பங்குனி
21, 2011
லிபியா மீது குண்டு மழை
அமெரிக்கா,
பிரான்ஸ், பிரிட்டன் கூட்டாகத் தாக்குதல்
தற்காப்புக்கு ஆயுதம் ஏந்துமாறு மக்களுக்கு
அழைப்பு

லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின்
கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய தளங்களின் மீது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும்
பிரிட்டன் இணைந்து இரண்டாவது நாளாகவும் நேற்று தாக்குதல் நடத்தின. வான்
மற்றும் கடல் மார்க்கமாக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு
தலைமையகமான பென்டகன் நேற்று அறிவித்தது. இதில் அமெரிக்கா, பிரிட்டன் இராணு
வம் கடல் மார்க் கமாக லிபியாவின் முக்கிய தளங்கள் மீது 110 மிசைல் களை ஏவிய
தாகவும் பிரான்ஸ் விமானங்கள் மூலம் லிபிய இராணுவ தளங்கள் மீது தாக்குதல்
நடத்தி வருவதாகவும் பென்டகன் மேலும் தெரிவித்தது. பெங்காசியில் கடாபி
ஆதரவுப் படையின் இராணுவ வாகன மொன்றுக்கு முதலில் தாக்குதல் நடத்திய பிரான்ஸ்
விமானம் தொடர்ந்து லிபிய அரசின் முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தி
வருகிறது.
(மேலும்....)
பங்குனி
21, 2011
நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க
பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடையை ‘சுட்டது’
அ) பாட்டியா?
ஆ) காக்காவா?
உடனடியா பதில் தேவை......!!!!
பங்குனி
21, 2011
புளொட் தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.
தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அத தெரண இணையத்தின் சந்திப்பு
நிகழ்ச்சியில் பங்கேற்று வழங்கிய நேர்காணல்
தமிழ் அரங்கு என்பது ஒரு அரசியல் கூட்டு அல்ல. தமிழ் அரங்கம் என்று
சொல்லுகின்ற விசயம் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சம்பந்தமாக அனைத்துக்
கட்சிகளும் ஒன்றுபட்ட ஒரு கருத்தை முன்வைப்பதற்காக, ஒன்றுபட்ட ஒரு பிரேரணையை
முன்வைப்பதற்காக கூட்டப்படுகின்ற ஒரு அரங்கு. அந்த அரங்கிலே இருக்கின்ற
கட்சிகள் விரும்பினால் அரங்கின் முழுக் கட்சிகளும் கூட்டாகவோ, அல்லது
தனித்தனியாகவோ அல்லது வேறு கட்சிகளுடன் கூடியோ தேர்தல் என்று ஒன்று வந்தால்
அதில் போட்டியிடலாமென்பதை ஆரம்பம் துவக்கமே நாம் கூறிவந்திருக்கின்றோம்.
ஏனென்றால் அதில் இருக்கின்ற கட்சிகள் மத்தியிலே எங்களுக்குள்ளே கருத்து
வித்தியாசங்கள் இருக்கின்றன. .......
எங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசினாலே சரி,
ஏனென்றால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒன்றாக
தேர்தலில் நிற்பது மாத்திரமல்ல, இந்த விசயங்கள் சம்பந்தமாக கலந்துரையாட
ஆரம்பித்திருக்கிறோம். ஆகவே எங்களுடைய கருத்துக்களும் அங்கு கூறப்படும்.
புளொட் தான் அதில கலந்துகொண்டு பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு
காணவேண்டும் என்கிற நோக்கம் எங்களுக்குக் கிடையாது. பிரச்சினைக்குத் தீர்வு
வேண்டும். அதில் யார் பேசினாலும் தீர்வு வரவேண்டும். எங்களைப்
பொறுத்தமட்டில் யார் குத்தினாலும் அரசிதான் வேண்டும் என்பதே எங்களுடைய
நோக்கமாக இருக்கின்றது.
(மேலும்....)
பங்குனி 21, 2011
தமிழக அரசியலில்
இல்லாமல்
போகும் புலிகளின் வைகோ

தமிழக சட்ட சபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு
தொடர்பில் அ. தி. மு. க. பொதுச் செயலாளர் ஜெயலலி தாவின் அடம் பிடிப்பால்
ஏப்ரல் 13 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலைப் புறக்கணிக்கத்
தீர்மானித்திருப்பதாக ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி
தெரிவித்துள்ளார். 243 ஆசனங்களைக் கொண்ட தமிழக சட்ட சபைத் தேர்தலில் 30
ஆசனங்கள் தமக்கு வழங்கப்பட வேண்டுமென ம. தி. மு. க. கோரிக்கை
விடுத்திருந்தது. எனினும், 6 ஆசனங்கள் மாத் திரமே வழங்கப் படும் என அ. இ.
அ. தி. மு. க. பொதுச் செய லாளர் ஜெயலலிதா விடாப்பிடியாக இருந்ததால்
கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறினார்.(மேலும்....)
பங்குனி 21, 2011
அபிவிருத்தியின்
பக்கமே தமிழ் மக்கள் திசை திரும்பியுள்ளமை தேர்தலில் தெளிவு
கடந்த தேர்தலில் 9 ஆசனங்களைப் பெற்ற
தமிழரசுக் கட்சி இம்முறை போனஸ் ஆசனத்துடன் 05 ஆசனங்களை மட்டுமே
பெறமுடிந்துள்ளமை அக்கட்சியின் செல்வாக்குச் சரிவை எடுத்துக்காட்டுகிறது.
மக்கள் புதியமாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இன்னமும் ஏமாறாமல்
அபிவிருத்தியைக் காண மக்கள் துடிக்கின்றனர். ஆலையடிவேம்பில் ஆளும் ஐ.ம.சு.
முன்னணிக்கு முதற்தடவையாக 2 ஆசனம் பெறப்பட்டிருக்கிறது. உண்மையில் இத்தொகை
இரட்டிப்பாக இருந்திருக்கும். ஆனால், இப்பட்டியலில் தரமான தகுதியான மக்கள்
சேவையாளர்கள் உள்ளீர்க்கப்படவில்லை.
(மேலும்....)
பங்குனி
21, 2011
தமிழக
காங்கிரஸில் அனுபவஸ்தர்களுக்கு வாய்ப்பு இல்லை
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட புதிதாக
அரசியலில் குதித்து இளைஞர் காங்கிரஸில் இணைந்தவர்களும், தலைவர்களின்
வாரிசுகளும், கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்களும் தான் காங்கிரஸ் கட்சியின்
வேட்பாளராக களமிறங்க உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்
விடாப்பிடியாக 63 ஆசனங்களை பெற்றுவிட்டது. இதில் போட்டியிட உள்ளவர்களின்
உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது. இவர்களில் பலர், தமிழகத்தில் காங்கிரஸ்
பொதுச்செயலர் ராகுல், இளைஞர் காங்கிரஸை பலப்படுத்த எடுத்த முயற்சியின்
விளைவாக, அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கு முன்,
இவர்களுக்கு பெரிய அரசியல் அனுபவம் இல்லை. ஒரு சிலர் மட்டும் உள்ளாட்சி
அமைப்புகளில் பொறுப்புகளில் இருந்துள்ளனர். இளைஞர் காங்கிரஸை பலப்படுத்தும்
முயற்சி எடுத்து, ஓராண்டுக்குள் இவர்களுக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட
வாய்ப்பு கிடைத்துள்ளது.
பங்குனி 21, 2011
புகுஷிமா அணு உலைகளுக்கு மின் விநியோக முயற்சி

ஜப்பானில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின்
நிலையத்தின் குளிரூட்ட கட்டமைப்புக்கான மின் விநியோக முயற்சி வெற்றியளித்து
வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின் நிலையத்தின் 6
உலைகளில் நான்கு உலைகளுக்கு மின் கம்பிகளை பொருத்தி முடிக்க முடியும் என
பணியாளர்கள் நம்புகின்றனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக இந்த மின்
நிலையத்தின் அணு உலைகளை குளிரேற்றம் கட்டமைப்பு செயலிழந்து போனதையடுத்து
உலைகளையும் அங்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எரிகுச்சிகளை சேமிக்கும்
தொட்டியையும் குளிர்மைப்படுத்துவதற்காக கடல் நீரைப் பாய்ச்சும் முயற்சிகளில்
பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாக கடுமையாகப் போராடி வருகின்றனர். கடல் நீரை
ஹெலிகொப்டர்களில் அள்ளிவந்து கொட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.(மேலும்....)
பங்குனி 21, 2011
மலடாக்கப்படும் பழங்கள் மனித குலத்திற்கு மேலும் தீமைகளை விளைவிக்குமா....?
திராட்சை, சீத்தா உள்ளிட்ட விதையுள்ள பழங்கள் சாப்பிடுவதற்கு சற்று சிரமமாக
இருக்கும். விதைகளை நீக்குவதற்கு குழந்தைகள் சங்கடப்படுவதுண்டு. இந்
நிலையில், விதையில்லாத சீத்தா பழத்தை விஞ்ஞானிகள் விளைவித்துள்ளனர்.
திராட்சை உள்ளிட்ட சில பழங்கள் நவீன கண்டுபிடிப்பில் விதையில்லாமல்
உருவாக்கப்படுகின்றன. இந்த வரிசையில் சீத்தா பழமும் இடம்பெறப் போகிறது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விதையில்லாத சீத்தா பழத்தைக்
கண்டுபிடித்துள்ளனர். அதாவது மலரில் உள்ள ஓவுல் என்ற ஜீன், பழத்தில் விதை
உருவாவதற்கு காரணமாக உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
(மேலும்....)
ஏற்றுக்
கொள்ளக்கூடிய தீர்வை அரசாங்கமே முன்வைக்க வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது
நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் வாக்க ளித்திருக்கும் நிலையில்,
இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட விடயங்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை
அரசாங்கமே முன்வைக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்
தெரிவித்தார். கூட்டமைப்புக்கும் அரசாங்கப் பிரதிநிதி களுக்குமிடையில் 3 ம்
கட்டப் பேச்சுவார்த் தைகள் இடம்பெற் றுள்ளன. இப்பேச்சு வார்த்தையில் தமிழ்
மக் களின் உடனடிப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் இனப் பிரச் சினைத் தீர்வு
தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அரியநேத்திரன் எம்.பி. இனப்
பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் கால அவகாசம் கோரி
யிருப்பதாகவும் கூறினார்.
(மேலும்....)
பங்குனி 21, 2011
எண்ணெய் வளத்தை கைப்பற்ற லிபியா மீது அமெரிக்கா-பிரான்ஸ்-பிரிட்டன் கொடிய
தாக்குதல் ஆக்கிரமிப்பை நிறுத்து
நேட்டோ படைகள் லிபியா மீது விமா னங்கள் மூலமும், கப்பல்களிலிருந்து ஏவு
கணைகள் மூலமாகவும் வான்வழித் தாக்கு தல்கள் நடத்தியுள்ளதற்கு மார்க்சிஸ்ட்
கம் யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடும் கண்டனம் தெரிவித்துக்
கொள் கிறது. பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா வைச் சேர்ந்த படையினரை
உள்ளடக்கிய நேட்டோ படைகளின் இத்தகைய ஆக்கிர மிப்பு நடவடிக்கை மிகவும்
ஆபத்தான ஒன்றாகும். இராக்கில் பல்லாயிரக்கணக்கான மக் களைக் கொன்று
குவித்ததைப்போல், பொருள்களை நாசப்படுத்தியதுபோல் இப் போது லிபியா மீதும்
மோசமான தாக்குதல் நடவடிக்கையை நேட்டோ மேற்கொண்டி ருக்கிறது. முதல் நாள்
தாக்குதலிலேயே 48 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
(மேலும்....)
பங்குனி
21, 2011
சாய்பாபா ஜனாதிபதியின் விருந்தினராக இலங்கை வரவுள்ளார்
உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர்களைக்
கொண்டுள்ள சாய்பாபா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருந்தினராக எதிர்வரும்
மே மாதம் இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதியின் தனிப்பட்ட மருத்துவரும்,
புதுமையான சிகிச்சை முறைகள் மூலம் உலகப் புகழ்பெற்றவருமான எலியந்த வைட் இடம்
சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே சாய்பாபா இலங்கை வரவுள்ளதாக மேலதிக
தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய பாதுகாப்பு மற்றும் பணிவிடைகளுக்கென
அவருடன் சோ்ந்து மேலும் ஆயிரம் பேரளவிலானோரும் இலங்கை வரவுள்ளதாகவும்
அத்தகவல் வட்டாரங்கள் மூலம் உறுதி செய்ய முடிந்துள்ளது. அதே நேரம் இலங்கை
அரசாங்கத்தின் சார்பிலும் அவருக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்துகொடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடக்கம் ஐக்கிய தேசியக்
கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய வரையான இலங்கையின் பல முக்கிய
அரசியல்வாதிகள்ஈ, முக்கியஸ்தர்கள் மற்றும் பிரபல வர்த்தகர்கள் என
இலங்கையிலும் ஏராளமான பக்தர்களை சாய்பாபா கொண்டுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பங்குனி 21, 2011
மட்டக்களப்பு
புகையிரத நிலையத்திற்கு அண்மையில் நிலத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்பு
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு
அண்மையில் சனிக்கிழமை நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பின்
ஊடாக நீர் வந்தவண்ணமுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடி மட்டத்திலிருந்த
நீர் மேல் மட்டத்திற்கு வந்தமையினாலேயே குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக
அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. பூரண சந்திரனின் தாக்கத்தினால்
அடி மட்டத்திலிருந்து நீர் மேல் மட்டத்திற்க வந்திருக்கலாம் என அனர்த்த
முகாமைத்துவ நிலைய பேச்சாளரொருவர் தெரிவித்தார். இந்த நிலைமை தொடர்பாக புவி
மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அனர்த்த
முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக விசாரணைகளை
மேற்கொள்ள குறித்த பிரதேசத்திற்கு புவி ஆராய்ச்சியாளரொருவர்
அனுப்பப்பட்டுள்ளதாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபையின் தலைவர் டாக்டர்
என்.பி. விஜேயனந்த தெரிவித்தார்.
பங்குனி 21, 2011
திமுக.! அதிமுக.!! ம.தி.மு.க.!!!
உன்னாலே நான் கெட்டேன்... என்னாலே நீ கெட்டாய்...

வைகோவின் முடிவு அரசியல் தற்கொலைக்கு
நிகரானது என்பது உண்மை என்றாலும், இந்த முடிவினால் அ.தி.மு.க.வும் பெரிய
அளவில் பாதிக்கப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தலில்
போட்டியிடப் போவதில்லை என்கிற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின்
தீர்மானம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ""கட்சியின் உயர்நிலை
மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டித் தீர்மானம் என்று ம.தி.மு.க. பொதுச்
செயலாளர் வைகோ தெரிவித்தாலும், பெருவாரியான மாவட்டச் செயலாளர்களும், கட்சிப்
பிரமுகர்களும், மனதிற்குள் வைகோவை சபித்தபடிதான் வெளியேறினார்கள் என்பதுதான்
உண்மை.
ஜெயலலிதாவுக்கு ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டிய நிர்பந்தம். வைகோவுக்குக்
கட்சியைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்பந்தம். இருவரும் இதைப் புரிந்து
கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தால்?
(மேலும்....)
பங்குனி
20, 2011
பிரபாகரனை இராணுவம் நெருங்குவதை மேற்கு நாடுகள் சில விரும்பவே
இல்லை
விடுதலைப் புலிகளின் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின்
மறைவிடத்தை இலங்கை இராணுவம் நெருங்குவதையோ அவர் கைது செய்யப்படுவதையோ மேற்கு நாடுகள்
சில விரும்பவில்லை என்று "விக்கி லீக்ஸ்" தெரிவித்துள்ளது. பிரபாகரனின் இருப்பிடத்தை
இராணுவம் நெருங்குவதைத் தடுப்பதற்குக் கூட அவை முயன்றன என்று "விக்கி லீக்ஸ்"
ஆவணங்கள் கூறுகின்றன. (மேலும்....)
பங்குனி
20, 2011
இந்தியா என்றும் தமிழர்களுடனேயே லண்டனில் சோனியா திட்டவட்டம், உரிமைகள்
மீளளிக்கப்படவேண்டும்
இந்தியா தமிழர்களுடனேயே இருக்கிறது என்றும்
தமிழர்களின் உரிமைகள் அவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டே ஆக வேண்டும் என்றும்
கருத்துத் தெரிவித்துள்ளார் இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிஸ் கட்சியின்
தனிப்பெரும் தலைவியான சோனியா காந்தி. ஆயுதங்கள் ஏதுமற்ற அப்பாவிப் பொதுமக்கள்
சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளைத் தான் நேரடியாகப் பார்த்தார் என்றும் அவர்
தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பில் உரையாற்றிய பின்னர்
லண்டனில் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே
இவ்வாறு தெரிவித்தார் என்று பேரவை நேற்று வெளியிட்ட அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருந்தது. (மேலும்....)
பங்குனி
20, 2011
Abused'
child monks handed to probation
A
court in Sri Lanka has ordered the child protection authorities to hand over two
young Buddhist monks -allegedly sexually abused by a senior monk- to the custody
of probation department. Aparekke Punnananda thero, a former parliamentarian
representing Sinhala nationalist Jathika Hela Urumaya (JHU) is accused of
sexually abusing five underage novice monks. The Child Protection Authority
(CPA) has produced the two monks before Colombo Magistrates Court as per a
previous court order. The novice monks have made secret statements to the
magistrate at her chambers. The court also ordered the police to produce other
three child monks allegedly abused by Punyananda thero. After considering a
report produced by the CPA, the magistrate ordered the authorities to submit a
report whether there are any other underage novice monks in the Budhhist temple
where the suspect is the chief incumbent. The CPA earlier informed the court
that the suspect has admitted sexually abusing child monks under his custody.
Aparekke Punyananda thero, who is on bail, appeared before the court on Friday
with security provided by the Ministerial Security Division.
பங்குனி
20, 2011
இன்றைய தேவை
தமிழர்கள் ஏற்கும் அதிகாரப் பகிர்வே...!
முறையான இன நல்லிணக்கமின்றி எங்கள் தேசத்தில் அமைதி ஒருபோதும் நீடித்து நிலைக்காது.
அத்துடன் நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களும் போரினால்
பாதிக்கப்பட்ட ஏனையவர்களும் தாங்கள் இழந்ததைப் பெறும்வரைக்கும், நம்பிக்கையான
எதிர்காலத்தினை நோக்கி அவர்கள் பயணிக்கும் வரைக்கும் உண்மையான இன நல்லிணக்கம்
ஏற்படப்போவதில்லை. எத்தனை பாலங்கள், பெருந்தெருக்கள் மற்றும் வீடுகள்
நிர்மாணிக்கப்படுகின்றன என்பது இங்கு ஒரு பொருட்டல்ல. போரினால் பாதிக்கப்பட்ட
மக்களின் துன்ப துயரங்கள் போக்கப்படும் வரைக்கும் நீடித்து நிலைக்கக் கூடிய அமைதி
ஏற்படப்போவதில்லை. இந்த மக்களுக்கு உணவு, உடை மற்றும் தங்குமிடம் கிடைத்துவிடுவதால்
மாத்திரம் இவர்களது துன்பதுயரங்கள் நீங்கிவிடாது. இந்த வசதிகளை பெறுவதற்காக
மாத்திரம் கடந்த 30 ஆண்டு காலப் போர் தொடுக்கப்படவில்லை. எல்லாவற்றையும் விட
முதன்மையாகத் தாங்கள் சுதந்திரமாக அவமானம் எதுவுமின்றி வாழுகிறோம் என்ற மனப்பதிவு
சிறுபான்மையினரின் மத்தியில் ஏற்படவேண்டும்.
(மேலும்....)
பங்குனி
20, 2011
அமெரிக்கா
மாற்றத்தை ஏற்படுத்தும் விஸ்கோன்சின் போராட்டம்!
விடுதலை தேவையென்றால் சில சமயங்களில் தியாகம் செய்ய வேண்டும். தங்களின்
சுதந்திரத்திற்காகப் பெரும்பாலான அமெரிக்கர்கள் எந்தவிதமான தியாகத்தையும் செய்யத்
தயாராக இல்லை. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க மாகாண அரசுகள் கடைப்பிடித்த
உத்திகளில் தொழிலாளர்களுக்குள்ள உரிமைகளைப் பறிப்பதும் ஒன்றாகும். விஸ்கோன்சின்
மாகாண நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முன்னணி வகிக்கிறது. பொதுத்துறை
நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குள்ள கூட்டுப்பேர உரிமையைப் பறிக்கும்
மசோதா மாகாண செனட் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த மாகாண நிர்வாகம்
குடியரசுக்கட்சியின் வசம் உள்ளது. இந்த உரிமைப் பறிப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம்,
பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குள்ள ஆதரவைப்
பறிக்க விரும்புகின்றன.
(மேலும்....)
பங்குனி
20, 2011
For a
Peaceful Political Solution to the Conflict.
Keep
Canadian Military at Home.
MARCH 19
2011
CENTRAL
EXECUTIVE COMMITTEE
COMMUNIST
PARTY OF CANADA
On
Thursday of this week, the U.N. Security Council passed Resolution 1973,
authorizing the imposition of a “no-fly zone” on Libya and the use of “all
necessary measures” short of an invasion – including naval blockades,
bombardment and air strikes – against Col. Muammar Gaddafi’s forces in order “to
protect civilians and civilian-populated areas” in the rebel-held Eastern part
of Libya. The resolution also imposes a ban on all air travel (including
civilian flights) in Libyan airspace, toughens the arms embargo, and widens the
freeze of offshore Libyan assets.
(more....)
பங்குனி
20, 2011
அணு உலைகளை
புதைக்க ஜப்பான் திட்டம்
அணுக்கதிர்வீச்சு அபாய கட்டத்தில் உள்ளதால், பேரழி வைத் தவிர்க்கும் பொருட்டு
புகுஷிமா அணு உலைகளை மண் ணுக்குள் புதைக்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளதாக செய்
திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் கடந்த 11-ந் தேதி, பூகம்பமும், சுனாமியும் தாக்கி
பேரழிவை உண்டாக்கின. புகுஷிமா என்ற இடத்தில் 6 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன.
அங்கு 4 அணு உலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து அணு கதிர்வீச்சு வெளியாகி வருகிறது.
(மேலும்....)
பங்குனி
20, 2011
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள்
கிரைண்டர்(அ) மிக்சி,
லேப்-டாப் இலவசம்
வரும்
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் பெண்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில்
இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில்
வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இலவச கலர் டி.வி., இலவச எரிவாயு
இணைப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த முறை இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, பரம ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி,
அரசுக் கல்லூரியில் தொழிற்கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்
(மடிக் கணினி) என ஏராளமான இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
(மேலும்....)
பங்குனி
20, 2011
ஜப்பான் அணுஉலை
அருகே மீண்டும் நிலநடுக்கம்
ஜப்பானில் ஏற்கெனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா
அணுமின் நிலையத்துக்குத் தெற்குப் பகுதியில் சனிக்கிழமை 6.1 ரிக்டர் அளவுக்கு
நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த
நிலநடுக்கம் டோக்கியோ வரை உணரப்பட்டதாகவும், அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்ததில்
மக்கள் பீதியடைந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் சேத விவரங்கள் உடனடியாகத்
தெரியவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக டோக்கியோவின் நரீதா விமான நிலையம்
தாற்காலிமாக மூடப்பட்டது.
(மேலும்....)
பங்குனி
20, 2011
கச்சத்தீவு ஆலய விழாவிற்கு புனித பயணம்
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்ள, ராமேஸ்வரத்திலிருந்து ஏராளமான
பக்தர்கள் படகில் புனித பயணம் மேற்கொண்டனர். அப்போது நடத்திய கடும் சோதனையில், மது
பானங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை கச்சத்தீவு புனித
அந்தோணியார் ஆலய விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும்
விழாவில் கலந்து கொள்ள, கடந்த ஆண்டைப் போல் ராமேஸ்வரத்திலிருந்து அதிகளவில்
பக்தர்கள் படகில் சென்றனர். மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சோதனைச்
சாவடியில், படகுகள் மற்றும் பக்தர்களிடம் நேற்று அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை,
குடியுரிமைத் துறை, வருவாய்த்துறை, மத்திய, மாநில புலனாய்வுத் துறை, போலீஸ்,
கஸ்டம்ஸ் மற்றும் பிளாஸ்டிக் கண்காணிப்பு குழுவினர் என 200க்கும் மேற்பட்டவர்கள்,
சோதனை நடத்தினர்.
(மேலும்....)
பங்குனி
19, 2011
ஐ.ம.சு.மு. அமோக வெற்றி
கோட்டைகளை இழந்து ஐ.தே.க. படுதோல்வி 9
சபைகளில் தப்பிப் பிழைப்பு
அனைத்தையும் இழந்து மண்கெளவியது ஜே.வி.பி, அரசியல் எதிர்காலம் சூனியம்?
234 உள்ளூராட்சி சபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 205 சபைகளை கைப்பற்றி
ஐ.ம.சு.முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. ஐ.தே.க. தனது பல கோட்டைகளை இழந்து
படுதோல்வியடைந்ததோடு, அதனால் 9 சபைகளை மட்டுமே வெல்ல முடிந்தது. ஜே.வி.பி.
தனக்கிருந்த ஒரேயொரு உள்ளூராட்சி சபையையும் இழந்து அரசியலிலிருந்தே
தூக்கிவீசப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
(மேலும்....)
பங்குனி
19, 2011
லிபிய வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை
ஐ.நா
பாதுகாப்பு சபை தீர்மானம்
லிபியா வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு
ஐ.நா பாதுகாப்புச் சபை தடை விதித்துள்ளது. அத்துடன் பொது மக்களை
பாதுகாப்பதற்காக தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபையில் நேற்று முன்தினம்
இடம்பெற்ற வாக்கெடுப்பில் எந்த எதிர்ப்பும் இன்றி லிபிய வான்பரப்பில்
விமானங்கள் பறக்க தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டுள்ளது. இதன்
போது இடம்பெற்ற வாக்கெடுப்பில் 10-0 என்ற கணக்கில் இந்த தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. எனினும் இந்த வாக்கெடுப்பில் ரஷ்யா, சீனா, ஜெர்மனி,
இந்தியா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
(மேலும்....)
பங்குனி
19, 2011
தமிழரசுக்
கட்சிக்கு பெரு வெற்றி
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தனித்துப்
போட்டியிட்ட தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. உள்ளூராட்சி சபைத்
தேர்தலில் தமிழரசுக் கட்சி 14 சபைகளில் போட்டி யிட்டது. இதில் 12 சபைகளில்
பெருவெற்றி பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு
பிரதேச சபைகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது. அதேபோல பொத்துவில் பிரதேச
சபையில் போட்டியிட்டு ஒரேயொரு ஆசனத்தை மாத்திரமே பெற்றது. இதேவேளை, வடக்கில்
மன்னார், முல்லைத்தீவு, வவுனியாவில் நடந்த தேர்தலில் முசலி பிரதேச சபை
தவிர்ந்த சகல சபைகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. தேசிய
அரசியலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, தமிழரசுக் கட்சி பிரதான கட்சியான
ஐ. ம. சு. மு. வுக்கு அடுத்ததாகக் கூடுதல் சபைகளை (12) கைப்பற்றி தனது
அரசியல் ஸ்திரத் தன்மையை வலுப்படுத்தியுள்ளதாகவே தென்படுகிறது
பங்குனி
19, 2011
ஈழத்தமிழருக்காக
புதுடில்லியை நோக்கிய நெடும் நடைப் பயணம்
''இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் மற்றும் வடக்கு
கிழக்கில் திட்டமிட்டு அரசினால் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்களை
அகற்ற வேண்டும்'' ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து கடந்த பெப்பரவரி
16ம் திகதி முதல் சென்னையிலிருந்து புதுடில்லியை நோக்கிய நெடும் நடைப்
பயணத்தை, 'ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் போராளிகள்' கடந்த 60 நாட்களாக, 2200
கிலோ மீற்றர் தூரத்தை மிகவும் துயரத்திலும், துன்பத்திலும், ஒரு உயிர்
இழப்புக்கும் மத்தியிலும், தங்களின் உடலை வருத்தி கொண்டு, எமது மக்களின்
அரசியல் உரிமைகளை பெறுவதற்காக அந்த நடைப் பயணத்தினை மேற் கொள்கிறார்கள்.
(மேலும்....)
பங்குனி
19, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை மீது தமிழ் மக்கள் அதீத நம்பிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் கொள்கைமீதும், அது அரசாங்கத்துடன்
முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகள் மீதும் தமிழ் மக்கள் அதீத நம்பிக்கை
வைத்திருப்பது நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மூலம்
வெளிக்காட்ட ப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத் திருந்த தமிழ் மக்கள், தமிழரசுக்
கட்சியின் மீது நம்பிக்கைவைத்து வாக்களித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகக்
குறிப்பிட்ட தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, கட்சிக்கு
வாக்களிக்காதவர் களையும் சந்தித்து எதிர்காலத்தில் அவர்களின் ஆதரவைப்
பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.
(மேலும்....)
பங்குனி
19, 2011
மு.கா.வின்
வாக்கு வங்கி கணிசமாக அதிகரிப்பு
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு
வங்கி மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்
நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன்
இணைந்தே போட்டியிட்டிருந்தது. ஆனால் இம்முறை தனித்துப் போட்டியிட்டு ஆதரவை
வெளிக்காட்டியிருப்பதாக ஹசன் அலி தெரிவித்தார். இம்முறை அரசாங்கத்தின்
பங்காளிக் கட்சியாகவிருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் தனித்தும்
சில இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்தும் போட்டியிட்டது.
(மேலும்....)
பங்குனி
19, 2011
அணுக் கதிர்வீச்சு கலிபோர்னியாவுக்கு பரவலாம்
ஜப்பானின் சேதமடைந்த புகுஷிமா அணு
உலைகளிலிருந்து வெளியாகும் அணுக் கதிர்வீச்சின் ஒரு பகுதி அமெரிக்காவின்
கலிபோர்னியா மாகாணத்தை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது
சிறிய அளவிலேயே இருக்கும் என்பதால் மக்கள் பீதியடைய வேண்டியதில்லை என்று
ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. கதிரியக்கத் தனிமங்கள் வட அமெரிக்கா நோக்கி
வந்து கொண்டிருக்கின்றன. பசுபிக் கடலின் மேல் வானில் உயரே உள்ளது என்றும்
அது நேற்று கலிபோர்னியாவை அடையும் எனவும் கூறப்பட்டிருந்தது. அமெரிக்க அணு
ஒழுங்க மைப்பு ஆணையம் மற்றும் மற்ற நிபுணர்கள் கருத்துப்படி அமெரி க்காவின்
மேற்குக் கடற்கரை மாகா ணம், ஹவாய், அலாஸ்கா அல் லது அமெரிக்க உட்
பகுதிகளுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால்
புகுஷிமாவின் சேதமடைந்து போன அணு உலைகள் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளது
என்பதையோ அதிலிருந்து எவ்வளவு கதிர்வீச்சு வெளியேறிக் கொண்டிருக்கிறது என்றோ
ஜப்பான் தெரிவிக்காததால் கலிபோர் னியாவை எந்த அளவுக்கு கதிர்வீச்சு அளவு
எட்டும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று வேறு மற்ற சில தகவல்கள்
தெரிவித்துள்ளன.
பங்குனி
19, 2011
அதிமுக கூட்டணியில் குழப்பம் நீங்கியது
அதிமுக கூட்டணியில் கடந்த இரு நாள்களாக
இருந்து வந்த குழப்பம் வெள்ளிக்கிழமை நீங்கியது. அதே சமயம் கூட்டணிக்
கட்சிகளுக்குத் தொகுதிகளைத் தேர்வு செய்து அறிவிக்கும் பணி போயஸ்
தோட்டத்தில் மாலையில் தொடங்கி நள்ளிரவுக்குப் பிறகும் நீடித்தது. தொகுதிகளை
ஒதுக்குவது குறித்து தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் ஆகிய
கட்சிகள் வெள்ளிக்கிழமை மாலை போயஸ் தோட்டத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா வீட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
(மேலும்....)
பங்குனி
19, 2011
லிபியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா திட்டம்?
மக்களைக் காப்பாற்ற எத்தகைய நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க அனுமதி தரும்
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத் தைப் பயன்படுத்திக் கொண்டு லிபியாவுக்குள்
நுழைய அமெரிக்கா திட்டமிட்டுள் ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்
கூட்டாளியான பிரான்ஸ் ஒருபடி மேலே சென்று, தீர்மானம் போட்டுள்ள ஒரு சில மணி
நேரங்களுக்குள் போர் விமானங் கள் குண்டு மழை பொழிய வேண்டும் என்று கூறியுள்
ளது. இந்தத் தீர்மானம் போடப்பட்டுள்ள நிலையில் லிபியா ஜனாதிபதி கடாபி,
போராடி வரும் மக் களுக்கு எதிரான நடவடிக் கைகளை முடுக்கிவிட்டுள் ளார்.
எதிர்ப்பாளர்கள் வசம் இருக்கும் பெங்காசி நகரை மீட்கும் பணியில் ராணுவம்
இறங்கியுள்ளது.
(மேலும்....)
பங்குனி
19, 2011
இரண்டாம் உலகப்
போர் பேரழிவை விட பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஜப்பான்!

ஜப்பானை ஒட்டிய கடற்பகுதியில் கடந்த 11 ஆம்
திகதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுச்
செயலிழந்த டாய்ச்சா அணு மின் நிலையத்தின் உலைகள் ஒன்றன் பின் ஒன்றாக
வெடித்து, அதிலிருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு மனித உடலைப்
பாதிக்கும் அபாயம் அளவை எட்டி வருகிறது என்கிற உறுதியான செய்தி, ஜப்பானை
மட்டுமின்றி, உலகத்தையே அச்சத்தில் தள்ளியுள்ளது.
மானுட உயிர்களையும், இயற்கை ஆதாரங்களையும் அடியோடு அழிக்கக் கூடிய, தடுக்கவே
முடியாத ஒரு ஆபத்தை தன்னகத்தே நிரந்தரமாகக் கொண்டுள்ளன அணு உலைகள்.
அதனால்தான் தங்கள் நாட்டின் மின் தேவையை 78% அளவிற்கு அணு மின் உலைகளின்
மூலம் பெரும் நாடான ஃபிரான்ஸ், 17 அணு உலைகளை மட்டுமே இயக்கிவரும் ஜெர்மனி,
அணு மின் சக்தியை அதிகரிக்கலாமா என்று ஆலோசித்த இத்தாலி ஆகிய நாடுகளில்
கடந்த இரண்டு நாட்களாக அணு உலைகளை மூடு என்று கூறி பெரும் அளவிற்கு
ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடிப்பினால் ஏற்பட்ட தாக்கம் இதனால் ஏற்படும் அணு
சக்தி அபாயம் குறித்து உலகளவில் ஏற்பட்டுள்ள பீதி என்பவற்றை தொடர்ந்து
புதிய அணு உலைகளை அமைக்கும் செயற்பாடுகளை சீனா இடை நிறுத்தியுள்ளது.
(மேலும்....)
பங்குனி
19, 2011
சுனாமி அனர்த்தம்
அணு உலைகளை
குளிர்விக்கும் முயற்சி தொடர்கிறது
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்க ப்பட்ட
புகுஷமா அணு மின் நிலை யத்தில் சூடேறியுள்ள அணு உலை களை குளிர்விக்கும்
நடவடிக்கையில் பணியாளர்கள் தொடர்ந்தும் ஈடு பட்டு வருகின்றனர். அத்துடன் அணு
மின் நிலை யத்திற்கு மின் சக்தி யை பெறும் முயற்சியிலும் தொழில்
நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ள னர். எவ்வாறாயினும் இந்த பணிகள் மிகவும் மந்த
கதியிலேயே இடம் பெற்று வருவதாக தெரிய வருகிறது. இதேவேளை நேற்றைய தினத்தில்
அணு உலைகளை குளிர்விப்பதற்காக ஜப்பான் விமானப் படையினர் கடல் நீரை மேற்படி
அணு உலை களுக்கு பாய்ச்சினர். குறிப்பாக அதிகம் சேதமடைந்துள்ள மூன் றாவது
அணு உலையை குளிர் விக்கும் பணியிலேயே பணியாள ர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
(மேலும்....)
பங்குனி
19, 2011
20 ஆயிரம் ஆசிரியர்கள் வேலையிழப்பு அமெரிக்காவில் தொடரும் துயரம்
பொருளாதார நெருக்கடியால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கெனவே
வேலையிழந்துள்ள நிலையில், மாகாண அள வில் கடும் நெருக்கடி உரு வாகியுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே விஸ்கோ ன்சின் போன்ற மாகாணங் களில்
மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகக்
கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர் கள் மக்களோடு மக்களாக அந்த
ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளனர். அரசின் கொள்கைகளுக்கு எதிரான
முழக்கங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன. இந் நிலையில் பெரும் பட்ஜெட்
பற்றாக்குறையைச் சந்திக் கும் மாகாணங்கள் பட்டி யலில் கலிபோர்னியாவும்
இணைந்துள்ளது. மாகா ணத்தின் நிதி நிலைமை சீர டையாவிட்டால் உங்கள் வேலைக்கு
உத்தரவாதம் எதுவும் தர முடியாது என்று அரசுப்பள்ளிகளில் பணி யாற்றும் 20
ஆயிரம் ஆசிரி யர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.(மேலும்....)
பங்குனி
18, 2011
ஆளுந்தரப்புக்குப் பாரிய வெற்றி 205 இலங்கைத் தமிழரசுக் கட்சி-12 ஐ.தே.க-09
முஸ்லிம் காங்கிரஸ் - 03.!
நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி
சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாரிய வெற்றி
பெற்றுள்ளது. இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 205 ஆசனங்களை
கைப்பற்றி முதலாவது இடத்திலும், இலங்கை தமிழரசு கட்சி 12 ஆசனங்களை கைப்பற்றி
இராண்டாவது இடத்திலும், ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களை கைப்பற்றி 3ஆவது
இடத்தைலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களை பெற்று 4ஆவது
இடத்திலும், தேசிய காங்கிரஸ் 2 ஆசனங்களை பெற்று 5ஆவது இடத்திலும் உள்ளன.
மேலும் மலையக மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சை குழு ஆகியன தலா ஒவ்வொரு
ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(விபரம்....)
பங்குனி
18, 2011
ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க. கூட்டணி இன்று உடன்பாடு: ம.தி.மு.க.வுக்கு
16 தொகுதிகள்!

அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த 2 நாட்களாக தொகுதி பங்கீட்டில் கடும் சிக்கல்
நிலவி வந்தது. அ.தி.மு.க. 160 வேட்பாளர்களை அறிவித்ததால் தொகுதி பங்கீடு
சிக்கல் முற்றியது. இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காணும் வகையில்
அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் 3-வது
அணி அமையலாம் என்ற யூகங்கள் கிளம்பின. ஆனால் இன்று மதியம் அதற்கு
முற்றுப்புள்ளி விழுந்தது.
(மேலும்....)
பங்குனி
18, 2011
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தத சன் சீ
கப்பல் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்துமாறு கனடா உத்தரவு!
எம்.வீ சன் சீ கப்பல் புகலிடக்
கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்துமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவு
பிறப்பித்துள்ளது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர் புலிகளுடன் தொடர்புகளைப்
பேணியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புலிகள்
அமைப்பில் அங்கம் வகித்ததாகவும், போராட்டங்களில் ஈடுபடவில்லை எனவும்
குறித்த நபர் தெரிவித்துள்ளார். எனினும், தடை செய்யப்பட்ட இயக்கமொன்றில்
அங்கம் வகித்த காரணத்தினால் குறித்த நபரை நாடு கடத்துமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யத்
திட்டமிட்டுள்ளதாக குறித்த புகலிடக் கோரிக்கையாளரின் சட்டத்தரணி
அறிவித்துள்ளார். மத்திய பொதுப் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு செய்யத்
தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். எம்.வீ சன் சீ கப்பலில்
பயணித்த 500 பேரில் 30க்கும் மேற்பட்டவர்கள் புலிகளுடன் தொடர்புடைய அல்லது
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது
பங்குனி
18, 2011
இதுவரை வெளியான
தேர்தல் முடிவுகளின் படி ஐ.ம.சு.மு.வுக்கு அதிக மன்றங்கள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இதுவரை
வெளியாகியுள்ள 207 மன்றங்களுக்கான பெறுபேறுகளின் பிரகாரம் ஆளும் ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணி 182 மன்றங்களை வெற்றி கொண்டுள்ளது. பிரதான
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 8 உள்ளூராட்சி மன்றங்களைக்
கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 உள்ளூராட்சி
மன்றங்களையும், மலையக மக்கள் முண்னணி, தேசிய காங்கிரஸ், சுயேச்சைக் குழு
ஆகியன தலா ஒவ்வோர் உள்ளூராட்சி மன்றத்தைக் கைப்பற்றியுள்ளன.
பங்குனி
18, 2011
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு
வவுனியாவில் 7, மன்னாரில் 5 ஆசனங்கள்
வவவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு
பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 11ஆயிரத்து 878 வாக்குகளை பெற்று
7 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5ஆயிரத்து 488
வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 1ஆயிரத்து 420
வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. மன்னார் பிரதேச சபைக்கான
தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 62 வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளதுடன்
எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சி
5ஆயிரத்து 061 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய
மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4ஆயிரத்து 619 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை
கைப்பற்றியுள்ளது. அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3ஆயிரத்து 906
வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
பங்குனி
18, 2011
சரிந்தன
மக்கள் விடுதலை முன்னணியின்
கோட்டைகள்..!
ஐ.தே.கட்சி யின் கோட்டை..!
மக்கள் விடுதலை முன்னணியின் கோட்டையென
வர்ணிக்கப்படும் திஸ்ஸமஹாராம பிரதேச சபையில் அக்கட்சி இம்முறை
தோல்வியடைந்துள்ளது. இம்முறை அச் சபையில் 7,767 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை
மாத்திரமே கைப்பற்றியுள்ளது. ஐ.ம.சு.முன்னணி இம்முறை திஸ்ஸமஹாராம பிரதேச
சபையில் 14,523 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ஐ.தே.கட்சி
8,344 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இதேவேளை மாத்தளை
மாவட்டத்தில் பள்ளேபொல பிரதேச சபைக்கான தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்று
வெற்றி பெற்றுள்ளது. மேற்படி சுயேச்சைக் குழுவிடம் ஐ.தே.க. தோல்வி
கண்டுள்ளது. இதன்படி 7081 வாக்குகளைப் பெற்ற சுயேச்சைக் குழு 6 ஆசனங்களையும்
6180 வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க. 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன. கண்டி
மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள்
விடுதலை முன்னணி படுதோல்வியடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 15 ஆசனங்களைப்
பெற்றிருந்த மக்கள் விடுதலை முன்னணி இம்முறை 1 ஆசனத்தை மட்டுமே
பெற்றுக்கொண்டுள்ளது.
பங்குனி
18, 2011
ஆளும் கட்சி அமோக வெற்றி
வடக்கில் வெற்றி பெற்றது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
நேற்று நடைபெற்று முடிந்த 234
உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பெரும்பாலான சபைகளை ஆளும் ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கைப்பற்றி அதிக ஆசனங்களைப் பெற்று
பெருவெற்றியீட்டியது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால்
குறைந்தளவு சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. வடக்கில் தேர்தல் நடைபெற்ற
தமிழ்ப் பகுதிகளில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி அதிக
ஆசனங்களைக் கைப்பற்றி சபைகளைத் தன்வசப்படுத்தியது. தமிழ்த்தேசிய
கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான கட்சியான ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு இந்தப் பகுதிகளில் படுதோல்வி கண்டது.
(மேலும்.....)
பங்குனி
18, 2011
மூன்றாவது அணி உருவாகுமா....?
தமிழ்நாடு கூட்டணிக் குளறுபடியின் பின்னணிகள்!
ஜப்பானைத்
தாக்கிய ஆழிப்பேரலையைப் போல, தன்னிச்சையாக அ.தி.மு.க. தனது வேட்பாளர்
பட்டியலை புதன்கிழமை வெளியிட்டபோது, அதிர்ந்து போய்விட்டனர் இடதுசாரிக்
கட்சியினர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் அவைத் தலைவர் பண்ருட்டி
ராமச்சந்திரனும் வியப்பின் உச்சத்துக்குச் சென்றுவிட்டனர். எதற்காக இப்படி
யாரையும் கேட்காமல், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தடாலடியாக அ.தி.மு.க.
பொதுச் செயலாளர் ஜெயலலிதா இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று தெரியாமல்
கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல, அ.தி.மு.க.வினரே மிரண்டு போய்விட்டனர்.வேடிக்கை
என்னவென்றால், அண்ணா அறிவாலயத்தில் பல தி.மு.க. அமைச்சர்களேகூட இது
உண்மையான அறிவிப்புதானா இல்லை ஏதாவது தவறு நேர்ந்து விட்டிருக்கிறதா என்று
குழம்பிப் போய் தங்களுக்குள் பேசிக் கொண்டார்களாம். பல பத்திரிகை
அலுவலகங்களிலிருந்து ஜெயா தொலைக்காட்சி நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு
கொண்டு இது நிஜமான பட்டியலா என்று மீண்டும் மீண்டும் விசாரித்த வண்ணம்
இருந்தனர்.
(மேலும்.....)
பங்குனி
18, 2011
ஜப்பான் அணு உலைகளின் தற்போதைய நிலை
அணு உலை 1:
கடந்த சனிக்கிழமை வெடிப்பு ஏற்பட்டது. தீமூட்டமும் ஏற்பட்டது. இந்த அணு
உலையில் 70 வீதம் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
அணு உலை 2:
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டது. இதனைத்
தொடர்ந்து அணுக் கசிவும் அதிகரித்தது. இந்த அணு உலையில் 33 வீதம்
சேதமேற்பட்டுள்ளது.
அணு உலை 3:
கடந்த திங்கட்கிழமை வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை
புகைமூட்டம் ஏற்பட்டது. அணு உலையின் கூரைப்பகுதி முழுமையாக சேதமடைந்தது.
அணு உலை 4:
கடந்த செவ்வாய்க்கிழமை கடும் சத்தத்துடன் தீ ஏற்பட்டது. இங்கு வெடிப்பு
நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. தொடர்ந்து புதன்கிழமையும் தீ மூட்டம்
ஏற்பட்டது.
அணு உலை ?: ??????????
பங்குனி
18, 2011
லிபியாவில் உடனடி யுத்த நிறுத்தம் தேவை -
ஐ.நா. செயலர் பான் கீ மூன்
லிபியாவில் உடனடி யுத்த நிறுத்தம் ஒன்று தேவை என ஐ.நா செயலாளர் நாயகம் பான்
கீ மூன் தெரிவித்தார். ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டம் நேற்று முன்தினம் ஐ.நா.
தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் லிபியாவில் விமானங்கள் பறக்க தடை விதிப்பது
குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. இதன்போது லிபிய பிரச்சினைக்கு தீர்வாக
திட்ட வரைவொன்றை அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதேவேளை, முஅம்மர்
கடாபியின் மகன் சயிப் அல் இஸ்லாம் பிரான்ஸைச் சேர்ந்த யூரோ தொலைக்காட்சி
சேவைக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கிளர்ச்சியாளர்களுடனான யுத்தம்
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் மேலும் 48 மணி நேரத்திற்குள் லிபியாவின்
அனைத்து பகுதிகளும் அரசவசமாகும் என்று குறிப்பிட்டார். அத்துடன் அரசு
படையினர் பெங்காசியை அண்மித்துள்ளனர். இந்த நிலையில் எடுக்கப்படும் எந்த
முடிவும் பயனளிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
(மேலும்.....)
பங்குனி
18, 2011
உற்பத்தியில்
பெருந்திரளான மக்கள் ஈடுபடுவதே முக்கியம்
-காந்தியடிகள்
(சங்கீதா ஸ்ரீராம்)
2004 டிசம்பரில் தாக்கிய சுனாமி, இந்திய, கிழக்காசிய நாடுகள் பலவற்றில் இல
ட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் உப்பை வாரிக் கொட்டிச் சென்றது.
பயிர்கள், பனைமரங்கள் என அனைத்தும் அதன் தாக்கத்தால் கருகிப்போயின.
ஆனால் இந்தியாவில் செலவற்ற பல முறைகளைக் கையாண்டு, இயற்கை விஞ்ஞானி
நம்மாழ்வார், ரேவதி ஆகியோரின் குழு மேற்கொண்ட மேல்மண் வளப்படுத்தும்
உத்திகள் மூலம் தமிழ் நாட்டின் நாகை மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்
நிலங்களில் ஆறே மாதங்களில் நெல்லில் நல்ல விளைச்சலைப் பார்க்க முடிந்தது.
இந்த வெற்றியை அடுத்து, புயலாலும் சுனாமியாலும் தாக்குதலுக்குள்ளான
இந்தோனேசியா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேச அரசாங்கங்கள் சேதமான பல
இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்பதற்காக இவர்களை அழைத்தனர். எதிர்பார்த்
தாற்போல, சில மாதங்களிலே பழைய விளைச்சலைக் கொண்டு வந்து காட்டியுள்ளனர்.
(மேலும்.....)
பங்குனி
18, 2011
இறுதி வீதி தடையும் நீங்கியது
யாழ். நகர்
விக்டோரியா வீதி திறப்பு

யாழ். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள
விக்டோரியா வீதி நேற்று முதல் பொதுமக்கள் பாவனைக் காக திறந்துவிடப்
பட்டுள்ளது. யாழ். நகரின் மையத்தில் யாழ். போதனா வைத்திய சாலையின் பின்புற
மாக உள்ள மேற்படி வீதி மின்சார நிலைய வீதி, மணிக்கூட்டு வீதி, பருத்தித்துறை
வீதி ஆகியவற்றை இணைக்கும் பிரதானமான குறுக்கு வீதி ஆகும். கடந்த 15
ஆண்டுகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த இவ்வீதி நேற்று
பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டது. இந்த வீதித் திறப்புடன் யாழ்.
நகரில் இருந்த இறுதி வீதித்தடைகளும் அகற்றப்பட்டு பாதுகாப்பு வலய வீதித்
தடைகள் எதுவுமற்ற நகரமாக யாழ். நகரம் உருவாகியுள்ளது. இந்த வீதித் திறப்பு
நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கதுருசிங்க யாழ். நகர
மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார்
மற்றும் யாழ். அரச அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர். யாழ். நகரின்
அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கவனத்தில் கொண்டு இவ்வீதி
பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
பங்குனி
18, 2011
கனடா தனவந்தரால் மண்டூர் மகாவித்தியாலயத்துக்கு பல்லாயிரம் பெறுமதியான
புத்தகங்கள் அன்பளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுகோட்ட கல்வி வலயத்துக்குட்பட்ட மண்டூர்
மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் கனடாவில் இருந்துவருகைதந்த
முத்துக்குமாரன் சந்திரகுமார் என்பவரால் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான
புத்தகங்கள் கையளிக்கப்பட்டன. மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி
முரளிதரனின் வேண்டுகோளின்பேரில் மண்டூர் மகா வித்தியாலய
விளையாட்டுப்போட்டியின் போது இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதன்போது
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் பாடசாலை மற்றும் கிராம மக்களால் பொன்னாடை
போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளிலுள்ள
புலம்பெயர் இலங்கையர் இப்படியான செயல்களில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது.
பங்குனி
18, 2011
அ.தி.முக
தன்னிச்சையாக பட்டியல் வெளியிட்டது
சட்டப் பேரவை தேர்தலில் 160 தொகுதிகளில்
அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அந்த தொகுதிகள் எவை என்பதையும், அவற்றுக்கான
வேட்பாளர்களின் பெயர்களையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
நேற்றுமுன்தினம் மாலை வெளியிட்டார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா
போட்டியிடுகிறார். கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் நிற்கும் தொகுதிகளும்
அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சட்ட மன்ற உறுப்பினர்களாக இருக்கும்
பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா
வாய்பளிக்கவில்லை.
(மேலும்.....)
பங்குனி
18, 2011
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
ஐ.ம.சு.மு.
முன்னணியில்
234 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி கூடுத லான ஆசனங்களைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது. நடந்த
தேர்தலின் முதலாவது உத்தி யோகபூர்வ முடிவு நேற்று இரவு 10.40 அளவில்
வெளியாகியது. இதன்படி, மாத்தறை மாவட்டம் வெலிகம நகர சபையின் முடிவுகள்
முதலில் வெளியாகின. இதில் ஐ. ம. சு. மு. 7,246 வாக்குகளைப் பெற்று 7
ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. ஐ. தே. க. 3,622 வாக் குக ளைப் பெற்று 3
ஆசனங்களைப் பெற்றது. ஜே. வி. பிக்கு 164 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது.
வெலிகம நகர சபையில் 2006 இல் ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்த ஜே. வி. பி. இந்தத்
தேர்தலில் ஆசனம் எதனையும் பெறவில்லை. இதே நகர சபையில் போட்டி யிட்ட
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 353 வாக்குகளை மட்டுமே பெற்றது.
(மேலும்.....)
பங்குனி
18, 2011
ஜப்பான் அணு உலை குறைபாடுகள்
பாதிப்புகள் பற்றி எச்சரித்தும் ஜப்பான் உதாசீனம்
ஜப்பானில் புகுஷிமாவில் அமைக்கப்பட்ட அணு உலையில் இருந்த குறை பாடுகள்
தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகாமை அமைப்பு ஏற்கனவே ஜப் பானை
எச்சரித்திருந்த தாகவும் அந்த எச்சரிக்கையை ஜப்பான் உதாசீனம் செய்தமையே
ஜப்பானில் தற்போது அணு உலைகளில் கசிவு ஏற்பட்டமைக்கு காரணம் என்றும்
தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்திலிருந்து வெளியாகும் டெய்லி
ரெலிகிராஃப்ட் என்ற பத்திரிகை விக்கிலீக்ஸை மேற்கோள்காட்டி இந்த தகவலை
வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அப் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில்
தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சர்வதேச அணுசக்தி முகாமை நிறுவனம் 2
ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் ஏற்படும் என குறிப்பிடப்பட்டி ருந்தது.
(மேலும்.....)
பங்குனி
18, 2011
ஜனாதிபதியின் நல்லாட்சி நடுநிலையான தேர்தலுக்கு தளம் அமைத்துள்ளது
1988ஆம் ஆண்டில் ஜே.வி.பியினர் ஆயுதம் தாங்கி, நாட்டில் படு கொலைகளை
புரிந்தும் மக்களின் சகஜ வாழ்க்கைக்கு தீங்கி ழைத்துக் கொண்டிருந்த காலப்
பகுதியில் ஜே. வி. பியினர் எம க்கு ஜனநாயக தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லை.
எவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க கூடாது என்ற கடு மையான
எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர். அதனையும் மீறி வாக்களிக்கச் சென்றவர்களை
வாக்குச்சாவடிகளுக்கு முன்னால் ஜே.வி.பியினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை
செய்யவும் தய க்கம் காட்டவில்லை. ஜே.வி.பியினர் சர்வாதிகாரி ஹிட்லர்,
முசோலினி போன்ற மனித உருவில் நடமாடிய மிருகங்களை போன்று மக்கள் உயிரை துச்ச
மாக மதித்து இலட்சக்கணக்கானோரை படுகொலை செய்ததைப் போன்று இலங்கையிலும்
வன்முறைகளை 1971 ஆம் ஆண்டி லும் 1987, 1988, 1989 ஆண்டுகளிலும் கட்டவிழ்த்து
விட்ட வன் முறைகளை எமது நாட்டு மக்கள் என்றுமே மறக்கமுடியாது.
(மேலும்.....)
பங்குனி
18, 2011
புகுஷிமா அனர்த்தத்தின் எதிரொலி
அணுஉலை நிர்மாணத்தை இடைநிறுத்தியது சீனா
ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடிப்பினால்
ஏற்பட்ட தாக்கம் இதனால் அணு சக்தி அபாயம் குறித்து உலகளவில் ஏற்பட்டுள்ள
பீதி என்பவற்றை தொடர்ந்து புதிய அணு உலைகளை அமைக்கும் செயற்பாடுகளை சீனா இடை
நிறுத்தியுள்ளது. ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் அதனைத்
தொடர்ந்து வந்த சுனாமியால் அந்நாட்டின் அணு உலைகள் வெடித்து, கதிர் வீச்சு
பரவி வருகிறது. ஜப்பானில் ஏற்பட்ட இந்த ஆபத்து உலகின் பல நாடுகளிலும்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அணு உலைகள் வைத்திருக்கும் அனை த்து நாடுகளுமே,
தங்களது அணு உலை களின் பாதுகாப்பு குறித்து மீள் பரிசீலனை செய்து வருகின்றன.
இந்நிலையில், ஜப்பான் நில நடுக்கத்திற்கு முன்னதாக சீனாவில் புதிய அணு
உலைகளை நிறுவ அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தற்போது அந்த அனுமதியை
பிரதமர் வென் ஜியாபோ தற்போது இரத்துச் செய்துள்ளார்.
பங்குனி
18, 2011
ஒவ்வொரு தீவிரவாதிக்கும் 50 அப்பாவிகள் பலி அமெ. தாக்குதல் பற்றி
பாகிஸ்தான் கருத்து
சர்வதேச சமூகத்தின் அனுமதி பெறாத ஆளில்லா
விமா னங்கள் மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அமெ ரிக்கப்படைகள்
நடத்தும் தாக்குதலில் ஏராளமான அப் பாவிகள்தான் கொல்லப்படுகிறார்கள் என்று
பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானிலிருந்து இயங்கும் பிரஸ்
டி.வி. இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. செவ்வாயன்று நடைபெற்ற தாக்கு தலில்
ஐந்து அப்பாவி பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட் டனர். ஆப்கானிஸ்தான்
எல்லைக்கருகில் உள்ள தத்தா கேல் தாலுகா ஆம்பிர் ஷாகா பகுதியில் சென்று கொண்
டிருந்த வாகனம் ஒன்றைக் குறிவைத்து ஆளில்லா வாக னங்கள் ஏவுகணைகளை வீசின.
அதில் பயணம் செய்து கொண்டிருந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.
(மேலும்.....)
பங்குனி
18, 2011
இந்தியாவில்
ஆட்சியைக் காப்பாற்ற எம்.பி.க்களுக்கு லஞ்சம் பிரதமர் ராஜினாமா செய்ய
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட மன்மோகன் சிங் அரசு
முடிவு செய்த தைத் தொடர்ந்து, ஐ.மு.கூட் டணி-1 அரசுக்கு அளித்து வந்த ஆதரவை
விலக்கிக் கொள்வதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து 2008ம்
ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு ஆதரவாக வாக் களிக்க
எம்பிக்களுக்கு காங் கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்த விவகாரம் அப்பொழுதே
அம்பலமானது. விக்கிலீக்ஸ் இணைய தளம் மற்றும் இந்து பத்தி ரிகை இதுகுறித்து
அமெ ரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட் டுள்ளது.
(மேலும்.....)
பங்குனி
18, 2011
நிலநடுக்கத்தால் கொரிய தீப கற்பம் இடம்பெயர்ந்தது
கடந்த வாரம் ஜப்பான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கொரிய தீபகற்பத்தை
கிழக்கு திசையில் நகர்த்தியுள்ளது. ஜப்பான் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை
நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 9 எனும் அலகாகப் பதிவானது. இந்த
நிலநடுக்கத்தால், கிழக்கு கடலைச் சேர்ந்த தென்கொரிய தீபகற்பத்தில் உள்ள,
உல்லங்தீவு, டோக்டோ தீவுகள் ஆகிய பகுதிகள் ஒன்று முதல் 5 செ.மீ.வரை
இடம்பெயர்ந்துள்ளன. நிலநடுக்கத்தின் மையப் பகுதியான ஜப்பானின் ஹோன்ஷ¤
தீவானது இந்தக் கொரியத் தீவுகளுக்கு அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் கொரியாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவு மிகக் குறைவான
அளவே நகர்ந்தது. இத்தகவலை கொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.
புவிநிலை அறியும் கருவிகள் (ஜி.பி.எஸ்) மூலம் நடத்திய ஆய்வில் நிலப்பகுதிகள்
நகர்ந்துள்ளன எனத் தெரிய வந்தது.
பங்குனி
18, 2011
ஜப்பான் உணர்த்தும் பாடம்!
சரித்திரம் இதுவரை சந்திக்காத சோதனை
ஜப்பானில் நிகழ்ந்திருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக இயற்கையின் சீற்றமும்
அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அணு உலைகளின் வெடிப்பும், மனித இனத்தையே
அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தின்
அதிர்ச்சியை எதிர்கொள்ளத் தயாராவதற்குள், உயர்ந்தெழுந்த ஆழிப்பேரலை
ஜப்பானின் வட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கோர தாண்டவம் ஆடி அந்த
தேசத்தையே நிலைகுலைய வைத்து விட்டிருக்கிறது. இத்தோடு விட்டேனா பார் என்று
பூகம்பமும், ஆழிப்பேரலையும் அடங்குவதற்குள் கடற்கரை ஓரமாக அமைந்த அணு மின்
நிலையங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அணு மின் உலைகள் வெடித்துச் சிதறத்
தொடங்கின. அதன் தொடர் விளைவாக, ஜப்பானை மட்டுமல்ல, அந்த நாட்டைச்
சுற்றியுள்ள கடல்கடந்த தேசங்களைக் கூட அந்த அணு மின் உலைகளிலிருந்து
வெளியாகும் கதிர்வீச்சு பாதிக்கக்கூடும் என்கிற செய்தி உலகையே பயத்தில்
ஆழ்த்தி இருக்கிறது.
(மேலும்.....)
பங்குனி
17, 2011
234 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல்
234 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல்
4.00 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது. 3036 உறுப்பினர்களைத் தெரிவு
செய்வதற்கான இந்தத் தேர்தலில் 29,108 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3
மாநகர சபைகள், 30 நகர சபைகள், 201 பிரதேச சபைகளுக்கான தேர்தலில் 94
இலட்சத்து 38,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம்
தெரிவித்தது. 7396 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளதோடு வாக்குகள்
எண்ணுவதற்காக 1077 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
(மேலும்.....)
பங்குனி
17, 2011
17.03.2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்
இந் நிகழ்ச்சியில் லண்டனில் நடைபெற்ற நெடும்
பயணம்தொடர்பான ஆதரவுக்கூட்டம் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் மனித
உரிமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கலந்து கொள்கிறார்கள். திரு. ரவி
சட்டத்தரணி அவுஸ்ரேலியா திரு. இரா ஜெயதேவன், தலைவர் தமிழ் ஜனநாயக காங்கிரஸ்,
திரு. செ. அரவிந்தன் தமிழர் விடுதலை கூட்டணி, ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர்
திரு .செ .ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ். மாலை 8மணி முதல்
10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு
சிறப்பிக்கலாம்.
தொடர்புகளுக்கு: 00 44 208 866 1001
பங்குனி
17, 2011
தமிழீழத்தை அழித்து தன்னை வளர்க்கும் கனடா தேசியத் தொண்டர்

கனடா ஈழத்தமிழினத்தின் இரண்டாவது தாயகம்.
அங்கே தேசியத்தின் குரலாக நாம் நினைத்து இருந்தவர் சொல்வதைக் கேட்க ஏன் எமது
இனம் தோற்றுப் போனது என்பது விளங்குகிறது. நெஞ்சு பொறுக்கிதில்லை இந்த விதி
கெட்ட மாந்தரை நினைத்து.... என்று விம்மியள வேண்டும் போலிருக்கிறது.
விடுதலைப்புலிகள் முற்றாக அழிந்து விட்டார்களாம். இனி அவர்களது கதையே
தேவையில்லையாம். உலகத்தமிழர் இயக்கம் வன்முறை சார்ந்த அமைப்பாம். இப்படி
நெஞ்சு கூசாமல் பொய் சொல்பவர்கள் வேறு யாருமல்ல. தேசியத் தலைவரின்
வழிகாட்டலில் வந்தவர்கள் என்று இப்போதும் எங்களுக்கு கூறிக் கொண்டிருக்கிற
கயவர்கள் தான்.
(மேலும்.....)
பங்குனி
17, 2011
திராவிட கட்சிகளையும் விட்டு வைக்கவில்லை
‘விக்கிலீக்ஸ்’
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த மு.க.அழகிரி, கார்த்தி சிதம்பரம்: அமெரிக்க
தூதரின் ரகசிய செய்தி மூலம் அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்
தேர்தல் நேரத்தில் வாக்காளர் களுக்கு பணம் கொடுப்பது தென் இந்தியாவில்
சாதாரண விஷயம் என்று அமெரிக்க அரசின் தலை மையிடத்திற்கு, சென்னையில் உள்ள
அமெரிக்க தூதரக அதிகாரி அனுப்பிய ரகசிய செய்தியில் கூறப்பட்டிருப்பதை
‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் அம்பலப்படுத்தி யுள்ளது. மத்திய அமைச்சர்
மு.க.அழகிரி மற்றும் மத்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரத்தின் மகன்
கார்த்தி ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்றும் அமெரிக்க
தூதர் விலாவாரியாக அனுப்பியுள்ள ரகசிய செய்தி, ‘விக்கிலீக்ஸ்’ தகவல் மூலம்
வெளிச் செத்திற்கு வந்துள்ளது.
(மேலும்.....)
பங்குனி
17, 2011
ஜெர்மனியில்
பழைய அணுமின் நிலையங்கள் கால அளவு நீடிப்பு நிறுத்தி வைப்பு

ஜெர்மனியில் உள்ள பழைய அணுமின் நிலையங்கள்
இயங்கும் கால அளவை நீடிப்பதை மூன்று மாத காலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளதாக
அந்நாட்டு சான்ஸலர் ஏங்கிலா மெர்கெல் கூறியுள்ளார். ஜப்பானில் சுனாமியைத்
தொடர்ந்து அணுமின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத விபத்துதான்
ஜெர்மனியின் இந்த புதிய முடிவுக்கு காரணம். ஜெர்மனியில் உள்ள 17 அணுசக்தி
நிலையங்களின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதை 3 மாத காலத்துக்கு ஒத்திப்போடுவதாக
சான்ஸலர் மெர்கெல் அறிவித்தார்.
(மேலும்.....)
பங்குனி
17, 2011
அண்ணன் சிவாவுக்கு அகவை 64 அகமகிழ வாழ்த்திடுவோம்.
உலக மெங்கும் உள்ள தமிழகளிடம் குறிப்பாக
அரசியவையும் எமது நாட்டின் சூழ்நிலையும்; சிந்திக்கின்ற அத்தனை பெயர்
மத்தியிலும் அறியபட்ட பெயர் தோழர் விஸ்வலிங்கம் சிவலிங்கம். கடந்த 11
ஆண்டுகளாக தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியச்
செய்தியின் பின் அரசியல் ஆய்வினையும், வியாழன் தோறும் அரசியல்
கலந்துரையாடலையும் அறிவுபூர்வமாகவும் ஆரோக்கியமாகவும் உலக வாழ் தமிழ் பேசும்
மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பெருமை திரு. விஸ்வலிங்கம் சிவலிங்கம்
அவர்களைச் சாரும் என்பதில் ஜயமில்லை. இவர் மழை, வெய்யில், பணி என்று
பாராமலும் பல அச்சுறுத்தல் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் 11 ஆண்டுகளாக
தனது பணியை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்கி வருவதை தமிழ்
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேயர்கள் மறந்து விடமாட்டார்கள்.
(மேலும்.....)
பங்குனி
17, 2011
ஜப்பான் சொல்லும் அணுவின் பாடம்
சுனாமிக்குப் பின்னால் ஜப்பானில் அணு உலைகளில் ஏற்பட்டுள்ள வெடிப்பும் அணுக்
கதிர் வீச்சு அபாயமும் உலக மக்களை கலங்க வைத்திருக்கிறது. அந்தக் கதிர்
வீச்சு ஆசிய நாடுகளை பாதிக்கும் என்கிற எச்சரிக்கை செய்தி மேலும் கவலை
அளிப்பதாக உள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவிலுள்ள அணுமின் நிலையங்களின்
பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய ஐயமும் அச்சமும் மக்களிடையே வலுப்பெற்று
வருகிறது. மத்திய அரசும் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என
ஆணையிட்டுள்ளது சரி யானது. ஆனால், அது வெறும் கண்துடைப்பாகி விடக்கூடாதே
என்று உள்ளுணர்வு எச்சரிக்கிறது.
(மேலும்.....)
பங்குனி
17, 2011
3059 பேருக்கு ‘9A’ 1,95,112 பேர் A/L கற்க தகுதி
2010 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில்
இம்முறை 195,112 பேர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். இத் தொகையை சென்ற
வருட பரீட்சார்த்திகளோடு ஒப்பிடும் போது 10.28 சத வீதம் அதிகரிப்பு
ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள்ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.பரீட்சை
திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்
போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த
பத்து ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை மாணவர்கள் அதிக ஆர்வத்துடன்
பரீட்சைக்குத் தோற்றினர். சகல பாடசாலைகளிலும் மாணவர்கள் பல்வேறு
கஷ்டங்களுக்கு மத்தியில், கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சில
பிரதேசங்களில் மாணவர்கள் அதிகாலையில் சென்று பாடசாலைகளில் ஆர்வத்துடன் கல்வி
பயின்றதை காணக் கூடியதாக இருந்தது.
(மேலும்.....)
பங்குனி
17, 2011
Sri Lankan suspected of having links with LTTE held in Navi Mumbai
A Sri Lankan national, suspected
to having links with terrorist outfit Liberation Tigers of Tamil Ealam (LTTE),
was arrested from his hideout in neighbouring Navi Mumbai by the
Maharashtra Anti-Terrorism Squad (ATS).The accused Rajan Silithuriya
alias Rajan alias Kartik, hailing from Sri Lanka, was picked up from his
hideout in Koparkhairane area of Navi Mumbai on Tuesday night. He had
been shifting places in the Mumbai suburbs since the past four years,
the ATS said. According to the ATS, Narcotics Control Bureau (NCB) on
April 13, 2007 had seized three kgs of heroin at the Chennai
International airport. The concerned special court had declared
Silithuriya as a wanted accused in the case and had also issued a non-bailable
warrant against him. The ATS had received specific information that
Silithuriya was staying in Navi Mumbai following which he was arrested.
"We are probing if Silithuriya has any links with LTTE or any other
group in Mumbai. Preliminary probe revealed the accused had stayed in
Matunga, Chembur and Navi Mumbai areas since past four years," said
additional director general (ATS) Rakesh Maria. The Chennai NCB would
seek his remand from the ATS soon, the ATS officials said adding further
probe was on.
பங்குனி
17, 2011
ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிராக விழிப்போடிருப்போம் ஈரான் ஜனாதிபதி அறைகூவல்
சுதந்திரமாக இயங்கும் நாடுகள் ஏகாதிபத்தியத்தின் சதிகளுக்கு எதிராக விழிப்
போடிருக்க வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி முகமது அகமதிநிஜாத்
எச்சரித்துள்ளார். ஈரானுக்கான வெனி சுலா தூதர் டேவிட் வேலாஸ் குஸ்
கரபல்லோவுடனான விவாதத்தின்போதே அவர் இதைத் தெரிவித்தார். இரு வருக்கும்
இடையிலான விவாதத்தில் சர்வதேச சமூகம் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சனைகள்
இடம் பெற்றன. சுதந்திர மாக இயங்கவும், நீதியை நிலைநாட்டவும் விரும்பும்
அரசுகள் ஏகாதிபத்தியத் தின் நிஜாத் கூறியிருக்கிறார்.
(மேலும்.....)
பங்குனி
17, 2011
கறிவேப்பிலையின்
மகத்துவம்
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை
பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும் போது உணவில்
கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஏனெனில்
கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம்
தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ஈரல்
மற்றும் ஈரல் தொடர்பான நோய்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு
போன்ற நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் காணப்படுகிறது. கறிவேப்பிலை
இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும், அறிவைப் பெருக்கவும்
உதவுகின்றது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும்.
சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். கறிவேப்பில்லை சமிபாட்டுப்
பிரச்சினை, மலச்சிக்கல். வாயு தொல்லை போன்றவற்றுக்கும் சிறந்த மருந்ததாகக்
காணப்படுகிறது. கறிவேப்பிலை வாரத்திற்கு இரண்டு முறை சம்பல் செய்து
சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளும் போது வாழ்நாளில் சுகதேகியாக வாழ முடியும்.
பங்குனி
17, 2011
பஹ்ரைனில்
ஆர்ப்பாட்டக்காரர் படையினர் மோதல்
பஹ்ரைனில் அரச எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில்
இருவர் கொல்லப்பட்டதோடு 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பஹ்ரைனில்
கல்ப் நாட்டு இராணுவங்கள் குவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மாத
காலத்திற்கு அங்கு அவசர நிலை பிரகடனப்படத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்த
பஹ்ரைனில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களிலும் அரசுக்கு எதிராக
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலின்
போது ஒரு பங்களாதேஷ் பிரஜை உட்பட இருவர் கொல்லப்பட்டனர். இதேவேளை பஹ்ரைன்
நாட்டின் மீது முஸ்லிம் நாடுகள், இராணுவ நடவடிக்கை எடுக்க முன்வந்திருப்பது
துரதிர்ஷ்டவசமானது என ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்
தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்
ராமின் மெஹ்மன்பரசாத் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பான கல்ப் கோ ஆப்ரேஷன்
கவுன்சில் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார். ஈரானின் இந்த அறிவிப்பைத்
தொடர்ந்து தெஹ்ரானில் உள்ள பஹ்ரைன் தூதுவரை பஹ்ரைன் அரசு திருப்பி அழைத்துக்
கொண்டுள்ளது. பஹ்ரைனில் சிறுபான்மையினரான சுன்னி முஸ்லிம் மன்னரே ஆட்சி
நடத்தி வருகிறார். அங்கு பெரும்பான்மையினரான ஷியா முஸ்லிம்களுக்கு அநீதி
இழைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
பங்குனி
17, 2011
ஜப்பான்
4 வது அணு
உலையிலும் தீப்பிடிப்பு, பெரும் பீதி

பூமியதிர்ச்சியாலும், சுனாமியாலும் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான், அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம்
அதிகரித்துள்ளது. சுனாமியால் புகுஷிமா டாய்ச்சி அணு மின் நிலையத்தில் அணு
உலைகள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. அணு உலைகளை குளிர்விக்க
செய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. ஒன்று முதல் மூன்றாவது
அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்ததால் அணு மின் நிலையத்தை சுற்றியிருந்த ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். 4வது அணு உலையில் 2
தீவிபத்துகள் ஏற்பட்டன. 4வது அணு உலை கதிரியக்க மூலப் பொருட்களை சேமித்து
வைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. அணுமின் நிலையத்தில் வெடிப்புக்குள்ளான 3
அணு உலைகளின் கலன்களில் இருந்தும் கசிவு இருக்கலாம். இது கதிர்வீச்சுக்
கசிவின் அபாயம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது. 4வது அணு உலையில் ஏற்பட்ட
தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முடிந்ததைத் தொடர்ந்து சேதமடைந்த அணு
உலைகளில் பணிகள் நிறுத்தப்பட்டன.
(மேலும்.....)
பங்குனி
17, 2011
NDP SOCIALIST CAUCUS ANNUAL FEDERAL CONFERENCE
Saturday, March 19, 2011 TORONTO
, 10 a.m. – 5 p.m.
Registration: 9:30 a.m. $5.00
(or PWYC)
ONTARIO INSTITUTE FOR STUDIES IN
EDUCATION
252 BLOOR ST. WEST, Room 2-212,
just above the St. George Subway Station.
10 a.m. "Egypt, the Arab
Uprisings, and the NDP"
GUEST SPEAKERS:
Dr. Mohammed Shokr,
representative, Egyptian National Association for Change -- just
returned from Cairo.
Barry Weisleder, Chair, NDP
Socialist Caucus, (Alt.) Delegate to Ontario NDP Provincial Council for
Trinity-Spadina NDP, and active member of OSSTF.
Lunch break film: Myths for
Profit – Canada's Role in Industries of War and Peace
RESOLUTIONS AND ELECTIONS The
conference will update and supplement SC resolutions on many topics,
including the freedom struggle in Libya, phasing out the Alberta Tar
Sands, pension reform, public ownership, green energy conversion,
solidarity with Palestine, opposition to the imperialist wars of
occupation, legalizing marijuana, defending Cuba, Venezuela and Bolivia,
and upholding workers' rights in Canada. Strategies and tactics to
advance socialist policies within the NDP, leading up to the NDP Federal
Convention set for Vancouver, June 17-19, will be discussed. There will
be an opportunity to add new members to the Socialist Caucus Federal
Steering Committee.
பங்குனி
17, 2011
விசுவாசத்தை
மறந்துபோன தமிழக அரசியல்
இன்றைய தமிழக அரசியலில் விசுவாசத்திற்கு
இடமில்லை என்பது, சாதாரண தொகுதிப் பங்கீட்டு விஷயத்திலேயே தெரிந்து விட்டது.
இதில், அ.தி.மு.க., தி.மு.க. என்று கூட்டணிகளில் பாகுபாடு இல்லை.
கூட்டணி விசுவாசம் இழந்து, இழுபறிகளில் தொடங்கி, அவமானப் பட்டு, இறுதியில்
தலைவர்கள் வேறு வழியின்றி தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளலாம். ஆனால்,
தேர்தலுக்கு உழைக்கும் தொண்டன் மனம் இணையுமா? இது கட்சித் தலைவர்க ளுக்கே
வெளிச்சம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
(மேலும்.....)
பங்குனி
17, 2011
லிபிய
அஜபியாவில் தொடர்ந்து மோதல்

லிபிய கிளர்ச்சியாளர்களின் தலைமையகமான
பெங்காசிக்கு அருகாமை நகரான அஜபியாவில் தொடர்ந்து மோதல்கள்
இடம்பெற்றுவருகின்றன. கடாபி ஆதரவுப் படையினர் அஜபியா பகுதியில் எறிகணை
தாக்குதல்களை நடத்திவருவதோடு விமானம் மூலமும் தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில் எதிர்ப்பாளர்கள் இங்கு நீண்ட காலம் தமது கட்டுப்பாட்டை நிலை
நிறுத்திக்கொள்வது கடினம் என அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அஜபியா பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக அரச
தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது. எனினும் இதனை கிளர்ச்சிப் படை
முற்றாக மறுத்தது. அஜபியாவுக்குள் கடாபி ஆதரவுப்படை உள்நுழைய முயன்ற போது
அதனை நாம் முறியடித்தோம் என கிளர்ச்சிப்படையின் பேச்சாளர் காலித் அல் சயா,
தெரிவித்தார்.
(மேலும்.....)
பங்குனி
16, 2011
உள்ளூராட்சி
தேர்தலுக்கு ஏற்பாடுகள் பூர்த்தி
234 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நாளை (17) நடைபெறவுள்ள தேர்தலில்
வாக்களிக்க 2009 ஜூன் மாத வாக்காளர் பட்டிய லின் பிரகாரம் 94 இலட்சத்து 44
ஆயிரத்து 455 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 23 மாவட்டங்க ளில் 324
உள்ளூ ராட்சி மன்றங்களுக்காக 3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 7 ஆயிரத்து
402 நிலையங்களில் இவர்கள் நாளை வாக்களிக்க வுள்ளனர். சுதந்திரமும்
நியாயமுமான தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில்
துணுக்காய்
உள்ளூராட்சி
மன்றத்துக்கான
வாக்களிப்பை
பின் போடுவதற்கு
கட்சி செயலாளர்களின்
கூட்டத்தில்
இணக்கம் காணப்பட்டதாகவும்
அதன்படி முல்லைத்தீவு
மாவட்டத்தில்
மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு மாத்திரமே
தேர்தல் நடைபெறும்.
(மேலும்.....)
பங்குனி
16, 2011
லிபிய
கிளர்ச்சியாளர்களின் தலைமையகமான
பெங்காசியை நோக்கி முன்னகர்கிறது அரச படை

லிபிய கிளர்ச்சியாளர்களின் தலைமையகமான பெங்காசியை நோக்கி கடாபி ஆதரவு அரச
படை முன்னகர்ந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரெகா நகரைக்
கைப்பற்றிய கடாபி ஆதரவுப்படை பெங்காசிக்கு அண்மைய நகரமான அஜபியாவைக்
கைப்பற்றப் போராடி வருகின்றது. பெங்காஸிக்கு தெற்காக 150 கிலோ மீற்றர்
தொலைவிலுள்ள அஜபியாவில் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றுவருவதாக
அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்குத்
தெரிவித்துள்ளனர். அஜபியாவில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு வான் தாக்குதல்
இடம்பெற்று வருவதாக அங்கு வசிக்கும் அலிபவுஹில்பாயா அல் ஜீரா செய்திச்
சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
(மேலும்.....)
பங்குனி
16, 2011
சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக அரபு நாடுகளின் படைகள்? பஹ்ரைனில் இறங்கியது
சவூதி ராணுவம்
மக்களின் கிளர்ச்சியை அடக்குவதற்காக அண்டை நாடுகளிலிருந்து ராணு வத்தை
அழைத்துள்ள பஹ் ரைன் அரசின் நடவ டிக்கை மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை
ஏற் படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத கால மாக பஹ்ரைன் நாட்டவர் அரசின் மக்கள்
விரோத கொள்கைகளுக்கு எதி ராகப் போராடி வருகிறார் கள். பஹ்ரைன் அரசு கடு
மையான அடக்குமுறை யைக் கட்டவிழ்த்துவிட் டது. ஞாயிறன்று நடை பெற்ற
வன்முறையில் பொது மக்கள் ஏழு பேர் கொல்லப் பட்டனர். ஆனால் மக்கள் போராட்டம்
ஓயவில்லை. இதனால் அண்டை நாடு களிலிருந்து ராணுவத்தை வரவழைக்க பஹ்ரைன் அரசு
முடிவு செய்தது.
(மேலும்.....)
பங்குனி
16, 2011
ஜப்பான் அணு உலையில் வெடிப்பு
கதிர்வீச்சுத்
தாக்கம் இலங்கைக்கு இல்லை
ஜப்பானின் புகுஷிமா டைய்ச்சி அணுமின்
உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட வெடிப்புக்களால் இலங்கைக்கு எந்தவிதமான
பாதிப்பும் இல்லையென அணு சக்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் விமலதர்ம
அபேயவிக்ரம தெரிவித்துள்ளார். எனினும், முற்கூட்டிய பாதுகாப்புத் தொடர்பில்
இன்று முதல் அணுக் கதிர்வீச்சுத் தொடர்பான ஆய்வுகள்
ஆரம்பிக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு உடனடியாக
எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லையென்பதால் மக்கள் தேவையற்ற அச்சமடையத்
தேவையில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
(மேலும்.....)
பங்குனி
16, 2011
புலிகளும் கைவிட்டு விட்டது ஐயா கதி அதோகதிதான்

