Contact us at: sooddram@gmail.com

 

மார்கழி 2010 மாதப் பதிவுகள்

மார்கழி 31, 2010

கெட்டுப் போனதா குட்டி யாழ்ப்பாணம்?

யுத்தக் கெடுபிடிகளுக்கஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்து, கைகால்களை நீட்டி, கொஞ்சம் காற்று வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். காற்றில் கொஞ்சம் விஷக் கிருமிகள் கலந்திருந்தால் நோய்நொடிகள் பிடிக்கச் செய்யும்தான். உடனே, ‘அந்த விஷக்காற்றைச் சுவாசித்துவிட்டான் நோயாளி!’ என்று யுத்தப் பிரகடனம் செய்து மீண்டும் இருண்ட குகைகளுக்குள் இளைஞர்களைத் தள்ளிவிட எத்தனிப்பதா? நோய் வருமென்றால், நோய்க்காப்பு அவசியம். பிள்ளைகளுக்கு நோய் வராமல் காக்கவேண்டியது யாருடைய கடமை? வீட்டிலும், பாடசாலைகளிலும், பொதுச் சூழலிலும் நோய்த்தொற்றைத் தடுக்கவேண்டியது பெற்றோர், அதிபர், ஆசிரியர்களினதும், சமூகத்தினதும் கடமையல்லவா? (மேலும்....)

 

மார்கழி 31, 2010

 

அரச நிறுவனங்களின் பெயர் மாற்றம்

 

‘சிலோன்’ என்பதற்கு பதிலாக இனிமேல் ‘ஸ்ரீலங்கா’ என்ற பதம்

 ‘சிலோன்’ எனப் பெயர் கொண்டிருக்கும் அனைத்து அரசாங்கத் திணைக்களத்தின் பெயர்களையும் ‘ஸ்ரீலங்கா’ என மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் ‘சிலோன்’ என அழைக்கப்பட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களும் இனிமேல் ‘ஸ்ரீலங்கா’ என மாற்றப்படவிருப்பதுடன், இதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார். உதாரணமாக இத்திட்டத்துக்கு அமைய ‘பாங்க் ஒவ் சிலோன்’ ‘பாங்க் ஒவ் ஸ்ரீலங்கா’, ‘சிலோன் எலக்ட்டிசிட்டி போர்ட்’ ‘சிறிலங்கா எலக்ட்டிசிட்டி போர்ட்’ என்றும் மாற்றியமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மார்கழி 31, 2010

வடபகுதியின் அபிவிருத்திக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவு அவசியம்

30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தை அரசாங்கம் வெற் றிகரமான முறையில் கடந்த ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று முடிவுக்குக் கொண்டுவந்ததையடுத்து, புலி உறுப்பினர்கள் 12,000 பேர் பாதுகாப்புப் படையினரிடம் சரண டைந்தனர். இவர்களில் 10,992 பேர் ஆண்கள். 2,098 பேர் பெண்கள். இவர்க ளுக்கு ஆயுதப் படையினர் எவ்வித உளவியல் ரீதியிலான, உடல் ரீதியிலான துன்புறுத்தலையும் செய்யாமல் சரியான விசார ணைகளின் பின்னர் நெறியான முறையில் புனர்வாழ்வு நிலையங் களில் சேர்த்து புனர்வாழ்வளிக்கும் நற்பணியை ஆரம்பித்தனர். இவர்களில் 8,894 பேர் திருமணம் முடிக்காதவர்கள். 4,143 பேர் மாத் திரமே திருமணமானவர்கள். இந்த எண்ணிக்கையில் 4,649 பேரைத் தவிர எஞ்சிய அனைவரும் புனர்வாழ்வு அளிக்கப்ப ட்டு பல்வேறு தொழில்களில் பயிற்சி பெற்றதை அடுத்து அவ ர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். (மேலும்....)

மார்கழி 31, 2010

Karuna deplores ‘US embassy lies’

by Shamindra Ferdinando

Deputy Minister Vinayagamoorthy Muralitharan aka Karuna  strongly denies former US Ambassador in Colombo Robert Blake’s claim that he fled Sri Lanka and secured refuge in Tamil Nadu in early 2004 with the help of the then President Chandrika Kumaratunga. "Ambassador Blake’s accusation is absurd," the National List MP told The Island. According to him, the US mission in Colombo, on the basis of unsubstantiated information received from those described as ‘trusted contacts’ in confidential US diplomatic cables had accused his former outfit (the TMVP) of illegal military operations directed at the LTTE. Blake in a secret diplomatic cable dated May 18, 2007, alleged that Karuna had directed his cadres while being in Tamil Nadu, where he remained till July 2006. (more...)

மார்கழி 31, 2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு இலங்கைக்குள் அனுமதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக் கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு ஐ.நா. நிபுணர்கள் குழு தனது விரு ப்பத்தைத் தெரிவித்துள்ளது. இந்த ஆணைக்குழுவின் முன்னி லையில் யாரும் சாட்சியமளிக்க முடியும் என்பதன் அடிப்படையில் ஐ.நா. நிபுணர்கள் குழுவும் இலங் கைக்கு வந்து ஆணைக்குழு முன் சாட்சி யமளிக்க விரும்பினால் அதற்கு அரசாங்கம் வீசா அனுமதி வழங்கும். உத்தியோகபூர்வமாக அனுமதி கோர ப்பட்டால் அதற்கு நிபுணர்கள் குழு வுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்னி லையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர் சாட்சியமளித்து ள்ளனர். (மேலும்....)

மார்கழி 31, 2010

Open letter to Canadian Tamil Congress - Saying CTC a lobbying organization is unconstitutional

Dear CTC board of directors, CTC officials,

It is very sad to see that CTC board unconstitutionally prevents members from raising transparency related concerns to our member of parliament. The reason I wrote this open letter to highlight the issues to other members and community. There is a need for any Tamil organization that try to represent Tamil Canadians to correct their mistakes and provide answers to their members responsibly. Fortunately, there are couple of good Tamil Canadian organizations emerging, so the expectation will become high for good organization practices. (more...)

யாழில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொலைக் கலாசாரம்: பூனைக்கு மணிகட்ட அஞ்சுகிறதா தமிழ்த் தலைமைத்துவம்?

யுத்தம் என்பதைத்தவிர தாம் எப்படியெல்லாம் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம் என்பதையும் அவர்கள் மறந்துவிடவில்லை. இந்தக் கசப்பான அனுபவங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கியெறியும் முன்னர் மீண்டும் தொடங்கியிருக்கிறது காடையர்களின் அட்டகாசம். மழைக்காலம் தொடங்கியவுடன் அதனைச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் தமது கைவரிசையைக்காட்ட ஆரம்பித்தார்கள். வீடுகளில் கொள்ளை, இரவில் தனியாக நடமாடுவோரிடம் பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நபர்கள் உயிரைக் காவுகொள்ளவும் தயங்கவில்லை. சங்கானையில் பூசகர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகமும் நேற்றுமுன்தினம் வலிகாமம் வலய உதவிக் கல்விப்பணிப்பாளரின் கொலையும் மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. (மேலும்....)

மார்கழி 31, 2010

மானிடராய் பிறத்தல் அரிதா?

காற்றும், நீரும், வானும். நெருப்பும் பொதுவில் இருக்கின்றன. மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்கிறது என்று ஒரு கவிஞன் கூறியது போல இன்று பூமியை பிரித்து உனக்கு எனக்கு என்று சொந்தம் கொண்டு பாவங்களை செய்யும் இந்த பிறவி ஓர் அரிய பிறவியா? பெற்ற தாயை வீதியில் விட்டுவிட்டு அனாதை என்ற பட்டம் கொடுத்து முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் இந்தப் பிறவி ஓர் அரிய பிறவியா? தேவைக்கு அதிகமாக வைத்துக் கொண்டு தவறு செய்வதும். செய்த தவறை பிறர் கண்டு கொள்ளாமல் இருக்க பிறரையும் தவறு செய்ய சொல்லும் இந்த பிறவி ஓர் அரிய பிறவியா? கால்நடைகள் நடக்கும் பாதையில் புல் பூண்டுகள் வளர்வதையும் மனிதன் தடம் பதித்த பாதையில் புல் பூண்டு ஒழிவதையும் கண்டிருப்போம். பணம் என்கின்ற உயிறற்ற பொருளைப் பற்றி, மனம் என்கின்ற பொக்கிஷத்தை உதறும் இப்பிறவி ஓர் அரிய பிறவியா? காற்றும் நீரும் மாசுபடுத்தி ஓசோன் படலத்தில் ஓட்டை உண்டாக்கிய இப்பிறவி ஓர் அரிய பிறவியா? (மேலும்....)

மார்கழி 31, 2010

நகரப் பகுதிகளில் கட்டடங்களை அமைப்பதற்கான வரி நீக்கம்

வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் கட்டுமானப் பணிக்கென நகர அபிவிருத்தி அதிகார சபையால் அறவிடப்பட்டுவந்த ஒரு வீத வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த மாநாட்டிலேயே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இத்தகவலைத் தெரிவித்தார். எதிர்வரும் 10 ஆண்டுகளில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளை 40 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு ஏதுவாக வீடுகள் நீங்கலாக ஏனைய கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட ஒரு வீத வரி நீக்கப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத் துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மார்கழி 31, 2010

வலிகாமம் பிரதி கல்விப்பணிப்பாளர், ஆலயகுரு கொலைகள்

அரசு மீது அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி

உரிமைகளுக்கான வலையமைப்பின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறது அரசாங்கம்

தனது கருத்தை வெளிப்படுத்தியமை காரணமாக யாழ். வலிகாமம் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை என்ற தலைப்பில் உரிமைகளுக்கான வலைய மைப்பு  என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை முற் றிலும் தவறானது என்று அரசாங்க தக வல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாய கம் ஆரியரட்ன அத்துகல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கையொ ன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது யாழ்ப் பாணத்தில் உள்ள வலிகாமம் வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் இனந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எனினும் அந்த அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. (மேலும்....)

மார்கழி 31, 2010

The New Orleans fire and the conditions of youth in America

Five young men and three young women perished in a fire in an abandoned warehouse early Tuesday morning in New Orleans after lighting a fire to keep warm in the freezing temperatures. Flames engulfed the structure. Before firefighters could extinguish the blaze they were all dead, their bodies burned beyond recognition. (more...)

மார்கழி 31, 2010

திருமணத்திற்கு பின் ஆண்களின் குணநலன்களில் மாறுதல்

திருமணத்திற்குபின், ஆண்களின் குணநலன்களில் பெரும்மாறுதல் ஏற்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றம் குறித்து, மெக்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்சாண்டிராபட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 17 முதல் 29 வயது வரையிலான திருமணமான மற்றும் திருமணமாகாத, தலா 289 ஆண்களிடம் 12 ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களின் குணநலன்களில் மாற்றம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

மார்கழி 31, 2010

 

இணக்கம் ஏற்பட்டால் பேசுவோம், இல்லாவிட்டால் விடைபெறுவோம்

டர்புர் போராளிகளுடன் (ஜே.ஈ.எம்) இணக்கம் ஏற்படாவிட்டால் டோஹா பேச்சுவார்த்தைகளிலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்ளும் என சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பஷிர் தெரிவித்தார். இணக்கம் ஏற்பட்டால் இறைவனுக்கு நன்றி தெரிவிப்போம். இணக்கம் ஏற்படாது போனால் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகிக் கொள்வோம். அரசுக்கெதிராக ஆயுதமேந்துவோருக்கெதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் அதேவேளை அபிவிருத்தியை விரும்புவோரின் தோள்களை அரவணைப்போம் என்றும் சூடான் ஜனாதிபதி உரையாற்றினார். ஜனாதிபதியின் இந்த உரையை டர்புர் போராளிகள் கண்டித்தனர். போரைப் பிரகடனம் செய்யும் உரையாகவே இதை நாங்கள் கருதுகின்றோம். (மேலும்....)

மார்கழி 31, 2010

கிழக்கில் எங்கும் வெள்ளக் காடு: மூன்று இலட்சம் மக்கள் பாதிப்பு

அடைமழையினால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்: வீடுகள், வயல்கள், வீதிகள் வெள்ளத்தில்

கிழக்கு மாகாணத்தில் பல தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெருமளவான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் பார்க்கும் இடங்களெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுவாசல்களை இழந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளன. மக்கள் குடியிருப்புகள், வீதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை இனிமேலும் தொடருமானால் வெள்ள நிலைமை மேலும் மோசமடையுமென அஞ்சப்படுகிறது. (மேலும்....)

மார்கழி 31, 2010

மறைந்து வரும் மார்கழியின் அடையாளங்கள்

மார்கழியின் அடையாளங்களான வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போடுவது வழக்கொழிந்து வருகிறது. கிராமங்களிலும் இதேநிலை தொடருவதால், பாரம்பரியமான கோலமிடும் முறை காணாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. மார்கழி என்றாலே உடல் சிலிர்க்கும் பனிப்பொழிவும், வீட்டு வாசலில் வண்ணக் கோலங்களும், தூரத்தில் கேட்கும் பெருமாள் கோவில் சுப்ரபாத பாடலும் பெரும்பாலும் அனைவருக்குமே நினைவுக்கு வரும். இவை அனைத்தும் கடந்த சில ஆண்டுகள் வரை தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. இப்போது அவசர யுகத்தின் மாற்றத்தால், இவற்றில் பல மறைந்து வருகின்றன. புவி வெப்பமடைந்து மார்கழி குளிரும் காணாமல் போகும் காலம் விரைவில் வந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. (மேலும்....)

மார்கழி 31, 2010

கே.பி பத்மநாதன் இரகசியமாக யாழ் விஜயம், பிரத்தியேக நிகழ்வுகளிலும் விருந்துகளிலும் பங்குபற்றினார் முந் நாள் புலிகளின் உறுப்பினர்களில் சிலரையும் சந்தித்ததார்!

தன்னை இலங்கை புலனாய்வுத்துறையினரால் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாபன் கடந்த 21ம் திகதி ரகசியமாக யாழ்ப்பாணம் சென்று அங்கு அவருக்காகவே நடாத்தப்பட்ட சில பிரத்தியேக நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் என தெரியவருகிறது. தான் நடத்திவரும் நெரடோ என்னும் அமைப்பினூடாக உதவிகளைச் செய்யவே தான் யாழ் விஜயம்செய்ததாக அவர் செய்திகளைக் கசியவிட்டாலும், முந் நாள் புலிகளின் உறுப்பினர்களில் சிலரை இவர் அங்கு சந்தித்ததாகவும் அறியப்படுகிறது. புலிகளின் முந் நாள் ஊடகப் பொறுப்பளர் தயா மாஸ்டரைச் சந்தித்த கே.பி மேற்படி சில நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார். இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட சில முந் நாள் புலிகளின் உறுப்பினர்களையும் இவர் யாழில் சந்தித்ததோடு, தமது உறவினர்கள் வீட்டில் மதிய உணவு அருந்தியதாகவும் யாழில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழில் ஏழைகளுக்கு உதவச் சென்றதாக இவர் பரப்பிவரும் கதைகளுக்கு பின்னணி என்ன என்பதே தற்போது புலப்படாத விடையமாக உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மார்கழி 30, 2010

 

மார்ச்சில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

  • 21 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 268 பிரதேச சபைகளுக்கு தேர்தல்.

  • ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் வேட்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் சகல உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும்.

(மேலும்...)

மார்கழி 30, 2010

இலங்கை வன்முறையற்ற அமைதியான நாடாக மாறும்

இப்போது இராணுவத்திலும் பொலிஸிலும் இருந்து சட்டவிரோதமாக தப் பிச் சென்றவர்கள் தங்களிடமுள்ள சீருடைகளையும் ஆயுதங்களை யும் பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களிடமிருந்து பணத்தையும், நகை களையும் கொள்ளையடிக்கும் வன்முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக் கின்ற போதிலும் அவற்றின் எண்ணிக்கை இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு குறைந்துள்ளன. பாதுகாப்புச் செயலாளர் பாதாள உலகைச் சேர்ந்தவர்களையும், கொள்ளை, கொலைகளில் ஈடுபடுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தும் பணியை தானே முன்னெடுத்து செல்ல ஆரம்பித்ததை அடுத்து இந்த வன் முறைகள் குறைந்துள்ளன. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு நகைக் கடையிலிருந்து பண த்தை கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கொள்ளைக் கோஷ்டி மிக வும் குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் பொலிஸாரு டன் ஏற்பட்ட மோதலின் போது அனைவரும் கொல்லப்பட்ட சம்பவ த்தையும் நாம் இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். (மேலும்...)

மார்கழி 30, 2010

 

வவுனியா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை யிலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட ஒரு கைதியை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு வரவேண்டும் என கோரி கைதிகளில் ஒரு தொகையினர் நேற்றுக் காலை முதல் உண்ணாவிரதம் அனுஷ்டித்து வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய கைதிகள் உணவு பரிமாறுவதினை உண்ணாவிரதிகள் தடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிறைச்சாலையில் 86 கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மன்னாரிலிருந்து விளக்கமறியலுக்கு கொண்டுவரப்பட்ட பாதிரியார் மீது தாக்குதலை நடத்தியமைக்காக குறித்த கைதி அனுராதபுரம் விளக்கமறியல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மார்கழி 30, 2010

விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட" 

புலிகள் இயக்கம் – ஒழுங்கமைக்கும் நடவடிக்கையில் போராளிகள்??

 

இது வரை உள்வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த பரபரப்பு மிகுந்த செய்தி ஒன்றை இம் முறை நடந்த மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட என்றும் இல்லாதபடி வழமைக்கு மாறான வகையில் இம்முறை இரண்டு மாவீரர் நாள் அறிக்கைகள் வெளியாகின. ஒரு அறிக்கை வழமையைப் போன்று விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டிருந்தது. மற்றைய அறிக்கை விடுதலைப் புலிகளின் மரபுக்கு முரணாக அனைத்துலகப் பணியகத்தின் பெயரில் நவம்பர் 26 அன்றே வெளியிடப்பட்டிருந்தது. சில நாடுகளில் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. சில நாடுகளில் அனைத்துலகப் பணியகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது. (மேலும்...)

மார்கழி 30, 2010

படம் அல்ல - பாடம்

(செ.சண்முகசுந்தரம்)

அண்ணல் அம்பேத்கரைப் பற்றிய திரைப்படம் தமிழ் வடிவத் தில் சமீபத்தில் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. பல நீண்ட தடங் களுக்குப் பின்னர் இப்படத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். அண்ணலாக கேரளத்தின் மம் முட்டி அற்புதமான நடிப்பை வெளிப் படுத்தி உள்ளார். அம்பேத்கர் நவீன இந்தியாவின் சமூக வரலாற்றை வடிவமைத்தவர்களுள் மிகவும் முக் கியமானவர். பல நூறு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவித்து வந்த கொடுமைகளை எதிர்த்து உரத்துக்குரலெழுப்பியவர். (மேலும்...)

மார்கழி 30, 2010

கட்டற்ற மென்பொருளுக்கு மாறுகிறது கியூபா

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பெரும் சாதனை படைத்துள்ள கியூபா, கணினித்துறையில் சிறப்பு முத்திரை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. லாபத்தையே குறியாகக் கொண்டு இயங்கிவரும் பன்னாட்டு கணினி நிறுவ னங்களின் நடவடிக்கை களைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளிப்படை யான மற்றும் கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்தும் முயற்சி சர்வதேச அளவில் உள்ளது. லாபம் என்பது ஒருபுறமும், மறுபுறத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் மென் பொருட்கள் நாட்டின் பாது காப்பையே கேலிக்கூத்தாக் கும் வகையில் அமைந்துள் ளன என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. (மேலும்...)

மார்கழி 30, 2010

 

2010ல் இந்தியாவின் சிறந்த மனிதர், போர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

போர்ப்ஸ் இந்தியா இதழின் 2010ம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற பத்திரிகை போர்ப்ஸ் வர்த்தக உலகின் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த பத்திரிகையின் இந்தியப் பதிப்பின் 2010ம் ஆண்டு சிறப்பிதழ் வெளியாகியுள்ளது. இதில் தொழிலதிபர் ஆனந்த மஹிந்திரா, பீகாரின் சாதனை முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 3 இடியட்ஸ் தந்த ராஜ்குமார் ஹிரானி என 2010ம் ஆண்டில் பல துறைகளில் சாதனை படைத்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் எந்திரன் மூலம் சாதனை படைத்த ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும் தனது கட்டுரையில், ‘இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்... பாலிவுட்டை வென்றார்’, என்று புகழாரம் சூட்டியுள்ளது. அது மட்டுமல்ல, இந்திய அளவில் வசூலில் முதலிடம் எந்தப் படம் என்பதையும் தெளிவாக்கியுள்ளது இந்த பத்திரிகை. இதுவரை வசூலில் முதலிடத்தில் இருந்த ராஜ்குமார் ஹிரானியின் 3 இடியட்ஸ் படத்தை ரஜினியின் எந்திரன் இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

மார்கழி 30, 2010

ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி

தமிழ் மொழியில் சிறந்த முறையில் எழுத, வாசிக்க, பேசக்கூடிய வகையில் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன், தமிழ் பேசும் இரண்டாயி ரம் பேரை பொலிஸ் சேவையில் இணைத் துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். நாட்டிலுள்ள ஆறு பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளின் ஊடாக வருடாந்தம் 1200 பேர் வீதம் ஐந்தாண்டு காலத்தில் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சி வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போது தமிழ் மொழி மூலமான பயிற்சிகளை முடித்துக்கொண்ட 600 பொலிஸார் வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத் தப்பட்டுள்ள தாகவும் அவர் சுட்டிக்காட் டினார். (மேலும்...)

மார்கழி 30, 2010

முல்லைத்தீவில் இன்று 800 பேர் மீள்குடியமர்வு

உறவினர், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ள 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்றப்பட உள்ளனர். கரைதுறைப் பற்றில் உள்ள 33 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதோடு, இதுவரை இங்கு மீள்குடியேற்றப்படாதவ ர்களே இன்று மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைதீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார். மழை காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமாகியுள்ள தாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடி யேற்றப் பணிகள் பெருமளவு நிறைவடை ந்துள்ளதோடு, மேலும் 28 கிராம சேவகர் பிரிவுகளிலே மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளனர். கரைதுறைப்பற்றில் 13 கிராம சேவகர் பிரிவுகளிலும், புதுக்குடியிருப்பில் 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒட்டுச்சுட்டானில் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் மீள்குடியேற்றம் எஞ்சியுள்ளது.

மார்கழி 30, 2010

தமிழ் இனத்தின் உரிமைக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நடைபயணத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கும் “மாவீரன் நெடுமாறன்”!

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நெடுமாறன் என்றால் நன்கு அறிமுகமானவர் என்பதை அனைவரும் அறிவர்! இவர் 1983ஆம் ஆண்டு முதல் ஈழத் தமிழரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் நாட்டில் மக்கள் ஆதரவை இழந்து, தனிக்கட்சி ஆரம்பித்து அதனையும் இழந்து, இறுதியில் ஈழப்பிரச்சினைக்குள் நுழைந்து தனது வாழ்வை இன்றுவரை தமிழர் பணத்திலேயே நடத்தி வரும் இந்த நபர் வெளியில் நல்லவர், மறைவில் பெரும் சதிகாரர் என்பது யாருக்கும் தெரியாத விடயமாகும். பார்த்தால் அப்பாவி போன்ற தோற்றத்தை உடைய இந்த நபர் நயவஞ்சகத்திலும், சுய நலத்திலும் பெயர் பெற்றவர். (மேலும்...)

மார்கழி 30, 2010

சுதந்திர தெற்கு சூடானை உருவாக்க உதவுவேன் - ஒமர் அல்பஷிர்

தெற்கு சூடானுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்க உதவப்போவதாக சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பஷிர் தெரிவித்தார். சூடானின் தெற்குப் பிராந்தியத்துக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க ஜனவரி 09 ஆம் திகதி சர்வசன வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ஒமர் அல்பஷிர் தொலைக்காட்சியில் உரையாற்றினார். சூடானின் தென்பகுதியைக் கட்டியெழுப்ப நான் உதவி செய்வேன். தென்பகுதி மக்களுக்கு சகோதர நாடொன்றை உருவாக்குவதில் எமக்கு ஆட்சேபனையில்லை. அங்கு பிரச்சினையிருந்தால் எமக்கும் பிரச்சினையே. இதனால் உறுதியான நட்பு நாடொன்றை உருவாக்க வேண்டும். இதற்கு மக்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு மக்கள் வாக்களித்தால் சுதந்திரமான தெற்கு சூடானை உருவாக்கியவர் என்ற முதற் பெயருடையவராக நானே இருப்பேன். இப்போது பந்து மக்கள் வசம் உள்ளதென்றார்.

மார்கழி 30, 2010

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் ஊடாக 13 இலட்சம் அரச ஊழியர்கள் நன்மையடையவுள்ளனர். சுமார் 4 1/2 இலட்சம் ஓய்வூதியக்காரர் களுக்கும் நன்மை கிடைக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 1200 ரூபா முதல் 6000 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்புகள் ஜனவரி மாதம் முதல் அமுலாகிறது. 6000 ரூபா முதல் 21,000 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பு ஜுலை மாதம் முதல் அமுலாகும் எனவும் அவர் தெரிவித்தார். முகாமைத்துவ உதவியாளரின் அடிப்படை சம்பள படி வரிசையில் ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு ஊழியரின் சம்பளம் 1,300 ரூபாவினால் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கும். அந்த சம்பள படி வரிசையின் உச்ச மட்டத்தில் உள்ள ஊழியரின் சம்பளம் 3050 ரூபாவினால் அதிகரிக்கும். தொழில் அதிகாரி முதல் சம்பள படி வரிசையில் உள்ளவரின் சம்பளம் 1450 ரூபாவினாலும் உச்ச மட்டத்தில் இருப்பவரின் சம்பளம் 4000 ரூபாவினாலும் அதிகரிக்கும். (மேலும்...)

மார்கழி 30, 2010

வட, தென் கொரிய முறுகலை களைய


கொரியன் உறவு அமைச்சு முன்வர வேண்டும்

வட கொரியாவை பேச்சுக்கு வருமாறு அழைத்துள்ள தென் கொரிய ஜனாதிபதி சமாதானத்தை அடையக் கூடிய சாதனைமிக்க முயற்சிகளை தங்களால் மேற்கொள்ள முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் உள்நாட்டு அமைச்சில் நடந்த முக்கிய கூட்டமொன்றில் உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி மேலும் கூறியதாவது: வட கொரியாவுடன் உறவை ஏற்படுத்தும் எண்ணம் தூரத்தி லிருக்காது. கொரியர்களிடையே பேச்சுவார்த்தையை நடத்தி அச்சமான சூழ்நிலையை மாற்ற கொரியன் உறவு அமைச்சு உதவ வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். வட, தென் கொரியர்களின் உறவுகளைப் பேண கொரியன் உறவு அமைச்சு என்ற அமைப்பு உள்ளது. இது 1950ம் ஆண்டு யுத்தத்தில் பிரிந்துபோன வட, தென் கொரிய உறவுகளையும் குடும்பங்களையும் கண்காணிக்கவென ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். தற்போது எழுந்துள்ள பதற்ற நிலையை இந்த அமைச்சே முன்நின்று தீர்த்துவைக்க வேண்டுமென தென் கொரிய ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார். கடந்த இரண்டு மாதங்களாக வட, தென் கொரியாவுக்கிடையே சுமுகமான உறவுகள் இல்லை. போர் ஒத்திகைகளால் அங்கு பதற்றம் எழுந்துள்ளது.

மார்கழி 30, 2010

தாக்குதலுக்குள்ளான பாதிரியார் தனிமையாக தங்க சிறைச்சாலையில் ஏற்பாட

வவுனியா சிறைச்சாலையில் உள்ள பாதிரியாரை தனிமையாக தங்க சிறைச்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது. மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட போது பாதிரியார் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் குறித்த பாதிரியார் தனிமையாக தங்குவதற்கு ஏற்பாடுகள செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவிக்கின்றார். பாதிரியார் மீது தாக்குதல் மேற்கொண்ட மற்றும் சிறைச்சாலையில் பிரச்சினைகள் இடம்பெற காரணமாக இருந்த 11 கைதிகள் இன்று மாலை 5 மணியளவில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது வவுனியா சிறைச்சாலையில் 72 கைதிகள் வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்கழி 30, 2010

1.1 திரில்லியன் டொலர்களை குவித்த வளைகுடா எண்ணெய் உற்பத்தி நாடுகள்

வளைகுடாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தான் இந்த ஆண்டு எக்கச்சக்க வருமானம் பார்த்துள்ளன. 2010ம் ஆண்டு இந்த நாடுகளின் மொத்த வருமானம் 1.1 திரில்லியன் டொலர்கள் ஆக உயர்ந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத உச்சகட்ட வருமானம் இது. எண்ணெய் உற்பத்தி வழக்கத்தைவிட அதிகமாக இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாலும் இந்தளவு வருவாய் பெருகியுள்ளது. இந்த வருவாயின் அடிப்படையைக் கொண்டு எமிரேட்ஸ் தொழில் வங்கியின் தயாரித்துள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் 2010 ஆண்டு வளர்ச்சி 5.4 சதவீதம் என்றும் 2011ல் இது 6.6 சதவீதமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இப்போதைய போக்கின்படி பார்த்தால், வரும் 2011ல் 1.15 திரில்லியன் டொலர் அளவு வருமானம் குவிக்கும் இந்த வளைகுடா நாடுகள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 40 சதவீதத்தை தங்கள் வசம் வைத்துள்ளன வளைகுடா நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி 29, 2010

சுட்டுக்கொல்லப்பட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் உறவினருக்கு அமைச்சர் டக்ளஸ் ஆறுதல்

சுட்டுக்கொல்லப்பட்ட வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேற்படி நபர் இனந்தெரியாதவர்களால் உரும்பிராயிலுள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே அமைச்சர் அங்கு சென்றார். சம்பவம் குறித்து உறவினர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அங்கு விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். இக்கொலை தொடர்பான விசார ணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை இனங்காண்பதற்கு உடனடி நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காத விதத்தில் பொலிஸார் மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக் கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

மார்கழி 29, 2010

கூகுளுக்குப் பதிலாக புதிய தேடல் பொறி

சீன அரசு தன்னுடைய நாட்டிற்கே சொந்தமாக என தனியாக ஒரு தேடல் பொறியை உருவாக்கியுள்ளது. கோசோடாட்சின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தேடல் பொறி கூகுளுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளதாக சீனாவிலிருந்து வெளிவரும் பீப்பிள்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்திற்கும் சீன அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வந்தது. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான இந்த கூகுள் சீனாவின் அதிகாரப் பூர்வ தேடல் பொறியாக இனிமேல் பங்கு வகிக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் 420 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேடல் பொறியில் செய்திகள் வீடியோ, படங்கள் புளொக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் இவற்றுடன் இணைந்த பெய்டுடாட்காம் என்ற உள்ளூர் தேடல் பொறி மூலம் கூகுளில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என தேடல் பொறி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்கழி 29, 2010

ஜனாதிபதி மஹிந்த - இந்திய பாதுகாப்பு செயலர் சந்திப்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் வலு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்படுமென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அவர், நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இரு நாட்டுப் படைகளையும் உள்ளடக்கி யதாக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விஸ்தரிக்க வேண்டுமென இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். (மேலும்...)

மார்கழி 29, 2010

கடற்றொழிலாளரின் குடும்ப வாழ்க்கையில் ஒளி வீசும்

தேசிய கடற்றொழிலாளர் சம்மேளனம் ஏற்கனவே களுத்துறை, திருகோணமலை, புத்தளம், சிலாபம் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அதன் கிளைகளை ஏற்படுத்தி யுள்ளது. சம்மேளனம் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவர் களையும், கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களையும் அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டுள்ளது. தங்காலை, மாத்தறை, காலி, அனுராதபுரம், பொலன்னறுவை, மொன ராகலை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், குரு நாகலை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் மீன்பிடி சங்கங்களை ஏற்படுத்து வதற்கும் கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள 56 கடற்றொழிலாளர் சங்கங்களின் மூலம் தமது சம்மேளனத்தில் ஆகக்கூடிய அளவிலான அங்கத்தவர்கள் சேர்ந்துடுள்ளார்கள் என்று இந்த சம்மேளனத்தின் ஒன்றிணைப் பாளரான பிரேமசிறி பெரேரா தெரிவித்துள்ளார். (மேலும்...)

மார்கழி 29, 2010

கெமரா ஊடாக கொழும்பு நகரை கண்காணிக்கும் பணி இன்று முதல் ஆரம்பம்

பாதுகாப்பு கெமராக்களினூ டாக கொழும்பு நகரை கண்காணிக்கும் (சி.சி.ரி.வி.) பணிகள் இன்று 29ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் புறக்கோட்டையிலுள்ள பொலிஸ் நலன்புரி கட்டடத் தொகுதியில் அமைக் கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று பிற்பகல் 4.00 மணிக்கு விஜயம் செய்யும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சி.சி.ரி.வி. செயற்பாடுகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். முதற்கட்டமாக கொழும்பு நகரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வுள்ளது. பின்பு படிப்படியாக ஏனைய பிரதான நகரங்களில் கெமராக்கள் பொருத்தப்படவு ள்ளன. குற்றச்செயல்கள் மற்றும் விபத் துக்கள் போன்றவற்றை உரிய முறையில் கண்காணித்து உடனுக்குடன் தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

மார்கழி 29, 2010

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு

ஒரு கல்லை கிழக்கு நோக்கி நாம் நகர்த்ததக்க ஆற்றலை கொடுக்கும் போது, அதன் இயக்கம் (வெளியாகி மீண்டும் பொருளாகுகையில்) கிழக்கு நோக்கி நகரக்கூடிய அறிவை கிரகித்தே கிழக்கில் மீண்டும் தன் மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக் கொள்கிறது. இது தான் அடிப் படை நகர்ச்சிக்கான தத்துவம். அடுத்து காலம் பற்றிய அடிப்படைக்கு போவோம். காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. இது அல்லாமல் காலம் என எதுவும் இல்லை. காலம் என ஒன்று தனியே இல்லை. காலம் ஒரு மாயையே அல்லாமல் உண்மை அல்ல. சரி உதாரணங்களுடன் பார்ப்போம். பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாறுவது இயக்கம். இந்த இயக்கத்தின் படிப்படியான நிலைகளின் அளவீடை தான் காலம் என்கிறோம். இந்த அளவீடு என்பது அளக்கும் அல்லது அறியும் பொருளை பொறுத்தது. இதற்கு ஐஸ்ஸ்டீனின் சார்பியல் தத்துவமே மிகச்சிறந்த ஆதாரமாக இருக்கிறது. காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை (பொருளை) பொறுத்தது என்பது சரி.(மேலும்...)

மார்கழி 29, 2010

ஸ்தான்புல் பேச்சுவார்த்தை ஈரான் மேற்குலக முரண்பாடுகளை களையும்

ஸ்தான்புலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை கள் நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வாய் அமையுமென ஈரானின் யுரேனியம் தொடர்பான பேச்சாளர் ஜாலிலி தெரிவித்தார். சிரியாவின் ஜனாதிபதி பஷிர் அல் அஸாத்துடன் தலைநகர் டமஸ்கஸில் ஈரான் உயரதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் மெஹ்ராபி ஜாலிலி ஆகியோர் ஈரான் சார்பாகக் கலந்துகொண்டனர். யுரேனியம் செறிவூட்டல் அணு விவகாரம் அனைத்துக்கும் இவர்களே பொறுப்பாயுள்ளனர். இவ் விருவரும் கூட்டாக இணைந்து நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்ததாவது, ஜனவரி 05ல் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் மேற்குல கிற்கும் ஈரானுக்குமிடையிலான நீண்டகால முரண்பாடுகளை முடித்துவைக்கும். இருதரப்பு நலன்களையும் பாதுகாக்கும் ஆனால் அவசரமாக ஐ.நா. ஈரான் மீது நான்காவது தடவையாகவும் பொருளாதாரத் தடை விதித்தமை ஆரோக்கிய மான முடிவல்ல எனத் தெரி வித்தனர்.

மார்கழி 29, 2010

கிழக்கு மாகாண வெள்ளப் பாதிப்பு

20 மில்லியன் ரூபா அவசர ஒதுக்கீடு; சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று கூறினார். மட்டக்களப்பிற்கு 20 இலட்சமும் திருகோணமலை மற்றும் பொலன்னறு வைக்கு தலா 5 இலட்சமும் அனுப்பப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதேவேளை சேதமடைந்த வீடுகளுக்காக நஷ்டஈடு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, திருகோணமலை, இரத்தினபுரி, மாத்தறை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. (மேலும்...)

மார்கழி 29, 2010

குடாநாட்டில் மீண்டும் வீதிச்சோதனை ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள படையினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். குடாநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக நவாலி, சங்கானை, சித்தன்கேணி , தொடிலடி, மாசியப்பிட்டி, அளவெட்டி போன்ற பகுதிகளில் இவ்வாறான சோதனைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்குறிப்பிட்ட இடங்களில் இராணுவத்தினரால் வீதிகளில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் சிறிய ரக வாகனங்கள் வழி மறிக்கப்பட்டு வாகன சாரதியின் அடையாள அட்டை இலக்கம், வாகனத்தின் இலக்கம் என்பன பதிவு செய்யப்படுகின்றன. இந்தப் பதிவு நடவடிக்கைகள் இராணுவ உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைவாகவே தாம் மேற்கொள்வதாக வீதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவிக்கின்றார்.

மார்கழி 29, 2010

அமெரிக்காதான் மிகப் பெரிய மரண வியாபாரி!  மேற்கு ஆசியாவில் கொள்ளை லாபம்

அமெரிக்காதான் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஆயுதங் களை விற்பனை செய்யும் பெரிய வியாபாரியாக இருக் கிறது என்று ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் கூறியுள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மேற்கு ஆசிய நாடுகளுக்கு போர் விமானங்கள், ஏவு கணைகள் உள்ளிட்ட ஆயு தங்களைப் பெருமளவில் விற்றது அமெரிக்காதான் என்று ஆய்வு மையம் சேக ரித்த புள்ளிவிபரங்களிலி ருந்து தெரியவந்தது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரான்ஸ் நிறுவனங்கள் தான் அதிகமான அளவில் ஆயுதங்களைத் தயாரித்து வழங்கி வந்தன. தற்போது அமெரிக்க நிறுவனங்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. (மேலும்...)

மார்கழி 29, 2010

சீனா குறித்த பாப்பரசரின் உரைக்கு பீஜிங் அதிருப்தி

சீன விவகாரங்களில் தலையிடுவதை பாப்பரசர் நிறுத்த வேணடும் என அந் நாட்டு அரசின் பத்திரிகை கூறியுள்ளது. கடந்த 1949ல் சீனாவில் மா சே.துங் தலைமையிலான கம்யூ. கட்சி, ஆட்சியைப் பிடித்த பின், தாவோயிசம், பெளத்தம், இஸ்லாம், கத்தோலிக்க மற்றும் புராட் டஸ்டண்ட் கிறிஸ்தவம் ஆகிய ஐந்து மதங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டன. சீன தலைமை கத்தோலிக்க திருச்சபைக் கும், வத்திகானுக்கும் சம்பந்தம் கிடையாது. ‘தேசாபிமான திருச்சபை என்ற பெயரில், சீன அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் அது இயங்கி வருகிறது. சீனாவில் திருச்சபை ஆயர்களை வத்திகான் நியமிக்க முடியாது. அரசு தான் ஆயர்களை நியமிக்கும். இதனால் சீனா வத்திகான் உறவு முறிந்து 60 ஆண்டுகளாகிவிட்டன. (மேலும்...)

மார்கழி 29, 2010

மதுபான விளம்பரத்தில் நடிக்க சச்சின் மறுப்பு

மும்பை: மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க மறுத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மகாராஷ்டிர அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. ரூ. 20 கோடி வருமானம் தரும் முன் னணி மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்ததற்கு பாராட்டு தெரிவித்து சச்சி னுக்கு சமூகநீதித் துறை அமைச்சர் சிவாஜி ராவ் மோகே கடிதம் எழுதியுள்ளார். சச்சினை நாங்கள் பாராட்டுகிறோம். மதுவுக்கு எதிரான அரசின் பிரச்சாரத் துக்கு சச்சின் மறைமுகமாக உதவிசெய் துள்ளார். மற்றவர்களுக்கும் ஒரு உதா ரணத்தை ஏற்படுத்தியுள்ளார் என மோகே தெரிவித்துள்ளார்.

மார்கழி 29, 2010

சிறிய இடைவேளைக்குப்பிறகு மீண்டும் அரசியல் - லூலா

பிரேசில் ஜனாதிபதி பொறுப் பிலிருந்து விலகிய பிறகு சிறிய இடைவேளை விட்டுவிட்டு மீண்டும் அரசியலில் தனது பங்கை செலுத்தப் போவதாக தற்போதைய ஜனாதிபதி லூலா டி சில்வா அறிவித்துள்ளார். பிரேசில் மக்களிடம் வானொலி மூலம் ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், பிரே சிலை ஆட்சி செய்வது மிக வும் கடினமான விஷயம் என்று அனைவரும் என்னிடம் குறிப் பிட்டனர். அது சிக்கலானதாக எனக்குத் தோணவில்லை. மகிழ்ச்சிகரமாகவே அந்தப் பணியை நான் செய்தேன்.(மேலும்...)

மார்கழி 28, 2010

மனிதஉரிமைகள் - ஜனநாயகத்தின் மறுபக்கம்

(ரஞ்சித்குமார்)

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற கருத்தியலின் அடிப்டையிற்தான் ஜனநாயகம் தங்கியிருக்கின்றது. நாட்டின் பிரஜைகள் உரிமைகளுடன் வாழுகின்ற பெறுமானத்தின் அடிப்படையிற்தான் நாடொன்றின் ஜனநாயகத் தன்மை அளவிடப்படுகின்றது. உண்மையிலேயே மனிதஉரிமைகள் மதிக்கப்படுமாயின் இந்நாட்டில் பெரும்பாலான அரசியற் பிரச்சினைகள் தீர்ந்து விடுவதற்கு வாயப்பிருக்கின்றது. உரிமைகள் மதிக்கப்படாமையே பிரச்சினைகளிற்கான முதற்காரணம் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அரசியலமைப்பிலும், ஏனைய சட்டங்களிலும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் பிரசைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்கின்ற கேள்வியே மனிதஉரிமைகள் தினத்தில் அனைவர் முன்னிலையிலும் முன்வைக்கப்படுகின்றது. (மேலும்...)

மார்கழி 28, 2010

“உள்ளே வரவிட மாட்டோம்”  சதிகாரரை தூதராக்கியதற்கு வெனிசுலா எதிர்ப்பு

தூதராக நியமிக்கப்படு வதற்கு முன்பே வெனி சுலாவுக்கு எதிரான கருத் துக்களைச் சொல்லி வந்த லாரி பால்மரை உள்ளே நுழைய அனுமதிக்க மாட் டோம் என்று வெனிசுலா அரசு அமெரிக்காவிடம் திட்டவட்டமாகக் கூறியுள் ளது. வெனிசுலாவின் இடது சாரி ஜனநாயக அரசைக் கவிழ்ப்பதற்கான அமெரிக்க முயற்சிகள் அனைவருக்கு தெரிந்த விஷயமான ஒன் றாகும். கூடுதலாக விக்கிலீக் சின் அம்பலங்கள் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தை தோலுரித்துக் காட்டின. இந்நிலையில் வெனிசுலா வுக்கான அமெரிக்கத் தூத ராக லாரி பால்மரை நிய மிப்பதாக அமெரிக்கா அறி வித்தது. இந்த அறிவிப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்று வெனிசுலா அரசு அறிவித்தது. (மேலும்...)

மார்கழி 28, 2010

இலங்கையில் இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர்

பாதுகாப்புத்துறையில் இந்தியா - இலங்கை இடை யிலான ஒத்துழைப்பை அதி கரிப்பது குறித்து விவாதிக்க இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் பிரதீப்குமார் கொழும்பு சென்றுள்ளார். மூன்று நாள் பயணமாக அவர், கொழும்பு வந்துள்ளார். இலங்கையில் உள் நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு மேற்கொள்ளப் பட்டுள்ள இநத்ப் பயணத் தின்போது இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே, அயல்துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ், பாதுகாப்புத்துறை செயலா ளர் கோயபக்த ராஜபக்சே உள்ளிட்டோரிடம் பிரதீப் குமார் ஆலோசனை நடத்த வுள்ளார்.

மார்கழி 28, 2010

யாழில் தொடரும் துப்பாக்கிக் கலாசாரம் பிரதிக் கல்விப் பணிப்பாளரையும் பலிவாங்கியது

யாழ். வலிகாமத்தில் பிரதி கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மார்க்கண்டு சிவலிங்கம் (வயது 55) நேற்று நள்ளிரவு இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்குக் கொள்ளையிட வந்த ஆயுததாரிகள் தங்க நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதக்காலப்பகுதியில் இடம்பெற்ற நான்காவது தப்பாக்கிப் பிரயோகம் இதுவாகும்.

மார்கழி 28, 2010

யாழ். பழைய பூங்கா ரூ. 10 மில்லியனில் புனரமைப்பு

யாழ்ப்பாணம், பழைய பூங்கா நவீன முறையில் புனரமைக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இதற்காக வட மாகாண சபை பத்து மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள புனரமைப்பு பணிகள் ஏப்ரல் மாதம் அளவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வடபகுதியை நோக்கி வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வருகை நாளுக்கு நாள் கணிசமான முறையில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மார்கழி 28, 2010

பி.பி.சி. ஒலிபரப்பிய செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக பி.பி.சி. சிங்களச் சேவையான சந்தேஷியா வெளியிட்ட செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லையென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள் என்ற தலைப்பில் பி.பி.சி. சிங்களச் சேவையான சந்தேஷியா செய்தி வெளியிட்டிருந்தது. எனவே, ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க வேண்டாமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகரவுக்கு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்தச் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு, வெளிவிவகார அமைச்சருக்கும், அமரசேகரவுக்குமிடையில் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லையென்றும் அறிவித்துள்ளது.

மார்கழி 28, 2010

நவீன நாசகார ஆயுத ஒழிப்பு உடன்படிக்கை: ரஷ்ய பாராளுமன்றம் அனுமதி?

அணு ஆயுத போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைக்கு ஆதரவளித்துள்ள ரஷ்ய பாராளுமன்றம் இந்த ஒப்பந்தத்தில் செய்யப்பட வேண்டிய திருத்த வேலைகள் அடுத்த ஆண்டில் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விவாதம் ரஷ்யப் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆளும் கட்சியான ஐக்கிய ரஷ்ய கட்சி எம்.பி.க்கள் இந்த நாசகார அணுஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை வரவேற்றுப் பேசினர். அமெரிக்கா, ரஷ்யாவிடையே நல்லுறவைப்பேண இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும், இறுதிக்கட்ட வாக்களிப்பில் இத் திட்டத்தை ஆதரிப்போம் என அக்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜனாதிபதி பராக் ஒபாமா, மெத்விடிவ் ஆகியோரிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை ரஷ்யாவில் செல்லுபடியாக வேண்டுமானால் இதை ரஷ்ய பாராளுமன்றம் மூன்று வாக்கெடுப்பிலும் ஆதரிக்க வேண்டும்.

மார்கழி 28, 2010

பெண்களை தலிபான்கள் தற்கொலைக்கு பயன்படுத்துகின்றமை நிருபணம்

பாகிஸ்தானில் சென்ற சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் பெண்ணொருவரால் நடத்தப்பட்டது என அரசாங்கம் ஊர்ஜிதம் செய்துள்ளது. ஆப்கானிஸ்தானை அண்மித்துள்ள பாகிஸ்தானின் கஹார் என்ற ஊரில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. உலக உணவு ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் பொருட்களைப் பெறும் பொருட்டு மக்கள் இங்கு கூடியிருந்தபோதே இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடந்தது. அதில் 40 பேர் கொல்லப்பட்டனர். தலிபான்கள் இதை உரிமை கோரியிருந்தனர். ஆனால் தற்கொலைதாரி பெண் என்பதற்கான அனைத்து அடையாளங்களும் கிடைத்துள்ளாக பலுகிஸ்தான் மாவட்ட பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்தார். பெண்ணின் கூந்தல், கைபாகம், புர்கா என்பவை சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார் இப்பெண் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர். தலிபான்கள் தற்கொலை தாக்குதலுக்குப் பெண்களையும் பயன்படுத்துவதாக முன்னரும் பேசப்பட்டது. ஆனால் இம்முறை அது நிருபண மாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். புர்கா அணிந்த பெண்ணே இத்தாக் குதலை நடத்தியுள்ளார். பிரதமர் யூசுப் ராஸா கிலானி இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மார்கழி 28, 2010

காற்றில் பறக்கிறது ஒபாமாவின் வாக்குறுதி  குவாண்டனாமோ சிறை மூடப்படாது

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குவாண்டனாமோ சிறை யை மூடிவிடுவோம் என்று ஒரு ஆண்டுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த வாக்குறுதி இப் போதைக்கு நிறைவேறாது என்று தெரிய வந்துள்ளது. ஒபாமாவின் வாக்கு றுதியைத் தொடர்ந்து ஒரு ஆண்டில் குவாண்டனா மோவில் இருக்கும் கைதி கள் இடமாற்றம் செய்யப் பட்டு, அந்த சிறை மூடப் படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரது அறிவிப்பு ஒரு ஆண்டு ஆகி யுள்ள நிலையில், அமெ ரிக்க நிர்வாகத்தால் சிறையை மூட முடியாது என்று கூறப்படுகிறது. (மேலும்...)

மார்கழி 28, 2010

திமுக : மிசா முதல் ஸ்பெக்ட்ரம் வரை

(டி.கே.ரங்கராஜன் எம்.பி.)

இந்திய வரலாற்றில் 2010ம் ஆண்டு ஒரு ஊழல் நிறைந்த ஆண்டாகவே எதிர்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்தப்படும். காமன் வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல், பூனா, கொல்கத்தா உள் ளிட்ட பல்வேறு இடங்களில் ராணுவத்திற்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு ஊழல், இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் வெளிவந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊழல் கொடிகட்டி பறக்கிறது. இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த ஊழல்கள் குறித்த செய்திகள் ஊடகங் களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.திமுகவை அண்ணா அவர்கள் துவக்கும் போது, இந்த கட்சி சாமானியர்களுக்காகவும், குப்பன்களுக்காகவும், சுப்பன்களுக்காகவும் துவக்கப்பட்டுள்ளது என்றும், பஞ்சை பராரி களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் இது என்றும் கூறினார். ஆனால் இன்றைக்கு திமுக என்பது டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு சேவை செய்யும் கட்சியாக மாறிவிட்டது. மாநில சுயாட்சி கேட்ட அந்த கட்சி, மத்திய அதிகாரத்திற்கு சென்றவுடன் மாநில சுயாட்சிகளுக்காக போராடவில்லை. மாறாக அனைத்து துறைகளிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. (மேலும்...)

