Contact us at: sooddram@gmail.com

 

ஆடி 2010 மாதப் பதிவுகள்

ஆடி 31, 2010

தமிழ்க் கட்சிகளிடையே ஐக்கியம்

முன்னர் இடம்பெற்ற இரண்டு ஐக்கிய முயற்சிகளிலும் பார்க்க இன்றைய ஐக்கிய முயற்சி குணாம்சரீதியாக முக்கியமானது. தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடைமுறைச் சாத்தியம ற்ற தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தமிழ் மக்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். தனி நாட்டுக் கொள்கை தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளி விடும் என்பதை ஏற்றுக் கொள்பவர்களாலேயே இன் றைய ஐக்கிய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதென்ப தால் இது தமிழ் மக்களுக்கு விமோசனப் பாதையைக் காட்டும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. (மேலும்...)

ஆடி 31, 2010

பிரபாகரனின் சாரதி பொலிஸாரிடம் சரண்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரத்தியேக சாரதியாக செயற்பட்ட வி.சதிகுமரன் திருகோணமலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான சதிகுமரன், போரின் கடைசிக்கட்டத்தில் அவ்வமைப்பிலிருந்து தான் தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி 31, 2010

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்படுமானால் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைய கூட்டமைப்பு தயார்'

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்படுமானால் 'தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில்' இணைவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.  தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணையுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, "கடந்த நான்கு கூட்டங்களின் போது அவர்கள் கூடி கலந்துரையாடியது, தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இவ்வரங்கத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாகத்தானே தவிர தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு எவ்வளவே இருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைப்பது தொடர்பில் மாத்திரம் கலந்துரையாடுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். இதுவரைக்கும் அவர்கள் என்ன விடயங்கள் கலந்துரையாடினார்கள் என்று இன்று வரைக்கும் மக்கள் மத்தியில் கூறவில்லை. அக்கூட்டத்தில் என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டது என்பதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு கழுவிற தண்ணீரில் நழுவிற மீன் போல இருக்கின்றது என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். 

ஆடி 31, 2010

உலக மரபுரிமைப் பட்டியலில் சிவனொளிபாதமலை, ஹோர்ட்டன் சமவெளி, நக்கிள்ஸ்

சிவனொளிபாதமலை, ஹோர்ட்டன் சமவெளி, நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகியன பாதுகாக்கப்பட வேண்டிய உலக மரபுரிமைப் பிரதேசங்களாக ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரேஸிலில் நடைபெறும் யுனெஸ்கோவின் உலக மரபுரிமைக்குழுவின் 34 ஆவது மாநாட்டில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை பிரேஸிலின் பிரஸில்லியா நகரில நடைபெறும் இம்மாநாட்டில்  பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையிலான  இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆடி 31, 2010

ஆரயம்பதி பொது மக்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது _

மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் நேற்று காலைமுதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய நிலங்களை ஆக்கிமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக உண்ணாவிரதமிருப்போர் தெரிவிக்கின்றனர். காத்தான்குடி நகரசபை தமது பிரதேச செயலக எல்லையை நிர்ணயம் செய்து தமது பகுதிக்குரிய சவ நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று சுமார் 5மணியளவில் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், நடைபெற்றுக் கொண்டிருந்த ஆர்பாட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவந்தார்.  (மேலும்...)

ஆடி 31, 2010

Foreign mediated efforts  won’t bring reconciliation:KP

Prabhakaran, his key commanders and an influential section of the Tamil Diaspora felt that Tamil Nadu would come to their rescue. They believed Tamil Nadu political parties could exploit a dicey political situation to compel Prime Minister Manmohan Singh to intervene in Sri Lanka. We also sought the assistance of some UN officials and President of East Timor to arrange for a truce before the Army overran the last few sq km of territory held by the LTTE in the third week of May 2009. (more...)

 

ஆடி 31, 2010

பிளாஸ்டிக் இல்லாத நாட்டை எப்போது உருவாக்கப் போகிறோம்?

சில காலங்களின் முன் ஸ்பெயின் நாட்டின் கடற்கரை ஒன்றில் 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்த திமிங்கிலத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக புதிய கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டது. ஆனால், முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து திமிங்கலம் இறந்துவிட்டது. பின்னர் இறந்த அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தபோது அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் குடலில் சுமார் 50 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் காணப்பட்டன. (மேலும்...)

ஆடி 31, 2010

IPad இற்குப் போட்டியாக Microsoft

உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது அப்பிளின் பிரபல ' ஐ பேட் ' ரக கணனிகளுக்குப் போட்டியாக ஒரு கணனியை உருவாக்கி வருவதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார். இதற்காக தாம் எச்பி,லெனோவோ,எசூஸ்,டெல் மற்றும் டொஷிபா போன்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றார். அத்துடன் தமது மென்பொருள் வல்லுநர்களுடன் சேர்ந்து கடுமையாக உழைத்து வருவதாகவும் கூடிய விரைவில் மக்களின் தேவைக்கேற்ற விதத்தில் இது சந்தைக்கு வருமெனவும் தெரிவித்தார். இந்நிலையில் மைக்ரோசொப்ட் கொரியர் எனப்படும் இரட்டைத் திரைகளைக் கொண்ட கணனிகளை அதன் வல்லுநர் குழுவொன்று இரகசியமாக உருவாக்கி வருவதாகவும் தகவல் கசிந்திருந்தது. ஆனால் இது தாம் உருவாக்கிவரும் பலவகையான கணனிகளில் ஒரு வகை மட்டுமே என மைக்ரோசொப்ட் அண்மையில் தெரிவித்திருந்தது.

ஆடி 31, 2010

பாதுகாப்பு அச்சுறுத்தல் இலங்கையில் இல்லை

தனது பிரசைகளுக்கான பிரயாணக் கட்டுப்பாட்டை பிரிட்டன் நீக்கியது

இலங்கையின் வட மாகாணத்தின் நான்கு மாவட்டங்களுக்குச் செல்வ தற்காக பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நீக்கியுள்ளது. வடக்கில் முல்லைத்தீவு, கிளி நொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு செல்லுவதற்கு பிரிட்டிஷ் தூதரகம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. என்றாலும் வடக்கில் இப்போது பாதுகாப்பான நிலை ஏற்பட்டுள்ளதனால், தனது பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுக ளை அகற்றுவதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரகம் நேற்று அறிவித்தது. (மேலும்...)

ஆடி 31, 2010

கிறிஸ்மஸ்தீவு கடற்பரப்பில் படகு மூழ்கிய நிலையில் 81 அகதிகள் மீட்பு

கடலில் மூழ்கும் அபாய நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர், அவுஸ்திரேலியாவின் வட மேற்கு கிரிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து நேற்று முன்தினம் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நான்கு இந்தோனேஷிய ஆட்கடத்தல் காரர்களும் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தெரிவானதைத் தொடர்ந்து அங்கு சென்ற 150வது படகு இதுவாகும். (மேலும்...)

ஆடி 31, 2010

தலீபான்களுக்கு நிதி உதவும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாதது ஏன்?

தலீபான்களுக்கு தஞ்சம் கொடுத்து, அவர்களுக்கு நிதி உதவியையும் அளித்த பாகிஸ்தான் மீது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தாக்குதல் நடத்தாது ஏன் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்களை ஒடுக்குவதற்காகவும் அங்கு இருந்த அல்கைதா தீவிரவாதிகளை விரட்டி அடிக்கவும் அமெரிக்கா அங்கு இராணுவத்தை அனுப்பி யுத்தம் நடத்தி வருகிறது. 9 ஆண்டுகளாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அந்நிய வீரர்கள் அங்கு முகாமிட்டு தலீபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். (மேலும்...)

ஆடி 31, 2010

தண்ணீர்...தண்ணீர்!

குடிநீர் இன்று கானல் நீராகி வரும் வேளை யில் ஐக்கிய நாடுகள் சபை, தூய்மையான குடிநீர் மனித உரிமை என பிரகடனப்படுத்தியிருக்கிறது. சரியான நேரத்தில் இந்த பிரகடனம் வெளியிடப் பட்டிருக்கிறது.  பூமியின் பரப்பில் 71 சதவிகிதம் தண்ணீர் இருந்தாலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் தண்ணீரின் அளவு 0.26 சதவிகிதம் மட்டுமே. மனிதனை தாக்கக்கூடிய நோய்களில் 62 சதவிகிதம் இந்த நீரினால் பரவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பரவும் ‘ தொற்று’ நோய்களில் 21 சதவிகிதம் தண்ணீர் மூலமே பரவுகிறது. ஆண்டுதோறும் வயிற்றுப் போக்கு நோயால் மட் டும் 7 லட்சம் இந்தியர்கள் பலியாகிறார்கள் என்ற ஆய்வு விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. (மேலும்...)

ஆடி 31, 2010

இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டுவதை நிறுத்துமாறு பாகிஸ்தானுடன் பேசுவேன் - இங்கிலாந்து பிரதமர்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து புதிய பிரதமர் டேவிட் கமரூன், டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு இரு தலைவர்களும் நிருபர்க ளுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, டேவிட் கமரூன் கூறு கையில், இந்தியாவில் தீவிரவாத த்தை தூண்டி விடுவதை நிறுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி, பாகிஸ்தானுடன் வெளிப்படையாக, திறந்த மனதுடன் பேச்சு நடத்துவது தான். அடுத்த வாரம் நான் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியுடன் இது தொடர்பாக பேச்சு நடத்துவேன் என்று கூறினார். இந்த கூட்டு பேட்டியில், பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், ஆப் கானிஸ்தான் எல்லையில் தீவிரவா தத்தை கட்டுப்படுத்த அக்கறை செலுத்துவது போல, இந்திய எல் லையிலும் தீவிரவாதத்தை கட்டுப் படுத்த பாகிஸ்தான் அக்கறை செலு த்த வேண்டும் என்று எதிர்பார்க் கிறேன். இதற்கு உலக நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்று கூறி னார்.

ஆடி 31, 2010

மட்டு.ஆரையம்பதி மக்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் இன்று காலைமுதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய நிலங்களை ஆக்கிமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக உண்ணாவிரதமிருப்போர் தெரிவிக்கின்றனர்.  காத்தான்குடி நகரசபை தமது பிரதேச, செயலக எல்லையை நிர்ணயம் செய்து தமது பகுதிக்குரிய சவ நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆடி 31, 2010

அமெரிக்க ராணுவ ரகசியங்கள் கூறும் உண்மை என்ன?

விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியான ஆப்கானிஸ்தான் போர் ராணுவ ரகசியங்கள் பிரச்சனையில் ஓபாமா நிர்வாகம் உடனடியாக, நாம் ஊகித்தது போன்றே நடந்து கொண்டுள்ளது. இக்கசிவுகள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ஒபாமா அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களையும் உலக மக்களையும் தவறாக வழிநடத்தி ஆப்கானிஸ்தானிய அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றஅமெரிக்க ராணுவம் மன்னிப்புக் கோரி ஒருவார்த்தை கூடக் கூறவில்லை. தற்போது அமெரிக்கா கடைப்பிடித்து வரும் கொள்கையே சரியான கொள்கை, அமெரிக்க நிர்வாகம் அதையே கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜெனரல் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார். உண்மையிலே, இத்துணிச்சலான வார்த்தைகளின் பின், வெளியே கசிந்துள்ள ஆவணங்கள் கூறும் கதையின் ஒரு பகுதி உண்மை தான் என்பது மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. (மேலும்...)

ஆடி 31, 2010

UNAC registers anti-war unity

(by Barry Weisleder)  

Anti-war unity in action got a major boost from a gathering of over 700 peace and social justice activists, held July 23-25 in Albany, New York. The United National Antiwar Conference was the largest of its kind since 2001. It had the backing of thirty national organizations across the United States, including the National Assembly Against U.S. Wars and Occupations, US Labor Against the War, Arab American Union Members' Council, Black Agenda Report, Code Pink, International Action Center, Iraq Veterans Against the War, National Lawyers' Guild and Progressive Democrats of America. People came from as far away as California and Texas. Several activists from Canada attended too, including a War Resisters' Canada rep., and six members of Socialist Action/Ligue pour l'Action socialiste from Toronto and Montreal. (more...)

ஆடி 30, 2010

மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் மக்களின் அங்கீகாரமும்

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை விரைவாக மீள் குடியேற்ற வேண்டும் என்றும் அவர்களின் மனித உரி மைகளையும் ஜனநாயக உரிமைகளையும் உறுதிப்படு த்த வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி கூறுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி மக் கள் விடுதலை முன்னணி பேசுவது வரவேற்புக்குரியது. ஆனால் அந்தப் பேச்சு சரிந்து செல்லும் அரசியல் செல் வாக்கைத் தக்க வைப்பதற்கான பேச்சாக அல்லாமல் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வை நாடி நிற்கும் பேச்சாக இருத்தல் வேண்டும். சிங்களக் கடுங்கோட்டப்பாட்டு வாக்கு வங்கியை இலக்கு வைத்துச் செயற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள மக் கள் விடுதலை முன்னணி அந்த நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு இனப் பிரச்சினையின் நியாயமான அரசி யல் தீர்வுக்காகக் குரல் கொடுக்கும் நிலையிலேயே தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியும். (மேலும்...)

ஆடி 30, 2010

மீண்டும் வெல்வது உறுதி

(கே.வரதராசன்)

இடதுசாரி அரசாங்கங்கள் நிலச்சீர்திருத் தம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைக ளில் மிக முக்கிய அம்சம் என்பது பினாமி நிலங்களையும், உபரி நிலங்களையும் கைய கப்படுத்தி, நிலமற்ற விவசாயிகளுக்கு விநி யோகம் செய்ததேயாகும். கடந்த 30 ஆண்டு களில் மேற்கு வங்க அரசு கையகப்படுத்திய நிலத்தின் அளவு 13.37 லட்சம் ஏக்கர்களாகும். இதில் 10.63 லட்சம் ஏக்கர் நிலங்களை மேற்கு வங்க அரசு நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகம் செய்து கொடுத்துள்ளது. இதன் மூலமாக 26.43 லட்சம் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர் களில் 47 சதவீதத்தினர் தலித்துகள், பழங் குடியினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினரா வார்கள். எனவேதான் நாட்டில் கையகப்படுத் தப்பட்ட நிலங்களில் 18 சதவீதமும், விவசாயி களுக்கு விநியோகிக்கப்பட்ட மொத்த நிலங்க ளில் 20 சதவீதமும் மேற்கு வங்கத்தில் இருக் கிறது என்று சொல்லும்போது அது விந்தை யாக இல்லாமல் இருக்கிறது.
(மேலும்...)

ஆடி 30, 2010

என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் அம்மணி?

(ஜீவிதன்)

தாம் கற்பிக்கும் மாணவர்களைத் தமது பிள்ளைகளாக எண்ணி அவர்களுக்குக் கல்வியை மாத்திரமன்றி நல்லொழுக்கத்தையும் சொல்லித்தர வேண்டியவர்கள் இவ்வாறு கீழ்த்தரமான சிந்தனைகளுடன் பாடசாலைக்குச் சென்று எவ்வாறு கற்பிப்பார்கள்? அரிச்சந்திரன் காத்த இடத்துப் பாடசாலையில் மட்டும் இல்லை. பொதுவாக இந்தப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் நிலைமை இதுவாக உள்ளதுதான் வேதனைக்குரிய விடயம். (மேலும்...)

ஆடி 30, 2010

‘அதியுயர் பாதுகாப்பு வலயங்களை கட்டம், கட்டமாக அகற்றும் பணி ஆரம்பம்’

வட பகுதியிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களைக் கட்டம், கட்டமாக அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஏ. பி. உபே மெதவல நேற்றுத் தெரிவித்தார்.  இத்திட்டத்தின் கீழ் கிளாலி, முகமாலை, கச்சாய், சாவகச்சேரி, மல்லாவி, காங்கேசன்துறை முதல் தெல்லிப்பளை வரையான பகுதி யாழ்ப்பாணம் - காங் கேசன்துறை வீதியில் மேற்கு பகுதி, மாங்குளம் உட்பட பல பிரதேசங்களின் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்கனவே நீக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருப்பதாகவும் அவர் கூறினார்.  (மேலும்...)

ஆடி 30, 2010

கே.பி அரச சாட்சியாக மாறும் சாத்தியம்; பொதுமன்னிப்பு வழங்கவும் முடியும்

 

கே. பி. எனப்படும் குமரன் பத்மநாதன் அடங்கலான பல புலம்பெயர் தமிழர்கள் வடபகுதி அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ளனர். நாட்டின் அழிவுக்காக பயன்படுத்தப்பட்டவர்களை நாட்டின் நலனுக்காக பாதிப்பில்லாதவாறு பயன்படுத்த தயாராக உள்ளோம். இலங்கை சட்டத்தின் பிரகாரம் கே. பி. அரச சாட்சியாக மாறும் சாத்தியம் உள்ளதோடு அவருக்கு பொது மன்னிப்பு வழங்கவும் முடியும். (மேலும்...)

ஆடி 30, 2010

பிரிட்டன் பிரதமரின் கருத்து பிராந்திய அமைதிக்கு பாதிப்பு - பாகிஸ்தான் தூதுவர்

பிரதமர் டேவிட் கமரோன் இந்தியாவில் வைத்து வெளியிட்ட கருத்துக்கள் பாகிஸ்தானை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தலிபான்களுக்கெதிரான போரில் பாகிஸ்தானின் மிகப் பெரிய பங்கை மலினப்படுத்துவதாயுள்ளது என்று பாகிஸ்தான் தூதுவர் பிரிட்டன் பத்திரிகைக்கு தெரிவித்தார். பென்டகனில் இரகசியமாகக் கசிந்த தகவல்களில் நாங்கள் சில உண்மையான தகவல்களைக் காண்கிறோம். அதில் பிரிட்டனின் நம்பகத் தன்மையில் குறைபாடு உள்ளது என்றும் ஹஸன் தெரிவித்தார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் இந்தியாவில் தெரிவித்தார். (மேலும்...)

ஆடி 29, 2010

மட்டு. களுவாஞ்சிக்குடி அபிவிருத்திக் குழுக் கூட்டம்

மட்டகக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜா திணைக்களத் தலைவர்கள் பிரதேச சபைத்தலைவர், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்திருந்தனர். இவ்வாண்டின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக அதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

ஆடி 29, 2010

KP speaks out

"Tamil Diaspora ready to work with President"

"Special Bank AC opened to raise funds"

Jaffna Mayor Alfred Duraiappah’s killing by Prabhakaran, the decision makers of the politico-militant movement at that time had removed Prabhakaran from the outfit. When he came to me, I was just an Advanced Level student, though I had to accommodate him in my room. There had been moves to kill him by some individuals, including the then TELO leader Thangadurai. (more.....)

 

ஆடி 29, 2010

 

’தமிழ்க் கட்சிகள் அரங்கம்’

9 கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு, கூட்டமைப்பை அழைக்க முடிவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். தலைவர்கள் ஒன்பது பேரும் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பிவைக்கப்பட  இருக்கின்றது. (மேலும்....)

ஆடி 29, 2010

5 ஆவது இரட்டைச் சதம் குவித்தார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 5 ஆவது டெஸ்ட் இரட்டை சதத்தை இன்று பூர்த்தி செய்தார். கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளான இன்று டெண்டுல்கர் 203 ஓட்டங்களைப் பெற்றார். 347 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர் மற்றும் 23 பௌண்டரிகளையும் விளாசினார். இலங்கை மண்ணில் இரட்டைச் சதம் பெற்ற 4 ஆவது வெளிநாட்டு வீரர் டெண்டுல்கர் ஆவார். இதற்குமுன் ஸ்ரீபன் பிளெமிங் (274) பிரையன் லாரா (221) வீரேந்தர் ஷேவாக் (201) ஆகியோர் ஏற்கெனவே இலங்கையில் இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளனர்.

ஆடி 29, 2010

Is LTTE ideologue Balakumar dead or alive?

Velupillai Balakumar or Balakumaran was the one time leader of Ealam Revolutionary Organization of Students (EROS). He was also a member of Sri Lanka parliament for a brief period. In late 1980s or early 1990s, he split the EROS and joined the Liberation Tigers of Tamil Ealam (LTTE) with a number of his associates.  He is believed an influential adviser to the leader of the LTTE Velupillai Prabakaran. The importance of this man is that he is famous as a Marxist. If he is alive like the former LTTE chief of international relations, he may speak one day how his Marxist ideas influenced the Tiger leader. Asked by The Island today whether among the detained terrorists were Yogiratnam Yogi, one-time LTTE negotiator and Balakumaran of the EROS, who threw his weight behind Velupillai Prabhakaran, Rehabilitation Commissioner Brig. Ranasinghe said that he did not have them. (more...)

ஆடி 29, 2010

வவுனியா நகர சபை தலைவர் நாதனின் அராஜகம்

வவுனியா நகரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதில்லையென மூன்று கட்சிகள் தீர்மானம்.

வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக 29விடயங்களை முன்வைத்து கையெழுத்திட்டு வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர், செயலாளர் ஆகியோர்க்கு எதிராக அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பித்தனர். குறித்த விடயங்கள் தொடர்பாக சரியான விளக்கம் தந்தால் கடந்தகாலங்கள்போல் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் இல்லையேல் ஒத்துழைப்புக்களை வழங்க மாட்டோமென்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக எடுத்த முடிவின்படி இனிமேல் நகரசபை செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென்று தீர்மானிக்கப்பட்டது. (மேலும்...)

வாகரையில் 70 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றம்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில் இன்று காலை 70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டன. கடந்த 2006 இராணுவ நடவடிக்கையின்போது போது இடம்பெயர்ந்து கதிரவெளி,சித்தாக்கேணி, பால்சேனை, வம்மிவெட்டுவான் போன்ற பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர். சுமார் 5 வருடங்களின் பின்னர் இவர்கள் தோணிதாண்டமடு கிராமத்தில் இன்று மீள்குடியமர்த்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். கதிரவெளியிலிருந்து இன்று காலை புறப்பட்டுச்சென்ற இவர்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதேசசெயவாளர், படையதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு வழியனுப்பிவைத்தனர்.

ஆடி 29, 2010

ராஜீவ்காந்தி கொலை வழக்கு

நளினியை விடுதலை செய்ய முடியாது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.  (மேலும்...)

ஆடி 29, 2010

லண்டன் கனவுகளின் தேசம் அல்ல

மட்டக்களப்பிலிருந்து எனது நீண்டகால நண்பர் திக்வயல் தர்மகுலசிங்கம் தொலைபேசி எடுத்துச் சொன்னார் 'உங்கை லண்டனுக்குத் எனது சொந்தக்காரப் பொடியன் ஒருத்தன் வாறான். அவன் ஸ்ருடன்ற் விசாவில் வாறான். ஒரு வேலை எடுத்துக் கொடுங்கோ'. இப்படியான தொலைபேசி அழைப்புக்கள் சிலோனிலிருந்து அடிக்கடி எனக்கு வரும். லண்டன் பெரும் சீமை என்று ஒரு பெருமை அந்தக் காலத்தில் இருந்ததுதான். பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வின் இடமாக லண்டன் முன்பு ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால் இப்பொழுது இல்லை. (மேலும்....)

ஆடி 29, 2010

தர்ஷிகாவின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

வேலணை வைத்தியசாலை யின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் உடல் நேற்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.  கடந்த 12ம் திகதி வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தர்ஷிகாவின் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவத்துக்கு வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் காரணமென தர்ஷிகாவின் குடும்பத்தினர்

ஆடி 29, 2010

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்தவர் ஸ்ரீமாவோ

- ஜனாதிபதி

முழு உலகிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய போதும் அதனை எதிர்கொள்ளும் பலம் அவருக்கிருந்தது. அந்தப் பலமே எமக்கும் முன்னுதாரணமாகியது. நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்க அவர் எப்போதும் தயாராகவே இருந்தார். அரச வளங்கள் எதனையும் அவர் விற்கவில்லை. காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வங்கிகள் போன்றவற்றை பாதுகாத்ததுடன் பூகொட, துல்கிரிய, டயர் கூட்டுத்தாபனம் ஆகியன அவரது காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. கட்சிக்காக, நாட்டுக்காக அவர் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவிருந்தார். தமது கட்சியின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது போன்று ஏனைய கட்சிகளின் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தினார்.(மேலும்....)

ஆடி 29, 2010

 

அமைச்சர் முரளியின் பேச்சுவார்த்தை வெற்றி

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணம் அதிகரிப்பு

இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிக்க உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நிவாநயகமூர்த்தி முரளிதரன் கூறினார். உலக உணவுத் திட்டத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதோடு இதனை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி ஆத்நாத் கானுக்கும் பிரதி அமைச்சருக்கு மிடையில் அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இடம்பெயர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு, மா, சீனி, மரக்கறி எண்ணெய் உப்பு என்பன வழங்கப்படுகிறது. பருப்பு, மரக்கறி எண்ணெய், மா என்பன அமெரிக்காவில் இருந்தும் சீனி, அரிசி, உப்பு என்பன அரபு நாடுகளில் இருந்தும் தருவிக்கப்படுகிறது. இவற்றை சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் கேள்வி மனுக்கோரி குறைந்த விலையில் பெற்றபின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிப்பதாக உலக உணவுத் திட்ட பிரதிநிதி கூறியுள்ளார்.

ஆடி 29, 2010

பட்டையைக் கிளப்பும் சத்யராஜ், குட்டை உடைக்கும் கருணாஸ்

''நான் புதுக்கோட்டையில் பிறந்தவன். ஈழம்தான் என் பூர்வீக பூமி. தமிழீழம் பெறவேண்டும் என்கிற வெறி, சீமானைவிட எனக்கு அதிகம் உண்டு. நான், இயல்பாகவே முருகபக்தன். 'தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உண்டே... அதில் ஏதாவது ஒரு கோயிலுக்குப் போகலாமே...' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதெல்லாம் குலதெய்வத்தை வழிபடுவதுபோல் ஆகுமா? என் குலதெய்வமான முருகன் கோயில், கதிர்காமத்தில்தானே இருக்கிறது? அங்கே நான் நேர்த்திக்கடன் செலுத்துவது தப்பா? முதலில் வர்மா என்ற ஒருவர் செல்போனில் தன்னை, 'சீமான் உதவி யாளர்' என்று சொல்லிக்கொண்டு, 'இலங்கைக்கு நீ போகக்கூடாது. போனால், தொலைத்து விடுவோம்...' என்றார். அடுத்து, 'நாம் தமிழர்' இயக் கத்தைச் சேர்ந்த அதியமான் ரொம்பவும் மோசமாக மிரட்டினார்.  (மேலும்....)

ஆடி 29, 2010

இலங்கையில் இதுவும் நடக்கின்றது

1929 சிறுவர் துஷ்பிரயோகம் 1750 அழைப்புகள்

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல் வழங்குவதற்கான 24 மணி நேர தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நேரடி தொலைபேசிக்கு நாடளாவிய ரீதியில் இருந்து இதுவரை 1750 அழைப்புகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாது காப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான இந்த நேரடி தொலைபேசி கடந்த 22ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. 1929 என்ற எண்ணில் 24 மணி நேரமும் இலவசமாக எவரும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்க முடியும். (மேலும்....)

ஆடி 29, 2010

அமெரிக்காவின்  அணுஆயுத மிரட்டல்

தென்கொரிய யுத்தக்கப்பல் ஒன்றை வட கொரியா மூழ்கடித்துவிட்டதாக கடந்த இரண்டு மாத காலமாக தென்கொரியா புகார் கூறி வரு கிறது. அதற்கு அமெரிக்காவும் சொல்லி வைத் தாற்போல் பின்பாட்டு பாடி வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு வடகொரியாவும், அமெரிக்காவும் திட்டமிட்டு செய்யும் வஞ்சகப் பிரச் சாரம் இது என்று வடகொரியா இடித்துரைத்துள்ளது. வரலாற்றில் அமெரிக்காவையும், அதன் அடி மைக் கூட்டாளிகளையும் முறியடித்து மகுடம் சூடிய நாடு வடகொரியா. தனது தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாத அமெரிக்க ஏகாதிபத்தி யம் வடகொரியாவுக்கு எதிராக தொடர்ந்து பல நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. பொரு ளாதாரத்தடை, உணவுப் பொருட்களுக்குத்தடை என பல மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வட கொரியா மீது அமெரிக்கா ஏவிவிட்டுள்ளது. தடைகளைத் தகர்த்தெறிந்து வளர்ச்சிப்பாதை யில் வடகொரியா கம்பீரமாக நடைபோடுகிறது.
(மேலும்....)

ஆடி 29, 2010

 

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக நேற்று மாலை பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. றுஹுணு பல்கலைக்கழக மாணவனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரியே நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக நீடித்தது. ஆர்ப்பாட்டத்தையொட்டி புகையிரத நிலையத்துக்கு முன்பான ஒல்கொட் மாவத்தை போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆடி 29, 2010

152 பயணிகள் பலி

பாகிஸ்தானில் விமானம் விபத்து

பாகிஸ்தானில் நேற்று நடந்த விமான விபத்தில் 6 விமானிகள் உட்பட 152 பேர் பலியாகினர். நேற்றுக் காலை இந்தச் சம்பவம் நடந்தது. பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து தலைநகரம் இஸ்லாமாபாத்துக்கு நேற்று காலை ஏர்புளு என்ற தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 153 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர். கராச்சியில் இருந்து சில மணி நேரம் பயணம் செய்து விமானம் இஸ்லா மாபாத்தை நெருங்கி கொண்டி ருந்தது. இஸ்லாமாபாத் அருகே உள்ள மார் காலா மலைக்கு மேலே விமானம் பறந்துகொண்டிரு ந்தது. அப்போது விமானம் திடீரென விமான நிலைய ரேடாரில் இருந்து மறைந்தது. ரேடியோ தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. உடனே உஷார் அடைந்த விமான நிலைய ஊழியர்கள் விமானத்துக்கு என்ன ஆனது? என்று தேட தொடங்கினார்கள். விமானம் மார்காலா மலையில் மோதி நொறுங்கிக் கிடப்பது தெரியவந்தது. அந்த இடத்துக்கு ஹெலிகொப்டர் மூலம் மீட்பு படையினர் அனுப்பப்பட்டனர். ஆனால், வானிலை மோசமாக இருந்ததால் விமானம் விழுந்து கிடந்த இடத்தில் இறங்க முடியவில்லை. பல பயணிகள் இறந்து கிடந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த சிலர் மீட்கப்பட்டனர். இதுவரை 45 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 114 பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.  

ஆடி 28, 2010

துயரங்களில் பங்கு கொள்கின்றோம்

ஈ.பி.டி.பி.யின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரனின் தந்தை இயற்கை எய்தினார்

 

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் சர்வதேசப் அமைப்பாளர் தோழர் மித்திரனின் தந்தையார் அந்தோனிமுத்து மரியாம்பிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலியில் இயற்கை எய்தினார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக அர்பணிப்புடன் செயற்பட்டு வரும் தோழர் மித்திரனுக்கும், அவர் தம் குடும்ப உறவுகளுக்கும் இது பெரும் இழப்பாகும். அவர்களின் துயரத்தில் சூத்திரம் இணையத்தளமாகிய நாங்களும் இணைந்து கொள்கின்றோம். ஈழ மக்கள் ஜனநாய கட்சியினரின் துயரங்களுடனும் நாமும் இணைந்து கொள்கின்றோம்.

ஆடி 28, 2010

இலங்கையர் அறுவர் அமெரிக்காவில் கைது

அமெரிக்க பொலிஸார் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படும் 6 இலங்கையர்களை செவ்வாய் காலை கைது செய்துள்ளனர். புளோரிடா மாநிலத்தின் பாம் பீச் நகரில் காலை 6.40 மணியளவில் ஈரமான ஆடையுடன் மேற்படி நபர்கள் வீதியில் நடந்து சென்றதை அவதானித்த பொலிஸார் அந்;நபர்களை கைது செய்து எல்லைக் காவல்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். முழங்கால் வரை அவர்களின் கால்கள் நனைந்திருந்ததால் அவர்கள் படகில் அழைத்துவரப்பட்டு கரையோரத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். எனினும் சந்தேகத்திற்கிடமான படகுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நபர்கள் அனைவரும் 20-40 வயதானவர்கள் எனவும் அவர்கள் ஆரோக்கியமான நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை மற்றும் அமெரிக்க நாணயத்தாள்கள் அவர்களிடம் இருந்ததாகவும் அவர்களால் ஆங்கிலம் பேசமுடியவில்லை எனவும் பொலிஸார் கூறுகின்றனர். அவர்களிடம் பை எதுவும் காணப்படாத போதிலும் செல்லிடத் தொலைபேசிகளை வைத்திருந்தனர்.

ஆடி 28, 2010

Hardcore Tigers among detainees identified, legal action awaited

A senior military official said on Monday (July 26) that those involved in major terrorist attacks would have to be legally dealt with. He said hardcore terrorists could not be released along with ordinary LTTE combatants, as they could pose a security threat. Brigadier Sudantha Ranasinghe, Commissioner General of Rehabilitation said that the 737 ex-LTTE personnel were among 7,948 persons held by authorities. He said that they were all men. Asked by The Island whether among the detained terrorists were Yogiratnam Yogi, one-time LTTE negotiator and Balakumaran of the EROS, who threw his weight behind Velupillai Prabhakaran, Brig. Ranasinghe said that he did not have them. (more...)

ஆடி 28, 2010

சிறப்பாக நடைபெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் திருவிழா _

வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் உற்சவத்தின் பத்தாம் நாள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். ஆலயத்தில் ஐந்து வருடங்களுக்கு மேலாக திருத்தப் பணிகள் இடம்பெறுவதால் கொடியேற்றம் நடைபெறாது திருவழாக் காலத்தில் உற்சவம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஆடி 28, 2010

உலக அதிசயங்களுக்கு இலங்கையிலுள்ள இடங்கள் பிரேரணை _

உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கும்படி இலங்கையிலுள்ள மூன்று இடங்களின் பெயர்களை பிரேரிப்பதற்காக சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா உட்பட அதிகாரிகள் குழுவொன்று பிரஸல்ஸ் நகரில் நடைபெறுகின்ற உலக ஏழு அதிசயங்களை தெரிவு செய்யும் மாநாட்டுக்கு சென்றுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்திலுள்ள நக்கில்ஸ் மலைத் தொடர், ஹோர்ட்டன் மலைத்தொடர், சிவனொலி பாதமலை என்பனவே அம்மூன்று இடங்களுமாகும். உலகில் ஏழு அதிசயங்களாக இதுவரை இடம் பிடித்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற இடங்களை மறுபரிசீலமைப்பதற்கு உலக அதிசயங்களை தெரிவு செய்யும் குழு தீர்மானித்துள்ளது.

ஆடி 28, 2010

அரசியலமைப்புத் திருத்தம் ஐ.தே.கவுக்கு சோதனைக் களம்

ஐக்கிய தேசியக் கட்சி 1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தும் முதலாவது குடியரசு அரசியலமைப்பை நீக்கி விட்டுப் புதிய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இந்த அரசியலமைப்பு ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் இரகசியமாகத் தயாரித்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் புதிய அரசியலமைப்பு பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. பொதுமக்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அன்றைய அரசாங் கம் அரசியலமைப்பைத் தன்னிச்சையாகத் தயாரித்தது மாத்திரமன்றிப் பதினாறு திருத்தங்களையும் தன்னிச்சை யாகவே மேற்கொண்டது. (மேலும்....)

ஆடி 28, 2010

பொலித்தீன் குப்பைகளால் ஆபத்து

கடலோரத்தில் வசிக்கும் மக்களாலும், சுற்றுலா பயணிகளாலும் பயன்படுத்தப் படும் பொலிதீன் பைகள், பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், மரக்கட்டைகள், மீன்பிடி வலைகள், ரப்பர் மற்றும் உலோக பொருட்களால் மன்னார் வளைகுடா பகுதியில் பெரும் மாசு ஏற்படுகிறது. இப்பகுதி பலவகை உணவு மீன்கள், வண்ணமீன், மெல்லுடலிகள், கணுக்காலிகள், பவளப் பாறைகள், கடற் பசுக்கள், கடற் குதிரைகள், ஆமைகள் என பல உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. (மேலும்....)

ஆடி 28, 2010

அல்கைதாவால் கடத்தப்பட்ட பிரான்ஸ் பொறியியலாளர் சுட்டுக் கொலை

பிரான்ஸ் பொறியியலாளர் மைகல் ஜேர்மனியா வயது 78 அல்கைதாவால் கொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித் துள்ள ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோசி இதற்கான விலையை அல்கைதா கொடு க்க வேண்டியிருக்குமெனச் சூளுரைத்தார். மாலியில் பணியாற்றிய பிரான்ஸ் பொறி யியலாளர் மைகல் ஜேர்மனியா ஏப்ரல் மாதம் மாலியில் வைத்துக் கடத்தப்பட்டார். இவரை மீட்க மொரிட்டானியா பிரான்ஸ் இராணுவம் என்பன கடுமையாக முயன் றன. இம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் பொறி யியலாளரைக் கொலை செய்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். (மேலும்....)

ஆடி 28, 2010

கொலம்பியாவின் எல்லையை நோக்கி வெனிசூலா இராணுவம்

கொலம்பியாவின் எல்லையை நோக்கி வெனிசூலாவின் இராணுவம் படை எடுத்துள்ளது. அசம்பாவிதங்களை எதிர்கொள்ள எந்நேரமும் விழிப்புடனுள்ளோம் என்று வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் குறிப்பிட்டார். கொலம்பியாவின் பார்க் போராளிகளை வெனிசூலா வளர்ப்பதாக கொலம்பியாவின் ஜனாதிபதி அல்வரோ யுரைப் அண்மையில் குற்றஞ்சாட்டினார். (மேலும்....)

ஆடி 28, 2010

பாகிஸ்தானின் உளவுத்துறை, இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தலிபான்களுடன் நெருங்கிய உறவு

பாகிஸ்தான் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள், உளவுத்துறை முக்கியஸ்தர்கள் சிலர் தலிபான்களுடன் இரகசிய உறவு களைக் கொண்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 2004 முதல் 2009ம் ஆண்டு வரை தலிபான் களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட இரா ணுவ நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகனால் வெளி யிடப்பட்டது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தான் அரசாங்கம் தலிபான்களை ஒழிப்பதில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்று கின்றது. ஆனால் முக்கிய அதிகாரிகள் சிலர் தலிபான்களுடன் இரகசிய உறவு களைப் பேணுகின்றனர். (மேலும்....)

ஆடி 28, 2010

இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்தக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்தோம். அவர்களை, இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதில் அரசியல் நோக்கம் கிடையாது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த அழைப்பு அரசியல் நோக்கம் கொண்டது. (மேலும்....)

ஆடி 28, 2010

35,333 பேர் மாத்திரமே மீள்குடியேற எஞ்சியுள்ளனர்

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் 35,333 பேர் மாத்திரமே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கும் அமைச்சரவைக்குமான பேச்சாளர் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாளாந்தம் சுமார் 700 பேர் சொந்த வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இடம்பெயர்ந்த மக்களின் பதிவு செய்யப்பட்ட தொகை 267,393 எனக் குறிப்பிட்ட அமைச்சர், இவர்களுள் முழுமையாக 2,30,000 பேர் ஒரு வருடகாலத்தினுள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். (மேலும்....)

ஆடி 28, 2010

பயங்கரவாத ஒழிப்பு

வடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும் சூழல்

அறிவை தடைசெய்யவோ, மூழ்கடிக்கவோ முடியாது. இதனை நாமறிவோம். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சிறந்த முறையில் உணர்ந்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள் தான் என நான் நம்புகிறேன். அறிவுத்துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் உரிமை இருப்பது அவசியம் எனக் கருதுகின்றேன். இதற்கு இப்போது எமக்கு சுதந்திர சூழல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. (மேலும்....)

ஆடி 28, 2010

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குரூர நாடகம்

(கி.இலக்குவன்)

தென் கொரிய நீர்மூழ்கிக் கப்பலான சியோனான் மீது மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து குண்டு வீசப்பட்டுள்ளது. இத்தாக்குதலினால் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 40 தென்கொரிய கடற் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடகொரியா தான் இத்தாக்குதலை நடத்தி யுள்ளது என்ற பொய்யான செய்தி அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தால் பரப்பப்பட்டது. தென்கொரிய தீபகற்பத்தில் போர்மூளுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது, அத னைப் பயன்படுத்திக்கொண்டு ஒகினா வா கடற்படை தளத்திலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று கோரிவரும் ஜப்பானிய பிரதமர் ஹடயோமா மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதே அமெரிக் காவின் நோக்கம் என்பது தெளிவாகி யுள்ளது. அதாவது ஜப்பானுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் அடாவடித்தன மான முறையில் செயல்பட்டுவரும் வட கொரியாவிடமிருந்து ஜப்பானைக் காப் பாற்றுவதற்கு ஒகினாவாவில் அமெரிக்கக் கடற்படைத்தளம் நீடிப்பது அவசியம் என்ற கருத்தை ஜப்பானிய மக்கள் மத்தி யில் ஏற்படுத்துவதற்காகவே இந்த கோர நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஒகினாவா கடற்படைதளம் நீடிக்கலாம் என்ற முடிவை ஹடயோமா எடுத்ததன் மூலம் அமெரிக்காவின் சதித்திட்டம் வெற்றி பெற்று விட்டது. (மேலும்....)

ஆடி 28, 2010

மதுரை விஞ்ஞானியின் பெயர் செவ்வாய்க்கிரகத்திற்கு செல்லும்

அமெரிக்காவின் “நாசா” விண்கலம், மதுரை விஞ்ஞானி சிவசுப்பிரமணியனின் பெயரை செவ்வாய் கிரகத்திற்கு “மைக்ரோ சிப்”பில் எடுத்து செல்கிறது. 2012 இல் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, அதன் மண் வளம், நில மேற்பரப்பு, உயி ரினங்கள் பற்றிய ஆரா ய்ச்சியில் ஈடு பட உள்ளது. இந்த ஆய்வகத்திற்கு அமெரிக்க அழைப்பின் பெயரில் சென்ற சிவசுப்பிர மணியன், சில தொழில்நுட்ப யோசனை களைத் தெரிவித்தார். உலகில் உள்ள சிறந்த விஞ்ஞானிகள் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெயர்களை விண்கலத்தில் “மைக்ரோ சிப்”ல் பதிவு செய்து செவ் வாய் கிரகத்திற்கு அனுப்ப “நாசா” தீர் மானித்துள்ளது. (மேலும்....)

ஆடி 28, 2010

பாக். குறித்த இந்திய நிலைபாடு உறுதிப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் இருந்து தீவிரவாத சக்திகள் பரவி அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை தருகின்றன என்பது இந்தியாவின் நிலைபாடாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பா ளர் கிரவ்லி கூறினார். இந் தியாவை பாகிஸ்தான் சமரசம் செய்ய விரும்பினால் உரிய அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ள வேண் டும். மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை பாகிஸ்தான் நீதியின் முன்பாக நிறுத்த வேண்டும். அத்தகைய நடவடிக்கை உரிய மேம்பாட்டு மற்றும் முக்கிய செயலாக திகழும் என்றும் கிரவ்லி கூறினார்.

(மேலும்....)

ஆடி 27, 2010

எழுந்திடுவோம் தோழர்களே!

(தோழர் மோகன்)        

உங்கள் கசப்பான வாழ்வுக்கு காரணங்கள் எதுவாகினும் மக்களின் இனிப்பான வாழ்வுக்கான உங்கள் கடமைகளை நிறுத்தி விடமுடியாது. கட்சியின் கொள்கைகளை தங்களுக்குள் உறுதியாக கொண்டவர்கள் தனித்து போவதற்கு தடைபோடும் அதிகாரம் யாரிடமும் இல்லை. உங்களை தலைமை தாங்குவது நீங்கள் கொண்ட இலட்சியமே தவிர வேறெதுவும் இல்லை. ஆகவே தோழர்களே! இது எங்கள் காலம் பல தசாப்பங்களாக அவதிப்பட்ட மக்கள் அமைதியான வாழ்வுக்கு திரும்பி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மீண்டும் எங்களை நோக்கியே திரும்பிபார்க்கிறார்கள். காலம் எங்களிடம் மிகப்பெரிய கடமையை தந்திருக்கிறது அதை தட்டிக்கழிக்கமுடியாத உள்ளங்களை கொண்டவர்கள் நாங்கள்.  (மேலும்...)

ஆடி 27, 2010

ஈழத்தமிழருக்காக வாய்கிழிய பேசுகின்ற நடிகர்களைவிட நான் ஒருபடி மேல் - நடிகை அசின்

ஈழத்தமிழருக்காக வாய்கிழிய பேசுகின்ற நடிகர்களைவிட நான் ஒருபடி மேலே சென்று, ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களின் சில பிரச்சினைகளை தீர்த்தவள் நான். ஆகையினால் நான் யாருக்கும் அடிபணிந்து போகவேண்டிய அவசியம் எனக்கில்லை. இந்திய அரசியல் சட்டத்தினையும் நடிகர் சங்கத்தின் கட்டளைகளையும் நான் இதுவரை மீறி நடக்கவில்லை, நடக்கவும் மாட்டேன். இதையும்மீறி நடிகர் சங்கம் எனக்கு தடைவிதித்தால் விதித்திட்டுப் போகட்டும். அதற்காக நான் கவலைப்படப்போவதில்லை என நடிகை அசின் கூறியிருக்கிறார். (மேலும்....)

 

 

ஆடி 27, 2010

Eelam war IV

Tiger captives down to 7,900, rehab programme on track

Brig. Ranasinghe said that 7,948 ex-combatants, including about 1,100 females were still undergoing rehabilitation. According to him, of the 1,100 females, about 700 are now working in the garment trade. About 400 are being trained as Montessori teachers (120). Others are learning English (100), IT (60) and drama ‘therapy’ (60). Brig. Ranasinghe said that garment workers received Rs 12,000 plus per month along with food, medical facilities and accommodation. An effort was being made to explore the possibility of securing the help and expertise of the British Council to teach English. The Montessori course, he said, would commence in the first week of August, while the remaining three programmes were already in progress. He appreciated versatile actress of international repute Anoja Weerasinghe’s support for a drama ‘therapy’ programme. (more....)

ஆடி 27, 2010

தனது முன்னாள் சகா

கே.பிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது முட்டாள்தனமானது -பிரதியமைச்சர் முரளிதரன்

கே.பி. வடபகுதி அபிவிருத்திக்குப் பொறுப்பாக நியமிக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோது,“இவை அனைத்தும் தவறான விடயம். இதேபோன்று கே.பியை முதலமைச்சராக அரசாங்கம் நியமிக்கப்போவதாக சரத் பொன்சேகா கூறினார். அடுத்த நாளே அதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. கே.பியை அந்தளவுக்கு முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது தவறானதும் முட்டாள் தனமானதுமாகும். கே.பி. இலங்கை சட்டத்திட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர். அரசாங்கத்தை குற்றம் சுமத்துவதற்காக சிலர் இவ்வாறான கதைகளை கூறுகிறார்கள். (மேலும்...)

ஆடி 27, 2010

இலங்கைக்கு விசேட தூதுவரை அனுப்புகிறார் மன்மோகன்சிங்

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பிலான முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு எழுதிய கடிதமொன்றில் மன்மோகன் சிங் இதனை தெரிவித்துள்ளதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது. (மேலும்....)

