஓரளவுக்காவது முன்னேறியிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் இந்த இருபத்தியோறாம் நூற்றாண்டிலும் பெண்கள் மீது ஊடகங்கள் செலுத்தி வரும் வன்முறை குறைந்திருப்பதாகத் தெரியவில்லை. பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களை சுரண்டுவதன் மூலமே லாபத்தையும் நுகர்வோரின் ஆதரவையும் பெற முடியும் என்று நம்புகின்றன. ஊடகத்தின் பெரும்பாலான நடவடிக்கைகளும் இந்த அவல நம்பிக்கை பொருந்தும். பொது புத்தியிலிருந்து விலகி பெண்களை மதிக்கக் கூடிய ஊடகங்கள் இருந்தாலும் அவை சிறுபான்மை எண்ணிக்கையிலேயே இருப்பதால் எந்தப் பெரிய பாதிப்பையும் அவை ஏற்படுத்துவதில்லை. பெண்களின் மீது மிகப்பெரிய வன்முறையை மிக நீண்டகாலமாக செலுத்திவரும் மிக முக்கியமான ஊடகம் திரைப்படங்கள். தமிழில் வெளியாகும் பல திரைப்படங்களை எடுப்பவர்கள் தங்களை தாங்களே கலாசாரக் காவலர்களாக நியமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

(மேலும்.....)

ஐப்பசி 30, 2010

அப்பாவி தமிழ் மக்களிடம் எரிக் சொல்ஹெய்ம் மன்னிப்பு கோர வேண்டும் கொமின் தயாசிறி !

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அப்பாவி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பிரபல சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அவலங்களுக்கு எரிக் சொல்ஹெய்மும் ஒர் முக்கிய பொறுப்பாளி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு ஆதரவான முறையில் செயற்பட்டு வந்தாகவும், அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளுடன் சொல்ஹெய்ம் நட்புறவினைப் பேணியதாகவும், சமாதான ஏற்பாட்டாளராக செயற்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். புலிகளுடனான சமாதான முனைப்புக்களின் போது நோர்வேயை சமாதான ஏற்பாட்டாளராக தெரிவு செய்தமை பாரிய தவறாகும் என அவர் தெரிவித்துள்ளார். (மேலும்...)

ஐப்பசி 30, 2010

ஜனாதிபதி சீனாவை சென்றடைந்துள்ளார்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலத்த வரவேற்பு!

சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை பயணமான
ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ உட்பட்ட தூதுக்குழுவினர் ஷங்காய் நகரை அடைந்துள்ளனர். ஷங்காய் நகரில் இடம்பெறும் எக்ஸ்போ 2010 கண்காட்சியில் பங்கேற்கும் முகமாக சீன அரசாங்கத்தில் விசேட அழைப்பின் பேரில் இவர்கள் சென்றுள்ளனர். சீனா சென்ற இவர்களுக்கு ஷங்காய் நகர புடோன் சர்வதேச விமானநிலையத்தில் வைத்து வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சீன பொது ஆலோசனை சபையின் தலைவர் ஷெய்வேய் மற்றும் ஷங்காய்;;;;; நகரின் அரசாங்க சிரேஷ்;ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதனிடையே, சீனாவில் உயர்மட்ட அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ, சீனப் பிரதமர் வென்ஜியாபோவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்தாலோசிக்கவுள்ளார்.

ஐப்பசி 30, 2010

Ottawa says Tamil arrests send warning to people smugglers

Authorities in Thailand say they have arrested another 100 Tamil migrants, and Canada’s Immigration Minister says the bust ought to send a strong message to human-trafficking syndicates: Don’t target Canada. “We’ve increased our police and intelligence presence in human-smuggling transit countries, including Thailand,” Jason Kenney said in an interview, alluding to pre-emptive actions now being taken by federal agents. It is unclear if the migrants were headed for Canada and Mr. Kenney could not speak to the details of the bust, but he said it “underscores for us the ongoing threat to the integrity of Canada.” He added that there are “several efforts under way by smuggling syndicates to send vessels to Canada.” (more....)

ஐப்பசி 30, 2010

ரிஷானாவின் கருணை மனு விவகாரம்

சவூதி மன்னரின் அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் கடிதம் கையளிப்பு

இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு எழுதிய கருணை மனு மன்னரின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கையெழுத்திட்ட கருணை மனு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக கருணை மனுவை ஏற்கும் மன்னரின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் சவூதி அரசிடமிருந்து பதிலை எதிர்பார்த் திருப்பதாகவும் அவர் கூறினார். (மேலும்...)

ஐப்பசி 30, 2010

அனைத்துப்பல்கலைக்கழக

மாணவர் ஒன்றிய அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உதுல் பிரேமரட்னவை நேற்று பகல் பொலிஸார் கைது செய்தனர். இராஜகிரிய பகுதியில் வைத்தே இவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதற்றத்தைத் தோற்றுவித்து அமைதியைச் சீர்குலைக்க அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டப்பட்டு வரும் நிலையில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை உயர் கல்வி அமைச்சு வளாகத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஐப்பசி 30, 2010

இந்தியாவின் புலிகளாக நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர்

நக்சலைட் தீவிரவாதம் நக்சல்வாடி பிரதேசத்தில் 1967 ஆம் ஆண்டு தோன்றியது. கடந்த 42 வருடங்களில் இந்தியாவின் 16 மாநிலங்களில் இவ்வியக்கம் விஸ்தரித்துள்ளது.முன்பு கட்டுப்பாட்டில் இருந்திராத புதிய இடங்களில்கூட ஸ்திரமாக கால் ஊன்றி நிற்கின்றார்கள். அதில் ஒன்றுதான் Bhopal நகரம். அங்கு ஒரு தொழில்சாலையை அமைத்து இருந்தனர். 16 மாநிலங்களில் இருந்தும் மொத்தமாக 40000 சதுர கிலோ மீற்றர் பரப்பு உடைய நிலம் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 'Red Corridor' என்று இது அழைக்கப்படுகின்றது. 16 மாநிலங்களில் உள்ள 194 மாவட்டங்களில் இவர்களின் பிரசன்னம் உண்டு.(மேலும்...)

ஐப்பசி 30, 2010

நல்லிணக்க ஆணைக்குழு மூலம் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ள விடயங்களுள் மிகப் பெரும்பாலானவை தமிழ் பேசும் மக்களின் நாளாந்த வாழ்க்கையுடனும் அவர்க ளின் இனத்துவ அபிலாஷையுடனும் நேரடியாகச் சம்பந் தப்பட்டவை. எனவே இவ்வாணைக்குழுவின் விசாரணை களில் முழுமையாகப் பங்கு பற்றித் தமிழ் பேசும் மக்க ளின் பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறி அம் மக் களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார் மீகப் கடப்பாடு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகை யில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. அக் கட ப்பாட்டை நிறைவேற்றாமல், ஆணைக்குழுவினால் எவ் வித பலனும் இல்லை எனக் கூறிப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது தலைமைத்துவப் பண்பாகாது. (மேலும்...)

ஐப்பசி 30, 2010

மாணவர் வன்முறைக்குப் பின்னால் வங்குரோத்து ஜே.வி.பி.

கடந்த காலத்தில் வன்முறைகளை கைவிட்டு, மீண்டும் ஜனநாயக அரசியலில் சேர்ந்து விடுவதைப் போன்று பாசாங்கு செய்து வந்த ஜே.வி.பி.யினர், தங்களுக்கு மக்களின் வாக்குப் பலத்தின் மூலம், அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றுவது என்றுமே சாத்தியப்படாது என்ற உண் மையை உணந்திருக்கின்ற காரணத்தினால், வேறு வழியின்றி அப்பாவி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவ, மாணவி களையும் அங்கு பட்டதாரி படிப்பை மேற்கொள்ளும் பெளத்த பிக்கு மாணவர்களையும், பகடைக் காய்களாக பயன்படுத்தி, தங் களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற் காக வன்முறை களை கட்டவிழ்த்த வண்ணம் இருக்கி றார் கள். (மேலும்...)

ஐப்பசி 30, 2010

அமரர் தொண்டமானின் 11வது சிரார்த்த தினம் இன்று

காலத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்ட உன்னத தலைவர்

(கே. மாரிமுத்து)

இவரது வேகமான, விவேகமான சேவை காரணமாக இலங்கை- இந்திய காங்கிரஸின் கம்பளை மாநாட்டில் வரவேற்புக்குத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1947ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்திலே அமரர் தொண்டமானுக்கு பிரவேசம் கிடைத்தது. மலையக மக்கள் சார்பாக தானே தலைமைதாங்கி 7 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை அவரைச் சார்ந்ததாகும். அன்றிருந்த அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களின் பிரஜாவுரி மையையும், வாக்குரிமையையும் பறித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1952ஆம் ஆண்டில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார். மூன்று மாதம் வரையும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றிகண்டார். (மேலும்...)

ஐப்பசி 30, 2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார். யுத்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அவர் எதிர்வரும் நவம்பர் நான்காந் திகதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பாரென்று அதன் இணைப் புச் செயலாளர் தெரிவித்தார். இதேவேளை, கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இயக்குநர் பீ. முத்துலிங்கம் நாளை மறுதினம் (முதலாம் திகதி) ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறார். அதனைத் தொடர்ந்து 03ஆம், 04 ஆம் திகதிகளிலும் 8 ஆம் திகதி முதல் 10 ஆந் திகதி வரையிலும் கொழும்பில் விசாரணைகள் நடைபெறும். எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் பகிரங்க அமர்வு நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா மற்றும் உறுப்பினர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

ஐப்பசி 30, 2010

யாழ். ஆதார வைத்தியசாலைகளுக்கு சத்திரசிகிச்சை படுக்கைகள் கையளிப்பு

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்காவின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்திலுள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகளுக்கு அவசர சத்திரசிகிச்சைப் படுக்கைகளும் மற்றும் நோயாளர்களின் படுக்கைகளும் யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள படைகளின் பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சத்திரசிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. சாவகச்சேரி வைத்தியசாலைக்கு இரண்டு சத்திரசிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. பருத்தித்துறை வைத்தியசாலைக்கு ஒரு சத்திரசிகிச்சை படுக்கையும் இன்று வழங்கப்பட்டன.(மேலும்...)

ஐப்பசி 30, 2010

பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு, ஒலுவிலில் ஆர்ப்பாட்டம்

ஒலுவில் முதலாம் பிரிவு அஷ்ரப் நகரில் யானைப் பாதுகாப்புக்கு வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டம் நேற்று மு.ப. 11.00 மணியளவில் அஷ்ரப் நகரில் யானை வேலி அமைக்கப்படும் இடத்தில் இடம் பெற்றது. இதில் பெருந்திரளான அஷ்ரப் நகர் மக்கள் கலந்து கொண்டனர். எனி னும், பொலிஸ் பாதுகாப்புடன் யானை வேலி அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஐப்பசி 30, 2010

கெற்பலி - மறவன்புலவு அகதி மக்களுக்கான நீதி.

2010 பங்குனி முதலாகக் கேட்டு வாங்கப்படும் இந்தத் தொகைகளுக்கு அறவழிப் போராட்டக் குழுவினர் எந்தவிதப் பற்றுச் சீட்டுக் கொடுக்கவில்லை. இந்தப் பணம் அறவழிப் போராட்டக்குழு வைத்திருக்கும் 12 வங்கிக் கணக்குகள் எதற்குள்ளும் செலுத்தப்படவிவ்லை. 101 குடும்பங்களுக்கும் காணிகளை அளந்து உறுதி எழுதிக் கொடுப்பதற்காக ரூ. 61,000 தொகையை 1985இலேயே இந்தக் குடும்பங்கள் அப்பொழுது தமக்கு வந்த உதவித் தொகையில் கொடுத்துள்ளன. இதற்கும் அப்பொழுதும் பற்றுச் சீட்டுக் கொடுக்கவில்லை. (மேலும்...)

ஐப்பசி 30, 2010

 

1983 இனக் கலவர அகதிகள், 1983 racial riots displaced
 

வணக்கம்

 

அன்னலட்சுமியின் அழுகை

செல்வரத்தினத்தின் சோகம்

பொன்னம்பலத்தின் பொருமல்

 

மனித உரிமை மீறலா?

அறவழி வாழ்வா?

 

தென்மராட்சியாரின் நன்கொடை

 

தீதும் நன்றும் பிறர் தர வாரா

 

பார்க்க காணொலி

http://www.youtube.com/watch?v=a8lGy0KFN-4

ஐப்பசி 30, 2010

புலிவாலும் தூஷணமும்

கடந்த ஞாயிறு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ரி.பி.சி வானொலியில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தார். நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது வழக்கம் போல் ஒரு புலி வால் ஒன்று தூஷணம் ஒன்றை சொல்லிவிட்டு சென்றது. புலிவால்கள் பற்றிய கருத்தில் தூஷணம் மிக முக்கியமானது. கருத்துக்களை எதிர்கொள்ள வக்கில்லாத அல்லது அரசியல் அறிவு கெட்ட ஞானசூனியங்கள் இறுதியாகப் பயன்படுத்துவது தூஷணவார்த்தைகளைத்தான். கிட்டு முதல்கொண்டு அன்ரன் பாலசிங்கம் வரை தூஷணம் கொட்டுவதில் வல்லவர்களாக இருந்தபோது புலிவால்கள் அவ்வழியே இருப்பது வியப்பொன்றுமில்லைத்தான்.(மேலும்...)

மாற்றம் கொண்டு வர போராடு

சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ தயாரில்லாமல் இன்னும் கூப்பாடு போட்டுக்கொண்டே இருக்கிறது. இத்தனை அழிகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள முடியாமல் இன்னும் குளறிக்கொண்டு இருக்கிறது. நாட்டில் இருக்க முடியாது இராணுவம் என்னைத்தேடுது என்று அரசியல் தஞ்சம் கேட்டு அக்ஸ்ப் பண்ணியவுடன் செய்யிற முதல் காரியம் இலங்கை பாஸ்போர்ட் எடுக்கிறது. பிறகு டிக்கட் போட்டிட்டு உல்லாசப்பயணமாக இலங்கைக்குப் போகிறது. இலங்கை தூதராக அதிகாரிகளே இதைச் சொல்லி கவலைப்பட்டார்கள். போயிட்டு திரும்பி வந்து சொல்லுகிற வார்த்தை சிங்களவன் ஒண்டும் தரமாட்டான். பக்கத்து வீட்டுக்காரனுக்கே உதவி செய்ய முடியாத தமிழன், தாழ்த்தப்பட்ட மக்களையே தலையெடுக்க விடாத தமிழன் சொல்லுகிற வார்த்தை சிங்களவன் ஒண்டும் தரமாட்டான். (மேலும்...)

ஐப்பசி 29, 2010

மீண்டும் தமிழர்கள் கைது

தாய்லாந்து பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் கைது!

தாய்லாந்து பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின்போது நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அங்கு கைது செய்யப்பட்டனர். மலேசிய- தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள songkhla, hatyai ஆகிய கிராமங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தவர்களே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அந்நாட்டில் சட்டரீதியாக தங்கி இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையில் கைது இடம்பெற்றபோது இவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் கப்பல் ஒன்றின் மூலம் கனடா செல்ல தயார் நிலையில் இருந்தார்கள் என்று பொலிஸ் சந்தேகிக்கின்றது. இவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குகின்றார்கள்.

ஐப்பசி 29, 2010

ஜெர்மனியில் அரசியல் கலந்துரையாடல்கள்

தோழமையுடன் வணக்கங்கள். பத்மநாபா EPRLF கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் வட-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் கட்சியின் சர்வதேச பிராந்திய மாநாட்டிற்காக வருகைதந்திருந்தார். ஏனைய ஐரோப்பிய நாடுககளுக்கும் விஜயம் செய்து மக்களையும் தோழர்களையும் சந்தித்து வருகின்றார். ஜெர்மனியிலும் கட்சிப்பணிகளை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் ம கால அரசியல் மற்றும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்ங்கள் போன்ற விடங்களை கலந்துரையாடவுள்ளார். நீங்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றி ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு தோழமையுடன் அழைக்கின்றோம்.

கலந்துரையாடல் நடைபெறும் இடங்கள்.

காலம்: 30.10.2010

நேரம்: மாலை 17.30 மணி

இடம்: Landhaus Str-62

             70190 Stuttgart

              Germany.

தொடர்புகளுக்கு: 015204302710

 

காலம்: 01.11.2010

நேரம்: பி.பகல் 14.30

இடம்:  Wilheim Schuroeder Str-13

              47441 Moers

               Germany

தொடர்புகளுக்கு: 017686354418     

                          

பத்மநாபா EPRLF (ஜேர்மன் கிளை)

திருமாவளவன்  கூறுகின்றார்_

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் விமர்சித்ததில் குற்றம் இல்லை _

புலிகளை ஆதரித்து புலியையும் புலித் தலைவரையும் இல்லாமல் செய்து விட்ட திருமாவளவன் போன்றவர்கள் தற்போது 'கிளம்பிடான் ஐயா கிளம்பிட்டான்' என்று காஷ்மீரிகளை இல்லாமல் செய்ய முனைகின்றனர் போலும். அருந்ததி ராய், மாயா, திருமா போன்றவர்களுக்கு ஏகாதிபத்தியத்தின் பணப் பட்டுவாடா இருக்கும் வரை இவர்கள் வாலாட்டிக்கொண்டு, குரைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். இவர்கள் வெளியாருக்கு மட்டும் அல்ல தங்கள் வீட்டிற்கும் உதவாதவர்கள். காஷ்மீரியளுக்கு பிரச்சனை உண்டு. இதனை இந்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் கூடாக இந்தியாவின் 'நண்பர்கள்?' விடமாட்டார்கள். இதுவே கடந்த பல ஆண்டுகளாக நடைபெறுகின்றது. சண்டையை பாவித்து இந்திய இராணுவத்திலுள்ள சிலரின் பொது மக்களுக்கெதிரான அத்து மீறல்கள் மேலும் காஷ்மீரிகளை பாகிஸ்தானின் வலைக்குள் விழச் செய்கின்றது என்பது ஒரு பரிதாப நிலைதான். (மேலும்...)

ஐப்பசி 29, 2010

இலங்கையின் வடக்கு கிழக்குமுன்னாள் முதலமைச்சர் தோழர்வரதராஐப்பெருமாள் புலம்பெயர் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாட சுவிஸ்நாட்டிற்கு 31.10.2010 அன்று விஐயம்..............

சர்வதேசபிராந்திய மகாநாட்டில் கலந்து கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு விஐயம் மேற்கொண்டிருக்கும் தோழர் வரதராஐப்பெருமாள் பிரான்ஸ் நாட்டில் மகாநாட்டை நடாத்தி முன்னணிதோழர்களையும் மக்களையும் சந்தித்தபின் சுவிஸ் நாட்டிற்கு எங்கள் மக்களை காண வருகைதரவுள்ளார். வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சரை நீங்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் உங்கள் கருத்துக்கள் எதுவானாலும் அமைச்சரிடம் கூறி அவரிடமிருந்து தெளிவான பதில்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். புலம் பெயர் மக்களையும் தோழர்களையும் சந்தித்து உரையாட முன்னாள் முதலமைச்சர் மிகவும் ஆவலாகவுள்ளார் என்பதினை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!!!  (மேலும்....)

ஐப்பசி 29, 2010

கனடாவில் கொண்டாட்டம்….. கொண்டாட்டம்….

தமிழ் CMR, TVI குஸ்தி போடும் கொண்டாட்டம்

தலைவரின் சரணடைவுக்கு பின்பு மௌனித்திருந்து உண்டியல்காரர் இப்படியே எவ்வளவு காலத்திற்கு குலுக்காமல் இருக்கலாம் என்று விரக்தியின் விளிம்பிற்கு வந்து இம்முறை இலையுதிர் காலத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்று TVI உடன் குஸ்தி போடும் கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். இதோ அவர்களைப்பற்றி அவர்களே கூறுகின்றனர். (மேலும்....)

ஐப்பசி 29, 2010

மாணவரை போதைப் பழக்கத்துக்கு உட்படுத்த முற்படும் விஷமிகள்!

பாடசாலை முடி ந்து மாணவர்கள் வெளியே வரும் போது அவர்களு க்கு போதைப் பொருளை விற்பனை செய்வதற்கெ ன்றே பல கும்பல்கள் இயங்கி வருகின்றமை விசார ணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு மாணவருக்கு போதைப் பொருள் விற்பனை செய்து வந்த பலர் பொலிஸாரிடம் அகப்பட்டுக் கொண்டுள்ளனர். பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள் ளன. மாணவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்குவ தன் மூலம் போதைப் பொருள் வியாபாரத்தை வெற்றி கரமாக நடத்துவதற்கு பல கும்பல்கள் முயற்சித்து வந் தமை தெரியவந்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 29, 2010

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா எப்போதும் தயார்

பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புவதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். ஜப்பானில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முன்தினம் மாலை மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் போய்ச்சேர்ந்தார். அங்கு அந்த நாட்டின் பிரதமர் முகமது நஜிப் துன் அப்துல் ரசாக்கை அவர் சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேச்சு நடத்தினார்கள். இதன்போது பாகிஸ்தானின் விவகாரங்களும் பேசப்பட்டன. இந்தியா, பாகிஸ்தானிடையேயுள்ள முரண்பாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைகளே சிறந்த வழி. இவ்விடயத்தில் இந்தியா இதயசுத்தியுடன் உள்ளதென்றார் பிரதமர் மன்மோகன்சிங்.