மார்கழி 27, 2010

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய கடுந்தொனியிலான கடிதம் - விக்கிலீக்ஸஸ்

புலிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் ஓகஸ்ட் 18 2005 அன்று இந்த இரகசிய தகவல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த இரகசியத் தகவலில் இவ்வாறு என்ட்விசில் கூறியிருக்கிறார். ஓகஸ்ட் 17 2005 அன்று நோர்வேயினது வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசனும் துணை வெளிவிவகார அமைச்சர் ஹெல்கேசனும் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்து உரையாடியபோது பிரபாகரனுக்கு என முகவரியிடப்பட்ட கடிதமொன்றைக் கொடுத்திருக்கிறார்கள் [கடிதத்தின் முழு விபரம் கீழே தரப்பட்டிருக்கிறது]. இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டுகைக்கமைய கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினது தூதுவர் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடுமாறு பிறசல்சுக்குப் பரிந்துரைக்கும். (மேலும்...)

மார்கழி 27, 2010

கனடாவில்

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட மூன்று தமிழ இளைஞர்கள் கைது!

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட மூன்று தமிழ இளைஞர்கள் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஹல்பா பிரதேசத்தில் வைத்து குறித்த கடனட்டை மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை இளைஞர்கள் மூவரும் ஏனையவர்களின் கடன் அட்டைத் தகவல்களை கொள்ளையிட முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடா ரொரன்ரோவில் வசிக்கும், சுகிர்தன் ஸ்ரீஸ்கந்தராசா, பரணீதரன் சடாச்சரம் மற்றும் தயாபரன் தனிநாயகம் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிகளின் தன்னியக்க பணப்பரிவர்த்தனை இயந்திரம் மீது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கடன் அட்டைத் தகவல்களைத் கொள்ளையிடும் கருவியைப் இவர்கள் பொருத்தியுள்ளனர். (மேலும்...)

மார்கழி 27, 2010

பலாலி விமானத்தளத்தை இராணுவத்திடமிருந்து பொறுப்பேற்று அதன் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது!

பலாலி விமானத்தளத்தை இராணுவத்திடமிருந்து பொறுப்பேற்று அதன் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் போக்குவரத்துக்கென தற்போதைக்கு ஆறு விமான நிலையங்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் அவை வர்த்தக விமான நிலையங்களின் தரத்துக்கு அமைவாக மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தற்போதைக்கு பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள பலாலி விமானத் தளம் மிக விரைவில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சினால் பொறுப்பேற்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரியங்கர ஜயரத்தின தெரிவித்துள்ளார். தற்போதைக்கு இரத்மலானை, கொக்கலை, வீரவில, அனுராதபுரம் மற்றும் பலாலி ஆகிய விமானத் தளங்களே உள்நாட்டுப் போக்குவரத்துக்கு தேவையான முறையில் மேம்படுத்தப்படவுள்ளன. அதற்கு மேலதிகமாக நுவரெலியாவின் சீத்தாஎளிய பிரதேசத்திலும் புதிய விமான நிலையமொன்றை அமைப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மார்கழி 27, 2010

இந்தியாவின் இலங்கை அகதிமுகாம்களில் விசேட சோதனை!

தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கான முகாம்களில் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ் நாட்டின் கியு பிரிவு காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து பெற்றுக்கொடுத்த தருகிறோம் என தெரிவித்து இவர்கள அவுஸ்ரேலியாவுக்கு கடத்தும் நபர்களை கைதுச் செய்வதற்கே இந்த விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆட் கடத்தல் மோசடி தொடர்பில், முகாம்களில் இருக்கும் மக்களுக்கு தெளிவுப்படுத்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக கியு பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். (மேலும்...)

மார்கழி 27, 2010

தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் தேவைகளை முன்வைக்க வேண்டும் - திஸ்ஸ வித்தாரண

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக தமது தேவைகளை ஒரு குழுவாக ஆராய்ந்து ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என விஞ்ஞான அலுவல்கள் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஆராயும் உபகுழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரும் அடங்குகின்றனர். இவ் உறுப்பினர்கள் ஒன்றிணை ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசியல் தேவைகள் போன்ற வற்றை ஆராய்ந்து ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்க வேண்டும். (மேலும்...)

மார்கழி 27, 2010

தேசிய கொடிக்கும், தேசிய கீதத்துக்கும், மதங்களின் கொடிகளுக்கும் மதிப்பளிப்போம்

தேசிய கீதத்திற்கும், தேசிய கொடிக்கும் என்றென்றும் மரியாதை யையும், மதிப்பையும் வைத்திருக்க வேண்டும் என்ற நல்லொழுக்கமும் இந்த பிள்ளைச் செல்வங்களின் மனதில் நிரந்தரமாக பதிந்து இருக்க வேண்டும். நாட்டின் பிரதான மதங்களின் கொடிகளான பெளத்த கொடி, இந்துக்களின் நந்திக்கொடி, இஸ்லாமி யரின் பிறைக் கொடி, கிறிஸ்தவர்களின் மதத்தை அடையாளம் காட்டும் கொடி ஆகியவற்றை ஜனரஞ்சனப்படுத்த வேண்டும். இந்நாட்டிலுள்ள சகல இன, மதங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் நாட்டுப்பற்றுடன் துளிர் விட்டு வளரும் இதே வேளையில் அவர்கள் மனதில் மற்ற மதங்களை கெளரவிக்கும் நற்பண்பும் குடிகொள்ளும். இதன் மூலம், நாட்டில் உண்மையான இன ஐக்கியத்தையும், மதங்களிடையே பரஸ்பரம் நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்தி இலங்கையில் என்றென்றும் சமாதான வெண்புறா ஆகாயத்தில் அச்சுறுத்தல் எதுவுமின்றி கம்பீரமாக பறந்து செல்வதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். (மேலும்...)

மார்கழி 27, 2010

மாணவனுக்கு ஆசிரியர் வழங்கும் தண்டனை மனோநிலையை பாதித்து விடலாகாது!

ஆழ் மனதில் எதிரான பதிவுகள் ஆபத்தானவை

(மருதமுனை ஏ. ஆர். ஆப்துல் ஹமீட் உளவளத்துணையாளர்)

தண்டனை பெறுகின்ற மாணவனின் மனோநிலை (Attitude) வேறு, தண்டிப்பவரின் மனோநிலை வேறு. இந்த இரு தரப்பினரதும் மனோநிலைகள் ஒன்றுபோலிருக்க நியாயமேயில்லை. மாணவன் குற்றம் புரிந்த மனோநிலையிலும், ஆசிரியர் அந்த மாணவனை திருத்தும் மனோநிலையிலும் காணப்படுவர். இவ்விடத்தில் இலகுவான தண்டனைகள் (Light beating) வழங்கப்படுவதில் யாருக்கும் ஆட்சேபனைகள் இல்லை. ஆசிரியர் வீட்டு வேலைகள் (Home Work) கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஆர்வம் காட்டாத மாணவர்களை ஆசிரியர் தட்டிக்கேட்பது நியாயமும்தான். தர்மமும்தான்!ஆனால் மாணவர்களுக்கு மனவழுத்தம் (Stress)  ஏற்படுத்தக்கூடியதும் கடுமையான காயங்களை விளைவிக்கக்கூடிய உடல் ரீதியான தண்டனைகளும் Physical Punishment  இந்த சாதாரண ‘வீட்டு வேலை செய்யாமை’ போன்ற விடயத்தில் பொருத்தமில்லை என்பதே முன்வைக்கப்படும் விவாதம். தண்டிப்பவரினதும், தண்டனை பெறுபவரினதும் மனோநிலைகள் (Attitude), மனோவெழுச்சிகளாக (Emotions) மாற்றடையும்போது அங்கே முரண்பாடுகள் ஆரம்பமாகும். இதுவொரு ஆபத்தான கட்டமாகும். (மேலும்...)

மார்கழி 27, 2010

'மில்ல சொயா' மெய்மை குன்றாத கலைப்படைப்பு

நல்ல சினமாவுக்கான ஒரு தேடல்

(ஜி. ரி. கேதாரநாதன்)

‘மில்ல சொயா’ திரைப்படத்தின் கதைக்களம் நீர்கொழும்புக்குப் போகும் வழியில் அருகிலுள்ள ‘கரையோர சிங்களக் கிராமத்தில் ஆரம்பிக்கிறது. தந்தையரோ அல்லது குடும்பத் தலைவர்களாக இருப்போரே துருப்பிடித்த என்ஜின்கள் கொண்டவள்ளங்களுடன் மல்லுக்கட்ட தாய்மார் வேறு வழியின்றி வருமானத்திற்காக (சட்ட விரோதமாக) கசிப்புக் காய்ச்ச வேண்டிய நிர்ப்பந்தம். தொழிலின்மையும் வறுமையும் இதனால் வன்முறை கோலோச்சும் ஒரு கரையோரக் கிராமம். அன்றாட வாழ்க்கைக்கே பெரும் போராட்டமாக இருக்கிறது. சராசரி நடுத்தர வர்க்கத்தினராக இருந்து ஓரளவு விளிப்பு நிலைக்கு வந்துவிட்டவர்கள். கிளர்ச்சி காலகட்டத்தில் சிறுவர்களாக இருந்தோர் வளர்ந்து, யுத்தம் தொடரும் காலகட்டத்தில் இளைஞர்களாயிருக்கின்றனர். நிரந்தர தொழிலற்ற இவர்களுக்கு ஒன்றில் இராணுவத்தில் சேரலாம். இல்லையேல் ‘கிரிமினல்’ வாழ்க்கை. இவையிரண்டும் இல்லையென்றால் எஞ்சியிருப்பது ஒன்றேயொன்றுதான். காணியை ஈடுவைத்தாவது எவ்விதத்திலும் வெளிநாடு சென்று உழைப்பது. ஒருவகையில் இலங்கையின் இருண்ட காலப் பகுதி இளைஞர்கள் இவர்கள். (மேலும்...)

மார்கழி 27, 2010

ஐவரிகோஸ்ட் நிலைமைகள் மோசமடைவதால் வெளிநாட்டுப் படைகள் அனுப்பப்படும் சாத்தியம்

ஐவரிகோஸ்டில் நிலைமைகள் நாளாந்தம் மோசமடைந்து செல்கின்றன. ஐவரிகோஸ்டின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து இதுவரைக்கும் 14 ஆயிரம் பேர் ஸைபீரியாவுக்குத் தப்பி யோடியுள்ளனர். அரசியல் வன்முறைகளால் இதுவரைக்கும் இருநூறுக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆபிரிக்க நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஜனாதிபதி கபகோ பதவி விலக வேண்டுமென ஐ. நா. செயலாளர் மற்றும் அமெரிக்க வெளிநாட்டமைச்சர்கள் விடுத்த வேண்டுகோளையும் கபகோ நிராகரித்துள்ளார். (மேலும்...)

மார்கழி 27, 2010

கிழக்கில் தொடர்ந்தும் அடைமழை

மட்டு. மாவட்டத்தில் நிலைமைமோசம், ஒரு இலட்சத்துக்கும் அதிகம் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கடும் மழையால் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 29 ஆயிரத்து 421 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்மழையால் திருகோணமலை மாவட்டமும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 594 குடும்பங்களைச் சேர்ந்த 2,464 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி, கிரான், ஏறாவூர் நகர், வெல்லாவெளி, வாகரை, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே வெள்ளத்தினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (மேலும்...)

மார்கழி 27, 2010

வாகன நெருக்கடியால் திணறும் சீனா, கார்களை வாங்க புதிய விதிமுறை

சீனத் தலைநகர் பீஜிங்கில் பெருகிவரும் கார்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளைச் சமாளிக்க, அடுத்தாண்டு முதல் கார் வாங்குவதில் பல்வேறு கண்டிப்பான விதிமுறைகள் அமுல்படுத்தப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது. உலகின் முதல் மிகப் பெரிய கார் சந்தை என்ற இடத்தை 2009 இல் அமெரிக்காவிடம் இருந்து தட்டிப்பறித்து பெருமை அடைந்தது சீனா. நகர மயமாக்கல் மற்றும் வாழ்க்கை நவீனமயமாதல் போன்றவற்றால் அந்நாட்டில் கார்களின் எண்ணிக்கை அதிகளவில் அதிகரித்து விட்டது. அதேநேரம் உலகில் மோசமான போக்குவரத்து நெருக்கடி மற்றும் மாசுபட்ட சுற்றுச் சூழலில் பீஜிங்குக்குத் தனியிடமும் உண்டு. தற்போது அந்நகரில் மட்டும் 48 லட்சம் கார்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்தாண்டில் மட்டும் ஏழு இலட்சத்து 80 ஆயிரம் கார்கள் புதிதாக வாங்கப்பட்டன. (மேலும்...)

மார்கழி 27, 2010

11 மாவட்டங்களில் பெரும் சோகம், கதறி அழுது கண்ணீர் அஞ்சலி

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட ஆறாண்டு நிறைவை வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதி மக்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர். உறவுகளையும், உடன்பிறப்புகளையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். கிழக்கில் உறவுகளின் கல்லறைகளுக்கு தீபமேற்றி, மலர்த்தூவி நெஞ்சுருக நினைவு கூர்ந்ததைக் காணக்கூடி யதாக இருந்தது. மத வழிபாடு களில் கலந்துகொண்ட மக்கள் ஆழிப் பேரலை அள்ளிச்சென்ற உறவுகளின் நினைவாக அன்னதானம் வழங்கியதுடன் தண்ணீர் பந்தல்களையும் நடத்தினர். சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளுக்கு அருகில் ஒன்று கூடிய உறவுகள், கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். கிழக்கின் கரையோர கிராமங்களில் நேற்றுக் காலை பெரும் சோகம் கெளவியிருந்ததை அவதானிக்க முடிந்தது. தென் பகுதியில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட இடங்களிலும் மக்கள் சோகமே உருவாக உறவுகளை நினைவுகூர்ந்தனர். உறவுகளின் பிரிவுத்துயரில் தோய்ந்த மக்கள் நீண்ட நேரம் ஓரிடத்தில் குழுமியிருந்து அஞ்சலி செலுத்தினர். இவ்வாறு 11 மாவட்டங்களில் சுனாமியின் சோக வடு நேற்று மீண்டும் மக்களை ஞாபகமூட்டிச் சென்றுள்ளது.

மார்கழி 27, 2010

பதவி விலகும் பிரேஸில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இறுதி உரை

பிரேஸில் ஜனாதிபதி லூலாடி சில்வா நாட்டு மக்களுக்கு தனது இறுதி உரையை கிறிஸ்மஸ் தினத்தன்று நிகழ்த்தினார். எட்டு வருடங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கு நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த பதவி விலகவுள்ள லூலாடி சில்வா புதிய ஜனாதிபதியின் கீழ் உலகில் தலைசிறந்த நாடாக பிரேஸில் திகழும் என்றார். தனது எட்டாண்டு காலத்தில் நடத்திய சாதனைகளை அவர் பட்டியலிட்டார். வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, இயற்கை வளங்களை பாதுகாத்தமை, பாதுகாப்பான வாழ்க்கை முறை என்பவை தனது எட்டாண்டு கால சாதனை எனப் புகழ்ந்துரைத்தார். புத்தாண்டுடன் பதவி விலகி விடுவேன். அதன் பின்னர் எனது எதிர்காலம் என்னவென்பதை என்னிடம் வினவாதீர்கள். ஏனென்றால் முன்னர் எனக்கு செளகரியமான வாழ்க்கையை நீங்கள் தந்துவிட்டீர்கள். இனிமேல் என்னைப் பாராமல் நாட்டின் எதிர்காலத்தைப் பாருங்கள். (மேலும்...)

மார்கழி 27, 2010

ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி:  இஸ்ரோ  விஞ்ஞானிகள்   தீவிர ஆய்வு

ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வியில் முடிவடைந் தது குறித்து இந்திய விண் வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய இஸ் ரோவின் செய்தித் தொடர் பாளர் எஸ்.சதீஷ், ஜிஎஸ் எல்வி ராக்கெட் எப்படி தோல்வியடைந்தது என் பது குறித்து ஒரு விஞ்ஞானி கள் ஆய்வு செய்து வருகி றார்கள் என்றும், இது குறித்து ஓரிரு நாட்களில் ஒரு குழு அமைத்து விவா திக்கப்படும் என்றும் தெரி வித்தார்.  ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவி லிருந்து சனிக்கிழமை ஜி சாட் - 5 பி என்ற தொலைத் தொடர்பு சேவைகளுக் கான செயற்கைக்கோளு டன் ஜிஎஸ்எல்வி - எப்06 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் மேலெழும்பிய சிறிது நேரத் திலேயே ராக்கெட் வெடித் துச் சிதறியது. ரஷ்யாவின் கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த ராக் கெட், 30 மணி நேர கவுன்ட் டவுனில் மிகச்சரியான முறையில் இயங்கியது குறிப் பிடத்தக்கது. மேலெழும் பும் வரை துல்லியமாக செயல்பட்ட நிலையில் எப் படி வெடித்தது என் பதை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

மார்கழி 26, 2010

53 வது பிறந்த நாள் நினைவு தினம்

அமரர் றொபேட் தம்பிராசா சுபத்திரன்(மத்திய குழு உறுப்பினர், பத்மநாபா -ஈ.பி.ஆர்.எல்.எப்.முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்)

அமரர் தோழர் றொபேட் தம்பிராசா சுபத்திரன்
(ஈ.பிஆர்.எல்.எவ் மத்திய குழு உறுப்பினர் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்)

தேச விடுதலையை நேசித்து

மானிட தர்மத்தை மதித்து நின்றதால்
ஏக பிரதிநிதித்துவத்தின் எதிரியானாய் -

இடர்களின் நடுவேயும்
தஞ்சமென மண்டியிடாது

தலைநிமிர்ந்து நின்று வீர காவியமானாய்
காற்றில் கலந்த போதும்

சாய்ந்துவிட்ட வல்லாதிக்கம் - உன்
கருத்தின் வலிமையை பறைசாற்றி நிற்கின்றது.
இனி நிமிர்ந்தெழும்

நீ உயர்த்திப் பிடித்த மானிட தர்மம்

மார்கழி 26, 2010

'எல்லோருக்கும் என் இனிய நத்தார் வாழ்துக்கள் உரித்தாகட்டும்' - வே.பிரபாகரன்

யேசு பாலகனின் பிறப்பின் மகிமை அறியாதோர்; என்னைபோன்று பூலோகத்திலும், மேல்லோகத்திலும்  துன்பவியல் (நரக) வாழ்வை அனுபவிப்பார்கள் - வே.பிரபாகரன். சமாதானமும், சந்தோசமும் நமது நாட்டில் இப்பொழுது நிலவுவதாக நான் அறிகின்றேன். நான் இப்பொழுது மேல்லோகத்தில் (நரகலோகத்தில்)  இருப்பதால் இந்த மாதரியான ஒரு நல்ல சூழ்நிலை நமது நாட்டில் காணப்படுவதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகின்றேன். இருந்தாலும் எனக்கு அடிமைபபட்டிருந்த வன்னி மக்கள் என்னை அம்போ என்று விட்டு விட்டு ஓடியதால் இன்னமும் துன்பத்தை அனுபவித்து கொண்டிருப்பதாக இங்கு (இறந்த பின்) வருபவர்கள் சொல்லுகிறர்ர்கள் அதை நினைத்து கொஞ்சம் சந்தோசமாக இருக்கின்றேன். நான் நாட்டில் இப்பொழுதும் உயிருடன் இருந்திருந்தால இப்படியெல்லாம் மக்களை சந்தோசமாக இருக்கவிட்டிருப்பேனா? எத்தனை குண்டுகள் வைத்து எத்தனை உயிர்களை குதறி எடுத்திருப்பேன், எத்தனை கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் வாங்குதல், எத்தனை களம் அமைத்து பலபேரின் பிள்ளைகளை பலிகொடுத்திருப்பேன். அதற்குள் அற்ப ஆயுளில் என்னை இங்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். (மேலும்...)

மார்கழி 26, 2010

சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் பிரவேசிக்கும் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நபர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் பிரவேசிக்கும் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நபர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை! சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் பிரவேசிக்கும் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நபர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களும், வர்த்தகப் பிரமுகர்களும் இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்கும் நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவளித்து வந்த முக்கிய வர்த்தகர் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து டுபாய் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புலி முகவர் ஒருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் இந்த நபர்கள் போலியான போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு முயற்சித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.

மார்கழி 26, 2010

ஐ.தே.க. தலைவர் பதவிக்கு சஜித் போட்டியிடுவது ஊர்ஜிதம் _

ஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி இரவு போதி ரணசிங்கவின் வீட்டில் நடந்த கூட்டமொன்றில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. இதுபற்றி மேலும் கூறப்படுவதாவது, கட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்சென்ற சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் அன்றைய தினம் கூடி அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டுமென ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர். (மேலும்...)

 

மார்கழி 26, 2010

Dear UN  Advisory Panel of Experts on Sri Lanka:

I have read with impassioned interest the National Council of Canadian Tamils  (NCCT) submission –Towards Global Justice: Accountability for War Crimes in Sri Lanka, which the four of the above Canadian politicians have endorsed. Although the submission made by the National Council of Canadian Tamils which claims to be a grassroots organization composed of elected representatives from across Canada, I am afraid this submission is suspect as it is an organization that is secretly working to re-establish and resurrect the Liberation Tigers of Tamil Eelam (LTTE) terrorists to fight another day to establish their mythical separate Tamil state, Eelam, thus they have an axe to grind which is far from being honourable. (more...)

மார்கழி 26, 2010

வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும- ஜனாதிபதி!

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்தும் புலம் பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்களுக்கு மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். (மேலும்...)

 

மார்கழி 26, 2010

தமிழகத்தில் மீண்டும் புலிகளின் உறுமல் சத்தம்!

இலங்கையில் இனி காலூன்ற முடியாத நிலையில், இந்தியா, கனடா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு, புலிகள் இயக்கத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் புலிகள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்களால் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் உயிருக்கு,புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களால் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது, புலிகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளதையும், தலைவர்களை கொல்லும் தங்களின் கொள்கையை கைவிடவில்லை என்றும் தெளிவுபடுத்துகிறது. (மேலும்...)

 

மார்கழி 26, 2010

வன்னியில் களமிறங்கியுள்ள இளம் தலைவர்கள்

யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்போது முழுமையான அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருந்து வரும் வன்னிப் பிரதேச மக்கள் தமது எதிர்காலம் குறித்த சிந்தனையில் ஆழ்ந்துள்ளனர். இறுதி யுத்தத்தின் தாக்கம் இன்னமும் இவர்களது மனதை விட்டகலவில்லை. இருந்தும் தாம் இனிமே லும் பழையவற்றை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதையும் இய ல்பு வாழ்வுக்கு முழுமையாகத் திரும்ப வேண்டும் என்பதையும் இவர்களுடன் உரையாடும்போது யாருமே உணரலாம். (மேலும்...)

மார்கழி 26, 2010

புலத்தில் ஒன்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேறொன்றும்!

(க. சிவராசா)

தமிழ்க் கூட்டமைப்பு அரசாங் கத்திற்குத் தமது நல்லெண் ணத்தைக் காட்டி வருவதாகவும், ஆனால் அரசாங்கம் அதனைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டி கருத்துத் தெரிவித்து வருகின்றனர். வரவு செலவுத் திட்டத்தின்போது எதிர்த்து வாக்களிக்காமை, அபிவிருத்தி மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் பங்கேற்றமை எனத் தாம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினாலும் அரசாங்கம் கைமாறாக எதுவுமே செய்யவில்லை என்பதே இவர்களது குற்றச்சாட்டாக உள்ளது. தமது நல்லெண்ணத்திற்கு அரசு என்ன கைமாறைச் செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் மாறாக தாம் இவ்வாறு அனுசரணையாகச் செயற்படுவதால் தம்மை ஒன்றும் குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும், இதனைத் தமது பலவீனமாக அரசாங்கம் கருதக் கூடாது எனவும் சவால் விடுத்துள்ளனர். (மேலும்...)

மார்கழி 26, 2010

தமிழ் மொழியும் சீர்திருத்தங்களும்

இன்றைய எழுத்துச் சீர்திருத்தம் பின்வருமாறு அமைவது பொருத்தமுடையதாகும்.

அ) எழுத்துக் குறைப்பு

ஆ) தேவையான ஒலிகளுக்கு ஏற்ப எழுத்துக்களை உண்டாக்கல்

இ) வரிவடிவத்தில் மாற்றம் உண்டாக்கல்

ஈ) விஞ்ஞானத்தோடு இணைய சில ஆலோசனைகள்

என்றவாறு சீர்திருத்தங்கள் அமையலாம்.  (மேலும்...)

மார்கழி 26, 2010

50,000 வீடமைப்புத் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுப்பு - இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்லப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பாக சில ஊடகங்களில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டதை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரா லயம், வடக்கின் 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. முதற்கட்ட நிர்மாணப் பணிகளை இந்திய நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் பேர்ஃவெப் லிட்டட்’ நிறுவனம் ஆரம்பித்திருப்பதாகவும், இதில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் ஆரம்ப மாகும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட் டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்...)

மார்கழி 25, 2010

மார்கழி 25, 2010

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நான் நேரடியாகத் தலையிடுவேன் -ராகுல்காந்தி!

இன்று தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தியுடன் தமிழகத்தைச் சார்ந்த அறிவுஜீவிகள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் ஆகியோரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடுவதற்கான ஏற்பாடு ஒன்றை காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைத்திருந்தது. இச்சந்திப்பின் போது பல் வேறு விதமான கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதிலளித்தார். இலங்கைத் தமிழர் விஷயத்தில் இந்தியா நடந்து கொண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பிய போது இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு ஏராளமாகச் செய்திருக்கிறது என்றார். என்ன செய்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை ஊடகவியலாளர் கேட்ட போது என்ன செய்ய வேண்டும் என எதிர்ப்பாக்கிறீர்கள் என்று ராகுல் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள பத்திரிகையாளர்கள் ஆட்சியில் இருப்பது நீங்கள்தான் உங்களுக்குத்தான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிய வேண்டும். என்று சொல்ல நான் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அவதானித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் விரைவில் நான் நேரடியாகத் தலையிடுவேன். என்று கூறியுள்ளார் ராகுல்காந்தி.

மார்கழி 25, 2010

"The 13th Amendment to the Constitution must be properly implemented": - Dharmalingam Siddharthan

(by Sergei DeSilva-Ranasinghe)

With the end of Sri Lanka’s civil war in May 2009 the situation facing the Tamil population is still dominated by genuine concerns for the future, perhaps most notably in the political arena. In this context, the views expressed by Dharmalingam Siddharthan, the leader of the moderate People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE), which has a support base in the Vanni and the Jaffna Peninsula, are of much interest. In an interview conducted by Sergei DeSilva-Ranasinghein June 2010, Dharmalingam Siddharthan provides his opinion on contentious issues such as war crimes allegations, the flight of asylum seekers, whether the Liberation Tigers of Tamil Eelam (LTTE) can revive, the aspirations and grievances of Tamils in Sri Lanka, and future of the LTTE and the Tamil diaspora. (more...)

மார்கழி 25, 2010

பெரும் மதிப்பிற்குரிய தமிழ்மூதறிஞர் கலாநிதி க.தா. செல்வராஜகோபால் (ஈழத்துப்பூராடனார்)அவர்கள் நேற்று  21-12-2010 அன்று மிஸ்ஸசாகாவில் இறைவனடிசேர்ந்தார்.

மட்டக்களப்பு செட்டிபாளயத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவாமி விபுலாநந்தரின் நேரடிமாணவரான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை மற்றும் சிறந்த தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்றதுடன் ஒருபயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக இலங்கையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 35 வருடங்களாக கனடாவில் வசித்து வந்த ஈழத்துப்பூராடனார் என அறியப்பட்ட கலாநிதி க.தா. செல்வராசகோபால் அவர்கள் கனடாவின் தமிழ் கலை, கலாச்சாரம் மற்றும் தமிழ்இலக்கியத்தின் முன்னோடியாவார். கனடாவில் முதன்முதலாக அச்சியந்திர சாலை நிறுவி தமிழ்பதிப்புக்களை மேற்கொண்டதுடன் 'நிழல்' என்னும் வாரமலரையும் கனடாவில் முதலில் வெளியிட்டவர். தமிழ் எழுத்துக்களை கணணியில் வடிவமைப்பதிலும் தமிழ்மொழிக்கல்வியை இலவசமாக தமிழ்மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதிலும் தன் மனைவி திருமதி பசுபதி செல்வராசகோபாலுடன் இணைந்து பணியாற்றிய ஒருசிறந்த சமூகநல நோக்கம் கொண்ட உயர்ந்த தமிழறிஞர் ஆவார். (மேலும்...)

மார்கழி 25, 2010

ஜூனியர் கோமாளியின் (விகடன்) சொதப்பல் செய்திக்கு ஈ.என்.டி.எல்.எப். தெளிவான விளக்கம்!

26-12-2010 தேதியிட்ட ஜூனியர் கோமாளியின் (விகடன்) “தமிழ் நாட்டில் தங்கி இருந்த “காட்டிக்கொடுப்பு” கருணா”, என்ற தலைப்பில் ஜூனியர் விகடன் “ஸ்பெசல் டீம்” என்ற சில கோமாளிகள் கதை எழுதியுள்ளனர். இந்தக் கோமாளிகள் பற்றி எங்களுக்குத் தெரியாது! வாராவாரம் ஈழத் தமிழர்கள் பற்றி கதை விட்டுப் பணம் சம்பாதித்து வரும் வார இதழின் இது போன்ற தவறான பிரசாரங்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் எற்படுத்தப்பட்டிருக்கிறது எங்களுக்கு. கருணா துரோகி என்றால் இவர்களும் துரோகிகள் தானே என்ற தோரணையில் எழுதப்பட்டிருக்கும் அக்கட்டுக்கதையில் விகடன் புலிகளிடம் பணம் பெறுவார்கள், சிங்கள அரசிடமும் பணம் பெறுவார்கள் என்பதை தங்களை அறியாமலேயே வெளிப்படுத்தியுள்ளனர் அந்த “டீம்”. (மேலும்...)

மார்கழி 25, 2010

தேசிய கீதம் தேசியப் பிரச்சனையா? இனப்பிரச்சனையின் ஒரு அங்கமா?

(இரா.வி .விஸ்ணு)

"இலங்கையில் தேசிய கீதம் ஒன்றே இருக்கவேண்டுமென்பது சாதகமாக பரிசீலிக்கப்படவேண்டிய விடயமே". அப்படியாக இருந்தால் தேசிய கீதத்தினை முற்றாக மறுசீரமைக்கலாம். தமிழ் , சிங்கள மொழிகள் கலந்த ஒரு தேசிய கீதத்தினை இலங்கையின் தேசியகீதமாக மறுசீரமைப்பது இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாக இருக்குமென தோன்றுக்கின்றது. அதுமாத்திரமல்ல போருக்கு பின்னதான இன ஒற்றுமையின் திறவுகோலாகவும், இலங்கையின் அனைத்து இன மக்களுக்கும் தேச பக்தியினை ஊட்டுவதாக தேசியகீதம்  அமைவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது. ஆனாலும் ஒரு நாட்டின் தேசிய கீதத்தினை மறுசீரமைப்பதேன்பது சாதரணமான விடயமல்ல. மறு சீரமைப்பதற்கான கருத்துக்கள் இரு மொழிகள் கலந்த தேசிய கீதமாக மறுசீரமைக்கவேண்டும் அல்லது உருவாக்கப்படவேண்டும் என்ற ரீதியில்  சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக முற்போக்குவாதிகளிடமிருந்து , அரசியல்வாதிகளிடமிருந்து பலமாக எழவேண்டும். (மேலும்...)
 

மார்கழி 25, 2010

WHY ARE THE SRI LANKAN OFFICIALS SO STUPID !!

(more...)

 

மார்கழி 25, 2010

Necklace makes Tamil woman suspect in Canada

Toronto, Dec 22 (IANS) Canadian authorities say that a Sri Lankan Tamil woman who entered the country aboard the smuggling ship MV Sun Sea in August is linked to the Tamil Tigers. The human smuggling ship had brought 492 Sri Lankan Tamils to Vancouver from Thailand after allegedly charging up to $50,000 from each of them. Since the Canada Border Services Agency (CBSA) fears that the Tamil Tigers might sneak into the country in the guise of asylum seekers, it has detained the passengers for screening them for their terror links. So far, 300 of them have been released after screening. But now a Tamil woman, who is in custody along with her children, has been identified as a security risk because of her alleged links to the Tamil Tigers. (more...)

மார்கழி 25, 2010

விக்கிலீக்ஸ் விவகாரத்தில் தமிழ் அமைப்புக்களின் மௌனம் மக்களுக்குக் கூறும் தகவல் என்ன?     

அமெரிக்க இராஜதந்திரத் தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் பற்றிய பேச்சு உலக நாடுகளை இன்னும் ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா எனும் தனியொரு வல்லரசு நாடு ஆசிய பிராந்தியத்தில் எந்தளவுக்கு தனது ஆதிக்கத்தைச் செலுத்த எத்தனிக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அதேநேரம் ஏனைய நாடுகள் தங்கள் உள்விவகாரங்கள் கசிந்ததை மறைப்பதற்கு மாற்றுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. எனினும் தமது நாடு குறித்து வெளியாகியுள்ள தகவல் பற்றி அந்தந்த நாடுகள் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. (மேலும்...)

 

மார்கழி 25, 2010

Tamil lady killed, her husband injered

A Brampton teen has been charged with drunk driving

A Brampton teen has been charged with drunk driving after an early-morning crash killed a 41-year-old mother of two, who was delivering newspapers with her husband. The collision occurred at Bramalea Rd. and Central Park Dr. before 5 a.m. Wednesday, when a Ford Focus and Honda Civic ran into each other. Two people were sent to hospital in critical condition. The crash impact was so powerful that the passenger in the Civic, Sivanermaikkarasi Parameswaran, was ejected from the car. She landed several metres down the road and was pronounced dead by first responders. (more...)

மார்கழி 25, 2010

 

வாகன போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்த அரசு முடிவு

 

போக்குவரத்து விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் பணிப்பிற்கமைய வாகனங்களில் ‘ஆசனப்பட்டி’ கட்டாயமாகப் பயன்படுத்தல் வேண்டும். இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியபடி வாகனம் செலுத்துவது தடை என்ற சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  இறக்குமதி வரியை செலுத்தாமல் பல்வேறு முறைகளில் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பொருத்தி முழுமையான வாகனங்களாக மாற்றி விற்பனை செய்வது தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்  இதன் முதற்கட்டமாக கராஜ் இலக்கங்களுடன் (சீ. சீ. இலக்கம்) வாகனங்கள் வீதியில் செல்வது உடனடியாக தடைசெய்யப்படுகின்றது. (மேலும்...)


மார்கழி 25, 2010

 

 

மார்கழி 25, 2010

 

100 முஸ்லிம் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்வு

யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் மேலும் நூறு குடும்பங்கள் மீள குடியமரவுள்ளன. இது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பும், குடிய மரவிருக்கும் முஸ்லிம் மக்கள் சமூக அமைப்புக்களின் சந்திப்பும் இன்று சனிக்கிழமை காலை, யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி புதுப்பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு முன்னாள் யாழ். மாநகர சபை பிரதி மேயர் எம். ஜி. எம். பஷீர் தலைமைதாங்குவார். யாழ்ப்பாணத்தில் இதுவரை 404 குடும்பங்கள் மீள்குடியமர்ந்துள்ள நிலையில் புத்தளத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பங்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர வருகை தரவுள்ளனர். (மேலும்...)

மார்கழி 25, 2010

Greetings and wishes from ORHAN, Vanny

Greetings and wishes from ORHAN. It is my pleasure to inform you that ORHAN is now preparing IEP which you instructed us during your visit to Puthuvalvu Poonka (TCMCC) on 23.07.2010. According to our discussion ORHAN is going to introduce IEP from 2011 academic year. For this purpose it has organized 1 day workshop on IEP for the teachers on 23rd of December 2010. In addition to these arrangements I would like to gently remain you the educational toys which are used in the developed countries like CANADA, more appropriate for the teaching to mentally challenged children and suggested by you during the same visits. I hope you are now taking some necessary measures such as fund raising regarding this issue, in order to donate us the educational toys. For this objective, hereby I would like to brief you some details of Puthuvalvu Poonka. (more...)

மார்கழி 25, 2010

வெள்ள நிவாரண நிகழ்வில், டக்ளஸ், கருணாவுடன், மாவை, விநாயகமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ், பிரதியமைச்சர் முரளீதரன்(கருணா) ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாண பிரதேச செயலக மண்டபத்தில் புதன்கிழமை(22-12-2010) நடைபெற்ற இந்த நிகழ்வில், மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோருடன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விநாயகமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். (மேலும்...)

மார்கழி 25, 2010

 

கொழும்பு தூத்துக்குடி கப்பல் சேவை

 

இந்திய கப்பல் சேவை நிறுவனம் கேள்வி மனு கோரல்

இந்திய மத்திய அரசு நிறுவனமான இந்திய கப்பல் சேவை கூட்டுத்தாபனம் (எஸ்.சி.ஐ) நிறுவனம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட் டுள்ளது. இதற்கான கேள்வி மனுக்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் இரு நாடுகளிடையே கப்பல் போக்கு வரத்து தொடங்க உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இரு நாடுகளிடையே சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இந்த சேவை தொடங்கப்படுகிறது. (மேலும்...)

மார்கழி 25, 2010

விக்கிலீக்ஸ் அறிக்கைகளால் வெளிநாட்டு உறவுகள் பாதிப்பு?

விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட ரகசியத் தகவல்களால் பிற நாடுகளுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டள்ளதா என்பதை ஆராய அமெரிக்க உளவுத் துறை (சிஐஏ) முடிவெடுத்துள்ளது. இதற்காக சிஐஏ சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் உளவுத் துறையைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள் இடம்பெற் றுள்ளனர். விக்கிலீக்ஸ் முன்னதாக வெளியிட்ட தகவலைவிட அண்மையில் வெளியிட்ட தகவல்களால்தான் பிற நாடுகளுடனான உறவு பாதித்திருக்க வாய்ப்புள்ளதாக சிஐஏ நம்புகிறத. இதனால் சமீபத்திய தகவலுக்கு முன்னுரிமை அளித்து ஆராய திட்டமிட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா, பிற நாடுகளுடன் பரஸ்பர நலத்தின் அடிப்படையில் உறவு வைத்துள்ளது. இதனால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலால் பிற நாடுகளுடனான அமெரிக்க உறவு பாதிக்கப்படவில்லை. என்று அந்நாட்டு வெளியிறவு அ¨மைச்சகச் செய்தித் தொடர்பாளர் குரோவ்லே கூறினார். அமெரிக்காவுடனான நட்பு நாடுகளின் தலைவர்களுடன் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்கழி 24, 2010

 

கப்பம் கோரி அச்சுறுத்தினால் கடும் தண்டனை

நகைக் கடை உரிமையாளர்களை அச்சுறுத்தி கப்பம் கோருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டால் உடனடியாகத் தமது கவனத்திற்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நகைக் கடை உரிமை யாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கடத்தி கப்பம் கோரும் முயற்சியில் எவராவது ஈடுபட்டால் தமது கவனத்திற்குக் கொண்டு வந்தவுடன் அவரைக் கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கூறினார். கொள்ளையர்கள் தமது நலனுக்காக பொலிஸ் மற்றும் இராணுவச் சீருடைகளைப் பயன்படுத்தி கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ள தாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். (மேலும்.....)

மார்கழி 24, 2010

பார்த்தால் பசுமரம்!

மார்கழி மாத காலைப் பனி உடலுக்கு இதமாக இருக்கும். பழக்கமில்லாதவர்களுக்கு குளிராக இருக்கும்! மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியில் குளிர் வாட்டி எடுத்துவிடும். இதனால் உடலுக்கு சூடேற்றிக்கொள்வதற்காக பெருந்தோட்டப் பகுதிகளில் விறகுகளைக் கட்டுக் கட்டாகக் குவித்து வைத்திருப்பார்கள். வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு, விறகு பொருக்குவதே ஒரு தொழில். இல்லாவிட்டால், தொழிலாளர்கள் தொழில் முடிந்து வீடு செல்லும்போது விறகு கட்டுகளையும் அணைத்துச் செல்வார்கள். (மேலும்.....)

மார்கழி 24, 2010

 

தென்கொரிய இராணுவம் பெரிய அளவில் போர் ஒத்திகை

தென் கொரியாவுக்கு சொந்தமான தீவான யியோங்பியாங் தீவில் வட கொரியா பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து தென் கொரியா - வட கொரியா இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் வட கொரியாவை மிரட்டுவதற்காக தென் கொரியா அந்த தீவில் நேற்று 3வது நாளாக போர் ஒத்திகை நடத்தியது. நேற்று நடந்த ஒத்திகை பெரிய அளவிலானது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஒத்திகையை விட இது மிகப் பெரிய அளவில் நடந்தது. இந்த ஒத்திகையின் போது பீரங்கிகள், போர் விமானங்கள், அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் பங்குகொண்டனர். 6 கடற்படை கப்பல்களும் இதில் கலந்துகொண்டன. வட கொரியா மீண்டும் எங்கள் நாட் டின் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று தென் கொரிய இராணுவ தளபதி ஜூ இயூன் சிக் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இதற்கு முன்பு 50 முறை போர் ஒத்திகை நடத்தப் பட்டபோதிலும் இந்த அளவு பெரியதாக இதுவரை நடந்தது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். போர் ஒத்திகைக்கு வட கொரியா எதிர்ப்பு தெரிவித்தது. போர் ஒத்திகை நடத்தினால், முழு அளவிலான போரை தென் கொரியாவுடன் தொடங்குவோம் என்று வட கொரியா எச்சரித்து இருந்தது. ஆனால் மிகப் பெரிய அளவில்போர் ஒத்திகை நடந்தபோது வட கொரியா அமைதி காத்தது.

மார்கழி 24, 2010

விடுதலைப் புலி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுக்கு விளக்கமறியல் 

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வவுனியாவல் வைத்துக் கைது செய்யப் பட்ட கமலினி அல்லது சுப்ரமணியம் சிவகாமினி என்ற பெண்ணை எதிர்வரும் ஜனவரி 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் முக்கிய உறுப்பினர் எனச் சந்தேகிக்கும் இவர் அவ்வமைப்புக்கு ஆட்சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டதாச் சந்தேகிக்கப்படுகிறது. இவர் பற்றிய அறிக்கை சட்டமா அதிபரிடமிருந்து இன்னும் கிடைக்கப் பெறவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததை அடுத்தே நீதவான் இவ்வுத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

மார்கழி 24, 2010

புகையிரத வீதி அமைப்பதற்கு கண்டியில் 116 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

கண்டி - பேராதெனிய நகரங்களுக்கிடையே இரட்டைப் புகையிரத வீதி அமைப்பதற்குத் தடையாக இருந்த 116 வீடுகளை நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். கண்டி புகையிரத நிலையத்திலிருந்து கெட்டம்பே வரையிலான பகுதியில் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக புகையிரத தினைக்களத்தின் கண்டி பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது. இவ் வீடுகளில் இருந்த பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் வெளியேறாததன் காரணத்தால் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. ___

மார்கழி 23, 2010

 

வடக்கு, கிழக்கில் சமாதானம் மற்றும்
அபிவிருத்திக்கான ஜப்பானின் உதவி

உலக சமாதானத்திற்கு செழிப்புடனும் அர்ப்பணிப்புடனும் பங்களிப்பு வழங்கும் நாடு என்ற வகையில் ஜப்பான் இலங்கையில் சமாதானம் மற்றும் மீள்கட்டமைப்பிற்கு தனது உதவியை வழங்குவதுடன் நடுத்தர மற்றும் நீண்ட கால அபிவிருத்தி நோக்கினைக் கொண்டுள்ளது. ஆகவே ஜப்பான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீள் கட்டமைப்பிற்கும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்விற்கும் அதி உயர்ந்த முன்னுரிமையளித்து செயல்பட்டு வருகின்றது. ஜப்பான் சமாதான நடவடிக்கைகளுக்கு தனது முழு உதவியை வழங்குகின்றது. சமாதானம் மற்றும் நல்லிணக்கம் நிலையான அபிவிருத்தி செளபாக் கியத்திற்கு இன்றியமையாததாகும்.

(மேலும்.....)

மார்கழி 23, 2010

 

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை யொன்றை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்துமுகமாகவே இந்தப் புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்படுவதாக அவர் கூறினார். இதற்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கி உள்ளதாகவும், நிர்மாணப் பணிகள் வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படு மென்றும் ஆணையாளர் நாயகம் கூறினார். யாழ்ப்பாண கோட்டையில் இருந்த சிறைச்சாலை 1985 ஆம் ஆண்டு சேதமானது. பின்னர் 1996 இல் இரண்டு தனியார் வீடுகளில் தொழிற்பட்டது. தற்போது சொந்தக் காணியில் சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளதென்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.யாழ்ப்பா ணத்தில் சுமார் 225 கைதிகள் சிறைவைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்கழி 23, 2010

 

தொடர் கொள்ளைச் சம்பவங்களை தடுக்க யாழில். கூட்டு ரோந்து

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும், இராணுவத்தின ரும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் பொதுமக்களும் இது குறித்து விழிப்பாக இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர். யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் தொடர் கொள்ளைச் சம்பவங்களை தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. (மேலும்.....)

மார்கழி 23, 2010

வடக்கு, கிழக்கு உட்கட்டமைப்புக்கு ஜப்பான் முதலீடு

வடக்கு, கிழக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஜப்பானிய நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளைச் செய்யவுள்ளன. இலங்கையின் தற்போதைய அமைதிச் சூழலை எடுத்துரைத்து ஜப்பானிய கம்பனிகளின் முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதாக ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்தது. ஜப்பான் - இலங்கை நட்புறவு பாராளுமன்ற ஒன்றியத்தின் சார்பில் இலங்கை வந்துள்ள ஜப்பானிய ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே நேற்று (22) இதனைத்தெரிவித்தது. ஜப்பானிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய எம்.பியுமான ஹிரோபியுமி ஹிரானோ தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட குழு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது. (மேலும்.....)

மார்கழி 22, 2010

புலித்தோல் போர்த்திய பச்சோந்திகளும் புலி வியாபாரமும் - புலி ஊடகங்கள்

இடிக்குந்துணையாரை ஆள்வாரை
யாரே கெடுக்குந்த தகைமை யவர்
(குறள் 447)

தளபதி ரமேஸ் மட்டுமல் தலைவரும் கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றது காணொளியாக உள்ளது. யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்ட நாடகத்தில் சரணடைந்தார். இந்த ஒளிப்பதிவு சிலரால் பார்க்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனை என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை இந்தியா இலங்கையிடமே விட்டுவிட, வே பிரபாகரனுக்கு சயனைட் வழங்கப்பட்டது. ஆனால் வே பிரபாகரன் அதனை எடுக்கவில்லை. அதன் பின்னர் இடம்பெற்ற சித்திரவதைகளில் வே. பிரபாகரன் நிர்வாணமாக ஆட்டம் போட நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவத்தினரின் பூட்ஸ்களை நக்கவும் பணிக்கப்பட்டு அவ்வாறு பூட்ஸ்களை நக்கியும் உள்ளார். அதன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும் உள்ளார். (மேலும்.....)
 

மார்கழி 22, 2010

 

Rahul says Sri Lanka not giving justice to Tamils

Voicing concern over Sri Lanka government "not doing enough" for the Tamils there, Congress leader Rahul Gandhi on Wednesday said he would ensure that they get justice. "We are concerned that enough is not being done for Sri Lankan Tamils by the government there," the AICC General Secretary said during a brief interaction with a group of intellectuals here.Gandhi said he would take up the matter with "appropriate persons" at the Centre and see that Sri Lankan Tamils got justice. (more...)

மார்கழி 22, 2010

 

ஐ.நா. செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கை வருவது நிச்சயமில்லை

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனால் இலங்கை விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இலங்கை வருவது நிச்சயமில்லையென ஐ.நா. செயலாளரின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கைக்கு வருவதோ அல்லது இக்குழு நல்லிணக்க ஆணைக்குழுவை எப்பொழுது சந்திக்கும் என்ற விடயமோ இதுவரை நிச்சயமாகவில்லையென ஃபர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார். (மேலும்.....)

மார்கழி 22, 2010

இலங்கை - இந்திய கப்பல் சேவையுடன் இணைந்ததாக

தூத்துக்குடியிலிருந்து பிரதான நகரங்களுக்கு ரயில் சேவை

இலங்கை - இந்திய கப்பல் சேவையுடன் இணைந்ததாகத் தொடர் ரயில் சேவைகளையும் நடத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொடர் ரயில் சேவைகளை நடத்துவது பற்றி இலங்கை - இந்திய அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார். உதாரணமாக கண்டியிலிருந்து கொழும்பு வந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வழியாக சென்னை செல்ல விரும்பும் ஒருவர், சென்னை வரையிலான கப்பல், ரயில் பயணங்களுக்கான பயணச் சீட்டைக் கண்டியிலேயே பெற்றுக் கொள்ள வசதிசெய்ய வேண்டு மெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 22, 2010

வடபகுதியில் வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு

பயங்கரவாத வன்செயல் காரணமாக 1983 ஆண்டுக்கு பின்னர் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்த 685 பொது மக்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால் நட்டஈடுகள் வழங்கப்படவுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற் றும் நெடுங்கேணியைச் சேர்ந்த இவ ர்களுக்கு நாளை மறுதினம் வெள் ளிக்கிழமை வைபவரீதியாக காசோ லைகள் வழங்கப்படும். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 500 பேருக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவு காலை 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், முல்லைத்தீவைச் சேர்ந்த 110 பேருக்கும், நெடுங்கேணியைச் சேர்ந்த 85 பேருக்குமான முதல் கட்ட நட்டஈடு கொடுப்பனவு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் வெள்ளி மாலை 3 மணிக்கு வழங்கப்படும். (மேலும்.....)

மார்கழி 22, 2010

 

இங்கிலாந்து

தீவிரவாத சந்தேகத்தில் இங்கிலாந்தில் 12 பேர் கைது

இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக சதித்திட்டம் தீட்டியதாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் லண்டன் நகரில் 3 பேரும், கார்டிங் நகரில் 5 பேரும், மற்ற இடங்களில் இருந்து 4 பேரும் என 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 11 பேர் 17 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து நாட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மும்பை பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த ஒரு மாத காலமாக ஐரோப்பிய பொலிஸ் படை எச்சரித்து வந்தது. இதை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு பொலிஸார் இந்த 12 பேரை கைது செய்தனர்.