ஆடி 27, 2010

பதினேழாவது திருத்தம் மக்களின் உடனடித் தேவையல்ல

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவும் சந்தித்து அரசிய லமைப்புத் திருத்தம் பற்றிப் பேசியதற்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றமை பற்றிய செய்தி மக்களிடம் நம் பிக்கையைத் தோற்றுவித்தது.  அத்தியாவசியமாகத் தேவைப் படும் அரசியலமைப்பு மாற்றங்களுக்கு எதிர்க்கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகளின் செயற்பாடு மக்க ளின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளது. (மேலும்...)

ஆடி 27, 2010

கோள் பட்டியலிலிருந்து புளுட்டோ வெளியே தள்ளப்பட்ட காரணம்

பள்ளிக் கூடத்தில் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் (Planets) இயங்குகின்றன என்று படித்திருக்கிறோம். புதன், வெள்ளி, பூமி தொடங்கி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று ஒன்பதையும் வரிசைப்படுத்தி சரியாக எழுதினால் புள்ளிகள் கிடைக்கும். இவை எல்லாம் சூரியனை மையமாகக் கொண்டு ஒரு நீள் வட்டப் பாதையில் (elliptical orbits) இயங்குகின்றன. இப்படிச் சூரியனைச் சுற்றும் கோள்களுக்கும் கோள்கள் உண்டு. அவை துணைக்கோள்கள், அல்லது உபக்கிரகங்கள் என்று அழைக்கப்படும். இவை கோள் களைச் சுற்றி இயங்குகின்றன. உதாரணமாக சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆகும். ஆனால் இன்றைய புரிதலின்படி சூரியனைச் சுற்றி எட்டு கோள்கள் தான் இருக்கின்றன. மூன்று குறுங்கோள்கள் - செரஸ், புளூட்டோ, ஈரிஸ். நாளை நம் தொலைநோக்கிகள் இன்னும் சக்தி வாய்ந்தவையாக மாறும் பொழுது இவையும் மாறலாம். (மேலும்...)

ஆடி 27, 2010

வெனிசூலா மீதான அச்சுறுத்தல் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகம் துண்டிக்கப்படும் - ஜனாதிபதி சாவெஸ்

வெனிசூலாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகத்தை துண்டிப்போம். இதனால் நாங்கள் கல்லைச்சாப்பிடக் கூடிய நிலையேற்பட்டாலும் அதை எதிர்கொள்ளத்தயாரென வெனிசூலா ஜனாதிபதி ஹுசோ சாவெஸ் தெரிவித்தார். கொலம்பியாவுடனான இராஜதந்திர உறவுகளை கடந்த வாரம் துண்டித்துக் கொண்ட பின்னர் சாவெஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதை அறிவித்துள்ளார்.(மேலும்...)

ஆடி 27, 2010

ஜெரூஸலத்தில் ஆயிரம் வீடுகள் உடைப்பு, காஸா சுரங்கப் பாதைகள் மீதும் குண்டு வீச்சு

ஹமாஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஸா எல்லைகளில் இஸ்ரேல் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டுத்தாக்குதல்களை நடத்தின. இக்குண்டுகள் சுரங்கப் பாதைகள் மீது போடப்பட்டன. எகிப்தின் எல்லைகளை அண்டியுள்ள காஸா சுரங்கப் பாதைகளே தாக்குதலுக்குள்ளாகின. இதற்கான காரணத்தை இஸ்ரேல் இராணுவம் அறிவிக்கவில்லை. சுரங்கப் பாதைகளூடாக ஹமாஸ் ஆயுதங்களைக் கடத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுவது வழக்கம். இதனால் அடிக்கடி சுரங்கப் பாதைகள் மீது இஸ்ரேல் இராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றது. (மேலும்...)

ஆடி 27, 2010

வடக்கு, கிழக்கில் கைத்தொழில் ஊக்குவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையாளர்களுக்கு உயர் தொழில் நுட்ப அறிவை வழங்கும் திட்டமொன்றை தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆரம்பித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் செயற்படும் விதாதா வள நிலையங் களினூடாக கைத்தொழிலாளர்களுக்கு தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுகிறது. யோகட் கைத்தொழில், பேக்கரி கைத்தொழில், மரக்கறி சார் உணவு உற்பத்தி என்பவற்றிற்காக உயர் தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுவதாக அமைச்சு கூறியது. இதன் காரணமாக குறித்த துறைகளில் கைத்தொழில்களை ஆரம்பிக்க கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.(மேலும்...)

ஆடி 27, 2010

உகந்தை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று

வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தை மலை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று செவ் வாய்க்கிழமை நடைபெறுகிறது. கடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம் தினமும் விஷேட பூஜைகள், அன்னதானத்துடன் நடைபெற்று வந்தது. தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தினர் இன்று வரை அன்னதானத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரைதீவு யாத்திரிகர் மட்டத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. இதேவேளை காரைதீவு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவமும் இன்று நடைபெறுகிறது. கடந்த 15 தினங்களாக திருவிழா நடைபெற்று வந்தது.

ஆடி 27, 2010

தொடர்கதையாகும் மீனவர்களின் துயரம்

(சி.ஆர்.செந்தில்வேல்)

“ஒரு நாள் போவார் மறுநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”

தற்போது இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கும் மேல்ஆகிவிட்ட நிலையில், இந்த ஓராண்டில் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் மீது பல்வேறு தாக்குதல் களைத் தொடுத்தனர். ஆனாலும், இந்த ஓராண்டில் எந்தமீனவரும் உயிர்ப்பலி ஆகவில்லை என்றபோது மீனவர்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கை தகர்ந்து போகும் விதத்தில் நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் மீனவக் குப்பத்தை சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அமைந்துள்ளது. இது தொடர் கதையாகுமோ என்ற அச்சமும் பீதியும், தமிழக மீனவர்களின் மத்தியில் மேலும் வலுப்பெற்றுள்ளது. (மேலும்...)

ஆடி 27, 2010

வசந்தபாலனுக்கு நேர்ந்த அவலம்

அங்காடித்தெரு திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போலவே, அப்படத்தை உருவாக்கிய இயக்குநர் வசந்தபாலனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்திருக்கிறது. பெரு நிறுவனங்களில் நடக்கும் அவலங்களை அப்படியே அச்சு அசலாக வசந்தபாலன் தனது படத்தில் கொண்டு வந்திருந்தார். ஊடகங்களில் பெரும் பாராட்டுகள் குவிந்தன. படம் குறித்த விவாதங்களும் பெரிய அளவில்தான் இருந்தன. ஆனால் படம் வெளியான சமயத்தில் தான் எங்கே இருக்கிறோம் என்பதைச் சொல்ல முடியாத அவல நிலையில் வசந்தபாலன் இருந்திருக்கிறார். அரவான் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சியில் திமுக எம்.பி.யான திருச்சி சிவா இதை அம்பலப்படுத்தியுள்ளார். அதில் பேசிய சிவா, அங்காடித்தெரு படம் திரைக்கு வருகிற நாளன்று வசந்தபாலன் என்ன செய்தார் தெரியுமா? தனது மனைவி, குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு தனது செல் போனையும் அணைத்துவிட்டு தலைமறை வாக இருந்தார். சமூக அவலத்தை வெளிச் சம் போட்டுக் காட்டுகிற ஒரு படைப்பாளி இப்படி தலைமறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தது வருத்தத்திற்குரிய விஷயம். அவரது படத்தைப் பாராட்டுகிற நமக்கு அந்த படைப்பாளியைக் காப்பாற்று கிற அக்கறையும் இருக்க வேண்டும் என்றார். சமூக அவலத்தைப் படமாக்கிய இயக்குநர் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார் என்று ஆளுங்கட்சி எம்.பி.யே பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆடி 27, 2010

பொருளாதாரத்தில் திவால்

அமெரிக்க அதிகரிக்கும்   நிதி பற்றாக்குறை!

அமெரிக்காவின் கூட்டு நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதம் ஆகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2009 ம் ஆண்டில் அமெரிக்காவின் கூட்டு நிதி பற்றாக்குறை ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி டாலர் ஆக இருந்தது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 56 ஆயிரம் டாலராக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தில் 10.6 சதவிகிதத்தை எட்டும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிர்வாக மற்றும் வரவு - செலவு திட்ட ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

ஆடி 26, 2010

கியூபா: சாதனை அல்ல... சரித்திரம்!

(எஸ். கண்ணன்)

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண் டுகள் முடிந்துவிட்டன. இன்றும் 30 சத வீதத்திற்கும் அதிகமான மக்கள் எழுதப் படிக்க அறியாதவர்களாக இருக்கிறார் கள். ஆனால் கியூபா 1959 ஜனவரி 1ம் தேதி ஹவானா நகருக்குள் புரட்சிப் படை நுழைந்ததன் மூலம் புரட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 61ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 100 சதவீதம் கியூப மக்களுக்கு எழுத்தறிவித்த வெற் றியை கியூபா அறிவித்த போது உலகமே வியந்து போனது. கியூபப் புரட்சியின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத அமெரிக்கா, பல கொடூரமான தாக்குதல் களை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கல்வியில் பெரும் சாதனையை கியூபா நிகழ்த்தியது சாதாரணமானதல்ல. (மேலும்...)

ஆடி 26, 2010

யாழ்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். தமது பிறந்தநாள் வைவத்தை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய வேளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் அவர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதால் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் ஆரியகுளத்தடியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் வருட மாணவனான சாந்தகுமார் சந்துரு (வயது 25) மற்றும் சுண்டுக்குளியைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனான கலிஸ்ரஸ் கஜேந்திரன் (வயது 25) ஆகியோராவர்.இம்மாணவர்கள் இருவரின் சடலங்களும் மரண விசாரணைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆடி 26, 2010

வடகிழக்கிற்கான அரசியல் தீர்வு என்பதை வடகிழக்கை தளமாக கொண்டு செயற்படும் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளுமே தீர்மானிக்கவேண்டும்.
-
மனோ கணேசன்

வடகிழக்கிற்கான அரசியல் தீர்வு என்பதை வடகிழக்கை தளமாக கொண்டு செயற்படும் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளுமே தீர்மானிக்கவேண்டும். இதில் நாம் தலையிட மாட்டோம். அதேபோல் தென்னிலங்கையில் மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல்மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிடமோ அல்லது வடகிழக்கு தமிழ் கட்சிகளிடமோ ஒப்படைத்துவிட்டு தென்னிலங்கை தமிழ் கட்சிகள் காத்திருக்க முடியாது. இன்று அரசியலமைப்பு திருத்தங்கள், தேர்தல் முறை மாற்றம், மலையகத்தின் பிரதேச செயலக எல்லைகளை தீர்மானிப்பது, மலையகத்தின் சகித்துகொள்ள முடியாத வறுமை மற்றும் கொழும்பிலும், மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு ஆகியவை உட்பட பெருந்தொகையான பிரச்சினைகளை தென்னிலங்கையில் வாழும் இந்தியவம்சாவளி தமிழ் மக்களும், வடகிழக்கிலிருந்து இடம் பெயர்ந்து தெற்கில் நிரந்தரமாக வாழும் தமிழர்களும் எதிர்நோக்குகின்றார்கள். (மேலும்....)

ஆடி 26, 2010

வவுனியா சுத்திகரிப்பு ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

பஸ் சேவை பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

வவுனியா நகர சபைத் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களுடைய பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வழமைபோல் நடைபெற்றன.  கடந்த மூன்று நாட்களாக சுத்திகரிப்பு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததினால்  நகரத்தினுள் குப்பை கூழங்கள் தேங்கிக் கிடந்தன. நகரசபை பணியாளர் ஒருவருக்கும் சுத்திகரிப்பு  தொழிலாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட  பிணக்கை தீர்ப்பதற்கு சபை நிர்வாகம் கவனம் செலுத்த தவறிவிட்டது என குற்றம் சுமத்தி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்து வந்தனர். (மேலும்....)

ஆடி 26, 2010

வடக்கில் கைவிடப்பட்ட நிலங்களில் நெற்செய்கை

வடக்கில் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான ஏர்பூட்டு விழா அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும் வயல் நிலங்கள் நீண்டகாலமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. புதர்களாக காட்சியளிக்கும் மேற்படி வயல் நிலங்களை சுத்திகரித்து பயிர்ச் செய்கைக்கு ஏற்ற விதத்தில் தயார்படுத்து வதற்கு பெரும் எண்ணிக்கையான ட்ரக்டர் வண்டிகள் தேவைப்படு கின்றன. தற்போது தேவையான ட்ரக்டர் வண்டிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக எருதுக ளின் உதவியுடன் ஏர் பூட்டும் பழைமை யான முறையினை பின்பற்றி அவற்றை விளைச்சலுக்கு உகந்த நிலங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளன.

ஆடி 26, 2010

தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்

இந்திய நடிகர்கள் இலங்கை செல்லலாம்

இந்திய நடிகர், நடிகைகள் தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ இலங்கைக்கு பயணிக்க முடியும். இந்நிலையில் “அவர்கள் அவ்வாறு செல்வதைத் தடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை சினிமாவில் ஏற்படும் இலாப நஷ்டங்களுக்கு நடிகர்களிடம் நட்டஈடு கோர முடியாது என்றும் இந்தக் கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (மேலும்....)

ஆடி 26, 2010

அமெரிக்காவின் பொலிஸ்காரத்தனம்

வடகொரியாவை எச்சரிக்க நான்கு நாள் போர் ஒத்திகை எட்டாயிரம் இராணுவம், 20 யுத்தக் கப்பல்கள், களத்தில்

அமெரிக்காவும் தென்கொரியா வும் இணைந்து நேற்று ஞாயி ற்றுக்கிழமை ஜப்பானின் கடல் பிராந்தியத்தில் போர்ப் பயிற்சியி லீடுபட்டன.  வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுள்ள நிலையிலும் இவ் விரு நாடுகளும் போர்ப் பயிற்சியிலீ டுபட்டன. எட்டாயிரம் இராணுவத் தினர் இருபது யுத்தக் கப்பல்கள் இன்னும் தேவையான இராணுவ விமானங்கள் என்பன இப்போர்ப் பயிற்சியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை ஈடுபட்டன. (மேலும்....)

ஆடி 26, 2010

Canada probes LTTE aid agencies

The ruling on the Tamil Refugee Aid Society came after an engineer from Toronto, Thiruthanikam Thanigasalam was jailed for 25 years recently in the United States for attempting to pay US $ 1 million to buy missiles, launchers and 500 AK-47 assault rifles in August 2006. He has been identified as the Charity’s Toronto office Representative. According to a statement issued by the Canadian revenue agency, “The Ottawa Society had provided $713,000 to the Tamil Tigers, whose long revolt against the Sri Lankan government was crushed last year”, the National Post reported. (more....)

ஆடி 26, 2010

லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி

‘மெக்ராஹி’ பிழையான வழிகாட்டலின்கீழ் விடுதலையானார்

லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியான லிபியாவைச் சேர்ந்த மெக்ராஹி விடுதலை செய்யப்பட்டமை தவறான விடயம் எனத் தெரிவித்த பிரிட்டன் வெளிநாட்மைச்சர் வில்லியம் ஹேக் பிரிட்டிஷ் பெற்றோலியக் கம்பனிக்கும் லிபியாவுக்கும் இவ்விடயத்தில் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் குறிப்பிட்டார்.மெக்ராஹி சென்ற வருடம் ஸ்கொட்லாந்து சிறையிலிருந்து கருணையடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட விடயம் அமெரிக்காவின் பாரிய சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது. (மேலும்....)

ஆடி 26, 2010

வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிப்பு

கடந்த வெள்ளி இரவு கடத்தப்பட்ட வவுனியா வர்த்தகர் நேற்றுமுன் தினம் சனிமாலை விடுவிக்கப்பட்டுள்ளாரென வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தகருடைய வீட்டில் வைத்து இனம் தெரியாத சிலரினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். கடத்தியவர் கள் இவரை விடுவிக்க ஒரு தொகை பணத்தினை கப்பமாகக் கோரியிருந்தனர். அதில் ஒரு பகுதி வழங்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டாரென விசாரணை யின் போது தெரியவந்தது

 ஆடி 26, 2010

More about Moringa Leaves

Moringa leaves could practically wipe out malnutrition on our planet. Experts agree that the long-term solution to malnutrition is the use of foods rich in the essential nutrients often lacking in people's diets. Modern scientific research is proving that Moringa leaves are one of the richest sources of such nutrients. Even small amounts of the leaves could protect thousands of people from suffering and death. People in several countries have found that Moringa leaves are quite acceptable to taste, especially when added to common foods.

ஆடி 26, 2010

கறுப்பு ஜூலை நினைவாக...

கறுப்பு ஜூலைக்குப் பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு இராணுவத்தீர்விலேயே அக்கறை காட்டின. சகல ஜனாதிபதிகளுமே உலக ஒப்பாசாரத்துக்கு அரசியல் தீர்வைப் பற்றிப் பேசினார்களேதவிர, இராணுவத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளுக்குத் தங்களாலியன்ற பங்களிப்பை வழங்கிவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேச சமூகத்தின் பங்களிப்போ இலங்கையில் அரசியல் தீர்வொன்று காணப்படுவதற்கு உதவுவதற்குப் பதிலாக இராணுவத் தீர்வை நோக்கிய செயன்முறைகள் முனைப்படைவதை உறுதிசெய்ததையே காணக்கூடியதாக இருந்தது. இறுதியில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்குக் கிடைக்கச் செய்தன. (மேலும்....)

ஆடி 26, 2010

Tamils rally at Queen's Park

(By CHRIS DOUCETTE, Toronto Sun)

Hundreds of Tamil-Canadians gathered at Queen’s Park Sunday afternoon to remember countrymen who were killed 27 years ago during Black July — a time when a wave of violence swept through Sri Lanka. There are some 300,000 Tamils Canada, most of whom live in the GTA. Many have lost friends and family in the fighting in their homeland. Once it was dark, the south lawn at Queen’s Park was filled with candlelight as the Tamil-Canadians continued their vigil. (more...)

ஆடி 26, 2010

Leads on LTTE's global ring

“Officials are moving ahead with more than just tight scrutiny on Sivarasa Pirundaban alias Achchudan alias Suresh, Bahitharan alias Bhavi, Narendran Rathnasabapathi alias Naren, Ganeshruban alias Ruban and Ponnaiah Anandarajah alias Aiyya alias Rajah and a few more LTTE activists who are connected to arms procurement, and shipping while posing as businessmen,” the Ministry said. The Ministry said the recent recovery in Visuamdu of documents and diary notes of Castro — once head of LTTE's international wing — had thrown light on the terror outfit's overseas operatives and clandestine funding agencies. (more...)

ஆடி 25, 2010

1983 நினைவுகளும் நாம் செய்ய வேண்டியவையும்

'83 இன வன்முறையை சொல்லி சொல்லியே வன்முறையையும், குரோதத்தையும் வளர்க்க கூடாது' -  தி. சிறீதரன்

இலங்கையின் சமகால வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயமான ஜூலை 83 படுகொலைகள் நிகழ்ந்து 27 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. வழமைபோல் கண்ணீர் விடுவதிலோ, சுயபச்சாத்தாபத்தில் மூழ்குவதிலேயோ காலத்தை கடத்தாமல் ஆக்கபூர்வமான முறையில் சிந்திக்க வேண்டு;ம். 1983 இன வன்முறையின் பின்னர் குறிப்பாக தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டின் அனைத்து இன சமூகங்களும் சிந்தியுள்ள ரத்தத்தையும் இழப்புக்களையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். (மேலும்....)

 

ஆடி 25, 2010

Crisis in transnational government of Tamil Eelam

(by Prof. Sisira Pinnawala)

The Transnational Government of Tamil Eelam has already run into trouble. The post Prabhakaran Tamil Diaspora which is divided into three rival factions as Rudrakumaran’s TGTE, Eezham People’s Assembly (EPA) or Makkal Peravai of Perinbanayagam Sivaparan (Nediyavan) and Father Emmauel’s Global Tamil Forum (GTF) are at loggerheads over the nature of the TGTE and a power struggle for control of the Constituent Assembly has been going on since the inception of the TGTE Project. Accusations of electoral fraud, intimidations of voters and similar other election malpractices were being hurled by the rival factions during the elections and there have been several resignations from the electoral contest in the UK and similar disputes have arisen in France. (more...)

ஆடி 25, 2010

நிபுணர் குழு விசா கோரவில்லை- இலங்கைக்கான உயர் அதிகாரி

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா அனுமதி கோரி எதுவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என அமெரிக்காவிலுள்ள இலங்கைக்கான உயர் அதிகாரி தெரிவித்தார். இந்த நிபுணர் குழு   இதுவரையில் எந்தவிதமான பூர்வாங்க கலந்துரையாடல்களையும் நியூயோர்க்கில் நடத்தவில்லை எனவும் அவர் கூறினார். 3 பேரைக் கொண்ட நிபுணர் குழுவினர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கான விஸா அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தனக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழுவை நியமித்திருப்பதாகவும் இது விசாரணைக் குழு அல்ல எனவும்  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார். இலங்கை செல்வதற்கான விஸா அனுமதி தமக்கு இலங்கை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் உண்மையைக் கண்டறிவதற்கு தடையேற்பட்டிருப்பதாகவும் நிபுணர் குழுவின் தலைவரான மர்சூகி தஸ்மன் பி.பி.சி செய்திச் சேவைக்கு அண்மையில் பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆடி 25, 2010

கனடாவில்

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி

கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார். கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வாரஇறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்த வேளையில், அதற்கான பயிற்சியில் கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார். CF-18  ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாதுரியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமாக எகிறி தப்பித்திருக்கிறார். சிறு காயங்களுக்கு மட்டுமே இலக்கான விமானி, அந்த விபத்துப்பற்றி விபரிக்கையில்… என் வாழ்நாளில் சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் நான் செத்துப் பிழைத்திருக்கிறேன். இயந்திரத்தில் 'பொப்... பொப்... பொப்...' என சந்தம் வந்தபோது துரிதமாக செயற்பட்டு எனது அவதானத்தினை செலுத்தினேன். அப்பொழுது ஓர் இயந்திரத்தின் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக பராசூட் இருக்கையை இயக்கி தப்பித்துக் கொண்டேன். சில செக்கன்களில் உயிர் தப்பியமை இன்னமும் வியப்பாக இருக்கிறது என அவ்விமானி குறிப்பிட்டுள்ளார்.

ஆடி 25, 2010

200 அகதிகளுடனான கப்பல் கனடா கரையை அண்மிக்கிறது: உறுதிப்படுத்துகிறது அமெரிக்கா

விடுதலைப்புலிகளின் கப்பல் என இலங்கை அரசாலும் மேற்குலக ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்ட இக்கப்பலில் அகதி அந்தஸ்துக்கோரும் 200க்கு மேற்பட்டோர் பயணிக்கிறார்கள் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இக் கப்பலின் நிலை பற்றிக் கருத்துத் தெரிவித்த மேற்படி அமெரிக்க அதிகாரி, தாய்லாந்துக் கொடி யுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இக் கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பி யாவின் கரையை நோக்கிச் சென்று கொண்டி ருப்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். மேற்படி அமெரிக்க பசுபிக் பிராந்தியக் கடற் கண்காணிப்புப் பிரிவு தனது எல்லைக் குட்பட்ட 12 கடல் மைல் தூரத்தையே கண்கா ணிப்பதால் இக் கப்பல் கரையை அண்மித் தவாறே பயணிக்கிறது என்றே நம்பப்படுகிறது. (மேலும்....)

ஆடி 25, 2010

தமிழ் மக்களும் பாதுகாப்பு வலயங்களும்

எந்தவொரு இலங்கை அரசாங்கமும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளப்போவதில்லை. குறிப்பாக, பிரிவினைவாதப் போர் பல தசாப்தங்களாகத் தளராமல் தொடருவதற்கு வசதியாக இருந்ததுடன் தமிழ்த் தேசியவாத ஆயுதப்படையணியின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் தொகுதி வாழ்ந்ததுமான பகுதிகளில் இருந்து படைகள் வெளியேறப் போவதில்லை. அமெரிக்காவிலே பிரிவினைவாத வாதக்குரல்களை எழுப்பிய தென்மாநிலங்களில் மத்திய அரசின் இராணுவம் சிவில் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னரும் 12 வருடங்கள் நிலைகொண்டிருந்தது. செச்னியாவில் ரஷ்யப்படைகள் பத்து வருடங்கள் நிலைகொண்டிருந்தன. ஹிட்லரைத் தோற்கடிக்கப்போன அமெரிக்கப்படைகள் ஜேர்மனியிலும் ஜப்பானிலும் பல தசாப்தங்களாக நிலைகொண்டிருந்தன. இலங்கைப் படைகள் வடக்கு,கிழக்கில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கவே செய்யும்.பிரிவினைவாதக் கிளர்ச்சி மீண்டும் தலைகாட்டுவதை முன்கூட்டியே தடுப்பதற்கும் பிரிவினைவாத ஆதரவுக் குழுக்களைக் கொண்ட தமிழ் நாட்டுக்கு நெருக்கமாக இருக்கும் மாகாணத்தைப் பாதுகாப்பதற்கும் போதுமான அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் நிரந்தரமான படைகளின் பிரசன்னம் இருக்கும்; இருக்கவேண்டும். (மேலும்....)

ஆடி 25, 2010

அமரர் சிறிமாவின் 50ஆவது நிறைவைக் கொண்டாட அரசு தவறிவிட்டது : சந்திரிகா

சிறிமா பண்டார நாயக்கா உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கைப் பிரஜைகளால் தெரிவு செய்யப்பட்டு ஐம்பது வருடங்கள் பூர்த்தியானதைக் கொண்டாட அரசாங்கம் தவறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது குறித்து ஊடகம் ஒன்றுக்குக் கருத்துக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், "பண்டாரநாயக்க குடும்பத்துக்கு எதிரான கொள்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது.  கடந்த 21 ஆம் திகதி, எனது தாயார் சிறிமா பண்டார நாயக்கா உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கைப் பிரஜைகளால் தெரிவு செய்யப்பட்டு ஐம்பது வருட நிறைவடைந்த தினம். ஆனால் அரசு இந்த 50 ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடத் தவறி விட்டது" என்றார்.

ஆடி 25, 2010

மாவோயிஸ்டுகளுக்கு அஞ்சப் போவதில்லை : மன்மோகன் சிங் _

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தீவிரவாதிகளுடன் சமசரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உள்நாட்டு பாதுகாப்புக்கு மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலாக உள்ளனர் என்பது சந்தேகமில்லை. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் கரம் கோர்த்துள்ளன. ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுவதற்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் சரிவர மக்களை சென்றடையாததே காரணம்.  (மேலும்....)

ஆடி 25, 2010

மாணவிகள் தற்கொலை

மலையகத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகள் : யார் காரணம்? _

மலையகத்தில் பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் யார் என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது. இவ்வாறான தற்கொலை சம்பவங்களுக்குப் பாடசாலைகள் தான் காரணம் என்று ஒரு சாரார் கூறிக்கொண்டு உண்மை நிலைமைகளை மறைக்கும் சூழலும் நிலவுகிறது. பாடசாலை மாணவிகள் அல்லது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது. (மேலும்....)

ஆடி 24, 2010

எனக்கு உணர்ச்சி இல்லையா?

இலங்கை தமிழ் எம்.பி. க்களிடம் எகிறிய தமிழக முதல்வர்!

'இனத் துரோகி' பட்டம் சூட்டும் எதிர்க்கட்சி அரசியலுக்கு இடையில், கோபாலபுரத்தில் வெளிப்பட்ட வார்த்தைகள் கடுமையாகவும் உறுதியாகவும் வந்து விழுந்திருக்கின்றன. ''நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்களோ... எனக்குத் தெரியாது. நான் இந்தியா வின் எதிர்க் கட்சித் தலைவர் இல்லை. இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்ட, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். நீங்கள் நினைப்பதை எல்லாம் நான் இங்கு பேச முடியாது. தமிழர்களுக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ... அதைத்தான் செய்ய முடியும். இந்த நாடு ஒரு தலைவரை இழந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் உணர்வில் நான் குறுக்கிட முடியாது!'' என்றபடி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த் தைகளைக் கோத்ததுபோல இருந்திருக்கின்றன, தமிழக முதல்வரின் வார்த்தைகள். (மேலும்....)

ஆடி 24, 2010

The consequences of a US war crime

Cancer rate in Fallujah worse than Hiroshima

(By Tom Eley)

The Iraqi city of Fallujah continues to suffer the ghastly consequences of a US military onslaught in late 2004. According to the authors of a new study, “Cancer, Infant Mortality and Birth Sex-Ratio in Fallujah, Iraq 2005–2009,” the people of Fallujah are experiencing higher rates of cancer, leukemia, infant mortality, and sexual mutations than those recorded among survivors in Hiroshima and Nagasaki in the years after those Japanese cities were incinerated by US atomic bomb strikes in 1945. The epidemiological study, published in the International Journal of Environmental Studies and Public Health (IJERPH), also finds the prevalence of these conditions in Fallujah to be many times greater than in nearby nations. (more....)

 

ஆடி 24, 2010

 

இயல்பாக வாழவிட்டாலே போதும்

பாம்பு வித்தியாசமான ஒரு உயிரியாக இருப்பதாலும், சரசரவென சருகுகள் இடையே ஊர்ந்து செல்வதாலும், திடீரென தோன்றுவதாலும் நிறைய பயம் ஏற்படுகிறது. இது எல்லாவற்றையும்விட பெரிய பயம் எல்லா பாம்புகளும் விஷமுள்ளவை என்று தவறாக நம்புவது. ஆனால் பொதுவாகக் காணப்படும் பாம்பு வகைகளில் நான்கைத்தவிர மற்ற அனைத்தும் விஷமற்றவையே. விஷமுள்ள பாம்புகள் நல்ல பாம்பு (கோப்ரா), கட்டுவிரியன் (கிரெய்ட்), கண்ணாடி விரியன் (ரஸ்ஸல்ஸ் வைபர்), சுருட்டைப் பாம்பு (சாஸ்கேல்ட் வைபர்), மற்ற அனைத்தும் விஷமற்றவை. விஷமற்ற விஷமில்லாத பாம்புகள் இடையே வேறுபாடு கண்டறியத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா பாம்புகளும் ஒன்று என்று குருட்டுத்தனமாக நம்பிக் கொல்லக்கூடாது. (மேலும்....)

ஆடி 24, 2010

இன உறவுப் பாலமாகும் ஆடிவேல் உற்சவம்!

ஆடிவேல் விழாவில்  தமிழர்களைவிட பெளத்தர்கள் பக் திப் பரவசத்துடன் அதில் பங்கேற்பது குறிப்பிடத்தக்க அம் சமாகும். முருகக் கடவுளை ‘கதரகம தெவியோ’ என்று பெளத்தர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபடுகிறார்கள். இத னால், ஆடிவேல் விழாவில் இந்துகளான தமிழர்களும் பெளத்த சிங்களவர்களும் ஒன்றித்துப் போகிறார்கள். ஆனால், 1983 ஆடிவேல் விழாவுக்குப் பின்னர் இந்தப் பிணைப்பில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அந்தச் சூழ்நிலையில் நல்ல தொரு மாற்றம் பிறந்திருக்கிறது. ஆடிக் கலவரத்திற்குப் பின்னர் ஓரிரு தடவை ஆடிவேல் உற்சவம் நிகழ்த்தப்பட் டாலும் அது இனங்களின் முழுமையான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கவில்லை. (மேலும்....)

ஆடி 24, 2010

சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சி வெற்றி பெறுமா?

‘இந்தியாவுடன் செய்துகொண்டது போல பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம்’

இந்தியாவுடன் அமெரிக்கா மின்சார தேவைக்காக அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதும், அதுபோன்ற ஒப்பந்தத்தை எங்களோடும் செய்துகொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் தலைவர்கள் கோரினார்கள். ஆனால் அணுஆயுத தொழில் நுட்பத்தை அந்த நாட்டு விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்கு விற்றதை தொடர்ந்து அது போன்ற ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் செய்துகொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறிவிட்டது.  இதைத்தொடர்ந்து சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் செய்துகொண்டது. பாகிஸ்தானில் 2 அணு உலைக்கூடங்களை அமைக்கவும் சீனா உதவி செய்வதாக அறிவித்தது. சீனாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. (மேலும்....)

ஆடி 24, 2010

சூரியனைவிட பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு அப்பால் சூரியனைவிட பெரிய நட்சத்திரம் ஒன்று இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனைவிட பல மடங்கு பெரியதாகும். அதன் எடை 320 சோலார் மாஸ் ஆகும். இது சூரியனைவிட ஒரு கோடி மடங்கு பிரகாசமானது. நமது பால் வளி வீதியில் இருந்து ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. இது 136 ஏ. எல். என்று அழைக்கப்படுகிறது. இதன் வெப்பம் சூரியனைவிட 7 மடங்கு அதிகம் உள்ளது. இதன் வெப்ப அளவு 40 ஆயிரம் டிகிரி செல்சியசுக்கும் அதிகம் ஆகும். இது போன்ற பெரிய நட்சத்திரங்கள் அதிக காலம் இருப்பது கிடையாது என்றும் இது 30 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்றும் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்ட் பால் குரோதெர் தெரிவித்தார்.

ஆடி 24, 2010

இப்படியும் சொல்கின்றார்கள்

இப்போது எங்கே பாலகுமார்? இறுதி நேரத்தில் பிரபாகரன் அருகில்...

(இரா.சரவணன்)

ஆரம்பத்தில் 'ஈராஸ்' அமைப்புக்குத் தலைவராக இருந்தவர் வே.பாலகுமார். 'இந்திய அமைதிப் படை' ஈழத்தில் வெறியாட்டம் போட்ட இக்கட்டான நேரத்தில் புலிகள் அமைப்பில் இணைந்து, தனது ஆதரவுத் தரப்பினரையும் புலிகளின் பின்னால் அணிவகுக்கச் செய்தவர். உலகளாவிய அரசியல் முன்னெடுப்புகளைப்பற்றி நல்ல ஆலோசகராக பிரபாகரனுக்கு உரைத்தவர். கடந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதி, ஈழப் போர் முடிவுக்கு வந்தபோது புலிகளின் முக்கியத் தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்று வரை நீடிக்கும் புதிராக இருக்கிறது. அதேபோல், புலிகளின் சிறப்பு உறுப்பினர் வே.பாலகுமார், போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி, பண்பாட்டுக் குழுத் தலைவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை போன்றவர்கள் என்ன ஆனார்கள் என்பதையும் சிங்கள அரசுத் தரப்பு அறிவிக்கவில்லை. (மேலும்...)

ஆடி 24, 2010

லெபனானிலிருந்து

3000 இலங்கையரை அழைத்து வருவதற்கு விசேட ஏற்பாடுகள்

பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற முடியாதுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்புக் காலமொன்றை லெபனான் அரசு அறிவித்துள்ளது. விசாக்காலம் முடிவடைந்த நிலையிலும் கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையிலும் நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்களை திரும்பி அழைத்துக்கொள்ள அவர்களது உறவினர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக இலங்கை திரும்ப முடியாமல் சுமார் 3000 பேரளவில் லெபனானில் தங்கியுள்ளனர். (மேலும்....)

ஆடி 24, 2010

உலகின் மிக விலை குறைவான லேப்-டாப்  இந்தியா தயாரிப்பு

மாணவர்களுக்காக வடிவ மைக்கப் பட்ட குறைந்தவிலை மடிக் கணி னியை மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் தொடங்கி வைத்தார். உலக அள விலான மொத்த உற்பத்திக்கு பெரு நிறுவனங் களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மடிக் கணினியின் மதர்போர்டு, சிப், டிஸ்ப்ளே, தொடர்புகள், நினைவாற்றல், செயல்முறை அனைத்தும் சேர்த்து மொத்தமாக ரூ.1,500-க்குள் உட்படும் என்று கபில் சிபல் தெரிவித்தார். தொடுதிரை வடிவமைப்பு, இணைய தள தேடுகருவிகள், பிடிஎப் ரீடர், மற்றும் வீடியோ கான்பரன்சிங் வசதிகளுடன் கூடியதாகும். எனினும், இதன் ஹார்டுவேர் உபயோகிப்பவருக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. லினக்ஸ் அடிப் படையிலான இக்கணினி உயர்கல்வி நிறுவனங்களுக்கு 2011 முதல் அளிக்கப் படும் என்று கபில்சிபல் தெரிவித்தார். இந்தியாவின் ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப நிறுவனங்களால் இக் கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடி 24, 2010

பின்லேடன் இருப்பிடத்தை பாகிஸ்தான் தெரிவிக்க வேண்டும்

அல்கைதா பயங்கரவாதிகள் தலைவர் ஒசாமா பின்லேடன் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்குமாறு பாகிஸ் தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பான பி. ஜே. குரோவ்லி வியாழக்கிழமை கூறியது : பின்லேடன் இப்போது எங்கு உள்ளார் என்பது குறித்து பாகிஸ்தான் அரசுக்கு தெரியும் என்று நம்புகிறோம். பின்லேடன் தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் அரசு தெரிவித்தால் அவரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். (மேலும்....)

ஆடி 24, 2010

ஈராக் படையெடுப்பு சட்ட விரோதம்  காமன்ஸ் சபையில் பிரிட்டன் துணைப்பிரதமர்

பிரிட்டிஷ் நாடாளுமன் றத்தின் மக்கள் அவையான காமன்ஸ் சபையில் வெளி யிட்ட அறிக்கையில் ஈராக் படையெடுப்பு சட்ட விரோதமானது என்று பிரிட்டன் துணைப் பிரதமர் நிக் கிளக் கூறினார். இராக் கொள்கையில், கூட் டணிக் கட்சிகள் இடையே குழப்பம் உள்ளதை இந்த அறிக்கை வெளிக்காட்டி யுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் அமெ ரிக்கா சென்றுள்ளார். பிர தமரிடம் விடுக்கப்பட்ட கேள்விகளுக்கு துணைப் பிரதமர் நிக் கிளக் பதில் அளித்தார். அப்போது ஈராக் படையெடுப்பு சட்ட விரோதமானது என்று கிளக் குறிப்பிட்டார்.  தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஈராக் படையெடுப்பில் அமெ ரிக்காவுடன் இணைவது என்று பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கான வாக் கெடுப்பு காமன்ஸ் சபையில் நடந்தபோது தற்போதைய ஆளும் கூட்டணியில் உள்ள கன்சர்வேடிவ் கட்சி யும் அதற்கு ஆதரவாக வாக்களித்தது. நிக் கிளக்கின் லிப ரல் டெமாகிரட்ஸ் கட்சி படை யெடுப்பை எதிர்த்தது. (மேலும்....)

ஆடி 24, 2010

டயானா கொலை விசாரணை, வழக்கறிஞர் தகவலால் பரபரப்பு

இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கார் விபத்து மூலம் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவ்வழக்கை விசாரித்த புலனாய்வுத்துறை வழக் கறிஞர் மைக்கல் தெரிவித்துள் ளார். இந்த கொலை சம்பவத்தில் கார் சாரதி பாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித் துள்ளார். விபத்து நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் பாலின் வங்கிக் கணக்கில் பல கோடி மதிப்பிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சாரதியின் வங்கிக் கணக்கில் திடீரென அதிகளவிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறித்து வழக்கு விசாரணையில் ஒரு வரிகூட இடம்பெறாதது டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்வதாகவும் மைக்கல் தெரிவித்துள்ளார். டயானா கொலை சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த அவர் வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளார். மைக்கேலின் இந்த தகவலால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற் பட்டுள்ளது.

ஆடி 23, 2010

காட்டிக் கொடுக்கும் ஆவணங்கள்

விசுவமடுவில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதையடுத்து புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்களுக்கு வலைவீச்சு

சிவராசா பிருந்தாபன் அல்லது அச்சுதன் அல்லது சுரேஷ், பகிரதன் அல்லது பவி, நரேந்திரன் ரத்தினசபாபதி அல்லது நரேன், கணேஷ்ரூபன் அல்லது ரூபன், பொன்னையா ஆனந்தராஜா அல்லது ஐயா, அல்லது ராஜா மற்றும்  தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னும் சில செயற்பாட்டாளர்கள் குறித்து அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்துவருவதற்கு அப்பால் அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்வதா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. (மேலும்...)

ஆடி 23, 2010

மனவடுக்களை போக்கும் மனமாற்றம்

‘அனைத்தையும் மாற்றும் வல்லமை படைத்தது காலம்’ என்ற கூற்றில் உண்மையுண்டு.

கிழக்கிலும் வடக்கிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் துளிர் விடத் தொடங்கியுள்ள ஐக்கியமும் தென்பகுதியில் தமிழ், சிங்கள மக்களிடையே மீண்டும் உருவாகியுள்ள நட்புறவும் மனவடுக்கள் குணமடைந்து வருவதற்கான அடையாளங்களாகும். இரு இனங்கள் ஒன்று சேர்ந்து நடத்துகின்ற விழாக்களின் போது நாம் இன ஐக்கியத்தைக் காண்கிறோம். காரைதீவில் சில தினங்களுக்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து கோலாகலமாக நடத்திய தமிழ் செம் மொழி விழாவில் விபுலானந்த அடிகளாரின் சிறப்பையும் தமிழ்மொழியின் மேன்மையையும்விட தமிழ், முஸ் லிம் இன ஐக்கியமே மேலோங்கியிருந்ததெனலாம். இது போன்று கதிர்காமம் உற்சவத்துக்காக இம்முறை யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பக்தர்களை தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்கள் உபசரித்துப் போஷித்த விதமும் இன ஐக்கியம் மேம்பட்டு வருவதற்கான அடையாளமாகவே தெரிகிறது. நயினாதீவு நாக பூஷணியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்துக்காக தென்னிலங்கை யிலிருந்து இம்முறை பெருமளவில் சென்ற சிங்கள மக்களும் அங் குள்ள தமிழ் மக்களால் இவ்வாறே உபசரிக்கப்பட்டனர். (மேலும்...)

ஆடி 23, 2010

கொழும்பில் பொலிஸ் பதியும் நடைமுறை தமிழர்களுக்கு மட்டுமானதல்ல

கொழும்பில் குடியிருப்பாளர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை தமிழ் மக்களுக்கு மட்டுமேயான பாரபட்ச செயற்பாடு என காட்டுவதற்கு சில சுயநல அக்கறை கொண்ட தரப்பினர் முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது. இது உண்மைக்கு மாறுபட்ட எந்த அடிப்படையும் அற்ற கூற்றாகும். அத்துடன் பாதுகாப்பு படையினர் இன விரோத நோக்குடன் அநீதியாகவும், கொழும்பில் வாழும் தமிழ் சமூகத்துக்கு பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக உலகத்துக்கு காட்ட முயற்சிக்கும் வகையிலானதாகும். இதற்கு மாறுபட்ட வகையில் பொலிஸ் கட்டளைக்கோவையின் கீழ் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் அவ்வாறான ஆட் பதிவினை அதிக பட்ச சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பொறுப்புடைமை மற்றும் அனைத்து மக்களினதும் இன பாகுபாடு பாராமலும் இவ்வாறான பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளுகின்றனர். (மேலும்...)

ஆடி 23, 2010

இந்திய அரசுடன் பேசத் தயார் அஸாம் விடுதலை அமைப்பு அறிக்கை

இந்தியாவின் அஸாம் மாநில விடுதலை அமைப்பின் தலைவர் புரோ கோஹைன் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என அறிவி த்துள்ளார். 75 வயதான புரோகோஹைன் அஸாம் விடுதலை அமைப்பின் தலைவராவார். 1979ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அஸாம் மாநில விடுதலைக்காகப் போராடுகின்றது. தற்போது இந்த அமைப்பின் தலைவர் சிறையிலுள்ளார். இந்திய புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் தலைவர் சிறையில் சென்று புரோகோஹைனைச் சிறையில் சந்தித்த போதே பேச்சுவார்த்தைக்கான விருப் பத்தை வெளியிட்டார். சமாதான பேச்சு வார்த்தைக்கான அஸாம் மாநில மக்களின் விருப்பங்களை சகலரும் மதிக்க வேண்டுமென்றும் அஸாம் விடுதலை அமைப்பின் தலைவர் கூறினார். (மேலும்...)

ஆடி 23, 2010

மண்ணின் மைந்தனால் இலங்கைக்கு பெருமை - ஜனாதிபதி

133 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுக்களை கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள முரளிதரன் 18 வருட காலம் கிரிக்கெட் விளையாடிய பின் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அத்துடன் இதுவரை 337 ஒரு நாள் போட்டிகளில் 515 விக்கெட்டுக் களையும் கைப்பற்றியுள்ளார். முரளி என்று நாம் அனைவரும் அழைக்கும் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகில் ஒரு அலங்கார ஆபரணத்தைப் போல் இருந்து வந்துள்ளார். (மேலும்...)

ஆடி 23, 2010

ஓட்டை ஒடிசலுக்குப் பேரீச்சம்பழம்!

(ஜீவிதன்)

நல்ல ஆசிரியர்கள் இருந்தும் சிறந்த வழிகாட்டல்கள் இல்லா ததால் இந்தப் பாடசாலை சீரழி ந்து வருவதாக அவர் வருந்துகி றார். இதுவரை தேசிய பாடசா லையாகத் தரமுயர்ந்திருக்க வேண்டிய இந்தக் கலவன் பாட சாலை, அரிச்சந்திரன் பணியாற் றிய இடத்தில் இருப்பதாலோ என்னவோ உயிர் பெறாமலே இருக்கிறது. இந்த நிலையில் இங்கும் சூரிய குஞ்சு ஆசிரியர் ஒருவரின் விளையாட்டு பற்றியே இப்போது அதிகம் பேசுகிறார்கள். இவர் சில நாட்களுக்கு முன்பு “கட்டிப் பிடி ... கட்டிப்.... பிடிம்மா...” என்று பாடி ஆடியது காட்டுத் தீ போல் பரவிக்கிடக்கிறது. அதற்கு முன்பு ‘கட்டிப் பிடி கட்டிப்பிடிடா’ என்று ஆடிய ஓர் ஆசிரியர் ‘இன்ரர்டிக்ற்’ செய்யப்பட்டிருப்பதாகத் தகவல். (மேலும்...)

ஆடி 23, 2010

பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட குழு

அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை, சவால்களை எதிர்கொள்வோம்

ஐ.நா. செயலாளரின் குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெளிவாக வெளியிட்டுள்ளோம். இந்தக் குழு சட்டபூர்வமற்றது என ஐ.நா. வில் உள்ள பல நாடுகள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு சபையினதோ மனித உரிமை ஆணையத்தினதோ அனுமதி இன்றி இத்தகைய குழுவொன்றை அமைக்க அவருக்கு உரிமை கிடையாது என அந்த நாடுகள் அறிவித்துள்ளன. கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. வில் பிரேரணை முன்வைக்கப்பட்டபோது ஏனைய நாடுகளின் உதவியுடன் அதனைத் தோற்கடித்தோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சவாலுக்கும் முகம்கொடுப்போம். எல்லை தாண்டாது எமது எதிர்ப்பை காட்டியுள்ளோம்.(மேலும்...)

