தை 2011 மாதப் பதிவுகள்
தை
31,
2011
புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ
முன்வர வேண்டும்
வடக்கு கிழக்கு
உட்பட நாடு முழுவதும் முதலீடு செய்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினால் நாடு
பிரகாசிக்கும்
30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு
பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்தோர் நாடு
திரும்பி நாட்டைப் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கு உதவ முன்வர
வேண்டும் எனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நாடு
திரும்பி தமது நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்குப்
பகுதிகளில் முதலீடு செய்து கைத்தொழில் மற்றும் பசுமைப்புரட்சி ஒன்றை
ஏற்படுத்த முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் பிரதி அமைச்சர், இதன்
மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கட்டியெழுப்ப
முடியும் என்றும் தெரிவித்தார்.
(மேலும்....)
தை
31,
2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைப்பயணம் 13,14 மற்றும் 15நாள்
நிகழ்வுகள்!
28-01-2011 வெள்ளிக்கிழமை நெடுந்தூர நடைப்பயண வீரர்கள் அதிகாலை 05:30
மணிக்கு தேனீர் அருந்திவிட்டு பிடிகுருலா நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
சரியாக 08:35 மணிக்கு பிடிகுருலா நகரத்தில் கால் பதித்தனர். பிடிகுருலா
நகரத்தில் சி.பி.எம். என்ற பத்திரிகையிலிருந்து வந்திருந்தார்கள்.
அவர்களுக்கு 10நிமிடம் ஒதுக்கப்பட்டு பத்திரிகையாளர் பேட்டி எடுத்தார்.
நடைபயணத்தை தலைமையேற்று நடத்தும் உயர்திரு. ஞா.ஞானராஜா அவர்களும் திரு. சி.
தயாபரன் (டேவிட்) அவர்களும், சீ. வசீகரன் அவர்களும் பேட்டி கொடுத்தார்கள்.
பேட்டி முடிந்ததும் காலை உணவை நடைபயண வீரர்கள் பிடிகுருலாவிலே முடித்துக்
கொண்டார்கள்.(மேலும்....)
தை
31,
2011
கிளிநொச்சி மாவட்டம்
தமிழரசுக்
கட்சி ஆதரவாளர் மத்தியில் பலத்த அதிருப்தி
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச
சபைகளுக்கான வேட்பாளர் தெரிவிலும் நியமனப்பத்திர தாக்கலில் ஏற்பட்ட
குளறுபடிகள் காரணமாக தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களிடையே பலத்த அதிருப்தி
ஏற்பட்டுள்ளதுடன் இதுவிடயத்தில் பாரபட்சமும் குளறுபடிகளும் மேற்கொண்டவர்கள்
மீது கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. பளை பச்சிலைப்பள்ளிக்கும், பூனகரிக்கும்
26ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு
தமிழரசுக் கட்சியின் இரு எம்.பிக்களால் சரிபார்க்கப்பட்ட நிலையில்
கிளிநொச்சி கச்சேரியில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட
நிலையில் இவ் விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறுகளால் நிராகரிக்கப்பட்டது.
(மேலும்....)
தை
31,
2011
"America,
America'" - sung by a Tamil girl

http://axisoflogic.com/artman/publish/Article_61682.shtml
தை
31,
2011
மன்மோகன்- கருணாநிதி இன்று டில்லியில்
சந்திப்பு
இந்திய வெளியுறவு
செயலர் கொழும்பு வருகை
இந்திய வெளியுறவுச் செய லாளர் திருமதி
நிருபமா ராவ் நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார்.
நேற்றிரவு 7.30 மணியள வில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந் தடைந்த இந்திய
வெளியுறவுச் செயலாளரை வெளி விவகார அமைச்சின் உயரதிகாரிகள் வரவேற்றனர்.
இன்றைய தினம் காலை இவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந் தித்து
பேச்சுவார்த்தை நடத்தவுள்ள துடன் அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர்
பேராசிரியர் ஜீ.எல். பீரிசையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக
வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார்.
(மேலும்....)
தை
31,
2011
நச்சுத்தன்மையற்ற உலகை உருவாக்கும் வகையில் இரசாயன சக்தியின் பயன்பாடு
(கலாநிதி யசோதரா பிரபாகரர் இராசாயனவியல் துறை)
இரசாயனவியலானது உலகளாவிய ரீதியில் ஏற்படும்
சவால்களை எதிர்கொள்வதில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. இன்றைய காலத்தின்
தேவைகளை புதியவகை சக்தி மூலங்களை உருவாக்கி காலநிலை மாற்றங்களை
புரிந்துகொள்ளல், நிலம், நீர், வளி என்பவற்றை உள்ளடக்கிய நச்சுத் தன்மையற்ற
சூழலை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இரசாயனவியல் அறிவு வேண்டப்படுகிறது.
திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள் ஆகிய சடப்பொருட்கள் யாவும் இரசாயன
மூலகங்கள் அல்லது அவற்றின் சேர்வைகளால் ஆனவை. அத்துடன் ஆழ்ந்து நோக்கினால்
உயிர்வாழ்வதற்குரிய எல்லாச் செயற்பாடுகளும் இரசாயனத் தாக்கங்களால்
கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இரசாயனவியற் முக்கியத்துவத்தை
பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டுவது மிகப் பெரிய தேவையாகும்.
(மேலும்....)
தை
31,
2011
எகிப்திய
ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சி ஆட்டம் காண்கிறது
82 வயதான ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு செவிமடுத்து
அந்நாட்டின் புலனாய்வுப் பிரிவின் அதிபர் ஒமர் சுலைமானை தனது உப
ஜனாதிபதியாக நியமித்து மக்களை சாந்தப்படுத்த முயற்சி செய்த போதிலும்
அம்முயற்சியை நிராகரித்த மக்கள் ஹொஸ்னி முபாரக் இராஜிநாமா செய்தால்தான்
எகிப்து மக்களுக்கு சுதந்திரமும் பொருளாதார சுபீட்சமும் ஏற்படும் என்று
தெரிவித்து தங்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேலும்
அதிகரித்துள்ளனர். ஹொஸ்னி முபாரக்கின் மகன் கமால் முபாரக் தமது தந்தைக்குப்
பின்னர் தான் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியுமென்று கனவு
கொண்டிருந்த போதிலும் அவரது இந்த இலட்சியக் கனவும் மக்கள்
ஆர்ப்பாட்டத்தினால் சின்னாபின்னாமாகியுள்ளது.
(மேலும்....)
தை
31,
2011
புதுப்புது
கிரகங்கள் கண்டுபிடிப்பு
விண்ணில் சூரிய குடும்ப கிரகங்கள் மட்டுமன்றி
எண்ணிலடங்கா கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் உள்ளன. இது குறித்து
ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானி கள் புதுப்புது கிரகங்களை கண்டு பிடித்து
வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு கிரகத்தை கண்டு
பிடித்துள்ளனர். டபிள்யூ. ஏ. எஸ். பி. 33 பி என்று இதற்கு பெயரிட்டுள்ளனர்.
இதை எச்.டி. 15082 என்றும் அழைக்கின்றனர். இது மிகவும் கடுமையான வெப்பம்
உடைய கிரகமாகும். 7160 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் இது உள்ளது. தற்போது
இதுதான் மிகுந்த வெப்ப முடைய கிரகம் என கருதப்படுகிறது. ஏனெனில் சூரியனின்
வெப்பம் 5,600 டிகிரி செல்சியஸ்தான். இதற்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்ட
கிரகம் 3,200 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டதாக இருந்தது. இது அதை மிஞ்சி
இரு மடங்கு வெப் பத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு தான் முதன்
முதலாக இந்த கிரகம் விஞ்ஞானிகள் அறிந்தனர். அதன் பின்னர் தான் ஆய்வு
மேற்கொண்டனர். இது வியாழன் கிரகத்தை விட 4 1/2 மடங்கு பெரியது.
தை
31,
2011
போக்குவரத்து வசதிக்காக மண் அணை அகற்றப்பட்டது
சேத்தான்குளம் முதல் அம்பணை வரை போடப்பட்டிருந்த மண் அணையை பாதுகாப்புப்
பிரிவினர் முற்றாக அகற்றியுள்ளனர். இப் பிரதேசத்தில் மக்கள் மீளக்
குடியமர்ந்துள்ளதால், இம் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இம் மண்
அணை தடையாக இருப்பதாக மீளக் குடியமர்ந்த மக்கள் யாழ். மாவட்ட இராணுவ
கட்டளைத் தளபதியிடம் தெரிவித்திருந்தமைக்கு அமைவாக அது அகற்றப்பட்டுள்ளது.
இவ் மண் அணை நீக்கப்பட்டதால், அளவெட்டி, அம்பணையூடாக தெல்லிப்பழைக்கு பஸ்
சேவையை நடாத்தவும், வசதியேற்பட்டுள்ளது. விரைவில் பலாலி பாதுகாப்பு
வலயத்தினுள் கருகம்பணை மக்களையும் மீள்குடியமர்த்த பதிவுகள் இடம்பெற்று
வருகின்றன. கருகம்பணை கீரிமலைக்கு அடுத்த கிராமமாகும். கருகம்பணை மக்கள்
தமது வீடுகள் காணிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தை
31,
2011
வவுனியா ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை வசதி
வவுனியாவில் உள்ள புற்றுநோயாளர்கள் மகரகம வைத்தியசாலைக்கு சென்றே சிகிச்சை
பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா வைத்தியசாலை அத்தியட்சகரின்
நடவடிக்கையால் நீண்டகாலத்திற்கு பின்னர் வவுனியா மாவட்ட அரசினர் பொது
வைத்தியசாலையில் புற்றுநோய்க்குரிய சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனாவைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை வைத்திய நிபுணர் மாதம் ஒரு தடவை
மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு
சிகிச்சையை வழங்கி வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
தை
31,
2011
அநுராதபுர சிறையிலிருந்து கைதிகள் இருவர்
தப்பியோட்டம் _
அநுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த இரு கைதிகள் சனிக்கிழமை
காலை தப்பியோடியுள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலை வேளையில் அன்றாட வேலைகளைக் கைதிகளுக்குப் பகிர்ந்தளித்துக்
கொண்டிருந்த வேளையில் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரியாமல் சிறைச்சாலையை
விட்டு ஓடி மல்வத்து ஓயாவினூடாக தலைமறைவாகியுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள்
கைதிகள் இருவரையும் பிடிப்பதற்காக பின்தொடர்ந்து ஓடியபோதும் அவர்கள்
இருவரும் தப்பியோடி விட்டனர். இவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான
நடவடிக்கைகளை சிறைச்சாலை அதிகாரிகளும் அநுராதபுரம் பொலிஸாரும் வேறுவேறாக
மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். _
தை
31,
2011
தலைமைப் பதவிக்கு இலக்கு
கூட்டமைப்புக்குள் குழப்பம் சிவாஜிலிங்கம் பலம் சேர்க்கும் ஒருவரென
சித்தார்த்தன் புகழாரம்
கருத்துத் தெரிவிக்காமல் மாவை சேனாதிராஜா
மெளனம்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுக்கோப்பைச் சிதைக்கும் வகையில் அதன்
பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும்
அறிக்கையினை விடுத்து வருகிறார்களென்று அவ்விருவர் மீதும் கூட்டமைப்பின்
ஏனைய தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஏற்கனவே இவ்விருவர் மீதும்
கூட்டமைப்புக்குள் அதிருப்தி நிலவி வரும்வேளையில், தற்போது கூட்டமைப்பை
பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சியை விமர்சித்து அறிக்கை
விடுத்ததன் மூலம் இவர்கள் மீதான வெறுப்பு மேலும் வலுவடைந்திருப்பதாக
கூட்டமைப்பின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
(மேலும்....)
தை
31,
2011
அப்படிப் போடு அரிவாளை
அமெரிக்காவின்
கோரிக்கை பாகிஸ்தான் அரசால் நிராகரிப்பு
பாகிஸ்தானின் லாகூர் நகரின் வீதியில்
பாகிஸ்தானியர்கள் இருவரை சுட்டுக்கொன்ற அமெரிக்கரை உடனடியாக விடுதலை
செய்யுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக் கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளதுடன்
இவ்விடயம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்பட வேண்டும்
என்றும் கூறியுள்ளது. ரேமன் டேவிஸ் என்ற மேற்படி அமெ ரிக்கர்
இஸ்லாமாபாத்தில் உள்ள அமெ ரிக்க தூதரகத்தில் பணிபுரிபவர். லாகூரில் வீதியில்
கடந்த வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை சுட்டுக் கொன்றார்.
சம்பவம் நடந்த பின்னர் இதுவரை டோவிஸ் லாகூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இவர் மாஜிஸ்தி ரேட்
முன்னிலையில் தோற்றினார்.
(மேலும்....)
தை
31,
2011
கூட்டமைப்பு - அரசிற்கு இடையில் வியாழனன்று மற்றுமொரு
சுற்று பேச்சு _
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்
அரசாங்கத்திற்கும் இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 3
ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருதரப்பிற்கும் இடையில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில்
வடக்கு கிழக்கின் மனிதாபிமான, மீள்கட்டமைப்பு பணிகள், அரசியல் தீர்வு
உள்ளிட்ட இனங்காணப்பட்ட விவகாரங்களுக்கு சீரான வகையில் தீர்வுகாண்பதற்காக
இருத்தரப்பும் தொடர்ந்தும் நல்லிணக்கத்துன் பேச்சுக்களை முன்னெடுப்பது
தீர்மானித்தது.
இந்த சுற்றுப்பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தரப்பில் அமைச்சர்களான நிமல்
சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ், ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும்
பாராளுமன்ற உறுப்பினரும் குழுவின் செயலாளருமான சஜின்வாஸ் குணவர்த்தன
ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் அதன் செயலாளர் மாவை
சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய
பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
தை
30,
2011
நாடு கடந்த தமிழீழ தனிநாடு அரசின் மாண்புமிகு பிரதமர் திரு உருத்திரகுமாரின்
கன்னியுரை இப்படியும் இருந்திருக்கலாம்
(மோகன்)
பெரும்பாலான புலம் பெயர்ந்த மக்களுக்கு தமிழ்
மக்களுக்கான தனிநாடு எமது சொந்த மண்ணிலேயே அமையவேண்டும் என்ற அவா இன்னமும்
தணியாத தாகமா இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக்கொள்ளாமல் இல்லை.
எங்களுக்கும் அந்த ஆசை இல்லாமல் இல்லை. ஒருவேளை அதற்ககான சந்தர்ப்பம்
கடைசிவரை இல்லாது போய்விட்டால் எமது கனவுகள் நிராசையாக விடக்கூடாது
என்பதற்க்காகவே இந்த நாடு கடந்த தனியரசு என்பதை அவர்கள் புரிந்து
கொள்ளவேண்டும். ஆனானப்பட்ட தேசியத்தலைவராலேயே முடியாமல் போன ஒன்றை தேசம்
விட்டு ஓடி வந்து எங்களால் முடித்து காட்டமுடியுமா என்பதை சிந்தித்து
பார்க்கவேண்டும் அதற்காக சிங்கள அரசிடம் மண்டியிட்டு போனதென்று அர்த்தமில்லை
சிங்கள தலைவர்களெல்லாம் புலம் பெயர்ந்த நாடுகளுக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு
வேளையிலும் ஆர்ப்பாட்டம் செய்து எங்கள் கோபங்களை இப்போதைக்கு தீர்த்து
கொள்வதே எங்கள் உடல் நலத்திற்கு ஏற்ற ஒன்று. இல்லாதுவிட்டால் துரோகக்
குழுக்களால் நாம் அழைக்கபடுவது போல் உண்மையிலேயே புலன் பெயர்ந்த மக்களாக
மாறிவிடும் சாத்தியக்கூறுகள் உண்டு.
(மேலும்...)
தை
30,
2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைப்பயணம் 11வது மற்றும்12 வது நாள்
நிகழ்வுகள்!
அடங்கி சாலையில் நடைபயண வீரர்கள்
தங்கியிருக்கும் போது அருகில் உள்ள கிராமத்திலிருந்து ஒருவர் வந்தார்.
தன்னுடைய பெயர் சங்கர் என்றும் தான் மதுரை பக்கத்தில் உள்ளவர் என்றும்
ஆந்திராவில் கடந்த 38 ஆண்டுகளாக முறுக்கு வியாபாரம் செய்து வருவதாகவும்
தெரிவித்தார். ஆந்திரா தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் படித்து
எங்களைப் பற்றி அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தார். மிகுந்த பாசத்துடன்
பழகிய அவர் நடைபயண வீரர்கள் இரவு உணவு சாப்பிடுவதைப் பார்த்தார். உங்களுடைய
கஸ்ரங்கள் எனக்குத் தெரிகிறது என்று பாசத்துடன் பேசிவிட்டு சென்றார். சிறிது
நேரத்தில் 2 மூடை அரிசியுடன் திரும்பவும் முகாமிற்கு வந்தார். நடைபயண
தலைமைக் குழுவின் தலைவர் மங்களராஜா அவர்களிடம் கையளித்து, தங்களுடைய
நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றுச் சென்றார்.
(மேலும்...)
தை
30,
2011
Current Tar Sands Mines if it were in my home

The mining of Canada's tar sands
is the largest (and one of the most destructive) industrial project in
human history. The harvesting of petroleum from the tar sands destroys
the land, pollutes the water and is poisoning downstream communities. It
is the largest contributor to greenhouse gas emission growth in Canada.
The tar sands already produce over 30 million tonnes of CO2 emissions
per year; by 2020 that number could grow to over 140 million tonnes.
Harvesting the tar sands requires the destruction of trees, ecosystems,
brush, muskeg and topsoil and requires a massive amount of water. The
tar sands are also creating huge health concerns in downstream
communities, trampling on treaty and Indigenous rights, and contributing
to the destruction of traditional way of life for First Nation peoples
in the area. Imagine if this was your home - what would you do?
தை
30,
2011
அரசாங்கத்தைக்
கலைத்தார் எகிப்து ஜனாதிபதி

எகிப்தில் இடம்பெற்றுவரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தினால்; அந்நாட்டு அதிபர்
ஹொஸ்னி முபாரக் தனது அரசாங்கத்தைக் கலைத்து புதிய அரசாங்கத்தை
அமைக்கவுள்ளார். டூனிசியாவில்; இடம்பெற்ற போராட்டங்களினால் அந்த நாட்டு
அதிபர் பென் அலி பதவியை விட்டு விலகினார். அதன் எதிரொலியாக எகிப்திலும்
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எகிப்தின் முக்கிய
நகரங்களான கெய்ரோ, சூஸ், அலெக்ஸ்சாண்ட்ரியா ஆகிய நகரங்களில் இடம் பெற்ற
மக்கள் ஆர்ப்பாட்டத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சூஸ் நகரில்
இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 13 பேரும், கெய்ரோ நகரில் இடம்பெற்ற
ஆர்ப்பாட்டத்தில் 5 பேரும் உயிரிழந்தனர்.
(மேலும்...)
தை
30,
2011
இலங்கையின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக!
கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது
இலங் கைக் கடற்படையினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜெயக்குமார்
என்ற மீனவரின் கழுத்தில் கயிற்றால் சுருக்கிட்டு இழுத்ததில் சனிக்கிழமை இரவு
அவர் உயிரிழந்தார். கடந்த 12ம் தேதி ஜெகதாபட்டினம் கடல் அருகே பாண் டியன்
என்ற இளைஞரை இலங்கை கடற்படை யினர் சுட்டுக் கொன்றனர். அந்தப் பதட்டம் தணி
வதற்குள் மீண்டும் ஒரு படுகொலை நடந்தேறியுள்ளது. வழக்கம்போல மத்திய
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரி வித்துள்ளார்.
இந்தியத் தூதரகத்திடம் இதுகுறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்
படை இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது என்று கூறுவது அடிப்படையற்றது என்று
இலங்கை கடற்படையின் செய்தித்தொடர்பாளர் நாடகம் ஆடியுள்ளார். இதே பதிலை
இலங்கை அரசு தரக்கூடும்.
(மேலும்...)
தை
30,
2011
ஈபிடிபியின் மருதங்கேணி பகுதிப் பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார்!

ஈபிடிபி அமைப்பின் மருதங்கேணி பகுதிக்கான பொறுப்பாளரும் மற்றும்
வன்னயிலிருந்து மீளக் குடியமர வந்த மக்களுக்கான நலன்புரி அமைப்புக்கான
பிரமுகருமான 36 வயதுடைய ராசரத்தினம் சதீஸ் இன்று காலை படுகொலை
செய்யப்பட்டுள்ளார். இன்று காலை வடமராட்சி கிழக்கிற்கு செல்லும்
பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் ஆனைவிழுந்தானை அண்டிய சுடலைப் பகுதியில்
இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
(மேலும்...)
தை
30,
2011
தை
30,
2011
ஒட்டுத் துணியும் மேலாடையும்
எப்பொழுதெல்லாம் பசித்தீயால்
கருகிக் கரைகிறோமோ
அப்பொழுதெல்லாம் ஓடிவந்து
முழங்குகிறீர்கள்.
“இது இனியும் நீடிக்கக் கூடாது”
முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம்.
உற்சாகம் நிரம்பியவர்களாய்
நீங்கள் எஜமானிடம் ஓடுகிறீர்கள்;
நாங்களோ,
பசித்தீயில் கருகியபடி காத்துக் கொண்டிருக்கிறோம்.
(மேலும்...)
தை
30,
2011
உப்புக்கல்லை வைரமென்று நம்பி கெடப்போகும் தமிழ்மக்கள்.

தமிழரங்கம் மட்டுமல்ல எந்தவொரு அரங்கமும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு
சவாலாக இனி வருவதெண்டால் .இந்த விண்ணாதி விண்ணன்களை சமாளிக்கிற
தைரியத்துடனும் தந்திரோபாயத்துடனும் வரவேண்டும். டக்ளசால் அது முடியாது.
டக்ளசுடன் இருப்பவர்களுக்கு அந்த ஆற்றல் கிடையாது. டக்ளசின் பணத்திற்காக
சேர்ந்த கூட்டம் டக்ளசின் இருக்கிற கொஞ்ச நஞ்ச மதிப்பையும் கெடுத்து
விடுவதில் முன்னிற்கிறது. அரசியல் ஆளமை கிடையாது. இது தெரிஞ்சுதான் மகிந்த
அரசு டக்ளசை யாழ்ப்பாணத்தில் தனித்து போட்டியிட அனுமதிப்பதில்லை.
கிரிமினல்கள், சுழியோடிகள், முடிச்சுமாரிகள், மொள்ளைமாரிகள் என
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் தாராளமாக நிறைந்து கிடக்கிறார்கள்.
இவர்களையெல்லாம் பிரபாகரனால் மட்டும்தான் அடக்கி வைத்திருக்க முடிந்தது.
தமிழ்ச்செல்வனிடம் அரசியல் வகுப்பெடுத்த பெருமை தமிழ்த்தேசியக்கூட்டமைக்கு
மட்டுமே உரியது.
(மேலும்...)
தை
30,
2011
மகிந்த ராஜபக்ஷ மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே மீது சட்டத்துக்குப் புறம்பாக படுகொலைகள்
செய்ததாக குற்றம்சாட்டி அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது.இலங்கை ராணுவத்தால் ரஜீகர் மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜா
மற்றும் கலைசெல்வி லவனின் கணவர் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின்
சார்பாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள தான் 3 கோடி டாலர் நஷ்ட ஈடு தொகை
கேட்டுள்ளதாகவும் அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் ஃபெய்ன் என்பவர்
தெரிவித்துள்ளார். சித்ரவதை மற்றும் சட்டத்துக்கு புறம்பான கொலைகள்
அமெரிக்க மண்ணுக்கு வெளியே நடந்து இருந்தாலும், சட்டப்படி அவற்றுக்கு தண்டனை
வாங்கி கொடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இலங்கையில்
மறைந்து கொண்டாலும் அதிபர் ராஜபக்ஷே, நீதியிடம் இருந்து தப்ப முடியாது
என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த வழக்கு ஊடகங்களில் தலைப்பு
செய்தியாக வர வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்ட முயற்சி என இலங்கை அதிபர்
அலுவலகம் கருத்து தெரிவித்துள்ளது.
தை
29,
2011
உள்ளுராட்சித் தேர்தலில் எமது கட்சி பங்குபற்றாது
-
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

தமிழ்மக்களுக்கான ஓர் அரசியல் அதிகார
விடுதலையைப் பெறல், சமூக அடிமைத் தளைகள் ஒடுக்குமுறைகளை ஒழித்தல்,
பொருளாதார சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டல், முற்போக்கான சர்வதேச உறவுகளை
வலுப்படுத்துதல் என்ற அடிப்படையில் தோழர் நாபாவின் வழிகாட்டலில் ஒரு
புரட்சிகர இயக்கமாகச் செயற்பட்ட நாம் காலப்போக்கில் தேர்தல்களில்
பங்குபெறுவதற்கும் முக்கியத்துவமளிக்க வேண்டியவர்களானோம். புலிகள் வல்லமை
கொண்டவர்களாக இருந்த போது மக்களோடு உறவுகளைப் பேணுவதற்கும் எமது அரசியல்
வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் தக்க வைப்பதற்காகவும் நாம் தேர்தல்களில்
பங்குபற்றினோம். இன்று மக்களோடு நெருங்கிப் பழகும் சூழ்நிலை
ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் தேர்தல்களில் எமது கட்சி வெற்றிகரமான
ஒன்றாக இருப்பதற்கான மக்கள் பலம் இப்போது எம்மிடம் இல்லை. அதனை வெற்றிகரமாக
ஆக்குவதற்கான கட்சிக் கட்டமைப்புப் பலத்தையும் நாம் இன்னமும் அடையவில்லை,
தேர்தல்களைச் சந்திக்கும் பணபலமும் எம்மிடமில்லை.
(மேலும்....)
தை
29,
2011
புலம்பெயர்ந்த வடக்கிற்கு கிழக்கிலிருந்து ஒருகடிதம்!!
(வாவிமகன்)
தமிழ் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக
நடைமுறைக்கு ஒவ்வாதவற்றைக் கைவிட்டு இதய சுத்தியுடனும் எல்லாப்
பிரதேசமக்களின் நம்பகத் தன்மையையும் உறுதி செய்யவேண்டியது உங்கள் கடமையாகும்.
தற்போது நாட்டில் ஒரு சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ள இவ்வேளையில் ஒட்டுமொத்த
தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய கட்டாயமும் கடப்பாடுமுள்ளது.
அவ்வகையில், தாயகத்திலுள்ள மக்களின் அபிலாசைகளைக் கருத்தில் கொண்டு
அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதமுறைகளை நிதானத்துடன் கையாளவேண்டிய தார்மீகப்
பொறுப்பு புலம்பெயர்ந்த வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இருபாலாருக்கும்
உண்டு. இவை சம்பந்தமாக அமைக்கப்படும் எந்த குழுவிலோ அமைப்பிலோ இரு
மாகாணத்தவருக்கும் சமமான இடமும் அவர்களுக்கான முக்கிய பொறுப்பும் சமமாக
வழங்கப்படவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியை மறந்து ஆயுதம் தாங்கிய
போராட்டம் அல்லது இலங்கை அரசிற்கு எதிரான தீவிர பிரச்சாரம் செய்யும்
அமைப்புக்களை புறக்கணித்து நேர்மையான அரசியல் சாணக்கியத்தை பயன்படுத்தி
உலகநாடுகளின் உதவியுடன் நம் மக்களுக்கான உரிமைகளை இலங்கை அரசின்
சம்மதத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டியதும் நமது தலைமுறையின் கடமையாகும்.
(மேலும்....)
தை
29,
2011
விக்கிலீக்ஸால் சர்வதேச உறவுகள் வலு பெற்றுள்ளது
-
ரஷ்ய ஜனாதிபதி
விக்கிலீக்ஸின் காட்டிக்கொடுக்கும்
இணையதளத்தினால் சர்வதேச உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன, என்று ரஷ்ய
ஜனாதிபதி டிமெட்ரி மித்வடே கூறியுள்ளார். கடந்த ஆண்டு விக்கிலீக்ஸ் இணைய
தளம் ஈராக், ஆப்கான் ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின் போர் குறித்த ரகசிய
ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. இதன் நிறுவனர்
ஜூலியன் அசேஞ்ச் சர்வதேச அளவில் பிரபலமானார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தில்
டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு
பேசிய ரஷ்ய ஜனாதிபதி டிமெட்ரி மித்வடே கூறியதாவது: விக்கிலீக்ஸ் இணையதளம்
வெளியிட்ட ரகசிய ஆவணங்களால் சில நாடுகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.
ஆனால் விக்கிலீக்ஸினால் சர்வதேச உறவுகள் வலுப்பெற்றுள்ளன. இது சர்வதேச
அளவில் பொது அரசியல் இணையதளமாக விக்கிலீக்ஸ் உள்ளது. இன்று பலகோடி மக்கள்
இணையதளத்தினை பயன்படுத்து கின்றனர். அந்த வகையில் விக்கிலீக்ஸ் சர்வதேச
நாடுகளிடையேயான உறவில் நல்ல செல்வாக்கினை பெருக்கியுள்ளது. இவ்வாறு அவர்
கூறினார்.
தை
29, 2011
'சிவாஜிலிங்கத்தை சேர்ப்பதற்கு த.தே.கூட்டமைப்பில் உத்தியோகபூர்வ பேச்சு
இடம்பெறவில்லை':
சுரேஷ், செல்வம்
இது கூட்டமைப்பு எடுத்த முடிவுகளுக்கு எதிராக மாவை சேனாதிராசாவினால்
தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் எடுத்த தனிப்பட்ட முடிவாகும்