மார்கழி 22, 2010

 

யாழ். நகரில் சுங்க திணைக்கள அலுவலகம் 3 ஆம் திகதி திறப்பு

வட பகுதியை முழுமையாக கண்காணிக்கும் வகையில் சுங்கத் திணைக்களத்தின் அலுவலகமொன்று யாழ். நகரில் எதிர்வரும் 3 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவிக்கிறது. வட பகுதியில் நீண்டகாலமாக சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் முடங்கிப் போய்க் கிடந்தன. வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இந்த சுங்க திணைக்கள உப அலுவலகம் இயங்கும். திருகோணமலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் சுங்க திணைக்களத்தின் உப அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

மார்கழி 22, 2010

 

நாளைய வெற்றிக்காக இளைஞரை தயார் செய்வதே புதிய கல்வித் திட்டத்தின் இலக்கு

தொழில் நுட்பக் கல்வி யானது கணிதத் தையும் விஞ்ஞானத் தையும் பிரயோகித்துப் பணிகளைத் திறமையாகவும், வேகமாகவும், திருத்தமான முறையிலும் சிக் கனமாகவும் செய்து முடிக்கக் கூடிய அறிவை வழங்குகிறது. இதை உத்தேசித்தே கலைப்பிரிவு என்று ஒதுக்கி வைக்கப்படும் மாணவர்களையும் ஏனைய பிரிவினரோடு சமப்படுத்தி அவர்களின் இயல்பான திறமைகளை இனங்கண்டு சமூகத்திற்குப் பயனுள்ள பிரஜைகளாக உருவாக்க கல்வி மறுசீரமைப்புத்திட்டம் வழிவகுக்கிறது. (மேலும்.....)

மார்கழி 22, 2010

 

கிளி., முல்லை., மக்களுக்கு வெள்ள நிவாரணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் சகல வேலைத் திட்டங்களுக்கும் தமிழ்த் தேசிய கூட் டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என யாழ். மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா நேற்று கூறினார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வரும் உதவிகள் குறித்தும் அவர் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 22, 2010

சோசலிசம் வலுவடையும்  சீர்திருத்தங்கள் குறித்து ரால் காஸ்ட்ரோ கருத்து

கியூபாவில் மேற்கொள் ளப்போகும் சீர்திருத்தங்கள் 1959 ஆம் ஆண்டுப் புரட்சிக் குப்பிறகு உருவான சோச லிச கியூபாவை மேலும் வலுவடையவே செய்யும் என்று கியூபாவின் ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார். கியூபாவில் மேற்கொள் ளப்பட்டு வரும் சீர்திருத்தங் கள் பற்றி தவறான செய்தி கள் பரப்பப்பட்டு வருகை யில், பிபிசி செய்தி நிறுவனத் தின் மைக்கேல் ஓஸ், கியூ பாவுக்கே சென்று நேரில் பார்த்தவற்றை தனது செய் தியில் விளக்குகிறார். புரட் சியை சாகடித்துவிடாமல் பார்த்துக் கொள்வதற்கு இந்த சீர்திருத்தங்கள் அவ சியம் என்று ரால் காஸ்ட்ரோ சொல்வதை அவர் பதிவு செய்துள்ளார். (மேலும்.....)

மார்கழி 22, 2010

 

வட கொரியாவின் எச்சரிக்கையை மீறி தென் கொரியா போர் விமானப் பயிற்சி

வட கொரியாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி தென் கொரியா கடந்த திங்கட்கிழமை இராணுவப் பயிற்சியை மேற்கொண்டது. வட கொரியாவை ஒட்டிய தீவுப் பகுதியில் தென் கொரியப் போர் விமானங்கள் சீறிப் பாய்ந்து பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இராணுவப் பயிற்சி மதியம் 2.30 மணிக்குத் தொடங்கி 4 மணிக்கு நிறைவடைந்தது. இப்பயிற்சி நிறைவடைந்ததும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிம் க்வான்-ஜின் பேட்டி அளித்தார். அப்போது எங்களது நாட்டு முப்படைகளும் வட கொரியா விடுக்கும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்றார். (மேலும்.....)

மார்கழி 22, 2010

வங்கித்துறை பொதுச்சேவையானது  வெனிசுலா நாடாளுமன்றத்தில் தீர்மானம்

லாபத்தை மனதில் கொண்டு இயங்கி வந்த வெனிசுலாவின் வங்கித்துறை இனி மேல் பொதுச் சேவைத் துறையாக இயங்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித் துள்ளது. இதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. பொதுச் சேவைத்துறை என்பதற்கான விளக்கமும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. சோசலிசத்தை நோக்கிச் செல்வதன் ஒரு பகுதியாகவே இத்தகைய தீர்மானம் கொண்டு வந்ததாக ஆளும் சோசலிஸ்டு கட்சி யினர் குறிப்பிட்டார்கள். (மேலும்.....)

மார்கழி 21, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும் ஒன்றிணைந்து செயற்படுவது ஆரோக்கியமான விடயம் -அரசாங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும் ஒன்றிணைந்து செயற்படுமாயின் அதனை ஆரோக்கியமான ஒரு விடயமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நோக்குகின்றது. இரு தரப்பினரும் இணைந்து அரசாங்கத்துடன் செயற்பட முன்வருவார்களாயின் அவர்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இவர்கள் இணைந்து ஒரு தீர்வு யோசனையினை முன்வைப்பார்களேயானால் அது குறித்து சாதகமாக பரிசீலிப்பதற்கும் அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் கூறினார். (மேலும்.....)

மார்கழி 21, 2010

தமிழ் கட்சிகள் ஏற்படுத்தியுள்ள குழுவில் முஸ்லீம் கட்சிகளும் இணைக்கப்பட வேண்டும் - ஹசன் அலி!

அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு முன்னணி ஒன்றை ஏற்படுத்த தமிழ், முஸ்லீம் அரசியல் கட்சிகள் எண்ணியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நோக்கத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள குழுவில் முஸ்லீம் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் கட்சிகளின் அரசியல் தீர்வு யோசனையை தயாரிப்பதற்கான கூட்டுக்குழுவின் உறுப்பினருமான சுமந்திரன், அது சிறந்த நடவடிக்கையாக அமையும் என கூறியுள்ளார். இந்த யோசனை குறித்து ஆராய கூட்டுக்குழு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகளின் அரங்கம் என்பன இணைந்து அரசியல் தீர்வு தொடர்பான யோசனையை தயாரிப்பதற்காக கூட்டுக் குழுவொன்றை ஏற்படுத்தின.

மார்கழி 21, 2010

கனடாவுக்கு எம்.வி. சன் சீ கப்பல் மூலம் சென்ற பெண்ணொருவர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்!

கனடாவுக்கு எம்.வி. சன் சீ கப்பல் மூலம் சென்ற பெண்ணொருவர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என கனேடிய அரசாங்கப் பிரதிநிதி ஒருவர் குற்றஞ் சாட்டியுள்ளார் என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பெண் புலிகள் இயக்கத்துடன் செயற்பட்டவர் என்றும் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கே உரித்தான கழுத்துப் பட்டி ஒன்றை வைத்திருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் இந்தப் பெண்ணின் விபரங்களை வெளியிடுவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் இவர் மீதான விசாரணைகள நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்றன. தற்போது இந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகளும் பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி 21, 2010

தேசம் நெற், புலி ஊடகச்சண்டை: கருத்து தெரிவிக்குமா விக்கிலீக்ஸ்?

தமிழர்களுகளுடைய கருத்துச்சுதந்திரம் எப்போதும் ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருந்ததில்லை. அடுத்தவன் வீட்டு மதில் மேல் கண்டதையெல்லாம் எழுதுவது கூட கருத்துச்சுதந்திரமாக இருந்திருக்கிறது. சிங்களவனின் தோலில் செருப்பு தைத்துப்போடுவோம் என்பது கூட அன்றைய தமிழத்தலைவர்களின் கருத்துச்சுதந்திரமாக இருந்திருக்கிறது. மாற்றுக்கருத்துக் கொண்டவர்களை துரோகி என புலிகள் அழைப்பது கருத்துச்சுதந்திரமாக இருந்திருக்கிறது. தமிழில் தேசியகீதம் பாடக்கூடாது என சிங்கள இனவாதிகள் சொல்வது கருத்துச்சுதந்திரமாக இருந்திருக்கிறது. ஆகமொத்தம் வாயில் என்ன கண்றாவிகள் வருகிறதோ அது எல்லாம் கருத்துச்சுதந்திரமாக இருந்திருக்கிறது. (மேலும்.....)

மார்கழி 21, 2010

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த

இந்திய பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் விசாரணை

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்திய பாதாள உலகக் குழுவான தாவூத் இப்ராகிமின் குழு உறுப்பினரிடம் மும்பாய் குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு மே 8 ம் திகதி தாவூத் இப்ராகிம், குழு உறுப்பினர் மிர்சா முகைதீன்பெய்க் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார். புலிகள் இயக்கத்துடன் ஆயுத விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். (மேலும்.....)

மார்கழி 21, 2010

இன்று 20-12-2010 அன்று சென்னையில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணினரால் ஏற்பாடு செய்யப்பட்ட  பத்திரிகையாளரின் சந்திப்பில் கொடுக்கப்பட்ட அறிக்கை!

சென்னை முதல் டெல்கி வரை ஈழத் தமிழர்களின் நடைபயணம்!

நாள்: 16-01-2011 ஞாயிறு

நேரம்: காலை 10:00 மணி.

இடம் : இராஜீவ்காந்தி நினைவு மண்டபம், சிறிபெரும்புதூர்.

தமிழர்களைப் புறக்கணித்து, பிரித்தானியரை ஏமாற்றி இலங்கை அரசாங்கத்தைக் கைப்பற்றிய சிங்கள ஆட்சியாளர் 1948ம் ஆண்டு முதல் தமிழ் இனத்தை அழித்து வருகின்றனர். ஈழத் தமிழர்களின் விவசாய நிலங்களைக் கைப்பற்றி சிங்களக் குடியேற்றங்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் புகுத்தி வந்த சிங்கள அரசு இப்போது தமிழர்களின் வாழ்விடங்களையும் ஆக்கிரமித்துச் சிங்களக் குடியேற்றங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து வருகிறது. (மேலும்.....)

மார்கழி 21, 2010

வடகொரியா - தென்கொரியா மோதல்

ஐ. நா. கூட்டம் தோல்வியில் முடிவு

வடகொரியா - தென்கொரியா இடையிலான மோதலால் ஏற்பட்டு ள்ள பதற்ற நிலையை தணிப் பதற்காக நடைபெற்ற ஐ. நா. பாதுகாப்பு சபையின் சிறப்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. தென்கொரியாவுக்கு சொந்தமான தீவான பியோங்கியாங் மீது வட கொரியா அண்மையில் பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து இரு நாடுக ளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த பதற்றத்தை தணிப்பதற்காக ஐ. நா. பாதுகாப்பு சபையின் சிறப்புக் கூட்டம் கூட்டப் பட்டது. இந்த கூட்டத்தில் வட கொரி யாவை கண்டித்து அறிக்கை வெளி யிட மேற்கத்தேய நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் ‘வீட்டோ’ ரத்து அதிகாரம் உள்ள சீனாவும், ரஷ்யாவும் வட கொரியாவை கண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இரு தரப்பினரும் தங்களது நிலையில் பிடிவாதமாக இருந்த தால், எந்த முடிவும் எடுக்கப் படாமல் கூட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக செய்திகள் தெரி விக்கின்றன.

மார்கழி 21, 2010

உள்ளூராட்சி மன்றத் திருத்தச் சட்டம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில்

புதிய உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் அடுத்த மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார். தொகுதி வாரி முறையையும்,விகிதாசார முறையையும் இணைத்து கலப்பு முறையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதன்படி உத்தேச தேர்தல் முறை திருத்தச் சட்டம் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சரினால் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் புதிய முறைப்படி நடத்துவதா, பழைய விகிதாசார முறைப்படி நடத்துவதா என இதுவரை அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்த அரசாங்கம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தது தெரிந்ததே.

மார்கழி 21, 2010

இந்தியா - கொழும்பு கப்பல் சேவையை நடத்த ஐந்து தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன - ஜீ. கே. வாசன்

கொழும்புக்கும் இந்தியாவின் தூத்துக் குடிக்கும் இடையிலான கப்பல் சேவை அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக் கப்படும் என்றும் இக்கப்பல் சேவையை நடத்த தனியார் முகவர் நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும் இந்திய மத்திய கப்பற்துறை அமைச் சர் ஜீ. கே. வாசன் தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதியை இந்திய மத் திய அமைச்சரவை ஏற்கனவே வழங்கி யிருக்கும் நிலையில் வெகுவிரைவில் இக் கப்பற்சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்.....)

மார்கழி 21, 2010

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு ஜனவரி மாதம் கொழும்பில்

மோதல்களால் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை கலை ஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளால் தீர்க்க முடியும் என்பதற்கிணங்க எதிர்வரும் ஜனவரி 6ஆம். 7ஆம், 8ஆம், 9ஆம் திகதி களில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்தவிருப்பதாக சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மோதல்களால் இனங்களுக்கிடையில் தோன்றியிருக்கும் இன முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் தமிழ் எழுத்தாளர்க ளையும், சிங்களக் கலை இலக்கியவாதிகளை இணைத்தும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள், தமிழக எழுத்தாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் எழுத் தாளர்களுக்கிடையில் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் 2011 ஆம் ஆண்டு சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடத்தப்படவிருப்பதாக இம்மாநாட்டின் பிரதம அமைப்பாளரும் சர்வதேச இணைப் பாளருமான முருகபூபதி தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 21, 2010

நாளைய வெற்றிக்காக இளைஞரை தயார் செய்வதே புதிய கல்வித் திட்டத்தின் இலக்கு

வகுப்பறையில் ஆசிரியரின் பாகமும் மாணவரின் பாகமும் புரட்சிகரமான முறையில் மாற்றத்திற்குள்ளாகவேண்டியுள்ளது. ஆசிரியரிடமிருந்து அறிவு வெறுமனே கடத்தப்பட்டு மாணவரிடம் படிப்பதற்குப் பதிலாக, மாணவர் மைய, தேர்ச்சிக்கமைய செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட முறைமை புகுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வகுப்பில் கற்கும் ஒவ்வொரு மாணவனதும் மாணவியினதும் சிந்தனைத்திறன்கள், சமூகத்திறன்கள், தனிப்பட்ட திறன்கள், அறிவைத் தேடியறியும் திறன்கள் என்பவற்றை விருத்தி செய்யும் பெரும் பொறுப்பை ஆசிரியர் தம் தோளின் மீது சுமக்கத் தயாராக வேண்டிய கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 21, 2010

அதிசய எண் ‘1111’ என்ன தெரியுமா?

‘1111’ என்ற விசேட எண்ணை விரைவில் நீங்கள் சந்திக்க இருக்கின்றோம். அது என்ன என்று தலையை சொறிந்தபடி யோசிக்க வைக்கிறதா? அது வேறொன்றும் இல்லை. வரப்போகும் புத்தாண்டைத் தான் குறிக்கிறது. வரப்போகும் புத்தாண்டும் 1ம் திகதி ஜனவரி மாதம் (1ம் மாதம்), 2011ன் சுருக்கம் ‘11’ இவற்றை சேர்த்து குறிப்பிடும் போது 1-1-11 என வருகிறது. இதன் பிறகு இதேபோல எண்கள் வர வேண்டுமானால், 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதாவது 2022 ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 2ம் திகதியை குறிப்பிடும் வகையில் 2-2-22 எனவும் அதன் பிறகு 11 ஆண்டுகள் கழித்து 3-3-33 எனவும் இதே போல ஒவ்வொரு 11 ஆண்டுகள் கழித்தும், அதாவது 9-9-99 வரை குறிப்பிடலாம்.

மார்கழி 21, 2010

எல்லோருக்கும் பல்கலைக்கழக பட்டதாரிகளாகும் வாய்ப்பு கிடைக்கும்

இலங்கையில் கடந்த 60 ஆண்டு காலமாக இருந்து வரும் இலவச கல்வியை மேலும் மேம்படுத்தும் முகமாக, அரசாங்கம் இப் போது நாடெங்கிலும் உள்ள 340 தேசிய பாடசாலைகளில் சீர்த்திருத்தங்களை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்பாடசாலைகளில் தொடர்ந்தும் 8 வருட காலம் பணியாற்றிவரும் ஆசிரியர்களை அடுத்த ஜனவரி மாதம் முதல் இடமாற்றம் செய்யப் போவதாக கல்வியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஒரே ஆசிரியர் ஒரே பாடசாலையில் அதிக காலம் கடமையாற்றினால், அவர் மாற்றங்கள் ஏற்படுத்துவதை விரும்பமாட்டார் என்பதற்காகவும், புதிதாக பட்டம் பெற்று வெளியேறும் திறமை மிக்க இளைஞர்களையும், யுவதி களையும் இப்பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கும் கல்வியமை ச்சர் பந்துல குணவர்தன இந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறார். (மேலும்.....)

மார்கழி 21, 2010

தீவிரவாதத்தை தடுக்க பாக். எடுக்கும் முயற்சிக்கு சீனா பாராட்டு

பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்பதிகரமானதாக இல்லை என்றும் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்றும் அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள தீவிரவாத முகாம்களை மூட தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்து உள்ள நிலையில் அதற்கு எதிரான கருத்தை சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மட்டும் அல்லாமல் மேற்கத்தேய நாடுகள் பலவும் பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை விமர்சித்து வரும் நிலையில் சீனா அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 21, 2010

சுவிஸ் வங்கி கடும் ஆடைக் கட்டுப்பாடு

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கி ஒன்று தனது ஊழியர்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள், உலக அளவில் பிரசித்தமானவை. அங்குள்ள மிகப்பெரிய வங்கியான யூ. எஸ். பி. வங்கி, தன் ஊழியர்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ஆடைக் கட்டுப்பாட்டு விதிகள் அடங்கிய 40 பக்க புத்தகத்தை அந்த வங்கி தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. அதில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மேற்கொள்ளப்பட வேண்டிய ஆடைக்கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகள், அந்த புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. எப்படி தலை சீவிக்கொள்ள வேண்டும், எந்த மாதிரியான பாதணிகளை அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட குறிப்புகளும் விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. (மேலும்.....)

மார்கழி 20, 2010

அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாட்டிலேயே செயற்பாடு - தமிழ் தேசியக் கூட்டமைப்பு

அரசியல்தீர்வு மற்றும் மீள் குடியேற்றம் உள்ளிட்ட உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்திற்குப் பூரண அனுசரணை வழங்குவதென்ற நிலைப்பாட்டின் அடிப்படை யிலேயே செயற்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர். இது தொடர்பாகத் தினகரனுக்குக் கருத்துத் தெரிவித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 20, 2010

இந்திய இடதுசாரிகள்  அணிக்கு எதிராக  அமெரிக்கா சதி - விக்கி லீக்ஸ்

2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் முக்கிய பங்கு வகித்த மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று அமெரிக்கா சதித்திட்டம் தீட்டியதை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட் டுள்ள புதிய தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் முதல் ஆட்சிக் காலத் தின்போது மக்களவையில் 61 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள், மதவெறி பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை தடுக் கும் பொருட்டு, ஐ.மு.கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. இந்நிலையில் இடதுசாரிக்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நவீன தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றியதோடு மட்டுமின்றி மன்மோகன் சிங் அரசு, அமெரிக்காவுடனான அணுசக்தி உடன் பாட்டில் கையெழுத்திட முயன்றது. (மேலும்.....)

மார்கழி 20, 2010

ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனி


சுவீடன் - பிரிட்டன் விமான நிலையங்கள் பூட்டு

பிரிட்டிஷ், ஜேர்மன், சுவீடன் போன்ற நாடுகளில் பெய்யும் கடுமையான பனியால் அங்கு இயல்பு நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விசேடமாக விமான சேவைகள் அனைத்தையும் இந்நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. நெடுஞ்சாலைகளிலும் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால் தரைமார்க்கமான போக்குவரத்துகளும் ஸ்தம்பித்தன. பாடசாலைகள் வைத்தியசாலைகள், அரச, தனியார் அலுவலகங்கள் இயங்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் மிக விசேடமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். பிரிட்டன் தனது உள், வெளிநாட்டு விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியது. பிரிட்டனின் வட பகுதி ஸ்கொட்லாண்ட் என்பன மிகமோசமான பனிப்பொழிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இருபது சென்ரிமீற்றர் பனி பொழிந்ததாக அறிவிக்கப்பட்டது. விமான சேவைகள் திடீரென இடைநிறுத்தப்பட்டதால் அதிகளவான பயணிகள் வீதியோரங்களிலும் விமான ஓடுபாதைகளிலும் இரவுகளைக் கழித்தனர்.

மார்கழி 20, 2010

வடக்கு, கிழக்கில் வீடமைப்பு  திட்டங்கள் நிறுத்தப்படவில்லை


வடக்கு, கிழக்கில் தொண்டர் நிறுவனங் களின் நிதி உதவியில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டிடங்களின் நிர்மாண வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியை அரசாங்கம் மறுத்துள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் தவறானதும் திரிபுபடுத்தப்பட்டதுமாகுமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் எதிர்காலத்தில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு மேலாக சேதமுற்ற கட்டடங்களை புனர் நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆனால், தீர்மானத்தின்படி தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய கட்டடத்திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்காது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 20, 2010

பாதுகாப்பு அத்துமீறலும்  அமெரிக்க வரம்புமீறலும்

மத்திய அரசின் அணுகுமுறைகள் எந்த அளவிற்கு மக்களைக் கிள்ளுக் கீரையாக நடத்துவதாக இருக்கின்றன, அதை அமெரிக்க ஏகாதிபத்தியம் எந்த அளவிற்குத் தனது நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதை அண்மையில் வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையதள ஆவணம் அம்பலப்படுத்துகிறது. காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நாட்டின் வேறு சில பகுதிகளிலும் சிறைக்கைதிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதை இந்திய அரசு “கண்டு கொள்ளாமல்” இருக்கிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக 2002-04 காலகட்டத்தில் இருந்த டேவிட் முல்போர்டு ஒரு ரகசியத் தொடர்பு மூலம் தனது அரசுக்குத் தெரிவித்தார் என்று அந்த ஆவணம் கூறுகிறது. (மேலும்.....)

மார்கழி 20, 2010

மயக்க ஊசி ஏற்றும் டொக்டர்களுக்கு தட்டுப்பாடு

கண்டி பெரியாஸ்பத்திரியில்  சத்திர சிகிச்சைகள் இடை நிறுத்தம்

கண்டி பெரியாஸ்பத்திரியில் மயக்க ஊசி செலுத்தும் டொக்டர்கள் பற்றாக்குறை காரணமாக கண்டி பெரியாஸ்பத்திரியில் மேற்கொள்ளப்படும் அனைத்து சத்திர சிகிச்சைகள் நேற்று (19) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 17ம் திகதி முதல் அவசர சத்திரசிகிச்சை மாத்திரம் இவ் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முதல் இச்சேவைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக கண்டி பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் டொக்டர் சந்திரா குணதிலக்க தெரிவித்தார். இருதயம் மற்றும் நரம்பு போன்ற அவசர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதும் இந்த சத்திர சிகிச்சைக்குரிய டொக்டர் கள் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து நோயாளிகள் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாக்கப்படும் அபாயம் ஏற் பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் சுட்டிக் காட்டினார். ஏனைய ஆஸ்பத்திரிகளி லிருந்து சில டொக்டர்களை கண்டி பெரியாஸ்பத் திரிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். இலவசக் கல்வியை இலங்கையில் முடித்துவிட்டு வெளிநாடுகளுக்கு டாக்ரர்கள் ஓடினால் இது நடைபெறத்தான் செய்யும்.

மார்கழி 20, 2010

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 18,698 மில். ரூபா ஒதுக்கீடு

யாழ். மாவட்டத்தில் அடுத்த நிதியாண்டில் 1648 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 18,698 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவித்துள்ளார். இதற்கான முன்மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றதும் வேலைகள் ஆரம்பமாகு மெனவும் கூறியுள்ளார். இவற்றுக்கு மேலாக யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு ஐந்தாண்டு செயல்திட்டமும் நிறைவேற்றப்படவுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்றும் 18004 குடும்பங்களைச் சேர்ந்த 66605 பேர் நலன்புரி நிலையங்களிலும் நிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனை வரும் வலிகாமம் வடக்கு பிரதேசங் களை சேர்ந்த வர்கள். இவர்கள் வாழ்ந்த பகுதிகளில் கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாமையால் இவர்களை மீள்குடியமர்த்துவதில் தாமதம் நிலவுவதாக தெரிவித்தார்.

மார்கழி 20, 2010

முதலாளித்துவத்தால் தீர்க்கவே முடியாத முரண்பாடு

உலக முதலாளித்துவத் திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி படிப்படியாக அதன் ஆழத்திற்கே சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் இம்மாத துவக்கத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 12வது சந்திப்பு நடை பெற்றது. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் உள்முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் சூழலில், ஏகாதிபத்தியத் திற்கு எதிரான போராட்டத்தை - உலக அமைதி, முன்னேற்றம், சோசலிசத்திற் கான போராட்டத்தை மேலும் தீவிரப் படுத்த வேண்டிய அவசியம் குறித்து இக் கூட்டம் விவாதித்தது. (மேலும்.....)

மார்கழி 20, 2010

லண்டன் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு யாழ். நகரில் உண்ணாவிரதம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் புலம்பெயர்ந்தோர் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அனுமதிக்காமையைக் கண்டித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கலாநிதி வேல்முருகு தங்கராசா தலைமையில் நேற்று யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. நேற்றுக்காலை 8 மணி முதல் மாலை வரை யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் யாழ். குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருகை தந்த ஏராளமானோர் கலந்துகொண் டிருந்தனர். (மேலும்.....)

மார்கழி 20, 2010

போர்ப் பயிற்சியை நிறுத்துமாறு ரஷ்யா - சீனா தென் கொரியாவுக்கு மீண்டும் அழுத்தம்

யுத்தப் பயிற்சிகள் எவற்றிலும் ஈடுபட வேண்டாமென ரஷ்யாவும், சீனாவும் கடுமையான அழுத்தங்களை தென் கொரியாவுக்குச் செலுத்தியுள்ளன. கொரியன் குடாவில் விமான மோதலையுண்டுபண்னும் வகையில் நடந்துகொள்ள வேண்டாமென ரஷ்யாவும் சீனாவும் தென் கொரியாவை மீண்டும் அழுத்தியுள்ளன. இன்று அல்லது நாளை தென் கொரியா ஒருநாள் யுத்தப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இதைக் கடுமையாக எதிர்த்துள்ள சீனா, ரஷ்யா என்பன இரண்டு நாடுகளும் (வட, தென் கொரியா) அமைதியைப் பேணவேண்டுமெனக் கேட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தென் கொரியா யுத்தப் பயிற்சியைக் கைவிடும் எண்ணம் எமக்கில்லை. திட்டமிட்டபடி இந்த ஒருநாள் பயிற்சிகள் இடம்பெறும் என அறிவித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 20, 2010

திருகோணமலையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை மாவட்டம் கின்னியா பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட கல்லறப்பு பகுதியில் ஒருதொகை ஆயுதங்கள் சீனக்குடா பொலிஸாரினால் நேற்று இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. சீனாக்குடா பொலிஸ் பிரிவின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் உதவி பரிசோதகரின் தகவாளிக்கு கிடைத்த தகவலையடுத்து இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் கிளைமோர் கண்ணிவெடிகள் 3, மதிவெடிகள் 5, பெச்சினேட்டர் 86, சி.எப் ரக வெடிமருந்து ஒரு கிலோ 800 கிராம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாயுதங்கள் மாவிலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கையின் போது பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தவை என சந்தேகிக்கப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது.

மார்கழி 20, 2010

ஐரோப்பிய பாராளுமன்றம் புலி ஆதரவாளரின் களம்  - இலங்கை அரசாங்கம் _

இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு அப்பாராளுமன்றம் அனுமதியளிக்கிறது என இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பர்க் ஆகியற்றுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியவன்ஸ இது தொடர்பாக கூறுகையில் கடந்த வாரம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக பரிமாறப்பட்ட கருத்துக்களுக்கு இலங்கை பதிலளிப்பதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். (மேலும்.....)

மார்கழி 20, 2010

ஐ. நா. படைகளை வெளியேற உத்தரவு

ஐவரிகோஸ்ட்டில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் குவற்றாவின் வெற்றியை ஐ.நா. அங்கீகரித்தது. இதனால் கோபமுற்ற அந்நாட்டின் ஜனாதிபதி கபகோ அனைத்து ஐ.நா. படைகளையும் வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஐவரிகோஸ்ட்டில் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இருவரும் வெற்றிக்கு உரிமை கோரினர். இதனால் அங்கு பெரும் நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டது. அரசாங்கத்தின் ஒரு பகுதி நிர்வாகத்தை குவற்றா கட்டுப்படுத்த ஊடகம் உட்பட ஏனைய விடயங்களை கபகோ கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தார். இவ்விருவரை யும் சமாதானம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதையடுத்து எதிர்க்கட்சி வேட்பாளர் குவற்றாவின் வெற்றியை ஐ.நா. உறுதிசெய்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி கபகோ நாட்டிலுள்ள ஐ.நா. படைகளை வெளியேறும்படி உத்தரவிட்டார்.

மார்கழி 20, 2010

அமெரிக்காவின் இன்னும் பல இரகசியங்களை விரைவில் வெளியிடுவேன - ஜுலியன் அசாஞ்ஞே

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜுலியன் அசாஞ்ஞே இன்னும் பல தகவல்களை இணையத் தளத்தில் வெளியிடப் போவதாக தெரிவித் துள்ளார். அமெரிக்க நிதி நிறுவனமொன்று அவருடைய சொத்துக்களை முடக்கியுள்ள நிலையில் இதைப் பொருட்படுத்தாத ஜுலி யன் அசாஞ்ஞே தன்னை சுவீட னுக்கு நாடு கடத்தும் திட்டத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் இவ்விடயத்தில் தன்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும் எனவே அமெரிக்க நிதி நிறுவனம் தனது பணம், சொத்துக்களை முடக்கக் கூடாதென்றும் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

மார்கழி 19, 2010

Devananda, Karuna deny WikiLeaks revelations

Recruiting child soldiers, carrying out killings, running brothels among charges

(By Chris Kamalendran)

Both EPDP Leader Minister Douglas Devananda and Deputy Minister Vinayagamoorthy Muralitharan yesterday strongly denied the allegations that paramilitary groups linked to them were allowed by the Government of Sri Lanka (GOSL) to recruit child soldiers from IDP camps, carry out extra judicial killings and run brothels within Army camps, as revealed by WikiLeaks on Friday. (more....)

மார்கழி 19, 2010

பக்க சார்பான இணையதளங்களுக்கு 'விக்கிலீக்ஸ்' ஒரு பாடப் புத்தகம்

(அ. விஜயன்)

உலகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் அது அச்சு ஊடகமானால் என்ன, ஒளி ஊடகமானால் என்ன, ஒலி ஊடகமானால் என்ன, இலத்திரனியல் ஊடகமானால் என்ன பக்கசார்பான செய்திகளை பிரசுரித்து ஒரு நாட்டையோ அல்லது ஒரு கட்சியையோ அல்லது ஒரு சமூகத்தையோ, அல்லது ஒரு மதத்தையோ அல்லது ஒது இனத்தையோ அல்லது ஒரு தனிமனிதனையோ திருப்திபபடுத்தும் போக்கே காணப்பட்டு வந்துள்ளது. இதற்கு மாறாக அமைந்து தனித்தன்மையுடன் காணப்படுகிறது. 'விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் செய்திகள். (மேலும்.....)

மார்கழி 19, 2010

'விடுதலைப்புலிகளுக்கு உதவினர்' என்று குற்றச்சாட்டில் சிறைப்பிடித்து பிணையில் விடுதலையாகிய சுரேஷ்க்கு மீண்டும் சிறைத்தண்டனை

ஈழத்தமிழ் மகனாகிய சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்று அமெரிக்காவினால் குற்றம் சாட்டப்பட்டு 2006ம் ஆண்டு கனடாவில் கைதுசெய்யப்பட்டார். 21-08-2006 இல் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க கனேடிய காவல் துறையினர் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் சுரேஷை கனடாவில் கைது செய்தார்கள். தடை செய்யப்பட்ட ஓர் பயங்கரவாத அமைப்புக்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) உதவினார் என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். கூடவே, கணனி போன்ற உபகரணங்களை வாங்கிச்சென்று யாருக்கு வழங்கினார் என்பது தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. (மேலும்.....)

மார்கழி 19, 2010

(பத்திரிக்கை அறிக்கை)

பிரித்தானியாவில் செயற்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் சமர்ப்பிக்கப்படட்ட அறிக்கை 22-11-2010

கற்க வேண்டிய பாடங்களையும் நல்லெண்ணத்திற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்கென நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்கழு முன்னிலையில் எமது அவதானிப்புகளை வழங்கச் சந்தர்ப்பம் தந்தமைக்கு எமது நன்றியை முதலில் தெரிவித்தக்கொள்கிறோம். மேற்குலக நாடான பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளாக செயற்பட்டுவரும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரில் இயங்கும் எமது வானொலிச் சேவை ஆபிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் நேரடியாகவும், சர்வதேச அளவில் இணையத் தளத்திலும் தனது சேவையை வழங்கி வருகிறது. வெளிநாடுகில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களைப் பேணும் வகையில் செயற்படுமாறு தூண்டுதல், இன, மத, நிற, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம், சமஉரிமை என்ற சர்வதேச விழுமியங்களின் அடிப்படையில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எட்டுதல், இலங்கையின் ஐக்கியம், இனங்களுக்கிடையேயான நல்லுறவுகளை வளர்த்தல், பயங்கரவாதம், வன்முறை, மனித உரிமை மீறல் என்பவற்றிற்கெதிராக செயற்படுதல் என்பவற்றை பிரதான குறிக்கோள்களாகக் கொண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தனது சேவையை வழங்கி செயற்பட்டு வருகிறது. (மேலும்.....) (Engilish Ver.....)

மார்கழி 19, 2010

இசைப்பிரியாவைக் கொன்றது யார்? அதற்கு துணை நின்றவர்கள் யார்?

புலத்துப் புலிகளின் துணையுடன் தான், வன்னிப் புலிகளை அரசு கொன்று குவித்தது. இல்லை என்கின்றாயா? அரசிடம் வன்னிப்புலிகள் சரணடைந்த செய்தியை மூடிமறைத்த புலத்துக் கூட்டம் தான், அவர்களை இரகசியமாக கொல்ல உதவியது. இதுவொரு உண்மையில்லையா? வன்னிப்புலிகள் உயிர் வாழ்வதற்காகத்தானே சரணடைந்தார்கள்? அதற்கு துரோகம் செய்தவர்கள் யார்? அதை இருட்டடிப்பு செய்து, அவர்களுக்கு அதை மறுத்தவர்கள் வேறு யாருமல்ல, நீ நம்பும் புலத்துப் புலிகளே தான். மக்களை ஏய்க்கும் தம் பிழைப்பை அவர்கள் தொடர, அதை மூடிமறைத்தனர். இதன் மூலம் அவர்களைக் கொல்ல, அரசுக்கு மறைமுகமாக உதவினர். சரணடைந்த புலிகளால், தம் பிழைப்புக்கு இனி எந்த விதத்திலும் உதவ முடியாது என்பதனால், புலத்து புலிகளின் பிழைப்பு அரசியலே இதைச் செய்தது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள், அப்படித்தான் புலிகள் இருந்தவரை பிழைப்புக்கு பஞ்சமில்லை. சரணடைவை விட செத்தால் தான் புலம்பெயர் புலிப் பிழைப்புவாதிகளுக்கு வாழ்வாகின்றது. இப்படி தான் இசைப்பிரியா சரணடைந்தது முதல் அவற்றை மூடிமறைத்ததன் மூலம் அவரைக் கொல்ல உதவினர். இப்படி மூடிமறைத்து கொல்ல உதவியவர்கள், அந்தப் பிணத்தைக் காட்டி புலம்பெயர் புலிக் கூட்டம் மீண்டும் உருவெடுத்து ஆடுகின்றது. (மேலும்.....)

மார்கழி 19, 2010

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை செல்லும் புலி ஆதரவாளர்கள் குறித்து விசாரணை!

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு பிரஜைகளில் புலிகளின் ஆதரவாளர்கள் வருகின்றனரா என்பதை கண்டறிய புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பில் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு புலனாய்வு பிரிவுகள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தொடர்பாகவும் முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோ படங்களை கொண்டு அதில் கலந்துக்கொண்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 19, 2010

தகவல் தொழில்நுட்ப பயங்கரவாதம்

Channel 4 போலி ஒளி நாடாக்கள்

மனித உரிமை மீறல்களா? நீதிக்குப் புறம்பான படுகொலைகளா? யுத்தக் குற்றங்களா? சீச்சீ! இவை எதுவுமே இலங்கையில் இடம்பெறவில்லை, இப்படி எவனாவது அடித்துக் கூறுவானேயானால் அவன் அடிமுட்டாளாகவே இருப்பான். 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக ஜே.ஆர். அரசு கட்டவிழ்த்து விட்ட கொடூரம் அப்பட்டமான மனித உரிமை மீறல். அது ஓர் இன சங்காரம். பிரேமாவதி மனம்பேரி, சாரதாம்பாள், அகிலாண்டேஸ்வரி, கிருஷாந்தி குமாரசாமி வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அடங்கும் வெகு சிலர். சந்திக்கு வந்த வெகுசில சம்பவங்கள் இவை. சந்திக்கும் சட்டத்திற்கும் முன்னால் வராமலேயே சமாதியாக்கப்பட்ட சம்பவங்கள் பற்பல. (மேலும்.....)

மார்கழி 19, 2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியளிக்க

ஐ.நா. நிபுணர் குழு வந்தால் அரசாங்கம் உரிய ஏற்பாடு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராக விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் சரத்துக்கமைய, 2010 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் திகதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட பகிரங்க அறிவிப்பின் கீழ், ஆணைக்குழு முன்னிலையில் யாரும் சாட்சியமளிக்க முடியும். (மேலும்.....)

மார்கழி 19, 2010

யாழ். முஸ்லிம்களை துரிதமாக மீள்குடியமர்த்த திட்டம்

யாழ்ப்பாணம் உட்பட வட பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடிய மர்த்துவதற்கான துரித செயற் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டிருப்பதாகக் கைத் தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரி வித்தார். முதற் கட்டமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களின் சொந்த இடங்களில், சொந்த மண்ணில் மீள்குடியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக் கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி, அரசாங்கத்தின் செயற் திட்டத்தின் ஊடாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த் திருப்பதாக அமைச்சர் கூறினார். (மேலும்.....)

மார்கழி 19, 2010

சென்னையிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகள் பிடிபட்டனர்

சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆளுக்கு 80 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு தங்களை ஒரு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியதாகவும், அதற்கிணங்க தாங்கள் அங்கு வந்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். பிரகாஷ் இவர்கள் அனைவரையும் கோயம் பேட்டுக்கு வரச்சொல்லி அங்கு அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு வான் மூலம் ஈஞ்சம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இது போன்று பலமுறை இலங்கைத் தமிழ் அகதிகளை பிரகாஷ் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று பிகாரஷ் தங்களிடம் கூறியுள்ளதாக பிடிபட்ட 5 பேரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். (மேலும்.....)

மார்கழி 19, 2010

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கைத் தமிழர்கள்

முப்பது வருடங்களாக நாட்டில் இடம்பெற்றுவந்த யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்ப ஆரம்பித்துள்ளமை ஒரு வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் முடிவுற்றதும் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்புமாறு அழைப்பினை விடுத்திருந்தார். என்றோ ஒரு நாள் யுத்தம் முடிவுறும், தமது சொந்த ஊருக்குத் திரும்பிவந்து வீடுவாசலைத் திருத்தி உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதே மண்டப முகாம்களில் தங்கியிருந்த இவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. அது இப்போது நிறைவேற ஆரம்பித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 19, 2010

மூதூர் முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள்

(கலைமேகம்)

எப்படிப்பட்ட படித்த பட்டதாரி மாப்பிள்ளையாய் இருந்தாலும் மாப்பிள்ளை ஒரு வெள்ளைச் சாறமும், வெண்ணிற முழுக் கை சேட்டுமே அணிந்திருப்பார். தலையை கைக்குட்டை மூடியிருக்கும் இதுதான் மாப்பிள்ளையின் ஆடை. பின்னர் காவின் திருமணப் பதிவுயாவும் முடிந்ததும், பெண் வீட்டில் திருமணத்திற் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி ரிபிசீ8t@னிu. இது முடிந்த கையோடு சகலரும் எழுந்து மாப்பிள்ளைக்கு கைலாகு கொடுத்து ஸலாம் சொல்லி பெண்ணிருக்கும் அறைக்கு கூட்டி செல்வார்கள் அங்கு மாபிள்ளையின் கால்களை தேங்காய் பாலால் பெண்ணின் வீட்டுப் பையனொருவன் கழுவ அவனுக்கு மணமகன் பணத்தைப் பரிசளிப்பார். அத்துடன் மணமகளின் தந்தை கைபிடித்துக் கொடுப்பார். மாபிள்ளை மஹரென்ற ஒன்றை நகையாகவோ, அன்றி நூற்றி ஒரு ரூபா பணமாகவோ வழங்குவார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட இரட்டைக் கதிரையில் உட்காரவைத்து பெண்களாகக் கூடி பெண் மாப்பிள்ளைக்கு பால் பழமும் பருகக் கொடுப்பார்கள். அதே சமயம் சில்லறைக் காசுகள் சிலவற்றை வெற்றிலைத் தட்டில் போட்டு மணமக்களின் தலையைச் சுற்றி உயர்த்தி கொட்டிவிடுவார்கள். அதனை அங்கிருக்கும் அனைவரும் பொறுக்கி எடுப்பார்கள். அத்தோடு மாப்பிள்ளை பெண்ணின் கழுத்தில் தாலியும் கட்டுவார். (மேலும்.....)

மார்கழி 19, 2010

தமிழை சாகாமல் காக்க...

தமிழ் மொழியைச் செம்மொழியாக்க நாம் என்ன செய்ய வேண்டும். இஃதே வேளை தமிழ் மெல்லாச் சாகாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என ஆராய்வோம். தமிழைச் செம்மொழியாகக் கொள்ள வேண்டும் என இந்திய அரசை முதலில் கோரியவர் ஜோர்ஜ்ஹாட் என்ற அமெரிக்கரே. 1901 ஆம் ஆண்டு மதுரையில் நான்காவது சங்கம் என கருதத்தக்க அமைப்பொன்று இயங்கியது. இதில் அங்கம் வகித்த பரிதிமாக் கலைஞர் தமிழையும் செம்மொழியாக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இப்படியான பலரின் வேண்டுகோளின்படி இந்திய மத்திய அரசு 12.10.2004 அன்று பிறப்பித்த அரச ஆணையால் தமிழ் செம்மொழியானது எனச் சிலர் கூறுகிறார்கள். சரி அப்படியே வைத்துக் கொள்வோம். (மேலும்.....)

மார்கழி 19, 2010

யாழ். பல்கலை உபவேந்தர் நியமனம் முடிவாகவில்லை _

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய உபவேந்தர் தெரிவு பிற்போடப்பட்டுள்ளது. புதிய உபவேந்தர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தபோதும் அச்செய்தியில் உண்மையில்லையென கேசரி வார வெளியீட்டுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உபவேந்தருக்கான தெரிவு இடம்பெறும் வரை பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பதில் உபவேந்தராகத் தொடர்ந்தும் கடமையாற்றுவார் என்றும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன. கிடைக்கும் தகவல்களின் படி உபவேந்தர் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றவரே உபவேந்தராக நியமிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

மார்கழி 19, 2010

அரசின் பங்காளிக் கட்சியாகப் புலிகள் அமைப்பு மாறலாம் - ரணில் _

விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரான கே.பி. குமரன் பத்மநாதன் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வதற்கான அமைப்பின் தலைமைப் பொறுப்பை வழங்கியுள்ள ஜனாதிபதி, எம் மீது புலி முத்திரையை குத்த முயற்சிப்பது என்ன நியாயம்? மிகவிரைவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கலாம்" என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார். ஈ.பி.டி.பி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை பதவிகளை கொண்டுள்ளது. ஆனால் கே.பி.எந்தப் பதவியும் இல்லாமல் அரச மாளிகையில் சுகபோகம் அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (மேலும்.....)

மார்கழி 18, 2010

போர் குற்றம்பற்றி கலந்துரையாட

ஐநா நிபுணர் குழு விரைவில் இலங்கை வருகை

ஐநா நிபுணர்கள் குழு வெகு விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூற அவரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவே வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்குழு எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன் குழுவினர் இங்கு வருவர் என்றும் இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினரைச் சந்திப்பர் என்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான இணக்கப்பாட்டை மகிந்த ராஜபக்ஷ வழங்கியிருப்பதாக அறிய முடிகின்றது.

காட்டுப் பன்றி சுடுவதற்கு பதில் மாணவனை சுட்ட சம்பவம் போன்று நடைபெற கூடாது -  இரா. துரைரெத்தினம்

மட்டக்களப்பு கரவெட்டி பிரதேசத்தில் காட்டுப் பன்றி வேட்டையாடச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவன் ஒருவன் காயமடைந்தது போன்ற சம்பவம் ஒருபோதும் நடைபெறக் கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் கோரிக்கை விடுத்தள்ளார். மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வர்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரவெட்டி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அருகாமையில், கடந்த 15 ஆம் திகதி மாலை 4 மணிக்கு வவுணதீவு பொலிஸில் கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்; காட்டுப்பன்றி வேட்டையாடிய போது தவறி பாஸ்கரன் விஜயகுமார் என்ற 13 வயது மாணவனுக்கு வெடிப்பட்டுள்ளது. நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி கற்கும் குறித்த மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, இப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சத்தம் கேட்பதாகவும், மக்கள் குறித்த இடத்துக்குச் சென்று பார்க்கும் போது மிருகங்கள் வேட்டையாடப்படு வருவதாகவும், தெரியவந்துள்ளது. இப்பிரதேசத்தில் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். பொதுமக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்கழி 18, 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் கொழும்பில் சந்தித்துப் பேச்சு

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்றுமாலை 7.00மணியளவில் கொழும்பிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் சந்திப்பினை நடத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இருதரப்பு அங்கத்துவம் கொண்ட குழுவை நியமிப்பதென எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அரங்கம் சார்பிலான குழுவுக்கு இன்று மூவர் தெரிவுசெய்யப்பட்டனர். இதன்படி திரு.வீஆனந்தசங்கரி, திரு.த.சித்தார்த்தன், திரு.அ.இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். கடந்த 11.12.2010அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ்; மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் என்பன தொடர்பாக ஒருமித்த குரலில் யோசனைகளை முன்வைப்பதற்காக ஒரு வரைபை யாப்பதற்கு இருதரப்பின் அங்கத்துவமும் கொண்ட ஒரு குழுவை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இதற்கமையவே இன்று அரங்கம் கூடி மேற்படி மூவரையும் தெரிவுசெய்ததுடன், மேலும் இருவரை குழுவில் இணைப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மார்கழி 18, 2010

விக்கிலீக்ஸ்

கருணா, டக்ளஸ் மீதும் குற்றச்சாட்டு வைக்கின்றது

விக்கிலீக்ஸ் புதிதாக வெளியிட்டிருக்கும் அமெரிக்க அரசின் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய ராஜாங்க தகவல் பரிமாற்றங்கள், இலங்கை அரசு மற்றும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு இருதரப்பாரையும், கடுமையாக விமர்சிப்பவையாக இருக்கின்றன.லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களில், இலங்கையில் செயற்படும் துணைப்படையினரின் கொலை, சிறார் கடத்தல் மற்றும் தொழில்ரீதியான விபச்சாரம் ஆகிய செயல்களில் இலங்கை அரசும் துணைபோயிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கட்டாயமாக படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன. (மேலும்.....)

மார்கழி 18, 2010

கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பிய தமிழர் சடலமாக மீட்பு!

கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பி வந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் கொழும்பில் கொட்டாஞ்சேனையில் தங்கி இருந்த வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். அ. சுரேஸ்குமார் (வயது-33) என்பவரே உயிர் இறந்தவர் ஆவார்.  இவர் ஐந்து நாட்களுக்கு முன்புதான் வந்து இருந்தார்.  இவரது மனைவி இந்தியாவில் உள்ளார்.  இது படுகொலையா? தற்கொலையா? என்கிற புலனாய்வு விசாரணைகளை கொட்டாஞ்சேனைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் முடுக்கி விட்டு உள்ளார்கள்.

மார்கழி 18, 2010

US embassy cables

Human rights abuses by Tamil Tigers

1. (S) SUMMARY: In late May PolOff met the XXXXXXXXXXXX described the LTTE's complete control of all activities that take place in Tiger-controlled territory, including forced conscription and the use of the Tamil Rehabilitation Organization (TRO) to extract money from INGOs. XXXXXXXXXXXX also criticized the Sri Lanka Monitoring Mission's (SLMM) complacency in the face of coercive techniques the LTTE employs to maintain control of its northern stronghold. On June 8, after meetings with representatives from UNICEF, UNHCR and the World Food Program to discuss how these organizations fund projects operating in the Vanni, Emboffs confirmed that in some circumstances INGOs are required to work with TRO to accomplish their project goals. END SUMMARY. (more....)

மார்கழி 18, 2010

சீனாவிற்கு பயப்பட ஆரம்பிக்கும் அமெரிக்கா?

தேவையில்லாமல் இராணுவத்தை குவிக்கிறது சீனா - அமெரிக்கா

சீனா தன் பாதுகாப்புக்கு தேவையானதை விட அதிகமாக இராணுவத்தை குவித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக இராணுவத் துறை துணைத் செயலாளர் வொலஸ் சிப் கிரெக் சன் கூறுகையில். இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு, இராணுவ நோக்கம், இராணுவத்தில் உள்ள ஆயுதங்களின் திறன் ஆகியவை குறித்து சீனா வெளிப் படையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் இந்த பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் கவலையை அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மார்கழி 18, 2010

Greatest victory to Sri Lankans

(by Lenin Benedict-Toronto)

As the President Mahinda Rajapakse discussed in the latest cabinet meeting about scraping of the National Anthem sang in Tamil in the North and East by Tamils living in the area for decades, just trying to portrait himself as a Hardcore Sinhala Nationalist and a savior of Sinhala language in the south as a measure to save his popularity eroding and his slogan of victory over Terrorism as his personal achievement diminishing due to his mistakes committed one after their other. Though the President trying hard to regain his political power and strength by propagating the old trick practiced by the Tamil Nationalist as well as Sinhala Nationalist to get the support from the mass, whenever their support does in drain, The victory won by the sacrifice of the Armed forces has been reconfirmed by no empathy or no support shown by the majority community that Srilankans cannot be divided on Language or Communal lines and will remain united as one. Really this was the greatest victory achieved by Srilankans than any other victory achieved so far. The war against Terrorist was supported by the majority of Srilankans to defeat just Terrorism and not Tamils have been very clearly established by majority of Srilankans showing no support of the President’s Tamil Anthem issue. It is worth to mention here that Srilanka has finally won its political goal of uniting all Srilankans against communal politics and the sacrifices made has not gone in vain. (more...)

மார்கழி 18, 2010

பிரிட்டனின் செயற்பாட்டை கண்டித்து

யாழ்ப்பாணத்தில் நாளை உண்ணாவிரதப் போராட்டம்

ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தின்போது பிரித்தானிய அரசும் புலம்பெயர்ந்த தமிழர்களும் திட்டமிட்டு நடாத்திய அநாகரிகமான செயற்பாடுகளை கண்டித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கலாநிதி வேல்முருகு தங்கராசாவின் தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் யாழ். பேரூந்து நிலையத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட விருக்கின்றது. மேற்படி உண்ணாவிரத போராட்டத்தில் யாழ். குடாநாட்டின் சகல இடங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட செயலாளர் அ. ரங்கா துஷார மேற்கொண்டுள்ளார்.

