Contact us at: sooddram@gmail.com

 

ஐப்பசி 2010 மாதப் பதிவுகள்

ஐப்பசி 31, 2010

பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேசக் கிளைகளின் மகாநாடு

கடந்தவாரம் பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேச கிளைகளின் மகாநாடு ஐரொப்பாவில் நடைபெற்றது. இது தொடர்பாக அவர்களின்   சர்வதேசப் பொறுப்பாளர் த. சாந்தன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை. (மேலும்...) (english Ver...)

 

 

 

ஐப்பசி 31, 2010

13 வது திருத்தத்தை நிராகரிக்கலாமா?

(ஆர். கே. ராஜலிங்கம்)

பதின்மூன்றாவது அரசிய லமைப்புத் திருத்தத்தை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடித்துக் கூறுவது இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் பிரதான தடைக்கல்லாக இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் எண்ணிக்கையில் கூடுதலான பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வு நடைமுறையில் பிரதான பங்காளியாக இருக்க வேண்டிய அவசியத்தைக் கூட்டமைப்புத் தலைமை உணர்ந்து செயற்படுகின்றதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அரசியல் தீர்வை அடைவதற்குத் தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்று ஜனாதிபதி அண்மையில் கூறியதில் அர்த்தம் உண்டு. தீர்வு முயற்சியை முன் னெடுப்பதற்குத் தடையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதை மனதில் வைத்தே ஜனாதிபதி அவ்வாறு கூறியிருக்க வேண்டும். (மேலும்...)

ஐப்பசி 31, 2010

சர்வதேச 'வாய்ப்பாடு'

இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் சர்வதேசம் என்ற ஒரு மாயை தமிழ்த் தலைவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. காலங்காலமாகத் தலைவர்கள் சர்வதேச வாய்ப்பாடு சொல்லிக்கொண்டிருப்பதால் மக்களும் அதில் நம்பிக்கை வைக்கத் தொடங்கினர். ஒருபோதும் சாத்தியமற்ற இரண்டு விடயங்களில் தலைவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்கள். ஒன்று தனிநாடு அமைக்க முடியும் என்ற நம்பிக்கை. மற்றது சர்வதேசம் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை. தமிழ் மக்கள் முகங்கொடுத்த இழப்புகளுக்கும் பின்னடைவுகளுக்கும் இவ்விரு நம்பிக்கைகளுமே பிரதான காரணம்.(மேலும்...)

ஐப்பசி 31, 2010

அரசியல் கட்சிகளின் அராஜகம்

பல்கலைக்கழக மாணவர்களின் வன்முறைச் செயற்பாடுக ளும் இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி வெளியிடப்படும் கருத்துகளும் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்து வருகின் றன. பல பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்து மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் பற்றிப் பேசியிருப்பதிலிருந்து ஏறக்குறைய எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் அமைதியற்ற நிலை இருப்பதைப் புரிந்துகொள் ளலாம். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அண்மையில் மாணவர்குழுவொன்று உயர் கல்வி அமைச்சுக் குள் அத்துமீறிப் புகுந்து தளபாடங்களையும் உபகரணங்களை யும் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாகவே இவர் கைது செய் யப்பட்டார்.

(மேலும்....)

ஐப்பசி 31, 2010

அரசியல் வட்டத்துக்குள் முடக்கப்பட்ட தமிழ் சினிமாவும், மழுங்கிப் போகும் கலைஞர்களின் திறமைகளும்

கடந்த சில மாதங்களாக வெளிவந்த வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்த படங்கள் அனைத்துமே அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டவை அல்லது மற்றவர்கள் தயாரித்து அவர்களால் வெளியிடப்பட்டவை. அவர்களோடு தொழில் ரீதியாக மோத முடியாத சிறிய தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரித்த படங்களை திரையிடுவதற்கு தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். தமிழத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சிலரே கைப்பற்றியதுதான் காரணம். சினிமா பெரும் முதலீட்டில் உருவாக்கப்படுகிறது என்பதால் அதன் வெற்றி என்பது விமர்சனங்கள், விருதுகள், அனைத்தையும் தாண்டி வியாபாரத்லும் இருக்கிறது. (மேலும்.....)

ஐப்பசி 31, 2010

பெண்கள் மீதான ஊடக வன்முறை

(அனிச்சா)

பெண்கள் ஓரளவுக்காவது முன்னேறியிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் இந்த இருபத்தியோறாம் நூற்றாண்டிலும் பெண்கள் மீது ஊடகங்கள் செலுத்தி வரும் வன்முறை குறைந்திருப்பதாகத் தெரியவில்லை. பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களை சுரண்டுவதன் மூலமே லாபத்தையும் நுகர்வோரின் ஆதரவையும் பெற முடியும் என்று நம்புகின்றன. ஊடகத்தின் பெரும்பாலான நடவடிக்கைகளும் இந்த அவல நம்பிக்கை பொருந்தும். பொது புத்தியிலிருந்து விலகி பெண்களை மதிக்கக் கூடிய ஊடகங்கள் இருந்தாலும் அவை சிறுபான்மை எண்ணிக்கையிலேயே இருப்பதால் எந்தப் பெரிய பாதிப்பையும் அவை ஏற்படுத்துவதில்லை. பெண்களின் மீது மிகப்பெரிய வன்முறையை மிக நீண்டகாலமாக செலுத்திவரும் மிக முக்கியமான ஊடகம் திரைப்படங்கள். தமிழில் வெளியாகும் பல திரைப்படங்களை எடுப்பவர்கள் தங்களை தாங்களே கலாசாரக் காவலர்களாக நியமித்துக் கொண்டிருக்கிறார்கள்.

(மேலும்.....)

ஐப்பசி 30, 2010

அப்பாவி தமிழ் மக்களிடம் எரிக் சொல்ஹெய்ம் மன்னிப்பு கோர வேண்டும் கொமின் தயாசிறி !

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அப்பாவி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பிரபல சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அவலங்களுக்கு எரிக் சொல்ஹெய்மும் ஒர் முக்கிய பொறுப்பாளி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு ஆதரவான முறையில் செயற்பட்டு வந்தாகவும், அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளுடன் சொல்ஹெய்ம் நட்புறவினைப் பேணியதாகவும், சமாதான ஏற்பாட்டாளராக செயற்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். புலிகளுடனான சமாதான முனைப்புக்களின் போது நோர்வேயை சமாதான ஏற்பாட்டாளராக தெரிவு செய்தமை பாரிய தவறாகும் என அவர் தெரிவித்துள்ளார். (மேலும்...)

ஐப்பசி 30, 2010

ஜனாதிபதி சீனாவை சென்றடைந்துள்ளார்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலத்த வரவேற்பு!

சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை பயணமான
ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ உட்பட்ட தூதுக்குழுவினர் ஷங்காய் நகரை அடைந்துள்ளனர். ஷங்காய் நகரில் இடம்பெறும் எக்ஸ்போ 2010 கண்காட்சியில் பங்கேற்கும் முகமாக சீன அரசாங்கத்தில் விசேட அழைப்பின் பேரில் இவர்கள் சென்றுள்ளனர். சீனா சென்ற இவர்களுக்கு ஷங்காய் நகர புடோன் சர்வதேச விமானநிலையத்தில் வைத்து வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சீன பொது ஆலோசனை சபையின் தலைவர் ஷெய்வேய் மற்றும் ஷங்காய்;;;;; நகரின் அரசாங்க சிரேஷ்;ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதனிடையே, சீனாவில் உயர்மட்ட அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ, சீனப் பிரதமர் வென்ஜியாபோவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்தாலோசிக்கவுள்ளார்.

ஐப்பசி 30, 2010

Ottawa says Tamil arrests send warning to people smugglers

Authorities in Thailand say they have arrested another 100 Tamil migrants, and Canada’s Immigration Minister says the bust ought to send a strong message to human-trafficking syndicates: Don’t target Canada. “We’ve increased our police and intelligence presence in human-smuggling transit countries, including Thailand,” Jason Kenney said in an interview, alluding to pre-emptive actions now being taken by federal agents. It is unclear if the migrants were headed for Canada and Mr. Kenney could not speak to the details of the bust, but he said it “underscores for us the ongoing threat to the integrity of Canada.” He added that there are “several efforts under way by smuggling syndicates to send vessels to Canada.” (more....)

ஐப்பசி 30, 2010

ரிஷானாவின் கருணை மனு விவகாரம்

சவூதி மன்னரின் அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் கடிதம் கையளிப்பு

இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு எழுதிய கருணை மனு மன்னரின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கையெழுத்திட்ட கருணை மனு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக கருணை மனுவை ஏற்கும் மன்னரின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் சவூதி அரசிடமிருந்து பதிலை எதிர்பார்த் திருப்பதாகவும் அவர் கூறினார். (மேலும்...)

ஐப்பசி 30, 2010

அனைத்துப்பல்கலைக்கழக

மாணவர் ஒன்றிய அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உதுல் பிரேமரட்னவை நேற்று பகல் பொலிஸார் கைது செய்தனர். இராஜகிரிய பகுதியில் வைத்தே இவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதற்றத்தைத் தோற்றுவித்து அமைதியைச் சீர்குலைக்க அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டப்பட்டு வரும் நிலையில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை உயர் கல்வி அமைச்சு வளாகத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஐப்பசி 30, 2010

இந்தியாவின் புலிகளாக நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர்

நக்சலைட் தீவிரவாதம் நக்சல்வாடி பிரதேசத்தில் 1967 ஆம் ஆண்டு தோன்றியது. கடந்த 42 வருடங்களில் இந்தியாவின் 16 மாநிலங்களில் இவ்வியக்கம் விஸ்தரித்துள்ளது.முன்பு கட்டுப்பாட்டில் இருந்திராத புதிய இடங்களில்கூட ஸ்திரமாக கால் ஊன்றி நிற்கின்றார்கள். அதில் ஒன்றுதான் Bhopal நகரம். அங்கு ஒரு தொழில்சாலையை அமைத்து இருந்தனர். 16 மாநிலங்களில் இருந்தும் மொத்தமாக 40000 சதுர கிலோ மீற்றர் பரப்பு உடைய நிலம் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 'Red Corridor' என்று இது அழைக்கப்படுகின்றது. 16 மாநிலங்களில் உள்ள 194 மாவட்டங்களில் இவர்களின் பிரசன்னம் உண்டு.(மேலும்...)

ஐப்பசி 30, 2010

நல்லிணக்க ஆணைக்குழு மூலம் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ள விடயங்களுள் மிகப் பெரும்பாலானவை தமிழ் பேசும் மக்களின் நாளாந்த வாழ்க்கையுடனும் அவர்க ளின் இனத்துவ அபிலாஷையுடனும் நேரடியாகச் சம்பந் தப்பட்டவை. எனவே இவ்வாணைக்குழுவின் விசாரணை களில் முழுமையாகப் பங்கு பற்றித் தமிழ் பேசும் மக்க ளின் பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறி அம் மக் களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார் மீகப் கடப்பாடு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகை யில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. அக் கட ப்பாட்டை நிறைவேற்றாமல், ஆணைக்குழுவினால் எவ் வித பலனும் இல்லை எனக் கூறிப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது தலைமைத்துவப் பண்பாகாது. (மேலும்...)

ஐப்பசி 30, 2010

மாணவர் வன்முறைக்குப் பின்னால் வங்குரோத்து ஜே.வி.பி.

கடந்த காலத்தில் வன்முறைகளை கைவிட்டு, மீண்டும் ஜனநாயக அரசியலில் சேர்ந்து விடுவதைப் போன்று பாசாங்கு செய்து வந்த ஜே.வி.பி.யினர், தங்களுக்கு மக்களின் வாக்குப் பலத்தின் மூலம், அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றுவது என்றுமே சாத்தியப்படாது என்ற உண் மையை உணந்திருக்கின்ற காரணத்தினால், வேறு வழியின்றி அப்பாவி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவ, மாணவி களையும் அங்கு பட்டதாரி படிப்பை மேற்கொள்ளும் பெளத்த பிக்கு மாணவர்களையும், பகடைக் காய்களாக பயன்படுத்தி, தங் களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற் காக வன்முறை களை கட்டவிழ்த்த வண்ணம் இருக்கி றார் கள். (மேலும்...)

ஐப்பசி 30, 2010

அமரர் தொண்டமானின் 11வது சிரார்த்த தினம் இன்று

காலத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்ட உன்னத தலைவர்

(கே. மாரிமுத்து)

இவரது வேகமான, விவேகமான சேவை காரணமாக இலங்கை- இந்திய காங்கிரஸின் கம்பளை மாநாட்டில் வரவேற்புக்குத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1947ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்திலே அமரர் தொண்டமானுக்கு பிரவேசம் கிடைத்தது. மலையக மக்கள் சார்பாக தானே தலைமைதாங்கி 7 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை அவரைச் சார்ந்ததாகும். அன்றிருந்த அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களின் பிரஜாவுரி மையையும், வாக்குரிமையையும் பறித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1952ஆம் ஆண்டில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார். மூன்று மாதம் வரையும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றிகண்டார். (மேலும்...)

ஐப்பசி 30, 2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார். யுத்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அவர் எதிர்வரும் நவம்பர் நான்காந் திகதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பாரென்று அதன் இணைப் புச் செயலாளர் தெரிவித்தார். இதேவேளை, கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இயக்குநர் பீ. முத்துலிங்கம் நாளை மறுதினம் (முதலாம் திகதி) ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறார். அதனைத் தொடர்ந்து 03ஆம், 04 ஆம் திகதிகளிலும் 8 ஆம் திகதி முதல் 10 ஆந் திகதி வரையிலும் கொழும்பில் விசாரணைகள் நடைபெறும். எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் பகிரங்க அமர்வு நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா மற்றும் உறுப்பினர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

ஐப்பசி 30, 2010

யாழ். ஆதார வைத்தியசாலைகளுக்கு சத்திரசிகிச்சை படுக்கைகள் கையளிப்பு

யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்காவின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்திலுள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகளுக்கு அவசர சத்திரசிகிச்சைப் படுக்கைகளும் மற்றும் நோயாளர்களின் படுக்கைகளும் யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள படைகளின் பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சத்திரசிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. சாவகச்சேரி வைத்தியசாலைக்கு இரண்டு சத்திரசிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. பருத்தித்துறை வைத்தியசாலைக்கு ஒரு சத்திரசிகிச்சை படுக்கையும் இன்று வழங்கப்பட்டன.(மேலும்...)

ஐப்பசி 30, 2010

பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு, ஒலுவிலில் ஆர்ப்பாட்டம்

ஒலுவில் முதலாம் பிரிவு அஷ்ரப் நகரில் யானைப் பாதுகாப்புக்கு வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டம் நேற்று மு.ப. 11.00 மணியளவில் அஷ்ரப் நகரில் யானை வேலி அமைக்கப்படும் இடத்தில் இடம் பெற்றது. இதில் பெருந்திரளான அஷ்ரப் நகர் மக்கள் கலந்து கொண்டனர். எனி னும், பொலிஸ் பாதுகாப்புடன் யானை வேலி அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

ஐப்பசி 30, 2010

கெற்பலி - மறவன்புலவு அகதி மக்களுக்கான நீதி.

2010 பங்குனி முதலாகக் கேட்டு வாங்கப்படும் இந்தத் தொகைகளுக்கு அறவழிப் போராட்டக் குழுவினர் எந்தவிதப் பற்றுச் சீட்டுக் கொடுக்கவில்லை. இந்தப் பணம் அறவழிப் போராட்டக்குழு வைத்திருக்கும் 12 வங்கிக் கணக்குகள் எதற்குள்ளும் செலுத்தப்படவிவ்லை. 101 குடும்பங்களுக்கும் காணிகளை அளந்து உறுதி எழுதிக் கொடுப்பதற்காக ரூ. 61,000 தொகையை 1985இலேயே இந்தக் குடும்பங்கள் அப்பொழுது தமக்கு வந்த உதவித் தொகையில் கொடுத்துள்ளன. இதற்கும் அப்பொழுதும் பற்றுச் சீட்டுக் கொடுக்கவில்லை. (மேலும்...)

ஐப்பசி 30, 2010

 

1983 இனக் கலவர அகதிகள், 1983 racial riots displaced
 

வணக்கம்

 

அன்னலட்சுமியின் அழுகை

செல்வரத்தினத்தின் சோகம்

பொன்னம்பலத்தின் பொருமல்

 

மனித உரிமை மீறலா?

அறவழி வாழ்வா?

 

தென்மராட்சியாரின் நன்கொடை

 

தீதும் நன்றும் பிறர் தர வாரா

 

பார்க்க காணொலி

http://www.youtube.com/watch?v=a8lGy0KFN-4

ஐப்பசி 30, 2010

புலிவாலும் தூஷணமும்

கடந்த ஞாயிறு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ரி.பி.சி வானொலியில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தார். நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது வழக்கம் போல் ஒரு புலி வால் ஒன்று தூஷணம் ஒன்றை சொல்லிவிட்டு சென்றது. புலிவால்கள் பற்றிய கருத்தில் தூஷணம் மிக முக்கியமானது. கருத்துக்களை எதிர்கொள்ள வக்கில்லாத அல்லது அரசியல் அறிவு கெட்ட ஞானசூனியங்கள் இறுதியாகப் பயன்படுத்துவது தூஷணவார்த்தைகளைத்தான். கிட்டு முதல்கொண்டு அன்ரன் பாலசிங்கம் வரை தூஷணம் கொட்டுவதில் வல்லவர்களாக இருந்தபோது புலிவால்கள் அவ்வழியே இருப்பது வியப்பொன்றுமில்லைத்தான்.(மேலும்...)

மாற்றம் கொண்டு வர போராடு

சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ தயாரில்லாமல் இன்னும் கூப்பாடு போட்டுக்கொண்டே இருக்கிறது. இத்தனை அழிகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள முடியாமல் இன்னும் குளறிக்கொண்டு இருக்கிறது. நாட்டில் இருக்க முடியாது இராணுவம் என்னைத்தேடுது என்று அரசியல் தஞ்சம் கேட்டு அக்ஸ்ப் பண்ணியவுடன் செய்யிற முதல் காரியம் இலங்கை பாஸ்போர்ட் எடுக்கிறது. பிறகு டிக்கட் போட்டிட்டு உல்லாசப்பயணமாக இலங்கைக்குப் போகிறது. இலங்கை தூதராக அதிகாரிகளே இதைச் சொல்லி கவலைப்பட்டார்கள். போயிட்டு திரும்பி வந்து சொல்லுகிற வார்த்தை சிங்களவன் ஒண்டும் தரமாட்டான். பக்கத்து வீட்டுக்காரனுக்கே உதவி செய்ய முடியாத தமிழன், தாழ்த்தப்பட்ட மக்களையே தலையெடுக்க விடாத தமிழன் சொல்லுகிற வார்த்தை சிங்களவன் ஒண்டும் தரமாட்டான். (மேலும்...)

ஐப்பசி 29, 2010

மீண்டும் தமிழர்கள் கைது

தாய்லாந்து பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் கைது!

தாய்லாந்து பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின்போது நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அங்கு கைது செய்யப்பட்டனர். மலேசிய- தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள songkhla, hatyai ஆகிய கிராமங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தவர்களே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அந்நாட்டில் சட்டரீதியாக தங்கி இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையில் கைது இடம்பெற்றபோது இவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் கப்பல் ஒன்றின் மூலம் கனடா செல்ல தயார் நிலையில் இருந்தார்கள் என்று பொலிஸ் சந்தேகிக்கின்றது. இவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குகின்றார்கள்.

ஐப்பசி 29, 2010

ஜெர்மனியில் அரசியல் கலந்துரையாடல்கள்

தோழமையுடன் வணக்கங்கள். பத்மநாபா EPRLF கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் வட-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் கட்சியின் சர்வதேச பிராந்திய மாநாட்டிற்காக வருகைதந்திருந்தார். ஏனைய ஐரோப்பிய நாடுககளுக்கும் விஜயம் செய்து மக்களையும் தோழர்களையும் சந்தித்து வருகின்றார். ஜெர்மனியிலும் கட்சிப்பணிகளை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் ம கால அரசியல் மற்றும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்ங்கள் போன்ற விடங்களை கலந்துரையாடவுள்ளார். நீங்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றி ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு தோழமையுடன் அழைக்கின்றோம்.

கலந்துரையாடல் நடைபெறும் இடங்கள்.

காலம்: 30.10.2010

நேரம்: மாலை 17.30 மணி

இடம்: Landhaus Str-62

             70190 Stuttgart

              Germany.

தொடர்புகளுக்கு: 015204302710

 

காலம்: 01.11.2010

நேரம்: பி.பகல் 14.30

இடம்:  Wilheim Schuroeder Str-13

              47441 Moers

               Germany

தொடர்புகளுக்கு: 017686354418     

                          

பத்மநாபா EPRLF (ஜேர்மன் கிளை)

திருமாவளவன்  கூறுகின்றார்_

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் விமர்சித்ததில் குற்றம் இல்லை _

புலிகளை ஆதரித்து புலியையும் புலித் தலைவரையும் இல்லாமல் செய்து விட்ட திருமாவளவன் போன்றவர்கள் தற்போது 'கிளம்பிடான் ஐயா கிளம்பிட்டான்' என்று காஷ்மீரிகளை இல்லாமல் செய்ய முனைகின்றனர் போலும். அருந்ததி ராய், மாயா, திருமா போன்றவர்களுக்கு ஏகாதிபத்தியத்தின் பணப் பட்டுவாடா இருக்கும் வரை இவர்கள் வாலாட்டிக்கொண்டு, குரைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். இவர்கள் வெளியாருக்கு மட்டும் அல்ல தங்கள் வீட்டிற்கும் உதவாதவர்கள். காஷ்மீரியளுக்கு பிரச்சனை உண்டு. இதனை இந்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் கூடாக இந்தியாவின் 'நண்பர்கள்?' விடமாட்டார்கள். இதுவே கடந்த பல ஆண்டுகளாக நடைபெறுகின்றது. சண்டையை பாவித்து இந்திய இராணுவத்திலுள்ள சிலரின் பொது மக்களுக்கெதிரான அத்து மீறல்கள் மேலும் காஷ்மீரிகளை பாகிஸ்தானின் வலைக்குள் விழச் செய்கின்றது என்பது ஒரு பரிதாப நிலைதான். (மேலும்...)

ஐப்பசி 29, 2010

இலங்கையின் வடக்கு கிழக்குமுன்னாள் முதலமைச்சர் தோழர்வரதராஐப்பெருமாள் புலம்பெயர் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாட சுவிஸ்நாட்டிற்கு 31.10.2010 அன்று விஐயம்..............

சர்வதேசபிராந்திய மகாநாட்டில் கலந்து கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு விஐயம் மேற்கொண்டிருக்கும் தோழர் வரதராஐப்பெருமாள் பிரான்ஸ் நாட்டில் மகாநாட்டை நடாத்தி முன்னணிதோழர்களையும் மக்களையும் சந்தித்தபின் சுவிஸ் நாட்டிற்கு எங்கள் மக்களை காண வருகைதரவுள்ளார். வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சரை நீங்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் உங்கள் கருத்துக்கள் எதுவானாலும் அமைச்சரிடம் கூறி அவரிடமிருந்து தெளிவான பதில்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். புலம் பெயர் மக்களையும் தோழர்களையும் சந்தித்து உரையாட முன்னாள் முதலமைச்சர் மிகவும் ஆவலாகவுள்ளார் என்பதினை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!!!  (மேலும்....)

ஐப்பசி 29, 2010

கனடாவில் கொண்டாட்டம்….. கொண்டாட்டம்….

தமிழ் CMR, TVI குஸ்தி போடும் கொண்டாட்டம்

தலைவரின் சரணடைவுக்கு பின்பு மௌனித்திருந்து உண்டியல்காரர் இப்படியே எவ்வளவு காலத்திற்கு குலுக்காமல் இருக்கலாம் என்று விரக்தியின் விளிம்பிற்கு வந்து இம்முறை இலையுதிர் காலத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்று TVI உடன் குஸ்தி போடும் கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். இதோ அவர்களைப்பற்றி அவர்களே கூறுகின்றனர். (மேலும்....)

ஐப்பசி 29, 2010

மாணவரை போதைப் பழக்கத்துக்கு உட்படுத்த முற்படும் விஷமிகள்!

பாடசாலை முடி ந்து மாணவர்கள் வெளியே வரும் போது அவர்களு க்கு போதைப் பொருளை விற்பனை செய்வதற்கெ ன்றே பல கும்பல்கள் இயங்கி வருகின்றமை விசார ணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு மாணவருக்கு போதைப் பொருள் விற்பனை செய்து வந்த பலர் பொலிஸாரிடம் அகப்பட்டுக் கொண்டுள்ளனர். பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள் ளன. மாணவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்குவ தன் மூலம் போதைப் பொருள் வியாபாரத்தை வெற்றி கரமாக நடத்துவதற்கு பல கும்பல்கள் முயற்சித்து வந் தமை தெரியவந்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 29, 2010

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா எப்போதும் தயார்

பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புவதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். ஜப்பானில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முன்தினம் மாலை மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் போய்ச்சேர்ந்தார். அங்கு அந்த நாட்டின் பிரதமர் முகமது நஜிப் துன் அப்துல் ரசாக்கை அவர் சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேச்சு நடத்தினார்கள். இதன்போது பாகிஸ்தானின் விவகாரங்களும் பேசப்பட்டன. இந்தியா, பாகிஸ்தானிடையேயுள்ள முரண்பாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைகளே சிறந்த வழி. இவ்விடயத்தில் இந்தியா இதயசுத்தியுடன் உள்ளதென்றார் பிரதமர் மன்மோகன்சிங்.

ஐப்பசி 29, 2010

தேசிய பாதுகாப்புத் தினத்தை யாழ். நகரில் நடத்த ஏற்பாடு

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட டிசம்பர் 26 ஆம் திகதியை நினைவுகூரும் நோக்குடன் எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினம்’ அனுஷ்டிக்கப்படவுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் ஆலோசனைக் கமைய தேசிய பாதுகாப்பு தின விசேட நிகழ்வுகளை யாழ். நகரில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ள தாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதுமே இந்த நிகழ்வின் நோக்கமாகும். பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடனும் தனியார் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடனும் யாழ். நகரில் இந்த தேசிய நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

ஐப்பசி 29, 2010

கிளிநொச்சி மாவட்டத்தில்

மீள் குடியேற்றம் 99 வீதம் பூர்த்தி, 52 குடும்பங்களே மிகுதி

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 52 குடும்பங்களே மீள் குடியேற்றப்பட வுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். பளை பிரதேச செயலகப் பரிவில் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்றுவருவதாகக் குறிப்பிட்ட அவர்; இந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் எஞ்சியுள்ள மேற்படி குடும்பங்களும் மீள் குடியேற்றப்படுமெனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரை 99 வீத மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுவிட்டன. எஞ்சியுள்ள 59 குடும்பங்களிலும் 25 குடும்பங்கள் காணி கள் இல்லாதவர்கள். ஆகையால், அவர்க ளுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐப்பசி 29, 2010

கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளரின் இடமாற்றம் ரத்து

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜாவின் திடீர் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கற்றலை மேம்படுத்தும் நேக்கில் வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜாவின் உடனடி இடமாற்றத்தினை பரிசீலிக்க வேண்டுமெனக் கோரி வலயக் கல்வி அலுவலக ஊழியர் நலன்புரி சங்கத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று மனுவொன்றினை நேரில் கையளித்திருந்தனர். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி, மீள்கட்டுமானம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கடந்தகால அர்ப்பணிப்பு மிக்கதான அவரு டைய சேவையினையும் கருத்தில்கொண்டு மேற்படி வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்

ஐப்பசி 29, 2010

கந்தஹார் இராணுவ நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தில்

இது தொடர்பில் தலிபான்கள் தங்களது இணையத்தளத்தில் செய்தியை வெளியிட்டனர். கந்தஹார் மாகாண இராணுவ நடவடிக்கை எங்களைப் பொறுத்தவரை சிறிய விடயம். இதை எதிர்கொள்ளும் இராணுவ, ஆயுத பலம் எம்மிடம் உண்டு. விரைவில் இதை நிருபிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.2001ம் ஆண்டு தலிபான்களின் அரசாங்கத்தை பதவி கவிழ்க்கவும், அல்கைதா தலைவர் ஒஸாமா பின்லேடனைக் கைது செய்யவும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இதுவரைக்கும் ஆப்கானிஸ்தானை நேட்டோ படைகள் முழுமையாக மீட்கவில்லை. நான்கு, ஐந்து மாகாணங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (மேலும்....)

ஐப்பசி 29, 2010

எண் விளையாட்டு விளையாடுவோமா....?

111 111 111 என்ற எண்ணை 111 111 111 என்ற எண்ணால் பெருக்கினால் வேடிக்கையான விடை கிடைக்கும். அந்த விடை 1234 5678 98765 4321 என்பதாகும்.

ஐப்பசி 28, 2010

மீண்டும் அகதிகள் தமிழகம் வருகை : கியூ பிரிவு போலீசார் விசாரணை!

(சாகரன்)

இலங்கை இராணுவத்தினால் முள்ளக்கம்பிக்கு பினால் அடைக்கப்பட்ட அல்லது சரணடைந்த தீவிர புலி உறுப்பினர்கள் இலஞ்சம் கொடுத்து முகாமிலிருந்து தப்பி வெளியே கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் இவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் சிறப்பாக பொது மக்களிடம் இருந்து ஏற்பட்டிருப்பதால் தமிழ் நாட்டிற்கு தப்பி வருவதாக அறிய முடிகின்றது. இவர்கள் முகாங்களிலிருந்து பணம் கொடுத்து தப்பி வந்ததை இராணுவத்திக்கு அறிவிப்பதில் இவர்களால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தீவிரமாக இருந்ததாகவும் அறிய முடிகின்றது. மேற்கத்தைய நாடுகளுக்க தப்பிச் செல்வதற்கான இடைத்தங்கல் சரணாலயமாக தமிழகத்தை அல்லது நிரந்தரமாக தங்கிவிடும் இடமாக தமிழகத்தை முன்னாள் புலி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிய முடிகின்றது. (மேலும்....)

ஐப்பசி 28, 2010

'பிரபல' எழுத்தாளர் அருந்ததி ரோய் மீது தேசத்துரோக வழக்கு : டில்லி தகவல் 

பிரபல இந்திய எழுத்தாளரும் 'புக்கர்' பரிசு பெற்றவருமான அருந்ததி ரோயின் மீது தேசத்துரோகம் வழக்கு பதியப்படலாம் என டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட அவர், காஷ்மீரானது இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியல்லவெனவும் இந்திய அரசை விமர்சித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்தானது பாரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்திய ஆளும்கட்சி உறுப்பினர்கள் முதல் எதிர்க்கட்சியினர் வரை அனைவரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். (மேலும்....)

ஐப்பசி 28, 2010

முதலீட்டாளர் குழு இன்று வன்னி விஜயம்

வட மாகாணத்தில் பல கோடி ரூபா செலவில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள ஆறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதற்கட்டமாக இன்று வவுனியா விஜயம் செய்யவுள்ளனர். ஒவ்வொரு நிறுவனமும் பல கோடி ரூபா செலவில் தாம் புதிதாக நிர்மா ணிக்கவுள்ள தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அடையாளம் காணவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாணத்தில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்த பிரென்டிக்ஸ், ஹைத்ராமணி, மாஸ் ஹோல்டிங், டைமெக்ஸ் ஓவிட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், தனக்கும் இடையில் வவுனியாவில் இன்று விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 28, 2010

தவறான வழிகாட்டலில் பல்கலைக்கழக மாணவர்கள்

மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதோ தேசிய அரசியலில் உயர் நிலையை அடைவதோ சாத்தியமற்ற போதிலும் மக்கள் விடு தலை முன்னணித் தலைவர்கள் வன்முறைச் செயற் பாடுகளுக்கு மாணவர்களைத் தூண்டுகின்றார்கள். இதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணிக்கு நன் மைகள் இல்லாதது போலவே இழப்புகளும் இல்லை. ஆனால் மாணவர்கள் பாரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடும். அவர்களின் கல்விச் செயற்பாடு வெகுவாகப் பாதிப்படையும். தங்கள் பிள்ளைகள் தாமதமின்றிப் பட்டப்படிப்பை முடித்து வந்து தங்களுக்குப் பொரு ளாதார ரீதியாகக் கைகொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப் புடன் வாழும் ஏழைப் பெற்றோர் ஏமாற்றமடைவர். மாண வர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் பற்றி அவர் களை ஊக்குவிக்கும் அரசியல் தலைவர்களுக்குச் சிறி தளவேனும் கவலை இல்லை. மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பற்றிச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். (மேலும்....)

ஐப்பசி 28, 2010

மலேஷியா, இந்தியா வர்த்தக உறவில் இணைவு

மலேஷியாவும், இந்தியாவும் அடுத்த வருடம் ஜுலை மாதத்துக்குள் வர்த்தக உடன்படிக்கையை அமுலுக்கு கொண்டுவரவுள்ளன. ஏற்கனவே செய்யப்பட்ட இந்த வர்த்தக உடன்படிக்கை நீண்டகாலமாக செயலிழந்து காணப்பட்டது. இதை அடுத்த வருடம் ஜுலை மாதமளவில் செயலுருவாக்க இரு நாடுகளும் எண்ணியுள்ளன. 2015ம் ஆண்டளவில் 15 பில்லியன் டொலரளவில் வியாபாரத்தை விஸ்தரிக்கவும் ஏற்பாடாகியுள்ளது. இந்தியப் பிரதமரைச் சந்தித்த மலேஷியப் பிரதமர் நஜீப் ரஸாக் இது குறித்துப் பேசுகையில், இரு நாடுகளில் வர்த்தக உறவுகள் செயல்வடிவம் பெறவுள்ளதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதனூடாக இரு நாடுகளினதும் பல்வகையான உறவுகள் விருத்தியடைய வாய்ப்பேற்படும் அரசியல், கலாசார உறவுகளைப் பலப்படுத்தும் என்றார். மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மலேஷியா சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐப்பசி 28, 2010

அமெரிக்காவின் “ஆயுத பூஜை”!

செப்டம்பர் 15 அன்று அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் உள்ள நெவேடா மாகாணத்தில் அணுஆயுதத்தை வெடித்து அமெரிக்கா சோதனை நடத்தியுள்ளது. இந்தச் செய்தி பெரும்பாலான நாடுகளின் ஊடகங்களால் மறைக்கப்பட்டுவிட்டன. சொந்தக்காலில் அணுசக்தி தயாரிக்கும் முயற்சியில் இருக்கும் ஈரானுக்கு எதிராக பல அஸ்திரங்களை அமெரிக்கா ஏவிவிட்ட வண்ணம் உள்ளது. அணுகுண்டு சோதனை நடத்தியதால் வடகொரியா மீது ஏராளமான தடைகள். இதையெல்லாம் செய்த அமெரிக்கா, தனது அணு ஆயுதச்சோதனையை நடத்தவும் தவறவில்லை. முழுப்பரிமாணம் கொண்ட சோதனையாக அது இல்லாததாக இருந்தாலும், 1997 ஆம் ஆண்டுக்குப்பிறகு அது போன்று 24 முறை சோதனைகளை அமெரிக்கா நடத்தியுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 28, 2010

பம்பலப்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டது

பம்பலப்பிட்டி காலி வீதியில் செயற்பட்டு வந்த வீதி சோதனைச் சாவடி நேற்று முதல் முழுமையாக அகற்றப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவள கூறினார். இதன்படி, கொழும்பு நகரிலுள்ள பிரதான வீதி சோதனைச் சாவடிகளை படிப்படியாக களைவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார். கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதனை தொடர்ந்து வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக களைவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஐப்பசி 28, 2010

270 நாட்களில் 253 இலங்கையர்களின் சடலங்கள்!

கடந்த 270 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக சென்றவர்களுள் 253 பேரின் சடலங்கள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 253 சடலங்கள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் கடந்த 2009ம் ஆண்டில் 365 நாட்களில் 333 இலங்கையர்களின் சடலங்கள் இலங்கைக்கு எடுத்து வரைப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே அதிக அளவில் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இயற்கை மரணம், கொலைகள், விபத்துக்கள், தற்கொலை பணியாளர்களினால் தாக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட காரணங்களினால் அவர்கள் உயிரிழக்கின்றனர்.

ஐப்பசி 28, 2010

ஈரானிடம் பணம் வாங்கினேன் ஆப்கான் அதிபர் ஒப்புதல்

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் அல் கர்சாய், அமெரிக்காவிடம் நட்பு கொண்டவர். ஆனால், அவர் அமெரிக்காவின் எதிரியான ஈரானியிடம் தனது உதவியாளர் உமர் தவுத்சை மூலம் பை நிறைய பணம் வாங்கியதாக தகவல் வெளியானது. இதுபற்றி பேட்டி அளித்த ஹமீத் அல் கர்சாய், பணம் வாங்கியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். அவர் மேலும் கூறுகையில், ‘எனது அதிபர் அலுவலகத்துக்கு எத்தனையோ நாடுகள் நிதி உதவி செய்து வருகின்றன. அதுபோல், ஈரானும் ரூ. 5 கோடி வரை நிதியுதவி செய்துள்ளது. இதில் ஒளிவுமறைவு கிடையாது’ என்றார். இதற்கிடையே, இந்த நிதிஉதவி பற்றி கேள்வி எழுப்ப மாட்டோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஐப்பசி 28, 2010

யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் நேற்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளனர்!

யாழ் நகரப் பகுதிகளிலும் யாழ் மாவட்டப் பகுதிகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 20க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் நேற்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளனர். வெள்ளை வானில் வந்தவர்களாலேயே இவர்கள் கடவுச்சீட்டு சகிதம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிந்தியாவிலிருந்து சென்றுள்ள இந்த புடவை வியாபாரிகள் துவிச்சக்கர வண்டிகள் சகிதம் யாழ் நகரத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (மேலும்....)

ஐப்பசி 28, 2010

ஏழு மாதம் கடலில் தத்தளித்தவர் நாடுதிரும்பினார்


ஏழு மாத காலமாக கடலில் தத்தளித்து உயிர் தப்பிய பேருவளை மீனவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந் தடைந்தார். கடந்த மார்ச் 19ம் திகதி நான்கு பேருடன் ஆழ்கடல் சென்ற டி.மகேஷ் பத்ம குமார மட்டுமே உயிருடன் மாலைதீவு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டார். நேற்று இலங்கை வந்த அவர் மாலைதீவு அரசுக்கு நன்றி களையும் தெரிவித்துக் கொண்டார். மாலைதீவில் துனுதுவா தீவில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்தார். இலங்கை விமான நிலை யத்தில் காலடி எடுத்து வைத் தமை தமக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி யதாகவும் இதற்காக உழைத்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஐப்பசி 28, 2010

பெனாசீர்பூட்டோவை தலிபான்களே கொலை செய்தனர் - புலனாய்வுக் குழு

நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். அதே ஆண்டு டிசம்பர் 27ம் திகதி அவர் ராவல்பிண்டி நகரில் திறந்தவேனில் நின்றபடி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவரை ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அதைத் தொடர்ந்து மனித வெடிகுண்டு தாக்குதலும் நடந்தது. இதில் பெனாசீர் பலியானார். மேலும் 24 பேரும் உயிரிழந்தனர். கொலை தொடர்பாக, தலிபான் அமைப்பை சேர்ந்த ரபாகத், உசைன், ஷெர் சமான், அத்சாஸ் ஷா, அப்துல் ரஷித் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கொலையில் அவர்களின் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 28, 2010

ஈராக் முன்னாள் வெளிநாட்டமைச்சர் தாரிக் அஸிஸை தூக்கிலிடுமாறு உத்தரவு

ஈராக் முன்னாள் வெளிநாட்டமைச்சர் தாரிக் அஸிஸ் தூக்கிலிடப்படவுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஈராக் நீதிமன்றம் இத்தீர்ப்பையளித்தது. இதற்கு எதிராக மேன் முறையீடு செய்ய தாரிக் அஸிஸுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவரைத் தூக்கிலிடவேண்டாமென வத்திக்கான் கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹ¤ஸைன் காலத்தில் தாரிக் அர்ஸ் வெளிநாட்டமைச்சராகக் கடமையாற்றினார். சதாம் ஹுஸைனின் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த ஒரேயொரு கிறிஸ்தவர் இவராவார். அமெரிக்காவின் படையெடுப்பிற்குப் பின் கைதான சதாம் ஹுஸைன் அரசாங்க அதிகாரிகளில் முன்னாள் வெளிநாட்டமைச்சர் தாரிக் அஸிஸம் ஒருவர். நீண்டகாலமாக அமெரிக்காவின் விசாரணையிலிருந்த இவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஈராக் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டார். ஈராக் நீதிமன்றமே இவரைத் தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது. வத்திக்கான் திருச்சபை இதை நிறைவேற்ற வேண்டாமெனக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐப்பசி 28, 2010

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் ' கோப்' முன் சாட்சியம் -  டியூ. குணசேகர

நட்டத்தில் இயங்கும் அல்லது இலாபமீட்டத் தவறிய அரச நிறுவனங்களின் தலைவர்கள் ' கோப்' குழுவின் (பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு) முன் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர் என மேற்படி குழுவின் தலைவரும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். வர்த்தக ரீதியில் அமைக்கப்பட்ட சில நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியதன் காரணமாக, அவற்றின் நட்டத்தை திறைசேரி நிறைவு செய்துள்ளது. திறைசேரி என்பது பொதுச் சொத்து. எனவே பொதுச் சொத்துக்களை விரயம் செய்வது பொது மக்களுக்கு இழைக்கும் தீங்காகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். எனவே அவ்வாறான நிறுவனங்களின் தலைவர்கள் அல்லது முன்னாள் தலைவர்கள் தெரிவுக்குழு முன் சாட்சியம் அளிக்க வேண்டிவரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐப்பசி 28, 2010

‘இவரைப் போல மோசம் வேறு யாரும் இல்லை’ -  சர்கோஸி பற்றி பிரான்ஸ் மக்கள் கருத்து

கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த ஜனாதிபதிகளிலேயே சர்கோ சியைப்போல மக்கள் மத்தி யில் பெரும் வெறுப்பை யாரும் சம்பாதிக்கவில்லை என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பிவிஏ ஆரஞ்சு எல் எக்ஸ் பிரஸ் பிரான்ஸ் மக்கள் மத்தி யில் கருத்துக் கணிப்பை நடத் தியது. அதில் சர்கோசிக்கு எதிராக 71 விழுக்காடு மக்கள் அதிருப்தியைத் தெரிவித்துள் ளார்கள். இந்த அளவுக்கு மக் களிடம் எதிர்ப்பை கடந்த 50 ஆண்டுகளில் யாருமே பெற்ற தில்லை. இதற்கு முன்பாக ஒருவர் 68 விழுக்காடு மக்க ளின் எதிர்ப்பை சம்பாதித்தி ருந்தார். அவர் வேறு யாரு மல்ல, இதே சர்கோசிதான். 2008 ஆம் ஆண்டில் நடந்த கருத்துக் கணிப்பில்தான் அவ ருக்கு இவ்வளவு எதிர்ப்பு காணப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 27, 2010

பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி!

முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, புலிகள் தலைவர் பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், நளினி, சந்தானம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. நளினி, முருகன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். சிவராசன் உட்பட 12 பேர் மரணமடைந்தனர்; பிரபாகரன் உட்பட நான்கு பேர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கை ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் நடந்த சண்டையில்,புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாகவும், அவரது உடல் நந்திகடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. இந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.ராஜிவ் கொலை வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனும், பொட்டு அம்மானும் மரணமடைந்துவிட்டனர்.  அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடப்பட்டுள்ளது. (மேலும்...)

ஐப்பசி 27, 2010

சந்திரிகா கொலைமுயற்சி குற்றவாளிக்கு சிறை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயற்சித்த பிரதான குற்றவாளிக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 28 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு கொண்டமையை ஏற்றுக்கொண்ட வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த சத்திவேல் இளங்கேஸ்வரனுக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேல் நீதிமன்ற நீதிபதி நீதிபதி டப்ளியூ.ரி.எம்.பி.டி. வராவௌ, விதித்துள்ளார். சம்பவத்தின் போது தற்கொலை குண்டு வெடிப்பினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு மரணித்திருந்தால் ஜனாதிபதித் தேர்தல் இடைநிறுத்தப்பட்டிருக்கும். இதனால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு சுமார் ஆறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என நீதிபதி தமது தீர்ப்பின் போது குறிப்பிட்டார். அத்துடன், கொலைமுயற்சியின் போது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியிருக்க கூடிய நிலையிருந்த போதும் குண்டை வெடிக்கவைத்து பல உயிர்களை காவுகொண்டமை தொடர்பில் குற்றவாளிக்கு இந்த தண்டனையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

ஐப்பசி 27, 2010

அரசாங்கத்திற்கு தென்பகுதி மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ. அதற்காகவே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்

வன்னியில் இருக்கும் மாணவர்களைப் பெற்றோரை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கல்விக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை நமது பிரதேசத்து மக்கள் கொடுப்பதில்லை. நான் அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்றோ, வேலைவாய்ப்பு பெற்றுத் தருவேன் என்றோ, இடமாற்றம் பெற்றுத் தருவேனென்றோ கூறி தேர்தலில் போட்டியிடவுமில்லை. வெற்றி பெறவுமில்லை. அரசாங்கத்திற்கு தென்பகுதி மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ. அதற்காகவே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள். இதனை இப்போது ஒரு தேர்தலை நடத்தினாலும் நாங்கள் எங்களுடைய பலத்தை நிரூபித்துக்காட்டத் தயார் என்றார். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

நாடெங்கும் போதைவஸ்து வேட்டை

இரு வாரங்களில் 7098 பேர் கைது-7927 கிலோ போதைப்பொருள் மீட்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக நடத்தப்பட்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 7098 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார். கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடத்தப்பட்ட இந்த சுற்றி வளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 7050 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளதுடன் 7927 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை மீட்டெடுத்துள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.(மேலும்...)

ஐப்பசி 27, 2010

 

மத்தல விமான நிலைய பணிகள் துரிதம்

2012 இல் முதல் விமானம் தரையிறக்கம், 5000 கொள்கலன்களுக்கு களஞ்சிய வசதி

மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கான 3 1/2 கிலோ மீட்டர் நீளமான ஓடு பாதைக்கான நிலத்தை சுத்திகரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு 40 மீட்டர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரம், தீயணைப்புப் படை மற்றும் பாதுகாப்பு அலுவலகம் என்பவற்றை நிர்மாணிக்கும் பணிகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக துறைமுகங்கள் விமான சேவை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார். 2012 ஆம் ஆண்டு பிற்பகுதியில் முதலாவது விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் எனவும் அவர் கூறினார். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

20 லட்சம் சுற்றுலாப்பயணிகள்!  தொடர்ந்து சாதனை படைக்கிறது கியூபா

அமெரிக்காவின் பல்வேறு தடைகளை மீறி கியூபாவைச் சுற்றிப் பார்ப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கை நடப்பாண்டிலும் 20 லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஏழாவது ஆண்டாகத் தொடர்ந்து 20 லட்சம் சுற்றுலாப் பய ணிகளை கியூபா ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டைவிட 12 நாட் களுக்கு முன்னதாக 20 லட்சமாவது பயணியை கியூபா வர வேற்றுள்ளது. கியூபாவுக்கு அதிகமான அளவில் சுற்றுலாப் பய ணிகள் கனடாவிலிருந்தே வருகிறார்கள். அதற்கடுத்த இடங் களில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், மெக் சிகோ, அர்ஜெண்டினா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. (மேலும்...)

ஐப்பசி 27, 2010

இலங்கையின் அமைதியான சூழலை காண விஜயம் செய்யுங்கள்!