சிவாஜிலிங்கத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைப்பது தொடர்பாக
உத்தியோகபூர்வமாக எந்தப் பேச்சுவார்த்தைகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்
இடம்பெறவில்லை. இரண்டு நபர்களுக்கிடையிலான ஒப்பந்தம் என்ற பெயரில்
சிவாஜிலிங்கம் தமிழரசுக் கட்சியில் உள்வாங்கப்பட்டு தமிழரசுக் கட்சியின்
வீட்டுச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கூட்டமைப்பு
எடுத்த முடிவுகளுக்கு எதிராக மாவை சேனாதிராசாவினால் தமிழரசுக் கட்சியின்
செயலாளர் என்ற வகையில் எடுத்த தனிப்பட்ட முடிவாகும் என தமிழ் தேசிய
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும்
செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
(மேலும்....)
தை 29,
2011
இலங்கை அரசு போரில் வெற்றிபெற உதவிய மூலோபாயங்கள் எவை
'ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின்
அழுத்தங்களுக்குப் பணிந்துகொண்டு புலிகள் தங்களை மீளொழுங்குபடுத்துவதற்காக
வாய்ப்பினை ஏற்படுத்தக்கொடுக்ககூடாது என்பதில் நாங்கள் உறுதியுடன் இருந்தோம்'
புலிகளின் முதலாவது வான் வழித் தாக்குதல் இடம்பெற்றபின்னர்தான், தாழ்வாகப்
பறந்து தாக்குதலை நடாத்தும் விமானங்களை முறியடிக்கும் திறன் எங்களிடம் இல்லை
என்பதை நாம் விளங்கிக்கொண்டோம். இந்த உண்மையினை நாங்கள் தெரிந்துகொண்டவுடன்
தாழ்வாகப் பறக்கும் எதிரி விமானங்களை இலக்குவைப்பதற்கு ஏதுவாக தாக்குதல்
அபாயம் இருந்த பகுதிகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகளை நிலைப்படுத்தினோம்,
என்கிறார் அவர். இதுபோன்ற இன்னொரு சம்பவத்தினையும் கோத்தபாய விபரித்தார். "படை
நடவடிக்கை ஒன்று அதன் இறுதிக்கட்டத்தினை நெருங்கும் போது இந்திய
அரசாங்கத்திடமிருந்து எழும் அழுத்தங்களில் விளைவாக குறிப்பிட்ட படை
நடவடிக்கைகளை நாம் பலமுறை கைவிட்டிருக்கிறோம். உதாரணமாக, இந்தியாவின்
தலையீட்டினைத் தொடர்ந்துதான் வடமராட்சி மீது முன்னெடுக்கப்பட்ட படை
நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. ஆதலினால் இம்முறை இந்தியாவுடன் சிறந்த
உறவினைப் பேணும் அதேநேரம் அவர்களது இதுபோன்ற அழுத்தங்களுக்குப்
பணிந்துகொடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டினை நாம் எடுத்திருந்தோம்". ஐக்கிய
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களுக்குப்
பணிந்துகொண்டு புலிகள் தங்களை மீளொழுங்குபடுத்துவதற்காக வாய்ப்பினை
ஏற்படுத்திக்கொடுக்ககூடாது என்பதில் நாங்கள் உறுதியுடன் இருந்தோம். இலங்கை
அரசியல் நிலைமைகள் தமிழ்நாட்டின் மீது அதிக செல்வாக்கினைச் செலுத்தும்
என்பதாலேயே இந்தியா தலையிட முனைந்தது".
(மேலும்....)
தை
29,
2011
யாழ்ப்பாணத்தில் குட்டிப் புலிகள் குதூகலிக்க கிழக்கு மாகாணத்தின் தலைநகரான
திருகோணமலையில் கிழட்டுப் புலியின் சாராயக்கடைக்காரர்காரர்களின்
சாம்ராஜ்யம்!

ராஜபக்ஸ ஓர் சிங்கள இனவாதி அவனால்
தமிழ் மக்களுக்கு எதனையுமே வழங்கமுடியாது என முழங்கியவர் ஜனாதிபதி திரு
ராஜபக்ஸ அவர்களின் காலடியில் மண்டியிட்டு தமக்கும் தமது சகாக்களான
மாபியாக்களுக்குமான வாகன இறக்குமதிக்கான பேமிற்றுகளை பெற்றதற்கமைய ஒரே
மொத்தத்தில் புலிக்கூட்டமைப்பின் மாபியாக்கள் அனைவரும் (5) ஐந்து மில்லியன்
ரூபாய்களுக்கு திடீர் அதிபதியானார்கள். சம்பந்தனினதும் அவரின் சகாக்களான
மாபியாக்களினதும் அரசியல் வாழ்க்கை தொடர்பான சரித்திரத்தினை எழுதுவதானால்
பத்துப் பக்கங்களில் எழுதினாலும் இடம் போதாத நிலையே ஏற்படும். எது
எவ்வாறாயினும் பிள்ளையார் பிடிக்கப்போய் இன்று பூதத்தின் வாயிலகப்பட்ட
கதையே திருமலை மக்களின் நிலை!
(மேலும்....)
தை
29,
2011
The High Commissioner,
High Commission for Britain,
New Delhi 110021.
Honourable Sir,
Greetings
from E.N.D.L.F. The participants of the epoch making long journey on
foot from Chennai to Delhi seeking justice for the Eelam Tamils, are the
members of Eelam National Democratic Liberation Front (E.N.D.L.F) Our
Front was a partner in the Northern and Eastern provincial coalition
government during the brief period 1988 - 1990. We had the strong hope
of finding a permanent solution for the grave problems confronted by the
Eelam Tamils through Indo-Sri Lankan Accord signed in 1987. With this
end in view we accepted the said Accord and the reign of the provincial
government. In this Endeavour thousands of our members lost their
precious life.
(more...)
தை
29,
2011
காப்பாற்றப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப்பை ஏன் சேர்க்கவில்லை என
கேள்வி எழுந்திருக்கிறது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள்
ஈ.பி.ஆர்.எல்.எப் சேர்க்கப்படாமல் இருப்பது சரியானது. தமிழ்த்தேசியமைப்பு
அயோக்கியர்களின் கூடாரம். அதற்குள் ஈ.பி.ஆர்.எல்எப் போய் ஏன் பெயரைக்
கெடுத்துக்கொள்வானேன். அவர்கள் சேராமல் இருப்பது சிறந்த முடிவுதான்.
ஈ.பி.ஆர்.எல்.எப் மீதான குற்றச்சாட்டுக்கள் இந்திய ராணுவ காலத்தில்
நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பானவை. அப்போது அதற்கு பொறுப்பாக செயற்பட்ட சு
ரேஷ் பிரமச்சந்திரன் நேர காலத்தோடு புலிகளுடன் போய் ஞானஸ்நானம் பெற்று
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இணைந்து விட்டார். மற்றைய பிரிவினரான பத்மநாபா
ஈ.பி.ஆர்.எல்.எப்பினர் புலிகளிடம் தமது முக்கிய உறுப்பினரான சுபத்திரனை
இழந்து பகிரங்க அரசியல் செய்ய முடியாதவாறு முடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
(மேலும்....)
தை
29,
2011
Canadian Tamils
for Peace and Democracy (CaTpad) strongly condemns attack on Buddhist
Vihara and monks in Chennai and Thanks Buddhist community in Srilanka
for showing greater patience
Canadian Tamils for Peace and Democracy (CaTpad)
condemns the cowardly attack on the Buddhist Vihara in Chennai by LTTE
sympathizers and anti social elements backed by LTTE. The attack on
place of worship and Buddhist monks clearly demonstrate the LTTE’s
impatience and anger of growing friendship and stronger relationship
between the Tamil and Sinhalese communities in Srilanka and the
frustration due to strong Diplomatic ties between Srilanka and India. (more....)
தை
29,
2011
கைதிகளை நல்வழிப்படுத்தும் நிலையங்களாக சிறைச்சாலைகள் மாற்றப்பட வேண்டும்
சிறைச்சாலைகளில் கைதிகள் மேற்கொள்ளும்
வன்முறைக ளும், கலவரங்களும் இன்று, இலங்கையில் அதிகரித்து வருகின்றமை
உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது நம் பிக்கை வைத்துள்ள மக்களுக்கு வேதனையை
அளிப்பதாக இரு க்கிறது. எமது சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதி
களில் 98 சதவீதமானோர் இலங்கைப் பிரஜைகளாவர். அவர்க ளுக்கும் எமது நாட்டின்
ஏனைய பிரஜைகளைப் போன்று சகல உரிமைகளையும் அனுபவிக்கும் தகுதியிருக்கிறது.
சிறைச்சாலைகள் குற்றமிழைக்கும் ஒரு மனிதனை திருத்தி மீண் டும்
நல்வழிப்படுத்தும் புனர்வாழ்வளிக்கும் ஒரு ஸ்தானமாகவே இருக்க வேண்டும்.
இதுவே, ஜனநாயகப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பம்சமாகும். கைதிகளுக்கு
சிறைக்கூடங்களில் பிரச்சினை கள் இருக்கலாம்.
(மேலும்....)
தை
29,
2011
டூனிசியா,
எகிப்தை தொடர்ந்து யெமனிலும் போராட்டம்
யெமன் நாட்டில் ஜனாதிபதி பதவி விலகக் கோரி,
எதிர்க்கட்சியினரும் இளைஞர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
டூனிசியாவில் ஜனாதிபதி அபிதின்பென் அலியை பதவி விலகக் கோரி நடந்த
போராட்டத்தின் காரணமாக அவர் தலைமறைவாகி சவூதியில் தஞ்சம் புகுந்தார். அங்கு
நடந்த போராட்டம் வெற்றியடைந்ததால், தற்போது எகிப்திலும் ஜனாதிபதி ஹோஸ்னி
முபாரக்குக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. தற்போது இந்த போராட்டம்
யெமனையும் தொற்றிக்கொண்டுள்ளது. யெமன் நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லா சலே
32 ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ளார். இவரது பதவிக் காலம் 2013இல்
முடிவடைகிறது. அதற்குள் தன்னுடைய மகனை ஜனாதிபதியாக்க முயற்சி செய்து
வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
(மேலும்....)
தை
29,
2011
NATIONAL DAY of Sri Lanka
We cordially invite you to attend
the
63 rd NATIONAL DAY of Sri Lanka
On Friday, 4 th February 2011 at the Celebrations Banquet Hall, 174
Bartley Drive (Victoria Park Avenue and Eglinton Avenue), North York,
Toronto, Ontario, M4A 1E1, (416) 759-7772
From 6;30 P:M to 9:00 P:M
Consulate General Of Sri Lanka
40 St Clair W
Toronto, ON M4V 3A1
(416) 323-9133
தை
29,
2011
தொடர்ந்தும் அதிகரித்துவரும் உலக முஸ்லிம்களின்
சனத்தொகை
உலகம் முழுவதும் முஸ்லிம்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதாகவும் வரும் 2030 ஆம் ஆண்டளவில் உலக மொத்த மக்கள் தொகையில்
25 வீதத்திற்கும் அதிகமானவர்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும்
ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வொஷிங்டனை சேர்ந்த மத மற்றும்
பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய ஆய்வில் அடுத்த இருபது
ஆண்டுகளில் முஸ்லிம் அல்லாதவர்களின் எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கு
அதிகமாக முஸ்லிம்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதாவது
அடுத்த இருபதாண்டுகளில் 35 சதவீதம் அதிகரிக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு 35 சதவீதம் அதிகரித்தால் 2010ல் 1.6
பில்லியனாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2030ல் 2.2 பில்லியனாக
அதிகரித்து காணப்படும்.
(மேலும்....)
தை
29,
2011
நிருபமாராவ்
இன்று இலங்கை வருகை
இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ்
இன்று இலங்கை வரவுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா
வின் வேண்டுகோளு க்கு அமைய அவ ரது பயணம் அமை ந்துள்ளதாக வெளி நாடு செய்திச்
சேவையொன்று அறிவித்துள் ளது. இன்று இலங்கை வரும் நிருபமா ராவ் இலங்கை அரசின்
முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். இதேவேளை, முக்கிய
பேச்சுவார்த்தைகளி லும் இவர் கலந்து கொள்வார் என தமிழக செய்திகள்
தெரிவிக்கின்றன. அத்துடன் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின்
வேண்டுகோளுக்கு அமைய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா,
செயலாளர் நிருபமா ராவை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகவும் தமிழக செய்திகள்
தெரிவிக்கின்றன.
தை
29,
2011
Members of Sri Lanka's Tamil minority on Friday filed a lawsuit in the
United States against the island's president, seeking $30 million in
damages over alleged extrajudicial killings
Members of Sri Lanka's Tamil
minority on Friday filed a lawsuit in the United States against the
island's president, seeking $30 million in damages over alleged
extrajudicial killings. Activists from the Tamil diaspora spearheaded
legal action after President Mahinda Rajapakse quietly traveled to the
United States, in a test of how much deference US authorities show to
visiting heads of state. Bruce Fein, a prominent Washington lawyer, said
he filed the suit on behalf of three plaintiffs under a 1991 act that
allows for action in the United States against foreign officials over
torture and extrajudicial killings. "President Rajapakse will not escape
the long arm of justice secured by the Torture Victims Protection Act by
hiding in Sri Lanka," Fein said after the filing in the US District
Court in Washington.
(more...)
தை
29,
2011
6 இலங்கையர்
உட்பட
கொள்கலனில் அடைக்கப்பட்ட நிலையில் 219 பேர் மீட்பு
இலங்கையர்கள் அறுவர் உட்பட சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் 219 பேரை
மெக்ஸிகோ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ‘ட்ரக்’
வண்டியொன்றில் ரகசியமான முறையில் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட போது கைது
செய்யப்பட்டுள்ளனர். 177 ஆண்கள், 33 பெண்கள், ஒன்பது குழந்தைகள் அடங்கலாக
இந்த 219 பேரில், குவாத்தமாலாவைச் சேர்ந்த 169 பேரும், எல்சல்வடோரைச்
சேர்ந்த 22 பேரும், ஹொண்டூராஸ் நாட்டைச் சேர்ந்த 18 பேரும் அடங்குவதுடன் ஆறு
இலங்கையர்களும் இருந்துள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த நால்வரும் இதில் கைது
செய்யப்பட்டுள்ளனர். சோதனைச் சாவடியொ ன்றில் ‘ட்ரக்’ வண்டியை நிறுத்துமாறு
விடுத்த அறி வித்தலை மீறி சாரதி சென் றதால், அதனைத் துரத்திச் சென்று
பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதன்போதே 219 பேர் மிகவும்
மோசமான முறையில் ஈவிரக்கமின்றி கொண்டு செல்லப்பட் டமை தெரியவந்துள்ளது.
பின்னர் இவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இரண்டு பேர் பொலிஸா ரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தை
29,
2011
காலநிலையில் திடீர் மாற்றம்
கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் சில தினங்களுக்கு கனத்த மழை
இலங்கைக்கு அருகில் வீசும் காற்றின் சீரற்ற தன்மையால் காலநிலையில் திடீரென
மாற்றம் ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானி லையாளர் சமிந்திர
டி சில்வா நேற்றுத் தெரிவித்தார். இம்மாற்றத்தின் விளைவாக கிழக்கு மாகாணம்
உள்ளிட்ட பிரதேசங்களில் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு கனத்த மழை
பெய்யும் என்னும் அவர் கூறினார். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24
மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை வீழ்ச்சி ரன்டம்பே நீரேந்து
பகுதியில் 100.5 மில்லி மீற்றர்களாகப் பெய்துள்ளது என்றும் அவர்
குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், தற்போது வடகீழ் பருவபெயர்ச்சி
மழைக்கால நிலையே நிலவுகின்றது. என்றாலும் வடகிழக்காக நாட்டுக்குள் வருகின்ற
காற்றில் சீரற்ற தன்மை திடீரென ஏற்பட்டிருகின்றது. இதன் விளைவாக கிழக்கு,
தெற்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் இடையிடையே கனத்த மழை
பெய்யக்கூடிய காலநிலை ஏற்பட்டிருக்கின்றது. அதேநேரம் பிற்பக லிலோ,
மாலைவேளையிலோ சப்ர கமுவ, மேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை
மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இதேவேளை கிழக்கு மற்றும்
மன்னார் கடற்பரப்புக்கள் சிறிதளவில் கொந்தளிப்பாகக் காணப்படும். நேற்று காலை
8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி பதுளை,
ஹந்தகெட்டியவில் 93.3 மி. மீ. மகியங்கனையில் 77.9 மி. மீ., ரந்தெனிகலயில்
74.5 மி. மீ. என்ற படி மழை பெய்துள்ளது என்றார்.
தை
29,
2011
இலங்கை தூதரகம் நோக்கி பேரணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
சென்னையில் இலங்கை தூதரகம் நோக்கி நேற்று
பேரணி சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பொலிஸார் கைது செய்தனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி
வருகின்றனர். அவர்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பின்மை தொடர்கிறது.
எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவும்,
தமிழக மீனவர்கள் உயிரை பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும்
எடுக்கக் கோரி மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை இலங்கை தூதரகம்
நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உட்பட
100 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
தை
29,
2011
நம்பிக்கை ஒளியேற்றும் போராட்டத் தீ
துனீசியா என்ற வார்த்தை ஆப்பிரிக்க மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை
ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அந்நாட்டு மக்கள்
தங்களை வதைத்துக் கொண்டிருந்த அரசை வெளியேற்றியுள்ளனர். மக்களின் இந்த
வெற்றி ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற நாடுகளுக் கும் பரவி வருவதால் பல
ஆட்சியாளர்களுக்கு கிலி பிடித்துள்ளது. எகிப்து மற்றும் ஏமன் நாடு களிலும்
கொள்கை மாற்றத்தோடு கூடிய மாற்று தேவை என்ற முழக்கங்களோடு லட்சக்கணக்
கானோர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக் கிறார்கள்.1987 ஆம் ஆண்டில்
பிரதமராக அபேதின் பென் அலி பொறுப்பேற்றார். ஒரே மாதத்தில் ஜனா திபதியாக
இருந்த ஹபீப் போர்கிபாவை அப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சியைக் கைப்
பற்றினார். அதன்பிறகு “மக்கள்” ஆதரவோடு தொடர்ந்து பதவியில் நீடித்தார்.
1994 ஆம் ஆண்டு தேர்தலில் 100 விழுக்காடு வாக்குகளும், 1999 ஆம் ஆண்டு
நடந்த தேர்தலில் 99.4 விழுக்காடு வாக்குகளும் அவருக்கு விழுந்ததாக
அறிவிக்கப் பட்டது. தங்களுக்கு ஒரு எடுபிடி கிடைத்துவிட் டார் என்ற
மகிழ்ச்சியில் அமெரிக்க நிர்வாகமும் ஆமாம் என்று தலையாட்டியது.
(மேலும்....)
தை
28,
2011
புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் கொழும்பில் கைது!
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நெருங்கிய நண்பராக இருந்த
ஒருவர் கொழும்பில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக
அறிய முடிகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள பிரஸ்தாப நபர் கொழும்பின் மிகப் பெரும் வர்த்தகர்களில்
ஒருவராக விளங்கும் கோடீஸ்வரர் என்றும் மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிது காலம் அவர் வெளிநாட்டிலும் வசித்துள்ளார். கொழும்பு 07 மற்றும்
வெள்ளவத்தைப் பிரதேசங்களில் இரண்டு ஹோட்டல்களைக் கொண்டிருக்கும் குறித்த
கோடீஸ்வரர், பன்னிரண்டு வர்த்தக நிலையங்களுக்கும் உரிமையாளராக இருந்துள்ளார்.
(மேலும்....)
தை
28,
2011
வீடுடைப்பு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களுடன்
தொடர்பு
யாழ்.
கோப்பாய் பகுதியில் 9 சந்தேக நபர்கள் கைது
யாழ். நகரில் வீடுடைப்பு, வழிப்பறி, கொள்ளைச்
சம்பவங்களுடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.
கோப்பாய் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பொன்றின் போது
சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்ட போதே
ஏனைய எட்டுப் பேரும் யாழ். குருநகர் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட தாக
யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.
யாழ். கோப்பாய் பகுதியில் வீடுடைப்பு சம்பவம் தொடர்பாக சுற்றிவளைப்பை
மேற்கொண்ட இராணுவத் தினர் இரவு சந்தேக நபரை கைது செய்து பொலிஸாரிடம்
பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
(மேலும்....)
தை
28,
2011
சிறுபான்மைக்
கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி
மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்
தேர்தலில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் கூட்டணிகளாகவும்,
சுயேச்சைகளாகவும் இணைந்தும் தனித்தும் போட்டியிடுகின்றன. அரசாங்கத்தின்
பங்காளிக் கட்சிகளாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள்
முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதுடன் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுகின்றது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில்
இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள், பிரஜைகள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்து
களமிறங்கியுள்ளன.
(மேலும்....)
தை
28,
2011
இலங்கையில் இனப்பிரச்சினை விடையத்தில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு
இன்றியமையாததொரு விடயமாகும்!
இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மிக
மோசமான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலான தமிழ் மக்கள் தாங்கள் உணர்வுகளற்ற
நடைப்பிணங்களாக வாழ்கின்றோமே என்ற உள்ளக் குமிறல்களுடன் வாழ்ந்து
வருகின்றனர். இந்த நிலமை ஒரு சாதாரண பொது மகனுக்கு மட்டுமல்ல பெரும்பாலான
தமிழ் அரசியல் தலைமைகளின் நிலையும் இதுதான்.
(மேலும்....)
தை
28,
2011
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தின்
நல்லூர், வலிகாமம் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, தென்மேற்கு, சாவகச்சேரி
நகரசபை, சாவகச்சேரி பிரதேசசபை, பருத்தித்துறை நகரசபை, பருத்தித்துறை
பிரதேசசபை, வல்வெட்டித்துறை, வடமராட்சி வடக்கு, தெற்கு, காரைநகர்,
ஊர்காவற்துறை, வேலணை ஆகிய 16 சபைகளுக்கும் இன்று வேட்புமனுத் தாக்கல்
செய்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு (நெடுங்கேணி), வவுனியா
தெற்கு (தமிழ் பிரதேசசபை), வெங்கல செட்டிகுளம் ஆகிய 03 சபைகளுக்கும்,
மன்னாரின் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேசசபை, நானாட்டான், முசலி, மாந்தை
மேற்கு ஆகிய 05 சபைகளுக்கும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ததுடன்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைந்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு,
மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய 04 பிரதேச சபைகளுக்கும் இன்று வேட்புமனுத்
தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சியின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய
சபைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனு நேற்று
நிராகரிக்கப்பட்டபோதிலும், இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியில்
அச்சபைகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இன்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கரைச்சி சபைக்கான வேட்புமனுவையும் தாக்கல்
செய்துள்ளது. அம்பாறையின் நாவிதன்வெளி, திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை,
ஆலையடிவேம்பு, பொத்துவில் ஆகிய 06 பிரதேச சபைகளுக்கு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் சம்மாந்துறைக்கான
வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. திருமலை மாவட்டத்தில் திருமலை நகரசபை,
தம்பலகமம், உப்புவெளி, மூதூர், குச்சவெளி, ஈச்சிலம்பற்று, மொறவௌ, தம்பலகமம்
உள்ளிட்ட சபைகளுக்கு தமிழக் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல் செய்தநிலையில்
தம்பலகமம், மொறவௌ ஆகிய சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தை
28,
2011
அ’புரம்
சிறைச்சாலை போராட்டம் முடிவு; காயமடைந்த கைதி மரணம்