ம.தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் மார்ச் 19-ம் தேதி (சனிக்கிழமை)
நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியுடன் உள்ள உறவு குறித்து
இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் இருந்து அ.தி.மு.க. அணியில் ம.தி.மு.க.
இடம்பெற்று வருகிறது. இப்போது, அந்த அணியில் உள்ள கட்சிகளிலேயே நீண்ட காலம்
அ.தி.மு.க.வுடன் தோழமைக் கட்சியாக உள்ள கட்சி ம.தி.மு.க.தான். எனினும்,
அ.தி.மு.க. அணியில் உள்ள பிற கட்சிகளுக்கெல்லாம் தொகுதிகள்
ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ம.தி.மு.க.வுக்கு இதுவரை தொகுதிகள்
ஒதுக்கப்படவில்லை. மதிமுகவுக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை
ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
(மேலும்.....)
பங்குனி
16, 2011
இந்திய அணுமின் நிலையங்களின் நிலை என்ன?
அணுமின் உலைகளின் வெடிப்பால் ஜப்பான் எதிர்கொண்டு வரும் சவால்களை அடுத்து
இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள், நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற
இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் பாதுகாப்புடன் உள்ளனவா என ஆராய அணுசக்தித்
துறையை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து
பாராளுமன்றில் இரு அவைகளிலும் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்
கூறியதாவது, நிலநடுக்கம் மற்றும் சுனாமியைத் தாங்கும் விதத்தில் இந்திய
அணுமின் உலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இந்திய
அணுசக்தித்துறை மற்றும் இந்திய அணுமின் கூட்டுத்தாபனம் ஆகிய இரண்டு
அமைப்புகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்திய அணுமின் உலைகள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய அணுமின்
சக்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதே கருத்தை இந்திய அணுமின்
ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் அமோ தித்துள்ளார்.
பங்குனி
16, 2011
America, fix your country before others!
While the US administrations take great efforts to dictate how countries
should be run providing equal rights, human freedom to all, they have
completely forgotten the state of chaos that exists in their own
country. The US holds the records for the world’s highest prison
population & incarceration statistics, its unemployment & literacy
records are no better and its media belongs to non-Americans and much of
the oppressions taking place around the world is totally as a result of
US arms sales to the very people they call “tyrants”. US needs to start
thinking about fixing its country without spending trillions on futile
invasions & occupations & putting its citizens into debt. US citizens
should now demand answers for every dollar that is being wasted by their
leaders.
(more....)
காங்கிரஸின் 63 தொகுதிகள் அறிவிப்பு
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி
போட்டியிடும் 63 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில்
திமுக தலைவர் கருணாநிதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.
தங்கபாலுவும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில்
காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளில் 3 அமைச்சர்களின் தொகுதிகள்
இடம் பெற்றுள்ளன. அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி (சென்னை அண்ணா நகர்),
தா.மோ. அன்பரசன் (ஆலந்தூர்), என். செல்வராஜ் (முசிறி) ஆகியோரின் தொகுதிகள்
காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 2006-ல் திமுக வெற்றிபெற்ற அறந்தாங்கி (உதயம்
சண்முகம்), ராதாபுரம் (அப்பாவு) தொகுதிகளும் காங்கிரஸ் பட்டியலில் இடம்
பெற்றுள்ளன. மின்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான ஆர்க்காடு
வீராசாமியின் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடம்
வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
(மேலும்.....)
பங்குனி
16, 2011
இலங்கை - இந்திய
மீனவர் பிரச்சினையில் இணக்கப்பாடு
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையி லான
கடற்றொழில் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் சில இணக்கப்பாடுகள்
ஏற்பட்டுள்ளன. இவை இலங்கைக்கு அதிகம் சார்பானதாகவே உள்ளதாக கடற்றொழில்
நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு
காண்பது தொடர்பாக முதலாவது கூட்டம் 27 ஆம் திகதி புதுடில்லியில் நடக்க
உள்ளதோடு இரண்டாவது கூட்டம் கொழும்பில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
(மேலும்.....)
பங்குனி
16, 2011
63 நாயன்மார்களும், 63 தொகுதிகளும்!
“காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் இதை நல்ல
எண்ணத்தோடு, பக்தி மனப்பான்மை யோடு வரவேற்பார்கள் என்று எண்ணு கிறேன்.
ஏனென்றால் புராணத்திலே 63 நாயன்மார் என்பார்களே அந்த 63 நாயன் மார்களை
இன்றைக்கு காங்கிரசார் இந்தக் கூட்டணியிலே பெற்றிருக்கிறார்கள் என் பதற்காக
அவர்களுக்கு என்னுடைய வாழ்த்து”.
60 தொகுதிகளை
ஒதுக்க திமுக முன்வந்தபோதும்
கூடுதலாக
மூன்று தொகுதிகளைக்
கேட்டு நெருக்கடி
கொடுத் துள்ளது காங்கிரஸ்.
மூன்று என்ற எழுத் துக்கு
அன்பு, அறிவு, தமிழ்,
அண்ணா என்று எத்தனை
சிறப்புகள்
உண்டு என்று கலைஞர்
அடுக்குவதுண்டு.
ஆனால் இப்போது
ஊழல், சிபிஐ,
ரெய்டு என்ற மூன்றெழுத்துக்களை
காட்டியே,
மூன்று தொகுதிகளை
பெற்றிருக்கிறது
காங்கிரஸ்.
(மேலும்.....)
பங்குனி
16, 2011
ஜப்பானில் அணு உலை
வெடிப்பு
தமிழ் நாடு
கல்பாக்கம் பகுதியிலும் மக்கள் அச்சம்

ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அணு உலை
வெடிப்பு கல்பாக்கம் பகுதியிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு
அருகே கல்பாக்கத்தில் அணுசக்தி வளாகம் உள்ளது. அணுசக்தித் துறைக்
கட்டுப்பாட்டில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இதில்
அதிவேக சோதனை அணு உலை செயற்படுகிறது. இந்திய அணு மின் கழகம் சார்பில் சென்னை
அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு இரு தொகுதிகளில் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது. பாபா அணு ஆராய்ச்சி மையம் மறு சுழற்சி அமைப்பு ஆகியவையும்
இயங்கி வருகின்றன. இப்பகுதியில் கதிர்வீச்சு ஏற்பட்டால் சுற்றுப்புற
மக்களைப் பாதுகாக்கும் வகையில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவசர கால ஒத்திகை
நடத்தப்படுகிறது. தற்போது ஜப்பான் சம்பவத்தால் இங்கு பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி தாக்கிய போது கல்பாக்கத்தில்
சென்னை அணுமின் நிலையத்தின் பம்பி நிலைய முகப்பு வரை கடல் நீர் உட்
புகுந்தது. அதற்கு மேல் உட்புகுந்திருந்தால் பெரும் விபத்தை
சந்தித்திருக்கும்.
பங்குனி
16, 2011
பலாலி விமான நிலையம்
வர்த்தக
விமான நிலையமாக அபிவிருத்தி செய்யத் திட்டம்
பலாலி மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை
வர்த்தக விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக
சிவில் விமான சேவை அமைச்சர் பிரியங்கர, ஜயரட்ன தெரிவித்துள்ளார். பலாலி
விமான நிலையத்தை வர்த்தக விமான நிலையமாக மேம்படுத்தவும், கட்டுநாயக்க விமான
நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தியை ஆரம்பிக்கவும் இந்திய அரசாங்கம்
அனுசரணை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
(மேலும்.....)
பங்குனி
16, 2011
Tamil Eelam National Identity Card
Sri Lanka, to create a
mono-ethnic racist Tamil only state on territory extending to one-third
of the land area and two-thirds of the coastal belt of the island state
of Sri Lanka. The TGTE is a government which only exists in the
imagination of its architects without one square inch of land under its
control. This same group previously provided funding, and other services
deemed illegal to the outlawed terrorist group known as the Liberation
Tigers of Tamil Eelam (LTTE) which has been banned in the USA since 1996
to seek the same goal by force of arms, which insurgency was militarily
defeated by the Sri Lankan authorities in 2009 after enduring much
bloodshed and violence over a period of 33 years.
(more....)
பங்குனி
16, 2011
தமிழகத்தில்
தேர்தலைச் சந்திக்க இரு கட்சிகளும் தயார்

சட்ட சபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
தொடங்க, இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அ. தி. மு. க. – தி. மு. க.
அணிகள், பலப் பரீட்சையில் ஈடுபடத் தயாராகி விட்டன. இன்றைய நிலவரப்படி, அ.
தி. மு. க. 160 தொகுதிகளிலும் தி. மு. க. 120 தொகுதிகளிலும் போட்டியிடுவது
உறுதியாகி உள்ளது. 2006ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதை விட, 12
தொகுதிகளில் குறைவாக தி. மு. க. போட்டியிடுகிறது. அ. தி. மு. க. கூட்டணியில்
இடம்பெற்றுள்ள, ம. தி. மு. க. வுக்கு மட்டுமே இன்னும் தொகுதிப் பங்கீடு
முடிவாகவில்லை. அந்த கட்சிக்கு மிகச் சொற்ப எண்ணிக்கையில், வெறும் எட்டு
தொகுதிகள் ஒதுக்க, அ. தி. மு. க. முன்வருவதால், கூட்டணியில் அக்கட்சி
இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதை தவிர்த்து அ. தி. மு. க. கூட்டணியும் இறுதி வடிவம் பெற்றுவிட்டது. அ.
தி. மு. க. 160 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அ. தி. மு. க.
கடந்த முறை, 188 தொகுதிகளில் போட்டியிட்டது.
(மேலும்.....)
பங்குனி
16, 2011
ஜப்பான் குறித்து அதிர்ச்சி தகவல்
ஒரு லட்சம் குழந்தைகள் அனாதைகளாகின!
ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால்
சுமார் ஒரு லட்சம் குழந்தை கள் அனா தைகளாகியிருக் கலாம் என்று பிரிட்டனிலி
ருந்து இயங்கும் சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து
செய்தியா ளர்களிடம் பேசிய அமைப் பின் பொறுப்பாளர் ஸ்டீ பன் மக்டொனால்டு,
இடம் பெயர்ந்துள்ள ஒரு லட்சம் குழந்தைகளின் கதி என்ன என்பதை அறிய மிகவும்
ஆவலாக உள்ளோம். அவர் களுடைய வீடுகள் முழுமை யாக அழிந்துவிட்டன.
பெரும்பாலான குழந்தை கள் மாற்று முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக்குழந்தைகளை எங் கள் தொண்டர்கள் அணு கிப் பேசிக்கொண்டிருக் கிறார்கள்.
தங்கள் குடும்பத்தினரை இழந்திருக்கிறோம் என்ற துயரத்தோடு, நண்பர்களின்
இழப்பும் அவர்களை பாதித் திருக்கிறது. பள்ளிக்கூடங் களுக்கு திரும்ப
வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
பங்குனி
16, 2011
அணுஉலைப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் சர்வதேச நாடுகள் முடிவு
ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் அணுஉலைகள் வெடிப்பு ஏற்பட்டு
கதிர்வீச்சு ஆபத்தாக மாறியுள்ளதால் சர்வதேச நாடுகள் மத்தியில் பாதுகாப்பு
குறித்த விவாதம் நடந்து வருகிறது. சீனா, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி,
பின்லாந்து, கஜகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை
எடுக்கத் துவங்கிவிட்டன. ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் சீனாவில் உள்ள
அனைத்து அணுஉலைகளையும் விஞ்ஞானிகள் சோதனை செய்திருக்கிறார்கள். பாதிப்பு
எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதோடு, கூடுதல் பாதுகாப்புப் பணிகளும்
அவசியம் என்று அந்த விஞ்ஞானிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள். பாதுகாப்பு
ஏற்பாடுகள் பற்றிப் பேசிய சீன அணுசக்திக்கழகத்தின் வல்லுநர்களில் ஒருவரான
சு மி என்பவர், ஜப்பானின் அனுபவத்திலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்.
கடுமையான இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் ஒருபுறம்
இருப்பினும், முன்னெச்சரிக்கை பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும்
என்று கூறியுள்ளார். கஜகஸ்தான் வல்லுநர்களும் பாதுகாப்புப் பணிகளில்
மும்முரமாக இறங்கியுள்ளனர். இந்த நாட்டைச் சேர்ந்த வல்லுநர்கள் ரஷ்யாவில்
உள்ள பல்வேறு அணுஉலைகளின் பாதுகாப்புப் பணிகளிலும் பொறுப்பாக இருக்கிறார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யாவின்
அக்டோ அணுமின் நிலையத்தைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டுள்ள கஜகிஸ்தான்
வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்கள்.
பங்குனி
16, 2011
Sinhala Language Day
With reference to the above
event, attached is the request letter for sponsorships and
advertisements. Your support in this regard is greatly valued.
Best regards
Nalaka
(more....)
பங்குனி
16, 2011
ஜப்பான் அணு
உலையில் மேலும் வெடிப்பு

குளிரூட்டி செயலிழந்த காரணத்தால் வெப்ப நிலை
அதிகரித்து டாய்ச்சியின் 4 ஆவது அணு உலையில் நேற்று ஏற்பட்ட வெடிப்பை
அடுத்து அணுக்கதிர் வீச்சு அளவு மனித உடலை பாதிக்கும் அளவிற்கு
அதிகரித்துள்ளதாக ஜப்பான் அரசு முதல் முறையாக உறுதி செய்துள்ளது. ஜப்பானை
ஒட்டிய கடற் பகுதியில் கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர
பூகம்பத்தினால் அந்நாட்டின் கிழக்கு கரையிலுள்ள புகுஷிமா நகரிலிருக்கும்
டாய்ச்சி அணு மின் நிலையம் செயலிழந்தது. அதில் இருந்த அணு உலைகளுக்கு குளிர்
நீரை செலுத்தும் குளிரூட்டிகள் ஒவ்வொன்றாக செயலிழந்தன. இதனால் அணு உலைகளில்
வெப்ப நிலை அதிகரித்து ஒவ்வொன்றாக வெடித்து வருகிறது. நேற்று 04 ஆவது அணு
உலையில் ஒன்றிற்குள் அதிகமான வெடிப்பு நிகழ்ந்துள்ளதென அந்நாட்டு அரசு உறுதி
செய்துள்ளது.
(மேலும்.....)
பங்குனி
15, 2011
66 ஆயிரம் இளைஞர் யுவதிகளை பலி எடுத்த பிரேமதாசா யுகம் ஏற்பட வேண்டுமா?
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களி த்து பிரேமதாசா
யுகமொன்றை மீண்டும் ஏற்படுத்த உதவுமாறு கேட்பது ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகளை
மீண்டும் பலி கொடுப்பதற்கா?. 66 ஆயிரம் இளைஞர் யுவதிகளை பலி எடுத்த அந்த இருண்ட
யுகம் மீண்டும் ஏற்பட நாட்டின் எந்தவொரு பிரஜையும் எந்த வகையிலான பங்களிப்பையும்
வழங்கப் போவதில்லை. அன்று அப்பாவி மக்களை கொலை செய்து மக்களுக்கு சேவை செய்வதற்காக
இருந்த பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் விவசாய சேவை நிலையங்களுக்கு தீ வைத்து
அழித்தவர்கள் இன்று விவசாயிகளைப் பற்றி பேசுவது கேலியாக உள்ளது.
(மேலும்.....)
பங்குனி
15, 2011
கடாபி முன்னேறுகின்றார்...?
பிரெகா நகரையும்
கைப்பற்றியது அரசு

லிபிய
கிளர்ச்சியாளர்களின் முக் கிய நகரங்களில் ஒன்றான பிரெ காவை கடாபி ஆதரவுப் படை
கைப்பற்றியது. கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற கடுமையான ஷெல் தாக்குதலைத் தொடர்ந்து
கிளர்ச்சி ப்படை பிரெகாவில் இருந்து பின்வாங்கினர். அவர்கள் கடற்கரை வழியாக
பிரெகாவுக்கு 80 கிலோ மீற்றர் அப்பால் உள்ள அஜபியா வுக்கு நகர்ந்துள்ளனர்.
பிரெகாவில் இடம்பெற்ற மோதலில் கிளர்ச்சிப்படை வீரர்க ளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்
ளதாக பெங்காசியில் இருக்கும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்து ள்ளன. இந்நிலையில்
கடாபி ஆதரவுப் படை கிளர்ச்சியாளர்களின் தலை மையகமாக இருக்கும் பெங் காசியை நோக்கி
நகர்ந்துவருவ தாகத் தெரியவருகிறது. இதனிடையே லிபிய வான் பரப் பில் விமானங்கள்
பறப்பதற்கு தடை விதிக்கும் ஆலோசனைக்கு அரபு லீக் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தத்
தடையை நடைமுறைப் படுத்துமாறு அந்த அமைப்பு ஐ. நா. சபையைக் கேட்டுள்ளது.
பங்குனி
15, 2011
புலி, ஐயா, அம்மா கைவிட்ட நிலையில்
வைகோ
என்ன செய்யப் போகிறார்?

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகள் அனைத்துக்கும் தொகுதிகள்
ஒதுக்கப்பட்டுவிட்டபோதிலும் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து அ.தி.மு.க.
அணியில் இடம்பெற்று வரும் கட்சியான ம.தி.மு.க.வுக்கு இதுவரை தொகுதிகள்
ஒதுக்கப்படவில்லை. ம.தி.மு.க. தரப்பில் தொடக்கத்தில் 35 தொகுதிகள் கொண்ட பட்டியல்
அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் 30
தொகுதிகள் என்ற எண்ணிக்கைக்கு ம.தி.மு.க. இறங்கி வந்ததாகத் தெரிகிறது. எனினும்,
அடுத்தடுத்து நடந்த பேச்சுகளைத் தொடர்ந்து ம.தி.மு.க. மேலும் இறங்கி வந்து, 23
தொகுதிகளைக் கேட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே தொகுதிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு
மட்டும் கூறி வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், கடந்த 8-ம் தேதி நடந்த
பேச்சுவார்த்தையின்போதுதான் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையைக்
கூறியதாகத் தெரிகிறது. அதைக் கேட்ட ம.தி.மு.க. தரப்பு மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக்
கூறப்படுகிறது.
(மேலும்.....)
பங்குனி
15, 2011
இலங்கை வெளிநாட்டுச் சேவைக்கு அரசியல் நியமனங்கள்?
இலங்கை வெளிநாட்டுச் சேவைக்கு முதற்தடவையாக அரசியல்
நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்
பிரகாரம் சுமார் பன்னிரண்டு போ் அமைச்சரவைப் பத்திரமொன்றின் ஊடாக வெளிநாட்டுத்
தூதுவராலய சேவைக்குள் உள்வாங்கப்படவுள்ளதாக பிரஸ்தாப தகவல் வட்டாரங்கள் மேலும்
தெரிவிக்கின்றன. இதுவரை காலமும் அவ்வாறு போட்டிப் பரீட்சையின்றி வெளியாட்கள் நியமனம்
செய்யப்படும் போது ஒப்பந்த அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படுவது வழக்கமாக
இருந்த போதிலும், இம்முறை நியமனம் பெறவுள்ளவர்கள் அனைவரும் நிரந்தரப் பதவிகளுக்கு
உள்வாங்கப்படவுள்ளனர்.
(மேலும்.....)
பங்குனி
15, 2011
என்றும் பொருந்தும் மார்க்ஸின் கோட்பாடுகள்
(அ.அன்வர்
உசேன்)
மார்க்ஸ் கல்வி கற்ற பள்ளியில் இறுதி வகுப்பில் ஒவ்வொரு மாணவரும் தனது எதிர் கால
இலக்கு என்ன என்பது குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். தனது 17வது வயதில்
எதிர்கால இலக்கு குறித்து மார்க்சின் கட்டுரை அவரது சிந்தனையை வெளிப்படுத் துவது
மட்டுமல்ல; ஒவ்வொரு பொதுவுடை மைப் போராளியும் கற்க வேண்டிய வழி காட்டுதல் எனில்
மிகை அல்ல. இன்னல்களுக்கிடையே இரும்பு போன்ற உறுதி “ஒருவன் தனக்காக மட்டுமே
வாழ்ந்தால் ஒரு வேளை புகழ்வாய்ந்தவனாகவோ அல் லது சிறந்த கல்விமானாகவோ ஆகலாம்.
ஆனால் அவன் ஒரு முழுமையான சிறந்த மனிதனாக ஆகவே முடியாது.” எவன் மிகவும்
மகிழ்ச்சிக்குரிய மனிதன்? “எவன் ஒருவன் மிக அதிகமானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறானோ,
அவன்தான் மிகவும் மகிழ்ச்சிக்குரியவன் என்பதை அனு பவம் கூறுகிறது”. ஆகவே வாழ்வின்
இலக்கு என்ன? “மனித குலத்திற்காக பணியாற்று. இந்த வாழ்வு ரோஜா மலர்ப்பாதை அல்ல.
முட்கள் நிறைந்த பாதை! நாம் மனித குலத்தின் நன் மைக்காக பணியாற்றுவது என முடிவு
செய்து விட்டால் எந்தஒரு துன்பமும் நம்மை நிலை குலைய வைக்காது. ஏனெனில் இந்த தியாகங்
கள் மனித குலத்தின் நன்மைக்காக!”
(மேலும்.....)பங்குனி
15, 2011
நாளை, திமுக வேட்பாளர் பட்டியல்,19-ல் தேர்தல் அறிக்கை
திமுக
வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை (16-ம் தேதி) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்
முதல்வர் கருணாநிதி, வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார். வரும் 19-ம் தேதி (சனிக்கிழமை)
கட்சியின் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிடுகிறார். திமுக கூட்டணியில் திமுக 120
இடங்களில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு கடந்த
செவ்வாய்க்கிழமை தொடங்கி, 6 நாள்கள் நடைபெற்றது.
(மேலும்.....)
பங்குனி
15, 2011
Ontario to
strip Toronto transit workers of right to strike
With the
Toronto Transit Commission (TTC) workers’ contract set to expire April 1, the
Ontario government of Liberal Premier Dalton McGuinty abruptly closed debate in
the provincial legislature last week on a bill that will strip more than nine
thousand subway and bus drivers and maintenance workers of their right to
strike. It is expected that the proposed legislation to declare the TTC an
“essential service” will become law in the final week of March. The Liberals’
attack on the most basic of workers’ rights comes in the wake of a vote by the
Toronto City Council, led by right-wing multi-millionaire mayor Rob Ford, to
formally request the McGuinty government—which has jurisdiction in the matter—to
devise and pass such a law. Since his election last fall, Ford has spearheaded a
campaign to vilify public sector workers, privatize garbage collection, sell off
public assets and further slash taxes for corporations and the rich. It is
expected that Ford’s 2012 municipal budget will seek to decimate what remains of
the social safety net in Toronto, including an attempt to privatize public
housing in the city.
(more...)
பங்குனி
15, 2011
சென்னையிலிருந்து டில்கியை நோக்கிய நெடும் பயணத்திற்கான ஆதரவு கூட்டம் லண்டனில்
ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று உள்ளது

இலங்கை
இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்தும் படியும்வடக்கு கிழக்கில் திட்டமிட்டு
அரசினால் குடியேற்றபட்ட குடியேற்றவாசிகளை வெளியேற்றும்படியும் முன்வைத்து
சென்னையிலிருந்து டில்கியை நோக்கிய நெடும்பயணத்தை ஈழ தேசிய ஜனநாயக மக்கள் விடுதலை
முன்னணியின் உறுப்பினர்கள்மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான ஆதரவு கூட்டம் லண்டனில்
ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று உள்ளது. இக் கூட்டத்திற்கு மருத்துவ கலாநிதி
நிக்கலஸ்பிள்ளை தலைமை தாங்கினார்.
(மேலும்.....)
பங்குனி
15, 2011
ஓமந்தை வரை யாழ். தேவி
எதிர்வரும் 26ம் திகதி ஓமந்தை ரயில் நிலையம் வைபவ ரீதியாக திறக்கப்படும். யுத்தம்
காரணமாக பாதிக்கப்பட்ட இந்த நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில்
கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை நடைபெற்று வருகின்ற ரயில்சேவைகள் 26ம் திகதி
முதல் ஓமந்தை வரை நீடிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து இதுவரைகாலமும் பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பிற்கு புறப்பட்ட யாழ்.
தேவி ரயில் சேவை ஒரு மணித்தியாலம் முன்னதாக 2.30 மணிக்கு புறப்படும் எனவும்
அதிகாரிகள் தெரிவித்தனர். ஓமந்தை நிலையம் திறக்கப்பட்ட தும் கொழும்பிற்கான அனைத்து
ரயில் வண்டிகளும் அங்கிருந்து புறப்படும்.
பங்குனி
15, 2011
UK Uncut and US sister group stage
more protests at banks
Over 40 UK branches saw action by campaign group, including a 'big society
reading room', a 'job centre' and a teach-in
(Jonathan
Paige)

UK Uncut, the anti-cuts campaign
group, staged protests at more than 40 bank branches throughout Britain on a day
when the group's American counterpart, US Uncut, staged at least 50 protests.
The fast growing British group, still under six months old, staged the Big
Society Bail In protests to show the range of services it says have had to be
cut in order to support the financial sector. Last week the group focused on
Barclays, which admitted it paid just Ł113m tax in the UK in 2009 on reported
profits of Ł11.6bn.
(more....)
பங்குனி
15, 2011
நடந்து முடிந்த மட்.சிவாநந்தா பழைய மாணவர் சங்கம் வட அமேரிக்க கனடா கிளையின்
பொதுக்கூட்டமும் புதிய நிருவாகசபை தெரிவும்
கடந்த 12ம் திகதி மட் சிவாநந்தா பழைய மாணவர் சங்கம்
வட அமேரிக்க கனடா கிளையின் பொதுக்கூட்டமும் மற்றும் புதிய நிருவாகசபை தெரிவும்
இராப்போசனத்துடன் இனிதே நடைபெற்றது.பிரதம அதிதியாக சாமித்தம்பி சிவபாக்கிய ராஜா
அவர்கள் கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சிகளை நித்தி என்றழைக்கப்படும் நித்தி
சிவாநந்தராஜா அவர்களால் நிகழ்ச்சிகள் தொகுத்தளிக்கப்பட்டன.வசந்தகுமார் பாபு
எனும் பழைய மாணவர் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைப்பு செய்தார்.போசகராக இருக்கும்
Prof.பாலசுந்தரம் அவர்களால் நிகழ்ச்சி வழிநடாத்தப்பட்டது.
(மேலும்.....)
பங்குனி
15, 2011
இந்திய கடற்படை
சோமாலிய கடற் கொள்ளையர்கள் 61 பேரை கைது செய்தனர்

அரபிக் கடலில் இந்திய கடற்படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், சோமாலிய
கடற்கொள்ளையர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பிடியில் இருந்த கப்பலும்,
அதிலிருந்த சிப்பந்திகள் 13 பேரும் மீட்கப்பட்டனர். அரபிக் கடல் பகுதியில் சோமாலிய
கடற்கொள்ளையரின் அட்டகாசம் அதிகரித்ததையடுத்து, இந்திய கடற்படையினர் தீவிர
கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி, அங்கு
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கு, சோமாலிய கடற்கொள்ளையினர்,
மீன்பிடி கப்பல் ஒன்றை கடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து,
ஐ.என்.எஸ். கல்பேனி என்ற போர்க் கப்பலில், கடற்படையினர் அங்கு விரைந்தனர்.
(மேலும்.....)
பங்குனி
15, 2011
Meadia Release
DEARCanada,Assistance Relief Phase I,II and III
Please see the attached media
release from Dear-Canada on our current project (Phase III) in providing
emergency relief to the flood victims in Eastern Sri Lanka. For futher
information please view Phase I,II and III donations @
http://www.youtube.com/watch?v=5mmaw4MY7wI. Please circulate to your
contacts. Again, on behalf of DEAR-Canada we thank you for your generous
support. (Part1,
Part 2....)
பங்குனி
15, 2011
கிளர்ந்தெழுகிறார்கள் ஐரோப்பிய மக்கள் போர்ச்சுக்கல், இத்தாலியில் மக்கள்
போர்க்கோலம்

அரசுகளின் பொருளா தாரக் கொள்கை மற்றும் அதன் பாதிப்புகள் ஆகிய வற்றை மையமாக வைத்து
ஐரோப்பிய நாடுகளின் மக்கள் பெரும் போராட் டங்களைத் துவங்கியுள் ளனர். கடந்த 15
நாட்களாகவே போர்ச்சுக்கல் நாட்டில் வேலையின்மைக்கு எதிராக அரசு எதிர்ப்புப்
பிரச்சாரங் கள் நடந்து கொண்டிருந் தன. கடந்த ஆண்டில் போர்ச் சுகல் நாட்டின் வேலை
யின்மை விகிதம் 10.8 ஆக உயர்ந்திருந்தது. ஞாயிறன்று பெருந்திரள் ஆர்ப்பாட் டங்களை
நடத்துமாறு மக் களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. ஒரே நாளில் நாடு முழுவதும்
லட்சக்கணக் கான மக்கள் ஆர்ப்பாட் டங்களில் பங்கேற்றனர்.
(மேலும்.....)
பங்குனி
15, 2011
தேர்தல் பிரசாரம் நிறைவு
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன.
பிரதான கட்சிகள் நேற்று தமது இறுதிக் கட்ட பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டன.
ஐ. ம. சு. மு. வின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
தலைமையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உட்பட
பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரப் பணிகள் முடிவடைந்துள்ள
நிலையில் சுவரொட்டிகள், தேர்தல் அலங்காரங்கள் அகற்றும் நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்
நடாத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கு 16ஆம் திகதி இரவு வரை கட்சி அலுவலகங்களைத் திறந்து வைக்க அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
பங்குனி
15, 2011
வவுனியாவிலிருந்து செஞ்சிலுவை சங்கம் வெளியேற்றம்
கடந்த 13 வருட காலம் வவுனியாவில் மனிதாபிமான
சேவையாற்றிய சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழு இந்த மாத இறுதியுடன் தனது வவுனியா
அலுவலகத்தை மூடிக்கொண்டு வெளியேறவுள்ளது. கடுமையாக போர் நடைபெற்ற காலத்தில் இவர்கள்
ஆற்றிய சேவையை பலரும் நினைவு கூர்ந்தனர். சர்வதேச செஞ்சிலுவைச்சங்க குழு போர்
நடைபெறும் பகுதிகளில்தான் சேவைகளை ஆற்றுவது நியதியாகும். சர்வதேச செஞ்சிலுவைச்சங்க
குழு வினர் வவுனியாவிலிருந்து வெளியேறிய போதிலும் இவர்களில் உள்ளூர் பணியாளர்கள்
நால்வர் சில கடமை களுக்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்துடன் இணைக்கப் பட்டு
அங்கிருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பங்குனி
14, 2011
ஜப்பானில் 3ஆவது
அணுஉலை வெடித்தது

ஜப்பானின் முக்கிய அணுசக்தி மையமான புகுஷிமாவின் 3ஆவது அணு உலை வெடித்ததில் 19 பேர்
படுகாயமடைந்துள்ளனர். இந்த அணுஉலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மணிக்கு 20மைல்
வேகத்தில் அணுக்கதிர் வீச்சு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அவசரமா வெளியேற வேண்டும் என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. நில
நடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பானின் 11 அணுஉலைகள் ஆபத்தில் சிக்கியுள்ளன.
இவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் அறிவித்துள்ள
போதிலும் அணு உலைகளின் ஹைட்ரஜன் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது.
(மேலும்....)
பங்குனி
14, 2011
Overseas Tigers shaken by debilitating split
Norway-based LTTE faction gains ground as Diaspora battle takes new turn
A section of the Transnational Government of Tamil Eelam (TGTE) has revolted
against V. Rudrakumaran, the self-appointed Prime Minister of the organisation
causing chaos among various Diaspora factions. The rebel group consists of 34
self-styled MPs based in Australia (3), Canada (6), France (3), Germany (7),
Italy (1), Denmark (3), Norway (3), Sweden (1) and UK (7). The TGTE comprised
102 ‘MPs’ based in various parts of the world. Sources told The Island that
since the conclusion of the war in May 2009, the US-based one-time legal advisor
to the LTTE, Rudrakumaran had spent millions of dollars on the ‘TGTE project.’
He tried to exploit the arrest and extradition of Selvarasa Pathmanathan aka
‘KP’ to Colombo in Aug. 2009 to promote TGTE as a government in exile.
(more....)
பங்குனி
14, 2011
பாலகுமார், யோகி, தங்கன், பாப்பா....உயிருடன் உள்ளனர்
இலங்கை அரசின்
உளவுப்பிரிவில் வேலை செய்கின்றனர்