மார்கழி 18, 2010

புலிகளுக்கு ஆயுதக்கொள்வனவு செய்த இலங்கைத் தமிழருக்கு ஐக்கிய அமெரிக்காவில் சிறை

ஐக்கிய அமெரிக்காவில் 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித் துள்ளதாக இலங்கைத் தூதுவராலய செய்திச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் மேரிலேண்ட் என்ற இடத்தில் 9 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. இதில் குற்றமிழைத்தவராகக் கருதப்பட்டு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ___

மார்கழி 18, 2010

சரத் தலைமையிலான அரசு விரைந்து செயற்படுமென அமெ. எதிர்பார்ப்பு - விக்கிலீக்ஸ்

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத்பொன்சேகா வெற்றி பெற்றால் அவரது தலைமையிலான அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைவிட விரைந்து செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புடெனிஸினால் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 18, 2010

அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு சோதனை தோல்வி

அமெரிக்க இராணுவத்தின் ஏவுகணை பாதுகாப்பு சோதனை தோல்வியில் முடிந்தது. கடந்த புதன்கிழமை இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது பசிபிக் பெருங் கடலுக்கு மேல் பாய்ந்த ஏவுகணையை இந்த சோதனை ஏவுகணை மறித்து தகர்க்க தவறிவிட்டது. ஏவுகணை பாதுகாப்பு சோதனை தோல்வி அடைவது என்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே நடந்த சோதனை யும் தோல்வியில் தான் முடிந்தது. இப்போது ஏற்பட்ட தோல்வி தொடர்ச்சியாக நடந்த 2வது தோல்வி ஆகும்.

மார்கழி 18, 2010

ஏ. ஆர். ரகுமானுக்கு மீண்டும் ஒஸ்கார் வாய்ப்பு

சென்னையைச் சேர்ந்த பிரபல சினிமா பின்னணி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கடந்த 2009ம் ஆண்டு ‘சிலம்டோக் மில்லினர்’ என்ற சினிமா படத்துக்கு இசை அமைத்ததற்காக ஒஸ்கார் பரிசு பெற்றார். இதே வரிசையில் அவருக்கு மேலும் 2 ஒஸ்கார் பரிசுகளும் கிடைத்தன. இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் மீண்டும் ஒஸ்கார் பரிசு பெறும் போட்டி வரிசையில் இருக்கிறார். 44 வயதான அவர் “127 மணி நேரம்” என்ற ஆங்கில சினிமாவில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் இசை அமைத்து இருக்கிறார். அந்த பாடலுக்கான இசை அமைப்புக்கு, இந்த ஆண்டுக்கான ஒஸ்கார் பரிசு கிடைக்குமா? என்பது ஜனவரி 6ம் திகதி தெரிய வரும். ஏ. ஆர். ரகுமானுக்கு “கோல்டன் குளோப்” விருது கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி 17, 2010

தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடையில்லை - இலங்கை அரசு

சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டுமென அமைச்சர் வீரவன்ச கூறி யிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை யில்லை. அரசியல மைப்பில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு தேசிய கீதம் இசைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க வேண் டுமென தவறான அபிப்பிராயம் பரப் பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடி வுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மா நாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, தேசிய கீதம் இசைப்பது தொடர்பில் அரசிய லமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் மெட்டையோ உச்சரிப் பையோ மாற்றாது பாட முடியும். அதற்குரிய கெளரவம் வழங்கப் பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் சிங் களத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூற முடியாது. அங்கு தமிழில் தேசிய கீதம் இசைக்க முடியும். ஐ.தே.க. ஆட்சியில் தேசிய கீதத்தின் மெட்டை மாற்ற முயற்சி நடந்தது. தேசிய கீதத்தை இசைத்து நடனம் ஆட இடமளிக்க முடியாது. சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டுமென அமைச்சர் வீரவன்ச கூறி யிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

மார்கழி 17, 2010

 

புலிகளின் கொலை அச்சுறுத்தலின் எதிரொலி

 

கருணாநிதி, சிதம்பரத்திற்கான பாதுகாப்பை பலப்படுத்த முடிவு

இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருக்கான பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக தமிழக காவல்துறை தலைவர் லத்திகா சரண்கூறியுள்ளார். தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து கடலோர மாவமட்டங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிந்து உள்ள புலிகள் அமைப்பினர் தமிழகத்தில் ஒன்றிணைய திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களால் முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய புலனாய்வுப் பிரிவு தகவல் ஒன்று அனுப்பி இருக்கிறது. இதையடுத்து நடைபெற்ற காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மத்தயி அமைச்சர் சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கான பாதுகாப்பைப் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸ் துறைத் தலைவர் லத்திகாசரண் தெரிவித்துள்ளார்.

மார்கழி 17, 2010

 

இந்தியாவுக்கு தல யாத்திரை செல்வோருக்கு இலவச வீசா

இலங்கையிலிருந்து இந்தியாவுக் குத் தல யாத்திரை மேற்கொள்கிற வர்க ளுக்கு இலவச வீசா வழங்கும் நடை முறை அமுல்படுத்தப் பட்டுள்ளது. இம் மாதம் முதலாந் திகதியிலிருந்து உடனடியாக அமு லுக்கு வரும் வகை யில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார். ‘கோபியோ’ அமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவுடன் நடத்திய பேச்சுவார்த் தையை அடுத்து இதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி யாத்திரை செல்பவர்கள் மத விவகார அமைச்சில் உறுதிக் கடிதமொன்றைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் இலவச வீசாவைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தது பத்துப் பேராவது ஒரு தடவையில் யாத்திரை செல்வதாக உறுதிப்படுத்த வேண்டுமென்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை யர்கள் இந்தியா சென்றடைந்ததும் கைய டக்கத் தொலைபேசிக்கான ‘சிம் கார்டை’ பெறும் நடைமுறையை இலகு வாக்குவ தாகவும் இந்திய உயர் ஸ்தானிகர் இணக் கம் தெரிவித்ததாக பிரபா கணேசன் எம். பீ. தெரிவித்தார். இந்தியா செல்லும் இலங்கையர்கள் ஏற்கனவே பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குவதுபற்றி கோபியோ பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தனர்.

மார்கழி 17, 2010

மரணத்தறுவாயில் மத்திய கிழக்கு பேச்சுவார்த்தை

மேற்குக்கரை, கிழக்கு ஜெருஸலத்தில் இஸ்ரேலின் யூதக்குடி யேற்றம் தொடர்வதை எதிர்த்தே பலஸ்தீன் நேரடிப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொண்டது. அண்மையில் ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்ட மைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இஸ்ரேல், பலஸ்தீன் முரண்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இரண்டு மக்கள் இரண்டு நாடு என்ற அடிப்படையில் இம் முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டுமென இக்கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டது. மீண்டும் பேச்சுக்களைத் தொடர வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு இஸ்ரேல் தற்காலிகமாக யூதக்குடி யேற்றங்களை இடைநிறுத்தியுள்ளமை அமைந்துள்ளது. பாலஸ்தீனர்களின் விடாப்பிடியான போராட்டமே இந்நிலமை ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாகும். (மேலும்.....)

மார்கழி 17, 2010

 

கல்பிட்டி தீவுகளில்

முதலீடு செய்ய வெளிநாட்டு கம்பனிகள் முன்வருகை

கல்பிட்டி கடலில் உள்ள 10 தீவுகளில் முதலீடு செய்ய 10 பிரதான வெளிநாட்டு கம்பனிகள் முன்வந்துள்ளன. இவை சுமார் 500 மில்லியன் டொலர் இலங்கையில் முதலீடு செய்ய உள்ளதாக பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். தகவல் தொழில்நுட்ப அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:- யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதோடு, முதலீடுகளும் அதிகரித்துள்ளன. கல்பிட்டியில் உள்ள 14 தீவுகளில் 2இல் ஏற்கெனவே முதலீடு செய்யப்பட்டுள்ளன. 10 தீவுகளில் முதலீடு செய்ய பிரதான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கொல்ப் மைதானம், பொழுதுபோக்கு இடங்கள் பூங்கா என்பன அமைக்கப்படும். இங்கு வாழும் மக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாதவாறே இந்தத் தீவுகள் அபிவிருத்தி செய்யப்படும். முதலீட்டாளர்கள் தமது மொத்த முதலீட்டில் 5 வீதத்தை இங்குள்ள மக்களின் வீடு மற்றும் வசதிகளை மேம்படுத்த செலவிட உள்ளனர். சர்வதேச மட்டத்தில் கேள்விப் பத்திரம் கோரியே இந்தத் தீவுகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 30 முதல் 50 வருட காலத்திற்கு இவை குத்தகைக்கு வழங்கப்படும்.

மார்கழி 17, 2010

இரகசியம் காப்பதில் கோட்டைவிடும் நாசா

நாசா விற்பனை செய்த கணனிகளில் இரகசிய விபரங்கள்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விற்பனை செய்த கண னிகளில் இரகசிய விவரங்கள் அழிக்கப்பட வில்லை. நாசா விண்வெளி மையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் வசமிருந்த பழைய கணனிகளை விற்பனை செய்தது. ஆனால் அதில் 2010 ம் ஆண்டில் ஸ்பேஸ் ஷட்டில் விண்வெளி ஓடம் குறித்து சேக ரித்து வைக்கப்பட்டிருந்த தரவுகள் மற்றும் விண்வெளி இரகசியங்கள் குறித்த தகவல்களை முறையாக அழிக்காமல் விற்பனை செய்தி ருப்பது தெரியவந்துள்ளது. மேலும் விற்பனை செய்யப்பட்டுள்ள கணனிகளில் நாசாவின் இணைய புரோட்டோகால் விலாசங்களும் அழிக்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவைகள் அனைத்தும் பயங்கரவாதிகள் கைகளில் கிடைத்தால் நாசாவின் உள்ளக கணனி வலையமைப்பில் புகுந்து சீர்கேட்டை விளைவிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்கழி 17, 2010

இலங்கை - இந்தியா கடற்போக்குவரத்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

தலைமன்னார்-இராமேஸ்வரம்; கொழும்பு-தூத்துக்குடி கப்பல் சேவைகள்

முதலில் கொழும்பு- தூத்துக்குடி மற்றும் தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படும். அதன்பின் ஏனைய துறைமுகங்களுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம் பிக்கப்படும். தற்பொழுது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் விமான போக்குவரத்து சேவை மாத்திரமே இடம்பெற்று வருகிறது. இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்பத்தில் கப்பல் சேவைகள் நடைபெற்ற போதும் யுத்தம் காரணமாகக் கடந்த 30 வருடங்களாக கப்பல் சேவை இடம்பெறவில்லை. மீண்டும் இரு நாடுகளுக்கிடையில் பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதனூடாக பெருமளவு மக்கள் நன்மையடைய உள்ளனர். விமானத்தில் பயணம் செய்வதைவிட குறைந்த செலவில் கப்பலில் பயணம் செய்ய வாய்ப்புக்கிட்ட உள்ளதோடு பயணிகளுக்கு புதிய பயண அனுபவமும் கிடைக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். (மேலும்.....)

மார்கழி 17, 2010

நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் அடுத்த ஆண்டில் மின் ஒளி பரவும்

நாடெங்கிலும் உள்ள 320 பிரதேச செயலகங்களுக்கு கீழ் வரும் 14,000 கிராமசேவக பிரிவுகளில் உள்ள மக்களின் வீடுகளுக்கு, இலங்கை மின்சார சபை அடுத்த ஆண்டு முதல் சூரியசக்தி, காற்று சக்தியின் மூலம் அந்தந்த பிரதேசங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய மின்சாரத்தை விநியோகித்து, இலங் கையிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் பின்தங்கிய கிராமங்களிலுள்ள ஏழை மக்களின் குடிசைகளுக்கும் மின்சார ஒளியை பரப்புவதற்கு அரசாங்கம் துரித கதியில் நடவடிக்கைகளை எடுத்து வருவது மஹிந்த சிந்தனை எண்ணக்கருவை நன வாக்கும் ஒரு செயற்பாடாக அமைந்துவிடும் என்பது திண்ணம். (மேலும்.....)

மார்கழி 17, 2010

இத்தாலியப் பிரதமருக்கெதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் போர்க்கொடி

இத்தாலியப் பிரதமர் பெர்லுஸ்கோனிக் கெதிராகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 630 ஆசனங்களை யுடைய பாராளுமன்றத்தில் 314 பேர் பிரதமரை ஆதரித்தும் 311 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். இரண்டு பேர் நடுநிலைமை வகித்தனர். இதனால் பிரதமர் பெர்லுஸ் கோனியின் பதவி காப்பாற்றப்பட்டது. பல்கலைக்கழகச் சீர்திருத்தம், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக் கப்படும் மந்த கதியிலான வேலைகள் என்பவற்றை எதிர்த்து பாராளுமன்றத்தில் நம்பிக்கை யில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இது வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இரண்டு மேலதிக வாக்குகளால் பிரதமர் வெற்றியீட்டினார். இதையடுத்து பிரதமருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் இத்தாலியின் பிரதான நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ரகளை செய்தனர். டயர்களை எரித்தனர். கற்கள், பொல்லுகளால் பொலிஸாரைத் தாக்கினர். பிரதமர் அலுவலகம் மீதும் கற்கள் வீசப்பட்டன. நிலைமை மோசமடைந்ததால் பொலிஸார் உஷாரடைந்தனர்.

மார்கழி 17, 2010

இப்போ வருகிற தமிழ்ப்பாட்டுக்களை விட சிங்களத்தில் தேசீயகீதத்தை கேட்பதில் தவறு ஏதுமில்லை.

ஸ்ரீலங்கா அரசாங்கம் புலிகளை ஒழித்துக்கட்டியதுடன் எல்லாம் முடிஞ்சு போச்சுது என நினைத்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை. தமிழ் மக்களை கையாளுவதற்கு இன்னும் அரசுக்கு தெரியவில்லை. அதுவும் யாழ்ப்பாணத்தானை கையாள்வதற்கான தந்திரம் அரசுக்கு இல்லை. டக்ளசையும், கே.பியையும், கருணாவையும் வைத்துக்கொண்டு தமிழ்மக்களை கையாள நினைப்பது குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்ட நினைப்பதாகும். சும்மா கிடந்த புலிகளை லண்டனுக்குப்போய் தட்டியெழுப்பிவிட்டு வந்த மகிந்த கையோடு தேசீயகீதத்தை தமிழில் பாடக்கூடாது என விசர்த்தனமாக முடிவெடுக்க சும்மா படுத்துக்கிடந்த தமிழ்த்தேசியவாதிகளெல்லாம் எழுந்து கூச்சல் போட புலிகளுக்கு இன்னும் உசார் வந்துவிட்டது. (மேலும்.....)

மார்கழி 17, 2010

மூத்த மொழி தமிழ்

கொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில், கனடா நாட்டில் டெரான்டோ நகரைச் சேர்ந்த ஜூங்நாம் கிம் கொரிய மொழியில் பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருப்பதாக தம் தமிழாய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கொரிய மொழியில், தமிழ் வார்த்தைகள் கலந்திருப்பது பற்றி ஜூங்நாம் கிம் குறிப்பிடுகையில், தென்கொரிய நாட்டைச் சேர்ந்த நான், தற்போது கனடாவில் வசிக்கிறேன். கொரிய மொழியில் தமிழ் வார்த்தை கலந்திருப்பதை ஆய்வுசெய்து 500 வார்த்தைகளை கண்டறிந்துள்ளேன். (மேலும்.....)

மார்கழி 17, 2010

தேடல்தான் வாழ்க்கையின் வெற்றி

ஊனால் ஆகிய இந்த உடம்பு மதிப்பு மிக்க பல உறுப்புகளைப் பெற்றுள்ளது. இவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டு குறைபாடுகள் பெற்றவர்களை ஊனுமுற்றவர்கள் என்கின்றோம். ஒரு குழந்தை எந்த இடத்தில் எந்த வீட்டில், எந்த இனத்தில் எந்த மதத்தில் பிறப்பது என்பதை பிறக்கப்போகும் அந்தக் குழந்தை தீர்மானிப்பதில்லை. பிறப்பும், இறப்பும் யார் சொல்லியும் வருவதில்லை. எப்படியோ நிகழ்ந்து விடுகின்றன. ஊனமும் அப்படித்தான். யாரும் விரும்பி ஊனமடைவதில்லை. பிறப்பாலோ, வியாதியாலோ, விபத்தாலோ எப்படியோ உடலில் ஊனம் ஏற்பட்டு விடுகின்றது. (மேலும்.....)

மார்கழி 17, 2010

பிலிப்பைன்ஸில் தாக்குதல், பத்து இராணுவ வீரர்கள் பலி

பிலிப்பைன்ஸில் இராணுவ வீரர்களைக் குறிவைத்த கம்யூனிஸ்ட் போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தியதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸில் புதிய மக்கள் இராணுவம் என்ற கம்யூனிஸ்ட் போராட்டக் குழுவினருக்கு எதிராக இராணுவ வீரர்கள் நடவடிக்கை எடுத்து வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அங்கு 18 நாள்கள் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது. போர் நிறுத்தம் அமுலுக்குவர உள்ள இரு தினங்களுக்கு முன்னரே இத்தகைய தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதனால் மத்திய தீவான சமர் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்து கம்யூனிஸ்ட் போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 10 வீரர்கள் உயரிழந்தனர். போர் நிறுத்த அறிவிப்பை கம்யூனிஸ்ட் போராட்டக் குழுவினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

மார்கழி 17, 2010

சங்கானை இந்து மதக் குருக்கள் சுடப்பட்ட விவகாரம்

பாதுகாப்பு செயலரின் அறிவிப்பு தமிழருக்கு நம்பிக்கை தரக்கூடியது

கடந்த யுத்த காலத்தின் போது தமிழ் மக்களும் இந்து மதகுருமார்களும் பல் வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்து வந்துள்ளனர். இவ்வாறான நிலைமையில் இன்று அமைதி சூழல் நிலவி வரும் சூழலில் இந்துமத குரு துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை எமக்குள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிகள் இரண்டும் படையினர் பாவிக்கும் துப்பாக்கிகள் என தற்போது பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளது. பொலிஸாரும், படையினரும் மேற்கொண்ட உயர் விசாரணையின் காரணமாக இர ண்டு படையினரும், ஆயுதக் குழுவைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்துயரச் சம்பவத்துக்கு ஏ.கே. 47, டி 56 ரக துப்பாக்கிகளே பாவிக்கப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் உள்ள ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை அர சாங்கம் களைய வேண்டும். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குபவர்களிடமிருந்தும் ஆயு தங்களை களைய வேண்டும். அவ்வாறு அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பது அப் பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது. (மேலும்.....)

மார்கழி 17, 2010

பெற்றோருடன் விளையாடும் போது குழந்தைகளின் அறிவு வளர்கிறது

குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிடும் போது அவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும் என இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மார்க் லென்சன்வேகர் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடுதல், அவர்களோடு பேசுதல், அவர்களின் வீட்டு பாடங்களை செய்து தருதல் போன்றவற்றை செய்யும் போது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் மன தைரியம், அதிகரித்து உடல் நலம் பெறச் செய்ய உதவும். மேலும் பிற நபர்களிடம் எளிதாக பழகும் தன்மையும் அதிகரிக்கும். அவை குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை அதிகரிப்பதோடு உலக விஷயங்களையும் கிரகித்து கொள்ளும் தன்மை உருவாகும் எனவும் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுடன் விளையாடினால் பெரியவர்களுக்கு ஏற்படும் மன குழப்பம் மற்றும் டென்ஷன் போன்றவை குறையும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

மார்கழி 17, 2010

நிபந்தனையுடன்

சதாம் ஹு ஸைன் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் ஐ.நா பாதுகாப்பு சபையால் நீக்கம்

ஈராக் மீதான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. நேற்று முடிவுக்குக் கொண்டு வந்தது. ஐ.நாவின் பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் இதற்கு ஆதரவு வழங்கின. பிரான்ஸ் மாத்திரம் நடுநிலைமை வகித்தது. நிதி தொடர்பான உத்தரவாதத்தை வழங்கும் வரை பிரான்ஸ் இதை எதிர்க் கவோ, ஆதரிக்கவோ மாட்டாதென ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதுவர் தெரி வித்தார். ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் 1990ம் ஆண்டு குவைத்தை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து ஈராக் மீது 03 வகையான பொருளாதாரத் தடைகள் ஐ.நா. பாதுகாப்புச் சபையால் கொண்டுவரப்பட்டன. ஆயுத உற்பத்தி, ஏற்றுமதி, பொருளாதார கொடுக்கல் வாங்கல், எண்ணெய், உணவு மருந்துப் பொருட்கள் என்பனவற்றில் கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அணு, உயிரியல், இரசாயன ஆயுதங்களை ஜனாதிபதி சதாம் ஹுஸைன் உற்பத்தி செய்வதாகக் குற்றம்சாட்டியே இப்பொருளாதாரத்தடை கொண்டுவரப்பட்டது. (மேலும்.....)

மார்கழி 16, 2010

16.12.2010 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

இந் நிகழ்ச்சியில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி சர்வேதேச அமைப்பாளர் தோழர் இ. தம்பையா ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம், ரிபிசியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு:  00 44 208 or 078107063682

மார்கழி 16, 2010

சங்கானை வாள்வெட்டுச் சம்பவம் - சந்தேக நபர்களுடன் இராணுவத்தினரும் கைது

யாழ். சங்கானையில் பூசகர்கள் மூவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் அவர்களுக்கு ஆயுதம் வழங்கிய இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். போதைக்கு அடிமையான இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கியுள்ளதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இராணுவச் சிப்பாய்க்கு உதவிசெய்ததாகக் கூறப்படும் மற்றுமொரு இராணுவ வீரரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மார்கழி 16, 2010

பிரதமர் சிங், சிதம்பரம், கருணாநிதியை  கொலை செய்ய புலிகள் திட்டம்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கொலை செய்வதற்கு தமிbழ விடுதலைப்புலிகள் திட்டமிடுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை எச்சரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்.ரீ.ரீ.ஈ. மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 16, 2010

ஆனையிறவு உப்பளங்களின் உப்பு உற்பத்திகள்

ஆனையிறவு உப்பளங்களின் உப்பு உற்பத்திகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 2000 பேருக்கு வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்க முடியும் என அரசாங்கம் தெரிவிக்கிறது. இதற்கு ஏதுவாக இப்பகுதியில் சுமார் 50 ஹெக்டயருக்கும் அதிகமான நிலப்பரப்பில் புதையுண்டுள்ள கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அடுத்த சில வாரங்களில் முற்றாக அகற்றிவிட முடியும் எனவும் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (மேலும்.....)

 

மார்கழி 16, 2010

தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் கதிகலங்கியுள்ள யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியின் ஆறுகால் மடச் சந்தியிலுள்ள வீட்டிற்குள் நேற்று நள்ளிரவுவேளையில் புகுந்த பத்திற்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய நகைகளையும் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சிறுமியொருவரை மாத்திரம் அழைத்து தங்கச்சாமான்கள் எங்கே இருக்கின்றன எனத் திருடர்கள் கேட்டுள்ளனர். பின்னர் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடும் மழை பெய்து கொண்டிருந்ததால் வீட்டாரின் கூச்சல் வெளியில் கேட்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்.....)

மார்கழி 16, 2010

அரசியலுக்கு அடுத்த கோமாளி தயார்?

ஒருவன், படுத்துக்கொண்டோ, உட்கார்ந்துக்கொண்டோ, நடந்துக்கொண்டோ, கனவு கான்பதையும், கற்பனை செய்வதையும் யாரும் தடுக்க முடியாது. ஆனால் நாம் காணும் கனவுக்கு ஒரு அர்த்தம் வேண்டும். அர்த்தமேயில்லாமல் கனவு கண்டு கொண்டுயிருப்பவர்கள் தற்போது அதிகமாகிவிட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் சொல்வது போல கோமளிகளுக்கும் நாடாளும் ஆசை வந்துவிட்டது. தற்போது அந்த ஆசை நடிகர் விஜய்க்கு வந்துள்ளது. யார் வேண்டுமானாலும் அரசியல்வாதியாகலாம், முதல்வர் ஆகலாம் என்பது என்ன நியாயம். அதற்கு ஒரு தகுதி, தராதரம் வேண்டாமா?. முதல்வர் பதவி என்பது என்ன வீட்டுக்கு வெளியில் போடும் கோலமா சரியில்லை என்றால் அழித்து விட்டு திருப்பி போட. (மேலும்.....)

மார்கழி 16, 2010

இயற்கையோடு இயைந்த தொழில்நுட்பம் தேவை

அது ஒரு குறிப்பிட்ட ஆதிக்கத்தின் கருவூலம் என்ற நிலை மாறி வளர்ந்த விஞ்ஞானம் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டில் அரசியல் ஆதிக்கம் செய்த வணிக முதலாளிகளால் ஒரு பெரும் திருப்பத்தைச் சந்தித்தது. உற்பத்தியின் அடிப்படைக் குறிக்கோள் சமூகத் தேவை என்பது மாறி இலாப நோக்கமே அடிப்படையாகவும் தீர்மானிக்கும் கூறாகவும் மாறியது. நவீன விஞ்ஞானத்தின் உயர் தொழில்நுட்பமும் வணிகர்களின் கருவிகளாக மாற்றப்பட்டன. இத்தகு தொழில்நுட்பமே மக்களை அடிமைப்படுத்தவும் இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் பயன்படுத்தப்பட்டது. டார்வின் கொள்கையையும் இன்றைய தொழில்நுட்பச் சமூகத்தின் கணித மயமாக்கலையும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக கூற இயலும். (மேலும்.....)

மார்கழி 16, 2010

அவுஸ்திரேலியாவுக்கு வந்த கப்பல்


கிறிஸ்மஸ் தீவில் விபத்து, பலர் நிர்க்கதி - சிட்னி


 
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் கப்பலொன்று சுண்ணக்கல் பாறையில் மோதியதில் அறுபது பேர் நிர்க்கதிக்குள்ளாகினர். இவர்களில் முப்பது பேர் கரை சேர்ந்துள்ளதாகவும் ஏனையோரை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் அவுஸ்தி ரேலியப் பொலிஸார் கூறினர். அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் நோக்கில் கப்பலில் 60 பேர் வந்த கப்பலே விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்ற வேளையிலும் கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு இடைஞ்சலை ஏற்படு த்துவதாகவும் கூறிய பொலிஸார் எந்த நாட்டவர்கள் என்ற விபரங் களைக் கூறவில்லை. (மேலும்.....)

மார்கழி 16, 2010

யாழ். - கொழும்பு போக்குவரத்தில்


சட்டவிரோத சேவையில் 106 பஸ்கள்

கொழும்புக்கும் யாழ்ப் பாணத்திற்குமிடையில் 106 சொகுசு மற்றும் அரைச் சொகுசு பஸ்கள் சட்ட விரோதமாக சேவையில் ஈடுபட்டுள்ளன. இவற்றுக்கு சட்டபூர்வமான அனுமதி வழங்க நடவடிக்கை எடுத் துள்ளோம். இதற்காக கேள்வி மனு கோரப்பட்டது. இதன்படி சொகுசு பஸ்களுக்கு 11 இலட்சம் ரூபாவும் அரைச் சொகுசு பஸ்களுக்கு 7 இலட்சம் ரூபாவும் பஸ் உரிமையாளர் செலுத்த வேண்டும். மாட்டு வண்டி முதல் விமானம் வரை தனியார் போக்குவரத்து அமைச்சின் கீழே வருகிறது. அவை தொடர்பில் தனியான செயல்முறையொன்றை அமைக்க உள்ளோம். (மேலும்.....)

மார்கழி 16, 2010

சீனப் பிரதமர் இந்தியா வருகை


திபெத் ஆதரவாளர்கள் பெரும் ஆர்ப்பாட்டம்

சீனாவின் பிரதமர் வென் ஜியாபோ நேற்று இந்தியா வந்து சேர்ந்தார். இவருடன் சுமார் 400 வர்த்தகப் பிரமுகர்களும் வந்தனர். முற்றிலும் வர்த்தக நோக்கத்தை அடிப்படை யாகவுடைய இந்த விஜயத்தில் பல விடயங்களும் பேசப்படவுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிரான்ஸ் ஜனாதிபதி நிக்க லஸ் சர்கோஸி ஆகியோரும் அண் மையில் இந்தியா வுக்கு வர்த்தக நோக்கிலான விஜய த்தை மேற் கொண்டிருந்தனர். இவர்களுடனும் அமெரிக்க, பிரா ன்ஸ் வர்த்தகத் தலைவர்கள் வந்திரு ந்தனர். ஆனால் இவற்றையும் விடக் கூடுத லான வியாபாரப் பிரதநிதிக ளுடன் சீனப் பிரதமர் இந்தியா வந்துள்ளார். (மேலும்.....)

மார்கழி 16, 2010

பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை

முன்னாள் வெளிவிவகார அமை ச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினை வுப் பேருரையை ஆற்றுவதற்காக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் இலங்கை வரு கிறார். திருமதி சுகந்தி கதிர்காமரின் அழைப்பின்பேரில் லியாம் பொக்ஸ் வருவதாக லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். சனிக்கிழமை லக்ஷ்மன் கதிர்காமர் நினைவுப் பேருரையை இவர் நிகழ்த்துவார்.

மார்கழி 16, 2010

ஐவரிகோஸ்டில் அரசியல் முரண்பாடு

கபகோ, குவற்றா அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள நேச உடன்படிக்கை?


ஐவரிகோஸ்ட்டில் இரண்டு வேட் பாளர்களும் வெற்றிக்கு உரிமை கோரி பதவியேற்றதால் பெரும் பிளவுகள் தலைதூக்கின. இதை முடித்து வைக்கும் பொருட்டு சென்ற செவ்வாய்க்கிழமை இரண்டு வேட்பாளர்களையும் இணங்கிச் சென்று நேச அணியை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டம் நடந்த ஹோட்டலைச் சுற்றி கபகோ, குவற்றா ஆகியோரின் ஆதரவாளர்களும் திரண்டு வந்தனர். முன்னாள் ஜனாதிபதி கபகோ, கெரில்லா அமைப்பின் தலைவர் குவற்றா ஆகியோர் அண்மையில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட போதும் இருவரும் வெற்றியை உரிமை கோரி னர். அரச இயந்திரங்களின் ஒரு பகுதி யை கபகோவும் ஏனைய பகுதியை குவற்றாவும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். ஐரோப்பிய யூனியன் கபகோவை ஆதரித்தது செவ்வாய்க்கிழமை கபகோ தனது இராணு வத்தை குவற் றாவின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து பேச்சுக்கான சூழலை ஏற்படுத்தினார்.

மார்கழி  2010

போர்க்குற்றவாளிகளை இனங்காட்டுவோம்! வாருங்கள்

புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் கோரப்படுகின்றன. கடந்தகாலங்களில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் வெளிக் கொணரப்படுகின்றன. பல போர்க்குற்றங்கள் புரிந்த புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழுகின்றனர். இவர்கள் மேல் போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும். பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவைக் கொன்ற றிச்சாட் இன்று பிரான்ஸ் நாட்டில் வாழுகின்றார். (மேலும்.....)

அனுப்பவேண்டிய முகவரி :
panelofexpertsregistry@un.org

மார்கழி  2010

மார்கழி 13 ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் கறைபடிந்த நாள். பிரபாகரனின் ஏகதலைமை ஆசை, வெறி ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை தடைசெய்துவிடும் முடிவுக்கு புலிகளை தள்ளிய நாள்.

மார்கழி 13 ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் கறைபடிந்த நாள். பிரபாகரனின் ஏகதலைமை ஆசை, வெறி ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை தடைசெய்துவிடும் முடிவுக்கு புலிகளை தள்ளிய நாள். ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், ரெலோ ஆகிய அமைப்புக்களுடன் ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற கூட்டமைப்பில் சேர்ந்திருந்து கொண்டே புலிகள் 1986 டிசம்பர் 13 ம் திகதி முன்னிரவில் ஈபிஆர்எல்எவ் ற்கு எதிராக தமது துப்பாக்கிகளை உயர்த்தினர். தமிழ் மக்களின் விடிவிற்காக அர்ப்பண உணர்வோடு உழைத்த பல ஆயிரக்கணக்காகன தோழர்களை கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதை செய்தனர் பலரை சுட்டுக்கொன்றனர். ஏற்கனவே 1986 முற்பகுதியில் ரெலோ இயக்கத்தை அழித்தொழிக்கும் முயற்சியில் பல ரெலோ அங்கத்தவர்களை உயிரோடு தீயில் கருக்கினர். பின்னர் புளொட் இயக்கத்தை தடைசெய்வதாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தனர். இறுதியாக ஈபிஆர்எல்எவ் மீதான தாக்குதலை தொடுத்தனர் அன்றிலிருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான ஈபிஆர்எல்எவ் தோழர்கள் புலிகளின் அதிகார வெறிக்கு இரையாகி வி;ட்டபோதும் பல ஆயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பாலும், உதிரத்தாலும் ஸ்தாபிக்கப்பட்ட ஈபிஆர்எல்எவ் இன் மூச்சை நிறுத்தும் புலிகளின் நோக்கம் நிறைவேறவில்லை. (மேலும்.....)

மார்கழி 15, 2010

வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதா?

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தவுடன், நாட்டு மக்களிடம் பேசிய ஜனாதி பதி மகிந்தா ராஜபக்சே, இந்நாட்டில் உள்ள தமிழ்மக்கள் அனைவரும் என் மக்கள் என்றும், அவர்களது புனர்வாழ்வுக்கு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளேன் என்றும் கூறினார். ஆனால் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அவர் எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சொந்த நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த வாழ்விடத்தில் குடியமர்த்தும் பணி மிகவும் மெத்தனமாகவே நடந்து வருகிறது. இந்தப் பணியை இலங்கை அரசு எவ்வாறு மேற்கொள்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமை சர்வதேச சமூகத்திற்கும், ஊடகத்திற்கும் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பெருமளவு நிதி உதவி செய்துவரும் இந்தியா விடம் கூட முழுமையான விவரங்களை இலங்கை அரசு தெரிவிப்பது இல்லை. (மேலும்.....)

மார்கழி 15, 2010

அமெரிக்க நிறுவனங்கள் பொருளாதார விழ்ச்சியில் இருந்து மீள்கின்றனவா? _

அமெரிக்க நிறுவனங்களின் மேலதிகாரிகள் மற்றும் நிதித்துறை நிர்வாகிகள் செல்வக்கொழிப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் பத்து மில்லியனுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பொருளாதார மந்த நிலைக்கு முகம் கொடுத்துக்கொண்டுவரும் நிலையில் இவர்கள் மிக உயர்ந்த கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். 2009ம் ஆண்டு அமெரிக்காவின் 450 பெரிய நிறுவனங்களின் நிர்வாகிகள் பெற்ற வருடாந்த கொடுப்பனவுகள் 11% அதிகரித்திருப்பதாக The Wall Street Journal வெளியிட்ட புதியதொரு கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாய், சராசரியான ஊதியம் (சம்பளங்கள், கொடுப்பனவுகள், பங்குகள் மற்றும் பிற ஊக்கச் சலுகைகள் ஆகியவை உட்பட) 3 சதவீதம் உயர்ந்து 2009ல் 7.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 15, 2010

ஜனாதிபதிக்கு பிரித்தானிய பொலிஸார் தகுந்த பாதுகாப்பு வழங்கினர்: பிரி. உயர் ஸ்தானிகராலயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயத்தின்போது அவரின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளானது என்ற கேள்வி எழவில்லை எனவும் பிரித்தானிய பொலிஸார் தகுந்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர் எனவும்  பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, டெய்லி மிரரின் ஊடகவியலாளரின் மின்னஞ்சல் மூலமான கேள்விகளுக்கு பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வழங்கிய பதில்கள் பின்வருமாறு: (மேலும்.....)

மார்கழி 15, 2010

ஈரான் வெளிநாட்டமைச்சர் ஜனாதிபதியால் பதவி நீக்கம்

ஈரான் வெளிநாட்டமைச்சர் மொனா ச்சர் மொற்றாகி நேற்று ஜனாதிபதி அஹ்மெதி நெஜாதினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான காரணங்கள் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இவ்வெற்றிடத்துக்கு புதிய வர் நியமிக்கப்படுவார் என ஜனாதி பதியின் செயலாளர் அறிவித்தார். யுரேனியம் சர்ச்சை தொடர்பாக முன்னாள் வெளிநாட்டமைச்சர் மொனா ச்சர் மொற்றாகி அமெரிக்கா, பிரிட் டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜேர்மன் ஆகிய நாடுகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டடு வந்தார். கடைசி யாக பெல்ஜியத் தலைநகர் புரு ஸெல்ஸில் நடந்த பேச்சுவார்த்தைக ளிலும் இவரே கலந்து கொண்டார். நேற்று வெளிநாட்டு அமைச்சுக்கு சென்ற மொனாச்சர் மொற்றாகி தனது பதவி விலகல் கடிதத்தை அங்கு கையளித்தார். எனினும் ஊடக ங்களுக்கு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

மார்கழி 15, 2010

முல்லை, கிளிநொச்சியில் இரண்டு ஏக்கரில் நெற்களஞ்சியங்கள்

வடக்கில் பெரும் போக விளைச்சலில் கிடைக்கவிருக்கும் நெல்லை களஞ்சியப்படுத்தும் பொருட்டு இரண்டு நெற்களஞ்சியங்களை உடனடியாக அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய இரு களஞ்சியசாலைகளை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார். இரு களஞ்சியசாலைகளையும் துரிதமாக அமைக்கவென வட மாகாண சபை, வடக்கின் அவசர மீள் எழுச்சித் திட்டம் என்பவற்றின் ஊடா 80 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 15, 2010

ஓய்வூதியத்திட்டங்கள் தேசியமயமானது  பொலிவியாவில் அரசு அபாரமான முடிவு

ஓய்வூதியம் பெறுவதற் கான தகுதி வயதை 58 ஆகக் குறைத்து பொலிவிய இடது சாரி ஆட்சி உத்தரவிட்டுள் ளது. ஐரோப்பிய நாடுகளில் அரசுக்கு எதிரான மக்கள் இயக்கங்களில் முக்கியமானது ஓய்வூதிய வயதை அதிகரிப்பதற்கு எதிராக நடப்ப தேயாகும். பிரான்சில் போராட்ட அலைகள் இன் னும் ஓயவில்லை. இந்த நிலையில், தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி வயது 65 ஆகும். அதை 58 ஆகக்குறைக்கும் உத்த ரவை அந்நாட்டின் ஜனாதி பதியான இவோ மொரேல்ஸ் வெளியிட்டுள்ளார். (மேலும்.....)

மார்கழி 15, 2010

கிடைக்கும் உதவிகளைக் கொண்டு வன்னி நிலம் அபிவிருத்தியடைகிறது

(வி. மிதிலா)

வன்னியில் புதுப் பொலி வுடனும் சுறுசுறுப்புடனும் வெற்றிநடை போடுகின்றார்கள் மக்கள். தம் வழிகாட்டல்களில் மறுபடியும் கால் பதித்து வெற்றியின் பாதையில் செல்கிறார்கள் வன்னி மக்கள். முதியவர்கள், பெற்றோர்கள், உழவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மீண்டும் வன்னியைச் செழிப்பாக வைத்திருப்பதற்கு பாடுபடுகின்றார்கள். தஞ்சம் புகுந்த மக்களை அரசு கைவிடவில்லை, கைகொடுத்து எழு ப்பியுள்ளது. மக்களுக்கான வீடுகளை தற்காலிக வீட்டுத் திட்டம், நிரந்தர வீட்டுத் திட்டம், பழைய வீடுகளைப் புனரமைத்தல் என்று முதல் கட்ட செயற்திட்டங்களாகச் செய்து வருகின்றது. இதைவிட மக்களுக்குத் தேவையான விவசாய உபகரணங்கள், வீட்டு உபகரணங்கள் என அனைத்துப் பொருட்களையும் வழங்குகின்றது. துன்பப்பட்டு வந்த மக்களுக்கு அரசு மட்டுமன்றி, வெளிநாட்டு நிறுவனங்களும் துணை புரிகின்றன. (மேலும்.....)

மார்கழி 15, 2010

நாடு தழுவிய  எதிர்ப்புப் போராட்டங்கள்  பிரிட்டன் சங்கங்கள் அறைகூவல்

கல்வித்துறையில் ஏராளமான சலுகைகளையும், நிதி ஒதுக் கீட்டையும் குறைப்பது என்ற பிரிட்டன் அரசின் முடிவுக்கு எதிராக தேசிய மாணவர் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்தன. டிசம்பர் மாதம் மதிய உணவு நேரத்தில் பெருந் திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போகிறார்கள். யுனைசன், யுனைட் மற்றும் ஜி.எம்.பி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், ஏ.டி.எல் மற்றும் தேசிய ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர் சங்கங் களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. (மேலும்.....)

மார்கழி 15, 2010

அதிக வெப்பமாகும் ஏரிகள் நாசா ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் கடந்த 25 ஆண்டுகளாக ஏரிகள் சூடாகி வருவதாக ‘நாசா’ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ‘நாசா’ மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்நீடர், சைமன் ஹுக் ஆகியோர் செயற்கைக் கோள் அளித்த விவரங்களை வைத்து, உலகம் முழுவதும் உள்ள 167 பெரிய ஏரிகளை ஆய்வு செய்த போது சில ஏரிகள் 1.8 பாகை பரனைட் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஏரிகள் அதிகம் வெப்பமடைந்து காணப்படுகின்றன. சைப்ரியா மங்கோலியா, வடக்கு சீனா பகுதிகளில் மிதமான வெப்பம் அதிகரித்துள்ளது. பூமி கோளத்துக்கு தெற்குப் பகுதியில் உள்ள ஏரிகளில் அவ்வளவாக வெப்பம் உயரவில்லை. வடக்கு ஐரோப்பாவில் ஏரிகளை, சுற்றியுள்ள காற்றுப் பகுதியை விட தண்ணீர்ப் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளது. ஏரிகளின் வெப்பம் அதிகரிப்பதால் பாசி அதிகம் படிந்து மீள் இனம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்கழி 15, 2010

புர்ஜ் காலிபா கட்டடத்தில் இந்தியர்கள் ஆதிக்கம்

உலகின் உயரமான புர்ஜ் காலிபா கட்டடத்தில் இடம் வாங்கியவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். உலகிலேயே உயரமான கட்டடம் என்ற பெருமையை டுபாயில் கட்டப்பட்டுள்ள புர்ஜ் காலிபா கட்டடம் பெற்றுள்ளது. இக்கட்டடம் இந்த ஆண்டு தொடக்கத்தில் திறப்பு விழா கண்டது. அதில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கோடீஸ்வரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வாங்கியுள்ளனர். இந்நிலையில் அக்கட்டடத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள பெரும்பாலான குடியிருப்புக்கள் மற்றும் வணிக வளாகங்களை வாங்கியுள்ளவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக ரெடின் காம் என்ற இணையத்தளத்தில் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. (மேலும்.....)

மார்கழி 15, 2010

ஜனாதிபதியினாலேயே உறுதியான தீர்வை முன்வைக்க முடியும்

பெரும்பான்மை இன மக்களின் அதிகப்படியான ஆதரவைப் பெற்று நாட்டின் தலைவராக விளங்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை உறுதியாக முன்வைக்க முடியும். இது தொடர்பாக ஜனாதிபதி மீது சிறுபான்மை இன மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 15, 2010

வடமத்திய மாகாணத்தில் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும் தாவரம்

பேராதனைப் பல்கலைக்கழக வைத்தியத்துறையைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்ட புதிய ஆய்வு ஒன்றின்மூலம் வடமத்திய மாகாணத்தில் உள்ளவர்களை அதிகமாகப் பாதித்து வரும் சிறுநீரக வியாதிக்கான காரணங்களில் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி தம்மிகா மெனிக்கே திசாநாயக்கா தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வின் படி வடமத்திய மாகாணத்திலுள்ள நீர் நிலைகளில் வளர்கின்ற அல்கா எனப்படும் தாவரத்தினால் (புலூகிறீன் அல்கா) உற்பத்தி செய்யப்படும் ஒருவகை நச்சுப் பொருளே சிறுநீரக பாதிப்பிற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர். நீரோடு இந்த நச்சுப்பொருள் கலப்பதால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவினர் ஒருவருட காலத்திற்கு மேலாக மேற்கொண்ட ஆய்வுகளின் படியே அத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

மார்கழி 15, 2010

RCMP reportedly set to charge suspected migrant smugglers

(Stewart Bell, National Post · Monday, Dec. 13, 2010)

The RCMP is preparing to lay charges against several alleged migrant smugglers who helped bring 76 Sri Lankans to the British Columbia coast last fall, according to two sources briefed on the investigation.The sources said the pending criminal charges concern suspected organizers of the voyage of the Ocean Lady, which was intercepted in Canadian waters on Oct. 17, 2009, after crossing from Malaysia.“Until charges come out, we don’t talk about things like that,” Constable Michael McLaughlin, an RCMP spokesman in B.C., said on Monday. He denied charges were close. “Charges are not imminent.” (more...)

மார்கழி 15, 2010

ஐ. தே. கவின் நீண்டகால பிளவு சர்வதேச மட்டத்தில் நிரூபணம்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் மிக நீண்டகாலமாக இருந்து வந்த இரகசிய பிளவுகள் அக்கட்சியின் சம்மேளனத்தின் பின் சர்வதேச மட்டத்தில் நிரூபணமாகியுள்ளதாக தகவல் தொடர்பாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விடுத்த ஊடக அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- ஐ. தே. க.வின் சம்மேளனத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடாத்திய பத்திரிகை மாநாடு மற்றும் அதே தினத்தில் ஐ. தே. க. வினது பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு- வெள்ளவத்தையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாடு இக்கட்சியின் பிளவுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. ஆகவே, ஐ. தே. க. இனி ஒருபோதும் ஒற்றுமைப்படப் போவதில்லை. கட்சியின் பிளவை எவராலும் ஒற்றுமைப்படுத்தவும் முடியாது. மேலும் சம்மேளனத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் பலர் பல அபிப்பிராயங்களை முன்வைத்துள்ளமை மிகவும் வெட்கக் கேடான செயலாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மார்கழி 15, 2010

 

விக்கிலிக்ஸ் உரிமையாளர் இரண்டாவது முறையாக நேற்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்

விக்கிலீக்ஸ் உரிமையாளர் ஜுலியன் அசாஞ்ஞே நேற்று இரண்டாவது தடவையாக லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார். தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரிய மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிணை மனு கோருவார் என எதிர்பார்க்கப்படு கின்றது. உலகம் பூராவும் ஜுலியன் அசா ஞ்ஞேயை விடுதலை செய்யும்படி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் வேளை நேற்று லண்டன் நீதிமன்றம் முன்பாகவும் ஆதரவாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இணையத்தளத்தில் இராணுவ இராஜ தந்திர இரசியங்களை வெளியிட்டதால் பல நாடுகள் இவரை ஒப்படைக்குமாறு கோரின. இந்நிலையில் சுவிடனில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் இவரைக் கைது செய்யுமாறு சர்வதேச பொலிஸிடம் சுவிடன் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. பின்னர் லண்டன் பொலிஸார் இவரை கைது செய்து விளக்க மறியலில் வைத்தனர்.

மார்கழி 15, 2010

பாலஸ்தீனத்தை கழிவுக்கிடங்காக்கும் இஸ்ரேல்!

இஸ்ரேலியத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளைக் கொண்டு போய்க் கொட்டும் பகுதியாக பாலஸ்தீனத்தின் மேற்குக்கரைப் பகுதியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. கடந்த மாதத்தில் சில வாகனங்களை பாலஸ்தீன நிர்வாகம் மறித்து சோதனை செய்தது. அதில் எக்கச்சக்கமான அளவில் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியபோது இஸ்ரேலியத் தொழிற்சாலைகளிலிருந்து வருகின்றன என்று அதை ஓட்டிவந்தவர்கள் தெரிவித்ததால் பாலஸ்தீன நிர்வாக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். (மேலும்.....)

மார்கழி 15, 2010

அமெரிக்காவுக்கு போட்டி கியூபாவில் இணையதளம்

அமெரிக்காவின் "விக்கிபீடியா' தகவல் களஞ்சியத்தைப் போல, கியூபா அரசும் சொந்தமாக ஒரு தகவல் களஞ்சிய இணையதளத்தைத் துவங்கியுள்ளது. நேற்று முதல் இந்த இணையதளம் அதிகாரபூர்வமாகச் செயல்படத் துவங்கியுள்ளது. "விக்கிபீடியா' என்ற தகவல் களஞ்சிய இணையதளம், 2001ல் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இலவசமாகத் தகவல்களைத் தரும், இந்த இணையதளத்தின் சிறப்பு, வாசகர்கள் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை அதில் பதிவு செய்ய முடியும். திருத்த முடியும். தற்போது அதில், 35 லட்சம் தலைப்புகள் ஆங்கிலத்திலும், ஆறு லட்சத்து 82 ஆயிரம் தலைப்புகள் ஸ்பானிஷ் மொழியிலும் உள்ளன. அமெரிக்காவை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற கியூபா அரசு, தற்போது "விக்கிபீடியா'வுக்குப் போட்டியாக, சொந்தமாக தகவல் களஞ்சிய இணையதளத்தைத் துவக்கியுள்ளது. இதை இயக்குபவர் யார் என்பது தெரியவில்லை. ஸ்பானிஷ் மொழியில் செயல்படும் இந்த இணையதளம் அதிகாரபூர்வமாக, நேற்று முதல் செயல்படத் துவங்கியது. எனினும், 20 ஆயிரம் தலைப்புகளில் ஏற்கனவே இது செயல்படத் துவங்கியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

மார்கழி 15, 2010

Colombo denies reports on Tamil National Anthem

 (B. Muralidhar Reddy)

 The Sri Lankan government on Monday denied a media report that it had decided to disallow a Tamil version of the island nation's National Anthem played in some parts of the Northern and Eastern Provinces. Lucien Rajakarunanayake , Director, Policy Research & Information (PIRU), Presidential Secretariat told The Hindu that there was no basis to the media report and follow-up reports by sections of the press that the Cabinet had decided to “scrap” the use of the Tamil version of the anthem. (more....)