இந்திய அரசானது பல சந் தர்ப்பங்களில் இலங்கையில் வாழும் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளி மலையக மக்களை இலங்கைத் தமிழர்க ளுடன் இணைத்துப் பார்த்து இரு சாராரையும் ஒன்றாகக் கணிக்க முற்பட்டுள்ளது. இந்தத் தவறான அணுகுமுறையைப் பற்றி பலமுறை இந்திய அரசிடம் நாம் சுட்டிக் காட்டி யுள்ளோம். இலங்கைத் தமிழர்க ளின் உரிமைப் போராட்டங்களை பெரிதும் மதிக்கின்ற அதே வேளை எமது தனித்துவத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகின்றோம். இலங்கை அரசு எமது தனி அடையாளத்தை ஏற்றுள்ளது. இலங்கை வாழ் இந்தியவம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்கு உழைத்த பல இந்திய தலைவர்களை இவ்விடத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். கே. ராஜலிங்கம், செள. தொண்டமான், எம். ஏ. அர்ஸ் என்னுடைய தந்தை வி. பி. கணேசன், வெள்ளையன், சி. வி. வேலுப்பிள்ளை, எஸ். நடேசன், பெ. சந்திரசேகரன், இரா சிவலிங்கம் ஆகியோர் இவ்விடத்தில் குறிப் பிடத்தக்கவர்கள். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

 

உருக்கமான ஒரு வேண்டுகோள்!

சவூதியைப் பொறுத்த வரை வேறு நாட்டவர் வழக்கை எதிர்கொள்வதில் அதிக சிக்கல் கள் உள்ளன. மொழியும் பிரதான பிரச்சினையாகிறது. இலங்கை போன்ற நாடுகளைப் பொறுத்தவரை குற்றமொன்றை நிரூபிப்பதா யின் ருசுப்படுத்தப்பட்ட சான்றுகள் அதிகம் தேவைப்படுகின்றன. இவையெல்லாம் ரிஷானாவின் இன்றைய நெருக்கடி நிலையில் அப் பாற்பட்ட விடயங்களாகின்றன. சவூதியின் குற்றவியல் சட்டத் தைப் பொறுத்தவரை அப்பெண்ணானவள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள குற்றவாளியாகிறார். இவர் பொதுமன்னிப்புப் பெற்று விடுதலையாகி வர வேண்டுமென்பதே மனிதாபிமானம் கொண்டோரின் உருக்கமான வேண்டுகோளாகும். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

Cash சொல் எவ்வாறு உருவானது

தங்கம், வெள்ளி இவற்றின் எடையைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல் கர்ஷா. இதிலிருந்தே தமிழில் காசு என்ற சொல் தோன்றியது. காசு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து காஷ் என்ற ஆங்கிலச் சொல் வந்தது.

ஐப்பசி 27, 2010

யுரேனியம் செறிவூட்டலை ஈரான் ஆரம்பித்தது

ஈரான் யுரேனியம் செறிவூட்டும் வேலைகளை நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து ரஷ்யாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரம் மெகாவோல்ட் அணு உலைகளில் இந்த யுரேனியம் செறி வூட்டப்பட்டது. மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே இந்த அணு உலை ரஷ்யாவால் நிர்மாணித்துக் கொடுக் கப்பட்டது.  உயர் ரக பெற்றோலை 20 வீதம் செறிவூட்டினால் மின்சாரமும் 80 வீதத்துக்கு மேல் செறிவூட்டினால் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான மூலப் பொருளையும் பெற முடியும். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

திருகோணமலை மாவட்டத்தில்

கிண்ணியா முஸ்லீம்களின் புனித நகரமாகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் பாதுகாப்பு படையின ரின் முகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும்.  திருகோணமலை மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசாரத்தினூடாக ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்து புனித நகரமாக உருவாக்குவதற்கு மத விவகார அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகின்றார். (மேலும்...)

ஐப்பசி 27, 2010

கண்ணிவெடி அகற்றும் பணி யாழ். குடாவில் துரிதம்

யாழ். குடாநாட்டிற்குள் தற்போது பொதுமக்களது பாவனைக்காக விடப்பட்டி ருக்கும் பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்றுக் காலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரது யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது மிதிவெடிகளை அகற்றுவதில் நிலவுகின்ற தடைகள், பிரச்சினைகள் குறித்தும் ஏனைய பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் பிரகாரம் யாழ். வசந்தபுரம், கடற்கரை வீதி, துண்டி போன்ற பகுதிகளில் மிதி வெடிகளை அகற்றும் நடவடிககைகளை உடன் ஆரம்பிப்பது எனத் திர்மானிக்கப்பட்டது.

ஐப்பசி 27, 2010

கிளிநொச்சியில் தே. வீ. அ. சபை அலுவலகம் நவம். 1 இல் திறப்பு

கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகக் கட்டடம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடத்தை நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைப்பார். அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு நிர்மாணப் பணிகள் பற்றிய அபிவிருத்திக் கூட்டமும் புதிய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பொன் நகரில் ஐம்பது பயனாளிகளுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளது.

ஐப்பசி 27, 2010

பொலிவிய ஜனாதிபதி ஈரான் விஜயம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொலிவியாவுக்கான வர்த்தக உறவு களை 287 மில்லியன் டொலராக அஹ்மெதி நெஜாத் விஸ்தரித்தார். இதை அடிப்படையாகக் கொண்டு நிலக்கரி வெடிமருந்துகள் கைத் தொழில் பொருட்களை ஈரான் பொலிவியாவுக்கு ஏற்றுமதி செய்ய வுள்ளது. உணவு உற்பத்தி கைத்தொழில் சாதனங்கள் மற்றும் சிமெந்து உற்பத்திகளை ஆரம்பிக்கும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடவும் இரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன. இரண்டு வருடங்களுக்குள் பொலி விய ஜனாதிபதி ஈரானுக்கு மேற் கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும். வெனிசுலாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் பொலிவியா தனது எரிபொருள் கைத்தொழில் தேவைகளுக்காக ஈரானுடனும் உறவாகவுள்ளது.(மேலும்...)

ஐப்பசி 27, 2010

இந்தோனேஷியாவில் சுனாமிக்கு பலி 23; 160 பேர் காணவில்லை

இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து எழுந்த சுனாமியில், 23 பேர் பலியானதாகவும், 160க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமத்ரா தீவின் மேற்கு கடற்பகுதிக்கு அடியில் திங்கட்கிழமை நள்ளிரவு கடுமையான பூகம்பகம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி அலைகள் எழுந்தன. மெந்தாவய் தீவுப் பகுதியில் இந்த அலைகள் 10 அடி நீளத்துக்கு எழுந்ததாக, இந்தோனேஷிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இந்த சுனாமியால் 10 கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பேரிடரில் 23 பேர் பலியானதாகவும், 160க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஐப்பசி 27, 2010

பிரிட்டனில் முன்னேற்றம்?

சிறிய அளவு முன்னேற்றம் இருந்தாலும் துள்ளிக் குதித்துக் கொண்டாடும் நிலைக்கு பிரிட்டன் அரசு வந்துவிட்டது. நடப்பாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதாரம் 0.8 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று அதிகாரபூர்வமான புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. துள்ளிக்குதிப்பதற்குக் காரணம் என்னவென்றால், 0.4 விழுக்காடுதான் வளர்ச்சி இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தார்கள். தங்கள் கணிப்பு பொய்யாகிவிட்டது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இது முன்கூட்டியே வெளியிடப்பட்ட மாதிரி ஆய்வின் முடிவுகள்தான். வளர்ச்சி விகிதத்தின் முழு ஆய்வில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் அவர்கள்.

ஐப்பசி 26, 2010

பிரான்சில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில்-சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்!

பிரான்சில்(பத்மநாபா-EPRLF)ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சர்வதேசக்கிளைகளின் பிராந்திய. மாநாடு இம்மாநாட்டில் புலம்பெயர் தேசங்களில் கட்சிப்பணிகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்கள் மற்றும் கட்சியின் தலைமைக்குழு தோழர்களும் பங்குபற்றினர்கள். இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக இம்மாநாட்டில் சில காத்திரமான முடிவுகள் எடுக்கபட்டுள்ளது. (மேலும்...)

 

ஐப்பசி 26, 2010

ரொறன்ரோ தேர்தல் முடிவுகள்! ரொப் போர்ட் மேயராகத் தெரிவு!

மார்க்கம் நகரசபை தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி!!

(சாகரன்)

ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல்கள் கனடிய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பிரகாரம் ரொப் போட் ரொறன்ரோவின் மேயராக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார்.  இதேவேளை இதே தேர்தலில் இப் பிரதேசத்திற்கான கல்விச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட செல்வி. யுவனிதா நாதன் 8,252 வாக்குக்களைப் பெற்றுத் தெரிவானார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 1,968 வாக்குகளைப் பெற்றார். (மேலும்...)

ஐப்பசி 26, 2010

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் பிரபாகரனின் பெயர் நீக்கம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் பிரதான குற்றவாளியென குற்றம் சுமத்தப்பட்டிருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக ஒப்புக்கொண்ட இந்தியா, அவரின் பெயரை அப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் சென்னையில் அவர் மீது தொடரப்பட்டு வந்த வழக்கு நடவடிக்கைகளையும் கைவிட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் புலிகளின் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ் வழக்கின் பிரதான குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டம்மன் என அழைக்கப்படும் சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோரின் பெயர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 26, 2010

உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றிபெற வேண்டும் - தோழர் மோகன்

கடந்த 23 வருடங்களிலும் தமிழ் அரசியல் அரங்கில் நிலவிய புலிகளின் பாசிசம் அனைத்தையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்திவிட்டது. இன்று 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர், யுவதிகள் பெரும்பாலானவர்கள் எமது கட்சியின் அரசியல் இலட்சியம், நடவடிக்கைகள் குறித்து அறியாதவர்களாக உள்ளனர். தமிழ் அரசியல் சூழலில் நிலவிய அராஜகம், ஜனநாயக விரோதம், சுத்துமாத்துக்கள், இதுவரை கால இழப்புக்கள் பொதுவாகவே அரசியல் மீதான நாட்டத்தை தடுத்துவிட்டிருக்கின்றது. கடந்த 30 வருடங்களிலும் பல்வேறு இழப்புக்களை சந்தித்த மக்கள் இயல்பாகவே மானியங்களையும், இலவச உதவிகளையும் எதிர்பார்க்கின்றனர். அரசாங்கத்திடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் மாத்திரமல்ல அரசியல் கட்சிகளையும் அதே கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றனர். மக்களின் இந்த இழி நிலையை அரசியல்வாதிகளும் வாக்கு சேகரிப்பதற்கான மூலதனமாக்கும் மோசடியும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

சமகால யதார்த்தமும் பதின்மூன்றாவது திருத்தமும்

நியாயமான அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்புத் திருத்தத்துக்குத் தேவைப்படும் பாராளுமன்றப் பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ள போதிலும், சர்வசன வாக்கெடுப்பில் அத் திருத்தத்தை அங்கீகரிப்பதற்குத் தேவையான மக்களாதரவு இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையில், உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வாகப் பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமே உள்ளது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலுள்ள குறை பாடுகளையும் அதன் சில சரத்துகள் நடைமுறைப்படுத்தப் படாதிருப்பதையும் சுட்டிக் காட்டித் தீர்வுச் செயற் பாட்டிலிருந்து ஒதுங்கியிருப்பது இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எவ்விதத்திலும் பலனளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் நடைமுறைத் துன்பங்கள் தீர்வதற்கும் அது வழிவகுக்காது. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

வடபகுதியில் அரசாங்கத்தின் ஆதரவில் இடம்பெரும் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு - சித்தார்த்தன்

தனிப்பட்ட ரீதியில் யாரும் வடக்கில் வசிக்கலாம். வர்த்தகங்களை நடத்தலாம். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. ஆனால் அரச ஆதரவில் குடியேற்றங்கள் இடம்பெறுவதையே எதிர்க்கின்றோம். தற்போது இராணுவத்தினர் காட்டுப்பகுதியில் முகாம்களை அமைக்கின்றனர். அது பிரச்சினையில்லை. ஆனால் பண்டிவிரிச்சானில் எதற்கு பௌத்த விகாரை? இவ்வாறு சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயங்கள் இடம்பெறுகின்றன. அதாவது வடக்கின் மக்கள் தொகையியலை மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது என்று புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இலங்கையில் தனிநாடு அமைவதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது. இலங்கை அரசாங்கம் விரும்பினாலும் இந்தியா அதற்கு ஒருபோதும் இணங்காது. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

மாவீரர் தினம் நெருங்கி வரும் நிலையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கே.பியின் பேச்சு!

இலங்கை இராணுவத்துடன் ஆன யுத்தத்தில் உயிர் இழந்த மாவீரர்களின் பிள்ளைகள் மீது நாங்கள் எல்லோரும் கவனம் எடுக்க வேண்டும், ஏனெனில் அம்மாவீரர்கள் எமது தாய் மண்ணுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள் என்று புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தராக இருந்த கே.பி கிளிநொச்சியில் தெரிவித்து உள்ளார். அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்று கூறப்படும் கே.பி கடந்த வாரம் அம்மாவட்டத்துக்கு சென்றிருந்தார். அவர் கண்ணகை குடியிருப்பு என்கிற முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கப் போராளிகளின் பிள்ளைகளை நேரில் சந்தித்தார். அப்பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

ஐப்பசி 26, 2010

எந்திரன் சிக்கலில்

Endhiran is a film produced by Sun Oics, whose managing director is Kalanidhi Maran...This film was directed by Shankar..Rajinikanth and Aisvarya Roy are in the lead..Simultaneously made in Telugu and Hindi...as Robot..The story of this fil was published in a magazine in the year 1996... The story writer is Amudha Tamilnadan also known as AAroor Tamilnadan...Shankar, the Director of the film Shankar claims the story is His... Today the story writer preferred a complaint before the Commissioner of Police, Chennai giving all the publish material and prayed to take action against the director of the film Shankar and the Producer Kalanidhi Maran for violating copy right...

ஐப்பசி 26, 2010

பாடசாலைக்கு சென்றால் பரிசு

மேற்கு வங்க மாநிலம், மஹானந்த் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் நாள்தோறும் தவறாமல் பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் பரிசளித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம், ஹுப்ளி மாவட்டத்தில் உள்ள மஹானந்த் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரிய ராக இருப்பவர் ஸ்வப்பன் நியோகி. இந்தப் பாடசாலையில் இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. அதன் அருகிலேயே கட்டப்பட்டு வந்த புதிய வகுப்பறை கட்டடங்கள், போதிய நிதி இல்லாததால் பாதியி லேயே நிற்கின்றன. தலைமை ஆசிரி யர் தவிர, இந்த பள்ளிக்கூடத்திற்கு 3 ஆசிரியர்கள் மட்டுமே உண்டு. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும், படிக்காத விவசாயிகள்.(மேலும்....)

ஐப்பசி 26, 2010

கண்ணீர் அஞ்சலி

போருக்குப் பின்னரான சூழலில் நிரந்தர சமாதானத்தையும் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வையும் முக்கிய விடயங்களாக அடையாளம் கண்டவர்களுள் கிருபானந்தனும் ஒருவர். வெறும் இனவாத, பிரதேசவாத, மதவாத குறுகிய அரசியல்தான் எமது மண்ணைச் சிதைத்தது என்பதால் சகல இனங்களுக்குமிடையிலான உறவு என்பது அவருக்கு முக்கியமானதாக இருந்தது. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒன்றுதான் அரசியல் வியாபாரிகளை அகற்றி நிரந்தர சமாதானத்தைத் தரும் என்று நம்பியவர் தோழர் கிருபா. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

கனடிய தேர்தலும் ஈழத்தமிழரும்... மக்கள் ஆணையை பொறுத்திருந்து பார்ப்போம்!  - அலெக்ஸ் இரவி

கனடாவில் மூன்று நிலைகளில் அரச அதிகாரம் செயற்பட்டு வருகிறது. ஒன்று தலைநகர் ஒட்டாவாவை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மத்திய அரசாங்கமாகும். இரண்டாவது வகை, மாகாணங்களை மையப்படுத்தி நடைபெறுகின்ற மாகாண அரசுகளாகும். மூன்றாவது நிலையில் செயற்படுபவை மாநகர, நகர, கிராம மட்ட நிர்வாகங்களாகும். இவற்றில் கனடாவின் மிக முக்கியமான மாகாணமாகத் திகழும் ஒன்ராறியோவின் தநைகரான ரொறன்றோ நகரின் மாநகர சபைக்குத்தான் ஒக்ரோபர் 25 இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

முல்லைத்தீவு மீள்குடியேற்றப் பணிகள் டிசம்பர் 31க்குள் பூர்த்தி

ஒட்டுசுட்டானில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் புதுக்குடியிருப்பில் 14 கிராமசேவகர் பிரிவுகளிலும் கரைதுரைப்பற்றில் 16 கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்துபுரம், திருமுருகண்டி மேற்கு, பனிச்சங்குளம், மாங்குளம், ஒலுமடு மற்றும் அம்பகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. வவுனியா மற்றும் யாழ். ஆகிய பிரதேசங்களில் தமது உற வினர் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றனர். (மேலும்....)

ஐப்பசி 26, 2010

அமெரிக்கா சொல்கின்றது

இராணுவ அழுத்தங்களை எதிர்கொள்ள இயலாத தலிபான்கள் பேச்சுவார்த்தையில் நாட்டம்

தலிபான் தலைவர்களில் பேச்சுவார்த்தை களை விரும்புவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் இதற்கான சமிக்ஞைகளை அண்மையில் தலிபான்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஹோல் புரூக் தெரிவித்தார்.  ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் அல் கார்சாயி அண் மையில் தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். இதற்கென விசேட சமாதானக் குழுவொன் றையும் அமைத்து முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரை இக்குழுவிற்கு தலைவராகவும் ஆக்கியுள்ளமை விசேட அம்சமாகும். ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் களின் தலைவரான முல்லா ஒமர் பாகிஸ்தானில் இயங்கிவரும் அல்ஹகானி தலைமையிலான தலிபான்கள் மற்றும் லக்ஷர் இ இஸ்லாம் லக்ஷர் இ தொய்யா அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்த ஹோல் புரூக் அல் கைதாவுடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்தார். (மேலும்....)

ஐப்பசி 26, 2010

வீட்டுச் சூழலை அசுத்தமாக வைத்திருந்தவருக்கு 4 மாத கடூழிய சிறை

டெங்கு நுளம்பு பரவும் வகையில் வீட்டு சுற்றுச் சூழலை அசுத்தமாக வைத்திருந்த வீட்டுரிமையாளர் ஒருவருக்கு கண்டி மஜிஸ்திரேட்டினால் 4 மாத கடூழியச் சிறைத் தண்டனையும் 1500/= ரூபா தண்டப்பணமும் செலுத்தும் படியும் நேற்று (26) தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மேற்படி தீர்ப்பை மீள் பரிசீலனைக்காக கண்டி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது மாவட்ட நீதவான் பீர்த்தி பத்மன் ஏலவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பையே உறுதி செய்யப்பட்டு மீள் பரிசீலனை நிராகரிக்கப்பட்டுள்ளது. மெனிக்கின்ன பிரதேசத்தில் அமைந் துள்ள வீடொன்றில் பாவித்த பழைய டயரொன்றுள் நுளம்பு பரவும் வகையில் அது அமைந்துள்ளமை குறித்து மெனிக் கின்ன பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.

ஐப்பசி 26, 2010

சன் சீ கப்பலில் கனடா சென்றவர்களில் 30 பேர் விடுதலை

எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவை சென்றடைந்தவர்களில் 30 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எம். வி. சன் சீ கப்பலின் மூலம் கடந்த ஒகஸ்ட் மாதம் 13ஆம் திகதி 492 இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று கனடாவை அண்மித்திருந்தது. அரசியல் புகலிடம் கோரி கனடாவை சென்றடைந்துள்ள இவர்களில் விடுதலை செய்யப்பட்டுள்ள 30 பேருக்கு அகதிகளுக்கான அந்தஸ்து கோருவதற்கான முழு உரிமை உள்ளதாக கனேடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

மக்களின் கருத்தை மதிக்காது

ஓய்வூதிய வயதெல்லை 62 ஆக உயர்வு புதிய சட்டம் விரைவில் அமுலாகும்

நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பலத்த கொந்தளிப்பு காணப்படுகிறது. இது தவிர, வருகிற வியாழன் மற்றும் நவம்பர் 6 ஆகிய திகதிகளில் இரண்டு வேலை நிறுத்த போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்ற மேல் சபை ஒப்புதல் அளித்தது. சட்டத்துக்கு ஆதரவாக 177 பேரும் எதிராக 153 பேரும் வாக்களித்தனர். முன்னதாக சட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொண்டு வந்த சுமார் 1250 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அடுத்த வாரம் இறுதி ஒப்புதல் பெறப்பட்ட பின், அந்த சட்டம் அமுலுக்கு வரும். ஆனால், இந்த சட்டத்தை கைவிடுமாறு சர்கோஸியை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. (மேலும்....)

ஐப்பசி 26, 2010

மஞ்சள் காமாலை வைரசை  துடைத்தெறிந்தது கியூபா

கியூபாவின் சுகாதாரத்துறை படைத்து வரும் சாதனை களில் அடுத்த மைல்கல்லாக மஞ்சள்காமாலை நோயின் உச்சகட்டமாகக் கருதப்படும் ஹெபாடிடிஸ் ‘பி’ வைரஸ் தாக்குதலை துடைத்தெறிந்த நிகழ்வு அமைந்துள்ளது. தொடர்ந்து தடுப்பு மருந்துகளை கொடுத்து வந்தாலும் பல நாடுகளில் பி வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்த முடி யாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் கியூபாவின் தேசிய மரபணு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப மையம் தயா ரித்து வழங்கிய தடுப்பு மருந்துகள் நல்ல பலனைத் தந்துள் ளன. இந்த தடுப்பு மருந்துகளைக் கொடுத்ததால் கியூபாவில் இந்த வைரஸ் தாக்குதல் இல்லவே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் புதிதாக எந்தவொரு கியூபக் குடிமகனையும் இந்த வைரஸ் தாக்கவில்லை. இதே மருந்தை வெளிநாடுகளுக்கு கியூபா ஏற்றுமதி செய்துள் ளது. கிட்டத்தட்ட 12 கோடி மக்களுக்குத் தேவையான மருந்து கியூபாவிலிருந்து சென்றுள்ளது.  சர்க்கரை நோயால் கால்களில் ஏற்படும் புண்ணைக் குணமாக்கும் ஒரே மருந்தையும் தங்கள் மையம்தான் கண்டு பிடித்தது என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் மையத் தின் இயக்குநர் டாக்டர் லூயிஸ் ஹெர்ரிரா.

ஐப்பசி 26, 2010

வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்

இராக் போர் தொடர்பான 4 லட்சம் ஆவணங் களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் அறி வித்த உடனேயே அமெரிக்காவும், அதன் அக்கி ரமங்களுக்கு துணை நின்ற நாடுகளும் பதறின. இந்தத் தகவல்கள் வெளியானதால் அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைப்பது குறித்து ஆராய பென்டகன் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த தகவல்கள் உண்மையல்ல என்று அமெரிக்காவினால் மறுக்க முடியவில்லை. மாறாக, இந்த ஆவணங் களால் இராக் மக்களுக்கும் அந்நாட்டில் உள்ள பன்னாட்டு வீரர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்று கூறுகிறது அமெரிக்கா. இராக்கிற்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்கா கூறிய காரணங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை அந்த நாடே ஒத்துக்கொண்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 25, 2010

பாரிஸ் மாநாடு ஓர் திருப்புமுனையாக அமையட்டும்

தமிழர்களின் பிரச்சினை பயங்கரவாததத்திற்கு முற்பட்டது 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவுவது என்பதை உணர்ந்தும் உணராதவர்கள் போல் இவர்கள் நடக்க முற்படுகின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் 2009 வெற்றியின் பெருமித உணர்வுகள் பரவலாக இருந்தாலும் அவர்கள் இன்று தாம் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளும் காவுகொள்ளப்பட்டு விடுமோ என அச்சமுறுகின்றார்கள் இலங்கையில் இன சமூகங்களின் பிரச்சினைக்கு ஜனநாயகரீதியாக தீர்வு காணாத வரை இலங்கையின் பெரும்பான்மை இன மக்களும் ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க முடியாதென்பதே நிஜம். தென்னிலங்கையில் முற்போக்கு அரசியலும் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. கெடுபிடி யுத்தத்திற்கு பின்னரான உலகம் 1990இருந்து தீவிர மாற்றமடைந்து வந்திருக்கிறது. அது தென்னாசியாவையும் பாதித்தது. இந்தியா, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் சாரம்சத்தை அதன் அதிகாரப் பரவலாக்கத்திட்டத்தை நடைமுறையில் முழுமையாக சாத்தியமாக்குமாறு இலங்கையிடம் பல தடைவை நயந்து கேட்டிருக்கிறது. இலங்கையின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டிருக்கிறது. நட்பான அயல்நாடு என்ற வகையில் பல்வேறு தடைவைகள் இலங்கையின் தலைவர்களிடம் பல தடைவைகள் இதனை வலியுறுத்தி வந்திருக்கிறது. (மேலும்....)

ஐப்பசி 25, 2010

ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலில் நேருக்கு நேர் மோதும், புலி முகவரும், மக்கள் நலன் விரும்பியும்!

(கனடா கந்தசாமி)

இலங்கையில் நெடுந்தீவு மண்ணை அடியாகக் கொண்ட, நீதன் சண்ணை எடுத்துக் கொண்டால், அவர் நமு பொன்னம்பலம் அளவுக்கு அரசியல் பாரம்பரியம் உள்ள ஒரு குடும்பத்திலிருந்து வந்தவரல்லர். நீதன் சண் தன்னைத் தீவிரமான புலி ஆதரவாளராகக் காட்டிச் செயற்பட்டதின் மூலமே, பிரபலம் தேடிக் கொண்டவர். ரொறன்ரோவில் நடைபெற்ற அநேகமான புலி சார்பு ஊர்வலங்கள், கூட்டங்கள் என்பனவற்றுக்கு இவரும் ஒரு முக்கியமான ஏற்பாட்டாளராகச் செயற்பட்டு வந்துள்ளார். அந்தச் செயற்பாடுகளின் உச்சக் கட்டமாக, 2004 டிசம்பரில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம் (Human Rights Watch), புலிகள் கனடாவில் மேற்கொண்டு வந்த கட்டாய நிதி வசூலிப்பை அம்பலப்படுத்திய பகிரங்க அறிக்கையொன்றை, கனடாவின் ஸ்காபரோ நகரில் வெளியிட்ட நிகழ்ச்சில் பெரும் கலாட்டா செய்த புலி ஆதரவாளர்களில் நீதன் சண் மிக முக்கியமானவராவார். (இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே கனடிய அரசாங்கம் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது) (மேலும்....)

ஐப்பசி 25, 2010

புளொட் இயக்கத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு!

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் தமது சர்வதேச கிளைகளின் மகாநட்டை எதிர்வரும் 30ம் 31ம் திகதிகளில் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் நடைபெறவுள்ள மகாநாட்டில் கட்சியின் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள்.வெளிநாட்டு கிளைகளின் பொறுப்பாளர்கள் பங்கு கொண்டு எதிர்கால செயற்திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராஜவுள்ளதாகவும், இவ் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு கிளைகளின் கட்சி உறுப்பினர்கள், சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் ஜேர்மனுக்கு வந்த வண்ணமுள்ளதாக புளொட் அமைப்பின் சர்வதேச ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒக்ரோபர் 24, 25 ம் திகதிகளில் பரிஸில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேச கிளைகளின் மாகா நாட்டைத் தொடர்ந்து நடைபெறும் இம் மகாநாடும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் புலத்திலும் தளத்திலும் பலம் பெற்று வருவதை எடுத்துக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஐப்பசி 25, 2010

கனடாவிலிருந்து மீண்டும் வர புதிய கடவுச் சீட்டு கோரும் இலங்கையர்

கனடாவிலுள்ள இலங்கை அகதிகள் தமது நாட்டுக்கு வருவதற்காகப் புதிய கடவுச் சீட்டு மற்றும் ஆவணங்களைக் கோரி வருவதாக, ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது. கனடாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் போது, தமது அகதி ஆவணங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர். இவ்வாறு அகதி அந்தஸ்து கோரியவர்களில் 70 சதவீதமான இலங்கையருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 25, 2010

இலங்கைக் கடல் எல்லையில் தமிழக அரசியல்வாதிகளின் படகுகள்

தமிழக அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான படகுகளே இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாகக் கடற்றொழில் நீரியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இரவுப் பொழுதில் பெரும் எண்ணிக்கையிலான இந்தியப் படகுகள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் செய்மதியினூடாக அதற்கான ஆதாரங்களைப் பெற்றுள்ளதாகக் கூறினார். செய்மதியினூடாகப் பெறப்பட்ட படங்கள் ஊடகவியலாளர்களுக்கு அதன்போது வழங்கப்பட்டது.

ஐப்பசி 25, 2010

The Vanni Crisis:  You can make a difference!

Recently I went to vanni got in touch with a number of people associated with schools.  l I discovered that there are more than 4000 students from Vanni on the verge of financial and emotional calamity as their sources of livelihood and support have, over the past few months, simply disappeared! While I was there I met the director of education of vanni district and listen to these students’ plights. Most of students are do not have one of their parent or both. There is large number of widows I met and their stories are heart trenching but they still holding their breath for their children. They are asking us to give a hand so they can stand up again and see the light. (more....)    

ஐப்பசி 25, 2010

 

யாழ். வசாவிளான் கல்லூரி ரூ. 50 இலட்சத்தில் புனரமைப்பு

யாழ். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் உடனடியாக புனரமைக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ். பாதுகாப்புப் படைகளினதும் மேற்படி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தப் பாடசாலை கடந்த மாதம் 29ம் திகதி பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது.  சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்பட்ட இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்தல், புனரமைப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

ஐப்பசி 25, 2010

விக்கிலீக்ஸ் அறிக்கை வெளியானதால் பெரும் பதற்றம்
வெளிநாடுகளிலுள்ள நேட்டோ படைகளுக்கு ஆபத்து

மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் தீவிரவாதிகள் தாக்கலாமென அதிகாரிகள் எச்சரிக்கை

ஈராக் போர் தொடர்பாக உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியான விக்கிலீக்ஸ் அறிக்கைகள் அனைத்தும் உண்மையென்றும் 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ஈராக் கில் இடம்பெற்ற இராணுவ கெடுபிடிகள், துஷ்பிரயோகங்கள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்களை இந்த அறிக்கை வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ள தாகவும் விக்கிலிக்ஸ் அறிக்கையை தயாரித்த ஜுலியன் அசான்ஜி தெரிவித்தார். விக்கிலீக்ஸ் அறிக்கைகள் அனை த்தும் உண்மை. இதில் நான்கு இலட்சம் தகவல்கள் உள்ளன. ஈராக்கில் நேட்டோ படைகளின் போர் தொடங்குவதற்கு முன்னிரு ந்துள்ள தகவல்களும் 2009ல் போர் முடிவடைந்த பின்னரும் தொடர் கின்ற கொடுமைகளை இந்த அறிக் கைகள் காட்டுகின்றன. 15 ஆயிரம் பொதுமக்கள் இதில் பலியாகியு ள்ளனர். ஆனால் இன்றும் பொது மக்கள் மீதான கொலைகள் தொடர் கின்றன.(மேலும்....)

ஐப்பசி 25, 2010

British government announces unprecedented social cuts

(By Ann Talbot)

The Conservative-Liberal Democrat government’s autumn spending review has introduced the most savage package of public spending cuts ever seen in Britain. Half a million public-sector jobs will be lost as Ł83 billion, or $128 billion, is cut from the budget. Another half million private-sector jobs will go as a result. Spending for welfare benefits will be slashed by a total of Ł18 billion between the cuts contained in the spending review and those already made in the emergency budget earlier this year. The military faces an 8 percent average cut in spending, as major programmes are slashed or postponed under the Strategic Defence Review. These cuts come on top of the plans inherited from the previous Labour government. Even before the election, the National Health Service was planning to cut Ł20 billion under Labour spending plans.(more....)

ஐப்பசி 25, 2010

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நேற்று ‘தீ ‘

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புமில்லையெனவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை ஏற்பட்ட இந்திடீர் தீ விபத்தினையடுத்து விமானப் படை மற்றும் கடற்படையினரின் உதவியுடன் சில மணித்தியாலங்களுக்குள் தீயை முற்றாகக் கட்டுப்படுத்த முடிந்ததாகத் தெரிவித்த பொலிஸார், சேத விபரங்கள் தொடர்பில் உடனடியாக எதனையும் குறிப்பிட முடியாதெனவும் தெரிவித்தனர். (மேலும்....)

ஐப்பசி 25, 2010

திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) ஈமக்கிரியைகள்

20.10.2010, 21.10.2010, 22.10.2010 புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மாலை 15:00 மணியிலிருந்து 20:00 மணிவரைக்கும், 23.10.2010, 24.10.2010 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 10:00 மணிமுதல் இரவு 20:00 மணிவரைக்கும் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமக்கிரியைகள் 25-10.2010 திங்கட்கிழமை அன்று மதியம் 13:00 மணிமுதல் 15:00 மணிவரை Krematorium, Geissbergweg 29, 4900 Langenthal BE என்னும் முகவரியில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்
குடும்பத்தினர்

ஐப்பசி 25, 2010

மக்களை நேசித்த மாமனிதன் வை. சி. கிருபானந்தன்

ரிபிசி யின் அஞ்சலி நிகழ்வு. மறக்க முடியாத மறுக்க முடியாத நினைவு அலைகள். உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் கிருபானந்தனை மீண்டும் நினைவு கூருகின்றோம். (மேலும்....)

ஐப்பசி 25, 2010

மஞ்சு வன்னிஆராச்சி மீது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து குற்றச்சாட்டு

புதுடில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மஞ்சு வன்னிஆராச்சி தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தினை பாவித்து போட்டியிட்டதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டிற்கான விசாரணை முடிவடையும் வரையில் அவர் பெற்ற தங்கப் பதக்கமானது இலங்கை ஒலிம்பிக் கமிட்டியின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.  தங்கப் பதக்கம் வென்ற சமயம் மஞ்சு வன்னிஆராச்சியிடம் பெற்றுக்கொண்ட சிறுநீரில் ‘நென்டிரலோன்’ எனும் தடைசெய்யப்பட்ட மருந்து படிந்துள்ளதாக பொதுநலவாய போட்டி ஏற்பாட்டாளர் குழு இலங்கை ஒலிம்பிக் கமிட்டிக்கு அறிவித்துள்ளது. மஞ்சு வன்னிஆராச்சியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட சிறுநீர் ‘ஏ’ மாதிரிக்கேற்ப இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமையால் அவர் இதனை நிராகரிக்கும் பட்சத்தில் ‘பி’ மாதிரிக்கான பரிசோதனை ஒன்றினை வேண்டும் சாத்தியங்கள் உள்ளன.

ஐப்பசி 25, 2010

அருணாச்சலப் பிரதேசத்தை இணைத்து சீனா புதிய வரைபடம்

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தன்னுடன் இணைத்து வரைபட மொன்றை வரைந்து வெளியிட்டுள்ளது. இந்த வரைபடம் மெப்வேல்ட் என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. ‘கூகுள் ஏர்த்’ என்ற இணைய தளத்துக்குப் போட்டியாக சீனா இந்த இணையத் தளத்தை ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்தை சீனா அநியாயமாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்த மாநிலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சுற்றுப் பயணம் செய்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்ல பிரதமருக்கு உரிமை உள்ளது என்றும் சீனாவுக்கு தெரிவித்தது. (மேலும்....)

ஐப்பசி 25, 2010

இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்னியில்

கைவிடப்பட்ட மோட். சைக்கிள்களில் 2050 பாவனைக்கு தகுதி

யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களில் 2050 மோட்டார் சைக்கிள்கள் பாவனைக்கு தகுதியானதென வாகன பரிசோதகர்களினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. வாகனங்களின் உரிமை யாளர்கள் தமது வாகனம் தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். விஷேட பரிசோதனையின் போதே 2050 மோட்டார் சைக்கிள்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன. பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதி, வாகனப் பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட் டை பிரதி, கிராம அலுவலகரின் உறுதிப் பத்திரம் என்பன சமர்ப்பித்து வாகன உரிமையாளர்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

ஐப்பசி 25, 2010

In Israel, the Noble vs. The Ugly

(By NICHOLAS D. KRIST)

Israel goes out of its way to display its ugliest side to the world by tearing down Palestinian homes or allowing rapacious settlers to steal Palestinian land. Yet there’s also another Israel as well, one that I mightily admire. This is the democracy that tolerates a far greater range of opinions than America. It’s a citadel of civil society. And, crazily, it’s the place where some of the most courageous and effective voices on behalf of oppressed Palestinians belong to Israeli rabbis — like Arik Ascherman, the executive director of Rabbis for Human Rights. (more...)

ஐப்பசி 25, 2010

அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை க்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்த தாஜ்மகால் ஹோட்டலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா, கடந்த ஆண்டு ஜனவரி 20ந் திகதி பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் நெருக்கமான நல்லுறவு வைத்திருப்பதால் அவரது இந்திய பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. (மேலும்....)

ஐப்பசி 25, 2010

ஆஸ்பத்திரிகளில் 24 மணிநேரமும் ஓ.பி.டி திறப்பு
 

சுகாதார அமைச்சின் செயலருக்கு ஜனாதிபதி மஹிந்த அறிவுறுத்தல்

நாட்டின் சகல அரசாங்க ஆஸ்பத்திரிகளிலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை 24 மணி நேரமும் திறந்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயா ளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். வெளிநோயாளர் பிரிவுகளுக்கு தினந்தோறும் பெருமளவு மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்ற நிலையில் ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு மேற்படி நடவடிக்கை உதவுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி; இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார். (மேலும்....)

ஐப்பசி 25, 2010

Rebel Films

Friday, October 29 - 7 p.m. Modern Times 1936, 87 min. Charlie Chaplin's last 'silent' film, filled with sound effects, turns against the alienation of labour in modern society. Firstly we see him frantically trying to keep up with a production line, tightening bolts. He is selected for an experiment with an automatic feeding machine, but various mishaps lead his boss to believe he has gone mad, and Charlie is sent to a mental hospital. When he gets out, he is mistaken for a communist while waving a red flag, sent to jail, foils a jailbreak, and is let out again. We accompany Charlie through many more escapades. Commentary by Toronto writer and Socialist Action member Carol Bailey, followed by discussion. (more....)

ஐப்பசி 25, 2010

செக். செனட்டில் எதிர்க்கட்சிகளுக்கு வலு கூடியது

செக். குடியரசில் செனட் அவைக்கு நடந்த இடைக் கால தேர்தலில் சோசியல் டெமாகிரட் கட்சி வலுப் பெற்றுள்ளது. இதன்மூலம் அரசின் நலத்திட்ட வெட்டு களுக்கு அடி விழுந்துள்ளது. செக். குடியரசின் செனட் (மேலவை)யில் 81 இடங்கள் உள்ளன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் வாக்கெடுப்பில் நிரப்பப்படும். தற்போது 27 இடங்களில் தேர்தல் நடந்தது. இத்தேர்தலின் பலனாக செனட்டில் எதிர்க்கட்சி உறுப் பினர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

TBC வானொலியில் வடகிழக்கின் முன்னாள் முதலமைச்சர்!

பிரான்ஸில் இடம்பெற்று வரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணியின் சர்வதேச மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள வரதராஜப்பெருமாள் இன்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் தமிழர் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின்(ரி.பி.சி) வானொலியில் இடம்பெறவுள்ள விசேட அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொள்கின்றார்.

தொடர்புகளுக்கு: 00 44 208 9305313

To participate you can call us on  00 44 208 9305313

ஐப்பசி 24, 2010

கலந்துரையாடல்

பிரான்சில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சர்வதேசக்  கிளைகளின் பிராந்திய மாநாடு

இம்மாதம்  23ம், 24ம் திகதிகளில் பிரான்சில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் சர்வதேசக் கிளைகளின் பிராந்திய மாநாடு நடைபெறவுள்ளதென்பதை தோழமையுடன் உங்களுக்கு அறியத்தருகின்றோம். இம்மாநாட்டில் புலம்பெயர் தேசங்களில் கட்சிப்பணிகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்கள் மற்றும் கட்சியின் தலைமைக்குழு தோழர்களும் பங்குபற்றவுள்ளார்கள். இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக இம்மாநாட்டில் சில காத்திரமான முடிவுகளை எடுக்கவுள்ளோம். 2வது நாள் (24.10.2010) மதியம் 14.00 மணியளவில் எமது கட்சியுடன் தொடர்புடைய மாற்றுக் கருத்தாளர்கள் முற்போக்கு ஜனநாயக சக்திகள் போன்றவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்துவதாக தீர்மானித்துள்ளோம். இக் கலந்துரையாடலில் நீங்களும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு தோழமையுடன் அழைக்கின்றோம்.

பத்மநாபா EPRLF  சர்வதேச  கிளைகளின் ஒன்றியம்.

மாநாடு நடைபெறும் இடம்:   

SALLE LOUIS PASTEUR, 9,RUE LOUIS CHOIX, 95140 - GARGES-LES-GONESSE

ஐப்பசி 24, 2010

ஒரு தொகுதி முன்னாள் புலி போராளிகள் வவுனியாவில் விடுதலை!

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு, புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்டு வந்த மேலும் ஒரு தொகுதி முன்னாள் புலி போராளிகள் 306 பேர் நேற்று சனிக்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பாடசாலை மண்டபத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.விடுதலை செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளைப் பெற்றோரிடம் கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் குணசேகர, கிளர்ச்சியில் முன்னர் ஈடுபட்டு பின்னர் தமது கிளர்ச்சி நடவடிக்கைகளைக் கைவிட்டு சமூகத்துடன் இணைந்த ஜேவிபியினர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியலில் பிரவேசித்துள்ளார்கள். (மேலும்....)

ஐப்பசி 24, 2010

கற்றுக்கொண்ட பாடங்கள்-புதிதாகச் சிந்திப்போம்!

புலிகளுடனான இறுதிச் சமரின்போது தமிழ் மக்களுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. வன்னிப் பெருநிலப் பரப்பில் வாழ்ந்த மக்களே கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகியவர்கள். உடன் பிறப்புகளை இழந்தார்கள். வீடு வாசல்களை இழந்தார்கள். சீவனோபாயத் தொழிலை இழந்தார்கள். இறுதியில், காலங்காலமாக வாழ்ந்த பிரதேசத்திலிருந்து வெறுங்கையோடு வெளியேற நேர்ந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் பேசும் மக்கள் முப்பது வருட காலமாக ஒன்றன்பின் ஒன்றாக அனுபவித்த துன்பங்களின் உச்சம் என்று இதைக் கூறலாம். இத் துன்பங்களின் நதிமூலம் என்ன என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ளாமல் தமிழ் மக்களின் விமோசனம் பற்றிப் பேசுவது பயனற்றது. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

ஈராக் - அமெரிக்கா போர்

தீயினால் கண்ணில் சுட்டு சித்ரவதை , போர் ஆவணம் லீக் ஆன பரபரப்பு

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆன விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2004 ம் ஆண்டு முதல் 2009 வரை ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேன் வரை சிறையில் தள்ளப்பட்டு அவரும் தூக்கிலிடப்பட்டார். இந்த போருக்கு பின் ஈராக்கில் ஜனநாயக தேர்தல் நடத்தப்பட்டு அங்கு புதிய ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் விக்கிலீக் இணையதளத்தில் ஈராக் போர் ஆவணங்கள் லீக் ஆகி இருக்கிறது. 4 லட்சம் ரகசியம் கொண்ட ஆவணங்களில் அமெரிக்காகவின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள், மற்றும் போர் வீரர்கள், பொதுமக்கள் துன்புறுத்திய சம்பவம் கொண்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

Who in LTTE ordered massacre of 630 cops in 1990

(P K Balachandran)

According to Thurairatnam of the Eelam People's Revolutionary Liberation Front (EPRLF) in Batticalao, Karuna was not in the East at the time of the incident. "The man then in charge was Newton who had very close, direct relations with Prabhakaran," he told Express. He added that the man who might have had a direct hand in the killing was Reagan, second in command to Karuna as well as Newton. It was Reagan who surrounded the Batticaloa police station and forced the policemen to surrender. Thurairatnam said Reagan did it because the army had killed his family in Wellavali. (more.....)

ஐப்பசி 24, 2010

ஒரு  முறை தான்...

(ரஷ்ய எழுத்தாளர் ஸெர்கேய் செக்மரியோவ்)

நாம் ஒரு முறைதான் வாழ்கிறோம், இந்த வாழ்க்கையை முடிந்தவரை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஒருவரும் மறுக்கவில்லை. இதெல்லாம் சரியே. ஆனால், பிறத்தியானிடம் உள்ளதை எல்லாம் சுருட்டிக்கொள்ள வேண்டும், நேர் வழிகளிலும் கோணல் வழிகளிலும் கூடியவரை அதிகப் பணம் திரட்ட வேண்டும், தினந்தோறும் விருந்தும் கேளிக்கையும் நடத்த வேண்டும் என்று இதற்கு அர்த்தம் அல்லவே அல்ல. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

தென்மராட்சியாரின் சோகக் கதை.

1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து கைதடி முகாமுக்கு வந்த மலையக அகதிகளுள் 101 குடும்பங்களின் மறுவாழ்வை தென்மராட்சியில் செய்ல்படும் அறவழிப்போராட்டக்குழு ஏற்றது. கெற்பலியில் 61 குடும்பங்கள், மறவன்புலவில் 40 குடும்பங்கள் எனப் புதுக் குடியேற்றத்துக்குக் காணிகளைப் பொது மக்களிடம் திரட்டிய நிதியில் வாங்கினர். நான் வழங்கிய நிதியும் அந்த முயற்சிக்குப் பங்காயது. கடந்த 25 ஆண்டுகளாக அந்த மக்களுக்குக் காணிக்கான ஆட்சி உறுதிகளை வழங்கவில்லை என்பதே தென்மராட்சியாரின் பெருந்தன்மை! ஏ.கே. இராமலிங்கம், வி.எசு. துரைராசா எம்.கே. சீவகதாசு ஆகிய மூவரின் பெயரில் அந்தக் காணிஉறுதிகள் உள்ளன. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

மனிதகுலமே முடிந்துவிடும்  அணு ஆயுதப்   போர் குறித்து   காஸ்ட்ரோ எச்சரிக்கை

ஈரான் இஸ்லாமியக் குடியரசு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக் குதல் நடத்தினால், அது உலக அள விலான அணுஆயுதப் போரை உரு வாக்கும் என்பதில் எனக்கு துளிகூட சந்தேகமில்லை. உயிர் வாழ்வதற்கான உரி மையை அரசியல் தலைவர்களிடம் கோரும் உரிமையும், கடமையும் மக்களுக்கு உள்ளது. தங்கள் உயிர்கள், தங்கள் மக்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்கள் அனை வரும் அத்தகைய ஆபத்தில் சிக்கி யுள்ளபோது பாராமுகத்துடனோ அல்லது வாழும் உரிமைக்கு மரியாதை தர வேண்டும் என்று கோராமல் நேரத்தை வீணாக்கும் வகையிலோ யாராலும் இருக்க முடியாது. நாளை என்பது மிகவும் தாமதமாகிவிடும். (மேலும்....)

ஐப்பசி 24, 2010

மலேசியாவில் “தமிழ் அகதிகள் மாநாடு'

மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் சுதந்திரவாழ்வை உறுதிப்படுத்தும் முதலாவது மாநாடு இன்று மலேசியாவில் இடம்பெறவுள்ளது.மலேசியா கோலாலம்பூரில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. 30 வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வாருவதாக தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

நிதிவெட்டு

சிக்கலில்   பிரிட்டன் முதியவர்கள் 

சுகாதாரத்துறைக்கான நிதி வெட்டப்படுவதால் பிரிட்டன் நாட்டின் முதியவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நோயா ளிகளின் எண்ணிக்கையைவிட குறைவானதாகவே இருக்கிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறைக்கான நிதி வெட்டப் படுவதால் நிலைமை மேலும் மோசமாகப் போகிறது என்கிறார்கள் பிரிட்டனின் சுகாதா ரத்துறை வல்லுநர்கள்.  சிகிச்சைக்காக மருத்துவ மனைகளுக்கு வரும் முதிய வர்கள் படுக்கைகள் இல்லாமல் திரும்பிச் செல்லும் நிலை உரு வாகும் என்று அவர்கள் எச்ச ரிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பிரிட் டனின் பிரதமர் கேமரூன் வெளியிட்ட அறிவிப்பில், சுகா தாரத்துறைக்கு தற்போது ஒதுக் கப்பட்ட நிதியில் 27 விழுக்காடு குறைக்கப்படும் என்று கூறப் பட்டிருந்தது. புதிய மருத்துவமனைக ளும், ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளில் புதிய வசதிகளும் தேவைப்படும் நேரத்தில் இத்தகைய நிதி வெட்டு பொருத்தமற்றது என்று அரசின் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

ஐப்பசி 24, 2010

யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!