ஆடி 23, 2010

தொடரும் இயற்கை அனர்தங்கள்

ஈரானில் பூகம்பம், 15 பேர் காயம், சீனாவில் மழை வெள்ளம்; 41 பேர் பலி

ஈரானில் தெற்கு பகுதியில் உள்ள ஹார்முஸ்கான் மற்றும் பார்ஸ் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து 4 முறை பூகம்பம் தாக்கியது. பிறகு 11 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. பூகம்பங்களின் வீரியம் ரிக்டர் அளவில் 5.8 ஆகவும் அடுத்து 5.2 ஆகவும், பிறகு 4.1 ஆகவும், 3.9 ஆகவும் இருந்தது. இந்த பூகம்பங்களில் 4 கிராம ங்களைச் சேர்ந்த 15 பேர் காயம் அடைந்தனர். இதில் பண்டார் அப்பாஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தப் பூகம்பங்களின் காரணமாக சில வீடுகள் இடிந்த விழுந்தன. ஈரானில் அடிக்கடி பூகம்பம் ஏற் படுவது வழக்கம். கடந்த 2003ம் ஆண்டு பாம் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 30 ஆயிரம் பேர் பலியானார்கள். இதேவேளை சீனாவில் ஷான்ஷி மாநிலத் தின் தெற்கு பகுதியில் உள்ள 22 மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரண மாக 41 பேர் பலியானார்கள். 107 பேரை காணவில்லை. 27 ஆயிரம் வீடுகள் இடிந்து விழுந்தன. 16 இலட்சம் மக்கள் பாதி க்கப்பட்டு உள்ளனர். அன் காங்க் என்ற இடத்தில் மட்டும் ஒரே நாளில் 2 பெரிய நிலச் சரிவுகள் ஏற்பட்டன. அதில் 14 பேர் பலியா னார்கள். 35 பேரை காணவில்லை.

ஆடி 23, 2010

ரொபேட் ஓ பிளக்கிற்கு கெஹலிய பதில்

“17 வது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரம்”

17 ஆவது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரமாகும். அது குறித்து ரொபேட் ஓ பிளக் பேசத் தேவையில்லை. 17 வது திருத்தம் பற்றி எமது பாராளுமன்றம் கவனிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கு விஜயம் செய்த பிளக் ஜனநாயகம் குறித்தும் 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்தும் கருத்து வெளியிட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதலளித்த அவர், இலங் கையில் ஜனநாயகம் நிலைநாட் டப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை பாதுகாக் கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத் துள்ளது. 17 ஆவது திருத் தத்தில் குறைபாடுகள் காணப்படு கின்றன. அவற்றைத் தீர்க்க வேண்டு மென்றார்.

ஆடி 23, 2010

நோய் வருமுன் காக்கும் பாரம்பரிய மருத்துவம்

(முத்தமிழ்)

இக்காலத்தைப் போல் இவ்வளவு அறுவை மருத்துவங்கள் அக்காலத்தில் இல்லை. இத்தகைய நோய்களும் அக்காலத்தில் இல்லை. இவ்வளவு பெரிய மருத்துவமனைகளும் அக்காலத்தில் இல்லை. எத்தனை மருத்துவமனைகள் கட்டினாலும் இப்போது நோயாளிகளுக்கு இடம் போதவில்லை என்கிறார்கள். இதற்கு நாள்தோறும் மக்களுக்கு நோய் அதிகப்படுவதே காரணமாகும். இதற்குக் காரணம், தற்போதைய மருந்துகளாலேயே வியாதிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆகவே பாரம்பரிய மருத்துவமே பயன்மிக்கது. ஏனென்றால் வருமுன் காக்கும் திறன் உள்ளது அந்த மருத்துவமே. (மேலும்...)

ஆடி 23, 2010

Transnational Government of Tamil Eelam (part 2)

(Prof Sisira PINNAWALA)

Selvarasa Pathmanathan, better known as KP proclaimed himself LTTE leader after Tiger supremo Prabakaran’s demise. KP chose Visuvanathan Rudrakumaran, a US based lawyer who was one time legal adviser to the LTTE negotiating team with the Government and later its unofficial ideologue after Anton Balasingham’s death, to explore the ways and means of forming a Transnational Government of Tamil Eelam. After the extraordinary rendition of Pathmanathan by the Government the unofficial mantel of leadership of the LTTE and the responsibility of forming the TGTE fell into the hands of Rudrakumaran. He authored the initial concept paper for the Provisional Transnational Government of Tamil Eelam (PGTGE) which was further developed by a 14 member Advisory Committee consisting of representatives of the Diaspora and some prominent LTTE sympathizers of the International non-governmental sector that included Karen Parker, Professors Francis Boyle and Peter Schalk. The Advisory Committee report entitled Formation of a Provisional Transnational Government of Tamil Eelam (PGTGE) and detailing its objectives, form and functions was launched on March 15, 2010. (more....)

ஆடி 22, 2010

காட்டிக் கொடுக்கும் புலி காஸ்ரோவின் கணணிகள்

புலிகளுடன் தொடர்பிலிருந்த புலம்பெயர் தமிழர்களின்  இரகசியங்கள் இலங்கையின் கையில்?

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனும் தான் கைதியாக இருக்கும் சூழ்நிலையில் இருந்து கொண்டு தன்னால் இயலக்கூடியதைத் தான் அங்குள்ள சிறைப்பட்டவர்களிற்கு செய்வதாகவும், தான் அரசியல் பேசவோ, அதிகாரம் பற்றிப் பேசவோ வரவில்லை என்று தெரிவித்ததோடு தான் காட்டிக் கொடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு இவ்வாறு நேரடியாகப் பதிலிறுத்துள்ளார். “காட்டிப் கொடுப்போர், துரோகி என்ற சொற்பதங்களை தாராளமாக என் மீது குற்றஞ்சாட்டுவோர் கூறட்டும். ஆனால் உண்மை யாதெனில் எனக்கே தெரியாத பல விடயங்களை அவர்கள் கஸ்ரோவின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் மூலமே எனக்குத் தெரிய வருகிறது. அந்த அவ்வளவுக்கு முழுமையாக போராட்டத்தைப் பற்றிய இரகசியங்களை அழிக்காமல் இலங்கைப் படைகளிடம் ஒப்படைத்து சென்றிருக்கிறர்கள் அந்த அலுவலத்தில் இருந்தவர்கள்” என கே.பி. தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஆடி 22, 2010

800 விக்கெட்டுக்களை வீழ்த்தி முரளி சாதனை!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரும் சாதனை படைத்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சாதனையை இந்திய வீரர் பி.பி.ஓஜாவின் விக்கெட்டை வீழ்த்தி இவர் படைத்துள்ளார். இது அவரது 133 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்டுக்களை இவர் கைப்பற்றியுள்ளார். அவரது சாதனை ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அவர் இன்றைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுப்பது அனைவரது மனதில் கவலையையும் தோற்றுவித்திருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆடி 22, 2010

Businessman arrested for building apartments with LTTE funds

(by Hemantha Randunu)

The Criminal Investigation Department yesterday arrested a leading businessman who had constructed an up-market condominium complex in Wellawatte allegedly with the money received from the LTTE.The alleged deal came to light following a CID probe into 11 condominium complexes in Colombo. The suspect Sivakumar, alias Siva, is a Canadian citizen. He had lived in Wellawatte for a long time after his return to Sri Lanka and engaged in the construction of luxury apartments, sources said. The suspect’s apartment complex consists of 78 units and 40 of them have already been sold at Rs. 15 million each, according to the police. The condominium project was launched in 2005 while the CFA between the LTTE and the government was in force. Investigations have revealed that the suspect had deposited large amounts of money with several banks.

(The Island)

ஆடி 22, 2010

தமிழைச் சரியாக எழுத சபதம் ஏற்போம்

ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகவியலாளர்கள் வகிக்கும் பாத்திரம் முக்கியமானது. அதே போல, மொழியின் வீழ்ச்சியிலும் அவர்களின் பாத்திரம் முக்கியமானது. பத்திரிகைகளை வாசிப்பதன் மூலமும் தொலைக்காட்சி மற்றும் வானொலிச் செய்தியறிக்கைகள் மூலமும் ஒருவர் தனது மொழி அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். அதே நேரம், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தியறிக்கைகளிலும் இலக்கணப் பிழைகள் இடம்பெறுவது ஒருவரின் மொழி அறிவு வீழ்ச்சி அடைவதற்குக் காரணமாகிவிடலாம். மொழி வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்க வேண்டிய ஊடகங்களிலேயே இலக்கணப் பிழைகள் இடம்பெறுவது மிகவும் கவலைக்குரிய விடயம். ஊடகங்களில் தமிழைப் பிழையாக எழுதுவதும் கையாள்வதும் தமிழ் மொழிக்குச் செய்கின்ற துரோகம் என்பதை நாம் புரிந்துகொண்டு இலக்கணப் பிழை இல்லாமல் தமிழை எழுத வேண்டும். (மேலும்....)

ஆடி 22, 2010

புலம்பெயர் தமிழர் மனமாற்றம்

இலங்கையில் அபிவிருத்தி, மீள்கட்டுமானத்தில் பங்கேற்க விருப்பம் - ரொபட் ஓ பிளேக்

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்ததாகக் கூறும் அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஒபிளேக், இலங்கையின் அபிவிருத்தியில் அவர்களைப் பங்கெடுக்குமாறும் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார அபிவிருத்தி, மீள் கட்டமைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் விரும்புகின்றனர் என்று அவர் மேலும் கூறினார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த வருடம் புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் நண்பனாக இருந்து வந்துள்ளது. அந்த நட்புறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. (மேலும்....)

ஆடி 22, 2010

புனர்வாழ்வு முகாமில் 7980 பேர் மட்டுமே:

க. பொ. த. (சா/த) பரீட்சை முடிந்ததும் 364 பேர் பெற்றோரிடம் ஒப்படைப்பு - அமைச்சர் டியூ

புலிகளின் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட 1300 பேர் உட்பட ஏனையோர் இயக் கத்துடன் எவ்வாறு தொடர்புபட்டிருந்தனரோ அதே அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ் வளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுள் 98 சத வீதமானோர் பெற்றோருடன் தொடர்பு கொண்டுள்ளனர். பெற்றோருக்கும் இவர்களை சென்று நேரில் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. க. பொ. த. சாதாரண தரப் பரீட் சைக்கு இம்முறை 364 பேர் தோற்றுகின்றனர். பரீட்சை முடிந்த பின்னரே அவர்களை தம்மிடம் ஒப்படை க்குமாறு பெற்றோர் தெரிவித்துள்ளனர். (மேலும்....)

ஆடி 22, 2010

ராகுல் சாங்கிருத்யாயன்

வால்கா இலிருந்து கங்கை வரை எழுதிய ராகுல்ஜி

பல ஆண்டுகள் சிறையில் இருந்ததால் பல நூல்களை எழுதினார். அதில் முக்கியமான நூல் நமக்கெல்லாம் அதிகமாகத் தெரிந்த ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல். இந்த நூல் 14 மொழிகளில் வெளிவந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்நூல் மனித சமூக வரலாற்றை விஞ்ஞான வழியில் தொகுத்துக் கூறுகிறது. லெனின் கிராடு பல்கலைக் கழகம் இவர் புலமையைத் தெரிந்துகொண்டு 1945ம் ஆண்டில் சமஸ்கிருத பேராசிரியராக நியமித்தது. அங்கு இரண்டரை ஆண்டுகாலம் அந்தப் பதவியில் இருந்தார். ராகுல் ஜிக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தும் தாய்மொழியான இந்தியிலேயே பெரும்பாலான நூல்களை எழுதினார்.(மேலும்....)

ஆடி 22, 2010

‘3R’ முறைமை சொல்வது என்ன?

(சாரதா மனோகரன்)

அடிப்படையில் மூன்றாம் உலக நாடுகள், சிறந்த கலாசாரப் பின்னணியையும் இயற்கையுடன் இணைந்து செல்கின்ற வாழ்வியலையும் கொண்டவை. ஆனால் அபிவிருத்தியடைந்த மேற்குலக நாடுகள் தமது உற்பத்திகளையும், கழிவுகளையும் நவீன யுகம், உலக மயமாதல் எனும் போர்வைகளில் மூன்றாம் உலக நாடுகளிடம் சந்தைப் படுத்தின. விளைவு, பாவித்ததும் தூக்கியெறியும் கலாசாரம் உலகம் முழுவதும் பரவியது. அது மட்டுமன்றி, இயற்கை வளங்கள் மிகையாக நுகரப்பட்டன. பணக்கார நாடுகள், வறிய நாடுகளின் வளங்களைச் சுரண்டின. விளைவாக, சுற்றுச் சூழல் பிரச்சினைகள் உருவாகின. அவற்றைத் தொடர்ந்து சமூக பொருளாதாரப் பிரச்சினைகளும் அணிவகுத்தன. தொட்டிலைக் கிள்ளியவர்களே பிள்ளையையும் ஆட்ட வேண்டு மல்லவா? ‘3R’ முறையையும் அதே பணக்கார நாடுகள் உருவாக்கின. இன்று எம் மத்தியில் பிரபல்யப் படுத்துகின்றன. (மேலும்....)

ஆடி 22, 2010

ஒஸாமா பில்லாடன்

கைது செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை - ஹிலாரி கிளிண்டன்

ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் இருப்பது அந்நாட்டு அரசுக்கு தெரியும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். இப்போது, பின்லேடன், அவரது கூட்டாளி அய்மன் அல் ஜவாஹிரி மற்றும் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா உமர் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் அரசிலும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயிலும் உள்ள சிலருக்கு இவர்களது இருப்பிடம் பற்றி தெரியும் என்றார். (மேலும்....)

ஆடி 22, 2010

கொழும்பில் ஆடிவேல் ஆரம்பம்

கொழும்பில் ஆறு வருடங்களுக்குப் பின்னர் மிகக் கோலாகலமாக நடைபெறும் ஆடிவேல் விழா நாளை ஆரம்பமாகிறது. முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிவேல் விழா இன்று (22) மாலை மகேஸ்வர பூஜையுடன் ஆரம்பமாகிறது. நாளை காலை காவடி ரதம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்கிறது. அங்கு 26 ஆம் திகதி வரை சுவாமி திருஉருவச் சிலை வைக்கப்பட்டு அன்றைய தினம் மாலை மீண்டும் சம்மாங்கோட்டை வந்தடையும். இதேவேளை, செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தின் வெள்ளி ரத பவனி நாளை (23) காலை 8 மணிக்கு பம்பலப்பிட்டியை நோக்கி ஆரம்பமாகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளி ரதம் பம்பலப்பிட்டியிலிருந்து செட்டியார் தெருவை மீண்டும் வந்தடையும். ஆடிவேல் விழாவைச் சிறப்பிக்குமுகமாக 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நாதஸ்வர, மேள வாத்திய கச்சேரிகளும் நடைபெறும்.

ஆடி 22, 2010

முல்லைத்தீவில் 198 குடும்பங்கள்
சொந்த இடங்களில் நாளை குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 198 குடும்பங்களைச் சேர்ந்த 602 பேர் நாளை சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தங்கியுள்ள இவர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளில் மீள் குடியேற்றப்பட உள்ளனர். ஏற் கெனவே 22 கிராமசேவகர் பிரிவு களிலும் மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றதோடு இதுவரை மீள்குடியேற்றப்படாதவர்களே நாளை மீள்குடியேற்றப்படு கின்றனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 23 கிராமசேவகர் பிரிவுகளில் இதுவரை மீள்குடி யேற்றம் இடம் பெறவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

ஆடி 22, 2010

156 ஆண்டு பழைமை

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பம்

சுமார் 156 வருடங்கள் பழைமை வாய்ந்த சிறைச்சாலைகளை மறுசீரமைப் பதற்காக மாறி மாறி வந்த அரசுகள் அனைத்தும் குழுக்கள் நியமித்துள்ளன. நான்கு பிரதான குழுக்கள் உட்பட அதிகாரிகள் மட்டத்திலான சிறு சிறு குழுக்களும் நியமிக்கப்பட்டன. இவை போன்று மேலும் ஒரு குழுவை நியமித்து காலத்தை இழுத்தடிக்க நான் விரும்பவில்லை. முதலாவதாக நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று வருடங்கள் ஆகின. அவ்வாறில்லாமல் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவரச, குறுகிய மற்றும் மத்திம கால வேலைத் திட்டங்களை உடனடியாக நடைமுறைப் படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது. குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் மிகப்பிரதானமாகக் கருதப்படுவது சிறைச்சாலைகளின் இடநெருக்கடிகளைப் போக்குவதும் சிறைக்குள் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்திப்பதுமாகும். (மேலும்....)

ஆடி 22, 2010

டெங்கு ஒழிப்பை துரிதப்படுத்தும் பணி
நாடு முழுவதும் 143 சுற்றாடல் பொலிஸ் பிரிவுகள்

சூழல் மாசடைவதால் டெங்கு நோய் துரிதமாக பரவுவதாக சுகாதார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் நடத்திய ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் சூழல் மாசடைதல் மற்றும் நகரங்களில் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் போதாமையினால் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாவதாகவும் அந்த ஆய்வுகளில்இருந்து மேலும் தெரியவந்துள்ளது. மேலும் டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் வீட்டையும், சுற்றாடலையும், பாடசாலையையும் வைத்திருந்த பாடசாலை அதிபர் ஒருவருக்கும் ஏனைய மூவருக்கும் முப்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. (மேலும்....)

ஆடி 22, 2010

ஏசியான் தலைவர்கள் நாளை வியட்நாமில் ஒன்று கூடுவர்

ஏசியான் அமைப்பின் மாநாடு நாளை வெள்ளிக்கிழமை வியட்நாமின் தலைநகர் ஹனோயில் ஆரம்பமாகின்றது. இதற்கு முன்னோடியாக ஏசியான் நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் திங்கட்கிழமை சந்தித்தனர். இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா உட்பட 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றபோதும் 10 நாடுகளே தற்போதைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. பொதுமக்கள் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தல், பிராந்தியத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இந்த மாநாடு நாளை தொடங்கவுள்ளது. (மேலும்....)

ஆடி 22, 2010

கடல் கன்னியா அல்லது கடல் கண்ணியா?

அனைவரையூம் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் கடற்கன்னி என சந்தேகிக்கப்படும் உருவம் ஒன்று எதிர்பாராதவிதமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. உலகில் கடற்கன்னி தொடாபாக பல கற்பனைக் கதைகளைக் கேள்வியூற்ற போதிலும் அவ்வாறான ஒரு உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதற்தடவையாகும். முத்துத் தீவிற்கு சென்றிருந்த உல்லாசப் பயணிகள் எதிர்பாராதவிதமாக இந்த உருவத்தைக் கண்டதும் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியூள்ளனர். விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வூகளை மேற்கொண்டு வருகின்றனா.

ஆடி 21, 2010

பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து எதுவும் தெரியாது- டி.யூ.குணசேகர

கடந்த சில தினங்களாக போரின் போது கணவர்களை இழந்த பெண்களின் மறுவாழ்வு தொடர்பான கூட்டங்களை அரசு வடபகுதியில் நடத்தியுள்ளது. இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.யூ குணசேகரா அவர்கள் இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார். தெள்ளிப்பளையில் இடம் பெற்ற கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோரின் மனைவிகளும் அவரை சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின் போது இவர்கள் தமது கணவர்கள் குறித்து தம்மிடம் ஏதும் பேசவில்லை என்றும், திருமதி பாலகுமார் மட்டும் தமது குழந்தைகள் குறித்து தம்மிடம் கேட்டதாகவும் அமைச்சர் டி.யூகுணசேகர கூறியுள்ளார். அதே போல யோகியின் மனைவி தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவும்படி கோரியதாகவும் அமைச்சர் கூறுகிறார். பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து தனக்கு தெரியாது. (மேலும்.....)

ஆடி 21, 2010

கலப்பையில் மாடுகளுக்குப் பதிலாக மனிதர்கள்..!

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவீனம் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் என்னமோ கிராமத்து மக்கள்தான். அன்றாட தேவைக்கே அல்லல்படுகின்ற மக்கள் இன்னமும் நம் மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவின் அஹமதாபாத்திலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவிலுள்ள 'கெய்லா' கிராமத்தில் கஷ்டப்படுகின்ற குடும்பமே இது. நீண்ட நாட்களாக மழை பெய்யாதிருப்பதால் காய்ந்துபோயுள்ள பருத்தி விளைநிலத்தினை குடும்பத்தினரின் உதவியுடன் உழுது, பருத்திய விதைகளை விதைக்கின்றார் இந்த விவசாயி. கலப்பையில் மாடுகளைப் பூட்ட வேண்டுமென்றால் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டும். அதனால் மாடுகளுக்கு பதிலாக தனது குடும்பத்தினையே கலப்பையில் பூட்டி உழுகின்ற பரிதாபமே இது…

ஆடி 21, 2010

"அம்மா நீங்கள் வரவே மாட்டீர்களா?"

அன்பின் அம்மாவுக்கு,

இந்தக் கடிதம் உங்கள் கையில் கிடைத்தவுடன் இலங்கைக்கு வர முயற்சி செய்யுங்கள். ஏனைய குழந்தைகளைப் போலவே தாய்ப்பாசத்தை நானும் முழுமையாய் அனுபவிக்க வேண்டும். எங்களுடைய தோட்டத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன அம்மா. நாங்கள் மட்டுமே அதே பழைய வீட்டில் இருக்கிறோம். டி.வி பார்ப்பதென்றால்கூட பக்கத்து வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும். கிழிந்த சட்டையுடன் அங்கு செல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது. என்னால் முடியவில்லை அம்மா. உங்கள் மடியில் கிடந்து கண்ணீர்விட்டு இதுவரையான அத்தனை சோகங்களையும் கரைக்கவேண்டும். என்னையும் தம்பியையும் உங்களோடு அழைத்துச் சென்றிருக்கலாம்தானே? (மேலும்.....)

ஆடி 21, 2010

Transnational Government of Tamil Eelam

(Prof Sisira Pinnawala)

Now that the liberation struggle is no more and the de facto state of Eelam is effectively dead the pro LTTE Sri Lankan Tamil Diaspora leadership is creating a new make-believe in place of their dream that came down shattering on the banks of Nandikadal lagoon in Eastern Sri Lanka. This make-believe is the Transnational Government of Tamil Eelam (TGTE). Like the Barbie doll that became a craze and mesmerized teenage girls around the world the TGTE is taking over the LTTE sympathizers in the Diaspora. The realists in the Tamil community seem to be behaving like the parents who do not wish to hurt the feelings of their children by not commenting on the subject, at least openly and for now. This essay is a brief critique of the Transnational Government of Tamil Eelam Project and also an attempt to speculate on the future of the TGTE. (more.....)

ஆடி 21, 2010

முழுமைப்படுத்தப்பட்ட இறுதி ஆவணம் அல்ல

 

சர்வகட்சி குழுவின் அறிக்கையென்று ஐ.தே.க எம்.பிக்கள் வெளியிட்ட அறிக்கை

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையென்று ஐக்கிய தேசிய கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை, முழுமைப்படுத்தப் பட்ட இறுதி ஆவணம் அல்லவென்று குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  தெரிவித்தார். அதேநேரம், முழுமைப்படுத்த ப்படாத அறிக்கை வெளியானதால், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் எதிர்காலப் பணிகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாதென்றும் அமைச்சர் கூறினார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்ற கட்சிப் பிரதி நிதிகளுக்கிடையே இணக்கம் காணப்பட்ட விடயங்கள் அறி க்கையாகத் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. (மேலும்.....)

ஆடி 21, 2010

பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கருத்தை சீனா ஆதரிக்கிறது

உலக சபாநாயகர்கள் மாநாட்டில் நிறைவேற்றப் படவுள்ள கொள்கை அறிக் கையில் பயங்கரவாதம் குறித்து இந்தியா முன்வைத்த கருத்துக்களை சீனாவும் ஆதரித்துள்ளது. மாநாட்டில் நிறைவேற் றப்பட விருக்கும் கொள்கை அறிக்கையில் பயங்கரவாதம் குறித்து ஒரு பத்தியை மக்க ளவை சபாநாயகர் மீரா குமார் முன்மொழிந் தார்.  மனிதகுலத்தின் சவா லாக உருவெடுத்துள்ள பயங்கரவாதத்தை ஒடுக்கிட கூட்டு நடவடிக்கை தேவை என்று அதில் அவர் குறிப் பிட்டிருந்தார். இதனை முழுமையாக ஆதரித்த மக் கள் சீனம், இதனை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் ஒருசில வார்த்தைகளில் திருத்தம் செய்துள்ளது. சீனா தெரிவித்த திருத் தங்களை உடனடியாக இந் தியா ஏற்றுக்கொண்டது. (மேலும்...)

ஆடி 21, 2010

படைப்பது பிரம்மன் அல்ல

 

உயிர்களைப் படைக்கும் தொழில்நுட்பம்

மனிதன் அச்சத்தினால் கடவுளைப் படைத்தான். ஆனால் கடவுள் தத்துவம் சுரண்டல்வாதிகளுக்கு வசதியாய் இருப்பதைக் கண்டு சுரண்டல்வாதிகள் அதை நிலைப்படுத்திக் கொண்டார்கள். ஆனால், மனிதன் அறிவியலில் சிறுது சிறிதாக முன்னேறும்போது கடவுள் தத்துவங்கள் சிறிது சிறிதாகச் சிதைய ஆரம்பித்தன. ஆனால் சுரண்டல்வாதிகளும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் மதவாதிகளும் அறிவியலுக்கு மதச் சாயம் பூசியும்.  அறிவியலை உள்வாங்கிக் கொண்டு செரித்தும் சுரண்டலையும் மதத்தையும் நிலைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுடைய அசைக்க முடியாத வாதமாக இதுவரை இருந்து வந்தது என்னவென்றால் ‘மனிதன் அறிவியலில் எவ்வளவுதான் முன்னேறினாலும் உயிர்களைப் படைக்க முடியாது. அது கடவுளின் உரிமை என்பதுதான். ஆனால், இவ் வாதத்தை கிரெயிக் வெண்டெர் என்ற அறிவியலாளரும் அவரது குழுவினரும் 20.05.2010 அன்று தகர்த்துவிட்டார்கள். இப்பொழுது மனிதனால் உயிரற்ற செயற்கைப் பொருட்களை வைத்துக்கொண்டு உயிர்களைப் படைக்க முடியும் என்ற அளவிற்கு அறிவியல் வளர்ந்துவிட்டது. (மேலும்.....)

ஆடி 21, 2010

லைபீரியாவில் ரஷ்ய விமானி தடுத்து வைப்பு

லைபீரியாவில் வைத்து ரஷ்யாவின் விமானி தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ரஷ்யா ஐ. நா. வுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. எவ்வித முன்னறிவித்தலோ குற்றச்சாட்டோ இன்றி விமானி கைது செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எனவே விமானியை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென்றும் அக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. வாஷிங்டனிலுள்ள ரஷ்யத் தூதரகம் ஐ. நா. வுக்கும் அமெரிக்காவுக்கும் இக்கடிதத்தை அனுப்பியுள்ளது. மே 28ம் திகதி லைபீரியாவின் தலைநகர் பொஷன்கோவில் வைத்து ரஷ்ய விமானி அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவ்விமானி அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அமெரிக்காவின் தோழமை நாடான ஜோர்ஜியாவுடன் 2008ம் ஆண்டு ரஷ்யா நடந்து கொண்ட விதம் (ஆக்கிரமிப்பு ஏற்பாடுகள்) சென்ற மாதம் ரஷ்யாவின் 10 உளவாளிகளை அமெரிக்கா நடத்திய விதம் என்பவற்றால் அமெரிக்க - ரஷ்ய உறவுகளில் அடிக்கடி விரிசல்கள் ஏற்பட்டன.

ஆடி 21, 2010

வடக்கு கிழக்கில் 80,000 யுத்த விதவைகள்

அரசாங்கம் திருப்தியாக திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை - சஜித்

வடக்கு கிழக்கில் 80,000 விதவைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டமெதனையும் அரசாங்கம் திருப்திகரமாக மேற்கொள்ளவில்லை. "வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தலா 40,000 பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாகியுள்னர்.  உள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 25,000 விதவைகள் உள்ளனர்.  இப்பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு சார்பற்ற நிறுவனங்கள் பல செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் எந்தவொரு திட்டத்தையும் திருப்திகரமாக செய்யவில்லை. (மேலும்.....)

ஆடி 21, 2010

மெக்ஸிக்கோ எல்லையை நோக்கி அமெரிக்க இராணுவம்

மெக்ஸிகோ எல்லையை நோக்கி அமெரிக்கா இராணுவத்தை அனு ப்பவுள்ளது. இந்த எல்லையில் அதி கரித்துவரும் போதைவஸ்துக் கடத் தல், ஆயுத விற்பனை, சட்ட விரோதக் குடியேற்றம் போன்ற குற்றச் செயல்களை ஒழிக்கும் நோக் குடன் இப்படைகள் ஓகஸ்ட் 01 ல் அனுப்பப்படவுள்ளன. இதுதவிர முன்னூறு சுங்க அதிகாரிகள், எல் லைத்தடுப்பு முகவர்களும் மெக் ஸிகோ எல்லைக்கு அனுப்பப்ப டுவர்.  மேலதிகமாக இராணுவ ஹெலி கொப்டர்கள் மற்றும் முக்கிய தள பாடங்களும் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெக்ஸிகோவின் எல்லையிலுள்ள அமெரிக்க மாநிலமான அரிசோனா இவ்வாறான குற்றச் செயல்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் இடம்பெறும் போதைக் கடத்தல், ஆயுத விற் பனை அரிஸோனா மாநிலத்தைப் பெரிதும் பாதித்துள்ளதுடன் இங்கி ருந்து ஆயிரக் கணக்கான சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களும் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். இதைக் கட்டுப்படுத்த அரிசோனா மாநிலம் கடுமையான சட்டங்களை அமுல் செய்த போதும் அவை வெற்றியளிகக்வில்லை. (மேலும்.....)

ஆடி 21, 2010

வியட்நாமில் ஏசியான் மாநாடு

ஏசியன் வெளிநாட்டு அமைச்சர்கள் நேற்று முன்தினம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஒன்றுகூடினர். இந்த அமைப்பிலுள்ள 10 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பிராந்திய நலன்கள் குறித்துப் பேசும் வகையில் இம் மாநாடு கூட்டப்பட்டது. 1967ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த ஏசியன் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. புருனை, கம்போடியா, இந்தோனேஷியா, லாஓஸ், மலேஷியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் என்பன இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளன. இவை 4.5 மில்லியன் சதுர கி.மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன் 570 மில்லியன் மக்கள் இந்நாடுகளில் வாழ்கின்றனர். நேற்று முன்தினம் நடந்த இந்த மாநாட்டில் ஏசியன் நாடுகளிடையேயான உறவுகளை மேம்படுத்தல் பொதுவாகச் செயற்பட்டு பிராந்தியம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளித்தல் போன்ற முக்கிய விடயங்கள் பேசப்பட்டன.

ஆடி 21, 2010

Ground Breaking Ceremony of New Mississauga Temple

West end Buddhist Centre or widely known as Mississauga Temple is planning to move into a new location in Cawatra Road. Ground breaking ceremony for the new building was held on 11th of July 2010 at an auspicious time at the new location. Hundreds of devotees and several Canadian and Sri Lankan distinguish guests took part in the event. Ontario Labour Minister Hon. Peter Fonseka, Her worship Susan Fennel the mayor of Brampton, Maja Prentice and Ann McFadden Mississauga city councillors, Her Excellency Chitrangani Vagiswara the Sri Lankan High Commissioner in Ottawa were among the guests. According to Chief Rev. Ven. K. Dammawasa Thera the new building will complete its construction by end of May in 2011 and “we are planning to celebrate next “wesak” at the new temple” he further said. The President of new Vihara Project Ven. Bikkhu Saranapala requests the help of everyone to building project to complete in time. If you want to get involved please contact Halton Peel Buddhist Cultural Society, 1569 Cormack Crescent, Mississauga, Ontario,L5E 2P8 and also by phone 905 891 8412, email info@westendbuddhist.com and web site www.westendbuddhist.com

ஆடி 21, 2010

தமிழக முதலமைச்சர் கருணாநிதியை த.தே.கூ. உறுப்பினர் இன்று சந்தித்தனர்

இலங்கைத் தமிழர்களை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டோம் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி தங்களிடம் உறுதியளித்ததாக இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  இதன்போது, வன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமாவதற்கான காரணங்களை கருணாநிதிக்கு எடுத்துரைத்ததாகக் கூறியுள்ள கூட்டமைப்பு எம்.பி.க்கள், இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டினைப் பொறுத்தே ஏனைய நாடுகளின் தீர்மானங்களும் அமையும் என்றும் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளனர். (மேலும்.....)

ஆடி 20, 2010

எதிர் கட்சியினர் சமர்பிப்பு _

ஒற்றையாட்சிக்குள் மாகாணசபைகளுக்கு அதிகாரம்

ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். தொகுதிவாரி முறைமையையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை ஏற்படுத்தப்பட வேண்டும். மத்திய, மாகாண, உள்ளூராட்சி மட்டங்களில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியம் என்று சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விட மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட செனட்சபை, இந்திய வம்சாவளி மக்களுக்கு சமூக சபை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய, மாகாண உயர்பதவி நியமன சபை அமைக்கப்படுதல் போன்ற யோசனைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. (மேலும்...)

ஆடி 20, 2010

அவுஸ்திரேலியாவில்

புகலிடக் கோரிக்கைக்கான தகைமையை நிரூபிக்கத் தவறுவோர் திருப்பி அனுப்பப்படுவர்

இலங்கையின் நிலைமையில் முன்னேற்றம் காணப்படுவதால் குறைந்த எண்ணிக்கையானோருக்கே அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது. புகலிட கோரிக்கைக்கான தகைமையை நிரூபிக்க தவறுவோர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலும் இலங்கையில் நிலைமை முன்னேற்றமடைந்து வருகிறது என்று அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் நிறுவனத்தின் அகதிகள் தொடர்பான வழிகாட்டு நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளின் விண்ணப்பங்களை இப்பொழுது நுணுக்கமாக பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது. (மேலும்...)

 
ஆடி 20, 2010

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்

 

வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட் டங்களை வெற்றிகரமாக முன்னெ டுப்பதற்கு அனைத்து நாடுகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன ஆகிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் தெரிவித் துள்ளார்.  யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் துரித அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்து ழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.  (மேலும்...)

ஆடி 20, 2010

காரைதீவில் தமிழ் செம்மொழி விழா : பேராசிரியர்கள், பேராளர்கள் கெளரவிப்பு

இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவ மாணவியரின் ஊர்வலத்துடன் அழைத்து வரப்பட்ட அதிதிகள் வித்தக மாமுனி விபுலானந்த அடிகள் பிறந்த வீட்டிற்குச் சென்று அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் பிறந்த வீடு, மற்றும் மணி மண்டபம் முதலானவற்றையும் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து ஊர்வலம், விழா நடைபெற்ற விபுலானந்த மத்திய கல்லூரியை அடைந்தது. (மேலும்...)

ஆடி 20, 2010

எட்டுக்கால் ஏமாற்று வித்தை

மூட நம்பிக்கை எனும் ஆக்டோபஸ்!

(என்.சிவகுரு)

மனித குல வரலாற்றில் மூட நம்பிக்கை எப்போதும் ஒரு தடையாகவே இருந்து வந்துள்ளது. விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி வேகமாக நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் கூட இதுபோன்ற விஷயங்கள் பெரிதும் ஊதப்படுகின்றன. தனிமனித வாழ்விலிருந்து துவங்கி விளை யாட்டு வரை இது விரிவடைந்து, சமூகத்தை பாழ்படுத்தியுள்ளது. கிளி, முயல், பல்லி, பூனை என விலங்குகள் பட்டியல் ஆக்டோபஸ் வரை நீண்டுள்ளது. இந்த விஷபரவலை உடனடியாக விஞ்ஞானத்தின் மேன்மையோடும் அறிவியல் துணையோடும் முறியடித்திட வேண்டும். இன்று ஆக்டோபஸ் ஆரூடம் பலித்துவிட்டது என எழுதும்போது நமக்கு ஒரு எளிமையான கேள்வியும் கூடவே எழுகின்றது. இந்த ஆக்டோபஸ்ஸும், கிளியும், லீக் போட்டிகளின் போது (தகுதிச்சுற்று) ஏன் வரவில்லை? ஒரு வேளை கூடுதல் பணி என விட்டுவிட்டார்களா? (மேலும்....)

ஆடி 20, 2010

வடக்கு மீள் குடியேற்றத்தை ஆராய அமைச்சர் வன்னி விஜயம்

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் மீள் குடியேற்றப் பட்டுவிட்டனர். மேலும் சுமார் 30,000 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களும் மிக விரைவில் மீள்குடியேற்றப்பட்டு விடுவர். சில மீள்குடியேற்றப் பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. அத்துடன் குறிப்பிட்ட சில இடங்களில் படையினரின் முகாம்கள் காணப்படுவதால் அப்பிரதேசங்களில் மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை. (மேலும்...)

ஆடி 20, 2010

இந்திய ரயில் விபத்து

52 பேர் பலிசிதைவுகளுக்குள் சிக்கியோரை மீட்பதில் சிரமம்

இந்தியாவின் கொல்கத்தா நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 52 பேர் பலியாகினர். இன்னும் பலர் பெட்டிகளின் இடி பாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் இந்த இரண்டு ரயில்களும் மோதின.  ஒரே தண்டவாளத்தில் இவ்விரண்டு ரயில் களும் எவ்வாறு பயணித்தன என்ற விசாரணைகளை இந்திய அதி காரிகள் ஆரம்பித்துள்ளனர். கொல்கத்தாவின் பேர்ம்பும் மாவட்டத்தில் இந்த ரயில் விபத்து நேர்ந்தது. இவ்விபத்து நடந்தவேளை அதிகாலை இரண்டு மணியாக இருந்ததால் மீட்புப் பணிகள் தாமதமடைந்தன. (மேலும்...)

ஆடி 20, 2010

Ontario to appeal for public-sector wage freezes

Ontario Finance Minister Dwight Duncan will meet public-sector employers and labour leaders on Tuesday, where he will appeal directly to them to impose wage freezes. Mr. Duncan put teachers, nurses and other unionized workers on notice in the provincial budget in March that there will be no money for wage hikes when their collective bargaining contracts expire. But Tuesday will be the first time he delivers that message face-to-face to about 60 public-sector executives and union leaders. (more....)

ஆடி 20, 2010

உழவு இயந்திரம் உழும், ஆனால் சாணம் போடுமா?

தன்னிறைவான உணவு உற்பத்தி, விவசாயிகளுக்கு சுயமாக விலை நிர்ணயிக்கும் உரிமை, சமூக, பொருளாதாரப் பின்னணியில் பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருப்பதால் அதற்கேற்ற விவசாயப் பொருளாதாரக் கொள்கைகளும் மானியங்களும், அதற்கு பொருந்திவரும் நட்பு நாடுகளுக்கு இடையிலான வணிக ஒப்பந்தங்கள் ஆகியவையே நமக்குத் தேவை ‘நாம் என்ன சாப்பிட வேண்டும்? நமக்கு என்ன நோய் வர வேண்டும்? நோய் வந்தால் என்ன மருந்து உட்கொள்ள வேண்டும்?’ என்பதை உலகில் ஏதோ ஒரு மூலையில் வாழும் பணக்காரன் தீர்மானிக்கும் நிலைக்கு நாம் ஏன் சம்மதிக்க வேண்டும்? விவசாயத்தில் உழவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில், மகாத்மா காந்தியின் பொருளாதார ஆலோசகர் ஜே.சி. குமரப்பா சொன்னதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ‘உழவு இயந்திரம் நல்லாத்தான் உழும். ஆழமாகக் கூட உழும்! ஆனால் சாணி போடாதே!’ என்றார் அவர். சாணியைப் பற்றி கவலைப்படாத நம் முன்னோர்கள் அந்த இயந்திரங்களைச் சார்ந்து மண்ணையும் உடலையும் அழித்ததுதான் மிச்சம். (மேலும்...)

ஆடி 20, 2010

மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்

160 மீட்டர் உயரமுடைய இந்தக் கட்டடம், 35 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் 18 பாகை அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது பைசா கோபுரத்தின் சாய்வை விட நான்கு மடங்கு அதிகம் (பைசா கோபுரத்தின் சாய்வு 3.99 பாகை) இந்தக் கட்டடத்தின் 12 மாடிகள், செங்குததாக உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள் படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த வகையில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்தக் கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்ட போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதை கட்டுவதற்கு 10 ஆயிரம் தொன் இரும்புப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. (மேலும்....)

ஆடி 20, 2010

எழுத்து மூலமான உத்தரவாதம் கிடைக்கும் வரை இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில்லை

மேற்குக் கரையில் இஸ்ரேல் நிறுவும் யூதக் குடியேற்றங்களை நிறுத்தும் வரையும் கிழக்கு ஜெரூஸலம் தொடர்பாக எழுத்து மூல உத்தரவாதம் கிடைக்கும் வரை இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுக்களுக்குச் செல்லமாட்டோம் என உறுதியுடன் கூறினார். மார்ச்சில் ஆரம்பமான இஸ்ரேல் பலஸ்தீன் மறைமுகப் பேச்சுக்களை அமெரிக்காவும் எகிப்தும் ஏற்பாடு செய்தன. அரபு லீக் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியது. இதுவரை இஸ்ரேல் நடந்துகொண்ட விதங்கள் அரபு லீக்கை எமாற்றிவிட்டது. (மேலும்...)

ஆடி 20, 2010

பிரிட்டன் பிரதமர் அமெரிக்கா விஜயம்,  சமீபகால முரண்பாடுகள் குறித்து பேச்சு

லொக்கர் பீ குண்டு வெடிப்பின் குற்றவாளியான லிபியாவைச் சேர்ந்த மெஹ் ரானியை விடுதலை செய்தமை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பேசப்படவுள்ளன. 1988ம் ஆண்டு அமெரிக்க விமானம் தாக்கப் பட்டதில் 188 அமெரிக்கர்கள் கொல் லப்பட்டனர். இதன் குற்றவாளி மெஹ்ரானி கைது செய்யப்பட்டு பிரிட்டனில் நீண்டகாலம் சிறைவாச மிருந்தார். பின்னர் புற்று நோய்க்கா ளாகியுள்ள மெஹ்ரானி மூன்று மாதங்களே உயிர் வாழ்வார் என வைத்தியர்கள் அறிவித்தமையால் கருணை அடிப்படையில் மெஹ்ரானி விடுதலை செய்யப்பட்டார். இச்சம்பவம் ஒரு வருடத்துக்குள் நடந்தது.  லிபியா சென்ற இவரை வைத்தியர்கள் சோதனை செய்த போது இன்னும் பத்து வருடங்கள் மெஹ்ரானி உயிர் வாழ்வார் என மருத்துவ சான்றிதழ்கள் தெரிவித்தன. (மேலும்...)

ஆடி 20, 2010

சீனாவில் தொடர் மழை: ஆறுகள் உடையும் அபாயம்

சீனாவின் வட மாகாணத்தில் இவ் வெள்ளம் ஏற்பட்டது. இரண்டு வாரங்களாக சீனாவில் பெரும் மழை பெய்து வருகின்றது. இதனால் ஆறுகள், நதிகள் உடைப்பெடுக்கும் அபாய மேற்பட்டுள்ளது. ஒருதசாப்தத்திற்குப் பின்னர் சீனாவில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெள்ளம் இதுவென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 1998ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 4150 பேர் பலியாகினர். ஆறுகள் நதிகள் உடைப்பெடுத்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. (மேலும்...)

ஆடி 20, 2010

Canada expected to follow U.S. in economic slowdown

The mighty U.S. economy is slowing again, and with it Canada’s chances of escaping the global downdraft. A sudden plunge Friday in a closely watched index of consumer confidence is the latest clue the recovery has stalled in the U.S., Canada’s neighbour and largest trading partner. Economists warn that Canadian businesses and investors should brace for the inevitable spillover as the U.S. grapples with a slowing economy and a growing fiscal hangover from years of excess. Canada will still fair relatively better than the United Stateshttp://images.intellitxt.com/ast/adTypes/mag-glass_10x10.gif. But a slowdown in manufacturing and consumer spending here is now likely, and an uptick in unemployment and even some months of shrinking economic activity is not out of the question, argued David Rosenberg, chief economist and strategist at Gluskin Sheff & Associates Inc. in Toronto. (more....)

ஆடி 19, 2010

அரசாங்கத்திற்கு புறம்பாக

சர்வகட்சி குழுவின் இறுதி அறிக்கை இன்று பகிரங்கமாக்கப்பட்டது

"சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையின் ஒரேயொரு பிரதி மாத்திரமே தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  சர்வகட்சி பிரதிநிதிகளாகிய நாங்கள், அக்குழுவில் அங்கம் விகிக்காத பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் தமிழத்தேசியக் கூட்டமைப்புடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தி, அதன்பின் ஒரு புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவை எடுத்துரைப்பார் என எதிர்பார்த்தோம். எனினும் இறுதி அறிக்கையொன்று  குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என ஊடகங்கள் மூலம் அறியக்கிடைத்தாலும் ஐ.தே.கவுக்கோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அதன் பிரதி கிடைக்கவில்லை.  அக்குழுவில் பங்குபற்றிய பிரதிநிதிகளிடம்கூட அவ்வறிக்கையின் பிரதி இல்லை. (மேலும்....)

ஆடி 19, 2010

 

Hundreds of LTTE war widows seek government assistance
Rehab Minister says Mrs. Balakumaran and Yogi among them

Rehabilitation and Prisons Reforms Minister Dew Gunasekera says an urgent programme is needed to provide relief to war widows, including wives of the LTTE cadres killed during the war. Speaking to The Island after meeting groups of war widows in Vavuniya, Jaffna and Kilinochchi over a week ago, Minister Gunasekera emphasized the importance of meaningful measures to alleviate their suffering. General Secretary of the Communist Party of Sri Lanka, Gunasekera said that among the women whom he had met in Jaffna were the wives of K.V. Balakumaran and Yogiratnam Yogi, a member of the LTTE negotiating team for talks with the then President Ranasinghe Premadasa’s government. The Army killed Balakumaran on the Vanni east front early last year. (more...)

ஆடி 19, 2010

அ.இ. காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தியே தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இந்த ஆண்டு இறுதியில் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அச்சமயம், காங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் இடம்பெறவுள்ளது. அதன்போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலும் நடத்தப்பட இருக்கிறது. அதில் சோனியாகாந்தி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட இருக்கிறார். (மேலும்....)

ஆடி 19, 2010

வைக்கற் பட்டறையில் படுத்திருப்பவர்களே வழிவிடுங்கள் மற்றவர்களுக்கு

(மோகன்)

அசின் போன்றவர்களே அசல் மற்றதெல்லாம் நசல், தமிழனாய் இருந்தும் மனிதர்களாய் வாழாதவர்களை விட எந்த இனத்தில் பிறந்திருந்தாலும் மனித நேயம் கொண்டவர்களால்தான் மனித இனத்திற்க்கே பெருமை. அந்த பெருமையை சேர்த்தவர்களில் அசினும் ஒருவள். மனித உயிர்கள் எல்லாம் ஒன்று, அதன் ஆசாபாசங்கள், உணர்வுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் பொதுவானவையே. ஒரு உயிர் துன்பப்படும் போது இன மொழி பேதமின்றி துடித்து போவதே மனித இனம். அதனால்தான் இலங்கைத்தமிழர்களின் துயர் கண்டு அசின் போன்றவர்களின் மனம் உதவிட நினைத்தது. வெறுமனே ஒரே மொழி பேசும் இனத்தின் பேரால் இன்னொரு இனத்தின் அழிவை விரும்பி நிற்பதும் அதன் துயரத்தை கண்டு உள்ளூர ரசித்து நிற்பதும் மனிதர்களின் குணாம்சம் அல்ல. இவர்களை போன்றவர்கள் தமிழ் இனத்தில் பிறந்திருப்பதே அந்த இனத்திற்கு பெரிய அவமானம் அதைவிட அவர்களை தமிழ் இனத்தின் தலைவர்களாக கொண்டாடுவது அந்த இனத்திற்க்கு செய்யும் மாபெரும் துரோகம். (மேலும்....)