மார்கழி 14, 2010

ராஜபக்சே அரசு முடிவை கைவிட இந்தியா வலியுறுத்த வேண்டும் : சிபிஎம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இலங்கையில் தமிழிலும், சிங்கள மொழியிலும் தேசிய கீதம் இதுவரையில் இசைக்கப்பட்டு வந்துள்ளது. திடீரென்று இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழ் மொழியிலான தேசிய கீதம் இசைப்பதை ரத்து செய்துள் ளார். இலங்கை அரசின் இந்த முடிவு கவலையளிக்கிறது. இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக் கும் இடையிலான ஆயுத மோதல் முடிந்து ஓராண்டுக் கும் மேலாகிவிட்டது. இலங்கை தமிழர்கள் அமைப்பு களோடு பேச்சுவார்த்தை நடத்தி தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு மாநில சுயாட்சி அளிப்பதோடு, மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரம் போன்ற அம்சங்களில் சம அந்தஸ்து வழங்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு வரும் சூழலில், இந்த முடிவு இலங்கைத்தமிழர்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்கும். எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசை கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மார்கழி 14, 2010

அந்தார்ட்டிகாவில் மூழ்கியது கொரியக் கப்பல்: 5 பேர் பலி - 15 பேர் மாயம்

கொரிய நாட்டிற்கு சொந்தமான கப்பல் ஒன்று அந்தார்ட்டிகா கடல் பகுதியில் மூழ்கியுள்ளது. இதில் பயணித்த 20 மாலுமிகளுள் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் 15 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கப்பல் மூழ்கியதற்கு காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. காணாமல் போனவர்களை தேடும் பணியில் இரண்டு தென்கொரியக் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுவருவதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. இது ஒரு நாசகாரச் செயலா என கொரிய அரசு விசாரணையை முடுகிவிட்டுள்ளது.

மார்கழி 14, 2010

இலங்கைக்கு இவ்வாண்டு 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கைக்கு இவ்வாண்டு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்வடைந்துள்ளது. ஆறு லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொடும் தம்பதியர் இருவரை வரவேற்க இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவுஸ்திரேலிய தம்பதியர் இருவரே இந்த அதிர்ஷ்டசாலிகள் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.இவர்கள் லண்டனிலிருந்து யு.எல் 501 என்ற விமானத்தின் மூலம் இன்று மாலை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களை வரவேற்க சுற்றுலாச் சபையின் உயரதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

மார்கழி 14, 2010

தமிழில் தேசிய கீதம் ரத்து?

இலங்கை அரசுக்கு கருணாநிதி கண்டனம்

சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என இலங்கை அமைச் சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு முதல் வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் வசிப்பதால் அந்த நாட்டு தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே மாற்றி, இனி சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அமைச்சரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் பத்திரி கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புண்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக்கூடியது. எனவே இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை இவ்வாறான முடிவுகள் ஏதும் எட்டவில்லை என்று இலங்கை அரசு தற்போது கூறியுள்ளது.

மார்கழி 14, 2010

UN Secretariat (Library Building, L-0330 L)

Secretariat of the Panel of Experts

 Dear Sir, Madam,

Thank you for writing to the Secretary-General's Panel of Experts. The

Panel appreciates the time you have taken to your share your contribution

with it.The responses to a number of frequently asked questions are thus set out

below.

(more...)

மார்கழி 14, 2010

தேவலோகம் வந்தும் எங்களுக்கும் நாடு கடந்த தேவலோகம் தா என்டு கேட்டாலும் கேப்பாங்கள்…

யாழ்ப்பாணத்தில் இப்ப பாருங்கோ முந்தி ஒருபோதும் இல்லாத அளவுக்கு விபத்துகள் பெருக்கிப் போச்சு.. இதுக்கு என்ன காரணம் என்டு வயதான அப்பு ஒருவரிட்ட கேட்டன். அந்தாள் அழுதழு சொன்ன விசயங்கள் இவைதான்:

முந்திப் பாருங்கோ எமன் எருமை மாட்டில வாறாதா எல்லாரும் சொல்லுவாங்கள்….
இப்ப அவன் கனக்க வாகனங்கள் வைச்சு விதம் விதமா வந்து எங்களை கொண்டு போகத் திரியிறான்.

 இப்ப சண்டை ஓய்ஞ்சு போச்சு…. இப்பிடியே இவங்களை விட்டால் கன அலங்கோலம் செய்வாங்கள்…

பிறகு தேவலோகம் வந்தும் எங்களுக்கும் நாடு கடந்த தேவலோகம் தா என்டு கேட்டாலும் கேப்பாங்கள்…(மேலும்.....)

மார்கழி 14, 2010

பிரபா தான் நினைத்ததையே செய்தார், ரஜீவ்காந்தியின் கொலை பாரிய தவறு

பெரும்பான்மை சமூகத்தை புண்படுத்தாத அரசியல் தீர்வே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் - நல்லிணக்க ஆணைக்குழு முன் பிரதியமைச்சர் முரளிதரன்

 

பெரும்பான்மை சமூகத்தைப் புண்படுத்தாத வகையில் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டமே சமூகங்களு க்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூ டியதாக அமை யும் எனப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்  தெரிவித்தார். சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் பெரும்பான்மை சமூகத்தைப் புண்படுத்தாத அரசியல் தீர்வு அவசியம். தற்பொழுது மாகாண சபைகள் ஊடாகவே தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அந்தந்த மாகாண மக்களே சுயமாக ஆட்சி செய்யக்கூடிய வகையில் அதிகார ங்களை வழங்கினால் அது திருப்திகரமான தீர்வாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

மார்கழி 14, 2010

ரூ. 207 கோடியில்

யாழ், கிளிநொச்சியில் பாரிய குடிநீர்திட்டம்

207 கோடி ரூபா செலவில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கான பாரிய குடிநீர் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்றரை இலட்சம் மக்கள் நன்மையடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பல்கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த பாரிய குடிநீர் விநியோகத் திட்டத்தின் முதற்கட்டம் 2015ம் ஆண்டளவில் நிறைவடையவுள்ளது. (மேலும்.....)

மார்கழி 14, 2010

ஆங்கிலத்தில் பாடி அசத்திய ரஷ்ய பிரதமர்

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் மாஸ்கோவில் நடந்த, சினிமா நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பாட்டுப் பாடி அசத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, நிதி திரட்டும் நிகழ்ச்சி மாஸ் கோவில் நேற்று முன்தினம் நட ந்தது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஷரோன் ஸ்டோன், கெவின் காஸ்ட்னர், மோனிகா பெலூசி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வந்த ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், திடீரென அங்கிருந்த பியானோவை இசைத்த படி, பழைய ரஷ்ய திரைப்பட பாட சாலை ஆங்கிலத்தில் பாடினார். இது குறித்து புடின் குறிப்பிடு கையில், “எனக்கு பாடவோ, இசை க்கருவிகளை இசைக்கவோ தெரி யாது,. என பலர் நினைத்து கொண் டிருக்கின்றனர். திமித்ரி பெஸ்கோ என்ற ஆசிரியரிடம் முறையாக இசையையும், ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டேன்’ என்றார்.

மார்கழி 14, 2010

 

யாழ். மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவங்களை தடுக்க வீதி ரோந்துகள்

யாழ். மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவங்கள் இரவு வேளைகளில் அதிகரித்திருப்பதையும், கொள்ளை யில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் ஈடுபடுவதையும் முழுமையாக கட்டுப்படுத்த சகல பொலிஸ் நிலை யங்களிலும் விசேட குற்றப்புல னாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டிருப் பதுடன் இரவு ரோந்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நடைபெற்ற கொள்ளை சம்பந்தமாக சந்தேகிக் கப்படுபவர்களின் விபரங்களை பொலிசாருக்கு தந்துதவுமாறு கோரப் பட்டுள்ளது.

மார்கழி 14, 2010

ரஷ்யா - பின்லாந்து ரயில் சேவை ஆரம்பம்

ரஷ்யா - பின்லாந்துக்கிடையி லான முதலாவது அதிவேக ரயில் சேவை நேற்று ஆரம்பமானது. ரஷ்யப் பிரதமர் விளாதிமீர் புட்டின், பின்லாந்து ஜனாதிபதி ஆகியோர் இந்த ரயில் சேவையை ஆரம் பித்தனர். மொஸ்கோவுக்கும் பின் லாந்தின் தலைநகருக்குமிடையி லான தூரம் 280 கி.மீற்றராகும் இந்த ரயில் மணித்தியாலத்துக்கு 220 கி.மீற்றர் செல்லும் ஒரு மணிநேரப் பயணத்தின் பின்னர் இரண்டு தலைவர்களும் சந்தித்துக் கொண் டனர். ஆசியாவையும், ஐரோப்பா வையும் இணைக்கும் மிகப் பெரிய ரயில் சேவை இதுவாகும். நாளொ ன்றுக்கு இரண்டு தடவைகள் இந்த ரயில்கள் சேவையிலீடுபடவுள்ளன. இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்ட மைக்கு இரு நாடுகளின் பிரயாணி களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆசிய ஐரோப்பிய உறவை மேம் படுத்த இந்தச் சேவைகள் உதவு மென நம்பிக்கை தெரிவிக்கப்படு கின்றது.

மார்கழி 14, 2010

க. பொ. த. (சா/த) பரீட்சை நாடெங்கும் சுமுகம்

182 முன்னாள் புலிகள் பரீட்சைக்கு தோற்றினர்

க. பொ. த. (சா/த) பரீட்சை நேற்று நாடெங்கும் மிகவும் சுமுகமாக இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க கூறினார். என்றாலும் பரீட்சை முடியும் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதுடன் ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். பாதுகாப்புப் படையினரிடம் சரண் அடைந்த 182 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று ஆரம்பமான க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றினார்கள். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இவர்களுக்குரிய பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டிருந்ததென வன்னி மாவட்ட மேலதிக கல்விப் பணிப்பாளர் பி. அரியரத்தினம் தெரிவிததார். வவுனியாவில் மொத்தமாக 6953 பரீட்சார்த்திகள் இந்த பரீட்சைக்கு தோற்றுகின்றனர். 58 நிலையங்களில் பரீட்சைகள் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி நடைபெற்று வருகின்றதென தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த 706 பேர் காமினி மகாவித்தியாலயத்தில் உள்ள ஏழு நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றினார்கள்.

மார்கழி 14, 2010

 

தென் கொரியாவுடன் அணு ஆயுதப்போர் வட கொரியா எச்சரிக்கை

தென் கொரியாவுடன் அணு ஆயுதப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தென் கொரியாவிலுள்ள யான்பியாங் என்னும் தீவின் மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் தென் கொரியாவின் இரண்டு கடற்படை வீரர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்க படையினர் களத்தில் இறங்கினர். இரு நாட்டு படையினரும் மஞ்சள் கடலில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஜப்பானும் தென் கொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் கொரிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் மேற்கூறிய கூட்டணியால் அணு ஆயுத போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக வட கொரியா எச்சரித்துள்ளது. தங்களது நடவடிக்கை தங்களது இயல்பான இராணுவ நடவடிக்கைதான் என்றும் தங்களைத் தாக்கும் நோக்கத்தோடு தென் கொரியா சமீபத்தில் இராணுவத்தை ஏவியிருப்பதாகவும் வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே வட கொரியாவிடம் அதிகபட்சமாக புதிய வகையான 10 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும், கடலுக்கடியில் இருந்து தாக்கும் திறன் கொண்ட அந்த அணு ஆயுதங்களை வடகொரியா தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

மார்கழி 14, 2010

இரத்தக் குழாய் அடைப்பு நீக்க நவீன லேசர் சிகிச்சை

இரத்தக் குழாய் அடைப்பை உடனடி யாக நீக்கும் வகையில், புதிய லேசர் சிகிச்சையை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்குள், ‘கதீட்டர் என்ற நுண்ணிய குழாயைச் செலுத்தி, அதன் வழியாக சக்தி வாய்ந்த லேசர் கற்றைகள் பாய்ச்சப் படும். வெப்பம் காரணமாக அடைப்பு ஏற்பட்டுள்ள, பகுதிக்குள் படிந்திருக் கும். தேவையில்லாத படிமங்கள் பொடிப் பொடியாக சிதறி விடும். இந்த லேசர் சிகிச்சைக்கு, ‘எக்சைமர்’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதம், இரண்டு நோயாளிகளு க்கு இந்த லேசர் சிகிச்சை அளிக்கப் பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. மேலும், அந்த நோயாளி கள் சிகிச்சை அளிக்கப்பட்ட மறுநாளே மருத்துமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இந்த சிகிச்சை மூலம் நோயாளிகள் ஆச்சரியமளிக்கும் வகையில் மிக விரைவில் பூரண குணமடைந்தனர். (மேலும்.....)

மார்கழி 14, 2010

வடபகுதி மக்களுக்கு விரைவில் குடிநீர் விநியோகத் திட்டம்

வட இலங்கைக்கான 5 ஆண்டு கால குடிநீர் விநி யோகத் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆசிய அபி விருத்தி வங்கியின் உதவியுடன் 20,740 மில்லியன் ரூபா செலவில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம், வட பகுதியில் உள்ள 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்களுக்கு, சுத்தமான குடிநீரை பெறும் வாய்ப்பு கிடைக்கும். இந்த குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான சாத்தியக் கூற்று ஆய்வு அறிக்கைகள் ஏற்கனவே உயரதிகாரிகளாலும் குடிநீர் விநியோக நிபுணர்களாலும் ஆராய்ந்து அங்கீகரிக் கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். (மேலும்.....)

மார்கழி 13, 2010

சதாம் உசேனின் கடைசி நிமிடங்கள் - விக்கிலீக்ஸ் அம்பலம்!

சதாம் உசேன் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அனுப்பியுள்ளனர். அந்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. பாக்தாத்தில் (அப்போதைய) அமெரிக்க தூதர் ஜல்மே கலில்சத் மற்றும் அரசு தலைமை வக்கீல் முன்கித் பரூன் ஆகியோர் சதாம் தூக்கு குறித்து ஆலோசனை நடத்தினர். தூக்கு மேடை சரியில்லை என்பதால் அமெரிக்க வீரர்கள் புதிதாக மேடை கட்டியதாக கலில்சத்திடம் பரூன் கூறியுள்ளார். (மேலும்.....)

மார்கழி 13, 2010

தேசிய கீதம் தொடர்பில் மொழிப்பிரச்சினையை தோற்றுவிப்பது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும்

ஒரு நாட்டின் தேசிய கீதம் அந்நாட்டின் பெரும்பான்மை மொழியில் இருக்கவேண்டும். உலகில் இவ்வாறான நடவடிக்கைகளே பின்பற்றப்படுகின்றன. இதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், யுத்தம் முடிந்த நிலையில் முக்கியத்துவம் வழங்குவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் நம் முன்னிருக்கையில் தேசிய கீதம் தொடர்பில் மொழிப் பிரச்சினையை தற்போது தோற்றுவிப்பது இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும். அத்தோடு, சர்வதேச ரீதியில் எமக்கு எதிரான நாடுகளுக்கு மெல்லுவதற்கு வாய்க்கு அவல் கிடைத்தது போல் அமையும். தேசிய கீதத்தையே தமிழில் தடைவிதிக்கும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கப்போகின்றதென புலி சார்பானவர்களின் பிரசாரத்திற்கு உந்துசக்தியாக அமைந்துவிடும். எனவே, யுத்தத்தில் வெற்றிகண்ட ஜனாதிபதி அனைத்தையும் அறிவார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. (மேலும்.....)

மார்கழி 13, 2010

எமது பண்டைய துறைமுகங்கள் வர்த்தகத்துக்கு வலுவூட்டின

இலங்கையின் பண்டைய பெருமைகளை எடுத்துக் காட்டக் கூடிய புதிய கண்டுபிடிப்புகளை எமது தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தைச் சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் பெறுவதில் வெற்றி கண்டுள்ளார்கள். சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கு வணிகம் செய்வதற்காக வந்த சீன மாலுமிகளும், உரோமன் சாம்பிராஜ்யத்தைச் சேர்ந்த வணிக கப்பல்களும் பயன்படுத்திய பண்டைய துறைமுகங்களின் அழிவுகளை இவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வெளிநாட்டு கப்பல்களில் வந்த வர்த்தகர்கள் சீன மற்றும் உரோமபுரியின் வர்த்தகர்கள் எமது நாட்டின் வாசனைத் திரவியங்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகிவற்றுடன் எமது மக்களின் கடும் உழைப்பினால் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி உணவையும் வாங்கிச் சென்றதற்கான புதிய சான்றுகள் இப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. (மேலும்.....)

மார்கழி 13, 2010

அரச அலுவலகத்துக்கு வருகை தரும் மக்களுக்கு நியாயம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்

சமூக ஒருமைப்பாடு என்பது “சமூகத்தில் நிலவும் இன, மத, மொழி, குலம் மற்றும் பல்வேறுபட்ட அந்தஸ்து முதலிய சகல வரையறைகளின் மூலமும் ஒதுக்கப்பட்ட மக்கள் பகுதியினரின் பொருட்டு அவர்களது தனித்துவத்தைப் பாதிக்காது சமமான வாய்ப்புகள் மற்றும் சம உரிமைகளை வழங்குதல் மூலம் ஒருவருக்குகொருவர் மதிப்பளிக்கும் வரையறையற்ற சமூகம்” ஒன்றை உருவாக்குவதாகும். அது மிகவும் கஷ்டமான பணியாகும். பெளதிக, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதைக் காட்டிலும் கஷ்டமான பணியாகும். (மேலும்.....)

 

மார்கழி 13, 2010

உலகம் வெப்பமயமாதலால் சென்னைக்கு பாதிப்பு

புவி வெப்பமயமாவதால், சென்னைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது, “என, சுற்றுச்சூழல் பொருளாதார ஆய்வாளர் சுஜாதா பைரவன் பேசினார். சர்வதேச வர்த்தகம் மற்றும் ஊடகக் கல்வி நிறுவனம், “சுற்றுச் சூழல் மாற்றத் தில் சென்னை’ என்ற, கருத்தரங்கை ரஷ்யன் கலாசார மையத்தில் நடத்தியது. இதில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் பொருளாதார ஆய்வாளர் சுஜாதா பைரவன் பேசியதாவது, புவி வெப்பமயமாதலை தவிர்ப்பதற்காக, பல நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. (மேலும்.....)

மார்கழி 13, 2010

இலங்கை

தமிழில் தேசிய கீதம் ரத்து  அதிகாரப்பூர்வ மற்றும் அரசு விழாக்களில் இனி சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படவேண்டும்: ராஜபக்சே அரசு உத்தரவு  அரசு முடிவுக்கு எதிராக   2 அமைச்சர்கள் கருத்து  தமிழ்மக்களை மேலும் தனிமைப்படுத்தும் முடிவு - அரசியல் நோக்கர்கள்

இலங்கையில் ஏற்கெனவே கடும் துயரத்தை சந்தித்துள்ள தமிழ் மக் களை மேலும் தனிமைப்படுத்தும் வித மாக, தேசிய கீதத்தின் தமிழ் வடி வத்தை ரத்து செய்து ராஜபக்சே அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தின் தமிழ்வடிவம் இனி இடம்பெறாது என்று அறிவித்துள்ளது.எனினும் இந்த முடிவுக்கு எதிராக இரண்டு அமைச்சர்கள் கருத்து தெரி வித்தனர். இலங்கை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத்துறை அமைச்சர் வசுதேவ நாணயக்கார மற் றும் அமைச்சர் ரஜீதா சேனரத்ன ஆகி யோர், இது எந்த விதத்திலும் பொருத்தமற்ற முடிவு என்று கூறினர். (மேலும்.....)

மார்கழி 13, 2010

வீண் ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுங்கள்

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிலர் தொடர்ச்சியாக தமது நிம்மதியான வாழ்க்கையை குழப்பிவருகின்றார்கள் என்ற நிலைப்பாடு வட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கலாம் என்று புலம்பெயர் தமிழர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயற்படுவதை விடுத்து வீணான ஆர்ப்பாட்டத்திலும், வட மாகாணம் தொடர்பில் கூறப்படும் பொய்யான தகவல்களை திரிவுபடுத்தி வெளியிடும் விடயத்திலேயே தமது நேர காலங்களை கழித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 13, 2010

கொழும்புக்கு 2 மாதத்தில் கப்பல் சேவை ஆரம்பம் - அமைச்சர் வாசன் _      

கொழும்பு தூத்துக்குடி இடையேயான கப்பல் போக்குவரத்து இன்னும் 2 மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜீ.கே. வாசன் தெரிவித்தார். சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் நவீன மக்கள் தொடர்பு அலுவலகத்தை மத்திய அமைச்சர் ஜீ.கே. வாசன் திறந்துவைத்தார். மேலும், இணையத்தளத்தின் மூலமாகப் புகார்களை தெரிவிக்கும் வசதியையும் தொடக்கிவைத்தார். தூத்துக்குடி கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கும். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட சென்னையில் கொள்கலன் பாரவூர்திகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க திருவொற்றியூரில் சுமார் 12 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு பாரவூர்திகளுக்கான தரிப்பிடம் அமைக்கப்படும். சென்னை துறைமுகத்தில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடவசதி ஏற்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறன

மார்கழி 13, 2010

பாகிஸ்தானில் 43 பயங்கரவாத முகாம்கள் - விக்கிலீக்ஸ் தகவல்

பாகிஸ்தானில் 43 பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கு உதவ வேண்டும்” என அமெரிக்காவி டம், இந்தியா வலியுறுத்தியுள்ளதாக விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல் வெளி யிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் வெளியிட்டதாக பிரிட்ட னி லிருந்து வெளிவரும், “கார்டியன்” பத்திரிகையில் செய்தி ஒன்று பிரசுரமாகி யுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியா-அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் ஜிம் ஜோன்ஸ், இந்திய இராணுவ அமைச்சர் ஏ. கே. அந்தோனி மற்றும் அப்போதைய இராணுவ தளபதி தீபக் கபூர் ஆகியோர் பங்கேற்றனர். (மேலும்.....)

மார்கழி 13, 2010

யாழ். குடாநாட்டில் தொடர் கொள்ளை
தடுக்க இராணுவம் சோதனை நடவடிக்கை

யாழ். குடாநாட்டில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவத ற்காக இராணுவத்தினர் இரவு நேரச் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத் தியுள்ளனர். யாழ்ப்பாணம், சங்கானை மற்றும் அளவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் இடம் பெற்ற மூன்று கொள்ளைச் சம்பவங்களில் கொள்ளையர்களால் துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் சங்கானைப் பகுதியில் கோவில் குருக்கள் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த முகமூடியணிந்த கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குருக்களும் அவருடைய இரண்டு மகன்மாரும் படுகாயமடைந்தனர். (மேலும்.....)

மார்கழி 13, 2010

தாய்லாந்தில் இடைத் தேர்தல்

தாய்லாந்தின் ஐந்து மாகாணங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடந்தது ஐந்து எம்.பி.க்களைத் தெரிவு செய்யும் பொருட்டே இத் தேர்தல் நடத்தப்பட்டது. நவம்பர் மாதம் எம்.பி. ஒருவரின் தெரிவை ரத்துச் செய்த நீதிமன்றம் மீண்டும் தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டது இதையடுத்து ஐந்து மாகாணங்களில் தேர்தல் நடந்தது முன்னாள் உள்துறை அமைச்சரும் ஆளும்கட்சியின் பிரதான பங்காளி கட்சி வேட்பாளரும் போட்டியிடுகின்ற வட மாகாணத்தில் போட்டிகள் கடுமையாக இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 03 மணிவரை வாக்களிப்பு இடம்பெற்றது. பிரதமர் அபிஷித் வெஜ்ஜாஜி தேர்தல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

மார்கழி 13, 2010

யாழ். நவாலி வயல் வெளியில் ‘ரொனாடோ’ சூறாவளி! மக்கள் அச்சம், பரபரப்பு

யாழ்ப்பாணம், நவாலியில் வயல்வெளி யில் நேற்று ரொனாடோ சூறாவளி ஏற்பட்டதில் மக்கள் பெரும் அச்சமடைந்தனர். வயல் நிலத்தில் இருந்து மழை நீர் சூறாவளி போன்று சுழன்று மேல் நோக்கி மிக வேகமாக சென்று கொண்டி ருந்தது. இந்த அதிசய சம்பவம் நேற்று நண்பகல் 12.50 மணியளவில் நவாலி மேற்கு களையோடை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் (பிட்டி அம்மன்) ஆம்பன் குளப் பகுதிக்கும் இடையில் இடம்பெற்றது. சுமார் அரை மணி நேரம் இந்த நிலை காணப்பட்டது. (மேலும்.....)

மார்கழி 13, 2010

லண்டனில் புலம் பெயர்ந்தோரின் செயற்பாடு

ஜனநாயக விழுமியங்களை மீறும் செயல்

இலங்கையிலுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் எங்கள் நாட்டின் 30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தின் பக்க விளைவுகளி னால் தங்களுக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புக்களில் இருந்து வாழ்க்கையை மீண்டும் புதிதாக புனர்நிர்மாணம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், இலங்கையில் மீண்டும் இனங்களிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் இன்றைய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பும் நல்கி வருகிறார்கள். ஆயினும், பிரிட்டனில் வாழும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில தீய சக்திகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் மாநகரில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தில் நிகழ்த்த இருந்த உரைக்கு தடை ஏற்படுத்தக் கூடிய வகையில் முட்டுக்கட்டைகளை விதித்தமை, உண்மையிலேயே வேதனைக்குரிய கண்டிக்கக் கூடிய விடயம். (மேலும்.....)

மார்கழி 13, 2010

காட்டுப்பகுதிகளில் இராணுவம், பொலிஸ் தேடுதல்

வறக்காபொல நகைக் கடை கொள்ளையுடன் தொடர்புடைய மேலும் நால்வர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளனர். அம்மேபுஸ்ஸ காட்டுப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேக நபர்கள் கொள்ளையிட்டதாக கூறப்படும் நகைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை காண்பிக்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் பொலிஸார் மீது துப்பாக்கி சூடு நடத்த முற்பட்ட வேளையிலேயே பொலிஸார் நடத்திய பதில் துப் பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (மேலும்.....)

மார்கழி 13, 2010

15 வருட காலம் சட்டவிரோதமாக நீரைப் பெற்றுவந்த வர்த்தகர் கைது

இரத்மலானையில் உள்ள நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைமையகத்துக்கு அருகில் செல்லும் நீர் விநியோக குழாய்களில் இருந்து கடந்த 15 வருட காலம் சட்டவிரோதமாக நீரைப் பெற்று வந்த முன்னணி வர்த்தகர் ஒருவர் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். சபைக்கு அருகே இருந்த கட்டடத் தொகுதியொன்று சந்தேக நபருக்கு சொந்தமாக இருந்திருக்கிறது. இந்நிலையில் பிரதான விநியோக குழாய்களின் மூன்று இடங்களில் இருந்து சந்தேக நபர் சட்டவிரோதமாக நீரைப்பெற்று வந்துள்ளார். இவ்வாறு பெறப்பட்ட சட்டவிரோத நீரின் மூலம் சபைக்கு 10 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 13, 2010

கொசோவோவில் முதற் தடவையாக நேற்று பொதுத் தேர்தல்


கொசோவோவில் நேற்று ஞாயிற்றுக் கிழமை முதன் முறையாக பாராளு மன்றத் தேர்தல் நடைபெற்றது. 120 எம். பிக்களை தெரிவு செய்ய மொத்தம் 70 ஆயிரம் பேர் வாக்களி த்தனர். 2008 ம் ஆண்டு சேர்பியாவி லிருந்து கொசோவோ பிரிந்து சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டபின் நடை பெறும் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். மொத்தமாக வுள்ள 16 இலட்சம் மக்களில் (1,6 மில்லியன்) 70 ஆயிரம் பேரே வாக்க ளிக்கத் தகுதி பெற்றனர். (மேலும்.....)

மார்கழி 12, 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு

அரசியல் தீர்வின் பொது இணக்கத்தை எட்டும் வகையில் உபகுழு அமைக்க முடிவு

தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் பம்பலப்பிட்டியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழர்கள் சார்பில் பொதுவான இணக்கப்பாடொன்றை எட்டுவது மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வில் தமிழர் கள் சார்பில் ஒருமித்த கருத்து வெளியிடப்பட வேண்டும் என்ற நோக்கில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து பொதுவான இணக்கப்பாடொன்றை எட்ட வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதாக நேற்றைய சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தெரிவித்தது. (மேலும்.....)

மார்கழி 12, 2010

“I do not think the LTTE can revive” Thirunavukkarasu Sridharan

“தமிழீழ விடுதலைப் புலிகள் புத்துயிர் பெறுவார்கள் என நான் நினைக்கவில்லை”திருநாவுக்கரசு சிறீதரன்

(by Sergei DeSilva-Ranasinghe)

“The EPRLF is a left-wing progressive political party. Our first leader K. Padmanabha was assassinated in 1990 in Madras by the LTTE, and we have also lost about 1400 EPRLF cadres fighting against the LTTE. Today the EPRLF-Naba has about 300 full time members, mainly around Batticaloa, Trincomalee and Jaffna. In the Tamil diaspora there are also around 500 active EPRLF members in Canada, England, France, Germany and Switzerland. The EPRLF has split in two groups [the ERPLF-Naba and EPRLF-Suresh faction]; our rival splinter group is headed by Suresh Premachandran who is now allied with the Tamil National Alliance (TNA) [the TNA is the largest Tamil political formation in Sri Lanka consisting of several parties]. The TNA’s politics is different to us, our politics is cadre based. Politically, the TNA are not broad minded people, their politics was circumscribed earlier by the LTTE and now by the trends of the diaspora.(more....) (தமிழ் மொழி மூலம் வாசிக்க....)

மார்கழி 12, 2010

எங்கள் பிள்ளைகளை தந்துவிடு' இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு மனித உரிமைகள் தின ஆர்ப்பாட்டத்தில்!

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை இரு வேறு ஆர்ப்பாட்டங்கள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்றன.காணாமல் போனோரை கண்டுபிடித்து தருமாறு,காணாமல் போனோரை கண்டறியும் குழு நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்குபற்றினர்.சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், சோசலிஷ கட்சி, பெண்கள் கண்காணிப்பகம், சுதந்திரத்துக்கான அரங்கம், இடதுசாரி விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளும் பங்குபற்றின. (மேலும்.....)

மார்கழி 12, 2010

நல்லிணக்க ஆணைக்குழு கற்றுத்தரும் பாடங்கள்

புலிகள் பயங்கரவாதிகள், அவர்களுடன் என்ன பேச்சுவார்த்தை எனப் பலர் விமர்சித்தபோதிலும் அவர் பேச்சுவார்த்தைக்குப் பலமுறை புலிகளுக்கு அழைப்பு விடுத்தார். மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவையும், சந்திரிகா அம்மையாரையும், ரணில் விக்கிரமசிங்கவையும், ஏமாற்றியது போலவே இவரையும் ஏமாற்றிக் காலத்தைக் கடத்தித் தமது காரியத்தைச் சாதிக்கலாம் எனப் புலிகள் திட்டமிட்டனர் என்பது அவர்களது அன்றைய செயற்பாடுகளில் தெளிவாகப் புரிந்தது. இறுதியில் இனியும் இவர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் எனக் கண்டறிந்த பின்னரே யுத்தம் மூலமாக புலிகளை ஒழித்துக் கட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக இன்று மக்கள் சுதந்திரமாக நாட்டின் எப்பகுதிக்கும் சென்றுவரக் கூடியதாகவுள்ளது. (மேலும்.....)

மார்கழி 12, 2010

வெளிநாடுகளில் சேர்த்த பணத்துடன் ஒளித்து வாழும் நம்மவருக்கு பொருத்தமான கவிதைவரிகள்.  
(A Poem From Denmark!  வாழ்க நக்கீரன் மகள்!)

பூவையரை புதுமைப்பெண்ணாக்கி நீங்கள் உயர்ந்த இடத்தில் வைத்தீர்
பூப்புனிதநீராட்டு என்று உலக அழகிகள் போல படம் எடுத்தோம் நாங்கள்
சீதனங்கள் கொடுக்க வேண்டாம் என நீங்கள் சொன்னீர்
சீட்டுக்கள் பல எடுத்து நாங்கள் போட்டிக்கு சீதனம் கொடுத்தோம்
கல்லறைக்குள் நீங்கள் தூங்குகிறீர்கள் தமிழ்மானம் காக்க
சில்லறைக்காய் தமிழ்மானம் விற்கிறோம் நாங்கள்

(மேலும்.....)

 

மார்கழி 12, 2010

பாராளுமன்றத்தில்  இந்த வாரம் எம்.பீ பாடிய முதல் பாடல்

(விசு கருணாநிதி)

பாடகர் எம். பி. யாகலாம்! எம்.பி. பாடகராகலாம்! ஆனால், பாராளுமன்றத்தில் பாட்டுபாட முடியுமா?

முடியாது! என்கிறது நிலையியற் கட்டளை. ஐ.தே. க. எம்.பி தயாசிறி ஜயசேகர ஒரு சிறந்த பாடகர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தன் இனிமையான குரலில் ரசிகர்களை ஈர்ப்பவர். ஆனால், பாராளுன்றத்தில் அப்படி பாட்டு பாடி அசத்த முடியாது என்பது தெரிந்தோ, தெரியாமலோ, வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது பாட்டுபாடி சபையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார். (மேலும்.....)

மார்கழி 12, 2010

"ஜனாதிபதியின் லண்டன் விஜயம்'' பயங்கரவாதம் தொடர்பான பிரிட்டனின் இரட்டை வேடம்

(சுஐப் எம். காசிம்)

இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட சுதந்திர நாடு இலங்கை. இருந்தும் இன்றும் அதே ஏகாதிபத்திய மனோபாவத்துடன் பிரிட்டன் இலங்கையைப் பார்க்கிறதா? அண்மையில் லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு எதிர்கொண்ட சம்பவங்களைப் பார்க்கும் போது இப்படித்தான் கேட்கத் தோன்றுகின்றது. ஒக்ஸ்போட் பல்கலைக்கழக யூனியனின் அழைப்பின் பேரில் லண்டன் சென்றிருந்தார் ஜனாதிபதி. அந்த யூனியனில் உரையாற்றுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அழைப்பல்ல. எனவே, பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுவது போல தனிப்பட்ட விஜயம்தான். அதனால்தானோ என்னவோ ஹீத்ரோ விமான நிலையத்தில் புலிக்கொடிகள் ஜனாதிபதியை வரவேற்றன. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பப்பட்டனவாம். பிரிட்டிஷ் தமிழர் பேரவை என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்ததாக கூறப்படுகின்றது. (மேலும்.....)

மார்கழி 12, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மனமாற்றம் வரவேற்கத்தக்கத

வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்காமல் இருப்பதற்கான முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தமையானது அவர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்து விட்டனர் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இந்த முடிவை அவர்கள் எப்போதோ எடுத்திருக்கலாம். எனினும் காலம் கடந்தேனும் அவர்கள் எடுத்திருக்கும் இம்முடிவு தமிழ் மக்களுக்கு நிச்சயம் மன நிறைவைக் கொடுக்கும். கல்வியில் ஆரம்பித்து காணிப் போராட்டமாக மாறி, இறுதியில் கொடிய யுத்தமாக மாறிய தமிழரின் போராட்டம் முப்பது வருடங்களைக் கடந்தும் முழுமையாக முடங்கிய நிலையிலேயே முடிவுற்றது. (மேலும்.....)

மார்கழி 12, 2010

 

Sri Lanka Green Tiger

 

This is not the first that the Green Tiger Jayalath has indulged in anti-Sri Lankan activities and openly supported and propagated the views of tiger terrorists, and betrayed this nation.  I remember that this foul-mouthed terrorist started airing his anti-Sri Lankan venom as far back as 1993 by addressing a Tiger Terrorist Conference together with his anti-Sri Lankan companion Dr. Wickremabahu Karunaratne. Since then he had been the prime mover of activities against Sri Lanka, whatever the subject it may come across, particularly in respect of anything that may assisting in denying aid to Sri Lanka, denying market access for Sri Lankan products, in humiliating Sri Lanka on the alleged human rights issues, and especially against the war and promoting the tiger terrorists. His treacherous deeds are so many which cannot be defined one by one since it would run to so many pages. He had been a continuous and frequent participant in terrorist gatherings overseas and an enthusiastic orator of overseas terrorist conventions and meetings.  He was the most traveled Sinhala person to the terrorist occupied territories and was even more zealous than Prabhakaran, Tamilselvan, Balassingham and Pottu Amman for segregating Sri Lanka and establishing the dreamland Eelam. As a Catholic rather than paying homage to the Madhu church, he made frequent barefooted homage to the terrorist graveyards in the North. (more.....)   

 

மார்கழி 12, 2010

சூரியதேவனுக்கு எமது நினைவாஞ்சலி

போறாரே தேசியத் தலைவர் பொல...பொலவென மக்களை விட்டு
தண்ணீரும் சோறும் தந்த வன்னி மண்ணை விட்டு
பல் குழல் சுடுகலன் விட்டு
பஞ்சாரத்து றொக்கற்றை விட்டு
போறாரே தேசியத் தலைவர் உலகை விட்டு

(மேலும்.....)

 

மார்கழி 12, 2010

இனியும் வேண்டாம் புலம்பெயர் தமிழர்களின் நீலிக்கண்ணீர்

(ஸாதிக் ஷிஹான்)

முப்பது வருடகால இருண்ட யுகத்தின் பின்னர் யுத்தம் ஒழிந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர் வடபகுதி மக்கள். புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இலங்கைக்கு எதிராக முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை அவர்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர். வட பகுதியிலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்குச் சென்ற எமக்கு அங்குள்ள மக்கள் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணிகள் ஊடாக வடபகுதி மக்கள் புலம் பெயர் தமிழர்கள் மீது கொண்டுள்ள எதிர்ப்பை காணக் கூடியதாக இருந்தது. இலங்கை வாழ் தமிழ் சமூகம் மீண்டும் ஒரு அழிவுக்கு முகம் கொடுக்க தயாரில்லை என்றும் பிரித்தானியாவில் ஜனாதிபதிக்கு புலம்பெயர் தமிழர்கள் காட்டிய எதிர்ப்பானது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஏற்பட்ட அவமான மும் தலைகுணிவும் என்று கருதுவ தாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, ஒத்துழைப்புக்களை செய்யாவிடினும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்றும் கோருகின்றனர். (மேலும்.....)

 

மார்கழி 12, 2010

விழலுக்கிறைத்த நீரான தமிழ்மொழி மாநாடுகள்

முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு என நாம் 1934ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநாட்டைக் கூறலாம். இம் மாநாட்டின் நோக்கம், விஞ்ஞானத்தைப் போதிப்பதற்கு இங்கிலீஸ் சொற்களுக்குப் பதிலாக தமிழ் விஞ்ஞானக் கலைச் சொற்களை உண்டாக்குவது என்பதாகும். இம் மாநாட்டின் கருவாக இலங்கையைச் சேர்ந்த விபுலானந்த அடிகளார் இருந்தார். இம்மாநாட்டின் தீர்மானப்படி 1936ஆம் ஆண்டும் விஞ்ஞான சொற்களுக்கான தமிழ்க் கலைச் சொற்கள் உண்டாக்கப்பட்டன. ஆனால் இது பிரயோகத்தின்போது பிரயோசனமற்றதாக தோல்வியடைந்தது எனலாம். தமிழ் பேசும் எல்லா நாடுகளிலும் இதனை அமுல்படுத்த முடியாமற் போனது தோல்விக்கு மிகப் பிரதான காரணமாகும். (மேலும்.....)

மார்கழி 12, 2010

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு வரவேற்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இலங்கையின் எதிர்காலத்திற்குச் சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். தமிழ்த் தரப்பினர் மீது அரசாங்கம் நம்பிக்கை வைக்கவும், அரசாங்கத்தின் மீது தமிழ்த் தரப்பினர் நம்பிக்கை கொள்ளவும் கூட்டமைப்பின் மனமாற்றம் வழிவகுத்துள்ளதாகத் தமிழ்த் சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியால் மட்டுமே தீர்வொன்றை வழங்க முடியும் என்ற ஏனைய தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மனமாற்றம் வலுப்படுத்தி யுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதேநேரம், தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு தலைமையில் அரசாங்கத் திற்குச் சமர்ப்பிக்கும் தீர்வு ஆலோசனை களுக்குச் சிங்களத் தலைவர்களின் ஆத ரவைப் பெற்றுத் தருவதாகவும் அவர்கள் கூறினர். (மேலும்.....)

மார்கழி 12, 2010

'பார்வையில் தொடங்கி பாதியிலே முடிந்த என் முதல் காதல்'

நான் வாழ்ந்த அந்த கதிரேசன் வீதியை இன்று கடக்கும் போது எதையோ தொலைத்துவிட்ட சோகம் என் தொண்டையை அடைத்துக் கொள்கிறது. அந்த காலத்தில் பெரிய கட்டடங்கள் எதுவுமே கதிரேசன் வீதியில் இல்லை. எல்லாமே சின்னஞ் சிறிய வீடுகள்தான். அந்த தெருக்களில் நான் பந்து விளையாடியது. அந்த தெருவில் உள்ள திண்ணைகளில் படுத்து உறங்கியது. அந்த புழுதிபடிந்த தெருக்களில் உருண்டது நினைத்துப் பார்க்கும் போது ரொம்பவும் இனிமையாக இருக்கிறது என்றவரிடம் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றிக் கேட்டோம். ‘அந்தக் காலத்தில் சினிமா பார்ப்பதென்றால் தியேட்டருக்கு போவோம் அது ஒரு திருவிழா மாதிரி இருக்கும். இப்போ அப்படியா? வீட்டுக்குள்ளேயே ‘டி.வி’ ரேடியோ என்று எல்லாமே கைக்கெட்டிய தூரத்திற்குள் வந்து விட்டது. அதனால் பழைய இனிமை தொலைந்து போய்விட்டது. இன்றைய வாழ்க்கை வசதியானதுதான் ஆனால் இனிமையானதல்ல.(மேலும்.....)

மார்கழி 12, 2010

பாக்.கில் மீண்டும் பயங்கரவாத முகாம்கள் - விக்கிலீக்ஸ் தகவல் _

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன என்று அமெரிக்க அதிகாரிகளிடம் இந்திய இராணுவத் தளபதி தீபக் கபூர் கூறியதாக விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு நாடுகளில் செயல்படும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், தங்கள் நாட்டு தலைமைக்கு அனுப்பி வைத்த ரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் இணையதளமே, இத்தகவலையும் வெளியிட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 11, 2010

 

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஊடாக

தீர்வை உலகுக்கு தெரிவிக்கும் வாய்ப்பை திசை திருப்பிவிட்டனர்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தின் உரையில் தெளிவுபடுத் துவதற்கு நான் திட்டமிட்டி ருந்தேன். இதனூடாக எமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து ஜனாதிபதி நேற்று உரையாற்றினார். சுமார் 50 நிமிடம் சபையில் பேசிய அவர் மேலும் கூறியதாவது; வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் இதன் ஒரு வெளிப்பாடே. ஆனால் வடக்கு, கிழக்கை கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னுரிமை அளித்திருக்கின்றோம். (மேலும்.....)

மார்கழி 11, 2010

ஸ்வீடன் அரசு இணையதளம் முடக்கம், விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் பதிலடி

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவர் ஜூலியன் அசாங்காவுக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்த ஸ்வீடன் அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு அரசின் இணையதளத்தை விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் முடக்கியுள்ளனர். விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கும், அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்காவுக்கும் ஆதரவளிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்களால் ஸ்வீடன் அரசின் அதிகாரபூர்வ இணையதளம் பல மணி நேரம் முடக்கிவைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்வீடன் அரசின் இணையதளத்தை திறந்தால் சர்வருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. எனினும் நேற்று பிற்பகலில் அந்த இணைய தளம் இயங்கத் தொடங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் சைபர் குற்றம் நடந்துள்ளதா என்பதை உறுதியாக தெரிவிக்க இயலவில்லை என்று ஸ்வீடன் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மார்கழி 11, 2010

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடு மீளாய்வு

தமிழ் மக்களின் நலன் கருதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை மீளாய்வுக்கு உட்படுத்தி யுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் நேற்று (10) சபையில் தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல் இருப்பதற்கு எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து கூட்டமைப்பைப் பலவீனமாகக் கருத வேண்டாமென்றும் அரியநேத்திரன் எம்.பி. கேட்டுக்கொண்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அதன் நல்லெண் ணத்தை வெளிப் படுத்தியிருப்பது டன், தமிழ் மக் களுக்கான அரசி யல் தீர்வை இழுத் தடிக்காமல் இதயசுத்தியுடன் செயற்பட முன்வந்தால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளதென்றும் அவர் கூறினார். (மேலும்.....)

மார்கழி 11, 2010

பாதாள அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் விக்கிலீக்ஸ் ஆவணங்கள்

ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உருக்கிய விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் ஆவணங்கள் அதி நவீன பாதாள அறை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்வீடனின் ஸ்டொக்ஹோம் அருகே உள்ள மலைப் பகுதி ஒன்றில் உள்ள மிகப் பெரிய கிரானைட் பாறை ஒன்றை குடைந்து பூமிக்கு அடியில் சுமார் 100 அடி ஆழத்தில் பையனென் என்ற தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட்டுகளை போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தான் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக ஸ்வீடன் தொழில்நுட்ப ஆய்வு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 11, 2010

 

நோபளுக்கு பதில் சீனாவில் கான்பூசியஸ் அமைதி பரிசு

மேற்கத்திய நாடுகள் சீனாவை தனிமைப்படுத்த முயல்வதாக சீன ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. சீன அரசுக்கு எதிராக போராடி வரும் லியூ ஷியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிறையில் இருக்கும் லியூவை விடுதலை செய்யவும் அந்நாடு மறுத்துவிட்டது. நோபல் பரிசு வழங்கும் விழாவை சீனா உட்பட அதன் 18 நட்பு நாடுகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதில் தற்போது இலங்கையும் அடக்கம். (மேலும்.....)

மார்கழி 11, 2010

விவசாயிகள் ஓய்வூதியத்தை அதிகரிப்பது பற்றி அரசு ஆராய்வு

விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி. புத்திக பத்திரண எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர் தற்போது 8,000 பேர் நாட்டில் விவசாய ஓய்வூதியம் பெறுகின்றனர் எனவும் தெரிவித்தார். தற்போது இந்த ஓய்வூதியக் கொடுப்பனவு ஆயிரம் ரூபாவிலிருந்து நான்காயிரம் ரூபாவரை வழங்கப்பட்டு வருகிறது. இதனை அதிகரித்து வழங்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். (மேலும்.....)

மார்கழி 11, 2010

 

யாழ். நகர கழிவிலிருந்து உரம் தயாரிக்க திட்டம்

யாழ். நகரக் கழிவுகளை அகற்றி அக்கழிவிலிருந்து விவசாய தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய உர வகைகளை உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான கலாநிதி வி. தங்கராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள கலாநிதி வி. தங்கராஜா; யாழ். நகரில் சேரும் கழிவு நீரை உரிய முறையில் அகற்றுவதில் பல இடையூறுகள் காணப்படுகின்றன. இந்நிலை தொடருமானால் அங்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படக்கூடிய ஆபத்துகள் உள்ளன.(மேலும்.....)

 

மார்கழி 11, 2010

 

வடக்கு, கிழக்கு எம்.பிக்களுக்கு தலா ஒரு கோடி ஒதுக்கப்பட வேண்டும்

வடக்கு, கிழக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக ஒரு கோடி ரூபாய் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று (10) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. வடக்கு, கிழக்கிற்கென இடைக்கால நிதி அறிக்கையைச் சமர்ப்பித்து இந்த நிதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். யுத்தத்தால் அழிவடைந்த வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் அபிவிருத்திக்குப் பகிர்ந்தளிக்க தற்போது வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா போதுமானதல்ல வென்றும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்.....)

மார்கழி 11, 2010

 

இலங்கையில் விவசாய புரட்சி ஆரம்பமாகியுள்ளது

கடந்த 30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தினால் சீர் குலைந்து போயிருக்கும் இலங்கையின் இயற்கை வளங்க ளான பாரிய வாவிகளையும் நீர்த் தேக்கங்களையும் கால் வாய்களையும் மீண்டும் புனரமைத்து, வடக்கு, கிழக்கு மாகாணங் கள் உட்பட, நாட்டின் நாலா பக்கங்களிலும் விவசாயத் துறையில் மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, எங்கள் நாட்டின் பண்டைய பாரம்பரியத்திற்கு அமைய, ஆசியாவின் நெற்களஞ்சியம் என்ற பெருமையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுத் தருவதற்கு நீர்ப்பா சன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபாடி டி சில்வா இப்போது துரித கதியில் நடவடிக்கைகளை எடுத்து வரு கிறார். (மேலும்.....)

மார்கழி 11, 2010

 

அரச அலுவலகத்துக்கு வருகை தரும் மக்களுக்கு நியாயம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு 2010 ஏப்ரல் மாதம் தாபிக்கப்பட்டதுடன் கெளரவ எஸ். பி. நாவின்ன அவர்களின் தலைமையில் அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு கொள்கையைத் தயாரித்தலின் பொருட்டு இதுவரையில் நிறை வேற்றியுள்ள வேலைகள் தொடர்பில் முதலில் எனது நன்றியை அவருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். சமூக ஒருமைப்பாடு எனும் விடயமானது மிக எளிதான அல்லது இலகுவான பணி ஒன்றல்ல என்பதுடன் அது தனியாக ஒரு அமைச்சினால் நிறைவேற்றக்கூடிய பணியுமல்ல என்பதனைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். சமூக ஒருமைப்பாட்டை உருவாக்கும் முகமாக மொத்த அரச பொறிமுறையும் செயலாற்ற வேண்டும் என்பதுடன், அதற்கு எனது அமைச்சு வழிகாட் டுதலையும் முன்னணி வகித்தலையும் வழங்க முடியும் என்பது எனது நம்பிக்கையாகும். (மேலும்.....)

மார்கழி 10, 2010

மரணங்கள் எந்த வகையில் நடந்தாலும்……..!

(வன்னிமகன் )   

மரணங்கள் எந்த வகையில் நடந்தாலும் வேதனை தரக்கூடியது என்பது உண்மைதான். அதிலும் கொலை என்பது வேதனை தரும் என்பதைவிட, மானிட   குலமே வெட்கித்தலைகுனிய வேண்டிய ஒன்றுதான். அதிலும் சரணடைந்தவர்களை கொல்வதென்பது மன்னிக்கமுடியாதுதான். அது இசைப்பிரியாவாக இருந்தாலும் சரி, இல்லை மாற்று அமைப்பு  போராளிகளாக இருந்தாலும் சரி, இல்லை கந்தன்கருணை கொலையாக இருந்தாலும் சரி,  புலிகளின்   உட்கட்சி  கொலையாக  (உ+ம் மாத்தையா ) இருந்தாலு சரி, ஏன்  அப்பாவி  சிங்களமக்களாக  இருந்தாலும் சரி,   நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால் இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் யார்? " (மேலும்.....)

மார்கழி 10, 2010

கெவிளியாமடு கறுவாச்சோலையில் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடை செய்ய வேண்டும் - பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான - துரைரட்ணம்!

மட்டக்களப்பு கெவிளியாமடு கறுவாச்சோலைக் கண்டத்தில் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடை செய்து உரிமையாளர்களிடம் காணிகளை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுனருக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். காணி உரிமையாளர் அத்துமீறி விவசாயம் செய்தவர்களுடன் தொடர்பு கொண்டு வினவிய போது இந்தப் போகத்துடன் நாங்கள் உங்கள் காணியை விட்டுத்தருவோம் எனக்கூறியதற்கிணங்க முரண்பாடுகள் வரக்கூடாது என்பதற்காக விட்டுக் கொடுத்து பொறுத்திருந்தனர். 2010 ஆம் ஆண்டு பெரும்போகச் செய்கையை தமிழர்கள் ஆரம்பித்தனர். இதேவேளை மீண்டும், இரவோடு இரவாக இக்காணிகளில் அத்துமீறி சிலபெரும்பான்மையினர் நெல் விதைத்து விட்டனர்.(மேலும்.....)