விடுதலைப்புலிகளின் முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாளரான பாபா இலங்கை புலனாய்வுப்
பிரிவில் கடமையாற்றிவருகிறார் என தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகளுடன்
தொடர்புடையவர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதும்
உள்நுழையும் போதும் அவர்களை அடையாளம் காட்டிக் கொடுப்பதே இவரது பணியாகும் என
ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது
புலிகளுக்கு ஆதரவானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும்போது பாபா அடையாளம்
காட்டும்போது கணினி திரையில் சமிஞ்சை காட்டும். அதனைக்கொண்டு குடிவரவு அதிகாரிகள்
புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்குவர்.
(மேலும்....)
பங்குனி
14, 2011
சுனாமி ஆபத்து
எந்நேரமும் ஏற்படும் என்பதை நாம் மறந்துவிடலாகாது
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ந் திகதியன்று, இலங்கையிலும், தெற்காசிய நாடுகளையும்
சின்னாபின்னப்படுத்தி, பல்லாயிரக் கணக்கான உயிர்களை பலிகொண்டும் கோடிக்கணக்கான
பெறுமதியுடன் சொத்துக்களையும், உடைமைகளையும், கட்டிடங்களையும் அழித்துவிட்ட சுனாமி
அனர்த்தத்தை இலங்கை மக்கள் இன்று முற்றாக மறந்துவிட்டார்கள். கடந்த வெள்ளிக்கிழமை
ஜப்பானையும், பசுபிக் சமுத்திரத்தை அண்டியுள்ள நாடுகளையும் அதனைவிட அதிக பலம்
வாய்ந்த சுனாமி ஒன்று பேரழிவை ஏற்படுத்தியது. ஜப்பான் மக்கள், எதற்கும் அஞ்சாத
மனோதிடமும், விடாமுயற்சியும் உடைய எறும் பைப் போன்ற சுறுசுறுப்பானவர்கள். 1945ம்
ஆண்டில் இரண்டா வது உலக மகா யுத்தத்தின்போது, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு
வருவதற்காக அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்கள் மீது
அணுகுண்டை போட்டு பல லட்சக் கணக்கான மக்களை பழிவாங்கி ஜப்பானை சரணடையவைத்தது.
(மேலும்....)
பங்குனி
14, 2011
தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவு
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (14) நள்ளிரவு
12 மணியுடன் முடிவடைவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
தெரிவித்துள்ளார். பிரசாரக் கூட்டம், மக்கள் சந்திப்பு, உள்ளிட்ட அனைத்து பிரசார
நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடித்துக் கொள்ளப்பட வேண்டுமென்று அவர்
கூறியுள்ளார். அதேவேளை நாளை (15) நள்ளிரவுக்கு முன்னர் வேட்பாளர்களின்
காரியாலயங்களும், வீடுகளில் செய்யப்பட்டுள்ள தேர்தல் அலங்காரங்களும் நீக்கிக்
கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(மேலும்....)
பங்குனி
14, 2011
ஜப்பான் மக்களின் துயரம் உலகத்திற்கொரு பாடம்
உழைப்புக்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப் படும் ஜப்பான் மக்கள் இன்று மிகப் பெரும்
துயரத்தைச் சந்தித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பூகம்பம் - சுனாமி என்ற இரட்டைத்
தாக்குத லுக்கு எண்ணற்றோரை பலி கொடுத்திருக் கிறார்கள். தரை மட்டமாகிப்போன ஊர்களை
மறுகட்டுமானம் செய்கிற சவால் மிக்க பணியில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களது
துயரத்தில் பங்கெடுக்கிற உலகம், இயல்பு வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கான அவர்களது
போராட்டத்தில் தோள்கொடுக்கவும் செய்யும். பலியானவர்கள் எத்தனை பேர் என்ற முழு மையான
தகவல்கள் இனிமேல்தான் வரவேண் டும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்
திருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.
(மேலும்....)
பங்குனி
14, 2011
எதிர்வரும் 19 பேரழிவு ஏற்பட வாய்ப்பு
- விஞ்ஞானிகள்
பாரிய இயற்கை அழிவு எதிர்வரும் 19ஆம் திகதி
ஏற்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரன் பூமிக்கு மிக மிக அருகாமையில்
வரும் 'சூப்பர் மூன்" நிகழ்வினாலேயே ஜப்பானில் நிலநடுக்கம் பாரிய சுனாமி போன்ற
அனர்த்தங்கள் இடம் பெற்றிருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகாமையில் அதாவது 2 இலட்சத்து 21 ஆயிரத்தி 556 மைல்
தூரத்தில் நெருங்கி வருகிறது. இதை அடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி சந்திரன்
பூமிக்கு அருகாமையில் வருவதால் சுனாமி, எரிமலை வெடிப்பு உட்பட பல்வேறு பேரழிவுகளை
ஏற்படுத்தும் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர். இதற்கு முன் 'சூப்பர் மூன்" நிகழ்வு 1955 ஆண்டு, 1974ஆண்டு, 1992
ஆண்டுகளில் நிகழ்ந்தன. இதன் போது குறித்த நாட்களில் மோசமான காலநிலை நிலவியதாக
விஞ்ஞானிகள்
குறிப்பிட்டுள்ளனர்.
பங்குனி
14, 2011
காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க. கைவிடாதது ஏன்?
இனி
மத்திய அரசுக்கு பிரச்சினைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவோம்,
சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற முடியாது என சென்னையில் நடந்த
தி.மு.க. உயர் மட்டச் செயற்றிட்டக் குழுவில் எடுத்த முடிவு அடுத்த சில நாட்களிலேயே
தலைகீழாகியதற்குக் காரணம் அழகிரியின் முயற்சி தான் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் –
தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஏறக்குறைய 20 - இருபது கிரிக்கெட் போட்டியை
விட அதிக பரபரப்பாக இருந்தது. முடிந்துவிடும் என்று நினைக்கும் போது, அதிரடியாக
பிரச்சினை ஏற்படும். தளரும் தறுவாயில் திடீரெனக் காட்சி மாறும். டில்லி என்றாலே
வேண்டாம் என்று தவிர்த்துக் கொண்டிருந்தவர் அழகிரி, ஆனால் பிரணாப் முகர்ஜியுடன்
இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸின் பிரச்சினையை அறிந்து கொண்டதோடு,
தி.மு.க.வின் நிலையையும் தெரிவித்துவிட்டு, தீர்வு காண முயற்சித்தார் அழகிரி.
(மேலும்....)
பங்குனி
14, 2011
பேரழிவுத் துயரத்தில் சிக்கித்தவிக்கும் ஜப்பான்:
10 ஆயிரம் பேர் பலி
ஜப்பானில் பயங்கர பூகம் பம்-சுனாமி பேரலைகளால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரமாக
அதிகரித்துள்ளது. சுனாமி கடுமையாகத் தாக்கிய மியாஹி நகரில் பல்லாயிரக் கணக்கானோர்
பலியாகியுள்ள னர் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, புகுஷிமா அணுமின் நிலையத்தில்
2வது அணு உலையும் ஞாயிறன்று வெடித்தது. இதனால் ஜப்பா னின் நெருக்கடி நிலைமை மேலும்
தீவிரமடைந்துள்ளது. பூகம்பம் மற்றும் சுனாமி யால் பாதிப்புக்குள்ளான புகு ஷிமா
அணுமின் நிலையத்தில் பிரதான அணு உலை சனிக்கிழ மை வெடித்துச்சிதறியது. இத னால்
ஏற்பட்ட பெரும் வெப் பத்தால் அந்த அணுஉலை பெரு மளவு உருகிவிட்டதாக அதி காரிகள்
தெரிவிக்கின்றனர். இந் நிலையில், அருகிலுள்ள 2வது அணு உலையும் ஞாயிறன்று வெடித்தது.
இங்கு அடுத்தடுத் துள்ள 6 உலைகளும் ஆபத்தின் பிடியில் சிக்கியுள்ளன. மேலும்
வெப்பநிலை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த இதர அணு உலைகள் மீது கடல் நீரை பாய்ச்
சுவதற்கான ஏற்பாடுகளை ஜப் பானிய அதிகாரிகள் மேற் கொண்டு வருவதாக தெரிவித் துள்ளனர்.
(மேலும்....)
பங்குனி
14, 2011
அல்ஜெஸீரா நிருபர் லிபியாவில் சுட்டுக் கொலை
லிபியாவின் செய்திகளை உலகம் முழுவதும் எடுத்துச்
செல்வதில் முதன்மை நிறுவனமாக இருந்து வரும் அல்ஜெஸீரா தொலைக்காட்சியின் நிருபர்
ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். கடாபிக்கு எதிராக கிளர்ச்சி நடந்து
வரும் லிபியாவில் ஒரு பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இந்த சம்பவத்தினால் நாங்கள் துவண்டு விட மாட்டோம் என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களை
நீதி முன் நிறுத்துவோம் என்று இந்த டி.வி. நிறுவன இயக்குனர் ஜெனரலர் வாடா கான்பார்
தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடாபிக்கு எதிராக
எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 2
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளளனர்.
(மேலும்....)
பங்குனி
14, 2011
வவுனியா ந.சபை
தேர்தலின் பின்பே புதிய தலைவரின் பெயர் அறிவிக்கப்படும்
வவுனியா நகர சபையின் புதிய தலைவர் யார் என்பது
பிரதேசசபைத் தேர்தல் முடிந்த அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படுமென இலங்கை
தமிழரசுக்கட்சியின் தலைமைப்பீடம் அறிவித்துள்ளது. கடந்த 15 மாத காலம் பதவி வகித்த
எஸ். என். ஜி. நாதன் நகர சபைத் தலைவர் பதவியினை இராஜினாமா செய்து கொண்டதினை அடுத்து
வெற்றிடமாக வுள்ள அந்த பதவிக்கு யார் நியமிக்கப் படவுள்ளார் என்பது ஊகிக்கமுடியாத
நிலை உள்ளது. மக்கள் மத்தியில் பலவித ஊகங்கள் உலாவியபோதிலும தமிழ்த் தேசிய
கூட்டமைப்பில் உள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி இறுதி தீர்மானத்தை
எதிர்வரும் 17ம் திகதிக்கு பின்னர் எடுப்பார்களென வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இதில் புளொட்டிற்கு தமிழ் தேசியக்
கூட்டமைப்பு ஆப்பு அடிக்க காத்திருப்பதாக அறிய முடிகின்றது.
பங்குனி
14, 2011
ஜப்பான்
அணுவிபத்தை சீனா கவனத்தில் கொள்ளும்
- சீன குழு துணைத்தலைவர் பேட்டி
2011-2015ம் ஆண்டுகளில் திட்டமிடப்படும் எரிசக் தித் திட்டங்களை இறுதிப் படுத்தும்
வேளையில், சுனா மியால் தாக்குண்ட அணு உலையில் ஏற்பட்ட விபத் தையும் சீனா கவனத்தில்
கொள்ளும் என்று சீனா வின் தேசிய வளர்ச்சி மற் றும் சீரமைப்புக் குழுவின்
துணைத்தலைவர் சிய் ஸென் குவா பெய்ஜிங்கில் கூறினார். இதுவரை ஏற்படாத மிகப் பெரும்
நில நடுக்கத் தின் விளைவாக ஜப்பானின் புகுஷிமா டாய் - இச்சி அணு நிலையத்தில் பெரும்
வெடிவிபத்தை ஏற்படுத்தி யது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 9 புள்ளிகள் இருந்தது
என்று ஜப்பா னின் மறுமதிப்பீடு கூறியது. அணு உலை விபத்தால் ஏற் பட்டுள்ள கதிர்
வீச்சு ஜப் பான் நிர்ணயித்துள்ள அதிக அளவு வரையறையைத் தாண்டிவிட்டது. அணு உலையின்
சுவர் இடிந்த துடன் பல ஊழியர்கள் காயமடைந்தனர்.
(மேலும்....)
பங்குனி
14, 2011
இலங்கையில் இந்தியாவின் தலையீடு
இலங்கையில் இந்தியாவின் தலையீடு என்பது ஈழ
தமிழர்களுக்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின்
தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்தியாவின் தலையீடு என்பது ஈழ தமிழர்களுக்கான
ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர் ஞா.
ஞானசேகரன் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு கொண்டுவரபட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தமானது
தமிழ் மக்களின் நலன்கருதி இந்தியாவினால் மேற்கொள்ளபட்ட ஒரு நடவடிக்கை எனவும் அதைனை
முறியடித்தவர்கள் தமிழ் நாட்டில் உள்ள தலைவர்கள் எனவும் தெரிவித்த அவர், அமரர்
ராஜீவ்காந்தியின் கொலை செய்யபட்டதை தொடர்ந்து மத்திய அரசு இலங்கை இன பிரச்சனை
தொடர்பாக ஒதுங்கிகொண்டதாக தெரிவித்தார்.
(மேலும்....)
பங்குனி
14, 2011
சேது சமுத்திரத்
திட்டம் கைவிடப்பட்டது?
சேது சமுத்திரத் திட்ட மாற்றுப் பாதை ஆய்வுப் பணிகள்
திடீரென முடிந்து விட்டதாகக் கூறி அதற்கான கருவிகளை கரை சேர்த்துள்ளமையானது
சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தி.மு.க. வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக
இருந்த போது சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது. ராமர் பாலம் சர்ச்சையை தொடர்ந்து
இத்திட்டம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 600 கோடி ரூபாவுக்கு மேல் பணி
மேற்கொள்ளப்பட்ட நிலையில் தாமதத்தால் அதற்கான பணிகள் வீணாயின. யார் மனதையும்
புண்படுத்தாத வகையில் மாற்றுப்பாதையில் திட்டத்தை நிறைவேற்றும் காரணிகளை
கண்டறியுமாறு, மத்திய அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியது.
(மேலும்....)
பங்குனி
14, 2011
பேரழிவும், லாபமும்!
உண்மையில் அணு உலைகளுக்குள் என்ன நடந்தது. தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது
என்பதை யாரும் அறி யார். ஆனால், அணு உலைகள் வெடித்துச் சிதறிவிட்டன என்பது மட்டும்
உண்மை. வெடித்தது அணு உலை அல்ல. அதைச் சுற்றி கட்டப்பட்ட கான்கிரீட் கட் டிடம்
மட்டுமே என்று ஜப்பான் அரசு அதி காரிகள், மழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அணு
கதிர்வீச்சு அபாயத்தை அவர்கள் மறுக்கவில்லை. வெடித்துச் சிதறிய அணு உலையிலிருந்து
20 கிலோ மீட் டர் சுற்றளவை தாண்டியிருக்கும் மக்கள், குழாயில் தண் ணீர் வந்தால்
குடிக்கக் கூடாது; வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது; உடல் முழுவதையும் மூடிக்
கொள்ள வேண் டும்; அந்தத் துணியை குளிர்வித்துக் கொண்டேயிருந் தால் நல்லது என்று
அறிவுரை கூறியிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், தப்பித்துக் கொள்ளுங்கள்
அல்லது சாவை தழுவிக் கொள்ளுங்கள் என்று பொருள்.
(மேலும்....)
பங்குனி
14, 2011
மும்பையில் பேரழிவு ஏற்படும் அபாயம் -
நிபுணர்கள்
எச்சரிக்கை
மும்பையில் கடலுக்கு அடியில் ரிக்டர் அளவுகோலில் 5
புள்ளிகளுக்கு மேல் பூகம்பம் ஏற்பட்டாலும் பல பகுதிகளில் பேரழிவு அபாயம் இருப்பதாக
நிபுணர்கள் கூறியுள்ளனர். ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.
பூகம்பத்திலும் சுனாமி தாக்குதலிலும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இந்த பூகம்பத்தை
தொடர்ந்து இந்திய புவியியல் ஆராய்ச்சித் துறையை சேர்ந்த அதிகாரிகள், பூகம்பத்தால்
மும்பை எதிர்நோக்கியுள்ள ஆபத்து குறித்து ஆய்வு செய்தனர். மும்பையில் 5
புள்ளிகளுக்கும் மேல் பூகம்பம் ஏற்பட்டால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த
சேதம் ஏற்படும் என தெரிவித்தனர். மும்பை பல தீவுகளால் சூழ்ந்த நகரம்.
(மேலும்....)
பங்குனி
13, 2011
லிபியா கடுமையான போர் நீடிக்கிறது
லிபியாவின் அதிபர் கடாபியின் ஆதரவுப் படை கள் மற்றும் எதிர்ப்பா ளர்களுக்கு இடையில்
கடு மையான சண்டை நடை பெற்று வருகிறது. அரசியல் சீர்திருத்தங் கள் கோரி லிபியாவில்
நடை பெற்று வந்த மக்கள் போராட்டம் முக்கியமான நகரங்களில் மோதல் நிலைக்கு கொண்டு சென்
றுள்ளது. மக்கள் எதிர்ப்பு கடாபிக்கு எதிராக அதிக மாக இருந்தாலும், ராணு வத்தைக்
கையில் வைத்திருக் கும் கடாபி, அதை மக்க ளுக்கு எதிராகப் பயன்படுத் தினார்.
எதிர்ப்பாளர்களும் ஆயுதங்களைக் கையில் எடுத்துப் போராடத் துவங் கினர். அவர்கள் வசம்
பல நக ரங்கள் வந்தன. அந்த நகரங் களை ராணுவத்தின் உதவி யோடு தனது ஆதிக்கத் திற்குள்
கொண்டு வரும் வேலையில் கடாபி இறங்கி யுள்ளார்.
(மேலும்....)
பங்குனி
13, 2011
வேஷ்டி
கசங்காமல் கழுத்தில் மாலையுடன் அறுவடை அமோகமாக நடக்கின்றது

பங்குனி
13, 2011
நாடு கடந்த
தமிழீழ அரசுமேலும்
உடைகின்றது
நாடு கடந்த தமிழீழ அரசைவிட்டுப் பிரிந்து செல்லும் எம்
பிரியமானவர்களே!-
பிரதிப் பிரதமர் விடுக்கும் வேண்டுகோள்
ஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று
வாழும் எம்மக்களுக்கு நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி
இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீளமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய
நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை,..........உலகத் தமிழரின் விருப்பை
ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என ஒரு கணம்
சிந்தியுங்கள். தமிழரின் ஒற்றுமையை, அதன் தேவையை எடுத்துக்காட்டும் விதத்தில்
நடக்கவேண்டிய நாமே பிரிவினைக்குக் காரணமாகலாமா? பிரிவினை என்ற சொல்லை தமிழ்
அகராதியில் இருந்து அகற்றவேண்டிய நாமே பிரிவிணைக்கு வழிவகுக்கலாமா? தேசியம் பேசிய
நாம் இன்று பிரிந்து நின்று எம்மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையைச் சிதைக்கலாமா?
(மேலும்....)
பங்குனி
13, 2011
ஜப்பானை ஆபத்து சூழ்ந்தது அணு உலை வெடித்தது
பயங்கர பூகம்பமும், சுனா மிப் பேரலைகளும் தாக்கிய ஜப்பானை மேலும் அதிர்ச்சி யில்
உறைய வைக்கும் விதமாக அந்நாட்டின் முக்கிய அணுமின் உலை சனிக்கிழமை மதியம்
வெடித்துச்சிதறியது. இதனால் கதிர்வீச்சு அபாயத்தில் ஜப் பான் சிக்கியுள்ளது. உலகில்
ஏற் பட்ட மூன்றாவது மிகப்பெரும் அணு உலை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் வெள்ளியன்று கடலில் ஏற்பட்ட பயங்கர பூகம் பத்தைத் தொடர்ந்து அந்நாட் டின்
கிழக்குகடலோரப் பகுதி முழுவதையும் சுனாமிப் பேர லைகள் தாக்கின. குறிப்பாக வடகிழக்கு
ஜப்பான் முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. பூகம்பம் மற்றும் சுனாமிப் பேரலைக ளும்,
அடுத்தடுத்து ஏற்பட்ட 50க்கும் மேற்பட்ட தொடர் நிலநடுக்கங்களும் அந்நாட்டின் பல
பகுதிகளில் பெரும் சேதத் தை ஏற்படுத்தியுள்ளது. குறிப் பாக எண்ணெய் கிடங்குகள்,
தொழில் மையங்கள் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. சென்டாய் நகரம் அழிந்து போனது.
ஏராளமான சிறிய நக ரங்கள் இருந்த இடம் தெரியா மல் கடலுக்குள் மூழ்கிவிட்டன. கடலில்
இருந்த படகுகள் எல் லாம் நகரங்களுக்குள் அடித்து வரப்பட்டன; நகரங்களிலிருந்த
வீடுகளெல்லாம் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டன.
(மேலும்....)
பங்குனி
13, 2011
சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு
கனடா
சிறுவர் அபிவிருத்தி கழகம் (சிடாஸ் - Children Development Association of Eastern
Sri Lanka – Canada ) ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பூமி தினத்தை
முன்னிட்டு “சூழலை காப்போம்” எனும் தலைப்பின் கீழ் மாபெரும் மர நடுகை நிகழ்வு
ஒன்றை வரும் ஏப்ரல் 16ம் திகதி(16-04-2011) புதன்கிழமை கனடா மிஸ்ஸிஸ்ஸாகா நகரில்
கனடிய வன பரிபாலன சபையுடன் இணைந்து நடாத்தவுள்ளது.
(மேலும்....)
பங்குனி
13, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
- 55, 56வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின்
55வது நாளான (11-03-2011, வெள்ளி) நேற்று “ஜான்சி” மாநகரத்திலிருந்து 20வது கிலோ
மீற்றர் தூரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் “குவாலியர்” மாநகரம் நோக்கி நடைபயணம்
தொடர்ந்தது. நடைபயண வீரர்கள் 55வது நாளான நேற்று 47 கிலோ மீற்றர் தூரத்தைக்
கடந்திருந்தனர். இந்நிலையில் நடைபயண வீரர்களை உற்சாகப்படுத்த சென்னையிலிருந்து ஈழ
தேசிய மாணவர் அமைப்பைச் சேர்ந்த 10 மாணவர்கள் குவாலியர் நோக்கி இரவு பயணமாகினர்.
அவர்கள் 13-03-2011 அன்று காலை 01:00 மணியளவில் நடைபயண வீரர்களுடன்
இணைந்துகொள்வார்கள்.
(மேலும்....)
பங்குனி
13, 2011
War porn is back in Libya "There's all that oil"
Forget "democracy"; Libya, unlike
Egypt and Tunisia, is an oil power. Many a
plush office of United States and
European elites will be salivating at the
prospect of taking advantage of a
small window of opportunity afforded by
the anti-Muammar Gaddafi
revolution to establish - or expand - a beachhead.
There's all that oil, of course.
There's also the allure, close by, of the
US$10 billion, 4,128 kilometer
long Trans-Saharan gas pipeline from Nigeria
to Algeria, expected to be online
in 2015.
(more....)
பங்குனி
13, 2011
ஜப்பானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1800 ஆக அதிகரிப்பு
_

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
ஆயிரத்து எண்ணூறு ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது.இவர்களை
தேடும் பணியும் இடம்பெற்று வருகிறது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாலும்
பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயர கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
பங்குனி
13, 2011
தமிழ் தேசிய
கூட்டமைப்பு ஒரு மாயைக்கட்சி
– கிழக்கு முதலமைச்சர்
_
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்கின்ற கட்சி மாயைக் கட்சி என தெரிவித்துள்ள கிழக்கு
மாகாணமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அவர்களுக்கு வாக்களித்து எதுவித பலனும்
கிடைக்காத பட்சத்தில், மக்கள் தற்போது தெளிவாக மாற்றுச் சிந்தனையாளர்களாக
மாறியிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். “இவ்வளவு காலமும் தமிழ் கட்சி என்றால்
வடக்கினை முழுமையாகக் கொண்டமைந்த தமிழ் தேசி கூட்டமைப்பு மாத்திரம் தான் கிழக்கு
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வந்தார்கள். ஆனால் தற்போது கிழக்கு
பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கிற்கான தனியான ஓர் அரசியல் அலகு ஏற்படுத்தப்பட்டு
அதற்கான வழிவகைகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.
(மேலும்....)
பங்குனி
13, 2011
ஜப்பானில் அணுஉலை வெடித்தது
நாடு
முழுவதும் அவசர நிலை பிரகடனம்

ஜப்பானில் அணுஉலை வெடித்ததால் அந்நாட்டில் அணுசக்தி ஆபத்து எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அந்நாட்டில் சுனாமிக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை
ஆயிரத்தி 600 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை ஜப்பானின் க்யோடா செய்தி நிறுவனம்
வெளியிட்டுள்ளது. வடக்கு ஜப்பானில் உள்ள ஃபுகுமா அணுமின் நிலையத்தில் உள்ள முக்கிய
அணுஉலை வெடித்தது. இச்சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ஜப்பான்
முழுவதும் அணுசக்தி ஆபத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கதிர்வீச்சு
அபாயம் காரணமாக அணுஉலை அருகில் இருந்த சுமார் 45 ஆயிரம் பொது மக்கள் பாதுகாப்பான
இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும்
சுனாமி காரணமாக அணுஉலை குளிரூட்டப்படவில்லை. இதனால் அணுஉலையின் வெப்பம் அதிகரித்து
வெடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் நாடோ கன், விமானம் மூலம்
அணுமின் நிலையத்தை பார்வையிட்டார்.
பங்குனி
12, 2011
8.9
ரிச்டர் பூகம்பம்
ஜப்பானில் சுனாமி
ஐப்பானின் கிழக்குக் கரையோரப் பிரதேசமான ஹொன்ஷ¤
பிரதேசத்தில் நேற்று அதிகாலை 8.9 ரிச்டர் அளவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இந்தப்
பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பெரும் பகுதி நீரில் அடித்துச்
செல்லப்பட்டிருப்பதுடன், பெரும் எண்ணிக்கையான சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
சுனாமி அனர்த்தத்தால் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள்
வெளியாகியிருக்கும் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும்
அதிகரிப்பதற்கான அச்சம் காணப்படுகிறது. சர்வதேச நேரப்படி அதிகாலை 5.46 மணியளவில் (ஜீ.எம்.ரி)
இந்தச் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது. சொத்துக்களுக்கு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது. பல
வாகனங்கள், படகுகள், கப்பல்கள் மற்றும் பல கட்டடங்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளன.
(மேலும்.....)
பங்குனி
12, 2011
Photo raises
questions about Canadian Tamil organization

A former member of a Canadian Tamil organization described
as “a peaceful separatist group” by the Ontario Progressive Conservatives
attended a weapons training session with the Tamil Tigers in Sri Lanka in 2003.
A photograph of the training session, used by U.S. authorities to convict a
Toronto man who tried to buy arms for the Tigers in 2006, raises new questions
about the National Council of Canadian Tamils (NCCT), a group linked to a Tory
candidate from the Toronto area. A man shown in the weapons-training photo,
Thiva Paramsothy, won a seat on the NCCT in an election last June but has since
stepped down. The election was supervised by Shan Thayaparan, who was recently
named the PC candidate for Markham-Unionville. On Monday, PC Leader Tim Hudak
denied that Mr. Thayaparan is linked to remnants of the Tigers through the NCCT
and encouraged anyone with evidence to the contrary to bring it forward. A party
spokesman, Alan Sakach, said background checks on the candidate found “nothing
out there that suggests that there is a problem with the National Council of
Canadian Tamils,” which he described as peaceful despite its goal of a separate
Tamil state in Sri Lanka.
(more....)
பங்குனி
12, 2011
புலிகளின் முகாம்கள் தமிழகத்தில் இல்லை
இந்தியாவின்
அறிவிப்புக்கு இலங்கை அரசு வரவேற்பு
இந்தியாவில் எல். ரீ. ரீ. ஈ. முகாம்கள் கிடையாது என
இந்திய அரசாங்கம் அறிவித்திருப்பதை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இந்தியாவில்
புலிகள் தலைதூக்க முயல்வதாக புலனாய்வுப் பிரிவுகள் ஏற்கனவே கூறியிருந்த நிலையில்,
தற்பொழுது அங்கு புலி முகாம்கள் கிடையாது என மறுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி
அடைவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார்.
(மேலும்.....)
பங்குனி
12, 2011
இனப்பிரச்சினைக்கான தீர்வு
உள்ளூராட்சி சபைகளுக்கான
சட்டங்களில் விரைவில் திருத்தம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையுடன் உள்ளூராட்சி
மன்றங்களுக்கான சட்டங்கள் திருத்தியமைக்கப்படவுள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வு
முயற்சிகளின் ஓர் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்ளூராட்சி மாகாண
சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா தெரிவித்தார். சட்டத் திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்கள் மற்றும் நிதி
ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். ஏறாவூர் பிரதேச சபையை
நகர சபையாகத் தரமுயர்த்தப்பட்ட பின்னர் ஏறாவூருக்கு விஜயம் செய்த அமைச்சருக்கு
பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட வைபவத்தில்
உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
(மேலும்.....)
பங்குனி
12, 2011
Tamil march to Delhi gaining momentum
A major meeting will be held in
London to show solidarity for the 2,500 kilometres march from Chennai to Delhi
by the Eelam National Democratic Liberation Front (ENDLF). The meeting will be
held at Harrow Leisure Centre, Christchurch Centre, Harrow, Middlesex on 13
(Sunday) March 2010 from 3.00pm. Speakers from the cross section of the
political divide of the Tamils will address the meeting. According the leaflets
widely circulated Dr Nicholaspillai, I T Sampanthan, Dr Vasanthakumar, Sivapalan,
Cllr Paul Sathyanesan, Ravi Sundaralingam, Miss Vasanthi Subramaniam, C
Sooriyakumar, Mrs Jenanny, V Sivalingam, E K Rajagopal, P Sivasubramaniam,
Nallathamby Jeyapalan, Ira Jayadevan, Mahalingam Sivam, S Yogarajah, Skanthadeva,
S Aravinthan, Ranjan Navarajah, Navaratnam Paramakumar, Ira Manoharan, Amuthan
Rajakariar, T Sothilingam, Dr Bala, S P Yogaratnam, Dr Ratneswaran and V Ramaraj
will be addressing the meeting.
(more....)
பங்குனி
12, 2011
அ. தி. மு. க.
அணியில் சரத்குமார் கட்சிக்கு 2 இடம்
அ.தி.மு.க. அணியில் நடிகர் சரத்குமார் தலைமையிலான
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் அக்கட்சியுடன் இணைந்த நாடார்
சங்கங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் சரத்குமார் நேற்று முன்தினம்
சந்தித்துப் பேசினார். அப்போது அ.தி.மு.க. அணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
மற்றும் அதனுடன் இணைந்த நாடார் அமைப்புகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்குவது என்று
ஒப்பந்தம் ஏற்பட்டது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடனான இந்த சந்திப்பு
மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அ.தி.மு.க. அணியில் எங்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்
ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளின் எண்ணிக்கை என்பது எங்களுக்கு முக்கியமல்ல ஊழல்
நிறைந்த தி.மு.க ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கம்.
பங்குனி
12, 2011
லிபியாவின் எண்ணெய் நகரான ராஸ் லனூபா அரசு வசம்
கிளர்ச்சி
அரசுக்கு பிரான்ஸ் அங்கீகாரம்
லிபியாவின் எண்ணெய் நகரமான ராஸ் லனூபாவை கடாபி ஆதரவுப் படை கைப்பற்றியது.
தொடர்ச்சியான மோதலைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு அரச படை நேற்று உள்நுழைந்தது.
விமானம் மற்றும் தரை வழியாக இடம்பெற்ற தொடர்ச்சியான தாக்குதலைத் தொடர்ந்து
கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து பின்வாங்கினர். இந்த தாக்குதலின்போது அதிக அளவிலான
கடாபி இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் வெளிநாட்டு ஊடகங்கள்
தெரிவித்துள்ளன. இது தவிர தலைநகர் திரிபோலிக்கு கிழக்கு பகுதி மற்றும் பிரெகா, பின்
ஜவாத், அஸ் ஸாவியா பகுதிகளில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில்
கடாபி ஆதரவுப் படை யுத்த விமானம், ரொக்கெட் லோன்சர், இயந்திர துப்பாக்கிகள் மூலம்
எதிர்ப்பாளர்களுக்கு கடுமையான தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
(மேலும்.....)
பங்குனி
12, 2011
Ex Jaffna Commander speaks out
Focus on Tamil Diaspora, LTTE fighting cadre, IPKF memorial and Indian strategy
(By Shamindra Ferdinando)
A despicable LTTE decision to exterminate rival Tamil groups had the blessings
of an influential section of the Tamil Diaspora and Indian officialdom, retired
Brigadier Hugh Fred Rupesinghe says. Rupesinghe says during his tenure as the
senior most officer in Jaffna in the 80s, he had offered protection to TELO
(Tamil Eelam Liberation Organization) leader Sri Sabaratnam at any Army camp in
the peninsula, though the LTTE killed Sabaratnam along with several dozens of
TELO cadres. At that time, TELO had been the dominant group. The one-time Jaffna
Security Forces Commander says those who now target Sri Lanka on the human
rights front turned a blind eye to LTTE atrocities, though Sri Lanka repeatedly
called for Western intervention.
(more....)
ஊடக அறிக்கை
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் கனேடிய பிரதிநிதிகளுக்கும் ரொறன்ரோ துணை
தூதரகத்தின் தூதுவர் திரு.கருணாரட்னா பரணவிதாரண அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் கனேடிய
பிரதிநிதிகளுக்கும் ரொறன்ரோ துணை தூதரகத்;தின் தூதுவர் திரு.கருணாரட்னா பரணவிதாரண
அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.03.2011) மாலை
ரொறன்ரோவில் இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பில் துணை தூதரகத்தின் தூதுவர்
கருணாரட்ண மற்றும் புளொட் அமைப்பின் சர்வதேச செயலகத்தின் கனேடிய பிரதிநிதிகளும்,
கனேடிய கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 3மணி நேரத்திற்கு மேலாக
இடம்பெற்ற இந்த சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு, வடகிழக்கில்
மீள்குடியேற்றம், தமிழர் வதிவிடங்கள் அபகரிக்கப்படுதல் உட்பட பல விடயங்கள் புளொட்
பிரதிநிதிகளால் துணை தூதுவர் கருணாரட்ண அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
(மேலும்.....)
பங்குனி
12, 2011
Statement on Libya
The uprising
against the Qaddafi-led regime and the resulting armed conflict in Libya is
growing more intense, and the danger of foreign military intervention by the
major imperialist powers including Canada looms larger with each passing day.
Indeed, NATO commandoes are already reported to be inside the country, training
the insurgent forces in Eastern Libya, and a massive naval armada is being
assembled offshore preparing for a full-scale assault.
(more....)
பங்குனி
12, 2011
நீர்வளத்தை பாதுகாக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம்
உலக நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு 21ம்
நூற்றாண்டில் வரு டத்திற்கு வருடம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. சமீ பத்தில்
இந்தியாவில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் இன்னும் பத்தாண்டு காலத்தில் இந்தியர்கள் பெரும்
குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்குவார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளது. அயல் நாடான
இந்தியாவுக்கு இந்த நிலை என்றால், நாலா பக்கமும் கட லினால் சூழ்ந்துள்ள இலங்கைக்கும்
இதுபோன்ற குடிநீர் தட்டுப் பாடு ஏற்படாது என்றும் எவரும் திட்டவட்டமாக கூறமுடியாது.
(மேலும்.....)
பங்குனி
12, 2011
பெண்கள் முன்னேற்றத்தில் பங்கு
உலகின் சிறந்த 100 பேரில்
5 இந்திய பெண்கள்
பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும்
உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் எழுத்தாளர் அருந்ததி ராய், பெண்ணுரிமை போராளி
ஜெய்ஸ்ரீ சத்புதே உட்பட 5 இந்திய பெண்கள் இடம் பிடித்துள் ளனர். 100வது ஆண்டு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, உலகில் மற்ற பெண்களுக்கு முன்னுதாரண மாகவும்,
பெண்கள் முன்னேற்றத் துக்கு தூண்டுதலாகவும் விளங்குப வர்கள் அடங்கிய முன்னணி 100
பெண்கள் பட்டியலை த கார்டியன் வெளியிட்டுள்ளது. புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர்
அருந்ததி ராய், ஏழைப் பெண்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ சத்புதே,
பெண்ணுரிமைக்காக போராடும் வந்தனா சிவா, கர்ப்பிணிகள் பாதுகாப்பு அமைப்பான ஒயிட்
ரிப்பன் ஒருங்கிணைப்பாளர் அபரஜிதா கோபோய், குலாபி கேங் அமைப்பை நடத்தும் சம்பத்பால்
தேவி ஆகிய 5 இந்திய பெண்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதுதவிர, பெப்சிகோ
நிறுவன தலைவர் இந்திரா நூயி மற்றும் திரைப்பட இயக்குநர் மீரா நாயர் உள்ளிட்ட
வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். தொழில் துறையில்
உயர் பதவிகளை அடைவதற்கு முன்னுதாரணமாக நூயி விளங்குகிறார் என த கார்டியன் செய்தி
வெளியிட் டுள்ளது.
புஸ்பராசா அவர்கள் மறைந்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவர்
தனது 55 வது வயதில் இவ் உலகைவிட்டுப் பிரிந்தார்
-
சிறிதரன் (ஈ.பி.ஆர்.எல்.எப் - பத்மநாபா)

தோழர் புஸ்பராசா அவர்கள் மறைந்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவர் தனது 55 வது
வயதில் 10-03-2006 இவ் உலகைவிட்டுப் பிரிந்தார். தனது மரணத்தின் நாள் முன் கூட்டியே
சிலநாட்களுக்கு முன் அவருக்கு தெரிந்திருந்தது. ‘வெடி மருந்து வீச்சமில்லாத
தாயகத்தின் தெருவில் தனது பிள்ளைகள் உலாவும் காலம் வரவேண்டும்’ என்று அவர் கனவு
கண்டார். மாணவர் -இளைஞர்பேரவைளினூடாக தமிழ் தேசிய அரசியலில் பிரவேசித்த
புஸ்பராசாவும் அவர் சகோதரி புஸ்பராணியும் 1970களின் முற்பகுதியில் வதைமுகாம்களில்
சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் .
(மேலும்.....)
கடும் பூகம்பத்தால் எழுந்த ஜப்பானியில் பயங்கரம் -சுனாமிப் பேரலைகள்
தாக்கின * விமான நிலையம் அழிந்தது * எண்ணெய்க் கிடங்குகள் எரிகின்றன அணுஉலை
விபத்து அபாயத்தால் அவசர நிலை பிரகடனம்

ஜப்பானின் வட கிழக்குப் பகுதி யை வெள்ளியன்று காலை பயங்கர பூகம்பமும், தொடர்ந்து
சுனாமியும் தாக்கின. இதனால் அந்நாட்டின் கடலோரப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் தலைநகர் டோக்கி
யோவிலிருந்து 400 கி.மீ. தொலை வில் உள்ள ஒனஹாமா மாகாணத் தில் மியாகி என்ற இடத்துக்கு
அருகே பசிபிக் கடலில் ஹொன்சு தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட் டது. கடலுக்கடியில்
30 கி.மீ ஆழத் தில் இந்த நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவுகோலில் 8.9 புள்ளிகளாகப்
பதிவான இந்த பூகம் பத்தைத் தொடர்ந்து, மியாகி கட லோரப் பகுதி உள்பட ஜப்பானின்
பெரும்பாலான கடலோரப் பகுதி களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக் கப்பட்டது.
(மேலும்.....)
பங்குனி
11, 2011
புலிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக வெளியான தகவல்
தவறானது -
இந்தியா மறுப்பு!
தமிழகத்தில் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக வெளியான தகவல் தவறானது.
ஆதாரமற்ற இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும்' என,
இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி
தொடர்பாளர் கூறியதாவது: தமிழகத்தில் புலிகளின் பயிற்சி முகாம்கள் மூன்று இடங்களில்
செயல்பட்டு வருவதாக, இலங்கை பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இலங்கை
அரசு தெரிவித்துள்ளது போல், தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் எதுவும் செயல்படவில்லை.
இலங்கை அரசு தெரிவித்துள்ள தகவலை உறுதியாக மறுக்கிறோம். இது தொடர்பான தகவல் எதையும்,
இந்தியாவுடன், இலங்கை பகிர்ந்து கொள்ளவில்லை. எனவே, யூகத்தின் அடிப்படையிலான,
ஆதாரமற்ற இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை, இலங்கை அரசு தவிர்க்க வேண்டும். இவ்வாறு
வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார்.
(மேலும்....)
பங்குனி
11, 2011
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் இராஜிநாமா!
வவுனியா
நகரசபைத் தலைவர் தனது தலைவர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளார். இது
தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்ததில அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச்
சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் நகரசபைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆயினும் தமக்குரிய இடத்தை வழங்கி கௌரமாக நடத்தி, தங்களுடன் இணைந்து செயற்பட மறுத்து,
தன்னிச்சையாகச் செயற்பட்டு வந்தார் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏனைய
உறுப்பினர்கள் அவர்மீது குற்றம் சுமத்தியிருந்தார்கள். எனினும் அந்தக் குற்றச்சாட்டை
அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
(மேலும்....)
பங்குனி
11, 2011
யாழ்.
முஸ்லிம்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
யாழ். புதிய சோனகத் தெரு வில் மீளக்குடியேறிய
முஸ்லிம் கள் தமக்கு அடிப்படை வசதி களை ஏற்படுத்தித் தருமாறு மேற்கொண்டு வரும் உண்ணா
விரதப் போராட்டத்தை சாகும் வரையான போராட்டமாக மாற் றியுள்ளதாக அறிவித்துள்ளனர். தமது
கோரிக்கைகள் தொடர் பாக உரிய அதிகாரிகள் எதுவித நடவ டிக்கைகளும் இதுவரை மேற்
கொள்ளவில்லையென வும் அவர்கள் குற்றஞ்சாட்டியு ள்ளனர். கடந்த 8ஆம் திகதி முதல் இந்த
மக்கள் சுழற்சி முறையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
பங்குனி
11, 2011
லிபியாவில்
ராஸ் லனூபா, அஸ்ஸாவியா,
மிஸ்ரடாவில் தொடர்ந்தும் மோதல்
லிபியாவில் பல நகரங்களிலும் தமது கட்டுப்பாட்டை
நிலைநாட்ட கடாபி ஆதரவுப் படையும் கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு
வருகின்றனர். இதில் எண்ணெய் நகரமான ராஸ் லனூபாவை கைப்பற்ற கடாபி ஆதரவுப்படை
தொடர்ந்தும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இது தவிர தரைவழியாகவும் இரு
தரப்பும் தீவிர மோதலில் ஈடுபட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர்
கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
(மேலும்....)
பங்குனி
11, 2011
கிளிநொச்சியில் கே.பிக்கு 100 ஏக்கர் காணி? -
சுரேஷ் எம்.பி
கே.பி. என்னும் குமரன் பத்மநாதனின் அரச
சார்பற்ற நிறுவனத்துக்காக அரசாங்கம், வன்னி மாவட்டத்தில் 100 ஏக்கர் காணியை
ஒதுக்கியுள்ளது. இந்தத் தகவலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தமிbழ
விடுதலைப் புலிகளின் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் ஆதரவாளர்களின் உதவியை
பெற்றுக் கொள்ள அவர் முயற்சிகளை மேற் கொண் டுள்ளதாகவும் சுரேஷ்
பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்
விடுதலைப் புலிகளின் உறுப் பினர்களை விடுதலை செய்ய கே.பி. வன்னி மக்களிடம்
உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.பி. வடக்கின் அனைத்துப்
பகுதிகளுக்கும் சென்றுவர அனுமதிக்கப்படுகின்றார். எனினும் மக்கள்
பிரதிநிதிகளாகிய தமக்கு அந்த வாய்ப்புக்களை படையினர் வழங்குவ தில்லை என
சுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது முன்னாள் சகா கேபியை இன்று காட்டிக் கொடுக்க தலைவர் சுரேஷ் பத்தமநாபாவை
புலிகளிடன் காட்டிக் கொடுத்து கொலை செய்த அனுபவங்கள் உதவுகின்றன என்று
அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பங்குனி
11, 2011
நீங்கள் இடுகின்ற ஒவ்வொரு புள்ளடியும் சர்வதேசத்தில் எமது குரலை ஓங்கி
ஒலிக்க வழிவகுக்கும்
-
புளொட் தலைவர் சித்தார்த்தன்
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்ப்
பகுதிகளில் எமக்கு நிகராக ஆளும்தரப்பு ஆசனங்களைப் பெறுமானால் அதனை தமிழ்
மக்கள் தமக்குத்தான் அதிக வாக்கை அளித்துள்ளனர் என்றும் அதனால் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவேண்டிய அவசியமில்லை என்றும்
ஆட்சியாளர்கள் சொல்லக்கூடும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக
ஆசனங்கள் கிடைக்க இத்தேர்தலில் வீட்டுச்சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டியது
அவசியமாகும். செட்டிகுளம் குளுக்களூரில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல்
பிரசாரக் கூட்டத்தில் பேசிய புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம்
சித்தார்த்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
(மேலும்....)
பங்குனி
11, 2011
Cars can be hacked and remotely controlled, researchers find
With a modest amount of expertise, computer hackers could gain remote
access to someone’s car – just as they do to people’s personal computers
– and take over the vehicle’s basic functions, including control of its
engine, according to a report by computer scientists from the University
of California, San Diego, and the University of Washington. Although no
such takeovers have been reported in the real world, the scientists were
able to do exactly this in an experiment conducted on a car they bought
for the purpose of trying to hack it. Their report, delivered last
Friday to the National Academy of Sciences’ Transportation Research
Board, described how such unauthorized intrusions could theoretically
take place.Because many of today’s cars contain cellular connections and
Bluetooth wireless technology, it is possible for a hacker, working from
a remote location, to take control of various features – like the car
locks and brakes – as well as to track the vehicle’s location, eavesdrop
on its cabin and steal vehicle data, the researchers said. They
described a range of potential compromises of car security and safety.
(more....)
பங்குனி
11, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
-
53,54வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர
நடைபயணத்தின் 53வது நாளான (09-03-2011, புதன்) நேற்று நடைபயண வீரர்கள் காலை
05:30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் “ஜான்சி” என்ற மாநகரத்தை நோக்கிப்
பயணித்தனர்.“ஜான்சி” நோக்கிப் பயணித்த நடைபயண வீரர்கள் 35 கிலோ மீற்றர்
தூரம் பயணித்து “ஜான்சி” மாநகரத்திற்கு 5கிலோ மீற்றர் தூத்திற்கு முன்னாள்
முகாம் அமைத்தனர்.
(மேலும்....)
பங்குனி
11, 2011
தொகுதிகளை அடையாளம் காண்பதில் நெருக்கடி தி.மு.க - காங்கிரஸ் பலப்பரீட்சை மீண்டும்
ஆரம்பம்
தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகள்
எந்தெந்தத் தொகுதி களில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்யும் அடுத்த கட்ட பலப்
பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. குறிப்பிட்ட சில தொகுதிகளை காங்கிர
ஸும், தி.மு.க
வும் விரும்புவதால் நெருக்கடி உருவாகியுள்ளது. காங்கிரஸும் தொகுதிப் பங்கீட்டில்
ஏற்பட்ட கால தாமதத்தைப் போல், தொகுதிகளை ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது
என்பதில் தி.மு.க கவனமாக இருக்கிறது. இதற்காக, காங்கிரஸ் போட்டியிட விரும்பும்
தொகுதிகளைப் பரிசீலித்து அதை முடிவு செய்வதில் தி.மு.க தீவிரமாக உள்ளது.
(மேலும்....)
பங்குனி
11, 2011
பெண் உரிமையை பறிக்கும் யு.என்.பிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்
1977 ஆம் ஆண்டில், ஜே. ஆர். ஜயவர்தனவின் தலைமையின் கீழ், ஆட்சிப் பொறுப்பை
ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொண்டது முதல், அக்கட்சி பாராளுமன்ற ஜனநாயக
பாரம்பரியங்களை உதாசீனம் செய்து, வன்முறைகளின் மூலமே, தேர்தல்களை நடத்தி,
முறைகேடாக தேர்தல் வெற்றிகளையும் பதிவு செய்து வந்தது. அன்றைய அரசாங்கத்தின்
இத்தகைய ஜனநாயக விரோத செயற்பாடுகளை பொது மேடைகளில் கண்டித்து பேசுபவர்களின்
தராதரம் பார்க்காமல் ஜே. ஆர். ஜயவர்த்தன அரசாங்கம் தனது குண்டர்களை அனுப்பி,
நையப்புடைத்து, அவர்களை மெளனிகளாக்கியது. அன்றைய அரசாங்க கட்சிக்கு எதிராக
ஒரு தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் ஒருவரின் வீட்டிற்கும்
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தனது குண்டர்களை அனுப்பி, அந்த வீட்டை
கற்களால் தாக்கி, உயர் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை பறிக்கக் கூடிய வகையில்
வன்முறைகளை கடைப்பிடித்து, நீதியரசர்களை அச்சுறுத்திய சம்பவங்களையும்
இந்நாட்டு மக்கள் மறுந்துவிடமாட்டார்கள்.
(மேலும்....)
பங்குனி
11, 2011
இந்தியாவில்
அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர்ப் பஞ்சம் வரும்
வரும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர்
பற்றாக்குறை ஏற்படலாம் என, அமெரிக்க வெளியுறவு அமைச்சக உயரதிகாரி ரொபர்ட் பிளேக்
கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, வரும் 2025 ம் ஆண்டில் உலக
நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்திக்கலாம்.
அதாவது கிடைக்கும் தண்ணீரின் அளவு, தேவையை விட குறைவாக இருக்கும். குறிப்பாக ஆசிய
நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகளவில் இருக்கும்.
(மேலும்....)
பங்குனி
11, 2011
WOMEN'S RIGHTS ARE HUMAN RIGHTS
International Women's Day 2011 Greetings from the Communist Party of
Canada
This year, the 100th Anniversary of International Women's Day comes
amidst inspiring new struggles for democratic rights in Tunisia, Egypt
and other countries. Women have played key roles in the trade union,
community, student and other grassroots organizing which sparked these
popular uprisings, and in the powerful fightback against the attacks on
public sector unions in Wisconsin. Across the capitalist world, women
are disproportionately paying the price for government bailouts of the
banks and major corporations. Across Europe, women are active in the
fightbacks against the neo‑liberal
cuts to social programs, public service lay‑offs
and massive raises in tuition. In Canada, IWD 2011 comes amidst the
intense battle over pension rights, such as the U.S. steel lockout of
steelworkers in Hamilton. The attacks by corporations upon the hard won
pensions of their workers, and by the government upon public pension
plans, have the sharpest impact on women, given their lower average
incomes, and higher rates of poverty. (more...)
பங்குனி
11, 2011
வடக்கில் குற்றச் செயலை தடுக்க அவசர அழைப்பு
வடக்கில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல் தெரிவிப்பதற்கு
அவசர அழைப்பு இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான
ஊடக மத்திய நிலையத்தினால் இந்த தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்
ளன.மோசடிகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பில்
மக்கள் நேரடியாக முறைப்பாடு செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்க விபரங்கள் வரு மாறு:
கொழும்பு - 0112 422 176
காங்கேசன்துறை - 0113 188 824
யாழ்ப்பாணம் - 021 222 83 55
பங்குனி
11, 2011
அரசியலில்
இருந்து ஓய்வுபெற தலாய்லாமா முடிவு
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, தற்போது
மேற்கொண்டு வரும் அரசியல் பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
1960 ஆம் ஆண்டு முதல் தான் திபெத்திய பாராளுமன்ற அலுவல்களில் ஈடுபட்டு வருவதாகவும்
இனி அதிலிருந்து விடுபட விரும்புவதாகவு அவர் தெரிவித்துள்ளார். திபெத் எழுச்சியின்
52 ஆவது ஆண்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். திபெத் பாராளுமன்றம்
தர்மசாலாவவில் (இந்தியா) வரும் 14 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது தனது ஓய்வு
குறித்து பாராளுமன்றத்தில் அறிவிக்க வுள்ளதாக தலாய்லாமா குறிப்பிட்டார்.
(மேலும்....)
பங்குனி
11, 2011
விளைச்சலோ அதிகம் விற்க வழியில்லை -
முல்லைத்தீவு விவசாயிகள் கவலை
முல்லைத்தீவு மாவட்டத்தில் இம்முறை நல்ல விளைச்சல் கிடைத்துள்ள போதும்
இதுவரை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களோ அல்லது நெல் சந்தைப்படுத்தும்
சபையோ நெல்லைக் கொள்வனவு செய்யாமையால் விவசாயிகள் மாபெரும் கவலை
அடைந்துள்ளனர். இவ்விவசாயி களிடம் நெல்லை நல்ல விலைக்குக் கொள்வனவு செய்ய
தனியார் வர்த்தகர்கள் ஆர்வம் கொண்டுள்ள போதும் அவர்களுக்கு அனுமதி
வழங்கப்படவில்லை. யுத்தத்தால் பெரும் இழப்புக்களை சந்தித்த முல்லைத்தீவு
விவசாயிகள் வங்கிகளில் கடன்களைப் பெற்றே நெற் செய்கையில் ஈடுபட்டிருந்தனர்.
விவ சாய நடவடிக்கைக்கான வங்கிக் கட ன்களை ஆறு மாத கால எல்லை யில் திருப்பிச்
செலுத்த வேண்டியிரு ப்பதால் அதிகாரிகள் கூட்டுறவுச் சங் கங்களுக்கு நிதி
வழங்கி நெல்லை கொள்வனவு செய்ய ஏற்பாடுகளை செய்யுமாறு விவசாயிகள் அதிகாரிக
ளைக் கோரி நிற்கின்றனர்.
பங்குனி
11, 2011
உலக பணக்காரர்
பட்டியலில் கார்லோஸ் சிலிம் முதலிடம்
உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் செய்தி
நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மெக்சிகோவின் கார்லோஸ் சிலிம் தொடர்ந்து
முதலிடத்தில் உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் 3வது இடத்திலும்,
இந்தியாவின் லட்சுமி மிட்டல் 6வது இடத்திலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ்
அம்பானி 27 வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் ஆசியர்களே அதிகம்
இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதலிடத்தில் உள்ள தொலைத் தொடர்பு
நிறுவனர் கார்லோஸ் சிலிம் 20.5 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளார். அத்துடன்
புதிய கணக்கெடுப்பின்படி மேலும் 200 பேர் பில்லியன் டொலர் சொத்துக்கு
உரிமையாளர்களாகியுள்ளனர் என போபஸ் குறிப்பிட்டுள்ளது. இதில் அமெரிக்காவில் மாத்திரம்
அதிகபட்சமாக 413 பேர் பில்லியன் டொலர் சொத்துக்கு உரிமையாளர்களாக உள்ளனர்.
பங்குனி
11, 2011
மீசாலை பெண் படுகொலைச்
சம்பவம், கள்ளக் காதலே காரணமாம்
தென்மராட்சியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் திருமதி சாந்தினி குகதாசன்
கொலைபற்றிய தகவல்களில் புதிய செய்திகள் கசியத் தொடங் கியுள்ளன. வடமராட்சியைச்
சேர்ந்த குகதாசன் பொறியியலாளராவார் அவர் கனடா குடியுரிமை பெற்றவர். அவருக்கும்
மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சாந்தினிக்கும் பேசி
முடிக்கப்பட்ட திருமணமாகும். திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்கு மேலாக கனடாவில் வாழ்ந்தவர்.
திருமண வாழ்வினால் இவருக்கு ஒரு மகனுமுண்டு. சீதனமாக நிலபுலங்கள் அதிகம் வழங்கப்
பட்டிருந்தன. மட்டுமல்ல குகதாசனது சம்பாத்தியத்திலும் சில காணிகள் வாங்கப்பட்டுள்ளன.
சீதனமாக பெறப்பட்ட நிலங்களிலும் பார்க்க கணவரின் வருமானத்தில் வாங்கிய காணிகள்
ஏராளம்.
(மேலும்....)
பங்குனி
11, 2011
மீண்டும் குவாண்டனாமோ சிறையில் விசாரணை ஒபாமா முடிவில் மாற்றம்
குவாண்டனாமோ சிறை யில் மீண்டும் விசாரணை கள் நடத்தப்படுவதோடு, நிரந்தரமாகவே
சிறைகளில் கைதிகளை அடைத்து வைக்கும் திட்டத்திற்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா
ஒப்புதல் கொடுத் திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குவாண்டனாமோ சிறை யில்
சட்டவிரோதமாக கைதிகள் அடைத்து வைக் கப் பட்டிருக்கிறார்கள் என்றும், மிகவும் கொடூர
மான முறையில் அவர்கள் சித்ரவதை செய்யப்படு கிறார்கள் என்றும் சர்வதேச
நாடுகளிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்து வந்தன. இதனால் அங்கு நடத்தப் படும்
விசாரணையை நிறு த்தி வைப்பதோடு, அங்கி ருக்கும் கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்றவும்
ஒபாமா ஒப்புதல் தெரிவித்த ார். அவரது மாற்றம் என்ற முழக்கத்தில் இதுவும் ஒரு பகுதி
என்று கூறப்பட்டது.
(மேலும்....)
பங்குனி
10, 2011
தமிழ் நாட்டில் புலிகளின் இரகசிய பயிற்சி முகாம்கள் - பின்னணில் பொட்டனின்
வலது கரம்...?