ஐப்பசி 29, 2010

தேசிய பாதுகாப்புத் தினத்தை யாழ். நகரில் நடத்த ஏற்பாடு

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட டிசம்பர் 26 ஆம் திகதியை நினைவுகூரும் நோக்குடன் எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினம்’ அனுஷ்டிக்கப்படவுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் ஆலோசனைக் கமைய தேசிய பாதுகாப்பு தின விசேட நிகழ்வுகளை யாழ். நகரில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ள தாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதுமே இந்த நிகழ்வின் நோக்கமாகும். பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடனும் தனியார் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடனும் யாழ். நகரில் இந்த தேசிய நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

ஐப்பசி 29, 2010

கிளிநொச்சி மாவட்டத்தில்

மீள் குடியேற்றம் 99 வீதம் பூர்த்தி, 52 குடும்பங்களே மிகுதி

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 52 குடும்பங்களே மீள் குடியேற்றப்பட வுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். பளை பிரதேச செயலகப் பரிவில் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்றுவருவதாகக் குறிப்பிட்ட அவர்; இந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் எஞ்சியுள்ள மேற்படி குடும்பங்களும் மீள் குடியேற்றப்படுமெனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரை 99 வீத மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுவிட்டன. எஞ்சியுள்ள 59 குடும்பங்களிலும் 25 குடும்பங்கள் காணி கள் இல்லாதவர்கள். ஆகையால், அவர்க ளுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐப்பசி 29, 2010

கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளரின் இடமாற்றம் ரத்து

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜாவின் திடீர் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கற்றலை மேம்படுத்தும் நேக்கில் வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜாவின் உடனடி இடமாற்றத்தினை பரிசீலிக்க வேண்டுமெனக் கோரி வலயக் கல்வி அலுவலக ஊழியர் நலன்புரி சங்கத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று மனுவொன்றினை நேரில் கையளித்திருந்தனர். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி, மீள்கட்டுமானம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கடந்தகால அர்ப்பணிப்பு மிக்கதான அவரு டைய சேவையினையும் கருத்தில்கொண்டு மேற்படி வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்

ஐப்பசி 29, 2010

கந்தஹார் இராணுவ நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தில்

இது தொடர்பில் தலிபான்கள் தங்களது இணையத்தளத்தில் செய்தியை வெளியிட்டனர். கந்தஹார் மாகாண இராணுவ நடவடிக்கை எங்களைப் பொறுத்தவரை சிறிய விடயம். இதை எதிர்கொள்ளும் இராணுவ, ஆயுத பலம் எம்மிடம் உண்டு. விரைவில் இதை நிருபிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.2001ம் ஆண்டு தலிபான்களின் அரசாங்கத்தை பதவி கவிழ்க்கவும், அல்கைதா தலைவர் ஒஸாமா பின்லேடனைக் கைது செய்யவும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இதுவரைக்கும் ஆப்கானிஸ்தானை நேட்டோ படைகள் முழுமையாக மீட்கவில்லை. நான்கு, ஐந்து மாகாணங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (மேலும்....)

ஐப்பசி 29, 2010

எண் விளையாட்டு விளையாடுவோமா....?

111 111 111 என்ற எண்ணை 111 111 111 என்ற எண்ணால் பெருக்கினால் வேடிக்கையான விடை கிடைக்கும். அந்த விடை 1234 5678 98765 4321 என்பதாகும்.

ஐப்பசி 28, 2010

மீண்டும் அகதிகள் தமிழகம் வருகை : கியூ பிரிவு போலீசார் விசாரணை!

(சாகரன்)

இலங்கை இராணுவத்தினால் முள்ளக்கம்பிக்கு பினால் அடைக்கப்பட்ட அல்லது சரணடைந்த தீவிர புலி உறுப்பினர்கள் இலஞ்சம் கொடுத்து முகாமிலிருந்து தப்பி வெளியே கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் இவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் சிறப்பாக பொது மக்களிடம் இருந்து ஏற்பட்டிருப்பதால் தமிழ் நாட்டிற்கு தப்பி வருவதாக அறிய முடிகின்றது. இவர்கள் முகாங்களிலிருந்து பணம் கொடுத்து தப்பி வந்ததை இராணுவத்திக்கு அறிவிப்பதில் இவர்களால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தீவிரமாக இருந்ததாகவும் அறிய முடிகின்றது. மேற்கத்தைய நாடுகளுக்க தப்பிச் செல்வதற்கான இடைத்தங்கல் சரணாலயமாக தமிழகத்தை அல்லது நிரந்தரமாக தங்கிவிடும் இடமாக தமிழகத்தை முன்னாள் புலி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிய முடிகின்றது. (மேலும்....)

ஐப்பசி 28, 2010

'பிரபல' எழுத்தாளர் அருந்ததி ரோய் மீது தேசத்துரோக வழக்கு : டில்லி தகவல் 

பிரபல இந்திய எழுத்தாளரும் 'புக்கர்' பரிசு பெற்றவருமான அருந்ததி ரோயின் மீது தேசத்துரோகம் வழக்கு பதியப்படலாம் என டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட அவர், காஷ்மீரானது இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியல்லவெனவும் இந்திய அரசை விமர்சித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்தானது பாரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்திய ஆளும்கட்சி உறுப்பினர்கள் முதல் எதிர்க்கட்சியினர் வரை அனைவரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். (மேலும்....)

ஐப்பசி 28, 2010

முதலீட்டாளர் குழு இன்று வன்னி விஜயம்

வட மாகாணத்தில் பல கோடி ரூபா செலவில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள ஆறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதற்கட்டமாக இன்று வவுனியா விஜயம் செய்யவுள்ளனர். ஒவ்வொரு நிறுவனமும் பல கோடி ரூபா செலவில் தாம் புதிதாக நிர்மா ணிக்கவுள்ள தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அடையாளம் காணவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாணத்தில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்த பிரென்டிக்ஸ், ஹைத்ராமணி, மாஸ் ஹோல்டிங், டைமெக்ஸ் ஓவிட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், தனக்கும் இடையில் வவுனியாவில் இன்று விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 28, 2010

தவறான வழிகாட்டலில் பல்கலைக்கழக மாணவர்கள்

மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதோ தேசிய அரசியலில் உயர் நிலையை அடைவதோ சாத்தியமற்ற போதிலும் மக்கள் விடு தலை முன்னணித் தலைவர்கள் வன்முறைச் செயற் பாடுகளுக்கு மாணவர்களைத் தூண்டுகின்றார்கள். இதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணிக்கு நன் மைகள் இல்லாதது போலவே இழப்புகளும் இல்லை. ஆனால் மாணவர்கள் பாரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடும். அவர்களின் கல்விச் செயற்பாடு வெகுவாகப் பாதிப்படையும். தங்கள் பிள்ளைகள் தாமதமின்றிப் பட்டப்படிப்பை முடித்து வந்து தங்களுக்குப் பொரு ளாதார ரீதியாகக் கைகொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப் புடன் வாழும் ஏழைப் பெற்றோர் ஏமாற்றமடைவர். மாண வர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் பற்றி அவர் களை ஊக்குவிக்கும் அரசியல் தலைவர்களுக்குச் சிறி தளவேனும் கவலை இல்லை. மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பற்றிச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். (மேலும்....)

ஐப்பசி 28, 2010

மலேஷியா, இந்தியா வர்த்தக உறவில் இணைவு

மலேஷியாவும், இந்தியாவும் அடுத்த வருடம் ஜுலை மாதத்துக்குள் வர்த்தக உடன்படிக்கையை அமுலுக்கு கொண்டுவரவுள்ளன. ஏற்கனவே செய்யப்பட்ட இந்த வர்த்தக உடன்படிக்கை நீண்டகாலமாக செயலிழந்து காணப்பட்டது. இதை அடுத்த வருடம் ஜுலை மாதமளவில் செயலுருவாக்க இரு நாடுகளும் எண்ணியுள்ளன. 2015ம் ஆண்டளவில் 15 பில்லியன் டொலரளவில் வியாபாரத்தை விஸ்தரிக்கவும் ஏற்பாடாகியுள்ளது. இந்தியப் பிரதமரைச் சந்தித்த மலேஷியப் பிரதமர் நஜீப் ரஸாக் இது குறித்துப் பேசுகையில், இரு நாடுகளில் வர்த்தக உறவுகள் செயல்வடிவம் பெறவுள்ளதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதனூடாக இரு நாடுகளினதும் பல்வகையான உறவுகள் விருத்தியடைய வாய்ப்பேற்படும் அரசியல், கலாசார உறவுகளைப் பலப்படுத்தும் என்றார். மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மலேஷியா சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐப்பசி 28, 2010

அமெரிக்காவின் “ஆயுத பூஜை”!

செப்டம்பர் 15 அன்று அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் உள்ள நெவேடா மாகாணத்தில் அணுஆயுதத்தை வெடித்து அமெரிக்கா சோதனை நடத்தியுள்ளது. இந்தச் செய்தி பெரும்பாலான நாடுகளின் ஊடகங்களால் மறைக்கப்பட்டுவிட்டன. சொந்தக்காலில் அணுசக்தி தயாரிக்கும் முயற்சியில் இருக்கும் ஈரானுக்கு எதிராக பல அஸ்திரங்களை அமெரிக்கா ஏவிவிட்ட வண்ணம் உள்ளது. அணுகுண்டு சோதனை நடத்தியதால் வடகொரியா மீது ஏராளமான தடைகள். இதையெல்லாம் செய்த அமெரிக்கா, தனது அணு ஆயுதச்சோதனையை நடத்தவும் தவறவில்லை. முழுப்பரிமாணம் கொண்ட சோதனையாக அது இல்லாததாக இருந்தாலும், 1997 ஆம் ஆண்டுக்குப்பிறகு அது போன்று 24 முறை சோதனைகளை அமெரிக்கா நடத்தியுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 28, 2010

பம்பலப்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டது

பம்பலப்பிட்டி காலி வீதியில் செயற்பட்டு வந்த வீதி சோதனைச் சாவடி நேற்று முதல் முழுமையாக அகற்றப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவள கூறினார். இதன்படி, கொழும்பு நகரிலுள்ள பிரதான வீதி சோதனைச் சாவடிகளை படிப்படியாக களைவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார். கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதனை தொடர்ந்து வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக களைவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஐப்பசி 28, 2010

270 நாட்களில் 253 இலங்கையர்களின் சடலங்கள்!

கடந்த 270 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக சென்றவர்களுள் 253 பேரின் சடலங்கள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 253 சடலங்கள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் கடந்த 2009ம் ஆண்டில் 365 நாட்களில் 333 இலங்கையர்களின் சடலங்கள் இலங்கைக்கு எடுத்து வரைப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே அதிக அளவில் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இயற்கை மரணம், கொலைகள், விபத்துக்கள், தற்கொலை பணியாளர்களினால் தாக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட காரணங்களினால் அவர்கள் உயிரிழக்கின்றனர்.

ஐப்பசி 28, 2010

ஈரானிடம் பணம் வாங்கினேன் ஆப்கான் அதிபர் ஒப்புதல்

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் அல் கர்சாய், அமெரிக்காவிடம் நட்பு கொண்டவர். ஆனால், அவர் அமெரிக்காவின் எதிரியான ஈரானியிடம் தனது உதவியாளர் உமர் தவுத்சை மூலம் பை நிறைய பணம் வாங்கியதாக தகவல் வெளியானது. இதுபற்றி பேட்டி அளித்த ஹமீத் அல் கர்சாய், பணம் வாங்கியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். அவர் மேலும் கூறுகையில், ‘எனது அதிபர் அலுவலகத்துக்கு எத்தனையோ நாடுகள் நிதி உதவி செய்து வருகின்றன. அதுபோல், ஈரானும் ரூ. 5 கோடி வரை நிதியுதவி செய்துள்ளது. இதில் ஒளிவுமறைவு கிடையாது’ என்றார். இதற்கிடையே, இந்த நிதிஉதவி பற்றி கேள்வி எழுப்ப மாட்டோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஐப்பசி 28, 2010

யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் நேற்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளனர்!

யாழ் நகரப் பகுதிகளிலும் யாழ் மாவட்டப் பகுதிகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 20க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் நேற்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளனர். வெள்ளை வானில் வந்தவர்களாலேயே இவர்கள் கடவுச்சீட்டு சகிதம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிந்தியாவிலிருந்து சென்றுள்ள இந்த புடவை வியாபாரிகள் துவிச்சக்கர வண்டிகள் சகிதம் யாழ் நகரத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (மேலும்....)

ஐப்பசி 28, 2010

ஏழு மாதம் கடலில் தத்தளித்தவர் நாடுதிரும்பினார்


ஏழு மாத காலமாக கடலில் தத்தளித்து உயிர் தப்பிய பேருவளை மீனவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந் தடைந்தார். கடந்த மார்ச் 19ம் திகதி நான்கு பேருடன் ஆழ்கடல் சென்ற டி.மகேஷ் பத்ம குமார மட்டுமே உயிருடன் மாலைதீவு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டார். நேற்று இலங்கை வந்த அவர் மாலைதீவு அரசுக்கு நன்றி களையும் தெரிவித்துக் கொண்டார். மாலைதீவில் துனுதுவா தீவில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்தார். இலங்கை விமான நிலை யத்தில் காலடி எடுத்து வைத் தமை தமக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி யதாகவும் இதற்காக உழைத்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஐப்பசி 28, 2010

பெனாசீர்பூட்டோவை தலிபான்களே கொலை செய்தனர் - புலனாய்வுக் குழு

நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். அதே ஆண்டு டிசம்பர் 27ம் திகதி அவர் ராவல்பிண்டி நகரில் திறந்தவேனில் நின்றபடி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவரை ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அதைத் தொடர்ந்து மனித வெடிகுண்டு தாக்குதலும் நடந்தது. இதில் பெனாசீர் பலியானார். மேலும் 24 பேரும் உயிரிழந்தனர். கொலை தொடர்பாக, தலிபான் அமைப்பை சேர்ந்த ரபாகத், உசைன், ஷெர் சமான், அத்சாஸ் ஷா, அப்துல் ரஷித் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கொலையில் அவர்களின் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 28, 2010

ஈராக் முன்னாள் வெளிநாட்டமைச்சர் தாரிக் அஸிஸை தூக்கிலிடுமாறு உத்தரவு

ஈராக் முன்னாள் வெளிநாட்டமைச்சர் தாரிக் அஸிஸ் தூக்கிலிடப்படவுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஈராக் நீதிமன்றம் இத்தீர்ப்பையளித்தது. இதற்கு எதிராக மேன் முறையீடு செய்ய தாரிக் அஸிஸுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவரைத் தூக்கிலிடவேண்டாமென வத்திக்கான் கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹ¤ஸைன் காலத்தில் தாரிக் அர்ஸ் வெளிநாட்டமைச்சராகக் கடமையாற்றினார். சதாம் ஹுஸைனின் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த ஒரேயொரு கிறிஸ்தவர் இவராவார். அமெரிக்காவின் படையெடுப்பிற்குப் பின் கைதான சதாம் ஹுஸைன் அரசாங்க அதிகாரிகளில் முன்னாள் வெளிநாட்டமைச்சர் தாரிக் அஸிஸம் ஒருவர். நீண்டகாலமாக அமெரிக்காவின் விசாரணையிலிருந்த இவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஈராக் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டார். ஈராக் நீதிமன்றமே இவரைத் தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது. வத்திக்கான் திருச்சபை இதை நிறைவேற்ற வேண்டாமெனக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐப்பசி 28, 2010

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் ' கோப்' முன் சாட்சியம் -  டியூ. குணசேகர

நட்டத்தில் இயங்கும் அல்லது இலாபமீட்டத் தவறிய அரச நிறுவனங்களின் தலைவர்கள் ' கோப்' குழுவின் (பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு) முன் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர் என மேற்படி குழுவின் தலைவரும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். வர்த்தக ரீதியில் அமைக்கப்பட்ட சில நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியதன் காரணமாக, அவற்றின் நட்டத்தை திறைசேரி நிறைவு செய்துள்ளது. திறைசேரி என்பது பொதுச் சொத்து. எனவே பொதுச் சொத்துக்களை விரயம் செய்வது பொது மக்களுக்கு இழைக்கும் தீங்காகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். எனவே அவ்வாறான நிறுவனங்களின் தலைவர்கள் அல்லது முன்னாள் தலைவர்கள் தெரிவுக்குழு முன் சாட்சியம் அளிக்க வேண்டிவரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐப்பசி 28, 2010

‘இவரைப் போல மோசம் வேறு யாரும் இல்லை’ -  சர்கோஸி பற்றி பிரான்ஸ் மக்கள் கருத்து

கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த ஜனாதிபதிகளிலேயே சர்கோ சியைப்போல மக்கள் மத்தி யில் பெரும் வெறுப்பை யாரும் சம்பாதிக்கவில்லை என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பிவிஏ ஆரஞ்சு எல் எக்ஸ் பிரஸ் பிரான்ஸ் மக்கள் மத்தி யில் கருத்துக் கணிப்பை நடத் தியது. அதில் சர்கோசிக்கு எதிராக 71 விழுக்காடு மக்கள் அதிருப்தியைத் தெரிவித்துள் ளார்கள். இந்த அளவுக்கு மக் களிடம் எதிர்ப்பை கடந்த 50 ஆண்டுகளில் யாருமே பெற்ற தில்லை. இதற்கு முன்பாக ஒருவர் 68 விழுக்காடு மக்க ளின் எதிர்ப்பை சம்பாதித்தி ருந்தார். அவர் வேறு யாரு மல்ல, இதே சர்கோசிதான். 2008 ஆம் ஆண்டில் நடந்த கருத்துக் கணிப்பில்தான் அவ ருக்கு இவ்வளவு எதிர்ப்பு காணப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 27, 2010

பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி!

முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, புலிகள் தலைவர் பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், நளினி, சந்தானம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. நளினி, முருகன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். சிவராசன் உட்பட 12 பேர் மரணமடைந்தனர்; பிரபாகரன் உட்பட நான்கு பேர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கை ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் நடந்த சண்டையில்,புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாகவும், அவரது உடல் நந்திகடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. இந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.ராஜிவ் கொலை வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனும், பொட்டு அம்மானும் மரணமடைந்துவிட்டனர்.  அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடப்பட்டுள்ளது. (மேலும்...)

ஐப்பசி 27, 2010

சந்திரிகா கொலைமுயற்சி குற்றவாளிக்கு சிறை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயற்சித்த பிரதான குற்றவாளிக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 28 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு கொண்டமையை ஏற்றுக்கொண்ட வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த சத்திவேல் இளங்கேஸ்வரனுக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேல் நீதிமன்ற நீதிபதி நீதிபதி டப்ளியூ.ரி.எம்.பி.டி. வராவௌ, விதித்துள்ளார். சம்பவத்தின் போது தற்கொலை குண்டு வெடிப்பினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு மரணித்திருந்தால் ஜனாதிபதித் தேர்தல் இடைநிறுத்தப்பட்டிருக்கும். இதனால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு சுமார் ஆறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என நீதிபதி தமது தீர்ப்பின் போது குறிப்பிட்டார். அத்துடன், கொலைமுயற்சியின் போது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியிருக்க கூடிய நிலையிருந்த போதும் குண்டை வெடிக்கவைத்து பல உயிர்களை காவுகொண்டமை தொடர்பில் குற்றவாளிக்கு இந்த தண்டனையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

ஐப்பசி 27, 2010

அரசாங்கத்திற்கு தென்பகுதி மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ. அதற்காகவே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்

வன்னியில் இருக்கும் மாணவர்களைப் பெற்றோரை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கல்விக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை நமது பிரதேசத்து மக்கள் கொடுப்பதில்லை. நான் அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்றோ, வேலைவாய்ப்பு பெற்றுத் தருவேன் என்றோ, இடமாற்றம் பெற்றுத் தருவேனென்றோ கூறி தேர்தலில் போட்டியிடவுமில்லை. வெற்றி பெறவுமில்லை. அரசாங்கத்திற்கு தென்பகுதி மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ. அதற்காகவே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள். இதனை இப்போது ஒரு தேர்தலை நடத்தினாலும் நாங்கள் எங்களுடைய பலத்தை நிரூபித்துக்காட்டத் தயார் என்றார். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

நாடெங்கும் போதைவஸ்து வேட்டை

இரு வாரங்களில் 7098 பேர் கைது-7927 கிலோ போதைப்பொருள் மீட்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக நடத்தப்பட்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 7098 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார். கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடத்தப்பட்ட இந்த சுற்றி வளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 7050 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளதுடன் 7927 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை மீட்டெடுத்துள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.(மேலும்...)

ஐப்பசி 27, 2010

 

மத்தல விமான நிலைய பணிகள் துரிதம்

2012 இல் முதல் விமானம் தரையிறக்கம், 5000 கொள்கலன்களுக்கு களஞ்சிய வசதி

மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கான 3 1/2 கிலோ மீட்டர் நீளமான ஓடு பாதைக்கான நிலத்தை சுத்திகரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு 40 மீட்டர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரம், தீயணைப்புப் படை மற்றும் பாதுகாப்பு அலுவலகம் என்பவற்றை நிர்மாணிக்கும் பணிகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக துறைமுகங்கள் விமான சேவை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார். 2012 ஆம் ஆண்டு பிற்பகுதியில் முதலாவது விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் எனவும் அவர் கூறினார். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

20 லட்சம் சுற்றுலாப்பயணிகள்!  தொடர்ந்து சாதனை படைக்கிறது கியூபா

அமெரிக்காவின் பல்வேறு தடைகளை மீறி கியூபாவைச் சுற்றிப் பார்ப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கை நடப்பாண்டிலும் 20 லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஏழாவது ஆண்டாகத் தொடர்ந்து 20 லட்சம் சுற்றுலாப் பய ணிகளை கியூபா ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டைவிட 12 நாட் களுக்கு முன்னதாக 20 லட்சமாவது பயணியை கியூபா வர வேற்றுள்ளது. கியூபாவுக்கு அதிகமான அளவில் சுற்றுலாப் பய ணிகள் கனடாவிலிருந்தே வருகிறார்கள். அதற்கடுத்த இடங் களில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், மெக் சிகோ, அர்ஜெண்டினா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. (மேலும்...)

ஐப்பசி 27, 2010

இலங்கையின் அமைதியான சூழலை காண விஜயம் செய்யுங்கள்!

இந்திய அரசானது பல சந் தர்ப்பங்களில் இலங்கையில் வாழும் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளி மலையக மக்களை இலங்கைத் தமிழர்க ளுடன் இணைத்துப் பார்த்து இரு சாராரையும் ஒன்றாகக் கணிக்க முற்பட்டுள்ளது. இந்தத் தவறான அணுகுமுறையைப் பற்றி பலமுறை இந்திய அரசிடம் நாம் சுட்டிக் காட்டி யுள்ளோம். இலங்கைத் தமிழர்க ளின் உரிமைப் போராட்டங்களை பெரிதும் மதிக்கின்ற அதே வேளை எமது தனித்துவத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகின்றோம். இலங்கை அரசு எமது தனி அடையாளத்தை ஏற்றுள்ளது. இலங்கை வாழ் இந்தியவம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்கு உழைத்த பல இந்திய தலைவர்களை இவ்விடத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். கே. ராஜலிங்கம், செள. தொண்டமான், எம். ஏ. அர்ஸ் என்னுடைய தந்தை வி. பி. கணேசன், வெள்ளையன், சி. வி. வேலுப்பிள்ளை, எஸ். நடேசன், பெ. சந்திரசேகரன், இரா சிவலிங்கம் ஆகியோர் இவ்விடத்தில் குறிப் பிடத்தக்கவர்கள். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

 

உருக்கமான ஒரு வேண்டுகோள்!