ஆடி 19, 2010

சிறப்பாக நடைபெற்று வரும் கதிர்காம திருவிழா

கதிர்காம ஆடித் திருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் இம்முறை வடகிழக்குப் பிரதேசங்களிலிருந்து அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதைக் காணக் கூடிய யுத்த சூழ்நிலை மறைந்துள்ள நிலையில் அச்சமின்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டு, திருமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் இம்முறை கதிர்காம ஆடித் திருவிழாவுக்கு செல்வதற்கு இன்னமும் பலர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பஸ்கள், கார்கள், வான்கள் மாத்திரமின்றி பெருமளவு பக்தர்கள் கால்நடையாகவும் இங்கு வந்து குவிந்த வண்ணமிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி தீ மிதிப்பும், 25ஆம் திகதி முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் வீதியுலா வருதலும், 26ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா நிறைவடைய உள்ளது. கதிர்காம திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் பெரஹரா ஊர்வலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

ஆடி 19, 2010

Demise - Daughter of Daya and Sister of Santusht Perera - Suki Amerasekara

Dr. (Mrs.) Suki Amerasekara passed away this morning in US. She is the wife of Dr. Vimal Amerasekara of Toronto, and only daughter of Daya Perera (former Sri Lanka High Commissioner in Canada) and late Mrs. Perera.

Only sister of Dr. Santusht Perera of NJ.

Funeral details:

Highland Funeral Home3280 Sheppard Ave East, Scarborough. (Warden/Sheppard), Canada

Viewing: Tuesday July 20th - 5-9 p.m. & Wed July 21st - 5-9 p.m.Funeral: Thursday July 22nd - Late afternoon.

Time to be confirmed upon availability of Crematorium.

ஆடி 19, 2010

கனடாவில் இடம்பெற்ற வீரமக்கள் தினம்!

கனடா ரொறன்ரோவில் 21வது வீரமக்கள் நேற்றையதினம் சனிக்கிழமை(17.07.2010) மாலை நினைவு கூரப்பட்டது. செங்கிளேயர் வீதியில் அமைந்துள்ள சென்ற் கொலம்பியா மண்டபத்தில் இடம்பெற்ற வீரமக்கள் தின கூட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலை அமைப்புகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டும், மரணித்த போராளிகளின் படங்களை திரையிலேயே காண்பித்தவண்ணம் மலரஞ்சலியுடன் வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகியது. புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் மையூரனின் வரவேற்புரையுடன் அவரது தலைமையில் வீரமக்கள் தின கூட்டம் ஆரம்பமாகியது. (மேலும்....)

ஆடி 19, 2010

கிழக்கில் செம்மொழி மகாநாடு

கிழக்கு மாகாண தமிழ் மொழி செம்மொழி விழா நேற்று கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப வைபவத்துக்கு வருகை தந்த அதிதிகளை ஆராத்தியெடுத்து வரவேற்பதைக் காணலாம்.

ஆடி 19, 2010

மலையகப் பிரதிநிதிகளுக்கு மனிதாபிமான வேண்டுகோள்!

கொழும்பு நகரத்தை எடுத்துக்கொண்டால் இங்கு செல்வந்த வீடுகள் பெரும்பாலானவற்றில் மலையகத்தைச் சேர்ந்த சிறு பெண்கள் தொழில் புரிகின்றனர். இவர்களில் சிலருக்கு மாத்திரமே மனிதாபி மானமுள்ள எஜமானர்கள் கிடைக்கின்றனர். ஏனையோர் மிகவும் துன்பப்படுகின்றனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக வேலை வாங்கப்படும் அவலத்தை பலர் எதிர் கொள்கின்றனர். விடுமுறையென்பது இவர்களுக்குக் கிடையாது. போதிய வேதனம் பலருக்கு இல்லை. இடையிடையே வீட்டுக்குச் சென்று வர விடுமுறை வழங்கப்படுவதில்லை. ஒரு வீட்டின் அத்தனை வேலைகளையும் தனியொருத்தியாக நின்று செய்ய வேண்டிய கொடுமைக்கு சின்னஞ்சிறு பெண்கள் உள்ளாகின்றனர். இதுவொரு சமூகப் பிரச்சினையென்பதை மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மலையக தொழிற்சங்கங் களுக்கு உண்டு.  (மேலும்....)

ஆடி 19, 2010

சூடானில் பெருஞ் சமர் 75 படை வீரர்கள், 300 தீவிரவாதிகள் பலி

சூடானின் டர்புர் பிராந்தியத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் மோசமான வன்முறைகள் தலைதூக்கின. அரசுக்கெதிரான போரில் ஜே.ஈ.எம். எஸ்.எல்.ஏ. போன்ற அமைப்புக்கள் ஆயுதப் போரில் இறங்கியுள்ளன. இதனால் மூன்று இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் 27 இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா. மதிப்பு செய்துள்ளது. ஆனால் 10 ஆயிரம் பேரே இறந்துள்ளதாக சூடான் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான கொலைக் குற்றச்சாட்டில் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பர் சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணைக்குள் சிக்கியுள்ளமை தெரிந்ததே. 2009 ஆம் ஆண்டு ஹேக்கிலுள்ள சர்வதேச நீதிமன்றம் சூடான் ஜனாதிபதிக்குப் பிடியாணை வழங்கியது. (மேலும்....)

ஆடி 19, 2010

காரைதீவில் இன்று செம்மொழி விழா; கல்முனை பிரதேசம் விழாக்கோலம்

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் தமிழ்ச் செம்மொழி விழா இன்று காலை 9.30 மணிக்கு காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் தலைமையில் நடைபெறவுள்ளது. இதனையிட்டு கல்முனைப் பிரதேசம் விழாக்கோலம் பூண்டுள்ளது. முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவாக நடைபெறும் தமிழ்ச் செம்மொழி விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கெளரவ அதிதியாகவும் கலந்துகொள்வர். (மேலும்....)

ஆடி 19, 2010

மூன்றாவது உலகப் போர் என்று ஒன்று நிகழ்ந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும்  -அப்துல் கலாம்

மூன்றாவது உலகப் போர் என்று ஒன்று நிகழ்ந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அது நிஜம்தான். இந்தியாவை சுற்றி உள்ள சீனா, நேபாளம், மியான்மர், வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் மக்கள் தொகை அதிகம் கொண்ட, தண்ணீர் பிரச்னைகள் அதிகம் உள்ள நாடுகள். இவற்றில் பல ஆயுத பலங்களையும் கொண்டவை. நாளை இவை தண்ணீருக்காக இந்தியாவுக்கு தொல்லை கொடுக்காது என்பது நிச்சயம் இல்லை. தண்ணீருக்காக அடிதடியும், கலவரமும், யுத்தமும் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு தேவை தீர்க்க தரிசனம் கொண்ட ஒரு தலைமை. இளைஞர்களில் இருந்துதான் தண்ணீருக்கான அந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கும் ஒருவர் வரவேண்டும். எதிர்கால தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடியாக செய்யவேண்டியது நதிநீர் இணைப்பு திட்டம்தான். (மேலும்....)

ஆடி 18, 2010

அரசியலமைப்புத் திருத்தமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்தனவும் முற்போக்கானவையுமான சக லவற்றையும் எதிர்க்கும் பாரம்பரியத்தைக் கொண்டவர்களே தமி ழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் என்ற அபிப்பிராயம் பெரும்பாலான மக்களிடம் தோன்றியிருக்கின்றது. அரசியலமைப் பின் பதினேழாவது திருத்தம், அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் ஆகியவற்றுக்குக் காட்டிய எதிர்ப்பை உதாரணமாகக் கூறலாம். பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அமையும் அரசியலமைப்புச் சபையில் இலங்கைத் தமிழர், இந்திய வம்சா வளியினர், முஸ்லிம் ஆகிய இனங்களின் பிரதிநிதிகள் அங்கத் துவம் வகிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் அத்திருத் தம் தமிழ் மக்களுக்குச் சம்பந்தம் இல்லாதது எனக் கூறித் தமி ழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப் புச் செய்தது. இது கண்மூடித்தனமான எதிர்ப்பு மனோபாவத்தின் வெளிப்பாடு. இத்தகைய அணுகுமுறை எதிர்மறை விளைவைத் தருமேயொழியச் சாதகமான பலனைத் தராது.  (மேலும்.....)

 

ஆடி 18, 2010

ரணிலின் ஆதரவு நிலைக்குமா?

இந்த நம்பிக்கை நிலைத்து நிற்குமா என்பது பிரதான கேள்வி. ரணிலின் கடந்த காலச் செயற்பாடுகள் இந்தச் சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றன. இவர் தோற்றுவித்த நம்பிக்கைகளை இவரே சிதைத்திருக்கின்றார்.  பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தது. அதை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியை அரசாங்கம் நாடியது. ஆதரிப்பதாக ரணில் நம்பிக்கையூட்டிக் கடைசி நேரத்தில் காலை வாரினார். தீர்வுத்திட்டத்தை மகா சங்கத்தினரின் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கூறி ரணில் ஓரத்தில் ஒதுங்கினார். (மேலும்.....)

ஆடி 18, 2010

உருத்திரகுமார், நெடியவனுக்கு இலங்கை அரசு ஆப்பு

புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு எதிராக புதிய நகர்வு

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முற்றாக முடக்கும் வகையில் இன்டர்போல் ஊடாகவும் சர்வதேச புலனாய்வு முகவர் அமைப்பின் ஊடாகவும் அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இயங்கும் புலிகளின் இரு முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இன்டர் போல் (சர்வதேச பொலிஸ்) நடவடிக்கை எடுத்து வருகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரான காஸ்ட்ரோவின் வன்னி அலுவலகத்தில் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஐயா அல்லது ராஜா எனப்படும் பொன்னையா ஆனந்த ராஜாவை இன்டர்போல் பொலிஸார் தேடி வருகின்றனர். 60 வயதான இவர், யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்தவரா வார். இன்டர்போலால் தேடப்படும் மற்றவரான அச்சுதன் சிவராஜா அல்லது பிருந்தாவன் அச்சுதன் என்பவர் பிரான்சிலுள்ள விமான பயிற்சிப் பாடசாலையில் விமானியாக பயிற்சி பெற்றுள்ளார். (மேலும்.....)

ஆடி 18, 2010

இந்திய - பாக். பேச்சு தோல்வி

இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றச்சாட்டு

இந்தியா - பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு இடையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது இந்திய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கவில்லை என பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரேஷி தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் போது அவர் தொடர்ச்சியாக இந்திய அரசிடமிருந்து தொலைபேசி அறிவுறுத்தல்களைப் பெற்று சந்திப்பில் தடங்களை ஏற்படுத்தி யதாகவும் இந்திய தூதுக் குழுவினரின் செயற்பாடுகள் பற்றி மஹ்மூத் குரேஷி ஊடகவியலாளர்கள் மத்தியில் கடுமையாக சாடியிருந்தார். (மேலும்.....)

ஆடி 18, 2010

நல்லூர் திருவிழாவில்

தமிழர் பண்பாடு, கலாசாரத்தை பேணும் வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும்

யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா

நல்லூர் கந்தசுவாமி கோயில் உற்சவம் இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட திருவிழாவாகும். யாழ்ப்பாண மக்களுடன் இலங்கையின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் எதிர்பார்த்திருக்கும் உற்சவம் இது. தமிழ் மக்களின் பண்பாடு கலாசாரத்தின் சின்னமாக விளங்கும் இதன் பெருமைகளைக் காப்பாற்றும் வகையில் நமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். (மேலும்.....)

ஆடி 18, 2010

சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ் விஜயம்

யாழ். அச்சுவேலி பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள வர்த்தக வலயப் பகுதிக்கு சர்வதேச முதலீட்டாளர்கள் நேற்று விஜயம் செய்தனர். முதலீட்டு நிலைமைகளைப் பார்வையிடுவதற்கு வருகை தந்த இவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைத்துச் சென்றதுடன் நிலைமைகளை எடுத்துக் கூறினார்.  இலங்கையில் முதலீடு செய்துள்ள முன்னணி ஆடை உற்பத்தி தொழிற்சாலை நிறுவனங்களான பிரான் டெக்ஸ், மாஸ் ஹோல் டிஸ், டிமெக்ஸ் கார்மண்ட்ஸ், ஒமேகா லைன், ஒரிக் எப்பரல்ஸ் ஆகிய ஐந்து சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களே யாழ். குடாநாட்டில் முதலீடு செய்வதற்காக நேற்று சென்றிருந்தனர். (மேலும்.....)

ஆடி 18, 2010

சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை ஏற்றிச் சென்ற கப்பல் முற்றுகை

கனடாவுக்கான புகலிடக் கோரிக்கையை முன்வைத்து சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று கௌதமாலாவிற்கு அருகில் வைத்து முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த கப்பல் கௌதமாலாவிற்கு அருகில் நேற்று சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 'சன் சீ' என்ற கப்பலில் 219 இலங்கைத் தமிழர்களும் 12 இந்தியத் தமிழர்களும் காணப்பட்டதாகவும் ஏசியன் றிபியூன் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு சென்ற சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களில் விடுதலைப் புலி சந்தேக நபர்கள் சிலர் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆடி 18, 2010

தமிழரின் மறுவாழ்வுப் பணிகளை அவதானிக்க சிறப்புப் பிரதிநிதி இலங்கை செல்ல வேண்டும் - கருணாநிதி

நலன்புரி நிலையங்களிலுள்ள  தமிழ் மக்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை அவதானிப்பதற்காக சிறப்புப் பிரதிநிதியை அங்கு  அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தீர்மானமொன்றை முன்வைத்துள்ளார். இந்தியப்  பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இந்தத் தீர்மானத்தை முன்வைத்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுப் பணிகள் தொடர்பிலான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம்   எடுக்க வேண்டும் எனவும், இதன் மூலம்  இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள்,  சாமாதனம் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க முடியும்   எனவும் மு.கருணாநிதி குறிப்பிட்டார். (மேலும்.....)

 

ஆடி 18, 2010

The Canada Revenue Agency Revokes the Charitable Status of Tamil (Sri Lanka) Refugee-Aid Society of Ottawa

 

This funding included $713,000 provided to an organization which, on the basis of publicly available information detailed in our letter of February 22, 2010, the CRA believes was operating as part of the support network for the Liberation Tigers of Tamil Eelam (the LTTE), a listed entity under the United Nations Suppression of Terrorism Regulations and the Criminal Code of Canada. The CRA audit also indicates that fundraising conducted under the Society's auspices involved an individual who has been convicted in the United States of conspiring to provide material support to the LTTE. In addition, the Society's liaison officer for Sri Lanka was named in documents filed with the Federal Court of Canada as a contact for area sales coordinators with the World Tamil Movement, also a listed entity under the Criminal Code of Canada because of its ties to the LTTE. (more....)

ஆடி 17, 2010

கனடாவில் 21வது வீரமக்கள் தினம்!

விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த பொதுமக்கள், போராளிகள் அனைவரையும் நினைவுகூரும் “வீரமக்கள் தினத்தில்” எமது அஞ்சலிகளை செலுத்திட அனைவரும் ஒன்று கூடுவோம்.

இடம்: 2723 St. Clair Ave East, East York, Toronto, Canada, M4B 1M8

காலம்: July 17, 2010

நேரம்: மாலை 5.00 – 9.00 (சனிக்கிழமை)

தொடர்புகளுக்கு: (416) 613 2771

மின்னஞ்சல்:  dplf_canada@plote.org.com

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி – கனடா

Democratic People’s Liberation  Front _ Canada (DPLF)

ஆடி 17, 2010

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை- மன்மோகன்  சிங்

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடனும், மதிப்புடனும் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும். இலங்கை அதிபருடன் கடந்த மாதம் பேச்சு வார்த்தை நடத்தியதுடன் அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் தூது குழுவும் என்னை சந்தித்து பேசியது இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கௌரவத்துடனும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உறுதியாக மேற்கொள்ளும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் விரைவில் குடியமர்த்தப்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு வலியுறுத்தும். (மேலும்....)

ஆடி 17, 2010

Govt. Will Gradually Release HSZs Lands Says Deputy Minister Muralitharan

Deputy Resettlement Minister Vinayagamurthy Muralitharan (formerly known as Karuna) said the government would gradually release the lands occupied by security forces under High Security Zones (HSZs) in the North in order to resettle displaced civilians. Muralitharan told The Sunday Leader that the HSZs in the North have left 62,000 people displaced. “The Defence Secretary has promised to me that he would gradually release the lands occupied by HSZs to resettle civilians who have been displaced. We have already resettled some civilians in Vadamarachchi East,” he said. Muralithran’s comments come after Government Spokesperson Minister Keheliya Rambukwella yesterday stated that the HSZs in the North would remain and that the government was not going to dismantle them. However, EPDP Leader and Minister Douglas Devananda has also stated that Preisdent Mahinda Rajapaksa had assured him that the HSZs in the North would be dismantled to resettle civilians.

ஆடி 17, 2010

சிறுபான்மையினர் பிரச்சினை தீராமல் அரசியலமைப்புத் திருத்தமா? _

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அரசியலமைப்புத் திருத்தம் பற்றியும் நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் முறையை ஸ்தாபிப்பது பற்றியும் பேசிப் பயனில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.நாட்டில் 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. இருப்பினும் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். (மேலும்.....) 

ஆடி 17, 2010

Rebels have been routed for good, says Sri Lankan Tamil MP

(Allan Jacob)

The LTTE began its ruthless struggle for a Tamil state and carried out a series of attacks from the early eighties. A largely defensive Indian Peace Keeping Force was deployed on the island in 1987 to disarm the rebels, but made a hasty exit after three years. Former Indian prime minister Rajiv Gandhi was killed by a female suicide bomber in 1991. This turned Indian sentiment against the group, which had backers in the state of Tamil Nadu. Then Lankan president Premadasa met his end in 1994, again at the hands of a suicide bomber, a killing strategy the group had perfected. More political assassinations followed and a Norway-brokered peace deal in 2002 didn’t last. (more....)

ஆடி 17, 2010

தேர்தல் முறையில் விரைவில் மாற்றம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பியுடன் அரசியலமைப்புத் திருத்தம் பற்றிப் பேச்சு

அரசியலமைப்பு திருத்தத்தை இந்த வருடத்தினுள் துரிதமாக மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறையில் கீழே நடத்தப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஐ.தே.க.வுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்வரும் நாட்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. போன்ற கட்சிகளுடன் பேச உள்ளதாகவும் அவர்கள் கூறினர். (மேலும்...)

ஆடி 17, 2010

CANADA MONITORS SUSPICIOUS VESSEL

(Stewart Bell, National Post)

Canadian authorities are monitoring a Thai cargo ship after reports it may be on its way to the British Columbia coast with more than 200 migrants on board. The MV Sun Sea was last spotted in the Gulf of Thailand, where it was the subject of a lookout issued by the Philippine Coast Guard, which called it "a suspected people-smuggling vessel." On the weekend, Colombo's Sunday Observer newspaper reported that while the 59-metre vessel was originally headed for Australia it was now sailing toward the Canadian coast. (more....)

ஆடி 17, 2010

மட்டு. - பொலன்னறுவை ‘ரயில் பஸ்’ சேவை ஆரம்பம்

 

பொலன்னறுவை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்புக்கு புதிய ‘ரயில் பஸ்’ சேவை ஒன்று எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. புகையிரத திணை க்களத்தின் இரத்மலானை பொறியியல் பிரிவினரால் மாற்றியமைக்கப்பட்ட இரண்டு இந்திய தயாரிப்பு பஸ் வண் டிகள் ‘ரயில் பஸ்’ வண்டியாக சேவை யிலீடுபடுத்தப்படவுள்ளன. அமைச்சர் குமார் வெல்கம, பொலன்னறுவை ரயில் நிலையத்தில் ரயில் பஸ் சேவையை ஆரம்பித்து வைப்பார்.

ஆடி 17, 2010

பொருளியல் அரங்கம்

மாற்று வழி கூறும் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி

(கணேஷ்)

ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அரசிடமி ருந்து மானியம் பெறுவதில் லை. கொள்கை ரீதியாக மானியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட் டது. இந்த மானியத்தை நிறுத்தினால் 1,600 கோடி ரூபாய் மிச்சமாகும். மொத்த முள்ள 722 இடங்களில் 460 இடங்களை நீக்கிவிட்டால் என்ன மிச்சமாக்க முடியுமா அதை இதில் எடுத்துவிட முடியும். அதைவிட்டு விட்டு, மக்கள் கருத்தைப் பிரதிபலிக்கும் நாடாளுமன்றத்தில் இடங்களைக்குறைப் பதை ஒப்புக் கொள்ள முடியாது என்கிறது கம்யூ னிஸ்ட் கட்சி. (மேலும்...)

ஆடி 17, 2010

'ரூ' போய் குறியீடு வந்தது...!!

அடையாளக் குறியீடோடு இருக்கும் நாணயங்கள் அமெரிக்கப் பணமான டாலர், இங்கிலாந்து பணமான பவுண்டு ஸ்டெர்லிங், ஜப்பான் பணமான யென் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ ஆகியவைதான். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ரூபாயும் இணைகிறது. பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பணமும் ரூபாய் என்றே இருந்ததுதான் இத்தகைய குறியீட்டை உருவாக்குவதன் நோக்கம் என்று மத்திய அரசு கூறுகிறது. தேவநாகரி எழுத்தான 'ர' என்பதையும், ரோமன் எழுத்தான 'ஆர்' என்ற எழுத்தையும் இணைத்து இந்தக்குறியீட்டை உதயகுமார் உருவாக்கினார். (மேலும்...)

ஆடி 17, 2010

மக்கள் படை

20 கிராமங்கள் மூழ்காமல் காப்பாற்றிய சீன ராணுவம்! 

அமைதிக்காலத்தில் பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளிலும் சீனாவின் ராணுவம் மற்றும் காவல்துறை இறங்குவது வாடிக்கையான ஒன்றாகும். வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போது மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த ராணுவம் அந்தப் பகுதிகளிலிருந்து இயங்கத் துவங்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகளில் முகாம்கள் அமைப்பது, படுக்கைகள் விநியோகிப்பது போன்ற பணிகளை அதிவிரைவில் செய்வது ராணுவமும், காவல்துறையும்தான். அதேபோல் வெள்ள அபாயத்தை எச்சரிக்கை செய்ய மக்கள் மத்தியில் செய்திகளைக் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியையும் மிகுந்த கவனத்துடன் செய்து வருகிறார்கள். (மேலும்...)

ஆடி 17, 2010

Prime Minister on six-day official visit to China

Prime Minster D. M. Jayaratne will be on a six-day official visit to China from 16th to 21st July to discuss regarding the bilateral economic development of the two countries.During the visit Prime Minister will hold discussions with high ranked Chinese leaders and investors on approaches to develop Sri Lanka’s export sector and also on poverty alleviation in the region. The main event of the visit will be the Shanghai Expo 2010 held under the theme “Better City, Better Life”. Sri Lanka is among the 246 countries and international organisations participating at the event. Prime Minister during this official visit will discuss matters regarding signing of several agreements in the fields of Education, Tourism, Energy and Agriculture with Chinese leaders and in addition, he will also discuss on areas of technology transfer and training between the two nations. Furthermore, in connection with the grand event at Shanghai, two other events at Kunming and Beijing are also expected to take place where Prime Minister Jayaratne will speak on possibilities of Asian Approaches to Poverty Alleviation.  In addition, he will also talk about possibilities to increase thefrequency for Sri Lankan Airlines to arrive in Beijing, in order to cater to the increasing demand.

ஆடி 17, 2010

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் நாளை

நெல்சன் மண்டேலா முதலா வது சர்வதேச தினம் நாளை ஜுலை 18 ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையால் அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உலகம் முழுவதும் நாளைய தினம் தென்னாபிரிக்கா வின் தந்தையெனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் முதலாவது சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளிலும் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜுலை 18 ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. நெல்சன் மண்டேலா நிற வெறிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததோடு மனித உரிமைக்கும் ஜனநாயகத் திற்காகவும் ஆற்றிய பணிக ளைப் பாராட்டும் முகமாக ஐ.நா. சபை ஜுலை 18 ஆம் திகதியை நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆடி 17, 2010

இலங்கை தொடர்பான தீர்ப்பு, சொந்த மண்ணில் போரில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் எச்சரிக்கையாக வேண்டும் - பாக். பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்

மோதல்களின் இறுதிக்கட்டத்தின் போதான, சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான மீறல்கள் குறித்த பொறுப்புடைமை பொறிமுறை தொடர்பாக ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குமாறு மேற்படி குழு கோரப்பட்டுள்ளது. ஆயுதப்போர்களின்  மாறிவரும் தன்மையானது  சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை வரையறுத்த ஜெனீவா ஒப்பந்தத்தின் விணைத்திறனை இல்லாமலாக்குவதாக உள்ளது. சீருடையிலுள்ள நபர்கள் இணக்கமில்லாதோருடனும் கிளர்ச்சியாளர்களுடனும் சண்டையிடும்போதுகூட இந்த ஒப்பந்தங்களின் கொள்கைகளை பின்பற்றவேண்டும் என்பது முக்கியமானதாகும்.    இலங்கை தொடர்பான தீர்ப்பானது சொந்த நாட்டில் யுத்தத்தில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டும். பொதுமக்களிடமும் காயமடைந்த எதிரிச் சிப்பாய்கள் மீதும் மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும் எனும் கொள்கை புனிதமானதும் மதிக்கப்பட வேண்டியதுமாகும்." (மேலும்...)

ஆடி 16, 2010

யாரும் இல்லாமல் போன எங்கள் குழந்தைகளை நாமே காப்பாற்றுவோம்

நடந்து முடிந்த இறுதியுத்தின் முன்னர் கிளிநொச்சி முல்லைதீவு பகுதிகளில் அதிகமான சிறுவர் சிறுமியர் காணாமல் போயுள்ளனர். கடந்த வருடம் பெப்ரவரிமாதம் எராளமான பிள்ளைகள் காணமல் போனதையடுத்து பெற்றோர்கள் மிகவும் வேதனையடைந்தவண்ணம் தெருத்தெருவாக பிள்ளைகளைதேடி வவுனியா இடம் பெயர்ந்த முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் கண்ணீருடன் விசாரித்து அலைந்தவண்ணம் உள்ளனர்அப்படி காணாமல் போன தனது ஒரேயொரு செல்ல மகளை தேடி தந்தையும் தாயும் மனநிலை பாதிக்கப்பட்டு வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்பா புலம் பெயர்வாழ் உறவுகளே பாதிக்கப்பட்ட இந்த பெற்றோரின் கவலைதீர்க்க உங்களால் முடியுமா??இவர்களது ஒரேயொரு செல்லமகளை யாராவது பார்த்திருந்தாலோ அல்லது உங்கள் உறவுகள்மூலமாக அறிந்திருந்தாலோ மனிதநேயஅடிப்படையில் உதவி புரியகாத்திருக்கும் எங்களுடன் தயவு செய்து தொடர்கொள்ளுமாறு கேட்டுக்கொகிள்றோம் காணாமல் போனவரின்தகவல் தருவோர்க்குதகுந்த சன்மானம் வழங்கப்படும்

நன்றி

வணக்கம்

தொடர்புகட்கு s.p. karan 0041783130889

ஆடி 16, 2010

வவுனியாவில் வீரமக்கள் தினம்!

இன்றையதினம் வீரமக்கள் தினத்தின் இறுதி நாளாகும். தமிழீழ விடுதலை புலிகளால் கொழும்புநகரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட த.வி.கூ. யின் செயலர் அமரர் அமிர்தலிங்கம்கொல்லப்பட்ட யூலை-13ம் திகதியில் இருந்து புளொட் செயலர் அமரர் கதிர்காமர்உமாமகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட யூலை 16ம் திகதி வரையிலான பகுதியை வீரமக்கள் தினமாக பிரகடனப்படுத்தி வீரமக்கள் தினம் கடந்த 20 ஆண்டுகளாக நினைவுகூரப்பட்டு வருகின்றது. கடந்த 13ம் திகதி மலரஞ்சலியுடன் ஆரம்பமாகிய வீரமக்கள் தினத்தின் இறுதி நாள் இன்றாகும். இன்றையதினம் வவுனியா கோயில் குளம் உமாமகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள அவரது சமாதியில் நினைவஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து அஞ்சலி கூட்டமும் இடம்பெறும் என்று புளொட் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்றைய நிகழ்வில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட அவ் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் சக விடுதலை அமைப்புக்களின் பிரதிநிதிகள், தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரணித்த போராளிகள், பொதுமக்;கள், தலைவர்கள், கல்விமான்களுக்கு தமது அஞ்சலியை தெரிவிப்பர் என்று புளொட் அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆடி 16, 2010

தமிழே இவர்களை மன்னித்து விடு

(மோகன்)

சினிமாவில் ஆடி களைத்து

உடல் கொஞ்சம் ஆட்டம் காண தொடங்கியதும்

அரசியலில் ஓய்வூதியத்துடன் ஓய்வெடுக்க

அதே ரசிகக் கண்மணிகள் ஓயாமல் உழைத்தும் கொடுப்பார்கள்

கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிகளுக்கு

பல்கலைக்கழங்களும்

தங்கள் பங்குக்கு தாராளமாக கொடுக்கும்

'டாக்டர்' பட்டம்

தமிழின் பெருமையை பேசிய

அண்ணாத்துரைக்கு 'அறிஞர்' பட்டம்

தமிழனாய் பெருமை சேர்த்த

விஞ்ஞானி அண்ணாதுரைக்கு

எதையும் கொடுப்பதில் இல்லை நாட்டம்

(மேலும்...)

ஆடி 16, 2010

கனடாவை நெருங்கும் அபாயம்

கிரீன்லாந்தில் ஏழு சதுர கி.மீ. பனிப்படிவம் நள்ளிரவில் உடைந்தது 

கிரீன்லாந்தில் உள்ள ஜேக்கப்ஷான் இஸ்ப்ரே பனிப் படிவத்தின் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பள வுள்ள ஒரு பகுதி ஜூன் 6 மற்றும் 7க்கும் இடைப் பட்ட இரவுப் பொழுதில் உடைந்து தனியாக மிதக் கிறது. கனடாவின் கிழக்கு கடற்கரையை இது நெருங் கக் கூடும் என்று ஆராய்ச் சியாளர்கள் கூறுகின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன் டைட்டானிக் கப்பலை முட்டி மூழ்கடித்த பனிப்பாறை இங்கிருந்துதான் உடைந்து வந்ததாக நம்பப்படுகிறது. மறுபடியும் ஒரு பனிப்படிவம் உடைந் துள்ளது. இது தெற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. கனடாவின் கிழக்கு கடற் கரையில் கடல் வணிகப் பாதையை மறிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்...)

ஆடி 16, 2010

இந்தியா - பாக். பேச்சுவார்த்தை

டேவிட் ஹெட்லி தந்த தகவல் அடிப்படையில் மும்பை தாக்குதல் குற்றவா ளிகள் மீது பாகிஸ்தான் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியு றவுத் துறை அமைச்சர் ஷா மகமூத் குரேஷியிடம் இந் திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தினார். இந்தியா-பாகிஸ்தான் இருநாட்டு நம்பிக்கை மேம் பாட்டு நடவடிக்கையாக இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச் சர்கள் பேச்சு வார்த்தை வியாழனன்று இஸ்லாமா பாத்தில் நடைபெற்றது. (மேலும்...)

ஆடி 16, 2010

மறதியைப் போக்க உடலுழைப்பு

உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு முதுமை மறதி நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள் அமெரிக்காவின் பாஸ்டன் மாகாணத்தில் உள்ள பெண்கள் மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர்கள். சுமார் 1,200 முதியவர்களின் கடந்த 20 ஆண்டுகால மருத்துவ ஆவணங்களைப் பரிசோதித்தே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள். அதேபோல் தேநீர் அருந்துபவர்களுக்கும் இந்த மறதி நோய் முதுமையில் வருவது குறைவாகவே உள்ளது என்றும் தங்கள் ஆய்வில் அவர்கள் கூறுகிறார்கள். வைட்டமின் `டி’ குறைவும் இந்த மறதி ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருக்கிறது என்பது அவர்கள் கருத்தாகும்.

ஆடி 16, 2010

வாழத் துடிக்கும் ஒரு தொழில்

(இ.முத்துக்குமார்)

ஹூண்டாய், நோக்கியா போன்ற சில ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெறும் பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் பல வகையில் அரசு சலுகைகளை வழங்குகிறது. ஆனால் 6 லட் சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் கைத்தறிக்கு பெரிய முதலீடு எதுவும் வழங்கவில்லை. மின்சார பற்றாக்குறை உள்ள நமது மாநிலத்தில் மின் பயன்பாடே இல்லாமல் நடைபெறும் ஒரு மிகப்பெரிய தொழில் இது மட்டுமே இருக்க முடியும். 6 லட்சம் வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதில் அரசு தோல்வி அடைந்தால் பெரும் கொந்தளிப்பும் சமூக அமைதி யின்மையே உருவாகிடும் இதுதான் பல நேரங்களில் பட்டினிச்சாவு, கஞ்சித் தொட்டி திறப்பு என்கிற பல வெளிப்பாடுகளை அவ்வப்போது காண்கிறோம். இது மேலும் பெரிதாக வெடிக்காமல் இருக்க அரசு விழித் துக்கொள்வது நல்லது. (மேலும்...)

ஆடி 16, 2010

இந்திய ரூபாய்க்கு புதிய சின்னம் அறிமுகம்

இந்திய ரூபாய்க்கு சின்னம் உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. வெற்றிபெறுபவருக்கு இந்திய ரூபாய் 2.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர். அதற்கமைய அனுப்பிவைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சின்னங்களை ஐந்துபேர்கொண்ட நடுவர்குழு பரிசீலித்து, அதில் ஐந்து சின்னங்களை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. அந்த ஐந்து சின்னங்களிலிருந்து கான்பூரில் ஐஐடி படிக்கும் மாணவர் உதயக்குமார் உருவாக்கிய சின்னத்தினை தேர்வுக்குழு தெரிவுசெய்திருக்கிறது. இந்திய நாணயத்தின் மதிப்பு சர்வதேச மட்டத்தில் உயர்ந்திருக்கும் இத்தருணத்தில் இந்தச் சின்னம் அறிமுகப்படுத்தியிருப்பது பொருத்தமானதே. இன்றும் ஆறு மாதங்களில் இந்தச் சின்னம் நடைமுறைக்கு வரும்.  (மேலும்...)

ஆடி 16, 2010

வாழும் ஜனநாயகம்....?

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு _

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் இன்று காலையில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மதுபோதையில் சென்று மாநகரசபை ஊழியர் ஒருவரை ( மேற்பார்வையாளர்) முறைகேடான வார்த்தைகளால் பேசி தாக்கச் சென்றதாகவும் மாநகர சபை வாசலில் குந்தி இருடா என மிரட்டி வாசலில் இருக்க வைத்து அவமானப்படுத்தியுமுள்ளார் எனவும் அதற்கெதிராக அவர்கள் இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆடி 16, 2010

இந்திய பெருங்கடலில் நீர்மட்டம் அதிகரிப்பு

இந்தியப் பெருங்கடலில் சில பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா, வங்காளதேசப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பசுங்கூட வாயு அளவு அதிகரித்து வருவதை தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து கடல்நீர் மட்டமும் அதிகரித் துள்ளது என அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக் கழகத்தின் சூழ்நிலை மற்றும் கடல் அறிவியல் துறை இணை பேராசிரியர் வெய்கிங் ஹன் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆய்வு அறிக்கை ‘ஜியோ சயின்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது. பசுங்கூட வாயு பெருக்கத்தால் வங்காள விரிகுடா, அரேபிய கடல் மற்றும் இலங்கை கடல் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.(மேலும்...)

ஆடி 15, 2010

போர் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்

(மோகன்)

ஓட்டகத்திற்கு இடம் குடுத்த கதையை போல நம்ம சிலோன் தமிழன்களுக்கு ஒட்ட இடம் கொடுத்த நிலையா போச்சு கனடாக்காரன்களுக்கு. இவன் என்னடாவென்றால் எலக்ஸன் நடத்துற சாக்கில கனடாவை தொகுதி, மாவட்டம், வட்டாரம் என அக்குவேற ஆணிவேறா பிரிச்சு வைச்சிருக்கிறான், கூடிய சீக்கிரம் கனடாவை பிளாட் போட்டு வித்தாலும் ஆச்சரியப்பட முடியாது. இப்ப லேட்டஸ்டா உலகத்தமிழரும் ஒரு எலக்ஸன் நடத்தினவையள். அதில இந்த இந்த தொகுதிக்கு இத்தனை இத்தனை மெம்பர் செலக்ட் பண்ணப்படுவினம் என்று வடிவா போட்டினம் அப்படியே கீழ போய் பார்த்தால் செலக்ட் பண்ணப்படவேண்டிய மெம்பரும் போட்டியிடுற நம்பரும் சேம், இது என்ன பப்பி சேம் அட அதுகூட பரவாயில்ல சில தொகுதிக்கு தேவையான வோன்டட் மெம்பருக்கே போட்டி போடுவதெற்கே நொட் இனப் மெம்பர். (மேலும்...)

ஆடி 15, 2010

CANADIAN SRI LANKANS MEET CANADIAN HIGH COMMISSIONER IN SRI LANKA

Members of “Friends of Sri Lanka-Canada” and a group of Tamil and Sinhala community members in Toronto met Canadian High Commissioner in Colombo, His Excellency Bruce Levy on July 12th 2010 at a Mississauga restaurant to discuss the present situation in Sri Lanka. Earlier Mr. Levy had promised “Friends of Sri Lanka-Canada” to meet Canadian Sri Lankans in Toronto when he visit to Toronto. At the discussion Mr. Levy described the situation in Sri Lanka is far better than he imagined before he went there and he even recommend Canadian foreign affairs to remove the travel advisory on Sri Lanka. “If I can travel from one end to the other end why not the others” he said. He commends the Sri Lankan government for resettling IDPs much faster than international community was ever expected. Also he expects progress in other avenues as well. He also made comments on VISA rejections of relatives to Canadian Sri Lankans. When raised the matter of local officials at the high commission mistreating visa applicants, High Commissioner said he will look in to that matter and promised there will be changes. High Commissioner promised to keep the dialog active, between Diaspora and the High Commissioner.

ஆடி 15, 2010

வெனிஸ் நகரம் உருவான கதை

ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்பட்டதல்ல என்று சொல்வார்கள். அந்த வசனம் வெனிஸ் நகருக்கு மிகவும் பொருந்தக் கூடியது. வரலாற்றின் மத்தியக் காலத்தில்தான் கல்லாலான கட்டடங்கள் கட்டப்பட்டன. அதற்கான அடித்தளமே ஆச்சரியம் தரக்கூடியது. மிக நீளமான பைன் மரங்களும் லொர்ச் மரங்களும் வெட்டப்பட்டு அப்படியே சதுப்பு நிலத்தில் புகுத்தப்பட்டன, வெண்ணெயில் தீக்குச்சிகளை நெருக்கமாக நட்டால் எப்படி இருக்குமோ அப்படி மரங்கள் நடப்பட்டு சதுப்பு மண் மறைக்கப்பட்ட மேலே அமைந்த சமதளத்தின் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டன. உண்மையில் சொன்னால், வீட்டைக் கட்டிப்பார் என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும். வீடு கட்டியாகிவிட்டது. நீர் இருந்து கொண்டே இருந்ததை எப்படிச் சமாளிப்பது? இந்தக் கேள்விக்கான பதிலாக வடிகால் அமைப்பு முறையைக் கண்டுபிடித்தனர். (மேலும்...)

ஆடி 15, 2010

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுங்கள்

வடபகுதி அரச ஊழியர்கள் மத்தியில் ஜனாதிபதி

ஜனாதிபதி தமிழில் உரையாற்றுகிறார். இன்று ஒரு வரலாற்று பூர்வமான நாளாகும். நாட்டின் தலைவர் ஒருவர் கிளிநொச்சியில் அரசாங்க அதிகாரிகளிடையே உரையாற்றுவது இது முதல் முறை என நான் நினைக்கிறேன். வட மாகாணம் முழுவதும் வாழ்வதற்கு மிகவும் உகந்த சூழலுடன் கூடிய இடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் உங்களிடையே உரையாற்ற முடிந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அனைவரும் பொறுப்புமிக்க அரசாங்க ஊழியர்கள். உங்கள் சேவை நாட்டு மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. அந்தக் காலத்தில் எமது தமிழ் நண்பர்கள் பலர் அரச சேவையில் இருந்தனர். அதனை கெளரவமான சேவை என்று மக்கள் கருதினர். அவர்களில் சிலர் முக்கியமான உயர் பதவிகளை வகித்தனர். அதனை எவரும் மறுக்கமுடியாது. காலனித்துவ நாட்களைப் போலன்றி இப்போது நாம் அனைவரும் சமமானவர்கள். எமக்கிடையே வர்க்கப் பாகுபாடு இல்லை. உங்களுக்கு இலவச கல்வியை பெறும் வாய்ப்பு இருந்துள்ளது. எனவே அதில் ஒரு பகுதியை நீங்கள் தாய்நாட்டுககு திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. (மேலும்...)

ஆடி 15, 2010

பாங்கி மூனின் ஆலோசனைக் குழுவை எதிர்த்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

 

ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை தொடர்பில் நியமித்த ஆலோசனைக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ. நா. தலைமை அலுவலகம் முன்பாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். ஜெனீவாவில் நேற்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நோர்வே உட்பட ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையர்கள் சுவிஸ் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறைமையை பாதுகாப்ப தற்கான அமைப்பொன்றினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதேவேளை, நியூயோர்க், பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆர்ப்பாட் டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த க்கது.

ஆடி 15, 2010

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உருவான தருணங்கள்

(சி. குமாரபாரதி)

இந்த மிலேனியத்தின் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு மைல் கல் கலீலி யோவின் பூமியையும் அண்டங்களைப் பற்றிய கோட்பாடுகள் பூமி தட்டை யானது அல்ல. அது உருண்டை என்பதை பல கணிப்புகளுடன் சரியா கவே அனுமானித்தார். பூமி உருண்டை வடிவானது என இப்போ நாங்கள் ஒத்துக்கொண்டாலும் பெரும்பாலும் அதை தட்டையாகவே இப்பொழுது கூட பாவனை செய்கிறோம்.  இந்தப் பாவனையில் நாளாந்த நன்மைகள் உண்டு. உதாரணமாக வீடு கட்ட திட்டம் போடவோ, வீதி அமைக்கவோ நில அளவை செய்யும் பொழுதோ இந்த அண்ணளவு பிரமாணம் கயிறடித்து சாலை அமைக்கிறோம். தவிரவும் நம்மில் எத்தனை பேர் பூமி உருண்டையானது என்னும் நினைப்பில் வாகனங்களை ஓட்டுகிறோம். ஆக உலகம் தட்டையானது என்று சொல்வது அவ்வளவு முட்டாள்தன மாகாது. (மேலும்...)

ஆடி 15, 2010

சி.ஐ.ஏ யின் பிடியிலிருந்த ஈரான் விஞ்ஞானி
வாஷிங்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தஞ்சம்

நேற்று முன்தினம் ஷெஹ்ராம் அமிரி அமெரிக்க உளவுப் பிரிவினரின் பிடியிலிருந்து தப்பி வாஷிங்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் சி.ஐ.ஏ. யிடமிருந்து தப்பிய இவர் எவரது கண்ணிலும் படாமல் வேஜினியா மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வந்துள்ளார். இதையடுத்தே அமெரிக்கா முதற்தட வையாக ஈரான் விஞ்ஞானி பற்றி வாய்திறந்தது. இவரைத் தாம் கடத்தவில்லையென்றும் சுயவிருப்பத்தின்படியே அமெரிக்க உளவுப்படையினருக்கு ஈரான் குறித்த தகவல்களை வழங்கியதாக அமெரிக்கா கூறியது. ஆனால் ஜுன் மாதம் வெளியான இவரது ஒளிநாடாவில் தான் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார். (மேலும்...)

ஆடி 15, 2010

‘கேரளம்’ என பெயர் மாறுகிறது கேரளா

கேரளா மாநிலத்தின் பெயரை “கேர ளம்” என்று மாற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தெரிவித்தார். புதனன்று சட்டப்பேரவையில் அவர் பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார். எனினும், நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆலோசனைகள், விவாதங்கள் ஆகியவற்றை நடத்தி அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அச்சு தானந்தன் கூறினார். மலையாளத்தில் “கேரளம்” என்று தான் உச்சரிக்கப்படுகிறது. அம்மொழியில் எழு தும்போதும் அவ்வாறு தான் குறிப்பிடப் படுகிறது. எனவே, மாநிலத்தின் பெயரை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆடி 15, 2010

உளவாளிகள் பரிமாற்றம்

(வாகுலன்)

பத்து ரஷ்ய உளவாளிகளையும் பற்றிய விபரங்களை அறிந்த அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் உடனடியாக அவர்களைக் கைது செய்யவில்லை. ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு உளவாளிகளுடன் இவர்ளைப் பரிமாற்றம் செய்வது பற்றிய பேச்சுவார்த்தையை மிக இரகசியமான முறையில் நடத்தி உடன்பாடு கண்ட பின்னரே அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் உடனடியாக வியன்னா விமான நிலையத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர். அதே நேரம் ரஷ்யா தனது சிறையில் இருந்த நான்கு உளவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி வியன்னா விமான நிலையத்துக்கு அனுப்பியது. இந்த நால்வரில் மூவர் இரட்டை உளவாளிகள் ரஷ்ய உளவு சேவையில் இருந்துகொண்டு அமெரிக்காவுக்காக உளவு பார்த்தவர்கள். (மேலும்...)

ஆடி 15, 2010

சூழலியலில் செய்மதி தொழில்நுட்பம்

(சாரதா மனோகரன் )

சூழலியல் நோக்கிலும் செய்மதித் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. முக்கியமாக காடுகள் அழிக்கப்படுதல் நிலங்கள் வரண்டு போதல் போன்ற சூழல் பிரச்சினைகளை இலகுவாக இனங்காண்பதற்கான அடிப்படையாகவும் செய்மதித் தொழில்நுட்பமே அமைந்து விடுகிறது. வனப்பகுதிகளிலோ தோட்டங்களிலோ நோய்களின் பீடிப்பால் ஏற்படும் தாக்கத்தை இனங்காண்பதற்கும் இந்தச் செய்மதிப் புகைப்படங்களே துணைபுரிகின்றன. அடர்ந்த காடுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை இனங்காணவும் இந்தச் செய்மதிப் படங்கள் வழிவகுக்கின்றன. (மேலும்...)