இப்போது சுதந்திரமாகத் தொழில் செய்கிறோம். இந்திய மீனவர்களால் அடிக்கடி பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது" என்கிறார் மரியகுணஸ்டீன் என்ற மீனவர்.நாம் வலைவிரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன. இதன்காரணமாக நாம் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுக்கிறோம். கடந்த வாரம்கூட சுமார் ஒன்றரை லட்சம் ரூபா விரயமானது. இதுகுறித்து நாம் அதிகாரிகள் பலரிடமும் முறையிட்டோம். ஆனால் சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருவேறு நாடுகள் எனச் சொல்லிப் பிரிவினைவாதத்துடன் நாம் பார்க்கவில்லை. (மேலும்....)

ஐப்பசி 24, 2010

கறுப்புச் சட்டைக் காரருக்கு செங்கொடி மரியாதை

விடுதலை அடைந்த இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் மீதான அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நாடெங்கும் கம்யூனிஸ்டுகள் வேட் டையாடப்பட்டனர். கம்யூனிஸ்டு கள் அடுக்குமுறைக்கு அடிபணிய மறுத்து முடிந்த வகையில் எல்லாம் போராடினர். தமிழகத்திலும் ஏராள மான சிகப்பு மலர்கள் கொடிய அடக்கு முறையால் வீழ்த்தப்பட்டன. சேலம் சிறைகூட இந்த இரத்த வேட்டைக்கு தப்பவில்லை. 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடலூர் சிறையிலும் துப்பாக்கிச் சூடு. இரணி யன், மாரி, மணவாளன், தூக்கு மேடை பாலு, திருப்பூர் பழனிச்சாமி, அன்னை லட்சுமி என தியாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே போனது இக்காலகட்டம்தான். சதி வழக்குகள், கொலை வழக்குகள் என சிறைக்கூடங்களில் கம்யூனிஸ்டு களை பூட்டிக் கொக்கரித்தது ஆளும் வர்க்கம். கட்சி மீது தடையும் நீடித்த காலம். (மேலும்....) 

ஐப்பசி 23, 2010

புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இரகசியங்களடங்கிய 20 ஆவணங்கள் கண்டுபிடிப்பு

தமிழ் வர்த்தகர்கள் என்ற போர்வையில் சில நாடுகளில் செயல்பட்டுவரும் மாவீ தரேஸ்ராஜா, சுரேஷ் ஆகிய புலிகளின் சர்வதேச வலையமைப்பின் முன்னணி செயல்பாட்டாளர்கள் இருக்கும் இடங்கள், அவர்களது நிறுவனங்கள், சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் சம்பந்தமான தகவல்கள் இந்த ஆவணங்களில் அடங்குகின்றன. இந்தத் தகவல்களை சர்வதேச காவல்துறையினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். (மேலும்.....)

ஐப்பசி 23, 2010

தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் புலி போராளிகளின் விபரங்களை இன்று இணையத்தில் வெளியிடுகிறது!

தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் புலி போராளிகளின் விபரங்களை இன்று இணையத்தில் வெளியிடுகிறது. தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்கள் இன்று இணையத்தில் வெளியிப்படவுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கையின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிவின் இணையத்தளத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டியூ.குணசேகர ஆரம்பித்து வைத்தார். http://www.bcgrsrilanka.com என்ற இணையத்தளத்திலேயே இந்த விபரங்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் அறிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

அரசாங்கத்தின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்யத் தயார் – தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் சம்பந்தன்!

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்யத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் நேரடியாக பங்களிப்புச் செய்தால் பாரியளவிலான உதவிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

மிக வேகமாக முன்னேறி வரும் திருமலை!

மூன்று திசைகளிலும் மலைகளைக்கொண்டு கடலால் சூழப்பட்டு பல அதிசயத்தக்க விடயங்களை தன்னகத்தே கொண்ட குடா, திருகோணமலை மாவட்டமாகும். இலங்கையர்களை மட்டுமல்லாது வெளிநாட்டவர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்த மாவட்டமும் இதுவேயாகும். ஒல்லாந்தர் காலம் தொட்டு இலங்கைக்கு பல வழிகளில் சிறந்த வருமானத்தை ஈட்டித்தந்த இப் பிரதேசம் கடந்ந பல வருடகாலமாக நடைபெற்றுவந்த யுத்த்தினால் தனது அந்தஸ்தை சற்று இழந்திருந்தது. சமாதானத்தின் நகரம் என பெயர்சூடப்பட்டு மூவின மக்களும் இணைந்து வாழும், இங்கே அடிக்கடி இடம்பெற்று வந்த அமைதி இன்மையினால் மக்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைமை, சுகந்திரமாக பேச முடியாத அளவுக்கு நிலைமை ஏற்பட்டிருந்தது. (மேலும்....)

ஐப்பசி 23, 2010

U.S. FEDERAL JURY CONVICTS LTTE TERRORIST WEAPONS MERCHANT

A Baltimore federal court jury Monday convicted a Singapore man of attempting to sell arms to the terrorist group Liberation Tigers of Tamil Eelam (LTTE) in Sri Lanka. Four co-conspirators have pleaded guilty in the case. Reuters reported that Balraj Naidu, 48, was charged in a conspiracy to provide material support to the LTTE, which in 1997 was designated by the U.S. Department of State as a foreign terrorist organization. It fought and lost a 26-year-long conflict against the Government of Sri Lanka. According to evidence presented at his trial, Naidu and four co-conspirators arranged to buy some 28 tons of U.S.-made weapons and ammunition from an undercover business in Maryland, Reuters said. LTTE representatives made a $250,000 down-payment on the $900,000 weapons deal with the bogus company in the summer of 2006, the Justice Department said. (more....)

ஐப்பசி 23, 2010

அரசியல் சதுரங்கத்தில் பல்கலை மாணவர்கள்

மக்கள் விடுதலை முன்னணி இன்று மக்களால் ஒதுக் கப்பட்ட நிலையில் இருக்கின்ற அரசியல் கட்சி. தனது பிரதான ஆதரவுத்தளமாக எந்தவொரு சமூக சக்தி யையும் இனங்காட்ட முடியாத நிலையில் அக் கட்சி இருக்கின்றது. இவர்கள் சிவப்புக் கொடியுடனும் சோஷ லிசக் கோஷங்களுடனும் நடை போடுகின்ற போதி லும் தொழிலாளி வர்க்கமோ சோஷலிஸ்டுகளோ இவ ர்களுடன் இல்லை. சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்க ளின் பிரதிநிதியாகத் தன்னை இனங்காட்டுவதற்கு மக் கள் விடுதலை முன்னணி மேற்கொண்ட முயற்சியும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இப்போது கல் லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை அணி திரட்டி அவர்களைப் பிரதான ஆதரவு சக்தியாக வைத்திருக்கும் முயற்சியில் இக் கட்சி ஈடுபட்டிருக்கின்றது. (மேலும்....)

ஐப்பசி 23, 2010

அரசின் செயற்பாடுகளுக்கு பொதுநலவாய பிரதிநிதிகள் பாராட்டு

மோதல்கள் காரணமாக லட்சக் கணக்காக இடம்பெயர்ந்த மக்களை ஒரே மாவட்டத்தில் முகாம்களில் சகல வசதிகளுடனும் தங்க வைத்ததுடன் மட்டுமல்லாமல் படிப்படியாக அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் இலங்கை அரசு மேற்கொண்ட பணியை பொது நலவாய பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர். உலக நாடுகளில் எங்கும் இல்லாதவாறு மூன்றாம் உலக நாடான இலங்கை ஒரு சிரமமான பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்துக் கொண்டிருக்கிறது என பொதுநலவாய பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

தலிபான்களுடனான பேச்சுவார்த்தைகளை தடுக்கக் கூடாது - அமெரிக்கா

தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையை யாரும் தடுக்கக் கூடாது என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் குழ வெளிநாட்டு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி, இராணுவ தளபதி கயானி ஆகியோர் தலைமையில் அமெரிக்கா சென்று உள்ளனர். அவர்கள் வெள்ளை மாளிகைக்கு சென்று ஒபாமாவை சந்தித்து பேசினார்கள்.  அவர்களிடம் அடுத்த ஆண்டு பாகிஸ்தான் வருவதாக ஒபாமா தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

குடிவரவுச் சட்டத்தை இறுக்கியது கனடா

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வருவோருக்கு 10 வருட சிறை

கனடாவுக்குள் நுழையும் சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் மற்றும் ஆட்கடத்தல் களைத் தடுக்கும் நோக்கில் கனேடிய அரசாங்கம், குடிவரவுச் சட்டத்தை மாற்றியமைத்துள்ளது. சட்ட விரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்ட மூலம் மாற்றப்பட்டிருப்பதாகக் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்டோவ்ஸ் தெரிவித்தார். இந்த புதிய சட்டத்துக்கமைய சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைபவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் உட்பட அடிப்படை வசதிகள் குறைக்கப்படும். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

கிளிநொச்சி மண்ணை மேலும் வளமாக்க தயாராகிறது இரணைமடுக் குளம்

(சாரதா மனோகரன்)

கிளிநொச்சி வாழ் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே தமது வாழ்வாதாரமாகக் கொண் டவர்கள். ஆதலால் அவர்கள் விவாசாயத்தை முன்னெடுப்பதற்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனப்பல தரப்பினராலும் உணரப்பட்டது. அதனடிப்படையில் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் அமையும் திருவையாறு நீர்ப்பாசனத் திட்டம் தெரிவு செய்யப்பட்டது. இரணை மடுக் குளத்தின் இடது கரையினால் வளம் பெறும் 3ம் வாய்க்காலின் நீர் கட்டுப்படுத்திகள் மற்றும் விழுத்திகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக் கப்பட்டன. எந்தவித வெளிநாட்டு நிதி உதவியுமின்றி வடக்கு மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணை க்களத்துக்கு வழங்கப்பட்ட நிதி இக்கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. மூன்றாம் வாய்க்காலானது திருவையாறு வட்டக்கச்சிப் பகுதியில் கோவிந்தன் கடைச்சந்தியில் இருந்து பூநகரியின் ஊரியான் வரையான பகுதி வரை செல்கிறது. அப்பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்கள் 3ம் வாய்க்காலால் வளம் பெருகின்றன. (மேலும்....)

ஐப்பசி 23, 2010

2ஆம் உலகப்போரில்   அமெ.கொலைவெறி: ஜப்பானில் கல்லறை கண்டுபிடிப்பு

ஜப்பானில் அமெரிக்கா கொன்று குவித்த வீரர்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானை அமெ ரிக்கா தாக்கியது. இந்த தாக்குதலின்போது, பல ஆயிரம் ஜப்பானிய வீரர்கள் கொன்று குவிக்கப்பட்ட னர். இந்த வீரர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ வுக்கு 660 மைல் தொலை வில் உள்ள பசிபிக் தீவுப் பகு தியான ஐவோ ஜிமோவில் புதைக்கப்பட்டனர். இங் குள்ள இரு பெரும் குழிகளில் 2 ஆயிரம் ஜப்பானிய வீரர்களின் உடல்கள் இருப்பதை ஜப்பானிய ஆய்வாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

MV Sun Sea human smuggling

Some Tamil boat people already rejected in U.K.

Some of the Tamil migrants who arrived on ships in British Columbia waters were already rejected refugees from the United Kingdom. Immigration Minister Jason Kenney revealed the information as he announced new human smuggling laws the federal government hopes will deter such operations. Speaking in Delta, B.C., in front of one of the two ships used to bring in migrants, Kenney told reporters the government has learned some of the migrants were already found not to need refugee protection in the United Kingdom. (more...)

ஐப்பசி 23, 2010

வட பகுதிக்கு விரைவில் இரணைமடு நீர், வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு

கிளிநொச்சி – யாழ். குடிநீர் விநியோகத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் பூர்த்தியாகிய நிலையில் யாழ். நகரில் நேற்று கிளிநொச்சி – யாழ். திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தை அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் பாரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இரணைமடு குள நீரை யாழ். நகருக்கு கொண்டு வருவதற்கான அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன, வடபகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். இதன் அடிப்படையில் குடிதண்ணீர் மற்றும் அத்துடன் இணைந்த சுகாதார திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து இத்திட்டம் நகர்த்தப்படுகின்றது. (மேலும்....)

ஐப்பசி 23, 2010

பிலிப்பைன்ஸில் பஸ்ஸில் குண்டு வெடித்ததில் 9 பேர் பலி

பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானாவோ என்ற தீவில் உள்ள தொழில் நகரமான ககேயன் என்ற இடத்தில் இருந்து ஒரு பஸ் சென்றது. அதில் 50 பயணிகள் இருந்தனர். இந்த பஸ்ஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள் இந்த சம்பவம் காலை 10.30 மணிக்கு நடந்தது. இந்த தாக்குதலில் அந்த இடத்திலேயே 8 பேர் பலியானார்கள். ஒருவர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்து போனார். தாக்குதல் நடந்த மாநிலத்தில் மாவோயிஸ்ட்களும் முஸ்லிம் தீவிரவாதிகளும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் யார் இந்த தாக்குதலை நடத்தியது என்பது தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மக்களிடம் கெட்ட தமக்கு பெயரை ஏற்படுத்த அரசு செய்த காரியம் என்று மாவோயிஸ்ட்களும், முஸ்லிம் தீவிரவாதிகளும் தெரிவிக்கின்றனர்.

ஐப்பசி 23, 2010

யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நேற்று நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு

மக்களால் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படுகின்றது. இந் நிவாரணம், யுத்தத்தால் மரணமடைந்த ஒரு பிரிவினருக்கும், காயமடைந்து அங்க குறைபாடுடையவர்களுக்கு ஒரு பிரிவாகவும், யுத்தத்தால் சொத்திழப்படைந்தவர்களுக்கு இன்னொரு பிரிவினருக்காகவும் 100 பேருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக இருபத்தைந்து மில்லியன் ரூபா வழங்கப்படுவதாக அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார். அவர் நேற்றுக்காலை யாழ்ப்பாண செயலகத்தில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 23, 2010

ஜனாதிபதியின் 2வது பதவிக் காலம்

11 நிமிடங்களில் 11 இலட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம்

30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக சூழல் உட்பட மரம். செடிகள் என்பவற்றிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டது. பசுமையான சூழலொன்றினை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்பூட்டுவதற்காகவே நாடளாவிய மர நடுகை வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் யாப்பா குறிப்பிட்டார். மேலும் நாட்டில் உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியுமென்று கூறிய அமைச்சர், இன்று உலகிலே சூழலை பாதுகாத்துவரும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார். (மேலும்....)

ஐப்பசி 22, 2010

வன்னியில் கடமையாற்றிய நான்கு வைத்தியர்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பர்

இறுதியுத்த காலப்பகுதியில் வன்னிப் பகுதியில் கடமையாற்றிய வைத்திய அதிகாரிகள் 4 பேர் அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர். வைத்திய அதிகாரிகளான வி. சண்முகராஜா, ரி. சத்தியமூர்த்தி, சிவபாலன், ரி.வரதராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு சாட்சியமளிப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் 19ஆம் திகதி வைத்திய அதிகாரிகளான சண்முகராஜா, சத்தியமூர்த்தி ஆகியோரும் 24ஆம் திகதி சிவபாலனும் 30ஆம் திகதி வரதராஜனும் சாட்சியமளிக்கவுள்ளனர். (மேலும்...)

ஐப்பசி 22, 2010

Karuna says he wasn’t even in B’caloa

Minister Vinayagamoorthy Muralidharan says at the time fighting erupted in the Batticaloa district in June 1990 during the Premadasa administration, he wasn’t even in the East. "I was in Jaffna," an irate Minister Murralidharan aka Karuna told The Island yesterday, denying any direct or indirect role in the massacre of several hundred policemen. The SLFP Vice President was responding to his erstwhile colleague, Eastern Province Chief Minister Sivanesathurai Chandrakanthan aka Pilleyan, who requested the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) to direct questions regarding the June 1990 massacre to Karuna. Chandrakanthan said that as he had joined the LTTE in early February 1991, he couldn’t comment on what had happened in June 1990. (more....)

ஐப்பசி 22, 2010

கனேடிய நாடாளுமன்றில் புதிய சட்டமூலம்

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டுவருபவர்களுக்கு 10 வருட சிறை

 சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கொண்டுவரும் நபர்களுக்கு தண்டனையளிக்கும் வகையிலான சட்டமூலத்தை கனேடிய அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்ற பொதுச்சபையில் சமர்ப்பித்தது. கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் ஆகியோர் இச்சட்டமூலம் குறித்து வான்கூவரில் செய்தியாளர்களிடம் பேசினர். இந்த சட்டமூலத்தின்படி, 50 இற்கு மேற்பட்டவர்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவருபவர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன், சட்டவிரோத குடியேற்றவாசிகளும் ஒருவருட காலம் வரையான சிறைத்தண்டனையை எதிர்நோக்கலாம். அவர்களுக்கு சுகாதார நலன்புரி சேவைகள் குறைக்கப்படுவதுடன் நிரந்தர வதிவுரிமையும் நிராகரிக்கப்படலாம். (மேலும்...)

ஐப்பசி 22, 2010

சந்திரிக்கா, தற்கொலை தாக்குதல் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

1999ஆம் ஆண்டு கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளி என கருதப்பட்ட சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு வந்த சத்தியவேல் இலங்கேஸ்வரன் என்ற  நபரே இவ்வாறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 22, 2010

இலங்கைக்கு சென்று ராஜபக்சேவுடன்

டீ-வடை சாப்பிட்டு விட்டு வேறு எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துவிட்டு வந்தார் தொல். திருமாவளவனுக்கு

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அருகதை இல்லை. அவர் தனது எம்.பி. பதவியை ராஜி னாமா செய்து விட்டு பின்னர் காங்கிரஸை விமர்சிக்கட்டும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி 125 வருட பாரம்பரிய மிக்கது. அந்த கட்சியை விமர்சிக்க யாருக் கும் தகுதியில்லை. காங்கிரஸ் தயவால் எம்.பி. யான திருமாவளவன் அந்த கட்சியை விமர் சிக்கிறார். வேண்டுமென்றால் தனது பதவி யை ராஜினாமா செய்துவிட்டு விமர்சிக் கட்டும். இலங்கைக்கு சென்று ராஜபக்சேவு டன் டீ-வடை சாப்பிட்டு விட்டு வேறு எது வும் பேசாமல் மவுனமாக இருந்துவிட்டு, இங்கே வந்து கடுமையாக விமர்சிக்கிறார். நேருக்கு நேர் அங்கேயே பேச வேண்டியது தானே. (மேலும்....)

ஐப்பசி 22, 2010

வடக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

  • அச்சுவேலி கைத்தொழில் பேட்டை மீள ஆரம்பம்

  • தனியார் ஒத்துழைப்புடன் உற்பத்தித்திறன் மேம்பாடு

  • இலங்கை, இந்தியா, ஐ.நா.969 மில்லியன் ரூ. ஒதுக்கீடு

(மேலும்....)

ஐப்பசி 22, 2010

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் -  அமெரிக்கா

பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் - அல் கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஏராளமான பண உதவிகளை செய்து வருகிறது. ஆனால் அந்த பணத்தை பாகிஸ்தான் வேறு வழிகளில் செலவு செய்கிறது. அதோடு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு பதில் அடைக்கலம் கொடுத்து வருகின்றது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பல முறை எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தவில்லை. இந்த நிலையில் அமெரிக்க பத்திரிகை ஒன்று இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், பின்லேடனுக்கு, பாகிஸ்தான் உளவுத்துறை தான் அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்று கூறப்பட்டிருந்தது. (மேலும்....)

ஐப்பசி 22, 2010

VIVA PALESTINA CONVOY BREAKS SIEGE AND ENTERS GAZA TO JUBILANT CROWDS

The Viva Palestina convoy of almost 150 vehicles, 370 people from 30 different countries and $5 million of aid has entered Gaza. Amidst scenes of jubilation from thousands of Palestinians there to greet the convoy, Kevin Ovenden, the convoy director, expressed his joy at being in Gaza once again. "We have driven more than 3,000 miles to bring this essential aid and to break this illegal siege of Gaza. We have been joined by supporters from Morocco and Algeria and from the Gulf States and Jordan, to make this the biggest convoy ever to break the siege of Gaza. We are absolutely overjoyed to be here and to bring with us the soil from the graves of those who were massacred on the Mavi Marmara which will be used to plant trees as a memorial to their sacrifice." (more....)

ஐப்பசி 22, 2010

நடுக்கடலில் தத்தளித்த 85 இலங்கையர் இந்தோனேசியாவில் மீட்பு

படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த 85 புகலிடக் கோரிக்கையாளர்களை இந்தோனேசியத் துறைமுகப் பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகு எரிபொருள், உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக பனாயிட்டான் தீவில் இடைநடுவில் நின்ற போது துறைமுகப் பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 15 பெண்களும், 18 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பல குழந்தைகள் சுகயீனமுற்றிருந்ததாகவும், பலர் பல நாட்கள் ஒழுங்கான உணவின்றி தவித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் படகில் சென்றவர்களில் ஒரு பெண் மற்றும் ஆண் உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர். மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்தோனேசியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது இவர்கள் ஜகார்த்தாவிலுள்ள இந்தோனேசிய குடிவரவு தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்த ப்பட்டுள்ளனர்.

ஐப்பசி 22, 2010

செலவினங்களை குறைக்கும் பிரிட்டன், 130 பில். டொலர் சேமிக்கத் திட்டம

 

பிரிட்டனில் இந்த ஆண்டின் மே மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் டேமாக்ரடிக் கட்சிக் கூட்டணி அரசாங்கம் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டு வந்த பொதுச் செலவின வெட்டுகளை அறிவித்துள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற ஒட்டுமொத்த செலவின மீளாய்வு நட வடிக்கைக்குப் பின்னர் வரும் ஆண்டுகளில் பிரிட்டன் எத்தகையளவில் செலவினங்களை குறைக்கும் என்பதை நாட்டின் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் அறிவித்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 130 பில்லியன் டொலர்களை சேமிக்க அரசு எண்ணுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டன் எடுத்துள்ள மிகப் பெரும் சிக்கன நடவடிக்கை இது வெனவும் தான் எடுக்கும் நடவடிக்கைகள் கடினமானவை. (மேலும்....)

ஐப்பசி 22, 2010

உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 20 ஆயிரம் ரூபா படியும், அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிடும் அபேட்சகர் ஒருவர் ஐயாயிரம் ரூபா படியும் கட்டுப் பணம் செலுத்த வேண்டும். தற் போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அபேட்சகர்கள் கட்டுப்பணம் செலுத்துவதில்லை. சுயேச்சைக் குழு உறுப்பினர் ஒருவர் 250.00 ரூபா படி கட்டுப்பணம் செலுத்துகிறார். புதிய திருத்தத்தின் படி அளிக்கப்படும் வாக்குகளில் இருபதில் ஒரு பங்கைப் பெறாதவர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்படும். இத்திருத்தத்தின் படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விகிதாசார முறைப்படியும் தொகுதிவாரி அடிப்படையிலும் நடத்தப்படும். (மேலும்....)

ஐப்பசி 22, 2010

இதுவரை 1800 சதுர கிலோ மீற்றர் நில பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது

இதுவரையில் 1800 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். வடக்கு பகுதிகளில் 314850 கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாகவும் 2000 சதுர கிலோ மீற்றர் பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச மற்றும் உள்நாட்டு கண்ணி வெடி அகற்றும் குழுக்களுடன், இராணுவத்தினரும் இணைந்து கண்ணி வெடிகளை அகற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி 22, 2010

ஆயுத விற்பனை  சவூதி அரேபியாவை ‘மொட்டை’யடிக்கிறது அமெரிக்கா!

தனது பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு உத்தியாக சவூதி அரேபியாவுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் பெறு மான ஆயுத விற்பனையைச் செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.  அமெ ரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய ஆயுத விற்பனையாக இருக்கும். மேலும் தவறான கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி யால் லட்சக்கணக்கானவர் கள் அமெரிக்காவில் வேலை யிழந்துள்ளனர். இந்த ஒப் பந்தத்தால் 75 ஆயிரம் பேரின் வேலையைப் பாது காக்க முடியும். அமெரிக்க நாடாளுமன்றம் எந்தவித ஆட்சேபணையும் செய் யாது என்பதோடு, அமெ ரிக்காவின் அரவணைப்பில் இருக்கும் இஸ்ரேலும் வாய் மூடி மவுனமாகவே இருக் கப்போகிறது. (மேலும்....)

ஐப்பசி 22, 2010

கராச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு, 12 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள முக்கியமான சந்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு மக்கள் நெருக்கடி அதிகமான சந்தைக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து கராச்சி நகரில் கடந்த 5 நாட்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. கராச்சியில் தொடர்ந்து நடைபெறும் வன்முறையால் அங்கு பதற்றம் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் நபில் கபோல் வலியுறுத்தியுள்ளார்.

ஐப்பசி 21, 2010

ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாத நிஜமுகம்

பலாலி விமான நிலையத்தைச் சர்வதேச தரத்துக்குப் புனரமைத்துச் சிவிலியன் போக்குவரத்துக்காகத் திறந்து விடுவதற்கு இன்றைய அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சர்வதேச தரத்துக்கு இந்த விமான நிலையம் புனரமைக்கப்பட்டதும் அங்கிரு ந்தே வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வசதிகளைச் செய்து தரப்போவதாக அரசாங்கம் கூறுகின்றது. வடபகுதி மக்களுக்கு நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி வழமை போலக் குட்டை குழப்புகின்றது. பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக நடவடிக்கை எடுக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக கூறியிருப்பது விஷமத்த னமானதும் அற்பத்தனமானதுமாகும். (மேலும்....)

ஐப்பசி 21, 2010

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது


110 கிலோ தங்கம் புலிகளிடமிருந்து மீட்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளிடமிருந்து 110 கிலோ கிராம் தங்கத்தை இராணுவத்தினர் மீட்டெடுத்ததாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் தொடக்க நிகழ்வின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.க. எம்.பி தயாசிறி ஜயசேகர கேட்டிருந்த வாய் மூல விடைக்கான வினா வுக்கு பதிலளிக்கும் வகையி லேயே அமைச்சர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். (மேலும்....)

ஐப்பசி 21, 2010

இப்படியும் சில ஈமெயில் விவாதங்கள்

Gary and see Pon Bala ( speaker of the Transnational Government of Tamil Eelam) using Ontario Gov. email  for T.G. T.E work . (Pon Balarajan, Consulting Technical Systems Specialist, Technical  Services,55 Lake Shore Blvd East, 3rd Floor, Toronto, Ontario M5E 1A4T: (416) 864-2405  E: pon.balarajan@lcbo.com, www.lcbo) for T.G. T.E work . Ontario tax money is spend for TGTE work. (more....)

ஐப்பசி 21, 2010

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் மற்றுமோர் வெளியீடு!

நீர்வை பொன்னையனின் 'கால வெள்ளம்' சிறுகதைத் தொகுதி கருத்தாடலும் ஆய்வும்

இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், 58 தர்மராம வீதி, கொழும்பு– 6

காலம்: ஒக்ரோபர் 24, 2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி

(மேலும்....)

ஐப்பசி 21, 2010

பிரான்ஸ் போராட்டத் தீ பரவுகிறது  ஓய்வூதியப் பறிப்புக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி

ஓய்வு வயது அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய வெட்டு ஆகியவற்றிற்கு எதிராக பிரான்ஸ் தொழிலாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதர வாக நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.ரயில்வே, பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தொழிலா ளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்திற்கு ஆதர வாக தபால்துறை, விமா னப்போக்குவரத்து, வாகன ஓட்டுநர்கள் ஆகியோரும் வேலைநிறுத்தம் செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில் நான்காவது முறையாக பிரான்ஸ் தேசம் தழுவிய முழு வேலை நிறுத்தத்தைக் கண்டது. (மேலும்....)

ஐப்பசி 21, 2010

சுவாமி விபுலாநந்தர் கலைமன்றத்தின்

வருடாந்த நினைவு விழா -2010

கனடா சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம் நடத்தும் சுவாமிகளின் வருடாந்த நினைவு விழாவும், கலை நிகழ்ச்சிகளும் எதிர்வரும் ஒக்ரோபர் 24ம் திகதி ஞாயிறன்று மாலை 6.00 மணிக்கு 733 Birchmount Rd,  Scarborough வில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ் வருடம் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதற் பரிசினைப் பெற்ற மாணவர்களின் பேச்சுடன், வில்லிசை, நாட்டிய நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதால் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் மன்றத்தினர்.

தொடர்புகளுக்கு : (905) 568 0551

                              (647) 261 5723

ஐப்பசி 21, 2010

சீனத்தலைவர் இந்தியா வருகிறார்

இந்தியா-சீனா இடையிலான உறவுகளில் தொடர்ந்து முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விதமாக சீன அரசின் உயர்நிலைக்குழு ஒன்று புதுதில்லி வருகிறது. சமீபத்தில் இந்தியா-சீனா இடையே சில பிரச் சனைகளில் முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக ஊட கங்கள் செய்திகளை பரப் பின. குறிப்பாக ஜம்மு-காஷ் மீரில் பணியாற்றும் இந்திய ராணுவ தளபதிகளில் ஒருவ ரான லெப்டினன்ட் ஜென ரல் டி.எஸ்.ஜஸ்வாலுக்கு விசா அளிக்க சீனா மறுத் ததைத் தொடர்ந்து இரு நாட்டு உறவுகளில் பிரச் சனை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டன. இந்நிலையில் சீனக் கம் யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜோகு யோங்காங் தலைமையி லான குழு ஒன்றை சீன அரசு இந்தியாவுக்கு அனுப் புகிறது. இதைத்தொடர்ந்து சீனப்பிரதமர் வென் ஜியா பவ் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஐப்பசி 21, 2010

Toronto

SriLankan Deepavali Celebration

Dear Sir/Madam,

The staff of the Sri Lanka High Commission in Ottawa and the Consulate General’s Office in Toronto are in the process organizing a program to celebrate Deepavali  on Sunday 7th November 2010 at  5.00pm at the Korean Cultural Centre for Education, 1133 Leslie Street, North York, Ontario, M3C 2J6.

It would be appreciated if you could join us to  celebrate this important religious festival.

Sri Lanka High Commission

Ottawa

(more....)

ஐப்பசி 21, 2010

கலிலியோ

கலிலியோ... இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15 ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில் பிறந்து சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக குருவான கலிலியோ பற்றிய சுலாரஸ்யமான தகவல்கள் இதோ. கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைந்தது. ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள் தான் பின்னாளில் வந்த பெளதிகவியல் விஞ்ஞானிகளுக்கு வேத பாடமாகியது. இத்தாலியிலுள்ள வைசாநகர பல்கலைக்கழகத்தில் கலிலியோவுக்கு கணிதப் பேராசிரியராக வேலை கிடைத்தது. ஆனால் தனது ஆரா ய்ச்சிகளின் காரணமாக மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவரைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கிவிட்டனர். (மேலும்....)

ஐப்பசி 21, 2010

கல்முனையில் சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

சட்டவிரோதமாக கல்முனையில் இயங்கி வந்த ஒளிபரப்பு நிலையம் கல்முனை பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டது. இங்கு பெறுமதி மிக்க உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக இந்திய அலைவரிசையிலிருந்து மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த இந்த நிலையம் நற்பிட்டிமுனையில் இயங்கி வந்துள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் நிலையத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த இலத்திரனி யல் உபகரணங்களையும் கைப்பற்றி யுள்ளனர். இவ்வொளிபரப்பு நிலையம் ஊடாக விளம்பரங்கள் இடம்பெற்றதாகவும், இந்திய திரைப்படங்கள், நாடகங்கள் மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நிலையத்தின் உரிமையாளரும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளன.

ஐப்பசி 21, 2010

உள்ளூராட்சி சட்டமூலத்துக்கு கி. மா இணக்கம் 

உள்ளூராட்சி சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவித்து கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் இணக்கத்தைப் பெறுவதற்காக பாராளுமன்றத்திலிருந்து கிழக்கு மாகாண சபைக்கு சட்டமூலப் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. திருத்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவிக்கும் பிரேரணை மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஏழு வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. 11 மேலதிக வாக்குகளால் சட்டமூலத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 21, 2010

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை - அமெரிக்கா

ஒசாமா பாகிஸ்தானில் இருப்பது குறித்து உறுதியாக தகவல் தெரியவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனும் அவனது நெருங்கிய கூட்டாளியுமான அய்மான் அல் ஜவாஹிரியும் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு வீட்டில் சுகபோகமாக வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பு அளித்து வருவதாகவும் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகின. (மேலும்....)

ஐப்பசி 21, 2010

2011 ஒக்டோபருக்கு முன்

குடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்

யாழ். குடாநாட்டின் சகல பிரதேசங் களுக்கும் எதிர்வரும் 2011 ஒக்டோபருக் கிடையில் மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.என்.சி. பேர்டினண்டோ தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கையில் மின்வலு எரிசக்தி அமைச்சு அடுத்தடுத்து பல வாக்குறுதிகளை வழங்கியுள்ள போதும், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டினார். (மேலும்....)

ஐப்பசி 21, 2010

திபெத்தில்

குணப்படுத்த முடியாத ‘காஷின் - பெக்’ எலும்புநோய் வேகமாகப் பரவுகிறது

திபெத் பகுதியில் உள்ள மக்களுக்கு குணப்படுத்த முடியாத ‘காஷின்-பெக்’ என்ற எலும்பு தொடர்பான நோய் பரவி வருகிறது. இதனால் 17,000 பேர் நோய்த் தாக்க அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். காம்டோ பெர்பெக்சர் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் 14,662 பேருக்கு ‘காஷின் -பெக்’ நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது. (மேலும்....)

ஐப்பசி 21, 2010

செங்கற்களும் சாலைகளும்   மட்டுமல்ல நகரம்

ஏற்கனவே சிங்கார சென்னை, எழில்மிகு சென்னை, சீர்மிகு சென்னை என மாநகரை அழகுபடுத்த துவங்கிய எந்த திட்டமும் உருப் படவில்லை. ஒப்பந்தக்காரர்களும் ஆளும்கட்சி யினரும் காசு பார்த்ததுதான் மிச்சம். பல சாலை களில் பேருந்து நிழற்கூரை கூட கிடையாது. மெட்ரோ ரயில் திட்டத்தை கூட தொழிலாளர் கள் அதிகமாக வசிக்கும் திரு வொற்றியூர் வரை நீடிக்க போராடித்தான் பெறவேண்டியிருந்தது. அது கூட கொள்கை அளவில்தான் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. செங்கற்களும் சாலைக ளும் மட்டுமல்ல நகரம். அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வும் அதில் அடங்கியிருக்கிறது என் பதை அரசு காணத் தவறக்கூடாது. (மேலும்....)

ஐப்பசி 21, 2010

இந்தியாவுடன் சுமுகப் பேச்சுக்கு பாகிஸ்தான் விருப்பம் - குரேஷி
 

காஷ்மீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் இந்தியாவுடன், சுமுகமான முறையில் பேசித் தீர்ப்பதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்று, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாடு களுக்கும் பயங்கரவாதம் ஒரு பொதுவான எதிரி என்றும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 21, 2010

வன்மம் காட்டும் ‘வர்க்கபாசம்’

“நானே ஒரு கம்யூனிஸ்ட்டுதான்” என்று முதல்வர் கருணாநிதி அடிக்கடி கூறுவார். மே தினத்திற்கு விடுமுறை அளித்தது திமுக அரசு என்றும், சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா விற்கு மேதின பூங்கா என்று பெயரிட்டு, மேதின தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் அமைத்த தாகவும் அவர் பெருமிதம் கொள்வார். ஆனால் இப்போது திமுக அரசு சென்று கொண்டிருக்கும் போக்கைப்பார்க்கும் போது மேதின பூங்காவில் அமைக்கப்பட்டது தியாகிகள் சின்னமா அல் லது உழைப்பவர் உரிமைகளுக்கு அமைக்கப் பட்ட கல்லறையா? என்ற கேள்வி எழுகிறது.(மேலும்....)

ஐப்பசி 20, 2010

உள்ளுராட்சி திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவளித்தவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் - இரா. துரைரெட்ணம் _

கிழக்குமாகாண சபையில் இருப்பவர்கள் உள்ளுராட்சி திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் அது சிறுபான்மை மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் சபையில் தெரிவித்தார். ஜனாதிபதி 10 நாளைக்குள் இத் திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றி அனுப்பிவைக்குமாறு பணித்தார் என்பதற்காக ஆதரவாக வாக்களிக்கப் போகும் ஆளும் தரப்பிற்கு சவால் விடுகின்றேன் என தெரிவித்தார். ஆளும் தரப்பினர் மக்களிடம் வாக்கு கேட்டுப்போகும் போது திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிப்போம் என்று கேட்டுவிட்டு தற்போது ஆதரவாக வாக்களித்தது சிறுபான்மை மக்களுக்கு செய்யும் துரோகம். (மேலும்....)
ஐப்பசி 20, 2010

தமிழ்நாட்டில் அமைச்சர் டக்ளஸ் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

1986ஆம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான வழக்கு நாளை வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை சென்னை 4ஆவது மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. (மேலும்....)


ஐப்பசி 20, 2010

வந்தாரை வாழவைப்பானா யாழ்ப்பாணத்தான்?

(பரா நவரஞ்சன்)

இப்ப சண்டை முடிஞ்சு போச்சு. கொஞ்ச சிங்களவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறார்கள். முன்கூட்டி அறிவிக்காமல் வந்தது பிழை. திட்டமிட்ட செயல் என ஆளுக்காள் விமர்சனம் செய்கிறார்கள். அட யாழ்ப்பாணத்தானே ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கேட்டு முன்கூட்டி அறிவிச்சா போனாய். ஆமி தேடுது பொலிஸ் தேடுது என பொய் சொல்லி தஞ்சம் கேட்ட யாழ்ப்பாணத்தான் 75 வீதம். உண்மையாக பிரச்சினையில் வந்தவன் 25 வீதம். அப்பொழுது ஐரோப்பியன் அடே முன்கூட்டி அறிவிச்சா எங்களிட்ட வாறாய் என கேட்கவில்லையே. மனிதாபிமானத்துடன் தஞ்சமளித்தான். (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல் (பகுதி 2)

(மீராபாரதி)

புலிகளின் ஆதிக்கம் இல்லாது போனதற்குப் பின்பான இன்றைய சுழலில் துரோகி என்றால் என்ன அது யார் என்பதற்கான வரைவிலக்கணம் விளக்கம் அளிக்க முடியாதளவு சிக்கலாக்கியுள்ளது. அதாவது புலிகளின் அங்கத்தவர்களுக்கு எதிராகவே இன்று இது அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் விளைவாக இன்று புலிகள் இயக்க அங்கத்தவர்கள் தமக்குள்ளையே ஒருவரை ஒருவர் மாறி மாறி “துரோகி” என அழைக்குமளவிற்கு “துரோகி” என்ற சொல் மிகவும் மலினப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கு தளத்திலும் புலத்திலும் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களின் செயற்பாடே காரணமாக இருக்கின்றது. இதற்கு போராட்ட ஆரம்ப காலத்திலிருந்து மாத்தையா வரை தொடர்ந்து பின் அண்மைக் கால உதாரணமான கருணா மற்றும் பிள்ளையான் தொடங்கி இன்றைய கே.பி மற்றும் நெடியவன் வரை இது பரந்து இருக்கின்றது எனக் கூறினால் மிகையல்ல. புலிகளின் அரசியல் பார்வையில் பிரபாகரனின் இறுதி முடிவு கூட “துரோக அரசியல்” எனவே கருதப்படவேண்டியுள்ளது. (மேலும்......)

ஐப்பசி 20, 2010

சிறைச்சாலைச் சீர்திருத்தம்

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றங் கள் தண்டனை வழங்குவதன் பிரதான நோக்கம் அவர்களைத் திருத்துவதே. சிறைவாசம் குற்றவாளி கள் தங்கள் பிழைகளை உணர்ந்து திருந்தி நல்ல பிரசைகளாக மாறுவதற்கான கால அவகாசமாகும். இன்று குற்றச் செயல்களின் விளைபுலமாகச் சிறை ச்சாலை மாறியிருப்பது கவலைக்குரியது. சிறைச்சா லையை ஒரு சீர்திருத்தப் பள்ளியாக மாற்றுவதில் நாம் வெற்றி காண்போமானால் நாட்டில் தர்மம் நிலை த்து நிற்கும். அமைச்சரும் பொறுப்புவாய்ந்த அதி காரிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவார்க ளென நம்புகின்றோம். (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் தேடுவோரைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடிவருவோரை எவ்வாறு நடத்துவதென்பது தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியட் கிலாட் தெரிவித்தார். ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் எதிர்காலம், நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் சட்டவிரோத குடியேறலைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இப்புதிய சட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளன. அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தோர் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வசதி குறைந்த இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வசதி கூடிய அறைகளில் தங்க வைக்கும் பொருட்டு இரண்டு பாரிய தடுப்பு முகாம்களும் அமைக்கப்படவுள்ளன. பெற்றோர்களைப் பிரிந்துள்ள குழந்தைகளை உறவினரிடம் ஒப்படைக்கவும் புதிய சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஐப்பசி 20, 2010

எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருவார்

அடுத்த வருட முற்பகுதியில் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் நோர்வேயின் விசேட சமாதான தூதுவராக செயற்பட்ட சொல்ஹெயிமின் இந்த விஜயமே, யுத்தம் முடிவடைந்தன் பின் இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக அமையும். (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!

"இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையை இந்திய அரசுதான் தீர்மானிக்கிறதே தவிர, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் அல்ல. ஒட்டுமொத்தமாக, இந்தியாவே உலகமயமாக்கலில் மூழ்கி இருக்கும்போது, மேற்கு வங்கத்தில் மட்டும் சோஷலிசத்தை அமல்படுத்திவிட முடியாது. ஆனால், இடது முன்னணி அரசு, அடித்தள மக்கள் பயன் அடையும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனாலும், தொழிற்சாலையைக் கொண்டுவருவது, அதற்கான நிலங்களை மக்களிடம் இருந்து பெறுவது போன்றவற்றில், இடது முன்னணி அரசு சில தவறுகளைச் செய்து இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அரசின் விதிமுறைகள், காலனியக் காலத்தைச் சேர்ந்தவையாகவே இருப்பதும் பிரச்னைதான்!" (மேலும்.....)

 

ஐப்பசி 20, 2010

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார்

தேர்தல் பிரசாரத்தில் கிளிண்டன் ஈடுபட்டு இருப்பது ஹிலாரி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டு இருக்கிறது.  2012 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் ஒபாமாவுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் என்றும் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கும் போட்டியிடலாம் என்றும் ஒபாமாவின் செல்வாக்குத் தொடர்ந்து சரிந்தால் 2012 ஆம் ஆண்டு தேர்தலிலேயே ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடலாம் என்று  இங்கிலாந்து  தி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

வடபகுதி மக்களுக்கு முழுமையான அரசபணி

வடமாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

மக்கள் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லும் வகையில் அதிகாரிகள் செயற்படுவது அவசியமெனவும் கருணையுடனும் அன்புடனும் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கொண்டு மக்களுக்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். வடக்கில் சில அதிகாரிகள் தம்மிடம் வரும் மக்களிடம் இன, குல பாகுபாடு காட்டி பாரபட்சமான வகையில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய பேதம், பாரபட்சத்துக்கும் இடமின்றி சிநேகபூர்வமான சேவையை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

மொத்தச் செலவில் கால் பங்கு பாதுகாப்பிற்கு

அடுத்த வருடத்தில் அரசாங்க செலவினமாக 1,08,096 கோடி ரூபா

அரசாங்க செலவுகளுக்காக அடுத்தவருடம் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 96 கோடி 77 இலட்சத்து 66 ஆயிரம் (10,80,967,766,000) ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்நிதியொதுக்கீட்டு சட்டமூலப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இப்பிரேரணையில் அடுத்த வருடம் நாட்டுக்கு உள்ளேயோ, வெளியிலோ 99700 கோடி ரூபாவுக்கு மேற்படாதவகையில் கடன் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இப்பிரேரணையின்படி அடுத்தாண்டுக் கான நிதியொதுக்கீட்டு சட்ட மூலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 20, 2010

ஹமாஸ் எம்.பி கைது, காஸாவில் பதற்றம்

ஹமாஸ் பாராளுமன்ற உறுப்பி னர் ஹாதிம் கபாயிஸ் என்பவரை இஸ்ரேல் இராணுவம் கைது செய்து அழைத்து சென்றது. மேற்குக் கரை நகரான காபில் இவரது வீட்டிற்குள் நுழைந்த இஸ் ரேல் இராணுவம் இவரைக் கைது செய்து அழைத்துச் சென்றபோதும் இதற்கான காரணங்கள் அறிவிக் கப்படவில்லை. சென்ற திங்கட்கிழமை இச்சம்ப வம் நடந்தது. இஸ்ரேல் சிறையில் பாராளு மன்ற உறுப்பினர் ஹாதிம் கபாயிஸ் அடைக்கப்படவுள்ளார். ஏற்கனவே பாலஸ்தீன் எம்.பி. க்கள் பொது மக்கள் எனப் பல வகையானோர் இஸ்ரேல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்க ளில் ஜனாதிபதி மஃமூத் அப்பா ஸின் கட்சியைச் சேர்ந்தோரும் உள் ளனர். பலர் விடுதலை பெற்றுள்ளனர்.

ஐப்பசி 20, 2010

சிதறிக் கிடக்கும் புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுகளில் முயற்சி - பிரதமர்

ஈழ நாடொன்றை அமைக்க உள்நாட் டிலும் வெளிநாட்டிலும் மீண்டும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து வெளிநாடுகளு க்குச் சென்று மீண்டும் இலங்கைக்கு வரும் புலிகளையும் யுத்த காலத்தில் தென்பகுதியில் மறைந்திருந்து மீண்டும் வடக்கிற்கு வரும் நபர்கள் குறித்தும் விசாரணை செய்வதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைமைத்துவமின்றி மறைந்து இருக்கும் புலனாய்வு மற்றும் ஆயுதப் பிரிவு புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுக ளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 19, 2010

புலிகளின் சகோர யுத்தம் தமிழர்களை படுகுழிக்குள் தள்ளியது

இலங்கைத் தமிழருக்கு மத்திய அரசு உரிமை பெற்றுத் தர வேண்டும் - கருணாநிதி _

இந்திய நாட்டின் அரசியல் சட்டத்துக்குட்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள், எடுத்து வரும் நடவடிக்கைகள் எண்ணற்றவை. தமிழீழ ஆதரவாளர்கள் என்ற அமைப்பை உருவாக்கி, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய அமைப்பின் தலைவர்களை மதுரைக்கு அழைத்து வந்து நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் முன்னிலையில், சகோதர யுத்தம் கூடாது என கடந்த 1986ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்தோம். அந்த வேண்டுகோள் முழுமையாக-மனப்பூர்வமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால் வரலாறு வேறுவகையான வடிவத்தைப் பெற்றிருக்கும். ஆனால், சகோதர யுத்தத்தின் காரணமாக, இலங்கையில் நடைபெற்ற சோகமயமான நிகழ்ச்சிகள், அவற்றினால் இலங்கைத் தமிழர்கள் பட்ட-இன்னமும் பட்டுக் கொண்டிருக்கும் துன்ப, துயரங்களை வரலாறு நிச்சயமாக மறக்காது; மன்னிக்கவும் மாட்டாது. (மேலும்...)

ஐப்பசி 19, 2010

2010 கருப்பு ஒக்டோபர் நினைவாக!

வடமாகாண முஸ்லிம்களில் புலிகளினால் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகள் பூர்த்தி முஸ்லிம் மீள் குடியேற்றம் ஓர் ஆய்வு

(M. ஷாமில் முஹம்மட்!)

