|
||||
|
ஆடி 2010 மாதப் பதிவுகள் ஆடி 31, 2010 தமிழ்க் கட்சிகளிடையே ஐக்கியம் முன்னர் இடம்பெற்ற இரண்டு ஐக்கிய முயற்சிகளிலும் பார்க்க இன்றைய ஐக்கிய முயற்சி குணாம்சரீதியாக முக்கியமானது. தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடைமுறைச் சாத்தியம ற்ற தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தமிழ் மக்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். தனி நாட்டுக் கொள்கை தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளி விடும் என்பதை ஏற்றுக் கொள்பவர்களாலேயே இன் றைய ஐக்கிய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதென்ப தால் இது தமிழ் மக்களுக்கு விமோசனப் பாதையைக் காட்டும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. (மேலும்...) ஆடி 31, 2010 பிரபாகரனின் சாரதி பொலிஸாரிடம் சரண் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரத்தியேக சாரதியாக செயற்பட்ட வி.சதிகுமரன் திருகோணமலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான சதிகுமரன், போரின் கடைசிக்கட்டத்தில் அவ்வமைப்பிலிருந்து தான் தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆடி 31, 2010 தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்படுமானால் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைய கூட்டமைப்பு தயார்' தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்படுமானால் 'தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில்' இணைவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணையுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, "கடந்த நான்கு கூட்டங்களின் போது அவர்கள் கூடி கலந்துரையாடியது, தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இவ்வரங்கத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாகத்தானே தவிர தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு எவ்வளவே இருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைப்பது தொடர்பில் மாத்திரம் கலந்துரையாடுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். இதுவரைக்கும் அவர்கள் என்ன விடயங்கள் கலந்துரையாடினார்கள் என்று இன்று வரைக்கும் மக்கள் மத்தியில் கூறவில்லை. அக்கூட்டத்தில் என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டது என்பதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு கழுவிற தண்ணீரில் நழுவிற மீன் போல இருக்கின்றது என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆடி 31, 2010 உலக மரபுரிமைப் பட்டியலில் சிவனொளிபாதமலை, ஹோர்ட்டன் சமவெளி, நக்கிள்ஸ்
சிவனொளிபாதமலை, ஹோர்ட்டன் சமவெளி, நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகியன பாதுகாக்கப்பட வேண்டிய உலக மரபுரிமைப் பிரதேசங்களாக ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரேஸிலில் நடைபெறும் யுனெஸ்கோவின் உலக மரபுரிமைக்குழுவின் 34 ஆவது மாநாட்டில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை பிரேஸிலின் பிரஸில்லியா நகரில நடைபெறும் இம்மாநாட்டில் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆடி 31, 2010 ஆரயம்பதி பொது மக்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது _ ![]()
மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் நேற்று காலைமுதல் சாகும்வரை உண்ணாவிரதப்
போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய
நிலங்களை ஆக்கிமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம்
நடத்தப்படுவதாக உண்ணாவிரதமிருப்போர் தெரிவிக்கின்றனர். காத்தான்குடி நகரசபை
தமது பிரதேச செயலக எல்லையை நிர்ணயம் செய்து தமது பகுதிக்குரிய சவ நிலங்களை
ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று சுமார்
5மணியளவில் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற கிழக்கு மாகாண
முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான
சிவநேசதுரை சந்திரகாந்தன், நடைபெற்றுக் கொண்டிருந்த ஆர்பாட்டத்தினை
முடிவுக்குக் கொண்டுவந்தார்.
(மேலும்...) Foreign mediated efforts wont bring reconciliation:KP
Prabhakaran, his key commanders and an influential section of the Tamil Diaspora felt that Tamil Nadu would come to their rescue. They believed Tamil Nadu political parties could exploit a dicey political situation to compel Prime Minister Manmohan Singh to intervene in Sri Lanka. We also sought the assistance of some UN officials and President of East Timor to arrange for a truce before the Army overran the last few sq km of territory held by the LTTE in the third week of May 2009. (more...)
ஆடி 31, 2010 பிளாஸ்டிக் இல்லாத நாட்டை எப்போது உருவாக்கப் போகிறோம்? சில காலங்களின் முன் ஸ்பெயின் நாட்டின் கடற்கரை ஒன்றில் 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்த திமிங்கிலத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக புதிய கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டது. ஆனால், முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து திமிங்கலம் இறந்துவிட்டது. பின்னர் இறந்த அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தபோது அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் குடலில் சுமார் 50 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் காணப்பட்டன. (மேலும்...) ஆடி 31, 2010 IPad இற்குப் போட்டியாக Microsoft
உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது அப்பிளின் பிரபல ' ஐ பேட் ' ரக கணனிகளுக்குப் போட்டியாக ஒரு கணனியை உருவாக்கி வருவதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார். இதற்காக தாம் எச்பி,லெனோவோ,எசூஸ்,டெல் மற்றும் டொஷிபா போன்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றார். அத்துடன் தமது மென்பொருள் வல்லுநர்களுடன் சேர்ந்து கடுமையாக உழைத்து வருவதாகவும் கூடிய விரைவில் மக்களின் தேவைக்கேற்ற விதத்தில் இது சந்தைக்கு வருமெனவும் தெரிவித்தார். இந்நிலையில் மைக்ரோசொப்ட் கொரியர் எனப்படும் இரட்டைத் திரைகளைக் கொண்ட கணனிகளை அதன் வல்லுநர் குழுவொன்று இரகசியமாக உருவாக்கி வருவதாகவும் தகவல் கசிந்திருந்தது. ஆனால் இது தாம் உருவாக்கிவரும் பலவகையான கணனிகளில் ஒரு வகை மட்டுமே என மைக்ரோசொப்ட் அண்மையில் தெரிவித்திருந்தது. ஆடி 31, 2010 பாதுகாப்பு அச்சுறுத்தல் இலங்கையில் இல்லை தனது பிரசைகளுக்கான பிரயாணக் கட்டுப்பாட்டை பிரிட்டன் நீக்கியது இலங்கையின் வட மாகாணத்தின் நான்கு மாவட்டங்களுக்குச் செல்வ தற்காக பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நீக்கியுள்ளது. வடக்கில் முல்லைத்தீவு, கிளி நொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு செல்லுவதற்கு பிரிட்டிஷ் தூதரகம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. என்றாலும் வடக்கில் இப்போது பாதுகாப்பான நிலை ஏற்பட்டுள்ளதனால், தனது பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுக ளை அகற்றுவதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரகம் நேற்று அறிவித்தது. (மேலும்...) ஆடி 31, 2010 கிறிஸ்மஸ்தீவு கடற்பரப்பில் படகு மூழ்கிய நிலையில் 81 அகதிகள் மீட்பு கடலில் மூழ்கும் அபாய நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர், அவுஸ்திரேலியாவின் வட மேற்கு கிரிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து நேற்று முன்தினம் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நான்கு இந்தோனேஷிய ஆட்கடத்தல் காரர்களும் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தெரிவானதைத் தொடர்ந்து அங்கு சென்ற 150வது படகு இதுவாகும். (மேலும்...) ஆடி 31, 2010 தலீபான்களுக்கு நிதி உதவும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாதது ஏன்? தலீபான்களுக்கு தஞ்சம் கொடுத்து, அவர்களுக்கு நிதி உதவியையும் அளித்த பாகிஸ்தான் மீது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தாக்குதல் நடத்தாது ஏன் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்களை ஒடுக்குவதற்காகவும் அங்கு இருந்த அல்கைதா தீவிரவாதிகளை விரட்டி அடிக்கவும் அமெரிக்கா அங்கு இராணுவத்தை அனுப்பி யுத்தம் நடத்தி வருகிறது. 9 ஆண்டுகளாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அந்நிய வீரர்கள் அங்கு முகாமிட்டு தலீபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். (மேலும்...) ஆடி 31, 2010 தண்ணீர்...தண்ணீர்! குடிநீர் இன்று கானல் நீராகி வரும் வேளை யில் ஐக்கிய நாடுகள் சபை, தூய்மையான குடிநீர் மனித உரிமை என பிரகடனப்படுத்தியிருக்கிறது. சரியான நேரத்தில் இந்த பிரகடனம் வெளியிடப் பட்டிருக்கிறது. பூமியின் பரப்பில் 71 சதவிகிதம் தண்ணீர் இருந்தாலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் தண்ணீரின் அளவு 0.26 சதவிகிதம் மட்டுமே. மனிதனை தாக்கக்கூடிய நோய்களில் 62 சதவிகிதம் இந்த நீரினால் பரவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பரவும் தொற்று நோய்களில் 21 சதவிகிதம் தண்ணீர் மூலமே பரவுகிறது. ஆண்டுதோறும் வயிற்றுப் போக்கு நோயால் மட் டும் 7 லட்சம் இந்தியர்கள் பலியாகிறார்கள் என்ற ஆய்வு விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. (மேலும்...)ஆடி 31, 2010 இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டுவதை நிறுத்துமாறு பாகிஸ்தானுடன் பேசுவேன் - இங்கிலாந்து பிரதமர் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து புதிய பிரதமர் டேவிட் கமரூன், டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு இரு தலைவர்களும் நிருபர்க ளுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, டேவிட் கமரூன் கூறு கையில், இந்தியாவில் தீவிரவாத த்தை தூண்டி விடுவதை நிறுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி, பாகிஸ்தானுடன் வெளிப்படையாக, திறந்த மனதுடன் பேச்சு நடத்துவது தான். அடுத்த வாரம் நான் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியுடன் இது தொடர்பாக பேச்சு நடத்துவேன் என்று கூறினார். இந்த கூட்டு பேட்டியில், பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், ஆப் கானிஸ்தான் எல்லையில் தீவிரவா தத்தை கட்டுப்படுத்த அக்கறை செலுத்துவது போல, இந்திய எல் லையிலும் தீவிரவாதத்தை கட்டுப் படுத்த பாகிஸ்தான் அக்கறை செலு த்த வேண்டும் என்று எதிர்பார்க் கிறேன். இதற்கு உலக நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்று கூறி னார். ஆடி 31, 2010 மட்டு.ஆரையம்பதி மக்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்
மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் இன்று காலைமுதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய நிலங்களை ஆக்கிமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக உண்ணாவிரதமிருப்போர் தெரிவிக்கின்றனர். காத்தான்குடி நகரசபை தமது பிரதேச, செயலக எல்லையை நிர்ணயம் செய்து தமது பகுதிக்குரிய சவ நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆடி 31, 2010 அமெரிக்க ராணுவ ரகசியங்கள் கூறும் உண்மை என்ன? விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியான ஆப்கானிஸ்தான் போர் ராணுவ ரகசியங்கள் பிரச்சனையில் ஓபாமா நிர்வாகம் உடனடியாக, நாம் ஊகித்தது போன்றே நடந்து கொண்டுள்ளது. இக்கசிவுகள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ஒபாமா அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களையும் உலக மக்களையும் தவறாக வழிநடத்தி ஆப்கானிஸ்தானிய அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றஅமெரிக்க ராணுவம் மன்னிப்புக் கோரி ஒருவார்த்தை கூடக் கூறவில்லை. தற்போது அமெரிக்கா கடைப்பிடித்து வரும் கொள்கையே சரியான கொள்கை, அமெரிக்க நிர்வாகம் அதையே கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜெனரல் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார். உண்மையிலே, இத்துணிச்சலான வார்த்தைகளின் பின், வெளியே கசிந்துள்ள ஆவணங்கள் கூறும் கதையின் ஒரு பகுதி உண்மை தான் என்பது மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. (மேலும்...)ஆடி 31, 2010 UNAC registers anti-war unity (by Barry Weisleder) Anti-war unity in action got a major boost from a gathering of over 700 peace and social justice activists, held July 23-25 in Albany, New York. The United National Antiwar Conference was the largest of its kind since 2001. It had the backing of thirty national organizations across the United States, including the National Assembly Against U.S. Wars and Occupations, US Labor Against the War, Arab American Union Members' Council, Black Agenda Report, Code Pink, International Action Center, Iraq Veterans Against the War, National Lawyers' Guild and Progressive Democrats of America. People came from as far away as California and Texas. Several activists from Canada attended too, including a War Resisters' Canada rep., and six members of Socialist Action/Ligue pour l'Action socialiste from Toronto and Montreal. (more...) ஆடி 30, 2010 மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் மக்களின் அங்கீகாரமும் வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை விரைவாக மீள் குடியேற்ற வேண்டும் என்றும் அவர்களின் மனித உரி மைகளையும் ஜனநாயக உரிமைகளையும் உறுதிப்படு த்த வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி கூறுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி மக் கள் விடுதலை முன்னணி பேசுவது வரவேற்புக்குரியது. ஆனால் அந்தப் பேச்சு சரிந்து செல்லும் அரசியல் செல் வாக்கைத் தக்க வைப்பதற்கான பேச்சாக அல்லாமல் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வை நாடி நிற்கும் பேச்சாக இருத்தல் வேண்டும். சிங்களக் கடுங்கோட்டப்பாட்டு வாக்கு வங்கியை இலக்கு வைத்துச் செயற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள மக் கள் விடுதலை முன்னணி அந்த நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு இனப் பிரச்சினையின் நியாயமான அரசி யல் தீர்வுக்காகக் குரல் கொடுக்கும் நிலையிலேயே தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியும். (மேலும்...) ஆடி 30, 2010 மீண்டும் வெல்வது உறுதி (கே.வரதராசன்)