சவூதியைப் பொறுத்த வரை வேறு நாட்டவர் வழக்கை எதிர்கொள்வதில் அதிக சிக்கல் கள் உள்ளன. மொழியும் பிரதான பிரச்சினையாகிறது. இலங்கை போன்ற நாடுகளைப் பொறுத்தவரை குற்றமொன்றை நிரூபிப்பதா யின் ருசுப்படுத்தப்பட்ட சான்றுகள் அதிகம் தேவைப்படுகின்றன. இவையெல்லாம் ரிஷானாவின் இன்றைய நெருக்கடி நிலையில் அப் பாற்பட்ட விடயங்களாகின்றன. சவூதியின் குற்றவியல் சட்டத் தைப் பொறுத்தவரை அப்பெண்ணானவள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள குற்றவாளியாகிறார். இவர் பொதுமன்னிப்புப் பெற்று விடுதலையாகி வர வேண்டுமென்பதே மனிதாபிமானம் கொண்டோரின் உருக்கமான வேண்டுகோளாகும். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

Cash சொல் எவ்வாறு உருவானது

தங்கம், வெள்ளி இவற்றின் எடையைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல் கர்ஷா. இதிலிருந்தே தமிழில் காசு என்ற சொல் தோன்றியது. காசு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து காஷ் என்ற ஆங்கிலச் சொல் வந்தது.

ஐப்பசி 27, 2010

யுரேனியம் செறிவூட்டலை ஈரான் ஆரம்பித்தது

ஈரான் யுரேனியம் செறிவூட்டும் வேலைகளை நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து ரஷ்யாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரம் மெகாவோல்ட் அணு உலைகளில் இந்த யுரேனியம் செறி வூட்டப்பட்டது. மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே இந்த அணு உலை ரஷ்யாவால் நிர்மாணித்துக் கொடுக் கப்பட்டது.  உயர் ரக பெற்றோலை 20 வீதம் செறிவூட்டினால் மின்சாரமும் 80 வீதத்துக்கு மேல் செறிவூட்டினால் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான மூலப் பொருளையும் பெற முடியும். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

திருகோணமலை மாவட்டத்தில்

கிண்ணியா முஸ்லீம்களின் புனித நகரமாகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் பாதுகாப்பு படையின ரின் முகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும்.  திருகோணமலை மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசாரத்தினூடாக ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்து புனித நகரமாக உருவாக்குவதற்கு மத விவகார அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகின்றார். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

கண்ணிவெடி அகற்றும் பணி யாழ். குடாவில் துரிதம்

யாழ். குடாநாட்டிற்குள் தற்போது பொதுமக்களது பாவனைக்காக விடப்பட்டி ருக்கும் பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்றுக் காலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரது யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது மிதிவெடிகளை அகற்றுவதில் நிலவுகின்ற தடைகள், பிரச்சினைகள் குறித்தும் ஏனைய பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் பிரகாரம் யாழ். வசந்தபுரம், கடற்கரை வீதி, துண்டி போன்ற பகுதிகளில் மிதி வெடிகளை அகற்றும் நடவடிககைகளை உடன் ஆரம்பிப்பது எனத் திர்மானிக்கப்பட்டது.

ஐப்பசி 27, 2010

கிளிநொச்சியில் தே. வீ. அ. சபை அலுவலகம் நவம். 1 இல் திறப்பு

கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகக் கட்டடம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடத்தை நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைப்பார். அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு நிர்மாணப் பணிகள் பற்றிய அபிவிருத்திக் கூட்டமும் புதிய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பொன் நகரில் ஐம்பது பயனாளிகளுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளது.

ஐப்பசி 27, 2010

பொலிவிய ஜனாதிபதி ஈரான் விஜயம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொலிவியாவுக்கான வர்த்தக உறவு களை 287 மில்லியன் டொலராக அஹ்மெதி நெஜாத் விஸ்தரித்தார். இதை அடிப்படையாகக் கொண்டு நிலக்கரி வெடிமருந்துகள் கைத் தொழில் பொருட்களை ஈரான் பொலிவியாவுக்கு ஏற்றுமதி செய்ய வுள்ளது. உணவு உற்பத்தி கைத்தொழில் சாதனங்கள் மற்றும் சிமெந்து உற்பத்திகளை ஆரம்பிக்கும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடவும் இரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன. இரண்டு வருடங்களுக்குள் பொலி விய ஜனாதிபதி ஈரானுக்கு மேற் கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும். வெனிசுலாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் பொலிவியா தனது எரிபொருள் கைத்தொழில் தேவைகளுக்காக ஈரானுடனும் உறவாகவுள்ளது.(மேலும்...)

ஐப்பசி 27, 2010

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு பலி 23; 160 பேர் காணவில்லை

இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து எழுந்த சுனாமியில், 23 பேர் பலியானதாகவும், 160க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமத்ரா தீவின் மேற்கு கடற்பகுதிக்கு அடியில் திங்கட்கிழமை நள்ளிரவு கடுமையான பூகம்பகம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி அலைகள் எழுந்தன. மெந்தாவய் தீவுப் பகுதியில் இந்த அலைகள் 10 அடி நீளத்துக்கு எழுந்ததாக, இந்தோனேஷிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இந்த சுனாமியால் 10 கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பேரிடரில் 23 பேர் பலியானதாகவும், 160க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஐப்பசி 27, 2010

பிரிட்டனில் முன்னேற்றம்?

சிறிய அளவு முன்னேற்றம் இருந்தாலும் துள்ளிக் குதித்துக் கொண்டாடும் நிலைக்கு பிரிட்டன் அரசு வந்துவிட்டது. நடப்பாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதாரம் 0.8 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று அதிகாரபூர்வமான புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. துள்ளிக்குதிப்பதற்குக் காரணம் என்னவென்றால், 0.4 விழுக்காடுதான் வளர்ச்சி இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தார்கள். தங்கள் கணிப்பு பொய்யாகிவிட்டது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இது முன்கூட்டியே வெளியிடப்பட்ட மாதிரி ஆய்வின் முடிவுகள்தான். வளர்ச்சி விகிதத்தின் முழு ஆய்வில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் அவர்கள்.

ஐப்பசி 26, 2010

பிரான்சில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில்-சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்!

பிரான்சில்(பத்மநாபா-EPRLF)ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சர்வதேசக்கிளைகளின் பிராந்திய. மாநாடு இம்மாநாட்டில் புலம்பெயர் தேசங்களில் கட்சிப்பணிகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்கள் மற்றும் கட்சியின் தலைமைக்குழு தோழர்களும் பங்குபற்றினர்கள். இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக இம்மாநாட்டில் சில காத்திரமான முடிவுகள் எடுக்கபட்டுள்ளது. (மேலும்...)

 

ஐப்பசி 26, 2010

ரொறன்ரோ தேர்தல் முடிவுகள்! ரொப் போர்ட் மேயராகத் தெரிவு!

மார்க்கம் நகரசபை தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி!!

(சாகரன்)

ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல்கள் கனடிய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பிரகாரம் ரொப் போட் ரொறன்ரோவின் மேயராக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார்.  இதேவேளை இதே தேர்தலில் இப் பிரதேசத்திற்கான கல்விச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட செல்வி. யுவனிதா நாதன் 8,252 வாக்குக்களைப் பெற்றுத் தெரிவானார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 1,968 வாக்குகளைப் பெற்றார். (மேலும்...)

ஐப்பசி 26, 2010

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் பிரபாகரனின் பெயர் நீக்கம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் பிரதான குற்றவாளியென குற்றம் சுமத்தப்பட்டிருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக ஒப்புக்கொண்ட இந்தியா, அவரின் பெயரை அப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் சென்னையில் அவர் மீது தொடரப்பட்டு வந்த வழக்கு நடவடிக்கைகளையும் கைவிட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் புலிகளின் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ் வழக்கின் பிரதான குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டம்மன் என அழைக்கப்படும் சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோரின் பெயர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 26, 2010

உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றிபெற வேண்டும் - தோழர் மோகன்

கடந்த 23 வருடங்களிலும் தமிழ் அரசியல் அரங்கில் நிலவிய புலிகளின் பாசிசம் அனைத்தையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்திவிட்டது. இன்று 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர், யுவதிகள் பெரும்பாலானவர்கள் எமது கட்சியின் அரசியல் இலட்சியம், நடவடிக்கைகள் குறித்து அறியாதவர்களாக உள்ளனர். தமிழ் அரசியல் சூழலில் நிலவிய அராஜகம், ஜனநாயக விரோதம், சுத்துமாத்துக்கள், இதுவரை கால இழப்புக்கள் பொதுவாகவே அரசியல் மீதான நாட்டத்தை தடுத்துவிட்டிருக்கின்றது. கடந்த 30 வருடங்களிலும் பல்வேறு இழப்புக்களை சந்தித்த மக்கள் இயல்பாகவே மானியங்களையும், இலவச உதவிகளையும் எதிர்பார்க்கின்றனர். அரசாங்கத்திடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் மாத்திரமல்ல அரசியல் கட்சிகளையும் அதே கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றனர். மக்களின் இந்த இழி நிலையை அரசியல்வாதிகளும் வாக்கு சேகரிப்பதற்கான மூலதனமாக்கும் மோசடியும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

சமகால யதார்த்தமும் பதின்மூன்றாவது திருத்தமும்

நியாயமான அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்புத் திருத்தத்துக்குத் தேவைப்படும் பாராளுமன்றப் பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ள போதிலும், சர்வசன வாக்கெடுப்பில் அத் திருத்தத்தை அங்கீகரிப்பதற்குத் தேவையான மக்களாதரவு இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையில், உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வாகப் பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமே உள்ளது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலுள்ள குறை பாடுகளையும் அதன் சில சரத்துகள் நடைமுறைப்படுத்தப் படாதிருப்பதையும் சுட்டிக் காட்டித் தீர்வுச் செயற் பாட்டிலிருந்து ஒதுங்கியிருப்பது இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எவ்விதத்திலும் பலனளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் நடைமுறைத் துன்பங்கள் தீர்வதற்கும் அது வழிவகுக்காது. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

வடபகுதியில் அரசாங்கத்தின் ஆதரவில் இடம்பெரும் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு - சித்தார்த்தன்

தனிப்பட்ட ரீதியில் யாரும் வடக்கில் வசிக்கலாம். வர்த்தகங்களை நடத்தலாம். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. ஆனால் அரச ஆதரவில் குடியேற்றங்கள் இடம்பெறுவதையே எதிர்க்கின்றோம். தற்போது இராணுவத்தினர் காட்டுப்பகுதியில் முகாம்களை அமைக்கின்றனர். அது பிரச்சினையில்லை. ஆனால் பண்டிவிரிச்சானில் எதற்கு பௌத்த விகாரை? இவ்வாறு சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயங்கள் இடம்பெறுகின்றன. அதாவது வடக்கின் மக்கள் தொகையியலை மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது என்று புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இலங்கையில் தனிநாடு அமைவதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது. இலங்கை அரசாங்கம் விரும்பினாலும் இந்தியா அதற்கு ஒருபோதும் இணங்காது. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

மாவீரர் தினம் நெருங்கி வரும் நிலையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கே.பியின் பேச்சு!

இலங்கை இராணுவத்துடன் ஆன யுத்தத்தில் உயிர் இழந்த மாவீரர்களின் பிள்ளைகள் மீது நாங்கள் எல்லோரும் கவனம் எடுக்க வேண்டும், ஏனெனில் அம்மாவீரர்கள் எமது தாய் மண்ணுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள் என்று புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தராக இருந்த கே.பி கிளிநொச்சியில் தெரிவித்து உள்ளார். அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்று கூறப்படும் கே.பி கடந்த வாரம் அம்மாவட்டத்துக்கு சென்றிருந்தார். அவர் கண்ணகை குடியிருப்பு என்கிற முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கப் போராளிகளின் பிள்ளைகளை நேரில் சந்தித்தார். அப்பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

ஐப்பசி 26, 2010

எந்திரன் சிக்கலில்

Endhiran is a film produced by Sun Oics, whose managing director is Kalanidhi Maran...This film was directed by Shankar..Rajinikanth and Aisvarya Roy are in the lead..Simultaneously made in Telugu and Hindi...as Robot..The story of this fil was published in a magazine in the year 1996... The story writer is Amudha Tamilnadan also known as AAroor Tamilnadan...Shankar, the Director of the film Shankar claims the story is His... Today the story writer preferred a complaint before the Commissioner of Police, Chennai giving all the publish material and prayed to take action against the director of the film Shankar and the Producer Kalanidhi Maran for violating copy right...

ஐப்பசி 26, 2010

பாடசாலைக்கு சென்றால் பரிசு

மேற்கு வங்க மாநிலம், மஹானந்த் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் நாள்தோறும் தவறாமல் பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் பரிசளித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம், ஹுப்ளி மாவட்டத்தில் உள்ள மஹானந்த் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரிய ராக இருப்பவர் ஸ்வப்பன் நியோகி. இந்தப் பாடசாலையில் இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. அதன் அருகிலேயே கட்டப்பட்டு வந்த புதிய வகுப்பறை கட்டடங்கள், போதிய நிதி இல்லாததால் பாதியி லேயே நிற்கின்றன. தலைமை ஆசிரி யர் தவிர, இந்த பள்ளிக்கூடத்திற்கு 3 ஆசிரியர்கள் மட்டுமே உண்டு. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும், படிக்காத விவசாயிகள்.(மேலும்....)

ஐப்பசி 26, 2010

கண்ணீர் அஞ்சலி

போருக்குப் பின்னரான சூழலில் நிரந்தர சமாதானத்தையும் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வையும் முக்கிய விடயங்களாக அடையாளம் கண்டவர்களுள் கிருபானந்தனும் ஒருவர். வெறும் இனவாத, பிரதேசவாத, மதவாத குறுகிய அரசியல்தான் எமது மண்ணைச் சிதைத்தது என்பதால் சகல இனங்களுக்குமிடையிலான உறவு என்பது அவருக்கு முக்கியமானதாக இருந்தது. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒன்றுதான் அரசியல் வியாபாரிகளை அகற்றி நிரந்தர சமாதானத்தைத் தரும் என்று நம்பியவர் தோழர் கிருபா. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

கனடிய தேர்தலும் ஈழத்தமிழரும்... மக்கள் ஆணையை பொறுத்திருந்து பார்ப்போம்!  - அலெக்ஸ் இரவி

கனடாவில் மூன்று நிலைகளில் அரச அதிகாரம் செயற்பட்டு வருகிறது. ஒன்று தலைநகர் ஒட்டாவாவை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மத்திய அரசாங்கமாகும். இரண்டாவது வகை, மாகாணங்களை மையப்படுத்தி நடைபெறுகின்ற மாகாண அரசுகளாகும். மூன்றாவது நிலையில் செயற்படுபவை மாநகர, நகர, கிராம மட்ட நிர்வாகங்களாகும். இவற்றில் கனடாவின் மிக முக்கியமான மாகாணமாகத் திகழும் ஒன்ராறியோவின் தநைகரான ரொறன்றோ நகரின் மாநகர சபைக்குத்தான் ஒக்ரோபர் 25 இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

முல்லைத்தீவு மீள்குடியேற்றப் பணிகள் டிசம்பர் 31க்குள் பூர்த்தி

ஒட்டுசுட்டானில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் புதுக்குடியிருப்பில் 14 கிராமசேவகர் பிரிவுகளிலும் கரைதுரைப்பற்றில் 16 கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்துபுரம், திருமுருகண்டி மேற்கு, பனிச்சங்குளம், மாங்குளம், ஒலுமடு மற்றும் அம்பகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. வவுனியா மற்றும் யாழ். ஆகிய பிரதேசங்களில் தமது உற வினர் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றனர். (மேலும்....)

ஐப்பசி 26, 2010

அமெரிக்கா சொல்கின்றது

இராணுவ அழுத்தங்களை எதிர்கொள்ள இயலாத தலிபான்கள் பேச்சுவார்த்தையில் நாட்டம்

தலிபான் தலைவர்களில் பேச்சுவார்த்தை களை விரும்புவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் இதற்கான சமிக்ஞைகளை அண்மையில் தலிபான்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஹோல் புரூக் தெரிவித்தார்.  ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் அல் கார்சாயி அண் மையில் தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். இதற்கென விசேட சமாதானக் குழுவொன் றையும் அமைத்து முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரை இக்குழுவிற்கு தலைவராகவும் ஆக்கியுள்ளமை விசேட அம்சமாகும். ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் களின் தலைவரான முல்லா ஒமர் பாகிஸ்தானில் இயங்கிவரும் அல்ஹகானி தலைமையிலான தலிபான்கள் மற்றும் லக்ஷர் இ இஸ்லாம் லக்ஷர் இ தொய்யா அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்த ஹோல் புரூக் அல் கைதாவுடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்தார். (மேலும்....)

ஐப்பசி 26, 2010

வீட்டுச் சூழலை அசுத்தமாக வைத்திருந்தவருக்கு 4 மாத கடூழிய சிறை

டெங்கு நுளம்பு பரவும் வகையில் வீட்டு சுற்றுச் சூழலை அசுத்தமாக வைத்திருந்த வீட்டுரிமையாளர் ஒருவருக்கு கண்டி மஜிஸ்திரேட்டினால் 4 மாத கடூழியச் சிறைத் தண்டனையும் 1500/= ரூபா தண்டப்பணமும் செலுத்தும் படியும் நேற்று (26) தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மேற்படி தீர்ப்பை மீள் பரிசீலனைக்காக கண்டி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது மாவட்ட நீதவான் பீர்த்தி பத்மன் ஏலவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பையே உறுதி செய்யப்பட்டு மீள் பரிசீலனை நிராகரிக்கப்பட்டுள்ளது. மெனிக்கின்ன பிரதேசத்தில் அமைந் துள்ள வீடொன்றில் பாவித்த பழைய டயரொன்றுள் நுளம்பு பரவும் வகையில் அது அமைந்துள்ளமை குறித்து மெனிக் கின்ன பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.

ஐப்பசி 26, 2010

சன் சீ கப்பலில் கனடா சென்றவர்களில் 30 பேர் விடுதலை

எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவை சென்றடைந்தவர்களில் 30 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எம். வி. சன் சீ கப்பலின் மூலம் கடந்த ஒகஸ்ட் மாதம் 13ஆம் திகதி 492 இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று கனடாவை அண்மித்திருந்தது. அரசியல் புகலிடம் கோரி கனடாவை சென்றடைந்துள்ள இவர்களில் விடுதலை செய்யப்பட்டுள்ள 30 பேருக்கு அகதிகளுக்கான அந்தஸ்து கோருவதற்கான முழு உரிமை உள்ளதாக கனேடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

மக்களின் கருத்தை மதிக்காது

ஓய்வூதிய வயதெல்லை 62 ஆக உயர்வு புதிய சட்டம் விரைவில் அமுலாகும்

நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பலத்த கொந்தளிப்பு காணப்படுகிறது. இது தவிர, வருகிற வியாழன் மற்றும் நவம்பர் 6 ஆகிய திகதிகளில் இரண்டு வேலை நிறுத்த போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்ற மேல் சபை ஒப்புதல் அளித்தது. சட்டத்துக்கு ஆதரவாக 177 பேரும் எதிராக 153 பேரும் வாக்களித்தனர். முன்னதாக சட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொண்டு வந்த சுமார் 1250 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அடுத்த வாரம் இறுதி ஒப்புதல் பெறப்பட்ட பின், அந்த சட்டம் அமுலுக்கு வரும். ஆனால், இந்த சட்டத்தை கைவிடுமாறு சர்கோஸியை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

மஞ்சள் காமாலை வைரசை  துடைத்தெறிந்தது கியூபா

கியூபாவின் சுகாதாரத்துறை படைத்து வரும் சாதனை களில் அடுத்த மைல்கல்லாக மஞ்சள்காமாலை நோயின் உச்சகட்டமாகக் கருதப்படும் ஹெபாடிடிஸ் ‘பி’ வைரஸ் தாக்குதலை துடைத்தெறிந்த நிகழ்வு அமைந்துள்ளது. தொடர்ந்து தடுப்பு மருந்துகளை கொடுத்து வந்தாலும் பல நாடுகளில் பி வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்த முடி யாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் கியூபாவின் தேசிய மரபணு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப மையம் தயா ரித்து வழங்கிய தடுப்பு மருந்துகள் நல்ல பலனைத் தந்துள் ளன. இந்த தடுப்பு மருந்துகளைக் கொடுத்ததால் கியூபாவில் இந்த வைரஸ் தாக்குதல் இல்லவே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் புதிதாக எந்தவொரு கியூபக் குடிமகனையும் இந்த வைரஸ் தாக்கவில்லை. இதே மருந்தை வெளிநாடுகளுக்கு கியூபா ஏற்றுமதி செய்துள் ளது. கிட்டத்தட்ட 12 கோடி மக்களுக்குத் தேவையான மருந்து கியூபாவிலிருந்து சென்றுள்ளது.  சர்க்கரை நோயால் கால்களில் ஏற்படும் புண்ணைக் குணமாக்கும் ஒரே மருந்தையும் தங்கள் மையம்தான் கண்டு பிடித்தது என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் மையத் தின் இயக்குநர் டாக்டர் லூயிஸ் ஹெர்ரிரா.