அநுராதபுரம் சிறைச்சாலை மோதல் சம்பவத்தில்
காயமடைந்த மற்றொரு கைதி நேற்று முன்தினம் இரவு மரணமடை ந்துள்ளார். இதன்
மூலம் இறந்தோர் தொகை 2 ஆக உயர்வடைந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் கூறியது.
இதேவேளை, கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டமும் முடிவடைந்துள்ளது. அநுராதபுரம்
சிறைச்சாலை கைதிகள் கடந்த 24ம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்றைய தினம் மாலை கைதிகளுக்கும் அதிகாரி களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில்
ஒரு கைதி கொல்லப்பட்டதோடு 8 அதிகாரிகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டிருந்த அநுராதபுரம் போதானேக
மவைச் சேர்ந்த சதுன் சானக குமார (24) என்பவரே நேற்று முன்தினம் இரவு
இறந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின. இதேவேளை மேற்படி மோதல் சம்பவம்
குறித்து ஆராய சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் மேலதிகச் செயலாளர்
தலைமையிலான குழு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த வாரம்
இதன் அறிக்கை அமைச்சருக்கு கையளிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சு அதிகாரி ஒருவர்
கூறினார். நேற்று முன்தினம் மீண்டும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்ட
கைதி கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதா கவும் சிறைச்சாலை, புனர்வாழ்வு
அமைச்சு கூறியது.
தை
28,
2011
அமெரிக்காவிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்
அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் நாடு திரும்பினார். கடந்த 19ம் திகதி
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி தமது ஒரு வாரகால பயணத்தை
முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை
வந்தடைந்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
தை
28,
2011
குச்சவெளி நீர்க்கசிவுகள் பூகம்பத்தின் அறிகுறியல்ல
-
பூகற்பவியலாளர்கள்
குச்சவெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தைப்
பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட பூகம்பமோ, எரிமலை
வெடிப்புக்கான முன்னறிகுறியோ காரணமல்ல என்று புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும்
சுரங்க பணியக பூகற்பவியலாளர்கள் நேற்று அறிவித்தனர். நிலத்தடி
நீர்மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு காரணமாக உருவான அமுக்கத்தின்
விளைவாகவே இந்நீர்க்கசிவுகள் ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆகவே
இந்நீர்க்கசிவுகள் ஏற்பட்ட பிரதேசத்தின் 50 முதல் 100 மீற்றர்கள் வரையான
பகுதிக்கு தற்காலிகமாக செல்லுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரதேசவாசிகளுக்கு
அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
(மேலும்....)
தை
28,
2011
யாழ். பொலிஸ்
நிலையத்துக்கு தமிழ்ப் பொலிஸார் நியமனம்
யாழ். மாவட்டத்தில் இருந்து பொலிஸ்
சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டு பயிற்சியை முடித்துக் கொண்ட தமிழ் பொலிஸ்
கான்ஸ்டபிள்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையங்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையால் மக்கள்
தமது முறைப்பாடுகளை தமிழில் பதியவும், பொலிஸ் பதிவு சம்பந்தமான ஆவணங்களை
பெற்றுக் கொள்ளவும் மக்களுக்கு வசதி கிட்டியுள்ளது. புதிதாக சேவையாற்றும்
தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பயிற்சியின் போது சிங்கள, ஆங்கில மொழிப்
பயிற்சி வழங்கப்பட்டதால் இவர்கள் மற்றைய மொழிகளிலும் சரளமாக உரையாடி
வருகின்றனர்.
தை
28,
2011
இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வியடையும் அபாயம்
-
அமெரிக்க ஜனாதிபதி
கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இந்தியா, சீனாவிடம்
அமெரிக்கா தோல்வி அடையும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி
ஒபாமா எச்சரித்துள்ளார். ஒபாமா அமெரிக்க பாராளுமன்றத்தில் வருடாந்திர உரை
நிகழ்த்துவது வழக்கம். அதன்படி அவர் நேற்று முன்தினம் உரையாற்றினார். ஒரு
மணி நேரம் அவர் பேசிய போது அவர் 3 முறை இந்தியாவை பற்றி குறிப்பிட்டார்.
இந்தியாவுடன் புதிய பங்குதாரராக அமெரிக்கா சேர்ந்து உள்ளது. புதிய நட்பு
பாலத்தை என் நிர்வாகம் கட்டி உள்ளத. உலகில் அமைதியையும், வளத்தையும்
ஏற்படுத்துவதற்காக என் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக
இந்த புதிய நட்பு பாலம் கட்டப்பட்டுள்ளது.
(மேலும்....)
தை
28,
2011
நெல்சன் மண்டேலா
மருத்துவமனையில் அனுமதி
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன்
மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என அவரது நெருங்கிய
வட்டாரங்கள் தெரிவித்தன. இன வெறிக் கொள்கையினை எதிர்த்து போராடி சிறை சென்ற
நெல்சன் மண்டேலா (92), கடந்த சில மாதங்களாக பொது மக்களை சந்திப்பதை
தவிர்த்து வந்தார். உடல் நிலை காரணம் என கூறப்பட்டு வந்த போதிலும்,
கடந்தாண்டு நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் நிறைவு நாள்
நிகழ்ச்சியின் போது தான் கடைசியாக பொது மக்களை சந்தித்தார். அதன் பின்னர்
கேப்டவுணில் உள்ள தனது இல்லத்தில் தான் வசித்து வந்தார். இந் நிலையில்
நேற்று முன்தினம் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால்
கேப்டவுண் நகரிலிருந்து ஜோஹன்ஸ்பெர்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு
கொண்டு வரப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர் எனவும், இது வழக்கமான
உடல் பரிசோதனை தான் தற்போது அவர் உடல் நிலை நன்றாக உள்ளது என்றும்
ஜோஹனஸ்பெர் ஆர்ச் பிஷப் டெஸ்மான்டூட்டு தெரிவித்தார்.
தை
28,
2011
இந்தியக் குடியரசு தின விழாவில்
இராணுவ
வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு
இந்தியாவின் 62 வது குடியரசு தினம் நாடு
முழுவதும் மிகவும் உற்சாகத்தோடும் கோலாகலத்தோடும் கொண்டாடப்பட்டது. தலைநகர்
டில்லியில் வழக்கமான உற்சாகத்தோடு நடைபெற்ற அணிவகுப்பு இந்தியாவின் இராணுவ
வலிமையை பறைசாற்றுவதாக அமைந்தது. வேற்றுமையில் ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக
இராணுவம், பொலிஸ் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு இருந்தது.
அணிவகுப்பும், கலாசார நிகழ்ச்சிகளும் சுமார் 100 நிமிஷங்கள் நடைபெற்றன.
(மேலும்....)
தை
27,
2011
நீங்கள்
தேர்தல் திருவிழாவில்.....? நாங்கள் வாழ்வைத் தேடும் போராட்டத்தில்.....? -
அப்பாவி
மக்கள்

(நன்றி:
(படம்)பூந்தளிர் இணையம்)
தை
27,
2011
பூநகரி - பச்சிலப்பள்ளி பிரதேச சபைகளிற்காக TNA தாக்கல் செய்த வேட்பு
மனுக்கள் நிராகரிக்கப்படலாம்!
யாழ் மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தலில் எதிர்பார்த்ததைப் போன்று தேர்தல்
பரபரப்பு சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் பொது சன ஐக்கிய முன்னணி,
ஈபிடிபி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ்
மற்றும் இடதுசாரிக்கட்சிகள் இணைந்த கூட்டு வெற்றலைச்சின்னத்தில்
போட்டியிடுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எதிர்பார்க்கப்பட்டதைப்
போன்றே சிவாஜிலிங்கமும் உள்ளீர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை
நகரசபைக்கான முதன்மை வேட்பாளராக சிவாஜிலிங்கம் அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.
புளொட், ரெலோ, (சுரேஸ் அணி) தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என
பல கட்சிகள் முதன் முறையாக இணைந்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளன.
(மேலும்....)
தை
27,
2011
யாழ்ப்பாண மாவட்டத்தில்
16 உள்ளுராட்சி சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாக்கல்
செய்த மனுக்கள் நிராகரிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 உள்ளுராட்சி சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக
தெரியவருகிறது. இதற்கு முன்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற
பெயரில் பதிவுசெய்திருந்த ஆளும் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு என்ற பெயரில் வேட்புமனுவை தாக்கல் செயத்தால், அவை
நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் யாழ்ப்பாண மாவட்டத்தில்
வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த மூன்று சுயேட்சைக் குழுக்களின்
வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஆளும் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு நுவரெலியா பிரதேச சபை, லிந்துல-தலவாக்கலை நகர சபை
ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்காக தாக்கல் செய்திருந்த, வேட்புமனுக்களும்
நிராகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத் தரப்பினர் தமது கடசியினுடைய பெயரை தவறாக
எழுதியதன் காரணமாக இவ்வாறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜீரீஎன்னிற்கு
வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
தை
27,
2011
மன்னாரில் முஸ்லீம்காங்கிரஸ் வேட்புமனுவை தாக்கல்
செய்ய முடியாது போனது.
மன்னார் நகர சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஸ்ரீலங்கா முஸ்லீம்
காங்கிரசுக்கு முடியாமல் போயுள்ளது. உள்ளுராட்சி சபைகளுக்காக வேட்புமனு
தாக்கல் இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்துடன் இதற்கு முன்னர், முஸ்லீம்
காங்கிரஸால் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்
மன்னார் நகர சபைக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
தை
27,
2011
முல்லைத்தீவில் சிறீரங்காவின் பிரஜைகள் முன்னணியின் பின்னால் அரசாங்கம்!
வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட 5
அரசியல் கட்சிகளும், 3 சுயேச்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்தத்
தேர்தலில் போட்டியிடுவதற்கென மொத்தமாக 5 சுயேச்சை குழுக்கள் வேட்பு மனு
தாக்கல் செய்திருந்த போதிலும், அவற்றில் இரண்டு சுயேச்சை குழுக்களின்
மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய
கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி ஆகிய 3 கட்சிகளும் வவுனியா
மாவட்டத்தில் உள்ள 4 பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்றன. இலங்கைத்
தமிழரசுக் கட்சி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெங்கலச் செட்டிகுளம்
பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளில்
போட்டியிடுகின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வவுனியாவில் தனித்து
வெங்கலச் செட்டிகுளம், வவுனியா தெற்கு தமிழ் பிரிவு ஆகிய 2 பிரதேச
சபைகளிலும் போட்டியிடுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்காவின்
தலைமையிலான பிரஜைகள் குழு நான்கு பிரதேச சபைகளுக்கும் வேட்பு மனு தாக்கல்
செய்திருந்த போதிலும் துணுக்காய் பிரதேச சபைக்கான அதன் வேட்பு மனு
நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரஜைகள் குழு மூன்று பிரதேச சபைகளில்
போட்டியிடுகின்றது.
தை
27,
2011
தமிழ் அரசியற் தலைமை என்பது என்ன?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையான உறுதியான தமிழ்த் தலைமையா?
(லெனின் பெனடிக்ற்)
தமிழ்மக்களுக்கான அரசியற் தலைமை என்று
வந்தால் கடந்த மூன்று தசாப்தங்களாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும்,
இந்நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் குறிப்பிட வேண்டும். இதில்
விஷேடமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் கடந்த 30 ஆண்டுகளில்
வடகிழக்குப் பிரதேசத்தில் எவ்வித பொருளாதார அபிவிருத்தியையும்
முன்னெடுக்காமல் ஆளும் அரசுக்களைக் குறைகூறி மட்டுமே அரசியல் நடாத்தி தமிழ்
மக்களின் வாக்குகளை அபகரித்துப் பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்தவர்கள்
என்றபெருமை இவர்களையே சாரும். அதைவிடவும் விஷேடமாக எதையுமே இந்தக் கூட்டம்
செய்யாது என்று சந்தேகமறத் தெரிந்தும் இதே கூட்டத்தை மீண்டும் மீண்டும்
பலமுறை பாராளுமன்றப் பிரதிநிதிகாளாகத் தேர்ந்தெடுத்த பெருமை வடகிழக்கு
மக்களையே சாரும். அதுவே இலங்கைத் தமிழ் மக்களின் இழந்த உரிமைகளை
வென்றெடுப்பதற்கான தகுதியினதும் தகுதியின்மையினதும் உரைகல்லாகும்.
(மேலும்....)
தை
27,
2011
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தலை தூக்க அனுமதிப்பது, தமிழ் மக்களுக்கு
ஆபத்தானது!
(செங்குட்டுவன்)
கொடூரப் புலிகளின் பினாமியாக இருந்து, அவர்கள் செய்த வகை தொகையற்ற
கொலைகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை,
உள்ளூராட்சி தேர்தலைப் பயன்படுத்தி மீண்டுமொரு முறை தமிழ் மக்கள் மத்தியில்
தனது அசிங்கமான தலையை நீட்டியுள்ளது. அது தலையை நீட்டியது மட்டுமல்ல,
அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ் கட்சிகளின் அரங்கத்தையும்
சீர்குலைப்பதற்காக, தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழ் தரப்பின் பேரம் பேசும்
பலத்தை அதிகரித்தல் என்ற வழமையான போலிக் காரணங்களைக் காட்டி
உடைத்தெறிந்துள்ளது. தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு
கட்சிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து உள்ளூராட்சித் தேர்தலில்
போட்டியிடுவதற்காக, அவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய பெரும்பான்மையான
கட்சிகளை விட்டு வெளியேறிச் சென்றுமுள்ளன. அதன் மூலம் தமிழ் கட்சிகளின்
அரங்கத்தை எப்படியும் உடைத்துவிட வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
நோக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
(மேலும்....)
தை
27,
2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
- 9வது மற்றும் 10வது நாள்
நிகழ்வுகள்!
நடைபயண வீரர்களுக்கு மிகவும் சிறப்பான உணவு
வகைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை, நடைபயண தலைமைக் குழுவினருக்கு
பொருளாதாரப் பிரச்சினை காரணமாக அவர்களுக்கு தகுதியான அளவுதான் உணவாக
தருகிறார்கள். நல்ல உணவு கொடுக்க முடியவில்லையே என்று நடைபயண
தலைமைக்குழுவில் உள்ளவர்கள் மிகவும் கவலையடைகிறார்கள். ஆயினும் வீரர்கள்
சாப்பாட்டை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. எங்களுக்கு நடக்கும் போது தேனீரும்
பாணும் கொடுத்தாலே போதும், எப்படியாவது நடைபயணம் வெற்றிபெற வேண்டும்,
நாங்கள் முகாமில் சிறப்பான உணவு வகைகள் எதுவும் சாப்பிட்டதில்லை. அதனால்
எங்களுக்கு எந்த உணவையும் சாப்பிட்டுப் பழக்கம்தான் ஆகையால் நீங்கள்
யோசிக்க வேண்டாம், நடைபயணம் வெற்றிபெரும், நாங்கள் இன்னும் 5000 கிலோ
மீற்றர் துரத்தையும் நடந்து செல்வோம் என்று தங்களது மன உறுதியை நடைபயண
குழுத் தலைவரிடம் வெளிப்படுத்தினர்.
(மேலும்....)
தை
27,
2011
Request for Flood Relief Assistance
The High Commission of Sri Lanka
in Canada wishes to draw the attention of the Sri Lankan expatriate
community and well-wishers to the recent disaster in Sri Lanka due to
the severe rainfall which continued for over three weeks. As a result,
over a million people have been affected in Sri Lanka and around 284,000
people are presently housed in welfare centres. Ampara and Batticaloa
are the worst affected districts. The Ministry of Disaster Management is
soliciting financial assistance to provide relief services to the
victims.Financial contributions could be directed to this High
Commission by sending a cheque drawn in favour of the “High Commission
of Sri Lanka”.Every contribution will be acknowledged with an official
receipt and the financial contributions will be transferred to the
General Deposit Account (GDA) of the Government of Sri Lanka, which will
eventually be utilized by the Disaster Management Centre (DMC) for
relief assistance measures.
High Commission of Sri
Lanka, Ottawa, January 20, 2011
தை
27,
2011
ஜனநாயகத்துக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இலங்கையில் இல்லை

இலங்கையில் இலவச கல்வி நாட்டின் தேசிய
தலைவர்களினதும் முன்னேற்றகரமான போராட்டங்களினதும் காரண மாகவே கிடைத்தது.
1947 முதல் பல்கலைக் கழகம் வரையிலான இலவச கல்வியை பெற்ற நாம் அனுபவித்து
வருகிறோம். கல்விக்கான முதலீடு மக்களின் சுகாதாரத்துக்கான மறைமுக முதலீடு
என்பதை நான் வலியுறுத்திக் கூறினேன். 1960 அளவில் நாட்டின் சுகாதார புள்ளி
விபரங்களில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை காணமுடிந்தது. இலவச கல்வியை
முதல் பரம்பரை தாய்மாரின் படிப்படியான முன்னேற்றத்தையடுத்தே இந்த நிலை
ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு எமது தடுப்பூசி எல்லை 100 சதவீதமாகும்.
(மேலும்....)
தை
27,
2011
We like to inform you that the place is booked for PMC Canada Annual
General Meeting on Saturday, February 12, 2011.
Location: York Civic
Centre (Council Chambers)
Address: 2700
Eglinton Avenue West ( Eglinton & Keele)
Toronto, ON. M6M 1V1
Date and time: February 12,
2011 at 2:00 pm
Please allocate some time join
this meeting to input you ideas and interest.
"WE NEED MORE PARTICIPANTS FOR
THIS MEETING"
தை
27,
2011
துனிசியா
கலவரத்தில் பலியானோருக்கு ரூ. 3 ஆயிரம் கோடி உதவி
துனிசியாவில் கடந்த ஒரு மாத காலமாக அரசியல்
கலவரம் வெடித்தது. ஜனாதிபதியாக இருந்த ஜைன் அல் ஆபிதீன் பதவியில் இருந்து
விரட்டப்பட்டு புதிய இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் கலவரத்தில்
பலியானோர் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 3 ஆயிரம் கோடி நிதி உதவியை துனிசிய
அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை ஊரக மேம்பாடு அமைச்சர் நெஜிப் தெரிவித்தார்.
இதுபோல வேலை இல்லாதவர்களுக்கு மாதந்தோறும் 150 தினார் உதவித் தொகை வழங்கவும்
முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஊழல் புகார் காரணமான பல்வேறு
மகாணங்களிலுள்ள கவர்னர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
தை
27,
2011
யாழ்நகர்
முற்றவெளியிலிருந்து தனியார் பஸ்கள் சேவையில்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாட்டங்களுக்கு
பஸ் சேவைகளை நடாத்திவரும் சகல தனியார் பஸ்களும் முற்றவெளி
தரிப்பிடத்திலிருந்து தான் சேவையை நடாத்த வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க
அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவித் துள்ளார். தனியார் போக்குவரத்து
பஸ் உரிமையாளர்களுடன் நடாத்திய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டதற்கு
அமைவாக இவ் ஒழுங்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பகலிலும் சரி,
இரவிலும் சரி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு கொழும்பு,
கண்டி, திருகோணமலைக்கு சேவையை நடாத்தும் தனியார் பஸ்கள் முற்றவெளியில்
தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். அண்மைக் காலமாக இப் பஸ்கள்
யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதியில் தரித்து நின்று
பயணிகளை ஏற்றிவருவதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி நிலையேற்பட்டு
வருகிறது. வெளி மாவட்ட தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றும் செயல்பாட்டை
போக்குவரத்துப் பொலிஸார் கண் காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
முற்றவெளி தனியார் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் விரைவில் ஏற்படுத்தி
கொடுக்கப்படவுள்ளன.
தை
27,
2011
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப்
போட்டியிடவுள்ளது
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக, அந்தக்
கட்சியின் ஊடகச் செயலாளர் அசாத் மௌலான தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு
மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் தற்போது நடைபெறாத நிலையில்,
அம்பாறை மாவட்டத்துக்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் தமிழ்
மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் தமது கட்சி
தனித்துப்போட்டியிடவுள்ளதகாவும் அவர் கூறினார்.தமிழ் மக்கள் விடுதலைப்
புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களிலும் இரு
கட்சிகளுக்குமிடையிலான நல்லிணக்கம் தொடரும் என்றும் அவர்
குறிப்பிட்டார்.தற்போதுள்ள நிலையில் தமது கட்சியின் அரசியல் எதிர்காலம்
கருதியே தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்துள்ளதாகவும், தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் அசாத் மௌலான தெரிவித்தார்.
தை
27,
2011
பின்னணி பாடகர்
எஸ். பி. பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.
பாலசுப்பிரமணியம் இந்த ஆண்டு பத்ம பூஷன் விருது பெறுகிறார். பின்னணி பாடகர்
இசை அமைப்பாளர், நடிகர் ஆகிய துறைகளில் அவர் சிறப்பாக பணியாற்றியதற்காக
இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ்
பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜனுக்கு பத்மஸ்ரீ விருது
அறிவிக்கப்பட்டு உள்ளது. இலக்கியம் மற்றும் கல்விக்கு சிறந்த சேவை
செய்ததற்காக அவர் இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். மேலும்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி. வி. சந்திரசேகர் (பரத நாட்டியம்), டாக்டர் சூரிய
நாராயணன் ராமச்சந்திரன் விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறை ஆகியோருக்கும்
பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவ்வை நடராஜன் தவிர தமிழ்நாட்டை
சேர்ந்த நடிகர் ஜெயராம் (சினிமா) எம். கே. சரோஜா (பரத நாட்டியம்), எஸ். ஆர்.
ஜானகிராமன் (கர்நாடக இசைப்பாடகர்), கோவை நாராயணராவ் ராகவேந்திரன் (விஞ்ஞானம்
மற்றும் பொறியியல்), மெக்கா ரபீக் அகமது மற்றும் கைலாசம் ராகவேந்திரராவ் (வர்த்தகம்
மற்றும் தொழில்), டாக்டர்கள் சிவபாதம் விட்டல், மாதனுர் அகமது அலி (மருத்துவம்)
ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
(மேலும்....)
தை
27,
2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு
போட்டியிடவுள்ளது
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்த்
தேசிய விடுதலை கூட்டமைப்பு போட்டியிடவுள்ளது. முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் என். ஸ்ரீகாந்தாவை தலைவராகவும் முன்னாள் எம்.பி. எம்.கே.
சிவாஜிலிங்கத்தை செயலாளராகவும் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
இயங்கிவருகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபை
தலைமைவேட்பாளராக எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடவுள்ளார். ஏனைய சபைகளிலும்
தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள்
நியமிக்கப்படவுள்ளனர்.
(மேலும்....)
தை
27,
2011
உள்ளுராட்சி சபைத் தேர்தல்
வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத்
தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று
நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. இதன்அடிப்படையில் பல பிரதான அரசியல்
கட்சிகள் இன்றைய தினம் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர்,
அதற்கு எதிர்ப்புகளை வெளிப்படுத்த அரசியல் கட்சிகளுக்கு ஒன்றறை மணி நேரம்
வழங்கப்படவுள்ளது. இதற்கிடையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும்
நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், உள்ளுராட்சி சட்ட முறைகளுக்கு அமைய
வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதன்
அடிப்படையில் மக்கள் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல்
விளம்பர சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை வேட்பாளர்களின் இல்லத்தில் மாத்திரமே
பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேட்பாளர்கள் தமது
இல்லத்தையே தமது காரியாலயமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
தை
27,
2011
சென்னையில் தாக்குதல்: புலிகள் கைவரிசையா?.
சென்னையில் புத்த பிட்சுகளின் சேவை மையத்தில் நடந்த தாக்குதலில், புலிகளின்
கைவரிசை உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை துவங்கியுள்ளது. சென்னை, எழும்பூரில்
உள்ள புத்த பிட்சுகளின் சேவை மையம், "மகா போதி சொசைட்டி' செயல்பட்டு
வருகிறது. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தை
தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன், இரவு 9.30 மணிக்கு இந்த சேவை
மையத்திற்குள் நுழைந்த 15 மர்ம நபர்கள், உள்ளே தங்கியிருந்த இலங்கை பல்கலைக்
கழக துணைவேந்தர் உள்ளிட்ட நால்வரை தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களையும்
அடித்து நொறுக்கி விட்டு தப்பியது.
(மேலும்....)
தை
27,
2011
இந்தியாவின் பாதுகாப்பு, விண்வெளி ஏற்றுமதி தொடர்பாக விதிக்கப்பட்ட
கட்டுப்பாடுகளை நிறுத்த அமெரிக்கா திட்டம்
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளுக்கான ஏற்றுமதிகள்
தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக
அமெரிக்கா கூறியுள்ளது. அத்துடன் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கிரமமாக
திட்டமிடும் நாடுகளின் பட்டியலிட இந்தியாவையும் பராக் நிர்வாகம்
சேர்த்துள்ளது. இதன்படி ஒரு காலத்தில் நிராகரிக்கப்பட்ட நாடாக இருந்த
இந்தியா தற்போது சர்வதேச ரீதியில் ஆயுத கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும்
நாடுகளின் பட்டியலில் இடம்பிடித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மேலும்....)
தை
26,
2011
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர்
புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், மன்னார்
தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளருமான வி.ஸ்.சிவகரன் இன்று செவ்வாய்க்கிழமை
காலை 8.30 மணியளவில் மன்னார் மூர் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து
புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டார். எனினும் எவ்வித விசாரணைகளும் இன்றி பொலிஸ் நிலையத்தில்
தடுத்துவைக்கப்பட்டிருந்த இவரை மன்னரில் உள்ள சட்டத்தரணி ஒருவரின்
கோரிக்கைக்கு அமைவாக இன்று முற்பகல் 11 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்.
தை
26,
2011
62 வது குடியரசு தினம்
டில்லியில் அணிவகுப்புகள் துவங்கியது!