இடதுசாரி அரசாங்கங்கள் நிலச்சீர்திருத் தம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைக
ளில் மிக முக்கிய அம்சம் என்பது பினாமி நிலங்களையும், உபரி நிலங்களையும்
கைய கப்படுத்தி, நிலமற்ற விவசாயிகளுக்கு விநி யோகம் செய்ததேயாகும். கடந்த
30 ஆண்டு களில் மேற்கு வங்க அரசு கையகப்படுத்திய நிலத்தின் அளவு 13.37
லட்சம் ஏக்கர்களாகும். இதில் 10.63 லட்சம் ஏக்கர் நிலங்களை மேற்கு வங்க அரசு
நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகம் செய்து கொடுத்துள்ளது. இதன் மூலமாக 26.43
லட்சம் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர் களில் 47
சதவீதத்தினர் தலித்துகள், பழங் குடியினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினரா
வார்கள். எனவேதான் நாட்டில் கையகப்படுத் தப்பட்ட நிலங்களில் 18 சதவீதமும்,
விவசாயி களுக்கு விநியோகிக்கப்பட்ட மொத்த நிலங்க ளில் 20 சதவீதமும் மேற்கு
வங்கத்தில் இருக் கிறது என்று சொல்லும்போது அது விந்தை யாக இல்லாமல்
இருக்கிறது. ஆடி 30, 2010 என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் அம்மணி? (ஜீவிதன்) தாம் கற்பிக்கும் மாணவர்களைத் தமது பிள்ளைகளாக எண்ணி அவர்களுக்குக் கல்வியை மாத்திரமன்றி நல்லொழுக்கத்தையும் சொல்லித்தர வேண்டியவர்கள் இவ்வாறு கீழ்த்தரமான சிந்தனைகளுடன் பாடசாலைக்குச் சென்று எவ்வாறு கற்பிப்பார்கள்? அரிச்சந்திரன் காத்த இடத்துப் பாடசாலையில் மட்டும் இல்லை. பொதுவாக இந்தப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் நிலைமை இதுவாக உள்ளதுதான் வேதனைக்குரிய விடயம். (மேலும்...) ஆடி 30, 2010 அதியுயர் பாதுகாப்பு வலயங்களை கட்டம், கட்டமாக அகற்றும் பணி ஆரம்பம் வட பகுதியிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களைக் கட்டம், கட்டமாக அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஏ. பி. உபே மெதவல நேற்றுத் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் கிளாலி, முகமாலை, கச்சாய், சாவகச்சேரி, மல்லாவி, காங்கேசன்துறை முதல் தெல்லிப்பளை வரையான பகுதி யாழ்ப்பாணம் - காங் கேசன்துறை வீதியில் மேற்கு பகுதி, மாங்குளம் உட்பட பல பிரதேசங்களின் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்கனவே நீக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருப்பதாகவும் அவர் கூறினார். (மேலும்...) ஆடி 30, 2010 கே.பி அரச சாட்சியாக மாறும் சாத்தியம்; பொதுமன்னிப்பு வழங்கவும் முடியும்
![]() கே. பி. எனப்படும் குமரன் பத்மநாதன் அடங்கலான பல புலம்பெயர் தமிழர்கள் வடபகுதி அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ளனர். நாட்டின் அழிவுக்காக பயன்படுத்தப்பட்டவர்களை நாட்டின் நலனுக்காக பாதிப்பில்லாதவாறு பயன்படுத்த தயாராக உள்ளோம். இலங்கை சட்டத்தின் பிரகாரம் கே. பி. அரச சாட்சியாக மாறும் சாத்தியம் உள்ளதோடு அவருக்கு பொது மன்னிப்பு வழங்கவும் முடியும். (மேலும்...) ஆடி 30, 2010 பிரிட்டன் பிரதமரின் கருத்து பிராந்திய அமைதிக்கு பாதிப்பு - பாகிஸ்தான் தூதுவர் பிரதமர் டேவிட் கமரோன் இந்தியாவில் வைத்து வெளியிட்ட கருத்துக்கள் பாகிஸ்தானை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தலிபான்களுக்கெதிரான போரில் பாகிஸ்தானின் மிகப் பெரிய பங்கை மலினப்படுத்துவதாயுள்ளது என்று பாகிஸ்தான் தூதுவர் பிரிட்டன் பத்திரிகைக்கு தெரிவித்தார். பென்டகனில் இரகசியமாகக் கசிந்த தகவல்களில் நாங்கள் சில உண்மையான தகவல்களைக் காண்கிறோம். அதில் பிரிட்டனின் நம்பகத் தன்மையில் குறைபாடு உள்ளது என்றும் ஹஸன் தெரிவித்தார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் இந்தியாவில் தெரிவித்தார். (மேலும்...) ஆடி 29, 2010 மட்டு. களுவாஞ்சிக்குடி அபிவிருத்திக் குழுக் கூட்டம்
மட்டகக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜா திணைக்களத் தலைவர்கள் பிரதேச சபைத்தலைவர், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்திருந்தனர். இவ்வாண்டின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக அதன்போது விரிவாக ஆராயப்பட்டது. ஆடி 29, 2010 KP speaks out "Tamil Diaspora ready to work with President" "Special Bank AC opened to raise funds"
Jaffna Mayor Alfred Duraiappahs killing by Prabhakaran, the decision makers of the politico-militant movement at that time had removed Prabhakaran from the outfit. When he came to me, I was just an Advanced Level student, though I had to accommodate him in my room. There had been moves to kill him by some individuals, including the then TELO leader Thangadurai. (more.....)
ஆடி 29, 2010
தமிழ்க் கட்சிகள் அரங்கம் 9 கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு, கூட்டமைப்பை அழைக்க முடிவு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். தலைவர்கள் ஒன்பது பேரும் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கின்றது. (மேலும்....) ஆடி 29, 2010 5 ஆவது இரட்டைச் சதம் குவித்தார் சச்சின்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 5 ஆவது டெஸ்ட் இரட்டை சதத்தை இன்று பூர்த்தி செய்தார். கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளான இன்று டெண்டுல்கர் 203 ஓட்டங்களைப் பெற்றார். 347 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர் மற்றும் 23 பௌண்டரிகளையும் விளாசினார். இலங்கை மண்ணில் இரட்டைச் சதம் பெற்ற 4 ஆவது வெளிநாட்டு வீரர் டெண்டுல்கர் ஆவார். இதற்குமுன் ஸ்ரீபன் பிளெமிங் (274) பிரையன் லாரா (221) வீரேந்தர் ஷேவாக் (201) ஆகியோர் ஏற்கெனவே இலங்கையில் இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளனர். ஆடி 29, 2010 Is LTTE ideologue Balakumar dead or alive? ![]()
Velupillai Balakumar or Balakumaran was the one time leader of Ealam
Revolutionary Organization of Students (EROS). He was also a member of
Sri Lanka parliament for a brief period. In late 1980s or early 1990s,
he split the EROS and joined the Liberation Tigers of Tamil Ealam (LTTE)
with a number of his associates. He is believed an influential adviser
to the leader of the LTTE Velupillai Prabakaran. The importance of this
man is that he is famous as a Marxist. If he is alive like the former
LTTE chief of international relations, he may speak one day how his
Marxist ideas influenced the Tiger leader. Asked by
The Island today whether among
the detained terrorists were Yogiratnam Yogi, one-time LTTE negotiator
and Balakumaran of the EROS, who threw his weight behind Velupillai
Prabhakaran, Rehabilitation Commissioner Brig. Ranasinghe said that
he did not have them.
(more...) வவுனியா நகர சபை தலைவர் நாதனின் அராஜகம் வவுனியா நகரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதில்லையென மூன்று கட்சிகள் தீர்மானம். வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக 29விடயங்களை முன்வைத்து கையெழுத்திட்டு வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர், செயலாளர் ஆகியோர்க்கு எதிராக அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பித்தனர். குறித்த விடயங்கள் தொடர்பாக சரியான விளக்கம் தந்தால் கடந்தகாலங்கள்போல் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் இல்லையேல் ஒத்துழைப்புக்களை வழங்க மாட்டோமென்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக எடுத்த முடிவின்படி இனிமேல் நகரசபை செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென்று தீர்மானிக்கப்பட்டது. (மேலும்...) வாகரையில் 70 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றம் மட்டக்களப்பு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில் இன்று காலை 70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டன. கடந்த 2006 இராணுவ நடவடிக்கையின்போது போது இடம்பெயர்ந்து கதிரவெளி,சித்தாக்கேணி, பால்சேனை, வம்மிவெட்டுவான் போன்ற பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர். சுமார் 5 வருடங்களின் பின்னர் இவர்கள் தோணிதாண்டமடு கிராமத்தில் இன்று மீள்குடியமர்த்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். கதிரவெளியிலிருந்து இன்று காலை புறப்பட்டுச்சென்ற இவர்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதேசசெயவாளர், படையதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு வழியனுப்பிவைத்தனர். ஆடி 29, 2010 ராஜீவ்காந்தி கொலை வழக்கு நளினியை விடுதலை செய்ய முடியாது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. (மேலும்...) ஆடி 29, 2010 லண்டன் கனவுகளின் தேசம் அல்ல மட்டக்களப்பிலிருந்து எனது நீண்டகால நண்பர் திக்வயல் தர்மகுலசிங்கம் தொலைபேசி எடுத்துச் சொன்னார் 'உங்கை லண்டனுக்குத் எனது சொந்தக்காரப் பொடியன் ஒருத்தன் வாறான். அவன் ஸ்ருடன்ற் விசாவில் வாறான். ஒரு வேலை எடுத்துக் கொடுங்கோ'. இப்படியான தொலைபேசி அழைப்புக்கள் சிலோனிலிருந்து அடிக்கடி எனக்கு வரும். லண்டன் பெரும் சீமை என்று ஒரு பெருமை அந்தக் காலத்தில் இருந்ததுதான். பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வின் இடமாக லண்டன் முன்பு ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால் இப்பொழுது இல்லை. (மேலும்....) ஆடி 29, 2010 தர்ஷிகாவின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்புவேலணை வைத்தியசாலை யின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் உடல் நேற்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. கடந்த 12ம் திகதி வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தர்ஷிகாவின் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவத்துக்கு வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் காரணமென தர்ஷிகாவின் குடும்பத்தினர் ஆடி 29, 2010 பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்தவர் ஸ்ரீமாவோ- ஜனாதிபதி முழு உலகிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய போதும் அதனை எதிர்கொள்ளும் பலம் அவருக்கிருந்தது. அந்தப் பலமே எமக்கும் முன்னுதாரணமாகியது. நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்க அவர் எப்போதும் தயாராகவே இருந்தார். அரச வளங்கள் எதனையும் அவர் விற்கவில்லை. காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வங்கிகள் போன்றவற்றை பாதுகாத்ததுடன் பூகொட, துல்கிரிய, டயர் கூட்டுத்தாபனம் ஆகியன அவரது காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. கட்சிக்காக, நாட்டுக்காக அவர் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவிருந்தார். தமது கட்சியின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது போன்று ஏனைய கட்சிகளின் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தினார்.(மேலும்....) ஆடி 29, 2010
அமைச்சர் முரளியின் பேச்சுவார்த்தை வெற்றி இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணம் அதிகரிப்பு
இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிக்க உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நிவாநயகமூர்த்தி முரளிதரன் கூறினார். உலக உணவுத் திட்டத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதோடு இதனை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி ஆத்நாத் கானுக்கும் பிரதி அமைச்சருக்கு மிடையில் அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இடம்பெயர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு, மா, சீனி, மரக்கறி எண்ணெய் உப்பு என்பன வழங்கப்படுகிறது. பருப்பு, மரக்கறி எண்ணெய், மா என்பன அமெரிக்காவில் இருந்தும் சீனி, அரிசி, உப்பு என்பன அரபு நாடுகளில் இருந்தும் தருவிக்கப்படுகிறது. இவற்றை சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் கேள்வி மனுக்கோரி குறைந்த விலையில் பெற்றபின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிப்பதாக உலக உணவுத் திட்ட பிரதிநிதி கூறியுள்ளார். ஆடி 29, 2010 பட்டையைக் கிளப்பும் சத்யராஜ், குட்டை உடைக்கும் கருணாஸ் ''நான் புதுக்கோட்டையில் பிறந்தவன். ஈழம்தான் என் பூர்வீக பூமி. தமிழீழம் பெறவேண்டும் என்கிற வெறி, சீமானைவிட எனக்கு அதிகம் உண்டு. நான், இயல்பாகவே முருகபக்தன். 'தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உண்டே... அதில் ஏதாவது ஒரு கோயிலுக்குப் போகலாமே...' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதெல்லாம் குலதெய்வத்தை வழிபடுவதுபோல் ஆகுமா? என் குலதெய்வமான முருகன் கோயில், கதிர்காமத்தில்தானே இருக்கிறது? அங்கே நான் நேர்த்திக்கடன் செலுத்துவது தப்பா? முதலில் வர்மா என்ற ஒருவர் செல்போனில் தன்னை, 'சீமான் உதவி யாளர்' என்று சொல்லிக்கொண்டு, 'இலங்கைக்கு நீ போகக்கூடாது. போனால், தொலைத்து விடுவோம்...' என்றார். அடுத்து, 'நாம் தமிழர்' இயக் கத்தைச் சேர்ந்த அதியமான் ரொம்பவும் மோசமாக மிரட்டினார். (மேலும்....) ஆடி 29, 2010 இலங்கையில் இதுவும் நடக்கின்றது1929 சிறுவர் துஷ்பிரயோகம் 1750 அழைப்புகள்சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல் வழங்குவதற்கான 24 மணி நேர தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நேரடி தொலைபேசிக்கு நாடளாவிய ரீதியில் இருந்து இதுவரை 1750 அழைப்புகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாது காப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான இந்த நேரடி தொலைபேசி கடந்த 22ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. 1929 என்ற எண்ணில் 24 மணி நேரமும் இலவசமாக எவரும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்க முடியும். (மேலும்....) ஆடி 29, 2010 அமெரிக்காவின் அணுஆயுத மிரட்டல்