ஆடி 14, 2010

மக்களோடு மக்களாய்

பிரான்சில் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

  • தோழர்கள் உயரிய இலட்சியங்களுக்காக போராடியவர்கள் -  தோழர் அலெக்ஸ்

  • நான் நேசிக்கின்ற தலைவர் அவர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார். - தோழர் தமிழ் நேசன் 

  • தோழர்கள் கண்ட தொலைதூரக் கனவுகளை நனவாக்குவோம் - தோழர் பெர்னாண்டோ

  • EPRLF மக்களின் எதிர்காலம் தொடர்பாக தீர்க்கதரிசனத்துடன் முடிவுகளை எடுத்தது. - தோழர்  கவிஞர் அருந்ததி

  • தோழமையும், ஒற்றுமையான செயற்பாடுகளும் தோழர் நாபா எப்படியான தலைமைப் பண்பைக் கொண்டிருந்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகின்றது. - தோழர் லோகநாதன் ஆசிரியர்

  • தோழர் நாபாவின்  சிந்தனையும் செயற்பாடுகளும் அனைத்து இனமக்களின் நலன் சார்ந்ததாகவே இருந்தது - JVP நந்தன குணசிங்கா 

  • இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு , முழு இலங்கைக்குமான சுபிட்சமான  எதிர்காலம்  என்பதெல்லாம் நாட்டின் சகல துறைகளிலும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது - தோழர் சிவலிங்கம்

  • தோழர்கள்  தமிழ் சமுகத்தில் இருக்கின்ற சகலவிதமான பிற்போக்கு தனங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும் நிராகரித்தவர்கள். - தோழர் சாந்தன்

(மேலும்....)

ஆடி 14, 2010

திருமலை கிரிக்கெட் மைதானப் பணிகளை ஆளுநர் பார்வையிட்டார்

திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் நகரசபையினால் அமைக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத்தை முதல் தர போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக  அமைக்கப்பட்டு வருகின்றது. மட்டுப்படுத்தப்பட்டு புற்கள் பதிக்கப்பட்ட பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதன் அமைப்பு வேலைகளை முன்னெடுக்கவுள்ளது. 2012ஆம் வருடம் இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் முன்னேற்றமாக நாட்டின் பல இடங்களிலும் முதல்த்தர கிரிக்கெட் மைதானங்கள் அமைக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது. முதல் கட்டமாக  மைதான மத்தியில் ஒரு ஆடுகளமும், 3 பயிற்சிக்கான பக்க ஆடுகளங்களும் இதில் அமைக்கப்படவுள்ளன. (மேலும்...)

ஆடி 14, 2010

கிளிநொச்சி மீள்குடியேற்ற மக்கள் - ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது கிளிநொச்சி விஜயத்தின் போது மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக சற்று முன்னர் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் குழுவினர் இணைந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். கிளிநொச்சி நகரத்தில் இதுவரை ஒரு லட்சம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆடி 14, 2010

அமிர் இருந்திருந்தால் தமிழர்களின் துன்பங்களைத் தீர்க்க அயல் நாடுகளின் உதவியைப் பெற்றிருப்பார்  – மாவை

‘அமிர் இல்லாது இருந்திருந்தால் தமிழ் மக்களின் துயர் தீர்க்கப்பட்டிருக்கும்’ - அன்று சொன்னார்கள்

‘அமிர் இருந்திருந்தால் தமிழ் மக்களின் துயர் தீர்க்கப்பட்டிருக்கும் ‘- இன்று சொல்கின்றார்கள்

(மேலும்....)

ஆடி 14, 2010

அருந்ததிராய்க்கு சில கேள்விகள்

(கே.ஆர்.)

ஆனந்தவிகடனே மீண்டும் ஒருமுறை அருந்ததிராயிடம் பேட்டி கண்டு நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கான அவரது விடை களைப் பிரசுரித்தால் நல்லது. ‘முற்போக்கு முகம்’ என்றால் சகட்டு மேனிக்கு மாவோ யிஸ்ட்டுகள் தவிர உள்ள எல்லோரையும் வசைபாடுவதுதானா என்பதை ஆனந்த விகடன் நமக்குச் சொன்னால் நல்லது. மாவோயிஸ்ட்டுகள் போலவே மாற்றுக் கருத்தாளர்களையும் முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளையும் அப்பாவி சிங்கள், முஸ்லீம், தமிழ் மக்களை கொன்று குவித்த புலிகளை ஆதரித்து செயற்பட்ட கருத்து வெளியிட்ட அருந்ததி ராய் இதற்கும் விளக்கம் அளிப்பாரா?  (மேலும்....)

ஆடி 14, 2010

தர்ஷிகா மரணம் தொடர்பான சந்தேக நபரை கைது செய்ய உத்தரவு

வேலணை வைத்தியசாலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சரவணை தர்ஷிகாவின் மரணம் தொடர்பாக சந்தேக நபரான வைத்தியர் செனவிரட்னவை கைது செய்யுமாறு இன்று  ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸாரிடமே இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.  இதேவேளை, இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  ஏற்றுக்கொண்டததை அடுத்து இன்று நண்பகல் 12 மணியுடன் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. தர்ஷிகாவின் குடும்பத்திற்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட வேண்டும், குறித்த வைத்தியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வைத்தியரை பணிநீக்கம் செய்ய வேண்டும், அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும், மரணம் தொடர்பில் அனுதாபம் தெரிவிக்காமைக்கு காரணம் கூற வேண்டும், தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் வரை தாம் இரவு நேரத்தில் வேலை செய்யமாட்டோம், மருத்துவ தாதிமார்களை அடிமைப்படுத்தும் செயலை நிறுத்த வேண்டும் ஆகிய 7 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆடி 14, 2010

திரு. அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர்நாயகமும், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா தலைமையில்  இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரை கூட்டணியின் முன்னால் உடுவில் கிராமசபை தலைவர் ச.முத்துலிங்கம்.  கூட்டணியின் முத்த உறுப்பினர்களில் ஒருவரான த.பூலோகரட்ணம் ஆகியோர் ஏற்றினர்.  அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலத்தப்பட்டது. தொடர்ந்து நினைவுரைகள் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் செ.முத்துலிங்கம், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் செ. விஜயரத்தினம், ச.முத்துலிங்கம், திருஞானசம்பந்தர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்த நன்றியுரையினை தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகச்செயலாளர் த.கஜன் நிகழ்த்தினார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆடி 14, 2010

அரசியல் தலைவர்களுடன்

பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், மேல் மாகாண ஆளுநருமான அல்ஹாஜ் அலவி மௌலானா அவர்களுடனான சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்


 

ஆடி 14, 2010

இணைப்புக் கோரிக்கை தீர்வைச் சிக்கலாக்கும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இவ்விரு மாகாணங்களினதும் இணைப்பு நீக்கப் பட்டதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர். வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்ததில் தங்களுக்கு எவ்வித பங்கும் இல்லையென்று கூட்டமைப்புத் தலைவர்கள் கூற முடியாது. இரு மாகாணங்களையும் வரலாற்று ரீதியான வாழ்புலங்களாகக் கொண்ட தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் அந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட்டிருந்தால் தற்காலிக இணைப்பு இதுவரையில் ஒருவேளை நிரந்தரமானதாக மாறியிருக்கலாம்.  (மேலும்....)

ஆடி 14, 2010

 

சட்டவிரோத கடல்மண் அகழ்வு:

கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதி அமைச்சர் ரோஹித திட்டம்

 

சட்ட விரோதமாக கடல்மண் அகழும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதி துறைமுக அபிவிருத்தி மற்றும் விமானச் சேவை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார். துறைமுக அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  கடந்த காலங்களில் சட்டவிரோதமாக கடல்மணல் அகழும் நடவடிக்கைகளைத் தடுக்க ஒழுங்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறிய அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறினார். கடலோரமாக உள்ள பொலிஸ் நிலையங்களின் ஒத்துழைப்பையும் இதற்காகப் பெறவுள்ளதாகவும் கடலோரப் பாதுகாப்பு சட்டம் குறித்து பொலிஸாரை அறிவூட்ட திட்டமிட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதே வேளை நாடு பூராவும் கட லோர பூங்காக்கள் அமைக்கத் தீர்மானித் துள்ளதாகவும் முதலாவது கடலோரப் பூங்கா களுத்துறையில் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அமைச்சர் ஐயா இதனை யாழ்பாணத்திலும் கடுமையாக, ஒழுங்கா கடைப்பிடியுங்கோ உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் ஐயா என யாழ் மக்கள் அலறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் (கள்ள, நல்ல?)மணலின் விலை விண்ணைத் தொடுகின்றனவாம்.

ஆடி 14, 2010

பேரரசர் ஒகஸ்டஸ் சீசர்

ஒரு சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்..... மீண்டும் எழுச்சியும்
(கு.வெ.கி. ஆசான)

ஜுலியஸ் சீசருக்கு முன்பு இருந்தே பல ஆண்டுக் காலம் உராம பேரரசு உள்நாட் டுப் போரி னால் அலைக் கழிக்கப்பட்டது. மக்கள் மிகப் பெரும் இடர்களுக்கு ஆட்பட்டனர். ஒக்டேவியன் உறுதியான வகையில் ஆட்சிப் பீடம் ஏறினார். அமைதியை ஏற்படுத்தினார். அவர் தன்னைச் சர்வாதிகாரி என்றோ அரசர் என்றோ அறிவித்துக் கொள்ளவில்லை. குடியரசு முறைக்கு உரிய சட்ட மன்றம், ஆட்சிமன்றம் (செனட்) ஆகியவற்றைக் கலைக்கவில்லை. அந்த மன்றங்களும் அவருடைய விருப்பத்திற்கு எதிராக நடக்கவில்லை. மக்கள் நலம் நாடிய மா மன்னர் போன்றே நடைமுறையில் அவர் ஆட்சி செய்தார். அவருக்கு அகஸ்டஸ் (பெருமிதமானவர்) என்ற பட்டத்தைச் செனட் சபை அளித்தது. பேரரசு மேலும் விரிவடைய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ந்து போர்களை நடத்துவதை அகஸ்டஸ் நிறுத்திக்கொண்டார். (மேலும்....)

ஆடி 14, 2010

மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா

 

அமெரிக்கா வாழ் இந்தியரான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வரும் 2012ம் ஆண்டில் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க வாழ் இந்தியரான சுனிதா வில்லியம்ஸ், குஜராத்தை பூர்விகமாகக் கொண்டவர். விண்வெளி வீராங்கனையான சுனிதா ஏற்கனவே விண்வெளிக்கும் பயணம் மேற்கொண்டு திரும்பியவர். அப்போது, விண்ணில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் 195 நாட்கள் தங்கியிருந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவதற்காக சுனிதா, வரும் 2012 ஜூனில் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொள்கிறார். இதை, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சுனிதா வில்லியம்ஸ் 1998ம் ஆண்டு நாசாவில் விமான இன்ஜினியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2006ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற 14 பேர் குழுவின், சுனிதா இடம் பெற்றார். சர்வதேச விண்வெளி மையத்தில் 195 நாட்கள் தங்கியிருந்த அவர், நான்கு முறை விண் நடை மேற்கொண்டு சாதனை படைத்தார். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த விண்வெளி வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆடி 14, 2010

யாழ். அரச அதிபராக இமெல்டா நேற்று பொறுப்பேற்பு

 

யாழ்ப்பாண அரசாங்க அதிபராக தாம் நேற்று பதவியேற்றுள்ளதாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாண செயலகத்தில் நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு அவர் தமது பொறுப்புக்களை முன்னாள் அரசாங்க அதிபர் கே. கணேஸிடம் இருந்து ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இந்தப் பதவி ஏற்பு கடந்த முதலாம் திகதி நடைபெறவிருந்த போதும், அது பின்னர் பிற்போடப்பட்டது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் பணிப்பிற்கு ஏற்ப தாம் யாழ்ப்பாண அரசாங்க அதிபராகக் கடமையை ஏற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

ஆடி 14, 2010

நேபாளத்தில் பெரும்பான்மை அரசை அமைப்பதில் தொடர்ந்தும் இழுபறி

நேபாளத்தில் புதிய பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதில் தொடர்ந்தும் இழுபறியேற்பட்டுள்ளது. கட்சிகளிடையே இணக்கம் காண்பதில் தொடர்ந்தும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேபாளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மாதவ்குமார் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னெடுத்த முயற்சிகள் கடந்த ஜூனில் தோல்வி யடைந்தது. இதையடுத்து பெரும்பான்மை அர சாங்கத்தை அமைக்கும்படி ஜனாதிபதி ராம்பராவ் யாதவ் அழைப்பு விடுத்தார். ஆனால் இதுவரைக்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் வெற்றியளிக்க வில்லை. நேபாளத்தில் நீண்டகாலமாகப் போராடி வந்த மாவோயிஸ்டுகள் 2006 ஆம் ஆண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டனர். பின்னர் நேபாளில் நடந்த பாராளுமன்றத் தேர் தலில் போட்டியிட்டு அதிக ஆசனங்களை வென்று கூட்டுக் கட்சியுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்தனர். மாவோயிஸ்ட் பிரதமருக்கும் ஜனாதி பதிக்குமிடையே ஏற்பட்ட அதிகார மோதலையடுத்து ஒரு வருடத்துக்கு முன்னர் அரசைவிட்டு வெளியேறினர். இவ்விடயத்தில் நாங்கள் மிக வேகமாகவுள்ளோம். ஆனால் ஏனைய கட்சிகள் இவ்விடயத்தில் மனமுவந்து நடந்து கொள்ளவில்லையென மாவோ யிஸ்ட்டுகளின் பிரதித் தலைவர் தெரிவித்தார். அரசியலமைப்பில் மாற்றம் செய்தல் மன்னராட்சியை முற்றாக இல் லாது செய்தல் போன்ற நிபந்தனைகளுடனே மாவோயிஸ்டுகள் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில்

ஆடி 14, 2010

கிளிநொச்சி, வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையம்

வவுனியாவுக்கு வடக்கே எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான எரிபொருள் விநியோக உப நிலையம் நேற்று வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது. இதுவரை காலமும் அனுராதபுரத்திலிருந்தே எரிபொருள் விநியோகம் பெளசர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது ரயில் மூலம் வட பகுதிக்கான எரிபொருள் விநியோகமும் நேற்று ஆரம்பிக்கப்பட்டு ள்ளது. அத்துடன் வன்னி மாவட்டத்தில் 13 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கும் திட்டத்தின் கீழ் எட்டாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைச்சர் சுசில் கிளிநொச்சி நகரில் திறந்துவைத்தார். 1989 களில் வவுனியாவில் இயங்கிவந்த எரிபொருள் விநியோக நிலையம் கடந்த காலங்களில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தது. வவுனியா குட்செட் வீதியில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலமைந்துள்ள மேற்படி விநியோக உப நிலையம் மீண்டும் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. (மேலும்....)

ஆடி 14, 2010

யாழ்தேவி ரயில் சேவை ஓகஸ்டில் ஓமந்தை வரை நீடிக்கப்படும்

 

யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாத முடிவுக்குள் ஓமந்தை வரை நீடிக்கப்படும். தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையில் ரயில் பாதையை மீண்டும் நிர்மாணிப்பதற்கான பணிகள் துரிதப்படுத்த ப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சியுள்ள நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஓகஸ்ட் மாதத்திற்குள் ரயில் பாதை நிர்மாணிப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு யாழ்தேவி ரயில்சேவை ஓமந்தை வரை நீடிக்கப்படும். ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிப் பதற்கு சிங்கர் தனியார் நிறுவனம் நிதியுதவியளிக்க முன் வந்துள்ளது. வலது குறைந்தோருக்கு தேவையான வசதிகளைக் கொண்டதாக இந்த ரயில் நிலையம் அமைக்கப்படவிருக்கிறது. இவ்வாறான வசதியை இலங்கையில் கொண்டிருக்கும் ஒரே ரயில் நிலையமாக ஓமந்தை ரயில் நிலையம் எதிர்காலத்தில் திகழும் என்றும் கூறினார்.

ஆடி 14, 2010

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த சாதாரண ஊழியர்

பாகிஸ்தானின் வட பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஐம்பது வயதுடைய கான் என்பவர் ஹோட்டலை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். வருடமொன்றுக்கு இருநூறு டொலரை கான் சம்பளமாகப் பெற்று வந்தார். சம்பவம் நடந்த தினம் ஜப்பான் பிர ஜையொருவர் தங்கியிருந்த றூமை துப் புரவு செய்யச் சென்றார். அப்போது அறையில் தங்கிய நபர் மறதியில் விட்டுச் சென்ற பணப் பெட்டியைக் கண்டு திறந்து பார்த்த பொழுது ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர் பணம் காணப்பட்டது இப்பெட்டியை அவ்வூழியர் ஹோட்டல் நிர்வாகியிடம் ஒப்படைத்து தனது நேர்மையைப் பறைசாற்றியமை குறிப் பிடத்தக்கது. இவரது நேர்மையைப் பாராட்டிய ஹோட்டல் நிர்வாகம் 10 ஆயிரம் அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்கிய போதும் ஊழியர் இதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பணப்பெட்டியைக் கண்டெடுத்த ஊழியர் இது தொடர்பாகக் கூறியபொழுது தான் எப்போதும் மனித நேயத்தையே நேசிக்கிறேன் தவறுதலாகப் பணம் சம் பதிக்கும் எண்ணம் தன்னிடமிருந்த தில்லையென்றும் விளக்கினார். மிக மோசமான வன்முறைகள் தாண்டவமாடும். பாகிஸ்தானில் இவ்வாறான நல்ல உள்ளம் படைத்தவர்களும் உள்ளனர்.

ஆடி 13, 2010

நாங்கள் பிரிவினைவாதிகள் அல்லர் எமது கோரிக்கைகள் நியாயமானவை என்று சிங்கள மக்களுக்கு முதலில் நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும்.

யாழ் உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் வழங்கிய பேட்டி (பகுதி 5)

தெற்கில் எமது மக்கள் இருக்கிறார்கள். அதேபோல சிங்களவர்களும் 30 வருட யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் உள்ள அவர்களின் நாகவிகாரையிலும் நயினாதீவிலுள்ள பௌத்த விகைரையையும் தரிசிக்கவும், சுற்றுலா நோக்கிலும் இங்கு வருகின்றனர். இவ்வாறு வருகின்றவர்களை எமது நிலத்தில் குடியேறுவதற்காகவே வருகிறார்கள் என குற்றம் சாட்டுவது சரியானது அல்ல. வன்னியில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக தமிழர்களின் மத்தியில் பலஅச்சங்கள் தோன்றியிருப்பது இயல்பானது. அவை தொடர்பாக அரசாங்கம் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். ஊகங்களின் அடிப்படையில் எதனையும் என்னால் கூறமுடியாதுள்ளது. ஆனால் இவ்வாறான செயலுக்கு அரசே பெரும் பொறுப்பாகும். அதேவேளை ஆதாரமற்ற ஊகங்களை எமது மக்கள் மத்தியில் விதைக்கக் கூடாது என்பதில் நாமும் சமூகப் பொறுப்புணர்வுடன் கவன இருக்க வேண்டும். (மேலும்....)

ஆடி 13, 2010

புளொட் அமைப்பின் வருடாந்த வீரமக்கள் தினம்

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) வருடாந்தம் அனுஷ்டிக்கும் வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின. வவுனியா கோவில்குளம் அமரர் உமா மகேஸ்வரன் சமாதிக்கு சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர் சு.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 21ஆவது வீரமக்கள் தின இறுதிநாள்  அஞ்சலி வைபவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமாதி முன்றலில் நடைபெறும். விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த தமிழ்த் தலைவர்கள், அனைத்துப் போராளிகள், பொதுமக்களை நினைவுகூர்ந்து வீரமக்கள் தினத்தை புளொட் அமைப்பு வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது.

தமிழ் எனும் அரசியல் 

யாருக்காக நடந்தது செம்மொழி மகாநாடு? 

(வாஸந்தி)

யாருக்கு நடந்த விழா அது? யாருக்கும் அதைக் கேட்கத் தோன்றக்கூட இல்லை. அது அசம்பாவிதமான கேள்வி. முதல்வர் கருணாநிதியின் படைப்புகளைப்பற்றி 21 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவருடைய மகள் கனிமொழியின் கவிதைகள் பற்றி மூன்று கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. செம்மொழி மாநாட்டின் அழைப்பின் பேரில் வந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் , வந்த மிகச் சில சிறந்த ஆய்வாளர்கள் தங்கள் அமர்வுகளில் இருந்த காலி இருப்பிடங்களைக்கண்டு நொந்தார்கள். அவமானப் பட்டார்கள். ஈழத் தமிழ் படைப்பாளிகளைக் காணோம். ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி கொழும்பிலிருந்து வருகை தந்தது இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதியின் மீது எந்த வருத்தமும் இல்லை என்று தெளிவு செய்துவிட்டது. அது போதாதா கருணாநிதிக்கு, விஷமிகள் பலரின் வாயை அடைக்க? தமிழின விரோதி என்று அவரைப் பழித்தார்கள்! அவரை. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று முழங்கியவரை. விரலைக் கீறி தனது குறுதியால் 'தமிழ் வாழ்க' என்று 14 வயதில் சுவரில் எழுதியவரை. தொடர்ந்து தமிழுக்காக, தமிழினத்துக்காக வாழ்பவரை. (மேலும்....)

ஆடி 13, 2010

முதன்மை விளையாட்டின் முதல் அணி

உலகின் முதன்மை விளையாட்டு என்ற பெருமையை கால்பந்து மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலகில் உள்ள 257 நாடுகளி லும் கால்பந்து ஆடப்பட்டு வருகிறது. 2010 உலகக் கோப்பையின் தகுதிச் சுற்றுப்போட்டிக ளில் 238 தேசிய கால்பந்து அமைப்புகள் கலந்து கொண்டுள்ளன. தகுதிப்போட்டிகளில் வென்ற 31 நாடுகளும், போட்டியை நடத்தும் நாடான தென்ஆப்பிரிக்காவும் ஆக 32 நாடுகள் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றுள்ளன. ஞாயி றன்று நடந்த இறுதிப் போட்டியை மட்டும் 70 கோடிப் பேர் தொலைக்காட்சிகளில் கண்டு களித்துள்ளனர். ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் அமர்ந்து போட்டிகளை ரசித்தவர்களின் எண் ணிக்கை இதில் அடங்காது. (மேலும்....)

ஆடி 13, 2010

இணக்கம் நீடிக்குமா?

நிறைவேற்று அதிகார பிரதமர் பதவி: ஜனாதிபதி – ரணில் இணக்கம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறும் வகையிலான நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் பதவியை ஏற்படுத்துவற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இவ்விருவரும் இன்று மாலை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்படி இணக்கப்பாடு ஏற்பாட்டுள்ளது. (மேலும்....)

ஆடி 13, 2010

உண்மைகள் உறங்கும் சிலகாலம்.....?

பெருந்தொகை சுனாமி நிவாரண நிதியை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வீணடித்துவிட்டன

(சாகரன்)_

புலம் பெயர் நாடுகளில் சேகரிக்கப்பட்ட பல மில்லியன் டாலர்கள் புலிகள் அமைப்பிடமே கொடுக்கப்பட்டது, (புலிகளின் பினாமி அமைப்பு என்று அழைப்பதை விட புலி அமைப்புக்கள் என்று அழைப்பதுவே சாலப் பொருத்தமானது). இவ் நிதிகள் வடக்கு கிழக்கு இற்கு புலிகளுக்கே அனுப்பப்பட்டன. (வடக்கு கிழக்கில் பொது அமைப்புக்கள் என்று காட்டப்பட்டாலும் அன்றைய கால கட்டத்தில் இவை புலி அமைப்புக்களாகவே செயற்பட்டன. இதில் ரிஆர்ஓ முக்கியமானது. சில சர்வதேச தன்னார்வு அமைப்புககள் செயற்பாட்டாலும் இதன் ஊழியர்கள் வடக்கு கிழக்கு தமிழர்களே பெரிதும் வேலை செய்தனர். இவர்கள் நிச்சயமாக புலிகளின் ஆட்களாகவே செயற்பட்டிருக்க முடியும். அன்றேல் அன்றே மண்ணோடு மண்ணாக போய் இருப்பார்கள். ஒட்டு மொத்தமாக பார்த்தால் புலிகளால் பொது மக்களின் உண்மையான உணர்வுகள் ஏமாற்றப்பட்டு கொள்ளளையடிக்கப்பட்ட பணம் புலிகளிடமே ஒப்படைக்கப்பட்டு வீணடிகப்பட்டதே இலங்கையில் தமிழ் பகுதி சுனாமி நிதிக்கு நடைபெற்றது. (மேலும்....)

ஆடி 13, 2010

வடபகுதி ரயில் சேவையும் தென்பகுதி மக்களின் பங்களிப்பும்

பயங்கரவாதத்தின் விளைவாக வடக்கும் தெற்கும் மெய் நடப்பில் பிரிந்திருந்தன என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். யுத்த களத்தில் புலிகள் தோற் கடிக்கப்பட்ட பின் வடக்கும் தெற்கும் அரசியல் ரீதி யாக ஒன்றிணைந்துள்ள நிலையில் உணர்வு ரீதியான ஒன்றிணைவுக்கான செயற்பாடு அரசாங்கத்தினால் ஒவ்வொன்றாக முன்னெடுக்கப்படுகின்றது. வடபகுதிக் கான புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிப்பது இச் செயற்பாட்டில் பிரதான இடம் வகிக்கின்றது. கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான புகையிரத சேவை மீண்டும் இடம்பெறுவதால் வட பகுதி மக்கள் மிகவும் நன்மை அடைவார்கள் என்பது வடபகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாததல்ல. யாழ்ப்பாணத்தையும் வன்னிப் பெருநிலப் பரப்பையும் வதிவிடமாகக் கொண்ட மக்களின் அன்றாட வாழ்வில் இச் சேவை சிறப்பான பலனை அளிக்கும் என்பது எல்லோரும் அறிந்த விடயம். (மேலும்....)

ஆடி 13, 2010

அகதிகளாக வரும்

இலங்கையருக்கு ஆஸி. எச்சரிக்கை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் குடியேற முயற்சிக்க வேண்டாம் என இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆட்களைக் கடத்துவோரை நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் அவுஸ்திரேலியக் கரையோரங்களையே வந்தடை கின்றீர்கள். அங்கிருந்து விரைவாகத் திருப்பி அனுப்பப்படுவீர்கள். என்று அவர் எச்சரித்துள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் இன்று அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு உடனடி அகதி அந்தஸ்த்து வழங்கத் தேவையில்லை என ஐ.நா.அண்மையில் வெளியிட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து புகலிடம் கோரும் விண்ணப்பங்களின் பரிசீலனையை இடைநிறுத்தியுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடி 13, 2010

எல்லை மீள் நிர்ணயம்

கஷ்ட பிரதேசங்கள் தொடர்பில் விசேட கவனம்

எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான சிபாரிசுகளின் போது மலையகம் மற்றும் வடக்கு கிழக்கின் கஷ்டப் பிரதேசங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 20ம் திகதி எல்லை மீள் நிர்ணயக் குழுவின் அடுத்த அமர்வு நடைபெறவுள்ளதுடன் அதன்போது தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆலோசனைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாகக் குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார். (மேலும்....)

ஆடி 13, 2010

நேபாள மாவோயிஸ்ட் முன்மொழிவுகள் நிராகரிப்பு

நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் துணைத் தலைவர் முன் வைத்த புதிய அமைதித் திட் டத்தை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், நேபாள காங்கிரஸ் கட்சியும் நிராகரித்துவிட்டன. நேபாள அரசியல் சட்ட மன்றத்தின் ஆயுட்காலம் மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுவிட்டது. இப்போது கொரில்லா ராணுவ முகாம்களை மூடு வது பற்றி விரிவான திட்டத்தை மற்ற இரு கட்சிகளின் முன் மாவோயிஸ்ட் துணைத்தலைவர் நாரா யண் காஜி ஸ்ரேஷ்தா முன் வைத்தார். இவைகள் அனைத்தும் தெளிவில்லாமல் உள்ளது என்றும், 2006ல் உருவான சமாதான ஒப்பந்தத்துக்கு எதிராக உள்ளன என்றும் இரு கட்சிகளும் கூறிவிட்டன.  மாவோயிஸ்ட்டுகளின் மக்கள் விடுதலைப் படை யின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யவே மாவோ யிஸ்ட்டுகளின் முன்மொழி வுப்படி மூன்று மாதங்களாகும் என்று அவை கூறிவிட்டன. தாமதமேற்படுத் தும் தந்திரம் என்றும் ஆயுதங்களை கைவிட மன மில்லை என்றும் அவை சொல்கின்றன. கொரில்லா படைகளின் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கவும், மாவோயிஸ்ட் கைப்பற்றிய பொதுச் சொத்துக்களை விடுவிப்பது பற்றி தீர்மானிக்கவும் இரண்டு வெவ் வேறு கமிஷன்களை நியமிக்க வேண்டும் என்று மாவோயிஸ்ட் முன்மொழிவுகள் கூறுகின்றன. (மேலும்....)

ஆடி 13, 2010

பிரான்ஸ் ஊடகவியலாளரை கொல்லப்போவதாக அல்கைதா மிரட்டல்

நகரில் கடத்தப்பட்ட பிரான்ஸ் ஊடக வியலாளரைக் கொலைசெய்யப் போவதாக அல் கைதா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி 15 தினங்களுக்குள் பிரான்ஸ் அரசாங்கம் எங்களது நிபந்த னைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் ஊடகவியலாளர் மைகல் கேர்மனியு வயது 78 என்பவரின் உயிரை பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ்சர்கோஸி பொறுப்பேற்க வேண்டும் எனவும் அல் கைதாவின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரான்ஸ் ஊடகவியலாளர் சென்ற ஏப்ரல் மாதம் நைகரில் கடத் தப்பட்டார். இவரை விடுதலை செய்ய அல் கைதா சில நிபந்தனைகளை விதித் துள்ளது. இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் முன்னர் பிரிட்டிஷ் ஊடகவியலாளரைக் கொன்றதைப் போல் இவரையும் கொன்றுவிடுவோம் என அல் கைதா மிரட்டியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் ஒளிநாடாவில் காண் பிக்கப்பட்டார். நைகரின் பெரும் பகுதியை அல் கைதாவுடன் தொடர்புடைய அமைப் பொன்று கட்டுப்பாட்டில் வைத்துள்ளது இங்கு பணியாற்றிய பிரிட்டன் பொறி யியலாளர்கள் மீள திருப்பி அழைக் கப்பட்டனர்.

ஆடி 13, 2010

ஏன் இந்த அலட்சியம்?

தமிழக மீனவர்கள்மீது தாக்குதல்

வேதாரண்யம் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் கொண்டு சென்ற பொருட்களை இலங்கை கடற்படையினர் கடலில் தூக்கி எறிந்துள்ளனர். மீனவர்களை கொடூரமாக தாக்கியதோடு, அவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. ஒரு வேளை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடித்தால் கூட அவர்களை அடித்து துன்புறுத்தவோ, கொலை செய்யவோ கூடாது. அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையே எடுக்க வேண்டும் என இந்தியாவும், இலங்கையும் அண்மையில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. (மேலும்....)

ஆடி 13, 2010

இந்திய மக்கள் தொகை 2050ல் சீனாவைவிட அதிகரிக்குமெனத் தகவல்

இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறித்து மத்திய அரசு சார்பாக ஒரு புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 100 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 5 மடங்காக அதிகரித்துள்ளது. 2009ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 119 கோடியே 80 இலட்சம் மக்களும், சீனாவில் 134 கோடியே 50 இலட்சம் மக்களும் இருந்தனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் சீனாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 0.6 வீதம் மட்டுமே மக்கள் தொகை அதிகரித்தது. எனவே இதே வீதத்தில் சென்றால் 2050ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள மக்கள் தொகையைவிட 2026ஆம் ஆண்டில் கூடுதலாக 37 கோடியே 10 இலட்சம் மக்கள் அதிகரித்து விடுவார்கள்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை யில் 22 சதவீதம் பேர் இருப்பார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் சேர்த்து 13 சதவீதம் பேர் இருப்பார்கள். அதே நேரத்தில் பாகிஸ்தானை பொறுத்தவரை 2009ம் ஆண்டில் 18 கோடி மக்கள் தொகை இருந்தது. அங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.2 சதவீதம் என்ற அளவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி 12, 2010

சீமான் சென்னையில் கைது _

வன்முறையைத் தூண்டியதாக குற்றச்சாட்டு

நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் இயக்கத் தலைவர் டைரக்டர் சீமான், "தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்ந்தால் இங்கு படிக்கும் சிங்கள மாணவர்களை நடமாட விடமாட்டோம்" என்று எச்சரித்தார். இதுகுறித்து வடக்கு கடற்கரை பொலிசார் சீமான் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். சீமானைக் கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டிருந்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக்கு டைரக்டர் சீமானும் வருவதாகக் கூறப்பட்டது. அங்கு வைத்து அவரை கைது செய்வதற்காக இன்று காலை 7.00 மணிக்கே பொலிசார் அங்கு குவிக்கப்பட்டனர். பகல் 11.30 மணியளவில் சீமான் வாலாஜா வீதி வழியாக சேப்பாக்கத்துக்கு வந்தார். சீமானைப் பொலிஸ் வாகனத்தில் ஏற்ற விடாமல் காரைச் சுற்றி சூழ்ந்து கொண்டனர். சுமார் 15 நிமிட போராட்டதுக்கு பின் டைரக்டர் சீமானை பொலிசார் வாகனத்தில் ஏற்றினர். பின்னர் ஜோர்ஜ் டவுன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காகப் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்றனர்.

ஆடி 12, 2010

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக பொது உடன்பாடுகளை ஏற்படுத்திக்  கொள்வது இன்றைய அவசியமாகும்.

யாழ் உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் வழங்கிய பேட்டி (பகுதி 4)

தமிழ் தேசிய ராணுவத்திற்குப் பலாத்காரமாக தமிழ் இளைஞர்களைச் சேர்த்து அவர்களை ஆயுத கலாச்சாரத்துக்குள் தள்ளிய அத்தகைய அன்றைய  நடவடிக்கை ஒரு பெரும் தவறுதான். இதுபற்றி நான் ஏற்கனவே பல தடவைகள் ஒப்புக்கொண்டிருக்கிறேன். இதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த நடவடிக்கையை மாகாணசபை என்ற அமைப்பின் மூலம் மேற்கொள்ளவில்லை. பிரேமதாசாவும் பிரபாகரனும் எமது மாகாண ஆட்சி மீது பழிபோடும் வகையாக மேற்கொண்ட ஒரு சதிப்பிரச்சாரமே அது. இளைஞர்களைத் திரட்டி ஜனநாயகரீதியான கட்சிகளின் பாதுகாப்பையும் பலத்தையும் அதிகரிக்கும் நோக்கில் கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவே தமிழ் தேசிய இராணுவம். இளைஞர்களை விரைவாக இணைப்பதில் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட போட்டியானது இளைஞர்களைக் கட்டாயமாகப் பிடித்து பயிற்சி அளித்து ஒரு இராணுவமாக்குதல் என மாறியது. அவ்வாறான முடிவை எடுத்ததிலோ அதை நடைமுறைப்படுத்தியலோ எனக்கு நேரடியான பங்கு எதுவுமில்லை. எனினும் நான் அவ்வாறாக செயற்பட்ட கட்சிகளில் ஒன்றின் ஒரு முக்கியஸ்தன் என்ற வகையில் அக்கட்சி விட்டிருக்கும் தவறுக்கு நானும் பொறுப்பேற்றே ஆகவேண்டும். எமது கட்சி ஒரு தற்பாதுகாப்பு நோக்குடனேயே அவ்வாறானதொரு தமிழர் இராணுவ விரிவாக்கத்தை உருவாக்க முனைந்தது. (மேலும்....)

ஆடி 12, 2010

நடமாடும் சேவைகளில் மக்கள் வெள்ளம்

யாழ், கிளிநொச்சி மக்களுடன் அமைச்சர் டியூ குணசேகர

கடந்த 30 வருடங்களின் பின் மக்கள் தமது பிரச்சினைகளை உரிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நேரடியாகத் தெரிவித்து அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பை இந்நடமாடும் சேவை வழங்கியுள்ளது. இந் நடமாடும் சேவை நிகழ்வுகளில் பெண்களே அதிகளவில் கலந்துகொண்டு தமது பிரச்சினைகளை முன்வைத்தனர். இவற்றில் காணாமற்போனோர், தடுத்துவைக்கப்பட்டுள்ளளோரின் விடுதலை, நட்டஈடு உள்ளிட்ட பிரச்சி னைகளே அதிகளவில் முன்வைக்கப்பட் டன. பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கவும் முடிந்துள்ளது. (மேலும்....)

ஆடி 12, 2010

அமரர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரனின் 21வது நினைவு தினம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், இலங்கையின் வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து செயலாற்றிய அமரர் அமிர்தலிங்கம் மற்றும் முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் யோகேஸ்வரன் ஆகியோரின் 21வது நினைவுதினம் நாளையாகும். இதனையிட்டு த.வி.கூ. யாழ். மாவட்ட தலைமைச் செயலக த்தில் நாளை காலை 10.00 மணியளவில் கூட்டம் இடம்பெறும். இவர்கள் இருவரும் விருந்தினர்களாக வேடம் பூண்டு வந்த புலி உறுப்பினர்களால் கொழும்பில் உள்ள வாசஸ்தலத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் இன்னொரு பிரமுகர் மு. சிவசிதம்பரம் உயிர் தப்பிக் கொண்டார். ஆகினும் இவர் கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் தனது நழுவல் போக்கையே கடைப்பிடித்தார். ஆனால்.... இன்று அமரத்துவம் அடைந்த பின்பு மக்கள் மனங்களில் இவரும் காணாமல் போய்விட்டார். இவரைப் போன்ற வயது ஒத்தவரும் தமது தலைவரின் கொலையைக் கண்டிக்காத இன்னொருவர் இரா. சம்மந்தன் மட்டும் இன்றும் உயிருடன் வாழ்கின்றார்.

ஆடி 12, 2010

Tamil diaspora started to crack up after the LTTE defeat

The diaspora was very much controlled by the LTTE. With the defeat of the LTTE, there are also many changes in the diaspora. It started to crack up. In the next two or three years, there will be even greater changes. Already critical voices are emerging. There were critical voices in the past as well as dissent was never completely crushed but now there are more and more. In that context, we are not going to see one cohesive, homogenous diaspora. Of course, there are people who were formerly LTTE propagandists that continue to hold the Tigers’ banner abroad because they think it’s how they can keep their own positions. But even among these people in the diaspora questions will increasingly be asked and there will be a shift. (more....)

ஆடி 12, 2010

புலிப் பணத்தில் போராட்டம்

சினிமாக்காரர் சீமான் தலைமறைவு

'சிங்கள மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு உயிருடன் ஊர் போய் சேர முடியாது' - சீமான்  

கைதுக்கு பயந்த சீமான், ஆந்திர மாநிலத்திற்கு தப்பிச்சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை சீமான் முன்கூட்டியே அறிந்துள்ளார். எந்தெந்த பிரிவுகளில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும் அவர் அறிந்திருப்பதாக கூறப்படுகிறது . அதன் பிறகே அவர் தப்பிச் சென்று விட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்வதற்காக வடபழனி, கோயம்பேடு ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று சாதாரண உடையில் போலீசார் விசாரணை நடத்தினர்.  இதனிடையே இன்று அவர் கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற இருப்பதாக அவருக்கு நெருக்கமாக உள்ள சிலர்  தெரிவித்தாகவும்  தகவல் வெளியாகியுள்ளது(மேலும்....)

ஆடி 12, 2010

பயங்கரவாதிகளுடன் போர் நடத்தும் போது சட்டங்களை முழுமையாக பாதுகாக்க முடியாது - இலங்கை அரசாங்கம்

உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தும் போது போர்ச் சட்டங்களை முழுமையாக பாதுகாக்க முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், அவ்வாறான ஓர் பின்னணியில் ஜனநாயக அரசாங்கமொன்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியதென அரசாங்கம் பான் கீ மூனுக்கு விளக்கியுள்ளது.(மேலும்....)

ஆடி 12, 2010

Tamil link to Perth credit card skimming

Sri Lankan Tamils were largely behind credit card skimming crimes that had cost about 6000 West Australians more than $6.5 million from EFTPOS machines, Assistant Commissioner Nick Anticich said yesterday. And there are concerns that funds raised in such operations could be diverted to the Liberation Tigers of Tamil Eelam, commonly known as the Tamil Tigers and listed by a number of countries as a terrorist organisation. (more....)

ஆடி 12, 2010

வடக்கில் அசின்

தமிழ் நாட்டில் சீமான் தலைமறைவு

வவுனியா வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் செய்த முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ அங்கு வரவேற்று அழைத்துச் செல்லப்படுகிறார். அருகில் தென் இந்திய திரைப்பட நடிகை அசின், பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் காணப்படுகின்றனர். இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அசினை எதிர்த்த சீமான் தமிழ் நாட்டில் தலைமறைவு. இலங்கை மாணவர்களை கொல்வேன் என்று சூளுரைத்த சீமான் தலைமறைவு.

ஆடி 12, 2010

தன்னை உணர்ந்தவனை மரணபயம் பாதிக்காது

உலகத்திலே அறிவில் சிறந்தவர் என்று வர்ணிக்கப்பட்ட அணுவிஞ்ஞானி ஐன்ஸ்டீன் மரணம் அடையும் வரை புகழின் உச்சியில் இருந்தார். மரணத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்து கொண்டிருந்த அவரிடம் சென்ற ஒருவர், ‘உலகப்புகழ்பெற்ற அறிவின் சின்னமே... நீங்கள் மீண்டும் பிறக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் அணுவிஞ்ஞானியாகப் பிறந்து புகழ்பெறத்தானே விரும்புவீர்கள்? என்றார். அவரோ மிக அமைதியாக, கேள்வி கேட்டவரை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு ‘அப்படி இன்னொரு பிறப்பு கிடைத்தால் நான் தச்சு வேலைக்காரராக பிறக்கவே ஆசைப்படுகிறேன்’ என்றார். (மேலும்....)

ஆடி 12, 2010

தோடர்கள் என்று ஒரு இனம்

தோடர்கள் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவராவர். இவர்கள் தோடா மொழி பேசுகின்றனர். மந்து என்று அவர்களால் அழைக்கப்படும் அவர்களது வசிப்பிடம் பொதுவாக மூங்கிலால் செய்யப்படுகிறது. எருமை வளர்ப்பு இவர்களது முதன்மைத் தொழிலாகும். தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். (மேலும்....)

ஆடி 12, 2010

காஸாவுக்கு நிவாரணக் கப்பல்கள்
முற்றுகையைத் தளர்த்துவதில் இஸ்ரேல் பிடிவாதம்

 

காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் புறப்பட்டுள்ளன. இவை கிரேக்கத்திலிந்து புறப்பட்டன. இதில் லிபியா மொரோக்கோ, நைஜீரியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் பயணிக்கின்றனர். எகிப்தின் துறைமுகத்தை நோக்கி இக்கப்பல்கள் செல்வதாகவும் காஸாவை நோக்கியே இந்நிவாரணக் கப்பல்கள் புறப்பட்டள்ளதாகவும் இரண்டு வகையாக அறிவிக்க்பபட்டுள்ளது. லிபிய ஜனாதிபதியின் இரண்டாவது மகன் இந்நிவாரணப் பொருட்களை ஏற்பாடு செய்து கப்பல்களை அனுப்பியுள்ளார். காஸாவை நோக்கி கப்பல்கள் செல்வதாக கடாபியின் மகன் அறிவித்துள்ள போதும் எகிப்தின் துறைமுகத்துக்கே கப்பல்கள் புறப்பட்டுள்ளதாக கிரேக்க அரசாங்கம் அறிவித்தது. (மேலும்....)

ஆடி 12, 2010

ஈரான் பெண் மீது கல்லால்
எறிந்து கொல்லும் தண்டனை வாபஸ்

ஈரான் நாட்டை சேர்ந்த 43 வயது பெண் சகீனா முகமதி ஆசியானி என்ற பெண், விபசாரத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக கல்லால் அடித்து கொல்ல உத்தரவிடப் பட்டது. இந்த தண்டனைக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் சங்கம் ஆகியவையும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக அவருக்கு விதிக் கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது என்று அந்த நாடு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக ஈரான் தூதரகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சகீனா கல்லால் அடித்து கொல்லப்பட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் தூக்கிலிடப்படுவாரா? அல்லது விடுதலை செய்யப்படுவாரா என்பது தெரியவில்லை. 2006ம் ஆண்டு இப் பெண்மீது இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் இவருக்கு 99 கசையடிகள் வழங்கப்பட்டன. லண்டனிலுள்ள ஈரான் தூதரகம் இப்பெண் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட மாட்டார் எனத் தெரிவித்துள்ளது.

ஆடி 12, 2010

ஜனாதிபதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்.  கிளிநொச்சியில் விசேட ஏற்பாடுகள்

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள் வதற்காக 44 அமைச்சர்களும் அன்றைய தினம் கிளிநொச்சி வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, அன்றைய தினமே அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமும் நடை பெறவிருப்பதனால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட மற்றும் முக்கிய அதிகாரிகளும் கிளிநொச்சி வரவிருப்பதாக ஆளுநர் சுட்டிக் காட்டினார். வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் இதுவரை முன் னெடுக்கப்பட்டுவந்த அபிவிருத்திச் செயற் பாடுகள் மற்றும் அவற்றை விரைவுபடுத்தக் கூடிய வழிமுறைகள் தொடர்பாக ஜனா திபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார். (மேலும்....)

ஆடி 12, 2010

ஆசிரிய சமூகத்துக்கு ஒரு வேண்டுகோள்!

பாடசாலையென்பது கல்வியை மட்டும் ஊட்டுகின்ற நிறுவனமல்ல... மாணவனுக்கு ஒழுக்கவிழுமியங்களையும் ஊட்டி எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமையுள்ள பிரஜையாக அம்மாணவனை உருவாக்கும் இடமாகவும் பாடசாலை விளங்குகிறது. எனவேதான் ஆசிரிய சமூகமென்பது பொறுப்பு மிகுந்ததாகப் போற்றப்படுகிறது. இத்தகைய பொறுப்புமிகுந்த ஆசிரிய சமூகத்திடம் பெற்றோர் தங்களது பிள்ளைகளை ஒப்படைக்கின்றனர். இந்நிலையில் ஆசிரியர்கள் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயற்படுவது அவசியம். மாணவர்களுக்காக தம்மையே அர்ப்பணித்து இமயமாக உயர்ந்து நிற்கும் ஆசிரியர்களும் எம்மத்தியில் உள்ளனரென்பதை மறுப்பதற்கில்லை. (மேலும்....)

ஆடி 12, 2010

தலிபான் கூறுகின்றது
முதியோரைக் குறிவைத்து தாக்குதல்

தற்கொலை தீவிரவாதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவர் தன் உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தார். பலியானோர் எண் ணிக்கை 102 ஆக உயர்ந்தது. பலியான வர்களில் 5 பேர் சிறுவர்கள் ஆவார்கள். அவர்கள் 5 முதல் 10 வயதுக்கு உட் பட்டவர்கள். பல பெண்களும், பலி யானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ் தான் தலிபான் பொறுப்பு ஏற்றுக்கொண்டு உள்ளது. தலிபான்களுக்கு எதிராக செயல்படும் பழங்குடி இன முதியவர்களை குறி வைத்துத்தான் இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக பாகிஸ்தான் தலிபான் செய்தி தொடர்பாளர் இக்ரமுல்லா முகமது தெரிவித்தார். (மேலும்....)

ஆடி 12, 2010

காஷ்மீரில் மீண்டும் கலவரம்; பொலிஸ் தடியடி-துப்பாக்கி சூடு

காஷ்மீரில் 4 நாட்களுக்கு பிறகு, உள்ளூர் பண்டிகைக்காக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. ஆனால், மீண்டும் கலவரம் வெடித்த தால் பொலிஸார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தி ஆர்ப்பாட்டக் காரர்களை கலைத்தனர். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் உள்ளிட்ட துணை இராணுவ படை யினருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, நடந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால், கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஸ்ரீநகர் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. (மேலும்....)