மார்கழி 10, 2010

 

புலிகளின் முக்கிய உறுப்பினர்களை முன்னணிக்கு கொண்டவரும் கேபி

http://www.youtube.com/watch?v=YDzDQANWFlU

 

மார்கழி 10, 2010

இலங்கை மீது சர்வதேச மட்டத்தில் யுத்தக் குற்ற விசாரணை வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணை அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானிய "சனல் 4' தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பப்பட்ட 5 நிமிட காணொளியைக் கொண்டு சர்வதேச மட்டத்தில் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சென்ற வருடம் ஒளிபரப்பப்பட்ட கானொளியின் நீட்டிப்பு கானொளி என குறிப்பிட்ட கானொளி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அக் கானொளியில் உள்ள ஒரு பெண்ணின் உடல் விடுதலைபுலிகள் இயக்கத்தின் தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவினுடையது என சர்வதேச தமிழ் ஊடகங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயின் ஒளிபரப்பப்பட்ட கானொளி சித்தரிக்கப்பட்டவை என இலங்கை அரசு தெரிவிக்கிறது என ஏபி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மார்கழி 10, 2010

The massive campaign of intimidation against WikiLeaks is sending a chill through free press advocates everywhere.

Legal experts say WikiLeaks has likely broken no laws. Yet top US politicians have called it a terrorist group and commentators have urged assassination of its staff. The organization has come under massive government and corporate attack, but WikiLeaks is only publishing information provided by a whistleblower. And it has partnered with the world's leading newspapers (NYT, Guardian, Spiegel etc) to carefully vet the information it publishes. The massive extra-judicial intimidation of WikiLeaks is an attack on democracy. We urgently need a public outcry for freedom of the press and expression. Sign the petition to stop the crackdown and forward this email to everyone -- let's get to 1 million voices and take out full page ads in US newspapers this week! (more....)

மார்கழி 10, 2010

 

பேராசிரியர் க.கைலாசபதி அவர்களது மறைவின் 25வது ஆண்டு நினைவுப் பேருரை

 

ஏற்பாடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

 

காலம்: டிசம்பர் 12, 2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி

 

இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்

     58, தர்மராம வீதி, கொழும்பு – 6

 

பொருள்: 'இலங்கையின் மனித வள அபிவிருத்தி - இரு உழைப்பாளி

       குடும்பம் பற்றிய கண்ணோட்டம்'

 

உரை நிகழ்த்துபவர்: கலாநிதி பவித்திரா கைலாசபதி

 

தலைமை: பேராசிரியர்: சபா. ஜெயராசா

 

இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

 

நீர்வை பொன்னையன்

இணைப்பாளர்

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

E-mail: kailashpath@yahoo.com

 

மார்கழி 10, 2010

வார்கிரைமும் புலிகளும் .....

புலிகள் இப்போது வார்கிரைம் பற்றி கதைக்கத்தொடங்கியுள்ளார்கள். அதாவது இலங்கை இராணுவத்தின் யுத்தக்குற்றம் பற்றி படங்கள் வீடியோக்களுடன் புலிகளின் ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன. படுபாவிகளா! இந்த வார்கிரைம் எப்படி உங்களுக்கு உறைக்கிறதோ அப்படித்தானே புலிகளுக்கெதிரானவர்கள் புலிகளால் கொல்லப்பட்டபோது அவர்களது சொந்தங்களுக்கு இருந்திருக்கும். புலி செய்யாத குற்றங்களா! (மேலும்.....)

மார்கழி 10, 2010

Freedom to terrorise?

[Thinking CAP - Palitha Senanayaka]

After World War II, Albert Einstein said, “We do not know what arms will be used to fight World War III but World War IV would certainly be fought with sticks and stones” and Dwight Eisenhower said, “The only way to survive after World War III would be to prevent it.” Thus such predictions of end of civilization in the event of another war made those nations who used arms to dominate the world realize the limits of armed power. Hence out of necessity they adopted new paradigms to ensure world peace and that meant co-existence had to replace domination of one nation by another and that ‘Jaw Jaw’ should replace ‘War War’. (more....)

 

மார்கழி 10, 2010

 

இலங்கை - உக்ரேய்ன் விமான சேவை ஆரம்பம்

உக்ரேய்னுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இரு நாடுகளுக்கிடையே 2010/ 2011ஆம் ஆண்டுகளுக்கான குளிர்கால விமான சேவைகளை நடத்துவதற்கான ஒப் பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட வுள்ளன. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் 2010/ 2011 ஆம் ஆண்டுகளில் குளிர்கால விமான சேவைகளாக குறிப்பிட்ட வான் வழியூடாக வாரம் ஏழு விமான சேவைகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. வாரம் ஒன்றுக்கு இரு நாடுகளுக்கும் இடையே 14 சேவைகளாக அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மார்கழி 10, 2010

 

இலங்கை தலைவரை அவமதித்ததன் மூலம் பிரிட்டனின் இரட்டை வேடம் அம்பலம்

பிரிட்டனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவமதிக் கப்பட்டமை உச்ச ஜனநாயக சுதந்திரம், பேச்சுரிமை எனக் கூறிக்கொள்ளும் மேற்குலக நாடுகளின் இரட்டை வேடத்தை அம்பலமாக்கியுள்ளது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் அழைப்பை ஏற்று நாட்டின் தலைவராக சென்ற ஜனாதிபதி தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டார் எனக் கூறி இந்த விவகாரத்திலிருந்து பிரிட்டன் நழுவிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 10, 2010

 

மேற்குலகின் பிடிவாதத்தால் மாநாடுகள் தோல்வியடைகின்றன

(சாரதா மனோகரன்)

‘கடந்த 25 வருடங்களுள் என்றுமில்லாத பனிப்பொழிவு’
‘பல ஆண்டுகளின் பின் வான்கதவுகள் திறப்பு’
‘என்று மில்லாத பெருமழை’

இவையெல்லாம் சமீபகாலமாக நாம் காணும் செய்தித் தலைப்புகள் ஆகும். அவை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வது கூட இல்லை. ஆனால் அவை எல்லாம் ஏதோ அறிகுறியை வெளிக்காட்டி நிற்பனவாகவே தெரிகின்றன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 2007 ஆம் ஆண்டிலேயே விடுத்த எச்சரிக்கையைக் கருத்தில் கொள்வதும் சிறந்த விடயமாகும். காலநிலை மாற்றம் காரணமாக இயற்கையின் சீற்றங்கள் இனிவரும் காலங்களிலே அதிகரிக்கலாம் என்பதே அந்த எச்சரிக்கையாகும். உலகின் பல்வேறு பாகங்களிலும் தெரியும் புதுவித மாற்றங்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தோற்றப்பாடுகள் தானோ என்ற எண்ணத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டன. (மேலும்.....)

மார்கழி 10, 2010

புலிகளின் செயற்பாட்டாளர்களால் லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டமல்ல

லண்டனில் ஜனாதிபதி தங்கியிருந்த வேளையில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் 250 அல்லது 300 பேர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டமானது ஜனாதிபதிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற நெருங்கிய உறவுக்கு எந்த வகையிலும் தடையாகவோ பாதிப்பாகவோ அமையாது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருங்கிய மற்றும் சுமுகமான உறவுக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளுடனான உறவுகளுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெஎőருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். (மேலும்.....)

 

மார்கழி 10, 2010

 

சீன அரசின் உதவியுடன் 4 வீதி அபிவிருத்தி திட்டங்கள்

நாவற்குழி - கரைதீவு - மன்னார் (ஏ. 032) 67 கிலோ மீற்றர் வீதியும் புத்தளம் – மரிச்சுகட்டி – மன்னார் (பீ 379 மற்றும் பீ 403) 113 கிலோ மீற்றர் வீதியும், தென் பகுதி அபி விருத்தியின் கீழ் அதிவேக பாதை யாக கருதப்படும் பின்னதுவ - கோதாகொட 15 கிலோ மீற்றர் வீதியும், கோதாகொட முதல் கொட கம வரையிலான 15 கிலோ மீற்றர் வீதியும் காலி துறைமுகத்துக்கு செல்லும் சகல வீதிகளும் எக்ஸிம் வங்கியின் நிதியுதவியின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. (மேலும்.....)

மார்கழி 10, 2010

ஆயுதக் கொள்வனவுக்கு அமெரிக்கா உதவி

அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) இஸ்ரேலுக்கு இருநூறு மில்லியன் டொலரை வழங்க அனுமதியளித்தது. ஏவுகணைகளைத் தாக்கியழிக்கும் நவீன ரக ஆயுதங்களை இஸ்ரேல் கொள்வனவு செய்யும் பொருட்டு அமெரிக்கா இந் நிதியை வழங்கியது. இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்புக்களால் ஏவப்படும் ரொக்கட் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கியழிக்கும் வல்லமையு டைய ஆயுதங்களை இஸ்ரேல் கொள்வனவு செய்யவுள்ளது. 2006 இல் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்புடன் நடந்த மோத லில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஹிஸ்புல்லா ஏவியது. இதனால் இஸ்ரேல் இராணுவம் திகைத்தது. காஸாவிலிருந்து ஹமாஸும் இவ்வாறான ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவுகின்றது. இதிலிருந்து பாதுகாப்புப் பெறும் நோக்குடனே அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் இவ் ஆயுதங்களை வாங்கவுள்ளது. இஸ்ரேலுக்கு நாங்கள் வழங்கியுள்ள நிதியுதவிகள் எங்களது எதிரிக்கும் எதிரியின் நேச அணிகளுக்கும் உறுதியான செய்தியை அனுப்புகின்றது. அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்குமிடை யிலான உறவுகள் உறுதியாக இருந்ததில்லை. இஸ்ரேல் மீது எமது எதிரிகள் நடந்து கொள்ளும் முறைகளே அமெரிக்காவை இஸ்ரேலுக்கு உதவ வைத்தது என்று அமெரிக்க அதிகாரியொருவர் சொன்னார்.

மார்கழி 10, 2010

 

பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பதில் இலங்கை முன்னணியில்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதில் இலங்கை இன்று பெருமளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. பால் நிலையை அடிப்படையாக வைத்து, பெண்களை ஆண்களை விட தாழ்ந்த தரத்தில் வைத்து, துன்புறுத்துவதை இல்லாமல் செய்யும் செயற்பாட்டில் இன்று இலங்கை 16வது ஸ்தானத்திற்கு உயர்ந்திருக்கிறது. இந்தியா இந்த விடயத்தில் இலங்கையை விட பல படிகள் உயர்ந்த நிலை யில் இருக்கிறது. அதற்கு காரணம், அந்நாட்டில் பால்நிலை அடிப் படையில் பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக இருந்து வரும் கடுமையான சட்டங்களாகும். இதனால், இந்த குற்றச் செயல் களில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் இந்தியாவில் வழங்கப்படுகின்றன.(மேலும்.....)

 

மார்கழி 10, 2010

அதிக மாணவர்களை உள்வாங்க தனியார் பல்கலைக்கழகங்கள்

  • வருடாந்தம் சுமார் 15 ஆயிரம் பேர் உயர்கல்விக்காக காத்திருப்பு

  • 26 பல்கலைக்கழகங்களுடன் பேச்சு

  • யாழ். பல்கலை நுண்கலை பிரிவை பீடமாக்க நடவடிக்கை

பல்கலைக்கழக வாய்ப்பின்றி இருக்கும் மாணவர்களைக் கூடுதலாக உள்வாங்கும் வகையில் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேநேரம், வெளிநாடுகளில் உள்ள புத்திஜீவிகளைத் திருப்பியழைக்கவும் இங்கிருந்து இனிமேல் யாரும் சென்று விடாதிருக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், உள்நாட்டு செலாவணியைப் பாதுகாக்கும் பொருட்டும் இந்தப் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்.....)

மார்கழி 10, 2010

 

கஸகிஸ்தானுக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா இணக்கம்

கஸகிஸ்தானுக்கு நவீன ஏவுகணைகளை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க சுமார் முன்னூறு ஏவுகணை களை ரஷ்யாவிடமிருந்து கஸகிஸ்தான் பெற்றுக்கொள்ளவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்றது. இரண்டு நாடுகளினதும் வெளிநாட்டமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து போன நாடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்ததால் இந்த ஏவுகணைகளை வழங்க இணங்கியுள்ளது. நேச நாடுகளுடனான பாதுகாப்பைப் பகிர்ந்து கொள்ளல் என்ற தொனிப் பொருளில் இந்த ஏவுகணைகளை ரஷ்யா வழங்கவுள்ளது. இதற்கான நிர்மாணப்பணிகள் தற்போது கஸகிஸ்தானில் ஆரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானுக்கு ஏற்கனவே வழங்குவதாக வாக்களித்த ஆயுதங்களை ரஷ்யா வழங்க மறுத்துள்ளது. இதனால் ரஷ்யா, ஈரானிடையே உறவுகள் மோசமடைந் துள்ளன.

மார்கழி 09, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- தமிழ் கட்சிகள் அரங்கம் சனிக்கிழமை சந்திப்பு

தமிழ்க் கட்சி அரங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா இதனை அறிவித்தாகவும் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் தமிழ்க் கட்சிகள் அரங்கத்தை சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்ப பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குருபரன் மேலும் தெரிவித்தார்.

மார்கழி 09, 2010

தேடப்படும் குற்றவாளி அல்ல தேவானந்தா"

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1986 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சென்னை சூளைமேடு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அவ்வழக்கு நடைபெறும் நான்காவது அமர்வு நீதிமன்றத்திடம் அது விடுத்துள்ள கைது வாரண்ட்டைத் திரும்பப் பெறுமாறு டக்ளஸ் தேவானந்தா கோரவேண்டும் என்றும், தவிரவும் முன் ஜாமீன் கோர உயர்நீதிமன்றத்தை அவர் அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.  ஒருவர் கொல்லப்பட்ட சூளைமேடு வழக்கு விசாரணையின்போது ஆஜராகாத தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என் 1990ஆம் ஆண்டில் அமர்வு நீதிமன்றம் அறிவித்தது.  அதைச் சுட்டிக்காட்டி சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயுடன் இந்தியா வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவைக் கைதுசெய்யவேண்டும் என்று ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய பரபரப்பு ஏற்பட்டது. நடவடிக்கை ஏதும் எடுக்கப்படும் முன் இலங்கை திரும்பிய டக்ளஸ், தான் தேடப்படும் குற்றவாளி என்ற அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். தனது தீர்ப்பில் நீதிபதி அக்பர் அலி, "சூளைமேடு வழ்க்கில் டக்ளஸ் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற உத்திரவு வெளியிடப்பட்டபோது, அவர் இந்தியாவில் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, தேடப்படும் குற்றவாளியாக டக்ளஸ் தேவானந்தாவைக் கருத அவசியமில்லை. ஆனால் வழக்கு தொடர்கிற நிலையில் டக்ளஸ் கைது வாரண்ட்டைத் திரும்பப் பெறச்சொல்லி அமர்வு நீதிமன்றத்தை அணுகவேண்டும், முன் ஜாமீனுக்கு உயர்நீதிமன்றத்தை அணுகலாம்" எனத் தீர்ப்பளித்தார். B.B.C

மார்கழி 09, 2010

 

க.பொ.த. உ/த பரீட்சை

யாழ். மாணவர்கள் 30 பேர் சாதனை

யாழ். மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் முப்பதுக்கும் அதிகமான மாணவர்கள் இம்முறை மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம், இந்துக்கல்லூரியில் ஒன்பது பேரும், வேம்படி மகளிர் கல்லூரியில் ஒன்பது பேரும், கொக்குவில் இந்துக் கல்லூரியில் நான்கு பேரும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஐந்து பேரும் மூன்று பாடங்களில் அதிவிசேட திறமைச் சித்தி பெற்றுள்ளனர். மாவட்ட மட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி கணித பாட பிரிவில் சுமங்கலி சிவகுமாரும், உயிரியல் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலனும், வர்த்தகப் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் புருஷோத்தமன் குருக்கள் ராஜாராமும், கலைப்பிரிவில் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரனும் முதன்மை மாணவர்களாக சித்தி பெற்றுள்ளனர். போங்கள்... யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் தான்...?  (மேலும்.....)

மார்கழி 09, 2010

புலம் பெயர்ந்தோரை பலிக்கடாவாக்குகிறது பிரிட்டிஷ் அரசு - விநாயகமூர்த்தி முரளிதரன்

பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் புலம்பெயர் தமிழர்களைத் தமது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்களென்பது, ஜனாதிபதிக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலம் புலனாகுவதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கான முழுப் பொறுப்பையும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்க வேண்டுமென்றும் பிரதியமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிரிட்டிஷ் அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டிருந்தால், ஜனாதிபதி உரையாற்றித் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்க முடியுமென்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஏகாதிபத்திய அரசுகள் காலா காலமாக எவ்வாறு பிரச்சினைகளை உருவாக்கினார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது. ஆகவே, ஆளுங்கட்சி எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து பார்க்கவேண்டும். (மேலும்.....)

மார்கழி 09, 2010

09.12.2010 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

இந் நிகழ்ச்சியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரும் பேச்சாளாருமான சுரேஸ் பிரேமசந்திரன்,  ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம், ரிபிசியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.

தொடர்புகளுக்கு: 00 44 208 9305313      or 078107063682

சீனாவுக்கு ஆதரவு

நோபல் பரிசு வைபவம் இலங்கை, இந்தியா பகிஷ்கரிப்பு

சீனாவில் சிறை வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் லியூ ஜியாபோவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்குவதென்ற தீர்மானத்தை கண்டித்துள்ள சீன அரசாங்கம், இந்த வைபவத்தை பகிஷ்கரிப்பதென்றும் அறிவித்துள்ளது. இந்நோபல் பரிசு வழங்கும் வைபவத்தில் கலந்துகொள்ளுமாறு விடுத்த அழைப்பை நோர்வேயின் ஒஸ்லோ நகரிலுள்ள இலங்கைத் தூதரகமும் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.  சீனாவுடனான நட்புப் பாலத்தை வலுப்படுத்தும் எண்ணத்துடனேயே இலங்கை அரசாங்கம் இத் தீர்மானத்தை எடுத்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் பேணி பாதுகாக்கும் நல்லெண்ணத்துடன், இந்திய அரசாங்கமும் சீனாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் எண்ணத்துடன் இவ்வைபவத்தைப் பகிஷ்கரிப்பதென்று தீர்மானித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 09, 2010

“ஈழப்போராட்டத்தில் இதுவரை நடந்தவைகளும் இனி நடக்க வேண்டியவைகளும்” – பெங்களுர் மாநாட்டில் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்கள் ஆற்றிய உரை! - பாகம் -03

வடக்கும் கிழக்கும் கண்டிப்பாக இணையும், அதை நாங்கள் செய்வோம் என்று எங்களுக்கு உறுதியளித்தார், அதேபோல்தான் அங்கு செய்யப்பட்டது. வடக்குக் கிழக்கும் இணைக்கப்பட்ட ஒரே மாகாணசபைக்குத்தான் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக பேசி முடிந்ததும் இராஜீவ்காந்தி அவர்களிடம் நான் ஒரே ஒரு கேள்வி கேட்டேன், இது சம்பந்தமாக தனியாக நான் பேச வேண்டும் என்று. என்னோடு எனது இயக்கத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் இருந்தார். ஒரு இயக்கத்திலிருந்து இரண்டு பேர்தான் கலந்துகொள்ளவேண்டும். தனியாகப் பேச வேண்டும் என்றால் இந்தக்கூட்டம் முடிந்தவுடன் பேசலாம் என்றார். கூட்டம் முடிந்ததும் எங்களை அழைத்தார். என்ன பேச வேண்டும் என்று கேட்டார், நான், ஏற்கனவே பண்டாரநாயக்கா-செல்வநாயகம் செய்துகொண்ட ஒப்பந்தம் கிழித்து வீசப்பட்டது, டட்லி சேனநாயக்கா-செல்வநாயகம் செய்துகொண்ட ஒப்பந்தம் கிழித்து வீசப்பட்டது, இவர்களுடைய ஒப்பந்தத்திற்கு ஏற்பட்ட நிலைமை இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்போது, அவர் என்னிடத்தில் ஆங்கிலத்தில் சொன்னார், ‘அப்படி ஒரு நிலைமை ஏற்படுமாயிருந்தால், நாடு பிரித்து வழங்கப்படும்” இதை சொன்ன அடுத்த நிமிடம் நான் சொன்னது, அப்படி ஒரு முடிவு உங்களிடம் இருக்குமானால், நிபந்தனையின்றி இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்றேன். உடனே அவர் எழுந்து என்னிடம் கைகொடுத்துவிட்டு, உடனடியாக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று வாக்களித்தவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
(மேலும்.....)

மார்கழி 09, 2010

Tom Flanagan threatened me over WikiLeaks comment, Toronto woman says

(Bill Graveland)

A Toronto woman says she felt threatened by an e-mail response she says she received from a former Stephen Harper adviser at the centre of a controversy over his comments about WikiLeaks. Janet Reymond says she felt “justifiably outraged” after Tom Flanagan mused on a CBC political talk show last week that the founder of WikiLeaks should be killed. Mr. Flanagan said U.S. President Barack Obama should consider assassinating Julian Assange because his website released thousands of highly sensitive U.S. government documents. Mr. Flanagan, a University of Calgary professor, has since apologized, saying he wasn't seriously suggesting Mr. Assange should be killed. (more...)

மார்கழி 09, 2010

நாம் தமிழர்… நாம் தமிழர்… கட்டுரை எழுதுக…

காரில் டக்கு… டக்கு… என்ற சத்தம். அப்படியே கராச்சுக்கு செல்கிறார் டாக்டர். மெக்கானிக்… ஐயா! காரைக் கிடங்கில விட்டுட் டியள். அதால வில்லுத் தகடு உடைந்து போச்சு. ஓ! முதியவருக்கு எலும்பு முறிவு. என் காருக்கு வில்லுத்தகடு உடைவு. இந்தச் சிந்தனையில் டாக்டர் இருக்க, கராச் தூணில் தொங்கிய வானொலியில்… இது வரை நீங்கள் கேட்ட செய்திகளின் சாரம்… வடக்கின் வசந்தம் யாழ்.குடாநாட்டில் வெற்றிகரமாக நிறைவடைந்து வருகின்றது. வீதிகள் யாவும் புனரமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் செய்திகள் முடிவடைந்தன… ஓ! செய்திகள்தான் முடிபடைந்தன. எல்லாம் செய்திகளில்தான் முடிபடைகின்றன. டாக்டர் வீதியில் இறங்கி நேர் கொண்ட பார்வையில் நடக்கத் தொடங்கினார். வீதியில் காத்திருந்த கிடங்கு டாக்டரை தடக்கி விழுத்த… விழுந்தெழுந்த டாக்டர் ஓ! நாம் தமிழர்… நாம் தமிழர்… தலை நிமிர்ந்து நடப்பது மகாதவறு. தலை நிமிர்ந்தால் தட்டி விழுத்த வீதியும் ரெடியாய் இருக்கு… இப்படி அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. (மேலும்.....)

மார்கழி 09, 2010

நீருக்கடியில் சுவாசிக்க புதிய நீச்சல் உடை - அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

ஆழ்கடல் செல்லும், “ஸ்கூபா டைவிங்” வீரர்களும், மீன்களைப் போல் சுவாசிக்கும் வகையில் புதிய நீச்சல் உடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் புதைபொருட்கள் பற்றி “ஸ்கூபா” வீரர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். நீருக்கடியில் சுவாசிப்பதற்காக ஒட்சிசன் வாயு உருளைகள் உள்ளிட்ட உபரகணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால், ஆய்வுப் பணிகளை முழுமனதாக நடத்த முடியாது. இதை கருத்தில் கொண்டு, “ஸ்கூபா” வீரர்களும், நீருக்கடியில் சுவாசிக்கும் விதமாக, புதிய நீச்சல் உடையை அமெரிக்காவைச் சேர்ந்த அர்னால்டு லான்ட் கண்டுபிடித்துள்ளார். (மேலும்.....)

மார்கழி 09, 2010

க. பொ.த. (சா/த) பரீட்சை

முன்னாள் புலி உறுப்பினர்கள் 182 பேர் தோற்ற ஏற்பாடு

க. பொ.த. சாதாரண தரப் பரீட்சை இந்த மாதம் 13ம் திகதி ஆரம்பித்து 23ம் திகதி நிறைவு பெறும். பரீட்சைக்கு வவுனியா மாவட்டத்திலிருந்து 6953 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் கல்வி வலயங்களில் 50 பரீட்சை மண்டப ங்களும் 17 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன என பரீட்சைகள் இணைப்பாளர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ. ஆர். ஏ. ஒஸ்வோல்ட் தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 09, 2010

சீனாவின் குற்றவாளிக்கு நோபல் பரிசு

பாரிய விளைவுகளைத் தூண்டுமென பீஜிங் எச்சரிக்கை, நூற்றுக்கு மேலான நாடுகள் தம்பக்கம் என்கிறது சீனா

சீனாவின் சிறையிலடைக்கப்பட்டுள்ள லியுஸ் ஸியாபோவிற்கு ஒஸ்லோ விருது வழங்கப்படவுள்ளமை தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. ஒஸ்லோவை மையமாகக் கொண்டியங்கும் நோபல் பரிசுக் குழுவை சீன அரசாங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் இந்த முடிவுகள் பாரிய வன்முறைகளை அதிகளவில் தூண்டிவிடும் என்றும் எச்சரித்துள்ளது. லியுஸ்ஸியாபோ 2009 டிசம்பர் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய இவருக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனது. (மேலும்.....)

மார்கழி 09, 2010

வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை விரிவுபடுத்த திட்டம்

வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் இலங்கையினுள் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகின்றனர். புலிகளின் செயற்பாடு அரிகரித்து வருகிற போதும் சில மேலைத்தேய நாடுகள் இன்னும் தமது போக்கை மாற்றிக் கொள்ளாதுள்ளன. அவை இலங்கை தொடர்பில் குரோதத்துடன் நடந்து கொள்கின்றன. அத்தகைய நாடுகளுடன் பேச அவற்றின் போக்கை மாற்ற வேண்டியுள்ளது. புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படாத போதும் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. 50 ற்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்து வதில்லை என உறுதியாக கூறியுள்ளனர். (மேலும்.....)

மார்கழி 09, 2010

மலேசிய காங்கிரஸ் தலைவர் பதவி விலகினார்

மலேசிய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு (74) பதவி விலகினார். கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் என்னுடைய பதவிக் காலம் 2012 மார்ச்சில் முடிவடைகிறது. எனினும் புதிய தலைமைக்கு வழிவிட்டு இப்போதே பதவியை விட்டு விலகுகிறேன் என்றார். இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவராக ஜி. பழனிவேல் பொறுப்பேற்றுக் கொண்டார். துணைத் தலைவராக எஸ். சுப்பிரமணியம் பதவியேற்றுக் கொண்டார். பதவி விலகிய சாமிவேலு 1979 முதல் சுமார் 30 ஆண்டுகள் தலைவராக பதவி வகித்துள்ளார்.

மார்கழி 09, 2010

பாகிஸ்தானில் மாகாண முதல்வரை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்

பலூசிஸ்தான் மாகாண முதல்வராக அஸ்லம் ரெய்சானி பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று காலை குவெட்டா நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து மாகாண சட்ட சபைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் ரயில்வே கிராசிங்கை கடப்பதற்காக முதல்வர் அஸ்லம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கார்கள் மெதுவாக சென்றன. அப்போது அங்கு பதுங்கியிருந்த தற்கொலை படை பயங்கரவாதி ஒருவன், முதல்வரின் காரை குறிவைத்து கையெறி குண்டை வீசினான். ஆனால் அந்த கையெறி குண்டு வெடிக்கவில்லை. உடனே அவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். ஆனால் இந்த தாக்குதலில் இருந்து முதல்வர் அஸ்லம் ரெய்சானி அதிர்ஷ்ட வசமாக காயப்படாமல் உயிர் தப்பினார். பலூசிஸ்தான் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் முக்கிய தலைவர்கள் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் சம்பவம் இது. கடந்த மாதம் 30ந் திகதி மாகாண கவர்னர் ஜுல்பிகர் மகசி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மார்கழி 09, 2010

ஈரானுடனான இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை  சிக்கலை ஏற்படுத்தலாம் - கதரின் அஸ்தொன்

ஈரானின் யுரேனியம் சர்ச்சை குறித்த பேச்சுவார்த்தைகளில் 75 வீதமானவை நிறைவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள நாட்களில் யுரேனியம் செறிவூட்டல் பற்றிய பேச்சுக்களே இடம்பெறவுள்ள தெனவும் அமெரிக்காவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இனிமேல் பேசப்படவுள்ள விடயங்களே பெரும்பாலும் சர்ச்சைகளைக் கிளப்பும் எனக்கூறிய ஈரானின் சார்பாக கலந்துகொண்ட சயீட்ஜாலல் யுரேனியம் செறிவூட்டல் அணு ஆயுத விவகாரம் என்பவை ஈரானைப் பொறுத்தவரை எங்களது இதயம் போன்றவை. இதில் எவ்வித விட்டுக் கொடுப்புகளும் கிடையாது. மேற்று நாடுகள் ஈரானிடம் எதிர்பார்க்கும் விட்டுக் கொடுப்பை இஸ்ரேலிடமும் எதிர்பார்க்க வேண்டும். இஸ்ரேல் அணுஆயுதத்தை வைத்திருக்கவும் ஈரான் அவற்றை வைத்திருக்கக் கூடாதென்பதும் நியாயமில்லாதவை. பேச்சுவார்த்தையின் நிலைமைகள் தொடர்பாக விளக்கிய ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டுக் கொள்கை தலைமையதிகாரி கதரின் அஸ்தொன் இனிமேல் இடம்பெறப் போகும் பேச்சுவார்த்தைகள் உருப்படியானவையாக இருக்கும் அதேநேரம் கடும் பிடிவாதமானதாக அமையுமெனவும் விளக்கினார்.

மார்கழி 09, 2010

500 அடி பள்ளத்தில் பாய்ந்தது மோட்டார் சைக்கிள்

13 மணி நேரம் மரத்தில் தொங்கிய கொன்ஸ்டபிள் உயிருடன் மீட்கப்பட்டார்

மோட்டார் சைக்கிளொன்று பாதையை விட்டு விலகி 500 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகிய போதிலும், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொலிஸ், கான்ஸ்டபிள் மரமொன்றின் கிளையைப் பிடித்து 13 மணி நேரம் தொங்கிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். இச் சம்பவம் எல்ல - வெள்ளவாய வழியில் 28 வது மைல் கல்லருகே நேற்று முன்தினம் 7 ஆம் திகதி இரவு இடம் பெற்ற போதிலும் நேற்று முற்பகல் 11 மணியளவிலேயே, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் காப்பாற்றப்பட்டிருக்கின்றார். 13 மணித்தியாலங்கள் தொங்கிய பிறகு, அவ்வழியாக வந்தவர்கள் சிலர், மரத்தில் தொங்கும் கான்ஸ்டபிளை கண்டுள்ளனர். பின் பெரும் பிரயத்தனங்களின் மத்தியில் பொலிஸ் கொன்ஸ்டபிளைக் காப்பாற்றினர். மேற்படி கொன்ஸ்டபிளுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

மார்கழி 09, 2010

ஊழல்வாதிகளைக் கூண்டில் நிறுத்துக!

(கி.இலக்குவன்)

ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பே என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது. நவீன தாராளமய யுகத்தில் ஊழலின் அரசியல் பொருளாதாரம் புதிய பரிணாமங்களை எட்டி யுள்ளது. முந்தைய காலங்களில் உரிமங் களைப் பெறுவதற்கும் சில விதிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கும் லஞ்சம் கொடுப்பது பெருமுதலாளிகளின் வாடிக்கை யாக இருந்து வந்தது. ஆனால் பெருமுத லாளிகளும் தொழில் நிறுவனங்களும் தாங் களே கொள்கைகளை வகுப்பவர் நிலைக்கு இன்று உயர்ந்துவிட்டனர். இந்த அமைச் சரை விலைபேசுவது, அந்த அமைச்சரை விலை பேசுவது என்பதெல்லாம் பழைய கதை. கொள்கைகளையே விலை பேசுவது தான் இன்றைய நடைமுறை. தொலை தொடர் புத்துறையாக இருந்தாலும் சரி, எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்துறையாக இருந்தாலும் சரி, அணுசக்தித்துறை, தற்காப்புத்தறை ஆகிய எந்த துறையாக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனங்களின் நலன்களுக்காக கொள்கை களையே விலை பேசிவிட முடியும்.(மேலும்.....)

மார்கழி 09, 2010

Let us talk about torture, summary execution and war crimes in ‘nasty places’

 (by Malinda Seneviratne)

There are two indisputable facts associated with the US-UK led invasion of Iraq.  First, there was absolutely no evidence of Iraq having ‘Weapons of Mass Destruction’ (WMD). Secondly, Nick Clegg, the British Deputy Prime Minister has confessed that the invasion was illegal. Let’s throw in a third, for laughs: if the existence of WMD warrants invasion, the US should invade Britain and Britain should return the favour.  Laughs aside, consequent to Points 1 and 2, everything that US and British troops have done in Iraq since the invasion constitutes ‘War Crimes’. (more....)

மார்கழி 09, 2010

அரசாங்கத்தின் முட்டாள் தனத்திற்கு நான் பொறுப்பாளியல்ல விக்ரமபாகு கருணாரத்ன

நாட்டிற்கு எதிராக நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். லண்டன் விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்ட முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பாளியல்ல என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற

விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “தனிப்பட்ட அழைப்பின்பேரில் நான் லண்டன் சென்றிருந்தேன். லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரசாங்கம் தனது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொள்ள விரும்பாமல் என்னையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவையும் குற்றவாளிகளாகப் பார்க்கிறது” என அவர் அங்கு மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயத்தின்போது புலம்பெயர்ந்துள்ள தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கலந்துகொண்டதாகக் கூறி அவர் மீது விமான நிலையத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புலிகளின் இலண்டன் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவில்லை என்பது போல் பேசும் விக்கிரமபாகு இப் புகைப்படங்களுக்கு பதில் கூறுவாரா...? தனிப்பட்ட அழைப்பென்று இவர் குறிப்பிடுவதும் இதைத்தானா...?

மார்கழி 09, 2010

பிரித்தானிய புலிச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நாளை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தின்போது புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் நாளை வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் இணைந்து மட்டக்களப்பு நகரில்கூடி சற்றுமுன் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

மார்கழி 08, 2010

“ஈழப்போராட்டத்தில் இதுவரை நடந்தவைகளும் இனி நடக்க வேண்டியவைகளும்” – பெங்களுர் மாநாட்டில் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்கள் ஆற்றிய உரை! - பாகம் -02  

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அரசர்கள் ஆண்டு வந்தாலும், போர்த்துக்கீசியரின் படைபெடுப்புக்குப் பிறகு எங்களது தலைமை முற்றாக அழிக்கப்பட்டது. கடைசியாக இருந்த பரராசசிங்கம் என்ற சங்கிலியன் அழிக்கப்பட்டதுடன், எங்களுக்காக இருந்த தலைமை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. பின்னர் எங்களுடைய பிரதேசங்களைக் கைப்பற்றிய போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள் அவர்களல்லாமல் பிரிட்டிசார், இவர்கள் யாவரும் தங்களுடைய நிர்வாகத்திற்காக, தலைமை இல்லாமல் போன தமிழர்களை தங்களுக்கு அடிமைகளாக தெரிவு செய்தார்கள். அப்படியான தமிழர்களில் சிலர் படிப்பித்திருந்தார்கள், சிலர் அவர்களுடைய நிர்வாகத்தில் உள்ளடங்கியிருந்தார்கள். அதன் மூலமாக சில இடங்களில் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருந்தவர்கள் எங்கள் இனத்தைப் பாதுகாக்க வேண்டும், எங்களது மொழியைப் பாதுகாக்க வேண்டும், எங்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும், ஒரு தலைமை தேவை, குறைந்தப்பட்சம் தங்களது மூத்தக்குடிகளைக் கொண்டு ஒரு சபையை அமைக்க வேண்டும் என்றுகூட யாரும் நினைக்க விலலை. (மேலும்.....)

மார்கழி 08, 2010

Thai police arrest 45 Sri Lankan migrants

(AFP) - Thai authorities said Wednesday they had arrested 45 migrants from Sri Lanka in the latest of a series of crackdowns in recent months. The Sri Lankans, who were rounded up at a crowded apartment in a Bangkok suburb, appear to be economic migrants hoping to travel to a third country, said Police Major General Manu Mekmok, of Thailand's Immigration Bureau. "They either overstayed their visas or entered illegally," he said. In October Thai authorities detained more than 200 Tamil migrants from Sri Lanka in two separate operations, but they later released some who were able to present valid travel documents. Some reports at the time suggested those Sri Lankans hoped to travel to Canada, whose government welcomed news of their arrest. Almost 500 Tamil refugees arrived in Canada in August aboard a cargo ship which reportedly spent 90 days travelling from Thailand before police boarded it in Canadian waters and piloted it ashore in western Canada. Sri Lanka's crackdown on the Tamil Tigers, which ended a lengthy civil war last year, has resulted in a flood of people seeking asylum in other countries.

மார்கழி 08, 2010

உண்மையை   முடக்க முடியாது 

விக்கி லீக்ஸ் இணையதளம் அமெரிக்க அரசின் சுமார் 4 லட்சம் ரகசிய யுத்த ஆவணங்களை வெளியிட்டது. இப்போது மேலும், 2 லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு பகுதியே ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களின்படி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகம் அம்பலமாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் தனது மேலாதிக்கத்தை கொண்டு வர அமெரிக்கா கேடுகெட்ட சதி வலைகளை பின்னி வருகிறது என்பதை விக்கி லீக்ஸ் வெளிக் கொணர்ந்துள்ளது. இதில் எந்த ஒரு ஆவணத்தையும் அமெரிக்காவினால் மறுக்கமுடியவில்லை. மாறாக சம் பந்தப்பட்ட நாடுகளிடம் அமெரிக்காவின் அயல் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தவணை முறையில் மன்னிப்பு கேட்டு வருகிறார். இதிலி ருந்தே இந்த ஆவணங்கள் உண்மையானவை என்பது தெளிவாகியுள்ளது.(மேலும்.....)

மார்கழி 08, 2010

லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு

ஜனாதிபதிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப் பேரணி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நேற்று மாபெரும் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை அமைப்பாளர் வேல்முருகு தங்கராசா மற்றும் இணைப்பா ளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் யாழ். மாவட்டத்தின் பதினொரு தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். (மேலும்.....)

மார்கழி 08, 2010

வடகொரியாவினால் இலங்கைக்கு ஆயுதம் விநியோகம்: விக்கிலீக்ஸ் தகவல் _

வடகொரியாவினால் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பல நாடுகளின் பாதுகாப்பு தகவல்களை வெளியிட்டுவரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் தற்போது இலங்கையின் ஆயுதக் கொள்வனவு தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரி ஸ்டுவர்ட் லெவேயினால்இ அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் வழங்கிய இந்த ஆவணம் தொடர்பான தகவல்களைஇ அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படிஇ வடகொரியா இலங்கை அரசாங்கத்துக்கு அதிக அளவிலான ரோக்கெட் லோஞ்சர்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசாங்கம் அவற்றை கொள்வனவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஆயுத பரிமாற்றலுக்கான நிதி வழங்கல்களுக்காக சீனாவின் வங்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி 08, 2010

ஜனாதிபதியின் லண்டன் விஜயம் துணிச்சல் மிக்க செயல் - அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்

தனது பயணத்தை தடுக்கவும் கைது செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்த நிலையில் அவை எதற்கும் அஞ்சாது தைரியமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானிய பயணத்தை மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். பிரித்தானிய பயணத்தை ரத்துச் செய்யுமாறு சிலர் ஜனாதிபதியை கோரிய போதும், தான் தவறு எதுவும் செய்யவில்லை எனவும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து தாய் நாட்டை மீட்டது தவறு எனின் அதற்காக சிறை செல்லவும் தயார் என்றும் மன தைரியத்துடன் ஒக்ஸ்போர்ட் சங்க அழைப்பை அவர் ஏற்றதாக அமைச்சர் கூறினார். (மேலும்.....)

மார்கழி 08, 2010

ஜனாதிபதி வேட்பாளரை கிரம்ளின் முடிவு செய்யும் - ரஷ்ய ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முடிவை தற்போது எடுக்க முடியாதெனத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி மெத்விடிவ் 2012ல் நிலவும் அரசியல் சூழலைப் பொறுத்து கிரம்ளின் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்றார். புட்டினா, மெத்விடிவா அடுத்த வேட்பாளர் என்ற எதிர்பார்ப்பு ரஷ்யாவிலே சூடுபிடித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 08, 2010

வெளிநாட்டு அழுத்தங்களை பொருட்படுத்தாது நாட்டு நலனை கருதி முடிவுகளை எடுத்தவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க - ஜனாதிபதி

முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் அரச தலைமைப் பதவியான பிரதமர் பதவியைப் பொறுப்பெடுத்தார். 1956ம் ஆண்டில் முன்னாள் பிரதமரான மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா விட்டுச் சென்ற இடத்திலிருந்து தமது அரசியல் பணிகளை முன்னெடுத்தார். அவர் ஒரு முன்மாதிரிமிக்க அரசியல் தலைவராக மாத்திரமல்லாமல் அன்பு நிறைந்த சிறந்த தாயாகவும் விளங்கினார். இவர் வெளிநாட்டு அழுத்தங்களைப் பொருட்படுத்தாது நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களை முன்நிறுத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்தார். குறிப்பாக பாடசாலைகள், பெற்றோலிய நிறுவனம், காப்புறுதி நிறுவனம் என்பவற்றை அரச உடைமையாக்கினார். காணி உச்ச வரம்பு சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவ்வாறான நடவடிக்கைகளை கண்டு, கோதுமை மாவுக்கு வழங்கிவரும் மானியத்தை நிறுத்தப்போவதாக வெளிநாட்டினர் அச்சுறுத்தினர். இருப்பினும் அந்த அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது தமது தீர்மானங்களை துணிகரமாக முன்னெடுத்தார். காணி உச்ச வரம்பு சட்டத்தின் மூலம் தமக்கு நஷ்டம் ஏற்படுவதையும் பாராது நாட்டு மக்களின் நலன் கருதி அச்சட்டத்தை செயலுருப்படுத்தினார். (மேலும்.....)

மார்கழி 08, 2010

மனித நேயம் மரணித்து விடவில்லை....?

ரிசானா நஃபீக் மீதான மரண தண்டனை இடைநிறுத்தம்

இலங்கை பணிப்பெண் ரிசானா நஃபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றம் விதித்துள்ள மரண தண்டனை இடைநிறுத்தப் பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக் கிணங்க சவூதி அரேபியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா நேற்று (07) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நஃபீக்கிற்கான தண்டனை உள்ளிட்ட விடயங்கள் ஷரீஆ சட்டத்திற்கிணங்கவே முன்னெடுக்கப்படுகின்றன. அந்நாட்டு மன்னருக்குக் கூட அதனைமீறி செயற்பட முடியாத நிலை உள்ளது.(மேலும்.....)

மார்கழி 08, 2010

விக்கிலீக்ஸ் அறிக்கையால் உலகம் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகும் அபாயம் - நிபுணர்கள் கருத்து

உலகம் முழுவதும் உள்ள சில முக்கிய கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடுவதன் மூலம் விக்கிலீக்ஸ் இணையதளம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அழைப்பு விடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபோன்ற ரகசிய ஆவணங்களை வெளியிடுவது அமெரிக்க நட்பு நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார். தேசப் பாதுகாப்பு நலனுக்கான முக்கியத்துவம் வாய்ந்தவை என அமெரிக்காவால் அடையாளம் காணப்பட்டிருக்கும் உலகம் முழுவ தும் உள்ள சில கட்டமைப்புத் திட்டங்களைக் குறிக்கும் ஆவணங்களை வெளியிடுவதன் மூலம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு விக்கிலீக்ஸ் அழைப்பு விடுக்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி. ஜே. குரோலி தெரிவித்தார்.

மார்கழி 08, 2010

கிளிநொச்சி மாவட்டம்

காணி உரிமை பெற்றோருக்கு விரைவில் விசேட அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் காணி உரிமை உள்ள நிலையில், வெளிமாவட்ட ங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் மக்களுக்கான அறிவிப்பொன்றை காணி அமைச்சு விரைவில் வெளியி டவுள்ளது. காணி உரிமைபற்றியும் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றியும் தகவல்களைப் பெற்றுத் தருவதற்குக் குறித்த ஒரு கால அவகாசத்தை வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகுமென்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 08, 2010

ரஷ்யாவுக்கெதிரான ஏவுகணைத்தளத்தை நேட்டோ நாடுகள் கைவிட்டன -விக்கிலீக்ஸ்

ரஷ்யாவுக்கெதிராக பால்கன் நாடு களில் ஏவுகணைத் தளங்களை அமைக்கும் யோசனைகளை நேட்டோ கைவிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அணு ஆயுத நாசகார ஆயுதங்களை ஒழிப்பது தொடர்பாக ரஷ்யாவு க்கும் அமெரிக்காவுக்குமிடையே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதைத் தொடர்ந்தே நேட்டோ தலை மையிலான நாடுகள் 2009 ஒக்டோ பரில் இந்த எண்ணத்தைக் கை விட்டதாகவும் விக்கிலீக்ஸ் அறிக் கையில் விளக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 08, 2010

விக்கிலீக்ஸ் அறிக்கையின் எதிரொலி

அரசியல், இராணுவ, உளவு அதிகாரிகளை மாற்றம் செய்ய அமெரிக்கா தீர்மானம்

அரசியல், இராணுவ உளவுத் துறை களிலுள்ள முக்கியஸ்தர்களின் பதவிகளில் மாற்றம் செய்ய அமெரிக்க அரசாங்கம் யோசனை செய்து வருகின்றது. விக்கிலீக்ஸ் அறிக்கைகள் வெளியானதால் இந்த பிரமுகர்களின் பாதுகாப்புகள் கேள்விக்குறி யாகியுள்ளன. மக்கள் இவர்களுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. கடமைகளைப் பொறுப்புடன் செய்யும் மனோநிலையிலும் இந்த அதிகாரிகள் இல்லை என்பதை உணர்ந்த பின்னரே அமெரிக்க அரசாங்கம் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர்களும் மாற்றம் செய்யப்படவுள்ளதுடன் அந்நாடுகளிலுள்ள நேட்டோ படைகளின் தளபதிகள், உள வுத் துறைக்குப் பொறுப்பானவர்கள், மற்றும் அரசியல் நிர்வாகத்திலுள்ளோரின் பதவிகளும் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 08, 2010

பிரமிப்பூட்டும் நீர்க்கீழ் குகைகள்

உலகில் இயற்கையின் கைவண்ணத்தில் உருவான பல அதிசயங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான அதிசயங்களில் கடலில் காணப்படும் பெரிய செங்குத்தான நீர்க்கீழ் குகைகள் அல்லது சுரங்கங்கள் மிகவும் பிரபலமாவை. கடலின் அடியில் பல மீற்றர் ஆழத்தில் காணப்படும் இந்தக் குகைகள் சுற்றுலாப் பயணிகளிடையே மட்டுமன்றி சாகச விளையாட்டுக்களில் ஈடுபடுவர்களிடையேயும் பிரபலம் பெற்றுள்ளன. உலகில் மிகவும் பெரிய நீர்க்கீழ் குகை பஹாமாவில் உள்ள டீன்ஸ் நீர்க்கீழ்குகையாகும். இது 202 மீட்டர் ஆழமானது. இந்த ஆழ்ந்த துவாரத்தில் பல சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. (மேலும்.....)

மார்கழி 07, 2010

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சம்மேளனத்தின்  13வது தேசிய மாநாட்டிற்கு எமது வாழ்த்துக்கள் - தி. ஸ்ரீதரன் பொதுச்செயலாளர் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

முற்போக்கு எண்ணம் கொண்ட, சமூக சமுத்துவத்தில் நம்பிக்கைக் கொண்ட இளைஞர் பாரம்பரியமொன்று இலங்கையில் இடதுசாரி இயக்கத்தால் உருவாக்கப்பட்டது. சமூக ஈடுபாடும் தீவிரமான வாசிப்பும் கொண்ட தலைமுறைகள் இந்த நாட்டில் இருந்திருக்கின்றன. சமூக மட்டத்திலும் பல்கலைகழகங்களிலும் இது செல்வாக்கை செலுத்தியது. இன, சமூக நல்லுறவை நேசிக்கும் கல்வியாளர்கள் பலரை உருவாக்கியது. இளையோர் எனப்படுவோர் வெளிப்படைத்தன்மை நேர்மையான உணர்வுகளால் உந்தப்பட்டு செயற்படுபவர்கள். பண்பட்ட  இளந்தலைமுறையும், வருங்கால சந்ததியும் உருவாக்கப்பட வேண்டும். ஜனநாயகம், சமூகத்தில் நிலவும் சகலவிதமான ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராக போராடுதல் ,சர்வதேச சகோதரத்துவம் என்ற உயரிய இடதுசாரி பண்பாடுகள் மீள்கட்டியெழுப்பப்பட வேண்டும். சுற்று சூழல் பற்றிய கரிசனையும் எமது நிகழ்ச்சி நிரலில் சேர்ந்துள்ளது. இலங்கையில் முற்போக்கான இளையதலைமுறையொன்றின் செழுமைமிகு பாரம்பரியம் காணப்பட்டது. வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் கம்யூனிச இயக்கத்தில் ஈடுபாடுகொண்ட இளையதலையொன்று இருந்தது. இதன் தொடர்ச்சி அவசியமானது. சமூகத்தை நாகரீகமான நிலையில் வைத்திருப்பதற்கும் தார்மீக வலுக்களை பாதுகாப்பதற்கும் இது மிகவும் அவசியமானது. இந்த நாட்டின் அனைத்து இன இளைஞர்களும் ஒருங்கிணைந்து செயற்படும் அந்த நற்காலம் உருவாக்கப்பட வேண்டும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சம்மேளனத்தின் 13வது காங்கிரஸ் இந்த இலக்குகளை எய்துவதற்கு நாம் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது ஒற்றுமை நீடூழி வாழ்க

மார்கழி 07, 2010

யாழ். பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் இருந்து வெடிகுண்டு ஒன்றினை இராணவத்தினர் இன்று மீட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர் சிற்றுண்டிச்சாலைக்குப் பின்புறமாகச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது குண்டு மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். நீண்ட காலமாக அங்கு வைக்கப்பட்ட குண்டே மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர். முன்னாள் புலி உறுப்பனர் ஒரவரின் தகவலின் அடிப்படையில் இக் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மார்கழி 07, 2010

மலையகத்தில் கடும் மழை, போக்குவரத்து பாதிப்பு

மலையகப் பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. கொழும்பு கண்டி புகையிரத வீதியில் ரம்புக்கனை பிரைதேசத்தில் கற்பாறை ஒன்று விழுந்துள்ளதன் காரணமாக கொழும்பு கண்டி புகையிரத சேவை ரம்புக்கனை வரை மட்டும் நடாத்தப்படுவதாக புகையிரத தினைக்களம் தெரிவிக்கின்றது. இதனால் கொழும்பு கண்டி தபால் புகையிரத சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மலையகத்தில் தற்போது கடும் பணிமண்டலம் காணப்படுவதனால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பாதைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. பேராதெனிய கட்டுகஸ்தோட்டை வீதியில் பாரிய மண் சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக வாகன போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதேவேளை கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் 10 வீடுகளும், கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 15 வீடுகளும் ஆபத்தான நிலையில் உள்ளதால் இக்குடும்பங்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி 07, 2010

விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் இன்று கைது

விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகரான ஜூலியன் அசாஞ்ஞே இன்று பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்களை அவர்களின் விருப்பமின்றி பாலியல்வல்லுறவிற்கு ஈடுபடுத்தினார் என்ற குற்றஞ்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் இக்குற்றஞ்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய நேரப்படி இவர் இன்று காலை 9.30 மணியளவில் மத்திய லண்டனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைய சென்றிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இவர் வெஸ்மினிஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுள்ளார். எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜூலியன், இது தன்னை முடக்குவதற்கான சதியெனவும் தெரிவித்துள்ளார்.