நாட்டின் 62வது குடியரசு தின விழா
இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை
முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டில்லியில் மட்டும் சுமார் 35 ஆயிரம் பாதுகாப்பு படைவீரர்கள் பாதுகாப்பு
பணியில் உள்ளனர். காலை 9.55 மணிக்கு துவங்கிய குடியரசு தின விழா 11.30 வரை
நடைபெறுகிறது. முன்னதாக காலை 9.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங், மத்திய
பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் தலைமையில் ராணுவ உயர்
அதிகாரிகள் அமர்ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
(மேலும்...)
தை
26,
2011
ஜனநாயகத்துக்கு
எந்த விதமான அச்சுறுத்தலும் இலங்கையில் இல்லை
1945 நவம்பர் 10ஆம் திகதி குறிப்பிடத்தக்கவொரு வருடமாகும். முழு
உலகையும் தமது பிடிக்குள் கொண்டுவர நாஸி ஜெர்மனியும் பாசிசவாத இத்தாலி
மற்றும் ஜப்பானும் எடுத்த முயற்சி சோவியத் யூனியன், பிரிட்டன் மற்றும்
அமெரிக்காவினால் அந்த வருடம் தான் தோற்கடிக்கப்பட்டது. அந்த வெற்றிதான் மே
9 ஆகும். யுத்தத்தில் தோல்வியுற்றதை ஏற்றுக்கொண்டு நாஸிகள் உடன்படிக்கையில்
கைச்சாத்திட்டுக் கொடுத்தது அன்றைய தினம்தான். நாஸி – பாசிசவாததுக்கு
எதிரான மக்கள் வெற்றியின் 65 ஆவது நிறைவை முழு உலகமும் கடந்த வருடம்
கொண்டாடியது. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் உலகில் எந்தவொரு யுத்தமும்
ஏற்படக்கூடாது என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. இந்த நோக்கத்துடன் பல
சர்வதேச அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த அமைப்புகளில் ஒன்று இளைஞர்
மற்றும் மாணவர்களின் உலக விழா ஆகும். இரு பிரதான நோக்கங்களுக்கமைய இந்த
அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
(மேலும்...)
தை
26,
2011
புலிகளின்
முன்னாள் உறுப்பினர்கள் யாழில் அரசியல் நடவடிக்கையில்,அரசியல்
சந்திப்புக்களில் குமரன் பத்மநாதன்!
இலங்கை அரசாங்கத்தினால் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக
சொல்லப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்தில்
அரசியல் சந்திப்புக்களை நடத்திவருவதாக தெரியவருகின்றது. கடந்த மூன்று
நாட்களின் முன்னர் யாழ்.பல்கலைக்கழக உயர் நிலை விரிவுரையாளர்களைச் சந்தித்த
அவர் அபிவிருத்திக்கு ஒத்துழைக்குமாறு கேட்டிருக்கின்றார்.
கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டும் செல்லாத விரிவுரையாளர்களை தொலைபேசி ஊடாக
தொடர்பு கொண்ட கே.பி மிரட்டல் பாணியில் அவர்களை உடனடியாக வருமாறு அழைத்ததாக
பல்கலைக்கழக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
(மேலும்...)
தை
26,
2011
உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை கண்ணியமாக நடத்த அரசாங்கம் விரும்புகிறது
உள்ளூராட்சிமன்ற தேர்தல்களுக்கான அரசியல்
கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் இப்போது பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
இதனால், இன்னும் பல வாரங்களில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல்
பிரசாரம் இப்போது இருந்தே படிப்படியாக சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.
கொழும்பில் பல இடங்களில் இருந்த சுவரொட்டிகளை மாநகரசபை ஊழியர்கள் நவீன
இயந்திரங்களைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தும் காட்சி களைப் பார்த்து, பலர்,
வேட்பாளர்களின் பிரசாரத்திற்கான சுவ ரொட்டிகளை ஒட்டுவதற்கு இவர்கள்
அடித்தளம் அமைத்துக் கொடுக் கிறார்களா என்று, கிண்டல் செய்த சம்பவங்களும்
இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
(மேலும்...)
தை
26,
2011
செயற்கை
சிறுநீரகங்களை உருவாக்கி இந்திய வம்சாவளி வைத்தியர் சாதனை
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை
சேர்ந்த வைத்தியர் செயற்கை சிறுநீரகங்களை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்.
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சூவோராய் என்ற மருத்துவ
விஞ்ஞானி செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். தேநீர்
கோப்பையை விட சற்று பெரியதான இந்த செயற்கை சிறுநீரகம், மனித உடலில் இயற்கை
சிறுநீரகம் செய்யும் அனைத்து பணிகளையும் செய்யும் வகையில்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறுநீரகம் முதலில், விலங்குகளின் உடலில்
பொருத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. விரைவில் மனித உடலில்
பொருத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படவுள்ளது.
(மேலும்...)
தை
26,
2011
மொஸ்கோ குண்டு வெடிப்பு
சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க ஜனாதிபதி உத்தரவு
மொஸ்கோவில் தற்கொலை குண்டுத் தாக்குதலில்
சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து அவர்கள் கடுமையாக
தண்டிக்கப்படுவார்கள் என்ற ரஷ்யாவின் ஜனாதிபதி ‘திமிற்றி மெட்டிடோவ்
எச்சரித்துள்ளார். மொஸ்கோவின் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை
குண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கு மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். இத் தாக்குதல் குறித்து 3 சந்தேக நபர்களை ரஷ்ய பொலிஸார்
வலைவிரித்து தேடுகின்றனர். இச் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட
தாக்குதலில் 2 பிரிட்டிஷ் பயணிகளும் கொல்லப்பட்டனர். கடந்த மார்ச் மாதத்தில்
மொஸ்கோவி லுள்ள நிலத்துக்கு அடியில் செல்லும் புகையிரதத்தில்
மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதுடன் 80க்கு மேல்
அதிகமானோர் காயமடைந்தனர். இத் தாக்குதலை இரு பெண் குண்டுதாரிகள்
மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ரஷ்யாவின் பிராந்தியங்களுக்கிடையிலான
முரண்பாடுகளே இத் தற்கொலை தாக்குதல்களுக்கு பின்னணியாக இருந்ததாக
அறிவிக்கப்படுகின்றது.
தை
26,
2011
குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்
குடாநாட்டில் அண்மைக் காலமாகக் குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம்
இருக்கின்றது. இவற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சியில்
பொலிஸாருடன் இராணுவத்தினரும் சேர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள். ஏனைய
மாவட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது யாழ். மாவட்டத்தில் குற்றச்
செயல்கள் குறைவாகவே காணப்படுகின்றன. குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும்
முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் பொலிஸார் ரோந்து
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் மானிப்பாய், சுன்னாகம்,
கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அதிக குற்றச் செயல்கள் அண்மைக் காலமாக
இடம்பெற்றுள்ளன.
(மேலும்...)
தை
26,
2011
போர்த்துக்கல் தேர்தலில் கவாகோ சில்வா மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு
போர்த்துக்கலில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி அனிபல்
கவாகோ சில்வா மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம்
எதிர்வரும் 5 வருடங் களுக்குத் தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவிவகிப்பார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் கவாகோ சில்வா 53 வீதமான வாக்குகளைப்
பெற்றுள்ளதுடன், அனைத்துப் பெரும் பான்மைத் தரப்பினரது வாக்குகளையும் அவர்
பெற்றுள்ளார். கவாகோ சில்வாவின் போட்டியாளராக, விளங்கிய மனுவல் அலேல்க் 20
வீதமான வாக்குகளை மாத்திரமே பெற்றிருப்பதாக போர்த்துக்கல் அரசாங்க ஊடகமொன்று
செய்தி வெளியிட்டுள்ளது. போர்த்துக்கல் ஜனாதிபதியான சில்வா 2006 ஆம் ஆண்டு
மார்ச் 9ஆம் திகதி யிலிருந்து ஜனாதிபதியாகப் பதவி வகித்து வருகிறார்.
போர்த்துக்கல் எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு
அரசாங்கமும், அரசாங்கப் பிரதிநிதிகளும் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள
நிலையில் நடைபெற்ற தேர்தலில் சில்வா வெற்றிபெற்றுள்ளார்.
தை
26,
2011
6000 முஸ்லிம்கள்
மீள்குடியேற்றம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 6,000 முஸ்லிம்
குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்
தெரிவித்துள்ளார். இவர்கள் யாழ்ப்பாண நகரம், சாவகச்சேரி மற்றும் வேலணை ஆகிய
பகுதியில் மீள்குடியமர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். போரினாலும், இராணுவ
உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்தும் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு
வழங்கப்படுகின்ற உதவிகளைப் போன்றே முஸ்லிம் மக்களுக்கும் உதவிகள்
வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், அதற்கான வேலைத் திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
தை
26,
2011
பருத்தித்துறை -
யாழ்ப்பாணம் பிரதான வீதியில்
இடிக்கப்பட்ட பஸ்தரிப்பிடங்கள் மீண்டும் அமைப்பு
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் வீதி அகலமாக்குவதற்காக இடித்து
அகற்றப்பட்ட பயணிகள் தரிப்பிடங்களை, வீதியிலிருந்து பின் நோக்கி நகர்த்தி
புதிதாகக் கட்டும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஈடுபட்டுள்ளது.
இப்பிரதான வீதியில் மந்திகை, ஆவரங்கால், புத்தூர், சிறுப்பிட்டி, நீர்வேலி
ஆகிய இடங்களில் அந்தந்த இடங்களில் இருந்த பஸ் தரிப்பிடங்கள் வீதி அகல
மாக்கப்படும் போது இடித்து அழிக்கப்பட்டன. வீதி அகலமாக்கப்பட்ட தையடுத்து
பயணிகள் தரிப்பிடங்கள் இருந்த இடங்களில் புதிய அகல மாக்கப்பட்ட வீதிக்கு
அருகாக புதிதாகக் கட்டப்பட்டு வரும் பயணிகள் தரிப்பிடங்கள் சிலவற்றின்
கட்டடப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. ஏனைய பயணிகள் தரிப்பிடங்கள்
கட்டப்பட்டு வருகின்றன.
தை
26,
2011
ஜோர்ஜ், தயா மாஸ்டர் அடங்கலாக 11968 பேரும்
இராணுவத்திற்கு எதிராக குற்றங்களை இழைக்கவில்லை -
கோத்தபாய

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு
வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு
அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள்
இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான
செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல்
நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.
(மேலும்...)
தை
26,
2011
Tunisia
The 14th of January Front
On the
20th of January 2011 a number of
Tunisian radical left organisations, notably the PCOT (Communist Party
of the Workers of Tunisia) and the PTPD (Patriotic and Democratic Labour
Party), constituted a Front. This Front was named the «14th of January
Front» in reference to the date of President Ben Ali’s rout.The object
of the 14th of January Front is to undertake the organisation of the
resistance against the present transitional government, which still
includes leaders of Ben Ali’s party the RCD (Rassemblement
constitutionnel démocratique), and to build a popular alternative based
on the existing vigilante committees that have been constituted in a
number of neighbourhoods in Tunisia with the aim to defend the
inhabitants against the terror disseminated by RCD thugs and the
presidential police. The call is addressed to all the progressive
political, trade-union, associative forces, asking them to fulfil the
objectives intended by popular Tunisian revolution.
(more....)
தை
26,
2011
தெல்லிப்பழையில் சேகரிக்கப்பட்ட நிவாரணம் கிழக்கில் கையளிப்பு
கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென
தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்ட பொருட்கள் கிழக்கு மாகாண
பல்கலைக்கழக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் பெய்த
மழையைத் தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெல்லிப்பழை
பூமா விளையாட்டுக் கழகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருட்களே வலி. வடக்கு
பிரதேச செயலாளரிடம் கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைப்பதற்காக கழகத் தலைவர்
உமா மற்றும் கழக உறுப்பினர்களினால் கையளிக்கப்பட்டது. பொருட்களைப் பெற
பிரதேச செயலாளர் குறிப்பிட்ட பொருட்களை உடனடியாக கிழக்கு பல்கலைக்கழக
மாணவர்களிடம் கையளித்துள்ளார். இந்தப் பொருட்களில் பால்மா வகைகள் பிஸ்கட்
வகைகள் மற்றும் குடிநீர், சவுக்காரம் என பல்வேறு பொருட்களும் அடங்கியுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும். சுமார் அறுபதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள்
வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தை
26,
2011
view Batti & Amparai districts flood affected areas and Reliefs.
அண்மையில் கிழக்கில்
எற்பட்ட இயற்கை அனர்த்தங்கள்
(மேலும்...)
தை
26,
2011
How Prabhakaran shot dead Mahattaya near 'Red Chilly Garden!...

The details of the murder of former LTTE Deputy Leader, Mahendrarajah
alias Mahattaya is now being revealed by LTTE men in Germany. Reports
from Germany state that Baskaran,a close associate of Prabhakaran from
childhood in Velvettithurai had unfolded the long kept secret.Baskaran
worked in a Tamil magazine in Jaffna and later for a Tamil daily in
Colombo before proceeding to Germany after the killing of Mahattaya.
According to Baskaran's revelation, Mahattaya had continuously objected
to LTTE killings of innocent Sinhalese living in border villages and
that of Tamils opposed to the LTTE. The view point of Mahattaya had
angered Prabhakaran and the rift between the two had widened.
(more...)
தை
25,
2011
அரசியலுக்கு வழிவிட்ட இயற்கையும் , இணைந்த தமிழ் கட்சிகளும்.
(இரா.வி.விஸ்ணு)
ஒன்று சேர்வதென்று முடிவெடுத்துவிட்டீர்கள்
இதில் ஈ.பீ.ஆர் .எல் எப் அல்லது டெலோவோ பழையபடி அனைவரும் ஒன்றாவதில் என்ன
பிரசனை இருக்கிறது (சொத்து பிரச்னையா?) சில விட்டுக்கொடுப்புகளை செய்யலாமே.
சிலர் விவாதிக்கலாம் தங்கள் தலைவரை கொன்றவரிடம் சரணடைந்தவர்கள் அவர்களோடு
சேர முடியாதென்றும் மற்றவர்கள் அவர்கள் தமக்கு பிரசனையானவர்கள் என்றும்
இருதரப்பும் யோசிக்கலாம். பழையவற்றை மறந்து தமிழர்களுக்காகவும் தமிழ்
பகுதியில் ஒரு புதியதொரு அரசியல் சூழலை உருவாக்கத்தானே முயற்சிக்கிறீர்கள்
அப்படியிருக்க பழையவற்றை மறந்து ஒன்றுபடுங்கள் அது எமது சமூகத்துக்கே
ஆரோக்கியமானது. ஒருவேளை இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைக்கபடாத பட்சத்தில்
இக்கட்சிகளில் அரசியல் எதிர்காலம் இன்றைய நிலையிலேயே இருக்கும் என்றே
தோன்றுகிறது. ஆனாலும் இக்கட்சிகள் ஒன்றிணைக்கபடாத போதும் இவை இத்தேர்தலில்
தற்போது உருவாகியிருக்கின்ற புதிய கூட்டணிக்கு நிச்சயம் ஆதரவை
தெரிவிக்குமென்று எதிர் பார்க்கலாம். வாருங்கால தமிழ் அரசியல் சூழ்நிலை
ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்று பிராத்திப்போம்.
(மேலும்....)
தை
25,
2011
Nehru Gunaratnam –Leader of Canadian LTTE
(by
Roger Nallanayagam, Toronto, Ontario, Canada)

So to find out the veracity of the statement “some leadership is already
here” I did some research on this subject and the findings absolutely
shocked me. My entire search on the internet and print media confirmed
that one of the most important LTTE leaders in Canada is Nehru
Gunaratnam. He joined LTTE in mid of 1980 and since then he is an active
LTTE member. Until 2003 he was the ‘shadow-leader’ of the Canadian LTTE
and in 2003 the LTTE officially appointed him as their Political
Committee Member representing their Canadian operations.” This political
committee compromised of LTTE leader V.Prabhakaran, LTTE Political wing
leader S.P. Tamilchelvam, LTTE’s Ideologist Anton Balasingam , LTTE’s
Women Political Wing leader Thamilini and seven other members from
Diaspora each representing the country they live. This includes Canada,
Britain, Denmark, Switzerland, France, Germany and Australia. As such
Nehru Gunaratnam represented the LTTE in Canada.
(more...)
தை
25,
2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
- 6 வது, 7வது மற்றும் 8வது நாள்
நிகழ்வுகள்!
தமிழகத்துத் தமிழர்களும் மற்றும்
‘சிறிமா-சாஸ்திரி” ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையிலிருந்து இந்தியா வந்த
தமிழர்களும் மற்றும் நெல்லூர் மக்களும் நடைபயண வீரர்களுக்கு உற்சாக
வரவேற்பைக் கொடுத்தனர். நடைபயண தலைமைக் குழுவினர் ஆறுபேருக்கும் பொன்னாடைப்
போர்த்தி நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக் கூறினர். அன்பு மழையில்
திணறவைத்துவிட்டனர்.
மீண்டும் மதியம் 12:00 மணிக்கு தொடர்ந்த பயணம் நெல்லூர் தொடர்வண்டி
நிலையத்தின் வழியாக சென்று 12:20 மணிக்கு நெல்லூர் பாலத்தை கடந்தது.
(மேலும்....)
தை
25,
2011
The Federal Court of Canada has ruled that the World Tamil Movement of
Ontario and the World Tamil Movement of Quebec should forfeit all their
belongings to the Canadian Government.
The investigation on LTTE
activity in Canada began in 2002, when the RCMP Integrated National
Security Enforcement Team in Ontario launched what it called Project
Osaluki. The following year, a similar probe called Project Crible began
in Montreal. The Canada Border Services Agency and Royal Thai Police
Force were also involved. Police kept WTM activists under surveillance
as they organized rallies in Canadian cities and travelled to Sri Lanka
to meet the Tiger leadership. Some of the activists were photographed
holding heavy weapons. In 2006, police raided the WTM offices in Toronto
and Montreal, hauling away paraphernalia and documentation. It took
years to translate and analyze the seized evidence.
(more...)
தை
25,
2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதன்கிழமை வன்னியில் வேட்புமனுத் தாக்கல்
எதிர்வரும் புதன்கிழமை அன்று தமிழ் தேசியக்
கூட்டமைப்பு வன்னி மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சித் தேர்தலுக்கான
வேட்புமனுக்களைக் கையளிப்பதற்கு முடிவு செய்துள்ளது. வன்னி மாவட்டத்தில்
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களினால் வேட்புமனுக்கள் அந்தந்த மாவட்டத்
தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்படவுள்ளன.
(மேலும்....)
தை
25,
2011
Groundviews letter criticizing Cheran for signing GLF boycott
I am writing to you after seeing
your signature on the petition circulated by the JDS (Journalists for
Democracy in Sri Lanka) and RSF (Reporters without Borders) calling for
a boycott of the Galle Literary Festival. I was really sorry to see your
signature there. As you know I have dedicated the past thirty years of
my life to defend human rights and media freedom in Sri Lanka, and
continue to live and work in this country. The past years have been very
difficult ones, especially as we face continuing attacks and
intimidation from both state and non-state forces in the aftermath of
the war and in the absence of any credible process of political
negotiation with the Tamil community, let alone any process of
reconciliation or healing.
(more...)
தை
25,
2011
அநுராதபுரம்
சிறையில் மோதல்
அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மாலை
இடம்பெற்ற மோதலில் கைதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர்
காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிறைச் சாலை அதிகாரிகள் 8 பேரும்
அடங்குவதாக அநுராதபுர வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ. எம். ரி.
பி. விஜேகோன் தெரி வித்தார். இரு தரப்பினருக்கும் இடை யில் ஏற்பட்ட மோதல்
முற்றியதால் சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் கைதிகள்
காயமடைந்தனர். கைதிகள் கற்களால் நடத்திய தாக்குதலால் சிறைச்சாலை அதிகாரிகள்
காயமடைந்தனர். இந்த மோதலில் பிரதம ஜெயிலர் காமினி சில்வாவும்
காயமடைந்துள்ளார்.
(மேலும்...)
தை
25,
2011
குற்றச்
செயல்களைக் கட்டுப்படுத்த யாழ்.பொலிஸ் நிலையங்களில் சி.ஐ.டியினர்
யாழ். குடாநாட்டில் இடம்பெறும் குற்றச்
செயல்களை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் அங்குள்ள பொலிஸ் நிலைய
ங்களில் விசேட புலனாய்வு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்பொழுது யாழ். மாவட்டத் தில் அமைதியான சூழல் காணப் படுவதாக தெரிவித்த
பிரதிப் பொலிஸ் மா அதிபர், எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும்
சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் இரவு நேரங் களில் கூட அச்சமின்றி
எங்கும் சென்றுவரக் கூடிய அளவுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். கொலை, கொள்ளை, திருட்டு,
குற்றச் செயல்கள் இடம்பெற்ற பகுதி களில் இந்த விசேட புலனாய்வு அதிகாரிகள்
கடமையில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.
(மேலும்...)
தை
25,
2011
திகாமடுல்ல
மாவட்டத்திற்கு சீ - பிளேன் விமான சேவை
உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் அடுத்த
மாதம் முதல் திகாமடுல்ல மாவட்டத்திற்கு சீ-பிளேன் விமான சேவையை
நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட இராணுவ பயிற்சி
பாடசாலையின் தலைமை அதிகாரி கேர்ணல் ஜயம்பதி திலக்கரட்ன தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள குளங்கள் துரிதமாகப்
புனரமைப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;
யுத்தம் முடிவடைந்த பின்னர் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இவ்வாறான நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள குளங் களைப் புனரமைப்புச்
செய்து சீ – பிளேன் விமான சேவையை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
(மேலும்...)
தை
25,
2011
இந்தியாவுக்கான
விசாவினை யாழ். துணை தூதரகத்தில் பெறும் வசதி
யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ள இந்தியத்
துணைத் தூதரகத்தின் ஊடாக இந்தியாவுக்கான விசாக்கள் வழங்கப்பட்டு வருவதாக
உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரி வீ. மகாலிங்கம் தெரிவித்தார். நாளாந்தம் 50
தொடக்கம் 100 வரையான விசாக்களை தற்போது வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும்
நம்பிக்கை தெரிவித்தார். சாதாரணமாக விசா வழங்கும் நடைமுறையே இங்கும்
பின்பற்றப் பட்டு வருவதாகவும், விண்ணப்ப தாரியின் விபரங்கள் கொழும்பில்
உள்ள இந்திய உயர்ஸ்தானிகராயத் துக்கு அனுப்பிவைக்கப்பட்டு கடவுச் சீட்டு
மற்றும் உண்மைத் தன்மை தொடர்பில் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விசா
வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பணிகளை மேற்கொள்வ தற்காக
இந்தியாவில் இருந்து வரவ ழைக்கப்பட்டுள்ள மென் பொருள் கள்
கிடைக்கப்பெற்றதும் யாழ். மக்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்க முடியும்
என்றார்.
தை
25,
2011
யாழ்.
குடாநாட்டின் 24 பகுதிகளுக்கு இரணைமடு குளத்து நீர் விநியோகம்
கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வாழ்வாதார
பிரச்சினையும் யாழ். குடாநாட்டு மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சினையும்
உள்ளது. எனினும், கடந்த 8 வருடங்களாக இரணை மடு குளத்து நீரை யாழ். குடா
நாட்டுக்கு கொண்டு செல்வதற்கான திட்டம் 20 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில்
ஆரம்பிக் கப்படுவதன் மூலம் அபிவிருத்தியில் உச்சியை அடையவுள்ளோம் என்றே
சொல்லவேண்டும். இவ்வாறு யாழ். மாவட்ட அர சாங்க அதிபர் திருமதி இமெல்டா
சுகுமார் தெரிவித்தார். யாழ். – கிளிநொச்சி (இரணை மடு) நீர் விநியோக
அமுலாக்க கூட்டம் யாழ். செயலகத்தில் இடம் பெற்றது. இதில் அரசாங்க அதிபர்
திருமதி இ. சுகுமார் மேலும் தெரிவிக்கை யில், ஆசிய அபிவிருத்தி வங்கி,
பிரெஞ்சு அபிவிருத்தி நிறுவனம், அரசாங்கம் என்பவற்றின் நிதி பங்களிப்புடன்
இத் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.
(மேலும்...)
தை
24,
2011
மீண்டும் ஒரு தேர்தல்
தமிழ் கட்சிகள் தமிழ் மக்களின் தேவைகளை, விருப்புக்களை நிறைவேற்றுவார்களா...?
(சாகரன்)

தமிழ் கட்சிகளின் அரங்கம் தேர்தலை நோக்கமாக
கொண்டு அமைக்கப்படவில்லை. இதன் வளர்ச்சிப் போக்கில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பையும் ஐக்கியப்படுத்திக் கொண்டு செயற்படுதல் என்ற முயற்சியில்
விடாப்பிடியாக செயற்பட்டே வந்தது. அரங்கத்தின் இந்தப் பிடிவாதம்தான் தமிழ்
தேசியக் கூட்டமைப்பு, அரங்கம் இடையேயான சந்திப்புக்களும், அரசியல் தீர்வுத்
திட்ட வரைதலுக்கான குழு அமைப்புகளும், இதையொட்டிய சந்திப்புக்களும்,
அளவளாவல்களும், விருந்தோம்பல்களும். இதில் முன்னணியில் காட்டப்படாவிட்டாலும்
பலரின் காத்திரமான விடாப்பிடியான உழைப்பும் விட்டுக் கொடுப்புக்களையும் எமது
மூத்த தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஐயா அறிவார். இன்று இல்லாவிட்டாலும் என்றோ
ஒருநாள் இந்த விட்டுக் கொடுப்புகளின் உண்மைகள் உறங்காமல் வெளிவரும், வெளிவர
வேண்டும். தேர்தலுக்கு அப்பால் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம்.,
புனருத்தாரணம், புனர்வாழ்வு என்ற உடனடிப் பிரச்சனைகளும், அரசியல் தீர்வு
என்ற பிரதான பிரச்சனைகளும் அரங்கம், கூட்டமைப்பிடையே சேர்ந்து பயணிக்க
வேண்டிய கட்டாயம் நிர்பந்தம் தேவைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
(மேலும்...)
தை
24,
2011
குச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்கள்

திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திடீரென நிலத்தைப்
பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள்
வெளிப்பட்டதையடுத்து பிரதேசத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சதுப்பு
நிலப்பகுதியிலேயே இந்த நீர்க் கசிவுகள் உருவாகியுள்ளன. சுமார் 15 இடங்களில்
நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக்
கின்றன.இந்நிகழ்வு
குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருமலை மாவட்ட இணைப்பாளர்
ஏ.சி.ஏ. வாஹிர் கூறுகையில், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை
ஆற்றுக்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் சுமார் 15 இடங்களில் 500 மீட்டர்கள்
நீத்தில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள்
ஏற்பட்டுள்ளன. இந்த நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக்கும் பிரதேசத்திற்கு
மேற்காக 150 மீட்டர் தூரத்தில் சலப்பை ஆறு உள்ளது. அதே நேரம்
இப்பிரதேசத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கடல் காணப்படுகின்றது.
அத்தோடு இப்பிரதேசத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேற்காக கருவாட்டு
மலையும் இருக்கின்றது. இத்திடீர் நீர்க்கசிவுகள் உருவானதற்கான காரணத்தைக்
கண்டறியும் ஆய்வுகள் விரிவாக இடம்பெறுகின்றன என்றார்.
(மேலும்...)
தை
24,
2011
பனம் உற்பத்திகளை
நாடுமுழுவதும் சந்தைப்படுத்துவதற்கு திட்டம்
-
பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி
சீவரெத்தினம்
பனை அபிவிருத்திச் சபை பனம் உற்பத்திப்
பொருட்களை நாடுமுழுவதும் சந்தைப்படுத்த வசதியாக காகில்ஸ் புட்சிற்றி
நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்று செய்திருப்பதாக சபையின் தலைவர் பசுபதி
சீவரெத்தினம் தெரிவித் துள்ளார். தற்போது பனங்கட்டி, பனம் வெல்லம், பனம்பாணி
புழுக் கொடியல், ஒடியல், பனாட்டு ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் அதிக
கிராக்கி நிலவு வதால் இப்பொருட்களை நவீன முறையில் பொதிசெய்து நாடுமுழுவதும்
காகில்ஸ் புட்சிற்றி மூலம் விற்பனை செய்ய முடியுமென அவர் நம்பிக்கை தெரி
வித்துள்ளார். இந்நடவடிக்கையால், பனக் கைத்தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள்
பெரும் நன் மை யடையும்.
தை
24,
2011
கனேடிய நீதிமன்றம் உத்தரவு
உலக தமிழர்
அமைப்பின் உடமைகளை முடக்க உத்தரவு
கனடாவின் ஒன்டாறியோ மற்றும் கியூபெக்
மாநிலங்களில் செயற்பட்டு வந்த உலகத் தமிழர் அமைப்பின் உடமை களை கனேடிய
அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகத்
தமிழர் அமைப்பின் உடமைகள் பயங்கரவாத அமைப்பினால் பயன்படுத்தப் பட்டவை
என்றும் அதன் சொத்துக்களை முடக்குமாறு கனேடிய நீதிமன்றம் வழங்கியிருக்கும்
தீர்ப்பானது, கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட
புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும்
கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(மேலும்...)
தை
24,
2011
தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைபெறுவதற்கான நெடும் பயணத்தின் 7வது நாள்
தாங்கள் நெடும் பயணத்தை ஆரம்பித்து முதல்
சற்றுசோர்வான நிலையில் இருந்தாகவும் ஆனால் தற்போது வழிநெடுகிலும் மக்கள்
வழங்குகின்ற ஆதரவு எமது நெடும் பயணத்திற்காண வெற்றி எனவும் தெரிவித்தார்.
அதேவேளை தமிழ் நாட்டிலிருந்து மக்கள் வாகனங்களில் வந்து ஆதரவு தெரிவித்து
செல்லுவதாகவும் தமிழ் நாட்டில் வாழ்கின்ற ஈழ தமிழர்கள் சமைத்து உணவுகளை
தாங்களுக்கு இடையிடையே பரிமாரிவருவதாகவும் தெரிவித்தார். அத்தோடு தாங்கள்
நெடும் பயணத்தை ஆரம்பித்தபோது தாங்களுடன் முன்னாள் ஈபிஆர்எல்எப் மற்றும்
டொலோ போரளிகளும் இணைந்து கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
(மேலும்.....)
தை
24,
2011
சீமான் செல்லும் பாதை- மரணம் நிச்சயம்
தேசிய தலைவரின் தம்பியான சீமானும், அவரது
வழியையே தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது. இன துரோகியான தி.மு.க காங்கிரஸ்
கூட்டணியை வீழ்த்துவதற்கு அவர் எதிரியான அ.தி.மு.க வுடன் இணைந்துள்ளார்.
அடுத்த கட்ட ஈழ போர் ஈழத்து தமிழர்கள் ஆதரவுடன், புலம் பெயர் தமிழர்கள்
உதவியுடன், நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பில் கண்டிப்பாக நடந்தே தீரும்.
அதற்கு தேவை தமிழர்களிடத்தில் ஒற்றுமை, நம்பிக்கை மட்டுமே.
சொன்னது நீ தானா சொல் சொல் சீமானே
....??????
இது ஓர் தேர்தல் வாக்குறுதி!
தை
24,
2011
கனடாவில் வானவில்
கனடாவில் 'வானவில்' என்ற பெயரில் மாதாந்த
இதழ் வெளிவரத் தொடங்கியுள்ளது. கனடாவில் வெளிவருகின்ற தமிழர்களின்
பத்திரிகைகள் இரண்டு வகைப்பட்டவை. ஒரு வகை புலிகளால் தமிழ் தேசியம் என்ற
அழகிய பதாகையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்த பிற்போக்கு தமிழ் தேசிய
வெறிப் பாசிசத்தை ஆதரித்துத் தொடங்கப்பட்டவை. மற்றயவை ஊடகத் தர்மம் பற்றியோ,
ஊடகத்துறை சம்மந்தமாகவோ முன் அனுபவம் ஒரு போதும் இல்லாத சிலரால், வருமான
நோகத்திற்காகத் தொடங்கப்பட்ட பிழைப்புக்காக புலிகளையே சார்ந்து இருக்கப்
பழகிப் கொண்டதனால், தமிழ மக்களின் ஊடகத் தேவையைச் சரியான முறையில் பூர்த்தி
செய்ய முடியாமல் போனவர்கள்.
(மேலும்.....)
தை
24,
2011
உரிமைக்கான நெடும்பயணம்!
- ஈ.என்.டி.எல்.எப். தலைவர்
ஞா.ஞானசேகரன்
விடுதலை இயக்கங்கள் என்று புறப்பட்ட
அமைப்புகள் தங்கள் அணியினை முதன்மைப்படுத்த முற்பட்டனரே தவிர எங்களது
மக்களின் விடுதலைக்கு என்ன வழி என்பதைக் கண்டுகொள்ளாமல் பாதைகளை
மாற்றிக்கொண்டனர். புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களை அழித்து தான் மட்டுமே
ஏகப்பிரதிநிதி என்று எங்கள் இனத்தின் பலம் எது பலவீனம் எது என்று தெரியாமல்
ஆயுதம் மட்டுமே விடுதலையைப் பெற்றுத் தரும் என்று அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இவர்களது அநீதிக்குப் பயந்து சில இயக்கங்கள் எதிரியான சிங்கள அரசிடம்
அடைக்கலம் தேடினர். பின்நாளில் அமைதிப்படைக்கு அஞ்சி விடுதலைப் புலிகளும்
அதே எதிரியான சிங்கள அரசிடம் தஞ்சமடைந்தனர்.
(மேலும்.....)
தை
24,
2011
தேர்தல் கூட்டணி
தொடர்பில் விரைவில் தீர்மானம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில்
எந்தெந்தப் பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது என்பது
தொடர்பில் அடுத்துவரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளாரும். வர்த்தக மற்றும்
கூட்டுறவுத்துறை பிரதி அமைச்ச ருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார். இது
தொடர்பாக அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாகக்
குறிப்பிட்ட அவர், சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் அரசாங்கத்துடன்
இணைந்தும் போட்டியிடுவதற்குக் கட்சி ஏற்கனவே தீர்மானித்திருப்ப தாகவும்
கூறினார். அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இறுதித்
தீர்மானம் எடுக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலம்
நெருங்கிவரும் நிலையில் தனித்துப் போட்டியிடவேண்டுமென்ற கோரிக்கைகள்
கீழ்மட்டத்தில் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கான
பட்டியல்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளான ஐக்கிய
தேசியக்கட்சியும், ஜே. வி. பி.யும் தெரிவித்துள்ளன.
தை
24,
2011
இந்தியாவில்
வாரிசு அரசியலால் வளர்ச்சிக்கு தடை சமூகவியலாளர்கள் கொதிப்பு
உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் நிலப்பரப்பில் ஏழாவது இடம் அதிக
இளைஞர்களின் எண்ணிக்கையில் முதலிடம் உலகின் மிகப் பழமையான பாரம்பரியம்.
அறிவியல் உண்மை செறிந்த இலக்கியங்கள் வற்றாத நதிகள், ஏராளமான இயற்கை வளங்கள்
என உலக நாடுகளின் உச்சத்தில் நம் நாடு இருந்து வருகிறது. இத்தனை வளங்கள்
இருந்தும் ஊழல் இலஞ்சம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், நேர்மையான
அரசியல்வாதிகளுக்கு பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகளால், நாடு பின்நோக்கி
சென்று கொண்டிருக்கிறது. இந்த பின்னடைவிற்கு பல்வேறு காரணங்கள்
முன்னிறுத்தப்படுகின்றன. இவற்றில் ‘வாரிசு’களை முன்னிறுத்தி அரசியல்,
தொழில்துறை ஆகியவை இயங்குவது முக்கிய காரணமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு
பொருளாதார சமூக வல்லுனர்களால் முன்வைக்கப்படுகிறது.
(மேலும்.....)
தை
24,
2011
வைகோ போடும் கரணம்!
தற்போது ஈழத்தைச் சுற்றிப்பார்த்து விட்டு
வந்திருக்கும் தமிழ் உணர்வாளரான பெண் வழக்கறிஞர் ஒருவர், ஈழத் தமிழர்கள்
தமிழகத்துத் தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள், இந்தியாவின்
உதவியை எதிர்பார்க்கவில்லையென்று சொன்னார்கள். அவருக்கும் விளங்கவில்லை,
தமிழகம் என்ன ஐரோப்பாவிலா இருக்கிறது? அதுவும் இந்தியாவில்தான் இருக்கிறது.
தமிழகமும் இந்தியாவின் ஒரு பகுதிதான்!. இந்தப் பெண்ணை விடுவிக்க உதவிய
பாரதப் பிரதம மந்திரி அவர்களுக்குத்தான் திரு. வைகோ அவர்கள் நன்றி
சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் விமானத்தில் சென்னை திரும்பியுள்ளார்.
(மேலும்.....)
தை
24,
2011
யாழ். முஸ்லிம்களை முழுமையாக மீளக்குடியமர்த்த காணிகள் பற்றாக்குறை
இடவசதி போதாமையினால் யாழ். குடாநாட்டில் மீளக்குடியமர திரும்பிய முஸ்லிம்
குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதில் சிக்கல் தோன்றியுள்ளதாக யாழ். மாநகர
சபை உறுப்பினர் பி.ஏ. எஸ். சுஃபியான் தெரிவித்துள்ளார். யாழ்.
மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் யாழ்.
குடாநாட்டில் மீளக்குடியமர விருப்பம் தெரிவித்துள்ளன. அத்துடன்
மீளக்குடியமரும் ஆவலுடன் யாழ். குடாநாட்டுக்கு வந்து தமது மீள்குடியேற்றம்
சம்பந்தமான பதிவுகளையும் மேற்கொண்டுள்ளனர். எனினும், மீள்குடியமர
திரும்பியுள்ள குடும்பங்களை குடியமர்த்த காணி வசதிகள் போதாத காரணத்தினால்
பல குடும்பங்கள் மீண்டும் திரும்பிச் சென்றுள்ளன. இந்த பிரச்சினையை தீர்ப்ப
தற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
(மேலும்.....)
தை
24,
2011
உங்களின் தகவல்
தொடர்பு சரியான அலைவரிசையில் செல்கிறதா?
(ருக்மணி பன்னீர்செல்வம்)
இயற்கையின் படைப்பில் மற்ற உயிரினங்களி
லிருந்து மனித இனம் இன்றைய நிலையில் பெரும்வளர்ச்சி பெற்றிருப்பதற்கு
அடிப்படையாய் அமைந்தது தகவல் பரிமாற்றம் தான். மனிதனால் முதன்முதலில்
பயன்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்ற வழிமுறையானது இன்றைக்கு பெரிதாகப்
பேசப்படும் ஆர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங் எனும் உடலசைவுதான். மனித வாழ்க்கையில்
பேச்சுக்கலை வளர்ந்த பிறகுதான் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நாம்
வெளிப்படுத்தும் கருத்துக்கள் தகவல் பரிமாற்றம் வழி எந்த அளவில் மிகச்
செம்மையாய் செய்யப்படுகிறதோ, அதைப் பொறுத்துத்தான் நம் எதிர்பார்ப்புகள்
நிறைவேறும்.
(மேலும்.....)
தை
24,
2011
மேய்ச்சல்வெளி
(சுல்தான்)
உடனடித் தேவையாக ஒரு நடைமுறைச் சாத்தியமான
தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்று எல்லாத் தமிழ்மக்களினதும்
பொது எதிர்பார்ப்பல்லவா? இதற்கு ஆவேசப்பட்டு விரோதத்தைக் கக்கும் அதே பழைய
வீரப்பேச்சுக்களால் ஆகுவது என்ன என்று இனியும் நாம் சிந்திக்க வேண்டாமா?
வாக்குகளுக்கும், வாய்சாலகத்தைக் காட்டவும் என வெறுமனே குற்றச்சாட்டுகளை
அடுக்கிக் கொண்டிருக்கும் இனரோசப் பேச்சுக்களால், இன்னுமின்னும் நாம்
இருந்த இடத்தை விட்டுக் கீழே கீழே வழுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே
யதார்த்தமல்லவா? பிடிக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டுச் சும்மா
பீற்றிக் கொண்டிருக்கும் அரசியலால் மக்கள் அடைந்தது என்ன? இப்போதேனும்
ஒன்றுகூடி யோசிக்க வேண்டாமா?
இதற்கு மேலும் கற்பனை ரதங்களில் மக்களை ஏமாற்றி அழைத்துச் செல்லாமல்,
சாத்தியமான ஒரு தீர்வுக்கு தமிழ்க்கட்சிகள் முதலில் ஒன்றுபட்ட முடிவுக்கு
வரப் பேசுதல் வேண்டும். அனைவரும் ஒன்றுபடும் புள்ளிகளை அடையாளப்படுத்திக்
கொள்ள வேண்டும்.
(மேலும்.....)
தை
23,
2011
யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க
பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை
யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்ககும்
நடைமுறைப்படுத்துவதற்கும் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து
நடவடிக்கையெடுக்கவுள்ளனர். கடந்த இரண்டு மாத காலத்தில் யாழ் மாவட்டத்தில்
பல்வேறு கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், கொள்ளைகள், கொலைகள்
அதிகரித்துள்ள நிலையில் இது சம்பந்தமான கலந்துரையாடல் யாழ். மாவட்ட
செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்
பெற்றது.
(மேலும்...)
தை
23,
2011
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம்
1983 இல் ஜே. ஆர். அரசின் அனுசரணையோடுதான் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு
எதிரான இன சங்காரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது ஓர் இனச் சுத்திகரிப்பு
நடவடிக்கை. இதைப்போன்றுதான் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு
நடவடிக்கையை புலிகள் கட்டவிழ்த்து விட்டார்கள். 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர்
மாதம் 30 ஆம் திகதி சுமார் லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வடக்கில்
இருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். சுமார் 40,000 க்கு மேற்பட்ட
இந்த முஸ்லிம் குடும்பங்களின் வரலாற்று வாழ்விடங்களாக வடபகுதியே இருந்து
வந்தது. இந்த மக்களின் அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் அனைத்தையும்
புலிகள் அபகரித்து விட்டு உடுத்த உடுப்புடனும் வெறுங்கையுடனும்
விரட்டியடித்தனர். வேரோடும் வேரடி மண்ணோடும் புலிகளால் பிடுங்கி எறியப்பட்ட
முஸ்லிம் மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட அகதி முகாம்களில் சந்தித்த அவலங்கள்
அளப்பரியவை.
(மேலும்...)
தை
23,
2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
-
ஐந்தாவது நாள் நிகழ்வுகள்!
(நெடுந்தூர நடைபயணத்தில் கலந்து கொள்பவர்களை ஊக்குவிக்க, வாழ்த்துச் சொல்ல,
மற்றும் அவர்களது கஸ்ரங்களை அறிந்துகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்:
00919490826037. இந்த கைபேசி எண் நெடுந்தூர நடைபயணத்தின் தலைமைக்குழுவில்
நிதி மற்றும் கட்டுப்பாட்டிற்குப் பொறுப்பு வகிக்கும் உயர்திரு. தயாபரன் (டேவிட்)
அவர்களிடம் இருக்கும்). ஐந்தாவது நாள் பயணம் 45 கிலோ மீற்றர்களைக் கொண்டதாக
இருந்தது. சூலூர் பேட்டை (ஆந்திரா) தாண்டி நான்காவது கிலோ மீற்றரில்
புறப்பட்ட நடைபயண வீரர்கள், நாயுடு பேட்டை தாண்டி 15 கிலோ மீற்றரில் ஓர்
வயல்வெளியில் இரவு தங்கினர்.
(மேலும்...)
தை
23,
2011
யாழ். குடாநாட்டின் குற்றச்செயல்களுக்கு அரசாங்கமோ,
அமைச்சர் டக்ளஸோ பொறுப்பல்ல
-
பிரதியமைச்சர் முரளிதரன்
(கருணா)
யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும்
குற்றச்செயல்களுக்கு அரசாங்கமோ அல்லது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ
பொறுப்பல்ல என்று பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)
உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியிலிருந்து
பிரிந்து சென்றவர்கள் வேண்டுமென்றால் குற்றச்செயல்களில்
சம்பந்தப்பட்டிருக்கலாம். ஆயினும் அதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையோ,
அவரது கட்சியான ஈ.பி.டி.பி. கட்சியையோ குற்றம் சாட்ட முடியாது என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
(மேலும்...)
தை
23,
2011
The New Lords Prayer by Bishop of Mannar (The Three Kings)
(by Lenin Benedict-Toronto)

Instead of replying to the Bishop of Mannar Rt.Rev.Dr.Joseph Rayappu and
his associates Rev.Fr.Victor Sosai and Rev.Fr.Xavier Croos, for their
submission in Lesson Learn and Rehabilitation Commission held in Mannar,
I simply would like to answer it from my imaginative way by the new
version of Lord’s Prayer.
(more....)
தை
23,
2011
விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணச் செய்தி குறித்து அதிகம்
மகிழ்ச்சியடைந்தவர்கள் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தான்
- பிரபா கணேசன்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணச் செய்தி குறித்து அதிகம்
மகிழ்ச்சிக்குள்ளானவர்கள் வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் தான் என்று
பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வார
இறுதி சிங்களப் பத்திரிகையான சிலுமிணவுக்கு வழங்கியுள்ள நோ்காணலிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரது செவ்வியில் மேலும்
குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தம் வடக்கில்
ஏராளமானவற்றை அழித்து விட்டது. அங்குள்ள மக்களுக்கு ஏராளம் இழப்புகளை
ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மேலாக அம்மக்கள் அபிவிருத்தியின் வாடையைக் கூட
கண்டறியாதவர்களாக இருந்தார்கள். பிரபாகரனின் கொலைவெறிக்கு அவர்கள் தங்கள்
இன்னுயிரைப் பறிகொடுத்தார்கள்.
(மேலும்...)
தை
23,
2011
இணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்
தற்போது உலகில் எண்ணிலடங்கா முகவரியற்ற
இணையத்தளங்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. இவற்றில் பல எங்கிருந்து
எவரால் இயக்கப்படுகிறது என்று யாருக்கும் தெரியாமலே உள்ளது. இதனால் இவர்கள்
தாம் விரும்பும் அரசாங்கங்களுக்கும், கட்சிக ளுக்கும்,
தனிப்பட்டவர்களுக்கும் ஆதரவாகவும் விரும்பாதவர்களுக்கு எதிராகவும் பிரசா
ரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இணையத்தளங்களில் பல, தமிழ்
மொழியில் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. அவற்றிலும் பல மறைந்த விடுதலைப்
புலிகளுக்குச் சார்பான செய்திகளை வெளியிடுவதற் காகவே இயங்கி வருகின்றன.
இந்தத் தமிழ் இணையத்தளங்கள் உள்நாட்டில் பெருமளவு தாக்கத்தை
ஏற்படுத்தாவிட்டாலும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை
வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த இணையங்களில் கனவு ஈழத்தை இவர்கள் கண்டு வரு
கின்றனர்.
(மேலும்...)
தை
23,
2011
சரணடைந்த நிலையில் அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையவில்லை -
பசீர் சேகுதாவூத்
நேர்காணல்: சுஐப் எம். காசிம்
கேள்வி:- மு. கா. எதிர்க்கட்சி அரசியலை
நடத்தும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் உடன்பாடு கண்டதே. அந்த
செயற்பாடுகள் எப்படி இருக்கின்றது.

பதில்:-
இவ்விரண்டு கட்சிகளும் என்றும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கைச்சாத்திட்டு செயற்படவில்லை. ஆனால் இரண்டு தமிழ் பேசும்
இனங்களுக்கிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்தி அரசியல் அரங்கத்தில் செயற்பாட்டை
ஏற்படுத்த சில முயற்சிகள் இடம்பெற்றன. இன்றும் அது தொடர்கின்றது. எனினும்
சரியான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் பரஸ்பர விட்டுக்கொடுப்புகளும்
புரிந்துணர்வுகளும் நிறையவே ஏற்பட்டுள்ளன. மு. கா. அரசுடன் இணைந்துவிட்டது
என்பதற்காக தமிழ்ச் சமூகத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஜனாதிபதியும்
தமிழ் மக்களுக்குச் செய்கின்ற எல்லா உதவிகளையும் நலன்களையும் முறையாக
மேற்கொள்ளத் தயாராகவே உள்ளார். அவ்வாறான செயல்பாடே நடக்கின்றது. வடக்கு
கிழக்கிலே ஓர் அரசியல் தீர்வு என்று வரும்போது தமிழர்களும் முஸ்லிம்களும்
பேசிய பின்னர் அரசுடன் பேசுவதே ஒரு முறையான, வெற்றிகரமான தீர்வைத் தரும்.
கடந்த காலத்தில் இனப்பிரச்சினைத் தீர்வில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளுக்கு
காரணம் தமிழர்களின் அரசியல் சக்திகளும் முஸ்லிம்களின் அரசியல் சக்திகளும்
ஒன்றிணைந்து செயற்படாமையே.
(மேலும்...)
தை
23,
2011
தருணம் வரும் என்கிறார் செல்வம் எம். பி
தமிழ்க்
கட்சிகளின் கூட்டணிக்கு பாடுபட்ட சிவாஜிக்கு கதவடைப்பு
தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துப் பாரிய
பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சிகளை, சிவாஜிலிங்கம், ஆனந்தசங்கரி,
சித்தார்த்தன் ஆகியோர் பிரதிநிதித்துவப் படுத்தும் நான்கு கட்சிகள்
ஆரம்பித்திருந்தன. இவர்களில் ஆனந்தசங்கரி மற்றும் சித் தார்த்தனை
இணைத்துக்கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்திருக்கும்
நிலையில், சிவாஜிலிங்கம் பிரதிநிதித் துவப்படுத்தும் கட்சியான தமிழ்த்
தேசிய விடுதலைக் கூட்டமைப்பை இணைப்பது பற்றி இதுவரை தீர்மானம் எடுக்கப்
படவில்லை.
‘எந்தவொரு கட்சியையும் ஒதுக்கிவைக்கும் தீர்மானத்தை நாம் எடுக்கவில்லை.
சிவாஜிலிங்கத்தையும் இணைப்பது பற்றிக் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி வருகிறோம்.
(மேலும்...)
தை
23,
2011
உடப்பு
கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம்
(அருள் சத்தியநாதன்)

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய
பிரதேசங்கள் ஒரு காலத்தில் தனித் தமிழ் மக்கள் வாழும் இடங்களாகக் காணப்பட்ட
போதிலும் இன்று அந்த சூழல் வெகுவாக மாறிவிட்டது. மாற்றங்கள் சகஜம்தான்.
ஆனால் சிலாபத்தில் இருந்து 26 கி. மீ. தொலைவிலும் புத்தளத்தில் இருந்து 42
கி. மீ. தொலைவிலும் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் மீன்பிடிக் கிராமமான
உடப்பு, எல்லாத் தாக்கங்களுக்கும் ஈடுகொடுத்து இன்றும் தனித் தமிழ்
கிராமமாக விளங்கி வருகிறது. இது பலரும் அறியாத உண்மை. இங்கே 90 சதவீதமானோர்
தமிழ் இந்து மக்கள். ஏனையோர் தமிழ் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள்.
சிலாபத்தில் இருந்து பிரிந்து செல்லும் குண்டும் குழியுமான பாதையூடாக
ஆடியசைந்து சென்றால் இக்கிராமத்தை சென்றடையலாம்.
(மேலும்...)
தை
22,
2011
ஹிட்லரை ஆதரித்தவர்
“முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்கவந்தனர்/ நான் பேசவில்லை; ஏனெனில் நான்
யூதன் அல்ல/ பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்/ நான்
பேசவில்லை; ஏனெனில் நான் கம்யூனிஸ்டு அல்ல/ பின்னர் அவர் கள் தொழிற்சங்க
வாதிகளைப் பிடிக்க வந் தனர்/ அப்போதும் நான் பேசவில்லை; ஏனெனில் நான்
தொழிற்சங்கவாதியும் அல்ல/ பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்/ அப்போது
எனக்காகப் பேச யாரும் இல்லை”. மனித மனங்களை நுட்பமாகப் படம் பிடித்து
பாசிசத்துக்கு எதிராக ஆவேச உணர்வை ஊட்டிய இக் கவிதை வரிகளை எழுதியவர்யார்?
அவர் வரலாறு என்ன? எதுவுமே தெரியாமல் கூட அன்றாடம் உல கெங்கும் பலரால்
இக்கவிதை மேற்கோள் காட்டப்பட்ட வண்ணம் உள்ளது.(மேலும்...)
தை
22,
2011
தமிழ் கட்சிகளின் அரங்கம்,தமிழ் தேசிய கூட்டமைப்பு இனரிடையே உள்ள உறவு இனி
என்னவாகும்?
(அ. விஜயன்)
தமிழ் கட்சிகளின் அரங்கம் உருவானபோது ஒற்றுமையை விரும்பும் பலர்
சந்தோசமைடந்தனர், அதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அரங்கத்தினருக்கும்
உறவு வளர்ந்த போது அந்த சந்தோசம் இரட்டிப்பாகி, சந்தேகங்களும் இனி அகன்று
விடும் என்ற எண்ணமும் உருவானது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரில் பாராளுமன்ற
உறுப்பினர்கள் 14 பேர் இருப்பதனால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான
பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு மறுதலிக்க முடியாத ஒரு தீர்வை தமிழ்
மக்களுக்கு வைப்தற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்ற நம்பிக்கை
இருந்தது. அந்த நம்பிக்கை இன்று அவநம்பிக்கையாக மாறியது, அனைவரையும்
கவலையடைய செய்துள்ளது. இதற்கு உள்ளுராட்சி சபை தேர்தல் எனும் அஸ்திரம்
எய்தப்பட்டுள்ளது.
(மேலும்...)
தை
22,
2011
மேய்ச்சல்வெளி
(சுல்தான்)
அப்பாவி மக்களின் வாழ்வு அல்லல்களுக்குள்
சிக்குப்பட்டுக் கிழிந்து கொண்டிருப்பதை, அநீதிகளும் அநியாயங்களும் நடந்து
கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவை எதிர்க்கப்பட வேண்டும் என்பதும்
உண்மையே. ஆனால், அநியாயங்களை எல்லாம் ஆவேசமாய் எதிர்த்தபடி செல்வது என்ற
ஒற்றைவழிப் போக்கில் இன்றைய சிக்கல்களை விடுவித்துவிட முடியாது. அப்பாவி
ஒருவனின் காலடி கூட அவனறியாமல் பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்டுவிடும்
அமைப்பில் நாம் வாழ்ந்து வருகிறோம். உயிரழிவுகள் தவிர்த்த ஒரு எதிர்ப்பு
வழிமுறையையே நாம் கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, மீண்டும்
உயிர்த்தெழுவதற்கான வாய்ப்புகளைத் தெரிந்திராதவர்கள், தாமே விரும்பிச்
சிலுவையில் ஏறக்கூடாது என்பதையே இந்த முப்பது வருடப் பாடமாக நாம்
பெற்றிருக்கிறோம்.
(மேலும்...)
தை
22,
2011
புதுடில்கியை நோக்கிய நெடும்பயண போரளிகளுக்கு நெல்லுரில் பெறும் வரவேற்பு
அளிக்கபட்டுள்ளது
ஈழ தமிழர்களின் விடுதலைக்கான ஈழ தேசிய
ஜனநாயக விடுதலை முன்னணியின் சென்னையிலிருந்து புதுடில்கியை நோக்கிய
நெடுபயணம் 6 வது நாளான இன்று 250 கிலோமிட்டர் தூரத்தை கடந்து உள்ளது.
ஆந்திரா மாநிலத்தின் உள்ள நெல்லுர் நகரத்தை ஊர்வலம் அடைந்து போது அங்கு
கூடியிருந்து தமிழ் நாட்டு தமிழ்மக்களும் ஆந்திர மக்களும் இணைந்து
வரவேற்றதுடன் தலைமை தாங்கி செல்கின்ற 6
பேருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளதுடன் தற்காலிகாமாக அமைத்த
மேடையில் உறையாற்றும் படியும் வலியுறுத்தியுள்ளனர்.
(மேலும்...)
தை
22,
2011
Organizations that allegedly raised money for Tamil Tigers ordered to
forfeit belongings
The World Tamil Movement
headquarters in Montreal, with Tamil Tigers flags and a poster of a
Tigers leader. An audit found the group took in up to $763,000 a year,
and most of the money went to a Malaysian account linked to the rebels.
A pair of Canadian non-profit organizations the RCMP says raised
millions of dollars for Sri Lanka’s Tamil Tigers rebels have been
ordered to forfeit all their belongings to the federal government. The
Federal Court ruled the property of the World Tamil Movement of Ontario
and the World Tamil Movement of Quebec was owned or controlled by a
terrorist organization and therefore had to be forfeited. The decision
marks the official end of the WTM, which was formed in 1986 and became
closely aligned with the fight for Tamil independence in Sri Lanka. It
also marks the conclusion of a nine-year RCMP investigation that did not
result in criminal charges.
(more...)
தை
22,
2011
செய்திச் சிதறல்கள்......
-
யாழ்ப்பாணத்தில் நடந்த பொங்கல் விழாவின்போது ராஜபக்சேவின் தலைப்பாகை
பொங்கல் பானைக்குள் விழுந்து விட்டது.
-
சிங்கள நடிகை ஒருவருக்கு பென்ஸ் காரை பரிசாக அளித்துள்ளார்
கோத்தபயா.
-
பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி இலங்கை வந்துள்ளார்.
(மேலும்...)
தை
22,
2011
நாடு முழுவதும்
வேட்பு மனுக்கள் தாக்கல் மும்முரம்
கொழும்பு மாவட்டத்தில் இரண்டு உள்ளூராட்சி
சபைகளுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உள்ளூராட்சி சபைக்குமாக மூன்று
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம்
தெரிவிக்கிறது. கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம பிரதேச சபைக்கும் கெஸ்பாவ
பிரதேச சபைக்கும் ஜனசெத பெரமுன வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகர சபைக்கு எம்.எம். ரிஸ்வான் மொஹமட்
தலைமையிலான சுயேச்சைக்குழு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது என தேர்தல்
திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
(மேலும்...)
தை
22,
2011
தமிழ் அரசியல்
தலைவர்கள் சிலர் வவுனியாவில் சந்தித்து பேச்சு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம்
அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், புளொட் தலைவர்
தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.
ஆனந்தசங்கரி ஆகியோர் ஒரே மேசையிலிருந்து பகல் போசனம் அருந்தினார்கள். கடந்த
கால சம்பவங்கள் அனைத்தினையும் மறந்து ஒரு அணியில் நிற்கின்றோம் என்பதினை
வெளிக்காட்டும் முகமாகவே சித்தார்த்தனினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய
போசனத்தில் இவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். வைரவபுளியங்குளத்தில் உள்ள
புளொட்டின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
(மேலும்...)
தை
22,
2011
சன் சீ
ஆட்கடத்தல் கப்பல் விவகாரம் பிரதான சந்தேக நபர்(கள்) கைது
எம்.வி. - சன் சீ கப்பல் 492 இலங்கையர்களை
பிரித்தானிய கொலம்பியத் தீவுகளுக்குச் சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரைக் கைது செய்திருப் பதாக
தாய்லாந்து அதி காரிகள் தெரிவித்துள்ளனர். 48 வயதுடைய நடேசன் ஜீயநந்தன்
என்பவரையும், சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களைக் கடத்தும் சம்பவங்களுடன்
தொடர்புடைய மேலும் 7 பேரையும் தாய்லாந்து அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை
கைது செய்திருப்பதாக குளோப் அன்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
(மேலும்...)
தை
22,
2011
சுங்கத்
திணைக்கள பணிகள் இன்று முதல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர்
யாழ்ப்பாணத்தில் சுங்கத் திணைக்களப் பணிகள் இன்று காலை (22.01.2011)
மீண்டும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பிரதம தபாலக
மேல்மாடியில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப் படவுள்ளது. வடபகுதி கடல்
பிராந்தியம் பாது காப்பு வலயமாக கடற்படையின ரால் அறிவிக்கப்பட்டதால் யாழ்ப்
பாணத்தில் செயல்பட்டு வந்த சுங்க அலுவலகப் பணிகள் இடைநிறுத்தப் பட்டிருந்தன.
தற்போது நாட்டில் சமாதான சூழ்நிலை உருவாகி கடல் வலயச் சட்டம்
நீக்கப்பட்டிருப்பதாலும், சுங்கத் திணைக்களப் பணிகளை
விரிவுபடுத்துவதற்காகவும் முன்னர் இயங்கிய யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை,
வல்வெட்டித்துறை, காரை நகர், பருத்தித்துறை சுங்கத் திணைக்கள பணிமனைகள்
ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட
சுங்கத்திணைக்கள அலுவலகம் வெளி நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்ப டும்
பொதிகளை உடனுக்குடன் பரி சோதனை செய்து உரியவர்களுக்கு கையளிக்கும்
பணியினையும் வெளி நாட்டுப் பொதிகளை பரிசீலனை செய்து அனுப்பிவைக்கும் பணியி
னையும் நிறைவேற்றவுள்ளது.
தை
22,
2011
சீனாவுடன் ஆரோக்கியமான போட்டியையே அமெரிக்கா எதிர்பார்க்கிறது
- ஒபாமா
சீனாவுடன் ஆரோக்கியமான போட்டியையே அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்று
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார். அமெரிக்காவில் நான்கு நாள்
சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் ஹு ஜின்டாவோவை சந்தித்த பின்னர்
இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜனாதிபதி பராக் ஒபாமா
கூறியதாவது:-சீனாவிடமிருந்து ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை அமெரிக்கா
எதிர்பார்க்கும் அதே சமயம் ஆரேக்கியமான போட்டியை எதிர்கொள்ளவே விரும்புகிறது.
எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு
இருப்பது அவசியம் என்பதை இருவருமே உணர்ந்துள்ளோம். நட்பு ரீதியிலான
போட்டிதான் நீண்டகால அடிப்படையில் பலன் அளிக்கும் என்பது பேச்சுவார்த்தையில்
தெரியவந்துள்ளது.
(மேலும்...)
தை
22,
2011
உலகின் 7 அதிசயங்களில் தாஜ்மஹாலுக்கு முதலிடம்