தமிழ் நாட்டில் இரகசியமாக இயங்கும் மூன்று இரகசிய முகாம்களில் ஒன்றில்
பயிற்சி பெற்றுவரும் புலிகளுக்கு பிரபுக்கள், மற்றும் அரசியல் தலைவர்களை
படுகொலை செய்வது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் புலனாய்வுப்
பிரிவுக்கு தகவல்கள் எட்டியுள்ளன. புலிகளின் இந்த செயற்பாடுகளின்
பின்னணியில் இருப்பவர் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த
பொட்டு அம்மானின் சகாவான புகழேந்தி மாஸ்டர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இன்று புலிகள் இயக்கம் மூன்று முக்கிய நபர்களை பிரதானமாகக் கொண்டு மீண்டும்
உயிர்பெற்று வருகிறது. ஐக்கிய அமெரிக்காவில் ருத்ர குமாரணை தலைமையாகக்
கொண்டும் நோர்வேயில் நெடியவனை தலைமையாகக் கொண்டும், இந்தியாவுக்கு தப்பிச்
சென்ற விநாயகம் என்பவரை தலைமையாகக் கொண்டு, இந்தியாவில் உயிர்ப்பெறுகிறது.
இலங்கையில் மீண்டும் சிறிய அளவில் கலவர நிலையை உருவாக்குவதே இவர்களின்
அடுத்த கட்ட பிரதான இலக்காக இருக்கின்றது.
(மேலும்....)
பங்குனி
10, 2011
மீள்குடியேறிய
யாழ். முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டம்

யாழ். மாவட்டத்தில் மீள் குடியேறிய
முஸ்லிம்களின் வாழ்வாதார உதவிகளுக்குரிய செயற்றிட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுத் தமக்கு நிரந்தரமான வீடுகள் அமைத்துத் தரப்பட வேண்டும்
எனக்கோரி சுழற்சி முறையான தொடர் உண்ணாவிரதப் போராட்டமொன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொம்மைவெளி புதிய சோனகத் தெருப் பகுதியில் நேற்று
முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்
உண்ணாவிரதப் போராட்டத்தில், யுத்தத்தின் பின்பு யாழ். குடா நாட்டில் மீன்
குடியேறிய பல முஸ்லிம்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். தமது
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இப்போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.
உடனடியாகச் செயற்படுத்தாவிடின் இச் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
பங்குனி
10, 2011
ஈழ மக்களின் விடுதலைக்காக நடத்தப்பட்டு வரும் நெடும் பயணத்தை ஆதரிப்போம்
- ஈழ தேசிய மாணவர் அமைப்பு!
சிங்கள அரசானது 1972ஆம் ஆண்டு தமிழ்
மாணவர்களுக்கு எதிரான கல்வித் தகுதியைத் தடுத்து நிறுத்த முற்பட்டது. ஈழ
மாணவர்கள் இந்த இனப் பாகுபாட்டுச் செயலுக்கு எதிராக போராட்டங்களை
ஆரம்பித்தனர். இதுவே பின்நாள்களில் விடுதலைப் போராட்டமாக மாறியது. விடுதலைப்
போராட்டமானது எங்கள் இளைஞர்களின் புரிந்துணர்வு மற்றும் விட்டுக்
கொடுப்புக்கள் குறைபாட்டால் தோல்வி கண்டுள்ளது. இந்தத் தோல்வி முடிவானதல்ல,
இப்போது வீழ்ந்தாலும் எழுந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையை எங்கள்
இளைஞர்கள் கைவிட மாட்டார்கள் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.
(மேலும்....)
பங்குனி
10, 2011
Iraqi Communist Party
Authorities’ request to vacate CP headquarters and newspaper offices is
politically motivated
In a sudden move, units of the
federal police arrived on Sunday morning, 6th March 2011, at the main
headquarters of the Iraqi Communist Party in Andulus Square in central
Baghdad, as well as the headquarters of its daily newspaper “Tareeq Al-Shaab”
(The People’s Path) in Abu Nuwas Street, and requested that both places
are vacated within 24 hours, on the basis of official orders. The
pretext for this move is that the two premises are state property and
should therefore be handed back. A period of one week, however, has now
been provisionally agreed to settle the issue with the relevant
authorities.
(more....)
பங்குனி
10, 2011
புலிகளியக்கத்தின் அலெக்ஸ் என்பவரின் மனைவியை கரம் பிடிக்க துடிக்கும்
சீமான்!

புலிகளியக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் பிரத்தியேக
உதவியாளராக செயற்பட்டுவந்த அலெக்ஸ் என்பவரின் மனைவியை கரம்பிடிப்பதற்கு
இந்திய சினிமா இயக்குனர் சீமான் முயன்றுவருவதாக
தெரியவருகின்றது.புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் சாமாதான ஒப்பதம்
செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தியா சென்றிருந்த அலக்ஸின் மனைவியார்
சீமானின் மேற்பார்வையில் அங்கு தங்கியிருந்ததுடன் அக்கால கட்டத்தில் அவர்கள்
இருவருக்குமிடையே உருவான நட்பினை பயன்படுத்தி சீமான் தற்போது அவரை தனது
சித்துவிளையாட்டை ஆரம்பித்துள்ளதாக நம்பமுடிகின்றது.(மேலும்....)
பங்குனி
10, 2011
இனவாதத்தை தூவியவர் ரணில்
என்னிடம் பெருந்தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு எனது வேண்டுகோளை நிறைவேற்றாது
இனவாதத்தைத் தூவியவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என
பிரதியமைச்சர் அப்துல் காதர் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்து முஸ்லிம்
வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று வியாபாரம் செய்யும் சூழலை
ஏற்படுத்திக் கொடுத்தவர் எமது ஜனாதிபதி அவர்கள். முஸ்லிம் மக்கள் அவருக்குத்
தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று ஹஜ் யாத்திரிகளின் தொகையை 3000 லிருந்து 5800 ஆக அதிகரித்த பெருமை
ஜனாதிபதியை சாறும். அதனை முஸ்லிம் மக்கள் வரவேற்பர் எனவும் பிரதியமைச்சர்
தெரிவித்தார்.
(மேலும்....)
பங்குனி
10, 2011
மகளிர் தினம்
எயார் இந்தியா
சிறப்பு ஏற்பாடு
மகளிர் தினத்தை முன்னிட்டு, முற்றிலும்
பெண்களே பணிபுரியும் விமான சேவைகளை சர்வதேச மற்றும் உள்நாட்டு
வழித்தடங்களில் ஏர் இந்தியா நிறுவனம் நேற்று முன்தினம் இயக்கியது. இது
குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, கடந்தாண்டில் முற்றிலும்
பெண்கள் குழுவினரை கொண்டு சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்களில் பல
விமானங்கள் இயக்கப்பட்டன. கடந்தாண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,
மும்பையில் இருந்து நியூயோர்க் நகருக்கு, பெண்கள் குழுவினரை கொண்டு நீண்ட
தூரம் விமானம் இயக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினம் நேற்று
முன்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த இரண்டாவது
ஆண்டாக, டில்லியில் இருந்து டொராண்டோவிற்கு முற்றிலும் பெண் ஊழியர்களை
கொண்டு விமானம் இயக்கப்பட்டது.
(மேலும்....)
பங்குனி
10, 2011
ஓய்வூதிய
திட்டத்துக்கு உட்படாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மூன்று புதிய திட்டங்கள்
வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள், சுயதொழிலாளர்கள் மற்றும் அரசாங்க
ஓய்வூதியத் திட்டத்திற்கு உட்படாத பணியாளர்களுக்கு ஓய்வூதியங்களை வழங்கும்
மூன்று புதிய திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்களால். கடந்த 2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்
முன்மொழியப்பட்ட இந்தத் திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தொழிலாளர் ஓய்வூதிய நல நிதியம், வெளிநாட்டில் பணியாற்றுபவர்களின் ஓய்வூதிய
நல நிதியம் மற்றும் சுயதொழிலாளர் ஓய்வூதிய நல நிதியம் ஆகிய திட்டங்களுக்கே
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைத்
தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன
யாப்பா தெரிவித்தார்.
(மேலும்....)
பங்குனி
10, 2011
நாட்டைவிட்டு வெளியேற
கிளர்ச்சியாளர்கள் கடாபிக்கு 72 மணிநேர கெடு
முஅம்மர் கடாபி மேலும் 72 மணி நேரத்திற்குள்
நாட்டைவிட்டு வெளியேறினால் தாக்குதலை நிறுத்துவதாக கிளர்ச்சியாளர்கள் நேற்று
அறிவித்துள்ளனர். இதன்படி முஅம்மர் கடாபி தமது பதவியை உடனடியாக ராஜினாமா
செய்து மேலும் 72 மணித்தியாலத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறினால் தாக்குதலை
நிறுத்திக்கொள்வதோடு, கடாபி மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கப்பட மாட்டாது
என கிளர்ச்சியாளர்களின் தேசிய கெளன்ஸில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு
அல் ஜீரா தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்டது.
(மேலும்....)
பங்குனி
10, 2011
ஸ்ரீதரன் எம்.பி.
மீதான தாக்குதலுக்கு அரசு கண்டனம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்
மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை
எடுக்குமென்று நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்
ஊடகவியலாளர் மாநாட்டில் சுற்றாடல் துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா
தெரிவித்தார். தன்மீது நடத்தபட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத்
தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற உறுப் பினர் ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில்
சிறப்புரிமைப் பிரச்சினை எழுப்பி யதுடன், இந்த விடயம் தொடர்பில் உரிய
விசாரணைகள் நடத்தப்பட்டு விசாரணை அறிக்கை சமர்ப்பிக் கப்பட வேண்டும் என
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கடுமையான உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் அமைச்சர்
குறிப்பிட்டார்.
(மேலும்....)
பங்குனி
10, 2011
யெமன்
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு
யெமன் தலைநகரில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான
ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதனால் 50
பேர் காயமுற்றுள்ளதோடு, 5 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். யெமன்
தலைநகர் கானாவில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த
முடியாத நிலையிலேயே இராணுவம் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியு ள்ளது.
கடந்த 32 ஆண்டுகளாக யெமன் ஜனாதிபதியாக இருக்கும் அலி அப்துல்லா சலா பதவி
விலகக் கோரி கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் யெமனில் ஆர்ப்பாட்டங்கள்
இடம்பெற்று வருகின்றன.
பங்குனி
10, 2011
ஓமானில் மீண்டும் அமைச்சரவை மாற்றம்
ஓமான் நாட்டில் ஒரே மாதத்தில் 3வது முறையாகவும் அமைச்சரவையில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. ஓமான் நாட்டில் மன்னர் ஆட்சி நடந்து வருகிறது. சுல்தான்
குவாபவுஸ் பின் சயீத் மன்னராக இருந்து வருகிறார். அங்கு மன்னராட்சிக்கு
எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டக்காரர்கள்,
வேலைவாய்ப்பு, அரசியல் சீர்திருத்தம் ஆகியவை கோரி போராடி வருகிறார்கள்.
இதனால் மன்னர் மக்களை அமைதிப்படுத்த அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார்.
ஏற்கனவே 2 முறை மாற்றி அமைத்து விட்ட அவர் இப்போது 3வது முறையாக மீண்டும்
மாற்றி அமைத்து இருக்கிறார். ஒரே மாதத்தில் 3 வது முறையாக அமைச்சரவை மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது. உள்துறை வர்த்தகம் பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு புதிய
அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பங்குனி
10, 2011
சாரணர் இயக்கத்தை வலுப்படுத்தி மாணவர்களை ஒழுக்க சீலர்களாக்கலாம்
முதலாம் தவணையின் இறுதி வாரங்களில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட்
போட்டிகள் நடைபெறும் போது, பாட சாலைப் பிள்ளைகளின் மனதிற்குள்
புதைந்திருக்கும் சில தீய எண்ணங்கள் வெளிப்படையாக இன்று கொழும்பிலும்
நாட்டின் ஏனைய பிரதான நகரங்களிலும் வீதிகளில் அரங்கு ஏறுவதை நாம்
பார்த்திருக்கிறோம். இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில்,
பாடசாலை மாண வர்கள் விநோத உடைகளை அணிந்து தங்கள் பாடசாலை கொடி களை
ஏந்தியவாறு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவண்ணம் வாகனங் களில் செல்வதுண்டு.
இன்னும் சிலர் நூற்றுக் கணக்கில் சைக்கிள் ஊர்வலங்களில் சென்று மகிழ்ச்சி
ஆரவாரத்தில் ஈடுபடுவதும் உண்டு. வேறு சிலர் தொப்பிகளை கையில் வைத்த வண்ணம்
வீதியில் செல்லும் பொதுமக்களிடம் பிச்சை எடுப்பதுபோன்று கைச்செலவுக்கு
ஏதாவது தாருங்கள் என்று கேட்பதும் உண்டு.
(மேலும்....)
பங்குனி
10, 2011
முகமாலையில்
சோதனை, மறுக்கிறது இராணுவம்
முகமாலையில் அமைந்துள்ள இராணுவச் சோதனைச்
சாவடியில் கடந்த சில வாரங்களாக இராணுவத்தினர் கெடுபிடியான சோதனை
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவ் வீதியால் பயணத்தை மேற்கொள்ளும்
பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.இதுவரை காலமும் பயணிகளை அன்பாக
விசாரித்து சாரதியினதும், வாகனத்தினதும் விபரங்களைப் பதிவு செய்தபின்
விரைவாக பயணத்தைத் தொடர அனுமதித்து வந்த இராணுவத்தினர் தற்போது பயணிகளை
இறக்கி வரிசையாக நிறுத்தி அவர்களது பயணப் பொதிகளையும் துருவித் துருவி சோதனை
செய்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(மேலும்....)
பங்குனி
10, 2011
திமுக - காங். உடன்பாடு அடுத்த சிக்கல் ஆரம்பம்
காங்கிரஸ் கோரியபடி63 தொகுதி களை திமுக
ஒதுக்கியுள் ளது. ஆனால் தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக இரு கட்சிகளிடையே
எத்த கைய உடன்பாடு ஏற்பட் டுள்ளதுஎன்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்
கப்படவில்லை. ஆனாலும் காங்கிரஸ் தனது விருப்பப் படியே தொகுதிகளை ஒதுக்
கக்கோரும் என்று கூறப் படுகிறது. குறிப்பாக தாங் கள் ஏற்கெனவே வெற்றி பெற்ற
தொகுதிகளை அப் படியே ஒதுக்குவதோடு மற்ற தொகுதிகளை தங்கள் விருப்பத்திற்கு
ஏற்ப ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோருகிறதாம். பாமக, விடுதலைச்
சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மூமுக ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு கொண்டுள்ள
நிலையில், காங்கிரஸ் கட்சியின் விருப் பத்தை திமுக எப்படி நிறை வேற்றப்
போகிறது, இதற் காக எத்தகைய மிரட்டல் களை சந்திக்கக் போகிறது என்பது குறித்து
அடுத்த கட்ட விவாதம் துவங்கி யுள்ளது.
(மேலும்....)
பங்குனி
10, 2011
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பூண்டு
கோபப்படாதீர்கள் என்று நாம் ஒருவரைச்
சொன்னால் அவர் மாறாக கோபத்தைக் கட்டுப்படுத்தச் சொன்னவரிடம் கோபப்படுவார்.
இதற்கு காரணம் உயர் ரத்த அழுத்தம். ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த ஆய்வு
ஒன்றில் மனிதனின் உயர் ரத்த அழுத்தத்தை பூண்டு உட்கொள்வதன் மூலம்
குறைக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய மருத்துவர்கள் உயர் ரத்த
அழுத்தம் உள்ள 50 பேரை ஆய்வு மேற்கொண்டபோது இதனை கண்டறிந்தனர். அவர்களுக்கு
தொடர்ந்து பூண்டு சேர்க்கப்பட்ட உணவு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து
அவர்களது உடலில் உள்ள கொழுப்பு மற் றும் ரத்த அழுத்தத்தின் அளவு வெகுவாக
குறைந்துள் ளது தெரியவந்தது. மேலும் ஒருவர் தொடர்ந்து 4 பூண்டு மாத்திரைகளை
12 வாரங்களுக்கு உண்டுவந் தால் அவரது உடலில் இதயத்தை சுருங்கச் செய்யும்
ரத்த அழுத்தம் கிட்டத்தட்ட 10அஅாப அளவு குறைகிறது என்று இவ்வாராய்ச்சியை
மேற்கொண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அடிலெய்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
கூறியுள்ளனர்
பங்குனி 09, 2011
சர்வதேச பெண்கள் தினம்
சவால்களை எதிர்கொண்டு முன் செல்ல சில கருத்துக்கள்
-
சிறிதரன். (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்).

சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய அளவில் நினைவு கூரப்படும் நிலையில்
இலங்கையில் பெண்கள் நிலையையும் ,பால் சமத்துவமின்மையையும் எண்ணிப்பாhர்க்க
வேண்டும். இலங்கை யுத்தத்தில் மரணமடைந்தவர்கள் போக வடக்கு கிழக்கில்
பெரும்பான்மையான குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகவே
இருக்கின்றன.இவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்குகிறார்கள் .பாலியல்
தக்குதல்கள் வீட்டிலும் வெளியிலும் இவற்றையும் தாண்டி வீட்டின் பொருளாதாரம்,
பிள்ளைகளின் கல்வி இன்னோரன்ன விடயங்களுக்கான தேவைகளுக்காககவும் அலைய
வேண்டியருக்கிறது. சிறையிலுள்ள பிள்ளைகளின் விடுலைக்காக சிறப்பு
முகாகளுக்கும் சிறைகளுக்கும் இவர்களே பெரும்பாலும் செல்ல வேண்டியிருக்கிறது.
வீட்டைப்புனரமைப்பது ,நிவாரணம் மற்றும் கடன்களுக்காக இவர்களே அலைகிறார்கள்.
குடும்பத்திற்கு வருமானத்தைப் பெறுவதற்காக அன்றாட உழைப்பிலும் இவர்களே
ஈடுபட வேண்டியிருக்கிறது.
(மேலும்....)
பங்குனி 09, 2011
இலங்கை - கனடா
நேரடி விமான சேவை
வரலாற்றில் முதல் முறையாக இலங்கைக்கும்
கனடாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய இராச்சியம்
அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் அண்
மையில் கைச்சாத்திடப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த
வாய்ப்பு இலங்கை க்குக் கிடைத்துள்ளது. இதன்கீழ் ஸ்ரீலங்கன் எயார் லைன்
நிறுவனத்திற்கு வாரத்தில் 7 பயணங்களை கனடாவின் டொரொன்டோ விமான நிலையத்திற்கு
மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த இணக்கப் பாட்டின் கீழ்
ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனத்திற்கு கொழும்பி லிருந்து லண்டன் ஊடாக
கனடாவின் டொரொன் டோ வரையில் பயணிகளைக் கொண்டு செல்வதற்கும்
கொண்டுவருவதற்கும் அனுமதி கிடைத்துள்ளது.
(மேலும்....)
பங்குனி 09, 2011
கிளிநொச்சியில் முன்னாள் புலிகள் உறுப்பினர் சடலமாக மீட்பு!
கிளிநொச்சி பிரதேசத்தில் கடந்த மூன்று
தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இளைஞர் ஒருவர் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.25 வயதான இவர் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் இவர் காணாமற் போயிருந்ததுடன், அது குறித்து
அவரது உறவினர்கள் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். ஆயினும் அவர் பற்றிய
எதுவித தகவல்களும் கிடைத்திருக்கவில்லை. இந்த நிலையில் நேற்றைய தினம் அவரது
சடலம் கிளிநொச்சியின் முரசுமோட்டைப் பிரதேசத்தில் இருந்து பொலிசாரினால்
கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ள சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது,இவர் கொலை
செய்யப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சம்பவம்
தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பங்குனி 09, 2011
சன் சீ கப்பலில் சென்ற கடற்புலி சந்தேகநபரை நாடு கடத்த கனேடிய அதிகாரிகள்
உத்தரவு!

சன் சீ கப்பலில் சென்ற அகதிகளில் ஒருவரான புலிகள் இயக்க உறுப்பினரை நாடு
நடத்த கனேடிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக கனேடிய குடிவரவு
மற்றும் அகதிகள் சபையின் உறுப்பினரான மைக்கல் மைக் பாலென் தகவல்
வெளியிடுகையில், புலிகள் என்று அறியப்பட்ட புலிகள் அமைப்பு கனடாவில் சமஷ்டி
அரசினால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே "சன் சீ" கப்பலில்
வந்தவர்களுள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என அறியப்பட்ட ஒருவருக்கு
அடைக்கலம் வழங்க முடியாது என அவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்
புலிகள் இயக்கத்தில் ஏழு ஆண்டுகள் உறுப்பினராக இருந்துள்ளார்.(மேலும்....)
பங்குனி 09, 2011
ஜனாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
சிவநாதன் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்!
ஜனாதிபதியின் வன்னி மாவட்ட
இணைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர்
நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளராக முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான
நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால்
வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில்
போட்டியிட்ட சிவநாதன் கிஷோர் அதற்கு முன்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பங்குனி 09, 2011
காங்கிரஸின்
கோரிக்கைக்கு அடிபணிந்தது தி. மு. க
தி. மு. க. - காங்கிரஸ் விரிசல் கலைஞர் கருணாநிதி நடத்திய மற்றுமொரு நாடகம்
என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தேர்தல் நாடகத்துக்கு தொகுதிப்
பங்கீடு வெறும் சாட்டு என்றும். முதலில் 63 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு
வழங்க மறுத்துவந்த கலைஞர் கருணாநிதி இப்போது அந்த 63 இடங்களையும் வழங்க
ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெக்ட்ரம்
பிரச்சினையால் ஏற்பட்ட கசப்புணர்வு மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான
தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து தி. மு. க.
காங்கிரசுடனான கூட்டினை முறித்துக்கொள்வதாகவும் மத்திய அரசிலிருந்தும் தமது
ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும் அறிவித்தது. நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற
தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் 60 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க
தி. மு. க. இணக்கம் தெரிவித்த போதும் தமக்கு 63 இடங்களை காங்கிரஸ்
அடம்பிடிப்பது நியாயமற்றது என்று தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி
குற்றம் சாட்டியிருந்தார்.
(மேலும்....)
பங்குனி 09, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின்:
51,52வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர
நடைபயணத்தின் 51வது நாளான (07-03-2011, திங்கள்) நேற்று நடைபயண வீரர்கள்
தேசிய நெடுஞ்சாலை – 26ல் பயணித்து பகல் 12:30 மணியளவில் “லலித்பூர்” என்ற
நகரத்தை அடைந்தனர். “லலித்பூர் நகரத்தில் நடைபயண வீரர்களுக்கு பொதுமக்கள்
நல்ல வரவேற்பைக் கொடுத்தனர். நடைபயண வீரர்கள் கொடுத்த, இலங்கை இராணுவத்தின்
கொடுமைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தைப் பார்த்து அங்குள்ள மக்கள் ஈழத்
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகள் கண்டு மிகவும் வேதனைப்பட்டனர்.
(மேலும்....)
பங்குனி 09, 2011
எங்கள் டொரென்டோ Consul General - இலங்கைத்தூதுவர் CTBC இளையபாரதி
வானொலிக்கு உங்களுடன் உரையாட வருகிறார்!! வருகிறார்!!
வருகின்ற சனிக்கிழமை பங்குனி மாதம் 12ம் திகதி காலை 9:00 மணிக்கு கனடிய
தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இலங்கை தமிழ் மக்களுடன் கௌரவ
உயர்ஸ்தானிகர் கருணாரத்ன பரணவிதான அவர்கள் உரையாட வருகிறார்.12ம்
திகதி காலை 9:00 மணிக்கு தமிழ் பேசும் மக்களாகிய நீங்கள் டொரென்டோ CTBC
இளைய பாரதியின்(சிவசோதி)வானொலியில் தயவு செய்து தொடர்பு கொண்டு உங்கள்
கருத்துக்களை கௌரவ கருணாரத்ன பரணவிதான அவர்களுடன்
பகிருமாறும்,கேள்விக்கணைகளை தொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
கௌரவ உயர்ஸ்தானிகர் கருணாரத்ன பரணவிதான அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும்
உரையாடுவார்.கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துடன் தொடர்பு கொள்ளவேண்டிய
தொலைபேசி இலக்கம்(TALK SHOW)416 4297171.
உரையாடல் நேரம் : காலை 9:00 முதல் 10:00 மணி(கனடிய நேரப்படி)
CTBC RADIO
86-LAIRD DRIVE TORONTO
பங்குனி 09, 2011
ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ்மன்னார் விஜயம்
மன்னாரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
இன்று ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ் கலந்துகொண்டார். மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற
இக் கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் அமைச்சர்களான
ரிசாட் பதியுதீன், மில்றோய் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்
பங்குனி 09, 2011
100வது
சர்வதேச பெண்கள் தினம்! 100th
International Women’s Day!
"எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று
கும்மியடி!'
- பாரதியார்
“Each person must live their life as a model for others”~
Rosa Louise McCauley Parks-February 4, 1913-October 24, 2005, African
American Civil rights activist
எமது நாடு இலங்கையைப்
பொறுத்த வரையில் பொறுத்தவரையில் பெண்கள் சாதிக்க வேண்டிய விடயங்கள்
இன்னமும் நிறையவே உள்ளன. நாட்டில் நடந்த 30ஆண்டு போர்ச் சூழலில் பெண்கள்
கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,இவர்களிலும் கடந்தகாலங்களில் கிழக்கு மாகான பெண்களே பிள்ளைகளை இழந்தும்,
கணவனை இழந்தும்
பாதிக்கப்படுள்ள நிலையில், தற்போது நடந்த கடைசி யுத்தத்தில் வன்னி பெண்கள் இக்கிழக்குமாகான பெண்களைப்போல்
பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. அரசியல்,
பொருளாதார ரீதியில் பெண்கள் நம்பிக்கையீனமானவர்களாகவும்
தகுதியற்றவர்களாகவும் நோக்கப்படும் ஒரு போக்கு காணப்படுகின்றது. வாழ்நாள்
முழுவதும் கடினமான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டும் இயந்திரங்களாகவே பெண்கள்
கணிக்கப்படுகின்றனர். இலங்கையில் மனைவியைத் தாக்குவதை நியாயமெனக் கருதும்
54
சதவீத கணவர்கள் இருப்பதாக யூனிசெப் அறிக்கையொன்று அண்மையில்
தெரிவித்திருந்தது. ஆண்களுக்கு கிடைக்கும் சட்டபூர்வமான உரிமைகள்
அனைத்துக்கும் பெண்களும் உரியவர்கள் என்பதை ஏற்கமறுக்கும் மனோபாவத்தினாலேயே
இன்று பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து செல்கின்றன. உலகம் முழுவதும்
ஆண்களால் பெண் என்பவளை அதிகாரம் செய்யும் தன்மை கொண்டவன் என்ற தோற்றப்பாடே
காணப்படுகின்றது. பெண் அடிமைத் தனமானது கருத்துருவம்,உயிரியல்,
சமூகவியல்,
வர்க்கம்,பொருளாதாரமும்
கல்வியும்,சக்தி,மானுடவியல்,
உளவியல் என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக பிரபல பெண்ணிய
ஆய்வாளரான கேட்மில்லட் குறிப்பிடுகின்றார். பெண்ணுக்கு "இல்லம்'
என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை ஆண் கட்டுப்படுத்தி
விட்டதாகவும் குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் கணவனை
சார்ந்திருக்க வேண்டியுள்ளதால் அவளை சுய சிந்தனை இல்லாதவளாக,
கையாலாகாதவளாக சமூகம் கருதத் தொடங்கியதாகவும் கேட்மில்லட் குற்றம்
சாட்டுகின்றார்.
(மேலும்....)
பங்குனி 09, 2011
பூமிக்கு வெளியே மனித உயிர்கள், நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு
பூமியில் உயிரினங்கள் வாழ்வ தைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில்
மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு
வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சி களில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு ள்ளனர்.
இந்நிலையில் பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர
எரி கற்களை சோதனையிட்டதில் அவற்றில் உள்ள பாக்டீரியாக்களுடன் பூமியில்
வாழும் மனித பாக்டீரியா அணுக்களுக்கு தொடர்பு இருப்பதை நாசா விஞ்ஞானி
டாக்டர் ரிச்சர்ட் ஹுப்பர் கண்டுபிடித்துள்ளார். பூமியில் எப்படி மனித
வாழ்க்கை ஆரம்பித்தது என்பதை நட்சத்திர எரிகல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள
பூமியின் அண்டை மண்டல அந்நிய மனித வாழ்க்கை முறை விவரித்துவிடும் என்று
ஹுப்பர் தெரிவித்துள்ளார்.
பங்குனி 09, 2011
அமெரிக்காவின் மற்றொரு கோரிக்கையை பாக். நிராகரித்தது
அமெரிக்க தூதரக பணியாளர் ரேமண்ட் டேவிஸ் விவகாரத்தில் அமெரிக்கா விடுத்த
மற்றொரு கோரிக்கையையும் ஏற்க பாகிஸ்தான் மறுத்துள்ளது. பாகிஸ்தானுக்கான
அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய ரேமண்ட் டேவிஸ், இரு பாகிஸ்தானியர்களை
சுட்டுக் கொன்ற வழக்கில் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில்
வைக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்க உளவுத் துறையான சி. ஐ. ஏ. யின் உளவாளி
என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டேவிசுக்கு எதிரான மத அமைப்புகளின்
ஆர்ப்பாட்டம், பாகிஸ்தானில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போதுள்ள
சிறையில் இருந்து அவரை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பாக சிறை வைக்க வேண்டும்.
அங்குதான் விசாரணை யும் நடக்க வேண்டும் என அமெரிக்கா கோரியிருந்தது.
இக்கோரிக்கையை பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண அரசு ஏற்க மறுத்து விட்டது. ஆனால்
டேவிசுக்கு சாத்தியமான வரையில் சிறந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என
உறுதியளித்துள்ளது.
பங்குனி 09, 2011
எகிப்தில் ரகசிய
ஆவணங்களை அழித்த 47 அதிகாரிகள் கைது
எகிப்தில் ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிரான
கலவரத்தின் போது அரசு ரகசிய ஆவணங்களை அழித்துவிட்டதாக 47 பாதுகாப்பு
உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எகிப்தில் ஜனாதிபதி ஹொஸ்னி
முபாரக்கிற்கு எதிராக 17 நாட்கள் பொதுமக்கள் கிளர்ச்சி செய்தனர். மக்களின்
எதிர்ப்பிற்கு பணிந்து ஜனாதிபதி பதவி விலகினார். அரசுக்கெதிராக நடந்த
வன்முறையின் போது 11 க்கும் மேற்பட்ட அரச அலுவலகங்கள் தாக்கப்பட்டு
சேதப்படுத்தப்பட்டன. அப்போது உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பணிப்
பிரிவைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலவரத்தின் போது நடந்த தொலைபேசி
ஒட்டுக்கேட்பு, மற்றும் குடிமக்கள் கண்காணிப்பு அவசரகால சட்டம் குறித்த
ரகசிய ஆவணங்கள் காணமால் போயின. இது குறித்த விசாரணையில் உள்துறை
அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்புப்படைப் பிரிவினைச் சேர்ந்த 47
பாதுகாப்புப்படை அதிகாரிகள் தான் அரசின் சட்டதிட்டங்களை மீறி பதவியினை
தவறாக பயப்படுத்தி ஆவணங்களை தீயிட்டு அழித்துள்ளது தெரியவந்துள்ளது.
பங்குனி 09, 2011
மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட
20 ஆண்டுகளின்
பின் சுற்றுலாப் பயணிகள் அனுமதி
மாமல்லபுரம் கலங் கரை விளக்கத்தில், 20
ஆண்டுகளுக்கு பின் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.
மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் நகரின் மையப்பகுதி யில் உள்ள குன்றின்
மேல் அமைக்கப்பட் டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. வங்கக்
கடலில் செல்லும் கப்பல்களுக்கு மாமல்ல புரத்தை அடையாளம் காட்ட கலங் கரை
விளக்கம் அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் கலங்கரை விளக்கத்தின்
உச்சியில் நின்று மாமல்லபுரத்தின் சுற்றுப்புற அழகை கண்டுகளிப்பது வழக்கம்.
1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைத்
தொடர்ந்து, கலங்கரை விளக்கத்தின் உச்சிக்குப் பயணிகளை அனுமதிக் கும் வழக்கம்
நிறுத் தப்பட்டது.
(மேலும்....)
பங்குனி 09, 2011
கேள்வி கேட்ட
கருணாநிதி பணிந்தார், காங்கிரசுக்கு 63 ஆசனங்கள் தர முடிவு
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 ஆசனங்கள்
கேட்பது நியாயமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து
தி.மு.க. விலகுகிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி இரண்டே நாளில் தன்
முடிவை மாற்றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 ஆசனங்களைத் தர
ஒப்புக்கொண்டார். அமைச்சர்களின் பதவி விலகல் நாடகமும் முடிவுக்கு வந்தது.
“தி.மு.க. அமைச்சர்கள் தங்களது பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் கடந்த
திங்கள் காலையில் அளிப்பர் என்று தி.மு.க. ஏற்கனவே அறிவித்திருந்தது.
தி.மு.க. வைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும் நேற்று முன்தினம் காலை டில்லி
வந்திறங்கினர். அனைத்து அமைச்சர்களும் நேடியாக அமைச்சர் அழகிரியின்
இல்லத்திற்கு விரைந்தனர்.
(மேலும்....)
பங்குனி 08, 2011
பெண்கள் உரிமை போற்றுவோம்!
(க.ராஜ்குமார்)

1911-ல் சர்வதேச மகளிர் தினம் முதன்முதலாக ஆஸ்திரியா, டென் மார்க், ஜெர்மனி,
சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களில் மார்ச் மாதம் 19-ந்தேதி கொண்டாடப் பட்டது.
அதே ஆண்டில் மார்ச் மாதம் 25-ந்தேதி அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு
முக்கோண தீ விபத்தில், பணியில் ஈடுபட் டிருந்த 140 பெண்கள் உயிரிழந்தனர்.
இவர் களில் பெரும்பாலானோர் இத்தாலி நாட் டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து
அன் றைய தினம் அமெரிக்க நாட்டில் பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்ததை
வெளிப்படுத்தியது. இதன் பின்னர், தொழி லாளர் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய
நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட இந்த நிகழ்ச்சி அடிகோலாக அமைந்தது. இதே ஆண்டில்
பெண்கள் நடத்திய ‘ரொட்டியும் ரோசாப்பூவும்’ என்ற இயக்கம் பெண்களின் கோரிக்கை
களை வலியுறுத்துவதாக அமைந்தது. இத்த கைய தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே
பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை யும் வேலை செய்யும் உரிமையும் சம ஊதியம்
பெறும் உரிமையும் பிற்காலத்தில் கிடைத்தன.
(மேலும்....)
பங்குனி 08, 2011
நாடகம் தொடர்கிறது திமுக அமைச்சர்கள் ராஜினாமா முடிவு ஒத்திவைப்பு

மத்திய அமைச்சரவையி லிருந்து திமுக அமைச்சர் கள் விலகுவது என்ற முடிவு
ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக திமுக பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டா லின்
தெரிவித்தார். இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு தொடர்பாக எழுந்துள்ள
சிக்கலுக்கு தீர்வுகாண மேலும் ஒரு நாள் அவகா சம் தருமாறு மத்திய நிதிய மைச்சர்
பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டதற்கேற்ப இந்த முடிவு எடுக்கப்பட் டுள்ளதாக அவர்
தெரிவித் தார். அண்ணா அறிவாலயத் தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பிர
ணாப் முகர்ஜி தமிழக முதல் வர் கருணாநிதியிடம் திங் களன்று தொலைபேசியில் இருமுறை
பேசியதாகவும், ராஜினாமா செய்வது என்ற முடிவை மேலும் ஒருநாள் ஒத்தி வைக்குமாறும் கேட்
டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
(மேலும்....)
பங்குனி 08, 2011
யாழில் முதற் கட்டமாக காபட் வீதி அமைக்கும் பணி ஆரம்பம்
_

யாழ்ப்பாணத்தில் முதற் கட்டமாக காபட் வீதி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
முதல் தடவையாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகள் அனைத்திற்கும் காபட்
போடும் பணி இடம் பெற்று வருகின்றது.
எல்லாவற்றையும் விட முதலில் ஏ9 வீதியை புதிதாக போடுதல் அவசியம், அவசரம் என்று மக்கள்
கருதகின்றனர்.
பங்குனி 08, 2011
பெண்
உரிமைக்கான சர்வதேச மகளிர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது
சம
உரிமை சமவாய்ப்பு எதிலும் முன்னேற்றம் எனும் தொனிப் பொருளில் பொதுவாக சர்வதேச மகளிர்
தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ந் திகதியன்று உலகளாவிய ரீதியில்
அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆண் ஆதிக்கத்தினால், பெண்கள் பல் வேறு வன்முறைகளுக்கும்
உபாதைகளுக்கும் உட்பட்டு, தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்தும் வேதனையில் மூழ்கியிருப்
பதை உலகெங்கிலும் பரந்து வாழும் மக்களுக்கு ஞாபகப்படுத்தி பெண்களையும் சரிசம
உரிமையுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு அடித்தளம் அமைப்பதற்கு இந்த சர்வதேச மகளிர் தினம்
உதவுகின்றது. பெண்கள் யுத்தம் மற்றும் வன்முறைகளினால் பெரும் துயரத்தை
அனுபவிக்கிறார்கள். பொதுவாக பெண்களின் பாதுகாப்பு, சமூக அந் தஸ்து என்பன
பாதிக்கப்பட்டு, இளம் விதவைகள் என்று நாமம் சூட்டப்பட்டு, சமூகத்தில் நிலவும் ஆண்
ஆதிக்க அவலங் களில் சிக்கி அவர்கள் வேதனைக்கடலில் மூழ்கி அல்லல்படுகிறார்கள்.
(மேலும்....)
பங்குனி 08, 2011
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா?