ஆடி 12, 2010

கியூப தலைவர் காஸ்ட்ரோவின் புதிய புகைப்படங்கள்

கியூப புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ புன்னகைக்கும் தோற்றத்திலான புதிய புகைப்படங்கள் இணையதளங்களில் வெளி யாகியுள்ளன. இரண்டு கியூப இணை யதளங்கள் இந்த புதிய படங்களை வெளியிட்டுள் ளன. 83 வயதாகும் காஸ் ட்ரோ கடந்த சில ஆண்டு களாக பொது இடங் களுக்கு வருவதில்லை. அவ ரது புகைப்படங்கள் மட் டுமே அவ்வப்போது வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகி யுள்ள படத்தில் புன்ன கைத்த படி காணப்படு கிறார் காஸ்ட்ரோ. மேலும், தொழிலாளர்களை வாழ்த்துவது போல அந்தப் புகைப்படம் உள்ளது. ஹவானாவில் நடந்த தொழிலாளர் நிகழ்ச்சிக்கு காஸ்ட்ரோ வந்துள்ளார். அந்தக் கூட்டத்தில்தான் காஸ்ட்ரோ தொழிலாளர் களை வாழ்த்தினார். அதை தொழிலாளர் ஒருவர் தனது செல்போன் மூலம் எடுத்துக் கொடுத்துள்ளார். அதைத் தான் கியூப இணையதளங் கள் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ரோசா பெயஸ் என்ற பத்திரிகை யாளர் கூறுகையில், மிக வும் மெலிந்து காணப்படு கிறார் காஸ்ட்ரோ. அதே சமயம், நல்ல உடல்நலத்து டன் அவர் இருக்கிறார். மன ரீதியாகவும் அவர் சிறப்பான நிலையில் இருப் பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர் என்றார்.

ஆடி 11, 2010

புலிகள் போரிடுவதற்காக அவர்களுக்கு பணத்தை வாரியிறைத்த புலம் பெயர் மக்கள் இப்போது வன்னி மக்களின் துயர் துடைக்கவும் பணத்தை அனுப்பலாம்

யாழ் உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் வழங்கிய பேட்டி (பகுதி 3)

நாடுகளைக் கடந்த ஒரு நாடு அமைப்பை தென்னாபிரிக்கர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் உலக  நாடுகள் பல சேர்ந்துதான் ஏற்படுத்தினவே தவிர அவை அந்நதந்த நாடுகளைச் சேர்ந்த சிலரால் நடாத்தப்பட்ட வேடிக்கை நாடகமல்ல. நாடு கடந்த தமிழீழம் என்பது தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றி சிலர் பணம் திரட்டுவதற்குப் பயன்படுமே தவிர உலகநாடுகள் எதுவும் அந்தக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. அதுமட்டுமல்லாது இவ்வாறான புரளிகள் இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் கட்டுப்பாடடில் தொடர்ந்தும் வடக்கு கிழக்கு மாகாணத்தை வைத்திருப்பதற்கும் அரசாங்கம் தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரிப்பதற்குமான நியாயங்களை வலுப்படுத்தவே உதவும். அப்படிக் கூறுபவர்கள் வேறு எந்த நாட்டிலாவது கனடாவிலோ இங்கிலாந்திலோ அல்லது பிரான்ஸிலோ தமிழீழம் அமைப்பார்களாயிருந்தால் நாங்கள் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம். அப்படி அமைத்து விட்டு அவர்கள் எங்களையும் அங்கு அழைக்கட்டும் நாங்கள் விருந்தாளிகளாகப் போய்வருவோம். இப்படியான பயனற்ற விடயங்களில் புலம் பெயர் தமிழர்கள் ஈடுபடுவதை விடுத்து போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு பணத்தை அனுப்புங்கள். நீங்கள் இங்குள்ள உங்கள் உறவினர்களுக்கு பணத்தை அனுப்பி அவர்கள் மூலம் வன்னி மக்களுக்கு உதவி செய்யுங்கள். (மேலும்....)

ஆடி 11, 2010

ஸ்பெயின் அணிக்கே உலகக் கிண்ணம்: ஒக்டோபஸ்ஸின் ஆருடம் பலிக்குமா?

(வாசுகி )

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது முதற்கொண்டே இந்த அணிதான் கிண்ணத்தை வெல்லும், இன்ன இன்ன அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் எனப் பல ஆரூடங்கள், ஊகங்கள். போட்டிகளின் ஆரம்பம் முதலே இறுதிப்போட்டி பிரேசில் அணிக்கும் ஆர்ஜென்டீன அணிக்கும் இடையில்தான் இடம்பெறும் என்று ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆரூடங்கள் மட்டுமல்ல கால்பந்தாட்ட நிபுணர்களும் அவ்வாறே கருதினார்கள். ஆனால் இக்கணிப்புகள் ஆரூடங்களையெல்லாம் இம்முறை உலகக் கிண்ணக் காலிறுதிப் போட்டிகள் பொய்யாக்கி விட்டன. புகழ்பெற்ற தென்னமெரிக்க அணிகள் காலிறுதிப்போட்டியிலேயே தோற்றுப்போய்விட்டன. இந்நிலையில் இன்றைய இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை ஸ்பெயின் வெற்றி கொள்ளுமென ஒக்டோபஸ் என்னும் நீர்வாழ் உயிரினம் ஆரூடம் கூறியிருக்கின்றது. (மேலும்....)

ஆடி 11, 2010

செம்மொழி மகாநாடு

'பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் தமிழாராய்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய ஆய்வாளர்கள் ஆகிவிட முடியாது'

(வாகுலன்)

கருணாநிதி தமிழ் அறிஞர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழன்னைக்கு வளம் சேர்ந்தவர் என்பதிலும் உடன்பாடு உண்டு. அதற்காக, அவருக்குப் புகழ்மாலை சூட்டுவதற்காகவும் அவரது வாரிசுகளுக்குப் பிரபல்யம் தேடிக்கொடுப்பதற்காகவும் தமிழாய்வு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடத்த வேண்டுமா? எங்கும் எல்லா அரங்குகளிலும் கருணாநிதி நிறைந்திருந்தார். அவரது பிள்ளைகள் மாத்திரமன்றிப் பேரப்பிள்ளைகளும் மேடையை அலங்கரித்தார்கள். இலங்கைத் தமிழ் அறிஞர்கள் ஓரங்கட்டப்பட்டதாக ஒரு குரல் எழுகின்றது. இலங்கையிலேயே நல்ல தமிழ் வளர்கின்றது. இலங்கை அறிஞர்கள் கருணாநிதியின் சுயதம்பட்டத்துக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டிய அவசியமில்லை. அங்கே போய்க் கருணாநிதியை “உலகத் தமிழர்களின் தலைவர்” என்று வர்ணிக்க வேண்டிய தேவையும் இல்லை. (மேலும்....)

ஆடி 11, 2010

மக்களோடு மக்களாய்

கொடிகாமத்தில் ஆசிரியர்கள் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பில் தோழர் வரதராஜப்பெருமாள்

மக்களோடு மக்களாய் நிகழ்வின் ஒரு அங்கமாக கிராமத்து வறிய மக்களை சந்தித்து வந்த பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் இனர் இன்று வரத்தகர்கள், ஆசிரியர்களுடனா சந்திப்பொன்றை மேற்கொண்டனர். சமகால அரசியல் நிலவரங்கள் பற்றி கலந்துரையாடலுடன் ஆரம்பமான கருத்தாடல் அரசியல் தீர்வு பற்றியும் கருத்தாடப்பட்டது. மக்களின் உடனடிப்பிரச்சனைகள் பற்றியும் பேசப்பட்டன. இவ் நிகழ்வில் பல வர்தகபெருமக்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். ஈபிஆர்எல்எவ் இன் ஆதரவாளர்கள் பலர் தமது உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டனர்.

ஆடி 11, 2010

IT IS TIME TO “IMPEACH” BAM KI MOON FOR DESTROYING UNITED NATIONS

(By Hasaka Ratnamalala)

 United States and some countries at European Union, collaboration with Secretary General’s office are trying to find new ways to interfere the sovereignty of member nations. This time UNSG Ban Ki moon is directly acting as a puppet of some western Nations; further more he and his backers are demanding the Sri Lankan government to violate the freedom of expression of Sri Lankans by banning protests against Ban Ki Moon. (more....)

ஆடி 11, 2010

அரசியல் தலைவர்களுடன்

இன்று மாலை (10.07.2010) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 67வது ஆண்டுநிறைவு விழா

ஆடி 11, 2010

தலைமைகளிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு

30 ஆண்டுகால யுத்த அழிவுகள் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக போனமை, பொருளாதார உட்கட்டுமானங்கள் எல்லாம் சிதைந்து போய் கிடக்கின்றன. கண்ணிவெடிகள் பெருந்தொகையான நிலங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றமை, எங்கு பார்த்தாலும் இராணுவ முகாம்களும், நிலைகளும் பரந்து கிடக்கின்றமை என உள்ள நிலைமைகளிலிருந்து பொருளாதார முன்னேற்றம் சமூக முன்னேற்றங்கள் அரசாங்க நிர்வாக அமைப்புக்களின் முன்னேற்றங்கள், மக்கள் அரசியல் விடயங்களில் விழிப்பாக செயற்படுதல் ஊழல் இன்மை, மோசடிகள் இன்மை வன்முறையாளர்கள் தொடர்பாக பயமின்மை. இராணுவம் தொடர்பான அச்சமின்மை போன்ற பல விடயங்களில் இன்னமும் பாரிய முன்னேற்றங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலையிலேயே அங்கு நிலைமைகள் காணப்படுகின்றன. (மேலும்....)

ஆடி 11, 2010

New eco fees catching consumers by surprise

Levies ranges from a few cents to several dollars

Manufacturers must pay the province a levy for recycling their products. Some companies are passing these costs, ranging from a few cents to several dollars per product, onto consumers. Stewardship Ontario, the agency overseeing the eco fees, began its $2.5 million public education campaign at the beginning of the month, which consists of posters and radio spots, as well as a group which tours public events and provides information about the program. “We would rather spend the money to educate people than to spend the money months ahead to say, ‘Hey, there’s a new eco fee coming,’ ” said spokeswoman Amanda Harper Sevonty. “Our message to consumers isn’t about the eco fees. Our message to consumers is about here are the materials and what to do with them.” (more....)

ஆடி 11, 2010

நண்பர்களை இனங்காண்போம்

சிங்கள மக்கள் மத்தியில் நட்பு சக்திகளை இனங்கண்டு அவர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய பின்புலத்தைத் தமிழ்த் தலைவர்கள் உரு வாக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலப் பிரசாரம் முழுவ தும் சிங்கள மக்களுக்கு எதிரான உணர்வலையை வளர்ப்பதாகவே இரு ந்தது. சிங்கள எதிர்ப்புணர்வை வளர்க்கும் வகையிலான உரைகளும் பாடல்களும் தமிழரசுக் கட்சியின் அன்றைய மேடைகளில் பெரு மளவில் இடம்பெற்றன. இவ்வாறான உணர்வலைகளை மக்கள் மத்தி யில் வளர்த்தவர்களால் தீர்வு முயற்சியைத் தேசிய மட்டத்திலான முய ற்சியாக முன்னெடுப்பது இலகுவான காரியமல்ல. எனினும், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்குச் சிங்கள மக்களின் ஆதரவும் அவசியமென்பதால் தமிழ்த் தலைவர்கள் அம் மக்களை அணுக வேண்டியது அவசியத் தேவையாகின்றது. (மேலும்....)

ஆடி 11, 2010

global protests from being stoned to death.

Yesterday an Iranian woman, Sakineh Mohammadi Ashtiani, was saved by global protests from being stoned to death. But she may still be hanged -- and, meanwhile, execution by stoning continues. Right now fifteen more people are on death row awaiting stoning in which victims are buried up to their necks in the ground and then large rocks are thrown at their heads. The partial reprieve of Sakineh, triggered by the call from her children for international pressure to save her life, has shown that if enough of us come together and voice our horror, we may be able to save her life, and stop stoning once and for all. Sign the urgent petition now and send it onto everyone you know -- let's end this cruel slaughter NOW! (more....)

ஆடி 11, 2010

UNSG's Panel on Sri Lanka 

Canadian Tamil families that you state were affected by the conflict in Sri Lanka in 2009, no doubt it is intended to garner votes at the next election and secure some seats in the GTA area.  Many of those affected Canadian families have directly contributed to the conflict by contributing funds to the banned Tamil Tigers over the years which the Liberal Party government allowed to flow unchecked, to continue their 32 plus years of unbridled violence constantly targeting Sri Lanka's 20 million civilians using bus and train bombs, claymore mine attacks, machete attacks at midnight on remote rural communities, unleashing of suicide bombers, ethnic cleansing, etc, resulting in the killing of nearly 80,000, maiming more and destroying an inestimable amount of valuable property. (more....) 

ஆடி 10, 2010

நியாயமான தீர்வெதையும் இந்தியாவும் தரவில்லை, இலங்கையும் தரவில்லை

யாழ் உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் வழங்கிய பேட்டி (பகுதி 2)

1985ஆம் ஆண்டில் நாம் ஒற்றுமையாக இருந்தபோது இந்தியாவின் உதவியோடு மெதுமெதுவாக எமது ஈழவிடுதலை என்னும் இலக்கை நோக்கிச் சென்று விடலாம் என்று நம்பினோம். எப்போது விடுதலைப் புலிகள், ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தார்களோ அன்றைக்கே எமது ஈழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே ஈழ விடுதலைப் போராட்டத்தை உண்மையில் தோற்கடித்தவர்கள் புலிகள்தான். அவர்கள் யுத்த மோதல்களைத் தொடர்ந்து பல  ஆண்டுகளுக்கு மேற்கொண்டாலும் அவர்கள் 1986ம் ஆண்டே இலங்கை அரசை ஈழ விடுதலைக்கான யுத்தத்தில் வெற்றிபெற வைத்துவிட்டார்கள்.. புலிகள் சக இயக்கங்கள் மீது தாக்கத்தொடங்கிய போதே தமிழர்களின் தனிஈழக் கோரிக்கையின் தோல்வி நிச்சயமாகிவிட்டது. அதற்குப் பிந்திய 24 ஆண்டுகால யுத்தமும் அழிவுகளுக்கும் இழப்புக்களுக்குமென நடத்தப்பட்ட யுத்தவெறியர்களின் சண்டைகளே தவிர வேறொன்றுமில்லை. (மேலும்....)

ஆடி 10, 2010

உலகக்கிண்ண உதைபந்தாட்டம்

தங்கக் கிண்ணமும் 30 மில்லியன் அமெரிக்க டொலரும் யாருக்கு?

ஸ்பெயின் - நெதர்லாந்து களத்தில்

தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை இடம் பெறும். இதில் ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. இதேவேளை மூன்றா வது அணியைத் தெரிவு செய்யும் அணிக்கான போட்டி இன்று உருகுவே - ஜெர்மன் அணிகள் மோதவுள்ளன. இதேவேளை உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்கு உத்தியோகபூர்வ பாடலைப்பாடிய கொலம்பிய பாடகி சஹிரா இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

 

ஆடி 10, 2010

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவின் உதவி தேவை: அமைச்சர் டியூ

இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வுக் காண்பதில் இந்தியாவின் உதவியும் ஆலோசனையும் தேவை என அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.  இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான அமைச்சர் டியூ குணசேகர, இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.  கடந்த 30 வருடங்களில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்தக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றமை இதுவே முதல் தடவையாகும். இதேவேளை, நலன்புரி நிலையங்களிலிருந்து கைது செய்யப்பட்ட தமிழர்களான பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் அமைச்சர் டியூ குணசேகரவின் தலையீட்டினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆடி 10, 2010

ஜனாதிபதி நேரில் பார்வையிட்டபின் விமலின் உண்ணாவிரதம் முடிவு

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் நேரில் பார்வையிட்டார். அதையடுத்து விமல் வீரவன்ஸவுக்கு  நீர் அருந்தக்கொடுக்கப்பட்டதுடன் அவர் அம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு நியமனத்திற்கு எதிராக, கொழும்பு ஐ.நா. செயலகத்திற்கு முன்னால் கடந்த வியாழக்கிழமையிலிருந்து அமைச்சர் விமல் வீரவன்ஸ உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆடி 10, 2010

 

மக்களோடு மக்களாய்

பிரான்சில் தியாகிகள் தினம்

 

ஆடி 10, 2010

பரஸ்பரம் தமிழ்-சிங்கள மொழி கற்றால் நாட்டில் சம நிலை தோன்றும் : அமைச்சர் டியூ

கடந்த காலத்தில் இடம்பெற்ற அரசியல் நிலைமைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் விட்ட பிழைகளினால் இந்த நாட்டு அரசியலில் குழப்பமான நிலைமை ஏற்பட்டதுடன் மொழிப் பிரச்சினையும் காணப்படுகின்றது. இத்தகைய நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இந்த வகையில் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கும் போது, பொலிஸ் சேவையில் உள்ள 600 பேர் மட்டுமே தமிழ் தெரிந்தவாகளாகக் காணப்பட்டனர். அன்று சுமார் 1000க்கும் மேற்பட்ட பொலிசார் தமிழ் கற்றிருந்தார்கள். அதேபோன்று ஏனைய படையினரும் கூட தமிழைக் கற்று வருகின்றார்கள். கடந்த காலத்தில் இல்லாதவாறு இன்று தமிழும் சிங்களமும் அரச கரும மொழி அந்தஸ்தைப் பெற்றுள்ளன. (மேலும்...)

ஆடி 10, 2010

Toxic, invasive weed hits southern Ontario

Biologists and health officials in southern Ontario are scrambling to contain an invasive plant that can cause blindness and severe burns. Heracleum mantegazzianum, or giant hogweed, is a poisonous plant most recently found growing in Renfrew County, west of Ottawa."The concern is it's a very poisonous plant, in the sense that if you get any of the sap from this plant on your skin, it can cause severe blistering and very bad burns," said Jeff Muzzi, manager of forestry services for Renfrew County. "If you should happen to get the sap in your eyes, it can blind you either temporarily or permanently." (more....)

ஆடி 10, 2010

ஒற்றர்கள் பரிமாற்றத்துக்கு   அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புதல் 

பனிப்போர் காலத்துக்குப்பின் மிகப்பெரும் ஒற்றர்கள் பரிமாற்றத் துக்கு ரஷ்யாவும் அமெரிக்காவும் சம்மதித்துள்ளன. இதன்படி ரஷ்யா நான்கு ஒற்றர்களை விடுதலை செய் யும். அண்மையில் அமெரிக்க புறநகர் பகுதிகளில் உளவு வேலை பார்த்த தாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி யுள்ள 10 ஒற்றர்களை அமெரிக்கா விடு தலை செய்யும். (மேலும்...)

ஆடி 10, 2010

மக்களோடு மக்களாய்

கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி


மக்களோடு மக்களாய் நிகழ்வின் ஒரு அங்கமாக யாழ்பாணத்தில் உள்ள பல கிராமங்களுக்கு திரு. அ. வரதராஜப்பெருமாள் தலமையில் மக்களின் குறைகேட்கும் பயணங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. மக்களின் குறுங்கால நீண்ட கால தேவைகளை முடிந்தளவு நிவர்த்தி செய்தல் என்பதை முதன்மையாக கொண்டு செயற்படுதல் என்பதோடு பயணங்கள் நடைபெறுகின்றன. அரசியல் தீர்வுத்திட்டம் பற்றிய மக்களின் எதிர்பார்ப்பு பற்றி கருத்துக்களும் உள்வாங்கப்படுகின்றன. தற்போது தமிழ் பகுதிகளில் அதிகாரத்தில் இருப்பவர்களின் குறை நிறைகளும் மக்களால் முன்வைக்கப்படுகின்றன. புலிகளின் அழிக்குப்பின்னரான பயப்பிராந்திய நிலமைகள் இன்னும் தொடர்வதாக உணரப்படுகின்றது. கடந்த கால அரசியல் செயற்பாட்டில் ஏற்பட்ட தவறுகள் பற்றி சுயவிமர்சனம், விமர்சனம் என்ற கண்ணோட்டத்தில் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றன. தொடர்புகள் அற்ற நிலையில் இருந்த முன்னால் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கிராமங்கள் தோறும் மீண்டும் அரசியல் செயற்பாட்டில் தீவிரம் காட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்

ஆடி 10, 2010

புலம்பெயர்ந்தவர்களின் தார்மீகக் கடப்பாடு

பிரிவினைப் போராட்டத்தை நிதியுதவி மூலம் ஊக்குவித்தவர்க ளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரதான இடம் வகி க்கின்றனர். இவர்கள் வழங்கிய பெருமளவு நிதியுத வியினால் தீவிரமடைந்த பிரிவினைப் போராட்டம் தமிழ் மக்களின் உயிரிழப்புக்கும் உடைமைகளின் அழி வுக்கும் காரணமாகியதே தவிர எந்தவிதமான சாதக விளைவையும் ஏற்படுத்தவில்லை. எனவே, பிரி வினை யுத்தத்தின் விளைவாக வீடுகளை இழந்து நிற்பவர்களுக்குக் கைகொடுக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. பிரி வினை யுத்தத்துக்கு நிதியுதவி வழங்காதவர்களுக் கும் ‘உடன்பிறப்புகளின்’ துயர்துடைக்கும் கடப்பாடு இல்லாமலில்லை. (மேலும்....)

ஆடி 10, 2010

உலகமயமாக்கல் செய்தது என்ன?

பிரேசிலில் இருந்து ஏற்றுமதியாகும் கோப்பி, இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலை மத்திய அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதியாகும் வாழைப்பழம். இவையெல்லாம் ஐரோப்பாவிலோ, அல்லது அமெரிக்காவிலோ உற்பத்தியாவதில்லை. ஆனால் அமெரிக்க - ஐரோப்பிய கம்பனிகளே மேற்படி உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. பெரும் மூலதனத்துடன் நடத்தப்படும் மேற்குலகப் பன்னாட்டுக் கம்பனிகள் ஆதிக்கம் செலுத்தும் உலக சந்தையை மாற்றுவது அவ்வளவு இலகு அல்ல. இவை மூலப்பொருட்களை வழங்கும் மூன்றாம் உலக நாடுகள் உலக சந்தைக்கு வர விடாமல் தடுக்கின்றன. (மேலும்....)

ஆடி 10, 2010

தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்

(வாகுலன்)

மொரார்ஜி தேசாயின் தலைமையில் 1977 மார்ச் மாதம் பதவிக்கு வந்த ஜனதா கட்சி அரசாங்கம் 1979ம் ஆண்டு நெருக்கடிக்கு முகங்கொடுத்தது. அந்த அரசாங்கத்தில் பாரதிய ஜன சங் கட்சியும் ஒரு பங்காளி. இக் கட்சிதான் பிற்காலத்தில் பாரதிய ஜனதா கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றது. அந்த அரசாங்கத்தில் கபினற் அமைச்சர்களான ஏ. பி. வாஜ்பாயும் எல். கே. அத்வானியும் தீவிர இந்துத்துவ அமைப்பாகிய ஆர். எஸ். எஸ்ஸிலும் உறுப்பினர்கள். இவர்கள் ஆர். எஸ். எஸ்ஸில் அங்கத்துவம் வகிக்கக் கூடாது என்று கட்சிக்குள் ஒரு சாரார் கூறினார்கள். இவ்விருவரும் ஆர். எஸ். எஸ்ஸிலிருந்து இராஜினாமாச் செய்யாவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கருத்தைத் தீவிரமாக வலியுறுத்தியவர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ். (மேலும்....)

ஆடி 10, 2010

ஐநா சபை தொடர்பாக

அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

முடிவு காணமுடியாத நிலையில் இலங்கை வெற்றிகரமாக யுத்தத்திற்கு முடிவு கட்டியது. இதனை தாங்க முடியாத சில நாடுகள் இலங்கை தொடர்பில் இரட்டை வேடமிட்டு வருகின்றன. புலிகளுக்கு ஆதரவான சில சக்திகளின் அழுத்தம் காரணமாகவே ஐ.நா. செயலாளர் குழுவொன்றை நியமித்தார். ஒரு வருடத்திற்கு முன் இலங்கை தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஐ.நா. முயன்றது. அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சியை தோற்கடித்தோம். சரத் பொன்சேகாவின் ‘வெள்ளைக் கொடி’ கதையினால் மீண்டும் இலங்கை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் தலைதூக்கியது. (மேலும்....)

ஆடி 10, 2010

கூட இருந்து குழிபறிக்காதீர்கள் என் கழுத்தை பிடித்து தள்ளிவிடுங்கள்

ஐக்கிய தேசியக்கட்சியில் நான் மிகவும் பழைமையானவன். நான் பிரயோசனமற்றவன் என்று நினைத்தால் என்னை கழுத்தை பிடித்து வெளியே ற்றுங்கள். கூட இருந்தே கழுத்தை அறுக்க வேண்டாம் என கண்டி மாவட்ட ஐ. தே. க. எம். பி. ஏ. ஆர். எம். அப்துல் காதர் ஐ. தே. க விடம் கேட்டுக் கொள்வதாக நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எனக்கு இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற சந்தர்ப்பம் தரவில்லை. எனக்கு பேச சந்தர்ப்பம் தரும் வரை நான் ஆசனத்தில் அமரப் போவதில்லை எனக் கூறிய காதர் எம்.பி முன் எதிர்க்கட்சி ஆசன வரிசையில் எழுந்து நின்றார்.(மேலும்....)

ஆடி 10, 2010

சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு

பெட்ரோல் இல்லாமல் சூரிய ஒளி சக்தி மூலம் இரவு நேரத்திலும் பறக்கும் திறனுயை அதி நவீன விமானம், சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. தற்போது விமானங்கள் விசேட பெட்ரோலால் இயக்கப்படுகின்றன. பெட்ரோலுக்கு பதிலாக சூரிய ஒளியின் சக்தியில் பறக்கும் விமானத்தை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ போர்ச்பெர்க் என்பவர் வடிவமைத்துள்ளார். இவர் ஜெட் விமானங்களை ஓட்டிய அனுபவம் உடையவர். (மேலும்....)

ஆடி 10, 2010

Tamil Tigers beckon and wave at Chinese dragon

The Tamil tiger website – the Tamilnet, last week made a gesture of welcome to China. The website stated, unlike India and America which are the countries that destroyed the Tamil Tigers, China is a friend, and relationship with it must be cultivated via the Leftist Forces in Sri Lanka (SL). The website added that there were discussions between the Chinese officials and the Tamil activists, and China had declared that even if it couldn’t help in formulating a solution  for the Tamil people’s political issues, it would certainly be able to contribute towards the development process in the North of Sri Lanka. (more....)

ஆடி 10, 2010

சுவிஸில் நடைபெற்ற வீரமக்கள் தினம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் வருடாந்தம் நிகழ்த்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வுகள் நேற்று பிற்பகல் சுவிற்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் , தமிழீழ விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும் செயலதிபருமான தோழர் உமா மகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நாளான ஜுலை 13 ம் திகதி முதல் 19 ம் திகதி வரையான நாட்கள் வீரமக்கள் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு, போராட்டத்தின் பெயரால் உயிரிழந்த போராளிகள் பொதுமக்கள் வருடந்தோறும் நினைவு கூரப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. (மேலும்....)

ஆடி 09, 2010

வன்முறைப் போராட்ட முறை எங்களுக்குப் பொருத்தமானது அல்ல

யாழ் உதயன் பத்திரிகைக்கு வரதராஜப்பெருமாள் வழங்கிய பேட்டி (பகுதி 1)

கேள்வி : 1970 களின் பிற்பகுதியில் பல இயக்கங்கள் தமிழினத்தின் விடுதலைக்காகத் தோற்றம் பெற்றன. அவை அனைத்தும் இன்று ஒரு வெற்றுப் புள்ளியிலேயே இயங்கவேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. ஆயுதப் போராட்டம் தோற்றுப் போன நிலையில் அரசியல் போராட்டத்தை மட்டும் நம்பியதாகவே தமிழர்களின் நிலை உள்ளது. இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில் : எங்களுடைய இன அடிப்படையிலான போராட்டத்தின் அனுபவத்தில் மற்றும் என்னுடைய அனுபவங்கள் தொடர்பான எனது மீளாய்வின் அடிப்படையில் நான் கூறுவது எமது சமூகத்துக்கும் எமது தேசிய மற்றும் பிராந்திய சூழலுக்கும் எமது போராட்ட இலக்குகளுக்கும் ஆயுதங்கள் தாங்கிய போராட்டமுறைமை பொருத்தமானது அல்ல. சோவியத் புரட்சி, சீனப் புரட்சி, கியூபாப் புரட்சி மற்றும் வியட்னாம் புரட்சி என்பவற்றின் போது ஆயுதந் தாங்கிய போராட்டங்கள் வெற்றியளித்திருக்கின்றன. ஆனால் எங்களுடைய அரசியல் சமூக இலக்குகளுக்கு வன்முறை அரசியல் பொருத்தமானது அல்ல என்பதே எனது முடிவாகும்.(மேலும்.....)

ஆடி 09, 2010

விமலின் உண்ணாவிரதம் தொடர்கிறது

விமல் வீரவன்ஸ தொடர்ந்தும் அமைச்சர் பதவியில்

ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான்கிமூன் அமைத்திருக்கும் விசாரணைக் குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று இரண்டாவது நாளாகவும் தனது உண்ணாவிரதத்தினைத் தொடர்கின்றார் அமைச்சர் விமல் வீரவன்ஸ. காலையில் மருத்துவர்கள் அவரது உடலினைப் பரிசோதிப்பதை காணலாம். வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குறித்த அமைச்சர் பதவியில் விமல் வீரவன்ஸ தொடர்ந்தும் நீடிக்கிறார் என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டின. கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் அமைச்சர் விமல் வீரவன்ஸ, தனது அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகக் கூறி ஜனாதிபதிக்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது

ஆடி 09, 2010

பான் கீ மூன் கூறிய பொய்

ஐ.நா. அபிவிருத்தித்திட்ட கொழும்பு பிராந்திய அலுவலகம் மூட ப்படுகின்றது

உண்மையில் மேற்படி அலுவலகத்தை மூடுவதற்கான நடவடிக்கை பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் போராட்டத்துடன் அதற்குத் தொடர்பில்லை எனவும் கொழும்பிலுள்ள ஐ.நா. அதிகாரியொருவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஐ.நா. அபிவிருத்தித்திட்ட பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்கும் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் போராட்டத்திற்கும் இடையில் தொடர்பு எதுவுமில்லை. இந்த அலுவலகம் முன்னர் காத்மண்டிலிருந்து இயங்கியது. 2006 அல்லது 2007 ஆம் ஆண்டு அங்கிருந்த பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இவ்வலுவலகம் கொழும்புக்கு இடமாற்றப்பட்டது. (மேலும்.....) 

ஆடி 09, 2010

இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக ஜூலை  10 ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.  - சீமான் அறிக்கை.

(குசும்பன்.)

சில மாதங்களுக்கு முன், தென் அமெரிக்க நாடொன்றில் சீமானுக்கும் கனடிய மற்றும் அமெரிக்க புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையும், அதைத் தொடர்ந்து இந்தியாவில் வைத்து வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பணப் பரிமாற்றமும் புலனாய்வுப் பிரிவினரின் பரிசீலனையில் தான் உள்ளது. மேற்படி கிடைத்த நிதியைக் கொண்டுதான்  சீமான் கட்சி ஆரம்பித்தார். புலிப் பணத்தில் கட்சி நடத்தும் சீமானுக்கு புலிகளின் கொடுப்பனவு நிறுத்தப்பட்டால் கட்சி படத் தயாரிப்புக்குப் போக வேண்டியதுதான்.  (மேலும்.....)

ஆடி 09, 2010

பிரதேச சுயாட்சிக்காக குரல் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சி

(து. குகதாஸ் )

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்றுமே ஒற்றையாட்சி முறையை ஆதரித்தது இல்லை. 1954ல் வடபகுதி கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு வல்வெட்டித் துறை சிவகுரு வித்தியாலயத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட பிரமுகர்கள் குறிப்பாக அ. வைத்தியலிங்கம், பொன் கந்தையா, மு. காத்திகேயன். ஐ. ஆர். ஆரியரத்தினம் ஆகியோர் பிரதேச சுயாட்சியின் அவசியத்தை வலியுறுத்தினார்கள். தமிழர்கள் தொன்றுதொட்டு பாரம் பரியமாக வடக்கு கிழக்கில் தமக்கென உரித்தான கலாசாரத்தையும், பொருளாதார கட்டமைப்பையும் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். எனவே இவர்கள் தங்களைத் தாங்ளே ஆளக்கூடிய ஒரு நிர்வாக முறையை உருவாக்க வேண்டும். அதற்கு ஏற்றதுதான் பிரதேச சுயாட்சிமுறை. (மேலும்.....)

ஆடி 09, 2010

பான் கி மூனின் தீர்மானம் தான்தோற்றித் தனமானது

ஐ.நா. அங்கத்துவ நாடுகளை கொச்சைப்படுத்தியுள்ளார் - சஜித் பிரேமதாச

ஆலோசனைக் குழு அமைக்கும் விடயத்தில் ஐ. நா. செயலாளர் நாயகம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.  இதன் மூலம் அவர் ஐ. நா. வில் அங்கம் வகிக்கும் அனைத்து அங்கத்துவ நாடுகளையும் கொச்சைப்படுத்தியுள்ளார். ஆலோசனைக் குழுவை அமைப்பதன் ஊடாக ஐ. நா. வின் சாசனத்தையும் பான் கி மூன் மீறியுள்ளார். மற்றுமொரு நாடு தெம்பாக இவ்வாறான ஒரு நிபுணர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைப்பதாயின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். (மேலும்.....)

ஆடி 09, 2010

புலம்பெயர்ந்தோர் உதவி வழங்கினால் மீள்குடியேறுவோருக்கு ஒரு வருடத்துள் வீடுகள் - கருணா அம்மான்

புலம்பெயர்ந்துள்ள எமது மக்கள் உதவிகளை வழங்கினால் வன்னியி லுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு வருடத்தில் வீடுகளை கட்டிக் கொடு க்கலாம். இதுபற்றி அந்த மக்கள் சிந் திக்க வேண்டும்.  அதேபோன்று புலம் பெயர்ந்த எமது மக்களையும் இங்கு வரவழை த்து இந்த நடவடிக்கைக்கு பங்காளி களாக ஆக்குவதற்கு தமிழ் கூட்ட மைப்பினர் முன்வர வேண்டும் என கூட்டமைப்பினருக்கும் வேண்டு கோளை முன்வைக்கிறேன். (மேலும்.....)

ஆடி 09, 2010

ஆடி 09, 2010

இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ரணில்

யுத்தம் என்ற இருட்டிலிருந்து இலங்கை இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிக்கிறது. முதலீடுகள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன. அரசியல் இருக்கலாம். எனினும் எதிர்க் கட்சியினர் அதிலிருந்து விடுபட்டு எமது வெளிநாட்டு கொள்கையின்படி நடந்துகொள்ள வேண்டும். இலங்கையுடன் இந்தியாவுக்கு அசைக்க முடியாத இறுக்கமான உறவு இருக்கிறது. வேறு எந்த நாடும் இல்லாத விதத்தில் உடனடி உதவிகளை இந்தியா வழங் குகிறது. பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, காங்கேசன்துறை துறைமுக கட்டுமான பணிகள் என்பவற்றை இந்தியா முன்னின்று செய்து வருகிறது. (மேலும்.....)

ஆடி 09, 2010

மாலைதீவு அரசியல் நெருக்கடி நிலைக்கு ஜனாதிபதி மஹிந்தவினால் சுமுக தீர்வு

மாலைதீவில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டையடுத்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.  அரசாங்கத்திலிருந்து மூவரும், எதிர்க் கட்சியிலிருந்து மூவருமாக மஜ்லிஸின் ஆறு அங்கத்தவர்களை கொண்ட குழுவொன்றை அமைத்து அமைச்சரவை நியமனம் மற்றும் சட்ட மன்றத்தை சீராக நடத்திச் செல்லுதல் போன்ற முக்கிய விடயங்களை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அரசாங்கமும் எதிர்க் கட்சியினரும் இணக்கம் தெரிவித்தனர். இலங்கை ஜனாதிபதியின் தூதுக் குழுவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் (மேலும்.....)

ஆடி 09, 2010

அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது பலஸ்தீனர்களின் துன்பங்களுக்கு விரைவில் விடிவு - ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத்

அமெரிக்கா ஒரு உலக சர்வாதிகாரி, இஸ்ரேல் அதன் கூட்டாளி என ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். அமெரிக்காவின் பிசாசுப் படைகளை பூமியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது. பலஸ்தீன மக்களின் துன்பங்களுக்கு விரைவில் முடிவுகட்டப் போகின்றோம். விரைவில் எமது வெற்றி விழாவைக் கொண்டாடவுள்ளோம் என்றும் ஈரான் ஜனாதிபதி உரையாற்றினார். சுமார் 150 மில்லியன் முஸ்லிம்கள் நைஜீரியாவில் உள்ளனர். இம்மக்கள் ஈரான் நிலைப்பாட்டையும் ஈரான் ஜனாதிபதியையும் பெரிதும் பாராட்டினர்.  (மேலும்.....)

ஆடி 09, 2010

முல்லையில் 350 குடும்பங்கள் மீள்குடியேற்றம்
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 350 குடும்பங்களைச் சேர்ந்த 1083 பேர் நேற்று (8) கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்ற ப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது. இவர்கள் கரைத்துறைப் பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள அலம்பில் வடக்கு, அலம்பில் தெற்கு மற்றும் செம்மலை ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் மீள் குடியேற்றப்பட்டதாக மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ் ஸ்ரீரங் கன் கூறினார். போர்ச் சூழல் காரணமாக முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த இவர்கள் ஒருவருடத்திற்கு மேலாக வவுனியா நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் விசேட பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டு சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆடி 09, 2010

Heat wave exposes decrepit infrastructure in US, Canada

(By Tom Eley )

Temperatures in New York City, Baltimore, Philadelphia, and Providence, Rhode Island, broke records on Tuesday. Baltimore Washington International Airport topped 105 degrees, and Philadelphia and Washington D.C.’s airports recorded temperatures of 102 and 101 degrees, respectively. High humidity made the heat more intense. New York’s Central Park—usually one of the cooler spots in the city—recorded a temperature of 103 degrees on Tuesday afternoon. But humidity made it feel like 111 degrees, according to AccuWeather. Wednesday saw temperatures in the high 90s for most of the region, with some cities once again hitting 100. Forecasts say the heat wave will lessen somewhat over the weekend, but will intensify again next week. (more...)

 

ஆடி 08, 2010

கே.பியை சந்தித்ததாக கூறவில்லை என்கிறார் அமைச்சர் டக்ளஸ் (பிந்திக் கிடைத்த செய்தி)

கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை சந்தித்ததை தான் உறுதிப்படுத்தியதாக வெளியான செய்தியை ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நிராகரித்துள்ளார். குமரன் பத்மநாதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட பல தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்ததாகவும் அதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிப்படுத்தியதாகவும் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் தான் அவ்வாறு கே.பி.யை சந்திக்கவில்லை எனவும் சந்தித்ததாக உறுதிப்படுத்தவுமில்லை எனவும் அமைச்சர் தேவானந்தா  கொழும்பு தமிழ்இணையத்தளமொன்றிற்கு  தெரிவித்தார்.

ஆடி 08, 2010

வரதராஜப்பெருமாள் ஏன் யாழ்பாணம் வந்தார்?

வரலாற்றில் இருந்து பாடத்தை படித்தாக வேண்டும்

(அரவிந்தன்)

வரதராஜப்பெருமாளைப் பொறுத்தவரையில் தமிழ்பேசும் மக்களின் இன்றைய அரசியல் நிலவரங்கள் அத்தனைக்கும் எல்லோரும் ஏதோ வழிகளில் பொறுப்பானவர்களாகவே இருந்துள்ளனர். அவரவருடைய பாத்திரங்களுக்கு அமைய இந்த விகித வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எல்லோரும் பொறுப்பாளிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்பது அவருடைய கருத்து.  நமது கடந்த காலம் பலரையும் பொறுப்பாளிகளாக்கியுள்ளபோதும் அந்தப் பொறுப்புகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்பாமல் இருக்கும் போக்கே தொடருகிறது. இது தான் அவலம். இந்தப் போக்கு தொடருமானால், நிச்சயம் இன்னொரு முள்ளிவாய்க்கால் நிலைமை தான் தமிழர்களுக்கு ஏற்படும். விடுதலைப் புலிகளின் போராளிகளாக இருந்தவர்களாலும் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்களாலும் கூட வேறுபட்ட கோணங்களில் பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு பின்னடைவுக்குப் பின்னர், ஒரு வீழ்ச்சிக்குப் பின்னர், ஒரு அரசியற் தளமாற்றம் நிகழும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான சுயமதிப்பீடுகளும் விமர்சனங்களும் வருவது வழக்கம். (மேலும்.....)

ஆடி 08, 2010

இலங்கைக்கு எதிரான ஐநா வின் செயற்பாட்டை எதிர்த்து

சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் விமல் வீரவன்ச

 

இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தினை முற்றுகையிட்டு மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது. அமைச்சர் விமல் வீரவன்ஸ சாகும்வரை உண்ணாவிரதத்தினை இன்று ஆரம்பித்துள்ளார். கொழும்பு ஐ.நா. காரியாலயம் இன்று இப்படிக் காட்சியளித்தது...
படங்கள்: கீத்சிறி டி மெல்(நன்றி: தமிழ்மிரர்)
 

ஆடி 08, 2010

கே.பி.யுடன் முக்கிய தமிழ் கட்சிகள் சந்திப்பு...

கே .பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுடன் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள் ஆகியோருக்கிடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார். எதுசம்பந்தமாக இந்த சந்திப்பு இடம்பெற்றன என உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.  இருப்பினும் பல ஊகங்கள் மட்டும் வெளியாகியிருக்கின்றன.

ஆடி 08, 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று ஒன்றுகூடி செயற்பாட்டு திட்டவரைபுகளை மேற்கொண்டனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு பொதுக் களத்தில் பேசி ஒருமித்த கருத்தையும் நிலைப்பாட்டையும் தமிழ் கட்சிகளுக்குள் உருவாக்குவதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நீதியான அரசியல் அபிலாசைகளை வென்றெடுத்தல் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் மலையக தமிழ் மக்கள் உட்பட தமிழ் பேசும் மக்களின் நீதியான அரசியல் அபிலாசைகளை வென்றெடுத்தல் என்பன தமிழ்க்கட்சிகளின் பிரதான நோக்கமாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் மேற்கூறிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஒற்றுமையான அரசியல் செயற் திட்டத்தினை உருவாக்குதலும் நடைமுறைப் படுத்துதலும் அத்துடன் இந்த நோக்கங்களை அடைவதற்காக இலங்கைத் தீவுக்குள்ளும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் பேசும் மக்களிடமிருந்தும் அவர்கள் மத்தியில் செயற்படும் அமைப்புக்களிடம் இருந்தும் பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுதல். (மேலும்.....)

ஆடி 08, 2010

வேண்டாம் எரிகிற வீட்டில் எண்ணை ஊற்றும் செயல்

(மோகன்)

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எவரும் அல்லது எதுவும் போகக்கூடாது என்றால் முதலில் தாங்கள் இயக்கி, நடித்து கிழித்து வரும் கண்றாவி தமிழ்ப்படங்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்பதில் தொடங்கட்டுமே. (இலங்கைத் தமிழர்களுக்கு செய்யும் மாபெரும் நல்லகாரியமாக இது ஒனறாவது இருக்கும்) ஏனெனின் தமிழ்ப்படங்களை வியாபார ரீதியாக இறக்குமதி செய்வதும் சிங்கள அரசுதான், அந்தப்படங்களை பார்த்து புண்ணியம் அடைபவர்களில் கணிசமான தொகையினர் சிங்கள மக்களும்தான். இல்லவே இல்லை உங்கள் உலகத்தரம் வாய்ந்த படங்களை இலங்கைத் தமிழர்கள் பார்த்துத்தான் தொலையணும் என்று அடம்பிடிப்பீர்களானால் அந்தத்தொழிலை பழம் நெடுமாறன் கையில் ஒப்படைத்து விடுங்கள் அவர் தனது வானரக்கூட்டம் சகிதம் படப்பெட்டிகளை யாழ்ப்பாண கடற்கரையோரம் பக்குவமாய் இறக்கிவிட்டு திரும்பிவரட்டும். (மேலும்.....)

ஆடி 08, 2010

திமுக சார்பி்ல் கனிமொழி நாடாளுமன்ற அமைச்சராகலாம் ?

மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் மாற்றியமைக்கப்படும் போது திமுக சார்பி்ல் கனிமொழி நாடாளுமன்ற அமைச்சராகலாம் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன..தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் மு.க. அழகிரி பதவி விலகலாம் என தெவிக்கப்படுகிறது. பணிச் சுமையைக் குறைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கோரியுள்ளதால், அவரது துறைக்கு இரு இணையமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். சரத்பவாரிடம் விவசாயத்துறையை மட்டும் விட்டுவிட்டு அவர் வசமுள்ள உணவுத்துறை மற்றும் பொது வழங்கல் துறைக்கு என தனியாக இரு இணையமைச்சர்கள் நியமி்க்கப்படவுள்ளனர். இந்தப் பதவிகளுக்கு பிரதீப் ஜெயின் (காங்கிரஸ்) சிசிர் அதிகாரி (திரிணாமூல் காங்கிரஸ்) ஆகியோரின பெயர்கள் முன்மொழியப்பட்டள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆடி 08, 2010

சிறப்புரிமையை பயன்படுத்தி
'என் மீது வீண்பழி சுமத்த சிலர் முயற்சி'  -
அமைச்சர் டக்ளஸ் தேவானந்த

கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் (விஜயகலா மகேஸ்வரன் தனது கணவர் அமரர் மகேஸ்வரனின் படுகொலை மற்றும் சாவகச்சேரி மாணவன் படுகொலை தொடர்பாக ஈ. பி. டி. பி.யின் மீதும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசியிருந்தார். ஈ. பி. டி. பி. மக்களிடம் இருந்து கப்பம் வரி போன்ற மக்கள் விரோத அறவீடுகளிலோ அன்றி கொள்ளை, கொலை போன்ற சட்ட விரோதச் செயற்பாடுகளிலோ எச்சந்தர்ப்பத்திலும் ஈடுபட்டது கிடையாது. கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளும் எமது ஜனநாயக வழிமுறைப்படி இப்போது அந்த அடிப்படையிலேயே இந்த உயரிய மன்றத்திலும் நான் கருத்துக்களுக்குப் பதிலாக எமது கருத்தை முன்வைக்கின்றேன். கருத்துக்களுக்குப் பதிலாகக் கருவிகளை ஒருபோதும் நாம் எடுக்கவில்லை. (மேலும்....)

ஆடி 08, 2010

Sri Lankan Tamil MPs meet CPI MP

A delegation of Tamil MPs from Sri Lanka today met CPI MP D Raja and impressed on him the need for active Indian involvement in hammering out a political solution for ethnic problem in their country. The delegation of Tamil National Federation (TNF) MPs including Sambandam, Suresh Premachandran and Senadhiraja met Raja in the CPI headquarters here and sought Indian help. Raja told the delegation that his party would take up the issue of Sri Lankan Tamils both inside and outside Parliament, especially in the matter of relief and rehabilitation of those still living in camps. (more....)