உலகின் புதிய 10 அதிசயங்களை 10 கோடி பேர் சேர்ந்து இணையதளத்தில்
ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுத்தனர். இதில் இந்தியாவின் தாஜ்மஹால் முதலிடத்தை
பிடித்துள்ளது. பழங்காலத்தில் அறிவிக்கப்பட்ட 7 அதிசயங்கள் அனைத்துமே 2
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. அவற்றில் இப்போதும் இருப்பது
எகிப்தின்பிரமிட் மட்டுமே. இந்த உலக அதிசயங்களை கிரேக்க எழுத்தாளர்
ஆன்டிபேட்டர் என்ற தனி நபர் ஒருவராகவே தேர்வு செய்ததாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில் இப்போதைய காலகட்டத்தின் அடிப்படையில் உலகின் புதிய 7
அதிசயங்களை தேர்வு செய்வதற்காக புதிய கருத்துக் கணிப்பு உலகம் தழுவிய அளவில்
நடத்தப்பட்டது.
(மேலும்...)
தை
22,
2011
ஒரிசா பாதிரியார்
கொலை வழக்கு
தாராசிங்கிற்கு
ஆயுள் தண்டனை! தூக்குத்
தண்டனை அல்ல!!
கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியாரான கிரஹம் ஸ்டெய்ன்சும் அவரது
இரண்டு மகன்களும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலையில்
ஈடுபட்ட தாராசிங்குக்கு ஒரிசா உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி
தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் தாராசிங்கிக்கு தூக்கு தண்டனை வழங்க
வேண்டும் என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இதனையடுத்து இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை
விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். மேலும்
தாராசிங்குக்கு ஒரிசா உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தும்
தீர்ப்பளித்தனர்.
(மேலும்...)
தை
22,
2011
உள்ளூராட்சித் தேர்தல்களில் அரசுடன் இணைந்து போடடியிடுவதின் மூலமே,
யுத்தத்தால் அழிந்து போன வடக்கு கிழக்கைக் கட்டியெழுப்ப முடியும்!
(வி.சின்னத்தம்பி)(யாழ்ப்பாணம்)
தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும்,
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டு,
சில பதவிகளைப் பெறுவதற்கு அங்கலாய்ப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்
அரங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரிய கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், பெரும்பாலும் அரசாங்கக் கட்சியான பொதுஜன
ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடக் கூடிய சூழல் நிலவுவதால், அதனை
ஏற்காத கட்சிகளின் நிலைப்பாட்டை உற்சாகப்படுத்துவதன் மூலம், தமிழ் தேசியக்
கூட்டமைப்புக்கு மாற்றாக உருவான தமிழ் அரங்கத்தை உடைத்துவிடலாம் என
கூட்டமைப்பினர் திட்டமிட்டுச் செயற்படுவது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது.
இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சதிச் செயலுக்கு இரையாகாமல்
இருப்பது தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு
கட்சியினதும் தலையாய கடமையாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தக்
கட்சிகள் சேர்ந்தால், அவர்கள் நிச்சயமாக இவர்களைக் கறிவேப்பிலையாகத்தான்
பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுவாகள் என்பது நிச்சயம். எனவே, ஒரு அற்ப
தேர்தலுக்காக, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைத் தீர்வுக்காக மிகவும்
கஸ்டப்பட்டு உருவாக்கிய தமிழ் கட்சிகளின் அரங்கத்தை உடைத்துவிடாதீர்கள்.
(மேலும்...)
தை
21,
2011
சன் சீ கப்பலில்
புலி உறுப்பினர்களை கனடாவிற்கு அனுப்ப உதவியதாக 8 பேர் கைது

விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 492
பேரை சன் சீ கப்பல் மூலம் கனடாவிற்கு அனுப்பிவைக்க உதவி புரிந்தனர் எனக்
குற்றம் சாட்டப்பட்டு நடேசன் ஜயந்தன் (வயது 48) உட்பட எட்டுப் பேரை
தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை பொலிஸ் குற்றப்
புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தாய்லாந்து
செல்லவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. கனடாவில் உள்ள புலிப்
பினாமி அமைப்புகளின் செயற்பாடுகளே சன் சீ கப்பலில் வந்தவர்களையும், இதற்கு
ஒழுங்கு செய்தவர்களையும் 'மாட்டிவிட' பெரிதும் உதவியதாக புலனய்வு துறையினர்
தெரிவிக்கின்றனர். புலிகளின் புத்தி சாதுர்சியம் அற்ற செயற்பாடுகள்
முள்ளிவாய்காலில் முளம் தாளிட்டு மண் கவ்வ வைத்தது போல், தற்போதைய புலி
முகவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன. உருத்திரகுமாரன் சற்று விளிப்படைந்தது
போல் தெரிகின்றது. அதுதான் மகிந்தாவை விசாரணை செய்யவேண்டும் என்ற
கோரிக்கைகளை மகிந்தாவின் அமெரிக்க தனிப்பட்ட விஜயத்தின் போது
முன்வைக்கவில்லையோ....?
தை
21,
2011
அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதியிடம் விசாரணை
நடத்துமாறு கோரிக்கை
அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த வேண்டும்
என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ நேற்று முன்தினம் காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமை
அமெரிக்காவுக்கு இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக்
பிராந்திய பணிப்பாளர் சேம் சரிப் தெரிவித்துள்ளார். கடத்தல், துன்புறுத்தல்,
நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா
நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தை
21,
2011
மீண்டும் எழுந்து வரும் யாழ்
யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று
முதல் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சுப்பிரமணியம்
பூங்காவிற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இக் கண்காட்சியும் விற்பனையும்
தொடந்து மூன்று தினங்கள் நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணம் பொது நூலகத்தில்
நடைபெற்ற கலந்துரையாடலுடன் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பிக்கப்பட்டது.
இக் கண்காட்சியில் 300ற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காட்சியறைகள்
அமைக்கப்பட்டுள்ளன. இவை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவை
என்பது குறிப்பிடத்தக்கது.
தை
21,
2011
குடாநாட்டில் பணம் பறிக்கும், சொத்துக்களை
அபகரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கத்துக்கு நெருக்கமான குழு -
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு
குடாநாட்டில் இடம்பெற்ற 24 சம்பவங்களையும் பார்க்கின்ற போது அவற்றுக்
கிடையில் ஒத்த தன்மை காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பாதாள உலக கோஷ்டியினர்
இல்லை. மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி பணம் பறிக்கும் சொத்துக்களை அபக
ரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கத்திற்கு நெருக்கமான குழுவே ஈடுபடுகின்றது
என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியது. தமிழ் மக்களுடன்
இணக்கம் காண விரும்பினால் அரசாங்கத்திற்குள் இருக்கின்ற குற்றவியல் சக்திகளை
அரசாங்கம் அகற்றிவிட வேண்டும். இன்றேல் எங்களுடைய சாதாரணமான சந்தேகம்
உண்மையாகிவிடும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியது.
(மேலும்....)
தை
21,
2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் நான்காம் நாள் நிகழ்வு!
ஆந்திராவில் “ஈநாடு”, “சாக்சி” போன்ற பிரபல
பத்திரிகைகள் உள்பட அனைத்துப் பத்திரிகைகளும் மற்றும் “ஜெமினி” டிவி போன்ற
பிரபலமான அனைத்துத் தொலைக்காட்சிகளும் ஈழ தேசிய ஜனநாக விடுதலை முன்னணியினர்
மேற்கொள்ளும் நடைபயணத்தின் நோக்கத்தை விரபரமாக உலகறியச் செய்துள்ளமைக்கும்
பொதுமக்கள் தொடந்து வழங்கி வரும் ஆதரவுக்கும், தேசிய நெடுஞ்சாலையில் நகரும்
நடைபயணத்திற்கு மிக சிரமங்களுடன் பாதுகாப்பை வழங்கி வரும் ஆந்திர
காவல்துறையினருக்கும் ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்ணியின் தலைவர்
ஞா.ஞானசேகரன் அவர்கள் நன்றினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆதரவு
வழங்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
(மேலும்...)
தை
21,
2011
FUND RAISING FOR FLOOD RELIEF BY
DISASTER EMERGENCY ASSISTANCE RELIEF – CANADA
Batticaloa and Amparai districts
are the worst affected area in SRILANKA, The total number of persons
affected in Batticaloa area is 540,144. The second worst affected
district is Ampara where 471443 persons are affected by floods.The
number of deaths caused by floods and heavy rain has risen to 38 while
four persons were missing and 52 persons were injured. Batticaloa
recorded the highest number of deaths, numbering 18. While ten persons
died in Ampara. (more...)
தை
21,
2011
கேரதீவு -
சங்குப்பிட்டி ஊடான பஸ் போக்குவரத்து வழமைக்கு
கேரதீவு - சங்குப்பிட்டி ஊடான பஸ்சேவைகள்
வழமைபோல் நடைபெறுவதாக இலங்கைப் போக்குவரத்துச் சபை வடபிராந்திய முகாமையாளர்
கே. கணேசபிள்ளை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி நல்லூர்
வரையான பஸ்சேவை யாழ். பஸ் நிலையத்திலிருந்து காலை 7.00 மணிக்கும் பிற்பகல்
2.00 மணிக்கும் இரு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சேவையில் ஈடுபடும்
பஸ்கள் சாவகச்சேரி தனங்களப்பு ஊடாக பூநகரி நல்லூர் வரை சேவையில் ஈடுபடும்.
(மேலும்....)
தை
21,
2011
கிளிநொச்சியில்
உள்ளூராட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச
சபைக்கும் அரசு தரப்பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட பலர் ஆர்வம்
காட்டி வருவதுடன் தமது விண்ணப்பங்களையும் சமர்ப்பித்து வருகின்றனர். கரைச்சி,
பச்சிலைப்பள்ளி, பூநகரி, பிரதேச சபைகளுக்கு வெற்றிலைச் சின்னத்தில்
போட்டியிட இம்முறை புத்திஜீவிகள், விவசாயிகள் சமூக சேவையாளர்கள், இளைஞர்
பிரதிநிதிகள் முதலானோரை வேட்பாளர்களாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகின்றது.
தை
21,
2011
யாழ். நகரில்
நவீன வர்த்தக நிலைய தொகுதியை அமைக்கத் திட்டம்
யாழ். நகரில் நவீன வர்த்தக நிலையம் தொகுதியை
அமைப்பது தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி
அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று
ஆய்வு செய்துள்ளார். முன்னதாக கஸ்தூரியார் வீதியில் நகரக் குளத்திற்கு
அண்மையாக அமைந்துள்ள வர்த்தக உரிமையாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
இதன்போது அமையப் பெறவுள்ள நவீன வர்த்தக நிலையத் தொகுதியில் முன்னுரிமை
அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து தரப்படுமெனவும் அதற்கு 4 மாத கால அவகாசம்
தேவையென்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் இவ்விடயம் தொடர்பில்
யாழ். மாநகர முதல்வரிடம் தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெற்றுக்
கொள்ளுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அப்பகுதியில் அமையப்
பெற்றுள்ள பாரவூர்தி, துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்
தரிப்பிடங்களையும் பார்வையிட்ட அமைச்சர் நகரக் குளத்தையும் அதன் சுற்றுப்
புறத்தையும் பார்வையிட்டார்.
தை
21,
2011
மத்திய மந்திரி சபை மாற்றம்
தி. மு. கவுக்கு அதிர்ச்சி மம்தா கட்சிக்கும் வாய்ப்பில்லை
மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் மாற்றி அமைக்கப்பட்டது. மூன்று பேர்
அமைச்சரவை அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றனர். மூன்று புதுமுகங்கள்
அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை
அமைச்சராக இருந்து ஜெய்பால் ரெட்டி, பெட்ரோலியத் துறைக்கு
மாற்றப்பட்டுள்ளார். அதே நேரத்தில், தி. மு. க. மற்றும் மம்தா பானர்ஜியின்
திரிணமுல் காங். கட்சியைச் சேர்ந்த யாருக்கும்அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
தொலைத் தொடர்பு அமைச்சராக கபில் சிபில் நீடிப்பார் என்றும்,
தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், எண்ணிக்கை
அளவில் சில சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
(மேலும்....)
தை
21,
2011
மன்னார் வளைகுடாவில் மூழ்கிய தீவுகள்
21 தீவுகளில் கீழக்கரை அருகே உள்ள பூவரசன்பட்டிதீவு, தூத்துக்குடி அருகே
உள்ள விலங்குசல்லி தீவுகள் அடையாளம் காண முடியாத வகையில் கடலில்
மூழ்கிவிட்டன. 2010ல் மன்னார் வளைகுடா கடலின் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
இதற்கு பவளப்பாறைகளின் பாதிப்பே காரணமாகும். பவளப் பாறைகள், 560 ச.கி.மீ.
பரப்பளவில் 117 வகை உள்ளன. “கப்பாபைகஸ் ஆல்வரேசி” பாசியால் இவை அழிவைச்
சந்தித்து வருகின்றன. இதைத் தடுக்க வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.(மேலும்....)
தை
21,
2011
மக்களின் பங்களிப்புடன் உணவுப் பொருட்களின் விலை உயர்வை தடுத்துவிடலாம்
சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால்
நாட்டின் பல பகு திகள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வட மத்திய
மாகாணத்தின் பல பிரதேசங்களிலும், நெல் விளை ச்சல் நிலங்களுக்கும், மக்களின்
உடமைகள், வீடுகள், இருப் பிடங்களுக்கும் இலட்சக்கணக்கான கோழிகளுக்கும்,
ஆயிரக் கணக்கான கால்நடைகளுக்கும், பல மனித உயிர்களுக்கும் ஏற்பட்ட இழப்பு
குறித்து, நாம் பத்திரிகைகளிலும், இலத்திரனி யல் ஊடகங்களான வானொலி,
தொலைக்காட்சி சேவைகளி லும் அறிந்து வேதனைப்பட்டோம்.
(மேலும்....)
தை
20,
2011
தமிழ் கட்சிகளின் ஒரு பாரிய கூட்டணி அமைக்கின்ற முயற்சிகளின் இறுதிகட்ட
தீர்மானம் நாளை நண்பகல்
தமிழ் கட்சிகளின் ஒரு பாரிய கூட்டணி அமைக்கின்ற ஒரு முயற்சியிலே தமிழர்
விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி, தமிழ் தேசிய
விடுதலைக் கூட்டமைப்பு ஆகிய நான்கு கட்சிகள் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து
எடுகின்ற முயற்சிகளின் பலனாக ஈபிடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலை கூட்டமைப்பு ஆர்வம் காட்டமையால் அவர்களுடன் சந்திப்பு
சாத்தியப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பல சுற்று கூட்டங்கள்
முடிவடைந்திருக்கின்ற சூழ்நிலையிலே, 7 கட்சிகள் உள்ளடங்களாக ஒரு பாரிய
கட்சியினை அமைக்கின்ற முயற்சியிலே போதியளவிலே இருகட்சிகளுக்கும் இடையில்
இணக்கம் காணப்பட்டுள்ளது.
(மேலும்...)
தை
20,
2011
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை
அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது. ஜனாதிபதி
தனிபட்ட விடயத்திற்காகவே அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அறிய
முடிகின்றது. அது சரி உருத்திரகுமார் என்ன செய்யப் போகின்றார்?
அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்க போட்டு மகிந்தாவை கைது செய்ய முயற்சிக்க
போகின்றாரா...?
தை
20,
2011
உள்ளுராட்சி தேர்தலில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இணைந்து
போட்டி…?
உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இணைந்து போட்டியிடத்
தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டம் உட்பட கூட்டமைப்பு
போட்டியிடும் சகல சபைகளிலும் இணைந்து ஓரணியில் போட்டியிடுவதற்கு இணக்கம்
காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலரும் பாராளுமன்ற
உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, எம்.பிக்களான சுரேஸ் பிறேமச்சந்திரன்,
எம்.சுமந்திரன் ஆகியோருக்கும் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம்
சித்தார்த்தனுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுக்களின்போது இந்த இணக்கம்
ஏற்பட்டுள்ளது.
(மேலும்...)
தை
20,
2011
குற்றச் செயல்களை
தடுக்க யாழ். பொலிஸார் நடவடிக்கை
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில்
உள்ள பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும்
நடவடிக்கைகளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா மேற்கொண்டு
வருகிறார். முதல் கட்டமாக யாழ். பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட
பொலிஸ் பிரிவு ரீதியாக பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள், வணிகர் கழக
பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளுடனான சந்திப்புக்களை மேற்கொண்டு
வருகின்றார். வீடுகளிலும் வணிக நிலையங்களிலும் இடம்பெறக்கூடிய திருட்டுச்
சம்பவங்களை கட்டுப்படுத்துவது சம்பந்தமான அறிவுரைகளையும் அவர் வழங்கி
வருகின்றார். கிராம அலுவலர்கள் தமது பகுதிகளில் நடமாடுபவர்கள் பற்றிய
விபரங்களில் அதிக அக்கறை எடுப்பதுடன் உரிய தகவல்களை பொலிஸாருக்கு வழங்கி
குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முழுமையான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும்
எனவும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
தை
20,
2011
20.01.2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்
இந் நிகழ்ச்சியில் மனித உரிமைவாதியும்
ஊடாகதுறை செயற்பாட்ளாருமான சுனந்ததேசபிரியா ரிபிசியின் அரசியல் ஆய்வாளர்
வி.சிவலிங்கம், ரிபிசியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் ஜெகநாதன், ரிபிசியின்
பணிப்பாளர் வீ. இராமராஜ்ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள்
தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள
இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.
தொடர்புகளுக்கு: 00 44 208 9304826 or
078107063682
Internet
24 hours:
http://tbcuk.com or http://www.tamil.nl
தை
20,
2011
மட்டக்களப்பு ஆரையம்பதி ஆர்பாட்டத்தால், பூ.பிரசாந்தன் கைது!
ரீ.எம்.வி.பி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் இன்று காலை மட்டக்களப்பு
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச
செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் மற்றும் அவர் மீது தாக்குதல்
மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் கைதினைத் தொடர்ந்து
மட்டக்களப்பில் பதற்றமான நிலைமை தோன்றியுள்ளதாக அங்கிருக்கும் எமது
செய்தியாளர் குறிப்பிடுகின்றார். குறிப்பாக பிரசாந்தனின் கைதினைத் தொடர்ந்து
அவருடைய ஆதரவாளர்கள் சிலர் ஆரையம்பதி பிரதேசத்தில் ஆர்ப்பாடத்தில்
ஈடுபட்டுவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தை
20,
2011
டெல்கியிற்கான நெடும் பணயம் தொடர்கின்றது.
ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்னணியின்
புதுடெல்கியை நோக்கிய நெடும் பயணம் தொடர்பான செய்திகளை ஆந்திர மாநில
தொலைகாட்சிகள் ஒலிபரப்பிவருகின்றன. மூன்றாவது நாளான புதன்காலை
ஆந்திரமாவடட்த்தில் உள்ள நாயடுபேட்டையிக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து
ஆரம்பாகி நெல்லுர்க்கு அருகே உள்ள கிராமத்தை சென்றயடை உள்ளது இன்று காலை
நடைபணயம் ஆரம்பிக்கபட்டபோது பெரும் தொகை பத்தரிக்கையாளகள் ஆந்திர மாநில
முன்னணி தொலை காட்சிகளான ஜெமினி, ஈநாடு, சொக்சி ஆகியன தொலைகாட்சி சேகரித்து
ஒளிபரப்பியுள்ளன.
(மேலும்...)
தை
20,
2011
Eastern University Damages Amount To Millions Of Rupees
The Eastern University located in
the Batticaloa District has incurred damages amounting to millions of
rupees due to the heavy floods experienced in the Eastern Province. Vice
Chancellor of the Eastern University, Dr. K. Premkumar has told the
media that the damages to the university amounted to about Rs. 130
million. The buildings in the university’s Vandaramulla faculty have
reportedly been damaged along with computers and other equipment that
were in the premises. Meanwhile, most of the roads in the East that were
badly damaged due to the floods are currently being repaired with
military assistance
(Ajantha Gnanamuttu) (905 460
1667)
தை
20,
2011
புலிகளின் பலமுகம்
பிரித்தானிய தமிழர் பேரவையின் இரு முகம்....?
பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் புதுடில்கி சென்று இந்திரா காங்கிரஸ்
செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தியை சந்தித்த விடயம் புலி ஆதரவு
இணையத்தளம் வெளியிட்டு உள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சென்
கந்தையா அண்மையில் இந்தியா புதுடில்கி சென்று இந்திரா காங்கிரஸ்
செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தியை சந்தித்த விடயம் புலி ஆதரவு
இணையத்தளமான அதிர்வுவெளியிட்டு உள்ளது. பிரித்தானியாவில் வாழும்
தமிழர்களியிடையே இந்தியாவிற்க்கு எதிரான போக்கினை கடைபிடிப்பது போல
பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பிரித்தானிய தமிழர் பேரவையின் உயர்மட்ட
தலைவர்கள் இந்திய அரசின் நெருங்கிய தொடர்புகளை மேற்கொள்ளுவதாகவும்
தெரியவருகிறது.
(மேலும்...)
தை
20,
2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடை பயணத்தின் 3வது நாள் நிகழ்வு!
ஆந்திராவில் உள்ள அனைத்துப் பத்திரிகை
நிருபர்களும், அனைத்துத் தொலைக்காட்சி நிருபர்களும் வந்து பேட்டி எடுத்து,
விபரங்களைத் தெரிந்து கொண்டு, உங்கள் நடைபயணத்தின் நோக்கத்தை உலகம் அறியச்
செய்வோம் என்று உறுதி கூறினார்கள். அங்கு நடந்த ஆந்திர மாநில பத்திரிகையாளர்
சந்திப்பு நிகழ்ச்சியும், அவர்கள் கொடுத்த உறுதி மொழியும் நெடுந்தூர நடைபயண
வீரர்களுக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது. ஆந்திரவில் உள்ள அனைத்துப்
பத்திரிகைகளின் நிருபர்கள் அனைவருமே உங்களது நோக்கம் நிறைவேற எங்களால்
முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று வாக்குக் கொடுத்து
விடைபெற்றார்கள்.
(மேலும்...)
தை
20,
2011
கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவி
கிழக்கில்விடாது பெய்தமழையினால் அம்பாரையில்-
4லட்சத்து 71ஆயிரத்து 443 பேரும் மட்டக்களப்பில்- 5லட்சத்து 40ஆயிரத்து 144
பேரும், மூதூரில் 98 ஆயிரத்து 985 பேரும் அடிப்படைவசதிகளின்றி
மீண்டும்மீண்டும் அகதிகளாய் ஒதுங்க இடமுமின்றி தவிப்பதுகண்டு எம்இதயம்
விம்மி வெடிக்கின்றது. சமையல்பாதிரங்களுடன்,படுக்கை, போர்வை, மாணவர்களின்,
பாடபுத்தகங்கள், கொப்பிகள், ஆடைகளென எல்லாமே வெள்ளத்தால்
அடித்துச்செல்லபட்டு ஏங்கித்தவிக்கும் எம் சொந்தங்களுக்காகவும்,
தாயின்மடியில் பாலின்றி அலறும் மழலைக்கும் அடிப்படைவசதியின்றி நோயுற்றவர்கள்,
கர்ப்பிணிதாய்கள் மற்றும் வயோதிபர்களுக்காகவும்; புலம்பெயர்ந்து வாழுகின்ற
அனைவரும் ஒன்றிணைந்து மனம்திறந்து உதவும்படி அன்பாகக்கேட்கின்றோம்.
(மேலும்...)
தை
20,
2011
நச்சு வாயுவை வெளியேற்றும்
வாகனங்களுக்கு
தடை விதிக்க வேண்டும்
வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுவாயு
கலந்த புகை சுற்றாடலை அசுத்தப்படுத்தி தீங்கிழைப்பதனால், உலகில் வருடாவருடம்
சராசரியாக 40 இலட்சம் மக்கள் மரணிக்கிறார்கள். இது இலங்கையிலும் பொது
மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. நச்சு வாயு கலந்த
கரும்புகையை வெளியேற்றும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட
நடவடிக்கை எடுப்பதற்கு எமது நாட்டின் வாகன போக்குவரத்து சட்டங்கள் போதியளவு
அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்குகின் றன. என்றாலும், இது விடயத்தில் பொலிஸாரோ,
வாகனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் அரசாங்க திணைக்களமோ இச்சட்டங் களை
கடுமையாக கடைப்பிடிப்பதில் அந்தளவுக்கு ஆர்வமோ, அக்கறையோ காட்டி
வருகிறார்கள் என்று கூறுவதற்கு இல்லை.
(மேலும்...)
தை
20,
2011
2400 ஆண்டுகள் பழைமையான சூப்
சீனாவின் புராதன இராசதானிகளில் ஒன்றாக இருந்த ஸாஆங்ஸி மாகாணத்தில்
மேற்கொள்ளப்பட்ட நிர்மாண வேலை ஒன்றின்போது 2400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சூப்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டு இருந்த
பாத்திரம் ஒன்றை வெளியில் எடுத்து திறந்து பார்த்தபோது அதற்குள் சூப்
இருந்தது. மிருகம் ஒன்றின் எலும்புகளில் சூப் ஆக்கப்பட்டு இருக்கின்றது.
இப்பாத்திரத்துடன் இன்னும் இரு பாத்திரங்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றுள்
ஒன்றுக்குள் ஒரு வகையான மதுபானம் உள்ளது. சூப் தயாரிக்கின்றமைக்குப்
பயன்படுத்தப்பட்ட மிருகம் எது? மதுபானம் எதில் இருந்து
தயாரிக்கப்பட்டிருக்கின்றது? என்கிற ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கி
உள்ளனர்.
தை
20,
2011
அமெரிக்க
டொலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த சீனா தீர்மானம்
அமெரிக்க டொலரினால் ஆதிக் கம் செலுத்தப்பட்ட
சர்வதேச நாணய முறைமை கடந்த காலத்திற் குரியதென இவ்வாரம் அமெரிக்கா வுக்கான
விஜயம் மேற்கொள்ள வுள்ள சீன ஜனாதிபதி ஹுஜிந் தாவோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்க டொலரிற்கு பதிலாக சீன நாணயமான யுவானை சர்வதேச அளவில்
புழக்கத்தில் விடு வதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜிந்தாவோ
தெரிவித் துள்ளார்.
(மேலும்...)
தை
20,
2011
வீடில்லாத அமெரிக்கர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
பொருளாதார நெருக்க டியின் பாதிப்பால் அமெ ரிக்காவில் ஏழைகளில் எண் ணிக்கை
அதிகரிப்பதோடு, வீடில்லாமல் அவதிப்படுப வர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து
அதிகரித்து வருகிறது. வீடின்மைக்கு முடிவு கட்டும் தேசியக் கூட்டணி என்ற
அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இது தெரிய வந்துள்ளது. வீடில்லாமல் அவதிப்படும்
அமெரிக்கர் களின் நலன்களுக்காகப் போராட இத்தகைய அமைப்பு உருவாக்கப்பட்
டுள்ளது. 2008 ஆம் ஆண் டோடு ஒப்பிடும்போது 2009 ஆம் ஆண்டில் வீடில்
லாதவர்களின் எண்ணிக்கை 3 விழுக்காடு அதிகரித்தது. சரியான புள்ளிவிபரங்கள்
இல்லாவிட்டாலும், 2010 ஆம் ஆண்டில் இந்த எண் ணிக்கை பெரும் அளவில்
அதிகரித்தது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.(மேலும்...)தை
20,
2011
இந்திய
அமைச்சரவையில் மாற்றம்
தி.மு.க.வைச் சேர்ந்த ஆர். ராசா, தொலைத்
தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகியதாலும், ஆதர்ஷ் கூட்டுறவு
வீட்டு வசதி சங்க முறைகேடு தொடர்பாக மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக்
சவாண் விலகவே அவரது இடத்தில் பிரதமர் அலுவலக இணை அமைச்சராக இருந்த பிருதி
விராஜ் சவாண் நியமிக்கப்பட்டதாலும், ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக இணை
வெளியுறவுத்துறை அமைச்சர் சசி தரூர் விலகியதாலும் ஏற்பட்ட வெற்றிடங்களை
நிரப்புவதே இந்த அமைச்சரவை மாற்றத்தின் முக்கிய நோக்கம். ஊடக வளர்ச்சித்துறை
அமைச்சர் சி.பி. ஜோஷி, கனரகத்தொழில் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்
உள்ளிட்ட சில அமைச்சர்கள் கட்சிப் பணிக்கு அனுப்பப்படக்கூடும் எனத் தகவல்கள்
வெளியாகியுள்ளன. ஆயினும் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோனி,
எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் வகிக்கும் நிதி, உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவு
ஆகிய முக்கிய அமைச்சுக்களில் மாற்றம் இருக்காது என்றும் தெரிகிறது.
(மேலும்...)
தை
19,
2011
ஒவ்வொரு அமெரிக்கர் தலையிலும் ரூ. 22 லட்சம் கடன்!
கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவில்,
ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 22 லட்சம் ரூபாய் கடன் ஏற்றப்பட்டுள்ளது.
இதுவரையிலும் இல்லாத அளவுக்கு நாட்டின் கடன் உயர்ந்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம்
ஊழலில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றவுடன், அதற்கு எத்தனை பூஜ்யங்கள்
என்பதைக் கண்டுபிடிக்க பலரும் திணறினார்கள். அமெரிக்காவின் ஒட்டுமொத்த கடன்
ஏழு கோடியே கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எவ்வளவு கடன் இருக்கலாம்
என்று ஒரு வரம்பை அங்கு வைத்திருக்கிறார்கள். தற்போது அந்த வரம்பை மேலும்
தளர்த்தி விடலாமா என்று அமெரிக்க நாடாளுமன்றம் ஆலோசனை செய்து வருகிறது.
அப்படித் தளர்த்தாவிட்டால் திவால் நிலைக்குள் அமெரிக்கப் பொருளாதாரம்
நுழைந்துவிடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
(மேலும்...)தை
19,
2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைப் பயணம் இரண்டாவது நாள் நிகழ்வு!
17-01-2001 (திங்கள்) காலை உணவை முடித்துக் கொண்டு 9: 00 மணியளவில் நடைப்
பயண வீரர்கள் பயணத்தை தொடங்கினர். சப்பாத்து போட்டு நடக்க முடியாத
வீரர்களுக்கு செருப்புகள் வாங்கிக் கொடுக்கப்பட்டது. நடைப்பயணம் சத்தியவேடு
நோக்கி பயணித்தது. சரியாக 01:30 மணிக்கு நடைபயணம் சத்தியவேடு சென்றடைந்தது.
அங்கேயே மதிய உணவை எடுத்துக்கொண்டார்கள். அங்கே வெப்பம் அதிகமாக இருந்ததால்
சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு, மாலை 04:00மணியளவில் மீண்டும் நடைபயணம்
ராசபாளையம் என்ற இடத்தை நோக்கிப் பயணித்தது.
(மேலும்...)
தை
19,
2011
Mississauga West End Buddhist Temple Launching Flood Relief Campaign to
help Hardest hit in Eastern Sri Lanka
First for years the ravages of a
brutal war; then a tsunami that killed or displaced half a million or
so! Then war again and now, devastating floods! Our compatriots,
Sinhalese, Tamil, Muslim and Malay brothers and sisters are in the grip
of suffering and misery once again. UN, India and neighboring friendly
nations in South Asia, China, Japan, USA, Canada, UK etc. have responded
opening their hearts to this latest calamity that hit Sri Lanka with the
dawn of the New Year 2011 by sending packages of generous aid -
financially and by way of essential items. West End Buddhist Cultural
Centre is launching a Flood Victims’ Relief Effort effective immediately
with January 31, 2011, as cut off date.
(more....)
தை
19,
2011
சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளின் பிராந்தியத் தலைவர்
கைது
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளில்
விடுதலைப் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த தலைவர்
கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நான்கு நாடுகளில் புலிகள் அமைப்பை இயங்க
வைத்துள்ளார். கைது செய்யப்பட்டிருப்பவர் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைச்
சோ்ந்த செல்லையா ஜெயபாலன் எனும் பெயரைக் கொண்டவரும், புலிகள் அமைப்பில்
அப்துல்லா எனும் பெயரில் இயங்கியவருமான புலிகளின் பிராந்திய தளபதியாவார்
என்று சுவிட்சர்லாந்துப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
செல்லையா ஜெயபாலன் எனும் பெயர் கொண்ட அவர் தன் பெயரை ஜெயபாலன் செல்லையா
என்பதாக மாற்றிக் கொண்டு சுவிட்சர்லாந்தின் போ்ண் நகரில் இருந்து கொண்டு
செயற்பட்டு வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. கொழும்பு,
இந்தியாவின் தமிழ்நாடு, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அவர்
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்துள்ளதுடன்,
அங்கெல்லாம் இயங்கும் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து
வந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமன்றி கடந்த
காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களைக் கொள்வனவு
செய்வதற்காக அவர் பெருந்தொகையில் நிதியுதவி அளித்துள்ளதாகவும் செய்திகள்
வெளிவந்துள்ளது.
தை
19,
2011
ஈழத் தமிழ் இனமும், ஆட்சி உரிமையும்!
போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்த பின்னர்
யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலைப் பகுதிகளைக் கைப்பற்ற முடியாமல் திணறினர்.
கொழும்பு, மன்னார் பகுதிகளை மட்டும் கைப்பற்றி ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.
மன்னார் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை போர்த்துக்கீசியர் கிறிஸ்தவ
மதத்துக்கு மாற்றினர், இதனைக் கண்டு ஆத்திரமடைந்த யாழ்ப்பாண தமிழ் அரசன்
மன்னாருக்குப் படை எடுத்துச் சென்று போர்த்துக்கீசியரை அடித்து விரட்டி
விட்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து
அவர்களது தலையை வெட்டிவிட்டார். இப்படி அறுநூறு பேர் கொல்லப்பட்டனர். இதனைக்
கண்டு கோபமுற்ற போர்த்துகீசியர் கோவாவிலிருந்தும்,
போர்த்துகீசியத்திலிருந்தும், கொழும்பிலிருந்தும் தங்களது படைகளைத் திரட்டி,
யாழ்ப்பாணத்தின் மீது படை எடுத்தனர். இந்தப் படை எடுப்பில் யாழ்ப்பாணம்
கைப்பற்றப்பட்டது. தமிழர்களின் அனைத்து நினைவுச் சின்னங்களும்
அழிக்கப்பட்டன. ஐந்து சிவ ஆலயங்களும் தரைமட்டம் ஆக்கப்பட்டன. அரச மாளிகை
உள்பட தமிழரது எந்த நினைவுச் சின்னங்களையும் போர்த்துக்கீசியர்
விட்டுவைக்கவில்லை. 1560ஆம் ஆண்டு இந்த அழிவை தமிழர்களுக்கு ஏற்படுத்தினர்
போர்த்துக்கீசியர்.
(மேலும்...)
தை
19,
2011
காணும் பொங்கல்
மெரினா
கடற்கரையில் திரண்ட பொதுமக்கள்
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா
கடற்கரையில் 5 இலட்சம் மக்கள் திரண்டனர். பொருட் காட்சி, பூங்காக்களிலும்
திருவிழாபோல் கூட்டம் இருந்தது. மெரினா கடலில் குளிக்க தடை
விதிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டது.
நேற்று முன்தினம் காலை 11 மணி முதலே மெரினா கடற்கரையில் அதிகள வில் மக்கள்
குவிய தொடங்கினர். சுட் டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தா மல்
குடும்பத்துடன் வந்து இறங்கினர். எங்கு பார்த்தாலும் மனித தலைகள் தென்படும்
அளவிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் நின்றிருந்தனர். எம். ஜீ. ஆர்.
சமாதி, அண்ணாசதுக்கம், உழைப்பாளர் சிலை அருகில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு
இருந்தனர. பலர் கட்டுச் சோறுடன் வந்து மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டனர்.
மெரினா கடற்கரையில் கூட்டம் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும்
நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரதம் பொலிசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலில் இறங்கி குளிக்க தடை
விதிக்கப்பட்டிருந்தது.
தை
19,
2011
Disbelief at defeat of LTTE needs to be unpacked
In the run up to the final
military annihilation of the LTTE, there were two perceptible reactions
from certain sections of the international community. There was freely
expressed horror at the massacre of thousands upon thousands of innocent
civilians that seemed to be inevitable. Mischief-makers started throwing
out numbers and these took lives of their own and were eventually
treated not as conjecture but fact, producing even greater horror. There
was a scandalous readiness to treat LTTE propaganda as biblical truth.
There were cries for international intervention to save the LTTE
leadership.
(more...)
தை
19,
2011
புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!
புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர்
ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராபுர
விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான திரைப்படத்தில்
குறித்த நபர் நடித்துள்தாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வினோதன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மீனவர் என்ற போர்வையில் குறித்த நபர் கனடாவில் அடைக்கலம்
கோரியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வினோதன், தாக்குதலுக்கு தலைமை
தாங்கிய நபரின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திரைப்படத்தில் நடிப்பதற்காக தமக்கு புலிகள் பணம் வழங்கியதாக அவர்
குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைத்து
விசாரிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தை
19,
2011
வவுனியா
மாவட்டத்தில் 98 வீதமான மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தி
வவுனியா மாவட்டத்தில் 98 சதவீதமான
மிதிவெடிகள், நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதுடன்
98 வீதமான மீள்குடியேற்றமும் பூர்த்தியடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர்
திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். மோதல்கள் உக்கிரமமாக
நடைபெற்ற காலங்களில் புலிகளால் அமைக்கப்பட்ட முன்னணி காவலரன் பகுதிகளில்
பெருமளவான மிதிவெடிகள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றை மிகவும்
எளிதாக அகற்றிவிட முடியாது. குறிப்பாக இம்மாவட்டத்தில் 98 சதவீதமான
பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றும் பணி பூர்த்தியடைந்துள்ளது. எனினும்
மிதிவெடிகள் ஆபத்துள்ளதாக கருதப்படும் பாதுகாப்பு அணை பகுதியான மகிழங்குளம்
பகுதியிலேயே தற்போது மிதிவெடிகள் அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த
அணைக்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும மீள்குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளன.
(மேலும்...)
தை
19,
2011
ஏ - 9 சாலையில்
பாரஊர்திகளுக்கு நிறை வரம்பு நடைமுறை விரைவில்
யாழ் - கண்டி ஏ-9 நெடுஞ்சாலையில் பயணிக்கும்
பார ஊர்திகளுக்கான நிறைக்கட்டுப்பாட்டு முறையை இறுக்கமாக நடைமுறைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா
சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்.-கண்டி நெடுஞ்சாலை உட்பட யாழ்.
குடாநாட்டில் உள்ள பிரதான வீதிகள் பல விரைவில் சேதமடைந்து போகின்றன. இதற்கு
அவ் வீதிகளில் பயணிக்கும் பார ஊர்திகள் அளவுக்கதிகமான சுமைகளை ஏற்றிச்
செல்கின்றமையும் ஒரு பிரதானமான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து,
பார ஊர்திகள் மற்றும் கன ரக வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படக் கூடிய சமையின்
நிறைக்கான வரம்பினை நிர்ணயம் செய்ய சட்டத்துக்கு அமைவாக நடவடிக்கைகள்
எடுக்கப்படவுள்ளன.
(மேலும்...)
தை
19,
2011
முல்லைத்தீவு
மாவட்டத்தில் 1666 பேர் மீள்குடியேற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்
பெயர்ந்த 1666 பேர் மருச்சியம்பற்று பிரதேச செயலக பிரிவில் மீள்கு
டியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது. மோதல் காரணமாக
இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் புத்தளம் பிரதேசங்களில் உறவினர்,
நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி 289 குடு ம்பங்களைச் சேர்ந்த 1168 பேர் மீள்கு
டியேற்றப்பட்டனர். இவர்களில் 547 ஆண்களும் 621 பெண்களும் அடங்குவர். இது
தவிர கடந்த 13 ஆம் திகதி 134 குடும்பங்களைச் சேர்ந்த 498 பேர் மீள் குடி
யேற்றப்பட்டனர். இவர்களி டையே 237 ஆண்களும் 261 பெண்களும் அடங்குவர்.
இன்னும் சிறிதளவானவர்களே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற
வேண்டியுள்ளதோடு இவர்கள் மிக விரைவில் மீள்குடியேற்ற உள்ளதாக மாவட்ட செயலகம்
கூறியது.
தை
19,
2011
யாழ். பல்கலைக்கழக மாணவர் கிழக்கில் நேரடியாகச் சென்று உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக மிகக்கடுமையாக
பாதிக்கப்பட்ட படுவான்கரைப்பகுதிக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்
ஒன்றியத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நேற்று போரதீவுப்பற்று
பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடம்பெயர்ந்த
முகாம்களுக்கு சென்ற மாணவர்கள் நேரடியாக இந்த உணவு விநியோகத்தை
மேற்கொண்டுள்ளனர். யாழில் உள்ள மக்களிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர்
ஒன்றியத்தினால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களே இவ்வாறு
விநியோகிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர் ஒருவர்
தெரிவித்தார். இந்த நிகழ்வை அரசியல் படுத்து விரும்பாத நிலையில் அதனை
தாங்கள் நேரடியாக கொண்டு சென்று அந்த மக்களுக்கு விநியோகம் செய்ததாகவும்
அவர் மேலும் தெரிவித்தார்
தை
19,
2011
Paul Calandra at ribbon cutting ceremony for NCCT
was in shock and so did the
others feel let down who have supported the Conservative Party during
the last two elections after reading the news item by-lined Andrew Moran
in the Examiner on January 16, 2011 which said – “Public officials help
welcome National Council of Canadian Tamils office. The National Council
of Canadian Tamils (NCCT) Chairman, Mohan Ramakrishnan, and Member of
Parliament, Paul Calandra, took part in the traditional cutting of the
ribbon..” at the launch of the official NCCT office in Northern Toronto,
at 3510 Finch Avenue East, Unit 10, Saturday (15 January 2011).
(more....)
தை
18,
2011
பிரிட்டன் அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
கடந்த வாரத்தின் நிறை வில் பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும்
அமைப்புகள் சார்பில் அர சின் கொள்கைகளுக்கு எதிராக ஆயிரக்கணக் கானோர்
பங்கேற்ற நிகழ்ச் சிகள் நடைபெற்றன. லண்டன் மாநகர், இங் கிலாந்தின் பல
பகுதிகள் ஆகியவற்றில் மனு கொடுக் கும் போராட்டம், பொதுக் கூட்டங்கள் மற்றும்
பேர ணிகள் நடைபெற்றுள்ளன. சுகாதாரத்துறை அமைச் சராக இருக்கும் லிபரல்
டெமாக்ரடிக் கட்சியின் பால் பர்ஸ்டோவின் தொகு தியில் பெருந்திரள் ஆர்ப்
பாட்டம் நடந்துள்ளது. சுகாதாரத்துறை நிதி ஒதுக் கீட்டில் கடுமையான வெட்டை
அரசு மேற் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப் பாட்டம் நடந்தது.
(மேலும்...)
தை
18,
2011
கிழக்கு மாகாண வெள்ள அனர்த்த நிவாரணப் பணிகளில் பத்தமநாபா ஈபிஆர்எல்எவ்
மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம்
தலைமையில் வெள்ள அனர்த்த நிவாரணப்பணிகள் கிழக்கில் நடைபெற்று வருகின்றன.
இவ்விடயம் சம்மந்தமாக கருத்து தெரிவித்த துரைரத்தினம்
பல்வேறு அரச நிறுவனக்கள், அரசு
சாராத நிறுவனங்கள் நிவாரண வேலைகளில் ஈடுபட்டிருப்பதையும்,
குறிப்பாக பிரதேச செயலா
ளர்கள்
தொடக்கம் அனைத்து அரச ஊழியர்களும், பாதுகாப்பு படையினரும், சமூக
நிறுவனங்களும் இரவு பகலாக கடும் பிரயத்தனங்கள் செய்வதையும் குறிப்பிட்டார்.
உடனடி நிவாரணத்தை பொறுத்தவரையில் கொடுக்கப்படும் உலர் உணவு மற்றும்
உணவுக்கான கொடுப்பனவு 100
ரூபா
போதுமானதாக இல்லை என்றும் இந்த விடயத்தில் மக்களுக்கு திருப்தி தரும்
வகையில் செயற்படுவதற்கான வளங்கள் எம்மிடமில்லை என்றும் தெரிவித்தார்.
எனினும் இடர்படும் குடும்பங்களுக்கும் அவரது சுற்றத்தினர்க்கும்
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொட்டலம் ஒன்று விநியோகிக்க ஏற்பாடு
செய்தால் பயனுடையதாக இருக்குமென்றார்.
(மேலும்....)
தை
18,
2011
சட்டவிரோத
குடியேற்றவாசிகளுடன் மேலும் இரு கப்பல்கள் கனடா நோக்கி பயணம்
சட்டவிரோதமாகக் குடியேறவிரும்பும் இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு மேலும்
இரு கப்பல்கள் தென்கிழக்கு ஆசியா நாடொன்றிலிருந்து கனடா நோக்கி
பயணிக்கவுள்ளதாக கனடிய புலனாய்வு அதிகாரிகள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு
எச்சரிக்கை செய்துள்ளனர். ஆசிய நாடுகளிலுள்ள இனங்காணப்படாத துறைமுகங்கள்
இரண்டிலிருந்து சட்டவிரோதமாக ஆட்களை கடத்திவருவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளதாகவும் புலி ஆதரவாளர்கள் உட்பட 400 இலங்கை தமிழர்கள்
இந்தக் கப்பலில் பயணிக்க தயாராகுவதாகவும் தமக்கு இரகசிய தகவல்கள்
கிடைத்துள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கனடா அரசாங்கத்தின் கவனத்திற்கு
கொண்டு வந்துள்ளனர்.
(மேலும்....)
தை
18,
2011
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்தக்கோரி
இந்தியாவில் நெடும் பயணம்
இந்தியஇலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். 1948 ஆம்
ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக்
குடியேற்றங்களை (முப்பது இலட்சம் சிங்களக் குடியேற்றவாசிகளை) வெளியேற்ற
வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து கால்நடையாக இந்தப்
பயணத்தை மேற்கொள்கிறோம்.
எங்களது
இனம் மறைமுகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவர்களுக்குத்
தெரியப்படுத்துவதுடன், உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுவது மட்டும்
அல்லாமல் அவற்றுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும்
வலியுறுத்தப்படும். எங்கள் இன மக்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும்
மேற்கொள்ளப்படும்.
(மேலும்....)
தை
18,
2011
புலிகள் இயக்கம் கனடாவை மையமாகக் கொண்டு இலங்கையில் மீண்டும் தீவிரவாத
செயல்களில் ஈடுபட முயற்சி கனடா பாதுகாப்புத் தரப்பினர் தகவல்
வெளியிட்டுள்ளனர்!