தென்கொரிய யுத்தக்கப்பல் ஒன்றை வட கொரியா மூழ்கடித்துவிட்டதாக கடந்த இரண்டு
மாத காலமாக தென்கொரியா புகார் கூறி வரு கிறது. அதற்கு அமெரிக்காவும் சொல்லி
வைத் தாற்போல் பின்பாட்டு பாடி வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு
வடகொரியாவும், அமெரிக்காவும் திட்டமிட்டு செய்யும் வஞ்சகப் பிரச் சாரம் இது
என்று வடகொரியா இடித்துரைத்துள்ளது. வரலாற்றில் அமெரிக்காவையும், அதன் அடி
மைக் கூட்டாளிகளையும் முறியடித்து மகுடம் சூடிய நாடு வடகொரியா. தனது
தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாத அமெரிக்க ஏகாதிபத்தி யம் வடகொரியாவுக்கு
எதிராக தொடர்ந்து பல நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. பொரு ளாதாரத்தடை,
உணவுப் பொருட்களுக்குத்தடை என பல மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வட கொரியா
மீது அமெரிக்கா ஏவிவிட்டுள்ளது. தடைகளைத் தகர்த்தெறிந்து வளர்ச்சிப்பாதை
யில் வடகொரியா கம்பீரமாக நடைபோடுகிறது. ஆடி 29, 2010
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக நேற்று மாலை பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. றுஹுணு பல்கலைக்கழக மாணவனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரியே நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக நீடித்தது. ஆர்ப்பாட்டத்தையொட்டி புகையிரத நிலையத்துக்கு முன்பான ஒல்கொட் மாவத்தை போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆடி 29, 2010 152 பயணிகள் பலிபாகிஸ்தானில் விமானம் விபத்து பாகிஸ்தானில் நேற்று நடந்த விமான விபத்தில் 6 விமானிகள் உட்பட 152 பேர் பலியாகினர். நேற்றுக் காலை இந்தச் சம்பவம் நடந்தது. பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து தலைநகரம் இஸ்லாமாபாத்துக்கு நேற்று காலை ஏர்புளு என்ற தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 153 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர். கராச்சியில் இருந்து சில மணி நேரம் பயணம் செய்து விமானம் இஸ்லா மாபாத்தை நெருங்கி கொண்டி ருந்தது. இஸ்லாமாபாத் அருகே உள்ள மார் காலா மலைக்கு மேலே விமானம் பறந்துகொண்டிரு ந்தது. அப்போது விமானம் திடீரென விமான நிலைய ரேடாரில் இருந்து மறைந்தது. ரேடியோ தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. உடனே உஷார் அடைந்த விமான நிலைய ஊழியர்கள் விமானத்துக்கு என்ன ஆனது? என்று தேட தொடங்கினார்கள். விமானம் மார்காலா மலையில் மோதி நொறுங்கிக் கிடப்பது தெரியவந்தது. அந்த இடத்துக்கு ஹெலிகொப்டர் மூலம் மீட்பு படையினர் அனுப்பப்பட்டனர். ஆனால், வானிலை மோசமாக இருந்ததால் விமானம் விழுந்து கிடந்த இடத்தில் இறங்க முடியவில்லை. பல பயணிகள் இறந்து கிடந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த சிலர் மீட்கப்பட்டனர். இதுவரை 45 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 114 பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆடி 28, 2010 துயரங்களில் பங்கு கொள்கின்றோம் ஈ.பி.டி.பி.யின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரனின் தந்தை இயற்கை எய்தினார்
ஆடி 28, 2010 இலங்கையர் அறுவர் அமெரிக்காவில் கைது அமெரிக்க பொலிஸார் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படும் 6 இலங்கையர்களை செவ்வாய் காலை கைது செய்துள்ளனர். புளோரிடா மாநிலத்தின் பாம் பீச் நகரில் காலை 6.40 மணியளவில் ஈரமான ஆடையுடன் மேற்படி நபர்கள் வீதியில் நடந்து சென்றதை அவதானித்த பொலிஸார் அந்;நபர்களை கைது செய்து எல்லைக் காவல்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். முழங்கால் வரை அவர்களின் கால்கள் நனைந்திருந்ததால் அவர்கள் படகில் அழைத்துவரப்பட்டு கரையோரத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். எனினும் சந்தேகத்திற்கிடமான படகுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நபர்கள் அனைவரும் 20-40 வயதானவர்கள் எனவும் அவர்கள் ஆரோக்கியமான நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை மற்றும் அமெரிக்க நாணயத்தாள்கள் அவர்களிடம் இருந்ததாகவும் அவர்களால் ஆங்கிலம் பேசமுடியவில்லை எனவும் பொலிஸார் கூறுகின்றனர். அவர்களிடம் பை எதுவும் காணப்படாத போதிலும் செல்லிடத் தொலைபேசிகளை வைத்திருந்தனர்.ஆடி 28, 2010 Hardcore Tigers among detainees identified, legal action awaited A senior military official said on Monday (July 26) that those involved in major terrorist attacks would have to be legally dealt with. He said hardcore terrorists could not be released along with ordinary LTTE combatants, as they could pose a security threat. Brigadier Sudantha Ranasinghe, Commissioner General of Rehabilitation said that the 737 ex-LTTE personnel were among 7,948 persons held by authorities. He said that they were all men. Asked by The Island whether among the detained terrorists were Yogiratnam Yogi, one-time LTTE negotiator and Balakumaran of the EROS, who threw his weight behind Velupillai Prabhakaran, Brig. Ranasinghe said that he did not have them. (more...) ஆடி 28, 2010 சிறப்பாக நடைபெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் திருவிழா _ வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் உற்சவத்தின் பத்தாம் நாள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். ஆலயத்தில் ஐந்து வருடங்களுக்கு மேலாக திருத்தப் பணிகள் இடம்பெறுவதால் கொடியேற்றம் நடைபெறாது திருவழாக் காலத்தில் உற்சவம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது ஆடி 28, 2010 உலக அதிசயங்களுக்கு இலங்கையிலுள்ள இடங்கள் பிரேரணை _
உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கும்படி இலங்கையிலுள்ள மூன்று இடங்களின் பெயர்களை பிரேரிப்பதற்காக சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா உட்பட அதிகாரிகள் குழுவொன்று பிரஸல்ஸ் நகரில் நடைபெறுகின்ற உலக ஏழு அதிசயங்களை தெரிவு செய்யும் மாநாட்டுக்கு சென்றுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்திலுள்ள நக்கில்ஸ் மலைத் தொடர், ஹோர்ட்டன் மலைத்தொடர், சிவனொலி பாதமலை என்பனவே அம்மூன்று இடங்களுமாகும். உலகில் ஏழு அதிசயங்களாக இதுவரை இடம் பிடித்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற இடங்களை மறுபரிசீலமைப்பதற்கு உலக அதிசயங்களை தெரிவு செய்யும் குழு தீர்மானித்துள்ளது. ஆடி 28, 2010 அரசியலமைப்புத் திருத்தம் ஐ.தே.கவுக்கு சோதனைக் களம் ஐக்கிய தேசியக் கட்சி 1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தும் முதலாவது குடியரசு அரசியலமைப்பை நீக்கி விட்டுப் புதிய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இந்த அரசியலமைப்பு ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் இரகசியமாகத் தயாரித்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் புதிய அரசியலமைப்பு பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. பொதுமக்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அன்றைய அரசாங் கம் அரசியலமைப்பைத் தன்னிச்சையாகத் தயாரித்தது மாத்திரமன்றிப் பதினாறு திருத்தங்களையும் தன்னிச்சை யாகவே மேற்கொண்டது. (மேலும்....) ஆடி 28, 2010 பொலித்தீன் குப்பைகளால் ஆபத்து கடலோரத்தில் வசிக்கும் மக்களாலும், சுற்றுலா பயணிகளாலும் பயன்படுத்தப் படும் பொலிதீன் பைகள், பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், மரக்கட்டைகள், மீன்பிடி வலைகள், ரப்பர் மற்றும் உலோக பொருட்களால் மன்னார் வளைகுடா பகுதியில் பெரும் மாசு ஏற்படுகிறது. இப்பகுதி பலவகை உணவு மீன்கள், வண்ணமீன், மெல்லுடலிகள், கணுக்காலிகள், பவளப் பாறைகள், கடற் பசுக்கள், கடற் குதிரைகள், ஆமைகள் என பல உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. (மேலும்....) ஆடி 28, 2010 அல்கைதாவால் கடத்தப்பட்ட பிரான்ஸ் பொறியியலாளர் சுட்டுக் கொலை பிரான்ஸ் பொறியியலாளர் மைகல் ஜேர்மனியா வயது 78 அல்கைதாவால் கொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித் துள்ள ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோசி இதற்கான விலையை அல்கைதா கொடு க்க வேண்டியிருக்குமெனச் சூளுரைத்தார். மாலியில் பணியாற்றிய பிரான்ஸ் பொறி யியலாளர் மைகல் ஜேர்மனியா ஏப்ரல் மாதம் மாலியில் வைத்துக் கடத்தப்பட்டார். இவரை மீட்க மொரிட்டானியா பிரான்ஸ் இராணுவம் என்பன கடுமையாக முயன் றன. இம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் பொறி யியலாளரைக் கொலை செய்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். (மேலும்....) ஆடி 28, 2010 கொலம்பியாவின் எல்லையை நோக்கி வெனிசூலா இராணுவம் கொலம்பியாவின் எல்லையை நோக்கி வெனிசூலாவின் இராணுவம் படை எடுத்துள்ளது. அசம்பாவிதங்களை எதிர்கொள்ள எந்நேரமும் விழிப்புடனுள்ளோம் என்று வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் குறிப்பிட்டார். கொலம்பியாவின் பார்க் போராளிகளை வெனிசூலா வளர்ப்பதாக கொலம்பியாவின் ஜனாதிபதி அல்வரோ யுரைப் அண்மையில் குற்றஞ்சாட்டினார். (மேலும்....) ஆடி 28, 2010 பாகிஸ்தானின் உளவுத்துறை, இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தலிபான்களுடன் நெருங்கிய உறவு பாகிஸ்தான் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள், உளவுத்துறை முக்கியஸ்தர்கள் சிலர் தலிபான்களுடன் இரகசிய உறவு களைக் கொண்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 2004 முதல் 2009ம் ஆண்டு வரை தலிபான் களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட இரா ணுவ நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகனால் வெளி யிடப்பட்டது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தான் அரசாங்கம் தலிபான்களை ஒழிப்பதில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்று கின்றது. ஆனால் முக்கிய அதிகாரிகள் சிலர் தலிபான்களுடன் இரகசிய உறவு களைப் பேணுகின்றனர். (மேலும்....) ஆடி 28, 2010 இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்தக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்தோம். அவர்களை, இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதில் அரசியல் நோக்கம் கிடையாது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த அழைப்பு அரசியல் நோக்கம் கொண்டது. (மேலும்....) ஆடி 28, 2010 35,333 பேர் மாத்திரமே மீள்குடியேற எஞ்சியுள்ளனர் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் 35,333 பேர் மாத்திரமே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கும் அமைச்சரவைக்குமான பேச்சாளர் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாளாந்தம் சுமார் 700 பேர் சொந்த வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இடம்பெயர்ந்த மக்களின் பதிவு செய்யப்பட்ட தொகை 267,393 எனக் குறிப்பிட்ட அமைச்சர், இவர்களுள் முழுமையாக 2,30,000 பேர் ஒரு வருடகாலத்தினுள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். (மேலும்....) ஆடி 28, 2010 பயங்கரவாத ஒழிப்பு வடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும் சூழல் அறிவை தடைசெய்யவோ, மூழ்கடிக்கவோ முடியாது. இதனை நாமறிவோம். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சிறந்த முறையில் உணர்ந்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள் தான் என நான் நம்புகிறேன். அறிவுத்துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் உரிமை இருப்பது அவசியம் எனக் கருதுகின்றேன். இதற்கு இப்போது எமக்கு சுதந்திர சூழல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. (மேலும்....) ஆடி 28, 2010 அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குரூர நாடகம் (கி.இலக்குவன்) தென் கொரிய நீர்மூழ்கிக் கப்பலான சியோனான் மீது மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து குண்டு வீசப்பட்டுள்ளது. இத்தாக்குதலினால் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 40 தென்கொரிய கடற் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடகொரியா தான் இத்தாக்குதலை நடத்தி யுள்ளது என்ற பொய்யான செய்தி அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தால் பரப்பப்பட்டது. தென்கொரிய தீபகற்பத்தில் போர்மூளுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது, அத னைப் பயன்படுத்திக்கொண்டு ஒகினா வா கடற்படை தளத்திலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று கோரிவரும் ஜப்பானிய பிரதமர் ஹடயோமா மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதே அமெரிக் காவின் நோக்கம் என்பது தெளிவாகி யுள்ளது. அதாவது ஜப்பானுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் அடாவடித்தன மான முறையில் செயல்பட்டுவரும் வட கொரியாவிடமிருந்து ஜப்பானைக் காப் பாற்றுவதற்கு ஒகினாவாவில் அமெரிக்கக் கடற்படைத்தளம் நீடிப்பது அவசியம் என்ற கருத்தை ஜப்பானிய மக்கள் மத்தி யில் ஏற்படுத்துவதற்காகவே இந்த கோர நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஒகினாவா கடற்படைதளம் நீடிக்கலாம் என்ற முடிவை ஹடயோமா எடுத்ததன் மூலம் அமெரிக்காவின் சதித்திட்டம் வெற்றி பெற்று விட்டது. (மேலும்....) ஆடி 28, 2010 மதுரை விஞ்ஞானியின் பெயர் செவ்வாய்க்கிரகத்திற்கு செல்லும்
அமெரிக்காவின் நாசா விண்கலம், மதுரை விஞ்ஞானி சிவசுப்பிரமணியனின் பெயரை செவ்வாய் கிரகத்திற்கு மைக்ரோ சிப்பில் எடுத்து செல்கிறது. 2012 இல் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, அதன் மண் வளம், நில மேற்பரப்பு, உயி ரினங்கள் பற்றிய ஆரா ய்ச்சியில் ஈடு பட உள்ளது. இந்த ஆய்வகத்திற்கு அமெரிக்க அழைப்பின் பெயரில் சென்ற சிவசுப்பிர மணியன், சில தொழில்நுட்ப யோசனை களைத் தெரிவித்தார். உலகில் உள்ள சிறந்த விஞ்ஞானிகள் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெயர்களை விண்கலத்தில் மைக்ரோ சிப்ல் பதிவு செய்து செவ் வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா தீர் மானித்துள்ளது. (மேலும்....) ஆடி 28, 2010 பாக். குறித்த இந்திய நிலைபாடு உறுதிப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாத சக்திகள் பரவி அண்டை நாடுகளுக்கு