ஐப்பசி 26, 2010

வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்

இராக் போர் தொடர்பான 4 லட்சம் ஆவணங் களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் அறி வித்த உடனேயே அமெரிக்காவும், அதன் அக்கி ரமங்களுக்கு துணை நின்ற நாடுகளும் பதறின. இந்தத் தகவல்கள் வெளியானதால் அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைப்பது குறித்து ஆராய பென்டகன் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த தகவல்கள் உண்மையல்ல என்று அமெரிக்காவினால் மறுக்க முடியவில்லை. மாறாக, இந்த ஆவணங் களால் இராக் மக்களுக்கும் அந்நாட்டில் உள்ள பன்னாட்டு வீரர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்று கூறுகிறது அமெரிக்கா. இராக்கிற்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்கா கூறிய காரணங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை அந்த நாடே ஒத்துக்கொண்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 25, 2010

பாரிஸ் மாநாடு ஓர் திருப்புமுனையாக அமையட்டும்

தமிழர்களின் பிரச்சினை பயங்கரவாததத்திற்கு முற்பட்டது 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவுவது என்பதை உணர்ந்தும் உணராதவர்கள் போல் இவர்கள் நடக்க முற்படுகின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் 2009 வெற்றியின் பெருமித உணர்வுகள் பரவலாக இருந்தாலும் அவர்கள் இன்று தாம் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளும் காவுகொள்ளப்பட்டு விடுமோ என அச்சமுறுகின்றார்கள் இலங்கையில் இன சமூகங்களின் பிரச்சினைக்கு ஜனநாயகரீதியாக தீர்வு காணாத வரை இலங்கையின் பெரும்பான்மை இன மக்களும் ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க முடியாதென்பதே நிஜம். தென்னிலங்கையில் முற்போக்கு அரசியலும் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. கெடுபிடி யுத்தத்திற்கு பின்னரான உலகம் 1990இருந்து தீவிர மாற்றமடைந்து வந்திருக்கிறது. அது தென்னாசியாவையும் பாதித்தது. இந்தியா, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் சாரம்சத்தை அதன் அதிகாரப் பரவலாக்கத்திட்டத்தை நடைமுறையில் முழுமையாக சாத்தியமாக்குமாறு இலங்கையிடம் பல தடைவை நயந்து கேட்டிருக்கிறது. இலங்கையின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டிருக்கிறது. நட்பான அயல்நாடு என்ற வகையில் பல்வேறு தடைவைகள் இலங்கையின் தலைவர்களிடம் பல தடைவைகள் இதனை வலியுறுத்தி வந்திருக்கிறது. (மேலும்....)

ஐப்பசி 25, 2010

ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலில் நேருக்கு நேர் மோதும், புலி முகவரும், மக்கள் நலன் விரும்பியும்!

(கனடா கந்தசாமி)

இலங்கையில் நெடுந்தீவு மண்ணை அடியாகக் கொண்ட, நீதன் சண்ணை எடுத்துக் கொண்டால், அவர் நமு பொன்னம்பலம் அளவுக்கு அரசியல் பாரம்பரியம் உள்ள ஒரு குடும்பத்திலிருந்து வந்தவரல்லர். நீதன் சண் தன்னைத் தீவிரமான புலி ஆதரவாளராகக் காட்டிச் செயற்பட்டதின் மூலமே, பிரபலம் தேடிக் கொண்டவர். ரொறன்ரோவில் நடைபெற்ற அநேகமான புலி சார்பு ஊர்வலங்கள், கூட்டங்கள் என்பனவற்றுக்கு இவரும் ஒரு முக்கியமான ஏற்பாட்டாளராகச் செயற்பட்டு வந்துள்ளார். அந்தச் செயற்பாடுகளின் உச்சக் கட்டமாக, 2004 டிசம்பரில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம் (Human Rights Watch), புலிகள் கனடாவில் மேற்கொண்டு வந்த கட்டாய நிதி வசூலிப்பை அம்பலப்படுத்திய பகிரங்க அறிக்கையொன்றை, கனடாவின் ஸ்காபரோ நகரில் வெளியிட்ட நிகழ்ச்சில் பெரும் கலாட்டா செய்த புலி ஆதரவாளர்களில் நீதன் சண் மிக முக்கியமானவராவார். (இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே கனடிய அரசாங்கம் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது) (மேலும்....)

ஐப்பசி 25, 2010

புளொட் இயக்கத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு!

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் தமது சர்வதேச கிளைகளின் மகாநட்டை எதிர்வரும் 30ம் 31ம் திகதிகளில் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் நடைபெறவுள்ள மகாநாட்டில் கட்சியின் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள்.வெளிநாட்டு கிளைகளின் பொறுப்பாளர்கள் பங்கு கொண்டு எதிர்கால செயற்திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராஜவுள்ளதாகவும், இவ் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு கிளைகளின் கட்சி உறுப்பினர்கள், சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் ஜேர்மனுக்கு வந்த வண்ணமுள்ளதாக புளொட் அமைப்பின் சர்வதேச ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒக்ரோபர் 24, 25 ம் திகதிகளில் பரிஸில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேச கிளைகளின் மாகா நாட்டைத் தொடர்ந்து நடைபெறும் இம் மகாநாடும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் புலத்திலும் தளத்திலும் பலம் பெற்று வருவதை எடுத்துக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஐப்பசி 25, 2010

கனடாவிலிருந்து மீண்டும் வர புதிய கடவுச் சீட்டு கோரும் இலங்கையர்

கனடாவிலுள்ள இலங்கை அகதிகள் தமது நாட்டுக்கு வருவதற்காகப் புதிய கடவுச் சீட்டு மற்றும் ஆவணங்களைக் கோரி வருவதாக, ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது. கனடாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் போது, தமது அகதி ஆவணங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர். இவ்வாறு அகதி அந்தஸ்து கோரியவர்களில் 70 சதவீதமான இலங்கையருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 25, 2010

இலங்கைக் கடல் எல்லையில் தமிழக அரசியல்வாதிகளின் படகுகள்

தமிழக அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான படகுகளே இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாகக் கடற்றொழில் நீரியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இரவுப் பொழுதில் பெரும் எண்ணிக்கையிலான இந்தியப் படகுகள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் செய்மதியினூடாக அதற்கான ஆதாரங்களைப் பெற்றுள்ளதாகக் கூறினார். செய்மதியினூடாகப் பெறப்பட்ட படங்கள் ஊடகவியலாளர்களுக்கு அதன்போது வழங்கப்பட்டது.

ஐப்பசி 25, 2010

The Vanni Crisis:  You can make a difference!

Recently I went to vanni got in touch with a number of people associated with schools.  l I discovered that there are more than 4000 students from Vanni on the verge of financial and emotional calamity as their sources of livelihood and support have, over the past few months, simply disappeared! While I was there I met the director of education of vanni district and listen to these students’ plights. Most of students are do not have one of their parent or both. There is large number of widows I met and their stories are heart trenching but they still holding their breath for their children. They are asking us to give a hand so they can stand up again and see the light. (more....)    

ஐப்பசி 25, 2010

 

யாழ். வசாவிளான் கல்லூரி ரூ. 50 இலட்சத்தில் புனரமைப்பு

யாழ். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் உடனடியாக புனரமைக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ். பாதுகாப்புப் படைகளினதும் மேற்படி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தப் பாடசாலை கடந்த மாதம் 29ம் திகதி பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது.  சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்பட்ட இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்தல், புனரமைப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

ஐப்பசி 25, 2010

விக்கிலீக்ஸ் அறிக்கை வெளியானதால் பெரும் பதற்றம்
வெளிநாடுகளிலுள்ள நேட்டோ படைகளுக்கு ஆபத்து

மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் தீவிரவாதிகள் தாக்கலாமென அதிகாரிகள் எச்சரிக்கை

ஈராக் போர் தொடர்பாக உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியான விக்கிலீக்ஸ் அறிக்கைகள் அனைத்தும் உண்மையென்றும் 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ஈராக் கில் இடம்பெற்ற இராணுவ கெடுபிடிகள், துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்களை இந்த அறிக்கை வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ள தாகவும் விக்கிலிக்ஸ் அறிக்கையை தயாரித்த ஜுலியன் அசான்ஜி தெரிவித்தார். விக்கிலீக்ஸ் அறிக்கைகள் அனை த்தும் உண்மை. இதில் நான்கு இலட்சம் தகவல்கள் உள்ளன. ஈராக்கில் நேட்டோ படைகளின் போர் தொடங்குவதற்கு முன்னிரு ந்துள்ள தகவல்களும் 2009ல் போர் முடிவடைந்த பின்னரும் தொடர் கின்ற கொடுமைகளை இந்த அறிக் கைகள் காட்டுகின்றன. 15 ஆயிரம் பொதுமக்கள் இதில் பலியாகியு ள்ளனர். ஆனால் இன்றும் பொது மக்கள் மீதான கொலைகள் தொடர் கின்றன.(மேலும்....)

ஐப்பசி 25, 2010

British government announces unprecedented social cuts

(By Ann Talbot)

The Conservative-Liberal Democrat government’s autumn spending review has introduced the most savage package of public spending cuts ever seen in Britain. Half a million public-sector jobs will be lost as £83 billion, or $128 billion, is cut from the budget. Another half million private-sector jobs will go as a result. Spending for welfare benefits will be slashed by a total of £18 billion between the cuts contained in the spending review and those already made in the emergency budget earlier this year. The military faces an 8 percent average cut in spending, as major programmes are slashed or postponed under the Strategic Defence Review. These cuts come on top of the plans inherited from the previous Labour government. Even before the election, the National Health Service was planning to cut £20 billion under Labour spending plans.(more....)

ஐப்பசி 25, 2010

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நேற்று ‘தீ ‘

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புமில்லையெனவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை ஏற்பட்ட இந்திடீர் தீ விபத்தினையடுத்து விமானப் படை மற்றும் கடற்படையினரின் உதவியுடன் சில மணித்தியாலங்களுக்குள் தீயை முற்றாகக் கட்டுப்படுத்த முடிந்ததாகத் தெரிவித்த பொலிஸார், சேத விபரங்கள் தொடர்பில் உடனடியாக எதனையும் குறிப்பிட முடியாதெனவும் தெரிவித்தனர். (மேலும்....)

ஐப்பசி 25, 2010

திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) ஈமக்கிரியைகள்

20.10.2010, 21.10.2010, 22.10.2010 புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மாலை 15:00 மணியிலிருந்து 20:00 மணிவரைக்கும், 23.10.2010, 24.10.2010 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 10:00 மணிமுதல் இரவு 20:00 மணிவரைக்கும் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமக்கிரியைகள் 25-10.2010 திங்கட்கிழமை அன்று மதியம் 13:00 மணிமுதல் 15:00 மணிவரை Krematorium, Geissbergweg 29, 4900 Langenthal BE என்னும் முகவரியில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்
குடும்பத்தினர்

ஐப்பசி 25, 2010

மக்களை நேசித்த மாமனிதன் வை. சி. கிருபானந்தன்

ரிபிசி யின் அஞ்சலி நிகழ்வு. மறக்க முடியாத மறுக்க முடியாத நினைவு அலைகள். உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் கிருபானந்தனை மீண்டும் நினைவு கூருகின்றோம். (மேலும்....)

ஐப்பசி 25, 2010

மஞ்சு வன்னிஆராச்சி மீது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து குற்றச்சாட்டு

புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மஞ்சு வன்னிஆராச்சி தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தினை பாவித்து போட்டியிட்டதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டிற்கான விசாரணை முடிவடையும் வரையில் அவர் பெற்ற தங்கப் பதக்கமானது இலங்கை ஒலிம்பிக் கமிட்டியின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.  தங்கப் பதக்கம் வென்ற சமயம் மஞ்சு வன்னிஆராச்சியிடம் பெற்றுக்கொண்ட சிறுநீரில் ‘நென்டிரலோன்’ எனும் தடைசெய்யப்பட்ட மருந்து படிந்துள்ளதாக பொதுநலவாய போட்டி ஏற்பாட்டாளர் குழு இலங்கை ஒலிம்பிக் கமிட்டிக்கு அறிவித்துள்ளது. மஞ்சு வன்னிஆராச்சியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட சிறுநீர் ‘ஏ’ மாதிரிக்கேற்ப இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமையால் அவர் இதனை நிராகரிக்கும் பட்சத்தில் ‘பி’ மாதிரிக்கான பரிசோதனை ஒன்றினை வேண்டும் சாத்தியங்கள் உள்ளன.

ஐப்பசி 25, 2010

அருணாச்சலப் பிரதேசத்தை இணைத்து சீனா புதிய வரைபடம்

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தன்னுடன் இணைத்து வரைபட மொன்றை வரைந்து வெளியிட்டுள்ளது. இந்த வரைபடம் மெப்வேல்ட் என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. ‘கூகுள் ஏர்த்’ என்ற இணைய தளத்துக்குப் போட்டியாக சீனா இந்த இணையத் தளத்தை ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்தை சீனா அநியாயமாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்த மாநிலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சுற்றுப் பயணம் செய்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்ல பிரதமருக்கு உரிமை உள்ளது என்றும் சீனாவுக்கு தெரிவித்தது. (மேலும்....)

ஐப்பசி 25, 2010

இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்னியில்

கைவிடப்பட்ட மோட். சைக்கிள்களில் 2050 பாவனைக்கு தகுதி

யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களில் 2050 மோட்டார் சைக்கிள்கள் பாவனைக்கு தகுதியானதென வாகன பரிசோதகர்களினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. வாகனங்களின் உரிமை யாளர்கள் தமது வாகனம் தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். விஷேட பரிசோதனையின் போதே 2050 மோட்டார் சைக்கிள்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன. பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதி, வாகனப் பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட் டை பிரதி, கிராம அலுவலகரின் உறுதிப் பத்திரம் என்பன சமர்ப்பித்து வாகன உரிமையாளர்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

ஐப்பசி 25, 2010

In Israel, the Noble vs. The Ugly

(By NICHOLAS D. KRIST)

Israel goes out of its way to display its ugliest side to the world by tearing down Palestinian homes or allowing rapacious settlers to steal Palestinian land. Yet there’s also another Israel as well, one that I mightily admire. This is the democracy that tolerates a far greater range of opinions than America. It’s a citadel of civil society. And, crazily, it’s the place where some of the most courageous and effective voices on behalf of oppressed Palestinians belong to Israeli rabbis — like Arik Ascherman, the executive director of Rabbis for Human Rights. (more...)

ஐப்பசி 25, 2010

அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை க்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்த தாஜ்மகால் ஹோட்டலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா, கடந்த ஆண்டு ஜனவரி 20ந் திகதி பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் நெருக்கமான நல்லுறவு வைத்திருப்பதால் அவரது இந்திய பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. (மேலும்....)

ஐப்பசி 25, 2010

ஆஸ்பத்திரிகளில் 24 மணிநேரமும் ஓ.பி.டி திறப்பு
 

சுகாதார அமைச்சின் செயலருக்கு ஜனாதிபதி மஹிந்த அறிவுறுத்தல்

நாட்டின் சகல அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை 24 மணி நேரமும் திறந்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயா ளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். வெளிநோயாளர் பிரிவுகளுக்கு தினந்தோறும் பெருமளவு மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்ற நிலையில் ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு மேற்படி நடவடிக்கை உதவுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி; இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார். (மேலும்....)

ஐப்பசி 25, 2010

Rebel Films

Friday, October 29 - 7 p.m. Modern Times 1936, 87 min. Charlie Chaplin's last 'silent' film, filled with sound effects, turns against the alienation of labour in modern society. Firstly we see him frantically trying to keep up with a production line, tightening bolts. He is selected for an experiment with an automatic feeding machine, but various mishaps lead his boss to believe he has gone mad, and Charlie is sent to a mental hospital. When he gets out, he is mistaken for a communist while waving a red flag, sent to jail, foils a jailbreak, and is let out again. We accompany Charlie through many more escapades. Commentary by Toronto writer and Socialist Action member Carol Bailey, followed by discussion. (more....)

ஐப்பசி 25, 2010

செக். செனட்டில் எதிர்க்கட்சிகளுக்கு வலு கூடியது

செக். குடியரசில் செனட் அவைக்கு நடந்த இடைக் கால தேர்தலில் சோசியல் டெமாகிரட் கட்சி வலுப் பெற்றுள்ளது. இதன்மூலம் அரசின் நலத்திட்ட வெட்டு களுக்கு அடி விழுந்துள்ளது. செக். குடியரசின் செனட் (மேலவை)யில் 81 இடங்கள் உள்ளன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் வாக்கெடுப்பில் நிரப்பப்படும். தற்போது 27 இடங்களில் தேர்தல் நடந்தது. இத்தேர்தலின் பலனாக செனட்டில் எதிர்க்கட்சி உறுப் பினர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

TBC வானொலியில் வடகிழக்கின் முன்னாள் முதலமைச்சர்!

பிரான்ஸில் இடம்பெற்று வரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணியின் சர்வதேச மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள வரதராஜப்பெருமாள் இன்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் தமிழர் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்(ரி.பி.சி) வானொலியில் இடம்பெறவுள்ள விசேட அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொள்கின்றார்.

தொடர்புகளுக்கு: 00 44 208 9305313

To participate you can call us on  00 44 208 9305313

ஐப்பசி 24, 2010

கலந்துரையாடல்

பிரான்சில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சர்வதேசக்  கிளைகளின் பிராந்திய மாநாடு

இம்மாதம்  23ம், 24ம் திகதிகளில் பிரான்சில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சர்வதேசக் கிளைகளின் பிராந்திய மாநாடு நடைபெறவுள்ளதென்பதை தோழமையுடன் உங்களுக்கு அறியத்தருகின்றோம். இம்மாநாட்டில் புலம்பெயர் தேசங்களில் கட்சிப்பணிகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்கள் மற்றும் கட்சியின் தலைமைக்குழு தோழர்களும் பங்குபற்றவுள்ளார்கள். இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக இம்மாநாட்டில் சில காத்திரமான முடிவுகளை எடுக்கவுள்ளோம். 2வது நாள் (24.10.2010) மதியம் 14.00 மணியளவில் எமது கட்சியுடன் தொடர்புடைய மாற்றுக் கருத்தாளர்கள் முற்போக்கு ஜனநாயக சக்திகள் போன்றவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்துவதாக தீர்மானித்துள்ளோம். இக் கலந்துரையாடலில் நீங்களும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு தோழமையுடன் அழைக்கின்றோம்.

பத்மநாபா EPRLF  சர்வதேச  கிளைகளின் ஒன்றியம்.

மாநாடு நடைபெறும் இடம்:   

SALLE LOUIS PASTEUR, 9,RUE LOUIS CHOIX, 95140 - GARGES-LES-GONESSE

ஐப்பசி 24, 2010

ஒரு தொகுதி முன்னாள் புலி போராளிகள் வவுனியாவில் விடுதலை!

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு, புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்டு வந்த மேலும் ஒரு தொகுதி முன்னாள் புலி போராளிகள் 306 பேர் நேற்று சனிக்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பாடசாலை மண்டபத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.விடுதலை செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளைப் பெற்றோரிடம் கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் குணசேகர, கிளர்ச்சியில் முன்னர் ஈடுபட்டு பின்னர் தமது கிளர்ச்சி நடவடிக்கைகளைக் கைவிட்டு சமூகத்துடன் இணைந்த ஜேவிபியினர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியலில் பிரவேசித்துள்ளார்கள். (மேலும்....)

ஐப்பசி 24, 2010

கற்றுக்கொண்ட பாடங்கள்-புதிதாகச் சிந்திப்போம்!

புலிகளுடனான இறுதிச் சமரின்போது தமிழ் மக்களுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. வன்னிப் பெருநிலப் பரப்பில் வாழ்ந்த மக்களே கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகியவர்கள். உடன் பிறப்புகளை இழந்தார்கள். வீடு வாசல்களை இழந்தார்கள். சீவனோபாயத் தொழிலை இழந்தார்கள். இறுதியில், காலங்காலமாக வாழ்ந்த பிரதேசத்திலிருந்து வெறுங்கையோடு வெளியேற நேர்ந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் பேசும் மக்கள் முப்பது வருட காலமாக ஒன்றன்பின் ஒன்றாக அனுபவித்த துன்பங்களின் உச்சம் என்று இதைக் கூறலாம். இத் துன்பங்களின் நதிமூலம் என்ன என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ளாமல் தமிழ் மக்களின் விமோசனம் பற்றிப் பேசுவது பயனற்றது. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

ஈராக் - அமெரிக்கா போர்

தீயினால் கண்ணில் சுட்டு சித்ரவதை , போர் ஆவணம் லீக் ஆன பரபரப்பு

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் விக்கிலீக் இணையதளத்தில் ஈராக் போர் ஆவணங்கள் லீக் ஆகி இருக்கிறது. 4 லட்சம் ரகசியம் கொண்ட ஆவணங்களில் அமெரிக்காகவின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள், மற்றும் போர் வீரர்கள், பொதுமக்கள் துன்புறுத்திய சம்பவம் கொண்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

Who in LTTE ordered massacre of 630 cops in 1990

(P K Balachandran)

According to Thurairatnam of the Eelam People's Revolutionary Liberation Front (EPRLF) in Batticalao, Karuna was not in the East at the time of the incident. "The man then in charge was Newton who had very close, direct relations with Prabhakaran," he told Express. He added that the man who might have had a direct hand in the killing was Reagan, second in command to Karuna as well as Newton. It was Reagan who surrounded the Batticaloa police station and forced the policemen to surrender. Thurairatnam said Reagan did it because the army had killed his family in Wellavali. (more.....)

ஐப்பசி 24, 2010

ஒரு  முறை தான்...

(ரஷ்ய எழுத்தாளர் ஸெர்கேய் செக்மரியோவ்)

நாம் ஒரு முறைதான் வாழ்கிறோம், இந்த வாழ்க்கையை முடிந்தவரை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒருவரும் மறுக்கவில்லை. இதெல்லாம் சரியே. ஆனால், பிறத்தியானிடம் உள்ளதை எல்லாம் சுருட்டிக்கொள்ள வேண்டும், நேர் வழிகளிலும் கோணல் வழிகளிலும் கூடியவரை அதிகப் பணம் திரட்ட வேண்டும், தினந்தோறும் விருந்தும் கேளிக்கையும் நடத்த வேண்டும் என்று இதற்கு அர்த்தம் அல்லவே அல்ல. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

தென்மராட்சியாரின் சோகக் கதை.