மத்திய
அமைச்சரவையில் இருந்து திமுக அமைச்சர்கள் விலகும் முடிவு ஒருநாள்
தள்ளிவைக்கப்பட்டிருப்பதால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் திமுக -
காங்கிரஸ் உறவு தொடருவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாகத் தெரிகிறது. 63 தொகுதிகளை
காங்கிரஸ் கேட்பதாலும், அதுவும் தாங்கள் கேட்கும் தொகுதிகளையே ஒதுக்குமாறு
கேட்பதாலும், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொள்வது என, சனிக்கிழமை
சென்னையில் நடந்த திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
(மேலும்....)
பங்குனி 08, 2011
லிபியாவின் பல
நகரங்களிலும் தொடர்ந்தும் மோதல்
இங்கிலாந்து அதிரடிப்படை
வீரர்கள்
பிடிபட்டனர்
லிபியாவில் அரச எதிர்ப்பு படைகள் வசம் உள்ள பல
நகரங்களை மீள கைப்பற்றும் முயற்சியில் கடாபி ஆதரவு இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் லிபியாவின் பல பகுதிகளிலும் கடும் மோதல் இடம்பெற்று வருகிறது. இதன்படி பின்
ஜவாத், டொப்ருக், ராஸ் ரனுல் மற்றும் மிசுரேட் பகுதிகளில் தொடர்ச்சியாக மோதல்கள்
இடம்பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் விமா னங்கள், யுத்த டாங்கிகள் மூலம் தாக்
குதல் நடத்தி அங்கு தமது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த கடாபி ஆதரவு படை முயற்சித்து
வருகிறது. எதிர்ப்பாளர்கள் வசமிருந்த பின் ஜவாத் பகுதியை கடாபி ஆதரவுப் படை கடந்த
ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது. எனினும் அங்கு மீண்டும் தமது கட்டுப் பாட்டை
நிலைநாட்ட எதிர்ப்பாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பின் ஜவாத் பகுதியில்
கடாபி ஆதரவுப் படையை காணக்கிடைக்க வில்லை என வெளிநாட்டு ஊடகம் ஒன்று நேற்று செய்தி
வெளியிட்டிருந்தது.
(மேலும்....)
பங்குனி 08, 2011
சுற்றுச் சூழல் அபாயத்திற்கு முதலாளித்துவமே காரணம் : ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத்
குற்றச்சாட்டு
இயற்கை வளங்கள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார். இத்தகைய கொள்கைகள் மற்றும் அதை படு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும்
அமெரிக்கா ஆகியவையே இந்த நிலைமைக்குக் கார ணம் என்று குற்றம் சாட் டினார். மேலும்
பேசிய அவர், உலகில் உள்ள 95 விழுக்காடு மக்கள் சுற்றுச் சூழல் நெருக் கடியை
சமாளிக்க சீர்திருத் தங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஐந்து விழுக்
காட்டைக் கையில் வைத் திருக்கும் அமெரிக்கா, 95 விழுக்காடு சேதத்தை உண் டாக்கி
வருகிறது. கியோட் டோ உடன்பாட்டில் கை யெழுத்திடாத சில நாடு களில் அமெரிக்காவும் ஒன்
றாகும். வெப்ப மயமாத லைத் தடுக்கவும், பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற் றத்தைக்
குறைக்கவும் இந்த உடன்பாடு எட்டப்பட் டது. உலகிலேயே அதிக மான அளவில் பசுமைக் குடில்
வாயுக்களை வெளி யேற்றும் முதல் பத்து நாடு களில் அமெரிக்காவும் ஒன் றாகும்.
(மேலும்....)
பங்குனி 08, 2011
யாழ் பல்கலைக்கழக மாணவர்களை
நடுவழியில் இறக்கிச்
சென்ற நடத்துனர் மீது நடவடிக்கை
இ.போ.ச. பஸ் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த
பல்கலைக்கழக மாணவர்களை இடைவழியில் இறக்கி விட்டுச் சென்ற பஸ் நடத்துனருக்கு எதிராக
கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென வட பிராந்திய போக்குவரத்துச் சபை பருத்தித்
துறைச்சாலை முகாமையாளர் எஸ். குண பாலச்செல்வம் அறிவித்துள்ளார். கடந்த 3ம் திகதி
காலை 6.30 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து 750 வழித்தடத்தில் யாழ்ப்பாணம் செல்லும்
பஸ்சில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் பயணம் செய்துள்ளனர். நெல்லியடி பஸ்
நிலையத்தை பஸ் சென்றடைந்ததும் பஸ் நடத்துனர் பஸ்ஸி லிருந்த பல்கலைக்கழக மாணவர்களை
இறங்கி 764 ம் வழித்தட இலக்க பஸ் வண்டியில் செல்லுமாறு கூறியுள்ளார்.
(மேலும்....)
பங்குனி 08, 2011
பேரணிகளுக்கு
சவூதி அரேபியா தடை
சவூதி அரேபியாவின் சிறுபான்மையின ரான ஷியா முஸ்லிம்கள் கிழக்கு மாநிலத்தில் அதிக
உரிமைகள் கோரியும் விசாரணையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு வரும் கைதிகளை விடுதலை
செய்யக் கோரியும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைத் தடுக்கவும், அரபு நாடுகளில்
பலவற்றில் ஆட்சிக்கு எதிரான போராட்டம் நடந்து வருவதை கருத்தில் கொண்டும்
பேரணிகளுக்கும், போராட்டங்களுக்கும் அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது
தொடர்பாக உள்துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது வஒழுங்கை குலைக்கும்
முயற்சிகளைத் தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவம் எடுக்கும்
என்றும் எச்சரித்துள்ளது.
பங்குனி 08, 2011
Meeting Invitation
Liberation
march on 'Chennai to Delhi'
Dear friends,
We have organised a meeting supporting the liberation march on
'Chennai to Delhi' (2500km). There are 25 organisations who are
supporting this event. Please come and attend the meeting
and give your solidarity.
The meeting will take place on th 3rd of March, 3pm, at Harrow
Lesiure Centre, Chrischurh Avenue, Harrow, HA3 5BD.
For further information, please download the attached notice.
Thank You
NB: Our media friends, please give wider publicity on this event.
V.Ramaraj
Thamil Broadcasting Centre UK Ltd (TBC)
00 44 7817063682
00 44 208 930 5313
SKYPE ID: TBCUKLIVE
பங்குனி 08, 2011
கிளிநொச்சி
கிராமத்துக்கு மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை
கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு மின்சார
வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்கு வடக்கின் வசந்தத் திட்டம் மூலம் இலங்கை மின்சார சபை
துரித நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் அக்கராயன் குளம் பிரதேசத்திற்கு
மின்சாரம் வழங்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில் இருந்து திருமுருகண்டி வீதியூடாக இம்
மின்சார வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களின் பின்பு முதல்
தடவையாக அங்கராயன்குளப் பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்குனி 08, 2011

பங்குனி 08, 2011
கனேடிய தமிழ் கணவர் “வெள்ளைவேனில்” மனைவியை கடத்திச் சென்று கொலை
நேற்று யாழில் தாய் மற்றும் 15வயது சிறுவன்
ஒருவனையும் வெள்ளை வேனில் கடத்திச் சென்ற சம்பவம், பெரும் பரபரப்பாக பேசப்பட்டு
வந்தது. கடத்தி செல்லப்பட்ட 24 மணித்தியாலத்தினுள் யாழ். தலைமையத்தை சேர்ந்த
படைவீரர்களால் சிறுவன் காப்பாற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரனைகளுக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இவர்கள்
ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்யும் முயற்சியில் படையினரின்
ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.
(மேலும்....)
பங்குனி 08, 2011
‘சே’ யின் புகழ்மிக்க பயணத்தில் உடன் சென்றவர் மறைந்தார்

1952ம் ஆண்டில் லத்தீன்- அமெரிக்காவில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற சே
குவேராவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் கூட்டாளியாகச் சென்ற ஆல்பர்ட்டோ கிரா
னாடோ சனிக்கிழமை யன்று ஹவானாவில் மர ணம் அடைந்தார். அவருக்கு வயது 88.1961 ம் ஆண்டு
முதல் கியூபாவின் தலைநகர் ஹவா னாவில் வாழ்ந்த அவர் இயற்கை மரணமடைந்தார். இருபதாம்
நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளராக சே குவேரா உருவாவதற்கு கிரானாடோவும் சேயும்
மேற்கொண்ட பயணம் மிகப் பெரும் காரணமாக அமைந்தது. அருதப் பழ சான மோட்டார் சைக்கி
ளுக்கு, வலுவான என்ற அர்த்தம் கொண்ட லா போடரோசா என்ற ஸ்பா னிஷ் பெயர் சூட்டி, அதில்
இருவரும் பயணித்தனர்.
(மேலும்....)
பங்குனி 08, 2011
விசுவமடு சந்தை விவகாரம்
எவரும் பாதிக்கப்படாத
வகையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்
விசுவமடு பிரதேசத்தில் பரந்தன் - முல்லை வீதியின்
மேற்கு பக்கமாக இன்னுமொரு சந்தையும் இயங்கி வருகின்றமை தொடர் பில் ஈ.பி.டி.பி
பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலை வருமான முருகேசு
சந்திரகுமார் தலைமை யில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து
தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் இப் பிரதேசத்தில் இரண்டு சந்தைகள்
இயங்கி வருகின்றமை தொடர்பிலும் எவரும் பாதிக்கப்படாத வகையிலும் இறுதித் தீர்மானம்
மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர் திருமதி.
விஜயலட்சுமி தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்படவுள்ளதாகவும்
தெரிவித்தார்.
(மேலும்....)
பங்குனி 08, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வாகனம் மீது இரு
கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு!
நேற்று நொச்சிகாமம் பகுதியில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பயணம் செய்த வாகனம் மீது இரு கைக்குண்டு தாக்குதலும்
பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை நேரம் 6 மணியளவில் இந்த சம்பவம்
நடைபெற்றுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து கொழும்பு
நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அனுராதபுரம் நொச்சிகாமம் பகுதியில் வைத்து இந்த
சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத்தாக்குதல்
நடத்தியதோடு தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.பதிலுக்கு அவரது
மெய்பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும்....)
பங்குனி 08, 2011
தி.மு.க. -
காங்கிரஸ் ஏழு ஆண்டு கூட்டணி உடைந்து போனதற்கு யார் காரணம்? விபரீதத்தில் முடிந்த
போட்டி
தமிழக சட்டசபைத் தேர்தலைப் பற்றிய பேச்சு எழுந்ததுமே
காங்கிரசுக்கு 90 தொகுதிகள், கூட்டணி ஆட்சி என்ற கோஷங்கள் எழுந்தன. இதற்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக முதல்வர்
கருணாநிதி நேரடியாகக் களமிறங்கி, சோனியாவை சந்தித்தார். ஆனால் சந்திப்புக்கு முன்,
கூட்டணியில் பா. ம. க. இருப்பதாக ஒரு வெடியை கொளுத்திப் போட்டார். காங்கிரசுக்கான
தொகுதிகளை குறைக்க தி. மு. க. தலைவர் செய்த இந்த தந்திரத்தை அக்கட்சி இரசிக்கவில்லை.
அதன் எதிரொலி சோனியாவுடனான சந்திப்பில் கேட்டது. தொகுதிப் பங்கீடு குறித்து பேச, இரு
தரப்பிலும் குழு அமைக்கப்படும் என்ற அதிர்ச்சிப் பதிலோடு தமிழகம் திரும்பினார்
கருணாநிதி.
(மேலும்....)
பங்குனி 08, 2011
வீதியில் கூடும்
இளைஞர் குழுவினால் மக்கள் அசெளகரியம்
பருத்தித்துறை சாவகச்சேரி வீதியிலுள்ள கலிகைச்
சந்திக்கும் யாக்கருக்கும் இடைப்பட்ட வீதியில் ஒன்று கூடும் இளைஞர்கள் வீதியில்
பயணிப்போர்க்கும் அப்பகுதிகளில் வசிப்போருக்கும் பல அசெளகரியங்களை ஏற்படுத்துவதாக
பொது மக்கள் விசனம் வெளியிட் டுள்ளனர். இப்பகுதிகளில் வீதியில் ஒன்று கூடும்
இளைஞர்கள் வீதியில் நின்றவாறு மதுபானம் அருந்துவதாகவும், புகைப் பிடிப்பதாகவும்
வீதியில் செல்வோரைக் கேலி செய்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வீதியில்
தனிமையில் செல்லும் பெண்களைக் கேலி செய்வதா கவும் தெரிவிக்கப்படுகிறது.
(மேலும்....)
பங்குனி 08, 2011
உலகின்
இரைச்சலான விமான நிலையம் டில்லி தான்
உலகிலேயே
மிகவும் இரைச்சல் நிலவும் விமான நிலையம் எது தெரியுமா? டில்லியில் உள்ள இந்திரா
காந்தி சர்வதேச விமான நிலையம்தான். உலகின் முக்கிய நகரங்களில் உள்ள விமான
நிலையங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால்
அந்த விமான நிலையங்களிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அதிக இரைச்சல் நிலவும்.
இது அந்த பகுதிகளில் வசிப்போருக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு
விமானங்கள் வந்து செல்லும் போதும் அந்த அளவுக்கு இரைச்சல் ஏற்படுகிறது என்பதை,
அனைத்து விமான நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ள கருவிகள் பதிவு செய்கின்றன. இதன்படி
டில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் (ஐ. ஜி. ஐ. ஏ) தான் உலகிலேயே
இரைச்சல் அதிகம் உள்ள விமான நிலையம் என தெரியவந்துள்ளது.
(மேலும்....)
பங்குனி 07, 2011
அமெரிக்க
சிறையில் நிர்வாணமாக்கி கொடுமை
விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு இராணுவ ரகசியங்களை
கொடுத்ததாக கைது செய்யப்பட்டவரை, வாரத்துக்கு, குறைந்தது ஒரு நாளாவது ஆடைகள்
இல்லாமல் தூங்கும்படி அமெரிக்க சிறை அதிகாரிகள் தண்டனை அளித்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. கடந்தாண்டின் இறுதியில் விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் மூலம்,
அமெரிக்க இராணுவத்தின் பல்வேறு முக்கிய விடயங்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம், ஈராக்
மற்றும் ஆப்கானில் அமெரிக்க இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்துக்கு
வந்தன. அமெரிக்க இராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு கொடுத்ததாக,
அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லி மேனிங் (23) என்பவர் கைது செய்யப்பட்டார். ஏழு
மாதங்கள் வரை இவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விர்ஜினியா வில்
உள்ள கடற்படை சிறை வளாகத்தில் தற்போது இவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்
பிராட்லி மேனிங்கிற்கு சிறை அதிகாரிகள் விசித்திரமான தண்டனையை வழங்கியுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. வாரத்துக்கு குறைந்தது ஒரு நாளாவது ஆடைகள் இல்லாமல் தூங்க வேண்டும்
என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க இராணுவ தலைமையகமான
பென்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.
பங்குனி 07, 2011
ஸ்பெக்ட்ரம் ஊழல்
சிக்குகிறார் கனிமொழி, விரைவில் விசாரணை நடத்துகிறது சிபிஐ
ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறையாடப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்
முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், திமுக நாடாளுமன்ற உறுப் பினருமான கனிமொழி யிடம்
விசாரணை நடத்த மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) திட்டமிட்டுள்ளது. அரசியல்
இடைத்தரகர் நீரா ராடியாவிடமும் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. மத்திய காங்கிரஸ் -
திமுக கூட்டணி அரசின் தொலைத் தொடர்புத் துறையில் 2ஜி அலைவரிசைக் கற்றை உரி மங்களை
ஒதுக்கீடு செய் ததில் வரலாறு காணாத ஊழல் நடந்தது. இதுதொடர் பான வழக்கில் உச்சநீதி
மன்றம் கிடுக்கிப்பிடி போட் டதால், வேறுவழியின்றி, சிபிஐ தனது விசார ணை யை
தீவிரப்படுத்தியுள்ளது. தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சரா க இருந்த திமுகவின்
முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார்
சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்.
(மேலும்...)
பங்குனி 07, 2011
மீண்டும் ஒரு படையை
உருவாக்க சங்கரி வீர வசனம் பேசி வருகிறார்
-
கருணா அம்மான்
“கடந்த
எட்டு வருடங்களாக விடுதலைப் புலிகளையும், தமிழரசுக் கட்சியையும் தாறுமாறாக
விமர்சித்து வந்த ஆனந்தசங்கரி ஐயா இன்று சுதந்திரமாக வடக்கிலும், கிழக்கிலும் உலவி
வீரவசனம் பேசி வருகிறார். மீண்டும் ஒரு இளைஞர் படையை உருவாக்க முனைகிறாரா? என்று
எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறு கூறிய மீள்குடியேற்ற பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி உப தலை வருமான விநாயகமூர்த்தி முரளிதரன் “அவ்வாறு ஆனந்தசங்கரி
இன்று வடக்கிலும் கிழக்கிலும் சுதந்திரமாகத் திரிவதற்குக் காரணம் இன்றைய சமாதானமே.
அதனை இன்றைய அரசாங்கமே ஏற்படுத்தியது என்பதை மறந்துவிடக் கூடாது” என்று
சுட்டிக்காட்டிப் பேசினார்.
(மேலும்...)
பங்குனி 07, 2011
ஈழத்
தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
- 50வது நாளாக வீரநடை!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின்
49வது நாளான (05-03-2011, சனி) நேற்று காலை 05:30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில்
பயணித்த நடைபயண வீரர்கள் மாலை 06:30 மணியளவில் உத்ரபிரதேச மாநில எல்கைக்கு 5 கிலோ
மீற்றர் தூரத்திற்கு முன்னாள் முகாம் அமைத்தனர். நடைபயண வீரர்கள் 49வது நாளான நேற்று
40 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர். இதே வேளை, சென்னையில் ஈழத் தமிழர்
விடுதலைக்காக ஒருங்கிணைந்த தமிழர்களில் 50 இளைஞர்கள் திரு. சோபன், திரு. மோகன்
அவர்கள் தலைமையில் ஒரு குழுவினரும் திரு. உமா, திரு. கனடாபாலன் அவர்கள் தலைமையில்
ஒரு குழுவினருமாக, நடைபயண வீரர்கள் 1900 கிலோ மீற்றர் தூரத்தை கடந்து செல்வதை அழகாக
வடிவமைத்து போஸ்டராக சென்னை முழுவதுமாக சுவற்றில் ஒட்டி சென்னைவாழ் ஈழத்
தமிழர்களுக்கும் சென்னை மக்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.
(மேலும்...)
பங்குனி 07, 2011
யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு முறையான உளவளப் பயிற்சி வேண்டும்
சிறுவர்களை மிகவும் மோசமான
உளப்பாதிப்புக்குள்ளாக்கியுள்ள விடயத்தினையும் வடக்கு கிழக்கில் வாழும்
சிறுவர்களுக்கு உடனடியாக உளவளப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதையும் யாருமே
மறுக்க முடியாது. இச்சிறுவர்களின் இப்பிரச்சினையினை உணர்ந்து கொண்ட அரச, அரச
சார்பற்ற அமைப்புகள் வடமாகாணத்தில் பாடசாலைகளுக் கூடாக உளவளப் பயிற்சிகளுக்கான
விசேட செயற்திட்டங்களினை முன்னெடுத்து சிறுவர்களின் நலன்களைப் பேணவுள்ளதாக
அறிவித்துள்ளன.
(மேலும்...)
பங்குனி 07, 2011
வடமராட்சி
கிழக்கு வீதியை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
வடமராட்சிக்கும் கிழக்கிற்குமிடையேயான பிரதான
போக்குவரத்து வீதி திறக்கப்படாமையால் தாம் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு
வருதாக அப்பகுதி அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும்
பொதுமக்களும் விசனம் வெளியிட்டுள்ளனர். முன்னர் போக்குவரத்திற்கு
அனுமதிக்கப்பட்டிருந்த இந்த நாகர்கோவில் ஊடான வீதியை உடனடியாகத் திறந்து விட ஏற்பாடு
செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(மேலும்...)
பங்குனி 07, 2011
சர்வதேச மகளிர் தினம் மார்ச் - 8
பத்திரிகைத்துறையில் ஓர் சாதனை மாது...
(வி. ரி. இளங்கோவன்.) (பிரான்ஸ்)

இன்று எத்தனையோ இளம்பெண்கள் சிறந்த படைப்பாளிகளாக, பத்திரிகையாளர்களாக
விளங்குகிறார்கள். சர்ச்சைக்குரிய விடயங்களையும் துணிச்சலோடு எழுதுகிறார்கள்.
பெண்ணியம் பேசுகிறார்கள். ஆனால் அன்று ஒரு இளம்பெண் படைப்பாளியாக விளங்கியதோடு,
துணிச்சலோடு பத்திரிகைத்துறையைத் தானாக விரும்பி ஏற்றுக்கொண்டு பணிபுரிய முன்வந்தமை
முற்போக்கானதும் பாராட்டுக்குரியதுமாகும்.
1959 -ம் ஆண்டு 'கலைச்செல்வி" சஞ்சிகை இவரை இளம் எழுத்தாளர் என அறிமுகப்படுத்தியது.
1962-ம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணியை
ஆரம்பித்தார். பத்திரிகைத்துறை, ஆங்கிலம் ஆகியவற்றில் டிப்ளோமா தேர்ச்சிச்
சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டவர். ஓவியத்துறையிலும் ஆசிரியர் தரரதரப் பத்திரம்
பெற்றுக்கொண்டவரென அறியமுடிகிறது.
(மேலும்...)
பங்குனி 07, 2011
மத்திய அரசிலிருந்து தி.மு.க விலகியதால் நெருக்கடி இல்லை
தமிழகத்தில், அடுத்த மாதம் 13ம் திகதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்தத்
தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதிப் பங்கீடு விவகாரங்களில், தமிழக
அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை,
கடைசியாக தே.மு.தி.க. இணைந்து அந்த கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. மற்ற
தோழமைக் கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ்
தவிர மற்ற கட்சிகளுடனான ஆசனப்பேரம் முடிந்து விட்டது. காங்கிரஸ் கட்சியுடனான
பேச்சுவார்த்தையில் மட்டுமே இழுபறி நீடித்தது. காங்கிரஸ ஐவர் குழு மற்றும் தி.மு.க.
குழுவினர் இடையே மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்த பின் இறுதியாக 60
தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. ஒப்புக் கொண்டது.
(மேலும்...)
பங்குனி 07, 2011
ஒருபுறம்
எம்முடன் பேசும் அரசாங்கம் மறுபுறம் பிரிக்கும் முயற்சியில் தீவிரம்
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
_
அரை நூற்றாண்டுக்கு மேலாக பேரினவாத சித்தாந்த பரிணாமத்தினாலும்
விரிவாக்கப்பட்ட அதன் அடிப்படையிலான ஆட்சி அதிகார இராணுவ நிர்மாணத்தினாலும்
தமிழ் மொழி, கலை, பண்பாடு மற்றும் வாழ்விடங்கள் சிதைக்கப்படுகின்றன.
பெரும்பான்மைத்துவ செறிவைக் கொண்ட தமிழ் மக்களின் கட்டமைப்பையும் குடி
மக்கள் பரம்பலையும் மாற்றியமைக்கும் சிறுபான்மைப்படுத்தும் விதத்தில்
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும்
கூட்டமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.(மேலும்...)
பங்குனி 07, 2011
பாரம்பரிய வைத்தியர்கள் விபரங்கள் சேகரிப்பு
மூலிகைத் தோட்டத்தை
ஆரம்பிக்க நடவடிக்கை
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள
பாரம்பரிய வைத்தியர்களின் விபரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் பாரம்பரிய
வைத்தியத் துறைக்கான தேசிய வைத்திய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைதீவு
மாவட்டங்களில் உள்ள ஆயுர்வேத பாதுகாப்பு சபைகள் ஊடாக வைத்தியர்களின் விபரங்கள்
திரட்டப்பட்டு வருகின்றன. பாரம்பரிய வைத்தியர்களின் நலனை நோக்கமாகக் கொண்டு
இவ்விபரங்கள் சேகரிக்கப்படுவதுடன் மூலிகை உற்பத்தி, மருந்து தயாரிப்பு
உட்பட்டவைக்கும் அதிக ஊக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாரம்பரிய வைத்திய
அபிவிருத்திக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே வேளை கிளிநொச்சியில் செயல்பட்டு
கடந்த யுத்தத்தால் அழியுண்டு போன மூலிகைத் தோட்டம் மற்றும் மருந்து தயாரிப்பு
நிலையங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய வைத்திய நிறுவனத்தை
கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத பாதுகாப்பு சபை இணைச் செயலாளர் பாரம்பரிய மருத்துவர்
சு. கணேசராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பங்குனி 07, 2011
இந்தியாவில் மலைப் பிரதேசங்களில்
சூரிய
சக்தியில் இயங்கும் கைத்தொலைபேசி தொலைத் தொடர்பு கோபுரம் அமையும்
பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் மலைப்
பிரதேசங்களில் மின்சார பற்றாக்குறை காரணமாக கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு கோபுரங்கள்
அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. சூரிய சக்தி மூலம் கைத்தொலைபேசி தொலைத் தொடர்பு
கோபுரங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது. ஒடிசா
மாநிலத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் 604 தொலைத் தொட்பு கோபுரங்களை
பி. எஸ். என். எல். நிறுவனம் அமைத்துள்ளது. இவை ஏற்கனவே செயல்படத் தொடங்கிவிட்டன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆயிரத்து 23 கோபுரங்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தில்
செயல்படாமல் உள்ள இவை வரும் ஜூன் மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும். ஜார்கண்ட்
மாநிலத்தில் 98 சதவீத கிராமங்களில் கிராமப்புற தொலைபேசி இணைப்பு வசதிகள்
மேற்கொள்ளப்பட்டு விட்டன. கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து
வருவது காரணமாக சாதாரண தொலைபேசி இணைப்பு பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை சரிந்து
வருகிறது.
பங்குனி 07, 2011
மரம் ஏறும்
தேங்காய் நண்டு
கடல் தீவுகளில் அதிக புழக்கம்

மரம் ஏறும் குணம் கொண்ட தேங்காய் நண்டுகள், இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக்
பெருங்கடலில் அதிகம் காணப்படுகிறது. கணுக்காலிகள் உயிரினத்தை சேர்ந்தவை நண்டுகள்.
இவற்றில் பல வகை இருந்தாலும் நாம் அறிந்திராத பார்த்திராத நண்டு வகையை சேர்ந்தது
தேங்காய் நண்டு. 10 கால்களுடன் ஓட்டினால் ஆன உடலமைப்பைக் கொண்ட இவை இந்திய
பெருங்கடல் மற்றும் பசும்பிக் பெருங்கடலில் உள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.
இவற்றை மக்கள் உணவாக உட்கொள்கின்றனரா என்பது புதிராக உள்ளது.
(மேலும்...)
பங்குனி 07, 2011
திரிபோலியில்
கடும் மோதல், துப்பாக்கி, குண்டு சத்தங்கள்
லிபியாவின் தலைநகர் திரிபோலியில் கடாபி
ஆதரவாளர்களுக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று
வருகின்றன. லிபியாவின் பெரும்பாலான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்திருக்கும் புரட்சிக்காரர்கள் தலைநகரையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்
முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினருக்குமிடையில் நேற்றுக் காலை முதல் கடும்
துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. திரிபோலி பகுதியில் கடுமையான குண்டு வெடிப்புச்
சத்தங்கள் கேட்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தன்னிச்சையாக இயங்கும்
ஆயுதங்கள் மற்றும் கலிபர் குண்டுகள் வெடித்ததாக நேரில் கண்டவர்கள் சர்வதேச
ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
(மேலும்...)
பங்குனி 06, 2011
திமுக காங்கிரஸ் உறவு முறிந்தது
மத்திய அமைச்சர் அவையிலிருந்தும் திமுக விலகுகின்றது

தொகுதிப் பங்கீட்டில் ஏற் பட்ட பிரச்சனை முற்றிய தையடுத்து மத்திய அரசிலி ருந்து
திமுக விலகுவதாக அறிவித் துள்ளது. மத்திய ஆட்சியில் அங் கம் வகித்து வந்த திமுக,
திடீரென இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட் டுள்ளது காங்கிரசை மிரட் டுவதற்காகத் தான்
என அர சியல் நோக்கர்கள் கூறு கிறார்கள். தமிழகத்தில் வருகிற ஏப் ரல் 13 ந்தேதி
சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் தமிழ கத்தில் கடந்த தேர்தலில்
வெற்றி பெற்ற காங்கிரஸ், தங்களுக்கும் அமைச்சர வையில் இடம் வேண்டும் என்று தொடர்ந்து
வலி யுறுத்தி வந்தது.
(மேலும்....)
பங்குனி 06, 2011
உள்ளுராட்சி
மட்டங்களில் அதிகாரங்களை பரவலாக்குவதற்கு அரசாங்கம் தயார்
அரசாங்கம் கிராம சபை, பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை
மட்டங்களில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்வதற்கே தயாராக இருப்பதாகத் தெரிய
வருகின்றது. அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான
பேச்சுவார்த்தையின் போதும் அரச தரப்பில் இருந்து மேற்குறித்த அதிகாரப் பரவலாக்கல்
பற்றிய யோசனைகளே முன்வைக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து அறிய
முடிகின்றது. அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான
பேச்சுவார்த்தையின் போது தமிழ் மக்களுக்கான உடனடித் தேவைகள் என்ன? அவைகளை இனங்கண்டு
தெரிவித்தால் தீர்வு குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் அரச
தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம். யாழ்ப்பாணம் செல்வம் கொழிக்கும் பூமி. பிரிவினையை
உருவாக்காதீர்கள் என்றும் கூட்டமைப்பினரிடம் அரச தரப்பினர் கேட்டுக் கொண்டனராம்.
அதேவேளையில், பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களைக் கூட அரச
தரப்பினர் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை என்று கூட்டமைப்பினர் குறைபடுவதாகவும்
அறிய முடிகின்றது.
பங்குனி 06, 2011
இரண்டு சுற்றுப்
பேச்சில் எட்டப்பட்ட தீர்வுகளை இப்போது கூறமுடியாது
-
தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து அரசாங்கமும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பும் இதுவரை இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன. எனினும்
இந்த பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட தீர்வுகள் குறித்து எவ்வித கருத்துக்களையும்
கூறமுடியாது என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.
சுமந்திரன் தெரிவித்தார்.
(மேலும்....)
பங்குனி 06, 2011
Tories' bid to win over South Asians opens party
to Tamil Tigers' remnant

Tories trying to win support from South Asians in Ontario
have opened the door to remnants of a Tamil Tiger front group the federal
Conservatives themselves banned in 2008.The unlikely association, forged behind
a curtain of tough government talk about Tamil refugee ships and a feared
terrorist migration to Canada last year, has developed since the Tigers’
separatist struggle was crushed by the Sri Lankan military in 2009. Last month,
Tim Hudak, Leader of Ontario’s Progressive Conservatives, announced Shan
Thayaparan as his party’s candidate for Markham-Unionville. Mr. Thayaparan had
helped run an election for a new Tamil separatist group, the National Council of
Canadian Tamils (NCCT), whose key adviser, Nehru Gunaratnam, is a former
spokesman for the outlawed World Tamil Movement. Federally, Tamil broadcaster
Ragavan Paranchothy, who was in direct contact with the top Tiger leadership in
2009, is seeking the Conservative nomination in Scarborough-Southwest.
(more....)
பங்குனி 06, 2011
உலகின் மிகப்பெரிய பணக்காரர் வரிசையில் ஹோஸ்னி முபாரக்
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் உலகின்
மிகப்பெரிய பணக்காரர் என்று 'தி கார்டியன்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அவருக்கு 7ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் (ரூபாயில் சுமார் 3.22 லட்சம் கோடி) சொத்து
இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக 30 ஆண்டுகளுக்கும்
மேலாக பதவி வகித்தவர் முபாரக். அன்மையில் அந்த நாட்டில் நடந்த கிளர்ச்சியால் அவர்
பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த நிலையில் லண்டனிலிருந்து வெளியாகும் 'தி
கார்டியன்" பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரும்
பணக்காரராக ஹோஸ்னி முபாரக் இருக்கலாம் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. ஹோஸ்னி
முபாரக் இந்தப் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள வங்கிகளிலோ அல்லது சொசுகு
பங்களாக்கள், ஹோட்டல்களிலோ முதலீடு செய்திருக்கலாம் என்றும் அந்தச் செய்தி
தெரிவிக்கிறது.
பங்குனி 06, 2011
லிபியாவில் அமெரிக்கா போர் முஸ்தீபு
லிபியாவில் கடாபி அரசிடமி ருந்து அந்நாட்டு மக்களை காப் பாற்றப்போவதாகக் கூறி, அந்
நாட்டின் மீது கொடிய போரை நடத்த அமெரிக்கா முழு அளவில் தயாராகி வருகிறது. அமெரிக்கப்
படைகளும் நேட்டோ ராணுவக் கூட்டணியின் படைகளும் லிபிய எல்லையையொட்டி குவிக்கப் பட்டு
வருகின்றன. இதனிடையே, லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக தொடர்ந்து தீவிரப்போராட்டம்
நடைபெற்று வருகிறது. அரசு படையினரின் தாக்குதலை எதிர்கொள்ள போராட்டத்தில்
ஈடுபட்டிருப்போ ரும் ஆயுதங்களை ஏந்தியிருப் பதால் நாடு முழுவதும் உள்நாட் டுப்போர்
தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக லிபியாவி லிருந்து பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர்
போக்குவரத்து வசதியின்றி கால்நடையாகவே வெளியேறி வருகின்றனர். இத னால் லிபியா
எல்லையிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது.
(மேலும்....)
பங்குனி 06, 2011
வெற்றிவாகை சூடட்டும் இடதுமுன்னணி
மேற்கு வங்கத்தில், தொடர்ந்து ஏழு முறை ஆட்சியில் அமர்ந்துள்ள இடது முன்ன ணியைத்
தோற்கடிப்பதற்காகக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பிரதான எதிர்ப்பாளர் கள்
திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியாகும். திரிணாமுல் காங்கிரசானது, இடது
முன்னணியைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற தன் நோக் கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக,
பயங் கரவாத நடவடிக்கைகளையும் வன்முறை யையும் கட்டவிழ்த்துவிட்டு வரும் ‘மாவோ
யிஸ்ட்டுகளுடன்’ வெளிப்படை யாகவே செயல்பட்டு வருகிறது. 2009 மே மாதம் நடை பெற்ற
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்குப் பின் இதுநாள்வரை திரிணாமுல் - ‘மாவோ யிஸ்ட்’
கும்பல் சுமார் 400 இடது முன்னணி ஊழியர்களைக் கொன்று குவித்துள்ளது. இதில் மிகவும்
மோசமான அம்சம் என்ன வெனில், நாட்டில் நாடாளுமன்ற அமைப்பு முறைக்கு எதிராக
வெளிப்படையாக யுத்தப் பிரகடனம் செய்துள்ள ‘மாவோயிஸ்ட்டு’ களுடன் கூடிக்குலாவும்
திரிணாமுல் காங் கிரசையும் மத்தியில் ஆட்சியில் உள்ள காங் கிரஸ் தன்னுடைய
கூட்டணியில் இணைத் துக் கொண்டிருப்பதே ஆகும்.
(மேலும்....)
பங்குனி 06, 2011
அரபு மக்களின் எழுச்சியும், அமெரிக்காவின் எரிச்சலும்
லிபிய ராணுவத்தில் ஒரு தளபதியாக இருந்த கலோனல் மும்மர் கடாபி, தனது 28வது வயதில்,
எகிப்து தேசத்தில் தனது நண் பர் அப்துல் நாசர் நடத்திய கிளர்ச் சிகரமான நடவடிக்கைக
ளால் ஈர்க்கப்பட்டு, 1969ம் ஆண்டு லிபியாவின் மன்னர் முதலாம் இட்ரிஸின் ஆட்சி யை
வீழ்த்தினார். அதிகாரத் திற்கு வந்தபின்னர் நிலச்சீர் திருத்தம் மற்றும் எண் ணெய்
வளம் தேசிய மயம் போன்ற முக்கிய மான, புரட்சிகரமான நடவடிக்கைகளை அமல் படுத்தினார்.
லிபியாவின் வரு மானம் அதிகரித்தது. இந்த வருமானத்தை பொரு ளாதார மற்றும் சமூக
மேம்பாட்டிற்காக அர்ப்பணித் தார். குறிப்பாக, மிகப் பெரும் பகுதி பாலைவன மாகவும்,
மிகமிகக் குறைவான அளவே பயன் படுத்தக்கூடிய நிலம் கொண்டதாகவும் இருக்கிற இந்த
நாட்டில் வாழும் மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்களின் கல்வி மற் றும் சுகாதார
வசதிகள் மேம்பாட்டிற்கு, நாட் டின் வருமானம் பெருமளவு பயன்படுத்தப்பட்டது.
(மேலும்....)
பங்குனி 06, 2011
மார்ச் - 5 மாமேதை ஸ்டாலின் நினைவு தினம்