அச்சுறுத்தலை தருகின்றன என்பது இந்தியாவின் நிலைபாடாக உள்ளது என்று
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பா ளர் கிரவ்லி கூறினார். இந்
தியாவை பாகிஸ்தான் சமரசம் செய்ய விரும்பினால் உரிய அடிப்படை மாற்றங்களை
மேற்கொள்ள வேண் டும். மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை பாகிஸ்தான்
நீதியின் முன்பாக நிறுத்த வேண்டும். அத்தகைய நடவடிக்கை உரிய மேம்பாட்டு
மற்றும் முக்கிய செயலாக திகழும் என்றும் கிரவ்லி கூறினார். ஆடி 27, 2010 எழுந்திடுவோம் தோழர்களே! (தோழர் மோகன்) உங்கள் கசப்பான வாழ்வுக்கு காரணங்கள் எதுவாகினும் மக்களின் இனிப்பான வாழ்வுக்கான உங்கள் கடமைகளை நிறுத்தி விடமுடியாது. கட்சியின் கொள்கைகளை தங்களுக்குள் உறுதியாக கொண்டவர்கள் தனித்து போவதற்கு தடைபோடும் அதிகாரம் யாரிடமும் இல்லை. உங்களை தலைமை தாங்குவது நீங்கள் கொண்ட இலட்சியமே தவிர வேறெதுவும் இல்லை. ஆகவே தோழர்களே! இது எங்கள் காலம் பல தசாப்பங்களாக அவதிப்பட்ட மக்கள் அமைதியான வாழ்வுக்கு திரும்பி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மீண்டும் எங்களை நோக்கியே திரும்பிபார்க்கிறார்கள். காலம் எங்களிடம் மிகப்பெரிய கடமையை தந்திருக்கிறது அதை தட்டிக்கழிக்கமுடியாத உள்ளங்களை கொண்டவர்கள் நாங்கள். (மேலும்...) ஆடி 27, 2010 ஈழத்தமிழருக்காக வாய்கிழிய பேசுகின்ற நடிகர்களைவிட நான் ஒருபடி மேல் - நடிகை அசின் ![]()
ஈழத்தமிழருக்காக வாய்கிழிய பேசுகின்ற நடிகர்களைவிட நான் ஒருபடி மேலே சென்று,
ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களின் சில பிரச்சினைகளை தீர்த்தவள் நான்.
ஆகையினால் நான் யாருக்கும் அடிபணிந்து போகவேண்டிய அவசியம் எனக்கில்லை.
இந்திய அரசியல் சட்டத்தினையும் நடிகர் சங்கத்தின் கட்டளைகளையும் நான் இதுவரை
மீறி நடக்கவில்லை, நடக்கவும் மாட்டேன். இதையும்மீறி நடிகர் சங்கம் எனக்கு
தடைவிதித்தால் விதித்திட்டுப் போகட்டும். அதற்காக நான் கவலைப்படப்போவதில்லை
என நடிகை அசின் கூறியிருக்கிறார்.
(மேலும்....)
ஆடி 27, 2010 Eelam war IV Tiger captives down to 7,900, rehab programme on track Brig. Ranasinghe said that 7,948 ex-combatants, including about 1,100 females were still undergoing rehabilitation. According to him, of the 1,100 females, about 700 are now working in the garment trade. About 400 are being trained as Montessori teachers (120). Others are learning English (100), IT (60) and drama therapy (60). Brig. Ranasinghe said that garment workers received Rs 12,000 plus per month along with food, medical facilities and accommodation. An effort was being made to explore the possibility of securing the help and expertise of the British Council to teach English. The Montessori course, he said, would commence in the first week of August, while the remaining three programmes were already in progress. He appreciated versatile actress of international repute Anoja Weerasinghes support for a drama therapy programme. (more....) ஆடி 27, 2010 தனது முன்னாள் சகா கே.பிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது முட்டாள்தனமானது -பிரதியமைச்சர் முரளிதரன்
கே.பி. வடபகுதி அபிவிருத்திக்குப் பொறுப்பாக நியமிக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோது,இவை அனைத்தும் தவறான விடயம். இதேபோன்று கே.பியை முதலமைச்சராக அரசாங்கம் நியமிக்கப்போவதாக சரத் பொன்சேகா கூறினார். அடுத்த நாளே அதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. கே.பியை அந்தளவுக்கு முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது தவறானதும் முட்டாள் தனமானதுமாகும். கே.பி. இலங்கை சட்டத்திட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர். அரசாங்கத்தை குற்றம் சுமத்துவதற்காக சிலர் இவ்வாறான கதைகளை கூறுகிறார்கள். (மேலும்...) ஆடி 27, 2010 இலங்கைக்கு விசேட தூதுவரை அனுப்புகிறார் மன்மோகன்சிங் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பிலான முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு எழுதிய கடிதமொன்றில் மன்மோகன் சிங் இதனை தெரிவித்துள்ளதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது. (மேலும்....) ஆடி 27, 2010 பதினேழாவது திருத்தம் மக்களின் உடனடித் தேவையல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவும் சந்தித்து அரசிய லமைப்புத் திருத்தம் பற்றிப் பேசியதற்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றமை பற்றிய செய்தி மக்களிடம் நம் பிக்கையைத் தோற்றுவித்தது. அத்தியாவசியமாகத் தேவைப் படும் அரசியலமைப்பு மாற்றங்களுக்கு எதிர்க்கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகளின் செயற்பாடு மக்க ளின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளது. (மேலும்...) ஆடி 27, 2010 கோள் பட்டியலிலிருந்து புளுட்டோ வெளியே தள்ளப்பட்ட காரணம் பள்ளிக் கூடத்தில் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் (Planets) இயங்குகின்றன என்று படித்திருக்கிறோம். புதன், வெள்ளி, பூமி தொடங்கி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று ஒன்பதையும் வரிசைப்படுத்தி சரியாக எழுதினால் புள்ளிகள் கிடைக்கும். இவை எல்லாம் சூரியனை மையமாகக் கொண்டு ஒரு நீள் வட்டப் பாதையில் (elliptical orbits) இயங்குகின்றன. இப்படிச் சூரியனைச் சுற்றும் கோள்களுக்கும் கோள்கள் உண்டு. அவை துணைக்கோள்கள், அல்லது உபக்கிரகங்கள் என்று அழைக்கப்படும். இவை கோள் களைச் சுற்றி இயங்குகின்றன. உதாரணமாக சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆகும். ஆனால் இன்றைய புரிதலின்படி சூரியனைச் சுற்றி எட்டு கோள்கள் தான் இருக்கின்றன. மூன்று குறுங்கோள்கள் - செரஸ், புளூட்டோ, ஈரிஸ். நாளை நம் தொலைநோக்கிகள் இன்னும் சக்தி வாய்ந்தவையாக மாறும் பொழுது இவையும் மாறலாம். (மேலும்...) ஆடி 27, 2010 வெனிசூலா மீதான அச்சுறுத்தல் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகம் துண்டிக்கப்படும் - ஜனாதிபதி சாவெஸ் வெனிசூலாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகத்தை துண்டிப்போம். இதனால் நாங்கள் கல்லைச்சாப்பிடக் கூடிய நிலையேற்பட்டாலும் அதை எதிர்கொள்ளத்தயாரென வெனிசூலா ஜனாதிபதி ஹுசோ சாவெஸ் தெரிவித்தார். கொலம்பியாவுடனான இராஜதந்திர உறவுகளை கடந்த வாரம் துண்டித்துக் கொண்ட பின்னர் சாவெஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதை அறிவித்துள்ளார்.(மேலும்...) ஆடி 27, 2010 ஜெரூஸலத்தில் ஆயிரம் வீடுகள் உடைப்பு, காஸா சுரங்கப் பாதைகள் மீதும் குண்டு வீச்சு ஹமாஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஸா எல்லைகளில் இஸ்ரேல் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டுத்தாக்குதல்களை நடத்தின. இக்குண்டுகள் சுரங்கப் பாதைகள் மீது போடப்பட்டன. எகிப்தின் எல்லைகளை அண்டியுள்ள காஸா சுரங்கப் பாதைகளே தாக்குதலுக்குள்ளாகின. இதற்கான காரணத்தை இஸ்ரேல் இராணுவம் அறிவிக்கவில்லை. சுரங்கப் பாதைகளூடாக ஹமாஸ் ஆயுதங்களைக் கடத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுவது வழக்கம். இதனால் அடிக்கடி சுரங்கப் பாதைகள் மீது இஸ்ரேல் இராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றது. (மேலும்...) ஆடி 27, 2010 வடக்கு, கிழக்கில் கைத்தொழில் ஊக்குவிப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையாளர்களுக்கு உயர் தொழில் நுட்ப அறிவை வழங்கும் திட்டமொன்றை தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆரம்பித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் செயற்படும் விதாதா வள நிலையங் களினூடாக கைத்தொழிலாளர்களுக்கு தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுகிறது. யோகட் கைத்தொழில், பேக்கரி கைத்தொழில், மரக்கறி சார் உணவு உற்பத்தி என்பவற்றிற்காக உயர் தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுவதாக அமைச்சு கூறியது. இதன் காரணமாக குறித்த துறைகளில் கைத்தொழில்களை ஆரம்பிக்க கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.(மேலும்...) ஆடி 27, 2010 உகந்தை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தை மலை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று செவ் வாய்க்கிழமை நடைபெறுகிறது. கடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம் தினமும் விஷேட பூஜைகள், அன்னதானத்துடன் நடைபெற்று வந்தது. தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தினர் இன்று வரை அன்னதானத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரைதீவு யாத்திரிகர் மட்டத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. இதேவேளை காரைதீவு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவமும் இன்று நடைபெறுகிறது. கடந்த 15 தினங்களாக திருவிழா நடைபெற்று வந்தது. ஆடி 27, 2010 தொடர்கதையாகும் மீனவர்களின் துயரம் (சி.ஆர்.செந்தில்வேல்) ஒரு நாள் போவார் மறுநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் தற்போது இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கும் மேல்ஆகிவிட்ட நிலையில், இந்த ஓராண்டில் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் மீது பல்வேறு தாக்குதல் களைத் தொடுத்தனர். ஆனாலும், இந்த ஓராண்டில் எந்தமீனவரும் உயிர்ப்பலி ஆகவில்லை என்றபோது மீனவர்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கை தகர்ந்து போகும் விதத்தில் நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் மீனவக் குப்பத்தை சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அமைந்துள்ளது. இது தொடர் கதையாகுமோ என்ற அச்சமும் பீதியும், தமிழக மீனவர்களின் மத்தியில் மேலும் வலுப்பெற்றுள்ளது. (மேலும்...) ஆடி 27, 2010 வசந்தபாலனுக்கு நேர்ந்த அவலம் அங்காடித்தெரு திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போலவே, அப்படத்தை உருவாக்கிய இயக்குநர் வசந்தபாலனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்திருக்கிறது. பெரு நிறுவனங்களில் நடக்கும் அவலங்களை அப்படியே அச்சு அசலாக வசந்தபாலன் தனது படத்தில் கொண்டு வந்திருந்தார். ஊடகங்களில் பெரும் பாராட்டுகள் குவிந்தன. படம் குறித்த விவாதங்களும் பெரிய அளவில்தான் இருந்தன. ஆனால் படம் வெளியான சமயத்தில் தான் எங்கே இருக்கிறோம் என்பதைச் சொல்ல முடியாத அவல நிலையில் வசந்தபாலன் இருந்திருக்கிறார். அரவான் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சியில் திமுக எம்.பி.யான திருச்சி சிவா இதை அம்பலப்படுத்தியுள்ளார். அதில் பேசிய சிவா, அங்காடித்தெரு படம் திரைக்கு வருகிற நாளன்று வசந்தபாலன் என்ன செய்தார் தெரியுமா? தனது மனைவி, குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு தனது செல் போனையும் அணைத்துவிட்டு தலைமறை வாக இருந்தார். சமூக அவலத்தை வெளிச் சம் போட்டுக் காட்டுகிற ஒரு படைப்பாளி இப்படி தலைமறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தது வருத்தத்திற்குரிய விஷயம். அவரது படத்தைப் பாராட்டுகிற நமக்கு அந்த படைப்பாளியைக் காப்பாற்று கிற அக்கறையும் இருக்க வேண்டும் என்றார். சமூக அவலத்தைப் படமாக்கிய இயக்குநர் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார் என்று ஆளுங்கட்சி எம்.பி.யே பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆடி 27, 2010 பொருளாதாரத்தில் திவால் அமெரிக்க அதிகரிக்கும் நிதி பற்றாக்குறை! அமெரிக்காவின் கூட்டு நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதம் ஆகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2009 ம் ஆண்டில் அமெரிக்காவின் கூட்டு நிதி பற்றாக்குறை ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி டாலர் ஆக இருந்தது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 56 ஆயிரம் டாலராக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தில் 10.6 சதவிகிதத்தை எட்டும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிர்வாக மற்றும் வரவு - செலவு திட்ட ஆணையம் மதிப்பிட்டுள்ளது.ஆடி 26, 2010 கியூபா: சாதனை அல்ல... சரித்திரம்! (எஸ். கண்ணன்) இந்தியா விடுதலை பெற்று 60 ஆண் டுகள் முடிந்துவிட்டன. இன்றும் 30 சத வீதத்திற்கும் அதிகமான மக்கள் எழுதப் படிக்க அறியாதவர்களாக இருக்கிறார் கள். ஆனால் கியூபா 1959 ஜனவரி 1ம் தேதி ஹவானா நகருக்குள் புரட்சிப் படை நுழைந்ததன் மூலம் புரட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 61ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 100 சதவீதம் கியூப மக்களுக்கு எழுத்தறிவித்த வெற் றியை கியூபா அறிவித்த போது உலகமே வியந்து போனது. கியூபப் புரட்சியின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத அமெரிக்கா, பல கொடூரமான தாக்குதல் களை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கல்வியில் பெரும் சாதனையை கியூபா நிகழ்த்தியது சாதாரணமானதல்ல. (மேலும்...) ஆடி 26, 2010 யாழ்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். தமது பிறந்தநாள் வைவத்தை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய வேளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் அவர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதால் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் ஆரியகுளத்தடியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் வருட மாணவனான சாந்தகுமார் சந்துரு (வயது 25) மற்றும் சுண்டுக்குளியைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனான கலிஸ்ரஸ் கஜேந்திரன் (வயது 25) ஆகியோராவர்.இம்மாணவர்கள் இருவரின் சடலங்களும் மரண விசாரணைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆடி 26, 2010
வடகிழக்கிற்கான அரசியல் தீர்வு என்பதை வடகிழக்கை
தளமாக கொண்டு செயற்படும் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளுமே
தீர்மானிக்கவேண்டும்.