தமிழ் மக்களின் பிரச்சனை தனியானது, அவர்கள் இறுதி யுத்தத்தின் போது புலிகளால் பலவந்தமாக அல்லது விரும்பி புலிகளுடன் சென்றார்கள். ஒரு கும்பமாக சென்றவர்கள் உறுபினர்களை இழந்து தொகை குறைத்து அல்லது வந்த அதே தொகையினர் மீள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள். இது ஒரு குறுகிய கால இடைவெளியில் நடைபெற்றவை ஆகவே தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் என்பது வேறு, முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் என்பது முற்றிலும் வேறானது. ஆனால் நடைமுறையில் இரண்டு தரப்பினரும் ஒன்றாக பார்க்கபடுகின்ற மிகவும் தவறான அணுகு முறைதான் பின்பற்றபடுகின்றது. (மேலும்....)

ஐப்பசி 19, 2010

மதபோதகரின் துர்நடத்தை

முருங்கன் சிறுவர் இல்லத்தை மூட மன்னார் நீதிமன்றம் உத்தரவு

மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தில் 18 வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதனை மத போதகர் ஒருவர் நடத்தி வருகின்றார். சிறுவர் இல்ல சிறுமிகள் சிலரை மன்னார் பெரியகமம் பகுதியில் உள்ள தனது வீட்டில் வேலை செய்வதற்காக இவர் அழைத்துச் சென்றுள்ளார். இதன்போதே அச்சிறுமிகள் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள 15 வயதான சிறுமி ஒருவர், மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதி மன்றத்திற்கு தெரியப்படுத்தினார். இதே விதமாக மேலும் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது. (மேலும்...)

ஐப்பசி 19, 2010

வெலிக்கடை சிறை பெண்கள் பிரிவில் சுற்றிவளைப்பு

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலி ஸார் நாற்பது பேர் அடங்கிய விசேட குழு நேற்று முன்தினம் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நடத்திய திடீர் சோதனையின் போது 53 கையடக்க தொலைபேசிகள், பற்றரிகள், சார் ஜர்கள் மற்றும் கஞ்சா சுருட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இந்த விசேட குழுவினர் சிறைச் சாலை அதிகாரிகள் 15 பேருடன் இணைந்து இந்த திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 19, 2010

துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல் (பகுதி 1)

(மீராபாரதி)

இன்று விடுதலைப்புலிகள் ஆகக் குறைந்தது இலங்கையிலாவது ஒரு அமைப்பாக சக்திவாய்ந்தவர்களாக இல்லை. அவர்களது இருப்பு இல்லை என்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தபோதும், உண்மையான யதார்த்த நிலையை ஏற்றுக்கொள்வதே முன்நோக்கிச் செல்வதற்கு வழிவகுக்கும். ஆகவே தொடர்ந்தும் புலிகளது தலைமையையும் அவர்களது கடந்தகால செயற்பாடுகளையும் விமர்சிப்பது என்பது பயனற்றது. ஆனால் புலம் பெயர் சுழலில் வாழுகின்ற புலிகளின் தலைமைகள் பலர் இன்றும் செயற்படுகின்றனர். புலிகளின் தலைவர் பிரபாரகன் இல்லாதபோது இவர்களுக்கு இடையிலான பிளவுகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதுடன் தமக்குள் சண்டை பிடிப்பார்கள் என்பதும் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. (மேலும்....)

ஐப்பசி 19, 2010

யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ளோர் விடயம்

ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து முடிவெடுகப்படும்  

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பத்தினர் தொடர் பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து பேசவிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜனாதிபதியுடன் சந்தித்து பேசிய பின்னர் இக்குடும்பத்தினர் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார். இக்குடும்பங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் கலந்துரை யாடவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்....)

ஐப்பசி 19, 2010

இராணுவத் தீர்வு சாத்தியமற்றது

ஈரானுடன் பேசுவதைத் தவிர ஐ.நா.வுக்கு வேறு வழியில்லை

 

ஈரானிடம் பேசுவத்தைத் தவிர வல்லரசு நாடுகளுக்கு வேறு வழி கிடையாது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்கும் ஈரானின் உரிமைய எந்தவொரு அழுத்தங்களுக்காகவும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லையென்றும் கூறினார். யுரேனியம் சர்ச்சை தொடர்பான மற்றொரு பேச்சுவார்த்தை நவம்பர் 15 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அமெரிக்கா, பிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் பேச்சுவார்த்தைகளைத் தவிர வேறு வழிகள் இல்லை. அனைத்தும் அடைபட்டுவிட்டன. ஆனால் இப்பேச்சுக்கள் நியாயத்தின் அடிப்படையில் இடம்பெறவேண்டும். (மேலும்....)

ஐப்பசி 19, 2010

வவுனியா மில் வீதியில் கைக்குண்டு தாக்குதல்

தனியார் சொகுசு ஜீப் வாகனம் உட்பட சில வாகனங்கள் சேதம்

வவுனியா நகர மில் வீதியில் தனியார் சொகுசு ஜீப் வாகனம் ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்கதலில் இருவர் காயமடைந்தனர் என்றும் தனியார் சொகுசு ஜுப் வாகனமும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட வாகனத்தின் பொனட் பகுதிக்குள்ளேயே குண்டு வெடித்ததாகவும் இதனால் அந்த வாகனம் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 19, 2010

வியட்நாமில் வெள்ளம்

74 பேர் பலி எண்பதாயிரம் பேர் வெளியேற்றம்

வியட்நாமில் பெய்த கடும் மழையால் அங்கு பாரிய வெள்ளம் ஏற்பட்டது. இதில் 14 பேர் பலியாகினர். சுமார் 78 ஆயிரம் பேர் இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்டனர். இரண்டு, மூன்று நாட்களாகப் பெய்த தொடர் மழையால் சென்ற ஞாயிற்றுக்கிழமை வியட்நாமில் பெரும் வெள்ளமேற்பட்டது. சில மாகாணங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்துகள், தொடர்பாடல்கள் செயலிழந்தமையால் வெள்ளம் ஏற்பட்ட மாகாணங்கள் ஏனைய மாகாணங்களிலிருந்து துண்டிக்கப்பட்டன. இம் மாகாணங்களிலிருந்து ஒரு இலட்சம் பேர் வரை வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 84 ஆயிரம் வீடுகள் ஆயிரம் ஏக்கர் அளவிலான பயிர்கள் என்பவற்றை வெள்ளம் மூழ்கடித்து இதனால் இவை பெரும் சேதத்துக்குள்ளாகின. (மேலும்....)

ஐப்பசி 19, 2010

மண்முனை - கொக்கடிச்சோலை வாவியூடாக பாலம் அமைக்க கோரிக்கை

100 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் மண்முனை- கொக்கடிச்சோலை வாவியுடான படகுப் பாதைக்குப் பதிலாக குறித்த நீர்வழியூடாக பாலம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 1 கிலோ மீற்றர் நீளமுள்ள இவ் நீர் வழிப்பாதையூடாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அரச ஊழியர்களும் படகுப்பாதையுடாகவே பலவேறு சிரமங்களுக்கு மத்தியில் பயணம் செய்து வருகின்றனர். இவ்வழியுடாக பாலம் அமைப்பதற்கு பல அரசியல் வாதிகள் பலமுறை அடிக்கல்நாட்டியுள்ளனர் ஆனால் கடந்த பல தசாப்தங்களாக பாலம் அமைக்கப்படவேயில்லை. கிழக்கு உதயத்தின் கீழாவது படகுப் பாதைக்குப்பதிலாக பாலம் அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு பண்ணைப் பாலம், திருகோணமலைக்கு கிண்ணியா பாலம்,  வன்னி - யாழ்ப்பாணத்திற்கு சங்குப்பிட்டிப்பாலம் போன்றவை எவ்வளவு முக்கிமானவையோ அவ்வளவு முக்கிமானது மண்முனை - கொக்கடிச்சோலை பாலம்.

ஐப்பசி 19, 2010

அமெரிக்கா மௌனம், பாலஸ்தீனம் குற்றச்சாட்டு

மேற்குக்கரை, கிழக்கு ஜெரூஸலத்தில் இஸ்ரேல் மீண்டும் யூதக் குடியேற்றங்களை ஆரம்பித்தது

இஸ்ரேல் அரசாங்கம் புதிய யூதக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான அனுமதியை வழங்கியதையடுத்து கட்டடக் காரர்கள் ஒப்பந்த மனுக்களைக் கோரியுள்ளனர். மேற்குக் கரை கிழக்கு ஜெரூஸலம் என்பவற்றில் அமைக்கப்படும் இஸ்ரேலின் குடியேற்றங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பெரும் தடையாகவுள்ளது. நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமானால் யூதக்குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டுமென பலஸ்தீன் கோரி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் அரசாங்கம் 240 அடுக்கு மாடிக் கட்டடங்களை நிறுவ அனுமதியளித்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 19, 2010

வடக்கு, கிழக்குக்கு நாளை பயணம்

பொதுநலவாய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் நேற்று சந்திப்பு

கொழும்புக்கு நேற்று முன்தினம் வருகை தந்த பொதுநல வாய சங்கத்தின் பிரித்தானிய கிளையைச் சேர்ந்த பதினொரு பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்ததுடன் இன்று (19 ம் திகதி) பிரதமர் டி. எம். ஜயரட்னவையும், சபா நாயகர் சமல் ராஜபக்ஷவையும் பாராளு மன்றத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதேவேளை இன்று பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யும் இக் குழுவினர் இளம் எம். பி. க்கள் குழுவையும், தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற குழுவையும் ஐ. தே. க. வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவையும் சந்தித்துக் கலந்துரையாடவி ருக்கின்றனர். இக் குழுவினர் நாளை (20 ஆம் திகதி) யாழ். குடா நாட்டுக்கும், திருகோணமலைக்கும் விஜயம் செய்யவுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 19, 2010

உலகிலேயே அதிக விலைமிக்க வீடு

முகேஷ் அம்பானியின் வானளாவிய மாளிகை

4500 கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் “மும்பை மாளிகை” உலகிலேயே அதிக விலைமிக்க வீடாகும். ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியால் மும்பையில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுதான் உலகிலேயே அதிக விலைமிக்க வீடு என்று அமெரிக்காவின் போர்பஸ் இதழ் தெரிவித்துள்ளது. தெற்கு மும்பையின் அல்டா மவூண்ட் சாலையில் அமைந்துள்ள “அந்திலா” என்ற இந்த வீடு 4500 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள் ளது.  27 மாடிகளுடன் 570 அடி உயரத்தில் அந்த வீடு விண்ணை முட்டும் விதத்தில் நிற்கிறது. அந்த சொகுசு பங்களா விரைவில் திறப்பு விழாவை எதிர்நோக்கியுள்ளது. வெறும் 2 ரூபாய்காக நாள் முழுக்க உழைக்கும் தொழிளாளரைக் கொண்ட இந்தியாவின் அவமானச் சின்னம் இந்த கண்ணாடி மாளிகை. பல கோடி மக்களை மேலும் வறுமைக் கோட்டிற்குள் தள்ளி கட்டி முடிக்கப்பட்ட மாளிகை இது என்றால் மிகையாகாது. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

பெல்ஜியத்தில் தொழிலாளர் எழுச்சி  ரயில், விமானப்போக்குவரத்து முடங்கியது

அரசின் நவீன தாரா ளமயக் கொள்கைகளைக் கண்டித்து பெல்ஜிய ரயில் வேத்துறை, விமானப் போக்குவரத்துத் துறையினர் மற்றும் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் 24 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்களுக் கான புதிய ஊதிய உயர்வு மற்றும் அவர்களது பணி கள் குறித்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரித் தொழிற்சங்கமான ஏசிஓடி வேலைநிறுத்தத் திற்கு அழைப்பு விடுத்தது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைப் பணியில் உள்ளவர்களும் பல்வேறு கோரிக்கை களுக்காக வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அக்டோபர் மாதம் துவங்கியதிலிருந்தே பெல் ஜியம் போராட்டக் கள மாகவே மாறிப் போயுள் ளது. அக்டோர் 8 ஆம் தேதி யன்று நடைபெற்ற பெரும் வேலை நிறுத்தத்தில் ஒட்டு மொத்த பெல்ஜியமே பங் கேற்றது. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுவகையில்

மீள்குடியேற்றம் தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவின மக்களுக்கும் பொதுவானதாக அமைய வேண்டும்

(சாகரன்)

அரசு காணிகளில் புதிதாக யாரையாவது திட் டமிட்டு குடியேற்றும் நடவடிக்கையாக சிறப்பாக தமிழ் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்ற முயலுதல் என்ற செயற்பாடு இனங்களுக்கு இடையில் மேலும் ஐயப்பாடுகளையும், விரிசல்களையும் ஏற்படுத்தும். அது மாத்திரமல்ல இலங்கை அரசின் செயற்பாடுகள் பற்றி தமிழ் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கு குந்தகமாகவும் அமையும். இலங்கையில் உள்ள சகல இனங்களும், சமூகக் குழுக்களும் சமத்துவமாக வாழ்வதற்குரிய அரசியல் நிலமைகளை குறைந்த பட்டசமாவது சட்ட மூலமும், நடைமுறை மூலமும் ஏற்படுத்தாமல் இலங்கை அரசு வலிந்த குடியேற்றங்களை ஏற்படுத்துமாயின் மீண்டும் இளைஞர்கள் 1970 களில் கிராமங்களை நோக்கி வகுப்பு எடுக்க புறப்படும் நிகழ்வுகள் நடைபெறமாட்டாது என்பதை உறுதி செய்ய முடியாது. இது வரைகாலமும் ஆட்சி செய்து வந்த அரசுகள் விட்ட தவறுகளை தற்போதைய அரசு பாடங்களாகக் கொண்டும் செயற்படும் என்று நம்பவைக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு தற்போது உண்டு. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்ல – சம்பந்தன்

அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உடல் நலக் குறைவினால் சம்பந்தன் அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. சம்பந்தனுக்கு பதிலாக இளம் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, அண்மைக்காலமாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் சம்பந்தன் பங்கேற்கவில்லை எனவும், உடல் நலக் குறைவினால் இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

இந்திய வெளிவிவகார அமைச்சர் நவம்பர் 25ம் திகதி இலங்கை வருகை

கொழும்பில் நடைபெறவிருக்கும் இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழுவில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நவம்பர் 25ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இம்மாதம் 27ஆம் திகதி மேற்படி ஆணைக்குழு கொழும்பில் கூடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் திடீர் ஜப்பான் விஜயம் காரணமாக இது அடுத்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டிரு ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி யொருவர் கூறினார். இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்க விருக்கும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மூன்று தினங்கள் வரை இங்கே தங்கியிருப்பதுடன் வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்வதுடன் அங்கு இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் முன்னெடுக்கப் பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு கடந்த 2005ஆம் ஆண்டு கொழும்பில் கூடி ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 18, 2010

Focus on people’s immediate needs as calls grow for unity
TAMIL PARTIES MULL OVER PRIORITIES...

Vinayagamurthi Muralitharan, Mano Ganeshan, Mavai Senathiraja, Sivanesathurai Chandrakanthan, Prabha Ganesan, Sivajilingam

Former MP Mano Ganeshan said Tamil parties had been vested with the responsibility of winning the confidence of the Sinhala people in order to create a stable environment within the communities. He said that it was very important, as they needed to differentiate the Tamil people from the LTTE.
The Tamil political scene has changed with the absence of the LTTE. Till May 2009 almost all the Tamil political parties and their views revolved around the LTTE. Either they were with the organisation, or against it. The political views and decisions of parties such as the TNA were largely influenced by the LTTE. The scenario took a turn when the outfit was defeated by the military in May last year. The defeat gave the other Tamil political leaders an opportunity to come to the forefront and address the issues faced by the people, an opportunity, which was deprived due to the presence of the Tigers, who claimed to be the sole representatives of the Tamil people. (more....)

ஐப்பசி 18, 2010

வெற்றுக் காணிகள் உறவினருக்கு விநியோகம் -  எள்ளுப்பிட்டி மக்கள் _

மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள் கடந்த 20 வருடங்களின் பின் மீண்டும் மீள்குடியேறியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள வெற்றுக்காணிகளை அங்கு மீள் குடியேறியுள்ள அரச அதிகாரி ஒருவர், அவருடைய உறவினர்களுக்கு எவருடைய அனுமதியும் பெறாமல் பிரித்துக் கொடுத்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். முசலிப் பிரதேசச் செயலகத்தில் கணக்காளராகக் கடமையாற்றும் நபர் அங்கு மீள்குடியெறியுள்ள நிலையில், மக்கள் மீள்குடியேறாத காணிகளை சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக எவருடைய அனுமதியும் பெறாமல் பிரித்துக் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக கிராம மக்கள் குறித்த நபரிடம் கேட்ட போது, தன்னிடம் இது தொடர்பாக யாரும் கேட்கக் கூடாது எனத் தெரிவித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். இது குறித்து, மாந்தை எள்ளுப்பிட்டிக் கிராம சேவகரிடம் கேட்ட போது, இது உண்மைதான் என்றும் இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐப்பசி 18, 2010

கல்மடு முருகன் ஆலயத்தில் 12 வருடங்களுக்குப் பின்னர் பூசை

கடந்த பன்னிரண்டு வருடங்களாக மூடிக்கிடந்த இந்து ஆலயமொன்று இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு நேற்று ஞாயிறு காலை விசேட பூசை நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தில் கல்மடு 2ம் யூனிட் பகுதியில் அமைந்திருந்த முருகன் ஆலயமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை அந்த பிரதேச இராணுவ அதிகாரிகள் செய்திருந்தனர். கல்மடு 2ம் யூனிட் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டு மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் புனருத்தாரண வேலை களை இராணுவத்தினர் மேற்கொண்டனர். மீள் குடியேறிய மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இந்த கிராம மக்களின் பல தேவைகளை நிவர்த்தி செய்ய பாதுகாப்புப் படையினர் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

ஐப்பசி 18, 2010

சரத்துக்கு தமிழ்க் காங்கிரஸ் ஆதரவு, உறுப்பினர்கள் அதிர்ச்சி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கனேடியன் தமிழ்க் காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளமையானது உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சரத்தை விடுவிக்குமாறு இவ்வாறு போராடுவதற்கு எந்தவகையான உத்தரவை அதன் உறுப்பினர்களிடமிருந்து தமிழ்க் காங்கிரஸ் பெற்றது என்பது இன்னமும் தெளிவில்லாத ஒன்றாகவே உள்ளது. இது டேவிட் பூபாலபிள்ளையினதும், கனேடியன் தமிழ்க் காங்கிரஸிடமிருந்து சம்பளம் பெறும் ஒரேயொரு பணியாளர் டான்ரன் துரைராஜாவினதும் புனைவுதிறனே இதுவென்றும் கூறப்படுகிறது. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

ஜனாதிபதி தலைமையில் வடமாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

அரசாங்கம் மாகாண ரீதியிலான அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இதற்கிணங்க நாளை 19 ஆம் திகதி வடமாகாணத்திற்கான அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியா பாதுகாப்புப் படை தலைமையகத்தில் நடைபெறவுள்ள மேற்படி மீளாவுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் மாவட்டச் செயலாளர்கள், மாகாண ஆளுநர் உட்பட உயர் மட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 18, 2010

போலிமருந்துகள் கடத்தலுக்கு விரைவில் தீர்வு

சட்டவிரோத செயலுக்கு உடந்தையான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் இலங்கையினுள் போலி மருந்துகளை கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குத் துரித கதியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். பதிவு செய்யப்படாத மருந்துகள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனை நிறுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்பேரில் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த நான்கு குழுக்களினதும் உறுப்பினர்களில் சிலர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு தொடர்ந்தும் ஒத்தாசை வழங்கி வருவது அம்பலத்திற்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஐப்பசி 18, 2010

போதைப்பொருளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி

நாடெங்கும் பொலிஸ் நிலையங்களுக்கு விசேட பணிப்பு

போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் பொருட்டு விசேட நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாட்டிலுள்ள 425 பொலிஸ் நிலையங்கள் ஊடாக இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. போதைப் பொருள் ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நாட்டிலுள்ள சகல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால சூரிய நேற்று பணிப்புரை விடுத்தார். (மேலும்....)

ஐப்பசி 18, 2010

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவில் ஐந்து தினங்கள் தங்கியிருக்க முடிவு

அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கு அதிக நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். “இது இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்துவதற்கு அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டுவதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது’ என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்து நாட்கள் வரை, அவர் இங்கு தங்கியிருக்க கூடும் என தெரிகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து, ஒபாமா இத்தனை அதிக நாட்கள் வேறு எந்த வெளிநாட்டிலும தங்கியது இல்லை என அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (மேலும்....)

ஐப்பசி 18, 2010

Ottawa monitors more potential migrants from Sri Lanka

(Shawn McCarthy)

The federal government is monitoring a second boatload of Sri Lankan migrants preparing to head for Canada, and has stepped up its co-operation with other countries against human smugglers. With Ottawa preparing new legislation aimed a human trafficking, The Globe and Mail has learned that federal officials believe they have solid evidence that smugglers in southern Asia are preparing to send another boatload of migrants to this country. (more...)

ஐப்பசி 18, 2010

ஈராக் பிரதமர் இன்று ஈரான் பயணம்

ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி மிக விரைவில் ஈரான் செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் இன்று திங்கட்கிழமை பிரதமர் நூரி அல் மாலிகி ஈரான் பயணமாகலாம் எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது. மார்ச் 07 இல் நடந்த பொதுத் தேர்தலையடுத்து இன்னும் அரசாங்கம் அமையவில்லை. அரசாங்கத்தை அமைக்க ஈரானின் உதவியைக் கோருவது ஈராக்கின் அபிவிருத்தி, பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் இதன் போது பேசப்படவுள்ளன.(மேலும்....)

ஐப்பசி 18, 2010

அறிவூட்டலுக்கு பெருமை சேர்க்கும் அபூர்வ ஆசிரியை

நடைபாதை குழந்தைகளின் உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்றவற்றுக்காக மக்களிடம், உதவிகள் பெற்று ஒரு ஆசிரியை அவர்களை பராமரித்து வருகிறார். ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியை கன்டா சக்ரவர்த்தி (44), கல்கத்தாவில் உள்ள டம்டம் ரயில்வே ஜங்ஷன் வழியாக தனது பாடசாலைக்கு சென்று வந்தார். அந்த ரயில் நிலைய மேடையில் தங்கியிருந்த சில சிறுமிகள் அவரிடம் பிச்சை கேட்பார்கள். சில நாட்கள் காசு கொடுத்த கன்டா சக்ரவர்த்திக்கு, அவர்கள் பள்ளிக்கூடம் போகாமல் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் என்று கேள்வி எழ, நாமே அவர்களுக்கு ஏன் பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது, என நினைத்தார். (மேலும்....)

ஐப்பசி 18, 2010

இரண்டு ரூபா சம்பளம்

தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவக் கிளை நிலையங்களில் பணிபுரியும் பகுதி நேரப் பணியாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது.  கால்நடை பராமரிப்பு துறை சார்பில், மாநிலம் முழுவதும் கால்நடை மருத்துவ மனை, கிளை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த கிளை நிலையங்களில் 1990க்குப் பிறகு, பகுதி நேர பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் காலை 8 மணிக்கு வேலைக்கு வரவேண்டும். அலுவலகத்தை சுத்தம் செய்தல், தண்ணீர் எடுத்து வைத்தல், வைத்தியர் ஊசி போடும் போது மாட்டுக்கு வால்பிடித்து உதவி செய்தல் போன்ற பணிகளை பகல் 12 மணி வரை செய்ய வேண்டும். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. பணிக்கு வரவில்லை என்றால், இரண்டு ரூபா சம்பளம் வழங்கப்படாது. மாநிலம் முழுவதும் 1,500 க்கும் மேற்பட்டோர் 15 ஆண்டுக்கும் மேலாக இப்பணியை செய்து வருகின்றனர். இவர்கள் எட்டாம் வகுப்பு முதல் + 2 வரை படித்தவர்கள். காலை 8 மணிக்குப் பயணிக்கு செல்லும் இவர்களால், வேறு வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் உலகின் பல பணக்காரர்கள் தற்போது இந்தியாவில்தான் உருவாகி வருகின்றார்களாம்.

ஐப்பசி 17, 2010

அரசியல் தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு

அண்டை நாடு என்பதனால் மாத்திரமன்றி, இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் கோடிக்கணக்கானவர்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழ்கின்றார்கள் என்பதனாலும் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டிய தார்மீகக் கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. எனினும், இறைமைமிக்க இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான எல்லைக்கு உட்பட்டதாகவே இந்தியாவின் செயற்பாடு அமைய முடியும். இந்த எல்லைக்குள் செய்ய வேண்டிய பணியை இந்தியா சரியாகவே செய்கின்றது. இப் பணியை இறுதி இலக்கு வரை முன்னெடுக்க வேண்டியவர்கள் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள். (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

சன் சீ கப்பல்

கனடா வந்த தமிழ் அகதி குழந்தைகளுக்கு கல்வி போதிக்க விசேட ஏற்பாடு

சன் சீ கப்பல் மூலம் கனடா வந்தடைந்த தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதற்கான விசேட நடவடிக் கைகளை கனேடிய அரசாங்கம் மேற்கொண் டுள்ளது. அதற்கென மூன்று விசேட போதனா சிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சன் சீ கப்பல் மூலம் கனடா சென்றடைந்த தமிழ் அகதிகளில் தனியாக இருந்த பெண் களும் ஆண்களும் சகல வசதிகளும் கொண்ட தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு தொடர்ச் சியாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆயினும் குழந்தைகள் மற்றும் சிறு வர்கள் தாய்மாருடன் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையிலேயே தாய்மாருடன் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வி தொடர்பில் கனேடிய கல்வி அமைச்சு விசேட ஏற்பாடொன்றை மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம் குறித்த சிறுவர்களின் வயது வரம்பைப் பொறுத்து அவர்களுக்குத் தனித்தனியான வகுப்புகளை ஒழுங்கு செய்து கல்வி போதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐப்பசி 17, 2010

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

முழுமையான மீள்குடியேற்றத்துக்கு ஆளுநர் பணிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிதிவெடி அகற்றும் பணியை துரிதமாக்குவதுடன், 127 கிராம சேவகர் பிரிவிலும் முழுமையாக மக்களை மீளக்குடியமர்த்தவும் நட வடிக்கைகள் எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப் புரை விடுத்தார். இம்மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் உங்களது சொந்த மக்கள் என்ற உணர்வுடன் சகல அரச அதிகாரிகளும், மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் செயற்பட வேண்டும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் கேட்டுக்கொண்டார். (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

ஐரோப்பிய யூனியனின் ஒருமைத்துவக் கோட்பாடு கேள்விக்கு உள்ளாகின்றது

றோமா மக்களையும் ஜிப்ஸிகளையும் உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சார்கோஸி ஓகஸ்ட் மூன்றாவது வாரத்தில் உத்தரவு பிறப்பித்தார். றோமா என்றும் ஜிப்ஸி என்றும் அழைக்கப்படுபவர்கள் றோமானியாவிலிருந்தும் பல்கேரியாவிலிருந்தும் வந்தவர்கள். இவ்விரு நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் பெற்றுள்ளன. ஐரோப்பிய யூனியன் பிரசைகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு விசா இல்லாமல் எந்த நேரத்திலும் செல்வதற்கும் அங்கு தங்கியிருப்பதற்கும் உரிமை உடையவர்கள். அப்படியிருந்தும் பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள். றோமா மக்களைப் பிரான்ஸ் பலவந்தமாக வெளியேற்றிய நிகழ்வு ஐரோப்பிய யூனியனின் ஒரு மைத்துவக் கோட்பா ட்டைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றது.(மேலும்.....)

ஐப்பசி 17, 2010

Wall Street firms dole out record pay to executives

(By Tom Eley)

While for millions of Americans 2010 has been a year of unemployment and wage-cutting, executives at a handful of finance firms will be paid a record $144 billion, according to a new survey by the Wall Street Journal. The sum is up 4 percent from last year’s haul of $139 billion, which was also a record.The Journal found that executive pay for 2010 has gone up at 29 of the top 35 surveyed banks, investment banks, hedge funds, money management firms, and securities exchanges. The payroll increase will slightly outstrip the growth in revenue at these firms, which increased by 3 percent from $433 billion in 2009 to $448 billion in 2010. About a third of total Wall Street revenue is given over to employees. (more....)

ஐப்பசி 17, 2010

இனப் பிரச்சினையின் தீர்வும் பிரதேச அபிவிருத்தியும் இணைந்து செல்ல வேண்டும்

நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் போது நாம் வேகமாகப் பின்னோக்கிச் செல்லக்கூடாது. எங்கள் முன்னுரிமைகளைச் சரியாக முடிவு செய்து செயற்படுவதிலேயே தமிழ் மக்களின் நிம்மதியும் முன்னேற்றமும் தங்கியுள்ளன. இரண்டு விடயங்களை எங்கள் முன்னுரிமையாகக் கூறலாம். ஒன்று இனப் பிரச்சினைக்கான தீர்வு. மற்றது தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி. இனப்பிரச்சினைக்கான தீர்வில் நாங்கள் மிகவும் பின்னுக்குச் சென்றுவிட்டோம். பின்தங்கியிருப்பது வேறு. பின்னுக்குச் செல்வது வேறு. அரசியல் தீர்வைப் பொறுத்த வரையில் கணிசமாக முன்னேறிய நிலைக்கு வந்து திடீரென வெகுவாகப் பின்னுக்குச் சென்று விட்டோம். இந்த நிலையிலிருந்து படிப்படியாகவே முன்னேற வேண்டும். அரசியல் தீர்வு முயற்சியில் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் நின்ற இடத்துக்கு மீண்டும் வர நீண்ட காலம் எடுக்கலாம். எனவே, அரசியல் தீர்வு முயற்சியில் மாத்திரம் எங்கள் ஈடுபாட்டைச் செலுத்து வோமானால் அபிவிருத்தியில் வெகுவாகப் பின்தங்கிவிடுவோம். (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

நக்சலைட்டுகளின் நதி மூலம்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் 1967ம் ஆண்டு பதவிக்கு வந்தது. சில மாதங்கள் மாத்திரமே இந்த அரசாங்கம் நிலைத்தது. கூட்டணி அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்களில் டார்ஜீலிங் மாவட்டத்திலுள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில் ஒரு கிளர்ச்சி வெடித்தது. மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சாரு மஸும்தார் என்பவரின் தலைமையில் விவசாயிகளின் எழுச்சிப் போராட்டம் என்ற பெயரில் ஒரு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். விவசாய நிலமும் விளைச்சலும் அவர்களால் அபகரிக்கப்பட்டுக் கூலி விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

முஸ்லிம் கைதிகள் விவகாரம்

மதத் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு அமைச்சர் டியூ முடிவு

சிறைச்சாலைகளில் அதிகரித்துவரும் முஸ்லிம் சிறைக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது பற்றி தாம் ஏற்பாடுகளைச் செய்யப் போவதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் முழு சனத்தொகை எட்டு வீதம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லிம் கைதிகளின் விகிதமோ 16 முதல் 19 வீதம் வரையில் அதிகரித்து இருப்பது குறித்து முஸ்லிம் மதத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்திருக்கிறார்.

ஐப்பசி 17, 2010

போதுமான நிதி ஏற்பாடு இன்றி

அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நடுவதை தவிர்க்க வேண்டும் - ஜனாதிபதி

போதுமான நிதி ஏற்பாடு இல்லாமல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். அடிக்கல் நாட்டிவிட்டு வருடக்கணக்கில் நிறைவு செய்யப்படாத அபிவிருத்தித் திட்டங்களால் மக்கள் தம்மையே குறை கூறுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நிறைவு செய்யப்படாதுள்ள திட்டங்களை துரிதமாக நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் பணிப்புரை விடுத்தார். (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

The Canadian University will discuss about Sri Lankan Tamils.

The Canadian Welford Laurie University had originated an Intellectuals’ panel to discuss about the Tamil refugees who had gone from Sri lanka as refugees. The Intellectuals panel will discuss on the forthcoming 18th at the Laurie University about the future of the 492 Tamils expatriates who had recently arrived to Canada and the Tamil refugees arrested with the assistance of Canada. The discussion will be on the theme of “increase entry of expatriates, the activities of foreign countries and the responsibility of Canada. The Intellectuals panel will comprise of Canadian refugees’ policy change and political division Prof.Krish Anderson, Religious Educational Prof.Amarnath Amarasingham of Wiford University, TamiL Congress Attorney Gery Anantha Shankari, Riyardson University Political Prof.Abarna Sunthar and United Nation Representative Alistair Edger. The expectations are that on conclusion of their discussions, a report will be submitted to the Canadian government.

ஐப்பசி 17, 2010

ஆள் பார்த்தே ஒழுங்காற்று நடவடிக்கை

உலகில் எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போது வேலை அதிகம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு என்று சொல்வதிலும் பார்க்க ரணிலுக்கு என்று சொல்லலாம். பொன்சேகவின் விடுதலைக்காக நாடு பூராவிலும் ‘போராட்டம்’ நடத்த வேண்டும். ரணிலின் போராட்டம் ‘தேவையற்றது’ என்று அனோமா சொன்ன பின்னும் அவர் விடுவதாக இல்லை. எங்களைக் கேட்காமல் மன்னிப்புக் கடிதம் அனுப்பிவிட்டார் என்று அனோமா சொன்னதன் அர்த்தம் அது தானே. பொன்சேகா மீது ரணிலுக்குக் கொஞ்சமும் பற்று இல்லை என்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு முக்கியஸ்தர். கட்சிக்குள் தனக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் எதிர்பைத் திசைதிருப்புவதற்காகவே விடுதலை பற்றிப் பேசுகின்றாராம். (மேலும்.....)

ஐப்பசி 17, 2010

Exposing second generation LTTE terror masters in Canada.

(Exclusive research from Sri Lanka Guardian)

Sri Lanka Guardian insiders among Tamil Diaspora had been conducting a extensive research on LTTE terror masters in Canada. We are publishing the names of individuals who had been the organizing figures of LTTE terror protests in Canada. This list will be updated on daily basis for the next two weeks. We will also publish photos of these individuals in our upcoming updated editions. (more....)

ஐப்பசி 17, 2010

பயனளிக்க முடியாத நேரடிப் பேச்சுவார்த்தை

அமெரிக்காவினது முயற்சியினாலேயே இப்பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பித்துள்ள போதிலும் அதற்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதில் அமெரிக்கா சிறிதளவும் கவனம் செலுத்தவில்லை. பேச்சுவார்த்தையில் காத்திரமான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதிலும் பார்க்கப் பேச்சு வார்த்தை இடம்பெற வேண்டும் என்பதிலேயே அமெரிக்கா அக்கறையாக இருந்திருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். பலஸ்தீனப் பிரச்சினையின் தீர்வுக்கு மேலாக உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே அமெரிக்காவின் நாட்டம் இருப்பது போல் தெரிகின்றது. மேற்குக் கரையில் இஸ்ரேல் நிர்மாணித்து வரும் குடி யிருப்புகள் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் நெதன்யாஹு அமெரிக்காவை ஏமாற்றுகின்றாரா? அல்லது அமெரிக்கா முழு உலகையும் ஏமாற்றுகின்றதா? (மேலும்.....)

ஐப்பசி 16, 2010

நாடு கடந்த தமிழீழத்தார்

தமக்குள் களையெடுப்புக்களை நடத்தப் போகின்றார்களாம்

(அருகில் உள்ள சுவரொட்டி புலிகளால் புலிகளுக்கு எதிராக கனடாவில் வெளியிடப்பட்டு பொது இடங்களில் ஒக்ரோபர் 15ம் திகதி ஒட்டப்பட்டவை)

கேபி இலங்கை அரசின் விருந்தாளியாக்கப்பட்ட பின்பு 'அமெரிக்க' உருத்திரகுமாரன் தலைவர் பொறுப்பை உத்தியோகபற்றற்ற முறையில் ஏற்றுக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து தேர்தல், பிரதம பதவி என்று எல்லாவற்றையும் தானே ஏற்றுக் கொண்டார். பதவி, பணத்திற்கு அலையும் இக் கூட்டத்திற்குள் தற்போது பலத்த குத்து வெட்டு. தொடர்ந்து இரு குழுக்களாக பிரிந்து கொண்டனர். இரு குழுக்களும் ஒருவரையொருவர் துரோகிகள் என்று சொல்லி கொள்கின்றனர். இப்ப என்னடாவென்றால் ஒரு குழு மற்ற குழுவை கை நீட்டி களையெடுக்கப் போகின்றார்கள் என்று புறப்பட்டு விட்டனர். இதன் தொடர்ச்சியாக கனடாவில் தமிழ் கடைகளின் சுவர்களில் களையெடுப்பு பற்றிய சுவரொட்டிகளும், துரோகிகளின் பெயர் விபரமும் வெளியாகியுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 16, 2010

தடுப்பு முகாம்களில் உள்ளோர் பற்றிய திருப்பமான பதில் ஒருவாரத்தில் கிடைக்கும்

வன்னிப் பகுதிகளில் நல்லிணக்க ஆணைக்குழு பொதுமக்களிடம் நடத்திய பகிரங்க விசாரணைகளின்போது, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் காணாமற்போனவர்களைத் தேடித் தருமாறும் கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டன. அதன்படி, தடுத்து வைக் கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு ஆணைக் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறானவர்களின் விபரங்களைத் தபால் மூலம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறினார். கிடைக்கப்பெறும் விபரங்களைக் கொண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் தனியாகக் கலந்துரையாடி பதிலொன்றைப் பெற்றுத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார். இது பற்றி ஒரு வார காலத்தினுள் திருப்பமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். (மேலும்....)

ஐப்பசி 16, 2010

அகதிகள் விடயத்தில் கடும் போக்கை கடைப்பிடிக்கும் கனடா அரசு

எம்.வி.சன்.சி கப்பலில் பயணித்து போலியான ஆவணத்தை சமர்பித்த கணவன் மனைவி கைது

எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் 492 பேரில் கணவன் மனைவி இருவர் போலியான ஆவணத்தை சமர்பித்தமையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தும் இன்னும் சிலரும் கைது செய்யப்படலாம் என கனடா நாட்டிலிருந்து செய்திகள் கசிகின்றன. இதில் முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் முக்கியமாக அடங்கி இருப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐப்பசி 16, 2010

இலங்கை-இந்திய ஒத்துழைப்பு குறித்து

ஜனாதிபதி மஹிந்த - பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு

கடந்த ஜூன் மாதத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்த போது இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகளை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வது பற்றி இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சு நடத்தியுள்ளனர். இந்திய அரசின் உதவியுடன் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நிறைவுசெய்யக் கூடியதாக இருக்குமென இத்திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் அறிவித்துள்ளதுடன், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர். இதேவேளை, இரு நாடுக ளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொள் ளப்பட்டுள்ள பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.(மேலும்....)

ஐப்பசி 16, 2010

முரண்படும் பிரித்தானியா

நேட்டோ நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு அவசியம் - ஹிலாரி கிளின்டன்

நேட்டோ நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு சமவிகிதத்தில் அமைய வேண்டுமென அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார். வியாழக்கிழமை புருஸெல்ஸில் நடந்த முக்கிய கூட்டமொன்றில் அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதன் போது உரையாற்றும் போதே ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு கூறினார். பிரிட்டன் அரசாங்கம் 2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான பாதுகாப்பு செலவினத்தை குறைக்கவுள்ளது. வெளிநாடுகளிலுள்ள பிரிட்டன் படைகளை யும் விரைவில் வாபஸ் பெற எண்ணியுள் ளது. டேவிட் கெமரோன் தலைமையிலான புதிய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவுகள் அமெரிக்காவைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 16, 2010

 

‘குளிர்வித்தால்’ காப்பாற்றலாம்!

விபத்தில் காயம் அடைந்தவர்கள் அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் முன் தண்ணீரில் குளிர்வித்தால் காப்பாற்றலாம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தப் புதிய நுட்பம், காயம் அடைந்த வரின் உடம்மை முழுமையாக மூடச் செய்யும். அதன் மூலம், மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய கூடுதல் நேரம் அளிக்கும் என்பது ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு. விபத்தில் பாதிக்கப்பட்டவரின் இதயத் துடிப்பு நின்றுபோன நிலையில் மூளை சேதம் அடையாளம் இந்த உதவி காக்கும். மயக்க, மருந்து மூச்சு ஆதரவு எந்திரங்களும் தேவையில்லை. (மேலும்....)

ஐப்பசி 16, 2010

புனர்வாழ்வு பெற்ற 500 பேர் நேற்று உறவினர்களிடம் ஒப்படைப்பு

முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சுமார் 500 பேர் நேற்று (15) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பான நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விடுவிக்கப்பட்டவர்களுள் கூடுதலானோர் பெண்களாவர். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 300 பெண்கள் உட்பட 500 பேர் பெற்றோர்கள், பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் பிரி கேடியர் சுனந்த ரணசிங்க, வன்னி பாது காப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

ஐப்பசி 16, 2010

காமன்வெல்த் போட்டிகள் நல்லபடியாக  முடிந்தது

இந்திய நாட்டின், பாமர மக்களும் பதக்கங்கள் பெற முடியும் என்பதை இப்போட்டிகள் வெளிப்படுத்தியுள்ளது. விவசாயி, ஆட்டோ டிரைவர், பால்வியாபாரி ஆகிய அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் பதக்கங்களை வென்றுள்ளனர். வாழ்வின் மேல்தட்டில் உள்ள அபிநவ் பிந்த்ரா போன்றவர்களுடன் பழங்குடி மக்கள் மற்றும் ஏழைகளின் வாரிசுகளும் தோளோடு தோள் உரசி நின்று இந்திய நாட்டின் பெருமைக்கு வலு சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். பாதுகாப்பு கருதி போட்டிகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த பல பிரபல விளையாட்டு வீரர்களுக்கு இப்போட்டிகள் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் விலகலை பூதாகரமாக்கிய ஊடகங்களுக்கும் முகத்தில் கரிபூசப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 16, 2010

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை, சுவிஸில் வெற்றிகரமாகத் திறக்கப்பட்டது!

எட்டு ஆண்களுக்கு முன் அல்ப்ஸ் மலையின் வடக்கு தெற்குப் பகுதிகளில் இருந்து மலையைக் குடையும் பணி தொடங்கப்பட்டது.  57 கிலோ மீற்றர் நீளமான இந்தப்பாதையின் நடுப்பகுதியில்,  சுமார் 2 மீற்றர் கனமான பாறைத் தொகுதியை, வடபகுதியில் இருந்து   'சிச்சி' எனற குறியீட்டுப் பேரைக் கொண்ட துளையிடும் இயந்திரம், ஐரோப்பிய நேரம் பகல் 2.05 மணிக்குத் துளையிடத் தொடங்கியது. சரியாக 2.18 நிமிடத்திற்கு, 2000க்கும் அதிகமான பார்வையாளர்கள் நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கானோர் உலகின் பலபாகங்களிலும் இருந்து தொலைக்காட்சி வழியாகவும் பாரத்திருக்க, பலத்த கரவொலிகளின் மத்தியில்,  தனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி, சுரங்கப்பாதையின் இறுதிப்பகுதியைத் துளைத்தெடுத்து,  இரு பகுதிகளையும் ஒன்றினைத்தது. (மேலும்....)

ஐப்பசி 16, 2010

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட பேராசிரியர் வீடியோவில் உருக்கமான வேண்டுகோள்

பாகிஸ்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட பேராசிரியரைத் தலிபான்கள் நடத்தும் விதம் குறித்த வீடியோ நாடாவை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். கடந்த 07 ஆம் திகதி பேராசிரியர் அஜ்மல் கான் தலிபான்களால் கடத்தப்பட்டார். இவர் பக்தூன் மாகாணத்தை ஆளும் அவாமி தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினருமாவார். இதய நோயாளியான இவர் வீடியோவில் உருக்கமான வேண்டுகோளை பாகிஸ்தான் அரசுக்கு விடுத்துள்ளார். தன்னை விடுதலை செய்ய தலிபான்கள் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளும்படி போராசிரியர் கேட்டுள்ளார். (மேலும்....)

ஐப்பசி 16, 2010

மீன்பிடி படகுகளை மீட்டு செல்ல

17 தமிழக மீனவர்கள் தலைமன்னார் வருகை

இலங்கை கடற்பரப்பினுள் மூழ்கி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட மீன்பிடி படகுகளை எடுத்துச் செல்வதற்காக தமிழக மீனவர்கள் 17 பேர் தலைமன்னார் வருகை தந்துள்ளனர். ஜுலை 22 ஆம் திகதியளவில் இலங்கை கடற் பரப்பிற்குள் மூழ்கிய தமது படகுகளை மீட்க முடியாமல் இலங்கை கடற் படையினரின் உதவியுடன் தமிழகம் திரும்பினர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களுடன் இணைந்து படகுகளை மீட்க முற்பட்ட போதும் மீட்க முடியாததால் ராமேஸ்வரம் மீனவர்களை அனுப்பி வைத்த இலங்கை கடற்படையினர், அடு த்த சில நாட்களில் இரண்டு படகுகளையும் மீட்டு தலைமன்னார் கடற்படை முகாமில் நிறுத்தினர். (மேலும்....)

ஐப்பசி 16, 2010

கொமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு 101 வாழ்த்துக்கள் - சச்சின்

கொமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு 101 வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்தியா கொமன்வெல்த் போட்டியில் 101 பதக்கங்கள் வென்றதையொட்டி இவ்வாறு 101 வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார் சச்சின். இது குறித்து தனது ட்விட்டர் செய்தி மூலம் சச்சின் கருத்து தெரிவிக்கையில், நமது கொமன்வெல்த் போட்டி சம்பியன்கள் அனைவருக்கும் 101 வாழ்த்துக்கள். உங்களது கடின உழைப்பும், பல்வேறு தியாகங்களுமே இந்த பெருமையை நாடு அடைவதற்குக் காரணம். நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்திவிட்டீர்கள் என்று கூறியுள்ளார் சச்சின். (மேலும்....)

ஐப்பசி 15, 2010

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு

தலைநகர் தில்லியில் இம்மாதம் 3ம்தேதி முதல் 14ம்தேதி வரை, 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி துடிப்புமிக்க விளையாட்டு உணர்வுடன் நடந்தது. 17 விளையாட்டுக ளில் 771 பதக்கங்களுக்கு 71 நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டனர். 7 ஆயிரம் வீரர் - வீராங் கனைகள் கடந்த இருவார மாகவே தங்களது சொந்த நாட்டில் இருப்பதை போன்ற உணர்வுடன், மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர். இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட் டுள்ள காமன்வெல்த் போட்டி, அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்று, வியாழனன்று நீங்காத நினைவுகளுடன் நிறைவு பெற்றது. துவக்கவிழா நடந்த ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்திலேயே நிறை வுவிழாவும் நடைபெற்றது. பார்வையாளர்களை துவக்கவிழா ஈர்த்ததை போன்று நிறைவு விழாவும் நீங்காத நினைவுகளுடன் கண்கவர் கலை நிகழ்ச்சி கள், இசைநிகழ்ச்சிகளை கொண்டு வந்தது. (மேலும்....)

தமிழில் படித்தால் வேலையா?

(எஸ். கண்ணன்)

மொழித் தகவல் தொடர்பின் அச்சு. பண்பாட்டின் வேர். மொழிதான் ஒரு சமூகம் குறித்த தொன்மையை, வரலாற்றை முழுமை யாக ஆய்வு செய்யப் பயன்படும், ஆய்வு முறையின் பிரதான கருவி. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பெருமைக்கு உரிய மொழியைப் பாடமாக கொண்டால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை எனப் பேசுவதும், அவசரச் சட்டம் இயற்றுவதும் ஒரு சமூகத் தில் நடந்தால், அந்த சமூகம் தன் தாய்மொழி குறித்தும், அதனுடன் இணைந்த வேலை வாய்ப்பு குறித்தும், கடந்த காலத்தில் சிந்திக்க வில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இங்கு விவாதிக்கும் இந்தப் பிரச்சனை வெளிப்பட்டிருக்கும் சமூகம் தமிழ்ச் சமூகம் ஆகும். (மேலும்....) 