ஆடி 08, 2010

ரணிலின் உரையும் நம்பகத்தன்மையும்

ரணில் விக்கிரமசிங்ஹ இலங்கையின் பழமைவாய்ந்த தேசியக் கட்சியொன்றின் தலைவர். நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சி அது. மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கின்ற கட்சி. இக் கட்சியின் தலைவர் தேசிய இனப்பிரச்சினை பற்றிப் பேசுவது எழுந்தமானப் பேச்சாக இருக்கக் கூடாது. கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்ஹவின் செயற் பாடுகள் இனப் பிரச்சினையின் தீர்வுக்கு ஆதரவான வையாக இருக்கவில்லை. பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டம் தொடர்பாக இவரும் இவரது கட்சியும் நடந்துகொண்ட விதம் மிகவும் மோசமானது. அத் தீர்வுத் திட்டத்தை ஆதரிப்பது போன்ற வெளித்தோ ற்றத்தைக் காட்டிய போதிலும் அதைத்தோற்கடிக்க வேண்டும் என்பதில் ரணில் தீவிரமாக இருந்தார். (மேலும்.....)

ஆடி 08, 2010

விநோத கிரகம்

வியாழன் கிரகத்தைவிட 13 மடங்கு பெரிதான ராட்சத வாயுக் கோளம் ஒன்று அதனுடைய நட்சத்திரத்தை 4 நாட்களுக்கும் குறைவான காலகட்டத்தில் அதிவேகமாகச் சுற்றி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதிய கிரகத்துக்கு எக்ஸ். ஓ - 3 பி என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 200க்கும் அதிகமான வேற்றுக் கிரகங்களை விட பல்வேறு வகைகளில் எக்ஸ். ஓ - 3 பி கிரகம் வேறுபட்டுள்ளதாக பால்டிமோரைச் சேர்ந்த பீட்டர் மெக்கல்லாத என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றார். முதலாவது இந்தக் கிரகம் அதிக எடையுடன் அதன் நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமான சுற்றுப் பாதையில் வலம் வருகிறது. இரண்டாவது நெருக்கமாக வலம் வருவதால் வட்டப் பாதையில் வலம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கிரகம், அதற்கு மாறாக நீள் வட்டப் பாதையில் வலம் வருகிறது. மூன்றாவதாக இந்தக் கிரகம் ஒவ்வொரு முறையும் அதன் தாய் நட்சத்திரத்தைச் சுற்றி வரும்போது தாய் நட்சத்திரத் திற்கும், நம்முடைய பூமிக்கும் இடையில் கடந்து செல்கிறது. இதைப்போன்று மொத்தம் 12 கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

ஆடி 08, 2010

மனித வாழ்வில் கலோரி

மனிதன் வேலை செய்யும் போது உடலில் இருக்கம் சக்தி வெளியேறுகிறது. எந்ததெந்த வேலை செய்ய எத்தனைக் கலோரி செலவாகும்? ஆனால் நீங்கள் எவ்வளவு நேரம் வேலை செய்கின்றீகள், எவ்வளவு வேகமாகச் செய்கின்றீகள் என்பதைப் பொறுத்து இந்த பட்டியல் மாறுபடும். உங்களுக்கான பட்டியல் இதோ. (மேலும்.....)

ஆடி 08, 2010

ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் வழங்க மறுப்பு?

ஈரான் அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவதை கைவிட மறுத்ததை தொடர்ந்து அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடையை கடந்த வாரம் விதித்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஈரான் நாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை ஈரான் அரசு மறுத்து உள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சரக செய்தி தொடர்பாளர் ராமின் மெக்மான்பாராஸ்ட் நிருபர்களிடம் கூறியதாவது,  இது போன்ற கட்டுப்பாடு எதுவும் ஈரான் மீது விதிக்கப்படவில்லை. ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல் ஆகும். இது ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் பிசார யுத்தத்தின் ஒரு பகுதி ஆகும். இவ்வாறு ராமின் தெரிவித்தார். ஜெர்மனி போக்குவரத்து அமைச்சரக அதிகாரியும் இப்படி எந்த வித தடையும் ஈரானிய விமானங்கள் மீது விதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

ஆடி 08, 2010

ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு எதிரே

சத்தியாகிரகம் தொடருகின்றது

ஐக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகத்துக்கு எதிரே தேசிய சுதந்திர முன்னணியினர் மேற்கொண்டுள்ள சத்தியாகிரகம் இன்றும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. இலங்கை விவகாரம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா.செயலாளர் நியமித்துள்ள குழுவை அவர் வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியே இந்த சத்தியாகிரகத்தில் தேசிய சுதந்திர முன்னணியினர் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் ஐ.நா. செயலாளர் இது பற்றிய ஒரு முடிவை அறிவிக்கவேண்டும் எனவும் இல்லையேல் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி 08, 2010

அமெரிக்க சி.ஐ.ஏ. யி னால் பயிற்றுவிக்கப்பட்ட

வெனிசூலாவில் கைதான குற்றவாளியை கியூபாவிடம் ஒப்படைக்க ஏற்பாடு

கியூபாவின் உல்லாச ஹோட்ட லைத் தாக்கிய குற்றவாளி சென்ற வாரம் வெனிசூலா விமான நிலைய த்தில் கைது செய்யப்பட்டார். அபர்கா என்ற இந்த நபர் சல்வடோர் நாட்டைச் சேர்ந்தவர். 1997ம் ஆண்டு கியூபாவிலுள்ள ஆடம்பர ஹோட்டலைத் தாக்கியதாக இவர்மீது குற்றம்சாட்டப் பட்டது. அன்று முதல் இவரை கியுபா அரசாங்கம் தேடிவருகின்றது. வெனிசூலாவில் கைதான இந்த நபரை கியூபாவுக்கு அனுப்பிவைக்க வெனிசூலா தயாராக உள்ளதென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்து ள்ளது. இது தொடர்பாக வெனி சூலா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, கைதான அபர்கா கம்யூனிஸ நாடுகளுக்கு எதிரானவர். கியூபா வின் முன்னாள் ஆட்சியாளர் லுயிஸ்பொஸாடாவின் அனுசரணையில் அமெரிக்க சி.ஐ.ஏ. யி னால் பயிற்றுவிக்கப்பட்டவர். இவர் பல்வேறு பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்காக கியூபா, வெனி சூலா அரசுகளால் தேடப்பட்டு வந்தவர். இவரைக் கைதுசெய்து தடு த்து வைத்துள்ளோம். சர்வதேச பொலிஸான இண்டர்போல் பிடி யாணையின் கீழ் அபர்கா கைதாகியுள்ளார். இவரிடம் போலி குவாதமாலா பாஸ்போட் இருந்தது விசாரணைக்காக இவர் கியூபா விடம் ஒப்படைக்கப்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

ஆடி 08, 2010

ஐ.நா.அறிவிப்பு

அகதி அந்தஸ்த்து வழங்கத்தேவையில்லை

இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவொருநாடும் இனிமேல் இயல்பாகவே அகதி அந்தஸ்த்து வழங்கத்தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அகதி அந்தஸ்த்து வழங்குவதற்கான தனது மீளமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களிலேயே ஐ.நா.இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைமைகள் இப்போது மிகவும் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் அதுவே இந்த அறிவிப்புக்குக் காரணம் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி 08, 2010

Demand an Independent Public Inquiry Defend Civil Liberties

MASS RALLY & MARCH

Saturday, July 10 at 1:00 p.m.

Queen's Park, Toronto

During the G20 Summit in Toronto on June 26 and 27, more than $1.2 billion was spent on a reported 20,000 police and security officers, a 5-metre fence, and new weapons designed to stifle dissent and silence public opposition. Despite threats of new crowd dispersal weapons and dubious claims that police were granted extraordinary powers of search and arrest, over 25,000 people peacefully marched to question the legitimacy of the G20 and call on Canada to take action on the economy, jobs, public services, global poverty, climate change, Indigenous rights, migrant and undocumented workers? rights, women?s rights, human rights, peace, inequality and social justice. (more....)

ஆடி 07, 2010

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளை வேண்டுமென்றே கொன்ற இலங்கை இராணுவம்.  - ஜெயலலிதா கண்டனம்!!!

பொது மன்னிப்பு என்று அறிவிக்கப்பட்டதால் சரணடைந்த 4000 தமிழ்ப் போராளிகளை புலிகள் கொன்ற வரலாறு 20 வருடங்களுக்கு முன்னர் தான் நடந்தது. யுத்தம் என்று வந்தபின் தர்மம் நியாயம் என்பதெல்லாம் சுத்தப்பொய். - குசும்பன்  

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நியாயமான விசாரணையை எதிர்கொள்ள ஏதுவாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் கருணாநிதி. தடை செய்யப்பட்ட எல்.டி.டி.ஈ. இயக்கத்தின் எந்த உறுப்பினரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற மற்றொரு தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்தும் என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார். போர் நடக்கும் போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று நான் தெரிவித்தது உண்மை தான். நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். (மேலும்...)

ஆடி 07, 2010

மக்களோடு மக்களாய்

கைதடிக் கிராமத்தில் வரதர்

06.07.2010 அன்று கைதடி நவபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களுடன் நவ சனசமூக நிலையத்தில் நடைபெற்ற சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு இன்றைய அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் பற்றி கலந்துரையாடினர். பொதுமக்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் பதிலளித்தார். புலிகளின் அச்சுறுத்தலால் தொடர்புகள் விடுபட்டிருந்த ஈபிஆர்எல்எவ் இன் உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது அரசியல் வேலைகளுக்கான அடித்தளங்களை விஸ்தரிப்பதாக உறுதி பூண்டனர்.

ஆடி 07, 2010

பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம்

முன்வைக்கப்பட்ட தீர்வுகளைத் தமிழ்த் தலைமை நிராகரிக்காது, முழுமையான அரசியல் தீர்வை அடைவதற்கான மார்க்கமாக ஏற்றிருந்தால் அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற பேச்சுக்கு இப்போது இடம் இல்லாது போயிருக்கும். நடந்து முடிந்தவை பற்றி இப்போது பேசுவதில் பலனி ல்லை. அவை முடிந்தவையாகவே இருக்கட்டும். அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம் நடைபெறுவதை வரவேற்போம். அதேநேரம், எதிர் காலத்தில் பாதுகாப்பு வலயங்கள் இல்லாத நிலையை உருவாக்குவது அனைவரதும் பொறுப்பு என்பதை உணர்ந்து செயற்படுவோம். நடைமுறைச் சாத்திய மான தீர்வை ஏற்றுப் படிப்படியாக முழுமையான அரசியல் தீர்வை அடைவதே அதற்கான வழி. (மேலும்....)

ஆடி 07, 2010

மக்களோடு மக்களாய்
இரவு நேரத்திலும் மக்களுடன் சந்திப்பு

21.06.2010 அன்று கைதடி ராஜபுரி கிராமத்தில் வசிக்கும் மக்களுடன் நடைபெற்ற சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் மற்றும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள். இரவு பகல் பாராமல் மக்களோடு மக்களாய் இணைந்து அவர்களின் குறை கேட்டு செயற்படுகின்றனர். வடக்கு கிழக்கு மாகாண சபையின் பொன்னான வாய்பை நாம் இழந்து விட்டதாக மக்கள் தமது ஆதங்கங்களை வெளிபடுத்தினர். போரில் மரணமடைந்த பொதுமக்கள் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆபிஆர்எல்எவ் இன் பழைய உறுப்பினர்கள் பலர் தாம் தொடரந்தும் மக்கள் வேலைகளில் ஈடுபட போவதாக இச் சந்தர்பத்தில் தெரிவித்துக் கொண்டனர்.

ஆடி 07, 2010

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரின் உரை உரத்த கண்டனத்திற்குரியது -

யாழ் ஆய்வறிவாளர் அணியம்

பகைமைகளை மறந்து, இனங்களுக்கிடையில் உறவுகளை விருத்தியாக்கி, சாதி, மத, பால் பேதங்களைக்கடந்து இலங்கை மக்கள்  அனைவரும் சுபிட்சமான ஒரு எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள சகலரும் ஒத்துழைக்கவேண்டிய ஒரு தருணத்தில், உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிவகித்த ஒருவரிடமிருந்து, ஆண் ஆதிக்க அகம்பாவத்துடன், பெண்களுக்கு எதிராகவும் - சிங்கள சகோதரிகளை       சிறுமைப்படுத்தியும் - யாழ் இளைஞர்களை கொச்சைப்படுத்தியும் - பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் இத்தகைய விசமத்தனமான கருத்துக்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன் இனவெறிக்குத் தூபமிடும் இத்தகைய ஆதாரமற்ற அவதூறுளை எந்தவித ஆய்வுகட்கும் உட்படுத்தாது பிரச்சாரப்படுத்துவதில் பங்களிக்கும் குடாநாட்டு பத்திரிகைகளின் பத்திரிகாதர்மத்தையும் நாம் பகிரங்கமாக கேள்விக்குட்படுத்துகிறோம். பெண்கள் தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் எழுப்புவதிலும், தீர்ப்பதிலும் முந்தியிருக்க வேண்டிய தமிழ் பெண்ணிலைவாதிகளும், தமிழ் பெண்கள் அமைப்புகளும்கூட பாரதூரமான இந்தப் பேச்சுக்குறித்து இதுவரையில் பாராமுகமாய் இருப்பதும்  பலத்த கண்டணத்திற்குள்ளாகவேண்டியதொன்று.  (மேலும்....)

ஆடி 07, 2010

மக்களோடு மக்களாய்

முன்னாள் புலி ஆதரவாளர்களும் இணைவு

தொழில் சங்கவாதிகளுடனும் பொதுமக்களுடனும் சந்திப்பு

05.07.2010 அன்று கொடிகாமம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளுடனான சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவராசா மோகன் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் புலிகளின் பிரசன்ன காலகட்டத்தில் புலிகளுக்கு ஆதரவளித்த பலர் தமது கடந்த கால தவறான புரிதலை ஏற்றுக் கொண்டு புதிய அரசியல் தலமையை நோக்கி பயணிக்க தாம் தயார் என கூறினர்.

ஆடி 07, 2010

மொழி எப்படிப் பிறந்திருக்கும்?

பொதுவாக மனிதர்களிடையே பேச்சு மொழியே முதலில் தோன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப் போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கும் என்பது தெளிவு. ஆனால் முதலில் மனித இனம் சைகைகளையும், உடல் அசைவுகளின் மூலமான செய்திகளையும்தான் பரிமாறிக்கொண்டிருக்கும் என்பதற்கு ஆதாரமாக, அண்மையில் சிம்பன்சி மற்றும் போனோபோ குரங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்ட தகவல்கள் அமைந்துள்ளன. (மேலும்....)

ஆடி 07, 2010

மக்களோடு மக்களாய்

மயிலிட்டி மக்களுடன் உயர்பாதுகாப்பு வலயம் பற்றி கலந்துரையாடல்

27.06.2010 அன்று மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்து சுண்ணாகம் கண்ணகை குடியிருப்பில் வசிக்கும் மக்களுடன் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் மற்றும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள். 1970 களின் முற்பகுதியில் தமிழ் மாணவர் பேரவை கால கட்டத்தில் வரதருடன் அரசியல் வேலைகளில் ஈடபட்ட பலர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூடவே தமிழ் இளைஞர் பேரவையின் பழம் பெரும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஆடி 07, 2010

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 8 பாரிய திட்டங்கள்

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் வெளி நாட்டு உதவியுடன் 8 பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டங்களுக்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய சங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகிய அமைப்புகளுடன் ஜப்பான் மற்றும் ஜெர்மன் அரசாங்கங்கள் ரூ. 33025 மில் நிதி உதவி வழங்கியுள்ளன. இந்த திட்டங்களில் 3361 கிலோ மீட்டர் வீதிகள் 104 பாலங்கள் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக செலவாகியுள்ள நிதி 6915 மில்லியன் ரூபாவாகும். மன்னார் பாலம் இந்த திட்டத்தில் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தாகும். இதற்கு ஜப்பானிய அரசு 2162 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியிரு ந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 43091 வீடுகள் 12151 மில்லியன் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இப்பிரதேச மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன

ஆடி 07, 2010

ஜகார்த்தா

அதிக மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவின் தலைநகரம் ‘ஜகார்த்தா’. இந்தோனேஷியாவின் கலை மற்றும் பொருளாதார மையமாகவும் இது திகழ்கிறது. 2008ல் நடந்த கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 87 லட்சத்து 92 ஆயிரம். இதன் மொத்தப் பரப்பளவு 285 சதுர மைல். உலகில் உள்ள மிகப் பெரிய நகரங்களுள் ஜகார்த்தா 12 வது இடம் வகிக்கிறது. (மேலும்....)

ஆடி 07, 2010

அரசியல் தலைவர்களுடன்

இலங்கை கம்யூனிஸ'ட் கட்சி ஆண்டு விழாவில் வரதர் , சித்தர் ,ஸ்ரீதரன்
 

02.07.2010 அன்று கொழும்பில் நடைபெற்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 67வது ஆண்டு நிறைவு விழாவில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் மூத்த தலைவர்களுடன் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தோழர் வரதராஜப்பெருமாள், பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரி.ஸ்ரீதரன் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழக செயலதிபர் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இலங்கையின் பழம் பெரும் இடதுசாரிக் கட்சியின் 67 வது

ஆண்டு விழாவில் இலங்கையின் முதுபெரும் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆமைச்சர் டியூ குணசேகரா உட்பட பலர் சிறப்புரை ஆற்றினர். வடக்கு கிழக்கில் இடதுசாரிகளுடன் இணைந்து வேலை செய்யம் தமது விருப்பை இவ்நிகழ்வு மூலம் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டனர் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர். கடந்த காலங்களில் புளொட் அமைப்பும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனரும் இலங்கையின் இடதுசாரிகளுடன் கரம் கோர்த்து செயற்பட்டதை மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

ஆடி 07, 2010

UN Secretary General’s Panel on Sri Lanka is a Blunder of Serious Proportions

 The UN Secretary General, Ban Ki-Moon has clearly exceeded the powers prescribed per Chapter XV of the UN Charter where his role as the Chief Administrative Officer and the limits of his authority are specifically defined in Articles 97 and 98, by his appointing a three member panel to investigate alleged violations of human rights and humanitarian law during the concluding stages of the military action taken by Sri Lanka in 2009 to regain the country from the designated terror group called the Liberation Tigers of Tamil Eelam (LTTE) also known as the Tamil Tigers.  The UN Charter provides that the Secretary General shall perform such functions as are entrusted to him by the General Assembly, the Security Council and other subsidiary bodies such as the Human Rights Council, but lacks authority to act in such matters on his own.  In fact, Sri Lanka’s human rights issues have been dealt with appropriately by the international community in June 2009 at the UN Human Rights Council in Geneva where the members decided in a 29 to 12 vote to not intervene in Sri Lanka’s internal issues. (more....)

ஆடி 06, 2010

 

ஆதாரம் உண்டென்கிறது தெஹ்ரான்

ஈரான் அணு விஞ்ஞானியை அமெரிக்கா கடத்தியது

ஈரான் அணு விஞ்ஞானியும் தெஹ்ரான் பல்கலைக்கழக பணியாளருமான ஷஹ்ராம் அமிர் பலாத்காரமாக கடத்தப்பட்டமைக்கான ஆதாரம் உண்டெனக் கூறியுள்ள ஈரான் அரசாங்கம் சுவிஸ்லாந்து தூதரகத்திடம் ஆதாரங்களைக் கையளித்துள்ளது. அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட இவரை சி.ஐ.ஏ. உளவாளிகள் கடுமையான முறையில் நடத்தி முக்கிய தகவல்களைப் பெற்றுக் கொண்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அமெரிக்காவோ ஷஹ்ராம் அமிர் தாம் விரும்பியே அமெரிக்கா வந்ததாகவும் ஈரான் பற்றிய தகவ்களை வழங்கியதாகவும் தெரிவித்தது. அண்மையில் சி.ஐ.ஏ. அதிகாரிகளின் பிடியிலிருந்து ஷஹ்ராம் அமிர் தப்பிவிட்டார். (மேலும்...)

ஆடி 06, 2010

பான் கீ மூனின் செயலுக்கு எதிர்ப்பு:

ஐ.நா. அலுவலகத்தை சுற்றி வளைத்து தேசிய சுதந்திர முன்னணி ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென நிபுணத்துவ குழுவொன்றை நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணி நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடாத்தியதுடன், ஐ.நா. அலுவலகத்தை சுற்றி வளைத்து உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக கொழும்பு, பெளத்தாலோக்க மாவத்தையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் சிக்குண்டிருந்த அதிகாரிகளும், ஊழியர்களும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் வெளியேற்றப்பட் டனர். (மேலும்...)

ஆடி 06, 2010

பிரபாகரனின் இராஜ தந்திரமும்? கேபியின் இராஜ துரோகமும்?

(தானா மூனா)

ஐயோ அவங்களே அவங்களைப்பற்றி அவிக்கிறாங்கள். எனக்கும் கீழே உள்ள இந்த செய்திக்கும் சத்தியமா எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால் அவங்களே அவங்களைப்பற்றி சொல்றதை நாமும் 1989 ம் ஆண்டு சொன்னோம். தேசியத் தலைவர் பிரபாகரன் இராஜதந்திரம் என்று சொல்லிக்கொண்டு பிரேமதாஸாவுடன் உறவு கொண்டதும் கொழும்பு வீதியில் உள்ள வீதித்தடை எங்கும் மாற்று இயக்ககாரரை ஆமியோடு சேர்ந்து பிடித்ததும் கொன்றதும் இப்பவும் தலைக்க  வந்து தொலைக்குதே, ஆனால் என்ன ஒன்று இதுவரை யூஎன்பி யை கட்டியழுததை விட்டு இன்று எஸ்எல்எவ்பியை உங்கள் தற்போதைய தலைவர் கட்டியழுகின்றார். அன்று பிரோமதாசாவுடன் கூடிக்குலவியது இராஜதந்திரம் என்றால் இன்று கோதபாயாவுடன் கூடிக்குலாவுவதும் இராஜ தந்திரமா? இராஜ துரோகமா?. வேணும் என்றால் பூநகரியானிடம் கேட்டுப்பாருங்கோ......? (மேலும்....)

ஆடி 06, 2010

உரிமையாளர் புலிகளுடன் தொடர்பாம்! கொழும்பிலுள்ள 20 தொடர்மாடிகளை அரசாங்கம் சுவீகரிக்கத் திட்டம்

கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 20 தொடர்மாடிகள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ள வர்த்தகருக்குச் சொந்தமானது எனவும் அவர் கனடாவில் வசிப்பதாகவும் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவுகள் இதனைத் தெரிவிப்பதாக லக்பிம பத்திரிகை நேற்று குறிப்பிட்டுள்ளது.  இந்த 20 கட்டிடங்களின் உரிமையாளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இந்த விபரங்கள் வெளிவந்திருப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய வர்த்தகருக்கு இவை சொந்தமானவையென  (மேலும்....)

ஆடி 06, 2010

சர்வதேச சமூகம் பிரச்சினையைத் தீர்க்காது

சர்வதேச சமூகம் பற்றிய ஒரு மாயையை இத் தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் தோற்று வித்திருக்கிறார்கள். சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறு வோம் என்றும் சர்வதேச சமூகத்துக்குத் தெரியப் படுத்தும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்றும் அடிக்கடி கூறுவதன் மூலம், சர்வதேச சமூகத்துக்கூடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்கள் மத்தியில் இவர்கள் வளர்த்திருகின்றார்கள். மக்களிடம் இந்த நம்பிக்கையை மேலும் வளர்க்கும் நோக்கத்துடன் இந்தியத் தலை வர்களுடன் பேசுவதில் அர்த்தமில்லை. நடைமுறைச் சாத்தியமான தீர்வுக்காகச் செயற்படும் நோக்கத்துடன் பேசுவதே பலனளிக்கும். இனப் பிரச்சினையின் தீர்வுக்குச் சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை வைத்திருப்பதால் எவ்வித பலனும் ஏற் படப்போவதில்லை. இந்தியாவைத் தவிர வேறெந்த நாடும் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரை யில் இதுவரை எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை. (மேலும்....)

ஆடி 06, 2010

முல்லைத்தீவு முஸ்லிம்கள் சொந்த இடங்களை பார்வையிட ஏற்பாடு

 

 முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு முன்னதாக அவர்களை தாம் வாழ்ந்த பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று காண்பிக்க உள் ளதாக மாவட்ட செயலகம் கூறியது.  வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 67 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் இடம் பெயர்ந்துள்ளமை பதிவு செய்யப்பட்டுள் ளதாக திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இவர்களுள் 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் கடந்த வாரம் கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகத்தினூடாக இதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 20 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு சென்றிராததாலும் சிலர் அங்கு செல்ல தயங்குவதாலும் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை இந்த மாதத்திற்குள் சொந்த இடங்களுக்கு நேரில் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஆடி 06, 2010

இணையத்தில் நூலகம்

வாசிப்பின் மூலம் நிறைய விடயங்களைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். அதனாலோ என்னவோ, வாசிப்பு மனிதனை பரிபூரணமாக்கும் என்று கூடச் சொல்லுவார்கள். நிறைய வாசிக்கும் பழக்கமுள்ள ஆர்வலர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி கூகிள் (Google)  நிறுவனம் தொடரறா நூலகமொன்றை (Online Library) ஏற்படுத்தி யுள்ளது. இந்த நூலகத்திலிருந்து உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கூட  PDF (Portable Document Format)  நிலையில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இருந்த போதும் பதிப்புரிமை செய்யப்பட்டு (Copyrighted Editions)  நூல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியாது. கூகிள் தேடலில் எந்த விடயம் தொடர்பான புத்தகங்களையும் தேடி அவற்றை பதிவுகளை செய்து கொள்ளும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆயினும் பதிப்புரிமை செய்யப்பட்ட நூல்களை உள்ளடக்கத்தின் ஒரு பகுதியை இலவசமாக வாசிக்க முடியும்படி நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகிலுள்ள சகல புத்தகங்களையும் இலக்கமிட்டு மக்களுக்கு அவை பயன்தரக் கூடிய வகையில் நிரல்படுத்துவதே தமது தலையாய நோக்கமென கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆடி 06, 2010

ஓமந்தைக்கு அப்பால் செல்ல எவருக்கும் தடை இல்லை

ஓமந்தைக்கு அப்பால் எவரும் செல்ல முடியும் அதற்கு எவ்வித தடையுமில்லையென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை நிறுவன வாகனங்கள் உட்பட சகல வாகனங்க ளும் தடையின்றி செல்ல முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நேற்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தமதுரையின் போது முன்வைத்த கூற்றொன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்

ஆடி 06, 2010

போலந்து ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி

போலந்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் முன்னாள் பிரதமர் ஐரிஸ்ஹோ கெக்னிஸ்கி வெற்றி பெற்றார். இவர் 53 வீத வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட லிபரல் கட்சி வேட்பாளர் 47 வீதத்தையே பெற்றார். தேர்தல் கணிப்பீடுகள் எதிர்க் கட்சி வேட்பாளாருக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் காட்டின. ரஷ்யாவில் நடந்த வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக போலந்து ஜனாதிபதி லெக் கெனிஸ்தி விமானத்தில் சென்றவேளை அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஜனாதிபதிப் பதவி வெற்றிடமானது. மூன்று மாமதங்களாக சபாநாயகர் நாட்டின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றார். தேர்தலில் வெற்றியீட்டியவர் விரைவில் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார். ஆளும் கட்சி ஆதரவாளர்கள் வெற்றியைப் பட்டாசு கொழுத்திக் கொண்டாடினார்.

ஆடி 06, 2010

மட்டு., திருமலை வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 3500 மில்லியன் ரூபாய் நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கி உள்ளது. இதனைக் கொண்டு பல வீதிகள் விரைவில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் 54 கிலோ மீற்றர் நீளமான 12 வீதிகளை அமைப்பதற்கு உலக வங்கி இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை வழங்கி உள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பு, நிர்மாண அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கடந்த 03ம் திகதி காலை திருகோணமலை ஊடக இல்லத்தில் நடைபெற்றது. அதன்போது மாகாண அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா அலஸ்தோட்டம் வீதி 3.2 கி. மீ., காக்காமுனை முனைச் சேனை வீதி 1.90 கி.மீ., எல்.பி. நான்காம் வாய்க்கால் வீதி 16 கி. மீ., கிவுலகடவெல திரியாய் வீதி 37 கி. மீ., குச்சவெளி கல்லம் பத்தை வீதி 9.7 கி. மீ. என்பன 1190 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ளன.

ஆடி 06, 2010

ஐ.நா.அறிவிப்பு

இலங்கைத் தமிழருக்கு புகலிடத் தஞ்சம் இனி இலகுவில் இல்லை

இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவொருநாடும் இனிமேல் இயல்பாகவே அகதி அந்தஸ்த்து வழங்கத்தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அகதி அந்தஸ்த்து வழங்குவதற்கான தனது மீளமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களிலேயே ஐ.நா.இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைமைகள் இப்போது மிகவும் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் அதுவே இந்த அறிவிப்புக்குக் காரணம் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி 06, 2010

இன்றும் இன்னமும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளை இஸ்ரேல்

மத்திய கிழக்குப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் காட்ட முயற்சி

பலஸ்தீன அதிகாரிகள் விசனம்

இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் மத்திய கிழக்கு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் காட்ட முனைவதாக பலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல், பலஸ்தீனப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென உலகை நம்பவைக்க சிலர் முனைவதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். எதைப் பேசுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியாது. பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எமக்கு எதுவும் அறிவிக்கப்படுவதில்லையென பலஸ்தீன் அதிகாரிகள் குறைகூறினர். எகிப்தின் ஏற்பாட்டில் இஸ்ரேல், பலஸ்தீனர்களிடையே நடைபெறும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவே பலஸ்தீன அதிகாரிகள் இக்குற்றச்சாட்டை வெளியிட்டனர். இஸ்ரேல், பலஸ்தீனர்களிடையே நேரடியான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது. எல்லைப் பாதுகாப்புகள் உத்தரவாதப்படுத்தப்பட்ட பின்னரே நேரடிப் பேச்சுக்கள் சாத்தியமென பலஸ்தீன் கூறுகின்றது.

ஆடி 06, 2010

யாழ். அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல்

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம்

யாழ். தெல்லிப்பளை, கோப்பாய் மற்றும் யாழ். குடாநாட்டின் மேற்குப் பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அமைச்சினால் அறிவுறுத் தப்பட்டுள்ளது. அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது, அங்கு அரசாங்க அதிபருடன் நடந்த கலந்துரையாடலின் போதே அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து அரச அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் செயலாளர் திஸாநாயக்க கூறினார். (மேலும்....)

ஆடி 06, 2010

தோனி, சாக்ஷியை மணமுடித்தார் 

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி தன்னுடைய சிறு பிராய தோழி சாக்ஷி சிங் ராவத்தைத் திருமணம் செய்து கொண்டார். அவரு டைய ஆறுகளைப் போலவே திருமணமும் அதிரடியாக நடந்தேறியது. அவருடைய திருமண நிச்சயதார்த்தம் சனிக்கிழ மையன்று நடந்தது. திரும ணம் ஞாயிறன்று டேரா டூனில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கண் டொலியில் உள்ள கோடை விடுதி ஒன்றில் இனிதே நடந் தது. செய்தியாளர்கள், ஏரா ளமான பிரமுகர்கள் இன்றி திருமணம் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியாகவே நடந்தது. ஒரு சில உறவினர்களும், அணி வீரர்களும் மட்டும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். ஹர்பஜன் சிங், நெஹ்ரா, சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லா, ரோகித் சர்மா மற்றும் ஆர். பி.சிங் ஆகிய கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நடிகர் ஜானி ஆப்ரகாம், இயக் குனர் பராஹ்கான் ஆகி யோர் திருமணத்தில் பங் கேற்றனர். கிரிக்கெட் வாரி யத் தலைவர் சசாங் மனோ கரும், செயலாளர் என்.சீனி வாசனும் கலந்து கொண் டதாக செய்திகள் கூறுகின் றன. தோனிக்கு நெருக்க மான யுவராஜ் சிங் திரும ணத்துக்கு வரவில்லை. ராஞ்சியில் உள்ள டிஏவி பள்ளியில் இருவரும் படித் தனர். 23 வயதான சாக்ஷி ஹோட்டல் நிர்வாகக் கலைப் பட்டம் பெற்றவர். கொண்டோலியில் உள்ள ஷிராந்தி விடுதியில் குமா வோன் மரபுப்படி திரும ணம் நடைபெற்றது. திரும ணம் நடைபெற்ற இடத்தை சில மாதங்களுக்கு முன் இருவரும் சென்று பார்த்து முடிவு செய்தனர்.

ஆடி 06, 2010

வருகுது ஆப்பு

ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் தவறு இல்லையே? - எஸ்பி இம்போர்ட்டேஸ், கனடா

முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் சொத்துக்கள் தொடர்பில் சர்ச்சை?

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சொத்துக்கள் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவின் ஸ்க்ராபோவில் காணப்படும் எஸ்.பி என்ற பல்பொருள் அங்காடியின் உரிமை தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.  மறைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் சகோதரிக்கும், குறித்த பல்பொருள் அங்காடியின் தற்போதைய உரிமையாளர் கிருபாகரனுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக குறித்த பல்பொருள் அங்காடியை தாம் நிர்வகித்து வருவதாகவும் இதன் உரிமையை எவருக்கும் கொடுக்கப் போவதில்லை எனவும் கிருபாகரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கனேடிய புலி வலையமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திவயின குறிப்பிட்டுள்ளது. இந்தக் கிருபாகரனும் புலி உறுப்பினர் என்பதுவும் கனடா வருமுன் புலிகளுடன் ஆயுதம் தூக்கி திரிந்தவர் என்பதுவும் குசுறு செய்தி. (மேலும்....)

ஆடி 06, 2010

Left will vote against extending President’s term

The left parties of the UPFA alliance have come out strongly against the proposal to remove the term limit on the executive presidency, calling for a complete abolition of the system instead. Vasudeva Nanayakkara, secretary of the Democratic Left Front, says the left will be obliged to vote against the amendment in parliament. (more....)

ஆடி 05, 2010

முடிவின்றித் தொடரும் சட்டவிரோத புலம்பெயர்வு

சட்டவிரோத குடியேற்றக்காரர்களால் ஏற்படுகின்ற பிரச்சினையை உலகின் பல்வேறு நாடுகளும் எதிர் கொண்டு வருகின்றன. பொருளாதார முன்னேற்றமடைந்த நாடுகளைப் பொறுத்தவரை இவ்விவகாரமானது பொதுவான பிரச்சினையாகிறது.  அவுஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சுவிற்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களினால் சிக்கலை எதிர்கொள்கின்றன. அந்நாடுகளின் குடிவரவுச் சட்டத்துக்கு எதிரான இச்செயலி னால் அந்நாட்டு அரசாங்கங்கள் அரசியல் ரீதியிலும் வீணான சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. (மேலும்.....)

ஆடி 05, 2010

மட்டக்குளி பதற்றம்; முழுஅளவில் விசாரணை

ஓ. ஐ. சி. உட்பட பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் உடனடி இடமாற்றம்

மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளனர். மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை முடியும் வரை இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அறிவித்துள்ளார். பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த சகல பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். (மேலும்....)

ஆடி 05, 2010

செவ்வாய்க் கிரகத்தில் உயிர்?

செவ்வாய்க் கிரகத்தில் நுண்ணுயிரினம் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கனடாவில், மீத்தேனை உற்பத்தி செய்யும் மீத்தேனோஜெனிக் பாக்டீரியா காணப்படும் ஓர் ஓடை உள்ளது. அது செவ்வாய்க் கிரகத்தின் முந்தைய, தற்போதைய ஓடைகளைப் போலத் தோன்றுகிறது. எனவே செவ்வாய்க் கிரகத்தில் நுண்ணுயிரினம் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. கனடாவின் ஆக்ஸல் ஹீபர்க் தீவில் அமைந்துள்ள அந்த ஓடையில் பெரிய பெரிய மீத்தேன் குமிழ்கள் எழும்பி வந்தது ஆராய்ச்சியாளர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது. அந்த மீத்தேன் வாயு புவியியல் ரீதியாக உருவாக்கப்பட்டிருக்குமா அல்லது நுண்ணுயிரினத்தால் உருவாக்கப்பட்டிருக்குமா என்று கண்டுபிடிக்க நினைக்கிறார்கள். (மேலும்.....)

ஆடி 05, 2010

அரசியல், இனவாத அடிப்படையிலான புகலிடக் கோரிக்கைகளுக்கு கட்டுப்பாடு - அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியட் கிலாட்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் விடயத்தில் அரசியல் இனவாதம் என்பன கருத்தில் கொள்ளப்படமாட்டாதென அந்நாட்டின் புதிய பிரதமர் ஜுலியட் கிலாட் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து கோரப்படும் புகலிட விண்ணப்பங்கள் அரசியல் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. இவ்வாறான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதால் அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழும் வாய்ப்புகள் உள்ளன. (மேலும்.....)

ஆடி 05, 2010

எண்ணெய் டேங்கர் வெடித்து சிதறியது: 230 பேர் பலி; 200 பேர் காயம்

காங்கோ ஜனநாயகக் குடியரசின் சாங்கே கிரா மத்தில் ஒரு எண்ணெய் டேங்கர் குப்புறக் கவிழ்ந்து வெடித்துச் சிதறியதில் குறைந்தது 230 பேர் இறந்த னர். சுமார் இரு நூறுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இறந்தவர்கள் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டனர். புருண்டி - காங்கோ எல்லையில் உள்ள சாங் கேயில் டான்சானியாவில் இருந்து வந்து எண்ணெய் டேங்கர் தலைகீழாகக் கவிழ்ந்தது. எண்ணெய் வெளியே கசிய ஆரம்பித்த வுடன் தீப்பற்றியது. தீ ஏற் பட்டவுடன் எண்ணெய் டேங்கர் வெடித்துச் சிதறி யது. தீ விபத்துக்கு ஏராள மான குடிசைகளும், டூரிங் டாக்கீஸும் தீப்பிடித்து எரிந்தன. (மேலும்.....)

 

ஆடி 05, 2010

அமைதிப் பூங்காவாக காஷ்மீர் மாறுவது எப்போது?

(கி.இலக்குவன்)

காஷ்மீரில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டுமென்றால் மக்களின் அதிருப்திக் குக் காரணமான அடிப்படை அரசியல் பிரச் சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண் டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. நாடு விடுதலை பெற்ற கட்டத்திலேயே காஷ்மீரும் ஒரு பெரும் பிரச் சனையாக உருவெடுத்தது. தீர்வு காணப் படாத பிரச்சனையாக கடந்த 60 ஆண்டு களாக அது நீடிக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு வெளி யேறியபோது மத அடிப்படையிலான பிரிவி னையை துணைக்கண்டத்தின் மக்களுக்குப் பரிசாக அளித்துவிட்டுச் சென்றனர். பிரிட் டிஷ் ஆட்சியின் பகுதியாக இருந்த மன்ன ராட்சி சமஸ்தானப்பகுதிகள் இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்று முடிவெடுக்கும் உரிமை யை மன்னர்களுக்கு அளித்து விட்டுச் சென் றனர். (மேலும்.....)

 

ஆடி 05, 2010

தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள்  நேற்று புதுடில்லி சென்றடைவு

புதிதாக அமைந்துள்ள 7 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து செயற்படுமாறு வற்புறுத்தல்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதுடில்லியை சென்றடைந்தது. இந்திய உள்துறையமைச்சர் ப. சிதம்பரத்தின் அழைப்பின் பேரிலேயே இக்குழு நேற்று புதுடில்லி பயணமானதாக அரியநேத்திரன் எம். பி. தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக கூட்டமைப்புக் குழு பேச்சு நடத்துமென எதிர்பார்க்கப் படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் சுமத்திரன் ஆகியோரே நேற்று மாலை 2 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதுடில்லி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 7 தமிழ் கட்சிகளின் கூட்டணி 'தமிழ் மக்கள் ஒன்றியம்' இல் இணைந்து வேலை செய்யமாறு அறிவுறுத்தவே இவர்களை அவசரமாக இந்தியா அழைத்ததாக அரசியல்அவதானிகள் கருதுகின்றனர்.

ஆடி 05, 2010

மீட்சி பெறுகிறதா உலகப் பொருளாதாரம்?

தபன்சென் எம்.பி.

உலகப் பொருளாதார நெருக்கடி அமெரிக் காவில் மையம் கொண்டது. அது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் பொரு ளாதாரம் மேலும் கடுமையான நெருக்கடிக் குள் சிக்கியுள்ளது என்பதே உண்மை. அமெ ரிக்காவில் மீட்சிக்கு வழிகாண சில முயற்சி களை மேற்கொண்டாலும், எதிர்பார்த்த பலனை அது தரவில்லை. அந்த உண்மைகளிலி ருந்து உலக மக்களின் கவனத்தை திருப்பும் விதமாக ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி முன்னுக்கு வந்துள்ளது. இது நிதி மூலதனத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. நிதி மூலதனத்திற்கு தேவை லாபம்; கொள்ளை லாபம். எனவே லாபம் கிடைக்காத இடத்திலிருந்து லாபம் கிடைக் கும் இடத்தை நோக்கி பாய்வதற்கு அது தயா ராகிறது. இதனால் ஏற்கெனவே நெருக்கடி யில் சிக்கியுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் மேலும் ஆழமான நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றன.(மேலும்.....)

 

ஆடி 05, 2010

ஆப்கனில் படைகள் இன்னும்  பத்தாண்டுகள் இருக்க வேண்டும்  பிரிட்டிஷ் தளபதி  சொல்கிறார்  

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பிரிட் டிஷ் அதிரடிப்படையின் தளபதிகளில் ஒருவரான லெப் கர்னல் பால் ஜேம்ஸ், ஆப்கானிஸ்தானில் படை கள் சுமார் 10 ஆண்டுக ளாவது தங்கியிருக்க வேண் டும் என்று மதிப்பிட்டுள் ளார். பிரிட்டிஷ் பிரதமர் சென்ற வாரம் திடீரென்று ஆப்கானிஸ்தான் சென்றார். அப்போது, 2015-க்குள் பிரிட்டிஷ் படைகள் தாய கம் திரும்ப வேண்டு மென்று விரும்புவதாக அவர் தெரிவித்தார்.   ஆனால் பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை செயலா ளர் டாக்டர் லியாம் பாக்ஸ் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் கடைசி படையாக பிரிட்டிஷ் படைகள் இருக்கும் என்று கூறியுள்ளார்.  (மேலும்.....)

 

ஆடி 05, 2010

பிரபஞ்சத்தில்

‘இருட்டு பெரும் பள்ளம்’ கிடையாது?

நமது பூமி உள்ளிட்ட கிரகங்கள், நட்சத்திரங்கள், எரிகற்கள், வாயு எல்லாம் உள்ளடக்கியதுதான் பிரபஞ்சம். ஆனால் எல்லையற்ற பிரபஞ்சத்தில் இவற்றின் பங்கு வெறும் 4 சதவீதம்தான் என்று கருதப்படுகிறது. மீதமுள்ள 96 சதவீத இடம்? அதை, இருட்டுப் பெரும்பள்ளம் மற்றும் சக்தி ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாகத்தான் இதுவரை கருதப்பட்டு வந்தது. அப்படி ஒரு பெரும்பள்ளமும், சக்தியும் இல்லாமலே இருக்கலாம் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் தற்போது கூறுகின்றனர். துர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், விண்வெளி குறித்த வழக்கமான மாதிரியில் பெரும் தவறு இருக்கலாம், ‘பிரபஞ்சத்தின் கறுப்புப் பக்கம்’ என்பதே இல்லாமல் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அதைப் போல, முன்பு கருதப்பட்டதை விட பிரபஞ்சம் குறைவான வேகத்திலேயே விரிவடைந்து வருகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆடி 05, 2010

 

கடமை துஷ்பிரயோகம்

14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடி இடை நிறுத்தம்

 

மத்திய மாகாணத்தில் கடமை புரிந்துவந்த பதினான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமையைத் துஷ்பிரயோகம் செய்துள்ளனரென்ற குற்றச்சாட்டின் பேரில் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்திலுள்ள கண்டி, மாத்தறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமை புரிந்தவர்களே இவ்வாறு தமது கடமைகளை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக மத்திய பிராந்திய பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன. பல்வேறு பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டினையடுத்து குறித்த 14 பேரினது பதவி இடை நிறுத்தப்பட்டு நேற்று முதல் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

ஆடி 04, 2010

மக்களோடு மக்களாய்

அதிகாரப் பரவலாக்கலுக்கு ஆணைக்குழு புனர்வாழ்வு, புனரமைப்புக்கு நிபுணர்குழு வடக்கு - கிழக்கு முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள்

அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தைச் சரியான முறையில் செயற்படுத்துவதற்கு உடனடியாகத் தேவைப்படுவது ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவாகும். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள், விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக் கூடிய திறமையாக நிர்வகிக்கக் கூடிய நிர்வாகத் திறன் மிக்க நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கள் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். அத்துடன் போரின் காரணமாக அகதிகளாகப் போன 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மறுவாழ்வு, அழிந்து போய்க கிடக்கின்ற வடக்கு கிழக்கை மீள் கட்டி எழுப்புதல் போன்ற விடயங்களை அரசாங்கம் வெறுமனே நடைமுறையில் இருக்கின்ற அரசு இயந்திரத்தில் மாத்திரம் தங்கியிருப்பதில் பலனில்லை. எனவே புனர்வாழ்வு, மீள் கட்டுமாணப் பணிகளுக்கான ஆற்றல் வாய்ந்தவர்களைக் கொண்ட நிபுணர் குழுவினை அமைக்க வேண்டும்.(மேலும்....) 

 

ஆடி 04, 2010

 

73 பேருடன் அவுஸ்திரேலிய சென்ற படகு கைப்பற்றப்பட்டது

 

இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் 73 பேரைக்கொண்ட அகதிகள் படகு ஒன்று நேற்று அவுஸ்திரேலியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் தீவுக்கு வடக்கே இந்தப் படகு கைப்பற்றப்பட்டதாக அவுஸ்திரேலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் உடனடியாக கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் நாடு மற்றும் உடல் நிலை தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஆடி 04, 2010

அபாயங்களுடன் வரும் இலங்கை அகதிகளை மீண்டும் அபாயத்துக்குள் தள்ள முடியாது- ஆஸி பிரதமர்

இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் யூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை அகதிகள் தொடர்பிலான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு, அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜுலியா அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகளுக்கு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஆடி 04, 2010

ஆடி 04, 2010

சாத்தியமான அரசியல் தீர்வை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்

  • எஞ்சியோரை மீளக்குடியமர்த்த வேண்டும்

  • சரணடைந்தோர், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்

நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு முயற்சிகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எஞ்சியுள்ள மக்களையும் மீளக்குடியமர்த்தி அவர் களின் வாழ்வாதாரத்திற் கான சகல ஏற்பாடுகளையும் விரைவுபடுத்த வேண்டு மென தெரிவித்த அமைச்சர், சரணடைந்தோர் மற்றும் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டோர் அனைவரையும் விடு விக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். (மேலும்...)