புலிகள் இயக்கம் கனடாவை மையமாகக் கொண்டு இலங்கையில் மீண்டும் தீவிரவாத
செயல்களில் ஈடுபட முயற்சித்து வருவதாக கனடாவின் பாதுகாப்புத் தரப்பினர்
தகவல் வெளியிட்டுள்ளனர். இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது
தங்களுக்குத் தெரியாது எனவும், கனடாவில் ஏற்கனவே புலிகள் அமைப்பின் சில
தலைவர்கள் இருப்பதாகவும் கனடா செய்தி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில்,
தெற்காசிய ஆட்கடத்தல்காரர்களால் மேலும் இரண்டு கப்பல்களில் பிரிட்டஷ்
கொலம்பியா கடற்பரப்பை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அதில் 50ற்கும்
மேற்பட்ட புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
(மேலும்....)
தை
18,
2011
கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவி
கிழக்கில்விடாது பெய்த மழையினாலும்
ஆர்ப்பரித்து பொங்கியெழும் கடலும் நிரம்பிவழிந்து உடைப்பெடுத்த குளங்களாலும்
கிராமம்கிராமமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அம்பாரையில் 4லட்சத்து
71ஆயிரத்து 443 பேரும் மட்டக்களப்பில் 5லட்சத்து 40ஆயிரத்து 144 பேரும்,
மூதூரில் 98 ஆயிரத்து 985 பேரும் அடிப்படை வசதிகளின்றி மீண்டும்மீண்டும்
உணவின்றி உறைவிடமின்றி அகதிகளாய் ஒதுங்க இடமுமின்றி தமது ஊரிலேயே தவிப்பது
கண்டு எம் இதயம் விம்மி வெடிக்கின்றது. சமையல் பாத்திரங்களுடன், படுக்கை,
போர்வை, மாணவர்களின், பாடபுத்தகங்கள், கொப்பிகள், ஆடைகளென எல்லாமே
வெள்ளத்தால் அடித்துச்செல்லபட்டு ஏங்கித்தவிக்கும் எம் சொந்தங்களுக்காகவும்,
தாயின் மடியில் பாலின்றி அலறும் மழலைக்கும் அடிப்படைவசதியின்றி
நோயுற்றவர்கள், கர்ப்பிணி தாய்கள் மற்றும் வயோதிபர்களுக்காகவும்
கல்வியின்றிதவிக்கும் இளம் சிறார்களுக்காகவும் புலம்பெயர்ந்து வாழுகின்ற
அனைவரும் ஒன்றிணைந்து மனம் திறந்து உதவும்படி அன்பாகக் கேட்கின்றோம்.(மேலும்....)
தை
18,
2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடும்பயணத்தின் முதல்நாள் நிகழ்வு!
16-01-2011 ஞாயிறு அன்று காலை 11:30 மணியளவில், அமரர் இராஜீவ்காந்தி நினைவு
மண்டபத்திலிருந்து, திரு. மங்களராஜா அவர்களின் தலைமையில் புறப்பட்ட
நெடும்பயணம் சரியாக 15 கிலோ மீற்றர் தூரத்தில் நெடும்பயண வீரர்கள் அனைவரும்
மதிய உணவை எடுத்துக்கொண்டனர். மதிய உணவை முடித்துக்கொண்டு புறப்பட்ட நெடும்
பயணத்தின் முன்னாள் சென்ற வாகனத்தில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியால்
உருவாக்கப்பட்ட ஈழ விடுதலைப் பாடல் ஒலிப்பரப்பப்பட்டது.
(மேலும்....)
தை
18,
2011
இப் புதிய முயற்சியை வரவேற்போமாக!
உள்ளூராட்சி
தேர்தலில் ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து போட்டி
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும்
உள்ளூராட்சி தேர்தலில் ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சி என்ற பெயரின் கீழ், தமிழத் தேசிய கூட்டமைப்பு,
ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட்,
ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா அணி, தமிழ் தேசிய விடுதலை முன்னனி ஆகிய கட்சிகள்
உட்பட ஏழு கட்சிகள் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. இலங்கை தமிழரசுக்
கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தாம் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய விடுதலை
முன்னணியின் பொதுச்செயலாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஆனால்
ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி சிறீலங்கா அரசுடன் இணைந்து
போட்யிடவுள்ளதாக தெரிவித்துள்ளன. வன்னி, முல்லைத்தீவு, கிளிநொச்சி
மாவட்டங்களில் 1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தல்கள்
நடைபெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
தை
18,
2011
பழைய செயற்கைக் கோள்களால் விண்வெளிக்கு ஆபத்து
கடந்த 50 ஆண்டுகளில் விண்வெளியில் ஏவப்பட்ட பல செயற்கைக் கோள்களும்,
அவற்றின் உடைந்த கருவிகள் துண்டு துண்டுகளாக விண்வெளியில் சுற்றிக்
கொண்டிருக்கின்றன. இதனால் தற்போது புதியதாக அனுப்பப்படும் செயற்கைக்
கோள்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது நமக்கு சவாலான ஒன்று பழைய
செயற்கைக் கோள்களின் 10 செ. மீ. அளவு உடைந்த பாகங்கள் மட்டுமே 30 ஆயிரம்
துகள்கள் வான்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. இவை வினாடிக்கு 10 கி.
மீ. வேகத்தில் சுற்றி வருகின்றன. இவற்றால் ஆபத்து ஏற்படாமல் தடுக்க இவற்றை
அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்.
(மேலும்....)
தை
18,
2011
மண்டேலா இறந்ததாக தென் ஆபிரிக்காவில் வதந்தி
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி
நெல்சன் மண்டேலா (92). இவர் இன வெறிக்கு எதிராக போராடியவர். அமைதிக்காக
நோபல் பரிசு பெற்றவர். இவர் மரணம் அடைந்துவிட்டதாக ஒரு இணைய தளத்தில் செய்தி
வெளியானதாக தெரிகிறது. இதனால் தென் ஆபிரிக்காவில் வதந்தி பரவியது. இதைத்
தொடர்ந்து பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இந்த தகவலை நெல்சன் மண்டேலா
அறக்கட்டளை மறுத்தது. மண்டேலா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விடுமுறையை
மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார். எனவே, இந்த அடிப்படை ஆதாரமற்ற வதந்தியை
யாரும் நம்ப வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த
தகவலை அந்த அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் ஷெலோ ஹட்டாய் வெளியிட்டுள்ளார்.
இந்த வதந்தி பரவ அந்த இணைய தளத்தை பயன்படுத்தியவர் தான் காரணம் என
கூறப்படுகிறது. ஆனால் இந்த இணைய தளம் பல பிரபலங்கள் மரணம் அடைந்ததாக
நகைச்சுவை களை வெளியிட் டுள்ளது. பாடகர் சுரேகா பிராங்க்களின், நடிகர்கள்
சார்லி, ஜானிதிப், மெஹாகன் பிரீமன் ஆகியோர் மரணம் அடைந்து விட்டதாக செய்தி
வெளியிட்டு பின்னர் அது நகைச்சுவை என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தை
18,
2011
யாழ்.தேசிய பொங்கல் விழாவுடன் குறுகிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி
-
தமிழ்த் தலைவர்களும் மக்களுக்காக எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும்
-
மாபிஃயாக்கள் ஒழிக்கப்பட வேண்டும்
-
எவரும் தனித்தோ பிரிந்தோ வாழமுடியாது
குறுகிய அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு சகல அரசியல் கட்சிகளும்
ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
நேற்று யாழ்ப்பாணத்தில் அழைப்பு விடுத்தார். இன, மத, குல ரீதியில் மக்களைப்
பிளவுபடுத்தும் குறுகிய அரசியல் யுகத்திற்குப் பொங்கல் விழா முற்றுப்புள்ளி
வைக்கும். இயல்பு நிலையை நாட்டில் ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையைக்
கட்டியெழுப்புவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி
அவர்கள் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு என்றில்லாமல் மாபிஃயா எங்கும்
ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி கூறினார்.
(மேலும்....)
தை
18,
2011
உள்ளூராட்சி தேர்தல்
திட்டமிட்டபடி 20 முதல் வேட்புமனுக்கள் ஏற்பு
திட்டமிட்டபடி வடக்கு கிழக்கு உட்பட
நாடு பூராவும் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை உள்ளூராட்சி மன்றத்
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட உள்ளதாக தேர்தல் செயலகம் நேற்று
தெரிவித்தது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராயும் உயர் மட்ட மாநாடு நேற்று
தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக் கவின் தலைமையில் நடைபெற்றது. இதில்
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி கள், மாவட்ட உதவித் தேர்தல் ஆணை யாளர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர். வெள்ளப் பாதிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில்
தேர்தல் ஒத்திவைப்பது குறித்து ஆராயவே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக வெளியான
செய்தியை தேர்தல் திணைக்களம் மறுத்தது. தேர்தல் பணிகள் மற்றும் ஒழுங்குகள்
குறித்து ஆராயவே இந்தக் கூட்டம் நடைபெற்றதாக பிரதி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.
பி. சுமணசிறி கூறினார். ஏற்கனவே அறிவித்த படி 20 ஆம் திகதி முதல் 27 ஆம்
திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தை
18,
2011
கிழக்கில் கண்ணிவெடிகள் கரையொதுங்கலாமென எச்சரிக்கை
புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள்
வெள்ளம் காரணமாக மிதந்து வந்து இருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் கிழக்கு
பொதுமக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென இராணுவத்தினர் வேண்டுகோள்
விடுத்துள்ளனர். புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் மழை, வெள்ளம் காரணமாக
மிதந்து வந்து கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படையினர் அச்சம்
தெரிவித்துள்ளனர். அவ்வாறு மிதந்து வந்த கண்ணிவெடிகள் தொடர்பாக விழிப்புடன்
செயற்படுமாறு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொது மக்களை இராணுவத்தினர்
கேட்டுக் கொண்டுள்ளனர். கிழக்கில் 95 வீதத்திற்கும் அதிகமான பகுதிகளில்
வெற்றிகரமாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர்
மேஜர் ஜெனரல் உபய மெதவெல, எஞ்சியுள்ள பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த
கண்ணிவெடிகள் தொடர்பாகவே அஞ்சுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தை
18,
2011
புதிய ஜனாதிபதி பதவி ஏற்புக்கு எதிர்ப்பு:
துனிசியாவில் கலவரம், கடைகள்,
வீடுகளில் கொள்ளை
புதிய ஜனாதிபதி ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து துனிசியாவில் கலவரம்
மூண்டுள்ளது. இதனால் கடைகள் மற்றும் வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடக்கிறது.
ஆபிரிக்க நாடான துனிசியாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் ஷின் எல் அபிடின்
பென் அலி (74) ஜனாதிபதியாக இருந்தார். இவரது 23 ஆண்டு கால ஆட்சியில்
நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடியது.
இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்
நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதற்கிடையே அவர் பதவி
விலகக்கோரி துனிஷ் நகரில் லட்சக்கணக்கான மக்கள் கண்டன பேரணி நடத்தினார்கள்.
(மேலும்....)
தை
17,
2011
கிழக்கில் தேர்தலை நடத்துவதா, இல்லையா? இன்று முடிவு
கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தலை பிற்போடுவதா, இல்லையா என்று
இன்று (17) தீர்மானிக்கவிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம்
தெரிவித்துள்ளது. அதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (17) தேர்தல் ஆணையாளர்
அலுவலகத்தில் இடம்பெறுகிறது. இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு
அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதி சிரேஷ்ட மற்றும் உதவி தேர்தல்
ஆணையாளர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில்
ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வேட்புமனு தாக்கல் செய்தல் உள்ளிட்ட
விடயங்களுக்கு இடையூறு ஏற்படுமா என்பது பற்றி இன்று விரிவாக ஆராயப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாவிடின்
அவசரகால சட்டத்தின் கீழ் அப்பிரதேசத்தில் தேர்தலை பிற்போடு வதற்கு தேர்தல்
ஆணையாளர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் கூறுகிறது.
தை
17,
2011
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஓரணியாகவும், ஏனைய தமிழ்க்கட்சிகள் இன்னொரு
அணியாகவும் போட்டியிடுவது தமிழ்மக்களுக்கு நல்லதல்ல
-
வீ. ஆனந்தசங்கரி,
தலைவர் - தமிழர் விடுலைக் கூட்டணி.

தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்),
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய
விடுதலைக் கூட்டமைப்பு ஜனவரி 1ம் திகதி கொழும்பில் கூடி தமிழ்க்கட்சிகள்
அனைத்தையும் இணைத்து ஒரு பாரிய கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தலில்
போட்டியிட வேண்டியதின் அவசியத்தை தீர்மானித்தோம். இது தொடர்பாக தமிழ்த்
தேசிய கூட்டமைப்புடன் பேசுவதாயும் ஈபிடீபி மற்றும் தமிழ் மக்கள்
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் அழைப்பு விடுவதெனவும் தீர்மானித்தோம்.
அதனடிப்படையில் ஈபிடீபியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ்மக்கள்
விடுதலைப் புலிகள் ஆர்வம் காட்டாமையினால் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.
(மேலும்.....)
தை
17,
2011
கற்றறிந்த
பாடங்கள் மீள் இணக்க ஆணைக்குழுவின் முன்
- ஸ்ரீ
லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.பஷீர்
2006 ம் ஆண்டு மூதூரில் குடிமக்களின் பாதுகாப்பு குறித்து தேவை எழுந்த
போதும் அவ்வாறே புலிகளிலிருந்து பிரிந்த சென்ற கிழக்கு முன்னாள் புலி
உறுப்பினர்கள் மீது பிரதான புலி அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டு
முன்னூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்றபோதும் கண்காணிப்பு குழுவினர்
அப்பிரதேசத்தை விட்டு நீங்கிச் சென்றதுடன் புலிகளின் மிலேச்சதனத்துக்கு
ஆதரவளித்தனர், தமது கண்காணிப்பு கடமைகளிருந்து தவறினர். கண்காணிப்பு
குழுவினர் வேண்டுமென்றே 2006 ஆம் ஆண்டில் மூதூரிலிருந்து வெளியேறினார்கள்.
போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் வடக்குக் கிழக்குப்
பகுதிகளில் செயற்பட்ட கண்காணிப்புக் குழுவினர் அப் பகுதிகளில் வாழ்ந்த
மக்களின் இருப்பைப் பலி கொடுத்துத்தான் தமது இருப்பைத் தக்கவைத்துக்
கொண்டார்கள். புலிகளினால் யுத்த நிறுத்த உடன்பாடுகள் மீறப்பட்ட போதெல்லாம்
வடக்கு கிழக்கில் முஸ்லிம்களே தங்களின் உயிர்களையும் உடைமைகளையும் பலியிட
வேண்டி நேரிட்டது. இந்திய சமாதானப் படை இலங்கையை விட்டு வெளியேறத்
தொடங்கியபோதும் இதுவே முஸ்லிம்களுக்கு நடந்தது. இந்நிலையிலே புலிகள் தாங்கள்
முஸ்லிம்களின் நண்பர்கள் என்று பாவனை செய்து கொண்டு கிழக்கில் காலூன்றினார்.
ஆனால் அவர்களின் நட்பின் நிறம் மெதுவாக வெளிறத் தொடங்கியது அவர்களின்
கொடூரங்கள் முஸ்லிம்களை கொன்றொழிப்பதிலும் வடக்கிலே வெளியேற்று வதிலும்
உச்சநிலை அடைந்தது.
(மேலும்.....)
தை
17,
2011
17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டிப் பாலம்
வடக்கு மக்களின் கனவு நனவானது,
யாழ் - கொழும்பு பயணம்
120 கிலோ
மீற்றரால்
சுருங்கியது

வடக்கு மக்களும் அபிவிருத்தியின் முழுமையான பங்காளிகள் எனவும்
ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின்
கீழ் பிரித்தானிய நிதியுதவி மூலம் 1032 மில்லியன் ரூபா செலவில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள சங்குப்பிட்டி பாலம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அவர்களினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மக்களின்
நீண்ட கால எதிர்ப்பார்ப்பான இப்பாலத்தின் நீளம் 288 மீற்றர். அகலம் 7.4
மீட்டர் பூநகரியையும் யாழ்ப்பாண நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் இரு
வழிப்பாதையாக இப்பாலம் அமைந்துள்ளது. தெற்கிலிருந்து 320 கிலோ மீற்றர் என்ற
குறுகிய தூரபயணத்தில் மக்கள் யாழ்குடா நாட்டை அடைய இப்பாலம் வழி
வகுக்கின்றது. கொழும்பிலிருந்து சிலாபம், புத்தளம், மன்னார் ஊடான
இப்பாதையில் யாழ்ப்பாண குடாநாட்டுக்குப் பயணம் செய்வோர் ஏ 9 பாதையினூடாக
செல்வதைப் பார்க்கிலும் சுமார் 120 கிலோ மீற்றர் தூரத்தை மீதப்படுத்திக்
கொள்ள முடியும்.
(மேலும்.....)
தை
17,
2011
விடுதலைப் புலிகளின் கை கூலி வைகோ, ஈ.என்.டி.எல்.எப் நடைபயணத்தை தொடங்கி
வைத்து முன்னாள் கங்கிரஸ் எம்.பி இரா.அன்பரசு பேச்சு

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ராஜீவ்காந்தியினால் அமுல்படுத்தப்பட்ட
இந்திய- இலங்கை ஒப்பந்தமே சரியான தீர்;வு அப்படி ஒரு அருமையான தீர்வை
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் முதலில் ஏற்று கொண்டார் பின்னர் அதை
பிரபாகரன் மறுதலித்தது கைகோ வின் பேச்சைக் கேட்டே அது மட்டுமல்ல,
முல்லைத்தீவில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வைகோ அமெரிக்கா
சென்றார் அங்கு ஒபாமாவை சந்தித்தார் பிரபாகரனை சமாதானத்துக்கு வர விடாமல்,
அமெரிக்க உதவி கிடைக்கப் போகிறது என பிரபாகரனிடம் சொல்லி தடுத்தவர் வைகோதான்
ஈ..என்.டி.எல்.எப் ஐ பார்த்து கை கூலி என்கிறார் வைகோ புலிகளின் கை கூலி என
இரா.அன்பரசு தனது உரையின் போது கூறினார்.
(மேலும்.....)
தை
17,
2011
பிறேசிலில் வெள்ள அனர்த்தம்
நிவாரண செயற்பாட்டிற்காக றியோ டி ஜெனரோவில் இராணுவம் குவிப்பு
பிறேசில் நாட்டில் கடந்த 40 வருட காலத் தில் நிகழ்ந்த மிகப் பெரிய
இயற்கை அனர்த் தத்தில் 600க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள னர். மிகவும்
மோசமாகப் பாதிக்கப்பட்ட நகர்க ளில் ஒன்றான டெரிஸோ பொலிஸ் சோபோ வில்
நகரத்திற்கு விரைந்து வந்த இராணுவத்தி னர் அங்கு மீட்புப் பணிகளை
துரிதப்படுத்தி னர். 600 பேர் வெள்ளத்தினால் இறந்து போயுள் ளமை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உத்தி யோக ப்பற்றுள்ள அறிக்கைகள்
தெரிவிக்கின்றன. நோவா பிறிபர்கோ நகரில் சவச்சாலைகளில் இடப்பற்றாக்குறையால்
அடையாளங் காணப் படாத சடலங்கள் புதைக்கப்படுகின்றன. வெள்ள அனர்த்தத்திற்காக
ஆளுநர் செர்ஜியோ கப்ரால் 7 நாட்களை துக்க தினமாக அறிவித் துள்ளார்.
தை
17,
2011
ஏ. ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்க திரைப்பட விருது
இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்க திரைப்பட விருது
கிடைத்துள்ளது. தமிழகத் தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இவர்
‘27 அவர்ஸ்’ என்ற ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்து இருந்தார். இந்தப்
படத்தில் ‘இப் ஐ ரைஸ்’ என்ற பாடலை ரகுமான் இசையில் பாப் பாடகர் டிடோ
பாடியிருந்தார். இந்த பாடலுக்கு இசை அமைத்ததற்காக ரகுமானுக்கு அமெரிக்காவின்
திரைப்பட விருது கிடைத்துள்ளது. ஏ. ஆர். ரகுமான் ஏற்கனவே உலகின் மிக உயரிய
விருதான ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு
இசை அமைத்ததற்காக 2 ஆஸ்கார் விருதுகள் அவருக்கு கிடைத்தது. லண்டனில்
அவருக்கு கிராமி விருதும் வழங்கப்பட்டது. தற்போது லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில்
உள்ள திரைப்பட அமைப்பு விருது வழங்கி உள்ளது.
தை
17,
2011
கிழக்கு வெள்ள நிவாரணத்திற்கு
இந்தியாவிலிருந்து மேலும் இரு கப்பல்களில் நிவாரணப் பொருள்கள்
கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக் கவென இந்தியாவில் இருந்து மேலும்
இரண்டு கப்பல்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. முதலாவது
தொகுதி நிவாரணப் பொருள்கள் அண்மையில் விமானத்தின் மூலம்
அனுப்பிவைக்கப்பட்டதுடன் இரண்டாவது தொகுதி நிவாரணம் இரண்டு கப்பல்கள் மூலம்
அனுப்பிவை க்கப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா
நேற்று முன்தினம் மட்டக்களப்பில் வைத்து தெரிவித்துள்ளார். விமானத்தில்
கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருள்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்போது இந்திய
உயர்ஸ்தானிகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
(மேலும்.....)
தை
17,
2011
துனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்சம்!
கடந்த வாரம் முதல் துனிசியா அரசுக்கு
எதிராக அதிகரித்துள்ள பொதுமக்கள் எதிர்ப்பின் உச்சகட்டமாக அந்நாட்டு
சர்வாதிகார ஜனாதிபதி சின் எல் அபிடைன் பென் அலி நாட்டைவிட்டு வெளியேறி சவூதி
அரேபியாவில் குடும்பத்தினருடன் தஞ்சமடைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளால்
பென் அலியின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வேலையின்மை, பொருட்கள் விலையேற்றம்,
லஞ்ச ஊழல் என்பன துனிசிய மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய போதும், அரச
அதிகார வர்க்கத்தின் ஊடக அடக்குமுறைகளினால் அரசுக்கு எதிராக பாரிய அளவில்
வன்முறை வெடிக்காமல் அடங்கிப்போனது. எனினும் சமீப காலமாக சர்வதேச செய்தி
இணையத்தளங்களின் துணையுடனும், பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூகவளி
இணையத்தளங்கள் துணையுடனும், அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக
முன்னெடுத்த துனிசிய மக்கள் இத்தகவல்களை தமது நாட்டு மக்களிடையேயும்
சர்வதேசத்திடமும் விரைவாக பரப்பத் தொடங்கினர்.
(மேலும்.....)
தை
17,
2011
மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் யோகா பயிற்சி

யோகாசனம் ஒரு சிறந்த உடற்பயிற்சி. மனிதர்களுள் இளையோர் முதல்
பெரியோர் வரைக்கும் இது சிறந்தது. பின்னர் குழந்தைகளுக்கும் சிறு
பிள்ளைகளுக்குமான யோகா அறிமுகமானது. யோகாசனம் தீராத முதுகுவலி, மார்புப்
புற்று நோய் போன்ற பல நோய்களையும் குணப்படுத்தக் கூடியது. ஒரு காலத்தில்
ஆச்சிரமங்களில் மட்டுமே போதிக்கப்பட்ட தவத்தோடும் ஆன்மிக தியானங்களோடும்
சம்பந்தப்பட்டிருந்த யோகாசனம் இப்போது நாய்களுக்கும் வந்துவிட்டது.(மேலும்.....)
தை
17,
2011
ஆறு மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு நெல் அறுவடை வீழ்ச்சியடையும் சாத்தியம்
அதிக அறுவடை எதிர்பார்க்கப்பட்ட ஆறு
மாவட்டங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இம்முறை அறுவடை 4
இலட்சம் மெட்ரிக் தொன்னால் குறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக
அறுவடை எதிர்பார்க்கப்பட்ட மாவட்டங் களில் மட்டக்களப்பு, திருகோணமலை,
அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள் முன்னணி
இடத்தைப் பெற்றிருந்தன.
அதிக அறுவடை எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆறு மாவட்டங்களில் பயிர்ச்செய்கை
இடம்பெற்ற மொத்த காணிப்பரப்பு 2 இலட்சத்து 75 ஆயிரம் ஹெக்டயர் ஆகும். இதில்
வெள்ள நீரில் மூழ்கிய காணிப்பரப்பு 88 ஆயிரத்து 500 ஹெக்டயராகும். அதேவேளை
முழுமையாக பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்ட காணிப் பரப்பு 9 ஆயிரத்து 250
ஹெக்டயர்.
(மேலும்.....)
தை
17,
2011
யாழ்ப்பாணத்தில் இன்று பொங்கல் விழா, ஜனாதிபதி பிரதம அதிதி
வட பகுதிக்கு விஜயம் செய்துள்ள
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவுள்ள
தைப்பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். யாழ்.
துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் போது, வட பகுதியைச்
சேர்ந்த பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு பெறுமதியான பரிசில்களை ஜனாதிபதி
அவர்கள் வழங்கவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி
தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி
அதிதிறமைச் சித்தி அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நூறு
மாணவர்களுக்கு மடிக்கணனியும் வடபகுதியைச் சேர்ந்த நூறு இந்து மத
குருக்களுக்கு பெறுமதியான பரிசில்களும் நாற்பது விவசாயிகளுக்கு உழவு
இயந்திரங்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் பொங்கல் பரிசாக
வழங்கப்படவுள்ளது.
(மேலும்.....)
தை
17,
2011
பால் குடிக்கும் போது பூனைக்கு ஏன் மீசை நனைவதில்லை?

நாய் நீர் அருந்தும் போது தனது நாக்கை
ஒரு கரண்டி போல் சுழற்றிச் சுழற்றிப் பாவித்து இயலுமானவரை நீரை
இழுத்தெடுத்து குடிக்கின்றது. ஆனால் பூனை அப்படியல்ல தான் எதைக் குடிக்க
வேண்டுமோ அந்தத் திரவத்தின் கீழ் பகுதியாக தனது நாவைச் செலுத்தி குடிக்க
வேண்டிய பதார்த்தத்தை நாவின் மேற்பரப்பில் சேகரித்து துரிதமாக நாவை
வாய்க்குள் இழுத்துக் கொள்கின்றது. இதனால் நாவின் மேற்பகுதியில் அது அருந்த
வேண்டிய பதார்த்தம் ஒரு ஓடைபோல் சேர்ந்து கொள்கின்றது. நாவின் மேற்பரப்பில்
பதார்த்தம் தேங்கியதும் புவியீர்ப்புத் தன்மையின் தாக்கத்தால் நாக்கு கீழே
சரிவதற்கு முன் பூனை தனது நாக்கை உள்ளே இழுத்துக் கொள்கின்றது.
(மேலும்.....)
தை
16,
2011
கூட்டமைப்பின் சொல் விளையாட்டால் தமிழ் மக்களுக்கு எவ்வித விமோசனமும் இல்லை
-
வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள்

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சரியான
உபாயம் சமஷ்டித்தீர்வாக இருந்த போதும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதற்கு
உடனடிச் சாத்தியமில்லை. 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவ்வாறான நிலையொன்று
உருவாகியபோதும் அது இடம்பெறாது போய்விட்டது. எனினும் எவ்வாறான தீர்வொன்று
தமிழ் பேசும் மக்களுக்கு உதவும் என்பதைத் தீர்மானிக்கும் பிரதான ஒருவராக
ஜனாதிபதியே விளங்குகின்றார். அந்த வகையில் அரசு என்ன தீர்வை
வைத்திருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. எனினும் 13வது திருத்தத்தின்
அடிப்படையில் தீர்வு சாத்தியம் எனக் கூறப்படுகின்றது. எல்லோரினதும் விருப்பு,
வெறுப்புக்களுக்கு அப்பால் அரசியல் யாப்பில் கடந்த 22 வருடங்களாக
இந்நாட்டில் இருக்கின்ற ஒரு விடயமே. ஆனால் அது முழுமையாக
நிறைவேற்றப்படவில்லை. அது சரியாகவும் நிறைவேற்றப்படவில்லை. இல்லையென்றால்
அதன் அர்த்தம் புரிகின்றதல்லவா? எந்தத் தீர்வானாலும் இந்த
நாட்டிலிருந்துதான் வரவேண்டும். இந்தியாவோ மேற்கத்தேய வல்லரசுகளோ யாரும்
எதையும் திணிக்க முற்பட்டாலும் அது வெற்றிகரமாக அமையாது. இந்நாட்டில்
அதிகாரப் பகிர்வு என்பது ஒரு சரியான முறையில் முன்னேறிச் செல்லும் அம்சமாக
நடக்க வேண்டும் என்றால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தம் வசம் வைத்துள்ள
ஜனாதிபதியும் அவரது அமைச்சரவையும் தமக்கு சரியென்று எண்ணுவதை அதனைச்
சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்ற வேண்டும்.
(மேலும்.....)
தை
16,
2011
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ஈ.என்.டி.எல்.எப்
டெல்லி வரை நடை பயணயம் சொல்வதும், சொல்லப்போவதும்
(அ.
விஜயன்)
இந்த நடைப் பயணத்திற்காக, ஈ.என்.டி.எல.எப் இனர் தேர்ந்தெடுத்துள்ள இடம்
சாலப் பொருத்தமானதாகும். இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு ஒப்பந்தத்தை
ஏற்படுத்தி அதற்காக இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி அப் படையினரின்
பாதுகாப்புடன் அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தியவர் அதற்காக புலிகளால் கொலை
செய்யப்பட்டவர். அவர் சின்னா பின்னமாக்கப்பட்ட இடம் இன்று ஒரு புனித இடமாக
பாராமரிக்கப்படுகிறது. எல்லோரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் அந்த
இடத்தில் தொடங்கும் ஈ.என்.டி.எல.எப் இனரின் நடைப்பயணம் வெற்றிபெற வேண்டும்.
அந்த இடத்தை பார்வையிடச் செல்லும் இலங்கை தமிழர்கள் ஒவ்வொருவரது
உள்ளத்திலும் ஒரு குற்ற உணர்வு ஏற்படும். நீங்களும் சென்று பாருங்கள் அதை
உணர்வீர்கள்.
(மேலும்...)
தை
16,
2011
Liberal Party response
Thank you for expressing your
concerns to our Leader Michael Ignatieff, and to his Chief of Staff,
Peter Donolo, about the Leader's attendance at this year's Thai Pongal
dinner being held by the Canadian Tamil Congress. As the Liberal Party
Critic for Multiculturalism I am happy to respond to you. You are right
that the Leader has not attended this particular event in the past. Last
year, as in previous years, a number of the federal Liberal caucus
members were there and I delivered greetings on behalf of the Leader.
Paul Calandra, Conservative M.P. from Oak Ridges-Markham, delivered
greetings on behalf of the Prime Minister and Jack Layton, Leader of the
N.D.P. was the Chief Guest. Many dignitaries from all walks of life
attended this dinner and celebrated the contributions of Tamil Canadians
as citizens, volunteers, academics, artists, business owners and
professionals.
(more....)
தை
16,
2011
Fund raising meeting for our Community back home
It is time to unite for a
meaningful cause to help communities affected by the flooding in Amparai
and the Batticaloa district. Along with inviting all social
organizations in the GTA, we kindly invite you to participate in a big
fundraising activity for our communities back home.
Meeting location:VIMIKA BANQUET
HALL # 1959, Finch Ave. west Downsview (Jane & Finch).
Date and Time:Sunday January 16th
2.00PM
(more...)
தை
16,
2011
Laabai Laabai, Yanda Yanda, Vegetables Laabai
Brave call from the Army that defeated Terrorist.
(by
Lenin Benedict)

It was well known that the recruitment during two to three years before
the war was done in a rapid way to strengthen the physical strength of
the Armed forces and to meet the requirements. The nation was aware that
most of the recruits are from rural areas of the country, with just
basic education and are young men whom were given basic training. These
young men who fought against the world notorious Terrorist are the
treasures of Srilanka and whom to be honored and given a respect in our
society. These brave men not only brought peace to the country but
defeated the separatist and united the country as one from the de facto
government run by LTTE. Is it necessary for the forces to be put to sell
vegetables like vendors? Is this is the way to treat our brave soldiers?
Do Srilankans are so ungrateful to forget the sacrifice that soon?
(more....)
தை
16,
2011
13ஆவது
திருத்தத்திற்கு அப்பால் தீர்வு! பொலிஸ் அதிகாரத்திற்கு இடமில்லை! தமிழ்
கூட்டமைப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்
–
ஜனாதிபதி
அரசியல் தீர்வானது 13 ஆவது திருத்தத்திற்கு
அதிகமான அதிகாரங்களுடன் அமையும். ஆனாலும், மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்
வழங்கப்படமாட்டாது. என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் நான்
தெரிவித்துள்ளேன். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் முன்வைக்கின்ற யோசனைகளை
அடிப்படையாகக் கொண்டு அனைத்துக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில்
அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(மேலும்...)
தை
16,
2011
Landmine-clearing undresses the pro-LTTE/Eelam clowns
(by Malinda Seneviratne)
Military Spokesperson Major
General Ubaya Medawala has said that a total of 307,200 mines have been
cleared and destroyed by the Army Field Engineers in a land area of
1,872 square kilometers. This has been done by both manual and
mechanical methods. Close to 1,300 soldiers have been deployed for this
task in Jaffna, Mannar, Mullaitivu, Trincomalee, Batticaloa, Polonnaruva
and Vavuniya districts, he said. The stretch from Oddusuddan to
Nedunkerni has been completely de-mined by troops with the help of
international and local organizations, he added. (more...)
தை
16,
2011
முஸ்லிம் கட்சிகளிடையே இணக்கப்பாடு அவசியம்
வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் நலன்கருதி
மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அக்கட்சி அதன் சின்னமான மரம் போன்று பலமான
ஆணிவேர்