ஐப்பசி 15, 2010

தமிழர்கள் பொருளாதார நோக்கத்தை முதன்மைப் படுத்தியே வெளிநாடுகளிடம் புகலிடம் கோருகின்றனர் - இலங்கை அரசு

தமிழர்கள் பொருளாதார நோக்கத்தை முதன்மைப் படுத்தியே வெளிநாடுகளிடம் புகலிடம் கோருகின்றனர் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடமொன்றுக்கு வழங்கிய பேட்டியிவேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எமது நாட்டை பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலோ கிடையாது. ஆனால் இவர்கள் பொருளாதார நோக்கமொன்றை மையமாகக் கொண்டு வெளிநாடுகளிடம் புகலிடம் கோருகின்றனர். நாட்டில் தற்போது யுத்தம் முடிவடைந்து சுமுகமான நிலை காணப்படுகின்றது. எனவே எவரும் அச்சம் கொள்ள வேண்டியது இல்லை. இந்நிலையில் நாட்டின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். என தெரிவித்தார்.

ஐப்பசி 15, 2010

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் அடுத்த வாரத்தில் நடைபெறுமென தேர்தல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அரசியல் கட்சியாக அனுமதிகோரி இது வரையில் 82 விண்ணப்பங்கள் தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள துடன், அதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒருசில விண்ணப்பதார ர்களுக்கு மாத்திரம் இதற்கான அழைப்பு விடுக்கப்படுமென அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள பிரமாணங்களிற்கேற்ப தகைமைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படமாட்டாது எனவும் அந்த வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வருகிறது.

ஐப்பசி 15, 2010

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் _

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. நகர மண்டபத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள உயர் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் பல்கலைக்கழக மாணவர்கள் அத்து மீறி பிரவேசித்ததையடுத்து இம் மோதல் இடம்பெற்றுள்ளது. வாயிற் கதவுகளை உடைத்து மாணவர்கள் உயர் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பிரவேசித்ததாகவும் பின் உயர்கல்வி அமைச்சிலிருந்து வெளியேறிய மாணவர்கள் விஹாரமஹாதேவி பூங்காவிற்குள் பிரவேசித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொலிஸார் மாணவர்கள் மீது தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (மேலும்....)

ஐப்பசி 15, 2010

The race has begun

It looks as if President Mahinda Rajapaksa had already launched his campaign for securing a third term even before being sworn in for the second one. What matters most in power politics is reaching out to the people at the grassroots as well as attending to their pressing needs in a tangible way, for it is their votes that matter at an election. The President is doing just that. He is conducting development review meetings at the provincial level like the recent one in the North-Western Province, where he scored heavily, as it were. These gatherings are, to some extent, reminiscent of the late President Ranasinghe Premadasa's 'mobile service', which became a huge success in that the voiceless public who had suffered at the hands of the callous bureaucracy for years got instant relief thanks to his intervention. (more....)

ஐப்பசி 15, 2010

இலங்கை- இந்தியா இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தலை மன்னாருக்கும் இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இடையில் இந்த கப்பல் போக்குவரத்து சேவை நடத்தப்பட உள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் வர்த்தகக் கப்பல் பிரிவு பொறுப்பாளர் சாந்த வீரக்கோன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் காரணமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ___

ஐப்பசி 15, 2010

வெனிசூலா ஜனாதிபதி வர்த்தக சுற்று பயணம்: பல நாடுகளுடன் ஒப்பந்தம்

எரிபொருள் தொடர்பான உடன்படிக்கை யொன்றிலும் ரஷ்ய, வெனிசூலா தலை வர்கள் ஏற்கனவே கை எழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதையடுத்து ஈரான், லிபியா, போர்த்துக்கல், சிரியா, உக்ரைன், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் பயணிப்பார். அமெரிக்காவின் பரம வைரியாக ஈரானுள்ளது. இங்கு செல்லும் சாவெஸ் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகளைக் கண்டித்து உரையாற்றுவார். 2006ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய வெனிசூலா ஜனாதிபதி அமெரிக்காவை கடுமையாகக் கண்டித்தார். (மேலும்....)

ஐப்பசி 15, 2010

Former Canadian Ambassador applauds Sri Lanka's post-war situation

The case cannot be made that Tamils in general in Sri Lanka suffer from persecution. Among other things, they continued to occupy senior positions in government throughout the war and still do so, former Canadian Ambassador to Asia and the Middle East and a spokesman for the Centre for Immigration Policy Reform, Martin Collacott said in an article on Ottawa Citizen published yesterday (11). 'The situation in Sri Lanka, moreover, could not have been as dire for Tamils as asylum seekers allege since large numbers of them have gone back to visit their relatives after filing their claims in Canada', the report added. (more...)

ஐப்பசி 15, 2010

கொழும்பை தூய நகரமாக்குவதில் அரசியல் நோக்கம் கிடையாது

 ‘கொழும்பு நகரில் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி குடிசைகளில் வாழும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய சூழலில் வீட்டு வசதி அளிக்கப்படும். கொழும்பு நகரை தூய்மையான அழகிய நகரமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். கொழும்பிலுள்ள குடிசை வீடுகளை அகற்றுவதில் எதுவித அரசியல் நோக்கமும் கிடையாது’ என அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறினார். அரசாங்க காணிகளில் சட்டவிரோதமாக குடியிருக்கும் மக்களை அரசாங்கம் வெளியேற்றப்போவதாக எதிர்க் கட்சிகள் தவறான பிரசாரம் முன்னெடுக்கின்றன. சுகாதாரமற்ற பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் வசதிகளுடன் கூடிய பொருத்தமான பகுதிகளில் குடியமர்த்தவே திட்டமிட்டுள்ளோம். (மேலும்....)

ஐப்பசி 15, 2010

இஸ்ரேல் இருக்கின்றவரை மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை - ஈரான் ஜனாதிபதி

விசேட உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி கூறியதாவது, இஸ்ரேல் இருக்கும் வரை மத்திய கிழக்கில் அமைதி வராது. ஆக்கிரமிப்பிற்கான விலைகளை இஸ்ரேல் என்றைக்காவது செலுத்த நேரிடும். இஸ்ரேலின் இருப்பை எதிர்த்துப் போராடும் ஹிஸ்புல்லாக்களின் துணிவைப் பாராட்டுகிறேன் என்றார். குண்டு துளைக் காத கண்ணாடிக் கூண்டில் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டபோதும் அஹ்மெதி நெஜாத் வெளியில் நின்றவாறே உரையாற் றினார். இதற்கு முன்னர் லெபனான் ஜனாதிபதி மைகல் சுலைமான் பிரதமர் சாட் ஹரிரி ஆகியோரையும் சந்தித்தார். (மேலும்....)

 

ஐப்பசி 15, 2010

Jaffna soldiers now fighting a different war to ensure wellbeing of civilians - GA Jaffna

Soldiers and the commander SF Jaffna who fought against terrorism in the recent past are now fighting for the wellbeing of the war affected civilians and we must thank them for their noble effort " said Mrs Emelda Sukumar , the District Secretary and Government Agent Jaffna on 09 October 2010.She told the above in a function held at the Kopay Government Teachers' College to hand over wheelchairs and artificial limbs to physically handicapped civilians in the area. (more....)

ஐப்பசி 15, 2010

பழமொழி சொல்லும் மருத்துவக் குறிப்பு

(முனைவர் சி. சேதுராமன்)

மிளகு எந்த விடத்தையும் உடன் முறிக்கக் கூடிய ஓர் அரிய மருந்தாகும். தேள், பாம்பு, பூரான், பிற தெரியாத பூச்சிகடிகளுக்கு மிளகையும், ஒரு வெற்றிலையையும் வைத்துத் தின்று உள் விழுங்கினால் விடம் உடலில் உடனே பரவாது. நமக்குத் தெரியாமல் பிறர், உணவில் விடம் வைத்திருந்தாலும் அதனை உண்டால் மிளகு அதனை முறித்துவிடும். மிளகிற்கு விடத்தை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது. இம்மருத்துவக் குறிப்பு, ‘நான்கு மிளகும் ஒரு வெத்திலையும் இருந்தா பகைவன் வீட்டில் கூட உணவருந்தலாம்’ என்ற பழமொழியில் இடம்பெற்றுள்ளது. அதனால் தான் நமது முன்னோர்கள் மிளகை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டனர். மேலும் காரத்திற்கு மிளகையே அதிகம் பயன்படுத்தினர். இன்று மிளகிற்குப் பதில் மிளகாயைப் பயன்படுத்துகின்றனர். அதனால் பல்வேறு வயிற்று நோய்களுக்கு இன்று மக்கள் ஆளாகின்றனர் எனலாம். (மேலும்....)

ஐப்பசி 15, 2010

விழிப்புலனை பேணி பாதுகாப்பதன் அவசியம்

பார்வைக் கோளாறுகள் ஏற்படுவதற்கு நீரிழிவு வியாதியே கூடுதலாக காரணமாகிறது. நீரிழிவு நோயானது கட்டுப்பா ட்டில் வைத்திருக்கக் கூடியது. கட்டுப்பாட்டில் வைக்கப்ப டாத போது நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உடலுறுப் புகளில் கண்களும் அடங்குகின்றன. கண்களில் வெண்திரை படர்தல், கண்களினுள் உயர் அழுத்தம் தோன்றுதல், குளு க்கோமா மற்றும் கண் நரம்புப் பாதிப்புகள் போன்றவை ஏற்படுவதற்கு நீரிழிவு நோயே காரணமாகிறது. எனவே தான் நீரிழிவு நோயை ‘அமைதியான கொலைகாரன்’ என்று டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர். கண்களைப் பாதுகா க்க வேண்டுமானால் இரத்தத்தில் சீனியின் அளவை கட் டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்பது வைத்தி யர்களின் முக்கிய அறிவுரையாகும். (மேலும்....)

ஐப்பசி 15, 2010

மருத்துவத் துறையில் ஒரு புரட்சி

அபூர்வமான நோய்க்குக் காரணமான ஜீன் கண்டுபிடிப்பு

ரத்தக்குழாய்களின் இயல்பான சுருங்குதல் மற்றும் விரிதலைப் பாதிக்கும் அபூர்வமான நோயை ஏற்படுத்தக்கூடிய ஜெனடிக் ம்யூட்டேஷனை டேனிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று டேனிஷ் தினசரி ஜைலாண்ஸ் போஸ்ட்டன் தெரிவித்துள்ளது. ஆர்கஸ் மருத்துவப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஆர். ஈஸ்டர்கார்டு மற் றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய பெயரிடப்படாத சோதனையில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர் என்று அப்பத்திரிகைத் தகவல் கூறுகிறது. (மேலும்....)

ஐப்பசி 14, 2010

மெய் 'சிலி'ர்க்கிறது!

வெளியேறும்போது யார் முதலில் என்ற கேள்விக்கு, தங்களில் திறமையானவரும், எந்தச் சிக்கலிலும் மனஉறுதி தளராதவருமான ஃபிளோரன்சியா அவலோள்ஸ தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால், 700 மீட்டர் ஆழத்திலிருந்து குழல்உறை மேலே செல்லும்போது மீண்டும் மண்சரிவு, அல்லது பாறை அழுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேரிட்டால் அந்தச் சூழலில் மனம் தளராமல் இருப்பார் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும். இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் பல்வேறு கனிமப் பொருள்களுக்காக எத்தகைய துயரங்களை பெயர்தெரியாத மனிதர்கள் சந்திக்க நேர்கிறது என்பதும் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதும்தான். (மேலும்....)

ஐப்பசி 14, 2010

 

யாழ். சிங்கள மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பான கருத்துப் பகிர்வு

யாழ். திரும்பியுள்ள சிங்கள மக்களின் மீள் குடியேற்றம் என்ற கருப்பொருளிலான பகிரங்க கருத்துப் பகிர்வு நிகழ்வொன்று எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த கருத்துப் பகிர்வு நிகழ்வை யாழ். ஆய்வறிவாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் இச்செயலமர்வில் கருத்துரை வழங்க அனுமதிக்கப்படுவரென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஐப்பசி 14, 2010

டெஸ்ட் தரவரிசையில் சச்சின் முதலிடம்

 இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் போட்டி தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் உட்பட 403 ஒட்டங்களை பெற்று கொண்டார்.இதனால் இவர் 891 புள்ளிகளுடன் முதலாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

ஐப்பசி 14, 2010

மானிப்பாய் இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையாகத் தரமுயர்வு. தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு விழா

மானிப்பாய் இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையாகக் கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது. வலிகாமம் கல்வி வலயத்தின் முதல் பாடசாலையாக மானிப்பாய் இந்துக் கல்லூரி தரமுயர்த்தப்பட்டுள்ளது. தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின்  நூற்றாண்டு விழாவையொட்டி நாளை 14ஆம் திகதி காலை மாலையென இரண்டு நேர நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. காலை அமர்வுகள் அதிபர் திருமதி. சிவமலர் அனந்தசயனன் தலைமையில் பாவலர் துரையப்பா மண்டபத்தில் இடம்பெறவுள்ளன. (மேலும்....)

ஐப்பசி 14, 2010

குத்துச்சண்டையில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்

இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை 72 வருடங்களின் பின்னர் குத்துச்சண்டையில் முதலாவது தங்கப் பதக்கத்தை நேற்று வென்றது. 56 கிலோகிராம் எடைப் பிரிவில் குத்துச் சண்டைப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி இலங்கைக்கான முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார். இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.20 அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி வேல்ஸ் நாட்டின் சீன் மெக் கோல்ரீக் என்பவருடன் மோதினார். இந்தப் போட்டியில் 16-14 புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டினார். (மேலும்....)

ஐப்பசி 14, 2010

69 நாட்கள்...! 700 மீற்றர் ஆழம்...!

சிலி சுரங்கத்தினுள் சிக்கியோர் வெற்றிகரமாக மீட்பு

சிலியில் 68 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கி ஜீவ மரணப் போராட்டம் நடத்திய 33 சுரங்கத் தொழிலாளர்களையும் மீட்கும் பணி நேற்று ஆரம்பமாகியது. இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 6.30 அளவில் பிளாரென்கியோ அவலோன் என்ற நபர் முதலில் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடைசியாக கிடைக்கப் பெற்ற செய்திகளின்படி சகலரும்(33 சுரங்கத் தொழிலாளர்கள்) மீட்கப்பட்டுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 14, 2010

இந்தியாவை அலட்சியம் செய்ததே பிரச்சினைகளை சிக்கலாக்கின - ஜெகான் பெரேரா

நாட்டின் கடந்த கால அரசுகள் இந்தி யாவின் நிலைப்பாட்டை அலட்சியம் செய்ததன் விளைவாகவே பிரச்சினை சிக்கலாகியதாக இலங்கை சமாதானப் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெகான் பெரேரா தெரிவித்தார். இந்தியாவின் நிலைப்பாட்டை நாம் அலட்சியம் செய்ததால், ஆயுதக் குழுக்களுக் குப் பயிற்சி அளித்தது என்று தெரிவித்த அவர், இந்தியாவின் கரிசனை இன்றும் நாளையும் என்றும் கவனத்திற்கொள்ளப் படவேண்டுமென்றும் வலியுறுத்தினார். (மேலும்....)

ஐப்பசி 14, 2010

Jubilation as miners lifted to safety

(Nathan VanderKlippe)

After 69 days, the deep Chilean tomb is giving up its captives. Remarkable scenes of rescue have now become commonplace at this isolated spot in the Chilean desert. Over the day, 25 men have emerged from the depths of the mine that has held them and eight co-workers hostage for more than two months. But even amid the cheering that continues to great each successful removal, the salvation of Mario Gomez stood out on a night — and now morning — filled with overwhelming emotion. Mr. Gomez, at 63, was expected to be among the most fragile of the miners. He was expected to wear a full oxygen mask as he rose to the surface, as an added measure of protection for a man who is the oldest among the trapped and who suffers from silicosis disease. (more....)

ஐப்பசி 14, 2010

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு சுழற்சிமுறை உறுப்புரிமை

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இடம் பெற்றுள்ளது. நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இவற்றுக்கு ‘வீட்டோ’ அதிகாரமும் உள்ளது. அதே சமயத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளும் உள்ளன. இந்த நாடுகள், கண்டங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த நாடுகளுக்கு ‘வீட்டோ’ அதிகாரம் கிடையாது. (மேலும்....)

ஐப்பசி 14, 2010

லெபனான் சென்ற ஈரான் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் நேற்று லெபனான் சென்றபோது பாரிய வரவேற்பளிக்கப்பட்டது. பெய்ரூத் விமான நிலையத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை அஹ்மெதி நெஜாத் திறந்த வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். ஆயிரக்கணக்கானோர் திரண்டு பூக்கள், அரிசி மணிகள் தூவி வரவேற்றதுடன் மாலைகளையும் அணிவித்தனர். லெபனான் ஸியா முஸ்லிம்கள் பலஸ்தீன் அகதிகள் எனப் பெருந்தொகையானோர் ஈரான் ஜனாதிபதியை வரவேற்று அழைத்துச் சென்றனர். வீதியெங்கும் அஹ்மெதி நெஜாத்தின் உருவப்படங்கள் இவரை வாழ்த்தும் சுலோகங்கள், ஆயத்துல்லா அலி கொமெய்னி, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லா ருஹுல்லா கொமெய்னியின் உருவப்படங் களும் தொங்கவிடப்பட்டன. (மேலும்....)

ஐப்பசி 14, 2010

கொலைக்குற்றச்சாட்டு

கல்முனையில் இரு இளைஞர்களுக்கு மரண தண்டனை

கல்முனையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இரு இளைஞர்களுக்கு கல்முனை மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. கல்முனைக்குடியில் கடந்த 2007,07,06ம் திகதி கல்முனைக்குடியைச் சேர்ந்த முகம்மட் யூசுப் முகம்மட் பரீட் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று பேருக்கு எதிராக கல்முனை மஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது. இவ்வழக்கு தீர்ப்புக்காக கல்முனை மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த வேளையில் நேற்று (13) புதன்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றின் மின் விளக்குகள், மின் விசிறிகள் அணைக்கப்பட்டு எல்லோரும் எழுந்து நின்று 2ம், 3ம் எதிரிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் முதலாவது எதிரி மன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கல்முனைக்குடியைச் சேர்ந்த முகம்மது அம்ஜத் (வயது 27) சாய்ந்தமருதைச் சேர்ந்த பஸ்மிர் (வயது 25) ஆகிய இருவருக்குமே தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஐப்பசி 14, 2010

அபிவிருத்திக் காலகட்டம்

ஜனாதிபதியின் முதலாவது பதவிக்காலம் நெருக்கடியான காலகட்டத்தில் ஆரம்பமாகியது. புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகள் அக்காலப்பகுதியில் நாளு க்கு நாள் அதிகரித்தன. ஏற்குறைய ஒவ்வொரு நாளும் படையினரின் வாகனங்கள் புலிகளின் கண்ணிவெடி யில் சிக்கின. ஏராளம் படைவீரர்கள் உயிரிழந்தனர். நாட் டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், இந்த நிலையிலும் புலிகள் இயக்கத்து டன் பேச்சுவார்த்தை நடத்துவதையே ஜனாதிபதி விரு ம்பினார். ஆனால் ஜனாதிபதியின் அழைப்புகளுக்குப் புலிகள் சரியான பிரதிபலிப்பை வெளிப்படுத்தவி ல்லை. மாவிலாறு துருசை மூடி நெருக்கடியைத் தோற் றுவித்ததால் அவர்களுக்கு எதிரான இராணுவ நடவடி க்கைக்கு உத்தரவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிப திக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை முழு நாடும் அறியும். (மேலும்....)

ஐப்பசி 14, 2010

பிரான்ஸ் வீதிகளில் கொந்தளிப்பு

பிரான்ஸ் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பிரான்ஸ் நாட்டு பல நகரங்களின் வீதிகளில் ஆவேச முழக்கங்களுடன் வலம் வருகிறார்கள். இவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க அரசு மறுப்பதால் அவர்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலை உருவாகியுள்ளது. செவ்வாயன்று நடைபெற்ற வேலைநிறுத்தங்களுக்கு தொழிலாளர்களிடமிருந்து மட்டுமல்ல, பொதுமக்களிடமிருந்தும் ஏகோபித்த ஆதரவு கிடைத்ததால் அடுத்தகட்ட போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தனது மோசமான கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்பிற்கு தொழிலாளர்களை வஞ்சிக்கக் கூடாது என்பது பிரான்ஸ் நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. பிரான்ஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அயர்லாந்து, பிரிட்டன், போர்ச்சுகல், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளிலும் எடுக்கப்படுகின்றன. அங்கும் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அக்டோபர் 16 அன்று இத்தாலியில் நாடு தழுவிய ஆர்ப் பாட்டங்கள் நடக்கப்போகின்றன.(மேலும்....)

ஐப்பசி 14, 2010

பிரான்ஸ் சொல்லும் சேதி... 

உலக மயம், தாராள மயம், தனியார் மயம், இவை முதலாளித்துவத்தை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதிலிருந்து தப்பிக்க முதலாளித்துவ நாடுகளில் சிக்கன நடவடிக்கைகள் என்கிற பெயரால் உழைப்பாளி மக்களின் உரிமைகளை பறிக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரான்ஸ் நாட்டில் உழைப்பாளி மக்களின் ஓய்வூதிய வயதை 60லிருந்து 62ஆக உயர்த்தவும்; மேலும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் வயதை 65லிருந்து 67ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் உழைப்பாளி மக்களின் ஓய்வூதியத்தை குறைக்கவும் திருடவும் பல் வேறு விதமான நிபந்தனைகளுடன் புதிய ஓய்வூ திய சட்டத்தை நிறைவேற்ற பிரான்ஸ் வெறித் தனமாக உள்ளதால், தொழிலாளி வர்க்கம் வீதியில் திரண்டு நிற்கிறது.
 (மேலும்....)

ஐப்பசி 13, 2010

“பாவமன்னிப்பு அரசியல்”

(கற்சுறா)

இலங்கை அரசு மேற்கொள்ளும் புலிகளின் அழிப்பு  என்பது தமிழ் மக்கள் மீதான அழிப்பல்ல. இந்த யுத்தத்தை விரும்பித் தொடங்கியவர்கள் புலிகளே என்றும் மக்களை மாட்டுமந்தைகள் சாய்ப்பது போல் தம்முடன் சாய்த்துக் கொண்டு போகிறவர்கள் புலிகள் தான் என்றும் இந்த மக்களை இலங்கை அரசு அழிப்பதை விட புலிகள் தான் தொடர்ந்தும் கோரமாக அழித்து வருகிறார்கள் என்றும் யுத்தம் நடந்த காலங்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர்கள் நாங்கள். தமிழ்த் தேசியவாதிகளும் புலிகளின் உத்தியோகத்தர்களும் சொல்வது போல் தமிழ் மக்களும் புலிகளும் ஒன்றல்ல. புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று மிகவும் இறுக்கமாகச் சொல்லியிருந்தோம். வன்னியில் நடந்த சண்டையில் மக்களைப் புலிகள் கொத்துக் கொத்தாகச் சுட்டுத் தள்ளுகிறார்கள், யுத்தத்திற்குள்ளும் குழந்தைகளைக் கடத்துகிறார்கள் என்றும் நாம் சொல்லிக்கொண்டிருந்ததை வெறும் புலி எதிர்ப்புக் கோசமாக தேடகம் உட்பட பலர் தவிர்த்துவிட்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று இவர்கள் எல்லோருக்கும் சி.கா. செந்தில்வேல் அவர்கள் இலங்கையிலிருந்து வந்து சொல்ல வேண்டியிருக்கிறது. (மேலும்....)

ஐப்பசி 13, 2010

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் மாகாண சபை உறுப்பினரை நீதிமன்றம் விடுவித்தது

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம், வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் உட்பட ஐவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் இன்று விடுதலை செய்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கருகில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்ததாகவும், போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தி காத்தான்குடி பொலிஸார் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம், வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர்,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், ஆகியோர் மீது வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு இன்று காலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 5 எதிராளிகளையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

ஐப்பசி 13, 2010

புலிகளே புலிகளைப் பற்றி கூறுகின்றார்கள்

மீண்டும் துரோகிப் பட்டம் சூட்டி கொலை வெறியாட தயாராகும் நாடு கடந்த தமிழீழக்காரர்

நாடுகடந்த தமிழீழ அரசை சிதைக்க சிறிலங்கா திட்டம்: கைக் கூலிகளாக கனடா உலகத்தமிழர் இயக்க ஊழியர்கள் சிலர்!

“தனி ஒரு மனிதனின் கையில் அதிகாரத்தைக் கொடுத்ததால் கருணா மூலம் கிழக்கை இழந்தோம்” எனக் குறிப்பிட்டதான் மூலம் அவர்கள் தேசியத்தை மாத்திரமல்ல எமது தேசியத் தலைவரையே கொச்சைப்படுத்தியதை வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. உலகத் தமிழர் பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்த வசனங்கள்தானா உங்களுடைய தற்போதைய நிலைப்பாடு என வெளிநடப்புச் செய்த இந்தக் குழுவினரை நாம் கேட்டுக் கொள்ளும் அதே நேரம் புனிதமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நீங்கள் முற்றுமுழுதாகக் கைகழுவி விட்டுவிட்டீர்களா என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்குமாறும் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். இவர்களை மாத்திரமல்ல, இவர்களைப் போன்ற சகலரையும் இனங்கண்டு களையெடுக்க வேண்டிய கடமை இப்பொழுது தமிழ் மக்களாகிய உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 13, 2010

இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ஒத்துழைப்பு அணுகுமுறை

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியைப் பொறுத்தவரையில், இரண்டு விதமான அணுகுமுறைகள் கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டன. பதவியிலுள்ள அரசாங்கத்தை முழுமையாக எதிர்க்கும் அணுகுமுறை ஒன்று. அரசாங்கத்துடன் சங்கமித்துப் போகும் அணுகுமுறை மற்றையது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசாங்க காலங்களில் தமிழ்த் தலைவர்கள் முழுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டையே எடுத்தனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாகத் தமிழ்க் கட்சிகள் செயற்பட்ட காலத்தைச் சரணாகதி அரசியலுக்கு உதாரணமாகக் கூறலாம். (மேலும்....)

ஐப்பசி 13, 2010

தாய்லாந்தில் கைதான 130 இலங்கையரையும் திருப்பியழைப்பதற்கு உதவ அரசு தயார்

தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 130 பேரையும் தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இலங்கை திரும்ப விரும்பினால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்யத் தயாரென்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இலங்கைக்குத் திரும்பிச் செல்லப்போவதில்லையென அவர்கள் மறுத்துவிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 13, 2010

President Vs the General – to be or not to be?

(by Luxman-Arvind)

Foreign governments with regular contact with Sri Lanka expressing the view releasing Sarath Fonseka will be the right thing to do gains further strength when the Tamil National Alliance adds to the chorus of pleas for his release. Astonishingly, a strong voice from the Tamil diaspora - David Poopalapillai of the Canadian Tamil Congress - coming out of his tree to ask for the release of Fonseka surprises many. Poopalapillai is widely identified with the LTTE for long – despite his denials now. The large Tamil community in Canada recognises him as a strong LTTE supporter - a fact confirmed even in TV programmes by Asoka Yapa, a long time and respected Lankan resident in Toronto. (more....)

ஐப்பசி 13, 2010

நித்திரையின்றி நிம்மதியில்லை

நித்திரை இன்மைக்கு பொதுவாக உடல்நலக் குறைவு, மன உளைச்சல் (கோபம், குரோதம், பயம், காதல் போன்ற உணர்வுகள்) காரணம் என்றாலும் வேறு காரணங்களும் இருக்கின்றன. நேரம் போவது தெரியாது, தொலைக்காட்சி பார்ப்பது, மணிக்கணக்கில் கைத்தொலைபேசியில் பேசுவது, இணையத்தில் இருப்பது, அதிக உணவை வயிறுபுடைக்க உண்பது அல்லது உண்ணாமலே உறங்குவது போன்ற இன்றைய பழக்கங்களும் நித்திரையைக் குறைக்கின்றன. நித்திரை குறைந்தாலும் கூடினாலும், உடல்நிலை பாதிக்கப்படும். மெலட்டோனின் என்னும் ஓமோன் சுரப்பதாலேயே எமக்கு நித்திரை வருகின்றது. இந்த ஓமோன் அதிகமாகச் சுரந்தால் நித்திரையும், குறைவாகச் சுரந்தால் நித்திரை இன்மையும் ஏற்படுகின்றது. (மேலும்....)

ஐப்பசி 13, 2010

 

கிர்கிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல், பெரும்பான்மையின்றி கட்சிகள் பின்னடைவு

கிர்கிஸ்தான் பாராளுமன்றத் தேர் தலில் ஐந்து கட்சிகள் ஆசனங்க ளைப் பெற்றுள்ள போதும் எவற்றுக்கும் பெரும்பான்மையில்லை. இதனால் கூட்டு அரசாங்கம் அமை யும் நிலை தோன்றியுள்ளது. ஞாயி ற்றுக்கிழமை நடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை வெளியாகின. சோவியத் ரஷ்யா விடமிருந்து பிரிந்த கிர்கிஸ்தானில் நடந்த முதலாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். முன்னர் ஆட்சியி லிருந்த ஜனாதிபதி ஆறு மாதங்களு க்கு முன்னர் பதவி கவிழ்க்கப்ப ட்டார். (மேலும்...)

ஐப்பசி 13, 2010

புத்திசாலி டொல்பின்

டொல்பின்கள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை தங்கள் பிள்ளைகளுக்குப் பாலூட்டி கண்ணும் கருத்துமாக பராமரிக்கும். டொல்பின்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும், குட்டிகளைப் பராமரிப்பதற்காகவும் எப்போதும் கூட்டமாகவே வாழும். நாம் செய்வதை, அப்படியே திரும்பச் செய்யும் திறன் மற்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை. சராசரியாக ஒரு டொல்பின் 2.5 மீட்டர் நீளமும் 74 கிலோ எடையும் கொண் டிருக்கும். அதன் துடுப்புகளில் உள்ள எலும்புகளின் கட்டமைப்பு மனிதர்களின் கைகள் மற்றும் உள்ளங்கையின் எலும்புகளை ஒத்திருக்கும். நீருக்கடியில் 16 மைல் தொலைவிலி ருந்து வரும் ஒலியைக் கூட டொல் பின்கள் கண்டுபிடிக்கும். குறிப்பிட்ட ஒலியை நினைவில் வைத்துக் கொள்வதில் மனிதர்களைக் காட்டிலும் டொல்பின்கள் சிறந்தவை. டொல்பின்கள் தங்கள் சக்தியைத் தக்கவைத்துக் கொள்ள நீரிலிருந்து அவ்வப்போது தாவிக் குதிக்கின்றன. அவற்றின் உடலுக்கு மேலே காணப்படும் துளை வழியாகச் சுவாசிக்கின்றன. அந்தத் துளைகள் மூலம் காற்று நேராக அவற்றின் நுரையீரலைச் சென்றடைகிறது.

ஐப்பசி 13, 2010

அமெரிக்க வர்த்தக முதலீட்டு குழு நேற்று யாழ். வருகை

 

அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட முதலீட்டுத் தூதுக் குழுவினர் யாழ். குடா நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்கு நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். முப்பது பேர் அடங்கிய இந்த அமெரிக்க வர்த்தக முதலீட்டுத் தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் நேற்றுக் காலை விமானம் மூலம் பலாலியை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் வைத்து யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரினால் வரவேற்கப்பட்ட அமெரிக்க முதலீட்டாளர்கள், யாழ். பொது நூல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அச்சமயம் அங்கு வருகைதந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உட்பட அமெரிக்க முதலீட்டு தூதுக் குழுவினரை யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார். (மேலும்....)

ஐப்பசி 13, 2010

Toronto

Municipal Campaign Heats Up - Candidates Need Volunteers!

 Now that Labour Day has passed, the October 25 Municipal elections are kicking into high gear! With a possible jump to the right in the Mayors' office, the election of individual council members are crucial to preventing the erosion of democracy at the local level. Candidates need volunteers!! If you are not already assisting on a campaign in your ward, please consider doing so today Election Endorsements: The Labour Council made three more endorsements at the August Delegates meeting. Long-time Toronto City Councillor Maria Augimeri was endorsed for re-election in Ward 9 in North York, as was sitting Georgina Councillor Dave Szollosy who is also an active Labour Council delegate. In Vaughan Ward 3 Steven Del Duca is running for the first time, but he is no stranger to politics. He was campaign manager for Greg Sorbara’s return to Queen’s Park a decade ago, and is now the Public Affairs Director for the Carpenters Union. Labour Council has endorsed more candidates at its' recent meetings. The full up-to-date list of candidates supported by Labour Council can be found at www.labourcouncil.ca. or http://www.labourcouncil.ca/melections2010.html

ஐப்பசி 13, 2010

South of the Border: Film Screening

7:00pm, Wednesday October 27, 2010

Bloor Cinema, 506 Bloor Street West, Toronto

Celebrated American director Oliver Stone takes us on a cinematic tour of Latin America in upheaval with his latest documentary South of the Border. (more....)

ஐப்பசி 13, 2010

சீனாவின் இராணுவ வளர்ச்சி பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவோ, சவாலாகவோ இருக்கப்போவதில்லை

சீனாவின் இராணுவ வளர்ச்சி ஆசிய நாடுகளுக்கோ அல்லது வேறு எந்த நாடுகளுக்குமோ அச்சுறுத்தலாக இருக்கமாட்டாதென அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லியாங்குயாங்லி தெரிவித்தார். தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நேற்று நடந்தது. இதில் எட்டு நாடுகள் பங்கேற்றன. மலேஷியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட எட்டு நாடுகள் தென்கிழக்காசிய அமைப்பிலுள்ளன. இது தவிர பிராந்திய நாடுகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டன. அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூஸிலாந்து, தென்கொரியா, அமெரிக்கா என்பவைகளே அவையாகும். (மேலும்....)

ஐப்பசி 13, 2010

TORONTO FORUM ON CUBA

(A member of the Latin American Solidarity Network / Miembro de la Red de Solidaridad Latinoaméricana)

UPCOMING EVENTS

WEDNESDAY, OCTOBER 14th - 6:30 PM

OISE, 252 Bloor St. West, Room #2-227 

Cuba's international solidarity in health care and a detailed first-hand account of Cuba’s internationalist health brigades

Guest Speaker:  Joel Gutierrez. MD. Ph.D. (Chair Clinical Neurophysiology Dept and Deputy Research Director of the Cuban Institute of Neurology and Neurosurgery Professor of Clinical Neurophysiology of the Havana Medical University), followed by Q & A.

 WEDNESDAY, OCTOBER 20TH – 7:00 PM

University of Toronto, Robarts Library, 140 St. George, Claude Bissell wing, Room 205

Celebrate Cuba’s Day of Culture

with poetry from Keith Ellis, Carlos Angulo, Arnold Itwaru and with Brian Gordon Sinclair’s performance of:  “Hemingway’s HOT Havana”.

ஐப்பசி 12, 2010

வடக்கின் தொழில் வளர்ச்சி

வடக்கில் அமையவுள்ள தொழிற்சாலைகளில் கூடுத லானவை ஆடைத்தொழிற்சாலைகளெனத் தெரிய வருகின்றது. இத்தொழிற்சாலைகள் மூலம் அவ்வப் பிரதேசங்களிலுள்ள யுவதிகளுக்கும் ஓரளவு இளை ஞர்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். இது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்குப் பெரிதும் உதவும் என்பதால் இத் தொழிற்சாலைகள் வடக்கின் வளர்ச்சிக்கு அத்தியாவசியத்தேவை. இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இத் தொழிற்சாலைகளுக்கு மேலதிகமாக, வடக்கில் காணப்படும் வளங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் அமைவதன் மூலம் கூடுதலான மக்கள் பலனடைவார்கள். எனவே, இவ்வாறான தொழிற்சாலைகளை வடக்கில் கூடுதலாக அமைப்பதற்கு ஆளுநர் உட்பட வடக்கின் அபிவிருத்திக்குப் பொறுப்பானவர்கள் சிரத்தையுடன் செயற்படுவார்களென நம்புகின்றோம். (மேலும்.....)

ஐப்பசி 12, 2010

ரொரன்ரோ வட்டாரம் 42ல் பிரதிநிதியாகப்போட்டியிடும் லிபரல் கட்சி உறுப்பினர் நமு பொன்னம்பலம் அவர்களை ஆதரித்து லிபரல் கட்சியின் மூத்த உறுப்பினர் பொப்றே அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்

ஒக்டோபர் 12, 2010 6.30மணி

Chinese Cultural Centre of Greater Toronto

5183 Sheppard Avenue East, Scarborough, Ontario, Canada M1B 5Z5

I have known Namu Ponnambalam for many years as a person of greatintegrity and ability. He will make a real contribution to public life - Bob Rae

Tel: 647 889 6268 - Cell: 416 269 5883

www.electnamu.com

ஐப்பசி 12, 2010

முஷர்ரபின் தலைக்கு சன்மானத் தொகை

அப்பாவி மக்களை கொன்று குவித்த முன்னாள் சர்வாதிகாரி முஷரப் மரண தண்டனைக்கு தகுதியானவர் என்றும், அவர் தலையை கொண்டு வருபவர்களுக்கு 100 கோடி ரூபாயும், ஆயிரம் ஏக்கர் நிலமும் பரிசாக அளிக்கப்படும் என்றும் கொல்லப்பட்ட பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் புக்தியின் மகன் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் உள்ள மாநிலங்களில் ஒன்று பலுசிஸ்தான். இந்த மாநிலத்தில் தான் பெட்ரோல் அதிக அளவில் கிடைக்கிறது. இயற்கை வளம் அதிகமாக இருந்தாலும் தொழில்வளமோ, முன்னேற்றமோ அதிகம் இல்லாமல் பின்தங்கிய பகுதியாக இந்த மாநிலம் இருக்கிறது. இதனால் பலுசிஸ்தான் மாநிலத்துக்கு சுயாட்சி கோரி அந்த மாநில மக்கள் போராடி வருகிறார்கள். (மேலும்.....)

ஐப்பசி 12, 2010

மாணவனை அன்பாலும் வழிப்படுத்த முடியும்

ஆசான் கற்பிப்பவன் மட்டுமல்ல. கற்பவனும் கூட. ஒரு ஆசான் தனது நடத்தையில் அல்லது கற்பித்தலில் விடும் ஒரு நிமிடத் தவறு ஒரு நூற்றாண்டையும் தாண்டிய தலை முறையை கருகச் செய்யும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் ஆசிரிய சேவை யின் வினைத்திறன் மிகு சேவை உளவிய லாளர்களாலும், சிந்தனையாளர் களாலும் உணரப்பட்ட அளவில் அரைவாசி வீதம் கூட ஆசிரியர்களால் உணரப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும். இன்று உலகளவில் நடக்கும் அத்தனை வன்முறைகளும் இளைய சமூகத்தினரின் அதிகூடிய பங்களிப்பில் நடைபெறுகிறது. இதற்குக் காரணமாக பாடசாலையில், வழங்கப்படும் முறைப்படுத்தப்படாத வழிகாட்டாகும். (மேலும்.....)

ஐப்பசி 12, 2010

They will keep coming

There are good reasons to believe that many Tamil migrants are taking advantage of Canada's flawed refugee process

The arrival of a boatload of Sri Lankan Tamil asylum seekers in August generated a good deal of interest among the media and the general public. While Canadians are generally supportive of accepting a reasonable number of genuine refugees, their reaction to this event was decidedly negative. An Angus Reid poll, for example, found that 63 per cent of respondents felt the ship should have been turned back before it reached Canada, while 83 per cent regarded the migrants as jumping the immigration queue. There are a number of reasons why many Canadians have serious doubts about whether the people on the Sun Sea are genuine refugees. (more......)

ஐப்பசி 12, 2010

எந்திரன் பற்றிய செய்திகள்

ரோபோ(Robot) என்ற சொல், செக் மொழியில் இருந்து வந்தது. முதன் முதலில் ரொபோட்டா என்று செக் மொழியில் பெயரிடப் பட்டது. முதன் முதலில் 1921ம் ஆண்டு ஒரு நாடகத்தில் தன் முதன் முதலாக ரோபோ அறிமுகப்படுத்தப் பட்டது. மனித வடிவிலான ரோபோ இயந்திரத்துக்கான அடிப்படை தொழில் நுட்பங்களை 1425ம் ஆண்டு லியானாடோ டாவின்சி வரைந்து வைத்திருந்தார். உலகின் முதல் மனித ரோபோவின் பெயர் எலெக்ட்ரோ. 1939 ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த 7 அடி உயரம் கொண்ட ரோபோ 700 சொற்கள் வரை பேசும் அளவு க்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்றைய சூழலில் உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான தொழிற்சாலை ரோபோக் கள் இயக்கத்தில் உள்ளன. அவற்றுள் 60% ஜப்பானில் உள்ளன. (மேலும்.....)

ஐப்பசி 12, 2010

அரசாங்கத்தை அமைக்க உதவுமாறு சதாம் ஹுஸைனின் கட்சிக்கு அழைப்பு

ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் ஆதரவாளர்களை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். ஷியா தலைமையிலான பிரதமரின் கட்சி ஆட்சியமைக்க ஆசனப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றது. இன்னும் 30 ஆசனங்கள் பிரதமருக்கு தேவைப்படுவதால் ஏனைய கட்சிகளையும் அழைத்துள்ளார். மார்ச் 07ல் நடந்த ஈராக் பாராளுமன்ற தேர்தலில் எக்கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை. 07 மாதங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்கவில்லை. இதனால் சுன்னி முஸ்லிம்களைக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் கட்சியான பாத் கட்சியை அரசாங்கம் அமைக்க உதவுமாறு அழைத்துள்ளார். (மேலும்.....)

ஐப்பசி 12, 2010

16,634 மில்லியன் ரூபா செலவில் மட்டு. மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள்

மட்டக்களப்பு மாவட்டம் முப்பது வருட யுத்தத்தின் பின் இவ்வருடம் பாரியளவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதற்கென இவ்வாண்டு 16,634 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இது தொடர்பாக ஆராயும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தலைமையில் நேற்று (11) நடைபெற்றது. பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீல. மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாண்டு வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் 15,319 மில்லியன் ரூபாய் செலவிலும், அமைச்சுக்களின் 750 மில்லியன், கமநெகும திட்டத்தின் 243 மில்லியன், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் 25 மில்லியன், கிழக்கு மாகாண சபையின் 307 மில்லியன் ரூபாய் செலவிலும் 2857 அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுள் 70 சதவீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

ஐப்பசி 12, 2010

முல்லைத்தீவில் 11 விமான குண்டுகள் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு காட்டுக்குள்ளிலிருந்து அதிசக்தி வாய்ந்த 11 விமான குண்டுகள் மீட்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். முன்றரை அடி நீளமும் 2 1/2 அடி அகலமும் கொண்ட 50 கிலோகிராம் நிறையுடைய 04 விமான குண்டுகளும் 3 1/2 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட 25 கிலோகிராம் நிறையுடைய 07 விமான குண்டுகளுமே இதன்போது மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொலிஸ் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா தலைமையிலான குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தேடுதலின் போதே இவை கைப்பற்றப் பட்டுள்ளன. ஏ-35 முல்லைத்தீவு - பரந்தன் வீதியிலமைந்துள்ள காட்டுக்குள் காணப்பட்ட பதுங்கு குழிக்குள்ளிருந்தே மேற்படி விமான குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

ஐப்பசி 12, 2010

அரசியல் தீர்வினை எட்டுவதற்கு அடிப்படையை விட்டுக் கொடுக்காமல் செயற்பட வேண்டும் - மாவை சேனாதிராஜா எம்.பி _

வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்து விட்டோமெனச் சொன்ன பிறகும், பிள்ளையானின் தலைமையில் கிழக்கில் மாகாண சபை அமைக்கப்பட்ட பிறகும் கருணா அம்மான் அமைச்சராகப் பவனி வந்த போதிலும் கிழக்கு மாகாண மக்கள், குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள் தடம்புரளாது உறுதியுடன் தமிழ்த் தேசியத்துடன் நாம் வடக்கு கிழக்கு மக்கள், தந்தை செல்வாவிற்குப் பின்னால் அணி திரண்ட சமுதாயம் என்பதை நிரூபித்துள்ளனர்.கொள்கைக்காக இலட்சியத்திற்காகவே நீங்கள் வாக்களித்தீர்களே தவிர பியசேனவுக்காக அல்ல என்பதே நிரூபணமாகும்.(மேலும்.....)

ஐப்பசி 12, 2010

பலஸ்தீனை உருவாக்கும் ஐ.நா.வின் திட்டத்தை கைவிட முடியாது - பிரான்ஸ்

பலஸ்தீன இராஜ்யத்தை உருவாக்குதல் என்ற ஐ.நா.வின் தீர்மானத்தை எவராலும் தட்டிக் கழிக்க முடியாது என பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் பேர்னாட் கெளச்சர் தெரிவித்தார். இஸ்ரேல் பிரதமர் வெளிநாட்டமைச்சர்க ளுடன் முக்கிய சந்திப்பில் கலந்து கொண்டபோதே பிரான்ஸ் வெளி நாட்டமைச்சர் இக்கருத்தை வெளியிட்டார். அரபு நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பிக்கும் முன் இஸ்ரேலில் முக்கிய கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பிரான்ஸ், ஸ்பெய்ன் வெளிநாட்டமைச்சர்களுடன் இஸ்ரேல் தலைவர்களும் பங்கேற்றனர். இங்கு மேலும் உரையாற்றிய பேர்னாட் கெளச்சர் இரண்டு நாடுகள் இரண்டு தீர்வுகள் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. விரைவில் பலஸ்தீன இராஜ்யத்தை வரவேற்க வேண்டியவர்களாக உள்ளோம். (மேலும்.....)

ஐப்பசி 12, 2010

மீன்பிடி கட்டுப்பாடுகள் யாவும் நேற்று முதல் முற்றாக நீக்கம்

மீனவர்களின் வாழ்வாதார த்தை மேம்படுத்தும் நோக்கில் நாட்டின் கடற் பிரதேசங்களில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்டி ருந்த அனைத்து கட்டுப்பாடுக ளையும் அரசாங்கம் நேற்று முதல் தளர்த்தியுள்ளது. கிளிநொச்சி மற்றும் யாழ்ப் பாண மாவட்டங்களில் உள்ள கடற்பகுதியில் உள்ள கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்படாததால் அவ்வாறு கண்ணிவெடிகள் இருக்கலாமென சந்தேகிக்கப்படும் இடங்களைத் தவிர மற்றைய அனைத்து கடற்பகுதிகளிலும் மீனவர்கள் இனி மீன் பிடிக்க முடியும் என்று மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 குதிரைச் சக்தி வலுவுடன் கூடிய 141 படகுகளை பாதுகாப்பு அமைச்சு மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சிடம் கையளித்துள்ளது. மீன்பிடி அமைச்சு அப்படகுகளை உரிய மீனவர்களிடம் ஒப்படைக்கும்.

ஐப்பசி 12, 2010

 

அமெரிக்க வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடு

முப்பது பேர் அடங்கிய அமெ ரிக்க வர்த்தகத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்தடைந்தது. அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த தூதுக்குழு இன்று (12) வட மாகாணத்திற்கு, விஜயம் செய்யவு ள்ளது. அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, மண்டத்தீவு, கேரதீவு, தீவு பகுதிகளு க்கும், வட பகுதியிலுள்ள கைத் தொழில் மற்றும் சுற்றுலா பிரதேசங் களுக்கும் இந்த வர்த்தகத் தூதுக்குழு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வர்த்தக துறையினரையும் சந்தித்துப் பேசவுள்ளனர். அமெரிக் காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை வந்துள்ள இந்த வர்த்தகத் தூதுக் குழுவின் சுமார் ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர். (மேலும்.....)

ஐப்பசி 12, 2010

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் சுழற்சி முறை உறுப்புரிமை பெற தேர்தல்

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சுழற்சி முறை அங்கத்துவத்தைப் பெறுவதற்கான வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை ஐ.நா.வில் இடம்பெறவுள்ளது. 10 நாடுகள் சுழற்சி முறை அங்கத்துவத்தைப் பெறுகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா என்பன நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றுள்ளன. 10 சுழற்சி முறை நாடுகளில் ஐந்தை தெரிவதற்கான வாக்களிப்பே இன்று நடைபெறுகின்றது. இந்த ஐந்தில் மூன்று நாடுகளுக்கான உடன்படிக்கைகள் செய்யப்பட்டு விட்டன. ஜப்பான், மெக்ஸிகோ, உகண்டா ஆகிய நாடுகளே அவைகளாகும்.  இந்நிலையில் இரண்டு ஆசனங்கள் உள்ளன. இதற்கு மூன்று நாடுகள் போட்டியிடுகின்றன. கனடா, ஜெர்மன்,போர்த்துக்கல் என்பவையே அவையாகும்.(மேலும்.....)