மாமேதை லெனின் கூறினார்: நடைமுறை இல்லாத தத்துவம் வறட்டுத் தத்துவம்; தத்துவம்
இல்லாத நடைமுறை குருட்டு நடைமுறை என்று. தத்துவத்தை அது பகட்டாகத் தங்கியிருந்த
தந்த மாளிகையிலிருந்து விடுவித்து இதுவரை இருந்த தத்துவங்கள் எல்லாம் உலகத்தை
நடைமுறைகளோடு பொருத்திக் காட்ட மட்டுமே செய்தன; ஆனால் தேவை என்னவென்றால் அதனை
மாற்றுவதே எனக் கூறிய மாமேதை மார்க்ஸின் கருத்தை ரஷ்யப் புரட்சியின் மூலம்
நிரூபித்ததோடு தத்துவம் நடைமுறை ஆகிய இரு அம்சங்களின் உருவகங்களாகவும்
விளங்கியவர்களே மாமேதைகள் லெனினும், ஸ்டாலினும் ஆவர்.
(மேலும்....)
பங்குனி 05, 2011
ஏ 9 வீதியை
விரைவில் புனரமைப்பது அவசியம்
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியுற்ற
அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே நாட்டின்
பொருளாதாரத்தை கட்டியெழுப்பியுள்ளது. தற்போது அதே நிலையே ஏற்பட்டுள்ளது
என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க
தெரிவித்தார். வடக்கு பகுதிக்கான ஏ 9 வீதி மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.
அதனை விரைவில் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்
மேலும் குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நிலைமைகள்
குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார். சீனா
யாழ்பாணத்திற்கும் வவுனியாவிற்கும் இடையிலான ஏ9 வீதியை புனரமைக்க பொறுப்பு
எடுத்துக் கொண்டதை யாவரும் அறிவர். போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகும்
நிலையில் ஏ9 வீதி இன்றும் குன்றும் குழியுமாக இருக்கின்றது.
பங்குனி 05, 2011
லிபியா நெருக்கடிக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு
காண சாவேஸ் யோசனை. கடாபி ஏற்றுக் கொண்டதாக தகவல்
லிபியாவில் நடை பெற்று வரும் மக்கள் கிளர்ச்சியை வன்முறை களமாக்கி அந்
நாட்டின் மீது போர் தொடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்டுள்ள தீவிர
முயற்சியை வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் கடுமையாக எதிர்த்துள்ளார்.
லிபியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க விரும்பினால், அங்கு படைகளை
அனுப்புவதற்கு பதிலாக உலக நாடுகளின் தலைவர்கள் அடங்கிய சர்வதேச அமைதிக்
குழுவை ஏன் அனுப்பக் கூடாது என்று சாவேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
லிபியாவின் எண்ணெய் வளத்தைக் கொள்ளை யடிப்பதற்காக, லிபியா சம் பவங்களை
அமெரிக்கா தனது ஆதரவு பெற்ற உலகளாவிய ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு மிகைப்
படுத்தி வருகிறது என்று சாவேஸ் குறிப்பிட்டார்.
(மேலும்....)
பங்குனி 05, 2011
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 சீட் ஒதுக்கீடு
அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள்
ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம், அ.தி.மு.க., பொதுச் செயலர்
ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு இடையே நேற்றிரவு
கையெழுத்தானது. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து,
தொகுதிப் பங்கீட்டுக்கான முஸ்தீபுகளில் இறங்கின. அ.தி.மு.க., கூட்டணியில்
தே.மு.தி.க., இடம்பெறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக நீடித்த
நிலையில், கடந்த 24ம் தேதி தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி
ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு
சென்று, அக்கட்சி நியமித்திருந்த குழுவினருடன் கூட்டணி குறித்த
பேச்சுவார்த்தையைத் துவங்கினர்.
(மேலும்....)
பங்குனி 05, 2011
உணவு உற்பத்தியை பெருக்க அரசு எடுக்கும் முயற்சிகள் மகத்தான வெற்றி
வயலும் வாய்க்காலும், கோயிலும் குளமும் இது
எமக்கு உரித் தான சமூக அடிப்படையாகும். நாம் அனைவரும் அந்த சமூக
அடிப்படைக்கு சொந்தமான மனிதர்களேயாகும். எனவே, நாம் இந்தப் பூமித் தாயை
மதித்து மரம், செடி, கொடிகளை நேசி க்க வேண்டும். எமது மூதாதையர்கள் இந்த
மண்ணில் மரம், செடி கொடிகளை நாட் டினார்கள் என்று மஹிந்த சிந்தனை எண்ணக்
கருவில் குறிப்பிட் டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்கு ஆண்
டுகளுக்கு முன்னர் உள்நாட்டு விவசாயத்திற்கும், விவசாயிகளுக் கும்
மாற்றாந்தாயின் கவனிப்புத்தான் கிடைத்ததென்றும் அன்று அனைத்து விதமான உணவுப்
பொருட்களும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன என்றும்
தெரிவித்துள்ளார்.
(மேலும்....)
பங்குனி 05, 2011
பாரளுமன்ற விசாரணை ஆணைக்குழு ஏற்படுத்தும் கோரிக்கை.
ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஸ்சவின் கீழ் ஆட்சிஅதிகாரம் செய்யப்படும் தற்போதய
அரசாங்கம், இலங்கை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அத்தனையையும் மீறியதோடு
பாரளுமன்ற ஜனனாயகத்தையும் மதிக்காததோடு, வடகீழ் புனருத்தாரண மற்றும்
அபிவிருத்தி அமைப்பின் உண்மைகளையும், அரச யந்திரத்தின் இரகசிய ஒத்தாசையோடு
அது செய்யும் சதிச் செயற்பாடுகளையும் மறைக்கிறது என்ற கடுமையான விவாதங்களை
நாம் வைக்கிறோம். வடகீழ்மாகாண புனருத்தாரண மற்றும் அபிவிருத்திகளுக்கான
அமைப்பு இலங்கையில் பதியப்படவில்லை என்றும் கே.பியை ஏதும் புனருத்தாரண
வேலைகளைச் செய்ய அனுமதிப்பதில்லையென்றும் முன்பு பாராளுமன்றத்தில்
வெளிப்படுத்தப்பட்டது. பின்பு அரசாங்கம் கே.பி புலிப்போராளிகளைப்
புனருத்தாரணம் செய்வது அடங்கலான புனருத்தாரண வேலைகளைச் செய்ய அனுமதி
அளித்ததை ஏற்றுக் கெண்டது. கே.பி மில்லியன் கணக்கான புலி நிதிகளை
இலங்கைக்குக் கொண்டு வந்ததாகவும் இன்றுவரை அந்த நிதிகள் பற்றிய கணக்கு
வழக்குகளோ, புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிதித்தொகைகளின் விபரங்களோ அவை
எங்கே வைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியோ எந்த அறிவித்தல்களையும்
ஆதாரங்களையும் அரசாங்கம் கூறவில்லை.
(மேலும்....)
பங்குனி 05, 2011
சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கனடா டொரென்டோவிலுள்ள இலங்கை
உயர்ஸ்தானிகர் இந்து ஆலயத்திற்கு விஜயம்

இலங்கை உயர்ஸ்தானிகர் கருணாரத்ன தனது உரையை
அழகிய தமிழில் ஆரம்பித்து பேசினார்.தனது உரையில் சிவராத்திரியின்
மகிமைகளையும் அழகிய இலங்கைத்தீவின் எத்தனையோ புராதன சிவன் கோவில்கள்
தமிழ்,சிங்கள ஊர்களில் உள்ளன என குறிப்பிட்டார்.சிவனுக்கு இன்றைய தினம்
ஏற்றிவைக்கப்படும் ஒவ்வொரு ஒளி விளக்கும் அறியாமை என்ற இருளை அகற்றி எமது
இலங்கை மக்கள் மத்தியில் ஐக்கியத்துக்கான ஒளியை கொண்டுவரவேண்டும் என்று
எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்திப்பதாக தனது உரையில் குறிப்பிட்டார்.
சுதந்திர இலங்கையில் நல்லொழுக்கமுள்ள ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதே
தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்களின் பொதுவான எண்ணமாகும்.இந்த பெரிய சிவன்
கோவிலில் தமிழ் இந்து மக்கள் செய்யும் பிரார்த்தனைகள் எமது எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றும் என்றார்.
(மேலும்....)
பங்குனி 05, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
-
47,48வது நாள் நிகழ்வுகள்!
சாகரில் இராணுவத்தினரும்,
பொதுமக்களும் நல்ல வரவேற்புக் கொடுத்தனர். நடைபயண வீரர்கள் சந்தித்த இராணுவ
வீரர்கள் அனைவரும் நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக் கூறினர். ஈழத்
தமிழர்களுக்கு தங்களால் ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாமைக்கு மிகுந்த
வருத்தம் தெரிவித்தனர். எனினும் அந்த சந்தர்ப்பத்தை தமிழர்களே
தவறவிட்டார்கள் என்றும் வேதனைப்பட்டார்கள். 1987ஆம் ஆண்டு நிலைமை மீண்டும்
திரும்பினால் ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் வெற்றியைத் தேடி தருவோம் என்று
வாக்களித்து வாழத்துக் கூறி அனுப்பினர்.
(மேலும்....)
பங்குனி 05, 2011
தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தங்கள் பலத்தை இலங்கை அரசுக்கும் உலகுக்கும்
காட்ட வேண்டுமாம் திருமலையில் கிழட்டுப் புலி விநாயகமூர்த்தி
கிழட்டுப் புலிப்பயங்காவாதிகளே,
பயங்கரவாதிகளுக்கு பாதணி சுமக்கும் பரதேசிகளே எங்கே உங்களின் வீராதிவீர
வீரமாத்தாண்டன். சம்பந்தன். தங்கத்துரை திருமலை மக்களின் பிரதிநிதியாக
இருந்தபோது கன்னியா இவ்வாறாகவா காட்சியளித்தது, பின்கதவால் ராஜபக்ஸாவை
சந்தித்து தேவையான காகிதக்கட்டுக்களை பெற்றுக்கொண்டு கொழும்பு நகரில்
சொகுசான வாழ்க்கை வாழும் மாபியாக்களே மக்களைப்பற்றி நீங்கள் எப்போதாவது
சிந்தித்ததுண்டா?
(மேலும்....)
பங்குனி 05, 2011
அரசு - த. தே.
கூ. பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்
என கனடா தெரிவித்துள்ளது. வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான
கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி, வடபகுதி அரசாங்க அதிபர்களைச்
சந்தித்தபோது இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார். இரு தரப்புக்கும் இடையிலான
பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட கனேடிய
உயர்ஸ்தானிகர், அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள்
மற்றும் அவர்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான தேவைகள் குறித்துக்
கலந்துரையாடியிருந்தார்.
(மேலும்....)
பங்குனி 05, 2011
யாழ்.நகர் சுபாஷ்
ஹோட்டல் உரிமையாளரிடம் ஒப்படைப்பு
16 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணம்
சுபாஷ் ஹோட்டல் நேற்று உத்தியோகபூர்வமாக உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் விக்டோரியா வீதியில் அமைந்துள்ள சுபாஷ் ஹோட்டலை கடந்த 1995ஆம்
ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பொருட்டு
இராணுவத்தினர் குத்தகைக்குப் பெற்றிருந்தனர். இதன் பின்னர் சுபாஷ் ஹோட்டல்
இராணுவத்தினரின் 51வது படைப்பிரிவின் தலைமையகமாகச் செயற்பட்டு வந்தது.
இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்ட
பின்னர் இராணுவத் தினர் வசமிருந்த தனியார் மற்றும் அரசாங்கக் கட்டடங்கள்
உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.
(மேலும்....)
பங்குனி 05, 2011
தேர்தலை ஒத்திவைக்க ஜெயலலிதாவும் வலியுறுத்தல்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை ஏப்ரல் இறுதி
அல்லது மே முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அ. தி. மு. க.
பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தலைமை
தேர்தல் ஆணையர் குரேஷிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை அ. தி.
மு. க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் மு. தம்பிதுரை, துணைத் தலைவர் டாக்டர்
வி. மைத்ரேயன் ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் டில்லியில் வியாழக்கிழமை
அளித்தனர்.
(மேலும்....)
பங்குனி 05, 2011
காங்கிரஸ் - தி
. மு . க தொகுதி பங்கீடு விரைவில்
தி. மு. க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் ஒதுக்கப்படும் என்று
டில்லியிலிருந்து நம்பிக்கையான வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ¤டனான
தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை விரைவில் தி. மு. க. வெளியிடும் என்றும்
கூறப்படுகிறது. தி. மு. க.வுடன் கூட்டணி பற்றியும் தொகுதிகள் பற்றியும்
விவாதிக்க காங்கிரஸ் மேலிடத்தால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் குழு
தலைவர் கே. வி. தங்கபாலு தலைமையிலான ஐவர் குழுவின் இரண்டு கட்டப்
பேச்சுவார்த்தைகளிலும் சுமுகமான முடிவு எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில்
காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் கடந்த
புதன்கிழமை தி. மு. க. தலைவரும் தமிழக முதல்வருமான மு. கருணாநிதியை
அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.
(மேலும்....)
பங்குனி 05, 2011
கடாபி பதவி
விலகும்வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை
முஅம்மர் கடாபி பதவி விலகும் வரை
பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என லிபிய எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி தனது புலனாய்வுத்துறை தலைவருக்கு
எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதற்கு
முஅம்மர் கடாபி பதவி விலகி வெளியேறும் வரை எந்த பேச்சுவார்த்தைக்கும்
பங்கேற்கப் போவதில்லை என எதிர்பாளர்கள் அறிவித்துள்ளனர்.(மேலும்....)
பங்குனி 04, 2011
தமிழக தேர்தல் வெல்லப் போவது யார்?
(அ. விஜயன்)
தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒவ்வொரு அணியினரும் பல விடயங்களை கையில்
வைத்திருக்கின்ற போதும். அ.தி.மு.க தலைமையிலான அணியினர் பிரதானமாக கையில்
வைத்திருப்பது 'ஸ்பெக்ரம்’ ஊழல், இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர்
பிரச்சினை, குடும்பஆட்சி என்பனவாகும். இவற்றை மீறி தி.மு.க தலைமையிலான
அணியினரின் பிரச்சாரம் எப்படி அமையப் போகிறது. தம்மால்
செயற்படுத்தப்படும் நல்ல திட்டங்கள் அடிப்படையாக கொண்டு அமையப் போகின்றது.
தி.மு.க அரசின் மக்கள் நல திட்டங்களான கலைஞர் உயிர்காக்கும் காப்பீட்டுத்
திட்டம், காங்கிரிட் வீட்டுத் திட்டம் என்பன தமிகத்தின் ஏழை, எளிய மக்களிடம்
நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலைஞர் உயிர்காக்கும் திட்டமானது தமிழக ஏழை
மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.(மேலும்....)
பங்குனி 04, 2011
ஓர் நினைவோட்டம்!
அறிவுப் பசிக்கு உதவிய ஆர். ஆர். பூபாலசிங்கம்
(வி. ரி. இளங்கோவன்)

தற்போதைய யாழ். நவீன சந்தைக் கட்டிடம் அப்போது கட்டப்படவில்லை. அந்த
இடத்தில் தான் அன்றைய பஸ் நிலையம் அமைந்திருந்தது. அதற்கு மேற்குப்புறமாகக்
கஸ்தூரியார் வீதியின் ஆரம்பம். அதனருகாமையில் மேற்குப்புறமாகத் தகரக்
கூரைகளுடன் வரிசையாகப் பல கடைகள். அதிகமானவை குளிர்பானம், பிஸ்கட் முதலியன
விற்கப்படும் கடைகள். அவற்றின் நடுவே ஒரு புத்தகசாலை. அந்தப் புத்தகசாலையின்
உள்ளேயும், வாசலிலும் தினசரி பல இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல்
பிரமுகர்களைக் காணலாம். உள்ளே ஓர் உயர்ந்த கறுப்பு உருவம், வெள்ளை வேட்டி,
அதற்கேற்ற வெள்ளை நாசனல் - சேட், சிவப்பு நிற 'மவ்ளர்" தோளில் - சிலவேளை
நாரியில் இறுக்கக்கட்டியபடி, சிலவேளை நெற்றியில் சந்தனப் பொட்டு,
பளிச்சிடும் வெண்ணிறப் பற்கள் தெரிய சிரிக்கும் அழகு, அன்பாகப் பண்பாகப்
பேச்சு. ஆமாம்.. அவர் தான் அந்தப் புத்தகசாலையின் உரிமையாளர் ஆர். ஆர்.
பூபாலசிங்கம்.
(மேலும்....)
பங்குனி 04, 2011
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் ரெஜி இங்கிலாந்தில் மறைந்து
வாழ்கின்றார்?

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின்
தலைவரான ரெஜி தற்போதைக்கு இங்கிலாந்தில் மறைந்து வாழ்வதாக நம்பகமான தகவல்கள்
கிடைத்திருப்பதாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
சாந்தலிங்கம் ஜெரம் ரெஜி எனும் பெயர் கொண்ட பிரஸ்தாப சந்தேக நபரை மிக
விரைவில் கைது செய்வதற்கு சர்வதேச பொலிசாரின் உதவியுடன் நடவடிக்கை
எடுப்பதாகவும் சட்ட மா அதிபர் நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ளார்.
வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம்
மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதுடன், வழக்கை எதிர்வரும் ஏப்ரல் 29ம்
திகதி வரை ஒத்திவைத்துள்ளது. அத்தோடு இவர் பல கோடி சொத்துக்களை தன்னகத்தே
மறைத்து வைத்திருப்பதாகவும் அறிய முடிகின்றது.
பங்குனி 04, 2011
புலிகளின் புலனாய்வுப்பிரிவின் முக்கிய உறுப்பினரொருவர் திருமலையில் கைது!
இராணுவத்திற்கெதிரான பல தாக்குதல்களைத் திட்டமிட்டு நடாத்திய புலிகளின்
முக்கிய உறுப்பினரொருவர். அவர் திட்டமிட்டு வழிநடாத்திய தாக்குதல்களில் மிக
முக்கியமானது 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி தம்புள்ளை
திகம்பத்தனையில் கடற்படையினரின் பஸ் தொடரணியை இலக்கு வைத்து
மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். அதன் போது விடுமுறையில் சென்று கொண்டிருந்த
நூற்றுக்கணக்கான கடற்படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன் கிழக்கை
விடுவிப்பதற்கான இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்திற்கெதிரான பல முக்கிய
தாக்குதல்களிலும் கைது செய்யப்பட்டுள்ள நபர் தலைமை தாங்கியுள்ளதாக
புலனாய்வுத்தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளன. அவ்வாறான தாக்குதல் ஒன்றின்
போது காயமுற்ற அவர், தற்போதைக்கு அங்கவீனமுற்ற நிலையில் காணப்படுகின்றார்.
அவரது இரண்டு சகோதரர்களும் புலிகள் அமைப்பில் இணைந்து போராடி மரணித்துள்ளனர்.
அதன் காரணமாக அவர்களின் குடும்பத்துக்கு மாவீரர் குடும்பம் எனும் அந்தஸ்து
புலிகளால் வழங்கப்பட்டிருந்தது.
பங்குனி 04, 2011
Opposition not supporting Bill C-49
I appreciate you soliciting for
my opinion on the Opposition, the Liberals, the NDP and the Bloc not
supporting the Preventing Human Smugglers from Abusing Canada’s
Immigration System Act Bill C-49, as I do have an opinion. The Federal
and Provincial politics in the Greater Toronto Area that has embraced
the Tamil terrorists the LTTE (aka Tamil Tigers) and the WTM, their
proxy organizations and their supporters have turned dirty and sick and
a million dollar business, where dirty money has been changing hands to
get introductions to you politicians, to get nominated as federal and
provincial election candidates, and Sinhalese and Muslim blood soaked
dollars dropped into the election preparedness fund coffers of all the
parties, which includes the Conservatives.
(more...)
பங்குனி 04, 2011
உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் அரசுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுக்கும்
எதிர்வரும் 17ந் திகதியன்று, நாட்டின் நாலா
பாகங்களிலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள், இந்நாட் டில்
பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரம் தளைத்தோங்குவத ற்கு ஒரு சுபமான அறிகுறியாக
இருக்க வேண்டும் என்று ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விரும்புகிறார்.
ஒரு நாட்டில் எதிர்க்கட்சி நெறியான முறையில் தனது எதிர்ப்பை அர
சாங்கத்திற்கு எடுத்துக் காட்டி, அரசாங்கத்தின் பலவீனங்களை நிவ ர்த்தி
செய்வதற்கு உறுதுணை புரியும் ஒரு தூண்டுகோலாக இருந் தால் தான் அந்நாட்டில்,
பாராளுமன்ற ஜனநாயகம் தளைத்தோங் கும் என்ற உண்மையை மறந்து இன்று தவறான
வழியில் சென்று கொண்டிருக்கிறது.
(மேலும்....)
பங்குனி 04, 2011
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை எடுப்பதில்லை
தமிழக மீனவர்களுக்கு இந்தியக் கடற்படையினர் ஒத்துழைப்பு வழங்குவதைப்போன்று
இலங்கை மீனவர்களுக்குக் கடற்படையினர் ஒத்துழைப்பு வழங்குவதில்லையென வடபகுதி
மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமிழக மீனவர்கள் இந்தியக்
கடற்படையினருக்கோ அல்லது இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினருக்கோ
தெரியாமல் இலங்கைக் கடல் எல்லைக்குள் ஊடுருவ முடியாது. இந்தியக் கடல்
எல்லையை மீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் அவர்கள் நுழைவதை இந்தியக்
கடற்படையினர் கண்டும் காணாததுபோல் இருந்துவிடுகின்றனர் என்றும் மீனவர்கள்
சாடியுள்ளனர்.
(மேலும்....)
பங்குனி 04, 2011
Liberated Libya Rejects US Intervention
There is already talk of US
military intervention in Libya. Here in Benghazi, Libyans overwhelmingly
reject this possibility. Secretary of State Hillary Clinton expressed
concern over food shortages, but food is still being given out for free
in these streets as donations keep pouring in from Libya's neighbors.
Jihan Hafiz for The Real News in Benghazi, Libya.
(more....)
பங்குனி 04, 2011
தேர்தல் பணிகளில் களமிறங்கிய துணை முதல்வர்
தி.மு.க.,
வினர் உற்சாகம் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி
தி.மு.க., தேர்தல் பணியை கண்காணிக்க, ஒன்றிய,
நகர நிர்வாகிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, துணை முதல்வர் ஸ்டாலின்
பேசி வருகிறார். சுவர் விளம்பரம் முதல், பூத் குழு பண பங்கிடுதல் வரை, துணை
முதல்வரே நேரடியாக களமிறங்கியுள்ளதால், எதிர்க்கட்சியினர்
கலக்கமடைந்துள்ளனர். அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க, - ம.தி.மு.க., -இ.கம்யூ.
மற்றும் மா.கம்யூ., - புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி
அமைத்துள்ளன. தி.மு.க.வில் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே,
மாவட்டம் தோறும், வார்டு மற்றும் கிளைகளில் தி.மு., - அ.தி.மு.க., - காங்.,
- தே.மு.தி.க., - பா.ம.க., வி.சி., - இ.ஜ.க., வாக்காளர்கள் மற்றும் நடுநிலை
வாக்கா ளர்கள் குறித்த விவரங்கள், தி.மு.க., தலைமைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
பங்குனி 04, 2011
யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகளின் மகளிர்தின நிகழ்ச்சிகள்
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கம் இம்மாதம் 08ஆம்
திகதி சர்வதேச மகளிர் தினத்தை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் பல்வேறு
விசேட நிகழ்ச்சிகளுடன் அனுஷ்டிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவி சற்சொரூபவதி
நாதன் தெரிவித்தார். இவ்வைபவத்தில் யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கும் பழைய
மாண விகள் சங்கத்திற்கும் பெரும் சேவை யாற்றியவர்களான திருமதி சத்திய லஷ்மி
சிவலிங்கம், திருமதி ஞானேஸ்வரி ஞானசேகரம் ஆகிய இரு சிரேஷ்ட மாணவிகளும்
சிறந்த பெண்மணிகளாக கெளரவிக் கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். பழைய
மாணவியான திருமதி இராஜேஸ்வரி ஜெனானந்த குருவின் வீணை இசையும் நடன ஆசிரியை
கீதாஞ்சலியின் மாணவிகளது நடன நிகழ்ச்சியும் சங்கத்தின் வருடாந்த வெளியீடாக
யாழ்நாதம் சஞ்சிகையும் வெளியிடப்படவுள்ள தாகவும் சங்கத்தின் தலைவி
சற்சொரூபவதி நாதன் மேலும் தெரிவித்தார்.
பங்குனி 04, 2011
லிபியாவில் தொடர்ந்தும் மோதல் அல்பிரேகா எதிர்ப்பாளர்கள் வசம்
லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி ஆதரவு இராணுவத்தினருக்கும்
எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் தொடர்ந்து தீவிரமான மோதல் இடம்பெற்று
வருகின்றது. இதில் கடாபி இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிர்திக்கு
அருகாமை நகரமான அல்பிரேகாவில் எதிர்ப்பு படையினர் தமது கட்டுப்பாட்டை உறுதி
செய்து கொண்டனர். அல்பிரேகாவில் கடாபி இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த போதும்
நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்கள் அவர்களை பின்வாங்கச் செய்து அந்தப்
பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இதன் போது அல் பிரேகா
பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் கடுமையான மோதல் ஏற்பட்டதாக அங்கிருக்கும்
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
(மேலும்....)
பங்குனி 04, 2011
பூகம்பத்தை
அடுத்து புழுதி புயல் ஆபத்து
நியூசிலாந்தில் பூகம்பம் பாதித்த
கிறிஸ்ட்சர்ச் பகுதியில், புழுதிபுயல் தாக்கியுள்ளது. நியூசிலாந்தின்
இரண்டாவது மிகப்பெரிய நகரான கிறிஸ்ட்சர்ச் கடந்த வாரம் ஏற்பட்ட பூகம்பத்தால்
மோசமாகப் பாதிக்கப்பட்டது. 240 பேர் இந்த பூகம் பத்தில் பலியாயினர்.
மீட்புப் பணிகள் இன்னும் நிறைவடையாத நிலையில் நேற்று இந்த நகரை புழுதி புயல்
தாக்கியது ஏராளமான மரங்கள் சாய்ந்தன. நகரம் முழுவதும் புழுதி மூட்டமாக
காணப்படுவதால், மக்கள் சுவாசிக்க சிரமப்படுகின்றனர். இதனால், அவர்களுக்கு
சுவாசக் கருவிகள் வழங்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
புழுதி முட்டத்தால் தெளிவான வழி கிடைக்காததால் மீட்புப் பணிகள்
பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் முகமூடி அணிந்தபடி தெருக்களில் நடமாடி
வருகின்றனர். புழுதி படலத்தை தணிக்க தண்ணீர் லொறிகள் மூலம் தெருக்களில்
தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு வருகிறது.
பங்குனி 04, 2011
வடபகுதி தமிழ் மக்கள் பண்பாடு நிறைந்தவர்கள்
வடபகுதி மக்களிடம் கவர்ச்சியையும் ஆபாசத்தையும் காட்டி பத்திரிகைகளை விற்பனை
செய்ய முடியாதென்றும் அந்தக் கலாசாரத்தில் வடபகுதி மக்கள் இல்லை யென்றும்
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யுத்தத்திற்குப் பின்னர் மனம் சோர்வடைந்த நிலையிலும் பல்வேறு பிரச்சினைகள்
மற்றும் உள்ளக் குமுறல்களுடன் வாழும் மக்களுக்கு அவர்களின் பிரச்சினைகளைக்
களைவதற்கு ஊடகங்கள் பங்களிப்பு செய்ய வேண்டுமென் றும் அரச அதிபர்
குறிப்பிட்டார்.பாரம்பரிய பத்திரிகையான தினகரன் வெளிவந்த இரண்டு தினங்களில்
மக்களைக் கவர்ந்து விட்டது எனத் தெரிவித்த அரச அதிபர் இமெல்டா சில
இணையத்தளங்களும், பத்திரிகைகளும் ஆபாசத்தையும், ஆசையை யும் காண்பித்து இளம்
சமுதாயத்தினை திசை திருப்ப முனைவதாகவும் விசனம் தெரிவித்தார். “வட பகுதி
பெண்கள் தனித்து வமான கலாசார பண்புகளைக் கொண்ட வர்கள். அவர்களின் மன நிலையை
ஒரு போதும் திசை திருப்ப முடியாது. வட பகுதி மக்கள் ஆக்கபூர்வமாகவும், அறிவு
பூர்வமாகவும் சிந்திக்கக் கூடியவர்கள் இதனை உணர்ந்து தினகரன் போன்ற
பத்திரிகைகள் சிறந்த வகையில் செயலாற்றி மக்களை கவர்கின்றன” என்று
தெரிவித்தார்.
பங்குனி 04, 2011
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மனு உச்ச நீதிமன்றில் விசாரணை
வடக்கு மக்களை பதிவு செய்யும் நடைமுறையை இடைநிறுத்துவதற்கு சட்டமா அதிபர்
இணக்கம்
பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வடக்கு மக்களை பதிவு
செய்யும் நடவடிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு
சட்டமாஅதிபர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (03) இணக்கம் தெரிவித்தார். மேலும்,
அந்த பதிவு செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொருத்தமான முறையொன்றினை
ஒழுங்கு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதற்கும் நடவடிக்கை
எடுப்பதாக சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிடர்
ஜெனரல் புவனெக்க அலுவிஹார உச்ச நீதிமன்றத்திடம் இணக்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை பதிவு
செய்வதன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச்
சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதி சொலிசிடர் ஜெனரல் சட்டமாஅதிபர் சார்பாக
இணக்கம் தெரிவித்தார்.
(மேலும்....)
பங்குனி 04, 2011
லிபியாவை நோக்கி விரைகின்றன அமெரிக்க போர்க்கப்பல்கள்
_

லிபியாவை நோக்கி விரைகின்றன அமெரிக்க போர்க்கப்பல்கள். இவை கடாபிக்கு
எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. லிபியா நாட்டில் ஜனாதிபதி
கடாபிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் வலுவடைந்துள்ளது. பெங்காசி,
மிஷ்ரதா, ஷாவியா உள்பட பல நகரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர்.
போராட்டத்தை அடக்கவும், அவர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்டு தங்கள் வசம்
கொண்டு வரவும் கடாபி ராணுவத்தை முடுக்கி விட்டுள்ளார். கிழக்கு பகுதியில்
உள்ள 2 முக்கிய நகரங்களை மீட்கும் நடவடிக்கையாக கடும் தாக்குதலை தொடுத்து
உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
(மேலும்....)
பங்குனி 04, 2011
யாழ் பொலிஸ்
நிலையங்களில் முறைப்பாடுகள் தமிழில் பதிவு
யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ்
நிலையங்களிலும் பொலிஸ் நிலைய வரவேற்பாளர்களாக புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்
பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அழகு தமிழில் அம்மா வாங்கோ
ஐயா வாங்கோ, அக்கா வாங்கோ என தமிழ் கலகலக்க எங்கிருந்து வருகிரீர்கள் என்ன
பிரச்சினை, அடையாள அட்டை தாங்கோ பதிய வேண்டும் எனக் கூறி சம்பந்தப்பட்ட
பிரிவுக்கு அழைத்துச் செல்கின்றனர். சகல பொலிஸ் நிலையங்களிலும்
முறைப்பாடுகள் தமிழில் பதியப்பட்டு முறைப்பாட்டு பிரதி தமிழில் வழங்கப்பட்டு
வருகின்றது. கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தற்சமயம் தமிழில் முறைப்பாடுகள்
பதியப்படுகின்றன. இப் பொலிஸ் நிலையத்தில் தற்சமயம் பொதுமக்கள் தமது
மொழியிலேயே கருமங்களை ஆற்ற முடியும்.
எகிப்து
மீண்டும் பத்து லட்சம் பேர் பேரணிக்குத் தயார்
எந்தவித கொள்கை மாற் றமும் ஏற்படாததால் இடைக்காலப் பிரதமர் அகமது சாபிக்
பதவி விலக வேண்டும் என்று கோரி எகிப்து மக்கள் மீண்டும் ஒரு பெரும் பேரணியை
நடத்த தயாராகிக் கொண் டிருக்கிறார்கள். அரசுக்கு எதிரான போராட் டங்களில்
பங்கேற்றதற்காக ஒருவருக்கு ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை அறிவித் துள்ளதால்
மீண்டும் மக்கள் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். அவர் மீதான விசாரணை
நேர்மையாக நடைபெறவில்லை என் றும், ஒட்டுமொத்தமாக ஐந்து நிமிடங்கள் மட்டுமே
விசாரணை நடைபெற்றது என்றும் எகிப்து நாட்டின் மனித உரிமை அமைப்பு குற்றம்
சாட்டியுள்ளது.
(மேலும்....)
பங்குனி 03, 2011
விவசாய உற்பத்தியில் யாழ். மக்கள் நாட்டுக்கு முன்னுதாரணம்

விவசாய உற்பத்திகளில் நாட்டின் ஏனைய பகுதி மக்களுக்கு யாழ்ப் பாண மக்கள்
முன்னு தாரணமாகத் திகழ்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ
புகழாரம் சூடினார். நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ‘திவி
நெகும’ குடும்ப பொருளாதார அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விசேட நிகழ்வில்
கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு யாழ். விவசாயிகளைப்
பாராட்டினார். 30 வருடங்களாக விவசாயம் செய்ய முடியாதிருந்த நிலங்களில்
தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததும் அம்மக்கள் அதனைச் சரியாக பயன்படுத்
திக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், நாட்டின் ஏனைய பகுதி மக்களும்
இதுபோன்று உற்பத்தித்துறை யில் கவனம் செலுத்த வேண்டும் எனவும்
கேட்டுக்கொண்டார். தாம் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை
மேற்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், புதிதாக பயிர்ச்செய்கையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலங்களைப் பார்வையிடுவதற்காக பலாலியில் இருந்து
வீதிவழியாக பயணித்ததாகத் தெரிவித்தார். இதன்போது அங்கு ஆயிரக்கணக்கான கிலோ
பீற்றூட் மரக்கறி வகைகளுடன் புகையிலை அறுவடையும் நேரில் காணக்கிடைத்ததாகவும்,
அதனைக் கண்டு தாம் மகிழ்வுற்றதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பங்குனி 03, 2011
புனர்வாழ்வு பெற்ற 106 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைப்பு
வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தொழில் பயிற்சி பெற்ற 106 பேர் நேற்று
பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டனர். தொழில் பயிற்சி பெற்றமைக்கான
சான்றிதழ்களும் இவர்களுக்கு வழங்கப்பட்டன. இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர்
பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்து தொடர்ந்து இது வரை காலமும் வவுனியாவில்
உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் தொழில்பயிற்சி பெற்ற முன்னாள் புலி இயக்க
போராளிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் நேற்று காலை
10 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். சிவராத்திரி தினமான நேற்று நகர சபை
மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் மூன்று யுவதிகள் உள்ளிட்ட 106 பேர்
விடுவிக்கப்பட்டனர். பெற்றோர்கள், பாதுகாவலர்களிடம் இவர்களை கையளிக்கும்
நிகழ்வில் பிரதம அதிதியாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், பிரிகேடியர் சுனந்த
ரணசிங்க கலந்து கொண்டார். கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாண மாவட்டங்களைச்
சேர்ந்த இவர்கள் சமூகத்துடன் இணைந்து கொண்டதினையிட்டு மகிழ்ச்சி
தெரிவித்தனர். புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றி பேராதனை
பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி ஒருவரும் இந்த வைபவத்தில்
பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார்.
பங்குனி 03, 2011
வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகள் அகற்றும் பணி துரிதம்
இலங்கை இராணுவத்தின் வெளியக பொறியியல் படைப் பிரிவினர் இதுவரை வடக்கு
கிழக்கு மாகாணங் களில் சுமார் 3800 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில்
3,08,900 மிதிவெடிகளை அகற்றியுள்ளனர்.
இப்போது ஒட்டுசுட்டானில் இருந்து நெடுங்கேணி வரை இராணுவத்தினரால் தரைக்கண்ணி
வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. தற்போது கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள்
மன்னார், கிளிநொச்சி, கொக்காவில், மற்றும் முகமாலை தொடக்கம் பரந்தன்
வரையிலும் உள்ள பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. வன்னியில்
வீதியோரத்தில் உள்ள வீடுகள், குறிப்பாக கிளிநொசி, முல்லைத்தீவு, மன்னார்,
வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட போதிலும்,
இப்பகுதிகளுக்கு அப்பாற்பட்ட மனித சஞ்சாரம் குறைந்த பகுதிகளில் கண்ணிவெடிகள்
அகற்றும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென அறிவிக்கப்படுகிறது.
(மேலும்....)
பங்குனி 03, 2011
NO TO AN IMPERIALIST ATTACK ON LIBYA!END IMPERIALIST INTERFERENCE IN
LIBYA!
The present situation in Libya is
grave, with Philippine attention focused on the thousands of Filipino
workers there who are fleeing the turmoil and are in need of immediate
repat-riation. Almost half of the 26,000 Filipino workers in Libya are
in conflict areas, and many of them are technical and construction
workers in the industry and infrastructure sectors. Their worksites have
become fair game for armed mobs and pro-“democracy” protesters extorting
money, mobile phones, computers and other electronic items, food and
other things of value. Some of their barracks have been ransacked, and
affected Filipino workers had to flee for dear life with nothing to
bring with them. The hundreds who were the first to arrive back in
Manila were from the capital city of Tripoli and nearby areas in western
Libya, and their orderly departure from Libya (via Malta) was arranged
by their European and Korean employers with security escorts from forces
of Muammar Gaddafi’s government. But employers in other conflict areas,
in fear of being taken as hostages, have fled earlier and abandoned
their Filipino and other expatriate workers. Areas seized by protesters
are left with no local government forces which would be able to stop the
armed mobs preying on worksites manned by expatriate workers. Hundreds
more of Filipina women workers, mostly nurses and laboratory
technicians, are being prevented from leaving their hospitals, or are
unable to get any assistance in traveling safely to the Egyptian or
Tunisian border crossings where Philippine migrant welfare officials
have set up documentation and repatriation centers. Many Filipino
workers have to beg for passage in ships chartered by western
governments to ferry their nationals from Benghazi to the southern Greek
island of Crete.
(more.....)
பங்குனி 03, 2011
கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு
11 பேருக்கு
மரண தண்டனை, 20 பேருக்கு ஆயுள் தண்டனை
குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில்,
11 பேருக்கு மரண தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு பெப்ரவரி
27ம் திகதி அயோத்தி சென்று விட்டு, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவகர்கள்
திரும்பிக் கொண்டிருந்தனர். குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே,
ரயிலை மறித்து ஒரு கும்பல் தீவைத்தது. அதில், 59 கரசேவகர்கள் பலியானார்கள்.
இதைத் தொடர்ந்து மூண்ட கலவரத்தில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
(மேலும்....)
பங்குனி 03, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
-
45,46வதுநாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர
நடைபயணத்தின் 45வது நாளான (01-03-2011, செவ்வாய்) நேற்று தேசிய நெடுஞ்சாலை
– 26ல் நடைபயண வீரர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மதியம் 1:00 மணியளவில்
நர்மதா ஆற்றங்கரையை அடைந்தனர். அங்கு நடைபயண வீரர்கள் நீராடியபின் மதிய உணவை
எடுத்துக்கொண்டனர். மதிய உணவை முடித்து சிறிது நேர ஓய்வுக்குப் பின்
பயணத்தைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் “பிராஸ்” என்ற இடத்தில் முகாம்
அமைத்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் கடுங்குளிரான காலநிலை
நடந்துகொண்டிருப்பதால் நடைபயண வீரர்கள் காலை 6மணி முதல் பகல் முழுவதும்
நடைபயணத்தை மேற்கொண்டு மாலை 6மணியளவில் முகாம் அமைத்துவிடுகின்றனர். நடைபயண
வீரர்கள் நேற்று மாலை 6மணி வரை 40கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர்.(மேலும்....)
பங்குனி 03, 2011
CaTpad demands the President of Srilanka to setup Parliament commission
to monitor NERDO’s role in Rehabilitation and Development.
Canadian Tamils for Peace and Democracy (CaTpad) demands the Srilankan
President Mahinda Rajapakse to come out with truth and to be transparent
about North East Rehabilitation and Development Organization with is
controlled by the former Head of LTTE International Operations and arms
smuggler Kumaran Pathmanaban alias K.P.
We strongly argue the present ruling
government under President Mahinda Rajapakse has broken all the promises
made to the people of Srilanka and disrespect parliamentary democracy by
hiding the facts of the role of NERDO and its covert operations in North
supported by State machinery. It was first announced in the parliament
earlier that NERDO is not registered in Srilanka and K.P was not allowed
to do any rehabilitations. Later Government admitted K.P is permitted to
carry out only rehabilitation projects including rehabilitating of LTTE
cadres. There were reports K.P has brought millions of LTTE funds into
Srilanka and so far there were no accounts or disclosures of the
recovered LTTE funds and whereabouts of the recovered money.
(more.....)
பங்குனி 03, 2011
சிவனுக்கு ஏற்றப்படும் ஒவ்வொரு விளக்கும் அறியாமை என்ற இருளகற்றவேண்டும்
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
சிவனுக்கு இன்றைய தினத்தில்
ஏற்றிவைக்கப்படும் ஒவ்வொரு ஒளிவிளக்கும் அறியாமை இருளகற்றி எமது மக்கள்
மத்தியிலும் பலமான ஐக்கியத்திற்கான ஒளியைக் கொண்டு வரவேண்டும் என்று
சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில்
தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தீமைகள் நீங்கி
நன்மைகள் விளையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சிவபெருமானை கௌரவிப்பதற்காக
இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கை
வாழ் இந்து மக்களுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில்
மகிழ்ச்சியடைகிறேன்.
(மேலும்....)
பங்குனி 03, 2011
டுனீசியாவில்
அமைச்சர்கள் ராஜினாமா
டுனீசியாவில் தொடரும் மக்கள் போராட்டத்தின்
எதிரொலியாக அமைச்சர்கள் இரண்டு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
டுனீசியாவில், முன்னாள் ஜனாதிபதி ஜைன் அல் அபிதீன் பென் அலி தலைமையிலான
அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிலர், அவரது வெளியேற்றத்துக்குப் பின்
முகமது கன்னவுச்சி பிரதமராகப் பொறுப்பேற்ற அமைச்சரவையிலும் இடம்பெற்றி
ருந்தனர். இதனால் வெறுப்படைந்த மக்கள், முன்னாள் ஜனாதிபதியோடு
தொடர்புடையவர்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரி,
கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்
கன்னவுச்சி தனது பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்தார். எனினும் மக்கள்
திருப்தியடையவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் தொழிற்துறை மற்றும்
தொழில்நுட்பத் துறை அமைச்சர் முகம்மது செல்பி என்பவரும், திட்டமிடல் மற்றும்
கூட்டுறவுத் துறை அமைச்சர் முகமது நூரி ஜூயினி என்பவரும் தங்கள் பதவியை
ராஜினாமா செய்தனர். புதிய அமைச்சரவையில் இவர்கள் இருவர் மட்டும் தான்
முன்னாள் ஜனாதிபதியோடு தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குனி 03, 2011
விசா மோசடிகள்
இலங்கை
மாணவருக்கு எதிராக பிரிட்டன் கடும் நடவடிக்கை
போலி ஆவணங்களை சமர்ப்பித்து விசா பெற்றுக்
கொள்ள முயற்சிக்கும் இலங்கை மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மாணவர் விசாக்களைப் பெற்றுக்
கொள்வதற்காக போலியான ஆவணங்களை சில இலங்கை மாணவர்கள் சமர்ப்பிப்பதாக
பிரிட்டன் எல்லை முகவர் நிலையம் சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி
மாதத்தில் போலி யான முறையில் மாணவர் விசாக் களை பெற்றுக் கொள்ள முயன்ற 230
இலங்கையர்களின் விண்ணப் பங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரி விக்கப்படுகிறது.
மாணவர் விசா பெற்றுக் கொள்வ தில்மோசடிகள் இடம்பெற்று வருவதனால் தீவிர
கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
(மேலும்....)
பங்குனி 03, 2011
தேசத்தை நேசிப்பவர்களை தேசம் பாதுகாக்கும்
பெண்கள் மகப்பேற்று லீவு எடுப்பதனாலும், இரவு
நேரத்தில் நீண்ட நேரம் காரியாலயத்திலிருந்து பணி புரிவது கஷ்டமாக
இருப்பதனாலும், அவர்களுக்கு தனியார் துறையில் மட்டு மன்றி, அரசாங்கத்
துறைகளிலும் உயர் பதவிகளை பெறுவது கஷ்டமாக இருக்கின்றது. சட்டம் இலங்கையில்
பெண் உரிமைக்கு உத்தரவாதமளித்து அவர்களுக்கு சம அந்தஸ்தும், சம உரிமையும்
கொடுக்கப் பட வேண்டுமென்று வலியுறுத்துகின்றது. ஆண் ஆதிக்கம் என்ற
மமதையினால் இன்றைய நவீன உலகில் கூட பெண் களை இரண்டாம் தர பிரஜைகளை போன்று
அல்லது பூரண சுதந்திரமற்றவர்களாக ஒதுக்கி ஓரம் கட்டி வருகின்றனர்.
இலங்கையில் பெண்களுக்கு சகல துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
என்ற கருத்து மஹிந்த சிந்தனை எண்ணக் கருவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எமது
நாட்டில் பெண்களை கெளரவிப்பதை போன்று எங்கள் தாயகமான இலங்கை மாதா மீதும்
நாட்டு மக்கள் அன்பையும், பாசத்தை யும் கொண்டிருக்க வேண்டும்.
(மேலும்....)
பங்குனி 03, 2011
இது எப்படி
இருக்கு....?
லிபியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்
-
பிரிட்டன்