மார்கழி 07, 2010

விக்ரமபாகு கருணாரத்ன மீது விமான நிலையத்தில் தாக்குதல்

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன இன்று பிற்பகல் விமான நிலையத்தில் பொதுமக்கள் சிலரின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உறுதிப்படுத்தினார். கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் வருகைக்காக காத்திருந்த சுமார் 40 பேர் இவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவரது ஆதரவாளர்களையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர் பாதுகாப்பாக வாகனத்தில் அங்கிருந்து சென்றுள்ளார்.

மார்கழி 07, 2010

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயத்தின்போது புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மார்கழி 07, 2010

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் 17 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா _

இலங்கையில் முகாம்களில் இன்னும் 17 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர் என எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார். ''இலங்கைப் பயணம் மேற்கொண்டபோது எழுதிய விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் கலந்தாலோசித்தேன். முகாம்களில் தங்கியுள்ள 17 ஆயிரம் பேரும் இந்த ஆண்டு இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. முகாம்களில் உள்ளவர்களை மறுகுடியமர்த்தவும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா போதுமான நிதியுதவி அளித்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர். (மேலும்.....)

மார்கழி 07, 2010

ஒக்ஸ்போட் சங்கத்தால் மகிந்தவுக்கு சுதந்திர பேச்சுரிமை மறுக்கப் பட்டது

 (ஆக்கம்: டி.பி.எஸ். ஜெயராஜ்)

ஜனாதிபதியின் ஒக்ஸ்போட் பேச்சு இரத்துச் செய்யப்பட்டதால் ஸ்ரீலங்காவில் இன்னலுறும் தமிழர்கள் ஏதாவது பயனடைந்தார்களா? பின்விளைவுகளால் எந்தவித பயனுமற்ற இதை நீங்கள் எதற்காக பெரிய வெற்றியாகக் கொண்டாடுகிறீர்கள்? இந்த நேரத்தில் தேசிய நல்லிணக்கத்துக்கும் இன ஒற்றுமைக்கும் இது அவசியப் படுமா?

ஜனாதிபதி பிரித்தானியாவில் கைது செய்யப்படக் கூடும் என்கிற அச்சுறுத்தல்களுக்கு பயந்து குகைக்குள் ஒளிந்து கொள்வார் என அபிப்ராயப் பட்டவர்கள் மெதமுல்லவில் இருந்து வந்த மகிந்த யார் என்பதை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. ஜனாதிபதி அநேகமாக சவால்களுக்கு பதிலடி கொடுக்க விரும்பும் ஒரு மனிதர்.அவர் நிச்சயமாக கைது செய்யப்படும் சாத்தியங்களுக்கு அஞ்சி பிரிட்டனிலிருந்து விலகியிருக்கப் போவதில்லை. அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட துணிவுகளைக் குறித்து விளக்கிக் கூறவேண்டிய அவசியத்துக்கு அப்பாற் பட்டதாக அங்கு போவதற்கு இன்னுமொரு காரணமும் உள்ளது. அது ஒக்ஸ்போட்டிலிருந்து கிடைத்த அழைப்பு. அதை நிராகரிக்க ஜனாதிபதி விரும்பவில்லை. 2008ம் ஆண்டு ஒக்ஸ்போட் சங்கத்தில் அவர் ஏற்கனவே உரையாற்றியிருக்கிறார். இப்போது திரும்பவும் பேசுவதற்கு அழைக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தமிழர்களுக்கிடையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பானவர்களின் கூத்தாடித்தனத்துக்காக அதைத் தவறவிடும் மனநிலையில் அவர் இல்லை. (மேலும்.....)

மார்கழி 07, 2010

“ஈழப்போராட்டத்தில் இதுவரை நடந்தவைகளும் இனி நடக்க வேண்டியவைகளும்” – பெங்களுர் மாநாட்டில் ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்கள் ஆற்றிய உரை!

ஈழத் தமிழர்கள் கடந்த 30, 40 ஆண்டுகளாக போராட்டங்களை முன்னெடுக்கிறாhகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஈழத் தமிழர் போராட்டம் என்பது, கிட்டத்தட்ட கிறிஸ்துவுக்கு முன் 161ஆம் ஆண்டுகளிலேயே எங்களது இனத்துக்கும் சிங்கள இனத்துக்குமான போர் ஆரம்பித்துவிட்டது. அது சிங்கள இனத்திலுள்ள துட்டகை முனு என்பவர் அந்த யுத்தத்தை ஆரம்பித்து வைத்தார். அந்த யுத்தத்தில் தமிழ் அரசனான எல்லாளன் தோல்வியுற்றான். அதன் மூலமாக அவர்கள் அனுராதபுரம், பொலனருவ பகுதிகளைக் கைப்பற்றி சிங்களவருடைய ஆட்சியை அங்கு நிலைநாட்டினார்கள். (மேலும்.....)

மார்கழி 07, 2010

கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் வகையில் தேசத்துரோக கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய எம்.பிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விரை வில் இந்த பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் விவாதிக்க எடுக்கப்பட உள்ளதாக ஐ.ம.சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் நேற்று தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 07, 2010

சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராகும் பிரித்தானியர்கள்

இங்கிலாந்து நாட்டு மக்கள் தொகையில்; வெள்ளை நிற பிரித்தானியர்கள் எண்ணிக்கை 84 சத வீதம் தான். இன்னும் 56 ஆண்டு களில் அவர்கள் சிறுபான்மையின ராகி விடுவார்கள் என்பது சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் கோல்மன் ஒரு ஆய்வு நடத்தினார். இப்போது உள்ள அளவில் பிறநாட்டினர் குடியேறுவது நீடித்தால் இன் னும் 56 ஆண்டுகளில் வெள்ளைக்கார பிரித்தானியரை விட மற்ற இனத்தினர் பெரும்பான்மையாகி விடுவார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது. (மேலும்.....)

மார்கழி 07, 2010

ஹஜ், ரமழான் காலங்களில் திரட்டப்படும் நிதிகள் அல் கைதாவுக்குச் செல்வதாக விக்கிலிக்ஸ் தகவல்

இஸ்லாமிய இயக்கங்களுக்கு சவூதி அரேபியாவிலிருந்து பெருந்தொகைப் பணம் செல்வதாக விக்கிலீக்ஸில் வெளியான செய்தியை சவூதி அரசாங்கம் நிராகரித்துள்ளது ஹஜ், நோன்பு காலங்களில் சவூதி அரேபியாவில் திரட்டப்படும் பணம் அல்கைதா, ஹமாஸ், ஹிஸ்புல்லா, லக்ஷர் இ தொய்பா, தலிபான் போன்ற இஸ்லாமிய அமைப்புக்களுக்கு செல்வதாக அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியதாக விக்கிலிக்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் சுன்னி முஸ்லிம் அமைப்பான அல் கைதாவுக்கே ஏராளமான பணம் செல்கின்றது. ஒஸாமா பின்லேடனின் மண் சவூதியாக இருப்பதும் சவூதி அரேபியாவும் சுன்னி முஸ்லிம் நாடாக இருக்கின்றமையும் இந்நிலைமைகளுக்கு ஏதுவாய் அமைந்துள்ளதையும் விக்கிலிக்ஸ் அறிக்கை விளக்கியுள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்துக்குப் பின்னர் இவ்வாறான நிதி, நிதிதிரட்டல்களில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை போதியளவில் பயனளிக்க வில்லையெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மார்கழி 07, 2010

க. பொ. த. சாதாரண தரம்

வடக்கில் இடம்பெயர்ந்த 2,598 மாணவர்கள் தோற்றம்

டிசம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாக விருக்கும் கல்வி பொதுத்தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையில் வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த 2 அயிரத்து 598 மாணவர்கள் தோற்றவுள்ளனர். வட மாகாணத்திலிருந்து மொத்தமாக 22 ஆயிரத்து 608 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் தோற்ற விருப்பதாகவும், இவர்களில் 20 ஆயிரத்து 16 பேர் நிரந்தரப் பாடசாலைகளிலும் 2 ஆயிரத்து 598 மாணவர்கள் இடம்பெயர்ந்த மாணவர்கள் என்றும் வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 07, 2010

ஆங்கில மொழி விருத்தியில் அரசு விசேட அக்கறை

1950வது, 1960வது தசாப்தங்களில் இருந்தது போன்று இனிமேலும் ஆங்கில மொழிக் கல்வியை எமது மாணவர்கள் புறக்கணிக்காமல் அதற்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் அவசியமாகும். ஆங்கி லம், எமது நாட்டின் ஒரு இணைப்பு மொழியாக இருப்பதனால், எமது கலாசார பாரம்பரியங்களுக்கு தீங்கு இழைக்காத வகையில், ஆங்கில மொழியை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் ஆங்கில அறிவில் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியாவில் இன்று, சகல மாநிலங்களிலும் உள்ள பாடசாலை களில் ஆங்கில மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு, ஆங் கிலத்தின் மூலம் சகல பாடங்களையும் கற்றுக்கொடுக்கும் நடை முறை பின்பற்றப்படுகிறது. இதனால்தான் இந்தியர்கள் இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் முழு உலகிலேயே முன்னணி யில் திகழ்ந்து வருகிறார்கள். (மேலும்.....)

மார்கழி 07, 2010

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஐ.தே.கவுக்கு எதிராக மக்கள் சகலரும் கிளர்ந்தெழ வேண்டும்

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இலங்கையை யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என ஐ. தே. க. தெரிவித்துள்ளதாக அரசாங்கம் கூறியது. வெளிநாடுகளில் இயங்கும் புலி ஆதரவாளர்களுடன் இணைந்து நாட்டை அவமானப்படுத்தும் இந்த பாரிய காட்டிக்கொடுப்புக்கு எதிராக முழு நாட்டு மக்களும் கிளர்ந்தெழ வேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சி சிரேஷ்ட அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்தனர். (மேலும்.....)

மார்கழி 07, 2010

உரிய சட்டம் வருமா?

புதிதாகப் போடப்படும் சாலைகள் ஏன் ஒரு மழைக்குக் கூட தாங்காமல் குண்டும் குழியு மாய் மாறுகின்றன என்பதிலிருந்து, மக்கள் நல் வாழ்வுக்காக என திட்டங்கள் உருவாக்கப்பட்டு எத்தனையோ கோடிக்கணக்கில் செலவிடப்பட் டாலும் ஏராளமானோர் ஏன் இன்னும் தெருக் கோடியில் வாழ்கிறவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வரையில் விடை தெரியாத பல கேள் விகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. இதற்கு, ஊருக் குப் பாய்ச்சப்படும் நீர் சிலரது சொந்த வாய்க் கால்களுக்குத் திருப்பிவிடப்படுவது போன்ற ஊழல் களும் முக்கியக் காரணமாகும். எந்த மட்டத்தில் ஊழல் நடந்தாலும், அதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்களை விசார ணைக்கு உட்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ள ஒரு சுயேச் சையான அமைப்பு தேவை என்று நீண்ட கால மாக வலியுறுத்தப் பட்டு வந்திருக்கிறது. (மேலும்.....)

மார்கழி 07, 2010

கடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த பெண்ணாக இந்திரா

கடந்த நூற்றாண்டில் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில், மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா வுக்கு ஒன்பதாவது இடத்தை அளித் துள்ளது ‘டைம்’ பத்திரிகை. இப் பட்டியலில், அன்னை தெரசாவும் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவில் இருந்து வெளி வரும், ‘டைம்’ பத்திரிகை, கடந்த நூற்றாண்டில் சக்தி வாய்ந்தவர்களாக விளங்கிய 25 பெண்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில், நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவின் முதல் பெண்மணி, ஜேன் ஆடம்ஸ் முதலிடம் பெற்றுள்ளார். அந்நாட்டின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஆறாவது இடத்தை பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து இப்படியலில் இந்திரா மற்றும் அன்னை தெரசா இருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். (மேலும்.....)

மார்கழி 07, 2010

கிளிநொச்சி மாவட்ட அதிபருடன் சுபியான் மெளலவி குழு சந்திப்பு

கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ். மாநகர சபை உறுப்பினர் சுபியான் மெளலவி தலைமையிலான குழுவொன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இச் சந்திப்பு நேற்று பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. நாச்சிக்குடா, வட்டக்கச்சி, கிளிநொச்சி நகர், சேவிஸ் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் யாழ் முஸ்லிம் பிரதிநிதிகளும் இக்குழுவில் அங்கம் வகித்தனர். (மேலும்.....)

மார்கழி 07, 2010

இஸ்ரேலைத் தவிர வேறு அயல் நாடுகளை தாக்கும் எண்ணம் ஈரானுக்கில்லை

ஈரானின் இராணுவ வலிமை அயல் நாடுகளுக்கெதிராகப் பயன்படுத்தப்பட மாடாதென அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் மொனாச்சர் மொற்றாக்கி தெரிவித்தார். பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் அண்மையில் ஈரான் குறித்து வெளியிட்ட கருத்தில் ஈரானின் அணு ஆயுத பலம் அயல் நாடுகளுக்கு ஆபத்தாய் அமையும். யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் எவ்வித விட்டுக்கொடுப்புகளும் இல்லையெனத் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றுகையிலே லியாம் பொக்ஸ் இக்கருத்தை வெளியிட்டார். (மேலும்.....)

மார்கழி 07, 2010

அவுஸ்திரேலியாவில் பெரும்வெள்ளம்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

அவுஸ்திரேலியாவில் பெய்த கடும்மழையால் அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட் டதுடன் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பாலங்கள் இடிந்து வீழ்ந்ததால் போக்குவரத்துகள் ஸ்தம்பித்தன. பாதைகள் வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டதுடன் தொலைத் தொடர்புகளும் செயலிழந்தன. 1974ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய வெள்ளம் இதுவென அரசாங்கம் அறிவி த்ததுடன் 34 பிரதேசங்களில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டு மீட்புப் பணிகள் துரிதமாக்கப்பட்டன. (மேலும்.....)

மார்கழி 06, 2010

கடற்படையினரால் தாக்கப்பட்ட பஸ் சாரதி மன்னார் வைத்தியசாலையில் அனுமதி

தாக்கதலுக்குள்ளான சாரதி ஆ.தவப்பிரகாசம் கருத்துத் தெரிவிக்கையில்,"மடுத்திருத்தலப் பகுதியில் இருந்து நேற்று மாலை 2.15மணியளவில் சுமார் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்தோம். இதன் போது முருங்கன் இசைமாளத்தாழ்வு பகுதியூடாக வந்து கொண்டிருந்த போது பஸ்ஸுக்குப் பின்புறமாக கடற்படையினரின் டிரக் ரக வாகனம் வந்துகொண்டிருந்தது. டிரக் வண்டி பஸ்ஸை முந்திக்கொண்டு செல்ல வழிவிடப்படாததால், சுமார் 5 கடற்படை வீரர்கள் என்னைத் தாக்கினர்" என்றார். (மேலும்.....)

மார்கழி 06, 2010

Tigers bought Japanese Coast Guard vessels

(by Shamindra Ferdinando)

Ponnaih Anandarajah alias Iyanna, one-time KP’s second-in-command is widely believed to have handled the transactions. Anandarajah succeeded ‘KP’ during the Norwegian-arranged CFA, though the LTTE reinstated KP a few months before the collapse of the group in May last year. Anandarajah visited Vanni, where he met LTTE leader Velupillai Prabhakaran during the CFA. Sources said that Anandarajah’s whereabouts weren’t known. It is believed that Anandarajah could be working with one of the three Diaspora factions now engaged in a major propaganda campaign against the Sri Lankan government. Sources said he was having a substantial amount of funds at his disposal. (more...)

மார்கழி 06, 2010

அடைமழை

75,000பேர் பாதிப்பு, வன்னிப் பிரதேசம் நீரில் மூழ்கின

  • நாடு முழுவதும் அவசர பணிக்கு ரூ.29 மில்லியன்

  • கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்துடன் தொடர்பு துண்டிப்பு

  • படகுகள் மூலம் நிவாரணம் வழங்குவதில் இராணுவம் மும்முரம்  

நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக நாடு முழுவதிலும் 75 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 70 ற்கும் அதிகமான முகாம்களில் தங்கவைக்கப்பட்டி ருப்பதுடன், வெள்ளப்பெருக்கால் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. (மேலும்.....)

மார்கழி 06, 2010

அபிவிருத்தி எனும் போது மட்டக்களப்பில் சரியான திட்டங்கள் எடுப்பது இல்லை - கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் _

கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் என்று வரும்போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பில் சரியான திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லையென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று காலை கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட செங்கலடி விவேகானந்த வித்தியாலய சாதனையாளர் பாராட்டு விழாவும் 'விவேகம்" சஞ்சிகை வெளியீட்டு நிகழ்விலும் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 06, 2010

பேராசிரியர் கைலாசபதி
தமிழ் அறிஞர்களை உருவாக்கிய வித்தகர்
(லெனின் மதிவானம்)

1963 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டு மென்ற ஆலோசனையை அமைச்சரவையில் கொண்டுவந்து அதன் அங்கீகாரத்தைப் பெற்றார். பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அடையாள மானியமாக ஒரு தொகைப் பணம் ஒதுக்குவதற்கு அவருக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் அதற்கு அடுத்த வருடம் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதால் அம்முயற்சி அத்துடன் நின்றிருந்தது.’ (இளங்கீரன் சுபைர் (1992), பேராசிரியர் கைலாசபதி நினைவு களும் கருத்துக்களும், சென்னை. ப. 80)ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் வேறு பல விடயங்கள் விவாதப் பொருளாக்கப்பட்டு யாழ். பல்கலைக்கழக வளாகம் அமைக்கும் முயற்சி கைவிடப் பட்டது. ஆயினும் 1970ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இலங்கை இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கம் அமைத்த பின்னர் யாழ். வளாகம் அமையலாயிற்று. (மேலும்.....)

மார்கழி 06, 2010

Who is the female writer from London giving false information about Dr JJ to the Colombo media

(December 05, London, Sri Lanka Guardian) According to Colombo media (Tamil) a very serious claim has been made without quoting the name of a female journalist that Dr Jayalath Jayawardene had participated in the demonstrations of the LTTE in London. Dr Jayalath Jayawardene is a regular visitor to the United Kingdom and has engaged in wide-ranging forums including radio discussions and interactive public discussion programmes involving the cross section of the Sri Lankan Diaspora community. (more....)

மார்கழி 06, 2010

தில்லி தமிழ்ச் சங்கம் கருத்தரங்கம்

காலம்: 10 – 12 டிசம்பர் 2010

இடம்: திருவள்ளுவர் கலையரங்கம், தில்லி, இந்தியா

(அழைப்பிதழ்: பக்கம் 1, பக்கம் 2)

மார்கழி 06, 2010

Tamil voters in Britain behind London's Sri Lanka stance - WikiLeaks

As the Sri Lankan military made its final push in the early part of 2009 against the militant Tamil Tigers, human rights groups warned of extreme abuses taking place, and United Nations officials estimated that thousands of civilians might have been killed in the final weeks of fighting. Another cable, from the US embassy in Colombo, highlighted that US diplomats had concerns over human rights abuses and the failure of the government to adequately address the charges. 'The responsibility for many of the alleged crimes rests with the country's senior civilian and military leadership, including President (Mahinda) Rajapaksa and his brothers and opposition candidate General (Sarath) Fonseka,' a message said. (more....)

மார்கழி 06, 2010

தேசத்துரோகிகளை மக்கள் தண்டிப்பார்கள்

இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு அமைய பாராளுமன்றத்திற்கு உறுப்பினராக தெரிவு செய்யப்படும் ஒருவர், நான் இலங்கையின் இறைமைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கக் கூடிய வகையில் பிரிவினைவாத பயங்கரவாத சக்திகளுடன் இணைந்து செயற்பட மாட்டேன் என்று, உறுதிப்பிரமாணம் எடுப்பார். ஜயலத் ஜயவர்தன, இந்த உறுதிப்பிரமாணத்தை மீறி லண்டன் மாநகரில் பிரிவினைவாத பயங்கரவாத சக்திகளுடன் இணைந்து செயற்பட்டதன் மூலம், தேசத் துரோகத்தை இழைத்து விட்டமைக் காக, இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எல்லோருடைய பெரும் மதிப்பை பெற்றிருக்கும் அமைச்சர் தினேஷ் குணவர்தன திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இதற்கமைய, தக்க ஒழுங்கு நடவடிக்கைகள் அவருக்கு எதிராக எடுக்கப்படும் என்றும் நாம் நம்புகிறோம். (மேலும்.....)

மார்கழி 06, 2010

வலை, தூண்டில் வேண்டாம், காகம் இருந்தால் கைநிறைய மீன்

வலை, தூண்டில் இல்லாமல் நீர் காகங்களை வைத்து மீன்பிடி தொழில் நடத்தும் வினோதம் சீனாவில் மேற்கொள்ளப்படுகிறது. சீனாவில் வலை, தூண்டில் என்ற எந்த உபகரணமும் இல்லாமல் நீர்காகங்களை வைத்து மீன்பிடித் தொழிலை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஜப்பானிலும் இம்முறை பின்பற்றப்படுகிறது. கரண்டம் அர்க்கம் எனப்படும் நீர்காகங்கள், தெற்கு ஆசியாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. தெற்கு பாகிஸ்தானில் தொடங்கி இந்தியா, இலங்கை வழியாக கிழக்கு இந்தோனேசியா வரை இதன் இனப்பெருக்க வாழ்விடங்கள் அமைந்துள்ளன. (மேலும்.....)

மார்கழி 06, 2010

Canada enlists in America's permanent war for peace

(Gerald Caplan)

American and NATO troops, including Canadians, will pull out of Afghanistan in 2014 at the latest, unless they don't. It depends on something but no one knows what that something might be. In his new book Obama's Wars, Bob Woodward quotes General David Petraeus, the senior U.S. commander in Afghanistan: "I don't think you win this war. I think you keep fighting. Š This is the kind of fight we're in for the rest of our lives, and probably our kids' lives." Dear me, how do I break this to our granddaughter? (more...)

மார்கழி 06, 2010

பெனாஷீர்  பூட்டோ படுகொலை விசாரணைகள் மும்முரம்


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனா ஷிர் பூட்டோ படுகொலை தொடர்பாக இரண்டு பொலிஸாருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு ள்ளது. பயங்கரவாதத்துக் கெதிரான நீதிமன்றம் இந்த பிடியா ணையைப் பிறப்பித்தது. முன்னாள் பிரதமர் பெனா ஷிர் பூட்டோவுக்கான பாதுகாப்பு விடயங்களில் இந்த இரண்டு பொலி ஸாரும் பூரண பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லையென இப்பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டது. (மேலும்.....)

மார்கழி 06, 2010

Please find attached herewith the "News  & Views" High Commission Newsletter.

Thank you

Sri Lanka High Commission

333, Laurier Avenue West, Suite 1204

Ottawa, Ontario. K1P 1C1.

(To read News Letter...)

(மேலும்.....)

மார்கழி 06, 2010

புலி ஆதரவாளரின் லண்டன் ஆர்ப்பாட்டம்

ஜனநாயகத்தை மதிக்கும் எந்தவொரு  நாடும் மெளனமாக இருக்க முடியாது

பயங்கரவாதத்துக்கு முகம்கொடுத்து அதனை முற்றிலும் ஒழித்துக்கட்டிய உலகிலுள்ள ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். ஜனாதிபதி இந்த நாட்டில் இடம்பெற்றுவந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இங்கு வசிக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இனங்களும் கெளரவமாக வாழும் உரிமையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் நிலையில் பிரிட்டனில் புலி ஆதரவாளர்களின் இந்த செயலை சிறியது என்று கருதமுடியாது. ஜனநாயகத்தை மதிக்கும் உலகின் எந்தவொரு நாடும் இதனை மெளனமாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பயங்கரவாதம் தொடர்பான தமது நிலைப்பாடு என்ன என்பதை ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகள் உலகுக்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் மேலும் கூறினார். (மேலும்.....)

மார்கழி 06, 2010

நல்லிணக்க ஆணைக் குழு

குச்சவெளியில் நேற்று அமர்வு, 147 சாட்சியங்கள் பதிவு

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்தனர். காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற நிகழ் வில் 147 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் தடுப்பு முகாமில் உள்ளவர்கள், புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்கள் போன்றோரின் முறைப்பாடுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை சம்பந்தமாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன. மேற்படி முறைப்பாட்டு ஆணைக்குழு முன் சாட்சியமளித்தவர்களில் அதிகளவானவர்கள் விதவைகள் மற்றும் பெண்கள், தாய்மார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 483 பேர் தங்களது சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளன.

மார்கழி 06, 2010

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் திடீர் ரத்து

இலங்கைக்கு மூன்றுநாள் விஜயமொன்ற மேற்கொண்டு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வருகை தரவிருந்த பிரித்தானிய வெளிவிகார (தெற்காசிய விவகாரங்கள்) அமைச்சர் அலிஸ்டெயார் பர்ட்டின் விஜயத்தை அந்நாட்டு அரசு இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இந்த வாரம் பங்களாதேஷ்,மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே அவர் தனது இலங்கைக்கான விஜயத்தை உடனடியாக இரத்துச் செய்துள்ளார். இதனை இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் லண்டன் சென்றி ருந்த போது எழுந்திருந்த நிலைமைகள் மற்றும் இலங்கையில் பிரித்தானியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களையடுத்தே இவரின் விஜயம் இரத்துச் செய் யப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகிறது. இலங்கைக்கான அவரின் விஜயத்தின் போது யாழ்ப்பாணத்துக்கும் செல்லத் திட்ட மிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. _

மார்கழி 06, 2010

காணாமல் போன உறவுகளை மீட்டுத்தாருங்கள் குச்சவெளியில் கதறியழுது மக்கள் மன்றாட்டம்

திருகோணமலை, குச்சவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளித்த பொதுமக்கள், காணாமல் போன தங்கள் உறவுகளை மீட்டுத்தருமாறு ஆணைக் குழுவிடம் கதறியழுதவாறு கோரிக்கை விடுத்தனர். காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட கணவன்மார்களை தேடித்தருமாறு மனைவிமார்களும் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு பெற்றோர்களும் கண்ணீர் மல்கியவாறு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி முதல் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் நடைபெற்றன. அந்த வகையில் குச்சவேலி பிரதேச செயலகத்தில் நேற்றைய அமர்வு அதன் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் நடைபெற்றது. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும்“ அமர்வில் கலந்துகொண்டனர். அத்துடன் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

மார்கழி 06, 2010

தாய்லாந்தில் கைதான 50 இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தல்

தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் கட்டம் கட்டமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 50 இலங்கைத் தமிழர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தின் குடிவரவுச் சட்டங்களை மீறி அங்கு தங்கியிருந்ததாகக் கூறி இரண்டு பாரிய சுற்றிவளைப்புகளின் போது சுமார் 200 வரையான இலங்கை தமிழர்களைத் தாய்லாந்து பொலிஸ் கைது செய்திருந்தது. மூன்றாவது நாடு ஒன்றில் அடைக்கலம் தேடும் நோக்கிலேயே அவர்கள் தாய்லாந்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் 50 பேர் வரையில் கடந்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டு ள்ளனர். ஏனையோர் பாங்கொக்கில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அவசரகாலக் கடவுச்சீட்டு மற்றும் விமானப் பயணச்சீட்டு ஆகியவற்றை ஒழுங்கு செய்து கொடுக்கும் முயற்சியில் தாய்லாந்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இலங்கைத் தூதரகமும் இவர்களைக் கொழும்புக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆயினும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் தமது குடும்பத்துடன் இணைந்து கொண்டனரா என்பது பற்றி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மார்கழி 06, 2010

ரயில் சேவைகள் பாதிப்பு

கண்டி - கொழும்பு ரயில் பாதையில் பாரிய கற்பாறை

கண்டி-கொழும்பு ரயில் பாதையில் பாரிய கற்பாறை ஒன்று நேற்று அதிகாலை வேளையில் சரிந்ததால் கண்டி - கொழும்பு பிரதான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள் ளதென என கண்டி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக கண்டி பிரதேசங்களில் கடும் மழை பெய்துவந்த போதும் சனி மாலை முதல் பெய்து வரும் கடும் அடைமழையின் காரணமாகவே இவ்வாறு ரயில் பாதையில் கற்பாறை சரிந்துள்ளது. கண்டி கொழும்பு ரயில் பாதையில் ரம்புக்கன-இஹலகோட்டை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையிலேயே பாரிய கற்பாறை சரிந்துள்ளது. இதேபோன்று கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அண்மையாக மண் சரிவு ஒன்றும் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று காலை கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று நேற்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளைக்கான ரயில் சேவையும் நிறுத்தப்பட்டிருந்தது.

மார்கழி 06, 2010

LOVE NOTES OF AN ISLANDER

 A post mortem of a snub

(by Malinda Seneviratne)

There’s no political fallout here, though.  The rabidly anti-Mahinda sections of our polity, including those who were rooting for the LTTE at the height of the military offensive, would have lost a lot of saliva over the past three days.  One remembers though that among them were editors of newspapers who rushed to pronounce Sarath Fonseka dead seconds after that unsuccessful suicide-bomber attack a few years ago and who were visibly full of glee when receiving unconfirmed reports of an LTTE attack on Vavuniya way back in mid-2006. One remembers too that these same individuals and their yes-boys and yes-girls were falling over themselves to support Sarath Fonseka when he ran for president and one tends to imagine that they would support Mervin Silva (Dr.) or even Malu Nihal if either were to weigh their chances against one Mahinda Percy Rajapaksa. (more...)

மார்கழி 06, 2010

 

புதிய வரவு செலவு திட்டத்தின் பயன்

80 இலட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்

தற்போது ஓய்வூதிய சம்பளம் கிடைக்காத 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் வழங்கும் நிதியத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி தனியார் துறையில் பணிபுரியும் 20 இலட்சம் பேர், வெளிநாடுகளில் பணிபுரியும் 30 இலட்சம், விவசாய, மீன்பிடி, சுயவேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள 30 இலட்சம் பேர் என மொத்தமாக 80 இலட்சம் பேர் பயன் பெறுவர். இவ்வாறான இரு நிதியங்கள் முறையான ஏற்பாடுகளுடன் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை முகாமைத்துவத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படவுள்ளன. (மேலும்.....)

மார்கழி 06, 2010

பூமி அழகியாக இந்தியாவின் நிகோலே பரியா தேர்வு

இந்த ஆண்டின் பூமி அழகியாக இந்தியாவைச் சேர்ந்த நிகோலே பரியா தேர்வு செய்யப்பட்டார். வியட்நாமின் ஹோசி மின் நகரில் 2010ம் ஆண்டிற் கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தன்னுடன் போட்டியிட்ட இதர 17 அழகிகளை வென்று நிகோலே பரியா மகுடம் சூடினார். இந்த 20 வயது அழகி பெங்களூரைச் சேர்ந் தவர். இந்நிகழ்ச்சியில் திரட் டப்பட்ட நிதி வியட்நாம் வெள்ள பாதிப்புக்குள்ளா னவர்களுக்கு வழங்கப்படு கிறது. அறிவுத் திறன் மற் றும் பெல்லி நடனத்துடன் கூடிய உலக அழகிப் போட் டியில் நிகோலே பரியா சாதனை படைத்தார். மகள் பெற்ற வெற்றி எங்களுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி யை தருகிறது. இருப்பினும் இந்த வெற்றி நாங்கள் எதிர் பார்த்தது தான் என பரி யாவின் தந்தை ஐயான் பெங்களூரில் தெரிவித்தார். உலக அழகிப் போட்டி யில் முதல் 5 இடம் பெற்ற அழகிகளில் ஒருவராக வியட்நாமின் பிரதி லூ தி தியம் ஹாங் இடம் பெற்றி ருந்தார். இவரது நாட்டுப்புற நடனம் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு வியட்நாம் பிராந்தியங்களில் புகழ்பெற் றது ஆகும். டிசம்பர் 4ம் தேதியன்று வியட்நாமின் வின்பியர்ல் தீவு பகுதியில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற நிகோலே பரியா கூறுகையில், அதிக நண்பர்களை பெற விரும்பு வதுடன், வியட்நாமில் உள்ள தருணத்தில் மகிழ்ச் சியாக இருக்க விரும்புகி றேன் என்றார்.

மார்கழி 05, 2010

விடுதலைப் புலிகளின் புதிய மையம் கேரளா?

கேரளாவில் வி்டுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணையும் சாத்தியக் கூறுகள் தெரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடபிலான ஆவணப்படம் ஒன்று, திருவனந்தபுரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக 'ஐ.பி.என் லைவ்' தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தமிழின படுகொலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட 'முல்லைத்தீவு சாகா' என்ற ஆவண திரைப்படம் திருவனந்தபுரம் அருகே மண்டபத்தில் ஒளிபரப்பப்பட்டது. மிகவும் ரகசியமான முறையில் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தலைவர்களின் கூட்டம் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் கேரள போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டது. ஆனால் இந்த கூட்டம் நடந்ததற்கான எந்த தடயங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் முல்லைத்தீவு சாகா திரைப்படம் காட்டப்பட்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. இனி இம்மாதிரி படங்களைத் திரையிடுவது நிறுத்தப்படுமா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "இந்தத் திரைப்படத்தாலோ, அதைத் திரையிட்டதாலோ இந்திய இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே தடை ஏதுமில்லை" என்று தெரிவித்தனர்.

மார்கழி 05, 2010

லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு

முல்லை, கிளிநொச்சியில் மக்கள் கண்டனப் பேரணி

பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர் குழுவொன்றினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அசெளகரியம் ஏற்படுத்தியமைக்கு எதிராக வடக்கில் பல இடங்களில் நேற்று (04) தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். புலம்பெயர்ந்த ஒரு பிரிவு தமிழர்களின் செயலைக் கண்டித்து வர்த்தக நிலையங்களை மூடியும் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டும் வடக்கில் தமிழர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முல்லைத்தீவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் கொடும்பாவிகளையும் மக்கள் எரித்துள்ளனர். (மேலும்.....)

மார்கழி 05, 2010

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிம்மதியைத் தொலைத்துவிடாதீர்கள்

பிரித்தானியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரபா கணேஷன் மற்றும் பீ. திகாம்பரம் ஆகியோர் வன்மையாகக் கண்டனம் தெரிவித்தனர். புலம்பெயர் தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக இருந்தால், வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு வந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முன்வரவேண்டுமென்று நேற்று (04) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். (மேலும்.....)

மார்கழி 05, 2010

அவமானத்தை சுமந்து நிற்கிறது புலம்பெயர் சமூகம்

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆற்றப்படவிருந்த உரையானது, பாதுகாப்புக் காரணங்களுக்காக இறுதி நேரத்தில் இரத்தான விடயம், புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு காட்டுமிராண்டித் தனமான செயலை மீண்டும் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. இச்செயலானது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகம் பூராகவும் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு பேரிழுக்காகும். (மேலும்.....)

மார்கழி 05, 2010

ஜெயகாந்தன் சரியென்று பட்டதை தயக்கமின்றி வெளிப்படுத்துபவர்

(முருகேசு ரவீந்திரன் )

ஜெயகாந்தன் என்ற படைப்பாளியையும் அவரது படைப்புக்கள் வாயிலாகவே புரிந்து கொள்ள முடியும். இவரது படைப்புக்கள் பற்றி ஆய்வு செய்த விமர்சகர்கள் ஜெயகாந்தன் கம்யூனிஸ்டாக இருந்த போது முற்போக்கான கதைகளை எழுதியதாகவும் ஆனால் பின்னாளில் அவரது படைப்புக்களில் முற்போக்கு சிந்தனைகளை காணமுடியவில்லை என்றும் கூறுகின்றனர். இன்றும் சில விமர்சகர்கள் ஜெயகாந்தன் பேனா பிடித்த போது அவர் சாதாரணமானவராக இருந்தார். அதனால் சாதாரண மக்களின் பிரச்சினைகள் பற்றி மிகச் சிறப்பான படைப்புக்களை வெளிக்கொண்டு வந்தார். எழுத்துறையில் புகழ்பெற்ற பின்னர் அவரது வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. அவரைச் சுற்றிலும் வசதியானவர்களே காணப்பட்டனர். வறுமையில் வாழ்பவர்களுக்கு வயிற்றுப்பசி. இது ஜெயகாந்தனின் ஆரம்பகால படைப்புக்களில் காணப்பட்டது. வசதியாக வாழ்பவர்களுக்கு உடற்பசி. இது ஜெயகாந்தனின் பிற்கால படைப்புகளில் செக்ஸ் பற்றி அதிகம் எழுத காரணமாக அமைந்தது. சமூகப் பிரச்சினைகளை மறந்து விட்டு பின்னாளில் நிர்வாணம் குறித்தே இவர் சித்திரித்ததாகவும் சில விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். (மேலும்.....)

மார்கழி 05, 2010

104 வீரர்களுடன் சென்றும் வெறுங்கையோடு....

ஆசிய விளையாட்டுப்போட்டி எழுப்பும் கேள்விகள்

சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய மற்றுமொரு ஆசிய விளையாட்டுப்போட்டி நிறைவடைந்துள்ளது. எனினும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் முடிவோடு இலங்கை விளையாட்டின் எதிர்காலம் குறித்து மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது. 133 பேர் கொண்ட குழுவுடன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் களமிறங்கிய இலங்கை வெறுங்கையோடு நாடு திரும்பியது. இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் 29 அதிகாரிகள் 104 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்கள் 22 போட்டிப் பிரிவுகளில் பதக்கம் வெல்வதற்கு முயற்சித்தனர். ஆனால் இலங்கையினால் ஒரு வெண்கலப்பதக்கத்தைக்கூட வெல்ல முடியவில்லை. (மேலும்.....)

மார்கழி 05, 2010

More Families Resettled at Keeramalai

Security Forces Headquarters – Jaffna (SF-J) on directives of the Army Headquarters took steps early this week to release some more lands at Keeramamli for the civilians who were original settlers there. Those blocks of lands were within the restricted zone due to the threat of landmines and other unexploded ordnance which made the area risky for civilians and their movements. During the past few months Army Engineers together with foreign de-mining agencies tirelessly worked on removing the explosives and handed over the land to civil administrative authorities Jaffna to implement resettlement. (more...)

மார்கழி 05, 2010

சுயமரியாதைத் திருமணம் என்பது... 

பிறப்பால் பிராமணரான ஒருவருக்கும் தேவதாசி தாய்க்கும் பிறந்த ஒரு பெண் ணுக்கும் திருமணம் என்றால் அதுவும் 1925ஆம் ஆண்டு நடந்ததென்றால் அது சாதாரணச் செய்தி அல்ல. அந்தச் செய்தி அந்தந்த சாதிக்குள்ளும் ஒட்டுமொத்த சமூகத்துக்குள்ளும் எவ்விதமான எதிர் வினைகளை தோற்றுவித்திருக்கும் என் பதை கூறவும் வேண்டுமோ? இதுதான் முதல் சுயமரியாதைத் திருமணம் என்று முனைவர் பி.எஸ். சந்திரபாபு தன் ஆய் வேட்டில் அடிக்கோடிட்டுப் பதிவு செய் துள்ளார். சுயமரியாதைத் திருமணம் என்றால் என்ன? இக்கேள்விக்கு வெ. ஆனை முத்து கூறுகிறார். “இது பிராமணக் குருக்களை அழைக்காமல், அர்த்தமற்ற பழக்க வழக்கங்கள், சடங்குகள், எதையும் செய்யாமல் மூடப்பழக்கங்க ளை மேற்கொள்ளாமல் நடத்தப்படுகிற ஒரு சீர்திருத்த முறையிலான திருமணத் தின் சிறப்பு வகையாகும். மேலும் தேவை யற்ற வீணான செலவுகள் இல்லாத ஒரு எளிய முறைத் திருமணமாகும்”. (மேலும்.....)

மார்கழி 05, 2010

Lesson Learn at London and Return to Colombo (LLLRC)

(by Lenin Benedict-Toronto)

(December 05, Toronto, Sri Lanka Guardian) His Excellency Mahinda Rajapakse, President of the Socialist Democratic of Srilanka has once again tried to prove the world and Srilankans that he wasn’t afraid of any threat from International community especially the Western nations. Of course it’s a pride to all Srilankans if the political leadership of the country remains strong and steady. Any nation would prefer a strong leadership that will keep the country strong. The leadership shown by some of the world great leaders at the time of crisis in their respective countries is a remarkable event in the history and was a lesson for the future generations and leaders to come. The courage shown by the President Mahinda Rajapakse to defeat Terrorist will be recorded in the history and will remain in the hearts of Srilankans forever. (more...)

மார்கழி 05, 2010

அவமானம் பிரிட்டிஷ் அரசுக்குத்தான்!

மகிந்தா நாடு திரும்பி விட்டார். பிரிட்டனுக்கு அவர் வரமாட்டார் பயத்தில் இலங்கையை விட்டு போகமாட்டார் என எழுதிதள்ளிய புலி ஊடகங்கள் அவர் பிரிட்டனில் கைது செய்யப்படவில்லை என்றவுடன் அவரது உரையை நடத்த விடாமல் பண்ணி விட்டோமே வெற்றி எங்களுக்கு என்கிற பாணியில் எழுதித்தள்ளுகின்றன. புலம்பெயர்நாடுகளில் அதிகமான விசர்ப்புலிகள் உள்ள நாடு எது என்றால் அது பிரிட்டனில்தான். குறிப்பாக லண்டனில் உள்ள புலி ஆதரவாளர்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. புலிகளின் நிகழ்ச்சிகளுக்கு தமிழ்மக்களை அழைக்கின்ற பாணியே தமிழ்ப்பட வில்லன்களின் அடியாட்கள் கட்டாயம் வரவேணும் என்ன என மக்களை பலவந்தமாக மிரட்டுகின்றமாதியிருக்கும். (மேலும்.....)

மார்கழி 05, 2010

Canadian Tamils for Peace and Democracy Congratulates President on his Victory!   

(MICHAEL WALTER in Toronto.)

It gives us immense pleasure to extend our hearty congratulations and warm greetings to His Excellency the President, Mahinda Rajapakse on behalf of Canadian Tamils for Peace and Democracy as he begins his second tenure as the President of Sri Lanka. Sri Lankans has once again have proved their commitment to strengthening democracy. Nothing improves the reputation of a government and its leader more than returning to power with a vast majority. (more...)

மார்கழி 05, 2010

‘இந்தியாவுக்கு இடமில்லாததை நினைத்துப்பார்க்க முடியவில்லை’  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் ஆதரிக்கும் - சர்கோஸி

100 கோடிக்கும் அதிக மான மக்களைக் கொண்ட இந்தியாவுக்கு ஐக்கிய நாடு கள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப் பினர் அந்தஸ்து அளிக்கா மல் இருப்பதை நினைத் துப்பார்க்கவே முடிய வில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸி கூறினார். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப் பினர் அந்தஸ்து கிடைப்ப தற்கான முயற்சிகளில் பிரான்ஸ் எப்போதும் துணை நிற்கும் என்று குறிப் பிட்ட அவர், இந்தியாவின் அணுசக்தி திட்டங்களுக் காக சர்வதேச அணுசக்தி விநியோகக் குழுமத்திடமி ருந்து உதவிகளைப் பெறு வதற்கும், அந்தக்குழுமத்தில் இந்தியா உறுப்பினராவதற் கும் துணை நிற்கும் என்றும் கூறினார்.  (மேலும்.....)

மார்கழி 05, 2010

ஒரு நேர் வெட்டுமுகம்

இலங்கை இந்திய பாகிஸ்தான் உறவுகள்

இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு இந்தியா, இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு பாகிஸ்தான். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இந்திய உப கண்டத்தின் அங்கமாக விளங்கிய பாகிஸ்தான் 1947ல் தனி நாடாக சுதந்திரம் பெற்றது அன்றில் இருந்து இன்று வரை பாகிஸ்தானும் இந்தியாவும் கீரியும் பாம்பும் போலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தங்கள், மோதல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுக்கள், கண்டனங்கள், உளவு நடவடிக்கைகள் என்று எல்லாமே தாராளமாக இடம்பெற்றிருக்கின்றன. இப்போதும் இடம்பெறுகின்றன. ஆனாலும் இந்த இரு நாடுகளின் முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவற்றுடன் நல்லுறவுகளை இலங்கை இப்போது பேணி வருகின்றது. (மேலும்.....)

மார்கழி 05, 2010

தமது மக்களது தேவையை உணர வேண்டிய தருணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நற்செயற்பாடுகளுக்குத் தமது ஆதரவினைத் தெரி விக்க விருப்பம் தெரிவித்திருப்பதானது உண்மையில் வரவேற்கத் தக்கதொரு விடயமாகும். நீண்ட காலத்திற்குப் பின்னர் அவர்கள் எடுத்திருக்கும் இம்முடிவானது தமிழ் மக்களால் நிச்சயம் வரவேற்கப்படும். அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பது மட்டும்தான் எதிர்க் கட்சியில் இருப் பவர்களது பொறுப்பாக இருந்துவிடக் கூடாது. அந்த வகையில் மிக நீண்ட கால அரசியல் பாரம் பரியம் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே கைகளை உயர்த்தி எதிர்ப்புத் தெரி விக்கும் கட்சியாக இருந்துவிடக் கூடாது. (மேலும்.....)

மார்கழி 04, 2010

புதுக்குடியிருப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து படையினர் வெளியேற்றம்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து நேற்று வியாழக்கிழமை படையினர் வெளியேறிச் சென்றுள்ளனர். கடந்த 30 வருடமாக விசேட அதிரடிப்படையினர் முகாம் அமைத்திருந்த காணி நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1990ஆம் தற்கொலை படைதாரியினால் குண்டு நிரப்பப்பட்ட வான் குறித்த முகாம் மோதப்பட்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து முகாம் மீது தாக்குல் நடத்தின. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசேட அதிரடிப்படையினரின் முகாம் மூடப்பட்டு அப்பகுதியில் கடமையில் இருந்த படையினர் வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மார்கழி 04, 2010

யாழில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி

கொட்டும் மழையிலும் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஆயுத முனையில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் பதற்றமும் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். தெல்லிப்பளை அளவெட்டியில் நேற்றிரவு 8 மணியளவில் துப்பாக்கிகள் சகிதம் வந்த திருடர்கள் எட்டாம் கட்டை வீதியிலுள்ள வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை திருடியுள்ளார்கள். பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் நகைகளும் களவாடப்பட்டுள்ளன. இதேபோன்று அளவெட்டி பகுதியினூடாக இரவு வேளைகளில் பயணம் செய்வோர் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

மார்கழி 04, 2010

மட்டு. மாவட்டத்தில் கடும்மழை, கொழும்பில் அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடைமழை  பெய்து வருகின்றது. கடந்த 30 மணித்தியாலங்களில் 47.8 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட காலநிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கு .சூரியகுமார் தெரிவித்தார். தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பல வீதிகள் நீரினால் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்ப்பட்டுள்ளன. கொழும்பில் இன்று மதியம் முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நாட்டின் வடமத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளதுடன் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மார்கழி 03, 2010

சாவகச்சேரியில்

இராணூவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் பலி

சாவகச்சேரி புத்தூர் சந்திக்கருகே இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மேற்படி நபர் குறிப்பிட்ட இடத்தில் காணப்பட்ட இருப்புக்கம்பியைக் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைத் தாக்கியதை அடுத்து இராணுவத்தினருக்கும் பொதுமகனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் அப்பொதுமகன் பலியாகியுள்ளார். சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மார்கழி 03, 2010

ஜனாதிபதி உரையாற்ற முடியாமல் போனது முழு நாட்டுக்கும் அகெளரவம்

ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஜனாதிபதிக்கு உரையாற்ற முடியாமல் போனது அரசுக்கு மட்டுமல்ல எமக்கும் முழு நாட்டுக்கும் ஏற்பட்ட அகெள ரவமாகும். இந்த நிகழ்வையிட்டு எமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதியின் உரை ரத்துச் செய்யப்பட்ட விடயம் தொடர்பாக அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்ததும், ஜோன் அமரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி என்பது அரசுக்கு மட்டுமல்ல எமக்கும் முழு நாட்டுக்குமே அவர் ஜனாதிபதி. அவருக்கு இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெற்றது எனினும் எம் அனைவருக்கும் ஏற்பட்டதாகவே கருதுகிறேன். ஜயலத் ஜயவர்தன எம்.பி. லண்டனில் இருக்கவில்லை என தெரிவிக்கிறார். இது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியை தடுக்க லண்டனில் ஆட்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு ஜயலத் ஜயவர்தனவுக்கு அந்த நாட்டில் ஆளுமை இருக்கிறது என நான் நம்பவில்லை.

மார்கழி 03, 2010

வடக்கு கிழக்கில் புதிதாக மதுபான நிலையங்கள் வேண்டாம் - த.தே.கூட்டமைப்பு

வடக்கு கிழக்கில் புதிதாக அமைக்கப்படும் மதுபான நிலையங்களுக்குப் பதிலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைத்துத் தருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வரவு செலவு திட்டத்தின் மீதான நான்காம் நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றபோது உரை நிகழ்த்திய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். "மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் அதிகமானவை இருளில் காணப்படுகின்றன. மின்வலு அமைச்சினூடாக அப்பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மின்சார வசதி இல்லாத காரணத்தினால் பாடசாலைகளுக்கு கணனி வசதி வழங்க முடியாத நிலை காணப்படுகிறது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யோகேஸ்வரன் எதற்கும் சுரேஸிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு மதுக்கடை வேண்டாம் என்ற விடயத்தை பேசியிருக்க வேண்டும்.  - ஆபீஸ் பையன்.

மார்கழி 03, 2010

உயிர்பிச்சை கேட்டு கெஞ்சும் புலிகளின் தளபதி ரமேஸ்:புலிகளின் பினாமி இணையத்தளங்களும் வெளியிட்டுள்ளன!