1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து கைதடி முகாமுக்கு வந்த மலையக அகதிகளுள் 101 குடும்பங்களின் மறுவாழ்வை தென்மராட்சியில் செய்ல்படும் அறவழிப்போராட்டக்குழு ஏற்றது. கெற்பலியில் 61 குடும்பங்கள், மறவன்புலவில் 40 குடும்பங்கள் எனப் புதுக் குடியேற்றத்துக்குக் காணிகளைப் பொது மக்களிடம் திரட்டிய நிதியில் வாங்கினர். நான் வழங்கிய நிதியும் அந்த முயற்சிக்குப் பங்காயது. கடந்த 25 ஆண்டுகளாக அந்த மக்களுக்குக் காணிக்கான ஆட்சி உறுதிகளை வழங்கவில்லை என்பதே தென்மராட்சியாரின் பெருந்தன்மை! ஏ.கே. இராமலிங்கம், வி.எசு. துரைராசா எம்.கே. சீவகதாசு ஆகிய மூவரின் பெயரில் அந்தக் காணிஉறுதிகள் உள்ளன. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

மனிதகுலமே முடிந்துவிடும்  அணு ஆயுதப்   போர் குறித்து   காஸ்ட்ரோ எச்சரிக்கை

ஈரான் இஸ்லாமியக் குடியரசு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக் குதல் நடத்தினால், அது உலக அள விலான அணுஆயுதப் போரை உரு வாக்கும் என்பதில் எனக்கு துளிகூட சந்தேகமில்லை. உயிர் வாழ்வதற்கான உரி மையை அரசியல் தலைவர்களிடம் கோரும் உரிமையும், கடமையும் மக்களுக்கு உள்ளது. தங்கள் உயிர்கள், தங்கள் மக்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்கள் அனை வரும் அத்தகைய ஆபத்தில் சிக்கி யுள்ளபோது பாராமுகத்துடனோ அல்லது வாழும் உரிமைக்கு மரியாதை தர வேண்டும் என்று கோராமல் நேரத்தை வீணாக்கும் வகையிலோ யாராலும் இருக்க முடியாது. நாளை என்பது மிகவும் தாமதமாகிவிடும். (மேலும்....)

ஐப்பசி 24, 2010

மலேசியாவில் “தமிழ் அகதிகள் மாநாடு'

மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் சுதந்திரவாழ்வை உறுதிப்படுத்தும் முதலாவது மாநாடு இன்று மலேசியாவில் இடம்பெறவுள்ளது.மலேசியா கோலாலம்பூரில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. 30 வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வாருவதாக தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

நிதிவெட்டு

சிக்கலில்   பிரிட்டன் முதியவர்கள் 

சுகாதாரத்துறைக்கான நிதி வெட்டப்படுவதால் பிரிட்டன் நாட்டின் முதியவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நோயா ளிகளின் எண்ணிக்கையைவிட குறைவானதாகவே இருக்கிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறைக்கான நிதி வெட்டப் படுவதால் நிலைமை மேலும் மோசமாகப் போகிறது என்கிறார்கள் பிரிட்டனின் சுகாதா ரத்துறை வல்லுநர்கள்.  சிகிச்சைக்காக மருத்துவ மனைகளுக்கு வரும் முதிய வர்கள் படுக்கைகள் இல்லாமல் திரும்பிச் செல்லும் நிலை உரு வாகும் என்று அவர்கள் எச்ச ரிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பிரிட் டனின் பிரதமர் கேமரூன் வெளியிட்ட அறிவிப்பில், சுகா தாரத்துறைக்கு தற்போது ஒதுக் கப்பட்ட நிதியில் 27 விழுக்காடு குறைக்கப்படும் என்று கூறப் பட்டிருந்தது. புதிய மருத்துவமனைக ளும், ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளில் புதிய வசதிகளும் தேவைப்படும் நேரத்தில் இத்தகைய நிதி வெட்டு பொருத்தமற்றது என்று அரசின் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

ஐப்பசி 24, 2010

யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!

இப்போது சுதந்திரமாகத் தொழில் செய்கிறோம். இந்திய மீனவர்களால் அடிக்கடி பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது" என்கிறார் மரியகுணஸ்டீன் என்ற மீனவர்.நாம் வலைவிரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன. இதன்காரணமாக நாம் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுக்கிறோம். கடந்த வாரம்கூட சுமார் ஒன்றரை லட்சம் ரூபா விரயமானது. இதுகுறித்து நாம் அதிகாரிகள் பலரிடமும் முறையிட்டோம். ஆனால் சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருவேறு நாடுகள் எனச் சொல்லிப் பிரிவினைவாதத்துடன் நாம் பார்க்கவில்லை. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

கறுப்புச் சட்டைக் காரருக்கு செங்கொடி மரியாதை

விடுதலை அடைந்த இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் மீதான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நாடெங்கும் கம்யூனிஸ்டுகள் வேட் டையாடப்பட்டனர். கம்யூனிஸ்டு கள் அடுக்குமுறைக்கு அடிபணிய மறுத்து முடிந்த வகையில் எல்லாம் போராடினர். தமிழகத்திலும் ஏராள மான சிகப்பு மலர்கள் கொடிய அடக்கு முறையால் வீழ்த்தப்பட்டன. சேலம் சிறைகூட இந்த இரத்த வேட்டைக்கு தப்பவில்லை. 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடலூர் சிறையிலும் துப்பாக்கிச் சூடு. இரணி யன், மாரி, மணவாளன், தூக்கு மேடை பாலு, திருப்பூர் பழனிச்சாமி, அன்னை லட்சுமி என தியாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே போனது இக்காலகட்டம்தான். சதி வழக்குகள், கொலை வழக்குகள் என சிறைக்கூடங்களில் கம்யூனிஸ்டு களை பூட்டிக் கொக்கரித்தது ஆளும் வர்க்கம். கட்சி மீது தடையும் நீடித்த காலம். (மேலும்....) 

ஐப்பசி 23, 2010

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இரகசியங்களடங்கிய 20 ஆவணங்கள் கண்டுபிடிப்பு

தமிழ் வர்த்தகர்கள் என்ற போர்வையில் சில நாடுகளில் செயல்பட்டுவரும் மாவீ தரேஸ்ராஜா, சுரேஷ் ஆகிய புலிகளின் சர்வதேச வலையமைப்பின் முன்னணி செயல்பாட்டாளர்கள் இருக்கும் இடங்கள், அவர்களது நிறுவனங்கள், சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் சம்பந்தமான தகவல்கள் இந்த ஆவணங்களில் அடங்குகின்றன. இந்தத் தகவல்களை சர்வதேச காவல்துறையினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். (மேலும்.....)

ஐப்பசி 23, 2010

தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் புலி போராளிகளின் விபரங்களை இன்று இணையத்தில் வெளியிடுகிறது!

தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் புலி போராளிகளின் விபரங்களை இன்று இணையத்தில் வெளியிடுகிறது. தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்கள் இன்று இணையத்தில் வெளியிப்படவுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கையின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிவின் இணையத்தளத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டியூ.குணசேகர ஆரம்பித்து வைத்தார். http://www.bcgrsrilanka.com என்ற இணையத்தளத்திலேயே இந்த விபரங்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் அறிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

அரசாங்கத்தின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்யத் தயார் – தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் சம்பந்தன்!

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்யத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் நேரடியாக பங்களிப்புச் செய்தால் பாரியளவிலான உதவிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

மிக வேகமாக முன்னேறி வரும் திருமலை!

மூன்று திசைகளிலும் மலைகளைக்கொண்டு கடலால் சூழப்பட்டு பல அதிசயத்தக்க விடயங்களை தன்னகத்தே கொண்ட குடா, திருகோணமலை மாவட்டமாகும். இலங்கையர்களை மட்டுமல்லாது வெளிநாட்டவர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்த மாவட்டமும் இதுவேயாகும். ஒல்லாந்தர் காலம் தொட்டு இலங்கைக்கு பல வழிகளில் சிறந்த வருமானத்தை ஈட்டித்தந்த இப் பிரதேசம் கடந்ந பல வருடகாலமாக நடைபெற்றுவந்த யுத்த்தினால் தனது அந்தஸ்தை சற்று இழந்திருந்தது. சமாதானத்தின் நகரம் என பெயர்சூடப்பட்டு மூவின மக்களும் இணைந்து வாழும், இங்கே அடிக்கடி இடம்பெற்று வந்த அமைதி இன்மையினால் மக்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைமை, சுகந்திரமாக பேச முடியாத அளவுக்கு நிலைமை ஏற்பட்டிருந்தது. (மேலும்....)

ஐப்பசி 23, 2010

U.S. FEDERAL JURY CONVICTS LTTE TERRORIST WEAPONS MERCHANT

A Baltimore federal court jury Monday convicted a Singapore man of attempting to sell arms to the terrorist group Liberation Tigers of Tamil Eelam (LTTE) in Sri Lanka. Four co-conspirators have pleaded guilty in the case. Reuters reported that Balraj Naidu, 48, was charged in a conspiracy to provide material support to the LTTE, which in 1997 was designated by the U.S. Department of State as a foreign terrorist organization. It fought and lost a 26-year-long conflict against the Government of Sri Lanka. According to evidence presented at his trial, Naidu and four co-conspirators arranged to buy some 28 tons of U.S.-made weapons and ammunition from an undercover business in Maryland, Reuters said. LTTE representatives made a $250,000 down-payment on the $900,000 weapons deal with the bogus company in the summer of 2006, the Justice Department said. (more....)

ஐப்பசி 23, 2010

அரசியல் சதுரங்கத்தில் பல்கலை மாணவர்கள்

மக்கள் விடுதலை முன்னணி இன்று மக்களால் ஒதுக் கப்பட்ட நிலையில் இருக்கின்ற அரசியல் கட்சி. தனது பிரதான ஆதரவுத்தளமாக எந்தவொரு சமூக சக்தி யையும் இனங்காட்ட முடியாத நிலையில் அக் கட்சி இருக்கின்றது. இவர்கள் சிவப்புக் கொடியுடனும் சோஷ லிசக் கோஷங்களுடனும் நடை போடுகின்ற போதி லும் தொழிலாளி வர்க்கமோ சோஷலிஸ்டுகளோ இவ ர்களுடன் இல்லை. சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்க ளின் பிரதிநிதியாகத் தன்னை இனங்காட்டுவதற்கு மக் கள் விடுதலை முன்னணி மேற்கொண்ட முயற்சியும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இப்போது கல் லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை அணி திரட்டி அவர்களைப் பிரதான ஆதரவு சக்தியாக வைத்திருக்கும் முயற்சியில் இக் கட்சி ஈடுபட்டிருக்கின்றது. (மேலும்....)

ஐப்பசி 23, 2010

அரசின் செயற்பாடுகளுக்கு பொதுநலவாய பிரதிநிதிகள் பாராட்டு

மோதல்கள் காரணமாக லட்சக் கணக்காக இடம்பெயர்ந்த மக்களை ஒரே மாவட்டத்தில் முகாம்களில் சகல வசதிகளுடனும் தங்க வைத்ததுடன் மட்டுமல்லாமல் படிப்படியாக அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் இலங்கை அரசு மேற்கொண்ட பணியை பொது நலவாய பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர். உலக நாடுகளில் எங்கும் இல்லாதவாறு மூன்றாம் உலக நாடான இலங்கை ஒரு சிரமமான பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்துக் கொண்டிருக்கிறது என பொதுநலவாய பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

தலிபான்களுடனான பேச்சுவார்த்தைகளை தடுக்கக் கூடாது - அமெரிக்கா

தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையை யாரும் தடுக்கக் கூடாது என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் குழ வெளிநாட்டு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி, இராணுவ தளபதி கயானி ஆகியோர் தலைமையில் அமெரிக்கா சென்று உள்ளனர். அவர்கள் வெள்ளை மாளிகைக்கு சென்று ஒபாமாவை சந்தித்து பேசினார்கள்.  அவர்களிடம் அடுத்த ஆண்டு பாகிஸ்தான் வருவதாக ஒபாமா தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

குடிவரவுச் சட்டத்தை இறுக்கியது கனடா

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வருவோருக்கு 10 வருட சிறை

கனடாவுக்குள் நுழையும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் மற்றும் ஆட்கடத்தல் களைத் தடுக்கும் நோக்கில் கனேடிய அரசாங்கம், குடிவரவுச் சட்டத்தை மாற்றியமைத்துள்ளது. சட்ட விரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்ட மூலம் மாற்றப்பட்டிருப்பதாகக் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்டோவ்ஸ் தெரிவித்தார். இந்த புதிய சட்டத்துக்கமைய சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைபவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் உட்பட அடிப்படை வசதிகள் குறைக்கப்படும். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

கிளிநொச்சி மண்ணை மேலும் வளமாக்க தயாராகிறது இரணைமடுக் குளம்

(சாரதா மனோகரன்)

கிளிநொச்சி வாழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே தமது வாழ்வாதாரமாகக் கொண் டவர்கள். ஆதலால் அவர்கள் விவாசாயத்தை முன்னெடுப்பதற்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனப்பல தரப்பினராலும் உணரப்பட்டது. அதனடிப்படையில் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் அமையும் திருவையாறு நீர்ப்பாசனத் திட்டம் தெரிவு செய்யப்பட்டது. இரணை மடுக் குளத்தின் இடது கரையினால் வளம் பெறும் 3ம் வாய்க்காலின் நீர் கட்டுப்படுத்திகள் மற்றும் விழுத்திகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக் கப்பட்டன. எந்தவித வெளிநாட்டு நிதி உதவியுமின்றி வடக்கு மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணை க்களத்துக்கு வழங்கப்பட்ட நிதி இக்கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. மூன்றாம் வாய்க்காலானது திருவையாறு வட்டக்கச்சிப் பகுதியில் கோவிந்தன் கடைச்சந்தியில் இருந்து பூநகரியின் ஊரியான் வரையான பகுதி வரை செல்கிறது. அப்பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்கள் 3ம் வாய்க்காலால் வளம் பெருகின்றன. (மேலும்....)

ஐப்பசி 23, 2010

2ஆம் உலகப்போரில்   அமெ.கொலைவெறி: ஜப்பானில் கல்லறை கண்டுபிடிப்பு

ஜப்பானில் அமெரிக்கா கொன்று குவித்த வீரர்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானை அமெ ரிக்கா தாக்கியது. இந்த தாக்குதலின்போது, பல ஆயிரம் ஜப்பானிய வீரர்கள் கொன்று குவிக்கப்பட்ட னர். இந்த வீரர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ வுக்கு 660 மைல் தொலை வில் உள்ள பசிபிக் தீவுப் பகு தியான ஐவோ ஜிமோவில் புதைக்கப்பட்டனர். இங் குள்ள இரு பெரும் குழிகளில் 2 ஆயிரம் ஜப்பானிய வீரர்களின் உடல்கள் இருப்பதை ஜப்பானிய ஆய்வாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

MV Sun Sea human smuggling

Some Tamil boat people already rejected in U.K.

Some of the Tamil migrants who arrived on ships in British Columbia waters were already rejected refugees from the United Kingdom. Immigration Minister Jason Kenney revealed the information as he announced new human smuggling laws the federal government hopes will deter such operations. Speaking in Delta, B.C., in front of one of the two ships used to bring in migrants, Kenney told reporters the government has learned some of the migrants were already found not to need refugee protection in the United Kingdom. (more...)

ஐப்பசி 23, 2010

வட பகுதிக்கு விரைவில் இரணைமடு நீர், வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு

கிளிநொச்சி – யாழ். குடிநீர் விநியோகத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் பூர்த்தியாகிய நிலையில் யாழ். நகரில் நேற்று கிளிநொச்சி – யாழ். திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தை அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் பாரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இரணைமடு குள நீரை யாழ். நகருக்கு கொண்டு வருவதற்கான அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன, வடபகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். இதன் அடிப்படையில் குடிதண்ணீர் மற்றும் அத்துடன் இணைந்த சுகாதார திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து இத்திட்டம் நகர்த்தப்படுகின்றது. (மேலும்....)

ஐப்பசி 23, 2010

பிலிப்பைன்ஸில் பஸ்ஸில் குண்டு வெடித்ததில் 9 பேர் பலி

பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானாவோ என்ற தீவில் உள்ள தொழில் நகரமான ககேயன் என்ற இடத்தில் இருந்து ஒரு பஸ் சென்றது. அதில் 50 பயணிகள் இருந்தனர். இந்த பஸ்ஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள் இந்த சம்பவம் காலை 10.30 மணிக்கு நடந்தது. இந்த தாக்குதலில் அந்த இடத்திலேயே 8 பேர் பலியானார்கள். ஒருவர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்து போனார். தாக்குதல் நடந்த மாநிலத்தில் மாவோயிஸ்ட்களும் முஸ்லிம் தீவிரவாதிகளும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் யார் இந்த தாக்குதலை நடத்தியது என்பது தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மக்களிடம் கெட்ட தமக்கு பெயரை ஏற்படுத்த அரசு செய்த காரியம் என்று மாவோயிஸ்ட்களும், முஸ்லிம் தீவிரவாதிகளும் தெரிவிக்கின்றனர்.

ஐப்பசி 23, 2010

யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நேற்று நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு

மக்களால் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படுகின்றது. இந் நிவாரணம், யுத்தத்தால் மரணமடைந்த ஒரு பிரிவினருக்கும், காயமடைந்து அங்க குறைபாடுடையவர்களுக்கு ஒரு பிரிவாகவும், யுத்தத்தால் சொத்திழப்படைந்தவர்களுக்கு இன்னொரு பிரிவினருக்காகவும் 100 பேருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக இருபத்தைந்து மில்லியன் ரூபா வழங்கப்படுவதாக அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார். அவர் நேற்றுக்காலை யாழ்ப்பாண செயலகத்தில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

ஜனாதிபதியின் 2வது பதவிக் காலம்

11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம்

30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக சூழல் உட்பட மரம். செடிகள் என்பவற்றிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. பசுமையான சூழலொன்றினை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காகவே நாடளாவிய மர நடுகை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் யாப்பா குறிப்பிட்டார். மேலும் நாட்டில் உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியுமென்று கூறிய அமைச்சர், இன்று உலகிலே சூழலை பாதுகாத்துவரும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார். (மேலும்....)

ஐப்பசி 22, 2010

வன்னியில் கடமையாற்றிய நான்கு வைத்தியர்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பர்

இறுதியுத்த காலப்பகுதியில் வன்னிப் பகுதியில் கடமையாற்றிய வைத்திய அதிகாரிகள் 4 பேர் அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர். வைத்திய அதிகாரிகளான வி. சண்முகராஜா, ரி. சத்தியமூர்த்தி, சிவபாலன், ரி.வரதராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு சாட்சியமளிப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் 19ஆம் திகதி வைத்திய அதிகாரிகளான சண்முகராஜா, சத்தியமூர்த்தி ஆகியோரும் 24ஆம் திகதி சிவபாலனும் 30ஆம் திகதி வரதராஜனும் சாட்சியமளிக்கவுள்ளனர். (மேலும்...)

ஐப்பசி 22, 2010

Karuna says he wasn’t even in B’caloa

Minister Vinayagamoorthy Muralidharan says at the time fighting erupted in the Batticaloa district in June 1990 during the Premadasa administration, he wasn’t even in the East. "I was in Jaffna," an irate Minister Murralidharan aka Karuna told The Island yesterday, denying any direct or indirect role in the massacre of several hundred policemen. The SLFP Vice President was responding to his erstwhile colleague, Eastern Province Chief Minister Sivanesathurai Chandrakanthan aka Pilleyan, who requested the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) to direct questions regarding the June 1990 massacre to Karuna. Chandrakanthan said that as he had joined the LTTE in early February 1991, he couldn’t comment on what had happened in June 1990. (more....)

ஐப்பசி 22, 2010

கனேடிய நாடாளுமன்றில் புதிய சட்டமூலம்

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டுவருபவர்களுக்கு 10 வருட சிறை

 சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கொண்டுவரும் நபர்களுக்கு தண்டனையளிக்கும் வகையிலான சட்டமூலத்தை கனேடிய அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்ற பொதுச்சபையில் சமர்ப்பித்தது. கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் ஆகியோர் இச்சட்டமூலம் குறித்து வான்கூவரில் செய்தியாளர்களிடம் பேசினர். இந்த சட்டமூலத்தின்படி, 50 இற்கு மேற்பட்டவர்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவருபவர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன், சட்டவிரோத குடியேற்றவாசிகளும் ஒருவருட காலம் வரையான சிறைத்தண்டனையை எதிர்நோக்கலாம். அவர்களுக்கு சுகாதார நலன்புரி சேவைகள் குறைக்கப்படுவதுடன் நிரந்தர வதிவுரிமையும் நிராகரிக்கப்படலாம். (மேலும்...)

ஐப்பசி 22, 2010

சந்திரிக்கா, தற்கொலை தாக்குதல் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

1999ஆம் ஆண்டு கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளி என கருதப்பட்ட சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு வந்த சத்தியவேல் இலங்கேஸ்வரன் என்ற  நபரே இவ்வாறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 22, 2010

இலங்கைக்கு சென்று ராஜபக்சேவுடன்

டீ-வடை சாப்பிட்டு விட்டு வேறு எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துவிட்டு வந்தார் தொல். திருமாவளவனுக்கு

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அருகதை இல்லை. அவர் தனது எம்.பி. பதவியை ராஜி னாமா செய்து விட்டு பின்னர் காங்கிரஸை விமர்சிக்கட்டும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி 125 வருட பாரம்பரிய மிக்கது. அந்த கட்சியை விமர்சிக்க யாருக் கும் தகுதியில்லை. காங்கிரஸ் தயவால் எம்.பி. யான திருமாவளவன் அந்த கட்சியை விமர் சிக்கிறார். வேண்டுமென்றால் தனது பதவி யை ராஜினாமா செய்துவிட்டு விமர்சிக் கட்டும். இலங்கைக்கு சென்று ராஜபக்சேவு டன் டீ-வடை சாப்பிட்டு விட்டு வேறு எது வும் பேசாமல் மவுனமாக இருந்துவிட்டு, இங்கே வந்து கடுமையாக விமர்சிக்கிறார். நேருக்கு நேர் அங்கேயே பேச வேண்டியது தானே. (மேலும்....)

ஐப்பசி 22, 2010

வடக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

  • அச்சுவேலி கைத்தொழில் பேட்டை மீள ஆரம்பம்

  • தனியார் ஒத்துழைப்புடன் உற்பத்தித்திறன் மேம்பாடு

  • இலங்கை, இந்தியா, ஐ.நா.969 மில்லியன் ரூ. ஒதுக்கீடு

(மேலும்....)