வடகிழக்கிற்கான அரசியல் தீர்வு என்பதை வடகிழக்கை தளமாக கொண்டு செயற்படும்
கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளுமே தீர்மானிக்கவேண்டும். இதில் நாம்
தலையிட மாட்டோம். அதேபோல் தென்னிலங்கையில் மத்திய, ஊவா, சப்ரகமுவ,
மேல்மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தமிழ் தேசிய
கூட்டமைப்பிடமோ அல்லது வடகிழக்கு தமிழ் கட்சிகளிடமோ ஒப்படைத்துவிட்டு
தென்னிலங்கை தமிழ் கட்சிகள் காத்திருக்க முடியாது. இன்று அரசியலமைப்பு
திருத்தங்கள், தேர்தல் முறை மாற்றம், மலையகத்தின் பிரதேச செயலக எல்லைகளை
தீர்மானிப்பது, மலையகத்தின் சகித்துகொள்ள முடியாத வறுமை மற்றும்
கொழும்பிலும், மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு ஆகியவை
உட்பட பெருந்தொகையான பிரச்சினைகளை தென்னிலங்கையில் வாழும் இந்தியவம்சாவளி
தமிழ் மக்களும், வடகிழக்கிலிருந்து இடம் பெயர்ந்து தெற்கில் நிரந்தரமாக
வாழும் தமிழர்களும் எதிர்நோக்குகின்றார்கள்.
(மேலும்....) வவுனியா சுத்திகரிப்பு ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது பஸ் சேவை பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது வவுனியா நகர சபைத் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களுடைய பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வழமைபோல் நடைபெற்றன. கடந்த மூன்று நாட்களாக சுத்திகரிப்பு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததினால் நகரத்தினுள் குப்பை கூழங்கள் தேங்கிக் கிடந்தன. நகரசபை பணியாளர் ஒருவருக்கும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட பிணக்கை தீர்ப்பதற்கு சபை நிர்வாகம் கவனம் செலுத்த தவறிவிட்டது என குற்றம் சுமத்தி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்து வந்தனர். (மேலும்....)ஆடி 26, 2010 வடக்கில் கைவிடப்பட்ட நிலங்களில் நெற்செய்கை வடக்கில் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான ஏர்பூட்டு விழா அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும் வயல் நிலங்கள் நீண்டகாலமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. புதர்களாக காட்சியளிக்கும் மேற்படி வயல் நிலங்களை சுத்திகரித்து பயிர்ச் செய்கைக்கு ஏற்ற விதத்தில் தயார்படுத்து வதற்கு பெரும் எண்ணிக்கையான ட்ரக்டர் வண்டிகள் தேவைப்படு கின்றன. தற்போது தேவையான ட்ரக்டர் வண்டிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக எருதுக ளின் உதவியுடன் ஏர் பூட்டும் பழைமை யான முறையினை பின்பற்றி அவற்றை விளைச்சலுக்கு உகந்த நிலங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆடி 26, 2010 தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம் இந்திய நடிகர்கள் இலங்கை செல்லலாம் இந்திய நடிகர், நடிகைகள் தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ இலங்கைக்கு பயணிக்க முடியும். இந்நிலையில் அவர்கள் அவ்வாறு செல்வதைத் தடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை சினிமாவில் ஏற்படும் இலாப நஷ்டங்களுக்கு நடிகர்களிடம் நட்டஈடு கோர முடியாது என்றும் இந்தக் கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (மேலும்....) ஆடி 26, 2010 அமெரிக்காவின் பொலிஸ்காரத்தனம்வடகொரியாவை எச்சரிக்க நான்கு நாள் போர் ஒத்திகை எட்டாயிரம் இராணுவம், 20 யுத்தக் கப்பல்கள், களத்தில்அமெரிக்காவும் தென்கொரியா வும் இணைந்து நேற்று ஞாயி ற்றுக்கிழமை ஜப்பானின் கடல் பிராந்தியத்தில் போர்ப் பயிற்சியி லீடுபட்டன. வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுள்ள நிலையிலும் இவ் விரு நாடுகளும் போர்ப் பயிற்சியிலீ டுபட்டன. எட்டாயிரம் இராணுவத் தினர் இருபது யுத்தக் கப்பல்கள் இன்னும் தேவையான இராணுவ விமானங்கள் என்பன இப்போர்ப் பயிற்சியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை ஈடுபட்டன. (மேலும்....) ஆடி 26, 2010 Canada probes LTTE aid agencies The ruling on the Tamil Refugee Aid Society came after an engineer from Toronto, Thiruthanikam Thanigasalam was jailed for 25 years recently in the United States for attempting to pay US $ 1 million to buy missiles, launchers and 500 AK-47 assault rifles in August 2006. He has been identified as the Charitys Toronto office Representative. According to a statement issued by the Canadian revenue agency, The Ottawa Society had provided $713,000 to the Tamil Tigers, whose long revolt against the Sri Lankan government was crushed last year, the National Post reported. (more....) ஆடி 26, 2010 லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி மெக்ராஹி பிழையான வழிகாட்டலின்கீழ் விடுதலையானார் லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியான லிபியாவைச் சேர்ந்த மெக்ராஹி விடுதலை செய்யப்பட்டமை தவறான விடயம் எனத் தெரிவித்த பிரிட்டன் வெளிநாட்மைச்சர் வில்லியம் ஹேக் பிரிட்டிஷ் பெற்றோலியக் கம்பனிக்கும் லிபியாவுக்கும் இவ்விடயத்தில் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் குறிப்பிட்டார்.மெக்ராஹி சென்ற வருடம் ஸ்கொட்லாந்து சிறையிலிருந்து கருணையடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட விடயம் அமெரிக்காவின் பாரிய சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது. (மேலும்....) ஆடி 26, 2010 வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிப்பு கடந்த வெள்ளி இரவு கடத்தப்பட்ட வவுனியா வர்த்தகர் நேற்றுமுன் தினம் சனிமாலை விடுவிக்கப்பட்டுள்ளாரென வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தகருடைய வீட்டில் வைத்து இனம் தெரியாத சிலரினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். கடத்தியவர் கள் இவரை விடுவிக்க ஒரு தொகை பணத்தினை கப்பமாகக் கோரியிருந்தனர். அதில் ஒரு பகுதி வழங்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டாரென விசாரணை யின் போது தெரியவந்தது ஆடி 26, 2010 More about Moringa Leaves
Moringa leaves could practically wipe out malnutrition on our planet. Experts agree that the long-term solution to malnutrition is the use of foods rich in the essential nutrients often lacking in people's diets. Modern scientific research is proving that Moringa leaves are one of the richest sources of such nutrients. Even small amounts of the leaves could protect thousands of people from suffering and death. People in several countries have found that Moringa leaves are quite acceptable to taste, especially when added to common foods. ஆடி 26, 2010 கறுப்பு ஜூலை நினைவாக... கறுப்பு ஜூலைக்குப் பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு இராணுவத்தீர்விலேயே அக்கறை காட்டின. சகல ஜனாதிபதிகளுமே உலக ஒப்பாசாரத்துக்கு அரசியல் தீர்வைப் பற்றிப் பேசினார்களேதவிர, இராணுவத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளுக்குத் தங்களாலியன்ற பங்களிப்பை வழங்கிவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேச சமூகத்தின் பங்களிப்போ இலங்கையில் அரசியல் தீர்வொன்று காணப்படுவதற்கு உதவுவதற்குப் பதிலாக இராணுவத் தீர்வை நோக்கிய செயன்முறைகள் முனைப்படைவதை உறுதிசெய்ததையே காணக்கூடியதாக இருந்தது. இறுதியில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்குக் கிடைக்கச் செய்தன. (மேலும்....) ஆடி 26, 2010 Tamils rally at Queen's Park (By CHRIS DOUCETTE, Toronto Sun) Hundreds of Tamil-Canadians gathered at Queens Park Sunday afternoon to remember countrymen who were killed 27 years ago during Black July a time when a wave of violence swept through Sri Lanka. There are some 300,000 Tamils Canada, most of whom live in the GTA. Many have lost friends and family in the fighting in their homeland. Once it was dark, the south lawn at Queens Park was filled with candlelight as the Tamil-Canadians continued their vigil. (more...) ஆடி 26, 2010 Leads on LTTE's global ring Officials are moving ahead with more than just tight scrutiny on Sivarasa Pirundaban alias Achchudan alias Suresh, Bahitharan alias Bhavi, Narendran Rathnasabapathi alias Naren, Ganeshruban alias Ruban and Ponnaiah Anandarajah alias Aiyya alias Rajah and a few more LTTE activists who are connected to arms procurement, and shipping while posing as businessmen, the Ministry said. The Ministry said the recent recovery in Visuamdu of documents and diary notes of Castro once head of LTTE's international wing had thrown light on the terror outfit's overseas operatives and clandestine funding agencies. (more...) ஆடி 25, 2010 1983 நினைவுகளும் நாம் செய்ய வேண்டியவையும் '83 இன வன்முறையை சொல்லி சொல்லியே வன்முறையையும், குரோதத்தையும் வளர்க்க கூடாது' - தி. சிறீதரன்
இலங்கையின் சமகால வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயமான ஜூலை 83 படுகொலைகள் நிகழ்ந்து 27 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. வழமைபோல் கண்ணீர் விடுவதிலோ, சுயபச்சாத்தாபத்தில் மூழ்குவதிலேயோ காலத்தை கடத்தாமல் ஆக்கபூர்வமான முறையில் சிந்திக்க வேண்டு;ம். 1983 இன வன்முறையின் பின்னர் குறிப்பாக தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டின் அனைத்து இன சமூகங்களும் சிந்தியுள்ள ரத்தத்தையும் இழப்புக்களையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். (மேலும்....)