 

இறுதிகட்ட போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் விசாரணையின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆதாரமான வீடியோக்களையும் புலிகளின் பினாமி அமைப்புக்களும் இணையத்தளங்களும் வெளியிட்டுள்ளன. அத்துடன் அவர்கள் யுத்த முனையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும்இ சிலர் தமது சகாக்களை காப்பாற்ற சென்றபோது மாட்டிக்கொண்டதாகவேறு அம்புலிமாமா கதைகள் கூற முனைகின்றனர். (மேலும்.....)

மார்கழி 03, 2010

நோர்வேயின் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கு விசா மறுப்பு

நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன என்று ஆய்வு நடத்த அந்நாட்டில் இருந்து வருகை தர இருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கும் விசா அனுமதி வழங்க இலங்கை மறுத்துள்ளது. நோர்வே 1997ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான அனுசரணையாளராகப் பணி ஆற்றியது. ஆனால் இவ்வனுசரணைப் பணி தோல்வி அடைந்து விட்டது. இத்தோல்வியின் காரணம் என்ன என்பதைக் கண்டறிய இருவரும் இலங்கை வர இருந்தனர். இவர்களில் ஒருவர் நோர்வேயைத் தளமாக கொண்டு இயங்கும் Chr. Michelsen's Institute இன் தலைவரான கினர்சோர்போ ஆவார். இவர் அண்மையில் நோர்வேக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்கவைச் சந்தித்து உரையாடி இருந்தார். இலங்கைக்கு வந்து அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரைச் சந்தித்து நோர்வேயின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அபிப்பிராயம் பெற அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் இருவரும் உத்தேசித்து இருந்தனர். விசாக்கள் மறுக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருக்கின்றனர். நோர்வேயின் முயற்சி இலங்கைக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்து இருக்கின்றார்கள். _

மார்கழி 03, 2010

ஏழைகள் வாழ்க்கைச் செலவை சமாளிக்க சீன அரசு உதவி

பீஜிங், சீனாவில் உள்ள ஏழைகள் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக, அவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி அளிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவில் நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி ஏறிவருகிறது. அதைச் சமாளிக்க முடியாமல் அங்குள்ள சாதாரண மக்கள் தடுமாறி வருகின்றனர். இதனால், அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை தணிக்கும் வகையில், சீனாவின் மேற்குப் பகுதிகளில் உள்ள வயதானோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு மாதந்தோறும், 20 யுவான் (சீன நாணயம்) வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவின் நாணய மதிப்புக் கணக்குப்படி அமெரிக்க டாலர் மூன்றுக்கு 20 யுவான் சமம். ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 150 ரூபாய் வரை ஒருவருக்கு தரப்படும். இத்திட்டத்தில் முதல் கட்டமாக 46 இலட்சம் பேர் பயனடைகின்றனர். இந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதில் 15 யுவான், சீன மத்திய நிதியமைச்சகம் தரும். மீதி அந்தந்த மாகாண அரசுகளால் பகிர்ந்துகொள்ளப்படும்.

மார்கழி 03, 2010

வெள்ளப்பெருக்கும், வீணாகும் தண்ணீரும்!

(க.ராஜ்குமார்)

உபரி நீர் வீணாவதை தவிர்த்து, சேமிப் பதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தமிழக அரசிற்கு ஆலோசனைகள் சிலவற்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து 24-08-2007-ல் திருச்சியில் என்.ஐ.டி-யில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை இணைக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தி பேசியுள்ளார். ஒரு நீர்த்தேக்கம் நிறைந்து வழிந்துகொண்டிருக்கையில், ஓர் நீர்த் தேக்கம் நிரம்பாமல் இருப்பதை சுட்டிக் காட்டி, இவைகளை இணைத்தால் வெள்ளப்பெருக்கையும் கட்டுப்படுத்த முடியும்; நீரையும் சேமிக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அவரின் கூற்று முற்றிலும் உண்மை என்பது இன்று வெளிப்பட்டுள்ளது.(மேலும்.....)

 

மார்கழி 03, 2010

தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை, இந்திய அமைச்சரவை அனுமதி

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இந்திய மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி. கே. வாசன் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.

மார்கழி 03, 2010

எகிப்து தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

கெய்ரோ, எகிப்து பார்லிமென்ட்டுக்கான முதல் கட்டத் தேர்தலில், ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. பிரதான எதிர்க் கட்சியான ‘முஸ்லிம் சகோதரத்துவ’ கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. எகிப்தில் கடந்த 28ம் திகதி, பார்லிமென்ட்டுக்கான முதல் கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 518 இடங்களில் 221 இடங்களுக்கு மட்டும் நடந்த இத்தேர்தலில் பிரதான எதிர்க் கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மிகக்குறைந்த இடங்களில் மட்டுமே, தனது வேட்பாளர்களை நிறுத்தியது. இதன் முடிவுகள் நேற்று வெளியாயின. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கட்சி, 209 இடங்களை பிடித்து பெரும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க் கட்சியினர் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இரண்டாவது கட்ட தேர்தல் வரும் 5ம் திகதி நடக்க இருக்கிறது. அதில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி, 27 வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளை புறக்கணிக்க போவதாகவும் அது அறிவித்துள்ளது.

மார்கழி 03, 2010

புலம்பெயர் தமிழ் அமைப்புடன் இணைந்து அரசுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு களை பரப்பும் அரசியல்வாதிகள் குறித்து பாது காப்பு அமைச்சு கவனம் செலுத்தி யுள்ளது. இவர்க ளுக்கு எதிரான முழு அறிக்கை யும் கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பாக ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார். பொலிஸ் மா அதிபரின் தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், முதன் முறையாக இலங்கைக்கு எதிரான அபகீர்த்தியை ஏற்படுத்தும் வீடியோ காட்சியை செனல் 4 அலை வரிசை காண்பித்த போது உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தோம். ஆனால் மீண்டும் அந்த வீடியோ காட்சிகளை செனல் 4 அலைவரிசை காண்பித்துள்ளது. இது முற்றிலும் பொய்யான வீடி யோவாகும்.

மார்கழி 03, 2010

விக்கிலீக்ஸ் ஆவண ஸ்தாபகர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு

விக்கிலீக்ஸ் ஆவண ஸ்தாபகர் ஜுலியன் அசாங்கியை பாலியல் துஷ்பிரயோகக் குற்றம் தொடர்பாக கைது செய்ய வேண்டுமென சுவீடன் கோரிக்கை விடுத்துள்ளதுடன் சர்வதேச பொலிஸான இன்டர் போலுக்கும் அறிவிப்புச் செய்துள்ளது. இதனால் பிரிட்டன் அரசாங்கம் மேலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. நேட்டோ படைகளின் இராணுவ இரகசியங்களை இணையத் தளங்களில் வெளியிட்டதால் பல நாடுகளின் கண்டனங்களை எதிர் கொண்டுள்ள ஜுலியன் அசங்கி ஏற்கனவே தலைமறைவாகியுள்ளார். இவரை விசாரணை செய்ய வேண்டுமெனப் பல நாடுகள் கோரியுள்ள நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளமை மேலும் நிலைமையை சிக்கலாக்கியுள்ளது. சுவீடனில் இருந்தவேளை ஜுலியன் அசங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சுவீடன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவர் மறைந்துள்ள இடம் லண் டன் பொலிஸாருக்குத் தெரியுமென் றும் ஆனால் இவரைக் கைது செய்ய பிரிட்டன் அரசாங்கம் எவ் வித நடவடிக்கையும் எடுக்கவில்லை யெனவும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மார்கழி 03, 2010

உள்நாட்டு, வெளிநாட்டு சதிகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்படும் சதி முயற்சியை முறியடிக்கும் வகையில் இன்று (03) காலை 9.30 இற்குக் கொழும்பு- கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறுகிறது.  “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்த ஆளுநர் மெளலானா, இன்றைய ஆர்ப்பாட்டம் அந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் அமையுமென கூறினார். ஜனாதிபதிக்கு எதிராக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது கண்டனத்துக்கு உரியது என்று குறிப்பிட்ட ஆளுநர், இதில் நம்நாட்டு அரசியல்வாதிகள் பங்கேற்பது மிகவும் மோசமான நிலையாகுமென்றும் சுட்டிக்காட்டினார்.

மார்கழி 03, 2010

முல்லைத்தீவில் விலங்குகள் சரணாலயம்

இலங்கை முல்லைத்தீவின் சுமார் 40,000 ஹெக்டேயர் பரப்பளவான பிரதேசம் வனவிலங்குகள் சரணாலயமாக மாற்றப்படவுள்ளதாக அரசாங்கள் தெரிவிக்கின்றது. இலங்கையின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் வரையாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையின் வடக்கில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இவை முழுதாக அகற்றப்பட்ட பின்னர் அடுத்தவருடம் அளவில் இச்சரணாலயம் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் வனவிலங்கு அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார். இச் சரணாலயத்தில் புலிகளுக்கும் இடமுட்டுதானே....?

மார்கழி 03, 2010

லத்தீன் அமெரிக்க நாடுகளில் வறுமை குறைந்துள்ளது  வருமானப் பகிர்வும், அரசுத்திட்டங்களும் காரணம்  ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை

தென் அமெரிக்காவில் வறுமைக்குறைப்பு திடீ ரென்று ஏற்படவில்லை என்று இந்த அறிக்கை சுட் டிக்காட்டுகிறது. வறுமை யைக் குறைக்கும் பாதை 2003 ஆம் ஆண்டிலிருந்தே போடப்பட்டுள்ளது. இந் தக் கால கட்டத்தில் வெனி சுலா, அர்ஜெண்டினா மற் றும் பெரு ஆகிய நாடுகள் 20 முதல் 30 விழுக்காடு வரை வறுமைக்குறைப்பைச் செய்து சாதித்துள்ளன. பிரே சில், பராகுவே, டொமினி கன் குடியரசு, உருகுவே மற் றும் சிலி ஆகிய நாடுகளி லும் குறிப்பிடத்தக்க முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது. கோஸ்டாரிகா, ஈக்குவடார் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன. (மேலும்....)

மார்கழி 03, 2010

போர்குற்றங்களுக்கு மஹிந்த பொறுப்பு "விக்கிலீக்ஸ்"

இலங்கை போர் காட்சிகள் இலங்கைப் போரின் இறுதியில் நடைபெற்ற படுகொலைகளுக்கு அதிபர் ராஜபக்சேதான் பெருமளவில் பொறுப்பு என்று அமெரிக்க ராஜதந்திரிகள் கருதியதாக தற்போது விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் கசியவிடப்பட்டுள்ள ஆவணங்கள் காட்டுகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் – அமெரிக்க அரசுத் துறைக்கு அளித்த ரகசிய தகவல்களை தற்போது விக்கி லீக் வெளியிட்டு வருகிறது. இதில் இலங்கை குறித்த ஆவணங்கள் இன்று வெளியாகியுள்ளன. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகளில் இலங்கை இராணுவத்தாலும், அதிகாரிகளாலும் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு பொறுப்பேற்றல் குறித்த விடயம் தொடர்ந்து நெருடலான விடயமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. (மேலும்....)

மார்கழி 03, 2010

எயிட்ஸ் தாக்கம் குறைந்து வருகிறது

உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட் கொல்லி நோயான HIV எயிட்ஸின் தாக்கம், இவ்வா ண்டில் இலங்கையில் என்றும் இல்லாத அளவுக்கு குறை ந்திருப்பது, இந்நாட்டு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு மாற்றமாகும். கடந்த ஆண்டில் எங்கள் நாட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட 68 புதிய நோயாளர் கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். இவ்வாண்டில் இந்த எண்ணி க்கை 48 ஆக குறைந்திருக்கிறது. ஜலதோசம், ஜுரம் போன்ற சாதாரண நோய்களைக் கூட தாக்குப்பிடிக்கும் உடலின் நோய் த்தாக்க வலுவை எயிட்ஸ் நோய் அழித்து விடுவதனால் தான் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணிக்கி றார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். (மேலும்....)

மார்கழி 03, 2010

தமிழ் மக்களின் தேவைகளை இன்றைய அரசாங்கத்தின் ஊடாக நிறைவேற்றுவோம்!

வட மாகாண விவசாயிகளுக்காக இந்தியா வழங்கும் உழவு இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை:

இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பது எமது மக்களுக்கு கிடைத்திருந்த ஒரு பொன்னான வாய்ப்பு. அதை ஏற்று, சரி வர பயன்படுத்தியும் இருந்தால் நாம் கடந்த காலங்களில் அழிவுகளை சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது. மக்களாகிய நீங்கள் உங்களது பிள்ளைகளை அல்லது உறவுகளை அழிவு யுத்தத்திற்கு பலி கொடுத்திருக்க வேண்டிய அவலங்கள் இங்கு நடந்திருக்காது. தவறான வழி முறையில் வழிநடத்தப்பட்டிருந்தாலும் இழந்து போன உயிர்கள் யாவும் எமது மக்களாகிய உங்களது பிள்ளைகள் என்ற வகையில் எங்களது உறவுகள் என்ற வகையில் நாமும் உங்களது துயரங்களில் பங்கெடுக்கின்றோம். நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். இனி நடப்பவைகள் நல்லதாக நடக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும். (மேலும்....)

மார்கழி 03, 2010

எந்தக் கல்லில் மோதிக் கொள்வது?

‘என் மகன் இங்கிலீஷில் படிக்கிறான்; என் பிள்ளை இன்ரநஷனலில் கற்கிறான்’, என்று பெருமைபட்டுக் கொள்ளும் பெற்றோர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். இதில் கிராமங்களில் வாழ்பவர்கள், பிள்ளை நகரத்துப் பாடசாலையில் படிக்கிறது என்றாலே பூரித்துப் பேசுவார்கள். என்னதான் தொழில் புரிந்து கோடீஸ்வரராக இருந்தாலும், பிள்ளைகளை எங்ஙனமாவது படித்து ஆளாக்கிவிட வேண்டும் என்பதில் பலர் குறியாக இருப்பார்கள். பணம் இருக்கிறதுதானே என்றாலும், தம்மிடமுள்ள பணத்தைவிட, கல்வி மீது அவர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ‘படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு.’ என்கிறார் கவிஞர். (மேலும்....)

மார்கழி 02, 2010

ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் தொடர்பில் உரிய விசாரணை

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். எனினும் அதில் கலந்துகொண்டாரா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தின்போது பெருந்திரளான பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கலந்துகொண்டதாக ஆளும் தரப்பினர் குற்றம் சுமத்தினர். இதனால் இன்று காலை நாடாளுமன்றில் பதற்றம் நிலவியது. இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சபாநாயகர், ஜயலத் எம்.பி இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்திருப்பதால் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.

மார்கழி 02, 2010

பிரிட்டன் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரின் ராஜதந்திரம் பரகசியம்

பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளைத் தேர்தலில் பெறுகின்றமைக்காகவே பிரிட்டன் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் டேவிட் மில்பார்ண்ட் தமிழர்களின் (புலிகளின்) பாதுகாவலரைப் போல் நடந்து கொண்டார் என்று ராஜதந்திரிகள் நம்புகின்றனர் என்று விக்கிலீக்ஸ் இணையத் தளம் பரகசியப்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த வருட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் மனிதப் பேரழிவுகள் குறித்து அதிகம் இவர் அதிகம் பேசி வந்தமைக்கு இதுவே காரணம் என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு கடந்த வருடம் மே மாதம் அனுப்பி வைக்கப்பட்ட ராஜதந்திர பொதியில் இருந்த அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. (more...)

மார்கழி 02, 2010

2.12.2010 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

இந் நிகழ்ச்சியில். திரு வீ ஆனந்தசங்கரி தலைவர் தமிழர் விடுதலை கூட்டணி, ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம், ரிபிசியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர்  ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.

தொடர்புகளுக்கு:  00 44 208 9305313G,     or  078107063682

மார்கழி 02, 2010

ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை இரத்து  -  ஜனாதிபதி மஹிந்த கவலை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆற்றவிருந்த உரையை ஒக்ஸ்போர்ட் யூனியன் பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்துச் செய்தமை குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது. இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் அழுத்தம் காரணமாக ஒக்ஸ்போர்ட் யூனியன் இந்த உரையை இரத்துச் செய்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க கூறியதாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இத்தீர்மானம்; சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் ஒக்ஸ்போர்ட் யூனியன் இந்த இரத்து குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாகவும் ஒக்ஸ்ட்போர்ட் யூனியன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய பேச்சாளர்களின் உரையை நடத்துவதையும் பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்டுவதையும் ஒக்ஸ்போர்ட் யூனியன் நீண்டகாலப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி 02, 2010

இந்திய உதவி வீடமைப்பு திட்டம், முதற்கட்ட நிர்மாண ஏற்பாடுகள் பூர்த்தி

இந்தியாவின் உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் முதற்கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முதற்கட்டமாக நிர்மாணிக்கப்படும் ஆயிரம் வீடுகளில் கிளிநொச்சியில் 350 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இந்தியாவின் உதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் நிர்மாணிக் கப்படுவதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார். முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் 150 வீடுகள் நிர்மாணிக்கப்படு மென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெ ல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இரண்டாயிரம் வீடுகள் புனரமைப்புச் செய்யப்படுவதுடன் 5150 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படு மெனவும் அரச அதிபர் கூறினார்.

மார்கழி 02, 2010

ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்தது என்னவென்ற மர்மத்துக்கு விக்கிலீக்ஸ் ஆவணங்களில் விடை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

விக்கிலீக்ஸ் இணையத்தளம், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ரகசிய தகவல் தொடர்புகள் குறித்த ஆவணங்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.  விக்கிலீக்ஸ் இணையத்தளம் வசம், கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு உலகின் பல்வேறு நாடுகளுடன் வைத்திருக்கும் ராஜரீக உறவுகள் தொடர்பான 251,287 ஆவணங்கள் சிக்கியுள்ளன. அதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் சம்பந்தப்பட்டவை. 1996ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையான காலப் பகுதிக்குள் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜாங்கத் தொடர்புகள் தொடர்பான ஆவணங்கள் வெளியாகியுள்ளன. வரும் நாட்களில் இவை விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான இராஜதந்திரத் தொடர்பின் இரகசிய விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் வெளிவருவது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. புலிகளின் முதல்கட்ட தலைவர்கள் என்ன ஆனார்கள் மற்றும் போரின் இறுதி நாட்களில் பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டது போன்றவற்றுக்கான பதில்கள் இந்த ஆவணங்களில் இருக்கும் எனத் தெரிவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மார்கழி 02, 2010 

கேபிள் தொலைக்காட்சி பார்க்காத ஒபாமா மகள்கள்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இரு மகள்களான மாலிமா (12) மற்றும் சாஷா (09) ஆகிய இருவரும் பொழுது போக்கிற்காக கேபிள் தொலைக்காட்சி பார்ப்பதில்லை என ஒபாமா அமெரிக்க தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு பேட்டி யளிக்கையில் தெரிவித்தார். ஆனால் இருவரும் செய்தி அலைவரிசைகளை விரும்பி பார்ப்பதாக அவர் தெரிவித்தார். தற்போதைய சூழலில் சிறுவர் சிறுமிகள் பெரும்பாலும் பொழுது போக்கிற்காக கேபிள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்ற சூழலில் அமெ ரிக்க ஜனாதிபதியின் மகள்கள் இரு வரும் செய்தி அலைவரிசைகள் பார் க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி 02, 2010

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில்

சந்தேகநபர் குண்டை வெடிக்க வைத்து பலி, 12 பொலிஸ் காயம்

நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சந்தேகநபரொருவர் குண்டொன்றை வெடிக்க வைத்ததில் சந்தேக நபர் கொல்லப்பட்டதோடு 12 பொலிஸாரும் இரு சிவிலியன்களும் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டு ள்ளார். இதேநேரம் படுகாயமடைந்த போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி மேலதிக சிகிச்சைக்காக கண்டிக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் சம்ப வம் நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கஞ்சா போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர் அங்கு சுற்றிவளைத்து நின்ற பொலிஸார் மீது கைக்குண்டை வீசியுள்ளார். கைக்குண்டை வீசிய சந்தேக நபர் முன்னர் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவரென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மார்கழி 02, 2010

வெனிசூலாவில் பெரும் வெள்ளம், கட்டடங்கள் இடிந்து 21 பேர் பலி

வெனிசூலாவில் பெய்த கடும் மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தன. வெள்ளத்தில் மூழ்கி யும், கட்டட இடிபாடுகளுக் குள் சிக்கியும் 21 பேர் பலியாகினர். வெள்ளிக்கிழமை ஆரம்பமான மழை செவ்வாய்க்கிழமை வரை இடை விடாமல் பெய்தது. வெனிசூலாவின் மூன்று மாகா ணங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் இங்கு இயல்பு நிலை கள் பாதிக்கப்பட்டன. விமான நிலையங்கள், எண்ணெய் வயல் களையும் வெள்ளம் மூழ்கடித்தது. இதையடுத்து அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப் பட்டு மீட்புப் பணிகள் துரிதப் படுத்தப்பட்டன. நிலைமைகளை சமாளிப்பதற் கேற்ற வகையில் பாதுகாப்புப் படையினர், மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப் பட்டனர். ஏனைய மாகாணங்களிலிருந் தும் மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு வரவழைக்கப்பட்டனர்.

மார்கழி 02, 2010

 

கிளிநொச்சி, மாங்குளம் பொலிஸ் நிலையங்கள் நாளை திறப்பு

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலையங்கள் நாளை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவு ள்ளன. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் நடை பெறவுள்ள இந்த நிகழ்வுகளில் பிரதமர் தி. மு. ஜயரட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைக்கவுள்ளார். கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பிரதேசங்களில் தற்காலிகமாக இயங்கிவரும் இரு பொலிஸ் நிலை யங்களின் செயற்பாடுகளும் வெள்ளி முதல் புதிய பொலிஸ் நிலையங்க ளில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். வட பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மார்கழி 02, 2010

ஆயுதப்போட்டி உருவாகலாம், மெத்வதேவ் எச்சரிக்கை

கூட்டு ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் குறித்து நேட்டோ அமைப் பும், ரஷ்யாவும் உடன்பாட்டுக்கு வரவில்லை என்றால் ஆயுதப்போட்டி உருவாகும் என்று ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நேட்டோ கூட்டத்தின்போது இதுகுறித்த பேச்சு வார்த்தை நடந்தது. அதில் மெத்வதே வும் கலந்து கொண்டிருந்தார். இரு தரப்பும் இணைந்து எவ்வாறு ஒத்து ழைப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று அவர் அந்தப் பேச்சு வார்த்தையில் குறிப்பிட்டிருந்தார். நேட்டோ அமைப்பு என்ற பெயரில் ரஷ்யாவின் அண்டை நாடுகளில் ஏவு கணைகளை நிறுவுவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த ஏவுகணைகள் தங்கள் நாட் டையே குறிவைத்து வைக்கப்படுகின் றன என்று மெத்வதேவ் மட்டுமில்லா மல், முன்னாள் ஜனாதிபதியும், தற் போதைய பிரதமருமான விளாடிமிர் புடினும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மார்கழி 02, 2010

சரணடைந்த புலி உறுப்பினர் தப்பியோட்டம்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஓமந்தை முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் திணக்களம் அறிவித்துள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த ராஜதுரை சசிசந்திரன் என்ற நபரே தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். _

மார்கழி 02, 2010

Obama imposes pay freeze on 2.1 million federal workers

(By Tom Eley)

President Obama on Monday announced the imposition of a two-year pay freeze on all federal government employees outside of the military. Pending congressional approval, the order will take effect immediately, affecting 2.1 million workers and eliminating a scheduled 1.4 percent pay increase for 2011. The move is the latest chapter in a concerted campaign of wage-cutting that began with the Obama administration’s bailout of GM and Chrysler, which was predicated on massive wage and benefit concessions to ensure profits for Wall Street investors. The federal wage freeze is at the same time the opening salvo in a far broader assault on the working class that will take shape over the next two years, using as a pretext the November 2 midterm elections, in which massive voter anger and disillusionment with the right-wing policies of the Obama administration led to a lopsided Republican victory. (more...)

மார்கழி 02, 2010

விவசாயத்துறை விஞ்ஞானிகள்
பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்படுவார்கள்

விஞ்ஞான, கணித துறையில் கல்விமான்களை உருவாக்கும் அதே வேளையில் நாட்டு மக்களின் பசிப்பிணியை போக்குவதற்காக நவீன விஞ்ஞான ரீதியில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு விவ சாயத்துறையில் உயர்கல்வி அவசியம் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், மஹிந்த சிந்தனை லட்சியக்கனவை நிறைவேற்று வதற்காகவே, இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவுள்ளது. ஏற் கனவே, பேராதனை பல்கலைக்கழகத்திலும், ஏனைய பல்கலைக் கழகங்களிலும் விவசாயப் பட்ட கல்வி மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அவற்றை உயர்கல்வி பீடங்களாக மாற்றுவதில் இது வரையில் எந்தவொரு பல்கலைக்கழகமும் செயற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

மார்கழி 02, 2010

இன முரண்பாடுகளைக் களையும் பணியில்
தமிழ், சிங்கள தரப்புகளுக்கு சமபங்கு உண்டு

இப்போது உருவாகியிருக்கும் யுத்தமற்ற சூழ்நிலையானது, நாட்டையும் மக்களையும் புதியதொரு வாழ்க்கைச் சூழலுக்குள் பிரவேசிக்க வைக்க வேண்டும். நாடு இன்னொரு இருண்ட யுகத்தினுள் எக்காரணம் கொண்டும் சிக்கமுடியாது. இதற்கு முரண்பாடுகளைக் களைய வேண்டும். முரண்பாடுகளைக் களைவதும் பகையை மறப்பதும் சமாதானத்துக்கான அடி வைப்பாகும் என உலகம் வலியுறுத்தி வருகிறது. இது ஒரு அடிப்படையான உண் மையாகும். பகையை வளர்ப்பது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படலாம். ஆனால் அது நிச்சயமாக நாட்டையும் சமூகங்களையும் பேரழிவிற்கே கொண்டு செல்லும். நடந்த பேரழிவுகள் இலங்கைத் தீவில் இருக்கும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் பாடங்களாகும்.  ஆகவே அமைதிக்கான வழி முறைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான அவசியமும் அதற்கான அரசியற் தீர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்....)

மார்கழி 02, 2010

இலங்கையில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு வலையமைப்பு வலுவாக உள்ளது - முக்கியஸ்தர் கொழும்பில் கைது

இலங்கையில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு வலையமைப்பு வலுவான நிலையில் இயங்கிக் கொண்டிருப்பதாக பாதுகாப்புத் தரப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் அடையாளம் கண்டறியப்படாத, உண்மைப் பெயர் வெளிப்படாத தலைவர் ஒருவரின் தலைமையில் அவர்கள் முழு வீ்ச்சில் இயங்கி வருவதாக தேசிய புலனாய்வுப் பொலிசார் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவைச் சோ்ந்த முக்கிய புள்ளிகளில் ஒருவரான பானு எனப்படும் செல்வராசா சீலன் எனப்படும் சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே பொலிசார் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். (மேலும்....)

மார்கழி 02, 2010

Maids Being Tortured in Saudi Arabia

Though it’s no secret that life is often brutally difficult for maids... 

(by: Laura Smith-Gary)

In August, a 49-year-old Sri Lankan woman, Lahadapurage Daneris Ariyawathie, returned to her home after working as a housemaid in Saudi Arabia. When she arrived, her children immediately realized she was in terrible pain and took her to a doctor. She told him the couple she worked for had hammered hot nails and pins into her hands, legs, and forehead when she told them she needed to rest. X-rays showed 24 nails embedded in her body. After the case was publicized and Sri Lankan government officials demanded the Saudi government take action, CNN reported a Saudi couple had been arrested for the torture. The government also reportedly considered suspending the recruitment of Sri Lankan maids, though they denied there was any connection to this case. (more...)

மார்கழி 02, 2010

ஐரோப்பிய யூனியன், ஈரான் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில்

யுரேனியம் செறிவூட்டல் முரண்பாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ஈரான் இணங்கியதையடுத்து இம்மாதம் 06, 07 ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜேர்மன் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இப்பேச்சுவார்த்தை சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ளது. 2009 ஆம் ஆண்டு கடைசியாக நடந்த பேச்சுக்களும் இங்கேயே நடந்தன. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மேற்கு நாடுகள் சோதனையிட வேண்டுமென்ற விடயத்தில் இப்பேச்சுக்கள் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபரில் முறிவடைந்தது. (மேலும்....)

மார்கழி 02, 2010

அச்சுவேலி கைத்தொழில்பேட்டை 2012ம் ஆண்டில் திறப்பு

வடக்கின் பாரிய கைத்தொழில் பேட்டையாக அச்சுவேலி கைத் தொழில் பேட்டை 285 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், 2012ம் ஆண்டில் அதனை திறப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் சிறு கைத்தொழில் துறையை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக் கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர்; அதற்கான வழிகாட்டல்கள் பயிற்சிகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். (மேலும்....)

மார்கழி 02, 2010

செனல் - 4 வீடியோவுக்கு அரசு கண்டனம்

இயல்பு வாழ்வை குழப்ப வெளிநாடுகளில் மீண்டும் சதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கு எதிரான பிரிவினைவாத சக்திகள் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருவதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள ஏற்படுத்தவும், வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவும் உதவுவதற்குப் பதிலாக இந்தச் சக்திகள் மீண்டும் பிரிவினைவாத சித்தாந்தத்திற்குப் புத்துயிரளித்து வருவதாக அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

மார்கழி 02, 2010

“ஜனாதிபதி சாவேசுடன், சோசலிசத்திற்காக...”: வெனிசுலாவில்   ஆயிரக்கணக்கானோர் முழக்கம்

வெனிசுலாவின் பொலி வாரிய புரட்சிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள், மாணவர்கள் மற்றும் பழங்குடி இனத்த வர்கள் அந்நாட்டு தலைநகர் காரகாசில் நடந்த பெருந்திரள் பேரணியில் பங்கேற்றனர். பொலிவாரியப் புரட்சி யை ஜனநாயக முற்போக் குத்தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நடந்த பேரணியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதிகார வர்க்கம் ஆகியவற்றின் சோசலிச எதிர்ப்பு நடவடிக்கைக ளுக்கு கண்டனம் தெரிவிக் கப்பட்டது. “ஜனாதிபதி சாவேசுடன், சோசலிசத்திற் காக..” என்ற முழக்கம் அடங் கிய அட்டைகளுடன் ஏரா ளமானவர்கள் பேரணியில் பங்கேற்றனர். (மேலும்....)

மார்கழி 02, 2010

Financial Meltdown on Wall Street
(by Michel Chossudovsky)

In contrast to Roosevelt’s New Deal, adopted at the height of the Great Depression, the macroeconomic policy agenda of the Obama administration does not constitute a solution to the crisis. In fact, quite the opposite: it directly contributes to the concentration and centralization of financial wealth, which in turn undermines the real economy. The crisis did not commence with the 2008 meltdown of financial markets. It is deeply rooted in major transformations in the global economy and financial architecture which unfolded in several stages since the early 1980s. The September-October 2008 stock market crash was the outcome of a process of financial deregulation and macroeconomic reform. (more...)

மார்கழி 02, 2010

விக்கிலீக்ஸ் அறிக்கையின் எதிரொலி

ஹிலாரி கிளிண்டனை பதவி விலகுமாறு வெனிசூலா ஜனாதிபதி சாவெஸ் கோரிக்கை

விக்கிலீக்ஸ் இரகசிய அறிக்கை கள் வெளியானதால் அமெரிக்கா வின் போர் வெறி அம்பலத்துக்கு வந்துள்ளதெனத் தெரிவித்த வெனி சூலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் உடனடியாக ஹிலாரி கிளின்டன் பதவி விலக வேண்டு மெனவும் கேட்டுக் கொண் டார். நேட்டோ படைகளின் போர் தொடர்பான விக்கிலீக்ஸ் அறிக்கைகள் இணையத்தளங்க ளில் வெளியாகி வருவதால் உலகில் பெரும் பதற்றம் எழுந் துள்ளது. இராணுவ, அரசியல் தலைவர்களுக் கெதிரான அச்சுறுத் தல்களும் அதிகரித்துள்ளன. (மேலும்....)

மார்கழி 02, 2010

ஐந்தாண்டுக்கான வேலைத்திட்டத்தை  மக்களிடம் எடுத்துச் செல்வோம் -  சீன கம்யூனிஸ்ட் கட்சி

வரும் ஐந்தாண்டுகளில் சீனாவின் வளர்ச்சிக்காக கட்சி உருவாக்கியுள்ள வேலைத்திட்டத்தை மக்க ளிடம் எடுத்துச் செல்ல டிசம்பர் மாதத்தில் பிரச் சாரத்தைத் துவக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி முடி வெடுத்துள்ளது. கட்சியின் பிரச்சாரத் துறை இது குறித்த அறிக் கையையும் வெளியிட்டுள் ளது. நாடு முழுவதும் பல் வேறு குழுக்கள் இந்தப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்லப்போகின்றன. எத் தனை குழுக்கள் என்று அந்த அறிக்கையில் கூறப் படவில்லை. அக்டோபர் மாதத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தலைநகர் பெய்ஜிங்கில் நான்கு நாட்கள்கூடி விவா தித்தது. நாட்டின் வளர்ச்சிக் கான ஐந்தாண்டுத் திட் டத்தை அதில் இறுதி செய் தனர்.  (மேலும்....)

மார்கழி 02, 2010

NATO, THE WORLD POLICE FORCE

(Reflections by Comrade Fidel)

NATO was born after WW II as an instrument of the Cold War unleashed by imperialism against the USSR, the country that paid for the victory over Nazism with tens of millions of lives and colossal destruction. Against the USSR, the United States mobilized, along with a goodly portion of the European population, the far right and all the neo-fascist dregs of Europe, brimming with hatred and ready to gain the upper hand for the errors committed by the very leaders of the USSR after the death of Lenin. With enormous sacrifice, the Soviet people were able to keep nuclear parity and to support the struggle for the national liberation of numerous peoples against the efforts of the European states to maintain the colonial system which had been imposed by force throughout the centuries; states that, in the post-war period, became allies of the Yankees who assumed command of the counter-revolution in the world. (more...)

மார்கழி 01, 2010

இந்தியாவிடம்

தமிழ் கட்சிகளின் அரங்கம் மகஜர் கையளிப்பு

இந்திய வெளியுறவமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் கையளிக்கவென தமிழ் கட்சிகள் அரங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் இன்றுகாலை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சார்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் பொதுச்செயலாளர் ரி.சிறிதரன் ஆகியோரினால் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜரில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், இனப்பிரச்சினைத் தீர்;வு, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள், நிவாரணங்கள், மக்களின் மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. (மேலும்....)

மார்கழி 01, 2010

யாழ். பருத்தித்துறை நெடுஞ்சாலை விஸ்தரிப்புப் பணிகள் துரித கதியில் முன்னெடுப்பு

மழை பொழியும் வேளையிலும் யாழ். பருத்தித்துறை நெடுஞ்சாலை விஸ்தரிப்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்றுவருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை மேற்கொள்ளப்படும் இப்பணிகளில் ஏறத்தாழ கோப்பாய் சந்தி வரையிலான பணிகள் நிறைவு பெற்றுள்ளதை அவதானிக்க முடிவதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

மார்கழி 01, 2010

விக்கிலீக்ஸ் ஆவணம்

சீன - வடகொரிய உறவைப் பாதிக்குமா?

அமெரிக்க இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளம் தொடர்பாக உலக நாடுகளுக்கிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் சீனா – வடகொரியா ஆகிய நட்பு நாடுகளுக்கிடையிலான நட்பு முறிவடையும் நிலை உருவாகியுள்ளது. வடகொரியா மோசமான குழந்தை என சீனா தெரிவித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இரகசிய ஆவணமொன்றில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச்சேவையொன்று தெரிவிக்கிறது. ஆசியாவில் சீன ஆதிக்கத்தன்மை இதன்மூலம் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் வெளியாகிய தகவல்கள் எவ்வாறு கசிந்தது என்பது குறித்து அமெரிக்க தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

மார்கழி 01, 2010

மட்டு.கல்லடி பாலத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகள்- பார்வையிட மக்கள் வெள்ளம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழள்ள வாவியில் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திச்செல்கின்றன. இவற்றைக்காண மழையையும் பொருட்படுத்தாது பெருமளவிலான மக்கள் கூடியுள்ளதை அவதானிக்கமுடிவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இன்று மாலை முதல் வாவியில் நீந்தும் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் இப்பாம்புகள் 2 அடிக்கும் 3 அடிக்கும் இடைப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கல்லடிப் பாலத்தின் கீழுள்ள வாவியில் பெருளவிலான பாம்புகள் நீந்தி ஓடுவது இது இரண்டாவது தடவையாகும். இவ்வாறு கடந்த 2004 ஆம் ஆண்டும் இலட்சக்கணக்கான பாம்புகள் வாவியில் நீந்தின. இவ்வாறு பாம்புகள் தென்பட்டு 5 மாதங்களில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதும் குறிப்படத்தக்கது. இப்பாம்புகள் வெளியானதன் பின்னர் இம்மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

மார்கழி 01, 2010

மாற்றுத்திறனுடையோர் வாழ்வில் ஒளியூட்டும் அரசின் திட்டங்கள்

இலங்கையிலுள்ள மாற்றுத் திறன் உடையவர்களின் நல் வாழ்வுக்காக, எனது நிர்வாகத்தின் கீழ் சகல வசதிக ளும் செய்து கொடுக்கப்படும். பார்வையற்றவர்கள், பேச முடியாதவர்கள், மனநிலை வளர்ச்சி குறைந்தவர்கள், மற்றவர்களின் உதவியின்றி நடமாட முடியாதவர்கள் மற் றும் சாதாரண மக்களை விட மாறுபட்ட நிலையில் உள்ள வர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையை தங்கு தடையின்றி நிம்மதியாக கழிப்பதற்கு தேவையான சகல வசதிகளும், வாழ்வாதாரங்களும், பயிற்சிகளும் கொடுக்கப் படும் என்று மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதற்கு அமைய, அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகிறது. (மேலும்....)

மார்கழி 01, 2010

Canadian spy secrets exposed in WikiLeaks dump

Canada’s spies are developing an intelligence channel into Iran and are “vigorously harassing” Hezbollah operatives, but they remain deeply frustrated about their ability to combat terror, according to a revealing WikiLeaks disclosure that is sending Ottawa into damage-control mode. A document released Monday as part of an ongoing dump of more than 250,000 U.S. diplomatic cables provides an extraordinary glimpse into secret operations of the Canadian Security Intelligence Service. (more...)

மார்கழி 01, 2010

ஐ. தே. க. ஆட்சியிலேயே புதுப்புது பெயர்களில் அமைச்சுக்கள்

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், மாவட்ட அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் என புதுப்புது பெயர்களில் அமைச்சர் பதவிகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தற்போதைய அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த சர்ச்சையொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். (மேலும்....)

மார்கழி 01, 2010

அமெரிக்க ராணுவத்தினர்  தற்கொலை அதிகரிப்பு

பாதுகாப்புப் பணியில் இல்லாத அமெரிக்க ராணுவத் தினர் தற்கொலை செய்து கொள்வது 2010 ஆம் ஆண்டில் அதிகரித்திருக்கிறது. எப்போதுமே போரை எதிர்நோக்கும் அமெரிக்க ராணுவத்தினர் பணிக்குச் செல்லாத காலத்தில் போதை மருந்துகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இதைத் தடுப் பதற்காக அமெரிக்க ராணுவம் எவ்வளவோ முயற்சிகளை செய்து பார்த்துவிட்டது. மன அழுத்தம், பணிக்காலத்தில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு, நாட்டின் பொருளாதார நெருக்கடியால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகி யவற்றால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக் கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். (மேலும்....)

மார்கழி 01, 2010

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி நாளை உரை

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத் தின் மாணவர் சங்கத்தின் கூட்டத்தில் நாளை (02) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றுகிறார். 1823 முதல் 187 வருட ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழக சரித்திரத்தில் உரையாற்றுமாறு இரண்டு முறை அழைக்கப்பட்ட ஒரேயொரு நாட்டுத் தலைவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அத்துடன் அண்மைக் காலத்தில் ஆசிய வலயத்தில் உருவான தரிசனத்துடன் கூடிய நாட்டுத் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனங்காணப்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும். இதற்கு முன் 2008 ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான உபாய மார்க்கங்கள்’ என்ற தொனிப்பொரு ளில் ஒக்ஸ்போர்ட் மாணவர் சங்கத்தில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

மார்கழி 01, 2010

முல்லைத்தீவு மாவட்டம்

எஞ்சியுள்ள குடும்பங்கள் இம்மாத இறுதிக்குள் மீள்குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியுள்ள சுமார் ஆறாயிரம் குடும்பங்களை இந்த மாத இறுதிக்குள் தங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தெரிவித்தார். மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவில் பூர்த்தி செய்யும் வகையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் இதுவரை 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயி ரம் மக்கள் தத்தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்....)

மார்கழி 01, 2010

தமிழ்த் தலைவர்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு பணிபுரிய வேண்டும்

வடக்கு, கிழக்கு, மலையகம் எனப் பேதம் பாராமல் தமிழ்த் தலைவர் ஒன்றுபட்டு மக்க ளுக்காகப் பாடுபட முன்வர வேண்டுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொருளாதார பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் அழைப்பு விடுத்தார். மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டுமென பிரதியமைச்சர் சிவலிங்கம் அம்பாறையில் கூறினார். தமிழ் மொழி மாணவர்கள் சிங்கள மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டுமென்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம் இனங்களுக்கிடையே ஒற்றுமையும் மத, கலாசார விழுமியங்களை அறிந்துகொள்ள முடியுமெனவும் இ.தொ.க தலைவரான பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார். (மேலும்....)

மார்கழி 01, 2010

வான்தாக்குதலில் சொந்தம், சொத்துக்களை இழந்தவர் நஷ்டஈடு கோரத்தீர்மானம்

பாகிஸ்தான் பழங்குடியினத்தவர் ஐநூறு மில்லியன் டொலர் நஷ்டஈடு கோரி கடிதங்களை அனுப்ப எண்ணியுள்ளார். நேட்டோ படைகளின் விமான தாக்குதலில் தனது மகன், சகோதரன் பலியானமை வீடு முற்றாகச் சேதமடைந்தமை என்பவற்றுக்கான நஷ்ட ஈடாகவே ஐநூறு டொலரைக் கோரவுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சி. ஐ. எ. தலைவர் சி. ஐ. ஏ. பணிப்பாளர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பவுள்ளார். பாகிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரகமூடாக இந்த நஷ்ட ஈட்டுக் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளதாக பழங்குடியினத்தவரின் வழக்கறிஞர் கூறினார். (மேலும்....)

மார்கழி 01, 2010

வன்னியில் மீளக்குடியமர்ந்தோரின் காணி பிரச்சினையை தீர்க்க விசேட திட்டம்

வன்னியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினையை முற்றாகத் தீர்த்து வைப்பதற்கான விசேட திட்டமொன்றை நடைமுறைப் படுத்தியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். காணிப் பிரச்சினையுள்ள கிராமங்களைத் தெரிவு செய்து அங்குபிம்சவியதிட்டத்தை அறிமுகப்படுத்தி காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச அதிபர் கூறினார். (மேலும்....)

மார்கழி 01, 2010

பலாலியில் இந்திய சர்வதேச விமானநிலையம்?, உண்மைத்தன்மையை வெளிப்படுத்த கோரிக்கை

இந்திய விமான சேவைகள் அதி கார சபையினூடாக பலாலியில் சர்வதேச இந்திய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாகவும், இது தொடர்பிலான மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளிவருகின்ற தகவல்கள் தொடர்பிலான உண்மைத் தன்மையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க நேற்று சபையில் அரசாங்கத்தை வலியுறுத்தினார். (மேலும்....)

மார்கழி 01, 2010

சதிவேலைகளின் உலக நாயகன்

இணையதள நிறுவனமான “விக்கி லீக்ஸ்” வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகங்களின் லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்கள், உல கெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளையும் அராஜகங்களையும் மீண் டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளன. சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க ஜனாதி பதி ஒபாமா, ஐக்கிய நாடுகள் சபையின் பாது காப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்காக இந்தியா மேற்கொள் ளும் முயற்சிகளுக்கு துணை நிற்கும் என்று முழங்கினார். ஆனால் அது ஒரு வெற்றுப்பசப்பல் என்பது, அவர் வாஷிங்டன் திரும்புவதற்குள்ளா கவே வெளிச்சத்திற்கு வந்தது. அவரது வெள்ளை மாளிகை நிர்வாகம், பாகிஸ்தானின் நலனை புறந்தள்ளிவிட்டு இந்தியாவுக்கு அந்தஸ்து என்ற பொருளில் ஒபாமாவின் கூற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று விளக்கம் கொடுத்தது. (மேலும்....)

மார்கழி 01, 2010

ஹுவே சாவோஸை கொல்ல 100 மில்லியன் டொலர் பேரம்

100 மில்லியன் டொலர் அளவுக்கு கூலிப்படையினரால் தன்னை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி ஹுவே சாவோஸ் அந்நாட்டு தொழிலதிபர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இலத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் ஹுவே சவோஸ் (57). முன்னாள் இராணுவ வீரரான இவர் தற்போது அமெரிக்காவின் எதிரியாக உள்ளார். கார்கஸஸ் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் ஜனாதிபதியாக உள்ளேன். எனினும் எனது அரசியல் எதிரிகள் சிலர் என்னை வீழ்த்த அமெரிக்க உதவியுடன் திட்டம் தீட்டி வருகின்றனர். அதிலும் நாட்டின் குளோபல் விஷன் எனும் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் உரிமையாளர், கூல்லர்மோ ஜுலுகா என்ற தொழிலதிபர் என்னை கொலை செய்ய 100 மில்லியன் டொலர் பேரம் பேசி வருகிறார். நாட்டு மக்களிடமிருந்தும், எனது கட்சி ஆதரவாளர் களிடமிருந்தும் என்னைப் பிரிக்க சதித் திட்டம் தீட்டி வருகிறார். ஆகையால் எந்த நேரத்திலும் என்னை கொலை செய்யலாம். இதற்கு அமெரிக்காவும் துணையாக செயல்படுகிறது என்று கூறினார்.

மார்கழி 01, 2010

 

இஸ்ரேலின் யூதக்குடியேற்றக் கொள்கை சமாதானப் பேச்சுவார்த்தையை சீரழிக்கும்

இஸ்ரேலின் யூதக்குடி யேற்றக் கொள்கைகள் மத்திய கிழக்குப் பேச்சுவார் த்தையைச் சிதைக்கும் என எச்சரித்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் சமாதானத்தை விரைவில் அடையும் வழிகளை மூடி விடும் என்றும் கவலை தெரிவித்தார். பலஸ்தீனர்க ளின் சர்வதேச தினத்தை யொட்டி ஐ.நா.வில் உரை யாற்றுகையிலே மஃமூத் அப்பாஸ் இதைத் தெரிவித் தார். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.நா. செயலாளர் பான் கீமூன் இரண்டு நாடுகளின் எதிர் கால நன்மைக்கு ஏதுவான சமாதானம் விரைவில் கிடை க்கும். ஒப்பமிடும் வேலைகளே மீதமாயுள்ளது என்றார். இஸ்ரேல் பலஸ்தீனுக் கிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இர ண்டு மாதங்களாகத் தடை ப்பட்டுள்ளன. இஸ்ரேல் தற்கா லிகமாக இடைநிறுத்திவைத்த யூதக் குடியேற்றங்களை சென்ற செப்டம்பர் 26 இல் மீண் டும் ஆரம்பித்ததையடுத்தே பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டன. தடைகளை அகற்றி பேச்சுக்களை மீண் டும் ஆரம்பித்து வைக்க அமெரிக்காவும், எகிப்தும் கடுமையாக உழைத்து வரு கின்றன. உறுதியானதும், இறுதி யானதுமான தீர்வைப் பெற ஐ.நா. முன்வர வேண்டுமென மஃமூத் அப் பாஸ் தன துரையில் கேட்டுக்கொண்டார்.

மார்கழி 01, 2010

ஜனநாயக விரோதச் செயல்களை கூட்டாகத் தடுப்போம்  தென் அமெரிக்க நாடுகள் முடிவு

ஜனநாயக ரீதியாகத் தேர்வு செய்யப்பட்ட அரசு களுக்கு எதிரான கலகங் களை ஒடுக்க கூட்டாகச் செயல்படுவோம் என்று தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு(யுனாசுர்) முடிவெடுத்துள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள 12 நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்தக் கூட்டமைப்பின் நான்கா வது உச்சிமாநாடு நடந்து முடிந்துள்ளது. அண்மை யில் ஈக்குவடாரில் கலக முயற்சி நடந்தது. இந்த முயற்சி பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இத்த கைய ஜனநாயக விரோதச் செயல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை கூட் டாக எடுப்போம் என்று அனைத்து நாடுகளும் ஒப் புக்கொண்டன. அத்தகைய நடவடிக்கைகள் குறித்த ஆவணமும் மாநாட்டின் முன்பாக வைக்கப்பட்டது. அரசு ரீதியான, அரசியல் ரீதியான மற்றும் வர்த்தக ரீதியான தடைகள் கலகக் காரர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் என் பது அனைத்து நாடுகளின் கருத்தாகவும் இருந்தது. (மேலும்....)

மார்கழி 01, 2010

சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் 12வது மாநாடு  தொடரும் சோசலிச இலக்கிற்கான போராட்டம்

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பத்தாண்டுகளில் ஒழுங்கற்ற வளர்ச்சிப்போக்குகளும், மோசமான மாற்றங்களும் ஏற்பட்டன. சோவியத் யூனியனில் சோசலிசம் தகர்ந்தது, சோவியத் ரஷ்யா பிளவுபட்டது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான அரசுகள் வீழ்ச்சி, இந்த அனைத்து நாடுகளிலும் மீண்டும் முதலாளித்துவம் ஆகிய அனைத்து நிகழ்வுகளுமே சோசலிசத்தை முன்னிறுத்திய சர்வதேச சக்திகளுக்கு பெரும் பின்னடைவாகவே இருந்தது. இந்த நிலையில் மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படைக் கொள்கையையே பல கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுஆய்வு செய்தன. ஒரு அதிதீவிர தத்துவார்த்த தாக்குதலின் வீச்சைத் தாங்க முடியாமல் மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர மையக்கருத்தைக் கைவிட்டுவிட்டு சமூக ஜனநாயகத்திற்கு பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தாவின. இந்தக் காலகட்டத்தில் சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கம் ஒழுங்கற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. (மேலும்....)

மார்கழி 01, 2010

5 moves that make you look cheap

Thanks to the recent financial crisis, frugality and thrift are increasingly becoming positive attributes. But if, like many people, you find yourself looking for ways to trim your spending, you may find yourself flirting with what can be a very fine line. You know: the one between making smart financial choices and being outright cheap. In fact, in many cases it's a line between thrift and outright thievery. You know you've hit it when your savings become someone else's loss - or your own. Here we'll look a few common examples where thrifty become downright cheap. How far would you go? (more...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com