மக்கள் மீது குண்டுகளை வீசும் லிபியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்
என்று பிரிட்டன் பிரதமர் கெமரூன் எச்சரித்துள்ளார். லிபியாவில் ஜனாதிபதி
கடாபி பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள் தலைநகர்
திரிபோலி உள்ளிட்ட பல இடங்களை கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கு
இராணுவத்தினரும் பெருமளவில் ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் கடாபி இராணுவத்தில்
ஏற்படுத்தி வைத்துள்ள தமது அதி தீவிர விசுவாச படையை கிளர்ச்சியாளர்களுக்கு
எதிராக ஏவிவிட்டுள்ளார். திரிபோலியில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது
பீரங்கி மற்றும் போர் விமானங்கள் மூலம் கடாபி ஆதரவு இராணுவத்தினர் தாக்குதல்
நடத்தினர். இந்நிலையில், கடாபிக்கு எதிராக போராடும் மக்கள் மீது குண்டு
வீசும் இராணுவ விமானங்களை சுட்டு வீழத்துவோம் என்று பிரிட்டன் பிரதமர்
டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார். மேலும் அமெரிக்க போர்க் கப்பல்களும்,
இராணுவ விமானங்களும் லிபியாவை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. அப்ப ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நேட்டோ படைகளின்
விமானங்களை சுட்டு விழுத்த தயாரா...?. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் விமானங்களை
சுட்டு விழுத்த தயாரா...?மேற் கூறிய நாடுகளின் குண்டு போட்ட, போடும் உங்கள்
நாட்டு விமானங்களை சுட்டு வீழத்த தயாரா...? பிரிட்டன் இதற்கு பதில் சொல்லுமா...?
பங்குனி 03, 2011
இலங்கை அருகில்
தாழமுக்கம், சில தினங்களுக்கு மழை
இலங்கைக்கு அருகில் கிழக்கு கடலில் சிறிய
அழுத்த நிலை ஏற்பட்டிருப்பதால் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டின்
சில பிரதேசங்களில் கடும் மழை பெய்யும். வட கீழ் பருவபெயர்ச்சி மழை வீழ்ச்சி
காலநிலை மீண்டும் ஓரளவு தீவிர மாகியுள்ளது. இதேநேரம் இலங்கை க்கு அருகில்
கிழக்கு கடலில் சிறிய அழுத்த நிலையும் ஏற்பட்டுள்ளது. இவற்றின் விளைவாக
கிழக்கு, வட மத்தி, ஊவா ஆகிய மாகா ணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்
இடையிடையே மழை பெய்யும். சில பிரதேசங்களில் மழை கடுமையாக இருக்கும்.
இதேநேரம் நாட்டின் ஏனைய பிர தேசங்களில் பிற்பகலிலோ, மாலை வேகையிலோ இடி,
மின்னலுடன் மழைபெய்யும். அதனால் இடி, மின்னலின் பாதிப்பிலிருந்து தவிர்ந்து
கொள் ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இதேவேளை கிழக்கு,
தென் கிழக்கு மற்றும் மன்னார் குடா கடல் பரப்புக்கள் கொந்தளிப்பாகக்
காணப்படும்.
பங்குனி 03, 2011
May Day rally and cultural evening of communist and workers’ forces
We are asking you to join us in
organizing and sponsoring a May Day rally and cultural evening of
communist and workers’ forces, to be held at the Steelworkers Hall, 25
Cecil Street , Toronto on the evening of Sunday, May 1st. These are
highly significant days for our worldwide struggle. We propose that this
rally should highlight and celebrate the major working-class, popular
and anti-imperialist victories during the past year, in Canada and
internationally. It should also serve to unite and invigorate our
efforts in the year ahead.We cordially invite you to send a
representative to an initial organizing committee meeting, which will be
held at the premises of the Greek Canadian Democratic Organization, 290
Danforth Avenue, on Thursday March 10th at 7.00 pm. With comradely
greetings on behalf of the Toronto Organizing Committee of the Communist
Party of Canada.
John Humphrey
PS: This event will be in
addition to a march which is already being planned earlier that day
பங்குனி 03, 2011
13ஆவது
அரசியலமைப்பு திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது_
அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற
போதிலும் மக்களின் ஆணையினை மீறும் வகையில் நாம் ஒரு போதும் செயற்படமாட்டோம்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவோ
அடிப்படையாகவோ அமைய முடியாது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம் என்று தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான மாவை
சேனாதிராஜா தெரிவித்தார்.13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று
அர்த்தமுள்ள ஆட்சி அதிகாரம் வழங்கப்படும் வகையில் அரசியல் தீர்வை குறித்த
கால கட்டத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்
என்றும் அவர் கூறினார்.
(மேலும்....)
பங்குனி 02, 2011
தேசிய மகா சிவாரத்திரி விழா
ஒட்டுசுட்டான்
தான்தோன்றீஸ்வரர்
ஆலயத்தில்
மகா சிவாரத்திரி விழா வினை இம்முறை ஒட்டுசுட்டான்
தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தேசிய நிகழ்வாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர்
ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க சிவன் ஆலயங்களில் ஒன்றாகும். 30 ஆண்டுகால யுத்தம்
மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இங்கு மகா
சிவராத்திரி விழா இன்று இடம்பெறவுள்ளது. இதன்போது விசேட பூஜைகள், வழிபாடுகள் என்பன
இடம்பெறும். மகா சிவராத்திரி தினம் இந்துக்களின் மிக முக்கியமான தினங்களில்
ஒன்றாகும். இந்த சிவாரத்திரியை விரதம் அனுஸ்டித்து இரவு முழுவதும் கண் விழித்து
சிவனுக்குரிய விசேட பூஜை வழிபாடுகளைச் செய்வது மரபாகும். வடமாகாணத்தை மையப்படுத்தி
ஒட்டுசுட்டானில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா இலங்கையின் வரலாற்றில் மிக
முக்கியமானதொன்றாகும்.
பங்குனி 02, 2011
The ghost of Tamil Tigers
(Feizal Samath)

“Those who attended the funeral were photographed and subjected to security
checks and the university students who came in buses were not allowed,” he was
quoted as saying to the BBC.
An Indian Parliamentarian Thol Thirumawalavan, seeking to attend the funeral,
was refused entry on arrival at the Colombo airport and had to return to India.
Immigration authorities said this was because the politician was unable to give
a valid reason for his visit. Journalists in Jaffna said that although the crowd
would have reflected some thinking that remnants of the LTTE were behind the
ceremony and that the group is vibrant again, there is no opportunity now to
resume any form of armed revolt against the government. “People are tired of the
war and won’t – as of now – support any return to violence. That option is not
there and the path to the rights of the Tamils lies in the political
mainstream,” one reporter said by telephone from Jaffna.
(more..)
பங்குனி 02, 2011
தமிழகத்தில்
இரண்டு கட்ட தேர்தல்? பண விநியோகத்தை தடுக்க அதிரடி
தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலை நடத்துவது
குறித்து ஆலோசித்து வந்த தேர்தல் குழு தற்போது தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளது.
தேர்தலில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பண விநியோகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில்,
இரு கட்டமாக தேர்தலை நடத்த முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் 28ம் திகதி ஒரு கட்டமாகவும்,
மே 6ம் திகதி மற்றொரு கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. தமிழக சட்ட
சபைக்கு தேர்தல் நெருங்கி வருவதையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் தி.
மு.க. கூட்டணியிலும், பிரதான எதிர்க்கட்சியான அ. தி. மு. க. கூட்டணியிலும் தற்போது
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.
(மேலும்....)
பங்குனி 02, 2011
இணையங்களும் இன முரண்பாடுகளும்
சமூக முன்னேற்றம் மற்றும் இன ஐக்கியம் பிளவு பட்டிருப்பதிலும் இணைந்திருப்பதிலும்
இலாபமடைவோர், நாட்டமற்றோர் எனும் இரு வேறு பிரிவுகள் அதிகாரத்தைக் கையில்
வைத்திருக்கும் அத்தனை பிரிவினரிடமும் இருக்கிறார்கள். இதில் யார்? எந்த வகையைச்
சேர்ந்தவர் என்பதன் அடையாளம் அவரவர்களின் செயற்பாடுகளை அறிவதன் மூலம் அவரவர்
அறிந்து கொள்ள வேண்டிய விடயம். சமீப கால ஒரு சில தமிழ் இணையங்களின் போக்குகள்
குழுப்பிரிவினைகள், கொள்கைப்பிரிவினைகளைத் தாண்டி இன முரண்பாடுகளுக்கு வித்திட்டு
வருவது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். கருத்து
சுதந்திரம் எனும் பெயரில் இன முரண்பாட்டு விஷத்தை விதைப்பவர்கள் அனைத்து
தரப்பினருக்கும் பொதுவாக இருப்பார்கள் என்பது எதிர்பார்க்க முடியாத ஒரு
விடயமாகினும், கருத்தாடல் மன்றங்கள் பக்கசார்பினை தவிர்ப்பதன் மூலம் வாசகர்களுக்கு
நற்பயனைத் தரவாவது முயற்சி செய்யலாம்.
(மேலும்....)
பங்குனி 02, 2011
Rituals, praying help fulfill virtuous society -
President
The rituals observe by Hindus at
Maha Shivarathri festival and their praying for a better society will help
create a virtuous society, President Mahinda Rajapaksa said in a Maha
Shivarathri message yesterday. The President said he is pleased to send his good
wishes to Hindus in Sri Lanka who observe Maha Shivarathri, the festival in
honour of Lord Shiva, which seeks to dispel all evil and enhance good in
society. "In the freedom that prevails in Sri Lanka, our common aspiration is
for a virtuous society. It is my belief that the many rituals such as night long
vigils at temples, fasting and chanting of devotional songs, observed by Hindus
at this festival, and their praying for a better society, will help fulfill this
aspiration," the resident said. He said "Religious values are foremost in
removing mistrust among ethnic and religious groups. Therefore, all religions
have a great responsibility to instill moral values among people, helping
society to be rid of evil. "May every lamp lit by Hindus to Lord Shiva on this
Maha Shivarathri help dispel the darkness of Ignorance and bring the light of
stronger unity among all our peoples."
பங்குனி 02, 2011
ஜனாதிபதியின் பொங்கல்தின வாக்குறுதி சிவராத்திரியில் நிறைவேற்றம்
தினகரன் யாழ். பதிப்பு நாளைமுதல் கடந்த பொங்கல்
தினத்தன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடபகுதி
மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைய தினகரனின் யாழ்ப்பாணத்திற்கான விசேட பதிப்பு
நாளை சிவராத்திரி தினமான 02ம் திகதி வெளி வருகிறது. தினகரனின் புதிய பதிப்பாக
வெளிவரும் இப்பத்திரிகை நாளை காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள லேக்ஹவுஸ்
நிறுவன அலுவல கத்தில் பூஜை வழிபாடுகளுடன் வெளியிட்டு வைக்கப்படும்.அதன்பின்னர் காலை
10.00மணிக்கு யாழ். கச்சேரி கேட்போர் கூடத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப் பில்
இப்பத்திரிகையினை லேக் ஹவுஸ் நிறுவன ஆசிரியபீடப் பணிப் பாளர் சீலரத்ன செனரத்
அறிமுகம் செய்துவைப்பார். இவ்வைபவத்தில் யாழ். அரசாங்க அதிபர், தினகரன் யாழ்.
பதிப்பின் ஆசிரியர் தே. செந்தில்வேலவர், சந்தைப்படுத்தல் முகாமையாளர் செந்தநாயக்கா
உட்படப் பலரும் கலந்து கொள்வார்கள்.
பங்குனி 02, 2011
டொரென்டோ உயர்ஸ்தானிகர் மஸ்ஜிட் அல் ஜன்னா பள்ளிவாசல் விழாவில் பங்கேற்பு

கனடா
குடும்ப தின விழாவை முன்னிட்டு புலம்பெயர் முஸ்லிம் மக்களின் அழைப்பை ஏற்று டொரென்டோ
உயர்ஸ்தானிகர் கௌரவ கருணாரத்ன மற்றும் உயர் ஆதிகாரிகளான சிவம்
விநாயகமூர்த்தி,மனோரஞ்சன்,செல்லையா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். மஸ்ஜிட் அல்
ஜன்னா என்று அழைக்கப்படும் இந்த பள்ளிவாசலானது வட அமெரிக்கவின் தமிழ் பேசும்
முஸ்லிம் மக்களினால் சொந்த செலவில் கட்டப்பட்ட முதலாவது பள்ளிவாசல் என்பது
சிறப்பம்சம் ஆகும்.இது காத்தான்குடி,கல்முனைஅக்கரைப்பற்று மற்றும் கொழும்பு பகுதிகளை
சேர்ந்த புலம்பெயர் முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த செலவில் கட்டிமுடிக்கப்பட்டது.
வரவேற்பு விழாவின் போது ஷேக் யூசுஃப் பதாத் அவர்கள் பள்ளிவாசலுக்கும்
சமூகத்திற்குமான தொடர்பு உட்பட முக்கிய விடயங்கள் உரையாற்றினார். மத வழிபாட்டின்
பின்னர் மதிய போசன விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது.பின்பு கௌரவ பரணவிதான
அவர்கள் மக்களுடன் குறை/நிறைகள் பற்றி கலந்துரையாடினார்.இதன்போது இலங்கை அரசால்
தன்னாலான உதவிகளை செய்வதாக உயர்ஸ்தானிகர் டொரென்டோ வாழ் முஸ்லிம் மக்களுக்கு
உறுதியளித்தார்.
பங்குனி 02, 2011
Sri
Lanka Tourism promotes the "Wonder of Asia" at New York Travel Show
Sri Lanka's participation at the North America's premier
travel event "The New York Times Travel Show" held at the Jacob K. Javits
Convention Centre in New York City from February 25-27 has attracted the
attention of the participants very much. Sri Lankan show included cultural
presentations. The world renowned Sri Lankan Dance troupe,"Channa-Upuli," flown
in courtesy of SriLankan Airlines performed on Saturday and Sunday on the Asia
Stage was one of the six cultural stages at the show featuring live performances
and culinary presentations from around the world. The highly rated American News
Channel (NY 1) featured a live performance "Making of the Lion dance" by the
Channa-Upuli Dance Troupe.
(more....)
பங்குனி 02, 2011
யாழ்.தமிழ் மக்களுடன்
பிட்டும் தேங்காய்ப்ப+வும் போல இணைந்து நல்ல உறவுடனேயே வாழ்ந்து வருகிறோம்
-
ஒஸ்மானியா கல்லூரி அதிபர் பெருமிதம்

வடபகுதியின் கடந்த கால துரதிர்ஷ்டவசமான நிலைமைகளினால் பரம்பரை பரம்பரையாக
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும்,
பின்னர் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியதாகவும் படிப்படியாக அவர்கள்
யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருப்பதும் வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது. முஸ்லிம்
மக்கள் பலர் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டிருந்தவர்கள் என்பது அனைவரும்
அறிந்ததே. இப்போது ஏராளமான முஸ்லிம் மக்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பிவிட்டதால்,
பழுதடைந்த நிலையிலிருந்த பள்ளிவாசல்களும், முஸ்லிம் பாடசாலைகளும் திருத்தம்
செய்யப்பட்டு, மீளவும் இயங்க ஆரம்பித்திருப்பது ஒரு சிறப்பான நிகழ்வாகும்.
(மேலும்....)
பங்குனி 02, 2011
மன்னார் வளைகுடா
பகுதியில் 5 ஆண்டுகளில் 40 சதவீதம் புதிய பவளப் பாறைகள்
தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த
5 ஆண்டுகளில் புதிதாக 40 சதவீத பவளப்பாறைகள் வளர்ந்துள்ளதாக மன்னார் வளைகுடா
உயிர்கோள காப்பகத்தின் இயக்குனர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார். கடல்வாழ்வு
உயிரினங்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் மன்னார் வளைகுடாவில் 117 வகை பவளப்
பாறைகள், 13 வகை கடற் புற்கள், 450 வகை மீன் இனங்கள், கடற்பசு, டால்பின்கள், கடல்
ஆமை, இறால், சிங்கி இறால் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. பவளப் பாறைகள்
அமைந்துள்ள பகுதி மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாராக பகுதியாக
மட்டுமின்றி மீன்களின் இனப் பெருக்க பகுதியாகவும் இருக்கிறது. மேலும் பவளப் பாறை
தீவுகள் கடல் அரிப்பு மற்றும் புயல் சீற்றங்களில் இருந்து காக்கும் கேடயமாகவும்
கருதப்படுகிறது.
(மேலும்....)
பங்குனி 02, 2011
ஓமானில்
போராட்டம் தொடர்கிறது
தென்மேற்கு ஆசிய நாடான ஓமானில் அரசுக்கு எதிராக
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை
முற்றிலுமாக முடக்கியுள்ளனர். சோஹர் நகரில் ஞாயிற்றுக்கிழமை வீதிகளில் கூடி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர்
உயிரிழந்தனர். சுமார் 5 பேர் படுகாயமடைந்தனர். டூனிசியா, எகிப்தில் அரசுக்கு எதிரான
புரட்சி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து லிபியா, ஓமான் உட்பட பல அரபு நாடுகளில்
ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தலநகர்
மஸ்கட்டில் இருந்து 200 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ள தொழில் நகரமான சோஹரில்
வேலையில்லாத திண்டாட்டத்தில் சிக்கியுள்ள இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
(மேலும்....)
பங்குனி 02, 2011
பருத்தித்துறை
மெதடிஸ்த பெண்கள் பாடசாலை

பருத்தித்துறை நகரில் மகளிர் கல்வியின் நிலைக்களனாக பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள்
உயர்தர பாடசாலை விளங்கி வருகின்றது. நூற்றுத் தொண்ணூறு ஆண்டுகள் தொன்மையும்
பெருமையும் மிக்க இப்பாடசாலையை ‘முன்னோக்கி மேல்நோக்கி ஒளியை நோக்கி’ என்னும்
மகுடவாசகம் தாங்கி ஆங்கில அதிபர்களாலும் தேசிய அதிபர்களாலும் வளர்க்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலை 1823 ஆம் ஆண்டு வண தோமஸ் ஸ்குவான்ஸின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாடசாலையில் ஆரம்பத்தில் கிறிஸ்தவ பாதிரிமாரே முகாமையாளர்களாக இருந்தனர். 19 ஆம்
நூற்றாண்டு வரை ஆங்கில மாதர்களான செல்வி பெஸ்ரல், செல்வி றிஸ்டேல், செல்வி
பிற்aஸ்வால்ஸ், செல்வி பியூச்சம்ப் ஆகியோர் அதிபர்களாகக் கடமையாற்றினர்.
(மேலும்....)
பங்குனி 02, 2011
திருமலை -
விசாகப்பட்டினம் கப்பல் சேவை விரைவில்
இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கும்,
இலங்கைக்கும் இடையில் நேரடி விமான, பயணிகள் கப்பல் சேவையை நடத்துவதற்கான ஒழுங்குகள்
இப்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் கொழும்பிலிருந்து நேரடியாக
விசாகப்பட்டினத்திற்கு விமான சேவையும், திருகோணமலை துறைமுகத்திலிருந்து
ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டின துறைமுகத்திற்கு நேரடி பயணிகள் கப்பல் சேவையும்
ஆரம்பிக்கப்படுமென்று இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம்
அறிவித்துள்ளார்.
(மேலும்....)
பங்குனி 02, 2011
தலைமைத்துவ மாற்றத்தை
இலக்கு வைத்தே ஐ.தே.க தலைவர்கள் பிரசாரம்
ஏப்ரல் 12ம் திகதி நடைபெற உள்ள கட்சி தலைமைத்துவ
மாற்றத்தை இலக்கு வைத்தே ஐ.தே.க. தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஐ.தே.க.
வில் கட்சி உட்பூசல் அதிகரித்துள்ள நிலையில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் பெருமளவில்
அரசாங்கத்துடன் இணைந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள்
தெரிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு
நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு அமைச்சர்களான டளஸ் அலஹப்பெரும,
மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. ஆகியோர் கருத்துத்
தெரிவித்தனர்.
(மேலும்....)
பங்குனி 02, 2011
ஜப்பான் மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி
ஜப்பானின் மத்தியப் பகுதியில் உள்ள மியோட்டா நகரின் மேயர் தேர்தலில் ஜப்பான்
கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான மொடேகி யுஜி வெற்றி பெற்றுள்ளார். பதிவான
வாக்குகளில் 59.5 விழுக்காடு வாக்குகளை அவர் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக வந்த
இரண்டு வேட்பாளர்களின் மொத்த வாக்குகளை விட ஒன்றரை மடங்கு அதிக வாக்குகளை யுஜி
பெற்றிருந்தார். 2007 ஆம் ஆண்டில் முதன்முறையாக மேயராகத் தேர்வு செய்யப்பட்ட யுஜி,
கடந்த நான்கு ஆண்டுகளில் மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினார். இதனால் நகர
மக்களின் நம்பிக்கையை அவர் பெற்றார் என்பது மீண்டும் மேயராகத் தேர்வு
செய்யப்பட்டதிலிருந்து உறுதியாகியுள்ளது.
(மேலும்....)
பங்குனி 01, 2011
இந்தியாவும் சீனாவும் எமக்கு செய்யும் உதவிகளை மறந்து விட முடியாது
ஆசியாவில் பொருளாதார ரீதியிலும், இராணுவ
ரீதியிலும் மிகவும் பலம் வாய்ந்த இரு அயல் நாடுகளான இந்தி யாவும் சீனாவும்
தங்களின் குட்டித்தங்கையான இலங் கையை அன்புடன் அரவணைத்து சகல உதவிகளையும்
செய்து வருகின்றன. பயங்கரவாத யுத்தம் இலங்கையில் உச்சக் கட்டத்தில் நடந்து
கொண்டிருந்த போது ஏனைய மேற்குலக வல்லரசுகளை போலன்றி இவ்விரு நாடுகளும்
எவ்வித மறைமுகமான அரசியல் இலாபத்தையும் எதிர்பாராமல் உற்ற நண்பர்களாக
பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் மனமுவந்து எமக்கு உதவி செய்தன.
யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட்டி ருக்கும் இவ்
வேளையில் யுத்தத்தினால் முழுமையாக அழி வடைந்த வட பகுதியின் ரயில் பாதையை
மீண்டும் அமைக்கும் பொறுப்புகளை இந்தியா நிறைவேற்றிக் கொண்டி ருக்கின்றது.
அதே வேளையில் சீனா வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ஏ 9
பாதையையும் அதனை இணைக்கும் ஏனைய குறுக்கு பாதைகளையும் செப்பனிட்டு திருத்தி
அமைக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
(மேலும்.....)
பங்குனி 01, 2011
லிபியாவுமா?
உலகின் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன்
நேட்டோ ராணுவக் கூட்டாளி களும் இணைந்து செயல்படுத்திய அராஜக அரசியல்
இன்றைக்கு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இது கிட் டத்தட்ட அனைத்து
அரபு நாடுகளிலும் உணவு தானிய விலையை பல மடங்கு கடுமையாக உயர்த்தியுள்ளது.
இந்த நாடுகளில் மிகப் பெருமளவு எண்ணெய் வளம் குவிந் திருக்கும்போதிலும் கூட
மக்கள் குடிநீருக்கு தவிக் கிறார்கள்; பெருவாரியான மக்களுக்கு வறுமை வாரி
வழங்கப்பட்டுள்ளது; எண்ணெய் வியாபாரம் மூலம் கிடைக் கும் மிகப் பெரும்
சொத்துக்கள் எல்லாம் குறிப்பிட்ட பிரி வினரின் கைகளுக்கு சென்றடைந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதி கரித்துள்ள நிலையில்,
ரியல்எஸ்டேட் அதிபர்களும், மன் னர் குடும்பங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சிறு
எண்ணிக் கையிலான நபர்களும், கோடிக்கணக்கான பில்லியன் டாலர்களை
கொண்டிருக்கிற செல்வந்தர்களாக வலம் வருகிறார்கள். தங்களது அடிப்படை தேவைகளை
கூட பூர்த்தி செய்ய வக்கில்லாத அரசுகள் ஏவுகிற கடுமையான அடக்குமுறை யால்,
இஸ்லாமிய கலாச்சாரமும், நம்பிக்கையும் மிகுந்த மக்களை கொண்ட அரபு உலகம்
கொந்தளித்துப் போயிருக் கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் உருவான இந்த
அரசுகள் காலனிய ஆதிக்க கட்டமைப்பையே ஆட்சி முறையாக பாவித்து அதிகாரம்
செலுத்தி வருகின்றன.
(மேலும்.....)
பங்குனி 01, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
- 43,44வது நாள்
நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஸ்ரா ஆகிய மூன்று மாநிலங்களைக் கடந்து
நான்காவதாக மத்திய பிரதேசத்தினுள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மத்திய
பிரதேசத்தைக் கடப்பதற்கு இன்னும் ஏறக்குறைய 160 கிலோ மீற்றர் தூரம் உள்ளது.
இன்னும் ஐந்து நாட்களில் நடைபயண வீரர்கள் மத்தியபிரதேச மாநிலத்தைக் கடந்து
உத்திரபிரதேச மாநிலத்திற்குள் பிரவேசிப்பார்கள்.
(மேலும்.....)
பங்குனி 01, 2011
டொரென்டோ ஜேம்ஸ் டவுனிலுள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் விசேட
கத்தோலிக்க ஆராதனை
நேற்று ஞாயிற்றுக்கிழமை கனடா டொரென்டோ
உயர்ஸ்தானிகர் கௌரவ கருணாரத்ன பரணவிதான தலைமையில் ஜேம்ஸ் டவுனிலுள்ள ரோமன்
கத்தோலிக்க தேவாலயத்தில் விசேட கத்தோலிக்க ஆராதனை நடைபெற்றது. இந்த
ஆராதனையில் தமிழ்,சிங்கள மற்றும் கனேடிய மக்களும் கலந்து கொண்டனர்.
ஆராதனையின் பின்னர் கௌரவ கருணாரத்ன அவர்கள் பொது மக்களுடனும்
பாதிரிமாருடனும் கலந்துரையாடினார். இது இலங்கையில் தமிழ்,சிங்கள மற்றும்
முஸ்லிம் மக்கள் சமாதானமாக வாழ விரும்பி இந்த சிறப்பு ஆராதனை
ஆதரவாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டது.
பங்குனி 01, 2011
சர்வதேச மகளிர்
தினத்தை அட்டனில் கொண்டாட ஏற்பாடு
சர்வதேச மகளிர் தினத்தை மார்ச் 8ம் திகதி
அட்டனில் பெருந்தோட்ட சமூக மாமன்றம் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை
மேற்கொண்டுள்ளது. இவ்வாறு கண்டி சமூக அபிவிருத்தி மன்றத் தலைவர் பெ.
முத்துலிங்கம் தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் திகதி அட்டன்
மல்லிகைபூ சந்தியிலிருந்து ஊர்வலம் ஒன்று அட்டன் நகரை வந்தடையும். அதைத்
தொடர்ந்து பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறும். இதில் பெருந்தோட்ட சமூக மாமன்ற
மகளிர் பலர் உரையாற்றுவார்கள். அதற்கான ஏற்பாடுகளை பெருந்தோட சமூக மாமன்றம்
செய்து வருகின்றது.
பங்குனி 01, 2011
மாதகல் கடற்பரப்பில்
இந்திய மீனவர் ஊடுருவல் அதிகரிப்பு, வலைகள் அறுப்பு
மாதகல் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஊடுருவல் மீண்டும் தொடர்கிறது. இரு
தினங்களில் பல ஆயிரம் ரூபா பெறுமதியான ஐந்து வலைகள் துண்டிக்கப்பட்டுச்
சேதமாக்கப்பட்டுள்ளதாக மாதகல் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்
தலைவர் வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மாதகல்
கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 26 மீனவர்களும் ஏழு
வள்ளங்களும் தொழிலுக்குச் சென்ற மாதகல் கடற்றொழிலாளர்களால் சுற்றி வளைத்துப்
பிடிக்கப்பட்டு, இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நீதவானின் உத்தரவின் பேரில் விடுதலை
செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
(மேலும்.....)
பங்குனி 01, 2011
ஒஸ்காரை நழுவ விட்டார் ஏ.ஆர். ரஹ்மான்
கடந்த முறை 2 ஒஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இந்த
முறை ஒஸ்கார் விருதினை நழுவ விட்டார் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று 83 வது
ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது. கண்களை கவரும் வகையில்
வண்ண மயமாக நடந்த இந்த விழாவில் ஒரி ஜினல் இசை மற்றும் ஒரிஜினல் பாடல்
பிரிவுகளில் 127 ஹவர்ஸ் படத்திற்காக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் பெயர்
பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இந்த
ஆண்டு பின்னணி இசைக்கான விருதை டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர்
பகிர்ந்து கொண்டுள்ளனர். விழாவில் அதிக அளவிலான விருதுகளை தி கிங்ஸ், ஸ்பீச்,
இன்செப்ஷன், தி சோஷியல் நெட் வொர்க் ஆகிய படங் கள் பெற்றன. இந்த ஆண்
டுக்கான சிறந்த நடிகர் விருது காலின் பிர்த் என்பவருக்கு தி கிங்ஸ் ஸ்பீச்
என்ற படத்திற்காகவும், சிறந்த நடிகை விருது நதாலி போர்ட்மேனுக்கு பிளாக்
ஸ்வான் படத்திற்காகவும் கிடைத்தது. தி கிங்ஸ் ஸ்பீச் படம் சிறந்த இயைமைப்
பாளருக்கான விருதையும் பெற்றது. இதுதவிர சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்),
சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த இயக்குனர் என மொத்தம் 5 விருதுகளை தி
கிங்ஸ் ஸ்பீச் படம் தட்டிச் சென்றது.
பங்குனி 01, 2011
நெடுந்தீவு -
குறிகட்டுவான் கடற்பரப்பை ஆழமாக்க நடவடிக்கை
குறிகட்டுவான் நெடுந்தீவு கடற்பரப்பில்,
புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட வடதாரகை 2 பயணிகள் படகு தரைதட்டாமல், மாவிலி
கடற்கரைக்கு பயணத்தை மேற்கொள்ள கடல் பாதையை ஆழமாக்க தகுதியான தனியார்
ஒப்பந்தகாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை நெடுந்தீவு பிரதேச சபை கோரியுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் தமது கோள்விகளை மார்ச் மாதம் ஏழாம் திகதிக்கு
முன் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவித்துள்ளனர். சுமார் ஏழு மைல் நீளமான கடல்
பயணப் பாதையை ஆழமாக்கப்படவுள்ளது. மாவிலி இறக்குதுறைப் பகுதி சேறுகளாலும்
சுண்ணாம்புப் பாறைகளாளும் உள்ள கடல் பரப்பாகும். இப் பயணங்களில் ஈடுபடும்
பயணிகள் படகுகள் தரை தட்டுவதால், விரைவில் பழுதடைந்து வருவதால் கடலை
ஆழமாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பங்குனி 01, 2011
லிபியத் தலைநகர் திரிபோலியை கைப்பற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி
லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபிக் கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நேற்றும்
இடம்பெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் லிபியாவின் பிரதான நகரங்களில் திரண்டு
முஅம்மர் கடாபியை பதவி விலகுமாறு வற்புறுத்தினர். இரண்டொரு வாரங்களாக
லிபியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல நகரங்கள் பொது மக்களின்
கட்டுப்பாட்டுக்குள் வந்தன. தலைநகர், திரிபோலியையும் அங்குள்ள ஜனாதிபதி
மாளிகையையும் கைப்பற்றும் நோக்குடன் திரண்டுள்ள மக்கள் இராணுவத்தினரையும்
இதில் இணையு மாறு வேண்டிக்கொண்டனர். இந்நிலையில் ஜெனிவாவில் கூடிய உலக
நாடுகளின் தலைவர்கள் முஅம்மர் கடாபி பதவி விலக வேண்டும் எனவும் தீர்மானம்
நிறைவேற்றினர்.
(மேலும்.....)
பங்குனி 01, 2011
தொல்பொருள் திணைக்களத்தால் புராதன தீர்த்தக்கேணி பராமரிப்பு
வடமராட்சி மாலிசந்தியிலுள்ள ஸ்ரீலங்கா ரெலிகொம் காரியாலயத்துக்கு முன்
அமைந்திருக்கும் பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் அமைந்திருக்கும் புராதனகால
தீர்த்தக் கேணி தொல்பொருளியல் திணைக்களத்தின் உடமையாக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் காணி துப்புரவாக்குதல், பயிரிடுதல், மரங்களை அழித்தல், தீ
வைத்தல், அகழ்வு வேலைகள் செய்தல், கல் உடைத்தல், எல்லைபோடுதல், அமைவிடம்
அமைத்தல் மற்றும் கட்டடம் அமைத்தல் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக
மேற்படி திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. அதேசமயம், இச்சின்னத்தின்
மீது உருமாற்றம் மற்றும் திருத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் முற்றாக
தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குனி 01, 2011
எகிப்து
இராணுவம் - இளைஞர் அமைப்பு கெய்ரோவில் பேச்சுவார்த்தை
ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டங்களிலீடு பட்ட
பொதுமக்கள் மீது இராணுவம், பொலிஸார் நடந்துகொண்ட முறைக்கு எகிப்தின் இராணுவ
ஆட்சியாளர்கள் மன்னிப்புக் கோரினர். ஜனநாயக ஆர்ப் பாட்டக்காரர்களை அடக்கும்
பொருட்டு எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இராணுவ அடக்குமுறையை
கையாண்டார். இதனால் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தும் பலியாகி யுமிருந்தனர்.
பின்னர் ஹொஸ்னி முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு இரா ணுவம்
நிர்வாகத்தைப் பொறுப்பேற்றுள்ளது. இவ்வாறு நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற
இராணுவமே பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. எகிப்தில் ஜனநாயக ரீதியான
தேர்தல் நடைபெறும் வரை இராணுவமே நிர்வாகத்தை நடத்தவுள்ளது.
(மேலும்.....)
பங்குனி 01, 2011
போரினாலும் வறுமையினாலும் ஏலம் போகும் நகைகள்
யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வங்கிக் கிளைகளில் அடகு வைத்த நகைகளில் இதுவரை
மீட்கப்படாத தங்க நகைகள், எதிர்வரும் பதின்மூன்றாம் திகதி பகிரங்க ஏலத்தில்
விற்பனை செய்யப்படுமென யாழ்ப்பாணம் பிராந்திய மக்கள் வங்கி பணியகம்
அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி, கன்னாதிட்டி, பிரதான வீதி,
இணுவில், காங்கேசன்துறை மல்லாகம், சுன்னாகம், கோப்பாய், யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம், நாவலர் வீதி மானிப்பாய், சங்கானை, பண்டத்தரிப்பு, உரும்பராய்,
அச்சுவேலி, சாவகச்சேரி, கொடிகாமம், நெல்லியடி, பருத்தித்துறை, புலோலி,
திருநெல்வேலி, கல்வியங்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய கிளைகளில் அடகு வைத்து
மீட்கப்படாத நகைகளே ஏலத்தில் விற்கப்படவுள்ளன. அடகு வைத்தவர்கள்,
ஏலவிற்பனைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக
அடகு வைத்த நகைக்கான வட்டியை மீளச் செலுத்தி அடகை புதுப்பித்துக் கொள்ள
முடியும் என தெரிவித்துள்ளனர். ஏல விற்பனையில் நூறு மில்லியன் ரூபா
பெறுமதியான மீட்கப்படாத நகைகள் விற்பனை செய்யப்படவிருப்பதாக வங்கி
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பங்குனி 01, 2011
நமக்கேற்றத் தலைமை எது?
(ஞாநி)
ஒரு மாநில முதலமைச்சர் காரில் போகிறார். சாலையில் சென்று கொண்டிருக்கும்
அவசர உதவி வண்டி ஒன்றின் மீது மோதுவது போல அவர் கார் நெருக்கமாகப் போகிறது.
உடனே காவல் துறை அதிகாரி, முதல்வர் காரை நிறுத்தி அபராதச் சீட்டு தருகிறார்.
கோர்ட்டில் வந்து ஆஜராகி பணத்தைக் கட்டாவிட்டால், சம்மன் அனுப்பப்படும்
என்று முதலமைச்சரை எச்சரிக்கிறார். முதலமைச்சருக்கு எரிச்சலாக இருக்கிறது.
தம் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசி,
அந்தக் காவல் துறை அதிகாரி ஒரு இடியட் என்று திட்டுகிறார். கூட்டத்தைப்
படம்பிடித்த ஒரு டி.வி.சேனல் இதை ஒளிபரப்பி விடுகிறது. முதலமைச்சருக்குப்
பெரும் கண்டனங்கள் குவிகின்றன. முதல்வர் உடனே காவல் அதிகாரியைச் சந்தித்து
தாம் இடியட் என்று கூறியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார். தாம்
செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். இனி அப்படிச் செய்ய மாட்டேன் என்று
சொல்கிறார். கோர்ட்டிலும் போய் அபராதத் தொகையைக் கட்டுகிறார்.
(மேலும்.....)