ஆடி 25, 2010 Crisis in transnational government of Tamil Eelam (by Prof. Sisira Pinnawala) The Transnational Government of Tamil Eelam has already run into trouble. The post Prabhakaran Tamil Diaspora which is divided into three rival factions as Rudrakumarans TGTE, Eezham Peoples Assembly (EPA) or Makkal Peravai of Perinbanayagam Sivaparan (Nediyavan) and Father Emmauels Global Tamil Forum (GTF) are at loggerheads over the nature of the TGTE and a power struggle for control of the Constituent Assembly has been going on since the inception of the TGTE Project. Accusations of electoral fraud, intimidations of voters and similar other election malpractices were being hurled by the rival factions during the elections and there have been several resignations from the electoral contest in the UK and similar disputes have arisen in France. (more...) ஆடி 25, 2010 நிபுணர் குழு விசா கோரவில்லை- இலங்கைக்கான உயர் அதிகாரி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா அனுமதி கோரி எதுவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என அமெரிக்காவிலுள்ள இலங்கைக்கான உயர் அதிகாரி தெரிவித்தார். இந்த நிபுணர் குழு இதுவரையில் எந்தவிதமான பூர்வாங்க கலந்துரையாடல்களையும் நியூயோர்க்கில் நடத்தவில்லை எனவும் அவர் கூறினார். 3 பேரைக் கொண்ட நிபுணர் குழுவினர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கான விஸா அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தனக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழுவை நியமித்திருப்பதாகவும் இது விசாரணைக் குழு அல்ல எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார். இலங்கை செல்வதற்கான விஸா அனுமதி தமக்கு இலங்கை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் உண்மையைக் கண்டறிவதற்கு தடையேற்பட்டிருப்பதாகவும் நிபுணர் குழுவின் தலைவரான மர்சூகி தஸ்மன் பி.பி.சி செய்திச் சேவைக்கு அண்மையில் பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆடி 25, 2010 கனடாவில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி
கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார். கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வாரஇறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்த வேளையில், அதற்கான பயிற்சியில் கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார். CF-18 ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாதுரியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமாக எகிறி தப்பித்திருக்கிறார். சிறு காயங்களுக்கு மட்டுமே இலக்கான விமானி, அந்த விபத்துப்பற்றி விபரிக்கையில் என் வாழ்நாளில் சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் நான் செத்துப் பிழைத்திருக்கிறேன். இயந்திரத்தில் 'பொப்... பொப்... பொப்...' என சந்தம் வந்தபோது துரிதமாக செயற்பட்டு எனது அவதானத்தினை செலுத்தினேன். அப்பொழுது ஓர் இயந்திரத்தின் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக பராசூட் இருக்கையை இயக்கி தப்பித்துக் கொண்டேன். சில செக்கன்களில் உயிர் தப்பியமை இன்னமும் வியப்பாக இருக்கிறது என அவ்விமானி குறிப்பிட்டுள்ளார். ஆடி 25, 2010 200 அகதிகளுடனான கப்பல் கனடா கரையை அண்மிக்கிறது: உறுதிப்படுத்துகிறது அமெரிக்கா
விடுதலைப்புலிகளின் கப்பல் என இலங்கை அரசாலும் மேற்குலக ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்ட இக்கப்பலில் அகதி அந்தஸ்துக்கோரும் 200க்கு மேற்பட்டோர் பயணிக்கிறார்கள் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இக் கப்பலின் நிலை பற்றிக் கருத்துத் தெரிவித்த மேற்படி அமெரிக்க அதிகாரி, தாய்லாந்துக் கொடி யுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இக் கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பி யாவின் கரையை நோக்கிச் சென்று கொண்டி ருப்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். மேற்படி அமெரிக்க பசுபிக் பிராந்தியக் கடற் கண்காணிப்புப் பிரிவு தனது எல்லைக் குட்பட்ட 12 கடல் மைல் தூரத்தையே கண்கா ணிப்பதால் இக் கப்பல் கரையை அண்மித் தவாறே பயணிக்கிறது என்றே நம்பப்படுகிறது. (மேலும்....) ஆடி 25, 2010 தமிழ் மக்களும் பாதுகாப்பு வலயங்களும் எந்தவொரு இலங்கை அரசாங்கமும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளப்போவதில்லை. குறிப்பாக, பிரிவினைவாதப் போர் பல தசாப்தங்களாகத் தளராமல் தொடருவதற்கு வசதியாக இருந்ததுடன் தமிழ்த் தேசியவாத ஆயுதப்படையணியின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் தொகுதி வாழ்ந்ததுமான பகுதிகளில் இருந்து படைகள் வெளியேறப் போவதில்லை. அமெரிக்காவிலே பிரிவினைவாத வாதக்குரல்களை எழுப்பிய தென்மாநிலங்களில் மத்திய அரசின் இராணுவம் சிவில் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னரும் 12 வருடங்கள் நிலைகொண்டிருந்தது. செச்னியாவில் ரஷ்யப்படைகள் பத்து வருடங்கள் நிலைகொண்டிருந்தன. ஹிட்லரைத் தோற்கடிக்கப்போன அமெரிக்கப்படைகள் ஜேர்மனியிலும் ஜப்பானிலும் பல தசாப்தங்களாக நிலைகொண்டிருந்தன. இலங்கைப் படைகள் வடக்கு,கிழக்கில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கவே செய்யும்.பிரிவினைவாதக் கிளர்ச்சி மீண்டும் தலைகாட்டுவதை முன்கூட்டியே தடுப்பதற்கும் பிரிவினைவாத ஆதரவுக் குழுக்களைக் கொண்ட தமிழ் நாட்டுக்கு நெருக்கமாக இருக்கும் மாகாணத்தைப் பாதுகாப்பதற்கும் போதுமான அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் நிரந்தரமான படைகளின் பிரசன்னம் இருக்கும்; இருக்கவேண்டும். (மேலும்....) ஆடி 25, 2010 அமரர் சிறிமாவின் 50ஆவது நிறைவைக் கொண்டாட அரசு தவறிவிட்டது : சந்திரிகா சிறிமா பண்டார நாயக்கா உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கைப் பிரஜைகளால் தெரிவு செய்யப்பட்டு ஐம்பது வருடங்கள் பூர்த்தியானதைக் கொண்டாட அரசாங்கம் தவறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது குறித்து ஊடகம் ஒன்றுக்குக் கருத்துக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், "பண்டாரநாயக்க குடும்பத்துக்கு எதிரான கொள்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. கடந்த 21 ஆம் திகதி, எனது தாயார் சிறிமா பண்டார நாயக்கா உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கைப் பிரஜைகளால் தெரிவு செய்யப்பட்டு ஐம்பது வருட நிறைவடைந்த தினம். ஆனால் அரசு இந்த 50 ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடத் தவறி விட்டது" என்றார். ஆடி 25, 2010 மாவோயிஸ்டுகளுக்கு அஞ்சப் போவதில்லை : மன்மோகன் சிங் _ நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தீவிரவாதிகளுடன் சமசரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உள்நாட்டு பாதுகாப்புக்கு மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலாக உள்ளனர் என்பது சந்தேகமில்லை. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் கரம் கோர்த்துள்ளன. ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுவதற்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் சரிவர மக்களை சென்றடையாததே காரணம். (மேலும்....) ஆடி 25, 2010 மாணவிகள் தற்கொலை மலையகத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகள் : யார் காரணம்? _ மலையகத்தில் பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் யார் என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது. இவ்வாறான தற்கொலை சம்பவங்களுக்குப் பாடசாலைகள் தான் காரணம் என்று ஒரு சாரார் கூறிக்கொண்டு உண்மை நிலைமைகளை மறைக்கும் சூழலும் நிலவுகிறது. பாடசாலை மாணவிகள் அல்லது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது. (மேலும்....)ஆடி 24, 2010 எனக்கு உணர்ச்சி இல்லையா? இலங்கை தமிழ் எம்.பி. க்களிடம் எகிறிய தமிழக முதல்வர்!
'இனத் துரோகி' பட்டம் சூட்டும் எதிர்க்கட்சி அரசியலுக்கு இடையில், கோபாலபுரத்தில் வெளிப்பட்ட வார்த்தைகள் கடுமையாகவும் உறுதியாகவும் வந்து விழுந்திருக்கின்றன. ''நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்களோ... எனக்குத் தெரியாது. நான் இந்தியா வின் எதிர்க் கட்சித் தலைவர் இல்லை. இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்ட, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். நீங்கள் நினைப்பதை எல்லாம் நான் இங்கு பேச முடியாது. தமிழர்களுக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ... அதைத்தான் செய்ய முடியும். இந்த நாடு ஒரு தலைவரை இழந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் உணர்வில் நான் குறுக்கிட முடியாது!'' என்றபடி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த் தைகளைக் கோத்ததுபோல இருந்திருக்கின்றன, தமிழக முதல்வரின் வார்த்தைகள். (மேலும்....) ஆடி 24, 2010 The consequences of a US war crime Cancer rate in Fallujah worse than Hiroshima (By Tom Eley)The Iraqi city of Fallujah continues to suffer the ghastly consequences of a US military onslaught in late 2004. According to the authors of a new study, Cancer, Infant Mortality and Birth Sex-Ratio in Fallujah, Iraq 20052009, the people of Fallujah are experiencing higher rates of cancer, leukemia, infant mortality, and sexual mutations than those recorded among survivors in Hiroshima and Nagasaki in the years after those Japanese cities were incinerated by US atomic bomb strikes in 1945. The epidemiological study, published in the International Journal of Environmental Studies and Public Health (IJERPH), also finds the prevalence of these conditions in Fallujah to be many times greater than in nearby nations. (more....)
ஆடி 24, 2010
இயல்பாக வாழவிட்டாலே போதும் பாம்பு வித்தியாசமான ஒரு உயிரியாக இருப்பதாலும், சரசரவென சருகுகள் இடையே ஊர்ந்து செல்வதாலும், திடீரென தோன்றுவதாலும் நிறைய பயம் ஏற்படுகிறது. இது எல்லாவற்றையும்விட பெரிய பயம் எல்லா பாம்புகளும் விஷமுள்ளவை என்று தவறாக நம்புவது. ஆனால் பொதுவாகக் காணப்படும் பாம்பு வகைகளில் நான்கைத்தவிர மற்ற அனைத்தும் விஷமற்றவையே. விஷமுள்ள பாம்புகள் நல்ல பாம்பு (கோப்ரா), கட்டுவிரியன் (கிரெய்ட்), கண்ணாடி விரியன் (ரஸ்ஸல்ஸ் வைபர்), சுருட்டைப் பாம்பு (சாஸ்கேல்ட் வைபர்), மற்ற அனைத்தும் விஷமற்றவை. விஷமற்ற விஷமில்லாத பாம்புகள் இடையே வேறுபாடு கண்டறியத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா பாம்புகளும் ஒன்று என்று குருட்டுத்தனமாக நம்பிக் கொல்லக்கூடாது. (மேலும்....) ஆடி 24, 2010 இன உறவுப் பாலமாகும் ஆடிவேல் உற்சவம்! ஆடிவேல் விழாவில் தமிழர்களைவிட பெளத்தர்கள் பக் திப் பரவசத்துடன் அதில் பங்கேற்பது குறிப்பிடத்தக்க அம் சமாகும். முருகக் கடவுளை கதரகம தெவியோ என்று பெளத்தர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபடுகிறார்கள். இத னால், ஆடிவேல் விழாவில் இந்துகளான தமிழர்களும் பெளத்த சிங்களவர்களும் ஒன்றித்துப் போகிறார்கள். ஆனால், 1983 ஆடிவேல் விழாவுக்குப் பின்னர் இந்தப் பிணைப்பில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அந்தச் சூழ்நிலையில் நல்ல தொரு மாற்றம் பிறந்திருக்கிறது. ஆடிக் கலவரத்திற்குப் பின்னர் ஓரிரு தடவை ஆடிவேல் உற்சவம் நிகழ்த்தப்பட் டாலும் அது இனங்களின் முழுமையான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கவில்லை. (மேலும்....) ஆடி 24, 2010 சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சி வெற்றி பெறுமா? இந்தியாவுடன் செய்துகொண்டது போல பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுடன் அமெரிக்கா மின்சார தேவைக்காக அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதும், அதுபோன்ற ஒப்பந்தத்தை எங்களோடும் செய்துகொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் தலைவர்கள் கோரினார்கள். ஆனால் அணுஆயுத தொழில் நுட்பத்தை அந்த நாட்டு விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்கு விற்றதை தொடர்ந்து அது போன்ற ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் செய்துகொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறிவிட்டது. இதைத்தொடர்ந்து சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் செய்துகொண்டது. பாகிஸ்தானில் 2 அணு உலைக்கூடங்களை அமைக்கவும் சீனா உதவி செய்வதாக அறிவித்தது. சீனாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. (மேலும்....) ஆடி 24, 2010 சூரியனைவிட பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு சூரிய மண்டலத்துக்கு அப்பால் சூரியனைவிட பெரிய நட்சத்திரம் ஒன்று இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனைவிட பல மடங்கு பெரியதாகும். அதன் எடை 320 சோலார் மாஸ் ஆகும். இது சூரியனைவிட ஒரு கோடி மடங்கு பிரகாசமானது. நமது பால் வளி வீதியில் இருந்து ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. இது 136 ஏ. எல். என்று அழைக்கப்படுகிறது. இதன் வெப்பம் சூரியனைவிட 7 மடங்கு அதிகம் உள்ளது. இதன் வெப்ப அளவு 40 ஆயிரம் டிகிரி செல்சியசுக்கும் அதிகம் ஆகும். இது போன்ற பெரிய நட்சத்திரங்கள் அதிக காலம் இருப்பது கிடையாது என்றும் இது 30 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்றும் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்ட் பால் குரோதெர் தெரிவித்தார். ஆடி 24, 2010 இப்படியும் சொல்கின்றார்கள் இப்போது எங்கே பாலகுமார்? இறுதி நேரத்தில் பிரபாகரன் அருகில்... (இரா.சரவணன்)