ஐப்பசி 12, 2010

 

யோகக்கலை மதங்களுக்கு அப்பாற்பட்டது

(சாரதா மனோகரன்)

தற்காலத்திலே யோகா எனப்படுவது பரவலாக ஒரு உடல்வளக் கலையாகவும் மனவளக் கலையாகவும் பயன்படுத்தப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரததேசத்திலே யோகிகளாலும் தவ சிரேஷ்டர்களாலும் பின்பற்றப்பட்டு வந்த யோக சூத்திரங்கள் பதஞ்சலி முனிவரால் தொகுக்கப்பட்டன. அதனால் அவை இன்று எமக்குக் கிடைத்தன. யோகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. மதங்களின் கொள்கைகள் வேறுபடுகின்ற போதும், அவற்றின் இறுதி இலக்கு ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையிலேதான் யோகமும் எந்தமதத்தையும் சாராது காணப்படுகிறது. அடிப்படையில் யோகம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவை ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம் என்பனவாகும். அவை ஒவ்வொன்றும் எட்டு உப பிரிவுகளைக் கொண்டவை. அப்பிரிவுகளின் தொகுப்பே அட்டாங்க யோகம் எனப்படுகிறது. (மேலும்.....)

ஐப்பசி 12, 2010

 

2011இல் வெளியிட முடிவு

இலங்கையின் அபி. திட்டங்களை உள்ளடக்கிய புதிய வரைபடம்

அண்மையில் அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கி இலங்கையின் புதிய வரைபடமொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நில அளவையாளர் நாயகம் எஸ். எம். எல். பெர்னாந்து கூறினார். பாரிய வீதி கட்டமைப்புகள், நீர்த்தேக்கங்கள், துறைமுகங்கள், அரசாங்கக் கட்டிடங்கள் என்பன தற்போது அமைக்க ப்பட்டு வருகின்றன. இவ ற்றை உள்ளடக்கியதாக புதிய வரை படம் தயாரிக்கப்பட வுள்ளது. புதிய இலங்கை வரைபடம் தயாரிப்பதற்காக ஆகாயத்தில் இருந்து படம் பிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதோடு அடுத்த வருடம் புதிய வரைபடம் வெளியிடப்படவுள்ளது. அரசாங்கத்தின் சில அபிவிருத்திப் பணிகளுக்கு செய்மதி புகைப்படங்களை பெறவும் திட்டமிடப்பட்டுள் ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் சகல அபிவிருத்திப் பணிகள் தொடர்பான அனைத்துத் தரவுகளும் திரட்டப்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐப்பசி 11, 2010

கனடிய இன்ரர்போல்

தாய்லாந்தில் தேடுதல் நடவடிக்கை - 130 ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது

தாய்லாந்தில் தாய்லாந்து பொலிசாரும், கனேடியன் இன்ரர்போலும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யபட்டவர்களிள் 60 ஆண்கள் 50 பெண்கள் 7 கர்ப்பணித்தாய்மார்கள் 13 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும் கப்பலில் கனடாவிற்கு செல்வற்காக வந்திருந்த அகதிகளும் கைதுசெய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக்கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுள் உள்ளடங்கியுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 11, 2010

மீன்பிடி படகில் 4000 கிலோ மீட்டர் பயணம்: இலங்கை அகதிகளை ரகசியமாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றது எப்படி? - கைதான புதுச்சேரி தி.மு.க. கவுன்சிலர்

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சொந்தமாக சுமார் 2000 தீவுகள் உள்ளது. இந்த தீவுகள் அனைத்தும் ஆஸ்திரேலியா நாட்டிற்கு அருகே இல்லாமல் சுமார் 1000 கி.மீ.க்கு மேல் தொலைவில் அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் தீவு, கிலிங் தீவு ஆகியவைதான் இந்தியாவில் அருகே உள்ளன. இதில் புதுச்சேரியில் இருந்து சுமார் 3829 கி.மீ. தூரத்தில் கிறிஸ்துமஸ் தீவு இருக்கிறது. கிறிஸ்துமஸ் தீவில் இருந்து 750 கி.மீ. தூரத்தில் கிலிங் தீவு அமைந்து உள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் தீவு இந்தோனேசியா நாட்டிற்கு மிக அருகில் உள்ளது. எனவே இலங்கை அகதிகளை கிறிஸ்துமஸ் தீவில் இறக்கி விட முடிவு செய்யப்பட்டது. இதற்கு சக்திவேல் சம்மதம் தெரிவித்தார். ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்ப வேண்டிய நபர்களை, யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வகையில் தேங்காய் திட்டு துறைமுகத்திற்கு கவுன்சிலர் சக்திவேல் அழைத்து வந்து விடுவார். (மேலும்....)

ஐப்பசி 11, 2010

கே.பியின் மீது கோட்டபாய நம்பிக்கை வைக்க காரணம் என்ன?

(பரம்ஜி ஞானாஸ்வரன்)

இந்தியாவின் மற்றும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் ஆதரவுகளுக்காக ஏங்கி நிற்கும் அப்பாவி இலங்கைத்தமிழர்களின் வாயில் மண்ணை போடக்கூடிய நிலைமைகளை தோற்றுவிக்கும் வகையிலேயே இவர்களது உளரல்கள் அமைந்து இருக்க காணலாம். மனித நேயம் மிக்க நல்ல மனிதர்களாக, கடின உழைப்பாளிகளாக, அறிவாளிகளாக கல்விமான்களாக நல்ல சிந்தனையாளர்களாக எழுத்தாற்றல் முதல் கலைத்திறன்கள் மிக்க நல்ல பல ஊடகவியலாளர்களை கொண்டிருக்கும் தமிழ் ஈழ மக்களின் பெருமைகளுக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில், தான் பிறந்த ஊரின் அடைமொழியுடன் தனது பெயரை இணைத்து ஒரு பரதேசி (புலம் பெயர்ந்த) இணையதளம் ஒன்றில் கொட்டி வைத்திருந்த குப்பை கண்ணில் சில நாட்களுக்கு முன் தட்டுப்பட்டது. (மேலும்......)

ஐப்பசி 11, 2010

Canadian Tamils support former Sri Lankan army chief-- who is he use the word Canadian Tamils ???? He should say CTC

I am also Tamil Canadian, I don’t have any Leaders. ONLY my God / My mother/ my father are my Canadian Leaders. I do have to work full time and pay my fair tax to Canada. David Poopalapillai is only Canadian Tamil Congress national spokesman not Canadian Tamil Leader. Can you PLEASE correct and rewrite in your news paper. We are Tamils, but Remember in Canada 75 % Tamils not support CTC Canadian Tamil Congress and we don’t have any membership with them. (more....)

ஐப்பசி 11, 2010

வீரத்தையும் கடந்த வீரம்

(பேராசிரியர் க. ராமச்சந்திரன்)

வெறுப்புக்கு எதிராக அன்பு, போட்டிக்குப் பதிலாக ஒத்துழைப்பு, தன்னலத்திற்கு எதிராகத் தியாகம், எவரிடத்தும் பகைமை பாராட்டாத இதயம் உடையவர்களும் வீரம் பொருந்தியவர்கள்தான், ‘தீமையை, நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்ளலாம்’ என்கிறது. திருக்குர்ஆன், ‘இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்” என்கிறது திருக்குறள். ‘பகைவனுக்கும் அருள்வாய்’ என்கிறார் மகாகவி பாரதி. தீய எண்ணங்களை நாம் அனுப்பும் நல்ல எண்ணங்கள் வலுவிழக்கச் செய்து விடுகின்றன. வாழ்வின் தாத்பரியம், நல்ல எண்ணம் என்ற ஒரு எசால்லில் அடங்கியிருக்கின்றது. (மேலும்......)

ஐப்பசி 11, 2010

ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த போர்த் தளபதி பொன்சேகாவுக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆதரவு

(தி. வண்ணமதி)

தமிழருக்கு எதிரான போரை முன்நின்று நடாத்தியவர் முன்னாள் சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா. தமிழருக்கு எதிரான போரை முன்னெடுத்தவர்கள் வரிசையில் சிறிலங்காவின் தற்போதய அதிபர் மகிந்த ராஜபக்சவைவிட பொன்சேகவுக்கு அதிகமானதும், காத்திரமானதும் பங்கு உண்டு. இவர் முன்னர் ஒருகாலத்தில் யாழ்ப்பாணமாவட்டத்தில் தளபதியாக பணியாற்றியவர். இவர் தளபதியாக இருந்த காலத்தில் பல இளைஞர், யுவதிகள் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். இன்று, அனோமா பொன்சேகா வடிக்கும் இதே கண்ணீரை யாழ்ப்பாணத் தமிழ் தாய்மாரும், தம் கணவன்மாரை படையினரிடம் பிடிகொடுத்த துணைவிமாரும் ஏற்கனவே வடித்தனர். (மேலும்......)

ஐப்பசி 11, 2010

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் பெண் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் பெண் உதவியாளர் நொர்குரோவ் கடத்தல் காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் வெள்ளிக்கிழமை இப் பெண்ணின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது செப்டம்பர் 26ல் கிழக்கு ஆப்கானிஸ்தானில் வைத்து இந்த பிரிட்டிஷ் பெண் இனந் தெரியாதோரால் கடத்தப்பட்டார். தலிபான்களே இப் பெண்ணைக் கடத்தியதாக நம்பப்பட்டது. இவரை மீட்கும் பணியில் அமெரிக்கப்படைகள் ஈடுபட்டிருந்த வேளையிலே தலிபான்கள் நொர்குரோவை சுட்டுக் கொன்றனர். பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் வில்லியம் ஹேக் லண்டனில் இச்செய்தியை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். ஆப்கானில் கடத்தப்பட்ட பெண் உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவரை மீட்கும் பணிகள் வெற்றியளிக்கவில்லை. இது மிகப் பெரிய மனவருத்தம் தரும் செய்தி. நொர்குரோவ் தடுத்துவைக்கப்பட்டிருந்த வீட்டின் எல்லையை நேட்டோப்படையினர் நெருங்கிக் கொண்டிருந்தவேளையிலே இப் பெண் கடத்தல் காரர்களால் சுடப்பட்டுள்ளார்.

ஐப்பசி 11, 2010

யாழ். சிங்கள மக்கள் விவகாரம்

தீர்வுக்கு 3 மாத கால அவகாசம் தேவை - அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்துக்கு மீளகுடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்கள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு மூன்று மாத கால அவகாசம் தேவையென அமைச்சர் டக்ளஸ் தேவான ந்தா தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் நிலவி வரும் காணிப்பிரச்சினைகள் மற்றும் காணிகளின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு காணிக் கச்சேரியொன்றை விரைவில் நடத்துவது அவசியமாகவுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார். யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுக் காலை நேரில் சென்று சந்தித்தார். (மேலும்......)

ஐப்பசி 11, 2010

யாழ்ப்பாணத்தில் இன்று உயர்மட்ட மாநாடு


ஆளுநர் தலைமை; அரச அதிபர்கள் பங்கேற்பு

வட மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் விசேட மாநாடு இன்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். (மேலும்......)

ஐப்பசி 11, 2010

வடக்கில் பலகோடி ரூபா செலவில் முதலீடு


ஆறு முன்னணி நிறுவனங்கள் முன்வருகை

யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை பிரதேசத்தில் சுமார் 100 கோடி ரூபா செலவில் ஒமேகா லைன் என்ற நிறுவனம் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதற்காக வட மாகாண சபை 10 ஏக்கர் நிலப்பரப்பு காணியை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த மாதமளவில் இந்த தொழிற்சாலையை நிறுவு வதற்கான நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படவுள்ளன என்றும் சுட்டிக் காட்டினார். ஹைதராமணி நிறுவனம் வவுனி யாவின் நெலுங்குளத்திலும், மாஸ் ஹோல்டிங் நிறுவனம் ஓமந்தை யிலும், ஒரிட் அபரல் நிறுவனம் செட்டிக்குளத்திலும், பிரன்டிக்ஸ் நிறுவனம் வவுனியா அல்லது மன்னாரிலும் தொழிற்சாலைகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளன. ட்ரைஸ்டார் நிறுவனம் கிளி நொச்சி நகரில் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவு வதற்காக அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளை ஆரம்பித் துள்ளது. (மேலும்......)

ஐப்பசி 11, 2010

நோபல் பரிசுக்கும் உண்டு  அரசியல் உள்நோக்கங்கள்

மேற்கத்திய நாடுகளின் அரசியல் நோக்கங் களுக்கு சாதகமான முறையிலேயே அவ்வப் போது இந்தக் குறிப்பிட்ட பரிசுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இதன் மூலம் உண்மையாகிறது. முன்பு சோசலிச சோவியத் யூனியன் சிதறுண்டு போகக் காரணமான கொள்கையின் பிரதிநிதி யான மிகயில் கோர்பச் சேவ் இப்பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போலந்தில் சோசலிச அரசு வீழ்த்தப்பட்டதில் முன்னணியில் இருந்த தொழிற்சங்கத் தலைவர் வாலேசாவுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் என்று அறிவித்தாலும் அங்கே பதட்டம் தணிய எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அத்துமீறல்களைத் தடுக்காத, ஆப்கானிஸ்தானில் தொடரும் அமெரிக்க ராணுவ அராஜகங்களை நிறுத்தாத பாரக் ஒபாமா வுக்கு இந்தப் பரிசு அளிக்கப்பட்டது. (மேலும்......)

ஐப்பசி 11, 2010

வெளிநாடுகளில் உள்ள அகதிகள் இலங்கை திரும்புவது குறித்து ஆராயப்படுகிறது - ஐ.நா

இலங்கைக்கு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறெனினும், நீண்ட காலமாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்புவதற்கு விருப்பம் காட்டுவார்களா என்பது சந்தேகத்திற்கிடமானதென ஜெனீப்பர் பெகோனிஸ் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலமாக வெளிநாடுகளில் வாழ்ந்து தமது வாழ்க்கை முறைமையை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் மீளவும் இலங்கை திரும்புவார்களா என உறுதிபடக் கூற முடியாதென அவர் தெரிவித்துள்ளார். (மேலும்......)

ஐப்பசி 11, 2010

நோபல் பரிசு பெற்ற லியூ ஜியாபோவை விடுதலை செய்ய ஒபாமா வேண்டுகோள்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஜனநாயக ஆதரவு தலைவராக லியூ ஜியாபோவை சிறையில் இருந்து சீன அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு சீனாவை சேர்ந்த மனித உரிமை போராளியும், ஜனநாயக ஆதரவு தலைவருமான லியூ ஜியாபோவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நார்வே நாட்டு நோபல் பரிசு தேர்வு குழுவினரை பாராட்டி உள்ளார். மேலும் நோபல் பரிசு பெறும் லியூ ஜியாபோவை சீன அரசு சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.(மேலும்......)

ஐப்பசி 11, 2010

ஐ.தே.கவும் எல்.ரீ.ரீ.ஈ.யுமே யுத்தநிறுத்த முறிவுக்கு பொறுப்பு

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாத இயக்கமும் செய்து கொண்ட பிழையான ஒப்பந்தமும் அந்த ஒப்பந்தத்தில் புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திரமும் அப்பாவிப் பொது மக்களையும் உயர் இராணுவ அதிகாரிகளையும் மதகுருமார், புத்தி ஜீவிகளையும் கொன்று குவிப்பதற்கும் கப்பம் அறவிடுவதற்கும் பொது மக்களின் சொத்துக்களை சூறையாடுவதற்கும் உறுதுணையாக இருந்தது.  யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் முறையற்ற செயற்பாடு களும் போர் நிறுத்த உடன்படிக்கை செயழிலப்புக்கு காரணமாக அமைந்தன. கல்குடாத் தொகுதி முஸ்லிம்களுக் கும், தமிழர்களுக்கும் இடையில் பல கசப்பான சம்பவங்கள் ஏற்படு வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணமாக இருந்தது.” (மேலும்......)

ஐப்பசி 11, 2010

ஈரான் ஜனாதிபதியின் லெபனான் விஜயம்

பிரமாண்டமாக வரவேற்க ஹிஸ்புல்லா ஏற்பாடு

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் லெபனானுக்கு விஜயம் செய்யவுள்ளதையடுத்து ஹிஸ்புல்லா அமைப்பு பாரிய வரவேற்பு ஏற் பாடுகளைச் செய்துள்ளது. லெப னானிலுள்ள ஷியா முஸ்லிம்களை யும், பலஸ்தீனர்களையும் (அகதி முகாம்மிலுள்ள) ஈரான் ஜனாதி பதியை வரவேற்கும் வைபவத்தில் இணைந்து கொள்ளுமாறு ஹிஸ் புல்லா அழைப்பு விடுத்துள்ளது. இம் மாதம் 13, 14ம் திகதிகளில் அஹ்மெதிநெஜாத் லெபனான் செல்லவுள்ளார். இவர் இஸ்ரேலின் எல்லையிலுள்ள பின்ற் ஜிப்லி என்ற கிராமத்துக்கும் செல்வார். 1996, 2006ம் ஆண்டுகளில் இஸ்ரேல், லெபனானிடையே நடந்த யுத்தங்களில் பின்ற் ஜிப்லி என்ற லெபனான் கிராமம் கடுமையாகத் தாக்கப்பட்டது இஸ்ரேலின் எல்லையில் இக்கிராமம் உள்ளதால் இஸ்ரேல் இராணுவம் அடிக்கடி இக்கிராமத்தைப் பதம்பார்த்தது அங்கிருந்துதான் இஸ்ரேல்மீது கற்களையும், எறிகணைகளையும் ஹிஸ்புல்லா ஏவுவதாக இஸ்ரேல் நம்புகின்றது.(மேலும்......)

ஐப்பசி 10, 2010

ஒரு நேரடி ரிப்போட்

"பிரச்சினைகள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம்''

வன்னியில் நடந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு

(விசு கருணாநிதி)

“தீர்வு கொண்டுவந்தபோதெல்லாம் எமது தமிழ்த் தலைவர்கள் அதற்கு இடையூறு ஏற்படுத்தினார்கள். அதனால்தான் பிரச்சினை நீடித்தது. பதவியில் உள்ள ஓர் அரசாங்கம் தீர்வொன்றைக் கொண்டுவந்தால், அதனை எதிர்க்கட்சியினர் எதிர்க்கிறார்கள். ஆளும் தரப்பு தீர்வு கண்டுவிட்டால், நமக்கு எதிர்காலம் இல்லாமல்போய்விடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் எமது இளைஞர்கள் பிரச்சினைகளைத் தமது கையில் எடுத்துத் தீர்க்க முயற்சித்தார்கள். படித்த பிள்ளைகளுக்குப் பொரு த்தமான தொழில் வழங்கியிருந்தால், இப்படி நடந்திருக்காது. பல்கலைக்கழக தரப்படுத்தலும் பிரச்சினைக்குக் காணரமாகியது” (மேலும்....)

ஐப்பசி 10, 2010

நவம்பர் 19 இல் ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்துக்கான பதவியேற்பு வைபவம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வு நவம்பர் மாதம் 18ஆம் திகதி அநுராதபுர இராசதானியில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்தப் பதவியேற்பு வைபவத்தின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் ஆளும் கட்சியில் இணையக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

ஐப்பசி 10, 2010

சமஷ்டியை மாத்திரமன்றி தமிழ் பேசும் மக்களையும் ஐ.தே.க கைவிட்டுவிட்டத

ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர். அவருக்கு முன் தலைவராக இருந்த டி.பி. விஜேதுங்க சிறு பான்மையினர் பற்றிக் கூறிய ஒரு கூற்று இப்போது நினைவுக்கு வருகின்றது. இலங்கை சிங்கள வர்களின் நாடு என்றும் சிங்களவர்கள் என்ற பெரிய விருட்சத்தைச் சுற்றிப் படரும் கொடிகளே சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். சரத் பொன்சேகாவும் இதே மாதிரியான ஒரு கருத்தை இராணுவத் தளபதியாக இருந்த போது வெளியிட்டார். இலங்கை சிங்களவர்களின் நாடு என்றும் சிங்களவர்களின் விருப் பத்துக்கு அமைவாகவே சிறு பான்மையினர் வாழ வேண்டும் என்றும் அவர் கூறினார். (மேலும்....)

ஐப்பசி 10, 2010

Canadian Tamils support former Sri Lankan army chief

Throwing their support behind their former tormentor and army chief Sarath Fonseka, who was sentenced to 30 months in jail last week, the Sri Lankan Tamil community in Canada Thursday condemned the Rajapaksa government for its treatment of the former military boss. 'We had problems with Fonseka as a military general, but we have no differences with him as a politician. He has been treated unjustly and jailed by a kangaroo court at the direction of (President) Mahinda Rajapaksa and his family clique which is running the country,'' Canadian Tamil Congress national spokesman David Poopalapillai told IANS. (more....)

ஐப்பசி 10, 2010

வட மாகாண அபிவிருத்தியில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு

அரசாங்கமும் சர்வதேசமும் வடக்கின் வளர்ச்சியில் செலுத்துகின்ற அக்கறை வடக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்களிடம் இல்லாதிருப்பது கவலைக்குரியது. தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புத் தலைவர்கள் குறைபாடுகளைக் கூறுவதுடன் தங்கள் பொறுப்பு முடிந்துவிட்டது என்ற பாணியில் செயற்படு கின்றார்கள். மக்களின் பிரதிநிதிகள் மக்கள் முகங்கொடுக்கும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் நின்றுவிடாமல் அவ ற்றை நிவர்த்திப்பதிலும் பங்காளிகள் ஆகவேண்டும். அப்போது தான் அவர்களின் பிரதிநிதித்துவப் பொறுப்பு பூரணமடையும். (மேலும்....)

ஐப்பசி 10, 2010

பிஹார் சட்டசபைத் தேர்தலில் சாதியா அல்லது அபிவிருத்தியா?

பிஹார் மாநிலத்தில் சாதி அடிப் படையிலேயே வாக்களிப்பு இடம்பெறு வது முந்திய காலங்களில் வழமையாக இருந்தது. நிதிஷ் குமாரின் அரசாங்கம் கடந்த ஐந்து வருட காலத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை நிறை வேற்றியிருப்பதால் இத் தேர்தலில் மக்கள் சாதிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அபிவி ருத்திக்காகத் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று ஆளும் கூட்டணியினர் கூறுகின்றனர். பதினைந்து வருட காலம் இல்லாத அளவுக்குக் கடந்த ஐந்து வருடங்களில் பிஹாரில் அபிவிருத்தி ஏற்பட்டிருப்பதை ஒத்துக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி மத்திய அரசாங்கம் நிதி வழங்கியதாலேயே அபிவிருத்தி சாத்தியமாகியது என்று உரிமை கோருகின்றது. இதே நேரம், ராஷ்டிரிய ஜனதா தள் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்வும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானும் தேர்தலின் போது மக்கள் சாதி அபிமானத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பதில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். (மேலும்....)

ஐப்பசி 10, 2010

தமிழர்களின் மத்தியில் நம்பிக்கையின்மையை ஐ.தே.கவே வளர்த்தது

காணி விடயங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நடந்துகொண்ட விதம் தமிழ் மக்களைப் பாதித்தது. தமிழர்களைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு காணிகளை அபகரித்தது. சமாதானம் சீர்குலைந்ததற்கு அடிப்படைக் காரணம் காணி விடயமேயாகும். தமிழ் மக்களுக்கு சமாதானத்தின் மீது நம்பிக்கையீனம் ஏற்படவும் யுத்தம் ஏற்படவும், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் செய்த மோசடி செயலும் திட்டமிட்ட நில அபகரிப்புமே காரணம். பெண்களே அதிகூடிய அளவில் காணப்பட்டனர். காணாமல் போனவர்களின் மனைவி மார்களே பெரும்பான்மையினராகையால் அவர்களிடமிருந்து ஆவணங்கள் மட்டுமே பெறப்பட்டன. (மேலும்....)

ஐப்பசி 10, 2010

விகிதாசார முறையினால் அரசியல் நெருக்கடி

நேபாளத்தில் நடைமுறையில் இருப்பது விகிதாசாரத் தேர்தல் முறை. அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் பார்க்கையில், தொகுதிவாரித் தேர்தல் முறை நடைமுறையில் இருந்திருக்குமேயானால் மாவோயிஸ்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கும். விகிதாசாரத் தேர்தல் முறை காரணமாக எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எந்தக் கட்சியும் மற்றைய கட்சிக்காரர் பிரதமராகுவதை விரும்பவில்லை. நேபாளத்தின் அரசியல் நெருக்கடிக்கு விகிதாசாரத் தேர்தல் முறையே காரணம். (மேலும்....)

ஐப்பசி 09, 2010

இணைய இயங்குதளம் (Internet Browser)

வளர்ந்து வரும்  Google Chrome! உறுதியாக நிற்கும் Firefox!! தடுமாறும் Internet Explorer!!!

(சாகரன்)

இன்று காலச்சுழற்சியில் Microsoft மென்பொருள் (Software) உலகில் தனிக்காட்டு ராஜாதனத்தை உடைக்க பல நிறுவனங்கள் இனாமாக பல மென்பொருட்களை(Software) விநியோகிக்க தொடங்கிவிட்டன. ஆனால் எதிர் காலத்தில் இவ் நிறுவனங்களும் Microsoft போலவே தமது வியாபார புத்தியையும் Monopoly யையும் காட்டத் தயங்க மாட்டாது என்பதை நாம் கண்கூடாக பார்க்கத்தான் போகின்றோம். இவ் ஏற்றத் தாழ்வுகளுக்கு விலைச் சலுகை, இனாம் என்பவற்றிற்கு அப்பால் தொழில் நுட்ப காரணிகளின் ஏற்றத் தாழ்வுகளும் காரணம் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதே வேளை வியாபார விளம்பரங்களும் அரசியல் குறுக்கீடுகளும் கணிசமான பங்குகளை ஆற்றுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் நிஜம் மக்களுக்கு சேவை செய்தல் என்ற அடிப்படையில் இவை எதுவும் நடக்கவில்லை என்பது மட்டும் உறுதி.(மேலும்....)

ஐப்பசி 09, 2010

இந்தியாவின் உதவியுடன்

கே. கே. எஸ். ரயில் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பமாகும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் கூறினார். யாழ். மாநகர சபையில் இலங்கை - இந்திய நட்புறவுச் சங்கத்தால் வழங்கப்பட்ட பஸ் வண்டிகளின் திறப்புகளை யாழ். நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். சண்முகலிங்கன், வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பொன்னம்பலம், யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் கு. பற்குணராஜா ஆகியோரிடம் இந்தியத் தூதுவர் அசோக்காந்த் நேற்று வெள்ளிக் கிழமை கையளித்தார். மன்னார், மடு, தலைமன்னார் பகுதிகளுக்கான புகையிரத வீதிகளையும் அமைத்துக் கொடுக்கவுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 09, 2010

வெளிநாடுகள் போல்

ஒரே கட்டண(10 ரூபா) அறவீட்டில் கொழும்பில் விசேட பஸ் சேவை

ஒரே அளவு கட்டண அளவீட்டுடன் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு 12 கிலோ மீற்றர் சுற்று வட்டத்தில் பயணிக்கும் புதிய பஸ் சேவையொன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு கோட்டையிலிருந்து புறப்ப டும் பஸ் புறக்கோட்டை, மருதானை, பொரளை, நாரஹென்பிட்டிய, கிருளபனை, ஹெவ்லொக் டவுன், டவுன்ஹோல் ஊடாக மீண்டும் கொழும்பு கோட்டையை வந்தடையும். பயணி ஒருவர் எந்த பஸ் தரிப்பு நிலையத்தில் ஏறி எந்த பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கினாலும் 10 ரூபா மட்டுமே அறவிடப்படும். (மேலும்....)

ஐப்பசி 08, 2010

 

ஐந்து இலட்சத்து 44 ஆயிரம் பேர் இதுவரை மீளக்குடியமர்வு

மீட்கப்பட்ட நகைகள் மீள்குடியேற்றத்தின் பின் உரியவரிடம் ஒப்படைப்பு

யுத்தம் காரணமாக உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களில் 5,44,494 பேர் இதுவரை மீள்குடி யேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுயதொழில், மீன்பிடி, விவசாயம் மற்றும் அன்றாட கூலி வேலை செய்வதினூடாக தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்வதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின் அப்பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் மக்கள் வங்கிக்கிளைகள் ஊடாக மீள வழங்கப்படும். (மேலும்....)

ஐப்பசி 09, 2010

ஆசிரிய சமூகத்துக்கு கௌரவம்

ஒரு மலரை அல்லது மலர்ச் செண்டை ஆசிரியருக்குக் கொடுத்து வணங்குவது நியா யமான கெளரவம். பண்டமாக ஆசிரியர்களுக்கு மாண வர்கள் பரிசளிப்பது விரும்பத்தக்கதல்ல. ஒரு வகுப்பில் கல்வி கற்கின்ற மாணவர்கள் எல்லோரும் ஒரே அளவு வருமானத்தைப் பெறும் பெற்றோரின் பிள்ளைகளாக இருப்பது சாத்தியமில்லை. மிகவும் பெறுமதி வாய்ந்த பரிசொன்றை ஒரு மாணவன் வழங்கும் போது, அதேய ளவு பெறுமதி வாய்ந்த பரிசைத் தன்னால் வழங்க முடி யவில்லையே என்ற மானசீகத் தாக்கத்துக்கு வறிய மாணவன் உள்ளாவது இயல்பு. வகுப்புக்குள் சமூக, பொருளாதார அந்தஸ்தின் உயர்வு தாழ்வு பிரதிபலிப்பத ற்கு இடமளிக்காதிருப்பது மாணவர்களின் மனோநிலை பாதிக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அத்தியா வசியமானது. (மேலும்....)

ஐப்பசி 09, 2010

வருணாசிரமம் வளர்த்தவனே ராஜராஜன்!

(அருணன்)

வருணாசிரமத்தின் ஒரு முக்கியமான கூறாக, தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தை முனனிறுத்துவது இருந் தது. இடைக்காலத்தில் சமண-புத்த மதங் களை ஒழித்துக்கட்டத் தமிழ் இசைப்பாடல்க ளைப் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, காரியம் முடிந்ததும் மீண்டும் தங்கள் பழைய நிலைமைக்குத் திரும்பி விட்டார்கள். அதைத் தான் ராஜராஜன் - ராஜேந்திரன் காலம் உணர்த்துகிறது. சிதம்பரம் கோவிலில் பதுக் கப்பட்டிருந்த மூவர் தேவாரத்தை ராஜராஜன் மீட்டெடுத்தான் என்பதும் கர்ண பரம்பரைக் கதையாகக் கூறப்படுகிறதே ஒழிய வலுவான கல்வெட்டு ஆதாரம் இல்லை. (மேலும்....)

ஐப்பசி 09, 2010

தமிழாராய்ச்சியின் தனிநாயகம்

இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள கரம்பனில் 2. 8. 1913 ல் பிறந்த தனிநாயகம் அடிகளின் இயற்பெயர் நாகநாதன். இவர் கிறிஸ்தவ சமயத்தை தழுவியபோது ஏற்றுக்கொண்ட பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என் பதாகும். ஆரம்பக் கல்வியை ஊர் காவல்துறை புனித அந்தோணியார் கல்லூரியிலும், இடைநிலைக்கல் வியை யாழ்ப்பாணம் புனித பத்திரி சியார் கல்லூரியிலும், கொழும்பில் தத்துவவியலில் கலைமாமணிப் பட்டத்தையும் (1934), அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் முது கலைமாமணிப் பட்டத்தையும், லண்டனில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். (மேலும்....)

 

ஐப்பசி 09, 2010

கடலில் எண்ணெய் கலந்த விவகாரம்:  மக்களிடம் அமெ. அரசு மறைத்த மோசடி அம்பலம்

நிலைமை மோசமாக இருக்கிறது என்று அரசு விஞ்ஞானிகள் மக்களுக்குச் சொல்ல முயன்றபோது அதை ஒபாமா நிர்வாகம் தடுத்திருக்கிறது. மிகவும் எளிதாக இந்தப் பிரச்சனையைக் கையாண்டுவிடலாம் என்று நிர்வாகம் தனக்குத் தானே முடிவு செய்திருந்தது. இந்த நகல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசு அதிகாரிகள், மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்கத் தாங்கள் விரும்பவில்லை என்று கூறினாலும், அறிக்கையில் எழுந்துள்ள பல கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை. மெக்சிகோ வளைகுடா பகுதியில் எண்ணெய் பரவி வருகிறது என்று தெரிந்த பிறகும் முதல் பத்து நாட்களுக்கு போதிய நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொள்ளவில்லை. பிரிட்டிஷ் பெட்ரோலிய நிர்வாகமே அதைச் சரிசெய்துவிடும் என்று இருந்துவிட்டார்கள். (மேலும்....)

ஐப்பசி 09, 2010

சகாயமணியை அடுத்த சபை அமர்வுக்கு முன் கண்டுபிடிக்க வேண்டும்: இரா.துரைரெட்ணம்.

காணாமல் போன உறுப்பினர் எதிர்வரும் சபை அமர்வுக்குள் கண்டுபிடிக்கப்பட வேண்டும், இல்லையேல் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தேடிக் கண்டறியப்பட வேண்டும். அது பொலிஸாரின் கடமையாகும். தவறும் பட்சத்தில் எதிர்வரும் சபை அமர்வுகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். "யுத்தம் முடிவடைந்த இவ்வேளையில் யாரேனும் ஒருவர் தவறிழைத்தால் அவர் முறைப்படி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மாறாக இவ்வாறாக கடத்தப்பட்டுக் காணாமல் போகும் சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்தார் இரா.துரைரெட்ணம். (மேலும்....)

ஐப்பசி 09, 2010

உலக அஞ்சல் தினம் இன்று

ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் வளர்ச்சிபெற்ற அஞ்சல் துறை

(நெளஸாத் காரியப்பர்) (அஞ்சல் அதிபர், சாய்ந்தமருது)

‘....... உலகின் பல்வேறு நாடுகளுக் குரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்கே உரிய பிரத்தி யேகமானதும், மிகப் பெறுமதி வாய்ந் ததுமான தகவல்களையும், பொருட்க ளையும் எம்மிடம் ஒப்படைப்பது அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாக வும், மிகக் கவனத்துடனும், அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார் கள் என்ற எம்மீதுள்ள பெரு நம்பி க்கை என்பதை நாம் அறிந்துள்ள தோடு அவர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற் திறமையு டனும் நேர்மையுடனும், பாதுகாப் போம்...’ (மேலும்....)

ஐப்பசி 08, 2010

நாடு கடந்த தமிழீழம்

நாங்கள் எதை எதிர்த்தோம்? ஏன் நிராகரித்தோம்? - மனம் திறக்கிறார்கள் ‘மக்கள் பிரதிநிதிகள்!’

தமது அத்தனை முயற்சிகளும் நியாயமற்ற வகையில் நிராகரிக்கப்பட்டதனால் அதிருப்தியடைந்த தமிழ்த் தேசிய உணர்வு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். அவர்களில் ஒருவர் இங்கிருந்த குண்டர்களால் தாக்கப்பட்டதாகவும், சிலரது தலையீட்டால் அவர்களது ஆயுத பிரயோக எத்தனிப்பு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சபையில் தெரிவித்துவிட்டு, அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார். 135 மொத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு பரிசீலித்து ஏற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் யாப்பை 48 உறுப்பினாகளை சபையில் வைத்துக்கொண்டு நிறைவேற்றியதும், அதே போல் 48 உறுப்பினர்களால் பிரதமர், சபாநாயகர், பிரதிச் சபாநாயகர் ஆகியோரது தெரிவும், அதற்குப் பின்னரான நியமனங்களும் சட்டப்படியும், நியாயப்படியும், சம்பிரதாயப்படியும், ஒரு நாட்டுக்கான அரசியல் முறைமைப்படியும் செல்லுபடியற்றது என்பதே எமது நிலைப்பாடு. (மேலும்.....)

ஐப்பசி 08, 2010

கனடாவில்

புகலிடம் கோருவோர் குறித்துப் புதிய சட்டவிதிகள்

கனடாவில் புகலிடம் கோரும் அகதிகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் புதிய சட்டவிதிகளை பின்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. புகலிடம் கோரி சட்ட விரோத கப்பல்கள் அண்மைக் காலமாக கனடாவை நோக்கிப் பயணித்து வருகின்றன. இதனால் பல சட்டவிரோத செயல்களும் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அகதிகள் தொடர்பில் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, அவை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஐப்பசி 08, 2010

பொதுநலவாய விளையாட்டு:பதக்க பட்டியலில் ஆஸி. முன்னிலை

விளையாட்டுப்போட்டியில் பதக்க பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.பொதுநலவாய விளையாட்டுப்போட்டியில் நாடுகள் பெற்ற பதக்கங்களின் விபரம்

 

தங்கம்

வெள்ளி

வெங்கல

மொத்தம்

அவுஸ்திரேலியா

32

19

19

69

இந்தியா

17

11

9

37

இங்கிலாந்து

12

25

12

49

கனடா

12

2

12

26

தென் ஆப்ரிக்கா

5

5

6

16

நைஜீரியா

4

4

5

13

மலேஷியா

3

3

3

10

சிங்கப்பூர்

2

2

4

8

ஸ்காட்லாந்து

1

2

4

7

கென்யா

1

1

1

3

நய்ரோ

1

1

0

2

ஜமைக்கா

1

1

0

2

உகான்டா

1

0

0

1

இலங்கை

0

1

1

2

ஐப்பசி 08, 2010

வீடமைப்பு, ரயில் பாதை

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வடக்கில் அபி. திட்டங்களுக்கு அடிக்கல்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு த்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வடக்கில் இந்திய அரசின் உதவியினால் முன் னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். எதிர்வரும் 29 ஆம் திகதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள அவர் வீடமைப்புத் திட்டம், ரயில் பாதைகள் அமைக்கும் வேலைத்திட்ட ங்களுக்காக அடிக்கல் நாட்டவுள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். மடுவிலிருந்து தலை மன்னார் வரையும் ஓமந்தையிலிருந்து பளை வரையும் இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கலந்து கொள்ளவுள்ளார். இதேவேளை, இந்திய அரசின் உதவியுடன் வடபகுதியில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்பகட்டமாக யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கலந்து கொள்ளவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

ஐப்பசி 08, 2010

தோழர் மு.கார்த்திகேசன் மறைந்த 33வது ஆண்டு நினைவையொட்டி

 

வெளியிடப்பட்ட

 

'கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் - நகைச்சுவை – ஆளுமை – தீர்க்கதரிசனம்'

 

என்ற நூல் பற்றிய ஆய்வரங்கு

 

இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

58 தர்மராம வீதி - கொழும்பு – 6

 

காலம்: 10 - 10 - 2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி

(மேலும்.....)

ஐப்பசி 08, 2010

சினிமாவின் பிறழ்ச்சியும் இன்றைய ரசிகனும்!

இன்றைய தலைமுறையினர் தனது அபிமான நடிகன் ஒருவனின் திரைப்படம் வெளியானதும் பித்துப் பிடித்த நிலைக்குள்ளாவதி லிருந்து இன்றைய ரசனையின் போக்கை நாம் அறிந்து கொள்ள முடியும். அறிவீனம், பாமரத்தனம், வெகுளித்தனம், பேதமை, முதிர்ச்சியீனம் போன்ற எந்த வரையறைக்குள் இத்த கைய ரசிகனை உள்ளடக்குவதென்பதுதான் புரியாமலுள்ளது. கதாநாயகன் குளிரூட்டிய அறையில் பணநோட்டுகளில் புரண்டிரு க்க, அவனது ரசிகனோ மரத்தில் ஏறி பதாகை கட்டுவதிலும் திரையரங்கு வாசலில் வரிசையில் வாழ்நாளைக் கழிப்பதிலும் வாழ்வையே வீணடிக்கிறான். (மேலும்.....)

ஐப்பசி 08, 2010

சீனாவின் வளர்ச்சியும் சவால்களும்

“ சோசலிஸ சமத்துவத்தின ஆரம்பக்கட்டத்திலேயே சீனா இன்னமும் உள்ளதுடன் தொடர்ந்துமே அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடாகவே இருக்கின்றது சீனாவின் மொத்த தேசிய உற்பத்தி தலா வருமானம் சமீபத்தில் தான் 3000 அமெரிக்க டொலர்கள் இலக்கை தாண்டியுள்ளது .இதன்படி உலகளவில் 104வது இடத்திலேயே காணப்படுகின்றது .சமச்சீரற்ற அபிவிருத்தியானது மிகமுக்கிய பிரச்சனைகளிலொன்றாக அமைந்துள்ளது பல கிராமப்புறங்களும் தூரப்பிரதேசங்களும் இன்னமுமே மிகவும் வறுமைமிக்கதாக காணப்படுகின்றது 135மில்லியன் மக்கள் இன்னமும் நாளொன்றுக்கு ஒருடொலர்களுக்கம் குறைந்த வருமானத்தை ஈட்டுபவர்களாகவே காணப்படுகின்றனர் .சீனா உண்மையான அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கு பல தாசப்தகாலங்கள் பத்திற்கும் மேற்பட்ட சந்ததியினரின் கடுமையான முயற்சிகள் அவசியமாகும் .;” (மேலும்.....)

ஐப்பசி 08, 2010

இலங்கை ஜனநாய சோசலிச குடியரசும் மகிந்த சிந்தனையும்

- தேவன் (கனடா) -

சிங்கள சமூக அரசியல் பாரம்பரியம் மிகவும் பன்முகத்தன்மை கொண்டது. முற்போக்கானதும் கூட. 30 வருட பிரபாகர சிந்தனையை தமிழ் சமூகம் வேடிக்கை பார்த்தது போல மகிந்த சிந்தனையை Justice is blind ஆன அரச யந்திரத்திற்கு நிச்சயம் மாற்றம் தேடுவார்கள். இன்றைய இலங்கைத் தீவில் குண்டுச் சத்தம், செல்லடி, வான் தாக்குதல்கள், ஊரடங்கு, போர்க்கெடுபிடி இல்லையே ஒழிய அதற்குப் பதிலாக இமாலய அளவுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இவைகளை முன்னிறுத்தி தேசிய அளவில் போராடவேண்டிய தமிழ் கட்சிகள் வெறும் றப்பர் ஸ்டாம் ஆகவும், அறிக்கைகள் விடுவதிலும் தம் இருப்பை தக்க வைப்பதிலுமே பத்தோடு பதினொன்றாக ஈழக் குறியீட்டில் அடையாள அரசியலை நடத்திவருகின்றன. (மேலும்.....)

ஐப்பசி 08, 2010

Ponniah Anandarajah alias Ayya alias Rajah, 60 years old, living in U.S. 

Interpol issues red notices on two hardcore terrorists:

Fresh moves to break LTTE ‘backbone’ abroad

(by Ananth PALAKIDNAR)

Fresh moves are under way with the assistance of Interpol and other intelligence agencies abroad to break the `backbone’ of the LTTE’s international terror network which is believed to be still active in certain countries, according to informed sources. Interpol has already issued red notices on two hardcore LTTE terrorists. The Interpol action is based on the secret documents which were recovered from the LTTE’s international link spot known as ‘Castro’ office in the Wanni by Sri Lankan authorities recently, the sources said. The two prime LTTE hardcore terrorists who were issued with red notices by Interpol are Ponniah Anandarajah alias Rajah alias Ayyah of the USA. Rajah is sixty years and hails from Chankanai, Jaffna. He had been the head of the LTTE financial procurement and shipping network since 2003. (more...)

ஐப்பசி 08, 2010

எங்கும் நிறைந்திருக்கும் மகாசக்தி

வான் பெளதிகவியல் என்ற விஞ்ஞான ஆய்வின் மூலம் இந்த நான்கு சக்திகளையும் அறிந்து கொள்ளலாம். திரிமூர்த்திகள் என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் இலத்திரன், நியூத்திரன், நியூட்ரோன், புரோட்டன் என்ற மூன்றுசக்தி களுக்குட்பட்டவையே எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையே வலம் வரவைத்துவிட்ட கரு ஆகிறார். புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் பிரம்மதேவன் சிருஷ்டிப்பதிலும், மகா விஷ்ணு காக்கும் கடளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்வதற்கும் பொறுப்பாளர்களாகினர் என்றார்கள். நவீன சாஸ்திரப்படி கண்ணோட் டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயகமாக அதிபாரசக்தியாகவே திகழ்கின்றாள். அவளுக்குத் துணையாக இலத்திரனான பிரம்மதேவனும், நியூத்திரனான விஷ்ணுவாகவும், புரேத்திரனான மகேஸ்வரனும் விளங்குகின்றனர். இதைக் கண்ணுறும் பொழுது இந்தச் சிக்தியே பிரபஞ்சத்தில் ஆதியிலே வெளியான அரும்பெரும் தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரிய பொருளாக விளங்குகின்றாள். (மேலும்.....)

ஐப்பசி 08, 2010

ஆப்கானிஸ்தான் அமைதி பெற்றால் அடுத்த தொல்லை பாகிஸ்தானை வந்தடையும் என்பதே இஸ்லாமாபாத்தின் அச்சம் என அமெரிக்கா கருதுகின்றது. வஸிரிஸ்தான் பஜுலுஸ்தான் மாகாணங்களிலுள்ள தலிபான்களின் செயற்பாடு உலகையே அச்சத்துக்குள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவததிற்கில்லை. இவ்வருட மார்ச் மாதத்தி லிருந்து ஆப்கானிஸ்தானில் நடப்பவை அனைத்தும் அச்சத்தையே ஏற்படுத்துகின்றது. அந்தளவிற்கு தலிபான்களின் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. (மேலும்.....)

ஐப்பசி 08, 2010

Preparations underway for possible second Tamil ship

(By TOM GODFREY, Toronto Sun Thursday, October 7, 2010)

A maritime search is underway by Canadian authorities for evidence of a second Tamil smuggling ship that is reported to be steaming to B.C. before the shipping season winds down for the winter.Military and police officers working for Public Safety Canada are using satellites and hi-tech eavesdropping equipment to locate and pick up signals from the vessel and determine if it is ferrying migrants from Sri Lanka, sources said. “We believe the first smuggling trip is paying for a second one,” a police source said on Thursday. “The smugglers have a window of only a couple weeks to make it to Canada.” (more...)

ஐப்பசி 08, 2010

சரத் பொன்சேகாவின் எம்.பி. பதவி வெற்றிடம்,  பாராளுமன்ற செயலாளர் அறிவிப்பு

ஜனநாயகத் தேசிய கூட்டமை ப்பு கொழும்பு மாவட்ட எம். பி. சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக தசனாயக்க நேற்று (7) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்துள்ளார். இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவு க்கு 30 மாத கடூழிய சிறைத்தண் டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதற்கு முப்படைகளின் தளப தியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 29ம் திகதி அங்கீகாரம் வழங்கினார். இதனடிப்படையில், பொன்சேகாவுக்கு எதிரான தண்டனை 30 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதோடு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சரத் பொன்சேகாவின் வெற்றிடத்திற்கு கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பட்டியலில் அடுத்ததாக உள்ள லக்ஷ்மன் நிபுனஆரச்சி நியமிக்கப்பட உள்ளதாக அறியவருகிறது.

ஐப்பசி 08, 2010

ஆப்கான் ஜனாதிபதி - தலிபான் தலைவர்கள் நேரடிப் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் அல்கர்ஸாயி தலிபான் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது. வெளிநாட்டுப் படைகள் வெளியேறும் வரை ஆப்கான் அரசுடன் பேச்சு வார்த்தைகளில்லையெனத் திட்டவட்டமாக அறிவித்த தலிபான்கள் தற்போது பேச்சுவார்த்தையில் பங்கேற்றமை வரவேற்புக்குரியது என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் அமைப்பின் தலைவர் மொஹமட் ஒமர் உட்பட முக்கியஸ்தர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு யுத்தத்தை முடிப்பது என்ற விடயத்தில் இரண்டு தரப்பாரும் உறுதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானி லுள்ள நேட்டோ படைகளை வெளியேற்றல், ஆப்கானிஸ்தான் அரசியலில் தலிபான்களை பங்கேற்கச் செய்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இதில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது.

ஐப்பசி 08, 2010

ஆசிரியத்துவம்! அழியாத தத்துவம்

(ஜீவகன்)

எதிர்காலச் சந்ததியினரின் கல்விக்கான பொறுப்பைத் தாங்கி நிற்பவர்கள் ஆசிரியர்களே. ஆசிரியத்துவம் என்பது அழிந்துபோகும் தத்துவம் அன்று. எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்றெல்லாம் போற்றிப் புகழும் இந்தப் பணியைப் புரிபவர் ஒருவரால் அந்தப் பணிக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே ஆற அமர சிந்திப்பின் வெளிப்பாடு. அதன் காரணமாகத்தான் ஆசிரிய பணியில் உள்ளவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எழுகிறது. (மேலும்.....)