ஆடி 04, 2010

தென்னிந்திய நடிகை என்பதாலேயே எனக்குப் பெருமை

வன்முறையை விதைப்பதற்கு இங்கு நான் வரவில்லை - அசின்

(வாசுகி சிவகுமார்)

நெருக்கடியான சூழ்நிலைகளில் நான் இங்கு வருவதும் துரதிர்ஷ்டமானதுதான் ஆனாலும், அவ்வாறான சூழ்நிலைகளிலும் என் ரசிகர்களின் முகத்தில் ஒரு சிறிய புன்னகையாவது ஏற்படுத்த என்னால் முடிந்தால், அதனை ஒரு பெரிய பாக்கியமாகவே நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை என்னால் முடிவதும் கலைஞர்களால் முடிவதும் அதுதான். நாங்கள் கலைஞர்கள். அரசியலை அரசியல் வாதிகளுடன் விட்டுவிட வேண்டும். கலைஞர்களாக எங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை நாம் செய்ய வேண்டும். கலையென்பது மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். அதனை மக்களைப் பிரிக்கப் பயன்படுத்தக் கூடாது. மக்களை மகிழ்ச்சிப் படுத்துபவர்கள்தான் கலைஞர்கள். அதனைத் தடுப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அரசியல் செயற்பாடுகள் கலைஞர்களை எந்தவகையிலும் பாதிக்கக் கூடாது. எங்கள் கிரிக்கெட் வீரர்கள் இங்கு வருகிறார்கள். கடற்படைத் தளபதி வருகின்றார். ஆனால் கலைஞர்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? இதுதான் புரியவில்லை. (மேலும்...)

ஆடி 04, 2010

அரசியல் தீர்வுக்கான கூட்டுச் செயற்பாடு

இனப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் நாளா ந்த வாழ்வில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியவை தொடர்பாகப் பொது இணக்கப்பாடொ ன்றை ஏற்படுத்திக் கூட்டாகச் செயற்படும் நோக்கத்துடன் கூடிய தமிழ்க் கட்சிகள் நேற்று முன்தினம் இரண்டாவது தடவையும் கூடிப் பேசியிருக்கின்றன. இக் கட்சிகள் இப்போது தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் என்ற பெயரில் இயங்குகின்றன. இந்த ஒன்றியத்தில் இணைந்திருக்கும் கட்சிகள் கொள்கை ரீதி யாக வேறுபாடுகள் இல்லாதவையல்ல. சமூக, பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்த வரையில் இவற்றுக்கிடையே வேறு பாடுகள் இருப்பினும் இனப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினை தொடர்பாக ஒருமித்த கருத்துடையன. நான்கு பிரதான விடயங்களில் இவற்றுக்கி டையே உடன்பாடு உண்டு. (மேலும்.....)

ஆடி 04, 2010

சம்பந்தரின் மற்றுமொரு அரசியல் நாடகம்!

தமிழ் மக்களை மாத்திரமல்ல, தனது கட்சியிலுள்ளவர்களையே எப்படி ஏமாற்றலாம் என்பது சம்பந்தருக்கு கைவந்த கலை. தான் என்ன நினைக்கின்றாரோ அதனை கனகச்சிதமாக செய்து முடிக்கக்கூடிய வல்லமையும் சாதுரியமும் அவரிடம் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யவேண்டும் என்பது பலரின் விருப்பம்.அதாவது கட்சியிலுள்ள மற்றயவர்களின் விருப்பம். அது சம்பந்தருக்கு உடன்பாடானதல்ல.தனது தலைமையிலான தமிழரசுக்கட்சியிலேயே தமிழ்க் கூட்டமைப்பு தங்கியிருக்கவேண்டும் என்பது அவரின் விருப்பம். ஆனால் அதற்கு மாறாக சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் போர்க்கொடி தூக்கியதால் வேறு வழியிருக்கவில்லை சம்பந்தருக்கு.  அதனால் தமிழ்க் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு விண்ணப்பித்து விட்டார். தமிழக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு என்றே அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவர் அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்கு விண்ணப்பம் மட்டுமே செய்திருக்கிறார். அதனை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது தேர்தல் ஆணையாளரின் முடிவைப் பொறுத்தது. நான் அறிந்த வரையில், ஒரு கட்சியின் செயலாளராக இருப்பவர் இன்னுமொரு கட்சியின் செயலாளராக இருக்கமுடியாது. ஏற்கனவே ஈபிஆர்எல்எவ் என்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் மாவை சேனாதிராஜா. ஆனால் இவர்கள் இருவரும் புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர்கள். இதனை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை. சட்டத்தில் பல தசாப்த அனுபவஸ்தரான சம்பந்தர் இதனை தெரியாமல் செய்திருப்பார் என்று நம்பமுடியவில்லை. அவர் வழக்கம்போல தன் சகாக்களையே ஏமாற்றியிருப்பதாகவே தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆடி 04, 2010

The Halton Peel Buddhist Cultural Society cordially invites you to a groundbreaking ceremony to be held at 3:00 P.M. on Sunday, July 11, 2010, at 3133 Cawthra Road, Mississauga.

As you are aware, the Halton Peel Buddhist Cultural Society since its inception in 1992 has been rendering religious, educational and cultural services to the Greater Toronto Area (GTA) under the mission “DEDICATED TO BUILDING A COMMUNITY OF SUPPORT IN THE LARGER CANADIAN COMMUNITY THAT NOURISHES INTELLECTUAL AND SPIRITUAL GROWTH WHILE EMBRACING OUR BUDDHIST TRADITIONS”. (more...) 

ஆடி 04, 2010

ஐ.தே.கவின் அநாகரிக முகம்

(வாகுலன்)

ஐக்கிய தேசியக் கட்சியின் அநாகரிக முகத்தை முழு நாடும் கடந்த செவ்வாய்க்கிழமை பார்க்கக் கூடியதாக இருந்தது. கலாநிதி சரத் அமுனுகம வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த வேளை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் கேவலமான இந்தச் செயற்பாட்டினால் மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்களால் உரையைச் செவிமடுக்க முடியவில்லை. தொலைக்காட்சியில் வரவு செலவுத் திட்ட உரையைக் கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை வைது தீர்த்துவிட்டார்கள். அவர்களாலும் உரையைச் செவிமடுக்க முடியவில்லை. (மேலும்.....)

ஆடி 04, 2010

சுதந்திரமாக செயற்படும் பெண்கள் அடங்காப்பிடாரிகள் அல்ல

(வாசுகி)

சுதந்திரச் சிந்தனையும், செலூக்கமும், தைரியமாக முடிவெடுக்கும் திறனும் கொண்ட பெண்களை ஆணாதிக்க சமுதாயம் அடங்காப்பிடாரி என இழிவாக அழைத்து வந்தது. சற்று நிதானமாக நோக்கினால் சுதந்திரப் போக்குள்ள விழிப்படைந்த பெண்ணே இவ்வாறு அழைக்கப்பட்டாள் என்பது புரியும். இன்று பெண்ணிய மேம்பாடு பல பெண்களை தைரியசாலி களாக்கியிருக்கிறது. தமது ஆற்றல் ஆளுமைகளை வெளிக்காட்டுவது ஒருபுறமிருக்க அடக்கு முறைகளையும் எதிர்த்து நிற்கும் துணிவு இன்றைய பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆணாதிக்க உலகில் ஆண்களின் கைகள் இன்றும் கூட மேலோங்கி இருப்பது உண்மை தான். எனினும், அதன் தகர்ப்பினை நோக்கிய பெண் விடுதலைப் பயணத்தின் பெறுபேறாக இன்று பெண்களின் குரலும் மேலோங்கி வருகிறது. (மேலும்.....)

ஆடி 04, 2010

உள்ளுர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சலுகைகளை வழங்க முடியும்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கடந்த 30ஆம் திகதியன்று வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையின் தொகுப்பு.

இடம்பெயர்ந்த மக்களை இதே நிலையில் நீண்ட காலம் வைத்திருக்க நாம் தயாராக இல்லை. எவ்வாறு அவர்களை விரைவாகத் தமது சொந்த இடங்களுக்கு அனுப்புவது என்று நாம் ஆராய்ந்தோம். அப்பகுதிகளில் அங்குலம் அங்குலமாக மிதி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. இது தான் எமது பிரதான பிரச்சினையாக இருந்தது. எல்லா பாதைகள், பாலங்கள் என்பன அழிக்கப்பட்டிருந்தன. சகல பாடசாலைகளும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. ஆஸ்பத்திரிகள் யாவும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அணைகள் உடைக்கப்பட்டிருந்தன. இப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த மிதிவெடிகளை அகற்றும் பணியை நாம் முதலில் ஆரம்பித்தோம். இராணுவத்தினதும் மற்றும் அமைப்புகளினதும் உதவியுடன் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் அப்பிரதேசத்தை நாம் ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக்குவதுடன் அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்தி மக்கள் பிரதிநிதித்துவத்துக்கு வாய்ப்பளித்து மாகாண சபை, பிரதேச சபை தேர்தல்களை நடத்தி, அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் செய்து முடித்து கடைசியில் இறுதித் தீர்வையும் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். (மேலும்.....)

ஆடி 04, 2010

ஐ.தே.க. எட்டி உதைத்ததால் ஜனாதிபதியை சந்தித்து பேசினேன் - காதர் எம்.பி

அரசாங்கத்தின் அனைத் துச் செயற்பாடுகளுக் கும் வெறுமனே எதி ர்ப்பைத் தெரிவிக்காமல், நல்ல விட யங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் நேற்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக அனைவரும் வாக்களித்து முழுப் பாராளுமன்றமும் அரசாங்கத்துடன் ஒரு மித்துள்ளதாக சர்வதேசத்திற்கு உணர்த்த வேண்டுமென்றும் காதர் எம்.பீ. கேட்டுக்கொண்டார். ஐ.தே.க. தமக்கு உரிய இடத்தை வழங்கவில்லையென்றும், தனது கட்சி எட்டி உதைத்ததால் ஜனாதிபதியைச் சந்தித்ததாகவும் கூறினார்.  மக்களுக்கு சேவையாற்றுவதற்கு எனக்கு அமைச்சுப் பதவி கோரவில்லை. அவர்கள் தருவதாகவும் சொல்லவில்லை. பணம் மட்டுமே வேண்டும் சேவையாற்ற, ஐ.தே.க. வுக்கு நான் பணம் கொடுத்துள் ளேன். இரு தசாப்தத்திற்கும் மேலாக அந்தக் கட்சியில் நான் இருக்கின்றேன். கண்டியில் மூவரை போட்டியிடச் செய்து என்னைத் தோற்கடிக்கப்பார்த்தார்கள். நான் அம்பாறையிலும், திருகோணமலை யிலும் போய் போட்டியிடவில்லை. தொடர்ச்சியாகக் கண்டியில்தான் போட்டி யிட்டிருக்கிறேன். எவர் வந்தாலும் என் னைத் தோற்கடிக்க முடியாது .

ஆடி 04, 2010

இறுதி இலக்கு எதுவாயினும் கட்சிகளின் கூட்டுச் செயற்பாடு இன்றைய அவசியத் தேவை

(ஜீவகன்)

‘வெறுங்கை முழம் போடாது’ என்பது போல வெறும் ஐக்கியம் பலன் தராது. சரியான கொள்கையின் அடிப்படையில் ஏற்படும் ஐக்கியமே பலன் தரும். ஒவ்வொரு கட்சியும் அதன் அடிப்படைக் கொள்கையைக் கைவிடாமலேயே ஐக்கிய செயற்பாட்டில் பங்காளியாக முடியும். கட்சிகளின் இறுதி இலக்கைப் பொறுத்த வரையில் வேறுபாடு இருக்கலாம். சில கட்சிகள் சோஷலிச சமுதாயத்தை இறுதி இலக்காகக் கொள்ளலாம். வேறு சில கட்சிகள் முதலாளித்துவ பொருளாதாரத்தில் நம்பிக்கை உடையனவாக இருக்கலாம்.  இவ்வாறாக என்னதான் வேறுபாடு இருந்தாலும் பொதுவான உடன்பாடொன்றுக்கு வந்து கூட்டாகச் செயற்பட வேண்டிய கடப்பாடு எல்லாத் தமிழ்க் கட்சிகளுக்கும் உண்டு. இது தான் இன்றைய யதார்த்தம். (மேலும்.....)

ஆடி 04, 2010

மக்களை மையமாகக் கொண்டே எல்லைகள் மீளமைக்கப்பட வேண்டும்

பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் ஆகியன பற்றிய எல்லைகள் மீள் நிர்ணயம் செய்தல் என்பது ஒரு புவியியல் சார்ந்த விடயம் மாத்திரமல்ல. அது ஓர் அரசியல் சார்ந்த விடயமாகும். மலையக மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர் கள் ஒன்றில் பரந்துபட்ட அளவில் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். அல்லது பிரதான போக்குவரத்து தொடர்பு மையங்களிலிருந்து மிகத் தொலைவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே தற்போதைய பிரதேச செயலக அமைப்பு முறைகள் அவர்களின் பங்கு பற்றலை அல்லது அவர்களின் அணுகு தலை அல்லது அவர்களின் உரிமை களை நிலைநாட்டிக் கொள்வதிலிருந்து மட்டுப்பாடுடையதாகவே காணப்படுகின் றன. சிறுபான்மை மக்கள் இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனடிப்படையில் மனித அபிவிருத்தித் தாபனம் மலையக மக்களை மையமாகக் கொண்டு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் எல்லைகளை மீளமைத்தல், மீள் நிர்ண யம் செய்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினர் மத்தியில் கலந்துரையாடல் களையும், கள ஆய்வுகளையும் மத்திய, ஊவா, சப்ரகமுவ போன்ற மாகாணங் களில் மேற்கொண்டது.  (மேலும்.....)

ஆடி 04, 2010

மலையக அரசியல் தலைமைகள் கடந்த பொதுத் தேர்தலில் கற்ற பாடம்

மலையக மக்களி டையே குறை கூறும் பழக்கமுள்ளது. தீர்வு கூறும் பழக்கமில்லை. யாப்பு திருத்தம் ஊடாக தேர்தல் முறை மாற் றங்கள் தொடரவுள்ளன. தற்போதைய முறை செலவினங்க ளுக்கும் போட்டித் தன்மைக்கும் வழிகோலுகிறது. ரட்னபுர வில் தந்தையும் மகனும் கூட போட்டி யிட்டனர். வெற்றி பெறும் நோக்கில் வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர். பிரசாவுரிமையை தொழிற்சங்கங்களே பெற்று கொடுத்தன. அதனூடாகவே வாக்களிக்கும் உரிமை கிட்டியது. அன்று பிரசாவுரிமை இல்லாத எமக்கு இன்று பிரதிநிதிகளும் இல்லாது போடியுள்ளனர். கிராமிய அமைப்பு நமக்குத் தேவை எதிர்காலத்தை எண்ணி சிந்தித்து செயற் படுவது அவசியமாகும். இனப் பிரநிதித் துவம் இல்லாதது பெருங் குறைபாடாகும். சமூகம் தோற்கவில்லை. தோற்கடிக்கப் பட்டுள்ளது. வேட்பாளர்களால் சமூகம் பிளவுபட்டுள்ளது. ஒற்றுமையின்மையே தோல்விக்குக் காரணம். சுயஆய்வுக்கு உட்படுத்துங்கள் (மேலும்.....)

ஆடி 04, 2010

நேபாளத்தின் அடுத்த பிரதமர் யார் ?

(அர்ச்சனா)

நேபாளத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்டுகள், அரசியல் நீரோட்டத்தில் கலந்து, 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தல்களில் அமோக வெற்றியீட்டினர். பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்கள் தம் வசமிருப்பதால் அதிகாரப் பகிர்வு அரசுக்குத் தாமே தலைமைதாங்க வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தேசிய அரசொன்றை அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைய சில நாட்களே இருக்கின்ற நிலையில், மாவோயிஸ்ட்டுகளின் தலைமையிலான அரசில் இணைய முடியாதென, முக்கிய கட்சிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளன. நேபாளத்தில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் சமாதான உடன்படிக்கையின் பல ஷரத்துக்கள் இன்னமும் அமுல் செய்யப்படவில்லை. குறிப்பாக, நேபாளத்தில் போரிட்ட ஆயிரக்கணக்கான மாவோயிஸ்டுகள் இன்னமும் இராணுவத்தில் உள்வாங்கப்படவில்லை. (மேலும்...)

ஆடி 03, 2010

KP as Northern Province Chief Minister?

Q: What is the EPDP’s stand on this apparent understanding between KP and the government? When the government came to an understanding with Karuna and Pillaiyan in the East, the EPDP lost its Eastern Base. Will the same thing happen in the North if KP is brought in?

A: The East is a bit different to the North. At the last elections we too contested in the East but the TMVP has got more votes than us. If it is the fate of the Tamil people to have KP as Chief Minister of the North, there is nothing we can do about it. I wish to reiterate that we are not interested in self-seeking competitive politics. (more...)

(இதை ஓட்டிய கட்டுரை....)

ஆடி 03, 2010

மக்களோடு மக்களாய்

இன்று தமிழ் அரசியல் அமைப்புக்கள்; ஒன்றுகூடி இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் யுத்தத்திற்கு பிந்திய அன்றாட நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

இந்தக் கூட்டத்தில் த.வி.கூ, ஈ.பி.டி.பி, பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புக்கள் பங்கு கொண்டிருந்தன. இவ் அமைப்புக்களின் தலைவர்களான திரு. வீ. ஆனந்தசங்கரி, திரு. டக்ளஸ் தேவானந்தா, திரு. சந்திரகுமார், திரு. வரதராஜப்பெருமாள், திரு. ஸ்ரீதரன், திரு. சித்தார்த்தன், திரு. ராகவன் திரு. சிவாஜிலிங்கம், திரு. உதயராஜா, திரு. குமரகுருபரன், செரின் சேவியர், மேகலா ச,ண்முகம், திரு. சந்திரஹாசன், திரு. கைலேஸ்வரராஜா, திரு. பிரசாந் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மேலும் அக்கட்சிகளின் வேறு சில பிரதிநிதிகளும் பங்குபற்றினர் . (மேலும்....)

ஆடி 03, 2010

செல்போனில் உலகக் கோப்பை கால்பந்து!

தென் ஆபிரிக்காவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. அந்த வேகம், உற்சாகத்தை நேரடியாகக் கண்டு ரசிப்போர் ஆயிரக் கணக்கானோர் என்றால், தற்போது செல்போன் மூலம் கண்டு ரசிப்போர் கோடிக் கணக்கானோர். தொழில்நுட்பம் வளர வளர அது விளையாட்டை ரசிகர்கள் நன்றாக ரசிக்க உதவுகிறது. எங்கோ நடைபெறும் விளையாட்டையும் ரசிகர்கள் தாங்கள் இருந்த இடத்தைவிட்டு அகலாது ரசிக்க முடிகிறது. தற்போது வி¨ளாயட்டு நம் உள்ளங்கைக்கு வந்துவிட்டது.(மேலும்.....)

ஆடி 03, 2010

நிலவில் அதிகத் தண்ணீர்!

பூமியில் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இனி பிற கிரகங்களில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று ஜோக் அடிக்கப்படுவது உண்டு. எதிர்காலத்தில் அது சாத்தியமானால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நிலவில் இதுவரை நினைக்கப்பட்டதை விட நூறு மடங்கு அதிக தண்ணீர் இரு ப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர். நிலவின் நிலப் பரப்புக்குக் கீழே அது பரவியுள்ளதாகக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள். (மேலும்.....)

ஆடி 03, 2010

கொரியன் குடாவில் யுத்தத்தை தூண்டிவிட அமெரிக்கா பிரயத்தனம் - வட கொரியா

தென் கொரியாவின் கப்பல் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உண்மை நிலைப்பாட்டை அமெரிக்கா வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுள்ள வட கொரியா இவ்விடயத்தைப் பெரிதாக்கி கொரியன் குடாவில் ஒரு போரையே உண்டுபண்ண அமெரிக்கா முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. கொரியன் குடாவில் தென் கொரியாவின் கடற்படைக் கப்பல் தாக்கப்பட்ட சம்பவம் வட, தென் கொரிய உறவுகளை சீர்குலைத்துள்ளது. அமெரிக்கா இதைப் பயன்படுத்தி தனது சர்வாதிகாரத்தை இப்பகுதியில் வலுப்படுத்த ஆயத்தமாகின்றது. (மேலும்.....)

ஆடி 03, 2010

மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

இக்கட்சிகள் அனைத்தும் இனப் பிரச்சினையின் தீர்வுக்காகச் செயற்படப் போவதாக எல் லாத் தேர்தல்களிலும் வாக்குறுதி அளித்த போதிலும் தீர்வு முயற்சி வெகுவாகப் பின்னடைவு கண்டிருக்கி ன்றது. மக்களும் தாங்க முடியாத அளவுக்கு இழப் புகளையும் அழிவுகளையும் சந்தித்து விட்டனர். இந்த அவல நிலை பற்றி மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். இதுதான் தமிழ் மக்களின் தொடர்ச்சி யான அரசியல் வரலாறு என்று ஆகிவிடக்கூடாது. மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும். எத்த னையோ கட்சிகள் அரங்குக்கு வந்த நிலையிலும் அரசியல் தீர்வு முயற்சி வெகுவாகப் பின்னடைவு கண்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். (மேலும்.....)

ஆடி 03, 2010

டக்ளஸுக்கு எதிராக 50 கோடி ரூபா மான நஷ்ட ஈடு கோரி வழக்கு - விஜயகலா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக 50 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளார். இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு எதிராக அபாண்டமாக குற்றம் சுமத்தி வருவதாகவும் அவர் தமிழ்மிரர் இணையதளத்திடம் கூறினார். யாழ்ப்பாணம்,நல்லூரில் நிறுவப்பட்டிருந்த  தியாகி திலீபனின் சிலை உடைப்புக்கு விஜயகலா மஹேஸ்வரனே காரணம் என உள்நாட்டு,வெளிநாட்டு ஊடகங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிவருகின்றார். நாடாளுமன்றத்தில் வரவு,செலவுத்திட்ட  உரை மீதான விவாதம் முடிவடைந்ததும் தாம் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் விஜயகலா மஹேஸ்வரன் தமிழ்மிரர் இணையதளத்திடம் மேலும் குறிப்பிட்டார்.

ஆடி 03, 2010

கிளிநொச்சியில் எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு

எதிர்வரும் 13 ஆம் திகதி கிளிநொச்சியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று நிறுவப்படவுள்ளது. எரிபொருள் துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனைத் தெரிவித்தார். மாங்குளம் பகுதியில் ஏற்கனவே புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்காலத்தில் மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வடமாகாணத்தில் புதிதாக 13 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். வடபகுதிக்கு பெருந்தொகை மக்கள் சென்றுவரும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படுவதால் போக்குவரத்து நடவடிக்கைகள் மேலும் இலகுவாகுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆடி 03, 2010

தமிழ்க்கட்சிகள் ;மீண்டும் சந்திப்பு

சந்திரஹாசன், வரதர், டக்ளஸ், சங்கரி, சித்தர் உட்பட பிரமுகர்கள் பங்கேற்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு போன்றவை குறித்து பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்குடனான தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு நேற்று இரண்டாவது தடவை யாகவும் கொழும்பில் நடைபெற்றது. ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடகிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் ஆகியோருடன் த. ம. வி. பு. சார்பில் கைலேஷ்வரராஜா, நிஷாந்தன் ஆகியோரும் முதல் முறையாக கலந்துகொண்டனர். தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்து உறுப்பினர் களும் நேற்றைய சந்திப்பின் போது கருத்துக்களை முன்வைத்தனர். (மேலும்...)

ஆடி 02, 2010

தமிழ் மக்களின் புதிய கூட்டணி

'தமிழ் கட்சிகளின் ஒன்றியம்' இன்று பேச்சு  வார்த்தை

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ( ஈ.பி.டி.பி ) உட்பட ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்த பேச்சுவார்த்தையொன்று இன்று காலை இடம்பெற்றதாக  தெரியவருகிறது.  தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது கட்சிகள் சார்பில் பங்குபற்றிய உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த தமிழ் கட்சிகளின் கூட்டணிக்கு "தமிழ் கட்சிகளின் ஒன்றியம்" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆடி 02, 2010

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் அரை இறுதிக்கு நெதர்லாந்து முன்னேறியது

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடரின் கால் இறுதி ஆட்டம் பிரேஸில் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றது. இப்போட்டியில் 2- 1 என்ற கோல் அடிப்படையில் நெதர்லாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நெதர்லாந்து அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. இதேவேளை, பிரேஸில் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடரிலிருந்து வெளியேறுகிறது.

ஆடி 02, 2010

குமரன் பத்மநாதனுக்கு சுகபோகம், சரத் பொன்சேகா சிறை

விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான கே.பி என்ற குமரன் பத்மநாதன் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள விசும்பாய என்ற முக்கிய விருந்தாளிகள் தங்கவைக்கப்படும் உத்தியோபூர்வ இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு, சுகபோகங்கள் வழங்கப்படுகிறது எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா சிறையில் துன்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். விசும்பாயவை முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டில் இருந்து வரும் விசேட அதிதிகள் தங்குவதற்காக நிர்மாணித்த போதிலும் தற்போதைய அரசாங்கம் அதனை விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் ஒருவரை தங்க வைப்பதற்காக பயன்படுத்துகிறது. இது கவலைக்குரிய விடயம். கே.பி எதிர்காலத்தில் வட மாகாணத்தின் முதலமைச்சராக அமர்த்தப்படவுள்ளதாக ஊட்கங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. புலிகளின் 22 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் 40க்கும் மேற்பட்ட கப்பல்களை கொண்டு வரப் போவதாக பெருமை பேசிய அரசாங்கத்தின் அமைச்சர் தற்போது என்னக் கூறப் போகிறார்கள் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆடி 02, 2010

நாடாளுமன்றத்தில் விஜயகலா-டக்ளஸ் கடும் வாய்த்தர்க்கம்

விஜயகலா மகேஸ்வரன் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். எனினும் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரமே பயன்களை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டார்.  இதன்போது குறுக்கிட்ட டக்ளஸ் தேவானந்தா, நீங்கள் அப்படி யாரை குறிப்பிடுகின்றீர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜயகலா மகேஸ்வரன் அரசாங்கத்தில் பல கட்சிகள் இருப்பதாகவும் குற்றம் செய்தவர்களுக்கே உறுத்தும் என அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒலி வாங்கி முடக்கிவிடப்படாத நிலையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். கடும் வாய்த்தார்க்கத்தில் நீங்கள் தானே மகேஸ்வரனை  கொலை செய்தீர்கள் என்று டக்ளஸ் தேவானந்தாவை பார்த்து சிங்கள மொழியில் ஆவேசமாக குற்றஞ்சாட்டினார். (மேலும்...)

ஆடி 02, 2010

தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தை; பிள்ளையான் கலந்துகொள்வாரா?

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ் கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று நாளை நடைபெறவுள்ளது. எனினும், இப்பேச்சுவார்த்தையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொள்ளமாட்டார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கைலேஸ்வரராஜா கலந்து கொள்வார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்புக்கான பிரதான காரணம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்துகொள்ள முடியாமையே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி 02, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு! - தலைவராக இரா.சம்பந்தன்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனியயாரு அரசியல் கட்சியாக நேற்று பதிவு செய்து கொண்டது. தலைவராக சம்பந்தனும் உபதலைவராக விநாயகமூர்த்தியும் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணை செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஒர் அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நேற்று மதியம் தேர்தல் ஆணையாளரிடம் அதன் புதிய இணைச் செய லாளர்களினால் கையளிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.இலங்கை தமிழரசுக்கட்சி, அகில இலங் கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல். எப். (சுரேஸ் அணி) ஆகிய நான்கு கட்சிகளின் கூட்டாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிகாரபூர்வமான அந்தஸ்தைப் பெறுவதற்காகவே அது ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. (மேலும்...)

ஆடி 02, 2010

தமிழரசுக்கட்சிக்கு துரோகம் இழைப்போர் பதவிகளிலிருந்து உடனடியாக விலக வேண்டும் - நிர்வாகச் செயலாளர் குலநாயகம் வலியுறுத்தல்

இரா.சம்பந் தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகி யோர் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பெரும் துரோ கம் விளைவித்துள்ளார்கள். கட்சியின் அனுமதியின்றி இவ்வாறு செயற்படுபவர்கள் தாம் வகிக் கும் கட்சிப் பதவிகளில் இருந்து விலகவேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனி அர சியல் கட்சியாகப் பதியப்பட்டதன் மூலம் இலங்கை தமிழரசுக் கட்சி அழிந்து போய்விடும் என பி.பி.சி தமிழோசைக்குப் பேட்டியளித்த புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தெளிவாகவே கூறியுள்ளார். இதனை எந்த தமிழரசுக் கட்சிக்காரனும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அனைத்துத் தமிழ் பேசும் இனத்தையும் இணைத்து தந்தை செல்வாவினால் கட்டி வளர்க்கப்பட்டு வந்த தமிழரசுக் கட்சியின் அழிவை தமிழ் பேசும் இனம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. (மேலும்....)

ஆடி 02, 2010

இந்திய கடற்பபடைத் தளபதி நேற்று யாழ்.விஜயம்

இந்தியக் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் நிர்மல் வர்மா நேற்று யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்தியக் கடற்படைத்தளபதி நேற்றுக் காலை காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் சென்று அங்கு நடைபெற்றுவரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து நேரில் ஆராய்ந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸார சமரசிங்க சகிதம் விஜயம் செய்த இந்தியக் கடற்படைத் தளபதி, யாழ்.நகரில் உள்ள கோட்டைக்குச்சென்று அதன் புனரமைப்புப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். அதைத்தொடர்ந்து நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார். தளபதிகளின் வருகை காரணமாக யாழ்.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன

ஆடி 02, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சின்னாபின்மாகின்றது...
தலைவர்கள் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது!  - பேராசிரியர் சிற்றம்பலம்

மத்திய குழு, பொதுச் சபை ஆகியவற்றி னுள் இது பற்றி விவாதிக்கப்படல் வேண்டும். இவையே கட்சியின் கொள்கை எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றை வகிக்கும் கருவிக ளாகும். மாநாடு முடிந்து ஆறு மாதங்கள் ஆகி யும் இவற்றைக் கூட்டிக் கட்சித் தொண்டர்க ளுடன் கருத்துக்களைப் பரிமாறத் தலைமைப் பீடம் எதுவித நடவடிக்கைகளையும் மேற் கொள்ளாத சூழலில் மத்திய குழுவைக் கூட் டும்படி 02.06.2010 இல் தலைவர்/செயலா ளர் ஆகியோருக்குக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் என்ற ரீதியில் ஒரு கடிதத்தினை அனுப்பியிருந்தோம். இற்றைவரை கடிதம் கிடைத்தது என்று கூடப் பதில் இல்லை. தன்னிச்சையான செயற்பாடுபொதுவாகக் கட்சித் தொண்டர்கள் மத்தி யில் தலைமைப்பீடம் தங்களைக் கலந்தா லோசிக்காது தன்னிச்சையாகச் செயற்படு கின்றது என்ற கருத்து நிலவுகின்றது. தலை மைப் பீடம் எதேச்சையாக செயற்பட்டதை அண்மைக்கால நிகழ்வுகளும் எடுத்துக் காட்டியுள்ளன. (மேலும்...)

ஆடி 02, 2010

நேபாள பிரதமர் திடீர் ராஜினாமா

நேபாள பிரதமர் மாதவ்குமார் நேபாள், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. ஜனாதிபதியாக ராம்பரன் யாதவும், பிரதமராக பிரசாந்தாவும் தேர்வு செய்யப்பட்டனர். பிரதமரின் சொல்படி கேட்காத ராணுவ தளபதி ருங்மாங்கத கத்வாலை, பிரதமர் பிரசாந்தா பதவி நீககம் செய்தார். இதற்கு ஜனாதிபதி அனுமதி மறுத்தார். இதன் காரணமாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் பிரசாந்தா. அதன் பிறகு கம்யூனிஸ்ட், நேபாள காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் கூட்டணியுடன் கம்யூனிஸ்ட் தலைவர் மாதவ் குமார் நேபாள் பிரதமரானார். (மேலும்...)

ஆடி 02, 2010

இந்திய விஞ்ஞானி அமெரிக்காவில் அடித்துக்கொலை

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகா ணத்தைச் சேர்ந்தவர் திவ்யேந்து சின்கா. இவர் சீமென்ஸ் கம்பெனி யில் ஆலோசகராக பணிபுரிந்து வந் தார். இந்நிலையில் சம்பவத்தன்று தன் னுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு அப்பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சின்காவை அடித்து கொன்றனர். இக்கொலையில் ஈடு பட்டவர்களை பொலிஸார் கண்ட றிந்து கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடி 02, 2010

500 பேரின் கண் சத்திரசிகிச்சைக்கான செலவை ஏற்கிறார் சல்மான் கான்

வடக்கு, கிழக்கு மற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் கண்ணில் விழிவெண்படலம் படர்ந்துள்ள 500 பேருக்கு தமது சொந்த செலவில் கண் சத்திர சிகிச்சை செய்வதற்கு இந்தியா வின் முன்னணி பொலிவுட் நடிகர் சல்மான் கான் முன்வந்துள்ளார். இது விடயமாக நடிகர் சல்மான்கான் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலம் நேற்றுமுன்தினம் கலந்துரையாடி தமது விருப்பத்தைத் தெரிவித்தார். இத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கேற்ப இந்தியாவின் ஐந்து கண் சத்திர சிகிச்சை நிபுணர்களும், இச்சிகிச்சைக்குத் தேவையான உபகர ணங்களும் மருந்து பொருட்களும் அடுத்துவரும் இரண்டு மூன்று தினங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன. இக் கண் சத்திர சிகிச்சை கொழு ம்பு கண்ணாஸ்பத்திரியில் நடைபெ றும். அதேநேரம் கண் நோயாளர்க ளுக்குப் பாவிக்கவென ஒரு தொகை கண்வில்லைகளை வழங்கவும் நடிகர் சல்மான்கான் விருப்பம் தெரிவித்து ள்ளார்.

ஆடி 02, 2010

காலி - மாத்தறை ரயில் சேவை ஓகஸ்ட் 1 முதல் இடைநிறுத்தம்

காலி – மாத்தறை இடையிலான ரயில் பாதை அதிவேக ரயில் பாதையாக மறுசீரமைக்கப்படுவதை முன்னிட்டு ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. இதன்படி 4 மாதங்களுக்கு ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்கள போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார். கொழும்பிலிருந்து – மாத்தறை வரையிலான கரையோர ரயில் பாதையை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதற் கட்டமாக காலி – மாத்தறை இடையிலான ரயில் பாதை மறுசீரமைக்கப்பட உள்ளதோடு இந்திய ரீல் கம்பனியுடன் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது

ஆடி 02, 2010

ஏனைய நாட்டுப் படைகள் உள்நாட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது - ஜனாதிபதி

நாட்டின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. எனினும், ஏனைய நாட்டுப் படைகள் நாடொன்றின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வாக முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டு ள்ளார். உக்ரேன் சென்றிருக்கும் ஜனாதிபதி நேற்று மாலை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். பயங்கரவாதிகளை தோற்கடிப்பதில் இலங்கைக்கு கிடைத்துள்ள அனுபவமானது பயங்கரவாத செயற்பாடுகளின் சவால்களுக்கு முகம் கொடுத்துவரும் ஏனைய நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகுமெனவும் ஜனாதிபதி இதன் போது கூறினார். (மேலும்....)

ஆடி 02, 2010

யாழ்., வன்னிக்கு நிரந்தர மின்சாரக்கட்டமைப்பு

கிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா பிரதேசங்களை இலக்காகக் கொண்ட மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள துடன் இதற்கென 6,376 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். கிளிநொச்சி, சுன்னாகம் வரையிலான முதலாவது மின் இணைப்புத் திட்டத்துக்கு 3276 ரூபா செலவிடப்படவுள்ளது. இரண்டாவது திட்டமான வவுனியா - கிளிநொச்சி வரையிலான திட்டத்துக்கு 3,100 மில்லியன் நிதி செலவிடப்படவுள்ளது.

ஆடி 02, 2010

China backs Sri Lanka's opposition to UN rights panel

China today backed Sri Lanka in its opposition to the setting up of a human rights panel by the UN to look into alleged rights abuses during the ethnic war, saying the government was capable of handling it. China said Sri Lanka and its people were capable of handling the issue and asked UN Secretary General Ban Ki-moon and world community to help the Colombo stabilise its internal situation. Chinese Foreign Ministry spokesman Qin Gang said Colombo has appointed a 'Reconciliation Commission' of its own to probe the charges of human rights abuses during the last stages of the conflict against the LTTE in Sri Lanka. (more....)

ஆடி 02, 2010

ராவணன்”  பட விமர்சனம்

விக்ரமிடம் ராகினி (ஐஸ்வர்யா) கேட்கிறாள் : நான் இங்கே தங்கி விடுகிறேன். என் கணவனைக் கொல்லாமல் விட்டுவிடுகிறாயா? எனக் கேட்கிறார். கணவன் மீது இவ்வளவு ஆழமான பற்றை வைத்துள்ள ராகினியின் கேள்வி விக்ரமை அசத்தி விடுகிறது. ஆகவேதான், திரும்ப கணவனிடமே திருப்பி அனுப்புகிறார். அப்படிப்பட்ட மனைவிதான் கணவனின் கேவலமான, கீழ் புத்தியை சகியாது இவனோடு இனி வாழ்ந்து பயனில்லை என எண்ணி, தன் மீது ஆசைப்பட்டாலும், கடைசி வரை தன்னைத் தொடாமல் காத்த விக்ரமைத் தேடித் திரும்புகிறாள். எந்த விக்ரமை? கீழ்குடிமகன், காட்டுவாசி, படிக்காதவன், முரடன்,. ஆனால் யோக்கியன், நேர்மையானவன், தன் கணவனிடம் தன்னைப் பற்றி உயர்வாகச் சொன்னவன் “சொக்கத்தங்கம்” என்றவன், தூசி, துரும்பு படாமல் உன்னிடம் திருப்பி அனுப்பி வைக்கிறேன் என்றவன், தன்னை வாங்க, போங்க, என்று பெண் என்றாலும் மரியாதையுடன் பேசியவன், அவனை உயர்வாய் மதித்து மேட்டுக்குடி மகள் திரும்பி வருகிறார். இந்த நூற்றாண்டுப் பெண், அவர் பழைய சீதை அல்ல, பெண்ணின் சுயமரியாதையை மணிரத்னம் காப்பாற்றுகிறார். (மேலும்...)

ஆடி 02, 2010

இலங்கைக்கு ஐ.நா. குழு: ஜெயலலிதா வரவேற்பு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல லிதா வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட் டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந் தோனேசிய முன்னாள் தலைமை வழக் கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் -கீ- மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகை களில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற் கத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபை தலைவரின் இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது. ஐநா சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு நுழைவிசைவு தருவதை இலங்கை அரசு தனது இயல்பிற்கு ஏற்ப மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. மஹிந்தா ராஜ பக்ஷே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி நிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக் கூடாது. பான் -கீ- மூன் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந் தோனேசியா, அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல் லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங் கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால், இந்த மேன்மை மிகுந்த குழு -ராஜபக்ஷேவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக்கொணரும் என்பதில் ஐயமில்லை.

ஆடி 01, 2010

வடக்கில் ஏற்படுத்தியுள்ள சமாதான சூழ்நிலையை குழப்ப சிலர் முயற்சி

அரசாங்கம் வடபகுதியில் ஏற்படுத்தியுள்ள சமாதான சூழ்நிலையை தெற்கில் படுதோல்வி அடைந்துள்ள சில அரசியல் கட்சிகள் குழப்புவதற்கு முயற்சி செய்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.  இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்படுவதுடன் அரசாங்கத்தின் மீள்குடியேற்ற வேலைத் திட்டங்களில் இணைந்து செயற்பட முன்வந்திருப்பதையிட்டு அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேனெனவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

ஆடி 01, 2010

த.தே.கூட்டமைப்புக்கு இந்தியா அழைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பேச்சுக்கு வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. புதுடில்லியிலிருந்து இந்த அழைப்பு கூட்டமைப்புக்கு நேற்று உத்தியோகபூர்வமாக கிடைக்கப் பெற்றிருப்பதாக வினோ எம்.பி. தெரிவித்தார்.  அழைப்பினை ஏற்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வார இறுதிக்குள் இந்தியா செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றக் கட்டடத்தில் இன்று கூடவிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இது தொடர்பாக ஆராய்வார்கள் எனவும் அவர் கூறினார்.

ஆடி 01, 2010

புலிகள் நடாத்தியது தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல! தமிழ் கட்சிகள் தமது பிரிவினைவாதப் பெயர்களை மாற்ற வேண்டும்!!

கனடாவில் யூன் 19 திகதி நடந்த ‘தியாகிகள் தின’க் கூட்டத்தில் கலந்து கொண்டு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) யின் முன்னாள் வட பிரதேசச் செயலாளர் ச.சுப்பிரமணியம் நிகழ்த்திய உரையைக் கீழே தருகின்றோம்

இலங்கையில் நடைபெற்றது, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. அது முழுக்க முழுக்க தமிழ் பிற்போக்கு சக்திகளின் இனவாதப் போராட்டமாகும். இன்னும் சொல்லப் போனால், உலகில் மக்கள் விரோதப் போக்குகளாகத் தோற்றம் பெற்ற, ஜேர்மன் நாசிசம், இஸ்ரேலிய சியோனிசம், தமிழ் நாட்டின் பார்ப்பணியம் போன்று, ஒப்பிடப்படக் கூடிய, ‘யாழ்ப்பாணியம்’ என்று சொல்லப்படக் கூடிய, யாழ் உயர்சாதி மேட்டுக்குடி குழாமினரின் அதிகாரத்துக்கான ஒரு போராட்டமே, புலிகளால் தலைமையேற்று நடாத்தப்பட்ட இந்தப் போராட்டமாகும். “ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் தவறென்ன?” என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், சாதாரண தமிழ் மக்களின் ஆளுகை பற்றி எதுவும் பேசவில்லை, முன்பு ஆண்ட பரம்பரை பற்றியே பேசியது. உண்மையில் அது, இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், தனது இன விகிதாசாரத்தை மீறி, வெள்ளைக்காரனிடமிருந்து பெற்றுக் கொண்ட அபரிமிதமான அதிகாரங்களையும், வளங்களையும், சலுகைகளையும் மீண்டும் பெறுவதற்காகவே தொடங்கப்பட்ட ஒன்று. அது ஏகாதிபத்தியத்துடனும், சிங்கள மேட்டுக்குடி அதிகார வர்க்கத்துடனும் கூட்டுச் சேர்ந்த அதேவேளையில், சாதாரண சிங்கள – தமிழ் - முஸ்லீம் மக்களைக் கொன்று குவித்ததிலிருந்து இதை விளங்கிக கொள்ளலாம். (மேலும்.....)

ஆடி 01, 2010

வளர்ச்சிக்கான வரவு - செலவுத் திட்டம்


இவ்வருடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று முன்தினம் பதில் நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. புதிதாக வரிகள் எவற்றையும் விதிக்காததும் நாட்டின் அத்தியாவசிய துறைகளின் அபிவிருத்திக்கான ஆலோசனைகளைக் கொண்டிருப்பதும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள். ஒரு நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி மாணவர்களிலேயே தங்கியுள்ளது. பல்துறை நிபுணர்கள் திட்டங்கள் தீட்டி முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அவர்களுக்குப் பிந்திய காலத்தில் தொடரப்பட வேண்டியது அவசியம். அவ்வாறு தொடரப்படும் பட்சத்திலேயே நாட்டின் தொடர்ச்சியான அபிவிருத்தி உறுதி செய்யப்படும். (மேலும்.....)

ஆடி 01, 2010

Flying Car a Step Closer to Reality

Weird-looking cars are a dime a dozen. Far less common are weird-looking cars that can also fly AND have approval from the Federal Aviation Administration. Indeed, as far as we know, there's only one of those babies: The Terrafugia Transition. The private aircraft/funky-looking car has been in the news before. But the recent announcement that it's going into production sparked mega-searches on the Web. Almost immediately, online lookups for "terrafugia transition" and "terrafugia transition pictures" both, well, took off. (more....)

ஆடி 01, 2010

ரஷ்யாவுக்காக உளவு பார்த்த 11 பேர் கைது

ரஷ்யாவுக்காக உளவு பார்த்த 11 பேரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்க - ரஷ்ய பனிப்போர் ஓய்ந்து, தற்போது இருநாடுகளும் நேசத்தோடு பழகி வருகின்றன. இருப்பினும், ரஷ்ய உளவு அமைப்பான எஸ். வி. ஆர். பலருக்கு பயிற்சி கொடுத்து அமெரிக்காவில் உளவு பார்க்கும் வேலையை செய்து வந்துள்ளது.  எஸ். வி. ஆர். உத்தரவின் பேரில் அமெரிக்காவின் பாஸ்டன், நியூயோர்க், நியூஜெர்சி, விர்ஜினியா உள்ளிட்ட பகுதிகளில் உளவு பார்த்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 வது நபர் சைப்பிரஸில் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்டவர்களில் எட்டுப் பேர் திருமணமான தம்பதியர். இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.

ஆடி 01, 2010

Communist Party Leader Calls for Independent Inquiry into Police Repression during G20

 Communist Party of Canada leader Miguel Figueroa today sharply denounced the wave of police repression which swept over downtown Toronto since last Saturday afternoon during the G20 Summit, and has called for a comprehensive independent public inquiry, including a thorough investigation of those politically responsible for giving a “green light” for the police thuggery and the unprecedented number of detentions and arrests. (more...)

ஆடி 01, 2010

தனுனவின் சொத்துக்கள் அரசுடமை

இராணுவத்துக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்த ‘ஹைகோர்ப்’ கேள்விப்பத்திர நிதி மோசடி வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவுக்கு சொந்தமான இரண்டு வங்கிகளில் ஏழு கணக்குகளில் உள்ள 15 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தையும் 1251 அமெரிக்க டொலர்களையும் அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று (30) உத்தர விட்டார். (மேலும்.....)

ஆடி 01, 2010

வட மாகாண சபை இணையத்தளம் இன்று மீள் ஆரம்பம்

வட மாகாண சபையின் www.np.gov.lk என்ற இணையத்தளம் புதுப் பொலிவுடன் இன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பிலுள்ள வட மாகாண ஆளுநரின் உதவி அலுவலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வின் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி இன்று உத்தியோகபூர்வமாக மீள ஆரம்பித்து வைக்கவுள்ளார். வடமாகாணத்தின் தற்போதைய நிலை, அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை காலமும் ஆங்கிலத்தில் மாத்திரம் இந்த இணையத்தளத்தின் ஊடக தகவல்களை பெற்றவர்கள் இன்று முதல் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் விரிவான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆடி 01, 2010

அடுத்த கட்டப் போராட்டத்திற்கு அணிகள் தயாராகின்றன

உலகக்கோப்பைப் போட்டிக்கு தகுதி பெற்ற 32 அணிகளில் ஐந்து அணிகள் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். அதில் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இதற்கு முந்தைய சுற்றில் பிரேசிலும், சிலியும் ஒரே ஆட்டத்தில் ஆடியதால் சிலி வெளியேற வேண்டியதாகிவிட்டது. ஆசிய அணிகளில் எதுவுமே காலிறுதிக்கு தகுதி பெறவில்லை. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து கானா இன்னும் களத்தில் உள்ளது. (மேலும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com