ஆரம்பத்தில் 'ஈராஸ்' அமைப்புக்குத் தலைவராக இருந்தவர் வே.பாலகுமார். 'இந்திய அமைதிப் படை' ஈழத்தில் வெறியாட்டம் போட்ட இக்கட்டான நேரத்தில் புலிகள் அமைப்பில் இணைந்து, தனது ஆதரவுத் தரப்பினரையும் புலிகளின் பின்னால் அணிவகுக்கச் செய்தவர். உலகளாவிய அரசியல் முன்னெடுப்புகளைப்பற்றி நல்ல ஆலோசகராக பிரபாகரனுக்கு உரைத்தவர். கடந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதி, ஈழப் போர் முடிவுக்கு வந்தபோது புலிகளின் முக்கியத் தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்று வரை நீடிக்கும் புதிராக இருக்கிறது. அதேபோல், புலிகளின் சிறப்பு உறுப்பினர் வே.பாலகுமார், போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி, பண்பாட்டுக் குழுத் தலைவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை போன்றவர்கள் என்ன ஆனார்கள் என்பதையும் சிங்கள அரசுத் தரப்பு அறிவிக்கவில்லை. (மேலும்...) ஆடி 24, 2010 லெபனானிலிருந்து 3000 இலங்கையரை அழைத்து வருவதற்கு விசேட ஏற்பாடுகள்பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற முடியாதுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்புக் காலமொன்றை லெபனான் அரசு அறிவித்துள்ளது. விசாக்காலம் முடிவடைந்த நிலையிலும் கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையிலும் நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்களை திரும்பி அழைத்துக்கொள்ள அவர்களது உறவினர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக இலங்கை திரும்ப முடியாமல் சுமார் 3000 பேரளவில் லெபனானில் தங்கியுள்ளனர். (மேலும்....) ஆடி 24, 2010 உலகின் மிக விலை குறைவான லேப்-டாப் இந்தியா தயாரிப்பு மாணவர்களுக்காக வடிவ மைக்கப் பட்ட குறைந்தவிலை மடிக் கணி னியை மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் தொடங்கி வைத்தார். உலக அள விலான மொத்த உற்பத்திக்கு பெரு நிறுவனங் களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மடிக் கணினியின் மதர்போர்டு, சிப், டிஸ்ப்ளே, தொடர்புகள், நினைவாற்றல், செயல்முறை அனைத்தும் சேர்த்து மொத்தமாக ரூ.1,500-க்குள் உட்படும் என்று கபில் சிபல் தெரிவித்தார். தொடுதிரை வடிவமைப்பு, இணைய தள தேடுகருவிகள், பிடிஎப் ரீடர், மற்றும் வீடியோ கான்பரன்சிங் வசதிகளுடன் கூடியதாகும். எனினும், இதன் ஹார்டுவேர் உபயோகிப்பவருக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. லினக்ஸ் அடிப் படையிலான இக்கணினி உயர்கல்வி நிறுவனங்களுக்கு 2011 முதல் அளிக்கப் படும் என்று கபில்சிபல் தெரிவித்தார். இந்தியாவின் ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப நிறுவனங்களால் இக் கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆடி 24, 2010 பின்லேடன் இருப்பிடத்தை பாகிஸ்தான் தெரிவிக்க வேண்டும்அல்கைதா பயங்கரவாதிகள் தலைவர் ஒசாமா பின்லேடன் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்குமாறு பாகிஸ் தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பான பி. ஜே. குரோவ்லி வியாழக்கிழமை கூறியது : பின்லேடன் இப்போது எங்கு உள்ளார் என்பது குறித்து பாகிஸ்தான் அரசுக்கு தெரியும் என்று நம்புகிறோம். பின்லேடன் தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் அரசு தெரிவித்தால் அவரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். (மேலும்....) ஆடி 24, 2010 ஈராக் படையெடுப்பு சட்ட விரோதம் காமன்ஸ் சபையில் பிரிட்டன் துணைப்பிரதமர் பிரிட்டிஷ் நாடாளுமன் றத்தின் மக்கள் அவையான காமன்ஸ் சபையில் வெளி யிட்ட அறிக்கையில் ஈராக் படையெடுப்பு சட்ட விரோதமானது என்று பிரிட்டன் துணைப் பிரதமர் நிக் கிளக் கூறினார். இராக் கொள்கையில், கூட் டணிக் கட்சிகள் இடையே குழப்பம் உள்ளதை இந்த அறிக்கை வெளிக்காட்டி யுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் அமெ ரிக்கா சென்றுள்ளார். பிர தமரிடம் விடுக்கப்பட்ட கேள்விகளுக்கு துணைப் பிரதமர் நிக் கிளக் பதில் அளித்தார். அப்போது ஈராக் படையெடுப்பு சட்ட விரோதமானது என்று கிளக் குறிப்பிட்டார். தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஈராக் படையெடுப்பில் அமெ ரிக்காவுடன் இணைவது என்று பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கான வாக் கெடுப்பு காமன்ஸ் சபையில் நடந்தபோது தற்போதைய ஆளும் கூட்டணியில் உள்ள கன்சர்வேடிவ் கட்சி யும் அதற்கு ஆதரவாக வாக்களித்தது. நிக் கிளக்கின் லிப ரல் டெமாகிரட்ஸ் கட்சி படை யெடுப்பை எதிர்த்தது. (மேலும்....)ஆடி 24, 2010 டயானா கொலை விசாரணை, வழக்கறிஞர் தகவலால் பரபரப்பு இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கார் விபத்து மூலம் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவ்வழக்கை விசாரித்த புலனாய்வுத்துறை வழக் கறிஞர் மைக்கல் தெரிவித்துள் ளார். இந்த கொலை சம்பவத்தில் கார் சாரதி பாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித் துள்ளார். விபத்து நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் பாலின் வங்கிக் கணக்கில் பல கோடி மதிப்பிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சாரதியின் வங்கிக் கணக்கில் திடீரென அதிகளவிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறித்து வழக்கு விசாரணையில் ஒரு வரிகூட இடம்பெறாதது டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்வதாகவும் மைக்கல் தெரிவித்துள்ளார். டயானா கொலை சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த அவர் வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளார். மைக்கேலின் இந்த தகவலால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற் பட்டுள்ளது. ஆடி 23, 2010 காட்டிக் கொடுக்கும் ஆவணங்கள் விசுவமடுவில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதையடுத்து புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்களுக்கு வலைவீச்சு
சிவராசா பிருந்தாபன் அல்லது அச்சுதன் அல்லது சுரேஷ், பகிரதன் அல்லது பவி, நரேந்திரன் ரத்தினசபாபதி அல்லது நரேன், கணேஷ்ரூபன் அல்லது ரூபன், பொன்னையா ஆனந்தராஜா அல்லது ஐயா, அல்லது ராஜா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னும் சில செயற்பாட்டாளர்கள் குறித்து அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்துவருவதற்கு அப்பால் அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்வதா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. (மேலும்...) ஆடி 23, 2010 மனவடுக்களை போக்கும் மனமாற்றம் அனைத்தையும் மாற்றும் வல்லமை படைத்தது காலம் என்ற கூற்றில் உண்மையுண்டு. கிழக்கிலும் வடக்கிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் துளிர் விடத் தொடங்கியுள்ள ஐக்கியமும் தென்பகுதியில் தமிழ், சிங்கள மக்களிடையே மீண்டும் உருவாகியுள்ள நட்புறவும் மனவடுக்கள் குணமடைந்து வருவதற்கான அடையாளங்களாகும். இரு இனங்கள் ஒன்று சேர்ந்து நடத்துகின்ற விழாக்களின் போது நாம் இன ஐக்கியத்தைக் காண்கிறோம். காரைதீவில் சில தினங்களுக்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து கோலாகலமாக நடத்திய தமிழ் செம் மொழி விழாவில் விபுலானந்த அடிகளாரின் சிறப்பையும் தமிழ்மொழியின் மேன்மையையும்விட தமிழ், முஸ் லிம் இன ஐக்கியமே மேலோங்கியிருந்ததெனலாம். இது போன்று கதிர்காமம் உற்சவத்துக்காக இம்முறை யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பக்தர்களை தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்கள் உபசரித்துப் போஷித்த விதமும் இன ஐக்கியம் மேம்பட்டு வருவதற்கான அடையாளமாகவே தெரிகிறது. நயினாதீவு நாக பூஷணியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்துக்காக தென்னிலங்கை யிலிருந்து இம்முறை பெருமளவில் சென்ற சிங்கள மக்களும் அங் குள்ள தமிழ் மக்களால் இவ்வாறே உபசரிக்கப்பட்டனர். (மேலும்...) ஆடி 23, 2010 கொழும்பில் பொலிஸ் பதியும் நடைமுறை தமிழர்களுக்கு மட்டுமானதல்லகொழும்பில் குடியிருப்பாளர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை தமிழ் மக்களுக்கு மட்டுமேயான பாரபட்ச செயற்பாடு என காட்டுவதற்கு சில சுயநல அக்கறை கொண்ட தரப்பினர் முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது. இது உண்மைக்கு மாறுபட்ட எந்த அடிப்படையும் அற்ற கூற்றாகும். அத்துடன் பாதுகாப்பு படையினர் இன விரோத நோக்குடன் அநீதியாகவும், கொழும்பில் வாழும் தமிழ் சமூகத்துக்கு பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக உலகத்துக்கு காட்ட முயற்சிக்கும் வகையிலானதாகும். இதற்கு மாறுபட்ட வகையில் பொலிஸ் கட்டளைக்கோவையின் கீழ் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் அவ்வாறான ஆட் பதிவினை அதிக பட்ச சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பொறுப்புடைமை மற்றும் அனைத்து மக்களினதும் இன பாகுபாடு பாராமலும் இவ்வாறான பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளுகின்றனர். (மேலும்...) ஆடி 23, 2010 இந்திய அரசுடன் பேசத் தயார் அஸாம் விடுதலை அமைப்பு அறிக்கை இந்தியாவின் அஸாம் மாநில விடுதலை அமைப்பின் தலைவர் புரோ கோஹைன் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என அறிவி த்துள்ளார். 75 வயதான புரோகோஹைன் அஸாம் விடுதலை அமைப்பின் தலைவராவார். 1979ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அஸாம் மாநில விடுதலைக்காகப் போராடுகின்றது. தற்போது இந்த அமைப்பின் தலைவர் சிறையிலுள்ளார். இந்திய புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் தலைவர் சிறையில் சென்று புரோகோஹைனைச் சிறையில் சந்தித்த போதே பேச்சுவார்த்தைக்கான விருப் பத்தை வெளியிட்டார். சமாதான பேச்சு வார்த்தைக்கான அஸாம் மாநில மக்களின் விருப்பங்களை சகலரும் மதிக்க வேண்டுமென்றும் அஸாம் விடுதலை அமைப்பின் தலைவர் கூறினார். (மேலும்...) ஆடி 23, 2010 மண்ணின் மைந்தனால் இலங்கைக்கு பெருமை - ஜனாதிபதி
133 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுக்களை கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள முரளிதரன் 18 வருட காலம் கிரிக்கெட் விளையாடிய பின் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அத்துடன் இதுவரை 337 ஒரு நாள் போட்டிகளில் 515 விக்கெட்டுக் களையும் கைப்பற்றியுள்ளார். முரளி என்று நாம் அனைவரும் அழைக்கும் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகில் ஒரு அலங்கார ஆபரணத்தைப் போல் இருந்து வந்துள்ளார். (மேலும்...) ஆடி 23, 2010 ஓட்டை ஒடிசலுக்குப் பேரீச்சம்பழம்! (ஜீவிதன்) நல்ல ஆசிரியர்கள் இருந்தும் சிறந்த வழிகாட்டல்கள் இல்லா ததால் இந்தப் பாடசாலை சீரழி ந்து வருவதாக அவர் வருந்துகி றார். இதுவரை தேசிய பாடசா லையாகத் தரமுயர்ந்திருக்க வேண்டிய இந்தக் கலவன் பாட சாலை, அரிச்சந்திரன் பணியாற் றிய இடத்தில் இருப்பதாலோ என்னவோ உயிர் பெறாமலே இருக்கிறது. இந்த நிலையில் இங்கும் சூரிய குஞ்சு ஆசிரியர் ஒருவரின் விளையாட்டு பற்றியே இப்போது அதிகம் பேசுகிறார்கள். இவர் சில நாட்களுக்கு முன்பு கட்டிப் பிடி ... கட்டிப்.... பிடிம்மா... என்று பாடி ஆடியது காட்டுத் தீ போல் பரவிக்கிடக்கிறது. அதற்கு முன்பு கட்டிப் பிடி கட்டிப்பிடிடா என்று ஆடிய ஓர் ஆசிரியர் இன்ரர்டிக்ற் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல். (மேலும்...) ஆடி 23, 2010 பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட குழு அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை, சவால்களை எதிர்கொள்வோம்ஐ.நா. செயலாளரின் குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெளிவாக வெளியிட்டுள்ளோம். இந்தக் குழு சட்டபூர்வமற்றது என ஐ.நா. வில் உள்ள பல நாடுகள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு சபையினதோ மனித உரிமை ஆணையத்தினதோ அனுமதி இன்றி இத்தகைய குழுவொன்றை அமைக்க அவருக்கு உரிமை கிடையாது என அந்த நாடுகள் அறிவித்துள்ளன. கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. வில் பிரேரணை முன்வைக்கப்பட்டபோது ஏனைய நாடுகளின் உதவியுடன் அதனைத் தோற்கடித்தோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சவாலுக்கும் முகம்கொடுப்போம். எல்லை தாண்டாது எமது எதிர்ப்பை காட்டியுள்ளோம்.