ஐப்பசி 07, 2010

எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள்

 

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்ய ப்பட மாட்டார்களென பொலிஸ் தலை மையகம் நேற்று அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் கவுன்ஸில் இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று கூடிய தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான சாட்சியங்களுக்கேற்ப வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆதாரங்கள் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்யப்படமாட்டார்கள். (மேலும்..)

ஐப்பசி 07, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

(சமஸ்)

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்? ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன. (மேலும்.....)

ஐப்பசி 07, 2010

தேர்தல் சீர்திருத்தம்

விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை நடைமுறைக்கு வந்த தற்கு முன் வட்டார அடிப்படையிலேயே உள்ளூரா ட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. வட்டார அடிப்ப டையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிக்கும் அவ்வ ட்டார மக்களுக்குமிடையே நெருக்கமான உறவு இரு ந்தது. அப்பிரதிநிதி மக்களின் தேவைகளை மாத்திர மன்றி வட்டாரத்தின் தேவைகளையும் நன்கு அறி ந்து அவற்றைப் பெற்றுக் கொடுப்பதில் அக்கறை யாக இருப்பார். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தெரிவு செய்யப்படும் பிரதிநிதி எல்லா வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாகப் பொதுப்படையாகக் கருதப்படுகின்ற போதிலும் ஓரிரு வட்டாரங்களுட னேயே அவருக்கு நெருக்கமான தொடர்பு இருக் கும். உள்ளூராட்சி சேவையின் பலனை மக்கள் அனை வரும் அனுபவிப்பதற்கு வட்டார அடிப்படையிலான தேர்தல் முறையே சிறந்தது. (மேலும்..)

ஐப்பசி 07, 2010

இலங்கைவாசி  ஜயசிங்கம் கைது, குணராஜா தேடப்படுகிறார்

சென்னையில் பாரிய கொள்ளைகள், கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு

சென்னை புறநகர் பகுதிகளில் 54 வழக்குகளில் திருட்டுப் போன 237 பவுண் தங்க நகைகள், 8 டாட்டா சுமோ கார்கள் மற்றும் ரூ. 39.5 இலட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்ட ஒரு கோடியே ஐந்து இலட்சம் மதிப்புள்ள பொருட்களை பொலிசார் மீட்டனர். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ஜயசிங்கம் உள்ளிட்ட 16 பேரை புறநகர் பொலிஸார் கைது செய்தனர். (மேலும்..)

ஐப்பசி 07, 2010

சரத் பொன்சேகாவுக்கு சிறையினுள் போதிய பாதுகாப்பு

சிறைச்சாலைக்குள்ளும், நீதிமன் றம் சென்று வருவதற்கும் சரத் பொன்சேகாவுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள், புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க சபாநாயகரின் அனுமதியைப் பெற்று எழுப்பிய கவனயீர்ப்பு கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது விடயமாக அமைச்சர் மேலும் கூறுகையில் சிறைச்சாலை யிலிருந்து நீதிமன்றத்திற்கு சரத்பொன்சேகா சென்று வர போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. இது விடயமாக பிரதி பொலிஸ் மா அதிபருடன் கலந்து ரையாடி நடவடிக்கை எடுத்துள்ளேன். சிறையில் எல்லாக் கைதிகளும் ஒரே மாதிரியாகவே நடாத்தப்படுவர். ஐ.தே.க. ஆட்சி காலத்தில் நான் சிறை யில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது ஒழுங்கு முறையாக உணவு வழங்கப்பட வுமி ல்லை. உறவினர்கள் என்னைச் சந்திப்பதற்கும் கூட இடமளிக்கப்பட வில்லை. ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லை என்றார்.

ஐப்பசி 07, 2010

இந்திய வடக்குப் பகுதியில் புதிய மொழி கண்டுபிடிப்பு

இந்தியாவின் வடக்கு பகுதியில் புதிய மொழி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் 'கோரோ' என்ற மொழியைப் பேசுவோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 'கோரோ' எனப்படும் இந்த மொழியை பேசுவோர் சுமார் 800 முதல் 1200 வரையான எண்ணிக்கையில் அங்கு வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது மொழியியல் ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேஷனல் ஜோகிராஃபிகல் சேனல் குழுவின் 2008 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த ஆராய்ச்சியின் மூலம் இந்த 'கோரோ' மொழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த கோரோ மொழி திபெத்தோ- பர்மன் குடும்பத்தை சேர்ந்தது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

ஐப்பசி 07, 2010

அனைவரினதும் மதிப்பிற்குரிய சுழிபுரம் இராஜசுந்தரம் மாஸ்ரர்

சாதிபேதம் பாராது அனைவரும் சமமென்று....

மோதல் தவிர்த்து முரண்பாடு நீக்கிவைத்தார்.

தென்னிலங்கைத் தோழர்கள் சிறுவயதே உன்நண்பர்.

அந்நியமாய்ப் பழகவில்லை அடுத்துக் கெடுக்கவில்லை.

 திண்ணிய நெஞ்சுரத்தில் தீங்கெனக்கு வாராதென்று....

எண்ணி -யாழ்- வாழ்ந்தவுன்னை எப்படித்தான் அழித்தாரோ?

(மேலும்..)

ஐப்பசி 07, 2010

வெறும் கண்களால் பார்க்கக்கூடிய முப்பரிமாண (3D) தொலைக்காட்சியை, 'டொஷிபா' அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக முப்பரிமாணத் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு கண்ணாடி அணிய வேண்டிய கட்டாய நிலையே இருந்து வந்தது. தற்போது ' டொஷிபா ' அறிமுகப்படுத்தியுள்ள இத்தொலைக்காட்சிக்கு கண்ணாடி அவசியமில்லை. இதன் ' லிக்யுட் கிரிஸ்டல்' திரையின் முன்பகுதியில் சிறிய வில்லைகளைக் கொண்ட 'சீட்' போன்றதொரு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. மேற்படி சீட்டானது திரையிலிருந்து வெளிப்படும் ஒளியை 9 புள்ளிகளுக்குச் செலுத்துகின்றது. இதனை மனித மூலை முப்பரிமாண வடிவமாக ஒருங்கிணைக்கின்றது. இத்தொலைகாட்சியானது 12 அங்குலம் மற்றும் 20 அங்குல அளவுகளில் விரைவில் சந்தைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எனினும் குறிப்பிட்டளவு தூரத்திற்குள் தான் இதன் தன்மையை ரசிக்கக் கூடியதாக இருக்கும். 20 அங்குல தொலைக்காட்சியின் எல்லை 90 சென்டி மீட்டராகவும் 12 அங்குல தொலைக்காட்சியின் எல்லை 65 சென்டி மீட்டராகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஜப்பானிய சந்தைக்கு வரவுள்ள இத்தொலைக்காட்சியானது சுமார் 1400 அமெரிக்க டொலர்வரை விலையிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐப்பசி 07, 2010

வடக்கு, கிழக்கு மாகாணங்களில்

பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்கள் 147ம் இந்திய எண்ணெய் கம்பனியின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 9ம் ஆகும்.

உலக சந்தை விலைகளை விட குறைந்த விலைக்கு எரிபொருள் பெறுவது தொடர்பாக பல நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். இந்த முயற்சி பலனளித்தால் பாவனையாளர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுமென பெட்ரோலிய தொழில்துறை அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கூறினார். இந்த வருட ஜனவரி மாதத்தின் பின் வடக்கில் துணுக்காய் பகுதியில் ஒன்றும் கிழக்கில் கிண்ணியாவிலும், பொத்துவிலிலும் தலா ஒவ்வொரு நிரப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. (மேலும்..)

ஐப்பசி 07, 2010

நாடுமுழுவதும் 2066 கிராமசேவகர் வெற்றிடங்கள்

நாட்டில் 2066 கிராம உத்தியோக த்தர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை துரிதமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டபிள்யூ. ஜோன் செனவிரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம். பி. தயாசிறி ஜயசேகரவின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்: நாடெங்கிலும் 2066 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும். பரீட்சைகள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக இப் போட்டிப் பரீட்சைகள் நடாத்தப் படும். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் திறமைச் சித்தியையும், கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியையும் பெற்றிருப்பவர்கள் இப்போட்டிப் பரீட்சைக்குத் தோற்றும் தகுதி பெற்றவர்களாவர்.

ஐப்பசி 07, 2010

சீனப் பெருஞ்சுவரை சிதைக்கும் சுற்றுலா பயணிகள்

சீனாவில் உள்ள சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக இதை யுனெஸ்கோ அறிவித்து உள்ளது. இதை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் ஒரு கோடி பேர் சீனாவுக்கு வருகிறார்கள். இவர்கள் சீனப் பெருஞ் சுவரில் இருந்தபடியே சாப்பிடுவது, சாப்பாடுகள் கொண்டு வந்த பேப்பர் பைகளையும், குளிர்பான போத்தல்களையும் மதுபோத்தல்களையும் அங்கேயே வீசி விட்டு போய் விடுகிறார்கள். இதனால் பெருஞ்சுவரின் பல பகுதிகள் குப்பைத் தொட்டிகள் போல காட்சி அளிக்கின்றன. பீஜிங் அருகே உள்ள படாலிங் என்ற இடத்தில் உள்ள சீனப் பெருஞ் சுவரில் சுற்றுலா பயணிகள் கூடாரம் அமைத்து இரவு படுத்து தூங்குகிறார்கள். இதற்காக அவர்கள் இரு கற்களுக்கு இடையே உள்ள சுவரில் ஆணி அடிப்பது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். இதனால் சுவர்கள் சேதம் அடைந்து உள்ளன.

ஐப்பசி 07, 2010

வட பகுதியிலுள்ள 25 வைத்தியசாலைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட வுள்ளது

எட்டு சுகாதார அதிகாரிகள் அலுவலகம், 12 விடுதிகள், ஐந்து மலேரியா தடுப்பு அலுவலகம், இரண்டு இருதய சிகிச்சை பிரிவு

“வரும் முன் காப்போம்” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளர்களுடன் இணைந்து சேவை யாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகா தார உதவியாளர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 570 பேருக்கு நவம்பர் மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐந்து அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த வேலைத் திட்டத்தின் முதலாவது அம்சத்தின் கீழ் 175 மருத்துவ மாதுகளும், 50 பொது சுகாதார அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் இவர்களுக்குத் தேவையான சகல பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது அம்சத்தின் கீழ் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள 25 வைத்தியசாலைகள் புதிதாக நிர்மாணிக்க புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் எட்டு சுகாதார அதிகாரிகள் அலுவலகம், 12 விடுதிகள், ஐந்து மலேரியா தடுப்பு அலுவலகம், இரண்டு இருதய சிகிச்சை பிரிவு, ஆகியன நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் 8 கெப் வண்டிகளும் வழங்கப்படவுள்ளன. (மேலும்..)

ஐப்பசி 07, 2010

பலஸ்தீனை மீளவும் இணைக்கும் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்

2007ம் ஆண்டு காஸாவை இஸ்லாமிய கடும்போக்கு அமைப்பான ஹமாஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பலஸ்தீன் இரண்டாக உடைந்தது. காஸாவுக்கு இஸ்மாயில் ஹனியா தலைவராகவும், மேற்குக் கரைக்கு மஃமூத் அப்பாஸ் ஜனாதிபதியாகவும் உள்ளனர். ஹமாஸ், பதா விடையே உண்டான அதிகார மோதலையடுத்தே பலஸ்தீன் இரண்டாக உடைந்தது. இப்பிரதேசங்களை மீளவும் இணைப்பதற்கான முயற்சிகள் எகிப்து தலைமையில் முன்னெடுக்கப்பட்டன. மஃமூத் அப்பாஸ், ஹமாஸின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான காலித்மெஷால் ஆகியோர் இப்பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றிருந் தனர். (மேலும்..)

ஐப்பசி 07, 2010

முட்டை விற்பனையில் மாபியாக்கள் செல்வாக்கு!

கோழிப் பண்ணையாளர்களிடமிருந்து நேரடியாக முட்டையைக் கொள்வனவு செய்யுமாறு கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன (ச. தொ. ச) வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்புரை வழங்கியுள்ளார். கோழிப்பண்ணைகளிலிருந்து வெள்ளை முட்டையை 12 ரூபாவுக்கும், சிவப்பு முட்டையை ரூபா 12.50 இற்கும் நேரடியாக கொள்முதல் செய்வதன் மூலம் பண்ணையாளர் மத்தியில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள விலை இறக்கத்தை சரி செய்யுமாறும் ச. தொ. ச தலைவருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். கூட்டுறவு, வர்த் தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று கோழிப்பண்ணை உரிமையாளர் களைச் சந்தித்து பேச்சு நடத்தினார். அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின் போது முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்றும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டனர்.

ஐப்பசி 07, 2010

 

கைபர் கணவாயூடாக வந்த நேட்டோ வாகனங்கள்மீது தலிபான்கள் கடும் தாக்குதல்

பாகிஸ்தானிலிருந்து எரிபொருட்களைக் கொண்டு சென்ற வாகனங்களை மறைந்திருந்த தலிபான்கள் தாக்கியதுடன் அவற்றை தீயிட்டுக் கொழுத்தினர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை அதிகாலை நடந்தது. வஸிரிஸ்தானின் குவெட்டி என்ற இடத்தில் 25 வாகனங்கள் தாக்கப்பட்டன. இவை எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு கைபர் கணவாயூடாக ஆப்கானிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த வேளையே தலிபான்களால் தாக்கப்பட்டது. இதே போன்றதொரு சம்பவம் திங்கட்கிழமையும் நடந்தது.(மேலும்..)

ஐப்பசி 07, 2010

சனிக்கிரகத்தின் ‘மின்னல்’

பூமியில் தோன்றும் மின்னலைவிட சுமார் ஆயிரம் மடங்கு அதிக வலிமை

பூமியைப் போலவே, சூரிய குடும்பத்தில் உள்ள எல்லா கிரகங்களிலும் ‘மின்னல்’ தோன்றும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி, ஆனால், ஒவ்வொரு கிரகத்திலும் மின்னலின் தாக்கம் வேறுபடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக சனிக் கிரகத்தில் தோன்றும் மின்னலானது பூமியில் தோன்றும் மின்னலைவிட ஆயிரம் மடங்கு அதிக வலிமையுடன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். (மேலும்..)

ஐப்பசி 07, 2010

சர்வதேச கிரிக்கட் பேரவையின்(ஐ.சி.சி) ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரருக்கான சேர் காபீல்ட் சோபர்ஸ் விருதை இந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வென்றெடுத்துள்ளார்.


இந்தியாவின் பெங்களுரில் இன்று மாலை இடம்பெற்ற 2010ம் ஆண்டிற்கான ஐசிசி விருதுவழங்கும் விழாவிலேயே சச்சினுக்கு இந்த உயர் விருது கிடைத்துள்ளது. சாதனைகளால் நிறைந்த சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கட் வாழ்வில் இந்த விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். விருதுகளுக்காக கருத்தில் கொள்ளப்பட்ட கடந்தாண்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி முதல் இவ்வாண்டு ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வீரர்களும் அணிகளும் வெளிப்படுத்திய ஆற்றல் வெளிப்பாடுகளைக் கவனத்தில் கொண்டே விருதுகள் ஐசிசியால் வழங்கப்பட்டது.(மேலும்..)

ஐப்பசி 07, 2010

ரஷ்ய விஞ்ஞானிகள் இருவருக்கு அறிவியல் நோபல் பரிசு

ரஷ்ய நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் இருவருக்கு இந்தாண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர்கள் ஆன்ட்ரீ ஜீம் (51), கான்ஸ்டான்டின் நோவோசெலோவ் (36). பிரிட்டனில் மான்செஸ்டர் பல்கலைக்கழக இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். கம்ப்யூட்டரில் சிலிகான் பயன்படுத்தப்படுகிறது. அதைவிட நுண்ணிய அளவில் "கார்பன்` எனப்படும் கரியை பயன்படுத்த முடியும் என, இவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் நிரூபித்தனர். (மேலும்.....)

ஐப்பசி 06, 2010

உலக ஆசிரியர் தினம் இன்று

எழுத்தறிவித்தவர் எந்தையும் தாயும் ஆவார்

(சாகரன்)

கற்தலும் கற்பித்தலும் பிறப்பிலிருந்து இறப்பு வரை முடிவற்றது. பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான கற்றல் பல்வேறு படிமுறையான வடிவங்களில் அமையும். அமைய வேண்டும். ஒரு குழந்தைக்கும், இளைஞருக்கும், முதியவருக்கும் கற்பிக்கும் முறமைகளில் வித்தியாசம் உண்டு. அவரவர்களுக்கு புரியும் விதத்தில் கற்பித்தலை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்பட்டால் 3 வயதில் கவிதை பாடிய திருஞானசம்மந்தமூர்த்தி நாயனாரின் வரலாற்றை உண்மையாக்க முடியும்.(ஞானப்பால் குடித்ததை அல்ல). அவரவர்களுக்கு புரியும் விதத்தில் கற்பித்தலில் ஒரு தெளிவான பார்வை, செயற்பாடு ஒரு சிறந்த நல்லாசிரியனுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகமைகள் ஆகும். (மேலும்...)

ஐப்பசி 06, 2010

நாம் எல்லோரும் இலங்கையர்

இலங்கையர் என்ற உணர்வு மேலோங்கியிருக்க வேண்டும் எனக் கூறும்போது ஒவ்வொருவரும் தத்தமது இன த்துவ அடையாளத்தையோ இனத்துவ உணர்வையோ கைவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. ஒவ்வொருவரிடமும் இன அபிமானமும் இனத்தின் மேம்பாட்டுக் கான பங்களிப்பும் இருந்தாக வேண்டும். அதேநேரம் இலங்கையர் என்ற உணர்வும் இனத்துவ உணர்வுக்குச் சற்றும் குறையாத வகையில் இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் நாடும் முன்னேறும். இனமும் முன்னேறும். இதையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகக் கூறுவர்.இலங்கையில் வாழும் சகல (தேசிய) இனங்களும், இனக் குழுக்கும் சமத்துவமான உரிமைகளை அனுபவிக்கும் போதுதான் நாம் இலங்கையர் என்ற உணர்வு வலுப்பெறும். இதனை அரசியல் அமைப்புச்சட்டத்தினால் மட்டும் அல்ல நடைமுறையிலும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.  (மேலும்...)

ஐப்பசி 06, 2010

இந்தியாவில் நாச வேலை, பாக். உதவியது உண்மைதான் : முஷாரப்

தனது ஆட்சியின்போது, இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு பயிற்சி அளித்தது உண்மைதான் என அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து உதவுவதாக இந்திய அரசு தொடர்ந்து சர்வதேச நாடுகளிடம் புகார் செய்து வந்துள்ளது. இது முஷாரப்பில் இந்த பேட்டி மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் முக்கிய தலைவர் ஒருவர் இதை ஒப்புக் கொண்டிருப்பது இதுவே முதல்முறை. (மேலும்...)

ஐப்பசி 06, 2010

விண்வெளிப் பயணம் ஒரு உயிர்ப் பணயமா...?

விண்வெளியில் ஒரு நாளைக்கு 18 முறை சூரிய உதயம் அதிக வெப்பநிலையில் தோன்றுவதால் விண்வெளி வீரர்களால் நீண்ட நேரம் தூங்க முடியாது. வளிமண்டலத்தில் சில வினாடிகள் விண்வெளி வீரர்கள் தமக்கான உடையின்றி மிதந்தால் கூட நாக்கு, மூக்கு, கண்களில் உள்ள நீர் கொதிக்கத் தொடங்கிவிடும். மிக அதிக வேகத்தில் விண்வெளி ஓடம் பூமிக்குத் திரும்புவதால், தரையைத் தொட்டவுடன் விண்வெளி வீரர்களால் தங்கள் கைகள், கால்களை அசைக்க முடியாது. இதனால் தான் விண்வெளி சென்று திரும்பி தரையிறங்குவதை இரண்டாவது பிறப்பு என்கின்றனர். இதுவரை விண்வெளிக்குச் சென்ற 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் யாருமே விண்வெளியில் இறக்கவில்லை. செல்லும்போதோ அல்லது திரும்பும் போதோ மட்டுமே உயிரிழந்துள்ளனர்.(மேலும்...)

ஐப்பசி 06, 2010

நாதஸ்வர வித்துவான் கே.எம் பஞ்சாபிகேசனுக்கு

யாழ். பல்கலையின் கௌரவ கலாநிதிப் பட்டம்

யாழ். பல்கலைக்கழகத் தின் இவ்வாண்டுக் குரிய பட்டமளிப்பு விழாவில் பிரபல நாதஸ்வர வித்துவான் சாவகச்சேரி கே. எம். பஞ்சாபிகேசனுக்கு கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் புகழடைந்த பஞ்சாபிகேசன் அவர்கள் 1924 ஆம் ஆண்டு தவில்வித்துவான் முருகப் பாபிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வராய்ப் பிறந்தார். இவரது சகோதரன் நடராஜ சுந்தரம்பிள்ளை. அவர்கள் பிரபல தவில்வித்துவான் ஆவார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1934 ஆம் ஆண்டளவில் பிர பல நாதஸ்வர வித்துவான்களான சண் முகம்பிள்ளை, அப்புலிங்கம்பிள்ளை, ராமைய்யாபிள்ளை, கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் நாதஸ்வர இசைப் பயிற்சியினைப் பெற்றார். (மேலும்...)

ஐப்பசி 06, 2010

வியட்னாமில் பெரு வெள்ளம் 36 ஆயிரம் பேர் வெளியேற்றம். இந்தோனேஷிய வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு

வியட்னாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் அதிகளவான மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். சுமார் 33 ஆயிரம் பேர் வரை இதுவரை வெளியேற்றப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது. 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் மீட்புப் பணியாளர்கள் கூறினர். வெள்ளிக்கிழமை ஆரம்பமான பெரும் மழையும் காற்றும் திங்கள் வரை பெய்ததால் வியட்னாமின் 09 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தோனேஷியாவில் வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் காணாமல் போனோரில் அதிகமானோர் உயிருடனுள்ளனர் எனத் தாம் நம்புவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்தோனேஷியாவின் கிழக்குப் பிராந்தியத்திலே இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. (மேலும்...)

ஐப்பசி 06, 2010

இலங்கையின் மத்தியில்

ஜனாதிபதியின் 2 வது பதவிக்கால சத்தியப் பிரமாண நிகழ்வு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான சத்தியப் பிரமாண நிகழ்வு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுர நகரில் நடைபெறுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எதிர்வரும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரமளவில் மிகவும் கோலாகலமான முறையில் நடைபெறவுள்ள சத்தியப் பிரமாண நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்...)

ஐப்பசி 06, 2010

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம்

இரு வாரங்களுக்குள் மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறப்படும்

அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள்

வர்த்தமானி மூலம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் மாகாண சபைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் அங்கீகாரம் பெறப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர், அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். 14 நாட்களுக்குள் இதனை மாகாண சபைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பித்து அங்கீகாரம் பெறப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு, மகாவலி கேந்திரத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,(மேலும்...)

ஐப்பசி 06, 2010

மா. சபைகளின் அதிகாரத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

மாகாண சபைகளின் அதிகாரத் தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கையையுமே எடுக்கவில்லை என்று உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாகாண சபைகள் திருத்த சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க் கட்சி தலைவர் ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் அதாஉல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அரசாங்கம் மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைப்பதற்கு எதுவிதமான நடவடிக்கையையுமே எடுக்கவில்லை. மாறாக மாகாண சபை முறையை வலுப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

ஐப்பசி 06, 2010

பொன்சேகாவின் காலத்தில்

இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக 5244 இராணுவத்தினருக்கு தண்டனை

*156 இராணுவ அதிகாரிகள்

* 5088 இராணுவ வீரர்கள்

தேசத்தால் புகழப்பட்ட வீரர் ஒருவர் தேசத்துரோகத்தனமாக நடந்த குற்றச்சாட்டிற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இது மாத்திரமல்ல இதுபோன்று சம்பவங்கள் உலகின் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளன. முதலாவது உலக மகா யுத்தத்தின் போது வழிநடத்திய அந்நாட்டு தளபதி பலராலும் போற்றப்பட்டார். ஆனால் பல வருடங்களுக்கு பின்னர் அவர் ஹிட்லருக்கு இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருந்தாலும் அவரைக் கெளரவப்படுத்தும் வகையில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் சிறையிலேயே உயிரிழந்தார். (மேலும்...)

ஐப்பசி 06, 2010

அமெரிக்காவின் சிண்டு முடிவால் கொதித்திருக்கும் உறவு

ஜப்பான், சீனப் பிரதமர்களின் பேச்சுவார்த்தையினால் வலுப்பெறுமா?

ஜப்பான் பிரதமர் நஓட்டாகான், சீனப் பிரதமர் வென்ஜியாபோ ஆகியோர் பெல்ஜியத் தலைநகர் புரூஸ ல்ஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிய, ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இரு தலைவர் களும் தனிப்பட்ட ரீதியில் இச் சந்திப்பை யேற்படுத்தினர். அண் மைக்காலமாக இரண்டு நாடுகளுக் குமிடையே ஏற்பட்ட மனக்கசப்பை போக்கும் வகையில் இச் சந்திப்பு அமைந்திருந்ததாக ஜப்பான் அமை ச்சரவையின் பிரதிச் செயலாளர் தெரிவித்தார். கொரியன் குடாவிலு ள்ள மஞ்சல் கடல்  பிரதேசத்தை இரண்டு நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இந் நிலையில் வட கொரி யாவுக்கெதிரான இராணுவ ஒத்திகையிலீடுபட்ட அமெரிக்க, தென் கொரிய இராணுவங்கள் இந்த மஞ்சல் கடற்பிரதேசத்தையும் பாவித்தன.(மேலும்...)

ஐப்பசி 06, 2010

கிழ.மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஆயுதம் இல்லாத பொலிஸ் பாதுகாப்பு - குமுறுகின்றனர் உறுப்பினர்கள்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்புப் பொலிஸாருக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் உறுப்பினர்களுக்கு ஆயுதம் இல்லாத பொலிஸார் கடமைக்கு வருவதாகவும் அவர்கள் தம்முடன் வர வேண்டுமாயின் மூன்று நாள்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்து அவர்களின் அனுமதியுடன் வருமாறும் கோரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிசார் மாகாண சபை உறுப்பினர்களுடன் மாவட்டத்திற்கு வெளியே செல்வது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளினால் சில புதிய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. (மேலும்...)

ஐப்பசி 05, 2010

மகிந்த

ஏகாதிபத்தியத்தின் வலைக்குள் சிக்குவாரா?

அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரிலுள்ள இயற்கை வரலாற்று நூதனசாலையில் கடந்த 23ம் திகதி (செப்டம்பர்) அளிக்கப்பட்ட வரவேற்பு உபசாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடனும் அவரது பாரியார் மிச்சல் ஒபாமாவுடனும் எடுத்துக் கொண்ட படம்.

ஐப்பசி 05, 2010

மக்களோடு மக்களாய்

வன்னியில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வின் ஒரு பகுதியாக வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் தலைவர்களில் ஒருவரான முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள். வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகர் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எமது முன்னாள் தோழர் கணபதி கதிரவேலு (ரகுபரன்) அவர்களால் நடாத்தப்படும் ஸ்ரீஸ் கந்தராஐ இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியினை மங்கள விழக்கேற்றி ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் மற்றும் இசைக்குழுவினர் சார்பில் மாலைகள் அணிவித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

ஐப்பசி 05, 2010

துரிதகெதியில் அகலமாகிறது யாழ்.- பருத்தித்துறை நெடுஞ்சாலை

யாழ். பருத்தித்துறை நெடுஞ்சாலை துரிதகெதியில் அகலப்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்திகள் தெரிவிக்கின்றன.. வீதியோரக் கட்டடங்களை அகற்றியும் பள்ளங்களைச் சீர்செய்தும் மரங்களை அகற்றியும் மிகவேகமாகப் இப்பணி நடைபெறுவதைக் காண முடிகின்றது. வீதியோரத்திலுள்ள தனியார் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சுற்றுமதிலை சிறிது உள்வாங்கிக் கட்டியும் தமது எல்லைகளை இப்பணிக்கு விட்டுக் கொடுத்தும் உதவி செய்வதைக் காண முடிகின்றது. வீதிக்காகப் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்படும் நிலத்தைச் செவ்வை செய்தும் மண் நிரப்பி வீதிக்குள் உள்வாங்கியும் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருவதையும் காண முடிகின்றது.

ஐப்பசி 05, 2010

There was no unilateral declaration of Tamil Eelam by me - Varatharajapperumal

First of all what happened with the North -East Provincial Council (PC) and what led to the infamous Unilateral Declaration of Independence?

Let me tell you first what led to the creation of the PCs. PCs were established by the 13th amendment, which was a result of the Indo-Lanka peace accord, as a solution to the ethnic conflict. But PC elections were only held in the South and we insisted that we want elections because there were no elected representatives for the Tamil people. Using this the LTTE stated that they are the only representative of the Tamils. I told the government that they will not be able to say that if the people elected another group into power and finally JR agreed to hold elections in November1988 and my government was established in 1988 December. Within a few months JR’s term was over and Premadasa came to power. Although Premadasa said he will strengthen the 13th amendment he began to undermine the PC system as soon as he became president. I tried my best to talk to the government and opposition leaders and the Indian government officials to push devolution forward. But no one was interested in devolution and Premadasa was undermining the process by cooperating with the LTTE. The LTTE and the Sri Lankan Army were helping each other and our comrades were getting assassinated and our movements were curtailed. We sensed that our days were coming to an end and we decided to leave with a fight. (more...)

ஐப்பசி 05, 2010

வடக்கு அபிவிருத்தியில் அரசின் அக்கறை

அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டிருந்த மாகாணங்களுள் வட மாகாணமும் ஒன்று. முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் வட மாகாண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைவர்களும் இம்மாகாணம் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டதற்குச் சம அளவில் பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகள் அரசாங்கத்திடம் அபிவிருத்திக் கோரிக்கைகளை முன்வைக்க வில்லை. வடபகுதி அபிவிருத்தியில் அரசாங்கமும் தானாக அக்கறை கொள்ளவில்லை. (மேலும்....)

ஐப்பசி 05, 2010

வேம்புமரம்

வேம்புமரம் இயற்கை நமக்கு அளித்துள்ள குளிர்சாதனக் கருவியாகும். தோட்டத்திலுள்ள ஒரு வேம்புமரம், பத்து குளிர்சாதனக் கருவியாகும். தோட்டத்திலுள்ள ஒரு வேம்புமரம், பத்து குளிர்சாதனக் கருவிகளுக்கு ஒப்பாகும். ஏனெனில் இது வெப்ப நிலையை பத்துப் பாகை வரை குறைக்கவல்லது. மருந்துகள், பல வாசனைப் பொருட்கள் கிருமிநாசினிகள் ஆகியவற்றைத் தயாரிக்க வேம்பிலைகள் பயன்படுகின்றன. உலகில் இந்தியாவில்தான் இப்போது அதிக வேம்பு மரங்கள் உள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் ஓர் எரிச்சரிக்கை வெளியிடப்பட்டது. வேம்புமரத்தின் பயன்களை அறிந்த மற்ற நாடுகள், குறிப்பாக அவுஸ்திரேலியா, வியட்நாம் ஆகியவை இப்போது அதிக அளவில் வேம்புமரங்களைப் பயிரிடத் தொடங்கியுள்ளன. நாம் இருக்கும் வேம்புமரங்கையெல்லாம் வெட்டிக் கொண்டிருந்தால் இழப்பும் நமக்குத்தான்.

ஐப்பசி 05, 2010

How China and India Displaced the West in Sri Lanka

(By Amantha Perera)

As a Sri Lankan military offensive destroyed the last remnants of the Tamil Tiger separatist insurgency in May of last year to end a quarter century of bloody civil war the country faced a problem at the U.N. Human Rights Council in Geneva: The European Union (EU) was trying to move a resolution critical of Sri Lanka, and calling for an investigation into rights violations during the offensive. Sri Lanka's representative at the Council, Dayan Jayatilleka reached out for support from two friendly nations, India and China. The result was that instead of a resolution censuring Sri Lanka, 29 members in the 47 member Council adopted a resolution commending the government. Only 12 voted against it, and six abstained. (more...)

ஐப்பசி 05, 2010

மக்களோடு மக்களாய்

தமிழ் மக்களின் வணக்க ஸ்தலத்தில் வரதராஜப்பெருமாள்

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகர் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்களுக்கு கோயில் குருக்கள் காளாஞ்சி கொடுத்து வரவேற்றனர்.

ஐப்பசி 05, 2010

மனிதர்கள் வாழக் கூடிய புதிய கிரகம்

மனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டு பிடிப்பு பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆய்வு கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சூரிய குடும்பத்திற்கு வெளியே அதிக வெப்பமும், அதிக குளிரும் இல்லாமல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற ஏற்ற சூழ்நிலை உள்ள புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 05, 2010

அமெரிக்கர்களை விழிப்போடு இருக்குமாறு வேண்டுகோள்

லண்டன், பாரீஸ் போன்ற ஐரோ ப்பிய நகரங்களில் மும்பை தாக் குதல் பாணியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பாவில் வசித்து வரும் மற் றும் அங்கு பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க வெளி யுறவுத்துறை பயண எச்சரிக்கை விடு த்துள்ளது. அதில் பஸ், ரயில் நிலையங்கள், சுற்றுலா இடங்கள் போன்றவற்றை தீவிரவாதிகள் குறிவைக்கக் கூடும் என்றும், அமெரிக்கர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த எச்சரிக்கை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐப்பசி 05, 2010

‘‘சரணடையும் புலிகளை சுடுமாறு கோத்தபாய உத்தரவிட்டதாக பொன்சேகா என்னிடம் கூறினார்’’

கோத்தாபய தனக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகாவை அவரது ரீட் அவென்யூ தேர்தல் அலுவலகத்தில் வைத்து கடந்த டிசம்பர் 8ம் திகதி பேட்டி கண்டபோது அவர் தன்னிடம் கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று டிரயர் அட்பார் விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தார். சரத் பொன்சேகாவின் வாழ்க்கை, அவரது சுயவிபரங்கள் மற்றும் அவரது தேர்தல் பிரசாரம் பற்றி கேள்வி கேட்பதே எனது நோக்கமாக இருந்தது. எனினும் எனது கடைசி கேள்வி வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியதாக இருந்தது. அப்போது கோட்டா, பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவுக்கு தொலைபேசி மூலம் புலி சந்தேக நபர்கள் வெள்ளை கொடியுடன் சரணடைய வரும்போது அவர்களை கொல்லு மாறு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா என்னிடம் கூறினார். (மேலும்....)

ஐப்பசி 05, 2010

சட்டவிரோத குடியேற்றங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது - ஜனாதிபதி

சட்டவிரோத குடியேற்றங்களுக்கு இடமளிக்க முடியாது. அத்துமீறி செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு காணிகளைப் பலவந்தமாகக் கைப்பற்ற முயல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அத்தகையவர்களுக்குத் துணை போகக்கூடாது எனவும் அதிகாரிகளுக்குக் கடுமையாக உத்தரவு பிறப்பித்தார். (மேலும்....)

ஐப்பசி 05, 2010

 

60 பேர் கொண்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழு வடக்கு விஜயம்

அமெரிக்காவிலிருந்து இலங்கை வரவுள்ள 60 பேர் கொண்ட வர்த்தகத் தூதுக்குழு எதிர்வரும் 12ம் திகதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். ஐம்பது அமெரிக்கர்களையும், பத்து அமெரிக்க வாழ் இலங்கையர்களையும் கொண்ட உயர்மட்ட வர்த்தகத் தூதுக்குழு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 05, 2010

யூதக்குடியேற்றங்கள்

நேரடிப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் இழுபறியில்

பத்து மாதங்களாக இஸ்ரேல் இடைநிறுத்திய மேற்குக் கரை கிழக்கு ஜெருஸலம் என்பற்றின் மீதான யூதக்குடியேற்ற வேலைகள் செப்டம்பர் 26 ற்குப் பின்னர் மீண்டும் ஆரம்பமானது. இதையடுத்தே மீண்டும் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. யூதக்குடியேற்றங்களைத் தொடர்ந்து கொண்டே நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்களாமென இஸ்ரேல் கூறுவதை பலஸ்தீனர்கள் ஏற்கவில்லை. இஸ்லேரின் பிடிவாதம் பலஸ்தீனர்களின் எதிர்காலம் தொடர்பாக கலந்துரையாடும் அரவு நாடுகளின் முக்கிய மாநாடு விரைவில் கூடவுள்ளது. இந்நிலையில் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிப்பதில் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளன. (மேலும்....)

ஐப்பசி 05, 2010

மக்களோடு மக்களாய்

புதுக்குடியிருப்பில் மக்களை சந்திக்க சென்ற போது பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

இறுதிக்கட்ட போரின் போது பெரிதும் பாதிகப்பட்ட இடங்களை பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர் பார்வையிட்டனர். அங்கு தற்போது மீள் குடியேற்றம் நடைபெற்று வரும் மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். மேலும் ஈபிஆர்எல்எவ் இன் உறுப்பினர் பலரையும் மீண்டும் சந்தித்து உறவுகளை புதுப்பித்து கட்சி வேலைகளை ஆரம்பித்து வைத்தனர். 03.10.2010 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான்,  புதுக்குடியிருப்பு பகுதிக்கு விஐயம் செய்த முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐபெருமாள் அவர்கள் அங்கு நடைபெற்ற மீள் குடியேற்ற இடங்களை பார்வையிட்டார்.

ஐப்பசி 05, 2010

இலங்கையில் மட்டும் அல்ல சந்திரனிலும் சீனா

சீனா கடந்த 2007 ம் ஆண்டு சந்திரனுக்கு ஆள் இல்லா விண்கலத்தை அனுப்பியது. அதை தொடர்ந்து இப்போது 2வது முறையாக விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சாங்க் - 2 என்ற இந்த விண்கலம் ரூ. 650 கோடி செலவில் அனுப்பப்பட்டு உள்ளது. இதை லாங்க் மார்ச் 3 சி ராக்கெட் விண்ணுக்கு எடுத்து சென்றது. 2.48 டன் எடையுள்ள ராக்கெட்டின் ஆயுள், 6 மாத காலம் ஆகும். சிச்சுவான் மாநிலம் ஷிசாங்க் நகரில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. தொழில்நுட்ப அளவில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம், விண்ணில் ஏவப்பட்ட 112 மணி நேரத்தில் சந்திரனை அடையும். இதற்கு காரணம் ராக்கெட்டின் முதிர்ந்த தொழில் நுட்பம் தான் என்றும், இது சந்திரனின் சுற்றுப் பாதையை அடைந்ததும், சந்திரனின் தரைப் பகுதியில் இருந்து 100 கி. மீ. தொலைவில் இருந்து அதை சுற்றி வரும்.

ஐப்பசி 04, 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று (03.10.2010) கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலயத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அரசியல் தீர்வு பற்றிய விடயம் தனியாக விவாதிக்கப்பட வேண்டும். மக்களினதும், தமிழ் பிரதேசங்கள் தொடர்பிலானதுமான உடனடி பிரச்சினைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் குறிப்பாக மீளக்குடியமரும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பங்கு கொண்ட கட்சிப்பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து உடனடி பிர்ச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 04, 2010

காமன்வெல்த் போட்டிகள் தொடங்கியது... வண்ணமயமான விழாவால் வசீகரித்த டெல்லி!

டெல்லியில் ஆயிரக்கணக்கான கலைஞர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது, 19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள். காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கியது. இப்போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும், இங்கிலாந்து இளவரசர் சார்லஸும் மேடைக்கு வந்தனர். சார்லஸுடன் அவருடைய மனைவி கமீலாவும் வந்திருந்தார். (மேலும்....) 

ஐப்பசி 04, 2010

அட்டகாசமான டெல்லி காமன்வெல்த் போட்டி தொடக்க விழா... வெளிநாட்டு ஊடகங்கள் புகழாரம்!

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த காமன்வெல்த் போட்டி தொடக்க விழாவை சர்வதேச ஊடகங்கள் வியந்து பாராட்டியிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கலைஞர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாகத் தொடங்கியது, 19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள். போட்டி ஏற்பாடுகளில் தாமதம், கட்டுமானப் பணிகள் ஊழல், நடைபாலம் சரிந்து விழுந்து விபத்து, வசதியற்ற விளையாட்டு கிராமம் எனப் பலப்பல எதிர்மறை விமர்சனங்களையெல்லாம் கடந்து, காமன்வெல்த் போட்டிகளை மிகச் சிறப்பாக தொடங்கியிருக்கிறது, இந்தியா. டெல்லி ஜவர்ஹலால் நேரு விளையாட்டு அரங்கில், இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், காண்பாரின் கண்களைக் கவரும் வகையிலும் இரண்டு மணி நேரம் நடைபெற்ற வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள், உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 04, 2010

‘என்னை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்துவதே பலரின் நோக்கம்’ - ஜனாதிபதி

“நாட்டை முழுமையாக மீட்டு ஐக்கியத் தில் கட்டியெழுப்பிவரும் நிலையில் என்னை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதே பலரின் நோக்கமாகவுள்ளது.” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது எம் வசம் உள்ளன. பொலனறுவை மாவட்ட மக்கள் புலிகளிடமும் காட்டு யானைகளிடமும் சிக்கித் தவித்த காலகட்டங்களை நாம் மறக்கவில்லை. சிங்கப்பூரைப் போன்று 20 மடங்கு பிரதேசத்தைப் புலிகள் தம் வசம் வைத்திருந்தனர். கடற் பரப்பில் 3ல் இரண்டு அவர்களிடம் இருந்தது. இப்போது சகலதும் இணைக்கப்பட்டு ஒரே ஆட்சியின் கீழ் ஒரே கொடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாகவும் ஐக்கியமாகவும் வாழக்கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடிந் துள்ளது. (மேலும்...)

ஐப்பசி 04, 2010

இலங்கையரைப் பணிக்கமர்த்தத் தடை : சவூதி அரேபியா தீர்மானம்

இலங்கைப் பணியாளர்களை பணிக்கமர்த்துவதைத் தடைச் செய்ய சவூதி அரேபியா தீர்மானித்துள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சவூதி அரேபிய வர்த்தமானியில் இது குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் புதிதாக எந்த ஒரு இலங்கையரையும் வேலைக்கமர்த்தும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது என அரபு இராச்சியத்தின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அரபு இராச்சியத்தின் இலங்கைத் தொழிலாளர் ஒன்றியம், இலங்கைத் தொழில் அலுவலகம் என்பவற்றுக்கு இடையில் நிலவும் முரண்பாடு காரணமாக இந்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் இவ் முடிவு? பற்றி கருத்து தெரிவித்த பலரும் வேலைக்கு அமர்த்துதல் என்ற போர்வையில் நடைபெறும் அடிமைத்தனத்தை விட வேலைக்கு அமர்தாமல் விடுவதே மேல் என அபிபப்பிராயப்படுகின்றனர்.

ஐப்பசி 04, 2010

நாடு கடந்த பிரதமர் தெரிவிலும் அடிதடி, உருத்திரகுமாரன் 'தேசியத் தலைவர்' வழியில் மிரட்டல்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு, வன்முறையில் முடிவுற்றதாகவும், அதன் காரணமாக மக்கள் பிரதிநிதிகள் அமர்வுகளிலிருந்து வெளிநடப்புச் செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அரசியல் யாப்பின் அங்கீகாரத்திற்காகவும்,  அரச அவைக்கான தெரிவுக்காகவும் நடைபெற்ற இரண்டாவது அமர்வு, அமெரிக்காவில் இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக குழப்பத்தில் முடிவுற்றுள்ளது. இதன் காரணமாக நாடு கடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதிகள், தமது அதிருப்தியைப் பதிவு செய்துவிட்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அமர்வு நடைபெற்ற மண்டபங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 04, 2010

கிழக்கு அபிவிருத்திப் பணிகள்

ஜனாதிபதி தலைமையில் இன்று திருமலையில் மீளாய்வுக் கூட்டம்

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக மீளாய்வு செய்யும் உயர் மட்டக் கூட்டம் ஒன்று இன்று திருகோணமலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது. திருமலை கடற்படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இக் கூட்டத்திற்கு ஆளுநர், அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் அழைக்கப்பட்டுள்ளனர். (மேலும்...)

ஐப்பசி 04, 2010

 

அமெரிக்காவிற்கு கடுப்பேத்த

பாகிஸ்தானுக்கு உதவ பின்லேடன் வேண்டுகோள்

அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் குரல் பதிவு செய்யப்பட்ட ஆடியோ ‘டேப்’ வெளியாகி உள்ளது. அதில், உலக பருவநிலை மாற்றம் மற்றும் பாகிஸ்தான் வெள்ள சேதம் குறித்து பின்லேடன் கவலை தெரி வித்துள்ளான். பாகிஸ்தான் வெள்ள நிவாரண பணிகள், சரிவர நடைபெறவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் தாராளமாக உதவி செய்ய வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐப்பசி 04, 2010

கோதுமைக்கு மானியம் வழங்கப்படாது

விவசாயிகளை பாதுகாத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதே இலக்கு

கோதுமை மாவுக்கு மானியங்களையும் நாம் வழங்கப்போவதில்லை. உள்நாட்டு விவசாயிகளை பாதுகாத்து உள்ளூர் உற்பத்தியினை அதிகரிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமென நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். எனவே, பாண் விலையதிகரிப்புக் குறித்து பொதுமக்கள் கலக்கமடையத் தேவையில்லை. அதற்கு பதிலாக அரிசி உற்பத்திப் பொருட்களின் பாவனையினை அதிகரிக்கவேண்டுமெனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரிமா நிறுவன விநியோகஸ்தர்கள் கோதுமை மா கிலோ வொன்றுக்கான விலையை 8 ரூபா 33 சதத்தினால் அதிகரித்திருப்பது குறித்து நுகர்வோர் விவகார அமைச்சரிடம் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

ஐப்பசி 04, 2010

ஒபாமாவுக்கு உதவிய காந்தி சுயசரிதை, அமெரிக்க அமைச்சர் தகவல்

காந்தி பிறந்தநாளையொட்டி, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காந்தி பிறந்தநாள் விழாவில், அமெரிக்க வெளியுறவு உதவி மந்திரி ராபர்ட் பிளேக் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், மகாத்மா காந்தியின் சுயசரிதையும், அகிம்சை வழியில் அவர் போதித்த சமூக நீதி குறித்த போதனைகளும்தான், அதிபர் ஒபாமா தனது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள உதவியதாக குறிப்பிட்டார், காந்தியும், மார்ட்டின் லூதர் கிங்கும்தான், தனது கதாநாயகர்கள் என்று ஒபாமா பல தடவை கூறி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். காந்திஜி வேற்று நாட்டிற்குள் புகுந்து பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற போர்வையில் அந்நாட்டு மக்களை கொல்லவில்லை என்பது அமெரிக்க ஆளும் வர்கத்திற்கு தெரியாதோ? பிரச்சனைகளை பேர் அற்ற அகிம்சை முறையில் போராடித் தீர்வு கண்ட காந்திஜி எங்கே ஆப்கானில் போர் முரசு கொட்டும் அமெரிக்க அதிபர் எங்கே...?

ஐப்பசி 04, 2010

'தலைவர்' இருந்தபோதும் வாழ்வு! இறந்த பின்பும் வாழ்வு!!

தமிழர்களின் எதிர்காலத்தை புலிகளின் தலைவர் பிரபாகரனே சூனியமாக்கினார்! - தயா மாஸ்ரர் பேட்டி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தமிழ் மக்களின் எதிர்காலத்தை சூனியம் ஆக்கினார். அவரது தமிழீழக் கனவுக்காக தமிழ் இளைஞர்கள் பலிக் கடா ஆக்கப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மனித உரிமைகளை ஒரு போதும் மதித்து நடந்ததே இல்லை. அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான யுத்தத்தால்தான் நான் இன்று உயிரோடு இருக்கின்றேன். இப்படி ஒரு பரபரப்புப் பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர். (மேலும்....)