ஐப்பசி 22, 2010

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் -  அமெரிக்கா

பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் - அல் கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஏராளமான பண உதவிகளை செய்து வருகிறது. ஆனால் அந்த பணத்தை பாகிஸ்தான் வேறு வழிகளில் செலவு செய்கிறது. அதோடு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு பதில் அடைக்கலம் கொடுத்து வருகின்றது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பல முறை எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தவில்லை. இந்த நிலையில் அமெரிக்க பத்திரிகை ஒன்று இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், பின்லேடனுக்கு, பாகிஸ்தான் உளவுத்துறை தான் அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. (மேலும்....)

ஐப்பசி 22, 2010

VIVA PALESTINA CONVOY BREAKS SIEGE AND ENTERS GAZA TO JUBILANT CROWDS

The Viva Palestina convoy of almost 150 vehicles, 370 people from 30 different countries and $5 million of aid has entered Gaza. Amidst scenes of jubilation from thousands of Palestinians there to greet the convoy, Kevin Ovenden, the convoy director, expressed his joy at being in Gaza once again. "We have driven more than 3,000 miles to bring this essential aid and to break this illegal siege of Gaza. We have been joined by supporters from Morocco and Algeria and from the Gulf States and Jordan, to make this the biggest convoy ever to break the siege of Gaza. We are absolutely overjoyed to be here and to bring with us the soil from the graves of those who were massacred on the Mavi Marmara which will be used to plant trees as a memorial to their sacrifice." (more....)

ஐப்பசி 22, 2010

நடுக்கடலில் தத்தளித்த 85 இலங்கையர் இந்தோனேசியாவில் மீட்பு

படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த 85 புகலிடக் கோரிக்கையாளர்களை இந்தோனேசியத் துறைமுகப் பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகு எரிபொருள், உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக பனாயிட்டான் தீவில் இடைநடுவில் நின்ற போது துறைமுகப் பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 15 பெண்களும், 18 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பல குழந்தைகள் சுகயீனமுற்றிருந்ததாகவும், பலர் பல நாட்கள் ஒழுங்கான உணவின்றி தவித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் படகில் சென்றவர்களில் ஒரு பெண் மற்றும் ஆண் உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர். மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்தோனேசியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது இவர்கள் ஜகார்த்தாவிலுள்ள இந்தோனேசிய குடிவரவு தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்த ப்பட்டுள்ளனர்.

ஐப்பசி 22, 2010

செலவினங்களை குறைக்கும் பிரிட்டன், 130 பில். டொலர் சேமிக்கத் திட்டம

 

பிரிட்டனில் இந்த ஆண்டின் மே மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் டேமாக்ரடிக் கட்சிக் கூட்டணி அரசாங்கம் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டு வந்த பொதுச் செலவின வெட்டுகளை அறிவித்துள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற ஒட்டுமொத்த செலவின மீளாய்வு நட வடிக்கைக்குப் பின்னர் வரும் ஆண்டுகளில் பிரிட்டன் எத்தகையளவில் செலவினங்களை குறைக்கும் என்பதை நாட்டின் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் அறிவித்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 130 பில்லியன் டொலர்களை சேமிக்க அரசு எண்ணுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டன் எடுத்துள்ள மிகப் பெரும் சிக்கன நடவடிக்கை இது வெனவும் தான் எடுக்கும் நடவடிக்கைகள் கடினமானவை. (மேலும்....)

ஐப்பசி 22, 2010

உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 20 ஆயிரம் ரூபா படியும், அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிடும் அபேட்சகர் ஒருவர் ஐயாயிரம் ரூபா படியும் கட்டுப் பணம் செலுத்த வேண்டும். தற் போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அபேட்சகர்கள் கட்டுப்பணம் செலுத்துவதில்லை. சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 250.00 ரூபா படி கட்டுப்பணம் செலுத்துகிறார். புதிய திருத்தத்தின் படி அளிக்கப்படும் வாக்குகளில் இருபதில் ஒரு பங்கைப் பெறாதவர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும். இத்திருத்தத்தின் படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விகிதாசார முறைப்படியும் தொகுதிவாரி அடிப்படையிலும் நடத்தப்படும். (மேலும்....)

ஐப்பசி 22, 2010

இதுவரை 1800 சதுர கிலோ மீற்றர் நில பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது

இதுவரையில் 1800 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். வடக்கு பகுதிகளில் 314850 கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாகவும் 2000 சதுர கிலோ மீற்றர் பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச மற்றும் உள்நாட்டு கண்ணி வெடி அகற்றும் குழுக்களுடன், இராணுவத்தினரும் இணைந்து கண்ணி வெடிகளை அகற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி 22, 2010

ஆயுத விற்பனை  சவூதி அரேபியாவை ‘மொட்டை’யடிக்கிறது அமெரிக்கா!

தனது பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு உத்தியாக சவூதி அரேபியாவுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் பெறு மான ஆயுத விற்பனையைச் செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.  அமெ ரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய ஆயுத விற்பனையாக இருக்கும். மேலும் தவறான கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி யால் லட்சக்கணக்கானவர் கள் அமெரிக்காவில் வேலை யிழந்துள்ளனர். இந்த ஒப் பந்தத்தால் 75 ஆயிரம் பேரின் வேலையைப் பாது காக்க முடியும். அமெரிக்க நாடாளுமன்றம் எந்தவித ஆட்சேபணையும் செய் யாது என்பதோடு, அமெ ரிக்காவின் அரவணைப்பில் இருக்கும் இஸ்ரேலும் வாய் மூடி மவுனமாகவே இருக் கப்போகிறது. (மேலும்....)

ஐப்பசி 22, 2010

கராச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு, 12 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள முக்கியமான சந்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு மக்கள் நெருக்கடி அதிகமான சந்தைக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து கராச்சி நகரில் கடந்த 5 நாட்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. கராச்சியில் தொடர்ந்து நடைபெறும் வன்முறையால் அங்கு பதற்றம் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் நபில் கபோல் வலியுறுத்தியுள்ளார்.

ஐப்பசி 21, 2010

ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாத நிஜமுகம்

பலாலி விமான நிலையத்தைச் சர்வதேச தரத்துக்குப் புனரமைத்துச் சிவிலியன் போக்குவரத்துக்காகத் திறந்து விடுவதற்கு இன்றைய அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சர்வதேச தரத்துக்கு இந்த விமான நிலையம் புனரமைக்கப்பட்டதும் அங்கிரு ந்தே வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வசதிகளைச் செய்து தரப்போவதாக அரசாங்கம் கூறுகின்றது. வடபகுதி மக்களுக்கு நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி வழமை போலக் குட்டை குழப்புகின்றது. பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக நடவடிக்கை எடுக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக கூறியிருப்பது விஷமத்த னமானதும் அற்பத்தனமானதுமாகும். (மேலும்....)

ஐப்பசி 21, 2010

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது


110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளிடமிருந்து 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தினர் மீட்டெடுத்ததாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் தொடக்க நிகழ்வின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர கேட்டிருந்த வாய் மூல விடைக்கான வினா வுக்கு பதிலளிக்கும் வகையி லேயே அமைச்சர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். (மேலும்....)

ஐப்பசி 21, 2010

இப்படியும் சில ஈமெயில் விவாதங்கள்

Gary and see Pon Bala ( speaker of the Transnational Government of Tamil Eelam) using Ontario Gov. email  for T.G. T.E work . (Pon Balarajan, Consulting Technical Systems Specialist, Technical  Services,55 Lake Shore Blvd East, 3rd Floor, Toronto, Ontario M5E 1A4T: (416) 864-2405  E: pon.balarajan@lcbo.com, www.lcbo) for T.G. T.E work . Ontario tax money is spend for TGTE work. (more....)

ஐப்பசி 21, 2010

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் மற்றுமோர் வெளியீடு!

நீர்வை பொன்னையனின் 'கால வெள்ளம்' சிறுகதைத் தொகுதி கருத்தாடலும் ஆய்வும்

இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், 58 தர்மராம வீதி, கொழும்பு– 6

காலம்: ஒக்ரோபர் 24, 2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி

(மேலும்....)

ஐப்பசி 21, 2010

பிரான்ஸ் போராட்டத் தீ பரவுகிறது  ஓய்வூதியப் பறிப்புக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி

ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய வெட்டு ஆகியவற்றிற்கு எதிராக பிரான்ஸ் தொழிலாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதர வாக நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.ரயில்வே, பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தொழிலா ளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்திற்கு ஆதர வாக தபால்துறை, விமா னப்போக்குவரத்து, வாகன ஓட்டுநர்கள் ஆகியோரும் வேலைநிறுத்தம் செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில் நான்காவது முறையாக பிரான்ஸ் தேசம் தழுவிய முழு வேலை நிறுத்தத்தைக் கண்டது. (மேலும்....)

ஐப்பசி 21, 2010

சுவாமி விபுலாநந்தர் கலைமன்றத்தின்

வருடாந்த நினைவு விழா -2010

கனடா சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம் நடத்தும் சுவாமிகளின் வருடாந்த நினைவு விழாவும், கலை நிகழ்ச்சிகளும் எதிர்வரும் ஒக்ரோபர் 24ம் திகதி ஞாயிறன்று மாலை 6.00 மணிக்கு 733 Birchmount Rd,  Scarborough வில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ் வருடம் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதற் பரிசினைப் பெற்ற மாணவர்களின் பேச்சுடன், வில்லிசை, நாட்டிய நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதால் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் மன்றத்தினர்.

தொடர்புகளுக்கு : (905) 568 0551

                              (647) 261 5723

ஐப்பசி 21, 2010

சீனத்தலைவர் இந்தியா வருகிறார்

இந்தியா-சீனா இடையிலான உறவுகளில் தொடர்ந்து முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விதமாக சீன அரசின் உயர்நிலைக்குழு ஒன்று புதுதில்லி வருகிறது. சமீபத்தில் இந்தியா-சீனா இடையே சில பிரச் சனைகளில் முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக ஊட கங்கள் செய்திகளை பரப் பின. குறிப்பாக ஜம்மு-காஷ் மீரில் பணியாற்றும் இந்திய ராணுவ தளபதிகளில் ஒருவ ரான லெப்டினன்ட் ஜென ரல் டி.எஸ்.ஜஸ்வாலுக்கு விசா அளிக்க சீனா மறுத் ததைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகளில் பிரச் சனை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டன. இந்நிலையில் சீனக் கம் யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜோகு யோங்காங் தலைமையி லான குழு ஒன்றை சீன அரசு இந்தியாவுக்கு அனுப் புகிறது. இதைத்தொடர்ந்து சீனப்பிரதமர் வென் ஜியா பவ் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஐப்பசி 21, 2010

Toronto

SriLankan Deepavali Celebration

Dear Sir/Madam,

The staff of the Sri Lanka High Commission in Ottawa and the Consulate General’s Office in Toronto are in the process organizing a program to celebrate Deepavali  on Sunday 7th November 2010 at  5.00pm at the Korean Cultural Centre for Education, 1133 Leslie Street, North York, Ontario, M3C 2J6.

It would be appreciated if you could join us to  celebrate this important religious festival.

Sri Lanka High Commission

Ottawa

(more....)

ஐப்பசி 21, 2010

கலிலியோ

கலிலியோ... இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15 ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில் பிறந்து சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக குருவான கலிலியோ பற்றிய சுலாரஸ்யமான தகவல்கள் இதோ. கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைந்தது. ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள் தான் பின்னாளில் வந்த பெளதிகவியல் விஞ்ஞானிகளுக்கு வேத பாடமாகியது. இத்தாலியிலுள்ள வைசாநகர பல்கலைக்கழகத்தில் கலிலியோவுக்கு கணிதப் பேராசிரியராக வேலை கிடைத்தது. ஆனால் தனது ஆரா ய்ச்சிகளின் காரணமாக மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கிவிட்டனர். (மேலும்....)

ஐப்பசி 21, 2010

கல்முனையில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

சட்டவிரோதமாக கல்முனையில் இயங்கி வந்த ஒளிபரப்பு நிலையம் கல்முனை பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டது. இங்கு பெறுமதி மிக்க உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக இந்திய அலைவரிசையிலிருந்து மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த இந்த நிலையம் நற்பிட்டிமுனையில் இயங்கி வந்துள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் நிலையத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த இலத்திரனி யல் உபகரணங்களையும் கைப்பற்றி யுள்ளனர். இவ்வொளிபரப்பு நிலையம் ஊடாக விளம்பரங்கள் இடம்பெற்றதாகவும், இந்திய திரைப்படங்கள், நாடகங்கள் மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நிலையத்தின் உரிமையாளரும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளன.

ஐப்பசி 21, 2010

உள்ளூராட்சி சட்டமூலத்துக்கு கி. மா இணக்கம் 

உள்ளூராட்சி சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவித்து கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் இணக்கத்தைப் பெறுவதற்காக பாராளுமன்றத்திலிருந்து கிழக்கு மாகாண சபைக்கு சட்டமூலப் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. திருத்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவிக்கும் பிரேரணை மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஏழு வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. 11 மேலதிக வாக்குகளால் சட்டமூலத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 21, 2010

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை - அமெரிக்கா

ஒசாமா பாகிஸ்தானில் இருப்பது குறித்து உறுதியாக தகவல் தெரியவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனும் அவனது நெருங்கிய கூட்டாளியுமான அய்மான் அல் ஜவாஹிரியும் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு வீட்டில் சுகபோகமாக வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பு அளித்து வருவதாகவும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகின. (மேலும்....)

ஐப்பசி 21, 2010

2011 ஒக்டோபருக்கு முன்

குடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்

யாழ். குடாநாட்டின் சகல பிரதேசங் களுக்கும் எதிர்வரும் 2011 ஒக்டோபருக் கிடையில் மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.என்.சி. பேர்டினண்டோ தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கையில் மின்வலு எரிசக்தி அமைச்சு அடுத்தடுத்து பல வாக்குறுதிகளை வழங்கியுள்ள போதும், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டினார். (மேலும்....)

ஐப்பசி 21, 2010

திபெத்தில்

குணப்படுத்த முடியாத ‘காஷின் - பெக்’ எலும்புநோய் வேகமாகப் பரவுகிறது

திபெத் பகுதியில் உள்ள மக்களுக்கு குணப்படுத்த முடியாத ‘காஷின்-பெக்’ என்ற எலும்பு தொடர்பான நோய் பரவி வருகிறது. இதனால் 17,000 பேர் நோய்த் தாக்க அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். காம்டோ பெர்பெக்சர் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் 14,662 பேருக்கு ‘காஷின் -பெக்’ நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது. (மேலும்....)

ஐப்பசி 21, 2010

செங்கற்களும் சாலைகளும்   மட்டுமல்ல நகரம்

ஏற்கனவே சிங்கார சென்னை, எழில்மிகு சென்னை, சீர்மிகு சென்னை என மாநகரை அழகுபடுத்த துவங்கிய எந்த திட்டமும் உருப் படவில்லை. ஒப்பந்தக்காரர்களும் ஆளும்கட்சி யினரும் காசு பார்த்ததுதான் மிச்சம். பல சாலை களில் பேருந்து நிழற்கூரை கூட கிடையாது. மெட்ரோ ரயில் திட்டத்தை கூட தொழிலாளர் கள் அதிகமாக வசிக்கும் திரு வொற்றியூர் வரை நீடிக்க போராடித்தான் பெறவேண்டியிருந்தது. அது கூட கொள்கை அளவில்தான் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. செங்கற்களும் சாலைக ளும் மட்டுமல்ல நகரம். அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வும் அதில் அடங்கியிருக்கிறது என் பதை அரசு காணத் தவறக்கூடாது. (மேலும்....)

ஐப்பசி 21, 2010

இந்தியாவுடன் சுமுகப் பேச்சுக்கு பாகிஸ்தான் விருப்பம் - குரேஷி
 

காஷ்மீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் இந்தியாவுடன், சுமுகமான முறையில் பேசித் தீர்ப்பதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்று, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடு களுக்கும் பயங்கரவாதம் ஒரு பொதுவான எதிரி என்றும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 21, 2010

வன்மம் காட்டும் ‘வர்க்கபாசம்’

“நானே ஒரு கம்யூனிஸ்ட்டுதான்” என்று முதல்வர் கருணாநிதி அடிக்கடி கூறுவார். மே தினத்திற்கு விடுமுறை அளித்தது திமுக அரசு என்றும், சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா விற்கு மேதின பூங்கா என்று பெயரிட்டு, மேதின தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் அமைத்த தாகவும் அவர் பெருமிதம் கொள்வார். ஆனால் இப்போது திமுக அரசு சென்று கொண்டிருக்கும் போக்கைப்பார்க்கும் போது மேதின பூங்காவில் அமைக்கப்பட்டது தியாகிகள் சின்னமா அல் லது உழைப்பவர் உரிமைகளுக்கு அமைக்கப் பட்ட கல்லறையா? என்ற கேள்வி எழுகிறது.(மேலும்....)

ஐப்பசி 20, 2010

உள்ளுராட்சி திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவளித்தவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் - இரா. துரைரெட்ணம் _

கிழக்குமாகாண சபையில் இருப்பவர்கள் உள்ளுராட்சி திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் அது சிறுபான்மை மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் சபையில் தெரிவித்தார். ஜனாதிபதி 10 நாளைக்குள் இத் திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றி அனுப்பிவைக்குமாறு பணித்தார் என்பதற்காக ஆதரவாக வாக்களிக்கப் போகும் ஆளும் தரப்பிற்கு சவால் விடுகின்றேன் என தெரிவித்தார். ஆளும் தரப்பினர் மக்களிடம் வாக்கு கேட்டுப்போகும் போது திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிப்போம் என்று கேட்டுவிட்டு தற்போது ஆதரவாக வாக்களித்தது சிறுபான்மை மக்களுக்கு செய்யும் துரோகம். (மேலும்....)
ஐப்பசி 20, 2010

தமிழ்நாட்டில் அமைச்சர் டக்ளஸ் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

1986ஆம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான வழக்கு நாளை வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை சென்னை 4ஆவது மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. (மேலும்....)


ஐப்பசி 20, 2010

வந்தாரை வாழவைப்பானா யாழ்ப்பாணத்தான்?

(பரா நவரஞ்சன்)

இப்ப சண்டை முடிஞ்சு போச்சு. கொஞ்ச சிங்களவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறார்கள். முன்கூட்டி அறிவிக்காமல் வந்தது பிழை. திட்டமிட்ட செயல் என ஆளுக்காள் விமர்சனம் செய்கிறார்கள். அட யாழ்ப்பாணத்தானே ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கேட்டு முன்கூட்டி அறிவிச்சா போனாய். ஆமி தேடுது பொலிஸ் தேடுது என பொய் சொல்லி தஞ்சம் கேட்ட யாழ்ப்பாணத்தான் 75 வீதம். உண்மையாக பிரச்சினையில் வந்தவன் 25 வீதம். அப்பொழுது ஐரோப்பியன் அடே முன்கூட்டி அறிவிச்சா எங்களிட்ட வாறாய் என கேட்கவில்லையே. மனிதாபிமானத்துடன் தஞ்சமளித்தான். (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல் (பகுதி 2)

(மீராபாரதி)

புலிகளின் ஆதிக்கம் இல்லாது போனதற்குப் பின்பான இன்றைய சுழலில் துரோகி என்றால் என்ன அது யார் என்பதற்கான வரைவிலக்கணம் விளக்கம் அளிக்க முடியாதளவு சிக்கலாக்கியுள்ளது. அதாவது புலிகளின் அங்கத்தவர்களுக்கு எதிராகவே இன்று இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் விளைவாக இன்று புலிகள் இயக்க அங்கத்தவர்கள் தமக்குள்ளையே ஒருவரை ஒருவர் மாறி மாறி “துரோகி” என அழைக்குமளவிற்கு “துரோகி” என்ற சொல் மிகவும் மலினப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கு தளத்திலும் புலத்திலும் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களின் செயற்பாடே காரணமாக இருக்கின்றது. இதற்கு போராட்ட ஆரம்ப காலத்திலிருந்து மாத்தையா வரை தொடர்ந்து பின் அண்மைக் கால உதாரணமான கருணா மற்றும் பிள்ளையான் தொடங்கி இன்றைய கே.பி மற்றும் நெடியவன் வரை இது பரந்து இருக்கின்றது எனக் கூறினால் மிகையல்ல. புலிகளின் அரசியல் பார்வையில் பிரபாகரனின் இறுதி முடிவு கூட “துரோக அரசியல்” எனவே கருதப்படவேண்டியுள்ளது. (மேலும்......)

ஐப்பசி 20, 2010

சிறைச்சாலைச் சீர்திருத்தம்

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றங் கள் தண்டனை வழங்குவதன் பிரதான நோக்கம் அவர்களைத் திருத்துவதே. சிறைவாசம் குற்றவாளி கள் தங்கள் பிழைகளை உணர்ந்து திருந்தி நல்ல பிரசைகளாக மாறுவதற்கான கால அவகாசமாகும். இன்று குற்றச் செயல்களின் விளைபுலமாகச் சிறை ச்சாலை மாறியிருப்பது கவலைக்குரியது. சிறைச்சா லையை ஒரு சீர்திருத்தப் பள்ளியாக மாற்றுவதில் நாம் வெற்றி காண்போமானால் நாட்டில் தர்மம் நிலை த்து நிற்கும். அமைச்சரும் பொறுப்புவாய்ந்த அதி காரிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவார்க ளென நம்புகின்றோம். (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடுவோரைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடிவருவோரை எவ்வாறு நடத்துவதென்பது தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியட் கிலாட் தெரிவித்தார். ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் எதிர்காலம், நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் சட்டவிரோத குடியேறலைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இப்புதிய சட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளன. அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தோர் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வசதி குறைந்த இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வசதி கூடிய அறைகளில் தங்க வைக்கும் பொருட்டு இரண்டு பாரிய தடுப்பு முகாம்களும் அமைக்கப்படவுள்ளன. பெற்றோர்களைப் பிரிந்துள்ள குழந்தைகளை உறவினரிடம் ஒப்படைக்கவும் புதிய சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஐப்பசி 20, 2010

எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருவார்

அடுத்த வருட முற்பகுதியில் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் நோர்வேயின் விசேட சமாதான தூதுவராக செயற்பட்ட சொல்ஹெயிமின் இந்த விஜயமே, யுத்தம் முடிவடைந்தன் பின் இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக அமையும். (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!

"இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையை இந்திய அரசுதான் தீர்மானிக்கிறதே தவிர, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் அல்ல. ஒட்டுமொத்தமாக, இந்தியாவே உலகமயமாக்கலில் மூழ்கி இருக்கும்போது, மேற்கு வங்கத்தில் மட்டும் சோஷலிசத்தை அமல்படுத்திவிட முடியாது. ஆனால், இடது முன்னணி அரசு, அடித்தள மக்கள் பயன் அடையும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனாலும், தொழிற்சாலையைக் கொண்டுவருவது, அதற்கான நிலங்களை மக்களிடம் இருந்து பெறுவது போன்றவற்றில், இடது முன்னணி அரசு சில தவறுகளைச் செய்து இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அரசின் விதிமுறைகள், காலனியக் காலத்தைச் சேர்ந்தவையாகவே இருப்பதும் பிரச்னைதான்!" (மேலும்.....)

 

ஐப்பசி 20, 2010

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார்

தேர்தல் பிரசாரத்தில் கிளிண்டன் ஈடுபட்டு இருப்பது ஹிலாரி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டு இருக்கிறது.  2012 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் ஒபாமாவுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் என்றும் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கும் போட்டியிடலாம் என்றும் ஒபாமாவின் செல்வாக்குத் தொடர்ந்து சரிந்தால் 2012 ஆம் ஆண்டு தேர்தலிலேயே ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடலாம் என்று  இங்கிலாந்து  தி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

வடபகுதி மக்களுக்கு முழுமையான அரசபணி

வடமாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

மக்கள் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லும் வகையில் அதிகாரிகள் செயற்படுவது அவசியமெனவும் கருணையுடனும் அன்புடனும் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கொண்டு மக்களுக்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். வடக்கில் சில அதிகாரிகள் தம்மிடம் வரும் மக்களிடம் இன, குல பாகுபாடு காட்டி பாரபட்சமான வகையில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய பேதம், பாரபட்சத்துக்கும் இடமின்றி சிநேகபூர்வமான சேவையை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

மொத்தச் செலவில் கால் பங்கு பாதுகாப்பிற்கு

அடுத்த வருடத்தில் அரசாங்க செலவினமாக 1,08,096 கோடி ரூபா

அரசாங்க செலவுகளுக்காக அடுத்தவருடம் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 96 கோடி 77 இலட்சத்து 66 ஆயிரம் (10,80,967,766,000) ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்நிதியொதுக்கீட்டு சட்டமூலப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இப்பிரேரணையில் அடுத்த வருடம் நாட்டுக்கு உள்ளேயோ, வெளியிலோ 99700 கோடி ரூபாவுக்கு மேற்படாதவகையில் கடன் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பிரேரணையின்படி அடுத்தாண்டுக் கான நிதியொதுக்கீட்டு சட்ட மூலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

ஹமாஸ் எம்.பி கைது, காஸாவில் பதற்றம்

ஹமாஸ் பாராளுமன்ற உறுப்பி னர் ஹாதிம் கபாயிஸ் என்பவரை இஸ்ரேல் இராணுவம் கைது செய்து அழைத்து சென்றது. மேற்குக் கரை நகரான காபில் இவரது வீட்டிற்குள் நுழைந்த இஸ் ரேல் இராணுவம் இவரைக் கைது செய்து அழைத்துச் சென்றபோதும் இதற்கான காரணங்கள் அறிவிக் கப்படவில்லை. சென்ற திங்கட்கிழமை இச்சம்ப வம் நடந்தது. இஸ்ரேல் சிறையில் பாராளு மன்ற உறுப்பினர் ஹாதிம் கபாயிஸ் அடைக்கப்படவுள்ளார். ஏற்கனவே பாலஸ்தீன் எம்.பி. க்கள் பொது மக்கள் எனப் பல வகையானோர் இஸ்ரேல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்க ளில் ஜனாதிபதி மஃமூத் அப்பா ஸின் கட்சியைச் சேர்ந்தோரும் உள் ளனர். பலர் விடுதலை பெற்றுள்ளனர்.

ஐப்பசி 20, 2010

சிதறிக் கிடக்கும் புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுகளில் முயற்சி - பிரதமர்

ஈழ நாடொன்றை அமைக்க உள்நாட் டிலும் வெளிநாட்டிலும் மீண்டும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து வெளிநாடுகளு க்குச் சென்று மீண்டும் இலங்கைக்கு வரும் புலிகளையும் யுத்த காலத்தில் தென்பகுதியில் மறைந்திருந்து மீண்டும் வடக்கிற்கு வரும் நபர்கள் குறித்தும் விசாரணை செய்வதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைமைத்துவமின்றி மறைந்து இருக்கும் புலனாய்வு மற்றும் ஆயுதப் பிரிவு புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுக ளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 19, 2010

புலிகளின் சகோர யுத்தம் தமிழர்களை படுகுழிக்குள் தள்ளியது

இலங்கைத் தமிழருக்கு மத்திய அரசு உரிமை பெற்றுத் தர வேண்டும் - கருணாநிதி _

இந்திய நாட்டின் அரசியல் சட்டத்துக்குட்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள், எடுத்து வரும் நடவடிக்கைகள் எண்ணற்றவை. தமிழீழ ஆதரவாளர்கள் என்ற அமைப்பை உருவாக்கி, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய அமைப்பின் தலைவர்களை மதுரைக்கு அழைத்து வந்து நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் முன்னிலையில், சகோதர யுத்தம் கூடாது என கடந்த 1986ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்தோம். அந்த வேண்டுகோள் முழுமையாக-மனப்பூர்வமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால் வரலாறு வேறுவகையான வடிவத்தைப் பெற்றிருக்கும். ஆனால், சகோதர யுத்தத்தின் காரணமாக, இலங்கையில் நடைபெற்ற சோகமயமான நிகழ்ச்சிகள், அவற்றினால் இலங்கைத் தமிழர்கள் பட்ட-இன்னமும் பட்டுக் கொண்டிருக்கும் துன்ப, துயரங்களை வரலாறு நிச்சயமாக மறக்காது; மன்னிக்கவும் மாட்டாது. (மேலும்...)

ஐப்பசி 19, 2010

2010 கருப்பு ஒக்டோபர் நினைவாக!

வடமாகாண முஸ்லிம்களில் புலிகளினால் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகள் பூர்த்தி முஸ்லிம் மீள் குடியேற்றம் ஓர் ஆய்வு

(M. ஷாமில் முஹம்மட்!)

தமிழ் மக்களின் பிரச்சனை தனியானது, அவர்கள் இறுதி யுத்தத்தின் போது புலிகளால் பலவந்தமாக அல்லது விரும்பி புலிகளுடன் சென்றார்கள். ஒரு கும்பமாக சென்றவர்கள் உறுபினர்களை இழந்து தொகை குறைத்து அல்லது வந்த அதே தொகையினர் மீள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள். இது ஒரு குறுகிய கால இடைவெளியில் நடைபெற்றவை ஆகவே தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் என்பது வேறு, முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் என்பது முற்றிலும் வேறானது. ஆனால் நடைமுறையில் இரண்டு தரப்பினரும் ஒன்றாக பார்க்கபடுகின்ற மிகவும் தவறான அணுகு முறைதான் பின்பற்றபடுகின்றது. (மேலும்....)

ஐப்பசி 19, 2010

மதபோதகரின் துர்நடத்தை

முருங்கன் சிறுவர் இல்லத்தை மூட மன்னார் நீதிமன்றம் உத்தரவு

மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தில் 18 வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதனை மத போதகர் ஒருவர் நடத்தி வருகின்றார். சிறுவர் இல்ல சிறுமிகள் சிலரை மன்னார் பெரியகமம் பகுதியில் உள்ள தனது வீட்டில் வேலை செய்வதற்காக இவர் அழைத்துச் சென்றுள்ளார். இதன்போதே அச்சிறுமிகள் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள 15 வயதான சிறுமி ஒருவர், மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதி மன்றத்திற்கு தெரியப்படுத்தினார். இதே விதமாக மேலும் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது. (மேலும்...)

ஐப்பசி 19, 2010

வெலிக்கடை சிறை பெண்கள் பிரிவில் சுற்றிவளைப்பு

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலி ஸார் நாற்பது பேர் அடங்கிய விசேட குழு நேற்று முன்தினம் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நடத்திய திடீர் சோதனையின் போது 53 கையடக்க தொலைபேசிகள், பற்றரிகள், சார் ஜர்கள் மற்றும் கஞ்சா சுருட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இந்த விசேட குழுவினர் சிறைச் சாலை அதிகாரிகள் 15 பேருடன் இணைந்து இந்த திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 19, 2010

துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல் (பகுதி 1)

(மீராபாரதி)

இன்று விடுதலைப்புலிகள் ஆகக் குறைந்தது இலங்கையிலாவது ஒரு அமைப்பாக சக்திவாய்ந்தவர்களாக இல்லை. அவர்களது இருப்பு இல்லை என்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தபோதும், உண்மையான யதார்த்த நிலையை ஏற்றுக்கொள்வதே முன்நோக்கிச் செல்வதற்கு வழிவகுக்கும். ஆகவே தொடர்ந்தும் புலிகளது தலைமையையும் அவர்களது கடந்தகால செயற்பாடுகளையும் விமர்சிப்பது என்பது பயனற்றது. ஆனால் புலம் பெயர் சுழலில் வாழுகின்ற புலிகளின் தலைமைகள் பலர் இன்றும் செயற்படுகின்றனர். புலிகளின் தலைவர் பிரபாரகன் இல்லாதபோது இவர்களுக்கு இடையிலான பிளவுகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதுடன் தமக்குள் சண்டை பிடிப்பார்கள் என்பதும் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. (மேலும்....)

ஐப்பசி 19, 2010

யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ளோர் விடயம்

ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து முடிவெடுகப்படும்  

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பத்தினர் தொடர் பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து பேசவிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜனாதிபதியுடன் சந்தித்து பேசிய பின்னர் இக்குடும்பத்தினர் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார். இக்குடும்பங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் கலந்துரை யாடவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்....)

ஐப்பசி 19, 2010

இராணுவத் தீர்வு சாத்தியமற்றது

ஈரானுடன் பேசுவதைத் தவிர ஐ.நா.வுக்கு வேறு வழியில்லை

 

ஈரானிடம் பேசுவத்தைத் தவிர வல்லரசு நாடுகளுக்கு வேறு வழி கிடையாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்கும் ஈரானின் உரிமைய எந்தவொரு அழுத்தங்களுக்காகவும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லையென்றும் கூறினார். யுரேனியம் சர்ச்சை தொடர்பான மற்றொரு பேச்சுவார்த்தை நவம்பர் 15 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அமெரிக்கா, பிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு வழிகள் இல்லை. அனைத்தும் அடைபட்டுவிட்டன. ஆனால் இப்பேச்சுக்கள் நியாயத்தின் அடிப்படையில் இடம்பெறவேண்டும். (மேலும்....)

ஐப்பசி 19, 2010

வவுனியா மில் வீதியில் கைக்குண்டு தாக்குதல்

தனியார் சொகுசு ஜீப் வாகனம் உட்பட சில வாகனங்கள் சேதம்

வவுனியா நகர மில் வீதியில் தனியார் சொகுசு ஜீப் வாகனம் ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்கதலில் இருவர் காயமடைந்தனர் என்றும் தனியார் சொகுசு ஜுப் வாகனமும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட வாகனத்தின் பொனட் பகுதிக்குள்ளேயே குண்டு வெடித்ததாகவும் இதனால் அந்த வாகனம் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 19, 2010

வியட்நாமில் வெள்ளம்

74 பேர் பலி எண்பதாயிரம் பேர் வெளியேற்றம்

வியட்நாமில் பெய்த கடும் மழையால் அங்கு பாரிய வெள்ளம் ஏற்பட்டது. இதில் 14 பேர் பலியாகினர். சுமார் 78 ஆயிரம் பேர் இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்டனர். இரண்டு, மூன்று நாட்களாகப் பெய்த தொடர் மழையால் சென்ற ஞாயிற்றுக்கிழமை வியட்நாமில் பெரும் வெள்ளமேற்பட்டது. சில மாகாணங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்துகள், தொடர்பாடல்கள் செயலிழந்தமையால் வெள்ளம் ஏற்பட்ட மாகாணங்கள் ஏனைய மாகாணங்களிலிருந்து துண்டிக்கப்பட்டன. இம் மாகாணங்களிலிருந்து ஒரு இலட்சம் பேர் வரை வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 84 ஆயிரம் வீடுகள் ஆயிரம் ஏக்கர் அளவிலான பயிர்கள் என்பவற்றை வெள்ளம் மூழ்கடித்து இதனால் இவை பெரும் சேதத்துக்குள்ளாகின. (மேலும்....)

ஐப்பசி 19, 2010

மண்முனை - கொக்கடிச்சோலை வாவியூடாக பாலம் அமைக்க கோரிக்கை

100 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் மண்முனை- கொக்கடிச்சோலை வாவியுடான படகுப் பாதைக்குப் பதிலாக குறித்த நீர்வழியூடாக பாலம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 1 கிலோ மீற்றர் நீளமுள்ள இவ் நீர் வழிப்பாதையூடாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அரச ஊழியர்களும் படகுப்பாதையுடாகவே பலவேறு சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்து வருகின்றனர். இவ்வழியுடாக பாலம் அமைப்பதற்கு பல அரசியல் வாதிகள் பலமுறை அடிக்கல்நாட்டியுள்ளனர் ஆனால் கடந்த பல தசாப்தங்களாக பாலம் அமைக்கப்படவேயில்லை. கிழக்கு உதயத்தின் கீழாவது படகுப் பாதைக்குப்பதிலாக பாலம் அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு பண்ணைப் பாலம், திருகோணமலைக்கு கிண்ணியா பாலம்,  வன்னி - யாழ்ப்பாணத்திற்கு சங்குப்பிட்டிப்பாலம் போன்றவை எவ்வளவு முக்கிமானவையோ அவ்வளவு முக்கிமானது மண்முனை - கொக்கடிச்சோலை பாலம்.

ஐப்பசி 19, 2010

அமெரிக்கா மௌனம், பாலஸ்தீனம் குற்றச்சாட்டு

மேற்குக்கரை, கிழக்கு ஜெரூஸலத்தில் இஸ்ரேல் மீண்டும் யூதக் குடியேற்றங்களை ஆரம்பித்தது

இஸ்ரேல் அரசாங்கம் புதிய யூதக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான அனுமதியை வழங்கியதையடுத்து கட்டடக் காரர்கள் ஒப்பந்த மனுக்களைக் கோரியுள்ளனர். மேற்குக் கரை கிழக்கு ஜெரூஸலம் என்பவற்றில் அமைக்கப்படும் இஸ்ரேலின் குடியேற்றங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பெரும் தடையாகவுள்ளது. நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமானால் யூதக்குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டுமென பலஸ்தீன் கோரி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் அரசாங்கம் 240 அடுக்கு மாடிக் கட்டடங்களை நிறுவ அனுமதியளித்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 19, 2010

வடக்கு, கிழக்குக்கு நாளை பயணம்

பொதுநலவாய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் நேற்று சந்திப்பு

கொழும்புக்கு நேற்று முன்தினம் வருகை தந்த பொதுநல வாய சங்கத்தின் பிரித்தானிய கிளையைச் சேர்ந்த பதினொரு பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்ததுடன் இன்று (19 ம் திகதி) பிரதமர் டி. எம். ஜயரட்னவையும், சபா நாயகர் சமல் ராஜபக்ஷவையும் பாராளு மன்றத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதேவேளை இன்று பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யும் இக் குழுவினர் இளம் எம். பி. க்கள் குழுவையும், தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற குழுவையும் ஐ. தே. க. வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவையும் சந்தித்துக் கலந்துரையாடவி ருக்கின்றனர். இக் குழுவினர் நாளை (20 ஆம் திகதி) யாழ். குடா நாட்டுக்கும், திருகோணமலைக்கும் விஜயம் செய்யவுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 19, 2010

உலகிலேயே அதிக விலைமிக்க வீடு

முகேஷ் அம்பானியின் வானளாவிய மாளிகை

4500 கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் “மும்பை மாளிகை” உலகிலேயே அதிக விலைமிக்க வீடாகும். ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியால் மும்பையில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுதான் உலகிலேயே அதிக விலைமிக்க வீடு என்று அமெரிக்காவின் போர்பஸ் இதழ் தெரிவித்துள்ளது. தெற்கு மும்பையின் அல்டா மவூண்ட் சாலையில் அமைந்துள்ள “அந்திலா” என்ற இந்த வீடு 4500 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள் ளது.  27 மாடிகளுடன் 570 அடி உயரத்தில் அந்த வீடு விண்ணை முட்டும் விதத்தில் நிற்கிறது. அந்த சொகுசு பங்களா விரைவில் திறப்பு விழாவை எதிர்நோக்கியுள்ளது. வெறும் 2 ரூபாய்காக நாள் முழுக்க உழைக்கும் தொழிளாளரைக் கொண்ட இந்தியாவின் அவமானச் சின்னம் இந்த கண்ணாடி மாளிகை. பல கோடி மக்களை மேலும் வறுமைக் கோட்டிற்குள் தள்ளி கட்டி முடிக்கப்பட்ட மாளிகை இது என்றால் மிகையாகாது. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

பெல்ஜியத்தில் தொழிலாளர் எழுச்சி  ரயில், விமானப்போக்குவரத்து முடங்கியது

அரசின் நவீன தாரா ளமயக் கொள்கைகளைக் கண்டித்து பெல்ஜிய ரயில் வேத்துறை, விமானப் போக்குவரத்துத் துறையினர் மற்றும் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் 24 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்களுக் கான புதிய ஊதிய உயர்வு மற்றும் அவர்களது பணி கள் குறித்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரித் தொழிற்சங்கமான ஏசிஓடி வேலைநிறுத்தத் திற்கு அழைப்பு விடுத்தது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைப் பணியில் உள்ளவர்களும் பல்வேறு கோரிக்கை களுக்காக வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அக்டோபர் மாதம் துவங்கியதிலிருந்தே பெல் ஜியம் போராட்டக் கள மாகவே மாறிப் போயுள் ளது. அக்டோர் 8 ஆம் தேதி யன்று நடைபெற்ற பெரும் வேலை நிறுத்தத்தில் ஒட்டு மொத்த பெல்ஜியமே பங் கேற்றது. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுவகையில்

மீள்குடியேற்றம் தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவின மக்களுக்கும் பொதுவானதாக அமைய வேண்டும்

(சாகரன்)

அரசு காணிகளில் புதிதாக யாரையாவது திட் டமிட்டு குடியேற்றும் நடவடிக்கையாக சிறப்பாக தமிழ் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்ற முயலுதல் என்ற செயற்பாடு இனங்களுக்கு இடையில் மேலும் ஐயப்பாடுகளையும், விரிசல்களையும் ஏற்படுத்தும். அது மாத்திரமல்ல இலங்கை அரசின் செயற்பாடுகள் பற்றி தமிழ் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கு குந்தகமாகவும் அமையும். இலங்கையில் உள்ள சகல இனங்களும், சமூகக் குழுக்களும் சமத்துவமாக வாழ்வதற்குரிய அரசியல் நிலமைகளை குறைந்த பட்டசமாவது சட்ட மூலமும், நடைமுறை மூலமும் ஏற்படுத்தாமல் இலங்கை அரசு வலிந்த குடியேற்றங்களை ஏற்படுத்துமாயின் மீண்டும் இளைஞர்கள் 1970 களில் கிராமங்களை நோக்கி வகுப்பு எடுக்க புறப்படும் நிகழ்வுகள் நடைபெறமாட்டாது என்பதை உறுதி செய்ய முடியாது. இது வரைகாலமும் ஆட்சி செய்து வந்த அரசுகள் விட்ட தவறுகளை தற்போதைய அரசு பாடங்களாகக் கொண்டும் செயற்படும் என்று நம்பவைக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு தற்போது உண்டு. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்ல – சம்பந்தன்

அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உடல் நலக் குறைவினால் சம்பந்தன் அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. சம்பந்தனுக்கு பதிலாக இளம் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, அண்மைக்காலமாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் சம்பந்தன் பங்கேற்கவில்லை எனவும், உடல் நலக் குறைவினால் இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

இந்திய வெளிவிவகார அமைச்சர் நவம்பர் 25ம் திகதி இலங்கை வருகை

கொழும்பில் நடைபெறவிருக்கும் இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழுவில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நவம்பர் 25ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இம்மாதம் 27ஆம் திகதி மேற்படி ஆணைக்குழு கொழும்பில் கூடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் திடீர் ஜப்பான் விஜயம் காரணமாக இது அடுத்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டிரு ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி யொருவர் கூறினார். இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்க விருக்கும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மூன்று தினங்கள் வரை இங்கே தங்கியிருப்பதுடன் வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்வதுடன் அங்கு இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் முன்னெடுக்கப் பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு கடந்த 2005ஆம் ஆண்டு கொழும்பில் கூடி ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 18, 2010

Focus on people’s immediate needs as calls grow for unity
TAMIL PARTIES MULL OVER PRIORITIES...

Vinayagamurthi Muralitharan, Mano Ganeshan, Mavai Senathiraja, Sivanesathurai Chandrakanthan, Prabha Ganesan, Sivajilingam

Former MP Mano Ganeshan said Tamil parties had been vested with the responsibility of winning the confidence of the Sinhala people in order to create a stable environment within the communities. He said that it was very important, as they needed to differentiate the Tamil people from the LTTE.
The Tamil political scene has changed with the absence of the LTTE. Till May 2009 almost all the Tamil political parties and their views revolved around the LTTE. Either they were with the organisation, or against it. The political views and decisions of parties such as the TNA were largely influenced by the LTTE. The scenario took a turn when the outfit was defeated by the military in May last year. The defeat gave the other Tamil political leaders an opportunity to come to the forefront and address the issues faced by the people, an opportunity, which was deprived due to the presence of the Tigers, who claimed to be the sole representatives of the Tamil people. (more....)