(மேலும்...) ஆடி 23, 2010 தொடரும் இயற்கை அனர்தங்கள் ஈரானில் பூகம்பம், 15 பேர் காயம், சீனாவில் மழை வெள்ளம்; 41 பேர் பலிஈரானில் தெற்கு பகுதியில் உள்ள ஹார்முஸ்கான் மற்றும் பார்ஸ் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து 4 முறை பூகம்பம் தாக்கியது. பிறகு 11 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. பூகம்பங்களின் வீரியம் ரிக்டர் அளவில் 5.8 ஆகவும் அடுத்து 5.2 ஆகவும், பிறகு 4.1 ஆகவும், 3.9 ஆகவும் இருந்தது. இந்த பூகம்பங்களில் 4 கிராம ங்களைச் சேர்ந்த 15 பேர் காயம் அடைந்தனர். இதில் பண்டார் அப்பாஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தப் பூகம்பங்களின் காரணமாக சில வீடுகள் இடிந்த விழுந்தன. ஈரானில் அடிக்கடி பூகம்பம் ஏற் படுவது வழக்கம். கடந்த 2003ம் ஆண்டு பாம் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 30 ஆயிரம் பேர் பலியானார்கள். இதேவேளை சீனாவில் ஷான்ஷி மாநிலத் தின் தெற்கு பகுதியில் உள்ள 22 மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரண மாக 41 பேர் பலியானார்கள். 107 பேரை காணவில்லை. 27 ஆயிரம் வீடுகள் இடிந்து விழுந்தன. 16 இலட்சம் மக்கள் பாதி க்கப்பட்டு உள்ளனர். அன் காங்க் என்ற இடத்தில் மட்டும் ஒரே நாளில் 2 பெரிய நிலச் சரிவுகள் ஏற்பட்டன. அதில் 14 பேர் பலியா னார்கள். 35 பேரை காணவில்லை. ஆடி 23, 2010 ரொபேட் ஓ பிளக்கிற்கு கெஹலிய பதில் 17 வது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரம் 17 ஆவது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரமாகும். அது குறித்து ரொபேட் ஓ பிளக் பேசத் தேவையில்லை. 17 வது திருத்தம் பற்றி எமது பாராளுமன்றம் கவனிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கு விஜயம் செய்த பிளக் ஜனநாயகம் குறித்தும் 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்தும் கருத்து வெளியிட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதலளித்த அவர், இலங் கையில் ஜனநாயகம் நிலைநாட் டப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை பாதுகாக் கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத் துள்ளது. 17 ஆவது திருத் தத்தில் குறைபாடுகள் காணப்படு கின்றன. அவற்றைத் தீர்க்க வேண்டு மென்றார். ஆடி 23, 2010 நோய் வருமுன் காக்கும் பாரம்பரிய மருத்துவம் (முத்தமிழ்) இக்காலத்தைப் போல் இவ்வளவு அறுவை மருத்துவங்கள் அக்காலத்தில் இல்லை. இத்தகைய நோய்களும் அக்காலத்தில் இல்லை. இவ்வளவு பெரிய மருத்துவமனைகளும் அக்காலத்தில் இல்லை. எத்தனை மருத்துவமனைகள் கட்டினாலும் இப்போது நோயாளிகளுக்கு இடம் போதவில்லை என்கிறார்கள். இதற்கு நாள்தோறும் மக்களுக்கு நோய் அதிகப்படுவதே காரணமாகும். இதற்குக் காரணம், தற்போதைய மருந்துகளாலேயே வியாதிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆகவே பாரம்பரிய மருத்துவமே பயன்மிக்கது. ஏனென்றால் வருமுன் காக்கும் திறன் உள்ளது அந்த மருத்துவமே. (மேலும்...) ஆடி 23, 2010 Transnational Government of Tamil Eelam (part 2) (Prof Sisira PINNAWALA) Selvarasa Pathmanathan, better known as KP proclaimed himself LTTE leader after Tiger supremo Prabakarans demise. KP chose Visuvanathan Rudrakumaran, a US based lawyer who was one time legal adviser to the LTTE negotiating team with the Government and later its unofficial ideologue after Anton Balasinghams death, to explore the ways and means of forming a Transnational Government of Tamil Eelam. After the extraordinary rendition of Pathmanathan by the Government the unofficial mantel of leadership of the LTTE and the responsibility of forming the TGTE fell into the hands of Rudrakumaran. He authored the initial concept paper for the Provisional Transnational Government of Tamil Eelam (PGTGE) which was further developed by a 14 member Advisory Committee consisting of representatives of the Diaspora and some prominent LTTE sympathizers of the International non-governmental sector that included Karen Parker, Professors Francis Boyle and Peter Schalk. The Advisory Committee report entitled Formation of a Provisional Transnational Government of Tamil Eelam (PGTGE) and detailing its objectives, form and functions was launched on March 15, 2010. (more....) ஆடி 22, 2010 காட்டிக் கொடுக்கும் புலி காஸ்ரோவின் கணணிகள் புலிகளுடன் தொடர்பிலிருந்த புலம்பெயர் தமிழர்களின் இரகசியங்கள் இலங்கையின் கையில்?
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனும் தான் கைதியாக இருக்கும் சூழ்நிலையில்
இருந்து கொண்டு தன்னால் இயலக்கூடியதைத் தான் அங்குள்ள சிறைப்பட்டவர்களிற்கு
செய்வதாகவும், தான் அரசியல் பேசவோ, அதிகாரம் பற்றிப் பேசவோ வரவில்லை என்று
தெரிவித்ததோடு தான் காட்டிக் கொடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு
இவ்வாறு நேரடியாகப் பதிலிறுத்துள்ளார். காட்டிப் கொடுப்போர், துரோகி என்ற
சொற்பதங்களை தாராளமாக என் மீது குற்றஞ்சாட்டுவோர் கூறட்டும். ஆனால் உண்மை
யாதெனில் எனக்கே தெரியாத பல விடயங்களை அவர்கள் கஸ்ரோவின் அலுவலகத்தில்
இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் மூலமே எனக்குத் தெரிய வருகிறது. அந்த
அவ்வளவுக்கு முழுமையாக போராட்டத்தைப் பற்றிய இரகசியங்களை அழிக்காமல்
இலங்கைப் படைகளிடம் ஒப்படைத்து சென்றிருக்கிறர்கள் அந்த அலுவலத்தில்
இருந்தவர்கள் என கே.பி. தெரிவித்துள்ளார்.
(மேலும்....) 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி முரளி சாதனை!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரும் சாதனை படைத்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சாதனையை இந்திய வீரர் பி.பி.ஓஜாவின் விக்கெட்டை வீழ்த்தி இவர் படைத்துள்ளார். இது அவரது 133 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்டுக்களை இவர் கைப்பற்றியுள்ளார். அவரது சாதனை ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அவர் இன்றைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுப்பது அனைவரது மனதில் கவலையையும் தோற்றுவித்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஆடி 22, 2010 Businessman arrested for building apartments with LTTE funds (by Hemantha Randunu) The Criminal Investigation Department yesterday arrested a leading businessman who had constructed an up-market condominium complex in Wellawatte allegedly with the money received from the LTTE.The alleged deal came to light following a CID probe into 11 condominium complexes in Colombo. The suspect Sivakumar, alias Siva, is a Canadian citizen. He had lived in Wellawatte for a long time after his return to Sri Lanka and engaged in the construction of luxury apartments, sources said. The suspects apartment complex consists of 78 units and 40 of them have already been sold at Rs. 15 million each, according to the police. The condominium project was launched in 2005 while the CFA between the LTTE and the government was in force. Investigations have revealed that the suspect had deposited large amounts of money with several banks. (The Island) ஆடி 22, 2010 தமிழைச் சரியாக எழுத சபதம் ஏற்போம் ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகவியலாளர்கள் வகிக்கும் பாத்திரம் முக்கியமானது. அதே போல, மொழியின் வீழ்ச்சியிலும் அவர்களின் பாத்திரம் முக்கியமானது. பத்திரிகைகளை வாசிப்பதன் மூலமும் தொலைக்காட்சி மற்றும் வானொலிச் செய்தியறிக்கைகள் மூலமும் ஒருவர் தனது மொழி அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். அதே நேரம், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தியறிக்கைகளிலும் இலக்கணப் பிழைகள் இடம்பெறுவது ஒருவரின் மொழி அறிவு வீழ்ச்சி அடைவதற்குக் காரணமாகிவிடலாம். மொழி வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்க வேண்டிய ஊடகங்களிலேயே இலக்கணப் பிழைகள் இடம்பெறுவது மிகவும் கவலைக்குரிய விடயம். ஊடகங்களில் தமிழைப் பிழையாக எழுதுவதும் கையாள்வதும் தமிழ் மொழிக்குச் செய்கின்ற துரோகம் என்பதை நாம் புரிந்துகொண்டு இலக்கணப் பிழை இல்லாமல் தமிழை எழுத வேண்டும். (மேலும்....) ஆடி 22, 2010 புலம்பெயர் தமிழர் மனமாற்றம் இலங்கையில் அபிவிருத்தி, மீள்கட்டுமானத்தில் பங்கேற்க விருப்பம் - ரொபட் ஓ பிளேக் புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்ததாகக் கூறும் அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஒபிளேக், இலங்கையின் அபிவிருத்தியில் அவர்களைப் பங்கெடுக்குமாறும் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார அபிவிருத்தி, மீள் கட்டமைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் விரும்புகின்றனர் என்று அவர் மேலும் கூறினார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த வருடம் புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் நண்பனாக இருந்து வந்துள்ளது. அந்த நட்புறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. (மேலும்....) ஆடி 22, 2010 புனர்வாழ்வு முகாமில் 7980 பேர் மட்டுமே: க. பொ. த. (சா/த) பரீட்சை முடிந்ததும் 364 பேர் பெற்றோரிடம் ஒப்படைப்பு - அமைச்சர் டியூபுலிகளின் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட 1300 பேர் உட்பட ஏனையோர் இயக் கத்துடன் எவ்வாறு தொடர்புபட்டிருந்தனரோ அதே அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ் வளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுள் 98 சத வீதமானோர் பெற்றோருடன் தொடர்பு கொண்டுள்ளனர். பெற்றோருக்கும் இவர்களை சென்று நேரில் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. க. பொ. த. சாதாரண தரப் பரீட் சைக்கு இம்முறை 364 பேர் தோற்றுகின்றனர். பரீட்சை முடிந்த பின்னரே அவர்களை தம்மிடம் ஒப்படை க்குமாறு பெற்றோர் தெரிவித்துள்ளனர். (மேலும்....) ஆடி 22, 2010 ராகுல் சாங்கிருத்யாயன் வால்கா இலிருந்து கங்கை வரை எழுதிய ராகுல்ஜி
பல ஆண்டுகள் சிறையில் இருந்ததால் பல நூல்களை எழுதினார். அதில் முக்கியமான நூல் நமக்கெல்லாம் அதிகமாகத் தெரிந்த வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல். இந்த நூல் 14 மொழிகளில் வெளிவந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்நூல் மனித சமூக வரலாற்றை விஞ்ஞான வழியில் தொகுத்துக் கூறுகிறது. லெனின் கிராடு பல்கலைக் கழகம் இவர் புலமையைத் தெரிந்துகொண்டு 1945ம் ஆண்டில் சமஸ்கிருத பேராசிரியராக நியமித்தது. அங்கு இரண்டரை ஆண்டுகாலம் அந்தப் பதவியில் இருந்தார். ராகுல் ஜிக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தும் தாய்மொழியான இந்தியிலேயே பெரும்பாலான நூல்களை எழுதினார்.(மேலும்....) ஆடி 22, 2010 3R முறைமை சொல்வது என்ன? (சாரதா மனோகரன்)
ஆடி 22, 2010 ஒஸாமா பில்லாடன் கைது செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை - ஹிலாரி கிளிண்டன் ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் இருப்பது அந்நாட்டு அரசுக்கு தெரியும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். இப்போது, பின்லேடன், அவரது கூட்டாளி அய்மன் அல் ஜவாஹிரி மற்றும் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா உமர் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் அரசிலும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயிலும் உள்ள சிலருக்கு இவர்களது இருப்பிடம் பற்றி தெரியும் என்றார். (மேலும்....) ஆடி 22, 2010 கொழும்பில் ஆடிவேல் ஆரம்பம் கொழும்பில் ஆறு வருடங்களுக்குப் பின்னர் மிகக் கோலாகலமாக நடைபெறும் ஆடிவேல் விழா நாளை ஆரம்பமாகிறது. முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிவேல் விழா இன்று (22) மாலை மகேஸ்வர பூஜையுடன் ஆரம்பமாகிறது. நாளை காலை காவடி ரதம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்கிறது. அங்கு 26 ஆம் திகதி வரை சுவாமி திருஉருவச் சிலை வைக்கப்பட்டு அன்றைய தினம் மாலை மீண்டும் சம்மாங்கோட்டை வந்தடையும். இதேவேளை, செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தின் வெள்ளி ரத பவனி நாளை (23) காலை 8 மணிக்கு பம்பலப்பிட்டியை நோக்கி ஆரம்பமாகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளி ரதம் பம்பலப்பிட்டியிலிருந்து செட்டியார் தெருவை மீண்டும் வந்தடையும். ஆடிவேல் விழாவைச் சிறப்பிக்குமுகமாக 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நாதஸ்வர, மேள வாத்திய கச்சேரிகளும் நடைபெறும். ஆடி 22, 2010
முல்லைத்தீவில் 198 குடும்பங்கள்
|