ஐப்பசி 04, 2010

செயற்கைக் கோள்

செயற்கைக் கோளை ராக்கெட்டுகள் விண்வெளிக்குச் சுமந்து செல்கின்றன. ரஷ்யா தான் முதன் முதலில் (1957) வான்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பியது. பூமியைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்தை 4 பிரிவாக பிரித்திருக்கிறார்கள். பூமியிலிருந்து 50 கிலோ மீற்றருக்கு மேல் 400 கி.மீ. வரை உள்ள 4வது அடுக்கு தமோஸ்பியர் எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் செயற்கைக் கோள்கள் மிதந்து வருகின்றன. இங்கு வெப்பமும், குளிரும் மிக அதிகமாக இருக்கும். இத்தகைய கடினமான சூழலில்தான் செயற்கைக்கோள் செயற்படுகிறது.

ஐப்பசி 04, 2010

கரடியனாறு குண்டு வெடிப்பின் எதிரொலி

சீனாவின் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இலங்கை விஜயம் _

சீனாவின் "என்.ஐ.சீ.' எனப்படும் சீன தேசிய புலனாய்வு அமைப்பினர் கொழும்பை வந்தடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு பொலிஸ் வளாகத்தில் நிகழ்ந்த டைனமைற் கொள்கலன் வெடிப்பு சம்பவம் பற்றி சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்து நாடளாவிய ரீதியில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்கே இவ்வமைப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கையில் உள்ள ஏனைய சீன நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் இப்புலனாய்வுக் குழுவினர் ஆராய்வை மேற்கொள்வர் எனவும் சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. அதேவேளை கரடியனாறு வெடிப்பு சம்பவம் குறித்து ஏற்கனவே இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளமையை இந்த சீன ஊடகமான சிங்குவா மேற்கோள் காட்டியுள்ளது.

ஐப்பசி 04, 2010

இலங்கை அகதிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை கைவிடுமாறு தமிழக அரசாங்கம் கோரிக்கை

தமிழகத்தில் சரணடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு முனைப்பு காட்டி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்வதற்கு இலங்கை அகதிகள் எத்தனிப்பதாகவும், இவ்வாறான முனைப்புக்களை கைவிடுமாறும் தமிழக அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முகாம்களிலிருந்து தப்பித்து சட்டவிரோதமான முறையில் மேற்குலக நாடுகளுக்குச் செல்ல தமிழ் அகதிகள் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அகதிகள் தொடர்பான தமிழக அரசாங்கத்தின் உயர் அதிகாரி கலைவண்ணன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் அகதிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்றாலும் இந்திய அரசாங்கத்திடம் அறிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் விசேட கரையோரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ___

ஐப்பசி 04, 2010

யோகா

சோர்வுக்கு வேறு எந்த உடற் பயிற்சியையும் விட ‘யோகா’ நல்லது, அது அதிகப் பலனளிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ‘யோகா’ வின் ஆக்கபூர்வமான தாக்கம், உற்சாகத்தைக் கூட்டுகிறது. மனக்கவலை, படபடப்பைப் போக்குகிறது என்கிறார்கள். நடைப் பயிற்சியை விட ‘யோகா’ செய்வது நல்லது என்பது அவர்கள் கருத்து. பொஸ்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் மேற்கண்ட முடிவைத் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் யோகாவில் ஈடுபடுபவர்கள், நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களின் மூளைச் செயற்பாட்டு நிலையை ஒப்பிட்டனர். அதற்கென்று ஒரு குழுவினர் வாரத்துக்கு மூன்று முறை ‘யோகா’ பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். மற்றொரு குழுவினர் அதே காலகட்டத்தில் அதே கால அளவுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளச் செய்யப்பட்டனர். யோகாவில் ஈடுபட்டவர்கள் மனநிலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஐப்பசி 04, 2010

திரு.வி.ருத்திரகுமாரன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முறைமையைக் கைவிட்டு ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டாரஜெயானந்தமூர்த்தி (முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி)

நாடுகடந்த தமிழீழ அரசில் ஒரு சிலரின் சர்வாதிகாரப் போக்குக் காரணமாக தமிழ் தேசியத்தின் சார்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அதைவிட்டு வெளியேறவேண்டிய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இயங்குவதா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடுகடந்த அரசின் பிரித்தானிய பிரதிநிதியும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். (மேலும்...)

ஐப்பசி 04, 2010

நட்சத்திரங்களின் நிறம்

ல்லா நட்சத்திரங்களுக்கும் நிறம் உண்டு. அந்தந்த நட்சத்திரத்தின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தைப் பொறுத்து நிறங்கள் மாறுபடுகின்றன. சில நட்சத்திரங்கள் குளிர்ச்சியாக இருக்கும். அவற்றின் புற வெப்பம் 3 ஆயிரம் பாகை செல்சியஸாக இருக்கும். அந்த வெப்பநிலை கொண்ட நட்சத்திரங்களின் நிறம் சிவப்பாக இருக்கும். மிகவும் சூடான நட்சத்திரங்களின் புற வெப்பம் 10 ஆயிரம் பாகைக்கு மேலும் காணப்படும். அதுபோன்ற வெப்பமுள்ள நட்சத்திரங்கள் நீல நிறத்தில் ஒளிரும். நாம் அன்றாடம் பார்க்கும் சூரியனும் ஒரு நட்சத்திரமே. இதன் புற வெப்பம் 5 ஆயிரம் பாகை செல்சியஸ் ஆகும். சூரியனின் நிறம் மஞ்சள் கலந்த வெள்ளை ஆகும். நட்சத்திரங்களின் நிறங்களை வெற்றுக் கண்களால் காண முடியாது. சக்தி வாய்ந்த தொலைநோக்கியால் மட்டுமே பார்க்க முடியும்.

ஐப்பசி 04, 2010

வடக்கில் பத்து ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தங்கள் உடனடி ரத்து

வட மாகாணத்தில் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பத்து ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறியியலாளர்களுடன் ஆராயும் மீளாய்வுக் கூட்டம் அண்மையில் வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை சரிவரச் செய்யத் தவறிய மற்றும் வழங்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை செய்யத் தவறிய பத்து ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்த அனுமதிப் பத்திரமே இரத்துச்செய்யப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இதில் யாழ்பாணத்தை சேர்ந்த 'விண்ணன்' இன் பெயரும் இருக்கின்றதா? என யாழ் மக்கள் கேட்கின்றனர்.

ஐப்பசி 04, 2010

நாடெங்கும் அடைமழை, வெள்ளம், இருவர் உயிரிழப்பு

ஆறுகள் பெருக்கெடுப்பு மண்சரிவு அச்சம் மக்கள் வெளியேற்றம்

நாடெங்கிலும் நேற்றும் பரவலாக மழை பெய்துள்ளது. ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக குக்குலே கங்கையில் 142 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்த விதாரண தெரிவித்தார். இன்று முதல் பெய்யும் மழையின் அளவு குறைவடைய முடியுமென எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவின்படி பொலன்னறுவையில் 117.9 மி.மீ. மதுகமவில் 108.3 மி.மீ. மன்னாரில் 66.4 மி.மீ என்றபடி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்...)

ஐப்பசி 03, 2010

அரசு விடுதலை புலிகளின் புனர் வாழ்வில் அதிக கவனம் - தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டதொடரில் முடிவு

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஐந்து விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்து யுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு மாத்திரமே அரசாங்கம் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் பக்கமே அரசு முழுமையான கவனத்தை செலுத்திவருகின்றது. ஆனால் யுத்த நிலையின்போது விடுதலைப்புலிகளினால் பாதிக்கப்பட்டு இன்று எதுவும் அற்ற நிலையில் உள்ள ஏனைய இயக்க உறுப்பினர்கள் தொடர்பில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் நலன் தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உதவுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவித்தார். (மேலும்...)

தமிழ் மக்கள் கௌரவத்துடன் வாழும் பின்னணி மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் - ரொபர்ட் பிளெக்

தமிழ்மக்கள் சுய கௌரவத்துடன் வாழக் கூடிய ஒரு பின்னணியை உருவாக்கி, அதன் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் மூலம் மட்டும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாதென தென், மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் கூறியுள்ளார். (மேலும்...)

ஐப்பசி 03, 2010

நண்பர்கள் யார் என்பதை இனங்கண்டு செயற்பட்டால் தீர்வு சாத்தியமாகும்

அரசியல் தீர்வு முயற்சியைக் கணிசமான சிங்கள மக்கள் பிரிவினை முயற்சியாகச் சந்தேகிக்கின்ற நிலையில் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான மார்க்கம் என்ன?

தேசிய ரீதியான அணுகுமுறைக்கூடாகவே சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுக்க முடியும். தமிழ் அரசியல் தலைமைகள் இதுவரை தேசிய ரீதியாகச் செயற்படவில்லை. இத்தலைவர்கள் தேசிய ரீதியாக இடைக்கிடை செயற்பட்டதெல்லாம் வர்க்க நலனை முன்னிறுத்துவதாக இருந்ததேயொழிய இனப் பிரச்சினை யின் தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. சுருக்கமாகக் கூறுவதானால் தமிழ்த் தலைமைகளின் தேசிய ரீதியான செயற்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவானவையாகவே இருந்தன. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்விலும் பார்க்கத் தேசியமயக் கொள்கையை எதிர்ப்பதற்கும் இடதுசாரி எதிர்ப்புக்கும் தமிழ்த் தலைவர்கள் முன்னுரிமை அளித்துச் செயற்பட்டதே இதற்கும் காரணம். (மேலும்...)

ஐப்பசி 03, 2010

குடாநாட்டின் குளங்களை புனரமைத்தலின் முக்கியத்துவம்

குடாநாட்டில் நெற் செய்கையை மேலும் அதிகரிப்பதற்கும் ஏனைய விவசாய முயற்சிகளின் வளர்ச்சிக்கும் இச் செயலணி செய்ய வேண்டிய மேலும் சில பணிகள் உள்ளன. குடாநாட்டில் நெற் செய்கை மழையை நம்பியதாக இருப்பது போல ஏனைய விவசாய முயற்சிகள் நிலக்கீழ் நீரை நம்பி இருக்கின்றன. குடாநாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் வயல்களை அண்டிச் சிறு குளங்கள் உள்ளன. இவை நெற் செய்கைக்கு நீர் பாய்ச்சுவனவல்ல. நெல் வளர்ச்சிக்குத் தேவையான அளவிலும் பார்க்க மேலதிகமான நீரைத் தேக்கி வைப்பனவே இவை. இக் குளங்களில் சேரும் நீரின் மூலம் நிலக்கீழ் நீர் வளம் குறையாது பேணப்பட்டு வந்தது. (மேலும்...)

ஐப்பசி 03, 2010

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமர்! உருத்திரகுமாரன் 

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் மேலைநாடுகளில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரதமராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்ததை அடுத்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களால், இலங்கையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தைக் கொண்டு நடத்துவதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மேலை நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் தேர்தல்களை நடத்தி இந்த நாடுகடந்த தமிழீழத்துக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தது. (மேலும்...)

ஐப்பசி 03, 2010

Lanka achieved a milestone when LTTE was defeated Blake      

 Assistant Secretary of State for South and Central Asian Affairs Robert  Blake said that Sri Lanka achieved a milestone when the government successfully defeated the LTTE in May 2009 ending the three decade long conflict. Addressing the emerging role of U.S. foreign policy in South Asia at the San Diego World Affairs Council, California he said :  “I have returned to Sri Lanka several times since the end of the war and observed a renewed sense of purpose among its people,” he said. (more...)

ஐப்பசி 03, 2010

ஐ.தே.க வின் வெறுமை வெளிப்படுகின்றது

புலிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சூழ்நிலையிலேயே சமஷ்டித் தீர்வு முன்வைக்கப்பட்டதாகவும் இப்போது ஆயுதப் போராட்டம் இல்லாததால் அரசியல் தீர்வு தேவையில்லை என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகின்றார். இவர் கட்சியின் சாதாரண ஆதரவாளரல்ல. பொதுச் செயலாளர். இவர் வெளியிடுபவை கட்சியின் உத்தியோபூர்வமான கருத்துகள். அரசியல் தீர்வு கிடைக்காததாலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது என்பதை ஏற்றாக வேண்டும். அரசியல் தீர்வு கிடைக்காததற்கு யார் பொறுப்பாளி என்பதையும் ஆயுதப் போராட்டம் சரியான வழியில் சென்றதா என்பதையும் இதனுடன் போட்டுக் குழப்பக் கூடாது. (மேலும்...)

ஐப்பசி 03, 2010

பொன்சேகா முறைப்படி மன்னிப்பு கோரினால் கவனம் செலுத்தப்படும் - ஜனாதிபதி

சரத் பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பினைத் தாம் ஏற்றுக்கொண்டமை தனிப்பட்ட பழிவாங்கலல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தாமே நியமித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமே ஏற்காவிட்டால் அந்த நீதிமன்றக் கட்டமைப்பிற்கே பங்கம் ஏற்படுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பளித்தல் சம்பந்தமாக முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அப்போது அது விடயத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். (மேலும்...)

ஐப்பசி 03, 2010

காமன்வெல்த் போட்டி இன்று துவங்குகிறது  தில்லியில் உற்சாகம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட் டிக்காக ஒரு வழியாக தலைநகர் புதுதில்லி முழு அளவில் தயாராகியுள்ளது. கிட்டத் தட்ட 5800 வீரர், வீராங்கனைகள், அதி காரிகள் தில்லியில் குழுமியுள்ளனர். மொத் தம் 6700 பேர் இதில் பங்கேற்கவுள்ளனர். கடந்த மெல்போர்ன் போட்டியில் (2006) 5766 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடந்த காமன்வெல்த் போட் டிகளிலேயே மிகப் பெரியது இது என்ற பெருமையும் தில்லி போட்டிக்குக் கிடைத் துள்ளது. ஆனால் இந்தப் பெருமையை உணரச் செய்யவிடாமல், பல மாத குழப் பங்கள், கடைசி நேர களேபரங்கள், கட்டு மானப் பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள், பெரும் ஊழல்கள், முறைகேடுகள், பரஸ் பர குற்றச்சாட்டுகள் என அரசின் உச்சகட்ட பொறுப்பின் மையும் அலட்சியம் அம்பலமானது. (மேலும்...)

ஐப்பசி 03, 2010

யாழ். கிளிநொச்சி நீர் விநியோக திட்டம் ரூ. 2000 கோடியில் ஆரம்பம்

யாழ். கிளிநொச்சி பாரிய நீர் விநியோகத் திட்டம் (இரணை மடுத் திட்டம்) இரண்டாயிரம் கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட வுள்ளது. 2002 இல் ஆசிய அபிவிருத்தி வங்கி, தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை மற்றும் யாழ். கிளிநொச்சி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட 55 கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரதிபலிப்பாகவே இத்திட்டம் முழுமை பெற்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி இவ்வாறு தெரிவித்தார். (மேலும்...)

ஐப்பசி 03, 2010

இந்தியாவில் பெருங்கோடீஸ்வரர்கள் இப்போது 69 பேர்!

உலகின் முதல் பெரும் பணக்காரராக மாறுவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் முகேஷ் அம்பானி இப்போதும் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் முதல் பணக்காரராக இருந்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு 27 பில்லியன் டாலர். அதாவது 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய்! அடுத்த இடத்தில் இருப்பவர் இரும்பு எஃகுத் தொழில் ஜாம்பவானாக இருக்கும் லட்சுமி மித்தல். இவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து ஐநூறு கோடி. இந்த வரிசைப்படி அஸிம் பிரேம்ஜி (ரூ. 88 ஆயிரம் கோடி), சாசி அன்ட் ரவி ரூயா (ரூ. 75 ஆயிரம் கோடி), சாவித்ரி ஜின்டால் (ரூ.72 ஆயிரம் கோடி), அனில் அம்பானி (ரூ.66 ஆயிரத்து 500 கோடி), கௌதம் அதானி (ரூ.53 ஆயிரத்து 500 கோடி), கௌசல் பால் சிங் (ரூ.46 ஆயிரம் கோடி), சுனில் மித்தல் (ரூ.43 ஆயிரம் கோடி), குமார் பிர்லா (ரூ.42 ஆயிரத்து 500 கோடி) ஆகியோர் முதல் பத்து இடங்களில் இருக்கின்றனர். (மேலும்...)

ஐப்பசி 03, 2010

தங்களை விடுதலை செயயுமாறு மட்டு.அரசியல் கைதிகள் கோரிக்கை _

எவ்வித விசாரணைகளுமின்றி மிக நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விசாரணையின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கைதிகளைப்பார்வையிடச்சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்புமட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் அரசியல் கைதிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்த அரியநேத்திரன் எம்.பி.இது தொடர்பாக பலமுறை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம் ஆனால் விடுதலை தொடர்பாக ஆரோக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டபட்டதாக தெரியவில்லை என்றார்.

ஐப்பசி 02, 2010

அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே முறுகல் நிலை

ஆப்கானிலுள்ள நேட்டோ படைகளுக்கான விநியோகப் பாதையை பாகிஸ்தான் மூடியுள்ளது. இது பாகிஸ்தானுக்கூடாகச் செல்லும் பாதை. நேட்டோ படைகளின் தாக்குதலினால் 3 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் நேற்று கொல்லப்பட்டிருந்தனர். இதன் எதிரொலியாகவே மேற்படி அதிரடி நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையில் முறுகல் நிலையை தோற்றுவிக்கலாமெனக் கருதப்படுகின்றது. மூடப்பட்ட இப்பாதையானது ஆப்கானினுள்ள நேட்டோ படைகளுக்கான முக்கியமானதொரு விநியோகப் பாதையாகும். மேலும் நேட்டோவினால் இதன் மூலம் அங்கு முன்னெடுக்கப்படும் போர் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐப்பசி 02, 2010

வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் எனும் பகுதி இனிமேல் இருக்காது

“வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பிரதேசம் இனி இருக்கமாட்டாது. அவ்வாறான பிரதேசம் அகற்றப்பட்டு அபிவிருத்திக்காக மக்களின் கைகளில் வழங்கப்படும்.” வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி இவ்வாறு தெரிவித்தார். வலி. மேற்கு பிரதேசத்தின் “தரிசுநிலப் பயன்பாடு அபிவிருத்தி” தொடர்பான கலந்துரையாடல் யாழ். ஆளுநர் அலு வலகத்தில் இடம்பெற்றது. இதில் கல ந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கருத்துத் தெரிவிக்கையில், வலி. மேற்கு பிரதேசம் 25 கிராம அலுவலர் பிரிவினை கொண்ட பரந்து விரிந்த பிரதேசம். இப்பிரதேசத்தில் உள்ள பயன்படு மற்றும் பயன்படாத நிலங்களின் விபரங்களை திரட்ட வேண்டும். (மேலும்....)

ஐப்பசி 02, 2010

வடக்கில் தொழில் வளர்ச்சி

ஒரு இனத்தின் வளர்ச்சி மொழி, மதம் போன்ற இனத்துவ அடையாளங்களின் அங்கீகாரத்துட னும் அரசியல் அபிலாஷைகளின் அங்கீகாரத் துடனும் மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல. அந்த இனம் செறிந்து வாழ்கின்ற பிரதேசத்தின் அபிவிருத்தியுடனும் சம்பந்தப்பட்டது. பிரதேச அபிவிருத்தி மக்க ளின் பொருளாதார வாழ்வு மேம்பாடடைவதற்கு அடி ப்படையாக அமையும். இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை ஏற்றுச் செயற்பட்டவர்கள் பின்பற்றிய கொள்கையும் அணுகுமுறையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இனப் பிரச்சினைக் குத் தீர்வு காணும் முயற்சியில் சிறிதளவேனும் இவர் கள் முன்னேற்றம் அடையவில்லை என்பதும் இவர்களின் பிழையான நிலைப்பாடுகள் காரணமாக மக்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகினர் என்பதும் பரவலாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள். (மேலும்....)

ஐப்பசி 02, 2010

அகிம்சையால் எதையும் சாதிக்கலாம்!

இன்று மகாத்மாகாந்தியின் 141 ஆவது ஜனனதினம்

(அருணா தருமலிங்கம்)

சரியாகச் சொன்னால் கொல்லாமையே அகிம்சை ஆகும். நமக்கு எதிரி என்று எண்ணிக்கொள்பவர் மீதுங்கூட கெட்ட எண்ணத்தை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது. இதுவும் அகிம்சை என்பதற்கு உண்மையான பொருள் என்று கூறலாம். விரோதி என்பவரிடம் உங்கள் அன்பை அகிம்சையை அவர் மனிதனுள் ஆழப்பதியுமாறு நீங்கள் காட்டுவீர்களேயானால் அதே அன்பை அவரும் உங்களுக்குக் காட்டியே தீருவார். உண்மை யாகவே அகிம்சை யைப் பூரணமாக அனுபவிப் பவருக்கு உலகமே அடிபணிந்து கிடக்கும் என்று சாஸ்திரங்கள் போதிக்கின்றன. இவரைச் சூழ இருப்பவருக்கும் இந்தத்தன்மை பற்றுகின்றது. விஷப்பாம்புகள் போன்றவை களாலும் எதுவிதமான தீங்களும் இவருக்கு நேராது என்கின்றன. (மேலும்....)

 

ஐப்பசி 02, 2010

While capitalism is confronted with its worst crisis China is achieving a massive development  – Somawansa Amarasinghe

There is a lie that has been told to us about China. They said China achieved this development due to following the system of free market economy. We had to wait till 2007 – 2008 to realize this was a lie. It has now been established that the free market economy cannot go forward or solve any issue. Hence, the lie told to us about China too has been revealed. China did not follow capitalist policy of free market economy. Then what is the secret here? The secret is China has a massive strength the capitalist world does not have. China has an economic administrative structure that does not allow the economy to drift away from the set course. The economy has been properly administered. (more...)

ஐப்பசி 02, 2010

ஏகாதிபத்திய திமிர்

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் மற்ற நாடுகளின் அமைச்சர்களை கூட அவ மானப்படுத்துவது என்பது சகித்துக் கொள்ள முடியாதது. ஏகாதிபத்திய திமிர்த்தனத்தை இது வெளிப்படுத்துவதாக உள்ளது. அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்தியா வரப் போவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அவரது பாதுகாப்பை இந்தியாவில் கூட அமெரிக்க அதிகாரிகளே மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இதே போன்று இந்திய ஜனாதிபதி அல்லது பிரதமர் அமெரிக்கா செல்லும்போது இந்திய அதிகாரிகள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று கூறினால் அதை அமெரிக்கா ஏற்குமா? (மேலும்...)

ஐப்பசி 02, 2010

அமெரிக்காவின் குறி வெனிசுலாவின் எண்ணெய் மீதுதான் -  பிடல் காஸ்ட்ரோ

நிர்வாக அதிகாரம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை மற்றும் சோசலிசத்திற்கு ஆதரவாகப் போராடக்கூடிய லட்சக்கணக் கான மக்கள் என்று பொலிவாரியப் புரட்சிக்கு ஆதரவு இருக்கிறது. வெனிசுலாவில், புரட்சியால் அரண்டு போயுள்ள சில சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து அதை நம்பி அமெரிக்காவால் இயங்க முடியும். சிலியில் அலெண்டேவுக்கு என்ன செய்தார்களோ அல்லது நமது அமெரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் என்ன செய்தார்களோ அதை வெனிசுலாவில் அவர்களால் செய்ய முடியாது. வெனிசுலாவின் ராணுவத் திற்கு சரியான வகையில் கல்வி புகட்டப்பட்டுள்ளது. விடுதலை வீரர் என்பதன் உண்மையான அர்த்தத்துடன் அதற்கு உதாரணமாக இயங்குகிறார்கள். அத்தகையவர்கள் வெல்ல முடியாதவர்கள். (மேலும்...)

 

ஐப்பசி 02, 2010

 

அழி இறப்பர்

இறப்பர் துண்டுகளை வைத்து பிரிட்டன் பொறியியலாளர் எட்வட் நெய்மே ஆய்வுகள் செய்தார். சில குறிப்புகளை பென்சிலால் எழுதும் போது தவறுகள் ஏற்படவே அதை அழிக்க ரொட்டித் தூள்களை எடுப்பதற்கு பதிலாக (அந்தக் காலத்தில் பென்சில் எழுத்துக்களை அழிக்க ரொட்டித் தூள்களைப் பயன்படுத்துவர்) தவ றுதலாக இறப்பர் துண்டுகளை எடுத்து அழித்தார். பென்சில் எழுத்துக்கள் சுத்தமாகவும் விரைவாகவும் அழிப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டு, உடனே களத்தில் இறங்கினார். பென்சில் எழுத்துக்களை அழிக்கும் இறப்பர் துண்டுகளை சந்தைக்கு அறிமுகம் செய்தார். (மேலும்....)

ஐப்பசி 02, 2010

வேலைகளுக்கான போட்டியில் இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது

-  ஒபாமா

பூமியிலேயே அதிக அளவுக்கு உற்பத்தி செய்யும் நாடாக இருக்கும் அமெரிக்கா, அந்த நிலையில் இருந்து நழுவ தொடங்கி உள்ளது. முன்பைவிட இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அறிவு புகட்டுவதில் ஆக்ரோஷமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா இந்த நாடுகளிடம் பலத்த போட்டியை எதிர்நோக்கி உள்ளது. விரைவிலோ அல்லது சில காலம் கழித்தோ அவர்கள் நம்மை முந்திவிடுவார்கள். இந்த நாடுகளுடன் நாம் எல்லா நிலையிலும் போட்டிபோட வேண்டியுள்ளது. அவர்கள் தங்கள் சக்தியை விட அதிகமாக ஏற்றுமதி செய்து வருகிறார்கள். (மேலும்....)

ஐப்பசி 02, 2010

அயோத்தி தீர்ப்புக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம்

அயோத்தி தொடர்பாக அலாகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஹைதராபாத், மூல்தான் ஆகிய நகரங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியத் தலைவர்களின் உருவப் படங்களும் சுவரொட்டிகளும் வீதிகளில் எரிக்கப்பட்டன. சில இடங்களில் கடை அடைப்பு நடந்தது. இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஹிந்து சமூகத்துக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பு இது என்று பாகிஸ்தானின் மத விவகார அமைச்சர் ஹமீத் சய்யீத் கஸ்மி கண்டித்தார். (மேலும்....)

ஐப்பசி 02, 2010

ஓமந்தை பாடசாலையை ஒரு மாதத்தினுள் மீள ஒப்படைக்க அமைச்சர் டியூ பணிப்பு

ஓமந்தை பாடசாலை மிகப்பெரிய பாடசாலையாகும். முப்பது வருட யுத்தத்தின் விளைவாக இன்று அப்பாடசாலை சிறைச்சாலையாக மாறிவிட்டது. இதில் எல். ரி. ரி. ஈயின் முதலாம் தர தலைவர்கள் கைதிகளாக உள்ளனர். ஆனால் இப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் மரம் செடிகளுக்கு மத்தியில் காட்டை பாடசாலையாக்கி கல்வி பெறுவதைக் கண்டதும் நான் நொந்து போனேன். ஒரு மாத கால இடை வெளிக்குள் பாடசாலையின் கைதிகளை இடம் மாற்றி பாடசாலையை அப் பகுதி கல்வி அதிகாரியிடம் கையளிக்குமாறு சிறையின் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்” என   அமைச்சர் டியூ கூறினார். (மேலும்....)

ஐப்பசி 02, 2010

நாடு முழுவதும் ‘ஒரேநேரம்’

நியம நேரத்தை வர்த்தமானி மூலம் அறிவிக்க தீர்மானம்

நாடு முழுவதும் ஒரே நேரத்தை அமுல்படுத்தும் வகையில் நியம நேரத்தை உத்தியோபூர்வமாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாடு முழுவதற்குமான பொதுவான நேரம், டிசம்பர் 31ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அறிவிக்கப்பட்டு 2011 முதல் அமுல் படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேறுபட்ட நேரங்கள் பயன்படுத்தப் படுவதால் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. சில ஊடக நிறுவனங்களும் வேறுபட்ட நேரங்களையே பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக புதிய சரியான நேரத்தை அறிவிக்க அளவீட்டு மற்றும் தரச் சேவைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கிரீன்விச் நேரத்திற்கும் இலங்கை நேரத்திற்குமிடையே 5.30 மணி நேர வித் தியாசம் காணப்படுகிறது. இதனடிப் படையில் புதிய நேரம் கணிக்கப்பட உள்ள தாக தகவல் திணைக்களம் கூறியது.

ஐப்பசி 02, 2010

 

தடுத்து வைக்கப்பட்டோர், காணாமல்போனோர் விவகாரம்

நல்லிணக்கக் குழு பயங்கரவாத தடுப்பு பிரிவுடன் பேச்சு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்ற பகிரங்க அமர்வுகளில் சாட்சியமளித்த பொது மக்கள், காணாமற் போன தமது உறவுகளைத் தேடித் தருமாறும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் ஆணைக் குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, அவர்களின் கோரிக் கைகளை விபரங்களுடன் எழுத்து மூலம் பெற்றுக் கொண்ட அவர், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அறிவிப்பதாக உறுதி அளித்திருந்தார். இதற்கமைய பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்து ஆணைக் குழுவின் தலைவர் பேச்சு நடத்தியதாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. (மேலும்....)

ஐப்பசி 02, 2010

US Medicaid enrollment climbs to 48 million

(By Kate Randall)

More people enrolled in the Medicaid program last year than at any time since the program’s inception in the late 1960s. The spike comes as the recession has wiped out millions of jobs and more people have lost their employer-sponsored health care coverage. A report released Thursday by the nonprofit Kaiser Family Foundation shows that some 48 million people, or better than one in every seven people in the US, are now enrolled in the health care program for the poor. Nearly 12 million US households also received food stamps last year, under conditions where 44 million people now fall below the official poverty line, according to the US Census. (more....)

ஐப்பசி 02, 2010

 

கலவரத்தில் 109 பேர் பலியானது வேதனை அளிக்கிறது  - உமர் அப்துல்லா

 

காஷ்மீர் கலவரத்தில் 109 பேர் பலியானது வேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. மதிப்பற்ற உயிர்கள் பறிபோனது பற்றி நான் கவலைப்படுகிறேன். காஷ்மீர் சட்டசபையில் காஷ்மீரில் சமீபத்தில் நடந்த கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பினார்கள். இதற்கு பதில் அளித்து முதல் மந்திரி உமர் அப்துல்லா பேசியதாவது, சிலர் என் உடலில் கை வைத்து என் இதயத்தில் இருந்து 109 பாகங்களை வெளியே எடுத்தது போல் உணர்கிறேன். சிலர் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் அந்த துப்பாக்கி என் தோளில் இருந்தது போல் உணர்கிறேன். இளைஞர்களின் உயிரை பறிக்கும்படி நான் யாருக்கும் உத்தரவிடவில்லை. இவர்களின் தியாகம் காஷ்மீருக்கு உதவும் என்று நினைத்தால் சந்தோஷம். ஆனால் இவர்களது தியாகம் வீணாகாது என்று நான் நினைக்கிறேன்.

ஐப்பசி 02, 2010

கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன்

கல்வி வளர்ச்சியில் அதீத அக்கறை காட்டி வருகிறார் - எம்.ரி.ஏ.நிஸாம்

கிழக்கு மாகாணம் தற்போது கல்வியில் வெகுவான வளர்ச்சி கண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்களைக் குறிப்பிடமுடியும். ஆயினும், முதலமைச்சர் சந்திரகாந்தனது முயற்சியும் ஓர் முக்கிய காரணியாகத் திகழ்கின்றது.  கிழக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சராக தான் இல்லாத போதும் கூட, அவர் கல்விக்காக பல்லாயிரக்கான ரூபாய்களைச் செலவளித்திருக்கின்றார். விசேடமாக அதி கஸ்ட மற்றும் கஸ்டப் பிரதேசம் என அடையாளம் காணப்பட்டிருக்கின்ற பாடசாலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு அபிவிருத்திகளை கல்விக்காக மேற்கொண்டு வருகின்றார். (மேலும்....)

ஐப்பசி 02, 2010

ரபேல் கோரியாவுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆதரவு

ஈக்குவடார் நாட்டின் ஜனாதிபதி ரபேல் கோரி யாவுக்கு பிரேசில், அர் ஜெண்டினா உள்ளிட்ட பல லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. ரபேல் கோரியா அரசின் ஒரு முடிவை எதிர்த்து அந் நாட்டு காவல்துறையினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் சிக் கிக் கொண்ட கோரியாவை அந்நாட்டு ராணுவம் விரைந்து சென்று பாதுகாப் பாக அழைத்துச் சென்றுள் ளது. நேரடியாக போராடிக் கொண்டிருக்கும் காவல் துறையினர் மத்தியில் தைரி யமாக பேசுவதற்காக கோரியா சென்றபோதே இந்த சம் பவம் நிகழ்ந்துள்ளது. சில மேற்கத்திய ஊடகங்கள் இதை அரசுக்கு எதிரான கலகம் என்று கூட வர்ணித்துள்ளன. (மேலும்...)

ஐப்பசி 01, 2010

இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்கு ஜனாதிபதி மஹிந்த அங்கீகாரம்

  • 30 மாத கடூழிய சிறை

  • எம்.பி பதவியும் ரத்தாகும்

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய 30 மாத கடூழிய சிறைத்தண்டனைக்கு முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவெல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார். இதன் பிரகாரம் பொன்சேகாவுக்கு எதிரான சிறைத்தண்டனை நேற்று முதல் அமுலாவதோடு அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இரத்தாவதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 01, 2010

போக்கிடமற்ற போக்கிரித்தனம்!

(ஜீ.)

இவர்கள் செய்திகளை தெரிவுசெய்து வழங்குவதும் வழங்கும் விதமும் கொடுமையானது. அதிலும் வானொலியின் அரசியல் ஆயும் நிகழ்சிகளில் இவர்கள் வழங்கும் கருத்துக்கள் கொடுமையிலும் கொடுமையாது. ஒரு பத்திரிகைக்குரிய தார்மீக பொறுப்புக்களிலிருந்தும் தூர விலகி அரசியல் நாகரிகமற்று நேர்மையான அரசியல்வாதியிலிருந்தும் விலகி பக்கா போக்கிரித்தனமான முறையில் செய்திகளையும் கருத்துக்களையும் இந்த வானொலியினூடாக எடுத்துவருகின்றனர். செத்த புலியை உயிர்ப்பிக்கும் நோக்கமல்ல, செத்து அழுகிக்கொண்டிக்கும் புலியின் சதையையும் என்புகளையும் அகற்றிவிட்டு பஞ்சடைத்த புலியைவைத்து எதிரியை மிரட்டுவதே இவர்களது நோக்கம் போலும். புலிகளின் பினாமி அமைப்பான கூத்தமைப்பு தொலைந்தது சனியனென்று தலைக்கு தண்ணிதெளித்துவிட்டு பிழைப்பைப் பார்த்துக்கொள்கிறது. ஆனால் இவர்கள் பூச்சாண்டி காட்டுகிறார்கள். (மேலும்....)

ஐப்பசி 01, 2010

புலிகளின் கழுத்தை இறுக்கும் அவுஸ்திரேலியா....?

அவுஸ்திரேலிய சிட்னி நகரில் இலங்கை தமிழ் குடும்பமொன்றை அந்தநாட்டுப் பொலிஸார் வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலாக விளங்கினர் எனக்கூறி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவிலிருந்து குறித்த குடும்பத்தினர் வில்லாவுட் தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், 6 மற்றும் 3 வயது பிள்ளைகளை உள்ளடக்கிய இந்தக் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தக் குடும்பத்திலுள்ளப் பெண் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதிமன்ற கட்டமைப்பில் கடமைப் புரிந்ததாகவும், 78 பேரை ஏற்றிவந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலிலிருந்து காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது. இவரின் கணவர் கடந்த வருடம் நடுப்பகுதியில் கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐப்பசி 01, 2010

Canada OK's most Sri Lankan refugee claims

(By David McKie, CBC News)

The refugee board accepted 85.5 per cent of Sri Lankans claiming refugee status in Canada during the first six months of 2010 - a rate that is on the high end among countries. The refugee board accepted 85.5 per cent of Sri Lankans claiming refugee status in Canada during the first six months of 2010 - a rate that is on the high end among countries. An analysis by CBC News of numbers released by the Immigration and Refugee Board of Canada showed 345 Sri Lankan claims were accepted in six months, while 50 were rejected. Another 705 claims from that period are waiting to be processed. (more....)

ஐப்பசி 01, 2010

அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை  வியாழக் கிழமை  இன்று தீர்ப்பை வெளியிட்டது.

அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து ராமர் கோவில் செயற்குழு, பாபர் மசூதி செயற்குழு, அகராவிடம் வழங்க உத்தரவு அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ராமர் கோவில் செயற்குழுவிடமும், அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் மற்றும் பாபர் மசூதி செயற்குழுவிடமும் வழங்க வேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதி தர வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை வியாழக் கிழமை 30ஆம் திகதி  பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. (மேலும்....)

ஐப்பசி 01, 2010

உங்களை உலகுக்கு தந்தோருக்காக வாழுங்கள்!

ஜீவனோபாயத்துக்கான வருமானமின்மை மாத்தி ரமே பிரச்சினை என்றில்லை.... மன ஆறுதல் தரவும் பராமரிக்க வும் பிள்ளைகள் எவருமே அருகில் இல்லாததன் காரணமாக பெற்றோருக்கு ஏற்படுகின்ற மனவேதனை, மன உளைச்சல் என்பவையெல்லாம் அம்முதியோர்களுக்கு மட்டும்தான் புரியும். முதியோர் இல்லங்களுக்குச் செல்வோமானால் அங்குள்ள முதிய வர் ஒவ்வொருவரினதும் முகங்களில் பிரதிபலிக்கின்ற சோகங்களை நாம் கண்டுகொள்ள முடியும். பெற்ற பிள்ளைகளை கண்ணால் காணும் பாக்கியம் கிட்டாதாவென்ற ஏக்கத்தில் வயோதிபர் இல் லங்களில் வாழும் பெற்றோர் பலர் உண்டு. (மேலும்....)

ஐப்பசி 01, 2010

உலகின் அதிவேக ரயில் அறிமுகம்

மணிக்கு 416.6 கி. மீ. வேகத்தில் பறக்கும் அதிவேக ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பீஜிங் தியான்ஷின் நகரங்களுக்கிடையே அதிவேக ரயிலை சீனா இயக்கி வந்தது. கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 24ம் திகதி இந்த ரயில் இயக்கப்பட்டது. மணிக்கு 394.3 கி. மீற்றர் வேகத்தில் இயக்கப்படட இந்த ரயில்தான் உலகின் அதிவேக ரயில் என்று புகழப்பட்டது. தற்போது அதை விட அதிக வேகமாக இயங்கக் கூடிய ரயிலை சீனா உருவாக்கியுள்ளது. இந்த ரயில் மூலம் ஷங்காய் - ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது மணிக்கு 416.6 கி. மீட்டர் மின்னல் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது. (மேலும்....)

ஐப்பசி 01, 2010

தமிழக மீனவர்கள் விவகாரம்

இலங்கை - இந்திய கடல் எல்லையில் கடற்படை கப்பலில் பேச்சுவார்த்த

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பினுள் செல்லுதல், இந்திய தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்தல் போன்றவற்றை தடுத்தல் விவகாரம் தொடர்பாக இலங்கை - இந்திய கடற்படைகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இலங்கை - இந்திய கடல் எல்லையில் கடற்படை கப்பலில் இந்த பேச்சுவார்த்தை கள் நடைபெற்றதாக கடற்படையின் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் தெரிவித்தார்.இலங்கை - இந்திய கடற் படைக்கு இடையே மாதந்தோறும் பேச்சுக்களின் ஒரு அங்கமாகவே இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்திய கடற்படையின் சார்பில் எட்டு அதிகாரிகளும், இலங்கை கடற்படை சார்பில் 7 படையதிகாரிகளும் கலந்து கொண்டனர். இரு நாடுகளினதும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இரு நாட்டு கடற்படையினரும் காவல் படைகளும் இணைந்து ரோந்து பணிகளை மேற்கொள்வதென இங்கு பேசப்பட்டதாக கூறிய கடற் படை பேச்சாளர் கப்டன் அத்துல செனரத், இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக தமிழக செய்திகள் தெரிவித்திருந்த கருத்துக்களை மறுத்தார்.

ஐப்பசி 01, 2010

அமெரிக்காவின

‘அவுட்சோசிங்குக்கு’ எதிரான பிரேரணை தோல்வி

அமெரிக்காவில் உள்ள கம்பெனி கள் தங்கள் வேலைகளை சம்பளம் குறைவாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் உள்ள கம்பெனிகளுக்கு அனுப்பி அங்கு வைத்து முடித்துக் கொள்வதால் அமெரிக்கர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. இதனால் வெளிநாடுகளுக்கு வேலைகளைக் கொடுக்கும் நிறு வனங்களுக்கு வரிச்சலுகை போன்ற வற்றை ரத்துச் செய்யும் சட்டம் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா திட்டமிட்டார். இந்த சட்டம் அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. அப்போது குடியரசு கட்சியினர் இந்தியாவுக்கு ஆதரவாக வாதாடினார்கள். அதன் பிறகு வாக்கெடுப்பு நடந்தது. இந்தச் சட்டம் நிறைவேற வேண்டு மானால், குறைந்தது 60 வாக்குகள் தேவை. ஆனால் 6 வாக்குகள் குறைவாக கிடைத்ததால், இந்த சட்ட மசோதா தோல்வி அடைந்தது.

ஐப்பசி 01, 2010

கம்போடிய நாட்டின்

மரங்களைப் பாதுகாக்க இந்திய குழு விஜயம்

கம்போடிய நாட்டின் புகழ்பெற்ற அங்கோர் வட் கோவிலின் அருகில் இருக்கும் ‘தா ப்ரோம்’ கோயிலில் வளர்ந்துள்ள பிரமாண்டமான அரிய வகை மரங்களை அழிவில் இருந்து பாதுகாப்பது குறித்து நேரில் ஆய்வு செய்ய இந்திய வன ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் நிபுணர் குழு விரையில் கம்போடியாவுக்குச் செல்ல இருக்கிறது. கம்போடிய நாட்டில் உலகப் புகழ்பெற்ற அங்கோர் வட் கோயில் அமைந்துள்ளது. அந்நாட்டில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் அக்கோவில் முதலிடம் வகித்து வருகிறது. அதையடுத்து, ‘பேயான்’ கோவில் இரண்டாமிடம் வகிக்கிறது. அங்கோர் வட் கோயிலில் இருந்து சில கி. மீ. தொலைவில் அமைந்துள்ள ‘தாப்ரோம்’ கோவில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 01, 2010

அப்துல் கலாமுக்கு கலாநிதி பட்டம்: கனடா பல்கலைக்கழகம் கெளரவம்

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு கனடா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. கன்டாவின் பிளாக்பெரி நகரில் அமைந்துள்ள வோட்டர்லூ பல்கலைக்கழகம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு கலாநிதி பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. டொரண்டோவில் நடந்த விழாவில் அப்துல் கலாம் கலந்து கொண்டு கலாநிதி பட்டத்தை பெற்று கொண்டார். கலாமின் மனிதாபிமானம், மற்றும் தொலைநோக்கு அணுகுமுறையை பாராட்டி இந்த கலாநிதி பட்டத்தை வோட்டர்லூ பல்கலைக்கழகம் அளித்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய கலாம் இந்திய- கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

ஐப்பசி 01, 2010

தமிழில் 11 நூல்களுக்கு சிறந்த இலக்கிய விருது

2009 ஆம் ஆண்டில் நாட்டில் 1332 புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டுள்ளன. அவற்றில் 77 நூல்கள் அரச இலக்கிய விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டிருந்தன அவற்றில் மும்மொழிகளையும் சேர்ந்த 35 நூல்களே அரச இலக்கிய விருதுகளை பெற்றுக்கொண்டன. தமிழ் மொழியில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருதை ஒ.கே. குணநாதன் எழுதிய குறும்புக்கார ஆமையார் என்ற நூலும் சிறந்த சிறுவர் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை சரோஜினி அருணாசலம் எழுதிய ‘என்றும் உங்கள்’ என்ற நூலும், சிறந்த நாடக இலக்கியத்திற்கான விருதை கலையார்வன் எழுதிய ‘கூத்துக்கள் ஐந்து’ என்ற நூலும் பெற்றுக் கொண்டன. (மேலும்....)

ஐப்பசி 01, 2010

 

நெடுந்தீவு பயணிகள் படகு சேவையில் நேர மாற்றம்

நெடுந்தீவுப் பயணிகளுக்கான படகுச் சேவையில் குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இருந்து காலை 7 மணிக்கு குறிகாட்டுவான் செல்லும் பயணிகள் படகு அங்கிருந்து பகல் 10.30 மணிக்கு மீண்டும் நெடுந்தீவுக்குப் புறப்படுகின்றது. எனினும் இன்று முதலாந் திகதி வெள்ளிக்கிழமை முதல் காலை 9 மணிக்கு குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து பயணிகள் படகு புறப்படும். இதேபோன்று பி. ப. 4.30 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்குச் சென்று வந்த படகு இன்று முதல் குறிகாட்டுவானில் இருந்து பி. ப. 4 மணிக்கு புறப்படும். நெடுந்தீவில் இருந்து பி. பகல் சேவை 2 மணிக்கு இடம்பெறும்.

ஐப்பசி 01, 2010

வெளிநாடுகளில் திருவிழாக் கோலம்...

எந்திரன் மெகா ஹிட்...

ரஜனியின் எந்திரன் படம் வெளியீடுபற்றி முதல் தகவல் அறிக்கை!

"சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்கு முன் இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை... சிறப்பான நடிப்பு, பிரமாதமான ஸ்டன்ட், ஐஸ் அழகு சொக்க வைக்கிறது. இயல்பான காமெடி, மிரள வைக்கும் இரண்டாம் பாகம்... குடும்பத்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்!" எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் 'முதல் தகவல் அறிக்கை' இது என்றால் மிகையல்ல. டுபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களில் டுபாயில் சந்தைத்துறை அதிகாரியாகப் பணியாற்றும் வரும் ஒருவர். (மேலும்....)

ஐப்பசி 01, 2010

ஆப்கானிஸ்தான்  போதையேறிய அமெரிக்க ராணுவம் கொலை வெறியாட்டம்

50 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினரை உள்ளே உட்கார வைத்துக் கொண்டே படைகளை இராக்கிலிருந்து வெளியேற்றி விட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானத்தில் தனது படையைக் கொலை வெறியாட்டத்தில் இறக்கிவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாகியும் உள்நாட்டில் நிலவும் குழப்பத்தைத் தீர்க்க முடியாமல் அமெரிக்க ராணுவம் திணறிக் கொண்டிருக்கிறது. இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க கர்சாய் தலைமையிலான பொம்மை அரசை அமெரிக்க ஏகாதிபத்தியம் முடுக்கிவிட்டுள்ளது. தான் ஆக்கிரமித்த இடங்களிலெல்லாம் எவ்வாறு கொலை வெறியாட்டங்களில் இறங்குமோ, அதே போல தனது வழக்கமான பாணியில் அமெரிக்க ராணுவம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது.(மேலும்....)

ஐப்பசி 01, 2010

பொலிவாரிய சோசலிசத்தை வலுப்படுத்தும்  வெனிசுலா தேர்தல் முடிவுகள் குறித்து சாவேஸ் கருத்து

வெனிசுலா தேர்தலில் வெனிசுலா சோசலிஸ்ட் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றி ஜனநாயக மற்றும் பொலிவாரிய சோசலி சத்தை வலுப்படுத்தும் பணி யை தொடர்ந்து மேற் கொள்வதற்கு உதவும் என்று அந்நாட்டு ஜனாதி பதி ஹியூகோ சாவேஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஞாயிறன்று நடை பெற்ற வெனிசுலா நாடாளு மன்றத் தேர்தலில் மொத்த முள்ள 165 இடங்களில் ஜனாதிபதி சாவேஸின் ஆதரவு பெற்ற சோசலிஸ்ட் கட்சி 98 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய எம்.யு.டி அணிக்கு 63 இடங் கள் கிடைத்தன. இடங்கள் குறித்த விபரங்களை வெளி யிட்டுள்ள வெனிசுலா தேசிய தேர்தல் ஆணையம் மொத்தம் எவ்வளவு வாக்கு கள் கிடைத்தன என்ற விப ரத்தை வெளியிடவில்லை. (மேலும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com