ஐப்பசி 18, 2010

வெற்றுக் காணிகள் உறவினருக்கு விநியோகம் -  எள்ளுப்பிட்டி மக்கள் _

மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள் கடந்த 20 வருடங்களின் பின் மீண்டும் மீள்குடியேறியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள வெற்றுக்காணிகளை அங்கு மீள் குடியேறியுள்ள அரச அதிகாரி ஒருவர், அவருடைய உறவினர்களுக்கு எவருடைய அனுமதியும் பெறாமல் பிரித்துக் கொடுத்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். முசலிப் பிரதேசச் செயலகத்தில் கணக்காளராகக் கடமையாற்றும் நபர் அங்கு மீள்குடியெறியுள்ள நிலையில், மக்கள் மீள்குடியேறாத காணிகளை சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக எவருடைய அனுமதியும் பெறாமல் பிரித்துக் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக கிராம மக்கள் குறித்த நபரிடம் கேட்ட போது, தன்னிடம் இது தொடர்பாக யாரும் கேட்கக் கூடாது எனத் தெரிவித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இது குறித்து, மாந்தை எள்ளுப்பிட்டிக் கிராம சேவகரிடம் கேட்ட போது, இது உண்மைதான் என்றும் இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐப்பசி 18, 2010

கல்மடு முருகன் ஆலயத்தில் 12 வருடங்களுக்குப் பின்னர் பூசை

கடந்த பன்னிரண்டு வருடங்களாக மூடிக்கிடந்த இந்து ஆலயமொன்று இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு நேற்று ஞாயிறு காலை விசேட பூசை நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தில் கல்மடு 2ம் யூனிட் பகுதியில் அமைந்திருந்த முருகன் ஆலயமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை அந்த பிரதேச இராணுவ அதிகாரிகள் செய்திருந்தனர். கல்மடு 2ம் யூனிட் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டு மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் புனருத்தாரண வேலை களை இராணுவத்தினர் மேற்கொண்டனர். மீள் குடியேறிய மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இந்த கிராம மக்களின் பல தேவைகளை நிவர்த்தி செய்ய பாதுகாப்புப் படையினர் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

ஐப்பசி 18, 2010

சரத்துக்கு தமிழ்க் காங்கிரஸ் ஆதரவு, உறுப்பினர்கள் அதிர்ச்சி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கனேடியன் தமிழ்க் காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளமையானது உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சரத்தை விடுவிக்குமாறு இவ்வாறு போராடுவதற்கு எந்தவகையான உத்தரவை அதன் உறுப்பினர்களிடமிருந்து தமிழ்க் காங்கிரஸ் பெற்றது என்பது இன்னமும் தெளிவில்லாத ஒன்றாகவே உள்ளது. இது டேவிட் பூபாலபிள்ளையினதும், கனேடியன் தமிழ்க் காங்கிரஸிடமிருந்து சம்பளம் பெறும் ஒரேயொரு பணியாளர் டான்ரன் துரைராஜாவினதும் புனைவுதிறனே இதுவென்றும் கூறப்படுகிறது. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

ஜனாதிபதி தலைமையில் வடமாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

அரசாங்கம் மாகாண ரீதியிலான அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதற்கிணங்க நாளை 19 ஆம் திகதி வடமாகாணத்திற்கான அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியா பாதுகாப்புப் படை தலைமையகத்தில் நடைபெறவுள்ள மேற்படி மீளாவுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் மாவட்டச் செயலாளர்கள், மாகாண ஆளுநர் உட்பட உயர் மட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 18, 2010

போலிமருந்துகள் கடத்தலுக்கு விரைவில் தீர்வு

சட்டவிரோத செயலுக்கு உடந்தையான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் இலங்கையினுள் போலி மருந்துகளை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் துரித கதியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நான்கு குழுக்களினதும் உறுப்பினர்களில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு தொடர்ந்தும் ஒத்தாசை வழங்கி வருவது அம்பலத்திற்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஐப்பசி 18, 2010

போதைப்பொருளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி

நாடெங்கும் பொலிஸ் நிலையங்களுக்கு விசேட பணிப்பு

போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் பொருட்டு விசேட நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாட்டிலுள்ள 425 பொலிஸ் நிலையங்கள் ஊடாக இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. போதைப் பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால சூரிய நேற்று பணிப்புரை விடுத்தார். (மேலும்....)

ஐப்பசி 18, 2010

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவில் ஐந்து தினங்கள் தங்கியிருக்க முடிவு

அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கு அதிக நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். “இது இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்துவதற்கு அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டுவதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது’ என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்து நாட்கள் வரை, அவர் இங்கு தங்கியிருக்க கூடும் என தெரிகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, ஒபாமா இத்தனை அதிக நாட்கள் வேறு எந்த வெளிநாட்டிலும தங்கியது இல்லை என அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

Ottawa monitors more potential migrants from Sri Lanka

(Shawn McCarthy)

The federal government is monitoring a second boatload of Sri Lankan migrants preparing to head for Canada, and has stepped up its co-operation with other countries against human smugglers. With Ottawa preparing new legislation aimed a human trafficking, The Globe and Mail has learned that federal officials believe they have solid evidence that smugglers in southern Asia are preparing to send another boatload of migrants to this country. (more...)

ஐப்பசி 18, 2010

ஈராக் பிரதமர் இன்று ஈரான் பயணம்

ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி மிக விரைவில் ஈரான் செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் இன்று திங்கட்கிழமை பிரதமர் நூரி அல் மாலிகி ஈரான் பயணமாகலாம் எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது. மார்ச் 07 இல் நடந்த பொதுத் தேர்தலையடுத்து இன்னும் அரசாங்கம் அமையவில்லை. அரசாங்கத்தை அமைக்க ஈரானின் உதவியைக் கோருவது ஈராக்கின் அபிவிருத்தி, பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் இதன் போது பேசப்படவுள்ளன.(மேலும்....)

ஐப்பசி 18, 2010

அறிவூட்டலுக்கு பெருமை சேர்க்கும் அபூர்வ ஆசிரியை

நடைபாதை குழந்தைகளின் உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்றவற்றுக்காக மக்களிடம், உதவிகள் பெற்று ஒரு ஆசிரியை அவர்களை பராமரித்து வருகிறார். ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியை கன்டா சக்ரவர்த்தி (44), கல்கத்தாவில் உள்ள டம்டம் ரயில்வே ஜங்ஷன் வழியாக தனது பாடசாலைக்கு சென்று வந்தார். அந்த ரயில் நிலைய மேடையில் தங்கியிருந்த சில சிறுமிகள் அவரிடம் பிச்சை கேட்பார்கள். சில நாட்கள் காசு கொடுத்த கன்டா சக்ரவர்த்திக்கு, அவர்கள் பள்ளிக்கூடம் போகாமல் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் என்று கேள்வி எழ, நாமே அவர்களுக்கு ஏன் பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது, என நினைத்தார். (மேலும்....)

ஐப்பசி 18, 2010

இரண்டு ரூபா சம்பளம்

தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவக் கிளை நிலையங்களில் பணிபுரியும் பகுதி நேரப் பணியாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது.  கால்நடை பராமரிப்பு துறை சார்பில், மாநிலம் முழுவதும் கால்நடை மருத்துவ மனை, கிளை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த கிளை நிலையங்களில் 1990க்குப் பிறகு, பகுதி நேர பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் காலை 8 மணிக்கு வேலைக்கு வரவேண்டும். அலுவலகத்தை சுத்தம் செய்தல், தண்ணீர் எடுத்து வைத்தல், வைத்தியர் ஊசி போடும் போது மாட்டுக்கு வால்பிடித்து உதவி செய்தல் போன்ற பணிகளை பகல் 12 மணி வரை செய்ய வேண்டும். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. பணிக்கு வரவில்லை என்றால், இரண்டு ரூபா சம்பளம் வழங்கப்படாது. மாநிலம் முழுவதும் 1,500 க்கும் மேற்பட்டோர் 15 ஆண்டுக்கும் மேலாக இப்பணியை செய்து வருகின்றனர். இவர்கள் எட்டாம் வகுப்பு முதல் + 2 வரை படித்தவர்கள். காலை 8 மணிக்குப் பயணிக்கு செல்லும் இவர்களால், வேறு வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் உலகின் பல பணக்காரர்கள் தற்போது இந்தியாவில்தான் உருவாகி வருகின்றார்களாம்.

ஐப்பசி 17, 2010

அரசியல் தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு

அண்டை நாடு என்பதனால் மாத்திரமன்றி, இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் கோடிக்கணக்கானவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழ்கின்றார்கள் என்பதனாலும் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டிய தார்மீகக் கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. எனினும், இறைமைமிக்க இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான எல்லைக்கு உட்பட்டதாகவே இந்தியாவின் செயற்பாடு அமைய முடியும். இந்த எல்லைக்குள் செய்ய வேண்டிய பணியை இந்தியா சரியாகவே செய்கின்றது. இப் பணியை இறுதி இலக்கு வரை முன்னெடுக்க வேண்டியவர்கள் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள். (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

சன் சீ கப்பல்

கனடா வந்த தமிழ் அகதி குழந்தைகளுக்கு கல்வி போதிக்க விசேட ஏற்பாடு

சன் சீ கப்பல் மூலம் கனடா வந்தடைந்த தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதற்கான விசேட நடவடிக் கைகளை கனேடிய அரசாங்கம் மேற்கொண் டுள்ளது. அதற்கென மூன்று விசேட போதனா சிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சன் சீ கப்பல் மூலம் கனடா சென்றடைந்த தமிழ் அகதிகளில் தனியாக இருந்த பெண் களும் ஆண்களும் சகல வசதிகளும் கொண்ட தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு தொடர்ச் சியாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆயினும் குழந்தைகள் மற்றும் சிறு வர்கள் தாய்மாருடன் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையிலேயே தாய்மாருடன் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வி தொடர்பில் கனேடிய கல்வி அமைச்சு விசேட ஏற்பாடொன்றை மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம் குறித்த சிறுவர்களின் வயது வரம்பைப் பொறுத்து அவர்களுக்குத் தனித்தனியான வகுப்புகளை ஒழுங்கு செய்து கல்வி போதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐப்பசி 17, 2010

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

முழுமையான மீள்குடியேற்றத்துக்கு ஆளுநர் பணிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிதிவெடி அகற்றும் பணியை துரிதமாக்குவதுடன், 127 கிராம சேவகர் பிரிவிலும் முழுமையாக மக்களை மீளக்குடியமர்த்தவும் நட வடிக்கைகள் எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப் புரை விடுத்தார். இம்மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் உங்களது சொந்த மக்கள் என்ற உணர்வுடன் சகல அரச அதிகாரிகளும், மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் செயற்பட வேண்டும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் கேட்டுக்கொண்டார். (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

ஐரோப்பிய யூனியனின் ஒருமைத்துவக் கோட்பாடு கேள்விக்கு உள்ளாகின்றது

றோமா மக்களையும் ஜிப்ஸிகளையும் உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சார்கோஸி ஓகஸ்ட் மூன்றாவது வாரத்தில் உத்தரவு பிறப்பித்தார். றோமா என்றும் ஜிப்ஸி என்றும் அழைக்கப்படுபவர்கள் றோமானியாவிலிருந்தும் பல்கேரியாவிலிருந்தும் வந்தவர்கள். இவ்விரு நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் பெற்றுள்ளன. ஐரோப்பிய யூனியன் பிரசைகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு விசா இல்லாமல் எந்த நேரத்திலும் செல்வதற்கும் அங்கு தங்கியிருப்பதற்கும் உரிமை உடையவர்கள். அப்படியிருந்தும் பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள். றோமா மக்களைப் பிரான்ஸ் பலவந்தமாக வெளியேற்றிய நிகழ்வு ஐரோப்பிய யூனியனின் ஒரு மைத்துவக் கோட்பா ட்டைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றது.(மேலும்.....)

ஐப்பசி 17, 2010

Wall Street firms dole out record pay to executives

(By Tom Eley)

While for millions of Americans 2010 has been a year of unemployment and wage-cutting, executives at a handful of finance firms will be paid a record $144 billion, according to a new survey by the Wall Street Journal. The sum is up 4 percent from last year’s haul of $139 billion, which was also a record.The Journal found that executive pay for 2010 has gone up at 29 of the top 35 surveyed banks, investment banks, hedge funds, money management firms, and securities exchanges. The payroll increase will slightly outstrip the growth in revenue at these firms, which increased by 3 percent from $433 billion in 2009 to $448 billion in 2010. About a third of total Wall Street revenue is given over to employees. (more....)

ஐப்பசி 17, 2010

இனப் பிரச்சினையின் தீர்வும் பிரதேச அபிவிருத்தியும் இணைந்து செல்ல வேண்டும்

நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் போது நாம் வேகமாகப் பின்னோக்கிச் செல்லக்கூடாது. எங்கள் முன்னுரிமைகளைச் சரியாக முடிவு செய்து செயற்படுவதிலேயே தமிழ் மக்களின் நிம்மதியும் முன்னேற்றமும் தங்கியுள்ளன. இரண்டு விடயங்களை எங்கள் முன்னுரிமையாகக் கூறலாம். ஒன்று இனப் பிரச்சினைக்கான தீர்வு. மற்றது தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி. இனப்பிரச்சினைக்கான தீர்வில் நாங்கள் மிகவும் பின்னுக்குச் சென்றுவிட்டோம். பின்தங்கியிருப்பது வேறு. பின்னுக்குச் செல்வது வேறு. அரசியல் தீர்வைப் பொறுத்த வரையில் கணிசமாக முன்னேறிய நிலைக்கு வந்து திடீரென வெகுவாகப் பின்னுக்குச் சென்று விட்டோம். இந்த நிலையிலிருந்து படிப்படியாகவே முன்னேற வேண்டும். அரசியல் தீர்வு முயற்சியில் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் நின்ற இடத்துக்கு மீண்டும் வர நீண்ட காலம் எடுக்கலாம். எனவே, அரசியல் தீர்வு முயற்சியில் மாத்திரம் எங்கள் ஈடுபாட்டைச் செலுத்து வோமானால் அபிவிருத்தியில் வெகுவாகப் பின்தங்கிவிடுவோம். (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

நக்சலைட்டுகளின் நதி மூலம்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் 1967ம் ஆண்டு பதவிக்கு வந்தது. சில மாதங்கள் மாத்திரமே இந்த அரசாங்கம் நிலைத்தது. கூட்டணி அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்களில் டார்ஜீலிங் மாவட்டத்திலுள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில் ஒரு கிளர்ச்சி வெடித்தது. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சாரு மஸும்தார் என்பவரின் தலைமையில் விவசாயிகளின் எழுச்சிப் போராட்டம் என்ற பெயரில் ஒரு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். விவசாய நிலமும் விளைச்சலும் அவர்களால் அபகரிக்கப்பட்டுக் கூலி விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

முஸ்லிம் கைதிகள் விவகாரம்

மதத் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு அமைச்சர் டியூ முடிவு

சிறைச்சாலைகளில் அதிகரித்துவரும் முஸ்லிம் சிறைக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது பற்றி தாம் ஏற்பாடுகளைச் செய்யப் போவதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் முழு சனத்தொகை எட்டு வீதம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லிம் கைதிகளின் விகிதமோ 16 முதல் 19 வீதம் வரையில் அதிகரித்து இருப்பது குறித்து முஸ்லிம் மதத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்திருக்கிறார்.

ஐப்பசி 17, 2010

போதுமான நிதி ஏற்பாடு இன்றி

அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நடுவதை தவிர்க்க வேண்டும் - ஜனாதிபதி

போதுமான நிதி ஏற்பாடு இல்லாமல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். அடிக்கல் நாட்டிவிட்டு வருடக்கணக்கில் நிறைவு செய்யப்படாத அபிவிருத்தித் திட்டங்களால் மக்கள் தம்மையே குறை கூறுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நிறைவு செய்யப்படாதுள்ள திட்டங்களை துரிதமாக நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் பணிப்புரை விடுத்தார். (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

The Canadian University will discuss about Sri Lankan Tamils.

The Canadian Welford Laurie University had originated an Intellectuals’ panel to discuss about the Tamil refugees who had gone from Sri lanka as refugees. The Intellectuals panel will discuss on the forthcoming 18th at the Laurie University about the future of the 492 Tamils expatriates who had recently arrived to Canada and the Tamil refugees arrested with the assistance of Canada. The discussion will be on the theme of “increase entry of expatriates, the activities of foreign countries and the responsibility of Canada. The Intellectuals panel will comprise of Canadian refugees’ policy change and political division Prof.Krish Anderson, Religious Educational Prof.Amarnath Amarasingham of Wiford University, TamiL Congress Attorney Gery Anantha Shankari, Riyardson University Political Prof.Abarna Sunthar and United Nation Representative Alistair Edger. The expectations are that on conclusion of their discussions, a report will be submitted to the Canadian government.

ஐப்பசி 17, 2010

ஆள் பார்த்தே ஒழுங்காற்று நடவடிக்கை

உலகில் எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போது வேலை அதிகம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு என்று சொல்வதிலும் பார்க்க ரணிலுக்கு என்று சொல்லலாம். பொன்சேகவின் விடுதலைக்காக நாடு பூராவிலும் ‘போராட்டம்’ நடத்த வேண்டும். ரணிலின் போராட்டம் ‘தேவையற்றது’ என்று அனோமா சொன்ன பின்னும் அவர் விடுவதாக இல்லை. எங்களைக் கேட்காமல் மன்னிப்புக் கடிதம் அனுப்பிவிட்டார் என்று அனோமா சொன்னதன் அர்த்தம் அது தானே. பொன்சேகா மீது ரணிலுக்குக் கொஞ்சமும் பற்று இல்லை என்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு முக்கியஸ்தர். கட்சிக்குள் தனக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் எதிர்பைத் திசைதிருப்புவதற்காகவே விடுதலை பற்றிப் பேசுகின்றாராம். (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

Exposing second generation LTTE terror masters in Canada.

(Exclusive research from Sri Lanka Guardian)

Sri Lanka Guardian insiders among Tamil Diaspora had been conducting a extensive research on LTTE terror masters in Canada. We are publishing the names of individuals who had been the organizing figures of LTTE terror protests in Canada. This list will be updated on daily basis for the next two weeks. We will also publish photos of these individuals in our upcoming updated editions. (more....)

ஐப்பசி 17, 2010

பயனளிக்க முடியாத நேரடிப் பேச்சுவார்த்தை

அமெரிக்காவினது முயற்சியினாலேயே இப்பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பித்துள்ள போதிலும் அதற்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதில் அமெரிக்கா சிறிதளவும் கவனம் செலுத்தவில்லை. பேச்சுவார்த்தையில் காத்திரமான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதிலும் பார்க்கப் பேச்சு வார்த்தை இடம்பெற வேண்டும் என்பதிலேயே அமெரிக்கா அக்கறையாக இருந்திருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். பலஸ்தீனப் பிரச்சினையின் தீர்வுக்கு மேலாக உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே அமெரிக்காவின் நாட்டம் இருப்பது போல் தெரிகின்றது. மேற்குக் கரையில் இஸ்ரேல் நிர்மாணித்து வரும் குடி யிருப்புகள் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் நெதன்யாஹு அமெரிக்காவை ஏமாற்றுகின்றாரா? அல்லது அமெரிக்கா முழு உலகையும் ஏமாற்றுகின்றதா? (மேலும்.....)

ஐப்பசி 16, 2010

நாடு கடந்த தமிழீழத்தார்

தமக்குள் களையெடுப்புக்களை நடத்தப் போகின்றார்களாம்

(அருகில் உள்ள சுவரொட்டி புலிகளால் புலிகளுக்கு எதிராக கனடாவில் வெளியிடப்பட்டு பொது இடங்களில் ஒக்ரோபர் 15ம் திகதி ஒட்டப்பட்டவை)

கேபி இலங்கை அரசின் விருந்தாளியாக்கப்பட்ட பின்பு 'அமெரிக்க' உருத்திரகுமாரன் தலைவர் பொறுப்பை உத்தியோகபற்றற்ற முறையில் ஏற்றுக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து தேர்தல், பிரதம பதவி என்று எல்லாவற்றையும் தானே ஏற்றுக் கொண்டார். பதவி, பணத்திற்கு அலையும் இக் கூட்டத்திற்குள் தற்போது பலத்த குத்து வெட்டு. தொடர்ந்து இரு குழுக்களாக பிரிந்து கொண்டனர். இரு குழுக்களும் ஒருவரையொருவர் துரோகிகள் என்று சொல்லி கொள்கின்றனர். இப்ப என்னடாவென்றால் ஒரு குழு மற்ற குழுவை கை நீட்டி களையெடுக்கப் போகின்றார்கள் என்று புறப்பட்டு விட்டனர். இதன் தொடர்ச்சியாக கனடாவில் தமிழ் கடைகளின் சுவர்களில் களையெடுப்பு பற்றிய சுவரொட்டிகளும், துரோகிகளின் பெயர் விபரமும் வெளியாகியுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 16, 2010

தடுப்பு முகாம்களில் உள்ளோர் பற்றிய திருப்பமான பதில் ஒருவாரத்தில் கிடைக்கும்

வன்னிப் பகுதிகளில் நல்லிணக்க ஆணைக்குழு பொதுமக்களிடம் நடத்திய பகிரங்க விசாரணைகளின்போது, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் காணாமற்போனவர்களைத் தேடித் தருமாறும் கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டன. அதன்படி, தடுத்து வைக் கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு ஆணைக் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறானவர்களின் விபரங்களைத் தபால் மூலம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறினார். கிடைக்கப்பெறும் விபரங்களைக் கொண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் தனியாகக் கலந்துரையாடி பதிலொன்றைப் பெற்றுத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார். இது பற்றி ஒரு வார காலத்தினுள் திருப்பமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். (மேலும்....)

ஐப்பசி 16, 2010

அகதிகள் விடயத்தில் கடும் போக்கை கடைப்பிடிக்கும் கனடா அரசு

எம்.வி.சன்.சி கப்பலில் பயணித்து போலியான ஆவணத்தை சமர்பித்த கணவன் மனைவி கைது

எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் 492 பேரில் கணவன் மனைவி இருவர் போலியான ஆவணத்தை சமர்பித்தமையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தும் இன்னும் சிலரும் கைது செய்யப்படலாம் என கனடா நாட்டிலிருந்து செய்திகள் கசிகின்றன. இதில் முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் முக்கியமாக அடங்கி இருப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐப்பசி 16, 2010

இலங்கை-இந்திய ஒத்துழைப்பு குறித்து

ஜனாதிபதி மஹிந்த - பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு

கடந்த ஜூன் மாதத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்த போது இரு நாடுகளுக்குமிட&